Friday, June 9, 2023
முகப்புபர்தாவின் 'நற்குடியும்', அய்யப்பனின் ஆணாதிக்கமும், பதிவுலகின் யோக்கியதையும்!!
Array

பர்தாவின் ‘நற்குடியும்’, அய்யப்பனின் ஆணாதிக்கமும், பதிவுலகின் யோக்கியதையும்!!

-

vote-012ஏறக்குறைய ஒரு மாதம் வீழ்த்திய வைரஸ் காய்ச்சலுக்குப் பிறகு பிறகு சொந்தமாக ஒரு பதிவு எழுதவேண்டுமென்று வந்தால் பதிவுலகில்  நற்குடி பிரச்சினை. பிரச்சினையற்ற உலகில் நேர்மறையாக எழுதவேண்டிய விசயங்கள் மலையளவு இருக்கும் போது தொடர்ந்து பிரச்சினைகளையும், தகராறுகளையும் அலசி ஆய்வதிலிருந்து என்று விடுதலை கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் ஊர் உலகமென்றால் பிரச்சினைகளும் இருக்கும்தானே?

ஈரோடு பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியிருக்கிறது.

பதிவர் சந்திப்பிற்கு பதிவர் சுமஜ்லா சென்று வந்ததோடு “பர்தாவோடு சென்றேன், பர்தாவோடு இருந்தேன்” என்று யாரையோ திருப்திப்படுத்தவோ, முன்னெச்சரிக்கைக்காகவோ, ஜாக்ரதையாக எழுதி பதிந்து கொண்டார். இதன் பின்னணி என்ன? ஒரு பெண் அதுவும் இசுலாமியப் பெண் பதிவு எழுதுவது பெரிய விசயம். அதையும் அவர் வீட்டு ஆண்கள் அனுமதிப்பது பெரிய சுதந்திரம்.( இன்னும் இதுபோன்ற என்னவெல்லாம் சுதந்திரங்கள் இருக்கிறதோ?) இதில் சுமஜ்லா தமிழில் வேறு என்ன செய்திகளை எழுதுகிறார் என்பது தெரியவில்லை.

ஆக முசுலீம் பெண்பதிவர் சுமஜ்லா தனது சுதந்திரம் பாதுகாப்பு கருதி இந்த பர்தா சங்கதியை பதிவு செய்திருக்கிறார் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். இல்லையேல் நாளை ஒரு முசுலீம் பெரிசு ” காலம் கெட்டுக்கிடக்கு, நம்ம சுமஜ்லா பொண்ணு ஏதோ இன்டர்நெட்டுக்காரனுக கூட்டத்துக்கு போய்ட்டு வந்துச்சாமே?” என்று வாங்கிவிட்டால் என்ன செய்வது?

இதைப் புரிந்து கொள்ளாத ஒரு அனாமதேயம் பின்னூட்டத்திலோ வேறு எதிலோ இதை பகடி செய்து ” நான் பேண்டு போட்டு பேண்டோடு அமர்ந்தேன், நான் சேலை கட்டி சேலையோடு அமர்ந்தேன்” என்று எழுதப்போக, அக்மார்க் இசுலாமிய பெண்ணான சுமஜ்லா அதை ஓரம்தள்ளாமல் பிரஸ்டீஜ் பிரச்சினையாக பாவித்துக்கொண்டு பர்தாவின் மகத்துவம் பற்றி ஒரு தனி பதிவு போட்டார். ஆரம்பித்தது பிரச்சினை.

அதிலும் “நற்குடி” பெண்களென்றால் பர்தா இல்லாமல் வாழமாட்டார்கள் என்ற ரேஞ்சில் தனது அடிமைத்தனத்தை சிலாகித்திருந்தார். இப்பத்தான் பதிவுலகம் வந்திருக்கும் அந்த பேதைப்பெண்ணுக்கு உலகம், அடிமைப்பெண்கள், சுதந்திரப் பெண்கள், மத பிற்போக்குத்தனங்கள் எல்லாம் புரிவதற்கு பதிவுலகமென்ன முற்போக்கு சிங்கமாகவா உள்ளது? மொக்கைகள், சினிமாக்கள் என்று காலம்தள்ளும் பதிவுலகை விண்டு பார்த்தால் சாதியும், மதமும், ஆணாதிக்கமும்தானே கோலேச்சுகிறது?

அந்த்தபடிக்கு சுமஜ்லாவும் திருந்த வாய்ப்பில்லாதது நம் சூழலோடு இணைந்தது. இதனால் அந்தப் பெண்பதிவர் எதுவும் தெரியாத அப்பாவி என்று பரிதாபப்படவில்லை. பர்தா என்ற அடிமை சமாச்சாரத்தை அப்படி உருகி உருகி அவர் எழுதியிருந்ததைப் பார்த்தால் அது நிச்சயம் அல்லாவுக்கே பொறுக்காது. உலகம் எங்கேயே போய்க்கொண்டிருக்கும் போது இன்னும் அந்த பர்தாவைத் தொங்கிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. வன்புணர்ச்சிக்கு அலையும் ஒரு கொடூரனிடமிருந்து ஜீன்ஸ், சல்வார் போட்ட பெண்களாவது கொஞ்சம் கை, காலை ஆட்டி சண்டையாவது போட முடியும், சுதந்திரமாக ஓட முடியும். பர்தா அணிந்த பெண்கள்? மூலையில் தேமே என்று அழவேண்டியதுதான். இதனால் மிருகங்கள் ஒன்றும் பரிதாபப் படபோவதில்லை.

உடையின் இடையில் தெரியும் பெண்ணுடலை வக்கிரத்துடன் பார்க்கும் நோய் ஆண்களின் கண்களில் உருவாக்கப்பட்டிருக்கும்போது அதற்கு அல்லாவோ பர்தாவோ என்ன செய்ய முடியும்? அல்லது அந்த அல்லாதான் ஆண்களின் காமவெறியை கொஞ்சம் காந்தி மாதிரி தணிச்சலாக படைத்திருக்கலாம்தானே? தஞ்சை மாவட்டத்தில் வயலில் வேலை செய்யும் உழைக்கும் பெண்கள் தமது உள்பாவாடையை வரிந்து கட்டிக்கொண்டு கிட்டத்தட்ட ஷார்ட்ஸ் போல உடையை மாற்றிக் கொண்டு வேலை செய்வதை சுமஜ்லா பார்த்ததில்லையா? எந்த வேலையும் இல்லாமல் சும்மா அரட்டை அடிப்பவர்களுக்குத்தான் பர்தா லாயக்கு. உழைக்கும் பெண்களுக்கும், ஒட்டம், ஆட்டம் என சாதனை படைக்கும் பெண்களுக்கும் அது தடைச் சங்கிலி.

அடுத்து பர்தா என்னவோ இசுலாமியருக்கு மட்டும் சொந்தமென்று சிலர் நினைக்கிறார்கள். வட இந்தியாவின் பல இந்து சாதிகளில் பர்தா என்பது இருந்தே ஆக வேண்டிய கட்டாயம். பொதுவில் பெண்களை அடிமைகளாக பார்க்கும் எல்லா மதங்களும் ( கிறித்தவத்தில் கன்யாஸ்தீரியின் அங்கி கூட ஒரு பர்தாதான்.) இப்படித்தான் சட்ட திட்டங்களை வைத்திருக்கின்றன.

பர்தாவின் அநீதியை ஒருவர் எதிர்க்க வேண்டுமென்றால் அவர் எல்லா மதங்களையும் அதில் உறைந்திருக்கும் ஆணாதிக்கத்தையும் எதிர்ப்பவராக இருக்கவேண்டும். சுமஜ்லா பர்தாவைப்பற்றி பதிவு எழுதியதும், கலகலப்ரியா எனும் இந்து பெண்பதிவருக்கு ஆத்திரம் வான்தட்ட அவர் ஒரு கவிதையை தாளித்தார். இவர் ரௌத்திரம் பழகும் பாரதியின் பயங்கர விசிறியாம். இவருக்கு எழுந்த கோபம் பெண்ணுரிமையின் பாற்பட்டதல்ல. பர்தா போட்ட பெண்களெல்லாம் நல்லவர்கள் மற்றவர்களெல்லாம் கெட்டவர்களா என்ற அணி அதாவது இந்து அணியிலிருந்து வரும் கோபமே அடிப்படை.

இவ்வளவிற்கும் இவர் பர்தாவை எதிர்க்கவில்லையாம். அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கைகளை அவரவர் பின்பற்றுவது சரியாம். ஆனால் அதற்காக மற்ற மதத்தவர்களை நொட்டம் சொல்வது சரியல்ல என்பதே பிரியாவின் வாதம். பிரியாவின் இரசிகர் கூட்டம் இந்த கவிதைக்காக பின்னூட்டத்தில் ஒரு பெரும் ஆவேசக் கூச்சலையே எழுப்பிச் சென்றிருக்கிறது. சாராமாகச் சொன்னால் நாகரீகமான வார்த்தைகளில் துடித்துக்கொண்டிருக்கும் இந்துத்வ மனமே இதன் இயக்கம். இதற்கு நம்ம ”ஞானப்பழம்” உண்மைத்தமிழன் கூட விலக்கல்ல. அப்பப்பா மொக்கைகளுக்குள் மறைந்து நிற்கும் பதிவுலகம் மதம் எனும் வாதத்தில் எப்படி சிக்குண்டிருக்கிறது என்பதறிய அந்த பின்னூட்டங்களை வாசிக்க வேண்டும்.

இவர்கள் எல்லோரும் எமது இந்துமதத்தை இழிக்கிறாயா என்ற ஆவேசத்தில் பதிவர் சுமஜ்லாவை கிழிக்கிறார்கள், மைனஸ் ஒட்டு போட்டு ரசிக்கிறார்கள். மாற்றுமுகாம் பதிவுகளுக்கு கள்ள ஒட்டு போட்டு கைதட்டுகிறார்கள். ஒரு புறம் பதிவுலகம் மத மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டது என்று பல்லவி பாடிக் கொண்டே மறு புறம் இசுலாமிய வெறுப்பை நாசுக்காகவும் பகிரங்கமாகவும் கொட்டுகிறார்கள். கவிதையும்(?) பதிவுமாக எழுதி தள்ளுகிறார்கள். இவர்கள் எவருக்குமே பெண்ணை மதங்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அநீதி குறித்து கிஞ்சித்தும் கவலை கிடையாது. அது இருந்தால் இந்து மதம் பெண்ணை வதைத்திருக்கும், வதைத்துவரும் கொடூரங்கள் குற்ற உணர்வை கொள்ள வைத்திருக்கும். இந்த விசயங்களை அந்தப் பதிவர்களின் பின்னூட்டங்களில் தனியாக நின்று வாதிட்ட சுகுணா திவாகரின் பின்னூட்டத்தை பலரும் சீண்டவில்லை என்பது மட்டுமல்லாமல் அநாமதேயங்களாகவும் வந்து கிண்டலடித்தார்கள்.

“மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்கள் இப்படித்தான், யாரும் மாற்ற முடியாது” என்று இசுலாமியர்களை இழிக்கும் இந்த சிகாமணிகள் மாறாத இந்து மதத்தை மாற்ற என்ன கிழித்தார்கள்? பிறந்ததிலிருந்து தகப்பன், கணவன், பிள்ளை என மாறி மாறி எல்லா ஆண்களுக்குக்கும் கட்டுப்பட்டவள் பெண் என்பதே மனு வகுத்து இன்றுவரை அமுலிலிருக்கும் நடைமுறை. பெண்கள் வேலைக்கு சென்றாலும் இந்த முறை மாறிவிடவில்லை. இன்றும் மற்ற மதங்களை விட விதவை திருமணம் என்பது இந்து மதத்தில் மிகுந்த இழிவாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள விதவைப் பெண்கள் இன்னமும் ஒரு கல்யாணம் காச்சிக்கும இன்றும் செல்ல முடியாது. இதைப்பற்றியெல்லாம் ஏன் ப்ரியாவுக்கு சீற்றம் வரவில்லை?

வட இந்தியாவில் இன்று வரை சீரோடு நடந்து வரும் குழந்தை திருமணங்களினால் பெண்தானே பாதிக்கப்படுகிறாள்? கயர்லாஞ்சியில் உழைத்து முன்னேறி வாழ விரும்பிய பூட்மாங்கே குடும்பத்தை ஆதிக்க சாதி ஆண்கள் கற்பழித்து வாய்க்காலில் வீசினார்களே இதுவெல்லாம் கலகலப்பரியாவுக்கு ரௌத்திரத்தை எழுப்பாதா? நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூட பார்ப்பனப் பெண்கள் விதவையானால் அவளது முடியை ஒண்ணொண்ணாக பிடுங்கி மொட்டையடித்த நாடும் இதுதானே? இந்தக் கதையெல்லாம் தனக்கு தெரிந்த நல்ல பார்ப்பனர்களை வைத்து ஜெயேந்திரப் பார்ப்பனர்களை மறைக்கும் பழமைபேசி பஞ்சாங்கங்களுக்கு தெரியுமா?

பெண்ணின் இயல்பான மாதவிடயாக் காலத்தை வைத்தே எத்தனை சட்ட திட்டங்கள்? அவள் பூ சூடக்கூடாது, கோவிலுக்கு போகக்கூடாது, விசேசங்களுக்கு செல்ல கூடாது, வீட்டில் ஒரு மூலையில் மூன்று நாட்களும் அடங்கிக் கிடக்க வேண்டும் என்றெல்லாம் கிரிமினல் சட்டம் வகுத்தவர்களைப்பற்றி கோபம் வராதா?

அவ்வவளவு ஏன், தற்போது ஐயப்ப சீசன். என்னவெல்லாம் வாய் கிழியப் பேசுகிறார்கள், சபரி மலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று ஒரு விதியை இன்னும் அமல்படுத்தி வருகிறார்களே இதுவெல்லாம் ‘நற்குடி’ பதிவர்களுக்கு கோபத்தை கொண்டுவரும் தகுதி படைத்தது இல்லையா?

சீசன் வந்து விட்டால் சாமிகளின் அட்டகாசம் தாங்கமுடியாது. டீக்கடையில் பேப்பர் கப்பாகட்டும், டாஸ்மாக்கில் சரக்கடிக்க தனி பிளாஸ்டிக் டம்ளாராகட்டும் என சரக்கு தொடங்கி சகலத்திலும் அய்யப்பமார் சாமிகளின் புனிதம் காக்கப்படுகிறதாம். இதில் வயதுக்கு வந்த ஒரு பெண் ஐயப்பனை வணங்க வந்தால் அது தீட்டாம். இந்த மாதிரி கேவலம் உலகில் வேறு எங்கவாது உண்டா? கேட்டால் பெண்ணின் ரத்தவாடை அறிந்து காட்டு விலங்குகள் வந்து விடுமாம் என்றொரு அறிவியல் விளக்கத்தையும் தெளிக்கிறார்கள்.

ஏன் ஆணின் உடலில் கூட மல, சலம், வியர்வை, ரத்தம், சளி என எல்லா எழவும்  இருந்துதானே தொலைக்கிறது. இதைப் பார்த்து காட்டு விலங்குகள் இது ஆண் சமாச்சாரம் என ஓடிவிடுமா? அப்புறம் சேலை கட்டிய பெண்கள் ஒட முடியாதாம். அதனாலென்ன ஜீன்ஸ் போட்ட பெண்கள் ஒடலாமே? ஏதோ சிந்து பாத்தின் சாகசப் பயணம் போல உதார் விடும் இந்த சாமிகள் எவரும் நோகமால் ரயில், பஸ், இதர வாகனங்கள், சுமைதூக்கிகள், சாப்பாட்டுக் கடைகள், மலையிறங்கியதுமே சரக்கடிக்க ஏற்பாடுகள் என எல்லா வசதிகளையும் வைத்துக் கொண்டே பயணம் செய்கிறார்கள்.

இப்பொதேல்லாம் சபரிமலைப் பயணம் என்பது ஒரு பிக்னிக் ஸ்பாட் பயணமாகி விட்டது. தேவைக்கேற்றபடி ஒரு மண்டல விரதம், ஒரு நாள் ஏன் ஒரு வேளை விரதம் என்பதாகவெல்லாம் சுருங்கிய நிலையில் பெண்கள் மட்டும் வரக்கூடாது என்ற அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்ல? இதைப்பற்றியெல்லாம்  ரௌத்திரதாசர்களுக்கு ரௌத்திரம் வராதா?

பெண்களைக் கண்டால் முகம் சுளிக்கும் ஐயப்பன் பூசை செய்யும் கண்டலரு பாப்பானின் அயோக்கியத்தனங்கள் அதுவும் பண மோசடி, விலைமாதர் சகவாசம், கணபதி ஹோமம் மந்திரம் கூட தெரிந்திராத பக்திப் பரவசம் இதையெல்லாம் சகித்துக் கொண்ட சூட்சுமம் என்ன? இந்த கிரிமினல் பாப்பான் ஜெயிலில் கம்பி எண்ணவேண்டிய கேடி இன்னும் குஷாலாக வெளியில் சுதந்திரமாக சுத்தி வருகிறான். இதைக்கண்டெல்லாம் ஆண்பக்தர்களுக்கு கோபம் வருவதில்லை. ஜெயமாலாவும், சுதாசந்திரனும் சாமியைத் தொட்டதற்காக தீட்டு கழித்த கபோதிகள் எவரும் கண்டலறுவின் அயோக்கியத்தனங்களுக்காக அய்யப்பனுக்கு ஒரு எழவுத் தீட்டும் செய்யவில்லை. அப்படி செய்யவேண்டியிருந்தால் பூசாரியையும், சாமியையும் ஒரு சேர குண்டு வைத்து பிளப்பதே தீட்டுக்கழிப்பாக இருக்கும்.

இதைப்பற்றி எந்த சுரணையும் இல்லாத சாமிகள்தான் ஆண்டுதோறும் பயணம் சென்று சாஸ்தாவைத் தரிசித்து வீரமணி பாட்டுக்களையெல்லாம் குத்தாட்ட ஸ்டைலில் பாடி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.

இப்படி பக்தர்களிலேயே பிழைப்பு வாதம் வந்து விட்டாலும் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க கூடாது என்பதில் மட்டும் எல்லா சாமிகளும் ஒன்றுபடுகிறார்கள். அதற்கு ஆயிரத்தெட்டு அறிவியல் விளக்கம் வேறு சொல்லி வதைக்கிறார்கள். காலையில் மலத்திற்கு முன் சிறுநீர் வருவது ஏன்? அக்குளில் அரிப்பு வந்தால் ஏன் சொறியவேண்டும், மோர்ச்சோறு ஏன் கடைசியில் விழுங்க வேண்டும் முதலானவற்றுக்கு இந்து மதத்தில் அறிவியல் விளக்கங்கள் உண்டு என்றால் பாருங்களேன். சந்தேகம் உள்ளவர்கள் ஆர்.வியின் ஞானகுரு டோண்டு ஐய்யங்காரிடம் கேட்டால் பதில் பெறலாம். ஹை லெவல் இன்புளுயன்ஸ் உள்ளவர்கள் காஞ்சி காமகேடி ஜெயேந்திரனிடம் போய் கேட்டலாம், மனைவி-மகளோடல்லாமல் தனியாக போவது ஷேமம் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு.

சபரிமலைக்கு கிளம்பும் ஆண் சாமிகளுக்கு வேண்டிய எல்லா பணிவிடைகளையும் செய்யும் பெண் மட்டும் சாமி ஆக முடியாதாம். அந்தப் பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஆம்பளை சாமிகள் வீட்டில் இருக்க மாட்டார்களாம். அவ்வளவு சுத்தமாம். இதே சுத்தம் ஐயப்பனுக்கும் தேவையென்பதால் பெண்களுக்கு தடா!

கடவுள் என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும், பாக்டீரீயா, வைரஸ் முதலான சகலவற்றுக்கும் பொதுதானே என்றால் அது வேறு இது வேறு என்று இழுப்பார்கள். இப்படி மனிதகுலத்தின் சரிபாதி பெண்ணினத்தை இழிவு படுத்தும் சபரிமலை அய்யப்பனை வணங்கும் கேவலமான காட்டுமிராண்டிகளின் நாடுதான் இந்தியா. இந்த காட்டுமிராண்டிகளின் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் பர்தா விவகாரத்தில் மதப்பற்றோடு குமுறி எழுகிறார்கள்.

சபரிமலையின் இந்த அயோக்கியத்தனத்தை மென்மையான வரிகளில் சந்தனமுல்லை தன் பதிவொன்றில் கேட்டிருந்தார். உடனே ஆம்பளை சாமிகள் அவருக்கு எச்சரிக்கை இடும் விதத்தில் பின்னூட்டமிடுகிறார்கள். அதில் ஒரு கபோதி சபரிமலை ஆண்டவன் சக்தி உள்ளவன், அவனிடம் விளையாட வேண்டாம், கண்ணைப் பிடுங்கி விடுவான் என்று பச்சையாக மிரட்டியிருக்கிறார். இதுதான் பதிவுலகின் இந்துத்வ இலட்சணம்.

சந்தனமுல்லையின் நியாயத்துக்கு குரல் கொடுக்காத கோழைகள்தான் இப்போது சுமஜ்லாவின் பர்தா பற்றுக்காக பொங்கி எழுகிறார்கள்.

சினிமா, மொக்கை, அரட்டை, அக்கப்போர், தொடர்பதிவு, வடிவேலு ஸ்லாங், மீதபர்ஸ்டு, முதுகு சொறிதல்  என்று பிழைப்பை நடத்தும் பதிவுலகின் ஆன்மாவைக் கீறிப்பார்த்தால் அங்கே சாதியும், மதமும்தான் கோலேச்சும். வினவின் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களில் இதை உணராதவர்களுக்கு  ‘நற்குடி’ பிரச்சினை தெளிவாய் விளக்கியிருக்கும். இதை முட்டி, மோதி, தட்டி, கொட்டி மாற்ற வேண்டுமானால் வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை?

vote-012

தொடர்புடைய பதிவுகள் – பதிவில் உள்ள சுட்டிகள் தவிர்த்து

    • ஹலோ வேற வேலை இருந்தா பாருங்கப்பா. எவனோ ஒருத்தன் கிருக்குறான் . அதை பல பேரு படிக்குறாங்க. வெட்டி மனிதர்கள்!!

  1. வைரஸ் காய்ச்சல் தான் வினவு பதிவுகள் குறைந்ததற்கு காரணமா?

    திரும்ப வரும்போதே அடாவடியா வந்திருக்கீங்க.. சூப்பர்.

    கம்யூனிஸ்டுகள் / நாத்திகர்கள் என்று வரும் போது, இந்துக்களும் இசுலாமியர்களும் மற்றெல்லா மதத்தவரும் ஒரே குரலில் பேசுவதைக் கேட்கலாம். நம்மை எதிர்கொள்வதைப் பொருத்தளவில் அவர்களுக்கு குரல்வளை ஒன்றாகிவிடுகிறது.

    அப்படியே சீக்கிரம் மக்களிசையை ஒலிக்கவிடுங்கள்.

    இந்த சிச்சுவேஷனுக்கு பொருத்தமான பாடலாக “இந்து என்னடா முசுலீமு என்னடா.. நிமிர்ந்து சொல்லுவோம் நாங்க பாட்டாளியடா” என்ற
    பாடலை நேயர் விருப்பமாக பரிந்துரைக்கிறேன்.

    • நல்ல ஆலோசனை, தோழர் கில்லி உடன் இதை அமல்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

      • வினவு …

        உஙகள் பதிவு அருமை…நல்ல கருத்து….சுமஜ்லா வின் கருத்து…இஸ்லமிய…பர்பனியம்னு சொன்னாங்க..அப்ப்டி சொல்ல வேண்டாம்…அவரை அந்த இடத்தில் முரன்படுகின்றேன்….கருத்து மோதல் இயற்கை…அவர் அவ்ர்கு வேண்டியதை எடுதுகொல்லட்டும்….உஙகலுக்கு….தமிழ் ல வல்க்கு சொல் ஒன்னு உண்டு….ஜாதிக்கு நாலு பேரு கெட்டவன் இருப்பான்…அதுனால…அந்த சமூகம் மொத்தத்தையும் குத்தம் சொல்வது…நியாயம் இல்லை….நாதிகம் பேசுறவங்க எல்லாரும் சரினு சொல்ல முடியதுல…உஙகளுக்காக இந்த இனைப்பு….

        ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! – சகுந்தலா நரசிம்ஹன்
        http://www.satyamargam.com/976

  2. நீண்டநாள் கழித்து அக்மார்க் வினவு பதிவு. எப்படியிருப்பினும் சுஜ்மலாவின் ‘நற்குடி’ பிரயோகத்தை நான் ரசிக்கவில்லை. சுஜ்மலா பின்பற்றுவது இசுலாமிய பார்ப்பனீயம்.

    • //சுஜ்மலா பின்பற்றுவது இசுலாமிய பார்ப்பனீயம்.//

      இதுவே தான் என் கருத்தும், பூனுல் போட்டதால் நான் உயர்ந்தவன் என்பது பார்பனியர்களின் பார்பனீயம் போல், பர்தா அணிவதால் நான் நற்குடி என சொல்வதும் பார்பனீயம் தான்

      • யாரெல்லாம் தூரமாயிருக்கீங்களோ கை தூக்குங்க, காமக்கொடூரன் ஜெயேந்திரர் கேட்கிறார் மாணவிகளிடம்

        Posted On Friday, 25 December 2009 at at 04:11 by Mike    

                                  தனது 75-வது பிறந்த நாளை ஊர் ஊராகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் காஞ்சி ஜெயேந்திரர். திருச்சியில் 3 பெண்கள் கல்வி நிறு வனங்களில் ஜெயேந்திரரின் பிறந்தநாள் டிசம்பர் 17, 18, 19 தேதிகளில் அமர்க்களப்பட்டது. மாணவிகளிடம் ஆசிரியர்கள், “”யாரெல்லாம் தூரமாயிருக்கீங்களோ கை தூக்குங்க. இது சாமி சம்பந்தப்பட்ட விஷயம். யாராவது தீட்டாயிருந்து ஏதாவது தப்பாயிடிச்சின்னா தெய்வ குத்தமாயிடும்” என்று சொல்ல, “”என்ன இப்படியெல்லாம் கேட்கு றாங்களே” என்று மாணவிகள் பதறிப்போய், ஓரிருவர் கை உயர்த்தினர். அப்போது ஒரு மாணவி, இவ்வளவு சுத்தம், ஆச்சாரம் பார்க்குறவர் ஏன் மேடம் ஜெயிலுக் கெல்லாம் போகணும்? அந்த விஷயத்திலும் சுத்தமா இருந்திருக்கலாமே” என்று சொல்ல, மாணவிகளிடம் சிரிப்பலை. 

        இந்திராகாந்தி பெண்கள் கல்லூரியில் நடந்த பிறந்தநாள் விழாவுக்கு வந்த ஜெயேந்திரர் உற்சாக மனநிலையில் இருந்தார். சங்கரராமன் வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து பல்டி அடிக்கிற விவரம் வந்துகொண்டே இருந்ததால்தான் இந்த மனநிலை. ஜெயேந்திரரை வாழ்த்த மதுரை, திருப்பனந்தாள் ஆதீனங்களும், விஸ்வ இந்து பரிஷத் வேதாந்தம், பா.ஜ.க ஹெச்.ராஜா ஆகியோர் வந்திருந்தனர். 

        • இந்த நாய் ஒரு பொருக்கி பொறம்போக்கு,ஏன் தோழரே இவனப்பத்தி எழுதி நேரத்த வீனடிகிறீங்க.

      • தமிழ் ஓவியா என்ற ஒரு மகத்தான பெரியார் அடிவருடி, பூனூல் போடுவது “இது பத்தினி வீடு” என்று எழுதி வைப்பதற்குச் சமம் என்றான்.
        இங்கே, பர்தா அணிந்தவள் தான் பத்தினி என்று ஓப்பனாகச் சொல்லியும் அவன் ஒன்றும் பேசவில்லை.
        பொண்டாட்டிக்கு பர்தா வாங்கப்போயிட்டான் போல இருக்கு….

        • நீ மொதல்ல ஓம் பேருல எழுதுடா தமிழ் ஓவியா பெரியார் அடி வருடியா முனி வருடியான்னு தெரியும் பொறம்போக்கு

    • கொஞ்ச நாளா பார்ப்பனர்கள் பூணூல் பெருமைகளை மார் தட்டி கூவுவதை நிறுத்திட்டாங்க !

      இந்தம்மா ரொம்ப பெருமையா அறிக்கை விட்டுருக்காங்க

  3. //சந்திப்பிற்கான உழைப்பில் வால்பையன் டிமிக்கி கொடுத்ததாகவும் //

    டிமிக்கி கொடுக்கல, டிமிக்கி கொடுத்துருந்தா நல்லாயிருந்துருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு கலகம் செய்தேன்! ஒருத்தர்,ரெண்டு பேர் சொன்னாங்கன்னு நீங்களும் அதையே சொல்லகூடாது, என் பங்கு என்னவாக இருந்ததுன்னு விளக்கமா என் பதிவில் எழுதியிருக்கேன்!

  4. //அந்த அல்லாதான் ஆண்களின் காமவெறியை கொஞ்சம் காந்தி மாதிரி தணிச்சலாக படைத்திருக்கலாம்தானே?//

    இபிலீஸ்னு ஒரு சைத்தானாம், உலகம் படைத்த காலத்தில் இருந்து இருக்கானாம், அவனையே ஒன்னும் பண்ணமுடியல, இதுல எங்கிருந்து குறைந்த காமவெறியோட மனிதர்களை படைப்பது! மதத்தையும், அதன் நம்பிக்கையையும் கட்டி அழுபவர்களை திருத்த வாய்ப்பேயில்ல போல!

  5. //எல்லா மதங்களையும் அதில் உறைந்திருக்கும் ஆணாதிக்கத்தையும் எதிர்ப்பவராக இருக்கவேண்டும். //

    திருவள்ளுவர் ஆணாதிக்கவாதின்னு ரெண்டு உதாரண குறள் கொடுத்ததுக்கு விளக்கம் சொல்லாம என்னை குடிகாரபயன்னு சொல்றாங்க, எங்கிருந்து இவுங்களை மாற்ற!

  6. //ஒரு கபோதி சபரிமலை ஆண்டவன் சக்தி உள்ளவன், அவனிடம் விளையாட வேண்டாம், கண்ணைப் பிடுங்கி விடுவான்//

    நானா இருந்திருந்தா *யிரைக்கூட புடுங்கியிருக்க முடியாதுன்னு சொல்லியிருப்பேன்!

  7. இசுலாமியப் பார்ப்பனீயமா ! இன்னாடா இது புச்சா ஒரு கல்ச்சர் வந்துகீதா ! அது இன்னா மேட்டர் கொஞ்சம் டீடைலு வான்டட்

  8. //சினிமா, மொக்கை, அரட்டை, அக்கப்போர், தொடர்பதிவு, வடிவேலு ஸ்லாங், மீதபர்ஸ்டு, முதுகு சொறிதல் என்று பிழைப்பை நடத்தும் பதிவுலகின் ஆன்மாவைக் கீறிப்பார்த்தால் அங்கே சாதியும், மதமும்தான் கோலேச்சும். வினவின் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களில் இதை உணராதவர்களுக்கு ‘நற்குடி’ பிரச்சினை தெளிவாய் விளக்கியிருக்கும். இதை முட்டி, மோதி, தட்டி, கொட்டி மாற்ற வேண்டுமானால் வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை?
    /

    என்னால் இதை ஏற்று கொள்ளமுடியாது. ஓரு சில மூட நம்பிக்கைகளை எதிர்த்து விட்டதாலும், பல பதிவுகள் போட்டு விட்டதாலும் உங்களை முற்போக்கு பதிவராகவும் இதற்கு எதிராக பாடுபடுவராகவும் நினைத்து கொண்டால் .. நீங்கள்தான் மூடநம்பிக்கையாளர் என சொல்லுவேன்

  9. “வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை? ”

    இது தாங்க இந்த கட்டுரையிலேயே மிகப் பெரிய காமெடி!

  10. புவனேஷ்வரியும் ஷகீலாவும் பர்தா போட்டுவிட்டு நீதிமன்றம் சென்றது கூட பிரச்சனை ஆகியது. ஐயப்பன் கோவிலை இந்த இடத்தில் நுழைத்திருப்பது பொருத்தமாகத் தெரியவில்லை. அது ஒரு கோவில் அமைப்பு அங்கு செல்ல விரும்பும் பெண்களும் குறைவே. ஆண்கள் சட்டையைக் கழட்டிக் கொண்டு நுழையச் சொல்லும் கோவில்கள் கூட உண்டு. மாதவிலக்கு பெண்களை பூசை செய்ய அனுமதிக்கும் மேல்மருவத்தூர் கோவில்களும் உண்டு. நீங்கள் இந்துக்களின் ‘தாலி’ செண்டிமெண்ட் மற்றும் பர்தா பாரம்பரியம் ஒப்பிட்டு இருந்திருக்கலாம்

    • கோவி கண்ணன் பெண்ணை அடிமைப்படுத்தி இழிவு படுத்துவதற்காகவே சுத்தம், அசுத்தம் என்ற காரணங்கள் கொண்டு சபரி மலையியல் அப்படி ஒரு விதியை வைத்திருக்கிறார்கள். அதை ஒரு கோவில் அமைப்பு என்று எப்படி தள்ளுபடி செய்கிறீர்கள்? சந்தனமுல்லையின் சாமி பதிவு பின்னூட்டங்களை வாசித்துப் பாருங்கள். இந்து ஆண்கள் எப்படி ஆடியிருக்கிறார்கள் என்பது தெரியவரும். பொதுவில் கடவுள்கள் என்றால் எல்லாருக்கும் பொது என்று அளந்து விட்டு இப்படி ஒரு இழிவு ஒரு மதத்தின் பெயரால் கடைபிடிக்கப்படுகிறது எனும்போது நாம் அதை கிடைக்கும் வழிகளில் அம்பலப்படுத்துவதும், எதிர்தப்பதும் சரிதானே?

      • “எனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்” என்று சொல்லும் கோவி கண்ணன் இவ்வாறு பதில் அளிப்பதில் என்ன தவறு ??

      • ஒரு நடிகை சபரிமலைக்குச் சென்றது மிகப் பெரிய பிரச்சினயானதும் அதனை ஒட்டித்தான் ஹோமோசெக்ஸ் விளைபொருள் ஐய்யப்பன் பெண்ணடிமைத்தன விவாதப் பொருள் ஆனதும் நடந்தது. கோவி கண்ணனுக்கு இந்த விசயங்கள் மறந்துவிட்டதா என்ன?

      • பெண்களுக்கு எவ்ளோ கஷ்டம் அந்த மூன்று நாட்களும், அவங்கள போயி எண்டா இப்புடி கஷ்ட படுதுரிங்க.

    • //அங்கு செல்ல விரும்பும் பெண்களும் குறைவே//

      அநியாயமான கருத்து பாஸ். பெண்கள் வரக்கூடாதுன்னு சட்டம் போட்டிட்டு அப்பறம் அவங்களே விரும்பலன்னு கதவிட்டா எப்படி? இது பெண்கள் “தானாகவே விரும்பி” பர்தா அணிவதற்கு இணையான காமெடி.

      சரி. அப்படியே பெண்கள் தானாகவே செல்ல விரும்பாமல் இருந்தாலும் விரும்பிச் செல்லும் பெண்களைத் தடுப்பது நியாயமா?

      //மாதவிலக்கு பெண்களை பூசை செய்ய அனுமதிக்கும் மேல்மருவத்தூர் கோவில்களும் உண்டு//

      இந்தத் தகவலில் என் மனம் நெகிழ்கிறது. மாரில் முடி முளைத்த மனிதரை அம்மா என்று அழைக்கும் இடம்தானே அது?

      //ஆண்கள் சட்டையைக் கழட்டிக் கொண்டு நுழையச் சொல்லும் கோவில்கள் கூட உண்டு. //

      உள்ளே வருபவன் பூணூல் அணிந்திருக்கிறானா இல்லையா என்று தெரிந்து கொள்ளக் கொண்டுவரப் பட்ட வழக்கம் அது. வயதில் மூத்தவர்களுக்கு எழுந்திருந்து இடம் கொடுப்பது, எச்சில் கையால் சோறு போட்டுக் கொள்ளக்கூடாது என்பது போல இது ஒன்றும் சமூகம் சுகாதாரம் சார்ந்த மரியாதைக்குறிய பாரம்பரியம் அல்ல. சபரி மலையே ஒரு அயோக்கியத்தனம். அதற்கு வரிந்து கட்டிக் கொண்டு செல்பவர்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள். இதில் ஒரு பெண் தொட்டதும் என்ன பெரிய கேள்வி!!

      பர்தா போடவைக்கும் அடிமைத்தனத்திற்கும் இதற்கும் அடிப்படையே பெண்ணை யோனியாக மட்டுமே பார்க்கும் அவலமான ஆணாதிக்க மனப்பாங்குதான். அவளுக்குப் பிற உருப்புகளும் உள்ளன.

  11. மெயிலுக்கு வள்ளுவன் என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் வந்திருந்தது, அது இங்கே காணோம்! அவருக்கு பதில்!

    நான் குடிக்கிறேன் இல்ல சாவுறேன்! கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்!

    • கலைஞர் திருக்குறளுக்கு எழுதிய உரையை வாங்கி அனைத்து குறளுக்கும் உள்ள விளக்கத்தை பாருமையா முதலில்.

      • //கலைஞர் திருக்குறளுக்கு எழுதிய உரையை வாங்கி அனைத்து குறளுக்கும் உள்ள விளக்கத்தை பாருமையா முதலில்//

        கலைஞர் சொன்னா நான் ஏத்துகனும்னு சட்டம் இருக்கா!?
        திருவள்ளுவர் நிலபுரபுத்துவ காலத்தில் வாழ்ந்த ஒரு சொம்பு தூக்கி!

        அதனால அந்த வசனத்தை கலைஞர் சொம்பு தூக்கிகளிடம் சொல்லும்!

        • குடிக்காக சொம்பு தூக்கும் உன் போன்றவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

          வினவு அவர்களே இது போன்ற குடிகாரன்களின் உளறலை எல்லாம் இங்கு அனுமதிக்க போகிறீர்களா.

        • கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது. நாமறிந்தவரை வால்பையன் பொருளோடு ஆழமாகவும், அழக்காவும் விவாதிப்பது இங்கு மட்டும்தான். இப்படி இருக்கையில் பதிவுலகையும் கொஞ்சம் மாற்றமுடியுமென நம்பிக்கையை சுகுணாவும் ஏனையோரும் வைத்துக்கொள்ளலாம்.

    • வால்பையன் பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை ஒத்துவராத மறுமொழிகள் என்ற தலைப்பில் கொண்டு செல்லப்படும் அதுதான் வள்ளுவனின் குடி செய்தி காணாமல் போனது

      • //வால்பையன் பொருளோடு ஆழமாகவும், அழக்காவும் விவாதிப்பது இங்கு மட்டும்தான். //

        அதை அழகாகவும் என்றே எடுத்து கொள்கிறேன்!
        நான் ரொம்ப நாளா இதை தான் செய்து கொண்டிருக்கிறேன்! நான் குடிப்பேன் என்று பொதுவில் சொன்னதால், கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் குடிகாரன் என்று தட்டி கழிக்கிறார்கள்!, இதற்கெல்லாம் நான் வருத்தப்பட போவதில்லை! மதங்களின் முகமூடிகளை கிழிப்பதே என் பெரும்பங்கு வேலை!

        • ஆகா வந்துட்டார்டா இன்னொரு பெரியார் ராமசாமி.
          இவனுங்க அலம்பலும் சலம்பலும் தாங்க முடியல.

  12. நன்றி தோழர். நற்குடிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த உண்மைத்தமிழன் தனது ‘வேலுபிரபாகரனின் காதல் கதை’ விமர்சனத்தில் ‘கீழ்சாதி’ப் பெண் ’மேல்சாதி’ ஆணைக் காதலிக்கிறாள் என்கிற ரீதியில் எழுதியிருந்தார். அது என்னடா சாதியிலே கீழ்சாதி என்று கேட்க ஒருவருமில்லை. நற்குடிக் கிளர்ச்சியாளர்களில் பெரும்பாலானோரின் யோக்கியதை இதுதான். அதைக்கூட விடுங்கள். இந்த சர்ச்சை தொடர்பாக ஒரு பின்னூட்டம் இட்டதற்காக ‘அரபுகளிலிருந்து மாதாமாதம் பணம் வருகிறது’ என்கிறார் ஒருவர். இன்னொருவர் ‘சுகுணாதிவாகரின் குழந்தைக்கு என்ன இனிஷியல்’ என்று குதர்க்கமாய் வினவுகிறார். இதற்கான அர்த்தம் என்ன என்பது யாருக்கும் தெரியாதா என்ன? ‘உலகத்திலேயே சிரமமான காரியம் முட்டாள்களோடு விவாதிப்பதுதான்’ என்றார் பெரியார். ஆனால் வாழ்நாள் முழுக்க அவர் அதைத்தான் செய்தார். அதனாலேயே அதைச் சொல்வதற்குக் கூடுதலான ‘தகுதி’யும் பெரியாருக்கு உண்டு. முட்டாள்களோடு விவாதிப்பதன் சிரமத்தைச் சமீபகாலமாக நன்றாகவே உணரமுடிகிறது. வலையுலகம் என்பது பெரும்பான்மை முட்டாள்கள் நிறைந்த கூடாரம். இதிலே ‘பதிவர்களுக்கிடையில் சாதியுணர்வு கிடையாது, மதமாச்சரியங்கள் கிடையாது, எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன’ என்கிற பம்மாத்துகள் வேறு.

    • டேய் வெண்ணை. நிறுத்துடா. துலுக்கப்பயலுவ எல்லாம் நற்குடின்னா அங்கே போயி துலுக்கனா இருக்கவேண்டியது தானே…
      என்ன மயித்துக்கு இந்து மதத்துல இருந்துகிட்டு இருக்க. நீயெல்லாம் இந்துவா இருந்து ஆகணும்ன்னு யாரு அழுதா.

      எல்லாரும் முட்டாள்ன்னா, நீ மட்டும் அறிவாளியா ?

      அவ்வளவு அறிவு உனக்கு இருக்கும் பட்சத்தில் முட்டாள்கள் என்று நீ கருதும் கூட்டத்துடன் உனக்கென்ன வேலை. உன் அறிவுக்கு ஏற்றார் போல் உள்ள கூட்டத்துடன் கூடியிருக்கவேண்டியது தானே. அவர்கள் அந்த நற்குடிகளைச் சேர்ந்தவர்கள். அங்கே விவாதமே கிடையாது…ஒருவர் சொன்னால் அதை அப்படியே எல்லோரும் தலையாட்டிக் கேட்கவேண்டும். தலையாடாவிட்டால் தலைவெட்டப்பட்டுவிடும். அவ்வளவு அறிவாளிகள்.

  13. மேலே சொன்ன எனது பின்னூட்டத்திற்குக் கூட கடுமையான கண்டனங்கள் வரக்கூடும். பதிவர்களை எப்படி முட்டாள்கள் என்று சொல்லலாம் என்று. மன்னிக்கவும் வடிகட்டின முட்டாள்கள் என்று வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளுங்கள். இவர்களது ‘விவாதங்களை’க் ‘கவிதைகளாக எழுதித்தொலைப்பது அதைவிட கொடுமை. சுஜ்மலா தொடங்கி கலகலப்ரியா, பிரபாகர் இன்னும் இன்னும் கவிதைகள், கவிதைகள், கவிதைகள். அதைப் பாராட்ட ஒரு முட்டாள் கூட்டம். நோ, நோ, கவிதை பாவம்!

    • சுகுணா ,

      இந்த பதிவுலகத்தில் அதிக பின் தொடர்பவர்களை கொண்டிருப்பவர் யார் தெரியுமா ? வாத்தியார் சுப்பையா !! அவர் எழுதுவது ஜோதிட பாடங்கள். ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள் !! அதில் பெரும்பான்மையானோர் பதிவர்கள் !! அவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?

      //சினிமா, மொக்கை, அரட்டை, அக்கப்போர், தொடர்பதிவு, வடிவேலு ஸ்லாங், மீதபர்ஸ்டு, முதுகு சொறிதல் என்று பிழைப்பை நடத்தும் //

      லிஸ்ட்ல ஒரு முக்கியமான வகை விட்டு போச்சு தலைவரே- வாழ்த்து பதிவுகள் (பிறந்த நாள் வாழ்த்து, மணநாள் வாழ்த்து, நூறு ஹிட்ஸ் வாழ்த்து இப்படி !!

  14. சரி…கடைசியா என்ன தான் சொல்ல வர்றீங்க ?

    ஒருவருக்கு பிடித்த ஒரு விஷயத்தையோ,நபரையோ மற்றொருவர் கேவலப் படுத்தும் போது வரும் நார்மலான கோவத்தின் வெளிப்பாடுகள் தான் இந்தப் பிரச்சினை.

    உடனே நாட்டாமை தோள்ல துண்டு போட்டுட்டு தீர்ப்பு சொல்ல வந்துட்டார்.

    கம்யூனிச கும்பல்கள் ஏழைகளுக்காக பாடுபடுகிறேன் என்று ஏமாற்றி, ஆட்டோக்காரங்க கிட்ட, ரிக்ஷாக்காரங்க கிட்ட, கூலி வேலை செய்றவங்க கிட்ட 50 ரூ,100 ரூ உறுப்பினர் கார்டு போட்டு, ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு சந்தா செலுத்த சொல்லி சம்பாதிக்குற கம்பெனி தான்.

    நாட்டுல மாவோயிஸ்ட்டுகள் கொலை, கொள்ளை என அடாவடி செய்துவருகிறார்களே…அதை பற்றி எல்லாம் எழுதுங்க வினவு !

    அடுத்தவன் புண்ணில் சொறிஞ்சி விடுறதுலேயே கவனமா இருக்கீங்க…!

    • கபிலனின் வயிற்றெரிச்சல் நன்றாக உணர முடிகிறது. வினவு சரியான திசையில தான் எழுதிகிட்டு இருக்கீங்கன்னு நல்லா தெளிவா தெரியுது!

      • இதுல வயிற்றெறிச்சல் பட என்ன இருக்குங்க? வழக்கமான ஒருதலைப்பட்சமான சமய எதிர்ப்பு பதிவு. அதுமட்டுமல்லாமல், இந்தப் பிரச்சினைக்கு, சம்பந்தமே இல்லாம ஐயப்பனை இழுத்திருப்பது.

        நடந்த கருத்து மோதல்கள் தப்பு இல்ல. தனி மனித விமர்சனங்கள் வந்தது தான் நெருடலா இருந்தது. சரி. அப்படியே எல்லோரும் தப்பு செஞ்சி இருந்தாலும், அனைவருக்கும் ஒரே விதமான தோரணையில் தான் பதில் சொல்லி இருக்கணும் ( வடிவேலு சொல்ற மாதிரி ” சேம் ப்ளட் .பாரபட்சம் பாக்காம திட்டுறா…..” ). வினவின் இப்பதிவு அப்படி அல்ல. நடுநிலை என்று சொல்லவே முடியாத நிலையில் இருக்கிறது அவர் எழுத்துக்கள்.

        அதனால இது ஒரு டம்மி பீஸ் பாஸ்! வயிறு எறிச்சல் வருகிற அளவுக்கு இல்ல!

    • கபிலன் இங்க வினவு என்ன கம்மூனிஸ பத்தியா எழுதிச்சு, எதுக்கு இம்மாம் கோவம்…
      ரெண்டு நாளா நாயாட்டம் அடிச்சு பொறான்டிகிட்டவங்களெல்லாம் இன்னா கம்மூனிஸ்டா?

      • ரெண்டு நாளா நடக்குற சண்டையே ….அதுவும் வன்முறை இல்லாம நடக்குற வாக்குவதமே, உங்களுக்கு பெருசா தெரியுதுன்னா….வருஷ கணக்கா ஆயுதம் ஏந்தி கொலை, கொள்ளைன்னு அட்டூழியம் செய்யும் மாவோயிஸ்டுகள் மீது ரொம்ப கோவம் வந்திருக்குமே! அதான், அதை பற்றி எழுதலையேன்னு ஒரு ஆதாங்கம் தாங்க : )

        உங்களுக்கு நெய் பிடிக்காது என்பதற்காக நெய் கடைக்காரரை அடிப்பது போல இருக்குங்க உங்க விவாதங்கள்.

        • ஆயிரக்கணக்கான வருசமாய் நம் மக்களின் மீதான வன்முறையாய் பிரோயோகிக்கப்படும் பார்ப்பனியத்தை நாங்கள் எதிர்த்து எழுதினால் நீங்கள் பார்ப்பனியத்துக்கு கூஜா தூக்குவது ஏனோ…கொலைகாரளுக்கு வக்காலத்து வாங்குவது ஏனோ????

        • பார்ப்பானுக்கு கூஜா தூக்கலிங்க….எங்கள் நம்பிக்கையை கேவலப் படுத்துறதால தான் இப்படி இறங்க வேண்டியதா போச்சு. நீங்க சொல்ற விஷயங்கள் எல்லாம் இருந்துச்சு அந்த காலத்துல. பூநூலை வைத்து பெருமை பேசும் பார்ப்பனர்கள் காலம் மலை ஏறிப் போச்சு. சாதியில் உயர்வு தாழ்வு பார்ப்பது நகரங்களில் அறவே இல்லை எனலாம். கிராமங்களும் மாறி வருகின்றன. அது காலத்தின் மாற்றம், கட்டாயமும் கூட.

          இப்போ ஏற்றத் தாழ்வு பணம் படைத்தவனுக்கும், இல்லாதவனுக்கும் தாங்க.

          நிறைய பழங்கள் இருக்குற, ஒரு பெரிய மரத்துல ஒரு பழம் கெட்டுப் போய் இருக்கு என்பதற்காக, மரத்தை வெட்டி சாய்த்தல் நியாயமா?

        • @@பார்ப்பானுக்கு கூஜா தூக்கலிங்க@@ நான் எப்போ பாப்பானுக்குன்னு சொன்னேன், பார்ப்னியம்னுதானே சென்னேன்..சாதி யாரும் பாக்குறதில்லைன்னு நீங்க சொல்லுறீங்க.. ஆனா அது நடைமுறைல இல்லீங்க.. தமிழ்நாடு பரவாயில்லைங்கறது உண்மைதான்.. ஆனா வடநாட்டுல நெலம தலைகீழ்

        • ///உங்களுக்கு நெய் பிடிக்காது என்பதற்காக நெய் கடைக்காரரை அடிப்பது போல இருக்குங்க உங்க விவாதங்கள்./////

          நெய் உங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக, பால்காரரையும்
          மாடுவளர்