பதிப்புரை
இ ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.
தற்போது டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள இவர், ஜாமியா உல்ஃபலா மதரசாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் படித்து முடித்தவர். இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் பற்றி இவர் விரிவாக ஆய்ந்தெழுதியுள்ளார். கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் “”ஃபிராண்டியர்” (பிப்ரவரி 511, 2006) என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர், இவை குறித்து அலசுகிறார். புறக்கணிக்கப்படும் பிரச்சினை குறித்த இச்சிறுவெளியீடு இந்துமதத்தின் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திலும் மனு”தர்ம’ அடிகொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சாதியத்திற்கு எதிராகவும் விடாப்பிடியாகப் போராட விரிந்த பார்வையை அளிக்குமென்று நம்புகிறோம்.
-கீழைக்காற்று
இஸ்லாத்தில் மனுவாதிகள் : (இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி – தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்)
கேள்வி:இந்திய முஸ்லீம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையை ஆய்வு செய்வதில் நீங்கள் எவ்வாறு அக்கறை காட்டத் தொடங்கினீர்கள்?
பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள மவுனத் பான்ஜன் என்ற ஊரில் எனது பள்ளிப் படிப்பை நான் முடித்தேன். பின்னர், இஸ்லாமிய உயர் கல்வி பெறுவதற்காக, ஆஜம்கார் மாவட்டத்தின் பிலாரியாகன்ஜ் எனும் ஊரிலுள்ள ஜாமியா உல்ஃபலா மதரசாவுக்குச் சென்றேன். 1999ஆம் ஆண்டில் ஃபசிலத் கல்வியை முடித்த நான், இளங்கலை பட்டப்படிப்புக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின்னர், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றேன்.
1996ஆம் ஆண்டில், ஜாமியா உல்ஃபலாவில் நான் மாணவனாக இருந்தபோது, “”குரானைப் பற்றிய ஓர் அறிமுகம்” என்ற ஒரு வார கால நிகழ்ச்சியை ஜமாத்இஇஸ்லாமிஹிந்த் என்ற அமைப்பு உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, முஸ்லிம்கள் அல்லாதோர் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய மதம் பற்றி விளக்குவதற்காக ஜமாத் தலைவர்கள் சென்றனர். குறிப்பாக, தலித்துகள் வாழும் பகுதிகளில் அவர்கள் கவனம் செலுத்தினர். இஸ்லாத்தின் பொதுக்கருத்தான சமூக ரீதியிலான சமத்துவம் பற்றி தலித்துகளிடம் அவர்கள் பேசினர்.
ஹக்கிம் அப்துர்ரவூஃப் என்ற மூத்த ஜமாத் தலைவர், பிலாரியாகன்ஜ்இல் உள்ள தலித்துகள் வாழும் சேரிப் பகுதிக்கு வந்தார். நான் படித்துக் கொண்டிருந்த மதரசாவும் இந்த ஊரில்தான் இருந்தது. இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்றும் சாதி, தீண்டாமை ஆகிய இழிவுகளுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்றும் தலித்துகளிடம் அவர் கூறினார். தலித்துகள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டு மதம் மாறுவார்களானால், முஸ்லிம்கள் அவர்களைக் கட்டித் தழுவி வரவேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு தலித் இளைஞர் எழுந்து நின்று, அவரை நோக்கி, “”இஸ்லாம் என்பது சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுடைய முஸ்லிம் சமுதாயம் சாதிகள் மலிந்ததாகவே இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்வதில்லை; மற்ற பகுதிகளிலும் அநேகமாக இதே நிலைமைதான். இந்நிலையில், தலித்துகளாகிய நாங்கள் முஸ்லிம்களாக மதம் மாறினால், எங்களுடன் யார் மணஉறவு வைத்துக் கொள்வார்கள்? எங்களுடன் சமமாக அமர்ந்து யார் உணவருந்துவார்கள்?” என்று கேட்டார்.
அந்த இளைஞரின் வாதம், எனது நெற்றிப் பொட்டில் தாக்கியதைப் போலிருந்தது; என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அவர் கூறியது பெருமளவு உண்மை என்பது எனக்குத் தெரியும். அது முதற்கொண்டு, சாதிய அமைப்பின் வரலாறு பற்றிய பல்வேறு நூல்களை நான் படிக்கத் தொடங்கினேன். பல்வேறு இந்திய உலேமாக்களின் நூல்களையும் நான் ஆழ்ந்து படித்தேன். இந்த உலேமாக்கள், அவர்களது சீடர்கள் பலராலும் மிகச் சிறந்த அறிஞர்கள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். மௌலவி அகமத் ரசாகான் பரேல்வி, மௌலவி அஷ்ரப் அலி பரூக்கி தான்வி முதலான இத்தகைய அறிஞர்களின் நூல்களையும் நான் படித்தேன்.
இந்த உலேமாக்களில் பலரும், பிறப்பு அடிப்படையிலான சாதிய மேன்மையை நடைமுறையில் ஆதரித்து வாதிடுவோராக இருப்பதைக் கண்டேன். இந்தச் சாதியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில், குரானுக்கு முற்றிலும் எதிரான வகையில் இவர்கள் ஃபத்வா வழங்கியுள்ளதை கண்டறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். அரபு மொழியில் காஃபா என்றழைக்கப்படுவதன் கருத்தாக்கத்தைத் துணையாதாரமாகக் கொண்டு, சாதியப் படிநிலை வரிசைப்படி, குழுக்களுக்கிடையே சாத்தியப்படும் மணஉறவுகளைப் பற்றிய விதிகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள், ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா (அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குøரஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்குக் கீழானவை — இவ்வாறாக இந்த உலேமாக்கள் வாதிட்டனர். ஒருவர் தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று உலேமாக்களில் பலரும் நம்பினர்.
இஸ்லாமைப் பற்றிய எனது புரிதலுக்கு முற்றிலும் நேரெதிரானதாக அவர்களுடைய கருத்துக்கள் இருந்தன. அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ள, அவர்களுடைய நூல்கள் எனக்குப் பெரிதும் உதவின. இந்தியாவில் உள்ள பல உலேமாக்கள் சாதிய அமைப்புக்குத் தவறாக இஸ்லாமியத் தன்மை வழங்குவதன் மூலம் அல்லது மதரீதியில் இசைவாணை வழங்குவதன் மூலம் சாதியத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை அறிந்த போது நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். இந்து மதத்தில் இன்னமும் நீடித்து வரும் சாதிய நடைமுறையிலிருந்து இது வேறுபட்டதல்ல. ஏனென்றால், இந்துமதம்தான் சாதிய வேறுபாட்டுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் மதரீதியாக இசைவாணை வழங்குகிறது.
சாதியம் பற்றிய எண்ணற்ற இந்திய உலேமாக்களின் நூல்களைப் படித்த பிறகு, ஜமாத்இஇஸ்லாமி தலைவரிடம் அந்த தலித் இளைஞர் முன்வைத்த கேள்வி கிட்டத்தட்ட முழுமையாக சரியானதுதான் என்பதை நான் புரிந்து கொண்டேன். சாதிய அமைப்பை நியாயப்படுத்துவதற்கு இத்தகைய உலேமாக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இப்படித் தவறாக வியாக்கியானம் செய்வார்களானால், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது பற்றி எந்த தலித் அக்கறையோடு பரிசீலிப்பார்? இந்த மௌலவிகளால் திரித்து முன்வைக்கப்படும் இஸ்லாமிய மார்க்கத்தை எந்த தலித் ஏற்றுக் கொள்வார்?
இந்திய முஸ்லிம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையானது, ஏதோ இந்து மதத்தின் தாக்கத்தினால் மட்டும் ஏற்பட்டதல்ல; சாதிய அமைப்பை இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரீஅத் இன் ஓர் அங்கம் எனத் தவறாகக் கருதும் பெரும்பாலான இந்திய உலேமாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை முற்றிலும் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் இந்த மௌலவிகள் இஸ்லாத்துக்கு எவ்வளவு பெரிய இழுக்கைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை உணர்ந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
கேள்வி: முஸ்லிம்களிடையே சாதிய பாரபட்சம் என்ற பிரச்சினையைப் பற்றி நீங்கள் எவ்வாறு எழுதத் தொடங்கினீர்கள்?
பதில்: சாதியையும் சாதிய பாரபட்சம் இழிவுபடுத்துதலையும், அப்பட்டமாக நியாயப்படுத்தி, மதரீதியில் சட்டபூர்வமாக்குவதற்கு இந்த உலேமாக்கள் முயற்சித்ததை அறிந்தபோது, இதைப் பற்றி எழுதுவது முக்கியத்துவம் வாய்ந்ததென நான் உணர்ந்தேன். இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுத முற்பட்டபோது, ஜாமியா உல்ஃபலாவில் பணியாற்றிய மௌலவி அனீஸ் அகமது சித்திகி ஃபலாஹி மதானி என்ற எனது மதிப்புக்குரிய ஆசிரியர், எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருந்தார். அவர் எங்களுக்கு மதங்கள் குறித்த ஒப்பீடு என்ற பாடத்தைக் கற்பிப்பவராக இருந்தார். படிநிலையாக உள்ள சாதிய அமைப்பு முறையை இந்திய முஸ்லீம்கள் எவ்வாறு இஸ்லாத்தின் உள்ளார்ந்த ஆன்மீகமாக மாற்றிவிட்டார்கள் என்பதையும், இந்து மதத்தின் தாக்கம் இதற்கு ஓரளவுக்குக் காரணமாக இருந்தது என்பதையும் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.
இருப்பினும், முஸ்லிம் பத்திரிகைகளில் இந்தச் சாதியப் பிரச்சினை பற்றி அபூர்வமாகவே விவாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையைப் பற்றி அவை முற்றாக மௌனம் சாதிக்கின்றன. இந்தியாவிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் பத்திரிகைகள் சுயநலவாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன; வெளியிடப்படுகின்றன. மதரசாக்களில் அளிக்கப்படும் குறுகிய கண்ணோட்டமுடைய பயிற்சியின் காரணமாக, உண்மையிலேயே அவர்கள் விரும்பினாலும் கூட, இத்தகைய பிரச்சினைகளைப் பற்றி எழுத இயலாத நிலையிலேயே உலேமாக்கள் உள்ளனர்.
மேலும், இந்திய உலேமாக்கள் பெரும்பாலும் ஹனாஃபி மரபில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். சாதி அடிப்படையிலான பாரபட்சம் காட்டுவதற்கு இந்த ஹனாஃபி மரபானது, மதரீதியில் புனித இசைவைத் தவறாகக் கற்பித்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இது நடந்து வருகிறது. ஹனாஃபி மரபுவழி சார்ந்த அறிஞர்களின் படைப்புகளைப் பரிசீலித்தால் இது தெளிவாகத் தெரியும்.
இதனால்தான், மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டும் மிகப் பெருமளவுக்கு விவாதத்திற்குரியதுமான இச்சாதியப் பிரச்சினையைப் பற்றி எழுதும் தார்மீகக் கடமை எனக்கிருப்பதாக நான் உணர்ந்தேன். எனவே “”இந்தியாவில் முஸ்லிம்களும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் பல கட்டுரைகளை நான் தொடர்ச்சியாக எழுதினேன். அலிகாரைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும் ஜமாத்இஇஸ்லாமியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் ஃபரிடி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “”ஜிந்தகிஇநவ்” என்ற பத்திரிகையில் இவை வெளியாயின. பேரன்பு கொண்ட டாக்டர் ஃபரிடி இவற்றை வெளியிட்டு உதவினார். சாதிய பாரபட்சம்இழிவுபடுத்தலுக்கு மதரீதியில் இசைவாணை வழங்கும் உலேமாக்களைக் கடுமையாக விமர்சிப்பவையாக எனது சில கட்டுரைகள் இருந்தன.
கேள்வி: இந்தக் கட்டுரைகளின் மூலம் நீங்கள் வாதிட்டு நிலைநாட்ட முயற்சித்தது என்ன?
பதில்: இந்திய முஸ்லிம்களிடையே சாதி மற்றும் சாதிய அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கான வரலாற்றுக் கண்ணோட்டத்தை அளிக்க நான் முயற்சித்தேன். இந்தியாவில் சாதிகளின் தோற்றம், சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன மதத்தின் வளர்ச்சி; பவுத்தம், சீக்கியம், பக்தி இயக்கம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சாதிய எதிர்ப்பு இயக்கங்களின் பாத்திரம்; இந்தியாவில் இஸ்லாமிய மதம் பரவுதல்; குறிப்பாக, இஸ்லாத்தின் சமூக சமத்துவம் காரணமாக, அதன்பால் ஈர்க்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளிடையே இஸ்லாமிய பரவுதல் ஆகிய இவை பற்றி நான் ஆய்வு செய்தேன்.
மறுபுறம், இந்திய வரலாற்றில் “இஸ்லாமிய ஆட்சி’ என்று சொல்லப்படும் காலத்தில் எழுதப்பட்டு வெளியான நூல்களிலிருந்து பல்வேறு மேற்கோள்களை முன்வைத்து, முஸ்லிம் மன்னர்களும் பொதுவில் இஸ்லாமிய மேட்டுக்குடி ஆளும் கும்பல்களும் சாதிய அமைப்பை எவ்வாறு கட்டிக் காத்தனர் என்பதை நான் விளக்க முயற்சித்தேன். இந்துக்களில் “உயர்சாதியினர்’ என்று சொல்லப்படுபவர்களுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து, இந்து மற்றும் முஸ்லிம் மக்களில் “கீழ் சாதியினர்’ என்று சொல்லப்பட்டவர்களை எவ்வாறு ஒடுக்கினர் என்பதையும் நான் எடுத்துக் காட்ட முயற்சித்தேன்.
இந்த முஸ்லிம் மன்னர்களும் மேட்டுக்குடி ஆளுங்கும்பலும் கீழ்ச் சாதியினர் அல்லது ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுவர்களை அவர்கள் இந்துக்களானாலும், முஸ்லிம்களானாலும் கல்வி கற்க அனுமதித்ததில்லை; தங்களது அரசவைகளில் நுழையக்கூட அனுமதித்ததில்லை. இவை இந்து மற்றும் முஸ்லிம்களில் உயர்சாதியினருக்கு மட்டுமே என்று ஏகபோக உரிமை கொண்டாடினர். இந்த உண்மைகளை, முல்லா அப்துல் காதிர் பாவாயுனிஇன் “”முன்டாகாப் அல்தாவாரிக்”, மௌலவி சய்யத் ஜியாவுதீன் பார்னிஇன் “”தாரிக்இஃபிரோஸ் ஷாஹி”, குன்வர் மொகம்மத் அஷ்ரப்இன் “”இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்” ஆகிய நூல்கள் மிகத் தெளிவாகவே நிரூபித்துக் காட்டுகின்றன. இந்த மன்னர்களுக்கும் மேட்டுக்குடி ஆளுங்கும்பல்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி முழுநிறைவாகத் தெரியாது. இஸ்லாமிய மார்க்கம் போதிக்கும் சமத்துவத்துக்கு அவர்கள் செவி சாய்த்ததுமில்லை.
இல்டுமிஷ், பால்பன் ஆகியோர் துருக்கிய அடிமை வம்சத்திலிருந்து வந்த சுல்தான்களாவர். அவர்களாவது சாதிய விவகாரங்களில் வேறுபட்டு நடந்திருக்க வேண்டுமென நாம் கருதலாம். ஆனால், அவர்களும்கூட கீழ்சாதியினர் என்றழைக்கப்பட்ட முஸ்லிம்களை அரசாங்கப் பணிகளில் அனுமதிக்க மறுத்தனர்.
இஸ்லாமிய அரசுகள் என்று சொல்லப்பட்ட அரசவைகளில் இருந்த எண்ணற்ற அறிஞர்களும் உலேமாக்களும் பராணி, ஃபரிஷ்டா இன்னும் இவர்களைப் போன்றவர்களும் “கீழ்’ சாதி அல்லது ரஸில் சாதி முஸ்லிம்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு மத ரீதியாக இசைவாணை வழங்கவே முயற்சித்தனர். ரஸில் (கீழ்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள், அஷ்ரஃப் (மேல்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றுகூட பராணி வாதிட்டுள்ளார். கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் குழந்தைகள் தமது முன்னோர்களின் பரம்பரைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு மாறாக, தமது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க எவராவது துணிந்து செயல்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“”குரான், தொழுகை, நோன்பு ஆகியவற்றுக்கு அப்பால், மேலான அறிவை ரஸில் என்றழைக்கப்படும் கீழ் சாதியினருக்கு அளிக்கக் கூடாது; இவ்வாறு செய்வது நாய்கள், பன்றிகளின் முன்பு விலையுயர்ந்த முத்துக்களைப் பரப்பி வைப்பதைப் போன்றதாகும்!” இவ்வாறு மக்தும் ஜஹானியான்இஜஹாங்கஷ்ட் என்றழைக்கப்பட்ட சையத் ஜலாலுதீன் புகாரி என்ற பிரபலமான சூஃபி அறிஞர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி காஸி சஜ்ஜத் ஹுசைன் தனது “”சிராஜுல் ஹேதயா” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மது அருந்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள் மட்டுமின்றி, நாவிதர்கள், பிணம் கழுவுபவர்கள், சாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தோல் பதனிடுபவர்கள், செருப்பு தைப்பவர்கள், வில் செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள் முதலானோருடன் சேர்ந்து மேல்சாதி முஸ்லிம்கள் உணவருந்தக்கூடாது என்று இந்த பிரபலமான சூஃபி அறிஞர் வலியுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் தமது வாதத்துக்கு வலுவூட்டுவதற்காக, இறைத்தூதர் முகமது நபிகளார் கூறியதாக ஒரு போலியான மரபை சான்றாதாரமாகக் கற்பிதம் செய்துக் காட்டியுள்ளார்.
மேல் சாதியினர் என்று கூறப்படுபவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காகவே கீழ் சாதியினர் கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் என்ற பார்ப்பனக் கோட்பாட்டைப் போன்றதுதான் இந்தக் கருத்து. பார்ப்பனர்களின் வேத நூலான மனுதர்மத்தின் நேரடி நகலைப் போன்றதுதான் இது! இதனால்தான் சாதிய பாரபட்சத்தை உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய உலேமாக்களை “”மனுவாதிகள்” என்று நான் அழைக்கிறேன். ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் பார்ப்பனர்கள் எத்தகைய மனப்பான்மையைக் கடைபிடிக்கிறார்களோ, அதிலிருந்து இந்த உலேமாக்களின் மனப்பான்மையை வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது.
“மாபெரும்’ மொகலாயப் பேரரசரான அக்பர், ரஸில் சாதியினர் என்றழைக்கப்படுவோருக்குக் கல்வி அளிக்கப்பட்டால், பேரரசின் அடித்தளமே ஆட்டங்கண்டுவிடும் என்று பிரகடனப்படுத்தியுள்ளதாக அப்துல் காதிர் படாயுனி தனது “”முன்டகாப்அல்தாவாரிஹ்” நூலில் குறிப்பிட்டுள்ளார். பேரரசர் ஒளரங்கசீப்இன் ஆணைப்படி தொகுக்கப்பட்ட “”ஃபடாவாஇஆலம்கிரி” என்ற ஹனாஃபி சட்டவியல் கருத்துரைத் தொகுதியில் “கீழ்’ சாதியினர் பற்றி இதேபோன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. கடைசி மொகலாயப் பேரரசரான பகதூர்ஷா ஜாஃபரும் இவற்றிலிருந்து வேறுபட்டவராக இல்லை.
பல நூல்களைத் தேடிப்படிக்கும்போது, 24.5.1857 நாளிட்ட “”டெல்லி உருது அக்பர்”இல் ஒரு செய்தி அறிக்கையைக் கண்டேன். அது பின்வருமாறு கூறுகிறது: பிரிட்டிஷாருக்கு எதிரான எழுச்சியைத் தொடர்ந்து 500 பேர் கொண்ட படையொன்றைக் கட்டியமைக்க தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு மாமன்னர் பகதூர்ஷா ஆணையிட்டார்; ஆனால், அந்தப் படையினர் அஷ்ரஃப் (மேல்) சாதியினராக இருக்க வேண்டும்; “கீழ்’ சாதியினர் எவரும் அதில் இருக்கக் கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டார். —இதிலிருந்து தெரிவது என்ன? இந்தியாவில் “இஸ்லாமிய’ ஆட்சிக் காலத்தின் “பொற்காலம்’ என்று மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் எழுத்தாளர்கள் சளைக்காமல் ஏற்றிப் போற்றிய காலத்தின் நிலைமையே இதுதான். சாராம்சத்தில் இப்”பொற்கால’ ஆட்சிகள், மனுவாத முஸ்லிம்கள் மற்றும் இந்து மேட்டுக்குடியினரின் ஆட்சிகளாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்த “கீழ்’ சாதியினர் என்று சொல்லப்படும் மக்களை, இந்த மேட்டுக்குடி கும்பல் ஆதிக்கம் செலுத்தி ஒடுக்கினர் என்பதே உண்மை.
பல மன்னர்களும், உலேமாக்களும் சாதிய அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த போதிலும், அவர்களில் சிலர் இதற்கு எதிராகவும் இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சுல்தான் முகமது காஸ்நவி தமது அடிமையான அயாஸ் என்பவரை பஞ்சாபின் ஆளுநராக நியமித்தார். ஹஜ்ஜம் எனப்படும் நாவிதர் சாதியைச் சேர்ந்த இந்துவான திலக் என்பவரைத் தமது தலைமைத் தளபதியாக நியமித்ததுடன் “”ராஜா” என்ற பட்டத்தையும் அவர் வழங்கினார். சுல்தான் சகாபுதீன் கோரி, தமது அடிமையான குத்புதீன் ஐபக் என்பவரை இந்தியாவில் தனது ஆளுநராக நியமித்தார். ஐபக், தனது அடிமையான சம்சுதீன் அல்டுமிஷ் என்பவரை குவாலியர், புலந்த்சாகர், படாயுன் ஆகிய பகுதிகளுக்கான ஆளுநராக நியமித்தார்.
சுல்தான் அலாவுதீன் கில்ஜி, பல உயர் பதவிகளில் சையதுகள் மற்றும் அஷ்ரஃப் என்றழைக்கப்பட்ட “மேல்’ சாதியினரை அமர்த்திய போதிலும், தனது வேலையாளான மாலிக் உத்துஜ்ஜார் ஹமீதுத்தீன் முல்பானி என்பவரைத் தலைமை நீதிபதியாக (காஸி உல் காஸட்) நியமித்தார். குஜராத்தின் புர்வா எனப்படும் சாமர் சாதியைச் சேர்ந்தவரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறியவருமான மாலிக் காபூர் என்பவரைத் தனது தலைமை அமைச்சராகவும் அவர் நியமித்தார். சுல்தான் முகமது பின் துக்ளக், சுல்தானா ரஸியா, சுல்தான் குத்புதீன் முபாரக் ஷா கில்ஜி ஆகியோரும் “கீழ்’ சாதியினர் என்று கூறப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினர்.
கேள்வி: இந்திய வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த “”மனுவாதி உலேமாக்கள்” என்று உங்களால் அழைக்கப்படுபவர்கள், பார்ப்பனர்களைப் போலவே சாதிய பாரபட்சத்தை ஈவிரக்கமின்றி உறுதியாக உயர்த்திப் பிடித்த போதிலும், கீழ் சாதியினர் என்று கூறப்படும் கோடிக்கணக்கான இந்துக்கள் இஸ்லாமிய மதத்தை எப்படி ஏற்றுக் கொண்டனர்?
பதில்: இதற்கான காரணம், சாதிய பாரபட்சம் இந்துக்களிடம் இருப்பதைவிட, முஸ்லிம்களிடம் எப்போதும் கடுமை குறைவாக இருப்பதேயாகும். மேலும், இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிக்கு மதரீதியில் எப்போதுமே இசைவாணை கிடையாது என்பது இன்னொரு காரணமாகும். இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சாதி வேறுபாடுகள் பலமாக நீடித்து வந்துள்ள போதிலும், தீண்டாமை என்பது நடைமுறையில் அவர்கள் அறியாத விசயம்தான். இருப்பினும், மத்திய காலத்தைச் சேர்ந்த பல இஸ்லாமிய மன்னர்கள் கீழ்வர்க்கத்தினரை தமது அரசவைகளில் அடியெடுத்து வைக்க அனுமதித்ததில்லை; அல்லது, அப்படி ஒரு சிலர் அனுமதித்தாலும், அவர்கள் வாய்திறந்து பேசுவதற்கு அனுமதித்ததில்லை. ஏனெனில், அவர்கள் “புனித’ மற்றவர்களாக “அசுத்த’மானவர்களாகக் கருதப்பட்டனர் என்று பிரபல வரலாற்று ஆசிரியரான கன்வர் மொகம்மத் அஷ்ரஃப், தனது “”இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்” நூலில் குறிப்பிடுகிறார்.
கேள்வி: “இஸ்லாமிய‘ ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த “மேல்‘ சாதி முஸ்லிம் எழுத்தாளர்களும் உலேமாக்களும் சாதிய அமைப்புக்கு மதரீதியாக இசைவாணை வழங்க முயற்சித்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிந்தைய காலத்தில் இந்த நிலையிலிருந்து நிச்சயம் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?
பதில்: இப்போது அந்த விசயத்துக்கு நான் வருகிறேன். “”ஜிந்தகிஇநவ்” இதழுக்கு நான் எழுதிய சில கட்டுரைகளில், காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்த பிரபலமான உலேமாக்கள் பற்றியும், இப்போதைய சமகால இந்தியாவிலுள்ள உலேமாக்கள் மற்றும் உலேமாக்களின் அமைப்புகள் பற்றியும் நான் பரிசீலித்தேன். பாரெல்விஸ், தியோபண்டிஸ், ஹல்இஹதித், ஜமாத்இஇஸ்லாமி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் போன்ற அமைப்புகளைப் பரிசீலித்தேன். குறிப்பாக, திருமண உறவு பற்றிய விசயங்களில், இவர்கள் சமூக சமத்துவம் அல்லது காஃபா பற்றிய கருத்தாக்கத்தை எப்படிக் கையாண்டனர் என்பதைப் பரிசீலிப்பதில் நான் கவனத்தைக் குவித்தபோது, அவர்களுக்கிடையில் வியப்பிற்குரியதொரு கருத்தொற்றுமை நிலவுவதைக் கண்டேன்.
சாதியைச் சட்ட சம்மதம் கொண்டதாக்குவதற்கு காஃபா பற்றிய கருத்தாக்கத்தைத் தமது ஹனாஃபி மரபில் பாரெல்விஸ் மற்றும் தியோபண்டிஸ் அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். அஷ்ரப் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் மேன்மையையும் ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் தாழ்நிலையையும் இவர்கள் சட்ட மரபாக்குகின்றனர். சமூகத் தகுதி பற்றிய விசயத்தில் ஹனாஃபி மரபினர் மிகவும் கறாராக இருக்கின்றனர். எனவே, காஃபா பற்றிய விசயத்தில் பிறப்பு அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாக்குகின்றனர். ஹனாஃபி சிந்தனை மரபு உருவான ஈராக்கைச் சேர்ந்த குஃபாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்ததும், அவற்றை அது நியாயப்படுத்த முனைந்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சன்னி சட்டப்பள்ளியைப் பின்பற்றுகின்ற அராபிய மையத்துக்கு வெளியில் உருவாகி வளர்ந்த ஷஃபி, ஹன்பாலி போன்ற மரபுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன.
ஆனால், இமாம் ஷஃபி, இமாம் அகமது பின் ஹன்பால் ஆகிய இருவரும் பிறப்பு அடிப்படையிலான காஃபாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறப்பு அல்லது குடும்பத்தை அடிப்படையாக்குவதற்கு நேர்மாறாக, மாலிகி சிந்தனைப் பிரிவு விதிவிலக்காக நிமிர்ந்து நிற்கின்றது. காஃபாவைத் தீர்மானிப்பதில் பிறப்பை ஒரு காரணியாகக் கொள்ளாமல், கடவுட்பற்றையே அடிப்படைக் காரணியாக மாலிகி சிந்தனைப் பிரிவு கருதுகிறது. இதுதான் உண்மையான இஸ்லாமிய அளவுகோலாகும். மாலிகி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தவரான இமாம் மாலிக் உண்மையான இஸ்லாமிய போதனையின் மையமான மெதினாவில் வாழ்ந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஹனாஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம். ஆனால் தியோபண்டி மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், “”சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது” என்று கற்பிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனாஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷா வலியுல்லா, இந்தியாவின் பிரபலமான முன்னணி இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர்; சன்னி பிரிவைச் சேர்ந்த சிந்தனை மரபினர் பலர், இவரைப் பெரிதும் மதித்தனர்; இவர் பிறப்பு அடிப்படையிலான காஃபாவை உறுதியாக ஆதரித்து உயர்த்திப் பிடித்தவராவார். காஃபா என்பது ஒருவரின் இயற்கையிலேயே உள்ளார்ந்து உறைந்திருப்பது என்றும், தமது சொந்த காஃபாவுக்கு வெளியில் மணஉறவு கொள்வதானது, கொலை செய்வதை விடவும் அபாயகரமானது என்றும் அவர் தனது “”ஹுஜ்ஜாத்துல்லா அல் பாலிகா”, “”ஃபிக்இஉமர்” ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இறை தூதருடன் இருந்த அவரது சகாக்களில் பலர் அடிமைப் பெண்களை மணந்த பல நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட போதிலும், இந்த அறிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. இறைதூதர் நபிகளார், தமது அத்தை மகளான ஜைனப் பிந்த்இஜஹாஷ்க்கு விடுவிக்கப்பட்ட தனது அடிமையான சையத்ஐ மணமுடித்து வைத்தார். தனது மாமன் மகளான ஜுபா ஏ பிந்த்இஜுபைர்க்கு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மிக்தாத் என்பவரை மணமுடித்துள்ளார்.
தீவிர ஹனாஃபி ஆதரவாளர்களான தியோபண்டி மரபினர், பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற கருத்தாக்கத்தைத் தீவிரமாக ஆதரித்துச் செயல்படுத்துவோராக உள்ளனர். “”தியோபண்ட் இயக்கமும் சஹரான்பூர் முஸ்லிம்களும்” என்ற நூலின் பாகிஸ்தானிய ஆசிரியரான குலாம் முஸ்தஃபா, அதில் பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்லியுள்ளார். தியோபண்ட் மதரசாவை நிறுவியவர்களில் ஒருவரும், ஷேக் சாதியைச் சேர்ந்தவருமான மௌலவி காசிம் நானோத்வி, நான்கு சாதியினரை மட்டுமே இறைவன் தமது மதத்துக்குச் சேவை செய்யப் படைத்துள்ளார் என்று அறிவித்துள்ளாராம்; சையத், ஷேக், மொகல், பத்தான் ஆகியவையே இந்நான்கு சாதிகளாம்!
தியோபண்டி மரபைச் சேர்ந்த மற்றொரு நூலாசிரியரும், தியோபண்ட் மதரசாவின் முதல் முஃப்தியுமான மௌலானா அஸிசுர் ரஹ்மான் உஸ்மானி, பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்கிறார். அஷ்ரஃப் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது தந்தை, பாட்டன் போன்ற தனது ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதியின்றி, ரஸில் சாதியைச் சேர்ந்த ஒரு ஆண்மகனைத் திருமணம் செய்வாரானால், அந்தத் திருமணம் உண்மையிலேயே நடந்ததாகக் கருத முடியாது; எனவே, அந்தத் திருமணத்தை முறிப்பது (ஃபஸ்க்இநிக்காஹ்) என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று அவர் அறிவிக்கிறார். தியோபண்ட் மதரசாவால் வெளியிடப்பட்ட “”ஃபடாவா இ தார்உல்உலும் தியோபண்ட்” என்ற தியோபண்டி ஆணைகளின் (ஃபத்வா) தொகுப்பில் இந்த விசயம் கூறப்பட்டுள்ளது.
அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவருடைய வாதத்திலிருந்து தெரிவது என்னவென்றால், இத்தகைய மண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் முறைகேடாகப் பிறந்தவர்கள்; இத்தம்பதியினரும் ஒழுக்கக் கேடானவர்கள்; இவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி, நூறு கசையடி தரப்பட வேண்டும்! இருப்பினும், ஒரு “கீழ்’ சாதிப்பெண் தனது நெருங்கிய ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதி இல்லாமலேயே “மேல்’ சாதி ஆண்மகனைத் திருமணம் செய்து கொள்ள இந்த உஸ்மானி அனுமதித்திருப்பார் என்பதை நாம் துணிந்து கூற முடியும். உண்மையில், இது பார்ப்பனிய மனோபாவத்தையும் அதேபோல முஸ்லிம்களிடம் உள்ளார்ந்து ஆழப்பதிந்துள்ள மூத்த குல ஆணாதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
தியோபண்டி மரபைச் சேர்ந்த இன்னுமொரு இஸ்லாமிய அறிஞரான மௌலவி முகம்மது சகாரியா சித்திகி என்பவர், இன்றைய உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான தப்லிஹி ஜமாத் இன் தலைமைச் சித்தாந்தவாதியாவார். “”மெய்யான சமயப் பணிகளின் நற்பேறுகள்” என்ற தமது நூலில் அவர், “”முஸ்லிம்களின் ஒரு குழு, மெக்காவுக்குப் புனிதப் பயணம் (ஹஜ்) அல்லது வேறிடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுமானால், அவர்கள் தம்மில் ஒருவரைத் தலைவராக (அமிர்) நியமிக்க வேண்டும்; இந்தக் குழுவில் குரைஷி (சைய்யத் அல்லது ஷேக்) சாதியைச் சேர்ந்தவர் எவராவது இருப்பின், அவரையே தலைவராக நியமிப்பது சிறந்தது” என்று கூறுகிறார். அவர் முஸ்லிம்களை அஷ்ரஃப் (“மேல்’ சாதி) என்றும் அர்ஸல் (“கீழ்’ சாதி) என்றும் வகைப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முதலாவது அரசாங்க முஃப்தியாக (முஃப்திஇஆஜம்) பின்னாளில் அமர்த்தப்பட்ட தியோபண்டி முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி எழுதிய, “”நிஹாயத் அல்அராப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற சர்ச்சைக்குரிய சாதி பற்றிய நூலையும் இவர் ஆதரித்தார். தியோபண்டி உலேமாக்கள் பலராலும் ஆதரிக்கப்பட்ட இந்த நூலில், அஷ்ரஃப் சாதிகள் என்றழைக்கப்பட்ட நான்கு வகை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் தனிச்சிறப்பாகக் கருணை காட்டுவார் என்று இந்த உஸ்மானி கூறியிருக்கிறார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி தமது இந்த நூலில், சக தியோபண்டி அறிஞரான அகமத் உஸ்மானி என்பவரின் ஒரு கட்டுரையும் இடம்பெறச் செய்திருந்தார். அந்தக் கட்டுரையில், “கீழ்’ சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள் கல்வி கற்கத் தொடங்கியதால்தான் எல்லாவகையான இடர்ப்பாடுகளும் ஆரம்பித்தன என்று அகமது உஸ்மானி எழுதியிருக்கிறார்!
இன்னுமொரு முன்னணி தியோபண்டி அறிஞரான மௌலவி அஷ்ரஃப் அலி ஃபரூக்கி தான்வி என்பவர், முஸ்லிம் நெசவாளர்களைச் சிறுமைப்படுத்தும் சொற்களில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் நெசவாளர்கள் தொழுகை செய்வது பற்றி தனது “”அல்ரஃபிக் ஃபிசவாய் அல்தாரிக்” நூலில் அவர் எள்ளி நகையாடினார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி என்பவரின் “”நிஹாயத் அல்அரப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற நூலை ஆதரித்து, அவர் எழுதி “”வாஸ்லஸ் சபாப் ஃபி ஃபாஸ்லின் நஸ்ப்” என்ற தனது நூலில் நெசவாளர் சாதியினரை வெறுப்புடன் “”ஜுலாஹா” என்று குறிப்பிட்டார். அன்சாரிகள் (“”உதவி செய்பவர்கள்”) என்று நெசவாளர்கள் தம்மை அழைத்துக் கொள்வதை அவர் கண்டனம் செய்தார்.
இவ்வாறு அவர்கள் தம்மை அழைத்துக் கொள்வது, ஒருவர் தமது குடும்ப மரபை அல்லது பரம்பரையை மாற்றிக் கொள்ளும் செயலாகும்; மெக்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்று அங்கு இறைதூதர் வாழ்ந்தபோது அவருக்கு உதவி செய்த மெதினாவைச் சேர்ந்த அன்சார்களின் வழித்தோன்றல்கள் என்று உரிமை பாராட்டுவதாகும்; இது தவறானதும் தடை செய்யப்பட்டதுமாகும் என்று தான்வி வாதிட்டார். தமது வாதத்துக்கு வலுசேர்க்க, இறைதூதர் கூறியதாக ஒரு வழிவழிச் செய்தியை இட்டுக்கட்டி கூறினார். தனது தந்தையைத் தவிர வேறொருவருக்கு மகன் என்று உரிமை பாராட்டும் ஒருவன் விண்ணுலகை அடையமாட்டான் என்பதே இறைதூதர் கூறியதாகச் சொல்லப்படும் அந்த வழிவழிச் செய்தியாகும்.
ஷப்பிர் அகமது ஹக்கீம் என்ற முஸ்லிம் அறிஞர், தான்வியின் “மசாவத்இ பகார்இ ஷாரியத்” என்ற இன்னொரு நூலிலிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாண்டுள்ளார். ஜுலாஹாஸ் (நெசவாளர்கள்), நயிஸ் (நாவிதர்கள்) ஆகியோரைத் தூய முஸ்லிம்கள் தமது இல்லங்களில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தான்வி அதில் வாதிடுகிறார். மேலும், சைய்யது சாதி தந்தைக்கும் சைய்யது அல்லாத தாய்க்கும் பிறக்கும் குழந்தை தூய சைய்யது தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தையைவிட சமூகத் தகுதி குறைந்தது என்று தான்வி “”பாஹிஸ்டி ஜேவார்” என்ற தனது நூலில் வன்மத்தோடு வாதிடுகிறார். இதே விசயத்தைத்தான் பிராமணர்கள் ஏற்றிப் போற்றும் மனுவும் தனது மனுதர்ம சாஸ்த்திரத்தில் (மனுஸ்மிருதி) சொல்லியிருக்கிறார்! சைய்யதுகள், ஷேக்குகள், மொகல்கள், பத்தான்கள் ஆகியோர் “மரியாதைக்குரிய மேல்குடி’ (ஷரிப்) சாதியினர் என்றும், எண்ணெய் பிழிபவர்கள் (டெலி), நெசவாளர்கள் (ஜுலாஹா) ஆகியோர் “கீழ்’ சாதிகள் (ரஸில் அக்வம்) என்றும் “”இம்தாத் உல்ஃபடாவா” என்ற தனது நூலில் தான்வி அறிவித்தார்.
இவர், இஸ்லாத்துக்கு மதம் மாறிய அராபியர் அல்லாதவர்களை “”நவ்முஸ்லிம்கள்” என்று குறிப்பிடுகிறார். காந்தானி முசல்மான் எனப்படும் பாரம்பரியமாக உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் திருமண உறவுக்கான காஃபாவுக்கு, நவ்முஸ்லிம்கள் கருதத்தக்கவர்களே அல்ல என்று இவர் வாதிடுகிறார். பத்தான்கள் அரபுவழி வந்தவர்கள் அல்ல என்பதால் அவர்களும் நவ்முஸ்லிம்கள்தாம் என்கிறார். அரபுவழி வந்தவர்களான சையத்துகள், ஷேக்குகளின் காஃபா வேறானது; எனவே அவர்களுடன் நவ்முஸ்லிம்களான பத்தான்கள் கலப்பு மணம் புரியக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் முதலாவது தலைவரும், தியோபந்த் மதரசாவின் துணைவேந்தருமான மௌலவி காரி மொகம்மது தய்யீப் சித்திகி என்பவரும்கூட, சாதியத்தின் ஆதரவாளராக இருந்தார். — இவை எனது ஆய்வில் நான் கண்டறிந்த உண்மைகளாகும்
நூல்: இஸ்லாத்தில் மனுவாதிகள் – வெளியீடு: கீழைக்காற்று பதிப்பகம் – விலை ரூ. 6.00
கிடைக்குமிடம்:
கீழைக்காற்று. 10, ஔலியா சாகிப் தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 தொலைபேசி – 044 2841 23677
மேலும் விவரங்களுக்கு
……………………………..
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
தொடர்புடைய பதிவுகள்
இஸ்லாமை வாகாபிசத்துக்கு கொண்டு செல்ல இது ஒரு வழி ,
எந்த இஸ்லாம் அறிஞன்(?) பெண்களுக்கெதிரான கொடுமையை பற்றி பேசுகிறான் ?
சூபியசத்தை நாசமாகிய கையோடு அடுத்த குறி சற்று இந்திய தன்மையுள்ள இஸ்ஸாமை அரபிமயமாக மாற்ற இது போன்ற ஆய்வுகள்(?)
மதி இண்டியா,
இந்தக்கட்டுரையாளர் இசுலாத்தில் சாதி பார்க்கும் பழக்கம் இந்தியாவிலுள்ள இந்து மதத்தின் பாதிப்பு என்பதையும் விளக்கியுள்ளார். எனவே இந்து மதம் தலித்துகளுக்கும், சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் இழைத்திருக்கும் கொடுமைகளை முதலில் நீங்கள் பேசுங்கள். அந்த வகையில் இசுலாத்தை விமரிசிப்பதற்கு முன் உங்கள் வண்டவாளங்களை திரும்பிப் பாருங்கள். அம்மணமாக நடமாடுபவன் கோவணம் கட்டியவனை கேலிசெய்தது போல இருக்கிறது உங்கள் ஆதங்கம்.
டேய் கம்யூனிஸ்டுக் கம்மினாட்டி.
இசுலாத்தை விமர்சிக்கும் தகுதி யாருக்குமே கிடையாது, அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்பது தானே துலுக்கத் தீவிரவாதிகள் வைக்கும் வாதம்.
அதையே நீ வேறுவிதமாகச் சொல்வதனால் யாருக்குடே நன்மை ?
யாருட்ட காசு வாங்கிட்டு வலையில எழுதுற ?
துரோகி நாயே.
என்னங்க…தி.மு.க. அன்ட் அ.தி.மு.க மாதிரி பேசுறீங்க? ‘நீ தப்பு செய்யிரியே?’ என்றால், ‘நீ மட்டும் தப்பு செய்யலியா?’ என்று… 😉
ஈராக்கியப் பழக்கமும் மநுவாதந்தானோ? ஷியா, ஸுன்னியும் இந்து மதத்தின் பாதிப்பு தானோ?
விரிவானதொரு கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி வினவு.
இஸ்லாமில் சாதிப்பார்க்கும் பழக்கம் இருப்பது உண்மைதான். பெண் கொடுத்து எடுப்பது இல்லை என்பதெல்லாம் முன்பிருந்த காலத்தில் இருந்திருக்கலாம். இப்போதைய காலத்தில் அப்படி கீழான சாதி என்று பார்ப்பதில்லை. அதற்கு பதிலாக அந்தஸ்து மாத்திரமே முக்கியப்படுத்தப்படுகிறது. அதிகப் பணம் உடையவர்கள், ஏழைகள் என்ற வித்தியாசம் மாத்திரமே தற்சமயத்தில் நிறுவப்பட்டு கொடுக்கல் வாங்கல் உறவுகள் நிகழ்கின்றன.
it is very difficult to overcome caste feeling. if one have more knowledge in Islam he only overcome the caste feeling.it is impossible to have enough knowledge in Islam for all Islamics who are living in India.Islam means love,kind,humanity
‘என்னடா இது, “தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!” பதிவில் நம் கருத்து வினவின் அடிமடியிலேயே கை வைக்கிறதே, இவர் அவ்வளவ்வாய் கண்டுகொள்ளவில்லையே’ என்று ஆச்சரியப்பட்டேன். என் ஆச்சரியம் வீண் போக வில்லை. copy & paste செய்து தனி பதிவே போட்டு விட்டார். இது வினவின் ஒரிஜினல் ஆர்.எஸ்.எஸ். முகம் ..! முழுசாய் வெளிப்பட்டுவிட்டது…! ஹிந்துக்களிடம் ஏற்பட்ட சாதிப்பிரிவினைக்கு அதன் அடிப்படை வருணாசிரம சித்தாந்தம் காரணம். இது தெரியாமல் யாரும் இருக்க முடியாது. தன் மதத்தின் அடிப்படையை தவறென்று ஒருவர் எதிர்த்தால் அவர் அந்த மதத்தை விட்டு வெளியேறியவர் ஆவார். அனால், ‘முஸ்லிம்களிடம் சாதி இருக்கிறது அதை ஒழிக்கிறேன் பேர்வழி’ என்று ஒருவர் இலகுவாக முனைவர் பட்டம்வாங்க முயல்கிறார். அதில் கவனிக்கவேண்டிய விஷயம் “இஸ்லாத்தில்…” என்று சொல்லவில்லை. “முஸ்லிம்களிடம்….” என்று சொல்கிறார். கேள்வியே அப்படித்தான் கேட்கப்படுகிறது. அதை அவர் இஸ்லாமிய சித்தாந்தம் மூலம் தான் ஒழிக்கப்போவதாயும் சொல்கிறார். ஒரு பெண்ணுக்கு இரண்டு தலை மூன்று கைகள் நான்கு கால்களுடன் பிறக்கும் குழந்தையை பார்த்துவிட்டு ‘மனிதர்கள் எல்லாரும் இப்படித்தான் இருப்பார்கள்’ என்ற முடிவுக்கு வருபவர் ஒரு வேற்றுகிரக வாசியாக இருக்கலாம் அல்லது வினவாக இருக்கலாம்.
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3636:2008-09-05-20-03-45&catid=185:2008-09-04-19-46-03
—-இதில் ஒரிஜினல் பதிவு உள்ளது. அங்கு சென்று அதற்கு இடப்பட்டுள்ள மறுமொழிகளை படிக்கலாம்.
வினவின் கருத்து :
கம்யூனிஸ்டுகள் (ஒரு கொள்கையில் இருப்பவர்கள்-அதன்படி நடக்க வேண்டியவர்கள்), கம்யூனிசம் (அந்த கொள்கையில் ) சொல்லாததையும் சொல்லியதுக்கு எதிராகவும் செய்யும் செயல்களுக்கு கம்யூனிசம் (அந்த கொள்கை) பொறுப்பேற்காது. அவர்களுக்கும் கம்யூனிசத்துக்கும் சம்பந்தம் இல்லை. இவர்கள் அடிக்கும் கூத்துக்கு கம்யூனிசம் குறை கூறப்படக்கூடாது. அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள்…!
பல வருடங்களாக இஸ்லாத்தின் எதிரிகளிடம் சொல்லப்பட்ட உண்மை முஸ்லிம்களின் கருத்தே என் கருத்து :
“முஸ்லிம்கள் (ஒரு கொள்கையில் இருப்பவர்கள்-அதன்படி நடக்க வேண்டியவர்கள்) இஸ்லாத்தில் (அந்த கொள்கையில் ) சொல்லாததையும் சொல்லியதுக்கு எதிராகவும் செய்யும் செயல்களுக்கு இஸ்லாம் (அந்த கொள்கை) பொறுப்பேற்காது.”
—– இது வினவு எனும் ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’.
முஸ்லிம்களில் குற்றம் செய்பவர்கள் உண்டு. அதனால், குறை மதியாளர் வினவுக்கு டிப்ஸ்: அடுத்தடுத்த “புரட்சிகர ஆக்கங்களின் தலைப்புக்கள்” ….!!!!???
“நாசிசத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
“பாசிசத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
“கம்யூனிசத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
“மாவோயிஸத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
“ஆர்.எஸ்.எஸ்.இடம் சரணடைந்த இஸ்லாம்”
“வட்டியில் சரணடைந்த இஸ்லாம்”
“விபச்சாரத்தில் சரணடைந்த இஸ்லாம்”
“கொலை,கொள்ளை,கற்பழிப்பிடம் சரணடைந்த இஸ்லாம்”
“லஞ்ச ஊழலில் சரணடைந்த இஸ்லாம்”
“வரதட்சனையிடம் சரணடைந்த இஸ்லாம்”
“அடிமைத்தனம் & பெண்ணடிமைத்தனத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
“சூதாட்டம், குடி, போதையிடம் சரணடைந்த இஸ்லாம்”
“கிருஸ்துவத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
“ஜுடாயிசத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
“புத்திசத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
“ஜைனத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
………… ……….. …………
last but not least …..
“வினவி ‘ஷ’ த்திடம் சரணடைந்த இஸ்லாம்”
வாங்க நண்பர் நெத்தியடி முகமது,
உங்களைத்தான் ஆர்வமாக எதிர்பார்த்தோம். ஆனால் கொஞ்சம் வெயிட்டாகவும் இருக்கும் என்று நினைத்தோம். கட்டுரையை முழுக்க படித்துவிட்டு விவாதித்தால் சரியாக இருக்கும். இசுலாத்தில் சாதி தீண்டாமை பின்பற்றப்படுகிறது, அதை இசுலாத்தின் அத்தாரிட்டகளான பல உலோமாக்கள் நியாயப்படுத்துவதையும் கட்டுரையாளர் விரிவாகவே குறிப்பிட்டுள்ளார். இதனால் இசுலாத்தை தவறாக நினைக்கக்கூடாது என்றால் சாதி பாராட்டும் முசுலீம்களை இசுலாத்தில் இருந்து நீக்கம் செய்யலாமே, அதை யார் தடுத்தது?
மீண்டும் மீண்டும் அறிந்துகொண்டே உங்கள் ‘அறியாமையை’யே வெளிப்படுத்துகிறீர்கள், உயர்திரு வினவு அவர்களே!
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிம், இஸ்லாத்தின் அடிப்படை விஷயமான ஒன்றை, ‘இறைவன் இல்லை’ எனறு சொன்னவுடன் அந்த கணம் அவன் ‘முஸ்லிம் இல்லை’ என்று இறைவன் கணக்கில் ஆகி விடுகிறான். யார் அவனை நீக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மீண்டும் தவறை உணர்ந்து திருந்தி முழுமனதுடன் உண்மையான உள்ளத்துடன் ‘அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை,முஹம்மத் நபி அவனின் தூதர்’ என்றால் அவன் முஸ்லிம்! யாரும் அவனை சேர்க்க வேண்டுமா?
இஸ்லாத்தில் இல்லாத ஒரு விஷயத்தை ஒரு முஸ்லிம் செய்வதை பார்த்தால், நாம் அனைவரும் சேர்ந்து அவரிடம், “எப்பா! உன் மதத்தில் இதெல்லாம் கிடையாது. இறைவனை பயந்து இதனை விட்டுவிடு. உண்மை முஸ்லிமாய் திருந்தி விடு” என்று சொல்வோம். அதை விட்டுவிட்டு, “நீ இப்படி செய்கிறாயா? சரிதான், அப்போ இஸ்லாம் இதைத்தான் கூறுகிறது, எல்லாரும் வாருங்கள் இஸ்லாத்தை ஒழிக்கலாம்” என்று நீங்கள் கூப்பிடுவது முட்டாள்தனமான கேலிக்கூத்து – வேடிக்கை.
தன் முந்தய மத சாதி நம்பிக்கையுடன் உள்ளவரை அறிவுரை கூறி திருத்தி அவரை நல்வழிப்படுத்துவதை விட்டுவிட்டு அவரை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இஸ்லாத்திலும், ஒரு கிராம கட்டைப்பஞ்சாயத்தில் (அல்லது ம.க.இ.க. வில் ? ) ஊர்நீக்கம் செய்யப்படுவதுபோல் செய்யக்கோருவது, வினவு போன்ற தன்னை ஒரு முற்போக்காளர் என்று ‘விளம்பரப்படுத்திக்கொள்ளும்’ நபர்க்கு அழகாய் தெரியவில்லை.
// ’முஸ்லிம்களில் சாதி ஏற்றத்தாழ்வு’ – ஒரு முஸ்லிமால் அப்படி நினைத்துப்பார்க்கவே முடியாது- ஏனென்றால் மனிதப்பிறப்பில் இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படை அப்படி! அப்படி எவரேனும் நினைத்தாலே பாவம். ஆதாரத்துடன் உங்கள் மறுமொழி வந்தால், அங்கே உடனடி கொள்கை சுத்திகரிப்பு உண்டு. TNTJ, TMMK, Jamathe Islaami, INTJ, இவர்களெல்லாம் எதற்கு இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? சும்மா நெட்டி முறிக்கவா? //
நண்பர் முஹமது, நீங்கள் மன்பு இட்ட மறுமொழியில், இஸ்லாமிய அமைப்புகள் தவறு நடந்தால் பார்த்துக் கொள்ளும் என கூறி இருந்தீர்கள், இப்பொழுது ,அல்லாவே இறைவன் என்றால் அவன் முஸ்லீம், இல்லை என்றல் அவன் முஸ்லீம் இல்லை என்கிறீர்கள்.. இப்படி எளிதாய் இஸ்லாம் இருந்தால் ஏன் முகமதியா, அகமதியா, சியா, சன்னி இப்படி வேறுபாடுகள் நிறைந்த இஸ்லாமியர் இருக்கிறார்கள்.
இங்கே உங்களின் கூற்றுப்படியே நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் அமைப்புகள் எல்லாம் நெட்டிமுரிக்க மட்டும்தான் உள்ளனர் என பொருள் கொள்ளலாமா..
Mr. நெத்தியடி முகமது,
1927ஆம் ஆண்டு பார்பன வெறியன் காந்தி பிராமணர்களை வேண்டுமானால் கண்டியுங்கள்; ஆனால் பிராமணியத்தைத் தாக்காதீர்கள் என்று கூறினார். அதே போல நீங்கள் இங்கு வாதிடுவது முஸ்லிம்களை வேண்டுமானால் கண்டியுங்கள்; ஆனால் இஸ்லாமியத்தை தாக்காதீர்கள் என்பது போல் உள்ளது.
இக்கட்டுரை என்ன சொல்கிறது? வினவு இஸ்லாமியத்தை ஒழிக்க வேண்டும் என்றா சொல்கிறது? இல்லையே… இஸ்லாமியத்திலும் மக்கள் சாதி பார்க்கிறார்கள் என்று சொல்கிறது. அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இஸ்லாமியத்தில் சாதி பார்க்கவில்லை; இஸ்லாமிய மதம் சாதியை போற்றவில்லை என்று நிரூபிக்க வேண்டும், இல்லை முஸ்லிம்கள் சாதி பார்க்கிறார்கள் என்றால் அவர்களை நீங்கள் திருத்த முயல வேண்டுமே அன்றி அவர்கள் இஸ்லாமியர்களே இல்லை அவர்கள் அப்படி செய்தால் அதற்கு இஸ்லாமியம் பொறுப்பேற்காது என்று நீங்கள் கூறுவது சரியென்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை நீங்கள் இஸ்லாமிய மதத்தை தீவிரமாக பின்பற்றுகிறீர்கள் அதனால் அதை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் அப்படியா? அப்படியானால் கிறிஸ்துவ மதத்திலும் சாதி பார்க்கிறார்களே. அவர்களை நீங்கள் என்ன சொல்வீர்கள்? தயவு செய்து மதம் எனும் போதையில் இருந்து வெளியே வந்து பதில் சொல்லுங்கள்.
Anna vanakkam,, appuram nengallam
Rawthar, Maraikair, pattans , urdu muslim, kerala muslim nu pera vachikuringa
Oru URDU muslim orun tamil muslimukkku ponna tharuvana !????
Hai, Vanniyan,
you asked : /////Oru URDU muslim orun tamil muslimukkku ponna tharuvana !????////
my answer is : oru thamil communist oru seena communistukku … ada avvalavu venaam, oru bengaali communistukku than ponnai tharuvaanaa?
பாவம் நெத்தியடி முகமது பாகம் 1
தமிழ்நாட்டில் இருக்கும் உருது முசுலீமும், தமிழ் முசுலீமும் மண உறவு கொள்ளமாட்டார்களாம். ஆனால் தமிழகத்திலிருக்கும் ஒரு கம்யூனிஸ்ட்டு சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட்டை மணக்கவேண்டுமாம். நண்பரே அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நிச்சயம் மணம் புரிவோம். எதுவும் எங்களுக்கு தடையில்லை. ஆனாலும் உங்கள்மீசையில் மண் ஒட்டவில்லை.
@vinavu
முஹம்மதை விரட்டுவதில் என்ன உங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ? :(- வன்னியனின் கேள்வி குழந்தைத்தனமானது. சாதீயம் பற்றி பேசும் பதிவில் வந்து மொழி புரியாத ஒருவருக்கு பெண் கொடுப்பீர்களா என்று கேட்பது தமிழ் சினிமாவில் வரும் தனி ட்ராக் காமெடி போல :)-
மணிகண்டன், முகமதுவை நெருக்கமான நண்பர் என்ற முறையில் நட்பாகத்தான் விவாதிக்கிறோம். அதில் விரட்டுவது எங்கே வந்த்து? தமிழகத்தில் உள்ள உருது முசுலீம்களுக்கு தமிழ் நன்றாக தெரிந்தாலும் அவர்கள் தமிழ் முசுலீம்களை கீழானவர்கள் என்றே கருதுகிறார்கள். இது அப்பட்டமான உண்மை, காமடி இல்லை.
ஆஹா! என்ன ஆச்சரியம்..! வினவுக்கு என் கேள்வியில் இருந்த பதில் புரிந்து விட்டது. அதற்கு சப்பைக்கட்ட இப்போது ஒரு புதிய ‘சாதியை'(?) உருவாக்குகிறார்..! அவருக்கே தான் சொல்வது காமடி என்பதும் புரிகிறது. நம்பிவிடுங்கள், பாவம் அவர்!. வினவுக்கு BPபார்த்தால் மட்டும் போதாது…
சீன கம்யூனிஸ்டை இந்திய கம்யூனிஸ்ட் மணப்பது வெறும் வார்த்தை ஜாலமே .நடைமுறையில் ஒரு பயலும் அப்படி செய்தது இல்லை .ஊமை பாஷையில் குடும்பம் நடக்குமோ ??உருதுகாரர்கள் பலர் தமிழ் பேசும் பெண்ணையோ அல்லது ஆணையோ மணம் முடித்து இருக்கிறார்கள். ஒரு பார்ப்பான் ஒரு பறச்சியையோ பறயனையோ எங்காவது கல்யாணம் பாணி இருக்கிறார்களா ? அப்படி செய்திருந்தால் உண்மையிலேயே அது ஒரு சாதனை .அவரவர் தாய் மொழியில் சம்பந்தம் பேசுவதே சிறப்பு .தொந்தரவில்லாததும் கூட .அவரவர் மொழி அவர்களுக்கு உசத்தி .தமிழ் மொழி மட்டும் தெரிந்த ஒருவன் வேற்று மொழி மாநிலத்தில் பிச்சை கூட எடுக்க முடியாது .எம் பி ஏ படிப்பு படித்துவிட்டு பிரான்சில் ரெஸ்டாரன்டில் தட்டை கழுவும் வேலை செய்பவர் பலரை நான் பார்த்திருக்கிறேன் .இன்னும் இருக்கிறார்கள் .தமிழையும் இங்கிலீசையும் வைத்துகொண்டு நாக்கு வழிக்க வேண்டியதுதான் .பிரான்சில் குப்பை கொட்ட முடியாமல் இங்கிலாந்திற்கு ஆயிரக்கணக்கில் இந்தியர்கள் ஓடியிருக்கிறார்கள் .ஏன் இங்கிலீஷ் மொழி உசத்தி என்றா ?அல்லது தமிழ்மொழி மட்டம் என்றா ?எங்கே எந்த மொழியில் பேசினால் பிழைக்க முடியுமோ அதை செய்வதுதான் அறிவுடைமை .சீனப்பெண்ணை கட்டுவேன் என்பதெல்லாம் கேனப்பேச்சு.
//உருதுகாரர்கள் பலர் தமிழ் பேசும் பெண்ணையோ அல்லது ஆணையோ மணம் முடித்து இருக்கிறார்கள். ஒரு பார்ப்பான் ஒரு பறச்சியையோ பறயனையோ எங்காவது கல்யாணம் பாணி இருக்கிறார்களா ? அப்படி செய்திருந்தால் உண்மையிலேயே அது ஒரு சாதனை .//
உருதுகாரர்கள் – பார்ப்பனர், தமிழ் பேசும் பெண் – பறச்சி? தூ…
உங்களின் இந்த ‘கேவலமான ‘கம்பேரிசனே, இந்த தலைப்பு 100% உண்மை என்பதை உணர்த்திவிட்டது. ஒத்துக் கொண்டைமைக்கு நன்றி.
Dear Mr. Vinavu,
Before you comment about Islam, I would request you please read about Islam. If you do not read about Islam please dont comment about Islam.
Please read the history of Islam, history of Prophet and the Holy Quran. If you find something wrong then, you can comment on it. Hope you will agree with me.
//“முஸ்லிம்கள் (ஒரு கொள்கையில் இருப்பவர்கள்-அதன்படி நடக்க வேண்டியவர்கள்) இஸ்லாத்தில் (அந்த கொள்கையில் ) சொல்லாததையும் சொல்லியதுக்கு எதிராகவும் செய்யும் செயல்களுக்கு இஸ்லாம் (அந்த கொள்கை) பொறுப்பேற்காது.”//
—– இது இந்துக்களுககும், இந்துமதத்துககும் மடடும் பொருந்தாதோ?
சகோதரர் வினவு அவர்களே, உங்களின் தலைப்பு தவறானது. இஸ்லாத்தில் ஒரு போதும் சாதி கிடையாது. இஸ்லாத்தை பின்பற்றுவதாகக் கூறும் ஒரு சில கூட்டத்தார்களிடம் சாதி உள்ளதைத்தான் மேலுள்ள கட்டுரையாளர் விளக்குகின்றார். இஸ்லாம் அப்படி அறிவுருத்துவதாக அவர் கூறவே இல்லை. சரியாக படித்து உங்களின் தலைப்பை மாற்றவும்.
இப்படியான மனப்பான்மையை உடைப்பதற்காகத்தான் நம் தமிழகத்தில் உள்ள ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் போராடி வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு இஸ்லாத்தில் இல்லாததை இஸ்லாமாக கூறிப் பிரச்சாரம் செய்து வரும் ஆலிம்களை கடுமையாக சாடி மக்களிடத்தில் சரியான இஸ்லாதை 20 ஆண்டு காலமாக எடுத்து வைத்து வருகின்றனர். இதன் பலனாக அனேக முஸ்லிம்களை நேர்வழியின் பால் மக்களை அழைப்பதே தனது கொள்கையாக கொண்டுள்ளனர்.
தங்களால் முடிந்தால் கீழ்கண்ட வலைத்தளங்களுக்கு சென்று பாருங்கள்.
http://www.onlinepj.com
http://www.tntj.net
நன்றி.
உழைக்கும் இசுலாமிய மக்கள் நாகூரிலும், ஏர்வாடியிலும், பொட்டல்புதூரிலும் உள்ள தர்காக்களில் வழிபாடு செய்வது இசுலாத்திற்கு விரோதமானது என்று உங்கள் தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்கிறதே இது கூட மேட்டுக்குடி மனோபாவம்தான். மக்கள் விரும்பிய முறையில் வழிபாடு செய்வதைக்கூட அனுமதிக்காத நீங்கள் சாதி ஆதிக்கத்திற்கு மட்டும் எதிராக போராடுகிறீர்கள் என்பதை நம்ப முடியவில்லை.
Dear Vinavu, The owner of the company expect the employees to work for him in the way how he expected. It is not the employees’ individual freedom.
Similarly God (the Creator) created the human beings and ordered them to worship him in the way how he expected, not in their own way. And individuals are not having their own wish to worship anybody. They should worship the creator, not the creation. I hope you are clear with the Islam concept. If not please raise your comments, we can help you to understand and send you more explanations.
அய்யா வினவு அவர்களே… உங்களின் இந்த கருத்து உங்களின் அறியாமையையே காட்டுகின்றது. மேற்குறிப்பிட்ட கட்டுரையாளர் கூறிய சாதி வழியை உருவாக்கியவர்களைத்தான் மக்கள் அவ்லியாக்கள், நல்லடியார்கள் எனக்கூறி அவர்களின் அடக்கத்தலத்தில் தர்ஹாக்களை உருவாக்கி இவரிடம் பாவ மன்னிப்பு கேட்டால் அவர் அல்லாஹ்விடம் உங்களுக்காக பரிந்துரைச் செய்வார் எனக் கூறி மக்களை ஏமாற்றி தங்களின் வயிரை வளக்கின்றனர். இவர்களை நாடிச் செல்பவர்கள் எல்லாம் உழைக்கும் மக்கள் இல்லை. மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பெரும் பணக்காரர்கள் தான் தங்களின் பாவங்களுக்கு இந்த தர்ஹா வழிபாடு மூலம் தங்களின் தில்லு முல்லுகளுக்கு பாவ மன்னிப்பு தேட முயற்சிக்கின்றனர்.
முதலில் ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள். இஸ்லாத்தில் யாரும் தங்களின் சொந்த விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப சட்டத்தையோ அல்லது தனது வழிபாட்டையோ மாற்ற முடியாது. இந்த சட்டம் நடைமுறையில் உள்ளதால் தான் உலகம் முழுவதும் இஸ்லாமிய வணக்க வழிபாடு ஒரே மாதிரி உள்ளது.
இதில் குருக்குசால் ஓட்ட முற்படுபவர்களைத்தான் கட்டுரையாளர் வெளிச்சம் போட்டு காட்டுகின்றார்.
எந்தப்பள்ளியில் உழைக்கும் மக்களுக்கு தன்னுடைய வழிபாடு உரிமையை தடுத்தார்கள்? நாகூர், ஏர்வாடி மற்றும் பொட்டல் புதூர் போவதற்கு?
ஆமாம். நீங்கள் இந்த மாதிரியான இடங்களுக்கெல்லாம் சென்றீர்களா? முதலில் சென்று வாருங்கள். உங்களையெல்லாம் யாரும் தடுக்கமாட்டார்கள். பிறகு எழுதுவீர்கள் என்ன என்ன அநியாயம் எல்லாம் நடக்கிறது இந்த நாகூரிலும், ஏர்வாடியிலும். ஏன் ஏர்வாடியில் நடந்ததை மறந்து விட்டீர்களா?
இந்த மாதிரியான இடங்களில் நடைபெறும் வழிபாடுகளை எந்த அடிப்படையில் சரி என்கின்றீர்கள்?
என் அறிவுக்கு எட்டிய வரை , ஒரு இசுலாமியர் அல்லா வை தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது. தர்காஹ் என்பது இசுலாமிய வழிபெரியவர்கல் கல்லறை போன்றது .
http://en.wikipedia.org/wiki/Dargah
இதில் உழைக்கும் மக்கள் என்ற பினாத்தல் எதற்கு ?? உங்களுக்கு தோற்றிய படி வழிபட வேணும்னா நீங்க புதுசா ஒரு மதததை உண்டுபன்னுங்கள் . எப்படி வென கும்பிடலாம்னு ஒரு மதம் இருக்கு ?? தெரியுமா ? கடவுளே இல்லேங்கற மதத்துக்கு கூட வரையறை இருக்கு.
ஊரு ரெண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்
ஒரு கட்டுரை/பேட்டியை வைத்துக் கொண்டு இப்படி ஒரு தலைப்பு.சிறு நூல். நீங்களாக எதையும் படித்து, ஆராய மாட்டீர்களா. இந்த இடுகைக்கு நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறீர்கள். ஏனென்றால் அவர் பீகார் போன்ற மாநிலங்களில் உள்ளதன் அடிப்படையில் பேசுகிறார். அது இங்குள்ளவர்களுக்கு
புரியாது. ஜாகீர் ராஜா எழுதியதை தோப்பில் முகமது மீரான் எழுதியதை சல்மா எழுதியதை நீங்கள் படித்து விட்டு, கானம் ஷெரீப் போன்றவர்களிடம் கேட்டறிந்து விட்டு தமிழ் நாட்டு நிலவரம் இது என்று எழுதியிருந்தால் அதில் அர்த்தமிருக்கும்.
ஆங்கிலத்தில் இருந்த தலைப்பு என்ன? தலைப்பே தவறு. பார்பனியத்திடம் இஸ்லாம் சரணடைந்திருந்தால் இந்த்துவ அமைப்புகள் ஏன் அதை எதிர்க்கிறார்கள்.
@ நெத்தியடி முகமது & கோ..
இவர்கள் சாரமாகச் சொல்வது –
1)”இசுலாத்தில் சொல்லாத ஒன்றை ஒரு இசுலாமியன் செய்தால் அது இசுலாமின் குற்றமல்ல”
2)”அப்படி இசுலாத்தில் சொல்லாத / தடைசெய்யப்பட்ட ஒன்றை ஒரு இசுலாமியன் செய்யும் போது அவன் முசுலீம் இல்லை என்றாகிறது;
அப்படியிக்க, நீங்கள் ஏன் இசுலாத்தின் மேல் குற்றம் சாட்டுகிறீர்கள்?”
3) அப்படி ஒருவன் இசுலாத்தில் இல்லாத ஒன்றை ஒருவன் செய்யும் போது அவனை நல்வழிப்படுத்துவதை விட்டுவிட்டு ஏன் இசுலாத்திலிருந்து
வெளியேறுமாரு சொல்ல வேண்டும்?
4) இசுலாத்தை விமர்சணம் செய்தால் அது ஆர்.எஸ்.எஸ் மனப்பான்மையைத் தான் காட்டுகிறது!
ம்… உலகின் எந்த மதமும் / தத்துவமும் நேரடியாக இன்னொரு மனிதனைத் துன்புறுத்து என்றோ; கொல்லு என்றோ; சுரண்டு என்றோ; ஒடுக்கு
என்றோ சொல்வதில்லை – இந்து மதத்தை “மதம்” எனும் வரையறைக்குள்ளேயே நான் கருதாததால்; அது மக்களை ஒடுக்கவென்றே
உருவாக்கப்பட்ட ஒரு தத்துவக் கோர்வை என்பதில் எனக்கு சந்தேகமேதும் இல்லாததால் இதில் இந்து ‘மதத்தை’ நான் கணக்கிலெடுத்துக்
கொள்ளவில்லை.
ஆனாலும் கூட இதே விதியை ஒரு இந்து சனாதனவாதியும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். சதுர் வர்ணம் மயா சிருஷ்ட்டம் என்று அந்த
பகவானே சொல்லி விட்ட பிறகு, நீங்கள் ஏன் படிநிலை படிநிலை என்று கூப்பாடு போடுகிறீர்கள்? அதான் பகவானே சொல்லிட்டானே?
சக்கிலியும் பரப்ரும்மம்; பரயனும் பரப்ரும்மம்; மறவனும் பரப்ரும்மம்; கவுண்டனும் பரப்ரும்மம்; பாப்பானும் பரப்ரும்மம்! முடிஞ்சது மேட்டரு…
எல்லாரும் ஒன்னு தான் எல்லாரும் ஹிந்து தான்.
மதம் எப்போதும் நீக்குப்போக்குகளுடன் தான் தன்னை பின்பற்றும் கூட்டத்தை அணுகுகிறது. அது எந்த மதமாயிருந்தாலும் அப்படித்தான். பாவ
மன்னிப்பு இத்தியாதி இத்தியாதி… மதம் என்பது ஒரு தேங்கிய குட்டை! இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட விவிலியமும் ஆயிரத்து
நானூறு வருடங்களுக்கு முன்பு இறங்கிய குரானும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் பிரச்சினைகளுக்கும் மதவாதிகளுக்கு இருக்கும் ஒரே
ரெஃபரன்ஸ் பாயிண்ட். அது தன்னைப் புணருத்தாரணம் செய்து கொள்வதுமில்லை – அது அனுமதிக்கப்படுவதுமில்லை.
வரலாற்றின் வளர்ச்சிப்போக்கில் மனிதர்களின் வாழ்வடிப்படைகள் மாறிவருவதைக் கணக்கிலெடுத்து தனது அனுபவங்களைத் தொகுத்து புதிய
அணுகுமுறையை வைப்பதோ – தனது அடியார்களின் தவறுகளில் இருந்து சுயவிமர்சனம் செய்து கொள்வதோ மதம் என்று வரும் போது வாய்ப்பே
இல்லாதவொன்றாகிவிடுகிறது.
இவ்வகையில் மதம் எப்போதும் மனிதனைப் பின்னோக்கியே இழுக்கிறதேயன்றி அது எப்போதும் ஒரு மனிதனை முன்னோக்கித் தள்ளுவதில்லை.
ஒரு கம்யூனிஸ்ட்டின் வேலை சாதிபார்க்கும் இசுலாமியனிடமும் வரதட்சினை வாங்கும் இசுலாமியனிடமும் ( ஓக்கே ஓக்கே.. பெயர் தாங்கிகள்னே வச்சிக்குவோமே) போய் இசுலாமை சரியாகப் பின்பற்றச் சொல்வதாக இருக்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? ஒரு சமுதாயத்தை
முன்னோக்கிச் செலுத்திச் செல்ல வேண்டுமானால் பழைய குட்டைகளை காலி செய்தாக வேண்டும் – மதத்தை உடைத்து நொறுக்க வேண்டும்.
எனவே கம்யூனிஸ்டு ஒரு மதத்திற்கு சாதகமாகவும் ஒரு மதத்திற்கு பாதகமாகவும் நடந்து கொள்ள முடியாது – மொத்தமாக எல்லா நாத்தத்தையும்
ஒழிச்சுக் கட்டத்தான் முனைவான்.
எனவே தான் மத வேறுபாடுகளைக் கடந்து எல்லா மதவாதிகளும் கம்யூனிஸ்ட்டை தனது எதிரியாக வரித்துக் கொள்கிறார்கள். நெத்தியடி
முகமதுவுக்கு எங்கள் தோழர்கள் மேல் இருக்கும் அதே கோபம், அதே அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் மோஹன் பாக்வத்துக்கும் இருக்கும். இந்த
அம்சத்தில் இவர்கள் இருவரும் எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் எங்களை ஒழித்துக் கட்ட தோளோடு தோள் சேரவும் தயங்க மாட்டார்கள்.
இசுலாத்தில் சொல்லாதவற்றை செய்யும் நபர்களின் தனிப்பட்ட செயல்களுக்கு கம்பேனி பொறுப்பல்ல என்கிறீர்களே.. சரிங்க இந்த ஆயிரத்து
நானூத்தி சொச்ச வருசத்தில இந்தியாவுக்கு வந்து ஒரு ஆயிரத்து சொச்ச வருசம் இருக்குமா? இந்த ஆயிரம் வருசத்தில ஏன் ஐடியல் முசுலீம்கள்
உருவாகவில்லை? அப்படி உருவாகியிருக்கிறார்கள் என்றால்.. மற்றவர்களை ஒரு லிட்மஸ் டெஸ்ட் வச்சி தூக்கி வெளியே கடாச வேண்டியது
தானே? ஆயிரம் தான் இருந்தாலும் நமக்கு அல்லா தானுங்களே முக்கியம்? அவரு சொன்ன வார்த்தைகள் தானேங்க முக்கியம்? இந்த கழிசடைப்
பசங்க பன்ற தப்பெல்லாத்துக்கும் ‘நல்ல’ முசுலீம்களும் இசுலாமும் ஏன் கெட்ட பேரு வாங்கிக்கனும்?
அதனால முதல்கட்டமா வட்டி வாங்கறவனும், வரதட்சினை வாங்கறவனும், பிறப்பினடிப்படையில் பிரிவினை பார்க்கறவனும் இசுலாத்திலிருந்து
கெட் அவுட் அப்படின்னு அறிவிச்சுடுங்களேன்?
அதச் செய்ய மாட்டீங்க! நீங்க மட்டுமில்ல வேறு மதத்திலயும் செய்ய மாட்டாங்க! அப்படிச் செய்யவும் முடியாது. மீறி செய்தா.. நெத்தியடி
மொகமதுவும் கூட ஒரு நாலஞ்சி பேரும் தான் முசுலீமாவே தேறுவீங்க.
தனது சித்தாந்தத்தை பின்பற்றும் ஒரு மக்கள் கூட்டத்தில் நடக்கும் தவறுகளை / இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களையவோ, தனது அணுமுறையை
மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லாத – அதன் விளைவுகளுக்கு சுயவிமர்சனம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத மதத்தைத்
தான் அதைப் பின்பற்றுபவர்கள் அதன் பேரில் செய்யும் செயல்களுக்குப் பொறுப்பாக்க முடியும் – அந்த வகையில் இந்திய இசுலாமியர்களில்
பெரும்பான்மையாகக் காணப்படும் சாதி (நடப்பில் வலிமையாக உள்ள பார்ப்பனிய மத்திடமிருந்து சுவீகரித்துக் கொள்ளப்பட்டதாகவே இருந்தாலும்)
களையப்படாததற்கு இசுலாத்தின் மேல் தான் குற்றம் சுமத்த முடியும்.
எல்லாம் சரிதாங்க.. ஆனா பேட்டில சொல்லப்பட்ட விஷயங்களுக்காக நீங்கள் ஏன் பார்ப்பனியத்திடம் இசுலாம் சரணடைந்தது என்று
தலைப்பிட்டீர்கள்? என்கிறார் ஒருவர். இசுலாமாகட்டும் கிருத்துவமாகட்டும் – இங்கே பரவ தனக்கு முன்னேயிருந்த ஒரு சமூக அமைப்பின்
கூறுகளை தன்னுள் வரித்துக் கொண்டிருக்கிறது என்பது தானே மேலே உள்ள பேட்டியின் மூலம் சாராம்சமாகத் தெரிவது? எனில் இந்தத்
தலைப்பு தான் பொருத்தமானது!
சங்கு, நீங்கள் எழுதி இருப்பவதை படிக்க நன்றாக தான் இருக்கிறது. ஆனால், கோடிக்கணக்கான மனிதர்கள் பின்பற்றும் மதம், அவற்றை பின்பற்றுபவர்கள் எல்லாம் ஒரேவிதமாக நல்லவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சும்மா பேச்சுக்கு தான் உதவும். மதம் மீது இன்றைய இந்தியாவின் மக்களில் தொண்ணூறு சதவீதம் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆதலால், அவற்றுள் எது சிறந்தது / எவ்வாறு தீமைகள் களையப்படவேண்டும் என்பதை குறித்து தான் விவாதங்கள் இருக்கவேண்டும். அப்படி செய்யும் போது ஒருவேளை மதத்தின் தேவையே மறுபரிசீலனைக்கு உட்படும். அதை விட்டுவிட்டு இதுபோன்று முகமதுக்காக கட் & பேஸ்ட் செய்து provocate செய்வது எல்லாம் எதற்கும் உதவாது.
இல்லையென்றால் நீங்கள் கேட்டுள்ள கேள்விகளை உங்களிடம் திருப்புவது மிகவும் எளிதானதே ! கம்யூனிஸ்ட் என்று சொல்லிகொள்பவர் ஏதாவது ஒரு தவறு செய்தால் நீங்கள் போலி கம்யூனிஸ்ட் என்று கூறுகிறீர்கள். முகம்மது அவருக்கு தெரிந்த வழியில் அவன் முஸ்லிம் இல்லை என்று கூறுகிறார். ஒரு வித்தியாசமும் இல்லை.
மணிகண்டன், இது முகம்மதுக்காக கட்டு அன்டு பேஸ்டு செய்தது அல்ல. இந்த பேட்டியை எங்கள் அமைப்பு சார்பாக நாங்கள் சிறு வெளியீடாக கொண்டு வந்துள்ளோம். தவிர அப்படியே செய்தாலும் என்ன தவறு, எனக்கு தெரிந்த இசுலாமியரிடத்திலெல்லாம் நான் இந்த நூலை வாங்கிக்கொடுதது விவாதித்திருக்கிறேன். இந்த கட்டுரையும் அதே போன்ற ஒரு விவாதத்தை இங்கே தூண்டினால் அது நல்லதுதானே.
இந்த கட்டுரையில் எழுதப்பட்டிருப்பது இந்தியாவில் நடக்கும் உண்மை. அதைப்பற்றி முகம்மதோ நீங்களோ பேசவில்லை ஆனால் சம்பந்தமே இல்லாமல் எங்கள் நோக்கத்தை கேள்விகேட்பது விவாதத்தை திசை திருப்புதாகவும் தனிநபர் தாக்குதலுக்கும் தான் வழிவகுக்கும்.
ஹலோ, புஷ்…! பிரச்னையை நானா திசை திருப்புகிறேன்? இங்கு தலைப்பு தான் நடுநிலை நல்லோர் அனைவராலும் எதிக்கப்படும் அம்சம். புரியவில்லையா?
வினவும், அவரின் ஒரு முஸ்லிம் தோழரும் செக்ஸ் படம் பார்க்கப்போகிறார்கள் என்று வைப்போம். மஜாவாக பார்த்துவிட்டு வந்து, அடுத்தநாள், வினவு, தன் தளத்தில், தன் முஸ்லிம் தோழரை மைண்டில் வைத்து, “ஷகிலாவிடம் சரணடைந்த இஸ்லாம்” என்று பதிவு போட்டால்? “தோழர்கள்” வேண்டுமானால் பரவசப்பட்டு ஆனந்தக்கூத்தாடி கொண்டாடி மகிழலாம். நடுநிலை நல்லோர் எதிக்காமா எப்படி இருப்பது? வேண்டுமானால் “ஷகிலாவிடம் சரணடைந்த ஒரு முஸ்லிம்” என்று போட்டுக்கொள்ளட்டுமே? (முஸ்லிம்கள் என்று போட்டாலும் கூட, அதையும் எதிர்த்து, வினவுக்கு, ஒருமை/பன்மை பற்றி எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டிவரும்.) இப்படி தலைப்பிடுவதேல்லாம் எதற்காக? ஏற்கனவே, இதுவரை யாரையும் பற்றி நல்லதாய் எழுதாத வினவு தமிழ்மணத்தை மட்டும் காகாபிடித்து எழுதி, அதன்மூலம், ஏகப்பட்ட ஹிட்ஸ் வரவேண்டும், அதரவு வோட்டுகள் வர வேண்டும், வினவின் புகழை எல்லாரும் பாட வேண்டும், அதன் மூலம் அதன் “TRP rating” (?) எகிற வேண்டும்….இதுதானே? அதற்குத்தான் நான் நிறைய ‘டிப்ஸ்’ ////வினவுக்கு டிப்ஸ்: அடுத்தடுத்த “புரட்சிகர ஆக்கங்களின் தலைப்புக்கள்” ….!!!!??? ///// கொடுத்துள்ளேனே..!.
இந்நிலையில் அந்த வினவின் அப்பாவி முஸ்லிம் தோழர், “ஏனையா வினவு, நிரும்தானே என்கூட வந்தீர், ஷகிலாவை ரசித்து ஜொள்ளு விட்டீர், எனவே, “ஷகிலாவிடம் சரணடைந்த ம.க.இ.க” என்று நான் சொல்லலாமா?”, என்று பாவம், அந்த பரிதாபத்திற்குரிய வினவின் முஸ்லிம் தோழர் வினவினால்,….. துல்லியமான இந்த லாஜிக்…. பாவம், வினவுக்கு புரியுதோ இல்லையோ, ம.க.இ.க. வின் ஒரு தோழருக்கும் புரியாது என்பதை மிகவும் உறுதியுடன் நம்பலாம்.
நெத்தியடி பாய்
1) நீங்கள் நடுநிலையாளர் அல்ல
2) இந்த தலைப்பு மிகச்சரியானது
3) வினவை விமர்சித்து நாலனாவுக்கு பயனில்லை கட்டுரையில் உள்ள கருத்துக்களை ஒன்றொன்றாக மறுத்து எழுதினால் உங்கள் அறிவு மற்றவர்களுக்கு பயன்படும்
நெத்தியடி முகமது பாய் அண்ணாச்சி,
ஷகிலா படத்தை மஜாவாக பாத்த்தப்பத்தி ஜாலியா எழுதுதீகளே நீங்கள் ஒரிஜனலா இல்லையா? ஒரு நல்ல பாய் அண்ணாச்சி ஷகிலா பெயரைச் சொல்லுத்துக்கு உரிமை இல்லையிலா? முதல்ல இந்த பிரச்சினைக்கு பதில் சொல்லுங்க.
இசுலாமியர்கள் சாதி பாராட்டுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ முயலாமல் சம்பந்தமில்லாமல் ‘ஷகிலாவை வைத்து திசை திருப்பி என்ன ஆதாயம் அடையப் போகிறீர்கள் நெத்தியடி முகமது?
வினவு,
நான் பார்த்த அளாவில் முஸ்லீம்கள் ஒரு கருத்து பரிமாற்றம் என்று வரும் பொழுது, ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் முன்னேற முடியவில்லை. அதனால், அத்துடன் காணாமல் போய்விடுகிறார்கள். (அல்லது) அவர்களால் எதையும் தர்க்கத்துடன் பேச முடிவதில்லை. இது அவர்களின் ‘இது தான் சரியானது’ என்ற மனோபாவம் தான் காரணம் என்பது என் கருத்து. இதை நான் 100% உருதியுடன் சொல்கிறேன்.
புச்சு, நான் வினவின் சமீபத்திய பதிவுகளை படித்து வருகிறேன். அதில் முகமது எழுதும் பின்னூட்டங்களும் / அவற்றுக்கு வினவு குழுவினரின் பதில்களையும் படித்தேன். இந்த சூழ்நிலையில் இந்த பதிவு விவாதத்தின் தொடர்ச்சியாக தெரிந்தது. அதைத்தவிர வினவின் பதிலாகிய “உங்களை தான் எதிர்பார்த்து இருந்தோம்” என்பதும் அந்த எண்ணத்தை வலுபடுத்தவே செய்தது. அதனால் எனக்கு தோன்றியதை கூறினேன் சம்பந்தமே இல்லாமல் உங்கள் நோக்கத்தை கேள்வி கேட்பதாக நினைத்தால் “ஓகே”. ஆனால் இந்த விவாதத்தை மேலும் திசை திருப்பாமல் இருக்க ஒதுங்கி கொள்வதில் ஒரு பிரச்னையும் இல்ல எனக்கு.
மணிகண்டன், நீங்கள் செல்லதும் சாத்தியமே ஏனென்றால் இந்தியாவின் சாதி பிரச்சனைக்கு இசுலாமை தீர்வு என்றார் பாய்… அதற்கு பதிலாக இந்த பதிவு ஏற்றப்பட்டிருக்கலாம் அப்படியே ஆனாலும்… அதற்காக வினவைதிட்டினால் சாதி ஒழியுமா? விவாதம் இசுலாமில் ஏன் சாதி இருக்கிறது என்பதை ஒட்டி நடந்தால் நலம்
அந்த ஆராய்ச்சியாளர் கூட class & caste வித்தியாசத்தை ரொம்பவே குறுக்கி எழுதிட்டாரோன்னு தான் தோனுது. எனக்கு தெரிந்த நண்பர்களின் (முஸ்லிம்) கல்யாணத்தில் இந்த ஜாதி வைத்து பெண்/பையன் தேடும் படலங்களை பார்த்ததில்லை. தீண்டாமை கொள்கை இருந்தால் தான் ஜாதி தவறு.
மதம் இருக்கிறதோ / இல்லையோ, என்றுமே இந்த சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அதற்கு basic standard of living நல்ல நிலையை அடைந்தால் ஏற்றத்தாழ்வினால் பிரச்சனைகள் இருக்காது.
மற்றுமொன்று – நான் நேதேர்லாந்தில் வசிக்கிறேன். இந்தியாவிலிரிந்து சுரினாமிர்க்கு(Dutch Colony) அடிமைகள் (Slave labours) ஆக 150 / 200 வருடங்கள் முன்பு பீஹார் மற்றும் உத்திர பிரதேசத்ரிலிருந்து பலரும் விற்கப்பட்டனர். அங்கு உள்ள மக்கள் (சுரினாமில்) இன்றளவிலும் ஜாதிகளை கடைபிடிக்கின்றனர். அதே சுரினாமில் இருந்து நெதெர்லாந்து வந்து குடியேறிய மக்கள் (இந்து) யாரும் ஜாதியை கட்டிக்கொண்டு அழவில்லை. திருமணங்களும் ஜாதி வைத்து நடப்பதில்லை. என்ன காரணமாக இருக்கும் ?
Mr. மணிகண்டன்,
//தீண்டாமை கொள்கை இருந்தால் தான் ஜாதி தவறு.//
அப்படியென்றால் இந்து வேத முறை இந்தந்த சாதியினர் இந்தந்த தொழில்தான் செய்ய வேண்டும் என்று சொல்கிறதே அந்த இடத்தில் சாதி சரி என்றாகிவிடுமா???
//மதம் இருக்கிறதோ / இல்லையோ, என்றுமே இந்த சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அதற்கு basic standard of living நல்ல நிலையை அடைந்தால் ஏற்றத்தாழ்வினால் பிரச்சனைகள் இருக்காது.//
According to New Internationalist (July 2005), In India, Brahmins, who are 3.5 per cent of the population, hold 78 percent of the judicial positions and approximately 50 per cent of parliamentary seats. இந்த அதிகாரப் போக்கிற்கு எந்த மாதிரியான basic standard of living தேவை என்று சொல்லுங்கள்.
//மற்றுமொன்று – நான் நேதேர்லாந்தில் வசிக்கிறேன். இந்தியாவிலிரிந்து சுரினாமிர்க்கு(Dutch Colony) அடிமைகள் (Slave labours) ஆக 150 / 200 வருடங்கள் முன்பு பீஹார் மற்றும் உத்திர பிரதேசத்ரிலிருந்து பலரும் விற்கப்பட்டனர். அங்கு உள்ள மக்கள் (சுரினாமில்) இன்றளவிலும் ஜாதிகளை கடைபிடிக்கின்றனர். அதே சுரினாமில் இருந்து நெதெர்லாந்து வந்து குடியேறிய மக்கள் (இந்து) யாரும் ஜாதியை கட்டிக்கொண்டு அழவில்லை. திருமணங்களும் ஜாதி வைத்து நடப்பதில்லை. என்ன காரணமாக இருக்கும்?//
இக்காரணத்தைப் புரிந்து கொள்ள முதலில் நீங்கள் அம்மக்களை வைத்து வேலை வாங்குபவர்கள் சாதி பார்ப்பவர்களா என்று பாருங்கள்… பின்னர் அதிலிருந்தே நீங்கள் ஒரு முடிவுக்கு வருவீர்கள்.
lenin, my answer was in response to the perceived casteism in islam where the author has accepted that there is no untouchability in it ! In this case, caste is nothing but a class of people. So, your first part of the answer does not make any sense w.r.t what i write.
I just don’t understand on why you have mentioned that statistics when i talk about basic standard of living. And if possible, kindly give me the link. It is like someone saying that all the kings before independence belong to what is termed today as most backward class. And also, if you see the last parliamentary term, we had 40 MP’s, 9 central ministers, cm of tamilnadu and so many state ministers from castes other than brahmins and ended up blaming 3 malayali higher caste bureaucrats for the injustice in eezham saying that they hold all the powers. (which i refuse to believe)
i don’t really know the answer for third one. you might be right but it may not be all that simple too. It is probably the only place where the hindus as a group is not following any casteism. That is why i wrote.
( i don’t have any tamil writers and google transliterate is failing me )
மணிகண்டன்,
வாழ்க்கைத்தரம் கூடிவிட்டால் சாதி பார்க்கமாட்டார்கள் என்பது உண்மையில்லை. இந்தியாவில் தீவிரமாக சாதி பார்க்கக்கூடிய பார்ப்பன மற்றும் ‘மேல்சாதியினர்’ வர்க்க ரீதியாகவும் மேட்டுக்க்குடியாகத்தான் இருக்கின்றனர். உங்கள் வாதப்படி இவர்கள் சாதியை மறந்திருக்கவேண்டும். யதார்த்தமோ நேரெதிராகத்தானே உள்ளது?
வினவு, தவறான புரிதல். நான் கூற வந்தது அடிமட்ட மக்களின் வாழ்க்கை தரம் குறித்து. Basic standard of living ஒரு நல்ல நிலையில் (அனைவருக்கும்) இருக்கும்பொழுது மாறலாம் என்று நினைக்கிறேன். அப்பொழுதும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஆனால் ஏற்றத்தாழ்வினால் பிரச்சனைகள் வராது. சோ, இந்தியா குறித்து நீங்கள் செய்து இருக்கும் comparison சரியாக வராது.
மணிகண்டன், Basic Standard of Living நன்றாக இருக்கும் நாடுகளில் நிறவெறி இருப்பதில்லையா?
சாதி வெறி / மத வெறி / இன வெறி / மொழி வெறி / நிற வெறி – இவற்றை நீங்கள் எப்படி அளவீடு / மதிப்பீடு செய்கிறீர்கள் என்று தெரியாது. ஆனால் நான் அவற்றால் ஏற்படும் பாதிப்பை வைத்து பார்க்கிறேன். அப்படி பார்த்தால் மேற்கு ஐரோப்பாவில் நிறவெறி இருக்கலாம். ஆனால் அவற்றினால் பாதிப்பு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு தான். (எனது அனுபவம் சார்ந்த கருத்து…தவறாகவும் இருக்கலாம்)
very good article….. its rare in tamil to read like this…..let others shout….but truth is truth….no body can deny that….. as chairman mao said ‘ they can pluck and throw the flowers but they cannot hold and stop the spring to come’ … i am worried only about one trend that is really paining .. that is where are these gentlemen so called defenders of islam gone when marxist leninst comrades stood honestly without any occilation and ready to sacrifice their life for the minority community against the facist rss and rightist forces…they escape at that time and come suddenly …i think they are the real danger than the right wing rss forces..because enemy has name but these bloggers who scribble dangerously does not have name they are the enimies of the people ….
//இந்து மதம் தலித்துகளுக்கும், சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் இழைத்திருக்கும் கொடுமைகளை முதலில் நீங்கள் பேசுங்கள். அந்த வகையில் இசுலாத்தை விமரிசிப்பதற்கு முன் உங்கள் வண்டவாளங்களை திரும்பிப் பாருங்கள். அம்மணமாக நடமாடுபவன் கோவணம் கட்டியவனை கேலிசெய்தது போல இருக்கிறது உங்கள் ஆதங்கம்.//
This is equally applicable to Vinavu and other criminals in Naxal movement like ma ka i ka.Do they have the honesty or guts to criticize the naxals who have mortgaged themselves to the chinese villains and also fervently wish to handover the country to China;do they have the honesty to condemn the marxists and naxalites killing hundreds of innocent people.people like vinavu do not have the moral right to criticize islam or for that matter any other institution.
naxalites killing hundreds of innocent
can you specify when and where? this article is about castism in muslim community ,you try to take the discussion in other way
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டு. நக்ஸலைட்டுகளோ, இஸ்லாமிய பயங்கரவாதிகளோ உலகில் இல்லவே இல்லை.
I feel Sangu is correct. instead of arguing about which religion is best or what to do to change religios, we need to remove all the religions from India. It is hard but if you start planning and execute perfectly like JESUS and MOHAMAD we can also get rid of this religion from India even from WORLD. If you want peaceful WORLD then we should not any religion. I am firmly believe BRAHMINS, MUSLIMS and CHRISTIN are the only people following religion. If you convert these people to NO RELIGION then the world become PEACEFUL.
மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தினானாம்.
PAKISTAN is the place in earth creating terrorist to destroy WORLD. It is due to they are following ISLAM. Nowadays in the world all knows that those who follow ISLAM, they are against humanity and they all are converted in to terrorist. Just another Victim is Fort Hood in Texas.
Hindu religion is Indian whereas Christianity and Islam foreign. The foreign religions, when it comes to India, the Indians impose on them the Indian ethos and Indian manners on it and adopt the religions, differently. Hence, we see the same discrimination, which Hindus have been doing, among the followers of the two foreign religions in India.
Islam preaches no division; and anyone who wants divisions, is not a Muslim. It is good to hear; but it is just theory. The practice is as I said in the first para.
In Bihar, the people who converted to Islam are mostly from the poorer sections of society, that too, the former untouchables of Hinduism. The few who converted to Islam from upper castes, never accept their untouchables as their equal. Islam is in theory. Not in practice here,
That is why Bihar Politicians like Lallu Yadav and UP politicians like Mulaymsing Yadav want reservations in jobs for those former untouchables among Muslims.
Nethiyadi Mohamaad and his company of friends here, do not want to see the stark realities that face a sociologist who study societies in India.
யோவ் கேனஸ்வாமி
இஸ்லாமில் ஜாதி இல்லை என்று சொல்கிறீர் .ஆனால் அது வெறும் தியரி மட்டும் என்கிறீர் .ஜாதிகுப்பைகளின் கலவையில் உருவான நீர் என்னத்தை நக்கி சுவாமி ஆனீர் .தீர்த்தம் என்ன கோமியமா?? கோகோ கோலா கோமியம் எப்போ ரிலீஸ் ??
நாடோடி, விவேகானந்த சாமி சரியாகத்தானே சொல்லியிருக்கிறார். வெளிநாட்டிலிருந்து வந்த இசுலாமும், கிறித்தவமும் பார்ப்பனிய இந்து மதத்தின் சாதியத்தை ஏற்றுக்கொண்டே வளர முடிந்த்து என்பதில் என்ன தவறு என்பதைக் கூறவும். இசுலாத்திதன் சரியை அதை பின்பற்றுபவரின் அளவுகோலின்படிதானே மதிப்பிட முடியும்?
வினவு says : ////இசுலாத்திதன் சரியை அதை பின்பற்றுபவரின் அளவுகோலின்படிதானே மதிப்பிட முடியும்?////
சர்தான்…அப்போ…..
கம்யூனிசத்தின் சரியை அதை பின்பற்றுபவரின் அளவுகோலின்படிதானே மதிப்பிட முடியும்? பிறகெதற்கு வண்டி வண்டியாய் உங்களின் “போலி கம்யூனிஸ்டுகள்” பதிவுகள்? உங்களின் இவ்வாதப்படி “கம்யூனிசம் போலி” என்றே நாங்கள் இனி புரிந்து மதிப்பிட்டுக்கொள்கிறோம். நன்றி வினவு.
முஹம்மது, நான் பொதுவாக மத நம்பிக்கையாளர்களிடம் (இஸ்லாம் / கிருஸ்துவர்களிடம்) அவர்கள் நம்பிக்கை குறித்து விவாதிப்பதில்லை. ஆனாலும் கம்யூனிசம் / இஸ்லாம் பதிலை நீங்கள் கொடுப்பதற்கு உதவி செய்துவிட்டேனோ என்று நெருடுவதால் ஒரே ஒரு கேள்வி. உங்கள் கேள்விக்கு வினவு குழுவினர் “ஆம். நீங்கள் சொல்வது சரி. கம்யூனிசம் போலி” என்று கூறினால் நீங்களும் இஸ்லாம் போலி என்று ஒத்துக்கொள்வீர்களா ?
பாவம் நெத்தியடி முகமது பாகம் – 2
நாங்கள் போலி கம்யூனிஸ்டுகள் என்று மதிப்பிட்டு விமரிசிப்பது போல நீங்கள் இசுலாத்தை சரியாக பின்பற்றாதவர்களை போலி இசுலாமியர்கள் என்று அழைப்பதில்லையே? வக்கிரம் பிடித்த அரபு ஷேக்குகள் முதல் சாதிவேற்றுமை பாராட்டும் இந்திய உலமோக்கள் வரை எல்லோரையும் இசுலாமியர் என்றே கொஞ்சி குலாவுகிறீர்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும் நண்பா!
//////உங்கள் கேள்விக்கு வினவு குழுவினர் “ஆம். நீங்கள் சொல்வது சரி. கம்யூனிசம் போலி” என்று கூறினால் நீங்களும் இஸ்லாம் போலி என்று ஒத்துக்கொள்வீர்களா ?////// —– ஒருக்காலும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் திரு.மணிகண்டன். நானும் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்பதில் என்ன சந்தேகம் தங்களுக்கு? எனக்காகவே ஒரு copy & paste பதிவை போட்டுவிட்டு, என்னையே எதிர்பார்த்து ரத்தக்கொதிப்புடன் தவம் கிடக்கும் வினவிடமிருந்து பதில் வரட்டும் என்றுதான் உங்களுக்கு பதிலளிக்க தாமதித்தென், திரு.மணிகண்டன். (இன்று நாட்டுக்கு உபயோகமான வேறு எந்த பதிவும் கிடையாதாம்! நான் மட்டும் தான் இலக்கு போலும்!பாகம் பாகமாய் அவரின் அவரின் சின்னபுள்ளத்தனமான பதிலை பார்த்தீர்கள் அல்லவா?) தன் பதிவிற்கு பொருந்தமில்லாத தலைப்பிட்ட வினவின் தவறான புரிதலிலிருந்து அவரை வெளிக்கொணரவே அந்த கேள்வியை கெட்டேன். நேற்றய எனது 3 மறுமொழிகளில் எங்காவது இந்த பதிவில் வந்தவை எல்லாம் பொய் என்று கூறி இருக்கிறேனா? அப்படி ஒரு அலிபியை உருவாக்கி இருக்கிறார். அப்போதுதான் அவரின் கருத்து சாகாமல் நிற்கும் என்பதற்காக. தலைப்பு மட்டுமே இவரின் சொந்த சரக்கு. அதனை மட்டுமெ எதிர்க்கிறேன். ஏற்கனவெ தமிழ் சர்க்கிளில் நான் முழுதாக படித்த பதிவுதான் இது என்பதை 4 வரிகளிலேயே புரிந்து கொண்டேன். (உள்ளெ வேறு என்ன தகிடுதத்தங்கள் செய்திருக்கிறார் என்று ஒரிஜினலோடு ஒப்பிட்டால் தான் தெரியும்). இவரையெல்லாம் ஒரு சிந்தனாவாதியாக நினைத்தது என் தவறு.
கவிஞர் இன்குலாப் (சாகுல் ஹமீது) அவர்களின் கட்டுரைத் தொகுப்பு – “கவிதா” படித்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களில் அனுசரிக்கப்படும் சாதி வேற்றுமைகள் தெரியவரும்.
சாதி வேற்றுமைகள் இஸ்லாமிய மதக்கோட்பாடுகளின் அனுமதிக்கப்படுவதாக யாரும் கூறுவதில்லை. ஆனால் நடைமுறையில் இருக்கும் சாதியக் கொடுமைகளை மரபுவழி இஸ்லாமியர்கள் யாரும் பகிரங்கமாக எதிர்க்க முற்படுவதில்லை என்பதே பரவலான குற்றச்சாட்டு.
தற்போதைய இஸ்லாமியர்கள் சில மாற்றங்களை செய்ய நினைக்கலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் பல சறுக்கல்கள் – உதாரணம்: தமுமுக-வின் புதிய அரசியல் கட்சி மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்கவிழாவிலோ, அழைப்பிதழிலோ ஒரு பெண் பெயர்கூட, பெயரளவுக்குக்கூட இல்லை.
மற்ற மதங்களை, அந்த மதம் சார்ந்தவர்களே விமர்சிக்கும்போது ரசிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள், இஸ்லாமிய மதம் (அ) மார்க்கத்தை மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாக நினைப்பதுகூட மேற்கூறிய சறுக்கல்களுக்கு காரணமாக இருக்கலாம்.
Excellent. This is what i am telling to Netheiyadi Mohammad.
நண்பர் சுந்தர்ராஜன் மற்றும் வினவு அவர்களுக்கு நான் புதிதாஹ இணைந்துல்லேன் இந்த வெளிஈடு குறித்து பல பதில்களையும் படித்தேன், இந்த விவாதம் இஸ்லாம் சம்பந்தப்பட்டதாக இருப்பதினால் சில எனக்கு தெரிந்த தகவல்களை பங்கிட்டுக்கொல்கிறேன். முதலாவது இஸ்லாம் என்பது இறைவனால் அருளப்பட்டது இன்னும் அதை மனிதர் வாழ்வுக்கு ஏற்புடையது என்று நபிகள் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியும் சென்றுள்ளார்கள் அது அல்லாத அனைத்தும் இஸ்லாம் அல்ல என்று திருக்குர்ரான் சான்று பகர்கின்றது. இன்னும் இஸ்லாம் ஒரு குறித்த மொழியிலேயோ அல்லது வர்கதினாற்கோ அருளப்பட வில்லை மாறாக மனித குலத்திற்கு அருளப்பட்டது. இந்த தூய இஸ்லாத்தின்படி இந்த மனித இனம் ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து படைக்கபட்டுள்ளவர்கள் இப்படி எங்கள் இறைவன் கூறும் போது இவுழகில் மனிதனாக பிறந்த நம் போன்ற அறிவிழிகள் கூறும் சாதியத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுத்து இஸ்லாத்தை வம்புக்கு இழுக்குகிரீர். உங்கழுடைய தலைப்பை மாற்றுங்கள் இதுபோல இந்திய முsலீம்களிடம் சாதியம் இருந்து உள்ளது (இப்பொழுது முற்றிலும் maari உள்ளது)
ஐயா இதில் விவாதிப்பவர்கள் அனைவருக்கும்,
நீங்கள் பெரும்பாலும் மதத்தை அடிப்படையாக வைத்து சமூகத்தை விமர்சிக்கிறீர்கள். இது மிகவும் தவறு. இங்கு எதுவும் மதத்தை வைத்து சமூகம் தீர்மானிக்கப்படவில்லை. ஒரு சமூகத்தில் ஒவ்வொரு மதமுமும் அதன் ஏற்றத்தாழ்வை எப்படி உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் இதை ஏதோ மனம் சம்மந்தப்பட்டதாகவும், உணர்வாகவும் சித்திரிப்பதை நிறுத்தவும்.
எந்த மதமும் பெண்ணடிமையை எதிர்த்தது இல்லை. தன் பெண்ணடிமைத் தனத்திற்கு ஏதோ ஒரு வகையில் தன் சமாதானத்தை ஞாயங்களை சொல்கின்றன. அதே போல் எந்த மதமும் விஞ்ஞான முன்னேற்றத்தை ஏற்றுக்கொண்டதில்லை. இவையெல்லாம் மதத்தை மீறியே வந்திருக்கின்றன.
எந்த மதமும் ஆன்மீக சமத்துவத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழு, சாதி சமத்துவத்தையோ சொல்லியிருக்கலாம். ஆனால் எதுவும் அரசு அதிகாரம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்று கோரவில்லை. எந்த மதமும் சுரண்டலை ஒழிக்கக் கோரவில்லை.
அப்படி இருந்தாலும் அந்ததந்த மதத்தை எதிர்த்துத்தான் அந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. வெறும் அடையாளங்களையும், சடங்குகளையும் வைத்து விவாதம் நடத்தினால் அது விதண்டாவதம்தான் மிஞ்சும். சமூகத்தில் இன்று இந்தியாவை எடுத்துக்கொண்டால் எப்படி அது அமெரிக்காவின் அடிமையாகவோ அல்லது ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி அடிமையாகவோ சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு எப்படி எல்லா அரசுகளும் சேவை செய்கிறது. எப்படி மக்களை கொள்கிறது என்பதை விளக்க வேண்டியுள்ளது. எல்லா இஸ்லாமிய நாடுகளையும் எடுத்துக்கொள்ளுங்கள், அரசதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி கொலைவெறி அமெரிக்காவிற்கு உதவிசெய்து கொண்டிருக்கிற்து, அதை எதிர்த்து ஒரு குழு இஸ்லாமிய மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகியது. இதில் யார் உண்மையான இஸ்லாமியனாக இருந்தால் என்ன? இந்துவாக இருந்தால் என்ன? இன்று பிரச்சனை அதுவல்ல. உண்மையான இந்துவாக இருந்தாலும், உண்மையாக இஸ்லாமியனாக இருந்தாலும் அவன் மக்களுக்காக இல்லாவிட்டால் அடிமைத்தனத்தை எதிர்க்காவிட்டால் அவன் எப்படி இருந்தால் மக்களுக்கு என்ன? அதனால் சில பேர் நாட்டையே கூட்டிக் கொடுத்து வளரலாம். ஆகையால் யார் மக்கள் நண்பர் யார் மக்கள் எதிரி என்பதை விவாதிக்கலாம். அதையும் மத அடிப்படையில் விவாதிப்பதால் எந்த தீர்வும் ஏற்படப்போவதில்லை.
இரண்டாவது சாதி அடிப்படையிலான பிரச்சனைப் பற்றி இஸ்லாம் நிலை என்ன என்பதல்ல இங்கு பிரச்சனை. அந்த மதத்தை தழுபவர்களிடத்தில் இஸ்லாம் எப்படி வந்தது என்றுதான் கேள்வி? அதை விடுத்து அவன் உண்மையான இஸ்லாமியனா, இஸ்லாம் அப்படி சொல்லி இருக்கிறதா என்றெல்லாம் விட அது அந்த சமூகத்தில் இன்னும் ஒதுக்கப்பட்ட காலனியாகவும் ஊர் மக்களாகவும் இருப்பதற்கு காரணம் என்ன என்பதே இங்கு கேள்வி. அது இஸ்லாமில் சொல்லாமல் இருந்தால் என்ன? கிருத்துவ மதத்தில் சொல்லியிருந்தால் என்ன? ஏன் அந்த மக்களிடம் அந்த பிரிவினை இருக்கிறது என்பதே.
1500 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட விஷயங்கள் அப்படியே இருக்கவில்லை. அல்லது அப்படியே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த வளர்ச்சி மனித வரலாற்றின் மேம்பாடு இந்த மதத்தால் வந்ததா? நிச்சயமாக எந்த மதத்தாலும் வளரவில்லை. அது விஞ்ஞானத்தினால் வந்தது. இப்பொழுது என் கேள்வி இப்படி இந்த விஞ்ஞானத்தினாலும், சமூகப் புரட்சியினாலும் வந்த இந்த வளர்ச்சியை ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்துக்கொண்டு தூய்மையான மதம் பற்றி பேசுவதான் வேடிக்கை. இங்கு எல்லோரும் அவரவர் மதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு நேரதிராகத்தான் இந்த விஞ்ஞான சமூக வளர்ச்சியை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஆகையால் இன்றைய நிஜம் எது பழைய படிமம் எது என்பதை தெளிவாக அறிந்தாலே இந்த சமூகத்தில் மதம் என்பது வெறும் கருத்துத்தான் (சித்தாந்தம்தான்) ஆனால் அதன் உண்மையான வேர் இந்த சமூகம் எந்த தன்மை கொண்டிருக்கிறது என்பதைப் பொருத்துத்தான்.
இந்து மதம் பின்பற்றுபவர்களாக இருந்தாலும், கிருத்துவ மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும், இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும் இவையாவும் மாறி மாறியே எவ்வளவோ திருத்தங்களுடனே மாறி வந்திருக்கிறது. இதில் எது தூய்மையானது என்பதை அவரவர்களின் பிரிவினையை (சாதி அடிப்படை, வருண அடிப்படை, இன அடிப்படை, சுன்னி, ஷியா, ஷபி, கேதலிக், புரட்டஸ்டண்ட், பெந்தகோஸ்த் என்று வேறு வேறு வகையில்) இதனை பிரிவுகள் இருக்கக் காரணம் ஏன். எதுவுமே மாறமல் இருக்கவில்லை. அப்படி பார்ப்பவன் வேறு யாருமல்ல குருடன், அதைவிட முரடன் அதைவிட மடையன். இந்த மாற்றம் ஏன் வந்தது என்பதைப் பார்த்தாலே இந்த சமூகத்தின் வளர்ச்சியின் கட்டம்தான் மதத்தை தீர்மானிக்கிறது. பிரிவினையை தீர்மானிக்கிறது.
ஆகையால் இந்த மாற்றத்தை அங்கீகரித்து இன்னும் எப்படி வளர்ச்சியை கொண்டுவருவது என்பதை தீர்மானிக்கவும். அதை விடுத்து முட்டாள்களின் தத்துவமான கருவாட்டை மீனாக்கவும், கறந்த பாலை மடி புகவும் முயற்சிக்கவேண்டாம்.
இஸ்லாத்தில் சாதி இருக்கிறதா? முஸ்லீம்களின் தவறுகளுக்கு இஸ்லாம் பொறுப்பேற்காதா?
இஸ்லாம் என்று வந்துவிட்டால் முஸ்லீம்களின் சிந்தனை தட்டையாகிவிடும் என்பதற்கு இங்குள்ள பின்னூட்டங்களே ஆதாரம். முஸ்லீம்களின் தவறுகளுக்கு இஸ்ல்லாம் எப்படி பொறுப்பேற்கும் என்பது ஏற்க முடியாதது. இஸ்லாமிய வேதத்தில் பார்ப்பனீய வேதங்களைப்போல் சாதிப்பிரிவினைகள் இல்லை என வைத்துக்கொண்டாலும் இஸ்லாத்தை முஸ்லீம்களிடமிருந்து தவறுகளின்போது மட்டும் பிரித்துவிட வேண்டுமா? ஒரு நீதிபோதனை நூல் நல்ல நடத்தைகளை கூறுகிறது அதன்படி மக்கள் நடக்கவில்லை அதற்கு அந்த நூல் பொறுப்பேற்க முடியாது என்பதற்கும்; இஸ்லாத்தில் சாதி கூறப்படவில்லை முஸ்லீம்களில் இருக்கிறது என்பதால் அவைகளுக்கு இஸ்லாம் பொறுப்பேற்காது என்பதற்கும் வித்தியாசம் உண்டு. எவ்வாறெனில் ஒரு நீதிபோதனை நூலைவிட இஸ்லாமின் வேதத்திற்கு மதிப்பும் தகுதியும் மிகமிக அதிகம். இது சரியானது என்றால் நீதிபோதனை நூலைவிட வேதத்திற்கு கடப்பாடும் அதிகம் இருக்கவேண்டும் என்பது தானே சரியாக இருக்கமுடியும்? இஸ்லாத்திற்கு பொறுப்பில்லை எனக்கருதினால் நீதிபோதனை நூலுக்குள்ள மதிப்புதான் வேதத்திற்கும் என்று இவர்களின் வாதப்படி பொருளாகும். இதை இவர்கள் ஏற்பார்களா? அடுத்து இஸ்லாமிய சித்தாந்தப்படி மனிதர்களின் (அல்லது முஸ்லீம்களின்) செயல்களை இயக்குவது கடவுளின் விருப்பமேயன்றி மனிதர்களின் விருப்பமல்ல. ஆக மனிதர்களின் சிந்தனைப்படி அமையாத அவர்களின் தவறுகளுக்கு அவர்களை இயக்கிய கடவுளின் புறத்திலிருந்துவந்த(!) மதத்தை பொறுப்பாக்க முடியாது என்பது எந்த விதத்தில் சரியாகும்?
பார்ப்பனீய இந்துமதத்தின் வடிவத்தில் இருந்தால் மட்டும்தான் அது சாதியாகுமா? இஸ்லாத்தில் அல்லது முஸ்லீம்களிடம் இருக்கும் சாதியின் வடிவம் வேறுவிதமானது. அது தீண்டாமை என்பதில் இல்லாமல் ஒடுக்குமுறை வடிவங்களில் தொடர்கிறது. சுதந்திர உணர்வுகளை எளிய இசைப்பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டுசென்ற பிரிவினர் இன்று பக்கீர் சாயிபுகள் என்ற பெயரில் நோன்பு மாதத்தில் அதிகாலையில் எழுப்பிவிட்டு அதற்குக்கூலியாக நோன்புப்பெருநாளில் துணியும் அரிசியும் பணமுமாய் பெற்று ஏனைய காலங்களில் பிச்சைஎடுக்கும் கூட்டமாய் இருக்கிறது. பள்ளிவாசலில் தோளோடு தொள் நின்று தொழுதுகொள்ள முடியும் என்பதால் மட்டும் இது சாதி இல்லை என்பதாக ஆகிவிடுமா? முடிதிருத்தும் தொழில் செய்யும் முஸ்லீம்களை நாசுவக்குடிகள் என்ற பெயரில் ஒதுக்கி வாரிசுவழி அத்தொழிலை செய்துவருவதில்லையா? வீட்டுக்குள் வந்து விருத்தசேதனத்தையும் அவர்கள் தான் செய்கிறார்கள் என்பதால் சாதி இல்லை என்பதாக ஆகிவிடுமா? தமிழகத்தில் இவைகள் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை என்றாலும் வடமாநிலங்களில் குறிப்பாக உபி யில் சாதிய அடுக்குகள் வெளிப்படையானவை. முஸ்லீம்களின் ஏழ்மைநிலையை வெளிப்படுத்தியதற்காக முஸ்லீம்களால் பாராட்டப்படும் சச்சார் அறிக்கை உபி அர்சால் முஸ்லீம்களின் அவல நிலையையும் பட்டியலிட்டுள்ளது. சன்னி ஷியா பிரிவுகளுக்கு இடையில் கொள்வினை கொடுப்பினை உண்டா? ஷாபி, ஹனபி, ஹம்பலி, மாலிக் பிரிவுகளின் உறவுகளை விளக்க முடியுமா? அரேபியாவில் பொது இடங்களில் கட்டிப்பிடித்து சகோதரத்துவத்தை வெளிப்படுத்திக்கொண்டாலும் கஹ்தானிகளும் அஸ்மரிகளும் தங்களுக்குள் மண உறவு கொள்ளமுடியுமா?
இஸ்லாமிய வேதமான குரானில் ஒரு அடிமையும் சுதந்திரமானவனும் சமமாகவே முடியாது என்று தெளிவாகவே கூறியிருக்கிறது. முஸ்லீம் அடிமை என்றாலும் நிலை இது தான், இது சாதியத்தின் தொடக்கப்புள்ளி இல்லையா? குரான் அத்தியாயம் அல் பகரா வசனம் 60 “……..அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்துகொண்டனர். அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள் பருகுங்கள். பூமியில் குழப்பம் விளைவித்துத்திரியாதீர்கள்” இந்த வசனத்திலுள்ள ‘ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்துகொண்டனர்’ என்பதன் பொருள் என்ன என்பதை இங்கு பின்னூட்டமிட்டுள்ள நண்பர்கள் விளக்குவார்களா?
தோழமையுடன்செங்கொடி
செங்கொடி சொல்லுவது விமர்சனபார்வையாக இருந்தாலும் சில உண்மைகள் இருக்கின்றன.
இந்த கட்டுரை சொல்லும் அடிப்படையே தவறானது. இந்திய முஸ்லீம்களிடையே சாதி இருப்பதன் காரணம் பார்ப்பனிய இந்து மதத்தின் தாக்கத்தில் ஏற்பட்டது என்று சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை.
//இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள், ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா (அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குøரஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்குக் கீழானவை — இவ்வாறாக இந்த உலேமாக்கள் வாதிட்டனர். ஒருவர் தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று உலேமாக்களில் பலரும் நம்பினர்.
//
இந்த உலேமாக்களுக்கு தெரியாதது, இங்கிருக்கும் நெத்தியடி முஹம்மத் போன்றவர்களுக்கு தெரிந்துவிட்டதா? உலேமாக்கள் ஹதீஸ், குரானின் வழியேதான் ஜாதிகளையும் இனக்குழுக்களையும் அணுகுகின்றனர். அவர்கள் இந்தியாவின் இந்து மதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. கோத்திரங்களையும் பிரிவுகளையும் உருவாக்கியது அல்லாஹ்வே என்று அல்லாஹ் அல்குரானில் தெளிவு படுத்துகிறான். உலக மக்களிலேயே அரபியர் மேலானவர்கள். அவர்களிலேயே மேலானவர்கள் குரேஷிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அறிவித்துள்ளார். மேலும் கீழ்ஜாதி ஆணை திருமணம் செய்யவிரும்பும் பெண் குடும்பத்துக்கு இழுக்கு கொண்டுவருகிறாள் என்றும் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அறிவித்துள்ளார்.
குரேஷி, அன்சாரி, ஆகிய ஜாதிகள் இந்தியாவின் ஜாதிகள் அல்ல. அவை அரபிய ஜாதிகள். சையதுகள் ஷேக்குகள் ஆகியோர் இந்திய ஜாதியினர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குரேஷி சாதியை சேர்ந்தவர். மேல் ஜாதி ஆண்கள் கீழ் ஜாதி பெண்களை திருமணம் செய்வது ஹலாலானது. ஆனால், மேல் ஜாதி பெண்கள் கீழ் ஜாதி ஆண்களை திருமணம் செய்வது ஹராமானது. நபிகள் நாயகம் (ஸல்) தன் மகளான பாத்திமா(ரலி)யை பிலாலுக்கு திருமணம் செய்து தரவில்லை. சமமான அந்தஸ்து உள்ள சாதியிலேயே திருமணம் செய்துதந்துள்ளார். ஆனால், அவர் கீழ்ஜாதி பெண்களான பலரை திருமணம் செய்துள்ளார். ஒரு பெண் மாற்று மதத்திலிருந்து வந்தால் அவளை திருமணம் செய்யமுடியாது. அவளை அடிமையாகத்தான் வைத்திருக்க முடியும். அந்த பெண் இஸ்லாமில் சேர்ந்தால் மட்டுமே அவளை திருமணம் செய்யலாம். இதுதான் ஷரியா சட்டப்படியான விஷயம்.
ஆகவே ஷரியா சட்டத்தை இந்து பார்ப்பன பழக்க வழக்கங்களின் பாதிப்பால் மாறுதலடைந்துள்ளது என்று சொல்வது இஸ்லாமியர்களை அவமானப்படுத்துவதாகும்.
இன்றும் சவுதி அரேபியாவில் மேல்ஜாதி அரபுப் பெண் ஒருவர் கீழ்ஜாதி அரபு ஆணை திருமணம் செய்யமுடியாது. நிச்சயமாக ஒரு கருப்பின முஸ்லீமை (அப்த்) திருமணம் செய்யமுடியாது. செய்யவும் கூடாது. அப்படி செய்தால், அது ஷரியா சட்டப்படி செல்லாது. ஆகவே இது தெரியவந்தால், கட்டாய விவாகரத்தே வழங்கப்படும்.
http://www.arabnews.com/?page=1§ion=0&article=120152&d=11&m=3&y=2009
ஆகவே, ஷரியா சட்டம் பார்ப்பன சட்டத்தால் மாறுபாடு அடைந்துள்ளது என்று கூறுவது சரியல்ல.
//இஸ்லாமிய வேதத்தில் பார்ப்பனீய வேதங்களைப்போல் சாதிப்பிரிவினைகள் இல்லை
என வைத்துக்கொண்டாலும் இஸ்லாத்தை முஸ்லீம்களிடமிருந்து தவறுகளின்போது மட்டும் பிரித்துவிட வேண்டுமா?//
ரொம்பத்தெளிவு.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான குணங்களில்தான் இருக்கும் .ஒருவன் நல்லவனாகவும் ஒருவன் தீயவனாகவும் வந்தால் அது யார் தவறு ?.அதற்காக தாய் சரியில்லை என்று சொல்ல முடியுமா?வாத்தியார் பிள்ளை மக்கு என்றால் அது யார் தவறு ?? இந்தியாவையே எடுத்து கொண்டாலும் தமிழன் /மலையாளி /கன்னடன் /சீக்கியன் /மராட்டியன்/தெலுங்கன் என்று பிரிந்துதான் இருக்கிறான் .அது இந்தியாவின் தவறா ??மராட்டியன் தமிழ் பெண்ணை மணந்தால் என்ன நடக்கும் ? சீக்கியன் தெலுங்கு பெண்ணை மணந்தால் என்ன நடக்கும் ??நாம் இந்தியன் என்று வாயால் சொல்லிக்கொள்ளலாம் .ஒரு பயலும் இந்தியன் கிடையாது .இன மொழி வாரியாக நாம் பிரிந்து இருந்தாலும் சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம் என்று சொல்லிக்கொள்ளலாம் .ஆனால் சட்டமே பணக்காரன் பக்கம்தான் எப்போதும் .அதற்காக இந்தியா சரியில்லை என்று சொன்னால் பைத்தியக்காரத்தனம் .இஸ்லாத்தை முகம்மது நபி எடுத்து சொன்ன போது அதை எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்று கொண்ட முதல் மூன்று நபர்களில் அலியும் ஒருவர் . தன் மகள் பாத்திமாவை அலிக்கு மணம் முடித்து கொடுத்ததில் என்ன தவறு காண முடியும் ?கம்யூனிசம் பேசும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் வேடதாரிகளே .வசனம் நன்றாக பேசுவார்கள் .ஆட்சி என்று வந்துவிட்டால் சர்வாதிகாரமே அதன் எல்லை .ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள் .கியூபாவில் காஸ்ட்ரோவை எடுத்து கொள்ளுங்கள் .கிழம் சாகும்வரை ஆட்சியில் இருக்க விரும்புகிறது .அவருக்கு பிறகு அவர் தம்பிதான் வருகிறார் .சீனாவோ சொல்ல தேவையில்லை எல்லாமே அடக்குமுறைதான் .ஆடு மாடைவிட கேவலமாக மனிதர்களை நடத்தும் வேலை வாங்கும் ஈனப்பிறவிகள் .சீனனை வேலைக்கு வைத்து கொண்டால் ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் கூட வேலை வாங்கலாம் என்று கிண்டலாக சொல்லலாம் .எல்லாருக்கும் எல்லாம் பொது என்பதே முட்டாள்தனமான வாதம் .உழைப்பாளியையும் சோம்பேறியையும் ஒரே அளவில் எப்படி வைக்க முடியும் ? நூறு பேரில் இருபது சோம்பேறி என்றால் அவர்களுக்கு யார் உழைப்பில் யார் கொட்டி கொடுப்பது ? நடைமுறைக்கு ஒத்தே வராத ஒரு கேனத்தனமே கம்யூனிசம் .சர்வாதிகாரிகளின் கூடாரம் கம்யூனிசம் .கொள்ளைக்காரர்களின் கூடாரம் முதலாளித்துவம் .நாய்க்கு ரொட்டி போட்டால் வாலை ஆடுவது போல் நமக்கு சுதந்திரம் /ஜனநாயகம் என்ற ரொட்டி.கிடைப்பதை வைத்து சந்தோசப்பட்டு கொள்ள வேண்டியதுதான் .எல்லாவற்றையும் குறை சொல்வது எளிது .மண்ணில் பிறப்பதே சாவதற்குதான் எனும்போது வாழ்வதே தேவை இல்லாத ஒன்றுதான் .சாவதற்குள் மண்ணாசை /பொன்னாசை /பெண்ணாசை /புகழாசை /பதவி ஆசை என்று எத்தனை ஆசைகள் மனிதனை ஆட்டுகிறது ! அவரவர் நம்பிக்கைபடி யாருக்கும் தொந்தரவு தராமல் நல்லவிதமாக வாழ்ந்து மடிவதே நல்லது .அதை விட்டுவிட்டு என் நம்பிக்கை உசத்தி உன் நம்பிக்கை மோசம் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் அடித்துக்கொண்டு சாக வேண்டியதுதான் .
//இஸ்லாத்தை முகம்மது நபி எடுத்து சொன்ன போது அதை எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்று கொண்ட முதல் மூன்று நபர்களில் அலியும் ஒருவர்//
கேள்வியே கேக்கக்கூடாது என்கிறீர்கள்.
//.ஆட்சி என்று வந்துவிட்டால் சர்வாதிகாரமே அதன் எல்லை .ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள் .//
ஆமாம். கம்யூனிஸ்டாக இருந்து கொண்டு எப்படி ஜனநாயகவாதியாக இருக்க முடியும்?
//கியூபாவில் காஸ்ட்ரோவை எடுத்து கொள்ளுங்கள் .கிழம் சாகும்வரை ஆட்சியில் இருக்க விரும்புகிறது .அவருக்கு பிறகு அவர் தம்பிதான் வருகிறார் .//
காஸ்ட்ரோவின் ஆட்சி எப்படி என்பதை வெளியாளான நீங்கள் சொல்லக்கூடாது. அந்த க்யூபா மக்கள் சொல்லவேண்டும். அவர் ஆட்சி நன்றாக இருப்பதால் தான் இந்தனை வருடம் ஆட்சியில் இருக்கிறார். அவர் கொடுத்ததை போன்ற ஆட்சியை ஏன் ஈரான், ஆப்கான், பாகிஸ்தான், பங்களாஅதேஷ் போன்ற நாடுகளால் கொடுக்க முடியவில்லை (பனக்கார அரபுதேசங்கள் சப்போர்ட் இருந்தும்)?.
//அவரவர் நம்பிக்கைபடி யாருக்கும் தொந்தரவு தராமல் நல்லவிதமாக வாழ்ந்து மடிவதே நல்லது.//
🙂
அருமை தோழர் அருமை..
இதே போல் நேர்த்தியாக அம்மதத்தின் உள்முரண்பாடுகளை – எழுதப்பட்ட vs நடைமுறையில் உள்ளது என எடுத்து அவர்கள் முன்னெ வைத்து.. நடைமுறை யதார்த்தத்தின் கேள்விகளில் இருந்து மதம் தனது பொறுப்புகளைக் கைகழுவி விட்டு தப்பித்துப் போவதை தடுக்க வேண்டும்..
வார்த்தைகளில் கவனம் நன்பர்களே… இது போன்ற மதவாதிகள் விவாதத்தின் போக்கில் அதன் மைய்யத்தை விட்டுவிட்டு ஏதேனும் சில வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்க வாய்ப்புகள் அதிகம்..
நெத்தியடி முகமது, தோழர் செங்கொடியின் விமரிசனங்களுக்கு பதிலளிக்கவும்.
யாருக்கு பதில்சொல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யக்கூட எனக்கு – என்னளவில் உரிமை இல்லையா, வினவு? அதனை முடிவு செய்து கட்டளையிடுவது, என் மீது நீங்கள் சர்வாதிகாரம் & வல்லாதிக்கம் செலுத்துவது, எந்த தத்துவத்தின் அடிப்படையில்?
பாவம் நெத்தியடி முகமது பாகம் – 3
நியாயப்படுத்த முடியாத தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவதற்கு இப்படி ஒரு விளக்கம். கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்று கோருவது சர்வாதிகாரம் என்றால் நெத்தியடி முகமது எவ்வளவு பயங்கரங்களுக்கு மத்தியியல் காலம் தள்ளுகிறார் என்பது புரிகிறது. இந்த அவலத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!
செங்கொடி அவர்களே, இஸ்லாம் சம்பந்தமாக உங்களின் தேடலைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது. ஆனால், நீங்கள் தீர்மானித்துப் போகும் பாதைதான் தவறாக உள்ளது.
ஃஃஇஸ்லாமிய வேதமான குரானில் ஒரு அடிமையும் சுதந்திரமானவனும் சமமாகவே முடியாது என்று தெளிவாகவே கூறியிருக்கிறது. முஸ்லீம் அடிமை என்றாலும் நிலை இது தான், இது சாதியத்தின் தொடக்கப்புள்ளி இல்லையா? குரான் அத்தியாயம் அல் பகரா வசனம் 60 “……..அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்துகொண்டனர். அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள் பருகுங்கள். பூமியில் குழப்பம் விளைவித்துத்திரியாதீர்கள்” இந்த வசனத்திலுள்ள ‘ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்துகொண்டனர்’ என்பதன் பொருள் என்ன என்பதை இங்கு பின்னூட்டமிட்டுள்ள நண்பர்கள் விளக்குவார்களா?ஃஃ
மூசாவின் சமூகத்தார்கள் யார் தெரியுமா? அவர்கள் தான் யாகூபின் 12 பிள்ளைகளின் சந்ததிகளாவார்கள். இவர்களைத்தான் இஸ்ரேலவர்கள் என்பார்கள். இந்த 12 பிள்ளைகளின் சந்ததிகளைத்தான் திருமறைக் குர்ஆன் மேற்கண்டவாறு கூறுகின்றது. நீங்கள் கணித்தமாறு சாதி அடிப்படையில் அல்ல. ஒரு தகப்பனுக்குப் பிறந்த பிள்ளைகளின் சந்ததிகளை எப்படி இஸ்லாம் சாதி அடிப்படையில் பிரித்து அறிவிக்கின்றது எனக் கூறுகின்றீர்கள்?
சிந்திக்கவும்.
கட்டுரையாளர் மேலே சொன்னது உண்மையாகவே இருக்கட்டும் .அவர் சொன்னது இந்தியாவில் ஆண்ட முகலாயர் ஆட்சி காலத்திலிருந்து முஸ்லீம்களிடம் இன்றும் கூட ஜாதி பார்க்கும் தன்மை இருக்கிறது என்கிறார் ,இருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை .நல்லவேளையாக தமிழ் நாட்டில் முஸ்லிம்களிடம் முன்பு இருந்த ராவுத்தர்/மரைக்காயர்/சாயபு என்று தொழில் சார்ந்த அடையாளங்களை போட்டு கொள்ளும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது .அது தேவை இல்லாத ஒன்று என்ற உண்மையை புரிந்து கொண்டதால்தான் .ஆனால் இந்தியாவில் ஜாதிகள்தான் இந்தியர்களின் அடையாளம் .இந்துமதம் அல்ல .இன்றைக்கும் சாதி மாறி கல்யாணம் செய்தால் கொலை விழுகிறது .இனியும் விழும் .
கருத்துக்களை பரிமாறி கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் .முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் .
தவறு செய்பவர்கள் மனிதர்கள் .தவறு செய்யாத மனிதர்கள் என்று எவரும் கிடையாது . ஒருவனுடைய தவறினால் மற்றவர்களுக்கு பாதிப்போ அல்லது இழப்போ ஏற்பட்டிருந்தால்,தவறை செய்தவன் தன தவறை உணர்ந்து வருந்தி பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு அதற்கு பிராயசித்தம் செய்ய விரும்பினால் அதை எந்த மதமும் மதத்தினரும் குறை சொல்ல மாட்டார்கள் .
ஆனால் இந்தியாவில் மட்டும் ஜாதி வேறுபாட்டை கொண்டு மனித இனத்தை நான் உயர்ந்த ஜாதி நீ தாழ்ந்த ஜாதி என்று பிரித்து மனித இனத்தையே கேவலப்படுத்தும் ஒரு செயலை தவறு என்று ஒப்புக்கொள்ளாதவர்களே உணராதவர்களே அதிகம் .அதை சரி என்று நியாயபடுத்தும் கேவலமான மிருக ஜென்மங்கள்தான் இந்தியர்கள் .சாதிகள் இல்லையென்று சொல்லும் மதங்களான கிறித்துவத்தை நூறு சதவிகிதத்திலும் இஸ்லாமை கொஞ்சம் குறைவாகவும் வளைக்க முடிந்த திறமைசாலிகள் .இந்து மதத்திலோ சொல்லவே தேவை இல்லை.பிறப்பிடம் வளர்ப்பிடம் உறைவிடம் எல்லாமே அதுதான் .அதனால்தான் இந்தியாவில் ஆண்ட முஸ்லிம் மன்னர் முதல் இன்றைய இந்திய மற்ற மாநில முல்லாக்கள் வரை அந்த கேவலமான ஜாதி என்ற வியாதியின் தாக்கம் படிந்திருக்கிறது .தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்ல முடியும் .இந்தியாவில் பல நூறு ஆண்டுகள் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்ய முடிந்ததற்கு அந்த இந்து வியாதியின் சாயலுடன் இருந்ததால்தான் என்றும் கூட சொல்லலாம்.அதை சரியானது தான் என்று ஒரு முஸ்லிமும் சொல்ல முடியாது சொல்ல மாட்டார்கள் .
ஒரு முஸ்லிம் ஒரே இறைவன் அவன் உருவமில்லாதவன் நிரந்தரமானவன் அவனுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. அவனுடைய இறுதி தூதர் முஹம்மது நபிகள் நாயகம் .இறைவன் ஒருவன்தான் அனைத்து விதமான பாவங்களுக்கும் தண்டனையும் மன்னிப்பும் தரும் வல்லமை பெற்றவன் .ஆனால் தனக்கு இணை வைக்கும் ஒரு குற்றத்திற்கு மட்டும் எந்த மன்னிப்பும் கிடையாது என்று தெளிவாக குரானில் சொல்லி விட்டவன் .இதை ஒப்புக்கொண்டவன் மட்டுமே முஸ்லிமாக இருக்க முடியும் .இதை மீறுபவர்கள் மறுப்பவர்கள் முஸ்லிமாக இருக்க முடியாது .இங்கேதான் பெரும்பாலான மாற்றுமத நண்பர்கள் குழப்பி கொள்கின்றனர் .அல்லது புரியாமல் பேசுகின்றனர் .இந்து மதத்தினரை முஸ்லிம் கல்யாணம் பண்ணினால் என்ன தவறு என்று கேட்கின்றனர் ? மனிதன் தான் உருவாக்கிய எந்த ஒரு சிலையையும் கடவுள் என்று வணங்கும் ஒரு மூடத்தனமான பழக்கம் உள்ள ஒருவனையோ அல்லது ஒருத்தியையோ ஒரே இறைவன் என்ற கொள்கையுள்ளவர் மணந்தால் தன் கொள்கையை மீறுகிறார் அல்லது மறுக்கிறார் என்றுதானே அர்த்தம் .அதற்கு மன்னிப்பே தரமாட்டேன் இறைவன் தெளிவாக அறிவித்து விட்ட பிறகும் .அதனால்தான் மன்னிப்பு கூட கேட்க முடியாத ஒரு செயலை ஒரு முஸ்லிம் ஆணோ பெண்ணோ செய்யும் போது
சக முஸ்லிம்கள் பதறுகிறார்கள் வேதனைப்படுகிறார்கள்.மனித சட்டத்தில் ஒருவனை கொலை செய்தால் ஒரு முறைதான் தூக்குதண்டனை .நூறு பேரையோ அல்லது லட்சம் பேரை கொன்ற கொடியவனாக இருந்தாலும் ஒரு முறைதான் சட்டத்தால் தண்டிக்க படுகிறான் கொல்லப்படுகிறான் .ஆனால் இஸ்லாமிய தண்டனை சட்டம் வேறு மாதிரி கணக்கு .ஒருவன் ஒரு நல்ல காரியம் செய்கிறான் அந்த காரியத்தால் பலரும் நல்ல பயனடையும்போது அதற்கு பகரமாக அவனுக்கு நன்மைகள் அவனுடைய கணக்கில் ஏறிக்கொண்டே போகும். ஒரு தீமை அல்லது அநியாயம் காரணமாக பலர்பாதிக்கப்படும்போது அதற்கான தீமையின் தன்மைகளும் பலன்களும் அவன் கணக்கில் ஏறிக்கொண்டே இருக்கும் .நூறு கொலை செய்தவனை நூறுமுறை தண்டனை கொடுத்தால்தானே சரி .அது மறுமை தீர்ப்புநாளில் அப்படி கிடைக்கும் என்பதே இஸ்லாமியரின் நம்பிக்கை . எந்த ஒரு செயலுக்கும் (நல்ல செயலோ கெட்ட செயலோ)அதற்கு தன்மைக்கு ஏற்றபடியே கூலி கிடைக்கும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் .
எல்லா மதத்து கடவுள்களையும் மனிதன்தான் உருவாக்கினான். அதில் ஒன்று உண்மை மற்றொன்று பொய் என்று ஆகிவிடாது. பாவம், புண்ணியம், கருமவிதி, சொர்க்கம், நரகம் எல்லாம் இந்து மதத்திலும் உண்டு. இதே ஃபார்முலா இசுலாத்திலும் உண்டு என்றால் அதுவும் மூடநம்பிக்கையே. சிலையை வழிபாடு செய்பவர்கள் மூடர்கள் என்றால் தர்காக்களில் இருக்கும் சமாதிகளை வணங்குபவர்களை குண்டு போட்டு கொல்வீர்களா?
//சிலையை வழிபாடு செய்பவர்கள் மூடர்கள் என்றால் தர்காக்களில் இருக்கும் சமாதிகளை வணங்குபவர்களை குண்டு போட்டு கொல்வீர்களா?// வினவு, இஸ்லமியர்களில் பலர் குறிப்பாக வகாபி அல்லது ஓர் இறைக் கொள்கையை முழுதாக பின்பற்றுபவர்கள் தர்கா வழிபாட்டை ஏற்றுக் கொள்வது கிடையாது. தர்காவழிபாடு தவறு மறுமையில் தண்டனை கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.
இணை வைத்தல் பெரும்பாவம் என்று சொல்லப்பட்டு, தர்காவழிபாடு பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எங்க ஊருக்கு பக்கத்தில் நாகூர் தர்காவில் இப்போதெல்லாம் பெருங்கூட்டங்கள் திருவிழாவின் போது கூடுவதில்லை. ஏஆர்ரகுமான் தர்கா வழிபாடு செய்யும் பழக்கம் உடையவர் என்பதால் பல இஸ்லாமிய சகோதரர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து மனம் திருந்த/திரும்பச் சொல்லி இருந்தார்கள்
மக்களிடம் உள்ள நாட்டார் மரபின் தொடர்ச்சியே தர்ஹாக்கள். நீங்கள் சொல்வது போல தமிழகத்திலுள்ள தர்ஹாக்களில் எல்லா மதத்தையும் சேர்ந்த சாதாரண மக்கள் வழிபடத்தான் செய்கிறார்கள். இது இசுலாத்திற்கு விரோதமென்பது மேட்டிமைத்தனமான பார்வை. இதனால் ஒன்றும் இந்த மக்கள் வழிபாடு நிற்கப் போவதில்லை.
vinavu says : /////சிலையை வழிபாடு செய்பவர்கள் மூடர்கள் என்றால் தர்காக்களில் இருக்கும் சமாதிகளை வணங்குபவர்களை குண்டு போட்டு கொல்வீர்களா?//// —– தோழர் வினவு, இதெல்லாம் உங்கள் மாவோஇஸ (ம.க.இ.க ?) நம்பிக்கை, இதுபோல் மாவோயிசத்திடம் சரணடைந்த முஸ்லிம்கள் (அதாவது வினவிசத்தின்படி, “மாவோயிசத்திடம் சரணடைந்த இஸ்லாம்???)தான் இஸ்லாத்தின் பெயருக்கு கலங்கம் சேர்க்கிறார்கள். இவர்களையெல்லாம் “இடைவிடாத இஸ்லாமிய பிரச்சாரத்தின் மூலமாகத்தான் மனமாற்றம் ஏற்படுத்தி நல்வழிப்படுத்த வேண்டும்” என்பதை (நன்மையை ஏவி தீமையை தடுத்தல்) இஸ்லாம் எங்களுக்கு போதிக்கிறது. எங்களின் விடாமுயற்சியின் பயனாய் என்றாவது ஒரு நந்நாள் உண்மை மேற்படி நபர்களுக்கு விளங்கும் போது அவர்களே இடித்து விடுவார்கள். இவர்கள் மீது உங்களின் “அழித்தொழிப்பு” தத்துவம் உதவாது! அப்படி செய்தால், அவர்களிலிருந்து முஸ்லிம்கள் உருவாக மாட்டார்கள், மாறாக, மேலும் மேலும் பயங்கரவாதிகளே உருவாவார்கள். இவ்வரும்பணியைத்தான் சங்பரிவார்/ஆர்.எஸ்.எஸ். கும்பல் செய்து கொண்டு இருக்கிறார்களே! நாங்கள் வேரு எதற்கு? நாடு ஒரளவாவது நல்லா இருப்பது பிடிக்கலையா வினவு உங்களுக்கு?
அன்பு “வினவு” தலைப்பை மாற்றலாமே…
“பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!”
கட்டுரைக்கும் தலைப்பிற்கும்
பொருத்தமாக இல்லை!
வினவு மீது பல முஸ்லிம்களுக்கு நல்ல கருத்து உண்டு!
உங்கள் கொள்கை நிலைப்பாட்டில் இருந்து எழுதியுள்ளீர்கள். விசயமறிந்தவர்கள் வேண்டிய பதில் தரக்கூடும்.
ஆனால், பொருத்தமற்ற தலைப்பு என்பதுதான் எம் கருத்து!
இதனை புரிந்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு…
கடைசியாக…
”
மதி இண்டியா,
இந்தக்கட்டுரையாளர் இசுலாத்தில் சாதி பார்க்கும் பழக்கம் இந்தியாவிலுள்ள இந்து மதத்தின் பாதிப்பு என்பதையும் விளக்கியுள்ளார். எனவே இந்து மதம் தலித்துகளுக்கும், சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் இழைத்திருக்கும் கொடுமைகளை முதலில் நீங்கள் பேசுங்கள். அந்த வகையில் இசுலாத்தை விமரிசிப்பதற்கு முன் உங்கள் வண்டவாளங்களை திரும்பிப் பாருங்கள். அம்மணமாக நடமாடுபவன் கோவணம் கட்டியவனை கேலிசெய்தது போல இருக்கிறது உங்கள் ஆதங்கம்.”
என மதி இண்டியாவிற்கு நீங்கள் கொடுத்த விளக்கமே நீங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் நோக்கம் இல்லை என்பதையும் அறிகிறோம்!-
தோழமையுடன் அதிரைpost
http://www.adiraipost.blogspot.com
இஸ்லாமில் சாதியம் பற்றி ஏற்கனவே தந்தை பெரியார் கூகுள் குழுமத்தில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.
“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13) – மனிதர்களில் இனம், கோத்திரம் ஆகியவற்றை தாமே படைத்தாக குரானில் இறைச் செய்தி இருக்கிறது. இது பற்றிய கட்டுரை
என்னதான் கடுமையான சட்டங்கள் இயற்றினாலும், ஒரு அரசு சிறப்பான சட்டங்கள் வைத்திருந்தாலும் அவை பயன்படுத்தப்படவில்லை அல்லது மக்கள் அச்சட்டங்களை மதிக்கவில்லை என்றால் சட்டத்தினால் பயன் எதுவும் இல்லை. சிறப்பான சட்டம் இருக்கிறது என்பது வெறும் பெருமை பேசும் செயலாகிவிடும். இவை மதங்கள் வைத்திருக்கும் கொள்கைகளுக்கும் பொருத்தமானவையே, பின்பற்றுபவர்களே கொள்கைகளை மதிக்கவில்லை என்றால் கொள்கைகள் யாருக்காக என்ற கேள்வி எழும்.
//ஒரு தீமை அல்லது அநியாயம் காரணமாக பலர்பாதிக்கப்படும்போது அதற்கான தீமையின் தன்மைகளும் பலன்களும் அவன் கணக்கில் ஏறிக்கொண்டே இருக்கும் .நூறு கொலை செய்தவனை நூறுமுறை தண்டனை கொடுத்தால்தானே சரி .அது மறுமை தீர்ப்புநாளில் அப்படி கிடைக்கும் என்பதே இஸ்லாமியரின் நம்பிக்கை//
தீமை, நன்மை என்பது இந்த இத்தனை நூற்றாண்டுகளும் அப்படியே இருக்கிறதா. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த சொல்லின் பொருள் அன்று சொல்லப்பட்ட நிலையிலிருந்து எவ்வளவோ மாறியிருக்கிறது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். இல்லையென்றால் ஒவ்வொரு மதத்தினுடைய மூல நூலினையும் பல்வேறு தடவை திருத்தி வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.
சரி தவறு செய்பவர்களை மறுமை தீர்ப்புநாளில் கிடைக்கும் என்று கூறும் கூற்று வெட்கப்பட்ட வேண்டியது. அது எல்லா மத்திலும் இருக்கிறது. இது தான் மக்களை அடிமையாக்கும் கருவி.
எல்லா அரசுகளுமே இன்று ஒடுக்கி அது இஸ்லாம் அடிப்படைவாதத்தை வைத்திருக்கும் அரசாக இருந்தாலும், அடக்கி ஒடுக்கி மக்களை தன் நிலையிலிருந்து ஒடுக்கி சுரண்டுகிறார்கள். இந்த சுரண்டலை ஒழிக்க எந்த மதமும் தயாரில்லை. மக்களுடைய பெரும்பாண்மை மக்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்த, குறைந்தபட்சம் ஒரு அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளக் கூடிய அந்த வாழ்கைத் தரத்தை உருவாக்கிக்கொடுக்க எந்த மதமும் தயாரில்லை. அதனால் எப்படி முடியும். இம்மையில் உணவின்றி, மருத்துவமின்றி வாழும் நரக வாழ்க்கையில் இருக்கும் மக்கள் மறுமையில் சொர்க்கம் கிடைத்து என்ன செய்யப் போகிறார்கள். அவர்களுக்கு மறுமையிலும் நரகமே இருந்தாலும் என்ன? ஆனால் அப்படி வாழும் மக்கள்தான் உண்மையில் மனிதாபிமானத்தோடு வாழ்கிறார்கள். ஆனால் நம்மை ஒடுக்கும் அரசுகள், நம்மை ஏறிமிதிக்கும் சுரண்டல்காரர்கள் எல்லாம் இங்கு சொர்கத்தில் வாழ்கிறார்கள். மறுமையில் என்ன ஆனார்கள் என்று நீங்கள் எல்லாம் அந்த புத்தகத்தில் பார்த்து சமாதானம் ஆகிறீர்கள். அவ்வளவே.
உங்களைப் பொருத்தவரையில் அவர்களை இம்மையில் ஒழிக்க வழிகோல சொல்லித்தரவில்லை. நீங்கள் இப்படியே அரை பட்டினாயகவும், உங்கள் பிள்ளைகள் நோய்நொடியோடும், ஒதுங்கக் கூட குடிசை இல்லாமல் வாழுங்கள், பரவாயில்லை உங்களை சுரண்டுபவர்களை உங்களை ஒடுக்குபவர்களை எதிர்த்து போராடாதீர்கள் என்று கற்றுத்தருகிறீர்கள். நீங்கள் இறை துதருக்கு பிரச்சாரகரா அல்லது இங்குள்ள சுரண்டல்காரர்களுக்கு ஏஜண்டா. நீங்கள் இங்கு கொலைவெறி, அடிமைசெய்யும் ஆட்களுக்கு கங்கானியா. மக்களை இம்மையில் இவ்வுலகில் அமைதியாக வாழுங்கள் நீங்கள் கடவுளிடம் சேருவீர் என்று சொல்வதின் மூலம் எதை சாதிக்கப் போகிறீர்கள்.
கோவி.கண்ணன் அவர்கள் //ஒரு அரசு சிறப்பான சட்டங்கள் வைத்திருந்தாலும் அவை பயன்படுத்தப்படவில்லை அல்லது மக்கள் அச்சட்டங்களை மதிக்கவில்லை என்றால் சட்டத்தினால் பயன் எதுவும் இல்லை.// என்று கூறுகிறார். இவர் எதை சிறப்பான சட்டம் என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. இங்குள்ள சட்டம் சராசரி பொதுமக்களானதா அல்லது இங்குள்ள ஆட்சியாளர்கள் தங்கள் சுரண்டலை, தன் அதிகாரத்தை தக்கவைத்துகொள்வதற்கானதா. இந்த வித்தியாசம் தெரியாமல் மக்கள் அதை மதிக்கவில்லை என்கிறீர்கள். ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடுவதின் ஒரு பகுதிதான் அந்த சட்டத்தை மதியாமல் அதை மாற்ற போராடுவது என்பது பொருள்.
இதே போல்தான் மதமும். எல்லா மதமும் சுரண்டலை ஆட்சியாளர்களின் சுரண்டலை ஞாயப்படுத்துகிறது. எல்லா மதமும் இம்மையில், இன்றைய உலகத்தில் உள்ள வளமான வாழ்வை பெற போரடுவதற்கு மறுக்கிறது. ஆனால் மதம் மாறுவதை எதிர்க்கிறது. மக்களை சிந்தனை ரீதியான அடிமையாக ஆட்சியாளர்கள் வைத்துக்கொள்வதற்கு, அடிமையாக்குவதற்கு மதம் பயன்படுகிறது அதன் சித்தாந்தங்கள் பயன்படுகிறது. ஏன் என்றால் அது இன்றைய உலகத்தில், இம்மையில் சுரண்டல்காரர்களை எதிர்த்துப் போராடுவதை பாவம் எண்கிறது. கடவுள் பார்த்துப்பார், உங்களை மறுமையில் ஒரு சொர்க்க வாழ்க்கை கொடுக்கிறேன் என்று சிந்தனை ரீதியாக அடிமையாக வைத்துக்கொள்கிறது. அப்படி சிந்தனை ரீதியான அடிமைக்கு உட்படாதவர்களை இராணுவம் போலீசு கொண்டு உடல் ரீதியாக துன்புறுத்தி அடக்கி ஒடுக்குகிறது. இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல.
இந்துமதம் வேத மதம், ஆகம மதம், வேதாகமம் மதம் என்று மாறியிருக்கிறது. இது சமூக மாற்றத்திற்கு ஏற்றவாறு தன்னையும் மாற்றிகொண்டு ஆள்பவர்களை ஆதரித்தும் மக்களையும் ஒடுக்கி வந்திருக்கிறது. அது போல் சமூகம் எந்தளவுக்கு ஜனநாயகத் தன்மை இருந்திருக்கிறதோ அந்தளவுக்கு மதமும் ஜனநாயகத் தன்மை அடைந்திருக்கிறது. மதம் அரசு இல்லாமல் அதிகாரம் இல்லாமல் சொத்து இல்லாமல் மடம் போன்று சொத்துக்களுடன் இயங்கமால் அதனால் நிலைத்து நிற்க முடியாது. எந்த மதமும் சொத்தில்லாம் வழிப்பாட்டு முறைமட்டும் வைத்துக்கொண்டில்லை. இதை மறந்து பேசுவது உங்கள் பேதமை. ஆகையால் சிறப்பான சட்டம் அதை மக்கள் பின்பற்றுவதில்லை என்பதெல்லாம் வெத்து வேட்டுக்கள். மக்களின் அடிப்படை வாழ்க்கையை தீர்மானிக்கும் அரசுக்கு தனக்கு தேவையானதை எப்படி சிந்தனை ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ ஒடுக்கத் தெரியும். மீண்டும் சொல்கிறேன் எல்லாம் மதத்தால் படைக்கப்பட்டது, எல்லாம் மதத்தாலே மாறும் என்பதும், அதை இப்போதே ஒழித்தால்தான் எல்லாம் மாறும் என்பதும் கற்பனாவாதமே அன்றி வேறல்ல. சமூகத்தை சமத்துவமாக்குவோம், சுரண்டலற்றதாக மாற்றுவோம். அதற்கு எது தடையாக இருந்தாலும் அதை அகற்றுவோம்.
இந்த மன்னர்களுக்கும் மேட்டுக்குடி ஆளுங்கும்பல்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி முழுநிறைவாகத் தெரியாது. இஸ்லாமிய மார்க்கம் போதிக்கும் சமத்துவத்துக்கு அவர்கள் செவி சாய்த்ததுமில்லை.
உங்களுக்கே தெரியவில்லை என்பதுதான் பிரச்சனையே.
ஏனென்றால் இம்மையில் என்ன செய்வது எனும்போது அதற்கு மறுமையில் மட்டுமே எந்த மதமும் தீர்வாக சொல்கிறது. அதை பற்றி நீங்கள் என்ன செய்கிறீர்கள். அந்த மன்னர்களும், மேட்டுக்குடி மக்களும் மட்டும் எப்படி அந்த மதத்தை பயன்படுத்த முடிகிறது. அதை எப்படி பாதுகாக்கிறார்கள். அது அவர்களைப் பாதுகாப்பதாலேயே. இம்மையில் அந்த மன்னர்களையும், மேட்டுக்குடிகளையும் வசதியாக வைத்துக்கொள்ள இந்த மதத் தத்துவம் உதவுவதாலேயே. அதை மாற்ற நீங்கள் தயாரா.
இம்மை மறுமை தத்துவத்தை தூக்கியெறிய எந்தமதமும் தாயாரில்லை. அது வரையில் மக்கள் எந்த காலத்திலும் அந்த மன்னர்களை, மேட்டுக்குடிகளை தூக்கியெறிய மதம் தயாரில்லை என்பதை மறந்து விட்டு அதை அவர்கள் பின்பற்றவில்லை, அவர்களுக்கு தெரியாது என்று அவர்களுக்கு அப்பாவி பட்டம் கட்டி நீங்கள் இளிச்சவாயர்களாக, அப்பாவிகளாக மாறி அழிந்துவிடாதீர்கள்.
இந்த கட்டுரை சொல்லும் அடிப்படையே தவறானது.
இந்திய முஸ்லீம்களிடையே சாதி இருப்பதன் காரணம் பார்ப்பனிய இந்து மதத்தின்
தாக்கத்தில் ஏற்பட்டது என்று சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை.
//இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள்,
ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி
முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என
உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால்
அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை
மணமுடிக்க முடியாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா
(அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப்
பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குøரஷி ஆகிய
இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை
மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும்
பத்தான்களுக்குக் கீழானவை — இவ்வாறாக இந்த உலேமாக்கள் வாதிட்டனர். ஒருவர்
தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது
என்று உலேமாக்களில் பலரும் நம்பினர்.
//
இந்த உலேமாக்களுக்கு தெரியாதது, இங்கிருக்கும் நெத்தியடி முஹம்மத்
போன்றவர்களுக்கு தெரிந்துவிட்டதா? உலேமாக்கள் ஹதீஸ், குரானின் வழியேதான்
ஜாதிகளையும் இனக்குழுக்களையும் அணுகுகின்றனர். அவர்கள் இந்தியாவின் இந்து
மதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. கோத்திரங்களையும் பிரிவுகளையும்
உருவாக்கியது அல்லாஹ்வே என்று அல்லாஹ் அல்குரானில் தெளிவு படுத்துகிறான்.
உலக மக்களிலேயே அரபியர் மேலானவர்கள். அவர்களிலேயே மேலானவர்கள் குரேஷிகள்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அறிவித்துள்ளார். மேலும் கீழ்ஜாதி ஆணை
திருமணம் செய்யவிரும்பும் பெண் குடும்பத்துக்கு இழுக்கு கொண்டுவருகிறாள்
என்றும் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அறிவித்துள்ளார்.
குரேஷி, அன்சாரி, ஆகிய ஜாதிகள் இந்தியாவின் ஜாதிகள் அல்ல. அவை அரபிய
ஜாதிகள். சையதுகள் ஷேக்குகள் ஆகியோர் இந்திய ஜாதியினர் அல்ல. நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் குரேஷி சாதியை சேர்ந்தவர். மேல் ஜாதி ஆண்கள் கீழ்
ஜாதி பெண்களை திருமணம் செய்வது ஹலாலானது. ஆனால், மேல் ஜாதி பெண்கள் கீழ்
ஜாதி ஆண்களை திருமணம் செய்வது ஹராமானது. நபிகள் நாயகம் (ஸல்) தன் மகளான
பாத்திமா(ரலி)யை பிலாலுக்கு திருமணம் செய்து தரவில்லை. சமமான அந்தஸ்து
உள்ள சாதியிலேயே திருமணம் செய்துதந்துள்ளார். ஆனால், அவர் கீழ்ஜாதி
பெண்களான பலரை திருமணம் செய்துள்ளார். ஒரு பெண் மாற்று மதத்திலிருந்து
வந்தால் அவளை திருமணம் செய்யமுடியாது. அவளை அடிமையாகத்தான் வைத்திருக்க
முடியும். அந்த பெண் இஸ்லாமில் சேர்ந்தால் மட்டுமே அவளை திருமணம்
செய்யலாம். இதுதான் ஷரியா சட்டப்படியான விஷயம்.
ஆகவே ஷரியா சட்டத்தை இந்து பார்ப்பன பழக்க வழக்கங்களின் பாதிப்பால்
மாறுதலடைந்துள்ளது என்று சொல்வது இஸ்லாமியர்களை அவமானப்படுத்துவதாகும்.
இன்றும் சவுதி அரேபியாவில் மேல்ஜாதி அரபுப் பெண் ஒருவர் கீழ்ஜாதி அரபு
ஆணை திருமணம் செய்யமுடியாது. நிச்சயமாக ஒரு கருப்பின முஸ்லீமை (அப்த்)
திருமணம் செய்யமுடியாது. செய்யவும் கூடாது. அப்படி செய்தால், அது ஷரியா
சட்டப்படி செல்லாது. ஆகவே இது தெரியவந்தால், கட்டாய விவாகரத்தே
வழங்கப்படும்.
http://www.arabnews.com/?page=1§ion=0&article=120152&d=11&m=3&y=2009
ஆகவே, ஷரியா சட்டம் பார்ப்பன சட்டத்தால் மாறுபாடு அடைந்துள்ளது என்று
கூறுவது சரியல்ல.
அப்துல்,
பார்ப்பனியத் தாக்கத்தினால் அல்லாமல் இசுலாத்தில் நபிகள் நாயகம், குரான் நூல் வழியாகவே சாதி பாரபட்சம் உண்டு என்று வாதிடும் நீங்கள் அது சரியா, தவறா என்று ஏன் சொல்லவில்லை? இத்தகைய சாதி ஆதிக்கம் தவறு என்பதால்தானே இந்தக் கட்டுரையே வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பற்றி கருத்துக்கூறாமல் இசுலாத்தில் சாதி பார்ப்பனியம் வழியாக இல்ல அரேபியா வழியிலேயே உள்ளது என்றால் அப்போதும் அது இசுலாத்திற்குதானே அவமானம்? அப்துலின் கருத்து குறித்து நெத்தியடி என்ன கருதுகிறார்? ஆவலாக உள்ளோம்.
வினவு,
நான் குறிப்பிட்டது, பார்ப்பனிய மதத்தாக்கத்தால் இஸ்லாத்தில் சாதிப்பிரிவினை தோன்றியது என்பதினை மறுக்கிறோம். சாதிப்பிரிவினை தவறு
என்றோ அல்லது எல்லோரும் சமம் என்றோ எந்த விதமான கருத்தும் இஸ்லாத்தில் கிடையாது. ஆணும் பெண்ணும் சமம் கிடையாது. ஆணும்
பெண்ணும் சமம் என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? ஒரு பெண்ணின் உடலையும் ஆணின் உடலையும் வெவ்வேறாக படைத்திருக்கும்போது எப்படி
சமம் என்று கூறுவீர்கள்? அல்லாஹ்வின் வழியில் வாழும் முஸ்லீமும், மற்றவர்களும் சமம் கிடையாது. ஏழையும் பணக்காரனும் சமம் கிடையாது.
அரபியரும் அரபியரல்லாதவரும் சமம் கிடையாது. அல்லாஹ் ஏன் அரபியரை தேர்ந்தெடுத்தான் ஏன் அரபி மொழியை தேர்ந்தெடுத்தான் என்பது
அல்லாஹ்வே அறிவான். அவனை வழிபடத்தான் நமக்கு உரிமை உண்டே தவிர கேள்வி கேட்க உரிமை இல்லை.
ஆனால், பெர்ஷிய ஷியாக்கள் எழுதிய புத்தகங்களில் அல்லாவின் தூதரின் இறுதி உரை என்று இட்டுக்கட்டி அரபியர்களும் பெர்ஷியர்களும் சமம்
என்று எழுதிக்கொண்டார்கள். அது எந்த வித ஹதீஸிலும் இல்லை. முக்கியமாக சஹீஹுல் புகாரியில் கிடையாது. இத்தனைக்கும் புகாரி ஒரு
பெர்ஷியரே. நேர்மையாக பதிந்த அவரே சேர்க்காதது அது.
ஆகையால் அது பின்னாலில் இட்டுக்கட்டப்பட்டதே.
நான் மேலே ஒரு அரபுநியூஸ் செய்தியை இணைத்துள்ளேன். அது கூறும் செய்தியை படியுங்கள். தாழ்ந்த இனத்தை சேர்ந்த ஒருவருக்கு மணம் முடித்த
மேல் இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு கட்டாய விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. ஏன் என்று சிந்தியுங்கள். அரபியாவில் பார்ப்பனிய மதத்தின் தாக்கமா?
ஆனால், மேல் இனத்தை சார்ந்த ஒரு ஆண் கீழ் இனத்தை சார்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்யலாம். அது ஹலாலானது.
சவுதி அரேபியாவில் இந்த ஷரியா சட்டங்களை எழுதியவர்களும் குடுமிகளா?
“பல கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம்.” (049:013)
“(அல்லாஹ்) உங்களில் சிலரைவிட சிலரை மேலே உயர்த்தினான்” 6.165
சமத்துவத்தை போதித்தான் என்றால், கிளைகளையும் கோத்திரங்களையும் மனிதர்களே உருவாக்கிகொண்டார்கள். அது பொய்யானது என்றல்லவா
அல்லாஹ் கூறியிருக்கவேண்டும்.
அல்லாஹ் நீதியையே போதிக்கிறான். சமத்துவத்தை அல்ல.
(நபியே!) நீர் கூறும்: ‘அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? [39:9]
மேலும், கூறும்: ‘குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா?
[13:16]
வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, ஜிகாத் போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார். பின் செலவு செய்து ஜிகாத்
போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்.[57:10]
முன்பு அல்லாஹ் உலக மக்களிலேயே இஸ்ராயீல் மக்களை மேம்பட்டவர்களாக ஆக்கினான். அதனால், மற்றவர்களின் நிலங்களை கைப்பற்ற
யூதர்களுக்கு அனுமதி அளித்தான்.
2:47 இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை
மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.
முன்பு இஸ்ராயீல் மக்களை அல்லாஹ் மற்ற எல்லோரையும் விட மேன்மைப்படுத்தினான். அல்லாஹ்விடம் ஏன் இஸ்ராயீல் மக்களை மற்றவர்களை விட
மேன்மைப்படுத்தினாய்? என்று கேட்க முடியுமா?
யூதர்கள் வழிகேடர்களாக ஆனபின்னால், பின்னர் அரபிய மக்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அவர்களை மேம்படுத்தினான். அதற்காக நபிகள்
நாயகத்தை (ஸல்) தேர்ந்தெடுத்தான்.
ஒரு நாட்டில் இரண்டு குரேஷிகளே இருந்தாலும் அவர்களே அரசர்களாக இருக்கவேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) தெரிவித்துள்ளார்கள்.
திர்மிதி (பாகம் 2)
“Of the two tribes that God chose as the best were the descendants of Ishmael and Isaac. God preferred the children of Ishmael (Arabs, to the children of
Isaac – the Jews). Then God created Muhammad in the chosen tribe of the Quresh (the descendants of Ishmael ) and then he chose his family as the best
among the Quresh families and created Muhammad as the best of all men.” (Jame Tirmze, Vol. 2)
Hubb al-`Arab min al-iman
“Innallah hina khalaqani ja`alani min khayri khalqihi… ” “When Allah created me He made me the best choice of His creation, and when He created tribes He
made me come from the best of tribes, and when He created souls He made me come from the best of souls, and when He
created clans He made me come from the best of them.”
உலக மக்களில் அரபியர்கள் மேலானவர்கள்.
அவர்களிலேயே நபிகள் நாயகத்தின்(ஸல்) இனம் மேம்பட்டது.
அவர்களிலேயே நபிகள் நாயகத்தின்(ஸல்) குலம் மேம்பட்டது.
ஒருவர் கொலையுண்டால், அவருக்கு கொடுக்கப்படும் ஈட்டுத்தொகை அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர், எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை
வைத்துத்தான் வழங்கப்பட வேண்டும். அதுவே ஷரியா சட்டம். இன்றும் சவுதி அரேபியாவில் இதுவே வழக்கத்தில் உள்ளது. ஒரு இந்திய முஸ்லீமுக்கு
கொடுக்கப்படும் நட்டத்தொகை, ஒரு அரபிய முஸ்லீமுக்கு வழங்கப்படும் நட்டத்தொகையைவிட குறைவுதான். ஏனெனில் அரபியர்களே மேலானவர்கள்
என்று அல்லாஹ் கூறியுள்ளான். சவுதி அரேபியாவில் எந்த பார்ப்பனிய மதத்தின் தாக்க இருக்கிறது? சவுதி அரேபியாவில் இந்த ஷரியா சட்டங்களை
எழுதியவர்களும் குடுமிகளா?
நபிகள் நாயகத்தின்(ஸல்) வழியில் அல்குரானின் வழியில் நிற்கும் எந்த முஸ்லீமுக்கும் அவமானம் ஏன்?
கோத்திரங்களையும் குலங்களையும் உருவாக்கியவன் அல்லாஹ்வே என்னும்போது அதில் எதற்கு அவமானம்?
ஆகவே இஸ்லாத்தில் உள்ள நடைமுறைகளில். ஷரியாவில் இந்து பார்ப்பனிய மதத்தின் தாக்கம் இல்லை. ஆகவே இந்த கட்டுரையின் தலைப்பு,
உள்ளடக்கம் இரண்டுமே தவறு.
////“பல கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம்.” (049:013)
“(அல்லாஹ்) உங்களில் சிலரைவிட சிலரை மேலே உயர்த்தினான்” 6.165
சமத்துவத்தை போதித்தான் என்றால், கிளைகளையும் கோத்திரங்களையும் மனிதர்களே உருவாக்கிகொண்டார்கள். அது பொய்யானது என்றல்லவா அல்லாஹ் கூறியிருக்கவேண்டும்.////
‘அப்துல்’ (யாருக்கு அடிமையோ தெரியவில்லை) என்ற பெயரில் ஒளிந்திருக்கும் முனாஃபிக்..! குரானின் ஒவ்வொரு வசனத்தின் தலையையும் வாலையும் வெட்டிவிட்டு முண்டத்துக்கு பொருள் சொல்லும் உலக மகா பொய்யனய்யா நீர்.
“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 049:013)
—– ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவர்கள் எப்படி கருப்பாக, வெள்ளையாக, மானிறமாக, கோதுமை கலரில், மஞ்சள் நிறத்தில், நெட்டையாக, குட்டையாக, சுருட்டை முடியுடன், செம்பட்டை முடியுடன், கருப்பு முடியுடன், நீலக்கண்ணுடன், கருப்புக்கண்ணுடன் தடித்த உதட்டுடன் …என வகை வகையாக பெருகினர், என்ற மக்காவின் அன்றய இறைமறுப்பாளர்களின் கேள்விக்கு இறைவனின் விளக்கமே, கிளைகள்-கோத்திரங்கள் எல்லாம். ஆக, நீங்கள் சோற்றில் மறைத்தது முழு ஒட்டகம் கண்ணூ….
அடுத்து, சோற்றில் முழு திமிங்கலம்..!
“அவனே உங்களை பூமியில் வழித்தோன்றல்களாய்(பிரதிநிதிகளாய்) ஆக்கினான், உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களை சோதித்துப்பார்ப்பதற்காக உங்களில் சிலரை விட சிலருக்கு தகுதிகளில் ( பதவிகளில், செல்வத்தில், ஆரோக்கியத்தில், அறிவில், குழந்தை செல்வத்தில்….இப்படி பல தகுதிகளில்) உயர்த்தியுமிருக்கிறான். உமதிரட்சகன் தண்டிப்பதில் மிகத்தீவிரமானவன்;மிக்க பிழைபொறுப்பவன்;பேரன்புடையவன்.” (குர்ஆன்6.165)
மற்றவையையும் தனியாக சொல்லவும் வேன்டுமா?
நெத்தியடி முஹம்மதுவுக்கு பதில்,
சகோதரரே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக
நாமனைவருமே அல்லாஹ்வின் அடிமைகளே.
உலேமாக்கள் தவறு செய்கிறார்கள் என்று நீங்களும் வினவும் சொல்கிறீர்கள். ஓரிரு உலேமாக்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக கூறுபவர்களாக இருக்கலாம். ஆனால், கடந்தகாலத்திய அனைத்து உலேமாக்களுமே இப்படி தவறான கருத்துக்களை சொல்லிவந்திருக்கிறார்கள் என்று சொல்வதன் மூலம் என்ன நிரூபிக்க துடிக்கிறீர்கள்?
வினவுக்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. கம்யூனிஸத்தை நிலைநிறுத்துவதற்காக மற்ற அனைத்து மார்க்கங்களையும் இழிவு படுத்துவதும், அதன் படிப்பாளிகளை இழிவு படுத்துவதுமே அவரது கொள்கை. அந்த கொள்கையின்படி இஸ்லாமிய உலேமாக்களை இழிவு செய்கிறார். நீங்கள் ஏன் அந்த வலையில் விழுகிறீர்கள்?
குரேய்ஷிகளே ஆளத்தகுந்தவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்லியிருக்கிறார். அப்போது அவரும் நீங்கள் வெறுக்கும் உலேமாக்கள் போல பொய்யரா? இரண்டு குரேய்ஷிகளே இருந்தாலும் அவர்களே தலைவர்கள் என்றும் கூறியிருக்கிறார். இவற்றை ஷியா பிரிவினர் மறுப்பது புரிந்துகொள்ளக்கூடியது. நீங்கள் ஷியாவா? காதியானியா?
உங்கள் மேலும் அப்படியே நிலவுவதாக.
‘அப்த்’ என்றால் ‘அடிமை’.
‘அப்துல்’ என்றால் ‘-க்கு அடிமை’ என்று பொருள்.
முஸ்லிம் குழந்தைக்கும் தெரிந்த விஷயம் இது.
‘-க்கு அடிமை’ , நீங்கள் யாருக்கு அடிமை?
யாருக்கு அடிமைப்பட்டு இப்படி உளறுகிறீர்கள் என்று தெரியவில்லை.
குரான் வசனங்களுக்கு எண்ணிட்ட நீங்கள் அனைத்து ஹதீஸ்களுக்கும் எண்ணிட மறந்தது தங்களின் போலித்தனத்தையே தோலுரிக்கிறது.
உதாரணம்:
உண்மையான அந்த ஹதீஸ் இதோ:
இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்:
இந்த ஆட்சி அதிகாரம் குறைஷிகளின் கைகளில் தான் இருக்கும் – அவர்களில் இருவர் எஞ்சி இருக்கும் வரை.
(புஹாரி – 3501) என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
இதிலிருந்து ……………
/////குரேய்ஷிகளே ஆளத்தகுந்தவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்லியிருக்கிறார். அப்போது அவரும் நீங்கள் வெறுக்கும் உலேமாக்கள் போல பொய்யரா? இரண்டு குரேய்ஷிகளே இருந்தாலும் அவர்களே தலைவர்கள் என்றும் கூறியிருக்கிறார்./////
இப்படிப்பட்ட பொருளில்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றால்,
“பின்னாளில் விபச்சாரம் பெருகும்” என்ற முன்னறிவிப்பு ஹதீஸ்க்கு, எல்லாரும் விபச்சாரம் பண்ணவேண்டும் (அஸ்தஃபிருல்லாஹி ) என்று புரிந்து கொள்வீர்களா?
நெத்தியடியின் விளக்கத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறேன். விபச்சாரத்தையும் மூஃமின்களின் தலைமையையும் ஒன்றாக ஒப்பிடும் இவர் நிச்சயம் ஷியாவாகவோ காதியானியாகவோதான் இருக்கவேண்டும்.
எச்சரிக்கைக்கும் அறிவுரைக்கும் வித்தியாசம் தெரியாமல் இவர் உளறுகிறாரா அல்லது வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்த கூறுகிறாரா?
குறிப்பிட்ட ஹதீஸ் ஒரு சிக்கலான நிலையில் மேற்கோள் காட்டப்பட்டு ஒரு பிரச்னை தீர்க்கப்படுகிறது. அதனை வைத்தே அது எச்சரிக்கையாக சொல்லப்பட்டதா அறிவுரையாக சொல்லப்பட்டதா என்று அறியலாம்.
நபிகள் நாயகம்(ஸல்)க்குப் பிறகு குரேஷிகளிடம் தலைமை இருக்கவேண்டுமா அல்லது அன்சாரிகளிடம் தலைமை இருக்கவேண்டுமா என்ற சிக்கலான பிரச்னையின்போது அல்லாஹ்வின் தூதரின் இந்த அறிவுரை நினைவு கூறப்பட்டு தலைமை குரேஷிகளிடம் அளிக்கப்படுகிறது. இது விபச்சாரம் போன்ற எச்சரிக்கையாக இருந்திருந்தால், அது அன்சாரிகளிடம் அல்லவா அளிக்கப்பட்டிருக்கவேண்டும்?
இது அல்லாஹ்வின் தூதரின் அறிவுரை. அதனால்தான் தலைமை குரேஷிகளிடம் அளிக்கப்பட்டது.
அரபி மூலத்திலிருந்து மோசமாக தமிழில் மொழிபெயர்த்துகொண்டு அதற்கு பின்னணி என்ன மூலம் என்ன உலேமாக்கள் என்ன விளக்கம் தருகிறார்கள், ஏன் மௌதூதியே என்ன விளக்கம் அளிக்கிறார் என்றெல்லாம் தெரியாமலோ, அல்லது தெரிந்துகொண்டே குழப்பம் விளைவிக்கவோ இது மாதிரி இஸ்லாத்தை அவதூறு செய்துவருகிறார்கள்.
/////நபிகள் நாயகம்(ஸல்)க்குப் பிறகு குரேஷிகளிடம் தலைமை இருக்கவேண்டுமா அல்லது அன்சாரிகளிடம் தலைமை இருக்கவேண்டுமா என்ற சிக்கலான பிரச்னையின்போது…////
—-அடப்பாவி..! -க்கு அடிமையே,
//சிக்கலான பிரச்னை// – குறைஷிக்கும் அன்சாரிக்குமா அல்லது முஹாஜிருக்கும் அன்சாரிக்குமா?
முஹாஜிரில் மட்டுமின்றி மொத்த ஸஹாபியிலும் சிறந்தவராய், கதிஜா(ரலி)க்கு பிறகு முதல் முஸ்லிம், மிஃராஜை உண்மைப்படுத்தி சித்திக் என்று போற்றப்பட்டவர், சொர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 பேரில் முதல்வர், ரஸுலுல்லாஹி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது எல்லாருக்கும் இமாமாக நியமிக்கப்பட்டவர் – மேலும் – நபியுடன் ஹிஜ்ரத் செய்த- குரானில் சிலாகிக்கப்பட்ட- சிறப்பிற்காக அல்லவா அபூபக்கர்(ரலி) அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? அங்கு குறைஷி என்ற பேச்சே எவரிடத்திடமும் எழக்கிடையாதே!
குரான் வசனத்தை வெட்டி பொருள் கூறுனீர்.பிடித்தோம்.
ஹதீஸை திரித்தீர்.சொன்னோம்.
இப்போது வரலாறை மாற்ற முயல்கிறீர். தடுத்தோம்.அடுத்து என்ன?
நெத்தியடியின் பொய்களும் அராத்துத்தனமான வார்த்தைகளும் அதிகரித்துவருகின்றன.
இவர் சொல்வதெல்லாமே பொய்கள்.
இவர் நான் சொல்வதில் பொய்களை பிடிக்கிறாராம்! வேடிக்கைதான்.
குலம் கோத்திரம் என்று குரான் வசனத்தில் வருவது மனிதர்கள் செம்பட்டையான முடியாகவும் கருப்பு நிறமாகவும் வெள்ளைநிறமாகவும் இருப்பதாலுமா!
குலம் கோத்திரம் என்பதற்கு குரான் ஹதீஸ் முழுவதும் என்ன வருகிறது என்றாவது தெரியுமா?
பானு ஹாஷிம், குறேஷி ஆகியவை என்னவென்று நெத்தியடிக்கு தெரியுமா? அல்லது வழக்கம்போல அராத்துத்தனமான பதில்களா?
நெத்தியடி சொல்கிறார்.
//அங்கு குறைஷி என்ற பேச்சே எவரிடத்திடமும் எழக்கிடையாதே! //
குறைஷி என்ற பேச்சு எழுந்ததா என்று பார்ப்போம்…
சஹி புகாரி 6830 யிலிருந்து சில பகுதிகள்
அபூ பக்ர் (ரலி) அவர்கள் அவர்கள் குறிப்பிட்டதானது..
இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்தக் குறைஷிக்
குலத்தாருக்கே அறியப்பட்டுவருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த
பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும் (மக்கா) சேர்ந்தவர்கள்.
அதற்கு அன்சாரி ஒருவர் குறிப்பிட்டதானது…
நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒரு தலைவர்; குறைஷி குலத்தாரே!
உங்களில் ஒரு தலைவர்’ என்றார்.
அது மறுக்கப்பட்டு அபூ பக்ர்(ரலி) அவர்களே தலைமைப்பதவி ஏற்கிறார்
ஹதீஸ் தொடர்கிறது.
(இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூ பக்ர்(ரலி)
அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததை விட மிகவும்
சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை.
முழு ஹதீஸையும் தமிழிலேயே படிக்க
http://www.tamililquran.com/bukharidisp.php?start=6830
யாரை ஏமாற்ற நெத்தியடி இப்படி முழுப்பொய்களை கூறிவருகிறார் என்று தெரியவில்லை.
மனசாட்சிக்கு விரோதமில்லாமல், உள்ளது உள்ளபடி, ஆழமாக அறிந்து, ஊருக்காக ஒரு கருத்து, தனக்கு ஒரு கருத்து என்று வாதத்திற்காக பேசாமல்… ஸஹோதரர் அப்துல் அவர்களே நெஞ்சத்தைத் தொட்டுவிட்டீர்கள். உங்களோடு கருத்து வேறுபாடு இருந்தாலும், உங்களை மிகவும் மதிக்கிறேன். ஸத்தியமே பெரிதென்று நபி சொன்னாரல்லவா
இது சேம் சைடு கோலா இல்லையான்னு தெரியலை.. ஆனா எனக்கென்னவோ முக்காடுக்குள் ஒளிந்து இருக்கும் குடுமி கண்ணுக்குத் தெரியுது..
இசுலாம் பற்றி நுணுக்கமா எனக்குத் தெரியாது ஆனா குரைஷி என்பது ஜாதி அல்ல – இனம் என்கிற அளவுக்குத் தெரியும்.
இந்தியாவுக்கு வெளியே எல்லா மதங்களும் இன வேறுபாடு காட்டுகின்றன.. இந்தியாவில் மேலதிகமாக சாதி வேறுபாடு காட்டுகிறது..
இரண்டும் பிறப்பின் அடிப்படையில் உருவாவது தான் என்றாலும்.. சாதி ஒருவனின் சமூக அந்தஸ்த்தின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது.
இங்கே விமர்சணம் இசுலாம் இந்தியாவில் ஏற்கனவே இருந்த சாதி அமைப்பை சுவீகரித்துக் கொண்டு வளர்ந்தது – அப்படி வளர்ந்த பின்னும் இன்னமும் ஓரளவுக்கு ( இந்து மதம் போல அத்தனை இறுக்கமாக இல்லை ) செல்வாக்குடன் இருக்கிறது என்பது தான்… இதற்கு பல எடுத்துக்காட்டுகளை பேட்டியாளர் முன் வைக்கிறார்..
இங்கே வாதிடும் எந்த இசுலாமிய நன்பர்களும் அவற்றை இல்லவே இல்லை என்று மறுதலிக்க முடியவில்லை.. கேள்வியைத் தாண்டி பதிலளிக்கிறார்கள்.
1) முதலில் உண்டா இல்லையா என்று சொல்லுங்கள்
2) உண்டு என்றால் ஏன் அப்படி? உலகமெங்கும் சகோதரத்துவம் பேசும் இசுலாம் இந்தியா வந்தவுடன் சாதி பேசுகிறதே ஏன்? ( இசுலாம் என்பதை அந்த மதக்கருத்துக்களோடு சேர்ந்து அதன் மக்களையும் சேர்த்தே சொல்கிறேன் – மக்களில்லாவிட்டால் உங்கள் மதம் ஏது?)
//இந்தியாவுக்கு வெளியே எல்லா மதங்களும் இன வேறுபாடு காட்டுகின்றன.. இந்தியாவில் மேலதிகமாக சாதி வேறுபாடு காட்டுகிறது..
இரண்டும் பிறப்பின் அடிப்படையில் உருவாவது தான் என்றாலும்.. சாதி ஒருவனின் சமூக அந்தஸ்த்தின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது. //
இன்றைக்கு பல்வேறு நாடுகளில் பல்வேறு இனமக்கள் வாழ்ந்துவரும் சூழலில் இனத்தால் ஆதிக்கம் செலுத்துவதற்கும் சாதியால் ஆதிக்கம் செலுத்துவதற்கும் எந்தவித ஞாயங்கள் வேறுபடுகிறது என்று புரியவில்லை. எனக்கு தெரிந்து சாதி மேலாண்மை சிறுபான்மை சாதியினருக்கு அரணாகவும் (சாதி படி நிலை உயர்வில் இருப்பவர்கள் விழுக்காடு அளவில் பிறசாதியினரைவிட குறைவு அதனால் சிறுபான்மையினர் என்று குறிப்பிட்டேன்), மதமேலாண்மை பெரும்பான்மை இனத்தினருக்கு ஆதரவாகவும் இருக்கிறது (மதத்தில் மேலாண்மை செலுத்துபவர்கள் குறிப்பாக அம்மதத்தின் தோற்றத்திற்கு காரணமான இனம் மதப்பெரும்பான்மை இனம் என்று குறிப்பிடுகிறேன், குறிப்பாக ஐரோப்பியரின் கிறித்துவ ஆதிக்கம், அரபு அல்லது குரோசிகளிகளின் இஸ்லாம் ஆதிக்கம், பார்பனர்கள் அல்லது உயர்சாதியினராக அடையயளப்படுத்திக் கொள்பவர்கள் சிறுபான்மை என்றாலும் சாதி மதம் இரண்டிலுமே ஆதிக்கம் செலுத்துபவர்கள்), இன மேலாண்மைக்கும் சாதிய மேலாண்மைக்கும் தீண்டாமை பொதுவானது. இப்போது குறைவு. ஆனால் இருந்தவை தான்..
//இரண்டும் பிறப்பின் அடிப்படையில் உருவாவது தான் என்றாலும்.. சாதி ஒருவனின் சமூக அந்தஸ்த்தின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது. //
இனவேறுபாடுகள் சரி அல்லது பரவாயில்லை ஆனால் சாதிவேறுபாடுகள் தான் சரி இல்லை என்பது ஒலிப்பதை ஏற்க முடியவில்லை. சமூக அந்தஸ்து சாதி, மத ஆகிய இரண்டு வெறிகளிலும் உள்ளவையே, இரண்டுமே மக்களை கூறுபோடுபவை.
//இங்கே விமர்சணம் இசுலாம் இந்தியாவில் ஏற்கனவே இருந்த சாதி அமைப்பை சுவீகரித்துக் கொண்டு வளர்ந்தது //
கட்டுரையாளர் அல்லது ஆராய்ச்சியாளர் இஸ்லாமில் சாதியம் பார்பனிய தாக்கத்தால் ஏற்பட்டது என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. பிறமதத்தாக்கம் இஸ்லாமுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்னும் போது இவை எப்படி உண்மையாக இருக்கும் ? இஸ்லாமுக்குள் சாதிய அமைப்புகள் இந்தியாவிற்குள் மட்டும் தான் இருக்கிறது என்பதை இந்தக்கட்டுரையில் எங்கும் சொல்லப்படவில்லை. பிற நாடுகளிலும் இருக்கும் இஸ்லாமிய மக்கள் பிரிவினைகள் இனம் என்று சொல்லப்படுகிறது. இனக்குழுக்கள் ஒரே மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தால் அவைகளை இனம் என்று சொன்னாலும் சாதி என்று சொன்னாலும் ஒன்றே நினைக்கிறேன். சாதி என்பது இந்திய முறை ஆகையால் வெளி நாட்டு சாதிகளை சாதி என்று குறிப்பிடாமல் அங்குள்ள இனம் என்ற பகுப்பில் சொல்கிறோம். மற்றபடி ஒரே மொழி பேசுபவர்களிடையே, ஒரு நிற முக அமைப்பு உடையவரிடையே உள்ளப் பகுப்பை சாதி என்றாலும் இனம் என்றாலும் எந்த வேறுப்பாடுகளும் இல்லை.
நன்பர் கோவி.கண்ணன்,
இனம் மேண்மையானது / சாதி கீழ்தரமானது எனும்படியான ஒரு அர்த்தம் எனது முந்தைய மறுமொழியில் ஒலிப்பதாக எனக்குப் படவில்லை.
இரண்டுமே மனிதர்களை பிரிவினை செய்வது தான் என்பதில் எனக்கு வேறு கருத்து இல்லை.
இனம் vs சாதி :
ஒரே இனத்துக்கு உள்ளே பல சாதிகள் இருக்கலாம் (இங்கே உள்ள சாதிகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் எல்லாரும் வேறு வேறு
இனங்களை சார்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது)
சாதியும் இனமும் அடிப்படையில் வேறுபட்டவை. ஒரு சீனனோ, ஒரு கருப்பினத்தவனோ, யூதனோ, அராபியனோ, ஜப்பானியனோ ஆங்கிலோ
சாக்ஸனோ தமது பொருளாதார மேண்மையின் அடிப்படையில் தனக்கான சமூக அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்ள முடியும். ஆனால் இங்கே
ஒரு சக்கிலியோ பறையனோ பள்ளனோ என்ன தான் பொருளாதார மேண்மை கொண்டிருந்தாலும் – ஏன் அரசியல் அதிகாரத்தை
கைப்பற்றியிருந்தாலும் கூட சங்கராச்சாரி முன்னே கைகட்டி தான் நிற்க முடியும். ஜெயலலிதா தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனை
ஆபாசமானவராக இருந்தாலும் உட்கார நாற்காலி கிடைக்கும்.
ஒரு சாதி தனது பொருளாதார மேண்மையை மட்டும் உயர்த்திக் கொள்வது அதன் சமூக அங்கீகாரத்தை உயர்த்திவிடாது என்பதற்கு உதாரணம்
நாடார்கள்.. பார்த்தால் தீட்டு எனும் அளவுக்கு ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் தம்மை பொருளாதார ரீதியில் உயர்த்திக் கொண்டதோடு, தமது
சமூக அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்ள “ஷத்திரிய குல” prefix தேவைப்பட்டது.. பல தாமிரப்பட்டைய கதைகளும், பாண்டிய வம்ச கதைகளும்
தேவைப்பட்டது… அடுத்த உதாரணம் வன்னியர்கள் இவர்களுக்கு “ஷத்ரிய” எனும் அடைமொழியையும் பல்லவ வம்ச கட்டுக்கதைகளையும் கொண்டே
தமது சமூக அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது..
இந்த வகைப்பட்ட தேவை மேற்குலகில் உள்ள ஒரு ஒடுக்கப்பட்ட இனத்துக்கு கிடையாது. அவ்வினம் தனது பொருளாதார மேண்மையை எப்போது
நிலைநாட்டுகிறதோ.. அப்போது அதன் சமூக அந்தஸ்த்து உறுதிப்படுத்தப்படுகிறது.
சமூகத்தளத்தில் சாதிக்கட்டுமானத்தின் இறுக்கம் இனவேறுபாடுகளைக் காட்டிலும் வலுவானது என்கிறேன் ( அதனால் இன வேறுபாடு எனக்கு
உவப்பானது என்று பொருளல்ல)
அடுத்து நீங்கள் சொல்ல வருவது – பிறமத தாக்கம் இசுலாத்தில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை!
முதலில் பார்ப்பனியம் வெறும் மதம் என்ற அளவில் மட்டும் குறுக்கிப் பார்க்கிறீர்கள். அடுத்து “சந்தனக் குட உரூஸ்” எங்கேயிருந்து இசுலாத்திற்கு வந்தது என்பதையும் தெளிவு படுத்த வேண்டியவர் ஆகிறீர்கள் 🙂
//ஆனால் இங்கே
ஒரு சக்கிலியோ பறையனோ பள்ளனோ என்ன தான் பொருளாதார மேண்மை கொண்டிருந்தாலும் – ஏன் அரசியல் அதிகாரத்தை
கைப்பற்றியிருந்தாலும் கூட சங்கராச்சாரி முன்னே கைகட்டி தான் நிற்க முடியும். //
பொருளாதார மேலாண்மை பெற்றவர்கள் ஏன் சங்கராச்சாரி போன்ற சாமியார்களிடம் ஆசி வாங்கச் செல்ல வேண்டும், புறக்கணிக்கலாமே. அவர்களிடம் சென்று நிற்பதால் தானே அவர்கள் அவமதிக்கிறார்கள். எல்லோரும் புறக்கணித்தால் சாமியார் ‘தலித் குடிசைகளுக்கு செல்கிறேன்’ என்று பத்திரிகையில் படம் போடுவாரே 🙂
பார்பனிய மேலாண்மையை ஒழிக்க முடியும், ஒழித்துவருகிறார்கள், இஸ்லாம் அல்லது கிறித்துவ மதத்தின் ஒவ்வாத கருத்துகளை ஒழிப்பதற்கு எவருக்குமே அனுமதி கிடையாது.
//முதலில் பார்ப்பனியம் வெறும் மதம் என்ற அளவில் மட்டும் குறுக்கிப் பார்க்கிறீர்கள். அடுத்து “சந்தனக் குட உரூஸ்” எங்கேயிருந்து இசுலாத்திற்கு வந்தது என்பதையும் தெளிவு படுத்த வேண்டியவர் ஆகிறீர்கள் //
பார்பனியம் இல்லையன்று நான் சொல்லவில்லை. ஆனால் பார்பனியம் பார்பனியம் என்று சொல்லி இந்தியர்களின் தத்துவங்கள் அனைத்தையும் புறக்கணிப்பதும், இந்திய மதங்கள் அனைத்தையும் பார்பனர்கள் தான் உருவாக்கினார்கள் என்று சொல்லி ஒட்டுமொத்தமாக மறுக்கும் மேற்கத்திய மதப்பிரச்சாரகர் செய்யும் உத்தியை நான் ஏற்றுக் கொள்வதில்லை. சீர்த்திருத்தவாதிகள் வள்ளலார் போன்றோர் இந்து மதத்தில் சீர்த்திருத்தம் செய்திருக்கிறார்கள், இந்திய ஆன்மிகத்திற்கு பார்பனரல்லாதோரின் பங்கும் பெரிய அளவிலேயே இருக்கிறது. சாதித்துவத்தை முன்னிருத்தி ஒட்டுமொத்த இந்து மதமே புறக்கணிக்கக் கூடியது என்கிற வாதங்கள் கூட எந்த அளவுக்கு ஏற்க்கக் கூடியது என்று சொல்லுங்கள்.நாட்டார் தெய்வ வழிபாட்டில் பார்பனரின் தலையீடுகள் இல்லை, அல்லது ஏற்க்கப்படுவதும் இல்லை. உருவ வழிபாட்டு வணக்க முறை தற்போது இருக்கும் இந்து மதத்திற்கு சமணர்களை பின்பற்றி ஏற்பட்ட ஒன்று. உருவ வழிபாட்டுக்கு ஆதரவு என்பதால் தான் கிறித்துவ மதத்தில் கத்தோலிக்கத்தை பின்பற்றும் கிறித்துவர்கள் இந்தியாவில் மிகுதியாக உள்ளனர். இஸ்லாமில் தற்பொழுது தீவிரமாக இருக்கும் ஏகத்துவம் என்னும் ஓரிரைக் கோட்பாடுகள் வழுப்பெற்றிருக்காத காலத்தில் சூஃபி ஞானிகளைப் பின்பற்றும் இஸ்லாமியர்கள், அந்த ஞானிகள் இறந்த பிறகு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் தர்கா , சந்தனக் கூடு திருவிழாக்கள் ஏற்பட்டன. அக்பரும், பாபரும் வாகாபிகள் இல்லை, ஆனால் ஒளரங்க சீப் வகாபி இசத்தை வளர்த்தார். எனக்கு தெரிந்து தர்காவில் வழிபடும் இஸ்லாமியர்கள் எவரும் அதை வழிபாட்டு இடம் என்ற அளவில் பயன்படுத்துகிறார்களேயன்றி அங்கு அடக்கமானவர்களை வழிபடுபவது போல் தெரியவில்லை. தர்கா விழாக்கள் வெறும் நினைவு விழாவாக நடத்துவதாகவும், ஏக இறை தத்துவத்தை மறுக்கிறோம் என்றெல்லாம் சொல்வதில்லை.
ஆக…”உங்களை பார்த்து காப்பி அடிக்கவில்லை. நாங்களே ஒரு சாதி கட்டமைபு வைத்துள்ளோம்” என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்கிறீர்கள் இல்லையா? பலே…பலே…;)
இசுலாம் குறித்த விவாதத்திற்காக இன்று 12.11.09 புதிய இடுகையில்லை. நண்பர்கள் இசுலாம், பார்ப்பனியம் குறித்த விவாதங்களில் பங்கு பெறுங்கள். பின்னூட்டமிடுபவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியோடு அளித்தால்தான் மறுமொழி தானாகவே வெளியிடப்படும். இல்லையேல் அனுமதிக்காக மட்டறுப்பில் போய்விடும்.
//பொருளாதார மேலாண்மை பெற்றவர்கள் ஏன் சங்கராச்சாரி போன்ற சாமியார்களிடம் ஆசி வாங்கச் செல்ல வேண்டும், புறக்கணிக்கலாமே. அவர்களிடம் சென்று நிற்பதால் தானே அவர்கள் அவமதிக்கிறார்கள்.//
சங்கராச்சாரி என்று நான் குறிப்பிட்டது ஒரு உருவகமாகத்தான்.. அப்படிப் புறக்கனிக்க வேண்டுமானால் மொத்தமாக இந்து மதத்தையே
புறக்கணிக்க வேண்டும்.
//பார்பனிய மேலாண்மையை ஒழிக்க முடியும், ஒழித்துவருகிறார்கள், இஸ்லாம் அல்லது கிறித்துவ மதத்தின் ஒவ்வாத கருத்துகளை ஒழிப்பதற்கு எவருக்குமே அனுமதி கிடையாது//
ஓ.. அப்ப பெரியாரெல்லாம் அனுமதி வாங்கிட்டு தான் வந்தாரா? ஆமா யாருகிட்டே?
//ஆனால் பார்பனியம் பார்பனியம் என்று சொல்லி இந்தியர்களின் தத்துவங்கள் அனைத்தையும் புறக்கணிப்பதும், இந்திய மதங்கள் அனைத்தையும்
பார்பனர்கள் தான் உருவாக்கினார்கள் என்று சொல்லி ஒட்டுமொத்தமாக மறுக்கும் மேற்கத்திய மதப்பிரச்சாரகர் செய்யும் உத்தியை நான் ஏற்றுக் கொள்வதில்லை. சீர்த்திருத்தவாதிகள் வள்ளலார் போன்றோர் இந்து மதத்தில் சீர்த்திருத்தம் செய்திருக்கிறார்கள், இந்திய ஆன்மிகத்திற்கு
பார்பனரல்லாதோரின் பங்கும் பெரிய அளவிலேயே இருக்கிறது.//
இந்திய ஆன்மீகத்திற்கு பார்ப்பனல்லாதோரின் பங்கு ‘பெரிய’ அளவில் இருக்கிறது என்று சொன்னீர்களல்லவா? எனக்கு அதில் பள்ளனுக்கு எவ்வளவு
பறையனுக்கு எவ்வளவு பங்கு சக்கிலிக்கு எவ்வளவு பங்கு என்று தெரிய வேண்டும் கொஞ்சம் விளக்குங்கள். நீங்கள் சொன்ன ‘பார்ப்பனரல்லாதோர்’
என்பவர்கள் சைவ சித்தாந்த மடக்கும்பல் போன்றவர்கள் என்பது எனது அவதானிப்பு.. இந்த கூமுட்டைகள் எவனும் எந்தக் காலத்திலும் பார்ப்பானின்
மேலாதிக்கத்தை எதிர்த்து வாயே திறக்கவில்லை.. வரலாற்றை விடுங்கள் – இங்கே சிதம்பரத்தில் தமிழில் தேவாரம் பாடும் உரிமையை நிலைநாட்ட – தமழ் ஒரு நீச பாசை எனும் மொழி ஒடுக்குமுறையை எதிர்த்து எமது தோழர்கள் அடிவாங்கி வழக்குகள் வாங்கி சிறையில் இருந்த போது கூட ஒரு பயல் கூட அடுத்த நாள் வந்து மேடையேறிப் பாடவில்லை – அவர்களால் அது முடியவும் முடியாது…
தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் முகாம்கள் நடக்கும் இடங்களெல்லாம் எங்கேயென்று விசாரித்துப் பாருங்கள்.. எல்லாம் உள்ளூர் மடங்கள் தான். I mean, பார்ப்பனரல்லாதோர் மடங்கள்! இந்தக் காவாளிகள் ‘நீ மட்டும் தின்னா எப்படி.. எனக்கும் கொஞ்சம் தாயேன்’ என்கிற அளவில்
வேண்டுமானால் பார்ப்பானோடு முரண்படலாம்..
மற்றபடி சித்தர்கள் போன்றவர்கள் அவர்கள் காலத்தின் வரையறைக்குட்பட்டு பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்து நின்றதை எவரும் நிராகரிக்கவில்லை..
//நாட்டார் தெய்வ வழிபாட்டில் பார்பனரின் தலையீடுகள் இல்லை, அல்லது ஏற்க்கப்படுவதும் இல்லை.//
இது தவறு.. சுடலை மாடன் ஸ்ரீ ஸுடலை மாடஸ்ஸுவாமி ஆக மாறி ரொம்ப நாளாச்சு. கொஞ்சம் கொஞ்சமாக நாட்டார் தெய்வங்களை
பார்ப்பனியம் சுவீகரித்து வருகிறது.. அதை எதிர்த்து அம்பலப்படுத்தி நடந்த போராட்டமும் கூட எங்கள் தோழர்களாலேயே நடத்தப்பட்டது.. இந்த ‘பார்ப்பனரல்லாத’ பங்களிப்பாளர்கள் பொத்திக் கொண்டு தான் இருந்தார்கள்
மதம் என்று வந்துவிட்டால் மொத்தமாக எதிர்த்து அழிக்கப்பட வேண்டியதே.. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ‘நல்ல’ விஷயங்கள் இருக்கலாம்.. “திருடாதே, பொய் சொல்லாதே, விபச்சாரம் செய்யாதே, ஏமாற்றாதே” என்று பொதுவில் எல்லா மதமும் தான் சொல்கிறது.. இதுக்கு
மதம் தேவையில்லை கோவி.. பள்ளிக்கூடத்தில் மாரல் எஜுக்கேஷனே போதும்… மதம் என்று வரும் போது உழைக்கும் மக்கள் பிளவு பட
நேர்கிறது..
இங்கே விமர்சனம் இசுலாம் ஒரு மாற்று இல்லை என்பதை மைய்யப்படுத்தி அமைந்திருக்கிறது.. நீங்களோ இருப்பதையே ரிப்பேர் பண்ணி யூஸ் பண்ணலாமே என்கிறீர்கள். ஏற்கனவே உள்ளது ஒரு பீக்கலெட்டு என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை அது பற்றி விவாதமும்
இங்கேயில்லை என்றே நினைக்கிறேன் 🙂
//ஓ.. அப்ப பெரியாரெல்லாம் அனுமதி வாங்கிட்டு தான் வந்தாரா? ஆமா யாருகிட்டே?//
திரு சங்கு அவர்களே,
மதங்கள் மற்றும் மத ஆதிக்கம் எதோ தமிழ் நாட்டில் அல்லது இந்தியாவில் இருப்பது போலத்தான் பேசுகிறீர்கள். பெரியார் ஒரு இந்து என்பதால் இந்து மத விமர்சனம் பொறுத்துக் கொண்டார்கள், அவர் ஒரு இஸ்லாமியாராகவோ, அல்லது கிறித்துவராகவோ இருந்தால் பொறுத்துக் கொண்டு இருந்திருக்க மாட்டார்கள். பெரியார் கிறித்துவ இஸ்லாமிய மதங்களை வெறும் இட்லி ஆவி, 786 என்ன கதவு என்ன என்பது போல் மிக மைல்டாகத்தான் விமர்சனம் செய்தார், பிற மதங்களில் எந்த அளவுக்கு மூக்கு நுழைக்க முடியுமோ அதைத்தான் அவரால் செய்ய முடிந்தது, ஒட்டுமொத்தமாக எல்லா மதங்களையும் ஒரே நிலையில் விமர்சித்திருந்தால் மதவாதிகள் ஒன்று கூடி பெரியாரை எதிர்த்திருப்பார்கள் அல்லது ஒழிக்க முயற்சித்திருப்பபர்கள் என்பதே உண்மை. பெரியாரின் இந்து மத விமர்சனம் பிற மதத்தினரால் ரசிக்கப்பட்டது என்பதே உண்மை. இஸ்லாமில் இருந்து கொண்டு இஸ்லாமை விமர்சித்து மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ருஷ்டியை கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ருஷ்டியை பொருத்துக் கொள்ளமுடியாதவர்கள் பெரியாரை பொறுத்துக் கொண்டிருப்பார்கள் என்று தாங்கள் நினைப்பதும், பெரியார் அனைத்து மதங்களையும் மிகவும் கடுமையாக விமர்சித்தார் என்று நினைப்பது தவறு.
//இந்திய ஆன்மீகத்திற்கு பார்ப்பனல்லாதோரின் பங்கு ‘பெரிய’ அளவில் இருக்கிறது என்று சொன்னீர்களல்லவா? எனக்கு அதில் பள்ளனுக்கு எவ்வளவு
பறையனுக்கு எவ்வளவு பங்கு சக்கிலிக்கு எவ்வளவு பங்கு என்று தெரிய வேண்டும் கொஞ்சம் விளக்குங்கள். நீங்கள் சொன்ன ‘பார்ப்பனரல்லாதோர்’
என்பவர்கள் சைவ சித்தாந்த மடக்கும்பல் போன்றவர்கள் என்பது எனது அவதானிப்பு.. //
அயோத்திதாசப் பண்டிதர் தாழ்த்தப்பட்ட பறையர் வகுப்பைச் சேர்ந்தவர், மிகப் பிற்காலத்தில் பவுத்த மதத்திற்கு மாறினார். ஐயா வைகுண்டர் நாடார் வகுப்பைச் சார்ந்தவர், வள்ளலார் பிள்ளைமார் வகுப்பைச் சார்ந்தவர் (வள்ளலார் பிள்ளைமார்களை வளர்த்தெடுக்கவில்லை, பின்னர் அவர்களின் ஆதிக்கம் சைவ மடங்களில் ஓங்கியது) இவர்கள் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்.
//இந்திய ஆன்மீகத்திற்கு பார்ப்பனல்லாதோரின் பங்கு ‘பெரிய’ அளவில் இருக்கிறது என்று சொன்னீர்களல்லவா? எனக்கு அதில் பள்ளனுக்கு எவ்வளவு
பறையனுக்கு எவ்வளவு பங்கு சக்கிலிக்கு எவ்வளவு பங்கு என்று தெரிய வேண்டும் கொஞ்சம் விளக்குங்கள். நீங்கள் சொன்ன ‘பார்ப்பனரல்லாதோர்’
என்பவர்கள் சைவ சித்தாந்த மடக்கும்பல் போன்றவர்கள் என்பது எனது அவதானிப்பு.. //
அப்படியெல்லாம் பார்த்தால் இந்திய கம்யூனிச மற்றும் மகஇக தலைமைகள் மீதும் நீங்கள் நம்பிக்கையற்றவராக இருந்திருக்க வேண்டும் 🙂 ஒரு சிலரை அல்லது ஒரு கும்பலை வைத்து ஒட்டுமொத்தவர்களின் நம்பிகையை குலைக்கவேண்டும் என்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
//மதம் என்று வந்துவிட்டால் மொத்தமாக எதிர்த்து அழிக்கப்பட வேண்டியதே.. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ‘நல்ல’ விஷயங்கள் இருக்கலாம்.. “திருடாதே, பொய் சொல்லாதே, விபச்சாரம் செய்யாதே, ஏமாற்றாதே” என்று பொதுவில் எல்லா மதமும் தான் சொல்கிறது.. இதுக்கு
மதம் தேவையில்லை கோவி.. பள்ளிக்கூடத்தில் மாரல் எஜுக்கேஷனே போதும்… மதம் என்று வரும் போது உழைக்கும் மக்கள் பிளவு பட
நேர்கிறது.. //
நான் எந்த மதத்திற்கும் வக்காலத்து வாங்கவில்லை. கம்யூனிசம் உட்பட எல்லா சித்தாந்தங்களும் எல்லா காலத்திற்குமே ஏற்றது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கொள்கைகள் நீர்த்துப் போகும் அல்லது காலாவதியாகிவிடும் இது மதமென்றாலும், கட்சிக் கொள்கைகள், சித்தாந்தங்கள் எதற்கும் பொறுத்தமானவையே.
//இங்கே விமர்சனம் இசுலாம் ஒரு மாற்று இல்லை என்பதை மைய்யப்படுத்தி அமைந்திருக்கிறது.. நீங்களோ இருப்பதையே ரிப்பேர் பண்ணி யூஸ் பண்ணலாமே என்கிறீர்கள். ஏற்கனவே உள்ளது ஒரு பீக்கலெட்டு என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை அது பற்றி விவாதமும்
இங்கேயில்லை என்றே நினைக்கிறேன் //
புதுச் சித்தாந்தங்கள் என்று எதுவுமே கிடையாது ஒன்றில் இருந்து தேவையானதை எடுத்துக் கொண்டு மற்றாவற்றைத் தள்ளிவிட்டு புதுவடிவங்களைத்தான் அனைத்துவிதமான மக்கள் தந்துவங்கள், கொள்கைகள் ஏற்படுகின்றன. பொருள் முதல்வாதம் கம்யூனிச சித்தாந்தம் என்றாலும் அவை கூட மிகப் பழங்காலத்தில் தத்துவமேதைகளால் சொல்லப்பட்டவை தான்
மன்னிக்கவும் எழுத்துப் பிழைகள் இருந்ததால் மறுமுறை வாசித்துப் திருத்திப் போடுகிறேன்.
//ஓ.. அப்ப பெரியாரெல்லாம் அனுமதி வாங்கிட்டு தான் வந்தாரா? ஆமா யாருகிட்டே?//
மதங்கள் மற்றும் மத ஆதிக்கம் எதோ தமிழ் நாட்டில் அல்லது இந்தியாவில் இருப்பது போலத்தான் பேசுகிறீர்கள். பெரியார் ஒரு இந்து என்பதால் இந்து மத விமர்சனம் பொறுத்துக் கொண்டார்கள், அவர் ஒரு இஸ்லாமியாராகவோ, அல்லது கிறித்துவராகவோ இருந்தால் பொறுத்துக் கொண்டு இருந்திருக்க மாட்டார்கள். பெரியார் கிறித்துவ இஸ்லாமிய மதங்களை வெறும் இட்லி ஆவி, 786 கதவு எண்ணா ? என்பது போல் மிக மைல்டாகத்தான் விமர்சனம் செய்தார், பிற மதங்களில் எந்த அளவுக்கு மூக்கு நுழைக்க முடியுமோ அதைத்தான் அவரால் செய்ய முடிந்தது, ஒட்டுமொத்தமாக எல்லா மதங்களையும் ஒரே நிலையில் விமர்சித்திருந்தால் மதவாதிகள் ஒன்று கூடி பெரியாரை எதிர்த்திருப்பார்கள் அல்லது ஒழிக்க முயற்சித்திருப்பபர்கள் என்பதே உண்மை. பெரியாரின் இந்து மத விமர்சனம் பிற மதத்தினரால் ரசிக்கப்பட்டது என்பதே உண்மை. இஸ்லாமில் இருந்து கொண்டு இஸ்லாமை விமர்சித்து மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ருஷ்டியை கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ருஷ்டியை பொறுத்துக் கொள்ளமுடியாதவர்கள் பெரியாரை பொறுத்துக் கொண்டிருப்பார்கள் என்று தாங்கள் நினைப்பதும், பெரியார் அனைத்து மதங்களையும் மிகவும் கடுமையாக விமர்சித்தார் என்று நினைப்பது தவறு.
//இந்திய ஆன்மீகத்திற்கு பார்ப்பனல்லாதோரின் பங்கு ‘பெரிய’ அளவில் இருக்கிறது என்று சொன்னீர்களல்லவா? எனக்கு அதில் பள்ளனுக்கு எவ்வளவு
பறையனுக்கு எவ்வளவு பங்கு சக்கிலிக்கு எவ்வளவு பங்கு என்று தெரிய வேண்டும் கொஞ்சம் விளக்குங்கள். நீங்கள் சொன்ன ‘பார்ப்பனரல்லாதோர்’
என்பவர்கள் சைவ சித்தாந்த மடக்கும்பல் போன்றவர்கள் என்பது எனது அவதானிப்பு.. //
அயோத்திதாசப் பண்டிதர் தாழ்த்தப்பட்ட பறையர் வகுப்பைச் சேர்ந்தவர், மிகப் பிற்காலத்தில் பவுத்த மதத்திற்கு மாறினார். ஐயா வைகுண்டர் நாடார் வகுப்பைச் சார்ந்தவர், வள்ளலார் பிள்ளைமார் வகுப்பைச் சார்ந்தவர் (வள்ளலார் பிள்ளைமார்களை வளர்த்தெடுக்கவில்லை, பின்னர் அவர்களின் ஆதிக்கம் சைவ மடங்களில் ஓங்கியது) இவர்கள் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்.
//இந்திய ஆன்மீகத்திற்கு பார்ப்பனல்லாதோரின் பங்கு ‘பெரிய’ அளவில் இருக்கிறது என்று சொன்னீர்களல்லவா? எனக்கு அதில் பள்ளனுக்கு எவ்வளவு
பறையனுக்கு எவ்வளவு பங்கு சக்கிலிக்கு எவ்வளவு பங்கு என்று தெரிய வேண்டும் கொஞ்சம் விளக்குங்கள். நீங்கள் சொன்ன ‘பார்ப்பனரல்லாதோர்’
என்பவர்கள் சைவ சித்தாந்த மடக்கும்பல் போன்றவர்கள் என்பது எனது அவதானிப்பு.. //
அப்படியெல்லாம் பார்த்தால் இந்திய கம்யூனிச மற்றும் மகஇக தலைமைகள் மீதும் நீங்கள் நம்பிக்கையற்றவராக இருந்திருக்க வேண்டும் 🙂 ஒரு சிலரை அல்லது ஒரு கும்பலை வைத்து ஒட்டுமொத்தவர்களின் நம்பிகையை குலைக்கவேண்டும் என்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
//மதம் என்று வந்துவிட்டால் மொத்தமாக எதிர்த்து அழிக்கப்பட வேண்டியதே.. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ‘நல்ல’ விஷயங்கள் இருக்கலாம்.. “திருடாதே, பொய் சொல்லாதே, விபச்சாரம் செய்யாதே, ஏமாற்றாதே” என்று பொதுவில் எல்லா மதமும் தான் சொல்கிறது.. இதுக்கு
மதம் தேவையில்லை கோவி.. பள்ளிக்கூடத்தில் மாரல் எஜுக்கேஷனே போதும்… மதம் என்று வரும் போது உழைக்கும் மக்கள் பிளவு பட
நேர்கிறது.. //
நான் எந்த மதத்திற்கும் வக்காலத்து வாங்கவில்லை. கம்யூனிசம் உட்பட எல்லா சித்தாந்தங்களும் எல்லா காலத்திற்குமே ஏற்றது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கொள்கைகள் நீர்த்துப் போகும் அல்லது காலாவதியாகிவிடும் இது மதமென்றாலும், கட்சிக் கொள்கைகள், சித்தாந்தங்கள் எதற்கும் பொருத்தமானவையே.
//இங்கே விமர்சனம் இசுலாம் ஒரு மாற்று இல்லை என்பதை மைய்யப்படுத்தி அமைந்திருக்கிறது.. நீங்களோ இருப்பதையே ரிப்பேர் பண்ணி யூஸ் பண்ணலாமே என்கிறீர்கள். ஏற்கனவே உள்ளது ஒரு பீக்கலெட்டு என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை அது பற்றி விவாதமும்
இங்கேயில்லை என்றே நினைக்கிறேன் //
புதுச் சித்தாந்தங்கள் என்று எதுவுமே கிடையாது ஒன்றில் இருந்து தேவையானதை எடுத்துக் கொண்டு மற்றாவற்றைத் தள்ளிவிட்டு புதுவடிவங்களைத்தான் அனைத்துவிதமான மக்கள் புது தந்துவங்கள், கொள்கைகள் ஏற்படுகின்றன. பொருள் முதல்வாதம் கம்யூனிச சித்தாந்தம் என்றாலும் அவை கூட மிகப் பழங்காலத்தில் தத்துவமேதைகளால் சொல்லப்பட்டவை தான்
பெரியார் இந்தியாவில் “இந்து” மதம் பெரும்பான்மை என்பதால் அதை தனது பிரச்சாரத்தின் இலக்காக்க கொண்டார். அதே போல இசுலாமிய நாடுகள், கிறித்துவ நாடுகளில் அந்தந்த மதத்தை சார்ந்த நாத்திகர்கள் இருந்திருக்கிறார்களே? மார்க்கசும், ஏங்கெல்சும் கூட கிறித்தவ மதத்தை கடுமையாக விமரிசித்திருக்கிறார்கள்.
அடுத்து மதம், கம்யூனிசம் எல்லாம் ஒன்று காலத்திற்கேற்ப நீர்த்து போய்விடும் என்பது உங்களுக்கு இரண்டையும் முழுதாகத் தெரியவில்லை என்பது புரிகிறது. சமத்துவமின்மை நீடிக்கும் வரை மதமும் இருக்கும், கம்யூனிசமும் இருக்கும்.
பொருள்முதல்வாதம் மிகப்பழங்காலத்தில் சொல்லப்பட்டவை என்பதை வரலாறு தெரியாமல், அறியாமல்கூறுகிறீர்கள். பொருள்முதல் வாதத்தின் சில மேலாட்டமான கூறுகளைத்தான் பழங்காலத்தில் கிரேக்க தத்துவ ஞானிகள் கூறியிருக்கிறார்கள். அறிவியல்பூர்வமான பொருள்முதல்வாதம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் காலத்தில் அவர்களால் உருவாக்கப்பட்டது. கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்பது பழங்காலத்திலிருந்து இன்றுவரை தொடருகின்ற இரு வர்க்கங்களுக்கான தத்துவ முகாமாக பிரிந்திருக்கின்ற ஒன்று. இதன் முழுமையான விளக்கம் மார்க்சியம் மலர்ந்த பின்தான் விளக்கப்பட்டது.
இஸ்லாத்தில் சாதிரீதியிலான பிரச்சினைகள் இல்லையென்றே இதுவரையில் நானும் நினைத்திருந்தேன். மசூத் ஆலம் கூறுவது போன்ற பிரச்சினை தமிழ்நாட்டில் தற்பொழுது தெரியாவிடினும் இருந்திருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த மாதம் பி.ஜே.யின் சொந்த ஊரான தொண்டிக்கு ஒரு சாவிற்காக சென்றிருந்தேன். சாவை அடக்கம் செய்துகொண்டிருந்த சமயம் மற்றொரு சாவு எங்களைக் கடந்து சென்றது. அதுகுறித்து அருகிலிருந்தவரிடம் வினவியபோது அந்த ஜனாசா(சாவு)பக்கீர் சாயிபுகளுடையது, அவர்களுக்கு தனி சுடுகாடு என்றார். மேலும் பக்கீர்களுடன் மற்றவர்கள் மணஉறவும் கொள்வதில்லை என்றார். காத இச்சம்பவங்கள் நடப்பது முஸ்லீம்களை திருத்த கிளம்பியிருக்கும் தவ்ஹீத் ஜமாத்தின் அமைப்பாளர் பி.ஜெயினுலாபுதீன் சொந்த ஊரில்தான். உழைக்கும் மக்கள் தர்ஹாக்களில் சென்று வேண்டுவது என்பது இந்துக்களின் குலதெய்வ வழிபாட்டின் தாக்கம் என்றே கருதுகிறேன். இஸ்லாமும் இந்து மதத்தின் சாதியத்தை ஏற்றுக்கொண்டே வளர முடிந்த்து என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. 20 வருடங்களுக்கு முன்பு வரை(அதீத தொலைதொடர்பு வளர்ச்சியற்ற காலம்), இந்துக்கள் திருப்பதி சென்று மொட்டை போடுவதையும் கோயிலை சுற்றுவதையும் மூடநம்பிக்கை என்று பரிகசித்த முஸ்லீம்கள் இன்று மெக்கா சென்று நாமும் அதையே செய்கிறோம் எனத் தெரியவந்தபோது பின்பக்கத்தையும் சேர்த்து மூடிக்கொண்டனர். ஹஜ்ஜின்போது முஸ்லீம்கள் கட்டும் இஹ்ராம் துணி இங்கு சங்கராச்சாரியாரின் உடையை ஒத்ததே.
மறுமை என்று இஸ்லாம் சொல்வது தீர்ப்பு நாளில் நான் நானாகவே எழுப்பப்பட்டு கேள்வி கேட்கப்படுவேன்.இந்து மதம் சொல்வது போல் மீண்டும் ஏழு ஜென்மங்களில் ஆடாகவோ மாடாகவோ கழுதையாகவோ பறவையாகவோ பன்றியாகவோ நாயாகவோ இறந்த மனிதன் பிறப்பெடுப்பான் என்று கூறவில்லை .வெளிநாடுகளுக்கு செல்லும் இந்துக்கள் வெள்ளை இன ஆணையோ பெண்ணையோ மணம்முடிக்க எளிதாக முடியும் .வெள்ளைத்தோல் என்பதால் ஒரு பிரச்சனையும் இல்லை .ஆனால் இதுவரை ஒரு இந்தியன் ஒரு கறுப்பின பெண்ணை மணந்ததை நான் பார்த்ததில்லை கேள்விபட்டதும் இல்லை .ஆனால் முஸ்லிம் ஆண் கருப்பு இன பெண்ணை மணந்து நான் பார்த்திருக்கிறேன்.எனக்கு தமிழ் மொழி என் தாய் மொழி என்பதால் தமிழ் பேச தெரிந்த பெண்ணையே மணக்க விரும்பினேன் மணந்தேன் .நமது தமிழ் கூட்டுகுடும்ப கலாச்சாரம் எனக்கு பிடிக்கும் என்பதால் நான் வேறு இனப்பெண்ணை நாடவில்லை .தன் பெற்றோரை அவர்கள் கடைசி காலம் வரை நல்லவிதமாகவும் நிம்மதியாகவும் வைத்திருக்க விரும்பிய ஆள் நான் .பெற்றோர்களுடைய வாழ்த்துக்களும் ஆசியும் இறைவனுக்கு பிடித்தமானவை . தமிழ் பெண்ணை நான் மணந்து கொண்டதால் நான் இன வெறியன் அல்ல .எது நல்லதோ அதை செய் .அவ்வளவுதான்.
சித்திக்கிற்கு
இஸ்லாம் மதத்திற்கு ஒருவர் மாறிவரும்போது அவர் இஸ்லாம் தடை செய்யும் விசயங்களை தவிர்த்து மற்றவைகளை அவர் தொடரலாம் .அதற்காக திருப்பதி மொட்டையை முஸ்லிம்கள் கிண்டல் பண்ணியதால் அது இஸ்லாத்தில் இல்லாத பழக்கம் என்று எந்த கேனை சொன்னது ? இன்று குரான் மற்றும் ஹதீஸ் அனைத்தும் தமிழ் மொழியிலேயே கிடைக்கிறது அதனால் ,நம்மிடம் இருந்த பல மூட பழக்கங்கள் தவறு என்று புரிய முடிந்தது .தர்ஹாக்களுக்கு போவது தவறு என்று உரைக்க ஆரம்பித்தது .நான் நாகூர் தர்காவிற்கு முதல் முறையாக போனபோது அருவருப்பாக இருந்தது .அப்போது எனக்கு இஸ்லாமை பற்றி சரியாக தெரியாது .அப்போதே எனக்கு பிடிக்கவில்லை .என் நண்பர்கள் அனைவரும் இந்துக்களே. சந்தனக்கூடு போன்ற கூத்துக்களையெல்லாம் ஜாலியாக பார்த்திருக்கிறேன் .ஆனால் விபரம் தெரிந்த பிறகு அந்த பக்கம் தலை வைப்பதில்லை .தெரியாமல் செய்தால் மன்னிக்கலாம் .தெரிந்தே செய்தால் குற்றமே .அடிக்கடி கோவில் திருவிழா வரும்போது நமக்கும் அப்படி இல்லையே என்று சிறு வயதில் தோணும் .அதனால் சந்தனக்கூடு அப்போ பிடிக்கும் .இப்போ அது தவறு என்று தெரிந்த பிறகு எங்கள் குடும்பத்தில் யாரும் போவதில்லை .இஹ்ராம் உடை சங்கராச்சாரியார் போடும் உடை என்கிறீர் .அப்போ முண்டமாக திரியும் சாதுக்கள் எப்படி ?பிறக்கும்போது எல்லோரும் முண்டமாக பிறக்கிறோம் அதற்காக முண்டமாகத்தான் திரிவேன் என்பது அறிவுடமையா ?
திருப்பதி பற்றியும் ஹஜ்ஜின்போது முஸ்லீம்கள் கட்டும் இஹ்ராம் துணியை இங்கு சங்கராச்சாரியாரின் உடையுடனும் நான் ஒப்பிட்டது மதங்களில் இருக்கும் சடங்குகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு அவ்வளவாக வேறுபாடுகள் இல்லை என்பதற்காகவே.
ஏற்றத்தாழ்வே இல்லாத உலக சமாதான மதம் சொல்வதை கேட்டு மகிழுங்கள் ,
(எடுத்து கொடுத்ததுக்கு தேங்க்ஸ் பாய்)
கோத்திரங்களையும் பிரிவுகளையும் உருவாக்கியது அல்லாஹ்வே என்று அல்லாஹ் அல்குரானில் தெளிவு படுத்துகிறான்.
உலக மக்களிலேயே அரபியர் மேலானவர்கள். அவர்களிலேயே மேலானவர்கள் குரேஷிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அறிவித்துள்ளார்.( நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குரேஷி சாதியை சேர்ந்தவர். )
மேலும் கீழ்ஜாதி ஆணை திருமணம் செய்யவிரும்பும் பெண் குடும்பத்துக்கு இழுக்கு கொண்டுவருகிறாள் என்றும் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அறிவித்துள்ளார்.
குரேஷி, அன்சாரி, ஆகிய ஜாதிகள் இந்தியாவின் ஜாதிகள் அல்ல. அவை அரபிய
ஜாதிகள். சையதுகள் ஷேக்குகள் ஆகியோர் இந்திய ஜாதியினர் அல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குரேஷி சாதியை சேர்ந்தவர்.
மேல் ஜாதி ஆண்கள் கீழ் ஜாதி பெண்களை திருமணம் செய்வது ஹலாலானது. ஆனால், மேல் ஜாதி பெண்கள் கீழ் ஜாதி ஆண்களை திருமணம் செய்வது ஹராமானது.
நபிகள் நாயகம் (ஸல்) தன் மகளான பாத்திமா(ரலி)யை பிலாலுக்கு திருமணம் செய்து தரவில்லை. சமமான அந்தஸ்து உள்ள சாதியிலேயே திருமணம் செய்துதந்துள்ளார். ஆனால், அவர் கீழ்ஜாதி பெண்களான பலரை திருமணம் செய்துள்ளார்.
ஆகவே ஷரியா சட்டத்தை இந்து பார்ப்பன பழக்க வழக்கங்களின் பாதிப்பால்
மாறுதலடைந்துள்ளது என்று சொல்வது இஸ்லாமியர்களை அவமானப்படுத்துவதாகும்.
இன்றும் சவுதி அரேபியாவில் மேல்ஜாதி அரபுப் பெண் ஒருவர் கீழ்ஜாதி அரபு
ஆணை திருமணம் செய்யமுடியாது.
நிச்சயமாக ஒரு கருப்பின முஸ்லீமை (அப்த்) திருமணம் செய்யமுடியாது. செய்யவும் கூடாது.
அப்படி செய்தால், அது ஷரியா சட்டப்படி செல்லாது. ஆகவே இது தெரியவந்தால், கட்டாய விவாகரத்தே வழங்கப்படும்.
மதி.இண்டியா. நீங்கள்தானே அந்த ‘அப்துல்’? இஸ்லாத்தில் இல்லாத ஒரு விஷயத்தை அது ‘இஸ்லாத்தில் இருக்கு’ என்று ஒரு முஸ்லிம் செய்வாராயின் அவர் சவூதி அரசர் அப்துல்லாஹ்வாகவே இருந்தாலும் தண்டிக்கப்படவேன்டியவரே. அரசாட்சி அதிகாரமில்லாத இந்திய அப்பாவி முஸ்லிம்கள் வேரு என்ன செய்ய முடியும். கண்டித்து அறிக்கை விடலாம். மேடைபோட்டு மைக் கிழிய எதிர்க்கலாம். நீங்கள்தான் அப்படிபட்ட முஸ்லிம்களை தீண்டாமை வண்கொடுமை சட்டத்தில் பிடித்து உள்ளே போடுங்களேன்.
நண்பர் நெத்தியடி முகம்மது,
அண்மையில் ஒரு தொ.கா விளம்பரம் பார்த்தேன். ஒரு சிறுவன் வீட்டு விலங்கு ஒன்றோடு சகதியில் விழுந்து புறண்டு விளையாடிவிட்டு வருவான். அவனின் தாயார் “ஹராம்… ஹராம்” என்று கூறிக்கொண்டே பையனை மருத்துவரிடம் அழைத்துவருவார். மருத்துவரான பெண்ணோ “அது ஒன்றும் தப்பில்லை இந்த சோப்பை போட்டு குளிப்பாட்டுங்கள்” என்பார்
இஸ்லாத்தில் வீட்டு விலங்குகள் வளர்ப்பதும், அவைகளோடு நெருக்கமாக உறவாடுவதும் தடைசெய்யப்பட்ட ஒன்று. உழைக்கும் மக்கள் இஸ்லாமிய நெறிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா? ஐவேளை தொழுகிறார்களா என்பதை கண்காணிக்க தனியாக முத்தவ்வா என்ற பெயரில் தனி காவல் துறையே சௌதியில் உண்டு. இந்த நிலையில் இஸ்லாத்திற்கு எதிரான இந்த விளம்பரம் தினசரி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது, ஒரு சிறு முணுணுப்பு கூட இல்லாமல். யாரை தண்டிக்கலாம்?
முதலாளித்துவத்தில் எல்லா மதங்களும் சரண் இஸ்லாம் உட்பட
தோழமையுடன்
செங்கொடி
(ஹராம் = இறைவனால் விலக்கப்பட்டது)
சரியாய் சொன்னீங்க செங்கொடி… பார்ப்னியத்திடம் சரணடைந்தது போலவே இஸ்லாம் முதலாளித்துவத்திடமும் எப்பவோ சரண்டைந்து விட்டது, அடுத்தது லிஸ்டில் என்னவோ?
இதெல்லாம் ஜுஜுபி மேட்டர், நண்பர் செங்கொடி. இஸ்லாத்தை மறந்த பல பணக்கார அரபிகள் மூலமாய் இதைவிடவெல்லாம் நிறைய அநீதிகள் சவூதியில் இருக்கிறதாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அநியாயக்காரனிடம் ‘நீ அநியாயக்காரன்’ என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.” (முஸ்னத் அஹமத்)
——இது, இன்றைய சவூதிகளுக்காகவே சொல்லப்பட்ட ஹதீஸோ என்று எண்ணத்தோன்றுகிறது, செங்கொடி. அதனால்தான் தமிழக முஸ்லிம்கள் சவூதியை இஸ்லாத்தின் அத்தாரிட்டியாக எடுத்துக்கொள்வது இல்லை.
அவர்களின், குடும்ப பாரம்பரியப்பெருமை பேசித்திரியும் அந்த familyname – ‘kabila’ வெறியை எந்த இஸ்லாமிய நெறியிலும் சட்டத்திலும் நியாயப்படுத்த முடியாது என்பதை நன்கு உணர்ந்தே அந்த பாவத்தில் சிக்கி சின்னாபின்னமாகும் சவூதிகளாய் என்னை பிறக்க வைக்காமல், தூய இஸ்லாமிய முறைப்படி வாழ அதிக வாய்ப்புள்ள தமிழ் முஸ்லிமாய் பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றி.
உங்கள் மீது எனக்கொரு கோபம் உண்டு செங்கொடி. வினவு, “திருப்பதி ஏழுமலையானை கைது செய்தபோது”, மக்காவில் உண்டியல் வைத்து சம்பாதித்தாரே (?!?), அதை நீங்கள் சவூதிலிருந்தும், (பச்சை இகாமா வைத்திருப்பவரான) நீங்கள் மக்கா செல்பவராய் இருந்தும் ஏன் வினவை “மக்காவில் உண்டியல்” விஷயத்தில் தவறென்று சொல்லவில்லை? அன்றிலிருந்து உங்கள் செங்கொடி அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருக்கிறது, நண்பர்.
ஊர் மூளைக்்கெல்லாம் சர்டிபிகேட்டு கொடுக்க ஆசைப்படும் சுயமோகம்மது….. மெக்காவில்ல உண்டியல் என்பது figurative speech அதாவது திருப்பதி மட்டுமல் வேடிகான் மெக்கா என எல்லா இடங்களிலும் இறைவன் பெயரால் பக்தர்களை ஆட்டையை போடுகிறார்கள் என்ற பொருள் வர… டைனோசருக்கு இருந்தளவுக்காவது உமக்கு மண்டைக்குள்ளே மேட்டர் இருந்தால் இது புரிந்திருக்கும்…ஹூம் என்ன செய்வது நீர் அதுக்கு கொடுத்துவைக்கவில்லையே…ஹோ…ஹோ……
யோவ்! கே….குறி…? உம்மை, நீரே லூசு என்று சொன்னதால், அரை லூசா முழு லூசா என தெரிந்துகொள்ள, நான் உமக்குத்தான் பரீட்சை வைத்தேன். ஊர் மூளைக்கெல்லாம் அல்ல. ஒருமுறை…. ஒருமுறை ….ஒரேமுறை பொருத்தமான பதில் சொல்லிப்பழகுமய்யா. உம்மையும் ஒரு மக்கா சூப்பர் ஸ்டாருன்னு சொல்லுதாகல்லா?
சுய்மேகம்மத்து, எத்தனை பதில் சொன்னாலும் உம்ம தேக்கு மர மண்டையில ஏற்வா போவுது…ஒன்னு பண்ணும், வழக்கம் போல வேற பெயரில் வந்து உமக்கு நீங்களே பதில் சொல்லிப்போட்டிங்கன்னா நெம்ப ஈசியா புரியும்.
நண்பர் நெத்தியடி முகம்மது,
நீங்கள் குறிப்பிடும் அதே பதிவில் தான் நான் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டுள்ளேன்.
“உண்டியல் என்றில்லை மதத்திற்காக மனிதன் செலவு செய்தபணத்தை கணக்கிட்டால் உழைப்பில் பாதியை விழுங்கியிருப்பது தெரியவரும்”
சௌதியின் மொத்த உள் உற்பத்திவரவில்(எண்ணெய்+ஹஜ்ஜின் மூலமான அன்னியச்செலவாணி) மீளாசெலவினங்கள் 39.7 விழுக்காடுதான், நிர்வாகச்செலவுகள் ஏனைய செலவினங்கள் போக மீதம் எங்கு செல்கிறது என அறிவிக்கப்படாவிட்டாலும் அது தெரிந்ததுதான். இதை எப்படி மறைக்கிறார்கள்? சொற்ப உதவித்திட்டங்கள் போக இரண்டு புனிதப்பள்ளிகளை இடைவிடாமல் விரிவித்துக்கொண்டும், கை கழுவும் குழாய்களில் கூட உணரிகளை பொருத்தியும் வசதிகள் செய்திருக்கிறார்களே இதெல்லாம் பக்தியினால் வரும் புனிதப்பயணிகளின் வசதிக்காக என நீங்கள் நம்புகிறீர்களா? இல்லை. வசதிகள் செய்து பக்தர்களை வியக்கச்செய்வதன் மூலம் கேள்விகள் உருவாகாமலேயே கரைக்கப்படுகின்றன. மக்களிடம் மீளத்திரும்பவேண்டிய பணம் வராமலேயே சுரண்டுபவர்களிடம் சேர்ந்தாலும், வந்து உண்டியல் போன்றவற்றின் மூலம் மீண்டும் சென்றாலும், இரண்டிற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. எனவே தோழர் வினவு வின் வார்த்தைகளை விட அதன் பொருளுக்கே வினையாக்கவேண்டும்.
ஒரு கிளைக்கேள்வி:
தூய முஸ்லீமாய் வாழ இறைவன் உங்களுக்கு வழங்கிய வாய்ப்புக்கும், அந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட சௌதியின் பதுவீன்களுக்கும் இடையிலான வித்தியாசத்தின் காரணிகளை கொஞ்சம் விளக்கவியலுமா?
தோழமையுடன்
செங்கொடி
இந்து மத நம்பிக்கை உள்ள என் போன்றவர்களிடம் எவனாவது வந்து பாப்பாந்தான் உயர்ந்தவன் என இந்த புத்தகத்தில் உள்ளதால் நாந்தான் உயர்ந்தவன் என எவனாவது சொன்னால் எதால் அடிப்பேன் என எனக்கே தெரியாது….
ஆனா பாருங்க ,
அரபிதான் தேவபாசை .
அரபிகள்தான் உயர்ந்த ஜாதி
அவர்களிலும் உயந்தவர்கள் நான் பிறந்த குறைஷி
தாழ்ந்த சாதிக்கு பெண் தரமாட்டேன் , ஆனால் அங்கிருந்து 3 பெண்களை எடுப்பேன்
என சொன்ன ஆளை எப்படி இறைதூதர் என்றும் ,அவர் சுயநலத்தோடு கடவுள் சொன்னது என கதை விட்டதை வேதம் என்றும் சொல்லி இடுப்பில் குண்டோடு சொர்கம் புக அரபிகள் அல்லாத தாழ்ந்த சாதி இந்திய முஸ்லீம்கள் ரெடியாகுறாங்க?
அரபி அடிமைகளே திருந்துங்கள் . தமிழ் நபி ஒருவரை கண்டுபிடியுங்கள்
(அரபியாவில் இருந்து வந்து கிழவனுக ஜமாத்தை கரக்ட் பண்ணி ஒருமாச கல்யாணம் பண்ணுகிறான்களே , அதுபோல இந்திய முஸ்லீம்கள் அரபி பெண்ணை கல்யாணம் (அட நிரந்த மணம்தான்) செய்ய முடியுமா ?)
யோவ் மதி ‘பாப்பான் தான் உயர்ந்தவன்’ அப்படீங்கற வர்னாசிரம தத்துவத்த போற்றாத புத்தகமா, இராமாயணம், மகாபாரதம், கீதை, மனுசுருமிதி, பாகவதம், இன்னும் எத்தனை டன்னு குப்பை இருக்கு… நீ எத்தனாந்தேதி இந்துமதம் கம்பேனி பிரைவேட் லிமிடெட் சேர்மேன் சங்கராச்சாரியை போயி செருப்பால அடிக்க போற…நானும் வற்றேன்
திருவாளர் சுயதம்பட்ட சுயமோக அரைவேக்காட்டு நெத்தியடி முகம்மது சமூகத்துக்கு….. இந்த லுசு தெக்கானு வினவ விட்டு போனதிலிருந்து நான் பாட்டுக்கு ஏன் வேலையை பாத்துகிட்டு ஒதுங்கி கிடந்தேன்…. விடமாட்டீங்களே… ஆமாம் எங்கேந்துய்யா கிளம்புறீங்க….. என்னமோ இவரு பயங்கரமா விவாதிக்குர மாதிரியும் இவர கண்டு எல்லாரு பயந்து பேண்டுல ரெண்டுக்கு போற மாதிரியும்… வினவு இவருக்காகவே பதிவு போடற மாதிரியும்… அப்புறம் இவருக்காகவே பதிவு போடாத மாதிரியும்,…இவருக்காகவே பின்னூடம் போடறமாதியும்….தன்ன பத்தி உசத்தியா நினைக்கறது தப்பில்ல அதுக்காக இப்படியா…அப்பா!!!
மொதல்ல இதகேளு… உன்ன இங்க யாரும் சீந்தாம இருக்க காரணம் நீர் ஒரு லூசு.(.ஒரு லூசுகிட்ட என்னமாதிரி ஒரு லூச தவிர வேறு எவன் விவாதம் பண்ணமுடியும்) அதுக்கும் மேல நீ ஒரு காமிடி பீசு… ரெம்ப டென்சனா ஒர்கு பண்ணும்போது உம்ம பின்னுட்டம் நல்லா காமிக்கு ரிலீப்பு..
இங்க வந்து நீ இங்க வந்து பதிவுக்கு சம்பந்தமே இல்லாம பின்னூட்டம் போடறதும்..அதுக்கு நீயே இன்னொரு பேருல வந்து சபாசு போட்டு ஜல்லியடிக்கறதும் …. கொஞ்ச நேரத்துல ஜல்லியடிச்சது நீதான்னு மறந்து போயி உனக்கு பல பேரு சப்போர்டு இருக்கறதா நீயே நம்பி உன்ன பெரிய்ய்யய ஆளுன்னு நெனனச்சகறதும், நல்ல வடிவேலு காமெடிக்க ஈக்குவல்… நீயே வேறாளு மாதிரி உன் பின்னூட்டத்த படிச்சு பாரு புரியும்…உருப்படியா ஏதாவது விவாதம் பண்ணு….பை பை.
//இஸ்லாத்தில் இல்லாத ஒரு விஷயத்தை அது ‘இஸ்லாத்தில் இருக்கு’ என்று ஒரு முஸ்லிம் செய்வாராயின் அவர் சவூதி அரசர் அப்துல்லாஹ்வாகவே இருந்தாலும் தண்டிக்கப்படவேன்டியவரே.//
நானே அப்துல்லாவாக இருந்துவிட்டு போகிரேன் நெத்தியடி முஹம்மத் , மேலே சொல்லப்பட்ட விசயம் உண்மையா இல்லையா ?
அதை சொல்லுங்கள் திருவாளர் இந்திய தாழ்ந்த முஸ்லீம் சாதி அரபி அடிமை அவர்களே .
யோவ் மதி மொதல்ல உன் ஆர்எஸ்எஸ் கூட்டத்த ஆசிட் ஊத்தி கழுவிட்டு வா… பாயான்ட அப்பாலிக்கா பேசிக்கலாம்.
வினவு குழுவினருக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) [ஏக இறைவனின் அன்பும் அருளும் உங்கள் மீது என்றென்றும் நிலைத்திருக்கட்டுமாக ]
ஒரு சித்தாந்தத்தை அதை பின்பற்றுகின்ற மக்களின் அளவுகோலின்படிதான் மதிப்பிட வேண்டும் என்பது வினவு குழு எடுத்து வைக்கின்ற வாதம். [ஆதாரம் : /* வினவு குழு: இசுலாத்தின் சரியை அதை பின்பற்றுபவரின் அளவுகோலின்படிதானே மதிப்பிட முடியும்? */ ]. இந்த விதியின் அடிப்படையில் தான் இந்த கட்டுரைக்கான தலைப்பே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த விதியை நானும் இங்கு பின்னூட்டமிடுகின்ற எந்த ஒரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்ளவில்லை. (அதாவது உண்மையான முஸ்லிம்கள். முஸ்லிம்களின் பெயரை மட்டும் சூட்டிக்கொண்டு திரிகின்ற கேடுகெட்ட போலிகளை நான் குறிப்பிடவில்லை ) ஆனால் வினவு குழு வகுத்த விதியை வினவு குழு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அது தான் ஒரு கொள்கைப் பற்று உடையவர்களின் இயல்பாக இருக்க முடியும்.
வினவு குழு வகுத்த விதியின் அடிப்படையில் கம்யூனிசத்தை நன்கு ஆராய்ந்தோமேயானால் பெரும்பாலான கம்யூனிஸ்ட்கள் கார்ப்பரடேடுகளின் காலை நக்குபவர்களாகவே இருக்கின்றனர். ஆகையால் வினவு குழு வகுத்த இந்த விதியின் அடிப்படையில் “கார்ப்பறேடுகளின் காலில் சரணடைந்த கம்யூனிசம்” என்ற கட்டுரையை எப்போது எழுதுவீர்கள்? பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
[குறிப்பு : என்னுடைய இந்த கேள்விக்கு வினவு குழு மட்டுமே பதிலளிக்க வேண்டும். அதற்கு மட்டுமே நான் மறுமொழி இடுவேன். அதைவிடுத்து ஜட்டி போட்டது போடாதது நொந்தது அரை வேக்காடு அரை டிக்கட்டு கேள்விக்குறி ஆச்சர்யக்குறி என்று எது வந்து பின்னூட்டமிட்டாலும் நான் மறுமொழி இடமாட்டேன். ]
ஷாஜகான் என்னும் பெரியவாள் அரியவேண்டிய ஒன்று…அதாவது… கம்யூனிஸ்டு பார்ட்டி ஆஃப் இந்தியா டாடாயிஸ்டு, கம்யூனிஸ்டு பார்ட்டி ஆஃப் இந்தியா ரவுடியிஸ்டு, இன்னமும் போலி கம்யூனிஸ்டுகளை எப்படியெல்லாம் அம்பலப்படுத்தமுடியுமே அப்படெய்லாம் அம்பலப்்படுத்துபவர்களும் இவர்களே. உங்கள் உலக அறிவு சீவி சிங்காரிக்கும் கேள்விகளை கேட்கும் முன் கொஞ்சூண்டாவது இந்த தளத்தில் இருப்பதை படியுங்கள்.. பார்ப்பனியத்திடம் சரண்டைந்த இசுலாமிற்கு வக்காலத்து வாங்கும் மேலூராரே………
கேள்விக்குறி. ஒரு போட்டி வைத்துக்கொள்ளலாமா?
“கார்ப்பறேடுகளின் காலில் சரணடைந்த கம்யூனிசம்”
“கார்ப்பறேடுகளின் காலில் சரணடைந்த கம்யூனிஸ்டுகள்”
—– இவ்விரண்டு வாக்கியங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்துவிட்டால், அதிபுத்திசாலி ‘தோழருக்கு’ என்ன பரிசு தரலாம்? பேசாமல். ‘தங்களுக்கு மூளை உள்ளது என்றும் அது வேலை செய்கிறது’ என்பதையும் ஒப்புக்கொள்வோமா? அட! இது தான் உலகில் விலை மதிக்க முடியாத பரிசாக இருக்கிறதே!
நான் மணி
தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்பவர்களை எல்லாம் கம்யூனிஸ்டுகள் என்று வரையறுக்க முடியாது. பெயரில் கம்யூனிசம் இருப்பதாலேயே அது கம்யூனிஸ்டு கட்சி என்றும் ஆகிவிடாது. இதனை அப்படியே முசுலீம்களுக்கு பொருத்த முடியுமா…
ஒருவேளை பொருத்தினால் இந்திய அரசமைப்புச்சட்டத்தில் உள்ள முசுலீம்களுக்கான பகுதிகளில் இவர்கள் எல்லாம் முசுலீம்கள் இல்லை அதாவது அசமத்துவம் பாராட்டுபவர்கள் என்று ஒரு திருத்த்த்தை எந்த முசுலீம் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்மொழியக் கூட இல்லையே ஏன்.. கம்யூனிஸ்டுகள் என்பதற்கு அப்படி சிறப்பு பகுதிகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை எனக் கருதுகிறேன்.
ஒரு முஸ்லீமுக்கு பிறக்கும் குழந்தையை முஸ்லீம் என்று நீங்கள் அழைப்பதுபோல, ஒரு கம்யூனிஸ்டிற்கு பிறந்த குழந்தையை கம்யூனிஸ்டு என்று நாங்கள் அழைப்பதில்லை. ஒருவனின் செயலை வைத்துத்தான் அவனை கம்யூனிஸ்டு என்கின்றோம் இல்லையெனில் போலி என்கின்றோம்.
என் மறுமொழியை ஷாஜகான் படிக்கவேண்டும் என்றோ பதிலுரைப்பார் என்பதற்காகவோ இதை பதியவில்லை. பெரியார் மிகத் தெளிவாக சொல்வார் இந்த ராமசாமி சொல்கிறேன் என்பதற்காக யாரும் அப்படியே பின்பற்ற வேண்டாம். சரி என்றால் ஏற்று கொள்ளுங்கள் தவறு என்றால் ஓதுக்கி தள்ளுங்கள். அது போலவே இடது வலது, போலி, மாவோ, மற்றும் பலரை அவர்களின் நடவடிக்கைகளை வைத்து எடை போட வேண்டுமேயன்றி, பொத்தாம் பொதுவாக பழியிடாமலும், விவாததிலிருந்து விலகி செல்ல வேண்டாம். நீங்கள் கேட்க மாதிரி பதிவை ஏற்கனவே புதிய ஜனநாயகத்தில் இவர்கள் எழுதியுள்ளார். முடிந்தால் அதை படிக்கவும்
நண்பர் ஷாஜகான், நேரடியாக கடவுளிடம் மட்டுமே பேசி பழக்கப்பட்டவர் போல் தெரிகிறது. நண்பரே , வினவு தோழர்கள் கட்டுரையாளர்கள் மட்டுமே, கடவுள் அல்ல. 🙂
வினவு ஒரு நாட்டாமை அல்ல. ஷாஜகான் எல்லாக்கேள்விகளுக்கும் நாங்களே பதில் சொல்வது சாத்தியமல்ல. எந்த கருத்தும் வாசகர்களால் விவாதிக்கப்படவேண்டுமென்றே விரும்புகிறோம். பல தோழர்கள் எங்களுக்காக விவாதிக்கிறார்கள். அவர்களையெல்லாம் நீங்கள் இழிவுபடுத்துவது சரியல்ல. வினவின்முகப்பில் கம்யூனிசம் என்ற தலைப்பில் உள்ள போலி கம்யூனிசம் என்ற உள்தலைப்பை திறந்தால் கார்ப்பரேட்டுகளின் காலை நக்கும் போலி கம்யூனிஸ்டுகளைப் பற்றிய பதிவுகளைப்பார்க்கலாம்.. இசுலாம் சாதி பார்க்கிறதா என்ற கேள்விக்கு வினவிடம் எதிர் கேள்வி கேட்பதால் மறைமுகமாக இசுலாம் சாதி பாராட்டுவதை நீங்கள் ஒத்துக்கொள்ளுகிறீர்கள் என்று பொருள். கம்யூனிசத்தின் பெயரில் தவறு செய்யும் எவரையும் நாங்கள் விமரிசித்தே வருகிறோம். கம்யூனிச நாடு என்று பலராலும் தவறாக அறியப்படும் சீனாவைக்கூட நாங்கள் முதலாளித்துவ நாடு என்றே மதிப்பிடுகிறோம். நீங்கள் வினவின் மற்ற கட்டுரைகளைப் படித்தால் உங்கள் ஐயம் அகலும். மற்றபடி விவாதிக்கும் நண்பர்களை அவர்களது பெயரை வைத்துஇழிவு படுத்தாமல் அவர்களுடன் நட்போடு விவாதியுங்கள்.
/////முகப்பில் கம்யூனிசம் என்ற தலைப்பில் உள்ள போலி கம்யூனிசம் என்ற உள்தலைப்பை திறந்தால் கார்ப்பரேட்டுகளின் காலை நக்கும் போலி கம்யூனிஸ்டுகளைப் பற்றிய பதிவுகளைப்பார்க்கலாம்..////
—-இதில், \\….போலி கம்யூநிஸத்தை பற்றிய பதிவுகளைப்பார்க்கலாம்..\\ என்று எழுதினால் உங்கள் இப்பதிவின் தலைப்புக்கு நியாயம் கற்பிக்கலாம். முஸ்லிம்கள் யாரும் பதிவை எதிர்க்கவில்லை. பொருந்தா தலைப்பை மட்டுமே எதிர்க்கிறோம்.
சுயமோகமது போலி கம்யூனிசம் என்ற பட்டனை தட்டினால் போலி கம்யூனிசத்தை பற்றி பதிவுகளை தானே பார்க்க முடியும் இது என்ன மடத்தனமான கேள்ளி. இதோ நான் சொல்கிறேன் போலி கம்யூனிசத்தை பற்றிய பதிவுகளை பார்க்க மேலே குறிபிட்ட இடத்தை அமுக்கவும், அமுக்கவும், அமுக்க்க்க்க்க்க்கவும்
‘கார்பரேட்டுகளின் காலை நக்கும் கம்யூனிசம்’ -இப்படி ஒரு தலைப்பில் ஒரு பதிவும் இல்லையே, தற்குறி!
பார்பனியத்திடம் சரண்டைந்த இசுலாம் என்ற தலைப்பு சரியானது என்று நாங்கள் கருதினோம் எழுதினோம். கம்யூனிசம் கார்புரேட்டு கால நக்கியசு என்று உமக்கு தோன்றினால் நீர் எழுதும். இங்கே ஜல்லியடிக்கும் வேலையாவது எமக்கு மிச்சமாகும்
யோவ்! தற்குறி..! /////கம்யூனிசம் கார்புரேட்டு கால நக்கியது என்று உமக்கு தோன்றினால் நீர் எழுதும்.///// அதுதானேயா என் நிலைப்பாடும்? காற்பறேடுகளின் காலை ஒரு கம்யூனிஸ்ட் நக்கினால் நீர் அவனை ‘போலி’ என்கிறீர். அப்போதுமட்டும் எதற்காக ‘கம்யூனிசமே போலி’ என்று புரிந்து கொள்ளமாட்டீர்? ‘அவர்களிடம் போலி கம்யூனிசம் இருப்பதால் அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள்’, என்கிறது உம அனைத்து பதுவுகளும். ஒன்றிலுமே அவர்கள் போலிகளாகி விட்டதால், ‘கம்யூனிசமே போலியாகிவிட்டது’ , இனி ‘எதற்கு இந்த கம்யூனிசம் வெங்காயம்’, ‘தூக்கி எறிந்துவிட்டு எல்லாரும் வெளியேறுங்கள்’ என்று எங்குமே தோழர்களுக்கு அறிவுரை எழுதவில்லையே.
இதே அளவுகோலின்படி, அவர்களிடம் போலி இஸ்லாம் இருப்பதால் அவர்களை போலி முஸ்லிம்கள் என்று சொல்லிவிட்டுபோனால் உம்மீது இங்கே ஜல்லியடிக்கும் வேலையாவது எமக்கு மிச்சமாகும்.
படிக்கிறவன் எல்லாரும் உங்கள் தோழர்கள் போலவே எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டு கேனையனாக இருக்க வேண்டுமா?
புரியாத முட்டாள் கூமுட்டையாகவே நீர் அனைவரும் இருப்பது என்று அடம் பிடித்தால், உம் அனைவரை விட கேவலமானவர்கள் யாரும் இல்லை.
நெத்தியடி, கேள்விக்குறி இருவரும் தடிமனான வார்த்தைகளை தவிர்த்துவிட்டு கருத்துக்களை மையமாக வைத்து மட்டும் விவாதிக்கலாமே? தோழர் கேள்விக்குறி நண்பர் நெத்தியடி வினவை வசைபாடுவதையெயல்லாம் நாங்கள் காமடியாகவே எடுத்துக் கொள்கிறோம். என்றாவது அவர் உண்மைகளை உணர்வார் என்ற நம்பிக்கையில். அதனால்தான் அவர் தொடர்ந்து வினவை படிக்கிறார், தப்பாக என்றாலும் விவாதிக்கிறார். ஒரு மதநம்பிக்கை வாதியின் நம்பிக்கையை நாம் கொஞ்சம் கேள்வி கேட்டாலும் அவர்கள் சீறத்தான் செய்வார்கள், இங்கே ஷாஜகான் சீறுவது போல. எனவே நெத்தியடி எவ்வளவு ஆத்திரப்பட்டாலும் நாம் அதற்கு பலியாகமல் கேள்விகளை மட்டும் கேட்டு தொடரலாமே?
இந்த பருப்பெல்லாம் வேகாது Mr.வினவு. நான் மீண்டும் மீண்டும் மறுமொழி இடுவதற்கு காரணம், என்றாவது ஒருநாள் இறைவன் அருளால், உங்கள் மனநிலை மாறும் என்ற நம்பிக்கைதான்.
நான், என் குடும்பம், என் தெரு, என் ஊர், என் மாநில முஸ்லிம் மக்களிடம் அவர்களின் முந்தய சமய சாதி நிலை, முஸ்லிம்களான பின்-தூய இஸ்லாமை குரானிலிருந்தும், நபி வழிலிருந்தும் பெற்ற பின் – திடீரென்று மறைந்தது எவ்வாறு? நடைமுறையில் நீங்களே பார்க்கிறீர்களே? இஸ்லாமை சரியாக பின்பற்றும் உண்மை முஸ்லிம்கள் சாதியை மறந்தது எவ்வாறு?
முஹம்மது முதலியார்(?), அஹ்மது தலித்(?), சேக் தாவூது செட்டியார்(?), அப்துல்காதர் அய்யர்(?), நவுஷாத் அலி நாடார்(?), தவஃபீக் தேவர்(?), எல்லாரும் முஸ்லிம்களாய் ஆன பின்னர் அவர்களின் அடைமொழி காணாமல் போனது மட்டுமின்றி ரத்தத்தில் ஊறிப்போன தன் சாதியை – அந்த சாதி வெறியை, தன் மூளையிலிருந்து மறந்தது எவ்வாறு? இதற்கு எந்த சித்தாந்தம் காரணம்? யார் அவர்களை தங்கள் சாதியை மறக்க வைத்தது? இங்குள்ள முஸ்லிம்கள் யாரும் செவ்வாய் கிரகணத்திளிருந்து குதிக்க வில்லை. எனக்கு இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்! முடியாவிட்டால், இப்பதிவின் தலைப்பை மாற்றுங்கள். இதுதான் ஒரு நேர்மையாளனுக்கு அழகு.
முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுங்கள். சால்ஜாப்புகள் வேண்டாம்.
கேள்விக்குறிதான் ஆரம்பித்து வைத்தது. காளமேகம் சூப்பர்ச்ட்டார் என்று புகழாரம் வேறு! தடித்த வார்த்தைகள் தொடர்ந்தது வந்ததால்-நீங்கள் அதற்கு ஆதவு தெரிவிக்கும் வகையில் ‘கண்டுக்காம இருந்ததால்’, நானும் கேள்விக்குறி பாணியில் இறங்கினேன். வேர் வழி? அதனால்தான்….கேள்விக்குறியின் அட்டோழியங்கள் இப்போதுதான் வினவுக்கு புரிந்துள்ளது! நன்றி!
இதுவே என் கடைசி முயற்சி. கீழ்க்காணும் கேட்கப்பட்ட வினாக்களுக்கு வினவிடம் சரியான பதில் இல்லையேல், வினவு குற்றவாளி, ம.க.இ.க வின் பிழைப்புவாதி, போலி கம்யூனிஸ்ட் என்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.
///நான், என் குடும்பம், என் தெரு, என் ஊர், என் மாநில முஸ்லிம் மக்களிடம் அவர்களின் முந்தய சமய சாதி நிலை, முஸ்லிம்களான பின்-தூய இஸ்லாமை குரானிலிருந்தும், நபி வழிலிருந்தும் பெற்ற பின் – திடீரென்று மறைந்தது எவ்வாறு? நடைமுறையில் நீங்களே பார்க்கிறீர்களே? இஸ்லாமை சரியாக பின்பற்றும் உண்மை முஸ்லிம்கள் சாதியை மறந்தது எவ்வாறு?///
///முஹம்மது முதலியார்(?), அஹ்மது தலித்(?), சேக் தாவூது செட்டியார்(?), அப்துல்காதர் அய்யர்(?), நவுஷாத் அலி நாடார்(?), தவஃபீக் தேவர்(?), எல்லாரும் முஸ்லிம்களாய் ஆன பின்னர் அவர்களின் அடைமொழி காணாமல் போனது மட்டுமின்றி ரத்தத்தில் ஊறிப்போன தன் சாதியை – அந்த சாதி வெறியை, தன் மூளையிலிருந்து மறந்தது எவ்வாறு? இதற்கு எந்த சித்தாந்தம் காரணம்? யார்/எது அவர்களை தங்கள் சாதியை மறக்க வைத்தது? இங்குள்ள முஸ்லிம்கள் யாரும் செவ்வாய் கிரகணத்திளிருந்து குதிக்க வில்லை. எனக்கு இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்! முடியாவிட்டால், இப்பதிவின் தலைப்பை மாற்றுங்கள். இதுதான் ஒரு நேர்மையாளனுக்கு அழகு.////
////நடைமுறையில் கண்கூடாக நம் ஊரிலேயே நமக்கு மத்தியில் நம்மிடம் மண்டிக்கிடந்த சாதிப்பேயை நாம் முஸ்லிம்கள் ஆன பிறகு நம்மிடமிருந்து நம் பெயரில் மட்டுமின்றி ஆழ் மனத்திலிருந்து ஓட்டியது எந்த மாந்திரீகம்? பதில் அளிக்க என்ன தயக்கம்? இதற்கு யாலாம் காரணமில்லையா?////
////இங்கிருக்கும் முஸ்லீம்களாகிய நாங்கள் யாவரும் அரபு முஸ்லிம்கள் கிடையாது . ஆறேழு தலை முறைக்கும் முன்னர் எங்கள் முன்னோர்களும் இந்து மதத்தில் கீழ் ஜாதியோ மேல் ஜாதியோ எதாவது ஒரு ஜாதியில் இருந்தவரே. ஆனால் இப்போது எங்களிடம் கேட்டால் எங்கள் பூர்வீக ஜாதி என்னவென்று யாருக்கும் சொல்ல தெரியாது. இதுதான் இசுலாத்தின் வெற்றி . இதுதான் இசுலாத்தின் வெற்றி. நீங்கள் தலைப்பில் சொல்லியது செய்தி உண்மை இல்லை என்பதற்கு இதுவே சாட்சி. இதுவே சாட்சி. உங்கள தலைப்பு அடிப்படையிலேயே தவறு என்பதை உணர்ந்து ஒத்துகொள்ளுங்கள்.தலைப்பை மாற்றுங்கள்.////
சகோதரர் முஹம்மது அவர்களே, உங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. இவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டளை நம்மளை குறை கூற வேண்டும் என்பதே. சிந்தனை சக்தி இல்லதவர்கள். இவர்களுக்கு பதில் அளிப்பதில் ஏதும் பலன் இல்லை என்பதை எப்படி அறிந்தேன் என்றால், நமது பதிலில் உள்ள உண்மையை ஆராயாமல் மனிதன் என்ற முறையில் நமது பதிலில் நம்மிடம் ஏற்படும் வார்த்தை தடுமாற்றத்தை மட்டும் பிடித்துக் கொண்டு குதிப்பவர்கள். நீங்கள் சரியான பதில் அளித்தால் அதை விட்டு விட்டு வேற கேள்விக்கு தாவுவார்கள். இவர்கள் ஒரு குழுவாக செயல்படுவதால் ஆள் மாற்றி மாற்றி பதில் அளிக்கப்பட்ட கேள்வியையே திருப்பிக் கேட்டு நம்மளை குழப்பமடையச் செய்வார்கள்.
அதனால், தாங்கள் தங்களுக்கென்று ஒரு வலைத்தளம் இருந்தால் அதில் இதற்கான பதில் அளித்துவிட்டு இவர்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றினால், நம்மை விட்டு தானாகவே விளகி விடுவார்கள்.
நன்றி.அப்துல் குத்தூஸ்.
அன்பின் நெத்தியடி முஹம்மத்
காஃபா என்பது நபிகள் நாயகத்தின் (ஸல்) அவர்களின் சுன்னா ஆகும். அவர் தனது மகள் பாத்திமா(ரலியை) அலி(ரலி)க்கு திருமணம் செய்துவைத்தார். அலி பானு ஹாஷிம் குலத்தை சேர்ந்தவர். பாத்திமாவை தனக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று அபு பக்கர் கேட்டுக்கொண்டதற்கு மறுத்தார். அபு பக்கர் பானு தைம் குலத்தை சேர்ந்தவர். ஆகையால், பானு ஹஷிமுக்கு பின்னால் அது வருகிறது. இதுவே காஃபா. ஆகும். சாதி பிரிவின் வழியே திருமணம் முடித்தலே நபிகள் நாயகத்தின்(ஸல்) வழியாகும். அதனை விட்டு திருமணம் செய்யலாம். ஆனால், சாதி பிரிவின் வழியே திருமணம் செய்வதே விரும்பத்தக்கது என்பதே நபிகள் நாயகத்தின்(ஸல்) அறிவுரையாகும்.
ஆகையால், இந்திய உலேமாக்கள் காஃபா பற்றிய கருத்தாக்கத்தை இந்திய சாதிகளை பார்த்துத்தான் உருவாக்கிகொண்டனர் என்று வினவு எழுதுவதும் தவறு. காஃபா என்பது நபிகள் நாயகம்(ஸல்) காட்டிய வழி அல்ல என்று நீங்கள் சொல்வதும் தவறு
காஃபா பற்றிய ஏராளமான ஹதீஸ்களை அளிக்கலாம்.
இன்றும் சவுதி அரேபியாவில் குறேஷி ஆட்சி நடைபெறவில்லை, உண்மையான இஸ்லாமிய ஆட்சி நடைபெறவில்லை என்பது உண்மையே.
காரணம் இன்று ஆளும் வர்க்கமாக ஆகியுள்ள சவுத் குடும்பத்தினர் பானு ஹனிபா பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் நபிகள் நாயகத்தின்(ஸல்) எதிரியான முஸைலிமா என்ற போலி நபியின் பிரிவை சேர்ந்தவர்கள். அங்கு பானு ஹனிபாவை இறக்கி பானு குறேஷியை ஆட்சியில் ஏற்றினாலே நல்லது நடக்கும். இல்லையேல் அமெரிக்காவின் எடுபிடியாகத்தான் அரேபியா தொடரும்.
அடப்பாவிகளா..! இரண்டு நாட்கள் ஆகப்போகுது, இதற்கு இன்னும் பதில் இல்லையா? ‘இக்’ என்றால், ‘இம்’ என்றால் பின்னூட்டும் ம.க.இ.க.வின் ‘காலி டப்பாக்கள்’ என்னுடைய இந்த open challenge -ற்கு மௌனம் சாதிப்பது ஏன்? ஏன்? ஏன்? இதற்கு உங்களிடம் “அதற்கு காரணம் இஸ்லாம் அல்ல” என்ற பதில் உங்களிடம் இல்லையென்றால் வெட்கி தலை குனிந்து, மதிகெட்டு வைத்த உங்கள் பொருந்தா தலைப்பை, உங்கள் பதிவுக்கேற்றபடி மாற்ற வேண்டியதுதானே?
திரு.வினவு…உங்களின் பிழைப்பு வாதம் அப்பட்டமாய் வெளியில் வந்து விட்டது. வன்முறையையும் ஆபாசத்தையும் விட்டால் எப்படி ஒரு நாலாந்தர மசாலா பட இயக்குனருக்கு பிழைப்பு நடத்த முடியாதோ, அதேபோல், ‘பார்ப்பனீயம்’, ‘கம்யூனிசம்’ இவை இரண்டும் இல்லையென்றால் வினவின் பிழைப்பு அதோகதி…!
இனி, இது போன்ற ‘பிழைப்பு வாதப்பதிவுகள்’ தான் வினவில் நீக்கமற எங்கும் வியாபித்து தொடரும். மேலும், வினவில்…கூடிய சீக்கிரம் சனிக்கிழமை கவிதைகளிலும் அவை வழிந்தோடும். அல்லது அவை தொலைக்கப்பட்டுவிடும். என்ன செய்ய..! அவைக்கு பத்து பின்நூட்ட்டங்கள் கூட ‘வினவு தோழர்களிடமிருந்து’ வருவதில்லையே…!
வணக்கம், நெத்தியடிபாய் அண்ணாச்சி, உங்களத்தான் சங்குத்தம்பி வலைவீசி தேடிக்கிட்டு இருந்தாப்புல, ஒரு கை என்ன இரண்டு கை கூட பாக்கலாமுன்னு தம்பி தயாரக இருந்தாக. இப்ப எல்லாம் பேசி முடிச்சதுக்கு பெறவு திரும்ப ஓரோன் ஒண்ணுண்ணு வாய்பாட்டு படிக்கீக. தம்பி சங்கு எங்க இருந்தாலும் வந்து பாய் கூட ஆட்டயப்போடு மக்கா!
வாய்யா நெத்தியடி நேத்து ரூம் போட்டு யோசிச்ச பிறகும் புதுசா திட்ட வார்த்தை கிடைக்கலையா??? அதே பழைய பல்லவி/புலம்பல்.
இது வரை நீங்களிருவர் சொன்ன பொய்களை பலர் அம்பலமாக்கிவிட்டனர். அதனால் தான் மீண்டும் வசைமாரியுடன் வந்து உங்கள்/எங்கள் நேரத்தை வீண்டிக்கிறீர்கள்.
பார்பனியத்திடம் சரண்டைந்த இசுலாமை பற்றி விவாதிக்க உங்களைப்போன்ற hypocrites தான் வருகிறார்கள், அதுதான் ஒரே feelings மா 🙁
பி.கு. எங்க உம்ம பொய்மையின் இருள் கூட்டாளி ஜாஜகான். நீங்க வரலையின்னா அவரும் வரமாட்டாரா 🙂
வெட்டிபேச்சு, வீண்பேச்சு வேண்டாம், ‘மதிப்பிற்குரிய’ தோழர்களே, முடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள், இல்லையேல் தோல்வியை ஒத்துக்கொண்டு ஓடிவிடுங்கள், ‘மாண்புமிகு’ பிழைப்பு வாதிகளே…
//////
இதுவே என் கடைசி முயற்சி. கீழ்க்காணும் கேட்கப்பட்ட வினாக்களுக்கு வினவிடம் சரியான பதில் இல்லையேல், வினவு குற்றவாளி, ம.க.இ.க வின் பிழைப்புவாதி, போலி கம்யூனிஸ்ட் என்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.
///நான், என் குடும்பம், என் தெரு, என் ஊர், என் மாநில முஸ்லிம் மக்களிடம் அவர்களின் முந்தய சமய சாதி நிலை, முஸ்லிம்களான பின்-தூய இஸ்லாமை குரானிலிருந்தும், நபி வழிலிருந்தும் பெற்ற பின் – திடீரென்று மறைந்தது எவ்வாறு? நடைமுறையில் நீங்களே பார்க்கிறீர்களே? இஸ்லாமை சரியாக பின்பற்றும் உண்மை முஸ்லிம்கள் சாதியை மறந்தது எவ்வாறு?///
///முஹம்மது முதலியார்(?), அஹ்மது தலித்(?), சேக் தாவூது செட்டியார்(?), அப்துல்காதர் அய்யர்(?), நவுஷாத் அலி நாடார்(?), தவஃபீக் தேவர்(?), எல்லாரும் முஸ்லிம்களாய் ஆன பின்னர் அவர்களின் அடைமொழி காணாமல் போனது மட்டுமின்றி ரத்தத்தில் ஊறிப்போன தன் சாதியை – அந்த சாதி வெறியை, தன் மூளையிலிருந்து மறந்தது எவ்வாறு? இதற்கு எந்த சித்தாந்தம் காரணம்? யார்/எது அவர்களை தங்கள் சாதியை மறக்க வைத்தது? இங்குள்ள முஸ்லிம்கள் யாரும் செவ்வாய் கிரகணத்திளிருந்து குதிக்க வில்லை. எனக்கு இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்! முடியாவிட்டால், இப்பதிவின் தலைப்பை மாற்றுங்கள். இதுதான் ஒரு நேர்மையாளனுக்கு அழகு.////
////நடைமுறையில் கண்கூடாக நம் ஊரிலேயே நமக்கு மத்தியில் நம்மிடம் மண்டிக்கிடந்த சாதிப்பேயை நாம் முஸ்லிம்கள் ஆன பிறகு நம்மிடமிருந்து நம் பெயரில் மட்டுமின்றி ஆழ் மனத்திலிருந்து ஓட்டியது எந்த மாந்திரீகம்? பதில் அளிக்க என்ன தயக்கம்? இதற்கு யாலாம் காரணமில்லையா?////
////இங்கிருக்கும் முஸ்லீம்களாகிய நாங்கள் யாவரும் அரபு முஸ்லிம்கள் கிடையாது . ஆறேழு தலை முறைக்கும் முன்னர் எங்கள் முன்னோர்களும் இந்து மதத்தில் கீழ் ஜாதியோ மேல் ஜாதியோ எதாவது ஒரு ஜாதியில் இருந்தவரே. ஆனால் இப்போது எங்களிடம் கேட்டால் எங்கள் பூர்வீக ஜாதி என்னவென்று யாருக்கும் சொல்ல தெரியாது. இதுதான் இசுலாத்தின் வெற்றி . இதுதான் இசுலாத்தின் வெற்றி. நீங்கள் தலைப்பில் சொல்லியது செய்தி உண்மை இல்லை என்பதற்கு இதுவே சாட்சி. இதுவே சாட்சி. உங்கள தலைப்பு அடிப்படையிலேயே தவறு என்பதை உணர்ந்து ஒத்துகொள்ளுங்கள்.தலைப்பை மாற்றுங்கள்.////
///
என்னுடைய இந்த open challenge -ற்கு மௌனம் சாதிப்பது ஏன்? ஏன்? ஏன்? இதற்கு உங்களிடம் “அதற்கு காரணம் இஸ்லாம் அல்ல” என்ற பதில் உங்களிடம் இல்லையென்றால் வெட்கி தலை குனிந்து, மதிகெட்டு வைத்த உங்கள் பொருந்தா தலைப்பை, உங்கள் பதிவுக்கேற்றபடி மாற்ற வேண்டியதுதானே?
திரு.வினவு…உங்களின் பிழைப்பு வாதம் அப்பட்டமாய் வெளியில் வந்து விட்டது. வன்முறையையும் ஆபாசத்தையும் விட்டால் எப்படி ஒரு நாலாந்தர மசாலா பட இயக்குனருக்கு பிழைப்பு நடத்த முடியாதோ, அதேபோல், ‘பார்ப்பனீயம்’, ‘கம்யூனிசம்’ இவை இரண்டும் இல்லையென்றால் வினவின் பிழைப்பு அதோகதி…!
இனி, இது போன்ற ‘பிழைப்பு வாதப்பதிவுகள்’ தான் வினவில் நீக்கமற எங்கும் வியாபித்து தொடரும். மேலும், வினவில்…கூடிய சீக்கிரம் சனிக்கிழமை கவிதைகளிலும் இதுபோல் அதிரதி மசாலா குப்பைகளே வழிந்தோடும். அல்லது அவை தொலைக்கப்பட்டுவிடும். என்ன செய்ய..! அவைக்கு பத்து பின்நூட்ட்டங்கள் கூட ‘வினவு தோழர்களிடமிருந்து’ வருவதில்லையே…!
////
பார்பனியத்திடம் சரண்டைந்த இசுலாமிற்காக வேலைவெட்டியில்லாமல் விவாதம் செய்யும் சுயமோகம்மதே! மேலே இசுலாமே ஏற்றத்தாழ்வானது மட்டுமல்ல அதுதான் சரியானது என்று உம்மைவிட மதவெறி அதிகம்பிடித்தவர்கள் எழுதி உங்க முகத்தில் கரியை பூசியதற்கு என்ன பதில்? என்ன பதில்? என்ன பதில்?
பொய்மையின் இருளை ஊருக்கு உபதேசம் செய்யும் கய்மோகமதே, இசுலாத்தில் சாதி பார்க்கப்படுவதை பற்றிய இந்த கட்டுரையின் உள்ளடக்கத்தை பற்றி இப்புட்டு நாளும் ஊமையாய் இருப்பது கேவலம். மற்றும் மோசடி என்கிறேன் நான்..அதற்கு என்ன பதில்? என்ன பதில்? என்ன பதில்?
காமடி பாய் நெத்தியடி அண்ணாச்சி லூசு கணக்கா உளறுத பேச்சை விடாம சிங்கம் சிங்கிளாத்தான் வருங்குத கணக்கா தம்பி கேள்விக்குறி தன்னந்தனியா கேட்டு மடக்கி போராடுத்துக்கு ஒரு உம்மா. சூப்பர் ஸ்டாரு கேள்விக்குறி தம்பிக்கு இந்த காளமேளம் ரசிகன்னு வச்சுக்கிட்டாலும் தப்பில்லையிலா!
November 18, 2009 at 12:18 am
நெத்தியடி முஹம்மத்
///நான், என் குடும்பம், என் தெரு, என் ஊர், என் மாநில முஸ்லிம் மக்களிடம் அவர்களின் முந்தய சமய சாதி நிலை, முஸ்லிம்களான பின்-தூய இஸ்லாமை குரானிலிருந்தும், நபி வழிலிருந்தும் பெற்ற பின் – திடீரென்று மறைந்தது எவ்வாறு? நடைமுறையில் நீங்களே பார்க்கிறீர்களே? இஸ்லாமை சரியாக பின்பற்றும் உண்மை முஸ்லிம்கள் சாதியை மறந்தது எவ்வாறு?///
உண்மையான முஸ்லீம்கள் ஜாதியை மறக்கவேண்டும் என்று யார் கேட்டார்கள்? நபிகள் நாயகத்தின்(ஸல்) அறிவுரையா அது? எந்த இடத்தில கேட்டுள்ளார்?
///முஹம்மது முதலியார்(?), அஹ்மது தலித்(?), சேக் தாவூது செட்டியார்(?), அப்துல்காதர் அய்யர்(?), நவுஷாத் அலி நாடார்(?), தவஃபீக் தேவர்(?), எல்லாரும் முஸ்லிம்களாய் ஆன பின்னர் அவர்களின் அடைமொழி காணாமல் போனது மட்டுமின்றி ரத்தத்தில் ஊறிப்போன தன் சாதியை – அந்த சாதி வெறியை, தன் மூளையிலிருந்து மறந்தது எவ்வாறு? இதற்கு எந்த சித்தாந்தம் காரணம்? யார்/எது அவர்களை தங்கள் சாதியை மறக்க வைத்தது? இங்குள்ள முஸ்லிம்கள் யாரும் செவ்வாய் கிரகணத்திளிருந்து குதிக்க வில்லை. எனக்கு இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்! முடியாவிட்டால், இப்பதிவின் தலைப்பை மாற்றுங்கள். இதுதான் ஒரு நேர்மையாளனுக்கு அழகு.////
நாசுவன் ஜாதியினர் தனியாத்தான் இருக்கிறார்கள். பக்கீர்ஷா ஜாதியினர் தனியாகத்தான் இருக்கிறார்கள். இதே போலத்தான் வடக்கிலும் பாகிஸ்தானிலும் தனித்தனியான ஜாதியினராகத்தான் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். அங்கும் தலித் முஸ்லீமை ரானாக்கள் திருமணம் செய்வதில்லை.
////நடைமுறையில் கண்கூடாக நம் ஊரிலேயே நமக்கு மத்தியில் நம்மிடம் மண்டிக்கிடந்த சாதிப்பேயை நாம் முஸ்லிம்கள் ஆன பிறகு நம்மிடமிருந்து நம் பெயரில் மட்டுமின்றி ஆழ் மனத்திலிருந்து ஓட்டியது எந்த மாந்திரீகம்? பதில் அளிக்க என்ன தயக்கம்? இதற்கு யாலாம் காரணமில்லையா?////
ஓட்டவில்லை. ஓட்டவும் தேவையில்லை. அது என்ன பேயா ஓடுவதற்கு? நபிகள் நாயகமே தனது குறைஷி பிரிவின் மீது பரிவுடனும் பாசத்துடனும் இருந்து நல்வழி காட்டியிருக்கும்போது நாம் ஏன் அதனை பேய் போல கருதி ஒதுங்க வேண்டும்?
////இங்கிருக்கும் முஸ்லீம்களாகிய நாங்கள் யாவரும் அரபு முஸ்லிம்கள் கிடையாது . ஆறேழு தலை முறைக்கும் முன்னர் எங்கள் முன்னோர்களும் இந்து மதத்தில் கீழ் ஜாதியோ மேல் ஜாதியோ எதாவது ஒரு ஜாதியில் இருந்தவரே. ஆனால் இப்போது எங்களிடம் கேட்டால் எங்கள் பூர்வீக ஜாதி என்னவென்று யாருக்கும் சொல்ல தெரியாது. இதுதான் இசுலாத்தின் வெற்றி . இதுதான் இசுலாத்தின் வெற்றி. நீங்கள் தலைப்பில் சொல்லியது செய்தி உண்மை இல்லை என்பதற்கு இதுவே சாட்சி. இதுவே சாட்சி. உங்கள தலைப்பு அடிப்படையிலேயே தவறு என்பதை உணர்ந்து ஒத்துகொள்ளுங்கள்.தலைப்பை மாற்றுங்கள்.////
///
நாங்கள் (மரைக்காயர், ராவுத்தர்) ஆகியோர் அரபுகளே. இங்கு பெண்ணெடுத்திருந்தாலும் நாங்கள் அரபுகளே.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே குறைஷி பிரிவினர் இஸ்லாமை தழுவாதவர்கள் பலராகவும் தழுவியர்கள் பலராகவும் இருந்தார்கள். இஸ்லாத்துக்குள் வந்ததும் இங்கே குறைஷி கிடையாது, அன்சாரி கிடையாது. எல்லோரும் முஸ்லீம்கள் என்று கூறிவிடவில்லை. குறைஷிகள் இன்றும் இருக்கிறார்கள். அன்சாரிகள் இன்றும் இருக்கிறார்கள். இஸ்லாம் அவர்களுடைய ஜாதிகளை அழித்துவிட்டதா? பனு குறைஷி, பானு தைம், பானு ஹனிபா ஆகிய பிரிவுகள் இன்றும் இருக்கின்றன என்னும் போது முதலியார்களும் நாயுடுகளும் ஏன் இஸ்லாத்துக்குள் வந்ததும் தங்களுடைய பட்டப்பெயர்களை ஜாதிப்பெயர்களை இழக்கவேண்டும். இஸ்லாம் எங்கள் மதம், இது எங்கள் ஜாதி, இது எங்கள் மொழி என்று இருக்கலாமே. அது போலத்தான் அரபியர்களும், துருக்கியர்களும், பெர்ஷியர்களும் இருக்கிறார்கள். ஏன் இந்தியர்கள் மட்டும் ஜாதியை இழக்கப்போகிறார்கள்?. அப்படி இஸ்லாம் கேட்கவும் இல்லை.
நீங்களாக இஸ்லாத்தில் இல்லாத ஒரு புதிய நடைமுறையை கண்டுபிடிக்காதீர்கள்.
ஜாதிமுறை இஸ்லாமுக்கு எதிரி அல்ல. இஸ்லாத்தில் உலகெங்கும் ஜாதிகளும் கிளான்களும் குலங்களும் கோத்திரங்களும் இருக்கும்போது இந்தியாவில் மட்டும் இஸ்லாத்தால் ஜாதி போய்விடும் என்று நீங்கள் இஸ்லாத்தின் பெயரில் பேசலாம்?
Oh, My dear poor sunnipath, your path is opposite and put same side goal and defeated vinavu team and kicked your vinavu team out of the contest. Thanks. I know vinavu and co. did not read the article before copy/paste for their already decided cum fixed title. In their path, sunnipath also did not read. Go, again read the artlce …just don’t turn after reading the title and write comments. Just see these from article itself are against your comments and by the way against vinavu’s title. //// பதிப்புரை
:
இ ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.////
////சாதிய அமைப்பை இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரீஅத் இன் ஓர் அங்கம் எனத் தவறாகக் கருதும் பெரும்பாலான இந்திய உலேமாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை முற்றிலும் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் இந்த மௌலவிகள் இஸ்லாத்துக்கு எவ்வளவு பெரிய இழுக்கைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை உணர்ந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்////
///இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிக்கு மதரீதியில் எப்போதுமே இசைவாணை கிடையாது////
///இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிக்கு மதரீதியில் எப்போதுமே இசைவாணை கிடையாது////
Oh, my dear pitiable sunnipath, what is my question? how irrelevent your answer is ! Ok..! Now just say TRUE or FALSE…!
In our Tamil nadu, the hindus who embraced islam and rightly understood the islam and forgot their (nearly one crore) caste ONE AND ONLY BECAUSE OF ISLAM…ISLAM…ISLAM.
Very very simplified for your brain and undersanding. Just say true or false. Don’t go away from the question and answer. Just say only one word. True/False. If you said “false”, give the reason for them how our own tamil muslims forget their caste..!
அய்யா பார்ப்பனியத்திடம் சரண்டைந்த இசுலாமிற்கு வக்காலத்து வாங்கும் ‘உண்மையான’ இசுலாமியர்களே…. நாங்க 100% அக்மார்க் கம்யூனிஸ்டுங்கதான் அதனாலதான் கம்யூனிச திரிபுகளை, போலிகளை எதிர்த்து வருசக்கணக்கா போராடிக்கிட்டிருக்கோம். ஆனா பார்ப்பனியத்திடம் சரண்டைந்த இசுலாமிற்கு வக்காலத்து வாங்கும் ‘உண்மையான’ இசுலாமியர்களான நீங்கள் எங்களை திட்டுவதில் செலுத்தும் முயற்சியில் 10% ஆவது இசுலாத்தில் சாதி பார்பவரை எதிரத்து போராடுவதில் செலுத்தலாமே…ஆனா அப்ப மட்டும் ஜவுண்டு ஆஃப் ஆகி விடுவது ஏன்????????????????????????????????????????????????????????????????????????????????????????
பிள்ளைங்க படிக்குற புஸ்தகத்துல கூட வருசா வருசம் சிலபஸ் மாத்தராங்க,,,மாத்லேன்னா ஸ்கூலுல போயி சண்ட போடுறீங்க… ஆனா வாழ்க்கை பிரச்சனைக்கு மட்டும் 1500 வருச பழை புக்க தூசி தட்டி ரெபரன்ஸ் பாக்குறீங்களே.. உங்களையெல்லாம் என்னத்த சொல்ல
நெத்தியடி முஹம்மது,“பின்னாளில் விபச்சாரம் பெருகும்” என்ற முன்னறிவிப்பு ஹதீஸ்க்கு, எல்லாரும் விபச்சாரம் பண்ணவேண்டும் (அஸ்தஃபிருல்லாஹி ) என்று புரிந்து கொள்வீர்களா? அதிலென்ன சந்தேகம் விபச்சாரம் பெருகினால்தானே நபியின் வார்த்தை உண்மையானதாகும்.
Yes, it is growing. Can you say ‘NO’? Compare, prostitution in the world of hijri-8 and the same world of hijri 1430.
You have to understand, this is to warn the muslims about the danger and not to fall in the evil (prostitution) even though it is being found common everywhere with free and fair.
கொய்யா சுயமோகமது, சத்தியமா எனக்கு அறிவு கிடையாது. உங்களைப்போன்ற அதி மோதாவிகளிடம் பேசிப் ்பேசி தேய்ந்து காணாமல் போய் விட்டது. தேடச்சொல்லி பி2 போலீசுடேசனில் பிராது கொடுத்திருக்கிறேன்
இந்த நெத்தியடி முஹம்மத் உண்மையிலேயே ஒரு முசுலிமா??????? இவர் ஒரு ஆர்எஸ்எஸ் அம்பியோ என எனக்கு வலுவான சந்தேகம்…
ஏனென்றால் இங்கே வந்து,,,, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் முதல் எதிரியாக கருதும் ம.க,.இ.கவினரை ஆர்.எஸ்.எஸ் என்று பிதற்றுபவர்……
வினவு ஆர்.எஸ்.எஸ் வலது சாரி பாசிசத்தை பற்றி எழுதினால் பீஸ் போன பல்பு கணக்காய் சைலான்டாய் கிடக்கிறார்.
ஈழத்தை பற்றி எதாவது எழுதினால் வாயே திறப்பதில்லை
பார்ப்பனிய சாதியை பற்றி எழுதினால் அம்பிகளுடன் சேர்ந்து பல பெயர்களில் வந்து வினவை பிறான்டுகிறார்
தமிழ்மணம் இந்து மதவெறி பாசிஸ்டுகளை தனிக்கை செய்ததை பாராட்டி எழுதினால் அதை வந்து விமரிசனம் செய்கிறார்.
இல்லை…தான் ஒரு ISO-2001 முசுலீம்தான், வினவு ம.க.இ.க RSS தான் என்றால் இவர் இசுலாத்துக்காகவும், முசுலீம்களுக்காகவும் என்ன புடுங்கியிருக்கிறார் என்பதை இவரே எழுதட்டும்…. அதை வைத்து மதிப்பீடு செய்யலாம்
தம்பி கேள்விக்குறி,
சூப்பர் ஸ்டாரு மாரி திடீர் திடீரின்னு வாரியே அது என்ன கணக்கு? ஆனாப்பாரு லேட்டா வந்தியின்னாலும் லேட்டஸ்ட்டா வந்து நெத்தியடிய கும்மு கும்முன்னு கும்முத. நெத்தியடி ஒரு பாய்தான். என்ன கொஞ்சம் விவரமான பாய்னு அவரே அவருட்ட சொல்லி நினைச்சுக்குதாரு. அங்கதான் பிரச்சினையே, அவர் ஒரு காமடி பாய்னு அவருக்கே வெளங்கலையே என்ன செய்ய மக்கா?
ஈழத்தைப் பற்றி என்ன எழுதிவிட்டீர்கள். அவர்கள் கொடுமை எப்படி என்று எழுதிவிடுவதினாலேயே, நீங்கள் ஈழத்தை ஆதரித்து எழுதியதாக சொல்லிக்கொள்ள முடியுமா.
ஈழத்துக்கு எதிராக நிரைய புத்தகங்களைப் போட்டுவிட்டு இப்பொழுது ஏதோ ஈழத்துக்கு ஆதரவாக போரடியதுபோல் சொல்கிறீர்கள். இதில் எவனும் வாயை திறந்து சொல்லமாட்டான். கருணாநிதிபோல் ஈழப்பிணத்தின் கொடுமைப் பற்றிமட்டுமே எழுதுவீர்கள். மற்றபடி ஈழத்தை ஆதரித்தெல்லாம் எழுதவில்லை. விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் எந்தமனிதனும் உன்னுடைய கட்டுரைக்கும், இதுவரையில் பதிப்பித்த புத்தகத்திற்கும் வாய்திறக்கமாட்டார்கள். வாய்க்கரிசி நீங்களே போட்டுக்கொண்டு பிறகு உங்களுக்கு உயிர்கொடுக்க பாசிஸ்டுகள் கூட வரமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் வேலையை நீங்களே செய்துகொடுக்கிறீர்களே.
இப்படி பேசினால் எங்கள் இணையதளத்தில் ஈழத்தைபற்றி எழுதுகிறோம் என்று தெரியவில்லையா என்பீர்கள். அதில் வருவதை எல்லாம் நீங்கள் எழுதியது என்றும் அதில் வரும் அனைத்து கருத்தும் விமர்சனக்கருத்து உட்பட உங்கள் கருத்து என்றும் உங்களால் உறுதியளிக்க முடியுமா.
புலிகேசியின் அவதூறுகளில் முக்கியமானவை….
1) அவர்கள் கொடுமை எப்படி என்று எழுதிவிடுவதினாலேயே, நீங்கள் ஈழத்தை ஆதரித்து எழுதியதாக சொல்லிக்கொள்ள முடியுமா.
2) ஈழத்துக்கு எதிராக நிரைய புத்தகங்களைப் போட்டுவிட்டு
3) கருணாநிதிபோல் ஈழப்பிணத்தின் கொடுமைப் பற்றிமட்டுமே எழுதுவீர்கள் மற்றபடி ஈழத்தை ஆதரித்தெல்லாம் எழுதவில்லை
4) விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் எந்தமனிதனும் உன்னுடைய கட்டுரைக்கும், இதுவரையில் பதிப்பித்த புத்தகத்திற்கும் வாய்திறக்கமாட்டார்கள்.
இதில் ஒன்றைக்கூட அவரால் நிரூபிக்க முடியாது என்று சவால் விடுகிறேன். இதோ இருக்கிறது ஈழ கட்டுரைகளின் சுட்டி https://www.vinavu.com/category/politics/eelam-politics/ அவருடைய அவதூறுகளுக்கு ஆதாரம் தரும் கட்டுரைகளின் பட்யலை வாசகர் பார்வைக்காக வைக்கட்டும்.
????….
நீங்கள் கேள்வி என்ன என்று புரிந்துகொண்டீர்களா இல்லையா?
நீங்கள் தனி ஈழத்தை ஆதரிக்கிறீர்களா இல்லையா கூறுங்கள்?
தனி ஈழத்திற்கான போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா இல்லையா?
நீங்கள் கொடுத்த
https://www.vinavu.com/category/politics/eelam-politics/
எந்த இடத்திலேயும் நாங்கள் தனி ஈழத்தை ஆதரிக்கிறோம் என்றோ அல்லது அந்தப் போரட்டத்தையும் ஆதரிக்கிறோம் என்றோ கூறவில்லை.
ஒரு வேளை என் கண் தேடியும், படித்தும் நான் அந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதாக நினைத்து எனக்கு அந்த கட்டுரையின் தலைப்பினையும் அந்த இடத்தின் வரியினையும் குறிப்பிடுங்கள்.
அப்படி இருப்பின் நானே வினவு மீது வைத்த குற்றச்சாட்டினை திரும்பப் பெறுகிறேன்.
சுத்தி வளைத்து வரும் குழப்பமான வார்த்தை உபயோகங்களை தவிர்க்கவும்.
ராஜபக்சேவை எதிர்ப்பது என்பது அவனுடைய பாசிச நடவடிக்கைக்கு எதிர்க்கலாம். ஏன் அவன் சொந்த மக்களையே நசுக்கிக் கொண்டிருக்கிறான். ஆகையால் தமிழர்களையும் பாகுபாடு பார்த்து பிரித்து நசுக்குகிறான். அவனுடைய பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்பதாலேயே நீங்கள் ஈழத்தை ஆதரிப்பதாக பொருள் இல்லை. உண்மையிலேயே நாங்கள் ஈழத்தை ஆதரிக்கிறோம். தனி ஈழம் எங்களுக்கு ஏற்புடையது என்று இப்பொழுது வைத்தால் கூட எங்களுக்கு மகிழ்ச்சியே.
இங்கு சாதி ஒடுக்குமுறை இருக்கிறது. சாதி பார்த்து ஒடுக்குகிறார்கள். மத ஒடுக்குமுறை பாசிச நடவடிக்கை இருக்கிறது, குஜராத் போல். அங்கெல்லாம் எல்லா ஜனநாயகம் கொண்ட மக்கள் அதை எதிர்த்து போராடுகிறார்கள். அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். ஆனால் அங்கெல்லாம் நாங்கள் அதற்கான தனி அடையாளம் வைத்து தனி ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று போராடுபவர்களை நீங்கள் ஆதரிப்பதாக பொருள் இல்லை. இந்த விளக்கம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் நிலையை தெளிவுபடுத்துக.
உண்மையிலேயே தவறாக நான் குற்றச்சாட்டு வைத்திருந்தால் நான் திரும்பப் பெற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும். இல்லையென்றால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டதாக பொருள்படும்.
புலிகேசி ஆதரமில்லாமல் நீங்கள் கூறிய அவதூறுகளை கூறியுள்ளேன், அறிவு நாணயம் துளியளவாவது இருந்தால் அவைகளை நீருபியுங்கள்.
//ஆதரமில்லாமல் நீங்கள் கூறிய அவதூறுகளை கூறியுள்ளேன், அறிவு நாணயம் துளியளவாவது இருந்தால் அவைகளை நீருபியுங்கள்.//
உங்களுக்கு மட்டுமே புரிந்த தேவ பாஷை.
எதை நிரூபிக்க சொல்கிறீர்கள். இருப்பதை எடுத்துக்காட்டலாம். இல்லாததை எடுத்துக்காட்டச் சொன்னால் எதைக்காட்டுவது.
இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள்தான் காட்டவேண்டும். வீண் வார்த்தைகள் சரியான விசயத்தை அடைய உதவாது.
கட்டுரையை எழுதியது நீங்கள். அதில் இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் கோடிட்டு காட்டுங்கள் என்றுதானே கேட்டேன்? இதில் என்ன அவதூறு இருக்கிறது.
என்னால் அப்படி ஒரு விசயத்தை அந்தக் கட்டுரைகளில் பார்க்கமுடியவில்லை என்று சொல்வது நாணயம் இல்லாதவரா?
சரி நாணயம் இல்லாதவர் என்பதையாவது நீங்கள் லிங்க் வழங்கிய அந்த கட்டுரைகளில் கோடிட்டு காட்டி மற்றவர்களுக்கு என்னைபற்றி புரியவைக்கலாம் இல்லையா? அப்படி என்னையாவது தவறானவன், நாணயமில்லாதவன் என்றாவது நிரூபிக்க எடுத்துக் காண்பிக்கக் கூடாதா?
புலிகேசி, குற்றம் சுமத்தியது நீங்கள், அதை நிரூபிக்கும் கடமை உங்களுடையது. முடியாவிட்டால், ‘முடியவில்லை’ என விவாதத்திலிருந்து ஒதுங்கிவிடுங்கள். அம்பலப்பட்டுபோவது மிச்சமாகும்.
கேள்விக்குறி????????????
//எந்த இடத்திலேயும் நாங்கள் தனி ஈழத்தை ஆதரிக்கிறோம் என்றோ அல்லது அந்தப் போரட்டத்தையும் ஆதரிக்கிறோம் என்றோ கூறவில்லை. //
என்று நான் கூறிய கருத்தை நீங்கள் பதில்லளிக்காததில் இருந்து நிரூபித்துவிட்டேன். நீங்கள் இல்லை என்கிறீர்கள்.
பரவாயில்லை. இப்பொழுது வினவின் கருத்து (ஏனென்றால் அதற்கான லின்ங்தான் அவர் கொடுத்தார்)
அவர்கள் தனி ஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்றும் அதற்காக போரடுபவர்களையும் விமர்சனத்தோடோ அல்லது எந்த நிபந்தனையும் இல்லாமலோ ஆதரிக்கிறார்கள் என்றும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
நன்றி, சரியான முடிவு. வரவேற்கிறோம், எனது மனப் பூர்வமான பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்க வினவின் தனி ஈழத்தை ஆதரிக்கும் நிலைப்பாடு, தொடர்க அதற்காக போராடும் அமைப்புகளை ஆதரிக்கும் நிலைப்பாடு.
புலிகேசி, வினவு ஈழத்திற்கும், ஈழ விடுதலைப்போராட்டத்துக்கும் எதிரானது என்ற ஆதாரம் தரமுடியாத அவதூறுகளை சுமத்திவிட்டு அதை நீருபிக்கமுடியாமல் நீங்கள் திண்டாடுகிறீர்கள். நமக்குள் நடக்கும் கருத்து(?) பரிமாற்றத்தை படிக்கும் யாருக்கும் உங்கள் அரசியல்/விவாத ஓட்டாண்டித்தனம் புலப்பட்டிருக்கும். இனி இதை வைத்துத்தான் நீங்கள் இங்கே மதிப்பிடப்படுவீர்கள். வாழ்த்துக்கள்
This video is for Nethiyadi Mohammad. I want to know how his brain works after seen this video
இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்களின் இறுதிப் பேருரை!
இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள்.
அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து ‘மினா’விற்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம்அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது ‘கஸ்வா’ ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, ‘பத்னுல்வாதி’ எனும் பகுதிக்கு வந்தார்கள்.
அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே “நபியவர்களின் இறுதிப் பேருரை” என்பதாக இன்று அறியப்படுகிறது.
கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது.
எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)
தொடக்க துதி மொழிகள்
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில்
செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.’ மேலும், நான் சாட்சி
சொல்கிறேன்: “நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.’ (ஸுனன் இப்னு மாஜா 1892,1893)
பிரிவின் முன்னறிவிப்பு
ஒஸ மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
ஒஸ மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
பிறர் உடமையைப் பேணுவீர்!
ஒஸ மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.
அராஜகம் செய்யாதீர்கள்!
அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)
உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்.
நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)
பணியாளர்களைப் பேணுவீர்!
ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)
மறுமைக்கு அஞ்சுவீர்!
ஓஸ குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)
அநீதம் அழிப்பீர்!
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன்.
அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
முறைதவறி நடக்காதீர்!
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமி,789)
உரிமைகளை மீறாதீர்!
ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, “உணவையுமா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது’ என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)
ஒஸ மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)
இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)
பெண்களை மதிப்பீர்!
கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள்
அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமி, 7880)
இரண்டைப் பின்பற்றுவீர்!
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)
எச்சரிக்கையாக இருப்பீர்!
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)
தஜ்ஜாலைப் பற்றி:
இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான்.
அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)
இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!
(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து
விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)
அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது.
அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)
சகோதரம் பேணுவீர்!
ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, பிக்ஹுஸ் ஸீரா 456)
சொர்க்கம் செல்ல இதுதான் வழி!
ஒஸ மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)
குற்றவாளியே தண்டிக்கபடுவார்!
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி 2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)
இஸ்லாம் முழுமையாகி விட்டது!
ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)
இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)
பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களை நோக்கி, “மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும்
எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்” என்றார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி “இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!” என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)
இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:”இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)” (அல்குர்அன் 5:3)
(ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)
சகோதரர் அதிரை POST. ஜஸாக்கலாஹ் க்ஹைர். இந்த இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்களின் இறுதிப் பேருரையைத்தான் காபி செய்ய தேடித்தேடி, பின் கிதாபை பார்த்து டைப் செய்து பதியலாம் என்று இருந்தேன். நீங்களே முடித்துவிட்டீர்கள். அல்ஹம்துலில்லாஹ். உங்கள் பனி மகத்தானது, அதிரை POST. அல்லாஹ் உங்கள் மீது பறக்கத் செய்ய பிரார்த்திக்கிறேன். இதில் பலருக்கும், மற்றும் சகோதரர் அப்துல்? (அப்துல்லாஹ்) விற்கு நிறைய பதில்கள் இருக்கின்றன.
நன்றி!
//எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்//
இது ஹதீஸ் ஆதாரம் இல்லாத இடைச்செருகல், பெர்ஷிய ஷியாக்களின் குறும்புத்தனத்தால் செருகப்பட்டது. மேலும் இந்த இறுதிப்பேருரை பல ஹதீஸ்களை இணைத்து செயற்கையாக பெர்ஷியர்களால் உருவாக்கப்பட்டது. இதற்கு அதிகாரம் கிடையாது என்று தெரிவித்துகொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
உலகத்திலுள்ள ஒவ்வொரு முஸ்லீமும், குரேஷிகளுக்காக இறைவனிடம் தொழுகை
செய்யவேண்டும். குரேஷிகளின் நலனுக்காக ஒவ்வொரு முஸ்லீமும் தொழுகையின்போது இந்த குரான் வசனங்களை ஓதவேண்டும்.
இது அல்குரானின் பகுதி
அத்தியாயம் – 106 ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
106:1 குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
106:2 மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
106:3 இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
106:4 அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான் மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
குறேஷிகளின் நலனுக்காக இப்படி தனியாக ஒரு அத்யாயத்தை அல்லாஹ் இறக்கியுள்ளான். இது போல வேறெந்த இனத்துக்காகவும் இறக்கப்பட்டதில்லை. அதிலிருந்தே அவர்களின் மேன்மை தெரியவில்லையா?
இஸ்லாமின் அடிப்படை அரபுகளை நேசிப்பது Hubb al-`Arab min al-iman
பேருரை என்று இங்கு எழுதப்பட்டிருப்பது ஷியாக்களின் வேலையாகும்.
Fiqhul Ibadat, version 1.04 – Hajja Durriah Aitah
PART THREE >> THE BOOK OF PRAYER >> Congregational prayer (JAMA’A) >> Legal status of congregational prayer >> The most rightful person to be imam
the most closely related to the Prophet (P. B. U. H), so a Qurashi, then a Muttalibi, then any Arab, take precedence over others, and the son of a righteous person or scholar takes precedence over others.
O-25.3: The Qualifications of a Caliph
[…]
(e) of the Quraysh tribe (K: because of the (H: well-authenticated (hasan) ) hadith related by Nasa’i.
“The Imams are of the Quraysh.”
a hadith adhered to by the Companions of the Prophet (Allah bless him and give him peace) and those after them, this qualification being obligatory when there is a member of Quraysh available who meets the other conditions) (H: though when there is not, then the next most eligible is a qualified member of the Kinana tribe, then of the Arabs, then of the non-Arabs);”
The Reliance of the Traveller. Version 1.06 – By Ahmad Ibn Naqib Al-Misri
BOOK M: MARRIAGE >> Chapter M-4.0: A Suitable Match (Kafa`a)
M-4.1
1- a non-Arab man for an Arab woman
Sorry.
The Reliance of the Traveller. Version 1.06 – By Ahmad Ibn Naqib Al-Misri
BOOK M: MARRIAGE >> Chapter M-4.0: A Suitable Match (Kafa`a)
M-4.1
1- a non-Arab man for an Arab woman
The above should read
The Reliance of the Traveller. Version 1.06 – By Ahmad Ibn Naqib Al-Misri
BOOK M: MARRIAGE >> Chapter M-4.0: A Suitable Match (Kafa`a)
M-4.1
following are not suitable matches for one another:
1- a non-Arab man for an Arab woman (O: because of the hadith that the Prophet (Allah bless him and give him peace) said,
“Allah has chosen the Arabs above others”)
—
Fiqhul Ibadat, version 1.04 – Hajja Durriah Aitah
PART THREE >> THE BOOK OF PRAYER >> Congregational prayer (JAMA’A) >> THE FRIDAY PRAYER (JUMU’A) >> The conditions for the two khutbas
[…]
8- That the two khutbas be in Arabic, if there is an Arab in the congregation, otherwise, it is valid for it not be in Arabic except the Quran which must be in Arabic. (pa: 238)
One person of the congregation, at least, must learn Arabic, for if not, all are sinful and their Friday prayer is not valid with the ability of one of them to learn.
[…]
“I want them to profess a single creed by which the Arabs will accept them as their leaders (tudina lahum biha) and the non-Arabs will pay them jizya.”
cited from Ibn Hanbal, Musnad, I, 227.-2.
Muhammad, quoted in Tabari:
“I summon them to utter a saying through which the Arabs will submit to them and they will rule over the non-Arabs.”
நபிகளின் இந்த இறுதிப்பேருரையிலிருந்து இசுலாம் அடிமைகளையும், பெண்ண்டிமைத்தனத்தையும் ஏற்றுக்கொள்கிறது என்று நிரூபித்த அதிரை போஸ்ட்டுக்கு நன்றி. அடிமைகளுக்கு உணவு, உடை வழங்குவதைப்போல பாரப்பனியம் சேவை சாதியினருக்கு உணவையும், உடையையும் தானமாக கொடுத்து சுரண்டி வருகிறது. பார்ப்பனியம் பெண்ணை மற்ற ஆண்களுக்கு சொந்தமான பொருளென்றே கருதுகிறது. இப்படி இசுலாத்திற்கும் பார்ப்பனிய்த்திற்கும் உள்ள ஒற்றுமைகளை இந்த இறுதிப் பேருரை அம்பலப்படுத்துகிறது
….இவர்கள் ஆள் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுவதுடன் வரி வசூலிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்….இந்த தூய செயலை செய்பவர்கள் யார்…?
வினவுங்கள் பார்ப்போம்? http://adiraipost.blogspot.com/2009/11/blog-post_3453.html
.ஏற்கனவே ஒரு சில வருடங்களுக்கு முன் வந்து போணியாகாத ஓர் புத்தகத்தை தலைப்பை மாற்றி பரபரப்புக்காக வெளியிடும் வினவின் இந்த வேலை கமலின் பாசிசத்தின் இலக்கியத்தை(உன்னை போல் ஒருவனைத்தான் சொல்றேன் ) விட அயோக்கியத்தனமாக இல்லை.இந்துத்வா சக்திகளை விட மோசமான சக்திகள் இந்த முற்போக்கு வேடமிடும் நக்சல்பாரிகள்.இதை சொல்வதற்கு வேதனையாக இருந்தாலும் இதுதான் உண்மை.ஏற்கனவே தஸ்லிமா அபலையை துரத்தும் இஸ்லாமிய மதவெறி என்ற தலைப்பில் வெளிவந்த இவர்களின் பு ஜ. கட்டுரைக்கு எதிரிடையாக இஸ்லாம் காலவதியா காலத்தின் கட்டாயமா. என்ற என்னுடைய கட்டுரைக்கு இதுவரை பதில் இல்லை.
ஒரு வேலை இவர்கள் விரும்பும் புரட்சிகர நக்சலிச அரசு அமைந்தால் இவர்களின் சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான பாசம் எப்படி இருக்கும் என்பதற்கு இதெல்லாம் எடுதகாட்டுக்கள் அவ்வளவுதான்.
iniavan, நாங்கள் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த இசுலாமியர்களுக்குத்தான் நண்பர்கள். இசுலாமிய மதவெறியர்களுக்குகல்ல. இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கு மீது எங்களுக்கு எந்தளவு ‘பாசம்’ உள்ளதோ அதே அளவுதான் இசுலாமிய மதவெறி பாசிஸ்டுகளின் மீதும் எங்களுக்கு உண்டு என்பதை தெரியப்படுத்துகிறேன்.
உங்களுக்கு கடுகளவுக்காவது நேர்மையிருந்தால்… இந்த கட்டுரையில் உரைக்கப்பட்டுள்ள உண்மைகளை ஏற்று சுயவிமர்சனம் செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் ‘ பார்ப்பனியத்திடம் இசுலாம் சரண்டையவில்லை’ என்பதை நிரூபியுங்கள். அதை வினவு தோழர்கள் ஏற்று தலைப்பை மாற்ற தயங்கமாட்டார்கள்.
வெற்று புலம்பல்கள் நம் அனைவருக்குமே நேரத்தை வீண்டிக்கும்.
சரியாகச்சொன்னீர்கள், இனியவன்.
“இஸ்லாம் காலவதியா காலத்தின் கட்டாயமா” என்ற தங்களின் கட்டுரைக்கு URL கொடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
எதற்கெடுத்தாலும் போலி கம்யுனிஸ்டுகள் என்று மார்க்சிசிஸ்ட் மற்றும் இந்திய கம்யுனிஸ்டுகட்சிகளை பார்த்து கூவிக்கொண்டிருக்கும் நக்சல்பாரிகள் (இவங்க நக்சல்பாரி என்றாலே பல பேர் இங்கே சிரிக்கிறார்கள் )அவர்கள் மார்க்ஸ் மற்றும் லெனினின் கொள்கையை விட்டு விலகி ஓடுவதால் அவ்வாறு கூறுகிறோம் என்பார்கள்.ஆனால் இஸ்லாத்தை பற்றி தெரியாத அல்லது தெரிந்து கொண்டே மாறுபட்ட வேலைகளை செய்த கொண்டிருக்கும் முஸ்லிம்களை போலி முஸ்லிம்கள் அல்லது இஸ்லாமிய விரோதிகள் என்று கூற ஏன் வலிக்கிறது இந்த போலி நக்சல் பாரிகளுக்கு, இவர்களுக்கு இஸ்லாத்தின் மேல் விழுந்து பிராண்ட வேண்டும் அவ்வளவுதான்…….உண்மையிலேயே உங்கள் பக்கம் இஸ்லாம் சாதியை வலியுறுத்துகிறது என்ற ஆதாரங்கள் இருந்தால் வாருங்கள் வினவு குழுவினரே……ஒரு விவாதம் வைப்போம் பார்ப்பனியத்துக்கு அடிபணிந்தது இஸ்லாமா அல்லது பார்பனிய தலைமையில் இயங்கும் நக்சல்பாரிகளா என்று அதில் பேசுவோம்..நாள் நேரம் எங்கு பேசலாம் என்று தொடர்பு கொள்ளுங்கள் தோழர்களே…kanchiiniavan@gmail.com
//உண்மையிலேயே உங்கள் பக்கம் இஸ்லாம் சாதியை வலியுறுத்துகிறது என்ற ஆதாரங்கள் இருந்தால் வாருங்கள் வினவு குழுவினரே//
மறுபடியும் மொதல்ல இருந்தா?
நான் மணி
யார் போலி அல்லது யார் அசல் என்பதல்ல பிரச்சினை. நக்சல்பாரிகளுக்கு யார் நல்ல முசுலீம் யார் போலி முசுலீம் என கணக்கெடுப்பதும் முக்கிய வேலை அல்ல• மாறாக உண்மையான இசுலாமியர்கள் எனத் தங்களை அழைத்துக் கொள்பவர்கள்தான் போலி முசுலீம்கள் என அவர்களால் அழைக்கப்படுபவர்களை அரசு முசுலீம்களாக அங்கீகரிக்க கூடாது எனக் கோர வேண்டும்.
காலாவதியாகிப் போன பிற்போக்கு அம்சங்கள் நிறைந்த இசுலாமை காலத்தின் கட்டாயம் என்று பினாத்துவதற்கு எந்த அம்சங்களை முன்வைத்தீர்கள் எனத் தெரிந்தால் உங்களுக்கு விவாதம் தனியாக நடத்தித்தான் புரிய வைக்க வேண்டும் என்று இல்லை. இந்த தளமே அதிகம்..
அவ்வளவுதான்…….உண்மையிலேயே உங்கள் பக்கம் இஸ்லாம் சாதியை வலியுறுத்துகிறது என்ற ஆதாரங்கள் இருந்தால் வாருங்கள் வினவு குழுவினரே
iniavan உமக்கு என்ன கண் குருடா? மேலே ஒரு இசுலாமிய அறிஞர் அளித்த பேட்டியை மொழி பெயர்திருக்கிறோம். படித்துவிட்டு வாருங்கள். சீனு சொன்னது போல மீண்டும் ஆரம்பத்திலிருந்து வந்தால் கூட நான் தயார்.
// பார்ப்பனியத்துக்கு அடிபணிந்தது இஸ்லாமா அல்லது பார்பனிய தலைமையில் இயங்கும் நக்சல்பாரிகளா //
எருமைக்கு பிறந்தால் எருமை என்பது போல முசுலீம் என்றும் அடையாளத்தை தாங்கிய நீங்கள், உங்களை, தனது சாதி மத அடையாளங்களை துறந்த கம்யூனிஸ்டுளான எங்களுடன் எப்படி ஒப்பிட்டு கொள்கிறீர்கள்?
சாதி்யையும் ஏற்றத்தாழ்வையும் ்கடைபிடிக்கும் மதம் உங்கள் மதம் என்பதை இங்கே ப்லரும் நிரூபித்த பின்னரும் அதை பற்றி விவாதிக்க உங்களுக்கு நேர்மையில்லை.
ஆனால் எங்களுடைய அமைப்பில் சாதியம், ஏற்றத்தாழ்வு ்கடைபிடிக்கப்படுகின்றது என்பதை உங்களால் நி்ரூப்பிக்க முடியுமா. சவால் விடுகிறேன் ஏற்றுக்கொள்ளும் துணிவு உங்களுக்கு உண்டா????
@@@@@@
.நாள் நேரம் எங்கு பேசலாம் என்று தொடர்பு கொள்ளுங்கள் தோழர்களே…kanchiiniavan@gmail.com
@@@@@@@
மேலே வினவு அலைபேசி எண் கொடுத்திருக்கிற்தே உமக்கு மயிறளவுக்காவது துணிவிருந்தால் நேர்மையி்ருந்தால் ஃபோன் செய்யுங்கள் பார்ப்போம்.
இங்கே இத்தனை பேர் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லை, இவருடன் மீட்டிங் வச்சு பேசனுமாம்.
///////////////////பதிப்புரை-
இஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது./////////////////////
உங்கள் பதிப்புரையின் ஆரம்ப வரிகளே உங்கள் தலைப்புக்கும் உள்ளே உள்ள விசயங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறவில்லை.இந்த கட்டுரையின் தலைப்பை உங்கள் ஆரம்ப வரிகளே மறுக்க வில்லையா.பார்பநியதிடம் சரணடைந்த முஸ்லிம்கள் என்று எழுதி இருந்தால் அப்படி உண்மையிலே சரணடைந்து இருக்கும் ஒரு சிலரை அம்பலப்படுத்த நாங்களும் உங்கள் பின் நின்று இருப்போம்.ஆனால் இஸ்லாத்தை வேண்டும் என்றே இழிவு படுத்த துடிக்கும் போக்கே உங்கள் தலைப்பில் தெரிகிறது.அப்புறம் விவாதத்திற்கு நான் தயார்.ஆனால் நான் இந்த தலைப்பை இட்ட வினவு மற்றும் மகஇக தோழர்களிடம் மட்டும்தான் பேச முடியும்.நடுவில் வந்து சிந்து பாடுபவர்களிடம் பேச முடியாது…நான் வினவிடம் கேட்கும் கேள்வி இதுதான்.உண்மையில் உள்ளத்தில் தெளிவும் உண்மையும் இருந்தால் பதில் சொல்லட்டும் வினவு குழுவினர்.. .1.
இரண்டு வருடங்களுக்கு முன்னே வந்த ஒரு சிறு கட்டுரை தொகுப்பின் தலைப்பை மாற்றி வெளியிட என்ன காரணம்..2.
உண்மையில் இஸ்லாத்தில் சாதிகள் உள்ளதா என்று தமிழகத்தின் முஸ்லிம்களின் நிலைமை அறிந்த உங்களுக்கு தெரியாதா..அப்படி இஸ்லாத்தில் சாதிகள் உண்டு என்று நீங்கள் கருதினால் இல்லை.நீங்களே ஆதாரப்பூர்வமாக ஒரு கட்டுரையை எழுதி இருக்கலாம்..(ஆட்டோ அனுப்பி அடிக்கும் அளவுக்கு நாங்கள் கோழைகள் அல்ல).கருத்து முரண்பாடுகளை வரவேற்கிறோம்.உங்கள் கருத்துக்கு நாங்கள் பதிலளிக்க தயார். பாலாஹியின் பின்னே நீங்கள் ஒளிய வேண்டிய அவசியம் என்ன…..
ம க இக விற்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கும் அவ்வளவு மோதலா இருக்கிறது தமிழகத்தில்.எங்களை பொறுத்தவரை உங்களை நட்பு சக்தியாகத்தான் இதுவரை நினைத்து வருகிறோம்..என்னுடைய கடைசி வேண்டுகோள்.இந்த கட்டுரையின் தலைப்பை குறைந்தபட்சம் இஸ்லாம் என்பதை விடுத்தது முஸ்லிம் என்ற பதத்தை சேர்த்தால் உண்மையில் நீங்கள் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்வோம்.இல்லை என்றால் நக்சல் முகமூடிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய விரோத சக்திகளை அடையாளம் கண்டு கொண்டோம் என்று மகிழ்வோம்.இதற்க்கு மேல் இந்த தலைப்பு தொடர்பாக நான் எதுவும் பேச விரும்பவில்லை……
இதையும் பார்க்கலாம் :
http://www.swaminomics.org/articles/20091108.htm
Anjumans deprive Muslim women of microcredit
இந்தியாவில் இஸ்லாத்தில் சாதி இருக்கிறது என சொல்வதே தப்பாக இருக்கும் காலகட்டத்தில் இஸ்லாத்தி மனுவாதிகள் எனும் புத்தகம் மிக சரியானது
உலக அமைதி இஸ்லாத்தினூடாக
இறைவனின் திருப்பெயரால்…..
உலக அமைதியை விரும்பும்
அனைத்து நல்லுங்களுக்கும்
இக்கட்டுரை சமர்ப்பணம்….
முன்னுரை:-
உலகெங்கிலும் அமைதியின்மையும் கவலையும் நிறைந்த காலகட்டம் இது. அமைதி என்பது கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிற காலம் இது. மனிதர்கள் அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உலக அமைதிக்குச் சரியான வழி எது என்பதை இத்தருணத்தில் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அமைதியின்மைக்குக் காரணங்கள்:-
உலக அமைதிக்குச் சரியான வழி எது என்பதைப் பற்றி சிந்திப்பதற்கு முன்னால் உலக அமைதியின்மைக்குக் காரணங்கள் எவை என்பதைப் பற்றி இத்தருணத்தில் அறிந்து கொள்ளலாம். மனிதனுடைய பேராசை, குடும்பப் பிரச்சனை, பொது வாழ்வியல் பிரச்சனை, அரசியல் பிரச்சனை, தேசப்பிரிவினைகள், மொழிப் பிரச்சனைகள், மனிதர்களிடையே இருக்கும் ஏற்றத் தாழ்வுகள், வழிப்பறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் திருடுதல் இவைதாம் இன்றைய உலக அமைதிக்குப் பிரதானமாக அறியப்படும் காரணிகளாகும். இவற்றிலிருந்து விலகி உலக அமைதி பெற என்னதான் தீர்வு என்பதைப் பற்றி கீழே நாம் விரிவாக காணலாம்.
உலக அமைதிக்குச் சரியான வழி:-
இன்றைய உலக அமைதிக்கு நிரந்தரமான தீர்வு இஸ்லாம் ஒன்றே என்று நம்மால் உரத்துச் சொல்ல முடியும். ஆம்! இந்த இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனுடைய கட்டளையின் வாயிலாகவும் உலகத் தூதர் முகம்து நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் மூலமாகவும் நடைமுறைப்படுத்தி அதை நிரூபித்தும் காட்டிய மார்க்கமாகும். உலகத்திலுள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்ட மார்க்கம் இஸ்லாம் என்ற சொல்லிலே முழு உலக அமைதியும் அடங்கி விடும். இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு சாந்தி, சமாதானம், மற்றொன்று ஒரே இறைவனுக்கு மட்டுமே கீழ்படிதல் என்பது ஆகும். எவ்வாறு அது உலக அமைதிக்குத் தீர்வு வழங்கியது என்பதை நாம் இனிமேல் காணலாம்.
மனிதர்களிடயே உள்ள ஏற்றத்தாழ்வுகள்:-
மனிதர்கள் தமக்குத் தாமே சில ஏற்றத் தாழ்வுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். தான் பிறப்பால் உயர்ந்தவன் என்றும் இனத்தால், நிறத்தால், மொழியால், தேசத்தால் மற்றும் இன்னும் பல காரணங்களால் தன்னை உயர்ந்தவன் என்றும் கூறிக் கொள்கிறான். இதற்காக பல உலக மாநாடுகள் நடத்தியும் இன்றுவரை தீர்வு காண முடியவில்லை. சட்டங்கள் இயற்றப்பட்டு அது இன்றும்கூட ஏட்டு அளவிலே உள்ளது. அமெரிக்காவின் பொதுத் தேர்தலில் போட்டிட்ட பராக் ஒபாமாவைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. கொலை முயற்சிக்கான காரணம் அவர் ஒரு கறுப்பு இனத்தவர் என்று கூறப்பட்டது. இன்றும் அந்தந்த மொழியைச் சேர்ந்தவன் தன்னுடைய மொழிதான் சிறந்தது என்றும் தேசத்தில் எங்கள் மொழிதான் சிறந்தது என்றும் கூறிக் கொள்கிறான். நமது இந்தியாவின் மும்பையில் அந்நிய மாநிலத்தவர்கள் நுழையக் கூடாது என்ற கோஷத்தை இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இதற்கும் மொழி வெறியே காரணமாகும். இதற்கான தீர்வை ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் உலகுக்கு எடுத்துக் கூறியது.
“மனிதர்களே நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகிக்கொள்ளும் பொருட்டு உங்களைச் சமுகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில் அல்லாஹ்விடம் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான்” – அல்குர்ஆன் 49:13
ஆம்! இந்த ஒரு வாசகமே போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த ஒரு வசனத்தின் கூற்றைப் பின்பற்றினாலே போதும், உலக அமைதி பெறுவது சாத்தியமாகும். மேலும் இன்று உலகில் மொழி வெறி ஆதிக்கத்தைப் போன்று அன்றைய அரபிகளிடத்திலிருந்த மொழி வெறிக்கும் முகமது நபி (ஸல்) அவர்கள் சம்மட்டியடித்தது போன்று பின்வரும் வாசகத்தை உலகுக்குக் கூறினார்கள்.
“கறுப்பனை விட வெள்ளையன் சிறந்தவனில்லை. வெள்ளையனை விடக் கறுப்பன் சிறந்தவனில்லை. அரபியை விட அரபியல்லாதவன் சிறந்தவனில்லை. அரபியல்லாதவனை விட அரபியன் சிறந்தவன் இல்லை”. (ஆதாரம் நூல் – அஹ்மத்)
இதைக் குறியதோடு மட்டுமில்லாமல் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தியும் காட்டினார்கள். ஆம்! குறைஷி குலத்தைச் சேர்ந்த அபூபக்கரும் பாரசீக(ஈரான்) நாட்டைச் சேர்ந்த ஸல்மான் பார்ஸியும் ரோம்(இத்தாலி) தேசத்தைச் சேர்ந்த ஸுஹைப் அவர்களும் நீக்ரோ இனத்தைச் சேர்ந்த பிலால் அவர்களும் ஒரே அணியில் தோள் சேர்ந்து நின்றார்கள்.
அதை இன்றும்கூட முஸ்லிம்கள் கடைபிடித்து வருவதை இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜின் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் உலக அமைதிக்கான தீர்வை நாம் காணலாம்.
மனிதர்களிடையே இருக்க வேண்டிய வேறுபாடுகள்:-
உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களிடத்திலும் தவிர்க்க முடியாத சில வேறுபாடுகளை நாம் காணலாம். அந்த வேறுபாடுகள் அவசியம் இருக்க வேண்டிய வேறுபாடுகளாகும். மனிதன் கல்வியின் மூலம் படித்து உயர்ந்தவனாகிறான். மனிதன் உழைத்து உழைத்து முன்னேற்றம் அடைகிறான். இப்படியாக மனிதர்கள் தாங்களாகவே தன்னை உயர்த்திக் கொள்கின்றனர்; கல்வியால், செல்வத்தால் வேறுபாடுகளுடன் திகழ்கிறார்கள். இந்த வேறுபாடுகளை இஸ்லாமும் அவசியம் இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது.
“நபியே! கல்வி கற்றவனும் கற்காதவனும் சமம் ஆக முடியுமா? உயிருள்ளவனும் உயிரற்றவனும் சமம் ஆக முடியுமா?” – அல்குர்ஆன் 39:9
இன்னும் சில மனிதர்கள் ஆட்சியினாலும் அதிகாரத்தினாலும் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் இந்த வேறூபாடுகளினாலும் சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன. இதனால் ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தனக்குக் கீழ் இருப்பவர்களை நசுக்க ஆரம்பிக்கும்போது அங்கே புரட்சிகள் வெடிக்கின்றன. இதனால் நாட்டில் குழப்பங்கள் உண்டாகின்றன. உதாரணமாக இஸ்ரேல் – பாலஸ்தீனை அபகரிக்கும்போது அங்கே புரட்சிகள் வெடித்துக் கொன்டுதான் இருக்கின்றன. இதற்கான தீர்வையும் நாம் இஸ்லாத்தில் மூலமாகக் காணலாம்.
“நீங்கள் மக்கள் மத்தியில் நீதியுடன் தீர்ப்புடன் வழங்க வேன்டும். இன்னும் நீதியுடன் நடக்க வேன்டும்” – அல்குர்ஆன் 4:58.
இந்த இறைமறையின் கூற்று ஒன்றினை ஆட்சியில் இருக்கிறவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் நடைமுறைப் படுத்தினால் போதும். அமைதியின்மை குறையத் தொடங்கி, அமைதியின்மை என்பதே இல்லாமலாகி விடும். இதையே நெப்போலியன் போனப்பார்ட் என்பவர் அழகாகக் கூறினார்:
“அனைத்து நாடுகளைச் சேர்ந்த கல்வி ஞானமுடைய மனிதர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, திருகுர்ஆன் கூறும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருமித்த அரசாட்சியை நான் உருவாக்கக் கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை. அந்த அடிப்படையில் அமையும் ஆட்சிதான் மனிதர்கள் அனைவருக்கு மகிழ்ச்சியை அளிக்கும்” (- நூல் Christian Cherfils எழுதிய Bonapart at Islam, Pedone Ed Paris, France 1914 – Page 105, 125)
மேலும் பெட்ரெண்ட் ரசல் கூறுகிறார்:-
“இந்தியா முதல் ஸ்பெயின் வரை இஸ்லாத்தின் மிகப் பிரம்மாண்டமான நாகரிகம் செழித்தோங்கியது. அக்காலக்கட்டத்தில்தான் கிறிஸ்தவ உலகம் இழப்புகளைச் சந்தித்தது. ஆனாலும் அந்த இழப்பு இஸ்லாத்தின் மூலம் மனித நாகரிகத்திற்குச் சரிசெய்யப் பட்டது” (- நூல் History of Western Philsophy London, 1948 P-419)
மனிதனால் ஏற்படும் அமைதியின்மைகள்:-
இன்று உலகில் ஒவ்வொரு மனிதனாலும் குற்றங்களும் பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனாலும் அமைதியின்மை ஏற்படுவதைக் காணலாம்.
இன்று தனிமனிதனால் அதிகமாக ஏற்படும் கொலை, கொள்ளை, திருடுதல், கற்பழிப்புப் போன்ற செயல்களாலும் நாட்டில் குழப்பங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இன்று மனிதன் ஒருவன் திருடுகிறான் என்றால் அவனை இன்றைய நமது அரசுகள் மக்களுடைய வரிப்பணத்திலே பாதுகாப்பு அளிப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். இதனால் திருடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் செல்கின்றது.
இதற்கும் இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது! திருடுபவனின் கையை நீங்கள் துண்டிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இது கொடூரமாகத் தோன்றும். ஆனால் ஒருவரைத் தண்டிக்கும்போது மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். தண்டனைகள் கடுமையாக்கப்படும்போது குற்றங்கள் குறைகின்றன. இன்று உலகிலேயே குற்றங்கள் குறைவான நாடு, இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை நடைமுறைப் படுத்தும் சவுதி அரேபியா என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்கடுத்தபடியாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொலை செய்வது என்பது இன்று சர்வ சாதாரணமாகி வருகிறது. ஒன்பது கொலை செய்த ஜெயப்பிரகாஷ் என்பவன்கூட இன்று சர்வசாதாரணமாக வெளியே உலா வருகிறான். கொலைக் குற்றம் புரிவதை இஸ்லாம் பெரும்பாவம் எனக் கூறுகிறது.
“இறைவன் தடுத்துள்ள எந்த உயிரையும் கொலை செய்யாதீர்கள்; நியாயத்தின் அடிப்படையிலன்றி” (அல்குர்ஆன் 17:33)
“உயிர்க்கு உயிர் வாங்குவதில் உங்களுக்குப் பாதுகாப்பு உண்டு” என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாமிய வழியில் பிரச்சினைகள் குறைக்கப்படுவதன் மூலம் அமைதி ஏற்படுகிறது.
விபச்சாரத்தினால் ஏற்படும் அமைதியின்மை:-
மனித குலத்திற்கே இன்று பெரும் தீங்காக விபச்சாரப் பெருக்கம் ஆகி விட்டது. ஆண் தன்னுடைய அற்பமான சுகத்துக்காகத் தகாத உறவில் பிற பெண்களுடன் ஈடுபட்டுவிட்டு, தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளிடத்தில் எயிட்ஸ் எனும் கொடிய நோயை பரப்புவதைக் காணலாம். உலகில் உள்ள மார்க்கங்களில் இஸ்லாத்தைப் போன்று வேறு எந்த மதமும் விபச்சாரத்திற்குக் கடுமையான தண்டனையை விதிக்கவில்லை.
“விபச்சாரம் செய்யும் பெண்ணையும் விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேன்டாம். அவ்விருவர் தண்டிக்கப்படுவதை நம்பிக்கைக் கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொள்ளட்டும்” (அல்குர்ஆன் 24:2)
“மேலும் நீங்கள் விபச்சாரத்தின் அருகில்கூட நெருங்க வேன்டாம்” என்று அல்குர்ஆன் (17:33) கட்டளையிடுகிறது. “விபச்சாரத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?” என்று ஒருகாலத்தில் கேட்டவர்கள்கூட, “இதுதான் சரியான தீர்வு” என்று இப்போது கூறுமளவுக்கு வந்து விட்டார்கள். நம்முடைய முன்னாள் உள்துறை அமைச்சர் அத்வானிகூட ஒருமுறை, “விபச்சாரத்திற்கு மரண தண்டனையே சரியான தீர்வு” என்று கூறினார். மேலும் நமது நாட்டில் பதினைந்து வயதுக்கு உட்பட்ட 70,000 குழந்தைகள் ஹெச்.ஐ.வி எனும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதாவது எய்ட்ஸ் எனும் கொடிய நோய்க்கு ஆளாகியுள்ளார்கள். என்பதை நமது மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த 25.08.2007 அன்று இதை ராஜ்யசபாவில் அறிவித்தார். இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள சிறு குழந்தைகள் இன்றைக்கு எய்ட்ஸுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் வேதனை என்னவெனில் இந்தத்தீமையின் ஆணிவேர் என்ன என்பதை இந்த உலகம் இன்னும் உணராமல் இருப்பதுதான். மனித குலத்திற்கே பெரிய தீங்கை ஏற்படுத்தும் இந்த விபச்சாரத்தை இஸ்லாமிய சட்டப்படி தண்டித்தால்தான் இந்த உலகம் கொடிய நோயில் இருந்து விடுதலை பெறும்.
உலக அமைதிக்கு நிரந்தரத் தீர்வு:-
நாம் இதுவரை மேலே கண்ட உலகியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, அதை நடைமுறைப்படுத்தி வெற்றிகண்ட மார்க்கம்தான் இயற்கை மார்க்கம். அதாவது இந்த இஸ்லாமிய மார்க்கம் ஆகும். இது மட்டுமில்லாமல் மனிதர்கள் செய்யும் குற்றங்களையெல்லாம் இறைவன் ஒருவன் பார்த்துக் கொன்டிருக்கிறான்; மரணத்திற்குப்பின் மறுமை எனும் நிலையான வாழ்வு உண்டு. அதில் மனிதர்களுக்குக் கேள்வி கணக்கு உண்டு. அவரவர் குற்றங்களுக்கு ஏற்ப நிரந்தர தண்டனையும் உண்டு என்று இஸ்லாம் எச்சரிக்கிறது.
இன்னும், வணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்புகளைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டு, மனிதனின் வாழ்விற்கு இஸ்லாம் நிரந்தர அமைதியை ஏற்படுத்துகிறது. இஸ்லாம் ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் ஒரு வலுவான சக்தி. இந்தப் பிரபஞ்சத்தில் அமைதியை ஏற்படுத்தவே அது அருளப்பட்டது. மனிதகுலம் முழுவதுமே பின்பற்றப்பட வேண்டிய ஓர் அற்புத மார்க்கமே இஸ்லாம். “இது, உலக மக்களுக்கு நல்லுரையன்றி வேறில்லை” (- அல்குர்ஆன் 68:52). உலகம் உண்மையான அமைதியை விரும்புமானால் “உலக அமைதி என்பது இஸ்லாத்தினூடாகத்தான்” என்பதே உண்மை.
ஆக்கம்: முஹம்மது ரஃபீக்
பார்க்க:
http://209.85.229.132/search?q=cache:yPgyD2r7y44J:www.satyamargam.com/component/option,com_rss/feed,RSS2.0/lang,Ta/index.php%3Foption%3Dcom_content%26view%3Darticle%26id%3D1245%26Itemid%3D300189+%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&cd=9&hl=en&ct=clnk&gl=uk
//இந்த இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனுடைய கட்டளையின் வாயிலாகவும் உலகத் தூதர் முகம்து நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் மூலமாகவும் நடைமுறைப்படுத்தி அதை நிரூபித்தும் காட்டிய மார்க்கமாகும்.//
🙂
//ஆம்! இந்த ஒரு வாசகமே போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த ஒரு வசனத்தின் கூற்றைப் பின்பற்றினாலே போதும், உலக அமைதி பெறுவது சாத்தியமாகும்.//
அப்பூ இந்த ‘ஒரு’ வசனத்தை ஆப்கானிலும், பாகிஸ்தானிலும் யாரும் படிக்கவில்லையோ?
//மேலும் இன்று உலகில் மொழி வெறி ஆதிக்கத்தைப் போன்று அன்றைய அரபிகளிடத்திலிருந்த மொழி வெறிக்கும் முகமது நபி (ஸல்) அவர்கள் சம்மட்டியடித்தது போன்று பின்வரும் வாசகத்தை உலகுக்குக் கூறினார்கள்.//
இனிமேல் மசூதிகளில் தமிழில் “அல்லாஹூ அக்பர்” சொல்லுவீங்களா?
இதுக்கு மேல படிக்க முடியல.
////மசூதிகளில் தமிழில் “அல்லாஹூ அக்பர்” சொல்லுவீங்களா?/////-Good argument, Mr.Seenu.
பெரும்பாலான ஆங்கிலம் பேசாத நாடுகளின் ராணுவத்தில் left/right என்றே marching சொல்லப்படுகிறதே. ஏன்?
நம் இந்தியாவில் தேசியகீதம், வங்காள மொழியில் மட்டும் இருப்பது ஏன்?
இந்திய பாஸ்போர்டில், நாணயத்தில், தபால் தலையில் ஆங்கிலம்/ஹிந்தி தவிர மற்ற மொழிகள் ஏன் இல்லை?
மாத்திரை மருந்தின் வேதிப்பெயர், உலகின் ஒவ்வொரு மொழியிலும் ஏன் மொழிபெயர்க்கப்படவில்லை?
நான் தமிழ் மீடியத்தில் படித்தவன். அப்போது, பல (கிரேக்க/ஆங்கில/லத்தீன்) அறிவியல் குறியீடுகள், கணிதக்குறியீடுகள் மட்டும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லையே, ஏன்?
இவற்றை மொழி வெறி என்று யாரும் சொல்லமாட்டார்கள். உலகம் முழுமையும் குழப்பமில்லாமல் புரிந்துகொள்வதற்கான ஒரு GLOBAL UNIFORMITY என்று புரிந்துகொள்ள வேண்டும். இவை எல்லாம் உலக தூர நோக்குடன் அனைத்து மக்களுக்காக சிந்திக்கும் மார்க்கம் இஸ்லாம் என்பதையே பறை சாற்றுகிறது. இஸ்லாம் உலகலாவியது – அனைத்து மொழி பேசும் மக்களுக்கானது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
மக்காவில் எல்லா மொழி மக்களும் கூடும் ஹஜ் சமயத்தில் வழிபாட்டில் மொழி ஒரு குழப்பமாக இல்லாமல் போனதற்கு காரணம், இஸ்லாத்தில் இருக்கும் இந்த GLOBAL UNIFORMITY தானே?
நான் சீனாவிற்கு சென்றிருக்கும்போது, அங்கு சீன மொழியில் பாங்கு சொன்னால், அதை நான் எப்படி, அது பாங்கு என அறிந்து கொள்வது? தொழுகை சீன மொழியில் நடந்தால் அது எப்படி எனக்கு புரியும்? உலகம் முழுதும் செல்லும் ஒரு முஸ்லிம் எத்தனை மொழிகளை கற்பது? கூட்டுத்தொழுகைக்காக அனைத்து உலக மக்களுக்கும் ஒரே மொழி நல்ல தீர்வாக தெரியவில்லையா?
அதேநேரம், முஸ்லிம்கள் அவரவர் தனக்காக இறைவனிடம் மனதுக்குள் இறைஞ்சுதலை அவரவர் தய்மொழியில்தானே கேட்கின்றனர்? இதில் இஸ்லாம் எந்த கட்டாயமும் புகுத்தவில்லையே?
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பாப்பாபட்டியிலோ கீரிப்பட்டியிலோ பிறந்திருந்தால், குரான் தமிழில் இறங்கி இருந்திருக்கும். பாங்கு,தொழுகை எல்லாம் உலகெங்கிலும் தமிழில் இருந்திருக்கும். உலகின் அனைத்து முஸ்லிம்களும் மார்க்கத்திற்காக GLOBAL UNIFORMITY-காக, தமிழ் கற்றிருந்திருப்பார்கள்.
அப்போது, உங்களைப்போல் ஒருவர், “ஏன் பாங்கு அரபியில் இல்லை” என்று அராபிய இனைய தளத்தில் அரபியில் பின்னூட்டிக்கொண்டு இருப்பார். அப்போது என்னசெய்வது?
என் கேள்வி, “அந்த மொழி வெறி குறைந்திருக்கிறதா என்று?”. அதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் வேறு கேள்விக்கு விடை கொடுத்துள்ளீர்கள். அரபு தேசத்தில் இருந்து அரபி மொழியில் பாங்கு ஓதினால் பரவாயில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்களில் அனைவருக்கும் கட்டாயம் தமிழ் தெரிந்திருக்கும். பின் எதற்காக அரபு மொழியிலேயெ பாங்கு செய்யவேண்டும் என்பது தான் என் கேள்வி?
மேலும், நீங்கள் சொல்வதை பார்த்தால் இஸ்லாத்தை புதிதாக ஒருவன் பின்பற்றினால், அவன் தாய் மொழி அவனிடம் இருக்காது. அப்படித்தானே?
//மாத்திரை மருந்தின் வேதிப்பெயர், உலகின் ஒவ்வொரு மொழியிலும் ஏன் மொழிபெயர்க்கப்படவில்லை?நான் தமிழ் மீடியத்தில் படித்தவன். அப்போது, பல (கிரேக்க/ஆங்கில/லத்தீன்) அறிவியல் குறியீடுகள், கணிதக்குறியீடுகள் மட்டும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லையே, ஏன்?//
மொழிபெயர்க்கப்படவேண்டும். இல்லாது போனால் அது தவறு. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகிவிடாது.
//இவை எல்லாம் உலக தூர நோக்குடன் அனைத்து மக்களுக்காக சிந்திக்கும் மார்க்கம் இஸ்லாம் என்பதையே பறை சாற்றுகிறது. இஸ்லாம் உலகலாவியது – அனைத்து மொழி பேசும் மக்களுக்கானது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.//
சமஸ்கிருதம் ‘தேவ’ பாஷை ஆனது போல என்று சொல்லுங்கள். 😉
//நான் சீனாவிற்கு சென்றிருக்கும்போது, அங்கு சீன மொழியில் பாங்கு சொன்னால், அதை நான் எப்படி, அது பாங்கு என அறிந்து கொள்வது?//
கடவுளிடம் பேசுவதற்கு மொழி எதெற்கு? (அரபு) மொழியில் சொன்னால் தான் அவருக்கு புரியுமா? இல்லை கடவுளை தொழ ஏதாவது ஒரு மொழி தேவையா? கமல் சொன்ன மாதிரி, “நல்லவங்க மனசுக்குள்ளா எஸ்.எம்.எஸ் அடிச்சுக்காதா?”.
உங்களை போன்றவர்கள் மதத்துக்காக உங்கள் மொழியை வ்ற்றுவிடுவீர்கள். எங்களுக்கு மொழிக்காக மதத்தை விட்டுவிடுவோம். செத்த பின் கிடைக்கும் சொர்க்கம் தேவையே இல்லை… 😉
நான் சொல்ல வந்த விஷயம் இதுவா, சீனு?
உங்களைப்போன்ற தமிழ் மொழிவெறி எனக்கு கிடையாது. ஆனாலும் தமிழ் மொழிப்பற்று பற்றி பேசும் நீங்கள் ஏன், தமிழ் மொழி பேசாத காரல் மார்க்சையும், லெனினையும்,ஸ்டாலினையும், மாவோவையும் இன்னும் பிடித்து தொங்கிக்கொண்டு உள்ளீர்கள்? இதுதான் தங்கள் தமிழ் பற்றோ?
//உங்களைப்போன்ற தமிழ் மொழிவெறி எனக்கு கிடையாது.//
இரண்டு பாயின்டுகள்.
1. (தேவைப்பட்டால்) தமிழ் மொழிக்காக மதத்தை துறப்பேன் என்றால் தமிழ் மொழி மீது வெறி என்று அர்த்தமில்லை. மொழி மீதான ‘பற்றை’ விட (கவனிக்க, ‘வெறி’ அல்ல), மதம் மீதான பற்று குறைவு என்று அர்த்தம். (வித்தியாசம் தெரியுமென்று நினைக்கிறேன்).
2. ஒருவேளை (உங்கள் அர்த்தப்படி!) எனக்கு மொழிமீது வெறி இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும், மதத்தை விட எனக்கு மொழிவெறி அதிகம். அப்படியானால், உங்களுக்கு (தமிழ்) மொழியைவிட மதவெறி அதிகம், இல்லையா?
//ஆனாலும் தமிழ் மொழிப்பற்று பற்றி பேசும் நீங்கள் ஏன், தமிழ் மொழி பேசாத காரல் மார்க்சையும், லெனினையும்,ஸ்டாலினையும், மாவோவையும் இன்னும் பிடித்து தொங்கிக்கொண்டு உள்ளீர்கள்? இதுதான் தங்கள் தமிழ் பற்றோ?//
மன்னிக்கவும். தமிழ் மொழி பிடிக்கும் என்றால் அதற்காக தமிழ் பேசாத எதையும் வெறுக்க கற்றுத் தரவில்லை என் மொழி. மாறாக, அவற்றையும் தமிழில் மொழிபெயர்த்து தான் புரிந்து கொள்கிறோம். நீங்கள் குறிப்பிட்ட அந்த லிஸ்ட்டில் உள்ளவை பற்றி எனக்கு முழுவதும் தெரியாது. அந்த பக்கம் கூட போனது கிடையாது. ஆனால், அதற்காக அவற்றை ஒதுக்கிவிடவேண்டும் என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. கடவுளை நம்புவதை விட உழைப்பை நம்பு என்று சொன்னால் நான் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். ஆனால், செத்த பின் கிடைக்கும் சொர்கத்தை விட வாழும் போது கிடைக்கும் (பார்க்கும்) நரகம் மேல், இல்லையா?
எந்த ஒரு முஸ்லிமும் எந்த நாட்டில் இருந்தாலும் தொழுகை அழைப்பு என்பது அரபு மொழியில் தான் இருக்கும் அதனால் எந்த நாட்டவருடனும் எங்களால் ஒன்றாக தொழ முடியும் .அதுதான் முஸ்லிம்களான எங்களுக்கு வசதி .எங்கள் ஒற்றுமைக்கு ஒரு அடையாளமும் ஆகும் .உங்களுக்கல்ல .ஆனால் உங்களுக்கு ஏன் எரிகிறது?அதே நேரத்தில் உலகில் எந்த ஹிந்து கோவிலிலும் பஜனை பண்ணுவது ஒரு ஐயராகத்தான் இருக்கும் .அமெரிக்க இந்து கோவிலில் வெள்ளை அமெரிக்கனோ அல்லது கருப்பு அமெரிக்கனோ அர்ச்சகராக இருக்க மாட்டார்கள் .அங்கும் ஒரு இந்திய ஐயர்தான் இருப்பார் .கோவில் என்று ஒன்று இருந்தால் அது இந்திய ஐயர்களின் சொத்து என்ற நினைப்பு .காதலியை டாவடிப்பதற்கு கோவில்தானே சிறந்த இடமாக இருக்கிறது .வாழ்க உங்கள் பக்தி .
//.காதலியை டாவடிப்பதற்கு கோவில்தானே சிறந்த இடமாக இருக்கிறது .வாழ்க உங்கள் பக்தி .//
இருந்தால் என்ன? காதலியை கோவிலில் டாவடிக்கலாம். தப்பில்லை. இதற்கும் பக்திக்கும் சம்பந்தமில்லை. கண்ணை மூடிக்கொண்டிருக்கும் பக்தியை விட, இது எவ்வளவோ மேல். முதலில் உங்கள் கோவிலுக்குள் பெண்களை உள்ளே விட முடியுமா பாருங்கள். (அது சரி! சவுதியில் பெண்களுக்கு இப்போ தான் ஓட்டு போடவே அனுமதித்திருக்கிறார்கள் ;))
நண்பர் நெத்தியடி முகமது,
ஒரு மதத்தை ஆராய்ச்சி செய்ய அந்த மதத்தினர் மட்டும் தான் தகுதியானவர் என்றில்லை. நண்பர்கள் அப்துல், Siddiq மற்றும் அஸீஸ் ஆகியோர் முஸ்லிம் என்பதோ முஸ்லிம் அல்லாதோர் என்பதோ முக்கியமில்லை. அவர்கள் கூறுவது எல்லாமே நீங்கள் கூறும் குரான் மற்றும் ஹதீஸ்கள் சொன்னதிலிருந்து தான். அந்த விளக்கங்கள் பொய் என்று நீங்கள் சொன்னால், குரான் மற்றும் ஹதீஸ்கள் சொன்னது படிப்பவர்கள் மனநிலையைப் பொறுத்தது என்பது போல் இருக்கும் என்று ஒரு பாமரனுக்கு தோன்றாதா?
நீங்கள் மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம். என்னுடைய கேள்வி இது தான்… மனிதர்களுக்குள் வேறுபாடுகள் (அதாவது கல்வி, செல்வங்கள் போன்றவற்றில்) வேண்டும் என்று சொல்பவனை ஆதரிப்பீர்களா அல்லது அந்த வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்று சொல்பவனை ஆதரிப்பீர்களா?…
Mr. அதிரைpost,
ஒரு மதம் என்ன சொல்கிறது என்பது இங்கு பிரச்சனையில்லை. நீங்கள் இஸ்லாம் மதம் மற்றும் அதன் பெருமைகள் என்ற பார்வையில் மட்டுமே பின்னூட்டமிடுகிறீர்கள். இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவோர் சாதி வேற்றுமை பார்க்கிறார்களா இல்லையா என்பது தான் பிரச்சனைக்குரிய கேள்வியாகும்.
//உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களிடத்திலும் தவிர்க்க முடியாத சில வேறுபாடுகளை நாம் காணலாம். அந்த வேறுபாடுகள் அவசியம் இருக்க வேண்டிய வேறுபாடுகளாகும். மனிதன் கல்வியின் மூலம் படித்து உயர்ந்தவனாகிறான். மனிதன் உழைத்து உழைத்து முன்னேற்றம் அடைகிறான். இப்படியாக மனிதர்கள் தாங்களாகவே தன்னை உயர்த்திக் கொள்கின்றனர்; கல்வியால், செல்வத்தால் வேறுபாடுகளுடன் திகழ்கிறார்கள். இந்த வேறுபாடுகளை இஸ்லாமும் அவசியம் இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது.//
இஸ்லாம் மதம் இப்படிப்பட்ட வேறுபாடுகளை அவசியம் வேண்டும் என்று கூறுவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் மற்றும் உரிமை வழங்க மறுக்கும் ஆட்சியாளர்கள், ஏழை உழைப்பாளிகள் மூலம் வளர்ச்சியடையும் முதலாளிகள் போன்றோர்களை ஊக்குவிப்பதாக உங்களுக்கு தோன்றவில்லையா? காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே தனது படுகொலைக்கு ஆதரவாக கீதை உபதேசத்தை நீதிமன்றத்தில் எடுத்துக் காட்டினான். அது போல் சுரண்டல்காரர்களும் இப்படிப்பட்ட வேற்றுமைகளை தங்களது ஆதாரமாகக் காட்டினால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
//“உயிர்க்கு உயிர் வாங்குவதில் உங்களுக்குப் பாதுகாப்பு உண்டு” என்று இஸ்லாம் கூறுகிறது.//
இதிலிருந்து நான் புரிந்து கொண்டது ‘பழிக்குப் பழி’ அவசியம். அப்படியா? இல்லை வேறு அர்த்தம் உள்ளதா?
//“விபச்சாரம் செய்யும் பெண்ணையும் விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேன்டாம். அவ்விருவர் தண்டிக்கப்படுவதை நம்பிக்கைக் கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொள்ளட்டும்” (அல்குர்ஆன் 24:2)//
இதை இந்தியாவில் நடைமுறைப்படுத்த இங்குள்ள முஸ்லிம் மதவாதிகள் பரிந்துரைக்கலாமே? செய்வார்களா?
லெனின்,
Mr. அதிரைpost,
ஒரு மதம் என்ன சொல்கிறது என்பது இங்கு பிரச்சனையில்லை. நீங்கள் இஸ்லாம் மதம் மற்றும் அதன் பெருமைகள் என்ற பார்வையில் மட்டுமே பின்னூட்டமிடுகிறீர்கள். இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவோர் சாதி வேற்றுமை பார்க்கிறார்களா இல்லையா என்பது தான் பிரச்சனைக்குரிய கேள்வியாகும்.//
மதம் என்ன சொல்கிறது என்பது இங்கு பிரச்சனையில்லை என்றால் சில முஸ்லிம்கள் செய்யும் தவறுகளுக்கு ஏன் (மதத்தை)இஸ்லாத்தை ஏன் தலைப்போடு (பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!) தொடர்பு படுத்த வேண்டும்?
“ஹிந்துக்களைப்போன்று சாதிப்பார்க்கும் முஸ்லிம்கள்” என தலைப்பு போட்டிருந்தால் பொருத்தமாக இருக்கும்!
அன்பு “வினவு” தலைப்பை மாற்றலாமே…
“பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!”
கட்டுரைக்கும் தலைப்பிற்கும்
பொருத்தமாக இல்லை!
வினவு மீது பல முஸ்லிம்களுக்கு நல்ல கருத்து உண்டு!
உங்கள் கொள்கை நிலைப்பாட்டில் இருந்து எழுதியுள்ளீர்கள். விசயமறிந்தவர்கள் வேண்டிய பதில் தரக்கூடும்.
ஆனால், பொருத்தமற்ற தலைப்பு என்பதுதான் எம் கருத்து!
இதனை புரிந்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு… //
என முன்பே கருத்து எழுதியிருந்தேன்!
அதை படித்தீர்களா;தலைப்பை மாற்றவில்லையே?
உங்களிடம் கொள்கையை விட வீம்பு தான் அதிகம்!
/////வினவு மீது பல முஸ்லிம்களுக்கு நல்ல கருத்து உண்டு!/////
—– செம சோக்கு. இது உண்மையல்ல. இதனை நீங்கள் திரும்பப்பெற வேண்டும், காகா.
நண்பரே எனக்கு இஸ்லாம் மதம் பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் இங்கு வரும் நண்பர்கள் அப்துல், Siddiq மற்றும் அஸீஸ் ஆகியோர் ஆதாரங்களோடு இஸ்லாமில் சாதியை
போற்றுவதாக சொல்கிறார்களே.
கல்வி, செல்வம் சார்ந்து வேறுபாடுகள் அவசியம் வேண்டும் என்று இஸ்லாம் மதம் சொல்வதற்கும் ஏழ்மை மக்கள் அவர்களின் நிலைக்கு முன்னர் அவர்கள் செய்த பாவங்களே காரணம் என்று இந்து மதம் சொல்வதற்கும் பெரிய வேறுபாடில்லை. ஒன்னும் வேண்டாங்க. ஒரு சாதாரண பாமர மனிதனிடம் சென்று கல்வி, செல்வம் சார்ந்து வேறுபாடுகள் அவசியம் வேண்டும் என்று இஸ்லாம் மதம் சொல்வதாகச் சொன்னால் அவனுடைய புரிதல் எப்படி இருக்கும்? இந்த வேறுபாடுகள் வேண்டும் என்பது சரிதானா? இந்த நிலையில் படிப்பதற்கு வழியில்லாத ஆனால் கல்வி கற்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு ஏழை முஸ்லிம் மாணவன் இப்படிப்பட்ட வேறுபாடுகள் வேண்டும் என்று நம் மதம் சொல்கிறதே என எண்ணிக் கொண்டு அப்படியே இருந்து விடுவானா? தெரியவில்லை…
நண்பர் நெத்தியடி முஹம்மது மற்றும் உங்களைப் போன்றவர்களெல்லாம் படித்து ஒரு உயர்ந்த நிலைக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் இந்த வேறுபாடுகள் அவசியம் என்பது உங்களை ஒன்றும் பாதிக்காது. அது இப்போதுள்ள சமூக சூழலில் வாழும் ஏழ்மை மக்களையும் மற்றும் வரவிருக்கும் அவர்களின் சந்ததியினரையும் பாதிப்பதாக உங்களுக்கு தோன்றவில்லையா?
மானுட சமூகம் வளர வளர அவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கேற்ப ஒரு நாட்டின் சட்டத்தையே மாற்றி அமைக்க வேண்டிய தேவை ஏற்படும் போது இப்படி எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் சமூக சூழலுக்கு ஒத்து வராதவைகளை சொல்லும் மதங்களை மட்டும் பற்றி இருக்க வேண்டியது அவசியம்தானா?… இப்படிக் கேட்பது வீம்பு என்று அர்த்தமா? இதற்கு மேல் விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை.
அன்புள்ள நண்பர் லெனின்..
உங்கள் கருத்துகள் பொதுவாய் அறிவுப்பூர்வமாக இருக்குமே? ஏன் இஸ்லாம் பற்றி… என்றால் மட்டும் வேறு மாதிரி இருக்கிறது?
அப்துல், Siddiq மற்றும் அஸீஸ் ஆகியோர் முஸ்லிம்கள் என்று எப்படி அறிந்து கொண்டீர்கள்? ‘அவர்கள் கருத்து @ விளக்கங்கள் இஸ்லாத்திற்கு எதிராய் இருக்கிறது’ என்று கத்தும் நாங்கள் ஏனய்யா உங்கள் பார்வைக்கு முஸ்லிம்களாய் தெரிய மறுக்கிறோம்? ஒருவேளை அவர்கள் முஸ்லிம்களாகவே இர்ந்து தொலைக்கட்டும். அவர்கள் என்ன முஸ்லிம்களின் அத்தாரிட்டியா? மற்ற யாருக்கும் தெரியாத இஸ்லாம் அவர்களுக்கு மட்டும் தெரிந்துவிட்டது என்று எந்த நியாயத்தின் பேரில் முடிவுக்கு வந்தீர்கள்? குரான்&ஹதீஸ்கள் அத்தனையையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு எங்கள் இரு தரப்பில் முடிவுக்கு வந்தீர்களா?
இந்த லிஸ்டில் செங்கொடியை கழட்டிவிடத்தெரிந்த உங்களுக்கு நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்.
வினவு குழுவினருக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் [ஏக இறைவனின் அன்பும் அருளும் உங்கள் மீது என்றென்றும் நிலைத்திருக்கட்டுமாக ]
வினவு குழு நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லாமல் வாய் மூடி மவுனியாக இருப்பது ஏனோ? உண்மையிலேயே வினவு குழுவினருக்கு சூடு சொரணை இருந்தால் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஒரு கொள்கைப் பற்றாளன் தான் வகுத்து கொண்ட விதியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் தான் அவன் கொள்கைப் பற்றாளன். வினவு தானே வகுத்துக் கொண்ட விதியின் அடிப்படையில் “கார்ப்பறேட்டுகளின் காலில் சரணடைந்த கம்யூனிசம்” என்ற கட்டுரையை எப்பொழுது எழுதப் போகின்றது? ஏனெனில் பெரும்பாலான கம்யூனிஸ்ட்டுகள் கார்ப்பறேட்டுகளின் காலையே நக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே அஹ்மதியாக்களைப் பற்றிய பதிவிலும் ஒரு கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கும் பதிலில்லை. அதாவது மனிதநேயம் என்று கூக்குரலிடும் (ம.க.இ.க, வினவு குழு போன்ற) போலி மனிதநேயவாதிகளை விட முஸ்லிம்கள் மனிதநேயத்தில் சிறந்தவர்கள். அதனுடைய வெளிப்பாடு தான் சுனாமி தாக்கிய போது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், த.மு.மு.க , மற்ற பிற இஸ்லாமிய இயக்கங்கள் மதபேதம் பார்க்காமல் ஆற்றிய அரும்பணிகள். சுனாமியின் போது அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை இன்றைக்கும் கடலோர மக்களிடம் போய் அறிந்து கொள்ளலாம். உயிரை காக்கும் இரத்த தானத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து தமிழகத்தில் முன்னிலை வகிக்கின்றது. த.மு.மு.க வின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுக்க பிரபலாமான ஒன்று. இவர்கள் மதபேதம் பார்க்காமல் மனிதநேயம் என்ற ஒன்றின் அடிப்படையிலேயே சேவை செய்கின்றனர். இல்லை நாங்கள் இவர்களை விட அதிகமாக மனிதநேயப் பணிகள் செய்கின்றோம் என்று ம.க இ. க வினால் சொல்ல முடியுமா? என்ற தொனியில் அங்கு கேள்வி எழுப்பி இருந்தேன். அந்த கேள்விக்கு இன்று வரை பதிலில்லை.
என்னுடைய இந்த கேள்விகளுக்கு வினவு குழு பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் வினவு குழுவும் பிழைப்பு வாதத்தை அடிப்படையாக கொண்ட ஒன்று என்ற முடிவுக்கு தான் எல்லோரும் வருவார்கள். (அதாவது உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையவர்கள். ம.க. இ.க காரர்கள் இல்லை.) மேலும் கருத்து திரிபில் விஞ்சியது தினமலரா அல்லது வினவா? என்ற பட்டிமன்றமும் கூட இங்கு நடத்தப்படலாம் என்ற ஒரு தகவலையும் வினவு குழுவுக்கு தெரிவித்து கொள்கின்றேன்.
[குறிப்பு: நான் மற்றவர்களின் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று சொன்னது பின்னூட்டமிடுபவர்களை அவமதிப்பதற்காக இல்லை. இங்கு கருத்து சொல்லும் பெரும்பாலோனோர் விவாதத்தை திசை திருப்பி விடுகின்றனர். மேலும் பல குப்பைகளும் இங்கு நிறைந்திருக்கின்றன. வினவு தளத்தில் பல குப்பைகளே இருக்கின்றன என்ற கருத்தை ம.க.இ.க வின் தோழர் (இப்போதும் அவர் உங்களுக்கு தோழரா என்று எனக்கு தெரியாது) பி.இரயாகரனே சொல்லியிருக்கின்றார். அந்த கருத்து முற்றிலும் சரியான ஒன்றே. மேலும் கட்டுரை எழுதியவரிடம் அல்லது அந்த குழுவிடம் விவாதிப்பதே சிறந்த முறை. அப்போது தான் விவாதம் திசை மாறாது. எனவே இங்கு நான் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு வினவு குழு பதிலளிக்க வேண்டும். ]
//அதனுடைய வெளிப்பாடு தான் சுனாமி தாக்கிய போது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், த.மு.மு.க , மற்ற பிற இஸ்லாமிய இயக்கங்கள் மதபேதம் பார்க்காமல் ஆற்றிய அரும்பணிகள்.//
உதவி பன்னும் போது கூட மதம் மாறுமாறு கூறினீர்களாமே? கேள்விப்பட்டேன். (கேட்டால், அது உங்கள் ‘கடமை’களில் ஒன்று என்பிற்கள்).
//த.மு.மு.க வின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுக்க பிரபலாமான ஒன்று//
நான் சென்னைங்க. இப்போ தான் கேள்விப்படுறேன்.
//என்னுடைய இந்த கேள்விகளுக்கு வினவு குழு பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் வினவு குழுவும் பிழைப்பு வாதத்தை அடிப்படையாக கொண்ட ஒன்று என்ற முடிவுக்கு தான் எல்லோரும் வருவார்கள்//
எல்லோருமா? அந்த எல்லோருமெல்லாம் யாருங்க?
சுனாமி வந்த போது ஆர்.எஸ்.எஸ் காரன் கூடத்தான் சேவை செஞ்சான். அத வச்சு அவன உசத்தின்னு நீங்க காலில விழுவீங்களா.
சுனாமியே இல்லாம கோடிக்கணக்கான ஏழை மக்கள் இந்துவும் முசுலீமுமா நாடு முழுக்க கிடக்காங்களே அவங்களை கடைத்தேற்ற என்ன வழி? அவங்களுக்கு உங்க மனித நேயம் என்னா ***. ஒருவேள அவங்க செத்து போனப்புறம் தர்மாஸ்பத்திரிக்கு போஸ்டு மார்டம் பண்ண எடுத்துகிட்டு போக உங்க ஆம்புலன்சு வருமோ?
சும்மா ஆம்புலன்சு சுனாமின்னு சீன் போடாதீங்க பாய். உள்ளே பகட்டா தொழுகை வெளியே ‘முசுலீம்’ பிச்சைக்காரி . அந்தான்ட கோயில் வாசல்ல ‘இந்து’ பிச்சைக்காரன். இதுதான் உங்க மார்கத்துக்கும் மத்த மதத்துக்கும் வித்தியாசம்.
இந்து மதத்துல சாதி பாக்குறாங்க, சமத்துவமில்லே வெங்காயமில்ல,,,டு பேட்…அங்க இருப்பது ச்சி ச்சி ஷேம்ஷேம் பப்பி ஷேமின்னு சொல்லி நீங்க மதம் மாத்துறீங்களே அப்ப இந்த அளவுகோல் எங்க போச்சுன்னு கேட்டா என்ன சொல்லுவீங்கோ? சாதி பாக்குறதுநால பொந்து மதம் மோசம்மின்னு சொல்ல்லாம் அதே சாதி பாத்தா இசுலாம் மோசமுன்னு சொல்லகூடாதா நடுநிலை நாட்டாமைகளே….????
வினவுல குப்பைகளுக்கு எப்போதும் அனுமதி உண்டு…. இல்லையினா உங்கள மாதிரி ஆளுங்க வரமுடியுமா?
சுனாமிக்கு சேவை செஞ்சது நல்ல விசயம்தான் ஆனா அந்த சுனாமிய உருவாக்கி லட்சக்கணக்கான மக்கள கொன்றொழிசதுக்காக உன் கடவுளயும் அது ஜால்ரா அடிக்கும் உம்மையும் எதால அடிக்க? உயிரெடுப்பதில் என்ன *** மனித நேயம்?
நெத்தியடி பாய் நீங்க வினவ எதுக்குறதுல மட்டும் குறியா இருக்காதிங்க நாயமாப் பேசுங்க கேட்டுக்கிறோம்
வினவிசத்துக்கு தலையாட்டியே ! நீங்கள் முதலில் நாயமாக பேசுங்கள். நான் என்ன தவறு செய்தேன்?
ஒரு பள்ளிக்கூட மாணவன் வகுப்புக்கு கட்டடித்துவிட்டு சினிமா பார்க்க போனால்……., அப்பள்ளிக்கு சொந்தமில்லாத பொதுமக்களாகிய நீங்கள் (வினவு & அதன் தலையாட்டிகள்) நியாயமாக என்ன செய்யலாம்?
1-அந்த மாணவனின் செயலை-தவறை அவனுக்கு எடுத்து சொல்லி, நல்ல புத்தி சொல்லி திருத்தலாம்.
2-பள்ளியின் சட்டம் மற்றும் பாடத்திட்டம் இவற்றுக்கு புறம்பான அல்லது எதிரான அவனின் செயலை கண்டிக்கலாம். (ஏனென்றால் அவன் செயலுக்கு நியாயம், பள்ளியின் சட்டம் மற்றும் பாடத்திட்டம் இவற்றில் இல்லை)
3-படிக்கும் மாணவனுக்கு இதனால் ஏற்படும் சீரழிவை எடுத்துச்சொல்லி சினிமாவை எதிர்க்கலாம்.
(இம்மூன்றையும் அந்த பள்ளியும் அதன் சட்ட/பாடத்திட்டப்படி அதன் ஆசிரியர்களும், அதை சரியாக புரிந்த மற்ற மாணவர்களும் செய்தார்கள், செய்கிறார்கள்… செய்துகொண்டும் இருக்கிறார்கள். செய்யத்தவறியவர்கள் இருந்திருக்க்கிறார்கள். இருக்கிறார்கள். அவர்களையும் நாங்கள் எதிக்கிறோம்.நாங்கள் எதிக்கிறோம்).
ஆனால்,அன்றிலிருந்து இன்று வரை ‘வினோதமாக’ வினவு என்ன செய்கிறார்?
4-‘அம்மாணவனின் செயலுக்கு அப்பள்ளியே காரணம்’ என, எந்த முகாந்திரமும் இல்லாமல், பள்ளியின் மீது அபாண்டமாய் வீண்பழி சுமத்தி, ‘இந்த பள்ளி தேவையா?’ என்று கேட்டு, ‘பள்ளிக்கூடமே இனி வேண்டாம்’ என்கிறார். (‘அஹ்மதியா’வில் கூட ஒரு பள்ளி ஆசிரியர், அதன் சட்ட/பாடத்திட்டத்திற்கு எதிராய் செய்த ஒரு செயலுக்கும் அந்த பள்ளியே தேவை இல்லை என்றார்).
“சினிமாதியேட்டரிடம் சரணடைந்த பள்ளி”- என்று தலைப்பிட்டு நியாயமே இல்லாமல்-பொருத்தமே இல்லமால்-செய்யும் வினவின் இந்த அராஜக அக்கிரமத்தைத்தான்-(4)-இதைத்தான் நான் எதிர்க்கிறேன். முதல் மூன்றையும் வினவு செய்யுங்கால், நான்(‘அஹ்மதியா’வில் பள்ளி ஆசிரியரை கண்டித்த) ‘அப்பள்ளியின் கட்டடிக்காத மாணவன்’ என்ற முறையில் வினவை ஆதரிப்பேன். வினவை ஆதரிப்பேன். வினவை ஆதரிப்பேன்.
(((Note:- பள்ளி-இஸ்லாம், சட்டம்/பாடத்திட்டம்-குரான்/ஹதீஸ், சினிமா-சாதி, சினிமாதியேட்டர்-பார்ப்பனீயம், ஆசிரியர்-உலமா, மாணவன்-முஸ்லிம்.)))
ஆனால், “கூறுகெட்டத்தனமாய் ஏன் உளறுகிறீர்கள், பாய் ” என்று, வினவும் அதன் தலையாட்டிகளும் தொடர்ந்து வினவுவதால்தான், ///ஒருபேச்சுக்கு அந்த இஸ்லாமிய பள்ளி, கம்யூனிசப்பள்ளியாக இருக்கும் பட்சத்தில் அக்கம்யூனிச மாணவன் செய்யும் ஏதோ ஒரு தவறுக்கு அப்பள்ளியே வேண்டாம் என்று வினவு கூறுமா?/// இப்படிக்கேட்க நேர்ந்தது.
///நீங்க வினவ எதுக்குறதுல மட்டும் குறியா இருக்காதிங்க, நாயமாப் பேசுங்க கேட்டுக்கிறோம்///—-என்பதாலேயே நான் இந்த மறுமொழியை எழுதுகிறேன்.
வினவு கோஷ்டிக்கு இது புரியவில்லை என்று நினைக்கவில்லை. புரிந்தும் வேண்டும் என்றே புரியாதது போல் நடிக்கிறார்கள் என்றே நம்புகிறேன். எனது நம்பிக்கையை யாராவது பொய்யாக்குவீர்களா?
முதலில் சுதந்திர கருத்து பரிமாற்றம் மூலமாக விஷயங்களை வெளிக்கொணர்ந்த வினவுக்கு பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்.
இஸ்லாம் ஒரு சமத்துவ மார்க்கம் என்று நடக்கும் பொய் பிரச்சாரத்தை ஒரு சுதந்திர கருத்து பரிமாற்றம் மூலமாக அழித்து ஒழித்த வினவுக்கும் வினவு பக்கத்துக்கும் நன்றிகள்.
நெத்தியடி,
உங்கள் உவமை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. பிரச்னை என்னவென்றால், அந்த உவமை ஒத்துவரவில்லை என்பதுதான்.
இஸ்லாமிய உலேமாக்களில் சிலர் ஜாதியை நியாயப்படுத்தியிருப்பது இந்துமதத்தின் தாக்கத்தால்தான் என்று வினவு உங்கள் சப்போர்ட்டாகத்தான் எழுதியிருந்தார்.
உலேமாக்கள் இந்துமதத்தால் பாதிப்படையவில்லை. ஆரம்பத்திலிருந்தே இஸ்லாம் மதத்தில் குலங்களும், இனங்களும் இருந்துவந்திருக்கின்றன. ஜாதி வித்தியாசம் போன்றே குல, இன வித்தியாசமும், அரபு மேலாண்மையும், குறேஷி குலப்பெருமையும், இன்னும் பலவும் இருந்துவந்திருகிறது என்று ஆதாரப்பூர்வமாகவே உங்களிடம் அப்துல் போன்றோர் வாதிட்டது மட்டுமின்றி, ஆதாரப்பூர்வமாகவே ஹதீஸ் மூலமாகவே நீங்கள் சொல்லும் பொய்களை அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறார்கள்.
இன்றும் இவ்வளவு காலத்துக்கு பின்னரும், சவுதி அரேபியாவில் குலத்தாழ்ச்சி உயர்ச்சி இருக்குமானால், இன்று இந்தியாவில் இஸ்லாமால் நடக்கக்கூடிய பலன் என்ன? அதுவும் அது ஷரியா படியே கட்டாய விவாகரத்து நடக்குமென்றால் அதனை சவுதி மக்களாலேயே எதிர்க்க முடியவில்லை என்றால், என்ன சாதி வித்தியாசத்தை ஒழிப்பதாக இங்கே டுமீல் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?
இந்தியாவில் இன்று, மேல்ஜாதி பெண் கீழ்சாதி ஆணை திருமணம் செய்ததை குடும்பங்களும் ஜாதியில் ஒரு சிலரும் வன்முறை மூலமாக எதிர்கிறார்கள். ஆனால் சட்டப்படி சரியானதுதான். சட்டப்படி அவர்களுக்கு விவாகரத்து வாங்கிவிடமுடியாது.
ஆனால் அரபுநியூஸில் நடந்திருப்பது வேறு. சவுதி அரேபியாவில் சட்டப்படி அவர்களுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. வித்தியாசம் புரிகிறதா நெத்தியடி?
இந்தியாவின் ஜாதி வித்தியாசம் வேறு, ஆனால் இஸ்லாமில் ஆரம்பத்திலிருந்தே சமத்துவம் இருந்ததில்லை. ஆணும் பெண்ணும் சமமில்லை. ஏழை பணக்காரன் சமமில்லை. இன்றும் மசூதிகளுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. திருமண பந்தங்களில் அரபு பெண் ஒருத்தி அரபு ஆண் அல்லாத ஒருவரை திருமணம் செய்வது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது ஷரியா, ஹதீஸ் மூலமாகவே என்று காட்டியிருக்கிறார்.
சும்மா இங்கே லுலுலாயி காட்டவேண்டாம்.
அப்துல் ஆதாரபூர்வமாக எழுதியதற்கு உங்களிடமிருந்து பதில் இல்லை. குறேஷி என்ற பேச்சே எழவில்லை என்று நீங்கள் சொன்ன பொய்யை அவர் ஹதீஸையே கொண்டுவந்து காட்டி உங்கள் பொய்யை வெளிக்காட்டியுள்ளார்.
அரபு மேலாண்மையை ஒத்துக்கொள்வதுதான் இஸ்லாம் என்றால் அது எதற்கு தமிழ்நாட்டில்? குறேஷிகளுக்காக ஏன் பங்களாதேஷிகளும் இந்தோனேஷியர்களும் இந்தியர்களும் ஓத வேண்டும்?
வானுலகத்தில் அல்லாஹ்வால் அனாதிகாலத்திலேயே எழுதிவைக்கப்பட்ட அல்குரானில் எதற்கு குறேஷி பற்றிய வரிகள்?
ஏமாற்றுவதற்கு வேறு இடத்தை தேடி போங்கள்.
நண்பர் நெத்தியடி முகம்மது,
“இது புரியவில்லை என்று நினைக்கவில்லை. புரிந்தும் வேண்டும் என்றே புரியாதது போல் நடிக்கிறார்கள்”இது உங்களுக்குத்தான் அப்படியே பொருந்தும்.
அப்பள்ளிக்கு சம்பந்தமில்லாத பொதுமக்களாகிய நீங்கள் என்று எழுதியிருக்கும் நீங்கள் இதை உங்கள் வேதம் அனுமதிக்கிறதா என சிந்தித்தீர்களா? உலக மக்கள் அனைவருக்குமானது என தம்பட்டமடிப்பது, விமர்சனம் என்று வந்தால் வெளியிலிருக்கும் நீங்கள் என்பது. இதைத்தான் ஆர் எஸ் எஸ் வெறியர்களும் சொல்கிறார்கள். ஆன்மீகப்பிரச்சனையில் நாத்தீகர்கள் ஏன் தலையிடுகிறீர்கள்? என்று. உங்களின் நிலைப்பாடுக்கும் ஆர் எஸ் எஸின் நிலைப்பாடுக்கும் என்ன வித்தியாசம்?
உங்கள் எடுத்துக்காட்டுக்கு வருவோம்.அந்தப்பள்ளியின் சட்டதிட்டங்களில் எத்தனை மாணவர்கள் இதில் படித்தாலும் அவர்களின் நடவடிக்கைகள் இந்தப்பள்ளியைக் கட்டிய (அல்லது வானிலிருந்து இறக்கிய) நான் நினைப்பதை விட்டு மீறுவதில்லை என்று இருக்கும்போது (எல்லாப்பள்ளிகளின் சட்டதிட்டங்களிலும் வேறு வேறு வார்த்தைகளில் இது தான் இருக்கிறது) மாணவர்களின் செயலுக்கு பள்ளியே பொறுப்பு என்று கூறுவதில் என்ன தவறு? விளக்குங்கள்.
பார்பனீயத்திடம் சரணடைந்த இஸ்லாம் என ஏன் கூறக்கூடாது?
பிறப்பினடிபடையினாலான தொழில் என்பது பார்ப்பனீயம், நாசுவ முஸ்லீம்கள் பிறப்பினடிப்படையில் முடிதிருத்தும் தொழில் செய்வதில்லையா?
ஒரு சாதியினர் மற்றொன்றினுடன் மண உறவு கொள்வதில்லை என்பது பார்ப்பனீயம், முஸ்லீம்களில் மண உறவு கொள்ள மறுக்கும் பிரிவினர் உண்டா இல்லையா?
அனைத்திற்கும் மேலாக எல்லோரையும் இந்து எனும் பட்டிக்குள் அடைக்க நினைத்து அதற்காக இஸ்லாத்தை எதிரியாக காட்டும் பார்ப்பன சூழ்ச்சிக்கு பலியாகி அவர்கள் போட்டுத்தந்த அதே பாதையில் மத அடிப்படையில் ஒன்றிணையும் முஸ்லீம்களை பார்ப்பனீயத்திடம் சரணடைந்ததாக ஏன் கூறக்கூடாது?
முஸ்லீம்கள் இஸ்லாம் என்று மீண்டும் நீங்கள் பிரிக்க நினைத்தால் தயைகூர்ந்து இதே இடுகையில் முன்னர் இட்ட பின்னூட்டத்திற்கு விடை கூற முனையுங்கள்.
கம்யூனிசப்பள்ளியும், இஸ்லாமியப்பள்ளியும் அடிப்படையில் வேறுவேறானவை என்று ஏற்கனவே உங்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் நீங்கள் இரண்டையும் (எடுத்துக்காட்டில்கூட) ஒன்றாக்க முனைந்தால், கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு வேதமில்லை இறைவனில்லை; நீங்களும் அப்படித்தானா?
நண்பரே, உங்களை எழுப்பிவிடத்தான் நாங்கள் முயற்சிக்கிறோம். அந்த முயற்சியில் நீங்கள் உறங்கவில்லை என்பது எங்களுக்கு புரிந்துவிட்டது. உங்களுக்கும் அது விரைவில் புரியும் என எதிர்பார்க்கிறோம்.
தோழமையுடன்
செங்கொடி
முஸ்லிம்களுக்கு குரான் முதன்மையானதா? ஹதீஸ் முதன்மையானதா? உங்கள் கருத்து என்ன?
முஸ்லிகள் கருத்து – குரான் முக்கியம்.
அப்படிஎன்றால்,
“மனிதர்களே நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகிக்கொள்ளும் பொருட்டு உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உண்மையில் அல்லாஹ்விடம் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான். அல்லாஹ் அறிபவன், நன்கறிந்தவன்” – அல்குர்ஆன் 49:13
ஒரு அப்பா அம்மா விற்கு பிறந்த பிள்ளைகளில் உயர்வு தாழ்வு கூறிக்கொல்லுதல் முட்டாள்தனம் இல்லையா? மற்றும் இறைவனுக்கு எதிரானதில்லையா? முஸ்லிம்கள் -பிகாரி/உபிக்கள்/பாக்கிகள்/சவூதிகள் வாழ முற்படுவது அவர்கள்-முஸ்லிம்கள் தவறா? அல்லது இஸ்லாம் தவறா?
அப்படி ஒரு கூட்டம் அல்லது ஒரு உலமா இறையச்சம் இன்றி சொல்வது பாவம் & பெருங்குற்றம் ஆகாதா? இப்பிரச்சினை நீதிமன்றம் சென்றால் ஒரு முஸ்லிம் நாட்டின் முஸ்லிம் நீதிபதி,
“….நீங்கள் மக்கள் மத்தியில் தீர்ப்புக்கூறினால் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேன்டும் என நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளை இடுகிறான்… “– அல்குர்ஆன் 4:58.
இவ்வசனத்திற்கு எதிராய் தீர்ப்பு கூறுவதும், பாவம் & பெருங்குற்றம் ஆகாதா?
இவர்கள் தவறிழைத்ததற்காக, அவர்களையே அந்த குற்றங்களுக்காக, ‘பாவிகள் மற்றும் இறையச்சம் இல்லா கண்ணியமர்றவர்கள்’ என்றும் சொல்லும் இஸ்லாத்தை நீங்கள் பழிப்பது உங்கள் பிழைப்புவாத உள்நோக்கத்தை தெளிவாக படம் பிடித்துக்காட்டுகிறது. மேலூர் ஷாஜகான் பாய், தங்களை-வினவு குழுவை பற்றி சொன்னது அனைத்தும் உண்மையே-சரியே என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்துகிறது.
இதையெலாம் சரிஇல்லை என்று கூறும் நீங்கள், அந்த புளித்துப்போன மாவுக்கேள்விகள், (-விதி & நினைப்பதை அறிபவன் அல்லாஹ் -) இரண்டையும், எங்கு இஸ்லாம் பற்றின விவாதம் என்றாலும் அந்த புளித்துப்போன கேள்விகளை தூக்கிவந்து பித்தப்பழைய தோசைகளை மறுமொழிகளாக சுட்டுத்தல்லுவதே உங்கள் வேலையாகிப்பாய் விட்டது. இவை எவ்வளவு பழையது என்றால், 1430வருடங்களுக்கு மேலானவை. அவற்றிற்கு அப்போதே அளிக்கப்பட்ட பதில்களும் தங்களுக்குத்தெரியும். அந்த பதில்களில் இருந்த உண்மையை புரிந்தவர்கள் முஸ்லிம் ஆனார்கள். 1, 2 ஆகி, 3 ஆகி, 9 ஆகி, 18 ஆகி, 100 ஆகி…..இப்போது 200 கோடிகளையும் தாண்டி இன்னும் இன்னும் வளர்ந்து கொண்டே போகிறது. அந்த பதில்களில் இருந்த நன்மையை – உண்மையை புரிந்தவர்கள் முஸ்லிம் ஆனார்கள், ஆகிக்கொண்டே உள்ளார்கள்.
உங்களுக்கு புரிந்தது இருநூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு புரியவில்லை என்று நீங்கள் நினைப்பது…..என்ன சொல்வது ? இவற்றில் உடன்பாடு காணாத அல்லது புரிந்து கொள்ள இயலாத நீங்கள் – கலீல் ரஹ்மான், செங்கொடியாகி விட்டீர்கள். அதுகூட இஸ்லாம், முஸ்லிம்களுக்கு கொடுத்த சுதந்திரம். நீங்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் என்பதைத்தவிர என்னால் உங்களை ஒன்றும் சொல்ல முடியாது.
நெத்தியடி முஹம்மது,
//ஒரு அப்பா அம்மா விற்கு பிறந்த பிள்ளைகளில் உயர்வு தாழ்வு கூறிக்கொல்லுதல் முட்டாள்தனம் இல்லையா? //
என்று கேட்டுள்ளீர்கள்.
காபிராக ஆகிவிட்ட சகோதரர்களை கொல்லுவது ஹலாலானது என்று சொல்லித்தான் கொல்கிறார்கள். காதியானி, ஷியா, வஹாபி வழியில் வராத சுன்னிகள், தர்காக்களில் வணங்குபவர்கள் இப்படி எல்லோரையும் காபிர்கள் என்று பெயர் சூட்டப்பட்டுவிட்டனர்
அதனாலேயே இன்று காபிராகிவிட்ட முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர்
இதற்கு அல்லாஹ்வே அல்குரானில் தெளிவுபடுத்துகிறான்.
9:23 ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
9:24 (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் (ஜிஹாத்) புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
9:107 இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: ‘நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் – ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
9:108 ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் – நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது¢ அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது¢ அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
9:109 யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை – அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.
9:110 அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது)¢ அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன் ஞானமிக்கவன்.
நண்பர் நெத்தியடி,
1430 ஆண்டுகள் பழமையான அந்தப்பதில் என்ன? இதில் சிக்கிக்கொள்ளாதீர்கள் தப்பித்துவிடுங்கள் என்பது தானே? அனைத்தைப்பற்றியும் சிந்திக்கச்சொல்வதாக நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் இஸ்லாம் இதில் மட்டும் ஏன் தப்பிக்கச்சொல்கிறது? ஆண்டவனின் இருப்பிலேயே கைவைப்பதால் அல்லவா? ஐயம் என்று வந்துவிட்டால் அதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று உங்கள் ஹதீஸ்தானே கூறுகிறது. ஆண்டவனின் இருப்பில் எனக்கு ஐயம் வந்ததால் தவிர்த்துக்கொண்டேன், அதனாலேயே நான் பரிதாபத்துக்குறியவனாக ஆகிவிடுவேனா?
ஒரே தம்பதியிலிருந்து படைத்திருந்தால் எதனால் 2:60 ல் தனித்தனி ஊற்றுகளில் தண்ணீர் அருந்தச்சொல்லவேண்டும்? முஸ்லீமே ஆனாலும் சுதந்திரமானவனும் அடிமையும் சமமல்ல என்று கூறவேண்டும்?4:58 ல் நீதியை பற்றி வகுப்பெடுக்கும் அதே அல்லா 2:284 ல் தான் நாடினால் தண்டிப்பேன் நாடினால் மன்னிப்பேன் என ஏன் கூற வேண்டும்? உங்கள் நம்பிக்கைப்படியே மரணத்திற்கு பிறகு எனக்கு சொர்க்கமும் உங்களுக்கு நரகமும் தந்தால் விளக்கம் கோர முடியுமா உங்களால்?
உங்கள் நம்பிக்கைப்படியே நீங்கள் மரணித்தபின் ஆண்டவனின் நீதிமன்றத்தில் உங்களின் உறுப்புகள் அனைத்தும் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லுமாமே, எல்லா உறுப்புகளும் உங்களுக்கு எதிராக சாட்சி சொன்னபின் எந்த உறுப்பை நரகத்தில் தண்டிப்பது என்று சிந்தித்துப்பார்த்தீகளா?
நண்பரே உணர்ச்சிவசப்படாமல் அறிவுவயப்பட்டு சிந்தியுங்கள்.
ஒரு சட்டை உங்களை வந்தடையவே ஆயிரக்கணக்கானோரின் உழைப்பை கடந்து வரவேண்டியதிருக்கும் இந்த உலகில் எந்த நியாயமும் இல்லாமல் ஏழையாக படைத்து உழலவிடுவதும் நானே பணத்தானாக வீங்கவைப்பதும் நானே எனக்கூறும் ஒன்றை நீங்கள் நினைவு தெரிந்த நாளிலிருந்து பின்பற்றியிருக்கிறீர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்னும் உங்கள் முதுகில் சுமக்கவேண்டுமா?
தோழமையுடன்செங்கொடி
போலி அரசியல் புரட்சி பேசும் வீன(ர்)வுகளே!
சற்று படித்து பாருங்கள்; உழைப்பாளிகளின் வயிற்றில் அடித்து பரித்த பணம் 15,000கோடி (வரியாம்)
நாட்டை துண்டாட நினைக்கும் நக்ஸல் திவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்!
http://adiraipost.blogspot.com/2009/11/blog-post_3453.html
அதிரை Waste!, தினமணியிலும் தினமலத்திலும் இசுலாமை தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்தி வந்த புனைச்செய்திகள் எத்தனை வேண்டும்????? போன நவம்பர் 26க்கு அப்புறம் வந்த பேப்பர் ஊட்ல இல்ல???? போங்கய்யா! வந்துட்டாங்க லிங்க தூக்கிகினு.
அவைகள் இஸ்லாமை தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்தி புனைச்செய்திகள் போடுகின்றன. நீரோ, இஸ்லாம் பார்ப்பநீயத்திடம் சரணடைந்துவிட்டதாக புனைச்செய்தி போடுகிறீர். உம்மிருவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. போங்கய்யா! வந்துட்டாங்க copy/paste பதிவை தூக்கிகினு.
எங்க அமைப்பு துட்டு போட்டு கொண்டாந்த புக்கு இது. இத காப்பி பேஸ்டு டுத்பேஸ்டு எதுவானாலும் நாங்க செய்யலாம். உனக்கேன்யா எறியுது.
சொந்த மூள இல்ல OK காப்பிடியிச்சு நான் எடுத்த வாந்திய எடுத்து தின்னு அதையே ்மீள் வாந்தி எடுக்கற OK ஆனா பொருந்தி வரலயே!! ச்சோ ச்சோ
வினவு குழுவினருக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
நான் கேட்ட கேள்வி வினவு குழுவினருக்கு புரியவில்லையா ? அல்லது புரியாதது போல நடிக்கின்றதா வினவு குழு? வினவு தன்னுடைய வலைத்தளத்தில் “கார்ப்பறேட்டுகளின் காலை நக்கும் கம்யூனிஸ்ட்டுகளை” பற்றிய பதிவில் கம்யூனிஸ்ட்டுகளை குறை கூறியிருக்கின்றதா ? அல்லது கம்யூனிசத்தை குறை கூறியிருக்கின்றதா? கம்யூனிஸ்ட்டுகளை தானே (அதாவது ம.க.இ.க பார்வையில்) போலி கம்யூனிஸ்ட்டுகளை தானே போட்டு காய்ச்சி எடுத்திருக்கின்றது. எந்த இடத்திலும் கம்யூனிசத்தை குறை கூறவில்லையே?
ஆனால் இஸ்லாத்தைப் பற்றிய பதிவுகளில் மட்டும் இஸ்லாமியர்கள் செய்கின்ற தவறுகளுக்கு வினவு குழு இஸ்லாத்தை குறை கூறுகிறதே அது ஏன்? கம்யூனிசம் என்றால் ஒரு நீதி. இஸ்லாம் என்றால் ஒரு நீதியா? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு வினவே? கார்ப்பறேட்டுகளின் காலை கம்யூனிசம் நக்க சொல்லவில்லை. போலி கம்யூனிஸ்ட்டுகள் தான் நக்குகின்றார்கள் எனவே போலிகளை மட்டுமே சாடுவோம். கம்யூனிச சித்தாந்தத்தை சாட மாட்டோம் என்ற நிலையில் இருக்கும் வினவுக்கு இஸ்லாமிய அடிப்படையில் சாதி இல்லை என்ற உண்மை தெரியாதா அல்லது தெரியாதது போல வினவு நடிக்கின்றதா? [இந்த பதிவின் முகப்புரையிலிருந்து: “இஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது”] பதிப்புரை பார்க்காமலே பதிவை நகலெடுத்து எழுதுகின்றதா வினவு குழு?
என்னுடைய் இந்த கேள்விகளுக்கு வினவு குழு தான் பதிலளிக்க வேண்டும். வேறு நபர்களுடன் பேசி விவாதம் திசை மாறுவதை நான் விரும்பவில்லை. விவாதிக்க நேரமில்லை என்ற மொக்கையான பதிலை மீண்டும் வினவு குழு சொல்லகூடாது.
போலிக் கம்யூனிஸ்டுகள் அவர்களுடைய சித்தாந்தத்தையே உண்மையன கம்யூனிசம் என்று அழைக்கிறார்கள். அந்தக் ‘கம்யூனிசத்தையும்’ நாங்கள் விமரிசனம் செய்கிறோம். இசுலாத்தின் அடிப்படையிலேயே இனபேதம், பால்பேதம், சாதி பேதம் இருப்பதாக அப்துல், அசிஸ்,, முன்னாள் முஸ்லீம், செங்கெடி போன்றவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். முதலில் அதற்கு பதில் சொல்லவும். அவர்களுக்கு பதில் சொன்னால்தான் உங்கள் மொக்கைகளுக்கு வினவு பாவம் பாத்து தலையெழுத்தே என்று பதில் சொல்லும்.
டியர் வினவு, முதலில் மருமொழிகளை படித்துவிட்டு பின்னர்தான் பதிவுக்கு தலைப்பு இட்டீர்களோ? நல்ல வேடிக்கை! /////இசுலாத்தின் அடிப்படையிலேயே இனபேதம், பால்பேதம், சாதி பேதம் இருப்பதாக அப்துல், அசிஸ்,, முன்னாள் முஸ்லீம், செங்கெடி போன்றவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.//// பதிவின் தலைப்பை நீங்கள் போட்டீர்களா?…. அல்லது அவர்கள் போட்டனரா? யாருடன் விவாதிக்கவேண்டும்?
////….அந்தக் ‘கம்யூனிசத்தையும்’ நாங்கள்… /// —இதில் என்ன கொக்கி வேண்டி கிடக்கு?
நான் இட்ட குரான் வசனக்களுக்கு அந்த போலி முஸ்லிம்களின் தவறான விளக்கவுரை பின்னூட்டங்கள் தான் உங்களுக்குக்கு ஆதாரமோ? பல அரபியில் புலமை பெற்ற முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய விளக்கங்கள் எல்லாம் படிக்க மாட்டீர்களோ? அப்படியென்றால், போலி கம்யூனிஸ்டுகளின் விளக்க மருமொழிகளைத்தான் “உண்மை கம்யூனிசத்துக்கு” ஆதாரமாக கொள்ள வேண்டும் என்கிறீர்களா?
நான், என் குடும்பம், என் தெரு, என் ஊர், என் மாநில முஸ்லிம் மக்களிடம் அவர்களின் முந்தய சமய சாதி நிலை, முஸ்லிம்களான பின்-தூய இஸ்லாமை குரானிலிருந்தும், நபி வழிலிருந்தும் பெற்ற பின் – திடீரென்று மறைந்தது எவ்வாறு? நடைமுறையில் நீங்களே பார்க்கிறீர்களே? இஸ்லாமை சரியாக பின்பற்றும் உண்மை முஸ்லிம்கள் சாதியை மறந்தது எவ்வாறு?
முஹம்மது முதலியார்(?), அஹ்மது தலித்(?), சேக் தாவூது செட்டியார்(?), அப்துல்காதர் அய்யர்(?), நவுஷாத் அலி நாடார்(?), தவஃபீக் தேவர்(?), எல்லாரும் முஸ்லிம்களாய் ஆன பின்னர் அவர்களின் அடைமொழி காணாமல் போனது மட்டுமின்றி ரத்தத்தில் ஊறிப்போன தன் சாதியை – அந்த சாதி வெறியை, தன் மூளையிலிருந்து மறந்தது எவ்வாறு? இதற்கு எந்த சித்தாந்தம் காரணம்? யார் அவர்களை தங்கள் சாதியை மறக்க வைத்தது? இங்குள்ள முஸ்லிம்கள் யாரும் செவ்வாய் கிரகணத்திளிருந்து குதிக்க வில்லை. எனக்கு இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்! முடியாவிட்டால், இப்பதிவின் தலைப்பை மாற்றுங்கள். இதுதான் ஒரு நேர்மையாளனுக்கு அழகு.
மேலூரு ஷாஜகானுக்கு…நான் கேட்டுள்ள கேள்விகளுக்கு உங்களிடம் நியாமான பதிலில்லை, இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள அநீதிகளுக்கு உங்களிடம் விளக்கங்கள் இல்லை…. இதனால்தான் இப்போ வரைக்கும் தலைப்பை பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள்.
ஷகிலா என்னும் பிட்டு பட நடிகை புர்கா போட்டதை எதிர்த்து சில இசுலாமிய அமைப்புகள் நடத்திய போராட்டம்தான் என் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது. அதாவது உங்களுக்கு ஷகீலா பிரச்சனையில்லை.. அவர் புர்கா போடுவதுதான் பிரச்சனை… இசுலாமில் சாதி பிரச்சனையில்லை அது பார்ப்பனியத்துக்கு அடிமையாவதுதான் பிரச்சனை..
இப்படிப்பட்டவர்களுடன் என்ன விவாதம் செய்ய முடியும். அடிப்படைவாதமும், பிற்போக்கும், பழமைவாதமும் உங்கள் மூளையில் நிறைந்துள்ளது… நிச்சயம் இதற்கு இசுலாம் காரணமல்ல.. உண்மையை காண மறுக்கும் உங்கள் சோம்பேறித்தனமும், நேர்மையின்மையும், சுயநலமும், அகம்பாவமுமே காரணம்.
இந்த கேடுகெட்ட குணங்களை இசுலாமின் பெயரால் நியாயப்படுத்தி இசுலாமை கேவலப்படுத்துவது நீங்களும், சுயமோகமது, அதிரை உள்ளிட்டவர்கள்தான்.
வினவு குழுவினருக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
1) அப்துல், அசிஸ், முன்னாள் முஸ்லீம், செங்கொடி போன்றவர்கள் பின்னூட்டமிட்ட பிறகுத் தான் வினவு இந்த பதிவை இட்டதா? அல்லது வினவிற்கு தீர்க்க தரிசனப் பார்வை ஏதும் இருக்கின்றதா?
2) இந்த புத்தகத்தின் முன்னுரையில் இஸ்லாத்தின் அடிப்படையில் சாதி இல்லை என்று சொல்லப்பட்டிருக்கின்றதே? அதை வினவு நீக்கி விட்டதா? வினவின் ம.க.இ.க கும்பல் அதை புத்தகமாக போட்டு காசு பார்த்ததே அந்த விற்பனை செய்த புத்தகத்தை எல்லாம் திரும்ப பெறப் போகிறதா ம.க.இ.க? ஏனெனில் வினவின் பார்வையில் தவறான செய்தி இந்த புத்தகத்தில் இருக்கின்றது. ஒரு கொள்கைப் பற்றாளன் காசுக்காக கொள்கையை மாற்றக் கூடாது. எனவே எப்போது இந்த புத்தகத்தை எல்லாம் வினவு அன்ட் கோ திருப்ப பெறப் போகின்றது?
3) கேள்வி கேட்டால் பாவப்பட்டு தலையெழுத்தே என்று பதிலளிக்கும் புர்ச்சிக்கார வினவு தளமே உனக்கும் தினமலருக்கும் என்ன வித்தியாசம்? அதை கொஞ்சம் இங்கே விளக்க முடியுமா? கேள்விகள் உங்களின் பிழைப்பு வாதத்தை அம்பலமாக்கும் போது விரண்டு ஓடுதல் கொள்கை குன்றுகளுக்கு அழகா? வினவு தளமே உன்னுடைய பிழைப்பு வாதத்தை இன்னும் அம்பலமாக்குவோம். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல். அதை விடுத்து சில்லறைகளை (அப்துல், அசிஸ், முன்னாள் முஸ்லீம், செங்கொடி போன்றவர்கள்) ஏவாதே. பதிவை இட்டது அவர்களா இல்லை வினவு தளமா? உம்முடன் தான் நான் விவாதிப்பேன். வினவு தளத்தின் பிழைப்பு வாதத்தைஅம்பலமாக்குவேன்.
ஷாஜகான், நாங்கள் பார்பனியத்திடம் சரண்டைந்த இசுலாமை அம்பலப்படுத்துகிறோம் நீங்கள் பிழைப்புவாதத்தை அம்பலப்படுத்த வாழ்த்துக்கள். ஆனால் ஒன்று பிழைப்புவாதம் என்றால் என்னவென்று குறைந்தபட்ச அறிவாவது வேண்டும். அந்த வார்த்தையை சொன்னால் வினவை மட்டம் தட்ட முடியும் என்கிற அளவுக்குத்தான் உமக்கு மூளை இருக்கிறது. நீங்கள் பிழைப்புவாதம் பிழைப்புவாதம் என்று அலற அலற அம்பலப்படப்போவது நீங்களும் உங்களின் பார்ப்பனியத்திடம் சரண்டைந்த இசுலாமும்தான்.
பின்குறிப்பு; – வினவு தளத்த அம்பலப்படுத்துவது இருக்கட்டும், இங்க வந்து முக்கி முக்கி பின்னூட்டம் இடுவது இருக்கட்டும்…சாதி பாக்குற இசுலாமுக்கு எதிரா நீ என்னா புடுங்குனன்னு எவனா்வது கேட்டுடப்போறான் பாய்…உசார்!!!!!
இசுலாமில் சமத்துவம் கோட்பாடு – பார்பனியத்திடம் சரண்டைந்த்து நடைமுறை. சமத்துவ கோட்பாடுள்ள இசுலாம் பார்பனியத்திடம் சரண்டைந்து சாதி பார்க்கும் முறையை நடைமுறைப்படுத்துவது ஏன் என்று கொஞ்சம் மூளையை கடன்வாங்கியாவது யோசித்தால் நல்லது
வினவு வேறு பெயர்களில் பின்னுட்டமிடுகிறது என்பது அபத்தமானது. மக்களை வென்றெடுப்பதுதான் எங்களது வேலையே தவிர ஆள்பிடிப்பது அல்ல. நாங்கள் பத்திரிக்கைகளைக் கூட அதை படிப்பவர்களுக்கு மட்டுமே விற்கிறோம். எங்களுடைய நட்பிற்காக,பெயருக்காக வாங்குபவர்களை தவிர்த்துக்கொள்கிறோம்.ஏன் நீங்கள் கடவுளிடம் மட்டும்தான் பேசுபவரா? வினவுடன் மட்டும்தான் விவாதிப்பேன் என்கிறீர்கள். “வினவு தளத்தின் பிழைப்புவாதத்தை அம்பலமாக்குவேன்”.தாரளமாக அம்பலமாக்குங்கள். நாங்களும் ஆயத்தமாகவே இருக்கிறோம். இதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்கிறோம்.
????இதற்கு என்ன பதில் திரு.வினவு????
/////2) இந்த புத்தகத்தின் முன்னுரையில் இஸ்லாத்தின் அடிப்படையில் சாதி இல்லை என்று சொல்லப்பட்டிருக்கின்றதே? அதை வினவு நீக்கி விட்டதா? வினவின் ம.க.இ.க கும்பல் அதை புத்தகமாக போட்டு காசு பார்த்ததே அந்த விற்பனை செய்த புத்தகத்தை எல்லாம் திரும்ப பெறப் போகிறதா ம.க.இ.க? ஏனெனில் வினவின் பார்வையில் தவறான செய்தி இந்த புத்தகத்தில் இருக்கின்றது. ஒரு கொள்கைப் பற்றாளன் காசுக்காக கொள்கையை மாற்றக் கூடாது. எனவே எப்போது இந்த புத்தகத்தை எல்லாம் வினவு அன்ட் கோ திருப்ப பெறப் போகின்றது?////
—– ரொம்ப கேவலாமாய் இருக்கிறது. இதுதான் பிழைப்புவாதாமோ?
அப்புறம் என் முந்தய கேள்விக்கு -நடைமுறையில் கண்கூடாக நம் ஊரிலேயே நமக்கு மத்தியில் நம்மிடம் மண்டிக்கிடந்த சாதிப்பேயை நாம் முஸ்லிம்கள் ஆன பிறகு நம்மிடமிருந்து நம் பெயரில் மட்டுமின்றி ஆழ் மனத்திலிருந்து ஓட்டியது எந்த மாந்திரீகம்? பதில் அளிக்க என்ன தயக்கம்? இதற்கு நீங்கள் பதில் சொல்லாமல் உங்கள் அடியாட்களை முஸ்லிம்கள் பேரில் அனுப்பவேண்டாம்..!
//உங்கள் அடியாட்களை முஸ்லிம்கள் பேரில் அனுப்பவேண்டாம்..!//
ஆள்மாறாட்டத்திற்கு பெயர்பெற்ற நெத்தியடிக்கு இப்படி பேச என்ன யோக்கியதை இருக்கு.
இந்தியாவில் சாதி ஒழிய இசுலாம் உள்ளிட்ட எந்த ம்தமும் ஒரு ம**ம் புடுங்கல. வாய்கூசாம பொய் பேசும் யோக்கிய சிகாமணிகளா, இந்தியாவுல கிட்டத்தட்ட 500 வருசத்துக்கு மேல நடந்த முகலாயர் ஆட்சி முசுலீம் ஆட்சி தானே, அப்புறம் நடந்த்து வெள்ளக்கார கிறிஸ்டியன் ஆட்சிதானே அப்புறம் ஏண்டா சாதி இன்னமும் இருக்கு.
///அப்புறம் ஏண்டா சாதி இன்னமும் இருக்கு//// hello..! Mr. vinavu…! now you understand who is respectable and maintain decorum here. Tell him, Muslims will not accept, moguls’ rule is an Islamic rule. Ask him to stop his baseless nonsense questions against wrong direction.
வருனாசிரமக்கொள்கை எந்த மதத்தில் உள்ளதோ அதன்மூலம் சாதி எந்த மதத்தில் உள்ளதோ அங்கு போய் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று சொல்லுங்கள், Mr.வினவு.
Though I feel bad for my outburst, I feel your shameless lies deserve it. ஒரு பெரியார் வரும்வரை தமிழனுக்கு சுயமரியாதையை எந்த பள்ளிவாசல் கற்றுத்தந்த்து. ஒரு அம்பேத்கார் வரும் வரை எந்த மௌலவி தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசியலை போதித்தார்.
//Muslims will not accept, moguls’ rule is an Islamic rule. //
You’re dead right இந்தியாவில் அப்போதும் இப்போதும் பார்பனியத்தின் ஆட்சிதான் நிலைத்திருந்த்து. இசுலாமோ கிறித்துவமோ ஆட்சியாளர்களின் மதம் எதுவானாலும், பார்பனியத்திடம் சரண்டைந்து, சமரசம் செய்ததோடு மட்டுமல்லாமல், பாதுகாத்து, புரவலராக பேணி வந்துள்ளதது.
அதனால்தான் சொல்கிறோம்….. பார்பனியத்திடம் சரண்டைந்த இசுலாம் என்று!!!! புரிகிறதா
Why ‘no answer’ still? Did vinavu commit suicide?
////அப்புறம் என் முந்தய கேள்விக்கு -நடைமுறையில் கண்கூடாக நம் ஊரிலேயே நமக்கு மத்தியில் நம்மிடம் மண்டிக்கிடந்த சாதிப்பேயை நாம் முஸ்லிம்கள் ஆன பிறகு நம்மிடமிருந்து நம் பெயரில் மட்டுமின்றி ஆழ் மனத்திலிருந்து ஓட்டியது எந்த மாந்திரீகம்? பதில் அளிக்க என்ன தயக்கம்? ///////
மொக்கை பின்னூட்டங்களால் நெத்தியடி நம் கழுத்தை அறுப்பது – கொலை.
நாமே அவரிடம் போய் விவாதம் செய்து கழுத்தறுபட்டால் தற்கொலை –
நிறைய விவாதங்கள் இடையில் கலந்து கொள்ள இயலவில்லை.. ஆனால் தொகுப்பாக பார்க்கும் போது எனக்குப் புரிவது இது தான் –
1) நெத்தியடி & கோ (மறைமுகமாக)- அ) ஆமாம்யா எங்களுக்குள்ள பாகுபாடு இருக்கு அதுக்கு இன்னான்றே..
ஆ) போலி கம்யூனிஸ்டு இருக்கலாம் ஆனா போலி இசுலாமியன் இருக்கக் கூடாதா?
இ ) என்னாதான் போலி இசுலாமியனா இருந்தாலும் அவனைப் பற்றி நாங்க பேச்சே எடுக்க மாட்டோ ம்
ஈ ) இசுலாம் பத்தி எவன் விமர்சனம் செய்தாலும் அவன் ஆர்.எஸ்.எஸ் தான் எங்க எதிரி தான்
2) அப்துல் & கோ ( நேரடியாக ) – அ) ஆமாம் எங்களுக்குள் பாகுபாடு இருக்கு
ஆ) ஆனா அது தான் சரியானது
இ ) இந்தப் பாகுபாடுகள் இறைத்தூதராலேயே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.. எனவே அது தான் சரி
ஈ ) அரபி தான் தேவ பாசை / அராபியன் தான் மேண்மையானவன்
இசுலாம் மிகுந்த உள்முரண்பாடுகள் கொண்ட மதம் என்பதும் இசுலாத்திலும் படிநிலைகள் இருக்கிறது (அரபி எதிர் மற்றவர்கள் / எஜமானன் எதிர் அடிமை / ஆண் எதிர் பெண்) என்பதும், இசுலாமிய ப்யூரிஸ்டுகள் (purists) தமது மதத்தின் மேல் வரும் விமர்சனங்களை எந்தவித சகிப்புத்தன்மையும் இன்றி ஒரு இந்து மதவெறியனின் அதேவிதமான மனநிலையில் தான் எதிர்கொள்வார்கள் என்பதும் இந்த பதிவின் மூலம் வெளிச்சமாகி இருக்கிறது.
அரபியில் வழிபடுவது என்பது ஒரு இணைப்பு மொழி என்கிற அம்சத்திற்காக = இந்த வாக்கியத்தில் “அரபியை” எடுத்து விட்டு சமஸ்கிருதத்தை சொருகிவிட்டால் அப்படியே ஆர்.எஸ்.எஸ் மோஹன் பாகவத் குரல் போலவே இருக்கிறது
இசுலாத்தை விமர்சிக்கிறாய் என்றால் நீ ஆர்.எஸ்.எஸ் தான் – இதற்கும் – “நீ எங்களோடு இல்லாவிட்டால் எங்களுக்கு எதிரி” இந்த வாக்கியத்திற்கும் சாராம்சத்தில் எந்த வேறுபாடும் இல்லை
அடிமைகள் தமது எஜமார்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் – சூத்திரன் பார்ப்பானுக்கு சேவை செய்ய வேண்டும் – இவை இரண்டுக்கும் எனக்கு வேறுபாடு எதுவும்
விளங்கவேயில்லை
பெண்கள் ஒரு விளைநிலம் – இது சொல்லப்பட்ட குரான் அத்தியாய எண்களை எடுத்து விட்டால் சொன்னது முகமதுவா ஜெயேந்திரனா என்கிற வித்தியாசம் எதுவும் தெரியாமலே போய்விடக் கூடும்.
நெத்தியடியின் மனதில் எந்தளவுக்கு வன்மம் இருந்திருந்தால் பிந்தைய ஈழப் பிரச்சினை பதிவில் வந்து அப்படி ஒரு கமெண்டு போட்டிருப்பார்? இவர் மனதில் இருக்கும் வன்மமும் முன்பொருகாலத்தில் எழுதி வந்த ஆர்.எஸ்.எஸ் பதிவர்களான நீலகண்டன் / ஜடாயு போன்றவர்கள் மனதில் இருந்த வன்மத்திற்கும் எந்த வித வேறுபாடும் கிடையாது..
நாங்கள் இந்து மதத்தின் பிற்போக்குத்தனங்களை தோலுரிக்கும் போது இங்கே வந்து குதூகலிக்கும் இசுலாமிய சகோதரர்களே.. நீங்கள் ஒரு முறை உமது முதுகை பார்த்துக் கொள்ளுங்கள். மேலே உள்ள நெத்தியடி & கோ வின் விவாதங்களே உமது மதத்தின் லட்சணத்தை தோலுரித்துக் காட்டி விட்டதை உணருங்கள். இங்கே சவடாலாக பேசிய இசுலாமிய நன்பர்களுக்கு இதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மனத்தடைகள் இருக்கலாம்.. எனில் தனிமையில் சுயவிமர்சனம் செய்து கொள்ளுங்கள்.
எமக்கு எல்லா மதமும் விரோதம் தான். மதம் மட்டுமல்ல உழைக்கும் மக்களை வர்க்க ரீதியில் ஒன்று திரட்ட எதுவெல்லாம் தடையோ அதையெல்லாம் நாங்கள் எதிர்க்கவே செய்கிறோம்.. அது சாதியோ, மொழியோ, இனமோ, நிறம், ஏன் தேசமாகவே இருந்தாலும் கூட.. இங்கே எமது பிரதான எதிரி எனும் அடிப்படையில் பார்ப்பனியத்தை தனிச் சிறப்பாக ‘கவனிக்கிறோம்’.. இங்கே உழைக்கும் மக்களின் ஐக்கியத்திற்கும் விடுதலைக்கும் பார்ப்பனியம் எப்படி எதிரியோ அப்படியே முசுலீம் நாடுகளில் இசுலாமிய பிற்போக்குத்தனம் எதிரி.
Don’t touch there 🙂
சங்கு….பலே…பலே..! இப்படித்தான் வல்லாதிக்க வர்க்கங்கள் தங்களுக்கு உடம் படும் கருத்துகளாய் வரலாறை திரித்து எழுதிவைத்தார்கள். சங்கு….பலே…பலே..! கண்ணெதிரே ஆதாரமாய் நிற்கும் என் பின்னூட்டங்களை அதற்கு நேர் எதிரான பொருளில் நான் சொன்னதாக இட்டுக்கட்டி தொகுத்து ஒரு குப்பையை கொட்டி உள்ளீர்கள். வல்லாதிக்க பாசறையில் படிப்பதன் விளைவு. இப்படி அபாண்டமாய் பொய் கூறுபவர்கள் இன்னும் என்ன வேண்டுமானாலும் கூறுவீர்கள்.
hahahaha.. I can see a Vadivelu out of you my friend
ஓ இவ்வ்ளவு நேரமாய் எந்த பருப்பு வேகும் என்றுதான் ஆராய்ச்சியா பலே பலே. நெத்தியடியின் ‘தடித்த’ வார்த்தைகள் அஹமதியா கட்டுரையிலிருந்தே துவங்கியது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். இவருடைய பின்னூட்டங்களில் 90% அவதூறு, திட்டு மற்றும் சாபம் அதிலும் வடிவேலு போல நாம் பேசுவதேயே உல்டா செய்து பேசுவது….(இதையே சில காலம் முன் தமிழ்மணி என்னும் பார்ப்பனமணி செய்து வந்தான். )
என்னை பொறுத்தவரை இவரை விட இசுலாமை ஆர்.எஸ்.எஸ் காரன் கூட கேவலப்படுத்தியது இல்லை. தனது மதத்தில் உள்ளவைகளை நேர்மையாக பரிசீலிக்க்கூட மறுக்கும் இவர்கள் கோறுவது தலைப்பை மாற்றுவது பற்றி…வேண்டுமான்ல் இப்படி எழுதலாம் . இசுலாம்=பார்ப்பனியம் OKவா
கேள்விக்குறிக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
தம்பி கேள்விக்குறி,
தூய்மையான இஸ்லாத்தை இஸ்லாமியர்கள் மத்தியிலே தினமும் எடுத்து சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றேன். பத்து வருடங்களுக்கு முன்னர் என்னுடைய நண்பர்கள் மத்தியில் கூட இந்த தூய்மையான இஸ்லாத்தை சொன்னதற்கு அவமானங்களை சந்தித்திருக்கிறேன். இன்றோ அவர்களும் தூய்மையான இஸ்லாத்தை விளங்கி எனக்கு தோள் கொடுத்து மக்கள் மத்தியிலே தூயமையான இஸ்லாத்தை சொல்லி வருகின்றனர். ஊரில் பலருடைய புறக்கணிப்புக்கும் ஆளாகி இருக்கின்றேன். முப்பது வருடங்களுக்கு முன்னர் தூய்மையான இஸ்லாத்தை தமிழகத்தில் மக்கள் மத்தியிலே நூறு நபர்கள் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தனர். இன்றோ தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் மிகத் தெளிவாக தூய்மையான இஸ்லாத்தை அறிந்து வைத்து அதன் படி நடந்தும் வருகின்றனர். ( எல்லா முஸ்லிம்களும் என்று நான் குறிப்பிடவில்லை ). முரசொலி அடியார் சமத்துவம் வேண்டி அப்துல்லா அடியாராக மாறியதும் இத்தகைய பிரச்சாரங்களினால் தான். டி.எம். மணி உமர் பாருக்காக மாறி தான் பெற்ற சமத்துவத்தை தன்னுடைய சகோதரர்களும் பெற வேண்டி தலித் மக்களிடத்தில் இஸ்லாத்தை பிரச்சாரம் பண்ணுவதும் இதனால் தான். அப்படி உண்மை பிரசாரத்தில் என்னால் முடிந்த அளவிற்கு நானும் பங்காற்றிக் கொண்டு வருகின்றேன். (உன்னுடைய பாசையில் சொன்னால் நான் இந்த அளவிற்கு புடுங்கியிருக்கின்றேன்) .
நீயும் , ம.க.இ.க. வும் வினவு அன்ட் கோவும் சாதியை ஒழிக்க எண்ணத்தை புடுங்கியிருக்கிண்றீர்கள்? என்று யாராவது கேட்டால் என்ன பதிலை மருதையனும் வினவு அன்ட் கோவும் வைத்திருக்கின்றது? நாங்கள் புதிய ஜனநாயகம் இதழிலும் வினவு தளத்திலும் கட்டுரை நிறைய எழுதினோம் என்று சொல்ல போகின்றதா மருதையன் அன்ட் கோ? ம.க.இ.க உருவாக்கிய சாதியற்ற சமூகம் எங்கே? தலித் மக்களிடத்தில் இருக்கின்ற உட்பிரிவு வேறுபாடுகளை களைவதற்கு என்ன தீர்வை மருதையன் அன்ட் கோ வைத்திருக்கின்றது? தூய்மையான இஸ்லாத்தை பின்பற்றுபவர்களின் பிரச்சாரத்தால் எங்களையெல்லாம் (அதாவது எல்லா முஸ்லிம்களையும்) கருவறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்ற அர்ஜுன் சம்பத் ( நம்ம மதி இந்தியா , அப்துல் , அசீஸ் , இன்ன பிற போலி முஸ்லிம் பெயர் தான்கிகளுடைய அண்ணன் ) கூட ” தீண்டாமை தீண்டாத இஸ்லாம்” என்று உண்மையை போட்டு உடைக்க கூடிய கட்டுரையை எழுதுகின்ற அளவிற்கு நிலைமை உருவாகியிருக்கின்றது. மருதையன் அன்ட் கோ சாதியி ஒழிக்க எடுத்த நடவடிக்கை என்ன?
பிழைப்பு வாதத்தின் தோற்றுவாயில் இரண்டை மட்டும் உனக்கு இங்கு சொல்லுகின்றேன். ஒன்று, தான் வகுத்து கொண்ட விதியை தானே பின்பற்றவில்லையென்றால் அங்கு பிழைப்புவாதம் துளிர்விடுகின்றது என்று அர்த்தம். (அதாவது வினவு தளம் தான் வகுத்த விதிகளின் அடிப்படையில் செயல்படாமல் இருக்கின்றதை போல). இரண்டு, தான் வகுத்த விதி தவறு என்று தெரிந்த மறுகணமே அந்த தவறை ஒத்துக்கொண்டு அதை சரி செய்ய முன்வராமை. இந்த ஒரு அறிகுறியும் பிழைப்புவாதம் ஆரம்பித்து விட்டதை காட்டி விடும் (அதாவது ஊருக்கு தான் உபதேசம். வினவுக்கு இல்லை என்பதைப் போல) . உங்களுகெல்லாம் கம்யூனிச பாடம் எடுக்கின்ற மருதையனையோ அலல்து வினவு குழுவையோ வந்து எம்மிடம் விவாதிக்க சொல். உங்களின் பிழைப்பு வாதத்தை அம்பலப்படுத்துகின்றேன். நீ அப்படி போய் அந்த மூலையில் உக்கார்ந்து என்ன பேசுகின்றோம் என்பதை மட்டும் கவனி. அது போதும். போய் மருதையனையோஅல்லது வினவு குழுவையோ வர சொல் விவாதம் செய்ய.
[பின்குறிப்பு: பொதுவாக நான் சில்லறைகளுக்கு நான் பதில் சொல்லுவதில்லை. ஆனால் சில சமயம் சில்லறைகள் தொடர்ந்து ஓலமிடும். கோயபல்ஸ் பிரசாரத்திலும் இறங்கி பொய்யை உண்மை போல காட்ட முயற்சிக்கும். சில்லறைகளின் கேள்விக்கு பதில் இவர்களிடம் இல்லை என்று யாரும் நினைத்து விடக் கூடாது என்றுதான் இந்த இறுதி பதில். இனி மருதையனிடமோ அல்லது வினவு குழுவிடமோ தான் விவாதிப்பேன். ]
Mr.Shajahan,
In the first place you try to acknowledge and respect people equally. When you say //”பொதுவாக நான் சில்லறைகளுக்கு நான் பதில் சொல்லுவதில்லை”// you are exposing your brand of equality. Is this the way your bloody pure islam teaches you the equality?. I take the liberty to assume so.. Then your brand of ‘equality’ taught by Koran is nothing but SHIT..!!!
//நான் இந்த அளவிற்கு புடுங்கியிருக்கின்றேன்//
Can you go little further and correct the phrases in Koran justifying Slavery & dividing people in terms of race (Kuraishi, Ansari, blah blah blah) ????
Go back on these discussions and see the phrases from Koran in support of Race superiority, Slavery and such things.. Are you trying to say this is the “purest” way of islam??
Man, you are talking about the purest form of islam. Are you going to make this part of the world another Talibanistan?
Your Talibanistic approach is nothing different from RSS brahminic terrorism.
“முதலியார், வன்னியர், தலித், அய்யர், தேவர், கள்ளர், செட்டியார், கவுண்டர், அனைவரும் தமிழ்நாட்டில் முஸ்லிம்களாய் ஆனா பின்னர் தத்தம் சாதியை மறந்தார்கள்” என்று சொல்லும் ஒரு ஸ்டேட்மெண்டில் “இஸ்லாத்தில் சாதி இருக்கிறது பார்த்தீர்களா?” என்று நீங்கள் கத்துவதால் போய் உண்மை ஆகி விடாது சங்கு!
குறிப்புகள்: ( குறைஷிகள்- மக்காவில் ஒரு இறைவனுக்கு இணைவைக்கும் வெள்ளை நிற. 360 சிலைகளை காபாவிற்குள் வைத்து வழிபட்ட பல தெய்வ வணக்க- ஆதிக்க வர்க்க சிந்தனையாலர் கூட்டம். இவர்கள் கருப்பர்களை அடிமைகளாய் வைத்திருந்தனர்.
நபி(ஸல்) அவர்கள் இந்த அடிமைத்தனத்தை இஸ்லாம் மூலம்…சிறுக சிறுக அதாவது முஸ்லிம்கள் பெருக பெருக…..இஸ்லாம் மூலம்தான் ஒழித்தார்கள். அனைவரையும் சகோதரர்களாய் ஆக்கினார்கள் என்பது வரலாறு. நீங்கள்தான் அதை திரிப்பவர் ஆயிற்றே!.
மேலும் அறிந்துகொள்ளுங்கள். அன்சாரி எனப்படுபவர் மதீனாவாசிகள். முஹாஜிர்கள் எனப்படுபவர் குறைஷிகலால் அடித்து துரத்தப்பட்ட மதினாவிற்கு தஞ்சம் தேடி வந்த மக்கா முஸ்லிம்கள்-இவர்களில் குறைஷிகளில் இருந்து + அடிமைகளில் இருந்து முஸ்லிம்கள் ஆனவர்களும் உண்டு.
பனூ… இப்படி வருபவர்கள் பிரபலமான இன்னாரது பரம்பரை எனலாம். உதாரணமாக வருண் காந்தி, பிரியங்கா, ராகுல் காந்தியை, ‘பனூ நேரு – நேரு கோத்திரம்’ என சொல்லலாம். — இப்போது சொல்லுங்கள்: இவையெல்லாம், வருணாசிரம் மூலம் நீங்கள் அறிந்து வைத்திருக்கும் சாதிகளை போன்றதா? )
இஸ்லாம் பற்றி என்னவென்றே தெரியாமல் பதிவு போடுவது, வேறு ஒருவர் போட்ட பதிவுக்கு சம்பந்தமில்லாமல் தலைப்பிடுவது, இஸ்லாம் பற்றி ஒரு மண்ணும் தெரியாமல் பின்னூட்டம் போடுவது, எடுத்து சொன்னாலும் ‘முயலுக்கு நான் ஏற்கனவே சொன்னபடி இரண்டரை கால்’ தான் என்று அடம் பிடிப்பது….ச்சே! வெறுப்பாய் உள்ளது.
பிறக்கும் போது எவனும் கம்யூனிச்டு இல்லை! அது அவன் வளர்ந்த பின்னர் அறிந்து புரிந்து தேர்ந்தெடுக்கும் அரசியல் பாதை.
இசுலாம் அப்படியா?
எருமைக்கு பிறந்தது எருமை என்பது போல முசுலிமுக்கு பிறந்தால் முசுலிம் என்பதுதானே உங்கள் விதி. இதற்கும் கவுண்டனுக்கு பிறந்தவன் கவுண்டன் என்பதற்கும் என்ன வித்தியாசம் சுயமோகம்மது அவர்களே?
ஒரு கம்யூனிஸ்டு என்று தன்னை கருதிக்கொள்பவன் தனது கொள்கையில் பிழற்சி கொண்டால் அவனை கட்சியிலிருந்து விலக்கவும், அவனது அரசியல் போலி என்றும் அழைக்கும் உரிமையும், துணிவும் நேர்மையான கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கின்றது.
இசுலாமில் அப்படியா?
நாளை முதல் தூய்மையான இசுலாமை பின்பற்றாதவர்கெளெல்லாம் முசுலீம்்கள் இல்லை அவர்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது முசுலீம் என்று தங்களை அழைத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்லும் துணிவு உங்கள் மதநிறுவனங்களுக்கு வருமா?
நாங்கள் கம்யூனிஸ்டுகள், எங்கள் பிள்ளைகளை நாங்கள் கம்யூனிஸ்டு என்று அழைப்தில்லை. அவர்கள் கம்யூனிஸ்டாய் இருப்பதும் இல்லாமலிருப்பதும் அவர்கள் முடிவு.
நீங்கள் அப்படியா?
உங்கள் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இசுலாமை கற்று தெரிந்த்து ்புரிந்து அதை வாழ்க்கை நெரியாக ஏற்க முடிவு செய்யும் வரை உங்களின் பிள்ளைகளை முசுலிமென அழைக்காமலிருக்கும் நேர்மையும் துணிவும் உங்களுக்கு வருமா?
அன்புள்ள நெத்தியடி முகம்மது, ஷாஜஹான்
தாங்கள் கூறுவது சரியல்ல. உங்களைப் பற்றி தெரியவில்லை. ஆனால், மரைக்காயர்
ராவுத்தர் போன்ற நாங்கள் தமிழர்கள் அல்ல். நாங்கள் உயர் குல அரபியர்கள்.
இங்கு வந்து பெண்ணெடுத்திருக்கலாம். அது ஆகுமானது. ஆனால், எங்களை
தமிழர்கள் அளவுக்கு கொண்டுவருவது சரியல்ல. உருது பேசும் முஸ்லீம்களை விட
நாங்கள் உயர்ந்தவர்கள்.
மேலும் விளக்கங்களுக்கு இந்த பக்கத்தை பார்க்கலாம்.
Arabs preferred over other nations
http://qa.sunnipath.com/issue_view.asp?HD=7&ID=9427&CATE=1
இஸ்லாமில் அனைவரும் சேரலாம். அல்லாஹ் உலக மக்களில் மற்றவர்களை விட அரபுகளை உயர்த்தினான்.
அரபுகளில் கினானாவை உயர்த்தினார். கினானாக்களில் குறேஷியினரை உயர்த்தினான். குறேஷிகளில் பானு ஹாஷிமை உயர்த்தினான்.
குறேஷியினரே ஆளத்தகுதியானவர்கள் என்றே அறிவித்துள்ளார் நபிகள் நாயகம்(ஸல்) காலிபாக்களும், வமிசங்களும் அனைவரும் குறேஷிகளே. இதனை எந்த இஸ்லாமியரும் மறுத்ததில்லை. நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்?
ஆகையால் இஸ்லாமில் சேர்பவர்கள் உடனே அரபுகளுக்கு தாங்கள் சமமானவர்கள் என கருதுவது ஆகுமானதல்ல. ஆணும் பெண்ணும் சமமாவார்களா? அடிமையும் அரபும் சமமாவார்களா? தமிழும் அரபு மொழியும் சமமாகுமா?
அரபி மொழி அல்லாஹ் நமக்கு வழங்கிய அருள் மறை குர்ஆனின் மொழி இன்னும்
சுவர்க்கத்தின் மொழியும் இதுவே.
சுவர்க்கத்தில் தமிழில் பேசவியலாது.
அருள் மறை அருளப்பட்ட அரபி மொழியிலேயே சுவனத்தில் பேசவேண்டும். தமிழில் தாவா செய்யலாம். ஆனால், அரபி மொழியை தமிழ் மொழி அளவுக்கு தாழ்த்துவது ஏற்புடைத்தல்ல.
தமிழ்நாட்டில் ஷரியா சட்டம் நிறைவேற்றப்படும் நாள் வரும்போது முதலில் அழிக்கப்படவேண்டியது சீறாப்புராணமே.
சிந்திக்க வேண்டுகிறேன்
நட்புடன்
தூய்மையான இசுலாம் -இது என்ன?
வடக்கே தீண்டாமை நிலவும் இசுலாமை தூய்மையான இசுலாமாகத்தான் போதிக்கப்படுகிறது,
தாலிபான் கூட தூய்மையான இசுலாமைத்தான் துப்பாக்கி கொண்டு நிலைநிறுத்துகின்றனர்.
அமெரிக்க எச்சில் காசில் களியாட்டம் போடும் அரபு ஷேக்குகள்தான் உங்கள் மதத்தின் புரவலர்கள், அவர்களும் தூய்மையான இசுலாத்தின் ஆட்சியைத்தான் அமெரிக்கா ஆசியுடன் ஜனநாயகம் எட்டிப்பார்க்காமல் பத்திரமாக நடத்திவருகின்றனர்.
ஷியா சுன்னி பிரிவால் அடித்துகொண்டு சாகும் இரான்-இராக் கூடத்தான் தம் நாடுகளில் தூய்மையான இசுலாமை பல வழிகளில் பேணுகின்றனர்
இதில் நீர் போதிக்கும் தூய்மையான இசுலாம் எந்த பிராண்ட்.
தூய்மையான இசுலாம் என்ற கருத்திலேயே சமத்துவம் இல்லையே .
இந்த தூய்மை பொய்யை எதைக்கொண்டு தூய்மை படுத்த போகிறீர்.
*************
//நீயும் , ம.க.இ.க. வும் வினவு அன்ட் கோவும் சாதியை ஒழிக்க எண்ணத்தை புடுங்கியிருக்கிண்றீர்கள்? //
பதில் ரொம்பவே சிம்பிள் பிரதர் …. ஏகாதிபத்திய உலகமயமாக்கலையும் – அது நிலைக்க அடித்தளம் அமைத்து கொடுக்கும் இந்திய அதிகாரவர்க்கம், ஆளும் வர்க்கம், உள்ளிட்டவைகளையும்… ஏற்றத்தாழ்வான சமூக இருத்தலுக்கு தத்துவ அடித்தளமமைக்கும், உழைக்கும் மக்களை ஒன்று சேரவிடாமல் தடுக்கும், சாதி ரீதியாக துண்டாடும் பார்ப்பனிய பாசிச சக்திகளையும் , ஒழிப்பதுவே சாதி உள்ளிட்ட வேற்றுமையை ஒழிக்கும் எமது திட்டத்தின் சுருக்கமான – lay man’s – புரிதலுக்குரிய விளக்கம். இந்த திட்டத்தினடிப்படையில்தான் எங்களுடைய தோழர்கள் பல அரங்குகளில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இதில் பார்பனியத்துக்கு எதிரான போராட்டம் என்பது வெறும் பார்பனர்களுக்கு எதிரான போராட்டமென நீங்கள் கருதக்கூடாதுல மேலே சொல்லியி்ருக்கும் பிற்போக்கு கொள்கைக்ளுடைய இசுலாம் கிறுத்துவ மத அடிப்படைவாதம் கூட கூட ஒழிக்கப்படவேண்டியதே. உங்களுடுடைய தூய்மையான அடிப்படைவாதத்தையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
**************
வினவின் பிழைப்புவாதத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கு விளக்கம் முட்டாள்தனமாக இருப்பதால் அதற்கு பதிலளிக்க மறுக்கிறேன். அறிவுபூர்வமாக ஏதாவது யோசித்து சொல்லவும். அப்பய யோசிக்கும் போது வினவை திட்டி/விமர்சனம் செய்து நீர் எழுதும் பின்னூட்டம் என் தணிக்கை செய்யப்படுவதில்லை என்றும் யோசிக்கவும்
ஷாஜகான் இசுலாத்தை கடைபிடிப்பவர்கள் மட்டும் உண்மையாளர்கள் மற்றவர்கள் பொய்யானவர்கள் என்று மனித குலத்தையே தூற்றும் உங்களது கயமைத்தனம் கண்டிக்கத்தக்கது. அடுத்து சாதியை எதிர்த்து நாங்கள் செய்திருப்பதல்லாம் மலையளவு விசயங்கள் உண்டு. கட்டுரை எழுதுவது மட்டுமல், எங்கள் தோழர்கள் அநேகம்பேர் சாதி, தீண்டாமை மறுப்பு திருமணங்கள்தான் செய்கின்றனர். பல கிராமங்களில் தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றிருக்கிறோம். பள்ளிகளில் கூட எமது குழந்தைகளை சாதி, மதமற்றவர்கள் என்றே சேர்க்கிறோம். இவையெல்லாம் மதவாதியான உங்கள் கண்களுக்கு தெரியவாய்ப்பில்லை. அடுத்து இங்கு விவாதிக்கும் நண்பர்களை, தோழர்களை சில்லறைகள் என்று கேவலமாக எழுதியிருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். இதுதான் இசுலாம் உங்களுக்கு கற்றுக் கொடுத்த மனிதநேயமா? நெத்தியடியை மன்னிப்பு கேட்கச் சொல்லும் முன்னர் உங்கள் கறைகளை நீங்கள் கழுவ்வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கா விட்டால் உங்களை நாங்கள் கண்டு கொள்ளப்போவதில்லை என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறோம்.
அருமைச் சகோதரர் முகம்மத் (நெத்தியடி) ,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …
நீங்கள் இங்கிருப்பவர்களிடம் மன்னிப்பை கேட்டு விட வேண்டும். ஏனெனில் நீங்கள் பல பெயர்களில் வந்து கருத்து தெரிவித்து இருக்கின்றீர்கள். அது உண்மையாளர்களுக்கு அழகல்ல. நீங்கள் வைக்கின்ற கருத்துக்கள் ஆணித்தரமாக இருந்தாலும் உங்களுடைய செயல்கள் அவற்றை நீர்த்துப் போகச் செய்து விடவேண்டாம். எனவே மன்னிப்பை கேட்டு விடவும். இதை பல பெயரில் உலாவும் மற்றவர்களிடம் கோர மாட்டேன். அவர்களை பொறுத்த வரை அது தவறில்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மையாளர்களை பொறுத்த வரை அது தவறு.
சகோதரத்துவத்துடன்
ஷாஜஹான்
வ அலைக்கும் சலாம்….ஷாஜஹான் பாய்.
நான் பல பெயர்களில் ஒரே பதிவில் வந்தது சில மாதம் முன் வினவு, ‘திருப்பதி ஏழுமலையானை கைது செய்யும்போது’.(???) வரை….
வினவு அதனை சுட்டிக்காட்டிய பின் அதை அன்றே ஒப்புக்கொண்டு அதற்கடுத்த விவாதங்களில் அப்படி வரவில்லை. காரணத்தையும் வினவிடம் தெரிவித்திருந்தேன். அதை இன்னும் மறக்காமல், இப்போது என் வாதங்களை நீர்த்துப்போகச்செய்ய அல்லது மற்ற ‘தோழர்கள்’ என்னை கிண்டல் பண்ண ஏதுவாக மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.
உங்களுக்காக, மீண்டும் ஒருமுறை எனது அந்த பழைய தவறை நான் ஒப்புக்கொண்டு வினவிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
“வினவிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்”.
நன்றி. ஷாஜஹான் பாய். நீங்கள் இருக்க எனக்கு இன்னொரு பெயர் இனி தேவை இல்லை. இன்ஷாஅல்லாஹ் ஒரு கை பார்த்து விடுவோம் பாய், ‘வினவிசமா’ அல்லது உண்மை மார்க்கமா என்று.
தங்கள் அன்பு சகோதரன்,
முஹம்மத்.
(நெத்தியடி என்பதெல்லாம் சும்மா ஒரு அடையாளத்துக்குதான்)
நெத்தியடி நான் உங்களை கிண்டல் செய்யவில்லை, நீங்கள் ஆள்மாறாட்டம் செய்வதாக வினவின் மீது அநியாயமாக பழிசுமத்தினீர்கள். அதனால் உங்களுக்கு நினைவு படுத்தினேன் அவ்வ்ளவே. நீங்கள் அதற்காக வேண்டுமானால் மன்னிப்பு கேட்டுக் ்கொள்ளுங்கள்.
மற்றபடி நீங்கள் இந்த பதிவில் இந்த ஒரு பெயரில் வந்து விவாதிப்பதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இல்லையெனில் நாம் இவ்வளவு பேசியிருக்கவும் முடியாது. உங்கள் உண்மை மார்க்க ஆதரவு வாதங்களை முறியடிக்க எனக்கு ஒரு வாய்ப்பும் தந்திருக்க முடியாது.
மிக்க நன்றி
நெத்தியடி முஹம்மதுவே கீழ்காணும் இரு வசனங்களை படியும், ஆளப்பிறந்தவன் ஆரியன் என்று கூறுவதுபோல ஆளப்பிறந்தவர்கள் குரைஷிகளே என்றும், மேலும் தலித் மக்களுக்கு உண்மையான பக்தியில்லை எனவே அவர்கள் ஊருக்கு சாமி வராது என பார்ப்பன சங்கராச்சாரி கூறுவதுபோல, குரைஷிகள் மார்க்கத்தை நிலைநாட்டி வரும்வரை மற்றவர்களின் மார்க்கபிடிப்பு குறைவானது எனவே அவர்கள் ஆளமுடியாது என்பதற்கும் சான்றுகளாகும். இதுவும் ஒரு தீண்டாமை வடிவிலானது என ஏன் கருதக்கூடாது? புஹாரி.7139. அறிவித்தவர்: முஹம்மது இப்னு ஜூபைர் இப்னி முத்யிம். நான் குரைஷியரின் தூதுக் குழுவில் ஒருவனாக முஆவியா அவர்களிடம் இருந்தபோது அவர்களுக்கு, அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள், விரைவில் கஹ்தான் குலத்திலிருந்து அரசர் ஒருவர் தோன்றுவார்’ என அறிவிப்பதாகச் செய்தி எட்டியது. உடனே அவர்கள் கோபம் கொன்டு எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டுக் கூறினார்கள். இறைவனை துதித்த பின் கூறுகிறேன்: உங்களில் சிலபேர் அல்லாஹ்வின் வேதத்திலும் இல்லாத இறைத்தூதர் அவர்களிடமிருந்து அறிவிக்கவும் படாத செய்திகளைச் சொல்கிறார்கள் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையே அறிவீனர்கள் ஆவர். நீங்கள் உங்களை வழிதவறச் செய்கிற வெற்று நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன். ஏனெனில், இறைத்தூதர் அவர்கள் ‘குறைஷியரிடையே தான் இந்த ஆட்சி அதிகாரம் இருந்துவரும். அவர்களைப் பகைத்துக் கொள்ளும் எவரையும் அல்லாஹ் முகம் குப்பறக் கவிழ்க்காமல் விடமாட்டான். அவர்கள் மார்க்கத்தை நிலைநாட்டிவரும் வரை இந்நிலை நீடிக்கும் என்றார்கள். புஹாரி. 7140. இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்’ இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையே தான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
சித்திக் என்று அரபி பெயரில் வரும் நீங்கள் யார்? முஸ்லிமா? வினவுக்கு இஸ்லாத்தின் அடிப்படையே தெரியாது என்பதை நான் தெரிந்து கொண்டேன். நீங்கள் அவருக்கு ஈமான் கொண்ட காரணத்தால், உண்மை அறிந்திருந்தும் அவருக்கு எடுத்து சொல்ல எண்ணமில்லை.
குறைஷி – சாதியா? குர்ஆனில் இவர்கள்தான் ஆள வேண்டும் என்று கூறி உள்ளதா? மேற்படி ஹதீஸ் குறைஷிதான் ஆள வேண்டும் என்று கட்டளை இட்டிருக்கிறதா…கட்டளை இட்டிருக்கிறதா? அதே புகாரியில் 3517 ஹதீஸ், முஆவியா(ரலி) மறுத்த செய்தியை உண்மையாக்குகிறதே? பின்னர் எப்படி ஒருபாதியை மட்டும் ஏற்றுக்கொண்டு மறு பாதியை மறுப்பீர்கள்.?
அப்படி என்றால் எல்லா இஸ்லாமிய நாட்டிலும் குரைஷிகள் தான் ஆளுகிரார்களா? இவ்வளவு ஏன்?. சவூதியில் குறைஷிதான் ஆளுகிறாரா? எத்தனை கலீபாக்கள் குறைஷிகள்? எத்தனை கலிபாக்கள் மற்றவர்? இதெல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி
வினவுக்கு ஜால்ரா அடிப்பது ஏன்?
இந்த பதிவின் தலைப்பு -இஸ்லாமில் பார்ப்பனீயம் -என்று பொருள்பட தலைப்பிட்டு உள்ளனர். அது தவறு என்று தெள்ளத்தெளிவாய் தெரிந்த பின்னும், அதற்கு முட்டுக்கொடுக்க, உருது முஸ்லிம்/தமிழ் முஸ்லிம் என்று சாதியை உருவாக்கினீர்கள், குறைஷி…. கஹ்தானி…… ஷம்மாரி…. அச்மரி…. ஷியா, அஹ்மதியா, சுன்னி, குர்து என அனைத்தும் சாதி என்றீர்கள். இன்னும் என்னவெல்லாம் கொண்டு வருவீர்களோ!
புஹாரி: 3517. இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: கஹ்தான் குலத்திலிருந்து ஒருவர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது.என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
கஹ்தான் குலமும் இஸ்மாயில் நபி வழி வந்த ஏமன் நாட்டைச் சேர்ந்த உயர்குலமே. இருந்தபோதிலும் நபிக்கு பெரிதும் உதவிய மதினாவைச் சேர்ந்த அன்சாரிகளை ஏன் நபிகளார் அனுமதிக்கவில்லை.
புஹாரி: 3792. உஸைத் இப்னு ஹுளைர்(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இன்னாரை நீங்கள் அதிகாரியாக நியமித்தது போல் என்னையும் அதிகாரியாக நியமிக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘எனக்குப் பிறகு (உங்களை விட) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, (மறுமையில் எனக்குச் சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் ‘ஹவ்ளுல்கவ்ஸர்’ என்னும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்” என்று கூறினார்கள்.
சித்தீக் என்ற பெயரில் எழுதுபவர் புகாரி ஷரீப் தொகுப்பை கையில் வைத்துக்கொண்டு , குறை சொல்லும் காரணம் இருப்பதாக நினைத்துகொண்டு ஒவ்வொரு பாகமாக போடுகிறார் .முஸ்லிம் மக்களின் ஸ்டைலில் அழகாக எழுதும் மாற்று மத நண்பர் என்று சந்தேகிக்கிறேன் .ஒரு முஸ்லிம் இந்த குறை காணும் கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என்பதை நம்ப முடியவில்லை .இதுவும் ஒரு வகை பார்ப்பான் ஸ்டைல் .
அய்யா வினவு அவர்களே , இங்கிருக்கும் முஸ்லீம்களாகிய நாங்கள் யாவரும் அரபு முஸ்லிம்கள் கிடையாது . ஆறேழு தலை முறைக்கும் முன்னர் எங்கள் முன்னோர்களும் இந்து மதத்தில் கீழ் ஜாதியோ மேல் ஜாதியோ எதாவது ஒரு ஜாதியில் இருந்தவரே. ஆனால் இப்போது எங்களிடம் கேட்டால் எங்கள் பூர்வீக ஜாதி என்னவென்று யாருக்கும் சொல்ல தெரியாது. இதுதான் இசுலாத்தின் வெற்றி . நீங்கள் தலைப்பில் சொல்லியது செய்தி உண்மை இல்லை என்பதற்கு இதுவே சாட்சி. தமிழ் பேசும் முஸ்லிம்கள் உருது பேசும் முஸ்லிம்களை கல்யாணம் செய்யவில்லை நட்பு பாராட்டுவது இல்லை என்று சொல்வதெல்லாம் பொய். உங்களுக்கு எத்தனை சாட்சிகள் வேண்டும் நான் காட்டுகிறேன். உங்கள தலைப்பு அடிப்படையிலேயே தவறு என்பதை உணர்ந்து ஒத்துகொள்ளுங்கள்.
அருமைச் சகோதரர் முஹம்மத்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
மன்னிப்பு கேட்ட தங்களின் பெருந்தன்மைக்கு முதலில் நன்றி. வினவை இன்ஷா அல்லாஹ் ஒரு கை பார்த்து விடலாம். சத்தியத்தின் ஒளியை வாயால் ஊதி அணைக்க நினைக்கும் வினவு அன்ட் கோ kku கண்டிப்பாக பாடம் எடுக்க வேண்டும்.
சகோதரத்துவத்துடன்
ஷாஜஹான்
//ஹனாஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம். ஆனால் தியோபண்டி மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், “”சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது” என்று கற்பிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனாஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.//
உங்கள் விவாதத்தி இடையில் குறுக்கிட்டதற்க்கு மன்னிக்கவும்
இந்த கட்டுரையில் //ஆனால் தியோபண்டி மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், “”சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது” என்று கற்பிக்கப்படுகிறது//
இது சரியா இல்லையா என்பதை நெத்தியடி முகம்மது சொல்லவேண்டும்
இஸ்லாமின் சாதிப் பட்டியல் இதோ!
‘Social Stratification Among Muslim – Hindu Community’ என்ற நூலில் A. F. இமாம் அலி என்பவர் கூறுகிறார்:-
முகமதியர் ஆட்சிக் காலத்திலேயே, முகமதிய சமூகம் கீழ்கண்டவாறு பிரிந்திருந்தது.
1. உயர்சாதி முகமதியர்கள்.
2. வீட்டுவேலை செய்பவர் மற்றும் அடிமைகள்
3. பொது ஜனங்கள், மற்றவர்கள்
உயர்சாதி முகமதியர்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகின்றனர்:-
1. அஹல் இ. தெளலத்: ஆளுகின்ற வர்க்கத்தினர். இதில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள், இராணுவ அதிகாரிகள் அடங்குவர்.
2. அஹல் இ. சஅதாத்:- அறிவுஜீவி வர்க்கத்தினர். இதில் இறையியல், நீதித்துறை, மதகுருமார்கள், சையது முதலியோர், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அடங்குவர்.
3. அஹல் இ. மூராத்:- மகிழ்ச்சியூட்டும் வர்க்கத்தினர், இசை வல்லுனர்கள், நாட்டிய வல்லுநர்கள் முதலியோர் அடங்குவர்.
இவர்களுக்குள் உள்ள சாதிச் சண்டைகள் இன்றும் இஸ்லாமிய நாடுகளிலேயே காணலாம். மேலும் பல பிரபலமான பிரிவுகள் உள்ளன. அவைகளை Caste and Social Stratificationa Among Muslim in India என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார்:-
1. கன்னிகள்:- ஹனபீ, ஷாபீயீ, மாலிதீ, ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாஃபர்தூஸி (தபிஸ்தான் என்ற நூலில் குறிப்பிட்டபடி)
கன்னிகளுக்குள் 65 பிரிவுகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுகிறது. இன்றும் இந்நான்கு பிரிவுகளில் பல உட்பிரிவுகள் உள்ளன.
2. ஷியாக்கள்:- ஜைதிய்யா, இஸ்மாயீலி/சபியுன், அஸ்னா
அஷ்ரிய்யா/இமாமீயா/கைஸானியா/ஹாஸிமீயா, காலியா/குல்லத் இவ்வைந்து பிரிவுகளுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன.
3. காரிஜிக்கள் (வெளியேறிவிட்டோர்)
4. முஃதஸிலா ( நடுநிலையாளர்)
5. முர்ஜிகள் (தாமதப்படுத்துவோர்)
6. வஹாபிகள் (அடிப்படைவாத பிரிவுகள் பல உண்டு)
7. பஹாவீ
8. ஸனூஸி
9. கைதியானி
10. அஹ்மதியா
11. ஸீபிகள்
இதைத்தவிர ரவாண்டிகள் (பிறவி சுழற்சி கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்கள்) ஸஃபித்ஜாமகன் (கடவுள் மனித உருவில் அவதாரம் எடுத்தார் என்ற கோட்பாடு கொண்டவர்கள்)
ரெளஸேனியர்கள், அக்பாரிகள், க்வாஜாரிகள் (அஜாரிகா, இபாதியா, நேஜ்தட் அஜாரியா, அஜ்ரிதா, ஸூஃபாருஜ் ஜியாதியா பிரிவுகள் உள்பட). பாபிக்கள் முதலிய பிரிவுகள்.
இந்தியாவிலேயே மதமாறிய முஸ்லிம்கள் பல மாநிலங்களில் OBC பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அச்சாதியினர் பின்வருமாறு:
1. ஆந்திரா – மஹாதர்
2. அஸ்ஸாம் – மைமால் (மீன்பிடிப்பவர்) மணிப்பூர் முஸ்லிம்கள்.
3. பீஹார் – பதியரா, சிக், தஃலாங்கே, தஃபாலே, ஃபகீர், கதிஹர், ஹீமா, கரஞ்சியா, துஸ்ஸ ¡ர், தர்ஜி, கஸாய், பங்கி, மதாரி, மிரியாஸின், மர்ஸிகா, மோமின், முக்ரோ, நட், பமானியா, ரங்ரீஜ், சாயி, தாகுரை.
4. குஜராத் – பஃவான், தேஃபர், ஃபகீர், கதாய், கலியவா, கஞ்சி, ஹிங்கோரா, ஜட், தாரி, ஹ லாரிகாத்தி, தர்பன், மக்ரானி, மெளசாரி, குரேஸி, மியானா, மீர், மிராசி, பஞ்சார ¡, சந்தி, பத்னி, ஜாமாத், துர்க், ஜமாத், தேபா, வாகேவ்
5. ஜம்மு-காஷ்மீர் – பட், தார், தூம், தூமா, ஹஜ்ஜன், ஜூலாஹா, லோஹர், லோனே, குல்ஃபகீர், கும்ஹார், மோசி, தேலி, நல்பந்த்
6. கர்நாடகம் – அன்சாரி, ஜூலாய், தம்போரி, யேரி, சஃபார்பந்தி, தர்ஜி, தோபி, ஃபகீர், தகராஸ், ஜர்கள்
7. கேரளம் – மோப்ளா (மாப்பிள்ளை)
8. பஞ்சாப் – பகிர், மேகாதி
9. ராஜஸ்தான் – ஜூலாஹா
10. உத்திரபிரதேசம் – அன்சாரி, கஸாப், பஞ்சாரா, காயஸ்தா
11. மேற்கு வங்காளம்- அன்சாரி, பகிர், சைன்
மேற்கண்ட உதாரணங்கள் எதைக்காட்டுகின்றன?
இஸ்லாமிலும் சாதிகள் உண்டு என்பதைத்தானே!
புஹாரி: 3797. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டும் எங்கள் தோள்களின் மீது மண்ணைச் சுமந்து எடுத்துக் சென்று கொண்டும் இருந்தபோது எங்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், ‘இறைவா! மறுமை வாழ்க்கையத் தவிர வேறு வாழ்க்கை எதுவுமில்லை. எனவே, முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!” என்று (பாடியபடி) கூறினார்கள். முஹம்மது பிறந்த குறைஷிக் குலத்தவர்கள் முஹம்மதை துன்புறுத்தியும் ஏசியும் மக்காவை விட்டு வெளியேறவைத்தனர். மக்கவிலிருந்து மதினாவிற்கு சென்ற முஹம்மதை மதினாவிலிருந்த அன்சாரிகள் ஆதரவளித்து, போர்களில் பல உதவிகள் புரிந்தனர். ஆனால் முஹம்மது அன்சாரிகளிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க விரும்பவில்லை. முஹம்மதிற்கு தான் பிறந்த குலமே ஆளவேண்டும் என்ற பற்றுதான் (குலப்பெருமை) இதற்கு காரணம். மேலும் உழைப்பவனுக்கு ஆட்சி செய்யும் அதிகாரம் கிடையாது என்பதில் இஸ்லாத்திற்கும் மாற்றுக்கருத்து இல்லை என்பதனை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகிறது.
நான் கேட்டதுக்கு முதல்ல விளக்கம் தாங்க அரபி அடிமை ,தாழ்த்தப்பட்ட குரைஷி அல்லாத இந்திய முஸ்லீம் நெத்தியடி ?
ஏற்றத்தாழ்வே இல்லாத உலக சமாதான மதம் சொல்வதை கேட்டு மகிழுங்கள் ,
(எடுத்து கொடுத்ததுக்கு தேங்க்ஸ் பாய்)
கோத்திரங்களையும் பிரிவுகளையும் உருவாக்கியது அல்லாஹ்வே என்று அல்லாஹ் அல்குரானில் தெளிவு படுத்துகிறான்.
உலக மக்களிலேயே அரபியர் மேலானவர்கள். அவர்களிலேயே மேலானவர்கள் குரேஷிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அறிவித்துள்ளார்.( நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குரேஷி சாதியை சேர்ந்தவர். )
மேலும் கீழ்ஜாதி ஆணை திருமணம் செய்யவிரும்பும் பெண் குடும்பத்துக்கு இழுக்கு கொண்டுவருகிறாள் என்றும் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அறிவித்துள்ளார்.
குரேஷி, அன்சாரி, ஆகிய ஜாதிகள் இந்தியாவின் ஜாதிகள் அல்ல. அவை அரபிய
ஜாதிகள். சையதுகள் ஷேக்குகள் ஆகியோர் இந்திய ஜாதியினர் அல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குரேஷி சாதியை சேர்ந்தவர்.
மேல் ஜாதி ஆண்கள் கீழ் ஜாதி பெண்களை திருமணம் செய்வது ஹலாலானது. ஆனால், மேல் ஜாதி பெண்கள் கீழ் ஜாதி ஆண்களை திருமணம் செய்வது ஹராமானது.
நபிகள் நாயகம் (ஸல்) தன் மகளான பாத்திமா(ரலி)யை பிலாலுக்கு திருமணம் செய்து தரவில்லை. சமமான அந்தஸ்து உள்ள சாதியிலேயே திருமணம் செய்துதந்துள்ளார். ஆனால், அவர் கீழ்ஜாதி பெண்களான பலரை திருமணம் செய்துள்ளார்.
ஆகவே ஷரியா சட்டத்தை இந்து பார்ப்பன பழக்க வழக்கங்களின் பாதிப்பால்
மாறுதலடைந்துள்ளது என்று சொல்வது இஸ்லாமியர்களை அவமானப்படுத்துவதாகும்.
இன்றும் சவுதி அரேபியாவில் மேல்ஜாதி அரபுப் பெண் ஒருவர் கீழ்ஜாதி அரபு
ஆணை திருமணம் செய்யமுடியாது.
நிச்சயமாக ஒரு கருப்பின முஸ்லீமை (அப்த்) திருமணம் செய்யமுடியாது. செய்யவும் கூடாது.
அப்படி செய்தால், அது ஷரியா சட்டப்படி செல்லாது. ஆகவே இது தெரியவந்தால், கட்டாய விவாகரத்தே வழங்கப்படும்.
இதெல்லாம் என்ன ?
ஏம்பா மதி. அன்னிக்கே சங்கராச்சாரிய என்னிக்கு செருப்பால அடிக்கபோறேன்னு கேட்டேன் இன்னும் பதில் இல்லையே???
மதி(யற்றவனே!) மதியானவர்கள் வினவிக்கொள்ளும் போது நீர் வேடிக்கைப்பாரும்!
சம்மந்தமே இல்லாம வீரத்துரவீ? மாதிரி பேச்ப்புடாது…!!!
வினவு குழுவினருக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்௦)….
நாங்கள் திறந்த மனதுடன் எந்த ஒன்றையும் விவாதிப்போம் என்று கொள்கை வேஷம் போடும் வினவு தளம் இந்த கட்டுரை சம்பந்தமாக நான் எடுத்த வைத்த எந்த ஒரு வாதத்திற்கும் பதிலளிக்கவில்லை. கட்டுரையின் தலைப்பை பற்றிய விவாதத்திற்கு கூட தயாராக இல்லாத வினவு இனிமேல் முற்போக்கு வேஷம் போடக் கூடாது.
நான் சில்லறை என்று சொல்லுவது இங்கு கருத்து சொல்லும் எல்லோரையும் இல்லை. RV போன்றவர்களின் கருத்துக்களை எப்போதுமே நான் விரும்பி படிப்பேன். எனக்கு உடன்பாடு இல்லாத கருத்தாக இருந்தாலும் அந்த பின்னூட்டங்களில் கண்ணியம் காக்கப்படும். அப்படி கண்ணியமின்றி வாய் கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி எழுதுபவர்களை சில்லறைகள் என்று சொல்லாமல் கண்ணியவான்கள் என்றா அழைக்க முடியும்?
யார் அல்லது எந்த குழு கட்டுரை எழுதியதோ அவர்களிடம் தான் அந்த கட்டுரையை பற்றி விவாதிக்க முடியும். அது தான் விவாதம் திசை திரும்பாமல் இருப்பதற்கு சிறந்த வழியாக இருக்க முடியும். வேறு நபர்களுடன் விவாதம் செய்யும்போது மிக சுலபமாக எனக்கும் அந்த கட்டுரையில் இருக்கின்ற சில வரிகளுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி விட முடியும். எனவே யார் எழுதினாரோ அவர்களுடன் தான் விவாதிப்பது சிறந்த முறை. அதில் தான் தீர்வும் ஏற்படும்.
வினவு தளத்தைப் பற்றி ஒரு கருத்து எழுதுகையில் உங்களின் தோழர் பி.இராயாகரன் தன்னுடைய தளத்தில் வினவு தளத்தில் இருக்கின்ற கருத்துக்களில் பெரும்பாலானவை குப்பைகள் என்று விமர்சனம் பண்ணியிருந்தார். அதற்காக அவர் மன்னிப்பா கேட்டார்? அவர் சொன்னது போலவே வினவு தளத்தில் வருகின்ற பின்னூட்டங்களில் பெரும்பாலானவை குப்பைகளே என்ற கருத்தில் தான் நானும் இருக்கின்றேன்.
நான் உயிரிலும் மேலாக மதிக்கின்ற இஸ்லாத்தை அவமதிக்கும் வண்ணம் வினவு எழுதும்போது அதை பகுத்தறிவோடு எதிர்கொள்வேன். ஏனெனில் இஸ்லாம் பகுத்தறிவு மார்க்கம். சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் உலகுக்கே போதித்த உன்னத மார்க்கம். இஸ்லாம் என்னும் சத்திய ஒளியை வெறும் வாயால் ஊதி அணைக்க நினைக்கின்ற வினவை விவாதம் என்ற நிலையில் சந்திக்க நான் தயாராகவே இருக்கின்றேன்.
விவாதத்திற்கு மருதையனோ அல்லது வினவு அன்ட் கோவோ தயாரா? மனித நேயத்தைப் பற்றி வினவு எமக்கு பாடம் எடுக்க தேவை இல்லை. அந்த நிலையிலும் நான் இல்லை. மனிதநேயம் சம்பந்தப்பட்ட என்னுடைய கேள்விக்கே இன்று வரை பதிலளிக்க திராணியில்லாத வினவு எனக்கு மனிதநேயத்தை பற்றி வகுப்பு எடுக்கின்றதா?
மறை கழண்ட ஷாஜகான் அண்ணாச்சி,
//யார் அல்லது எந்த குழு கட்டுரை எழுதியதோ அவர்களிடம் தான் அந்த கட்டுரையை பற்றி விவாதிக்க முடியும். அது தான் விவாதம் திசை திரும்பாமல் இருப்பதற்கு சிறந்த வழியாக இருக்க முடியும். வேறு நபர்களுடன் விவாதம் செய்யும்போது மிக சுலபமாக எனக்கும் அந்த கட்டுரையில் இருக்கின்ற சில வரிகளுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி விட முடியும். எனவே யார் எழுதினாரோ அவர்களுடன் தான் விவாதிப்பது சிறந்த முறை. அதில் தான் தீர்வும் ஏற்படும்.//
உங்க நியாயப்படி குர்ஆனையும், ஹதிசையும் எழுதுன பாய்மாரை அனுப்பி வையுங்கப்பா. நாங்க அவுக்கிட்ட விவாதிச்சுகிட்டு கிடக்கோம். உங்கள மாதிரி சில்லறைகாரவுகளோடு விவாதிக்க முடியாதுலா. நடையைக் கட்டுங்கடே!
ஷாஜகான் வாய்கூசாமல் பொய் சொல்கிறார்
@@’ பி.இராயாகரன் தன்னுடைய தளத்தில் வினவு தளத்தில் இருக்கின்ற கருத்துக்களில் பெரும்பாலானவை குப்பைகள்’ @@ என்று சொல்லவே இல்லை. முடிந்தால் இவர் அதை நிரூபிக்கட்டும். அவர் குப்பைகள் என்று எதைச்சொன்னார் என்பது அந்த குறிப்பிட்ட கட்டுரைகளில் விவாதித்த அனைவருக்குமே தெரியும்.
@@யார் அல்லது எந்த குழு கட்டுரை எழுதியதோ அவர்களிடம் தான் அந்த கட்டுரையை பற்றி விவாதிக்க முடியும். அது தான் விவாதம் திசை திரும்பாமல் இருப்பதற்கு சிறந்த வழியாக இருக்க முடியும்@@
அப்போ குரானை எழுதியவரை வ்ரச்சொல்லும் அவரிடம்தான் குரானை பற்றி பேசமுடியும் . படு முட்டாள்தனமான லாஜிக்.
@@@யார் எழுதினாரோ அவர்களுடன் தான் விவாதிப்பது சிறந்த முறை. அதில் தான் தீர்வும் ஏற்படும்.@@@
இந்த கட்டுரையை எழுதியவர் மசூத் ஆலம் ஃபலாஹி. அவரிடம் தான் நீங்கள் விவாதிக்க வேண்டும். போய் தேடுங்கள். இந்த ஒரு விசயத்தைக்கூட நீங்கள் இன்னமும் படிக்கவில்லை எனும்போது கட்டுரை முழுவதும் படித்தீர்க்ளா என்பது சந்தேகமே
@@@சத்திய ஒளியை வெறும் வாயால் ஊதி அணைக்க நினைக்கின்ற @@@
ஏய் இதெல்லாம் ரொம்ப ஓவர்மா, பழைய பா வரிசை பட டயலாக்கெல்லாம் இன்னுமா பேசுவது…
@@@மனிதநேயம் சம்பந்தப்பட்ட என்னுடைய கேள்விக்கே இன்று வரை பதிலளிக்க திராணியில்லாத@@@
எது சுனாமி – ஆம்புலன்ஸ் மனித நேயமா? அது வெட்டிப்பேச்சுன்னு நான் அப்பவே https://www.vinavu.com/2009/11/11/casteism-in-islam/#comment-12488 இங்க பதில் சொல்லியாச்சு, நீங்கதான் ஜைலன்டு. நான் ஒருவன் வைத்துள்ள வாதத்திற்கே உங்களுக்கு பதில் சொல்ல திராணியில்லை. தலைப்பு தலைப்பு என அதனால்தான் புலம்புகிறீர்கள். இன்னும் பலர் உங்களையெல்லாம் ஒரு ஆளாக மதித்து கேள்விகளை வைத்துள்ளனர். அவங்கள என்ன சொல்றது.
@@@நான் உயிரிலும் மேலாக மதிக்கின்ற இஸ்லாத்தை அவமதிக்கும் வண்ணம் வினவு எழுதும்போது அதை பகுத்தறிவோடு எதிர்கொள்வேன். @@@
நான் பெரிதாக மதிக்கும் வினவு தளத்தில் நீங்கள் விவாதம் செய்ய வந்தால் அதை நான் எதிர்கொள்வேன். துணிவில்லாமல் கோழைத்தனமாக விவாதங்களுக்கு பதிலளிக்்காமல் ஒதுக்குவது/ஓடுவது/ஒளிவது உங்கள் விருப்பம்.
@@@@வாய் கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி எழுதுபவர்களை சில்லறைகள் என்று சொல்லாமல் கண்ணியவான்கள் என்றா அழைக்க முடியும்?@@@
நெத்தியடி உங்க சகோதரர் இல்லையா அவரை இப்படியா அவமானப்படுத்துவது???
@@@ விவாதம் திசை திரும்பாமல் இருப்பதற்கு@@@ ஷாஜகானின் மற்றுமெரு பொய். இந்த பதிவில் விவாதம் யாரால், எதற்காக திசை திருப்ப படுகின்றது??? இசுலாமில் நிலவும் சாதி தீண்டாமை குறித்து ஒரு இசுலாமிய அறிஞர் கட்டுரை எழுதுகிறார். அதை வினவு வெளியிடுகிறது. சத்தியமார்க்ம் என பீலா விடும் புண்ணியவான்களான நெத்தியடியும் ஷாஜகானும் தங்களிடத்தில் துளியளவேனும் சத்தியமிருந்தால்
1)இசுலாத்தின் இந்த இழிந்த நிலைக்கு காரணம் என்ன?
2) எந்த சாதியை எதிர்ப்பதாக கூறுகின்றதோ அதே சாதியை சுவீகரித்து கொண்டது ஏன்?
3) இந்த நிலையை மாற்றுவது எப்படி
போன்ற ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடு பட்டிருப்பர்… ஆனால் அவர்களோ
1) வினவுதளத்தை திட்டுவதிலும்,
2) விவாதிப்பவர்களை கேவலப்படுத்துவதிலும்
3)(சரியான) தலைப்பை மாற்றும் படி கூப்பாடு போடுவதிலும்,
4) இல்லாத சமத்துவத்தை இருப்பதாக சொல்லும இவர்ககளின் நிலைப்பாட்டிற்கு தோதான வாசகங்களை கையாள்வதிலும்
5) மற்ற்வர்கள் கேட்கும் கேந்திரமான கேள்விளக்கு பதில் சொல்லாமல்ஜகா வாங்குவதிலும்
6) மனிதநேயம், ஆம்புலனஸ், போலி கம்யூனிசம் போன்ற சம்மந்தமில்லா விவாதங்களை வளர்பதில் முனைப்பு காட்டுவதிலும்
7) அவதூறுகளை அள்ள ்வீசுவதிலும்
உள்ளிட்ட ஆக கேவலமான ஜனநாயகமற்ற வழிமுறைகளை பின்பற்றி ஒரு விவாதம் உருவாவதையே நசுக்கி வருகின்றனர். இதில் ஒரு கை பார்த்துவிடுவோம் என்ற பம்மாத்து வேறு. இவர்களுக்கெல்லாம் வெட்கம் மானமே இல்லையா? இவ்வளவையும் இவர்கள் செய்துவிட்டு மற்றவர்கள் விவாதத்தை திசை திருப்ப முனைவதாக கூசாமல் பொய் பேசும் இவர்களெல்லாம் எந்த வகையான குணம் கொண்டவர்கள்? முதலில் இசுலாமை இவர்களைப் போன்றவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
நண்பர் நெத்தியடி முகம்மது,
பர்ப்பனீய இந்து மதத்தைவிட இஸ்லாமிய மதம் முற்போக்கானது தான். இதில் ஐயம் ஒன்றும் இல்லை. சாதிய அடையாளங்களை இஸ்லாம் அழித்திருக்கிறதா என்றால், ஆம் அழித்திருக்கிறது அதிலும் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இஸ்லாம் மட்டுமே சாதியை ஒழிப்பதற்கான ஒரே தீர்வு என்பதில் தான் சிக்கல் இருக்கிறது. இஸ்லாத்திற்கு மதம் மாறுவதால் மட்டும் சாதி அழியவில்லை. இஸ்லாத்திற்கு மாறியவர்கள் முதலியாரென்றும், இன்னும் சாதியப்பெயர்களிலும் அறியப்படுவதில்லை தான். ஆனால் எப்படி? தனித்தனி சாதிக்கூடாரங்களில் இருந்தவர்களை விடுவித்து இஸ்லாம் என்னும் பெரிய மதக்கூடாரத்தில் இருத்தியிருக்கிறது. பெரிய கூடாரத்திற்கு வந்தபின் அவர்களின் முந்தைய சின்னக்கூடார அடையாளங்கள் மறைந்து விட்டன. பெரியாரும் இப்படி சாதி மத அடையாளங்களை மாற்றிக்காட்டியிருக்கிறார். கம்யூனிஸ்டுகளாகிய எங்களிடம் சாதி, மத, இன, இட, மொழி பேதங்களில்லை. ஆனால் சாதி ஒழிப்பு என்பது என்ன? வெறும் அடையாளங்களை ஒழிப்பதா? முஸ்லீம்களாக மாறிய பின் சாதிப்பெயர்களோ வேறு அடையாளங்களோ அவர்களிடம் இல்லை ஆனால் இயல்பில் இல்லை என மறுக்க முடியாது. ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமை நேசிக்கும் அளவுக்கு ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்டு மனிதக்கழிவுகளை அகற்றும் ஒருவரை நேசிக்க இயலாது என்பதற்கு அனேக நடைமுறை சான்றுகளை காட்ட முடியும். இஸ்லாத்திற்கு மாறிய பின்னர் நாங்கள் பேதம் பார்ப்பதில்லை என்பதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியுமென நினைக்கிறேன். இஸ்லாத்தில் சாதியில்லை என்று குரான் ஹதீஸ் வசனங்களை கொண்டு வந்து சாதிப்பீர்களேயானால், முதலியார்களுக்குள் பேதமில்லை, செட்டியார்களுக்குள் தீண்டாமையில்லை என சாதிச்சங்கங்களும் அழைத்துக்கொள்ள முடியும். இந்து மதத்தில் சேர்க்க முடியாது இஸ்லாமிய மதத்தில் சேர்த்துக்கொள்ள முடியும் என்பதா பிரச்சனை? இதுவா சாதி ஒழிப்பு? அனைவரும் ஆதாமின் மக்கள் என்பது வெறும் கொள்கையளவில் இருந்தாலும் முஸ்லீம்களின் இயல் வாழ்வில் தாக்கம் செலுத்தத்தூண்டிய காரணி பார்ப்பனீயம் தான் என்பதில் உங்களுக்கு ஐயம் ஏதும் உண்டா?
பார்ப்பனீயம் என்பதன் பொருளை நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள்? தொடரும் உங்கள் கோபத்திற்கு இரண்டு காரணங்களை என்னால் அனுமானிக்க முடிகிறது. ஒன்று, தூயதான எங்கள் மதத்தை இன்னொரு மதத்தில் சரணடந்து விட்டதாக எப்படிக்கூறலாம்? இரண்டு, 1400 ஆண்டுகளுக்கு முன்பே பூர்த்தியாகிவிட்ட எங்கள் மதத்தில் புதிதாக ஒரு மாற்றம் எனும் தோற்றத்தை எப்படி ஏற்ப்படுத்தலாம்? இந்த இரண்டும் சேர்ந்து தான் முஸ்லீம்களையும் இஸ்லாத்தையை பிரிக்கச்சொல்கிறது. புளித்தமாவு என கோபப்படும் நீங்கள் எங்கு விமர்சனம் என்றாலும் இஸ்லாத்தை முஸ்லீம்களிடமிருந்து பிரிக்க வேண்டும் என்பதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் பார்ப்பனீயம் என நாங்கள் அழைப்பது நீங்கள் புரிந்துகொண்டிருப்பதைவிட ஆழமானது. முஸ்லீமாகப்பிறந்த அப்துல் கலாமை நாங்கள் பார்ப்பனீயவாதி என விளிக்கும் காரணமென்ன? ஒடுக்கப்பட்ட பிரிவைச்சேர்ந்தவரானாலும் இசையமைப்பாளர் இளையராஜாவை பார்ப்பனீயத்தில் வாழ்பவர் என நாங்கள் விமர்சிப்பதை நீங்கள் கேட்டதில்லையா? என்னவாகப்பிறந்தாலும் ஒருவரின் பிறரை ஒடுக்கிவாழும், பார்ப்பனீயத்தை விலக்கி வாழ மறுக்கும் நடப்பை வைத்து அவரை பார்ப்பனீயத்தானாக எப்படி அம்பலப்படுத்துகிறோமோ அதே அளவுகோலின்படியே ஈடேற்றத்திற்கான ஒரே வழி என எழுத்தில் இருந்தாலும் நடப்பில் பார்ப்பனீயத்தை வரித்துக்கொண்டிருக்கும் ஒன்றை பார்ப்பனீயத்திடம் சரணடைந்ததாகக்கூறுவதில் என்ன தவறு? மீண்டும் முஸ்லீம்கள் தவறு இஸ்லாத்திற்கு இல்லை என கூறமாட்டீர்கள் என நினைக்கிறேன்.
இன்னும் நீங்கள் தலைப்பில் தவறு என்பதில் உறுதியுடன் இருந்தால் தெளிவான காரணங்களோடு மறுப்புக்கூறுங்கள் ஆனால் உங்களோடு மோதுகிறது என்பதால் மட்டுமே ஒன்று தவறாகிவிடாது என்பதையும் மனதிலிருத்துங்கள்.
தோழமையுடன்
செங்கொடி
நண்பர் செங்கொடி,
////பர்ப்பனீய இந்து மதத்தைவிட இஸ்லாமிய மதம் முற்போக்கானது தான். இதில் ஐயம் ஒன்றும் இல்லை. சாதிய அடையாளங்களை இஸ்லாம் அழித்திருக்கிறதா என்றால், ஆம் அழித்திருக்கிறது அதிலும் மறுப்பதற்கு ஒன்றுமில்லை.//// இப்படி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டு பார்பநீயத்தில் இஸ்லாம் சரணடைந்ததாக டுபாக்கூர் விடுவது உங்களுக்கே அசிங்கமாயில்லையா?
////தனித்தனி சாதிக்கூடாரங்களில் இருந்தவர்களை விடுவித்து இஸ்லாம் என்னும் பெரிய மதக்கூடாரத்தில் இருத்தியிருக்கிறது. பெரிய கூடாரத்திற்கு வந்தபின் அவர்களின் முந்தைய சின்னக்கூடார அடையாளங்கள் மறைந்து விட்டன////—இது எதனால்? இஸ்லாம்தானே காரணம்…!
////பெரியாரும் இப்படி சாதி மத அடையாளங்களை மாற்றிக்காட்டியிருக்கிறார்.//// —கப்சா…அப்புறம் ஏன் பெரியார் அவர்களும் ” ஒரு தீண்டத்தகாதவனாக இருந்து நாத்திகனாக வாழ்வதை விட தீண்டாமையை ஒழித்து ஆன்மீகவாதியாக வாழ்வதே மேல்” என்றும் பிறிதொரு இடத்தினில் “இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே தீர்வு” என்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டி விட்டு சென்றிருக்கின்றார்?
///கம்யூனிஸ்டுகளாகிய எங்களிடம் சாதி, மத, இன, இட, மொழி பேதங்களில்லை./// —இதுவும் கப்சா. நான் பலமுறை செய்தித்தாள்களில் படித்துள்ளேன். அவர் ‘தலித் கம்யூனிஸ்ட்’, ‘இவர் FC கம்யூனிஸ்ட்’ என்றெல்லாம்… எந்த அடையாளம் மாறியது செங்கொடி? தலித் ஹிந்து விலிருந்து தலித் கம்யூனிஸ்ட் என்று மாறிஇருக்கிறது. இவர் இந்தியாவில் உயர் அரச பதவியில் – இராணுவத்துறை அமைச்சராகிறார் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், இவர் சிலை திறந்தால், தீட்டு என்று அவர் திறந்துவிட்டு போனதும் சடங்கு செய்வார்கள். இவர், ஜனாதிபதியே ஆனாலும், கோவிலில் கும்பிட்டுவிட்டு போனதும் கோவிலையே அலம்பி தீட்டு கழிப்பார்கள். உங்கள் – கம்யூனிஸ்டுகளால் இதனை ஒழிக்க முடிந்ததா? கோஷம் போட்டுவிட்டு கலைந்து விடுவீர்கள். மீண்டும் இதே மாதிரியான கொடுமை எதிர்காலத்தில் ஒரு மக்களவைத் தலைவர்க்கு நடந்தால் மறுபடியும் ஒருமுறை கோஷம் போட்டுவிட்டு கலைந்து விடுவீர்கள். உங்களால் கொடுமையை ஒழிக்க முடிந்ததா இதுவரையில்? முடியுமா? அனால், ஒரு ஹிந்து தலித்தோ, கிருஸ்த்துவ தலித்தோ இஸ்லாமிய மதத்தை தழுவினால் அவருக்கு இந்த அநீதி அதே அடக்குமுறை சமுதாயத்திலிருந்து நடந்திருக்கிறதா என்பதை ஏன் சிந்திப்பதில்லை?
அகவே, ///ஆனால் சாதி ஒழிப்பு என்பது என்ன? வெறும் அடையாளங்களை ஒழிப்பதா? முஸ்லீம்களாக மாறிய பின் சாதிப்பெயர்களோ வேறு அடையாளங்களோ அவர்களிடம் இல்லை ஆனால் இயல்பில் இல்லை என மறுக்க முடியாது./// -இட்டுக்கட்டப்பட்ட நம்பமுடியாத – நடப்பு உண்மைக்கு மாறான… ஒரு பொய்.
///முதலியார்களுக்குள் பேதமில்லை, செட்டியார்களுக்குள் தீண்டாமையில்லை /// சுத்த பேத்தல், நீங்கள் இப்படி சொல்லலாமே. “ஒரு தனி மனிதனுக்குள் தீண்டாமை இல்லை. அவனே அவனை தொட்டுக்கொல்கிறான். எனவே தீண்டாமை என்பதே பொய்’ – சுத்த காமெடி. சொன்னாலும் சொல்வீர்களய்யா. உங்கள் நோக்கம், ‘இஸ்லாத்தில் பார்ப்பனியம் உள்ளது’ என்று சொல்வதுதானே…!
///இஸ்லாத்திற்கு மாறிய பின்னர் நாங்கள் பேதம் பார்ப்பதில்லை என்பதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியுமென நினைக்கிறேன்./// –புரியவில்லை. ஏனென்றால், உங்களுக்கே தெரிகிறது. நீங்களே சாதிகள் என்று இட்டுக்கட்டி பொய் சொல்லும், கஹ்தானிகள், ஷம்மாரிகள், அஸ்மாரிக்கள், அம்ரிக்கள், தோச்சரிக்கள் எல்லாரும் ஒரே சஹானில் ஒன்றாய் சாப்பிடுவார்கள். எந்த நாட்டு முஸ்லிமுடனும் சேர்ந்து சாப்பிடுவார்கள். அந்த முஸ்லிம் கழிப்பறை தூய்மைப்படுத்துவோராய் இருந்தாலும். ஆனால், அதே நபர் மாற்றுமத நபராய் -அலுவலகத்தில் உயர்ந்த அதிகாரம் படைத்தவராய்- அவ்வளவு ஏன்?- ஒரு அமெரிக்க அதிபராய் இருந்துவிட்டு போகட்டுமே, சஹானில் சேர்ப்பார்களா? மாட்டார்கள். அவர் தன்னை மனப்பூர்வமாக இஸ்லாத்தில் இணைத்து முஸ்லிமாகிவிட்டால், சஹானில் சேர்க்க இவர்கள் மறுப்பார்களா? இதுவும் மற்றதும் ஒன்றா? ஒரு தலித் கம்யூனிஸ்ட், பிராமின் கம்யூனிஸ்ட் ஆக முடியுமா? ஒரு தலித் கிறிஸ்து நாடார் கிறிஸ்து ஆக முடியுமா? ஒரு தலித் ஹிந்து, தேவர் ஹிந்து அல்லது பிராமின் ஹிந்து ஆக முடியுமா? இல்லைதானே? அப்புறம் எப்படி எல்லாம் ஒரே மாதிரி கூடாரம் என்கிறீர்கள்? ஒரே கூடாரத்துக்குள் இவ்வளவு முரண்பாடுகள் இருக்கின்றனவே? இதற்குக்காரணம் பார்ப்பனீயம் இல்லையா? இந்த பார்ப்பனியம் ஏன் முஸ்லிம் கூடாரத்துக்குள் நுழையமுடியாமல் அடித்து விரட்டப்படுகிறது? பின்னர், எப்பை இஸ்லாம் பார்ப்பனியத்தில் சரண் அடைந்துவிட்டதாக கதை அளக்கிறீர்கள்? –இப்படி எல்லாம் நான் கேட்பேன் என்றுதான், ///பார்ப்பனீயம் என்பதன் பொருளை நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள்?//// –இப்படி புதிதாக ஜோடிக்கிறீர்கள். பார்ப்பனீயம் என்றால் என்ன என்று உலகம் எப்படி புரிந்து வைத்து இருக்கிறதோ அப்படித்தான் அய்யா நான் புரிந்து வைத்துள்ளேன். அப்துல் கலாமும் இளையராஜாவும் பார்ப்பனர்களாம். யாராவது அவர்கள் உடலில் பூணூல் அணிந்திருப்பதை பார்த்தால் – இருந்தால் சொல்லுங்கள். செங்கொடி தன் வாத்தத்தை நிரூபிக்க. ஒரு பணக்கார தலித் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு ஏழைக்கு அவர் முதலாளி தலித் அல்ல. அவர்…பார்ப்பனர். எங்க போய் எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை. அர்த்தமற்ற பதில்கள். முதலில் குடும்பபெயர்கள், ஊர்ப்பெயர்கள் எல்லாம் சாதிகள் எம்ரீகள். அப்புறம் இஸ்லாமே ஒரு சாதி என்று ஒரே போடாய் போட்டீர்கள்.. பார்ப்பனர்கள்-பார்ப்பனீயம் போன்ற வற்றையும் திரிக்க ஆரம்பித்துள்ளீர்கள். இன்னும் என்னன்னவோ. இந்தக்கெனத்தனத்துக்குத்தான் நான் பதிலளிக்கவேண்டுமா என்று நான் சும்மா இருந்தேன். ஆனால், ‘பார்தீர்களா…! முஸ்லிம்களிடம் பதில் இல்லை…!’ என்று அசிங்கமாய் பிரச்சாரம்…ச்சே.
///அனைவரும் ஆதாமின் மக்கள் என்பது வெறும் கொள்கையளவில் இருந்தாலும் முஸ்லீம்களின் இயல் வாழ்வில் தாக்கம் செலுத்தத்தூண்டிய காரணி பார்ப்பனீயம் தான் என்பதில் உங்களுக்கு ஐயம் ஏதும் உண்டா?///
—-அவன் நின்றுகொண்டே ஓடிக்கொண்டிருக்கிறான்.(???) -முடியுமா?
—-இரத்த ஒட்டம் இல்லை. ஆனால், சுவாசிக்கிறான். (???) -முடியுமா?
ஒரே ஜோடி மனிதரை படைத்து அதிலிருந்து உலக மக்கள் அனைவரையும் உருவாக்கி உயிர்கொடுத்த அந்த ஒரே இறைவனுக்கு, மனைவி-குழந்தை-சந்ததி இல்லை என்று நம்பும் ஒரு முஸ்லிம் எப்படிங்க அந்த இறைவனின் தலையிலிருந்து காலிலிருந்து அதிலிருந்து இதிலிருந்து பிறந்தான் என்ற சாதி சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியும்? இஸ்லாம்பற்றி அடிப்படை கூட அறியாத உங்களைப்போல்-இந்த பதிவில் உள்ள சில உ.பி. முஸ்லிம்களைப்போல் இருந்தால்தான் இது சாத்தியம். அதாவது….
—-“நூறு டிகிரியில் தண்ணீர் ஆவியாகும், சீரோ டிகிரியில் தண்ணிர் பனிக்கட்டியாகும் என்பது கொள்கை அளவில் இருந்தாலும், நூறு டிகிரியில் தண்ணீர் பணிக்கட்டியாகிறது. சீரோ டிகிரியில் தண்ணிர் கொதித்து ஆவியாகிறது என்பதில் உங்களுக்கு ஐயம் ஏதும் உண்டா?” என்று நீங்கள் உளறுவது, எப்படி?.
////ஈடேற்றத்திற்கான ஒரே வழி என எழுத்தில் இருந்தாலும் நடப்பில் பார்ப்பனீயத்தை வரித்துக்கொண்டிருக்கும் ஒன்றை பார்ப்பனீயத்திடம் சரணடைந்ததாகக்கூறுவதில் என்ன தவறு? மீண்டும் முஸ்லீம்கள் தவறு இஸ்லாத்திற்கு இல்லை என கூறமாட்டீர்கள் என நினைக்கிறேன்./// —எப்படி கூறாமல் இருக்க முடியும்? உங்களுக்கு புரியவில்லை. கம்யூனிஸ்டை உதாரணம் கூறினால், அவர்கள் போலிகள் என்பீர்கள். இப்படியே எல்லாரையும் போலிகள் என்றால், யாரும் மிஞ்சி இல்லை… அதனால், வேறு உதாரணம் கூறுகிறேன். நம் நாட்டில் எந்த அரசு அலுவலகம் சென்றாலும் லஞ்சம் உள்ளதல்லவா? கட்டாயம் மக்களிடம் லஞ்சம் வாங்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளதா? நடைமுறையில் வாங்குகிறார்களே? எதிர்க்காமல் கேட்டவுடன் கொடுக்கிறார்களே? இதனை நம் எதிரி நாட்டு இணையதளம் ஒன்று
இப்படி எழுதுகிறது. “லஞ்சத்தை அங்கீகரித்த இந்தியா மற்றும் இந்திய சட்டம்” (??!!??) இது உங்கள் வாதப்படி சரி. இவர்களை உங்களால் எதிக்க முடியாது. ஆனால், நாங்கள் எதிர்போம். எப்படி? ”
|||||| ஐயா, 99 % சதா அரசு அலுவலகங்களில் லஞ்சம் இருப்பதால் இப்படி எழுதலாமா? இது அபாண்டம். ஒவ்வொரு அலுவலகத்திலும் எல்லா அலுவலர்களுமா வாங்குகிறார்கள்? ஒட்டுமொத்தமாய் எல்லா இந்திய மக்களுமா லஞ்சத்தை ஆதரிகிறார்கள்? எத்தனையோ பேர் எதிர்ப்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்? எனக்குத்தெரிந்து ஒரு சில அலுவலகங்களில் 99 % ஊழியர்கள் வாங்குவதில்லையே? இதுபோல் 70 , 50 , 30 , 10 , 1% ஊழியர்களை லஞ்சம் வான்காதவர்களாய் கொண்ட அலுவலகங்கள் இருக்கின்றனவே. அப்படிஎன்றால், ஒழுக்கமாய் வாழும்-வாழ நினைக்கும் மற்றவர்களை எப்படி இந்த தலைப்பில் பொதுமைப்படுத்துவீர்கள்?,
அப்படி சொல்வது மற்ற கணிசமான பாதி நல்லவர்களின் மேல் இட்டுக்கட்டப்படும் அவதூறு மற்றும் அநீதி அன்றோ? – இப்படியெல்லாம் கேட்டு சண்டைக்கு போவோம். ஆனால், நீங்கள்? உங்கள் “கொள்கைப்படி” முடியாது.- ச்சீ, கேவலம் |||| இதே விதிமுறை உங்களின் -வினவின் தலைப்பிற்கும் பொருந்தாதோ? நீங்களே ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட ஒப்புதல் வாக்குமூலத்திற்கு எதிரான அராஜகம் அல்லவா இது? தமிழ்நாட்டில் உள்ள 1.5 கோடி முஸ்லிம்களும் பார்ப்பனீயத்தில் சரணடைந்து விட்டார்களா? இந்தியாவில் உள்ள 20 கோடி முஸ்லிம்களும் பார்ப்பனீயத்தில் சரணடைந்து விட்டார்களா? உலகத்தில் வாழும் 200 கோடி முஸ்லிம்களும் பார்ப்பனீயத்தில் சரணடைந்து விட்டார்களா? அப்புறம் எப்படி இஸ்லாம் பார்ப்பனியத்தில் சரணடைந்த்ததாக ஏற்றுக்கொள்வது? முட்டால்களாயா நீங்கள்?
இதெல்லாம் யாரை ஏமாற்ற? தமிழ்மணத்தில் ஹிட்ஸ் வர வேண்டும் என்றா? நிறைய பின்னூட்டங்களை குவித்து நம்பர் ஒன் தளம் என்று வரவேண்டும் என்றா? மகஇக தோழர்களை ஏமாற்றவா? அல்லது, ஒடுக்கப்பட்டவர்கள், இஸ்லாமிய மதத்திற்கு சென்றுவிடக்கூடாது என்று தலித்துகளை ஏமாற்றவா? பொய்ப்பிரச்சாரம் ஏன்? “பார்ப்பனியத்தை ஒழித்த கம்யூனிசம்” என்று எப்போதாவது பதிவு போடுவீர்கள்? ஒருக்காலும் முடியாது. கேட்டால், மதத்தை ஒழித்தால்தான், சாதி போகும் என்பீர்கள். உங்களால் மதத்தையும் ஒழிக்க முடியாது. பின்னர் எப்படி சாதியை ஒழிப்பீர்கள்? கோவிலுக்கு செல்லும் கம்யூனிஸ்டுகளை நான் நிறைய பார்த்திருக்கிறேன். உடனே அவர்கள் போலிகள். அப்போ, யார்தான் ஒரிஜினல்? காட்டுங்களேன்?
என்னங்க, உங்கள் கண்ணுக்கு எதிராக, சாதியையும் ஒழித்து இறை நம்பிக்கையையும் வளர்த்துவரும் இஸ்லாம், உங்கள் வரட்டுவாதத்திற்கு -வெற்றுக்கூற்றுக்கு -‘இளவு காத்த கிளி’யின் எதிர்பார்ப்பிற்கு- “மதத்தை ஒழித்தால்தான், சாதி போகும்”-என்ற உங்கள் மூடநம்பிக்கைக்கு எதிராய்-உங்கள் பிழைப்புவாதத்திற்கு எதிராய்——- சாதித்த ….சாதித்துக்காட்டிய இஸ்லாம் உங்களுக்கு எதிரியாக -அழித்தொழிப்பு செய்யப்படவேண்டிய வில்லனாக தெரிவதில் எனக்கு-உலக முஸ்லிம்களுக்கு ஆச்சரியமாக தெரியவே இல்லைங்கோ…!
பின்னர் எப்படி இந்த பதிவில்…அப்படி…என்று கேட்பீர்கள்? நம் நாட்டில் உள்ள மதங்களில் யார் குறைந்த கல்வியறிவு பெற்றவர்கள்? முஸ்லிம்கள். நம்நாட்டிலேயே எந்த மாநிலங்களில் கல்வியறிவு கம்மி? பிஹார், உ.பி., ஜார்க்கன்ட் போன்றவை. இப்படி கல்வி அறிவில் குறைந்த மக்களுக்கு கல்வி (இஸ்லாம் பற்றியும் தான்)அறிவை போதிப்பதா? அதைவிட்டுவிட்டு, உலக முஸ்லிம்களே இப்படித்தான் என்று பொய்ப்பிரச்சாரம் செய்வதா? அதைத்தாநேய்யா, அந்த மனிதரும் செய்கிறார்? சிந்திப்பீர்களா தோழர்களே? “நம்நாட்டிலேயே எந்த மாநிலங்களில் கல்வியறிவு கம்மி?” இதைவைத்து நம் நாட்டின் கல்வியறிவு முப்பது சதம் என்று அறிவிப்பீர்களா? அல்லது, “கல்லாமையில் சரணடைந்த இந்தியா” என்று பதிவிக்கு தலைப்பிடுவீர்களா? வருடாவருடம் கல்வியறிவு % அதிகரிக்கிறதா என்பத்தைத்தானே அறிவாளிகள் பார்க்க வேண்டும்? அப்படியே குறைந்து கொண்டுபோய் ௦.9% -இந்தியாவின் கல்வியறிவு என்ற நிலை வருமானால், அந்த தலைப்பு சரியாகலாம். உங்கள், சிந்தனை வறட்சி சகிக்கவில்லை என்றால், அதற்கு உங்கள் அனைவரது சப்பைக்கட்டு படு கேவலம். அசிங்கம். நம்மவர்கள் இப்படியா தரம் தாழ வேண்டும். கேரளாவில்-தமிழகத்தில் கல்வி அறிவு கூடியபோது, அதேபோல போலி முஸ்லிம் உலமாக்களை அடையாளம் கண்டுகொண்டு ஒதுக்கிவிட்டு முஸ்லிம்கள் இப்போது தூய இஸ்லாத்தை அறிந்து வாழ்வில் முன்னேருகிரார்களே, அது தெரியவில்லையா? தெரியும். சேந்க்கொடியை கண்ணில் கட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டு கிடந்தால் எப்படி தெரியும். விழித்துப்பார்க்கவேண்டும், தோழா!
இன்னும் ‘நீங்கள் தலைப்பில் தவறு இல்லை’ என்பதில் உறுதியுடன் இருந்தால் தெளிவான காரணங்களோடு மறுப்புக்கூறுங்கள். ஆனால் இஸ்லாம் கொள்கையளவில் உங்களோடு மோதுகிறது என்பதால் மட்டுமே அது தவறாகிவிடாது என்பதையும் மனதிலிருத்துங்கள்.
அதே தோழமையுடன்
முஹம்மத்.
அன்பு சகோதரர் முஹம்மத் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….
அல்ஹம்துலில்லாஹ்…. எவ்வளவு பொருள் பொதிந்த மறுமொழி. இதை படித்தும் இவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்கள் மண்டையில் மூளை இல்லை. களிமண் தான் இருக்கிறது என்று அர்த்தம்.
வினவு குழு உண்மையில் நேர்மையான குழுவாக இருந்தால் நேரடியாக இஸ்லாமிய அறிஞர்களுடன் விவாதத்திற்கு வர வேண்டும். அப்படி வருமா ம.க.இ.க குழு?
நண்பர் நெத்தியடி முகம்மது,
உங்களின் நெருக்கடி உங்கள் பதிலில் எதிரொலிக்கிறது.
பார்ப்பனீயத்தின் கூறுகளை இஸ்லாம் உள்வாங்கியிருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் உங்களுக்கு தரப்பட்டிருக்கின்றன, உங்கள் வேதம் வியாக்கியானங்களிலிருந்தும், நடைமுறையிலிருந்தும். அவைகளுக்கு தகுந்த மறுப்பு கூறாமலும், விளக்கங்கள் தராமலும் வாழாவிருந்துவிட்டு, மீண்டும் அதே புரட்டுகளுடன் புறப்பட்டிருக்கிறீர்கள். இந்தப்பதிவின் முதல் பின்னூட்டத்திலேயே இப்படி குறிப்பிட்டிருக்கிறேன், “பார்ப்பனீய இந்துமதத்தின் வடிவத்தில் இருந்தால் மட்டும்தான் அது சாதியாகுமா? இஸ்லாத்தில் அல்லது முஸ்லீம்களிடம் இருக்கும் சாதியின் வடிவம் வேறுவிதமானது.” “பொது இடங்களில் கட்டிப்பிடித்து சகோதரத்துவத்தை வெளிப்படுத்திக்கொண்டாலும் கஹ்தானிகளும் அஸ்மரிகளும் தங்களுக்குள் மண உறவு கொள்ளமுடியுமா?” ஆனால் நீங்களோ ஒரே தட்டில் சாப்பிடுவதாக கூறிக்கொண்டு அதையே சாதியின்மையின் அடையாளமாக நிருத்துகிறீர்கள். தீண்டாமையின் வடிவத்தில் இஸ்லாமின் சாதி இல்லை என்பதை நாங்களே விளக்கிவிட்ட பிறகும்; இஸ்லாமில் தீண்டாமை இல்லை எனவே சாதியும் இல்லை என நீங்கள் கூறுவீர்களாயின் உங்களை என்னவென்று அழைப்பது? அதையும் நீங்களே கூறிவிடுங்கள். பார்ப்பனீய இந்து மதத்திற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் உள்ள வேறுபாடு, அங்கு தனித்தனியாக பல கூடாரங்கள் இருக்கிறது, இங்கு ஒரே கூடாரமாக இருக்கிறது என்பது தான். அங்கு தனித்தனியாக இருப்பதால் தனித்தனியான அடையாளங்கள், இங்கு ஒன்றாக இருப்பதால் ஒரே அடையாளம். இதை சாதியின்மை என நீங்கள் கருதுவீர்களாயின் மண உறவுகள் தடுக்கப்பட்டிருப்பதன் காரணத்தை நீங்கள் சிந்திக்கவேண்டியவர்களாவீர்கள். இது உங்கள் வேதத்திலிருந்தும், உங்கள் ஒரே தலைவரின் வாழ்முறையிலிருந்தும் வந்திருந்தால் நீங்கள் இங்கு வாதிடும் அடிப்படையே தகர்ந்துபோகும். மாறாக அது இந்தியாவின் ஆதிக்கவாதமான பார்ப்பனியத்திலிருந்து வந்திருந்தால் இடப்பட்ட தலைப்பு சரியானது என்றாகும். மாறாக இந்த இரண்டையும் மறுத்து மீண்டும் புளித்த தோசையான முஸ்லீம்கள் தவறு இஸ்லாத்தைச்சேராது என்பதை பரிமாறுவீர்களானால் என்னுடைய முந்தைய பின்னூட்டத்தின் ஒருபகுதியான, “ஒரு நீதிபோதனை நூல் நல்ல நடத்தைகளை கூறுகிறது அதன்படி மக்கள் நடக்கவில்லை அதற்கு அந்த நூல் பொறுப்பேற்க முடியாது என்பதற்கும்; இஸ்லாத்தில் சாதி கூறப்படவில்லை முஸ்லீம்களில் இருக்கிறது என்பதால் அவைகளுக்கு இஸ்லாம் பொறுப்பேற்காது என்பதற்கும் வித்தியாசம் உண்டு. எவ்வாறெனில் ஒரு நீதிபோதனை நூலைவிட இஸ்லாமின் வேதத்திற்கு மதிப்பும் தகுதியும் மிகமிக அதிகம். இது சரியானது என்றால் நீதிபோதனை நூலைவிட வேதத்திற்கு கடப்பாடும் அதிகம் இருக்கவேண்டும் என்பது தானே சரியாக இருக்கமுடியும்? இஸ்லாத்திற்கு பொறுப்பில்லை எனக்கருதினால் நீதிபோதனை நூலுக்குள்ள மதிப்புதான் வேதத்திற்கும் என்று இவர்களின் வாதப்படி பொருளாகும். இதை இவர்கள் ஏற்பார்களா? அடுத்து இஸ்லாமிய சித்தாந்தப்படி மனிதர்களின் (அல்லது முஸ்லீம்களின்) செயல்களை இயக்குவது கடவுளின் விருப்பமேயன்றி மனிதர்களின் விருப்பமல்ல. ஆக மனிதர்களின் சிந்தனைப்படி அமையாத அவர்களின் தவறுகளுக்கு அவர்களை இயக்கிய கடவுளின் புறத்திலிருந்துவந்த(!) மதத்தை பொறுப்பாக்க முடியாது என்பது எந்த விதத்தில் சரியாகும்” என்பதற்கு பதில் கூற வேண்டும். எப்படி வசதி?
உங்களின் புழுகு மூட்டையான “‘தலித் கம்யூனிஸ்ட்’, ‘இவர் FC கம்யூனிஸ்ட்’” என்பதெல்லாம் நான் பதில் கூறும் தரத்தில் இல்லை. அப்துல் கலாமையும், இளையராஜாவையும் பார்ப்பனீயவாதிகள் என்று நாங்கள் புது விளக்கம் கொடுக்கவில்லை, இங்கு வினவு தளம் தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே அவர்களை அப்படித்தான் விமர்சித்து வருகிறோம். நீங்கள் இஸ்லாமில் சாதியில்லை என்பதற்கு என்ன அளவுகோலை வைத்திருக்கிறீர்களோ அதே அளவுகோலைக்கொண்டு அவர்களின் உடலில் பூனூல் இல்லை என்கிறீர்கள். உங்களுக்குத்தேவை வெறும் அடையாளம், எங்களுக்கோ உள்ளடக்கமே இன்றியமையாதது.
கையூட்டு (லஞ்சம்) குறித்து ஒரு எடுத்துக்காட்டை கூறியிருக்கிறீர்கள். மீண்டும் தவறுகிறீர்கள் தவறாக ஒப்பிட்டிருக்கிறீர்கள். சட்டத்தில் கையூட்டு அனுமதிக்கப்படவில்லை எனவே இந்தியாவே கையூட்டில் திளைத்திருப்பதாக கூறக்கூடாது அதன் 99 விழுக்காடினர் அதில் ஈடு பட்டிருந்த போதிலும். வேண்டுமானால் இந்தியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று வேன்டுமானால் கூறிக்கொள்ளுங்கள் என்கிறீர்கள். நாங்கள் 99 விழுக்காடினர் ஈடுபட்டிருப்பதால் இந்தியாவே ஈடுபட்டிருப்பதாக எடுத்துக்கொண்டு அது எங்கிருந்து வந்தது? எந்த அடிப்படையில் நிலைத்திருக்கிறது? என்பதை ஆய்ந்து அதற்கு எதிராக போராடுகிறோம். இந்தியாவில் பார்பானீய அடிப்படையில் சாதி, அரேபியாவில் குலம் கோத்திரம் என்ற அடிப்படையில் சாதி, ஈரான் ஈராக் போன்ற நாடுகளில் ஷியா சன்னி அடிப்படையிலான சாதி, பாக்கிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் கிராமியப்பொருளாதார அடிப்படையிலான சாதி, ஆப்பிரிக்கை நாடுகளில் இனத்தின் அடிப்படையிலான சாதி என 99 விழுக்காடினர் சாதிய அடிப்படையில் இருப்பதால் இஸ்லாத்தையே சாதியில் வீழ்ந்து கிடப்பதாக விளித்து எந்த அடிப்படையில் அவர்களை மீட்டெடுப்பது எனும் வழியில் செயல் படுகிறோம். நீங்களோ இஸ்லாமின் கோட்பாடுகளில் சாதி சொல்லப்படவில்லை எனவே இஸ்லாத்தை குறை சொல்லாதீர்கள் வேண்டுமானால் முஸ்லீம்களை சொல்லிக்கொள்ளுங்கள் என்கிறீர்கள். இஸ்லாம் என்பது என்ன? குரானும் ஹதீஸும் மட்டுமதானா? இஸ்லாமியர்களுக்கு அதில் என்ன பங்கு?
நண்பரே நோய் உங்களுக்கு எங்களை மருந்து விழுங்கச்சொல்லாதீர்கள்
தோழமையுடன்
செங்கொடி
நண்பர் செங்கொடி,
நான் சொன்னவற்றை உங்கள் வசதிக்கேற்றவாறு நன்றாய் திரித்திருக்கிறீர்கள்.
///அதன் 99 விழுக்காடினர் அதில் ஈடு பட்டிருந்த போதிலும். வேண்டுமானால் இந்தியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று வேன்டுமானால் கூறிக்கொள்ளுங்கள் என்கிறீர்கள். நாங்கள் 99 விழுக்காடினர் ஈடுபட்டிருப்பதால் இந்தியாவே ஈடுபட்டிருப்பதாக எடுத்துக்கொண்டு…/// —நான் அப்படியா சொல்லி இருக்கிறேன். மீண்டும் படியுங்களேன். இதுபோல உண்மையை ஏனய்யா திரிக்கிறீகள் என்றால், அதையே மீண்டும் செய்து காட்டி உங்களை நீங்களே வெளியுலகிற்கு போட்டுக்கொடுத்துள்ளீர்கள். (ஒரு மாநிலத்தில் ஒரு முதல்வர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு முதல்வர். எனவே இந்தியா முழுக்க இருப்பது முதல்வர்களே. மக்களே இல்லை..! ஆஹா! சூப்பர்!) நன்றி.
இதுபோலவே மொத்தமாய் உங்கள் மறுமொழி புளுகு மூட்டைகல் நிறைந்த கொடவுனாக இருக்கிறது.
உதாரணம்:- (ஒரு குடோனுக்கு ஒரு மூட்டை பதம்)
“கம்யூனிஸ்ட் செய்யும் செயலுக்கு அவன்தான் பொறுப்பு. ஏனென்றால் கம்யூனிச சித்தாந்தத்தின்படி கடவுள் இல்லை. எனவே அவனை யாரும் இயக்கவில்லை” என்கிறீர்கள். —ரோம்பத்தெளிவு…!
ஆனால்,
இவ்வளவு தெளிவாக கடவுளை மறுத்துவிட்டு……
///இஸ்லாமிய சித்தாந்தப்படி மனிதர்களின் (அல்லது முஸ்லீம்களின்) செயல்களை இயக்குவது கடவுளின் விருப்பமேயன்றி மனிதர்களின் விருப்பமல்ல. ஆக மனிதர்களின் சிந்தனைப்படி அமையாத அவர்களின் தவறுகளுக்கு அவர்களை இயக்கிய கடவுளின் புறத்திலிருந்துவந்த(!) மதத்தை பொறுப்பாக்க முடியாது என்பது எந்த விதத்தில் சரியாகும்” என்பதற்கு பதில் கூற வேண்டும். எப்படி வசதி?///
இப்படி கூறுகிறீர்களே….
அப்படிஎன்றால்,
இஸ்லாம் கூறும் கடவுளை ஏற்றுக்கொண்டீர்களா? உங்கள் கம்யூனிச கொள்கையின்படிதான் கடவுள் என்பதே இல்லையே? அப்புறம் எங்கிருந்து எப்படி திடீரென்று முளைத்தார், கடவுள்? கடவுளை ஒத்துக்கொண்டது மட்டுமல்ல…இஸ்லாமிய சித்தாந்தத்தையும் ஏற்றுக்கொண்டுவிட்டீர்களா? நீங்கள் உண்மையான கம்யூனிசவாதியாக இருந்ததால், கடவுளே கிடையாது, எனவே இஸ்லாமே கிடையாது, அப்புறம் எப்படி அவர்கள் செயலுக்கு இறைவன் பொறுப்பாகி அதன்மூலம் இஸ்லாம் பொறுப்பாகும் என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்? என் இப்படி ஆற்றிலே ஒருகால் சேற்றிலே ஒரு கால்? இதை நான் எப்படி எடுத்துக்கொள்வது? தாங்கள் இன்னும் முழுசாய் இஸ்லாத்தை விட்டு வெளிஎரவில்லையா அல்லது இன்னும் முழுசாய் கம்யூனிசத்தில் நுழையவில்லையா? ஒன்னும் புரியலை..! ///மனிதர்களின் (அல்லது முஸ்லீம்களின்) //// நீங்கள் எல்லாம் மனிதர்களில் சேர்த்தி இல்லையா? அப்புறம் எதில் சேர்த்தி? சாரி….நான் மனிதர்களிடம் மட்டும் விவாதிக்க விரும்புகிறேன். எப்படி வசதி?
ஒன்றை நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும், ஒரே தளத்தில் (இஸ்லாமோ அல்லது கம்யூனிசமோ)நின்று ஒரே கோணத்தில் உள்ள பிரச்சனைகளுக்குத்தான் ஒரே நியதி இருக்கமுடியும். ஒரே பிரச்னைக்கு மாறுபட்ட தளத்தில் நின்றுகொண்டு ஒரே நியதியை எதிர்பார்ப்பது அநீதியன்றோ. இறைநம்பிக்கை என்ற ஒன்றில் இருந்துகொண்டு நாங்கள் ஒன்றை பார்ப்பதற்கும், நாத்திக அடிப்படையில் இருந்து அந்த ஒன்றை நீங்கள் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், நீங்கள் பாதிதீர்வுக்கு ஒரு தளப்பார்வையும் மீதிதீர்வுக்கு எதிர் தளப்பார்வையிலும் சொல்லும் நீதி அணீதி-அராஜகம் அன்றோ?
நீங்களே இதே தளத்தில், பல பதிவுகளில், பல பின்னூட்டங்களில், சங்பரிவார ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலின், “முஸ்லிம்கள் குண்டு வைப்பதற்கு காரணம் இஸ்லாம், குரான், நபிகள்- எனவே அவர்கள் எல்லாரும் இஸ்லாமிய பயங்கரவாதிகள், இஸ்லாமே பயங்கரவாத மதம்” என்பது போன்றன ‘தவறான குருட்டு கூற்றுகள்’ என்று எந்த தளத்தில் நின்று -எந்த சித்தாந்த அடிப்படையில் மிகச்சரியாக எதிர்த்தீர்கள்? ஊடகங்களின் திரிபை எப்படி சரியாக விளங்கி எதிர்த்தீர்கள்? இப்போது மட்டும், இந்த சாதி விஷயத்தில் மட்டும் ஏன் நீங்களே உங்களில் முரண்படுகிறீர்கள்?
பாலஸ்தீன போராட்டம், காஷ்மீர் போராட்டம் எல்லாம், இறைவன் செயலா? அல்லது ஒடுக்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் போராட்டமா?
//ஏனெனில், இறுதியில் நம் செயல்பாட்டை மதம் தீர்மானிப்பதில்லை, நம் சமூக வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது. அந்த உண்மையிலிருந்து கற்றுக்கொண்டு இந்துத்வப் பயங்கரவாதம், இசுலாமிய பயங்கரவாதம், அமெரிக்க பயங்கரவாதம் என எல்லா பயங்கரவாதங்களையும் எதிர்த்துப் போராடுவோம்// என்று தானே சொன்னவர்கள் உங்கள் கூட்டம்? அப்போதெல்லாம், இதற்கு -‘இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு’- காரணம் இஸ்லாம் என்று சொல்லாமல், அடக்குமுறை, ஒடுக்குமுறை, உரிமை பறிப்பு, வன்கொடுமை, சமஉரிமைபரிப்பு , அநீதி…இத்யாதி இத்யாதி என்றுதானே காரணங்களை அடுக்கிநீர்கள். ஒருபோதும் மதத்தை தூர்ரியதே இல்லையே? உங்களின் அந்த சரியான கணிப்பு ஏன் ‘அஹ்மதியா’விலிருந்து மாயமானது? அதற்கு கிடைத்தது negative popularity -என்பது தெரியாமல் மயங்கிவிட்டீர்களா? எப்படி …இப்படி மாறிப்போநீர்கள்? எதற்கு இந்த பிழைப்புவாதம்? சென்ற வருட-இவ்வருட ஆரம்பத்தில் பல நல்ல பதிவுகள் வந்த இந்த தளத்தில் ஏன் இப்போது நிறைய அர்த்தமற்ற கொள்கைக்கு முரணான குப்பைகள்? Investigative journalism, out of the box thinking, expressing in a different way, writing the real truth, hard working for the articles’ preparation – இவை எல்லாம் எங்கே போய் விட்டன? எனக்கு இந்த தளத்திலிருந்து இது விடைபெறும் காலம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். கடந்த வருடங்களில், வினவின் உழைப்பில் ஒரு trainee – இடம் இருந்த அதீத அர்ப்பணிப்பு, அயராத உழைப்பு, உண்மை எல்லாம் இருந்தது. இப்போது, confirmation order வாங்கிய ஒரு ஊழியனின் அசிரத்தை, கவனக்குறைவு, தலைக்கனம், ஓப்பி அடித்தல், அகங்காரம், கர்வம், மமதை எல்லாம் தெரிய ஆரம்பித்துவிட்டன.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…. காதைக்கொண்டாங்க…… நீங்கள் சங்-பரிவார ஆர்.எஸ்.எஸ். கும்பலில் இணைந்து விட்டீர்களா? எப்போது? சொல்லவே இல்லையே?
தோழமையுடன்
முஹம்மத்.
நண்பர் நெத்தியடி முகம்மது,
வருத்தமாக இருக்கிறது உங்களின் மறுமொழியை படிக்கையில். கேள்விக்கு பதில் சொல்வது ஒருவகை, கேள்வியின் நோக்கத்திற்கு பதில் சொல்வது மற்றொரு வகை, இரண்டும் இல்லாமல் கேள்விகளின் நோக்கத்தையே சிதைத்து வார்த்தைகளை பிரித்தெடுத்து கேள்விகளாக அடுக்குவதன் மூலம் பதில்சொல்வதினின்று தப்பித்துப்போவதுதான் நெத்தியடி முகம்மதின் வகையோ. என்னுடைய பின்னூட்டங்களை பாருங்கள் எத்தனை நேரடியான கேள்விகள் பதிலின்றி நிற்கின்றன? என்னுடைய பின்னூட்டங்களை பாருங்கள் கேள்விகளிலிருந்து துளியும் விலகியிருக்கிறதா? வருத்தப்படுகிறேன் நண்பா.
உங்களுக்கு குயுக்தி அதிகம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால் தெளிவாக தெரிந்துகொண்ட பின்பும் ஒன்றை குழப்பிக்காட்டுகிறீர்களே. பொதுவுடமையின் பார்வையிலிருந்து சமூகத்தை பார்க்கிறோம் என்பதால் அந்த தளத்திலிருந்து நாங்கள் பதிலளிக்கிறோம், அது இயல்பாகவும் இருக்கிறது. ஆனால் மாதவாதப்பார்வையில் இருந்து எல்லாவற்றையும் பார்க்கும் நீங்கள்; விமர்சனம் என்றதும் அதிலிருந்து விலகி (நானே எல்லாவற்றையும் இயக்குபவன் என்று உங்கள் கடவுள் கூறியிருந்தும் அதிலிருந்து விலகி) மனிதனையும் கடவுளையும் பிரித்து மனிதனே அவன் செயலுக்கு பொறுப்பாவான் எனும் நாத்தீக தளத்திற்கு ஏறிவந்து பதில் சொல்கிறீர்கள். ஆக மதவாத தளத்திலும், நாத்தீக தளத்திலும் மாறி மாறி நின்று பதில் சொல்கிறீகள். எங்கள் பதில்கள் அவ்வாறு தளம் மாறி இருப்பதாக கருதுகிறீர்களா? ஆம் என்றால் எங்களின் பின்னூட்டங்களை மேற்கோள்காட்டி விளக்குங்கள், வார்த்தைகளை தனியே பிரித்தெடுத்தல்ல. அது சரி உங்கள் கடவுளே தளம் மாறி எழுதிவைத்திருக்கும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? பாவம்.
கடவுள் இல்லை எனவே மதமும் இல்லை என்றெல்லாம் எங்களால் வாழாவிருக்க முடியாது, ஏனென்றால் கடவுள் வேறு மதம் வேறு. ஆதியில் இயற்கையின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத பயத்தின் விளைவு கடவுள். அந்த பயத்தை பயன்படுத்தி மக்களை அடிமைப்படுத்திய ஆதிக்கவர்க்கத்தின் சதி மதம், இரண்டும் ஒன்றல்ல. எனவே விட்டேத்தியாய் நீங்கள் பதில் சொன்னாலும் பதில்தர முயல்வது இயல்பாகிறது ஏனென்றால் நாங்கள் பொதுவுடமைவாதிகள்.
தீவிரவாதம் இஸ்லாம் எனும் மதத்துடன் தொடர்புடையதல்ல எனும் எங்கள் நிலைப்பாடு சமூகத்தின் தன்மையையும் அதில் ஆதிக்காவாதமான பார்ப்பனீயத்தின் வினையாக்கலையும் தெளிவாக புரிந்த நிலைப்பாடு. இஸ்லாத்தின் பார்ப்பனீயமும் சமூக அசைவுகளின் திசையறி ஆய்வின் நிலைப்பாடு. இதில் ஒன்றை மதத்திற்கு ஆதரவு என்றும் மற்றதை மதத்திற்கு எதிர்ப்பு என்றும் நீங்கள் புரிந்துகொள்வது, வேதத்தின் பக்கங்களில் சமூகத்தை அளப்பது உங்கள் நிலைப்பாடு. கொஞ்சமும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் ஆதரவா எதிர்ப்பா என்ற கோணத்தில் விளைவுகளை தீர்மானிப்பது என்ன நிலைப்பாடு?
இறுதியாக, உங்கள் மறுமொழிகளின் மூலம் என்னை பதிலெழுத தூண்டுங்கள். மாறாக பதிலெழுதவேண்டுமா? என யோசிக்க வைக்காதீர்கள்.
தோழமையுடன் செங்கொடி
நண்பர் செங்கொடி,
என்னுடைய வேறு எந்த கேள்விக்குகும் பதில் இல்லை என்று தெரிகிறது. சரி, உங்களின் புளித்த மாவில் மீண்டும் ஒருமுறை தோசை சுடுவோம். வாருங்கள்.
உங்களுக்கு உள்ள ஒரே பிரச்சனை இதுதான்: ஒவ்வொவொரு மனிதனும் நினைப்பது இறைவனுக்கு தெரியும். எனவே, அவன் செய்வது இறைவன் செய்வதே. – இதுதானே?. பலமுறை நான் உட்பட பலர் விளக்கியும் விளங்கிக்கொள்ள உங்களால் முடியவில்லை. ஏற்கனே எழுதிவைக்கப்பட்ட விதிப்பதிவேடு இருக்கிறது என்பதால், மனிதனால் சுயமாக சிந்திக்கவே முடியாது என்பது தவறு. குரானையும் ஹதீசையும் முழுசாக படித்து விட்டு வந்து விவாதிக்கவும்.இறைவன் தம்மை சுயமாக சிந்திக்க விட்டிருக்கிறான் என்பது, முஸ்லிம்கலுக்கு இது நன்றாக தெரியும், அட உங்களுக்கும்தானுங்க. நீங்க மனுஷன் இல்லையா? தங்கள் முன்னே இருப்பவற்றில் எது நல்லவை எது கெட்டவை என்று தெரிந்தெடுக்கும் சுய என்ன ஓட்டத்தை இறைவன் தந்திருக்கிறான். எழுதப்பட்ட விதிப்பதிவேட்டை நம்புதல் என்பது:
1) இறைவனுக்கு அனைத்தும் – முக்காலமும் தெரியும்.
2) இறைவன் தன் பதிவேட்டில் முக்காலத்தையும் பதிவு செய்து வைத்திருக்கிறான்.
3) இறைவன் நினைத்ததுதான் நடக்கும். நடக்கிறது. நடந்தது. அவன் நாடாதது நடக்காது, நடக்கவில்லை, நடந்ததில்லை.
நம்மை படைத்ததே, நாம் இறைவனுக்கு வணங்கி வழிபடத்தான்.(Quran 51:56)
இப்ப ஒரு கதை படிப்போமா?
நீங்கள் ஒரு போலிஸ். உங்களிடம், அரசு, ஒரு துப்பாக்கியும் ஆறு தோட்டாக்களும் கொடுத்துள்ளது, ஓர் உடன்படிக்கையுடன். உங்கள் உயிருக்கு ஆபத்து வரும்போது, ஷூட்டிங் ஆர்டர் குற்றவாளி தப்பிக்கும் போது, கண்ணீர்புகை குண்டு போட்டபின்னும் கட்டுப்படாத கொலைவெறி கும்பலை கலைக்க முட்டிக்களுக்கு கிழே சுட என சில அனுமதிகள். மற்ற சமையங்களில் குறிப்பாக உங்கள் சொந்த பகை போன்றவற்றிற்கு இதை பயன்படுத்தக்கூடாது என்று நல்லது/கெட்டது இரண்டையும் பிரித்தரிவித்து விட்டு துப்பாக்கியை தோட்டா நிரப்பி உங்கள் கையில் கொடுக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் வினவுக்கு எதிராய் பேசும் என்னை சுட்டுவிடுகிரீர்கள். அரசு உங்களை கைது செய்ய வந்தால், “இது அரசு துப்பாக்கி ,இவை அரசு தோட்டா, எனக்கும் இந்த கொலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்கிறீர்கள், போய் அரசை கைது செய்யுங்கள்”என்கிறீர்கள். இப்போது, நீங்கள் இப்படி கேட்பீர்கள். “அரசும் இறைவனும் ஒன்றா? நான் தவறான எண்ணத்துடன் சுடப்போவது இறைவனுக்கு தெரியுமே, பின்னர் என் உடனே தடுக்கவில்லை?”
நாம் இங்கே இருப்பது ஒரு பரீட்சை அறையில், பரீட்சை எழுதிக்கொண்டுள்ளோம். ஒரு ஆசிரியர், தனக்கிட்ட பாடத்திட்டப்படி எல்லா பாடங்களையும் நடத்தி எப்படி தேர்வெழுத வேண்டும் எப்படி எழுதக்கூடாது என்று மாணவர்களுக்கு, நல்லது-தீயது இரண்டையும் பிரித்தரிவித்துவிட்டு சென்றுவிடுகிறார். அடுத்து பரீட்சை ஆரம்பம். எதற்கு? நீங்கள் சொல்லிக்கொடுத்தப்படி பரீட்சை சரியாக எழுதுகிறீர்களா, அல்லது சொல்லிக்கொடுத்ததுக்கு எதிராய் தவறாக எழுதுகிறீர்களா என்று சோதிப்பதற்காகவே. என்ன? சோதிப்பதற்காகவே…! அப்போதுதானே யார் நல்லா படித்தார், யார் நல்லா படிக்கவில்லை என்பது தெரியும்.? அப்போது நீங்கள் தவறாக எழுதுகிறீர்கள். ஆசிரியருக்கு தெரிகிறது, நீங்கள் தவறாக எழுதுவது. உடனே அவர், “உங்களை திருத்தி இப்படி சரியாக எழுது” என்றால் இது பரீட்சை அறையா? வகுப்பறையா? அண்ணல் ஆசிரியர் neengkal தவறாக எழுதுவது தெரிந்தும் கண்டுக்கவில்லை. பரீட்சை முடிந்தவுடன் விபரம் அறிந்த நீங்கள் “அப்போதே திருத்தி இருக்கலாமே?” என்கிறீர்கள். “இது அநீதி” என்கிறீர்கள். அல்ல, செங்கொடி. இதுதான் நீதி. எப்படி என்றால், நீங்கள் உங்களை மட்டுமே நினைக்கிறீர்கள். ஆசிரியரோ அனைத்து மாணவர்களும் சமம் அவருக்கு. உங்களுக்கு உதவி செய்வது, கஷ்டப்பட்டு படித்துவிட்டு வந்து நியாபகம் வைத்து சரியாக எழுதும் மற்ற மாணவர்களுக்கு எதிரான அநீதி அன்றோ?
இந்த பரீட்சை, பரீட்சை அறை , ஆசிரியர், அரசு, போலிஸ், அநியாயக்கொலை, எதிலுமே நம்பிக்கை இல்லை என்றால், இன்னொன்றும் சொல்கிறேன்.
நீங்கள் ஒன்றை நாடுவீர்கள். எப்பாடுபட்டாவது அதனை அடைந்துவிட வேண்டும் என்று எல்லா முயற்சியும் சரியாக எடுத்து ஓடுவீர்கள். அனால், கிடைக்காது. ஏன்? நீங்கள் நாடினீர்கள். இறைவன் நாடவில்லை. மற்றொரு சந்தர்பத்தில், நீங்கள் எந்த முயற்சியும் எடுக்க மாட்டீர்கள். நேரமும், சந்தர்ப்பமும் உங்களை வேறு வழியே இல்லாமல் முயற்சி எடுக்க வைத்து அதை பெற்றுத்தரும். உங்களுக்கு அந்த எண்ணமே இருக்காது.
மேலும் சொல்கிறேன். உங்கள், உடலில் circulatory system, nervous system, respiratory system, digestive system, excretory system இப்படி எல்லாமும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அதது அதுவாக இயங்குகிறது. அதேபோல உடலுக்குள்ளே இயங்கும் ஒவ்வொரு உறுப்பும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. வெளி உறுப்புகள், கை, கால் முதலியன உங்களால் இயக்க முடியும் எனில், அந்த ‘உங்கள்’ யார்? ‘மூளை’. அந்த மூளைக்கு இதை செய்ய வேண்டும் இதை செய்யக்கூடாது என்று தெளிவான அறிவுரை கூறப்பட்டிருக்கும் போது, அது எப்படி இயங்குகிறது என்று சோதனை செய்யப்படும் வேளையில் அந்த மூளை தன் இஷ்டப்படி நடந்தால், தவறா சரியா? அந்த மூளை மற்ற வெளி உறுப்புகளுக்கு தன் இஷடப்படி, தான் இருக்கும் உடலுக்கோ, மற்றவரின் உடலுக்கோ தீங்கு நேரும் வண்ணம் கட்டளை போடுகிறது எனில் அந்த மூளை தண்டிக்கப்பட வேண்டியதுவா, இல்லையா? நீங்கள், இனியும் சோதனை செய்து கொண்டிருப்பவரை குற்றம் சொல்லி பயன் இல்லை.
ஏற்கனவே நான் சொன்ன பதில்: குரான் :- மனிதன் தனது வழிகேட்டுக்கு தானே பொறுப்பாளி. # 10:108–( “மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உண்மை(இறைவாக்கு-குரான்) வந்துவிட்டது. (இதன் மூலம்)நேர்வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். (தன் மன இச்சையின் படி)வழிகெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்” என்று (முஹம்மதே) கூறுவீராக)17:15–( நேர்வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழிதவறுபவர் தனக்கு எதிராகவே வழி தவறுகிறார்…..)39:41–(மனிதர்களுக்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை (குரான்) நாம் உமக்கு அருளினோம். நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். வழிகெடுபவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். (முஹம்மதே) நீர் அவர்களுக்கு பொறுப்பாளன் அல்ல)மனிதனே தனது செயலுக்கு பொறுப்பாளி # 2:57, 2:79, 2:90, 2:134, 2:141, 2:225, 2:281,286, 3:25, 3:108, 3:117, 3:161, 3:182, 4:62, 5:80, 5:105, 6:70, 6:116, 6:119,120, 6:129, 7:96, 8:51, 9:70, 9:82, 9:95, 10:8, 10:44, 10:108, 11:101, 13:11, 14:27, 14:51, 15:84, 16:33, 16:118, 17:15, 17:19, 17:18, 18:29, 18:57, 22:10, 27:92, 28:47, 29:40, 30:9, 30:36, 30:41, 31:6, 34:50, 39:7, 39:41,50,51, 40:17, 40:31, 41:17, 42:20,30, 42:48, 43:76, 45:14, 45:22, 59:18, 62:7, 73:19, 74:37,38, 74:55, 76:29, 78:39,40, 80:12, 81:28, 83:14, 89:௨௪
அதற்கு நீங்கள் எடுத்துவைத்தை குரான் வசங்கள்.:
//எதுவும் என்னை மீறி நடந்துவிட முடியாது என கூறுவதும் அவன் தான் இதோ வசனங்கள் 6:59; 10:61; 13:11; 35:11; 57:22; 74:56; 2:142; 2:213; 7:30…… //
இதுவும் உண்மைதான். ஏற்கணவே எழுதப்பட்டுவிட்ட பதிவேட்டில் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. இதே இறைவன்தான், நம்மை தன்னிடம் துவா கேட்கச்சொல்கிறான்-இறைஞ்ச சொல்கிறான்..எதற்காக வேண்டவேண்டும். உங்கள், நற்செயல்களின் படி, உங்களின் வேண்டுதல் அமைந்தால், உங்கள்மீது எழுதப்பட்டவற்றை மாற்றுவது இறைவனுக்கு எளிதான காரியம்தானே. பதிவேட்டில் எழுதப்பட்ட விதியை இறைவன் தான் நாடியதை தேவை ஏற்படின் தான் நாடுவோர்க்கு மாற்றி அமைப்பான். (குரான் 13 :39.)
ஆகையால், திரு செங்கொடி, இறைவன் உங்களுக்கு-உங்கள் மூளைக்கு கொடுத்த சுதந்திரத்தின் அடிப்படையில் தீயவையை விளக்கி நல்லதை தேர்ந்தேடுக்க சொன்னதற்கு ஏற்ப “ஒன்றை” தேர்ந்தேடுத்துக்கொண்டீர்கள். அது நல்லதா தீயதா என்பது பரீட்சை அறையில் தெரியாது….!. ரிசல்ட் வருமே…..! அப்போதுதான் தெரியும். அந்த நாள், இறுதி தீர்ப்பு நாள் வரும் பொது தெரியும்…! யார் செய்தது சரி யார் செய்தது தவறென்று.
நான் இங்கு அரசு அனுமதித்திருந்தும், சிகரெட் பிடிப்பதில்லை. மது குடிப்பது இல்லை. பாண் பராக் போதை எடுப்பதில்லை, சூதாடுவது இல்லை, குதிரை ரேசில் கலந்துகொள்வதில்லை, வட்டித்தொழில் செய்வதில்லை, விபச்சாரம் செய்வதில்லை, லாட்டரி வாங்குவதில்லை, அடல்ட்ஸ் ஒன்லி படம் பார்ப்பதில்லை, இன்டர்நெட்டில் கெட்ட சைட் போவதில்லை, சைட் அடிப்பதில்லை, எங்கள் வீட்டு பெண்கள் மூட வேண்டிய பாகங்களை மூடிக்கொள்கிறார்கள், நானும் மூட வேண்டிய பாகங்களை மூடிக்கொள்கிறேன்…..இப்படியே நிறைய சொல்லலாம், எனக்கு அரசு அனுமதி இருந்தும் சட்டப்படி தவறில்லை என்று இருந்தும் ஏனிப்படி நான் செய்ய வேண்டும்.?
உங்கள் கூற்றுப்படி மத வாதிகள் தாங்கள் செய்யும் தவறுக்கு மதமே பொறுப்பு என்றால், கீழ்காணும் கொஷங்களைப்போட நீங்கள் முதலில் தயாரா?
——பாபர் மசூதி இடிப்புக்கு அத்வானி, ஜோஷி, உமாபாரதி பொறுப்பில்லை. ராமனை கைதுசெய்து சிறையிலடை..!
—–மும்பை கலவரத்துக்கு -முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுக்கு சிவசேனா தாக்கரே காரணம் இல்லை, ஹிந்து மதத்தை தூக்கிலிடு.
—-கோவை குண்டுவெடிப்பில் தூக்குதம்டனை கொடுக்கப்பட்டவர்களை விடுதலை செய். இஸ்லாமை தூக்கில் போடு.
—–குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களை கொன்ற மோடியை குற்றம் சொல்லமாட்டோம். ஹிந்து மதத்தை தூக்கில் போடு.
——அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சே வாழ்க. அவர்களின் கடவுளான புத்தரை சுட்டுக்கொல்.
இப்பத்தாண்டி ஆப்பு….
—–நக்சலைட்டுகளின் அராஜக அக்கிரம கொலை கொள்ளைகளுக்கு மத நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்டுகளான அவர்கள் தான் பொறுப்பு. அவர்கள் அனைவரையும் பிடித்து தூக்கில் போடு. அல்லது கண்டவுடன் சுட்டுக்கொல், அரசே…! உடனடியாக இதனை செய்…!
ஹலோ..! என்ன பேச்சையே காணோம்? எல்லாம் சரிதானே?
தலைப்பை செங்கொடி நியாயப்படுத்த முயல்கிறார். இந்த பேட்டியை அளித்தவரும் ஒரு முஸ்லீமே. அதனால், இஸ்லாத்தில் இந்த சாதிய பிரிவு இல்லை. இங்கே இருக்கும் உலேமாக்கள் உருவாக்கியது என்று சொல்கிறார்.
ஆனால் இந்த சாதிய பிரிவுகள் இஸ்லாத்தின் உள்ளேயே இருக்கின்றன என்பதே உண்மை என்று தெரிகிறது.
பேட்டியில் இது சொல்லப்படுகிறது
//இவர் தமது வாதத்துக்கு வலுவூட்டுவதற்காக, இறைத்தூதர் முகமது நபிகளார் கூறியதாக ஒரு போலியான மரபை சான்றாதாரமாகக் கற்பிதம் செய்துக் காட்டியுள்ளார்.//
நபிகளார் கூறியதாக சொல்லப்பட்டது என்ன என்று இவர் குறிப்பிடவில்லை. அது போலியானது என்று இவரே சான்று அளித்துவிட்டார். அதனை கூறினால்தானே அது போலியானதா அல்லவா என்று அறியலாம்.
உலேமாக்கள் அப்படி போலியாக கூறுவார்கள் என்று நம்ப முடியவில்லை. மத நம்பிக்கையுள்ள உலேமாக்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சித்தான் இருப்பார்கள். ஆகவே அப்படி போலியாக உருவாக்கியிருக்கமாட்டார்கள் என்று நம்பலாம்
இதே சாதிய, இனக்குழு பிரிவினை மேல் இனம் கீழ் இனம் என்று பிரிவு சவுதி அரேபியாவில் இருக்கிறது. அதன் காரணமாக சட்டப்பூர்வமாக விவாகரத்தே வழங்கப்படுகிறது என்றும் இங்கே இணைப்பு கொடுத்திருக்கிறார்கள். அதனை வைத்து பார்க்கும்போது அப்படிப்பட்ட ஒரு நபிகளாரின் மரபு இருந்திருக்கும் என்றுதான் தோன்றுகிறது. நவீன காலத்தில் தற்போது இஸ்லாமிய நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பவர்கள் தங்களது அரசியலுக்கு தகுந்தவற்றைத்தான் மொழி பெயர்க்கிறார்கள். ஆகவே அப்படிப்பட்ட ஒரு மரபு மொழிபெயர்க்கப்படவில்லை என்றே தோன்றுகிறது
ஆகையால் உலேமாக்கள் அரபி மொழியில் இருப்பதை சரியாக புரிந்தே இந்த சாதிய பிரிவினைகள் போற்றியிருக்கிறார்கள். இன்று இஸ்லாமிஸ அரசியல் நடத்துபவர்கள் அவற்றை மூடி மறைத்து சமத்துவ வேஷம் போடுகிறார்கள்.
சவுதி அரேபியாவில் இன்னமும் சாதிப்பிரிவினையும் மேல் இனம் கீழ் இனம் போன்றவையும் இருக்கும்போது இங்கே இந்தியாவில் இஸ்லாமில் சேர்ந்தால் சாதி பிரிவினை போய் சமத்துவம் வந்துவிடும் என்று இவர்கள் சொல்லுவது வெற்று கூச்சல். தங்களுக்கு ஆள் சேர்க்கும் ஏமாற்றுவேலை.
நண்பர் நெத்தியடி முகமது,
ஒரு மதத்தை ஆராய்ச்சி செய்ய அந்த மதத்தினர் மட்டும் தான் தகுதியானவர் என்றில்லை. நண்பர்கள் அப்துல், Siddiq மற்றும் அஸீஸ் ஆகியோர் முஸ்லிம் என்பதோ முஸ்லிம் அல்லாதோர் என்பதோ முக்கியமில்லை. அவர்கள் கூறுவது எல்லாமே நீங்கள் கூறும் குரான் மற்றும் ஹதீஸ்கள் சொன்னதிலிருந்து தான். அந்த விளக்கங்கள் பொய் என்று நீங்கள் சொன்னால், குரான் மற்றும் ஹதீஸ்கள் சொன்னது படிப்பவர்கள் மனநிலையைப் பொறுத்தது என்று ஒரு பாமரனுக்கு தோன்றாதா?
நீங்கள் மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம். என்னுடைய கேள்வி இது தான்… மனிதர்களுக்குள் வேறுபாடுகள் (அதாவது கல்வி, செல்வங்கள் போன்றவற்றில்) வேண்டும் என்று சொல்பவனை ஆதரிப்பீர்களா அல்லது அந்த வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்று சொல்பவனை ஆதரிப்பீர்களா?
இஸ்லாமிய கொள்கைகளை கட்டளைகளை எந்த ஒரு முஸ்லிம் நாடும் சரியாக கடைபிடிக்கவில்லை என்பதே உண்மை .சவூதி அரேபியா உட்பட .மன்னர் ஆட்சிக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை .பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் அதுதான் இருக்கிறது .அடக்குமுறை ,சர்வாதிகாரம் வழியே ஆட்சியை பிடித்திருப்பவர்களே அதிகம் .சவூதியில் தலை வெட்டப்படுபவர்கள் பெரும்பாலும் அந்நிய நாட்டவர்களே .சவூதிகாரர்கள் எத்தனை பேர் அப்படி தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள் ? இஸ்லாமிய சட்டத்தை முறையாக செயல்படுத்தினால் அந்த நாட்டு ஆட்சியாளர்களின் தலை தான் முதலில் கொய்யப்படும் .இனத்தையும் சாதியையும் போட்டு குழப்பி கொள்பவர்களே அதிகம் .காஷ்மீர் இந்தியாவில் இருக்கிறது .ஆனால் காஷ்மீரியை தவிர எந்த ஒரு இந்தியனும் அங்கே பெண் எடுக்க முடியாது . ஏன் ?சவூதியிலும் மற்ற சில அரபு நாடுகளிடமும் அப்படியே அந்த நடைமுறை இருக்கிறது .மிதவாதிகள் இனப்பற்று என்று சொல்வார்கள் .பிடிக்காதவர்கள் இனவெறி என்று சொல்வார்கள் .நமது நாடே ஏன் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது? அடித்துக்கொண்டு சாகாமல் இருக்கத்தானே! .கற்பனை பண்ணித்தான் பாருங்களேன் இந்தியர்கள் எல்லாம் இந்தியில்தான் பேச வேண்டும் என்றால் என்ன நடக்கும் என்பதை ? எந்த ஒரு இந்தியனும் அதை ஏற்க மாட்டான் இந்திக்காரர்களை தவிர .அதே ஹிந்திகாரர்களிடம் தமிழ்தான் தேசிய மொழி என்று சொல்லுங்கள் .உதைக்க வருவார்கள் .மற்றவரை பாதிக்காமலும் இழிவுபடுத்தாமலும் இருந்தால் இனப்பற்று தவறில்லை .அந்தஸ்து ஏற்ற தாழ்வும் தவிர்க்க முடியாததே ! எந்த ஒரு கொள்கையும் எடுத்த எடுப்பிலேயே வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது .கொஞ்சம் விட்டு கொடுத்து படிப்படியாக தன் வழிக்கு கொண்டுவருவதிலேயே வெற்றி அடங்கி இருக்கிறது .மொடாக்குடியர்களான முரட்டு அரேபியர்களிடம் இஸ்லாத்தை தழுவியவுடன் குடிப்பதற்கு தடை என்று சொல்லப்படவில்லை .காலப்போக்கில் படிப்படியாக அது முழுமையாக தடை செய்யப்பட்டுவிட்டது . .இஸ்லாமும் அப்படித்தான் ஜெயித்து கொண்டு வருகிறது .இன்று உலகில் வேகமாக இஸ்லாம் பரவி வருகிறது .அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இன்னும் வேகமாக பரவுவதின் காரணம் என்ன ?இஸ்லாத்திற்கு எதிராக அங்கே இல்லாத ஊடகங்களா?கருத்து சுதந்திரம் , மனித சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு இஸ்லாத்தை தன் முதல் எதிரியாக சொல்லாமலும் சொல்லிக்கொண்டும் செயல்படும் ஊடகங்களையும் மீறி ஏன் இஸ்லாம் வெல்கிறது ? எந்த பெரிய நதியும் ,சிறிய நதியும், எந்த மாதிரி பெயரில் ஆயிரக்கணக்கான மைல்கள் தனித்தன்மையுடன் ஓடி இருந்தாலும் கடலில் அது சங்கமமானவுடன் அது கடல் என்று தானே அழைக்கப்படுகிறது .இஸ்லாத்திலும் அப்படியே மனிதர்கள் பக்குவப்படும்வரை பிரிவுகள் இருக்கும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் இஸ்லாமிய கொள்கையும் அதை அப்படியே ஜெயிக்கும் .ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ……………………………….!
நெத்தியடி முஹம்மத், sunnipath, ஷாஜஹான் ஆகிய அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்
கேள்விக்குறி போன்ற தற்குறிகளை உதாசீனம் செய்யுங்கள். இவர்களுடன் விவாதம் செய்து இஸ்லாத்தை நிலைநாட்ட வேண்டிய தேவை இஸ்லாத்துக்கு இல்லை.
இது போன்று தேவையில்லாத விவாதங்களை ஆரம்பித்து இஸ்லாத்தின் மீது கரி பூச முனையும் வினவுக்கு என் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று நம் முன் உள்ள பெரிய பயஙகரவாதம் இந்து பார்ப்பனிய பயங்கரவாதம்.
உலகெங்கும் பெரும் அழிவுகளை கொண்டுவந்து உலக மக்களை கொன்றுவருவது இந்து பார்ப்பனிய பயங்கரவாதமே. பாபர் மசூதி இடிப்பிலிருந்து
கோடிக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களை குஜராத்தில் கொன்று வெறியாட்டம் ஆடி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பது இந்து பார்ப்பனிய
பயங்கரவாதம்.
ஆனால், அந்த பயஙகரவாதத்தை பேசாமல், உலக ஊடகங்கள், இஸ்லாமிய போராளிகள் நியூயார்க்கில் புனிதப்போர் புரிந்ததையும், லண்டனில்
புனிதப்போர் புரிவதையும், ஸ்பெயினில், பாகிஸ்தானில், தாய்லாந்தில் எல்லாம் புனிதப்போர் புரிவதையும் பயங்கரவாதமாக சித்தரிக்கின்றன. அதே
நேரம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா உள்ளே நுழைந்து முஸ்லீம்களை கொல்கிறது. அதை யாரும் கண்டிக்கக் காணோம். அதற்கு துணையாக
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளும் ஆப்கானிஸ்தான் சென்று முஸ்லீம்களை கொல்கிறார்கள். பாகிஸ்தானையும் இன்று வற்புறுத்தி முஸ்லீம்களை கொல்ல
தூண்டிவருகிறது ஆர்.எஸ்.எஸ்.
இஸ்லாமின் படி புர்கா போட்டுக்கொண்டு வீட்டுக்குள்ளேயே கண்ணியத்துடன் மூமீனாக வாழ விரும்பும் முஸ்லீம் பெண்களை இந்து இந்தியாவும்,
கிறிஸ்துவ ஐரோப்பாவும் மினி ஸ்கர்ட் போட்டு பள்ளிக்கு போகவேண்டும், ஆண்களோடு பொது இடங்களில் வெட்கமின்றிச் சிரித்துப் பேசிக் காமக்
கேளிக்கை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி சித்திரவதை செய்கின்றன.
பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் சீக்கியர்களும் இந்துக்களும் பாதுகாப்புடன் வாழ்வதற்காக நன்றியோடு முஸ்லீம்களுக்கு மனமுவந்து ஜிஸியா
கொடுக்க விரும்புவதை திரித்து, ஏதோ இஸ்லாமியர்கள் கட்டாய ஜிஸியா வாங்குவதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. நபிகள்
நாயகத்தின்(ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது சுன்னாவின் படி அல்லாஹ்வை வணங்காத பெயர்தாங்கி முஸ்லீம்களை அல்லாஹ்வின்
ஆணைப்படி இஸ்லாமிய போராளிகள் கண்டிப்பதை தற்கொலை குண்டுவெடிப்பு என்று இந்து பயங்கரவாத ஊடகங்கள் சித்தரிக்கின்றன.
இந்து பார்ப்பனிய பயங்கரவாத இந்தியாவும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளும் முஸ்லீம் பெண்களுக்கு பல்கலைக்கழகங்களை கட்டி முஸ்லிம்
பண்பாட்டைச் சீரழிக்க சதி செய்து வருகின்றனர். இது இஸ்லாமிய சமூகத்துக்கு பெரும் அச்சுருத்தலை உருவாக்கியுள்ளது. மேலும் பரிணாமவியல்
போன்ற அல்குரானுக்கு எதிரான கல்வியை இந்திய முஸ்லீம்களுக்கு கட்டாயமாக திணித்து அவர்களை மார்க்கத்திலிருந்து விலக தூண்டுகின்றன. இது
இஸ்லாத்துக்கு எதிரான காபிர்களின் மாபெரும் தாக்குதலாகும். இதனையும் அல்லாஹ்வின் அருளால் வெற்றிகரமாக முறியடிப்போம். இநதியாவில்
இந்துக்கள் இருக்கும் வரைக்கும் சத்திய மார்க்கம் வெற்றிபெற முடியாது என்பது உண்மை. ஆகையால் இந்துக்களை மதம் மாற்றி இந்து மதத்தையும்
ஒழிப்பதே நம் முன் உள்ள முக்கிய கடமை.
ஒழிக்கவேண்டியது இந்துமதமே. ஆகையால் நாம் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளாமல் இந்தியாவில் சிக்கியிருக்கும் தேச இனங்களை விடுதலை செய்து, இந்து மதத்தை அழித்து இஸ்லாமை நிலைநாட்ட துணை சேருவோம்.
நண்பர் முஹம்மத் (நெத்தியடி),
கடைசியாக தோழர் செங்கொடி அவர்கள் November 18, 2009 at 12:18 am அன்று இட்ட பின்னூட்டத்திற்கு மட்டும் பதிலளித்துவிட்டு சென்று விடுங்கள்.
கடைசிவரைக்கும் எதையுமே சொல்ல மாட்டேங்கறாங்களே!!!
வினவு,
உங்க நெலமைய பார்த்த “டேய்! எதடா சொல்ல வேணாம்கிற?”, “அண்ணே! எதையுமே சொல்லிடாதீங்க…!”…அப்படீனு அடிவாங்கும் வடிவேலு தான் நியாபகத்துக்கு வர்றார்…
ஷாஜஹான், நெத்தியடி
ஏன் ஒரு கை மட்டும் பார்க்கனும்.. எங்களுக்கு ரெண்டு கை இருக்கு.. வாங்க வந்து ரெண்டு கை பார்க்கலாம்..
ஓரளவுக்கு நட்பு ரீதியான இந்த முரண்பாடுகளை பகை முரணாக மாற்ற வேண்டாமே என்று எனக்கு இது வரையில் இருந்த தயக்கத்தை போக்கி விட்டதற்கு நன்றி. தினசரி ஒரிரண்டு மணி நேரம் உங்களுக்காக ‘செலவழிப்பதில்’ எங்கள் தோழர்கள் எவருக்கும் சிரமம் இருக்காது என்றே
நினைக்கிறேன்.
இன்னா சொன்னீங்க.. முசுலீம் ஆன பின்னே உங்களுக்குள்ளே முதலி, நாடார், தேவர் போன்ற சாதி பேதம் குறைந்து விட்டதா?
நாங்க கம்யூனிஸ்டு ஆன பின்னே சாதி வித்தியாசம் மட்டுமில்லே.. மத வித்தியாசமும் மொழி வித்தியாசமும், ஏன் தேச வித்தியாசமும் கூட ஒழிந்து விட்டது…! அப்படிப் பார்த்தா ஷாஜஹான் பாயை விட நாங்க ரொம்பவே அதிகமா ‘புடிங்கியிருக்கோம்’
அரபுக்கள் மேண்மையானவர்கள் என்று குரானில் சொல்லப்பட்டிருப்பது இங்கே நடந்துள்ள விவாதங்களில் பல இடங்களில் குரான் வசனங்கள் மூலமே தெட்டத்தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது..
எனது கேள்வியெல்லாம் அவ்வசனங்கள் குரானில் உள்ளதா இல்லையா? நீங்கள் அவையெல்லாம் குரானில் இல்லாத வசனங்கள் என்று இதுவரையில் மறுக்கவில்லை.. ஆனால் அவற்றுக்கு புதிய விளக்கங்களை அளிக்கிறீர்கள்..
கிடக்கட்டும்.. அரபிக் கிழவன்கள் இந்தியா வந்து ஏழை இசுலாமியச் சிறுமிகளை தமது காமப் பசிக்கு இறையாக பிடித்துப் போகிறார்களே…
இது வரையில் ஷாஜஹான் பாயோ அல்லது நெத்தியடியோ ஏதாவது போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று அதற்கெதிராக வினையாற்றியதுண்டா?
அரபு நாடுகளுக்கு பிழைக்கப்போகும் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தானைச் சேர்ந்த முசுலீம்களை அங்குள்ள அரபு முசுலீம் மக்கள் இழிவாக
நடத்துகிறார்கள் என்பது அரபு தேசத்தில் வேலைக்குப் போகும் எல்லாருக்கும் தெரிந்த உண்மை – ஏன் நானே நேரடியாகப் பங்களாதேஷைச் சேர்ந்த ஒரு இசுலாமிய சகோதரன் இழிவு படுத்தப்பட்டதை கண்டிருக்கிறேன்.. இது வரையில் இந்தப் பாகுபாடுகளை எதிர்த்து நீங்கள் போராடியதுண்டா?
தாலிபான்கள் செய்த கவுரவக் கொலைகள் ( honor killings) எதிர்த்து நீங்கள் வினையாற்றியதுண்டா.. குறைந்தபட்சம் அதனைக் கண்டித்து உங்கள்
பத்திரிகைகளில் எழுதியதுதான் உண்டா?
உலகமெங்கும் ஏகாதிபத்தியத்தால் கொல்லப்படும் இசுலாமியர்களுக்காகவும், இந்தியாவெங்கும் இந்துவெறி பாசிஸ்டுகளால் கொல்லப்படும் இசுலாமியர்களுக்காகவும் நாங்கள் போராடியே இருக்கிறோம்.. அது மதம் எனும் குறுகிய நோக்கில் அல்ல.. ஆதிக்க வெறி பாசிசத்தால் கொல்லப்படும் ஒரு சக மனிதன் எனும் அடிப்படையிலேயே தான்.. ஆனால் இங்கெ அரசின் பொருளாதார பாசிஸத்தால் கொல்லப்படும் விவசாயிகள் குறித்து உங்கள் கருத்தென்ன? அவர்களுக்காக நீங்கள் நடத்திய போராட்டங்கள் எத்தனை? அதற்கும் இசுலாமியமே தீர்வு என்கிறீர்களா?
இது என்ன வகை சகோதரத்துவம்?
இதுதான் உமக்கும் எமக்குமான வித்தியாசம். எங்கள் மனம் மனித உயிர் வதைபடும் போது துடிக்கும் – அது இசுலாமியனோ இந்துவோ கிறித்துவனோ வேறு எந்த மொழி பேசுபவனோ வேறு எந்த தேசத்தை சேர்ந்தவனோ.. உங்கள் மனம் இசுலாமியன் என்றால் மட்டுமே துடிக்கிறது.. அதிலும் அரபுக்களுக்கு ஒருவிதமாகவும், ஷியாக்களுக்கு ஒருவிதமாகவும், காதியானிகளுக்கு ஒருவிதமாகவும், தர்க்கா செல்லும் முசுலீம்களுக்கு ஒருவிதமாகவும்..
ஏர்வாடி பயங்கரத்தை நாங்கள் நோக்கும் விதம் வேறு நீங்கள் நோக்கும் விதம் வேறு… அப்பாடா ஒரு தீவிபத்தில் நமக்கு ஒவ்வாத மத நடைமுறை கொண்ட ஒரு பிரபலமான கொள்கையாளர்களின் பிரபல்யத்திற்கு இழுக்கு வந்து விட்டது என்கிற கீழ்த்தரமான சந்தோசம் தான் உங்கள் வார்த்தைகளில் தொனிக்கிறது..
இது என்ன வகை சகோதரத்துவம்?
இது சகோதரத்துவமே அல்ல… காட்டுமிராண்டித்தனம்!
நீங்கள் புதிதாக எதுவும் அம்பலப்பட வேண்டியதேயில்லை நன்பர்களே.. இந்தப் பதிவு நெடுகிலும் நடந்துள்ள விவாதங்களை நோக்கும் எந்த ஒரு மூன்றாம் நபரும் உங்கள் இசுலாமியச் சகோதரத்துவத்தைக் காறி உமிழ்வார்கள்.. அதுவே இப்பதிவின் வெற்றி..!
நீங்கள் வேண்டுமானல் உங்கள் கறார்த்தனத்தை நிலைநாட்டி விட்டதற்காக காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.. ஆனால் நீங்கள் தனிமைப்பட்டு
விட்டீர்கள். உம்மைப் போன்ற கடுங்கோட்பாட்டுவாதிகளை தனிமைப்படுத்தியது தான் இப்பதிவின் வெற்றி..!
வினவு தோழர்களுக்கு எனது புரட்சிகர செவ்வணக்கங்கள்!!! தொடருங்கள் தோழர்களே! உமது புரட்சிகர இணையச் செயல்பாடுகள் கம்பீரமாய்த் தொடரட்டும்
//வினவு தோழர்களுக்கு எனது புரட்சிகர செவ்வணக்கங்கள்!!! தொடருங்கள் தோழர்களே! உமது புரட்சிகர இணையச் செயல்பாடுகள் கம்பீரமாய்த் தொடரட்டும்//
மிகச்சரியானது. இணையத்தில் இப்படி திறந்த விவாதங்களை கட்டமைக்க வழிஏற்படுத்தி கொடுத்து தமிழ் பதிவுலகமே மொக்கை என்னும் அவப்பெயரை மாற்றுவதில் வினவு தளத்திற்கு முக்கிய பங்கு உண்டு. நன்றி தோழர்களே.
மறுமொழிகள் ஏன் மேல் கீழாக வருகிறது? கடைசியாக போட்ட மறுமொழி கடைசியாகத் தானே வர வேண்டும்? மேலே சென்று விட்டதே?
//நீங்கள் புதிதாக எதுவும் அம்பலப்பட வேண்டியதேயில்லை நன்பர்களே.. இந்தப் பதிவு நெடுகிலும் நடந்துள்ள விவாதங்களை நோக்கும் எந்த ஒரு மூன்றாம் நபரும் உங்கள் இசுலாமியச் சகோதரத்துவத்தைக் காறி உமிழ்வார்கள்.. அதுவே இப்பதிவின் வெற்றி..!//
Correct.
பார்ப்பனர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் அல்லுலேயாவினருக்கும் தன் மதம் என்ற பெருமையில் வேறுபாடில்லை. இவர்கள் மூவரும் பிறந்ததிலிருந்தே மதக்கோட்பாடுகளுடன் வளர்க்கப்படுகின்றவர்கள். அதனால்தான் அவர்களது மதத்தின் மீதான விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் சாமியாடுகிறார்கள். நபியின் ஹதீதுகளில் சாதி என்ற சொல் இல்லையே தவிர குலம், குலப்பெருமை கோத்திரங்கள் கோத்திரங்களில் உட்பிரிவுகள் போன்றவற்றிற்கு அநேக ஆதாரங்கள் கொடுக்கமுடியும்.
இந்துமதத்தின் சாதித்தீண்டாமையை உள்வாங்கிக்கொண்டே இஸ்லாம் இந்தியாவில் வளர்ந்துள்ளது என்பதனை மறுக்கமுடியாது. pj வின் சொந்த ஊரான தொண்டிக்கு அருகாமையில் உள்ள ஊரான spபட்டனம் என்ற ஊரில் முஸ்லீம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்த முஸ்லீமாக மதமாறிய DHRILL என்ற தாழ்த்தப்பட்ட இளைஞனை(செம்படவர்) தாக்கி “உங்களைப் போன்று மதம்மாறி வந்தவனுக்கெல்லம் எங்கள்ட பக்கீர்சாக்காரன் வூட்டுல பொண்ணு இருக்குடா” என்று கூறி விரட்டியடித்தனர். pj வின் ஊரான தொண்டியில்கூட பக்கீர்சாக்கள் மற்றும் நாவிதர்களுடன் மற்ற முஸ்லீம்கள் மண உறவு கொள்வதில்லை. இவர்களுக்கு தனிசுடுகாடுதான். உருது பேசும் தக்னி முஸ்லீம்கள் தாழ்த்தப்பட்டவர்கள். இவர்கள் தக்னி முஸ்லீம்களிடையே மட்டும் தான் மணமுடித்துக்கொள்கின்றனர்.உருது பேசும் தக்னி முஸ்லீம்கள் தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கு பெண் கொடுப்பதில்லை. பெண்ணெடுத்துக் கொள்கின்றனர். இவைகளெல்லாம் பார்ப்பனீயத்தை உள்வாங்கிக்கொண்டு இஸ்லாம் இந்தியாவில் வளர்ந்ததற்கான ஆதாரங்கள்.
குறிப்பு: மீனாட்சிப்புரத்தில் மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்குள்ளேதான் மணம் முடித்துக் கொள்கிறார்கள் என்றும் மற்றவர்கள் மண உறவு கொள்வதில்லை என்றும் குரான் ஓதி இமாம் ஆனவர்களுடன் மட்டும் மண உறவு கொள்வதாகவும் கேள்வி. இதை நான் நேரிடையாக பார்த்தவனில்லை என்பதினால் ஆதாரப்பூர்வமானதாக கூறவில்லை.
எங்கே ஷாஜஹான் & நெத்தியடி & கோ????
வாங்க வந்து ரெண்டு கை பாருங்க..!
யாருக்கு யார் பாடம் எடுப்பது என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம் வாருங்கள் நன்பர்களே..
பி.ஜே என்பது பி.ஜெய்னுல்அப்தீன் தானே?
pj என்பது தவ்ஹீது ஜமாத்தின் அமைப்பாளர் பி.ஜெயினுல் அபிதீன் என்பவர்தான்.
மீனாட்சிபுரத்தில் வரதட்சணை காரணமாகத்தான் பெரும்பாலான குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சிலர் தன்னுடைய பழைய ஜாதி சொந்தங்களையே வேறு வழியில்லாமல் மணந்து கொண்டதாகவும் மனாருல் ஹுதா மாத பத்திரிக்கையில் நேரடிய சென்று பல குடும்பங்களை பேட்டிகண்டு அந்த பேட்டிகளையும் பிரசுரித்து இருந்தார்கள் .இந்தியாவின் இந்துக்களின் பெருவியாதியான வரதட்சணை பழக்கத்தை இந்திய முஸ்லிம்கள் முழுமையாக உள்வாங்கி கொண்டு அந்த கொடுமையை அவர்களும் செய்து வருகின்றனர் . இஸ்லாம் அதை தடை செய்திருந்தாலும் அதை மீறுகின்றனர் .இந்த விசயத்தில் பெரும்பாலான இந்திய ஆண்கள் பேடிகளாகவே இருக்கின்றனர் .பெற்றோர் பார்த்து பேசி முடிப்பதால் இந்த விசயத்தில் பெண்களே பெண்களுக்கு எதிரியாக செயல்படுகின்றனர் .இதில் எந்த ஜாதியும் விதிவிலக்கல்ல .தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் அந்த சாக்கடையில் பன்றிகளாக முஸ்லிம்களும் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை .இதில் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள் பார்ப்பன இனத்து ஆண்களே .அந்த ஜாதியில் ஆணாக பிறந்தால் வாழ்க்கை முழுதும் அக்கா தங்கச்சிகளுக்கு கல்யாணம் முதல் கருமாதி வரை எல்லா செலவுகளும் பெண்ணின் அண்ணன் அல்லது தம்பி தலையிலேயே விடியும் .காலம் முழுதும் கடனிலே சாகும்வரை இருக்கும் குடும்பம் எனக்கு தெரியும் .என் நண்பர்கள் பலர் ஐயர் என்பதால் எனக்கு அவர்களை நன்றாக தெரியும் .கவுரவத்தை விட்டு கொடுக்க முடியாமல் தவிக்கும் குடும்பங்கள் பல .அவர்களின் மூடப்பழக்கங்களுக்கு அவர்களே பலியாடுகள் .இந்த வரதட்சணை கொடுமையை வெளிநாட்டு மக்கள் கேள்விப்பட்டு என்னிடம் கேட்கும் போது இந்திய பிச்சைக்கார நாடு . பிச்சைகாரர்களின் பழக்கம் கையேந்துவதுதானே என்று சொல்லி விடுகிறேன் .நான் வரதட்சணை சீர் செனத்தி என்ற எந்த கச்மாலத்தையும் வாங்காதவன் என்பதால் என்னால் இதை சொல்ல முடிகிறது .
ஒப்புதல் வாக்குமூலம் நெம்பர் – 1
வாங்க நெத்தியடி & ஷாஜஹான் & கோ… வந்து ரெண்டு கை பாருங்க 😉
//இந்தியாவின் இந்துக்களின் பெருவியாதியான வரதட்சணை பழக்கத்தை இந்திய முஸ்லிம்கள் முழுமையாக உள்வாங்கி கொண்டு அந்த கொடுமையை அவர்களும் செய்து வருகின்றனர்//
கூடிய விரைவில் உங்கள் அவதூறு புத்தகத்திற்கான சரியான ஆதாரங்களோடு தொகுப்பு ஒன்று வரவுள்ளது.உங்கள் புத்தகத்தை படித்த வுடன் எழுத ஆரம்பித்தது பாதியில் நிற்கிறது…அதை முழுமைபடுத்த தூண்டிய வினவுக்கு நன்றி……
After reading Nethiyadi Mohamad comment, he agreed that he is not belive in ISMLAM in the rest of the world because REST of the world follows castism in ISLAM but in india ISLAM there is no castism. Ha Ha Ha Now he agreed ISLAM is not religion and ALLAH is not GOD. If there is ISLAM is only one religion then all the rules in rest of the world is applicable to ISLAM in India too. If people in India following different ISLAM then it is new religion and they are not following ALLAH. (Amazing how nethiyadi mohamad is doing same side GOAL)
பதில் சொல்ல அஞ்சி நடுங்கி திட்டமிட்டு தலைப்பை பற்றியும் வினவு தளத்தையும் திட்டி விவாதத்தை திசைதிருப்பும் உங்கள் மோசடியை நான் அம்பலப்படுத்தியிருக்கிறேன் அதற்கு என்ன பதில்? என்ன பதில்? என்ன பதில்?
நேத்து மாதிரி போய் ஒளிஞ்சுக்கிடாதீங்க நெத்தியடி …பயப்படாம வாங்க வந்து விவாதம் பண்ணுங்க
Sorry, i coudnt type in tamil..
also coudnt read all the replies..
i just want to comment on the topic.
1. The topic says Islam surrenders with Brahminsim..
Its delibrate attemp to distort the fact abt islam. When u say anything abt islam.., u should quote with creed / teachings of islam — not by seeing of some persons actions..
Can a communist be beliver in god? is it stupid to ask tht question right? .. Same applies to Islam.. If some one says i belive in castesism and im a muslim then he is a insane… Islam’s fundamental principle is brotherhood and equality. so if a person is not following it, he cant be a muslim.. being rationalist is not just copy pasting information. When u say anything abt islam.. atleast u should what is islam teaches.. not by seeing people and write.
Hi all,I would like to say few a things,
First, the author made the topic ‘Islam surrenders to Braminism/ Castetism’ making deliberate atempt to distort the fact abt islam’. There is no reference made in this article that ‘Islam encorages / supports’ castetism by quoting ‘Koran / hadith(Sayings of prophet Muhammed peace be upon him). Islam rejects all kind on superiority of human race by color, race or reginal ethinity or by language. All humans are equal to Allah . No Arab is superior to Non arab or by language. This is message conveyed by Prophet Muhammed (PBUH) on his last Haj gathering. If some one not following due to lack of islamic knowledge or awareness, it is own fault and not on Islam. to be put simple terms.. ‘If some one says i’m an Athesit and frimly beliver in God’ then u would say he fools himself. or he donno what is Atheism.. Similarly if the person who follows castetism and says i’m a muslim, then he fools himself…
ஆம், முஸ்லிம் அல்லாதவர்கள் இழிவு படுத்தப் படவேண்டும் என்பது வஹி மூலம் ஏக இறைவன் அறிவித்த ஒன்று. பாகிஸ்தானில் இந்துச் சகோதரரர்களை இழிவுபடுத்தும் அப்பாவி முஸ்லிம்களை குறைசொல்லி பிரயோசனம் இல்லை. கா·பிர்கள் (முஸ்லிம் அல்லாதோர்) அழித்தொழிக்கப் பட வேண்டியவர்கள் என்பது இந்தியாவைப் படையெடுத்துவந்து அழித்த துருக்கியரின் தனிப்பட்ட எண்ணம் அல்ல, அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்த கட்டளை.
கடவுளுக்கு மகன் உண்டு என்று கருதுவோர் தீயோர் என்பது வஹி மூலம் அல்லாஹ் அறிவித்த ஒன்று. கிறிஸ்துவர்களை துன்புறுத்தும் சவுதி அரசை குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும், சுதந்திரமாக செயல்படக்கூடாது என்பது தாலிபான்களின் தீர்ப்பு அல்ல, வஹி மூலம் அல்லாஹ் மனிதகுலத்துக்கு இட்ட கட்டளை. நடத்தை தவறியவர்கள் என்று கருதும் பெண்களை கல்லால் அடித்துக் கொள்வது ஈரான் அரசின் கண்டுபிடிப்பு அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் ஒரு சமூகத்தையே தாம் கல்லால் அடித்துக் கொன்றதாக அல்லாஹ் வஹி மூலம் அறிவித்துள்ளார்.
பெஸ்லானில் குழந்தைகளைக் கொன்றதற்காக தீவிரவாதிகளைக் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. குழந்தைகளும் எதிரிகளே என்பது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தவொன்று. ஜிஹாத் செய்து எதிரிகளை அழிக்கும்போது அவர்களின் பெண்களை கற்பழிக்கலாம் என்பது நபிகள் நாயகமோ, அல்லது 1400 வருடங்களுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சமூகங்களின் வழக்கமோ அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது. தெளிவாக இப்படிப் பிடித்து அடிமைகளாக்கப் படும் பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதை வஹி மூலம் அல்லாஹ் ஹலாலாக்கியிருக்கின்றார்.
மேலும், இதெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விஷயங்கள், அப்போது இதுதான் அனைத்து சமூகங்களிலும் வழக்கமாயிருந்தது ஆகவே இப்போது அதெல்லாம் தவறு என்று கருதுவோர்களுக்கும் அல்லாஹ் தெளிவாக அப்போதே வஹி மூலம் அறிவித்திருக்கின்றார், இதெல்லாம் மாற்றமுடியாத கட்டளைகள் – இறுதித்தீர்ப்பு நாள் வரைக்கும் இவற்றை மு·மீன்கள்(நம்பிக்கையுள்ளோர் – முஸ்லிம்கள்) பின்பற்றப்பட வேண்டியவை, இவற்றை மறுப்பது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப் பட்ட ஒன்று, அப்படி மாறுபாடு செய்வோர் தலையில் கொதிக்கும் தண்ணீர் ஊற்றப்படும், உருக்கும் செம்பை குடிக்க வைக்கப் படுவார்கள், தீயில் வறுத்து எடுக்கப் படுவார்கள் என்று.
ஆகவே, இத்தகைய மதவாதத்துக்கு, மத அடிப்படைவாதத்துக்கு, இவற்றிலிருந்து வெளிக்கிளம்பும் வன்கும்பல்களுக்கு, அவற்றின் தீவிரவாதச்செயல்களுக்கு, ஊற்றுக்கண்ணாயிருப்பது அல்லாஹ் எனும் அரபி இறைவன், தமது வானவர் ஜிப்ரீல் மூலம் தாம் தேர்ந்தெடுத்த முகமது என்ற நபிகள் நாயகத்துக்கு அறிவித்த
வஹியாகும். இந்த வஹி மூலமே அல்லாஹ் தம்மையும்,ஜிப்ரீலையும்,தமது தூதரையும் நம்பும் மு·மீன்களுக்கு(முஸ்லிம்களுக்கு) எவ்வாறு மாற்று மதத்தோரை நடத்தவேண்டும், அவர்களிடையே எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர்களை எப்படித்தாக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்டுள்ளார்…… அல்லது, அப்படி நம்பப்படுகிறது!
ஆம், இந்த நம்பிக்கையே இச்செயல்களின் பின்னால் உள்ளது. இந்நிலையில், இந்த வஹி பற்றி ஆய்வு செய்வதும், விவாதிப்பதும் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது. இந்த ஆய்வுகள், தனியொரு மனிதருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் சில ஆன்மீக அனுபவங்களின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட மதக்கோட்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து வன்முறையை தவிர்த்து, உலகில் அமைதியை நிலவச்செய்யும்
ஆர் .எஸ்.எஸ் அசிங்கமே
நல்ல எண்ணமே இல்லாத ஜென்மங்கள் .முஸ்லிம் வன்மமே குறிக்கோள் . பாவப்பட்ட ஜென்மங்களின் தளம் (பா.ஜ.த)தள்ளாடுகிறது.போய் காப்பாத்து .வந்துட்டானுங்க புடுங்க .
நெத்தியடி முஹம்மத்
இஸ்லாத்துக்குள் வந்ததும் முதலியார், பிள்ளைமார் ஆகியோர் தங்கள் ஜாதிகளை இழந்து இஸ்லாமியர் என்று ஆனது எவ்வாறு என்று கேட்கிறீர்களா?
இவ்வளவு காலம் இந்தியாவில் இருந்து இந்துக்களை புரிந்துகொண்டது இவ்வளவுதானா?
இந்துக்களை பொறுத்தமட்டில் இஸ்லாம் என்பது ஒரு ஜாதி. புரியவில்லை என்றால் ஒரு இந்துவிடம் பேசிப்பாருங்கள். இந்தியாவில் பலர் இன்னொரு ஜாதிக்கு போவார்கள். முதலியார் பெண்ணை திருமணம் செய்து முதலியார் ஜாதியில் சேரும் அய்யர்கள் உண்டு. அதே போல முதலியார் ஆணை திருமணம் செய்து முதலியார் ஆகும் தலித் பெண்களும் உண்டு. கேட்டுப்பாருங்கள். விசாரித்து பாருங்கள். இதே போலத்தான் முஸ்லீம் பெண்களையும் ஆண்களையும் திருமணம் செய்து முஸ்லீமாகியிருக்கிறார்கள் பல இந்துக்கள். அது அவர்களின் ஜாதிகெட்ட இழி நிலையை காட்டுகிறது.
முஸ்லீம்கள் அதனை ஒரு பெருமையாக கருதிக்கொள்ள தேவையில்லை. அது இந்துக்களின் ஜாதி கெட்ட இழிநிலை. நான் கேட்டது இது. இஸ்லாமை தழுவியவுடன் பனுகுறைஷி, அன்ஸாரி பனு ஹனிபா எல்லாம் அழிந்துவிட்டது, எல்லோரும் இனி முஸ்லீம்கள் இனி பிரிவினை பார்க்ககூடாது என்று எங்கேனும் தெரிவித்துள்ளார்களா? இந்த கேள்விக்கு பதில் கூறுங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே குறைஷி பிரிவினர் இஸ்லாமை தழுவாதவர்கள் பலராகவும் தழுவியர்கள் பலராகவும் இருந்தார்கள். இஸ்லாத்துக்குள் வந்ததும் இங்கே குறைஷி கிடையாது, அன்சாரி கிடையாது. எல்லோரும் முஸ்லீம்கள் என்று கூறிவிடவில்லை. குறைஷிகள் இன்றும் இருக்கிறார்கள். அன்சாரிகள் இன்றும் இருக்கிறார்கள். இஸ்லாம் அவர்களுடைய ஜாதிகளை அழித்துவிட்டதா? பனு குறைஷி, பானு தைம், பானு ஹனிபா ஆகிய பிரிவுகள் இன்றும் இருக்கின்றன என்னும் போது முதலியார்களும் நாயுடுகளும் ஏன் இஸ்லாத்துக்குள் வந்ததும் தங்களுடைய பட்டப்பெயர்களை ஜாதிப்பெயர்களை இழக்கவேண்டும்? இஸ்லாம் எங்கள் மதம், இது எங்கள் ஜாதி, இது எங்கள் மொழி என்று இருக்கலாமே. அது போலத்தான் அரபியர்களும், துருக்கியர்களும், பெர்ஷியர்களும் இருக்கிறார்கள். ஏன் இந்தியர்கள் மட்டும் ஜாதியை இழக்கப்போகிறார்கள்?. அப்படி இஸ்லாம் கேட்கவும் இல்லை.
இன்னும் பனு குறைஷி, பனு ஹனிபா, பனு தைம் ஆகிய பிரிவுகள் இருக்கின்றனவே. ஏன் சவுதி அரச குடும்பத்தின் பிரிவு பனு ஹனிபா என்று இன்றும் அறியப்படுகிறது? இஸ்லாம் பிரிவுகளை அழித்துவிட்டது நீங்கள் சொல்வது உண்மையென்றால் ஏன் இன்னும் அந்த பிரிவுகள் அரபியாவில் இருக்கின்றன?
நீங்களாக இஸ்லாத்தில் இல்லாத ஒரு புதிய நடைமுறையை கண்டுபிடிக்காதீர்கள்.
ஜாதிமுறை இஸ்லாமுக்கு எதிரி அல்ல. இஸ்லாத்தில் உலகெங்கும் ஜாதிகளும் கிளான்களும் குலங்களும் கோத்திரங்களும் இருக்கும்போது இந்தியாவில் மட்டும் இஸ்லாத்தால் ஜாதி போய்விடும் என்று நீங்கள் இஸ்லாத்தின் பெயரில் பேசலாம்?
பொய் மட்டுமே சொல்வதால் என் கேள்விக்கு உங்களால் ஒருக்காலும் பதிலளிக்க முடியாது…..ஏனென்றால், என் கேள்விக்கு விடை உண்மை – உங்கள் கண்ணெதிரே தெரியும் உண்மை.
(‘சாதி’ என்றால் என்ன என்றும் ‘மதம்’ என்றால் என்ன என்றும் உங்கள் எதிரே யார் தென்பட்டாலும் கேட்டு தெரிந்துகொண்டு அதனிடையே இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொண்டு வந்து அதன் பின்னர் பின்னூட்டவும்…அல்லது வினவின் பல இடுகைகளை….அவ்வளவு ஏன் “பார்ப்பனீயம்-ஒரு விவாதத்தில்” தைரியமிருந்தால் உங்களின் இதே கருத்தை வைக்கவும். அல்லது அதன் மறுமொழிகளை மட்டுமாவது படித்து விட்டு வரவும்)
Get lost.
நெத்தியடி முஹம்மத்
இஸ்லாத்தில் இல்லாதவற்றை இஸ்லாத்தில் உள்ளதாக பொய் பேசுவது நீங்களே. இந்த கருத்துக்களை உங்கள் முன்னேதான் வைக்கிறேன். பார்ப்பனியம் ஒரு விவாதத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் ஏன் அங்கு பேசவேண்டும்.
மேலும் இது வினவு தளம்தானே? அங்கு எழுதுபவர்கள் இங்கு படிக்கமாட்டார்களா?
நான் கூறிய கருத்துக்களை ஆதாரப்பூர்வமாக மறுக்க முயற்சி செய்யுங்கள். உங்களுடைய அடாவடிகளை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு கேள்விகளுக்கு பதிலளியுங்கள். அது ஒரு உருப்படியான விவாதம் ஆகும்?
நான் சொன்னவற்றை உங்களால் மறுக்க முடியவில்லை என்றால் தூற்றுவது உங்களது பாணி. அது ஒரு முஸ்லீமின் பாணி அல்ல.
இஸ்லாத்தை பின்பற்றும் அரபியர்களையும், உலேமாக்களையும் திட்டுவதையும் நானே தூய முஸ்லீம் என்று தம்பட்டம் அடித்து திரிவதையும் விட்டுவிட்டு கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
இல்லையேல் தோல்வியை ஒப்புகொண்டு ஓடுங்கள்.
நீங்கள் அப்படி என்ன கூறிவிட்டீர்கள்? இஸ்லாமும் ஒரு சாதி என்கிறீர்கள். ////ஏன் இஸ்லாத்துக்குள் வந்ததும் தங்களுடைய பட்டப்பெயர்களை ஜாதிப்பெயர்களை இழக்கவேண்டும்? இஸ்லாம் எங்கள் மதம், இது எங்கள் ஜாதி, இது எங்கள் மொழி என்று இருக்கலாமே/////
எப்படி? தலையிலிருந்தா? காலிலிருந்தா? ஒரே ஜோடி மனிதரை படைத்து அதிலிருந்து உலக மக்கள் அனைவரையும் உருவாக்கி உயிர்கொடுத்த அந்த ஒரே இறைவனுக்கு, மனைவி-குழந்தை-சந்ததி இல்லை என்று கூறும் ஒரு முஸ்லிம் எப்படிங்க அந்த இறைவனின் தலையிலிருந்து காலிலிருந்து அதிலிருந்து இதிலிருந்து பிறந்தான் என்ற சாதி சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியும்?
நான், நீங்க, வினவு எல்லாரும்-இந்த உலக மக்கள்(past -present -future)அனைவரும் யார்? பனூ ஆதம்….! ஆமாங்க…! பனூ ஆதம். இல்லையா? எந்த மதத்திலிருந்தாலும் இது மாறுமா? பனூ இப்ராஹீம் யார்? யூத-கிருத்துவ-முஸ்லிம்கள் யாவரும்…! பனூ இஸ்ராயீல் யார்? பனூ இஸ்மாயீல் யார்? இதெல்லாம் சாதியாங்க? எந்த மதம் மாறினாலும் இது மாருமாங்க? அது போலத்தான் பனூ குறைஷி..! (http://en.wikipedia.org/wiki/Quraishi) ‘மதுரைக்காரன்’ இது ஒரு சாதியா? அதுபோல ‘நபிக்கு உதவிய மதினாக்காரன்’-அன்சாரி என்று அவர்களுக்கு வேறு பெயர். அவர்களின் சந்ததிக்கு பனூ அன்சாரி எனலாம். இதே மாதிரி…. உங்கள் சந்ததிக்கு பெயர்….”பனூ சுன்னிபாத்”. இது ஒரு சாதியாங்க? ஒங்க கூட ஒரே போருங்க. மீண்டும் மீண்டும் அதே பழம் பல்லவி. டைப் அடித்து எழுத்து தேய்ந்ததுதான் மிச்சம். ////நீங்களாக இஸ்லாத்தில் இல்லாத ஒரு புதிய நடைமுறையை கண்டுபிடிக்காதீர்கள்.ஜாதிமுறை இஸ்லாமுக்கு எதிரி அல்ல.////
—-இதுக்கு மேல உங்ககூட விவாதித்தால் பார்ப்பவர் சிரிப்பார்கள். முதலில் முஸ்லிம் முகமூடி இல்லாமல் சொந்த பெயரில் வாருங்கள். முகமூடி போட்டபின்னும் குடுமி நல்ல வெளிய ஆடுது. அதுக்குத்தான் சொன்னேன். உங்களுக்கான தலைப்பு ‘பார்ப்பனீயம் – ஒரு விவாதம்’.
முஸ்லிம் எப்படிங்க அந்த இறைவனின் தலையிலிருந்து காலிலிருந்து அதிலிருந்து இதிலிருந்து பிறந்தான் என்ற சாதி சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியும்?
ஏனுங்க, உலக மக்களில் அரபியர் மேலானவர், அவர்களின் கினைனா மேலான ஜாதி, அதில் குறைஷி மேலான கோத்திரம், அதில் பானு ஹஷின் மேலான குலம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். இதனையும் ஒத்துக்கொள்வதில் என்னய்யா பிரச்னை..
இந்த விவாதத்தில் பார்ப்பனியத்துக்கும் இஸ்லாமுக்கும் ஒரு புண்ணாக்கு வித்தியாசமும் இல்லை என்றுதான் தெளிவாய் இருக்கிறது
யோவ்…”பொய்ப்புளுகி மாறன்”
////ஏனுங்க, உலக மக்களில் அரபியர் மேலானவர், அவர்களின் கினைனா மேலான ஜாதி, அதில் குறைஷி மேலான கோத்திரம், அதில் பானு ஹஷின் மேலான குலம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்.//// —–ஒத்துக்கிட்டவன் எவன்னு காட்டய்யா…
நண்பர் ஷஹீத் அவர்கள் புட்டு புட்டு வைத்துள்ளாரே.
அதையும் படிக்கவில்லையா?
பார்ப்பனியத்துக்கும் இஸ்லாத்துக்கும் ஒரு புண்ணாக்கும் வித்தியாசம் கிடையாது.
கம்யூனிஸம் மட்டுமே சமத்துவ வழி
ஹலோ மாறன்,
///நண்பர் ஷஹீத் அவர்கள் (???!!!)///
அன்னார், நண்பர் இல்லீங்கோ….’தோழர்’ தானுங்கோ அவர்….
நான், ஷாஜஹான், அதிரை post , சதக்கத்துல்லா, அப்துல் குத்தூஸ் அவர்கள் எல்லாம் புட்டு புட்டு வைத்துள்ளனரே…! படிக்கவில்லையா?
//கம்யூனிஸம் மட்டுமே சமத்துவ வழி//
நீங்கள் பின்னூட்டம் படிப்பதிலேயே தெரியுது…உங்கள் சமத்துவ லட்சணம். நல்லாவே…போங்கய்யா நீங்களும் உங்க தளமும்.
முஸ்லீம்கள் பயங்கரமான மதவெறியர்கள் என்றுதான் அறிந்திருந்தேன். தற்போது அவர்கள் மிக மோசமான சாதி வெறியர்களும் கூட என்று அறிந்து கொண்டேன்.
ஒரு இடத்தில் வெறி இருந்தால் இன்னொரு இடத்திலும் தானாக தொற்றிகொண்டுவிடுமோ என்னவோ
இந்த ஏமாற்றுக்கும்பலை கண்டுகொள்ள வைத்த வினவுக்கு நன்றிகள்
Ezhil.., dont split ur garbage here… do u have any proof on ur thing?. Whr did islam say to insult non muslims.. can u quote any one of verses from quran?
இஸ்லாத்தை பற்றி பொய்களை பரப்பும் வினவே,
http://athikkadayan.blogspot.com/2009/11/blog-post_20.html
இவர் விட்ட சவாலுக்கு முதலில் பதிலை சொல்.
பின்னர் பார்ப்போம் வினவு உண்மையான புரட்சி தளமா என்று?
இந்தப் கேள்வியைப் படித்த உடனேயே எனக்கு சோர்வு வருகிறது.
“இஸ்லாமியர்கள் செய்கின்ற தவறுகளுக்கு இஸ்லாத்தை எந்த விதத்தில் குறை சொல்ல முடியும்? வினவு வைக்கின்ற குற்றச்சாட்டு (சாதிய ஏற்றத்தாழ்வுகள்) இஸ்லாமிய சித்தாந்தத்தில் இருக்கிறதா அல்லது இஸ்லாமியர்களிடத்தில் இருக்கிறதா?”
இதே வாக்குவாதம் இந்து மதம் செய்கின்ற தவறுகளை மறைத்து விடாதா? பின்வரும் கேனத்தனங்களை கவனியுங்கள்.
இந்து மதத்தில் எந்த இடத்தில் மசூதிகளை இடிக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது? இந்து மதம் உருவான போது இஸ்லாமும் மசூதிகளும் கிடையாதே!! எனவே பாபர் மசூதி இடிப்பில் இந்து மதத்தின் பால் தவறே இல்லை!
இந்து மதத்தில் எந்த இடத்தில் முஸ்லீம்களுக்கு அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் இடம் கொடுக்கக் கூடாது என்று எழுதியிருக்கிறது. எனவே மும்பையில் முஸ்லீம்களுக்கு வாடகை வீடு தர மறுக்கும் இந்துக்கள் செய்யும் தவறுக்கு இந்து மதம் பொறுப்பல்ல.
இந்து மதத்தில் எந்த இடத்தில் முஸ்லீம்களை வன்முறைக்கு ஆட்படுத்த வேண்டும் என்று எழுதியிருக்கிறது. குஜராத் கலவரத்தில் இறந்த முஸ்லீம்களுக்கு இந்து மதம் பதில் சொல்லத் தேவையில்ல. அது இந்துக்களின் தவறு. மதத்தின் கோட்பாடுகளில் அப்படி சொல்லவே இல்லை. எனவே மதத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றாதீர்கள்.
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
தன்னை முஸ்லீம் என்று சொல்லிக் கொள்பவர்கள், இஸ்லாத்துக்காக இஸ்லாமின் பெயரில் எது செய்தாலும் – சமூக ரீதியாக பிறப்பில் ஏற்ற தாழ்வு பார்த்தாலும் சரி, எவன் தலையையோ வெட்டி இண்டர்னெட்டில் காட்டினாலும் சரி, வன்முறை வழியில் வெடிகுண்டாக மாறினாலும் சரி – அதில் இஸ்லாமுக்குப் பொறுப்பு உண்டு. சாதி வேறு பாடு பார்ப்பவர்கள் இஸ்லாமில் இருந்து வெளியேற்றப் படுவார்கள். வன்முறையாளர்கள் எங்கள் மதத்தில் இருந்து தூக்கி எறியப் படுவார்கள் என்று அனைத்து முஸ்லீம் அறிஞர்களும் உலக அளவில் அறிவிக்கட்டும். அதுவரையில் முஸ்லீம்கள் செய்யும் தவறுகளுக்கு இஸ்லாம் கேள்வி கேட்கப் படும்.
எல்லா மதங்களும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாலேயே வழி நடத்தப் படுகின்றன. நாங்கள் சரி. எங்கள் புத்தகம் எப்போதும் உண்மையைத்தான் பேசும். எங்கள் மத ஆசான்கள் மேதைகள். என்றெல்லாம் தன் கூட்டத்தைத் தானே புகழ்வதை கொஞ்சம் நிறுத்தி விட்டு மனித நேயம் வளர்க்கப் பார்ப்போம்.
\\எல்லாம் சரிதாங்க.. ஆனா பேட்டில சொல்லப்பட்ட விஷயங்களுக்காக நீங்கள் ஏன் பார்ப்பனியத்திடம் இசுலாம் சரணடைந்தது என்று தலைப்பிட்டீர்கள்? என்கிறார் ஒருவர். இசுலாமாகட்டும் கிருத்துவமாகட்டும் – இங்கே பரவ தனக்கு முன்னேயிருந்த ஒரு சமூக அமைப்பின்
கூறுகளை தன்னுள் வரித்துக் கொண்டிருக்கிறது என்பது தானே மேலே உள்ள பேட்டியின் மூலம் சாராம்சமாகத் தெரிவது? எனில் இந்தத் தலைப்பு தான் பொருத்தமானது! –சங்கு\\
எனக்கும் இந்த தலைப்பில் மாற்றுக் கருத்தே உள்ளது. பேட்டி அளித்துள் masooth aalam தனது புத்தகத்திற்கு “இசுலாத்தில் மனுவாதிகள்” என்று தலைப்பிட்டுள்ளதும் தவறே. இத்தலைப்புகள் இசுலாமியக் கோட்பாடு சாதி வேறுபாடற்ற தூயவடிவமுடையது என்றும் இசுலாமியர்களே தங்களின் கோட்பாட்டிற்குப் புறம்பாக குலப்பிரி – சாதிப் பிரிவுகளை பார்பனீயத்தின் பண்பாட்டிடமிருந்து பெற்றுக் கொண்டு கடைப்பிடிக்கின்றனர் என்ற கருத்தை படிப்பவர்கள் எண்ணத்தில் உருவாக்குகிறது.
இது ஒரு வரலாற்றுத் தவறான பதிவாகிவிடும் என்றும் கருதுகிறேன். பேட்டியளித்துள்ள Masooth எனது கருத்துக்கு முதல் சான்றாக உள்ளார்.
\\\ சமூகத் தகுதி பற்றிய விசயத்தில் ஹனாஃபி மரபினர் மிகவும் கறாராக இருக்கின்றனர். எனவே, காஃபா பற்றிய விசயத்தில் பிறப்பு அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாக்குகின்றனர். ஹனாஃபி சிந்தனை மரபு உருவான ஈராக்கைச் சேர்ந்த குஃபாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்ததும், அவற்றை அது நியாயப்படுத்த முனைந்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சன்னி சட்டப்பள்ளியைப் பின்பற்றுகின்ற அராபிய மையத்துக்கு வெளியில் உருவாகி வளர்ந்த ஷஃபி, ஹன்பாலி போன்ற மரபுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன
\\\\
ஏற்றத்தாழ்வு தூய இசுலாமிய வடிவத்தில் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி நாம் அறிந்துக்கொள்ள முடியாதவாறு இவ் வரிகள் தடுத்தாலும் இந்திய பார்பனீயத்திற்கு வெளியே இன்னும் சொல்லப்போனால் அரேபியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் பிறப்பினடிப்படையிலான சாதி போன்ற ஏற்றத்தாழ்வு உள்ளது என்பதை Masooth கூறுகிறார். ஆனால் அங்கிருந்து இந்தியா வந்தது தூய இசுலாம் என்றும் இங்குள்ள இசுலாமியர்கள்தான் பார்பனீயத்தினை உள்வாங்கி சாதி போன்ற ஏற்றத்தாழ்வினை கடைபிடிக்கிறார்கள என்றும் கூறுவது முரண்பாடாகும்.
இதற்கு வலுச்சேர்க்க அரேபியாவின் மதினா நகரில் தோன்றிய மாலிக் மத்ஹப் பிரிவை தோற்றுவித்த மாலிக் என்பவர் இசுலாமியப் போதனையின் மையத்தில் வாழ்த்தால் “தூய இசுலாத்தை” உணர்ந்து அதன் வழியில் ஏற்றத்தாழ்வை மறுப்பவராக உள்ளார் என்று கூறுகிறார். மதினாவின் இசுலாமியர்களான அன்சாரிகள் பற்றிய விவரங்கள் சிலவற்றைப் பார்க்காமல் மாலிக் பற்றிய இவரது பதிவைப் புரிந்துக்கொள்ள முடியாது.
முகம்மது நபியுடன் மக்காவிலிருந்து மதினாவிற்கு தப்பி வந்தவர்களுக்கு தங்கள் இல்லத்தில் அடைக்கலம் கொடுத்ததுமட்டுமல்லாது சொத்துக்களிலிருந்தும் பங்கிட்டுக் கொடுத்தனர். தங்கள் மனைவியர்களைக்கூட மண விவாகரத்து செய்து மக்காவாசிகளுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். இவர்களைப்பற்றி குர்ஆன் வசனம் 59: 9 பின்வருமாறு கூறுகிறது.
ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு அளிக்கப்பட்டவை தங்களுக்கும் தேவையானவை என்று மனதளவில் கூட நினைப்பதில்லை. மேலும் தங்களுக்குத் தேவையிருந்தாலும் சரி, தங்களைவிட (மக்காவாசிகளுக்கு கொடுப்பதையே) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்……
புகாரியின் நபிமொழி எண்: 3786 பின்வருமாறு கூறுகிறது.
அறிவிப்பவர் மாலிக் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் தமது குழந்தை ஒன்றை தம்முடன் வைத்துக்கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் பேசினார்கள். அப்போது அவர்கள் “அல்லாஹ்வின் மீதானையாக! (அன்சாரிகள்) நீங்கள் மக்களிடையே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று இருமுறைக் கூறினார்கள்.
இவைகளிலிருந்து மாலிக் என்பவரின் கோத்திரத்திரனரான அன்சாரிகளின் உயர் பண்பும் முகம்மதுநபியின் கருத்தும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்த அன்சாரிகள் முகம்மதுநபியிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டதற்கு “பொறுமையாக இருங்கள், உங்களுக்கு சொர்கத்தில் எனக்கருகில் உள்ள இடம் பரிசாக உள்ளது என்று கூறிவிட்டார்கள்.
இதற்கு சான்று புகாரி : 3792 அறிப்பவர் ஹுளைர்
அன்சாரிகளில் ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! இன்னாரை நீங்கள் அதிகாரியாக நியமித்த்துபோல் என்னையும் அதிகாரியாக நியமிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார். நபி அவர்கள்”எனக்குப் பிறகு உங்களைவிட மற்றவர்களுக்கு ஆட்சியதிகாரத்தில் முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே (மறுமையில் எனக்கு சிறப்பு பரிசாக கிடைக்கும் ஹவ்ளுள் கவ்ஸர் என்னும் தடாகத்தின் அருகே) என்னை சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்” என்று சொன்னார்கள்.
முகம்மதுநபி வார்த்தை ஜாலத்தால் அதிகாரத்தை வழங்குவதற்கான தனது மறுப்பை சொர்கத்தைக்காட்டி பதிலாக கூறிவிட்டார்கள்.
மேலும் ஒரு வரலாற்று நிகழ்வும் உள்ளது. முகம்மதுநபி இறந்ததும் அன்சாரிகள் ஒன்றுகூடி ஒரு தலைவரை தேர்தெடுக்க முற்பட்டபோது முகம்மதுநபியின் மதிப்புமிக்க குறைஷி குலத்தைச் சேர்ந்த அபுபக்கரும், உமரும் (காலிபாவாக இருந்தவர்கள்) சேர்ந்து “குறைஷிகள், உங்களில் ஒருவர் தலைவராக வருவதை விரும்பமாட்டார்கள்” என்று தடுத்துவிட்டனர்.
இதனை இதற்குமேல் விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கின்றேன். இந்த அன்சாரிகளின் மரபுவழி வந்த மாலிக் ஏற்றத்தாழ்வை எதிர்ப்பது இயல்புதானே. ஆனால் அது இசுலாத்தின் தூயவடிவம் என்பதுதான் மோசடி.
இரண்டாவது சான்றாக புகாரியின் நபிமொழி எண் 3500ஐ எடுத்துக் கொள்வோம்.
முகம்மதுபின் ஜீபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. முஆவியா அவர்களிடம் குறைஷிகளின் ஒரு தூதுக்குழுவில் ஒருவனாக நான் வருகை தந்திருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ்பின் சமர்பின் ஆஸ் (ரலி) அவர்கள் “கஹ்தான குலத்திலிருந்து மன்னர் ஒருவர் தோன்றுவார் என்று அறிவிப்பதாகச் செய்தி வந்தது” என்று கூறினார்கள். முஆவியா அவர்கள் கோபமடைந்து எழுந்து நின்று அல்லாஹ்வை அவனது தகுதிபடியுள்ள வர்ணனைகளால் புகழ்நது கூறுகிறேன். உங்களில் சிலர் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அறிவிக்கப்படாத செய்திகளைப் பேசுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையே உள்ள அறியாதவர்கள் ஆவார். வழிகெடுத்துவிடுகின்ற வெற்று நம்பிக்கை குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நபி அவர்கள இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும். அவர்களுடன் (அதுதொடர்பாக) பகைமைப் பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்திவிடுவான். மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டி வரும் வரை இந்நிலை நீடிக்கும் என்று கூறக்கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.
புகாரியின் நபிமொழி எண்: 3501 பின்வருமாறு கூறுகிறது. அறிவிப்பவர் இப்னு உமர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம்தான் இருக்கும். அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை.
இவை இரண்டும் இசுலாமியர்களில் இருகண்களில் ஒன்றான நபிவழியின் சான்றுகள். சான்று எழுதியவர் நம்பிக்கைக்குரிய மூவரில் ஒருவர். இன்றைய இசுலாமியர்களின் நடைமுறையிலிருந்து சான்றுகள் தரப்படாமல் இசுலாத்தில் தூய வழியிலிருந்து சானறுகள தந்துள்ளேன்.
மேலும் இன்ன குலத்தாரைவிட இன்னின்ன குலத்தார்கள் உயர்ந்தவர்கள் எனறு நபி கூறிய நபிமொழிகளும் உள்ளன.
சாதி என்று சொன்னதும் தீண்டாமை என்பதை மட்டுமே அனைவரும் கருத்தில் கொள்கிறேன். சாதி எனபதின் முதற்குறிக்கோள் ஆளும் தகுதியை குறிப்பதே. இதிலிருந்து இசுலாமும் விதிவிலக்கல்ல.
முகம்மது நபி தன் இனத்தாரிடமிருந்து தீண்டாமையை கடை பிடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஆரம்பத்தில் இசுலாத்தை ஆதரித்தவர்கள் குறைஷிகளில் சிலரும் அடிமைகளில் ஒருசிலரும் மதினாவாசிகளில் பெரும்பான்மையினரும் ஆவார். மதினாவாசிகள் அடைககலம் கொடுக்காதிருந்தால் இசுலாம் வளர்ந்திருக்க முடியுமா? ஒருக்காலும் முடியாது. முகம்மது நபியின் உறவினர்கள் அவர்மேல் பாசம் வைததிருந்தாலும் இசுலாத்திற்கமாற மறுத்துவிட்டனர்.
ஆனாலும் முகம்மது நபியிடம் இருந்த குறைஷிகளின் உயர்வுக்குறித்தும் அவர்கள் இசுலாத்திற்கு வருவதே தமக்கான நல்லாதரவாக இருக்கும் என்று கருதியதற்கும் வரலாறு உள்ளது. போர்களில் பிறகுல மக்களை கைப்பற்றியதும் அடிமைகளாக்கிக் கொண்டார்கள். சந்தைகளில் விற்றார்கள். ஆனால் குறைஷிகள் தோற்க்கப்பட்டு பிடிபட்டபோதெல்லாம் ஈட்டுத்தொகைப் பெற்றுக்கொண்டு விடுதலை செய்தார்கள்.
ஒருமுறை குறைஷிகளின் மதிப்புமிக்கவர்களுடன் வலீதிப்னு முஙைரா, அபூஜகீல் மற்றும் சிலர் இசுலாத்திற்கு அழைப்புவிடுத்து முகம்மது நபி உரையாற்றிக் கொண்டிருந்தபோது இடையில சென்று சந்தேகம் ஒன்றை வினவிய அப்துல்லாஹிப்னு உம்மெ மக்தூம் என்பவரை தாம் முக்கியமானவர்களுடன் விவாதித்துக் கொண்டிருக்கும்போது இடைமறித்ததற்காக முகம்மதுநபி கோபம கொணடுவிடுகிறார். ஆனால் நீண்ட நேரம் குறைஷிகளுடன் விவாதித்தும் பலனில்லாது போனதும் தாம் அப்துல்லாஹிப்னு உம்மெ மக்தூம் என்பவரை கோபித்துக் கொண்டது தவறு என்பதை உணர்கிறார். இதனை குர்ஆன் அத்தியாயம் 80ன் மூலம் தன் தவறை வெளிப்படுத்துகிறார்.
80:1 முதல் 6 வரை அவ்வசனங்கள் பின்வருமாறு
அவர் கடுகடுத்தார். முகத்தையும திருப்பிக் கொண்டார். பார்வையற்ற ஒருவர் அவரிடம் வந்தற்காக (நபியே) அவர் (குறைஷிகள்) பரிசுத்தமடைந்து விடுவார்கள். என்பதுபற்றி உமக்கென தெரியும்? அல்லது உபதேசத்தை அவர் நினைவு கூறலாம். அப்போது அவ்வுபதேசம் அவருக்க பலனிருக்கலாம் என்பதுபற்றி உமக்கென்ன தெரியும்). எவன் தேவையற்றவனாக இருக்கிறானோ நீர் அவனையே முன்னோக்குகிறீர்.
இதன் மூலமும் அவர் குறைஷிகளையே உயர்வாக கருதியதும தெளிவாகிறது. அரசனை நம்பி புருஷனை இழந்த கதையாகிவிடக்கூடாது. என்பதற்காக தம்மைதாமே கண்டித்துக்கொள்கிறார்.
எனவே கட்டுரையின் தலைப்பு “பார்பனியத்தால் விழுங்கப்பட்ட இசுலாம்” என்பதும் Masooth என்பவரின் புத்தகத்தின் தலைப்பு “இசுலாத்தில் மனுவாதிகள்” என்பதும் பொருத்தமற்றதே.
சரி உள்ளடக்கத்தினைப் பார்ப்போம். இசுலாத்தின் கோட்பாடும் மரபுவழியும் இந்திய சூழ்நிலையும் சாதிய அமைப்பு போன்ற ஏற்றத் தாழ்வுடைய குலங்களைக் கொண்டுள்ளதை ஒழிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதே!
இசுலாத்தின் அப்படி சாதிய அமைப்பே இல்லை. இசுலாமியர்களிடம் தான் உள்ளது. என்றும் அதற்கு இசுலாம் பொறுப்பேற்காது என்றும் அவர்கள் இசுலாமியர்கள் இல்லை என்றும் நெத்தியடி முகம்மது விவாதிக்கிறார். நாமும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் அவர்கள் இசுலாமியர்கள் இல்லை என்பதை நெத்தியடி முகம்மதும் அவரது அவுலியா பி.ஜே.வும் இப்படிபட்டவர்களை பெயர் குறிப்பிட்டு காபிர்கள் என்று வெளிப்படையாக அறிக்க வேண்டும். .ஜே.வின் சொந்த ஊரான தொண்டியில் “சாயிபு வீடு” என்ற பணக்கார குடும்பங்கள் உள்ளன. இவர்களே பக்கிர்ஷாக்களை கீழானவர்களாக நடத்துகினறர். இவர்களையும் காபிர்கள் என்று பி.ஜே. அறிவிப்பரா?
அடிமைகளை அவர்கள் வைத்திருந்ததும், இசுலாத்திற்கு மாறிய அடிமைகளையும் அடிமையாகவே நடத்தியதும் அடிமைகளின் அவலநிலையும் இசுலாத்தின் தூயவடிவில் இருந்ததற்கு குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஏராளமான சான்றுகள் உள்ளது. எனது அடிமை அது அல்லாஹ்வின் ஆணை என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளேன்.
நெத்தியடி முகம்மது ஏற்றதாழ்வே இல்லை என்பதற்கு “நாமே” உங்களை நீங்கள் அடையாளம் காணபதற்காக கோத்திரங்களாக பிரித்து வைத்துள்ளோம். என்று அல்லாஹ் கூறுவதை சான்றாக கூறுகிறார். மொட்டையாக அடையாளம் காணபதற்கு என்று கூறினாள் எப்படி புந்து கொள்வது? எந்த வகையில் அடையாளம் காண்பதற்காக அல்லாஹ் பிரித்து வைத்துள்ளான் என்று இவர் கூறுவாரா? நாம் இதனையே குலங்களின் ஏற்றதாழ்வுக்கு சான்று என்கிறோம். இல்லை என்று மறுப்பது என்றால் எந்த வகை அடையாளத்திற்காக என்று நெத்தியடி கூறவேண்டும்.
எல்லோரும் பணக்காரர்களாக ஆகிவிட்டால் பிறகு எவன் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வருவான்? அதனால்தான் ஏற்றதாழ்வு உள்ளதாக அல்லாஹ் படைத்துள்ளான். என்று பி.ஜே உளறுவதுபோல் உளரக்கூடாது. (இவர் சொலலாமல் விட்டது கக்கூஸ் கழுவ எவன் வருவான்?)
சாதிய வேறுபாட்டை கடைபிடிப்பவர்கள் இசுலாமிளர்களே இல்லை அவர்கள் மறுமைநாளில் உலகம் அழிந்தபிறகு) அதற்கான தண்டையாக நரகத்தை பெறுவார்கள் என்று அவர்களுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து வழுகி கள்ளமௌனம் சாதிக்கிறார்கள்.
தனது தலைமையை ஏற்றுக்கொண்டு தன் பின்னால் வரவில்லை என்தற்காக இவர்களின் அவுலியா உலமாக்களுடனும் சாதாரண மக்களுடனும் குர்ஆன் ஹதீது குறித்து தவறாக விளங்கிக் கொண்டு தவறாக நடப்பதாக லட்சக்கணக்கில் செலவு செய்து போராடுவார்களாம். இடஒதுக்கீடு, அரசியலில் பங்கெடுப்பு ஆகியவற்றிர்கெல்லாம் இவர்கள் யாரை இசுலாமியர்கள் இல்லை என்று கூறுகிறார்களோ அவர்களுக்கும் சேர்த்து போராடுவார்களாம். ஆனால் சாதிய அமைப்பு பற்றி “அது தப்பு இசுலாத்தில் இல்லை அவர்கள் இசுலாமியர் இல்லை எனறு ஒன்றைவரி பதில் போதுமாம்” (அதற்கு அலலா பார்த்துக் கொளவானாம்). உலக காபிர்கள் குறிப்பாக தலித்துக்கள் இசுலாத்தில் இணைந்து சொர்கம் செல்ல வேண்டும் என்று கூப்பாடும் போடும் இவர்கள் அல்லாஹ் பார்த்துக் கொள்வான எனறு வாலை சுருட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். அப்பொழுது மட்டும் மதப்பற்று பொத்துக்கொண்டு கிளம்பிவிடும்.
வேறு ஏதோ ஒரு கட்டுரையில் ஒருவர் பி.ஜே யுடன் நேரில் விவாதிக்க தயாரா என்று கேட்டிருந்தார். நேரில் விவாதிப்பது மட்டும் தான் விவதாமா? இங்கு விவாதிக்கக் கூடாதா? இங்கு நாம் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில்தரக்கூடாதா?
நெத்தியடி முகம்மது உங்கள் அவுலியா பி.ஜே. தனது குர்ஆன் மொழிபெயர்ப்பின் பினகுறிப்பு 107ல் அடிமைப பெண்களை பலரும் சீண்டுவதை தடுப்பதற்காகவும் பெண்ணடிமையின் காமத்தேவையை பூர்த்தி செய்து விபச்சாரம் செய்வதிலிருந்து தடுப்பதற்காகவும் ஆண்டைகள் பெண்ணடிமைகளுடன் உடலுறவு வைத்துக்கொள்ள முகம்மது நபி அனுமதித்தார்கள். என்று பெண்ணடிமைகளுக்கு கரிசனப்பட்டு எழுதியுள்ளார்கள். அப்படியானால் பெண்களைவிட காமஉணர்வு கூடுதலாக ஆண்களுக்கு உள்ளதால் தான் நான்கு பெண்கள்வரை திருமணம் செய்துகொள்ள ஆண்களுக்கு அனுமதித்தார்கள் என்று கூறும் நீங்கள், ஆண் அடிமைகள் காம உணர்வை தீர்த்துக்கொண்டு அவர்களை விபச்சாரம் செய்வதிலிருந்து தடுத்துவிட முகம்மது என்ன ஏற்பாடு செய்தார்கள் என்று கூறுவீர்களா? பதில் தெரியாவிட்டால் உங்கள் அவுலியாவிடம் கேட்டுப் பதிலை எழுதுங்கள். பிறகு நேரில் விவாதம் செய்வது குறித்து சரியான ஏற்பாடு செய்கிறேன்.
சாதிய ரீதியான பிரச்சனைக்கும் வர்க்கப்பிரச்சனைக்கும் மதங்களை தூக்கி எறியாமல் தீர்வு என்பதே கிடையாது. அப்பணியை நாம் தொடராக செய்தே தீர வேண்டும.
வினவு குழுவினருக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….
இங்கே கருத்து சொல்பவர்கள் தொடர்ந்து நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற ரீதியிலேயே கருத்து சொல்லிக் கொண்டு வருகின்றனர்.
ஷேக் தாவூத் விட்டிருக்கின்ற சவாலுக்கு வினவு பதில் சொல்லாமல் மவுனம் காப்பதன் மூலம் தன்னுடைய தவறை மறைக்க பார்க்கின்றது.
http://athikkadayan.blogspot.com/2009/11/blog-post_20.html
மேலும் இங்கு கருத்து சொல்லுகின்றவர்கள் தங்களுக்கு கருத்துப் பாடம் எடுத்த மருதையனோடு சென்று இஸ்லாமிய மார்க்க அறிஞர்களோடு நேருக்கு நேர் விவாதம் செய்ய ஏன் பயப்படுகின்றனர்? ஒரு வேளை கம்யூனிச டவுசர் கிழிந்து மக்கள் முன்னால் அவமானப் பட்டு விடுவோம் என்ற அச்சமோ? வினவு இதற்கும் மவுனம் தான் சாதிக்கும். ஏனெனில் பிழைப்புவாதிகள் அவமானப்படும்போது மவுனமாகவே இருக்கின்றனர். ம.க.இ.க கும்பலுக்கு உண்மையிலேயே தைரியம் இருக்குமானால் முஸ்லிம் அறிஞர்களோடு விவாதிக்க இந்நேரம் தேதி குறித்திருப்பார்கள். பாவம் ம.க.இ.க வினவு கும்பல்கள்…….
பரபரப்பிற்கு செய்திகள் எழுதும் தினமலரும் புதிய ஜனநாயகமும் வினவு தளமும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை கூவத்தில் தூக்கி எறியப் படக் கூடிய ஒன்றே. தைரியம் இருந்தால் அவர் விட்ட சவாலை மக்களின் முன்னால் சந்தியுங்கள். அதை விடுத்து மீண்டும் மீண்டும் சில்லறைகளை விட்டு ஏதாவது எழுதி அதை சமாளிக்கப் பார்க்காதீர்கள்.
நான் சில்லறை,
மீண்டும் மீண்டும் சில்லறைகள் என்று கூறுவதிலிருந்து உங்களுடைய தந்திரமும் காழ்ப்புணர்ச்சியும் புரிகிறது. நாங்கள் நேரடியான விவாதத்திற்கு உடனடியாக வர இயலாது.(உடனடியாக என்றுதான் குறிப்பிட்டிருக்கின்றேன். எப்பொழுதும் வரமுடியாது எனக்கூறவில்லை.) ஏனென்றால் மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டி உட்கார்ந்து பிழைப்பவர்கள் அல்ல நாங்கள். இங்கு ஹதீதுகளின் ஆதாரத்துடனேயேதான் சில்லறைகள் (உங்கள் மொழியில்) விவாதிக்கிறார்கள். உங்களுக்கு இங்கு விவாதிக்க தயக்கம் ஏன்? எனக்கு நீங்கள் மறுமொழி இடமாட்டீர்கள் என நினைக்கின்றேன். ஏனென்றால் உங்கள் மொழியில் நான் ஒரு சில்லரை.
வினவுக்கு ஓர் வேண்டுகோள்: இஸ்லாத்தின் பொருளாதாரத்திற்கு தீர்வான ‘ஜகாத்’ பற்றி ஒரு பதிவை எழுதவும். அதில் இவர்களின் டவுசர் முழுவதும் கிழிந்து நாறிவிடும்.
யோவ் ஷாஜகான், இங்கே கட்டுரை எழுதி இத்தனை நாளாச்சு அத்திகடையான் என்ன கிழித்தார், இங்கே வந்து விவாதிக்க வேண்டியது தானே. இந்த கட்டுரையின் பின்னூட்டங்களில் நீங்களொல்லாரும் அம்மணமாக வலம் வருவதே காண சகிக்கவில்லை குறைந்தபட்ச நேர்மையோடு நீங்கள் இங்கே பின்னூட்டங்களுக்கு பதிலளித்து விவாதித்தால் உங்கள் முகமாவது அம்பலப்படாமலிருக்கும். அதை விடுத்து இல்லை ‘நான் மக்கள் மத்தியில் தான் அம்மணமாகத் திரிவேன்’ என்றால் அதற்கு என்ன செய்வது???
ஒரு மதவாத கூட்டத்தை விட விவாதத்தில் ஜெயிக்க ஒரு அல்வா துண்டு கிடைக்குமா? வினவு ஃபோன் நம்பர் இருக்கின்றது துணிவு இருந்தால் ஃபோன் செய்து நேரம் குறிக்கவும என்ன் எப்பவோ செல்லியாச்சு… எதுக்கு ஒடுறான் புடி ஒடுறான் புடின்னு சீனு போடுறீங்க…. போய் ஃபோன எடுங்க பாய்…..
இது அத்திக்கடையான் தளத்தில் இடப்பட்ட பின்னூட்டம்
நண்பர் ஷேக் தாவூது,
முதலில் நீங்கள் வினவு தளத்தில் இடப்பட்ட பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படித்தீர்களா என்பதே ஐயமாக இருக்கிறது. உங்கள் சகோதரர்கள் எழுப்பிய கேள்விகளை நான் உட்பட தோழர்கள் தெளிவாக விளக்கிய பின்னரும், நேரடி விவாதத்திற்கு தாயாரா என வாய்ச்சவடால் அடிக்கிறீர்கள். பல ஆதாரங்களுடன், பலவித கோணங்களில் தோழர்கள் தெளிவான மறுப்பை பதிவு செய்திருந்தும் அதற்கு பதிலளிக்கும் தெளிவில்லாமல் முஸ்லீம்களின் தவறு இஸ்லாத்தை பாதிக்காது என்பதையே திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருக்கின்றனர். வினவின் பிழைப்புவாதத்தைப்பற்றி எழுதும் நீங்கள் நேர்மையானவராக இருந்தால், வினவு இப்படி ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறது அது இந்த விதத்தில் தவறானது அதை நாங்கள் இப்படி விளக்கியிருக்கிறோம், இருந்தாலும் அவர்கள் இதற்கு பதில் கூறாமல் மவுனம் சாதிக்கிறார்கள் என பட்டியலிட்டிருக்கலாமே. அதை செய்யாத நீங்கள் எல்லாவித விளக்கங்களும் ஆதாரங்களும் தந்த பின்னரும் உங்கள் தளத்தில் ஓடி வந்து இப்படி ஒரு பதிவை இடவேண்டிய அவசியமென்ன? எது பிழைப்புவாதம்? அதே வினவு தளத்தில் அஹமதியாக்களை பற்றிய கட்டுரையில் உங்களோடு நான் உரையாடிய தொகுப்பை என்னுடைய செங்கொடி தலத்தில் பதிவாக இட்டிருந்தேன் அதில் உங்கள் பின்னூட்டத்தையும் அதற்கு என்னுடைய பதிலையும் சேர்த்து தந்திருந்தேன். அதைப்போன்றதொரு இடுகையை இடமுடியாமல் உங்கள் நேர்மையை தடுத்தது எது?
சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது அவர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் அடித்துக்கொள்வார்கள். பின் தோற்றவன் கொஞ்சம் தொலைவில் சென்று நின்றுகொண்டு கூறுவான் என்னையா அடிச்சே, எங்க வீட்டுப்பக்கம் வா உன்னை கவனித்துக்கொள்கிறேன் என்பான் அதேபோல் தான் நீங்களும் சரக்கு தீர்ந்தவுடன் நேரடி விவாதத்திற்கு வா கவனித்துக்கொள்கிறேன் என்கிறீர்கள். நேரடி விவாதம் என்றதும் நாங்கள் அஞ்சிவிடுவாதாக உங்களுக்கு நீங்களே நினைத்துக்கொண்டு சவடால் அடித்துக்கொள்கிறீர்கள் அப்படியல்ல. வினவு தளத்தில் பின்னூட்டமிட்ட நான் உட்பட பல தோழர்கள் பல்வேறு நாடுகளில் இருந்துகொண்டு எழுதுபவர்கள். பல தோழர்கள் வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அப்படியானதொரு வாய்ப்பில் நேரடி விவாதத்திலும் உங்களின் மூட நம்பிக்கைகளை கிழித்து உங்களுக்கே அடையாளம் காட்டுவோம். அதுவரை பொறுத்திருங்கள். அல்லது முடித்தால் எழுத்து விவாதத்தில் பங்குபற்றி உங்களின் கருத்துக்களை கூறுங்கள். நிச்சயமாக தோழர்களின் தளங்களில் பின்னூட்டங்கள் நீக்கப்படுவதில்லை.
உளுத்துப்போன கம்யூனிசம் என்ற சொல்லாடலுக்கும், “இரும்புத் திரை போட்டு இலட்சக்கணகான மக்களை இரஷ்யாவில் கொன்றழித்தவர்களின்” என்ற சொற்றொடருக்கும் தகுந்த மறுப்பையும் விளக்கத்தையும் உங்களுக்கு தந்திருந்தும் (அஹமதியாக்களை பற்றிய கட்டுரையில்) இன்றுவரை அதற்கொரு பதிலை கூற முடியாமல் இருக்கும் நீங்கள் மீண்டும் அதே பழைய பல்லவியை பாடியிருப்பது தான் உங்களுடைய நேர்மையா?
இந்த பின்னூட்டத்தை நீங்கள் வெளியிடுவீர்களா என்பது ஐயத்திற்கிடமானது தான். அப்படி நீங்கள் வெளியிடாது போனால் வினவு தளத்தில் தொடர்புடைய பதிவில் இது பின்னூட்டமாக இடப்படும்
தோழமையுடன் செங்கொடி
நெத்தியடி முகம்மது உங்கள் அவுலியா பி.ஜே. தனது குர்ஆன் மொழிபெயர்ப்பின் பினகுறிப்பு 107ல் அடிமைப பெண்களை பலரும் சீண்டுவதை தடுப்பதற்காகவும் பெண்ணடிமையின் காமத்தேவையை பூர்த்தி செய்து விபச்சாரம் செய்வதிலிருந்து தடுப்பதற்காகவும் ஆண்டைகள் பெண்ணடிமைகளுடன் உடலுறவு வைத்துக்கொள்ள முகம்மது நபி அனுமதித்தார்கள். என்று பெண்ணடிமைகளுக்கு கரிசனப்பட்டு எழுதியுள்ளார்கள். அப்படியானால் பெண்களைவிட காமஉணர்வு கூடுதலாக ஆண்களுக்கு உள்ளதால் தான் நான்கு பெண்கள்வரை திருமணம் செய்துகொள்ள ஆண்களுக்கு அனுமதித்தார்கள் என்று கூறும் நீங்கள், ஆண் அடிமைகள் காம உணர்வை தீர்த்துக்கொண்டு அவர்களை விபச்சாரம் செய்வதிலிருந்து தடுத்துவிட முகம்மது என்ன ஏற்பாடு செய்தார்கள் என்று கூறுவீர்களா? பதில் தெரியாவிட்டால் உங்கள் அவுலியாவிடம் கேட்டுப் பதிலை எழுதுங்கள். பிறகு நேரில் விவாதம் செய்வது குறித்து சரியான ஏற்பாடு செய்கிறேன்.
dai deyvudiya paiya sahith oru appanukum aathalukum nee piranthiya ?
உயிரினங்கள் எதுவானாலும் யாரானாலும் எப்படியானாலும் ஒரு அப்பன் ஒருஆத்தாலுக்குத்தாண்டா பொறக்கமுடியும் பரதேசி. இதுல ஒனக்கு ஏதாச்சும் சந்தேகம் இருந்தா பாக்கர் கிட்ட கேளுடா மண்டு.
athhikadaiyarum pathil sollalamay அவுலியா பி.ஜே. தனது குர்ஆன் மொழிபெயர்ப்பின் பினகுறிப்பு 107ல் அடிமைப பெண்களை பலரும் சீண்டுவதை தடுப்பதற்காகவும் பெண்ணடிமையின் காமத்தேவையை பூர்த்தி செய்து விபச்சாரம் செய்வதிலிருந்து தடுப்பதற்காகவும் ஆண்டைகள் பெண்ணடிமைகளுடன் உடலுறவு வைத்துக்கொள்ள முகம்மது நபி அனுமதித்தார்கள். என்று பெண்ணடிமைகளுக்கு கரிசனப்பட்டு எழுதியுள்ளார்கள். அப்படியானால் பெண்களைவிட காமஉணர்வு கூடுதலாக ஆண்களுக்கு உள்ளதால் தான் நான்கு பெண்கள்வரை திருமணம் செய்துகொள்ள ஆண்களுக்கு அனுமதித்தார்கள் என்று கூறும் நீங்கள், ஆண் அடிமைகள் காம உணர்வை தீர்த்துக்கொண்டு அவர்களை விபச்சாரம் செய்வதிலிருந்து தடுத்துவிட முகம்மது என்ன ஏற்பாடு செய்தார்கள் என்று கூறுவீர்களா? பதில் தெரியாவிட்டால் உங்கள் அவுலியாவிடம் கேட்டுப் பதிலை எழுதுங்கள். பிறகு நேரில் விவாதம் செய்வது குறித்து சரியான ஏற்பாடு செய்கிறேன்.
athhikadaiyarum pathil sollalamay
வினவு குழுவினருக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….
உண்மையிலேயே வினவு குழுவினருக்கு மானமோ ரோஷமோ நேர்மையோ கிடையாதா? மக்கள் மத்தியில் நேரடி விவாதத்திற்கு அறைகூவல் விட்டிருக்கிற ஷேக் தாவூத்தின் சவாலுக்கு பதில் சொல்ல துப்பு இல்லாமல் தொடர்ந்து வடிவேலு பாணியில் நான் வாறன் ஆனால் வர மாட்டேன் என்ற ரீதியில் கதை அடித்துக் கொண்டிருக்கிறது வினவு குழு. ஆண்மையுள்ள நெஞ்சில் நேர்மையுமுள்ள ஒருவன் இந்த மாதிரி சவாலுக்கு உடனே ஒத்துக் கொள்வான்.
நேரடி விவாதத்தில் தெரிந்து விடும் யார் அம்மணமாக போகிறோம் என்று. தைரியம் இருக்கின்றதா வினவு ம.க.இ.க கும்பலுக்கு விவாதத்திற்கு வருவதற்கு? நேரடி விவாதத்திற்கு ம.க.இ.க மருதையன் தலைமையிலான ம.க.இ.க வினவு குழு தயார் என இந்த தளத்தில் வினவு அறிவிக்கட்டும் முதலில். நேர்மையிருந்தால் வினவு குழு முதலில் இதை செய்யட்டும். சில்லறைகள் மட்டுமல்ல சவாலுக்கு ஓடி ஒளியும் பல கோழைகளின் கூட்டணியோ வினவு தளம்?
ஷாஜகான் என்னும் ஒரு கோழை மான ரோஷத்தைப் பற்றி பேசப்பிடாது! நான் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் பின்னங்களால முன்னால் ஒடும் ்சுயமோகம்மதுவின் பிடரியில் இடிக்க ஓடிவிட்டு இப்போ என்ன சீன் வேண்டிக்கிடக்கு. அதான் வினவு குழு ஃபோன் நம்பர் போட்டிருக்கிறார்களே, விவாதத்துக்கு ஃபோன் செய்து அழைக்க வேண்டியது தானே. ஃபோனில் பேசவே டவுசரை ஈரமாக்கும் உங்களிடம் நேரில் என்ன பேசுவது…..???
ஷாஜகான்…. நீங்கள் என்ன மவுண்டு ரோடு சிக்னலில் பிச்சை எடுப்பவரா எப்போ பார்த்தாலும் சில்லறை சில்லறை என்கிறீர்களே….
பின்குறிப்பு – இதில் யாருக்கேனும் நான் பிச்சைக்காரர்களை கேவலப்படுத்தியாக தோன்றினால் அதற்கு மன்னிப்பு. அது என் நோக்கமல்ல
வினவு குழுவினருக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….
நேரடி விவாதத்தை சந்திக்க திராணியற்று வினவு குழு தனி நபர் தாக்குதலில் இறங்கியிருக்கின்றதா? நான் சில்லறைகள் என்று சொன்னதன் முழு அர்த்தமும் இப்போது பல பேருக்கு புரிந்திருக்கும். இத்தகைய தனி நபர் தாக்குதலில் இறங்கும் இத்தகைய வக்கிர எண்ணம் உடையவர்களை சில்லறைகள் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைக்க முடியும்? தகரம் கண்டுபிடிப்பதற்கு முன்னர் தகர உண்டியல் கண்டுபிடித்து பிச்சை எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்று என்னால் இதற்கு பதிலளிக்க முடியும். ஆனால் நான் தனிமனித தாக்குதலில் நம்பிக்கை இல்லாதவன்.
வினவு குழுவுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன். உங்களிடம் நேர்மையிருந்தால் தைரியமாக இஸ்லாமிய அறிஞர்களுடன் நேரடியாக விவாதம் செய்ய வேண்டும். அப்படி நேரடி விவாதம் செய்ய மருதையன் தலைமையிலான குழுவினருக்கு என்ன தயக்கம்?
நண்பர் ஷாஜஹான்,
இந்த தளத்தில் விவாதம் செய்வதால் என்ன வந்துவிட்டது என்று புரியவில்லையே. நேரில் வந்து விவாதிக்கும் போது சொல்லப் போகும் ஆதாரங்களை இங்கேயே சமர்பிக்கலாமே. அல்லது இஸ்லாமிய அறிஞர்களையே இந்த தளத்தில் விவாதிக்கச் சொல்லலாமே. இத்தளத்தில் விவாதிக்கும் போது பல நாடுகளில் உள்ளவர்களும் பங்கு கொள்வார்கள் அல்லவா? இல்லை நேரில் வந்தால் தான் அந்த அறிஞர்கள் எல்லோரும் விவாதிப்பார்களா?
பார்ப்பன பயங்கரவாதத்தினை ஒழிக்க சகோதர சக்திகளான கம்யூனிஸ்டுகளும் கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய வரலாற்று கடமை இன்று இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நேரத்தில் இது போன்ற உள் முரண்பாடுகளை ஊதி பெரிதாக்க கூடாது என்று கருதுகிறேன். சகோதர சக்திகளை அணைத்து அணிவகுக்க நீங்கள் உழைக்க வேண்டுமே அன்றி, இப்படி கிறிஸ்துவர்களுக்கு எதிராகவும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிடுவதும் அந்த நட்பு சக்திகளுக்கு எதிராக பதிவுகளை பதிவதும் ஆக்கப்பூர்வமானது அல்ல என்று கருதுகிறேன்.
இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதத்தினை கம்யூனிஸ்டுகளும், கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் ஒன்றுபட்டாலே ஒழிக்க முடியும். இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதம் ஒழிந்தாலே உலகத்தில் அமைதி பூக்கும் என்பது அசைக்கமுடியாத உண்மை. உலகத்தினை இன்று அச்சுருத்தி வரும் மாபெரும் பயங்கரவாதம் இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதமே என்பது வெள்ளிடை மலை. இதனை எதிர்த்து போரிட வேண்டிய முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் உலகளாவிய அளவில் தங்களுக்குள்ளே போரிட வைத்து வேடிக்கை பார்த்து வருவது இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதம்.
சகோதர சக்திகளான கம்யூனிஸ்டுகளும் கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
முஸ்லீம்களும் இஸ்லாமிய அமைப்புகளும் பாகிஸ்தானை போல இந்தியாவையும் சவுதி அரேபியாவின் கீழ் காலனி நாடாக்கி இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதத்தினை அழிக்க கடுமையாக உழைத்து வருகின்றன.
கம்யூனிஸ்டுகள் சீனாவின் கீழ் காலனி நாடாக நேபாளை ஆக்கியதுபோல இந்தியாவையும் ஆக்கி இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதத்துக்கு முடிவினை கொண்டுவர கடுமையாக உழைத்து வருகின்றன.
சோனியா காங்கிரஸும் கிறிஸ்துவ சக்திகளும் அமெரிக்காவுக்கு கீழ் பிலிப்பைன்ஸை போல இந்தியாவையும் ஒரு காலனி நாடாக்கி இந்து பார்ப்பன பயங்கரவாதத்தினை முடிவுக்கு கொண்டுவர வேலை செய்கின்றன.
ஆனால் இந்து மதவெறியும், பார்ப்பன பாஜகவும் சற்று வலிமையாக இருப்பதால், அதனை செய்யமுடியாமல் இருக்கிறது.
ஆகவே நட்பு சக்திகளான கம்யூனிஸ்டுகளும் முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் தங்களது வேற்றுமைகளை தற்போது பெரிது படுத்தாமல் ஒன்று இணைந்து இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதத்தினை ஒழிக்க முன்வரவேண்டும்.
அமெரிக்க பயங்கரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், கிறிஸ்துவ பயங்கரவாதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிராமல், உலக மக்களின் முதன்மை எதிரியான இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதத்தினை அழிக்க தோளோடு தோள் சேருவோம்.
அருமை.
இந்து மதத்தினை ஒழித்திட கம்யூனிஸ்டுகள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்களாகிய தோழமைச் சக்திகள் இணைந்து செயல்பட வேண்டியதை கூறியுள்ள நட்பாளருக்கு நன்றி.
காங்கிரஸ் என்னதான் கிறிஸ்துவ ஆதரவு சக்தியாக இருந்தாலும், அதற்கு பாஜகவையும் இந்து மதத்தினையும் வீழ்த்திட சகோதர சக்திகளான கம்யூனிஸ்டுகள், முஸ்லீம்களின் ஆதரவு தேவை.
இந்து மதத்தை ஒழித்தபின்னால், நாம் இந்த நாடு கிறிஸ்துவ நாடாக ஆகவேண்டுமா அல்லது முஸ்லீம் நாடாக ஆகவேண்டுமா என்று பார்த்துக் கொள்ளலாம்.
தற்போதைய தேவை இங்குள்ள இந்து மதத்தை ஒழிப்பதுதான்.
ஆகையால் தயவு செய்து இஸ்லாமை திட்டுவதை நிறுத்திவிட்டு இந்துமதத்தை அழிப்பதில் கவனம் செலுத்துவோம். அதற்காக நாம் இஸ்லாமை போற்ற வேண்டும். கிறிஸ்துவ மதத்தை போற்ற வேண்டும். அப்போதுதான் இந்துக்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி முஸ்லீம்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ ஆவார்கள்.
கிறிஸ்துவ மதத்துக்கு சென்றவர்கள் கம்யூனிஸ்டு ஆதரவாளர்களாக ஆகிறார்கள். ஆனால் முஸ்லீமானவர்கள் கம்யூனிஸத்துக்கு ஆதரவாக அதிகம் பேர் ஆவதில்லை. ஆகவே இஸ்லாமியரும் தங்களது வேற்றுமைகளை மறந்து கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அல்லது இந்துக்கள் முஸ்லீம்களாக மாறாமல் கிறிஸ்துவர்களாக மாற வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவும் ஐரோப்பாவும் நமக்கு நல்லது செய்வார்கள்.
தற்போதைக்கு முதலில் உலகில் இருக்கும் ஒரே பாகன் மதமான இந்து மதத்தை அழிப்போம். பிறகு கம்யூனிஸமா இஸ்லாமா அல்லது கிறிஸ்துவமா என்று பார்ப்போம்.
இதில் திகவினரும் தங்கள் உழைப்பை நல்கிக்கொண்டுள்ளனர்.
இந்து மதத்தை அழிப்பதில் கம்யூனிஸ்டுகளான மகஇகவினரின் பங்கு அளப்பரியது!
ஆகவே மகஇகவினர் திக, இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகியவற்றை திட்டுவதை நிறுத்திவிட்டு இந்து மதத்தை மட்டுமே திட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கோவாவில் கிறிஸ்துவம் செய்ததை போன்று ஒரு கட்டாய மதமாற்றத்தை நாம் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் கிறிஸ்துவம் இந்தியாவில் பரவும்.
நன்றி
தங்கமணி ஒன்று ஆர்.எஸ்.எஸ் போன்ற ம்த அடிப்படைவாத சக்திகளின் கைக்கூலி இல்லை அடி முட்டாள்……..
கம்யூனிஸ்டுக்ளுக்கு மதத்தை ஒழிப்பது வேலையில்லை, மாறாக சமூகத்தில் மதம் என்ற கருத்்தின் தேவையையே ஒழிப்பதுதான் வேலை…
ஆ.எஸ்.எஸ் மேல் எங்களுக்கு என்ன ‘பாசம்’ உள்ளதோ அதே அளவுதான் இசுலாமிய கிறுத்துவ மதவாத சக்திகளுக்கும் மீதும்.
மேலும் கம்யூனிசத்தை கட்டோடு பேதமில்லாமல் வெறுப்பவர்களும் மதவாத சக்திகளே.
எங்களுடைய தோழமை என்றுமே பாட்டாளி வர்க்த்தோடு மட்டுமேயன்றி மதவெறியர்களோடு இல்லவே இல்லை… அதானால் தயவு செய்து உங்கள் உளரலை இத்தோடு நிறுத்திவிடுங்கள்.
மட்டமானா கருத்து.
//தற்போதைய தேவை இங்குள்ள இந்து மதத்தை ஒழிப்பதுதான்.
ஆகையால் தயவு செய்து இஸ்லாமை திட்டுவதை நிறுத்திவிட்டு இந்துமதத்தை அழிப்பதில் கவனம் செலுத்துவோம். அதற்காக நாம் இஸ்லாமை போற்ற வேண்டும். கிறிஸ்துவ மதத்தை போற்ற வேண்டும். அப்போதுதான் இந்துக்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி முஸ்லீம்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ ஆவார்கள்.//
மானங்கெட்ட பொழப்பு… 😉
//கோவாவில் கிறிஸ்துவம் செய்ததை போன்று ஒரு கட்டாய மதமாற்றத்தை நாம் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் கிறிஸ்துவம் இந்தியாவில் பரவும்.//
🙂
சகோதரர் ஷேக்தாவூத் பிளாக்கில் இருந்து ……
சகோதரர் செங்கொடி,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ,
உங்களின் பின்னூட்டத்தை வெளியிடாமல் மறைக்கின்ற அளவிற்கு நான் ஒன்றும் கோழை அல்ல என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நேரடி விவாதத்திற்கு உங்கள் குழுவினரை அழைக்கின்ற அளவிற்கு இறைவன் எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் தந்திருக்கின்றான். உங்களின் மருதையன் தலைமையிலான ம.க.இ.க வினவு குழுவினர் போல விவாதத்தை கண்டு அஞ்சி நடுங்கி ஒளிந்து கொள்பவனல்ல.
/* முதலில் நீங்கள் வினவு தளத்தில் இடப்பட்ட பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படித்தீர்களா என்பதே ஐயமாக இருக்கிறது.*/ எந்த ஒன்றையும் படிக்காமல் பின்னூட்டமிட நான் ஒன்றும் மூளையை அடகு வைத்த கம்யூனிஸ்ட் அல்ல சகோதரரே. எந்த ஒன்றையும் சிந்தித்து பார்த்து ஏற்றுக் கொள்ள சொல்கிறது இறைவேதமான திருக்குர்ஆன். முழுமையாக அந்த பதிவை படித்து அதன் பின்னூட்டங்களையும் படித்த பின்னரே இந்த பதிவை எழுதினேன்.
/* உங்கள் சகோதரர்கள் எழுப்பிய கேள்விகளை நான் உட்பட தோழர்கள் தெளிவாக விளக்கிய பின்னரும் */ அங்கே இஸ்லாமிய சகோதரர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது என்ற ஓர் பெரும் பொய்யை எவ்வாறு வாய் கூசாமல் சொல்லுகின்றீர்கள் செங்கொடி? முஸ்லிம்கள் தவறு செய்தால் அதற்குப் பொறுப்பு இஸ்லாம் தான் என்றால் கம்யூனிஸ்ட்டுகள் செய்கின்ற தவறுகளுக்கு கம்யூனிசம் தானே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற தொனியில் நெத்தியடி முஹம்மத், ஷாஜஹான் மேலூர் போன்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வினவு தளமோ அல்லது உங்களின் தோழர்களோ எங்கு பதில் சொல்லி இருக்கின்றீர்கள்? அதாவது இஸ்லாமியர்களின் தவறுகளுக்காக “பார்ப்பனீயத்திடம் சரணடைந்த இஸ்லாம்” என்று வினவு எழுதும் போது கம்யூனிஸ்ட்டுகளிடம் இருக்கின்ற தவறுகளுக்காக “கார்ப்பறேட்டுகளின் காலில் சரணடைந்த கம்யூனிசம்” என்ற பதிவை ஏன் வினவு எழுதவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார்களே? அதற்கு உங்கள் வினவு தளம் எந்த பதிலை சொல்லியது. நீங்கள் எழுப்பிய அதே கேள்வியை உங்களை நோக்கியே நான் எழுப்புகின்றேன். அந்த புரட்டுக்கார முரட்டு தளத்தில் வந்த பின்னூட்டங்களை முழுவதும் படித்தீர்களா செங்கொடி?
இஸ்லாம் என்றால் ஒரு நீதி. கம்யூனிசம் என்றால் ஒரு நீதி என்பது அப்பட்டமான பிழைப்புவாதம் அன்றி வேறென்ன? என்ற தொனியிலும் அங்கு கேள்விகளை எமது சகோதரர்கள் எழுப்பியிருக்கின்றனரே? என்ன பதிலை உங்களின் அபிமான வினவு தளம் கொடுத்தது செங்கொடி? நீங்கள் முழு பூசணிக்காயை (உங்களுக்கு பிடித்த எள்ளல் தொனியில் சொன்னால் ஒரு டைனோசரை) சோற்றில் மறைக்க பார்க்காதீர்கள். இந்த கேள்விகளுக்கு சுற்றி வளைக்காமல் உங்களின் வினவு தளத்தை நேரடியாக பதில் கொடுக்க சொல்லுங்கள்.
அஹமதியாக்களைப் பற்றிய பதிவில் பேசுபொருளை விட்டு (மனிதநேயமற்றவர்கள் முஸ்லிம்கள் என்று பு.ஜ , வினவு வைத்த குற்றச்சாட்டு) விவாதத்தை தந்திரமாக திசைமாற்றியது நீங்களா அல்லது நானா? இஸ்லாமியர்களின் மனிதநேயம் மற்ற எல்லோர்களுடைய மனிதநேயத்தை விட குறிப்பாக ம.க.இ.க வினருடைய மனிதநேயத்தை விட சற்றும் குறைந்ததல்ல அதற்கு ஒருபடி மேல் தான் இஸ்லாமியர்களின் மனிதநேயம் என்ற பதிலை உங்களுக்கு நான் அங்கேயே அளித்திருக்கின்றேன். அதற்கு பதில் சொல்லாமல் நீங்கள் விவாதத்தையே திசைமாற்றி கொண்டு சென்றீர்களா இல்லையா? நீங்கள் செய்த தவற்றை என்மேல் சுமத்துவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா செங்கொடி?
/* நேரடி விவாதம் என்றதும் நாங்கள் அஞ்சிவிடுவாதாக உங்களுக்கு நீங்களே நினைத்துக்கொண்டு சவடால் அடித்துக்கொள்கிறீர்கள் அப்படியல்ல. வினவு தளத்தில் பின்னூட்டமிட்ட நான் உட்பட பல தோழர்கள் பல்வேறு நாடுகளில் இருந்துகொண்டு எழுதுபவர்கள். பல தோழர்கள் வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அப்படியானதொரு வாய்ப்பில் நேரடி விவாதத்திலும் உங்களின் மூட நம்பிக்கைகளை கிழித்து உங்களுக்கே அடையாளம் காட்டுவோம். அதுவரை பொறுத்திருங்கள். அல்லது முடித்தால் எழுத்து விவாதத்தில் பங்குபற்றி உங்களின் கருத்துக்களை கூறுங்கள். */ எழுத்து விவாதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. அது சங்கிலித் தொடராக நீளுமேயன்றி எந்த ஒரு உருப்படியான தீர்வையும் தராது. எனவே தான் உங்களை நேரடி விவாதத்திற்கு அழைக்கின்றோம். நெஞ்சில் நேர்மையும் கொள்கையில் உறுதியும் இருந்தால் கண்டிப்பாக உங்களுடைய இயக்கத்தினர் (ம.க.இ.க) நேரடி விவாதத்திற்கு வர வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்களேன் செங்கொடி. நீங்கள் தான் விவாதத்திற்கு வர வேண்டும் என்பதில்லை. உங்களின் சார்பாக உங்கள் இயக்கத்தினர் பங்கு பெறலாமே. இல்லை ஒரு வேளை தமிழ்நாட்டில் இருக்கும் எங்கள் இயக்கத்தினர்கள் எல்லாம் முட்டாள்கள் (மருதையன் உட்பட). அவர்களுக்கு விவாதம் பண்ண தெரியாது. அந்த அளவிற்கு அவர்களுக்கு அறிவும் இல்லை என்ற சொல்ல வருகின்றீர்களா? எனவே வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் தான் அறிவாளிகள். நாங்கள் வந்து தான் விவாதம் செய்வோம் என்று சொல்ல வருகின்றீர்களா? உங்களின் கருத்து இந்த தொனியில் தான் இருக்கின்றது.
நண்பர் செங்கொடி அவர்களே நேரடி விவாதத்திற்கு தயார் என்றால் தெரிவியுங்கள். அதைவிடுத்து எழுத்து விவாதம் எங்கள் தளத்தில் விவாதம் என்பதெல்லாம் தீர்வை தர முடியாத கால நேரத்தை வீணடிக்கும் செயல்களே. முடிந்தால் உங்கள் அமைப்பை விவாதத்திற்கு அழைத்து வரும் வழியை பாருங்கள். இல்லையென்றால் எழுத்துப்பூர்வமான வெட்டி விவாதத்தை நீங்களே செய்து கொள்ளுங்கள். அதில் நாம் கலந்து கொள்ள மாட்டோம். ஏனெனில் எமக்கு கால நேரத்தை வீணடித்தல் அவ்வளவு சாதரணமான ஒன்றல்ல. ஆக்கப்பூர்வமான் பணிகள் பல எமக்கிருக்கின்றது. நேரடி விவாதம் என்றால் தொடர்பு கொள்க செங்கொடி.
நண்பர் ஷாஜஹான்,
என்னுடைய பின்னூட்டத்திற்கான மறுமொழியை இங்கு பதிந்ததற்கு நன்றி. ஆனால் அதற்கு பதிலளிக்கவேண்டும் என்று அங்கு சென்றால் என்னுடைய பின்னூட்டத்தையும், இந்த மறுமொழியையும் காணவில்லை. கண்டுபிடித்துத்தறுமாறு கேட்டுக்கொள்வதோடு காரணத்தையும் அன்னாரிடம் கேட்டுச்சொல்லுங்கள்.
நண்பர் ஷேக் தாவூது,
ஆத்திரம் உங்கள் கண்களை மறைப்பதற்கு அனுமதிக்காதீர்கள். முஸ்லீம்கள் தவறுக்கு இஸ்லாம் பொறுப்பேற்காது என்பதற்கு பின்னூட்டம் எண் 15 ல் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தையும் கம்யூனிசத்தையும் ஒப்பிடுவது அடிப்படையிலேயே தவறானது என திருப்பதியானை கைது செய்த பதிவிலேயே பின்னூட்டம் எண் 37ல் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் விளக்கமாக 37.1.2 லும் விளக்கப்பட்டுள்ளது, அதுவும் நீங்கள் குறிப்பிடும் நெத்தியடி முகம்மதுவுக்குத்தான். விளக்கம் கொடுத்தபின் ஒன்று அது தவறு என மறுக்கவேண்டும் அல்லது அந்தக்கேள்வியை விலக்கவேண்டும் இரண்டுமின்றி ஒவ்வொறு பதிவிலும் அதையே கேட்டுக்கொண்டிருந்தால், நாங்கள் ஒன்றும் உங்கலைப்போல் பொழுதுபோக்குவதற்காக எழுதுபவர்களல்ல.
யாருக்கு வெட்கமில்லை நண்பர் ஷேக் தாவூது அவர்களே, உங்கள் மனித நேயத்தை சொல்லும் சாக்கில் அஹ்மதியா பதிவில் உளுத்துப்போன கம்யூனிசம் என்று பதிவுக்கு தொடர்பின்றி விமர்சித்தது யார்? உங்களின் கேள்விக்கு பதில் கூறியதைத்தவிர வேறு என்ன எழுதப்பட்டிருந்தது என்னுடைய மறுமொழியில் கூறமுடியுமா? அப்போது கள்ள மௌனம் சாதித்துவிட்டு இன்று மீண்டும் அதே போல் உளுத்துப்போன கம்யூனிசம் என்று எழுதுவதற்கு கேவலமாக இல்லையா உங்களுக்கு? பதிலும் சொல்லமாட்டீர்கள் ஆனால் மீண்டும் பழைய கிழவி கதவை திறடி என்று பல்லவி பாடுவீர்கள். இதற்கு யார் வெட்கப்படவேண்டும்? வெத்து வீராப்பு உதவாது நண்பரே
நேரடி விவாதத்திற்கு நாங்கள் அஞ்சுகிறோம் என்று மீண்டும் மீண்டும் புலம்புவதில் அர்த்தமில்லை. தினமும் நேரடி விவாதங்களில் பலரிடம் அவர்களின் ஆன்மீகம் சமூகம் சார்ந்த மூட நம்பிக்கைகளை அவர்களிடமே அம்பலப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன். இதற்காக பதில் சொல்லமுடியாத கோழைகள் சிலரால் தனிப்பட்ட இழப்புக்கும் ஆளாகியிருக்கிறேன். ஆனால் நீங்களோ நேரடி விவாதம் என்றால் குறிப்பிட்ட ஒருவருடன் செய்வதுதான் என்று அடம்பிடிக்கிறீர்கள் அதற்கும் தயாராகத்தான் இருக்கிறேன். வாய்ப்புக்கு காத்திருக்கிறேன். அப்போது நிச்சயம் உங்களிடம் தகவல் சொல்கிறேன். அமைப்பினருடன் தொடர்புகொள்ள வெண்டுமென்றால் தொலைபேசி இலக்கத்தை வெளிப்படையாக அறிவித்திருக்கிறோம். தொடர்புகொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு சவடால் அடித்துக்கொண்டு திரியாதீர்கள்.
தோழமையுடன்
செங்கொடி
தோழர்களே,
இவர்களிடம் மதவெறி மட்டுமல்ல, அதை நியாயப்படுத்துவதற்கு எந்த வித கீழ்த்தரமான செயலிலும் இறங்குவார்கள் என்பதற்கு இதோ சான்று.
***************************************************************************************
நண்பர் ஷேக் தாவூது,
எப்படி எப்படி…. உங்கள் தளத்தில் இட்ட பின்னூட்டங்கள் உங்களுக்கு தெரியாமல் காணாமல் போய்விட்டதா? காதில் பூச்சுற்றுவதை செவியுற்றிருக்கிறேன், பூக்கூடையை கவிழ்ப்பதை கூட யூகிக்கமுடியும். எப்படி பூந்தோட்டமே வைக்கிறீர்கள்? கேப்பையில் நெய் வடிகிறதென்று எதற்கோ சொல்வார்கள்.
என்னுடைய முதல் பின்னூட்டத்தில் வினவு தளத்திலும் இதை இடுவேன் எனக்கூறியதால் வேறு வழியில்லாமல் வெளியிட்டுவிட்டு அதற்கு பதில் என்று ஒன்றை கூறிவிட்டு மீண்டும் நான் வரமாட்டேன் (வரக்கூடாது) என்றெண்ணி அவைகளை நீக்கிவிட்டீர்கள். மறு மொழிவதற்காக நான் உங்கள் தளத்திற்கு வந்தபோது இரண்டையும் காணவில்லை. பரவாயில்லை என்று மறு மொழியை ஏற்றினால் அது ஏறாமல் அடம்பிடித்தது, சரிதான் ஏதோ தொழில்நுட்ப கோளாறு போல என்றெண்ணி மீண்டும் வினவு தளத்தில் அந்த மறு மொழியை பதித்தேன். அதைப்பார்த்ததும் ஓடி வந்து உங்கள் தளத்தில் நான் ஏதோ கோளாறு செய்துவிட்டதைப்போல் புலம்பியிருக்கிறீர்கள். இது போன்ற ஈனத்தனத்தில் ஈடுபடுவதில்லை நாங்கள் அது உங்களைப்போன்றவர்களின் வேலை. என்னுடைய செங்கொடி தளத்தை உங்கள் ஆட்கள் முடக்க முயன்றார்கள், நடக்கவில்லை. இல்லையென்று மறுத்தால் ஆதாரம் தருகிறேன். உங்கள் பூந்தோட்ட வேலையை வேறு எங்காவது வைத்துக்கொள்ளுங்கள்.
தோழமையுடன் செங்கொடி
வினவு தளத்தில் நான் இட்ட மறு மொழி
செங்கொடி says: November 25, 2009 at 12:09 am
நண்பர் ஷாஜஹான்,
என்னுடைய பின்னூட்டத்திற்கான மறுமொழியை இங்கு பதிந்ததற்கு நன்றி. ஆனால் அதற்கு பதிலளிக்கவேண்டும் என்று அங்கு சென்றால் என்னுடைய பின்னூட்டத்தையும், இந்த மறுமொழியையும் காணவில்லை. கண்டுபிடித்துத்தறுமாறு கேட்டுக்கொள்வதோடு காரணத்தையும் அன்னாரிடம் கேட்டுச்சொல்லுங்கள்.
நண்பர் ஷேக் தாவூது,
ஆத்திரம் உங்கள் கண்களை மறைப்பதற்கு அனுமதிக்காதீர்கள். …………. பின்னூட்டம் எண் 83. ………………. அதை விட்டுவிட்டு சவடால் அடித்துக்கொண்டு திரியாதீர்கள்.
தோழமையுடன் செங்கொடி
வினவு குழுவினருக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….
ஏற்கனவே இந்த தளத்தில் கம்யூனிஸ்ட்டுகள் இடும் பின்னூட்டம் தனி காமெடியாக போய்கொண்டிருக்க இப்போது ஆர்.எஸ்.எஸ் காரர்களும் தனி டிராக்கில் காமெடி பண்ண ஆரம்பித்து விட்டார்கள். தாங்க முடியவில்லை.
எழுத்து விவாதம் என்பதெல்லாம் ஒன்றுக்கும் உதவாத விஷயம். எனவே வினவு குழுவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் நேரடி விவாதத்திற்கு வர வேண்டும்.
இந்த தளத்தை ஆயிரம் பேர் பார்த்தால் நேரடி விவாதம் எனும் போது இலட்சக்கணக்கான நபர்கள் காணும் வாய்ப்பு ஏற்படும். ஏனெனில் விவாதம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் போது இன்னும் அதிகமான மக்களிடத்தில் போய் சேரும். எனவே ம.க.இ.க வினவு குழு நேரடி விவாதத்திற்கு தயார் என அறிவிக்க வேண்டும். நேரடி விவாதத்தில் யார் பொய்யர்கள் என்பது தெரிந்து விடும். ம.க.இ.க வினவு குழு தயாரா?
ஷாஜகான் மற்றும் நெத்தியடி கவனிக்க….உங்களுக்கு துளியளவும், நேர்மையும், பொறுப்பும், அறிவும், தெளிவும், துணிவும், நம்பிக்கையும் இல்லை என்பது இங்கே நீங்கள் பதில் சொல்லாமல் ஓடுவதிலிருந்து உள்ளங்களை பூசனிக்காயாக…..
குறைந்த பட்சம் வினவு குழுவின்ரின் செல்பேசியில் அழைக்கும் அளவுக்கு கூட உங்களிடம் துணிவு இல்லை.
சரி ஒழிந்து போகட்டும் என எங்கள் தோழர் சாகித் அவர்கள் உங்களிடம் விவாதம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார், https://www.vinavu.com/2009/11/11/casteism-in-islam/#comment-13079 அதற்கு கூட உங்களால் பதில் சொல்ல முடியாமல் மீண்டும் மீண்டும் உதார் விடுவதிலேயே குறியாக இருக்கின்றீர்கள்
உங்களுக்கு விவாதம் செய்ய ஆர்வமிருந்தால் அவருடன் உரையாடி நேரம் குறிங்கள். தேய்ந்த ரிக்கார்டான உங்கள் பின்னூட்டங்களை காண சகிக்கவில்லை
வினவு குழுவினருக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….
நேரடி விவாதம் ஏற்பாடு செய்ய சொன்னால் காமெடியா ஒரு
கண்டிஷனை போட்டுக்கிட்டு இது புது டிராக்குல போற காமெடியா? ஏற்கனவே கம்யூனிஸ்ட்டு, ஆர்.எஸ்.எஸ் காமெடின்னு போறப்போ இப்ப அடுத்த காமெடியா? இந்த அடிமை முறையை பற்றிய கேள்வியையும் நேரடி விவாதத்துல கேட்கலாமே.
கம்யூனிஸ்ட்டுகள் தப்பிக்க பல வழி தேடிக் கொண்டிருக்காங்க. இது தப்பிக்க புது ரூட்டு போல. ஆர்.எஸ்.எஸ். காரன் தோத்துடுவான் போல இவங்க அடிக்கிற பல்டில. நேரடி விவாதத்திற்கு வாங்க என்றால் வடிவேலு மாதிரி காமெடி பண்ணி தப்பிக்க பார்க்குறீங்களே கம்யூனிஷ்ட்டுகளா?
ஷாஜகான்,… ஒரு கழுதைக்கு கூட உன்ன விட நேர்மை அதிமா இருக்கும் !!!
விவாதம்னா அது நேருலதான் நாங்க நெட்டுலல்லாம் பேச மாட்டோமின்னு கன்டீசன் போடறது யாரு… நீயா நாங்களா? கொஞ்சமாச்சும் சூடு சொரண இருந்தா உண்மைய பேசுவ… வாய திறந்தா பொய், பித்தலாட்டம், அயோக்கியத்தனம்… இதுல சத்தியாமார்கம் மயிறு மட்டைனைனு ஊருக்கு உபதேசம்….த்தூ இதுவும் ஒரு பொழப்பா…?????
வினவு குழுவினருக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….
நேரில் பேசலாம் வாருங்கள் என்று அழைப்பவன் நேர்மையாளனா? இல்லை முகம் காட்டாமல் இருந்து கொண்டு எழுத்தில் தான் எழுதுவேன் அன்று அடம்பிடிப்பவன் நேர்மையாளனா? முகம் காட்டாமல் இருந்து கொண்டு எழுதுவது ஆர்.எஸ்.எஸ் காரன் புத்தியாச்சே? அது எப்படி ம.க.இ.க தொண்டர்களுக்கு வந்தது.? ஒருவேளை பார்ப்பனீய மயமாகி விட்டதோ ம.க.இ.க?
நேரடி விவாதத்திற்கு அழைப்பவர்கள் நேர்மையற்றவர்கள். ம.க.இ.க வினரின் அடுத்த காமெடியா இது? வினவு குழுவுக்கு இன்னும் மானம் ரோஷம் வரவில்லையா? இல்லை நேரடி விவாதத்திற்கு வந்தால் கம்யூனிச உள்ளாடை கிழிந்து விடும் என்ற பயமா?
நேர்ல பேசனுமின்னு விரும்புற நீங்க அதப்பத்தி 4 மைலுக்கு நாட்டாம பன்னும் நீங்க பின்னூட்டத்துல என்னாதுக்கு அழைக்கனும், நீங்கதான் ரொம்ம்ம்ம்ப நேஏஏஏஏஏமையாளராஆஆஆச்சே நேர்ல போய் கூப்பிட வேண்டியது தானே… முகம்காட்டாமல் எழுதுவது ஆர்.எஸ்.எஸ் காரன் புத்தின்னுதான் இவ்வளவுநாளா நினைச்சேன்…இப்பதான் தெரியுது இசுலாமிய ”பாப்பான்களும்” அப்படித்தான்னு….
இதுக்குத்தான் வாயக்கொடுத்து…..
வினவு குழுவினருக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….
நேரடி விவாதம் செய்ய வேண்டுமெனில் நேரில் சென்று வெற்றிலைப் பாக்கு எல்லாம் வைத்து அழைக்க வேண்டும் என்று வினவு குழு எதிர்பார்க்கின்றதா? வினவு தளத்தில் நேரடி விவாதத்திற்கு தயார் என்று ஓர் அறிவிப்பில் நேரடி விவாதத்தை முடிவு செய்து விடலாமே? ஒரு சந்தேகம். நேரில் வாங்க வாங்க என்று அழைக்கிண்றீர்களே. ஒரு வேளை வட நாட்டில் மாவோயிஸ்ட்டுகள் (அதாவது வட நாட்டு ம.க.இ.க) ஆட்களை கடத்துவது போல இங்கும் கடத்துவதற்கு ஐடியா பண்ணுகிறீர்களோ?
மீண்டும் சொல்லுகிறேன். நேரடி விவாதம் என்றால் வினவு குழு அறிவிக்கட்டும். அதை விடுத்து தனிப்பட்ட லாவணி பாடுவதில் எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. வினவு குழு நேரடி விவாதத்தை எதிர்கொள்ளுமா? மானம் ரோஷம் உள்ளவர்கள் எதிர் கொள்வார்கள். வினவு குழு?
முரண்பாடின் மூட்டையே,… நேரில் வாவா என்று அழைப்பது நீர்தானே…பின்னூட்டத்தில் ஒரு அரைமென்டல் ”நேர்லவாடா”ன்னு சொன்னா உடனே ஒடிவிடமுடியுமா??? வினவு தனது அட்ரஸ் டெலிபோன் நம்பர் எல்லாம் கொடுத்திருக்கிறார், நீயோ ஒரு அநாமதேயம்… உன்னை நீ வேண்டுமானால் இசுலாமின் பிரதிநிதியாக நினைத்துக்கொள்ளலாம், ஆனால் இங்கு விவாதிப்பவர்களை பொறுத்தவரை நீர் ஒரு அநாமதேயமே! அதனால் உங்கள் அழைப்பை முறைப்படி வை அப்புறம் பேசு. இங்கே பின்னூட்டத்தில் ஜல்லியடிப்பதில் காலணாவுக்கு பயனில்லை …
எனக்கென்னவோ இந்த ஷாஜகான் நெத்தியடி கூட்டனி ஆர்.எஸ்.எஸ் குரூப்போங்கற சந்தேகம் அதிகமாயிட்டே இருக்கு… பாக்கலாம்!!!!
மிக தைரியமாக இஸ்லாத்தை விமர்சிக்கிறீர்கள்.உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் .எதற்கும் உங்களது அலுவலக முகவரியை ரகசியமாக வைத்து கொள்ளுங்கள் ஏனெனில் விரைவில் இந்த நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்
ஒரு அச்சுறுத்தல்
ஒரு பாத்வா
கடைசியாக தாக்குதல்
இந்து மதத்தை நீங்கள் எப்படி வேண்டுமானால் விமர்சிக்கலாம் உங்களுக்கு பாத்வா விதிக்க அதில் யாருக்கும் அதிகாரம் இல்லை ஏனெனில் அது நிறுவனமயமாக்கப் படவில்லை .இஸ்லாம் நிறுவனமயப் படுத்த பட்ட பாசிச கட்டமைப்பை கொண்டிருக்கிறது
ஒரு பெரியார் இஸ்லாத்தில் சாத்தியமே இல்லை ஏனெனில் கேள்வி கேட்பவர்க்கு அதில் இடமில்லை
அத்தே நீங்க சொல்றீங்களாக்கும்?…. வேதனை.
தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை.
போய் புள்ள குட்டிய படிக்க வைத்து உருப்படற வழிய பாருங்கய்யா…போங்கய்யா…..போங்கன்னா…..
வினவு குழுவினருக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….
நேரடி விவாதம் செய்ய அஞ்சவில்லை என்றால் வினவு குழு நேரடி விவாதத்திற்கு தயார் என அறிவிக்கட்டுமே. அதை செய்ய வினவுக்கு தைரியமில்லை. ஆனால் புரட்சி பண்ணுகின்ற ரேஞ்சுக்கு பஞ்ச் வசனங்கள் சர்வ சாதரணமாக வருகிறது கம்யூநிச்ட்டுகளிடமிருந்து . ஒருத்தர் விவாதத்துக்கு தயார் என்று உதார் விடுகிறார். இன்னொருத்தர் விக்கிரமாத்தித்தன் கதையில் வரும் வேதாளம் போல இந்த கேள்விக்கு பதில் சொன்னால் விவாதத்திற்கு தயார் என்று காமெடி பண்ணுகிறார். இன்னொருத்தரோ வினவுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்தால் தான் விவாதம் என்று வடிவேலு ரேஞ்சுக்கு கண்டிஷன் போடுறார். அடேங்கப்பா ஆர்.எஸ். எஸ் அமைப்புலாம் தோற்றுவிடும் போல இவங்க அடிக்கிற பல்டியை பார்த்து. வினவுக்கு மானம் சூடு சொரணை கொஞ்சம் கூட கிடையாதா?
ஷாஜகான், என்ற மத அடிப்படைவாதிக்கு,
வினவுக்கு மானம், சூடு, சொரணை உண்டா என்று ஆயிரத்தோரு முறை கேட்டு விட்டீர்கள். எங்களுக்கில்லை என்றே வைத்துக்கொள்வோம். மேற்படி ஐயிட்டங்கள் உங்களுக்கு டன் கணக்கில் இருப்பது உண்மையினால் இந்த விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கவேண்டுமல்லவா? அதற்கு துப்பில்லாமல் நேரடி விவாதத்திற்கு என்று கூரையேறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்பட்டது நினைவுக்கு வருகிறது. கோழியை விடுங்கள் கோழிக்குஞ்சை கூட பிடிக்க முடியாத உங்களது அவல நிலைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். உதார் விடுவதற்க்ம் ஒரு அளவு இருக்கிறது. அரபு ஷேக்குகள் துவங்கி உள்ளூர் பணக்கார முசுலிம்கள் தொட்டு சுரண்டும் கூட்டம் ஏழை முசூலீம் மக்களை மத பிற்போக்கு வாதத்தில் மூழ்கடிக்க நினைக்கிறது. இந்த எண்ணம் ஈடேற விடமாட்டோம். நீங்கள் என்னதான் குதித்தாலும் உழைக்கும் முசூலீம் மக்களை எங்கள் பக்கம் அணிசேர்ப்போம். அதை நீங்களோ உங்கள் இறைவனோ கனவில் கூட தடுக்க முடியாது.
வினவு குழுவினருக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….
மானம், சூடு சொரனையற்ற வினவு குழுவே (வினவு குழுவே இது தங்களுக்கில்லை என்று ஒத்துக் கொண்டது) முதலில் இந்த பதிவு சம்பந்தமாக நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் இருந்து விட்டு இப்போது கம்யூனிஸ்ட் காலி டப்பாக்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்லவில்லை என்று புலம்புவதற்கு கேவலமாக இல்லையா வினவே? நான் தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே சில்லரைகளுடன் பேச மாட்டேன் வினவு குழுவுடன் மட்டுமே பேசுவேன் என்று. திரும்பவும் சில்லரைகளுடன் பேசு விவாதி என்று சொல்ல ம.க.இ.க விடம் மூளையை அடகு வைத்த காலி டப்பா கம்யூனிஸ்ட்டுகளால் மட்டுமே முடியும். இதில் சவால் வேறு. இஸ்லாமிய மக்களை இவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் ஆக்க போகின்றார்களாம். வினவே முடிந்தால் உன்னால் உன் சிந்தனையான கம்யூனிசத்தை சொல்லி மக்களை அழைத்துப் பார். அதுவும் குறிப்பாக இஸ்லாமிய மக்களிடம். கிடைப்பது என்ன என்று அப்போது தெரியும். கடைசி வரைக்கும் சூடு சொரணை வந்தாவது விவாதத்திற்கு வருவாங்க என்று பார்த்தால் அரசியல்வாதி கம்யூனிஸ்ட்டுகளை விட இந்த நக்சல் கம்யூனிஸ்ட்டுகள் ரொம்ப தெளிவா இருக்குறாங்க. யாரும் அவர்களை நாறடித்து விடக் கூடாது என்பதில். விவாதத்திற்கு வந்தால் நாரிப்போய்டும்லே. அடப் போங்கய்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை. நீங்களும் உங்க தளமும்.
@ஷாஜஹான் மேலூர்
ஒவ்வொரு கமெண்ட் போடும் போதும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
என்கிறீர்களேஅஸ்லாமு எங்கே அழைக்கிறாக.. எங்கே வர்றாக ?
ஷாஜகான் மேலூர் போன்ற சில்லறைகள், அல்லக்கைகள், அநாமதேயங்கள், அரை லூஸ்கள், வேலை வெட்டி இல்லாதவர்கள் கூட வினவு விவாதிக்க விரும்பவில்லை. அதற்கு பதில் சாதாரண உழைக்கும் முசுலீம் மக்களிடம் பேசி எங்கள் தரப்பில் இணைக்கும் வேலை செய்வோம். மற்ற கட்சிகளை விட எங்கள் இயக்கத்தில் பிறப்பால் முசுலீம்களாக உள்ள தோழர்கள், ஆதரவாளர்கள் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவலை மேலூர் காரருக்கு தெரிவிக்கிறோம். எப்படியும் எந்த மதங்களுக்கும் நிச்சயமாக எதிர்காலமில்லை என்பது இசுலாத்திற்கும் பொருந்தும். அதை ஜீரணிப்பதற்கு மருந்து சாப்பிடுங்கள் அதாவது தொடர்ந்து வினவு படியுங்கள். இந்தியாவில் இந்து மதவெறியரால் ஒடுக்கப்படும் இசுலாமிய மக்கள் உங்களைப்போன்ற மதவாதிகளை விட எங்களைப் போன்ற புரட்சிகர அமைப்புகளின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இதில் பொறாமை அடைந்து நீங்கள் அலறினாலும் உண்மை அதுதான்.
அப்பாடா…! வினவின் பிழைப்புவாத போலி கம்யூனிஸ்டு வேஷம் வெளிப்பட்டுவிட்டது. அதை அப்பட்டமாய் ஒத்துக்கொண்ட வினவுக்கு இதைவிட வேறு ஒன்றும் கேவலம் இல்லை. நேரடி விவாதத்துக்கு வர முடியாது என்று சொல்ல ஆயிரம் சப்பைக்கட்டா? எங்கே ‘?????’ அந்த ‘????’ சலம்பல் பார்ட்டிகள் ‘?????’ வினவிடம் வந்து இப்ப சண்டை இடுங்களேன்?
//அரபு ஷேக்குகள் துவங்கி உள்ளூர் பணக்கார முசுலிம்கள் தொட்டு சுரண்டும் கூட்டம் ஏழை முசூலீம் மக்களை மத பிற்போக்கு வாதத்தில் மூழ்கடிக்க நினைக்கிறது//// ஹா…..ஹா…. செம காமடி….கழுதை கண்ணை மூடினா சூரிய கிரகணம்தான்…!
//நீங்கள் என்னதான் குதித்தாலும் உழைக்கும் முசூலீம் மக்களை எங்கள் பக்கம் அணிசேர்ப்போம்.// — உங்க மூஞ்சில அவர்கள் காறி துப்பாம இருந்தா அது உங்க அதிர்ஷ்டம்.
/// அதை நீங்களோ உங்கள் இறைவனோ கனவில் கூட தடுக்க முடியாது./// — இதுக்கு எப்படி சிரிக்கிறதுன்னே தெரியலை. தி வொர்ஸ்ட் சினிமா பன்ச் டயலாக் ஆஃப் தி செஞ்சுரி.
வினவுக்கு ஒரு சவால்…! தில்லு இருந்தால், அது என்னா கம்யூனிச சித்தாந்தம் மண்ணாங்கட்டி புண்ணாக்கு சொல்லுதுன்னு இதே தளத்திலே ஒரு பதிவு போடுங்களேன்யா? நாங்களும் நோண்டி நுங்க எடுக்கிறோம். எவ்வளவு வாட்டி கேட்டுட்டேன்? யார் அந்த ஸ்டாலின், லெனின், மார்க்ஸ்? அவாளெல்லாம் என்னா சொல்லுதுகள்? ஒரு பயலுக்கும் தெரியாது. உங்களுக்கே முதலில் தெரியுமா? தெரியாதா?. கம்யூநிசம்னா இதுதான், ஒரு கம்யூனிச அரசுன்னா இதைத்தான் செய்யும், இப்படித்தான் மக்கள் வாழ வேண்டும், இதுதான் சட்டம், இப்படித்தான் நீதி வழங்கப்படும், இப்படித்தான் அரசும், அலுவலகங்களும் இயங்கும், இதுதான் விதிகள்……இப்படி எதையாவது இதுவரை போட்டிருக்கிறீர்களா? அப்புறம் பாருங்கள், நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சிண்டை பிச்சுக்கிட்டு ஓடுறதை பார்ப்போம். ஒரு country இதனை பின்பற்ற முடிந்ததா?
// வினவு, இத்தளத்தில் 317 இடுகைகள் எழுதியுள்ளார்//
—இந்த பந்தாவுக்கேலாம் ஒன்னும் குறைச்சல் இல்லை…!
நான் ஏற்கனேவே //October 15, 2009 at 7:16 pm // கேட்டதுதான்:
///மேலே உள்ள வினவின் முகப்பு-சுட்டுவில் இவர்களின் “கொள்கையான” ‘கம்யூனிசம்’ எனும் தலைப்பில், ‘கல்வி’, ‘கேள்வி-பதில்’, ‘செவ்வியல்’…என வரிசையாக உள்தளைப்புகளில் ‘கிளிக்’ செய்தால் “நீங்கள் தேடும் பக்கத்தைக் காண இயலவில்லை” என்று “ஈ” என்று தளம் பல்லு இளிக்கிறது. இதிலெல்லாம் பதிவு போட இவர்களுக்கு விஷயம் இல்லை…! (?) ஆனால், சமூகம் என்ற தலைப்பில் எங்கோ ஒரு மூலையில் உள்ள மதம் என்ற உள் தலைப்பில் மட்டும் பக்கத்துக்கு பத்து பதிவுகளாக நான்கு பக்கங்களுக்கு வத வத வென்று எண்ண்ண்ண்ண்ண்ண்ணற்ற – தளத்திலேய அதிக அளவிலான-பதிவுகள்..!///
/// இவர்களுக்கு-இவர்களின் பதிவுகளுக்கு, நிறைய பார்வைகளும் நிறைய பின்னூட்டங்களும் தேவை. அவ்வளவுதான்.! வேறு ஒரு புண்ணாக்கும் கிடையாது. கம்யூனிசத்தை பதிவாய் போட்டால் எவன் பார்க்கப்போகிறான் என்பது இவர்களுக்கும் தெரியும்; மற்ற எல்லா கம்யூனிச ‘செங்கொடி தள’ வகையறாக்களுக்கும் மிக நன்றாகவே புரிந்துவிட்டது…!///
எனக்கு கம்யூநிசம்னாலே, என் நண்பன் – தாத்தா, அப்பா, பெரியப்பா, மாமா, அண்ணன் என ஒரு பக்கா கம்யூனிச பரம்பரை – சொன்னதுதான் இன்னும் நினைவில் நிற்கிறது… நான் பிளஸ் டூ படிக்கும் சமயம் நாங்கள் ஒரு நான்கு பேர் போட்டி போட்டு முதல் மதிப்பெண்களை பெறுவோம். ஆனால் அந்த கம்யூனிஸ்டு நண்பனால் எவ்வளவோ முயன்றும் சராசரி மதிப்பெண்ணே பெற முடிந்தது. ரிசல்ட் வந்த பின்னால் அவன் கோபத்துடன் கண்கள் சிவக்க சொன்னது: “போங்கடா, நீங்களும் உங்கள் இஞ்சிநீயரிங்கும்….எங்க கம்யூனிச ஆட்சி வரும்டா….அப்ப பாருங்கடா…நீங்க எடுத்த மார்க்குகளையெல்லாம் பிரிச்சு பிரிச்சு சமமா பகிர்ந்து எல்லாருக்கும் சமத்துவ அடிப்படையிலே சரிசமமா விநியோகித்து, பரீட்சை எழுதின எல்லாரும் இஞ்சினியரா ஆவாய்ங்கடா, பாருங்கடா, அதுவரை ஆட்டம் போடுங்கடா…” என்றதும் எங்களுக்கேலாம் பகீரென்றது. ‘கடவுளே, கம்யூனிச ஆட்சியே எங்கும் வரக்கூடாது, முற்றிலுமாய் ஒழித்துவிடு’ என்று ஒருவனும், இனி ஒருக்காலமும் கம்யூனிசத்துக்கு நாம ஒட்டு போட்டுடப்படாதுடா மாப்ளே’ என்று மற்றவனும் பேசிக்கொண்டது இன்னும் நினைவில் நிற்கிறது.
இது தவறு என்றால், உண்மையான கம்யூநிசம்னா அந்த எளவு என்னான்னுதான் போட்டுடுங்களேன்யா….உங்க மகஇக காரங்களாவது தெரிஞ்சுகிடட்டுமே..?
ஹி..ஹி..புல்லரிக்குது உங்கள் கம்யூனிச அறிவு நினைச்சா
நீங்கள் கூறுவதுபோன்று இஸ்லாத்தில் எவ்வித பிரிவுகளும்(குலம்,சாதி,கோத்திரம்)இல்லை என்றே வைத்துக்கொள்ளுவோம். ஆனால் இந்தியாவில் முஸ்லீம்களிடம் சாதிப்பிரிவுகள் இருக்கிறதே. இது எங்கிருந்து வந்தது? இஸ்லாம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே பார்ப்பன மதத்தில்தான் சாதிப்பிரிவுகள் இருந்து வந்துள்ளது. இங்கு இஸ்லாம் பரவ ஆரம்பித்தபோது பார்ப்பன மதத்தின் சாதிப்பிரிவுகளை உள்வாங்கிக் கொண்டே வளர்ந்துள்ளது என்பதற்கு சமகாலத்தில் முஸ்லீம்களிடம் இருக்கும் படான்,ராவுத்தர்,மரைக்காயர்,ஷேக்,அஷ்ரப்,… போன்ற சாதிப்பிரிவுகளே சாட்சி. முதலியார்,செட்டியார்,..என்ற பெயர்களில்தான் இருக்க வேண்டுமென்பதில்லையே! முஸ்லீம்கள் தவறு செய்வதற்கு இஸ்லாத்தைக் குறை கூறக்கூடாதுன்னு சொன்னீங்கன்னா இந்தியாவில் இஸ்லாமே இல்லை என்றுதான் கொள்ளவேண்டும். அப்புறம் 1 சதவீதம்கூட தேறமாட்டீங்க. பார்ப்பன மதத்தில் இருப்பது போன்ற தீண்டாமை வடிவங்கள் இல்லையே தவிர சாதிகள் உண்டு. உங்களுக்கு புரிந்துகொள்ளும் திறன் குறைவுன்னு நினைக்கிறேன், memory plus சாப்பிடுங்களேன்.
தோழர் , நேரடி விவாதத்துக்கு பாத்துபோங்க ,
இது ஒன்னும் இ.வா பாப்பான் கும்பல் இல்லை , அடையாளம் கண்டு வெட்டிருவாங்க அல்லாவின் ஆசியோடு
அவரு வரலியாங்க, நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம். நிம்மதியா போய் தூங்குங்க.
என்ன தோழர் இன்னும் என்னோட கமெண்டை காணலை
ஏ இந்த பின்னூட்ட பிரச்சனையை சரி பண்ணுங்ப்பா , அதுவும் கம்மூனிசம் மாதிரியே முன்னுக்கு பின் முரணா போஸ்டாகுது
வினவு சொன்னது,
இதை நான் ஆயிரம் மடங்கு உறுதி செய்கிறேன்.
இந்து மதம் அழியும் , அல்லேலூயா பெந்தகொஸ்தே
கும்பலும் அழியும், அப்போது நீங்களும் அழிந்துவிடுவீர்கள்
இசுலாமிய வெறியர்களே. அதனால என்ன இப்ப போய்
உங்களோட ஆணாதிக்க திமிரை, காட்டுமிராண்டித்தனத்தை
உங்க வீட்டு பெண்களிடம் போய் காட்டுங்க. நீங்க அழிந்து போக இன்னும் நாள் இருக்கு.
ஷாஜகான் மேலூர் போன்ற சில்லறைகள், அல்லக்கைகள், அநாமதேயங்கள், அரை லூஸ்கள், வேலை வெட்டி இல்லாதவர்கள் கூட வினவு விவாதிக்க விரும்பவில்லை. அதற்கு பதில் சாதாரண உழைக்கும் முசுலீம் மக்களிடம் பேசி எங்கள் தரப்பில் இணைக்கும் வேலை செய்வோம். மற்ற கட்சிகளை விட எங்கள் இயக்கத்தில் பிறப்பால் முசுலீம்களாக உள்ள தோழர்கள், ஆதரவாளர்கள் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவலை மேலூர் காரருக்கு தெரிவிக்கிறோம். எப்படியும் எந்த மதங்களுக்கும் நிச்சயமாக எதிர்காலமில்லை என்பது இசுலாத்திற்கும் பொருந்தும். அதை ஜீரணிப்பதற்கு மருந்து சாப்பிடுங்கள் அதாவது தொடர்ந்து வினவு படியுங்கள். இந்தியாவில் இந்து மதவெறியரால் ஒடுக்கப்படும் இசுலாமிய மக்கள் உங்களைப்போன்ற மதவாதிகளை விட எங்களைப் போன்ற புரட்சிகர அமைப்புகளின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இதில் பொறாமை அடைந்து நீங்கள் அலறினாலும் உண்மை அதுதான்.
Don’t be emotional in your arguments. Could you dare to challenge the below article from the brother hamza?
http://hamzatzortzis.blogspot.com/2010/01/dawkins-delusion-response-to-richard.html
I really appreciate if you could come up with some logic and intelligence…
For more info: http://hamzatzortzis.blogspot.com/
http://www.facebook.com/h.a.tzortzis
I suggest u to see his debate videos with promenient athesit is UK and US , which will be available in this website.
http://hamzatzortzis.blogspot.com/2009/07/debate-on-religion-logic-of-submissio.html
வினவு சொன்னது,
இதை நான் ஆயிரம் மடங்கு உறுதி செய்கிறேன்.
இந்து மதம் அழியும் , அல்லேலூயா பெந்தகொஸ்தே
கும்பலும் அழியும், அப்போது நீங்களும் அழிந்துவிடுவீர்கள்
இசுலாமிய வெறியர்களே. அதனால என்ன இப்ப போய்
உங்களோட ஆணாதிக்க திமிரை, காட்டுமிராண்டித்தனத்தை
உங்க வீட்டு பெண்களிடம் போய் காட்டுங்க. நீங்க அழிந்து போக இன்னும் நாள் இருக்கு.
ஷாஜகான் மேலூர் போன்ற சில்லறைகள், அல்லக்கைகள், அநாமதேயங்கள், அரை லூஸ்கள், வேலை வெட்டி இல்லாதவர்கள் கூட வினவு விவாதிக்க விரும்பவில்லை. அதற்கு பதில் சாதாரண உழைக்கும் முசுலீம் மக்களிடம் பேசி எங்கள் தரப்பில் இணைக்கும் வேலை செய்வோம். மற்ற கட்சிகளை விட எங்கள் இயக்கத்தில் பிறப்பால் முசுலீம்களாக உள்ள தோழர்கள், ஆதரவாளர்கள் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவலை மேலூர் காரருக்கு தெரிவிக்கிறோம். எப்படியும் எந்த மதங்களுக்கும் நிச்சயமாக எதிர்காலமில்லை என்பது இசுலாத்திற்கும் பொருந்தும். அதை ஜீரணிப்பதற்கு மருந்து சாப்பிடுங்கள் அதாவது தொடர்ந்து வினவு படியுங்கள். இந்தியாவில் இந்து மதவெறியரால் ஒடுக்கப்படும் இசுலாமிய மக்கள் உங்களைப்போன்ற மதவாதிகளை விட எங்களைப் போன்ற புரட்சிகர அமைப்புகளின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இதில் பொறாமை அடைந்து நீங்கள் அலறினாலும் உண்மை அதுதான்.
பினூட்டங்கள் மாறி மாறி வருகின்றன,
என்ன பிரச்சனை என்று பாருங்கள்!!
வினவு குழுவினருக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்
மானமில்லாத சூடு சொரனையற்ற வினவு குழு என்னை பார்த்து திட்டுவது சூரியனைப் பார்த்து நாய் குறைப்பதற்கு சமம். கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாதவர்கள் எதற்கு கட்டுரை எழுதணும்? இதில் புரட்சி விவாதம் உண்டு என்ற வெட்டி விளம்பரம் வேறு. கேட்ட கேள்விக்கே பதில் சொல்ல வக்கில்லை வினவு குழுவுக்கு. இதில் புரட்சி விவாதம் வேறாம். சில முஸ்லிம் பெயர்தாங்கி அல்லக்கைகள் உங்களுடன் சேர்ந்து கொண்டதால் ஏதோ ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இவர்கள் பின்னால் நிற்கிறார்கள் என்ற கதை வேறு விடுகிறது மானங்கெட்ட வினவு குழு . சிரிப்புத்தான் வருகிறது. சில்லறைகள் இங்கு வந்து கருத்தை மட்டும் தான் சொல்லுகின்றது என்று நினைத்தேன். ஆனால் சில்லறைகள் தான் வினவு குழுவையே நடத்துகிறது என்று இப்போது தான் புரிகிறது. வெப்சைட் ஹிட்ஸ் அதிகம் வேண்டுமெனில் வேறு எதாச்சும் பலான பலான நியூஸ் போடுங்க. ஹிட்ஸ் அதிகமாகும். அதை விடுத்து பொய்யை எழுதினால் இபப்டித்தான் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முழிக்க வேண்டிவரும்.
வினவு,
இனிமே நீங்க இந்த மூசுலீம் மதவெறியர்களைப் பற்றி எழுதாதீர்கள், இந்து மதத்தை பற்றி மட்டுமே எழுதுங்கள், இவர்கள் அதை ரசித்து ரசித்து படிப்பார்கள். இந்த பாய்கள் எல்லாம் புதிய ஜனநாயகத்தையும், புதிய கலாச்சாரத்தையும் இல்லையில்லை புதிய ஜனநாயகத்திலும், புதிய கலாச்சாரத்திலும் வாசிப்பதெல்லாம் இந்து மதவெறியர்களை பற்றிய கடுரைகளை மட்டும் தான். வெட்கம்கெட்ட இந்த மதவெறியர்கள் கேடுகெட்ட முறையில் அதைப் போய் ரசித்து ரசித்து படிக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு எவ்வளவு மதவெறி போதை இருக்கும். சீக்கிரமாக இந்த கும்பலையெல்லாம் அல்லா இருக்கும் இடத்திற்கே உழைக்கும் இசுலாமிய மக்கள் அனுப்பி வைப்பார்கள்.
இதில் தமிழ் முஸ்லீம் என்ற தறுதலை நாய் ரொம்ப ஆபாசம பேசி வருகிறான்/
அவன் மடல்களை மட்டறுக்கவும்
சத்தியத்தை சொல்லுவோம் அசத்தியம் அழியும் வரை…
Friends,
Be clear when you talk to this religious fundamentalist especially with muslims. Never argue with them about what muslims do. They will always come up with an excuse saying that do not look at muslims look only Quran and Hadis to judge Islam. So argue and prove them that Islam is evil in the lite of Islam itself (Quran and Hadis). An human being will become a wild animal when he followes Islam fully. Muslims are following islam meagerly, so we see lesser disasters of Islam.
All religions to be erradicated, the first should be Islam. Find the below link which challenges all the muslims moulavis with the reward of Rs.44,00,000 if they refute the true arguments (Rs.22,00,000 for the moulavi who debate and Rs.22,00,000 to a person who helps in bringing a moulavi for the debate). Arguments are made on the basis of only Quran and sahih Hadis.
http://www.faithfreedom.org/
இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்து கொள்ள
ரியாஸ், இது இஸ்லாமிய பெயரில் வந்திருக்கும் இந்துத்துவ மாடு, ஏகாதிபத்திய கைக்கூலி பன்றி…
அது கொடுத்திருக்கும் சுட்டியில் போய் பார்தால், முஸ்லீம் மக்களின் மீது கருத்தியல் ரீதியாக கொடூரமான தாக்குதலை வைக்கிறார்கள்!
/////No other cause is responsible for more deaths than Islam. Our goal is to reveal the truth of Islam and promote secularization and human rights in Islamic countries. We want to help Muslims end their “us” vs. “them” ethos and embrace the human race in amity. Muslims are led to believe that the world is their enemy when in reality it is they who are the enemy the world.
We strive for the unity of mankind through understanding and the elimination of hate. Humanity is one. Let not charlatans like Hitler, Marx and Muhammad divide us with their big lies./////////
இன்றைய உலக மக்களின் முதன்மை விரோதி அமெரிக்கா, அதன் பயங்கரவாதம் பற்றி கருத்து ஏதும் சொல்லாமல், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுப்பதன் மூலம் அமெரிக்க பயங்கரவதத்தை ஆதரிக்கிறது!
அபு கிரைப் சித்திரவதைகளை பார்த்த பின்பு யாரெனும், அமெரிக்காவை நியாயப்படுத்த முடியுமா?
பன்னியோ, மாடோ.. சிக்குனேன்னு வையி பிரியாணிதான்!
To know about true mohamMadism please visit the following sites.
http://www.faithfreedom.org/the-challenge/the-challenge/
http://www.alisina.org
An ex-muslim called Ali Sina and other ex-muslims expose true Islam. A must for all non-muslims and for future ex-muslims
இஸ்லாத்தில் சாதி இல்லையா.?
இந்திய அரசியலமைப்பு சட்டம் லஞ்சம், ஊழல், திருட்டு போன்றவற்றை ஆதரிக்கிறதா.?
இல்லை..
அப்படியெனில்,
இந்தியாவில் உள்ள மக்கள் மேற்கண்ட தவறுகளை செய்கிறார்களே.?
மக்கள் செய்யும் தவறை , மக்களுடைய குற்றமாக, அறியாமையாகத்தான் கருத முடியுமே தவிர, அரசியலமைப்பின் தவறாக கருத முடியாது..
இந்தியர்களில் சிலர் தவறு செய்கிறார்கள்.
ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் மேற்கண்ட எந்த தவறையும் ஆதரிப்பதில்லை..
மேலும் தனக்கென ஒரு அரசியல் சட்டத்தை கொண்டிருப்பதோடு, தவறு செய்யும் மக்களுக்கு
அவரவருக்குரிய உரிய தண்டனைகளையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது..
இங்கே பிரச்சனை , தவறு செய்யும் மக்கள் மீதும், சட்டத்தை சரியாக பயன்படுத்தாத ஆட்சியாளர்கள் மீதும் தானே தவிர அரசியல் சட்டத்தின் மீதான அடிப்படை பிரச்சனை அல்ல இது.
என்ற விளக்கத்தை பாமரர் கூட எளிதாக புரிந்து கொள்வார்..
இப்போது மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் , இஸ்லாத்தில் சாதி என்ற கேள்விக்கு வருவோம்.
இஸ்லாம் ஒரு போதும் சாதியையோ,
அதற்கான கூறுகளையோ போதிப்பதில்லை.
முஸ்லிம்களில் சிலர் தவறு செய்கிறார்கள் என்றால், அது அந்த தனிப்பட்ட நபர்களின் தவறு தானே தவிர,
அந்த தவற்றை இஸ்லாத்தின் கொள்கை மீதான தவறாக கொள்ள இயலாது..
இஸ்லாத்தின் கொள்கையின் அடிப்படையில்,
இந்த உலகம் ஒரு சோதனைக்களம்.
இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான வசதி வாய்ப்புகள், சூழ் நிலைகள், சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதனது முழு வாழ்வும் தேர்வுக்களமே.
தேர்வு எழுதும் வேளையில் எவருடைய மதிப்பெண்ணையும் நாம் கணக்கிட முடியாது என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே.
அதைப்போலவே ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது மரணம் வரை, கால அவகாசம் உண்டு.
ஒரு மனிதன் , அவனது வாழ்வின் செய்த ஒட்டுமொத்த நற்செயல்கள், தீய செயல்கள், உதவிகள், உபத்திரவங்கள் போன்ற அவனுடைய அனைத்து செயல்களின் அடிப்படையிலேயே அவனுக்கான கூலியை கொடுக்க முடியும்.. அவனது மொத்த மதிப்பெண்ணை கணக்கிட இயலும். மேலும் சில செயல்களை வெறும் செயல்களை வைத்து மட்டும் அல்லாது, அவனது எண்ணத்தையும் வைத்தே மதிப்பிட இயலும்.
இறுதியாக சொல்வது,
கொள்கை அடிப்படையில் விமரிக்கும் போது,
முஸ்லிம்களாக இருப்பவர்கள் செய்யும் தவறுகளையும், அவரது அறியாமைகளையும் இஸ்லாத்தின் கொள்கை மீதான தவறாக பிரச்சாரம் செய்வது அறிஞர்களாக இருக்கும், (அல்லது கருதிக் கொள்ளும்) மக்களின் அறியாமையா.? அல்லது காழ்ப்புணர்வா .?
இந்தியாவில் வேதகாலம் என்று அழைக்கப்படும் காலத்தில் சாதிபிரிவினை கிடையாது.கால ஒட்டத்தில் வருவாய், வலிமை, பொருளாதாரம், சமூக அந்தஸ்து,குடும்ப பாரம்பரியம், அழகு ,புகோள சுழ்நிலை,மனிதனின் பலஹினம்,சுயநலம்,ஆதிக்க மனப்பான்மை இப்படி ஆயிரக்கணக்கான காரணங்களின் தாக்குதலால் சமூகம் பல சாதியாகப் பிரிந்துபோனது. ஆயினும் தீண்டாமை என்ற அழுக்கைத்தவிர சமூகம் மனித வளத்தை பண்பாட்டை மனிதாபிமானத்தை முற்றிலும் இழந்து விடவில்லை. கோடிக்கணக்கான வேறுபாடுகளிடையே இந்துஸ்தானத்து மக்கள் மிகுந்த சமூக இணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர. திருக்குறள் தொடங்கி 2000 வருடங்களுக்கு முன்னா் பிறந்த கௌதம புத்தர் மற்றும் வரலாற்றில் பதிவு செய்யப்படாத ,ஆயிரக்கணக்கான சமூக மானுடலாளா்கள் பிறந்து சமூகத்தை வளப்படுத்தி வந்துள்ளனர. குறைகள் அற்ற சமூகம் எங்கும் இல்லை. குறைகளை களையும் தீவிர நாட்டம் அன்று முதல் இன்று வரை உள்ளது இந்தயாவில் இந்து சமூகத்தில் உள்ளது.சமூக கலாச்சார பரிணாமம் வளர்ச்சி தொடர்ந்து வளா்ந்து கொண்டேயிருக்கின்றது.அரேபியாவில் தான் அன்பு இருக்கின்றது,அறிவு இருக்கின்றது,சகோதரத்துவம் உள்ளது என்பது அரேபியாவைப்பற்றி மிகக்குறைந்த அறிவு கொண்டவா்களின் கூற்று. முகம்மது வாளின் முனையில் ஒரு சமூக சீரதிருத்தத்தை உருவாக்கினாா். தன்னை இறைவனின தூதா் என்று ஏற்காத மக்களை பெரும் கொடுமைக்கு ஆளாக்கினார். முகம்மது உருவிய வாளாடு அலைந்தரர்.அவரைப்சுற்றி அவரது பகைவார்களும் உருவிய வாளோடுதான் அலைந்தாா்கள். இரத்தக்களறி. முகம்மது போதித்த குரானில் ” யுத்தததில்கைப்பற்றப்பட்ட பெண்களை பொருட்களை முகம்மதுவும் சகவீரர்களும் பங்குபோட்டுக் கொண்டனார.வைப்பாட்டிகளாக அடிமைப் பெண்களாக விற்பனை செய்தாா்கள். குரானில் கூட வலக்கரம் கைபற்றிய பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. முகம்மது 52ம் வயதில் 9 வயது ஆயிசா என்ற சிறுமியை திருமணம் செய்தார்.இறுதிவரை ஆயிசாவே பிரிய மனனைவி.முகம்மதுவை சுற்றியிருந்த பகைவர்களின் எண்ணிக்கை காரணமாக முகம்மது தனது கூட்டத்தாரிடையே ஒரு சகோதரத்துவத்தை போதித்தார்.
சுயபாதுகாப்புதான் அதன் ஒரே குறிக்கோள். முகம்மது இறந்த பின் அவரது சீடர்களிடையே யார் அடுத்த தலைவர் என்ற கேள்வி பலமாக ஏற்பட்டது. 3வது நாள்தான் சீடர்கள் அவரை அடக்கம் செய்தனார. முகம்மதுவின் குடும்பத்தினார் மருமகன் அலிதான் கலிபா என்றனர். பிறர் அபுபக்கரை தோ்வ செய்தனா். உமர்ரால் தாக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணியாக பாத்திமா -முகம்மதுவின் மகள்- இறந்துபோனாள். அலி துரத்தப்பட்டார. அபுபககார்பின் உமார் கலிபாவாக மாறி யுத்தம் செய்தனா். 3.-ம் கலிபா கொல்லப்பட்டாா்.4 வது கலிபா யாா் என்பதில் முகம்மதுவின் மனைவி ஆயிசாவிற்கும் மருமகன் அலியாருக்கும் மோதல் பெரும் போரில் முடிந்தது. ஒட்டகப்போ் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அப்போரில் 7000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனா். அரேபியாவில் சகோதரத்துவம் உள்ளது என்பது முட்டாள்களின் கனவு. கழுதைவிட்டையில் முன் விட்டை வேறு பின்விட்டை வேறா என்பாா்கள்.மனிதா்கள் எங்கிருந்தாலும் .மனித பலஹீனம்…
முகம்மதிற்கும் மனைவிகள் 9 போ்கள் தவிர யுத்தத்தில் கைபற்றப்பட்ட குமுஸ் பெண்கள் 25 க்கு மேற்பட்ட வைப்பாட்டிகள் இருந்தனா் என்று முன்னாள் முஸ்லீம் அலிசேனா கூறகிறாா்.www,alisena.org பார்க்க. பிறா மனை நோக்கா பேராண்மை என்ற குறள் நெறி அரேபிய மத நூலாகிய குரானைவிட சிறந்தது.
அலிசீனா ஒரு கைக்கூலி பிராடு. நபி தினமும் இரவில் தனது அனைத்து மனைவியரிடமும் இல்லறம் புரிவார் என ஒரு ஹதீஸ் உள்ளது. இதெல்லாம் நடக்கிற விடயமா? எப்படித்தான் ஹதீஸில் இருப்பதையெல்லாம் உண்மைன்னு எடுத்து வச்சி உளற்ராரோ இந்த அலிசீனா.
கட்டுரை முழுக்க இந்திய முஸ்லீம்களிடத்திலும் சாதி வேரூண்றியுள்ளது என்பதை நிறுவவே முயற்ச்சிக்கிறார் எழுத்தாளர் , அதற்கு துணையாக ஔரங்கசீப் , அக்பர் காலத்தையும் , குரைஸிகள் , பத்தான் கள் என இந்திய முஸ்லீம்களுக்கு சம்மந்தமில்லாத பிரிவினரையும் கட்டுரையில் இணைக்கிறார் ..
அந்தக்கால மன்னராட்சியில் மன்னர்களின் அவைகளில் வீற்றிருந்த பார்ப்பணர்களால் கூட பார்ப்பணீயம் இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் இவர் குறிப்பிட்டது போன்று வெகுவாக இல்லையென்றாலும் குறைவாக இருந்திருக்கலாம்.. ஆனால் அவற்றை ஆய்வு செய்து பார்ப்பணீயம் உச்சத்தில் எதேச்சதிகாரம் செய்துகொண்டிருக்கும் இந்த காலத்தில் சாதிரீதியாக இந்துக்களாக ஒன்றிணைந்து இந்துச்சாதி பெரும்பான்மைகள் தாழ்த்தப்பட்ட மக்களை கொடுமைப்படுத்தும் இந்த நாட்களில் , பெரியார் போன்றவர்கள் இந்திய முஸ்லீம்களிடத்தில் சாதிய வேறுபாடுகள் இல்லை என அறைகூவல் விடுத்த பின்பும் , ஒடுக்கப்படும் தலித் மக்கள் இஸ்லாத்தை நோக்கி வரும் இந்த காலத்தில் இப்படி ஒரு கட்டுரையின் மூலம் பழைய பஞ்சாங்க சம்பவங்களை கிளறி இன்றும் இந்திய இஸ்லாமியர்களிடத்தில் சாதி உள்ளது என்பதை நிறுவ முயற்ச்சிக்கிறது “வினவு” தளம்!
ஏற்கனவே இதே “வினவு”தளம் பழனி ஷஹான் என ஒரு முஸ்லீம் நபரை வைத்து எழுதிய இஸ்லாமிய வெறுப்பு கட்டுரையை போல் இந்த தடவை வேறு ஒரு முஸ்லீம் நபரை வைத்து இஸ்லாமியர்களும் – பார்ப்பணர்களும் ஒன்று என்று நிறுவுவதற்காக எழுது வெளியிடுகிறது என்றே தோன்றுகிறது.