திருச்சியில் கள்ளர் சாதியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா பி.எட் படிக்கும் போது அறிமுகமான தலித் இளைஞரான பத்ரகாளியை காதலிக்கிறார். பின்னர் செப்டம்பர் 29ஆம் நாள் இருவரும் சேலத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பத்ரகாளியின் சகோதரி வசிக்கும் மடத்துக்குளம் என்ற உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஊரில் வாழ்கின்றனர்.
கடந்த 4.11.09 புதன்கிழமை அன்று ஸ்ரீபிரியாவின் தந்தையான சீனிவாசனும், அவரது இரண்டு உறவினர்களும் மடத்துக்குளம் வருகின்றனர். மகளிடம் அவளது அம்மா நோய்வாய்ப்பட்டிருப்பதால் திருச்சிக்கு வந்து பார்க்குமாறு சீனிவாசன் கேட்டிருக்கிறார். இந்த சென்டிமென்டுக்கு பின்னால் சாதிவெறி இருக்கும் என்பதை யூகிக்க முடியாத அந்த அப்பாவிப் பெண் தனது கணவன் வந்ததும் முடிவு செய்வதாக கூறியிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு தனது தந்தையின் சாதிவெறி மாறியிருக்கும் என்று அந்த பெண் மகிழ்ச்சியடைந்திருக்கலாம்.
பத்ரகாளியின் சகோதரி கணவர் சந்திரசேகர் கூறியபடி மகளை பார்க்க வந்த தந்தையும் இரண்டு உறவினர்களும் வெளியேறினர். சிறிது நேரம் கழித்து அந்த இரண்டு உறவினர்கள் மட்டும் திரும்பி வந்தனர். “எதற்கு திரும்ப வந்து தொந்தரவு செய்கிறீர்கள்” என்று சந்திரசேகரனது மனைவி ராணியும் பக்கத்துவீட்டுகாரரும் கேட்டிருக்கின்றனர். அந்த இரண்டு உறவினர்களில் ஒருவர் கத்தியைக்காட்டி மிரட்ட மற்றொருவர் ஸ்ரீபிரியாவைக் குத்திக் கொன்றார். கழுத்திலும், மார்பகத்திலும், வயிற்றிலும் குத்திக் கிழிக்கப்பட்ட ஸ்ரீபிரியா அங்கேயே துடி துடித்துக் கொல்லப்பட்டார்.
தற்போது சீனிவாசனும், அவரது உறவினர்களான ஆசைத்தம்பி, பண்ணாடி முதலியோர் கைது செய்யப்பட்டு 302 கொலை செய்தல் பிரிவின்படி வழக்கு பதியப்பட்டிருக்கிறது. தீண்டாமை வன்கொடுமையின் கீழ் போலிசார் வழக்குபதியவில்லை. (செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, 6.11.09)
திருமணம் முடிந்த உடனேயே ஸ்ரீபிரியாவின் பெற்றோர், உறவினர்கள் எல்லாம் சேர்ந்து இந்த புதுமணத்தம்பதியினரை மிரட்டி வந்தனர். இதற்காக பத்ராகாளியன் உறவினர்கள் போலிசிடம் சிலமுறை புகார் கொடுத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல போலிசு நடவடிக்கை எடுக்காமல் ஸ்ரீபிரியாவை அவரது தந்தையுடன் அனுப்ப பஞ்சாயத்து செய்தது. அதை அந்த பெண் மறுக்கவே அவரது தந்தையும், உறவினர்களும் ஆத்திரத்துடன் சென்றிருக்கின்றனர்.
முதலில் அவர்களுடைய திட்டம் பத்ரகாளியைக் கொல்வதுதான். ஆனால் அவர்கள் சென்ற நேரத்தில் பத்ரகாளி இல்லாததால் ஸ்ரீபிரியாவை மட்டும் கொடூரமாக கொன்றிருக்கின்றனர். அதுவும் மார்பகங்களை குத்தி கிழிக்குமளவுக்கு சாதிவெறி முத்தியிருந்தது.
கடந்த இருவருடங்களில் இதுபோல ஏழு கொலைகள் கலப்பு மணத்திற்காக நடந்திருக்கின்றன. தஞ்சை, திருச்சி முதலான மத்திய தமிழகத்தில் வாழும் கள்ளர் சாதியினர் தேவர் சாதி பிரிவில் ஒருவராவார்கள். பொதுவில் கடும் சாதிவெறி கொண்டதாகவே இந்த சாதியினர் நடந்து கொள்வார்கள். இந்த பகுதிகளில் எல்லா அரசியல் கட்சிகளிலும், ஏன் ரவுடிகளிலும் கூட இந்த சாதி மட்டுமே இருக்கும். தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்
மற்ற எல்லாவற்றையும் விட தனது சாதிப்பெண்கள் தலித்துக்களை மணம் செய்வதை இந்த உலகத்திலேயே மிகவும் இழிவான செயலாக ஆதிக்க சாதி வெறியர்கள் கருதுகின்றனர். இதனாலேயே மகள் தாலியறுத்தாலும் பரவாயில்லை என தலித் மருமகன்களை கொல்கின்றனர். தனது சாதி பெண் கலப்பு மணத்தில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அவளையும் கொல்வதற்கு அவர்கள் தயங்குவதில்லை.
சில ஆண்டுகளுக்கும் முன் விருத்தாசலத்தில் ஒரு வன்னிய பெண் தலித் ஆண் தம்பதியினர் கட்டிவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். சென்ற ஆண்டு திருவாரூரைச் சேர்ந்த ஒருதலித் இளைஞன் கள்ளர் சாதி பெண்ணை மணந்ததற்காக அவளது அண்ணன்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இன்னும் வெளிச்சத்திற்கும், ஊடகங்களுக்கும் வராத செய்திகள் பல இருக்கும். இந்த பிரச்சினைகள் போலிசு தரப்பிற்கு வரும்போது அவர்கள் சமரசம்பேசி அந்த திருமணங்களை ரத்து செய்து ஆதிக்க சாதியினரின் மனங்களை குளிர்விக்கவே முயல்கின்றனர். மாறாக அப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு பாதுகாப்பு தருவதில்லை. சமூகத்திலேயே ஆதிக்க சாதி கோலேச்சும் போது போலிசு மட்டும் விதிவிலக்கா என்ன?
இதுதான் தமிழகத்தின் உண்மையான முகம். இதுதான் தமிழக காதலர்களுக்கு உள்ள ஜீவாதாரமான பிரச்சினை. இதை வைத்தோ, அம்பலப்படுத்தியோ, ஆதிக்க சாதியினரை இடித்துரைத்தோ கதைகளோ, சினிமாவோ, தொலைக்காட்சி உரையாடல்களோ வருவதில்லை. மற்றபடி நடை, உடை, பாவனைகளை வைத்து எப்படி காதலிப்பது, கவருவது, கடலை போடுவது என்பதையே ஊடகங்கள் கற்றுத்தரும் பாடம்.
ஆதிக்க சாதி வெறி கிராமத்தில் மட்டும்தான் இருக்கும் நகரத்தில் இல்லை என்பதெல்லாம் மேம்போக்கான மதிப்பீடு மட்டுமே. இங்கே ஸ்ரீபிரியாவின் பெற்றோர் திருச்சியில்தான் வசிக்கின்றனர். கிராமங்கள் சூழ வாழும் நகரத்தில் மட்டும் சாதி புனிதமடைந்து விடுமா என்ன?
தலித் பெண்களை ஆதிக்கசாதி ஆண்கள் மிரட்டி பெண்டாளுவதெல்லாம் பிரச்சினை இல்லை. ஒரு ஆதிக்க சாதியின் திமிரான அந்த காமவெறியினால் சாதியின் புனிதம் கெட்டுவிடுவதில்லை. சொல்லப்போனால் அது பெருமையாக பார்க்கப்படுகிறது. தலித் பெண்களெல்லாம் அவர்களுக்கு படைக்கப்பட்ட சதைப்பிண்டங்களாக கருதப்படுகின்றனர். ஏனைய வேலைகளில் தலித் மக்களின் இலவச சேவைகளை பயன்படுத்தும் ஆதிக்க சாதி இந்த பெண்டாளுவதையும் ஒரு சேவையாக அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் திமிரில் செய்கிறது.
ஆனால் ஒரு ஆதிக்க சாதி பெண் மட்டும் ஒரு தலித்தை மணந்தால் அது சாதியின் கௌரவம் குலைந்த ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வளவு சமூக மாற்றத்திற்குப் பிறகும் ஆதிக்க சாதி வெறியர்கள் இந்த ‘கௌரவத்தை’ குலைக்கும் மணங்களை வாழவிடுவதில்லை. தமிழகம் முழுவதும் இதுதான் நீக்கமற நிரம்பியிருக்கும் சமூக யதார்த்தம். இதில் எந்தப்பகுதியும் விதிவிலக்கல்ல.
கல்வியும், வேலைகளும் சமூகமயமாகி வரும் வேளையில் இப்படி இருசாதிகளைச் சேர்ந்தோர் பழகுவதற்கும் காதல் வயப்படுவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் எல்லா நவீன நுகர்பொருட்களோடும் வாழும் ஆதிக்க சாதி வெறியர்கள் இதை மட்டும் அனுமதிப்பதில்லை.
தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடும் டி.வி தொடர்களில் எதாவது இந்த உயிராதராமான பிரச்சினையை பேசுகிறதா?. வெற்றி பெற்ற காதல்படங்கள் இந்த வாழ்வா சாவா போராட்டத்தை பிரதிபலித்திருக்கிறதா? திறமை வாய்ந்த எழுத்தாளர்கள் எவராவது இதை நாவலாக எழுதியிருக்கிறார்களா? கேள்விகளை நிறைய இருக்கின்றன. ஆனால் பதிலென்னவோ ஒன்றுதான்.
நீங்க, வாங்க என்று பேசப்படும் கோவைத்தமிழின் உயர்ந்தபண்பாடு குறித்தெல்லாம் அந்தப் பகுதியைச் சேர்ந்த பதிவர்கள் உயர்வாக பேசுகின்றனர். ஆனால் அங்குதான் அருந்ததி மக்களை நாயை விட கேவலாமாக நடத்தும் கொங்கு வேளாளக் கவுண்டர்களின் சாதி வெறி கோலேச்சுகிறது. தங்களது ஊரின் பழமைகளை மண்மணக்க பேசும் அந்த பதிவர்கள் எவரும் தமது பகுதிகளின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஏனென்றால் இவர்களும் கூட சமூகயதர்த்தத்தின் உண்மைகளுக்கு முகங்கொடுப்பதாக இல்லை.
இப்படித்தான் ” இப்பெல்லாம் யாரு சார் சாதியை பார்க்குறாங்க” என்று நாகரீக நியாயம் பேசுபவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறோம். மார்பகங்கள் கிழித்து கொல்லப்பட்ட ஸ்ரீபிரியாவை இழந்து கதறிக்கொண்டிருக்கும் பத்ரகாளி ஊரோடு ஒத்து வாழ்ந்திருந்தால் இந்தப் பிரச்சினை இருக்காது என்று கூட அந்த நியாயவான்கள் பேசக்கூடும். அப்படி என்றால் இனி தலித் ஆண்கள் எந்த ஆதிக்க சாதி பெண்களையும் காதலிக்க கூடாது மீறீனால் மரணதண்டனை என்று ஒரு சட்டத்தை இயற்றிவிடலாம். அப்படி நடந்தால் தமிழகம் எந்த சாதி ‘மோதல்களும்’ இல்லாமல் அமைதிப்பூங்காவக திகழும்.
……………………………..
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
தொடர்புடைய பதிவுகள்
- காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா, அரிவாளா?
- அமெரிக்காவில் ஒரு அம்பியின் சாதிவெறி !
- வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!
- இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம் !
- மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!
- தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!
- பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!
- சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!
- சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !
- இந்து மதம் கேட்ட நரபலி !
- ஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்!
- முத்துராமலிங்கன் என்கிற தேவர் சாதிவெறியனுக்கு கீற்று தளம் வக்காலத்து !
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்
ஹரிபிரியா என தினமணியில் போட்டிருந்தார்கள். தினமலரில் சாதியெல்லாம் குறிப்பிடாமல், செய்தி வந்தது. ஆனால், அந்த குறிப்பிட்ட தெருவை போடும் பொழுது, ‘தேவந்திர’ என குறிப்பிட்டிருந்தார்கள். அதன் மூலம் தெரிந்து கொண்டேன். கொடுமையான சம்பவம். அந்த பெண்ணின் அப்பாவுடன் உடன் பிறந்த அண்ணனின் பையன் தான் இந்த கொலையை செய்திருக்கிறார்.
என்ன ஒரு கொடுமையான சாதி வெறி?
she knows someone will kill. then why she should go with him, we are Devar’s we will do the same if continious,
You fool, love is blind, love has no colour, no religion, no nationality, no caste, now in the globalization world if you say Iam Devar & it will continues is foolishness.
Hey u fool, you brain washed by the films.To respect your women your behavior first.Then you ll feel your your cast women good.you feel your cast is lowest and worse people because of that you trying to marry other cast.” thanoda sathiya kuraiva kevalama ninakira manusam kevalamana piravithan” “yarum thalthavarum illai uyarthavrum illai athanal ealam oreemathiyanvrgalahavum mudiyathu”
nam yhellam pallar sthy kallar sathy yhan mikaipaduthuvathalthan sathy veri varukirathu nam pallar kallarkal koalai seithanar nru sathy koori sathi valarkireerkal neengal kathalay vazharka veandumaanal oru sakiliyanuku nam sathy ponnai katti koadupoam sari sakiliyan yhandru oru sathyi kuripitathuku
இந்தியாவும் சரி விசேசமாக தமிழ் நாடும் சரி சாதிகள் ஒழிக்கப்பட்டால்தான் உருப்படும் … மனிதரில் தரம் பார்ப்பவர்கள் தாங்கள் உண்ணும் உணவு முதற்கொண்டு உடுத்தும் உடை வரை எத்தனையோ சாதிகளால் தானே உருவாக்கப்பட்டது…அதற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கும் சாதி வெறியர்கள் தங்கள் கழிவுகளைத் தாங்களாகவே அள்ளி போட வேண்டியதுதானே…..முட்டாள்தனமான சிந்தனைகளுக்கு விடுதலை கொடுத்து உண்மையான மனித நேயத்தோடு வாழ முற்படுவோம்.
சாதிவெறி தன் மகளால் மானம் போனது என்று நினைக்க வைத்தது இப்போது இரணடு குடும்பங்கள், இரணடு ஊர்களுக்கு மற்றும் தெரிந்த இந்த செய்தி இகலோக முழுக்க தெரிந்துவிட்டது. மானத்தால் மாண்ட விட்டனர். கொலையால் மானம் மீண்டு விட்டது என அல்லவா நினைக்கின்றனர்.
கொலையால் மனிதம் மடிந்து விட்டது. இந்த நிமிடம் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். தன் பெண் பேரக் குழந்தையை இருபாலர் படிக்கும் பள்ளியில் சேர்த்தால் நல்லதா ஒன்றும் ஆகி விடாதே என்ற ஆராய்சி கலந்த கவலையை தெரிவிக்கிறார்.
படிமம் சிறுவயது முதலே,,,,,,,,, மதம், சாதி கலப்பு அகவுரம் என்று. மனிதனின் இன கலப்பால் என்ன நிகழும்.. சமுதாயம் மாற்றம்தானே வரவேற்போம். இதில் சாதி இனமா அல்ல திராவிட, ஆரிய,பார்சிய இப்படி பட்ட இன கலப்பா.. நாகரிக வளர்ச்சியை நோக்கி செல்லும் மனித இனம் இப்படி பட்ட இன கலப்பால் மேன்மையடையுமே தவிர தாழ்ந்து விடாது. சரி பண்ணாடி போன்றோரை என்ன செய்யலாம்..
மற்ற பதிவர்களின் கருத்திற்காக காத்திருக்கிறேன்
மனசுக்கு ஆத்திரமா வந்த்து. இந்த நாட்டின் சாதி அமைப்பு சிறந்த்து எனக் கதறும் ஜெயமோகனின் அடிப்பொடிகளான அல்லது எதற்கெடுத்தாலும் அவரது சைட்டுக்கு லிங்க கொடுக்கும் அன்பர்கள் இந்தக் கொலையை நியாயப்படுத்துவார்களா அல்லது இதற்கு பொறுப்பேற்பார்களா.
கட்டுரை சில வரிகளில் அதன் அரசியல் நோக்கத்தை சிதறடிப்பதாகப் படுகின்றது. மக்களை அணிதிரட்ட இது அறிவியல் ரீதியானது அல்ல•.////பொதுவில் கடும் சாதிவெறி கொண்டதாகவே இந்த சாதியினர் நடந்து கொள்வார்கள். இந்த பகுதிகளில் எல்லா அரசியல் கட்சிகளிலும், ஏன் ரவுடிகளிலும் கூட இந்த சாதி மட்டுமே இருக்கும். தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்//
ராசாத்தி மற்றும் நண்பர்ளுக்கு,
தமிழகத்தின் ஆதிக்கசாதிகளில் முன்னணி வகிக்கும் கள்ளர் சாதியில் உள்ள ஆதிக்க சக்திகள் சசிகலா கும்பல்மூலம் அரசியல் ரீதியாகவும், கொல்லப்பட்ட முட்டைரவி, தி.மு.கவின் கலைவாணன் மூலம் தாதாயிசத்திலும் ஆதிக்கம் செய்கிறது. மற்ற சாதிகளை விட தலித்துக்களை குறிப்பாக காதல் மணம் செய்வோரை படுகொலை செய்யுமளவு இங்கு சாதிவெறி கோலேச்சுகிறது. அதைக் குறிப்பிடத்தான்
//தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்//
என்று எழுதியிருந்தோம். ஆனால் அப்படி எழுதியது தவறு என்பதை சுயவிமரிசனம் செய்து கொள்கிறோம். ஏனெனில் அந்த வரியின் பொருள் பிறப்பிலேயே சாதிவெறி என்ற பார்ப்பனியத்தின் பொருளை ஏந்தி வருகிறது. கள்ளர் சாதியிலும் ஏதுமற்ற உழைக்கும் மக்களும் இருக்கிறார்கள். சாதிவெறிக்கு அந்த சமூகம் பலியாகி இருந்தாலும் அதை மேற்கண்ட வரியில் இடித்துரைப்பது தவறு. தவறினைச் சுட்டிக்காட்டியமைக்கு தோழர் ராசாத்திக்கு நன்றி. இனி இத்தவறுகள் நிகழாத வண்ணம் கவனமாக இருப்போம்
ஒன்றும் புதுமையில்லை. I am not shocked. இது வெறும் சாதிப்பிரச்னையில்லை.ஆணாதிக்கமும் சேர்ந்த ஒன்று. கள்ளர் ஜாதியினரோ, மற்றும் பலஜாதியனர், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும், கருதுவது என்னவென்றால், தங்கள் ஜாதி தங்களுக்கு எப்படி வந்ததோ அப்படியே வரும் தலைமுறைகளுக்கும் போய் சேரவேண்டும என்பதுதான். எப்படி சேர்ப்பது? அதற்குத்தான் இருக்கிறது கருப்பை. அது யாருக்கும் சொந்தம்? ஜாதிக்குத்தான் சொந்தம். அவளுக்கு அல்ல. கருக்கலைப்பு செய்யலாம். ஆனால் கருவைச் சுமந்தால் அது ஜாதிக்கருவாகத்தான் இருக்கவேண்டும். இல்லையெனில் ஜாதித் தொடர் அறுந்துவிடும். எனவே, இங்கு பெண் கொலைசெய்யப்பட்டாள்: தனக்குச் சொந்தமில்லா ஒன்றை சொந்தம் கொண்டாடுவது தவறு. ஊரார் சொத்துக்கு ஆசைப்படலாமா? எல்லா ஜாதியும் இப்படி நினைப்பது, மக்களின் குழுமனப்பான்மையே. சிறுசிறு குழுக்களாக இருந்தே பெரிய குழுவில் அடங்கமுடியும். இல்லை…இல்லை…நம் சிறு குழு மனப்பான்மையை அழித்துவிட்டு பெருங்குழுவில் காணாமல் போவோம் என்றால், நீங்கள் மட்டும் தனித்துவிடப்படுவீர். Musical chair மாதிரி இருக்கைகள் மற்றவருக்கு; உமக்கல்ல என்றாகி விடும். பெருங்குழு என்பது ஒரு தற்செயலான இலக்குகளுக்கு மட்டும்தான். சிறு குழு என்றும் காலம்காலமான ஆயிரங்காலத்துப் பயிர். தமிழ்ப்பார்ப்பனர்களை எடுத்துக்கொள்வோம். பார்ப்பன எதிர்ப்பு அலையோ அல்லது தங்களின் பேராசையோ தெரியவில்லை: அவர்கள் தங்கள் இனத்தையே அழித்துவருகிறார்கள். யாரையும் அவர்கள் பெண் காதலிக்கலாம். படித்தவனா, பண்பாளனா? தன் பெண் நன்றாக் இருப்பாலா? என்ற கேள்விகளுக்கு ஓரளவு positiveவான விடைகள் கிடைப்பின், அவர்கள் ok சொல்லிவிடுகிறார்கள் – ஒரு சிலர் மட்டும் ‘சாத்திரம், சம்பிரதாயம்’ எனத்த்டுத்தாலும், பெண்ணை விலக்கிவிடுவார்களே ஒழிய, கொலை போன்ற செயல்களில் இறங்கமாட்டார்கள். விளைவென்ன Mr வினவு? தமிழ்ப்பார்பனர் என்ற ஜாதி மெல்லமெல்ல அழிந்து வருகிறது. மற்றவரும் அழிய வேண்டுமா? அதுவா உங்கள் நோக்கமும் ஆசையும்?
தமிழ் பார்ப்பனர் என்ற சாதி தானே அழிந்த்து. அந்த சாதி இன மக்கள் அழியவில்லையே… பிறகு என்ன கவலை அய்யா..
பார்சிக்கள் பம்பாயில் இன்னும் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுள் மொத்தமே 25 குடும்பங்களே பார்சிக்கள் என அழைக்கப்படமுடியும். மற்றவர்களெல்லாம், பிற வகுப்பில் மணம் செய்து மாறிப்போனார்கள்.
இதைப்போலவே, பார்ப்பனரெல்லாம் தங்கள் பெண்களைப் பிறவகுப்பார்களுக்குக் கொடுத்துவிட்டால், யாராப்பார்ப்பனர் என அழைப்பது? வாழ்வார்கள் நீங்கள் சொன்னதுபோல. அழிவதில்லை. ஆனால், பார்ப்பனர் என்ற ஜாதி காணாமல் போய்விடும்.
Yes, you are correct. We believe the individualism ( not only in cast) and to maintain is our responsibility. Even in socialism we continue this. It is shame.
தமிழ் பார்ப்பனர்கள் அழிகிறார்களா இல்லை தங்க்ள் சாதியை அமெரிக்கா சென்றும் இறுக பற்றியிருக்கிறார்களா என்பதை அறிய இந்து பேப்பரின் மேட்ரிமோனியல் பக்கத்தை பார்க்கவும். அதில் சாதி தடையில்லை என்று ஒரு பார்ப்பான் கூட அறிவித்த்து கிடையாது. மற்றபடி குலம் கோத்திரம் எல்லாம் கச்சிதமாக குறிப்பிட்டே வரும். மற்ற சாதிகளிடம் கொஞ்சமாவது இருக்கும் நெகிழ்வுத்தன்மை பார்ப்பனர்களிடம் சுத்தமாக இருப்பதில்லை.
இந்த பக்கம் வந்து நாளாயிற்று என்று எட்டிப் பார்த்தேன். ஏண்டா வந்தோம் என்று நினைக்க வைக்கிறீர்கள்.
உங்களிடமிருந்து இந்த பதிவிலும் மறுமொழிகளிலும் மூன்று ஸ்டேட்மெண்டுகள்:
1. தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்.
2. ஆனால் அப்படி எழுதியது தவறு என்பதை சுயவிமரிசனம் செய்து கொள்கிறோம். ஏனெனில் அந்த வரியின் பொருள் பிறப்பிலேயே சாதிவெறி என்ற பார்ப்பனியத்தின் பொருளை ஏந்தி வருகிறது.
3. மற்ற சாதிகளிடம் கொஞ்சமாவது இருக்கும் நெகிழ்வுத்தன்மை பார்ப்பனர்களிடம் சுத்தமாக இருப்பதில்லை.
மூன்றாவது ஸ்டேட்மெண்டில் பிறப்பிலேயே நெகிழ்வுத்தன்மை என்ற பொருளை ஏந்தி வரவில்லையா?
இன்னும் சு. சாமி மற்றும் உ.போ. ஒருவன் விஷயத்தில் இரட்டை நிலைக்கு இன்று வரை பதில் இல்லை. பூணூல் போட்டவன் ஃபாசிஸ்ட் என்ற கருத்துபடத்துக்கும் இன்று வரைக்கும் விளக்கம் இல்லை.
வினவிடம் இரட்டை நிலையும் போலித்தனமும் பெருகி வருகிறது.
ஆர்.வி, எப்போதும் நீங்களாகவே ஒன்றைக் கற்பித்துக் கொண்டு கேள்விகளைக் கேட்கிறீர்கள். ஹிந்து பேப்பரின் மேட்ரிமோனியல் விளம்பரத்தை பார்த்தால் பார்ப்பனர்களிடம் நெகிழ்வுத் தன்மை இருக்கிறதா இல்லையா என்று அறியலாம். இதற்கு பிறப்பிலேயே காரணமென்று நீங்களே கற்பனை செய்து கேட்கிறீர்கள். பார்ப்பனர்கள் பிறந்து தங்களது சமூக சூழலில் வளர்ந்து சாதி உணர்வை இறுக்கமாக பேணுபவர்களாகவே உள்ளார்கள். இதை எத்தனை முறை எழுதுவது
அடுத்து சு.சாமி விவகாரத்தில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குபோட்டு ராமர் பாலம் என்ற புராணப் புரட்டை சொல்லி ஒரு அரசின் திட்டத்தையே நிறுத்துமளவு அதிகாரம் உள்ளது. அதாவது கருத்தை அமல்படுத்தும் அதிகாரம் அவரிடம் உள்ளது. எங்களுக்கு கருத்தை சொல்லுவதற்கு கூட உரிமை இல்லை. இதெல்லாம் ஏற்கனவே எழுதப்பட்ட விசயம்தான்.
உன்னைப்போல ஒருவனில் ஆர்.எஸ்.எஸ் விரும்பும் ஆட்சிமுறை, நடைமுறைகளை காமன் மேன் செய்கிறார். மேலும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத தலைவர்களில் பெரும்பாலானோர் பூணூல் போட்டு வருணத்தருமத்தை நிலைநாட்டவும், முசுலீம்களை பூண்டோடு அழிக்கவும் விரும்பும் பயங்கரவாதிகள்தான். அதற்கு குஜராத் இனப்படுகொலை சாட்சியமாக உள்ளது. எனவே ஆர்.எஸ்.எஸ் கருத்தை தெரிவிக்கும் உ.போ.ஒ படத்தில் பூணூல் பயங்கரவாத படம் சரியானதே. எப்போதும் பார்ப்பனர்கள் பக்கம் நின்று விவாதிப்பதை விடுத்து சற்று விலகி நின்று பார்த்தால் உங்கள் ஓட்டைகள் உங்களுக்கே பொருந்தும். இந்தக்கருத்துக்களுக்கு பதிலாய் திரும்ப பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிப்பீர்கள். ரொம்பக் கஷ்டம்தான்
Poonul is the birth right.of Tamil brahmins – this is RV everywhere. What can one argue with him?
All his arguments are written to prove his point that Tamil brahmins will continue to uphold their unique identity as a caste. Thevars are better than him: they are not hypocrites.
நேரம் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி மழுப்பல்களைப் பார்த்தால் எரிச்சலாக வருகிறது. என்ன செய்வது?
நான்காவதாவகவும் நீங்கள் விட்ட ஒரு ஸ்டேட்மெண்டை இங்கே கொடுத்திருக்கிறேன்.
/// தலித் மக்கள் படிக்கமாட்டார்கள், ஒழுக்கமாக இருக்கமாட்டார்கள், குளிக்கமாட்டார்கள், எனவேதான் அவர்கள் முன்னேறாமல் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி கும்பல் கூறுகிறது. //
இப்படி எழுதிய நீங்கள் // பார்ப்பனர்கள் பிறந்து தங்களது சமூக சூழலில் வளர்ந்து சாதி உணர்வை இறுக்கமாக பேணுபவர்களாகவே உள்ளார்கள். இதை எத்தனை முறை எழுதுவது // என்று சொல்வதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்? ஒரு ஜாதியில் பிறந்த அத்தனை பேரும், – கவனிக்கவும் நீங்கள் சொல்வது அத்தனை பேரையும்! – தங்கள் பிறப்பால், இல்லை இல்லை வளர்ப்பால், “சாதி உணர்வை இறுக்கமாக பேணுபவர்கள்” என்று சொல்வதற்கு உங்களுக்கே நா கூசவில்லையா? உங்களுக்கும் நீங்கள் சொல்லும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும் இந்த விஷயத்தில் என்ன வித்தியாசம்?
ஹிந்து பேப்பரில் மாட்ரிமோனியல் என்கிறீர்கள். சரி பார்ப்பனர் அல்லாதவர்கள் கொடுக்கும் மாட்ரிமோனியல் விளம்பரங்களில் எத்தனை பேர் வேறு ஜாதியில் பெண்ணெடுக்க, மாப்பிள்ளை பார்க்க தயாராக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அனேகமாக இதற்கு மவுனம்தான் பதில் என்று நினைக்கிறேன்.
// அடுத்து சு.சாமி விவகாரத்தில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குபோட்டு ராமர் பாலம் என்ற புராணப் புரட்டை சொல்லி ஒரு அரசின் திட்டத்தையே நிறுத்துமளவு அதிகாரம் உள்ளது. அதாவது கருத்தை அமல்படுத்தும் அதிகாரம் அவரிடம் உள்ளது. எங்களுக்கு கருத்தை சொல்லுவதற்கு கூட உரிமை இல்லை. இதெல்லாம் ஏற்கனவே எழுதப்பட்ட விசயம்தான். //
யார் இல்லை என்று சொன்னார்கள்? நான் கேட்பது உங்கள் இரட்டை நிலையைப் பற்றி. இதே போலத்தான் உ.போ. ஒருவனில் வரும் காமன் மானும் நினைக்கிறார். ஆனால் அந்த கற்பனைக் கதையில், வணிக நோக்கம் கொண்டு எடுக்கப்பட்ட சினிமாவில் அவன் சட்டத்தை கையில் எடுப்பது தவறு என்று வாதிட்ட நீங்கள் சாமி விஷயத்தில், நிஜத்தில், சட்டத்தை கையில் எடுப்பது சரி என்று வாதிடுகிறீர்கள். ஒன்று, சில நேரங்களில், சில சூழ்நிலைகளில் சட்டத்தை கையில் எடுப்பது சரி; இல்லை சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. நீங்கள் வினவு கை காட்டுபவர்கள் சட்டத்தை கையில் எடுக்கலாம் மற்றவர்கள் கதையில் கூட எடுக்கக் கூடாது என்று வாதிடுகிறீர்கள். இதைத்தான் நான் பல முறை திருப்பி திருப்பி கேட்டிருக்கிறேன், ஒன்றும் புரியாதவர் மாதிரி வெறும் சு.சாமி விஷயத்தில் உங்கள் நிலையை சுருக்கமாக எழுதுகிறீர்கள். மழுப்பலுக்கும் ஒரு அளவு இல்லையா?
// உன்னைப்போல ஒருவனில் ஆர்.எஸ்.எஸ் விரும்பும் ஆட்சிமுறை, நடைமுறைகளை காமன் மேன் செய்கிறார். மேலும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத தலைவர்களில் பெரும்பாலானோர் பூணூல் போட்டு வருணத்தருமத்தை நிலைநாட்டவும், முசுலீம்களை பூண்டோடு அழிக்கவும் விரும்பும் பயங்கரவாதிகள்தான். அதற்கு குஜராத் இனப்படுகொலை சாட்சியமாக உள்ளது. எனவே ஆர்.எஸ்.எஸ் கருத்தை தெரிவிக்கும் உ.போ.ஒ படத்தில் பூணூல் பயங்கரவாத படம் சரியானதே. //
அப்படியா? உலகில் முக்கால்வாசி பயங்கரவாத செயல்கள் செய்வது முஸ்லிம்கள். நீங்கள் இனி மேல் தீவிரவாதிகள் பற்றி கருத்து படம் போடும்போது அவர்கள் தலையில் ஒரு குல்லா வைத்து போடுவீர்களா? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்!
எனக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் எத்தனை பேர் பூணூல் போட்டவர்கள் எத்தனை பேர் போடாதவர்கள் என்று தெரியாது. ஆனால் நீங்கள் சொல்வது உண்மை என்று வைத்துக் கொள்வோம். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் எல்லாரும் பூணூல் போடுபவர்கள் என்று சொல்வதற்கும் பூணூல் போட்டவர்கள் எல்லாரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்று சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவரா நீங்கள்? அப்படி வித்தியாசம் தெரியாதவர்தான் என்றால் இந்த இரண்டு ச்டேத்மேண்டுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி யோசிட்டுத்ப் பாருங்கள் – குல்லா போட்டவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் vs. தீவிரவாதிகள் எல்லாம் குல்லா போட்டவர்கள். அப்போது உங்களுக்கு நிச்சயமாக புரிந்துவிடும்!
உங்கள் நிலை பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் மற்ற ஜாதியில் பிறந்தவர்களை விட “சாதி உணர்வை இறுக்கமாக பேணுபவர்கள்” என்பது. இது பல பதிவுகளில், மறுமொழிகளில், மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது. முடிந்தால் அதை நிரூபியுங்கள். இல்லாவிட்டால் பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்களை மட்டும் கேவலப்படுத்துவதை நிறுத்துங்கள்.
ஆர்.வி யதார்த்த்தை ஏற்க மறுக்கும் உங்கள் பதிலில் காழ்ப்புணர்வு தலைவிரித்தாடுகிறது.
1. பார்ப்பனர்களில் பெரும்பாலானோர் எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களை மதிப்படி முடியும். நீங்கள் தொடர்ந்து பார்ப்பனர்களை எதுவும் தெரியாத அப்பாவிகள் என்று வக்காலத்து வாங்குகிறீர்கள். இந்த நாட்டில் பலநூற்றாண்டை மேல்நிலையில் இருக்கும் அந்த சாதி எல்லா வசதிகளையும் வருண, சாதி அமைப்பின் பெயரில் அனுபவித்துக்கொண்டு எப்போதும் பேஷாக வாழ்க்கைய நடத்துகிறது. இந்த வசதி மற்ற சாதிகளை அடக்கி ஒடுக்கிய சுரண்டலில்தான் இருக்கிறது. அதனால்தான் பார்ப்பனர்கள் எவரையும் உடலுழைப்பு வேலைகள், விவசாயம் எதிலும் பார்க்க முடியாது. தன்னை உயர்வாக கருதிக்கொள்ளும் சாதி அதற்காக பல மடங்களையும், ஆர்.எஸ்.எஸ் முதலான பயங்கரவாத அமைப்புகளையும் வைத்து தன்னை இந்துக்களின் ரட்சகனாக காட்ட முயல்கிறது. இதற்கு சங்கராச்சாரி முதல் கோல்வால்கர் வரை பலரை சொல்லமுடியும். எல்லா மத, புராணங்களிலும் தனது மேன்மையை முன்னிருத்தி பிழைக்கும் இந்த ஒட்டுண்ணிகளை ஏதோ தலித்துகள் போன்று சித்தரிப்பது பச்சையான கயமைத்தனம். 50,100 ஆண்டுகளுக்கு முன்னால் வரை அவர்கள் செய்த அட்டூழியம் கணக்கில் அடங்காது. தற்போது ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தால் அந்த அடக்குமுறைகள் பெருமளவு ஒடுக்கப்பட்ட்டுள்ளது. ஆனால் இன்றும் பார்ப்பனர்கள் பாஜ.க மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி தங்களவா ஆட்சியை நிறுத்தவே விரும்புகிறார்கள். எனவே இந்த நாட்டின் மதவெறிக்கும், பிற்போக்கிற்கும், மற்ற சாதி மக்களை இழிவுபடுத்தியும், சுரண்டியும் வாழும் பார்ப்பனர்களை ஒன்னும் தெரியாத பாப்பா என அடிமுட்டாள் கூட கருதமுடியாது.
2. ஹிந்து பேப்பரின் மேட்ரிமேனியலில் மட்டுமல்ல, வீடு வாடகைக்கு கூட பிராமின்ஸ் ஒன்லி என்று விளம்பரம் போடும் ஒரே சாதி பார்ப்பனர்கள்தான்.
3.சு.சாமி விசயத்தில் சட்டத்தை கையிலெடுத்திருப்பது அந்த ஆள்தான். எங்களுக்கு சட்டத்தை விடுங்கள் கருத்தைக் கூட கையிலெடுப்பதற்கு அதிகாரமில்லை.
4.இந்த உலகில் பயங்கரவாத செயல்கள் செய்வது முசுலீம்கள் என்பது உங்களுடைய இந்துத்வ மற்றும் அமெரிக்க அடிமைத்தன சிந்தனையைக் காண்பிக்கிறது. இந்த உலகில் பயங்கரவாத செயல்களை அதிகாரப்பூர்வமாகவும், அதிகமாகவும், பல இலட்சம் மக்களைக் கொன்றும் செயல்படும் ஒரே பயங்கரவாதி அமெரிக்காதான். ஆனால் அமெரிக்காவுக்கு வாழ்க்கைப்பட்டிருப்பதால் நீங்கள் இந்த உண்மையை ஏற்கமாட்டீர்கள்.
5.டோண்டு ராகவன் என்ற பார்ப்பனர் கூட இந்தியாவில் மோடி பிரதமராக வரவேண்டும் என்று எழுதியிருக்கிறார். 2000 முசுலீம்களைக் கொன்ற அந்த பயங்கரவாதியை அவர் ஆதரிப்பதற்கு காரணம் டோண்டுவின் கண்ணோட்டம் பார்ப்பனியம் என்பதே. அத்தகைய டோண்டுவோடு நீங்கள் கொஞ்சிக் குலாவுவீர்கள். அதைக் கண்டிக்கிற வினவை வசைமாதிரி பொழிவீர்கள். இதற்கு காரணமென்ன? பார்ப்பன சாதிதான் மற்ற மக்களை கேவலப்படுத்துகிறது. அதை சாதிய பாசம் என்ற கண்களை மூடிக்கொண்டு உங்களால் ஒருக்காலும் உணரமுடியாது.
6. மற்றபடி உங்களை பார்ப்பனியக் கண்ணோட்டத்திலிருந்து யாராலும் விடுதலை செய்ய முடியாது
// 2. ஹிந்து பேப்பரின் மேட்ரிமேனியலில் மட்டுமல்ல, வீடு வாடகைக்கு கூட பிராமின்ஸ் ஒன்லி என்று விளம்பரம் போடும் ஒரே சாதி பார்ப்பனர்கள்தான். //
இரட்டை நிலை மிக அதிகமாக போகிறது என்று நினைத்தேன். பொய் சொல்லவும் ஆரம்பித்துவிட்டீர்களே! நான் சவால் விடுகிறேன். ஹிந்து மாட்ரிமொனியால்களில் பார்ப்பனர் அற்ற ஜாதியினரின் விளம்பரங்கள் எல்லாவற்றிலும் நாங்கள் ஜாதி பார்ப்பதில்லை என்று வருவதில்லை. முடிந்தால் என் கூற்று பொய் என்று நிரூபியுங்கள். ஒரே சாதி பார்ப்பனர்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். பிற ஜாதிகளைப் பற்றியும்தான் பார்ப்போமே! ஹிந்து மட்டுமல்ல, தினத்தந்தி, தினகரன், டைம்ஸ் எந்த பேப்பர் ஆனாலும் எனக்கு சம்மதம். சவால்!
இனி உங்கள் மிச்ச பாயின்ட்களுக்கு வருவோம்.
1. // பார்ப்பனர்களில் பெரும்பாலானோர் எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களை மதிப்படி முடியும். நீங்கள் தொடர்ந்து பார்ப்பனர்களை எதுவும் தெரியாத அப்பாவிகள் என்று வக்காலத்து வாங்குகிறீர்கள். //
தாராளமாக தவறு செய்யும் பார்ப்பனர்களை கண்டியுங்கள். ஜாதி பார்க்கும் பார்ப்பனர்களை வலிமையாக கண்டியுங்கள். ஜாதீயம் என்ற கோட்பாட்டை கடுமையாக விமர்சியுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னது? ஆனால் பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் அனைவரையும் உங்கள் கண்ணில் பெரும்பாலோர், என் கண்ணில் கொஞ்சம் பேர் ஜாதி பார்க்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் எல்லாரையும் மதிப்பிடுகிறீர்கள் என்றால், கவனியுங்கள் எலாரையும் திட்டுகிறீர்கள் என்றால் அது மிக தவறான அணுகுமுறை. அந்த அணுகுமுறை தவறு என்பதால்தானே // கள்ளர் சாதியிலும் ஏதுமற்ற உழைக்கும் மக்களும் இருக்கிறார்கள். // என்று சுய விமரிசனம் செய்து கொள்கிறீர்கள்? கள்ளர் என்றால் கண் திறக்கும், பார்ப்பனர் என்றால் மூடிக் கொள்ளுமா?
3. // ு.சாமி விசயத்தில் சட்டத்தை கையிலெடுத்திருப்பது அந்த ஆள்தான். எங்களுக்கு சட்டத்தை விடுங்கள் கருத்தைக் கூட கையிலெடுப்பதற்கு அதிகாரமில்லை. //
ஒருவ மீது முட்டை வீச்சு என்பது சட்டத்தை கையில் எடுப்பது இல்லையா? உனகள் பதிவில் தேடித் பாருங்கள், எத்தனை முறை சு. சாமியை சட்டம் ஒன்று செய்யம் முடியவில்லை, அதனால்தான் சட்டத்தை, முட்டைகளை கையில் எடுத்தோம் என்று சொல்லி இருக்கிறீர்கள் என்று தெரியும்.
4. // ந்த உலகில் பயங்கரவாத செயல்கள் செய்வது முசுலீம்கள் என்பது உங்களுடைய இந்துத்வ மற்றும் அமெரிக்க அடிமைத்தன சிந்தனையைக் காண்பிக்கிறது. //
என்ன செய்யலாம், ஒசாமா, கசப் என்று பலர் இருக்கிறார்களே! அவர்கள் மதம் சார்ந்த தீவிரவாத செயல்களை செய்து தொலைக்கிறார்களே! அவர்கள் உத்தமர்கள் என்று நீங்கள் உளற விரும்பினால் சொல்லுங்கள். அவர்களை கம்யூனிஸ்டுகள் என்றா சொல்ல முடியும்?
// 5.டோண்டு ராகவன் என்ற பார்ப்பனர் கூட இந்தியாவில் மோடி பிரதமராக வரவேண்டும் என்று எழுதியிருக்கிறார். //
டோண்டு ராகவன் என்ன பார்ப்பனர்களின் பிரதிநிதியா? இல்லை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற நினைப்பா? அப்படி என்றால் ஒசாமா என்ற சோற்று பருக்கை, கசப், ஊட்தாபுரம், திண்ணியம், பாப்பாப்பட்டி, இம்மானுவேல் சேகரன் போன்ற சோற்றுப் பருக்கைகளை வைத்து என்ன முடிவுக்கு வருகிறீர்கள்? இல்லை குஜராத் மாநிலத்தில் மோடியை முதல்வர் ஆக்கி இருக்கும் எல்லாரும் பார்ப்பனர்களா?
இதுதான் உங்கள் வாதம் என்றால் உக்ரேய்னின் நாடாளுமன்றத்தில் ஹோல்டோமோர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இன அழிப்பு என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்களே என்று சும்மாவா இருக்கிறீர்கள்? உக்ரேய்னில் நடந்தது என்ன என்று உக்றேநியர்களை விட உங்களுக்குத்தான் தெரியும் என்று நீங்கள் எழுதவில்லையா? ஒரு பார்ப்பனர் மோடிய ஆதரித்தால் போதும், பார்ப்பனர்கள் தாக்கப்பட வேண்டியவர்கள் என்று முடிவுக்கு வருவதை எப்படி நியாயப்படுத்தப் போகிறீர்கள்? சரி நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன்; மோடியை மட்டுமல்ல, பா.ஜ.க. கட்சிக்கே எதிர்ப்பாளன்; என்ன முடிவுக்கு வரப் போகிறீர்கள்?
பிராமணர்கள் தாக்கப்பட வேண்டியவர்கள் என்று ஒரு முடிவு எடுத்துவிட்டீர்கள்; அதை சமாளிக்க இரட்டை நிலை, போலித்தனம், பொய் எல்லாம் தானாக பின்னால் வருகிறது. உங்கள் ஜாதி எதிர்ப்பு என்பதே வெறும் போலித்தனம். என் கருத்து என் ஜெநோடைப்பால் உருவானது என்று டாக்டர் ருத்ரன் சொன்னபோது ஜெநோடைப் என்றால் நான் வளர்ந்த சூழ்நிலை என்று வாய் கூசாமல் பொய் சொன்னீர்கள்; சரி இன்றைக்கு மறுபடியும் கேட்கிறேன், என் கருத்து என் ஜெநோடைப்பால் உருவானது என்று டாக்டர் ருத்ரன் சொன்னது சரியா தவறா? தைரியம் இருந்தால் வெளிப்படையாக சொல்லுங்கள்!
Dear, RV, உங்களுக்கும் வினவுக்கும் ஒரு மண்ணாங்கட்டி வித்தியாசமும் இல்லை. (வினவின் பார்வையில்)பெரும்பாலான (உங்கள் பார்வையில் சில)பார்ப்பனர்கள் பயங்கரவாதியாக இருப்பதால் எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தான் என்கிறார்.
ஒசாமாவும், கசாபும் முஸ்லிம்கள் என்பதால் உலகில் பயங்கரவாதம் செய்வது முஸ்லிம்கள் மட்டுமே என்கிறீர்கள், நீங்கள்.
சபாஷ்..! சரியான போட்டி..!! உங்கள் இருவர் பார்வையும் சார்பற்ற பார்வை கிடையாது என்பது நிரூபணம் ஆகிவிட்டது. உங்கள் இருவரது பதிவும் நடுநிலையாளர் பார்வையில் வெற்றுக்குப்பைகளே அன்றி வேறில்லை.
உலகின் ஒவ்வொரு தீவிரவாத இயக்கமும் ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்படும் சிறுபான்மை பிரிவிலிருந்து தம்மை ஆள்வோருக்கேதிராய் மட்டுமே துவங்குகிறது. எல்லா இயக்கங்களும் நியாயமான காரணங்களுக்காகவே துவக்கப்படுகின்றன. சில நியாயமான வழியிலும் பல அநியாயமான வழியிலும் உரிமைகளுக்காக அந்தந்த அரசுக்கெதிராய் போராடுகின்றன.
அப்படி அல்லாமல், இந்தியாவில் மட்டும் பெரும்பான்மை சமூகத்துக்கு – அதுவும் அடக்கி ஆளும் பிரிவினரால், பெரும்பான்மை இன அரசுக்கு ஆதரவாய் (!), சிறுபான்மை இன மக்களுக்கு எதிராய்(!) எதற்காக RSS என்ற ஒரு தீவிரவாத இயக்கம்? எதை சாதிக்க? ஒரே ஒரு நியாயமான காரணமாவது உண்டா? பெட்ரோலை ஊற்றி தீயை அணைக்கிறேன் என்று கூறுவதை எப்படி நம்புவது?
தேசத்தந்தை கொலை, சிறுபான்மையினர் மற்றும் அதே மதத்தின் கீழ் சாதி மக்கள் மீது வன்முறை வெறியாட்டம், எண்ணற்ற குண்டுவெடிப்புகளில் நேரடி மற்றும் மறைமுக தொடர்பு, மசூதி இடிப்பு, ராணுவம், நீதி, அரசு, காவல், ஊடகம், நிர்வாகம், கல்வி, என அனைத்திலும் எதற்கு அதன் ஆதிக்கம்? மும்பை, கோவை குண்டுவெடிப்பு தவிர மற்ற ஏனைய எண்ணற்ற குண்டு வெடிப்புகள், கலவரங்கள், வன்முறை வெறியாட்டங்களில் விசாரணைக்கமிஷன் முடிந்தும் RSS குற்றவாளிகள் தண்டனை பெற முடியவில்லயே? பல விசாரணை கமிஷன்கள் சுட்டிய குற்றவாளிகளை கைது கூட செய்யவில்லையே? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?
// Dear, RV, உங்களுக்கும் வினவுக்கும் ஒரு மண்ணாங்கட்டி வித்தியாசமும் இல்லை. (வினவின் பார்வையில்)பெரும்பாலான (உங்கள் பார்வையில் சில)பார்ப்பனர்கள் பயங்கரவாதியாக இருப்பதால் எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தான் என்கிறார்.
ஒசாமாவும், கசாபும் முஸ்லிம்கள் என்பதால் உலகில் பயங்கரவாதம் செய்வது முஸ்லிம்கள் மட்டுமே என்கிறீர்கள், நீங்கள். //
அடுத்தவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்று புரிந்துகொண்ட பிறகு பதில் எழுத வாருங்கள். ஒசாமாவும் கசபும் முஸ்லிம்கள் என்பதால் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்வது தவறு; அதே போலத்தான் யாரோ ஒரு பார்ப்பனர் என்னவோ சொன்னார் என்பதால் பார்ப்பனர்கள் ஃபாசிச்டுகள் என்பது தவறு, வினாவுக்கு முஸ்லிம்கள் பற்றி எழுதுவது தவறு என்று புரிகிறது, பார்ப்பனர்கள் பற்றி அப்படி எழுதவது தவறு என்று புரியவில்லை என்று பல மாதங்களாக கத்திக் கொண்டிருக்கிறேன். (சமீப காலமாக வினவுக்கு அது தவறு என்று புரிகிறது, ஆனால் இரட்டை நிலை எடுக்கிறார் என்று தோன்றிக்கொண்டிருக்கிறது.)
உங்கள் அறிவு, புரிந்துகொள்ளும் திறன் பிரமிக்க வைக்கிறது. ஆனால் கவலைப்படாதீர்கள், அதனால் எல்லா முஸ்லிம்களும் முட்டாள்கள் என்று சொல்ல மாட்டேன்.
ஒசாமாவும் கசபும் முஸ்லிம்கள் என்பதால் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்வது தவறு; அதே போலத்தான் யாரோ ஒரு பார்ப்பனர் என்னவோ சொன்னார் என்பதால் பார்ப்பனர்கள் ஃபாசிச்டுகள் என்பது தவறு, வினாவுக்கு முஸ்லிம்கள் பற்றி எழுதுவது தவறு என்று புரிகிறது, பார்ப்பனர்கள் பற்றி அப்படி எழுதவது தவறு என்று புரியவில்லை என்று பல மாதங்களாக கத்திக் கொண்டிருக்கிறேன். (சமீப காலமாக வினவுக்கு அது தவறு என்று புரிகிறது, ஆனால் இரட்டை நிலை எடுக்கிறார் என்று தோன்றிக்கொண்டிருக்கிறது.)//
ஒருசிலர் செய்யும் சில காரியங்களை வைத்து ஒட்டு மொத்தமாக குறை கூறுவது தவறு தான். இதை நாங்கள் யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதை விளக்கும் உங்கள் ஒப்பீடு தான் மிகத்தவறானது.
இஸ்லாமியர்களில் சிலர் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதற்காக இஸ்லாமியர்களே பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறுதான்.
இஸ்லாமியர்களை பார்பனர்களுடன் ஒப்பிடுவதற்கு பார்பனர்களில் சிலர் தான் சாதிபற்றோடு இருக்கிறார்களா??? அல்லது சிலர் தான் சாதியை கடைபிடிக்கிறார்களா???
பூணுல் போட்ட படத்தை வினவு வெளியிட்டதற்கு கேள்வி கேட்கும் நீங்கள், பூணூல் அணிவதே இந்துக்களில் தான் தனித்த சாதி என்று அடையாளம் காட்டுவதற்காகத்தான் என்பதை மறுக்கிறீர்களா?
பார்பனீயத்துக்கும் சாதிக்கும் சம்பந்தமே இல்லை நீங்கள் சொல்வீர்களேயானால், மற்ற நாடுகளில் இல்லாத சாதிப்பிணி இந்தியாவில் மட்டும் கான்கிரீட் கட்டிடம் போல் ஊன்றி இருக்க காரணம், மற்ற நாடுகளில் இல்லாத (ஒரு வேளை இருந்தாலும்) இந்து பார்ப்பனீயம் இந்தியாவில் மட்டும் ஊன்றி இருப்பதே காரணம் என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?
சர்வதேசியவாதிகள்,
// ஒருசிலர் செய்யும் சில காரியங்களை வைத்து ஒட்டு மொத்தமாக குறை கூறுவது தவறு தான். இதை நாங்கள் யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதை விளக்கும் உங்கள் ஒப்பீடு தான் மிகத்தவறானது. // என்று நீங்கள் சொல்கிறீர்கள். நங்கள் என்பது யார் என்று தெரியவில்லை. அதில் வினவு உண்டா? வினவின் மறுமொழியிலிருந்து ஒரு quote . // டோண்டு ராகவன் என்ற பார்ப்பனர் கூட இந்தியாவில் மோடி பிரதமராக வரவேண்டும் என்று எழுதியிருக்கிறார். // இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? டோண்டு ராகவனின் கருத்துக்கு மொத்த பார்ப்பனர்களும் பொறுப்பா? இல்லை டோண்டு ராகவன், மற்றும் பார்ப்பனர்கள் வோட்டில்தான் மோடி முதல்வராகி உட்கார்ந்திருக்கிறாரா? அவர் கருத்து சரி தவறு என்பது இருக்கட்டும். ஆனால் டோண்டு ராகவன் போல கோடிக்கணக்கானவர்கள் நினைக்கிறார்கள். அந்த கோடிக்கனக்கானவர்களில் ஒருவரை மட்டும் – அவர் பார்ப்பனர் என்பதால் – தேர்ந்தெடுத்து அதனால் பார்ப்பனர்கள் ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று சொல்லாமல் சொல்லும் வினவின் செய்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா கண்டிக்கிறீர்களா? அதை முதலில் தெளிவாக, தைரியம் இருந்தால், சொல்லிவிடுங்கள்.
// இஸ்லாமியர்களை பார்பனர்களுடன் ஒப்பிடுவதற்கு பார்பனர்களில் சிலர் தான் சாதிபற்றோடு இருக்கிறார்களா??? அல்லது சிலர் தான் சாதியை கடைபிடிக்கிறார்களா???//
நான் கேட்கும் கேள்வி உங்கள் கண்ணில் படவில்லையா? பார்ப்பனர்கள் மட்டும் என்ன எக்ஸ்ட்ரா ஜாதிப் பற்றோடு இருக்கிறார்களா? எல்லா ஜாதிகளிலும் இருப்பதைப் போலத்தான் பிராமணர்களிலும். ஜாதி பார்ப்பவர்கள், பார்க்காதவர்கள் எல்லாரும் உண்டு. பார்ப்பனர்கள் தவிர்த்த மற்ற ஹிந்துக்கள் எல்லாரும் ஜாதியை விட்டுவிட்டதாகவும், பார்ப்பனர்கள் மட்டுமே ஜாதிப்பற்றொடு இருப்பதாகவும் உங்கள் கேள்வி பொருள் தருகிறது. ஜாதியின் நெகடிவ் கூறுகள் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த நாட்டில் பெரும்பாலோர் மனதில் ஜாதி பிரக்ஞையாவது இருக்கத்தான் செய்கிறது. பார்ப்பனர்கள் மட்டுமே மாட்ரிமொனியலில் ஜாதி பார்க்கிறார்கள் என்று வினவு எழுதுகிறார். இது பொய்யா உண்மையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வெளிப்படையாக சொல்ல முடியுமா?
// பூணுல் போட்ட படத்தை வினவு வெளியிட்டதற்கு கேள்வி கேட்கும் நீங்கள், பூணூல் அணிவதே இந்துக்களில் தான் தனித்த சாதி என்று அடையாளம் காட்டுவதற்காகத்தான் என்பதை மறுக்கிறீர்களா? //
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? குடுமி வைத்தவன், நாமம் போட்டவன், பூணூல் போட்டவன் ஃபாசிஸ்ட் என்று பொருள் வரும்படி கருத்துப்படம் போட்டது சரியா தவறா?
பூணூலுக்கு கடந்த காலத்தில் இருந்த ஒரு ஜாதியை உயர்த்தும் அர்த்தத்தை நான் மறுக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அது ஒரு சடங்கு மட்டுமே என்பது என் உறுதியான கருத்து. குலதெய்வம் கோவிலில் மொட்டை போடுவது, கடா வெட்டி பலி கொடுப்பது, கல்யாணத்தில் சில ஜாதிகளில் மாப்பிள்ளைக்கு முண்டாசு கட்டுவது, பெண் கழுத்தில் தாலி, முஸ்லிம்கள் குல்லா போடுவது போன்ற பல சடங்குகளில் இதுவும் ஒன்று. என்ன தாலி அடிமைத்தனத்தை குறிக்கிறது என்று வரிந்து கொண்டு வினவு எழுதுகிறாரா? இல்லை அடிமை படம் போட வேண்டுமென்றால் கழுத்தில் தாலியோடு ஒரு பெண்ணின் படத்தை போடுவாரா? யார் உடம்பில் என்ன இருக்க வேண்டும் என்று வரையறுக்க அடுத்தவருக்கு உரிமை இல்லை!
// பார்பனீயத்துக்கும் சாதிக்கும் சம்பந்தமே இல்லை நீங்கள் சொல்வீர்களேயானால், மற்ற நாடுகளில் இல்லாத சாதிப்பிணி இந்தியாவில் மட்டும் கான்கிரீட் கட்டிடம் போல் ஊன்றி இருக்க காரணம், மற்ற நாடுகளில் இல்லாத (ஒரு வேளை இருந்தாலும்) இந்து பார்ப்பனீயம் இந்தியாவில் மட்டும் ஊன்றி இருப்பதே காரணம் என்பதை உங்களால் மறுக்கமுடியுமா? //
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. பார்ப்பனீயம் என்ற சொல்லாட்சி தவறானது, பார்ப்பனர் மனதை புண்படுத்துவது. பார்ப்பனீயம் என்று நீங்கள் சொல்வதை நான் சாதாரணமாக ஜாதீயம் என்று பொருள் கொள்வேன். ஜாதீயத்துக்கும் சாதிக்கும் சம்பந்தம் இல்லாமல் எப்படி போகும்? ஜாதி இந்தியாவில் கான்க்ரீட் கட்டடம் போல ஊன்றி இருக்கிறது, அதற்கு காரணம் சாதீயக் கோட்பாடு என்று நீங்கள் சொல்வதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஆனால் context சரியாக புரியவில்லை. இந்த கோட்பாட்டில் பார்ப்பனர்களின் பங்கு பெரிது என்று சொல்ல வருகிறீர்களா? அதற்காக இன்றைய பார்ப்பனர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் முப்பாட்டன் நிச்சயமாக உங்கள் வீட்டு பெண்களை அடக்கி ஆண்டிருப்பான். அதற்காக உங்களுக்கு என்ன தண்டனை தரப்பட வேண்டும்? ஹிந்து மதவாதிகள் கஜினிக்கும், மொஹம்மது கோரிக்கும், பாபருக்கும், அவுரங்கசீப்புக்கும், ஏன் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் நடந்த Direct Action Day-க்கும், நவகாளிக்கும், ஜின்னாவுக்கும் இன்று பழி வாங்க வேண்டும் என்று சொல்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
//அவர் பார்ப்பனர் என்பதால் – தேர்ந்தெடுத்து அதனால் பார்ப்பனர்கள் ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று சொல்லாமல் சொல்லும் வினவின் செய்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா கண்டிக்கிறீர்களா? அதை முதலில் தெளிவாக, தைரியம் இருந்தால், சொல்லிவிடுங்கள்.//
நீங்கள் திரும்ப திரும்ப, ”பூணூல் போட்டவர்களெல்லாம் சாதிவெறியர்களா?
பார்பனர்களெல்லோரும் பாசிஸ்டுகளா?” என்னும் கேள்வியை கேட்பதன் மூலம்
பூணூல் எதனால் அணிகிறார்கள், பார்பனர் சாதிய பற்றாளர் என்று எதனால் கூறுகிறார்கள் என்பதற்கான புரிதலை உள்வாங்காதரவராகத்தான் உங்களை காட்டுகிறது.
பிறப்பின் அடிப்டையில் ஒருவரை பார்ப்பனர் என்று நாங்கள்(வினவு உட்பட) சொல்லவில்லை. சொல்லவும் கூடாது.
பார்பனர்கள் என்று யாரை கூறுகிறோம்? சாதிய கட்டமைப்பில் மேல் தளத்தில் ஒய்யாரமாக கைகட்டி கொண்டு சமூகத்தின் சாதிபடிநிலைகளை சரியென்று கூறுகிறவர்கள், சாதிய படிநிலையில் தீண்டாமை குறித்து, சாதி கூறித்து எதிர்ப்பு கிளம்பும் போது அதை மனுதர்மப்படியும் சாஸ்திரங்களின் மேற்கோள்கள் காட்டி அதை நியாயம் என ஆதரிப்பவர்கள், சாதிகெதிரான சக்திகள் உருவாகும் போது அவ்வபோது அதை இந்து மத (அ)தர்மத்தின் படி தடுக்க அரும்பாடுபடுகிறவர்கள் எவரோ அவர்கள் பார்பனர்கள்.
பார்பன குடுமபத்தில் பிறந்த ஒருவர் பார்ப்பன சாதிய கட்டுமானத்தை தகர்க்க போராடுகிறாரெனில் அவரை பார்ப்பனர் என்று கூறமுடியாது. ஆனால் பூணூல் அணியும் எத்தனை பேர் சாதியையே செங்கற்கல்லாய் கொண்டு கட்டப்பட்ட இந்துமதத்திற்கெதிராக போராடுகிறார்கள்?
பார்ப்பனர்களில் எத்தனை பேர் இந்து மதவெறியை எதிர்க்கிறார்கள்?
இந்து மதவெறியர்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள்?
சாதிய வன்கொடுமைகள் நிகழும் போது எத்தனை பேர் கண்டித்திருக்கிறார்கள்? சாதியை ஒழிக்க எத்தனை பேர் போராடுகிறார்கள்?
இவைகளுக்கெல்லாம் போராடுகிறவர்கள் பார்ப்பனர்கள் அல்ல!
ஆனால் இதெற்கெல்லாம் கள்ளமௌனம் காத்து போராடாமல் அல்லது நேரடியாகவே ஆதரிப்பவர்கள் பார்ப்பனர்கள் இல்லை என்று உங்களால் கூறமுடியுமா?
இனிமேலாவது பார்ப்பான் என்று சொல்லிவிட்டீர்களே என்று வாதிக்காமல் பார்பனர் என்றால் யார் என்ற புரிதலுடன் விவாதியுங்கள்.
//நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. பார்ப்பனீயம் என்ற சொல்லாட்சி தவறானது//
மன்னிக்கவும், அதில் பார்பனர் என்பதற்கு பதிலாக பார்பனீயம் என்று தவறாக அடிக்கப்பட்டுள்ளது.
//நான் கேட்கும் கேள்வி உங்கள் கண்ணில் படவில்லையா? பார்ப்பனர்கள் மட்டும் என்ன எக்ஸ்ட்ரா ஜாதிப் பற்றோடு இருக்கிறார்களா? எல்லா ஜாதிகளிலும் இருப்பதைப் போலத்தான் பிராமணர்களிலும். ஜாதி பார்ப்பவர்கள், பார்க்காதவர்கள் எல்லாரும் உண்டு. பார்ப்பனர்கள் தவிர்த்த மற்ற ஹிந்துக்கள் எல்லாரும் ஜாதியை விட்டுவிட்டதாகவும், பார்ப்பனர்கள் மட்டுமே ஜாதிப்பற்றொடு இருப்பதாகவும் உங்கள் கேள்வி பொருள் தருகிறது. ஜாதியின் நெகடிவ் கூறுகள் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த நாட்டில் பெரும்பாலோர் மனதில் ஜாதி பிரக்ஞையாவது இருக்கத்தான் செய்கிறது. பார்ப்பனர்கள் மட்டுமே மாட்ரிமொனியலில் ஜாதி பார்க்கிறார்கள் என்று வினவு எழுதுகிறார். இது பொய்யா உண்மையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வெளிப்படையாக சொல்ல முடியுமா?//
எல்லோரும் தானே சாதி பார்க்கிறார்கள். பார்பனர்கள் மட்டுமா சாதி பார்க்கிறார்கள் என்று குழந்தைதனமாய் கேட்டாலும் உண்மையை மறைக்கும் விஷம் கக்கும் வார்த்தைகள் இவை. சாதியில், குலத்தில், கோத்திரத்தில் கறைபடிய கூடாது என்று அகமனமுறையை சமூகத்தில் தோற்றுவித்து இன்றும் அதை கடைபிடித்து, கோயிலில் ஒரு பிரிவனர் தான் உள்ளே நுழைய வேண்டும் ஒரு சிலர் நுழையக் கூடாது, மற்ற மொழி தீட்டு, இந்த மொழியில் தான் பாடவேண்டும் என்று விதிமுறைகளை வகுத்து அன்றும், இன்றும் அந்த விதிமுறைகளை கடைபிடிப்பவர்கள் யார்? இவைகளுக்கெல்லாம் எதிராக ஒரு பார்ப்பனர் பேசியிருப்பாரா?
அப்படி பேசினால், இந்த சமூக அநீதிகளுக்கெதிராக குரல் கொடுத்தால் அதற்காக போரடினால் அவர் பார்ப்பனர் இல்லை.
//நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? குடுமி வைத்தவன், நாமம் போட்டவன், பூணூல் போட்டவன் ஃபாசிஸ்ட் என்று பொருள் வரும்படி கருத்துப்படம் போட்டது சரியா தவறா?//
குடுமி வைத்தவன், நாமம் போட்டவன், பூணூல் போட்டவன் எல்லாம் இந்துமதவெறியை எதிர்க்கிறானா? சாதியை எதிர்க்கிறானா? நிச்சயமாக இல்லை. இவைகளை எதிர்க்காமல் இந்துமதம் சரியானது. சாதியும் சரியானது என்பதால் தான் அணிகிறான்.
//யார் உடம்பில் என்ன இருக்க வேண்டும் என்று வரையறுக்க அடுத்தவருக்கு உரிமை இல்லை!//
உடம்பில் பூணூல் இருந்தால் என்ன? நெற்றியில் நாமம் இருந்தால் என்ன? அல்லது எதுவுமே இல்லாமல் அம்மனமாய் நிர்வாண சாமி போல் சாலையில் சென்றால் என்ன?
ஆனால் இதேபோல் யார் உடம்பில், எது(?) இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன என்று எல்லோரையும் கோவிலில் அர்ச்சகராக்க அனுமதிக்க ஆதரவளிப்பீர்களா? ஆத்திகர்களின் மொழி எந்த மொழியாய் இருந்தாலும் பாட அனுமதிப்பீர்களா?
//இந்த கோட்பாட்டில் பார்ப்பனர்களின் பங்கு பெரிது என்று சொல்ல வருகிறீர்களா? அதற்காக இன்றைய பார்ப்பனர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் முப்பாட்டன் நிச்சயமாக உங்கள் வீட்டு பெண்களை அடக்கி ஆண்டிருப்பான். அதற்காக உங்களுக்கு என்ன தண்டனை தரப்பட வேண்டும்? ஹிந்து மதவாதிகள் கஜினிக்கும், மொஹம்மது கோரிக்கும், பாபருக்கும், அவுரங்கசீப்புக்கும், ஏன் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் நடந்த Direct Action Day-க்கும், நவகாளிக்கும், ஜின்னாவுக்கும் இன்று பழி வாங்க வேண்டும் என்று சொல்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//
அன்று செய்த பார்ப்பனர்களுக்காக இன்றுள்ள பார்ப்பனர்களையெல்லாம் பழிவாங்கவேண்டும் என்று சொல்லவில்லை. அன்று வகுத்த கோட்பாடுகளை இன்றும் இவர்கள் பின்பற்றுவதால் அதை பார்ப்பன வெறி என்கிறோம்.
சரி. அன்று தவறிழைத்த பார்ப்பனர்களால் இன்றுள்ள பார்ப்பனர்கள் என்ன செய்வது என்று கேட்டால், இன்றும் அன்று வகுத்த சாதி தீண்டாமையை கடைபிடிக்கும் பழக்கத்தை என்னவென்று சொல்வது? திட்டினா மட்டும் அவர்கள் செய்தார்கள் என்று கைகாட்டி தப்பிக்கவேண்டியது. அதை மாற்றுங்கள் என்று சொன்னால் பாரம்பரியம் என்று சொல்லவேண்டியது.
அன்று தவறிழைத்த பார்பனர்களால் அப்பாவியாய்(!) இன்று பழிச்சொல் வாங்கும் இன்றைய பார்ப்பனர்கள், அவர்கள் செய்த தவறையே செய்யாமல் அதை திருத்திக் கொள்ள தயாரா? சாஸ்திரம், மனு என்று அன்று முட்டாள்தனமாக மக்களுக்கு கற்பித்து விட்டார்கள். சாதியின் பெயரால் மக்களை பிரித்து வைத்து விட்டார்கள். இவைகள் தவறானவை. சாதியில்லை என்று கூறமுடியுமா?
உங்களை கம்யூனிஸ்டுகளாக மாறுங்கள் பேசுங்கள் என்று வற்புறுத்தவில்லை; துன்புறுத்தவில்லை. குறைந்த விடயமாக, எல்லோரும் இந்து மததிற்குள்ளேயே பிராமணன் முதல் பஞ்சமன் வரை பெண் கொடுத்து பெண் எடுக்கலாம் என்று நீங்களோ, இன்றுள்ள பார்ப்பனர்களோ அல்லது பார்ப்பன அமைப்புகளோ அறிவிக்க தயாரா?
//இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? டோண்டு ராகவனின் கருத்துக்கு மொத்த பார்ப்பனர்களும் பொறுப்பா? //
ஆமாம் என்று சொல்லுவேன், பார்ப்பான் இல்லையென்பவனுக்கு சுய சாதியில்லை எனும் போது அவன் ஏன் இந்த கூற்றைப் பார்த்து பயப்படவேண்டும்?
அந்த சாதி அடையாளத்தை விட முடியாதவன் தான் ஏதாவது ஒரு வகையில் அதனை நியாயப்படுத்தி தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், பார்ப்பனியம் என்ற வார்த்தைக்கு மக்களிடம் தெருவில் இறங்கி பொருள் கேளுங்கள் நீங்கள் வரையறை செய்வதையெல்லாம் பேசாதீர்கள் என்று ஆர் வி வால்பிடிப்புவாதம் பேசுகிறார். நல்லது, இதே போல குஜராத்திற்கு சென்றால் அங்கு முஸ்லீம் எல்லாம் பயங்கரவாதி என்றே சொல்வார்கள். எனும் போது ஆர்வியின் நியாயப்படி பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு ஏற்ப குஜராத்தில் முஸ்லீம் என்ற வார்த்தையும், பயங்கரவாதமும் ஒன்று என்ற புரிதலை வைத்தே நாம் அந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
//பூணூலுக்கு கடந்த காலத்தில் இருந்த ஒரு ஜாதியை உயர்த்தும் அர்த்தத்தை நான் மறுக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அது ஒரு சடங்கு மட்டுமே என்பது என் உறுதியான கருத்து. குலதெய்வம் கோவிலில் மொட்டை போடுவது, கடா வெட்டி பலி கொடுப்பது, கல்யாணத்தில் சில ஜாதிகளில் மாப்பிள்ளைக்கு முண்டாசு கட்டுவது, பெண் கழுத்தில் தாலி, முஸ்லிம்கள் குல்லா போடுவது போன்ற பல சடங்குகளில் இதுவும் ஒன்று. என்ன தாலி அடிமைத்தனத்தை குறிக்கிறது என்று வரிந்து கொண்டு வினவு எழுதுகிறாரா? இல்லை அடிமை படம் போட வேண்டுமென்றால் கழுத்தில் தாலியோடு ஒரு பெண்ணின் படத்தை போடுவாரா? யார் உடம்பில் என்ன இருக்க வேண்டும் என்று வரையறுக்க அடுத்தவருக்கு உரிமை இல்லை!//போகிற போக்கில் பூணூலை சாதாரண விசயமாக்கி விடுகிறார் ஆர்வி.. எல்லாப் பாப்பானுக்கும் தெளிவாகத் தெரிந்துதான் இதனை அணிந்துகொள்கிறானுக..யார் ஒடம்பில என்ன இருக்கணும்னு வரையறுக்க உரிமை இல்லையா? இதெல்லாம்..கொத்தி எறிய வேண்டிய கொழுப்பு இல்லையா? 50 வருசத்துக்கு முன்னாடியே பெரியார் கேட்டார்..ஒரு தெருவுல பல வீடுகள் இருக்கும்போது ஒரு வீட்டில மட்டும் ‘இது பத்தினிகள் வாழும் வீடு’ன்னு ஒரு குடும்பம் எழுதி வச்சிதுன்னா என்னா அர்த்தம்? அதுதாண்டா பூணூலுக்கும் அர்த்தம்..நீ முதுகுல் நூலைச் சுத்தினாலே..நான் இருபிறப்பாளன்..எல்லாத்தையும் விட நான் ஒசத்தி..நீ எல்லாம் எனக்கு கீழே என்று கொழுபோடு சொல்லும் திமிர் அது..அது சரி..அந்த நூலு மயிறுதான் சாதாரண சடங்குதானேப்பா..அதனை அறுத்துப்போடுறதுக்கு மட்டும் என்ன தேசப்பாதுகாப்புச் சட்டம் பாயுது? இந்த தேசம் என்ன பாப்ப்பான் முதுகுலயும் வயித்திலேயுமா சுத்துக்கிட்டு இருக்குது?
முஸ்லீமும், பார்ப்பனரும் ஒன்றா?
ஆர் வியின் கருத்தில் சாதியும், மதமும் ஒன்று என்று ஆகிறது. இது மாதிரி சம்பந்தா சம்பந்தாமில்லாமல் முடிச்சு போட்டு ஆர் வி பார்ப்பனிய அடையாளத்தை காப்பாற்ற முனைவது அவரது சார்புநிலையையே காட்டுகிறது.
ஒரு ஒடுக்குமுறை சமூகத்தில் மதம் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை. மதத்தை நாடும் மக்களை அனுதாபத்துடன் தான் அணுக வேண்டியுள்ளது(அதே நேரத்தில் அதை நியாயப்படுத்துவதையும், அதை வைத்து தொந்தி வளர்ப்பவ்ரகளையும் இடித்துரைக்க வேண்டும்). ஆனால் சாதி? அது வரலாற்று வழி வந்த கொழுப்பு அதையெல்லாம் செருப்பு கொண்டு மட்டுமே அணுக வேண்டும்.
இன்னிலையில் சாதி அடையாளத்தையும் மத அடையாளத்தையும் சமமாக பார்க்கக் கோரி வேண்டுகிறார் ஆர்வி… அப்படிச் செய்ய முடியாது.
Dear RV, I’m extremely sorry.
////4.இந்த உலகில் பயங்கரவாத செயல்கள் செய்வது முசுலீம்கள் என்பது உங்களுடைய இந்துத்வ மற்றும் அமெரிக்க அடிமைத்தன சிந்தனையைக் காண்பிக்கிறது.//// vinavu ////
———–இதை படித்துவிட்டு,
\\\\\\\\ 4. // ந்த உலகில் பயங்கரவாத செயல்கள் செய்வது முசுலீம்கள் என்பது உங்களுடைய இந்துத்வ மற்றும் அமெரிக்க அடிமைத்தன சிந்தனையைக் காண்பிக்கிறது. // என்ன செய்யலாம், ஒசாமா, கசப் என்று பலர் இருக்கிறார்களே! அவர்கள் மதம் சார்ந்த தீவிரவாத செயல்களை செய்து தொலைக்கிறார்களே! \\\\\\ RV \\\\————-இதை படித்தேன். (சுத்தமாய், நீங்கள் எனக்கிட்ட மறுமொழிக்கு-உங்கள் எண்ணத்திற்கு-எதிரான கருத்து) உடன் மறுமொழி எழுதினேன்.
//////அப்படியா? உலகில் முக்கால்வாசி பயங்கரவாத செயல்கள் செய்வது முஸ்லிம்கள். நீங்கள் இனி மேல் தீவிரவாதிகள் பற்றி கருத்து படம் போடும்போது அவர்கள் தலையில் ஒரு குல்லா வைத்து போடுவீர்களா? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்!////// RV /////
========இப்போதுதான் இதை படிக்கிறேன். கொஞ்சம் அசந்த நேரத்தில் முழுப்பூசணியை சோற்றுப்பருக்கையில் மறைத்துவிட்டாரே வினவு!
As a honest man, why not you reply on my remaining part of the comment? Is it against you?
நெத்தியடி முகம்மது,
Apology accepted. தவறை தவறு என்று ஒத்துக் கொள்வது பெரிய விஷயம். வாழ்த்துக்கள்.
ஆனால் உங்கள் கருத்துகளில் எனக்கு இசைவு இல்லை. வித்தகன் சொல்வது போல ஜெனோம் தியரி டார்வின் கொள்கைகளை கொன்றுவிடவில்லை. ஆதாமும் ஏவாளும் மனித குலத்தின் தாய் தகப்பன் என்பது இன்றைய அறிவியலின் புரிதல் இல்லை.
ஆர்.எஸ்.எஸ். பற்றி கேட்டிருந்தீர்கள். எனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளைப் பற்றி அரசல் புரசலாகத்தான் தெரியும். ஆர்.எஸ்.எஸ். குற்றவாளியா இல்லையா என்பது பற்றி என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது, அவ்வளவுதான். (மோடி குற்றவாளி, அத்வானி பாபரி மசூதியை இடித்த விஷயத்தில் குற்றவாளி என்று உறுதியாக சொல்ல முடியும்.) அவர்கள் என்ன, கருணாநிதி, ஜெயலலிதா, மாயாவதி, அந்துலே, அத்வானி, மோடி, யாருமே தண்டிக்கப்படுவதில்லை. ஏன் தண்டிக்கப்படுவதில்லை என்று என்னை கேட்டால் நான் என்ன பதில் சொல்லட்டும்?
//ஆர்.எஸ்.எஸ். பற்றி கேட்டிருந்தீர்கள். எனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளைப் பற்றி அரசல் புரசலாகத்தான் தெரியும். ஆர்.எஸ்.எஸ். குற்றவாளியா இல்லையா என்பது பற்றி என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது, அவ்வளவுதான். (மோடி குற்றவாளி, அத்வானி பாபரி மசூதியை இடித்த விஷயத்தில் குற்றவாளி என்று உறுதியாக சொல்ல முடியும்.) அவர்கள் என்ன, கருணாநிதி, ஜெயலலிதா, மாயாவதி, அந்துலே, அத்வானி, மோடி, யாருமே தண்டிக்கப்படுவதில்லை. ஏன் தண்டிக்கப்படுவதில்லை என்று என்னை கேட்டால் நான் என்ன பதில் சொல்லட்டும்?//
ஆர்வி,
இவர்களையெல்லாம் ஆதரிக்கும் நோண்டு ராகவன் குற்றவாளியா? ஏன் ஆர்வி நீங்கள் இது வரை நோண்டு ராகவனுடைய பதிவில் சென்று அவரது சாதி வெறியை எதிர்த்து வாதடியதில்லை? இங்கு கூட அவரை கண்டு கொள்ளாமலேயே வலம் வருகிறீர்களே?
ஆர் வியின் சார்பு நிலைகள் வெளிவரும் இடங்கள்.
//ஆர்.எஸ்.எஸ். குற்றவாளியா இல்லையா என்பது பற்றி என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது, அவ்வளவுதான்.//
//பிறகு டோண்டு சாதி வெறி பிடித்தவர் இல்லை. அவருக்கு வீம்பு உண்டு. அவரை விட வீம்பு பிடித்த எத்தனையோ பேரை இங்கே பார்க்கிறேன், அவர்களையும் ஜாதி வெறியர் என்று நான் கருதவில்லை.//
இணையத்தில் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் நுழையாத காலத்திலிருந்தே சுயசாதிப் பெருமை பேசி திரிந்த பிண்டம்தான் இந்த பெரியவர் டோண்டு. இவரது சாதிவெறிதான் போலி டோண்டு உருவானதில் முக்கிய பங்கு ஆற்றியது.
ஆனால் ஆர் வியின் கருத்தில் ஆர் எஸ் எஸ் செய்திருப்பதாக தோன்றுகிறதாம், டோண்டு சாதிவெறியர் இல்லையாம்… நல்ல அவதனிப்பு
//என் ஜெநோடைப்பால் உருவானது என்று டாக்டர் ருத்ரன் சொன்னது சரியா தவறா? தைரியம் இருந்தால் வெளிப்படையாக சொல்லுங்கள்!//
ஆர்வி,
டாக்டர அப்பாலிக்கா மொத்தமா கண்டிச்சுக்கலாம் மொத்தல்ல நொண்டு ராகவனை என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்
கண்டிப்பாக.. உங்கள் கருத்து அது வெளிப்படும் விதம் (ருத்ரன் கூறியபடி மறுப்பை கைக்கு எட்டும் தூரத்தில் இருந்து பதிவு செய்யாதது) கண்டிப்பாக ஜீனோடைப் சார்ந்தது..
மேலும், பார்ப்பனர்கள் உடல் உழைப்பு செய்யாதது கூட ஜீனோடைப் சார்ந்ததே..
அதே போல..
பள்ளர்கள் கெட்ட வார்த்தை பேசுவதும், தேவர்கள் பீத்திக்கொள்வதும், கள்ளர்கள் பொய் பேசுவதும் , பிள்ளைகள் புறம் பேசுவதும், கோனார்கள் கோள்சொல்வதும் , நாயக்கர்கள் ஏமாற்றுவதும், முதலியார்கள் அடாவடி செய்வதும், வன்னியர்கள் வம்பளப்பதும், நாடார்கள் கலப்படம் செய்வதும் ஜீனோடைப் சார்ந்ததே..
நான் மணி
1. சாதியத்தை படிநிலையாக மாற்றி அதற்கு த்த்துவ விளக்கம் தந்து அதன் மேல்நிலையில் இருந்தவர்கள் என்ற முறையில் அந்த அமைப்பு தவறானது எனக் கருதுபவர்கள் அதற்கு சாவு மணி அடிக்க வேண்டும். கள்ளர் அப்படி நிலையில் பின்னால் வருபவர்கள். கருத்து உருவாக்கத்தில் இவர்களது பங்கு எதுவும் கிடையாது என்பதோடு அவர்களும் பல சாதிகளுக்கு அடியில்தான் வருகின்றனர். மேல்நிலையில் இருந்து அதன் பய்னகளை நியாயமற்ற முறையில் அனுபவித்து வந்தவர்கள் மாறி வரும் ஜனநாயக கோட்பாடு தங்களது சமூகத்துக்கும் வேண்டும் என்று நம்புபவர்கள் தான் முதலில் திருமணம் போன்ற விசயங்களில் கலப்புமணத்தை ஊக்குவிக்க வேண்டும். மற்றவர்களை சாதி பார்க்க பழக்கியதற்காக பழக்கப்படுத்திய சாதியின் ஜனநாயக ஆதரவாளர்கள் மற்றவர்களையும் பார்க்க கூடாது என பிரச்சாரம் செய்யவும், அதனை பார்க்க தூண்டும் ஆச்சாரம் சடங்கு ஆகியவற்றை தமது குடும்பத்தில் இருந்தே எதிர்க்க துவங்க வேண்டும். இதனை
விவாதிக்க வரும் நண்பர்கள் தமது குடும்ப அளவில் மாத்திரம் செய்யாமல் தமது உறவினர்கள் வரையிலும் நீட்டித்து இருப்பார்கள் என நம்புகிறேன். மதிப்பிடுவதையே குறை சொல்வது எனப் புரிந்து கொண்டாலோ அல்து பெண்களை ஒடுக்க தமது முன்னோர்கள் சொல்லிய புராணங்கள் காரணமல்ல என்று நம்பினாலோ சொலவத்தற்கு ஒன்றுமில்லை.
2. காமன் மேன் தீவிரவாதம்தான் பிரச்சினை என்று தானே முடிவுசெய்கிறார். ஜனநாயகவாதிக்ள் கவனிக்க வேண்டிய விசயம் இது. அதனை ரகசியமாகவும் செய்துமுடித்துவிட்டு பிறகு தன்னை நியாயப்படுத்துகிறார். மராரின் கருத்துடன் காமன் மேனின் கருத்து ஒன்றிணைகிறது. தற்செயலானது என்றே வைத்துக் கொள்வோம்.
சுப்ரமணியசாமிக்கு முட்டையடித்து ஒரு செய்தி சொல்லப்பட்டது. ஏன் சுப்ரமணியசாமி அங்க வந்தாரு.. அப்புறம் ஏன் சிதம்பரம் போனாரு..12 ஆண்டுகளுக்கு முன் தீட்சதர்களை குற்றம் சொன்ன அவரே இன்று ஏன் அவர்களுக்கு ஆதரவா விசுவிந்து பரிசத் தலைவர்களுடன் உள்ள வர்றாரு.. இதெல்லாம் தனித்தானியா பாத்துவிட்டு அவர ஒரு டிராபிக் ராமசாமி மாதிரி பாருங்க அப்படின்னு நீங்க சொல்றீங்க•. கேக்குறவன் கொச்சம் கேணயனா இருக்கணும்..
ஆயுதம்தான் பிரச்சனை என்பது உங்களது கருத்து.. முட்டையடி ஒன்றும் சட்டத்தை கையில் எடுப்பதும் அல்ல•. செருப்பு வீச்சு நடந்தே புஷ்ஷுக்கு அது கூட உங்கள் பார்வையில் எதிர்ப்பு இல்லை… அப்படின்னா எதிர்ப்ப எப்படி காட்டணும்னு பாடம் எடுங்கன்னு உங்கள கூப்பிட்ட்டுமா… கமான் மேன் எதிர்ப்பை காட்டவில்லை.. அரசின் ஜனநாயகம் என்ற நூலைப் பற்றிக் கொண்டு தீவிரவாதிகள் எப்படி தப்பிக்கிறார்கள் எனப் புரிந்துகொண்ட அவன் மீ அரசு வின் பாத்திரத்தை ஏற்றுக் கொள்கிறான். மரார் விரும்பிய அரசு அதுதான். இரண்டும் வேற அப்படினுன் புரியலையா
அரசாலும், நிதி மன்றத்தினாலும், ஆதிக்கசாதியாலும், பெரும்பான்மைவாதிகளாலும் முடக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுபவர்கள், அநீதி இழைக்கப்பட்டவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள் போராடுகிறார்கள்.
அவர்களுக்காக இயக்கங்கள். சரி.
தாங்களை யார் மிதிக்கிறார்கள். எதற்காக உங்களுக்காக ஒரு தீவிரவாத (RSS) இயக்கம்?
///// தலித் மக்கள் படிக்கமாட்டார்கள், ஒழுக்கமாக இருக்கமாட்டார்கள், குளிக்கமாட்டார்கள், எனவேதான் அவர்கள் முன்னேறாமல் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி கும்பல் கூறுகிறது. //
இப்படி எழுதிய நீங்கள் // பார்ப்பனர்கள் பிறந்து தங்களது சமூக சூழலில் வளர்ந்து சாதி உணர்வை இறுக்கமாக பேணுபவர்களாகவே உள்ளார்கள். இதை எத்தனை முறை எழுதுவது // //
இதில் என்ன முரன்பாடு இருக்கிறது? தலித்துகள் முன்னேறாமல் இருப்பதற்கு முதன்மை காரணம் சாதியம் (தேவர் சாதி) மற்றும் அதன் சித்தாந்த வடிவமான பார்ப்பனியம்(ஒன்லி பிராமின்ஸ், வெஜ் ஒன்லி மற்றும் அனைவரும் அர்ச்சகர் ஆவதை எதிர்ப்போம்) எனும் போது ஆர் எஸ் எஸ் திட்டமிட்டு பார்ப்பனக் கொழுப்புடன் பொய் சொல்கிறது.
ஆனால், பார்ப்பன சாதியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே அதன் பண்பாட்டு மேன்மை குறித்த பெருமிதங்கள் அவர்கள் மனதில் கட்டமைக்கப்படுவதற்கே வாய்ப்பு அதிகம் என்பது உண்மைதான். இது வினவு சொன்னது.
ஆர்வி குழம்பிக் கிடக்கிறார் என்று நினைக்கிறேன்
//உங்கள் நிலை பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் மற்ற ஜாதியில் பிறந்தவர்களை விட “சாதி உணர்வை இறுக்கமாக பேணுபவர்கள்” என்பது. இது பல பதிவுகளில், மறுமொழிகளில், மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது. முடிந்தால் அதை நிரூபியுங்கள். இல்லாவிட்டால் பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்களை மட்டும் கேவலப்படுத்துவதை நிறுத்துங்கள்.//
ஏன் அபாண்டமாக பொய் சொல்றீங்க ஆர்வி. பார்ப்பனியத்தை தாங்கிப் பிடிப்பவர்களைத்தான் இழிவுபடுத்துகிறோம் நாங்கள்
//3. மற்ற சாதிகளிடம் கொஞ்சமாவது இருக்கும் நெகிழ்வுத்தன்மை பார்ப்பனர்களிடம் சுத்தமாக இருப்பதில்லை.
மூன்றாவது ஸ்டேட்மெண்டில் பிறப்பிலேயே நெகிழ்வுத்தன்மை என்ற பொருளை ஏந்தி வரவில்லையா?//ஆர்.வி. இந்த மூன்றாவது ஸ்டேட்மெண்டில் எங்கே பிறப்பு வருகிறது? எனக்கு விளங்கவில்லை.. ஒரு பேச்சுக்காக – புரிதலுக்காக – நான் இப்படிச் சொல்றேன்னு வச்சுக்குவோமா? நோய் நொடி வந்தால் டாக்டர்கிட்டப் போறது..கடவுளை மட்டும் நம்பிக்கிடாமல் வைத்தியம் செய்வது இதில் ஆர்.சி., பிராட்டஸ்டண்டுகள் சாதாரணமாச் செஞ்சு அறிவியலோடு ஒத்துப் போறாங்க,, ஆனா பெந்தகொஸ்தே கிட்ட இந்த நெகிழ்வுத் தன்மை இல்லை.” இதுதான் என் ஸ்டேட்மெண்டுன்னு வச்சிக்கிட்டா..இப்ப நான் சொன்னது பெந்தேகொஸ்தேயிடம் இருக்கும் அடிப்படைவாதத்தையா?? இல்லை..பெந்தேகொஸ்தேவின் பிறப்பைப் பத்தியா?
இதே லாஜிக்கோடு பாருங்கள்.. 3 வது ஸ்டேட்மெண்டில் நீங்கள் கொடுக்கும் பொருளின் பொருத்தமின்மை புரியும்.
//பார்ப்பனர் என்ற ஜாதி காணாமல் போய்விடும்//
சூப்பரப்பு.. இத இத இதத்தானே நாங்க எதிர்பார்க்கிறோம்..
I am not able to paragraph. What is wrong?
I am serioulsy concerned about late sripriya. She should have been killed like this. In this world we dont have any rights to kill anyone.
If you go through the reason for this murder is affection or confident on their childerens. If parents will feel that they are going to loose this, then definitly they will do such kind of follishness. I would say the mistake is with that “BATHARA KALI”(idiot). He is the one cheated that girl and finally he was the sole reason for death also. Definitly he will get another SC girl to get marry after a month or two. I just wanted to know one thing… that is VINAVU wanted all the non SC girls should get marriage to SC boys? We can’t eliminate the castism just because of doing the marriage. Even within SC, a educated SC boy is very much relectunt to get marry with SC girl. Why? Whether VINAVU has taken any positive steps on this???? Here we always wanted critisize the other community/ people. First we have to stop this. Otherewise we will not have any kind of developments.
Let GOD give peace to her soul.
Mr Nanban!
If parents have affection and love their daughter, they will only ensure whether the boy whom she has chosen as her husband, –
1) has good conduct
2) well positioned economically.
They won’t worry whether he is from the same caste and, neglect all other desirable characteristics.
Do you mean to say that they should neglect the no. 1 and 2 and insist only on caste of the boy. And that, according to you, is the correct way to show affection to their daughter?
Why you, the Thevars, look for caste? To preserve the caste line as Kallapiran says here.
An educated SC man can marry any other SC? And a thevar girl can marry within her caste?
What happens to romance? Why shouldn’t young people fall in love and choose their life partner? If you do, you desire to kill freedom of mind and consciousness and want a society of slaves. If a person is denied liberty to choose his or her partner, then, it is a society of tyrants and killers.
Why does and educated SC become reluctant to marry within his caste?
The root of the problem lies in their historical conditions. Historically, they were deprived of good things of life and were treated like animals. They accepted such animal life. Now, they may be rising. Indeed, many have. But to undo the impact of their animalistic past, will take centuries more. Even today, they are not allowed inside temples; and stand equal to you the thevars although some of them are more educated and cultured than you.
The impact of the horrendous past is still seen: they are not handsome, they don’t dress handsomely, they don’t give importance to hygiene; they don’t have regulated life.
If an educated SC gets married within caste, even if the bride is also educated, chances are that he will get the same old caste group of people with all the attributes the society hates. Her uncles, cousins, nephews, aunts, nieces and all other in family circle and other relations are the same old dalits, with the same old habits. His children will fall into the same group and grow up with the same habits.
It will, therefore, take further centuries for them to evolve a refined and well regulated culture. Till then, it is natural for an educated SC to look for brides outside. Such things don’t happen to your Thevar community. Dalits boys and girls getting married outside their caste will sooner or later end the caste. Yes, dalits, as a caste, will become extinct. When it becomes extinct, everything associated with them, as I enlisted, will become a thing of the past. You, thevars, are scared to see such a society of well-clad and decent dalits, I am afraid.
பெற்ற அப்பனும் உடன் பிறவா ஒன்று விட்ட சகோதரனும் தங்கள் வீட்டு பெண்ணையே கோர கொலை செய்தது பெரிய விஷயமாக உங்களுக்கு தெரியவில்லை! ஆனால், தம்பதிகளின் பரஸ்பர காதல் மேட்டரை வேண்டுமென்றே மறைத்துவிட்டு, ‘ஓர் படித்துவிட்ட தலித் ஆண், ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்ய அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை’ என்று அநியாயமாக விஷயத்தை, விஷமத்துடன் திசை திருப்பி விடுகிறீர்கள். உங்களுக்கு, கொடுமையான கேவலமான மட்டமான சந்தர்ப்பவாதி புத்தி.
////We can’t eliminate the castism….//// — உங்களுக்கு தெரியுமா? இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் வெவ்வேறு ஜாதியிலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர்கள்தானே? எப்படி அவர்கள் தங்கள் ஜாதி படுகுழியிலிருந்து மீண்டு எழுந்து நிற்கிறார்கள். காரணம் இஸ்லாம்.! இப்போது எந்த முஸ்லிமிடமாயினும் போய் ‘என்ன ஜாதி’ என்று கேளுங்களேன். ‘தெரியாது’. எவருக்கும் தெரியாது. சத்தம் போடாமல் இப்படி சாதிப்பேயை அழித்துவிட்டு பெருமிதமாக வீற்றிருக்கும் முஸ்லிம்களை கண்டிப்பாய் மற்றவர்கள் முன்னுதாரணமாய் கொள்ளலாம். இப்படி தலித்கள் முஸ்லிம்களாய் மாறி அடுத்தகட்டத்துக்கு முன்னேறினாலும், அங்கே அதே வில்லன்கள் ஹிந்துத்வா ரூபத்தில் வந்து முஸ்லிம்கள் மீது கொடுஞ்செயல் புரிகிறார்கள். வாழ்க்கை என்பதே போராட்டமாகிவிட்டது ஒடுக்கப்பட்டவர்களுக்கு.!
இசுலாமில் சேரின் சாதிகள் போகும். பிளவுகள் போகா. தொழுகை மட்டுமே வாழ்க்கையா? இல்லையே. மனிதர்கள் சமூக மற்றும் தத்தம் தனிவாழ்க்கையில் பல மனிதர்களோடு உறவாடுகிறார்கள். அப்போது, இசுலாமில் அனைவரும் ஒன்று நினைத்து உறவாடுவதில்லை. பள்ளிவாசலில் உள்ளேதான் எல்லாரும் ஒன்று. அஃதாவது தொழுகையில். இறைவன் முன். அவ்வளுவுதான். நான் சொல்வது பொய்யென்றால், பாக்கிஸ்தானைப்பாருங்கள்…இந்தியாவிலுருந்த வந்த இசுலாமியரை (முகாஜியர்) அங்குள்ள பத்தான், மற்றும் பஞ்சாபி முஸ்லீம்கள் – இங்கு தலித்துகள் தேவர்களால் இழிவு படுத்தப்படுகிறார்களோ அதைப்போல – இழிவு படுத்தப்படுகிறார்கள். கராச்சியில் பலர் கொல்லபபடுகிறார்கள். இதற்கு ஊ\டகங்கள் சொல்லும் பெயர் sectarian strifes. பெயர்தான் வேறு. குணம் ஒன்றே. எம்மதமும் ஓரள்வுக்குத்தான் மனிதரை திருத்தமுடியும். அவனின் அடிப்படை மனப்போக்கான குழுமனப்பான்மையையும், அதை விடாப்பிடியாக பிடிக்கும் குணத்தையும் மாற்ற முடியாது.
பெயர் மாறும், செயல் மாறாது.
honor killing என்று கூகிளிட்டுப் பாருங்கள். வருவதில் முக்கால்வாசி, துலுக்கப்பயலுவ செய்யும் கொலை தான்…
இராக், பாகிஸ்தான், துருக்கி, காசா, போன்ற இடங்களிலிருந்து தான் வரும்.
நெத்தியடி முஹமத் அவர்களே,
கள்ளபிரான் பாதி உண்மையை மட்டுமே சொல்லியுள்ளார். மீதி இங்கு தாழ்த்தப்பட்டவர்கள், அருந்ததியர்கள், இன்னும் சில சாதியினர் முஸ்லீம் மதத்தினருக்கு மாறியுள்ளார்கள். ஆனால் அந்த கிராமத்திலோ அல்லது பகுதியிலோ தாழ்த்தப்பட்ட, அருந்ததியர்களுக்கு தனி பள்ளி வாசல், தனி சர்ச் கூட ஊரில் தனி பள்ளி வாசல் என்பது கூட இருக்கிறது. போய் பாருங்கள். அதற்கு எதற்கு கள்ளபிரான் பாகிஸ்தான் போகிறார் என்று தெரியவில்லை. நம்மூரிலே இருக்க அவர் காசு செலவு செய்து உயிரை பணயம் வைத்து பாகிஸ்தான் பயனம் செய்வானேன். நகரத்தில் உள்ள பள்ளி வாசல், சர்ச்சில் மட்டுமே அனைவரும் சென்று தொழுவதற்கு பிரார்தனை செய்வதற்கு அனுமதி உண்டு, கிராமத்தில் அவ்வாறு இல்லை. அங்கு பள்ளி வாசலோ அல்லது சர்ச்சோ சாதி ரீதியாகவே ஏற்படுத்தியிருக்கிறார்கள். அங்கு அனைத்து மதமும் அந்த சாதியினை உள்வாங்கிக் கொண்டுவிட்டது. காரணம் அவர்களின் வாழ்நிலை. ஊர் சேரி என்று பிரிந்திருப்பது.
இந்து மதம் இல்லாத மற்ற மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மூன்று ஒடுக்குமுறை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒன்று சாதிய ஒடுக்குமுறை, இந்த அரசின் ஒடுக்குமுறை, இன்னொன்று மத ஒடுக்குமுறை.
ஆனால் ஒன்று மறக்கக் கூடாது. இஸ்லாமில் கூட தன் மதத்தில் உள்ளவர்களை தவிர வேறு மதத்தில் காதலித்து திருமணம் செய்துகொள்பவரை கொள்கிறார்கள் என்பதை மறக்கக்கூடாது. அதையும் நாம் மாற்ற வேண்டும்.
கள்ள பிராமணனுக்கு,
இஸ்லாம் மதத்தில் இருக்கும் ஒருவன் ஒரு செயலை செய்தால் இஸ்லாம் சொல்லியதாகத்தான் இருக்கும் என்று அர்த்தம் கொள்வது முட்டாள்தனம் .அடிமைகளாய் வைத்து இருந்த கருப்பு இன மக்களை விடுதலை செய்ய சொல்லி அவர்களை திருமணமும் செய்ய சொல்லி அடிமைத்தனத்தையே ஒழித்து கட்டியது இஸ்லாம் .சாதி நிற பேதங்களுக்கு இஸ்லாத்தில் இடம் கிடையாது .ஒரு அய்யர் ஒரு தலித்தை கல்யாணம் பண்ண உங்களுடைய வேதத்தில் அனுமதி தந்து இருக்கிறதா?? இருக்கிறது என்றால் உரக்க சொல் ! இல்லையென்றால் பொத்தி கொண்டு இருக்கவும் .அதை விட்டு அவன் பாகிஸ்தானில் அதை செய்கிறான் இதை செய்கிறான் காண்பிக்க வேண்டியது .சமத்துவமே இல்லாத ஒரு மதத்தில் இருந்து கொண்டு அதை மறைத்து சங்கராச்சாரி போன்ற பொம்பளை பொறுக்கிகளை தலைவராக நீங்கள் இன்னும் மதித்து காலில் விழுந்து கும்பிடும் கேடு கேட்ட ஜென்மங்கள் .தூ !!!!
வெட்டிக்கு
உங்களை போன்ற ஆட்கள் ஒரு குற்றச்சாட்டை கூறும் போது ஆதாரத்தோடு எந்த இடத்தில் என்று கூற வேண்டும் .அவர்கள் அங்கே தனியாக தொழுகிறார்கள் என்று கதை விடுகிறாய் .அவர்கள் ஏரியாவில் அருகில் பள்ளிவாசல் இல்லையென்றால் அங்கு பள்ளிவாசல் கட்டி இருப்பார்கள் .அதனால் அது அவர்களுக்கென்று உள்ள தனி பள்ளிவாசல் உன்னை போன்ற கூமுட்டைகள் உளறலாம் .பள்ளிவாசல் என்று உருவாகி விட்டால் எந்த முஸ்லிமும் போய் தொழலாம்.கோவில் பிரச்சினைகளை போல நாறி போய் விடவில்லை. கிறித்துவ மதம் இந்தியாவில் முன்னேறாத காரணம் உருப்படாத ஜாதி பிரிவுகளை அப்படியே அந்த மதத்திலும் வைத்து கொண்டதுதான் .வந்துட்டானுக வெட்டிப்பெயலுங்க.
உங்களின் அவுளியா பி.ஜே. ஊரான தொண்டியிலேயே பக்கிர்ஷா ஜாதிக்கும் நாசுவன் (நாவிதர்) ஜாதிக்கும் தனிக் கல்லரை உள்ளதை நீங்கள் அறியாமல் இப்படி உளறுவது பூனை கண்ணைக் கட்டிக் கொண்டது போல் உள்ளது.
தோழர் சாதிக்,
பார்ப்பனியத்திடம் சரண்டைந்த இசுலாம் பதிவுக்கும் வந்து விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்.
தோழமையுடன்
கள்ளபிரான், உங்களின் மொட்டைத்தலையும் பொய், முழங்காலும் பொய், முடிச்சு மட்டும் எப்படி ஆகும் மெய்? சாதித்தகராரும் ஊர்த்தகராரும் ஒன்றா?
கண்ணில் காணும் உண்மையை கூறியுள்ளேன். எங்கோ கராச்சியாம், முஹாஜிராம், செக்டேரியன் ஸ்ட்ரைபாம். அதே பட்டாணியர்கள் தானே வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, மேல்விசாரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, பேரனாம்பெட் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ளனர்? என்ன நடந்து விட்டது அங்கேயெல்லாம்?.அவர்களில், இந்த தலைமுறையினர் தமிழ் கற்று தமிழ் முஸ்லிம்களை திருமணம் புரியவும் ஆரம்பித்து விட்டார்களே? முஸ்லிம் லீக்கில் தமிழக முஸ்லிம்களுக்கெல்லாம் தலைவராக சிலமுறை அவர்களுள் ஒருவர் ஆகவில்லையா? பலர் எம்.பி ஆகவில்லையா? ஏன் இந்த பொய்ப்பிரச்சாரம்?
இரண்டு தலைமுறைக்கு முன் தலித்தாக இருந்து இஸ்லாத்தை ஏற்றவரின் வாரிசு தான் எங்கள் ஊர் பள்ளிவாசல் தலைவர்.
ஒன்று புரிகிறது. தலித்தாகவே இருந்து மேல் சாதியின் கொலை மற்றும் அடக்குமுறையை அவர்கள் சகித்துக்கொள்ள வேண்டும், முஸ்லிம்களாய் மட்டும் மாறி சமத்துவம் பெற்றுவிடக்கூடாது..! என்னே உங்கள் எண்ணம்?
நீங்களே ஒப்புக்கொண்ட ‘இஸ்லாமிய வழிபாட்டில் சமத்துவம்’ என்பது கூட அவர்களுக்கு கிடைத்துவிடக்கூடாது! உங்கள் எண்ணத்தை ‘தலித் விடுதலை’ எனும் தீயில் எரித்துவிட்டு வாருங்கள். மீனாட்சிபுரம் மறந்து விட்டதா?
ஈராக் நாட்டிற்குள்ளும், ஈரான் – ஈராக் போரின் போதும், பாக்கிலும் நடக்கும் ஷியா- சன்னி மோதலில் எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற கணக்கு தெரியுமா நெத்தியடி முகமது? இசுரேலை அடியாளக வைத்திருக்கும் அமெரிக்காவை உச்சி மோருவதுதான் அரேபியஷேக்குகளின் வழக்கம். இப்படி பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு துரோகம் செய்யும் ஷேக்குகளை என்ன செய்ய? இசுலாம் கோட்பாட்டளவில் சமத்துவத்தை போதித்திருக்கிறதா என்பதை விட நடைமுறையில் இசுலாமியர்கள் தேச,இன,மொழி இந்தியாவில் சாதியாகவும் பிரிந்தே இருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் சுதாக்கா என்ற கிராமத்தில் ஒரு தலித் முசுலீமை “மேல்சாதி” முசுலீம் பெண் காதலித்தாள் என்ற குற்றத்திற்காக அந்த தலித் முசுலீம் இளைஞனை “மேல்சாதி” முசுலீம்கள் கொன்றுவிட்டார்கள். பத்து ஆண்டுகளுக்குமுன்னர் இந்த சம்பவம் புதிய கலாச்சாரத்தில் வந்திருக்கிறது. எனவே பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை இசுலாமும் ஏற்றுக்கொண்டுதான் இந்தியாவில் வாழவேண்டியிருக்கிறது
பு.ஜ வில் சொல்லப்பட்டவை எல்லாம் உண்மை என்று நம்பும் உங்கள் அடிவருடிகளிடம் சொல்ல வேண்டிய கதை. “தலித் முஸ்லிம்” என்ற பெயரே இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியாதவர்களின் செயலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பல்ல. முடிந்தால் இஸ்லாம் என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். அதற்கப்புறம் இஸ்லாமிய கோட்பாடுகளிலிருந்து மாருபடிகிரவர்களை நம் இருவரும் சேர்ந்து எதிர்ப்போம். இதெல்லாம்விட, சாதி சண்டைக்கும் புரிந்துகொள்ளலில் ஏற்பட்ட பிரிவினை சண்டைக்கும் வித்தியாசம் நன்கு தெரிந்திருந்தும் இவ்விஷயத்தில் எழுத்து வியாபாரம் & பிழைப்புவாதம் புரியும் வினவு…. என் மனதில் ஒரு மூலையில் தங்களுக்காக கட்டி வைத்திருந்த சிறு குடிலையும் உங்கள் வஞ்சக வாந்தியால் அசிங்கப்படுத்தி பிய்த்தெறிந்து விட்டீர்கள்.
நெத்தியடி முகமது உண்மைகள் நமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவை. அதை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை உங்களிடம் இல்லை. பார்ப்பனியத்தால் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் தலித் மக்களை மதமாற்றம் ஒன்றும் விடுதலை செய்து விடாது. அதை நீங்கள் வலியுறுத்தியதாலேயே வரலாற்று உண்மைகளை எடுத்துச் சொன்னோம். இதனாலேயே நீங்கள் இவ்வளவு ஆத்திரம் அடைவீர்கள் என்றால் உங்களுக்கும் ஆதிக்க சாதி சிந்தனை உள்ளவர்களுக்கும் என்ன வேறுபாடு என்று விளக்க முடியுமா? உங்கள் குடும்பத்து பெண்ணை ஒரு இந்து தலித்துக்கு மணம் செய்து கொடுக்க நீங்கள் தயாரா என்ற கேள்வியை நீங்களாகவே கேட்டுக்கொண்டால் நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கே புரியும்.
ஒரு ஆச்சார பிராமணரை வீட்டிற்கு-விருந்திற்கு வரவழைத்து மட்டன் பிரியாணி போடும் ‘சமத்துவம்’ இஸ்லாத்தில் இல்லை. அவருக்கு எதில் உடன்பாடில்லையோ அதை விருந்துக்கு அழைத்து உபசரிப்பவர் தவிர்த்தல் சான்றோர் பண்பாடு. அதுதான் இஸ்லாமிய பண்பாடு.அந்த இந்து தலித் முஸ்லிமாக மாறினால் எந்த முஸ்லிம் வீட்டு பெண்ணையும் மணக்கலாம். அவரே, ஒரு இந்து பிராமண பெண்ணை மணக்க இஸ்லாத்தில் முடியாது. மதமும் சாதியும் ஒன்று என்று குழப்பிக்கொண்டு திரியும் வினவு, உங்கள் மீது கோபம் வரவில்லை. பரிதாபம் வருகிறது. சாட்சாத் சந்தர்ப்பவாதி-பிழைப்புவாதி அரசியல்வாதிகளைப்போலவே உங்கள் கருத்தும் இருக்கிறது. உண்மையை மறைக்க உங்களால் முடியாது. பிழைத்து போங்கள்.
அப்படி மதம் மாறாமல் ஒரு இந்து தலித் இளைஞனும், ஒரு முசுலீம் பெண்ணும் காதலித்து பதிவுத் திருமணம் செய்கிறார்கள் எனில் உங்கள் நிலை என்ன? சுற்றி வளைக்காமல் நேரடியாக பதில் சொல்லுங்கள். ஸ்ரீபிரியாவின் தந்தை தன் மகளையே கொலை செய்யத் துணிந்தார் என்பதை நினைவில் வைத்து பதிலளியுங்கள்.
நீங்களாகவே ஏதாவது கற்பனை செய்து கொள்வது அல்லது பம்பாய் படம் பார்த்துவிட்டு இஸ்லாம் திருமணம் பற்றி என்ன கூறுகிறது என்று அறிந்து கொள்ள வேண்டியது. கொடுமை சார். இறைகட்டளைக்கு பயந்து இஸ்லாமியனாக வாழ நினைப்பவன் அல்லது நினைப்பவள் வேற்று மதத்தவரை காதலிக்க மாட்டார். அப்படியே காதலித்து விட்டாலும் இருவரும் முஸ்லிமாய் இருந்தால் மட்டுமே அந்த திருமணம் இஸ்லாமிய பதிவு புத்தகத்தில் ஏறும். இல்லை என்றால் அத்திருமணம் நடைபெற அரசு பதிவு புத்தகம் உள்ளது. அதற்குப்பின் அவர்களை தண்டிக்கும் உரிமை எந்த முஸ்லிமுக்கும் இல்லை. இறைவன் பார்த்துக்கொள்வான் என்று அவரவர், அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு சென்று விட வேண்டியது தான். அந்த தம்பதிகள் கூட நாளை முஸ்லிம்களாய் மாறிவிடலாம். கொலை செய்து விட்டால்…? அடுத்தவரை அநியாயமாய் கொலை செய்வது என்பது, அந்த திருமணத்தைவிட இறைவனிடம் மிகப்பெரியபாவம். அதற்கு நிரந்தர நரகம். கொலை செய்யும் காட்டுமிராண்டித்தனமேல்லாம் இஸ்லாம் கூறுவதாய் உங்களின் கட்டுரையிலோ, இஸ்லாமிய எதிரிகளின் நாவல்களிலோ, ஹிந்துத்துவா இயக்குனர் படங்களிலோதான் வரும். தனிமனிதனுக்கு அடுத்தவனை தண்டிக்க எந்த உரிமையும் இல்லை என இஸ்லாம் மிக மிக தெளிவாக கூறிவிட்டது. சில மாதங்கள் கழித்து மீண்டும் முஸ்லிம்களில் சிலர் தவறு செய்யும்கால் நீங்கள் இதை தெரியாதது போல கேட்பீர்கள். அப்போதும் என்பதில் இதுதான்.
//இறைகட்டளைக்கு பயந்து இஸ்லாமியனாக வாழ நினைப்பவன் அல்லது நினைப்பவள் வேற்று மதத்தவரை காதலிக்க மாட்டார்.//
இறை கடடளை என்ன ? வேற்று மதத்தவன் வெறுக்குத்தகுந்தவன் என்றா? வேற்று மதத்தவன் ஆண் இல்லையென்றா? வேற்று மதத்தவன் காதலிக்கத் தகுந்தவன் இல்லை இல்லவே இல்லை? இசுலாமியன் ஆன் எல்லா நற்குணங்களும் வந்து ஒரு ஆண் ஒரு இசுலாமியப்பெண்ணின் காதலுக்குத் தகுதியுடைவனாகிறானா? எல்லவற்றிர்க்கும் பதில்கள் ‘ஆம்’ என்றால், வேற்று மதத்தவர்கள் மனிதர்கள் அல்ல; விலங்குகள்.
ஓரிறை கொள்கை இஸ்லாம் .பலகடவுள் கொள்கை இந்து மதம் .நாங்கள் பசும்பாலை உடலுக்கு நல்லது குடிக்கலாம் என்கிறோம் .நீங்கள் அதன் மூத்திரத்தையும் நல்லது குடிக்கலாம் என்கிறீர்கள் .எங்களுக்கும் பால் மட்டுமே நல்லது என்பதை நீங்களும் ஒப்புக்கொண்டால் நாம் இருவரும் ஒரே கொள்கை .மூத்திரமும் நல்லது குடிக்கலாம் என்பதை நான் ஒப்புக்கொண்டால் நானும் உன்னைப்போல் ஒருவன் .அப்புறம் எப்படியப்பா நான் முஸ்லிமாக இருக்க முடியும் ?
Mr. Nethiyadi Muhammad & Mr. Nadodi,
‘மனிதனை மனிதன் சமமாக மதிக்க வேண்டும்’, ‘கடவுள் என்று யாருமே இல்லை’ போன்ற கொள்கைகள் புத்த மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இல்லை என்று கருதி தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்தமதத்தை பின்பற்றினார் (புத்தர் கடைப்பிடித்த பண்புகளை மட்டும்தான்… இன்றைய புத்த மத வெறியர்கள் போற்றும் சடங்கு முறைகளை அல்ல). அவருடைய காலத்தில் இந்து பிராமணிய மத வெறியால் ஒடுக்கப்பட்ட மக்களையும் அதிலிருந்து விடுபட புத்த மதத்திற்கு மாறச் சொன்னார். ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொல்லவில்லை?
லெனினுக்கு,
பெரியார் இஸ்லாம் முற்போக்கானது. இருக்கும் மதங்களிலே இஸ்லாம்தான் சரியானது, ஆகையால் எல்லோரும் இஸ்லாத்திற்கு மாறுங்கள் என்று கூறினார். இது ஏன் அய்யா விளக்குங்கள். இது சரியா தவறா.
Mr. குசேலன்,
பெரியார் அவர்களுக்கும் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கும் மதம் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.
பெரியார் அவர்களின் அடிப்படை நோக்கம் ஆரிய எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு. கிறிஸ்துவ மதமும் இஸ்லாமிய மதமும் “ஒரு கடவுள் தான் உண்டு; மக்களில் ஒரு ஜாதிதான் உண்டு” என்கிறது என்று சொன்னார் பெரியார். ஆனாலும் இந்தியாவில் கிறிஸ்துவ மதத்திலும் உட்பிரிவு ஜாதிகள் கடைப்பிடிக்கப்படுகிறது; ஆனால் இஸ்லாம் மதம் வேத இந்து முறையை வேரிலிருந்தே எதிர்க்கிறது. அது ஆரியர்களுக்கு எதிரான மதம் என்றார் பெரியார். அதனால் இந்துக்களில் இருந்து வெளியேறுபவர்கள் இஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுக்கலாம் என்றார் பெரியார். மேலும் இஸ்லாம் மதத்தை விட வேறு சிறந்த ஒன்று இருந்தாலும் அதை பின்பற்றலாம் என்றார்.
ஆனால் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அடிப்படை நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம். தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக அரசியல் தளத்தில் முன்னேற்றமடைய இந்து மதம் தடையாக இருப்பதை உணர்ந்திருந்தார். 1950ஆம் ஆண்டு மதம் பற்றி டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூறியது:
“It is impossible to take each of the other religions and compare it with Buddhism in detail. All I can do is put my conclusion in a summary form.
I maintain:
1. That society must have either the sanction of law or the sanction of morality to hold it together. Without either, society is sure to go to pieces.
2. That religion is defined in the first proposition must be in accord with science. Religion is bound to lose respect and therefore become the subject of ridicule and thereby not merely lose its force as a governing principle of life but might in course of time disintegrate and lapse, if it is not in accord with science. In other words, religion if it is to function, must be in accord with reason which is merely another name for science.
3. That religion as a code of social morality, must recognise the fundamental tenets of Liberty, Equality and Fraternity. Unless a religion recognises these three fundamental principles of social life, religion will be doomed.
4. That religion must not sanctify or ennoble poverty. Renunciation of riches by those who have it may be a blessed state. But poverty can never be. To declare poverty to be a blessed state is to pervert religion, to perpetuate vice and crime, to consent to make earth a living hell.
Which religion fulfills these requirements……It may be that one of the existing religious satisfies one of these tests, some two. Question is – Is there any religion which satisfies all these tests? So far as I know the only religion which satisfies all these tests is Buddhism. In other words, Buddhism is the only religion which the world can have.”
(Source: ‘Ambedkar on Religion’, Edited by Nagendra Kr. Singh, Page 440, Anmol Publications Pvt Ltd, New Delhi, 2000).
லெனின் அவர்களுக்கு,
மேலே இது பதிந்துவிட்டது. ஆனால் உங்கள் கேள்விக்கு கீழேயே இருக்க வேண்டும் என்று மீண்டும் உங்கள் கேள்விக்கு கீழேயே பதிலை தருகிறேன். மீண்டும் நான் அதே கேள்வியை கேட்க வேண்டியது இருக்கிறது. நீங்கள் சொல்லியதை நானே சொல்லி விட்டேனே. அவர்கள் வைக்கும் தீர்வை பின்பற்றலாமா? யாருடையதை பின்பற்றுவது என்பதை விளக்கச் சொல்லிதான் கேட்டேன். நீங்கள் நான் சொன்னதையே இன்னும் விளக்கமாக கூறி இருக்கிறீர்கள்.
வேண்டுமானாலும் நீங்கள் எழுதியதை இப்படி புரிந்துகொள்ளலாமா. தாழ்த்தப்பட்டவர்கள் புத்தமதத்திற்கு மாறலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா. தாழ்த்தப்பட்டவர்கள் அலலாதவர்கள் முஸ்லீம் மதத்துக்கோ அதைவிட மேலானது என்று இருந்தால் அதற்கோ மாறலாம் என்றும் கொள்ளலாமா?
//That religion as a code of social morality, must recognise the fundamental tenets of Liberty, Equality and Fraternity. Unless a religion recognises these three fundamental principles of social life, religion will be doomed.//
கடவுள் தத்துவம் எப்போது மதமாக மாறுகிறது? ஒடுக்கும் அரசு அதை தத்து எடுத்துக்கொள்ளும்போது, அல்லது அந்தத் தத்துவம் அரசுக்கு சுரண்டலுக்கு ஒரு சித்தாந்தக் கருவியாக பயன்படும்போது. மதம் நிறுவனமயமாகிறது. அரசுக்கு ஒரு சிந்தனா ஒடுக்குமுறைக்கு கருவியாகும் போது நிறுவனமயமாகிறது. அங்கு இந்த் விடுதலை, சுதந்திரம், சமத்துவம் என்பதெல்லாம் சாத்தியமில்லை. அந்த சமத்துவம் என்பது ஒடுக்குபவருக்கு இடையிலான சமத்துவம், ஒடுக்கப்படுபவர்களுக்கு இடையிலான சமத்துவம். ஒடுக்குபவனுக்கும், ஒடுக்கப்படுபவனுக்கும் இடையிலான சமத்துவம் இல்லை. இதை புரிந்துகொள்ளவில்லை என்றால் மதமே இல்லை. மற்றதெல்லாம் நம் ஆசையே.
வர்க்க சுரண்டல் இருக்கும்வரை மதம் இருந்தே தீரும். இதை விடுத்து அதில் சீர்த்திருத்தம் கோரலாமே தவிர, முழு சமத்துவத்தை கோர முடியாது. இதனடிப்படையிலேயே கூறுகிறேன். நீங்கள் எந்த வழியை தேர்ந்தெடுப்பது என்று வினவுங்கள் கேட்டு?
Mr. குசேலன்,
//வேண்டுமானாலும் நீங்கள் எழுதியதை இப்படி புரிந்துகொள்ளலாமா. தாழ்த்தப்பட்டவர்கள் புத்தமதத்திற்கு மாறலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா. தாழ்த்தப்பட்டவர்கள் அலலாதவர்கள் முஸ்லீம் மதத்துக்கோ அதைவிட மேலானது என்று இருந்தால் அதற்கோ மாறலாம் என்றும் கொள்ளலாமா?//
அப்படியல்ல. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ஆராய்ச்சியின் படி எந்த ஒரு மதமும் மனிதனை ஒடுக்கி அடிமைப்படுத்துவதை ஊக்குவிக்கக் கூடாது, அல்லது அந்த மதத்தில் எந்த ஒரு இடத்திலும் ஒரு வரியேனும் சாதி பற்றி சொல்லியிருக்கக் கூடாது. அந்த வகையில் பார்க்கும் போது இஸ்லாமிலும் சாதிப் பிரிவுகள் கடைப்பிடிக்கப்பட்டதை இங்கு வினவு தளத்தில் வாதாடும் பலரும் ஆதாரத்துடன் கூறுகிறார்கள். அப்படி இஸ்லாமியம் சாதியையே ஊக்குவிக்கவில்லை என்றால் டாக்டர் அம்பேத்கர் அவர்களே அவரின் ஆராய்ச்சியின் முடிவில் அதை சொல்லியிருந்திருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. அப்படியிருக்கும் பொருட்டு பெரியார் அவர்கள் இஸ்லாமியத்தை பின்பற்றுங்கள் என்று சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாது.
லெனினுக்கு நன்றி,
ஒரு பாதி பதில் என்றாலும் நேரடியாக உங்கள் கருத்தை வைத்ததற்கு நன்றி. ஆனால் முதல் பாதி
//தாழ்த்தப்பட்டவர்கள் புத்தமதத்திற்கு மாறலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா//
என்பது குறித்து எதுவும் கூறவில்லை.
அப்படியும் இல்லையென்றால் உங்களுக்கு வேறு மாற்றுக் கருத்து இருப்பின் வைக்கவும். விவாதம் ஆரோகியமாக இருக்கும். தெளிவான விவாதம் அனைவரும் தொடங்க ஏதுவாக இருக்கும்.
லெனினுக்கு நன்றி,
ஒரு பாதி பதில் என்றாலும் நேரடியாக உங்கள் கருத்தை வைத்ததற்கு நன்றி. ஆனால் முதல் பாதி
//தாழ்த்தப்பட்டவர்கள் புத்தமதத்திற்கு மாறலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா//
என்பது குறித்து எதுவும் கூறவில்லை.
அப்படியும் இல்லையென்றால் உங்களுக்கு வேறு மாற்றுக் கருத்து இருப்பின் வைக்கவும். விவாதம் ஆரோகியமாக இருக்கும். தெளிவான விவாதம் அனைவரும் தொடங்க ஏதுவாக இருக்கும்.
இதன் தொடர்ச்சியாக பல விவாதம் இருக்கிறது. இது அவர்கள் என்ன சொன்னது என்பதும், அதை நீங்கள் எதை ஆதரிக்கிறீர்கள் என்பதும், அதன் பிறகு அவர்கள் சொல்லியது போல் இருக்கிறதா, உண்மையில் வேறானதா என்பதையும் குறித்து விவாதம் நடத்த வேண்டியுள்ளது.
Mr. குசேலன்,
//தாழ்த்தப்பட்டவர்கள் புத்தமதத்திற்கு மாறலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா//
புத்தர் தத்துவத்தில் கடவுளுக்கு இடமே இல்லை. ஆனால் புத்தருக்குப்பின் வந்த புத்த ஞானிகள் புத்த தத்துவத்தையே மாற்றி அமைத்தனர். புத்தருக்குப் பிறகு புத்தமதத்தில் பிராமணீயத்தை எதிர்த்து வந்த பற்பல அர்த்தமற்ற சடங்குகளும், மூடநம்பிக்கைகளும், மெல்ல மெல்ல புகுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது புத்த மதம் தீண்டாமையை ஒழிக்கும் என்பதில் நம்பிக்கையில்லை.
ஒருமுறை புத்த மாநாட்டில் ‘கம்யூனிசமும், புத்த மதமும்’ என்ற தலைப்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உரையாற்றினார். அவ்வுரையில் இருந்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கம்யூனிசமும், கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமையின் தீராப் பிரச்சனைக்கு தீர்வு காணும் சக்தியுடையது என்பதை மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் அவர் கூறும் மருந்து தீராத் தலைவலியாகிய தீண்டாமையை ஒழிக்க தக்க மருந்தல்ல என்பதைச் சரித்திரம் நிரூபித்துவிட்டது.
எனவே தற்போதுள்ள நடைமுறை சமூகத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் விருப்பப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்டத்தில் இன்னும் அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.
/இறை கடடளை என்ன ? வேற்று மதத்தவன் வெறுக்குத்தகுந்தவன் என்றா? வேற்று மதத்தவன் ஆண் இல்லையென்றா? வேற்று மதத்தவன் காதலிக்கத் தகுந்தவன் இல்லை இல்லவே இல்லை? இசுலாமியன் ஆன் எல்லா நற்குணங்களும் வந்து ஒரு ஆண் ஒரு இசுலாமியப்பெண்ணின் காதலுக்குத் தகுதியுடைவனாகிறானா? எல்லவற்றிர்க்கும் பதில்கள் ‘ஆம்’ என்றால், வேற்று மதத்தவர்கள் மனிதர்கள் அல்ல; விலங்குகள்.//
பார்ப்பன மதத்தின் இறைக்கட்டளை அல்லது தர்மம் என்ன? வேற்று சாதியினர் கருவறைக்குள் செல்வது கூடாது என்பதா? வேற்று மொழியில் கடவுளுக்கு காதில் ஏறாது என்பதா? வேற்று சாதியினருடன் கலந்து கொள்வது புனிதமல்ல என்பதா? குறைந்த விலை பசுவை சாப்பிடுவது தாயைச் சாப்பிடுவது என்பதா அப்படிச் செய்தால் அவர்களின் தோலை உரிப்பதுதான் சரி என்பதா?
இதற்கு பதில் ஆம் எனில், ஒடுக்கப்பட்ட சாதியினர் மனிதர்கள் அல்ல, விலங்குகள்(அக்கார்டிங் டூ பார்ப்பனிய இந்து மதம்)
I do not see any difference between Nethiyadi Mohamad and Bin Ladan. SHIT.
அப்போ உங்களுக்கும் மோடிக்கும் என்ன வித்தியாசம்??
இஸ்லாமிய அடிப்படையில் உலக மக்கள் அனைவரும் ஒரு அப்பா அம்மா பெற்ற சந்ததியே.! அப்படி பார்க்கும்போது எங்கேயா வந்தது சாதி? ராமகோபாலனும் திருமாவளவனும் சகோதரர்களே. வினவும் முத்துராமலிங்க தேவரும் சகோதரர்களே. பின்லேடனும் புஷ்ஷும் சகோதரர்களே. இவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் சகோதரர்களே. எப்படி வரும் சாதிப்பிரிவினை முஸ்லிம்களின் மனதில்? நம் நாட்டு முஸ்லிம்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா? எங்கே அவர்களின் சாதி அடையாளம்? எப்படி காணாமல் போனது? பிறப்பின் அடிப்படை எண்ணம் மாறியது- அதனால் எல்லாம் மாறியது. இது தானே உண்மை?
அப்படியா முகம்முது, ரொம்ப சந்தோஷம்… அப்போ உங்க சம்சாரம் உங்களுக்கு அக்கா முறையா? தங்கச்சி முறையா?
Hai pattakaththi, it becomes usual for you when you are appearing only against me with some stupid comments and getting chappal blast from somebody else. ////உங்க சம்சாரம் உங்களுக்கு அக்கா முறையா? தங்கச்சி முறையா?//// haa haa haa….!
Now, she is my wife.
But, my wife is the relation for you…!?!?!? How ? Your’s great great great great great great great great great grand father’s father-in-law’s great great great great great great great great great grand daughter is my wife. So, you are my MAMA. Hai mama how are you? Tell my salaams to my maami. Hope I see you with some sensible comments next time. Bye…Bye.
பட்டாகத்தியின் கேள்வி, முகமதுவின் பதிலை விட பொருள் உள்ளதாகவே உள்ளது…
இதுபோன்ற தேவையற்ற, தனிப்பட்ட விவாதங்களை தவிர்க்கவும்
A wife can be all to her husband: a sister and a wife and a friend. Similarly, a husband to his wife: a brother and a husband and a friend. Only thing that is added to the role of a husband or a wife is physical relationship or companionship. In Ramayanam, (Pattaakaathi Bala is a Hindu), Raman is said to be brotherly to his wife on many occasions. Kambar writes that he plays that role also. As a brother or as a sister, we relate to the person we married on a yet another unique plane, which cements the relationship deeper. Raman did it well. Ramayananm teaches us that a man should treat his wife as his sister also. If a man dons the role of a brother, a friend in addition to a husband to give physical companionship to his wife, his marriage will satisfy both partners. Dittor for a woman.
Levy-Strauss who died two days before, is a formidable French Intellectual who deeply impacted the thinking of modern society. He is an anthropololist and his field of study is to explore the origin and growth of cultures of people of different society.
In his explorations, the institutions of marriage was invented by tribal soceities to prevent incestuous relationship. In other words, incestuous relationship was the basis we all came into being in the world. For millennia in the history of mankind, cultures and civilizations were not developed. People lived in unregulated life which included incestuous relationship
அட அப்போ அறிவியல் ஆராய்ச்சியில் நியாண்டர்தால் மனிதர்கள், மனிதருக்கும் குரங்கிற்கும் மூதாதை விலங்கு என பல படிமங்களை கண்டு பிடித்து உள்ளனர்.. அப்போ அதெல்லாம் பொய்யா..? அடடே… அப்போ மனிதனில் மட்டும் ஆண் பெண் என இரண்டு பேரை மட்டும் படைத்த இறைவன்…எதற்கு பல விலங்குகளை ஒன்றாக படைத்தான்..
////// மனிதருக்கும் குரங்கிற்கும் மூதாதை விலங்கு….. அப்போ அதெல்லாம் பொய்யா..? அடடே… ////// — ஹலோ பகத், kindly update your science asper latest current discoveries.
க்ரோமோசோம் -ஜீனோம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவை, டார்வினுக்கு கொள்ளி வைத்துவிட்டு காரியம் பண்ணிவிட்டன. ஜீனோம் தியரி அறிவியல் ரீதியாய் ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டது. (டார்விநிசம் போல பிராக்டிகாளாய் நிரூபிக்கப்படாத தியரி அல்ல). இதன்படி இதுவரை பிறந்த இனி பிறக்க இருக்கிற உலக மனித சமுதாயம் அனைவரும் ஒரே ஒரு ஆப்பிரிக்க தாயின் வயிற்றில் உதித்த சந்ததியே. அப்படியிருக்க தலையிலிருந்து பிறந்தான், காலிலிருந்து பிறந்தான் என்பதெல்லாம் வெத்துவேட்டு. அந்த ஆப்பிரிக்கத்தாய்தான் ஹவ்வா என்றாலோ, அவரை கற்பமாக்கிய ஆண் ஆதம் என்றாலோ தவறில்லை. சாதி ஒழிய வேண்டுமானால் இந்த ஜீனோம் அறிவியல் உண்மையை ஏற்க வேண்டும். இதை இஸ்லாம் பல நூற்றாண்டாய் இங்கே நடைமுறை படுத்திக்காட்டி உள்ளது என்ற உண்மையையும் மறுக்கக்கூடாது.
Nethiyadi Mohammad…
1. Genome theory is consistent with Darwin’s theory of evolution. They are not different branches of science. In fact, Darwin’s theory of evolution is the basis for any genetic research.
2. The evidence for Darwinism is all around you, unlike what is taught in religious institutions all over the world. The theory of evolution has been proven beyond doubt in over 150 years of testing and research whereas the religious stories remain just that: stories.
3. No single woman gave birth in Africa to start the human race.
4. Darwin did not say different races of men were created from different parts of the body. It is absolutely stupid.
5. Islam, or any other religion, has not proven anything regarding the origin of man.
You are either a pathological liar or seriously dumb to post so much bullshit with such confidence; I suspect you are both.
நெத்தியடி முஹம்மத்//
மற்றவர்களை science update செய்ய சொல்லும் நீங்கள் அறிவியல் அறிவில் முன்னோக்கி இருந்திருந்தால் இஸ்லாம் ‘காலவதியான கோட்பாடு’ என்று அறிந்திருப்பீர்கள். அன்றைய சமூகத்தில் இஸ்லாம் தனிமனித ஒழுக்கத்தை போதிப்பதற்காக இருந்திருக்கலாம். ஆனால் இன்று யதார்த்த உலகில் அரசியலில் சமுகத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் போது இஸ்லாம் இன்றைக்கும் பொருந்தும் என்று அப்பாவித்தனமாய் கூறுவது, பழங்காலத்தில் வந்திருந்த நோய்க்கு பழங்காலத்தில் கண்டுபிடிக்கபட்ட மருந்தை வைத்து கொண்டு, இன்று புதிது புதிதாய் வந்திருக்கும் பறவைகாய்ச்சல், பன்றிகாய்ச்சல்களுக்கெல்லாம் பயன்படும் என்று சொல்வது போல் உள்ளது.
பி.கு : பன்றிகாய்ச்சல் – ”இஸ்லாமிய பார்வை” என்று இஸ்லாத்தில் பன்றிகாய்ச்சலை சொல்லி இருக்கிறது என்று சொல்பவர்களும் உண்டு.
நண்பர் முஹமது, தற்போதைய DNA ஆய்வுகளில் தெரியவந்துள்ளது, இதுதான் “DNA studies suggest that all humans today descend from a group of African ancestors who—about 60,000 years ago” .
மற்றும் குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்ற கூற்று தவறானது. குரங்கும் , மனிதனும் ஒரே மூதாதையரை (Common Ancestor) ஒரு புள்ளியில் கொண்டு இருந்தனர். உண்மையில் பரிமாண வளர்ச்சி என்பது ஒரு மரத்தின் கிளைகளை போல, மைய கிளையில் இருந்து பிரிந்து பிரிந்து பல சிறிய கிளைகள் உள்ளது போலதான்.
முஹம்மது அவர்களே,
உங்களை நினைத்தால் பரிதாபமாக வருகிறது. நீங்கள் மதம் மாறினால் அவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்றீர்கள். அப்படி இல்லை என்றால் அவர்கள் முஸ்லீமே இல்லை என்கிறீர்கள்.
//இறைகட்டளைக்கு பயந்து இஸ்லாமியனாக வாழ நினைப்பவன் அல்லது நினைப்பவள் வேற்று மதத்தவரை காதலிக்க மாட்டார். அப்படியே காதலித்து விட்டாலும் இருவரும் முஸ்லிமாய் இருந்தால் மட்டுமே அந்த திருமணம் இஸ்லாமிய பதிவு புத்தகத்தில் ஏறும். இல்லை என்றால் அத்திருமணம் நடைபெற அரசு பதிவு புத்தகம் உள்ளது. அதற்குப்பின் அவர்களை தண்டிக்கும் உரிமை எந்த முஸ்லிமுக்கும் இல்லை. இறைவன் பார்த்துக்கொள்வான் என்று அவரவர், அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு சென்று விட வேண்டியது தான்.//
முஸ்லீமாக இருந்தால் தண்டிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு என்று நினைக்கிறீர்களா? இந்த சந்தேகத்தைப் போக்கவும்.
அது இருக்கட்டும் அதை ஆபத்தான விஷயம் உங்கள் கருத்தில் இருக்கிறது. எதுவென்று காண்பிக்கிறேன்.
//ராமகோபாலனும் திருமாவளவனும் சகோதரர்களே. வினவும் முத்துராமலிங்க தேவரும் சகோதரர்களே. பின்லேடனும் புஷ்ஷும் சகோதரர்களே. இவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் சகோதரர்களே.//
உங்களுக்கு ஒடுக்குபவனுக்கும் ஒடுக்கப்படுபவருக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கிறீர்கள். இன்னும் சொல்லவேண்டுமானால் இன்னும் நீங்கள் அறியும் பருவத்தை (அறிவு அடிப்படையில்) அடைய வில்லை என்றே. நினைக்கிறேன். இவர்கள் அனைவரும் எப்படி சகோதரராக தெரிகிறார்கள் என்று தெரியவில்லை. மதத்தைப் பற்றி விவாதம் நடத்துபவர்கள் மீது உங்களுக்கு கொபம் இருக்கிறது. ஆனால் அந்த மதத்தை சேர்ந்தவர்களை கொல்பவர்களைப் பார்த்து சகோதரர்கள் என்கிறீர்கள்.
ஒன்று தெரிகிறது. ஆரோகியமாக உண்மையை விமர்சனம் செய்பவர்கள் உங்கள் எதிரியிகள். உங்களிடம் பேசவே பேசாமல் உங்களைக் கொள்கிற ராமகோபாலன் போன்ற இந்து வெறியர்களும், புஷ்ஷும் உங்கள் சகோதரர்கள். நல்ல விளக்கம். இதில் கோபம் வேறு வருகிறது. உங்கள் அறியாமையின் உச்சம் எவ்வளவு என்று தெரிகிறது. அனேகமாக உலகத்தை அறியாமல் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதி வைத்த புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு இன்றுள்ள நிஜத்தை அறியாமல் பேதையாக இருக்கிறீர்கள் என்று வருந்துகிறேன்.
உங்களுக்கு அனேகமாக குறைந்த பட்ச கல்வி தேவைப்படுகிறது. அடிமைத் தளையிலிருந்து விடுதலைக்காக இஸ்லாம் போராடியாதாக கூறுகிறீர்கள். நீங்களோ இஸ்லாமியத்தை தழுவதாக கூறிகொண்டு அந்த அடிமைமுறையினை ஒழிக்க கூறாமல் அவர்களுடன் சகோதரராக அடிமையாக இருப்பீர்கள். இங்கே வந்து நீஙக்ள் சாதி அடிமையை ஒழிப்பதாக நடிக்கிறீர்கள். உங்கள் நோக்கம் சாதி ஒழிப்பது அல்ல. இந்த சாதி அடிமைத் தனத்திலிருந்து புஷ்ஷுக்கு அடிமையாக்க முயற்சிக்கிறீர்கள். இதைத்தான் அன்றைய அடிமையும் செய்வான். அதாவது இவன் கொடுமையான எஜமானனாக இருக்கிறானே என்று அங்கிருந்து தப்பித்து இன்னொரு இடத்திற்கு அடிமையாக மாட்டிக்கொள்வானாம். அடிமைக்கு தப்பிக்க மட்டுமே தெரியும் அந்த அடிமை முறையினையே ஒழித்தக் கட்டத் தெரியாது. ஏனென்றால் அந்த அடிமை முறையினை ஒழித்துகட்டுவதற்கு அவனுக்கு அறிவும் கிடையாது (சமூக அறிவு). ஆகையால் அவன் விடுதலை என்பது அங்கிருந்து தப்பிப்பது என்பது மட்டுமே சொல்வான். அதைதான் நீங்கள் சாதி ஒழிப்பிற்கு வழிகாட்டி நிற்கிறீர்கள்.
இங்கே எங்கேயும் சாதி என்பது மதத்தின் அடிப்படையில் மட்டும் நிற்கவில்லை. அப்படி நின்றிருந்தால் கிருத்துவத்தில் எப்படி சாதி வந்திருக்க முடியும். ஏன் இஸ்லாமை தழுவிய ஊர்களில் கூட ஊர் சேரி என்று பிரிந்து இருப்பதற்கு காரணம் என்ன? மீனாட்சிபுரத்தை எடுத்துக்காட்டாக கூறுகிறீர்களே அங்கேயும் ஊர் சேரி இருக்கக் காரணம் என்ன? இது மதத்தால் ஏற்பட்டது அல்ல. சமூகத்தால் ஏற்பட்டதை மதம் காப்பாற்றுகிறது. அந்த மதத்தில் உள்ள சாதியில் உள்ள ஆதிக்க வெறியர்கள் அந்த ஆதிக்கத்தில் உண்மையில் லாபமடைகிறவர்கள். ஆளும் கும்பலாக இருக்கிற சிலப் பேர்தான் காரணம். ஆகையால் தான் அந்த சமூக கட்டமைப்பை உடைத்தாலே சாதி ஒழியும். அதை விடுத்து அங்கிருந்து ஓடிப்போனாலோ (மதம்) அல்லது ஒரு இறைவனையே வணங்கினாலும் தீர்வு கிடையாது. ஊர் சேரி என்பதை ஒழிக்க முடியாது.
இதெயெல்லாம் அறிந்து கொள்ள இன்றைய சமூகத்தை படிக்கவும். இவன் உருவாக்கினான். இவனுக்காக உருவாக்கினான் என்ற வரலாற்றாடோ, இன்று எப்படி இந்த சாதி என்பது இருக்கிறது என்பதை அறியுங்கள். ஊர் சேரி ஏன் இருக்கிறது என்று அறியுங்கள். மதம் மாறினால் கூட அங்கு வழிபடும் உரிமை சமமாகலாமே தவிர நீங்கள் வாழும் கிராமங்களில் (நகரங்களில், மாநகரங்களில் அல்ல) ஊர் சேரி என்று இருப்பதை ஒழிக்க முடியாது.
ஆகையால்தான் மதம் மாறுவது ஆன்மீக சம உரிமைக்கு சாத்தியமாகலாம். சமூக சம உரிமைக்கு சாத்தியமாகாது. நீங்கள் நினைப்பது போல் ராம கோபலனும், புஷ்ஷும் சகோதரராக நினைப்பதலே சம உரிமை நீங்கள் பெற்றுவிடுவீர்கள் என்று குழந்தைத்தனமாக நினைக்காதீர்கள். இவர்களை எதிர்த்துப் போராடி வீழ்த்தினால்தான் உங்களுக்குமான சம உரிமையும் உண்டு, சாதிக்கான சம உரிமையும் உண்டு. அதை விடுத்து எங்க மதம்தான் பெரிது அதில் எங்கள் பிரிவுதான் பெரிது என்பதை விட்டுவிட்டு உண்மையான ஒடுக்குமுறையாளனை எதிர்த்து போராட முன்வாருங்கள். சாதியையோ, மத சுதந்தித்தையோ எதையுமே இன்றுள்ள புஷ்ஷும் (ஒபாமா) சரி ராமகோபாலனும் (சோனியா) சரி இவர்களுடைய ஆதிக்கத்தை வீழ்த்தாமால் பெறுவது சாத்தியமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏதோ ஒன்று விவாதிக்கிறோம் என்பதை விட்டுவிட்டு கொஞ்சநாள் நிதானமாக யோசியுங்கள். நிஜத்தை பாருங்கள், நிச்சயமாக எதிரி யார் உங்கள் நண்பன் யார் என்று தெரியும். இவர்களை வீழ்த்த மத சாதி அடையாளத்தைவிட்டு இணைவோம். வெல்வோம் எதிரிகளை. இல்லையென்றால் யாருக்கும் வாழ்வில்லை. இதில் எந்த அடிமைத்தனம் பெரிது என்று விவாதம் இதை வெல்லும் வரை ஒதுக்கிவைப்போம்.
Dalits to escape from caste killing, many of them entered Islam( one of the eg. Meenaatchipuram). Those who did not like islam and having faith in god entered christianity and so again accepted caste suppression. Those who didnot like islam and no faith in god like entered communism.
Now, honestly say, who eradicated caste? First, second or the third?
Empty vessel gives more noise like you and vinavu.
Now, I feel PERIYAR who honestly accepted the truth “islam is the only medicine to cure and eradicate caste completely from society”. Now, nobody like him.
You people are just barking but did nothing on removing caste. Hereafter, come with counter arguments, otherwise close the site and run away.
முஹம்மத் அவர்களே,
நீஙகள் மத வேறுபாட்டை பார்க்கிறீர்கள். அவர்கள் சாதி வேறுபாட்டை பார்க்கிறார்கள். அவர்கள் சாதி மாறி திருமணம் செய்தால் வெட்டிக்கொல்கிறார்கள். நீஙக்ள் மதம் மாறி திருமணம் செய்தால் வெட்டிக் கொல்கிறீர்கள். அவர்கள் மற்ற சாதியில் உள்ளவர்களை தீண்டாமையில் வைக்கிறார்கள். நீஙக்ள் மற்ற சாதியில் உள்ளவர்களை தீண்டாமையில் வைக்கி்றீர்கள்.
ஒன்று நிஜம் மனிதன் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்களும் மதத்தினை அளவுகோலாக வைத்தே மனிதத்தன்மையை வைக்கிறீர்கள். மனிதனை மனிதனாக மதிக்க சொல்லவில்லை மதம் என்பதுதான் உங்கள் கூற்று போல. உங்கள் மதம் இல்லை என்றால் அவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை என்பது உங்கள் அகராதியில்.
மதமும் சாதியும் ஒன்று என்று குழம்பி்க் கொள்ள முடியாது. ஏனென்றால் இது இரண்டுமே அடுத்வர்களை மனிதன் என்று ஒப்புக்கொள்வதில்லை என்றே உங்கள் கூற்றிலிருந்து அறிய முடிகிறது.
I never said like this.
All you said are lies on me. You showed who you are.
Come with conter arguments for my questions here. Otherwise, be silent. I know you are standing wothout anything. I feel sorry for you. Don’t, put stupid comments and lies hereafter.
Hello Vettiyaan, I never said like this.
All you said are lies on me. You showed who you are.
Come with conter arguments for my questions here. Otherwise, be silent. I know you are standing wothout anything. I feel sorry for you. Don’t, put stupid comments and lies hereafter.
நண்பர் முஹமது, எல்லோரும் சாதியால் வேறுபடாமல் மதத்தால் ஒன்று படுங்கள் என்ற கொள்கையை தவிர வேறு ஏதும் உங்களிடம் இல்லை.. இதன் மூலம் சாதி வெறி ஒளிந்து மத வெறி வளருமே தவிர… ஒன்றுக்கும் உதவாது.
//ஒரு ஆச்சார பிராமணரை வீட்டிற்கு-விருந்திற்கு வரவழைத்து மட்டன் பிரியாணி போடும் ‘சமத்துவம்’ இஸ்லாத்தில் இல்லை. அவருக்கு எதில் உடன்பாடில்லையோ அதை விருந்துக்கு அழைத்து உபசரிப்பவர் தவிர்த்தல் சான்றோர் பண்பாடு. அதுதான் இஸ்லாமிய பண்பாடு.//
என்னது பிராமணர்கள் மாமிசம் சாப்பிட மாட்டார்களா??? டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தீண்டாமை பற்றிய ஆராய்ச்சி பற்றி நீங்கள் படித்ததில்லையா? இதிலிருந்து நீங்களும் பிராமணியத்திற்குள் மூழ்கியிருப்பது தெரிகிறது.
//அந்த இந்து தலித் முஸ்லிமாக மாறினால் எந்த முஸ்லிம் வீட்டு பெண்ணையும் மணக்கலாம். //
எந்த முஸ்லீமாக? சியாவா? சன்னியா? சுப்பியா? இல்லை அஹமதியாவா? அல்லது இன ரீதியாக அரேபியரா? குர்தா?
வாய்ப்பந்தல் மழையை மறைக்காது(கார்காலத்துக்கு பொருத்தமான டைமிங்காக இருக்குல்ல?)
நண்பர் முஹமது, “தலித்” முஸ்லீம் என்று யாரும் இஸ்லாமில் இல்லை என நீங்கள் கூறுவது, பள்ளிக்கூடங்களில், அரசியல் சட்டத்தில் “தீண்டத்தகாதவர்” என யாரும் இல்லை என இருக்கிறதே அது எவ்வளவு சரியோ அவ்வளவு சரிதான் உங்கள் கூற்றும். குரானில் என்ன கூறி இருக்கிறது என்பது மட்டும்தான் நடைமுறையில் இருக்கிறதா? அல்லது குரானின் கூற்றுப்படி நடைமுறையில் இருந்து விட்டால் மனித துன்பங்களுக்கு விடை கிடைக்குமா?
சரிதான் தோழர்!!!!
கிருத்துவர்கள் புனிதமாக கருதும் பைபிளில் கூடத்தான் சாதியம் இல்லை..தலித் என்ற சொல் இல்லை….கிருத்துவத்தில் சாதியம் பின்பற்றப்படவில்லையா?
தலித் என்ற சொல் இல்லாத காரணத்தால் மட்டும் எப்படி ஏற்றத்தாழ்வு இல்லை என்று சொல்ல முடியும்…
சொல் ஆராய்ச்சிக்குள் இறங்குவதற்கு பதிலாக நாம் சமூகத்தை ஆராய்ந்தால் ஏற்றத்தாழ்வுகள் தெளிவாக புரியும்
பகத் & “சரிதான் தோழர்” !!!! :
/////சொல் ஆராய்ச்சிக்குள் இறங்குவதற்கு பதிலாக நாம் சமூகத்தை ஆராய்ந்தால் ஏற்றத்தாழ்வுகள் தெளிவாக புரியும்/////—நீங்களே சுட்டிக்காட்டுங்களேன். உலகமே தெரிந்து கொள்ளட்டுமே. ‘முஸ்லிம்களில் சாதி ஏற்றத்தாழ்வு’ – ஒரு முஸ்லிமால் அப்படி நினைத்துப்பார்க்கவே முடியாது- ஏனென்றால் மனிதப்பிறப்பில் இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படை அப்படி! அப்படி எவரேனும் நினைத்தாலே பாவம். ஆதாரத்துடன் உங்கள் மறுமொழி வந்தால், அங்கே உடனடி கொள்கை சுத்திகரிப்பு உண்டு. TNTJ, TMMK, Jamathe Islaami, INTJ, இவர்களெல்லாம் எதற்கு இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? சும்மா நெட்டி முறிக்கவா?
பூனை கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது, விடுங்கள்……………..
தினம் தினம் நமது தமிழகத்தில் நடக்கும் வன்செயல்களுக்கு இணையாக, எங்கோ வடநாட்டில் எப்போதோ பத்து வருடங்களுக்குமுன் அதுவும் பு.ஜ.வில் வந்த ‘கட்டு’ரையை ஆதாரமாய் காட்டி….ஏன்? இஸ்லாம் என்றாலே பற்றிக்கொண்டு வருகிறது? அப்படிஎன்றால், மும்பை 26/11, ஈராக், அமெரிக்கா, இஸ்ரேல், உ.போ.ஒ. விமர்சனம் எல்லாம் நீங்கள் எழுதவில்லையா? வினவு என்பவர் ஒரு நபரா அல்லது பலரா? ஒவ்வொருவருக்கும் பல கொள்கையா? ஏன் இப்படி நீங்களும் குழம்பி மற்றவரையும் குழப்புகிறீர்கள்? உங்கள் கொள்கையை ஒருமுறை அனைவரும் அறிய ஒப்பித்துவிடுங்கள். அடிக்கடி மாற்றும் போது கண்டுபிடிக்க.
நண்பரே புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த சுதாக்கா கிராமத்தின் கட்டுரையை மதுரையிலிருந்து வெளிவரும் சிந்தனை சரம் என்ற இசுலாமிய இதழ் மறு வெளியீடு செய்து முசுலீம்களிடம் இருக்கும் சாதி வேறுபாடுகளைப்பற்றி விவாதித்து. மற்றபடி இந்த சம்பவம் அவுட்லுக் ஆங்கிலப்பத்திரிகையில் விரிவாக படங்களுடன் வெளிவந்தது. இந்துமதவெறி பாசிஸ்ட்டுகளை எந்த மதசார்பின்மை உணர்விலிருந்து விமரிசிக்கிறோமோ அதே உணர்விலிருந்துதான் இசுலாத்தையும் விமரிசிக்கிறோம். அதனால் இரு மதத்து பழமைவாதிகளும் எங்கள் தூற்றுகிறார்கள். அது சரியா என்பதை நீங்கள்தான் பரிசீலிக்க வேண்டும்.
இஸ்லாத்தில் மனுதர்மம் என்ற புத்தகத்திற்கான தொடுப்பு:
இஸ்லாத்தில் மனுவாதிகள் : (இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி – தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்)
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3636:2008-09-05-20-03-45&catid=185:2008-09-04-19-46-03
இஸ்லாத்தில் மனுவாதிகள் : பதிப்புரை
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3635:2008-09-05-19-59-49&catid=185:2008-09-04-19-46-03
//மற்றப்படி திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். //
அப்படியா? அப்ப ஏன் சாதி பார்த்து திருமணம் செய்றீங்கோ டோண்டு ராகவன் தாத்தா?
அப்போ சாதி என்பது தனிப்பட்ட விருப்பமா?
மிஸ்டர் ஆர்வி ப்ளீஸ் ஹேண்டில் திஸ் வோல்டு வேர்ல்டு கிரேசி கேஸ்ட் அனிமல்…
(தமிழில்: மேதகு ஆர்வி அவர்களே தயை கூர்ந்து இந்த பழைய உலகத்து சாதிய மிருகமான கிறுக்கனை எதிர்கொள்ளுங்கள்)
மீனாட்சிபுரம் உண்மை நிலவரம் தெரியாமல் அப்பன் குதிரைக்குள் இல்லை என்று கூறியதற்கு நன்றி!
//honor killing என்று கூகிளிட்டுப் பாருங்கள். வருவதில் முக்கால்வாசி, துலுக்கப்பயலுவ செய்யும் கொலை தான்…
இராக், பாகிஸ்தான், துருக்கி, காசா, போன்ற இடங்களிலிருந்து தான் வரும்.///
ஏனேனில், இஸ்லாம் உலகம் முழுவதும் இருக்கு. பார்ப்பனியம் ஒரு ச்ல நாடுகளில்தான் இருக்கு. அதனால் எண்ணிக்கை கொஞ்சம் கம்மி . மேலும், இந்தியாவில் இவன் செய்கிற பல அயோக்கியத்தனங்கள் வெளி வருவதே இல்லை
ஏன் ஒடுக்கபட்டவர்கல் தங்கல் சாதியய் குரைவாய் நினைகுராங்கல்? அவர்கல் முனேரி பெருமை செர்கலம் தனே? நல்ல பலக்க வலகங்கலை பலகி மட்ரவர் மதிக்க இருகலம். அதுகாக மதம் மாருவது ஏட்ருகொல்ல முடியாது. it u do so all will be follow European and Chinese one day. then its not India its Chaina. remember that. don’t give up your things make proud your thinks.Brother your not Islamic in your generation some one have less confident to fight for their thinks that’s in your DNA. another Day in your generations some one change another religion and fight against your current religion. YOUR GENE IS NOT A GOOD QUALITY ONE.
Hey Nanban,
Do you know that ‘Bathrakali’ Personally.??? Without knowing the things don’t comment on anybody. Your comments were so rude and baseless. It shows your attitude and your narrow thought. What to do?? Your level of thinking is that much… So sad…
Are you justifying the act of those wild animals so called, ‘that girl’s relative.’
If you were born in so called SC community and Your wife is killed like this, would you be in a position to digest. You may.. your words says you may marry some other girl. You can look for alternatives except Wife, Father, mother and GOD.
They have done a crooked deed. You are justifying that. Vinavu has brought this to the world. This itself a great thing. Do you think Vinavu is a Government authority to take the actions against them??
No way, you should know the limitations of a press reporter. He can point out the things happening around the world. Ok, Have you taken any positive steps.??? You are an empty vessel that is why you are making Noise. !!! Also change you attitude. If you want to convey good things or your gratitude for giving you to scribe here to the public, do so… Don’t scribe like this in appropriate and irrelevant comment to demotivate others.
parents have their own plans on their child welfare even in marriages when it is otherwise decided they are ready to disown the decisions of their children. it depends on the caste that matters, if that young girl was stabbed on the chest by the relatives it is because of the caste she choose whether it is intention or accident. the girl should carry the caste child of her birth not of her choice. suppose it happened as premarital affair it canbe averted by abortion with the approval of the parents. there they try to forget or hide the fact that another caste entered the daughter choice of birth to another caste .knowingly there is a process of caste mixing is ;completed. this fact of incidents are being occured in every caste. what is that it is not come to the notice of the public/society
today younger generation is fully aware of this and fast culture is heading to this direction by living together, pub,you come i spend,having more no of hug partners on both sex. the same parents not dare enough to tell their own caste alliances. bathrakali will get another not sc girl even any other caste girl to ger marry. suppose he was killed then also the poor wife will carry his child and in the long run may search for male companion. this not for the argument it is the order of the day.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளன் இதுபோல் அடிக்கடி ஏதேனும் பேசி தமிழ் மக்களை சிரிப்பு மூட்டுவார். அதைப் பற்றி எல்லாம் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தீடிரென்று தமிழ் என்பார், தமிழ் ஈழம் என்பார், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பார், பின்னர் இவர்கள் அனைவருக்கும் விரோதியான காங்கிரஸுடன் கூட்டணி வைப்பார். என்ன கொடுமா சார் இது?
“நீங்க, வாங்க என்று பேசப்படும் கோவைத்தமிழின் ………..”
உனது ஊரின்…. நாட்டின்…. மொழியின்….. வீரத்தின்….. இன்னும் எதுவாக இருக்கட்டும். அதன் பெருமையைப் பேசும்போது, சாதித் தீயால் பொசுங்கிக்கொண்டிருக்கும் சக மனிதனின் முகங்கள் நினைவுக்கு வரவேண்டும். அழகில், பிரமிப்பில் மூழ்கும்போது, அடிவயிறு காய்ந்து சுருண்டுக் கிடக்கும் மனிதர்கள் நினைவுக்கு வரவேண்டும்.
நல்ல கண்ணோட்டம். கட்டுரை வெறும் செய்தியோடு நின்றுவிடாமல், பதிவர்களின் சிந்தனையை தூண்டும் விதமாக உள்ளது.
நல்ல கட்டுரை.
Most of t he dalits are not really loving .. they are only expect the money and sex and etc…first of all wihtout parents agreed how the he can take her when parent grew her daughter for 18 years and she is theirs..that useless guy should have been punished. ..it is not at all true love.. if he has guts and eligibiliy he should have asked her parents and if they are agreeing should leave it ..each and every caste different cutures and etcc.thtast why everyone should marry on their on own caste…
Do you think, the girl wouldn’t have asked their parents to marry that guy?? Possibilities on either side. Also, anyone in this world does not have the rights to Possess anyone for their own. Even if you have given birth to a child, you don’t have the rights to control it. Since because of the love, the basic funda, you are caring the child, thats it Mr. Soundararaj. Also, You are a fundamentalist. That’s why you are shortening yourself to your boundary.
Definitely the guy should have shown a true love on her wife that’s why she didn’t go with their parents while they asked to come with them.
Also, she would have found a true love in him, which she didn’t find in their house. That’s why she would have married him.
If her family has the guts to kill her instead of loving her, its really coward. I agree, every caste has their own culture and tradition. In your caste, if your father or you kill anyone out of your angry, is it acceptable?? Dont; try to justify the murder. Even if you marry in your own caste and does not show the love on your wife, then your bounded to your caste, but you are out of love, the basic element for any happy life.
You should love everyone. You should care. If you are going on a bike, you met with an accident, who will come and help you. Your own caste people. If you want to get the help from others, you don’t look for caste. If you want to live with a girl, do you need love or caste….Try to love every one in brotherly and sisterly manner. Then every qualities will be added…
Try to get out of your fundamentalism, and Narrow thoughts then you can comment anyone.
எய்யா சாமி ரொம்ப கொடுமை இது கருத்து சொல்ல வந்துட்டு………இப்படியா…கொல்றது…
தலித்துகள் பாலியலைத்தான் விரும்புகிறார்கள் என்றால்…தாய்-தந்தையிடமே பெண்ணை செட் பண்ணி தரச்சொல்லி….திருமணம் முடிக்கும் முறையில் பூசையா செய்கிறார்கள்…
பெண்ணாக இருக்கட்டும், ஆணாக இருக்கட்டும் யாரும் பெற்றோர்களுக்கு அடிமையில்லை…..
தன்னுடைய துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் உண்டு…
18 வருடம் வளர்த்ததால் தனக்கு அடிமையாகத்தான் வளர்ந்திருக்க வேண்டுமென்றால்…
ஆடு, மாட்டைத்தான் வளர்த்திருக்க வேண்டும்
சரியானதும், உணர்ச்சிப்பூர்வமானதுமான பதிவு! ஆதவன் தீட்சண்யா பதிவு செய்த சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் நினைவுக்கு வருகிறது. பல வருடங்கள் முன்பு இதே போன்று உளவியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட, நானறிந்த ஒரு பெண்ணின் பதற்றம் நிறைந்த கண்கள் நினைவுக்கு வருகின்றன.
//கடந்த இருவருடங்களில் இதுபோல ஏழு கொலைகள்//
வடநாட்டில் நடந்து வரும் ஒரே கோத்திரத்தில் காதலிக்கும் இளைஞர்கள், பெண்களைக் கொலை செய்வதோடு சேர்த்தால், எத்தனை கொலைகள்? தெரியவில்லை. இவையனைத்தும் எந்த வகையிலும் தமிழ் மக்களின் மனசாட்சியை சற்றும் உலுக்கியதாகத் தெரியவில்லை. தனது துணையைத் தேர்ந்தெடுக்கும் குறைந்தபட்ச ஜனநாயக உரிமையைக் கூட வழங்க மறுக்கும் இந்த வெங்காய தேசம், வல்லரசாகப் போகிறதென்று ஜம்பம் வேறு!
இது போலத்தான் எத்தனை கதைகள் கடந்து போய் விட்டன? எத்தனை பேர் செத்துப் போனார்கள்? யாரிடமும் எந்தக் கணக்கும் இல்லை. இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில், காதலின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கொடூரமாக இருக்கிறது. நிலவும் இறுகிய சாதியக் கட்டமைப்பில், காதல் ஒரு பாவச் செயல், ஒரு பெருங்குற்றம், ஒரு மனிதத் தன்மையற்ற செயல்!
இதனிடையே, உலகத்திலேயே காதல் என்ற ஒற்றை உணர்வை வைத்து, பார்க்காத காதல், பேசாத காதல் என அபத்தத்தின் உச்சங்களைத் தொட்டு, வருடத்திற்கு நூற்றுக்கணக்கான படங்களை எடுத்துத் தள்ளும் இந்தியத் திரைப்படங்களில் குறிப்பிட்ட சாதி மீறிய காதல் குறித்து காத்திரமான படங்கள், ஆதிக்க சாதியின் மிருகத்தனத்தை அம்பலப்படுத்தும் திரைப்படங்கள் இதுவரை எதுவும் வெளி வரவில்லை. ஒரு முயற்சி என்ற அடிப்படையில், அத்திரைப்படங்களில் உள்ள ஆதிக்க சாதி போற்றுதல்களைத் தாண்டி, சேரனின் பாரதி கண்ணம்மா மற்றும் பாலாஜி சக்திவேலின் காதல் திரைப்படங்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக, காதல் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில், நாயகன் மீது நிகழ்த்தப்படும் கொடூர வன்முறை ஒரு முக்கியமான காட்சி. ஆனால், இந்தப் படம் எந்த எதிர்ப்பையும் சந்திக்கவில்லை என்பதுதான் கவனத்துக்குரியது. ஒரு வகையில் இந்த வன்முறைக் காட்சி திகிலூட்டுவதற்கு மட்டுமே பயன்பட்டது. திரைப்படங்களிலேயே பகிரங்கமாக பேச முடியாத சூழலில், சமூகத்தில் மாற்றம் நிகழ்வது அத்துணை எளிதானதல்ல என்று மட்டுமே சொல்ல முடிகிறது.
//நீங்க, வாங்க என்று பேசப்படும் கோவைத்தமிழின் உயர்ந்தபண்பாடு குறித்தெல்லாம் அந்தப் பகுதியைச் சேர்ந்த பதிவர்கள் உயர்வாக பேசுகின்றனர். ஆனால் அங்குதான் அருந்ததி மக்களை நாயை விட கேவலாமாக நடத்தும் கொங்கு வேளாளக் கவுண்டர்களின் சாதி வெறி கோலேச்சுகிறது. தங்களது ஊரின் பழமைகளை மண்மணக்க பேசும் அந்த பதிவர்கள் எவரும் தமது பகுதிகளின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஏனென்றால் இவர்களும் கூட சமூகயதர்த்தத்தின் உண்மைகளுக்கு முகங்கொடுப்பதாக இல்லை.//
Palamaipesi, Please come and answer this
these dalits are given all benefits from goverment for study and scholships etc…..Still They stupid young people of their thinkin is how to earn the money wrong way.. World may be destroyed but you can not change them to dicsipline.. This is not for all dalits. but most of them are like that only..They donot eveny study well but they get all benfits from goverment, … First of all Let govermnet give eqaul benefits. ….not evern single dalit intersted to study even if thye are provided all benefits.
தலித் வாழ்க்கை முன்னேற்றம் பற்றி யாருக்காவது கடுகளவேனும் ஆவல் இருந்தால் நீங்கள் எதிர்த்து பின்னூட்டமிட வேண்டியவர் இதோ இருக்கிறார்.
சவுந்தர் ராஜ்,
தலித் மக்கள் படிக்கமாட்டார்கள், ஒழுக்கமாக இருக்கமாட்டார்கள், குளிக்கமாட்டார்கள், எனவேதான் அவர்கள் முன்னேறாமல் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி கும்பல் கூறுகிறது. மேல்சாதி ஆதிக்கம் என்ற திமிரை அவர்கள் இப்படித்தான் சுயமுன்னேற்ற ஒழுக்கமாக போதிக்கிறார்கள். இட ஒதுக்கீட்டின் மூலம் ஆதாயம் அடைந்த தலித் மக்கள் வெகு சொற்பம். பெரும்பாலான தலித் மக்கள் ஏழ்மையின் கையில்தான் சிக்கியிருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ் படித்த தலித்தாக இருந்தாலும் சொந்த ஊரில் தனிக்குவளை என்பதுதான் சமூக நிலைமை. உங்கள் மேல்சாதி கண் அநீதிக்கு துணைபோவதை நியாயப்படுத்துகிறது. முதலில் உங்கள் மனதில் உள்ள அழுக்கை கழுவ முயலுங்கள்,
WHY DO YOU DARING IN OTHER CAST PEOPLE.AS OTHERS TREAT YOU YOU TREAT OTHERS.
ஏண்டா! வெண்ணெய்!!!
தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்களை சக மனிதனாகக்கூட பார்க்க தெரியாத முண்டம் நீ….தகுதி யோக்கியதை பற்றி பேசுறே!!!!
கல்வி மனிதனை பண்படுத்துமென்றால், அனைவருக்கும் வேண்டுமென்பது எம் எண்ணம்…
ஆனால், இந்த கல்வி அமைப்பு உன்னை போன்றவர்களை ஆங்கிலத்தைத்தான் கற்றுதரும்..அறிவை தராது என்றால் இந்த கல்வி அமைப்பை தகர்த்து மானுடத்தை போற்றும், வளப்படுத்தும் கல்வி அமைப்பை உருவாக்க வேண்டும்
//these dalits are given all benefits from goverment for study and scholships etc//
Who is Government? ஏங்க என்னவோ இதல்லாம் காந்திய காங்கிரஸ் வாங்கிக் கொடுத்த சலுகைகள் மாதிரி பேசுறிங்களே… இதல்லாம் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக சாதிக் கொடுமைகளை (அதான் காந்தி கடைப்பிடித்த சாதி வெறி) எதிர்த்து போராடிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வாங்கிக் கொடுத்தது.
//First of all Let govermnet give eqaul benefits. ….not evern single dalit intersted to study even if thye are provided all benefits.//
தேசப் பிதான்னு பெரும்பாலான மக்கள் பேசுற காந்தி அன்றைக்கே டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கேட்டதற்கு ஒத்துக்கொண்டிருந்தால் எப்படி வந்திருக்கும் இந்த benefits எல்லாம்…
//First of all Let govermnet give eqaul benefits. ….not evern single dalit intersted to study even if thye are provided all benefits.//
பார்ப்பன வெறியன் காந்தி அன்றைக்கே டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கேட்டதற்கு ஒத்துக்கொண்டிருந்தால் நாங்க ஏண்டா இப்படி அடிமைப்பட்டிருக்கப் போறோம்…
பொய்யை மட்டுமே வாரியிரைத்திருக்கிறார் சௌந்திரராஜ், ஒவ்வொரு பத்தாண்டும் ஏன் இந்த மத்திய அரசு இட ஒதுக்கீட்டை நீட்டிக்கிறது. இட ஒதுக்கீட்டின் படி பணம் செலுத்தி படிக்க முடியாத பொருளாதார சிக்கல்கள் எத்தனை பேருக்கு. வாழ்வதற்கே போராட வேண்டிய சூழ்நிலையில் தலித் மற்றும் இதர கீழ் வருண மக்களை வைத்துக் கொண்டு, அவர்கள் திருந்த மாட்டார்கள் என்பது. ஊரை ஏமாற்ற அரசியல்வாதிகள் சொல்வது அதையே இவர் வாந்தி எடுத்திருக்கிறார். இட ஓதுக்கீடு 50 ஆண்டுகளுக்கு மேலும் தொடர்ந்து இந்த தலித்துகள் ஏன் முன்னேறவில்லை என்று இவரால் சிந்திக்க முடிந்ததா? வாந்தி எடுப்பவரால் சிந்திக்க முடியாது. தன் நாட்டில் சக ஊரில் உள்ளவனை இன்னும் தலித் அவன் திருந்த மாட்டான் நான் நாகரிகமானவன் என ஒது கி இவர்களும் மனிதர்களா
//கள்ளபிரான், உங்களின் மொட்டைத்தலையும் பொய், முழங்காலும் பொய், முடிச்சு மட்டும் எப்படி ஆகும் மெய்? சாதித்தகராரும் ஊர்த்தகராரும் ஒன்றா?
கண்ணில் காணும் உண்மையை கூறியுள்ளேன். எங்கோ கராச்சியாம், முஹாஜிராம், செக்டேரியன் ஸ்ட்ரைபாம். அதே பட்டாணியர்கள் தானே வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, மேல்விசாரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, பேரனாம்பெட் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ளனர்? என்ன நடந்து விட்டது அங்கேயெல்லாம்?.அவர்களில், இந்த தலைமுறையினர் தமிழ் கற்று தமிழ் முஸ்லிம்களை திருமணம் புரியவும் ஆரம்பித்து விட்டார்களே? முஸ்லிம் லீக்கில் தமிழக முஸ்லிம்களுக்கெல்லாம் தலைவராக சிலமுறை அவர்களுள் ஒருவர் ஆகவில்லையா? பலர் எம்.பி ஆகவில்லையா? ஏன் இந்த பொய்ப்பிரச்சாரம்?
இரண்டு தலைமுறைக்கு முன் தலித்தாக இருந்து இஸ்லாத்தை ஏற்றவரின் வாரிசு தான் எங்கள் ஊர் பள்ளிவாசல் தலைவர்.
ஒன்று புரிகிறது. தலித்தாகவே இருந்து மேல் சாதியின் கொலை மற்றும் அடக்குமுறையை அவர்கள் சகித்துக்கொள்ள வேண்டும், முஸ்லிம்களாய் மட்டும் மாறி சமத்துவம் பெற்றுவிடக்கூடாது..! என்னே உங்கள் எண்ணம்?
நீங்களே ஒப்புக்கொண்ட ‘இஸ்லாமிய வழிபாட்டில் சமத்துவம்’ என்பது கூட அவர்களுக்கு கிடைத்துவிடக்கூடாது! உங்கள் எண்ணத்தை ‘தலித் விடுதலை’ எனும் தீயில் எரித்துவிட்டு வாருங்கள். மீனாட்சிபுரம் மறந்து விட்டதா?//
திரு முஹமது அவர்களே!
எனக்கு இசுலாத்தின் மீது கடுங்கோபம் அல்ல; கடுங்காதல் உண்டு. எனக்குத் தெரியும் இசுலாத்தின் அனைவ்ரும் சமம் என்றும் இச்சமக்கோட்பாடை ஏற்றாலே ஒருவன் இசுலாமியன் ஆவான் என்றும் பக்காவாகத் தெரியும்.
நான் சொல்லவந்த கருத்து (பாகிஸ்தானைக்காட்டி) என்ன்வென்றால், இசுலாத்தில் இருப்பவர் அனைவரும் இக்கோட்பாட்டை ஏற்பவர்களாக நடிக்கிறார்கள். நீஙக்ள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். அப்படியே ஏற்பின், அவர்கள் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்பீர்கள்.
இசுலாத்தில் ஒருவன் சேர்ந்தாலே ஒருவன் நல்லவன் ஆகிறான் என்பதும் ஒருபடச வாதமே. ந்ல்லவன் எங்கும் நல்லவனாக இருக்க முடியும்.
நண்பரே, உங்கள் வாதம் என்னவென்றால், ஒரு இசுலாமியன் இன்னொரு இசுலாமியனைத்தான் சரி ச்மமாக ஏற்று சகோதரத்துவத்துடன் பழகுகிறான். பழகுவான். என்பது.
ஆனால், தன் மதம் சாரா தலித்தை இசுலாமியர் எப்படி பார்க்கிறார்கள்? என்பதுதான் இம்மன்றத்துக்குத் தேவை.
பிறமதத்தான் மேல்சாதியாக இருந்தால் (அம்மத்ததின்படி) நீங்கள் மரியாதை செய்கிறீர்கள். அவன் தலித்தாக இருந்தால், அம்மேல்ஜாதியான் தலித்தை எவ்வளவு இழிவாகப் பார்க்கிறானோ அப்படியே நீங்களும்.
நான் இசுலாமியர் 60 விகிதத்திற்கும் மேல் உள்ள சிற்றூரில் வாழ்ந்தவன். அங்கு கண்ட காட்சிகளே என்னை, இசுலாம் மனிதனின் அடிப்படை குணமான (இளிச்சவாயர்களை தன் கீழ் போட்டு வைப்பது) என்ற குணத்தை மாற்றவைல்ல என்பது உறுதிப்படுத்தியது.
/////எனக்கு இசுலாத்தின் மீது கடுங்கோபம் அல்ல; கடுங்காதல் உண்டு. எனக்குத் தெரியும் இசுலாத்தின் அனைவ்ரும் சமம் என்றும் இச்சமக்கோட்பாடை ஏற்றாலே ஒருவன் இசுலாமியன் ஆவான் என்றும் பக்காவாகத் தெரியும்.//////——>மிக்க நன்றி திரு.கள்ளபிரான்.
///////பிறமதத்தான் மேல்சாதியாக இருந்தால் (அம்மத்ததின்படி) நீங்கள் மரியாதை செய்கிறீர்கள். அவன் தலித்தாக இருந்தால், அம்மேல்ஜாதியான் தலித்தை எவ்வளவு இழிவாகப் பார்க்கிறானோ அப்படியே நீங்களும்.//////——->இறைவன் மீது சத்தியமாக அப்படி கிடையாது திரு.கள்ளபிரான். இஸ்லாத்தை பொறுத்தவரை மனிதரில் இருவர், ஒருவர், முஸ்லிம் மற்றவர் முஸ்லிமல்லாதவர். அவ்வளவுதான். இதில் தலித், பிராமின், அமெரிக்கன், ரஷ்யன் என்ற எந்த வேறுபாடும் இல்லை. அனைவரும் ஒரே சம தட்டில் தான் வைத்து பார்க்கப்படுவார்கள். ஒரு பிராமினுக்கு என் வீட்டில் என்ன மரியாதை தரப்படுமோ அதே அளவு மரியாதை தலித்துக்கும் உண்டு. ஒரு முஸ்லிமாக என் பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களில் என் மாற்று மத நண்பர்களின் சாதி எனக்கு தெரியாது. இந்த சமயத்தில் ஒரு சம்பவத்தை நான் உங்களுடன் பகிர வேண்டும் என்ற ஆவல்.
என் பணியிடத்தில் புதுமணத்தம்பதிகளை வீட்டிற்கு அழைத்து விருந்தோம்புதல் ஒரு சம்பிரதாயம். ஒரே நேரத்தில் திருமணமான இரு தம்பதிகளை ஒரே நாளில் (என் மனைவிக்கு வேலை மிச்சம்) அழைத்திருந்தேன். ஒரே மேசையில் விருந்து. இரண்டாவதாய் வந்த தம்பதிகளை மேசையில் அமர்வதை கண்டதும் முதல் தம்பதிகள் ஏதோ திடீரென்று ‘வீட்டை பூட்ட மறந்துவிட்டோம்’ என்று சொல்லி, சென்றுவிட்டனர். வெகுநேரம் காத்திருந்துவிட்டு (தொலைபேசிஎல்லாம் எங்களிடம் இல்லை அப்போது) அவர் வீட்டுக்கு சென்று விசாரித்தால் ‘ஓட்டலில் சாப்பிட்டாச்சு’ என்றனர். ‘என்?’ என்றால், ‘அவர்களுடன்’ சேர்ந்து சாப்பிட முடியாதாம்…! எனக்கு வந்த கோபத்தில் ‘ச்சீ நீ எல்லாம் என் நண்பனா?’ என்று சொல்லிவிட்டு வீடு வந்து அந்த தம்பதியுடன் சேர்ந்து சாப்பிட்டோம். இவர்கள், அவர்களை பற்றி கேட்டனர். ‘வந்து…..’ என்று நான் இழுக்கும் போதே, என் நண்பன் ‘எதிர்பார்த்ததுதான் பாய், நீ ஒன்னும் கண்டுக்காதே’ என்று சகஜமாய் இருந்ததை கண்டு உள்ளுக்குள் துணுக்குற்றேன். இசுலாம், மனிதனின் அடிப்படை குணமான (இளிச்சவாயர்களை தன் கீழ் போட்டு வைப்பது) என்ற குணத்தை தன் காலில் போட்டு மிதிக்கும், திரு.கள்ளபிரான்.
எமது அடிமை அது அல்லாவின் ஆணை என்ற புத்தகத்தில் தலித்துகளுடனான உங்களின் பாசத்திற்கான விபரங்களும் சில கேள்விகளும் உள்ளன. படித்துவிட்டு பதில் கூறுங்கள்.
பெண் காதலிப்பான் அவள் மனதைக்கவர்ந்த ஆட்வனை. இது இயற்கை உணர்ச்சி. இது ஒன்றும் வெறுக்கத்தகுந்த அசிங்கமான் நடத்தை அல்ல. இதை ஏன் தடுக்கிறார் உங்கள் க்டவுள் கட்டளைபோட்டு.
Caste feelings are deep rooted and they can not be uprooted that easily. “Education would change everything”- this statement has proved nothing. In fact it nurtures caste feelings through subtle ways(literature with caste colour and films that propagate casteism etc. Caste will always remain a WINNER.
Islaam is one and only solution to eradicate completely the ‘deep rooted caste feelings’. It has proved it successfully in our land. For hundreds of years nothing done by all other trials and laws.
நண்பர் நெத்தியடி முஹம்மத்,
என்னுடைய கருத்து – சாதி ஒழிய வேண்டும் என்றால் முதலில் மதம் ஒழிய வேண்டும்… இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீரா?
நண்பர் லெனின், ஒத்துக்கொள்கிறேன்.
எந்தெந்த மதங்களெல்லாம் சாதியை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதோ அல்லது சாதியை அனுமதிக்கும் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டிருக்கிறதோ அவைகளை ஒழித்தபின்னர்தான் சாதி ஒழியும் என்றால் வேறு வழி?
தவறே நடந்து இருந்தாலும் சட்டத்தை கையில் எடுக்க எந்த தனி மனிதனுக்கும் உரிமை கிடையாது .ஆத்திரத்திலும் அவமானங்களுக்கும் பயந்து ஒருவன் தவறான முடிவை எடுக்கிறான் .அது கொலையாக கூட இருக்கலாம் .அதற்கு இஸ்லாம் எப்படி பொறுப்பாக முடியும்?. ஒரு முஸ்லிம் ஆணோ அல்லது பெண்ணோ இந்து மத பார்ப்பானையோ அல்லது பறையனையோ எப்போது கை பிடிக்கிறார்களோ அவர்கள் இஸ்லாமை விட்டு விலகி விடுகிறார்கள் .கண்ட கல் சிலைகளை எல்லாம் கடவுள் என்று வணங்குபவனை முஸ்லிம் ஒருத்தி விரும்பினால் அவளுக்கும் அந்த கற்சிலைகள் ஓகே என்று தானே அர்த்தம் .கொஞ்ச நாள் இருந்துவிட்டு பிடிக்கவில்லை என்று திரும்பி வந்தால் யார் ஆதரிப்பார்கள் .முஸ்லிமாக அவள் மீண்டும் வரலாம் .ஆனால் போன மானம் .எவன் அவளை கல்யாணம் பண்ணிக்கொள்வான்.எனக்கு தெரிந்து அப்படி செய்து திரும்பி வந்த இரண்டு பெண்களை பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் இருவரின் எதிர்காலமும் ????.நல்ல பெண்கள் பலர் வரிசையில் மணமுடிக்க கிடைக்கும் போது கடித்து துப்பியதை எவன் நாடுவான் ??இளம் விதவைகள் கூட கரையேற முடியும் ஆனால் அந்த இரு பெண்கள் ? .நாம் வாழும் பாழாய் போன சமுதாயமே காரணம் .இதற்கு எந்த மதத்தை காரணம் சொல்ல முடியும் ?
I hate ISLAM
தப்பில்லை குமார் .சாத்தான்களுக்கும் இஸ்லாமை பிடிக்காது .இனம் இனத்தோடுதானே சேரும் .வாழ்க வளர்க .
தவறான பதில் நாடோடி,
எனக்கு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கையில்லை ஆனால் எல்லா மனிதர்கள் மீதும் அவர்களின் செயல்களின் மீதும் நம்பிக்கை உண்டு.
மற்றொன்று சாத்தான் மீது எனக்கு அறவே நம்பிக்கையில்லை.
இறை நம்பிக்கையில் எமாற்றமே சாத்தானின் மீது நம்பிக்கை. இதனால் குமார் சொல்வது சரியானது என்று அர்த்தமேயில்லை. மதத்தை வெறுக்கிறேன் என்று மனிதர்களை வெறுக்க கற்று தருகிறார்கள் இவர்கள்.
/////இறை கடடளை என்ன ?/////
குரான் – 2 : 221
ஆண், பெண் பாலியல் உணர்வு சார்ந்த செய்திகளில் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அளவுக்கு பெற்றோர்கள் பண்பட்டவர்களாக இருக்க வேண்டுமேயொழிய….
அவர்களின் விருப்பங்களை தீர்மானிக்க ஆணாதிக்க புத்தி இருக்கக்கூடாது….
தன் துணையை தானே தேர்ந்தெடுக்கும் உரிமை கூட கிடையாது என்றால்,………..
என்ன மண்ணாங்கட்டி விடுதலை…தத்துவம எல்லாம்………
புனிதம் பேசும் இந்து மதக்குப்பைகள் சேர்த்து வைத்திருப்பதெல்லாம்….காமசாத்திரம்தான் பேசுகிறது…
இந்த லட்சணத்தில் இவர்களுக்கு சாதித்திமிர் வேறு
Vinavu,
your article is excellent. Continue writing like this. Dont worry about the halfboiled comments.
தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் 7 புரட்சி தின வாழ்த்துக்கள்
அந்தக் கனலை நெஞ்சில் ஏந்துவோம்அதற்காகவே வாழ்வோம்
தோழமையுடன்செங்கொடி
Muhammad.
Come out of religion. Religions (including hindu , christianity) created by human being. Please condiser other human as a living one. Because he is not following your religion that does not mean he is not human. Please change your attitute. DO NOT FOLLOW ISLAM. Why you need religion to live.
கள்ளர் மட்டும் தான் இப்படி செய்கிறார்கள் என்பது தவறு. எங்கள் ஊரில் தலித்களில் இரண்டு வகுப்பினர் உண்டு 1. பறையர் 2. கூத்தாடி, இதில் பறையர் உயர் வகுப்பினர் என்றும் கூத்தாடி தாழ்ந்த வகுப்பினர் என்றும் கூறிக்கொள்வர், ஒரு பறையர் வகுப்பு ஆணும் கூத்தாடி வகுப்பு பெண்ணும் காதலித்து ஓடிவிட்டனர், அந்த ஆணின் தந்தை அவமானம் தாங்க முடியாமல் அந்த ஊரிலிருந்தே குடும்பத்தோடு வேறு ஊருக்கு சென்றுவிட்டார், அந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். எனவே நண்பர்களே ஜாதி வெறி என்பது ஏதோ ஒரு சாதியினருக்கே சொந்தம் என்பது போல் எழுதுவது கண்டிக்கத்தக்கது, எல்லா ஜாதியினரிலும் சிலர் வெறி பிடித்தவர்களாகவே காலம் காலமாய் இருக்கிறார்கள் இதற்க்கு தலித்கள் மட்டும் விதிவிலக்கல்ல. என்ன செய்வது ஆரியம் மூட்டிய ஜாதி தீ கொழுந்து விட்டு எறிந்து திராவிடனை அழிக்கிறது.
//என்ன செய்வது ஆரியம் மூட்டிய ஜாதி தீ கொழுந்து விட்டு எறிந்து திராவிடனை அழிக்கிறது.//
இதை ஒழிப்பதற்கு என்ன செய்ய???
For every story like this there may be many where inter-caste married couples will be living happily. The criminals should be punished and caste fanaticism should be fought against.But Vinavu makes sweeping judgments and his bias against some castes is well known.Dalits are also divided along sub-caste lines.
How many Dalits marry outside their sub-caste.I think if there are 100 inter-caste marriages without sanction from parents, revenge like this may happen in 1 or 2. There could be sheer indifference from many parents who had disowned their sons/daughters.’கடந்த இருவருடங்களில் இதுபோல ஏழு கொலைகள் கலப்பு மணத்திற்காக நடந்திருக்கின்றன’
How many inter-caste marriages would have happened in these two years- 1000? 2000? 500.What happens in most cases is as important as what happens in some cases like this. Murders are committed within families, within communities with so many motives. If you take the whole picture such murders will be more than the murders that are committed against inter-caste couples.Dont use such news items to spread your bias and hatred.
‘
“தமிழ் பார்ப்பனர்கள் அழிகிறார்களா இல்லை தங்க்ள் சாதியை அமெரிக்கா சென்றும் இறுக பற்றியிருக்கிறார்களா என்பதை அறிய இந்து பேப்பரின் மேட்ரிமோனியல் பக்கத்தை பார்க்கவும். அதில் சாதி தடையில்லை என்று ஒரு பார்ப்பான் கூட அறிவித்த்து கிடையாது. மற்றபடி குலம் கோத்திரம் எல்லாம் கச்சிதமாக குறிப்பிட்டே வரும். மற்ற சாதிகளிடம் கொஞ்சமாவது இருக்கும் நெகிழ்வுத்தன்மை பார்ப்பனர்களிடம் சுத்தமாக இருப்பதில்லை.
”
How many brahmin parents have killed their sons/daughters/son-in-law/daughter-in-law for inter-caste marriage.In many instances brahmin boys and girls fall in love and then get married wth/without consent of parents. In fact the trend is inter-sub-caste marriage i.e Iyer-Iyengr/Iyer/Iyengar-Madhva brahmin is more a norm than an exception among brahmins and no. of inter-caste marriages are also increasing.you would find in ads specifying mother/father brahmin. You hate brahmins. That is plain and simple.
Why my comments appear before comments posted on 6th.Why cant you publish comments in the order they are written, last comment displayed last/
தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சிகர வாழ்த்துக்கள். ஓங்கட்டும் தொழிலாளர் ஓற்றுமை. உடையட்டும் தனியுடைமை !
அனைவருக்கும் நவம்பர் 7 – புரட்சிகர வாழ்த்துக்கள்.
http://socratesjr2007.blogspot.com
வினவு தோழர்களுக்கு, தளத்தின் முகப்பில் “Friday 6th November” என இருக்கிறது… சரி பார்க்கவும்.
பார்ப்பனர்கள் எல்லாம் மற்ற சாதி சனங்களை போலத்தான், அவர்களுக்கு உள்ளே நல்லவர்களும், கெட்டவர்களும் இருக்கிறார்கள் என ஆர்.வீ. பல காலமாக கூப்பாடு போடுகிறார்.. இதில் சில சவால்கள் வேறு.. “இந்து மனமேடை விளம்பரங்களில் எல்லோரும் சாதி பார்ப்பதில்லை என கூறுவது இல்லை” … பார்ப்பனரல்லாதோர், நூறில் ஒருவர் சாதியற்ற திருமண விளம்பரம் கொடுத்தால் பார்ப்பனரில் ஆயிரத்தில் ஒருவர் கூட கொடுப்பதில்லை.. இதை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள், ஆர்.வியின் உறவினர்களில் எத்தனை பேர் சாதி மாறி திருமணம் செய்து இருக்கிறார்கள்..? என்னுடைய உறவினர்களில் சாதி மறுத்து திருமணம் செய்த 4 பேரை தெரியும்..
பார்ப்பனர்கள் தன்னை விட உயர்ந்த நிலையில் இருப்பதாக அவர்கள் கருதும் “வெள்ளை தோல்” மேலை நாட்டவரை திருமணம் செய்யும் போது மட்டும்தான் சாதி பார்ப்பதில்லை..மற்றபடி இந்தியாவில் குலம் கோத்திரம் பார்க்காமல் திருமணமா..? சிரிப்புதான் வருகிறது…
ஆர்.வி உங்களுக்கு ஒரு சவால் இந்தியாவில், கல்லுடைக்கும், சுமை தூக்கும், ஏன் இந்தியாவில் 7௦% மக்கள் சார்ந்து இருக்கும் விவசாயத்தில் விவசாய கூலியாக ஈடுபடும் ஒரு பார்ப்பன குடும்பத்தை நீங்கள் காட்ட முடியுமா..?
அப்படி கணிசமான பார்ப்பனரை நீங்கள் சாதாரண “உழைக்கும் வர்க்கத்தில்” காட்டினால்..
// கள்ளர் சாதியிலும் ஏதுமற்ற உழைக்கும் மக்களும் இருக்கிறார்கள். // இந்த வாக்கியத்தை நாம் பார்ப்பனர்களுக்கும் பொருத்தலாம்.
இந்த அனைத்து வேலைகளையும் செய்யும் ஒரு பிற்படுத்தப் பட்ட சாதியினரை நான் காட்ட முடியும்…
பகத்,
// பார்ப்பனர்கள் எல்லாம் மற்ற சாதி சனங்களை போலத்தான், அவர்களுக்கு உள்ளே நல்லவர்களும், கெட்டவர்களும் இருக்கிறார்கள் என ஆர்.வீ. பல காலமாக கூப்பாடு போடுகிறார்.//
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பார்ப்பனர்கள் சராசரி மனிதர்கள் என்றா இல்லை அவர்கள் மட்டும் ஸ்பெஷல் என்றா? அவர்கள் சராசரி மனிதர்கள் என்றுதான் நினைக்கிறீர்கள் என்றால் எனக்கு கூப்பாடு போடும் நிலை இருப்பது என், அப்படி நிலைமை இருப்பது சரிதானா என்று சொல்லுங்கள். இல்லை அவர்கள் ஸ்பெஷல் என்றால் எப்படி என்று விவரியுங்கள். மனிதர்கள் அடிப்படையில் ஒரே மாதிரிதான் என்று கூப்பாடு போடுகிறேன் என்று குறைப்படுவது ஜாதியை எதிர்க்கிறேன் என்று சொல்லிக் கொள்கிறவருக்கு அழகா? இல்லை பார்ப்பனர்கள் மனிதர்களே இல்லை என்பது உங்கள் கருத்தா?
// பார்ப்பனரல்லாதோர், நூறில் ஒருவர் சாதியற்ற திருமண விளம்பரம் கொடுத்தால் பார்ப்பனரில் ஆயிரத்தில் ஒருவர் கூட கொடுப்பதில்லை. //
இது நீங்கள் சொல்வது. வினவும் இதையேதான் சொல்கிறாரா என்று நீங்களே முடிவு செய்து எல்லாருக்கும் சொல்லுங்கள். வினவின் மறுமொழியிலிருந்து quote செய்கிறேன். // 2. ஹிந்து பேப்பரின் மேட்ரிமேனியலில் மட்டுமல்ல, வீடு வாடகைக்கு கூட பிராமின்ஸ் ஒன்லி என்று விளம்பரம் போடும் ஒரே சாதி பார்ப்பனர்கள்தான். //
உங்கள் கணக்கில் எனக்கு இசைவில்லை. ஆனால் அப்படியே நீங்கள் சொல்வது உண்மை என்று வைத்துக்கொண்டாலும் நூற்றுக்கு 99 பேர் கல்யாண விஷயத்தில் ஜாதி பார்க்கிறார்களா இல்லை ஆயிரத்துக்கு 999 பேரா என்பதுதான் வித்தியாசம். அதாவது ஜாதி பார்ப்பவர்கள் மிக மிக அதிகம் என்றுதான் நீங்களும் சொல்கிறீர்கள். நூற்றுக்கு 99 பேர் ஜாதி பார்க்கும்போது வினவு “ஒரே சாதி பார்ப்பனர்கள்தான்” என்று சொல்வது பொய்யா இல்லையா? என்ன நினைக்கிறீர்கள்? தைரியம் இருந்தால் சொல்லுங்கள்.
// , ஆர்.வியின் உறவினர்களில் எத்தனை பேர் சாதி மாறி திருமணம் செய்து இருக்கிறார்கள்..? என்னுடைய உறவினர்களில் சாதி மறுத்து திருமணம் செய்த 4 பேரை தெரியும்..
பார்ப்பனர்கள் தன்னை விட உயர்ந்த நிலையில் இருப்பதாக அவர்கள் கருதும் “வெள்ளை தோல்” மேலை நாட்டவரை திருமணம் செய்யும் போது மட்டும்தான் சாதி பார்ப்பதில்லை..மற்றபடி இந்தியாவில் குலம் கோத்திரம் பார்க்காமல் திருமணமா..? சிரிப்புதான் வருகிறது…
ஆர்.வி உங்களுக்கு ஒரு சவால் இந்தியாவில், கல்லுடைக்கும், சுமை தூக்கும், ஏன் இந்தியாவில் 7௦% மக்கள் சார்ந்து இருக்கும் விவசாயத்தில் விவசாய கூலியாக ஈடுபடும் ஒரு பார்ப்பன குடும்பத்தை நீங்கள் காட்ட முடியுமா..?
அப்படி கணிசமான பார்ப்பனரை நீங்கள் சாதாரண “உழைக்கும் வர்க்கத்தில்” காட்டினால்..
// கள்ளர் சாதியிலும் ஏதுமற்ற உழைக்கும் மக்களும் இருக்கிறார்கள். // இந்த வாக்கியத்தை நாம் பார்ப்பனர்களுக்கும் பொருத்தலாம். //
கல்லுடைப்பவர்கள் etc. மட்டுமே உழைக்கும் வர்க்கம் என்பதை நான் ஏற்கவில்லை. “கனவு பூமியான” ரஷியாவில் என்கிநியர்களும் குமாஸ்தாக்களும் டாக்டர்களும் வாத்தியார்களும் உட்கார்ந்து சாப்பிடும் வர்க்கம் என்று சொல்ல மாட்டீர்கள். நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தாலும்:
சாதாரணமாக நான் பர்சனல் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை. ஏனென்றால் anecdoctal evidence பெரும்பாலும் பயனற்றது. என் உறவினர்களில் எத்தனை பேர் ஜாதி விட்டு ஜாதி மாறி கல்யாணம் செய்துகொண்டார்கள் என்பது இந்த வாதத்துக்கு எந்த விதத்திலும் பயன்படாது. நூறு பேர் அப்படி திருமணம் செய்திருந்தால் பகத்தின் எண்ணங்கள் மாறப் போவதில்லை. பகத்தின் குடும்பத்தில் யாருமே அப்படி செய்யாவிட்டாலும் என் எண்ணங்கள் மாறப்போவதில்லை. ஏனென்றால் இது வெறும் anedoctal evidence மட்டுமே.
பகத் சீரியஸாக விவாதிக்க விரும்புபவர் என்று நினைக்கிறேன். அதானால் இந்த ஒரு முறை மட்டும்:
என் நெருங்கிய உறவினர் மூவர் – ஒருவர் முஸ்லிமை கல்யாணம் செய்துகொண்டாள். இன்னொருவர் ஒரு வங்காளப் பெண்ணை கல்யாணம் செய்துகொண்டான். அந்த வங்காளப் பெண் என்ன ஜாதி என்று தெரியாது. இன்னொருவர் ஒரு சிந்திப் பெண்ணை கல்யாணம் செய்துகொண்டான். அந்த சிந்திப் பெண்ணும் என்ன ஜாதி என்று தெரியாது.
நான் பெரும்பாலும் பிராமணர்கள் இல்லாத கிராமங்களில் வளர்ந்தவன். எனக்கு நினைவிருக்கும் கிராமமான எண்டத்தூரில் 4 பிராமண குடும்பங்கள், எங்களைய்ம் சேர்த்து. என் கணக்கு வாத்தியாரின் பேரன் ஓட்டலில் சர்வராக வேலை பார்த்தான். மற்ற இரண்டு குடும்பங்கள் விவசாயக் குடும்பங்கள். நிலத்தில் இறங்கி வேலை செய்பவர்கள். ஒரு குடுமத்துடன் எங்களுக்கு இன்றைக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்கள் பெண் வேற்று ஜாதியில் திருமணம் புரிந்தவள். இன்னொரு பெண் இன்றும் மாடு வைத்து பால் விற்று (சாணி அள்ளி, பால் கறந்து etc.) அவளும் அவள் கணவனும் வாழ்கிறார்கள். எங்களுக்கு நெருங்கிய நண்பராக இருந்த கிட்டு மாமா பக்கத்து கிராமத்தவர். (வைப்பனை) அங்கு இருந்த ஒரே பிராமணக் குடும்பம் அவர்கள்தான். அவர் மாட்டை ஒட்டிக்கொண்டு வயலுக்கு அரையில் துண்டுடனும் கலப்பையுடனும் போவதை நானே பார்த்திருக்கிறேன். மாட்டுப் பொங்கலை அவர்கள் வீட்டில்தான் கொண்டாடுவோம். அவர்கள் வீட்டில்தான் மாட்டை அலங்கரித்து பிறகு ஊரில் உள்ள மாட்டு சொந்தக்காரர்கள் எல்லாரும் மாட்டை ஊர்வலமாக அழைத்துப் போவார்கள். பக்கத்தில் இன்னொரு ஊர் – பேர் இப்போது மறந்துவிட்டது. அங்கே கிட்டு மாமாவின் உறவினர்கள் இருந்தார்கள். அவர்களும் விவசாயக் குடும்பம். அருகே இருந்த “பெரிய” ஊர் உத்தரமேரூர். அங்கே எங்களுக்கு இரண்டு பிராமணக் குடும்பங்களை தெரியும். ஒருவர் டாக்டர். மற்றவர் ஓட்டல் வைத்திருந்தார். (அங்கேதான் என் கணக்கு வாத்தியார் பேரனும் வேலை பார்த்தான்.) அவர் தட்டு கழுவதையும் மாவாட்டுவதையும் சாதாரணமாக பார்க்கலாம். சில வருஷங்கள் கழித்து நாங்கள் பக்கத்தில் உள்ள இன்னொரு கிராமத்துக்கு – மானாம்பதி – குடி பெயர்ந்தோம். அங்கே எங்களையும் சேர்த்து மூன்று பிராமணக் குடும்பங்கள். ஒருவர் குருக்கள். கஷ்ட ஜீவனம். இன்னொருவர் பால் கடை வைத்திருந்தார். சூடான பால் கிடைக்கும். (டீக்கடை பால் கடை வைத்திருப்பவர்கள் எல்லாரும் உங்கள் கணக்கில் உடல் உழைப்பவர்களா இல்லையா என்று தெரியவில்லை.)
எனக்கு சிறு வயதில் தெரிந்த பத்து கிராமத்து குடும்பங்களில் நான்கு குடும்பங்கள் விவசாயக் குடும்பங்கள்; ஒருவர் சர்வர்; இருவர் “உழைக்கும்” சிறு முதலாளிகள்; ஒருவர் டாக்டர்; ஒருவர் குருக்கள். நான் என்ன முடிவுக்கு வரவேண்டும்?
என் நெருங்கிய உறவினர் ஹோட்டலில் தட்டு கழுவியர். பத்து பதினைந்து வருஷம் தட்டு கழுவிய பின்னர் யார் யார் காலிலோ விழுந்து கடன் வாங்கி அவரே ஒரு ஓட்டல் வைத்து அவர் பத்து பேருக்கு வேலை கொடுத்தார். என் தாத்தா தானே நிலத்தில் இறங்கி விவசாயம் பார்த்ததாகவும் முதுமை வந்து தள்ளாமல் போய்விட்டதால் குத்தகைக்கு விட்டதாகவும் அது “உழுபவனுக்கு நிலம் சொந்தம்” திட்டத்தில் நிலமே போய்விட்டதாகவும் சொல்வார். நாலைந்து வருஷம் முன்னால் செத்துப்போன என் அத்தை பையன் கல்யாண சமையல் செய்யும் கோஷ்டியில் ஒரு அசிஸ்டன்ட். அறுபதுகள் வரைக்கும் ஓட்டலில் சர்வர் வேலை பார்த்த பார்ப்பனர்கள் சர்வ சாதாரணம். சமையல் வேலை செய்யும் பார்ப்பனர்களை, மாமிகளை நீங்கள் பார்த்ததே இல்லையா?
ஆர்.வீ.யீன் கிராமம் எனக்குத் தெரியாது..ஆனால் சென்னையில் மைலாப்பூர் டைம்ஸ் எனும் வாராந்தர இலவச பத்திரிக்கை ஒன்னு அந்த ஏரியாவில் மவுண்டு ரோடு மகாவிஷ்ணுவின் வயிற்றுக்குள் வைத்துத் தரப்படுகிறது. அதில் வரும் வீடு வாடகைக்கு விளம்பரத்தில் வெக்கமே இல்லாமல் ‘ஒன்லி பிராமின்ஸ்’ விளம்பரம் போடுறவன் பார்ப்பான் தான்.. நான் என் வாழ்நாளில் எந்த பத்திர்க்கைலயும் ‘ஒன்லி நாடார்’னோ, ‘ஒன்லி கோனார்’னோ பாத்ததில்லை.. ஆதாரம் இருந்தா ஆர்வி காட்டட்டும்..
நண்பர் ஆர.வி , பார்ப்பனர்கள் எல்லோரையும் போல சாதாரண மனிதர்கள்தான் அவர்கள் சாதியம் பார்க்காதவரை. ஆனால் பார்ப்பன மக்கள் சாதாரணமாக இருந்த போதும் அவர்கள் “அசாதாரணமாக” இந்த சமூகத்தால் திணிக்கப்படுகிறது. ஒரு உதாரணத்திற்கு தமிழ் நாட்டில் வரும் தமிழ் திரைப்படங்களில் எத்தனை திரைப்படங்களில் ஒரு பார்ப்பனர் வில்லனாக காட்டப்பட்டு உள்ளார்… வில்லனாக வருபவர் எல்லாம், ஒரு கபாலி, ஆண்டனி அல்லது ஒரு ஆசிப்..etc. இவர்களைப் போன்ற நபர்களை நாம் சமூகத்தில் காண்கிறோம்.. அதே சமயம் ஊழலும், கொலையும், செய்யும் ஒரு பார்ப்பனன் கூட கிடையாதா..?
வருடா வருடம் புரியாத மொழியில் தியாகராச ஆராதனை என்ற பெயரில் எல்லோரும் சேர்ந்து பாடுவதை தேசிய தொலைகாட்சி முதல் உள்ளூர் பத்திரிகை வரை அனைவரும் நேரடி ஒளிபரப்பாக, முக்கிய செய்தியாக வெளியிடுகின்றனர்.. ஆனால் அதே சமயம் மக்களின் வாழ்வில் இருந்து பிறந்த மக்களில் வாழ்வை பிரதிபலிக்கும் இசை விழாக்களை புறங்கையால் ஒதுக்கி தள்ளுகின்றனர். தியாகராசா விழாவில் எத்தனை பேர் பார்ப்பனர் அல்லாதோர் இருப்பர்?
சிதம்பர கோவிலின் பிரச்சினையில் கோவில் பூசாரிகள் முதல்வராக மு.க இருந்த போதும் எதற்காக செயா அம்மையாரை சந்திக்க வேண்டும், ஈழ தமிழ் மக்களின் துயருக்கு ஒரு துரும்பை கூட செய்யாத சு.சாமி எதற்காக இந்த ‘அபலைகளின்’ துயரை காக்க ஓடோடி வரவேண்டும்… இதுவெல்லாம் உங்களுக்கு சாதாரணமாக தெரியலாம்.. ஆனால் இப்படித்தான் அறிந்தோ, அறியாமலே பார்ப்பனியத்தின் வடிவங்கள் இந்த சமூகத்தில் திணிக்கப்படுகின்றன…
Dear RV,
பார்பணீயத்தை, பார்ப்ணர்களையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். என்னதான் உடல் உழைப்பு மூலம் உண்டி வளர்த்தாலும் பார்பணீய்த்தை தூக்கி பிடிக்கும் யாரும் மனிதருக்கு அப்பாற்பட்ட ஏதோவென்று, அவர்கள் கருத்துப்படி நான் சூத்திரன். ஆனால் என் தோட்டத்தில் உள்ள வாழையிலை, மாவிலை தேவைபடுகிறது. இரண்டு வீடு தள்ளியிருக்கும் அவர்கள் பேசிக் கொள்வதும் உண்டு, உழைத்துதான் வாழ்கிறார்கள். ஆனால் என் வீட்டில் வாங்கிய வாழையிலைக்கு காசை தூக்கிதான் போடுவார்கள். இதுதான் பார்ப்பணீயம்.
சாக்கடை அள்ளும் மற்றும் இல்லை அதைவிட கீழான வேலையை செய்யும் தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர வேறு சாதியை காட்ட முடியுமா. ஏன் பிற்படுத்தப்பட்டவர்களை கூட.
ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். கீழ் நிலை வேலை செய்பவர்களை இன்னும் இதுபோல் மோசமான தொழில்களை மனிதன் செய்வதை ஒழித்து அவர்களை மேம்படச் செய்யவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கும். அதைப்போல் உடலுழைப்பில் ஈடுபடும் சாதியைக் கூட உடல் உழைப்பு அதிகம் ஈடுபடுத்தாத நவீன விவசாய முறைக்கு வளரவேண்டும் வளரவைக்க வேண்டும் என்பதே இலக்காகவும் இருக்கும். மூலை உழைப்பிற்கும், உடலுழைப்பிற்கும் உள்ள வித்தியாசம் இப்பொழுது ஒழியும் என்று யார் சொன்னது.
இதுவல்ல பிரச்சனை அவரவர் சாதித்தொழிலை ஒழிக்கமட்டுமே நிபந்தனை. அதை விடுத்து வேறு சாதியின் தொழிலை இன்னொரு சாதிக்கு பதிலீடு செய்வதல்ல. உழைக்காத உண்டு வாழும் கும்பல்களை அது எந்த சாதியில் இருந்தால் என்ன இல்லை சாதியடையாளத்தோடோ, அல்லது சாதி கலப்பின் பேரிலோ இந்திராகாந்தி குடும்பத்தைப் போலோ, அல்லது கருணாநிதி குடும்பத்தைப் போலோ கலப்பு இருந்தாலும் அவர்களை வீழ்த்தி ஒழித்து எப்படி சுரண்டலை ஒழிப்பது என்பதை பார்க்கவேண்டும்.
அதை விடுத்து அவர்களில் விவசாயிகளையே காணமுடியாது என்றும், இல்லை சாக்கடை மலம் மற்றும் சுடுகாடு வேலைகளைப் பார்ப்பவர்களே இல்லை என்றும் கூறுவது சரியாகாது.
உங்களின் கருத்துடன் ஒன்று படுகிறேன்… சாதி தொழிலை இன்னொரு சாதி தொழிலுடன் பதிலீடு செய்வது தீர்வாகாது.
ஆனாலும்…..திரு.RV,
நீங்கள் சொல்வது போல் எல்லா பார்ப்பனர்களும் பயங்கரவாதிகள் இல்லைதான்…என்பதும் சரிதான். அதே நேரம், எல்லா ஹிந்துத்வா பயங்கரவாதிகளையும் தலித் & கிருத்துவர்கள் + முஸ்லிம்களுக்கேதிராய் உருவாக்குவதும் இயக்குவதும் பார்ப்பனர்களும் அவர்களின் கொள்கையும்தானே?
YES YES YES YES YES YES ………
Please reply to my question, why do u hate other human being because he is not muslim
When and where i said like this?
//ஒசாமாவும் கசபும் முஸ்லிம்கள் என்பதால் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்வது தவறு; அதே போலத்தான் யாரோ ஒரு பார்ப்பனர் என்னவோ சொன்னார் என்பதால் பார்ப்பனர்கள் ஃபாசிச்டுகள் என்பது தவறு, வினாவுக்கு முஸ்லிம்கள் பற்றி எழுதுவது தவறு என்று புரிகிறது, பார்ப்பனர்கள் பற்றி அப்படி எழுதவது தவறு என்று புரியவில்லை என்று பல மாதங்களாக கத்திக் கொண்டிருக்கிறேன்.//
இந்தியாவில் இஸ்லாமியர்களில் சிலர் செய்யும் தீவிர செயலுக்கும், இந்தியாவில் பார்பனர்களின் சாதிபற்றையும் ஓப்பிட்டு சிலர் செய்யும் தவறுகளால் எல்லோரையும் அவ்வாறு கருத முடியாது என்று சொல்லவருகிறீர்கள். சொல்லும் விடயம் சரி. ஆனால் உங்கள் ஒப்பீடு தவறு. இஸ்லாமிய மக்களில் சிலர் பயங்காரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் பார்ப்பனர்களில் அப்படி சிலர் தான் சாதியை கடைபிடிக்கிறார்களா Mr.RV?
உலகில் எங்குமே இல்லாத சாதி இந்தியாவில் மட்டும் கான்கிரீட் கட்டிடமாக மண்ணில் ஊன்றி இருபதற்கு யார் காரணம்? உலகில் மற்ற நாடுகளில் இல்லாத (அப்படியே இருந்தாலும்) இந்து மத பார்பனியமே காரணம் என்பதை மறுக்கமுடியுமா உங்களால்?
சர்வதேசியவாதி,
// பிறப்பின் அடிப்டையில் ஒருவரை பார்ப்பனர் என்று நாங்கள்(வினவு உட்பட) சொல்லவில்லை. சொல்லவும் கூடாது. //
பார்ப்பனர் என்பது நடைமுறையில் இருக்கும் வார்த்தை. நீங்கள் தெருவில் யாரையாவது பிடித்து பார்ப்பான் என்றால் என்ன என்று கேட்டு பார்த்துவிட்டு பிறகு புது வரையறைகளை ஆரம்பியுங்கள். பார்ப்பனர் என்ற வார்த்தைக்கு எந்த தமிழ் அகராதியில் நீங்கள் சொல்லும் அர்த்தம் இருக்கிறது? தேவர் என்றால் தேவர் ஜாதியில் பிறந்தவராம்; கவுண்டர் என்றால் கவுண்டர் ஜாதியில் பிறந்தவராம்; தலித் என்றால் தலித் ஜாதியில் பிறந்தவராம்; முஸ்லிம் என்றால் முஸ்லிம் மதத்தவராம்; கிருஸ்தவர் என்றால் நடைமுறையில் இருக்கும் பொருள்தாநாம். ஆனால் பார்ப்பானர் என்றால் மட்டும் அய்யா நீங்கள் பார்ப்பனர் என்றால் அதை என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறீர்கள், பார்ப்பனர் என்றால் பார்ப்பன ஜாதியில் பிறந்தவரா, இல்லை ஜாதி வெறியரா, இல்லை கம்யூனிச தத்துவத்தை பின்பற்றுபவரா, இல்லை ஆறடி உயரமானவரா என்ன அர்த்தம் என்று உங்களை ஒவ்வொரு முறையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமாம். இந்த சப்பைக்கட்டு இங்கே நிறைய முறை கேட்டாகிவிட்டது, அதை பல முறை இடித்தும் பேசியாகிவிட்டது. நடைமுறையில் இருக்கும் வார்த்தையை நீங்கள் வேறு முறையில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை விளக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கேள்வி கேட்டால் மட்டுமே சப்பைக்கட்டாக வரும் விளக்கம் இது!
சரி, அப்படியே இருக்கட்டும். வினவு விட்ட ஒரு ஸ்டேட்மென்ட்: //
RV
Posted on November 8, 2009 at 2:37 am
// 2. ஹிந்து பேப்பரின் மேட்ரிமேனியலில் மட்டுமல்ல, வீடு வாடகைக்கு கூட பிராமின்ஸ் ஒன்லி என்று விளம்பரம் போடும் ஒரே சாதி பார்ப்பனர்கள்தான். //
இங்கே பார்ப்பனர்கள் என்ற வார்த்தை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது? நீங்கள் சொல்லும் அர்த்தத்திலா? சும்மா உதார் விட்டு நேரத்தை வீணடிக்காதீர்கள்.
நானும் ஒரு ஸ்டேட்மென்ட் விடுகிறேன். வினவு ஒரு காபிடலிச்ட். (என் வரையறையில் காபிடலிச்ட் என்றால் மாநில தலைநகரங்களில் வசிப்பவர்). நான் ஒவ்வொரு முறையும் காபிடலிச்ட் என்று சொல்லும்போது அதற்கு என்ன பொருள் என்று நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். சம்மதமா?
இருக்கிற எரிச்சல்கள் போதாது என்று மறுமொழிகள் மேலும் கீழும் ஏறுமாறாக போகின்றன. அதுவும் பல மாதங்களாக. அய்யா வினவு, இதை கொஞ்சம் சரி செய்யக் கூடாதா? பேசாமல் ஒவ்வொரு மறுமொழிக்கும் கீழே பதில் எழுதும் வசதியை எடுத்துவிடுங்கள். எல்லா மறுமொழிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரட்டும், குறைந்த பட்சம் எது முன்னால் எது பின்னால் என்றாவது தெரியும்.
Dear RV and Viththakan,
“is darwin’s theory really scientifically proved?” , “how genome proved darwin wrong” & “mitochondrial Eve” என்று கூகுளில் தேடினால், you’ll get hundreds and hundreds of sites. எண்ணற்ற அறிவியல் தளங்களில் டார்வின் கொள்கைகளை அடிச்சு கசக்கி துவைச்சு புளிஞ்சு காயப்போட்டிருக்கிரார்களே? I am neither a baseless story teller nor a scientist to give newer thesis.! வித்தகன் சொல்வது போல் நானா பொய் சொல்கிறேன்? Am I // pathological liar or seriously dumb // ??? இவர்களின் கடவுள் இல்லை கொள்கைக்கு பெரிய மாரல் சப்போர்ட் இந்த டார்வின் தான். அதனால்தான் இவர்களுக்கு வேறு எந்த அறிவியலாளரைவிடவும் டார்வின் மீது அப்படியொரு பைத்தியம்.
Just for sample : http://www.allaboutscience.org/darwin-day.htm
http://waynestegall.com/politics/againstdarwinism.htm
http://www.igenea.com/index.php?c=900
If you have the freedom to come out of your fixed ideology and can read the opponent’s ideals, then go through them and if possible many many others like them.
நெத்தியடி முகம்மது…
ஆதாமும் ஏவாளும் முதல் மனிதர்கள் என்பது உங்கள் கருத்து. அவர்கள் பிள்ளைகள் அடுத்த தலைமுறை என்பது தெளிவு. மூன்றாம் தலைமுறை எங்கிருந்து வந்தது? உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் என் வம்சாவளி தாயை மகன் புணர்ந்து அல்லது தந்தை மகளைப் புணர்ந்து அல்லது சகோதரப் புணர்ச்சியில் பரவியது என்று சொன்னால் அதை நான் பொறுக்க மாட்டேன். நீங்கள் எப்படி? உங்களுக்கு இந்தக் கருத்து பரவாயில்லையா அல்லது மூன்றாம் தலை முறை உருவாகியிருக்க வேறு விளக்கம் வைத்திருக்கிறீர்களா?
Dear Mr.viththakan,
ஆதம் நபிக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் முதல் முஹம்மது நபிக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் வரை ஒரே அடிப்படை அம்சம் “ஒரே இறைவன்”. ஆனால், சட்டங்கள் அந்தந்த சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் தான் வெவ்வேறு நபிக்கும் கொடுக்கப்பட்டன.
பன்றி இறைச்சி, வட்டி, விபச்சாரம், மது, சூதாட்டம், ஆபாசம் போன்றவை பல மத & நாட்டு சட்டங்களில் சாதாரணமாக அனுமதிக்கப்பட்டவை என்றாலும் முஹம்மது நபிக்கு தரப்பட்ட இஸ்லாத்தில் தடை செய்யப்பட பாவங்கள். இதேபோலத்தான், நம் ஆட்கள், இந்த நாகரிக உலகிலும் மிக மிக சாதாரணமாக முறைமாமனை-தாய்மாமனை உரிமையுடன் மணப்பது (அதையே திருப்பிப்போட்டால் சின்னம்மாவை மணப்பது என்றாகும்) என்பது, இஸ்லாத்தை பொறுத்தவரை அருவருக்கத்தக்கது – தடைசெய்யப்பட்டது.
இதுபோலத்தான், மனித சமுதாயம் பல்கிப்பெருக, ஒரே இரத்த சகோதரர்களை மணக்க கொடுக்கப்பட்ட இறை அனுமதி பிற்காலத்தில் அதே இறைவனால் மனித சமுதாயம் பல்கிபெருத்தவுடன் தடையும் செய்யப்பட்டுவிட்டது. இதெல்லாம் கேவலம் என்று பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிச்சொல்லி தங்களின் வருணாசிரம சாதிகளை ஸ்தாபித்தனர். இதை எதிர்த்த இறை மறுப்பாளர்கள், டார்வினின் தத்துவம் தங்களை சாதியிலிருந்து (மேல்நாட்டில் இனம்) விடுவிக்கிறது என்பதால் அதைபிடித்து-பொய் என தெரிந்தும்- இன்னும் தொங்கிக்கொண்டுள்ளனர்.
என் வம்சாவளி தாய் தந்தை அரைகுறை ஆடையிலோ அல்லது அது கூட கிடைக்காமலோ, பன்றியை சாப்பிட்டோ, வட்டி, விபச்சாரம், மது, சூதாட்டம், ஆபாசம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு இத்யாதி…இத்யாதி…இவற்றில் ஈடுபட்டோ வாழ்ந்திருந்தனர் என்பதை எப்படி என்னால் பொறுத்துக்கொள்ள முடியுமோ அதேபோல் நாமெல்லாம் உருவாக காரணமான மூன்றாம் தலைமுறையின் செயல் எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை – இதுதான் சாதி அடிப்படையில் நமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இறைவன் நினைத்திருந்தால், இரு ஜோடியை படைத்து, அவர்களை சம்பந்தியாக்கி, உங்கள் அருவெறுப்பு எண்ணத்தை போக்கி இருந்திருக்க முடியும். ஆனால், அப்படி செய்திருந்தால் இஸ்லாத்தில் இப்போது இரண்டு சாதி இருந்திருக்கும். அதில் சமத்துவம் மண்ணோடு மண்ணாகிப்போய் இருந்திருக்கும். யூதர்களும் (இவர்கள் ஆப்ரஹாமின் மனைவிக்கு பிறந்தவர்களாம் மற்றவர்கள் வேலைக்காரிக்கு பிறந்தவர்களாம் ) பார்ப்பனர்களும் தங்கள் “பிறப்பின் பெருமை” காரணமாய் தங்களிடம் மற்றவரை சேர்த்துக்கொள்ள அனுமதிக்காதது போல இஸ்லாமியர்களும் தங்களிடம் யாரையும் சகோதரத்துவத்துடன் அனுமதித்திருக்க மாட்டார்கள்.
ஆர்வி, வினவு, பகத் ஆகியவர்களுக்கு, ம.க.இ.க. பார்ப்பனியம் பற்றி 90களில் அளித்திருக்கும் கீழ்க்கண்ட விளக்கம் பாருங்கள். தேவையே இல்லாமல் விவாதம் நீண்டுபோகிறது எனக் கருதுகிறேன். ம.க.இ.க.வின் கீழ்க்கண்ட வரையறையில் ஆர்.வி.க்கு ஏதேனும் ஆட்சேபம் இருப்பின் எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன்..
“பார்ப்பன சனாதன வருணாசிரம சாதிய அமைப்பை முற்றாகத் துடைத்தெறியாமல் இந்த நாட்டின் ஜனநாயகப் புரட்சியோ, அதன் ஒரு அங்கமாகிய தேசிய இன விடுதலையோ பூர்த்தியாகாது. இந்த அமைப்பை எப்படியாவது தக்கவைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் அனைவரும் ஜனநாயகப் புரட்சிக்கும் எதிரிகள்தாம். அப்படிப்பட்ட எதிரிகளாகப் பார்ப்பனர்கள் அனைவரையும் கருதமுடியாது. பார்ப்பன மற்றும் பார்ப்பனர் அல்லாத பிற மேல் சாதிகளையும் சேர்ந்த நிலப்பிரபுக்களையும் தரகு அதிகார முதலாளிகளையும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளையுமே எதிரிகளாகக் கருத முடியும். அவ்வாறின்றி பார்ப்பன சாதி -– வருணாசிரமப் பிறப்புடைய அனைவருமே எதிரிகள். “உள்ளிருந்தே அடுத்துக் கெடுக்கும் நரித்தனம்’ அவர்களுடைய பிறவிக்குணம். அதற்கு விதிவிலக்குக் கூட கிடையாது என்பதுதான் தமிழினவாத, திராவிட (பூர்வகுடி) இனவாதக் கட்சிகள், குழுக்களின் நலைப்பாடு. இது முற்றிலும் தவறானது. பகுத்தறிவுக்கே எதிரானது. மார்க்சிய -– லெனினிய சித்தாந்தத்துக்கு மாறானது. (பூர்வகுடி) இனவாத சித்தாந்தம் (ரேசியலிசம்) ஆகும்.
பிறவிக்குணம் என்று எதுவுமே கிடையாது. ஒருவரது குணநலன்கள் அவரது சமூக வாழ்வால்தான் உருவாகிறது. தீர்மானிக்கப்படுகிறது. பிறவியினால் அல்ல. பிறப்பு என்பது ஒரு விபத்தைப் போல தற்செயலாக நிகழ்வது. அதை வைத்துக் கொண்டு எவரது சமூக — அரசியல் தகுதியையும் தீர்மானிக்கக் கூடாது. இதுதான் பகுத்தறிவு, அரசியல் மார்க்சிய லெனினியக் கண்ணோட்டம்.
குறிப்பிட்ட வருண சாதிப் பிறப்புத்தான் மனிதர்களது குணநலன்களையும், சமூக அரசியல் தகுதியையும் தீர்மானிப்பதற்கு அடிப்படையாக வைக்க வேண்டும் என்பது உண்மையிலேயே பார்ப்பன சனாதன சித்தாந்தமாகும். இதுவேதான் நாஜி சித்தாந்தத்தின் மூலகர்த்தா நீட்சே உருவாக்கிய தத்துவம். இதன் அடிப்படையில்தான் ஆரிய இனமே உலகை ஆளும் அறிவும், திறமையும் தகுதியும் உடையது என்ற இட்லரின் கோட்பாடு வகுக்கப்பட்டு ஆரிய இனமல்லாதாரை அடிமைப்படுத்தவும், வேட்டையாடவும் கிளம்பினர். நீட்சே – இட்லரின் சித்தாந்தத்தைப் போன்றதுதான் திராவிட (பூர்வகுடி) இனவாதமும் ஆகும். ஆகவே இதை நாம் ஏற்கவில்லை.”
(பார்ப்பனர்களாய்ப் பிறந்தவர்களை நாம் நம்பலாமா எனும் கேள்விக்கு 1993 இல் புதிய ஜனநாயகம் அளித்த பதில் – ஆதாரம் பு.ஜ. 1–15 ஆகஸ்ட் 1993)
புதிய ஜனநாயகம் வாசகருக்கு,
நீங்கள் மேற்கோள் காட்டிய விளக்கத்தை பலமுறை பல கோணங்களில் ஆர்.விக்கு விளக்க முயன்றிருக்கிறோம். ஆனால் அவர் பார்ப்பானியம் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது என்கிறார். அதை சாதியவாதம் என்று சொல்லுமாறு கோருகிறார். அதற்கு உங்கள் விளக்கம் என்ன?
பல்வேறு தரவுகளையும் ஆய்வுகளையும் ஒப்பிட்டு அம்பேத்கர் போன்ற அறிஞர்களின் வாதங்களையும் கேட்டபின்னர் நாம் முடிவுக்கு வருவது என்ன என்றால், ஆரியர் வருகைக்கு முன்னரே இந்தியத் துணைக்கண்டத்தில் சாதி, குலப்பிரிவுகள் இருந்தன. இங்கு வந்து சேர்ந்த ஆரியக்கூட்டத்தினர் அதனைத் தங்கள் நலனுக்கேற்றபடி பயன்படுத்திக் கொண்டனர். அவர்களின் மனுஸ்மிருதி போன்ற நூல்கள் சாதிப் படிநிலையைக் கற்பித்து..பிரம்மாவின் தலையில் நாங்க பிறந்தோம் அதனால் பிராமணன். அதாவது தமிழில் பார்ப்பான். மீதி உள்ளவன் எல்லாம் எனக்கு அடிமை என்று நால்வருணத்தையும் கற்பித்து அதனை அரசாட்சி முறையோடு இணைத்தார்கள். ஒரு சாதிக்கு மற்ற சாதி தாழ்வானது என்றும் இது பிறப்பினால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் கோவில் கோபுர அடுக்கு போல இறுக்கமான படிநிலை அமைப்பை உருவாக்கியது பார்ப்பன சனாதன தருமம். ஆக, ஏற்கெனவே இங்கிருந்த சாதியை (நன்கு கவனிக்க, சாதியைத்தான்..ஏற்றத்தாழ்வை அல்ல) வகைப்படுத்தி ஒரு பிரம்மிடு போன்ற சமூகக் கட்டமைப்பை உருவாக்கியது மனுதர்மம் போன்ற கொடிய அற நூல்களே. இதன் உச்சியில் இருப்ப்பது பார்ப்பனர்கள். அதாவது பிராமணர்கள். இச்சொல்லே பிரம்மனின் தலையில் இருந்து பிறந்ததைக் குறிப்பிடுவதனால்..சொல்வழியே பிறப்பை அடிப்படையாக வைத்த ஏற்றத்தாழ்வைக் கட்டமைப்பதால், சாதிக்கொடுமையைக் குறிப்பிட பார்ப்பனியம் என்று சொல்வதுதான் சரியானது. சாதியம் என்று குறிப்பிடுவதால் பார்ப்பனியத்தை மூடிமறைக்கிறோம் என்று ஆகின்றது. இந்தச் சிந்தனை மேலிருந்து கீழாக அனைத்து சாதியிலும் ஊடுறுவி இருக்கின்றது. தனக்குக் கீழே இருப்பவனை ஒடுக்க எண்ணுபவன் அதனை நியாயப்படுத்த, தான் பார்ப்பனனுக்குக் கட்டூப்பட்டிருக்கும் தர்மத்தைத்தான் துணைக்கு அழைக்கிறான்.
இதுபற்றி 1957 இல் முதுகுளத்தூர் கலவரத்தினை ஓடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பார்ப்பனரான காவல்துறை அதிகாரி சொல்லும் ஒரு சம்பவத்தை பல அறிஞர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். கீழத்தூவல் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டினை அடுத்து ஒவ்வொரு கிராமத்திலும் தேவர், பள்ளர் சாதிகளில் சாதிக்கு 20 இளைஞர்களைப் பிடித்துக் கைது செய்ய முயன்றார்களாம். அப்போது தேவர் சாதிப்பிரமுகர் ஒருவர் அந்த காவல்துறை அதிகாரியிடம் சொன்னது “சாமி..நீங்க எங்களை விட உயர்ந்தவர். நீங்க சொல்றதுக்கு நாங்க கட்டுப்படணும்..இதுதான் தர்மம்..அதனால எங்காளுகள நீங்க சொல்றதால அனுப்பறோம்..இதை நாங்க செய்யலன்னா..பள்ளனுக எங்களுக்கு அடங்கி இருக்க மாட்டாங்க..” (வார்த்தைகள் சில மாறியிருப்பினும் அப்பிரமுகர் சொன்னதன் சாரம் இதுதான்)
ஒரு சாதி மேல்சாதிக்கு கட்டுப்பட்டிருக்கணும்..அச்சாதிக்குக் கீழ்சாதி கட்டுப்பட்டிருக்கணும்..இனக்கலப்ப்பு நடந்திடக்கூடாது..நடந்துருச்சுனா தர்மம் அழியிதுன்னு அர்த்தம்..அப்படி தர்மம் அழிஞ்சிட்டா அந்தத் தர்மத்தைக் காக்க நானே அவதரிப்பேன்..இதுதான் பார்ப்பன சனாதருமத்தைக் காக்க மகாவிஷ்ணு அறிக்கை விட்டதைத்தான் கீதைன்னு படிக்கச்சொல்றான்..
இத்துடன் சேர்ந்து இன்னொரு விசயத்தையும் சொல்ல விரும்புகிறேன்.
சாதி என்பது ஆசிய சொத்துடைமை வடிவம் நிலவிய தென்கிழக்கு ஆசியா நாடுகள், கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் போன்ற நாடுகளிலும் ஏதோ ஒரு வடிவில் இருந்து வந்ததுதான்(பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு). ஆனால் பார்ப்பனிய பல்படிநிலைமை(அல்லது படிபடிம வடிவம்) என்பது இந்தியாவில் பார்ப்பனிய தத்துவம் உருவாக்கிய ஒன்று. எனவே இதனை பார்ப்பனியம் என்றுதான் அழைக்க முடியும்.
சூனா பானா,
என்னிடம் விளக்கம் கேட்பவர்கள் அநேகம். என் கேள்விகளுக்கு – மிக நேரடியான கேள்விகளுக்குக் கூட – பதில் சொல்பவர்கள் குறைவு. அதனால் என் நேரடியான கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள், பிறகு விரிவாக பேசலாம்.
1. நீங்கள் பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்ற கொள்கையை ஏற்றுக் கொள்பவரா இல்லை மறுப்பவரா?
2. டாக்டர் ருத்ரன் என் கருத்துகளுக்கு காரணம் என் ஜெநோடைப் என்று ஒரு முறை கூறினார். இது கண்டிக்க வேண்டிய கருத்தா இல்லையா?
3. வினவு மாட்ரிமொனியல்களில் ஜாதி பார்க்கும் ஒரே ஜாதி பார்ப்பனர் மட்டுமே என்று கூறுகிறார். இது உண்மையா பொய்யா?
ஆர்.வி திரும்பத் திரும்ப ஒரு பொய்யை வினவின் மேல் அபாண்டமாக சுமத்துகிறீர்கள். பார்ப்பன சாதி அழிந்து வருகிறது என்று ஒரு வாசகர் எழுதியதற்கு பதிலாகத்தான்,
//தமிழ் பார்ப்பனர்கள் அழிகிறார்களா இல்லை தங்க்ள் சாதியை அமெரிக்கா சென்றும் இறுக பற்றியிருக்கிறார்களா என்பதை அறிய இந்து பேப்பரின் மேட்ரிமோனியல் பக்கத்தை பார்க்கவும். அதில் சாதி தடையில்லை என்று ஒரு பார்ப்பான் கூட அறிவித்த்து கிடையாது. மற்றபடி குலம் கோத்திரம் எல்லாம் கச்சிதமாக குறிப்பிட்டே வரும். மற்ற சாதிகளிடம் கொஞ்சமாவது இருக்கும் நெகிழ்வுத்தன்மை பார்ப்பனர்களிடம் சுத்தமாக இருப்பதில்லை.// இப்படிக் குறிப்பிட்டிருந்தோம். பிராம்ன்ஸ் ஒன்லி என்று வீடு வாடகைக்கு போர்டு போடும் ஒரே சாதி பார்ப்பனர்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்து மாட்ரிமோனியலில் மற்ற சாதிகளில் ஒரு சிலராவது சாதி தடையில்லை என்றுவரும். அப்படி வரவே வராத சாதி பார்ப்பனர்கள்தான். மேட்ரிமோனியல் விளம்பரத்தில் மற்ற சாதிகளும் தங்கள் சாதிகளைக் குறிப்பிட்டே உறவு தேடுகிறார்கள் என்பதை எங்கேயும் நாங்கள் மறுக்கவில்லை. நாங்கள் சொல்லாத்தை சொன்னதாக அபாண்டமாக பொய் சொல்லி எழுதி மகிழ்கிறீர்கள். இது என்ன ஜனநாயகமோ தெரியவில்லை.
வினவு,
இதோ உரல் – https://www.vinavu.com/2009/11/06/caste-killing/#comment-11953
இரண்டாம் பாயின்ட் – கட் அண்ட் பேஸ்ட் செய்து கீழே: ஏற்கனவே பல முறை கட் அண்ட் பேஸ்ட் செய்ததுதான்.
2. ஹிந்து பேப்பரின் மேட்ரிமேனியலில் மட்டுமல்ல, வீடு வாடகைக்கு கூட பிராமின்ஸ் ஒன்லி என்று விளம்பரம் போடும் ஒரே சாதி பார்ப்பனர்கள்தான்.
இது நீங்கள் எழுதாமால் யார் உங்கள் தாத்தாவா வந்து எழுதி இருக்கிறார்? இப்படி எழுதியும்விட்டு பிறகு நான் அபாண்டமாக பொய் சொல்கிறேன் என்று வாய் கூசாமல் சொல்கிறீர்கள்.
// மேட்ரிமோனியல் விளம்பரத்தில் மற்ற சாதிகளும் தங்கள் சாதிகளைக் குறிப்பிட்டே உறவு தேடுகிறார்கள் என்பதை எங்கேயும் நாங்கள் மறுக்கவில்லை. நாங்கள் சொல்லாத்தை சொன்னதாக அபாண்டமாக பொய் சொல்லி எழுதி மகிழ்கிறீர்கள். //
மத்ரிமொநியலில் மட்டுமல்ல, வீட்டு வாடகைக்கு கூட ஜாதி பார்க்கும் ஒரே ஜாதி பார்ப்பனர்கள்தான் என்று நீங்கள் எழுதி விட்டு நான் பொய் சொல்கிறேன் என்கிறீர்கள். சுண்டைக்காயைத்தான் சோற்றுக்குள் மறைக்க முடியும். பூசணிக்காயை எப்படி மறைப்பது?
//2. ஹிந்து பேப்பரின் மேட்ரிமேனியலில் மட்டுமல்ல, வீடு வாடகைக்கு கூட பிராமின்ஸ் ஒன்லி என்று விளம்பரம் போடும் ஒரே சாதி பார்ப்பனர்கள்தான்.//
மேலே உள்ளதை ஆர்வி புரிந்து கொள்ள முடியவில்லை என்பது மகிழ்ச்சியானதே. ஏனேனில் அவர் பார்ப்பன்ர் என்ற அடையாளத்தின் மீது வரும் தாக்குதலை தடுப்பது என்ற நிலையிலிருந்து எல்லாவற்றையும் பார்க்கிறார்.
ஹிந்து மேட்ரிமோனியலில் எல்லா சாதிக்காரனும்தான் போடுகிறான். ஆனால் அங்கு மட்டுமல்ல வீடு வாடகை விடுவதிலும் சாதி பார்ப்பவன் பார்ப்பனந்தான் என்று இந்த வரிகளை புரிந்து கொள்ள என்னால் முடிகிறது.
டோண்டு அய்யனுக்கும், ஆர் விக்கும் புரியவில்லை என்பது நல்ல விசயமே.
//வாடகைக்கு கூட ஜாதி பார்க்கும் ஒரே ஜாதி பார்ப்பனர்கள்தான் என்று நீங்கள் எழுதி விட்டு நான் பொய் சொல்கிறேன் என்கிறீர்கள். //
இல்லையென்று சொல்கிறீர்களா ஆர்வி? நீங்கள் ஏன் அபாண்டமாக பொய் சொல்கிறீர்கள் ஆர்வி?
நண்பர் ஆர்.வி, வினவின் இந்த கூற்றில் நான் புரிந்து கொண்டது, மன மேடை பகுதியில் “சாதி தடை இல்லை” என்ற பகுதியில் விளம்பரம் செய்யாத சாதி பார்ப்பன சாதி. (இதன் உட்பொருள் மற்ற சாதிகள் எல்லாம் அந்த பகுதியில் விளம்பரம் செய்கிறது என்பது அல்ல, ஆனால் மற்ற சாதிகளுக்கு இருக்கும் நெகிழ்வுதன்மை இவர்களுக்கு கொஞ்சமும் இல்லை என்பதாகவே நான் புரிந்து கொள்கிறேன் )
அதே போல் வீடு வாடகைக்கு விடுவதில் கூட பிராமின் ஒன்லி என அட்டையை தொங்கவிடும் ஒரே சாதி பார்ப்பன சாதிதான்.
RV நீங்க முன்முடிவோடு அனுகுவதாகத்தான் எனக்கு தெரிகிறது. முதல் தலைமுறைக்கு புரிந்தது போலத்தான் எனக்கும் புரிந்தது ஏனென்றால் அது ஒரு FACT இந்து போப்பரில் நாயர், கம்மாவார் என்ன பல சாதியினரும் தனது சாதிக்குள்ள பெண்தேடுவதை மறுத்து யாரும் எழுத முடியாது. ஆனால் அதே பேப்பரில் வீட்டு வாடகை பக்கத்தில் BRAHMINS ONLY போல NAIDU ONLY, THEVAR ONLY என்று நீங்கள் பார்க்கவே முடியாது. இதைத்தான் வினவு சென்னது. ஆனால் வழமை போல நீங்கள் ஒரு அர்த்தத்தை புரிந்து கொண்டு அதற்க்காக கோபப்படுகிறீர்கள்.
பிராமனாள் கபே என்பது எப்படி மாற்றுச் சமூகத்தினரை அவமானப்படுத்தியதோ அதே போல்தான் பிராமின்ஸ் ஒன்லி யும் செய்கிறது. இது உங்களக்கு ஏன் புரியவில்லை என்பது எனக்கு புரியவில்லை.
தனது சாதியை, இன மேன்மையை (யூத இனம் உட்பட) தூக்கிப்பிடிக்கும், NEO-NAZI டோண்டு ராகவன் மீது வினவிடம் நீங்கள் வெளிப்படுத்தும் அறச்சீற்றத்தின் 0% கூட படுவதில்லையே..? என்னே உங்கள் நடுவு நிலைமை
பார்ப்பனியம் என்ற வார்த்தைக்கு எதிராக நீங்கள் பேசத்துவங்கியது இன்று பார்ப்பனியத்துக்கு வக்காலத்து வாங்குவதில் போய் நிற்கிறது… கவனம், கவனம், கவனம்
//குறைந்த விடயமாக, எல்லோரும் இந்து மததிற்குள்ளேயே பிராமணன் முதல் பஞ்சமன் வரை பெண் கொடுத்து பெண் எடுக்கலாம் என்று நீங்களோ, இன்றுள்ள பார்ப்பனர்களோ அல்லது பார்ப்பன அமைப்புகளோ அறிவிக்க தயாரா?//
ஏன் அறிவிக்க வேண்டும். பார்ப்பனர்கள்தான் சாதிவிட்டு சாதியில் திருமணம் செய்கிறார்கள் என ஒரு பின்னூட்டத்தை கள்ளர்பிரான் என்பவர் மேலே கொடுத்துள்ளாரே. வினவும் அதை மறுத்ததாகத் தெரியவில்லையே.
நீங்கள் கேட்பதை இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கள்ளர் சாதியினர் செய்வார்களா, உத்தபுரத்து பிள்ளைமார்கள் அறிவிப்பீர்களா என கேட்டு பாருங்கள். உங்கள் சாதியினர் (அது என்ன சாதியாக இருந்தாலும் சரி) செய்துவிடுவார்களா?
@ஆர்.வி.
நானும் பேசாமல் இருக்கலாம் எனப் பார்த்தால் இந்த பார்ப்பன வெறுப்பாளர்கள் கக்கும் விஷம் தாங்கவில்லை. முதலில் நீங்கள் இவர்களுக்கு மறுமொழி அளிப்பதை நிறுத்துங்கள். மர்ற உயர்சாதியினர் செய்யும் அக்கிரமங்களையும் பார்ப்பனீயம் என்றே அழைத்து தத்தம் சாதியினர் செய்வதை மறைப்பார்கள். வேறு வேலை இல்லையா உங்களுக்கு? இவர்களது சான்றிதழ் நமக்குத் தேவயில்லை என்பதை உணர்ந்து இவர்களை புறக்கணிப்பதே நல்ல வழி.
கீழ்வெண்மணியில் தலித்துகளை எரித்த சகநாயுடுவின் செயலை பூசி மெழுகிய ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்னும் கன்னட பலிஜார் நாயுடுவை பின்பற்றுபவர்களிடமிருந்து வேறு என்ன புத்திசாலித்தனமான வாதங்களை கேட்கவியலும்?
அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்
ஐயா டோண்டு ராகவையங்கார் என்ற துக்ளக் சோவின் அல்லக்கை பார்ப்பனரே,
கீழ்வெண்மணி குறித்த பெரியாரின் அறிக்கையை மட்டுமல்ல அரசு அமைப்பிற்குள் மட்டும் நின்று பார்ப்பனியத்தை எதிர்த்த அவரது அணுகுமுறையில் எங்களுக்கும் விமரிசனம் உண்டு. இதனாலேயே தி.கவினர் எங்களை எதிரிகளாகப் பார்க்கிறார்கள். ஆனால் பார்ப்பனிய இந்து மதத்தை தோலுரித்த பெரியாரின் பங்கை நாங்கள் உயர்த்திப் பிடிக்கிறோம். கீழ்வெண்மணி கொலைக்காக கோபாலகிருஷ்ண நாயுடுவை பழிவாங்குவதற்காக கொன்றது நாங்கள் ஆதரிக்கும் மார்க்சிய லெனினிய இயக்கத்தை சார்ந்தவர்தான். பிரமண சங்கத்தை சார்ந்தவர் அல்ல. மோடியின் வெறியரான உம்மைப் போன்றவர்கள் பெரியாரின் பெயரைக்கூட உச்சரிப்பதற்கு தகுதியற்றவர்கள். இந்த நாட்டில் சாதி அமைப்பு நீடிப்பதற்கு வரலாற்றில் எப்போதும் பக்கபலமாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்தான். தேவதாசி முறையை நீட்டிப்பதற்கு உம்மவா சத்தியமூர்த்தி ஐயர் வெறிகொண்டு ஆதரித்தபோது, பெரியாரே அதை எதிர்த்து முறியடிப்பதற்கு காரணமாக இருந்தார். மற்றபடி குழந்தை திருமணம், சதி, விதவையை ஒதுக்குவது முதலான சமூக கொடுமைகளை சட்டத்தின் மூலம் தடை செய்ய முயன்றபோது ஒவ்வொரு முறையும் அதை எதிர்த்தவர்கள் பார்ப்பனர்கள்தான். எனவே இந்த நாட்டில் பிற்போக்கின் வரலாறு பார்ப்பனியத்தை தூக்கி பிடிக்கின்ற பார்ப்பன மேல்சாதியினருக்கே சொந்தம். அவர்களின் வாரிசாக உம்மைப் போன்றவர்கள் இன்றும் தொடர்வது தமிழ்நாட்டின் சாபக்கேடு. சாதி பெயரைச் சொல்லி பார்ப்பனியத்தின் அணிக்கு ஆர்.வியை சேர்க்கச் சொல்லும் உங்களின் சதிக்கு ஆர்.வி பலியாகாமல் இருக்கவேண்டும்.
மன்னர் மானியத்தை ஒழித்த பொழுது அதனை எதிர்த்த ஒரே கட்சி பாஜகவின் முந்தைய அவதாரமான பார்ப்பனிய ஜனசங்கம்
ஆர்வி நியாயமானவர் எனில் சாதிப் பெயரை பெருமையுடன் அறிவித்து நானோரு அய்யங்கார் பாப்பாந்தான் என்று வக்கிரமாக கூவும் இந்த கிழவனை கண்டிக்கட்டும், பிறகு மற்ற நியாயங்களை பேசட்டும்.
ஆர்வி உங்களது சாதிச் சார்பின்மையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு(இந்த வரிகள் மதச்சார்பின்மை குறித்த ஆர் எஸ் எஸ்ன் குரலை ஒத்தது போல சிலருக்கு ஒலித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல )
பார்ப்பனர்கள் சாதி விட்டு திருமணம் செய்வதாக சொல்லும் டோண்டு அவர்களே நீங்கள் அப்படித்தான் திருமணம் செய்தீர்களா, இல்லை உங்கள் மகன், மகளை ஒரு தலித்துக்கு மணமுடிக்க முடிவு செய்திருக்கிறார்களா என்று சொல்லிவிட்டு மேற்கண்ட வாதம் உண்மையா, பொய்யா என்ற ஆராய்ச்சிக்குள் இறங்கவும். எங்கள் தோழர்களில் அநேகம்பேர் சாதி தீண்டாமை மறுப்பு மணம் செய்தவர்கள் என்பதையும் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். ஊருக்கு உபதேசம் செய்யும் தகுதியை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வதை சகிக்க முடியவில்லை.
நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
மற்றப்படி திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இதில்மெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்பட்டு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என மற்றவர்களுக்கு நியாயம் பேசும் கட்டைப் பஞ்சாயத்து செய்யும் உங்களைப் போன்றவரை திருப்தி செய்து கொண்டிருக்கமுடியாது.
கள்ளர்சாதி வெறி பற்றி பேச வந்த இப்பச்திவில் சௌகரியமாக பார்ப்பனீயத்தை ஏன் நுழைக்க வேண்டும். மேற்படி கள்ளர்சாதியை தாக்கியதற்காக பதறிப்போய் ஏன் டிஸ்கி எல்லாம் தர வேண்டும்? அவர்கள் செருப்பால் அடிப்பார்கள் என்ற பயம்தானே.
டோண்டு ராகவையங்கார்
ஆர்வி முன்பொருமுறை பார்ப்பான் பறையன் என்ற பெயரில் வித்தியாசம் இல்லை. எனவே பறையன் என்ற வார்த்தையை நாம் விட்டொழித்தது போல பார்ப்பான் என்று விளிப்பதையும் விட வேண்டும் என்றார்.
அது ஒரு மோசடியான கூற்று என்பதுடன் பார்ப்பனக் கண்ணாடி போட்டுக் கொண்டு சொல்லும் ஒரு வரலாற்று மோசடி ஆகும்.
தேவர் ஹோட்டல் என்றும், ஒன்லி பிரமின்ஸ் என்றும், வெஜ் ஒன்லி என்றும், இங்கு பிராமன்ர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், மாட்டு மாமிசமா? ஒவ்வேக் என்றும், எங்க கவுண்டர் சாதில இப்படித்தான் செய்வாங்க என்றும், கர்நாடிக் சங்கீதம்தான் சூப்பர் என்றும், கேனையன் என்றும், சண்டாளன் என்றும், டப்பாங்குத்து என்றும், அல்பனுக்கு வாழ்வு வந்தால் என்றும் எந்த வெட்கமும் இன்றி சாதிப் பெருமை பேசுவதும், பறையன், பள்ளன் முதலான தாழ்த்தப்பட்டவர்களின் பெயர், அடையாளங்கள் இழிவுபடுத்துவது ஒரு பொது நடைமுறையாக இருக்கும் சூழலில் பார்ப்பனன் என்ற வார்த்தையும் பறையன் என்ற வார்த்தையும் ஒன்று என்று ஏமாற்றும் ஆர்வியின் கூற்று படு மோசடியானது மட்டுமல்ல சாதிய ஒடுக்குமுறையும், தீண்டாமையும் வரலாற்று ரீதியாக இன்றும் தொடர்கிறது என்பதை மூடி மறைக்கும் தந்திரமும் ஆகும்.
//நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். //
யோவ் உன்ன மாதிரி சாதிக் கொழுப்பெடுத்த பாப்பானுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுய்யா. வேனுமின்னா உன்னோட தளத்துல தனியா உக்காந்து புலம்பிக்க. இன்னும் தொடர்ந்து இங்க பேசவது என்று முடிவு செய்தால் இன்னும் அதிகமாக அசிங்கப்படுத்தப்படுவாய்(அசிங்கப்படப் போவதைப் பத்தில்லாம் நீ கவலைப்படப் போவதில்லை என்பது தெரியும், ஏனெனில் சாதியை தூக்கிப் பிடிப்பவனுக்கு மானம்-ரோசம்-வெட்கம்-சூடு-சொரனை இதெல்லாம் சுத்தமாக இருக்காது. இதை மீறி எங்க திருப்திக்கு சொல்லிக்கிறேன்).
எங்கெங்கேயோ தூண்டித் துருவி ஆதாரம் கண்டுபிடிக்கும் ஆர்வியே, ஜனநாயகம் பேசும் நலலவரே, இதோ உங்களது கண் முன்னே பெருமையுடன், ‘டோண்டு ராகவ அய்யங்கார்’ என்று விளம்பரப்படுத்தும் சுய சாதி பெருமை பிடித்த மிருகத்தை அடித்து விரட்ட ஓடி வாருங்கள்.
//ஏன் அறிவிக்க வேண்டும். பார்ப்பனர்கள்தான் சாதிவிட்டு சாதியில் திருமணம் செய்கிறார்கள் என ஒரு பின்னூட்டத்தை கள்ளர்பிரான் என்பவர் மேலே கொடுத்துள்ளாரே. வினவும் அதை மறுத்ததாகத் தெரியவில்லையே.//
கள்ளர்பிராந்தான் பார்ப்பன சாதி, அமைப்புகளின் அத்தாரிட்டியா நோண்டு ராகவன் அவர்களே? அப்படியெனில் கள்ளார்பிரானை நோண்டி நொங்கெடுத்து எமது கருத்தை உறுதிப்படுத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா?
நான் மணி
பார்ப்பனர்கள் மேட்ரிமோனியலில் சாதி பாராட்டுகிறார்கள் என்பது சரியானதல்ல• மாறாக எனக்கு சில ஐயங்கள் உள்ளன• இந்த ஐயங்களுக்கு பதில் தேவை..
1. கவுண்டர், முதலியார், செட்டியார், ராவுத்தர், தமிழ் சன்னி, பறையர் என சாதிப்பெயர்களை வெட்கமே இல்லாமல் (அதாவது பிறப்பை இழிவுபடுத்துவதாக இருந்தாலும்) ஏன் மக்கள் மேட்ரிமோனியலில் பயன்படுத்துகிறார்கள். தவறான முறையில் பிறந்தாலும் ஒரே முறையில்தான் தவறிப் பிறந்திருக்க வேண்டும் என்ற அவர்களது விருப்பமா… அல்லது அடிமைத்தனத்திற்கு பழக்க்கப்படுத்தப்பட்ட அவர்களது மனநிலையா…
2.திருமணம், தாலி, பூணூல் என்பன தனிப்பட்ட விருப்பம் அவற்றை யாரும் தீர்மானிக்க முடியாது என்பது ஜனநாயக உரிமை என்று வைத்துக் கொண்டால், அந்த ஜனநாயக உரிமை மறுக்கப்பட்ட காலத்துக்கு யார் பொறுப்பேற்பது..
3. ஒரு சாராய வியாபாரி சாராயம் காய்ச்சி ஊரக் கெடுத்து சம்பாதிக்கிறான். அவனோட பேரன் படித்து
நல்ல நிலைமைக்கு வந்து விடுகிறான். தாத்தாவிடம் சாராயம் காய்ச்சியனின் பேரன் படிக்க போக விடாம அந்த சாராய வியாபாரியால மீண்டும் சாராயம் காய்ச்சவே போய் இன்றைக்கு ரவுடியாகி விடுகிறான். இவன் ரவுடியானதுக்கு எங்க தாத்தா தான் காரணம் … அவரு சம்பாத்யத்துல நான் படிச்சாலும் என்ன அந்த பையன் ரவுடியானதுக்கு பொறுப்பேற்க சொல்லக் கூடாது அப்படின்னு அந்த படித்தவன் சொன்னால் அது நியாயமா..
4. பூணூல் போட தகுதியானவர்கள் இருபிறப்பாளர்கள் என்கிறது மனுஸ்மிருதி. தகுதியற்றவர்கள் என வேசியின் பிள்ளைகள் என பெரும்பாலான சாதிகளையும் வரையறுக்கிறது. பெரியாரின் மொழியில் சொல்வது என்றால் ஒரு தெருவில் ஒரு வீட்டில் மாத்திரம் இது பத்தினிகள் குடியிருக்கும் வீடு என்று எழுதிப்போடுவதற்கு சம்மான இக்குற்றம் தீவிரவாதம் அல்லது ஆயுதமேந்தலை விட கொடுரமானதா இல்லையா.. நேர்மையானவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்…
5. வீட்டுப் பெண்களை அடிமையாக நடத்துவது சரி என்பதற்கு பழைய இந்துமத கருத்துகஃளை ஆதாரம் காட்ட முடியும். தலித், மாடு, பெண் இவர்கள் சம்மானவர்கள் என வரும் அந்த பாடலில் எழுதியவர் நிச்சயமாக தலித் ஆக இருக்க மாட்டார் என நம்ப முடியும். எழுதியவர் நிச்சயமானவே படிக்க வாய்ப்பு தரப்பட்ட ஒரே சாதியைச் சேர்ந்தவர்தான். அதனால் யார் பொறுப்பேற்க வேண்டும். இப்போ நோய் வருது வருவதற்கு காரணமான சூழலை மாற்றுவதும், அந்த வைரஸ் அல்லது கிருமியை ஓழிப்பது அவசியமா, அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளை எல்லாம் உடம்பிலிந்து எடுத்துவ இடுவது சாத்தியாமா
சர்வதேசியவாதிகளே,
பெயரில் மட்டும் சர்வதேசிய வாதிகள் என்று போட்டுக்கொள்வதில் பயனில்லை. உண்மையில் சர்வதேசியத்தின் நிலமை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். கிணற்றுக்குள் இருந்துவிட்டு, நாங்கள் சர்வதேசியவாதிகள் என்று சொல்வதில் உங்கள் அறியாமைதான் வெளிப்படுகிறது.
ஜப்பானில் சாதி உண்டு என்பது உலகறிந்த உண்மை. caste and outcaste. இதில் அவுட்கேஸ்ட்டில் உள்ளவர்களை தீண்டமையை உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளையும் செய்து வந்தார்கள் என்பதும் நன்கு அறிந்த விசயம். அப்போது எப்படி புத்தமதம் சாதிய தீண்டாமையை கொண்டு வந்தது என்று விளக்க முடியுமா. அங்கே பார்ப்பனர்கள் கிடையாது. ஆனால் சாதியும் தீண்டாமையும் எப்படி வந்தது. அது யாருக்கு அங்கு சேவை செய்தது. தேடுங்கள். இப்பொழுதும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.
மற்றொன்று, உங்கள் வினவிலேயே வந்தது. கலையரசன் அவர்களால் எழுதப்பெற்ற ஆப்ரிக்க கட்டுரை. அதில் ஆப்ரிக்காவில் ஒரு குறிப்பட்ட பகுதி-குழு-இனம் சார்ந்த மக்கள் கோவிலுக்குள் நுழைய முடியாது என்பது, கடவுளை வணங்க முடியாது என்பதும். அவர்களுக்கு மேலும் சில உரிமைகள் இல்லை என்பதும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இது சாதியை ஒத்த தன்மைப் போல் இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார். சிந்தனை ரீதியாக இதை ஏன் உருவாக்கினார்கள். இதை ஏன், யாருக்கு, எதை கட்டிக் காப்பற்ற கூறினார்கள். இங்கே உருவாக்கியது பார்ப்பனர்களே என்று வைத்துகொள்ளுங்கள், இதில் பார்ப்பனர்கள் மட்டும்தான் பயனடைந்தார்களா?
பூ நூல் என்பது பார்ப்பனர்கள் மட்டும்தான் அணிகிறார்கள் என்பது இல்லை. செட்டியார்கள், வேளாளர்கள், ஆச்சாரிகள் என்று நிறைய சாதிகள் அணிகிறார்கள்.
இப்படி நிறைய கேள்விகள் இருக்கின்றன. இதையெல்லாம் மீறி, இன்று அந்த சாதியினை வைத்துக்குகொண்டு வெறும் பார்ப்பனர்கள்தான் மட்டும்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்களா என்பது ஒரு கேள்வி? இன்று சாதி பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு மட்டும்தான் தடையாக இருக்கிறதா?
//பிறப்பின் அடிப்டையில் ஒருவரை பார்ப்பனர் என்று நாங்கள்(வினவு உட்பட) சொல்லவில்லை. சொல்லவும் கூடாது.
பார்பனர்கள் என்று யாரை கூறுகிறோம்? சாதிய கட்டமைப்பில் மேல் தளத்தில் ஒய்யாரமாக கைகட்டி கொண்டு சமூகத்தின் சாதிபடிநிலைகளை சரியென்று கூறுகிறவர்கள், சாதிய படிநிலையில் தீண்டாமை குறித்து, சாதி கூறித்து எதிர்ப்பு கிளம்பும் போது அதை மனுதர்மப்படியும் சாஸ்திரங்களின் மேற்கோள்கள் காட்டி அதை நியாயம் என ஆதரிப்பவர்கள், சாதிகெதிரான சக்திகள் உருவாகும் போது அவ்வபோது அதை இந்து மத (அ)தர்மத்தின் படி தடுக்க அரும்பாடுபடுகிறவர்கள் எவரோ அவர்கள் பார்பனர்கள். //
பார்ப்பனர்கள் என்பவர்கள் யார் என்பதற்கு நீங்கள் புதிய முறையில் சாதியை உருவாக்கிறீர்கள். உங்கள் வேலை சாதியை உருவாக்குவதுதானா? பார்ப்பனர்கள் யார் என்பது அல்லது சாதி என்ன என்பது அதை உருவாக்கியவர்கள் விளக்கும் போது அது பிறப்பின் அடிப்படையில் என்று ஒரு விதி இருக்கிறது. ஆனால் நாங்கள் அப்படி இல்லை. நாங்கள் புதி விதிசெய்கிறோம். புதிய சாதியை படைக்கிறோம் என்று முயற்சிப்பது போல் தெரிகிறது. உங்கள் அகராதியில் இரண்டு வருணத்தை மட்டும் படைப்பீர்கள் (இரண்டு வருணத்தை ஒழித்துவிட்டதாக பிற்காலங்களில் நீங்கள் சொல்லலாம்) போல் தெரிகிறது. உங்களை பொறுத்தவரையில் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்று இரு வருணம் மட்டுமே.
உங்கள் விளக்கப்படி பார்ப்பனர் சாதி எப்போதுமே இருக்கும். எப்படி என்றால் உத்தமபுரத்தில் சம உரிமை விரும்பாத பார்ப்பனர் அல்லாத மக்களும் உங்கள் அகராதியில் பார்ப்பனர்கள். உங்களுக்கு பார்ப்பனியத்துக்கும் பார்ப்பன சாதிக்கும் வித்தியாசம் தெரியாமல் நபர்களுக்கும் அவர்கள் மனுதர்மத்துக்கும் சித்தாந்தத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக இருக்கிறீர்கள். உங்களால் சாதி ஒழிக்கவோ, எதிர்க்கவோ முடியாது முற்போக்காக வேண்டுமானால் பேசலாம். ஆனால் சாதியை, ஒரு புதிய விதியின் அடிப்படையில் சாதியை உருவாக்க முடியும். நீங்கள் மக்களையும் ஆள்பவர்களையும், ஒடுக்குபவர்களையும் வேறுபடுத்த முடியாது. உங்கள் அகராதியில் அனைவரும் ஒடுக்குபவர்கள், ஆள்பவர்கள். அனைவரும் ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கிறவர்கள். அவ்வளவுதான். இதில் குறிப்பாக சில அடையாளங்கள் இருந்தால் அவர்களை நீங்க்ள் பெயர் சொல்லி உங்கள் லிஸ்டில் ஏற்றிவிட்டால் அவர்கள் மட்டுமே வித்தியாச நபர்கள் என்று நினைக்கிறேன். நிதானமாக சிந்தியுங்கள். உங்கள் வரையரைப் பற்றி நிதானமாக சிந்தியுங்கள்.
குசேலன் அவர்களே,
எமது முந்தைய பின்னுட்டம் உங்களது வசதிக்காக
//
இத்துடன் சேர்ந்து இன்னொரு விசயத்தையும் சொல்ல விரும்புகிறேன்.
சாதி என்பது ஆசிய சொத்துடைமை வடிவம் நிலவிய தென்கிழக்கு ஆசியா நாடுகள், கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் போன்ற நாடுகளிலும் ஏதோ ஒரு வடிவில் இருந்து வந்ததுதான்(பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு). ஆனால் பார்ப்பனிய பல்படிநிலைமை(அல்லது படிபடிம வடிவம்) என்பது இந்தியாவில் பார்ப்பனிய தத்துவம் உருவாக்கிய ஒன்று. எனவே இதனை பார்ப்பனியம் என்றுதான் அழைக்க முடியும்.
//
படிபடிம வடிவம் என்றால் எனன்வென்று அம்பேத்கரையும், பெரியாரையும் படித்து புரிந்து கொள்ளவும் அல்லது சொந்த அனுபவத்தில் சாதியை ஒழிப்பது குறித்து ஆய்வு செய்து புரிந்து கொள்ளவும்.
ஐயா முதல் தலைமுறையாளரே,
உண்மையில் நீங்கள் முதல் தலைமுறைக்கு அடுத்து வளரவே இல்லைபோலும். இங்கு தத்துவம் உருவாக்கியது பார்ப்பனியம் என்ற பெயரில் என்பதை நன்கு அறியலாம். அதுவல்ல பிரச்சனை அதை பார்ப்பனர் என்று மட்டும் அழைப்பது சரியாகுமா என்பதே இன்றைய (நேற்றைய அல்ல) பிரச்சனை.
அடுத்தது அது ஏதோ இந்து பார்ப்பனர் என்று சொல்வதின் மூலம் ஏதோ பார்ப்பனர்களை ஒழித்தால் அது ஒழிந்துவிடும்போல் பலப்பேர் கூறுகிறார்களே அதுதான் பிரச்சனை. உங்களுக்கு கருத்துக்களை அழிப்பது என்றால் தத்துவத்தை ஒழிக்க வேண்டுமென்றல் அதற்கு காரணமான சமூக படிமத்தை ஒழிக்க வழிசொல்லித்தாருங்கள் அதைவிடுத்து மற்றதை சொல்லித் தராதீர்கள். பெயரல்ல பிரச்சனை அந்த தத்துவம் யாருக்கானது என்பதுதான் பிரச்சனை. அது பார்ப்பனர்களுக்கு மட்டுமானதா என்பதே என் கேள்வி?
அம்பேத்காரையும் பெரியாரையும் படித்து புரிந்து கொள்ளவும் என்று குறிபிட்டுள்ளீர்கள்.
அம்பேத்கார் சாதிக்கு அடிப்படை இந்து மதமே ஆகையால் புத்தமதத்திற்கு மாறினால் இது தீரும் மாறும் என்றார். இதைப் பின்பற்றலாமா. அல்லது;
பெரியார் சாதிக்கு அடிப்படை கடவுள். ஆகையால் கடவுளை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது என்றார். பின்னொருதடவை இஸ்லாம் முற்போக்கானது. ஆகையால் எல்லோரும் இஸ்லாத்திற்கு மாறுங்கள் என்று கூறினார். ஆகையால் அதை பின்பற்றுவதா.
சரி இரண்டு பேரும் சாதி தோன்றியதற்கு மூலக் காரணம் இரண்டு பிறப்புகளை கூறுகிறார்கள். ஒழிவதற்கு இரண்டு வழிகளை கூறுகிறார்கள். நீங்கள் எதை தேர்தெடுத்தீர்கள். அல்லது அதில் எது வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க உரிமை உண்டா. இல்லை நீங்கள் இதை எதையுமே ஒத்துக்கொள்ளவில்லையா? நீங்களே விளக்கி எனக்கு புரியவையுங்களேன்.
இரண்டு தீர்வுகளையும் ஏற்கவில்லை. நாங்கள் கம்யூனிச தீரவை முனவைப்பவர்கள்
மேலும் இருவரும் சொன்னதைப் பற்றி அதனது காண்டக்ஸ்டைப் பற்றி தெரியாமல் இரு கருத்துக்களாக சொல்லி உள்ளீர்கள். இந்து மதத்தின் கொடுங்கோன்மை அவர்நம்பிய சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்ததால் பார்ப்பனியத்தை எதிர்த்து பின்னோக்கிய மாற்றுத் தீர்வை முன்வைத்து அம்பேத்கார் பௌத்த மதத்திற்கு மாறினார். அந்த நேரத்தில் பெரியார அதனை விமர்சனம் செய்தார். அதன் ஒரு வாக்கியம்தான் இசுலாத்திற்கே மாறி இருக்கலாம் என்பது. அதாவது பெரியார் அதனை பவுத்தத்துடன் ஒப்பிட்டு முற்போக்கானது என்றாரே தவிர தீர்வு என அர்த்தம் ஏற்படும் வகையில் அந்த கட்டுரையில் சொல்லவில்லை. படித்துப் பார்த்துவிட்டு பேசவும். பழைய தலித் முரசு பத்திரிகையின அட்டைப்படக் கட்டுரையில் கூட இது வந்துள்ளது.
மணிக்கு,
அது என்ன கம்யூனிச தீர்வு? சொல்லவில்லைய?
அம்பேத்கார், பெரியார் ஆகியோரது தீர்வை ஏற்கவில்லை என்று சொல்லிவிட்டீர்கள். ஆகையால் அதற்கான விவாதம் வேண்டாம்.
உங்கள் தீர்வை சொன்னால் அதில் விவாதம் தொடங்கலாம். பிறகு வரலாற்று விசயத்துக்கு வருவோம்.
//பெயரல்ல பிரச்சனை அந்த தத்துவம் யாருக்கானது என்பதுதான் பிரச்சனை. அது பார்ப்பனர்களுக்கு மட்டுமானதா என்பதே என் கேள்வி?//
ஆமாம்.. அதிலென்ன சந்தேகம்? சாதியம் இங்கும் இருக்கிறது உலகின் பல நாடுகளிலும் இருந்துள்ளது. ஆனால், அதில் நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கெல்லாரும் அடிமை என்ற தனது (பார்ப்பனன்) மேலாதிக்கத்திற்கான நியாயத்தை பேசும் தத்துவத்தை வேறு பெயரிட்டு அழைக்க முடியாது
///அம்பேத்கார் சாதிக்கு அடிப்படை இந்து மதமே ஆகையால் புத்தமதத்திற்கு மாறினால் இது தீரும் மாறும் என்றார். இதைப் பின்பற்றலாமா. அல்லது;
பெரியார் சாதிக்கு அடிப்படை கடவுள். ஆகையால் கடவுளை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது என்றார். பின்னொருதடவை இஸ்லாம் முற்போக்கானது. ஆகையால் எல்லோரும் இஸ்லாத்திற்கு மாறுங்கள் என்று கூறினார். ஆகையால் அதை பின்பற்றுவதா.///
அம்பேத்கரும் பெரியாரும் பக்கம் பக்கமாக எழுதி இதைத்தான் சொல்லியுள்ளார்கள் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன்
முதல் தலைமுறையாளரே,
உங்களின் கருத்துப் படி பார்ப்பனரை எதிர்த்து பிற்படுத்தப்பட்டவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடிகளையும் ஒன்று சேர்த்து அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும். அதுதானே உங்கள் கருத்து. உங்களைப் பொருத்தவரை ஒடுக்குபவன் பார்ப்பான், ஒடுக்கப்படுபவன் பார்ப்பனர் அல்லாதார். சரியா. உங்கள் பார்முலா
பார்ப்பான் X பிற்படுத்தப்பட்டவர் + தாழ்த்தப்பட்டவர்கள்.
நல்ல தத்துவம் என்று உங்கள் நினைப்பு. பாவம்!!!!!!!!!!
முதல் தலைமுறையாளரே,
அம்பேத்கார், பெரியார் இதைச் சொல்லவில்லை என்று நினைத்தால் தீர்மானமாக இது சொல்லவில்லை என்று தீர்மானமாக சொல்லுங்கள். வேறு எதைச் சொன்னார் என்றும் சொல்லுங்கள். இதில் பக்கம் பக்கமாக விளக்கினால் என்ன? சுருக்கமாக சொன்னால் என்ன? எதைச் சொன்னார் என்று சொல்லுங்கள். விதண்டாவாதம் வேண்டாமே?????????
குசேலனுக்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
அம்பேத்காரும், பெரியாரும் மிகச் சரியாக இந்து பார்ப்பன மதமே சாதிக்கு அடிப்படை என்பதை கூறினர். அதற்கு தீர்வு என்றும், அதற்கு எதிரான பண்பாட்டு நடவடிக்கைகள் என்றும் பலவற்றை அனுபவரீதியாகவே அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அவற்றில் ஒன்றிரண்டை பட்டியலிட்டு அதை மட்டும்தான் இறுதியும் முடிவுமான தீர்வாகச் சொன்னார்கள் என்று வாதிடுவது சிறுபிள்ளைத்தனம்.
உங்களுக்கு எனது ஆலோசனை மீண்டும்
//படிபடிம வடிவம் என்றால் எனன்வென்று அம்பேத்கரையும், பெரியாரையும் படித்து புரிந்து கொள்ளவும் அல்லது சொந்த அனுபவத்தில் சாதியை ஒழிப்பது குறித்து ஆய்வு செய்து புரிந்து கொள்ளவும்.//
உங்களுக்கு அம்பேத்கார் சொன்னதை புத்த மதம் மாறுவதுதான் தீர்வு என்று சொன்னதை மறுக்க துணிவில்லை. அதே போல் பெரியார் இந்து மதம் கடவுள் ஒழியாத வரை தீர்வுகிடையாது என்று சொன்னதை இல்லை என்றால் அதை எந்த பெரியாரிஸ்டுகளிடமே கேட்டுக்கொள்ளுங்களேன். அதற்கு உப தீர்வாக இஸ்லாத்துக்கு மாறுங்கள் அது முற்போக்கானதாக இருக்கிறது என்று சொன்னதை சரி, தவறு என்று ஒத்துக்கொள்ள துணிவிலலை. உங்கள் அகராதியில் ஆயிரம் இருக்கட்டும். இதை சொல்லி இருக்கிறார்லா? இதை பின்பற்றலாமா இல்லையா என்பதை சொல்லுங்கள். இப்படி பயங்கொள்ளிதனமான கருத்துக்களை பதுக்கிவைத்து சந்தர்ப்பவாத நாடகம் ஆடாதீர்கள். உங்கள் பார்வையில் இது சரியா தவறா என்று சொல்லிவிட்டு, அதற்கு பிறகு மற்றதையும் ஏதொ சொன்னார்கள் என்று விவாதியுங்கள்.
யாரை காப்பாற்ற போகிறீர்கள் என்று தெரியவில்லை? உங்களுக்கேன் அதை சொல்ல துணிவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
முழுவது விளக்க நேரமில்லாமல் இருக்கலாம். ஆனால் இதுபோல் சொல்லவே இல்லை என்பது மறுக்ககூடவா நேரமில்லை. அப்படி இதுவும் சொல்லியிருந்தாரென்றால் அது தவறு சரி என்று கூடவா சொல்ல நேரமில்லை. இவ்வளவு பிஸியான ஆளு எதற்கு இதில் வந்தீர்கள். அரட்டையடிக்கவா. ஓ இது அரட்டை அரங்கமா.
மிஸ்டர் குசேலன்,
கீழே எனது பதில் உள்ளது. பின்னூட்டங்களையும் தெளிவாகப் படிக்கவும்.
//குசேலனுக்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். //
//பெரியாரும் மிகச் சரியாக இந்து பார்ப்பன மதமே சாதிக்கு அடிப்படை என்பதை கூறினர். அதற்கு தீர்வு என்றும், அதற்கு எதிரான பண்பாட்டு நடவடிக்கைகள் என்றும் பலவற்றை அனுபவரீதியாகவே அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அவற்றில் ஒன்றிரண்டை பட்டியலிட்டு அதை மட்டும்தான் இறுதியும் முடிவுமான தீர்வாகச் சொன்னார்கள் என்று வாதிடுவது சிறுபிள்ளைத்தனம்.//
இருவரும் பிரச்சினை என்று இந்து பார்ப்பன மதத்தைத்தான் சொல்கிறார்கள். அதில்தான் வாதம் செய்ய முடியும்.
முதல் தலைமுறை,
//முதல் தலைமுறையாளரே,
உங்களின் கருத்துப் படி பார்ப்பனரை எதிர்த்து பிற்படுத்தப்பட்டவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடிகளையும் ஒன்று சேர்த்து அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும். அதுதானே உங்கள் கருத்து. உங்களைப் பொருத்தவரை ஒடுக்குபவன் பார்ப்பான், ஒடுக்கப்படுபவன் பார்ப்பனர் அல்லாதார்.//
நீங்கள் எப்படி சுற்றிவளைத்தாலும் இதற்கு தீர்வு? அதைப் பற்றி என்ன கருத்து என்பதே கூறாமல் வெறும் அதைப் பற்றி புலம்பி என்ன பயன்.
அவர்கள் சொன்ன பொதுவான தீர்வாக எதை ஏற்றுக்கொள்கிறீர்கள். நான் சொல்வது தவறாகவே இருக்கட்டும். அவர்கள் சொன்ன இறுதி விடிவு என்ன? அதை நீங்கள் யாருடையதை ஏற்கிறீர்கள்? இல்லை தீர்வுக்கான சொந்த விளக்கம் கூறுங்கள்.
//முதல் தலைமுறையாளரே,
அம்பேத்கார், பெரியார் இதைச் சொல்லவில்லை என்று நினைத்தால் தீர்மானமாக இது சொல்லவில்லை என்று தீர்மானமாக சொல்லுங்கள். வேறு எதைச் சொன்னார் என்றும் சொல்லுங்கள். இதில் பக்கம் பக்கமாக விளக்கினால் என்ன?//
நோகாமல் நொங்கு தின்ன விரும்பும் குசேலன் அவர்களே.. உங்களுக்கு விரிவான பாடம் எடுக்கும் அவகாசம் எனக்கு இல்லை. எனவே உங்களது அக்கறையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் ப்ட்சத்தில் சொந்த முயற்சியில் இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு,
முதல்தலைமுறையிலேயே பின் தங்கிவிட்ட முதல் தலைமுறை
பெறுநர்:
பல தலைமுறைகள் அட்வான்ஸ்டு படிப்பு படித்தும் சாதியத்தின் இந்திய பார்ப்பனிய வடிவம் படிபடிமம் என்றால் என்னவென்று தெரியாத குசேலன்
ஆமாம் நாங்கள் பாமரர்கள்தான். அதற்காக எதையாவது சமாளித்து எழுதினால் பதில் சொல்லாமல் எழுதினால் நீங்கள் எல்லாம் மெத்தப்படித்த மேதாவியாகிவிடுவீர்களா. இதில் மேதவித்தனமல்ல பிரச்சனை. இப்படி இருக்கிறதா இல்லையா என்பதே பிரச்சனை. சொந்த முயற்சியில் படிப்பதற்கு விவாதம் ஏன்? அதை விட இந்த மாதிரி விவாத முயற்சி எடுக்க வேண்டிய அவசியம் ஏன். அதில் நீங்கள் கலந்துகொள்ள அவசியம் ஏன்? நாங்கள் பின் தங்கி விட்டதாலே எங்களை ஏமாற்றலாம் என்பது உங்கள் கருத்தோ. எங்களைப் போல் அனுபவ அறிவுள்ளவர்களை எந்த பதிலும் கொடுக்காமல் ஏய்க்கலாம் என்பதுதான் என்னமோ.
பின் தங்கிவிட்டார்கள் என்பதாலேயே எங்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை என்பது மமதையன்றி வேறில்லை.
குதர்க்கம் தேவையில்லை கேட்ட விளக்கத்தில் உங்கள் கருத்து என்ன என்பதே. இதை வெட்டி அரட்டை அரங்கமாக மாற்ற விரும்பினாலும் உங்களுடன் வீண்வார்த்தை அளக்க எனக்கு நேரமில்லை மேதையே!!!
//நாங்கள் பின் தங்கி விட்டதாலே எங்களை ஏமாற்றலாம் என்பது உங்கள் கருத்தோ. //
பெரியார், அம்பேத்கர் இருவரும் சந்தேகத்திற்கிடமின்றி இந்தியாவின் தடைக்கல் இந்து பார்ப்பன மதம் என்று சொல்லியுள்ள போது அதில் விவாதம் நடத்த உங்களுக்கு என்ன மனத்தடை?
பயமா?
அதை விட்டுவிட்டு அவர்கள் தமது சொந்த அனுபவத்தில் முன் வைத்த ஒரு சில பண்பாட்டு நடவடிக்கைகள் மீது வாதம் செய்ய இது ஒன்றும் பெரியார், அம்பேத்கர் பற்றிய பதிவு அல்ல. இந்து பார்ப்பன மதத்தின் மீதான் விமர்சனம், விவாதத்தை பெரியார், அம்பேத்கர் அனுபவங்களின் மீதான விமர்சனம், விவாதமாக கடத்துவதற்கான உங்கள் நோக்கத்தை ஈடு செய்ய இயாலதது எனக்கும் வருத்தமளிக்கிறது 🙂
முதல் தலைமுறை,
//அம்பேத்காரும், பெரியாரும் மிகச் சரியாக இந்து பார்ப்பன மதமே சாதிக்கு அடிப்படை என்பதை கூறினர். //
//பெரியார், அம்பேத்கர் இருவரும் சந்தேகத்திற்கிடமின்றி இந்தியாவின் தடைக்கல் இந்து பார்ப்பன மதம்//
இதில் சாதிக்கு அடிப்படை என்றும், அதை வேறு இடத்தில் இந்தியாவின் தடைக்கல் என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
சாதிஒழிப்புக்கு மட்டும் இந்து பார்ப்பனிய மதம் அடிப்படை என்று கூறினாரா? இந்தியாவின் அனைத்துப் பிரச்சனைக்கும் தடைக்கல்லாக கூறினாரா? உங்கள் விளக்கம் இரட்டைத் தன்மை உள்ளது. ஒழுங்குப்படுத்துங்கள்.
இது இந்து பார்ப்பனிய மதம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. அதுதான் தடைக்கல் அதனால் எல்லாவற்றிற்கும் தீர்வு அதை ஒழிப்பதுதான் முன்நிபந்தனை. அதை செய்தால் அனைத்தும் தீர்ந்துவிடும் என்றுபொருள்படும். அதுதான் உங்கள் கருத்தா? இல்லை வேறொன்றா? அது எது?
//இந்து பார்ப்பன மதத்தின் மீதான் விமர்சனம், விவாதத்தை பெரியார், அம்பேத்கர் அனுபவங்களின் மீதான விமர்சனம், விவாதமாக கடத்துவதற்கான உங்கள் நோக்கத்தை//
இந்து பார்ப்பன மதத்தின் மீதான விமர்சனத்திற்கும் பெரியார் அம்பேத்கார் விமர்சனத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என் நோக்கம் தவறானது என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் இந்து பார்ப்பன மதம் என்பதை உங்கள் சொந்த கண்டுபிடிப்புதானே. அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லைதானே.
உங்களுடைய இவ்வளவு விவாதமும் உங்கள் சொந்த கண்டுபிடிப்பு அல்ல. இவை அனைத்தும் அம்பேத்கார் பெரியாரின் கண்டுபிடிப்பே என்பதை ஏற்றுக்கொள்வது. அது மட்டுமில்லாமல் தீர்வையும் அவர்களுடையதை ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதுதான்.
தோற்றத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள். ஏனென்றால் எப்படி பார்த்தாலும் இரண்டு வார்த்தையில் இந்து பார்ப்பன என்று இருப்பதில் இவர்களில் ஒவ்வொருவருக்கும் தொடர்பு வந்துவிடுகிறது. ஆகையால் உங்களுக்கு தடுமாற்றம் இல்லை. ஆனால் தீர்விற்கு வரும்போது இரண்டு, உங்களைப் பொருத்தவரையில் நிறைய வழிமுறையை வைக்கிறார்கள். அப்பொழுதுதான் உங்களுடைய தடுமாற்றம் வருகிறது. அப்பொழ்துதான் மீண்டும் என் கேள்வி இதில் எந்த தீர்வு என்பதை ஒருவரியில் எழுதுங்கள் என்று கேட்கிறேன்? கருத்தை எதிர்கொள்ள என்ன பயம். நான் தீர்வு இதுதான் என்று அவர்கள் சொல்வதை தெளிவாக வைக்கிறேன். நீங்கள் இல்லை என்று சொல்லிவிட்டு வேறு எதை இருவரும் சொன்னார்கள் என்பதையும் சொல்லவில்லை. அதில் உங்களுக்கு ஏற்புடையது எது என்று சொல்லவில்லை. சரியாக சொன்னால் தலித்தியத்தை ஏற்கிறீர்களா, பெரியாரியத்தை ஏற்கிறீகளா என்பதை சொல்லவில்லை. முகமே தெரியாமல் விவாதிக்கும்போதுகூட கருத்தை வைக்க தயக்கமேன்?
நான் மணி
1. இந்தியாவில் தனிமனித உரிமைகள், அல்லது ஜனநாயகத்திற்கான உரிமைகள் வளர முடியாமல் தவிப்பதற்கு இங்கு நிலவும் உற்பத்தி முறையில் நிலவும் பிரஷ்யன் ஜங்கர் ஒரு காரணம் என்பதை புரிய வேண்டுமென்றால் அதனை வெறும் உரிமைகள் மாத்திரமே ஜனநாயக வளர்ச்சி எனப் புரிந்து கொள்ளும் நபர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே தோழர்கள் இதுபோல சிறுபிள்ளைத்தனமான அவர்களது கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்ல வேண்டும் எனக் கருதுகிறேன். அவர்களை கேட்டால் பூணூலே அணிவது ஜனநாயக உரிமை என்பார்கள்.. அதனை எள்ளி புறந்தள்ளி உண்மையை உணர்த்த முயற்சியுங்கள•
2. நிலவுகின்ற சமூக அநீதிகளைக் கண்டு குமுறும் சில மேல்சாதி நண்பர்களுக்கு அது சிறிது காலத்தில் தங்களது இனத்தின் மீதான துவேசமாக மாறுவது வியப்புக்குரியதல்ல• ஏனெனில் எல்லாவற்றுக்கும் விளக்கம் அளிக்க கல்வி அவர்களைப் பயிற்றுவித்திருக்கிறது. நியாய உணர்ச்சி அழிந்து போவது அவர்களுக்கு பெரிதாகத் தெரிவதில்லை. தனது முப்பாட்டன் செய்த கொடுமைக்கு தான் தண்டனை அநுபவிக்க வேண்டும் என்ற அறவுணர்ச்சி அவர்களை முன்நடத்துவதில்லை. ஏன் குறைந்தபட்சமாக தங்களது உறவினர்களி சாதி பாராட்டும் தருணங்களான பூணூல் திருமணம், அகமண முறைத் திருமணம், வீட்டு வாடகை விடுதல் ஆகியவற்றைப் புறக்கணிக்கவும், முடிந்தவரை விமர்சனம் செய்யவும் அஞ்சுகின்ற நபர்களாகவே இவர்கள் இருக்கின்றார்கள்.
3. இவர்கள் எவரும் தாமாகவே முன்வந்து இதுவரை தமது மூதாதையர் செய்த குற்றங்களுக்கு இந்த இணையத்தில் கூட மன்னிப்பு கேட்கவில்லை என்பது போதும் இவர்களது நேர்மைத்தனத்திற்கான உதாரணமாக
கைக்கெட்டும் தூரத்தில் நின்று தன் கருத்தைக்கூறமுடியாதவன் என்பது என் அநுபவத்தில் நான் கண்ட பார்ப்பன குணம். ஓர் இனம் என்பது தன் பழக்கங்களைத்தன் சந்ததியனருக்கு இயல்பாகவே அளிக்கிறது. இந்த கோணத்தில்தான் கொழுப்பும் குயுக்தியும் மலிந்துகிடந்த `விதண்டா’வாதத்தை பார்ப்பனீயபாரம்பரியமாக நான் பார்க்கநேர்ந்தது..இன்னும் பார்க்குமாறு இருக்கிறது..
i shall not continue on my stand in this forum, as those who provoke me do so mainly to distract all others from the primary topic of discussion
good said ddr
ஆர்வி,
ஒடுக்கப்ப்ட்ட சாதியின் பேசத் துணிந்த முதல் தலைமுறையாகிய நான் இங்கு உங்களுக்கு பல கேள்விகளை வைத்துள்ளேன் தயை கூர்ந்து பதில் சொல்லி என்னை உற்சாகப்படுத்துங்கள்.
முதல் தலைமுறை,
பின்னூட்டம் அளிக்கும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள். அப்போதுதான் மறுமொழி தானாகவே வெளியிடப்படும் இல்லையேல் மாடரேஷனுக்கு என்று வெளியாகமல் போய்விடும். ஆர்.வி இப்போது அமெரிக்க நேரப்படி தூங்கிக்கொண்டிருக்க வேண்டும். இரவில் துவங்கி நள்ளிரவு காலை வரை அவர் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கொடுப்பார் என நம்புகிறோம். ஆனால் டோண்டு இப்போது முழி பிதுங்கியவாறு பார்த்துக்கொண்டுதான் இருப்பார்.
எல்லா தோழர்களும் பாரப்பனியம் குறித்து தாங்கள் அறிந்தவையை வைத்து அள்ளி வீசுங்கள். இந்த முறையாவது ஆர்.விக்கு பார்ப்பனியம் என்றால் என்னவென்று புரியுதா பார்க்கலாம்.
சரி தோழரே, எனது மின்னஞ்சல் முகவரியுடன் பின்னூட்டுகிறேன்….
உங்களை கம்யூனிஸ்டுகளாக மாறுங்கள் பேசுங்கள் என்று வற்புறுத்தவில்லை; துன்புறுத்தவில்லை. குறைந்த விடயமாக, எல்லோரும் இந்து மததிற்குள்ளேயே பிராமணன் முதல் பஞ்சமன் வரை பெண் கொடுத்து பெண் எடுக்கலாம் என்று நீங்களோ, இன்றுள்ள பார்ப்பனர்களோ அல்லது பார்ப்பன அமைப்புகளோ அறிவிக்க தயாரா?/////////////////////////////////
அறிவிக்க சொன்னா அறிவிச்சுடுவானுங்க தோழர்! பின்பற்றுவானுங்களான்னு கேளுங்க…
நான் மணி
பார்ப்பன சாதியில் பிறக்க நேர்ந்த சில ஜனநாயகவாதிகள் தாங்கள்தான் அதற்கு தடையாக இருக்கிறோம். அதாவது தாங்கள் சார்ந்த சாதி உருவாக்கிய த்த்துவம்தான் தடையாக இருக்கிறது என்பது புரியாமல் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அந்நிலை பரிதாபத்திற்குரியதுதான்.
தேங்கிய நீருக்கு சாக்கடை பொறுப்பேற்பதா அல்லது அந்த சாக்கடையில் இருக்கும் தூசி தும்புகள் பொறுப்பேற்பதா என்று இன்னும் தெளியாத நீர் பேசமுடியாது என நினைக்கிறேன். ஏனெனில் ஜனநாயகம் ஒரு செடியின் ஆணிவேருக்குத்தான் நீராக பாய்ச்சப்பட வேண்டுமே தவிர அதின் சல்லி வேருக்கல்ல• சல்லி வேரையே ஆணிவேராக்க முயலும் அன்பர்களுக்கு ஒரு கோணலான செடிதான் கிடைக்கும் என்ற அறிவு இல்லாத்து வருந்த்த்தக்கது.
பார்ப்பனர்களைத் திட்டித் தீர்ப்பதற்கு எழுதுவதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அய்யா நீங்கள் மற்றவர்களுக்கு மறுத்த் கல்வியால் உங்களை சில தலைமுறைக்கு முன்னேற்றி கொண்டு போனதால் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் நீங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க துவங்கி விட்டீர்கள். மற்றவர்களும் உங்களைப் போல வர வேண்டுமானால், நிகழ்த்தப்பட்ட தவறுகளை உங்களில் அனைவரும் சேர்ந்து சரி செய்ய முன்வர வேண்டும்தானே.. அது சாத்தியமில்லை என்றால் அதில் உள்ள தங்களை ஜனநாயகவாதிகள் என சாதிப்பெயரை மற்றவர்கள் சொன்ன போதெல்லாம் வந்து கோபிக்க தெரிந்தவர்கள் அதற்காக போராடி இருக்கணும்தானே…
உலகத்தில் எல்லா இடத்திலும் சாக்கடை ஓடுவதால் சாக்கடையே உண்மை என ஆகி விடாது. மனித ஏற்றத்தாழ்வுகளை களைய ஒரு போராட்டம் அவசியம்தான். அதனை நடத்த அனைத்து தரப்பு ஜனநாயக வாதிகளும் தயாராக இருக்க வேண்டும். பார்ப்பன ஜனநாயக வாதிகள் தங்களது ஒடுக்குமுறை க்கான அடையாளம் அறுக்கப்பட்டால் கூட ஜனநாயக மறுப்பு, சர்வாதிகாரம் எனக் கூக்குரலிடுவது சரியா என அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
தங்களது முப்பாட்டன் செய்த தவறுக்கு தங்கள் பொறுப்பல்ல என்பவர்கள் அவன் சம்பாதித்து தந்த சொத்தையும் புறக்கணிக்க வேண்டும்.
சர்வதேசியவாதிகளே,
//பார்பனீயத்துக்கும் சாதிக்கும் சம்பந்தமே இல்லை நீங்கள் சொல்வீர்களேயானால், மற்ற நாடுகளில் இல்லாத சாதிப்பிணி இந்தியாவில் மட்டும் கான்கிரீட் கட்டிடம் போல் ஊன்றி இருக்க காரணம், மற்ற நாடுகளில் இல்லாத (ஒரு வேளை இருந்தாலும்) இந்து பார்ப்பனீயம் இந்தியாவில் மட்டும் ஊன்றி இருப்பதே காரணம் என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?//
இந்தியாவில் மட்டும் சாதி பிரச்சனை இருக்கிறது. இந்து பார்ப்பனியம் இந்தியாவில் மட்டும் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.
ஜப்பானில் சாதி கேள்விப்பட்டதில்லையா. ஜப்பானில் Caste and Outcaste என்ற வரையில் உள்ள சாதிகள் பற்றி கேள்விகூட பட்டதில்லையா. அங்கு இந்தியாவைப் போல் பிரிவினைகளும் இருக்கிறது. அந்தப் பிரிவின் அடிப்படையில் தொழிலையும் செய்கிறார்கள். அவர்களை தீண்டாதவர்களாகவும் வைத்திருக்கிறார்கள். அது ஒழிக்கப்பட்டது என்று சொல்லிக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இன்று கூட அப்படி தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைத்திருப்பவர்களைப் பற்றி அந்த தாக்கம் இன்னும் இருப்பதை பற்றி பத்திரிக்கைகளில், கட்டுரைகளில், புத்தகம் (Outcaste) போன்றவற்றில் இருப்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவில்லை போலும்.
ஏன் வினவில் வந்த கலையரசன் அவர்களின் ஆப்ரிக்க கட்டுரையை நீங்களே படிக்கவில்லை என்றால் யார் படிப்பது. அதில் ஆப்ரிக்காவில் இதே போல் பிரிவினை இருப்பதும், அதில் ஒரு சிலப் பிரிவுகளுக்கு அங்குள்ள அந்த தெய்வங்களை கோவிலில் சென்று வழிப்பட உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதே போல் குழுக்குள் மணமுறை இருக்கிறது. இன்னும் சில உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கிறது. இதை வேறொரு கட்டுரை கூட இரண்டு மூன்று வருடத்திற்கு முன்பே ஒருவர் எழுதியிருக்கிறார். கலையரசன் அவர்களும் இது இந்தியாவில் இருந்த சாதி தன்மைகளை ஒத்து இருக்கிறது என்று எழுதியிருக்கிறார்.
இதிலிருந்து புத்தமதத்தில் யார் ஜப்பானில் இந்த பிரிவினையையும் தீண்டாமையும் வடித்தான். ஆப்ரிக்காவில் இதேபோல் கோவில் நுழையவிடாமல் தடுத்த தத்துவம் எது. என்பதைப் பார்க்கவும்.
சர்வதேசியவாதிகள் என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது கிணற்றிலிருந்து வெளியில் உள்ள நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு பிறகு உலகத்தில் இல்லாத விசயம் என்று வேண்டுமானால் எழுதங்கள். இதில் குறிப்பான வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதன் பொதுத் தன்மையைப் பார்க்காமல் ஒரு முடிவுக்கு வரமுடியாது.
சரி பார்ப்பான் என்று உங்களுடைய விளக்கத்தைப் பார்ப்போம்:
//பார்பனர்கள் என்று யாரை கூறுகிறோம்? சாதிய கட்டமைப்பில் மேல் தளத்தில் ஒய்யாரமாக கைகட்டி கொண்டு சமூகத்தின் சாதிபடிநிலைகளை சரியென்று கூறுகிறவர்கள், சாதிய படிநிலையில் தீண்டாமை குறித்து, சாதி குறித்து எதிர்ப்பு கிளம்பும் போது அதை மனுதர்மப்படியும் சாஸ்திரங்களின் மேற்கோள்கள் காட்டி அதை நியாயம் என ஆதரிப்பவர்கள், சாதிகெதிரான சக்திகள் உருவாகும் போது அவ்வபோது அதை இந்து மத (அ)தர்மத்தின் படி தடுக்க அரும்பாடுபடுகிறவர்கள் எவரோ அவர்கள் பார்பனர்கள்.//
பார்ப்பனர்கள் யார் என்ற விளக்கம் நீங்கள் ஏன் வகுக்க முற்படுகிறீர்கள். நீங்கள் பழைய இருக்கும் வரையரையை மாற்றி புதிய பார்ப்பன சாதியைப் படைக்கப் போகிறீர்களா. யாரெல்லாம் மனுதர்மத்தை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் பார்ப்பனர்கள் மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் என்று இரண்டு வருண அடிப்படையை ஒழித்துவிட்டதாக காட்டி இரண்டு புதியதாக படைக்க முற்படுகிறீர்கள் போலும். உங்கள் நோக்கம் சாதியை ஒழிப்பதா அல்ல சாதியை படைப்பதா என்பது தெரியவில்லை.
இதற்கு காரணம், பார்ப்பனர் அல்லாதவர்கள் அந்த சாதியின் அடிப்படையில் ஆளும் தகுதியைப் பெற்றிருப்பவர்களை, ஆதிக்க தகுதியைப் பெற்றிருப்பவர்களை சாட பயம் போலும். அப்படி இருப்பவர்களை எல்லாம் பார்ப்பனர்கள் என்ற பட்டியலில் சேர்த்துவிட்டு மற்ற சாதிகள் யாரும் ஆதிக்கமே செய்யவில்லை என்று சொல்ல வருகிறீர்கள்.
பார்ப்பனியம் என்பது இருக்க நீங்கள் ஏன் பார்ப்பனர் என்று கூறுகிறீர்கள்? பார்ப்பனியம் வைத்துக்கொண்டு அதன் மூலம் பயனடைபவர்கள் யார்? யார்? வெறும் பார்ப்பனர்கள் மட்டும்தான் பயனடைகிறார்களா? அவர்களைவிட அதிகம் இன்று பயனடைந்து கொண்டிருப்பவர்கள் சாதி கட்சிகள் நடத்துபவர்கள் அனைவருமே அடைந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை விட அந்த சாதி அழியக் கூடாது என்பதில் கண்ணும்கருத்துமாக இருக்கிறார்கள். அவர்களை அந்த சாதியாக காட்டக் கூடாது என்கிறீர்களா.
உங்களின் கருத்துப்படி நீங்கள் தனியாக பார்ப்பனர்கள் என்று விதி செய்த படி அனைவரும் பார்ப்பனர்கள். அல்லது அனைவரும் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள். ஏனென்றால் உத்தமப்புரத்தில் சமநிலையை ஏற்றுக்கொள்ளாமல் சாதாரணமக்களே மனுதர்மம் விதித்ததை அப்படியே ஏற்றுக்கொண்டு ஊரில் கோயிலில் வணங்க தடை விதித்தார்கள். ஏன் தாழ்த்தப்பட்டவர்களே அருந்ததியர்களை தனக்கு கீழே பார்க்கிறார்கள், மலைவாழ் சாதிகளை அதைவிடக் கீழே பார்க்கிறார்கள். ஆகையால் அவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். இப்படி ஊர் ஊருக்கு பார்த்தால் 99 சதவீதம் பார்ப்பனர்கள் என்று ஒதுக்கிவிட்டு யாரைவைத்து இதை மாற்றி காட்டப்போகிறீர்கள். ஒடுக்கப்படும் மக்களுக்கும், ஒடுக்கும் கயவாளிகளையும் உங்கள் விதியில் இனம் பிரிக்க முடியாது. இல்லை இந்த மக்களே வேஸ்ட் இவர்கள் எல்லாம் வைத்துக்கொண்டு எதையும் செய்யமுடியாது என்ற முடிவில் இருக்கிறீர்களா. இதற்கு எதிர் கருத்து எடுத்துக்கொண்டாலும் அனைவரும் பார்ப்பனர் அல்லாதவர்கள்.
உங்களுக்கு வேலை அகராதி வகுப்பதல்ல. ஏற்கெனவே இருக்கும் பார்ப்பனர் யார்? மற்ற சாதிகள் என்ன? என்று வரையறுத்ததை சொல்லி, அதில் பார்ப்பனியம் என்றால் என்ன? அதில் பயனடையும் சாதிகள் எது? அதில் பயனடையாத ஒடுக்கப்படும் சாதி எது என்று வேண்டுமானாலும் விளக்கம் சொல்லுங்கள். அதை விடுத்து பார்ப்பனர்கள் என்று நீஙக்ள் புதிய மனு ஒன்றை எழுதவேண்டிய அவசியம் இல்லை. அதை ஒழிப்பது எப்படி என்று வேண்டுமானாலும் எழுதுங்கள் வரவேற்கலாம்.
அடுத்தது, பார்ப்பனர்கள்தான் பூ நூல் அணிகிறார்கள் என்று யார் சொன்னது. செட்டியார், வேளாளர், ஆச்சாரி என்று எத்தனையோ சாதிகள் பூ நூல் அணிகிறார்கள். அதில் வேண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களும் பூ நூல் அணிபவர்களே. அவர்களும் பார்ப்பனர்களே என்று உங்கள் விளக்கப்படி சொல்லலாம். ஆனால் அனைவருக்கும் வேறுவேறு தொழில்கள். இதை எப்படி சாதி அடிப்படையில் பார்க்கப்போகிறீர்கள். பார்ப்பனியம் என்பதற்கும் பார்ப்பனர் என்பதற்கும் வேறுபாடு தெரியவில்லை என்றால் மனிதனுக்கும் கருத்துக்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியவில்லை என்று பொருள். இது மாயையை அன்றி வேறு எதையும் உங்களுக்கு உருவாக்காது.
சர்வதேசியவாதிகளே,
//பார்பனீயத்துக்கும் சாதிக்கும் சம்பந்தமே இல்லை நீங்கள் சொல்வீர்களேயானால், மற்ற நாடுகளில் இல்லாத சாதிப்பிணி இந்தியாவில் மட்டும் கான்கிரீட் கட்டிடம் போல் ஊன்றி இருக்க காரணம், மற்ற நாடுகளில் இல்லாத (ஒரு வேளை இருந்தாலும்) இந்து பார்ப்பனீயம் இந்தியாவில் மட்டும் ஊன்றி இருப்பதே காரணம் என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?//
இந்தியாவில் மட்டும் சாதி பிரச்சனை இருக்கிறது. இந்து பார்ப்பனியம் இந்தியாவில் மட்டும் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.
ஜப்பானில் சாதி கேள்விப்பட்டதில்லையா. ஜப்பானில் Caste and Outcaste என்ற வரையில் உள்ள சாதிகள் பற்றி கேள்விகூட பட்டதில்லையா. அங்கு இந்தியாவைப் போல் பிரிவினைகளும் இருக்கிறது. அந்தப் பிரிவின் அடிப்படையில் தொழிலையும் செய்கிறார்கள். அவர்களை தீண்டாதவர்களாகவும் வைத்திருக்கிறார்கள். அது ஒழிக்கப்பட்டது என்று சொல்லிக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இன்று கூட அப்படி தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைத்திருப்பவர்களைப் பற்றி அந்த தாக்கம் இன்னும் இருப்பதை பற்றி பத்திரிக்கைகளில், கட்டுரைகளில், புத்தகம் (Outcaste) போன்றவற்றில் இருப்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவில்லை போலும்.
ஏன் வினவில் வந்த கலையரசன் அவர்களின் ஆப்ரிக்க கட்டுரையை நீங்களே படிக்கவில்லை என்றால் யார் படிப்பது. அதில் ஆப்ரிக்காவில் இதே போல் பிரிவினை இருப்பதும், அதில் ஒரு சிலப் பிரிவுகளுக்கு அங்குள்ள அந்த தெய்வங்களை கோவிலில் சென்று வழிப்பட உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதே போல் குழுக்குள் மணமுறை இருக்கிறது. இன்னும் சில உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கிறது. இதை வேறொரு கட்டுரை கூட இரண்டு மூன்று வருடத்திற்கு முன்பே ஒருவர் எழுதியிருக்கிறார். கலையரசன் அவர்களும் இது இந்தியாவில் இருந்த சாதி தன்மைகளை ஒத்து இருக்கிறது என்று எழுதியிருக்கிறார்.
இதிலிருந்து புத்தமதத்தில் யார் ஜப்பானில் இந்த பிரிவினையையும் தீண்டாமையும் வடித்தான். ஆப்ரிக்காவில் இதேபோல் கோவில் நுழையவிடாமல் தடுத்த தத்துவம் எது. என்பதைப் பார்க்கவும்.
சர்வதேசியவாதிகள் என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது கிணற்றிலிருந்து வெளியில் உள்ள நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு பிறகு உலகத்தில் இல்லாத விசயம் என்று வேண்டுமானால் எழுதங்கள். இதில் குறிப்பான வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதன் பொதுத் தன்மையைப் பார்க்காமல் ஒரு முடிவுக்கு வரமுடியாது.
முதல் தலைமுறைக்கு,
//சாதி என்பது ஆசிய சொத்துடைமை வடிவம் நிலவிய தென்கிழக்கு ஆசியா நாடுகள், கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் போன்ற நாடுகளிலும் ஏதோ ஒரு வடிவில் இருந்து வந்ததுதான்(பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு).//
ஆசிய சொத்துடைமை என்பதை விளக்க முடியுமா. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுதான் ஆசிய சொத்துடமையா. பார்ப்பனியம் ஆசிய சொத்துடமை என்பதா அல்லது இது அதற்கு உட்படாததா? மறுமொழிக
///அப்படி அல்லாமல், இந்தியாவில் மட்டும் பெரும்பான்மை சமூகத்துக்கு – அதுவும் அடக்கி ஆளும் பிரிவினரால், பெரும்பான்மை இன அரசுக்கு ஆதரவாய் (!), சிறுபான்மை இன மக்களுக்கு எதிராய்(!) எதற்காக RSS என்ற ஒரு தீவிரவாத இயக்கம்?/// —- I asked,
///ஆர்.எஸ்.எஸ். பற்றி கேட்டிருந்தீர்கள். எனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளைப் பற்றி அரசல் புரசலாகத்தான் தெரியும். ஆர்.எஸ்.எஸ். குற்றவாளியா இல்லையா என்பது பற்றி என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது, அவ்வளவுதான்/// —–RV said. I will explain you.
பற்பல மறுமொழிகளை படித்தபின் எல்லாருக்கும், ‘சாதியை ஒழிக்க பார்ப்பநர்களை ஒழித்தால் போதும்’ என்ற எண்ணம் இருக்கிறது என்று புரிகிறது. ஆனால், அப்படி முடிந்ததா? முடியுமா? இன்னொரு வகையினர், பார்ப்பனீயத்தை ஒழிக்க வேண்டும். என்கின்றனர். பார்ப்பனர்கள் விடுவார்களா? முடியுமா அது? சரி பார்ப்பனர், பார்ப்பனீயம் இரண்டையும் அழித்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். சாதி ஒழிந்து விடுமா? தலித்துகள் சுகவாழ்வு பெற்று விடுவார்களா? ஒரு மேலாளர் ஓய்வு பெற்றால் அதற்கு அடுத்தவர்-சீனியர்-அப்பொறுப்புக்கு வந்து அந்த நிறுவனம் ‘அதே கொள்கை குறிக்கோளுடன்’ இயங்கும் என்பது யாருக்கும் புரியவில்லை. பார்ப்பனரை நீங்கள் அழித்தவுடன் அங்கு வேறு ஒரு வல்லாதிக்க சாதி மகிழ்வுடன் அமர்வார். தன்னை மேல் சாதி என்பார். மற்றவரை கீழ் சாதி என்பார். என்ன செய்வீர்கள்? அவரையும் அழிப்பீர்களா? இதுபோல் இன்னும் எத்தனை பேரை அழிப்பீர்கள்?
முட்டி மோதி பார்த்துவிட்டு கடைசியில் அம்பேத்கரும் பெரியாரும் இந்துமதத்தை விட்டு வெளியேறும் முடிவையே தங்கள் தீர்மானமாய் கூறினர். சரியான முடிவுதான். அம்பேத்கார் சொன்னபடி செய்தார். பெரியார் சொன்னார்…, செய்யவில்லை. ஏனென்றால், அவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர். அவருக்கு அது தேவை இல்லை.
அப்படி கிராமம் கிராமமாய் வெளியேறியபோது அதுவரை கண்டுக்காத மேல்சாதி பெருந்தலைகள் யோசித்தன. பெடல்கள் கழண்டு ஓடி விட்டால், ‘மிதிக்க’ பெடல்கள் இல்லாவிட்டால் இவர்களின் ‘சைக்கிள்’ எப்படி ஓடும்? விழுந்துவிடாது? கிருத்துவர்கள் “தலித் கிருத்துவர்கள்” என்ற புதிய விஷயத்தை உண்டாக்கி ஆதிக்க சாதியின் கோபத்திலிருந்து தப்பித்துக்கொண்டனர். இஸ்லாம் அப்படி செய்யவில்லை. வந்தவர் அனைவரும் முஸ்லிம்கள் என்றது. அதனால்தான் அவர்களின் கோபம் இஸ்லாம் மீது திரும்பியது. ஜின்னாவை உசுப்பிவிட்டு பாக்கிஸ்தானை உண்டாக்கினார்கள். ஊரைவிட்டு அங்கே ஓடாதோரை இன்னும் சித்ரவதை செய்ய ஆரம்பித்தார்கள். “இஸ்மாயில்” என்று பச்சைகுத்தி கோட்சே, காந்தியை கொன்றது, கரசேவகர்களை கொளுத்திவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டது, பல இடங்களில் குண்டு வைத்துவிட்டு முஸ்லிம்களின் மீது பழிபோட்டு பரபரப்பாக சந்தேகத்தின் பேரில் எண்ணற்ற முஸ்லிம்களை கைது பண்ணிவிட்டு பலமாதமோ, பல ஆண்டு கழித்தோ ரகசியமாக விட்டுவிடுவது என்று சித்ரவதை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இடையில் ‘ராமர்கோவில்’ உதவியால் பலசாதிகளை ‘ஹிந்துக்கள்’ என்று ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காண வைத்து, 4 MP-இலிருந்து முன்னேறி ஆட்சியையும் பிடித்தனர். இவர்கள் பிழைப்பு(சைக்கிள்)ஓட, பெடலை மிதித்தாக வேண்டும். இந்துமதத்தில் ஒட்டுபவனாக எவன் வந்து அமர்ந்தாலும் இந்துமதம் எனும் சைக்கிளில், பெடல்களாய் இருக்கும்வரை பெடல்கள் மிதிப்படத்தான் செய்யும். பெடல்கள் ஓட்டுனராக வேண்டும் அல்லது கழண்டோட வேண்டும். பெடல்கள் இல்லாவிட்டால் சைக்கிள் காலி என்பதயும் ஓட்டுனர் மறக்க மாட்டார். காரணம், ஓட்டுனர் எக்காலத்திலும் பெடலாய் மாறமாட்டார். அதனால் யாரையும் கழற்ற அல்லது தானாக கழற விட மாட்டார். அதுதான் ஓட்டுனர் (RSS) வேலை. ‘கழண்டு வா’ என்பவனை பயங்கரவாதியாக சித்தரிப்பதற்கு காரணம், ‘பெடல்கள்’ தானாக ‘கழண்டால் என்ன’ என்று சிந்தித்து விடக்கூடாது என்பதுதான்.
After reading comments from Nethiyadi Mohammad, I feel Muslims and Brahmins are same. Both are believe in GOD. I am telling dont belive in GOD. Lets belive in human being. Mohammad dont want to marry Hindu Dalit woman because she is not MUSLIM (even thogh she is human being) and Brahmins want only Brahmins.
My dear kumar. Why don’t you understand anything. Brahmins and Dalits are in same religion. Yet they cannot marry each other. Because, (do you know?) a dalit can never…never….become a brahmin and vice vesra asper brahminism or hinduism. But, any hindu dalit or christin dalit can become muslim can marry any other muslim.
I know it is very difficult and too complex for you to understand. I will explain it with a simple example. You cannot wear ‘other school’s’ uniform in ‘your’s school’. If you want to wear that, you have to join that ‘other school’.
In “brahmins school”, even you cannot join, but, in “Islam school” you can join and can wear same uniform as like other.( school – just example).
I will not marry George Bush’s daughter or Dr.Manmohansing’s grand daughter or Thozhar Lenin’s great grand daughter or RV’s Sister. Why? Are they not human beings to me? Please, try to differentiate between religion and caste within religion.
வினவு தளத்தில் மறுமொழிகள் ஏறுமாறாக வருவது பெரிய தலைவலியாக இருக்கிறது. யார் யார் என்னென்ன சொல்லி இருக்கிறீர்கள் என்று நிச்சயமாக தெரிவதில்லை. கீழே இருந்து மேலே போய்ப் பார்க்கப் போகிறேன். நான் நீங்கள் சொன்னதை மிஸ் செய்துவிட்டிருந்தால் மன்னிக்கவும்.
// இவர்களையெல்லாம் ஆதரிக்கும் நோண்டு ராகவன் குற்றவாளியா? ஏன் ஆர்வி நீங்கள் இது வரை நோண்டு ராகவனுடைய பதிவில் சென்று அவரது சாதி வெறியை எதிர்த்து வாதடியதில்லை? இங்கு கூட அவரை கண்டு கொள்ளாமலேயே வலம் வருகிறீர்களே? //
இப்படி எழுதி இருக்கும் இந்த முதல் தலைமுறை யாரென்று தெரியவில்லை. முன்னே பின்னே இணையத்தில் பார்த்ததில்லை. டோண்டுவிடம் வாதாடியதை பார்க்க வேண்டுமென்றால் டோண்டு தளத்தில் போய்ப்பாருங்கள். என்ன கையில் அட்டெஸ்டெட் காப்பி வைத்துக்கொண்டா அலைய முடியும்?
பிறகு டோண்டு சாதி வெறி பிடித்தவர் இல்லை. அவருக்கு வீம்பு உண்டு. அவரை விட வீம்பு பிடித்த எத்தனையோ பேரை இங்கே பார்க்கிறேன், அவர்களையும் ஜாதி வெறியர் என்று நான் கருதவில்லை. மேலும் இங்கு அவரை எதற்கு கண்டுகொள்ள வேண்டும்? இது என்ன டோண்டுவின் தளமா? இல்லை இங்கே டோண்டு மறுமொழி எழுதி தள்ளுகிறாரா? டோண்டு நான் ஆதரித்தோ எதிர்த்தோ பேச வேண்டிய கருத்தை எழுதினர் என்றால் கண்டு கொள்ளலாம். அது வரை நான் எதற்கு அவரை கண்டுகொள்ள வேண்டும்? என்ன முட்டாள்தனமான பேச்சு?
டோண்டு குற்றவாளியா என்று கேட்கிறீர்கள். என் கருத்துக்கு மாற்று கருத்து உள்ளவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று சொல்லும் அளவுக்கு நான் சித்தாந்த தேர்ச்சி பெறவில்லை.
ஒரு டஜன் மறுமொழிகள் எழுதி இருப்பீர்கள் போலிருக்கிறது. சரி வழக்கம் போல மூன்று கேள்விகள். இதற்கு நீங்கள் பதில் சொன்னால் மேலே பேசலாம்.
1. நீங்கள் பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்பதை நம்புகிறவரா மறுப்பவரா?
2. டாக்டர் ருத்ரன் என் கருத்துகள் என் ஜெநோடைப்பால் உருவானவை என்று ஒரு முறை சொன்னார். அதற்கு வினவும் சப்பைக்கட்டு கட்டினார். டாக்டர் ருத்ரனின் கருத்து, அதற்கு வினவு தெரிவித்த ஆதரவு ஆகியவை உங்களுக்கு சம்மதமா?
3. வினவு மாட்ரிமொநியலில் மட்டுமல்ல, வீட்டு வாடகையிலும் ஜாதி பார்க்கும் ஒரே ஜாதி பார்ப்பனர் என்று சொல்கிறார். மாட்ரிமொநியலில் பார்ப்பனர் மட்டும்தான் ஜாதி பார்க்கிறார்களா? வினவின் இந்த கூற்று உண்மையா பொய்யா?
நாகராசு எழுதுகிறார்: // போகிற போக்கில் பூணூலை சாதாரண விசயமாக்கி விடுகிறார் ஆர்வி.. எல்லாப் பாப்பானுக்கும் தெளிவாகத் தெரிந்துதான் இதனை அணிந்துகொள்கிறானுக..யார் ஒடம்பில என்ன இருக்கணும்னு வரையறுக்க உரிமை இல்லையா? //
எத்தனை பாப்பன் உலகில் இருக்கிறான்? அதில் எத்தனை பாப்பானை உங்களுக்கு தெரியும்? எத்தனை பேரை பூணூல் பற்றி கேள்வி கேட்டீர்கள்?
யார் உடம்பில் என்ன இருக்க வேண்டும் என்று நீங்கள் வரையறுப்பீர்களா? அப்புறம் எந்த லாஜிக் படி ரவிக்கை போடக்கூடாது என்று மேல் ஜாதியினர் வரையறுத்ததை தவறு என்று சொல்வீர்கள்? நாளைக்கு “I am the boss” என்று எழுதிய ஒரு டி-ஷர்ட் போட்டு நீங்கள் வந்தால் நீ பாஸ் என்றால் என்னை வேலைக்காரன் என்கிறாயா, டி-ஷர்ட்டை கழற்று என்று சொல்ல எனக்கு உரிமை உண்டா?
சரி அதெல்லாம் கிடக்கட்டும் நாகராசு, வினவின் மாட்ரிமோனியல் கருத்து, டாக்டர் ருத்ரனின் ஜெநோடைப் கருத்து பற்றி ஏதாவது சொல்ல தைரியம் உண்டா?
டாக்டர் ருத்ரனும் வந்துவிட்டார்! டாக்டர்சாப், ஜெநோடைப் கமென்ட் பற்றி மீள்சிந்தனை ஏதாவது உண்டா?
மணி,
// ிருமணம், தாலி, பூணூல் என்பன தனிப்பட்ட விருப்பம் அவற்றை யாரும் தீர்மானிக்க முடியாது என்பது ஜனநாயக உரிமை என்று வைத்துக் கொண்டால், அந்த ஜனநாயக உரிமை மறுக்கப்பட்ட காலத்துக்கு யார் பொறுப்பேற்பது..//
மறுத்தவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இதில் என்ன சந்தேகம்? சோம்நாத் கோவில் இடிக்கப்பட்டதற்கு இன்றைய ஆஃப்காநியர்களையா பொறுப்பேற்க சொல்வீர்கள்? மீண்டும் மீண்டும் அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்கிறீர்கள். சரி இரண்டு தலைமுறைக்கு முன் வரை ஆங்கிலேயர் ஆட்சி. நாட்டில் இருக்கும் எத்தனையோ பிரச்சினைகளுக்கு அவர்கள்தான் காரணம். என்றைக்காவது எலிசபெத் ராணிக்கு பெட்டிஷன் எழுதி நம் நாட்டு பிரச்சினைகளுக்கு அவர்களை பொறுப்பேற்க செய்யும் திட்டம் ஏதாவது இருக்கிறதா? இரண்டு தலைமுறைக்கு முன்னாலேயே இல்லையாம்; இருநூறு தலைமுறைக்கு போய்விட்டீர்கள். உங்கள் முப்பாட்டன் உங்கள் வீட்டு பெண்களை அடக்கி ஆண்டிருப்பான். அதற்கு நீங்கள் இது வரையில் எந்த விதத்தில் பொறுப்பேற்றிருக்கிறேர்கள் என்று விளக்க முடியுமா? எத்தனை முறை இணையத்தில் இது வரை மன்னிப்பு கேட்டிருக்கிறீர்கள்? கொஞ்சம் சுட்டி ஏதாவது தரமுடியுமா?
// தங்களது முப்பாட்டன் செய்த தவறுக்கு தங்கள் பொறுப்பல்ல என்பவர்கள் அவன் சம்பாதித்து தந்த சொத்தையும் புறக்கணிக்க வேண்டும்.//
என்ன சொத்து? என் தாத்தாவும் பாட்டியும் வைத்திய செலவுக்கு பணம் இல்லாமல் செத்தார்கள். அட ஏன் சார் வயித்தெரிச்சலை கொட்ட்க்கறீங்க?
சரி மணி இந்த ஜெநோடைப், மாட்ரிமோனியல் கமெண்ட்களை பற்றி உங்களுக்கு என்ன கருத்து?
டோண்டு,
யார் சான்றிதழும் தேவை இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் விவாதம் மூலமே, மாற்று கருத்துகளை சந்திப்பது மூலம் மட்டுமே காழ்ப்புணர்ச்சி குறையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்ன விவாதத்தில் நேர்மையை எதிர்பார்க்கிறேன். அது சில சமயம் கிடைப்பதில்லை.
வினவு, புதிய தலைமுறை, பகத், ஜார்ஜ் புஸ்,
வினவின் இந்த ஸ்டேட்மென்ட் //2. ஹிந்து பேப்பரின் மேட்ரிமேனியலில் மட்டுமல்ல, வீடு வாடகைக்கு கூட பிராமின்ஸ் ஒன்லி என்று விளம்பரம் போடும் ஒரே சாதி பார்ப்பனர்கள்தான்.// பற்றி; “ஒரே சாதி” என்பது வாடகைக்கு மட்டுமே பொருத்திப் பார்க்க வேண்டும், மாட்ரிமொநியலுக்கு இல்லை என்கிறீர்கள். எனக்கு வினவின் நேர்மையில் இருந்த நம்பிக்கை போய்விட்டது. ஆனால் இணையத்தில் எழுதும்போது மனதில் உள்ள கருத்துகள் சரியாக எழுத்தில் வெளிப்படாமல் இருக்கலாம் என்பதை உணர்கிறேன். வினவு தெளிவாக வாடகையை பற்றிதான் “ஒரே சாதி” என்று சொன்னேன், மாட்ரிமொநியலுக்கு இல்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்கிறேன். அது ஏற்கனவே சொல்லப்பட்டது என்று வினவு நினைத்தாலும் அதை மீண்டும் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேர்ன்.
புதிய ஜனநாயக வாசகர், சில வார்த்தைகளைப் பற்றி minor objections உண்டு. ஆனால் பெரும்பாலும் “பார்ப்பனர்களாய்ப் பிறந்தவர்களை நாம் நம்பலாமா” என்ற மறுமொழி ஏற்றுக் கொள்ளக் கூடியது. பிரச்சினை வினவு இப்படி சொல்லிக் கொண்டே பார்ப்பனராய் பிறந்த அனைவரையும் சகட்டு மேனிக்கு தாக்குவதுதான். உங்கள் இரண்டாவது மறுமொழி – பார்ப்பனீயம் என்ற சொல்லாட்சியே சரியானது – எனக்கு கொஞ்சமும் இசைவில்லாதது. பிராமணர் என்றால் பிரம்மாவிடமிருந்து பிறந்தவர் என்கிறீர்கள்; தலை எங்கிருந்து வந்தது? பிரம்மதலையர் என்றா பேர் இருக்கிறது? சரி அப்படியே வைத்துக் கொண்டாலும் பிரம்மாவின் தலையிலிருந்து பிராமணர்கள் பிறந்தார்கள், அதனால் ஜாதி ஏற்றத்தாழ்வை பிராமணீயம் என்று அழைக்க வேண்டும் என்று சொல்லும் லாஜிக் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. பிரம்மாவின் தொப்புளிலிருந்து பிறந்திருந்தால் எப்படி அழைக்க வேண்டும்? குறைந்த பட்சம் ஜாதி படிகளில் பிராமணர்கள் முதல் படியில் இருக்கிறார்கள், அதை சுட்டிக் காட்ட பிராமணீயம் என்று அழைக்க வேண்டும் என்று சொல்லலாம்.
பல முறை சொன்ன மாதிரி பிராமணீயம் என்பது சமீபத்தில் உருவான வார்த்தை. 1920-களில்தான் முதலில் பயன்படுத்தப்பட்டது என்று லெனின் சொன்ன ஞாபக்கம். அதற்கு முன் ஜாதி ஏற்றத்தாழ்வை எப்படி குறித்தார்கள்? 1920 -களில் ஒரு வார்த்தை உருவாக்கப்படலாம் என்றால் இப்போது அந்த வார்த்தை மாற்ற மட்டும் கூடாதா?
சாவி, // அதை விடுத்து அவர்களில் விவசாயிகளையே காணமுடியாது என்றும், இல்லை சாக்கடை மலம் மற்றும் சுடுகாடு வேலைகளைப் பார்ப்பவர்களே இல்லை என்றும் கூறுவது சரியாகாது. // உங்கள் கருத்து சிந்திக்க வைக்கிறது.
பகத், நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலே இல்லையே?
// ஒரு உதாரணத்திற்கு தமிழ் நாட்டில் வரும் தமிழ் திரைப்படங்களில் எத்தனை திரைப்படங்களில் ஒரு பார்ப்பனர் வில்லனாக காட்டப்பட்டு உள்ளார் // என்று கேட்கிறீர்கள். எத்தனை படத்தில் முஸ்லிம்/கிருஸ்துவ/கவுண்டர்/தேவர்/தலித் மத்திய தர பெண் விபசாரம் செய்வதாக காட்டுகிறார்கள் என்று சில பிராமணர்கள் கேட்டது நினைவு வருகிறது. ஸ்டீரியோடைப் வைத்து வியாபாரம் செய்பவர்கள்; சினிமாவில் வரும் எல்லா கம்யூனிஸ்டும் யோக்கியன்தான். கம்யூனிசத்தைப் பற்றி நெகடிவ் விமர்சனம் வரவே வராது. இங்கே சிபிஎம் பற்றி கிழிக்கிறீர்கள். ஏன் நீங்கள் இந்த சித்தரிப்பை பற்றி கவலைப்படவில்லை? சினிமாவில் வரும் பாதிரியார்கள் எப்போதும் சாந்தம் நிரந்த முகத்துடன் ஆசீர்வாதம் செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால் ஹிந்து போலி சாமியார்கள் சவுக்கடி சந்த்ரகாந்தா காலத்திலிருந்து சர்வ சாதாரணம். கோவில்தான் கொடியவர்களின் கூடாரம் ஆகும். மசூதி ஆகாது, சர்ச் ஆகாது. ஏன் நீங்கள் இதை எல்லாம் பற்றி கவலையே படுவதில்லை? நாலு ஃபைத், இரண்டு டான்ஸ், ஒரு குத்துப்பாட்டு என்று ஒரு ஃபார்முலாவில் காலத்தை ஓட்டுபவர்கள் ஏன் சமூகத்தை உண்மையாக சித்தரிக்காமல் ச்டீரியோடைப்களை வைத்து படம எடுக்கிறார்கள் என்று கேட்கிறீர்கள். அடுத்தபடி என்ன கேட்கப்போகிறீர்கள், குமுதத்தில் ஏன் நடிகை படம் போடுகிறார்கள் என்றா?
தியாகராஜா ஆராதனையில் பார்ப்பனர் இல்லாதவர்களுக்கு இடம் இல்லையா? தவறு, போராடுவோம். சிதம்பரம் கோவில் விஷயத்தில் நம் நிலை ஒன்றுதான் என்று நினைவு. தீட்சிதர்கள் ஏன் ஜெவிடம் போனார்கள் என்று கேட்கிறீர்கள். என்ன ஆளும் கலைஞரிடமா ஆதரவு எதிர்பார்க்க முடியும்? எதிர்க்கட்சியிடம்தான் போகவேண்டும். சு. சாமி பற்றி விமர்சித்து நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. அந்த ஆள் ஒரு கோமாளி என்று பல முறை சொல்லி இருக்கிறேன், புதிதாக என்ன சொல்லப் போகிறேன்?
ஆனால் இவை யாவும் நான் எழுப்பிய பிரச்சினைகள் இல்லை. சட்டத்தை கையில் எடுக்கும் விஷயத்தில் வினவின் இரட்டை நிலை, பார்ப்பனர் மேல் – கவனிக்கவும் பார்ப்பனராய் பிறந்தவர் மேல், ஜாதீயவாதிகள் மேல் இல்லை – ஜெனடைப் கருத்து ஆகியவற்றை பற்றி எதுவும் சொல்லாமல் கம்மென்று இருக்கிறீர்களே! பர்சனல் விஷயங்களை பேசுவதை வெறுப்பவன் என்றாலும் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நான் பதில் சொன்னது உங்கள் கண்ணில் படவில்லையா?
வேல், பார்ப்பனீயம் என்றால் என்ன என்று விளக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. நான் பல முறை சொன்னது போல பார்ப்பனீயம் என்பது தவறான சொல்லாட்சி. பார்ப்பனீயம் என்பதை நான் சாதாரணமாக ஜாதீயம் என்று சொல்கிறேன், பொருள் கொள்கிறேன். நீங்கள் சொன்ன எல்லாம் சாதீயத்தில் இல்லையா என்ன? ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? வினவு விட்ட மாட்ரிமோனியல் ஸ்டேட்மென்ட் பிறப்பால் பார்ப்பனர்களை குறிக்கிறதா இல்லை “பார்ப்பநீயவாதிகளை” குறிக்கிறதா என்று யோசித்துவிட்டு பேசுங்கள். “பார்ப்பனீயவாதிகள்” எல்லா ஜாதியிலும் இல்லையா, வினவு ஏன் பிறப்பால் பாப்பனர்களை பற்றி மட்டும் பேசுகிறார்? அவர் பார்ப்பனர்களை பற்றி பேசினாலும் உங்களுக்கு அது ஜாதீயம் பற்றி பேசுவதாகத்தான் தெரிகிறது. வினவின் இன்னொரு ஸ்டேட்மென்ட்: /// னவே இந்த நாட்டில் பிற்போக்கின் வரலாறு பார்ப்பனியத்தை தூக்கி பிடிக்கின்ற பார்ப்பன மேல்சாதியினருக்கே சொந்தம். //
என்ன “பார்ப்பனீயத்தை” தூக்கி பிடிக்கிற எல்லாரையும் குற்றம் சாட்டுகிறார்? பிறப்பால் பார்ப்பனரை மட்டும்தானே? அவருக்கு குழப்பம் இல்லை; எனக்கும் குழப்ப இல்லை; நீங்கள்தான் வினவு “பார்ப்பனீயத்தை” மட்டும் சாடுகிறார் என்று நினைத்து குழம்புகிறீர்கள்.
ஐயா ஆர்.வி.
//என்ன விவாதத்தில் நேர்மையை எதிர்பார்க்கிறேன். அது சில சமயம் கிடைப்பதில்லை.//
அதுவும் வினவு தளத்தில் எப்போதுமே கிடைப்பதில்லை. அதனால்தான் கூறுகிறேன் இம்மாதிரி வெறுப்பாளர்களிடம் பேசுவதைவிட வேறு ஏதாவது உருப்படியான காரியங்கள் செய்யலாம் என்று.
வீட்டு வாடகை விளம்பரம் பற்றி வினவு பேசியிருந்தார். இப்போது கூட தில்லி போன்ற நகரங்களில் வட இந்தியர்கள் தாங்கள் அளிக்கும் விளம்பரங்களில் தென்னிந்திய பிராமணர்களுக்கு முன்னுரிமை என்று இருக்கும். அவர்களுக்கு என்ன பார்ப்பனர் மேல் அவ்வளவு பாசமா என்ன? அவர்கள்தான் தாம் உண்டு தம் வேலை உண்டு என இருப்பார்கள், வீடு தேவைப்படும்போது கேட்டால் வீட்டை காலி செய்து கொடுப்பார்கள் என்று அவர்கள் நினைப்பதுதான் காரணம். இக்காரணங்களை பெரியாரும் தனது இடங்களை வாடகைக்கு விடும்போது கூறி, பார்ப்பனர்களுக்கே முன்னுரிமை அளித்தார் என்பதையும் படித்துள்ளேன். இது ஒரு சமூக கண்ணோட்டம்.
மேட்ரிமோனியல் விளம்பரங்கள் குறித்து ஆணித்தரமாக நீங்கள் கூறியதற்கு அவர்களிடம் பதில் இல்லை, வழுக்குகிறார்கள்.
மோடி விஷயம். நரேந்திர மோடி மேல் லஞ்ச ஊழல் குற்றம் எதையும் காங்கிரசால் கடந்த தேர்தல் சமயம் எழுப்ப இயலவில்லை. இந்த விஷயத்தில் அவர் அளவுக்கு வேறு எந்த முதன் மந்திரி இச்சமயம் இந்தியாவில் உண்டு? அது ஒன்றே போதுமே அவரை ஆதரிக்க. கோத்ரா/கலவர விவகாரம் இருமுறை வாக்காளர்களால் சீர்தூக்கி பார்க்கப்பட்டு, இரு முறையும் மோடியை குஜராத்தியர் வெற்றி பெறச்செய்தனர். அதுவும் இரு தேர்தல்களிலும் சம்பந்தப்பட்ட தேர்தல் கமிஷனர்கள் அவரைக் குறித்து தம் வன்மத்தை வெளிப்படையாக கூறி, தேர்தலை மிகக் கடுமையாக நடத்தினர். அவர்களையும் மீறித்தான் மக்கள் வாக்களிக்க நேர்ந்தது.
மேலும் மோடி என்ன பார்ப்பனரா? சீக்கியக் கொலைகளுக்கு சப்பைக்கட்டு கட்டிய ராஜீவ் காந்தியை விட அவர் எவ்வளவோ மேல்.
நிங்கள் கூறுவதுபோலவினவு தளத்தில் மறுமொழிகள் ஏறுக்கு மாறாக காலவரிசையின்றி வருவது ஒரு பெரிய தலைவலியே. அவரது செட்டிங்ஸ்கள்தான் அதற்கு காரணம். அதை சரிசெய்யாதவரை நிலைமை இப்படித்தான் இருக்கும். அதை அவர் செய்வாரா என்பதை பார்க்கலாம்.
உங்களுக்கு பதில் சொல்லவே நான் இப்போது வந்தேன். இனிமேல் வருவதாக இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் மணி
முதலில் மற்றவர்களுடைய கேள்விகளுக்கு பதில் தந்து விட்டு என்னுடைய கேள்விக்கு அவர்கள் ஈந்த பதிலுக்கு வருகிறேன்.
1. மேட்ரிமோனியல் பற்றி ஏற்கெனவே பின்னூட்டத்தில் சொல்லி விட்டதால் கூறியது கூறலைத் தவிர்க்கிறேன்.
2. ஜெநோடைப் என்ற விசயத்தை பொறுத்தவரை எனது கருத்து இதுதான். ஒருவருடைய ஜெநோடைப் என்பது பகுதியும், வளர்ப்பு சூழல் பகுதியும் ஒரு நபரின் ஆளுமையைத் தீர்மானிக்கும். ஜெநோடைப் பிற்போக்கானதாக இருக்கும்போது வளர்ப்பு சூழல் முற்போக்காக இருந்தால் மாத்திரமே ஒருவரது ஆளுமை நார்மலாக இருக்கும். மாறாக, சூழல் பிற்போக்கானதாகவோ அல்லது லிபரலாகவோ இருக்கும்பட்சத்தில் நமக்கு ஒரு வலதுசாரி சிந்தனை உடையவனொ அல்லது நிலபிரபுத்துவ லிபரல் ஜனநாயகவாதியோதான் கிடைக்க முடியும். விவாதிக்க வந்த நண்பர்கள் அல்லது அவர்களுக்கு இங்கு விவாதித்து வேஸ்டு என்று எடுத்து சொல்ல வந்த நண்பர்கள் தாங்கள் எங்கே இருக்கிறோம் என இதனைப் பார்த்து சொன்னால் உதவியாக இருக்கும்.
திரும்பவும் சொல்கிறேன். ஒருவரது குணம் என்பது பிறப்பால் மாத்திரம் முடிவுசெய்யப்படுவதில்லை. நன்றாக படிக்கவும் மாத்திரம்தான்… அதுவே காரணி அல்ல என்று புரிந்து கொள்ள கூடாது.
அப்புறம் எனக்கான பதில்களுக்கு வருகிறேன். எனது எல்லா கேள்விகளுக்கும் பதில் தேவை என்று சொல்ல மாட்டேன். அது உங்களது கருத்து சுதந்திரம். கேள்வி கேட்ட சார்வாகர்களை கல்லால் அடித்து கொன்றது மன்னல்ல•.. ஒரு கூட்டம்.. அது பூணூல் போட்டிருந்த்து அப்பிடின்னு நான் சொல்லித்தான் தெரியணுமா.. அதுக்கு எந்த மன்ன்ன பொறுப்பேற்க சொல்றது.. ஏனுங்க கஜினி உடைத்தால் ஆப்கானியர்கள் எல்லாரும் பதில் சொல்லணும்… ஆனால் பிரிட்டிஷ் அரசு செய்த கொள்ளைக்கு அரசியே பொறுப்பேற்கணும்…(இதுதான் ஜெநோடைப் னு நான் சொல்ல மாட்டேன்… ஆயிரம்தான் இருந்தாலும் ஆசிய மைனர்ல பிரிந்த சொந்தக்காரன் இல்லையா அப்படின்னு நான் சொல்ல மாட்டேன்). ஆனா கூட்டமா கொள்ளையடிச்சா அதுக்கு யாரு பொறுப்பேற்கணும்… நடுத்தர வர்க்கம் தான் செய்த தப்புக்கே பொறுப்பேற்காது … இந்த லச்சணத்துல் அப்பன் முப்பாட்டன் செய்த தப்புக்கு எப்படி மன்னிப்பு கேட்கும்.. சரிங்க கஜினி பிரித்துக் கொடுத்த சோமநாதர் ஆலய சொத்தை வைத்து ஆப்கன் மக்கள் எல்லோரும் அராபிய ஷேக்குகள் போல வாழ்கின்றார்களா.. வறுமையாக இன்று இருக்கிறார்களே.. கொஞ்சம் கூட இந்திய பார்ப்பனர்களோடு அவர்களை ஒப்பிட வெட்கமாக இல்லையா….
//டோண்டு குற்றவாளியா என்று கேட்கிறீர்கள். என் கருத்துக்கு மாற்று கருத்து உள்ளவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று சொல்லும் அளவுக்கு நான் சித்தாந்த தேர்ச்சி பெறவில்லை.//
இதுதான் திரிபல்ஸ் ஆப் இண்டியா ஆர்வி. ஆர் வியால் குற்றவாளிகளாக இருக்கலாம்(??) என்று அழைக்கப்பட்ட அத்வானி, மோடிகளை சமரசமின்றி ஆதரிக்கும் நோண்டு ராகவன் ஒரு குற்றவாளியா என்பது என் கேள்வி. அதற்கு ஆர்வியின் பதில் திரித்து எதிர்வினை செய்கிறது.
//1. நீங்கள் பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்பதை நம்புகிறவரா மறுப்பவரா?//
இதை இல்லையென்று வினவும், பலரும் பலமுறை மறுத்து எழுதியாயிற்று மேலும் பார்ப்பனர் என்று ஒருவரை சொல்வதன் பின்னணியில் அவரது பண்பாட்டு அடையாளமே பிரதானமானது என்றும் சொல்லியாயிற்று. பிறப்பால் பார்ப்பனரான பலர் இந்த பண்பாட்டு அடையாளத்தை துறந்த பலரை வினவு போன்றோர் ஆதரிக்கிறார்கள்.
//
2. டாக்டர் ருத்ரன் என் கருத்துகள் என் ஜெநோடைப்பால் உருவானவை என்று ஒரு முறை சொன்னார். அதற்கு வினவும் சப்பைக்கட்டு கட்டினார். டாக்டர் ருத்ரனின் கருத்து, அதற்கு வினவு தெரிவித்த ஆதரவு ஆகியவை உங்களுக்கு சம்மதமா?//
டாக்டர் ருத்ரன் விசயத்தை பேசும் முன்பு நோண்டு விசயத்தை முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளேன்.
//
3. வினவு மாட்ரிமொநியலில் மட்டுமல்ல, வீட்டு வாடகையிலும் ஜாதி பார்க்கும் ஒரே ஜாதி பார்ப்பனர் என்று சொல்கிறார். மாட்ரிமொநியலில் பார்ப்பனர் மட்டும்தான் ஜாதி பார்க்கிறார்களா? வினவின் இந்த கூற்று உண்மையா பொய்யா?//
இதற்கும் ஒரு பத்துமுறை பலரும் விளக்கம் எழுதியாயிற்று.
அவசரமில்லாமல் நிதானமாகவே எதிர்வினை செய்யலாம் ஆர்வி
ஆர் வி அவர்களுக்கு, சாதியம் அனைத்து தளங்களிலும் இருக்கிறது. ஆனால் தீட்டு, வெளிப்படையான செயல்பாடு, அனைத்திலும் தானே உயர்ந்தவன் மற்றவனெல்லாம் தனக்கு கீழ் எனும் எண்ணம் பார்ப்பனீயத்திலேதான் மிகுந்து காணப்படுகிறது. சட்டையை கழற்றி விட்டு வரச் சொல்லும் கோயில்களில் தரப்படும் வித்தியாசன மரியாதை மனிதர்களை வகைபடுத்ததானே அன்றி வேறேதுமில்லை.
கேரளத்தில் இதே சாதிதான் நாடார் பெண்கள் இரவிக்கை போடக் கூடாது என்றது. மாராப்பு சேலை போராட்டம் நடத்தி அன்றோ உரிமையை பெற்றனர். பாட்டன் முப்பாட்டன் வகுத்ததை இன்னும் தொடர்ந்து கொண்டு நான் மட்டும் அப்படியில்லை என்றால் அதே தவறுகளை தொடர்ந்து கொண்டிருக்கும் அவர்களை விட்டு வெளியே வரவேண்டும் . விமர்சனம் செய். அப்படி வந்தவர்கள் நிறைய.
பார்ப்பனீயம் கற்று கொடுத்தது என்னவென்றால் பார்ப்பனர்களை புரோகிதர்களை தவிர்க்கும் மற்ற சாதி மக்கள் கூட சட்ங்குகள், மற்ற நடைமுறைகளை செய்யும் பண்டாரம், குடிமகன் எனும் வகுப்பினரை பயன்படுத்தும் போது பார்ப்பன அடையாளமான பூணுலை அணிந்தே சடங்குகளை செய்கின்றனர்.
பார்ப்பனர்களே புரோகிதம் செய்யும் பிராமணர்களை பின்பக்கம் தான் நுழைய அனுமதிக்கின்றர். நகர்புறம் அடுக்குமாடி ஆனாதல் அதை தவிர்க்கவியலாத காரணங்களால் ஒத்தி வைத்திருக்கின்றனர்.
வீடு வாடகை/விற்பனை மைலாப்பூர்/மந்தவெளியில் வசிக்கும் பிற சாதி மக்களுக்கு தெரியும் அதன் கடினம். நான் அந்தப் பகுதியில்தான் வசிக்கிறேன். ஒரு பழைய அடுக்குமாடி வீடொன்று வாங்க ஆசை விளம்பரம் பார்த்து தொடர்பு கொண்டபோது கேட்ட கேள்வி நான் பிரமணனா? இல்லை என்றவுடன் மன்னிகவும் பிரமணர்களுக்கே விற்க முடியும் ஏனென்றால் அந்த அடுக்ககத்தில் அனைவரும் பிராமணர்கள் . அவர்கள் என்னை விரும்ப மாட்டார்கள் என பதில். தற்போது வாடகைக்கு இருக்கிறேன். 24 குடித்தனத்தில் 3 பேர்களுக்கு மேல் என்னிடம் பேசுவதில்லை. பேசும் ஒருவர் கூட என் சாதியத்தை எப்படியோ தெரிந்து கொண்டு அவர் ஆசிரியராக இருக்கும் பள்ளியில் அந்த சாதி பிள்ளைகள் எல்லாம் மக்கு எனறொரு விமர்சனத்தை என் மனைவியிடத்தில் வைத்திருக்கிறார். இதுதான் அதன் திமிர். இது அவர்கள் வழக்கம். எனது வழக்கம் கடந்த ஒன்னரை ஆண்டில் ஒருநாள் கூட அசைவம் சமைத்ததில்லை. அவர்களுக்கு இடைஞசலாகுமென்று.
திருமணத்தில் சாதி – பெரும்பான்மை சமுதாயம் இன்னும் சாதிய வழியில்தான் சென்றுக் கொண்டிருக்கிறது. (இனகலப்பில் திருமணம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுதானிருக்கிறது ஆனால் ஒட்டு மொத்த சமுதாயமும் பின்பற்ற சாத்தியமா……. ஐரோப்பியன், மங்கோலியன், திராவிடன் என மறைந்து மனித இனம் ஒன்று என்ற நிலை எப்போது வரும்? காலம்தான் பதில் சொல்லும்.)
1920 உருவான வார்த்தை/குறியீடு அதை மாற்ற கவலைபடும் நண்பரே அது தங்களது சாதியோடு தொர்புடைய வார்த்தை என்பதில்தானே. எதற்காக அந்த குறியீடு/வார்த்தை உருவாகியதோ அது இல்லாமல் போகும்வரை இருக்கதான் செய்யும். அதுபோலவே பிறசாதியனரும் நடக்கும் பட்சத்தில் (எந்த வருணத்திலும்) அவ்வாறே அழைக்கப் பெறுவர்.
சொத்தில் எப்படி பங்கு கேட்க உரிமை உள்ளதோ அதே போல பெற்றோர் பட்ட கடனுக்கும் அடைக்க வேண்டிய பொறுப்பு மகனுக்கு உண்டு. இது பொருளாதார தளத்தில். இதனை கல்வி மூலம் அறிவு பெறல் என்ற தளத்திற்கு ஒப்பிட்டு புரிந்துகொள்ள முடியும் உங்களுக்கு எனக் கருதினேன்.
யாருக்கு வீட்டை வாடகைக்கு விடுவேன் என்பதௌ முடிவு செய்யும் உரிமை சொந்தக்காரரிற்கு இருக்கிறது. ஒரு முஸ்லீம் தன் வீட்டை முஸ்லீமிற்குத்தான் வாடகைக்கு விடுவேன் என்றால் அதில் கோர்ட் தலையிடாது
அது தனி மனித உரிமை என்று சட்டத்தை காட்டி தலையிடாது. பார்சிக்ளை மட்டும் உரிமையாளர்களாக கொண்ட ஒரு பல்லடுக்கு வீட்டுத் தொகுப்பில் பார்ஸி அல்லாதோருக்கு வீட்டை விற்கக் கூடாது என்று அந்த பல்லடுக்குதொகுப்பின் விதிகளில் இருந்தால் அது சரி, அதை நாங்கள் மாற்றுமாறு நிர்ப்பந்திக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அரசு உதிவியை 100% பெறும் கிறித்துவ,முஸ்லீம் கல்விநிலையங்களில் 50% இட ஒதுக்கீடு அந்த மதத்தாருக்கு
இருக்கிறது, அது போல் வேலையிலும். அதுவும் சட்டரீதியாக சரியே. தலித் முரசு ஆசிரியர் தலித்
முரசிற்கு அலுவலகம் தேடி அலைந்த கதை, கிடைத்தபின் ஏன் காலி செய்ய வேண்டியதாயிற்று என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார்.கூகுளில் தேடுங்கள்,தெகல்காவின் இணையதளத்தில் அது உள்ளது. இந்தியாவில் சாதி ரீதியாக,மதரீதியாக பாரபட்சம் என்பது ஏன் இருக்கிறது அது தனி மனித, மத உரிமையின் பகுதியாகி விட்டது. அதை யார் யார் செய்கிறார்கள் என்று பார்த்தால் சில உண்மைகள் விளங்கும். தன் சாதியில் உள்ளவருக்க்த்தான் வாடகைக்கு விடுவேன் என்பவர் வேலை என்று வரும் போது எங்கு சம்பளம்,வச்தி அதிகமோ அங்குதான் செல்வார். அங்கு சாதி பார்க்கமாட்டார். வாடகைக்கு விடும் போது எத்தனை பேர் தன் சாதி/மதம் என்பதற்காக வாடகையை குறைத்துக் கொள்வார்கள் மனிதர்களை முத்திரை குத்தாமல் புரிந்து கொள்ள முயலுங்கள். முற்போக்கு என்று பேசுபவர்களில் பாரபட்சங்கள் காட்டமல் இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை பேர். வினவிற்கு ஒரு வீடு இருந்தல் அதை ஆர்.எஸ்.எஸ் காரருக்கு வாடகைக்கு விடுவாரா?
//தலித் முரசு ஆசிரியர் தலித்
முரசிற்கு அலுவலகம் தேடி அலைந்த கதை, கிடைத்தபின் ஏன் காலி செய்ய வேண்டியதாயிற்று என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார்.// அது சரி.. பு.பாண்டியன் இவ்வளவு சொல்லுகிறாரே..அவரின் பத்திரிக்கையில் வரும் மணமகன்/மணமகள் தேவை விளம்பரங்களில் ‘இந்து ஆதிதிராவிடர் மணமகளுக்கு அதே உட்பிரிவில் தகுந்த மணமகன் தேவை’ என ஏன் வெளியிடுகிறார்? இது ஏதோ தேடிப்பார்த்தால் கிடைத்த ஒற்றை விளம்பரம் அல்ல..கடந்த 3 இதழ்களிலும் தலா 15 மேட்ரிமோனியல் விளம்பரங்களை தலித் முரசுவில் வெளியிட்டு வருகின்றனர். அதில் பாதிக்கும் மேல் சாதிகாக்கும் விளம்பரங்கள்.. இதுக்குப் பேரு பார்ப்பனியம் இல்லையா? அல்லது என்.ஜி.ஓ.க்கள் இதற்கெல்லாம் கேள்வி கேக்க மாட்டாங்களா? புரட்சிகர இயக்கங்கள் மீது பாய்ந்து பிராண்டுவதற்கு முன் பு.பா. சுயவிமர்சனம் செய்யவேண்டும்..
your site sucks. replies are not in order of date and time of posting.
சிதம்பரம் கோவிலை மீட்பது ஒரு ஜனநாயகப்படுத்தலுக்கான கோரிக்கையும் கூடத்தான். அந்த மக்கள் வழிபடுவதற்கான ஜனநாயக உரிமையை இனி அரசு தரக்கூடாது. பார்ப்பனர்கள் கட்டுப்படுத்த அதிகாரம் வேண்டும் என்று கேட்டுதான் தீட்சிதர்கள் உயர்நீதி மன்றம் வந்தார்கள். அதற்கு ஆதரவாக வந்தவர் அந்த இடத்தில் ஜனநாயகத்திற்காக வந்தாரா அல்லது சர்வாதிகாரத்திற்காக வந்தாரா…
அதிகார மட்டங்களில் செல்வாக்குள்ள ஒருநபர் ஒரு ஜனநாயக போராட்டத்தை ஒடுக்க ஒரு அதிகார மையத்திற்கு வருகை தந்தால் அவரை எப்படி மக்களிடம் அம்பலப்படுத்த முடியும்.. சட்டத்திற்கு உட்பட்டுதான் எதிர்ப்பு காட்ட வேண்டும் என்றால் அவருக்காக சட்டம் தன்னை வளைத்து கொண்டதை பிறகு பார்த்த பின்பும் எப்படி கூற முடியும்.. அனுமதிக்காத பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்… இது ஜனநாயகவாதிகள் பதில் சொல்ல வேண்டிய கேள்வி..
ஒரு உலக நன்மைக்காக ஒரு கொடூரனுடன் போர் நடத்த வேண்டிய சூழல் வந்தால் போரை ஆதரிப்பீர்களா அல்லது வழக்கம்போல எதிர்ப்பீர்களா… ஏன்
ஜனநாயகம் எல்லா இடத்திலும் எல்லோருக்கும் சாத்தியம் எனில் ஏற்கெனவே அதிகாரத்தை வைத்திருந்து இழந்தவன் சும்மா இருப்பான் என்பதற்கு என்ன உத்திரவாதம்.. உங்களாலால் அவன் எப்படி சும்மா இருப்பான் என்பதற்கான திட்டத்தை விளக்க முடியுமா..
அதாவது நாய் நக்கிய கருப்பட்டியை நக்காம இருக்கதுக்கு உத்திரவாதம்…
முசுலீம் எல்லாம் தீவிரவாதின்னா, அதுக்கு கசாப், பின்லேடன் என்று சொன்னால் நான் பார்த்த விபச்சாரி ஒருத்தி மடிசார் கட்டியிருந்தாள் என்பற்காக மடிசார் கட்டிய பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்று நான் சொல்ல முடியுமா.. அது தவறுதானே…
குல்லாவிக்கும் பூணூலிக்கும் வித்தியாசம் இருக்கு. தத்துவத்திலும் இருக்கு குறியீட்டிலும் இருக்கு. தெரியாமல் நான் மனு ஸ்மிருதியும் படித்தேன். குரானையும் படித்தேன். குல்லா த்த்துவம் தனது மக்களை தீண்டத்தகாதவர்களா சொல்லல• ஆனா இங்க என் பொறப்ப டிபைனசன் கொடுக்குது மனு ஸ்மிருதி. பூணூல் என்பது அதன் குறியீடா அதாவது ஒழுக்கமான தாய்க்கு பிறந்தவங்க அப்படின்னு என்னய முன்ன வைச்சே சொல்லுது. இத எப்படி பாக்கதுன்னு சொல்லித்தாங்க•. அறிவுக்கு உகந்ததா இருந்தா மாத்திக்கிறேன்.
சாக்கடைவாசம் செய்யும் பன்றியை, குட்டியிலியே கூட்டிவந்து கோவிலில்வைத்து, நாமம்சாத்தி, வராகமே என்று கொஞிக்கொண்டிருந்தால் அது மலம் சாப்பிடாதுதான். சூழல், கொவிலையே நாசமாகி, பக்தர்களையெல்லாம் விரட்டிவிட்டால் அது என்ன சாப்பிடும்? பிரசாதாமும் நைவேத்யமும் இல்லாமல் பட்டினியால் சாகுமா இல்லை பழைய இடம் நோக்கி நகருமா? ஒரு பார்ப்பனவயிற்றில் பிறந்த அறிவோடுதான் இதை யோசித்துக்கொண்டிருக்கிறேன்
நான் மணி
ருத்ரன் எனக்கு உங்களது உவமையில் உடன்பாடு இல்லை. பன்றி ஆல் பகுத்தறிய முடியாது என நினைக்கிறேன். பகுத்தறிவை குறிப்பிட்ட சாதியினர் சரியான முறையில் பயன்படுத்துவது இல்லை என்பதற்காக இப்படி ஒப்புவமை செய்வது தவறு எனக்கருதுகிறேன்.
இன்னொரு சந்தேகம்.. கோவில்களை இடித்துவிட்டால் பன்றி கட்டாயம் மலம் திங்கத்தான் போகும் என்றீர்களே அது இந்தியப் பன்றிகளுக்கா அல்லது ஐரோப்பிய பன்றிகளுக்கா பொருந்தக் கூடியது.
ஓர் அணில் அப்படி சாப்பிட முடியாத்..பன்றியால்தான் முடியும்…சில நேரங்களில் என்போன்றோர் இப்படித்தான்செயல்படுவதைப்பார்க்கிறேன்..
சர்கஸ்ஸிலேயே பிறந்துவளர்ந்த புலி பசியில் என்னசெய்யும்? புலி ஒரு கொளரவமான உதாரணம் என்று நான் நினைப்பதும் பார்ப்பனீயம்தான்
நான் மணி
ருத்ரன், உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என நினைக்கிறேன். நான் பன்றியை இழிவானது என்ற பொருளில் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். பன்றியோ, சர்க்கஸ் புலியோ அவை விலங்குகள்தானே. தனது நடவடிக்கைகளுக்கு அதனை பொறுப்பேற்க சொல்ல முடியாது. அதேநேரத்தில் பார்ப்பனர்களில் பலரும் மக்களை விலங்கு நிலையிலேயே சில ஆயிரம் ஆண்டு நீடிப்பதற்கு உதவிய தம் முன்னோர்களின் இழிவான செயலுக்கு பொறுப்பேற்பதில்லை. அவர்களது பரிணாம வளர்ச்சி அடுத்த கட்டம் நோக்கி பயணிப்பது என்ற நோக்கில் அவர்கள் உள்ளனர். சுப்பிரமணிய சாமியை கல்லால் அல்லது முட்டையால் அடிப்பது சூத்திரச் செயல் என்றுதான் அவர்களது புரிதல் எனக் கருதுவது அவர்களைப் பற்றி நமது குறைமதிப்பீடு ஆகும்.
அவர்கள் ஏகலைவனின் கட்டைவிரலைக் கேட்கும்போது நியாயத்தை ஆயுதமாக்குவார்கள். அதாவது அவர்களுக்கான நியாயம். இட ஒதுக்கீட்டு க்கு எதிராக அவர்களது ஜனநாயக உரிமையை ஆயுதாமாக்குவார்கள். அகமண முறையை ஒழிக்க வேண்டும் என்றால் தனிமனித உரிமையை ஆயுதமாக்குவர்கள். முட்டாள்தனமாக என்றாலும் கூட இந்திரா மூலம் கம்யூனிஸ்டும் ஆள வந்துவிடுவானோ என்று ஜனதாவிற்கு கொடி பிடிப்பார்கள். அரசின் ஜனநாய உரிமை மீறல்களை அவ்வப்போது கண்டிக்கவும் தவற மாட்டார்கள். ஆயுதம் பிரச்சினையல்ல•. மனதை ஆளும் உணர்வுகளை ஓப்பனாகச் சொல்லாமல் மயிர் பிளக்க விவாதிக்கும் இந்த் அற்பர்களது காலமும் இணையத்தில் கழிகிறதே என நினைக்கியைல் ஆத்திரமாக வருகிறது.
ஜனநாயகம் இன்ன தேதியில் இருந்து உங்களுக்கு வழங்கப்படும் என்று சிலர் அளித்த சுதந்திரத்தில் பிறந்த தேசத்தில் ஜனநாயகம் என்பது காமன் மேனின் வார்த்தைகளில் சொன்னால், நாற்பது சதவீதம் ஓட்டு கூட மேற்கு எல்லையில் பதிவாகவில்லை. அவர்களுக்கெல்லாம் ஜனநாயகம் எதுக்கு என்பதற்கு மேல் அவர்களின் மூளயில் ஒனுறுமில்லை
மணி,
நீங்கள் முதலில் மறியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள். மருத்துவர் ருத்ரன் வயதிலும்,அனுபவத்திலும் நம்மையெல்லாம் விட மூத்த தோழர். நீங்கள் எப்படியும் அவரை விட இளையவராகவே இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனவே மரியாதையின்றி பெயர் சொல்லி அழைப்பதை நிறுத்துங்கள்.
இது என்னுடைய கருத்து, இதில் உங்களுக்கு மாற்றுகருத்து இருப்பின் அதை நான் இங்கு விவாதிக்கப்போவதில்லை. அது மைய்யமான விவாதத்திலிருந்து அனைவரையும் திசசை திருப்பும். எனவே நீங்கள் இதை பரிசீலிக்காவிட்டால் மேற்கொண்டு தொடரலாம்.
மணியை அறியாத அமைப்பு தோழரே… இது என்ன கொடுமை.. பேரைச்சொல்வதில் என்ன மரியாதை குறைவு. ருத்ரன் என்பது அவர் பெயர்தானே… லெனின் ஸ்டாலின் மாவோ என்று சொல்வதும் தவறா?
நான் மணி
வயதிலும் அனுபவத்திலும் பார்ப்பனியம் கம்யூனிசத்தை விட மூத்த்து என்பதற்காக மரியாதை செய்வீர்களா..
இப்படி ஒப்பிட்டது அதிகம்தான். ஆனாலும் உங்களுக்கு புரியவைக்க எனக்கு வேறுவழி தெரியவில்லை.
மற்றபடி நீங்கள் எந்த அமைப்பிலும் இருக்க தகுதியற்றவர் என்பதை உங்களது பார்வை காட்டிக் கொடுத்து விட்டது. முதலாளித்துவ சமூக அமைப்பு தரும் ஜனநாயகத்தில் அதிபர்களைக் கூட சாதாரண குடிமகன் பெயரைச் சொல்லி அழைப்பதும், தொழிற்சாலைகளில் முதலாளியின் பெயரை ஒரு சாதாரண தொழிலாளி உச்சரித்து அழைப்பதும் சாதாரணம். இவற்றுக்கெல்லாம் கோபித்துக் கொள்கிற நிலபிரபுத்துவ தோரணையில் மருத்துவர் இருக்க மாட்டார் என நம்புகிறேன்.
விவாதிக்க விரும்பவில்லை என்ற கூற்றுடன் வந்த உங்களது விவாத துவக்கமும் உங்களது இழிந்த பண்பைக் காட்டிக் கொடுத்து விட்டது
மணி அவர்களுக்கு வராலற்றில் முதலில் புராதன பொதுவுடமை சமுதாயம் இருந்ததாகவும் அதன் பிறகே ஆண்டான் அடிமை, முதலாளித்துவம் வந்ததாகவும் படித்ததாக ஞாபக்ம
புராதன பொதுவுடமை சமூகமும் அமையவிருக்கும் பொதுவுடைமை சமூகமும் ஒன்று அல்ல எனப் படித்த்தாக ஞாபகம்
மாபெரும் மார்க்சியவாதி மணி அய்யா அவர்களுக்கு வணக்கம்.
வயதில் மூத்தவருக்கு மறியாதை தாருங்கள் என்று தான் உங்களிடம் கேட்டிருந்தேன் அதை நீங்கள் சட்டை செய்து ஒரு ‘தோழரை’ போல எனக்கு பதிலளித்திருக்கலாம், அல்லது அதை ஒதுக்கித்தள்ளிவிட்டு மேற்கொண்டு உங்கள் விவாதத்தை தொடர்ந்திருக்கலாம், அதை விடுத்து ஒரு எதிரியை அணுகுவது போல என்னை அணுகியிருக்கிறீர்கள்.
உங்கள் கோபத்தை என்னைப் போன்ற தோழமை உறவுள்ளவர்களிடம் காட்டாதீர்கள், பிழைப்புவாதிகளிடமும் போலிக்கம்யூனிஸ்டுகளிடமும் எதிரிகளிடமும் காட்டு்ங்கள்.
உங்களுடைய விவாத முறையை நானும் தொடர்ந்து கவனித்துக்கொண்டு தான் வருகிறேன். நீங்கள் பெரிய விவாதக்காரர் என்கிற நினைப்பு உங்களிடம் இருக்கிறது. விவாதத்துல நாம கலக்கிறோன்டா என்று உங்களுக்கு நீங்களே நினைத்துக்கொள்கிறீர்கள். அதிலிருந்து தான் நீங்கள் மற்றவர்களை அணுகுகிறீர்கள். டாக்ட்டர் ருத்ரனை நீங்கள் பெயர் சொல்லி அழைத்ததால் மட்டுமே, இந்த விசயத்தில் நீங்கள் நடந்துகொண்டதை வைத்து மட்டும் நான் உங்களை பற்றிய முடிவுக்கும் வரவில்லை, அதிலிருந்து மட்டுமே உங்களுக்கு நான் மேற்கண்ட பின்னூட்டத்தை போடவும் இல்லை, அதற்கு ஒரு கடந்த காலம் இருக்கிறது.
தோழர் ரயாகரன் தொடர்பான விவாதத்தில் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள்? தோழர் இரயாவை என்னவெல்லாம் சொன்னீர்கள் ? டாக்ட்டர் ருத்ரனை பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் சரி போகட்டும் ஆனால் இரயா தொடர்பான விவாதத்தில் சில தோழர்களை நீங்கள் சாலமன் பாப்பையா என்றீர்களே அதற்கு என்ன பொருள் அந்த தோழருடைய பெயர் சாலமன் பாப்பையாவா ? அந்த விவாதம் முழுவதும் மிக மோசமாக நடந்து கொண்டவர் நீங்கள் தான். அதை நான் அப்போதே ‘சனி’ என்கிற பெயரில் பின்னூட்டமாக போட்டேன்.
இதற்கு மேல் உங்களிடம் பேச எனக்கு ஒன்றும் இல்லை.
எனக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளீர்கள், நன்றி. அமைப்பிலிருந்து நானாக வெளியேற வேண்டுமா அல்லது நீங்கள் அமைப்பிடம் பரின்ம்துரை செய்கிறீர்களா ? எந்த அமைப்புகளிலும் இருக்கத்தகுதியற்ற என்னைப் போன்றவர்களை ம.க.இ.க வில் முட்டாள்தனமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே தயவு செய்து உங்கள் கருத்தை அமைப்பிற்கு சொல்லி என்னைப்போன்றவர்கள் எந்த அமைப்பிலும் இருக்கத்தகுதியற்றவர்கள் எனவே இவரைப்போன்றவர்களை அமைப்பிலிருந்து உடனடியாக வெளியேற்றுங்கள் என்று எனக்காக அமைப்பிடம் பரிந்துரை செய்யுமாரு உங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு:
இவர் ஒரு அமைப்பு தோழர் என்கிற முறையில் இன்னொரு தோழரிடமே இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார் என்றால் விசயமே தெரியாமல் விவாதிக்கும் பிற நபர்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் ? மூக்குக்கு மேல் இப்படி கோபம் வந்தால் மக்களிடம் எப்படி ஐக்கியப்படுவார்கள் ? புதிதாக விவாதிக்க வருபவர்கள் இவரை கண்டு ஓடி விடுவார்கள். அது யாருக்கு நட்டம் என்பதை இந்த தோழர் யோசிக்க வேண்டும். எனது இந்த பதிலுக்கு கூட நீங்கள் பாய்ந்து வந்து என்னை திட்டக்கூடும் தோழரே ! எனினும் நான் இனி இது தொடர்பாக எந்த பின்னூட்டமும் போட மாட்டேன் என்று கூறிக்கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்களில் ஒரு தோழர் மற்ற தோழரிடமோ வெளி நபர்களிடமோ வரம்பு மீறும் போது வினவு தோழர்கள் தலையிட்டு கருத்து சொல்ல வேண்டும்.மாறாக அமைதியாக இருப்பது வேதனையானது.
தோழரே,
நேற்று தோழர் மணி வினவு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதே அவரது விமரிசனம் அதாவது நீங்கள் எந்த அமைப்பிலும் இருக்கத் தகுதியானவரில்லை என்ற கருத்துக்கு எதிர்ப்பையும், விமரிசனத்தையும் தெரிவித்தோம். டாக்டர் ருத்ரனை மரியாதையாக அழைப்பது என்று ஒரு தோழர் கோரியிருப்பதை இவ்வளவு வன்மம் கொண்டு அவர் எழுதியிருப்பது தவறானது என்பது எங்கள் கருத்து. மற்றபடி மருத்துவரை ருத்ரன் என்று அழைப்பதும் பிழையில்லை. இதை விமரிசிப்பதாக இருந்தால் நேர்மறையில் விமரிசித்திருக்கவேண்டுமென்பதையும் அவருக்கு தெரிவித்தோம். இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டதால் இங்கேயும் எங்கள் கருத்தை பதிவு செய்கிறோம். தோழர் மணி தனது வரம்பு மீறலை சுயவிமரிசனம் செய்து கொள்ள வேண்டுமென்பது எங்களது கோரிக்கை.
sorry for all the typographic errors..but there is no errata in content
mani….மிருகங்களின் number of அறிவு பற்றியதும் மனித கண்ணோட்டம்தான்…கண்ணோட்டம் கற்பிக்கப்படுவது..கற்றுக்கொள்ளப்படுவது..இது உங்களிடம் பேச அல்ல.. some people whose brain function i had wondered all along are just pulling me into this. i shall desist the temptation henceforth
மனிதக் கண்ணோட்டத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் அவசியமில்லை என்று கருதுகின்றீர்களா..(for this context)
மனித கண்ணோட்டம் can be wrong..in a universal consciousness…upanishads are supposedly so!!
anyway i do not want to dilute this topic by entering into a discussion about my comment…thanks for trying to understand me.
இங்கே சில விஷயங்களை தவறாக சகோதரர் நெத்தியடி மொஹம்மத் தெரிவித்துள்ளார்.
மாற்றுமத சகோதரர்களுக்காக சில தெளிவுகளை அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
அல்லாஹ் நம்மை ”கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்:” என்று கூறுகின்றான்.
:ஆகையால் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் அதாவது கிளான்களாக்வும் ஜாதிகளாகவும் ஆக்கியது அல்லாஹ்வே.
உலக மக்களில் அரபிகளே மேலானவர்கள் அவர்களுக்கும் மேலானவர்கள் குரேஷிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) ஹதீஸில் அறிவித்துள்ளார்.
நபிகள் நாயகம்(ஸல்) தனது மகள் பாத்திமாவை(ரலி) பிலாலுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை. ஏன் என்று சிந்தித்து பார்க்கவேண்டும். ஒரு பெண் மேலான கோத்திரத்தில் (அல்லது மேலான ஜாதியில்) திருமணம் செய்யலாம். ஆனால் கீழான ஜாதியில் திருமணம் செய்யக்கூடாது. அது குடும்பத்தின் கௌரவத்துக்கு இழுக்கு என்பதே காரணம். ஆகையால், இன்றும் ஷரியாவை பின்பற்றும் சவுதி சமூகத்தில் கீழான ஜாதியில் பெண்களை திருமணம் செய்யக்கூடாது. ஆனால் ஒரு ஆண் கீழான ஜாதியில் பெண் எடுக்கலாம். ஆனால் பெண் கீழான ஜாதியில் ஆணை திருமணம் செய்யலாகாது. அப்படி வழி தவறிச் செல்லும் பெண்ணை, குடும்ப கௌரவத்துக்கு இழுக்கு கொண்டுவரும் பெண் கொல்லப்பட வேண்டும் என்பது ஷரியாவின் படியான நீதி.
ஆகையால் முஸ்லீம் ஆண்கள் முஸ்லீம் சமூகத்துக்கு கீழான சமூகமான இந்து, கிறிஸ்துவ சமூகத்தில் பெண் எடுக்க அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆனால் மேலான சமூகமான இஸ்லாமிய சமூகத்திலிருந்து ஒரு பெண் கீழான சமூகமான இந்து கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்த ஆணை திருமணம் செய்ய தடுக்கப்படுகிறாள். இது மதம் சார்ந்த கட்டுப்பாடு மட்டுமல்ல ஜாதி சார்ந்த கட்டுப்பாடும் கூட. இன்றும் சவுதி சமூகத்தில் கீழான கோத்திரத்தை அல்லது ஜாதியை சேர்ந்த ஆணை ஒரு பெண் திருமணம் செய்தது தெரிந்தால், ஷரியாவின் படி மணவிலக்கு கொடுக்கப்படும். அல்-திமானி என்ற (al-Timani) என்று அரபுநியூஸில் தேடிப்பாருங்கள். திருமணம் ஆன குழந்தை இருக்கும் தம்பதியினர் கட்டாய மணவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளனர். காரணம் கணவர் கீழான ஜாதியை சேர்ந்தவர்.
http://www.arabnews.com/?page=1§ion=0&article=91804&d=6&m=2&y=2007
ஆகையால் இஸ்லாமில் ஜாதி ஏற்றத்தாழ்வு இல்லை என்று கூறுவது சரியல்ல. ஆனால் இந்தியாவில் இருப்பதுபோன்று இல்லை. இங்கு மேல் ஜாதி ஆணும் கீழ்ஜாதி பெண்ணை திருமணம் செய்வதில்லை. மேல்ஜாதி பெண்ணும் கீழ்ஜாதி ஆணை திருமணம் செய்வதில்லை. ஆனால் அரபியாவில் ஷரியாவின் படி, மேல்ஜாதி பெண் மட்டுமே கீழ்ஜாதி ஆணை திருமணம் செய்யக்கூடாது. மேல்ஜாதி ஆண் கீழ்ஜாதி பெண்ணை திருமணமோ அல்லது அடிமையாகவோ வைத்துகொள்ளலாம். அது ஹலாலாகும்.
//
2BHK First floor house rent (Individual Houses)
Posted by: Individual
Ad Id: 4054411 Posted by Gopalakrishnan onOct 03, 2009
2BHK first floor house with area of 1200 sqft with car parking facilities. Bath attached bedroom with balcony and terrace facilities. We are looking for a @@@@Brahmin@@@@ family with rent of 12,000rs (negotiable). The house is near to Gandhi Nagar telepho…
View Full Description
* Location: Saligramam
* Area: 1200 Sq Feet
* Monthly Rent: Rs.12,000
* Bedrooms: 2 BHK
* Food Habit: Veg/Non Veg
* Furnished: Semi Furnished
2BHK First floor house rentClose
You have contacted this Advertiser. Mark as Broker
Post your requirement as an Ad and get more responses.
Note: Your contact details will be shared with the advertiser once you click to “View Number”
Name:
Contact No:
Email Id:
View Number
You have reached your response limit.
Close
Please do not respond to this advertisement if you are a broker/agent. The advertiser prefers to deal directly with individuals
Brokers excuse.
One of our executives will call you and verify your mobile number. After verifying the response will be sent to the advertiser
You need to register and verify your mobile no. to contact this advertiser.
Contact Advertiser:
View Phone Number
//
இப்படிப்பட்ட விளம்பரம் வேற எந்த சாதிக்காரனும் போடுவதில்லை.
one more email:
Pl cascade below to your associates .
2 BHK Waterford Apartment, Appasamy builders, Near Tiruvanmiyur Bus Stand on ECR Road, VI Floor, #42 for Rent with car Park. Rent 15000 (negotiable )Advance 1.0 Lacs. Brokers Excuse and Vegetarians only.
ஆர்.எஸ்.எஸ் சாதி வேற்றுமைப் பார்க்ககூடாது என்றும், அனைத்து இந்துக்களும் ஒன்று என்றுதான் சொல்கிறது. சித்பவானந்தர் அனைத்து இந்துக்களும் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும், உரிமை உண்டு என்க்றார்.தீண்டாமைக்கு எந்த வித சாத்திர அனுமதியும் இல்லை, அது தவறு என்று 1964ல் அனைத்து மடாதிபதிகள் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்
முன்னிலையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக் கூட்டணி ஆட்சியில் பார்பனர் அல்லதோரும் சடங்குகளை செய்ய வகை செய்யும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை முரளி மனோகர் ஜோஷி கொண்டு வந்தார். இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா. ஆர்.எஸ்.எஸ் சாதியை ஏற்பதில்லை.அதில் அனைவரும் சமம்.பல மாநிலங்களில் பார்பனர் அல்லாதோர் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.
இந்த உண்மைகளை என்றைக்காவது உங்கள் பத்திரிகைகளில் எழுதியுள்ளீர்களா?
ஆர்.எஸ்.எஸ் இந்துக்களை ஒன்று எனக் கருதுவதும், சாதி வேற்றுமை பார்ப்பதில்லை என்பதும் கடைந்தெடுத்த பொய். கருவறையில் பார்ப்பனர்களுக்கும், சமஸ்கிருதத்துக்கும் மட்டும் அனுமதி. அக்கரகாரம், சேரி என்று வாழ்விடத்தில் வேறுபாடு. மலம் அள்ளும் தொழிலை இந்துக்களெல்லாம் ஒன்று என சொல்லும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பூணூல் பார்ப்பனர்களும், பூணூல் போடாத பார்ப்பனர்களும் செய்யத்தயாரா? உழைப்பாளிகள் சாப்பிடும் மாட்டுக்கறியை உண்ணத்தயாரா? முனீஸ்வரனுக்கு வெட்டப்படும் கிடாவை வெங்கடாசலபதி கோவிலில் வெட்டத்தயாரா? பாப்பாபட்டி, கீரிப்பட்டி, திண்ணியம், மேலவளவு பிரச்சினைகளில் ஆர்.எஸ்.எஸ் என்ன கிழித்த்து? தலித் மக்கள் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களின் பெண்களை மணம் செய்ய வாய்ப்பு கேட்டு வரலாமா? ரூப்கன்வரை உடன்கட்டை ஏற்றிக் கொன்றதை நியாயப்படுத்தும் காட்டுமிராண்டிக்கூட்டம்தான் ஆர்.எஸ்.எஸ். ஹரியாணாவில் செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்று ஐந்து தலித்துக்களை கொன்ற வெறிக்கூட்டம்தான் ஆர்.எஸ்.எஸ். குஜராத்தில் 2000 முசுலீம்களை கொன்று வேட்டையாடிய நரமாமிச மிருகங்கள்தான் ஆர்.எஸ்.எஸ் கூட்டம். இந்திய உழைக்கும் மக்களை மொழி.சாதி,பண்பாடு என எல்லாவற்றிலும் அடிமையாக நடத்தும் இந்து மதத்தின் அரசியல் முகம்தான் ஆர்.எஸ்.எஸ். ஊரே ஜெயேந்திரனை காறித்துப்பியபோது அவரை ஜகத்குரு என கொண்டாடியது ஆர்.எஸ்.எஸ்ஸும் பார்ப்பனர்களும்தான்.
நான் மணி
சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறேன். ஒரு நபரை அவர் மாபெரும் அறிவீளி அல்லது மாபெரும் ஆசான் ஆக இருந்தாலும் திரு, டாக்டர், இஞ்சினியர், அறிஞர், .. இத்யாதி போட்டு பேச வேண்டும் என்று கூறுவது நிலபிரபுத்துவ பண்பாடு என நினைக்கிறேன். எனக்கு கருத்து சொன்ன நபர் ஒரு தோழர் என்பதற்காக இந்தக் கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது. எந்த அமைப்பிலும் இருக்க தகுதியற்றவர் என்று கூறியது தவறு. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளில் இருக்க முடியும்.
எழுதியவர் தோழர் எனச் சொல்தால் சொல்கிறேன். சாலமோன் பாப்பையா என்று சொன்னது உங்களைப் பொறுத்தவரை தவறு என ஏன் தெரிகிறது. வார்த்தைகளில் தொங்கி நிற்கின்றீர்கள் என்பது உங்களுக்கு புரியவில்லையா… மையமான விசயத்தை விவாதிக்க விரும்பாத அல்லது இயலாத பொது இத்தகைய வார்த்தை பிரயோகம் எதாவது உங்களது கண்களுக்கு பட்டுத் தொலைக்கிறது. அதனை வைத்து பின்னூட்டம் பல இடுகின்றீர்கள். சரியோ தவறோ தனது கருத்து இன்னதுதான் என்று சொல்லாமல் விவாதிக்கும் இரு தரப்பும் சில நல்லெண்ணங்களின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும் எனக் கருத்துரைப்பது சாலமன் பாப்பையா அல்லது லியோனி அல்லது பல பட்டிமன்ற நடுவர்களொடு ஒப்பிட்டது சரியானதுதான். ஏனெனில் கொள்கை அல்லது சித்தாந்த்த்தை விட சில தோழமை உறவுகள் மாத்திரமே உங்களை சரியாக வழிநடத்தி விடும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்.
நான் விவாதிக்க வந்திருக்கிறேன் என்று ரவுடி போல நடந்து கொண்டேனா என்பதை தகுந்த ஆதாரங்களுடன் சொல்லுங்கள். அது ஒரு சித்தாந்த புரிதலில் ஏற்பட்ட விவாதம் என நினைக்கிறேன். அது மென்மையான மொழியில் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல• அதில் நடந்த விவாதங்களில் சரியாக பங்களிப்பு செய்யாத அல்லது விவாத வழியில் எனது விவாதங்களை ஒரு சிபிஎம் ஆதரவாளர் புறம்தள்ளுவது போல புறம்தள்ளிய பின்னூட்டங்களை நான் காட்ட முடியும். ஆனால் நான் அவற்றை பொருட்படுத்தாமல்தான் விவாத்த்தில் கலந்து கொண்டேன். மக்களோடு எப்படி விவாதிப்பது என்ற உங்களது ஐயம் நியாயமானதுதான். மார்க்சியம் ஒருவழிப்பாதையாக மாத்திரமே உள்ளது என்ற உங்களது சிந்தனை முறையில் இதனை தாண்டி நீங்கள் யோசிக்க முடியாதுதான். மக்களோடு சித்தாந்த போராட்டம் நடக்கிறதா என நீங்கள்தான் சொல்ல வேண்டும். அவர்கள் நடைமுறையில் நமக்கு கற்றுத் தருவார்கள் என்பதும் தெரியும். கறாரான விமர்சனத்தை கட்சிக்குள் வைக்க தவற வேண்டும் எனக் கோருகின்றீர்கள் நீங்கள்.. ரயாகரனை விமர்சித்த்தில் எனது புறம் எதுவும் தவறு இருப்பதாக தெரியவில்லை. தெரிந்தால் மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.
நான் கடவுள் போல ஒவ்வொரு முறையும் நான் மணி என அகங்காரத்துடன் விவாதிக்கும் தன்னகங்கார அறிவாளி மணி அவர்களுக்கு, ஒரு தோழரை அமைப்பில் இருக்கலாம் இருக்கக்கூடாது, அவர் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேரத்தான் லாயக்கு என்று திமிருடன் பேசுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை. ஒரு எளிய பிரச்சினைக்காக ஒரு தோழரை ஆர்.எஸ்.எஸ் என முத்திரை குத்துவது உங்களின் குட்டிமுதலாளித்துவ அராஜகத்தையும். சீர்குலைவு வேலையையும் வெளிப்படுத்துகிறது. தோழர்களை விமரிசிப்பது என்ற பேரில் அமைப்பிலிருந்து வெளியேற்றும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது? இந்தக்கட்டுரையின் விவாதம் தற்போது தன்னகங்கார மணியின் திருப்பணியால் வேறு திசை நோக்கி பயணிக்கிறது. இருப்பினும் வேறு வழியில்லை. மற்ற தோழர்களும் திருவாளர் மணியின் உளறல்கள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு கோருகிறோம். எத்தனை பேர் சொன்னாலும் அவர் பரிசீலிப்பாரா என்பது தெரியவில்லை. இருந்தாலும் அவர் மாதிரி அவரை அமைப்பில் இருந்து வெளியேற்றும் உரிமை நமக்கில்லை என்பதால் இந்த தோழரையும் சகித்துக்கொள்ள வேண்டும்.
தோழர் மணி அவர்கள் அந்த தோழரை நமது தோழராக கருதாமல் மிகவும் மூர்க்கமாக தாக்குவது ஏன் ? மேலும் மேலும் விவாதத்தை வளர்த்து ஒரு தோழரை புன்படுத்துகிற திருப்பனியை மணி அவர்கள் செய்து வருகிறார். இது தேவையற்றது என்று கருதுகிறேன்.
மணி தன்னையும் அமைப்பின் ஒரு தோழராக கருதாமல் அவரை நீக்கலாம் இவரை நீக்கலாம், இவர் இருக்க தகுதியற்றவர், இவர் ஆர்.எஸ்.எஸில் இருக்க வேண்டியவர் என்றெல்லாம் பேசுவது மிக மிக வரம்பு மீறிய பேச்சு.
நீங்கள் உங்கள் விமர்சனத்தை அந்த தோழரிடம் நேர்மறையில் சொல்லவில்லை என்பது எனது கருத்து.
குறிப்பிட்ட ஒரு தோழரை அமைப்பில் இருக்கத் தகுதியற்றவர் என்று கூறியதாலும் அவர் ஆர்.எஸ்.எஸில் இருக்க வேண்டியவர் என்று கூறியதாலும் நீங்கள் சுயவிமர்சனம் ஏற்க வேண்டும் என்பது தான் எனது கருத்தும்.
நான் மணி
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் நீதிபதிகளை மரியாதையாக மை லார்டு என்றுதான் அழைக்க வேண்டும் என்பதற்காக போராடலாமா
விவிமு தோழர்கள் நிலக்கிழார்களை அப்பச்சி எனத் தோழர்கள் அழைக்க வேண்டும் என்பதற்காக போராடலாமா..
மரியாதைக்காக அவர் வரும்போது இடுப்பில் துண்டு கட்ட வேண்டும் என சட்டம் போடலாமா…
பெரியவர்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்றால் அதனை சட்டமாகவே நிறைவேற்றுவீர்களா..
நான் மணி
அமைப்பை விட்டு நீக்க வேண்டும் என்றோ, தன்னகங்காரத்துடனோ பேசியதாக வினவு நிரூபிக்க வேண்டும் எனக் கருதுகிறேன். மாறாக ஒரு வலது சாரி கருத்தை பின்பற்ற வேண்டும் என ஒரு முற்போக்காளர் என தன்னை அறிவித்துக் கொள்பவர் தொடர்ந்து தவறு சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் வலியுறுத்துவார் என்றால் அதனை வினவு ஆதரிப்பதும் சுட்டிக்காட்டுபவரை அராஜகவாதி, சீர்குலைவுவாதி என முத்திரை குத்துவதும் மார்க்சிய வகைப்பட்ட அணுகுமுறையாகத் தெரியவில்லை.
தன்னகங்காரம் அல்லது உளறல் என நீங்கள் குறிப்பிடுவதை நான் மார்க்சியம் என்று கருதி வருகிறேன். அது தவறு என நீங்கள் கருதினால் சுட்டிக் காட்டுங்கள்.
பழைய விவாதம் ஒன்றில் ஆதாரமும் இல்லாமல் அல்லது வார்த்தைகளைப் பிடித்துத் தொங்குவதை வைத்து என்னை மதிப்பீடு செய்ய ஒரு தோழருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதா… ஆனால் ஒரு சித்தாந்தபூர்வமான விவாத்த்தில் பாரிய பங்களிப்புகள் எதுவும் செய்யாமல் ஒரு பார்வையாளராகவே இருந்துவிட்டு விவாதமுறை என்ற முக்கியமான பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு வந்த இந்த பழைய நபர் தன்னை மீண்டும் ஒரு ஒன்றுக்கும் உதவாத பிரச்சினையில் வெளிப்படுத்து பிற்போக்கை சட்டமாக்க கோருகிறார். அந்த பிற்போக்கு மொத்த வேலைக்கு உதவும் என்றால் செயல்படுத்து நான் தயார்.
ஆனால் இதனை நேர்மறையில் புரிந்து கொள்வீர்கள் என்றால் சொல்கிறேன். எனக்கும் இந்த தளத்தில் தொடர்ந்து விவாதிப்பதில் பொருள் இருப்பதாக தெரியவில்லை.
ஒரு பிற்போக்கு பண்பாட்டை எதிர்ப்பது சீர்குலைவுவாதம் அல்லது அராஜகவாதம் என முத்திரை குத்தும் இடத்தில் எனக்கும் வேலையில்லை என நினைக்கிறேன். கடந்த விவாதங்களில் வினவு மாத்திரம் பதில் பசொல்லுங்கள் கடந்த விவாதங்களின் அடிப்படையில் என விவாதிக்க வந்த அனைவரையும் கேவலப்படுத்திய பின்னூட்டங்களுக்கு எவரும் பதில் சொல்லவில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
என்ன தோழர் மணி பிளாக் மெயில் செய்கிறீர்களா ? நீங்கள் விவாதிக்காமல் போனால் வினவு தளம் நின்று விடுமா ? உங்களைப் போன்று முரட்டுத்தனமானவர்கள் விவாதிப்பதை விட விவாதிக்காமல் இருப்பது தான் வினவுக்கு செய்யும் நன்மை என்று நான் கருதுகிறேன்.
வினவு இவ்வளவு விரிவாக சுட்டிக்காட்டிய பிறகும் உங்களுடைய நிலையிலேயே பிடித்த பிடியாக நிற்கிறீர்களே இது தான் அமைப்பு உங்களுக்கு கற்றுக்கொடுத்த கம்யூனிச பண்பா ?
நீங்கள் அந்த தோழரை அவமறியாதை செய்யும் விதமாக நடந்து கொண்டீர்கள் என்பது உண்மை. அவரை அமைப்பிலிருக்க தகுதியற்றவர் என்று சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தோழர்களோடு தோழமையுடன் பேசுங்கள். செய்த தவறுக்கு ஒரு கம்யூனிஸ்டை போல நேர்மையாக சுயவிமர்சனம் செய்து கொள்ளூங்கள்.
நான் மணி
வினவின் வார்த்தைகளில் உள்ள முன்முடிவுகளை நீங்களே பாருங்கள்..
……’குட்டிமுதலாளித்துவ அராஜகத்தையும் .. எத்தனை பேர் சொன்னாலும் அவர் பரிசீலிப்பாரா என்பது தெரியவில்லை
நான் விவாத்த்தை திசைதிருப்பியதாகவும் வினவு தோழர்கள் சொல்லி உள்ளனர். பார்வை குறைபாடு இல்லாத எந்த ஒருவராலும் இந்த பொய்யை சகிக்க முடியுமா என்று தெரியவில்லை…
எனது கடந்த காலம் என்று ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறார். அது சரியா என்றும் வினவு சுட்டிக் காட்டவில்லை. மாறாக மற்ற தோழர்களை எனக்கு விளக்க கோரி ஒரு வித குறுங்குழுவாத போக்கை மார்க்சியப் பண்பாட்டுக்கு எதிராக உயர்த்திப் பிடிக்கிறார் வினவு.
சனி என்ற பெயரில் முன்னர் பின்னூட்டமிட்ட இவர் உங்களுக்கும் ரயாகரனுக்கும் வாய்க்கால் பிரச்சினையா என்று கேட்டார். அதற்கும் பணிவாகத்தான் பதில் சொல்லி உள்ளேன். எனது விவாதமுறை தவறு என அடுத்தடுத்த பின்னூட்டங்களில் வினவோ மற்ற தோழர்களில் ஓரிருவர் தவிர மற்றவர்களோ முன்வைக்கவில்லை. ஆனால் தற்போது எனது விவாதம் முரட்டுத்தனமாக உள்ளது என முன்வைக்கின்றீர்கள். மார்க்சியம் ஒரு அறிவியல் என நினைக்கிறேன். சனி அதற்கு பிறகு போராட்டம் என்ற தோழர் அளித்த ஒரு கவித்துமான கருத்துக்கு பின்மொழிந்தார். அதற்காக இவர்கள் இருவரும் பேசி வைத்து பின்னூட்டம் இட்டார்கள் என்றெல்லாம் நான் குற்றம் சாட்ட மாட்டேன்.
அறிவியலில் விதிகளில் அல்லது அளவீட்டில் கறாராக இல்லாமல் கொஞ்சம் தொளதோளப்பாக இருந்தால் எதனையும் நீங்கள் கண்டறிய முடியாது என நினைக்கிறேன். அந்தக் கறார்தன்மைதான் முரட்டுத்தனம் என்று கருதி அதனை புறக்கணித்தால் இழப்பு எனக்கு இல்லை. மாறாக நான்தான் எனது விவாத்த்தின் மூலம் எல்லாவற்றையும் சரிசெய்கின்றேன் என்ற இருமாப்பும் எனக்கு இல்லை. அதேநேரத்தில் சரிசெய்தலுக்கான போராட்டத்தில் தொடர்ந்து இருப்பதும் அவசியமாகிறது.
யாரை அவமரியாதை செய்தேன். ருத்ரனையா… அப்படியானால் அவரே வந்து சொன்னால் நான் மாற்றிக் கொள்கிறேன். மற்றபடி மரியாதையாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் என்று ஒருவர் பேசுவார். கேட்பவர்கள் அதற்கு கொஞ்சம் கூட உணர்ச்சிவயப்படாமல் பதில் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கும் உங்களது நியாயம் வியப்பாக உள்ளது.
வினவு விரிவாக சுட்டிக் காட்டியது ஒரு மார்க்சிய பார்வையில் இருந்து என நிரூபித்தால் ஏற்றுக் கொள்கிறேன். மற்றபடி விரிவாக இருக்கிறது என்பதற்காக மகாபாரதம் உண்மையாகி விடாது.
ஒருவர் மக•இக என்று குறிப்பிட்டு சொல்லவில்லை, மாறாக எந்த முற்போக்கு அமைப்பிலும் இருக்க தகுதியற்றவர் என்பதை அவர் எதனைச் சட்டமாக்க கோருகிறார் எனபதிலிருந்து சொல் முடியும். இதனை நமது அமைப்பைச் சேர்ந்த பத்திரிகைகளில் பலமுறை விமர்சனமாக போலிகளுக்கு சொல்லி இருக்கிறோம். சனியும் மனிதர்தான் போலியும் மனிதர்தான் எனக் கருதுகிறேன். கொள்கைகளை நமக்கு வேண்டியவர்களுக்காக மாற்றிக் கொஃள்ள முடியாது எனக் கருதுகிறேன்.
மீண்டும் சொல்கிறேன்… அவர் சட்டமாக்க கோருகிறார். எதனை நிலபிரபுத்துவ பண்பாட்டை.. அதனைத்தான் நீங்கள் வலியுறுத்துகின்றீர்களா… ஆம் எனில் இதனை மிரட்டலாக கருதாமல் நேர்மறையில் படிக்கவும்… கொள்கைக்கு உகந்த இடத்தில் இருப்பதுதான் சாலச் சிறந்த்து என நான் கருதுகிறேன்.
தோழர் வினவு கூறியதை நான் ஏற்கிறேன், தோழர் மணி ஒரு தோழரிடம் எப்படி நடந்து கொள்ளக்கூடாதோ அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார். அமைப்பிற்கு அவர் புதிய தோழரா பழைய தோழரா என்கிற எந்த கவனமும் இல்லாமல் அவரை எதிர் நிலைக்கு தள்ளும் முறையில் செயல்பட்டுள்ளார். தோழருடைய இந்த நடைமுறையை நான் மிகவும் வண்மையாக கண்டிக்கிறேன். செய்த தவறை ஒப்புக்கொள்ள முடியாமல் தோழர் மணி அதை நியாயப்படுத்துவது சரி அன்று.
சிறு சிறு தவறுகளுக்காக எந்த தோழரையும் அமைப்பிலிருக்க தகுதியற்றவர் என்று முத்திரை குத்தி காயப்படுத்த எந்த தோழருக்கும் உரிமை இல்லை என்பதை அந்த பெயர் தெரியாத தோழருக்கும் உங்களுக்கும் சக தோழர் என்கிற வகையில் நான் சொல்லிக்கொள்கிறேன்.
வரம்பு மீறிய உங்கள் வார்த்தைகளுக்காக நீங்கள் சுயவிமர்சனம் ஏற்பது தான் சரியானது என்பது என் கருத்து.
அப்புறம் தோழர் மணி எனக்கு ரொம்ப காலமா ஒரு சந்தேகம், பின்னூட்டம் போடுகிற நீங்கள் தான் மணி என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும் என்கிற போது அப்புறம் எதற்காக நீங்கள் ஒவ்வொரு முறையும் நான் மணி நான் மணி என்று கூறிக்கொள்கிறீர்கள் ?
நான் மணி
நான் மணி என்பதுதான் நான் கடவுள் என்பது போன்ற தன்னகங்காரமாக வினவு தோழர்களுக்கு பட்டதற்கு நான் போறுப்பல்ல• நிற்க
கணிணியில் பின்னூட்டம் ஏற்றும்போது சில வேளைகளில் அனாமதேயம் என்ற பிரிவில் நமது கருத்து போய்விடுவதால் தொடர்ச்சியாக விவாதம் செய்ய முடியாமல் இருந்த்து. அதற்கு பதிலீடாக நான் ஆரம்ப காலத்தில் கடை பிடித்த முறை இது.. பழக்கதோஷத்தால் தொடர்கிறது. இதனை எனது தன்னகங்காரமாக கருதி கேள்வி கேட்டமைக்கு நன்றி…
தோழர் மணி,’மணியை அறியாத அமைப்பு தோழர்’ என்கிற அந்த தோழர் கூறியதில் பிழை இருக்கலாம், அப்படி இருந்தால் அதை சுட்டிக்காட்டுவது தான் சக தோழர்களான நமது வேலை ஏனென்றால் அவர் நமது தோழர். ஆனால் உங்களுடைய பின்னூட்டத்தை படித்த போது அதில் தோழமை உணர்வை கான முடியவில்லை மாறாக தாக்குதல் தொனியில் எழுதிருக்கிறீர்கள். நமது தோழர்களை இப்படி அனுகுவது சரியா ?
அவர் செய்த ஒரு பிழைக்காக அவரை அமைப்பில் இருக்க தகுதியற்றவர் என்றும் ஆர்.எஸ்.எஸ் சில் இணையலாம் என்றும் சொல்வது என்ன வகையான விமர்சனம் ?
நீங்கள் செய்யும் சில தவறுகளுக்காக உங்களையும் அப்படி சொல்லலாமா ? என்ன காரணம் என்று அறிய முடியவில்லை நீங்கள் சக தோழர்களையே கிண்டல் செய்கிறீர்கள் மூர்க்கமாக தாக்குகிறீர்கள். நீங்கள் சாலமன் பாப்பையா என்று சொன்னது எம்மைத்தான். இனி மேற்கொண்டு தவறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் தோழர்.
தோழர்கள் கூறியதை போல நீங்கள் பேசிய சில தவறான வார்த்தைகளுக்காக சுய விமர்சனம் ஏற்பது தான் சரி.
நான் மணி
ஒருவர் பிழை செய்யலாம். நானும் செய்யலாம். ஆனால் அப்பிழையை எல்லோரும் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார் சுட்டிக்காட்டிய பிறகும் என்றால் அது பிழையா இல்லை வலதுசாரிப் போக்கா.. அந்த நபர் அமைப்பில் இருக்கிறாரா அல்லது ஆர்.எஸ்.எஸ் சில் இருக்கிறாரா என நீங்கள்தான் சொல்ல வேண்டும்
சாலமன் பாப்பையா என்று உங்களை மாத்திரம் சொல்லவில்லை. ஏகலைவனையும்தான் குறிப்பிட்டேன். அவருக்கு அந்த வார்த்தை பிரச்சினையாக இல்லை. அதனுடைய உள்ளடக்கத்தில் தோழர் போராட்டத்தையும் விமர்சித்தேன். அவர்கள் பதிலுக்கு ஆப்பையா என்று குமுறவில்லை. வார்த்தைகளைப் பிடித்து தொங்க ஆரம்பித்தால் தொங்கிக் கொண்டே இருக்கலாம். மற்றபடி உங்களுக்கு அந்தப் பதிவில் என்னுடைய பின்னூட்டத்தில் பதில் சொல்லி உள்ளேன்.
தோழமையோடு சொல்ல வேண்டும் என்ற நல்லெண்ணம் உங்களுக்கு இருந்தால், பொருந்தவே முடியாத இடத்தில் வந்து மரியாதையாகப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்பவருக்கு உள்ள தோழமை உணர்வை நீங்கள் பரிசீலித்தீர்களா..
நான் மனிதர்களை கொள்கைகளின் அடிப்படையில்தான் தோழமை அல்லது உறவு என வரையறுத்து வாதிட நினைக்கிறேன். மாறாக அவர் தவறை சட்டமாக்க கோருகிறார். வினவும், ஒரு தோழரும் சுட்டிக் காட்டிய பிறகும் அதனையும் அதற்கு துணையாக ரயாகரன் மீதான விமர்சனத்தில் அதிக தவறுடன் நடந்து கொண்டதாக என்னை மதிப்பிடுகிறார். மீண்டும் சொல்கிறேன். ஒருவர் அமைப்பில் இருக்கலாம் அல்லது கூடாது என நான் வரையறுக்கவில்லை.
சாலமன் பாப்பையா எனச் சொன்னது கூட கொஞ்சம் குறைவான வரையறைதான். அவராவது இரண்டு பக்க பேச்சையும் செவிமடுக்கவாவது செய்வார். தவறைத் திருத்திக் கொள்வது என்றால் என்ன தவறு என விளக்கமளியுங்கள். மாறாக எப்போதுமே தவறை சுட்டிக் காட்டுபவர்கள்தான் இப்போதும் சுட்டிக் காட்ட வேண்டும் என முன்னர் விவாதித்த தோழர் அல்லவா தாங்கள் … எப்படி மறக்க முடியும்…
///ஒருவர் பிழை செய்யலாம். நானும் செய்யலாம். ஆனால் அப்பிழையை எல்லோரும் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார் ///
மேற்கண்ட வாக்கியத்தின் படி அந்த தோழர் எங்கு இவ்வாறு கூறி உள்ளார் என எடுத்துரைத்தால் உதவியாய் இருக்கும்..?
மணி, நீங்கள் மருத்துவரை பெயர் சொல்லி அழைத்தது தவறு இல்லை. நம்முடைய நாட்டில் பலரும், நம்மில் வயதில் பெரியவர்களை பெயர் சொல்லி அழைப்பதை மரியாதை குறைவானதாக கருதுவது இயல்பு. உங்களின் மற்ற விவாதங்களில், விவாதம் செய்யும் நபருக்கு புரியும்படியாக எழுத முயற்சிக்கும் போது, தோழர் ஒருவருக்கு உங்களின் நியாயத்தை எளிய முறையில் எடுத்துரைப்பது அவசியம். அதைவிடுத்து அவருக்கு ‘பட்டம்’ கொடுத்து அவருக்கு ‘நடத்தை சான்றிதல்’ வழங்க உங்களுக்கு கண்டிப்பாக உரிமை இல்லை. அதற்காக நீங்கள் கண்டிப்பாக சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து.
நான் மணி
நான் எனது பக்க நியாயம் என்று சொல்வது மார்க்சிய பண்பாட்டை தூக்கிப் பிடிப்பது. ஆனால் வினவும் சனி என்ற அந்த தோழரும் ஆதரித்து நிற்பது அதற்கு எதிரான பண்பாட்டை. மார்க்சியத்தின் பெயரால் மார்க்சியத்திற்கு எதிராக நடக்கும் இந்த தவறுக்கு நியாயம் கற்பிக்க அவர்கள்தான் முயல வேண்டும். மாறாக நீங்கள் பேசுகின்ற முறை வேடிக்கையாக உள்ளது.
மருத்துவர் ருத்ரனை பெயர் சொல்லி அழைப்பது தவறு அல்ல, ஆனால் மணியை அறியாத அமைப்பு தோழர் என்கிற அந்த தோழர் மீதான மணியின் அணுகுமுறை தவறானது.
மார்க்சியம் என்றால் கறாராக விமர்சிப்பது, தவறு தலையெடுத்தாலே அடிப்பது என்பதாக தோழர் புரிந்து கொண்டு மற்ற தோழர்களை அணுகுவதாக தெரிகிறது. விமர்சனம் செய்வது சரி தான் ஆனால் அதை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்று செய்தால் அதற்கு பெயர் விமர்சனம் அல்ல தவருகளை திருத்தும் வடிவம் விமர்சனத்திற்கு இருக்க வேண்டும் அது தோழர் மணியின் விமர்சனத்தில் இல்லை.
அந்த தோழரும் புரட்சிக்காக தான் அமைப்பில் இருக்கிறார்.அவரை நாம் மதிக்க வேண்டும். அவருக்கு புரிவதை போல தவறுகளை எடுத்து சொல்ல வேண்டும். தோழர்கள் அனைவரும் ஒரே புரிதலிலோ ஒரே விதமாகவோ இருக்க மாட்டார்கள் என்பதை தோழர் புரிந்து கொண்டு அணுக வேண்டும்.
பொதுவில் தோழர் மணி பதிலுக்கு பதில், பதிலுக்கு பதில் என்று நமது தோழர்களோடு கூட போட்டி போடுகிறார். இதோ மேலே சர்வதேசவாதி தோழருக்கு பதில் என்கிற பெயரில் உங்களை சாலமன் பாப்பையா என்று சொன்னது கூட குறைவு என்கிறார்.
சர்வதேசவாதிகளும் இதற்கு பதில் சொல்கிறேன் என்று சொல்லி இந்த விவாதத்தை இன்னொரு பக்கம் திசை மாற்றி விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தனது தவறுகள் அனைத்தையும் மறைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அதற்கு நியாயம் கற்பிக்கும் விதமாகவும் தான் சொல்வது தான் மார்க்சிய நடைமுறை என்கிற ரீதியிலும் நடந்து கொள்ளும் தோழர் மணியின் நடைமுறையையை இப்படியே விமர்சிக்காமல் அது தான் சரியானது அதாவது தான் சொல்வது தான் சரியானது நிலைக்கு வளரும் எனவே நான் அவருடைய விளக்கங்களை ஏற்கவில்லை. தோழர்கள் அனைவரும் கூறியுள்ளது போல அவர் தனது தவறுக்கு சுய விமர்சனம் ஏற்க முன் வர வேண்டும்.
அந்த தோழர் முதல் வரியில் சற்று கடுமையாக உங்களிடம் பெயரை சொல்லாதீர்கள் என கூறி உள்ளார் ஆனால் அதே சமயம் அதற்க்கு பிறகு அவர் தன்மையான முறையிலேயே உங்களிடம் விளக்குகிறார். வினவோ அல்லது அமைப்பில் கள பணியாற்றும் தோழர்களோ இப்படி அறியாமையில் தவறு இளைத்தவர்களை எல்லாம் ஒன்றுக்கும் தகுதி அற்றவர்கள் என கூறி ஒதுக்கினால் வினவு தளமும் இயங்காது, அமைப்பும் மக்களுக்கு ஆனதாகவும் இருக்காது.
இந்த விவாதம் தேவை இல்லாமல் நீண்டு வருவதால், இதனை விரைவில் முடிக்க கோருகிறேன்.
this is no more about how to call me. for everybody’s information i can be called without the prefix.
the discussion is useful to us, but maybe fodder for some cheap people to graze in glee.,
நான் மணி
உங்கள் மீதான விமர்சனத்தை வைத்தால் அதனை அமைப்பின் மீதான விமர்சனமாக மாற்றத் தெரிந்த உங்களுக்கு அமைப்பு மீது ரயாகரன் வைத்த விமர்சனம் கண்ணிற்கு தெரியாமல் போனது எப்படி…
ரயாகரனை என்ன சொன்னதுனால உங்க மனம் புண்பட்டது எனச் சொன்னால் உதவியாக இருக்கும்…
விவாத்த்தை கலக்குவது என்ற பெயரில் நான் இறங்கியது என்று எப்படி சொல்கின்றீர்கள்.. ஒரு விசயத்தை விவாதிக்கும் பொதே வினவு இதில் தலையிட வேண்டும் என அழைப்பது ஏன்… நான் ஒன்றும் உங்களைத் திட்டவில்லை, அவதுஊறு செய்யவில்லை.. அப்புறம் எதற்காக இத்தகைய அறைகேவல்கள்..
அமைப்பில் இருந்து நீக்க பரிந்துரையுங்க்ள் என்றெல்லாம் பேசுவது ஒரு தோழரிடம் வெளிப்படும் பண்பல்ல என நினைக்கிறேன். விரிவாக பேசுவது என்பதே அந்த அபத்த வரிகளுக்கு தரப்படும் மரியாதை ஆகி விடும் என்பதால் தவிர்க்கிறேன்.
வினவின் நேர்மையை கேள்விகேட்கும் நேர்மையற்ற RV அவர்களே எங்கே போனிர்கள். தன் முதுகு சொரியப்படவேண்டும் என்பதற்காக வருவோர் போவோரெல்லார் முதுகையும் சொரிந்து விடும் வலைப்பதிவர்கள் மத்தியில்.. தனது அமைப்பு தோழர் என்ற போதிலும் துணிவுடன் விமரிசனம் செய்யும் https://www.vinavu.com/2009/11/06/caste-killing/#comment-12179 வினவின் நேர்மையெங்கே, பிறப்பில் ஏற்றத்தாழ்வை பார்க்கும், இனபெருமை பேசும் டோண்டு ராகவனை விமரிசனம் செய்யாத நீங்கள் எங்கே. சொந்த சாதி பற்றில் மூழ்கியிருக்கும் உங்களுடன் இத்துனை நாளாக இவ்வளவு பேர் ஏன் விவாதித்தனர் என்று எனக்கு சத்தியமாக புரியவில்லை
நான் மணி
ஒரு பிற்போக்கு பண்பாட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்கின்றவர் தவறை இருவர் சுட்டிக்காட்டிய பிறகும் அதனை மாற்றிக் கொள்ளாமல் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குமுறுகிறார். அவருக்கு ஆதரவாக வினவு களமிறங்கி உள்ளது. மார்க்சிய பண்பாடு அல்லாத ஒன்றை தோழர்கள் தூக்கிப் பிடிக்கின்றார்கள் என்பதற்காக ஆதரித்து பலரையும் எனக்கு புத்திமதி சொல்ல ஏவுகின்றார்கள். இந்த குறுங்குழுவாதப் போக்கிற்கு, பிற்போக்கிற்கு எதிராக தோழர்கள் போராடுவார்கள் என நம்புகிறேன்.
அல்லது போராடாமல் இருந்துவிட்டு பிறகு எப்போதாவது நான் உணர்ச்சிவசப்பட்டு சாலமன் பாப்பையா என்று சொன்னால் மாத்திரம் கண்டுபிடிக்க குற்றம் உங்களுக்கு கிட்டுமானால் நான் என்ன செய்ய
உள்ளடக்கத்தை விட வடிவம் முக்கியம் என்ற புரிதல் எனக்கு இல்லாத்தால்தான் என்னால் உங்களோடு ஒன்றுபட முடியவில்லையோ…
நான் மணி
ஒரு சரியான விசயத்திற்காக போராடாமல் தவறான சட்டத்திற்காக ஒரு தோழரின் இணையதளம் சொல்லி விட்டது என்பதற்காக தர்க்கரீதியில் அமையாத விவாதங்களை தோழர்கள் கட்டமைக்கிறார்கள்.
நேரடியாக சொல்லிவிடுங்கள். அவர் சொன்னதை சட்டமாக்க சொல்லியதை நடைமுறைப்படுத்தலாமா.. வேண்டாமா..
சர்வதேசியவாதிகளுக்கு நான் சொன்னது சரிதான். நீங்களும் அந்த நிலைப்பாடு எடுப்பதால் உங்களையும் அப்படியே சொல்கிறேன். இதனால் உங்கள் மனம் புண்படும் என்றால் ஒரு பண்பாட்டைப் புரிந்துகொள்ளும் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் முன்னேறிய பிரிவு இவ்வளவு பின்தங்கி இருக்குமென்றால் அதனை ஏய்ப்பதற்கு வெளியில் இருந்து வேறு ஆள் வர வேண்டுமா என்ன
ஒரு நிமிடம்.. கொஞ்சம் உண்மையை நேர்மையாக பேசுங்கள்… என்ன தவறு என்னிடம் வெளிப்பட்டது அதனை நான் மறைத்து உள்ளேன்.
இந்த விவாத்த்தை இந்த திசையில் செலுத்த காரணமான தோழரை வினவு கண்டிக்காத்தால் நீங்களும் கண்டிக்க மறுக்கின்றீர்கள்.. இது என்ன வகையான நடைமுறை என நான் சொல்லித்தான் நீங்கள் தெரிய வேண்டுமா…
நான் மணி
யாரையும் அல்லது அமைப்பையும் மிரட்டுவதற்காக இதனை எழுதவில்லை.
ஒரு பார்ப்பனிய பண்பாட்டை உயர்த்தி பிடிப்பவருக்கு ஆதரவாக அவரை விமர்சித்த்து எனக் கூறி அதற்கு சீர்குலைவுவாதம், குட்டிமுதாலாளித்துவ அராஜகவாதம் என்றெல்லாம் பெயர் சூட்டி இருக்கும் தோழர்களை தோழர்களாகப் பெற்ற இழிந்த சூழலில் வாழ நேர்ந்த்தற்காக வருந்துகிறேன்.
சொந்த வாழ்க்கையின் வரம்பிடல்களாலும், இதனை விடவும் சிறந்த அமைப்புகள் எதுவும் இல்லாத்தாலும் இந்த இடத்தில் இருந்தாவது சமூக மாற்றத்திற்கு பங்களிக்கலாம் என்ற எதார்த்த்த்தை உள்வாங்கி இந்த விவாத்த்தில் இருந்து விலகுகிறேன்.
நான் மணி
விவாத்த்தில் இருந்து விலகி விட்டாலும், பகத் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கடமையால் பேசுகிறேன்.
நீங்கள் குறிப்பிடுவது நான் எழுதியது. அவர் கொருவதன் உள்ளடக்கம் என்ன அது சரியானதா, பிழையானதா.. பிழையானது எனில் அதனை அவர் தூக்கிப் பிடிக்கின்றாரே அது அமைப்பு முழுவதும் பின்பற்ற வேண்டியதா இல்லையா… இந்த உள்ளடக்கம்தானே அவரது பின்னூட்டம்.
அற்ப உணர்வுகளும், நிலபிரபுத்துவ பண்பாடும் பார்ப்பனியத்தின் உதவியால் நம்மிடையே விரவித்தான் கிடக்கிறது. இவற்றில் சிலவற்றைத்தான் நம்மாலே கண்டறிய முடிகிறது. போராடுகிறோம். சில்ர் வெற்றி பெருகிறோம். அது தனிக்கதை.. மாறாக பார்ப்பனிய மரியாதையை தோழர்கள் பின்பற்றிதான் ருத்ரனுடன் பேச வேண்டும் என்று கூறுவதும், அதற்கு அனுபவமாக முன்னர் ரயாகரனுடன் நடந்த விவாத்த்தை முடிச்சு போடுவதும் என்ன வகை வாதம் என எனக்கு தெரியவில்லை… இரண்டும் ஒப்பிடத்தக்கதா…
ஆர்.வி உடனான விவாதம் நடந்தபோது ருத்ரன் எழுதிய ஒரு பின்னூட்டத்தில் பார்ப்பனர்களை பன்றியுடன் அவர் ஒப்பிட்டதை நான் விமர்சிக்க முனைந்தபோது நடந்த உரையாடலின் கிளைக்கதையாக ஒரு கதையை தோழர் மணியை அறியாத அமைப்புத் தோழர் என்ற சனி என்ற தோழர் ஆரம்பித்துள்ளார். இதன் அவசியம் பற்றி இதற்கு முந்தைய கதையான ருத்ரனுடான விவாத்த்தில் அவர் இது மைய விவாதப்பொருளை திசைதிருப்பும் எனக் கூறி விலகிக் கொண்டார். அவருடைய புரிதல் வினவுக்கு இல்லாத்து மையமான பொருள் பற்றிய அவர்களது அக்கறைக்கு நல்ல எடுத்துக்காட்டு. மாறாக தனிப்பட்ட விரோதி போல முன்முடிவுகளுடன் வினவு அணுகியதையோ, பின்னர் பின்னூட்டம் இடும் தோழர்கள் இருதரப்பையும் உற்றுநோக்காமல் வடிவப்பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும் அயற்சியாக இருந்த்து.
சொந்த வாழ்வின் ஊசலாட்டங்களும் வேறு அமைப்புகளும் சரியானதாக இல்லாத்தாலும் இந்த இடத்தில் நீடித்தாவது வாழ்கைகையை பொருள் உள்ளதாக மாற்றலாம என்பதற்காக அமைதி காக்கிறேன். மற்றபடி இவ்விவாதம் இத்துடன் முடிந்தாலே போதும் என்றும், பிறிதொரு காலத்தில் கூட விவாதிக்க பயத்தையும் உண்டுபண்ணி உள்ளது. இதற்கும் சுயவிமர்சனம் நான்தான் ஏற்க வேண்டும் எனச் சொன்னால் எனக்கும் அதனை விட வேறு வழியில்லைதானே
மணி உங்கள் சொந்த வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றுவதற்கு நீங்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். வடிவமா உள்ளடக்கமா என விவாதித்தால் உள்ளடக்கம் தான் முக்கியம் என்ற முடிவுக்கு வர முடியும். கேவலமான வடிவமா, நல்ல வடிவமா என்று விவாதித்தால்?
உங்கள் மீதான விமரிசனம் நீங்கள் ‘அவர் எந்த அமைப்பிலும் இருக்க தகுதியில்லை ‘என்று சொன்னது அதுவும் ஒரு ‘அற்பமான’ நிலப்பிரபுத்துவ விழுமியங்களுக்காக. உங்கள் மீது வைக்கப்பட்ட விமரிசனத்தை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்?
நீங்கள் எந்த தவறை செய்தீர்கள் என்று தோழர்களிருவர் கருதினார்களோ அதை மேலும் வன்மத்துடன் மீண்டும் செய்தீர்கள் அதாவது சம்பந்தப்பட்ட தோழர்களை மன வருத்தம் அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மேலும் கடுமையாக அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருக்கலாம் என்று சென்னீர்கள்.
அதுமட்டுமல்லாது அப்படி நீங்கள் கருதுவது தவறு என்று தோழர்கள் விமரிசனம் செய்தால் முதலில் அவரை விமர்சனம் செய்யுங்கள் என்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறீர்க்ள். அப்படி செய்யாது போனால் நீங்களும் அப்படித்தான் என்று எதிர்விமரிசனம் செய்கிறீர்கள்,இதில் என்ன கம்யூனிச வெங்காயம் இருக்கிறது? இல்லை இன்னாரை முதலில் இதர்க்காக முதலில் விமர்சிக்க வேண்டும் பிறகுதான் இவரை….. என்று லெனின் உங்களுக்கு ஒரு கைடு கொடுத்திருக்கிறாரா?
யாரும் யாரையும் விமர்சனத்துக்கு உட்படுத்தவேண்டும், விமர்சனத்துக்கு உட்படுபவர் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ‘பணிவாக’ தன்னுடைய நிலையை விளக்க வேண்டும், அவர் விமர்சனத்தை ஏற்காவிட்டாலும் அதுதான் விதி. இப்படி முறையாக நடப்பது என்பது புரட்சியை 500 வருடத்துக்கு தாமதமாக்கினாலும் பிரச்சனையில்லை உசிலம்பட்டி விவாசாயி செய்யப்போகும் புரட்சிக்கு ஆர்பாட்டமான வார்த்தைகள் தேவையில்லை. எளிய உண்மைகளே போதும்.
கம்யூனிஸ்டு ஆவது எப்படியென்ற நூலை என்பதை உங்கள் கடுமையான வாழ்க்கை சூழலுக்குள் மீண்டும் மீண்டும் படிக்க பரிந்துரைக்கிறேன்
மற்றபடி தோழர் சனி என்கிற மணியை அறியாத தோழரே
நீங்கள் இரயாகரன் கட்டுரையில் தோழர் மணியின் மீது கோபம் கொண்டு அதை மனதில் வைத்தே இங்கேயும் விமர்சனம் செய்திருக்கிறீர்கள். இது தவறு. உங்கள் விமரிசனங்கள் எதுவாகினும் அதை அப்போதே பேசி தீர்ப்பது நல்லது இல்லையா அதே பிரச்சனை வேறொரு சமயத்தில் வெளிபட்டால் விவாதிக்கலாம் இல்லை மறந்துவிடலாம். இங்கே அவர் ருத்ரனை மரியாதை குறைவாக அழைத்ததாக நான் கருதவில்லை மருத்துவரும் கருதவில்லை. உங்கள் விமரிசனத்தில் மணி மீது தனிப்பட்ட கோபம் உங்களுக்கு இருப்பது வெளிப்படுகிறது. இது தேவையற்றது, தவறானது இது முன்முடிவுகளுக்கு இட்டுச்செல்லும். இதை பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் சமீப காலமாக போலி கம்யூனிஸ்டுகளிடமும் மதவாதிகளிடமும் வினவு தளத்தில் தோழர் மணி சளைக்காம் போராடி வருகிறார் என்பதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்
தோழமையுடன்
எது கேவலமான வடிவம் எது நல்ல வடிவம். பிற்போக்கு மதிப்பீட்டை சட்டமாக்க கொருவது வடிவமா.. அல்லது வார்த்தைகள் வடிவமா..
அற்பமான நிலபிரபுத்துவ விழுமியத்தை ஒரு அமைப்பு தோழர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார். கட்டாயம் பின்பற்றுவது எனக் கொருவதுதான் பிரச்சினை.. அதற்கு பெயர் விமர்சனம் இல்லை.. பின்னோக்கி இழுப்பது..
பின்னுக்கு இழுப்பது என்றால் ஆர் எஸ் எஸ் தான் இந்தியாவில் உதாரணம் காட்ட இருக்கறது என நினைக்கறேன். வேறு எதாவது தெரிந்தால் சொல்லுங்கள். பிற்போக்குக்கு எதிராக பேசுங்கள் என்றால் அதற்கு உங்களது இடத்தில் எதிர் விமர்சனம் என்று பொருளா.. ஆச்சர்யமாக உள்ளதே..
பிற்போக்குக்கு எதிராக போராடுவதற்கு லெனின் மாத்தரமல்ல எல்லா ஆசான்களுமே கைடு அல்ல புத்தகம் தந்து உள்ளார்கள். கைடு போட்டால் அதற்குள் மார்க்சியம் போல பேசுபவர்கள் வந்து விடுவார்களே..
விமர்சனமாக வந்தால் அது தவறானதாக இருந்தாலும் பணிவுடன் கேட்க தயார். ஆனால் என்ன நடக்கிறது என்பதை சரியாக அவதானிக்காமல் விமர்சனம் செய்தால் அதுதான் முறையாக நடப்பதா.. குட்டிமுதலாளித்துவ அராஜகவாதம், கலைப்புவாதம் என்று வினவு பேசியதை எப்படி நியாயப்படுத்தப் போகின்றீர்கள். அதற்கு என்னுடைய எழுத்தில் எதாவது ஆதாரம் இதுவரை காட்டுங்கள் பார்க்கலாம•..
உசிலம்பட்டி விவசாயி பண்ணிணாலும், உதவாக்கரை ஐடி தொழிலாளி பண்ணினாலும் புரட்சிக்கு மார்க்சியம் தேவைதான். அதன் மொழிகள் கடினமாக இருக்கிறது என்பதற்கா நீட்சேயிடம் கடன் வாங்கி புரட்சி செய்ய முடியாது எனவும் கருதுகிறேன். பிற்போக்கு பண்பாட்டை அமைப்பு தோழர் பின்பற்ற வேண்டும் எனச் சொல்பவர் ஐடி பார்க்கில் இருந்தால் கூட புரட்சி செய்ய முடியாது. புரட்சியைப் போல ஒன்றைச் செய்யலாம்.
எல்லாவற்றுக்கும் மேல் தளத்தை நடத்துபவர்கள் முதலில் விவாத்த்தை திசைதிருப்பியவரை கண்டித்து இருந்தால் இந்தளவுக்கு விவாதம் நடந்தும் இருக்காது. பெயரையே மணியை அறியாத அமைப்பு தோழர் என்று வைத்துக்கொண்டு வரும் ஒருவரை தோழராக கருத வேண்டும் என்ற புரிதல் எனக்கும் ஏற்பட்டிருக்கும்.
சொந்த வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்ற முயற்சிப்பதை நீங்கள் கிண்டலாக கருதலாம். ஆனால் அது ஒரு கையறுநிலைதான்.
தோழர் மணி மற்றும் சனி அவர்களுக்கு செவ்வணக்கம். தோழர் சனி என்கிற மணியை அறியாத தோழரே நீங்கள் இரயாகரன் கட்டுரையில் தோழர் மணியின் மீது கோபம் கொண்டு அதை மனதில் வைத்தே இங்கேயும் விமர்சனம் செய்திருக்கிறீர்கள். உங்கள் விமரிசனத்தில் மணி மீதான தனிப்பட்ட கோபம் உங்களுக்கு இருப்பது வெளிப்படுகிறது. இது தேவையற்றது. மருத்துவரை பெயரை சொல்லி அழைத்ததில் தவறில்லை. இருந்தபோதிலும் தோழர் மணி அவர்கள், அதை சுட்டிகாட்டிய தோழரை சற்று கடுமையான வார்த்தைகளால் தாக்கிவிட்டதாகவே உணர்கின்றேன். போலிகம்யூனிஸ்டுகளிடமும் பார்ப்பனர்கர்களிடமும் நிதானமாக விவாதம் செய்யும் நீங்கள் சக தோழர்களிடம் ஆவேசப்படுவதும் நையான்டிசெய்வதும் ஏனோ? இங்கு மறுமொழியிடும் அனைத்து தோழர்களும் மார்க்சியத்தை கரைத்துகுடித்தவர்கள் அல்ல. பிழையிருக்கலாம். நீங்கள் அனுபவமான தோழரானால் அதை புரியும்படி திருத்துவதுதான் சிறந்தது. வினவில் உங்கள் மீதான விமர்சனத்திற்கு நீங்கள் அமைப்பை முச்சந்திற்கு இழுப்பது தவறானது. வினவு மகஇக வின் அதிகரபூர்வமான தளமல்ல என்பதை முன்பே பலமுறை கூறியிருக்கிறார்கள்.
//எனக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளீர்கள், நன்றி. அமைப்பிலிருந்து நானாக வெளியேற வேண்டுமா அல்லது நீங்கள் அமைப்பிடம் பரின்ம்துரை செய்கிறீர்களா ? எந்த அமைப்புகளிலும் இருக்கத்தகுதியற்ற என்னைப் போன்றவர்களை ம.க.இ.க வில் முட்டாள்தனமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே தயவு செய்து உங்கள் கருத்தை அமைப்பிற்கு சொல்லி என்னைப்போன்றவர்கள் எந்த அமைப்பிலும் இருக்கத்தகுதியற்றவர்கள் எனவே இவரைப்போன்றவர்களை அமைப்பிலிருந்து உடனடியாக வெளியேற்றுங்கள் என்று எனக்காக அமைப்பிடம் பரிந்துரை செய்யுமாரு உங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.//
அமைப்பை முச்சந்திக்கு இந்த இடத்தில் அவர் இழுத்துள்ளார். பதில் சொல்லுங்கள். நான் எந்த இடத்திலும் அமைப்புதான் வினவு என்று குறிப்பிடவில்லை. பின்னூட்டமிடும் தோழர்களைத்தான் விமர்சனம் செய்தேன்.
யாரையும் நையாண்டி செய்யவில்லை. மாறாக என்னை விமர்சனம் என்ற பெயரில் ஒருவர் இந்த மாதிரி முரட்டுத்தனமானவர் வேண்டாம் என்கிறார். இனிமேலாவது தவறுகளை திருத்துங்கள் என்கிறார் ஒருவர். ஆதாரமில்லாமல் நான் சொல்பேச்சு கேட்க மாட்டேன் என்கிறார் வினவு.. இதைப்பற்றியெல்லாம் உங்களுக்கு சொல்வதற்கு ஒன்றுமே இல்லையா.. அல்லது தவறை சில தோழர்களுக்கு மாத்திரம்தான் சுட்டிக்காட்ட வேண்டும் எனக் கொள்கை வைத்திருக்கின்றீர்களா… இதில் நையாண்டி இல்லை என நினைக்கிறேன். எப்போதும் அதனை நான் முதலில் செய்வது இல்லை. விவாதத்தின் போக்கில் நிகழ்ந்திருக்கலாம• ஆனால் நையாண்டி ஆக்ரோசம் என்ற வடிவம் முக்கியமா அல்லது பேசிக் கொண்டிருக்கும் விசயம் முக்கியமா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
போலிகளிடமும், பார்ப்பனர்களிடமும் ஏன் மக்களிடமும் கூட நான் ஏன் நிதானமாக பேச முடிகிறது என்றால் அவர்களுக்கு தெரிந்த உலகத்தில் இருந்து தெரியாத உலகத்தை நாம் பிரித்து காட்ட வேண்டியிருக்கிறது. பேசுகின்ற தோழர்களுக்கு தெரிந்த உலகத்தை மீண்டும் ஒருமுறை இடித்துதான் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இடித்தது தவறு என்பது உங்களது நிலைப்பாடு. ஆனால் இத்தகைய அவல சூழலுக்கு வித்திட்ட உங்களது பொறுப்பின்மைக்கு என்ன சொல்வது.
நான் வயதில் பெரியவனோ அல்லது அனுபவசாலியோ அல்ல• ஆனால் எனக்கு தெரிந்த நியாயத்திற்காக போராடுகிறேன். நக்கல் நையாண்டி ஆக்ரோசம் இவைதான் அந்த தோழரை முதலில் எனக்கு உண்மையில் ஆர்எஸ்எஸ் காரர் போலவே காட்டியது. பொதுவில் நான் அவர்களிடமும் மென்மையாக பேச முயற்சித்ததால்தான் மென்மையான மொழியில் பேசினேன். உதாரணமாக பார்ப்பனியத்திற்கு எதிரான உரையாடலின் போது அவர் உள்ளே நுழைந்து தன் பெயரை மணியை அறியாத அமைப்பு தோழர் என்று வைக்கிறார். இந்த பெயரிலேயே ஒரு தோழமை உணர்வற்ற நக்கலும் நையாண்டியும் உள்ளது. இது அமைப்பு என்றெல்லாம் இழுத்த நக்கலும் நையாண்டி எனப் புரிந்து கொள்ளாதீர்கள். அப்புறம் மரியாதையா பேசுன்னு இருமுறை சொல்கிறார். ஒரு தோழர் அதனை சுட்டிக்காட்டுகிறார் அதன் பிறகுதான் கடந்த காலம் மற்றும் அமைப்பு பற்றிய பின்னூட்டங்களை இடுகிறார். இப்போதும் அவர் தோழர் என சில தோழர்கள் சொல்லித்தான் புரிந்துகொள்ள முடிகிறதே தவிர அவர் பேசிய பேச்சில் அப்படி எதுவும் வெளிப்படவில்லை.
மணி,
இழிந்த பண்புடையவர், எந்த அமைப்பிலும் இருக்க தகுதியற்றவர் போன்ற அரசியலற்ற / அடிப்படையற்ற விமர்சனங்களால் விவாதத்தை அராஜகமாக கொண்டு போனது உங்களுடைய தவறு. அதற்கு சுயவிமர்சனம் ஏற்பதுதான் சரியானது. முதலில் அதை செய்யுங்கள். அதுதான்
இந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டு வர உதவும். சரி தவறுகளை அடையாளமும் காட்டும்.
பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்
நான் மணி
அடிப்படையற்ற அரசியல் முத்திரைகளை விடவும் சரியாகத்தான் சொல்லி உள்ளேன். அவரது இழிந்த பண்பு என்பது ஒரு கட்டளை, அப்புறம் அந்த கட்ட்டளைக்கான வரையறை, அப்புறம் விவாதிக்க விரும்பவில்லை என்று சொல்வது இந்தப் பண்பை பார்ப்பனீயம் காலம் காலமாக சூத்திர்ர்கள் மீது நடத்தி வருகிறது. இந்த அடிப்படையில்தான் அவரது வலதுசாரி முகத்தை அம்பலப்படுத்தும் விதமாக ஆர்எஸ்எஸ் என்று சொன்னேன். அதனுடைய அரசியலும் அதுதான்.
தன்னுடைய அராஜகமான முன்முடிவுகளுடன் கூடிய இதுவரையில் ஆதாரம் காட்ட முடியாத முத்திரைகளின் மூலம் வினவு நடந்து கொண்டது அராஜகமா மார்க்சியமா என்று சொல்ல முடியுமா…
பிற்போக்கான கருத்தை பின்பற்றுமாறு சொன்னவரை அதாவது அந்த அரசியலை விமர்சிப்பதை விட அத்தன்மையை சரியாகச் சொன்னதற்காக ஒருவரை அராஜகவாதி என முத்திரை குத்துவது எவ்வித்த்தில் நியாயம் என்ற உங்களால் சொல்ல முடியுமா… ஒருவேளை என்னுடைய நிலையில் நீங்கள் இருந்தால் இந்த இடத்தில் இதற்காக சுயவிமர்சனம் ஏற்றால் என்ன சொல்வீர்கள் என ஒருமுறை சொல்லுங்கள் பார்க்கலாம்.
இன்னும் பல தோழர்கள் எனக்கு பின்னூட்டம் இட்டுள்ளார்கள். அக்கருத்துக்கள் எல்லாம் உங்களுக்கு உடன்பாடா… அதில் நிற்பது அராஜகவாதம் இல்லையா… எனக்கும் இந்த விவாதம் முடியட்டுமே என்றுதான் இருக்கிறது. ஆனால் இதில் ஏற்கெனவே பின்னூட்டமிட்ட தோழர் சித்தார்த கூட ரயாவுடனான விவாத்த்தின் இறுதியில் வந்து வடிவத்தை குறை சொன்னவர். பின்னூடமிடும் பல தோழர்களிடம் நிகழும் இந்த தவறை சுட்டிக்காட்ட வேண்டியது உங்களது கடைமை. ரயாவுடனான விவாத்த்தில் உங்களிடம் இருந்த சரியான அணுகுமுறை இங்கு எப்படி தொலைந்த்து என புரியவில்லை.
லெனின் அவர்களே,
மீண்டும் நான் அதே கேள்வியை கேட்க வேண்டியது இருக்கிறது. நீங்கள் சொல்லியதை நானே சொல்லி விட்டேனே. அவர்கள் வைக்கும் தீர்வை பின்பற்றலாமா? யாருடையதை பின்பற்றுவது என்பதை விளக்கச் சொல்லிதான் கேட்டேன். நீங்கள் நான் சொன்னதையே இன்னும் விளக்கமாக கூறி இருக்கிறீர்கள்.
வேண்டுமானாலும் நீங்கள் எழுதியதை இப்படி புரிந்துகொள்ளலாமா. தாழ்த்தப்பட்டவர்கள் புத்தமதத்திற்கு மாறலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா. தாழ்த்தப்பட்டவர்கள் அலலாதவர்கள் முஸ்லீம் மதத்துக்கோ அதைவிட மேலானது என்று இருந்தால் அதற்கோ மாறலாம் என்றும் கொள்ளலாமா?
//That religion as a code of social morality, must recognise the fundamental tenets of Liberty, Equality and Fraternity. Unless a religion recognises these three fundamental principles of social life, religion will be doomed.//
கடவுள் தத்துவம் எப்போது மதமாக மாறுகிறது? ஒடுக்கும் அரசு அதை தத்து எடுத்துக்கொள்ளும்போது, அல்லது அந்தத் தத்துவம் அரசுக்கு சுரண்டலுக்கு ஒரு சித்தாந்தக் கருவியாக பயன்படும்போது. மதம் நிறுவனமயமாகிறது. அரசுக்கு ஒரு சிந்தனா ஒடுக்குமுறைக்கு கருவியாகும் போது நிறுவனமயமாகிறது. அங்கு இந்த் விடுதலை, சுதந்திரம், சமத்துவம் என்பதெல்லாம் சாத்தியமில்லை. அந்த சமத்துவம் என்பது ஒடுக்குபவருக்கு இடையிலான சமத்துவம், ஒடுக்கப்படுபவர்களுக்கு இடையிலான சமத்துவம். ஒடுக்குபவனுக்கும், ஒடுக்கப்படுபவனுக்கும் இடையிலான சமத்துவம் இல்லை. இதை புரிந்துகொள்ளவில்லை என்றால் மதமே இல்லை. மற்றதெல்லாம் நம் ஆசையே.
வர்க்க சுரண்டல் இருக்கும்வரை மதம் இருந்தே தீரும். இதை விடுத்து அதில் சீர்த்திருத்தம் கோரலாமே தவிர, முழு சமத்துவத்தை கோர முடியாது. இதனடிப்படையிலேயே கூறுகிறேன். நீங்கள் எந்த வழியை தேர்ந்தெடுப்பது என்று வினவுங்கள் கேட்டு?
நான் மணி என்று நீங்கள் எழுதவில்லை, குதிரையும் இல்லை இருந்தாலும் இது நீங்களாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.
இன்று நீங்கள் எழுதியது….
1) அற்பமான நிலபிரபுத்துவ விழுமியத்தை ஒரு அமைப்பு தோழர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார். ” கட்டாயம் பின்பற்றுவது எனக் கோருருவதுதான்
பிரச்சினை.. அதற்கு பெயர் விமர்சனம் இல்லை.. பின்னோக்கி இழுப்பது..
நேற்றைய அவரது பின்னூட்டத்திலிருந்து
”””’மணி,
நீங்கள் முதலில் மறியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள். மருத்துவர் ருத்ரன் வயதிலும்,அனுபவத்திலும் நம்மையெல்லாம் விட மூத்த தோழர். நீங்கள்
எப்படியும் அவரை விட இளையவராகவே இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனவே மரியாதையின்றி பெயர் சொல்லி அழைப்பதை நிறுத்துங்கள்.
இது என்னுடைய கருத்து, இதில் உங்களுக்கு மாற்றுகருத்து இருப்பின் அதை நான் இங்கு விவாதிக்கப்போவதில்லை. அது மைய்யமான விவாதத்திலிருந்து
அனைவரையும் திசசை திருப்பும். எனவே நீங்கள் இதை பரிசீலிக்காவிட்டால் மேற்கொண்டு தொடரலாம்.”””
இதில் அவர் கட்டாயமாக பின்பற்ற எங்கேயும் சொல்லவில்லை என்பதை தமிழ்அறிந்த அனைவருமே புரிந்தகொள்ளமுடியும், இது தனது கருத்து என்ற
அளவில்தான் எழுதியிருக்கிறார். மையாமான விவாதத்திலிருந்து திசை திரும்பக்கூடாது என்று அவர் கருதியதால் அவர் விவாதிக்க போவிதில்லை என்றும்
சொல்லிவிட்டார். உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லையென்றால் நீங்களும் அவ்வாறே சொல்லியிருக்கலாம் ஆனால்…..
நேற்றைய உங்களது பின்னூட்டத்திலிருந்து – ஒவ்வொன்றின் கீழும் எனது கருத்துகள்
””””””””””’
1) வயதிலும் அனுபவத்திலும் பார்ப்பனியம் கம்யூனிசத்தை விட மூத்த்து என்பதற்காக மரியாதை செய்வீர்களா..இப்படி ஒப்பிட்டது அதிகம்தான். ஆனாலும்
உங்களுக்கு புரியவைக்க எனக்கு வேறுவழி தெரியவில்லை.
அவர் எழுதியிருக்கும் context க்கும் இதற்கும் என்ன சம்பந்தம். இதில் பார்பனியம் v/s கம்யூனிசம் என்ற விதத்தில் பார்த்தால் ருத்ரன்v/s நீங்கள் என்றல்லவா
வரவேண்டும். அப்படியாயின் ருத்ரன் இங்கே Negative குறியாடாக போகிறார்…இந்த உதாரணம் எவ்வளவு அறிவிலித்தனாமானதாக இருக்கிறது என்பது
உங்களுக்கே புரிந்திருக்கும், இருந்தாலும் இதை ஜீரணிக்கலாம்
2) மற்றபடி நீங்கள் எந்த அமைப்பிலும் இருக்க தகுதியற்றவர் என்பதை உங்களது பார்வை காட்டிக் கொடுத்து விட்டது.
எந்தப்பார்வை அவரை காட்டிக்கொடுத்து விட்டது என்கிறீர்கள்? வயதில் பெரியவரை மரியாதையாக பேசு என்ற பார்வையா?? இது பாசிசத்திற்கும் கொடியதாக
இருக்கின்றதே. உங்கள் அப்பாவின் முன்னால் தம்மடிப்பீர்களா? அம்மாவை பெயர் சொல்லி அழைப்பீர்களா? மாமாவை ஒருமையில் விளிப்பீர்களா? எந்த
உலகத்திலிருந்து வந்துள்ளீர்கள். சென்னை போன்ற பெருநகரங்களிலேயே இன்னமும் நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் ஒட்டியுள்ளது. அமைப்புக்கு வரும் எல்லா
தோழரும் இதோடுதானே வருகிறார்கள்.. அப்பனை திட்டுபவன் மட்டும் அமைப்பில் சேர அப்ளிகேசன் போடலாம் என்று விதி வைக்கலாமா?? அவ்வளவு ஏன்
இன்னமும் நமது அமைப்பில் மூத்த தோழர்கள் முன்னால் புதிய தோழர்கள் சிகரெட் பிடிப்பதில்லை… வந்தவுட்ன் எழுந்து நின்று இருக்கையை
அளிக்கின்றனர்…அப்படியாப்ட்டவர்களையெல்லாம் தேடிப்பிடித்து அமைப்பிலிருந்து துரத்திவிட பிரந்துரைக்கின்றீர்களா???
3) முதலாளித்துவ சமூக அமைப்பு தரும் ஜனநாயகத்தில் அதிபர்களைக் கூட சாதாரண குடிமகன் பெயரைச் சொல்லி அழைப்பதும், தொழிற்சாலைகளில்
முதலாளியின் பெயரை ஒரு சாதாரண தொழிலாளி உச்சரித்து அழைப்பதும் சாதாரணம். இவற்றுக்கெல்லாம் கோபித்துக் கொள்கிற நிலபிரபுத்துவ தோரணையில்
மருத்துவர் இருக்க மாட்டார் என நம்புகிறேன்.
மேலே 2) க்கு உள்ள கருத்துதான் இதற்கும். நீங்கள் கருதியது போலவே ருத்ரன் இதற்கு கோபிக்கவில்லை
4) விவாதிக்க விரும்பவில்லை என்ற கூற்றுடன் வந்த உங்களது விவாத துவக்கமும் உங்களது இழிந்த பண்பைக் காட்டிக் கொடுத்து விட்டது
இது திரிபு வேலை — அவர் இந்த விவாதம் திசைவிலகிப் போகக்கூடாது (இப்போது போல) என்ற காரணத்தினால் விவாதிக்க விரும்பவில்லை என்றார். அது
நியாயமானது என்று தான் எனக்கு தோன்றுகிறது. மேலும் ஒருவர் விவாதிக்க மறுத்தால் அது இழிந்த பண்பா? விவாதிக்க மறுக்கும் உரிமை யாருக்கும்
இல்லையா? ஒரு மனிதன் ஒரு விடயத்தில் கொண்ட கருத்தை வைத்தே அவர் உயர்ந்த பண்புடையவர், அல்லது இழிந்த பண்புடையவர் என்று தீர்மானிப்பது
பார்பனியத்துக்கு அருகில் நிற்பதாக நான் கருதுகிறேன்.
””””””””””””””””
இதற்கு பதிலாக அந்த தோழர் எழுதியது கூட உங்கள் விவாதமுறை பற்றியதாகவும், நீங்கள் கோபப்படுவதாகவும் ஒரு அமைப்பு கண்ணோட்டத்தில்
எழுதியுள்ளார். பெயர் சொல்லி அழைப்பதன் பாலுள்ள தவறான புரிதலை வினவு சுட்டிக்காட்டிய அதே நேரம் உங்கள் விவாத்ததில் உள்ள தவறான
அம்சத்தையும் விமர்சித்தது.. நீங்களோ அதை சற்றும் பரிசீலிக்காமல் பெரியவர்களுக்கு மரியாதை கொடு என்ற நிலபிரபுத்துவ விழுமியத்தை, அது மனித
சமூகத்தையே பின்னுக்கு இழுப்பதாக சொல்கிறீர்கள், அவரை கொண்டுபோய் ஆர்எஸ்எஸ் அமைப்பில் தள்ளுகிறீர்கள். அவரை மட்டுமல்ல பெரியவர்களுக்கு
மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் அனைவரையும் (முசுலீம்கள் உட்பட) ஆர்எஸ்எஸ் அமைப்பில் தள்ளுகின்றீர்கள். ‘இந்துக்களே ஒன்று
சேருங்கள்’ என பினாத்திக்கொண்டிருக்கும் இராமகோபலன்ஜீக்கு கூட தோனாத யோசனை இது.
அது தவறு என்று தோழர்கள் விமர்சனம் செய்தால் சற்றும் பரிசீலிக்காமல்
1) வார்த்தையை பிடித்து தொங்களாதீர்கள்
2) அவரை முதலில் விமர்சனம் செய்யுங்கள் என்றும் சொல்லுகிறீர்கள்..
ஏன் உங்கள் வார்த்தைகளுக்கு நீங்கள் பொறுப்பாக முடியாதா? அப்படி முடியாதென்றால் எதற்காக பேசு/எழுதுகிறீர்கள். சொன்ன சொல்லுக்கு பொறுப்பாக இருக்க
முடியாத உங்களிடம் சமூக பொறுப்பு எப்படி இருக்கும் என்று கேட்டால் தவறா? இல்லை கோபத்தில் ஏதோ எழுதிவிட்டேன் என்றால் அதற்கும் சுயவிமர்சனம்
தானே தீர்வு. அப்போதுதானே கோபத்தில் மீண்டும் எழுதாமல் இருக்க முடியும். (வினவு ரத்தத்தில் கலந்தது என்று எழுதிய ””வார்த்தையை””’ தவறு என்று நீங்கள்
சுட்டிக்காட்டினீர்களே ஏன்?) ஆனால் நீங்களோ உங்களை பரிசீலிக்கவுமில்லை மற்றவர்களை அவர்களை அந்த தோழரை விமர்சிக்காததால் பிற்போக்கை (அதாவது
ஆர்எஸ்எஸ்) ஆதரிப்பதாக சொல்கிறீர்கள்…எதிர் விமர்சனம் செய்கிறீர்கள்….மார்க்சியத்தை காப்பாற்ற எஞ்சியிருக்கும் கடைசி தோழரை போல
ஆவேசப்படுகிறீர்கள்.
பிற்போக்குதனத்திற்கு எதிராக போராட அனைத்து ஆசான்களும் வழிகாட்டியிருப்பது உண்மைதான் ஆனால் அதை நீங்கள் படித்தீர்களா என்பதுதான் சந்தேகமே…
மார்க்ஸ் அற்பவாதிகளை ஏளனம் செய்தார், அவர்கள் பழைய உலகத்து மனிதர்கள் என்றார்… அவரை ஆழ்ந்து படிக்கவேண்டும் என்றார்…ஆனால் அவரை
பாசிஸ்டு என்று கருதவில்லை.. லெனினுக்கு ரொட்டி கொண்டுவந்த கிழவனை என்னவென்று சொல்வீர்கள்… ஏன் பேராசான் மாவோ மாமா, சித்தப்பா என்றுதான்
விவசாயிகளுடன் பழகுவார். அவரை…. இவர்களெல்லாம் உங்கள் அளவுகோல்படி முற்போக்கா? பிற்போக்கா?? பாசிஸ்டுகளா??? தோழர்களா????
நீங்கள் மார்க்சியத்தின் மொழியின் கடுமையை பற்றி பேசுகிறீர்கள் நான் அதை பயன்படுத்துவதை பற்றி பேசுகிறேன். அதாவது தத்துவத்தை நடைமுறைப்படுத்துவது…பிற்போக்குத்தனத்திற்கெதிரான போராட்டம் வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் எரும்பை கொல்ல அணுகுண்டு வேண்டும் என்று சொல்வதும் அதை நியாயப்படுத்துவதும் எனக்கு லூயி போனாபார்ட்டைத்தான் நினைவு படுத்துகிறது. இதைத்தான் குட்டிமுதலாளித்துவ அராஜகவாதம் என்றார்கள் வினவு தோழர்கள். அது சரியே.
மன்னிக்கவேண்டும் தோழரே இராயாவிடத்தில் எந்த வறட்டுவாதத்தை கண்டோமோ அதையே வேறு வடிவத்தில் உங்களிடம் காண்கிறேன். இதை வைத்துக்கொண்டு புரட்சியை போல ஒன்று கூட செய்ய இயலாது என்பது தான் நிதர்சனம்.
மற்றபடி உங்கள் சொந்தவாழ்க்கையை கிண்டலாக எழுதவில்லை…இவ்வளவு சிரமப்பட்டு போராடி நீங்கள் வந்த முடிவுகளை எண்ணி வருத்தப்பட்டேன்.
தோழமையுடன்
நான் மணி
கட்டாயமாக பின்பற்ற என்ற வார்த்தை என்ற வடிவம் இல்லை என்பதை பிடித்து தொங்குகின்றீர்கள். மொத்த வாக்கியமும் கட்டளை வாக்கியம் என்ற வடிவத்தில் உள்ளது என நான் உங்களுக்கு பதில் சொல்ல்லாம். ஆனால் அவசியமற்றது என்பதால் புறம்தள்ளுகிறேன்.
நீங்கள் ஜீரணித்த்தாக சொல்லிய நெகட்டிவ் குறியீடான ருத்ரன் என்ற ஒப்பீட்டின் அபத்த்த்தை நீங்களே ஒருமுறை மீண்டும் படித்துப் பார்த்து மாற்றிக் கொள்ளுங்கள். எனக்கு உங்களது பொருத்தப்பாடற்ற விவாதம் ஜீரணிக்க கடினமாகத்தான் உள்ளது.
மரியாதை கொடுத்து பேசு என்பதற்கு மாற்று மரியாதை இல்லாமல் கேவலப்படுத்து என்ற மாற்று மட்டுமே அல்ல• இயல்பாக விளிக்கலாம். சாதாரணமாக பேச வேண்டும். மரியாதையாக பேசலாம். ஆனால் அதனை சட்டமாக அல்லது கட்டளையாக (உங்களுக்கு புரிந்திருக்கும் எனக் கருதுகிறேன்) மற்றவர்கள் மீது திணிப்பதற்கு ஒரு நபர் அமைப்பின் பெயரால் அல்லது தோழர் என்ற பெயருடன் வரும்போது நியாயப்படுத்த வேண்டும்.
நிலபிரபுத்துவ கலாச்சாரம் என்னிடமே இருக்கும் ஒன்றுதான். ஆனால் அதனை நான் யாருக்கும் கட்டளையாக கூட அல்ல பரிந்துரை கூட செய்ய மாட்டேன். பரிந்துரை செய்தால் கூட நான் ஆர்.எஸ்.எஸ் சில்தான் இருந்தாக வேண்டும். இப்போது நான் அவரை சொல்லவில்லை. இப்போது பதில் சொல்லுங்கள். நான் சொல்வது பாசிசமா..
அப்பா முன்னாடி தம்மடிக்கலாமா அல்லது தோழர் முன்னாடி தம்மடிக்கலாமா அல்லது மரியாதை கொடுக்கலாமா என்ற விசயங்களைப் பொறுத்தவரை நிலபிரபுத்துவ பண்பாட்டை மாத்திரம் கடைபிடிப்பதாக கூறி நீங்கள் அமைப்பை கேவலப்படுத்துகின்றீர்கள். ஒருவர் அனுபவசாலி அல்லது மூத்தவர் என்பதை விட அத்தோழரின் சமூக பங்களிப்பை மதிப்பிட்டுதான் மரியாதை பல தோழர்கள் தருவதாக நான் கருதுகிறேன். புரிதலுக்காக இதனை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. வயதில் மூத்த ஒருவரை அவர் தோழர் என்ற பெயரில் சமூக பங்களிப்பு எதுவும் செய்யாதபோது மதிப்பளிக்க வேண்டும் எனக் கொரினால் அது சரியா
திரும்ப திரும்ப சொல்கிறேன். தனது தவறான கருத்தை மாற்றாத உள்ளடக்கத்தில் அவர்தான் தன்னை தோழர் எனறு அழைத்துக் கொள்கிறார். அவரை அமைப்பில் இருந்து துரத்துங்கள் என்று நான் எங்கேயும் பரிந்துரை செய்யவில்லை. அவரது ஒப்பீடு அதாவது இந்த அற்ப விசயத்தில் தவறாக முடிவுசெய்ததை சுட்டிக்காட்டிய பிறகும் அந்த அற்ப விசயத்தை ரயாகரனுடன் நடந்த சித்தாந்த போராட்டத்துடன் ஒப்பிட்டார். இதை நீங்களோ அல்லது வினவோ சுட்டிக் காட்டவில்லை.
மாறாக வினவு எனக்கு சில முத்திரைகளை குத்தி உள்ளது.(ஃஆதாரமில்லாமல்)
. பார்ப்பனியத்துக்கு அருகில் நான் இருப்பதாக நீங்கள் சொல்லி உள்ளீர்கள். அது சனி என்று சொல்லி இருக்க வேண்டும். ஒருவர் ஒரு கட்டளை இடுவார். அதற்கு ஒரு வரையறை ஒன்றையும் தருவார். பிறகு இதனை
விவாதிக்க விரும்பவில்லை என்பார். (ஏற்கெனவே விவாதம் திசைதிரும்பிக் கொண்டிருந்த சூழலை ருத்ரன் சரிசெய்த சூழலில் வந்தார் என்பதும் கவனத்திற்குரியது). அதாவது சூத்திரர்களை வேசி மகன் என்பார்கள். அதுக்கு ஒரு வரையறை தருவார்கள். ஆனால் அதனை சூத்திரன் கண்டுக்காம வாழணும்பாங்க•.. அவங்க யாரு..
மரியாதை கொடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் எல்லோரும் பாசிஸ்டுகள் என நான் சொல்லவில்லை. நான் சொல்லாத ஒன்றை பற்றி இவ்வளவு பேசுகின்றீர்கள். ஆனால் என்னை விமர்சனம் செய்வதாக வந்த தோழர் அமைப்பை கேவலமாக அவதூறு செய்துள்ளார். இரண்டாவது பின்னூட்டத்தை படியுங்கள். அமைப்பை அண்ணா திமுக ரேஞ்சுக்கு கீழே போட்டு உடைத்து இருக்கிறார். இதைப்பார்த்து யாருக்கும் கோபம் வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு பெரிய படிப்போ, அரசியல் ஞானமோ கூட அவசியமில்லைதானே.. கொஞ்சமாவது தன்னுணர்ச்சி தானே இருக்க வேண்டும்.
சொன்ன சொல்லை நான் இன்னமும் வாபஸ் வாங்கவில்லை என்பதை தெரிந்துகொண்டு வார்த்தைகளுக்கு பொறுப்பேற்பதைப் பற்றிப் பேசுங்கள். வார்த்தைகளைப் பிடித்து தொங்குவது பல தோழர்களிடமும் ரயா விமர்சனம் நடந்தபோதே வெளிப்பட்டது. அதற்குள் போக விரும்பவில்லை. அது வடிவம் சம்பந்தப்பட்டது என நினைக்கிறேன். மையமான விவாதத்திற்கு அவர்கள் தயாராக இல்லை இப்போதும் உங்களைத், பகத் ஐத் தவிர மற்றவர்கள் விசயம் என்ன பேசுகிறார்கள் என அவதானிக்காமல் பேசுகிறார்கள். அல்லது ஏற்கெனவே இருந்த கருத்தை இப்போது வெளிப்படுத்துகிறார்கள். அந்த மற்றும் இந்த இடுகைக்கான அவர்களது பின்னூட்ட விமர்சனம் என்ற பெயரில் வந்துள்ளவற்றில் என்ன சரி என்ன தவறு என்று குறிப்பாக பேச அவர்கள் யாரும் முன்வரவில்லை. மாறாக வினவு தன்னால் நியாயப்படுத்த முடியாத முன்முடிவுகளை தோழர்களிடம் விமர்சனம் பண்ணுங்கள் என்று கூறியதும், அவர் யார் சொன்னாலும் கேட்க மாட்டார் எனக் கூறியதும் இவர்கள் அனைவரும் வந்து பேசத் துவங்கி விட்டார்கள். நியாயம் அல்லது அநியாயத்தை சீர்தூக்கிப் பார்ப்பதற்கான Jஜனநாயக வெளியை வினவு அடைத்துவிட்டதால் அவர்களுக்கான நியாயத்தின் கீழ்தான் நீங்களும் விவாதித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
சிலர் விமர்சனத்தை மிரட்டுகின்றீர்களா, உங்களைப் போன்ற முரட்டுத் தோழர்கள் தேவையே இல்லை, இனுமேலாவது மரியாதையாக பேச கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பேசி உள்ளார்கள். இதுபோன்ற மறுமொழிகளில் காணப்படும் அரசியலை எனக்கு பேச முடியாதுதான். அவற்றை வினவோ மற்ற தோழர்களோ கண்டிக்கவில்லை. ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு ஒரு கண்ணுக்கு வெண்ணெய் என்ற இந்த அணுகுமுறையும் எனக்கு புதிதாக உள்ளது.
ஒருத்தரை விமர்சிக்கவில்லை என்றால் ஆதரிப்பதாக அர்த்தம். இதற்கு பெயர் எதிர் விமர்சனமா..கொஞ்சம் யோசித்து எழுதுங்கள். ஒரு தோழர் சரியான ஒன்றுக்காக போராடவில்லை என்றால் அது சரியா.. அல்லது அப்படி போராடுவதை கடைசித் தோழரைப் போல கருதிக்கொள்வதாக ஏளனம் செய்வீர்களா.. இதற்கெல்லாம் யார் சுயவிமர்சனம் ஏற்கப் போகின்றீர்கள்..
நான் ஆசான்களின் வழிகாட்டல்களை நேரடியாக படித்தவன் அல்ல•. சில தோழர்கள் மூலமாக பேசக் கேட்டிருக்கிறேன். அற்பவாதிகளை படிக்க வேண்டும் என்பது மார்க்சின் கருத்தாக இருந்தாலும், அற்பவாத மதிப்பீடுகளை கம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டும் என அவர் சொல்லியிருக்கிறாரா என விளக்குங்கள். நானும் அவர்களையோ அல்லது அவர்களைப் பின்பற்றுபவர்களையோ பாசிஸ்டு என்று சொல்ல மாட்டேன். அதனை அமைப்பிற்குள் நின்று பேசுவது அல்லது கட்டளையாக பிறப்பிக்கபடுவது விமர்சனத்திற்கு உட்பட்டது. கட்டளை எனில் கடுமையான விமர்சனத்தை வைக்க வேண்டும். ஒன்று இருக்கணும் இல்லை வெளியேறி விட வேண்டும்.
லெனினுக்கு ரொட்டி கொண்டுவந்த கிழவர் கதையை படித்ததில்லை. ஆனால் அவர் பாசத்தில் கொண்டுவந்திருப்பார். அந்த பாசம் கூட நமக்காக உழைக்கும் தலைவர் என்ற சமூகமதிப்பீட்டால்தான் என்பதும் கூடத்தான். ஆனால் லெனின் இனிமேல் அதனை கட்டாயம் எல்லா கிழவர்களும் தலைவர்களுக்கு ரொட்டி தரவேண்டும் என கட்டளை பிறப்பித்திருக்க மாட்டார் என நம்புகிறேன்.
மாமா சித்தப்பா என்று விவசாயிகளை அழைப்பதை எப்படி இவர் கூறியதுடன் ஒப்பிட்டீர்கள். பொருத்தப்பாடின்மை உங்களுக்கே உறுத்தவில்லையா. மக்களுடன் ஐக்கியப்படுவதற்கான ஒன்றை நிலபிரபுத்துவ மரியாதையுடன் குழப்பிக் கொள்ளும் உங்களது புரிதல் நன்றாக இருக்கிறது.
நானும் மார்க்சியத்தின் மொழிக்கடுமையை பிரயோகிக்கவில்லை. நீக்குப்போக்காக தோழர்களுக்குள் மார்க்சியத்தை அமல்படுத்துவதற்காக நீங்கள் போராடுகின்றீர்கள். அதாவது உங்களது மொழியில் சொன்னால் தத்துவத்தை நடைமுறைப்படுத்துகின்றீர்கள். மருத்துவர் என்று அழைத்தால் இந்த அரசியலுக்கு பத்து பேர் அதிகமாக வருவார்கள் என்று சொன்னால் நான் மேதகு மருத்துவர் என்று அழைக்க கூட ரெடி. வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள்.
கட்சி தொளதொளப்பாக இருப்பதைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த இடத்தில் அவரிடம் வெளிப்பட்டது எரும்பும் அல்ல• நான் பயன்படுத்திய சொற்கள் மார்கசியவகையில் உயர்ந்த மொழியும் அல்ல• சம்பந்தா சம்பந்தமில்லாமல் லூயி போனபார்ட் உங்களுக்கு ஞாபகம் வந்திருக்கிறார். எனக்கு மலைக்கட்சி ஞாபகத்திற்கு வந்த்து தற்செயலானதுதான். இதின் கிளைக்கதையாக குட்டிமுதலாளிய அராஜகவாதம் வேறு உதைக்கிறது. விளக்கம் போல ஒன்றைத் தர முயன்றிருக்கின்றீர்கள். இந்த அளவிற்காவது காது கொடுப்பதற்கு சில தோழர்கள் இருப்பதால் நிம்மதியாக இருக்கிறது.
ரயாவின் வறட்டுவாதம் என்னுடைய கருத்துடன் எப்படி ஒத்து வந்த்து என சொல்ல முடியுமா.. நிறைய முன்முடிவுகளுடன் அணுகுகின்றீர்கள் எனக் கருதுகிறேன். புரட்சியைப் போல ஒன்றைச் செய்வதற்கு மார்க்சியமும் தேவையில்லை, வறட்டுவாதமும் தேவையில்லை.
இன்றைக்கு பெரியவர்களுக்கு மரியைதை கொடுக்க வேண்டும் என கட்டளையாக சொல்பவர், சிவாஜி கணேசன் மீதான விமர்சனத்தை எப்படி பார்ப்பார், நாளை புரட்சியின் வெற்றியில் ஒரு வயதான நிலக்கிழார் ஐ
எதிர்கொண்டால் எப்படி நடந்து கொள்வார், நாளை பொறுப்புக்கு வந்தால் அவர் எதற்கெல்லாம் முக்கியத்துவம் தருவார்… இதெல்லாம் சொன்னால் எலி அணுகுண்டு எறும்பு என்று ஒப்பிடலாம்.
நேரக் குறைவினால் விலாவாரியாக பதில் எழுத முடியாத நிலை. விரைவில் – ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளுக்காவது – வந்து பதில் எழுதுகிறேன். ஒரு அவசரப் பார்வை பார்த்தேன் – இன்னும் ஒருவர் கூட ஜெநோடைப் கமென்ட் தவறு என்று (அட சரி என்றாவது) எழுதவில்லை. வினவிடமிருந்து ஆமாம், ஒரே சாதி என்றது பார்ப்பனர்கள் வாடகை விஷயத்தில் மட்டுமே என்று ஒரு தெளிவுபடுத்தல் வரவில்லை. சாமியின் விஷயத்தில் (அந்த பதிவில் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை என்று பல முறை எழுதி இருந்தும்) நாங்கள் சட்டத்தை கையில் எடுக்கவில்லை என்ற முழுப் பூசணிக்காய்-சோறு நிலை மாறவில்லை. ஃபா சிச்டை சித்தரிக்க பூணூல் போட்டால் போதும், குடுமி இருந்தால் போதும் என்ற நிலைக்கும் விளக்கமும் இல்லை. (ஆர.எஸ்.எஸ்.சில் பிராமணர்கள் என்று சொல்வது வெறும் சப்பைக்கட்டு, அப்படி ஆர.எஸ்.எஸ். தொடர்பை காட்ட வேண்டுமென்றால் சட்டையில் ஆர.எஸ்.எஸ். என்று போட்டிருக்கலாம், பூணூல் போட்டால் ஆர.எஸ்.எஸ். என்பது எப்படிப்பட்ட பிதற்றல்!) சர்வதேசியவாதிகள் என் காபிடலிஸ்ட் வரையறையைக் கேட்ட பிறகு வாயை திறக்கவில்லை. என் அவர்சரப் பார்வையின் குறையாக இருக்கலாம். அப்படி இருந்தால் மன்னிக்கவும்.
சிறு சந்தோசம் வந்தது முதல் தலைமுறையின் வேகம் உற்சாகம் பார்த்து மட்டுமே. அவர் தான் ஒடுக்கப்பட்ட குடுமபத்தில் முதல் தலைமுறை என்று குறிப்பிடுகிறார். வாழ்த்துக்கள்! முதல் முறையாக உங்களை இணையத்தில் பார்க்கிறேன், தொடர்ந்து எழுதுங்கள்! மாற்று கருத்து உள்ளவர்களைக் கண்டு – என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் – சோர்வடையாதீர்கள். இங்கே பார்ப்பனர்கள் தவறாக தாக்கப்படுகிறார்கள்தான். ஆனால் பார்ப்பனர்களுக்கு நடக்கும் தவறுகள் பரங்கி மலை அளவு என்றால் தலித்களுக்கு, மற்ற ஒடுக்க்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட தவறு இமய மலை அளவு!
//– இன்னும் ஒருவர் கூட ஜெநோடைப் கமென்ட் தவறு என்று (அட சரி என்றாவது) எழுதவில்லை. //
நான் பல முறை பார்த்துவிட்டேன். இன்னும் நோண்டுவின் கருத்து கடுமையாக கண்டிக்கப்படவேண்டியது என்று ஆர் வி சொல்லவில்லை.
//ஆர் வியின் சார்பு நிலைகள் வெளிவரும் இடங்கள்.
//ஆர்.எஸ்.எஸ். குற்றவாளியா இல்லையா என்பது பற்றி என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது, அவ்வளவுதான்.//
//பிறகு டோண்டு சாதி வெறி பிடித்தவர் இல்லை. அவருக்கு வீம்பு உண்டு. அவரை விட வீம்பு பிடித்த எத்தனையோ பேரை இங்கே பார்க்கிறேன், அவர்களையும் ஜாதி வெறியர் என்று நான் கருதவில்லை.//
இணையத்தில் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் நுழையாத காலத்திலிருந்தே சுயசாதிப் பெருமை பேசி திரிந்த பிண்டம்தான் இந்த பெரியவர் டோண்டு. இவரது சாதிவெறிதான் போலி டோண்டு உருவானதில் முக்கிய பங்கு ஆற்றியது.
ஆனால் ஆர் வியின் கருத்தில் ஆர் எஸ் எஸ் செய்திருப்பதாக தோன்றுகிறதாம், டோண்டு சாதிவெறியர் இல்லையாம்… நல்ல அவதனிப்பு//
ஜெநோ டைப் பற்றிய எனது கருத்தை ஏற்கெனவே பதிவு செய்துள்ளேன். பூணூல் மற்றும் காமன் மேன் பற்றுயும் சொல்லி உள்ளேன்.
//சாமியின் விஷயத்தில் (அந்த பதிவில் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை என்று பல முறை எழுதி இருந்தும்) நாங்கள் சட்டத்தை கையில் எடுக்கவில்லை என்ற முழுப் பூசணிக்காய்-சோறு நிலை மாறவில்லை//
சட்டத்தை கையில் எடுப்பது என்றால் என்ன ஆர் வி? சட்டீஸ்கர் முதல் வங்காளம் வரை பழங்குடியின மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டுதான் அரசையும், போலீசையும், ராணுவத்தையும் எதிர்த்து போராடி வருகிறார்கள். பிரச்சினை சட்டத்தை கையில் எடுப்பது அல்ல. மக்களுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதுதான் பிரச்சினை.
உ.போ.ஒவிலும் அதுதான் வலியுறுத்தப்பட்டது. சுவாமி விசயத்திலும் அரசு அதிகாரத்தை வைத்துக் கொண்டு அவன் செய்யும், செய்து வந்த அநாகரிக வன்முறைகளுக்கான எதிர்வினையாகத்தான் முட்டை வீச்சு முன்னிறுத்தப்பட்டது. இவை அந்தக் குறிப்பிட்ட பதிவிலும், பின்னூட்டங்களிலும் சொல்லப்பட்டிருந்தது.
ஆனால் ஆர்வி, தான் பிடித்த முயலுக்கு மூனு கால், நோண்டு என்ற பார்ப்பன் சுயசாதி மோகி விமர்சனம் செய்யப்பட வேண்டியவர் அல்ல, ஆர் எஸ் எஸ் கொலைகள் செய்திருக்கலாம்(??), பார்ப்பனியம் என்ற வார்த்தையும் பறையன் என்ற வார்த்தையும் ஒன்று(இதை அவர் மறுக்கிறார் எனில் பழைய பின்னூட்டங்களை எடுத்தாள கடமைப்பட்டுள்ளேன்) போன்ற டெம்ப்ளேட் சிந்தனையிலிருந்து விடுபட மறுக்கிறார்.
//ஆனால் பார்ப்பனர்களுக்கு நடக்கும் தவறுகள் பரங்கி மலை அளவு என்றால் தலித்களுக்கு, மற்ற ஒடுக்க்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட தவறு இமய மலை அளவு!//
1857ல் பிரிட்டிஷ்க்காரன் மீது முதல் அகில இந்திய சுதந்திரப் போரின் போது பல கோடூரங்கள் ஏவப்பட்டன. அவை அநீதியானவைதான் ஆனால் அவற்றை விட அங்கு மிக முக்கியமாக பேசப்பட வேண்டியவை, பேசப் பட்டுக் கொண்டிருப்பவை, பேசப்பட்டவை பிரிட்டிஷ் ஆட்சியின் இமயமலை அளவு ஒடுக்குமுறையும், அதனை எதிர்த்த சுதந்திரப் போரின் பெருமையும் ஆகும்.
பரங்கிமலையா அல்லது இமயமலையா என்பது அல்ல பிரச்சினை. பிரிட்டிஷ் என்ற அடையாளம் பேணப்படக் கூடியதா அல்லது இந்தியன் என்ற அடையாளத்துடன் ஒன்றி போராட வேண்டுமா என்பதுதான் பிரச்சினை மற்றும் மையமான கேள்வி.
ஒரு பிரிட்டிஸ்க்காரனாக பிறந்திருந்தால் கூட இந்தியர்களுடன் இணைந்து அவர் போராடுகிறார் எனில் பரங்கிமலையளவு அநீதிகள் கண்டு அவர் கலவரப் பட அவசியம் ஏதுமில்லை. ஏனேனில், ஒடுக்கப்படுகிறார்கள் என்ற அம்சத்தில் இந்தியர்கள் என்ற அடையாளம் பேணப்பட வேண்டியதாகவும், பிரிட்டிஷ் என்ற அடையாளம் உடைத்தெறியப்பட வேண்டியதாகவும் இருக்கிறது. இந்த அடிப்படையில் பார்ப்பான், பறையன் அடையாளங்களை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்(பிரிட்டிஷ்க்காரர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது என்று குறிப்பிட்டதை இய்ந்திரகதியாக பொருத்தி பார்ப்பனர்கள் மீது வன்முறை ஏவப்படுவதை நான் ஒப்பு்க் கொண்டதாக ஆர்வி புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இது ஒரு உதாரணம்தான். இதன் மூலம் சொல்ல வருவது அடையாளங்கள் அனைத்தும் ஆதரிக்கப்படவோ, பேணப்படவோ வேண்டியவை அல்ல என்பதை வலியுறுத்தத்தான்)
//ஆனால் பார்ப்பனர்களுக்கு நடக்கும் தவறுகள் பரங்கி மலை அளவு என்றால் தலித்களுக்கு, மற்ற ஒடுக்க்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட தவறு இமய மலை அளவு!//
1857ல் பிரிட்டிஷ்க்காரன் மீது முதல் அகில இந்திய சுதந்திரப் போரின் போது பல கோடூரங்கள் ஏவப்பட்டன. அவை அநீதியானவைதான் ஆனால் அவற்றை விட அங்கு மிக முக்கியமாக பேசப்பட வேண்டியவை, பேசப் பட்டுக் கொண்டிருப்பவை, பேசப்பட்டவை பிரிட்டிஷ் ஆட்சியின் இமயமலை அளவு ஒடுக்குமுறையும், அதனை எதிர்த்த சுதந்திரப் போரின் பெருமையும் ஆகும்.
பரங்கிமலையா அல்லது இமயமலையா என்பது அல்ல பிரச்சினை. பிரிட்டிஷ் என்ற அடையாளம் பேணப்படக் கூடியதா அல்லது இந்தியன் என்ற அடையாளத்துடன் ஒன்றி போராட வேண்டுமா என்பதுதான் பிரச்சினை மற்றும் மையமான கேள்வி.
ஒரு பிரிட்டிஸ்க்காரனாக பிறந்திருந்தால் கூட இந்தியர்களுடன் இணைந்து அவர் போராடுகிறார் எனில் பரங்கிமலையளவு அநீதிகள் கண்டு அவர் கலவரப் பட அவசியம் ஏதுமில்லை. ஏனேனில், ஒடுக்கப்படுகிறார்கள் என்ற அம்சத்தில் இந்தியர்கள் என்ற அடையாளம் பேணப்பட வேண்டியதாகவும், பிரிட்டிஷ் என்ற அடையாளம் உடைத்தெறியப்பட வேண்டியதாகவும் இருக்கிறது. இந்த அடிப்படையில் பார்ப்பான், பறையன் அடையாளங்களை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்(பிரிட்டிஷ்க்காரர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது என்று குறிப்பிட்டதை இய்ந்திரகதியாக பொருத்தி பார்ப்பனர்கள் மீது வன்முறை ஏவப்படுவதை நான் ஒப்பு்க் கொண்டதாக ஆர்வி புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இது ஒரு உதாரணம்தான். இதன் மூலம் சொல்ல வருவது அடையாளங்கள் அனைத்தும் ஆதரிக்கப்படவோ, பேணப்படவோ வேண்டியவை அல்ல என்பதை வலியுறுத்தத்தான்)
மீண்டும் மீண்டும் என்னை இங்கே இழுப்பது ஒரு நரித்தனம்..என்ன செய்ய அவர்கள் மூளை சுறுசுறுப்பாக வேலை செyது நம்மவர்களை திசை திருப்பிக்கொண்டேயிருக்கிறது.
இனியாவது கட்டுரையின் அடிப்படை கருத்து பற்றி விவாதிக்கலாமே
மருத்துவர் ருத்ரன்
அவர்களது அரசியலை இயைந்த மாயாவதியின் அரசியலை ஒத்த வடிவத்தில் வைக்கிறார்கள். ஏற்கெனவே அசோகமித்திரனோ அல்லது வேறு ஓரு பார்ப்பன இலக்கியவாதியோ சொன்ன ஒன்றுதான் அத்தகைய கருத்து.
இதில் சூது எதுவம் இல்லை. தங்களை சூழ்நிலையின் தாக்கத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவதானிக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.
விவாதம் இதன்மூலமாக திசைதிரும்பாது என நம்புகிறேன். தொடர்ச்சியாக அவர்கள் எழுப்பும் சுசாமி காமன் மேன் ஜெநோ டைப் போன்றவற்றுக்கு பதில் சொல்லப்பட்டாலும் படிக்காமல் அல்லது விவாதிக்க விரும்பாமல் நழுவிச்செல்லும் பண்பை விமர்சிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நீளமான மறுமொழி – இரண்டு மூன்று பாகமாக எழுதுகிறேன்.
நிறைய மறுமொழிகள்; வினவு மறுமொழிகளை தொக்குக்க முயற்சி செய்திருப்பது போலத் தெரிகிறது. நன்றி, ஆனால் இன்னும் முயற்சி வெற்றி அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்போம் இந்த மறுமொழி எங்கே சொருகப் படுகிறது என்று.
இந்த முறை மேலிருந்து கீழே செல்கிறேன். மீண்டும் சொல்கிறேன், கவனக் குறைவினால் ஏதாவது மிஸ் ஆனால் மன்னிக்கவும்.
3-ஆவது மறுமொழியில் ராசாத்தி எழுதுகிறார்; // சாதி அமைப்பு சிறந்த்து எனக் கதறும் ஜெயமோகனின் அடிப்பொடிகளான அல்லது எதற்கெடுத்தாலும் அவரது சைட்டுக்கு லிங்க கொடுக்கும் அன்பர்கள் இந்தக் கொலையை நியாயப்படுத்துவார்களா அல்லது இதற்கு பொறுப்பேற்பார்களா. //
தவறான தகவல். ஜாதியில் பாசிடிவ் கூறுகளும் இருக்கின்றன, ஆனால் நெகடிவ் கூறுகள்தான் அதிகம் என்று ஜெயமோகனின் கருத்தை சுருக்கமாக சொல்லலாம்.
ராசாத்தி ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது என்பதை கண்டித்தும், அதை வினவு திருத்திக் கொண்டதும் நல்ல விஷயங்கள். (ஆனால் வினவு ஜெநோடைப் பற்றி மட்டும் வாயைத் திறக்க மாட்டார்). ராசாத்தி ஜெநோடைப் கருத்து பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆவல்.
4-ஆவது மறுமொழியில் கள்ளபிரான் எழுதுகிறார் – // தமிழ்ப்பார்பனர் என்ற ஜாதி மெல்லமெல்ல அழிந்து வருகிறது. //
ஒரு ஜாதியாவது அழிந்தால் அது நல்ல விஷயம்தானே? அதில் என்ன பிரச்சினை?
4.1-ஆவது மறுமொழியில் மணி எழுதுகிறார் – // தமிழ் பார்ப்பனர் என்ற சாதி தானே அழிந்த்து. அந்த சாதி இன மக்கள் அழியவில்லையே… பிறகு என்ன கவலை அய்யா.// என்ன சொல்ல வருகிறார்? பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்றா? கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள், மணி!
30-ஆவது மறுமொழியில் பகத் நிறைய கேள்விகள் கேட்டிருந்தீர்கள். நானும் பதில் சொல்லி இருந்தேன். என் கேள்விகளுக்கான பதில் எதையும் காணோமே? உங்களுக்கும் நேரக் குறைவா?
31-ஆவது மறுமொழியில் நெத்தியடி முகமது கேட்கிறார் – // எல்லா ஹிந்துத்வா பயங்கரவாதிகளையும் தலித் & கிருத்துவர்கள் + முஸ்லிம்களுக்கேதிராய் உருவாக்குவதும் இயக்குவதும் பார்ப்பனர்களும் அவர்களின் கொள்கையும்தானே? //
தவறு. என் தவறு என்று புரியவில்லை என்றால் இதே போன்று அமைந்த இந்த கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். // எல்லா இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் கிருத்துவர்கள்+ஹிந்துக்களுக்கு எதிராக உருவாக்குவதும் இயக்குவதும் முஸ்லிம்களும் அவர்களின் கொள்கைக்களும்தானே? //
32-ஆவது மறுமொழியில் சர்வதேசியவாதிகள் பார்ப்பனர் என்ற வார்த்தைக்கு புது வரையறை பற்றி நிறைய பேசி இருந்தார். என் காபிடலிஸ்ட் வரையறையை கேட்டதும் பேச்சு மூச்சு காணோமே? உங்களுக்கும் நேரக் குறைவா?
37 -ஆவது மறுமொழியில் வினவு “ஒரே சாதி” என்பதை மாட்ரிமொநியலுக்கு மட்டுமே சொல்கிறார் என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டிருந்தேன். மவுனம்தான் இது வரை.
38 .1.2.-ஆவது மறுமொழியில் டோண்டு அய்யங்கார் என்று குறிப்பிடுவதை கண்டிக்க வேண்டும் என்று முதல் தலைமுறை சொல்கிறார். முதல் தலைமுறையின் வேகம், உற்சாகம் நல்ல விஷயம்தான். ஆனால் immaturity-யும் இருக்கிறது. டோண்டு தான் அய்யங்கார், அதனால் உயர்ந்தவன் என்று சொன்னால் நிச்சயமாக கண்டிக்க வேண்டும். டோண்டு தான் அய்யங்கார் என்று சொன்னாலே கண்டிக்க வேண்டும் என்பது தவறான அணுகுமுறை. நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன். எனக்கு பொதுவாக பர்சனல் விஷயங்கள் பற்றி பேசுவதில் விருப்பம் இல்லை. ஆனால் எத்தனை முறை நீ மாற்று கருத்து உள்ளவனா, நீ குடுமியாகத்தான் இருக்க வேண்டும், நீ அம்பியாகத்தான் இருக்க வேண்டும், உன் ஜெநோடைப் என்ன, என்று என் கருத்தைப் பற்றி பேசாமல் என் தனிப்பட்ட குணாதிசயங்களைப் பற்றி இங்கே பேசப்பட்டது என்று உங்களுக்கு தெரியாது. இப்போதுதான் இங்கே வந்திருக்கிறீர்கள். எரிச்சல் மிகுந்து நானே அடிக்கடி ஆமாய்யா நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன் என்று வீம்புக்காவே சொன்னேன். கவனிக்கவும், நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன், அதனால் உயர்ந்தவன் என்று எழுதியதில்லை. டோண்டுவும் அப்படி எழுதி இது வரை நான் பார்த்ததில்லை. அப்படி அவர் எழுதி இருந்தால் சுட்டி கொடுங்கள், நிச்சயமாக கண்டித்து எழுதுகிறேன். ஆனால் டோண்டு அய்யங்கார் என்று எழுதுவதற்காக எல்லாம் கண்டிக்க முடியாது.
38.2.2-ஆவது மறுமொழியில் புதிய தலைமுறை எழுதுகிறார் – // ஆர்வி முன்பொருமுறை பார்ப்பான் பறையன் என்ற பெயரில் வித்தியாசம் இல்லை. // இப்படி நான் எங்கும் எழுதியது இல்லை. தவறான தகவல். பார்ப்பனீயம் என்ற வார்த்தைக்கு ஆட்சேபனை உண்டு. பார்ப்பான் என்ற வார்த்தைக்கு இல்லை.
38 .3-ஆவது மறுமொழியில் புதிய தலைமுறை கேட்கிறார் // கள்ளர்பிராந்தான் பார்ப்பன சாதி, அமைப்புகளின் அத்தாரிட்டியா நோண்டு ராகவன் அவர்களே?// அவருக்கு இதே கேள்வி – டோண்டு பார்ப்பனர்களின் பிரதிநிதியா? – வினவு டோண்டு ராகவன் இப்படி சொன்னார், அப்படி சொன்னார், அதனால் பார்ப்பனர்கள் தாக்கப்பட வேண்டியவர்கள் என்று எழுதும்போது தோன்றவில்லை. ஏனென்று அவர்தான் விளக்க வேண்டும்.
Dear, Mr.RV, ///////// 31-ஆவது மறுமொழியில் நெத்தியடி முகமது கேட்கிறார் – // எல்லா ஹிந்துத்வா பயங்கரவாதிகளையும் தலித் & கிருத்துவர்கள் + முஸ்லிம்களுக்கேதிராய் உருவாக்குவதும் இயக்குவதும் பார்ப்பனர்களும் அவர்களின் கொள்கையும்தானே? //
தவறு. என் தவறு என்று புரியவில்லை என்றால் இதே போன்று அமைந்த இந்த கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். // எல்லா இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் கிருத்துவர்கள்+ஹிந்துக்களுக்கு எதிராக உருவாக்குவதும் இயக்குவதும் முஸ்லிம்களும் அவர்களின் கொள்கைக்களும்தானே? // //////// Both are not same Mr.RV. Certainly not same. I think you missed ( or slipped to 51.1 from 41?) my comment ( No. 49) for you! There you can get the explanation for my question.
நெத்தியடி முகமது எழுதுகிறார் – // Both are not same Mr.RV. Certainly not same. I think you missed ( or slipped to 51.1 from 41?) my comment ( No. 49) for you! There you can get the explanation for my question. // இரண்டும் ஒன்றில்லை என்றால் ஏன் ஒன்றில்லை என்று விளக்க வேண்டாமா? 49-ஆவது மறுமொழியில் ஒரு விளக்கமும் இல்லை. பார்ப்பனர் என்ற “மேல் ஜாதி” ஒழிந்தால் வேறு “மேல் ஜாதி” அந்த இடத்தில் உட்கார்ந்து “கீழ் ஜாதியினரை” ஒடுக்கும் என்றும் ஆர.எஸ்.எஸ். சதி செய்தது என்றும்தான் அங்கே எழுதி இருக்கிறீர்கள். இதற்கும் // // எல்லா ஹிந்துத்வா பயங்கரவாதிகளையும் தலித் & கிருத்துவர்கள் + முஸ்லிம்களுக்கேதிராய் உருவாக்குவதும் இயக்குவதும் பார்ப்பனர்களும் அவர்களின் கொள்கையும்தானே? // என்ற உங்கள் கேள்விக்கும் // எல்லா இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் கிருத்துவர்கள்+ஹிந்துக்களுக்கு எதிராக உருவாக்குவதும் இயக்குவதும் முஸ்லிம்களும் அவர்களின் கொள்கைக்களும்தானே? // என்ற என் rhetorical கேள்விக்கும் என்ன சம்பந்தம்?
Mr.RV. I have pasted that comment#49 exactly from where you stopped reading further, with some extra explanations in brackets.
////(சாதியை ஹிந்துக்களில் இருந்து ஒழிக்க )முட்டி மோதி பார்த்துவிட்டு கடைசியில் அம்பேத்கரும் பெரியாரும் இந்துமதத்தை விட்டு வெளியேறும் முடிவையே தங்கள் தீர்மானமாய் கூறினர். சரியான முடிவுதான். அம்பேத்கார் சொன்னபடி செய்தார். பெரியார் சொன்னார்…, செய்யவில்லை. ஏனென்றால், அவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர். அவருக்கு அது தேவை இல்லை.
அப்படி கிராமம் கிராமமாய் (ஹிந்து மதத்திலிருந்து ) வெளியேறியபோது அதுவரை கண்டுக்காத மேல்சாதி பெருந்தலைகள் யோசித்தன. பெடல்கள் (கீழ் சாதி ஹிந்துக்கள்+தலித்துகள் )கழண்டு ஓடி விட்டால், ‘மிதிக்க’ பெடல்கள் இல்லாவிட்டால் இவர்களின் (மேல்சாதி பெருந்தலைகள்)‘சைக்கிள்’ எப்படி ஓடும்? விழுந்துவிடாது? கிருத்துவர்கள் “தலித் கிருத்துவர்கள்” என்ற புதிய விஷயத்தை உண்டாக்கி ஆதிக்க சாதியின் கோபத்திலிருந்து தப்பித்துக்கொண்டனர். இஸ்லாம் அப்படி செய்யவில்லை. வந்தவர் அனைவரும் முஸ்லிம்கள் என்றது. அதனால்தான் அவர்களின் கோபம் இஸ்லாம் மீது திரும்பியது. ஜின்னாவை உசுப்பிவிட்டு பாக்கிஸ்தானை உண்டாக்கினார்கள். ஊரைவிட்டு அங்கே ஓடாதோரை இன்னும் சித்ரவதை செய்ய ஆரம்பித்தார்கள். “இஸ்மாயில்” என்று பச்சைகுத்தி கோட்சே, காந்தியை கொன்றது, கரசேவகர்களை கொளுத்திவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டது, பல இடங்களில் குண்டு வைத்துவிட்டு முஸ்லிம்களின் மீது பழிபோட்டு பரபரப்பாக சந்தேகத்தின் பேரில் எண்ணற்ற முஸ்லிம்களை கைது பண்ணிவிட்டு பலமாதமோ, பல ஆண்டு கழித்தோ ரகசியமாக விட்டுவிடுவது என்று சித்ரவதை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இடையில் ‘ராமர்கோவில்’ உதவியால் பலசாதிகளை ‘ஹிந்துக்கள்’ என்று ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காண வைத்து, 4 MP-இலிருந்து முன்னேறி ஆட்சியையும் பிடித்தனர். இவர்கள் பிழைப்பு(சைக்கிள்)ஓட, பெடலை மிதித்தாக வேண்டும். இந்துமதத்தில் ஒட்டுபவனாக (மேல்சாதி ஹிந்துக்கள்) எவன் வந்து அமர்ந்தாலும் இந்துமதம் எனும் சைக்கிளில், பெடல்களாய் (கீழ் சாதி ஹிந்துக்கள்+தலித்துகள்) இருக்கும்வரை பெடல்கள் மிதிப்படத்தான் செய்யும். பெடல்கள் ஓட்டுனராக வேண்டும் அல்லது கழண்டோட வேண்டும். பெடல்கள் இல்லாவிட்டால் ‘சைக்கிள் காலி’ (பொழைப்பு காலி) என்பதயும் ஓட்டுனர் மறக்க மாட்டார். காரணம், ஓட்டுனர் (மேல்சாதி ஹிந்துக்கள்) எக்காலத்திலும் பெடலாய் (கீழ் சாதி ஹிந்துக்கள்+தலித்துகள்) மாறமாட்டார். அதனால் யாரையும் கழற்ற அல்லது தானாக கழற விட மாட்டார். அதுதான் ஓட்டுனர் (பார்ப்பனிய கருத்தோட்ட ஹிந்துத்வா)+(RSS) வேலை. ‘கழண்டு வா’ என்பவனை (முஸ்லிமை) பயங்கரவாதியாக சித்தரிப்பதற்கு காரணம், ‘பெடல்கள்’ (கீழ் சாதி ஹிந்துக்கள்+தலித்துகள்)தானாக ‘கழண்டால் என்ன’ (நாம ஹிந்து மதத்திலிருந்து வெளியேறினால் என்ன) என்று சிந்தித்து விடக்கூடாது என்பதுதான்./////
இப்போது புரிகிறதா திரு.RV , பார்ப்பனீயத்தின் வருணாசிரம – சாதிய தீண்டாமை சித்தாந்தத்தால் பாதிக்கப்பட்ட கீழ்சாதி மற்றும் தலித் ஹிந்துக்கள் பார்ப்பனீய-சாதிய தீண்டாமை விடுதலைக்காக இஸ்லாத்திற்கு மாறியதாலும், பார்ப்பனீயத்திலிருந்து தப்பிக்க கிருத்துவத்திற்கு மாறியதாலும், இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் கிருத்துவர்கள் மீதும் வன்மம் கொண்டு தனது பார்ப்பனீய அடிப்படையிலான ஹிந்துத்வா கொள்கையின் மூலம் சங் பரிவார்/RSS முதலான இயக்கங்கள் உருவாகி நூறாண்டுகளுக்கும் மேலாய் முஸ்லிம்களை தாக்கி அழித்து வருவது & எல்லா ஹிந்துத்வா பயங்கரவாதிகளையும் தலித் & கிருத்துவர்கள் + முஸ்லிம்களுக்கேதிராய் உருவாக்குவதும் இயக்குவதும் பார்ப்பனர்களும் அவர்களின் கொள்கையும்தானே?
இதே போல ஒரு லாஜிக்,
// எல்லா இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் கிருத்துவர்கள்+ஹிந்துக்களுக்கு எதிராக உருவாக்குவதும் இயக்குவதும் முஸ்லிம்களும் அவர்களின் கொள்கைக்களும்தானே? //
என்பதற்கு இல்லையே, திரு.RV.
ஆர்விக்கு … ஜெயமோகனின் கட்டுரைகளை நீங்கள் இன்னொருமுறை படித்துப் பார்த்துவிட்டு பின்னூட்டம் போட்டால் சரியாக இருக்கும் என நம்புகிறேன். ராசாத்தி ஜெநோடைப் பற்றி கருதுவது இருக்கட்டும். நீங்கள் என்ன கருதுகின்றீர்கள். அது மனிதன் மீது பாதிக்கும் பண்புகளை அறிவியல் வழி விளக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
நான் மணி
1. சாதிதான் அழிகிறது. சாதியே அழிந்தபிறகு நபர்களும் அழிய வேண்டியதுதானே என்று அவர் கருதுகிறார். நீங்கள் அறிவுரை சொல்லி மாற்ற வேண்டியது அவரை என நினைக்கிறேன்.
2. நெத்தியடி முகமது உடன் நபர்களை முதலில் கைகாட்டுவதை விட அவர்களை இயக்கும் சித்தாந்தங்களை விவாதிக்க முனைந்தால் அதன் பயன்பாடு பற்றி விவாதித்தால் விவாதம் செழுமையடையும். மாறாக இம்முறை விவாதம் பதிலுக்கு பதில் பேசுவதில் முடியுமே தவிர உண்மைகளுக்கு நெருக்கமாக முடியாது.
3. மாட்ரிமானியல் பற்றி ஏற்கெனவே விளக்கமும், கேள்வியும் எழுதி விட்டேன். படித்து பார்த்து கருத்து சொல்லவும்.
4. டோண்டு உயர்ந்தவன் என்று வார்த்தையில் சொல்வது இல்லையே தவிர அவரது தளத்தில் இப்படி ஒரு ஆரோக்யமான விவாத்த்தை நடத்த எவரையும் பின்னூட்டமாக கூட அனுமதிக்காத மற்றும் புதியவர்களை மட்டம் தட்டுகிற போக்கை நீங்கள் தொடர்ந்து கவனித்து வரலாம். துக்ளக் கிற்கு நூல் அறிமுகம் மாத்திரம் செய்பவரும் அவரே.. நிறைய பிற்போக்கு கருத்தை அல்லது ஜனநாயக விரோத கருத்தை அவரது ஒவ்வோரு மறுமொழியிலும் காண முடியும். இதற்கு ஜெநோடைப் பும் வளரும் சூழலான பினோடைப்பும் காரணம் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.
இரண்டாவது பகுதி:
41 -ஆவது மறுமொழியில் மணி எழுதுகிறார். // இந்தியாவில் தனிமனித உரிமைகள், அல்லது ஜனநாயகத்திற்கான உரிமைகள் வளர முடியாமல் தவிப்பதற்கு இங்கு நிலவும் உற்பத்தி முறையில் நிலவும் பிரஷ்யன் ஜங்கர் ஒரு காரணம் என்பதை புரிய வேண்டுமென்றால் அதனை வெறும் உரிமைகள் மாத்திரமே ஜனநாயக வளர்ச்சி எனப் புரிந்து கொள்ளும் நபர்களால் புரிந்து கொள்ள முடியாது. // மணியின் மறுமொழிகளில் சாதாரணமா “நான் மணி” என்ற வாக்கியம் மட்டுமே சுலபமாக புரிகிறது. பிரஷ்யன் ஜங்கர் என்றால் என்ன? என் போன்றவர்களுக்காகவாவது கொஞ்சம் எளிமையாக எழுதுங்களேன் அய்யா! மேலும் எழுதுகிறார் – // இவர்கள் எவரும் தாமாகவே முன்வந்து இதுவரை தமது மூதாதையர் செய்த குற்றங்களுக்கு இந்த இணையத்தில் கூட மன்னிப்பு கேட்கவில்லை என்பது போதும் இவர்களது நேர்மைத்தனத்திற்கான உதாரணமாக // மூதாதையர் செய்த குற்றங்களுக்கு இன்றைய சந்ததியர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கருத்து தவறானது. அட அது சரி என்றே வைத்துக் கொள்வோம். மணி தன் ஜாதியை சேர்ந்த மூதாதையர் செய்த குற்றங்களுக்கு எங்கே மன்னிப்பு கேட்டிருக்கிறார்? சரி மணி இருப்பதிலேயே “கடை நிலை” ஜாதி என்றே வைத்துக் கொள்வோம். தன் மூதாதையர் பெண்களுக்கு இழைத்த அநீதீகளுக்கு எங்கே நீங்கள் மன்னிப்பு கேட்டிருக்கிறீர்கள்? ஊருக்கு உபதேசம்!
51.1-ஆவது மறுமொழியில் டோண்டு எழுதுகிறார். // மோடி விஷயம். நரேந்திர மோடி மேல் லஞ்ச ஊழல் குற்றம்…//
மோடி லஞ்சம் வாங்கவில்லை, குஜராத் மாநிலத்தை முன்னேற்றி இருக்கிறார் என்பதெல்லாம் சரிதான். ஆனால் குஜராத் படுகொலைகளுக்கு அவரே பொறுப்பு. கொலைகாரன், ஆனால் திருடுவதில்லை என்பதற்காக அவரை தூக்கி பிடிக்கிறீர்கள். இந்த விஷயத்தில் நமக்குள் இசைவு ஏற்படப் போவதில்லை. ஆனால் வாக்காளர்கள் ஒட்டு போட்டார்கள், அதனால் மோடி குற்றமற்றவர் என்று சொன்னால் அப்புறம் கலைஞரும் ஜெயலலிதாவும் ஊழல் செய்யவில்லை என்று ஆகிவிடுமே! அப்படி சொல்வீர்களா என்ன? // சீக்கியக் கொலைகளுக்கு சப்பைக்கட்டு கட்டிய ராஜீவ் காந்தியை விட அவர் எவ்வளவோ மேல். // அந்த கொலைகாரனை விட இந்த கொலைகாரன் பெட்டர் என்றால் என்ன சொல்லட்டும்?
51 .2-ஆவது மறுமொழியில் மணி எழுதுகிறார் // ஜெநோடைப் பிற்போக்கானதாக இருக்கும்போது வளர்ப்பு சூழல் முற்போக்காக இருந்தால் மாத்திரமே ஒருவரது ஆளுமை நார்மலாக இருக்கும். // பிற்போக்கு ஜெநோடைப், முற்போக்கு ஜெநோடைப்! நீங்கள் டாக்டரையே மிஞ்சிவிட்டீர்கள். உங்கள் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு பிரமிப்பூட்டுகிறது.
51 .3-ஆவது மறுமொழியில் புதிய தலைமுறை எழுதுகிறார் // டாக்டர் ருத்ரன் விசயத்தை பேசும் முன்பு நோண்டு விசயத்தை முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளேன். // ஏன்? என்னங்க சின்னப் பிள்ளைத்தனமா பேசிக்கிட்டு? இதை நான் முன்னால் பார்த்திருந்தால் டோண்டு பற்றி வீம்புக்காகவே எழுதி இருக்கமாட்டேன். நீங்க யாரு எனக்கு கண்டிஷன் போட?
51 .4-ஆவது மறுமொழியில் வேல் எழுதுகிறார். // தற்போது வாடகைக்கு இருக்கிறேன். 24 குடித்தனத்தில் 3 பேர்களுக்கு மேல் என்னிடம் பேசுவதில்லை…// அந்த 21 பேரை கண்டியுங்கள். நானும் சேர்ந்து கண்டிக்கிறேன். உங்கள் பர்சனல் வாழ்க்கையில் 21 பேர் இல்லை 2100 பேர் உங்களுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்றால் அதற்கு ஒட்டு மொத்த பிராமணர்களையும் பொறுப்பாக்குவீர்களா? ட்வின் டவர்ஸ் தகர்ப்பில் இறந்த ஒருவரது மகன் எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகள், அவர்களை அழிக்க வேண்டும் என்று சொன்னால் அதை ஆமோதிப்பீர்களா? மயிலாப்பூர் பகுதியில் வாழ்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். அடுத்த முறை நான் சென்னை வரும்போது என் வீட்டுக்கு – இல்லை எங்காத்துக்கு – சாப்பிட வாருங்கள் என்று அழைக்கிறேன். அப்படி நாளை என் வீட்டில் சாப்பிட்டவுடன் எல்லா பிராமணர்களும் ஜாதி பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வருவீர்களா?
55-ஆவது மறுமொழியில் மணி எழுதுகிறார். // சட்டத்திற்கு உட்பட்டுதான் எதிர்ப்பு காட்ட வேண்டும் என்றால் அவருக்காக சட்டம் தன்னை வளைத்து கொண்டதை பிறகு பார்த்த பின்பும் எப்படி கூற முடியும்..// இந்த நிலை எனக்கு இசைவில்லாதது. சரி மணி சொல்வது சரி என்றே வைத்துக் கொள்வோம். சில சூழ்நிலைகளில் சட்டத்துக்கு வெளியே செல்ல வேண்டி இருக்கிறது என்று மணி நினைக்கிறார். மணி அப்படி நினைக்கலாம், உ.போ.ஒருவனில் வரும் காமன் மான் அப்படி நினைத்தால் தவறா? இல்லை மணி, வினவு கை காட்டுபவர்கள் மட்டும்தான் சட்டத்திற்கு வெளியே செல்லலாமா? கோபால கிருஷ்ண நாயுடுவை கொன்றது தங்கள் இயக்கத்தினர்தான் என்று வினவு பெருமையுடன் கூறுகிறார். சட்டத்திற்கு வெளியே எப்போதும் செல்லக் கூடாது என்று நினைக்கும் எனக்கே அதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் நாயுடுவை நிஜத்தில் கொன்றால் சரி, காமன் மான் சினிமாவில் கொன்றால் தவறு என்பதில் இருக்கும் இரட்டை நிலை புரியாத மாதிரி ஏன் எல்லோரும் நடிக்கிறீர்கள்?
மணி மேலும் எழுதுகிறார் // முசுலீம் எல்லாம் தீவிரவாதின்னா, அதுக்கு கசாப், பின்லேடன் என்று சொன்னால் நான் பார்த்த விபச்சாரி ஒருத்தி மடிசார் கட்டியிருந்தாள் என்பற்காக மடிசார் கட்டிய பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்று நான் சொல்ல முடியுமா.. அது தவறுதானே…// அதைத்தானே அய்யா நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்? கசப், பின் லாதேன் வைத்து முஸ்லிம்கள் எல்லாரும் தீவிரவாதிகள் என்று சொல்லகே கூடாது அது போலத்தான்; இப்படி எழுதும் மணிக்கு சு. சாமி தவறானவர், தீட்சிதர்கள் தவறானவர்கள், மயிலாப்பூரில் பிராமின்ஸ் ஒன்லி என்று விளம்பரம் கொடுக்கிறார்கள், அதனால் பிராமணர்கள் எல்லாரும் ஜாதி வெறியர்கள், அயோக்கியர்கள், பூணூல் போட்டவர்கள் ஃபாசிச்டுகள் என்று கருத்துப்படம் போடுவது சரி என்று எப்படி சொல்ல முடிகிறது?
மேலும் மணி எழுதுகிறார். // என் பொறப்ப டிபைனசன் கொடுக்குது மனு ஸ்மிருதி. பூணூல் என்பது அதன் குறியீடா அதாவது ஒழுக்கமான தாய்க்கு பிறந்தவங்க அப்படின்னு என்னய முன்ன வைச்சே சொல்லுது. இத எப்படி பாக்கதுன்னு சொல்லித்தாங்க•. அறிவுக்கு உகந்ததா இருந்தா மாத்திக்கிறேன்.// இது கூடவா அடுத்தவர் சொல்ல வேண்டும்? மனு ச்ம்ரிதியை, குறிப்பாக பூணூல் போடாதவர்கள் ஒழுக்கமற்ற தாய்க்கு பிறந்தவர்கள் என்று சொல்லும் பகுதியை நிராகரியுங்கள்.
63 -ஆவது மறுமொழியில் ஜார்ஜ் புஸ்ஸு எழுதுகிறார். // வினவின் நேர்மையை கேள்விகேட்கும் நேர்மையற்ற RV அவர்களே எங்கே போனிர்கள்.// ஜார்ஜ் புஸ்ஸு, நான் எப்போதும் வினவு தளத்தில் யார் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று படித்துக் கொண்டிருப்பதில்லை. சரி, சு.சாமி/உ.போ.ஒருவன் விஷயத்தில் இரட்டை நிலையை சுட்டிக் காட்டிய பிறகு பல நாட்களாக வினவு பதில் அளிக்கவில்லை. அப்போதெல்லாம் நீங்கள் கேள்வி கேட்க மறந்து விட்டீர்களா?
68 .2.1-ஆவது மறுமொழியில் மணி எழுதுகிறார். // போலிகளிடமும், பார்ப்பனர்களிடமும் ஏன் மக்களிடமும் கூட நான் ஏன் நிதானமாக பேச முடிகிறது என்றால் அவர்களுக்கு தெரிந்த உலகத்தில் இருந்து தெரியாத உலகத்தை நாம் பிரித்து காட்ட வேண்டியிருக்கிறது. // அவருக்கு பார்ப்பனர்களிடம் நிதானமாக பேச முகிரதாம்! ஆனால் அவர் ஜாதியை எதிர்க்கிறாராம்! பலே பலே!
6. பிரஷ்யன் ஜங்கர் உற்பத்தி முறை என்பது ஒரு பெரிய தொடர். இந்த காண்டக்சிடில் மேலிருந்து திணிக்கப்பட்ட என்ற ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ளுங்கள். அவ்வுற்பத்தி முறையை பிறிதொரு காலத்தில் தெளிவாக்குகிறேன். பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக மன்னிப்பு கேட்பது பற்றியும் ஏற்கெனவே எழுதி விட்டேன். படித்துப்பராத்து விட்டு எழுதவும்.
7. ஜெநோடைப்பின் அவசியம் என்ன … அதில் நான் சொன்னது எப்படி புதிய அறிவியல் கண்டுபிடிப்பு என ஏளனம் எசய்தீர்கள் அய்யா… கொஞ்ச்ம் விளக்க முடியுமா அய்யா
8. எவ்வளவு பேர் திருந்துகிறார்கள் அதிலும் நான் பார்த்த்தில் என்பது சமூகத்தை தனிநபர்களது வெறும் தொகுப்பு எனப் பார்க்கும் எந்திரகதியான பார்வை. ஆனால் சமூகம் அப்படி இருப்பது இல்லை. அந்த சமூகத்தின் பொது உணர்வை மாற்றி அமைப்பது என்பதுதான் சமூக மாற்றத்தின் ஒரு அங்கமாக இருக்க முடியும். அதனைப் புரிந்துகொண்டு சமூகம் மாறுவதையும் அல்லது தேங்குவதையும் அவதானியுங்கள். அதாவது 21 பேரை சிந்திக்க அவ்வாறு தூண்டிய இழிந்த கருத்தை மொத்த சமூகமும் இழிந்த்து என்பதை புரிந்துகொண்டு தூக்கி எறிய வேண்டும்.
9. சட்டம் எல்லோருக்கும் நேர்மையாக ஒரே மாதிரி இருக்க வேண்டும். சிலருக்காக வளைந்து கொடுக்கிறது என்றால் அல்லது அந்த சட்டத்தின் காப்பாற்றுவதற்கான தூண்கள் சிலருக்காக மாத்திரம் வளைகிறது என்றால் அங்கு ஜனநாயகம் நிலவுவதாக கண்ணை மூடிக் கொள்ளும் பூனைக்ள் மாத்திரம்தான் கருத முடியும். சுசாமி பலமுறை அம்பலப்படுஃத்தப்பட்ட பிறகும் இந்த நாட்டின் அதிகார அமைப்புகளான நீதிமன்றமும், நாடாளுமன்றமும், அரசும் அவனுக்கு இயைந்து தன்னை வளைத்துக் கொள்ளும் சம்பவங்கள் நிறைய உண்டு. அது அம்பானி, டாடா, பிர்லா கும்பலுக்காகவும் வளைகிறது. கோபாலகிருஷ்ண நாயுடுதான் 44 போரை குழந்தைகளும் பெண்களுமான நாலணா கூலி உயர்வு கேட்ட வெண்மணியின் விவசாய கூலித் தொழிலாளர்களை அவர்கள் தலித் களாகாவும் இருந்த்தால் உயிரோடு காம்ன் மேனைப் போல ஜனநாயகம் வழங்காமல் கொளுத்தினான். அதற்கு நீதிமன்றம் அதாவது சுப்ரீம் கோஃர்ட் எப்படி வளைந்த்து தெரியுமா… இப்படிப்பட்ட பெரிய மனிதன் இந்த படுபாதக செயலை செய்திருப்பான ஃஎன்று நம்புவதிற்கில்லை என்று தீர்ப்பெழுதியது. எல்லா இடத்திலும் நியாயம் மறுக்கப்பட்ட அந்தக் குடும்பத்திற்கு எப்படி தீர்வு சொல்வீர்கள் அய்யா சட்டத்திற்கு உட்பட்டு… ஆனால் காமன் மேன் தனது தீர்ப்பில் குற்றவாளிகளுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை. அவனது ஜனநாயகத்தில் அதற்கு இடம் இல்லை. சுப்ரமணிய சாமி விசயத்தில் வைஷ் வெர்சாவாக உள்ளதே…
10. பூணூல் விசயத்தில் நீங்கள் சொல்வது சேக்ஷ்பியரின் கிங் லியர் நாடகத்தை ஞாபகப்படுத்துகிறது. அம்மணமாக போறவன் ஆடை அணிந்திருப்பதாக நினை இல்லாவிட்டால் நீ முட்டாள் என்கிறீர்கள்.
11. நான் ஜாதியை எதிர்ப்பது என்ற கோணம் அதனை ஒழிப்ஃபதற்காக•.. மாறாக நீங்கள் மையமாக நான் சொன்னவற்றை விட்டு விட்டு எதை சொல் வருகின்றீர்கள் என விளக்கினால் விவாதிக் உதவியாக இருக்கும்
மூன்றாம் பகுதி:
இங்கே என்னை கேள்வி கேட்பவர்கள் நிறைய உண்டு. பதில் சொல்பவர்கள் மிகச் சிலரே. இத்தனை மாதங்கள் ஆகியும் இங்கே ஜெநோடைப் கமென்ட் பற்றி மணி ஒருவரைத் தவிர வேறு யாரும் கருத்து சொன்னதில்லை. ஆனால் எல்லாரும் பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்க்காதவர்களாம்! டாக்டர் ஜெநோடைப் என்றால் வளர்ப்பு என்று புது வரையறை வகுத்துப் பார்த்தார். வினவு ஆமாம் அப்படித்தான் என்று அதற்கு சப்பைக்கட்டு கட்டினார். மணி இப்போது முற்போக்கு ஜெநோடைப், பிற்போக்கு ஜெநோடைப் என்று புதிய அறிவியலைக் கற்றுத் தருகிறார்.
மீண்டும் மீண்டும் சு. சாமி-உ.போ.ஒருவன் விஷயத்தில் வினவு சமாளித்துப் பார்க்கிறார். முதலில் கண்டு கொள்ளவே இல்லை. நான் விடாமல் மீண்டு மீண்டும் இரட்டை நிலையை சுட்டி காட்டியதும் உ.போ.ஒ. பதிவிலேயே அதற்கான பதில் இருப்பதாக சொன்னார். உ.போ.ஒ. பதிவில் சு. சாமியைப் பற்றி ஒரு வார்த்தை கிடையாது. பிறகு சட்டத்தை கையில் எடுக்கவில்லை என்று சொல்லிப் பார்க்கிறார். இவர்தான் பல முறை சட்டம் சாமி முன் கைகட்டி நிற்கிறது, எங்களுக்கு சட்டத்தை கையில் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று எழுதியவர். இன்று கோபால கிருஷ்ண நாயுடுவை கொன்றது எங்கள் இயக்கத்தவர்தான் என்று பெருமைப் படுகிறார். ஆனால் சினிமாவில் சட்டம் ஒன்றும் செய்யமுடியாத தீவிரவாதிகளை காமன் மான் கொன்றால் due process எங்கே என்று கேட்கிறார். காமன் மான் (பூணூல் போட்ட) ஃபாசிஸ்ட் என்று எழுதுகிறார். இரட்டை நிலையைப் பற்றி மட்டும் வாயை திறக்க மாட்டார். ஒன்று சில சூழ்நிலைகளில் சட்டத்தை கையில் எடுக்கலாம்; இல்லை எப்போதும் எடுக்கக் கூடாது. வினவின் கருத்து சு. சாமிக்கு எதிராக எடுக்கலாம்; கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு எதிராக எடுக்கலாம்; ஆனால் தீவிரவாதிகளை கற்பனை சினிமாவில் கூட சட்டப்படிதான் தண்டிக்க வேண்டும். அதாவது இவர்தான் சுப்ரீம் கோர்ட்; யார் குற்றவாளி யார் இல்லை என்று இவர் சொல்வதுதான் இறுதியானது. மற்ற யாருக்கும் இவர் அளவுக்கு சித்தாந்த தேர்ச்சி, வர்க்க உணர்வு, கம்யூனிச நிபுணத்துவம் கிடையாது, அதனால் அவர்கள் யாரும் இவர் அனுமதி இல்லாமல் சட்டத்தை கதையில் கூட கையில் எடுக்கக்கூடாது. யாரவாது விஜயகாந்துக்கு சொல்லிடுங்கப்பா! அவர் தெரியாத்தனமா சினிமாவில நாலு தீவிரவாதியைப் பிடிச்சு உள்ளே போட்டுடப் போறார்!
அப்புறம் பூணூல் போட்டவன் ஃபா சிஸ்ட் என்று ஒரு கருத்துப் படம். ஆறு முனை Star of David இருந்தால் அவன் ஜெர்மனியின் எதிரி என்று ஹிட்லர் சொன்னாராம். அதுதான் ஞாபகம் வருகிறது! ஆர.எஸ்.எஸ்.காரர்கள் என்று காண்பிக்க அப்படி கருத்துப் படம் போட்டாராம். அப்படி என்றால் இரண்டு முறை; பூணூல் போட்டவன், குடுமி வைத்தவன், நாமம் போட்டவன் ஆர.எஸ்.எஸ்.காரன், ஆர.எஸ்.எஸ்.காரன் என்றால் ஃபா சிஸ்ட். சரி இரண்டாவது கூரைப் பற்றி எனக்கு சொல்ல அதிகமில்லை, ஏனென்றால் எனக்கு ஆர.எஸ்.இச்சைப் பற்றி அரசால் புரசலாகத்தான் தெரியும். ஆனால் நாட்டில் நாலைந்து கோடி பிராமனரக்ல் இருக்கிறார்கள் என்று கேள்வி; ஆர.எஸ்.எச்சில் நாலைந்து லட்சம் பேர் இருப்பார்களா என்று தெரியவில்லை. என்ன மழுப்பல்! பதிலே இதற்கும் வராது!
ஆர்.வி நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பலமுறை பதிலளித்த பிறகும் கீறல் விழுந்த ரிக்கார்ட் பிளேயேரைப் போல அறுப்பது தாங்க முடியவில்லை. எத்தனை மதக்கலவரங்கள், எத்தனை ஆயிரம் மக்கள் படுகொலை….இத்தனைக்குப் பிறகும் ஆர்.எஸ்.எஸ்ஸைப் பற்றி ஒன்றும் தெரியதாம். உலகத்துக்கே தெரிந்த உண்மை ஆர்.விக்கு தெரியவில்லை என்றால் அவரது சிந்தனை நடுநிலைமையானதல்ல என்றே சொல்ல முடியும். அடுத்து எல்லா விசயங்களையும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதில் ஆர்.விக்கு நிகராக யாரையும் சொல்ல முடியாது. கீழ் வெண்மணியில் பல பத்து மக்கள் தீ வைத்து கொன்றதற்கு காரணமான நாயுடுவை சமூகத்தில் அந்தஸ்தான மனிதர் அவர் அப்படி செய்திருக்க முடியாது என்று நீதிமன்றம் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி விடுதலை செய்தது. காரணம் இந்த நாட்டின் எல்லா அமைப்புகளும் பார்ப்பன, ‘மேல்’சாதியினருக்கு சேவகம் செய்வதே யதாரத்த்தம். அதனால்தான் குஜராத்தில் மோடி எனும் கொலைகாரன் ஜென்டில்மேனாக உலாவருவதும், அதற்கு டோண்டு போன்ற அல்லக்கைகள் ஜால்ரா அடிப்பதும் நடக்கிறது. குஜராத் இனப்படுகொலையில் குற்றவாளிகளை இந்த நாட்டின் நீதிமன்றம் விடுதலை செய்வதே இறுதி என்றால் உறவுகளை இழந்த ஒரு முசுலீம் இளைஞனின் மனநிலை ஏன் பயங்கரவாதத்தை நோக்கி போகாது? இந்த இடத்தில் ஆர்.வி என்ன சொல்வார் என்றால் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதையே அமல்படுத்தவேண்டும் என்று இந்த பயங்கரங்களுக்கு வக்காலத்து வாங்குவார். எனவே சட்டமும், நீதியும் மறுக்கப்பட்ட மக்கள் வன்முறையை கையிலெடுப்பதற்கு காரணம் இந்த நாட்டின் அதிகார அமைப்புகளே. இந்த அதிகார அமைப்புகளுக்கு போதிய அதிகாரம் இல்லை சர்வாதிகாரம் வேண்டும் என்பதே உ.போ.ஒ வனின் காமன் மேன் கேட்கும் சலுகை. ஏற்கனவே சட்டம் மேல்வர்க்கத்தினருக்கும் மேட்டுக்குடிக்கும் சேவை செய்யும் போது அது பத்தாது என்பதும், நீதி மறுக்கப்பட்ட மக்கள் எதிர் வன்முறையை கையெலெடுப்பதும் ஒன்று என சம்பபடுத்தி பார்ப்பது அயோக்கியத்தனம். ஈராக்கில் அமெரிக்கா செய்யும் சட்டப்பூர்வமான கொலைகள் ஆர்.வியின் வாதப்படி சரியானது. அதற்கு எதிராக இராக்கிய மக்கள் நடத்தும் போராட்டம் சட்டபூர்வமானதல்ல எனவே ஆர்.வி ஜார்ஜ் புஷ்ஷின் பிரச்சாரபீரங்கியாக இருப்பதற்கு தகுதியானவர்.
ஜேனோ டைப் பற்றி பலமுறை எழுதியும் ஆர்.வி அவருக்கு விரும்பிய பதில் கிடைக்காத்தினால் கீறலை மீண்டும் மீண்டும் போட்டு படுத்துகிறார். பார்ப்பன சாதியில் பிறந்து பாரப்பன சூழ்நிலையில் வளர்ந்து ஜனநாயகமோ, சமூகநீதியோ அறிமுகமாக ஒரு பார்ப்பனன் பார்ப்பானாகத்தான் வளருவான். அதற்கு எடுத்துக்காட்டு டோண்டு ராகவன். டோண்டுஅளவிற்கு இல்லையென்றாலும் ஆர்.வியும் கூட பார்ப்பனியத்துக்கு பெருமளவு பலியாகித்தான் இருக்கிறார். இதற்கு காரணம் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையோ, போராட்டத்தையோ பார்த்திராத படியால் அவர் பார்ப்பனர்களுக்கு மட்டும் வக்காலத்து வாங்குகிறார். காரணம் அவர் அந்த சாதியில் பிறந்ததே. ஒரு வகையான லிபரல் கண்ணோட்டம் அவரிடம் இருப்பதற்கு காரணம் அவர் அமெரிக்காவில் இருப்பதே. ஒருவேளை இங்கேயே ஒரு அக்ரகாரத்தில் அவர் வளர்ந்திருந்தால் அவரும் ஒரு டோண்டுவைப்போலவே ஆகியிருப்பார். பிறப்பும், வளர்ப்பும், சமூகச் சூழலுமே ஒருவனின் சாதிய பிற்போக்கை உருவாக்குகிறது. அதிலிருந்து வெளியேற நினைப்போர் முதலில் சுயசாதி அபிமானத்தை துறந்து அதை எதிர்ப்பவராக மாறவேண்டும். மாறாக அதற்கு வக்காலத்து வாங்குபவன் ஒருக்காலும் ஜனநாயகவாதியாக மாறமுடியாது. அந்த வகையில் ஆர்.வியிடம் நாங்கள் ஜனநாயகத்தை காணவில்லை.
வினவு,
// பார்ப்பன சாதியில் பிறந்து பாரப்பன சூழ்நிலையில் வளர்ந்து ஜனநாயகமோ, சமூகநீதியோ அறிமுகமாக ஒரு பார்ப்பனன் பார்ப்பானாகத்தான் வளருவான். //
எத்தனை நாள்தான் இந்த பொய்யை சொல்லப் போகிறீர்கள்? ஜெநோடைப்புக்க்ம் வளர்ப்புக்கும் என்ன சம்பந்தம்? ஜெநோடைப் என்பது பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஜீன்கள் என்பது தெரியாத மாதிரி எத்தனை நாள்தான் நடிப்பீர்கள்? ஜீன்களுக்கும் வளர்ப்புக்கும் என்ன சம்பந்தம்? என் கருத்துகள் என் ஜீன்களால் உருவானது என்று டாக்டர் சொல்கிறார், அதற்கு நீங்கள் சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள். அப்படி என்றால் பிறப்பால் ஒருவரின் கருத்துகள் உருவாகின்றன என்ற வாதத்தை நீங்களும் ஏற்கிறீர்கள். வாதத்தில் அடிப்படை நேர்மை இல்லாமல் போய்விட்டதே? என் கருத்துகளுக்கு என் வளர்ப்பு, சூழ்நிலை காரணம் என்றால் ஜெநோடைப் எங்கிருந்து வந்தது? என் கருத்துகளுக்கு அடிப்படை என் ஜெநோடைப் என்றால், இதைத்தான் ஜாதீயவாதிகள் சொல்கிறார்கள் – உன் பிறப்பு உன் இடத்தை தீர்மானிக்கிறது என்று. இதனால்தான் சொல்கிறேன் உங்கள் ஜாதி எதிர்ப்பு நிலை வெறும் வேஷம், போலித்தனம் என்று.
Genotype’s defintion:
1. the genetic makeup of an organism or group of organisms with reference to a single trait, set of traits, or an entire complex of traits.
2. the sum total of genes transmitted from parent to offspring.
மீண்டும் மீண்டும் பொய் சொல்லிக்கொண்டே இருக்கும் உங்களிடம் இனியும் என் நேரத்தை வீனடிக்க விரும்பவில்லை.
//2. the sum total of genes transmitted from parent to offspring.//
நீங்கள் கூறும் டிபைனைசன் தவறு. அறிவியலை உங்கள் விருப்பத்திற்கு திரிக்காதீர்கள் ஆர்வி
//எத்தனை நாள்தான் இந்த பொய்யை சொல்லப் போகிறீர்கள்? ஜெநோடைப்புக்க்ம் வளர்ப்புக்கும் என்ன சம்பந்தம்? ஜெநோடைப் என்பது பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஜீன்கள் என்பது தெரியாத மாதிரி எத்தனை நாள்தான் நடிப்பீர்கள்? ஜீன்களுக்கும் வளர்ப்புக்கும் என்ன சம்பந்தம்?//
ஜீன்கள் என்ன கடவுள் அருளியதா? சுற்றுப்புறமும், வளர்ப்பும் ஜீன்களின் மீது ஆதிக்கம் செலுத்தாது எனில் பரிணாம வளர்ச்சியே நடந்திருக்காது.
ஆயிரம் வருடம் அடிமையாயிருந்தவனின் ஜீனும், ஆயிரம் வருடம் உழைக்காமல் சுரண்டிக் கொழுத்தவனின் ஜீனும் ஒன்றல்ல்.
ஆனால், மனிதன் என்ற வகையில் பகுத்தறிந்த வினையாற்றும் சக்தி படைத்தவர்கள் என்ற வகையில், ஜீன்கள் முன்னிருத்தும் உயிரியல் உந்துதல்களையும் மீறி நம்து நடவடிக்கைகளை முறைப்படுத்த இயலும் என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.
இந்த வகையில், பார்ப்பனர்களுக்கு என்று சில குணாம்சங்கள் அவர்களின் வரலாற்று வழியிலும், வளர்ப்பு சூழலிலும் உருவாகுவது இயல்பே. அதனை மீறி சரியான விசயத்தை முன்னெடுக்கும் பிறப்பால் பார்ப்பனர்கள் இருப்பதும் வெகுவாக சாத்தியமானதே. இந்த விசயம் ஆர் விக்கு புரியவில்லை என்பது அவர் விரும்பிய பதிலை தேடி அலைவதே காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
//Genotype’s defintion:
1. the genetic makeup of an organism or group of organisms with reference to a single trait, set of traits, or an entire complex of traits.
2. the sum total of genes transmitted from parent to offspring.//
ஜீன்கள் கடத்தப்படுவது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த ஜீன்கள் பெற்றோரின் வாழ்க்கை சூழலால் பாதிக்கப்படுவதுதான் முக்கியமான உண்மை.
நண்பர் ஆர்.வி, பிறப்பு ஒருவனின் சிந்தனையை தீர்மானிப்பது இல்லை, அவனின் புற நிலையும், வாழ்க்கை முறையும் தான் சிந்தனையை தீர்மானிக்கின்றன.
பல நேரங்களில் தான் சார்ந்த சமூகத்தின் சிந்தனையை உள்வாங்கியே பலரும் வளர்கின்றனர், உதாரணமாக அரசியல்வாதிகளின் பிள்ளைகள் எல்லாம் என் அப்பன் ஒரு திருடன், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறான் , அது தவறு என நினைத்து அப்பனை எதிர்த்து அரசியல் பண்ணுவதில்லை.. அதே அரசியலில் சங்கமம் ஆகி அப்பனை விட பல மடங்கு ஊழல் செய்கிறான்..
ஜீநோடைப் என்பது மேற்கூறிய அர்த்தத்திலேயே கூறப்பட்டு இருப்பதாக நான் உணர்கிறேன்.. இதை தவிர்த்து பிறப்புதான் ஒருவனின் சிந்தனையை தீர்மானிக்கும் என்றால் அது தவறு.
பல நேரங்களில் நீங்கள் “வார்த்தையை” பிடித்து தொங்குவது போல் தெரிகிறது, வினவு நெகிழ்வு தன்மை பற்றி குறிப்பிடும் போதும், இப்படிப்பட்ட நெகிழ்வுதன்மை மன மேடை விளம்பரங்களில் மட்டும் அல்ல, வீடு வாடகைக்கு விடுவதிலும் பார்ப்பனர்களுக்கு இருப்பது இல்லை, எனும் பொருளில் குறிப்பிட்டு இருந்ததை ஒரு சில வார்த்தைகளுக்காக வீணான விவாதத்தில் ஈடுபட்டு இருந்தீர்கள். இதனை பரிசீலியுங்கள்.
ஒரு சில வாக்கியங்களை அதன் முழுப் பொருளும் தெரியாமல் உள்வாங்குவது மிக தவறான முடிவுகளுக்கு இட்டு செல்லும், உதாரணமாக பெரியார், தாழ்த்தப்பட்ட மக்களை இஸ்லாமிற்கு மாறுமாறு கோரியதன் பின்னணியை புரிந்து கொள்ளாமல் பெரியார் கடவுளை மறுக்கவில்லை அவர் அல்லாவை ஆதரித்தார் என யாராவது கூறுவது தவறான முடிவுகளுக்கு இட்டு செல்லும். ஒரு வார்த்தையை மட்டும் வைத்து அதனுடைய பொருளை மட்டும் புரிந்து கொண்டு நாம் விவாதித்தால் அது சரியான முடிவை தராது. ஒரு வாக்கியம் எந்த சூழ்நிலையில் எதை விளக்குவதற்காக சொல்லப்பட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
Bhagat,
If I make a statement that George Bush invaded Iraq because he is a follower of Marx and that is what communist philosophy dictates – what would your reaction be? Would you interpret that as Haliburton’s welfare dictated it?
The statement made by Dr. Rudhran is straightforward – my opinions are a result of my genotype. Why would I or anybody else interpret it as meaning the exact opposite? – that my opinions are a result of my upbringing? Yet it is exactly this interpretation that Vinavu claims; even you, who acknowledges that opinions are not part of genotype, say that genotype should be interpreted as upbringing. If Dr. Rudhran meant to say upbringing and wrote genotype instead, it is upto him to say so. He has never said it. Vinavu consistently says genotype means upbringing. It is upto Vinavu to let the world know why he claims the exact opposite meaning for a word.
Discussions are based on words. If people keep claiming that brahmin doesn’t mean a brahmin by birth and genotype actually means upbringing, it is better to stay away from this kind of intellectual dishonesty.
At least people like Mudhal Thalaimurai, who claims that genotypes are different for different castes, has the guts to stand by the statement and take an openly casteist view. And Mani claims that there are different genotypes for progressive and non-progressive thought. Asuran implies that the brahmins genes have undergone some kind of change, perhaps a mutation. I disagree with these people vehemently – but at least these people have the guts to take a stand and not claim that genotype means upbringing.
Do you realize that in all these months, you are the only one who has actually said thoughts, opinions etc. are not the result of birth? People who claim that all are born equal, actually defend the genotype comment. I cannot tolerate this lack of integrity any more. Spin doctors, all.
I am reminded of the pro-slavery arguments in the 19th century. Negroes are genetically different, hence it is okay to enslave them! Or Hitler’s arguments; Jews are genetically impure, and hence it is necessary to kill them. Brahmins are born with the “non-progressive” thought gene, hence it is okay to attack them. Pongada neengalum unga logickum!
And even you hedge later saying that you think genotype is used in the sense of upbringing! What next, the word truth is used in the sense of lying?
I came here to read Rathi’s article and again I got sucked into writing a reply. Dammit!
நான் மணி
இந்த பின்ன்னூட்டத்தில் அனைத்துஃம தொகுத்து தந்துள்ளீர்கள்.
1. ஜெநோடைப்பின் அவசியம் என்ன•. ஒரு நபரின் ஜெநோடைப்பை ஏன் கண்டறிய வேண்டும்.. அதனுடைய பய்யன் என்ன என நீங்கள் பார்த் தளங்களிலேயே கூட விபரம் இருக்குமே அதன்பிறகும் நான் கண்டறிந்த்து என அதற்கு அறிவியலா என்று பின்னூட்டத்தை மீண்டும் வைத்திருப்பது சரியா…
2. சட்டத்தை மதித்தால் ஜனநாயகம் செழிக்கும் என்று பார்க்கின்றீர்கள். சட்டம் வளைந்தால் ஜனநாயகம் பாசிசமாகும் என்று உங்களுக்கு புரியவில்லையா.. உபோஉ வில் தானே முடிவுசெய்த குற்றவாளிகளுக்கு அவர்தரும் தண்டனை ஜனநாயக நடவடிக்கையா… சுசாமிக்கு முட்டையடி கொடுத்த்தால் அவரது ஜனநாயக பிதற்றல்களை அடக்கியா விட்டார்கள் ஸோ கால்டு சட்டத்தை கையில் எடுத்தவர்கள்.. அடுத்து சுசாமி வந்த்து நீதிமன்றத்திற்கு ஜனநாயக உரிமையை கோரி தீட்சிதர்களுக்கு பெற்றுத் தரவா…
3. கோபாலகிருஷ்ண நாயுடு பற்றி ஏற்கெனவே சொல்லி விட்டேன். மேலதிகமாக தெரிந்து கொள்ள அவரது கேசின் தீர்ப்பை படித்துவிட்டு அல்லது அந்த வரலாற்றை படித்துவிட்டு விவாதித்தால் நீங்கள் தெளிவடையலாம்.
4. பூணூல்தான் பாசிசம் என்றால் உங்களுக்கு புரியாது. பாசிசம்னா எதோ ஒரு பத்து வருசம் கத்தி துப்பாக்கி தூக்கிட்டு வந்தால் சர்வாதிகாரமா இருந்தால்தான் சொல்வீர்களா… இரண்டாயிரம் வருசமா மனித சமூகமாக உரிமைகளை பறித்து அவனை வேசிமகன் என்று குற்ற உணர்வில் இருத்தி வைத்து கல்வியை மறுத்து இப்படி பல விசயங்களில் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை தடுத்த ஒரு சாதியின் பழைய அடையாளம் பூணூல். பூணூலை பார்க்கும் போதெல்லாம எனது ஜெநோடைப் எனக்கு வேசி மகன் என்ற குற்ற உணர்வால் என்னைத் துடிக்க வைக்கிறது. இது உங்களது ஜனநாயக உரிமையில் கவனத்தில் கொள்ளுமளவுக்கு பிரச்சினை இல்லாத ஒன்றாக இருக்கிறது என்றாலே பிரச்சினை உங்களிடம் இருஃப்பதும் இரட்டை நிலை நீங்கள் எட்டுப்பதும் புரியவில்லையா.. பாசிஷ்டு என்ற சோல் இன்னும் சமூக உணர்வில் மட்டத்தில் கெட்டவார்த்தை ஆகவில்லை… ஆனால் வேசி மகன் என்பது.. கேட்டா அதனை நீக்க சொல்வீர்கள்.. அதையும் நான்தான் நீக்க வேண்டுமா.. அதனால் பயன்பெற்ற இன்றும் அதனை தனது மேல்நிலைக்கு ஆதாரமாக கொண்டிருக்கிற சாதியின் ஜனநாயக சக்திகள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் செய்ய மாட்டார்களா… அப்படிச் செய்பவ்ர்களை நான் நிறைய அறிவேன். உங்களைப் போன்றவர்கள் பூணூலின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். மாறாக அதனை அணிவது உரிமை என்றால் அதனை நடப்பில் அம்மணமாக தெருவில் ஓட ஒரு வயதுவந்த ஆண் கோரும் தனிமனித உரிமைக்குத்தான் ஒப்பிட முடியும்
Mani,
Please refer to the following URLs –
http://dictionary.reference.com/browse/genotype
http://www.medterms.com/script/main/art.asp?articlekey=8472
or buy a dictionary. Check your facts before you accuse me of twisting scientific definitions. You are the formulator of this new theory of “progressive thought” genes and “non-progressive thought” genes and you accuse me of twisting facts! Truly ironic. Just like Vinavu – who keeps saying genotype is everything to do with environment and not heredity. As if he doesn’t know that genotype is determined the instant the sperm mates with the egg!
ஜீன்கள், கிரோமோசோம்கள் பற்றிய ஆர் வியின் கருத்துமுதல்வாத கண்ணோட்டங்களைப் பற்றி பேசும் பழையதொரு கட்டுரை பகுதிகள்
கீழே லைசென்கோ மார்கன் மரபு கடத்தல் கோட்பாடை மறுதலிக்கும் அம்சத்தை தருகிறேன். பிறகு படிப்பவர்களே நீலகண்டனுடைய நம்பகத்தன்மையை எடை போட்டுக் கொள்ளுங்கள்.
“”Following Weismann, the Mendelist-Morganists contend that the chromosomes contain a special “hereditary substance” which resides in the body of the organism as if in a case and is transmitted to coming generations irrespective of the qualitative features of the body and its conditions of life. The conclusion drawn from this conception is that new tendencies and characteristics acquired by the organism under the influence of the conditions of its lift and development are not inherited and can have no evolutionary significance.””
மேண்டலின்-மார்க்ன் பிரிவைச் சேர்ந்தவர்களின் கூற்றுப் படி, குரொமோசோமில் இருக்கும் ஒரு சிறப்பு பொருள் குறிப்பிட்ட உயிரினத்தின் சுற்றுச் சூழலினால் பாதிக்கப்படாமலேயே ஒரே தகவலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது. உண்மை என்னவெனில், சுற்றுச் சூழல் உள்ளிட்ட பல விசயங்களின் பாதிப்பினால் உருவாகும் தகவல்களும் சேர்ந்தே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்பதை நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.
இதைத்தான் லைசென்கொ மறுக்கிறார். மேலேயுள்ள கருத்து தவறுதானே? இது பரினாமத்துவத்தை மறுப்பதுதானே? அதை லைசென்கோ மறுப்பதில் என்ன தவறுள்ளது?
“”In other words, whether qualitative variations of the nature of vegetable and animal organisms depend on the conditions of life which act upon the living body, upon the organism.
The Michurin teaching, which is in essence materialist and dialectical, proves by facts that such dependence does exist.
The Mendel-Morgan teaching, which in essence is metaphysical and idealist, denies the existence of such dependence, though it can cite no evidence to prove its point.””
“”Naturally, what has been said above does not imply that we deny the biological role and significance of chromosomes in the development of the cells and of the organism. But it is not at all the role which the Morganists attribute to the chromosomes.””
இங்கு லைசென்கோ, மரபணுவில் நடைமுறை வாழ்க்கை ஏற்படுத்தும் பாதிப்புக்குள்ள தொடர்பு குறித்து சொல்கிறார். நீலகண்டன் சொல்லுவது போல குரோமோசோம் உள்ளிட்டவற்றின் பங்களிப்பை அவர் மறுக்கவில்லை(இதனை இரண்டாவது மேற்கோள் குறிப்பிடுகிறது). மாறாக அவற்றுக்கு மட்டுமே அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைத்தான் மறுக்கிறார்.
ஆக, நடைமுறை வாழ்க்கை மரபணுவில் பதிய வைக்கும் செய்திகளை மறுக்கும் மாண்டலிய-மார்கன் குழுவினரின் சில கருத்துக்களைத்தான் லைசென்கோ மறுக்கிறார். இப்படிப்பட்ட கருத்துக்கள் யாருக்கு தேவைப்படுகிறது? வேறு யாருக்கு கருத்து முதல் வாதிகளான மத வெறியர்களுக்குத்தான் தேவைப்படுகிறது.
அதென்னவோ தெரியல, என்னோட முக்கியமான கேள்விகளுக்கு எல்லாம் ஆர்வி எதிர்வினை புரிவதே இல்லை. ஜீன் பற்றி நானும் கருத்து சொல்லிருக்கேன். அதுக்கு பதில் இல்லை.
I am Mani
.. sorry for my misunderstanding the word ‘sum’ in urs’ drs’ definition…
Cultural Dictionary:
genotype : A combination of alleles situated on corresponding chromosomes that determines a specific trait.
நன்றி லெனினுக்கு,
ஒரு பாதி பதில் என்றாலும் நேரடியாக உங்கள் கருத்தை வைத்ததற்கு நன்றி. ஆனால் முதல் பாதி
//தாழ்த்தப்பட்டவர்கள் புத்தமதத்திற்கு மாறலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா//
என்பது குறித்து எதுவும் கூறவில்லை.
அப்படியும் இல்லையென்றால் உங்களுக்கு வேறு மாற்றுக் கருத்து இருப்பின் வைக்கவும். விவாதம் ஆரோகியமாக இருக்கும். தெளிவான விவாதம் அனைவரும் தொடங்க ஏதுவாக இருக்கும்.
ஆர் வி அவர்களே, நேரடியான விளக்கம் அளிக்காமல் நழுவுகிறீர்கள. விவாதத்தின் மையத்தை விட்டு விலகி வேறு பக்கம் செல்கிறீர்கள். என்னுடைய விளக்கத்தில் பேசுவது பிரச்சனையல்ல. அக்கம்பக்கத்திலுள்ளவர்களில் நடைத்தையை குறிக்கிறேன், அதுதான் முக்கியம். அதையே விளக்கினேன். நீங்கள் உணவருந்த அழைத்தால் கண்டிப்பாக வருவேன். எனனுடன் அசைவ உணவு சாப்பிட்ட உங்களை போன்ற நண்பர்களும் வீடு என்று வரும்போது நடவடிக்கைகள் மாறிதான் விடுகிறது. அதனால் வீட்டிற்கு அழைப்பாதாலே எனது நண்பன் என்னை (நீங்கள் கூறுவது போல்) ஏற்றுக் கொண்டான் என்றா அர்த்தம். மற்றவர்கள் வகுக்கும் எல்லை கோடு போல் இல்லாமல் இந்த எல்லை கோடு வித்யாசமானது.
நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். எனினும் நன்றி
Genotype comment has pained RV too much, especially the non-progressive etc.
The brahmins, as a caste, or as an exclusive group in Indian society, is as ancient as Hindu religion. In TN, too. Only during the six or thereabouts decades, the brahmins came out of their agraharams and brahminism. In our day, their coming out has accelerated, thanks to anti-brahmin movment as also the changes taking place in our society in all spheres, and people seeking more lucrative options to lead a comforatbale life. When we disregard the changes in the life of brahmins, and stop the clock at 1940s and before, then, the genotype issue becomes relevant for brahmins.
Millienia of time period in which the brahmins were frozen into a certain life style based on Hindu religion, has turned them into a repository, a custodian, a possessor of certain traits of which the conservtism, fierce pride in the past, adamantine tenacity of brahminsim are hall marks.
Therefore, it is true that non-progressive ideas (conservatism) is synonymous with brahmins. They were against any changes; and hence, they are against any progressive ideas. Their secluded and insulated lives have made them frozen in the past.
RV, before getting annoyed, will read the above carefully and ponder over them a little more, please.
I think Dr Rudran’s ‘genotype’ comment, and Mani’s non-progressive ideas of brahmins – all based on the historical life and legace of the brahmins.
இதனால் தோழர்கள் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்,
தோழர் மணி இன்னும் எத்தனை பேர் வந்து சொன்னாலும் சுயவிமர்சனம் ஏற்க மாட்டார்!
சனி என்ற மணியை தெரியாத தோழரை நீங்கள் விமர்சனம் செய்தாலும், அவரே வந்து சுயவிமர்சனம் ஏற்றாலும், அவர்(மணி) ”சுயவிமர்சனம் ஏற்க முடியாது” என்பதே அவர் நிலைப்பாடு!
நீங்க அமைப்பின் அறிமுகத்தில் இருப்பவர் ஆயினும், சித்தாந்தங்கள் பற்றி அறிமுகத்தில் இருப்பவர் ஆயினும் கவலையில்லை! அவர் (மணி) சொன்னால் சொன்னது தான்.
நாங்கெல்லாம் எப்புடி????
கோமாளி reverse நீங்க செய்வது உங்களுக்கே நியாமா இருக்கா? அதான் ஒருவழியா ஆஃப் ஆன மேட்டர ஆன் பண்ணுறீங்களே… அங்க ரெண்டு பாய்ங்களோட நான் மல்லுகட்டிகிட்டு ஒரு கை கொடுக்கக்கூடாதா???
இன்னும் ஆஃப் ஆகவில்லை தோழர், அவர் சுயவிமர்சனம் ஏற்க மறுப்பதை அப்படியே விட்டுவிடலாமா? நாமும் அமைதியை கடைபிடிக்க, அவரும் அமைதியை கடைபிடிக்கிறார். இதனால் மேட்டர் ஆஃப் ஆகவில்லை மாறாக ஸ்டேண்டு பை மொடுக்குதான் சென்றிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
“இயற்கையிலும் சரி சமுதாயத்திலும் சரி, ‘கலப்பற்ற’ நிகழ்வுகள் எவையும் இல்லை.” ஆனால் ஒரு நிகழ்வின் தன்மையை இன்னதென்று வரையறுத்துச் சொல்லும் நேரத்தில், அதில் இது கலந்திருக்கிறதே “என்பதை யாரேனும் நினைவுபடுத்துவாரானால் அவர் அளவு கடந்த அசட்டுப் புலமை வாய்ந்தவராகவோ அல்லது சொற்புரட்டராகவோ எத்தராகவோதான் இருக்க வேண்டும்”
தோழர் மணி,
நீங்கள் சொன்ன தத்துவ விளக்கம் எனக்கு புரியவில்லை. தயவு செய்து புரியும் நிலையில் கீழிறங்கி வந்து சொல்லுங்களேன்!
தோழர் மணி,
நீங்கள் ஏன் இது போன்று மிகவும் சூக்குமமான வார்த்தைகளைப் போட்டு எழுதுகிறீர்கள். நீங்கள் இவ்வாறு எழுதினால் தனிமைப்பட்டு விடுவீர்கள் என்பதை உங்களுக்கு கவனப்படுத்துகிறேன், மேலும் தோழர் ளிமாகோ கூறியது போல மேட்டர் இன்னும் ஆப் ஆகவில்லை. மணி சுய விமர்சனம் ஏற்க முடியாது என்று கூறியதை அப்படியே விட்டுவிட்டு நகர முடியாது. இது போன்று ‘முடியாது’ என்று முடிவுகளை அறிவிக்கும் தோழர் மணியினுடைய போக்கு அதிர்ச்சியாக இருக்கிறது, அமைப்பில் இயங்குகிற ஒரு தோழர் இது போல பிடிவாதம் பிடிக்க முடியுமா ? இது போன்று நடந்து கொள்வது நடுத்தர வர்க்க, குட்டி முதலாளி வர்க்க வறட்டு பிடிவாதமாகும்.
தோழர் மணி எதையோ ஒன்றை தெரியாமல் கூறிவிடவில்லை, தான் கூறியதை இப்பொதும் சரி என்றே கருதுகிறார் என்பதை தொடர்ச்சியான அவருடைய விளக்கங்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. . ஒரு தோழரை அமைப்பிலிருக்க தகுதியற்றவர் என்றும், ஆர்.எஸ்.எஸில் இருக்கத்தான் தகுதியானவர் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு கூறியது எந்த நிலையிலிருந்து பார்த்தாலும் ஏற்க முடியாத இழிவுபடுத்தலாகும். எனவே தோழர் மணி தனது தவறுக்கு சுயவிமர்சனம் ஏற்பது தான் சரியானது. அது வரை இந்த விசயம் ஒரு முடிவுக்கு வராமல் ஆப் ஆகாது என்பதையும், அவ்வாறு ஆப் ஆகி முடிந்துவிட்டதாக கருதுவது உணர்வுபூர்வமாகவே இதை மறக்க முயல்வதாகும், தோழர் மணியை தவறிலிருந்து காக்க முயல்வதாகும், அவருக்கு மட்டும் தாராளவாதம் காட்டுவதாகும் என்று நான் கருதுகிறேன்.
தோழர்கள் சூப்பர் லிங்க்ஸ் மற்றும் ளிமாகோ, இந்த விவாதம் இங்கு வைத்து விவாதிக்கப்படும் எல்லையை எப்போதோ கடந்து விட்டது என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். இரயா இடுகையில் பின்னூட்டமிட்ட பல தோழர்கள் அந்த காரணத்தினால்தான் இங்கே இன்னமும் கருத்தளிக்கவில்லை என்று நான் கருதுகிறேன். ”முறையான” வழிமுறைகளில் இதை உடனடியாக அணுகுமாறு தோழர்களை கோறுகிறேன்.
சமரசப்படுத்துவதன் மூலம் முரண்பாடுகளையோ தவறுகளையோ களைய முடியாது.
இந்த தோழரின் (மணி) வரம்பு மீறிய பேச்சை பற்றி நான் அமைப்பில் தெரிவித்தேன். அதற்கு தோழர்கள் இதையெல்லாம் அமைப்பு மூலமாக கேட்க முடியாது, அங்கேயே அது தவறு என்பதை சுட்டிக்காட்டுங்கள் தவறை ஏற்காவிட்டால் புரியவைக்க போராடுங்கள் என்று கூறினார்கள் அதன் படி என்னா முடிந்தவரை தோழர் மணிக்கு என்னுடைய கருத்தை நான் கூறிவிட்டேன் இனி பரிசீலிக்க வேண்டியதும் முடிவு எடுக்க வேண்டியது அவர் தான்.
கூடவே, பிற தோழர்களை கிண்டல், நக்கல், நையாண்டி செய்வதையும் தோழர் மணி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
இந்த விசயத்தில் வினவு குழு எதுவும் கருத்து தெரிவிக்கவில்லையா?
தோழரே. நான் சமரசம் செய்யவில்லை. அதே நேரத்தில். இது அமைப்புக்கு உள்ளே விமர்சனமாக போன பின்பு இங்கே விவாதிப்பதும், விவாதிக்குமாறு வழிகாட்டுவதும் தவறு என கருதுகிறேன். இதில் அமைப்பு என்ன கருதுகின்றது என்று நமக்கு முறையாக தெரிய வாய்ப்புகள் இல்லை, அதனாலும் கூட விவாதத்தை தவிர்ப்பது சரியானது என்று கருதுகிறேன்.
அதே நேரத்தில் நமது இந்த நிலைப்பாடு தோழர் மணி, முன்வந்து சுயவிமர்சனம் ஏற்பதற்கு தடையாக இருக்காது. அவர் மீது நாம் வைக்கும் விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் மட்டுமே இது பொருந்தும்
…இயற்கையிலும் சரி சமுதாயத்திலும் சரி, ‘கலப்பற்ற’ நிகழ்வுகள் எவையும் இல்லை.” ஆனால் ஒரு நிகழ்வின் தன்மையை இன்னதென்று வரையறுத்துச் சொல்லும் நேரத்தில், அதில் இது கலந்திருக்கிறதே “என்பதை யாரேனும் நினைவுபடுத்துவாரானால் அவர் அளவு கடந்த அசட்டுப் புலமை வாய்ந்தவராகவோ அல்லது சொற்புரட்டராகவோ எத்தராகவோதான் இருக்க வேண்டும்…
“நான் தவறு செய்யவில்லை” என்று மணி தீர்மானமாக கூறுகிறார். அதனை நிரூபிப்பதற்கு வினவு உள்ளிட்ட மற்றவர்கள் செய்த தவறுகள் என்று அவர் கருதுவனவற்றை சுட்டிக் காட்டுகிறார். அவ்வப்போது தவறு இருந்தால் மாற்றிக் கொள்வதாகவும் கூறுகிறார். பின்னர் அறிவியல் மொழி என்பது அப்படித்தான் இருக்கும் என்றும் சுட்டிக் காட்டுகிறார். விவாதம் தொடர்ந்தபடி இருக்கிறது. மணியை விமரிசிக்கும் தோழர்களுக்கு ஒன்றைக் கூற விழைகிறோம். தான் தவறு செய்யவில்லை என்று உறுதியாக கருதும் ஒருவரை சுய விமரிசனம் மேற்கொள்ளுமாறு கோர முடியாது. அது பயனற்றதும் கூட. வேண்டுமானால் குறிப்பிட்ட விசயத்தில், நடைபெற்ற விவாதத்திலிருந்து சம்மந்தப்பட்டவரைப் பற்றி நீங்கள் ஒரு மதிப்பீட்டுக்கு வரலாம். அவ்வளவே.
மணிக்கு சில வார்த்தைகள். வினவு தெரிவித்துள்ள கருத்தின் மீது நீங்கள் விமரிசனம் கூறியிருக்கிறீர்கள். இருந்த போதிலும் இதை மட்டுமாவது கொஞ்சம் காதில் வாங்கிக் கொள்ளுங்கள். அறிவியலின் துணை கொண்டு அடுத்தவர் மண்டையில் ஆணி அடிக்க முடியும். ஆனால் இதயத்தை வெல்ல முடியாது. பெரும்பான்மை என்பது ஒருவேளை முட்டாள்தனமாக உங்களுக்குப் பட்டாலும், அந்தப் பெரும்பான்மையின் கூற்றைப் பரிசீலிப்பதற்குப் பெயர்தான் ஜனநாயக உணர்வு.
அறிவியலுக்கு உணர்வு கிடையாது என்பது உண்மைதான். ஆனால் அது மனிதர்களுக்கு உண்டு. மேலும், நடந்து கொண்டிருக்கும் இந்த விவாதத்துக்கு அறிவியல் ஆய்வு என்றெல்லாம் பெயர் சூட்டுவதும், மார்க்சிய விவாதமுறை, ஆய்வு முறையியல் ஆகியவற்றை இழுப்பதும் ரொம்பவும் அதிகமானது – பட்டாம்பூச்சியின் சிறகடிப்புக்கும் புயலின் உருவாக்கத்துக்கும் முடிச்சு போடும் பட்டர்ஃபிளை எஃபெக்ட் தியரி மாதிரி. கோட்பாடற்ற விவாதத்துக்கு கோட்பாட்டு சட்டை அணிவிப்பதொன்றும் ரொம்பக் கடினமான காரியமல்ல. அந்தச் சட்டையைக் கழற்றுவதுதான் கடினம்.
நீங்கள் ஒரு லெனின் மேற்கோளை அவருடையது என்று குறிப்பிடாமல் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள். அது விவாதத்துக்கு எந்த வகையில் தொடர்புள்ளது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அது லெனினுடையது என்று நீங்கள் குறிப்பிடாததற்கு காரணம் என்ன என்று விளங்கவில்லை. இவையெல்லாம் தவறான விவாத முறைகள் என்பதை மட்டும் கூறிக்கொள்கிறோம்.
முளையிலேயே கிள்ளியிருக்க வேண்டிய இந்த விசயம் இப்படி விவாதமாக நீள்வதற்கு நாங்களும் காரணம் என்பதை மிகத் தாமதமாக உணர்கிறோம். தவறுக்கு வருந்துகிறோம். நோக்கமற்ற இந்த விவாதம் போதும். நிறுத்திக் கொள்ளுமாறு கோருகிறோம். இந்த விவாதத்திற்கு இனி வினவு இடமளிக்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்ணா என் பொண்டடி புள்ள பெக்ல. பார்பனர்கள்தான காரணம்.
பாப்பான்களின் வெறி செயல் பாருங்கள். என் வீடுல பால் பொங்க மாட்டங்குது.பாப்பாந்தான் இதுக்கு காரணம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மெய்க்கோவில்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் தலித் இளஞரை அதே கிராமத்தில் வசித்து வரும் மேல் சாதிக் கிறித்துவர்கள் மலம் திங்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது.
சடையாண்டி என்ற அந்த தலித் இளைஞர் மெய்க்கோவில்பட்டியின் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர். இவர் சாதிக் கிறித்துவர்கள் அதிகம் உள்ள தெருவில் ஜனவரி மாதம் 7ஆம் தேதி சென்ற போது, சுமார் 10 சாதிக் கிறித்துவர்கள் அவரை வழிமறித்தனர் என்றும், தங்கள் தெருவில் தலித்துகள் காலில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்ற உத்தரவு இருப்பது தெரியாதா என்று அவரை மிரட்டியுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செருப்பைக் கழகற்றி அந்த தலித் இளைஞரை அவர்கள் அடித்ததாகவும், அந்த கும்பலில் ஒருவர் மலத்தை திங்குமாறு செய்ய வலியுறுத்தியதாகவும் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் அந்த தலித் இளஞர் புகார் தெரிவித்துள்ளார்.
வந்தேறிகளோ,ஆளவந்தாரோ,இங்கிருந்தவரோ நம்மை 2000 வருடத்துக்கு மேலாக ஆட்டிப்படைத்தவர்;
{தொடர்ந்து என்னுடைய தளத்தில்…}
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=௩௩௪௨௭௫௮௦
aiyaa inga nadappadhai kandikkaamal en aiyaa iran iraq ellam poivitteergal
தலித் என சொன்னா போதுமாப்பு…என்ன ஜாதி…அத சொல்லுங்க.தேவேந்திர குலத்தவரை தலித் என அரசு பட்டியலில் குறிப்பிட்டுறுக்கிறது.ஆனால் தேவேந்திரர் தங்களை தலித் என குறிப்பிடுவதை மறுத்து வழக்காடி ஆணை பெற்றிஉருக்கிறது.இழி தொழில் செய்தவரகளே தலித் என்பவர்.விவசாயத்தொழிலை அடிப்படையாக உள்ள தேவேந்திர குலத்தவர் தலித் அல்ல.இருப்பினும் இந்தியநன்டுகளாச்சே….தலித் என்றால் என்ன ஜாதி அவன்….இனத்த மாத்தி கல்யாணம் செய்தவன் அவன் இனத்துக்கு துரோகம் செய்துவன்.
போலீஸ் ஜாதிக்கு ஜால்ரா போடுகிறார்கள்