ஏறக்குறைய ஒரு மாதம் வீழ்த்திய வைரஸ் காய்ச்சலுக்குப் பிறகு பிறகு சொந்தமாக ஒரு பதிவு எழுதவேண்டுமென்று வந்தால் பதிவுலகில் நற்குடி பிரச்சினை. பிரச்சினையற்ற உலகில் நேர்மறையாக எழுதவேண்டிய விசயங்கள் மலையளவு இருக்கும் போது தொடர்ந்து பிரச்சினைகளையும், தகராறுகளையும் அலசி ஆய்வதிலிருந்து என்று விடுதலை கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் ஊர் உலகமென்றால் பிரச்சினைகளும் இருக்கும்தானே?
ஈரோடு பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியிருக்கிறது.
பதிவர் சந்திப்பிற்கு பதிவர் சுமஜ்லா சென்று வந்ததோடு “பர்தாவோடு சென்றேன், பர்தாவோடு இருந்தேன்” என்று யாரையோ திருப்திப்படுத்தவோ, முன்னெச்சரிக்கைக்காகவோ, ஜாக்ரதையாக எழுதி பதிந்து கொண்டார். இதன் பின்னணி என்ன? ஒரு பெண் அதுவும் இசுலாமியப் பெண் பதிவு எழுதுவது பெரிய விசயம். அதையும் அவர் வீட்டு ஆண்கள் அனுமதிப்பது பெரிய சுதந்திரம்.( இன்னும் இதுபோன்ற என்னவெல்லாம் சுதந்திரங்கள் இருக்கிறதோ?) இதில் சுமஜ்லா தமிழில் வேறு என்ன செய்திகளை எழுதுகிறார் என்பது தெரியவில்லை.
ஆக முசுலீம் பெண்பதிவர் சுமஜ்லா தனது சுதந்திரம் பாதுகாப்பு கருதி இந்த பர்தா சங்கதியை பதிவு செய்திருக்கிறார் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். இல்லையேல் நாளை ஒரு முசுலீம் பெரிசு ” காலம் கெட்டுக்கிடக்கு, நம்ம சுமஜ்லா பொண்ணு ஏதோ இன்டர்நெட்டுக்காரனுக கூட்டத்துக்கு போய்ட்டு வந்துச்சாமே?” என்று வாங்கிவிட்டால் என்ன செய்வது?
இதைப் புரிந்து கொள்ளாத ஒரு அனாமதேயம் பின்னூட்டத்திலோ வேறு எதிலோ இதை பகடி செய்து ” நான் பேண்டு போட்டு பேண்டோடு அமர்ந்தேன், நான் சேலை கட்டி சேலையோடு அமர்ந்தேன்” என்று எழுதப்போக, அக்மார்க் இசுலாமிய பெண்ணான சுமஜ்லா அதை ஓரம்தள்ளாமல் பிரஸ்டீஜ் பிரச்சினையாக பாவித்துக்கொண்டு பர்தாவின் மகத்துவம் பற்றி ஒரு தனி பதிவு போட்டார். ஆரம்பித்தது பிரச்சினை.
அதிலும் “நற்குடி” பெண்களென்றால் பர்தா இல்லாமல் வாழமாட்டார்கள் என்ற ரேஞ்சில் தனது அடிமைத்தனத்தை சிலாகித்திருந்தார். இப்பத்தான் பதிவுலகம் வந்திருக்கும் அந்த பேதைப்பெண்ணுக்கு உலகம், அடிமைப்பெண்கள், சுதந்திரப் பெண்கள், மத பிற்போக்குத்தனங்கள் எல்லாம் புரிவதற்கு பதிவுலகமென்ன முற்போக்கு சிங்கமாகவா உள்ளது? மொக்கைகள், சினிமாக்கள் என்று காலம்தள்ளும் பதிவுலகை விண்டு பார்த்தால் சாதியும், மதமும், ஆணாதிக்கமும்தானே கோலேச்சுகிறது?
அந்த்தபடிக்கு சுமஜ்லாவும் திருந்த வாய்ப்பில்லாதது நம் சூழலோடு இணைந்தது. இதனால் அந்தப் பெண்பதிவர் எதுவும் தெரியாத அப்பாவி என்று பரிதாபப்படவில்லை. பர்தா என்ற அடிமை சமாச்சாரத்தை அப்படி உருகி உருகி அவர் எழுதியிருந்ததைப் பார்த்தால் அது நிச்சயம் அல்லாவுக்கே பொறுக்காது. உலகம் எங்கேயே போய்க்கொண்டிருக்கும் போது இன்னும் அந்த பர்தாவைத் தொங்கிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. வன்புணர்ச்சிக்கு அலையும் ஒரு கொடூரனிடமிருந்து ஜீன்ஸ், சல்வார் போட்ட பெண்களாவது கொஞ்சம் கை, காலை ஆட்டி சண்டையாவது போட முடியும், சுதந்திரமாக ஓட முடியும். பர்தா அணிந்த பெண்கள்? மூலையில் தேமே என்று அழவேண்டியதுதான். இதனால் மிருகங்கள் ஒன்றும் பரிதாபப் படபோவதில்லை.
உடையின் இடையில் தெரியும் பெண்ணுடலை வக்கிரத்துடன் பார்க்கும் நோய் ஆண்களின் கண்களில் உருவாக்கப்பட்டிருக்கும்போது அதற்கு அல்லாவோ பர்தாவோ என்ன செய்ய முடியும்? அல்லது அந்த அல்லாதான் ஆண்களின் காமவெறியை கொஞ்சம் காந்தி மாதிரி தணிச்சலாக படைத்திருக்கலாம்தானே? தஞ்சை மாவட்டத்தில் வயலில் வேலை செய்யும் உழைக்கும் பெண்கள் தமது உள்பாவாடையை வரிந்து கட்டிக்கொண்டு கிட்டத்தட்ட ஷார்ட்ஸ் போல உடையை மாற்றிக் கொண்டு வேலை செய்வதை சுமஜ்லா பார்த்ததில்லையா? எந்த வேலையும் இல்லாமல் சும்மா அரட்டை அடிப்பவர்களுக்குத்தான் பர்தா லாயக்கு. உழைக்கும் பெண்களுக்கும், ஒட்டம், ஆட்டம் என சாதனை படைக்கும் பெண்களுக்கும் அது தடைச் சங்கிலி.
அடுத்து பர்தா என்னவோ இசுலாமியருக்கு மட்டும் சொந்தமென்று சிலர் நினைக்கிறார்கள். வட இந்தியாவின் பல இந்து சாதிகளில் பர்தா என்பது இருந்தே ஆக வேண்டிய கட்டாயம். பொதுவில் பெண்களை அடிமைகளாக பார்க்கும் எல்லா மதங்களும் ( கிறித்தவத்தில் கன்யாஸ்தீரியின் அங்கி கூட ஒரு பர்தாதான்.) இப்படித்தான் சட்ட திட்டங்களை வைத்திருக்கின்றன.
பர்தாவின் அநீதியை ஒருவர் எதிர்க்க வேண்டுமென்றால் அவர் எல்லா மதங்களையும் அதில் உறைந்திருக்கும் ஆணாதிக்கத்தையும் எதிர்ப்பவராக இருக்கவேண்டும். சுமஜ்லா பர்தாவைப்பற்றி பதிவு எழுதியதும், கலகலப்ரியா எனும் இந்து பெண்பதிவருக்கு ஆத்திரம் வான்தட்ட அவர் ஒரு கவிதையை தாளித்தார். இவர் ரௌத்திரம் பழகும் பாரதியின் பயங்கர விசிறியாம். இவருக்கு எழுந்த கோபம் பெண்ணுரிமையின் பாற்பட்டதல்ல. பர்தா போட்ட பெண்களெல்லாம் நல்லவர்கள் மற்றவர்களெல்லாம் கெட்டவர்களா என்ற அணி அதாவது இந்து அணியிலிருந்து வரும் கோபமே அடிப்படை.
இவ்வளவிற்கும் இவர் பர்தாவை எதிர்க்கவில்லையாம். அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கைகளை அவரவர் பின்பற்றுவது சரியாம். ஆனால் அதற்காக மற்ற மதத்தவர்களை நொட்டம் சொல்வது சரியல்ல என்பதே பிரியாவின் வாதம். பிரியாவின் இரசிகர் கூட்டம் இந்த கவிதைக்காக பின்னூட்டத்தில் ஒரு பெரும் ஆவேசக் கூச்சலையே எழுப்பிச் சென்றிருக்கிறது. சாராமாகச் சொன்னால் நாகரீகமான வார்த்தைகளில் துடித்துக்கொண்டிருக்கும் இந்துத்வ மனமே இதன் இயக்கம். இதற்கு நம்ம ”ஞானப்பழம்” உண்மைத்தமிழன் கூட விலக்கல்ல. அப்பப்பா மொக்கைகளுக்குள் மறைந்து நிற்கும் பதிவுலகம் மதம் எனும் வாதத்தில் எப்படி சிக்குண்டிருக்கிறது என்பதறிய அந்த பின்னூட்டங்களை வாசிக்க வேண்டும்.
இவர்கள் எல்லோரும் எமது இந்துமதத்தை இழிக்கிறாயா என்ற ஆவேசத்தில் பதிவர் சுமஜ்லாவை கிழிக்கிறார்கள், மைனஸ் ஒட்டு போட்டு ரசிக்கிறார்கள். மாற்றுமுகாம் பதிவுகளுக்கு கள்ள ஒட்டு போட்டு கைதட்டுகிறார்கள். ஒரு புறம் பதிவுலகம் மத மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டது என்று பல்லவி பாடிக் கொண்டே மறு புறம் இசுலாமிய வெறுப்பை நாசுக்காகவும் பகிரங்கமாகவும் கொட்டுகிறார்கள். கவிதையும்(?) பதிவுமாக எழுதி தள்ளுகிறார்கள். இவர்கள் எவருக்குமே பெண்ணை மதங்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அநீதி குறித்து கிஞ்சித்தும் கவலை கிடையாது. அது இருந்தால் இந்து மதம் பெண்ணை வதைத்திருக்கும், வதைத்துவரும் கொடூரங்கள் குற்ற உணர்வை கொள்ள வைத்திருக்கும். இந்த விசயங்களை அந்தப் பதிவர்களின் பின்னூட்டங்களில் தனியாக நின்று வாதிட்ட சுகுணா திவாகரின் பின்னூட்டத்தை பலரும் சீண்டவில்லை என்பது மட்டுமல்லாமல் அநாமதேயங்களாகவும் வந்து கிண்டலடித்தார்கள்.
“மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்கள் இப்படித்தான், யாரும் மாற்ற முடியாது” என்று இசுலாமியர்களை இழிக்கும் இந்த சிகாமணிகள் மாறாத இந்து மதத்தை மாற்ற என்ன கிழித்தார்கள்? பிறந்ததிலிருந்து தகப்பன், கணவன், பிள்ளை என மாறி மாறி எல்லா ஆண்களுக்குக்கும் கட்டுப்பட்டவள் பெண் என்பதே மனு வகுத்து இன்றுவரை அமுலிலிருக்கும் நடைமுறை. பெண்கள் வேலைக்கு சென்றாலும் இந்த முறை மாறிவிடவில்லை. இன்றும் மற்ற மதங்களை விட விதவை திருமணம் என்பது இந்து மதத்தில் மிகுந்த இழிவாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள விதவைப் பெண்கள் இன்னமும் ஒரு கல்யாணம் காச்சிக்கும இன்றும் செல்ல முடியாது. இதைப்பற்றியெல்லாம் ஏன் ப்ரியாவுக்கு சீற்றம் வரவில்லை?
வட இந்தியாவில் இன்று வரை சீரோடு நடந்து வரும் குழந்தை திருமணங்களினால் பெண்தானே பாதிக்கப்படுகிறாள்? கயர்லாஞ்சியில் உழைத்து முன்னேறி வாழ விரும்பிய பூட்மாங்கே குடும்பத்தை ஆதிக்க சாதி ஆண்கள் கற்பழித்து வாய்க்காலில் வீசினார்களே இதுவெல்லாம் கலகலப்பரியாவுக்கு ரௌத்திரத்தை எழுப்பாதா? நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூட பார்ப்பனப் பெண்கள் விதவையானால் அவளது முடியை ஒண்ணொண்ணாக பிடுங்கி மொட்டையடித்த நாடும் இதுதானே? இந்தக் கதையெல்லாம் தனக்கு தெரிந்த நல்ல பார்ப்பனர்களை வைத்து ஜெயேந்திரப் பார்ப்பனர்களை மறைக்கும் பழமைபேசி பஞ்சாங்கங்களுக்கு தெரியுமா?
பெண்ணின் இயல்பான மாதவிடயாக் காலத்தை வைத்தே எத்தனை சட்ட திட்டங்கள்? அவள் பூ சூடக்கூடாது, கோவிலுக்கு போகக்கூடாது, விசேசங்களுக்கு செல்ல கூடாது, வீட்டில் ஒரு மூலையில் மூன்று நாட்களும் அடங்கிக் கிடக்க வேண்டும் என்றெல்லாம் கிரிமினல் சட்டம் வகுத்தவர்களைப்பற்றி கோபம் வராதா?
அவ்வவளவு ஏன், தற்போது ஐயப்ப சீசன். என்னவெல்லாம் வாய் கிழியப் பேசுகிறார்கள், சபரி மலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று ஒரு விதியை இன்னும் அமல்படுத்தி வருகிறார்களே இதுவெல்லாம் ‘நற்குடி’ பதிவர்களுக்கு கோபத்தை கொண்டுவரும் தகுதி படைத்தது இல்லையா?
சீசன் வந்து விட்டால் சாமிகளின் அட்டகாசம் தாங்கமுடியாது. டீக்கடையில் பேப்பர் கப்பாகட்டும், டாஸ்மாக்கில் சரக்கடிக்க தனி பிளாஸ்டிக் டம்ளாராகட்டும் என சரக்கு தொடங்கி சகலத்திலும் அய்யப்பமார் சாமிகளின் புனிதம் காக்கப்படுகிறதாம். இதில் வயதுக்கு வந்த ஒரு பெண் ஐயப்பனை வணங்க வந்தால் அது தீட்டாம். இந்த மாதிரி கேவலம் உலகில் வேறு எங்கவாது உண்டா? கேட்டால் பெண்ணின் ரத்தவாடை அறிந்து காட்டு விலங்குகள் வந்து விடுமாம் என்றொரு அறிவியல் விளக்கத்தையும் தெளிக்கிறார்கள்.
ஏன் ஆணின் உடலில் கூட மல, சலம், வியர்வை, ரத்தம், சளி என எல்லா எழவும் இருந்துதானே தொலைக்கிறது. இதைப் பார்த்து காட்டு விலங்குகள் இது ஆண் சமாச்சாரம் என ஓடிவிடுமா? அப்புறம் சேலை கட்டிய பெண்கள் ஒட முடியாதாம். அதனாலென்ன ஜீன்ஸ் போட்ட பெண்கள் ஒடலாமே? ஏதோ சிந்து பாத்தின் சாகசப் பயணம் போல உதார் விடும் இந்த சாமிகள் எவரும் நோகமால் ரயில், பஸ், இதர வாகனங்கள், சுமைதூக்கிகள், சாப்பாட்டுக் கடைகள், மலையிறங்கியதுமே சரக்கடிக்க ஏற்பாடுகள் என எல்லா வசதிகளையும் வைத்துக் கொண்டே பயணம் செய்கிறார்கள்.
இப்பொதேல்லாம் சபரிமலைப் பயணம் என்பது ஒரு பிக்னிக் ஸ்பாட் பயணமாகி விட்டது. தேவைக்கேற்றபடி ஒரு மண்டல விரதம், ஒரு நாள் ஏன் ஒரு வேளை விரதம் என்பதாகவெல்லாம் சுருங்கிய நிலையில் பெண்கள் மட்டும் வரக்கூடாது என்ற அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்ல? இதைப்பற்றியெல்லாம் ரௌத்திரதாசர்களுக்கு ரௌத்திரம் வராதா?
பெண்களைக் கண்டால் முகம் சுளிக்கும் ஐயப்பன் பூசை செய்யும் கண்டலரு பாப்பானின் அயோக்கியத்தனங்கள் அதுவும் பண மோசடி, விலைமாதர் சகவாசம், கணபதி ஹோமம் மந்திரம் கூட தெரிந்திராத பக்திப் பரவசம் இதையெல்லாம் சகித்துக் கொண்ட சூட்சுமம் என்ன? இந்த கிரிமினல் பாப்பான் ஜெயிலில் கம்பி எண்ணவேண்டிய கேடி இன்னும் குஷாலாக வெளியில் சுதந்திரமாக சுத்தி வருகிறான். இதைக்கண்டெல்லாம் ஆண்பக்தர்களுக்கு கோபம் வருவதில்லை. ஜெயமாலாவும், சுதாசந்திரனும் சாமியைத் தொட்டதற்காக தீட்டு கழித்த கபோதிகள் எவரும் கண்டலறுவின் அயோக்கியத்தனங்களுக்காக அய்யப்பனுக்கு ஒரு எழவுத் தீட்டும் செய்யவில்லை. அப்படி செய்யவேண்டியிருந்தால் பூசாரியையும், சாமியையும் ஒரு சேர குண்டு வைத்து பிளப்பதே தீட்டுக்கழிப்பாக இருக்கும்.
இதைப்பற்றி எந்த சுரணையும் இல்லாத சாமிகள்தான் ஆண்டுதோறும் பயணம் சென்று சாஸ்தாவைத் தரிசித்து வீரமணி பாட்டுக்களையெல்லாம் குத்தாட்ட ஸ்டைலில் பாடி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.
இப்படி பக்தர்களிலேயே பிழைப்பு வாதம் வந்து விட்டாலும் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க கூடாது என்பதில் மட்டும் எல்லா சாமிகளும் ஒன்றுபடுகிறார்கள். அதற்கு ஆயிரத்தெட்டு அறிவியல் விளக்கம் வேறு சொல்லி வதைக்கிறார்கள். காலையில் மலத்திற்கு முன் சிறுநீர் வருவது ஏன்? அக்குளில் அரிப்பு வந்தால் ஏன் சொறியவேண்டும், மோர்ச்சோறு ஏன் கடைசியில் விழுங்க வேண்டும் முதலானவற்றுக்கு இந்து மதத்தில் அறிவியல் விளக்கங்கள் உண்டு என்றால் பாருங்களேன். சந்தேகம் உள்ளவர்கள் ஆர்.வியின் ஞானகுரு டோண்டு ஐய்யங்காரிடம் கேட்டால் பதில் பெறலாம். ஹை லெவல் இன்புளுயன்ஸ் உள்ளவர்கள் காஞ்சி காமகேடி ஜெயேந்திரனிடம் போய் கேட்டலாம், மனைவி-மகளோடல்லாமல் தனியாக போவது ஷேமம் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு.
சபரிமலைக்கு கிளம்பும் ஆண் சாமிகளுக்கு வேண்டிய எல்லா பணிவிடைகளையும் செய்யும் பெண் மட்டும் சாமி ஆக முடியாதாம். அந்தப் பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஆம்பளை சாமிகள் வீட்டில் இருக்க மாட்டார்களாம். அவ்வளவு சுத்தமாம். இதே சுத்தம் ஐயப்பனுக்கும் தேவையென்பதால் பெண்களுக்கு தடா!
கடவுள் என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும், பாக்டீரீயா, வைரஸ் முதலான சகலவற்றுக்கும் பொதுதானே என்றால் அது வேறு இது வேறு என்று இழுப்பார்கள். இப்படி மனிதகுலத்தின் சரிபாதி பெண்ணினத்தை இழிவு படுத்தும் சபரிமலை அய்யப்பனை வணங்கும் கேவலமான காட்டுமிராண்டிகளின் நாடுதான் இந்தியா. இந்த காட்டுமிராண்டிகளின் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் பர்தா விவகாரத்தில் மதப்பற்றோடு குமுறி எழுகிறார்கள்.
சபரிமலையின் இந்த அயோக்கியத்தனத்தை மென்மையான வரிகளில் சந்தனமுல்லை தன் பதிவொன்றில் கேட்டிருந்தார். உடனே ஆம்பளை சாமிகள் அவருக்கு எச்சரிக்கை இடும் விதத்தில் பின்னூட்டமிடுகிறார்கள். அதில் ஒரு கபோதி சபரிமலை ஆண்டவன் சக்தி உள்ளவன், அவனிடம் விளையாட வேண்டாம், கண்ணைப் பிடுங்கி விடுவான் என்று பச்சையாக மிரட்டியிருக்கிறார். இதுதான் பதிவுலகின் இந்துத்வ இலட்சணம்.
சந்தனமுல்லையின் நியாயத்துக்கு குரல் கொடுக்காத கோழைகள்தான் இப்போது சுமஜ்லாவின் பர்தா பற்றுக்காக பொங்கி எழுகிறார்கள்.
சினிமா, மொக்கை, அரட்டை, அக்கப்போர், தொடர்பதிவு, வடிவேலு ஸ்லாங், மீதபர்ஸ்டு, முதுகு சொறிதல் என்று பிழைப்பை நடத்தும் பதிவுலகின் ஆன்மாவைக் கீறிப்பார்த்தால் அங்கே சாதியும், மதமும்தான் கோலேச்சும். வினவின் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களில் இதை உணராதவர்களுக்கு ‘நற்குடி’ பிரச்சினை தெளிவாய் விளக்கியிருக்கும். இதை முட்டி, மோதி, தட்டி, கொட்டி மாற்ற வேண்டுமானால் வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை?
தொடர்புடைய பதிவுகள் – பதிவில் உள்ள சுட்டிகள் தவிர்த்து
- நீங்கள் பாலியல் குற்றவாளியா?
- ஷகீலா – கவர்ச்சி சுதந்திரமா ? பர்தா கண்ணியமா ??
- சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !
- கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி
- சிறுகதை: ‘பால்’ திரிந்த வேளை!
- வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!
- அமெரிக்காவில் ஒரு அம்பியின் சாதிவெறி !
- ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !
- தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!
- மொக்கைப் பதிவு உடல் நலத்திற்க்குக் கேடு !
- பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!
🙂
சென்ஷி,
எவ்வள்வு விசயங்களை வினவு எழுதியிருக்காரு! வினவு தளத்துலாயாவது கொஞ்சம் விவாதிங்கப்பா!
பெண் உரிமை உரிமை என்று பெண்களை விபசாரிஹலஹா மாற்றிவிட்டீர்ஹல்
ஹலோ வேற வேலை இருந்தா பாருங்கப்பா. எவனோ ஒருத்தன் கிருக்குறான் . அதை பல பேரு படிக்குறாங்க. வெட்டி மனிதர்கள்!!
பதிவுலகின் லட்ச்ணத்தை நார்நாராக கிழித்துவிட்டீர்கள். தொடர்க உங்கள் பணி
வைரஸ் காய்ச்சல் தான் வினவு பதிவுகள் குறைந்ததற்கு காரணமா?
திரும்ப வரும்போதே அடாவடியா வந்திருக்கீங்க.. சூப்பர்.
கம்யூனிஸ்டுகள் / நாத்திகர்கள் என்று வரும் போது, இந்துக்களும் இசுலாமியர்களும் மற்றெல்லா மதத்தவரும் ஒரே குரலில் பேசுவதைக் கேட்கலாம். நம்மை எதிர்கொள்வதைப் பொருத்தளவில் அவர்களுக்கு குரல்வளை ஒன்றாகிவிடுகிறது.
அப்படியே சீக்கிரம் மக்களிசையை ஒலிக்கவிடுங்கள்.
இந்த சிச்சுவேஷனுக்கு பொருத்தமான பாடலாக “இந்து என்னடா முசுலீமு என்னடா.. நிமிர்ந்து சொல்லுவோம் நாங்க பாட்டாளியடா” என்ற
பாடலை நேயர் விருப்பமாக பரிந்துரைக்கிறேன்.
நல்ல ஆலோசனை, தோழர் கில்லி உடன் இதை அமல்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
வினவு …
உஙகள் பதிவு அருமை…நல்ல கருத்து….சுமஜ்லா வின் கருத்து…இஸ்லமிய…பர்பனியம்னு சொன்னாங்க..அப்ப்டி சொல்ல வேண்டாம்…அவரை அந்த இடத்தில் முரன்படுகின்றேன்….கருத்து மோதல் இயற்கை…அவர் அவ்ர்கு வேண்டியதை எடுதுகொல்லட்டும்….உஙகலுக்கு….தமிழ் ல வல்க்கு சொல் ஒன்னு உண்டு….ஜாதிக்கு நாலு பேரு கெட்டவன் இருப்பான்…அதுனால…அந்த சமூகம் மொத்தத்தையும் குத்தம் சொல்வது…நியாயம் இல்லை….நாதிகம் பேசுறவங்க எல்லாரும் சரினு சொல்ல முடியதுல…உஙகளுக்காக இந்த இனைப்பு….
ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! – சகுந்தலா நரசிம்ஹன்
http://www.satyamargam.com/976
நீண்டநாள் கழித்து அக்மார்க் வினவு பதிவு. எப்படியிருப்பினும் சுஜ்மலாவின் ‘நற்குடி’ பிரயோகத்தை நான் ரசிக்கவில்லை. சுஜ்மலா பின்பற்றுவது இசுலாமிய பார்ப்பனீயம்.
//சுஜ்மலா பின்பற்றுவது இசுலாமிய பார்ப்பனீயம்.//
இதுவே தான் என் கருத்தும், பூனுல் போட்டதால் நான் உயர்ந்தவன் என்பது பார்பனியர்களின் பார்பனீயம் போல், பர்தா அணிவதால் நான் நற்குடி என சொல்வதும் பார்பனீயம் தான்
niruthu un pechai islamiya visayathil ulla mookai nulaikkatheee
யாரெல்லாம் தூரமாயிருக்கீங்களோ கை தூக்குங்க, காமக்கொடூரன் ஜெயேந்திரர் கேட்கிறார் மாணவிகளிடம்
Posted On Friday, 25 December 2009 at at 04:11 by Mike
தனது 75-வது பிறந்த நாளை ஊர் ஊராகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் காஞ்சி ஜெயேந்திரர். திருச்சியில் 3 பெண்கள் கல்வி நிறு வனங்களில் ஜெயேந்திரரின் பிறந்தநாள் டிசம்பர் 17, 18, 19 தேதிகளில் அமர்க்களப்பட்டது. மாணவிகளிடம் ஆசிரியர்கள், “”யாரெல்லாம் தூரமாயிருக்கீங்களோ கை தூக்குங்க. இது சாமி சம்பந்தப்பட்ட விஷயம். யாராவது தீட்டாயிருந்து ஏதாவது தப்பாயிடிச்சின்னா தெய்வ குத்தமாயிடும்” என்று சொல்ல, “”என்ன இப்படியெல்லாம் கேட்கு றாங்களே” என்று மாணவிகள் பதறிப்போய், ஓரிருவர் கை உயர்த்தினர். அப்போது ஒரு மாணவி, இவ்வளவு சுத்தம், ஆச்சாரம் பார்க்குறவர் ஏன் மேடம் ஜெயிலுக் கெல்லாம் போகணும்? அந்த விஷயத்திலும் சுத்தமா இருந்திருக்கலாமே” என்று சொல்ல, மாணவிகளிடம் சிரிப்பலை.
இந்திராகாந்தி பெண்கள் கல்லூரியில் நடந்த பிறந்தநாள் விழாவுக்கு வந்த ஜெயேந்திரர் உற்சாக மனநிலையில் இருந்தார். சங்கரராமன் வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து பல்டி அடிக்கிற விவரம் வந்துகொண்டே இருந்ததால்தான் இந்த மனநிலை. ஜெயேந்திரரை வாழ்த்த மதுரை, திருப்பனந்தாள் ஆதீனங்களும், விஸ்வ இந்து பரிஷத் வேதாந்தம், பா.ஜ.க ஹெச்.ராஜா ஆகியோர் வந்திருந்தனர்.
இந்த நாய் ஒரு பொருக்கி பொறம்போக்கு,ஏன் தோழரே இவனப்பத்தி எழுதி நேரத்த வீனடிகிறீங்க.
தமிழ் ஓவியா என்ற ஒரு மகத்தான பெரியார் அடிவருடி, பூனூல் போடுவது “இது பத்தினி வீடு” என்று எழுதி வைப்பதற்குச் சமம் என்றான்.
இங்கே, பர்தா அணிந்தவள் தான் பத்தினி என்று ஓப்பனாகச் சொல்லியும் அவன் ஒன்றும் பேசவில்லை.
பொண்டாட்டிக்கு பர்தா வாங்கப்போயிட்டான் போல இருக்கு….
நீ மொதல்ல ஓம் பேருல எழுதுடா தமிழ் ஓவியா பெரியார் அடி வருடியா முனி வருடியான்னு தெரியும் பொறம்போக்கு
தமிழ் ஓவியா என்ற ப்ளாக் ஒரு மகத்தானது,
கொஞ்ச நாளா பார்ப்பனர்கள் பூணூல் பெருமைகளை மார் தட்டி கூவுவதை நிறுத்திட்டாங்க !
இந்தம்மா ரொம்ப பெருமையா அறிக்கை விட்டுருக்காங்க
படியுங்கள் படித்து பாருங்கள்
பர்தா விவகாரம் விஜய் டிவிக்கு எதிராக முஸ்லிம்கள் கடும் கொந்தளிப்பு விவரம்
http://athiradenews.blogspot.com/2010/01/blog-post_3697.html
//சந்திப்பிற்கான உழைப்பில் வால்பையன் டிமிக்கி கொடுத்ததாகவும் //
டிமிக்கி கொடுக்கல, டிமிக்கி கொடுத்துருந்தா நல்லாயிருந்துருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு கலகம் செய்தேன்! ஒருத்தர்,ரெண்டு பேர் சொன்னாங்கன்னு நீங்களும் அதையே சொல்லகூடாது, என் பங்கு என்னவாக இருந்ததுன்னு விளக்கமா என் பதிவில் எழுதியிருக்கேன்!
//அந்த அல்லாதான் ஆண்களின் காமவெறியை கொஞ்சம் காந்தி மாதிரி தணிச்சலாக படைத்திருக்கலாம்தானே?//
இபிலீஸ்னு ஒரு சைத்தானாம், உலகம் படைத்த காலத்தில் இருந்து இருக்கானாம், அவனையே ஒன்னும் பண்ணமுடியல, இதுல எங்கிருந்து குறைந்த காமவெறியோட மனிதர்களை படைப்பது! மதத்தையும், அதன் நம்பிக்கையையும் கட்டி அழுபவர்களை திருத்த வாய்ப்பேயில்ல போல!
//எல்லா மதங்களையும் அதில் உறைந்திருக்கும் ஆணாதிக்கத்தையும் எதிர்ப்பவராக இருக்கவேண்டும். //
திருவள்ளுவர் ஆணாதிக்கவாதின்னு ரெண்டு உதாரண குறள் கொடுத்ததுக்கு விளக்கம் சொல்லாம என்னை குடிகாரபயன்னு சொல்றாங்க, எங்கிருந்து இவுங்களை மாற்ற!
//ஒரு கபோதி சபரிமலை ஆண்டவன் சக்தி உள்ளவன், அவனிடம் விளையாட வேண்டாம், கண்ணைப் பிடுங்கி விடுவான்//
நானா இருந்திருந்தா *யிரைக்கூட புடுங்கியிருக்க முடியாதுன்னு சொல்லியிருப்பேன்!
உங்களுக்கு ஐயப்பன் மேல எதுனா காண்டா
Great!
இசுலாமியப் பார்ப்பனீயமா ! இன்னாடா இது புச்சா ஒரு கல்ச்சர் வந்துகீதா ! அது இன்னா மேட்டர் கொஞ்சம் டீடைலு வான்டட்
//சினிமா, மொக்கை, அரட்டை, அக்கப்போர், தொடர்பதிவு, வடிவேலு ஸ்லாங், மீதபர்ஸ்டு, முதுகு சொறிதல் என்று பிழைப்பை நடத்தும் பதிவுலகின் ஆன்மாவைக் கீறிப்பார்த்தால் அங்கே சாதியும், மதமும்தான் கோலேச்சும். வினவின் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களில் இதை உணராதவர்களுக்கு ‘நற்குடி’ பிரச்சினை தெளிவாய் விளக்கியிருக்கும். இதை முட்டி, மோதி, தட்டி, கொட்டி மாற்ற வேண்டுமானால் வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை?
/
என்னால் இதை ஏற்று கொள்ளமுடியாது. ஓரு சில மூட நம்பிக்கைகளை எதிர்த்து விட்டதாலும், பல பதிவுகள் போட்டு விட்டதாலும் உங்களை முற்போக்கு பதிவராகவும் இதற்கு எதிராக பாடுபடுவராகவும் நினைத்து கொண்டால் .. நீங்கள்தான் மூடநம்பிக்கையாளர் என சொல்லுவேன்
அப்ப என்ன செஞ்சா நீங்க புரட்சி நாயகன்னு ஒத்துக்குவீங்க
“வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை? ”
இது தாங்க இந்த கட்டுரையிலேயே மிகப் பெரிய காமெடி!
வரலாறு முக்கியம் அமைச்சரே !
புவனேஷ்வரியும் ஷகீலாவும் பர்தா போட்டுவிட்டு நீதிமன்றம் சென்றது கூட பிரச்சனை ஆகியது. ஐயப்பன் கோவிலை இந்த இடத்தில் நுழைத்திருப்பது பொருத்தமாகத் தெரியவில்லை. அது ஒரு கோவில் அமைப்பு அங்கு செல்ல விரும்பும் பெண்களும் குறைவே. ஆண்கள் சட்டையைக் கழட்டிக் கொண்டு நுழையச் சொல்லும் கோவில்கள் கூட உண்டு. மாதவிலக்கு பெண்களை பூசை செய்ய அனுமதிக்கும் மேல்மருவத்தூர் கோவில்களும் உண்டு. நீங்கள் இந்துக்களின் ‘தாலி’ செண்டிமெண்ட் மற்றும் பர்தா பாரம்பரியம் ஒப்பிட்டு இருந்திருக்கலாம்
கோவி கண்ணன் பெண்ணை அடிமைப்படுத்தி இழிவு படுத்துவதற்காகவே சுத்தம், அசுத்தம் என்ற காரணங்கள் கொண்டு சபரி மலையியல் அப்படி ஒரு விதியை வைத்திருக்கிறார்கள். அதை ஒரு கோவில் அமைப்பு என்று எப்படி தள்ளுபடி செய்கிறீர்கள்? சந்தனமுல்லையின் சாமி பதிவு பின்னூட்டங்களை வாசித்துப் பாருங்கள். இந்து ஆண்கள் எப்படி ஆடியிருக்கிறார்கள் என்பது தெரியவரும். பொதுவில் கடவுள்கள் என்றால் எல்லாருக்கும் பொது என்று அளந்து விட்டு இப்படி ஒரு இழிவு ஒரு மதத்தின் பெயரால் கடைபிடிக்கப்படுகிறது எனும்போது நாம் அதை கிடைக்கும் வழிகளில் அம்பலப்படுத்துவதும், எதிர்தப்பதும் சரிதானே?
“எனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்” என்று சொல்லும் கோவி கண்ணன் இவ்வாறு பதில் அளிப்பதில் என்ன தவறு ??
ஒரு நடிகை சபரிமலைக்குச் சென்றது மிகப் பெரிய பிரச்சினயானதும் அதனை ஒட்டித்தான் ஹோமோசெக்ஸ் விளைபொருள் ஐய்யப்பன் பெண்ணடிமைத்தன விவாதப் பொருள் ஆனதும் நடந்தது. கோவி கண்ணனுக்கு இந்த விசயங்கள் மறந்துவிட்டதா என்ன?
பெண்களுக்கு எவ்ளோ கஷ்டம் அந்த மூன்று நாட்களும், அவங்கள போயி எண்டா இப்புடி கஷ்ட படுதுரிங்க.
//அங்கு செல்ல விரும்பும் பெண்களும் குறைவே//
அநியாயமான கருத்து பாஸ். பெண்கள் வரக்கூடாதுன்னு சட்டம் போட்டிட்டு அப்பறம் அவங்களே விரும்பலன்னு கதவிட்டா எப்படி? இது பெண்கள் “தானாகவே விரும்பி” பர்தா அணிவதற்கு இணையான காமெடி.
சரி. அப்படியே பெண்கள் தானாகவே செல்ல விரும்பாமல் இருந்தாலும் விரும்பிச் செல்லும் பெண்களைத் தடுப்பது நியாயமா?
//மாதவிலக்கு பெண்களை பூசை செய்ய அனுமதிக்கும் மேல்மருவத்தூர் கோவில்களும் உண்டு//
இந்தத் தகவலில் என் மனம் நெகிழ்கிறது. மாரில் முடி முளைத்த மனிதரை அம்மா என்று அழைக்கும் இடம்தானே அது?
//ஆண்கள் சட்டையைக் கழட்டிக் கொண்டு நுழையச் சொல்லும் கோவில்கள் கூட உண்டு. //
உள்ளே வருபவன் பூணூல் அணிந்திருக்கிறானா இல்லையா என்று தெரிந்து கொள்ளக் கொண்டுவரப் பட்ட வழக்கம் அது. வயதில் மூத்தவர்களுக்கு எழுந்திருந்து இடம் கொடுப்பது, எச்சில் கையால் சோறு போட்டுக் கொள்ளக்கூடாது என்பது போல இது ஒன்றும் சமூகம் சுகாதாரம் சார்ந்த மரியாதைக்குறிய பாரம்பரியம் அல்ல. சபரி மலையே ஒரு அயோக்கியத்தனம். அதற்கு வரிந்து கட்டிக் கொண்டு செல்பவர்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள். இதில் ஒரு பெண் தொட்டதும் என்ன பெரிய கேள்வி!!
பர்தா போடவைக்கும் அடிமைத்தனத்திற்கும் இதற்கும் அடிப்படையே பெண்ணை யோனியாக மட்டுமே பார்க்கும் அவலமான ஆணாதிக்க மனப்பாங்குதான். அவளுக்குப் பிற உருப்புகளும் உள்ளன.
மெயிலுக்கு வள்ளுவன் என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் வந்திருந்தது, அது இங்கே காணோம்! அவருக்கு பதில்!
நான் குடிக்கிறேன் இல்ல சாவுறேன்! கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்!
கலைஞர் திருக்குறளுக்கு எழுதிய உரையை வாங்கி அனைத்து குறளுக்கும் உள்ள விளக்கத்தை பாருமையா முதலில்.
//கலைஞர் திருக்குறளுக்கு எழுதிய உரையை வாங்கி அனைத்து குறளுக்கும் உள்ள விளக்கத்தை பாருமையா முதலில்//
கலைஞர் சொன்னா நான் ஏத்துகனும்னு சட்டம் இருக்கா!?
திருவள்ளுவர் நிலபுரபுத்துவ காலத்தில் வாழ்ந்த ஒரு சொம்பு தூக்கி!
அதனால அந்த வசனத்தை கலைஞர் சொம்பு தூக்கிகளிடம் சொல்லும்!
குடிக்காக சொம்பு தூக்கும் உன் போன்றவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
வினவு அவர்களே இது போன்ற குடிகாரன்களின் உளறலை எல்லாம் இங்கு அனுமதிக்க போகிறீர்களா.
கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது. நாமறிந்தவரை வால்பையன் பொருளோடு ஆழமாகவும், அழக்காவும் விவாதிப்பது இங்கு மட்டும்தான். இப்படி இருக்கையில் பதிவுலகையும் கொஞ்சம் மாற்றமுடியுமென நம்பிக்கையை சுகுணாவும் ஏனையோரும் வைத்துக்கொள்ளலாம்.
வால்பையன் பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை ஒத்துவராத மறுமொழிகள் என்ற தலைப்பில் கொண்டு செல்லப்படும் அதுதான் வள்ளுவனின் குடி செய்தி காணாமல் போனது
//வால்பையன் பொருளோடு ஆழமாகவும், அழக்காவும் விவாதிப்பது இங்கு மட்டும்தான். //
அதை அழகாகவும் என்றே எடுத்து கொள்கிறேன்!
நான் ரொம்ப நாளா இதை தான் செய்து கொண்டிருக்கிறேன்! நான் குடிப்பேன் என்று பொதுவில் சொன்னதால், கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் குடிகாரன் என்று தட்டி கழிக்கிறார்கள்!, இதற்கெல்லாம் நான் வருத்தப்பட போவதில்லை! மதங்களின் முகமூடிகளை கிழிப்பதே என் பெரும்பங்கு வேலை!
ஆகா வந்துட்டார்டா இன்னொரு பெரியார் ராமசாமி.
இவனுங்க அலம்பலும் சலம்பலும் தாங்க முடியல.
நன்றி தோழர். நற்குடிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த உண்மைத்தமிழன் தனது ‘வேலுபிரபாகரனின் காதல் கதை’ விமர்சனத்தில் ‘கீழ்சாதி’ப் பெண் ’மேல்சாதி’ ஆணைக் காதலிக்கிறாள் என்கிற ரீதியில் எழுதியிருந்தார். அது என்னடா சாதியிலே கீழ்சாதி என்று கேட்க ஒருவருமில்லை. நற்குடிக் கிளர்ச்சியாளர்களில் பெரும்பாலானோரின் யோக்கியதை இதுதான். அதைக்கூட விடுங்கள். இந்த சர்ச்சை தொடர்பாக ஒரு பின்னூட்டம் இட்டதற்காக ‘அரபுகளிலிருந்து மாதாமாதம் பணம் வருகிறது’ என்கிறார் ஒருவர். இன்னொருவர் ‘சுகுணாதிவாகரின் குழந்தைக்கு என்ன இனிஷியல்’ என்று குதர்க்கமாய் வினவுகிறார். இதற்கான அர்த்தம் என்ன என்பது யாருக்கும் தெரியாதா என்ன? ‘உலகத்திலேயே சிரமமான காரியம் முட்டாள்களோடு விவாதிப்பதுதான்’ என்றார் பெரியார். ஆனால் வாழ்நாள் முழுக்க அவர் அதைத்தான் செய்தார். அதனாலேயே அதைச் சொல்வதற்குக் கூடுதலான ‘தகுதி’யும் பெரியாருக்கு உண்டு. முட்டாள்களோடு விவாதிப்பதன் சிரமத்தைச் சமீபகாலமாக நன்றாகவே உணரமுடிகிறது. வலையுலகம் என்பது பெரும்பான்மை முட்டாள்கள் நிறைந்த கூடாரம். இதிலே ‘பதிவர்களுக்கிடையில் சாதியுணர்வு கிடையாது, மதமாச்சரியங்கள் கிடையாது, எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன’ என்கிற பம்மாத்துகள் வேறு.
டேய் வெண்ணை. நிறுத்துடா. துலுக்கப்பயலுவ எல்லாம் நற்குடின்னா அங்கே போயி துலுக்கனா இருக்கவேண்டியது தானே…
என்ன மயித்துக்கு இந்து மதத்துல இருந்துகிட்டு இருக்க. நீயெல்லாம் இந்துவா இருந்து ஆகணும்ன்னு யாரு அழுதா.
எல்லாரும் முட்டாள்ன்னா, நீ மட்டும் அறிவாளியா ?
அவ்வளவு அறிவு உனக்கு இருக்கும் பட்சத்தில் முட்டாள்கள் என்று நீ கருதும் கூட்டத்துடன் உனக்கென்ன வேலை. உன் அறிவுக்கு ஏற்றார் போல் உள்ள கூட்டத்துடன் கூடியிருக்கவேண்டியது தானே. அவர்கள் அந்த நற்குடிகளைச் சேர்ந்தவர்கள். அங்கே விவாதமே கிடையாது…ஒருவர் சொன்னால் அதை அப்படியே எல்லோரும் தலையாட்டிக் கேட்கவேண்டும். தலையாடாவிட்டால் தலைவெட்டப்பட்டுவிடும். அவ்வளவு அறிவாளிகள்.
மேலே சொன்ன எனது பின்னூட்டத்திற்குக் கூட கடுமையான கண்டனங்கள் வரக்கூடும். பதிவர்களை எப்படி முட்டாள்கள் என்று சொல்லலாம் என்று. மன்னிக்கவும் வடிகட்டின முட்டாள்கள் என்று வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளுங்கள். இவர்களது ‘விவாதங்களை’க் ‘கவிதைகளாக எழுதித்தொலைப்பது அதைவிட கொடுமை. சுஜ்மலா தொடங்கி கலகலப்ரியா, பிரபாகர் இன்னும் இன்னும் கவிதைகள், கவிதைகள், கவிதைகள். அதைப் பாராட்ட ஒரு முட்டாள் கூட்டம். நோ, நோ, கவிதை பாவம்!
சுகுணா,
நீங்க பதிவரா..?
கண்ணா!
அறிவா பேசுறதா நினைக்காதீங்க! விவாதியுங்கள். சுகுணாவின் கோபம் நியாயமானது.
சுகுணா ,
இந்த பதிவுலகத்தில் அதிக பின் தொடர்பவர்களை கொண்டிருப்பவர் யார் தெரியுமா ? வாத்தியார் சுப்பையா !! அவர் எழுதுவது ஜோதிட பாடங்கள். ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள் !! அதில் பெரும்பான்மையானோர் பதிவர்கள் !! அவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?
//சினிமா, மொக்கை, அரட்டை, அக்கப்போர், தொடர்பதிவு, வடிவேலு ஸ்லாங், மீதபர்ஸ்டு, முதுகு சொறிதல் என்று பிழைப்பை நடத்தும் //
லிஸ்ட்ல ஒரு முக்கியமான வகை விட்டு போச்சு தலைவரே- வாழ்த்து பதிவுகள் (பிறந்த நாள் வாழ்த்து, மணநாள் வாழ்த்து, நூறு ஹிட்ஸ் வாழ்த்து இப்படி !!
🙂
சரி…கடைசியா என்ன தான் சொல்ல வர்றீங்க ?
ஒருவருக்கு பிடித்த ஒரு விஷயத்தையோ,நபரையோ மற்றொருவர் கேவலப் படுத்தும் போது வரும் நார்மலான கோவத்தின் வெளிப்பாடுகள் தான் இந்தப் பிரச்சினை.
உடனே நாட்டாமை தோள்ல துண்டு போட்டுட்டு தீர்ப்பு சொல்ல வந்துட்டார்.
கம்யூனிச கும்பல்கள் ஏழைகளுக்காக பாடுபடுகிறேன் என்று ஏமாற்றி, ஆட்டோக்காரங்க கிட்ட, ரிக்ஷாக்காரங்க கிட்ட, கூலி வேலை செய்றவங்க கிட்ட 50 ரூ,100 ரூ உறுப்பினர் கார்டு போட்டு, ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு சந்தா செலுத்த சொல்லி சம்பாதிக்குற கம்பெனி தான்.
நாட்டுல மாவோயிஸ்ட்டுகள் கொலை, கொள்ளை என அடாவடி செய்துவருகிறார்களே…அதை பற்றி எல்லாம் எழுதுங்க வினவு !
அடுத்தவன் புண்ணில் சொறிஞ்சி விடுறதுலேயே கவனமா இருக்கீங்க…!
கபிலனின் வயிற்றெரிச்சல் நன்றாக உணர முடிகிறது. வினவு சரியான திசையில தான் எழுதிகிட்டு இருக்கீங்கன்னு நல்லா தெளிவா தெரியுது!
இதுல வயிற்றெறிச்சல் பட என்ன இருக்குங்க? வழக்கமான ஒருதலைப்பட்சமான சமய எதிர்ப்பு பதிவு. அதுமட்டுமல்லாமல், இந்தப் பிரச்சினைக்கு, சம்பந்தமே இல்லாம ஐயப்பனை இழுத்திருப்பது.
நடந்த கருத்து மோதல்கள் தப்பு இல்ல. தனி மனித விமர்சனங்கள் வந்தது தான் நெருடலா இருந்தது. சரி. அப்படியே எல்லோரும் தப்பு செஞ்சி இருந்தாலும், அனைவருக்கும் ஒரே விதமான தோரணையில் தான் பதில் சொல்லி இருக்கணும் ( வடிவேலு சொல்ற மாதிரி ” சேம் ப்ளட் .பாரபட்சம் பாக்காம திட்டுறா…..” ). வினவின் இப்பதிவு அப்படி அல்ல. நடுநிலை என்று சொல்லவே முடியாத நிலையில் இருக்கிறது அவர் எழுத்துக்கள்.
அதனால இது ஒரு டம்மி பீஸ் பாஸ்! வயிறு எறிச்சல் வருகிற அளவுக்கு இல்ல!
கபிலன் இங்க வினவு என்ன கம்மூனிஸ பத்தியா எழுதிச்சு, எதுக்கு இம்மாம் கோவம்…
ரெண்டு நாளா நாயாட்டம் அடிச்சு பொறான்டிகிட்டவங்களெல்லாம் இன்னா கம்மூனிஸ்டா?
ரெண்டு நாளா நடக்குற சண்டையே ….அதுவும் வன்முறை இல்லாம நடக்குற வாக்குவதமே, உங்களுக்கு பெருசா தெரியுதுன்னா….வருஷ கணக்கா ஆயுதம் ஏந்தி கொலை, கொள்ளைன்னு அட்டூழியம் செய்யும் மாவோயிஸ்டுகள் மீது ரொம்ப கோவம் வந்திருக்குமே! அதான், அதை பற்றி எழுதலையேன்னு ஒரு ஆதாங்கம் தாங்க : )
உங்களுக்கு நெய் பிடிக்காது என்பதற்காக நெய் கடைக்காரரை அடிப்பது போல இருக்குங்க உங்க விவாதங்கள்.
ஆயிரக்கணக்கான வருசமாய் நம் மக்களின் மீதான வன்முறையாய் பிரோயோகிக்கப்படும் பார்ப்பனியத்தை நாங்கள் எதிர்த்து எழுதினால் நீங்கள் பார்ப்பனியத்துக்கு கூஜா தூக்குவது ஏனோ…கொலைகாரளுக்கு வக்காலத்து வாங்குவது ஏனோ????
பார்ப்பானுக்கு கூஜா தூக்கலிங்க….எங்கள் நம்பிக்கையை கேவலப் படுத்துறதால தான் இப்படி இறங்க வேண்டியதா போச்சு. நீங்க சொல்ற விஷயங்கள் எல்லாம் இருந்துச்சு அந்த காலத்துல. பூநூலை வைத்து பெருமை பேசும் பார்ப்பனர்கள் காலம் மலை ஏறிப் போச்சு. சாதியில் உயர்வு தாழ்வு பார்ப்பது நகரங்களில் அறவே இல்லை எனலாம். கிராமங்களும் மாறி வருகின்றன. அது காலத்தின் மாற்றம், கட்டாயமும் கூட.
இப்போ ஏற்றத் தாழ்வு பணம் படைத்தவனுக்கும், இல்லாதவனுக்கும் தாங்க.
நிறைய பழங்கள் இருக்குற, ஒரு பெரிய மரத்துல ஒரு பழம் கெட்டுப் போய் இருக்கு என்பதற்காக, மரத்தை வெட்டி சாய்த்தல் நியாயமா?
@@பார்ப்பானுக்கு கூஜா தூக்கலிங்க@@ நான் எப்போ பாப்பானுக்குன்னு சொன்னேன், பார்ப்னியம்னுதானே சென்னேன்..சாதி யாரும் பாக்குறதில்லைன்னு நீங்க சொல்லுறீங்க.. ஆனா அது நடைமுறைல இல்லீங்க.. தமிழ்நாடு பரவாயில்லைங்கறது உண்மைதான்.. ஆனா வடநாட்டுல நெலம தலைகீழ்
///உங்களுக்கு நெய் பிடிக்காது என்பதற்காக நெய் கடைக்காரரை அடிப்பது போல இருக்குங்க உங்க விவாதங்கள்./////
நெய் உங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக, பால்காரரையும்
மாடுவளர்த்தவரையும் மொட்டையடிப்பது போல
இருக்குங்க உங்க விவாதங்கள்!
//பூநூலை வைத்து பெருமை பேசும் பார்ப்பனர்கள் காலம் மலை ஏறிப் போச்சு. //
ஓவர் டூ ஆர்வி…. இதே வினவு தளத்துல பூனூலு தூக்கிப் பிடிச்சுக்கிட்டு ஆர்வி போராடினாரு. அங்க நம்ம கபிலன் அண்ணாச்சி இருந்தராஅன்னு இன்ன வரை தேடிட்டு இருக்கேன்…
குடிகாரன் கொளந்தை மாதிரி !
கொழந்த சாமி மாதிரி
கொளந்தை என்னா பண்ணும் கத்தும்
அளப்பற பண்ணும் வாந்தி எடுக்கும் ( அதுக்கு பேரு கதக்கறது)
ஆனா உண்மை தான் பேசும்
இல்லாத ஒன்றிற்கு எத்துணை ஆர்பாட்டம். இவர்களை திருத்துவது கடினம். ஏனெனில் துங்குபவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்குவது மாதிரி நடிப்பவர்களை எழுப்புவது மிக மிக கடினம். கடவுளை நம்புபவன்(எந்த மதமானாலும்) ஒரு முட்டாள் (or) சீரிய சிந்தனையற்றவர்கள். period. மதபோதனைகளை மேற்கோள் காட்டுபவன் அதன் முட்டாள் தனங்களை பறைசாற்றுகிறான் (வெட்கமில்லாமல்). கொடுமை என்னவெனில் அதில் எவனும் இங்கு சளைத்தவன் இல்லை. குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாதவர்கள் தான் இங்கு மதத்தலைவர்கள். அவர்களுக்கு தெரியும் மக்களை முட்டாளாக்குகிறோம் என்று (அரசியல்வியாதிகளைப்போலவே) . நெஞ்சில் கை வைத்து சொல்லச்சொல்லுங்கள் அவர்களை….ம்ம் அப்போதும் கூசாமல் பொய் சொல்லி நமக்கு BP எகிற வைப்பார்கள். விலங்கினும் கீழோர்.
//நெஞ்சில் கை வைத்து சொல்லச்சொல்லுங்கள்//
ஹா ஹா ஹா ! எதுல வேணா வெச்சு பொய் சொல்லுவானுங்க தல
//கோவி கண்ணன் பெண்ணை அடிமைப்படுத்தி இழிவு படுத்துவதற்காகவே சுத்தம், அசுத்தம் என்ற காரணங்கள் கொண்டு சபரி மலையியல் அப்படி ஒரு விதியை வைத்திருக்கிறார்கள். அதை ஒரு கோவில் அமைப்பு என்று எப்படி தள்ளுபடி செய்கிறீர்கள்? சந்தனமுல்லையின் சாமி பதிவு பின்னூட்டங்களை வாசித்துப் பாருங்கள். இந்து ஆண்கள் எப்படி ஆடியிருக்கிறார்கள் என்பது தெரியவரும். பொதுவில் கடவுள்கள் என்றால் எல்லாருக்கும் பொது என்று அளந்து விட்டு இப்படி ஒரு இழிவு ஒரு மதத்தின் பெயரால் கடைபிடிக்கப்படுகிறது எனும்போது நாம் அதை கிடைக்கும் வழிகளில் அம்பலப்படுத்துவதும், எதிர்தப்பதும் சரிதானே?
//
கோவிலால் ஏற்படும் தடைகள் கோவிலுக்குச் செல்லும் பெண்களுக்குத்தான், ஒரு இந்துப் பெண் நினைத்தால் ‘போங்கடா உங்க சாமியும்’ என்று போய்விட முடியும்.நாம கோவில் நுழைவில் உரிமை வாங்கித்தருகிறோம் என்ற பெயரில் பெண்களையும் தலித்துகளையும் பார்பனியத்துக்கு அடிமை ஆக்கியதைத் தான் செய்துவருகிறோம். மாறாக புறக்கணிக்கக் கற்றுக் கொடுத்திருக்கனும். ஊர்கூடி தேர் இழுங்கன்னு ஆளை அனுப்புகிறோம். இல்லை என்றால் தேர் தெருவில் தான் நிற்கனும். ஆனாலும் நம அனுப்பும் ஆட்களுக்கு தேரை இழுக்கத்தான் உரிமை கிடைக்கிறது என்பதை நாம நினைப்பது இல்லை. அதைத் தான் நான் சொல்லவந்தேன். இதைச் செய்யாதே என்பது செய்ய விரும்புவர்களுக்கானத் தடை தான். செய்யப் பிடிக்காதவர்கள் அதை காதில் வாங்குவதும் இல்லை.
//.நாம கோவில் நுழைவில் உரிமை வாங்கித்தருகிறோம் என்ற பெயரில் பெண்களையும் தலித்துகளையும் பார்பனியத்துக்கு அடிமை ஆக்கியதைத் தான் செய்துவருகிறோம்.//
நானும் இதில் உடன்படுகிறேன்! மூடநம்பிக்கைகளை நம்பினாலும் பரவாயில்லை ஆனா எல்லோரும் ஒண்னா சேர்ந்து நம்புங்கன்னு சொல்ற மாதிரி தான் இருக்குது!
கோவி கண்ணன், பார்ப்பனியத்தின் பலமே தீண்டாமைதான். என் கோவிலில் வராதே, தனி கோவில் கட்டிக்கொள், என்தெருவில் வராதே, சேரியில் முடங்கிக் கொள், என் மொழியில் வணங்காதே, உன் மொழியில் வணங்கு என்று எல்லாவற்றிலும் சமூக உரிமைகளை மறுக்கும் அடக்குமுறையைத்தான் செய்து வருகிறது. எனவே இதை ஏற்றுக் கொண்டு நாமும் தனி கோவில், அல்லது புறக்கணிப்பு என்று சென்று விட்டால் இது பார்ப்பனியத்தின் வெற்றியைத்தான் குறிக்கும். மாறாக அது வழங்க மறுக்கும் சம உரிமைகளை போராடிப் பெறுவதே சமத்துவத்தின் முதல் படி. இது பார்ப்பனியத்திற்கு அடிமை ஆவது ஆகாது. சொல்லப்போனால் இந்தப் போராட்டங்கள் வெல்லும் போது பார்ப்பனியம்தான் செத்து விழும். பல முற்போக்காளர்களும் எதற்கு கோவில், இறைவழிபாடு என்று இவற்றை குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதில் அவர்கள் வடிவத்தைத்தான் பார்ப்பனியம் என்றுபார்க்கிறார்களே ஒழிய உள்ளடக்கத்தை அல்ல.
வினவு,
கோவி கண்ணனின் கருத்து பலருடைய கருத்துமாகவும் இருக்கிறது. வருங்காலத்தில் இது குறித்து வினவு ஒரு விரிவான பதிவிட வேண்டும்.
அது தான் இருக்கவே இருக்கிறதே! தில்லையில் “நந்தன் நுழைந்த நுழைவாயிலை உடைத்து திறப்போம்!” என்ற போராட்டம்
கோவி. கண்ணனுடன் மிகவும் உடன்படுகிறேன்….கடவுளையும், `மதத்தையும், அது சார்ந்த மற்ற எல்லா விஷயங்களையும் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்…. எந்த கடவுளின் பேரில் இந்த மோசடிகள்/அநீதிகள் செய்யப்படுகிறதோ அந்த கடவுளையே மறுப்பது தான் சிறந்த வழி என்றே நான் நினைக்கிறேன்….
பதிவுலப் போராட்டங்களில் தோழர்கள் கலந்துகொள்ளாத்தன் காரணமென்ன? தோழர்கள் மா.சே,கலகம், அதிரடி மாம்போ, ஜான், அசுரன், கேள்விக்குறி, வித்தகன்,ஜார்ஜ் புஷ், காளமேகம், அரைடிக்கெட், குருத்து, நொந்தகுமாரன்,மணி(கொஞ்சம் வில்லங்கமாக இருந்தாலும்), போராட்டம், ரதி, ரியல் என்கவுண்டர், சுனாபானா, அறிவுடை நம்பி இன்னும் பெயர் விடுப்ட்ட நண்பர்கள் மேடைக்கு வரவும்.
சரக்கடிக்கரத பத்தி ஓட்டறதா நெனச்சுகிட்டு காமெடி பண்ண ஆரமிச்சுட்டாங்க !
மப்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
மப்பே சிவமாதல் ஆரும் அறிகிலார்
ஹா..ஹா இதுதான் வினவு தளத்திற்கு முதல்முறையா வந்து கமெண்ட் போடுறது…
//வினவு
says:
பதிவுலப் போராட்டங்களில்
//
ங்கொய்யால இதான் பதிவுலக போராட்டமா………விளங்கிரும்…………..
பதிவும், பின்னூட்டத்தையும் பார்த்தா செம காமடியா இருக்கு…..
கண்ணா!
இந்த பதிவில் உள்ள பின்னூட்டங்களில் மொக்கையாக இருப்பது உன் பின்னூட்டங்கள் தான் கண்ணா!
இந்த நக்கல், கிண்டலை விட்டு, கருத்து ரீதியா கொஞ்சம் வாய் விட்டு உங்க கருத்துக்களை பேசு கண்ணா!. அப்ப தெரிஞ்சுரும். நீங்க எவ்வளவு முற்போக்குன்னு?
//ஆகா வந்துட்டார்டா இன்னொரு பெரியார் ராமசாமி.
இவனுங்க அலம்பலும் சலம்பலும் தாங்க முடியல.//
ஆராவது
கேள்விகேட்டாலே பெரியார் நெனப்பு தான் உங்களுக்கு வருது ! பரவால்ல … நல்லாத்தான் உங்களுக்கு ஆப்பு வெச்சு விட்டுருக்கார் ! நினைவிருக்கும் வரை மறக்க முடியாதபடிக்கு
//ஆகா வந்துட்டார்டா இன்னொரு பெரியார் ராமசாமி.
இவனுங்க அலம்பலும் சலம்பலும் தாங்க முடியல.//
மறுபடியும் நன்றி!
என்னை அடிக்கடி நன்றி சொல்ல வைக்காதீர்கள்!
விவாதத்திற்கு வாங்க, அப்படினா என்னானே தெரியாதா, என் ப்ளாக்குல போய் இந்த கும்மிய அடிங்க!
நேத்து மூக்குடபட்ட மாதிரி இங்கேயும் வாங்கிகாதிங்க!
கோவி.கண்ணன் நீண்ட நாட்களாக இந்த பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்கிற பாத்திரத்தை திறம்பட செய்து வருகிறார். அவ்வப்போது
அசந்தர்ப்பமான தருணங்களில் முகமூடி கிழிந்து விடுகிறது – அதில் வினவு தளமும் ஒன்று. ஒரு கையில் பெரியார் – இன்னொரு கையில்
பார்ப்பனியத்துக்கு கூஜா! நல்லா வேஷம் போடறீங்க கோவி.கண்ணன்.
இந்த விவாதமாகட்டும் முன்பு ஒரு முறை இசுலாமியம் பற்றிய ஒரு விவாதத்திலாகட்டும் இவருடைய பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள்
படித்துப் பார்க்கட்டும்.
//புறக்கணிக்கக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்//
இதைத் தான் டோ ண்டு தனி டீக்கடை வைத்துக்கொள்ளுங்களேன் என்று ‘ஆலோசனையாக’ சொல்லிவிட்டு இத்தனை வருடங்களாக ஏதோ
இரட்டைக் குவளை பிரச்சினைக்கு தான் கண்டுபிடித்த அருமருந்து போல பேசித் திரிகிறார். நாளையே கோவி.கண்ணன் இவ்வாறு சொல்லக்கூடும்
– “உன்னை வேசி மகன் என்று பார்ப்பனியம் சொன்னாலென்ன, காதில் பஞ்சு வைத்து அதைப் புறக்கணித்து விடு”.
எதைப் புறக்கணிக்கச் சொல்கிறீர்கள் கோவி? எதை? பார்ப்பனியம் உயர் சாதிகளுக்கு வழங்கியிருக்கும் மேல்நிலையென்பது கலாச்சார
ரீதியிலானது மட்டுமல்ல – மாறாக அதுவே பொருளாதார மேண்மைக்கான அளவுகோளாய் இருக்கிறது. தலித்துகளுக்கு நிலத்தின் மேல்
உரிமையில்லை – அவர்களை நிலத்தைப் புறக்கணிக்க வேண்டுமென்பீர்களா? வளங்களின் மேல் உரிமையில்லாவிட்டால் வளங்களைப் புறக்கணிக்க
வேண்டுமா?
நீங்கள் யாருக்கு நன்பர் கோவி.கண்ணன்?
இது தான் நிஜமான இரட்டை குவளை முறை ! இதெல்லாம் திருக் குவளை கத்துக் கொடுத்தது !
கலகிடிங்க ராஜன் உண்மைல நீங்க ஒரு கவிகுவளை
தோழர் கார்க்கியின் வார்த்தைகளை நூறுசதவீதம் ஒத்துக்கொள்கிறேன்.
பாசிஸ்டுகளின் பலமே மக்களை மூளை சலவை செய்து அவர்களின் சித்தாந்ததை மக்களின் மூளையில் ஏன் ஜீனிலேயே ஏற்றுவதுதான். அதுபோலத்தான், பர்தாவையும் பெண்களின் சிந்தனையில் ஏற்றி இருக்கின்றார்கள். தாலியை இந்து பெண்களின் சிந்தனையில் ஏற்றி இருக்கிறார்கள். இது பல நூற்றாண்டுகளாக மக்களின் இரத்தத்தில் கலந்து இருக்கிறது. இதனை மககளின் மயக்கத்தை தட்டி எழுப்புவதன் மூலமே தகர்க்க முடியும். அந்த வகையில் இந்த மாதிரி பதிவுகள் தேவைதான்.
உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பிங்க நல்ல இருக்கும்
ஐயா… தமிழகத்தில் பலர் சுயமரியாதை திருமணம் -தாலி-மந்திரம்-பார்ப்னன்- இல்லாமல் செய்து கொள்வது உமக்கு தெரியாதா
இதுவரை இங்கே நடந்த பர்தா நற்குடி, கரும்பன்றி மயிர் போன்ற பதிவர்களின் அற்புதமான (அவர்களைப் பொருத்தவரை) உரையாடல் மீதான ஆரோக்கியமான, சரியான மாற்றுப்பார்வை இக்கட்டுரை. நன்றி.
ஆனால் என்ன? வழக்கமாக உங்கள் கட்டுரைகளை உதாசீனப்படுத்திக் கடந்துசெல்ல ஊரார் கொண்டிருக்கும் “எப்பவுமே வினவு இப்படித்தானய்யா, கெடக்கறார் விடுங்க” எனும் முத்திரையை இங்கேயும் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக சில தவிர்த்திருக்கக்கூடிய (இந்தக் கட்டுரையில்) வெட்டி வீழ்த்தல்களையும் சேர்த்தே எழுதியிருக்கிறீர்கள். வினவின் தோழர்கள் தாண்டி வேறு யாருக்கும் கட்டுரை போய்ச்சேராமல் இருக்க நீங்களே போதும் வினவு:))
இதுகுறித்தும் டாக்டர் ருத்ரன் அவர்களின் “பெண்பதிவர்களுக்கு அன்புடன்” இடுகையின் தொடர்ச்சியாகவும் எழுத எண்ணங்கள் உண்டு, ஆனால் நேரப் போதாமை, பார்க்கலாம்.
நான் நேரம் கிடைத்து வரும்போது காலம் கடந்தும் விடும்.
தவிர்த்திருக்க கூடிய வெட்டிவீழ்த்துதல்களை பட்டியலிட்டு காட்டினால் உதவியாக இருக்கும் செல்வநாயகி
கருத்துக்களைச் சொல்ல காலம்தாழ்ந்துவிட்டதாய் நினைக்க வேண்டாம். சில விஷயங்கள் திரும்பத்திரும்பச் சொல்லப்படவேண்டும்.
//புறக்கணிப்பு என்று சென்று விட்டால் இது பார்ப்பனியத்தின் வெற்றியைத்தான் குறிக்கும். மாறாக அது வழங்க மறுக்கும் சம உரிமைகளை போராடிப் பெறுவதே சமத்துவத்தின் முதல் படி. இது பார்ப்பனியத்திற்கு அடிமை ஆவது ஆகாது.//
பெரியார் விடிய விடிய பிரச்சாரம் செய்தும் கோவில்களில் கூட்டம் குறைந்திருக்கிறதா பார், கூடியிருக்கிறதே என்று பார்பனர்கள் கூவுவதற்கு என்ன சொல்கிறீர்கள் ? அந்தக் கூட்டமே பெரியார் உரிமை பெற்று தந்ததால் வந்த கூட்டம் தான் என்று சொல்வேன். அனைவருக்கும் கோவில் உரிமை, ஆலய வருமானத்தைத்தான் பெருக்கி தந்திருக்கிறது, பார்பனர் திருந்தியது போல் தெரியவில்லை. சிதம்பரத்தில் உரிமை கேட்டு ஆறுமுக சாமி அடிவாங்கியது தான் மிச்சம்
கோவி.கண்ணன்,
சக்கரை வியாதிக்காரன் இனிப்பை ஒதுக்குவதற்கும் சக்கரை வியாதியற்றவன் தனது ஆரோக்கியத்துக்காக இனிப்பை விலக்கி வைப்பதற்கும்
நிறைய வேறுபாடு உள்ளது.
உரிமை மறுக்கப்படும் இடத்தில் விலகிப் போவது புறக்கணிப்பதல்ல – பலவீனம்.
எல்லா உரிமையும் இருக்கும் போது பக்தியின் போலித்தனத்தை உணர்ந்து அதை மறுப்பதே – பகுத்தறிவு.
கோடிக் கணக்குல பெத்து விட்டா கூட்டம் கூடத்தான் செய்யும் !
அப்பறம் ஆறுமுக சாமி என்ன அர்நால்டா? பாவம் கெழவனை அடிச்சு கெத்து காட்டின பயபுள்ளைக !
ராஜன், நீங்க நல்லவரா கெடவரா?
நாலு பேத்துக்கு நல்லவன் …. அதுவும் கடைசில என்ன தூக்கறதுக்கு தான்
பெருமதிப்பிற்குரிய முற்போக்கு சிந்தனையாளர் அண்ணன் வினவுக்கு..
உங்களைப் பீடித்த வைரஸ் காய்ச்சல் முருகன் புண்ணியத்தில் உங்களிடமிருந்து விலகியோடி, உடல் நலம் பெற்றுத் திரும்பி வந்ததில் மிக்க மகிழ்ச்சி.!
பர்தா அணிவதே அடிமைத்தனம் என்று நீங்கள் சொல்லி நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதுதான் காலத்தின் கொடுமை. இந்த பர்தா அடிமைத்தனத்தை முன் வைத்து எத்தனையோ இஸ்லாமிய அன்பர்களிடத்தில் பல பதிவர்கள் வாதாடியிருக்கிறார்கள். இதே சுமஜ்லா என்ற சகோதரியிடத்திலும், பீர் என்கிற அன்பரிடத்திலும் வேறொரு பதிவில் நான் கடந்த மாதந்தான் இந்த பர்தா விஷயம் பற்றி பேசி ஓய்ந்து போயிருந்தேன். அது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று சொன்னவுடன் உங்க மதத்தில் மட்டும் என்னவாம் என்று கேள்வி கேட்டு பிரச்சினையை திசை திருப்புவதுவதான் முற்போக்கு என்றால் நீங்கள் முற்போக்காளர்களாகவே இருந்து கொள்ளுங்கள்..
எங்களது வீட்டில் எந்த உடை அணிவது.. எப்போது கோவிலுக்குச் செல்வது.. எந்தக் கோவிலுக்குச் செல்வது என்பதையெலலாம் முதலில் பெண்கள் முடிவெடுத்து பின்புதான் நடைமுறைப்படுத்தும்போது ஆண்களிடத்தில் வந்து சேர்கிறது.. ஊரும், உலகமும் ஆண்களை மையப்படுத்திய உலகத்தில் இருக்கும்போது என் வீட்டுப் பெண்கள் மட்டும் என்ன செய்ய முடியும்..? இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எங்களது இல்லங்களில் பெண்களுக்கான சுதந்திரம் அவர்களாலேயே மீட்கப்பட்டு வருகிறது.. இது மறுக்க முடியாத உண்மை.
இன்னமும் உங்களைப் போன்ற மெத்தப் படித்த மேதாவிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் முற்போக்கு முண்டாசுகள் மட்டுமே எல்லார் வீட்டிலும் பெண்கள் அடிமைப்படுவதாகவே எழுதிக் குவித்து வருகிறீர்கள். என்னுடைய இந்த 40 வருட கால அனுபவத்தில் எனது அக்காமார்களும், அம்மாவும் உடையுடுத்துதல், கோவிலுக்குச் செல்லுதல் என்று எதிலும் தாங்கள் சுயமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். அதன்படியேதான் அத்தனை வீடுகளிலும். அவரவர் கடமைகளை நீங்கள் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல..!
நற்குடியில் பிறந்தவள்தான் மாரியம்மன் கோவிலுக்கு சேலையோடு வருவாள் என்று எனக்குத் தெரிந்து எந்த இந்து பக்தையும் சொல்லி நான் கேட்டதில்லை. அவரவர் கவலை அவரவர்க்கு.. அவங்களுக்கு எது தோதோ அதையணிகிறார்கள்.. கோவிலுக்குள் கைகூப்பி வணங்குவதுகூட அடிமைத்தனம்தான்.. அது ஆண்டவனுக்கு அடிமைத்தனம். ஆண்டவனையே உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் மீண்டும், மீண்டும் கேட்கிறேன் எதற்கு உங்களுக்கு இந்த மதப் பிரச்சினை..? மதத்தை விட்டொழித்துவிட்டு சமூகத்தை சீர்த்திருத்தப் போகலாமே..? உங்களை யார் மதத்தைத் தூக்கிப் பிடிக்கச் சொன்னது..?
எனக்கு முருகனைப் பிடிக்கும்.. நான் ஞானப்பழம்தான். ஆனால் இந்து என்பது எனது சர்டிபிகேட்டில் இருக்கின்ற ஒரு தகுதி.. அது இல்லாமல் இருந்தாலும் எனக்கு முருகனைப் பிடிக்கத்தான் செய்யும்..! முருகன் இந்துமதத்தின் குறியீடு என்று உங்களுடைய முற்போக்கு அறிவு சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.. நான் எனது கேடு கெட்ட வாழ்க்கையில் கிடைத்த அனுபவத்தின் வாயிலாகத்தான் எவனோ ஒருவன் எனக்கும் மேலே இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த எவனோ ஒருவனை நான் அழைக்கும் பெயர் முருகன்.
அந்த முருகன் என்ற பெயர் இந்துதானே என்றால் அதற்கு நான் என்ன செய்வது..? நான் இந்துவாக இருந்த அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பிறந்ததே தவறு என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்..? சிறு வயதில் நான் பார்த்த முருகன் எனது ஹைப்போதலாமஸில் புகுந்ததற்கு நான் பொறுப்பாக முடியுமா..? உங்களுக்கு ஏதோ ஒரு கணத்தில், ஏதோ ஒரு விஷயத்தில், ஏதோ ஒரு நாளில், ஒரு புத்தகத்தின் வாயிலாக இந்த முற்போக்கு வியாதி தொற்றியிருக்கும். யோசித்துப் பாருங்கள்.. அது போலத்தான் நானும், எனது முருகனும்..!
இந்து மதத்தில் எதுவெல்லாம் பெண் அடிமைத்தனம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ, அதுவெல்லாம் மற்றவர்களுக்கு கடமையாகவோ, பிரியமாகவோ, இஷ்டமாகவோ இருந்து தொலைக்கும்..! இதனை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்..! அறிவால் முடியாதது ஆண்டவனை உணர்தலும்தான்..!
முடிந்தால் உங்களது முற்போக்கான சிந்தனைகளை வைத்து இந்துவாக யாரையும் பிறக்கவிடாமல் செய்து, காமன்மேனாக பிறக்க வைத்துப் பாருங்கள்..
ஐயப்பன் கோவில் விவகாரம்.. ஒவ்வொரு கோவிலுக்கும், ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு வரலாறும், நடைமுறைக் கோட்பாடுகளும் உண்டு. அதனைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.. பெண்களுக்கு படியேற அனுமதியில்லைத்தான். ஆனால் வணங்குவதற்கு நிச்சயம் அனுமதியுண்டு. சிதம்பரம் கோவிலின் சித்சபைக்குள் நுழைவதென்றால் ஆண்கள் சட்டையில்லாமல்தான் நுழைய வேண்டும்.. நானும் அப்படித்தான் நடராஜனை பார்க்கச் சென்றேன். இது எனக்கு அவமானம், என்னை அடிமைப்படுத்துகிறது என்றால், எதற்காக நான் நடராஜனை பார்க்கப் போக வேண்டும். நடராஜன் என்ன என்னைவிட பெரிய நபரா..? அவரை வேண்டுமானால் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டில் இருந்து விடலாம்.. எந்த இந்து மத வியாதியோ அல்லது வாதியோ இதனை கேள்வி கேட்கக் கூடாது.. இதற்கு அத்தனை நடராஜன் பக்தர்களுக்கும் அனுமதியுண்டு.
[[[இதை முட்டி, மோதி, தட்டி, கொட்டி மாற்ற வேண்டுமானால் வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை?]]]
நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்குது என்பார்கள்.. அது இதுதான்.. இந்தாண்டில் கடைசி கட்டத்தில் நல்லதொரு நகைச்சுவை வரிகளை வாசித்த அனுபவம் கிட்டியது.. நன்றிங்கண்ணே..!
/். என்னுடைய இந்த 40 வருட கால அனுபவத்தில் எனது அக்காமார்களும், அம்மாவும் உடையுடுத்துதல், கோவிலுக்குச் செல்லுதல் என்று எதிலும் தாங்கள் சுயமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். அதன்படியேதான் அத்தனை வீடுகளிலும். அவரவர் கடமைகளை நீங்கள் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல..!//
இரண்டாயிரம் வருசமா இந்த தாழ்த்தப்பட்ட பயபுள்ளகை சுயமாகவேதான் தீண்டாமையை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இதனை அடிமைத்தனம் என்று பேசும் வினவு போன்ற மெத்தப்படித்த மேதாவிகளுக்கு என்ன ஒரு கொழுப்பு?
இவ்வாறு அவா அவா கடமைகளை அவா அவா முரன்பாடில்லாம செஞ்சிண்டு இருக்கறத நீங்க அடிமைத்தனம்னு சொன்னா அதுக்கு பார்ப்பனியம் பொறுப்பல்ல… சீ.. ஸாரி உண்மைத்?தமிழன் பொறுப்பல்ல (ரெண்டும் ஒன்னுதான்.. இருந்தாலும்…)
அசுரன்
//இது எனக்கு அவமானம், என்னை அடிமைப்படுத்துகிறது என்றால், எதற்காக நான் நடராஜனை பார்க்கப் போக வேண்டும். நடராஜன் என்ன என்னைவிட பெரிய நபரா..? அவரை வேண்டுமானால் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டில் இருந்து விடலாம்.. எந்த இந்து மத வியாதியோ அல்லது வாதியோ இதனை கேள்வி கேட்கக் கூடாது.. இதற்கு அத்தனை நடராஜன் பக்தர்களுக்கும் அனுமதியுண்டு.//
இப்படி சொல்வது சரி என்றால், அதாவது ஒதுங்கிப் போவது சரி என்றால் அது இன்னொரு விசயத்தையும் சேர்த்து உள்ளடக்கியுள்ளது.
நான் ஒதுங்கிப் போகிறேன். அதே நேரத்தில் என்னை இந்து லிஸ்டில் சேர்காதே என்று இந்து-பார்ப்பனிய மத வியாதியிடம் மூஞ்சில் அடித்து சொல்ல வேண்டும்.
இந்து என்ற பெயரில் பார்ப்பனிய பயங்கரவாதம் செய்யும் ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் ஆசனவாயான ‘சோ” போன்றோரை அடித்து விரட்ட வேண்டும்.
இத உண்மைத்?தமிழன் வசதியா மறந்துடுவாரு. ஏன்னா? பேசிக்கலி அவர் ஒரு அப்பாவி பக்தர்…. அதுதான் உண்மைத்?தமிழன் டச்….
//நற்குடியில் பிறந்தவள்தான் மாரியம்மன் கோவிலுக்கு சேலையோடு வருவாள் என்று எனக்குத் தெரிந்து எந்த இந்து பக்தையும் சொல்லி நான் கேட்டதில்லை.//
பப்புக்களுக்குள் புகுந்து பெண்களை அடித்ததும், முஸ்லீமை மணந்த பெண்கள் மற்றும் சாதி விட்டு திருமணம் செய்த பெண்களை கொல்வது-கடத்துவது, பெண்களுக்கு கன்னித் திரை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சொன்ன பாஜக, ஆர் எஸ் எஸ், பஜ்ரங்தள் பார்ப்பன பயங்கரவாதிகள் இந்து பார்ப்பன மத வியாதிகள் இல்லை என்று உண்மைத்?தமிழன் ஜஸ்ட் லைக் தாட் சொல்லி விடும் அபாயம் உள்ளது.
ஏனேனில், பொது நடைமுறைகளைப் பற்றி அவருக்கென்ன கவலை. அவருக்கு எதாவது ஒன்று தொந்தரவாக இல்லை ஆனால் அதனை விமர்சிக்காமல் இருப்பது மாரலி தப்பு எனில் அதற்கான விளக்கத்தை மட்டும் அவரது சொந்த டிக்சனரியில் மட்டும் மாற்றிக் கொள்வார் உண்மைத்?தமிழன் அண்ணாச்சி.
மேற்சொன்ன சம்பவங்கள் எல்லாமே நற்குடி பெண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ‘சோ’ வின் ஆதரவு பெற்ற ஆர் எஸ் எஸ் பயங்கரவாத படையினர்(கபிலன் வார்த்தையில் கலாச்சாரா அமைப்பினர்) செய்தவைகள்தான்.
அசுரன்
அசுரன்
இந்த பதிவு சரியான சவுக்கடி (இதில் வினவு கூறுவது முற்றிலும் பொருந்துபவர்களுக்கு ) …
[[[நற்குடிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த உண்மைத்தமிழன் தனது ‘வேலுபிரபாகரனின் காதல் கதை’ விமர்சனத்தில் ‘கீழ்சாதி’ப் பெண் ’மேல்சாதி’ ஆணைக் காதலிக்கிறாள் என்கிற ரீதியில் எழுதியிருந்தார். அது என்னடா சாதியிலே கீழ்சாதி என்று கேட்க ஒருவருமில்லை.]]]
எப்படி கேட்பார்கள்..?
வேலுபிரபாகரன் என்னும் கதாசிரியரின் கதையை நான் அப்படியே மறுபிரசுரம் செய்திருக்கிறேன்.. அந்தப் படத்தின் கதையில் இருக்கும் ஒரு காதலின் முக்கிய எதிர்ப்பே இருவருக்குமான சாதி பிரச்சினைதான். இதனைச் சொல்வதற்கு வேறு எப்படி விமர்சனம் எழுதி சொல்ல வேண்டுமாம்..!
படிக்கிறவன் பாட்டைக் கெடுத்தான்.. எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்றது இதுதான்..!
ஏன் இப்படி கதை என்றால் அதனைக் கேள்வி கேட்க வேண்டியது வேலு பிரபாகரனிடம்தான்.. இதுகூடத் தெரியாமல் என்னத்துக்கு பகுத்தறிவு வேஷம்..?
சுகுணா, மிகச்சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் முட்டாள்களோடு விவாதம் செய்வது என்று. ஒடுக்கப்பட்ட சாதி அல்லது தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல வேண்டும். அது என்ன கீழ்ச்சாதி இப்படி கேள்வியின் நுட்பம் கூட தெரியாத உண்மைத்தமிழன் மாதிரியான முட்டாள்களோடு விவாதிப்பது உண்மையிலேயே சிரமமானதுதான்.
[[[களப்பிரன் says:
December 30, 2009 at 4:08 pm
சுகுணா, மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் முட்டாள்களோடு விவாதம் செய்வது என்று. ஒடுக்கப்பட்ட சாதி அல்லது தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல வேண்டும். அது என்ன கீழ்ச்சாதி இப்படி கேள்வியின் நுட்பம்கூட தெரியாத உண்மைத்தமிழன் மாதிரியான முட்டாள்களோடு விவாதிப்பது உண்மையிலேயே சிரமமானதுதான்.]]]
இதிலென்ன நுட்பம் இருக்கிறது களப்பிரர்..? அத்திரைப்படத்தில் வருகின்ற வசனங்களில் இந்த வார்த்தைகள்தான் இடம் பெற்றிருக்கின்றன. அரசு அனுமதி பெற்ற சென்சார் போர்டும் அங்கீகரித்திருக்கிறது.. அதுவும் நடைமுறையில் உள்ள வார்த்தைகள்தான்.. உங்களை மாதிரி அறிவுஜீவித்தனமாகத்தான் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டுமெனில் உங்களை மாதிரியே மேலே கழண்டு போயிருக்கும் சிலர் இருப்பார்கள். அவர்களிடம் போய் பேசுங்கள் நீங்களும் உங்களது தோழரும்..!
///இந்துக்கள் கோவில் இந்துக்களுக்கே.. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இதில் நாத்திகக் கொள்கையுடைய நாத்திக அரசுகளுக்கு என்ன வேலை..? அந்தந்த ஊர்க்காரர்களிடமே கோவில்களை ஒப்படைத்துவிட்டு வெளியேறலாமே..? தினம்தோறும் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி கோவிலை நிர்வகித்துக் கொள்ளட்டுமே..///
இங்க உண்மைத்தமிழன் ஆர் எஸ் எஸ் குரலில் சொல்லியுள்ளது என்னவென்றால், கோவில் விவகாரத்தில் ஆயிரம் ஒடுக்குமுறை கேவலம் இருக்கும் அதை தனி அமைப்பாக அந்தந்த ஊர்காரர்களிடம் ஒப்படைத்தால் பிரச்சினை தீர்ந்து விடும். இது ஒரு பொய், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் உண்மை?த்தமிழன் கருத்து என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ஆனால், இதே உண்மைத்தமிழன் அதே பின்னுட்டத்தில் சொல்லியுள்ளார்:
//அவங்களை மேல் தட்டு மக்களோட ஒட்ட வைக்குறதுக்கு என்ன வழி..? அரசுகளை எப்படி இறங்கி வர வைப்பது அப்படீன்னு கொஞ்சம் யோசிங்க.. அப்புறமா வந்து இந்த ஆத்திகம், நாத்திகம், தலித்தியம், மேல் சாதி, கீழ் சாதின்னு, மற்ற புண்ணாக்குகளை யோசிப்போம்..!///
ஆஹ, இதுக்கு மட்டும் நாத்திகர்கள் வேண்டுமாம். யோவ் உண்மை இப்போதான்யா நீ உண்மையிலேயே யாருன்னு காட்டிருக்க. சோ மாறியோட கருத்துக்களை உன்னோட தளத்துல போட்டயே அதுக்கு காரணம் இந்த ஆர் எஸ் எஸ் கருத்துநிலைதான் அடிப்படை. ஏன் இத நீ யோசிக்க மாட்டியா? இதுக்கு மட்டும் நாங்க வேனுமாயா?
சிதம்பரத்துல கோயில் தீட்சித பாப்பான் கையிலதான் இருந்தது, உண்மைத்தமிழன் முருகா, முருகான்னு கதறும் தமிழ்க்கடவுளின் தமிழை உள்ளே விட மறுத்த கோயில் அது. போராடி இதனை எதிர்த்தவர்கள் நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள்-நக்சல்பாரிகள். இந்த அயோக்கியத்தனத்துக்கு நியாயம் பேசியவர்கள் (நாத்திகர்களுக்கு இங்கென்ன வேலை என்று உண்மைத்தமிழன் குரலிலேயே கேட்டு) ஆர் எஸ் எஸ் மற்றும் சோ மாறிகள். இதற்கு மௌனமாக இருந்து அங்கீகாரம் வழங்கியவர்கள் வேறு யாருமல்ல உண்மைத்தமிழன் மாதிரியான் அப்பாவி பக்தர்கள்.
கண்டதேவி/கோவில்பட்டி கோயில் தேர் இழுப்பு, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி இங்கெல்லாம் ஊரில் உள்ள பெரும்பான்மை ஆதிக்க சாதிகள் ஓன்னு கூடித்தான் சாதிய ஒடுக்குமுறை செய்தார்கள். உண்மைத் தமிழன் அண்ணாச்சியோ ஊரு கையில கட்டுப்பாட கொடுத்துட்டா பிரச்சினை தீர்ந்துடும்னு குன்சா கத வுடுறாரு.
இந்தப் பதிவின் மையமான விசயமாக இருக்கும் பெண்ணடிமைத்தனம் குறித்து உண்மைத்தமிழன் ஒன்றும் சொல்லவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அத பேசினா கொஞ்ச நஞ்ச டவுசரும் கிழிந்து தொங்கி விடும் அல்லவா?
//அரசு அனுமதி பெற்ற சென்சார் போர்டும் அங்கீகரித்திருக்கிறது.. அதுவும் நடைமுறையில் உள்ள வார்த்தைகள்தான்.. உங்களை மாதிரி அறிவுஜீவித்தனமாகத்தான் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டுமெனில் உங்களை மாதிரியே மேலே கழண்டு போயிருக்கும் சிலர் இருப்பார்கள்.//
மேலே உள்ளதும் உண்மை?த்தமிழன் அண்ணாச்சியின் ‘சோ’ பாணி கருத்துதான். அவரது பிற்போக்குத்தனம், சமூக ஒடுக்குமூறை போக்கிரித்தனம் குறித்து கேள்வி கேட்டால் சட்டப்படி அதை தவறு என்று சொல்லமுடியாது என்று சட்டவாதம் பேசுவது இவர்களின் இரட்டுற மொழியும் நாக்கு பிறழ்வு நடைமுறை. இதே ஆட்கள்தான் இவர்களின் அயோக்கித்தனக்கள் பாதுகாக்க முடியாத அளவு அம்பலப்பட்டு நிற்கும் பொழுது பொது அறிவு, தார்மீக நியாயங்கள், மனிதாபிமானம் அடிப்படையில் பேசுவார்கள்.
சட்டப்படி இஸ்லாம் ஒரு மதம், சட்டப்படி இஸ்லாமிய கருத்துக்களை பிரச்சாரம் செய்வதில் தவறில்லை எனும் போது பர்தா போடாத பெண் கேவலாமனவள் என்பது இஸ்லாம் கருத்து என்று ஒருவர் கூறுவதற்கு அவருக்கு முழு உரிமையுள்ளது என்று உண்மை?த்தமிழன் அண்ணாச்சியின் லாஜிக் படி யாரும் பேசலாம். ஆனால் இதனை உண்மைத்தமிழன் அண்ணாச்சி ஏற்றுக் கொள்ளமாட்டார்.
ஏனேனில், அவ்ரது மேற்படி இந்த லாஜிக் பின்வரும் இந்து பார்ப்பனிய ஒடுக்குமுறையை நியாயப்படுத்த மட்டுமே தேவைப்படும்:”சட்டப்படி கீழ்ச்சாதி என்று பேசலாம், ஏனேனில் சென்சார் போர்டு அனுமதித்துள்ளது”
இந்த மாதிரி நல்லவன் வேசம் போட்டு பார்ப்பனிய ஆர் எஸ் எஸ் வெறியோடு பேசுவதற்கு வேறு ஏதாவது செய்யலாம்.
உங்க பேர மாத்தி வைச்சிக்கோங்களேன் மிஸ்டர் உண்மைத்?தமிழன்
அசுரன்
தோழர் வினவு மற்றும் கார்கி,
உங்களது இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகள் இஸ்லாமில் சாதியம் மற்றும் பார்தா விவகாரம் இரண்டையும் இந்துத்துவம் அல்லது பார்பனியம் இரண்டையும் ஒப்பிட்டதாகவே இருக்கிறது. நேரடியாக கண்டிப்பதற்கு உங்களால் முடிந்தால் அது இஸ்லாமியர்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்கிற தேவையற்ற அச்சம் என்று நான் எடுத்துக் கொள்ளலாமா ? இங்கு நீங்களும் சரி சுகுணாதிவாகரும் சரி, பர்தா குறித்து மாறுபட்டக் கருத்துக்கள் கூறியவர்கள் யாவரும் பார்பனிய ஆதரவாளிகள் என்று காட்ட முயலுவது ஏன் ? செய்யதும் அவரது பதிவில் அதைத்தானே செய்திருக்கிறார். அவருடைய பதிவுக்கும் உங்கள் கருத்துகளுக்கும் பெரிய அளவில் வேறுபாடு தெரியவில்லை. ஒன்று தற்காப்பு மற்றொன்று பிரச்சனை எங்குதான் இல்லை நீங்கள் மட்டும் யோக்கியமா என்பது போன்ற திரித்தல். இதில் நீங்கள் வலியுறுத்துவது பெண்ணிய விடுதலை என்பதைவிட வழக்கமான பார்பனிய எதிர்ப்பு தான் தெரிகிறது
கோவி.கண்ணன்,
ஒரு குறிப்பிட்ட மதத்தின் பிற்போக்குத்தனங்களை எதிர்க்க வேண்டுமாயின், எதிர்ப்பவர் மதங்களைக் கடந்து சென்றுவிட்டவராய் இருக்க வேண்டும்,
அல்லது தான் சார்ந்த மதத்தின் உள்ளேயே இருந்து அதன் பிற்போக்குத்தனங்களை கடுமையாக விமர்சிப்பவராய் இருக்க வேண்டும்.
இது ஒரு அடிப்படை அறம்.
மாறாக, எனது மதம் மேண்மையானது உனது மதம் இழிவானது எனும் அடிப்படையில் விமர்சிப்பவர்களை நாங்கள் விமர்சிக்கும் போது உங்களுக்கு
ஏன் எரிகிறது?
நீங்கள் இந்த மறுமொழியிலேயே சொல்வதென்ன?
//இதில் நீங்கள் வலியுறுத்துவது பெண்ணிய விடுதலை என்பதைவிட வழக்கமான பார்பனிய எதிர்ப்பு தான் தெரிகிறது//
இருக்கட்டுமே! பார்ப்பனியம் பெண் விடுதலை ஆதரிக்கிறதா என்ன? நேரடியாக பதில் சொல்லுங்கள் பூசி மொழுக வேண்டாம்.
பார்ப்பனியம் தான் ஆகக் கேடாக பெண்ணை அடிமைப்படுத்துகிறது என்கிறேன்.. அதை ஆதரிப்பவர்களுக்கு இசுலாத்தின் பெண் அடிமைத்தன
கருத்துக்களை விமர்சிக்க ஒரு மயிரளவும் யோக்கியதையில்லை.
//இருக்கட்டுமே! பார்ப்பனியம் பெண் விடுதலை ஆதரிக்கிறதா என்ன? நேரடியாக பதில் சொல்லுங்கள் பூசி மொழுக வேண்டாம்.
பார்ப்பனியம் தான் ஆகக் கேடாக பெண்ணை அடிமைப்படுத்துகிறது என்கிறேன்.. அதை ஆதரிப்பவர்களுக்கு இசுலாத்தின் பெண் அடிமைத்தன
கருத்துக்களை விமர்சிக்க ஒரு மயிரளவும் யோக்கியதையில்லை.//
நானும் உலக நாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி கம்யூனிச தலைமைகளில் பெண்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன். இன்னும் ஒரு பெண்ணுக்கு கூட உங்களால் விடுதலை வாங்கித் தந்து கம்யூனிச தலைமை ஏற்கும் தகுதிகள் கொடுக்கப்பட்டது போல் தெரியவில்லையே
ஆமா ! இந்த கம்முநிஸ்ட் கம்முநிச்டுங்கரான்களே ! அது யாருங்க ? ஹாலிவுட் நடிகரா ?
கோவி கண்ணன் அவர்களே,
பர்தா குறித்து தனிப்பட்டு விமர்சனம் செய்யும் வினவு பதிவுகள் உள்ளன, ஆனால் அங்கு கோவி கண்ணன் தான் இல்லை என்பது வருந்தத்தக்கது.
இந்த பதிவு மைய்யமாக பேசுவது என்னவென்றால் பர்தா எனும் பெண்ணடிமைத்தனத்தை முன்னிட்டு இந்து-பார்ப்பனிய மற்றும் இஸ்லாம் மத ஆணடிமைத்தன, மதவெறி கருத்துக்களை பரிமாறிக் கொண்ட பதிவர்களின் மனநிலை குறித்தும், எல்லா மதங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது பெண்ணடிமைத்தனமே என்பது குறித்தும் ஆகும்.
எனவே இதில் தவறொன்றுமில்லை.
அசுரன்
[[[‘உலகத்திலேயே சிரமமான காரியம் முட்டாள்களோடு விவாதிப்பதுதான்’ என்றார் பெரியார். ஆனால் வாழ்நாள் முழுக்க அவர் அதைத்தான் செய்தார். அதனாலேயே அதைச் சொல்வதற்குக் கூடுதலான ‘தகுதி’யும் பெரியாருக்கு உண்டு.]]]
இதனால்தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக கருப்புச் சட்டைக்காரர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போக.. அவர்களைப் புறக்கணித்து கண்டு கொள்ளாமல் போகும் கடவுளர்களின் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது..
[[[முட்டாள்களோடு விவாதிப்பதன் சிரமத்தைச் சமீபகாலமாக நன்றாகவே உணரமுடிகிறது. வலையுலகம் என்பது பெரும்பான்மை முட்டாள்கள் நிறைந்த கூடாரம். இதிலே ‘பதிவர்களுக்கிடையில் சாதியுணர்வு கிடையாது, மதமாச்சரியங்கள் கிடையாது, எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன’ என்கிற பம்மாத்துகள் வேறு.]]]
ஐயோ பாவம்.. இந்த அல்டாப்புகளின் உளறல்களில் இதுவும் ஒன்று. இவரைத் தவிர மற்றவர்கள் முட்டாள்கள் என்று சொல்வதற்கும் கொஞ்சம் தனி மூளை வேண்டும். அது இவருக்கு நிறையவே இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன்..
பதிவர்களுக்கிடையே சாதி, மத மாச்சரியங்கள் இல்லை என்பதால்தான் எங்களுக்கிடையில் பல்வேறு உதவிகளும், கொடுக்கல், வாங்கல்களும், அன்பு பரிமாற்றங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இதையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் பகுத்தறிவு மூளையைக் கொஞ்சம் கழற்றிவைத்துவிட்டு சாதாரண மனிதன் என்னும் தோற்றத்தோடு வர வேண்டும்..! முடிந்தால் வாருங்கள் மிஸ்டர் சுகுணா.. இல்லையெனில் உங்களை நீங்களே வாழ்த்திக் கொண்டு பினாத்துங்கள்..!
வாழ்க பகுத்தறிவு..!
[[[இதனால்தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக கருப்புச் சட்டைக்காரர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போக..]]]
கருப்புச்சட்டைக்காரர்களின் எண்ணிககை குறைந்து கொண்டே போக என்று இருந்திருக்க வேண்டும். அவசரம்.. அவசரம்.. அவசரத்தினால் ஏற்பட்ட தவறு..
இந்தப் பின்னூட்டத்தை நான்தான் எழுதினேன்..!
//சுஜ்மலா பின்பற்றுவது இசுலாமிய பார்ப்பனீயம்.//
தலைவரே என்னைப் பொறுத்தவரை பார்ப்பனியம் என்ற சொல்லே ஜாதி வரிகளில் ஊரும் மானிடர்களைத் தான் குறிக்கும் என்று கூறுவேன். இதில் இஸ்லாமியப் பார்ப்பனீயம் என்று ஒரு புது வகையை உண்டு பண்ணிவிடாதீர்கள். இப்போது பதிவுலக மக்கள் நினைக்கின்ற பார்ப்பனர்களின் பிரச்சினையே இன்னும் ஒய்ந்த பாடில்லை.
இதைப் பற்றியே “யார் பார்ப்பனன்?” என்ற இடுகையை எனது அழிந்து விட்ட பதிவான ஏழு மாத காலங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். எனக்கும் வால்பையன் அவர்களுக்கும் கருத்து மாற்றங்களும் நடந்தது. ஆனால் அது நாகரீகமான முறையில் நடந்தது என்பது எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அதற்கு பிறகு என் பதிவை யாரோ அழித்து விட்டார்கள் என்பதே உண்மை. அதிலிருந்து நான் படிப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். இப்போது ஏனோ இங்கு பின்னூட்டம் இட வேண்டும் என்று தோன்றியது.நன்றி.
மேலே வினவிற்காக எழுதப்பட்ட பெரிய பதில் பின்னூட்டமும், சுகுணா திவாகருக்கான பதில் பின்னூட்டத்தையும் நான்தான் இட்டேன்.
வழக்கமா பிளாக்கர் என்று நினைத்து வேகமாக போஸ்ட் செய்து விட்டேன். தடங்களுக்கும், தவறுக்கும் மிகவும் வருந்துகிறேன்..!
நீண்ட விளக்கத்திற்கு அது தப்பாக இருந்தாலும் நன்றி உண்மைத் தமிழன். பதிவுலகில் பல பிரச்சினைகள் அது சமூகத்தைப்போலவே இருந்து வருகின்றன. அதை உரிய தருணங்களில் விவாதத்திற்கு கொண்டு வந்து பேசித்தான் பார்ப்போமே என்பதற்கே இந்தப்பதிவு. பதிவர்கள் என்றால் ஒரே அடியாக மட்டம் தட்டமால் அவர்களும் இருக்கும் சமூகத்தின் பிரதிபலிப்பாய்த்தான் இருப்பார்கள் என்று புரிந்து கொள்கிறோம். அந்த உரிமையில்தான் இந்த பதிவும் கருத்துப் போராட்டமும்.
சரி சரி சண்ட போட்டுக்காதீங்க ஏட்டையா!
//சுஜ்மலா பின்பற்றுவது இசுலாமிய பார்ப்பனீயம்.
தலைவரே என்னைப் பொறுத்தவரை பார்ப்பனியம் என்ற சொல்லே ஜாதி வரிகளில் ஊரும் மானிடர்களைத் தான் குறிக்கும் என்று கூறுவேன்//
ஜாதி வரிகளில் ஊறும் என்று மாற்றி படிக்கவும். எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்.
//ளையே கோவி.கண்ணன் இவ்வாறு சொல்லக்கூடும்
– “உன்னை வேசி மகன் என்று பார்ப்பனியம் சொன்னாலென்ன, காதில் பஞ்சு வைத்து அதைப் புறக்கணித்து விடு”.//
ஏன் பஞ்சு வைக்கனும் ?
கோவி.கண்ணன் எப்போதும் சொல்வது இது தான் “பார்பனரை பிராமணன் என்று அழைப்பதை நிறுத்தினாலே போதும் மற்றவர்கள் சூத்திரர் என்று அறியப்பட மாட்டார். பார்பனரை பிறர் பிராமணன் என்று அழைக்கும் வரை பார்பனரல்லாதோர் சூத்திரனாகத்தான் நினைக்கப்படுவர்.” எவரையும் பிராமணன் என்ற சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றே எழுதி வருகிறேன்
//பார்பனரை பிராமணன் என்று அழைப்பதை நிறுத்தினாலே போதும் மற்றவர்கள் சூத்திரர் என்று அறியப்பட மாட்டார். பார்பனரை பிறர் பிராமணன் என்று அழைக்கும் வரை பார்பனரல்லாதோர் சூத்திரனாகத்தான் நினைக்கப்படுவர்.” எவரையும் பிராமணன் என்ற சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றே எழுதி வருகிறேன்//
வாரே வாஹ்…
கோவி.கண்ணன், பார்ப்பனியம் என்பது பார்ப்பனியம் என்று சொல்வதாலோ பார்ப்பான் என்று கூப்பிடுவதாலோ இருப்பில் இல்லை. அதன் இருப்பு
சமூகத்தில் எதார்த்தத்தில் இருக்கிறது. நாம் பார்ப்பான் இல்லை என்று நம்ப ஆரம்பித்தவுடன் அவன் கீழே வந்துவிடவும் போவதில்லை – நாம்
மேலே போய்விடவும் போவதில்லை..
உங்க சமூக அறிவு புல்லரிக்க வைக்குதுங்க.. இருந்தாலும் உங்களுக்காக ஸ்பெஷலா ஒரு பழைய பழமொழியை சொல்லிக்கிட்டு எஸ்கேப்பாகிறேன்.
“காக்கா கா-கான்னு கத்தறதுனாலே தான் அதைக் காக்கான்னு சொல்றோம்”
“காக்காவை டா-டான்னு சொன்னோம்னா அது டா-டான்னு கத்தாது”
பார்பனனை பிராமணன் என்று சொல்வதை யார் நிறுந்த வேண்டும் பிராமணா மற்றவனா. அவாள் பிராமணா சங்கம் வைத்திருக்கா சூத்ராள் ஒரே சங்கமா வைக்காம தனித் தனி சாதி சங்கமா வைத்திருக்கா. இதுல எது எப்படி தானா மறையும் கோவி.
[[[ sugunadiwakar says:
December 30, 2009 at 12:26 pm
மேலே சொன்ன எனது பின்னூட்டத்திற்குக் கூட கடுமையான கண்டனங்கள் வரக்கூடும். பதிவர்களை எப்படி முட்டாள்கள் என்று சொல்லலாம் என்று. மன்னிக்கவும் வடிகட்டின முட்டாள்கள் என்று வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளுங்கள். இவர்களது ‘விவாதங்களை’க் கவிதைகளாக எழுதித்தொலைப்பது அதைவிட கொடுமை. சுஜ்மலா தொடங்கி கலகலப்ரியா, பிரபாகர் இன்னும் இன்னும் கவிதைகள், கவிதைகள், கவிதைகள். அதைப் பாராட்ட ஒரு முட்டாள் கூட்டம். நோ, நோ, கவிதை பாவம்!]]]
ஐயோ தமிழ் மேலும், கவிதைகள் மேலும் என்ன ஒரு அக்கறை..!
ஏதோ அடிமைத்தனம்.. அடிமைத்தனம் என்கிறார்களே.. அந்த அடிமைத்தனத்தை செய்யும் புத்திசாலி எஜமானர்களில் ஒருவர்தான் இந்த சுகுணா திவாகர்..
பதிவர்கள் எழுதுவதை கவிதை, கவிதையில்லை என்றெல்லாம் அளவுகோல் வைத்து மதிப்பீடு வழங்க இவர் யார்..? யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தது.. இவருக்குப் பிடிக்கவில்லையெனில் அதுவெல்லாம் கவிதை இல்லையாமா..? இப்படி மதிப்பீடு அளிப்பதற்கு சுகுணா என்ன எல்லாம் தெரிந்த கடவுளா..? இது ஒருவகையில் அறிவுத்திமிர்..! தூக்கிப் பிடித்த அத்தனை வலைப்பதிவர்களுக்கும் பொங்கல் போனஸ் இது.. சாப்பிடுங்கப்பா..!
ஓ முருகா.. இவர்களிடத்தில் போய் இப்படி தமிழைக் கொடுத்து அல்லல்பட வைக்கிறாயே.. கொடுமைடா சாமி..!
பதிவர்கள் அனைவருமே வடிகட்டின முட்டாள்கள் என்று சொன்ன பிறகும் இவரை வலைப்பதிவர்களில் ஒருவர் என்று சொல்லாமா என்று வலையுலகம் சிந்திக்கட்டும். இல்லாவிட்டால் முட்டுச்சந்தில் பட்டப்பகலில் முட்டக் குடித்துவிட்டு கூச்சலிடும் அரை லூஸாக நினைத்து ஒதுங்கிப் போக வேண்டியதுதான்..!
வலையுலகத்திற்கு வந்த சோதனை..!
வினவு..
நீங்க நினைச்சது நடந்தேறிவிட்டதா..? திருப்தியா போய்த் தூங்கிட்டு அடுத்த சொம்பைத் தூக்கிட்டு வாங்க..!
ஏன்னே உண்மை, ஒரு ஆளு சுகுணாகிட்ட உன்புள்ளக்கு யாரு அப்பன்னு கேப்பாரு, நீங்க வாய முடிகிட்டோ தொரந்துகிட்டோ நிப்பீங்க… அதுக்காக சுகுணா கோவப்பட்டு முட்டாளுன்னு எழுதுனா அதுக்கு வினவு தளத்த திட்டுவீங்களா.. நல்லாருக்குண்ணே உங்க நாயம்!!
யாரோ ஒரு அனானி எழுதியதாய் நினைத்து கம்மினாட்டி என்று குறிப்பிட்டு விட்டேன், தயவு செய்து அந்த வார்தையை நீக்கிவிடுங்கள்… ஐயா தண்டோரா நீங்கதானா இப்படி ஒரு கேள்வியை கேட்டது? நல்லா இருக்கு உங்க பதிவுலக ‘தோழமை’
பதிவு பிடித்திருந்தது.
//உங்க சமூக அறிவு புல்லரிக்க வைக்குதுங்க.. இருந்தாலும் உங்களுக்காக ஸ்பெஷலா ஒரு பழைய பழமொழியை சொல்லிக்கிட்டு எஸ்கேப்பாகிறேன்.//
உங்க அளவுக்கு சமூக அறிவு ஜீவி இல்லிங்க.
//கோவி.கண்ணன், பார்ப்பனியம் என்பது பார்ப்பனியம் என்று சொல்வதாலோ பார்ப்பான் என்று கூப்பிடுவதாலோ இருப்பில் இல்லை. அதன் இருப்பு
சமூகத்தில் எதார்த்தத்தில் இருக்கிறது. நாம் பார்ப்பான் இல்லை என்று நம்ப ஆரம்பித்தவுடன் அவன் கீழே வந்துவிடவும் போவதில்லை – நாம்
மேலே போய்விடவும் போவதில்லை..//
அப்படின்னா தாராளமாக கொண்டு போய் அனைவருக்கும் அர்சகர் ஆகும் உரிமை மற்றும் ஏனைய உரிமை பெற்றுத்தந்து அனைவரையும் பிராமணர் ஆக்கி பார்பனீயத்துக்கு புதியவர்களை “உற்பத்தி” செய்யுங்கள்.
கோவிலில் கூட்டம் குறையவில்லை என்று மார்த்தட்டுபவர்களுக்கு இன்னும் தாராளமாக ஏற்றுமதி செய்யுங்கள்.
//“காக்கா கா-கான்னு கத்தறதுனாலே தான் அதைக் காக்கான்னு சொல்றோம்”
“காக்காவை டா-டான்னு சொன்னோம்னா அது டா-டான்னு கத்தாது”//
கம்யூனிசத்தில் இருக்கும் பார்பனக் காக்கைகள் அனைவருமே கம்யூனிச காக்கை ஆகிவிட்டார்கள் என்று நீங்கள் நம்பினால் சரி
கோவி கண்ணன் விவாத்தில் கேட்ட கேள்விக்கு உரையாடாமல் தப்பிப்பதற்காக கம்யூனிசத்தை ஏன் இழுக்கிறீர்கள் அது உங்கள் உரிமை என்றாலும் கூட. கம்யூனிசத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே இருப்பார்கள், மற்ற சாதி, மத.இன,மொழி மாச்சரியங்களுக்கு இடமில்லை. வர்க்கம் மட்டுமே பொது அடையாளம். ஆனால் நீங்கள் நேசிக்கும் சொல்லிக்கொள்ளும் தமிழ் அடையாளம் அப்படிப்பட்டதல்ல. அங்கே எல்லா சாதிகளும், ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. பார்ப்பனியத்தை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் தமிழன் அடையாளத்தில் சாரமே ஆதிக்க சாதி திமிர்தான். முதலில் உங்கள் அடையாளத்தை திருத்திக் கொண்டு கம்யூனிஸ்டுகளை திருத்துவதற்கு வாருங்கள்.
//கோவி கண்ணன் விவாத்தில் கேட்ட கேள்விக்கு உரையாடாமல் தப்பிப்பதற்காக கம்யூனிசத்தை ஏன் இழுக்கிறீர்கள் அது உங்கள் உரிமை என்றாலும் கூட. கம்யூனிசத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே இருப்பார்கள், மற்ற சாதி, மத.இன,மொழி மாச்சரியங்களுக்கு இடமில்லை. வர்க்கம் மட்டுமே பொது அடையாளம். ஆனால் நீங்கள் நேசிக்கும் சொல்லிக்கொள்ளும் தமிழ் அடையாளம் அப்படிப்பட்டதல்ல. அங்கே எல்லா சாதிகளும், ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. பார்ப்பனியத்தை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் தமிழன் அடையாளத்தில் சாரமே ஆதிக்க சாதி திமிர்தான். முதலில் உங்கள் அடையாளத்தை திருத்திக் கொண்டு கம்யூனிஸ்டுகளை திருத்துவதற்கு வாருங்கள்.
//
பிரச்சனையே உங்களால் நேரடியாக ஒன்றை எதிர்க்க முடியவில்லை என்பதே. உங்கள் பர்தா ஐயப்பன் ஒப்பீட்டீர்கான காரணமே ? நாங்கள் தன் தீர்ப்பு சொல்லுவோம் என்கிற ஆதிக்க ஏதோசதிகார மனப்பான்மை. பர்தா விவாகரத்தில் கருத்து சொன்னவர்கள் அனைவருமே பார்பனிய ஆதரவாளர்கள் என்று உங்களிடம் சொன்னார்களா ? பார்பனியதை நீங்கள் இங்கே இழுத்ததே நீங்கள் இங்கே பர்தாவுக்கு எதிராக எழுதி இருப்பது கண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்கே என்றே நினைக்க முடிகிறது. உங்களால் ஏன் நேரடியாக கண்டிக்க முடியவில்லை ? மதவாதிகள் உங்கள் எதிரி என்றால் அதில் ஒரு சாரருக்கு சிறப்பு சலுகை கொடுப்பதும், மற்ற ஒப்பீடுகளும் உங்கள் தரப்பு வாதத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டிருக்கிறது என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் ?
கஷ்ட காலம், கோவியார் அவர்கள் பதிவை முழுதாகப்படித்தாரா என்றே தெரியவில்லை. பர்தா விவகாரத்தில் மற்றவர்களை விட இங்கே அதிகமாக இசுலாமிய பிற்போக்குத்தனம் உரிய மொழியில் விமரிசிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் எல்லா மத பெண்ண்டிமைத்தனத்தையும் எதிர்ப்பதில் நிற்பதால் வரும் முனைப்பு. சுஜ்ம்லா விவகாரத்தில் பர்தாவை யாரும் கண்டிக்கவில்லை. உனது முறை உனக்கு உசத்தி என்றால் என்னை ஏன் குற்றம் சொல்கிறாய் என்பதே? இதை கலகலப்பரியாவை எழுதியிருக்கிறார். ஆக இந்த விவகாரத்தில் பர்தாவை எதிர்ப்பவர்கள் என் இந்து மதத்தை இழிவு படுத்திவிட்டாயே என்ற கோபம்தான். அதனால்தான் சொந்த மதத்தில் ஆயிரத்தெட்டு முறைகளில் பெண்ண்டிமைத்தனத்தை பின்பற்றும் இவர்கள் பொய்யான அற உணர்ச்சியின்பாற்ப்ட்டு குதிக்கிறார்கள். ஏட்டிக்குப் போட்டி விவாதிப்பது என்பது அவ்வளவு நல்ல பண்பல்ல கோவி. இந்த பிரச்சினையை நீங்கள் முழுசாக படித்தீர்களா, புரிந்து கொண்டீர்களா என்பதே ஐயமாக இருப்பதால் விவாதிப்பதற்கு சிரமமாக இருக்கிறது.
கோவி, வினவில் பர்தா, திருச்சபை, பார்ப்பனியம் எல்லமே தனித்தனியாக விலாவாரியாக விமர்சிக்கப்பட்டுள்ளது… இந்து முசுலீம் என்ன பஞ்சாயத்து நடக்கும்போது இரண்டுபக்கத்தையும் எழுதுவதுதான் அறிவியல் பூர்வமானது.. அப்போதுதான் பிரச்சனையின் முழுப்பரிமாணத்தையும் அனைவரும் உணர முடியும். இதை எப்படி மறுக்கிறீர்கள் என்று புரியவில்லை?????
||ம்யூனிசத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே இருப்பார்கள், மற்ற சாதி, மத.இன,மொழி மாச்சரியங்களுக்கு இடமில்லை. வர்க்கம் மட்டுமே பொது அடையாளம். ஆனால் நீங்கள் நேசிக்கும் சொல்லிக்கொள்ளும் தமிழ் அடையாளம் அப்படிப்பட்டதல்ல. ||
அடடா, அது தான் வங்கத்து பார்ப்பனக் கம்முனிஸ்டுங்கலாம் அக்னிய வலம் வந்து , அனைத்துப் பார்ப்பன சடங்குகளுடன் தங்கள் புத்திர புத்திரிகளுக்கெல்லாம் மணம் புரிஞ்சு வச்சாங்களே, இது மாரித்தானே..
அடச்சே அவனுங்கலாம் மார்க்க்ஸிஸ்டுங்கறீங்களா…? உங்க கோஷ்டிக்காரெய்ங்க நம்ம பிரச்சண்டா அண்ணாத்தே கூட பார்ப்பன சாதி சங்க கூட்டத்துல கலந்துக்கிட்டு அடையாளத்த நல்ல வெளிப்படுத்தினாருங்களே? அவுரு கம்மூனிச்சிட்டு இல்லீங்கறீங்களா ?
கம்மூனிசத்துல கூட வலது ஓரம், நடுவு, இடது ஓரம் இருக்குங்க்ளே.. நம்ம வங்கத்து கேரளத்து பார்ப்புங்க, ராமமூர்த்தி, ஓட்டுப்பொறுக்கி கம்மூனிசிட்டுங்க எல்லாம் இடதுலயும் வலதாத்தானுங்களே இருக்காக, இருந்திருக்காக… சில மேலத்தேய மார்க்சிஸ்டுங்க கிறிஸ்தவம், புத்தம் எல்லாம் இணைச்சுக் கூட மார்க்சிசத்தப் பார்த்திருக்காக… மனிதங்கற அடையாளத்துக்குள்ள பல தேசிய எனங்க வராப்புல, பசுமைவாதம், சூழலியத்துக்குள இடது முற்போக்குவாதிங்களும், தாராளமையவாதிகளும், ஏன் மேலைத்தேய பரப்பில் இப்போது பழமைவாதிகளும் வாரங்களே.. கம்மூனிஸ்டு அடையாளத்தோட தானுங்களே நம்ம போல்போட்டு அண்ணாத்தேயும் அறியப் பட்டாரு.. என்னமோ போங்க, கேட்ட இவனுங்கலாம் நெசமான கம்மூனிச்சிட்டு இல்லீம்பீங்க! ஏதோ தோணுது கேக்கறேனுங்கோ..
எழுதுறதுக்கு மட்டும் தமிழப் பயன்படுத்துவீங்களாக்கும்? ஏதோ போங்க!
////இருக்கட்டுமே! பார்ப்பனியம் பெண் விடுதலை ஆதரிக்கிறதா என்ன? நேரடியாக பதில் சொல்லுங்கள் பூசி மொழுக வேண்டாம்.
பார்ப்பனியம் தான் ஆகக் கேடாக பெண்ணை அடிமைப்படுத்துகிறது என்கிறேன்.. அதை ஆதரிப்பவர்களுக்கு இசுலாத்தின் பெண் அடிமைத்தன
கருத்துக்களை விமர்சிக்க ஒரு மயிரளவும் யோக்கியதையில்லை.//
நான் பார்பனியத்தை ஆதரிப்பதில்லை, அதே சமயத்தில் ஆப்ரிக்கவில் ஒருவன் பாதிக்கப்பாட்டாலும் அதற்கும் இந்தியாவில் இருக்கும் பார்பனியமே காரணம் என்று சொல்வதும் இல்லை.
உலக நாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி கம்யூனிச தலைமைகளில் பெண்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன். இன்னும் ஒரு பெண்ணுக்கு கூட உங்களால் விடுதலை வாங்கித் தந்து கம்யூனிச தலைமை ஏற்கும் தகுதிகள் கொடுக்கப்பட்டது போல் தெரியவில்லையே
நீங்கள் பார்ப்பனியத்தை ஆதரிப்பதில்லையா? சரி…. விடுங்கள் அந்த ஸ்டேட்மெண்ட்டின் நேர்மை மேலே உள்ள மறுமொழிகளில் விரவிக்கிடக்கிறது.
பொதுவான வாசகர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.
இங்கே யாருக்கும் ஆப்ரிக்கப் பிரச்சினைக்கு பார்ப்பனியம் காரணம் என்று சொல்லவில்லை – வேண்டுமானால் வினவில் ஆப்ரிக்கா பற்றி
தோழர் கலையரசன் எழுதியுள்ள பதிவுகளைப் படித்துப் பார்த்து உங்கள் ஸ்டேட்மெண்ட்டை நீங்களே வெரிஃபை செய்து பார்த்துக் கொள்ளலாம்.
கம்யூனிஸ்டு தலைமைகளில் பெண்களைத் தேடிக் கொண்டு இருக்கும் உங்கள் “தேடல்” பற்றி மகிழ்ச்சி – கம்யூனிஸ்டு கட்சிகளில் ஒரு தனிநபர்
தலைமை இருக்காது என்று நினைக்கிறேன் – பொலிட்ப்யூரோ என்பது ஒரு கூட்டுத் தலைமை – இதில் பெண்கள் இருந்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.. ஆனால், மாவோயிஸ்டுகளின் மக்கள் விடுதலை இராணுவத்தில் பெரும்பான்மை பெண்கள் இருக்கிறார்கள் – அவர்களே பல படைப்பிரிவுகளுக்கு தலைமையும் ஏற்கிறார்கள் – இதை நீங்கள் யூடியூபில் கிடைக்கும் வீடியோக்களில் பார்க்கலாம்.
இங்கே பேசப்படும் விஷயத்தை விட்டு நீங்கள் ஏன் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறீர்கள் கோவி?
//கம்யூனிஸ்டு தலைமைகளில் பெண்களைத் தேடிக் கொண்டு இருக்கும் உங்கள் “தேடல்” பற்றி மகிழ்ச்சி – கம்யூனிஸ்டு கட்சிகளில் ஒரு தனிநபர்
தலைமை இருக்காது என்று நினைக்கிறேன் – பொலிட்ப்யூரோ என்பது ஒரு கூட்டுத் தலைமை – இதில் பெண்கள் இருந்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.. ஆனால், மாவோயிஸ்டுகளின் மக்கள் விடுதலை இராணுவத்தில் பெரும்பான்மை பெண்கள் இருக்கிறார்கள் – அவர்களே பல படைப்பிரிவுகளுக்கு தலைமையும் ஏற்கிறார்கள் – இதை நீங்கள் யூடியூபில் கிடைக்கும் வீடியோக்களில் பார்க்கலாம்.// தீவிரவாதம் என்று அரசுகளால் சொல்லப்படும் இயக்கங்களில் பெண்கள் இருப்பது நடைமுறையில் அல்கொய்தாவிலும் உண்டு. நான் கேட்பது கம்யூனிஸ்டுகள் ஆட்சி நடத்தும் நாடுகளில், மாநிலங்களில், கட்சித்தலைமைகளில் எத்தனை பேர் பெண்கள் ? பெண்கள் இன்னும் அந்த தகுதிக்கு வரவில்லையா ?
நீங்கள் பேசும் பெண் விடுதலை எல்லாம் ஊருக்கு உபதேசம் போல் இருப்பதால் நானும் இதைக் கேட்க வேண்டி இருக்கிறது. உங்கள் கொட்டை பாக்கு சாடலில் இது பற்றிப் பேச தவிர்பது புரிகிறது. நாங்க தான் யோக்கியம் எங்களுக்குத்தான் கண்டிக்கும் உரிமை இருக்கிறது என்று நீங்கள் மேலே சொன்னதை மீண்டும் என் கேள்வியுடன் தொடர்பு படுத்தினால் கொட்டை பாக்கு விலை சும்மா கேட்கவில்லை என்று விளங்கும்,
//இங்கே பேசப்படும் விஷயத்தை விட்டு நீங்கள் ஏன் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறீர்கள் கோவி?//
இப்ப விடை சொல்லிவிட்டேன்
கோவி நீங்கள் குறிப்பிடும் போலி கம்யூனிஸ்டு கம்பேனி பிரைவேட் லிமிடெட் பற்றி பதிவர்கள் மாதவராஜ், சந்திப்பு போன்றவர்களிடம் கேட்கவும், ”நாங்கள் தீவிரவாதிகள்”,
ஆமாம் வினவு , சீன பிராண்டு கம்மூனிஸ்டு பதிவர்களை தவிர எங்கும் நீங்க பின்னூட்டமிடுவதேயில்லையே ?
ஆர்வி உங்களுக்கு மறுப்பாக எழுதிய பதிவில் கூட நீங்கள் எழுதவில்லையே ,
அவ்வளவு மேட்டிமைதனமா இல்லை பதிவர்கள் எல்லாம் மதிப்பு கொடுக்க தகுந்த ஆட்கள் இல்லை என்ற எண்ணமா ?
என்னை போன்ற வாசகர்கள் ஓகே , பதிவர்கள் ஏன் உங்களுக்கு பின்னூட்டமிடவேண்டும் ?
நல்லகேள்வி மதி இந்தியா. ஒருவேளை நேரம் காரணமாக இருக்கலாம். இருந்தாலும் இவர்கள் கொடுத்து இருக்கும் முல்லையின் பதிவை இன்று தான் பார்க்கிறேன். வினவு, கார்க்கி போன்ற முற்போக்காளர்கள் அங்கே சென்று அவருக்கு ஆதரவாக விவாதம் செய்து இருக்கலாம். அந்த நிகழ்வை பல மாதங்கள் கழித்து வேறொரு இடத்தில் பயன்படுத்த மட்டுமே செய்துள்ளனர்.
கார்க்கியும் பார்க்காமல் இருந்திருக்கலாம். அதனால் வினவு ஏன் அவருக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட எழுதாமல் இன்று அனைவரையும் கேள்வி கேட்கிறார் ?
செய்யது தளத்தில் உங்கள் பின்னூட்டத்தை நான் முன்பே வாசித்தேன், மதவிகாரங்கள் உங்கள் சிந்தனையை தீர்மானிக்க் நீங்கள் விடவில்லை என்பது அதில் தெரிந்தது. கீழே சீகிலா-பர்தா மற்றும் ஐயப்பன் பற்றி ரெண்டு சூப்பர் கட்டுரைகளுக்கு லிங்க் இருக்கு, அதை படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்…
மணிகண்டன், முல்லையின் சாமி பதிவு டிசம்பர் 23ஆம்தேதி வெளியிடப்பட்டிருக்கிறது. அது மீள்பதிவு என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எனவே அது பல மாதங்களுக்கு முந்தைய பதிவல்ல. அடுத்து அந்த பதிவில் பின்னூட்டமிடாத்தற்கு காரணம் ஏற்கனவே அங்கு சிலர் ஐயப்பன் சக்தி வாய்ந்த சாமி பாத்து எழுதுங்கள் என்று மிரட்டியிருந்தனர். இதில் எங்கள் கருத்துக்களை தீவிரமாக எழுதப்போய் வினவில் எங்களுகுக்கு சேர வேண்டிய ஆபாச அர்ச்சனைகள் முல்லைக்கு போய் அவருக்கு ஒரு புதிய பிரச்சினையையும் தலைவலியையும் கொண்டுவரலாம் என்பதால் அதை தவிர்த்தோம். பல பதிவுகளில் பின்னூட்டமிடுவதை தவிர்ப்பதற்கு இதுதான் காரணம். சில பதிவுகளில் இடவும் செய்கிறோம். மற்றபடி இது மேட்டிமைத்தனத்தினால் இடாமல் இல்லை.மற்றபடி பின்னூட்டமிட்டாலும் இடாவிட்டாலும் பதிவுலக பிரச்சினைகளில் கலந்து கொண்டு எங்கள் கருத்தை தெரிவிப்பது நிச்சயம் மேட்டிமைத்தனமல்லவே. வினவின் முந்தைய பதிவுகளுக்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை என்பதிலிருந்தே இதைப் புரிந்து கொள்ளலாம். அடுத்து ஒரு பிரச்சினையில் முழுதாக எங்கள் கருத்தை தெரிவித்து விவாதத்தை முன்னெடுப்பதற்கு எங்கள் தளமே பேருதவியாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு வரும் திட்டுக்கள், பிரச்சினைகள் எங்களைச் சார்ந்தவையாக இருக்கும். நன்றி
&&&எனவே அது பல மாதங்களுக்கு முந்தைய பதிவல்ல.&&&You are right.
&&&இதில் எங்கள் கருத்துக்களை தீவிரமாக எழுதப்போய் அது முல்லைக்கு ஒரு புதிய பிரச்சினையையும் தலைவலியையும் கொண்டுவரலாம் என்பதால் அதை தவிர்த்தோம்&&&
ஒகே. understood.
&&&பதிவுலக பிரச்சினைகளில் கலந்து கொண்டு எங்கள் கருத்தை தெரிவிப்பது நிச்சயம் மேட்டிமைத்தனமல்லவே.&&&
இது அப்படி கிடையாது வினவு. உங்களுக்கு தேவையானதை மட்டும் சமயம் வரும் பொழுது(முன்பு எந்த கருத்தும் சொல்லாமல்) பயன்படுத்தி கொள்கிறீர்களே என்று தான் சொன்னேன். ஒரே ஒரு எடுத்துக்காட்டு. பைத்தியக்காரன் சுகுணாவை பற்றி ஒரு அகழாராய்சி பதிவு எழுதியவுடன் அவரிடம் நீங்கள் கேட்ட கேள்விகள் – ஈழ போராட்டம் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது உலக திரைப்படம் போடுகிறீர்கள். ஒரு capitalist நிறுவனத்தில் சென்று உங்கள் படங்களை போடுகிறீர்கள். இது போன்றவற்றை சொன்னேன்.
மணிகண்டன், வினவு பின்னூட்டத்தை பற்றி நீங்கள் சொல்வது வேடிக்கை… ஈழம், முதலாளித்துவம் பற்றி பற்பல பதிவுகளில் வினவு தனது கருத்தை சொல்லியபின், வினவின் கருத்து இதுதான் என்பது சம்பந்தப்பட்ட பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் பகிரங்கமாக தெரிந்தபின் ‘பயன்படுத்தி கொள்ளல்’ எங்கேயிருந்து வந்த்து. அப்படியே ‘தேவையான சமயத்தில்’ ஒரு நிகழ்வை குறிப்பிட்டு எழுதுவதினால் ‘பயன்’ அதிகமென்றால் அதை எழுதுவதில் என்ன தவறு???? வினவை மதிப்பீடு செய்வது இருக்கட்டும், நற்குடி பிரச்சனையை பற்றி உங்கள் கருத்துக்களை பதியவும்.
நற்குடி குறித்தான எனது கருத்தை செய்யது வலைப்பதிவில் பின்னூட்டமாக எழுதியுள்ளேன்.
பைத்தியக்காரன் ஒவ்வொரு மாதமும் உலகத்திரைப்படம் குறித்தான அறிவிப்பை செய்து வந்துள்ளார். அவருடைய எந்த பதிவிலும் ஈழம்/உலக திரைப்படம் குறித்தான வினவின் கருத்துக்கள் இல்லை. ஆனால் திடீரென்று சுகுணாவை குறித்து எழுதியவுடன் கோவம் கொண்டு அந்த கேள்வியை பைத்தியக்காரனிடம் எழுப்பினார். இதைத் தான் பயன்படுத்திகொள்வது என்று கூறினேன். உங்களுக்கு புரிந்திருக்கலாம். புரியாமலும் இருக்கலாம். வினவிற்க்கு நான் கூறவந்தது முற்றிலும் புரிந்திருக்கும்.
மணி, புரியாமலில்லை, அது வேடிக்கை என்றுதான் சொல்கிறேன், அந்த பின்னூட்டத்தை மீண்டும் போய் வாசிக்கவும், அதில் நீங்கள் குறிப்பிடும் அம்சமா பிரதானமாக உள்ளது? மையாமான வாதத்திற்கு வலு சேர்க்கவே எடுத்தாளப்பட்டது. அதை விடுங்கள். நீங்கள் இங்கே சொல்ல வருவது என்ன? ஒரு கருத்தை உடனோ சொல்லவேண்டுமா அல்லது சொல்லக்கூடாதா?? பைத்தியக்காரனிடத்தில் தாமதமாக சொன்னது தவறா இல்லை இங்கே உடனே சொன்னது தவறா??? செய்யது தளத்தில் நீங்கள் பதிந்தமையால் இங்கே அதை பதியாமல் இருப்பது சரியா, அப்போ வினவு உலக சினிமா இயக்கத்த பத்தி வேறு எங்கேயோ எழுதிவைத்து பல மாதங்கள் கடந்த பின்னர் பைத்தியக்காரனிடத்தில் விமர்சனம் செய்தால் அது சரியா?? தவறா??? இங்கே அந்த பிரச்சனையை நீங்கள் இழுத்துவந்திருஃக்கும் ‘நோக்கம்’ என்ன????
அந்த பிரச்னையை இங்கு இழுத்து வந்தது தேவையில்லாதது என்று கூறலாம். “நோக்கம்” என்ன என்று கேட்டால் இனி தான் யோசிக்கவேண்டும். படித்தவுடன் அதை கேட்கவேண்டும் என்று தோன்றியது. கேட்டாயிற்று. அவ்வளவே.
வினவு ஐயப்பமலை பதிவில் யோசித்ததை போல தான் நானும் அவர்களுக்கு(சுமஜ்லா மற்றும் சிலருக்கும்) மேலும் பிரச்சனையை வளர்க்கக் கூடாது என்று தனிப்பதிவோ/ ஒவ்வொரு பதிவிலும் பின்னூட்டமோ போடவில்லை.
அண்ணன் திரு. உண்மைத்தமிழனார் சில விஷயங்களைச் சொன்னார் – பல விஷயங்களைச் சொல்லவில்லை..
அவர் சொல்லாத விஷயங்களின் கணத்தை அவர் சொல்லும் சிலவற்றை உரக்கச் சொல்வதன் மூலம் மறைக்க முடியுமா என்று
முயற்சித்துப் பார்த்துள்ளார் – good try! ஆனால் பரிதாபமாகத் தோற்றுப் போகிறார்.
//ஐயப்பன் கோவில் விவகாரம்.. ஒவ்வொரு கோவிலுக்கும், ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு வரலாறும், நடைமுறைக் கோட்பாடுகளும் உண்டு.//
அதே so called “நடைமுறைக் கோட்பாடுகளாகத்” தான் அவர்கள் பர்தா விஷயத்திலும் சொகிறார்கள் அண்ணே. பாவம்
ஐய்யப்பன் சமாச்சாரத்தின் உங்களுக்கு முக்கியமாகத் தோன்றும் “நடைமுறைக் கோட்பாடுகள்” பர்தாவிஷயத்தில் மட்டும்
எப்படிண்ணே… ஆணாதிக்கமாகத் தெரிகிறது?
நாங்க மொத்தமா ரெண்டுபக்கமுமே ஆணாதிக்கம் என்பது உங்களுக்கு “இந்தாண்டின் கடைசி கட்டத்தில் நல்லதொரு
நகைச்சுவையாகத்” தெரிகிறது – தனியா சிரிக்காதீங்கண்ணே.. லூசுன்னு சொல்லிப்பிடுவாய்ங்க.
//ஓ முருகா.. இவர்களிடத்தில் போய் இப்படி தமிழைக் கொடுத்து அல்லல்பட வைக்கிறாயே.. கொடுமைடா சாமி..!//
என்ன செய்வது உண்மை, எங்களிடம் தமிழைக் கொடுத்து உங்களை அல்லல்பட வைத்த முருகன் மேல் கருணை காட்டி விட்டுவிடுங்கள்.
ஆனால், எங்களுக்கு தமிழைக் கொடுத்த முருகன், சிதம்பரம் நடராஜனுக்கு தமிழை மறுக்கும் கூட்டத்தைக் கருணை காட்டி விட்டிருக்கிறானே,
இதற்கு என்ன சொல்கிறீர்கள்? இல்லை தமிழின் மீதும் கவிதையின் மீதும் திடீர் பாசத்துடன் பொங்கி வந்திருக்கும் நீங்கள், ஒரு நாள் – ஒரே
நாள் திருச்சிற்றம்பல மேடையேறி தமிழில் தான் கொஞ்சம் பாடிப் பார்க்கலாமே? அங்கே தமிழில் பாட மறுக்கப்படும் உரிமைக்காக குரல்
கொடுக்க முன்வராத “உண்மைகளுக்கு” தமிழில் தொழுகை அழைப்பு வரவில்லையே என்று கேட்க ஒரு தனி தைரியமும் வேண்டும் – மான ரோஷம்
இல்லாமலும் இருக்க வேண்டும்…
//என்னுடைய இந்த 40 வருட கால அனுபவத்தில்// எங்காவது மாதவிடாய்க்காலத்தில் பெண்கள் கோயிலுக்குப் போகமுடிந்திருக்கிறதா? மாதவிடாய்
அல்லாத காலத்திலேயே வேலைக்குப் போகும் பெண்கள் வேசிகள் என்று சொன்ன சங்கரனை பார்த்து பொத்திக் கொண்டிருந்த “உண்மைகள்”…
மாதவிடாய் அல்லாத காலத்தில் கூட பெண்களை மாலை போட அனுமதிக்க மறுக்கும் கண்டரரு கும்பலைக் கண்டிக்க மறுக்கும் “உண்மைகள்”..
பர்தா விஷயத்தில் மட்டும் சொம்பைத் தூக்கிக் கொண்டு வந்துவிடும் மர்மம் தான் என்ன?
//ஆண்டவனையே உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் மீண்டும், மீண்டும் கேட்கிறேன் எதற்கு உங்களுக்கு இந்த மதப் பிரச்சினை..? மதத்தை விட்டொழித்துவிட்டு சமூகத்தை சீர்த்திருத்தப் போகலாமே..? உங்களை யார் மதத்தைத் தூக்கிப் பிடிக்கச் சொன்னது..?//
ஆலோசனைக்கு நன்றி “உண்மை” – உங்கள் ஆலோசனை இங்கே எவருக்கும் தேவையில்லை. ஆனா ஒன்னு சொல்லுங்க – இந்த எழவெடுத்த
மதம் சமூகத்திலில்லாமல் அந்தரத்தில் எங்காவது தொங்கிக் கொண்டிருக்கிறாதா என்ன?
தோழர் கார்க்கி நறுக்குதெறித்தாற் போல விவாதங்களை முன் கொண்டு செல்வதற்கு வாழ்த்துக்களும், நன்றியும், மற்ற தோழர்கள் இதில் பங்கு பெறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
தோழர்,
எதுவாக இருந்தாலும் அவங்களே சண்டை போட்டுக்குவாங்க.. ஒண்ணு விவாதம் பண்ணுங்க.. இல்லன்னா என்னைய மாதிரி வேடிக்கை பாருங்க. ச்சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தி விடாதீங்க………
தோழர்.கார்க்கியை வன்மையாகக் கண்டிக்கிறேன் உண்மைத்தமிழன் மாதிரியான கேஸ்களுக்கு எல்லாம் விலாவரியாகப் பதில் சொல்லிக்கொண்டிருபதால்.
\\
உண்மைத்தமிழன்
says: December 30, 2009 at 2:04 pm
வினவு..
நீங்க நினைச்சது நடந்தேறிவிட்டதா..? திருப்தியா போய்த் தூங்கிட்டு அடுத்த சொம்பைத் தூக்கிட்டு வாங்க..!
//
அடி பின்னிட்டிங்க உண்மைத்தமிழன். ஆனா இந்த வறட்டு தவளைகளுக்கு மண்டையில் எதுவும் ஏறாதே என்ன செய்வது.
பார்ப்பனீயம் என்பது philistine, spartan போல் ஒரு குணத்தினைகே குறிக்கும் சொல். இசுலாமிய பார்ப்பனீயம் என்பதும் ஏற்புடைய பிரயோகம் தான்.
கரெக்டு டாக்டர் !
[[[அண்ணன் திரு. உண்மைத்தமிழனார் சில விஷயங்களைச் சொன்னார் – பல விஷயங்களைச் சொல்லவில்லை.. அவர் சொல்லாத விஷயங்களின் கணத்தை அவர் சொல்லும் சிலவற்றை உரக்கச் சொல்வதன் மூலம் மறைக்க முடியுமா என்று முயற்சித்துப் பார்த்துள்ளார் – good try! ஆனால் பரிதாபமாகத் தோற்றுப் போகிறார்.
//ஐயப்பன் கோவில் விவகாரம்.. ஒவ்வொரு கோவிலுக்கும், ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு வரலாறும், நடைமுறைக் கோட்பாடுகளும் உண்டு.//
அதே so called “நடைமுறைக் கோட்பாடுகளாகத்”தான் அவர்கள் பர்தா விஷயத்திலும் சொகிறார்கள் அண்ணே. பாவம்
ஐய்யப்பன் சமாச்சாரத்தின் உங்களுக்கு முக்கியமாகத் தோன்றும் “நடைமுறைக் கோட்பாடுகள்” பர்தா விஷயத்தில் மட்டும்
எப்படிண்ணே… ஆணாதிக்கமாகத் தெரிகிறது?]]]
கார்க்கியண்ணே..! கிறிஸ்துவ தேவாலயங்களில் ஆண், பெண் அனைவரும் மண்டியிட்டு வணங்குதலும், பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொள்ளுதலும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு பாதிரிகள் என்று சொல்லப்படுபவர்கள் நடமாட அனுமதித்திருப்பதும், தொழுகைகள் நடக்குமிடங்களில் ஆண்கள் மட்டுமே சென்று பங்கெடுத்துக் கொள்வதுமாக மிக முக்கிய மதங்களில் பல்வேறு நடைமுறைகள், பின்பற்றல்கள் உள்ளன. பக்தி உண்டெனில்,, அனைவரும் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்கள்.. பக்தி இல்லாதவர்களின் கூச்சலிட்டு என்ன புண்ணியம்..? அதனால் யாருக்கு என்ன லாபம்..?
எந்தப் பெண்ணாவது மாரியம்மன் கோவிலுக்கு வருவேன். கும்பிட மாட்டேன். வயிற்றில் மாவிளக்கு ஏற்ற மாட்டேன். அர்ச்சகரிடம் குங்குமம் வாங்கிக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால் அதனை அவளுடைய குடும்பத்தினரால்கூட தடுக்க முடியாது.. தடுக்கவும் மாட்டார்கள். இஷ்டமிருந்தால் செய். இல்லாவிட்டால் ஒதுங்கி நில். இதுதான் அந்த இடத்தில் கிடைக்கும் பதில்.. இதில் எந்தப் பெண் இதனை அடிமைத்தனம் என்று சொல்கிறாள்..? நான் கேள்விப்பட்டதே இல்லை..!
இதேபோல் கிறித்துவ தேவாலயங்களின் உள்ளே முக்காடிட மாட்டோம்.. முழங்காலிட மாட்டோம் என்று கூச்சல் போடுவது அந்த இடத்தின் நடைமுறையை அவர் ஒருவருக்காக மாற்ற வேண்டிய கோரிக்கை. அவருக்குப் பிடிக்காவிட்டால் அவர் வீட்டில் இருந்தே இயேசுவை வேண்டலாம்.. எந்த பாதிரி வந்து தடுக்க முடியும்..?
தொழுகைகளில் நாங்களும் பங்கேற்போம் என்று பல ஊர்களில் இஸ்லாமிய பெண்கள் கோரிக்கையெழுப்பி வருகிறார்கள். இதனைப் பரிசீலித்து அனுமதிக்க வேண்டியது அவர்களுடைய மதகுருமார்கள்.. அதுவும் அந்த வழிமுறை அவர்களுடைய கோட்பாட்டிற்கு உட்பட்டதுதான் என்றால் செய்யலாம். இல்லையெனில் அவரவர் வீட்டில் இருந்தே ஆண்டவனை வணங்கலாம்.. எல்லா மதங்களிலும் ஆண்டவன் எங்கும் இருக்கிறான் என்றுதானே சொல்கிறார்கள்.
நான் கோவிலுக்குப் போய்தான் முருகனை வணங்குகிறேன் என்றில்லை. வீட்டில் இருந்தும்.. அது என் விருப்பம். ஆனால் கோவிலுக்குள் கால் வைத்த பின்பு அதையும் எனது வீடு போல் பாவித்து வணங்குவேன் என்பது தவறு..!
[[[நாங்க மொத்தமா ரெண்டு பக்கமுமே ஆணாதிக்கம் என்பது உங்களுக்கு “இந்தாண்டின் கடைசி கட்டத்தில் நல்லதொரு
நகைச்சுவையாகத்” தெரிகிறது – தனியா சிரிக்காதீங்கண்ணே.. லூசுன்னு சொல்லிப்பிடுவாய்ங்க.]]]
நான் அதனைச் சொல்லவில்லை. வினவு தன்னைத்தானே முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொண்டதற்குத்தான் நகைச்சுவை என்று சொன்னேன். வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே.. “ஏய் எல்லாரும் பாருங்கப்பா.. நானும் ரெளடிதான்.. நானும் ரெளடிதான்..” என்று.. அதுபோல் காமெடியாக உள்ளது..
[[[//ஓ முருகா.. இவர்களிடத்தில் போய் இப்படி தமிழைக் கொடுத்து அல்லல்பட வைக்கிறாயே.. கொடுமைடா சாமி..!//
என்ன செய்வது உண்மை, எங்களிடம் தமிழைக் கொடுத்து உங்களை அல்லல்பட வைத்த முருகன் மேல் கருணை காட்டி விட்டுவிடுங்கள்.
ஆனால், எங்களுக்கு தமிழைக் கொடுத்த முருகன், சிதம்பரம் நடராஜனுக்கு தமிழை மறுக்கும் கூட்டத்தைக் கருணை காட்டி விட்டிருக்கிறானே, இதற்கு என்ன சொல்கிறீர்கள்? இல்லை தமிழின் மீதும் கவிதையின் மீதும் திடீர் பாசத்துடன் பொங்கி வந்திருக்கும் நீங்கள், ஒரு நாள் – ஒரே நாள் திருச்சிற்றம்பல மேடையேறி தமிழில்தான் கொஞ்சம் பாடிப் பார்க்கலாமே? அங்கே தமிழில் பாட மறுக்கப்படும் உரிமைக்காக குரல் கொடுக்க முன்வராத “உண்மைகளுக்கு” தமிழில் தொழுகை அழைப்பு வரவில்லையே என்று கேட்க ஒரு தனி தைரியமும் வேண்டும் – மான ரோஷம் இல்லாமலும் இருக்க வேண்டும்…]]]
அண்ணே.. அதுதான் தீர்ப்பு வந்து பாடியும் முடித்தாகிவிட்டதே.. பிறகென்ன..? தமிழுக்கும், கடவுளுக்கும் நான் எதிரியல்ல.. அங்கே நடந்தது முறைகேடுதான்.. அதில் சந்தேகமில்லை..! இப்போதும் தினமும் யாரேனும் ஒருவர் சித்சபையில் தமிழில் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்.. நீங்க எதுக்கும் வருத்தப்படாதீங்க..!
//என்னுடைய இந்த 40 வருட கால அனுபவத்தில்//
எங்காவது மாதவிடாய்க்காலத்தில் பெண்கள் கோயிலுக்குப் போக முடிந்திருக்கிறதா? மாதவிடாய் அல்லாத காலத்திலேயே வேலைக்குப் போகும் பெண்கள் வேசிகள் என்று சொன்ன சங்கரனை பார்த்து பொத்திக் கொண்டிருந்த “உண்மைகள்”… மாதவிடாய் அல்லாத காலத்தில் கூட பெண்களை மாலை போட அனுமதிக்க மறுக்கும் கண்டரரு கும்பலைக் கண்டிக்க மறுக்கும் “உண்மைகள்”.. பர்தா விஷயத்தில் மட்டும் சொம்பைத் தூக்கிக் கொண்டு வந்துவிடும் மர்மம்தான் என்ன?]]]
நிச்சயமாக இதில் பெண்கள் தாங்களேதான் அந்த நேரத்தில் கோவிலுக்குச் செல்வதை நிறுத்திக் கொள்கிறார்களே தவிர.. எந்த ஆணும் “இன்னைக்கு நீ விலக்கா..? இல்லைன்னா கோவிலுக்கு வா” என்று சொல்லிக் கேள்விப்பட்டதே இல்லை.. தம்பி முதல்ல வீட்டு நிலவரத்தை அக்கம்பக்கம் விசாரிச்சுட்டு அப்புறமா வந்து பேசு.. என் வீட்ல இருந்த மூணு பெண் ஜீவன்கள்தான் என்னை கோவிலுக்கு அழைத்துச் சென்றார்களே தவிர.. எனது அப்பாவோ, அண்ணனோ அல்ல..!
கண்டரரு விஷயத்தில் இப்போதுவரையிலும் அவருக்குத் தடா உத்தரவுதான் போட்டு வைத்திருக்கிறார்கள். வேறென்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்.?
காஞ்சிபுரம் சங்கரன் மேட்டரை லூஸில் விட வேண்டியது.. அவர் சொல்லி தமிழ்நாட்டில் கோவிலுக்குப் போய் சாமியை பார்ப்பவர்கள் யாருமில்லை.. பின் எதற்கு இந்தக் கேள்வி..? காலத்திற்கேற்றாற்போல் மாறத் தெரியாத பழங்குடியினத்தின் தலைவராகத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.. அவ்வளவுதான்.. அவருடைய தலைமைதான் தவறே ஒழிய.. பீடம் தவறில்லை..! அது ஆன்மீகத்தின் வழி வந்தது..? அவரைப் போன்ற சில்லரை மனிதர்கள் செய்தவைகளுக்கு ஆன்மீகத்தை ஏன் குற்றம் சொல்கிறீர்கள்..?
//ஆண்டவனையே உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் மீண்டும், மீண்டும் கேட்கிறேன் எதற்கு உங்களுக்கு இந்த மதப் பிரச்சினை..? மதத்தை விட்டொழித்துவிட்டு சமூகத்தை சீர்த்திருத்தப் போகலாமே..? உங்களை யார் மதத்தைத் தூக்கிப் பிடிக்கச் சொன்னது..?//
ஆலோசனைக்கு நன்றி “உண்மை” – உங்கள் ஆலோசனை இங்கே எவருக்கும் தேவையில்லை. ஆனா ஒன்னு சொல்லுங்க – இந்த எழவெடுத்த மதம் சமூகத்திலில்லாமல் அந்தரத்தில் எங்காவது தொங்கிக் கொண்டிருக்கிறாதா என்ன?]]]
ஆம்.. நிச்சயமாக.. மதத்தைக் கையில் எடுப்பது உங்களைப் போன்ற வேலைவெட்டியில்லாதவர்கள்தான்.. அவரவர் குடும்பம், குழந்தைகளை நல்ல முறையில் பேணிக் காத்து நற்பண்புகளுடன் வளர்க்க முற்பட்டாலே போதும்.. அதைவிடுத்து இது போன்று அல்பத்தனத்தில் மூக்கை நுழைத்து நேரத்தை வீணாக்கி இதனால் யாருக்கு என்ன புண்ணியம்..?
உரக்க வழிமொழிகிறேன்.
//பக்தி உண்டெனில்,, அனைவரும் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்கள்.. பக்தி இல்லாதவர்களின் கூச்சலிட்டு என்ன புண்ணியம்..? அதனால் யாருக்கு என்ன லாபம்..?//
உண்மையண்ணே… “பக்தி உண்டெனில்…” எனும் இடத்தில் “இசுலாத்தின் கட்டுப்பாடுகளில் நம்பிக்கை உண்டெனில்” என்பதைப்
போட்டுக் கொண்டால், சுமஜ்லா அவர்கள் சொல்லிக்கொண்டிருந்த பதில்களின் தொனி தெரிகிறதல்லவா?
இந்தக் குசு உடறவன், உட்டு முடிச்ச ஒடனே.. அக்கம்பக்கத்திலிருப்பவனை ஒரு பார்வை பார்ப்பான் பாருங்க… அப்படியே
இருக்குங்க நீங்க பேசறது.
//நான் கோவிலுக்குப் போய்தான் முருகனை வணங்குகிறேன் என்றில்லை. வீட்டில் இருந்தும்.. அது என் விருப்பம். ஆனால் கோவிலுக்குள் கால் வைத்த பின்பு அதையும் எனது வீடு போல் பாவித்து வணங்குவேன் என்பது தவறு..!//
கரெக்டுண்ணே.. ஆனா பொதுவான இடம்னு வந்த பின்னே.. அவனுக்கு ஒரு ரூல்ஸ் எனக்கு ஒரு ரூல்ஸ்னு ஏண்ணே தனித்தனியா
ரூல்ஸ் வச்சிருக்காங்க?
//அதுதான் தீர்ப்பு வந்து பாடியும் முடித்தாகிவிட்டதே.. பிறகென்ன..? தமிழுக்கும், கடவுளுக்கும் நான் எதிரியல்ல.. அங்கே நடந்தது முறைகேடுதான்.. அதில் சந்தேகமில்லை..! இப்போதும் தினமும் யாரேனும் ஒருவர் சித்சபையில் தமிழில் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்.. நீங்க எதுக்கும் வருத்தப்படாதீங்க..!//
அது தான் தீர்ப்பு வந்து பாடப்போனவங்க கதி என்னாச்சுன்னு பாத்தீங்களே…. அடுத்த நா சுத்துப்பட்டுல இருக்க தமிழால்
தொந்தி வளர்த்த சைவ ‘மட’அதிபதிகளெல்லாம் வீரமாக பதுங்கிக்கிடந்தார்களே.. அப்ப நீங்களாச்சும் கொஞ்சம் வீரமா வந்து
தமிழில் பாடி முருகனைக் கொஞ்சம் பெருமைப்படுத்தியிருக்கலாமே? அடுத்த நாள் மட்டுமில்லாமல் தொடர்ந்து வந்த
நாட்களிலும் எங்கள் தோழர்கள் தானே பாடினார்கள்? அது பக்தியைக் காப்பாற்றவும் இல்லை தமிழைக் காப்பாற்றவும் இல்லை –
அது மொழித்தீண்டாமைக்கெதிரான ஒரு போராட்டமாகச் சென்று பாடினார்கள்.
இன்றும் சிதம்பரத்தில் தமிழில் பாடுவது ஒரு போராட்டமாகத் தானிருக்கிறது – சந்தேகமிருந்தால் நீங்களே போய் ஒரு முறை
பாடிப் பாருங்கள்.
//நிச்சயமாக இதில் பெண்கள் தாங்களேதான் அந்த நேரத்தில் கோவிலுக்குச் செல்வதை நிறுத்திக் கொள்கிறார்களே தவிர..//
எனக்கு அடிமைச் சீனத்தின் கவிஞன் ஒருவன் அந்த அடிமைகளின் குணத்தைப் பார்த்து “எங்களுக்கு விடுதலை வேண்டாம் –
சவுக்கடி போதும்” என்று பாடியது தான் நினைவுக்கு வருகிறது.
இசுலாமியப் பெண்களும் தாங்களே விரும்பி பர்தா போட்டுக் கொள்கிறோம் என்று சொல்லும் இடத்துக்கு சொம்பைத் தூக்கிக்
கொண்டு ஓடும் பதிவர்களைப் பார்த்து நீங்கள் ஏன் எதுவும் சொல்லவில்லை?
திணிக்கப்பட்டாலும் சரி தானாக ஏற்றுக் கொண்டாலும் சரி – அது அடிமைத்தனம் தான்!
கண்டரரு, சங்கரன் விஷயத்தில் நீங்கள் சொல்வது எப்படியிருக்கிறது தெரியுமா? வடிவேலு ஒரு படத்தில் தன்னிடம் கடன் வசூலிக்க வந்தவர் கிட்டே போய், அவரிடம் பணிந்து பேசுவதை மெல்லமாக அவருக்கு மட்டும் கேட்குமாறும் – அந்த வாக்கியங்களின் முடிவை வீரமாக் தொலைவில் நிற்கும் தன் நன்பர்களுக்கு கேட்கும் படி சத்தமாகவும் பேசுவாரே அப்படி இருக்கிறது.
“ஆமாமா.. அவரு சொன்னது தப்புதான்…” என்று மெல்லமாக முணகி விட்டு “ஆன்மீகத்தை ஏன் குற்றம் சொல்கிறீர்கள்?” என்று சத்தமாகக் கேட்கிறீர்களே…. இந்த புழுக்கள் நீங்கள் மெச்சும் ஆன்மீக மலக்குட்டையிலிருந்து தான் உற்பத்தியாகி வந்துள்ளது
என்பதை ஏன் ஆய்வு செய்து பார்க்க மறுக்கிறீர்கள்?
//இது போன்று அல்பத்தனத்தில்//
மதம் ஒரு அல்பத்தனம் என்று ஒப்புக்கொண்டு சேம் சைடு கோல் போட்டதற்கு நன்றி! ஆனால் அந்த அல்பத்தனம் சமூகத்தில்
நிலவும் வரை சும்மா இருக்க முடியாது உண்மையாரே.
சுற்றி வளைக்காமல் சொல்லவும். பள்ளியில் சேர்க்கும் போதோ அல்லது வேறு தேவை படும் இடத்திலோ உம் குழந்தைகள் மதம் என்ன என்று கேட்டல் நீவிர் என்ன மதம் என்று குறிப்பிடுவாய்.
கிரிகிரி சட்டத்துல சாதி மதமற்றவன்று பதிவு செய்ய வழியிருக்கு.
கேள்வி. நீர் என்ன செய்வீர் என்பது தான். வழி இருப்பது எல்லாருக்கும் தெரியும் தம்பீ.
நீர் இந்து, சந்து என்று எழுதி b.c, o.b.c என்று எழுதாமல் சாதி, மதம் அற்றவன் என்று எழுதி உங்கள் பிள்ளையின் வாழ்க்கையில் மண்ணள்ளிப் போடுவீர்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை.
தான் செய்யாததை அடுத்தவன் செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது hypocricy.
அனானி, இதில் என்ன மண்ணள்ளி போடுவது இருக்கு, இதைத்தான் காலம்காலமாக பலர் வருகிறார்கள் (நானும்தான்) அதனாலதான் சட்டத்துல அதுக்கு எடமிருக்கு.
[[[உண்மையண்ணே… “பக்தி உண்டெனில்…” எனும் இடத்தில் “இசுலாத்தின் கட்டுப்பாடுகளில் நம்பிக்கை உண்டெனில்” என்பதைப்
போட்டுக் கொண்டால், சுமஜ்லா அவர்கள் சொல்லிக்கொண்டிருந்த பதில்களின் தொனி தெரிகிறதல்லவா? ]]]
ஆனால் அந்த நம்பிக்கையை ஏற்றுக் கொண்டவர்கள்தான் நற்குடியினர் என்றோ.. மற்றவர்களெல்லாம் கெட்டகுடிகள் என்றோ மற்றவர்கள் சொல்வதில்லையே.. இந்த அம்மையார் மட்டும்தானே சொல்கிறார்..! இஸ்லாத்தில்கூட தீவிர மதப் பற்றில்லாமலும் பலரும் இருக்கிறார்கள்.
[[[கரெக்டுண்ணே.. ஆனா பொதுவான இடம்னு வந்த பின்னே.. அவனுக்கு ஒரு ரூல்ஸ் எனக்கு ஒரு ரூல்ஸ்னு ஏண்ணே தனித்தனியா
ரூல்ஸ் வச்சிருக்காங்க?]]]
யார் சாமி தனியா வைச்சிருக்கா..? எல்லா கோவிலிலும் எல்லா மனுஷனும் நுழையறதுக்கு தகுதியும் இருக்கு. அனுமதியும் இருக்கு. இன்னும் அனுமதியில்லாம இருக்குன்னு அதுக்கு குத்தம் சொல்ல வேண்டியது கோவில்களை நிர்வகிக்கும் அரசுகளைத்தான்..! திராவிட இயக்க அரசுகளாகவும், பெரியாரின் வழி வந்தததாகச் சொல்லிக் கொள்பவர்களாகவும், வெறும் ஓட்டரசியலை மையமாக வைத்தே அரசியல் பிழைப்பு நடத்தி வருவதாலும்தான் இந்த நிலைமை.
இன்னும் ஒன்று நமது சக மக்களுக்கும் ஏன், எதற்கு, எப்படி என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவமும், அறிவும் இல்லை.. இன்னும் 40 ஆண்டுகளில் இந்த நிலைமை முற்றிலும் மாறி அனைவரும் சமம் என்பது வந்துவிடும்.
கண்டரரு விஷயத்தில் இனிமேற்கொண்டு சட்டம்தான் செயல்பட வேண்டுமே ஒழிய மதமோ, பீடமோ, என்னைப் போன்ற அப்பாவி பக்தனோ எதுவும் செய்துவிட முடியாது..!
அல்பத்தனம் மதத்தில் அல்ல.. அதை வைத்து பிழைப்பு நடத்த சில மனிதர்களின் செயல்களினால்தான்..!
//யார் சாமி தனியா வைச்சிருக்கா..? எல்லா கோவிலிலும் எல்லா மனுஷனும் நுழையறதுக்கு தகுதியும் இருக்கு. அனுமதியும் இருக்கு. இன்னும் அனுமதியில்லாம இருக்குன்னு அதுக்கு குத்தம் சொல்ல வேண்டியது கோவில்களை நிர்வகிக்கும் அரசுகளைத்தான்..! திராவிட இயக்க அரசுகளாகவும், பெரியாரின் வழி வந்தததாகச் சொல்லிக் கொள்பவர்களாகவும், வெறும் ஓட்டரசியலை மையமாக வைத்தே அரசியல் பிழைப்பு நடத்தி வருவதாலும்தான் இந்த நிலைமை.//
இந்தியா முழுக்க கோவில் இருக்கு! எல்லா பக்கமும் பார்ப்பணிய ஆதிக்கம் தான் இருக்கு, தாழ்த்தபட மக்கள் இன்னும் முன்னேறாமல் இருப்பது தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் தான் அதிகம்!, அம்பேத்கார் மட்டும் இல்லைனா வடநாட்டில் தாழ்த்தபட்டவர்களை ஹிட்லர் மாதிரி கொன்னு போட்டிருப்பானுங்க!
குஜராத்தில் அதிகமாக இரட்டை குவளை முறை இருக்குன்னு ஒரு தடவை டோண்டு பதிவில் லிங்க் கொடுத்திருந்தேன் நியாபகமுஇருக்கா!?
அட லூசுத்தமிழா,
நற்குடி பற்றி திரும்பத் திரும்ப பேசற நீ, சூத்திரன் என்றால் வேசிமகஎன்று சொல்லும் இந்துமதம் பற்றி என்ன கருத்து என்றுதான் சுகுணா கேட்டார். அதற்குப் பதில் சொல்.
//கண்டரரு விஷயத்தில் இனிமேற்கொண்டு சட்டம்தான் செயல்பட வேண்டுமே ஒழிய மதமோ, பீடமோ, என்னைப் போன்ற அப்பாவி பக்தனோ எதுவும் செய்துவிட முடியாது..!//
சுமஜ்லா மற்றும் இஸ்லாம் மீது நீங்கள் வைத்துள்ள விமர்சனத்துக்கு மட்டும் அப்பாவி பக்தனாகிய நீங்கள் ஏதாகிலும் செய்து விட முடியுமா?
ஆனால் சுமக்லாவையோ அல்லது இஸ்லாமிய பிற்போக்குத்தனத்தையோ அம்பலப்படுத்தி கண்டிக்கும் போது உங்களுக்கு நீங்கள் ஒரு அப்பாவி பக்தன் என்ற உண்மை உறுத்துவதில்லையே ஏன்?
மாறாக, பார்ப்பனிய/சாதிய ஒடுக்குமுறை, பெண்ணடிமைத்தனம், தீண்டாமை குறித்து பேசும் போது மட்டும் நீங்கள் ஒரு அப்பாவி பக்தன் என்கிற உண்மை உங்களுக்கு உறைக்கிறதே ஏன்?
என்னால என்னப்பா செஞ்சிர முடியும்? நான் ஒரு அப்பாவி பக்தனல்லவா? இப்படி சொல்லி தப்பிக்க முடிகிறதே உங்களா?
எப்படி வந்தது இந்த செலக்டிவ் உண்மைனிசியா? உண்மைத்தமிழன் என்று பெயர் வைத்துக் கொண்டதாலேயா?
அசுரன்
நச் நச் விளக்கங்கள்!
சூப்பர்!
[[[களப்பிரன் says:
December 30, 2009 at 4:38 pm
அட லூசுத்தமிழா, நற்குடி பற்றி திரும்பத் திரும்ப பேசற நீ, சூத்திரன் என்றால் வேசிமக என்று சொல்லும் இந்துமதம் பற்றி என்ன கருத்து என்றுதான் சுகுணா கேட்டார். அதற்குப் பதில் சொல்.]]]
நான் அதனை நம்பவும் இல்லை.. ஏற்கவும் இல்லை..! இது மதத்திற்கும் எனக்குமான பிரச்சினை மிஸ்டர் களப்பிரர்..! கடவுளை வணங்குவதும், மதங்களை நம்புவதும், அதன் வழி நடப்பதும் அவரவர் தனி மனித உரிமை. இதனால் உமது உரிமை எப்போது, எப்படி பாதிக்கப்பட்டது..?
நீர் அதனை நம்பவும் ஏற்கவும் இல்லையென்றால் இந்துவாக இருக்கவும் முடியாது. முருகனுக்குச் சொம்பு தூக்கவும் முடியாது. ௯௭ சதவிகிஒத மக்களை தேவடியா மகன் என்று சொல்வது உனக்கும் மததிற்குமான பிரச்சினையா மிஸ்டர் லூசுத்தமிழன்
////சினிமா, மொக்கை, அரட்டை, அக்கப்போர், தொடர்பதிவு, வடிவேலு ஸ்லாங், மீதபர்ஸ்டு, முதுகு சொறிதல் என்று பிழைப்பை நடத்தும் பதிவுலகின் ஆன்மாவைக் /// பதிவர்களும் சாதாரண மனிதர்கள் தாம். சந்திர மண்டலத்தில் இருந்து வரவில்லை. வெளியுலகில் இருப்பவர்களின் சராசரி மனோபாவம் மற்றும் கருத்தக்க்ளை தாம் இங்கும் பிரதிபலிக்கப்படுகிறது. அவ்வளவுதான்.
சரி, இணைய்ததில் மொக்கை, அரட்டை, கும்மி போன்றவை இருக்க கூடாதா என்ன ? இப்பவெ இதை ‘கட்டுபடுத்த’ நினைக்கிறீங்களே, செம்புரட்சி செய்து, அதிகாரத்தை கைப்பற்றினால், எதையெல்லாம் எப்படி கட்டுபடுத்துவீர்கள் என்று கற்பனை செய்கிறேன்.
’இணைய உலகில் இரு செம்புரட்சி’ என்று ஒரு பதிவு எழுத இருக்கிறேன். இணைய உலகை, hack செய்து அனைத்து தளங்களையும், செம்புரட்சியாளர்கள் கைபற்றி, கட்டுபடுத்த ஆரம்பித்தால் எப்படி இருக்கும் ? freedom of expression and free speech and contrary opinions இவை எப்படி இருக்கும் என்று இரு கற்பனை. Stalin and Mao’s suppression பற்றியும் ஒரு ஒப்பீடு. பார்க்கலாம்..
அதியமான்… இங்கே வினவு மொக்கை அரட்டை வேண்டாம் என்றோ அதைப்பற்றிய மதிப்பீடோ செல்லவில்லையே, மொக்கை முகமுடிக்களுக்கு பின்னே ஒளிந்திருக்கும் ‘மத’ங்களை அடையாளம் காட்டியிருக்கிறது. அவ்வளவே.. இது புரியவில்லையா????? வலிந்து வலிந்து கம்யூனிச எதிர்பை பதிவு செய்ய கடல் மலை விற்பனைக்கு பதிவுக்கு செல்லவும்…சம்பந்தமே இல்லாமல் இங்க வந்து பிதற்றதேவையில்லை
கேள்விக்குறி, ஈரோடு பதிவர் சந்திப்பு மொக்கை என்று எழுதியதற்காகவும், பொதுவாக பதிவுகள் பற்றிய generalised comments காகவும் தான் நான் எழுதியிருந்தேன். பிதற்றுவது நீர் தான்.
சரி, வினவு மற்றும் தோழர்களிடம் ஒரு கேள்வி : பதிவுகள் அனைத்தும் மார்கிசியம், பெரியாரியம், தலித்தியம், பாட்டளி வர்கம், வர்கப்போர், அமெர்க்க ஏகாதிபத்திய சதிகள், முதலாளித்துவ பயங்கரவாதம், திரிபுவாதிகள், போலி கம்யூனிஸ்டுகள், ஒரிஜினல் கம்யூனிசம், மாவோ, ஸ்டாலின் : இது போன்ற விசியங்களை ‘மட்டுமே’ எப்போதும் சொல்ல வேண்டுமா ? மொக்கை, ஆன்மீகம், கும்மி, சினிமா, etc என்று எதை பற்றி வேண்டுமானாலும் எழுதும் உரிமை basic rights of bloggers. அது நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இதை பற்றி தான், இப்படி தான் எழுதவேண்டும். மற்றவை எல்லாம் waste and useless என்ற பாணியில் விமர்சிப்பதுதான் ஃபாசிசத்தின் ஆரம்பம். கருத்து சுதந்திரத்தை நசுக்கும் ஆரம்பம். உண்மையில் அதிகாரம் ‘தோழர்களிடம்’ கிடைத்தால் கண்டிப்பாக சர்வாதிகாரிகளாக உருமாறுவர். இதை பற்றி தான் சொன்னேன். ஓ.கே.
அதியமான்,
நீங்கள் அனேகமாக அப்ஸஸிவ் கம்பெல்ஸிவ் டிஸ்ஸார்டரால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களோ என்று சந்தேகமாக இருக்கிறது – அதிலும் குறிப்பாக ‘புரட்சி’ எனும் வார்த்தை குறித்து சிந்திக்கும் போதும் / எழுதும் போதும்.
மகாபாரதத்தில், கிருஷ்ணனிடம் அர்ச்சுனன் போய்க் கேட்டானாம் “யார் உன்னை அதிகம் நினைக்கிறார்?” என்று. அதற்கு
கிச்சா சொன்னானாம் “சகுனி தான் என்னை அதிகம் நினைவில் வைத்திருக்கிறார்” என்று..
அது போல கம்யூனிஸ்டுகளை விட அதிகம் “செம்புரட்சி” பற்றி நீங்கள் தான் அதிகம் “சிந்திக்கிறீர்கள்” என்று நினைக்கிறேன்.
அனேகமாக உங்களின் இந்தக் “கவலையை” இருபத்தைந்தாயிரத்து எண்ணூத்தி பதினைந்தாவது தடவையாக சொல்லி
விட்டீர்கள்.
hahahahaha
🙂
🙂
அருமையான விவாதம் நண்பரே! உங்களுள் இத்தனை நாளாய் மறைத்து வைத்திருள்ளீர்கள்!
மலைத்து போய் உட்கார்ந்திருக்கேன்! ௩ மணிக்கு சாப்பிட்டது அதுகுள்ள செமிச்சிருச்சு!
கார்க்கி, பரவாயில்லையே, OCD பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்களே. செம்புரட்சி பற்றி எனக்கு அப்படி எல்லாம் இல்லை. சும்மா போட்டு வாங்கும் ஒரு வகை விளையாட்டு. உங்களை போன்ற தோழர்களின் கனவான செம்புரட்சி உண்மையில் உருவானால் அதன் மொத்த விளைவுகளை பற்றிய விவரங்கள் இன்னும் உங்களை போன்ற பலருக்கும் புரிவதில்லை. முக்கியமாக நான் தெளிவாக்க விரும்பியது, இந்த ‘இணையத்தில் இருக்கும் இந்த ‘கட்டற்ற சுதந்திரம்’ ; ஆனால் சர்வாதிகாரம் கோலோச்சும் நாடுகளில் இது வெகுவாக தடை செய்யப்பட்டுள்ளது. அது எவ்வகை சர்வாதிகாரமாக இருந்தாலும்.
மற்றபடி, இந்தி்யாவில் செம்புரட்சி எப்போதும் சாத்தியமில்லை தான். மாவோயிஸ்டுகளும் தொடர்ந்து hit and run செய்யும் கொரிலா முறையை கடந்து, ’மக்கள் யுத்தம்’ அல்லது mass movement ஆக மாறுவதும் சாத்தியமில்லை என்றும் கருதுகிறேன். ஓ.கே.
பதிவுல வினவுக்காரவுக பர்தா மேட்டரை கிழி கிழின்னு கிழிச்சுருக்காக. இன்ஃஉம் நெத்தியடி பாய் அண்ணாச்சியைக் காணமே?
அண்ணாச்சி இது நாயமா? நான் இப்பவே எஸ்கேப்பு
யாருக்கு தெரியும் அவரு இங்க என்ன பேருல எழுதிகிட்டிருக்காறோ?
\\
கேள்விக்குறி
says: December 30, 2009 at 3:58 pm
கிரிகிரி சட்டத்துல சாதி மதமற்றவன்று பதிவு செய்ய வழியிருக்கு.// எங்க சீனாவில அல்லது கியுபாவிலா
இங்கதான்யா!!!! ஒரு எழவும் தெரீல கருத்து சொல்ல வன்டாங்க…
அடேய் தற்குறி மேதையே அப்படி அந்த மாதிரி குறிப்பிட்ட தச்தாவேஜை காட்டமுடியுமா.
உன் வீட்டு அட்றச இங்க புன்னூட்டமா போடுடா புன்னாக்கு, ஒரு காப்பியனுப்பறேன்…
ஆனந்த விகடன்ல இந்த சட்ட வாய்ப்பை அடிப்படையா வைச்சி இடஓதுக்கீடு எதிர்ப்பு பார்ப்பனிய பிரச்சாரம் செய்ற கதை ஒன்னு இளைஞர் பகுதில வந்திருக்கு மிஸ்டர் கிரிகிரி அங்க ரிபெர் செய்யலாம்
இந்த கம்யுனிஸ்டு மன்னாங்கட்டிகளே இப்படிதானோ. பேசறதுக்கும் திருட்டுத்தனமா பணம் பிடுங்கி வயறு வளர்கருதுக்கும் உங்கள விட்ட யாரும் மிஞ்ச முடியாது பிடுங்கிகளா.
உங்கள் கருத்துக்களை முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். அனைத்து பிரபல மதங்களும் பெண்களைக் கீழ் நிலையிலேயே வைத்துள்ளன. ஆணின் அதிகாரத்தையும் மேன்மை நிலையையும் திரும்பத் திரும்ப நிறைய இடங்களில் வலியுறுத்துகின்றன.
பொதுவாக துஸ்பிரயோகமாக, மனித உரிமை அத்துமீறலாகப் பார்க்கப்படும் நிறைய விடயங்கள் பெண்ணுக்கு அவ்விடயம் நடக்கும் போது மட்டும் மதங்களின் பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது.
ஆனாலும் எமது சமுதாயத்தில் மிகக் கட்டுப்படுத்தப்பட்டு, சுயமாக சுதந்திரமாக சிந்திக்க வாய்ப்பளிக்காமல், முக்கியமாக எதிர்க் கேள்விகள் கேட்க வாய்ப்பளிக்காமல் பிள்ளைகள் வளர்க்கப்படுவதால், பெண்களே தம்மை கேவலப்படுத்துவதுடன், கேவலப்படுத்தும் ஆட்களையும் நூல்களையும் நியாயப்படுத்துவது தொடர்கிறது.
சுமஜ்லா எழுதிய ” மூடிவைத்த பதார்த்தத்தில்
வாசம் வராதென்று,
திறந்து வைத்து,
தேடிவரும் ஈசலுக்கும்,
நாடிவரும் எறும்புக்கும்
இரையாக்கும் கூட்டம்!”
இவ்வரிகள் என்னை மிகவும் பாதித்ததால் நான் பின்வரும் கருத்தை அவர் வலைத்தளத்தில் பதிந்தேன். அவர் அதை வெளியிடவில்லை அதனால் இங்கு பதிகிறேன்.
பர்தா அணியாத பெண்களெல்லோரும் உரிந்து விட்டு திரிபவர்கள் என்றா? அல்லது ஆண்கள் எல்லோரும் கேவலம் கெட்டவர்கள், வேறு வேலைகளே இல்லாமல் எந்நேரமும் புணர்ச்சி பற்றியே சிந்தித்திருப்பதால், ஒரு பெண்ணின் கை கண்ணில் பட்டால் கூட அவர்களுக்கு உணர்ச்சிப்பெருக்கை அடக்க முடியாது என்றா?
As a woman I find it very offensive. But I think that any decent man would be offended too.
இவ்வாறே சில வருடங்களுக்கு முன் அவுஸ்திரேலிய இஸ்லாமிய மதத்தலைவர் ஒருவர் பர்தா அணியாத பெண்களை திறந்து வைக்கப்பட்ட இறைச்சித் துண்டுக்கு ஒப்பிட்டு, அவ்விறைச்சித்துண்டை பூனை சாப்பிட்டால் அது பூனையின் பிழையல்லவென ஒரு பெண் கயவர் கும்பலால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு் கூறினார்.
உண்மைத் தமிழன் ஒன்றை கவனிக்க வேண்டும்… சும்ஜ்லாவை திட்டியும் ஆதரித்தும், கலகலப்ரியாவை புகழ்ந்தும், ஆதரித்தும் என மதத்தின் பெயரால் நடக்கும் இரண்டு தனிநபர்களின் துவேஷமாக போய்க்கொண்டிருந்த விவாதத்தை வினவின் இந்த பதிவுதான் சரியான தளத்திற்கு கொண்டுவந்துள்ளது. இங்கே யாரும் சும்ஜ்லாவையோ, கலகலப்ரியாவயோ பற்றி பேசவில்லை, மாறாக ஆணாதிக்கம், இசுலாம், பார்ப்பனியம் உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக சரியான திசையில் விவாதம் போய்க்கொண்டிருக்கிறது…. தனிநபர் ”தாக்குதல்”களினால் பதிவுலகம் இந்து முசுலீம் என அணிதிரளும் அபாயம்தான் இருந்த்து… இந்த பதிவு அதை மாற்றியிருப்பதுதான் உண்மை…முருகா ஞானபண்டிதா…இதே ஏன் உண்மைத்தமிழனுக்கு உணர்த்த மாட்டேங்குற.
ஆகா நாட்டாமை தோளில் செழுப்பு துண்டு போட்டுக்கொண்டு வந்து மரத்தடியில் குந்தி பிரச்சனையை பேசி தீர்த்து தீர்ப்பு சொல்லிட்டருப்பா. எல்லோரும் ஒரு ஒ போடுங்கப்பா.
///தனிநபர் ”தாக்குதல்”களினால் பதிவுலகம் இந்து முசுலீம் என அணிதிரளும் அபாயம்தான் இருந்த்து… இந்த பதிவு அதை மாற்றியிருப்பதுதான் உண்மை…முருகா ஞானபண்டிதா…இதே ஏன் உண்மைத்தமிழனுக்கு உணர்த்த மாட்டேங்குற.////
என்ன இப்புடி சொல்லிப்புட்டீக கேள்விகுறி,
அதுல தானே ஒரு கிளு கிளுப்பே இருக்கு. நாங்க ஒரு குருப்பா அவங்கள திட்டுவோம், அவங்க எங்கள திட்டுவாங்க.. இதெல்லாம் காலங்காலமா நடக்குறது தானே…
இதுக்கு போயி கோவிச்சுக்கிட்டு பதிவெல்லாம் போடுறதா? பாருங்க உ.த, கோவி, அல்லாரும் கூட்டமா வராங்க…
@ உண்மைதமிழன்,
பாஸ் இவுங்க எப்பவுமே இப்படி தான் அடிச்சுகிட்டே இருப்பாங்க..
இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ணமுடியுமா?
நாட்டாமை, இந்த இரான் இராக் பிரச்சனை, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பிரச்சனை அப்புறம் நம்மூரு தெலுங்கானா பிரச்ச்சனைஎல்லாம் எப்ப பைசல் பண்ணி தீர்ப்பு சொல்லப்போறீங்க. நாங் ஆவலோட இருக்கோம்.
யோவ் சொம்பு, பதிவுல காத்தேயில்ல மூச்சுமுட்டுது நீவேற ஏன்யா எடத்த அடைக்கற??? மொதல்ல கெளம்பு காத்து வறட்டம்..அப்புறமா உன் எடத்துல ஒபாமாவயும் ஒசாமாவையும் ஒக்காரவச்சு பாஞ்சாயத்து பண்ணலாம்…
நான் வினவை பற்றி என்னவோ நினைத்திருந்தேன். சரியா படிக்கல போலருக்கு..நாங்க முந்திய நாள் இரவு தக்காளி ரசமும், சிக்கனும் சாப்பிடவில்லை.. ச்ந்திப்பு நடந்த மதியம் தான் சாப்பிட்டோம். தகவலை பிழையை சரி செய்யவும்..
மிக்க நன்றி லிங்க்க்கு..நன்றிங்கோ..
அட… ஏனுங்க போடதா வடைய யாருங்க வினவுக்கு சொல்லியிருப்பாங்க…. உளவு சொன்னவரோ, எழுதிக்கொடுத்தவரோ தப்புத் தப்பா தகவல் கொடுத்திட்டாங்க போல….
சங்கமத்துக்கு வராம பூ.கண்ணாடி வச்சி பார்த்ததால கொஞ்ச மங்கின மாதிரி தெரிஞ்சிருக்கும்….. //மதுவறைக் கொண்டாட்டங்களில் பேசப்பட்ட வரலாற்றுப் புகழ் விவகாரங்கள் காதுகளுக்கு வரவில்லை //
பூ.கண்ணாடி கூட ஒரு இயர் போன் செட் பண்ணியிருந்தா என்ன பேசுனாங்கன்னு தெரிஞ்சிருக்கும்….
அண்ணன் வற்றது தெரீல எல்லாரும் வழிவிடுங்கடே
எனக்கும் இந்த கம்பெனியில மெம்பர்ஷிப் கொடுங்க!
மேலோட்டமா பாத்தா எல்லா மதங்களையும் விமரிசைக்கும் சாக்கில், கடைசியில் நீங்களும் ஒரு மதத்தை மட்டுமே தாக்கி, உங்களின் மதச்சார்பின்மையை மறுபடியும் நிரூபித்துள்ளீர்கள்!!! 😉
சீனு நீங்க மட்டும் சும்மாவா? உங்க கீபோடு முசுலீம் எதிர்ப்பு மறுமொழிய மட்டும்தானே இன்புட் செய்யும், உங்கள நாங்க ஏற்கனவே வினவுல பாத்திருக்கோம்ல..மதசார்பின்மையை பத்தி பேசனுமின்னா அதுக்கு மதசார்பின்மையை கடைப்பிடிக்கனும்.. போயி மதத்த கயட்டி வச்சுட்டு மனுசனா வாங்க
பதிவுலகம் என்ன தான் மொக்கை, கும்மி என செழிப்பாய் இருந்தாலும், உள்ளடக்கம் மதப்பற்று, ஆணாதிக்கம் தான் கோலோச்சுகிறாது என்பது மிகச்சரி. புதிது புதிதாய் பதிவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். முற்போக்காளர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறார்கள்.
கொஞ்சமாவது சுயமரியாதை உள்ளவர்கள் இங்கு வந்து விவாதிக்கிறார்கள். பலர் எட்டியே பார்ப்பதில்லை. அவர்களை என்னவென்பது?
அலுவலக வேலை அதிகம் என்பதால் தளத்திற்கு முன்பு போல வர முடியவில்லை. விவாதத்திலும் கலந்து கொள்ள இயலவில்லை. இனி அடிக்கடி வர முயற்சிக்கிறேன். வைரஸ் காய்ச்சல் உருவாக்கிய சோர்வை நீக்க, இது மாதிரி இன்னும் நிறைய பதிவுகள் எழுத வேண்டும். கார்க்கியும், கேள்விக்குறியும் நன்றாக விவாதிக்கிறார்கள். மற்ற தோழர்கள் மேடைக்கு வர அன்புடன் அழைக்கிறேன்.
புத்தக கண்காட்சி துவங்கிவிட்டது என நினைக்கிறேன். கீழைக்காற்று – ஸ்டால் எங்கு இருக்கிறது என போன முறை வரைபடம் எல்லாம் போட்டு காட்டினீர்கள். அதுமாதிரி போடலாமே!
பல நூறு கடைகள் இருந்தாலும், பல புத்தகங்கள் உள்ளடக்கத்தில் குப்பையாகத்தான் இருக்கின்றன. ஆகையால், வினவு ஒரு சுற்று போய்வந்து, முற்போக்கு புத்தகங்களின் சமீபத்திய வரத்து குறித்து ஒரு பதிவு போட்டால், புதிய வாசகர்களுக்கு பயன்படும்.
//ஈரோடு பதிவர் சந்திப்பு// கிளிக் பண்ணினா கேபிளுக்கு போகுது…. அட… கேபிள் பக்கத்தில போட்டோ மட்டும் பார்த்துட்டு எழுதிப்புட்டீங்களோ…. அப்போ….. எங்கள யாருமே படிக்கலைங்களா
கதிர், ஈரோட்டு பதிவர் சந்திப்பு தான் முடிஞ்சு போச்சே, கேபிள் சங்கர் போட்டோ வீடியோவெல்லாம் போட்டு எல்லாரும் பாத்து முடிச்சாச்சு. மேட்டருக்கு வாங்க! பதிவ பத்தி கருத்து எழுதுங்க பாஸ்! அத மெனுவுல இல்லாத வடையா நமக்கு இப்போ முக்கியம்..
ரொம்ப நேரமா அதான் பாஸ் நடந்துகிட்டு இருந்தது!
சுகுணாவைப் பற்றி நான் குறிப்பிட்டதை திரித்து அவர் எழுதுகிறார்.அதை திருவாளர் கேள்விக்குறியும் ஆமோத்திக்கிறார்.நான் சொல்ல வந்தது போலி பெரியாரிஸ்ட்களை பற்றிதான்.பெண்ணூரிமை பற்றிய பெரியாரின் கருத்துக்களுடன் உங்களுக்கு உடன்பாடு உண்டா? மற்றப்டி பதிவு நல்ல காரம்.குப்பண்ணா மெஸ் நாட்டுக்கோழி மசாலாஅவை விட!! கடைசைவரைக்கும் கேள்விக்குறி போல் வளைந்தே இருந்திர போறீங்க கேள்விக்குறி அண்ணே.அபுறம் ஒரு டவுட்.இது தோழர் பாண்ண்டியன் எழுதினதா? இல்லை அண்ணன் சுகுணா எழுதினதா?வழக்கமா கொஞ்சம் காண்ட்ரவர்சியல் மேட்டரெல்லாம் அவர் உங்களுக்கு எழுதி கொடுப்பார்னு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கேள்விபட்டிருக்கிறேன்
புள்ளயோட இனிசியல பத்தி பேசவேண்டிய அவசியம் என்ன? இத திரிச்சு வேற எழுதனுமோ ..வினவுல சுகுணா எழுதறதா ஒரு பொய்ய இப்ப சொல்றீங்களே அதுமாதிரிதானா இதுவும்…. நல்ல கெளப்புறாங்கய்யா பொறளிய
திரித்தலைப் பற்றி தண்டோரா பேசுவது இந்த ஆண்டின் இறுதி நகைச்சுவை. பதிவில் பர்தா அணிவது பற்றியும் இந்துமதம் குறித்த விவாதமும்தான் வந்தது. அங்கு எனது இனிஷியல் குறித்து தண்டோரா பின்னூட்டம் போட்டது எதற்காக? நான் போலி பெரியாரிஸ்ட் என்றால் தண்டோரா மதிப்பீட்டின்படி யார் தண்டோராவிடம் சர்ட்டிபிகேட் வாங்கிய அசல் பெரியாரிஸ்ட் ? மேலும் போகிற இடத்தில் எல்லாம் தன்னைப் பார்ப்பனராகவே அடையாளப்படுத்தி முஸ்லீம்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கும் தண்டோராவுக்கு உண்மைப் பெரியாரிஸ்ட்கள் குறித்த அக்கறை என்ன? நான் திரித்து எழுதுவதாகச் சொல்லும் தண்டோரா இந்த வினவின் பதிவை நான் எழுதியதாகச் சொல்வதற்குப் பெயர் என்ன? இதுமாதிரியான அவதூறுகளையும் கிசுகிசுக்களையும் எழுதுவதைத் தாண்டி தண்டோரா சாதித்தது என்ன? உன்னைப் போல் ஒருவன் விமர்சனம் தொடங்கி என்னைக் குறித்து தனிப்பட்ட முறையில் இழிவு செய்து வரும் தண்டோரா என்றைக்காவது நேர்மையாக அரசியல் ரீதியாக விமர்சனங்களை வைத்திருக்கிறாரா? என்னைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்துகொண்ட தனிப்பட்ட தகவல்களை ஊதிப்பெருக்கி அவதூறு பரப்புவதுதான் தண்டோராவின் நோக்கம் என்றால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. பர்தா தொடர்பான மயில் என்னும் பதிவரின் பின்னூட்டத்தில்தான் எனது இனிஷியல் குறித்து முதன்முதலாக அனானி பின்னூட்டம் வந்தது. அப்போது நான் வெளிப்படையாகவே தண்டோராவிடம் கேட்டபோது அந்த பின்னூட்டத்தைத் தான் போடவில்லை என்றார். ஆனால் பிறகு அவர் பெயரிலேயே இனிஷியல் குறித்து கேபிள் பதிவில் பின்னூட்டம் வருகிறது. நான் வெளிப்படையாகக் கேட்டது என்னுடைய நேர்மையின் பாற் பட்டது. ஆனால் தண்டோரா….? நட்பு அறமும் விமர்சன அறமும் இன்றி இப்படி அவதூறுகளை உருவாக்குகிற பொழைப்பு உங்களுக்குத் தேவைதானா தண்டோரா?
//ஆனால் அந்த நம்பிக்கையை ஏற்றுக் கொண்டவர்கள்தான் நற்குடியினர் என்றோ.. மற்றவர்களெல்லாம் கெட்டகுடிகள் என்றோ மற்றவர்கள் சொல்வதில்லையே…//
இந்த மாதிரியெல்லாம் பேச ‘உண்மை’யிலேயே ஒரு தனி தில்லு வேணும்ணே. இந்து மதத்தில் மட்டும் பெண்களை இசுலாத்தில் மட்டுமாவது பர்தா போட்டால் தான் நற்குடி – ஆனா இந்து மதத்தில தலித்தா பொறந்தாலே கீழ்குடியாச்சே.
//யார் சாமி தனியா வைச்சிருக்கா..? எல்லா கோவிலிலும் எல்லா மனுஷனும் நுழையறதுக்கு தகுதியும் இருக்கு. அனுமதியும் இருக்கு. இன்னும் அனுமதியில்லாம இருக்குன்னு அதுக்கு குத்தம் சொல்ல வேண்டியது கோவில்களை நிர்வகிக்கும் அரசுகளைத்தான்..!திராவிட இயக்க அரசுகளாகவும், பெரியாரின் வழி வந்தததாகச் சொல்லிக் கொள்பவர்களாகவும், வெறும் ஓட்டரசியலை மையமாக வைத்தே அரசியல் பிழைப்பு நடத்தி வருவதாலும்தான் இந்த நிலைமை.//
அட அட அட அட… உங்களுக்கு கருணாநிதி மேல அளவுக்கதிகமா ‘என்னமோ இருக்கு’ – ஞாநியோட சகவாச தோஷமா?
சிதம்பரம் கோயில் பிரச்சினையில் கூட தீட்சிதர்கள் மொழித்தீண்டாமையை தொடர வேண்டுமானால் கோயில் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க
வேண்டும் என்று நினைக்கிறார்கள் / சொந்தம் கொண்டாடுகிறார்கள். அதனால் தான் சு.சுவாமி(முட்டையடி புகழ்), இராம.கோவாலு (வெளியே
கோவனம்) போன்ற லூசுகளைக் கூட்டி வந்து “இந்துக்களின் கோயில் இந்துக்களுக்கே – திராவிட/நாத்திக அரசுக்கு இதில் வேலையில்லை”
என்று போராட்டம் நடத்த வைக்கிறார்கள்.
உண்மை என்னான்னா.. தமிழ்நாட்டில் வடக்கை ஒப்பிடும்போது தீண்டாமை குறைவு – மேலும் இங்கே பிரச்சினையே அப்படி நுழையவிடாத
கோயில்களில் தலித்துகள் பணிந்து போகாமல் போராடுவது தான் – அதாவது இங்கே தலித்துகள் அடக்குமுறையை எதிர்த்து போராட வேண்டும்
எனும் அளவுக்காவது ஓரளவு விழிப்புணர்வோடு இருக்கிறார்கள்.. ஆனால் வடக்கே நிலைமை ரொம்ப மோசம் தலித்துகள் கோயில் அல்ல – உயர்
சாதியினரின் குடியிருப்பு இருக்கும் பகுதிக்குள் கூட நுழைய முடியாது – இன்னொன்னு தெரியுமா உண்மையாரே? தலித்துகளின் குடியிருப்புகள்
இன்ன உயரத்தில் தான் இருக்க வேண்டும் / இன்ன நிறத்தில் தான் இருக்க வேண்டும் / வாசல் சின்னதாக இருக்க வேண்டும் / காற்று வீசும்
திசைக்கு கீழ் திசையில் தான் இருக்க வேண்டும் (ஏனெனில் அவர்களைத் தீண்டிய காற்று கூட உயர்சாதியினரைத் தீண்டிவிடக் கூடாதாம்)
போன்ற கட்டுப்பாடுகள் திராவிட அரசுகள் இல்லாத மாநிலங்களில் இந்து மதத்தின் பெயரால் இருந்து வருகிறது.
நீங்கள் வேண்டுமானால் கூகிளில் “முஸாஹர்” (muzahar) என்று அடித்து தேடிப்பாருங்கள் – கிட்டத்தட்ட மனிதர்கள் போலல்ல, அரைமிருகம்
(சப்ஹுயுமன்) எனும் நிலையில் அங்கே தாழ்த்தப்பட்டவர்களை வைத்திருக்கிறார்கள் – இந்து மதத்தின் பெயரால்.
கொஞ்சம் கிணத்துக்குள்ளேயிருந்து வெளியே வாங்க உண்மை!
அதெப்படி வாய்க்கூசாம பொய்பேசிக்கிட்டே “உண்மை”தமிழன்னு பேரு வச்சிருக்கீங்க?
[[[இந்த மாதிரியெல்லாம் பேச ‘உண்மை’யிலேயே ஒரு தனி தில்லு வேணும்ணே. இந்து மதத்தில் மட்டும் பெண்களை இசுலாத்தில் மட்டுமாவது பர்தா போட்டால் தான் நற்குடி – ஆனா இந்து மதத்தில தலித்தா பொறந்தாலே கீழ்குடியாச்சே.]]]
என்னமோ நாங்க வற்புறுத்திதான் நீங்க சொல்ற கீழ்க்குடில புள்ளை பெத்துக்குற மாதிரி பேசுறீங்க..!
அவங்களே மறந்திருந்தாலும் நீ சக்கிலியன்.. நீ பறையன்னு அவங்க ஜாதியை சாகுறவரைக்கும் அவங்களால மறக்க முடியாம பண்றது உங்களை மாதிரியான அரைவேக்காட்டு அரசியல் செய்யும் வியாதிகள்தான்..!
[[[அட அட அட அட… உங்களுக்கு கருணாநிதி மேல அளவுக்கதிகமா ‘என்னமோ இருக்கு’ – ஞாநியோட சகவாச தோஷமா?]]]
எல்லோர்கூடவுந்தான் எனக்கு தோஷம் இருக்கு..! தமிழர்களுக்கான அரசு.. தமிழுக்காக, தமிழருக்காக அப்படி, இப்படின்னு நாப்பது வருஷமா ஆட்சில இருக்காங்களே.. தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத கோவில்களே தமிழ்நாட்டில் இல்லை.. தமிழ்நாட்டில் இரட்டைக் குவளை முறைகளே இல்லை.. தீண்டாமையே இல்லை அப்படீன்னு அறிவிக்குற மாதிரி ஆட்சியை நடத்தியிருக்கலாமே.. ஏன் செய்யலை..? நீங்களே வந்து.. உங்க தாத்தா போட்டோவை வைச்சே ஆட்சி நடத்தியும் உங்களுக்கு செய்ய மனசு இல்லீல்ல.. இப்ப வேஷம் போடுறது யாரு..?
[[[சிதம்பரம் கோயில் பிரச்சினையில் கூட தீட்சிதர்கள் மொழித் தீண்டாமையை தொடர வேண்டுமானால் கோயில் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் / சொந்தம் கொண்டாடுகிறார்கள். அதனால்தான் சு.சுவாமி(முட்டையடி புகழ்), இராம.கோவாலு (வெளியே கோவனம்) போன்ற லூசுகளைக் கூட்டி வந்து “இந்துக்களின் கோயில் இந்துக்களுக்கே – திராவிட/நாத்திக அரசுக்கு இதில் வேலையில்லை” என்று போராட்டம் நடத்த வைக்கிறார்கள்.]]]
இந்துக்கள் கோவில் இந்துக்களுக்கே.. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இதில் நாத்திகக் கொள்கையுடைய நாத்திக அரசுகளுக்கு என்ன வேலை..? அந்தந்த ஊர்க்காரர்களிடமே கோவில்களை ஒப்படைத்துவிட்டு வெளியேறலாமே..? தினம்தோறும் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி கோவிலை நிர்வகித்துக் கொள்ளட்டுமே..
இருக்கின்ற அத்தனை துறையிலும் நாய் நக்குவதைப் போல் சுரண்டியெடுக்க ஆசைப்பட்ட உங்களது அரசியல்வியாதிகளுக்கு தங்களது உடன்பிறப்புக்களும், தொண்டர்களுக்கும் சம்பாதித்துக் கொள்ள ஒரு வாய்ப்பைக் கொடுப்பது போலத்தானே அத்தனை அறநிலையத்துறை கோவில்களின் நிர்வாக லட்சணங்கள் இருக்கிறது..
வடநாட்டில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது என்றால் அதற்குக் காரணம் மக்களின் அறியாமையும், படிப்பறிவு இல்லாததும் முக்கியமாக நமது அரசியல்வியாதிகளின் சித்து விளையாட்டுக்களும்தான்..
அரசியல்வியாதிகள் மட்டும் மிகச் சரியாக இருந்தால் நாட்டு மக்கள் துன்பப்பட மாட்டார்கள். இங்கேதான் சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தி ஜெயிக்க வைத்து ஜாதி சங்கங்களின் உதவியோடு ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்களே.. பின்பு எங்கே இவர்கள் ஜாதியையும் தாண்டி மக்களை கவனிக்கப் போகிறார்கள்..?
[[[அதெப்படி வாய்க் கூசாம பொய் பேசிக்கிட்டே “உண்மை”தமிழன்னு பேரு வச்சிருக்கீங்க?]]]
அதென்ன பேச்சுக்கு பேச்சு பொய்யா அள்ளி வீசிக்கிட்டு இருக்கீங்கண்ணே..! நிஜத்தை புரிஞ்சுக்குங்க.. மொதல்ல உங்களோட அறிவுஜீவித்தனமான புத்தகத்தையெல்லாம் எடைக்கு எடை பேரிச்சம்பழத்துக்கு தூக்கிப் போட்டுட்டு ஒரு குடிசை வீட்டுக்குள்ள போயி அங்க என்ன பிரச்சினை? அவங்களுக்கு சோத்துக்கு என்ன வழி..? அவங்களை மேல் தட்டு மக்களோட ஒட்ட வைக்குறதுக்கு என்ன வழி..? அரசுகளை எப்படி இறங்கி வர வைப்பது அப்படீன்னு கொஞ்சம் யோசிங்க.. அப்புறமா வந்து இந்த ஆத்திகம், நாத்திகம், தலித்தியம், மேல் சாதி, கீழ் சாதின்னு, மற்ற புண்ணாக்குகளை யோசிப்போம்..!
உண்மைத் தமிழன்,
//அவங்களே மறந்திருந்தாலும் நீ சக்கிலியன்.. நீ பறையன்னு அவங்க ஜாதியை சாகுறவரைக்கும் அவங்களால மறக்க முடியாம பண்றது உங்களை மாதிரியான அரைவேக்காட்டு அரசியல் செய்யும் வியாதிகள்தான்..!//
சாதி என்பது நினைவூட்டல்களால் நிலவுவதில்லை – அது சமூகத்தில் நிலவுவதால் தான் அதைப் பற்றி பேசியாகவேண்டியுள்ளது.
சரி உங்கள் / கோவி.கண்ணன் லாஜிக்படியும் பார்த்தால் கூட, பெரியாரும் அம்பேத்கரும் பேசியபின் தான் சாதி தோன்றியதா?
அதற்கு முன் முழு சமரச சமூகமாகத் தான் இருந்ததா? சாதி அப்போதெல்லாம் இருந்ததேயில்லையா?
//தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத கோவில்களே தமிழ்நாட்டில் இல்லை..தமிழ்நாட்டில் இரட்டைக் குவளை முறைகளே இல்லை.. தீண்டாமையே இல்லை அப்படீன்னு அறிவிக்குற மாதிரி ஆட்சியை நடத்தியிருக்கலாமே.. ஏன் செய்யலை..? நீங்களே வந்து.. உங்க தாத்தா போட்டோவை வைச்சே ஆட்சி நடத்தியும் உங்களுக்கு செய்ய மனசு இல்லீல்ல.. இப்ப வேஷம் போடுறது யாரு..?//
தமிழகத்தில் மற்ற வட இந்திய மாநிலங்களைக் காட்டிலும் சாதிக்கட்டுமானம் ஓரளவுக்கு நெகிழ்வாகத்தான் இருக்கிறது. இப்போது
சட்டக்கல்லூரியில் நடந்த எதிர் தாக்குதல் ஒரு சின்ன உதாரணம். நீங்கள் பீகார்/உ.பி/ம.பி/ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சென்று
பார்த்தல் இதை உணரலாம். அங்கே தலித்துகள் கோயிலை விடுங்கள் – ஆதிக்க சாதியினர் பயணம் செய்யும் பேருந்திலேயே கூட அமர்ந்து
பயணம் செய்ய முடியாது.
கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் மாநிலங்களில் தீண்டாமை மட்டுமல்ல, நிதி முறைகேடுகளும் நமது மாநிலத்தைக் காட்டிலும்
அதிகம் நடக்கிறது – ஏனென்றால் அங்கேதான் அக்கௌண்டபிலிடியே இல்லையே?
//வடநாட்டில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது என்றால் அதற்குக் காரணம் மக்களின் அறியாமையும், படிப்பறிவு இல்லாததும் முக்கியமாக நமது அரசியல்வியாதிகளின் சித்து விளையாட்டுக்களும்தான்..//
அதெப்படிங்க? தமிழ்நாட்டை விடக் கேவலமாயிருக்கும் மாநிலங்களைப் பற்றி பேசும் போது மட்டும் அப்படியே ஜஸ்ட் லைக் தட் கடந்து
போயிடறீங்க?
அ) கோயில் இந்துக்களிடம் இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமென்றால் அப்படியிருக்கும் மாநிலங்களில் தமிழகத்தை விட நிலைமை மோசமாக
இருப்பது ஏன்? இது உணர்த்துவது, கோயில்கள் அரசிடம் இருந்தால் ஓரளவுக்காவது நிலைமை சரியாக இருக்கும் என்பதைத்தானே?
ஆ) வடநாட்டில் தீண்டாமை இல்லை “உண்மை” – அதை விடக் கேவலமான நிலையிருக்கிறது. நான் உங்களிடம் muzahar பற்றி தேடிப்
படிக்கச் சொன்னேன். படித்துப் பாருங்கள் – மிருகங்களை விடக் கேவலமான நிலையில் வைத்திருக்கிறார்கள். அது ஒரு சின்ன உதாரணம்
மட்டும் தான். இது போல் அங்கே ஒவ்வொரு படிநிலைக்கும் ஒவ்வொரு விதி இருக்கிறது. குடியிருப்புகள் அமைந்திருக்கும் திசைகூட காற்றின் திசைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டும். அதாவது தலித்துகளின் குடியிருப்பைக் கடந்து மேல்சாதியினரின் குடியிருப்புக்குக் காற்று செல்லக் கூடாது. இந்த மாதத்தில் ஓலைக் குடிசையாய் இருந்த தனது வீட்டை ஒரு முசாகர் காரை வீடாக கட்டிவிட்டதற்காக அதை இடித்துத்
தள்ளியிருக்கிறார்கள் மேல்சாதி இந்துக்கள்.-
ஒருவேளை இங்கே திராவிட அரசுகள் வந்தது தான் அங்கே சாதி ஆதிக்கம் நிலவ காரணம் என்கிறீர்களா? பாவம்ங்க கருணாநிதி.. விட்றுங்க அந்த மனுசன..
நீங்க நெப்பு நெதானத்தோட தான் பேசறீங்களான்னே புரியலை – என்னோட முந்தைய எந்த விமர்சணத்துக்கும் தர்க்க ரீதியிலோ தரவு
ரீதியிலோ பதிலளிக்காமல் வெறும் மட்டையடியாகவே உளரிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதாலும் – உம்மிடம் வேறு சரக்கு இல்லை என்பது
தெளிவாகத் தெரிவதாலும், வேறு தர்க்க ரீதியிலான மறுமொழியுடன் நீங்கள் வரும் வரை உங்களுடன் பேசுவதில் பிரயோஜனம் கிடையாது
என்றே நினைக்கிறேன்.
/என்னமோ நாங்க வற்புறுத்திதான் நீங்க சொல்ற கீழ்க்குடில புள்ளை பெத்துக்குற மாதிரி பேசுறீங்க..!/
இந்த வரிகளில் வரும் நாங்க, நீங்க, கீழ்க்குடி மாதிரியான வார்த்தைகளைக் கவனியுங்கள். இதை விடவா ஒரு வன்முறை வேண்டும்? நற்குடி என்று சொன்னால் தப்பு. கீழ்க்குடி என்றால் என்ன?
எனக்கென்னவோ அந்த பாப்பாத்தி ஞாபகம் வருது. அந்தம்மாதான் அம்மாவோட பேயரை இன்ஷியலா வைன்னாங்க.ஜீனியர்விகடம் மேட்டரெல்லாம் அரை டிக்கெட்டுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைஅன்னு நினக்கிறேன்.அவங்க பத்திரிக்கையில் வராத மேட்டரெல்லாம் வினவுல வந்திருக்கப்பா…
ஒலகத்துல தண்டோரா மட்டும்தான் அறிவாளி..அல்லாம் தெரிஞ்சவர்ர்ர்ரு என்னாMost Menial தொழிலான அட்ட்டைஸ்சுமென்டு கம்பேனி வச்சுருக்காரு ஆனா 25 வருசமா பத்திரிக்க நடத்தற புதிய ஜனநாயகம் முட்டாளாம்… விவரங்கெட்டதனம் தாங்கல..ஹூம்!
தண்டோரா,
முதலில் கிசுகிசுக்களை உருவாக்குவதை நிறுத்துங்களேன்.
க.பாலாசி. இவங்க டார்கெட்டே வேற.கேபிள் பதிவு ஊறுகாய். அவ்வளவுதான்.
இது புரிய உங்களுக்கு 170 மறுமொழியாச்சா… பயங்கர அறிவாளிதான் போங்கள்.
என்ன கொடுமை சார் இதெல்லாம்.
பதிவர் சந்திப்புகள் என்றாலே மொக்கைகள் தான், ஈரோட்டில்மட்டும் இன்டலெக்சுவலாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.. பதிவர்கள் கருத்து மோதலெல்லாம் பதிவில் மட்டும் தான் நேராக சந்திக்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸ்…
மதமே ஓபியம் தானே இதில் குறிபிட்ட ஒரு மதம் மாத்திரம் சுத்தமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. இந்து மதம் ஒரு விதாத்தில் தவறு என்றால இசுலாம் வெறு விதங்களில் தவறாக உள்ளது. இதில் நேரமை, மதத்தை எதிர்பது தான்..
பதிவுகளின் நுண்ணளவில் ஒளிந்துக்கொண்டிருப்பது ‘அங்கிகாரம்’ எனும் போதை அது இன்னொரு ஓபியம், அதற்காக தான் சாதரண ஒரு பதிவிற்க்கும் “ஷ்கிலா’ என்று த்லைப்பு வைக்க வேண்டி வருகிறது.
திரட்டி எனும் சந்தையில், நம் வலைதளத்திற்கு ஒருவரை அழைக்க படும் பாடு (நானும் அப்படி தான்).. சர்ச்சைகள் விவாதங்கள் எல்லாம் பதிவுலகிள் எப்பொழுதோ செத்துபோய்விட்டது.. விவாத்ங்கள் நடந்தாலும் அவை திசை திருப்ப படுகிறது, தனி நபர் தாக்குத்லாக மாற்ற படுகிறது, அனனிகள் ,போலிகள் இவற்றையெல்லாம் பார்ர்கும் போது, ஏதோ ஒரு சினிமாவை கொஞ்சம் கலாய்த்துவிட்டு, நாலு ஹிட்டையும் ரெண்டு பின்னுட்டதையும் வாங்கிக்கொண்டு போவது சுலபம், சேமம்..
இதை பயம் என்று சொல்லிவிட முடியது, ஒரு வித பாதுகாப்பு.
அண்ணன் அரை டிக்கெட் ரொம்ப நெருங்கியவர் போலிருக்கே.நன்றி தலைவரே…
ரொம்ப இன்லன்னே ரொம்ப ரொம்ப 🙂
/ஒலகத்துல தண்டோரா மட்டும்தான் அறிவாளி..அல்லாம் தெரிஞ்சவர்ர்ர்ரு என்னாMost Menial தொழிலான அட்ட்டைஸ்சுமென்டு கம்பேனி வச்சுருக்காரு ஆனா 25 வருசமா பத்திரிக்க நடத்தற புதிய ஜனநாயகம் முட்டாளாம்… விவரங்கெட்டதனம் தாங்கல..ஹூம்!//
அண்ணே.. விளம்பர உலகத்துடன் சம்பந்தம் இருக்கா?
அல்லா இருக்காருன்னா பர்தாவை ஒத்துக்கிடனும்.
பர்தா கண்ணியம்னா ஆண்களெல்லாம் ஜொள்ளுபார்ட்டின்னு ஒத்துக்கிடனும்.
ஜொள்ளுபார்ட்டிகள்தான்னா முகம்மது நபி(பல திருமணம்) செய்ததும் சரி.
முஹம்மது செய்தது சரின்னா அவரும் ஜொள்ளுபார்ட்டின்னு ஒத்துக்கிடனும்.
ஜொள்ளுபார்ட்டிகளில்லைன்னா பர்தா அடிமைச்சின்னம்னு ஒத்துக்கிடனும்.
பர்தா அடிமைச்சின்னம்னா அல்லா ஆணாதிக்கக்காரன்னு ஒத்துக்கிடனும்.
அல்லா ஆணாதிக்கக்காரன்னா கடவுள் ஆண்னு ஒத்துக்கிடனும்.
கடவுள் ஆண்னா கடவுளுக்கு உருவம் உண்டுன்னு ஒத்துக்கிடனும்.
கடவுளுக்கு உருவமிருக்குன்னா உருவமில்லைன்னு சொன்னது பொய்யின்னு ஒத்துக்கிடனும்.
பொய்யில்லைன்னா கடவுளே இல்லைன்னு ஒத்துக்கிடனும்.
கடவுள் இருக்காருன்னா நாமெல்லம் வேசிமகன்னு ஒத்துக்கிடனும்
வேசிமகனில்லைன்னு சொன்னா ஐயப்பனும் இல்லைன்னு ஒத்துக்கிடனும்.
ஐயப்பன் இருக்காருன்னா ஓரினச்சேர்க்கையையும் சரின்னு ஒத்துக்கிடனும்.
ஓரினச்சேர்க்கை தவறுன்னா ஐயப்பன் தறுதலைன்னு ஒத்துக்கிடனும்.
ஐயப்பன் தறுதலைன்னா சபரிமலைக்கு போகும் பக்தன் முட்டாள்ன்னு ஒத்துக்கிடனும்.
மேலே உள்ளவற்றை எதையும் ஒத்துக்கிடலைன்னா வினவு சொல்வதை ஒத்துக்கிடனும்….ஹி..ஹி..ஹி
செம கமெண்டு!
நச் நச் நச்….!!!!
அட்டகாசமான வடிவம்.. நானும் இதுமாதிரி எழுத கத்துக்கறேன்
நல்ல பின்னூட்டம்.
//மேலே உள்ளவற்றை எதையும் ஒத்துக்கிடலைன்னா வினவு சொல்வதை ஒத்துக்கிடனும்….ஹி..ஹி..ஹி//
ஒருவழியா முடிச்சுட்டீங்க… 🙂
அடேங்கப்பா…அருமை !
🙂
செம்ம கமெண்ட் தலைவா …. LOL but seriously very thoughtful. no one can disagree,
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் .
உங்கள் மகனுக்கு அம்மாவின் முதலெழுத்தை இன்ஷியலாக வைத்து முற்போக்குவாதி ஆவீர்களா?என்றுதான் நான் கேட்டேன்.சுகுணாதான் விட்டால் குழந்தை உங்களுக்கு பிறந்ததா? என்று கேட்பீர்கள் என்று மறுமொழியிட்டார்.அய்யா..கேள்விக்குறியாரே..தயவு செய்து நீஙகளும் அதை திரிக்காதீர்கள்.சுகுணா ஒன்றும் எனக்கு விரோதி இல்லை.
தண்டோரா.. இதுதான் நீங்கள் கேட்டது என்றால் முதலில் அதை சுகுணாவிடம் விளக்குங்கள்.
அவர் வேறுமாதிரி புரிந்து கொண்டிருக்கிறார்
பலே! வினவு சாட்டையை சரியாகதான் சுழற்றியிருக்கிறீர். “நற்குடி” , ”வராகங்கள்” என நாறிக்கொண்டு பக்கசார்புடன் தன் மனக்கழிவுகளை இறக்கி வைத்துக் கொண்டிருக்கும் வக்கிரக் கூட்டத்தின் நடுவில் ஒரு நடுநிலையான பார்வை.
பெண்ணடிமைத்தனத்தை நிலைநிறுத்துவதில் எந்த மதமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை. அதைச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.
??யாரே!!! சுகுணாவிடம் இந்த கேள்வியை நான் சாருவின் பார்ட்டியிலேயே கேட்டேன்.அது அவன் முடிவு செய்யவேண்டும் என்று சொன்னார்.பெரியார்,பெண்ணுரிமை என்று பதிவு வந்ததினால் இந்த கேள்வியை மீண்டும் பதிவில் கேட்க நேர்ந்தது.சுகுணா உங்களுக்கு என்னை பற்றி தெரியும்.அருணாவில் உங்களூக்கு விளக்கியிருக்கிறேன்.சுயவிளக்கம் கூறும்போது அறியாமல் காயப்படுத்தும் வார்த்தைகள் வந்து விடுகிறது.மன்னிக்கவும்.
ஓகே, இந்த மேட்டர் சால்வ்ட்ன்னு நெனைக்கிறேன்
எத்தனைமுறை காயப்படுத்திவிட்டு மன்னிப்பு கேட்பீர்கள் தண்டோரா ஒரு குத்துக்கு ஒரு மன்னிப்பா?
// சினிமா, மொக்கை, அரட்டை, அக்கப்போர், தொடர்பதிவு, வடிவேலு ஸ்லாங், மீதபர்ஸ்டு, முதுகு சொறிதல் என்று பிழைப்பை நடத்தும் பதிவுலகின் ஆன்மாவைக் கீறிப்பார்த்தால் அங்கே சாதியும், மதமும்தான் கோலேச்சும் //
சுடும் உண்மை!
சிறப்பான அலசலுக்கு நன்றி.
எப்படி செய்தித்தாள், வானொலி, செயற்கை கோள் தொலை காட்சி போன்ற ஊடகங்கள் எல்லாம் தமிழனின் வாழ்வு நிலை முன்னேற்றம் சார்ந்த எந்த சிந்தனையும் தூண்டாத தேசபக்தி, ஆன்மிகம், சினிமா சார்ந்த குப்பைகளை வாரி வழங்கு கிறதோ, அதே போல் பதிவுலகமும் ஆகிவிட்டது என்பது வேதனையாக தான் உள்ளது !!
//உலகம் எங்கேயே போய்க்கொண்டிருக்கும் போது இன்னும் அந்த பர்தாவைத் தொங்கிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது.//
உலகம் எங்க போனாலும் நாங்க சொர்க்கத்துக்கே போவோம்னு மதவாதிகள் அப்படியே தான் இருக்காங்க. ( இந்த உதாரணத்துல முஸ்லீம் மதம் )
http://en.wikipedia.org/wiki/Sheikh_Muszaphar_Shukor
Since Sheikh Muszaphar is a Muslim, and as his time in space coincided with the last part of Ramadan, the Islamic National Fatwa Council drew up the first comprehensive guidebook for Muslims in space.[1][3] The 18-page guidebook is titled “Guidelines for Performing Islamic Rites (Ibadah) at the International Space Station”, and details issues such as how to pray in a low-gravity environment, how to locate Mecca from the ISS, how to determine prayer times, and issues surrounding fasting. The orbit of the ISS results in one day/night cycle every 90 minutes,[1][25] so the issues of fasting during Ramadan are also addressed. The guidebook will be translated into Russian, Arabic, and English.[7][26] Anan C. Mohd, from Malaysia’s Department of Islamic Development said that fasting while traveling is optional, so Sheikh Muszaphar could choose what he would like to do, but if he did decide to fast in space, the times would be centered around local time in Baikonur, where the launch takes place.[27][28] Sheikh Muszaphar celebrated Eid ul-Fitr aboard the station, and packed some satay and cookies to hand out to the rest of the crew on October 13, 2007 to mark the end of Ramadan.[29]
வினாவுக்கு என்ன அப்படி ஒரு கோபம்? பார்ப்பனியம் , பர்தா, ஐயப்பன் என்று பேட்டை ராப் பாடல் போல் பதிவு உள்ளது. இந்த மொக்க பதிவுக்கு எழுவதஞ்சி பின்னோட்டம். ஒரு சலம்பல ஏற்படுத்தி உதார் விடுவதுதான் இந்த பதிவின் முக்கிய கருவாக உள்ளது. இது தெரியாம நீங்கல்லாம் மாறி மாறி பின்னோட்டம் விடுவது விழலுக்கு இறைத்த நீர். பின்னூட்டங்களில் காணப் படும் சொற் பிரயோகம் “அடச் சீ இன்னு தோணுது”. இதை போல பனை மட்டையில் ஒன்னுக்கு அடிக்கும் பதிவுக்கு பதிலாக நல்ல பதிவை வினவு தரலாம்.
சுகுணா திவாகரைத் தவிர வேறு எந்தப் பெண் பதிவர்கள் அல்லது வாசகிகள் யாரும் இந்த விவாவதத்தின் கருப்பொருள் குறித்து கருத்து பதியாதது ஏன்? ஆண்கள் மட்டுமே இதை இங்கே விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், கட்டுரை பெண்கள் மத, கலாச்சார அடையாளங்களை, விழுமியங்களை தீராச்சுமையாக ஏன் வாழ்நாள் பூராவும் சுமக்க வேண்டும் என்பதை சொல்வதாக படுகிறது. பிறகேன் பெண்களே இவர்களை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள்? நீங்கள் சமூகத்திற்காக பேசவேண்டாம். குறைந்தபட்சம் உங்களுக்காகவேனும் பேசுங்களேன். உங்கள் கருத்துகளை எண்ணங்களை படிக்க ஆவலாயுள்ளேன். அதென்னங்க, எப்ப பாத்தாலும் பெண்கள் தான் மத, கலாச்சார விழுமியங்களை கட்டிக்காக்க வேணும்? அதுதான் எப்போதும் இப்படி பட்டிமன்ற அல்லது விவாதப்பொருளாக ஆகிறது. ஆண்களின் மத, கலாச்சார அடையாளங்கள் அவர்களின் சமூக இருப்பு அல்லது தனிமனித உரிமைகள் பற்றிய சர்ச்சைகளை கிளப்புவதில்லை. அப்படியானால் இது Discrimination தானே? நான் இதை ஆணுரிமை, பெண்ணுரிமை என்று விவாதிக்கவில்லை. நான் சொல்லவருவது இது பெண்களுக்கு மட்டும் ஏன் தலைவலியாக உள்ளது. இது வெறும் உடை விடயம் என்று பார்த்தால் அது தனிமனித விருப்பம் தான். ஆனால், உன் உடையே மதம், கலாச்சாரம் என்னும் வடிவில் சர்ச்சைக்குள்ளாகும் போது உங்கள் தனிமனித உரிமை அடிபட்டுபோகிறதே சகோதரிகளே. நான் எந்த உடை போடவேண்டுமா என்பதை என் அறிவுதான் தீர்மானிக்க வேண்டும். அதையெல்லாம் தாண்டி சில பெண்களுக்கு சில கலாச்சார உடைகளை நீண்டகாலமாக அணியும் போது அது ஓர் செளகரியமான விடயமாக மாறிப்போகிறது. அதை இலகுவில் மாற்றமுடியாதுதான். அவர்களிடம் அது பற்றி கேள்வியெழுப்பினால், “பழகிப்போச்சு” என்கிறார்கள்.
சுமஜ்லாவின் பதிவில் சொன்னதை தான் இங்கேயும் சொல்கிறேன். எங்கள் மீதுள்ள அன்பால், அக்கறையால் எங்கள் வீடும், சமூகமும் சில மூடநம்பிக்கைகளை எங்கள் மனங்களில் விதைத்துவிட்டார்கள். அதையே பிடித்துக்கொண்டு தொங்காமல் எங்களுக்காக நாங்கள் சிந்திக்கவேண்டும் என்பதே என் கருத்து. அப்புறமா, இதை சொன்னதுக்காக என்னை திட்டுறவங்க தாரளமாக திட்டிக்கலாம்.
நான் பெண்பதிவர் அல்ல ரதி.
மன்னிக்கவும், சுகுணா என்ற பெயரில் நான் குழம்பிவிட்டேன்.
ஏங்க மொக்கைகளை எழுதுபவர்களிடம் உங்களுக்கு என்ன கோபம். இலக்கியவாதிகள், உங்களைப் போன்று நிறைய படித்தவர்கள், முன், பின் நவீனத்துவங்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மட்டும் தான் ப்ளாக் எழுதனுமா ? எதோ எங்களுக்கு தெரிஞ்ச மொக்கைகளையும் போட விடுங்களேன்.
தெரிந்து கொள்ள மட்டும் தொடர்கிறேன்
சரியான பதிவு!!!
எல்லா மதங்களுமே எளியவர்கள் (ஒடுக்கப்பட்ட அனைவரும்) மீது ஆதிக்கம் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டன. தீமைகளின் ஒட்டுமொத்த வடிவமே மதம். அதனால்தான் இதற்குத் தமிழில் “மதம்” என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்.
//
அதாவது பர்தா பதிவுக்கு முந்தைய பதிவின் போதே (தேவையில்லாத சில கருத்துக்களை சொன்னதால்) அவர் கட்டம் கட்டப்பட்டுவிட்டார் என்பது என் கணிப்பு.//
தவறு என் அன்பு பீர். அந்த சகோதரிமேல் எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் எவருக்கும் கிடையாது. எந்த ஒரு நிகழ்வினுக்கும் 100 சதம் பாராட்டுக்களை என்றும் எதிர்பார்க்க முடியாது. பர்தா விஷயமாய் நீங்கள் இட்ட ஒரு இடுகையில் கூட நான் இட்ட பின்னூட்டம் உங்களுக்கு நினைவிற்கு இருக்கும் என எண்ணுகிறேன்.
அதே சமயம் அவரின் பர்தா பற்றிய இடுகையில் அவரின் ஆரம்பக்கருத்துக்களில் இருந்து பலர் பக்குவமாய் சொல்லியும் கேட்பதாய் இல்லை.
எதிர்கவிதை எழுதும்போது, இன்னும் காட்டமாக எழுதவே பதிலுக்கு நானும் ஒரு கவிதை எழுதினேன், அது அவர் சார்ந்திருக்கும் இடத்தையே சாடுகிறார் என்ற ஆதங்கத்திலும், மிகவும் நாகரிகமாய் நான் அனுப்பிய பின்னூட்டத்தை நிராகரித்ததாலும் தான். உங்களை போன்ற எனது இஸ்லாமிய நண்பர்களுக்கு எனது ஆதங்கம் புரியும் என எண்ணுகிறேன்.
//மறதி எனும் நம் தேசிய வியாதியை சில நேரங்களில் வசதியாக பயன்படுத்திக்கொள்வதே நல்லது, ஒரு முற்றுப்புள்ளியும் வைக்க முடியும். //
நிச்சயம், நம்மை செம்மைப்படுத்திக்கொள்ள, மறந்து எதிர்வரும் புத்தாண்டை இனிமையாய் மாற்றிக்கொள்ள.
இப்பொழுதுதான் விவாதம் சரியான திசையில் செல்கிறது
சபாஷ் பீர்
//ஒரு பெண் அதுவும் இசுலாமியப் பெண் பதிவு எழுதுவது பெரிய விசயம். அதையும் அவர் வீட்டு ஆண்கள் அனுமதிப்பது பெரிய சுதந்திரம்.( இன்னும் இதுபோன்ற என்னவெல்லாம் சுதந்திரங்கள் இருக்கிறதோ?) இதில் சுமஜ்லா தமிழில் வேறு என்ன செய்திகளை எழுதுகிறார் என்பது தெரியவில்லை//
அந்த நிகழ்வில் மற்ற மதங்களை சேர்ந்த பெண் பதிவர்களும் கூட கலந்து கொண்டார்கள் என்றே நினைக்கிறேன்… ஆனால் அவர்கள் யாரும் தாங்கள் எந்த உடையில் சென்று வந்தார்கள் என்று பதிவிடவில்லை…அதற்கான தேவையும் இருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை…
ஆக,
இஸ்லாமை விட மற்ற மதங்களில் பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பதாக வினவு சொல்வதாக நினைக்கலாமா??
இஸ்லாமை விட மற்ற மதங்களில் பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பதாக வினவு சொல்வதாக நினைக்கலாமா??@@@@
உடை விஷயத்தில் மற்ற மதங்களில் ஒரளவு சுதந்திரம் இருக்கிறது என்று வேண்டுமானால் நினைத்துக்கொள்ளுங்கள்….மற்றபடி பெண்ண்டிமைத்தனத்தில் எந்த கொள்ளி கெட்டகொள்ளியென்பதை அவரவர் தேடலை பொறுத்த பதிலே கிட்டும்.
//ஆக முசுலீம் பெண்பதிவர் சுமஜ்லா தனது சுதந்திரம் பாதுகாப்பு கருதி இந்த பர்தா சங்கதியை பதிவு செய்திருக்கிறார் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். இல்லையேல் நாளை ஒரு முசுலீம் பெரிசு ” காலம் கெட்டுக்கிடக்கு, நம்ம சுமஜ்லா பொண்ணு ஏதோ இன்டர்நெட்டுக்காரனுக கூட்டத்துக்கு போய்ட்டு வந்துச்சாமே?” என்று வாங்கிவிட்டால் என்ன செய்வது?//
//இவ்வளவிற்கும் இவர் பர்தாவை எதிர்க்கவில்லையாம். அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கைகளை அவரவர் பின்பற்றுவது சரியாம். ஆனால் அதற்காக மற்ற மதத்தவர்களை நொட்டம் சொல்வது சரியல்ல என்பதே பிரியாவின் வாதம். பிரியாவின் இரசிகர் கூட்டம் இந்த கவிதைக்காக பின்னூட்டத்தில் ஒரு பெரும் ஆவேசக் கூச்சலையே எழுப்பிச் சென்றிருக்கிறது. சாராமாகச் சொன்னால் நாகரீகமான வார்த்தைகளில் துடித்துக்கொண்டிருக்கும் இந்துத்வ மனமே இதன் இயக்கம். இதற்கு நம்ம ”ஞானப்பழம்” உண்மைத்தமிழன் கூட விலக்கல்ல. அப்பப்பா மொக்கைகளுக்குள் மறைந்து நிற்கும் பதிவுலகம் மதம் எனும் வாதத்தில் எப்படி சிக்குண்டிருக்கிறது என்பதறிய அந்த பின்னூட்டங்களை வாசிக்க வேண்டும்.இவர்கள் எல்லோரும் எமது இந்துமதத்தை இழிக்கிறாயா என்ற ஆவேசத்தில் பதிவர் சுமஜ்லாவை கிழிக்கிறார்கள், மைனஸ் ஒட்டு போட்டு ரசிக்கிறார்கள். //
அதாவது, சுமஜ்லா என்ற இஸ்லாமிய பதிவர் எழுதினால் அது தற்காப்பு, சுதந்திரம்….அதுவே இந்து ப்ரியா எழுதினால் அது இந்து மதத்தை இழிக்கிறாயா என்ற ஆவேசம்….
வினவு, நியாயம் என்பது ஒரு பக்கமாக பேசுவதில்லை….அது நியாயத்தின் பக்கமாக கண்களை கறுப்பு திரையிட்டு கொண்டு பேசுவது….
ஐ, வார்த்தையை வெட்டியெடுத்து எழுதித்தான் முரண கண்டுபிடிப்பிங்களோ? அவர் பர்தாவோடு வந்ததைத் எழுதியைத்தானே தற்காப்புக்காக இருக்கலாம் என்று வினவு குறிப்பிடுகிறது… அவர் பர்தாவின் மேன்மையே பற்றி எழுதியதை அடிமைத்தனத்தின் உச்சம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே. பின் ஏன்..
ப்ரியா பதிவின் பின்னூட்டங்களில் துடித்துக்கொண்டிருந்த இந்துமதம் உங்கள் பார்வைக்கு படாமல் போனதேன்..
நீங்கள் செருப்புகாக காலை வெட்டுகிறீர்கள், எழுதிய பதிவுக்காக விதண்டாவாதம் செய்கிறீர்கள் அது சரி அல்ல
//அதிலும் “நற்குடி” பெண்களென்றால் பர்தா இல்லாமல் வாழமாட்டார்கள் என்ற ரேஞ்சில் தனது அடிமைத்தனத்தை சிலாகித்திருந்தார்.//
பிரச்சினையே அது தான்…அடிமைத் தனம் என்று நீங்களே சொல்கிறீர்கள்…ஆனால், அப்படி அடிமையாக இல்லாதவர்கள் திறந்து வைத்த பண்டங்கள் என்று சொல்வதை எந்த வகையில் நீங்கள் ஆதரிப்பீர்கள்?
உண்மையை சொன்னால், திறந்து வைத்த பண்டங்கள் என்ற வார்தை தேவடியாள் என்றே எனக்கு அர்த்தமாகிறது…வேறு யாருக்கேனும் வேறு அர்த்தங்கள் புலப்பட்டால் தயவு செய்து எழுதவும்!
திறந்து வைத்த பண்டங்கள் என்ற வார்தை தேவடியாள் என்றே எனக்கு அர்த்தமாகிறது@@@
என்க்கும் அப்படித்தான் புரிகிறது. ஆனால் இதை வினவு எங்கே ஆதரிக்கிறது என் நீங்கள் கண்டீர்கள்,
//இப்பத்தான் பதிவுலகம் வந்திருக்கும் அந்த பேதைப்பெண்ணுக்கு உலகம், அடிமைப்பெண்கள், சுதந்திரப் பெண்கள், மத பிற்போக்குத்தனங்கள் எல்லாம் புரிவதற்கு பதிவுலகமென்ன முற்போக்கு சிங்கமாகவா உள்ளது? மொக்கைகள், சினிமாக்கள் என்று காலம்தள்ளும் பதிவுலகை விண்டு பார்த்தால் சாதியும், மதமும், ஆணாதிக்கமும்தானே கோலேச்சுகிறது?//
பேதைப் பெண் என்பதை தவிர மற்ற எல்லாவற்றையும் ஒப்புக் கொள்கிறேன்…நான் எழுதுவதற்கு நானே பொறுப்பு…வினவு எழுதுவதற்கு வினவே பொறுப்பு….அது போல அவர் எழுதுவதற்கு அவரே பொறுப்பு….அவரது கடந்த சில இடுகைகளை பார்த்தால் அவர் பேதைப் பெண் என்று என்னால் நம்ப முடியவில்லை…
மற்றபடி, பதிவுலகம் மொக்கை, சினிமா என்று காலம் தள்ளும் பொழுதுபோக்கு க்ளப்பாகவே உள்ளது என்பது உண்மை (அந்த க்ளப்பில் சில நேரங்களில் நானும் மெம்பர் என்பது மறுக்க முடியாத உண்மை…)
பேதைப்பெண் என்பதை நானும் ஏற்கவில்லை,
மற்றவை பிறகு பேசுவோம்
//உடையின் இடையில் தெரியும் பெண்ணுடலை வக்கிரத்துடன் பார்க்கும் நோய் ஆண்களின் கண்களில் உருவாக்கப்பட்டிருக்கும்போது அதற்கு அல்லாவோ பர்தாவோ என்ன செய்ய முடியும்? அல்லது அந்த அல்லாதான் ஆண்களின் காமவெறியை கொஞ்சம் காந்தி மாதிரி தணிச்சலாக படைத்திருக்கலாம்தானே? தஞ்சை மாவட்டத்தில் வயலில் வேலை செய்யும் உழைக்கும் பெண்கள் தமது உள்பாவாடையை வரிந்து கட்டிக்கொண்டு கிட்டத்தட்ட ஷார்ட்ஸ் போல உடையை மாற்றிக் கொண்டு வேலை செய்வதை சுமஜ்லா பார்த்ததில்லையா? எந்த வேலையும் இல்லாமல் சும்மா அரட்டை அடிப்பவர்களுக்குத்தான் பர்தா லாயக்கு. உழைக்கும் பெண்களுக்கும், ஒட்டம், ஆட்டம் என சாதனை படைக்கும் பெண்களுக்கும் அது தடைச் சங்கிலி.//
இது தான் எனது கருத்தும்….
பெண்களை காம இச்சையுடன் பார்க்கும் பிரச்சினை உளவியல் ரீதியாக ஆராயப்பட வேண்டியது…. அது உண்மையில் மதப்பிரச்சினை அல்ல, சமூக, சுற்றுப்புற பிரச்சினை….டாக்டர் ருத்ரன், அவருக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் தெளிவாக என்றேனும் விளக்கலாம்…
அதற்காக, பர்தா அணியாத பெண்கள் எல்லாம் நற்குடி இல்லையென்றால் (அவர்கள் இஸ்லாமிய பெண்களாகவே இருந்தாலும்), இன்றைக்கும் வயல்களிலும், கட்டிடடங்களிலும், கார்ப்பரேட் கம்பெனிகளிலும் வேலை பார்க்கும் பெண்கள் குறித்தும் என்ன அர்த்தமாகிறது??
//ஒரு புறம் பதிவுலகம் மத மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டது என்று பல்லவி பாடிக் கொண்டே மறு புறம் இசுலாமிய வெறுப்பை நாசுக்காகவும் பகிரங்கமாகவும் கொட்டுகிறார்கள். கவிதையும்(?) பதிவுமாக எழுதி தள்ளுகிறார்கள். இவர்கள் எவருக்குமே பெண்ணை மதங்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அநீதி குறித்து கிஞ்சித்தும் கவலை கிடையாது. அது இருந்தால் இந்து மதம் பெண்ணை வதைத்திருக்கும், வதைத்துவரும் கொடூரங்கள் குற்ற உணர்வை கொள்ள வைத்திருக்கும்//
அது இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இது வரை, எனக்கு தெரிந்து, எந்த ஒரு பெண்ணும் (நீங்களே சொன்னபடி) தங்கள் அடிமைத் தனத்தை சிலாகித்தும், அப்படி இல்லாதவர்கள் திறந்து வைத்த பண்டங்கள் என்று சொன்னதில்லை….
இந்து மதத்தின் கொடூரம் மறுக்க முடியாத விஷயம்…..பெண் பதினைந்து வயது, கணவன் எண்பது வயது என்றிருந்தாலும் அந்த கிழட்டு கணவன் செத்தவுடன் பெண்ணை உடன் கட்டை ஏற்றியதும், அந்த சிறு பெண் தன் வாழ்க்கையில் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளக்கூடாது என்று சொன்னதும் இந்து சமயமே….
ஆனால், இந்த இடுகையில் சொல்லியிருப்பது போல, அது நாற்பது வருடங்களுக்கு முன் நடந்தது…இன்றைக்கும் அது போல யாரேனும் செய்வார்களாகில் அந்த பன்றிகள் கழுவில் ஏற்றப்பட வேண்டியவை…. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை….
இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம், புத்திஸம் உட்பட எல்லா மதங்களும் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்…
//ஆனால் இதை எதிர்க்கும் வீராதி வீர, வீரபத்திர பேரன்களாகிய ஆண்பதிவர்கள் குறித்துதான் யோசிக்கிறேன். இவர்கள் பிறந்த மதம் என்பது பெண்களுக்கு என்ன மாதிரியான உரிமைகளை அளித்திருக்கிறது, அதை எங்கு மீறியிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சமாவது யோசித்தார்களா? நற்குடியில் பிறந்த பெண்கள் குறித்து எகிறிக்குதிப்பவர்கள், ‘பெண்கள் பாவத்தின் யோனியிலிருந்து பிறந்தவர்கள்’ என்று சொல்லும் பகவத்கீதையை மலந்துடைப்பார்களா? //
இதுவும் சுகுணா திவாகரின் பின்னூட்டம் தான்…!
ஓக்கெ…பெண்கள் பாவத்தின் யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று எந்த பதிவராவது எழுதினார்களா?? தமிழ் பதிவர்களில் ஆன்மீகம் பற்றி எழுதுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்….ஆனால், அவர்களில் எவரும் எனக்கு தெரிந்து பெண்களை இழிவுபடுத்தி எழுதினாதாக எனக்கு தெரியவில்லை…(தெரிந்தால் தயவு செய்து சுட்டிக் கொடுங்கள்)…அப்படி எவரேனும் பெண்களை இழிவுபடுத்தி எழுதினால், அவர் மிக கடும் எதிர்வினைகளையே சந்திப்பார்….
//மாதவிலக்கான பெண்களை வழிபாடுகள் மற்றும் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கும் மத நடைமுறைகளுக்கு எதிராக, அது உடல்ரீதியிலான ஒரு நிகழ்வு என்கிற புரிதலோடு தங்கள் வீட்டுப் பெண்களை வழிபாடு மற்றும் சடங்குகளில் பங்கெடுக்க வைத்திருக்கிறார்களா? ‘பெஸ்ட் பேக்கரியில் ஒரு இஸ்லாமியப் பெண் கொலை செய்யப்பட்டால் என்ன, அதுதான் இன்னும் ரெண்டு இருக்கே” என்பதற்குச் சிரித்துக் கைதட்டி, ‘சூப்பர் படம்” விமர்சனம் எழுதியவர்களுக்கு சுஜ்மலாவின் வார்த்தைகள் குறித்து கோபப்படுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? நற்குடி குறித்து கோபப்படும் கனவான்களே, உங்களையும் உங்களைச் சேர்ந்தவர்களையும் ‘வேசிமக்கள்’ என்று சொன்ன உங்கள் மதத்திற்கு எதிராக என்ன செய்தீர்கள்? உங்கள் மதம் தேவடியாமகன் என்று சொல்வது குறித்து எந்த சுயக்கூச்சமும் இல்லாத நீங்கள் சுஜ்மலாவின் வார்த்தைகளுக்காக வரிந்து கட்டுவது, சந்தடி சாக்கில் ஒரு முஸ்லீம் எதிர்ப்பைப் பதிவு செய்து விட்டுப் போவது என்பதைத் தாண்டி வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை//
Once again, இதுவும் சுகுணா திவாகரின் பின்னூட்டம்….
என் பதிவிலே சொன்னது போல, பெஸ்ட் பேக்கரி வசனம் பற்றி, மனித தன்மையுள்ள யாருக்கும் ஒப்புதலில்லை….to be faiர், அது பற்றி பல பதிவர்களும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி தான் இருக்கிறார்கள்…
ஆனால், தேவடியா மகன் என்றோ, கூட்டிக் கொடுப்பவர்கள் என்றோ எந்த பதிவரும் எழுதவில்லை….அப்படி எழுதினார்கள் என்று சுகுணா திவாகர் சுட்டிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்…
இதை இங்கு நான் முழு மனதோடு பதிவு செய்கிறேன்…சுகுணா திவாகர் போன்ற காமாலை கண்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் காமாலையுடன் தான் பார்க்க முடியும்….எல்லா விஷயத்தையும் மதச்சார்பு கோஷத்துடனேயே பார்க்க முடியும்…அந்த மதத்தை பற்றி முதலில் பேச ஆரம்பித்தது யார் என்பதை முற்றிலும் மறைத்தும் கூட!
//“மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்கள் இப்படித்தான், யாரும் மாற்ற முடியாது” என்று இசுலாமியர்களை இழிக்கும் இந்த சிகாமணிகள் மாறாத இந்து மதத்தை மாற்ற என்ன கிழித்தார்கள்? பிறந்ததிலிருந்து தகப்பன், கணவன், பிள்ளை என மாறி மாறி எல்லா ஆண்களுக்குக்கும் கட்டுப்பட்டவள் பெண் என்பதே மனு வகுத்து இன்றுவரை அமுலிலிருக்கும் நடைமுறை. பெண்கள் வேலைக்கு சென்றாலும் இந்த முறை மாறிவிடவில்லை. //
சபாஷ்….சரியான கேள்வி வினவு…சரியான கேள்வி…
ஆனால் ஒரு சின்ன பிழை இருக்கிறது….இன்றைய நடுத்தர குடும்பங்களில் பெரும்பாலும் பெண்கள் வைத்தது தான் சட்டம்….இதை இல்லை என்று மறுப்பவர்கள் தயவு செய்து தங்கள் அக்கம்பக்கத்தில் விசாரிக்கவும்….
பெண்கள் வேலைக்கு சென்றாலும் அவர்களே வீட்டில் பல வேலைகளும் செய்ய வேண்டியிருப்பது உண்மை…..அது மிக தவறானதே….அதுவும் கூட மாறி, பல ஆண்கள் இப்பொழுது வீட்டு வேலைகளும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்…
//இன்றும் மற்ற மதங்களை விட விதவை திருமணம் என்பது இந்து மதத்தில் மிகுந்த இழிவாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள விதவைப் பெண்கள் இன்னமும் ஒரு கல்யாணம் காச்சிக்கும இன்றும் செல்ல முடியாது. இதைப்பற்றியெல்லாம் ஏன் ப்ரியாவுக்கு சீற்றம் வரவில்லை?//
வெகு எளிமையான காரணம்….விதவைப் பெண்கள் கல்யாணம் காச்சிக்கு போகக்கூடாது…ஏனெனில் இந்து மதம் இப்படி சொல்லியிருக்கிறது என்று எந்த பதிவரும் எனக்கு தெரிந்து எழுதவில்லை….ஒரு வேளை அப்படி யாரேனும் எழுதியிருந்தால் அவர் சீறியிருப்பார் என்றே நான் நம்புகிறேன்….
//நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூட பார்ப்பனப் பெண்கள் விதவையானால் அவளது முடியை ஒண்ணொண்ணாக பிடுங்கி மொட்டையடித்த நாடும் இதுதானே? இந்தக் கதையெல்லாம் தனக்கு தெரிந்த நல்ல பார்ப்பனர்களை வைத்து ஜெயேந்திரப் பார்ப்பனர்களை மறைக்கும் பழமைபேசி பஞ்சாங்கங்களுக்கு தெரியுமா?//
அது நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த கதை என்று நீங்களே சொல்கிறீர்கள்….பழமைபேசியும், ப்ரியாவும் எழுதுவது இன்றைக்கு நடக்கும் கதை…இன்றைய சூழ்நிலை…
நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த கதை என்று சொல்வதிலிருந்து இன்றைக்கு நடப்பதில்லை என்று நீங்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதாக எடுத்துக் கொள்ளலாமா வினவு??
எப்படி இருந்தாலும், இன்றைக்கும் நடந்தால் அது மிக கேவலமான செயல்….நடக்காதிருந்தால் சந்தோஷமே….எல்லாரும் ஆசாபாசங்களுக்கு உட்பட்ட மிக சாதாரண மனிதர்களே….அவர்களும் மற்ற மனிதர்கள் போல நடத்தப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்….
மிஸ்டர் அது சரி,
அரை டிக்கெட் சுட்டிகாட்டியபடி வெட்டி ஒட்டி கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் கோர்வையாக படிக்க இயலுமா என்று பாருங்கள். வினவு அந்தக் கருத்தை ‘பழமை பேசி’ என்ற பதிவருக்குச் சொல்கிறது.
அதாவது, பழமை பேசும் பதிவரா, 40 50 வருடங்களுக்கு முன்பு கூட இப்படி பெண்கள் இழிவுபடுத்தப்பட்டனரே அது உமக்குத் தெரியவில்லையே என்ற அர்த்தத்தில். மற்றபடி இன்றைக்கும் பெண்கள் மீது அடக்குமுறை நிகழ்கிறது என்பதை வினவு மறுப்பதாக இதை புரிந்து கொள்ள அது சரியினால் மட்டுமே முடியும். ஆனால் அது சரியல்ல
மேற்படி கலகலப்ரியாவின் கவுஜையையும், அதில் சுகுணாவின் பின்னூட்டத்தையும் அதற்கு பதில என்ற பெயரில் உண்மைத்?தமிழன் அண்ணாச்சி எழுதியிருந்த ஆவேச உளறல்களையும்(அல்லது இத்தனை நாள் மனதில் அடக்கியிருந்ததை கொட்டியதையும்) இதுதான் சாக்கு என்று நீண்ட நாள் தலைமறைவாக இருந்து இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தலையைக் காட்டும் வக்ரா பஞ்சர்(அல்லது சுருக்கமா வஜ்ரா) என்ற பார்ப்பன ஆர் எஸ் எஸ் பயங்கரவாதியின் சந்திடை ஜால்ராக்களையும் பார்த்தேன்.
சுகுணாவின் கேள்விகள் மிக நியாயமானவை. இஸ்லாமில் சில பெண்கள் பர்தா அணிவதில்லையே என்ற கேள்விக்கு நற்குடியில் பிறந்த பெண்கள் அணிவார்கள் என்று பதிலளித்துள்ளார் அந்தக் குறிப்பிட்ட இஸ்லாம் பெண்.(பொதுப்படையாக எல்லாப் பெண்களையும் கூட சொல்லவில்லை) இதனை எதிர்த்துக் கிளம்பிய சுயமரியாதைச் சிங்கங்கள், தேவாடியாள் மகன் என்று இன்று வரை சூத்திரர்களையும், தாழ்த்தப்பட்ட சாதியினரையும் ஒடுக்கி வருவதை ஏன் எதிர்ப்பதில்லை என்று சுகுணா கேட்டுள்ளார்.
நாற்குடி என்ற பிரயோகம் குறித்தும், பொதுவாக அந்த இஸ்லாமிய பெண்ணிடம் முன்பே பல்வேறு விசயங்களில் வாதிட்டு அது திருந்தாது என்று முடிவு செய்து அறிவிக்கும் உண்மைத்?தமிழன் அண்ணாச்சி இதே போலான விமர்சனப் பூர்வ அணுகுமுறையை பார்ப்பனியவாதிகளிடமோ(டோண்டு உள்ளிட்டோர்) காட்டியதில்லை என்பதை சுகுணாவின் எதிர்வினை அம்பலப்படுத்துகிறது.
நற்குடி என்ற பிரயோகம் குறித்து ஆவேசம் அடையும் பெண்கள்(கலகலப்ரியா, துளசி கோபால் போன்றோர்), இந்து பார்ப்பன மதம் பெண்களை அதை விடக் கேவலமாக இழிவுபடுத்துவதை ஏன் எதிர்க்கவில்லை என்று சுகுணா கேட்கிறார். ஆகக் கடைசியில் இந்த மோதல் திட்டமிட்டபடி ஆண்கள் வரையறை செய்துள்ள கற்பு, விபச்சாரம் என்ற பெண்ணடிமை சமூக வரையறைகளுக்கு உட்பட்டே நடந்துள்ளது என்பதே சுகுணாவின் எதிர்வினையில் தெரியவருகிறது. அவ்வாறு இல்லையெனில், இந்த விவாதம் நியாயமாக இஸ்லாமில் இருக்கும் பெண்ணடிமைத்தனம் குறித்து நடந்திருக்க வேண்டும்.
இது வெகு சுலபமான விசயம். டோண்டு, வஜ்ரா போன்ற கழிசடை பார்ப்பன பயங்கரவாதிகளுடன் நட்புடன் பழகுவதும், சோ மாதிரியான தேசத் துரோகிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கவும், ஆர் எஸ் எஸ் பயங்கரவாத அமைப்புகளை கலாச்சார அமைப்பு என்று முட்டுக் கொடுக்கவும், அதற்கு சட்டவாதம் பேசுவதும், தாழ்த்தப்பட்ட மற்றும் இந்திய உழைக்கும் மக்களின் அவல வாழ்வு குறித்து கிஞ்சித்தும் அறிவின்றி, உணர்வின்றி மேல்தட்டு நியாயம் பேசவும் கொஞ்சம் கூட குற்றவுணர்வு கொள்ளாத பதிவர்கள் மட்டும்தான் அந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் ஆவேசம் காட்டியுள்ளனர். இந்த ரெட்டைத்தனம் என்பது இவர்களின் உள்ளார்ந்த பண்பாடாகவே உள்ளது. இது இவர்களின் பிழைப்புவாதத்தில் இருந்து உருவாகிறது.
ஸ்ஸ்ஸ், அப்பா… இதைப் புரிய வைக்கத்தான் இவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது. மேலும் டோண்டுராகவன் மாதிரியானவர்களிடம் கேள்வி கேட்காதது மட்டுமல்ல, கீழ்சாதி, கீழ்க்குடி என்று மனசுக்குள் இருக்கும் விஷம் வெளியே வருகிறது பாருங்கள். இங்கே அதுசரி என்கிற ஒருவர், பகவத்கீதை சொன்னதைப் போல பதிவர்கள் சொன்னார்களா என்று ‘புத்திசாலித்தனமாக’ கேள்விகளை அடுக்குகிறாரே. இதோ ஒரு பதிவர் தாழ்த்தப்பட்ட மக்களைக் கீழ்சாதி என்றும் கீழ்க்குடி என்றும் அழைத்திருக்கிறார். டவுசரைக் கழட்டுவீர்களா அதுசரி?
//பெண்ணின் இயல்பான மாதவிடயாக் காலத்தை வைத்தே எத்தனை சட்ட திட்டங்கள்? அவள் பூ சூடக்கூடாது, கோவிலுக்கு போகக்கூடாது, விசேசங்களுக்கு செல்ல கூடாது, வீட்டில் ஒரு மூலையில் மூன்று நாட்களும் அடங்கிக் கிடக்க வேண்டும் என்றெல்லாம் கிரிமினல் சட்டம் வகுத்தவர்களைப்பற்றி கோபம் வராதா?//
இதற்கு முன்பே கோவி.கண்ணன் பதில் சொல்லிவிட்டார்…என்றாலும்….
இன்றைய சூழ்நிலையில், Oh….Come on….ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் இருக்கிறாள் என்பது அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கே தெரியாது…வினவு, உங்களுக்கு பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்கள், நடுத்தர மக்கள், உயர்குடி மக்களுடன் தொடர்பு என்று தெரியவில்லை…ஆனால், எனக்கு தெரிந்த வரை, பல குடும்பங்களும் இன்றைக்கு அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை….
(பொருளாதார ரீதியாக என்று சொல்வதற்கு காரணம், பகுப்பின் அடிப்படை அவர்களின் பொருளாதாரமே தவிர, ஜாதியோ இன்ன பிற விஷயங்களோ அல்ல!)
//தற்போது ஐயப்ப சீசன். என்னவெல்லாம் வாய் கிழியப் பேசுகிறார்கள், சபரி மலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று ஒரு விதியை இன்னும் அமல்படுத்தி வருகிறார்களே இதுவெல்லாம் ‘நற்குடி’ பதிவர்களுக்கு கோபத்தை கொண்டுவரும் தகுதி படைத்தது இல்லையா?//
வெகு எளிய கேள்வி….
சபரிமலைக்கு செல்பவர்கள் நற்குடி மக்கள், செல்லாதவர்கள் நாறக்குடி என்று யாரேனும் எழுதினார்களா? சொன்னார்களா??
சொல்லியிருப்பின் சுட்டி தாருங்கள்…அவர்களின் கோவணத்தை யார் கழட்டுகிறார்களோ இல்லையோ, என்னால் முடிந்த வரை கழட்ட நான் தயார்….
//சபரிமலைக்கு செல்பவர்கள் நற்குடி மக்கள், செல்லாதவர்கள் நாறக்குடி என்று யாரேனும் எழுதினார்களா? சொன்னார்களா??
சொல்லியிருப்பின் சுட்டி தாருங்கள்…அவர்களின் கோவணத்தை யார் கழட்டுகிறார்களோ இல்லையோ, என்னால் முடிந்த வரை கழட்ட நான் தயார்…//
ரொம்ப சிரமப்படாதீர்கள் அது சரி, இதே போல ஒரு கருத்தை சிதம்பரம் கோயில் பிரச்சினையில் எதிர்மனுதாரர்களாக தீட்சித பார்ப்பனர்கள் சமர்பித்த மனுவில் சொல்லியுள்ளனர்.
அதாவது, கோயில் உள்ளே பூசை செய்யும் உரிமை அவர்களுக்குத்தான் உண்டு ஏனெனில் பிற சாதியினரிடம் கொடுத்தால் நகைகள் முதலான விலையுயர்ந்த பொருட்களுக்கு ஆபத்து என்று. இதன் மூலம் இந்துக்கள் என்று அறியப்படும் பெரும்பான்மை மக்களை திருடன் என்று சொல்கிறார்கள் பார்ப்பனர்கள். இதனை அன்றைய நீதிபதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்(அவர் பெயர் அம்பேத்கர் என்பது ஒரு முரன்நகை).
கருணாநிதி திருடன் என்று சொன்னார் என்று குதித்த இந்து மனமே, இஸ்லாமியப் பெண் நற்குடி என்று (அதுவும் இஸ்லாமிய பெண்களைத்தான் சொல்லியுள்ளார்) சொன்னதற்காக ஆவேசப்படும் அது சரியே.. இது வரலாறு உனக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறது… உடனே சிதம்பரம் சென்று தீட்சிதர்களின் கோவணத்தை கழட்டு, அதற்கு முன்பு அவர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் இந்து முன்னணி போன்ற பார்ப்பன பயங்கரவாத அமைப்புகளின் கோவணம், அதற்கு அடுத்து போலீஸ்காரர்களின் கோவணம் போன்றவற்றையும் கழட்ட வேண்டியிருக்கும்.
இதையெல்லாம் விட சுலபமான வழி டெல்லியில் நடக்கும் சிதமபரம் கோயில் வழக்கு நிதி முழுவதையும் ஏற்றுக் கொள்வது(சில லட்சம் ஆகும்).
என்ன அது சரி.. சரியா அது உங்களுக்கு வருமா?
இதே போல, பபப்புக்களுக்குள் புகுந்து பெண்களை அடித்ததும், முஸ்லீமை மணந்த பெண்கள் மற்றும் சாதி விட்டு திருமணம் செய்த பெண்களை கொல்வது-கடத்துவது, பெண்களுக்கு கன்னித் திரை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சொன்ன பாஜக, ஆர் எஸ் எஸ், பஜ்ரங்தள் பார்ப்பன பயங்கரவாதிகள், ஆபீசுக்கு செல்லும் பெண்கள் விபச்சாரிகள் என்று சொன்ன காமக் கேடி சங்கரன் போன்றோர் இதன் மூலம் நற்குடி பெண்கள் என்படுபவள் ஆண்களுக்கு இணையாகக் கேளிக்கைகளில் ஈடுபடக் கூடாது, சாதி-மதம் விட்டு திருமணம் செய்யக் கூடாது, ஆண்களைப் போல உடல் உழைப்பு வேலை செய்யக் கூடாது, வெளி வேலைக்குச் செல்லக் கூடாது என்று வரையறை செய்துள்ளனரே.. அது சரி அவர்கள் இந்த பார்ப்பன பயங்கரவாதிகளின் கோவணத்தைக் கிழிக்க எம்முடன் அணிதிரள்வாரா?
//சபரிமலைக்கு செல்பவர்கள் நற்குடி மக்கள், செல்லாதவர்கள் நாறக்குடி என்று யாரேனும் எழுதினார்களா? சொன்னார்களா??//
மேலும்,
இதே சபரிமலைப் பிரச்சினையில் ஐயப்பனைத் தொட்டதாக கன்னட நடிகை ஒருத்தி பேட்டிக் கொடுக்கப் போய் மிகப் பெரிய பிரச்சினையாகி தீட்டுக் கழிக்கும் யாகம் நடத்தப்பட்டது. ஆனால் இதே ஐய்யப்பனை தொட்டுத் தடவி பூசை செய்யும் பூசாரி ஒருவன் ஆகக் கேடான அயோக்கியத்தனங்கள் செய்த பொழுதும் அவனுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்படவில்லை, ஐயப்பனுக்கும் எந்த தீட்டுக் கழிப்பு நடத்தப்படவில்லை.
இதன் மூலம், பெண் என்பவளே நற்குடியானவள் அல்ல என்று வரையறை செய்துள்ள இந்து பார்ப்பனிய சமூக ஒழுங்கமைப்பின் கோவணத்தை அது சரி என்று கழட்டுவார் என்று ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டுள்ளேன்
//சீசன் வந்து விட்டால் சாமிகளின் அட்டகாசம் தாங்கமுடியாது. டீக்கடையில் பேப்பர் கப்பாகட்டும், டாஸ்மாக்கில் சரக்கடிக்க தனி பிளாஸ்டிக் டம்ளாராகட்டும் என சரக்கு தொடங்கி சகலத்திலும் அய்யப்பமார் சாமிகளின் புனிதம் காக்கப்படுகிறதாம். இதில் வயதுக்கு வந்த ஒரு பெண் ஐயப்பனை வணங்க வந்தால் அது தீட்டாம். இந்த மாதிரி கேவலம் உலகில் வேறு எங்கவாது உண்டா? கேட்டால் பெண்ணின் ரத்தவாடை அறிந்து காட்டு விலங்குகள் வந்து விடுமாம் என்றொரு அறிவியல் விளக்கத்தையும் தெளிக்கிறார்கள்.//
முற்றிலும் ஒப்புக் கொள்கிறேன்….1000%! And really, that’s why I like Vinavu website and its editors! I just love this criticism!
குடிப்பவனுக்கு சரக்கு தான் முக்கியம்…அதில் என்ன புனிதமும் மற்ற மயிரும்?? மிக சுத்தமான ப்ளாஸ்டிக் கப்பில் ரம் என்று கோக் ஊற்றி கொடுத்தால் ஒத்துக் கொள்வானா? தறுதலை பொறுக்கி பன்னாடை பொறம்போக்குகள்!
வயதுக்கு வந்த பெண்கள் வந்தால் காட்டு விலங்குகள் வருகிறதா??? காஞ்சி “காம” கோடி ஜெயேந்திரன், ப்ரேமானந்தாவை விட மோசமான விலங்குகள் கூட உண்டா??
இதிலிருந்து புரிவது நாம் எல்லோரும் சொல்லி வருவது தான்….எல்லா மதங்களிலும் பொறுக்கிகள் உண்டு….மதம் என்பதே காட்டுமிராண்டித் தனத்தின் எச்சம்….(got to add something here….I am a capitalist, I do admire communism for just one thing….Because the true communism is the first political philosophy that denied all religions!)
//ஏன் ஆணின் உடலில் கூட மல, சலம், வியர்வை, ரத்தம், சளி என எல்லா எழவும் இருந்துதானே தொலைக்கிறது. இதைப் பார்த்து காட்டு விலங்குகள் இது ஆண் சமாச்சாரம் என ஓடிவிடுமா? அப்புறம் சேலை கட்டிய பெண்கள் ஒட முடியாதாம். அதனாலென்ன ஜீன்ஸ் போட்ட பெண்கள் ஒடலாமே? ஏதோ சிந்து பாத்தின் சாகசப் பயணம் போல உதார் விடும் இந்த சாமிகள் எவரும் நோகமால் ரயில், பஸ், இதர வாகனங்கள், சுமைதூக்கிகள், சாப்பாட்டுக் கடைகள், மலையிறங்கியதுமே சரக்கடிக்க ஏற்பாடுகள் என எல்லா வசதிகளையும் வைத்துக் கொண்டே பயணம் செய்கிறார்கள்.//
ஒரு சிறிய மாறுபாடு…சரக்கடிக்க என்பதை கடைசியில் சேர்த்திருக்கிறீர்கள்…ஆனால், உண்மையில் அது மிக மிக முதலில் வரும் விஷயம்! தவிர, அது மலை இறங்கும் போது மட்டுமல்ல, மலை ஏறுவதற்கு முன்பே “அடிக்கும்” சாமிகளை(!) எனக்கு பழக்கம் உண்டு….(ஆமா, ப்ளாஸ்டிக் கப்பில் தான்…அதுல தெளிவா இருப்பாய்ங்க!)
//இப்பொதேல்லாம் சபரிமலைப் பயணம் என்பது ஒரு பிக்னிக் ஸ்பாட் பயணமாகி விட்டது. தேவைக்கேற்றபடி ஒரு மண்டல விரதம், ஒரு நாள் ஏன் ஒரு வேளை விரதம் என்பதாகவெல்லாம் சுருங்கிய நிலையில் பெண்கள் மட்டும் வரக்கூடாது என்ற அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்ல? இதைப்பற்றியெல்லாம் ரௌத்திரதாசர்களுக்கு ரௌத்திரம் வராதா?//
சரியான கேள்வி….எல்லோருக்கும் சாமி எனும் போது அதில் பெண்கள் வரக்கூடாது என்பது பொறுக்கித் தனமே…. அதுவும் பொறுக்கியான ஒருவன் மேல்சாந்தியாக இருக்கும் ஒரு கோவிலுக்கு பெண்கல் வருவது தவறென்பது பிற்போக்கு மோசடியே தவிர வேறில்லை…
அதே சமயம், ரெளத்திரதாசர்களுக்கு ரெளத்திரம் வராதா என்று நீங்கள் ஏதேனும் குறிப்பிட்ட பதிவரை குறிப்பீர்களானால், நான் கேட்பது மீண்டும் அதே விஷயம் தான்….பதிவர்களில் யாரேனும் பெண்கள் வரக் கூடாது, அவர்கள் தவறானவர்கள் என்று பதிவிட்டார்களா???
//இதைப்பற்றி எந்த சுரணையும் இல்லாத சாமிகள்தான் ஆண்டுதோறும் பயணம் சென்று சாஸ்தாவைத் தரிசித்து வீரமணி பாட்டுக்களையெல்லாம் குத்தாட்ட ஸ்டைலில் பாடி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.//
கரெக்ட்….முக்காலா முக்காபுலா, ஸ்டைலு ஸ்டைலு தான் மெட்டில் பாட்டுக்களை கேட்டு பல குழந்தைகள் பய்ந்து போயிருக்கிறார்கள்…:0))))
வருஷா வருஷம் இந்த சாமிங்க குத்தாட்டம் தாங்கல சாமி….
//ஹை லெவல் இன்புளுயன்ஸ் உள்ளவர்கள் காஞ்சி காமகேடி ஜெயேந்திரனிடம் போய் கேட்டலாம், மனைவி-மகளோடல்லாமல் தனியாக போவது ஷேமம் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு.//
வினவு,
இப்பல்லாம் ஹை லெவல் இன்ஃபுளூயன்ஸ் இருக்க பவர்ஃபுல்லா ஆளுங்களே கூட மனைவி மகளோட காஞ்சி “காமம் கோடி” ஜெயந்திரன் கிட்ட போறதில்லையாமே?? நெசமாவா??
அசுரன் மற்றும் அரடிக்கெட்டு,
இப்ப தான் மெயின் இடுகைக்கு பதில் போட்டு முடிச்சேன்…நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவை….ஆனா, இப்பவே இங்க டைம் 1:30 ஆயிடுச்சி….நாளைக்கு கன்டினியூ பண்றேனே…
அரடிக்கெட்டு, உங்க பேரு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு….எல்லாம் பழைய ஞாபகம் தான்…:0))))
///தவிர்த்திருக்க கூடிய வெட்டிவீழ்த்துதல்களை பட்டியலிட்டு காட்டினால் உதவியாக இருக்கும் செல்வநாயகி/////
வினவு,
நேற்று இரவு உங்கள் இடுகை தட்டுப்பட்டவுடன் வாசித்துவிட்டுப் போனது. பலமணிநேரங்கள் கழித்து வந்து பார்த்தால் பின்னூட்ட மலையேறிக் கடக்கவே நிறைய நேரம் பிடித்தது:)) நீங்களே ஒரு பின்னூட்டத்தில் ஒத்துக்கொண்டிருப்பது போல் 40 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் இக்கட்டுரையின் மையப் பொருளான “மதங்களின் பார்வையில் பெண்கள்” என்பதைத் தொடவேயில்லை. ஏனென்றும் உங்கள் பங்காக அதில் ஏதும் காரணம் இருக்கிறதா என்றும் பார்க்கும்போது புரியும் நான் குறிப்பிட்டுச் சொன்ன உங்களின் தவிர்த்திருக்கக்கூடிய “வெட்டி வீழ்த்தல்கள்”. இப்போது நீங்களேவும் உணர்ந்து ஒரு பத்தியைத் தூக்கியும் இருக்கிறீர்கள்.
அதுமட்டுமல்ல. பதிவுலகம் பெரும்பான்மை அளவில் ஆக்கப்பூர்வமாகச் செயல்படவில்லை என்பதை ஒத்துக்கொண்டு பார்த்தாலும், அதை மாற்ற விரும்புவுதாய்ச் சொல்லும் உங்களின் அணுகுமுறை என்ன? அத்தனை பேரையும் ஆவேசமாகத் திட்டிவிட்டு பின் எவரும் உள்ளே வந்தே உரையாடுவதில்லை என்று குற்றமும் சொல்லிக்கொண்டு இருப்பதா? இதில் வேறு வினவில் தன் கருத்தை வந்து எழுதாதவன் எல்லாம் சுயமரியாதை அற்றவன் என்றெல்லாம் ஒரு நண்பர் இலகுவாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நாம் யாரைச் சென்றடைய விரும்புகிறோமோ அவர்களுடன் ஒரு இணக்கமான உரையாடல் சூழலையாவது ஏற்படுத்திக் கொள்ளாது “நானே முற்போக்கு, வாங்கடா பிற்போக்கு” என்று பல்லவி இசைப்பதால் வினவின் தோழர்கள் தாண்டி மற்றவர்கள் உங்களைப் புரிந்துகொள்ள நீங்களே தடை ஏற்படுத்துகிறீர்களா? இல்லையா? இங்கு மணிகண்டன் சுட்டிக்காட்டியிருப்பது போல் வினவுக்கே மற்றவர்களின் தளங்களில் சென்று இடுகை சம்மந்தமான குறைந்தபட்சக் கருத்தைப் பதிவதில் ஆர்வங்கள் இல்லாதிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது? அதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள் ஏற்புடையவை அல்ல. பெண்கலைப் பற்றி இவ்வளவு நல்ல சிந்தனைகளை இன்று இங்கே எழுதுகிற நீங்கள் சந்தனமுல்லையின் இடுகையில் குறைந்தபட்ச எதிர்ப்பை மட்டுமாவது அம்மிரட்டலுக்குப் பதிந்து செல்வதில் என்ன இருக்கிறது? எல்லாவற்றையும் உங்கள் இடத்திலேதான் எழுதவேண்டுமெனத் தீர்மானம் போட்டுக்கொண்டு இடுகை வெளியிட்ட உடனே வராத உங்கள் தோழர்களையும் மைக் வைத்து மேடைக்கு வரவைத்து ஒரு கூட்டத்தைக் கூட்டி விட்டு மதில் மேல் பூனையாக எவர்தான் சரியாகச் சொல்கிறார் என எட்டி எட்டிப் பார்க்கும் அப்பிராணிகளையும்கூட உள்ளே வரமுடியாத ஒரு தயக்கத்தை உண்டுபண்ணி அனுப்புவதில் உங்களுக்கும் பங்கிருக்கிறது வினவு.
வினவும், மற்ற முற்போக்குப் பதிவர்களும் சேர்ந்து மற்ற பதிவர்களைத் திருத்தவே முடியாது எனச் சலித்துக்கொள்கிறீர்களே? ஏன் வினவு இப்படித் தனக்குத்தானே பரிவட்டம் கட்டிக்கொள்ளும் வேலையையும் செர்த்துச் செய்ய வேண்டும்? மடாதிபதிகளை எதிர்க்கிறவர்களே முற்போக்குக்குப் பீடாதிபதிகள் என்று அறிவித்துக் கொள்ளுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? முற்போக்குக்கு என்ன வரையறை? எதையும் எதையும் எதிர்த்தால் முற்போக்கு? அல்லது எதையும் எதையும் ஆதரித்தால் முற்போக்கு? ஒடுக்கப் பட்டவர்களை ஆதரித்தும் காரல் மார்க்ஸைக் கரைத்துக் குடித்தும் எதிரில் இருப்பவர் மீது எச்சில் தெறிக்கப் பேசும் என் கம்யீனிஸ்ட் நண்பன் தன் வீட்டிலேயே ஒரு உயிரை வெறும் தோசை சுட்டுக் கொடுக்கவும், வேட்டி துவைத்து மடிக்கவும் மட்டுமென்று ஒடுக்கி வைத்திருப்பதைப் பார்க்கவும் அதே சமயம் சனாதனச் சகதியைத் தன் செயல்கள் பலதில் பூசியிருந்தாலும் பொண்டாட்டியோடு மிக இயல்பாக வேலைகளைப் பகிர்வதோடு தன் ஆண் திமிரைக் கழட்டி எறிந்துவிட்டவனையும் ஒரு சேரப் பார்ப்பது நேர்ந்துகொண்டிருக்கையில் இந்த இரண்டு பேரில் எவன் முற்போக்கு? எதில் முற்போக்கு? எவ்வலவு தூரம் முற்போக்கு? என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிற வேலை இருக்கிறதே! இதில் எதற்கு ஒட்டுமொத்தமாக ஒரு முற்போக்கு, பிற்போக்கு வகைப்பாடு? இந்த வகைப்பாடுகளையெல்லாம் தவிர்த்து விட்டு சமூகமெங்கும் அப்பிக் கிடக்கிற அவலங்களை எழுதுவதும் இயலாத காரியமல்ல வினவு உங்களுக்கு. தரையில் இறக்க முடியாத விமானங்களைக் கொண்டு நாம் எந்த ஊருக்குப் பயணிகளைச் சேர்க்கப் போகிறோம்?
மற்றபடி உங்களின் மையப் பொருளான மதங்களும், பெண்களும் பற்றி நான் என் முதல் பின்னூட்டத்திலேயே சொன்னதுதான், அல்லாவும் சரி, யேசுவும் சரி, இராமனும் சரி எவனுக்கும் பெண் ஒரு உயிர் அல்ல வெறும் உடல் அவ்வளவே. இதை உணர்ந்துகொள்ள முடிகிற பெண்களுக்கு மதங்கள் மட்டுமல்ல கடவுள்களும் இல்லை.
பின் குறிப்பு:_
உங்கள் தோழர் ரதி வேறு அவ்வப்போது “வினவு தளத்தில் நான் மட்டுமே ஒரே பெண்ணாகப் பல விசயத்தையும் பேசிக்கொண்டிருக்கிறேன், பென் பதிவர்களே வாருங்கள், உங்களுக்காகவேனும் பேசுங்கள்” என்று அழைப்பு விட்டுக் கொண்டிருக்கிறார். இங்கே பல முறைகளில் சந்தன முல்லை, கண்ணகி, செல்வநழயகியெல்லாம் பின்னூட்டம் இட்டுக்கொண்டுதான் இருக்கிறார்களே, ரதிக்கு ஒருவேளை பெண் பெயர்களைப் புரிந்துகொள்ள இயல்வதில்லையோ?
கூடவே ரதியை நான் சமீப காலங்களில்தான் அறிந்து வருகிறேன். ஈழத்துக் காரர் என்று அறிகிறேன். இணையத்தில் அதே ஈழத்துப் பெண்பதிவர்கள் பலர் எழுதிய இதே மத, இன்னபிற அடக்குமுறைக்கெதிரான குரல்கள்கூட கூகிளிட்டுப் பார்த்தாலே கிடைக்கும் படிக்கலாம். தான் படித்திருக்காததாலேயே எதுவும் எழுதப்படவேயில்லை என்கிற புரிதலில் இருந்து விடுபட அவை உதவும்.
முற்போக்கில் போலிகளே அதிகம். அவர்களைப் பற்றியும் வினவில் பல பதிவுகள் வந்தன. சாதி,மத,பால்பேத அடையாளங்கள் இல்லாமல் அதையும் ஒரு போராட்டமாக வாழ்வதும் மற்றவர்களை அப்படி வற்புறுத்துவதும் பரிவட்டம் கட்டும் செயலல்ல.உங்களுக்கு தெரிந்த போலி கம்யூனிஸ்ட்டுகளை வைத்து முற்போக்கு, பிற்போக்கு எதுவென்று கேட்கிறீர்கள். அதற்குப்பதில் உங்கள் வாழ்வில் நீங்கள் தீவிரமான, உண்மையான, எளிமையான கம்யூனிஸ்ட்டுகளை பார்த்த்தில்லை என்றே தெரிகிறது. உங்களின் தேடலில் குறையிருப்பின் அது எங்கள் தவறல்லவே. வினவின் எல்லா பதிவுகளுக்கும் செல்வநாயகி பின்னூட்டமிடுவதில்லை. ஆனால் வாசிக்கிறார். அதே விதியைத்தான் மற்ற பதிவர்களுக்கும் வினவு அமல்படுத்துகிறது. தேவையான போது மற்ற பதிவுகளில் மறுமொழி இடுகிறோம். அதை வலிந்து ஒரு பொழுது போக்காக செய்யுமளவு நேரமில்லை. எங்கள் நேரத்தில் களப்பணி போகவே கணினிப்பணிக்கு ஒதுக்கியிருக்கிறோம். வினவில் கூட மற்ற நண்பர்களின் கட்டுரைகளே பெரும்பான்மையாக வெளியிடப்படுகின்றன. ஆயினும் மற்ற பதிவர்களின் விவாதங்களில் கலந்து கொள்வதும், கருத்து தெரிவிப்பதும் சரியானதே. அவற்றை இயன்றவரையில் இனி செய்யப் பார்க்கிறோம். ரதியை எங்கள் தோழராக மாற்றியதற்கு நீங்கள் ரதியிடம்தான் அனுமதி பெறவேண்டும். செல்வநாயகியைக் கூட எங்கள் தோழர் என்று சொல்ல ஆசையிருந்தாலும் அதற்கு செல்வநாயகி சம்மதிக்கவேண்டுமே. ரதி இங்கு வாசகராக அறிமுகமாகி இப்போது கட்டுரைகள் எழுதும் நண்பர். அரசியலையும், சமூக தேடலையும் கற்றுவருகிறார். நீங்கள் உங்களுக்கு தெரிந்தவனவற்றில் இருந்து பேசுவது போல அவர் அவருக்கு தெரிந்தவற்றிலிருந்து பேசுகிறார். கூடக்குறைய இருந்தாலும் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறதே என்பதையே பொதுவாய் சொல்ல முடியும். மற்றபடிக்கு நீங்கள் எழுதியிருக்கும் மையமான விசயங்களை ஒரு தனி இடுகையாக மென்மையான வார்த்தையில் வெளியிடுவதற்கு முயல்கிறோம். எப்படியும் இந்த பதில் உங்களுக்கு ஏற்புடையதல்ல என்பதால்.
//சந்தன முல்லை, கண்ணகி, செல்வநழயகியெல்லாம் பின்னூட்டம் இட்டுக்கொண்டுதான் இருக்கிறார்களே, ரதிக்கு ஒருவேளை பெண் பெயர்களைப் புரிந்துகொள்ள இயல்வதில்லையோ?//
மன்னிக்கவும் சகோதரி. நான் குறிப்பிட்ட ஒரு சில தளங்களை/பதிவுகளை தான் படிப்பது. நேரப்பற்றாக்குறையே இதற்கு காரணம். இதனால் யார் ஆண் பதிவர், பெண்பதிவர் என்ற குழப்பங்கள் எனக்கு உண்டு. இப்போது தான் சுகுணா திவாகரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு இந்தப்பக்கம் வந்தால் நீங்கள் என்னை திட்டுவது காதில் விழுந்தது. //செல்வநழயகியெல்லாம் பின்னூட்டம் இட்டுக்கொண்டுதான் இருக்கிறார்களே//. ஆமாங்க அது என்னோட தவறுதான். கவனிக்கத்தவறிவிட்டேன். நான் இந்த பதிவில் ஓர் வாசகியாகத்தான் பதிலளித்தேன், பதிவராக அல்ல. அதற்காக நீங்கள் வினவை திட்டியிருக்க வேண்டாமே. என்னிடமே கேட்டிருக்கலாம். அல்லது என்னையே நேரடியாக திட்டியிருக்கலாம். உங்கள் பதில்களை படித்து விட்டு கண்டிப்பாக பின்னூட்டம் இடுகிறேன். நன்றி.
தொழுகை பிராத்தனை ஆஸீர்வாதம் இது மாதிரியான சொல் பிற மதங்கள் சொல் போல்
தெரியும். அவர்கள் அதிகம் பயன்படுத்துவதால்.
அது போல் தான் பர்தாவும். முகத்தை முடுதல் என்பதை பாரதி சொல்வார்
டில்லி துலுக்கர் பழக்கம் என்று. பெண்களாக முடுவதில்லை, முட வைக்கப்படுகிறார்கள்
வாய் பேசாது சொன்னதை செய். அது தான் அடிமையின் அடயாளம்.
வினவின் பதிவுகள் எல்லாம் சமுகத்தை அடிக்கும் சாட்டை அடிகள். அதற்காக புலம்புபவர்கள் எல்லாம் வலி தாங்க முடியாமல் கதறுகிறார்கள். வினவின் சாட்டை அடி தொடர வாழ்த்துகள்.
அட முட்டாள் பசங்களா பர்தானா அவ்வள்வு மோசமான உடையா இது, பாதுகாப்பு, பாதுகாப்புக்காக போடுகின்ற உடை, இது இஸ்லாமியர்கள் தான் போடனும் இல்லை, பார்ப்பனர்களும் போடலாம், விபச்சாரிகளும் போடலாம், அது தான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது, ஏன் பாப் இசை புகழ் மைக்கேல் ஜாக்ஸன் கூட உலக நாடுகளுக்கு சுற்றுபயனம் செய்யும் போது பர்தா அனிந்து தான் சென்று வந்தார், ஏன் அவருக்கு ஒரு பாதுகாப்பு தானே, விபச்சாரி என கோர்ட்டுக்கு வரும்போது புவனேஸ்வரி பர்தா அனிந்து தான் வந்தார், ஏன் பாதுகாப்பு தானே, இதற்க்கு நற்குடிகள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, கோவில் அர்ச்சகர் பெண்கள் சாமி கும்பிட குணியும் போது அவர்கள் மார்பகங்களை செல்போனில் போட்டோ எடுப்பாராம், இது யாருடைய தப்பு, ஏன் அதே பர்தா அனிந்து வந்தால் எவன் மார்பகங்களை போட்டோ எடுப்பான், ஒரு பென் ஆண்கள் இருக்கும் இடத்திற்க்கு செல்லும் போது பனிவாக மரியாதையாக பர்தா அனிந்து வருவது சிறப்பு அதற்க்கு தான் அவர்கள் நான் பர்தா அனிந்து போய் வந்தேன் என்று சொல்லியிருக்கிறார்கள், இதை அறியாத முட்டா பசங்க (சில பதிவர்கள் ) நானும் பேண்ட் போட்டு தான் போய் இருந்தேன் சொல்லி இருக்கிறார்கள், முட்டாள் பசங்க,,,,,,,
irshad கூறியதாவது
பெண் உரிமை உரிமை என்று பெண்களை விபசாரிஹலஹா மாற்றிவிட்டீர்ஹல்லா
பதில் – தவறு அப்படி சொல்லவில்லை பர்தா அனிவது ஹலாலா என்பது பிரச்சினை இல்லை, ஒரு பென்னுக்கு பாதுகாப்பு தான் இப்போது பிரச்சினையே, ஹலாலா, ஹலால் என்பது இல்லை இது மதம் சார்ந்த விஷயம், பர்தா அனிந்து போவது வருவது செக்ஸ் சாமியாரிடமும், செக்ஸ் வெறியர்களிடமும்,ஈவு இரக்கமற்ற வெறியர்களிடமிருந்து பாதுகாக்க வே தான் பர்தா என்பது ஒரு பாதுகாப்பு.பர்தாபோடுவது பெண்களை பொறுத்து தான், அது விபச்சாரி என்று இல்லை, புவனேஸ்வரி பர்தா போட்டு வரும் போது தவ்ஜித் ஜமாத் பெண்கள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள் தான் இது பர்தாவை கேவலமாக்கும் விஷயம் தான், ஆனால் இப்போது பதிவர்களிடம் நடக்கும் போராட்டம் ஒரு முஸ்ஸிலிம் பெண் பர்தா அனிந்து போய் வந்தது பார்ப்பன பைத்தியங்கலுக்கு வயிறு எரிகிறது அது தான் விஷயமே
“தில்லி துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள் முகமதை மறைத்து வைத்தல். மறைத்ததால் அழகு மறைந்ததில்லை” என்று தேசிய கவி சுப்ரமணிய பாரதி பாடியிருக்கிறான். அந்த கோபம் அவனுக்கும் இருந்திருக்கிறது.
பெண்அடிமையின் உச்சக் கட்டம் பர்தாவும் பெண் குறி வெட்டுவதும். அது இன்றும் சில ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளில் உள்ளது.
வினவின் கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு இருந்த போதிலும்.. அவர் இங்கே குறிப்பிட்டு சாடியுள்ள சில பதிவர்களின் பெயர்களை பார்க்கின்ற போதும் மற்றும் இதுவரை வந்துள்ள பின்னூட்டங்களை பார்க்கின்ற போதிலும் வலை பதிவுலகில் ஆரோக்கியமான கருத்தாடல் அறவே குறைந்துகொண்டு வருவது கண்கூடாகத்தெரிகின்றது… ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்வது நையாண்டி செய்வதும் பொதுக்கழிவரையில் கிறுக்கிவைப்பதை போல மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது… மேலும் முற்போக்காளர்கள் என்ற முத்திரை உடைய பலரும் மிகவும் பிற்போக்காக ஒருத்தரை ஒருத்தர் சாடிக்கொள்வதையே வழக்கமாக வைத்திருப்பதும் என்னைபோன்ற ஒன்றும் தெரியாதவர்களுக்கு வேதனை அளிக்கிறது… நம்பகத்தன்மை இழக்கச்செய்கிறது…
வினவு அவர்களின் கருத்தில் முழு உடன்பாடு இருந்த போதும்.. இப்பதிவில் அவர் குறிப்பிட்டுச்சாடியுள்ள ஒரு சில பெயர்களை பார்க்கின்ற போதிலும், மற்றும் அடுக்கடுக்காக வந்துள்ள பின்னூட்டங்களை பார்கின்ற போதும் தமிழ் வலை பதிவுலகில் ஆரோக்கியமான கருத்தாடல்கள் வெகுவாக குறைந்துவருவது எளிதில் தெரிகிறது. முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்பவர்களே ஒருவருக்கோருவர் சாடிக்கொண்டு மிகவும் பிற்போக்காக இருப்பது பொதுக்கழிவறை சுவற்றில் கிறுக்கி வைப்பதைப் போன்ற வேதனையினை அளிக்கிறது. என்னை போன்ற ஒன்றும் தெரியாதவர்களுக்கு மிகுந்த குழப்பமளிக்கிறது.
//ஏறக்குறைய ஒரு மாதம் வீழ்த்திய வைரஸ் காய்ச்சலுக்குப் பிறகு பிறகு…//–தற்போது உடல்நிலையில் எப்படி இருக்கிறீர்கள் வினவு? சுகாதாரமான முறையில் உங்கள் உணவு உட்கொள்ளலை அமைத்துக்கொள்ளுங்கள். இரவில் சீக்கிரம் தூங்கிவிடுங்கள். இரவில் தூங்கும் நேரத்தை அதிகப்படுத்துங்கள். அதுவே தங்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
பி.டி.கத்திரிக்காய்க்கு பிறகு…கருணாதி அரசு எதிப்பு இடுகைகள் தவிர…வேறு எந்த பதிவும் மக்களுக்கு பயன்படும்படி வினவில் வந்ததாக தெரியவில்லை. மற்ற எல்லாம் மொக்கை என்றால், இது இமாலய மொக்கை.
பர்தாவை பெண்ணடிமைத்தனம் என்பது உங்கள் பார்வை. பண்டைய இந்தியாவில் மன்னர்களின் மனைவிகளுக்கு மட்டும் மார்கச்சை. பிற அடிமைகளுக்கும் ஒடுக்கப்பட்ட ஏழை குடிமக்களுக்கும் அதுவும் போடக்கூடாது. இம்முறை பலகாலம் நீண்டு வாழ்ந்து வந்து ஒரு சில முற்போக்குவாதிகளால், ஆதிக்க வர்க்கங்களுக்கு எதிரான பல பாரிய போராட்டங்களுக்கு பின்னர் மாராப்பு அணியும் உரிமையை பெண்களுக்கு பெற்றுத்தந்தார்கள். அதாவது பெண்ணடிமைத்தனத்தை ஒழித்தார்கள். தற்போது பிற்போக்குவாதிகள் பலர் தங்களை ‘முற்போக்குகள்’ என்று கதை அளந்துவிட்டுக்கொண்டு மீண்டும் பெண்களை அந்தக்கால மாராப்பில்லா அடிமைத்தனத்துக்கு இட்டுச்செல்ல முயல்கிறார்கள். ‘திறந்து வைத்தல்’ அடிமைத்தனம் என்பதுபோய் ‘மூடிவைத்தல்’ அடிமைத்தனம் என்று ஆகிவிட்டது. இந்த பிற்போக்கு வாதத்துக்கு எதிராய் குரல் கொடுத்தால் அவர்களுக்கு பெயர் பிற்போக்குவாதிகளா? என்னே கொடுமை வினவு….!
வயலில் வேலை செய்பவர்கள் அப்படித்தான் உடையை மடித்துக்கொள்வார்கள்-சேறு ஒட்டாமல் இருக்க. பின்னர் வயல் வேலை முடிந்து வரப்பு ஏறியவுடன் கீழிறக்கி விட்டுவிடுவார்களா இல்லையா? அப்படியேவா எப்போதும் ஊரிலும் வீட்டிலும் பலர்முன் கோவணம் போல கட்டி இருக்கிறார்கள்? இதுதான் ‘பர்தா'(ஹிஜாப்-அரபி வார்த்தை). அட, அமாங்க..! இது தான்-இறக்கிவிடும் இந்த செயல்தான்-பர்தா எனப்படுவது. நீங்கள் எல்லாம் நினைப்பதுபோல-சொல்வதுபோல ‘பர்தா’ என்பது கருப்பு ஆடை-அங்கி அல்ல. அது ஒரு உடை அல்ல. அது “உடலை நாகரிகம் கருதி மறைத்தல்” என்ற ஒரு செயல். அவ்வளவேதான். பெண்கள், ஆண்களை விட சற்று அதிகமாக மறைக்கவேண்டும் என்பதனை எல்லாரும் ஒத்துக்கொள்கிறோம். அனால், அந்த ‘மறைத்தல் என்பது எவ்வளவு’ என்பதில்தான், உலகில் பல சித்தாந்த பார்வைகளுக்கு இடையில் முரண்படுகிறோம். இஸ்லாம் கூறும் “உடலை நாகரிகம் கருதி மறைத்தல்”(பர்தா) என்றபார்வை ஆக சற்று அதிகம். அது என்ன சொல்கிறது? பெண்கள் தங்கள் பாதம்,முன்கை,முகம் தவிர்த்து மற்றதை மறைத்தல். உடல் அங்கங்கள் வெளித்தெரியும் வண்ணம், இறுக்கமாகவோ, சீத்ரூவாகவோ இருக்கக்கூடாது. இவ்வளவுதான் பர்தா-ஹிஜாப் என்பது. இதை எந்த ஆடையை கொண்டும் இதை நிறைவேற்ற முடியும். ஆனால், புருக்கா என்ற அங்கி மிக எளிதாய் இதை நிறைவேற்றுகிறது.
எங்கெல்லாம் பெண்கள் ஆடைக்குறைப்பு செய்யவில்லையோ அங்கெல்லாம் கண்ணியம், மரியாதை, பாதுகாப்பு, நாகரிகம் என்ற வார்த்தைகொண்டு அவர்கள் பாராட்ட்ப்படுதலை கண்கூடாக காண்கிறோம். இது குறையும் பட்சத்தில் ஆபாசம், அநாகரிகம், ஈவ்டீசிங், பாலியல் பலாத்காரம் என்று கேள்விப்படுகிறோம், படிக்கிறோம். இதற்கு வேறு எங்கும் செல்லவேண்டாம், வினவே, முந்தய இடுகைகளில், நக்மாவை ‘ஆபாச நடிகை’ என்றும், மனோரமாவை ‘ஆச்சி மனோரமா’ என்றும் சொல்கிறார். சிந்திக்கவும். காரணம் மனோரமாவின் பர்தா, நக்மாவின் பர்தாவைவிட அதிகம். மனோரமா பெண்ணடிமைத்தனத்தில் இருக்கிறாரா? அந்தக்கால ‘கவர்ச்சி நடிகை’ ஜெயலலிதாவின் பர்தா இந்தக்கால முன்னால் முதல்வர் அம்மாவின் பர்தாவும் ஒன்றா? நம் ஜனாதிபதி இடுப்புமறைக்கும் முழுக்கை சட்டையும், தலையில் முக்காடும் இடுகிறாரே? (இது ஒரு அப்பட்டமான இராமனாதபுர மாவட்ட இஸ்லாமிய பர்தா முறை) அவரை எந்த பெண்ணடிமைத்தனத்தில் சேர்ப்பீர்கள்? குட்டை பாவாடையும், கையில்லா டாப்சும் போட்டால்தான், பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்த இவர் முற்போக்கு குடியரசுத்தலைவர் என்பீர்களா? அடப்பாவமே..!
இப்போது, பெண்கள் உடை போடுவதையே எதிர்க்கும் கூட்டம் உலகெங்கும் அதிகமாகிறது. உதாரணம்-சினிமா,மாடலிங்,டிவி விளம்பரங்கள், விளையாட்டு…ஏன், பள்ளிகளின் சீருடையில் கூட ஆண் அதே ஃபுள் பேன்ட்/ஃபுள் ஷர்ட்/டை என்று, அப்படியே இருக்கையில் பெண்ணுக்கு மட்டும், சட்டை-கையில்லாமல் போகிறது, பாவாடை உயரம் கணுக்காலில் இருந்து உயர்ந்துகொண்டே போய்…தொடையை தொட்டு நிற்கிறதா இல்லையா? இப்படியே போனால், பிற்காலத்தில் பெண்விடுதலை எனக்கூறி, இவர்களின் ‘உடை நாகரிகம்’ என்பது இப்படி இருக்கும் :- முழு நிர்வாணம்..! யாரும் யாரை வேண்டுமானாலும் கண்ட இடத்தில் பப்ளிகாய் புணரலாம் என்பதே அன்றைய காலத்தில் ‘முற்போக்குவாதமாய்’ இருக்கும். அன்று யாராவது ஒரு ‘அரைவேக்காட்டு பிற்போக்கு பதிவர்’, ‘இல்லை, பெண்கள் ஜட்டி மட்டுமாவது போட்டுக்கொள்ளலாம்(அதுதான் அன்றைய பர்தா), நற்குடியில் பிறந்தவர்கள் ஜட்டி போடுவதை விரும்புவார்கள்’ என்றால் அவரை – அந்த ‘பிற்போக்குவாதியை’ மற்ற ‘முற்போக்குவாதிகள்’ எல்லாம் ஒன்று சேர்ந்து அடித்து துவைத்து கசக்கி பிழிந்து காயப்போட்டுவிடமாட்டோம்? என்ன ஒரு புரட்சி..! பாவம் அவர் நிலை.
வினவுக்கும் மற்ற தளங்களுக்கும் வித்தியாசம்:
இதில் மக்களுக்கு உபயோகமாய் வாரத்துக்கு ஒருமுறையாவது நல்ல விழிப்புணர்வு பதிவு வருகிறது. மற்ற பெருவாரியான தளங்களில் இது மாதமொருமுறை அல்லது மாதமிருமுறை எனலாம். அவ்வளவுதான் வித்தியாசம். தெற்கே வினவுக்கு பெருமிதம் தலைக்கேறி கூடிப்போய்….//வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை?// என்று தன்னை ‘முற்போக்குவாதி’ என்று தனக்குத்தானே பரிவட்டம் கட்டி, மகுடம் சூடிக்கொள்கிறார்.
இதுதான்….அப்பட்டமான……கம்யூனிச பார்ப்பனீயம்…..என்பதா?
வாங்க நெத்தியடி முகமது, நலமா, நெடுநாட்களாய் உங்களை பார்க்காத ஏக்கம் உண்மையிலேயே உண்டு என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். இங்கே பாதி சென்னை மக்களை வைரஸ் பிடித்து ஆட்டுகிறது. உங்களைப் போன்ற நண்பர்கள் அருகாமையில் இருந்தால் பண்டிகை நாட்களில் பிரியாணியாவது கிடைக்கும். அதெல்லாம் இல்லாமல் காய்ந்து போய்தான் இருக்கிறோம்.மற்றபடி உங்கள் பர்தா விமரிசனத்தை கேள்விக்குறி, கார்க்கி முதலான நண்பர்கள் பதிலளிப்பார்கள் என நம்புகிறோம். நன்றி
“எங்கெல்லாம் பெண்கள் ஆடைக்குறைப்பு செய்யவில்லையோ அங்கெல்லாம் கண்ணியம், மரியாதை, பாதுகாப்பு, நாகரிகம் என்ற வார்த்தைகொண்டு அவர்கள் பாராட்ட்ப்படுதலை கண்கூடாக காண்கிறோம்.”
கலிலியோ தொலைநோக்கியை கண்டுபிடித்தபோது ஒருவன் கேட்டானாம் தொலைநோக்கியைக்கொண்டு பக்கத்து வீட்டில் குளிக்கும் பெண்ணை பார்க்கமுடியுமா என்று. பெண்களுக்கு உரிமை வேண்டும் சுதந்திரம் வேண்டும் என்றவுடன் பலரும்(பெண்கள் உள்பட) ஜட்டி பிராவுடன் அலைவதையே சுதந்திரம் என்பதாக கற்பனை செய்துகொள்கின்றனர். என்ன செய்வது ஜொள்ளுப்பார்ட்டிகளாக படைக்கப்பட்டுவிட்டனரே. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஜட்டியுடன் சென்றால் நாம் அதை எதிர்க்கவே செய்வோம். ஒருவர் உடலை மறைத்துக்கொள்ள ஆடை உடுத்துவது என்பது வேறு பர்தாதான் கண்ணியமான உடை என்பது வேறு. பர்தா போட்டால் கண்ணியம் வந்துவிடுமா! தற்காலங்களில் பர்தா உடுத்திக்கொண்டு பல தவறுகள் செய்வது சுலபமாக உள்ளதாக கருதுகின்றனர். அப்படியென்றால் பர்தா குற்றம் செய்வதற்கு வசதியான உடையென்றே முடிவுக்கு வரலாம். ஈரானில் பெண்கள் பர்தாவுடன் விபச்சாரத்திற்கு அழைப்பது போன்ற வீடியோ பதிவுகள் வெளிவந்திருக்கின்றன. புதுவையில் மத்ரசத்துல் ஈமானி வல்குரான் என்ற மத்ரசாவில் ஓதிய பர்தா உடுத்திய நற்குடிப்பெண்(!)மத்ரசாவிற்கு பர்தாவுடன் செல்லும்போது ஒரு ஆடவனுடன் ஓடிப்போனது. கண்ணியம் பர்தாவில் இல்லை. ஜொள்ளுப்பார்ட்டியாக படைக்கப்பட்ட கண்ணியமற்ற ஆணின் பார்வையில்தான் உள்ளது. ஆணின் காமவெறிப்பார்வையைச் சமாளிப்பதற்காகப் பெண்களின் மீது இஸ்லாம் போட்டிருக்கும் கவசமே பர்தா. அவ்வளவு ஏன் ஆயிரம் சட்டங்கள் போட்ட முஹம்மது நபியே பலரை திருமணம் செய்யவில்லையா?ஏன் அவருக்கு அத்தனை மனைவிகள் தேவைப்பட்டது?
பெண்களின் உரிமையை பற்றி தோழர் லெனின் கூற்வதைக் கேளுங்கள்.1919.ம் ஆண்டு பெண்களின் நான்காவது மாஸ்கோ நகர மாநாட்டில் தோழர் லெனின் பேசியது.
தோழர்களே!
பெண்களை ஆண்களுக்குச் சமமாக ஆக்க வேண்டும். நாம் இப்படிச் சொல்லும் போது பெண்கள் செய்யக் கூடிய வேலைகளில் உற்பத்தி செய்யும் திறமையில் ஆண்களுக்குச் சமமான நிலையில் வைக்கப் போவதாக நாம் சொல்லவில்லை. பெண்கள் செய்யக்கூடிய வேலை நேரம். வேலை நிலமைகள் இவைகளிளெல்லாம் ஒரு நாளைக்குச் செய்யக்கூடிய வேலை நேரம் வேலை நிலைமைகள் இவைகளிளெல்லாம் பெண்களை ஆண்களுக்குச் சமமான நிலையில் வைக்கப் போவதாக நாம் சொல்லவில்லை. ஒரு குடும்பத்தில் பெண்களுக்கு மட்டுமே இருக்கக்கூடியதாக சொல்லப்படுகிற நிலமையைக் காரணம் காட்டி அதனாலேயே அவள் ஆணுக்குச் சமமாக மாட்டாள் என்று சொல்லி பெண்களை ஒடுக்கக் கூடாது என்பதையே நாம் குறிப்பிடுகிறோம்.
பெண்கள் முழு உரிமைகளைக் கொண்டிருக்கும் பொழுது கூட அவர்கள் உண்மையில் இன்னும் அடக்கி வைக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் எல்லா வகையான வீட்டு வேலைகளுக்ளுமே பெண்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டு வேலை என்பது பெரும்பாலும் மிக அதிக பயனில்லாததாக கடினமானதாக இருப்பது வீட்டு வேலைதான். ஒரு பெண்ணின் வளர்ச்சியை எவ்விதத்திலாவது ஊக்குவிக்கக் கூடிய ஒரு அம்சம் கூட அவள் செய்யும் வீட்டு வேலையில் இல்லை.
உணவு சமைப்பது குழந்தைகளை வளர்ப்பது என்ற வகையில் நெடுங்காலமாக இருந்துவரும் அலுப்புத் தருகின்ற வேலைகள் பெண்களை அவமானகரமான முறையில் உணர்ச்சிகள் மழுங்கிப் போகும் விதத்தில் அடிமையாக இருக்க வைத்திருக்கிறது.
சோசலிச இலடசியத்தைப் பின்பற்றி சோசலிசத்தைப் பரிபூரணமாக அமுலாக்குவதற்கு நாம் போராட விரும்புகிறோம். இங்கே பெண்கள் உழைப்பதற்குரிய விரிவான துறை ஏற்படுத்தப்படுகிறது.
பெண்களை குடும்ப வீட்டு வேலைகளிலிருந்து விடுவிக்கக்கூடிய குழந்தை நிலையங்கள் உணவுச்சாலைகள் முன் மாதிரியான அமைப்புகள் ஆகியவற்றை நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவைகளை அமைக்கிற வேலைகளையும் பெண்களுக்கே பிராதானமாகக் கொடுக்கப்படும். குடும்ப அடிமைத்தனம் என்ற நிலையிலிருந்து பெண்களை விடுவிக்கக்கூடிய நிறுவனங்கள் மிகச் சிலவே இருக்கின்றன. சாத்தியமாக இருகக்கூடிய இடங்களில் இன்னும் ஏற்படுத்தப்பட வேண்டும். இத்தகைய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உழைக்கும் பெண்களே பாடுபட வேண்டும். தொழிலாளர்கள் விடுதலையைத் தொழிலாளர்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் சொல்வது போலவே உழைக்கும் பெண்கள் விடுதலையையும் உழைக்கும் பெண்களாலேயே ஏற்பட வேண்டும். ஒவ்வொரு உழைக்கும் பெண்ணும் அரசியலில் பங்கெடுத்துக் கொள்வதைச் சாத்தியமாக்குவது நமது சோசலிச அரசாங்கத்தின் கடமை. பெண்களுக்கு முழுச்சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும் பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது.” கம்யூனிஸ்ட் கட்சியில் இன்னும் சேராமல் இருக்கிற பெண்களுக்காக மாஸ்கோவில் நடந்த நாலாவது மாநாட்டில் லெனின் இவ்வாறு பேசியிருக்கிறார்.பெண்களின் விடுதலையை உழைக்கும் பெண்களாலேயே ஏற்படவேண்டும் என்கிறார். போராட வேன்டும் என்கிறார். நீங்களோ ஒரு ஆண் 15 பெண்ணை மணமுடிக்கும் ஆணின் வக்கிரத்தைக் கூறி புளங்காகிதம் அடைகிறீர்கள். ஆணைப்போல தலாக் சொல்லும் உரிமை கூட பெண்களுக்கு இல்லை. ஆணைப்போலவே மூளையையுடைய பெண்ணுக்கு அறிவு குறைவு என்றும் கூறுகிறீர்கள். வீட்டிற்குள்ளேயே இருக்கவேண்டும் என்கிறீர்கள். தந்தைக் கூட மகளின் கால்பெருவிரலைப் பார்த்துத்தான் பேச வேண்டும் என்கிறீர்கள். இவ்வளவுக்குப் பிறகும் இஸ்லாத்தைப்போல் பெண்ணுக்கு யார் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என்ற கேள்வி வேறு.
இஸ்லாம் பற்றி நீங்கள் கூறிய அனைத்தும்…ஆமாம்…அனைத்தும் பொய்யானவை. நான் படித்தவரையில், இத்தளத்தில், ‘லெனின் இப்படி கூறினார்’ என்று மிகத்தைரியமாக மேற்கோள் காட்டிய முதல் ‘தோழர்’ தாங்கள்தான். அவ்வகையில் தங்களை பாராட்டி வரவேற்கிறேன். அவர் 1919-ல் பெண்களின் இயற்கையை உணராமல் குழம்பி அரைகுறையாக குழப்பி சொல்லியதை படித்தபோது தான், அவரை விட 600-லேயே இஸ்லாம் பெண்களுக்கு தெளிவாக பல உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கி இருப்பதை அறியலாம். பதிவுலகில் பலர் இஸ்லாம் பற்றி அரைகுறையாக அறிந்துகொண்டுதான் கூப்பாடு போடுவார்கள். நீங்கள் இஸ்லாம் பற்றி ஒன்றுமே அறியாதவராய் குதிக்கிறீர்கள். பரிதாபம். இஸ்லாம் பெண்களின் உரிமையை எந்த அளவு பாதுகாக்கிறது என்பதை இங்கே சென்றாவது அறிந்துகொள்ளுங்கள்.
http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/
ஒரு விஷயம் பற்றி கருத்து கூறும் போது கொஞ்சமாவது அறிந்துகொண்டு பின்னர் பின்னூட்டமிடுங்கள்.
நண்பா,நான் கூறியதில் எது தவறானது என விளக்கமுடியுமா.
முதலில் மருமொளிஹளை உடனுக்குடன் போடச்சொல்லு உண்க பீஜய்விடம் அப்புறம் லிங்க் கொடு . ஊடிருவாருள்ள…..
நண்பர் நெத்தியடி பாய் நீங்கள் கூறியதால் pj வின் வலைத்தளத்தை படித்தேன். அதிலிருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொண்டேன். இருந்தாலும் நாம் இங்கு ஹிஜாப் பற்றி மட்டும் விவாதிப்போம்.நன்றி
ஹிஜாப்(பர்தா) ஏன்?
நமது நெத்தியடியின் ஆன்மீக குருவும்,விபச்சார குற்ற சம்பந்தமான பிரச்சினையொன்றில் ஒரு சாமானிய பெண்ணிற்கும்(sp பட்டணம்) தவ்ஹீதின் முன்னாள் அனல் பேச்சாளர் பாக்கருக்கும் இரு வேறுவிதமாக தண்டனை கொடுத்த pj கூறுகிறார்.(பாக்கருக்கு கொடுத்தது தண்டனை அல்ல வெகுமதி)
1.இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும்.
2.பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் சினிமாவில் பெண் ஆபாசமாகக் காட்சியளிப்பதும்,அரைகுறை ஆடைகளை விரும்புவதும் காரணம்.
3.ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ல காரணம் தனக்கு தெரிந்தவர்களிடம் தன்னுடைய மதிப்பும் மரியாதையும் பாதிக்கப்படும் என்று அஞ்சுவதுதான்.
4.ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும்பெண்கள் ஆண்களை அரகுறை ஆடையுடன் ரசிப்பதில்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்.
அடங்கொய்யாள, இதத்தான்யா நானும் சொன்னேன். ஆண்கள் ஜொள்ளுப்பார்ட்டிகளாக படைக்கப்பட்டுள்ளனர்,ஆணின் காமவெறிப்பார்வையைச் சமாளிப்பதற்காகப் பெண்களின் மீது இஸ்லாம் போட்டிருக்கும் கவசமே பர்தா,பெண்ணுரிமை என்றவுடன் ஜட்டி,பிராவுடன் அலைவதாகவே கற்பனை செய்துகொள்ளுகின்றனர், பர்தாவினால் ஒழுக்கம் வந்துவிடாது யாரும் பார்க்கவில்லையென்றால் மேய்ஞ்சுடுவானுங்க என்று.
பெண்கள் ஆண்களை அரைகுறை ஆடையுடன் ரசிப்பதில்லை என இவருக்கு யார் சொன்னது. பெருநகரங்களில் இருக்கும் இண்டெர்நெட் மையங்களில் சென்று pj வை துப்பறியச் சொல்லுங்கள். பிறகு ரசிக்கிறார்களா இல்லையா என்று கதையளக்கலாம்.
இறுதியாக பாய் அவர்களுக்கு,உங்களுடைய ஆன்மீகக் குரு சீரழிந்த முதலாளித்துவத்தின் சீரழிவில் இருந்தே பர்தாவின் கண்ணியத்தை பாதுகாப்பாதென விளக்கமளிக்கிறார். நாங்கள் கோருவது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம். முதலாளித்துவத்தின் சீரழிவிலிருந்து பெண்களை காப்பது பர்தா அல்ல,கம்யூனிசமே. கம்யூனிசமே மக்களை காக்கும்.
பெண்கள் அவர் விரும்பியே பர்தா போடுவது என்பதும் ஆண்கள் எவரும் அதனை அவர்கள் மீது திணிக்கவில்லை என்று கூறுவதும் அப்பட்டமான பொய்.ஓ ! நெத்தியடி முகம்மதே நீர்கேளும். நீர் உமது உள்ளத்தில் உள்ளதை மறைத்து பொய் கூறுகிறீர் என்பதும், முழுப்பூசணிக்காயையும் சோற்றிலே மறைக்க எத்தனிப்பதும் நாம் அறிந்தவற்றில் மிகத் தெளிவானதே. கீழே எழுதப்பட்டுள்ளது உமக்கல்ல. பிற பின்னூட்டக்காரர்களுக்கு. நம்ம உமரு காலிபா இருக்காருங்களே அவர்தாங்க இந்த பர்தாவை திணிப்பதில் முழு மூச்சாக நினறாரு. அவரு பல தடவை முகம்மது நபியிடம் கட்டாயப்படுத்தினாருங்க. ஒருநாள் முகம்மதுநபி மனைவிமார்களில் ஒருத்தரான சௌதா வீட்டிலேர்ந்து வெளியே மலம் கழிக்க போனாருங்களாம் (வழமையானதே! அப்போவல்லாம் ஊட்ல கக்கூஸ் இல்லீங்க) எந்த நேரத்தில் போனாங்க தெரியுமா? கருக்கல்ல. அந்த கும்மிருட்டுள்ள போனாங்கலாம். அய்யோ இந்த உமருக்கு யார் போறதுன்ன அடையாளம் தெரிஞ்சுட்டதாம். அதனால் வம்படியா சண்டை போட்டார். முகம்மதுநபியும் மௌணமா இருந்துப்பார்த்தார். உமரு விடுவதாக இல்லை. புர்காவை கட்டாயமாகக்கிட்டாருங்க. அதிலேருந்து இது இசுலாமிய பெண்களுக்கு ஷாரியத் சட்டமுங்க. அவங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போட்டாத்தாங்க இசுலாமிய பெண் இல்லைன்னா சொர்க்கத்தில் இடமில்லை நரகம்தான்.
அப்படி போடு அருவாள! ”மூடி வைத்தால் நாறாதா? பண்டம்தான்” என்று அ.தி.மு.க வளர்மதி ரேஞ்சுக்கு ஒரு குலவிளக்கு கருத்து சொல்லியிருந்தது.
சுப்பிரமணிய சாமிக்கு ஹைகோர்ட்டு வாசலில் பண்டங்களை திறந்து காட்டிய மகளிரணியில் சேரும் எல்லா அடிப்படை தகுதிகளும் கலகலவென கலக்கும் அந்த குலவிளக்குக்கு இருக்கிறது.
நான் அடிமைதான். பர்தா போடுவது என்னுடைய இஷ்டம் என்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது.
பெண்ணின் உடலின் மீதுதான் சாதிகளும் மதங்களும் கட்டமைக்கபட்டிருக்கின்றன என்ற உண்மையை அறியாத மாக்களையும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் மரியாதைகள் என்று மாசோகிஸ்ட் மனப்பான்மையை கொண்டிருப்பவர்களையும் திருத்த முடியாது.
இணைய தொடர்பு இல்லாததால் வர இயலவில்லை.அநேகமாக இந்த ஆண்டின் கடைசி பின்னூட்டம் (இங்கு). அரைடிக்கெட்,சுகுணா,கேள்விக்குறி மற்றும் வினவு குழுவினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் ஆண்டில் இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமாக செயல்பட முயற்சிக்கிறேன்.சுகுணா கேபிள் பதிவில் என் பின்னூட்டம் இருக்கிறது.அதை படியுங்கள் மீண்டும்.மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.தொடர்ந்து வினவை வாசிக்க காத்திருக்கிறேன்.நன்றி
/என்னைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்துகொண்ட தனிப்பட்ட தகவல்களை ஊதிப்பெருக்கி அவதூறு பரப்புவதுதான் தண்டோராவின் நோக்கம் என்றால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. பர்தா தொடர்பான மயில் என்னும் பதிவரின் பின்னூட்டத்தில்தான் எனது இனிஷியல் குறித்து முதன்முதலாக அனானி பின்னூட்டம் வந்தது. அப்போது நான் வெளிப்படையாகவே தண்டோராவிடம் கேட்டபோது அந்த பின்னூட்டத்தைத் தான் போடவில்லை என்றார். ஆனால் பிறகு அவர் பெயரிலேயே இனிஷியல் குறித்து கேபிள் பதிவில் பின்னூட்டம் வருகிறது. நான் வெளிப்படையாகக் கேட்டது என்னுடைய நேர்மையின் பாற் பட்டது. ஆனால் தண்டோரா….? நட்பு அறமும் விமர்சன அறமும் இன்றி இப்படி அவதூறுகளை உருவாக்குகிற பொழைப்பு உங்களுக்குத் தேவைதானா தண்டோரா//
மன்னிக்கணும்.இன்னும் ஒரே ஒரு பின்னூட்டம். அனானியாய் போடுவதென்றால் கேபிள் சங்கர் பதிவிலேயே போடலாமே.அவர் அனானி அனுமதியில்லையென்றால் இருக்கவே இருக்கு சீனியர் காட்டிய வழிகள்.ஆனால் என் பெயரில்தான் பின்னூட்டம் இட்டேன்.மயில் பதிவில் நான் அனானி பின்னூட்டம் இடவில்லை என்பதை உலகிலேயே எனக்கு பிடித்தமானவர் மீது ஆணையிட்டு சொல்லிக் கொள்கிறேன்.
செல்வநாயகி,
Comment # 29, Dec 30, 2009 @1325hr இல் நீங்கள் எழுதிய கருத்தை படித்துவிட்டேன். அதில் பர்தா பற்றிய கருத்தை விட வினவு பற்றிய விமர்சனமே உள்ளது. அதற்கப்புறம், Comment # 101, Dec, 31, 2009 @0750hr இல் உங்கள் பின்னூட்டத்தில் கூட நீங்கள் வினவை //மற்றைய பதிவர்கள், வாசகர்களின் கருத்தை விமர்சிப்பதாகவே என் அறிவுக்குப் படுகிறது. ஆனால் கடைசியில் 51/4 வரியில் பதிவின் சாரம் பற்றிய உங்கள் கருத்துள்ளது. அதைப்பற்றிய என் கருத்து அல்லா, இயேசு, ராமன் போன்றோரின் பெயரில் என் சகமனிதர்கள் என்னை, என் சிந்தனையை அடிமைப்படுத்துவதில்; ஆணாதிக்கத்தின் கறைபடிந்த மூடநம்பிக்கைகளை என் உடலின் மீது போர்த்தியோ, பூசியோ விடுவதில் எனக்கும் உடன்பாடில்லை.
உங்கள் காத்திரமான எழுத்துக்கள் மூலம் நான் தெரிந்துகொண்டது. நீங்கள் என்னைவிட அறிவாளியாய் இருக்கிறீர்கள். உங்களைப்போன்றவர்களிடமிருந்து சமூகம் சார்ந்த நல்ல விடயங்களை/கருத்துக்களை கற்றுக்கொள்ள ஆவலாயுள்ளேன். மற்றது, ஆண்களின் ஆதிக்கமே நிறைந்திருக்கும் பதிவுலகில் உங்களைப்போன்ற பதிவர்கள் அவசியம், தொடருங்கள். இறுதியாக என்னைப்பற்றிய கடந்தகால விமர்சனங்களின் போது எனக்காக குரல் கொடுத்தவர்களில் செல்வநாயகியும் ஒருவர் என்பதை நான் மறக்கவில்லை, நன்றி.
ரதி, புத்தாண்டு கொண்டாடும் மனநிலையில் நீங்கள் இல்லை, கொண்டாடும் வழக்கம் எங்களுக்கில்லை, தற்போது பின்னூட்டத்தில் பார்த்ததால் பதிவு சம்பந்தமாக ஒரு கேள்வி. கனடாவில் வாழும் பிறதேச முசுலீம் பெண்களில் பர்தா அணியாத நாட்டவர் உண்டா?
வினவு,
உண்மையில் இந்தப் பின்னூட்டத்தை எழுதுவது சங்கடமாக இருக்கிறது, ஆனாலும் சிலதைச் சொல்ல. தன்னை விமர்சிக்கும் பாங்கில் கருத்தை முன்வைத்தால் அவர்கள் சமூகம் குறித்த தன் வேறு பல கருத்துக்களோடு உடன்படுபவர்கள், அக்கருத்துக்களை வரவேற்பவர்கள் என்றாலுமே எதற்காக விமர்சனம் வந்ததோ அதைப் புரிந்துகொள்ளவோ அல்லது அதைச் சொல்பவருடைய நோக்கங்களைப் புரிந்துகொள்ளவோ வினவுக்கும் இயலாது என்பதை உணர்ந்துகொள்ள உண்மையில் எனக்கு இன்று உங்களோடு இந்த இடுகையில் பேசியது உதவியாக இருந்தது. அந்த வாய்ப்புக்காக நன்றி.
உங்களின் பதில்களில் இருக்கும் எள்ளல்கள் உங்களைச் சொல்கின்றன. அதற்கு மேல் வேறு எதுவும் தேவையில்லை. அதுமட்டுமல்ல வாருங்கள் தோழர்களே என்று நீங்கள் அழைத்த பட்டியலில் ரதியின் பெயரும் இருந்ததால் எழுதும்போது இயல்பாக வந்து விழுந்த் வார்த்தை “உங்கள் தோழர் ரதி” என்பது. அதற்கெல்லாம் இவ்வளவு பிரித்து விளக்கம் சொல்வது மேலும் பேசக்கூட ஒருவித அயர்ச்சியைத் தருகிறது அது உங்களுக்கும் எனக்கும் வெறும் நேர விரயமாகப் போகும் என. முக்கியமாக உங்களின் நேரம் என்னால் வீணாக வேண்டாமே எனவும்.
ரதி,
உங்களுக்குச் சொன்ன பதில்கள் உங்கள் மீதான, வினவின் மீதான திட்டு அல்ல. வினவில் உரையாட வராமைக்கு நேரம் வினவின் பக்கத்திலிருந்துமான தடைகளைத்தான் நான் என் பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டினேன். அதையும் தாண்டி வினவின் கருட்துக்களின்பால் ஈர்க்கப்பட்டு வரும், அவ்வப்போது பின்னூட்டமும் இடும் பெண் பதிவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் உங்களுக்குச் சொல்லத்தான். நீங்கள் வினவில் ஈழம் குறித்து எழுதும்போது வினவில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக நீங்கள் எழுதுவதை நிறுத்துவதாக அறிவித்தபோது அது வருத்தம் தருகிறது எனவும் நீங்கள் மீண்டும் எழுத வேண்டும் எனவும்கூடப் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். எனவேதான் பெண்பதிவர்கள் வருவதேயில்லை” என்ற உங்களின் பார்வையை மறுத்தேன். அது திட்டு அல்ல. உண்மையில் நீங்கள் நிறைய எழுத வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். நன்றி.
இந்த பதிவு எழுதுவதற்கான ஆதார பதிவுகளில், களமிறங்கி பல பின்னூட்டங்களில் காரசாரமாய் பல பிற்போக்குத்தனமாய் பின்னூட்டங்களில் விமர்சித்தவர்கள் இங்கு வந்து தன் கருத்தை சொல்வதில், விவாதிப்பதில் என்ன தடை? – என்ற இந்த இயல்பான கோபத்தில் சில வார்த்தைகள் எழுதினால்… நீங்கள் எழுதிய மூன்று பின்னூட்டங்களில், அதை இன்னும் கொஞ்சம் (சுயமரியாதை அற்றவன்) என காரம் ஏற்றிவிடுகிறீர்கள். எப்பொழுதும் நிதானம் காப்பதற்கு, செல்வநாயகி போல கற்றுகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்
ரதி,
என் பின்னூட்டத்தைப் போட்டுவிட்டுப் பார்த்தால் நீங்கள் மீண்டும் இன்னொரு பதில் எனக்கு எழுதியிருக்கிறீர்கள். எனவே நகரும் முன்பு இது….. என் பின்னூட்டத்தில் எத்தனை வரிகள் என்ன பேசுகின்றன என்று அலசி எழுதியிருக்கிறீர்கள்:)) போட்டதே ஒரு பத்து வரிகள் தான். என்னளவில் அது ஒரு உரையாடல் பங்கெடுப்புக்கூட இல்லை. ஒரு கட்டுரையை அல்லது ஒரு கருத்தை மறுத்து பேசுவதற்கு நிறைய எழுதிக்கொண்டிருக்கலாம். ஆனால் அதை வரவேற்கும்போது அதை ஆமோதித்து அக்கட்டுரைக்கு நன்றி சொல்லிப் போட்ட பிறகு என்னை என்ன எழுத வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? ஒருவ் ஏளை இங்கே மற்றவர்கள் வந்து மதத்தை ஆதரித்து எழுதுவதையெல்லாம் எதிர்த்தா? அதைத் தெரிந்த புரிதல்களை வைத்து இணையத்தில் பலமுறை பல இடங்களில் செய்தாயிற்று. திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும்தான், ஆனால் அது நேர வசதி, ஈடுபாடு சார்ந்தது. அதுமட்டுமல்ல அதை இங்கே கார்க்கி, அசுரனெல்லாம் ஏற்கனவே நன்றாகச் செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
பதிவுலகின் யோக்கியதையும் என்று தலைப்பும் வைத்து அவைபற்றிய விமர்சனங்களையும் தன் பானியில் வைத்து, சுயமரியாதை உள்ள எவனுமே இங்கெல்லாம் வ் அந்து உரையாடவே மாட்டேங்கறான் என்பன போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டால் ஏன் பதிவர்கள் வருவதில்லை? உங்களின் பக்கத்தில் என்ன செய்கிறீகள் பதிவர்களை நோக்கி? அது எப்படியான மனத்தடைகளை உண்மையில் உரையாட விரும்புபவர்களுக்கும் ஏற்படுத்தும்? என்பதை இன்னொருவர் தன் பார்வையில் சுட்டிக்காட்டுவது மட்டும் கட்டுரையின் பொருளில் இருந்து விலகி விடுகிறது என வினவு எனக்கு எழுதுவதை எதிர்த்துக் கேள்வி கேட்பீர்கள் என நினைத்தேன், ஒரு பெண் பதிவருக்கு இன்னொருவர் பெண் பதிவர் செய்யும் மூடச் சார்பாகவெல்லாம் இல்லை, எனது நோக்கத்தைப் புரிந்து…..
பரவாயில்லை:)) நீங்கள் தொடர்ந்து மையப் பொருள் குறித்து உரையாடுங்கள்.
அறிவாளிப் பாராட்டெல்லாம் நிச்சயம் வேண்டவே வேண்டாம், உண்மையில் இங்கு அப்படி ஒன்றும் இல்லை….புரட்டிப் போடுகிற காலத்தோடும், வாழ்வோடும் முட்டி மோதிக் கற்றுக் கொள்பவைதான்………அதுமட்டுமல்ல இங்கே அறிவு கொண்டு சிந்தித்தே எல்லாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டியதும் இல்லை……மனிதாபிமானம் என்கிற ஒற்றை அளவுகோல் போதுமாகவும் இருக்கிறது பல நேரங்களில்…..இல்லையா?
வினவு,
//கனடாவில் வாழும் பிறதேச முசுலீம் பெண்களில் பர்தா அணியாத நாட்டவர் உண்டா?//
எனக்கு தெரிந்தவரையில், நானறிந்தவரையில் “இல்லை” . அநேகமான முஸ்லிம் பெண்கள் பர்தா அணிகிறார்கள். எங்கு பார்த்தாலும் பர்தாவோடு தான் அவர்களை காணமுடிகிறது. எனக்கு பர்தா என்னும் போது அது தலையை மட்டு மூடி அணிவது தொடக்கம் கண்கள் மட்டுமே தெரியுமளவிற்கு கறுப்பு துணியில் போட்டிருப்பார்களே எல்லாமே ஒன்றுதான். அதில் என்ன வேறுபாடு என்பதெல்லாம் தெரிவதில்லை. ஆனால், எனக்கு இதில் கொஞ்சம் கூட ஓர் பெண் என்ற முறையில் உடன்பாடு இல்லவே இல்லை. கண்கள் மட்டுமே தெரியும் அளவுக்கு ஒரு பெண்ணை ஆடை அணியச்சொல்லுமளவிற்கு ஓர் மத நம்பிக்கையா என்று இந்த நிமிடம் வரை கூட எனக்குள் கோபம் உண்டு. கனடா போன்ற நாட்டிலேயே இப்படியென்றால் தமிழ்நாட்டை கேட்கவே வேண்டாம் என்றுதான் பேசாமல் இருந்தேன்.
இன்றைய உலக அரசியல் சூழலில் (குறிப்பாக அமெரிக்கா) முஸ்லிம் சமூகம் ஒடுக்கப்படுவதால் பிரித்தானியா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் இந்த பர்தா விவகாரம் என்பது சற்றே அரசியல் காரணத்தோடும் பார்க்கப்படுகிறது. தங்கள் மீதான ஓர் ஒடுக்குமுறையின் வடிவமே இந்த பர்தா பற்றிய சர்ச்சை கிளப்பப்படுவது என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. அதனாலேயே, பலர் பர்தாவை கெட்டியாகப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள். அது தங்களின் மத உரிமை அதை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். இவர்கள் மத உரிமை மீது அக்கறை காட்டி, அதை நிலைநாட்ட மனித உரிமையை மறக்கடிக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.
//அதிலும் “நற்குடி” பெண்களென்றால் பர்தா இல்லாமல் வாழமாட்டார்கள் என்ற ரேஞ்சில் தனது அடிமைத்தனத்தை சிலாகித்திருந்தார். இப்பத்தான் பதிவுலகம் வந்திருக்கும் அந்த பேதைப்பெண்ணுக்கு//
//அந்த்தபடிக்கு சுமஜ்லாவும் திருந்த வாய்ப்பில்லாதது நம் சூழலோடு இணைந்தது. இதனால் அந்தப் பெண்பதிவர் எதுவும் தெரியாத அப்பாவி என்று பரிதாபப்படவில்லை. பர்தா என்ற அடிமை சமாச்சாரத்தை அப்படி உருகி உருகி அவர் எழுதியிருந்ததைப் பார்த்தால் அது நிச்சயம் அல்லாவுக்கே பொறுக்காது.//
உம்ம கருத்தை சொல்ல எப்படி உமக்கு சுதந்திரம் இருக்கோ, அதே போல அனைவருக்கும் இருக்கிறது! இந்த வார்த்தைகளில் இருக்கும் உண்மையை ஆராயாமல் பதிவிட்டு, உம் தரத்தைத் தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்…! எம்மைப் பற்றி எதுவும் தெரியாமல், என்னைப் பற்றி எழுதும் துணிச்சலை யார் தந்தது??? குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலவேண்டாம்….! பதிவைத் திருத்துங்கள்.
சுமஜ்லா,
அப்படிஎன்னதான் எழுதி இருந்தீர்கள் என்று பார்த்தால்…. இவ்வளவுதானா? இதுக்கேவா இப்படி குதித்தார்கள்? என்று நொந்துபோய் உடன் கமென்ட் போட நினைத்தால்…(அங்கு ஏன் கமெண்ட்ஸ் பகுதி பூட்டப்பட்டுவிட்டது?)முடியாமல், இங்கு எழுதுகிறேன்.
///ஏன் ஒரு சில முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லை?
அதற்குக் காரணம், அவர்களின் வளர்ப்பு தான். நற்குடியில் பிறந்து, இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்படும் அனைவரும் நிச்சயமாக பர்தாவை விரும்புவார்கள். பொதுவாக ஒரு குடும்பத்தில் பெண் எடுக்கும் போது, அக்குடும்பப் பெண்கள் பர்தா அணிபவராக இருந்தால்,விரும்பி பெண் எடுப்பார்கள்./// — இது நீங்கள், ‘பர்தாவிற்கு முஸ்லிம் பெண்களின் இஸ்லாமிய வளர்ப்பு காரணம்’ என அப்பதிவில் சொன்னது. தவறே இல்லை. மிகச்சரி.
அதையே, இப்பதிவில் வினவு ….//அதிலும் “நற்குடி” பெண்களென்றால் பர்தா இல்லாமல் வாழமாட்டார்கள் என்ற ரேஞ்சில் தனது அடிமைத்தனத்தை சிலாகித்திருந்தார்.// என்று பொதுப்படுத்தி உங்களை பெண்ணடிமைத்தனத்தில் வலுக்கட்டாயமாய் புகுத்தி மகிழ்ந்துபோய் தன் பதிவை குப்பையாக கொட்டுகிறார்.
இதுதான் – இந்த ‘கோக்குமாக்கு’தான் உங்கள் நேர்மையா வினவு?
//எம்மைப் பற்றி எதுவும் தெரியாமல், என்னைப் பற்றி எழுதும் துணிச்சலை யார் தந்தது???//-மரண அடி.
//குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலவேண்டாம்….! பதிவைத் திருத்துங்கள்.// — நிச்சயமாக திருத்த வேண்டும்.
ஆனால், நீங்கள், //ஒரு பெண் அதுவும் இசுலாமியப் பெண்//, அதிலும் //இப்பத்தான் பதிவுலகம் வந்திருக்கும் பேதைப்பெண்//. அதிலும், நீங்கள் ஈரோட்டில் தண்ணிபோட்டுவிட்டு கலாட்டா பண்ணி மிரட்டி வடை சுடவில்லையே…! பின் எப்படி வினவு தன் பதிவை திருத்துவார்?
நான் கடந்த ஒரு வருடமாக வினவை அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுண்டு. தன் ‘கொள்கையான'(?) பரணில் ஏற்றிய கம்யூனிசத்தை பற்றி எல்லாம் எதுவும் எழுதாமல்-அல்லது எழுதினால் ஹிட்ஸ் வராது என்பதாலோ என்னவோ, போலி கம்யூனிசம், மொக்கை/ஆபாச பதிவர்கள், ஈழம், பார்ப்பனீயம், சாதி, இறைநம்பிக்கை, ஹிந்துமதம், இஸ்லாம், கிருத்துவம், சினிமாவில் பாசிசம், என்று வரிசையாக எழுத எழுத, மெகா ஹிட்ஸ் வர வர, இப்போது ஒரு புதிய முயற்சியாக, மொக்கை பதிவர்+ஹிந்துமதம்+இஸ்லாம் என்ற மூன்றையும் ஒரேபதிவில் ஒன்றாய் கலந்தார். சூப்பர் ஹிட். இரண்டே நாட்களில் முன்னூறு பின்னூட்டம் கடந்தார். அநேகமாய் மேற்சொன்ன அனைத்தையும் ஒரே பதிவில் சேர்த்து அத்தோடு அரசியல்,கிரிக்கட், தேசியம் இவற்றையெல்லாம் கலந்துகட்டி ஒரு ‘பதிவு'(???) என்ற குப்பையை கொட்டினால்….இல்லை குப்பைதொட்டியை வீசினால், ….அடா…. அடா… ஒரே நாளில் ஆயிரம் பின்னூட்டம் என்ற இலக்கை எட்டி சாதனை நிகழ்த்திவிடுவாரல்லவா, வினவு? பதிவுலகில் என்னே ஒரு பிழைப்புவாதம்?
திருமதி அல்லது குமாரி……….. “புர்கா அணிவதே பெண்களுக்கு கன்னியம் (ஒழுக்கம்) என்று கூறியது புர்கா அணியாத இசுலாமிய பெண்கள் மற்றும் பிறமதப் பெண்களை இழிவுப் படுத்தும் சொற்கள் என்பதில் எள்ள்ளவும் சந்தேகம் இல்லை. அதனை பிற பிளாக்கர்கள் (Blogggers) கண்டித்திருப்பதும் நேர்மையானதே. பிறமதத்திலுள்ள பிளாக்கர்கள் தத்தமது மதத்திலுள்ள பெண்ண்டிமைத்தனங்களை எல்லாம் எதிர்க்காமல் —- விமர்சனத்திற்குமட்டும் வரிந்துக் கட்டிக்கொண்டு வருவானேன் என்ற உங்களின் இந்தப் பதிவு நேர்மையற்றது. இங்கு பிரச்சனை புர்காமட்டுமே. ஒருவேளை விதவை மணம், அய்யப்பன் கோவில் நுழைவு, தாலி என்று பிரச்சனைகள் பேசப்பட்டு பிளாக்கர்கள் அதற்கு வக்காலத்து வாங்கியிருந்தால் உங்களின் இக்கட்டுரை நேர்மையானதே. மாறாக எழுப்பப்படாத பிரச்சனையை ஊடாக நுழைத்ததின் விளைவு புர்கா அணியாத இசுலாமியப் பெண்களுக்கான ஆதரவு கருத்துக்களையும் சர்ச்சைகளையும் தோற்றுவிப்பதற்குப் பதிலாக திசைமாறிய கருத்துக்களையும் சர்ச்சைகளையுமே தோற்றுவித்துள்ளது. எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைத் தொடர்பான சரியான தேர்வு எது என்பதனை அறியமுடியாமல் செய்துவிட்டது. இதனை கருத்தில்கொண்டு கட்டுரைகளை அமைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
கண்ணியமிக்க —- அவர்களே!பெண்கள் வெளியில் செல்லக்கூடாது, அப்படியே செல்லநேரிட்டாலும் ஆண்துணையில்லாமல் செல்லக்கூடாது, அதுவும் மணமுடிக்கத்தக்க உறவுடைய அல்லது அன்னிய ஆண்களுடன் வெளியில் செல்லக்கூடாது என்றும், கழுத்து மூடியவாறும் முழங்கைக்கு கீழ் அமைப்பு இருக்குமாறும் மேற்சட்டை அணியவேண்டும் என்றும் கண்ணியமிக்க பெண்களுக்கு முகம்மது நபியின் கட்டளைகள் உண்டு.அது மட்டுமில்லூங்கோ. எந்த ஒரு கண்ணியமிக்கப் பெண்களும் அன்னிய ஆண்களுடன் பேசும்போது திரைமறைவுக்குப் பின்னால் நின்றுதான் பேசவேண்டும். தந்தை தன் மகளுடன் பேசவேண்டும் என்று விரும்பினாலும் திரைக்குப் பின்னால் நின்றுதான் பேசவேண்டும் என்றும் முகம்மது நபியின் கட்டளை உண்டு.
முகம்மது நபி தன் மரணப்படுக்கையில் படுத்திருக்கும்போது, தன் தோழர்களையும்(?) தன் மனைவியையும் திரைமறைவில் நின்றே பேசவேண்டும் என்றும், உணவு தேவைப்பட்டால், உணவு தயாரான பிறகே விட்டினுள்ளே சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் (திரைமறைவில்தான்). அதுவரை வீட்டினுள் அநாவசிமாக யாரும் (தோழர்களுக்குத்தான்) உள்ளே வரக்கூடாது என்று முகம்மது நபியின் கட்டளை உண்டு. (மனதில் என்ன சந்தேகமோ?) முகம்மது நபியின் மனைவியர்கள் என்றால் சாதாரணமானவர்கள் இல்லை. தூய உள்ளம் கொண்டவர்கள். (மறுமணத்தை எல்லாப் பெண்களுக்கும் உரிமையாக்கிய முகம்மதுநபி தனது மனைவிகளுக்கு மட்டும் தடுத்திட “முகம்மதுநபியின் மனைவிமார்கள் உலக மக்களுக்கெல்லாம் தாய்” என்று அறிவித்தது என்னவகை நியாயம்? ஆனால் முகம்மதுநபி யாருக்கும் தந்தை இல்லை என்பதையும் முகம்மதுநபி இறந்தபோது அவரது மனைவி ஆயிஷாவிற்கு 17வயது என்பதையும் இங்கே சேர்த்து புரிந்துக்கொள்ளுங்கள்.) உலக மக்களுக்கெல்லாம் தாய் என்று அல்லாவே அறிவித்துவிட்ட சிறப்பு மிக்கவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கே இப்படிப்பட்ட கட்டளை என்னும்போது சாதாரணமான நீங்கலெல்லாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்ங்க.
புர்காவை ஒப்புக்குகாக மட்டும் போடக்கூடாதுங்க. உங்கள் முகமும், தலையும், உடலும் முழுதாக மறைக்க வேண்டும்ங்க. உங்களின் உள்ளங்கை மற்றும் விரல்கள், பாதங்கள் மட்டும்தான்தெரியவேண்டும்ங்க. அன்னிய ஆடவர்களுக்கு எதிரில் நீங்க சிரிக்கவும் கூடாதுங்க.
எனவே கண்ணியமிக்க —- அவர்களே! ஒவ்வொருவரும் தான் கடைபிடிப்பதை மட்டும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம் என்று கூறுவதும், அப்படி எல்லாம் இசுலாத்தில் இல்லை என்று மறுப்பதும் அவ்வாறில்லையானால் “மனிதன் தவறு செய்பவனாக படைக்கப்பட்டுள்ளான்; அதனால் எல்லாவற்றையும் எல்லாறும் கடைபிடிக்க முடியாது” என்று சவளைவாதம் முன்வைக்காமல் கண்ணியமிக்க மிக மிக கண்ணியமிக்க பெண்ணாக நபிவழியில் நடந்து உலகம் போற்றும் பெண்ணாக வாழ்வீர்கள் என நம்புகிறேன்.
உங்கள் முகம்மதுநபி தனது 55 வயதில் 6வயது ஆயிஷாவை திருமணம்செய்து பெண்ணின் கண்ணியத்தை பச்சிளம் பருவத்திலேயே பாதுகாத்ததையும் உங்கள் பிளாக்கில் வெளியிட்டு நபிவழியின் சிறப்பை உங்களு பெண்களிடம் பிரச்சாரம் செய்யுங்கோ!!!
even vinavu has not analysed this issue in depth!!! strange. The cultural symbols mentioned here are only outward manifestation. Underlying issue is property rights & financial independence of women. I think the purdah has effectly camoflagued both women and their rights. Highlight the root cause ( economics) for these kind of analysis than just the religious ones. anyway hats off to vinavu – good post but improvise!!!!
நன்றி
வினவு…>>> //வன்புணர்ச்சிக்கு அலையும் ஒரு கொடூரனிடமிருந்து ஜீன்ஸ், சல்வார் போட்ட பெண்களாவது கொஞ்சம் கை, காலை ஆட்டி சண்டையாவது போட முடியும், சுதந்திரமாக ஓட முடியும். பர்தா அணிந்த பெண்கள்? மூலையில் தேமே என்று அழவேண்டியதுதான்.// –அடடா…என்னே ஒரு அறிய கண்டுபிடிப்பு..!!!
வினவுக்கு ஒரு சவால்,
பர்தா கடைப்பிடித்த முஸ்லிம் பெண்கள் Vs. ‘முற்போக்கு(உங்கள் பார்வையில்) உடை’ அணிந்த பெண்கள். இவர்களில் யார் அதிகம் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளானவர்கள்? இதில் நம்நாட்டு புள்ளிவிபரமாவது மக்கட்தொகை சதவீத அடிப்படையில் தெரியுமா? சொல்ல முடியுமா வினவு?
எத்தனை //ஜீன்ஸ், சல்வார் போட்ட// பெண்கள், //வன்புணர்ச்சிக்கு அலையும் ஒரு கொடூரனிடமிருந்து// வேகமாய் ஓடி தப்பித்திருக்கிறார்கள் என்று கூற முடியுமா? மூன்று முக்கோணங்களை உடையாக(?) அணிந்தால்
மட்டுமே வேகமாய் ஓட முடியும் என்று பிதற்றும் ஓட்டப்பந்தய உலகில், அடி முதல் முடிவரை மறைத்து ஆடை அணிந்த ஒரு பஹ்ரைன் முஸ்லிம் பெண் -ருகையா அல் கசரா – 200மீ ஓட்டப்பந்தயத்தில், அதுவும் 2008 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கூட வாங்கி விட்டார், வினவு.!
///உடையின் இடையில் தெரியும் பெண்ணுடலை வக்கிரத்துடன் பார்க்கும் நோய் ஆண்களின் கண்களில் உருவாக்கப்பட்டிருக்கும்போது அதற்கு அல்லாவோ பர்தாவோ என்ன செய்ய முடியும்? அல்லது அந்த அல்லாதான் ஆண்களின் காமவெறியை கொஞ்சம் காந்தி மாதிரி தணிச்சலாக படைத்திருக்கலாம்தானே?/// — வினவு, நீங்கள் குடிப்பீர்களா? குடி போதையிலேதான் பதிவெழுதுவீர்களா?
இனிமேல் இது போன்ற மொக்கை பதிவுகளையெல்லாம் போடாமல், நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை விளைவிக்கும் நல்ல விஷயங்கள் பக்கம் கவனம் செலுத்தலாமே அல்லது வில்லவன், கலையரசன் போன்றோருக்கு அதிகம் வாய்ப்பு அளிக்கலாமே, வினவு.!
Hello Nethiyadi, , don’t tell wrong information.. Rakia al-Gassra did not wear Burkha.. She wore track pant which is a recommended dress for running.. Who cares if she covers her face She doesn’t run with her head..And nobody says that you need to wear shorts for running, Its left to the choice of the athlete.. I am an athlete and I know in my academy many women who wears tracks when they train.. Running is a science.. – Physics actually – The weight of what we wear matters.. It doesn’t matter if its shorts or Tracks, the lighter the better. Sometimes due to the synthetic material used the Tracks can be lighter than the shorts. Do you have any idea about all these stuff, We need to spend in thousands for athletic suits in professional competition…and remember in 2000 year Olympic history there has not been many Rakia al-Gassra’s…. The reason, you need to ponder.
I never said she was wearing burkha. //She wore track pant which is a recommended dress for running..// then, why not others wore the same as she?
Exactly….//The weight of what we wear matters..// = that is what i said in other words.
Mr. Nethiyadi //then, why not others wore the same as she?// what are you trying to communicate, who are you and I to decide what others wear, there are a few non-muslim male olympians who wear trackpants and almost all muslim male athletes who runs in shortpants and Muslim women from non muslim countries like Africa and muslim country like indonesia run in shorts! SO ?its their wish, I mean why are you guys even bothered! What that matters is Running others are totally irrelevant .
//The weight of what we wear matters..// = that is what i said in other words.// No you did not say it. You were saying it is possible to cover yourself with Burkha and still run and gave a totally irrelevant example of a person ruinning with tracks which is infact was what Vinavu said about Running is easy in Jeans and Salwar
//கார்க்கி நறுக்குதெறித்தாற் போல விவாதங்களை முன் கொண்டு செல்வதற்கு வாழ்த்துக்களும், நன்றியும், மற்ற தோழர்கள் இதில் பங்கு பெறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.//
சாதாரணமா சொல்லிட்டீங்க 307 ஐயும் முடிக்குறதுக்குள்ள காலமே ஒடிப்போச்சு
வாங்க நெத்தியடி பாய்,
//பர்தா கடைப்பிடித்த முஸ்லிம் பெண்கள் Vச். ‘முற்போக்கு(உங்கள் பார்வையில்) உடை’ அணிந்த பெண்கள். இவர்களில் யார் அதிகம் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளானவர்கள்? இதில் நம்நாட்டு புள்ளிவிபரமாவது மக்கட்தொகை சதவீத அடிப்படையில் தெரியுமா? சொல்ல முடியுமா வினவு?//
ஆமா இதெல்லாம் நீயே சொல்லு உங்க புத்தகத்துல அப்படி அதுக்குன்னு சூத்திரம் வச்சிருக்கீயளோ? அதாவது பாயீ சோறுன்னா வாயில தான் சாப்பிடணும் என்ன புரியுதா அப்படித்தான் பர்தா போட்டுகிட்டு தப்பிக்கமுடியாதுன்னு குழந்தைங்க அறிவுக்கு கூட புலப்படும், ஆனா பாருங்க எல்லாம்வல்ல கருணையாளனோட பக்தனுக்கு தெரியல என்பது கொஞ்சம் வருத்தம் தான். அதுக்கு நீங்க அல்லாகிட்ட முறையிடுங்க.
பர்தா அவ்வளவு நல்ல டிரஸ்ன்னா நீங்க லீவுல நம்ம வூருக்கு வரும்போது பர்தா போட்டுகினு வருவீங்கலாம் நீங்களும் நானும் ஓடிபிடிச்சு விளையாடுவோமாம், அப்பத்தெரியும் என்னுடைய சகோதரிகளான உங்க அம்மா, உங்க தங்கச்சி, அப்புறம் உங்க சொந்தக்காரங்க பெண்களை எப்படி அடிமையா வைத்திருக்கிறோமென்று.
னம்ம நண்பர் மீனா சொன்னமாதிரி அந்த முசுலீம் பெண் பர்தா போட்டுகிணு ஓடுனாங்க அப்புடீன்னா பாய் அதுதான் கின்னஸ் ரெக்கார்ட்(!!!!!). என்னவோ பர்தவைபத்தி சொன்னவுடனே கோம் பொத்துகிட்டுவருதே, உங்க மதத்துல உங்க குர்ர்ரான் சொல்றபடி எத்தினி பேர் வாழறீங்க லிஸ்ட் கொடுப்பீங்களா(நீங்க கேட்ட லிஸ்ட்க்கும் இந்த லிஸ்ட்தான் பதில்)
சும்மா அல்லா அல்லான்னு சங்கூதாதீங்க ! குஜராத்தில் ஆயிரக்கணக்கான முலீம்கள் கொல்லப்பட்டபோது உங்க அல்லா எங்க போனார் பாங்கு ஊதப்போனாரா! விலை வாசி ஏறுது, கல்வியில கொள்ளையடித்து பசங்களை படிக்க வைக்க முடியலை இதை எந்த அய்யப்பனும் அல்லாவும் மாத்த மாட்டாங்க. அந்த நாதேரிக்கெல்லாம் வக்காலத்து வாங்க வந்துட்டீங்க!
வினவுக்கு,
இந்தப்பதிவு மிகவும் சிறப்பு, பலரின் முகமுடிகளை கிழித்து போட்டிருக்கிறது.
ஆனால் நம்ம கமெண்ட்தான் ரொம்ப லேட் போல இருக்குது. கொன்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க
கலகம்
அது என்னனு எனகு தெரியல…ஃபுர்தா போட்ட அடிமைகலா….என்னத்த சொல்ல….அடிமைனு நீஙக சொல்லுரது…கருத்து சுதந்திரம்னா,,,அது அதை பொடுரவஙகலோட விருப்பம்….இஸ்லமிய பெண்கல் எல்லோரும் ஃபர்தா பொடுரது கிடயாது….விரும்புரவஙக மட்டும் தன் பொடுராங்க….உடனே… ஆப்கன் யென் கட்டாயம்னு சொல்லுராங்கனு நீஙக கேட்பீங்க…அது அவஙக கலாசாரம்..அபயா அது அவ்ஙக cultural dress..தமிழன மாதிரி…எல்லாரும் எல்லாத்தையும் எத்துக்குவஙன்னு,,,எதிர் பார்க்க முடியாது…கல்வி தான் எல்லத்தையும் மாற்றும்….you just check with the other literated country like egypt,turkey….they r all well developed and educated…and fully liberal country….just see and come…still they r politically and religialy freed…but still muslim womens r using Abaya’s…there is no obstrcle…no one can force them…but they r using…not fully some of them r not using the furdha….but they r dressed like abaya..fulla hand court and…skirts…head scarfs…like that what is wrong in that..boss…though u want and try to find mistakes from muslims and islam….there might be a lot of mistakes in muslim..because we nor not following islam..properly….the community which was in high level when at the early stages…..later…by muslim….lack of education nleads to a drastic setback all over the world and also in India….Muslims r lower than the Scheduled caste as per the instruction given by the supreme court…and the comittee of rajendra chachar said these this…
periya..the athiest leader who never scold abd critisize abt islam…amm nt saying muslim…..he told at many circumstances….இன இலிவு ஒலிய இஸ்லாமே நன் மருந்து….இப்பொ Dr.periyardasan….he has changed many people…believer to non believers….but never scold abt islam and never crizise abt it….see hee later converted to islam…as like rthese we can say many examples…y am saying is…pls u can say anything that should nt hurt anyone…healthy discussion is acceptable…as what we doing now…but blaming means..nothing to say my Bro.
2. கண்ணியம் எங்குள்ளது? மதுரையில் ஒரு நிகழ்வு அந்தக் குடும்பம் மிகப்பெரும் பணக்கார குடும்பம் கிரானைட் அவர்களது தொழில். தந்தை மகன் ஆளாலுக்கு தனிகார்களும் உண்டு. அவர்கள் குடும்பத்துடன் ஒரு சேட்டுக்கு ( கிரானைட் வியாபாரிதான்) நட்பு ஏற்பட்டது. அவர் வீட்டுக்கு வர போக இருந்தார். மகனின் மனைவிகூட அவரிடம் சகஜமாக உரையாடுவார்.
ஒருநாள் மகனின் மனைவிக்கு ஒரு தனிக்கார் வீட்டிற்கு வந்தது. அது பற்றி அவரது மனைவி “சேட் அன்பளிப்பாக” வழங்கியதாக கூறியுள்ளார். அந்த மனைவி அடிக்கடி தனது தோழிகளை காண வெளியில் செல்வாராம். இப்பொழுது காரில் செல்லலானார். அதுவும் அதிகமாகியதால் மகனின் மனதில் ச்நதேகம் தோன்றியது. கார் அன்பளிப்பு மனதை உறுத்தியது. ஒருநாள் மனைவி வெளியில் செல்லும்போது தானும் அவருன்னுடன் வருவதற்காக கூறியிருக்கிறார். ஆனால் அவரது மனைவி சாக்குபோக்கு சொல்லி தடுத்துவிட்டார். அவரது மனம் நிலைகொள்ளாமல் குளம்பியது. தாங்கமுடியாத மனஉலைச்சல். ஒருநாள் மனைவி வெளியில் செல்லும் போது அவளரறியாத பின் தொடர்ந்தார். மனைவியின் கார் ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கு நுழைகிறது. பொருத்திருந்து கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்ற திட்டமிட்டார். சில மணிதுளிகள் அவருக்கு நகர வேதனையாக நகர்கிறது. அந்த சில மணிதுளிகள் கடக்கும் வரை அவரது உடல் படபடக்கிறது. பிறகு மெதுவான வரவேற்பை அனுகி விவரம் கூறி அறை எண்ணை தெரிந்துகொண்டு வேகமாக விரைகிறார். அறையை அடைந்து கதவை தட்டுகிறார் . தாம் இருப்பது தனது கணவருக்கு தெரியாது என்பதில் எள்ளளவும் அந்த மனைவிக்கு சந்தேகமே இல்லை. அதனால் வேறு யாரோ ஹோட்டல் தொழிலாளியாக இருப்பார் என்று அவரது மனைவி கதவை திறக்கிறாள்.
மனைவியின் அழகில் வாலிப மிடுக்கில் கிறங்கி தனது செல்வத்தினை உள்ளம் உவக்க நனையச் செய்து, தனது மும்தாஜியாக பெருமையுடன் இணைந்து உலா வந்த அந்த மகன், தன் மனைவி கதவை திறந்த்தை கண்டு சில வினாடிகளில் கண்ணாடிபோல நொறுங்கினாலும் மறுகனமே ஆத்திரம் உச்சந்தலையை சூடாக்க உள்ளே இருக்கும். சேட்டை, அந்த அயோக்கிய காஃபிரை எதிர்பார்த்து ஆவேசமாக உள்ளே நுழைகிறார். அங்கே அதிலும் பெரும் அதிர்ச்சி!! கல்லாக உரைகிறார்!! அங்கே காண்பது கனவா நினைவா? ஆம்! உள்ளே இருப்பது சேட் அல்ல தாடியும் தொப்பியுமாய் சொல்லுக்குச் சொல் மாஷா அல்லாஹ் (அல்லா அற்புதமானவன்), அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வின் கருனையால்) என்று சொல்லும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அவரது….. தந்தை! மறுநாள் அந்த இசுலாமிய “மகன்” தூக்கில்தொங்கிக் கொண்டிருந்ததை நாளிதழ்கள் வெளியிட்டன.
சுமஜிலா நீங்கள் உங்கள் தந்தையின் முன்பும், மாமனார் முன்பும், வீட்டினுள் இருக்கும் போதும்கூட பர்தாவில் இருந்தால்தான் கண்ணியமாக இருக்கும். தவறு எங்கே உள்ளது? எந்த பெண் வெளியில் செல்கிறார் என்று தெரிந்தால் என்ன? வெளியில் செல்ல தடை விதித்தலில் தவறு உள்ளது.
பெண்கள் பள்ளிவாசலில் தொழுக வந்தால் என்ன? உமரின் சாட்டையை கேளி செய்தவர்களை விளாசித்தள்ளாதலில் தவறு உள்ளது.
பெண்கள் புர்கா அணியாமல் வெளியில் வந்தால் என்ன? சுமஜ்லா போல் அதற்கு உண்மைக்கு புரம்பான விளக்கங்களை கூறி பெண் இனத்திற்கே துரோகம் செய்வதில் தவறு உள்ளது.
பர்தாவோ புர்காவோ ஆணின் பாலியல் வக்கிர புத்தியை அடித்து நொறுக்காதவரை பெண்கள் வன்உணர்வின் மிரட்டலில்தான் வாழ முடியும்.
Rakia al-Gassra 2008 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கவில்லை. செமியில் தோற்றுவிட்டார்!
Rakia al-Gassra 2008 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கவில்லை. செமியில் தோற்றுவிட்டார்!
என்ன ஐயா, 119-க்கு மறு-பின்னூட்டம் இட்டால் இங்கு விழுகிறது
அன்பான நண்பர் திரு வினவு மற்றும் மற்ற பல நண்பர்களுக்கும்,
என்ன சார், பார்த்து ரொம்ப நாளாச்சு! புரட்சி செயல் திட்டங்களெல்லாம் எப்படி சார் இருக்கு? ஏகாதிபதிய பிற்போக்கு
ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளை எப்பொழுது கவுத்து நம்ம ஊரில்ல அக்டோபர் புரட்சி செய்யப்போறீங்க?
சீக்கிரம் ஏதோ பாத்து செய்யுங்க சார்! மத்த ரியாலிட்டி ஷோ எல்லாம் ரொம்ப போர் அடிக்குது! மானாட மயிலாட போன்ற அருமையான ஒன்றை
அதாவது மாவோ பாட நாங்களும் மாங்கா மாதிரி ஆட அப்படின்னு ஒன்று எடுத்து விடுங்க சார், ஏதோ எங்களுக்கும் பொழுது போகும்!
அது சரி, அருமை நண்பர் திரு கலகத்தின் எழுத்துகளை பார்க்கலாம் என்றுதான் வந்தேன்! ஆளை காணவில்லையே? திட்டி திட்டியே களைச்சு போயி ரெஸ்ட்இல இருக்காரா?? அதுவும் இந்த மாதிரி கண்டபடி வசை பாடும் ஒரு இடத்துல அவரு இல்லைன்னா ரொம்ப போர் அடிக்குது சார்! கொஞ்சம் வந்து கொம்பு சுத்த சொல்லுங்களேன்! அட்லீஸ்ட் திரு கலகம் பாட மற்ற கெட்டவார்த்தை எல்லாம் ஓட அப்படின்னு ஒன்றை பார்த்த சந்தோஷமாவது இருக்கும்!
நான் சும்மா போயிருப்பேன்! நமக்கு எதுக்குடா வேண்டாத வேலை என்று! அனா பாருங்க சார் ஒரு லைன் ஒன்றை போட்டீங்களே!! ஐயோ சாமி, எப்படிங்க சார், // வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை//
முற்போக்கா???????
பார்க்கிறவன் பன்னாடையா இருந்தா பட்டுக்கோட்டை பெரியப்பா படம் பத்து ஆஸ்கர் வாங்கியிருக்குன்னு கூட சொல்லலாம்!
இதைப்பார்த்து சிரிச்சி சிரிச்சி, சரி, என்னதான் வேலை இருந்தாலும் கொஞ்சம் வந்திட்டு போவமேன்னுதான் வந்தேன்!
காஞ்சி தேவநாதன் கற்பும் கர்பக்ரஹமும் எவ்வளவு புனிதமானது என்பதைப்பற்றி அருமையாக பேசினார்! நல்லா இருக்கு இல்ல சார் இது!
நீங்க எழுதுவதற்கும், மேலே உள்ளதற்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை! ஒரு கடைந்தெடுத்த Hypocritical கூட்டம் என்றால், வேற யாரு….நீங்களும் உங்கள் ஜல்லிகளும்தான் சார்! கூட வேற ஏனைய முற்போக்கு பதிவர்கள் அப்படின்னு சொல்லி வேற ஒரு லைன்! அது யாரு சார் உங்க அளவு முற்போக்கு?????
ஹோ ஹோ …. நண்பர் திரு சுகுனாவா? அதானே பார்த்தேன். அவரும் வந்து தன பங்கிற்கு ஏதோ தன்னால் முடிந்த முட்டைகள் ரெண்டை இட்டுவிட்டு
போயிருக்கிறார்! அவரு ரொம்ப பெரிய ஆள் சார்! Of Course, உங்களுக்கு தெரியாதது இல்லை! அதான் சார், நல்லா முத்திரை குத்துவரே! சார் சொல்லுகிறார் யாரோ ஒருவரைப்பார்த்து நீங்க யாரு எனக்கு சர்டிபிக்கேட்டு தருவதற்கென்று! அப்போ அவரு போடற செர்டிபிகெட்டு மற்றும்
முத்திரைகளுக்கு அதிகாரம் யாரு தந்தது??? அதெல்லாம் கேட்கக்கூடாது, ஏனென்றால், நீங்களெல்லாம் முற்போக்குவாதிகள்! எங்களுக்கு முத்திரை குத்தத்தான் தெரியும்! எங்க தொழிலே அதுதானே!
ஒன்று புரிந்து கொள்ளுங்கள் சார், எல்லா மனிதர்களுக்கும் தெரிந்த முற்போக்கு மற்றும் பிற்போக்கு ஒன்று இருக்கிறது! எல்லோரும் முர்போக்குதான் பல சமயங்களில், எல்லோரும் பிர்போக்குதான் சில சமயங்களில்!
“ஒன் பாத்ரூம் முற்போக்கு, டூ பாத்ரூம் பிற்போக்கு” – இதைதவிர நீங்க சொல்லவரும் முற்போக்கு மற்றும் பிற்போக்கிற்கு வேற ஒன்றும் ஆர்தமே கிடையாது!
ஏமாந்தவன் எட்டிப்பார்த்தால் நோக்கு கூலி கேட்ப்பார்களாம்
எமாத்தியவன விட்டு வெச்சா அவன் பொழைப்பதர்க்கு பத்து காரணத்த சொல்லுவானாம்
நீங்கள் கட்டி வைத்த மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் எல்லாம் சரிந்து போய், சாக்கடை என்று எல்லோரும் கண்டுகொண்டு, சரித்தரித்திலிருந்து சுருங்கி சனியன் போனது என்று உலக மக்களெல்லாம் உங்களைப்போன்றவர்களை மறந்து விட்ட பிறகும், ஒரு சில இடங்களில் நீங்கள் செய்யும் காமடி அப்பப்பா. Historically convicted on all counts yet posturing superbly as sanctimonious இந்த உலகத்தில் யாராவது செய்யமுடியும் என்றால் அது நீங்களும் உங்களது நண்பர்களும்தான் சார்.
போதாகுறைக்கு புர்க்காவைப்பற்றி ஏதோ உங்களால முடிந்த ஒரு கால் பக்கம்! தனி மனித உரிமையைப்பற்றி பேச உங்களுக்கு என்ன சார் யோகிதை இருக்கிறது. This is for every body to know – As writen by Svetlena Alliluyeva….daughter of the mighty Joseph Stalin, the god of our முற்போக்குவாதி friends!!
ஒரு முறை ஸ்டாலின் முன் அவரின் மகள், சுமார் பத்து வயது இருக்கும் பொழுது, தொடை தெரிய அந்த சிறிய பெண் அணிந்த உடையை பார்த்து விட்டார் ஒரு அரை! The point is, இதை செய்தது யாரோ ஒரு குடும்பத்தலைவன் இல்லை. முற்போக்குவாதிகளின் பிரதிநிதியாக வணகப்படும் ஒருவர்!!
ஆதலால் இதை நீங்கள் கண்டித்துவிட்டு பிறகு, புர்தாவைப்பற்றி கண்டிக்கவும்!
(இதற்க்கு இவர்கள் சொல்லப்போகும் பதில், இது ஒரு கட்டுக்கதை – ஏகாதிபதிய திரிபு…..and so on……..but the facts are on the table)
இரண்டாவது, ச்வேடேலானாவின் முதல் திருமணம்…. அவரின் காதலரின் பெயர் கிராகேரி மோர்சா. வயதில் மூத்தவர் (38 Vs. 17) எனினும் ஸ்வெட்லானா
அவரைதான் மணப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்றார். ஸ்டாலின் இதை சிறிதும் விரும்பவில்லை. ஒரு தகப்பனானவன், இந்த அளவு வயது வித்தியாசம் இருந்தால் கண்டிப்பாக கவலை கொள்ளலாம்தான்! தவறில்லை, என்ன ஆனாலும் அவரின் மகளின் வாழ்கை! ஆனால் ஸ்டாலின் கவலைப்படதோ மணமகனின் வயதைப்பற்றி இல்லை.அவரின் குலத்தைப்பற்றி. I dont like him, he is a Jew – இது ஸ்டாலின் தன் மகளிடம் கூறியது! கிரிகோரி ஒரு யூதர். யூதர்களும் கிருத்துவர்களும் திருமண சம்பந்தம் வைத்துக்கொள்வது நடவாத காரியம் – யாருக்கு – பிற்போக்கு மனிதர்களுக்கு. ஆனால் சிவப்பு சட்டை காரர்கள்தான் முற்போக்கு ஆயிற்றே…இருந்து…….ஊருக்கு தான் உபதேசம்.. அதிரிந்து போன ச்வேட்லான, எப்படி அப்பா இப்படி எல்லாம் பேசலாம் என்று மறு மொழி கூறியபின், கோபமாக ஸ்டாலின் do what you want என்று வெளியேறி, தன் மகளின் திருமணத்திற்கு கூட செல்லவில்லை!
அன்பான சிவப்பு நண்பர்களே, அதாவது முற்போக்கு நண்பர்களே…..என்ன சத்தத்தையே காணும்!
(இதற்கும் நீங்கள் எல்லாம் பதில் வைத்திருக்கிறீர்கள்… இது ஒரு திரிபு….ஸ்வெட்லானா சோவியத் ரஷ்யாவிலிருந்து ஓடி மேற்கத்திய நாடுகளுக்கு போய், அங்கே இருக்கும் ஏகாதிபதிய சுரண்டல்கார்களிடம் பணம் வாங்கி இப்படி கண்டபடி எழுதி தன் சுய சரிதையாக வெளியிட்டார் என்று அடிப்பீர்கள்…வேற என்ன??)
இவர் செய்த முற்போக்கு இன்னும் பல பல பல ….. கேட்டால் சிரிப்பாக வரும்……
இவர் பேசுகிறார்களாம் பெண்ணடிமைப்பற்றி………. இவர்கள் பேசுகிறார்களாம் முர்போக்கைப்பற்றி………
காமடி காமடி…………
நன்றி
நோ,
உன் இரட்டை வேடத்தை கலைச்சு, சிறப்பான அறிவிப்பு எல்லாம் செய்ஞ்சு, அப்ப தளத்தை விட்டு ஓடிப்போனவன் தான். ரெம்ப நாள் கழிச்சு, எட்டி பார்க்கிற!
நீ எல்லாம் போனதுக்கு பிறகு, கலகத்துக்கு வேலை இல்லாம போச்சு! அதனால் தான் வராம இருக்கிறார்.
நீ வந்துட்ட! கலகமும் வந்துட்டார்.
ஆனாலும், உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. அதே பெயரிலேயே வர்றீயே! அதுக்கு தான்.
‘சினிமா, மொக்கை, அரட்டை, அக்கப்போர், தொடர்பதிவு, வடிவேலு ஸ்லாங், மீதபர்ஸ்டு, முதுகு சொறிதல் என்று பிழைப்பை நடத்தும் பதிவுலகின் ஆன்மாவைக் கீறிப்பார்த்தால் அங்கே சாதியும், மதமும்தான் கோலேச்சும். வினவின் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களில் இதை உணராதவர்களுக்கு ‘நற்குடி’ பிரச்சினை தெளிவாய் விளக்கியிருக்கும். இதை முட்டி, மோதி, தட்டி, கொட்டி மாற்ற வேண்டுமானால் வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை?’
Vinavu&co is on a civilising mission to reform the tamil blog world and transform it as a part of the revolutionary vanguard.Bloggers should co-operate with Vinavu&co and save humanity from monsters like hindutva,capitalism. So bloggers are requested to understand that the real purpose of their birth and existence is to contribute to revolution and extend support to the missions of vinavu&co.Otherwise they will be punished according to vinavupurana in the post-revolutionary world. So save your souls now as revolution is round the corner.
நண்பர் நெத்தியடி பாய் நீங்கள் கூறியதால் pj வின் வலைத்தளத்தை படித்தேன். அதிலிருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொண்டேன். இருந்தாலும் நாம் இங்கு ஹிஜாப் பற்றி மட்டும் விவாதிப்போம்.நன்றிஹிஜாப்(பர்தா) ஏன்? நமது நெத்தியடியின் ஆன்மீக குருவும்,விபச்சார குற்ற சம்பந்தமான பிரச்சினையொன்றில் ஒரு சாமானிய பெண்ணிற்கும்(sp பட்டணம்) தவ்ஹீதின் முன்னாள் அனல் பேச்சாளர் பாக்கருக்கும் இரு வேறுவிதமாக தண்டனை கொடுத்த pj கூறுகிறார்.(பாக்கருக்கு கொடுத்தது தண்டனை அல்ல வெகுமதி)1.இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். 2.பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் சினிமாவில் பெண் ஆபாசமாகக் காட்சியளிப்பதும்,அரைகுறை ஆடைகளை விரும்புவதும் காரணம்.3.ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ல காரணம் தனக்கு தெரிந்தவர்களிடம் தன்னுடைய மதிப்பும் மரியாதையும் பாதிக்கப்படும் என்று அஞ்சுவதுதான்.4.ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும்பெண்கள் ஆண்களை அரகுறை ஆடையுடன் ரசிப்பதில்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்.அடங்கொய்யாள, இதத்தான்யா நானும் சொன்னேன். ஆண்கள் ஜொள்ளுப்பார்ட்டிகளாக படைக்கப்பட்டுள்ளனர்,ஆணின் காமவெறிப்பார்வையைச் சமாளிப்பதற்காகப் பெண்களின் மீது இஸ்லாம் போட்டிருக்கும் கவசமே பர்தா,பெண்ணுரிமை என்றவுடன் ஜட்டி,பிராவுடன் அலைவதாகவே கற்பனை செய்துகொள்ளுகின்றனர், பர்தாவினால் ஒழுக்கம் வந்துவிடாது யாரும் பார்க்கவில்லையென்றால் மேய்ஞ்சுடுவானுங்க என்று.பெண்கள் ஆண்களை அரைகுறை ஆடையுடன் ரசிப்பதில்லை என இவருக்கு யார் சொன்னது. பெருநகரங்களில் இருக்கும் இண்டெர்நெட் மையங்களில் சென்று pj வை துப்பறியச் சொல்லுங்கள். பிறகு ரசிக்கிறார்களா இல்லையா என்று கதையளக்கலாம்.இறுதியாக பாய் அவர்களுக்கு,உங்களுடைய ஆன்மீகக் குரு சீரழிந்த முதலாளித்துவத்தின் சீரழிவில் இருந்தே பர்தா கண்ணியமானதென பாதுகாப்பானதென விளக்கமளிக்கிறார். நாங்கள் கோருவது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம். முதலாளித்துவத்தின் சீரழிவிலிருந்து பெண்களை காப்பது பர்தா அல்ல,கம்யூனிசமே. கம்யூனிசமே மக்களை காக்கும்.
///கம்யூனிசமே மக்களை காக்கும்/// — அப்பாடா! இதைத்தான், இதைத்தான்….”இதன் கொள்கை, அதை நடைமுறைபடுத்துதல், அதில் சட்டம், தவறுபவர்களுக்கான தண்டனை, அதன் இயக்கம், மக்களின் வாழ்க்கைமுறை, மக்களின் பொருளாதார வெற்றி, மனநிறைவு, அமைதி …இத்யாதி…இத்யாதி – இவற்றை எல்லாம் இங்கே-நாங்கள்தான் உண்மை;மற்றவரெல்லாம் போலி என்று முழக்கமிடும்-இத்தளத்தில் பற்பல பதிவுகளாய் போட்டுத்தொலைத்தால் என்ன”….. என்றுதான் நான் பல மாதமாய் கேட்கிறேன். பதிலே இல்லை. நீங்களாவது விளக்கி சொல்லுங்கள், தோழர்,திரு.மருதன் அவர்களே..! அது அப்படி என்னதான் சொல்லி மக்களை காக்கும் என்று தான் தெரிந்து கொள்வோமே?
இஸ்லாம் இவ்வுலகில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், எப்படி வாழ்ந்தால் கண்ணியமாக வாழ முடியும் என்பதை தெளிவாக கற்றுத்தருகிறது. நாகரீகம் வளர்ச்சி அடையாத காலங்களில் கூட மனிதன் தன் உடம்பை இலை, தழைகளை வைத்து மறைப்பதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டான். எனில் உடம்பை மறைத்தல் என்பது மனிதர்களுக்கு இடையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரிய செயல் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஹிஜாப் பற்றி இப்படி ஒரு கருத்தை எதிர்பார்க்கமுடியாத ஒரு இடத்தில் இருந்து வந்த உண்மை சம்பவ பதிவு : தங்களுக்கு சில ஆச்சரியங்கள் இங்கே காத்திருக்கின்றன. சென்று வாருங்களேன், தோழர்.
http://vanjoor-vanjoor.blogspot.com/2008/09/blog-post_09.html
(பின் குறிப்பு-உலக முஸ்லிம்களுக்கு எல்லாம் ஒரே குருதான், அவர்: முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மட்டுமே. இத்தலத்திலேயே நான் பல வேறு சைட்டுகளுக்கு லிங்குகள் பலசமயம் தேவைப்படும் கருத்துக்காக அல்லது டைப் அடித்து அடித்து அலுத்துப்போய் கொடுத்துள்ளேன். அவர்களெல்லாம் என் குருவா?)
நெத்தியடி முஹம்மது,நீங்கள் மீண்டும் மீண்டும் கூறியதையே கூறுகிறீர்கள். மனிதன் நாகரிக வளர்ச்சியின் மூலம் பக்குவமடைந்ததற்கும் இஸ்லாத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. இஸ்லாம் சொல்லித்தான் உடலை மறைத்தார்கள் என்பன போன்ற உங்களின் கருத்து நகைப்புக்குரியது. கம்யூனிசத்தை பற்றி அறிந்துகொள்ள துடிக்கும் உங்களது ஆவலை மெச்சுகிறேன். இனி வரும் காலங்களில் வினவு அதைப்பற்றிய பதிவுகள் இடுவார்கள்,கண்டிப்பாக என நினைக்கின்றேன். உங்களுக்கு அதீத ஆவலிருந்தால் சென்னையிலுள்ள எல்லீசு சாலையின் ஒரு சிறிய குறுக்கு சந்தான அவுலியாசாஹிப் தெருவில் அமைந்துல்ள கீழைக்காற்று வெளியீட்டகம் நிலையத்தில் கம்யூனிசத்தைப்பற்றிய அனைத்து புத்தகங்களும் கிடைக்கும்.
//…இனி வரும் காலங்களில் வினவு அதைப்பற்றிய பதிவுகள் இடுவார்கள்,கண்டிப்பாக என நினைக்கின்றேன். //–அந்தோ பரிதாபம் நீங்களும் என்னை மாதிரியேவா… “நினைக்கிறீர்கள்”?
ஏங்க இப்படி ‘மோனோபோலி’த்தனமா //சிறிய குறுக்கு சந்தான அவுலியாசாஹிப் தெருவில் அமைந்துல்ள கீழைக்காற்று வெளியீட்டகம் நிலையத்தில் கம்யூனிசத்தைப்பற்றிய அனைத்து புத்தகங்கங்களையும்//இப்படி மறைச்சு வச்சி இருட்டு வியாபாரம் செய்றீங்க? நெட்டில் ஏற்றினால்-எல்லாரும் இலவசமாக படித்துவிட்டால்-தங்கள் வியாபாரம் கெட்டுவிடுமே என்று பயமா?
you ask to pj, who supported to sell Mr. Pakkar that 20 rupee cassett sold to 50 rupee.
மதம் என்ற ஒன்று ஆரம்பித்த நாளிலிருந்து , அதை எதிர்போரும் ஒரு பக்கம் இருக்கிறார்கள். ஆனால் மதம் வளர்ந்த அளவு மதத்தை எதிர்ப்போர் அளவு வளர்ந்திருகிறதா என்றால் இல்லை. எதனால் இப்படி? மனக் கஷ்டத்தில் , பணக் கஷ்டத்தில் இருப்பவர்கள் மதத்தை நாடும் பொழுது , அது அவர்களுக்கு ஒரு தற்காலிகமான மன நிம்மதியை
அளிக்கிறது எனபது தான் உண்மை. இந்த நிம்மதியை என்றைக்கு மத எதிர்ப்பு நிலை அளிக்கிறதோ அன்று இந்த மத மாச்சரியங்களும் அழிந்துவிடும். இந்தியாவில் ஏத்தவது ஒரு கஷ்டத்தில் இருப்பவர்கள் தான் அதிகம். மத அடிற்பளர்கள் இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் மாற்றங்களை காணலாம். வெறும் விவாதத்தின் மூலம் எதையும் சாதிக்க முடியாது.
பெண்கள் ஆடைக்குறைப்பு செய்து உடையணிவது அவர்களின் உரிமை என்ற முறையில் அதை ஆதரிக்கிறோம்.அதே போன்று முழுமையாக உடலை மறைத்து உடையணிந்தால் அதுவும் பெண்களின் உரிமை தானே?.அதை ஏன் பிற்போக்குத்தனம் என்று சொல்ல வேண்டும்?
ஆடை குறைவாக அணியும் பெண்களிடம் எந்த மதப் புத்தகமும் அப்படி சொல்லவில்லை. அது அவர்களாகவே எடுக்கும் முடிவு. அவர்கள் அதிகமாக உடை அணிய ஆரம்பித்தால் குடி கெட்டதாகவும் யாரும் சொல்லப் போவதில்லை.
அதே நேரம் 1500 வருடம் முன்னால் யாரோ பர்தா அணிவது பெண்களுக்கு அவசியம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அப்படி அணியாவிட்டால் நற்குடியில் பிறக்கவில்லை என்று குறை சொல்கிறார்கள்.
இரண்டிற்கும் வித்தியாசம் புரிகிறதா?
பொய் சொல்லக்கூடாது, புறம் பேசக்கூடாது, திருடக்கூடாது, கற்பழிக்கக்கூடாது, கொலை செய்யக்கூடாது, தற்கொலை செய்யக்கூடாது , தண்ணியடிக்கக்கூடாது, சூதாடக்கூடாது, ஏமாத்தக்கூடாது, லஞ்சம் வாங்கக்கூடாது, விபச்சாரம் செய்யக்கூடாது, ஓரினச்சேர்க்கை கூடாது, ….இப்படியே… நிறைய…நிறைய …. “பிற்போக்குத்தனங்கள்”(?) குர்ஆனில் மலிந்து காணப்படுகின்றனவே…?!?!? 1430 வருடங்களுக்கு முந்தயவற்றான இதெயெல்லாம் தாங்கள் பின்பற்றியாகவேண்டும் என்று மனதார பின்பற்றுபவர்களை என்ன சொல்லலாங்க….? இவர்களை ‘நற்குடி’ இல்லை என்று சொல்லிவிடலாமா?
நெத்தியடி.. நீங்கள் மேலே சொல்லியிருக்கும் நல்வழிப்படுத்தும் தகவல்கள் எல்லா மதப் புத்தகங்களிலும் உள்ளன… ரொம்பவும் உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள வேண்டாம்.. எனக்குக் குரானோ வேறு எந்த மதப் புத்தகமோ தேவையில்லை.. அதனால் நான் ஒன்றும் நீங்கள் பட்டியலிட்டுள்ள குற்றங்களைச் செய்துவிடவில்லை.. என்னமோ குரான் இல்லாவிட்டால் உலகமே இருண்டுவிடும் என்பது போல் உளறாதீர்கள்…
நற்கருத்துக்கள் யாருக்கும் தனியுடமை இல்லை… பிற்போக்கும் வாதமும் எந்த ஒரு தனி மதத்தின் அடையாளம் இல்லை என்றும் எனக்குத் தெரியும்.. பர்தா என்ற பிற்போக்கு இஸ்லாத்தின் இக்கால அடையாளம் என்பதால்தான் இங்கே பேச்சு.. அதன் ஆரம்ப கால பயன்பாடுகள் மத்திய ஆசியாவில் இருந்த எல்லா மதங்களைலும், ஆப்பிரஹாம் வழிவராத மதங்களில் கூட மலிந்தே இருக்கிறது.. ஆனால் அதை இஸ்லாத்தின் தூய்மையின் அடையாளமாக உங்களைப் போன்றவர்கள் முன்னிறுத்தும் போதுதான் வாக்குவாதம் வருகிறது..
1. இன்று, புர்கா ஆண்களால் திணிக்கப்படுவதில்லை என்று கூறுவது பொய்.
என்னோட கூட பிறந்தவங்க 7பேரு. இரண்டு பேரு பெண்கள். என் தாய் இறக்கும்வரை பர்தா அணிந்ததில்லை எனது சகோதரிகளும் தனது ஏறக்குறைய 33, 35 வயதுவரை அணிந்ததில்லை. எங்களுக்கெல்லாம் மூத்தவருக்கு நாங்கள் மரியாதை செலுத்துவது வழக்கம் ஏன்னா தன்னுடைய 18 வயதிலிருந்து எங்கள் குடும்பத்தை காப்பத்தில் அளப்பரிய தியாகம் செய்தவர். அவரும் தனது 35 வயதுவரை குடித்துக்கொண்டு இருந்தவர்தான். ஆனால் திடிரென்று பக்தியோ பக்தி புடிச்சிக்கிருச்சி. அதிலிருந்து எல்லாரையும் புர்கா போடச் சொல்லிட்டாரு. என்னுடைய அண்ணியர்கள் எவரும் அதுவரை புர்கா அணிந்ததில்லை. அதிலும் எங்களின் மூத்தவரின் மனைவி தலையில் முக்காடு கூட போடமாட்டார்கள். இந்த முக்காடு போடாதற்காக எங்க அண்ணி வாங்கிய அடிகளும் எங்க அண்ணன் தன்னைதானே காயப்படுத்திக் கொண்டு வருத்திக்கொண்டதும் ஏராளம்.
ஏன் எங்கள் குடும்பம் புர்கா அணியவில்லை? எங்கள் ஊரில் அது வழக்கமில்லை. தென் மாவட்டங்கள் எதிலும் இந்த பழக்கமில்லை. பொதுவாக இசுலாமியர்கள் என்று சொன்னதும் பலருக்கும் எளிதாக நினைவு வரும் ஊர் கீழக்கரை. (இந்த ஊருல அவுங்க தெருவுல அன்னிய ஆண்கள் நுழையக்கூடாதுன்னு தடை இருக்கு. ஒரு அறிவிப்பு பலகையும் உண்டு.) காயல்பட்டிணம், முத்துப்பேட்டை, வாணியம்பாடி ஆகிய ஊர்கள் இந்த ஊர்களில் எவரும் புர்கா ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அணிந்ததில்லை. வாணியம்பாடி உருது முஸ்லீம்கள் தவிர). பொதுவாக தமிழ் முசுலீம்கள் அணிவதில்லை. கேரள பெண்கள் விஷயம் முற்றிலும் வேறு. அவர்கள் முக்காடு போட்டாலும் அங்குள்ள பண்பாட்டைச் சார்ந்து மாராப்பு போடுவதில்லை. புர்காவும் கிடையாது.
எங்கள் குடும்பம் எங்கள் ஊரில் கண்ணியமிக்க குடும்பத்தில் நம்பர் 1 இசுலாமிய சட்டங்களில் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்வது, இந்த கழிசடை ஊர் சுற்றி சுமஜ்லா போலில்லாது (அப்படி நான் சொல்லஙீங்க. இசுலாம் சொல்லுது) பெண்கள் வீணாக வெளியில் சுற்றுவதில்லை என்பது போன்ற அனைத்தையும் கறாராக கடைபிடித்தவர்கள். எனது தாத்தா பட்டம் பெற்ற ஆலிம். எனது தந்தை பட்டம் பெறாவிட்டாலும் இமாமாகவும் அரபி போதராகவும் பணியாற்றியவர் (35 வயதுக்குமேல்)
இப்பொழுது என் சகோதரிகள் தாங்கள் விரும்பியே புர்கா அணிகிறோம்; எவரும் கட்டாயபடுத்தவில்லை என்றுதான் கூறுகிறார்கள்.
எனது உறவுக்காரர் ஒருவர் தனது பருவமடையாத 11வயது மகளுக்கு பர்தாவின் கண்ணியத்தை திணித்துள்ளார் என்பது இதன் புதிய பரிணாம வளர்ச்சி.பெண்கள் அவர் விரும்பியே பர்தா 2. கண்ணியம் எங்குள்ளது? மதுரையில் ஒரு நிகழ்வு அந்தக் குடும்பம் மிகப்பெரும் பணக்கார குடும்பம் கிரானைட் அவர்களது தொழில். தந்தை மகன் ஆளாலுக்கு தனிகார்களும் உண்டு. அவர்கள் குடும்பத்துடன் ஒரு சேட்டுக்கு ( கிரானைட் வியாபாரிதான்) நட்பு ஏற்பட்டது. அவர் வீட்டுக்கு வர போக இருந்தார். மகனின் மனைவிகூட அவரிடம் சகஜமாக உரையாடுவார்.
ஒருநாள் மகனின் மனைவிக்கு ஒரு தனிக்கார் வீட்டிற்கு வந்தது. அது பற்றி அவரது மனைவி “சேட் அன்பளிப்பாக” வழங்கியதாக கூறியுள்ளார். அந்த மனைவி அடிக்கடி தனது தோழிகளை காண வெளியில் செல்வாராம். இப்பொழுது காரில் செல்லலானார். அதுவும் அதிகமாகியதால் மகனின் மனதில் ச்நதேகம் தோன்றியது. கார் அன்பளிப்பு மனதை உறுத்தியது. ஒருநாள் மனைவி வெளியில் செல்லும்போது தானும் அவருன்னுடன் வருவதற்காக கூறியிருக்கிறார். ஆனால் அவரது மனைவி சாக்குபோக்கு சொல்லி தடுத்துவிட்டார். அவரது மனம் நிலைகொள்ளாமல் குளம்பியது. தாங்கமுடியாத மனஉலைச்சல். ஒருநாள் மனைவி வெளியில் செல்லும் போது அவளரறியாத பின் தொடர்ந்தார். மனைவியின் கார் ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கு நுழைகிறது. பொருத்திருந்து கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்ற திட்டமிட்டார். சில மணிதுளிகள் அவருக்கு நகர வேதனையாக நகர்கிறது. அந்த சில மணிதுளிகள் கடக்கும் வரை அவரது உடல் படபடக்கிறது. பிறகு மெதுவான வரவேற்பை அனுகி விவரம் கூறி அறை எண்ணை தெரிந்துகொண்டு வேகமாக விரைகிறார். அறையை அடைந்து கதவை தட்டுகிறார் . தாம் இருப்பது தனது கணவருக்கு தெரியாது என்பதில் எள்ளளவும் அந்த மனைவிக்கு சந்தேகமே இல்லை. அதனால் வேறு யாரோ ஹோட்டல் தொழிலாளியாக இருப்பார் என்று அவரது மனைவி கதவை திறக்கிறாள்.
மனைவியின் அழகில் வாலிப மிடுக்கில் கிறங்கி தனது செல்வத்தினை உள்ளம் உவக்க நனையச் செய்து, தனது மும்தாஜியாக பெருமையுடன் இணைந்து உலா வந்த அந்த மகன், தன் மனைவி கதவை திறந்த்தை கண்டு சில வினாடிகளில் கண்ணாடிபோல நொறுங்கினாலும் மறுகனமே ஆத்திரம் உச்சந்தலையை சூடாக்க உள்ளே இருக்கும். சேட்டை, அந்த அயோக்கிய காஃபிரை எதிர்பார்த்து ஆவேசமாக உள்ளே நுழைகிறார். அங்கே அதிலும் பெரும் அதிர்ச்சி!! கல்லாக உரைகிறார்!! அங்கே காண்பது கனவா நினைவா? ஆம்! உள்ளே இருப்பது சேட் அல்ல தாடியும் தொப்பியுமாய் சொல்லுக்குச் சொல் மாஷா அல்லாஹ் (அல்லா அற்புதமானவன்), அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வின் கருனையால்) என்று சொல்லும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அவரது….. தந்தை! மறுநாள் அந்த இசுலாமிய “மகன்” தூக்கில்தொங்கிக் கொண்டிருந்ததை நாளிதழ்கள் வெளியிட்டன.
சுமஜிலா நீங்கள் உங்கள் தந்தையின் முன்பும், மாமனார் முன்பும், வீட்டினுள் இருக்கும் போதும்கூட பர்தாவில் இருந்தால்தான் கண்ணியமாக இருக்கும். 1. இன்று, புர்கா ஆண்களால் திணிக்கப்படுவதில்லை என்று கூறுவது பொய்.
திருமதி அல்லது குமாரி……….. “புர்கா அணிவதே பெண்களுக்கு கன்னியம் (ஒழுக்கம்) என்று கூறியது புர்கா அணியாத இசுலாமிய பெண்கள் மற்றும் பிறமதப் பெண்களை இழிவுப் படுத்தும் சொற்கள் என்பதில் எள்ள்ளவும் சந்தேகம் இல்லை. அதனை பிற பிளாக்கர்கள் (Blogggers) கண்டித்திருப்பதும் நேர்மையானதே. பிறமதத்திலுள்ள பிளாக்கர்கள் தத்தமது மதத்திலுள்ள பெண்ண்டிமைத்தனங்களை எல்லாம் எதிர்க்காமல் —- விமர்சனத்திற்குமட்டும் வரிந்துக் கட்டிக்கொண்டு வருவானேன் என்ற உங்களின் இந்தப் பதிவு நேர்மையற்றது. இங்கு பிரச்சனை புர்காமட்டுமே. ஒருவேளை விதவை மணம், அய்யப்பன் கோவில் நுழைவு, தாலி என்று பிரச்சனைகள் பேசப்பட்டு பிளாக்கர்கள் அதற்கு வக்காலத்து வாங்கியிருந்தால் உங்களின் இக்கட்டுரை நேர்மையானதே. மாறாக எழுப்பப்படாத பிரச்சனையை ஊடாக நுழைத்ததின் விளைவு புர்கா அணியாத இசுலாமியப் பெண்களுக்கான ஆதரவு கருத்துக்களையும் சர்ச்சைகளையும் தோற்றுவிப்பதற்குப் பதிலாக திசைமாறிய கருத்துக்களையும் சர்ச்சைகளையுமே தோற்றுவித்துள்ளது. எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைத் தொடர்பான சரியான தேர்வு எது என்பதனை அறியமுடியாமல் செய்துவிட்டது. இதனை கருத்தில்கொண்டு கட்டுரைகளை அமைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
கண்ணியமிக்க —- அவர்களே!பெண்கள் வெளியில் செல்லக்கூடாது, அப்படியே செல்லநேரிட்டாலும் ஆண்துணையில்லாமல் செல்லக்கூடாது, அதுவும் மணமுடிக்கத்தக்க உறவுடைய அல்லது அன்னிய ஆண்களுடன் வெளியில் செல்லக்கூடாது என்றும், கழுத்து மூடியவாறும் முழங்கைக்கு கீழ் அமைப்பு இருக்குமாறும் மேற்சட்டை அணியவேண்டும் என்றும் கண்ணியமிக்க பெண்களுக்கு முகம்மது நபியின் கட்டளைகள் உண்டு.அது மட்டுமில்லூங்கோ. எந்த ஒரு கண்ணியமிக்கப் பெண்களும் அன்னிய ஆண்களுடன் பேசும்போது திரைமறைவுக்குப் பின்னால் நின்றுதான் பேசவேண்டும். தந்தை தன் மகளுடன் பேசவேண்டும் என்று விரும்பினாலும் திரைக்குப் பின்னால் நின்றுதான் பேசவேண்டும் என்றும் முகம்மது நபியின் கட்டளை உண்டு.
முகம்மது நபி தன் மரணப்படுக்கையில் படுத்திருக்கும்போது, தன் தோழர்களையும்(?) தன் மனைவியையும் திரைமறைவில் நின்றே பேசவேண்டும் என்றும், உணவு தேவைப்பட்டால், உணவு தயாரான பிறகே விட்டினுள்ளே சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் (திரைமறைவில்தான்). அதுவரை வீட்டினுள் அநாவசிமாக யாரும் (தோழர்களுக்குத்தான்) உள்ளே வரக்கூடாது என்று முகம்மது நபியின் கட்டளை உண்டு. (மனதில் என்ன சந்தேகமோ?) முகம்மது நபியின் மனைவியர்கள் என்றால் சாதாரணமானவர்கள் இல்லை. தூய உள்ளம் கொண்டவர்கள். (மறுமணத்தை எல்லாப் பெண்களுக்கும் உரிமையாக்கிய முகம்மதுநபி தனது மனைவிகளுக்கு மட்டும் தடுத்திட “முகம்மதுநபியின் மனைவிமார்கள் உலக மக்களுக்கெல்லாம் தாய்” என்று அறிவித்தது என்னவகை நியாயம்? ஆனால் முகம்மதுநபி யாருக்கும் தந்தை இல்லை என்பதையும் முகம்மதுநபி இறந்தபோது அவரது மனைவி ஆயிஷாவிற்கு 17வயது என்பதையும் இங்கே சேர்த்து புரிந்துக்கொள்ளுங்கள்.) உலக மக்களுக்கெல்லாம் தாய் என்று அல்லாவே அறிவித்துவிட்ட சிறப்பு மிக்கவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கே இப்படிப்பட்ட கட்டளை என்னும்போது சாதாரணமான நீங்கலெல்லாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்ங்க.
புர்காவை ஒப்புக்குகாக மட்டும் போடக்கூடாதுங்க. உங்கள் முகமும், தலையும், உடலும் முழுதாக மறைக்க வேண்டும்ங்க. உங்களின் உள்ளங்கை மற்றும் விரல்கள், பாதங்கள் மட்டும்தான்தெரியவேண்டும்ங்க. அன்னிய ஆடவர்களுக்கு எதிரில் நீங்க சிரிக்கவும் கூடாதுங்க.
எனவே கண்ணியமிக்க —- அவர்களே! ஒவ்வொருவரும் தான் கடைபிடிப்பதை மட்டும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம் என்று கூறுவதும், அப்படி எல்லாம் இசுலாத்தில் இல்லை என்று மறுப்பதும் அவ்வாறில்லையானால் “மனிதன் தவறு செய்பவனாக படைக்கப்பட்டுள்ளான்; அதனால் எல்லாவற்றையும் எல்லாறும் கடைபிடிக்க முடியாது” என்று சவளைவாதம் முன்வைக்காமல் கண்ணியமிக்க மிக மிக கண்ணியமிக்க பெண்ணாக நபிவழியில் நடந்து உலகம் போற்றும் பெண்ணாக வாழ்வீர்கள் என நம்புகிறேன்.
உங்கள் முகம்மதுநபி தனது 55 வயதில் 6வயது ஆயிஷாவை திருமணம்செய்து பெண்ணின் கண்ணியத்தை பச்சிளம் பருவத்திலேயே பாதுகாத்ததையும் உங்கள் பிளாக்கில் வெளியிட்டு நபிவழியின் சிறப்பை உங்களு பெண்களிடம் பிரச்சாரம் செய்யுங்கோ!!!போடுவது என்பதும் ஆண்கள் எவரும் அதனை அவர்கள் மீது திணிக்கவில்லை என்று கூறுவதும் அப்பட்டமான பொய்.ஓ ! நெத்தியடி முகம்மதே நீர்கேளும். நீர் உமது உள்ளத்தில் உள்ளதை மறைத்து பொய் கூறுகிறீர் என்பதும், முழுப்பூசணிக்காயையும் சோற்றிலே மறைக்க எத்தனிப்பதும் நாம் அறிந்தவற்றில் மிகத் தெளிவானதே. கீழே எழுதப்பட்டுள்ளது உமக்கல்ல. பிற பின்னூட்டக்காரர்களுக்கு. நம்ம உமரு காலிபா இருக்காருங்களே அவர்தாங்க இந்த பர்தாவை திணிப்பதில் முழு மூச்சாக நினறாரு. அவரு பல தடவை முகம்மது நபியிடம் கட்டாயப்படுத்தினாருங்க. ஒருநாள் முகம்மதுநபி மனைவிமார்களில் ஒருத்தரான சௌதா வீட்டிலேர்ந்து வெளியே மலம் கழிக்க போனாருங்களாம் (வழமையானதே! அப்போவல்லாம் ஊட்ல கக்கூஸ் இல்லீங்க) எந்த நேரத்தில் போனாங்க தெரியுமா? கருக்கல்ல. அந்த கும்மிருட்டுள்ள போனாங்கலாம். அய்யோ இந்த உமருக்கு யார் போறதுன்ன அடையாளம் தெரிஞ்சுட்டதாம். அதனால் வம்படியா சண்டை போட்டார். முகம்மதுநபியும் மௌணமா இருந்துப்பார்த்தார். உமரு விடுவதாக இல்லை. புர்காவை கட்டாயமாகக்கிட்டாருங்க. அதிலேருந்து இது இசுலாமிய பெண்களுக்கு ஷாரியத் சட்டமுங்க. அவங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போட்டாத்தாங்க இசுலாமிய பெண் இல்லைன்னா சொர்க்கத்தில் இடமில்லை நரகம்தான்.
புர்காவிற்கு இவ்வளவு நீண்………..ட விவாதமா?
இஸ்லாமியர்கள் புர்கா பெண்களுக்கு கண்ணியத்தை தருகிறது என்று அடம் பிடிக்கிறார்கள். புர்காவிற்கு எதிராக யாராவது கருத்துச்சொன்னால் குறையாடை கட்டித்திரிவதற்கு அனுமதி கேட்கிறார்கள் என்றும் முதலாளிய வக்கிரத்தைக்காட்டி இதுதான் முற்போக்கா என்றும் எதிர்க்கேள்வி கேட்கின்றனர். முதலாளிய வக்கிரத்திற்கு வெளியே, புர்காவிற்கு வெளியே பெண்களுக்கான கண்ணியமோ, முற்போக்கோ இருக்கக்கூடும் என்று கற்பனை செய்வது கூட அவர்களுக்கு இயலாததாக இருக்கிறது.
முன்கைகள் முகம் தவிர ஏனைய பாகங்களை மறைப்பது போல் உடையணிந்தால் புர்கா அவசியமில்லை என்பது போல் ஒரு கருத்தை உருவாக்க முனைகின்றனர். பெண்கள் தங்கள் ஆடை அலங்காரங்களை கணவன் உள்ளிட்ட சிலரைத்தவிர ஏனையோரிடம் வெளிப்படுத்தக்கூடாது என குரான் தெரிவிக்கிறது. ஆகையால் புர்கா என்பது ஆடையோடு தொடர்புடையது அல்ல. ஆடைகளுக்கு மேற்பட்டு அதிகப்படியானது. தலை முந்தானைகளை தாழ்த்திக்கொள்ளவேண்டும் என்று கூறியிருப்பது முகமும் மறைக்கப்படவேண்டும் எனும் பொருளிலேயே.
பாலியல் தொந்தரவுகளிலிருந்து காக்கப்படுவதற்கு புர்கா அவசியம் என்பதும் பொய்யானது மட்டுமல்ல அநீதியானதும் கூட. ஆண்களின் காமப்பார்வைக்கு எந்தத்திரையும் போடாமல் 4 மனைவி + அடிமைப்பெண்கள் என்று சுதந்திரம் கொடுத்துவிட்டு, பெண்களின் அங்கங்கள் வெளியில் தெரிந்தால் ஆண்கள் தூண்டப்படுவார்கள் எனவே பெண்கள் தங்களை மறைத்துக்கொள்ளவேண்டும் என ஆணையிடுவது கடைந்தெடுத்த ஆணாதிக்கம் மட்டுமல்ல அயோக்கியத்தனமானதும் கூட. அங்கங்கள் வெளியில் தெரிந்தால் ஆண்கள் தூண்டப்படுவார்கள் எனவே புர்கா; கேட்கக்கூசும் வார்த்தைகளால் வதைக்கிறார்களே, என்ன செய்யலாம். காதில் பஞ்சை அடைத்துக்கொண்டுதான் வெளியில் வரவேண்டும் என கூட்டிக்கொள்ளலாமா? வீதிகளில் பொது இடங்களில் உரசுவதற்கென்றே அலைகிறார்களே, என்ன செய்யலாம். உடலை விட்டு ஒரு அடிக்கு வெளியே உலோகத்தால் ஒரு கூண்டு மாட்டிக்கொள்ளவேண்டும் என திருத்தம் கொண்டு வரலாமா? பெண்களை சக மனிதப்பிரவியாய் பார்க்காமல் ஒரு போகப்பண்டமாய் பார்ப்பதன் குறியீடு தான் புர்கா என்பது. இதை கண்ணியம் என்பது வெட்கக்கேடு.
புர்காவை முஸ்லீம் பெண்கள் விருப்பப்பட்டு தான் அணிகிறார்களா? ஆடைகளின் அலங்காரங்கள் வெளியில் தெரியக்கூடாது என்பதற்க்காக அணியும் புர்காவில் எத்தனை அலங்கார வேலைப்பாடுகள்? திண்மை தேய்மைகளை வெளிக்காட்டும் என்னென்ன வடிவமைப்புகள்? உள்ளே அணியும் ஆடைகளின் நிறங்களுக்கு ஏற்றாற்போல் விளிம்புகளில் தனி நிறம் தைத்த தனித்தனியான புர்காக்கள். புர்கா அணிந்து செல்லும் பெண்களை கவனித்தால் புரியும் இத்தனையும். இதெல்லாம் விரும்பி அணிவதன் வெளிப்பாடுகளா? அரபு நாடுகளுக்கு தமிழக ஆண்கள் பரவலாக வேலைக்கு செல்லும் முன்புவரை பெண்களுக்கு புர்கா என்றால் என்னவென்றே தெரியாது (சில விலக்குகள் தவிர்த்து) நிலமை இப்படி இருக்க புர்கா என்பது பெண்களின் தெரிவா? ஆண்களின் தெரிவா?
தோழமையுடன்செங்கொடி
செங்கொடி உங்களின் ஆணித்தரமான கேள்விகள் மக்களை நோக்கி எழுப்பபடவேண்டும் நிச்சயம் புரிந்துகொள்வார்கள் உங்கள் பனி தோடர வாழிதுக்கள
Kanchi Shankarachrya (senior) was
for marrying off women at early ages.But in his own life time brahmins rejected that.Post 47 brahmin women became more educated and took up jobs.Many chose civil services, professions like advocates, doctors and ended up in top positions.Brahmins rejected his views on women but they did not give up hindu faith. Church is against contraception and abortion.This does influence catholics but many reject that view by choosing contraception and abortion.So people often decide what they need and what they do not need.A husband who goes to Ayyappan temple may not deny education to his daughtrs or may encourage his wife taking up a job.
But a progressive may prefer his wife to remain at home and rear children than taking up a job. So,the reality is not as simple as you think.Arguing for the sake of arguing can be done easily.In your blog that is happening.You are ignorant of the complexity in socoety.Selvanayaki has put that in her own words. Yet Vinavu and others dont understand that.Perhaps they dont want to as it would upset their firmly held views which they use to position themselves as progressives.
ஒரு பிளாக்ல படிச்சா கவிதை
பொன்னையும் பொருளையும்
பெட்டியில் பத்திரமாய்
பூட்டி வைத்து பாதுகாக்கும்
தன் எஜமானனிடம்
வேலியோரத்தில் சுதந்திரமாய்
விட்டெறியப்பட்ட
விளக்குமாறு ஒன்று
வீறுகொண்டு தன் கடுங்குரலில் அகவியதாம்,
“என்னைப்போல் அவற்றுக்கும் கொடு-விடுதலை”-என..!
பெட்டிக்குள்ளே
உள்ள’நற்குடிகளுக்கு’
தெரியாதா
‘எது கண்ணியமான பாதுகாப்பு’-என்று..!
பாவம்…பரிதாபப்படுவோம்…
‘விளக்குமார்கள் என்றாவதொருநாள்
விளங்குவார்கள் உண்மையை’
என நம்பிவைப்போம்
இப்போதைக்கு…!
இஸ்லாம் என்பது மதமன்று. பல மதங்கள், சித்தாந்தங்கள் போன்று ஒரு சிலவற்றை சொல்லிவிட்டு பலவற்றை சொல்ல தெரியாத, அப்படியே சொல்லியிருந்தாலும் இன்றைய வாழ்வியலுக்கு ஒத்துவராத கோட்பாடுகளை கொண்டவையுமல்ல. மாறாக வாழ்வியலின் அனைத்து நடைமுறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள வாழ்வியலுக்கான வழிகாட்டியாக விளங்கும் மார்க்கமாகும். ஒரு பெண் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டுமேயானால் அவளுடைய கண்ணியம் காக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் ஹிஜாப் என்னும் உடையின் மூலம் பெண்களை கண்ணியப்படுத்தி சமூகத்தில் வாழ செய்கின்றது இஸ்லாம். இல்லை நான் அரைகுறை ஆடை தான் அணிவேன் என ஒரு பெண் சொன்னால் தாரளாமாக அவற்றை அணிந்து கொள்ளலாம். ஏனெனில் இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை. “மார்க்கத்தில் நிர்பந்தம் என்பது இல்லை …(குர்ஆன் 2:256 )”.
தம்முடைய கண்ணியத்தையும் அடுத்தவர்களின் காமக் கண் கொடூர பார்வையையும் தவிர்க்க வேண்டும் என்று விரும்பும் எந்த பெண்ணாக இருப்பினும் அவர் ஹிஜாபை தெரிவு செய்து கொள்ளலாம். அதற்கு இஸ்லாமியராக தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இந்த உடை அணிவதினால் பெண்களுக்கு கண்ணியம் ஏற்படுகின்றது என்பதை ஹிஜாபை எதிர்க்கும் மத வெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் மறுப்பார்களா? இந்தியாவின் உயர்ந்த பீடத்தினில் இருக்கின்ற இன்றைய குடியரசுத்தலைவர் அவர்களே மிக அழகாக பெரும்பாலான நேரங்களில் ஹிஜாபை பேனுபவராகவே இருக்கின்றார். இஸ்லாம் பெண்களின் உடை விடயத்தினில் ஒரு அளவை மிகத் தெளிவாக சொல்லிவிட்டது. இதற்கு மாற்றுக் கருத்து சொல்லுபவர்கள் பெண்களின் உடை விடயத்தினில் எந்த ஒரு கருத்தையும் தெளிவாக சொல்லவில்லை. உடையணிதல் தனிப்பட்ட பெண்களின் உரிமையை சார்ந்த விடயம் என்று வாதிடும் இவர்கள் திரைப்படத்தினில் நடிகைகளின் அரைகுறை ஆடைகளை ஆபாசம் அருவெறுப்பு என்றும் எழுதுகின்றனர் என்பதுதான் நகைச்சுவையின் உச்சம். அப்படி அரைகுறை ஆடை அணிவது அந்த நடிகையின் தனிப்பட்ட உரிமை என்ற வாதத்தை அப்பொழுது வசதியாக மறந்து விடுகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை மதவெறி மற்றும் போலி முற்போக்காளர்களே?
வாரம் ஒரு வாலிபனுடன் வலம் வருவது கூட பெண்கள் சுதந்திரத்தின் அங்கமாகவே நினைக்கின்ற சில பெண்கள் இன்று உருவாகி விட்டனர். பெண் சுதந்திரம் என்ற அடிப்படையில் இவர்களை ஏற்றுக் கொண்டு இந்த மாதிரி பெண்களை திருமணம் செய்ய ஹிஜாபை எதிர்க்கும் மதவெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் தயாரா? தவறுகள் சர்வசாதரணமாக சமூகத்தில் உலா வரும் போது அவை தவறு என்ற எண்ணமே மறைக்கப்பட்டு விடும். இதற்கு சரியான உதாரணம் புகைப்பிடித்தலை சொல்லலாம். இதே மாதிரி தான் அரைகுறை ஆபாச உடை விடயத்தையும் கொண்டு வர சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு தடையாக இருப்பது ஹிஜாபே ஆகும். எனவே தான் இதற்கு எதிராக இவ்வளவு ஆக்ரோஷமாக கிளர்த்தெழுகின்றனர். இதில் போலி முற்போக்குவாதிகள் மத வெறியர்கள் என்ற வித்தியாசமெல்லாமில்லை.
அன்பின் சகோதரி சுமஜ்லா நீங்கள் கண்ணியம் வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள். ஆகவே ஹிஜாபை பேணுகின்றீர்கள். ஆனால் வாரம் ஒரு வாலிபனுடன் வலம் வந்த அல்லது வலம் வருவதை ஆதரிக்கின்ற அல்லது தங்கள் வீட்டு பெண்களை இத்தகைய கேடு கேட்ட நிலையினில் தள்ளப் போகின்றவர்கள் “கலகல” என ஏதாவது ஒன்றை கவிதை வரியினில் எழுதியதால் மனம் தளர வேண்டாம். நடிகைகள் தங்களுடைய அரைகுறை உடையினை ஆபாசம் என்று என்றைக்குமே ஏற்றுக் கொள்வதில்லை. அதைப் போன்றே இவர்களும் என விட்டுத் தள்ளுங்கள். ஹிஜாபின் கண்ணியத்தை உங்களைப் போன்ற பெண்கள் சொல்லுவதுதான் அதற்கு இன்னும் கண்ணியத்தைக் கொடுக்கின்றது. எழுத்தாளர் சகுந்தலா நரசிம்ஹன் கூட சமீபத்தில் ஹிஜாபின் கண்ணியத்தைப் பற்றி தன்னுடைய அனுபவத்தை மிகத் தெளிவாக எழுதியிருந்தார். மறைந்த மாபெரும் எழுத்தாளர் கமலா சுரையா கூட ஹிஜாபினால் தனக்கு எவ்வளவு தூரம் பாதுகாப்பு கிடைத்தது என்பதை பல தருணங்களில் நினைவு கூர்ந்திருக்கின்றார்.
ஹிஜாபை பேணுகின்ற சுமஜ்லா போன்ற பெண்களை மதவெறிப் பிடித்தவர்கள் என பொய்ப்பரப்புரை செய்ய உண்மையில் மதவெறி பிடித்து போய் திரிகின்றவர்களும், பிற்போக்குத்தனத்திலும் ஆணடிமைத்தனத்திலும் ஊறியவர்கள் இஸ்லாமியப் பெண்கள் என நிலைநாட்ட போலி முற்போக்கு கும்பல்களும் (ம.க.இ.க உட்பட) முயலுகின்றன. அதன் வெளிப்பாடு தான் கவிதை கட்டுரை பின்னூட்டமென சமீப காலத்தில் இவர்கள் எடுக்கும் அவதாரங்கள்.
“இஸ்லாம் என்பது, ‘பெண்ணாதிக்கம்’, ‘ஆணடிமைத்தனம்’ என்றும் சொல்லலாமா?”
நம்பவே முடியவில்லை, நீங்கள் குரானை வாசித்தும் இவ்வாறு சொல்லக்கூடியதாக இருப்பது. உங்களால் பின்வருவன குரானிலோ ஹதீத்களிலோ இல்லை/எல்லோரும் மிகப் பிழையாகத்தான் விளங்கிக்கொண்டுள்ளனர் என ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?
Men are protectors and maintainers of women and women should be obedient to their husbads?
ஆண்களே பெண்களைப் பாதுகாப்பவரும் பராமரிப்பவருமாவர். பெண்கள் தமது கணவருக்கு கீழ்ப்படிதல் வேண்டும்.பெண்கள் விஸ்வாசமற்றவராக இருப்பதாக ஆண்கள் நினைப்பார்களே ஆனால், அவர்களை முதலில் பேசலாம்/உபதேசிக்கலாம். பின் கட்டிலில் இருந்து தள்ளி வைக்கலாம். இவை எதுவும் செய்தும் சரிவரவிட்டால் அடிக்கலாம். அதன் பின் அவர்கள் கீழ்ப்படிந்தார்களேயானால் அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம்.
இல்லைத் தெரியாமல் தான் கேட்கிறேன் ஆண்கள் எதாவது பிழை செயின் நாமும் மேற் சொன்னவற்றையே கடைப்பிடிக்கலாமா? நாயை/சிறு பிள்ளைகளையா அல்லது ஒரு சுயமாக சிந்திக்கும் ஆற்றலுடைய மனித ஜாதிப் பெண்ணையா வழிநடத்த அல்லா வழிகள் சொல்லியிருக்கிறார்?
004.034
YUSUFALI Translation: Men are the protectors and maintainers of women, because Allah has given the one more (strength) than the other, and because they support them from their means. Therefore the righteous women are devoutly obedient, and guard in (the husband’s) absence what Allah would have them guard. As to those women on whose part ye fear disloyalty and ill-conduct, admonish them (first), (Next), refuse to share their beds, (And last) beat them (lightly); but if they return to obedience, seek not against them Means (of annoyance): For Allah is Most High, great (above you all).
PICKTHAL Translation: Men are in charge of women, because Allah hath made the one of them to excel the other, and because they spend of their property (for the support of women). So good women are the obedient, guarding in secret that which Allah hath guarded. As for those from whom ye fear rebellion, admonish them and banish them to beds apart, and scourge them. Then if they obey you, seek not a way against them. Lo! Allah is ever High, Exalted, Great.
Women are inferior to men: பெண்கள் ஆண்களுக்கு கீழ்நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். ஒருவருடைய குற்றத்தை நிரூபிக்க ஒரு ஆண் சாட்சிக்கு சமமாக இரு பெண்கள் வேண்டும்.
002.282
YUSUFALI: O ye who believe! When ye deal with each other, in transactions involving future obligations in a fixed period of time, reduce them to writing Let a scribe write down faithfully as between the parties: let not the scribe refuse to write: as Allah Has taught him, so let him write. Let him who incurs the liability dictate, but let him fear His Lord Allah, and not diminish aught of what he owes. If they party liable is mentally deficient, or weak, or unable Himself to dictate, Let his guardian dictate faithfully, and get two witnesses, out of your own men, and if there are not two men, then a man and two women, such as ye choose, for witnesses, so that if one of them errs, the other can remind her.
உங்கள் நபியின் பார்வையில் ஒட்டகங்களும் அடிமைகளும் பெண்களும் ஒன்றா?
Narrated Abdullah ibn Amr ibn al-‘As:
The Prophet (peace_be_upon_him) said: If one of you marries a woman or buys a slave, he should say: “O Allah, I ask Thee for the good in her, and in the disposition Thou hast given her; I take refuge in Thee from the evil in her, and in the disposition Thou hast given her.” When he buys a camel, he should take hold of the top of its hump and say the same kind of thing.
இவை சில உதாரணங்களே. இது மாதிரி எவ்வளவோ குரான்/ஹதீத்களில் மட்டுமல்ல இந்து, கிறீஸ்தவ ‘புனித’ நூல்களிலும் உள்ளன.
இவை எல்லாம் உங்களுக்கு பெண்ணாதிக்க கருத்துக்களாகத் தெரிகின்றனவா? எங்களுக்கு ஆதிக்கமெல்லாம் வேண்டாம். எம்மை உங்களோடு பூமியில் வாழும் சக மனிதராக மதிக்கும் மதநூல்களைக் காட்டுங்கள் பார்ப்போம்.
இஸ்லாம்ல் ஆணாதிக்கமா? யார் சொன்னது?
இங்கு சவூதியில் ஆண்களை அபு காலித், அபு சவூத் என்றெல்லாம் விலிக்கின்றார்கள். அதாவது காலித் அப்பா, சவூத் அப்பா ன்னு அர்த்தம். அதே சமயம் அவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் பெண் மட்டுமே இருந்தால் அபு பாத்திமா அல்லது அபு கதிஜா என்றோ கூப்பிடகூடாதாம். அது அந்த ஆணுக்கு இழுக்காம். நம்ம ஊர்ல எப்படிங்க?
இஸ்லாம்ல் ஆணாதிக்கமா? யார் சொன்னது?
இங்கு சவூதியில் ஆண்களை அபு காலித், அபு சவூத் என்றெல்லாம் விலிக்கின்றார்கள். அதாவது காலித் அப்பா, சவூத் அப்பா ன்னு அர்த்தம். அதே சமயம் அவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் பெண் மட்டுமே இருந்தால் அபு பாத்திமா அல்லது அபு கதிஜா என்றோ கூப்பிடகூடாதாம். அது அந்த ஆணுக்கு இழுக்காம். நம்ம ஊர்ல எப்படிங்க?
வினவு, தங்களின் கட்டுரைக்கு நன்றி! இடுகையையும், எல்லா பின்னூட்டங்களையும் வாசித்து முடித்தேன். சாமி குறித்த தங்களது ஆதரவான கருத்துக்களுக்கு நன்றி. இது என்னை இன்னும் எழுத உற்சாகமூட்டுகிறது.
விடுமுறையில் இருந்ததால் பர்தா குறித்த விவாதங்களை தொடர இயலவில்லை. தங்களின் இடுகை உதவி செய்தது. மதங்களே மனிதனை ஆட்டுவிக்கிறது…:-(
பர்தா குறித்து – என் கல்லூரித் தோழி, திண்டுக்கல் பெரியகுளத்தைச் சேர்ந்தவர். கல்லூரியின் கடைசி வருடத்தில் பர்தா அணியத் தொடங்கினார். இத்தனை நாட்கள் பர்தா அணியாமல் ஏன் திடீர் மாற்றமென்று கேட்டதற்கு வீட்டில் திருமணத்திற்கு பார்ப்பதால் அணிய வேண்டியது அவசியமாகிறது, பர்தா அணியும் பெண்களையே மாப்பிள்ளை வீட்டார் விரும்புவார் என்று கூறினாள். திருமண சந்தையில் விலைபோவதற்காக – பர்தா அணிந்தவரே குடும்பத்திற்கேற்ற பெண் என்ற இந்த சமூகத்தின் பிம்பப்படுத்துதல் காரணமாக – அவர் தன்னை பர்தாவுக்குள் திணித்துக்கொண்டார். இது சமூகம் அவர் மீது ஏவும் வன்முறை இல்லையா?
செங்கொடிக்கு ஆன்லைன் பிஜே இணைய தளம் கொடுத்த பதில் இது. அவர் நேர்மையானவராக இருந்தால் இதற்கு பதிலளிப்பார். எனக்கு நம்பிக்கை இல்லை செங்கொடி மீது. ஏதாவது ஒரு குருட்டு காரணம் சொல்லி எஸ்கேப்பாக தான் முயற்சி செய்வார். ///
…….. ஏற்கனவே ஒப்பந்தம் செய்து விட்டு அழைப்பது சரியா என்ற அவரது கேள்வி நியாயமானது. ஆனால் எழுத்து வடிவிலான விவாதம் மட்டுமே செய்வேன் என்பது கோழைத்தனமானது. நேரடி விவாதத்தில் தான் உடனுக்குடன் கேள்வி கேட்க முடியும். ஒருவர் சொல்வது தவறா என்பதை உடனே கண்டு பிடிக்க முடியும். எனவே செங்கொடி என்பவரோ அவரைச் சேர்ந்தவர்களோ தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தால் இதற்குப் பயப்பட வேண்டியதில்ல. அவர்களே மூட நம்பிக்கையின் ஒட்டு மொத்த வடிவமாக இருப்பதால் நேருக்கு நேராக சந்திக்க பயப்படுகிறார்கள். அவர்களுடன் புதிதாக ஒப்பந்தம் செய்து விவாதம் செய்ய நாம் தயார். அடுத்து அவர் விதித்திருக்கும் நிபந்தனை கூட அறியாமையாக உள்ளது. இஸ்லாம் மட்டுமே சரியானது என்ற நிலையை மாற்றிக் கொண்டால் தான் விவாதிப்பேன் என்பது அந்தக் கேலிக் கூத்தான நிபந்தனை. இஸ்லாம் மட்டுமே சரியானது என்று தக்க ஆதாரத்துடன் நாம் நம்புவதால் தான் விவாதத்துக்கே அழைக்கிறோம். பரிசீலனைக்கு உரியது என்ற கருத்து இருந்தால் அதில் விவாதத்துக்கு தேவையே இல்லையே. தனது விவாத்தின் மூலம் அதை அவர் நிரூபிக்க வேண்டுமே தவிர விவாதத்துக்கு முன்பே தோற்று விட்டதாக எழுதிக் கேட்பது மடத்தனமானது இப்படி கூறுவதில் இருந்து இவர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது உறுதியாகிறது. இதற்கு எதிர்க் கருத்தாக இஸ்லாம் பரிசீலனைக்கு உரியது அல்ல என்று செங்கொடி அறிவித்தால் தான் விவாதிப்பேன் என்று நான் சொன்னால் அதற்கு அவரது பதில் என்ன? வேண்டுமானால் இஸ்லாம் பரிசீலனைக்கு உரியதா? இவர்களின் கொள்கை பரிசீலனைக்கு உரியதா என்ற தலைப்பில் முதலில் விவாதிக்கலாம். இதற்கு அவர் சம்மதிக்கிறாரா என்று கேட்டு எழுதுங்கள். பகுத்தறிவு என்ற போர்வையில் இவர்கள் செய்யும் மடமையைத் தோலுரிக்க நாம் தாயார்.//////
நண்பர் ஷாஜஹான்,
செங்கொடி குறித்த ஒரு தகவலை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இதற்கு பதிலும் கொடுக்கப்பட்டுள்ளது கவனம் கொள்க.http://senkodi.wordpress.com/2010/01/06/red-green/
தோழமையுடன்
செங்கொடி
நான் முன்னரே சொல்லிய மாதிரி செங்கொடி கிரேட் எஸ்கேப் நேரடி விவாதத்திலிருந்து. ஏதாவது ஒரு காரணம் சொல்லி பின்வாங்கி ஓடும் கலையை ம.க.இ.க புரட்சிக்காரர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
பெரியவரே, உங்க கூட விவாதிக்கதான் பரையோசை பதிப்பகம் சாகித் ரெடின்னு சொன்னப்பறம் ஏன் இன்னும் நீங்க போகல,எதுக்காக வெளிநாட்டுல இருக்குரவங்கள கூப்பிடறீங்க இப்பவே http://paraiyoasai.wordpress.com போயி சாகித் கூட பிக்ஸ் பண்ணுங்க அப்படியே இங்கேயும் தாக்கல் சொன்னா நாங்களும் எங்களுக்கு தெரிஞ்சவங்கள அனுப்பிவைக்கறோம்
இது மருதன் என்ற அரைகுறைக்கு, முதலில் நீங்கள் தெரிவித்த அனல் தெறிக்கும் முன்னாள் பேச்சாளர் விபச்சாரம் செய்ததாக தவ்ஹீத் ஜமத்தினில் இருந்து நீக்கப்படவில்லை. மனைவியல்லாத ஒரு பெண்ணுடன் பஸ்ஸில் ஒன்றாக அமர்ந்து பயணம் செய்தார் என்ற காரணத்திற்காகவே நீக்கப்பட்டார்.
இந்த வகையில் பார்த்தால் யார் தவறு செய்தாலும் அவர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் (பொதுச் செயலாளராக இருந்தவர் அவர்) உடனே நீக்கப் படுவார். இப்படி நடவடிக்கை எடுத்து தவ்ஹீத் ஜமாஅத் தூய்மையான இஸ்லாமிய இயக்கம் என்று நிரூபித்திருக்கின்றது.
இந்தியாவில் யார் விபச்சாரம் செய்தாலும் அவர்களுக்கு இந்திய குற்றவியல் சட்டப்படி தான் தண்டனை கொடுக்க முடியுமே ஒழிய வேறு சட்டங்களின் தண்டனை கொடுக்க முடியாது. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீங்களெல்லாம் கருத்து சொல்ல வந்து விட்டதை நினைத்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை. போய் கொஞ்சமாவது விஷயம் தெரிஞ்சுகிட்டு வாங்க சார். இல்லேனா செங்கொடி கம்யூனிச டவுசர் அவுந்த மாதிரி உங்க டவுசரும் அவுந்தர போகுது.
நண்பர் மேலூர்காரருக்கு, சில்லரைக்கு பதில் அளித்ததற்கு நன்றி.
முன்னேறிவரும் விஞ்ஞான உலகில் வேற்பாடுகளின்றி எல்லா மதங்களும் நவீனமயமாகி மக்களை மூளைச்சலவை செய்து வருகின்றன. அம்மணமாகி வரும் முதலாளித்துவம் தன்னைப்பற்றி அறியாமலிருக்க மக்களை மத மயக்கத்தில் ஆழ்த்தி பக்தி பரவசப்படுத்துகிறது. சபரி மலையின் மகரஜோதி தானே எரிவதல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான் என்று தலைமைப் பூசாரியே அறிவித்த போதிலும்,ஒருவாரம் நோன்பிருந்து ஐயப்பனை தரிசிக்க மலையேறும் பக்தனின் நம்பிக்கையை என்னவென்றழைப்பது. கி.மு.450 ல் பைலோலாஸ் என்ற கிரேக்க அறிஞர் பூமி உருண்டை என முதலில் கூறியவர் என அறிந்திருந்தாலும் இல்லை கி.பி 6ம் நூற்றாண்டில் முஹம்மதால் இயற்றப்பட்ட குரான்தான் பூமி உருண்டை எனக் கூறும் உங்களையும் என்னவென்றழைப்பது. இரண்டு நம்பிக்கைகளும் வெவ்வேறல்ல.பாக்கர் செய்த தவறுகள் என்னவென்று தெரிந்திருந்தும் ஒரு பென்ணுடன் அமர்ந்து பயணம் மட்டுமே செய்தார் என சப்பை கட்டுகட்டும் உங்களை பொய்யன் என்றழைக்கலாமா?
பாக்கர் மீதான குற்றச்சாட்டை நான் கூறவில்லை. துபாயிலிருந்து ஜனாப்.ஹாமீம் இபுராஹீம் விவரிக்கிறார்.கேளுங்கள்.
1.20 ரூபாய் குறுந்தகடை 50 ரூபாய்க்கு விற்றது.
2.Yk மன்சிலில் ஒரு பெண்னை தங்கவைத்து பின்பு நீங்கள் அங்கு சென்றது.
3.கலியவாய்க்காலில் நடைபெற்ற அரங்கத்திலிருந்து வெளியேறி கோட்டாவில் ஒரு பெண்ணுடன் தனியாக தங்கியிருந்தது. இப்பெண்ணுக்கும் உங்களுக்கும்(பாக்கருக்கும்) தொடர்பு உள்ளதாக குமரிமாவட்ட சகோதரர்கள் உறுதியாக கூறியபோதும் தலைமை கண்டிக்காமல் விட்டுவிட்டது.
4.நந்தினி என்ற பெண்ணை காரில் வரவழைத்து மதராசாவில் தங்கவைத்து பின்பு தக்வா அச்சாபீஸிற்கு வரச்செய்து,அப்பெண்ணுக்கு பட்டுப்புடவை எடுத்துக்கொடுக்க மதரஸா முதல்வருக்கு ஆணையிட்டது. பின்பு அப்பெண்ணுடன் கோவில்பட்டி வரை அருகே அமர்ந்து பிரயாணம் செய்தது. அதுசமயம் அவளுடன் பலவித சில்மிஷங்கள் செய்ததை நேரில் பார்த்த ஒருவர் புகார் கூறியதால் மாட்டிக்கொண்டீர்கள்.
5.மதுரவாயிலில் வேலை செய்து வந்த ஆசிரியையுட்ன் தனித்து இருந்தது.
6.சக்கிளாபானு என்ற பெண்ணை அலுவலகத்திற்கு வரச்செய்து சல்லாபத்திற்கு முயன்றது உங்களால் மறுக்கமுடியுமா. அவளை மைதீன்,கோவை.ஜாபர் மூலம் மிரட்டியது.
7.உங்களுக்கு பயந்து மதராசாவை கானத்தூருக்கு மாற்றியது. சரீயத் தீர்ப்பாயத்திற்கு வந்த பெண்களிடம் சில்மிஷம் செய்தது,தனித்து இருந்தது.
8.சக்கிளாவை நீங்கள் திருமணம் செய்ய மறுத்ததால் அவர் பொதுக்குழுவில் வந்து நியாயம் கேட்பேன் என்றார்.அப்பெண் வந்தால் உங்கல் பெயர் நாரிப்போய்விடும்,ஜமாத்பெயர் பாதிக்கப்படும் எனக் கவலைப்பட்டு உங்களை நீக்குவதற்கு பதிலாக பயிலாவை காரணம்காட்டி அனைவரும் விலகிக் கொண்டார்கள். உங்களை அம்பலப்படுத்தி நீக்குவதற்கு நிர்வாகிகளுக்கொ pஜ் விற்கோ துணிவு இல்லை.
9.மன்மதன் புரோகிராம் வந்தால் நன்கொடை தரமாட்டோம் என மக்கள் கூறுவதால் உங்களை ஓரம் கட்டினர். மற்றபடி உங்களை அம்பலப்படுத்தும் துணிவு இல்லை.பழைய நிர்வாகிகளுக்கு துணிவு இல்லாதது போலவே புதிய நிர்வாகிகளுக்கும் துணிவு இல்லை. ஜமாத்திற்கு பாடுபட்டவர் என்பதால் திருந்த வாய்ப்பு தந்தது.உங்கள்து குற்றங்களை நிர்வாகம் மறைத்தது.
10.20.11.2008 ற்குள் எழுத்துபூர்வமாக உங்களது பதில் எனக்கு கிடைக்காவிடில்,நீங்கள் பிரச்சாரம் செல்லும் ஊர்களுக்கு நீங்கல் செல்லும் முன் லீலைகல் அனைத்தும் கத்தைக்கத்தையாக விநியோகம் செய்யப்படும். இதனால் ஜமாத் என்மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை.
பாக்கரின் இவ்வளவு பாலியல் குற்றங்களுக்குப் பிறகும் அவரைக் காப்பாற்றிய pj, ஹாமீமின் மிரட்டலுக்குப் பிறகே நடவடிக்கை எடுக்கிறார் . சுமார் 2 வருடம் அவரின் மேல் நடவடிக்கையில்லையே ஏன்?
ஆனால் நம்புதாளையைச் சேர்ந்த சக்கிளா என்ற பெண் தகாத உறவு வைத்திருந்தார் என்பதினால் அவரை மரத்தில் கட்டிவைத்து சேலையை உருவி அடித்தனர். இதுதான் உங்களது நேர்மையா? தனக்கு ஒரு நீதி பிறருக்கு ஒரு நீதி என நிலை எடுக்கும் உங்களை என்னவென்று அழைப்பது?
இஸ்லாம் பற்றி சரியாக அறியாமல்/அரைகுறையாக புரிந்துகொண்டு பற்பல பொய்களையே சொல்லிவரும் தோழர்களுக்கு:
உங்கள் ‘செம்புரட்சி கருத்தை’ பெண்கள் ஆடை விஷயத்தில் நீங்கள் என்னவென்று ரோஷமிருந்தால் தெளிவாக சொல்லுங்களேன். எந்த அளவுக்கு பெண்கள் மறைக்க வேண்டுமென தெளிவாக செம்புரட்சி கூறுவதை தைரியமிருந்தால் பதியுங்களேன். ஒருவேளை ‘அது அவர்களின் தனிப்பட்ட உரிமை’ என்று சொல்லி ‘அதில் செம்புரட்சி தலையிடாது’ என்று தப்பிப்பதற்காக சொல்லி பின்வாங்கினால், இதோ இன்னொரு கிடுக்கிப்பிடி..! உங்கள் வீட்டுக்குழந்தைகளுக்கு அவை தனக்கென சுய அறிவை வளர்த்துகொள்ளுமுன் ஆடை அணிவிக்கிறீர்களா இல்லையா? அது ஏன்? உங்கள் குழந்தைகளுக்கு இப்படி-இவ்வளவு ஆடை அணிவித்தால் அழகாக கண்ணியமாக நாகரிகமாக இருக்கும் என்று எப்படி நினைத்தீர்கள்? ‘மனிதனை படைத்த இறைவனுக்கே மனிதனுக்கான ஆடையை சொல்ல எந்த உரிமையும் இல்லை’ என கொக்கரிக்கும் தோழர்களே, உங்கள் பச்சிளம் குழந்தைகளின் ஆடை விஷயத்தில் என்ன உரிமை உங்களுக்கு? யார் கொடுத்த உரிமை? இது உங்களின் ‘குழந்தை அடிமைத்தனம்’ இல்லையா? பின்னர் நிர்வாணமாக சினிமாவில் நடிக்கும் அல்லது மேடைகளில் நிர்வாண பேஷன் ஷோ நடத்தும் அல்லது மியாமியில் சன்பாத் எடுக்கும் அல்லது புளூ ஃபிலிமில் புணரும் சுதந்திரமான பெண்களை ‘முதலாளித்துவம்’ என்ற பெயரில் சாட என்ன அருகதை உள்ளது உங்களுக்கெலாம், வீணர்களே?
இரயில்களில் தனி பெட்டி பெண்களுக்காக ஏன்?
இரயில் நிலையங்களில் பெண்களுக்காகாக தனி ஒய்வு அறை எதற்கு?
மகளிர் மட்டும் பேருந்து எதற்கு?
டென்னிசில் இரண்டு செட் கம்மியாக எதற்கு?
பேருந்தில் முன்சீட் எதற்கு?
உணவகங்களில் பெண்கள் தனி சர்வீஸ் அறை எதற்கு?
பெண்களுக்கு மெட்டர்னிட்டி லீவ் எதற்கு?
மாணவிகளுக்கு ஈவ் டீசிங் சட்டம் எதற்கு?
பெண்கள் வன்கொடுமை சட்டம் எதற்கு?
வரதட்சினை ஒழிப்பு சட்டம் எதற்கு?
இதெல்லாம் அரசும் பல நிறுவனமும் மக்களும் பெண்களுக்கென தரும் சிறப்பு கண்ணியமும், கெட்ட ஆண்களிலிருந்து பாதுகாப்பும் மகப்பேறு காலத்திற்கு மரியாதையும் அல்லவா? அப்போது மட்டும் இவற்றை பெண்ணடிமைத்தனம் என்று சொல்வதில்லையே? இவையெல்லாம் பெண்களுக்கு வேண்டும் என நீங்கள் அரசை/நிர்வாகத்தை எதிர்த்து போராடியதில்லையா? காரணத்தை யோசித்தீர்களா? அதுவே இஸ்லாம் கூறினால் ஏன் உங்களுக்கு கசக்கிறது?
இஸ்லாமிய ஆண்களுக்கு, பெண்களை உணவு/உடை/இருப்பிடம்/செல்வம்/அன்பு/அரவணைப்பு எல்லாம் தந்து காப்பாற்றுவது கட்டாயக்கடமை. இஸ்லாமிய பெண்களுக்கு அப்படி இல்லை. இஸ்லாமிய ஆண்களுக்கு தங்கள் பெற்றோரை கடைசிவரை காப்பாற்றும் கடமையும் உள்ளது. தன் மனைவியின் உடன்பிறந்தோர்= ஆண், இல்லை என்றால் மாமனார் மாமியாரும் அவன் தலையில்தான். தங்கை/அக்கா அநாதரவாய் இருந்தால் சகோதரன் தலையில். ராணிமாதிரி தன் வீட்டில் ஹாயாக இருப்பது பெண்ணடிமைத்தனமா? அல்லாது வெளியே பிறரிடம் நாய்படாத பாடு படுவது பெண்ணடிமைத்தனமா? குழந்தை பிறந்த அன்று விவாகரத்து ஆனால் கூட அந்த தாய்க்கு அவளின் குழந்தைக்கு பாலூட்ட(இல்லாவிட்டால் பால் கட்டிக்கொண்டு கடும் வேதனை தரும்) அடுத்த இரண்டு வருடம் விவாகரத்து செயப்பட்டவன் பணம் தந்தாக வேண்டும். இதுபோல உங்களால் ‘கண்டுகொள்ளப்படாத’ பல வியக்கவைக்கும் சட்டங்கள் இஸ்லாத்தில் பெண்களுக்காக பற்பல உள்ளன. இஸ்லாம் போல பெண்களை கண்ணியமாக பாதுகாத்து காப்பாற்றும் மார்க்கம் வேறு ஏதாவது உண்டா? சூடு சொரணை இருந்தால் பதில் கூறுங்கள் தோழர்களே.
பெண்கள், சமைத்தும் போட்டு, குழந்தைகளையும் பராமரித்து, வீட்டையும் பராமரித்து, வேலைக்கும் சென்று சம்பாதிக்கவும் செய்யவேண்டும், அதை தனக்கே தன் குடும்பத்துக்கே செலவழிக்க வேண்டும், அதோடு பத்து மாசம் சுமந்து குழந்தை குட்டியும் பெற்றுத்தரவும் வேண்டும் என்று ஓவர்லோடு ஏத்திவிட்டு இதுதான் ‘பெண்ணுரிமை’ என்றும் ‘ஆணாதிக்க எதிர்ப்பு’ என்றும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் குற்ற உணர்ச்சியே இல்லாமல் இறக்க குணமே இல்லாமல் நயவஞ்சகத்தனமாய் அடிமைப்படுத்தவேறு செய்துவிட்டு இப்போது அவர்கள் தங்கள் மானத்தை மறைத்து இழுத்து மூடவும் கூடாது என்றும் கூறும் நீங்கள் உண்மையிலேயே மனிதர்களா? அரக்கர்களா? உங்களுக்கெல்லாம் இதயமே இல்லையா? எக்கேடு கெட்டுத் தொலையுங்கள்.
“உங்கள் ‘செம்புரட்சி கருத்தை’ பெண்கள் ஆடை விஷயத்தில் நீங்கள் என்னவென்று ரோஷமிருந்தால் தெளிவாக சொல்லுங்களேன். எந்த அளவுக்கு பெண்கள் மறைக்க வேண்டுமென தெளிவாக செம்புரட்சி கூறுவதை தைரியமிருந்தால் பதியுங்களேன்.”
தனக்கு பிடித்தமான எந்த உடையையும் தேர்ந்தெடுக்க ஒரு சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலுள்ள எந்த பெண்ணிற்கும் உரிமை உண்டு. எனக்கு அச்சுதந்திரம் உண்டு என்பதற்காக நான் அம்மணமாகத் தெருவில் திரியப்போவதில்லை. அநேகமான சுயபுத்தியுள்ள பெண்கள் அவ்வாறு செய்வதில்லை.
“உங்கள் வீட்டுக்குழந்தைகளுக்கு அவை தனக்கென சுய அறிவை வளர்த்துகொள்ளுமுன் ஆடை அணிவிக்கிறீர்களா இல்லையா? அது ஏன்? உங்கள் குழந்தைகளுக்கு இப்படி-இவ்வளவு ஆடை அணிவித்தால் அழகாக கண்ணியமாக நாகரிகமாக இருக்கும் என்று எப்படி நினைத்தீர்கள்?”
குழந்தைகள் தமக்கென சுய அறிவை வளர்த்துகொள்ளுமுன் அவர்களின் சார்பில் அறிவார்ந்த முடிவுகளை எடுப்பது பெற்றோரின் கடமை. குழந்தையும் ஒரு வளர்ந்த சுயமாகச்சிந்திக்கும் ஆற்றலுடைய பெண்ணும் ஒன்றல்ல. இந்த ஒப்பீடே மிகத்தவறானது.
‘மனிதனை படைத்த இறைவனுக்கே மனிதனுக்கான ஆடையை சொல்ல எந்த உரிமையும் இல்லை’ என கொக்கரிக்கும் தோழர்களே!
இதைப்பற்றி கதைக்க வெளிக்கிட்டால் இவ்விவாதத்தின் மையப்பொருள் மாறிவிடும். I’ll just leave it at இதை இறைவன் தான் சொன்னான் என்பதற்கு உங்களிடம் எந்தச் சாட்சியும் இல்லை. ஒரு நூல் சொல்கிறது என்பதற்காக கொஞ்சமும் சிந்திக்காமல், அதைப் பின்பற்றுவது முட்டாள்த்தனம். அதோடு இக்கருத்துக்கள் மிகப் பின்னோக்கிய சிந்தனைகள் உடைய காலத்தில் உருவாக்கப்பட்டவை. பெண்களை வெறும் போகப்பொருளாகச் சித்தரிக்கும் இக்கருத்துக்களை கடவுளே சொன்னாலும் பிழை பிழைதான்.
இரயில்களில் தனி பெட்டி பெண்களுக்காக ஏன்?
இரயில் நிலையங்களில் பெண்களுக்காகாக தனி ஒய்வு அறை எதற்கு?
மகளிர் மட்டும் பேருந்து எதற்கு?
பேருந்தில் முன்சீட் எதற்கு?
உணவகங்களில் பெண்கள் தனி சர்வீஸ் அறை எதற்கு?
பெண்களை ஆண்களுக்கு சரிசமனான மனிதப்பிறவிகளாக மதிக்கப்படும் இடங்களில் மேற்சொன்னவற்றிற்கு அவசியமேயில்லை.
பெண்களுக்கு மெட்டர்னிட்டி லீவ் எதற்கு?
இதுக்கும் பர்தா அணிவதற்கும் என்ன தொடர்பு? மகப்பேறு காலத்தில் மரியாதைக்கா maternity leave? குழந்தை பிறந்த ஆரம்ப காலங்களில் தாயின் உடல் குணப்படுவதிற்கும், குழந்தை பிறப்பால் வரும் பொறுப்புகளை திறன்பட செய்வதற்கும், குழந்தையை ஒழுங்காக பராமரிப்பதற்குமே maternity leave அவசியம். ஆரம்ப காலங்களில் (முதல் இரண்டு/மூன்று மாதங்கள்) மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவது கடினம் and the mother needs a break. அதன் பிறகு Maternity leave should actually be called ‘parental leave’. The father should also be allowed to take leave and look after the baby, IF the wife wants to go back to work. It should be entirely upto the couple to decide what suits them best. இதைப்பற்றியும் நிறைய எழுதலாம். ஆனால் பிறகு விவாதத்தின் மையப்பொருள் மாறிவிடும். அதனால் இத்தோடு நிறுத்துகிறேன்.
மாணவிகளுக்கு ஈவ் டீசிங் சட்டம் எதற்கு?
பெண்கள் வன்கொடுமை சட்டம் எதற்கு?
வரதட்சினை ஒழிப்பு சட்டம் எதற்கு?
திரும்பவும், பெண்கள் சரிசம மனிதப்பிறவிகளாக மதிக்கப்படும் இடங்களில் இவ்வாறானவை இடம்பெறாது. Eve teasing would be called sexual harrasment. That’s what it is. Sexual harrasment is wrong whether it’s done to a girl or a boy.
“ராணிமாதிரி தன் வீட்டில் ஹாயாக இருப்பது பெண்ணடிமைத்தனமா? அல்லாது வெளியே பிறரிடம் நாய்படாத பாடு படுவது பெண்ணடிமைத்தனமா?”
🙂 Being an honourbale slave sounds so heavenly (in the most sarcarstic tone possible)! Let me ask you something. You seem to be so in love with how women are told to be treated in Quran than men. Hypothetically, if you were given a chance to be born a woman, would you honestly willing to take that chance?
Taking care of parents or helping other siblings whenever they are in need should be every offspring’s/sibling’s responsibility. Not just boys. It just gives them so much extra burden for no reason. We (women) are mature members of the human society who are able to think for ourselves and contribute to the society. We are not mentally retarded or five year olds. We DO NOT NEED to be taken care of. We just need to be given a chance just like you have to be able to develop into our own thinking selves. Then we can take care of our parents, siblings or anybody and we can achieve anything we want.
“பெண்கள், சமைத்தும் போட்டு, குழந்தைகளையும் பராமரித்து, வீட்டையும் பராமரித்து, வேலைக்கும் சென்று சம்பாதிக்கவும் செய்யவேண்டும், அதை தனக்கே தன் குடும்பத்துக்கே செலவழிக்க வேண்டும், அதோடு பத்து மாசம் சுமந்து குழந்தை குட்டியும் பெற்றுத்தரவும் வேண்டும் என்று ஓவர்லோடு ஏத்திவிட்டு இதுதான் ‘பெண்ணுரிமை’ என்றும் ‘ஆணாதிக்க எதிர்ப்பு’ என்றும்”
They don’t have to do everything. Why can’t men help around the house? Why does it have to be solely women’s responsibility to keep the house in order? If both husband and wife are working, then they both should share the household duties too, including parenting. Why can’t you do that? If a woman wants to be a housewife, then by all means she can. But if she wants to go out and work, then she should be given that option to be able to do that too and if she wants to do both, then she should be able to do that too. So should a man.
Dear Analyst, please, analyze in right way. உங்கள் மறுமொழி என்னில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அதில் கருத்தியல் வறட்சிதான் மேலோங்கி இருக்கிறது.
‘ஒரு பெண் எந்த ஆடை உடுத்த வேண்டும் என்பது அவளது விருப்பம், சுதந்திரத்தைப் பொறுத்தது என்பதில் சிறிய சிக்கல் இருக்கிறது. இன்றைய பெண்களின் நடை, உடை, பாவனைகளை அவர்கள் தெரிவு செய்வதில்லை. மாறாக பன்னாட்டு அழகு சாதன நிறுவனங்கள்தான் அவற்றைப் பயன்படுத்துமாறு பெண்களை நிர்ப்பந்திக்கின்றன. இந்நிறுவனங்களின் நோக்கம் பெண்களின் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவது அல்ல. மாறாக ஆணின் போகப்பொருளாக பெண்ணுடல் மாற்றப்பட வேண்டும் என்பதுதான். ஏனெனில் ஆண்களைக் கவருதற்குத்தான் ஆயிரக் கணக்கில் பொருட்கள் பெண்களின் மேக்கப் உலகில் குவிக்கப்படுகின்றன.
இந்தியாவில் பூவும், பொட்டும், வளையலும் அணிந்து ஒரு பெண் செல்வதற்கு காரணமென்ன? கணவனைக் கவருவதற்குத்தான். ஆனால் ஆண்கள் யாரும் பெண்களைக் கவருவதற்கு மல்லிகையைச் சூடுவதில்லை. தெருவோரம் நிற்கும் விலைமாது கூட இந்த அலங்காரங்களோடுதான் தனது வாடிக்கையாளரைக் கவருகிறாள். இவையின்றி அவளால் தொழிலைச் செய்ய முடியாது.
ஆண்களின் இன்பத்திற்காகப் பெண்களைக் கடைச்சரக்காக்கும் இந்த மாயவலையில் இருந்து பெண்கள் விடுபடவேண்டும். அரை நிர்வாண உடையுடன் நடக்கும் பேஷன் ஷோக்கள் எல்லாம் பெண்களின் விடுதலைக்காகவா நடத்தப்படுகின்றன? எந்த அளவுக்கு ஆண்களைக் கவர முடியும் என்பதே அவற்றின் அழகியல் விதி. உள்ளாடைகளைக்கூட ஆண்களின் கவர்ச்சிக்காகத் தயாரிக்கிறார்களேயன்றி பெண்களுக்கு அவை சிறப்பாகப் பயன்படவேண்டும் என்பதற்கல்ல.
எல்லா விளம்பரங்களிலும், ஏன் ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்குக் கூட பெண் மாடல்கள்தான் தேவைப்படுகிறார்கள். இப்படி எல்லா வழியிலும் அல்லும் பகலும் பெண்ணுடல் என்பது உலக முதலாளித்துவ நிறுவனங்களால் அன்றாடம் கற்பழிக்கப்படுகின்றன. அதனால்தான் சொல்கிறோம் ஒரு பெண் தனக்குரிய ஆடைகளை அணிவதற்கு சுதந்திரமில்லை. இதைப்பெறவேண்டுமானால் போகப்பொருளாகக் கருதி திணிக்கப்படும் இந்த அழகியல் பொருட்களை மறுக்க வேண்டும். இவற்றைத் துறப்பதில்தான் பெண்ணழகு உண்மையாக மலர முடியும். ஆண்களைக் கவரும் விசயத்திலிருந்து பெண்கள் விடுதலையாவதுதான் அவளின் சுதந்திரத்திற்கான முதல் நிபந்தனை. சமத்துவமான பெண்ணுரிமை என்பது அப்படித்தான் மீட்கப்பட முடியும்.’
அப்படிஎன்றால் பெண்கள் ஆடையின் வரையறை என்ன? இஸ்லாம் ஒன்றே சரியான தீர்வு சொல்லி இருக்கிறது.
நம் நாட்டில் பாலியல் வன்புணர்வுக்கு சரியான தண்டனை கிடையாது. ஒரு வட இந்திய நீதிமன்றம் கூட சில வருடம் முன், ‘பெண் ஒப்புதல் இல்லாமல் ஒரு ஆண் அவளை பாலியல் வன்கொடுமை(கற்பழிப்பு) செய்ய முடியாது’ என்ற தீர்ப்பை கேள்விப்பட்டுள்ளேன். நீதிமன்ற உதவியோடு ஆணாதிக்கம் நடத்தும் பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராட பெண்தான், தன்னை, தான் அணிவதைக்கொண்டு காத்துக்கொள்ளவேண்டியுள்ளது.
ஆண், தன் குணத்தில்-உடலமைப்பில் ‘ஆணாக’ இருக்கும் வரையும் பெண், தன் குணத்தில்-உடலமைப்பில் ‘பெண்ணாக’ இருக்கும் வரையும் இருவருக்கும் ஹிஜாப் தேவைப்படுகிறது. ஆண் சொல்லி இஸ்லாத்தில் எந்த பெண்ணும் ஹிஜாப் பேணவில்லை. இறைவன் சொல்லித்தான் பேணுகிறார்கள். அந்த இறைவன் ஆண்பாலோ பெண்பாலோ இல்லை. ‘கடவுட்பால்’ என்ற தனி ஒரே ஒரு பால். ஹிஜாப் பேணுவதன் நன்மை பேணாததால் ஏற்படும் தீமையை நடைமுறையில் சரிகான்கிறார்கள். மற்ற ஹிஜாப் பேணாத பெண்ணுக்கு என்ன ஆகிறது என்பதனை அறிகிறார்கள். தனக்கு அது ஏற்பட மிக மிக மிக குறைந்த சதவீதமே இருக்கிறது என்பதனை அறிகிறார்கள்.
நோயெதிர்ப்பு தடுப்பூசிகள் போடுவது நம்மை நோய்க்கு அடிமை ஆனதாக கருத வைப்பதில்லை. கொசுவலை கட்டிக்கொண்டு தூங்கும் எவனும் தன்னை கொசுக்கு அடிமை என்று கருதுவதில்லை. வீட்டை பூட்டும் எவனும் தன்னை திருடனுக்கு அடிமை என்று கருதுவதில்லை. ரெயின்கோட் அணிபவன் எவனும் தன்னை மழைக்கு அடிமை என்று கருதுவதில்லை. ஆண்டிவைரஸ் சாப்ட்வேர் பயன்படுத்தும் எவனும் தன்னை வைரசுக்கு அடிமை என்று கருதுவதில்லை. இவையெல்லாமே எப்படி நாம் நமக்கு எதிர் சக்திகளை வெற்றிகொள்ள வேண்டிய தக்க தகவமைப்பாக கொள்கிறோமோ, அவாறு அதைக்கொண்டு எப்படி நம் எதிரிகளை வெற்றிகொண்டோமோ, அதேபோல, நற்குணமற்ற வக்கிர ஆண்களிடம் இருந்து பெண் தன்னை காத்துக்கொள்ளும் தக்க தகவமைப்பே ஹிஜாப் என்றுதான் முஸ்லிம்கள் புரிந்து கொள்கிறார்கள்.
இறை நம்பிக்கை இல்லாத உங்களுக்கு வேண்டுமானால் இவையெல்லாம் ‘ஆணாதிக்கமாகவும்’ ‘பெண்ணடிமைத்தனமாகவும்’ தெரிகிறது. முஸ்லிம்களுக்கு அப்படித்தெரியவில்லை. அமைதியான நல்ல மகிழ்வான வாழ்க்கைக்கு இறைவன் காட்டிய வழியாகத்தான் -அனுபவப்பூர்வமாக நடைமுறையில் உணர்ந்து நம்புகிறோம். இதை ‘இறையாதிக்கம்’ என்றாலும், ‘மனிதஅடிமைத்தனம்’ என்றாலும் மேலும் எப்படி எள்ளி நகையாடினாலும் மகிழ்ச்சியே.
என் மறுமொழியில் ஒரு முக்கிய திருத்தம்:
///அதேபோல, நற்குணமற்ற வக்கிர ஆண்களிடம் இருந்து பெண் தன்னை காத்துக்கொள்ளும் தக்க தகவமைப்பே ஹிஜாப் என்றுதான் முஸ்லிம்கள் புரிந்து கொள்கிறார்கள்.///
என்பது…..
///அதேபோல, இறைவன் இட்ட கட்டளையான-ஆணுக்கான ஹிஜாப் பேணாத, நற்குணமற்ற வக்கிர ஆண்களிடம் இருந்து பெண் தன்னை காத்துக்கொள்ளும் தக்க தகவமைப்பே பெண்ணுக்கான ஹிஜாப் என்றுதான் முஸ்லிம்கள் புரிந்து கொள்கிறார்கள்.///
இப்படி சரியாக இருந்திருக்க வேண்டும்.
நண்பர் நெத்தியடி முகம்மது,
கோபப்படாமல் அமைதியாக யோசித்துப்பாருங்கள். ஒரு பெண்ணுக்கு தனக்கு தேவையான அளவிற்கான உடைகளை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கவேண்டும் என்பது அறைகுறையாய் இருப்பதற்கான அதிகாரம் என புறிந்துகொள்ளவேண்டியதில்லை. இதற்காக உடை அளவுகளை செம்புரட்சி வலியுறுத்தவேண்டிய தேவையும் இல்லை. இதில் குழந்தையின் நிலையும் வளர்ந்த ஒரு பெண்ணின் நிலையும் ஒன்றென்றா கருதுகிறீர்கள்? முதலாளித்துவ பெண்ணியம் பற்றி சரியான பார்வையை கொண்டுள்ள நீங்கள் அதை எந்த நோக்கில் பயன் படுத்துகிறீர்கள்? முதலாளித்துவம் தீர்மானிப்பதை விட கடவுள் தீர்மானிப்பது சிறந்தது என்றா?
இஸ்லாமிய அடிப்படையில் புர்காவின் நோக்கம் என்ன? ஆண்களின் காமப்பார்வையிலிருந்து தப்பிப்பது. இதற்கு புர்கா உதவாது என்பது தான் குற்றச்சாட்டு. காரணம் ஆண்களின் காமத்தை தீர்மானிப்பது பெண்களின் உடைகளல்ல. ஆனால் இதை நீங்கள் எப்படி கருதுகிறீர்கள் என்பதில் தான் உங்களின் நிலைபாடு அமைந்திருக்கிறது. அவர்கள் அந்த அளவில் உடையணிகிறார்கள், இவர்கள் இந்த அளவில் உடையணிகிறார்கள் எனவே இஸ்லாம் உடையணிவதின் அளவை தீர்மானிப்பதில் பிழையில்லை என்கிறீர்கள். நான் உங்கள் முதுகில் சுவரொட்டி ஒட்டிவிடாமலிருக்க வேண்டுமென்றால் நீங்கள் சட்டை அணிந்திருக்கவேண்டும் என்று கூறினால் அதில் நியாயம் இருக்கமுடியுமா? இதுவே பெண்ணுக்கு என்றால் ஏன் பார்வை மாறுபடுகிறது? முதலாளித்துவ சீரழிவுகள் பெண்களை ஒருவிதத்தில் போகப்பண்டமாக்குகிறது, அதை எதிர்க்கிறோம். இஸ்லாம் வேறொரு விதத்தில் பெண்களை போகப்பண்டமாக்குகிறது, அதையும் எதிர்க்கிறோம். காரணம் பெண் என்பதின் பெண்ணுரிமை என்பதின் சரியான இலக்கில் செயல் படுவதால். ஆனால் நீங்கள் முதலாளியமும் இஸ்லாமும் ஒரே விதமல்லவே பின் ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற அடிப்படையில் இருக்கிறீர்கள்.
இப்போதைய உலகம் ஆணாதிக்க வடிவிலேயே தகவமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் பெண்களுக்கென்று சில சலுகைகளும், சட்டங்களும் இருக்கின்றன. இவைகள் பெண்கள் பலவீனமானவர்கள் எனும் அடிப்படையிலிருந்து எழுந்தவை. ஆனால் மெய்யில் பெண் பலகீனமானவளல்ல. உங்களுக்குத்தெரியுமா? தொடக்கத்தில் பெண்தான் தலைமை தாங்குபவளாக இருந்தாள். பின் ஆணாதிக்க எழுச்சியினால் பலகீனமானவளாக ஆக்கப்பட்டாள். இந்த சமனின்மையை சமனானதாக காட்டும் ஒரு ஜனநாயக தோற்றத்திற்காகவே ஒரு திரையாக இதுபோன்ற சட்டங்களும் சலுகைகளும் பயன்படுகின்றன. மெய்யான சமத்துவம் நிலவும்போது இதுபோன்ற பெண்களுக்கான சிறப்புகளின் தேவையிருக்காது. ஆணாதிக்கச்சமூகத்தின் இருப்பிற்கு பெண்ணுரிமை எதிர்ப்பாகிவிடக்கூடது என்பதால் சரிக்கட்டும் நோக்கில் பெண்களுக்கான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் இஸ்லாமிய பெண்ணியல் கூறுகள் பெண்களை பலகீனமானவர்களாகவே தக்கவைப்பதை நோக்கமாக கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.
அடுத்து உங்கள் எடுத்துக்காட்டுகளுக்கு வருவோம்,
\\நோயெதிர்ப்பு தடுப்பூசிகள் போடுவது நம்மை நோய்க்கு அடிமை ஆனதாக கருத வைப்பதில்லை. கொசுவலை கட்டிக்கொண்டு தூங்கும் எவனும் தன்னை கொசுக்கு அடிமை என்று கருதுவதில்லை. வீட்டை பூட்டும் எவனும் தன்னை திருடனுக்கு அடிமை என்று கருதுவதில்லை. ரெயின்கோட் அணிபவன் எவனும் தன்னை மழைக்கு அடிமை என்று கருதுவதில்லை. ஆண்டிவைரஸ் சாப்ட்வேர் பயன்படுத்தும் எவனும் தன்னை வைரசுக்கு அடிமை என்று கருதுவதில்லை//
இதில் திருட்டைத்தவிர மற்ற அனைத்தும் இயல்புகள். கிருமிகள் மனிதனை தாக்கி அழிக்கவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டவைகளல்ல, கொசுவும் அப்படியே. மழைக்கு தன்னில் நிற்பனவறை நனைக்கிறோம் என உணர்ந்து செய்கிறதா? உருவாக்கியவன் மனிதன் என்றாலும் அழிக்கும் நிரல்களுக்கு (வைரசு) பயன்மிக்க ஒன்றை இல்லாமல் செய்கிறோம் எனும் அறிவு இருப்பதில்லை எனவே அவைகளுக்கு எதிராக பாதிக்கப்படும் நாம் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். ஆனால் பெண்ணுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்யும் ஆண் இந்த வகைப்பாடுகளில் வரமாட்டான். அவனுக்கு சுய அறிவு உண்டு. எனவே பாதிக்கப்படும் பெண்களை நீங்கள் அதிகப்படியான ஆடையணிந்தால் பாதுகாக்கப்படுவீர்கள் என்று கூறுவது அறிவுக்கு பொருந்தாதது. இதன் மூலம் ஆண்களின் தவறுகளுக்கு பெண்களையும் பங்கேற்கச்சொல்லுகிறது இஸ்லாம்.
திருட்டைப்பொருத்தவரை பணத்தை பூட்டிவைப்பதைப்போல் பெண்களை பூட்டிவைக்கவேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடாக இருக்கிறது. பணத்தைப்போல் பெண்ணும் ஒரு மதிப்புதான். பயன்பாட்டு மதிப்பு. பெண்ணுக்கு இளமைதான் பயன்பாட்டு மதிப்பு எனவே அதை காத்துக்கொள்ள இஸ்லாம் சொல்லும் ஆடையை அணியுங்கள்.
மணவிலக்கின் பின் குழந்தைக்கு பால் கொடுத்தால் அதற்கு பணம் கொடுக்கச்சொல்கிறது இஸ்லாம். இது உங்களுக்கு முற்போக்காகத்தெரிகிறதா? இதன் பொருள் என்ன தெரியுமா? பிறக்கும் குழந்தையின் மீது அதன் தாய்க்கு எந்த உரிமையும் இல்லை என்பது தான் இதன் பொருள். இப்படியெல்லாம் உங்களுக்கு தெரிவதற்கு காரணம் மதம் எனும் உங்கள் முன் முடிவுதான்.
உங்கள் முன்முடிவுகளை விலக்கிவைத்துவிட்டு பரிசீலித்துப்பாருங்கள். உண்மை உங்களுக்கு வெகு அருகில் இருக்கும்.
தோழமையுடன்
செங்கொடி
“‘ஒரு பெண் எந்த ஆடை உடுத்த வேண்டும் என்பது அவளது விருப்பம், சுதந்திரத்தைப் பொறுத்தது என்பதில் சிறிய சிக்கல் இருக்கிறது. இன்றைய பெண்களின் நடை, உடை, பாவனைகளை அவர்கள் தெரிவு செய்வதில்லை.”
திரும்பவும் பெண்களின் உடையைத் தெரிவு செய்யும் உரிமை அவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று தான் சொல்கின்றேன். பெண்கள் பர்தா கட்டாயம் அணிய வேண்டும் என்ற கருத்தை எதிர்க்கின்றேன் என்பதற்காக அதற்கு நேர் எதிர் மாறான பெண்ணை நிர்வாணமாக்கியே பிழைப்பு நடத்தும் கோஷ்டியை ஆதரிக்கின்றேன் என்பது அர்த்தமல்ல. இரண்டுமே ஆணாதிக்கச் சமுதாயத்தின் முகங்கள் தான். இரண்டுமே பெண்ணின் உடலுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. பெண் எப்போதும் மிகவும் மெல்லியதாகவும் இளமையோடும் தாம் ஆமோதிக்கும் அழகுடனும் தான் இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் கூட ஆணாதிக்கத்தின் விளைவுகளே.
“நீதிமன்ற உதவியோடு ஆணாதிக்கம் நடத்தும் பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராட பெண்தான், தன்னை, தான் அணிவதைக்கொண்டு காத்துக்கொள்ளவேண்டியுள்ளது… ஹிஜாப் பேணுவதன் நன்மை பேணாததால் ஏற்படும் தீமையை நடைமுறையில் சரிகான்கிறார்கள். மற்ற ஹிஜாப் பேணாத பெண்ணுக்கு என்ன ஆகிறது என்பதனை அறிகிறார்கள். தனக்கு அது ஏற்பட மிக மிக மிக குறைந்த சதவீதமே இருக்கிறது என்பதனை அறிகிறார்கள்.”
நீங்கள் சொல்வது தவறான கருத்து. பாலியல் வன்முறை செய்ய நினைப்பவன் பெண் என்ன உடை உடுத்திருந்தாலும் செய்யத் தயங்க மாட்டான். நான் முதலில் பதிந்தது போல் ஒரு பெண்ணின் உடை பாலியல் வன்முறைக்கு அழைப்பிதல் இல்லை. ஆபிரிக்காவில் பல பழங்குடிகளின் கலாச்சாரத்தில் பெண்கள் சாதாரணமாகவே மேலாடை அணிவதில்லை. அவற்றிலும் பெரும்பாலானவை ஆணாதிக்க கலாச்சாரங்கள் தான் என்றாலும், அங்கு பாலியல் மற்ற நாடுகளை விட குறிப்பிட்டளவு கூடுதலாக நடக்கவில்லை. அதோடு, நீங்கள் நினைப்பது போல் பர்தா அணிவதால் பாலியல் வன்முறை குறைவான சதவீதமே இருக்கும் என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை.
ஏன் எப்போதுமே நீங்கள் பெண்கள் எப்படித் தம்மை மாற்றிக்கொண்டால் பாலியல் வன்முறைகளைத் தவிர்த்துக்கொள்ளலாம் என்றே கேட்கிறீர்கள்? பெண்களைக் கட்டுப்படுத்துவதால் மட்டுமே ஆண்கள் செய்யும் குற்றத்தை தடுக்கலாம் எனும் எண்ணம், குற்றத்தை குற்றம் செய்தவனிடமிருந்து பாதிக்கப்பட்டவருக்கு மாற்றுவதே ஆகும்.
Becky Canary-King from http://happybodies.wordpress.com/2009/11/21/1889/ sums it up nicely:
“Why is the question always, how should women change their behavior rather than how do we stop men from raping? To respond with a headline “Police warns women” and a photo of a male policemen, allows men to congratulate themselves on protecting their women rather than addressing the real problem: that the culture in their city makes sexual violence permissable. I do not need men to protect me, and if I do, I’ll ask and define it for myself. And in fact, I’d like to ask men now to protect me from sexual violence, by asking themselves what they can do to stop rape culture, not by regulating my body.”
“ஆண்களைக் கவரும் விசயத்திலிருந்து பெண்கள் விடுதலையாவதுதான் அவளின் சுதந்திரத்திற்கான முதல் நிபந்தனை.”
ஆணைக் கவருவது தான் முக்கியம், அதுவும் தன் பழக்க வழக்கங்களை மாற்றி ஆண்களை எப்படியாவது கவருவதே முக்கியம் எனும் நினைப்புக் கூட ஒடுக்கப்பட்டிருப்பதன் பிரதிபலிப்பே. அதற்கு தாம் உடுக்கும் உடுப்பை மாற்றுவதை விட மனதை, அவர்களது சிந்தனையை மாற்றுவது மிக மிக முக்கியம். தாம் யாரையும் விடத் தாழ்ந்தவள் இல்லை, திருமணமே தனது பிறவிக்கடன் இல்லை, தான் ஒரு சுதந்திரமான, சுயமாகச் சிந்திக்கக் கூடிய, புத்தியுள்ள மனிதப்பிறவி, தான் யாரிலும் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை எனும் கருத்துக்களை அவளுக்கு வளரும் போதே ஊட்டிவளர்ப்பின் அவள் ஒரு தன்னம்பிக்கை உள்ளவளாக, சுய மரியாதை/புத்தியுள்ளவளாக வளர்வாள். அதை விட்டு விட்டு குரானிலோ, பைபிலிலோ, வேதங்களிலோ பெண்களைப் பற்றி சொல்லியிருப்பதைச் சொல்லி வளர்ப்பின் தன் மீதுள்ள தாழ்வு மனப்பான்மையும், ஆண் என்ன குற்றம் செய்யினும் அதைப் பொறுத்துப் போவதும் அல்லது அதற்கு தன்னையே குற்றம் சாட்டுவதும், தன்னை எப்பவும் கீழ்நிலையில் வைத்திருப்பதுமே சாத்தியமாகும். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பல பின்னூட்டங்களில் எத்தனையோ பெண்ணடிமைத்தன வசனங்கள் குரானிலிருந்தும் ஹதீத்துகளிலிருந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணிற்கு போதித்து, அவளின் வேறு சிந்தனைகளுக்கு மதிப்பளிக்காமல் வளர்ப்பின் ஒரு சுய மரியாதையுள்ள பெண்ணை உருவாக்க முடியாது.
“ஆண் சொல்லி இஸ்லாத்தில் எந்த பெண்ணும் ஹிஜாப் பேணவில்லை. இறைவன் சொல்லித்தான் பேணுகிறார்கள்.”
இறைவன் அருளியது என்று சொல்லும் பிரபல மதங்களின் நூல்கள் எல்லாமே மிகப்பிந்தங்கிய ஒரு ஆணாதிக்க சமுதாயத்தால் உருவாக்கப்பட்டவையே.
செங்கொடி,
மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி. உங்கள் கருத்துக்களை முற்று முழுதாக ஆமோதிக்கிறேன்..
அன்பு சகோதரர் முகம்மத் அவர்களே உங்களது விளக்கம் மிகவும் அருமை. சின்ன குழந்தை கூட புரிந்து கொள்ளும். ஆனால் மாவோவிடம் மண்டையை அடகு வைத்த இந்த அறிவிலிகள் விளங்கினாலும் விளங்காதது மாதிரியே நடிப்பார்கள்.
என்ன செய்வது மருதன் சில சமயம் சில்லறைகளுக்கு கூட பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகின்றது. இல்லையெனில் யாரும் எங்களுக்கு பதில் சொல்லவில்லை என்று சில்லறைகள் இறுமாப்பு கொள்ள ஆரம்பித்து விடும். முடிந்தவரை சில்லறைகளுக்கு பதில் சொல்லுவதை தவிர்த்து தான் வருகின்றேன்.
nctps vada chennai anal min nilayathil 10 வருடங்களாக contract labour pani purindha 261 thozilaligal velai nirutham seiyapattu ulllanar.melum avargal velai vendum endru poratam nadathiyadharku kaidhu seiyapattu meenjur baalakotti thirumana mandabathi adaithu vaikapattu maalai vidhudhalai seiyapattanar
ஆன்லைன் பிஜே இணையதளம் அனைத்து நபர்களுக்கும் ஓர் பகிரங்க அறைகூவலை விட்டிருக்கின்றது. இது சங்பரிவார முழு மடையர்களுக்கும் கம்யூனிச அரை மடையர்களுக்கும் மற்றும் இன்ன பிற மடையர்களுக்கும் சேர்த்து தான்.
“சில கிறித்தவர்களும் , இந்துத்துவாவினரும் , கம்யூனிஸ்டுகளும் , நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா ? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் (பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமையிலான இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் குழு) தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும். ”
உண்மையில் மானம் ரோஷம் இருந்தால் இந்த கம்யூனிச வெத்துவேட்டுக்கள் (வினவு , மருதய்யன், ம.க.இ.க வினர் உட்பட) இந்த பகிரங்க அழைப்பை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதி நேரடி விவாதம் செய்ய போக வேண்டும். அந்த நெஞ்சுரம் இந்த வேத்துவேட்டுகளுக்கு இருக்கின்றதா அல்லது நான் முன்னரே சொல்லிய மாதிரி செங்கொடி போல ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஓடி விடுவார்களா?
சங்பரிவார சாக்கடைகள் கண்டிப்பாக விவாதத்திற்கு வர மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். ஆனால் வாய்ச்சவடால் விட்டுதிரியும் கம்யூனிச வெத்து வேட்டுக்களாவது விவாதத்திற்குவருவார்களா?
பெரிசு பாத்து மூச்சு முட்டிட போவுது. ஒரே ஒரு மேட்டர். அதாவது இசுலாமிய மதவிவகாரங்கள படிச்சு விவாதிக்க கம்யூனிஸ்டு – நாத்திகர் தரப்புல ஆள் இருக்காங்க, நாங்க பிரச்சனயின்னு பாத்தத எழுதியும் இருக்கோம். இப்ப கம்யூனிசத்த பத்தி நீங்களோ இல்ல பீச்சேயோ எழுதியத நாங்க ் பாக்கனுமே ஏன்னா, உங்க்கூட விவாதிக்குற அளவுக்கு உங்களுக்கோ இல்ல பீச்சேவுக்கோ அறிவிருக்கான்னு தெரிஞ்சுக்கவேணாமா, இல்லேன்னா விவாதம் காமெடியா பூடுமே
மேலும் விபரம் வேண்டுமெனில் இந்த தளத்திற்கு சென்று பார்வையிட்டுக் கொள்ளலாம்.
http://www.onlinepj.com/
நண்பர் ஜார்ஜ் புஷ்,
உங்களைப் பற்றிய அறிமுகமறிய எனது வலைத்தளம் அல்லது paraiyoasai@gmail.com அல்லது எனதுகைபேசி எண். 9487985126. என்ற தொடர்புகளில் என்னை தொடர்புகொள்ளவும்.
நான் எப்போதூமே நேரடி விவாதத்திற்கு தயாராகவே உள்ளேன். இருந்தபோதிலும் மற்ற தோழர்களின் நிலை மற்றும் கருத்தறிந்து ஒரு தேதியை முடிவு செய்து அவர்களை அழைக்கலாம்.தோழமையுடன்,சாகித்.
அய்யா ஜார்ஜு புஸ்சு நீங்க சொல்லுற அந்த சாகித்தை நேரடி விவாதத்தில் கலந்துக்க சொல்லுங்க. இஸ்லாத்தை பற்றி குறை சொல்ல தெரியுற வினவு தளத்துக்கும் ம.க.இ.க வினருக்கும், மருதைய்யனுக்கும் நேரடி விவாதத்தில் கலந்துகிட்டு பேச தெரியாதா? இல்லை பேசினால் கம்யூனிச டவுசர் கிழிஞ்சு போய்டும்னு பயமா? இதுக்கும் பிறகு உங்களை எப்படி திட்டி நேரடி விவாதத்தில் கலந்துக்க வைக்கிறதுனு இனிமே ரூம் போட்டு தான் யோசிக்கணும் போல.
ஒருவேளை இப்படி சொன்னாலாவது இவர்களுக்கு கோபம் வந்து கலந்துக்கிராங்கலன்னு பார்ப்போம்.
“நற்குடி”யை சேர்ந்தவர்கள் வெறுமனே இஸ்லாத்தைப் பற்றி வாய்ச்சவடால் விட்டு திரியாமல் பிஜே வின் நேரடி விவாத அழைப்பை ஏற்று அவருடன் விவாதம் செய்யப் போய்விடுவார்கள். நாறக்குடிகள் மட்டுமே நேரடி விவாதத்திற்கு அஞ்சி அதேசமயம் இங்கே வீராப்பு பேசிக் கொண்டிருக்கும்.
இதற்கு மேலும் இந்த செம்புரட்சிக்கரார்கள் நேரடி விவாதத்திற்கு செல்லவில்லையென்றால் அவர்கள் எந்தக் குடி என்பதை இங்கிருப்பவர்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
சகோதரர் முகம்மத் அவர்களுக்கு இதற்கு மேலும் இவர்களுக்கு நீங்கள் இங்கு விளக்கம் கொடுப்பது பாறாங்கல்லை பார்த்து பாடம் எடுப்பதற்கு சமம் சகோதரரே. முடிந்தால் உங்கள் பதிவிலும் இவர்களை பிஜே வுடன் விவாதம் செய்ய வைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். வினவு தளத்தினர் இந்த அறைகூவலை ஏற்று நேரடி விவாதத்திற்கு செல்ல வேண்டும். இதில் கம்யூனிசமா இல்லை இஸ்லாமா என்ற தீர்வாவது கிட்டும். இல்லையெனில் மாதம் ஒரு முறை இந்த மாதிரி பதிவுகளை போட்டு சல்லியடித்துக் கொள்ள வேண்டியது தான்.
சகோதரர் ஷாஜஹான் அவர்களுக்கு:
தங்கள் மீது இறைவனின் சாந்தி என்றென்றும் நிலவ வேண்டியவனாய்….
தங்கள் கருத்தே என் கருத்தும் சகோதரரே. எவ்வளவு காலம்தான் இவர்கள் இப்படி டிமிக்கி கொடுப்பார்களோ தெரியவில்லை. இப்படி ஒரு வெளிப்படை அறிவிப்பு (பிஜே ஆன்லைன்) அறைகூவல் கண்டவுடன் மெய்யாலுமே ஏதும் சரக்கிருந்தால் விவாதம் செய்ய உடனடியாக ஒப்புக்கொள்ளாமல் வீண் விதண்டாவாதம் செய்வது சால்ஜாப்புகள் கூறி பின்வாங்குவது ரொம்ப ரொம்ப அசிங்கமான அநீதியான செயல். இப்படித்தான் அடுத்தவர்களை எந்த ஆதாரமுமின்றி திட்டி குறை பதிவு எழுதி வாழ்க்கையை கடத்துவதா? இதைவிட கேவலமான பிழைப்புவாதத்தை நான் வினவு/செங்கொடி தவிர வேறு எவரிடமும் கண்டதில்லை.
//இவர்களுக்கு நீங்கள் இங்கு விளக்கம் கொடுப்பது பாறாங்கல்லை பார்த்து பாடம் எடுப்பதற்கு சமம்// — மிக மிக சரியான சொற்றொடர், சகோதரரே.
http://senkodi.wordpress.com/2010/01/06/red-green/
இதை இப்போதுதான் பார்த்தேன். ஆகையால், //வினவு/செங்கொடி// இதில் செங்கொடி தயார். வினவு என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை. எனவே, செங்கொடி பெயரை என் மறுமொழியில் இருந்து நீக்கி விடுகிறேன்.
வினவில் விவாதிக்கும் இஸ்லாமிய நண்பர்களே,
விவாதங்களில் கலந்து கொள்ளும் உங்களின் நேர்மைக்கு எனது நன்றிகள். பெரும்பாலும் இஸ்லாமியர்கள் ஒரு எல்லைக்குமேல் விவாதம் செய்யமாட்டார்கள்,அதுவும் விதியின் கோட்பாட்டைப் பற்றி பேசினால் எழுந்து ஓடிவிடுவார்கள். இங்கு இஸ்லாமியர்கள் என்று மட்டும் குறிப்பிடுவது தவறே, அனைத்து மதத்தினரும் அவ்வாறே. இங்கு உங்களால் பதில் அளிக்க முடியாமல் முட்டுச்சந்தில் நீங்கள் சிக்கிக் கொள்ளும்போது “நேரடி விவாதம்” என்ற ஆயுதத்தை கையில் எடுத்துக்கொள்கின்றீர்கள். நேரடி விவாதம் என்றால் எமது டோழர்கள் பயப்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறீர்கள். உங்கள் தவ்ஹீது அமைப்புடன் நேரடிவிவாதம் நிச்சயம் நடக்கும் . தோழர் செங்கொடி அவர்கள் இந்தியா வரும் சமயம் உங்களுடனான விவாதத்திற்கு நாள் குறிக்கப்படும்.
முன்னூறுவரை தொடர முடிந்தது.. இடையில் ஊர்சுற்றி விட்டு வந்து பார்த்தால் அனல்பறக்கும் பதிவுகள் சிலவும்(இனிதான் படிக்கவேண்டும்) இங்கே
நானூறை எட்டிப்பிடிக்கும் வேகத்தில் இந்தப்பதிவில் பின்னூட்டங்களும்.. வைரஸ் காய்ச்சல் போகும் போது வினவின் வேகத்தைச் சீண்டி விட்டு
போயிருக்கும் போலிருக்கிறதே… வாழ்த்துக்கள்.
நம்ம நெத்தியடியும் ஷாஜஹானும் அவ்வப்போது அடிக்கும் ஸ்டண்டுகள் உண்மையிலேயே அருமை. சீரியஸான திரைப்படம் பார்க்கும் போது
வடிவேலு எண்ட்ரி கொடுப்பது போலவே இருக்கிறது. இப்படித்தான் வேறு ஒரு இடத்தில் “நாங்கெல்லாம் டார்வினோட கோட்பாடுகளையே
நார் நாராகக் கிழித்து தொங்கப்போட்டுட்டோ ம் தெரியுமில்லே?” என்று கேட்டு பீதியைக் கிளப்பி விட்டார்கள். ஹ… குர்ரானுக்கு வெளியில்
ஒரு உலகம் இருப்பதை என்ன சொல்லி இவர்களுக்கு விளங்க வைப்பது என்பதை நினைத்தாலே லேசாக வயிற்றைக் கலக்குகிறது.
கொசு பறக்கற கேப் கெடச்சா போதும் இப்ப மேல விட்டிருக்கிறாரே “செங்கொடியின் டவுசரைக் கயட்டிவிட்டோ ம்” என்பது போன்ற
ஸ்டேட்மெண்ட்டுகளை கூச்சமேயில்லாம சொல்லிட்டுப் போயிட்டே இருப்பது இவர்களின் இன்னொரு விசேஷம். கவுண்டமனி ஒரு படக் காட்சியில்
வீட்டுக்குள் பெண்டாட்டியிடம் அடிவாங்கிக் கொண்டே வீரமாக வாய்ஸ் கொடுத்து வெளியில் நிற்பவர்களிடம் இமேஜ் மெயிண்டெய்ன் செய்வாரே..
அவரெல்லாம் நம்ம ஷாஜஹான் பாயிடம் பிச்சை வாங்க வேண்டும்.
பொய் சொல்லாதே திருடாதேன்னு ஆயிரத்து ஐநூறு வருசத்துக்கு மின்னயே நாங்க மட்டும் தான் சொன்னோம் அப்படிங்கறாரு நம்ம பாய்.. அட
நம்ம திருவள்ளுவர்லேர்ந்து பொழுது போகாத அத்தன கவுஜர்களும் அதைத் தானே பாய் சொல்லிட்டுப் போனாங்க? ( இவங்கெல்லாம் அந்தந்த
இனங்களுக்கு அனுப்பித்தரப்பட்ட தூதர்கள் (டீஃபால்ட்டா முகமது லாஸ்ட் தூதர்) அப்படின்னு சொல்லுவீங்க.. விடுங்க)
அப்புறம் நேரடி விவாதம் –
எனக்கும் இந்த நேரடி விவாதம் சில இசுலாமிய (உடன் பணிபுரியும்) நன்பர்களோடு நடந்துள்ளது. அந்தக் கோராமையை சில முறை
அனுபவித்ததிலிருந்து எனக்குக் கிடைத்த படிப்பினைகள் சிலவற்றை மட்டும் இங்கே சொல்லி வைக்கிறேன்.
உலகத்தில் நாளைக்கு நடக்கப்போகும் ஏதோவொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் கூட குர்ரானில் ஆயிரத்தைனூறு வருசத்துக்கு முன்னேயே
அல்லா வசனமாய் இறக்கி உட்டார் என்று சொல்லி கரைச்சல் கொடுப்பது.
ஆயி போறதுக்கும் உச்சா போறதுக்கும் கூட குர்ரானில் மந்திரம் சொல்லி வச்சிருக்காங்க – உங்க மார்க்ஸும் எங்கெல்ஸும் இதைப் பற்றி
சொல்லாத மர்மம் என்ன? என்று கேட்டு கிலியைக் கூட்டுவது.
தாடி வளர்ப்பின் பின் உள்ள விஞ்ஞான உண்மைகளை ஏதோ ஒரு பல்கலைகழக விஞ்ஞானி நடத்திய ஆய்வுகள் நிரூபித்திருப்பதை சுட்டிக்காட்டி
பீதியைக் கிளப்புவது. (வளராதவன் என்னய்யா பண்ணுவான்?)
“பாத்தீங்களா இப்பெல்லாம் விபச்சாரம் அதிகமாயிடிச்சி.. எங்காளு தான் அப்பயே இதப்பத்தின வசனங்களை இறக்கிட்டாரே?” என்று பெருமை பீற்றிக் கொள்வது (யாகாவா ‘முனிவர்’ சொன்னதிலும் சிலது ‘பலித்திருப்பதாக’ அவரது தீவிரபக்தரும் எனது நன்பரும் சொல்கிறார் – அப்ப
இவரு லேட்டா எண்ட்ரி கொடுத்த தூதரா?)
திரும்பத்திரும்ப குர்ரானைச் சுற்றிச் சுற்றியே ‘விவாதிப்பது’ – சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்வது – திரும்பத்திரும்ப சொல்வதாலேயே
அது நிருவப்பட்ட உண்மை என்று வாதிடுவது –
தாவூ தீர்ந்து போயி எஸ்க்கேப் ஆகப் பார்த்தால் – “ஹேய்… நாங்க கெலிச்சுட்டோ மே… தோத்தாங்குளி தோத்தாங்குளி” என்று நீங்களே
உங்கள் முதுகைத் தட்டிக் கொள்வது..
அப்போதிருந்தே இந்த மனம் திறந்த அழைப்புகளைக் கண்டாலே பின்னங்கால் பிடறியில் பட மான் கராத்தே காட்டிவிடுவது எனும் உயரிய
கொள்கையை கடைபிடித்து வருகிறேன். உங்களின் இந்த அழைப்பு எனது முந்தைய நினைவுகளைத் தூண்டிவிட்டதால் சொன்னேன். ஆனாலும்
இது இணையத்தில் நடப்பதால் தொடர்ந்து கவனித்து வருவேன் – அவ்வப்போது கலந்து கொள்ளவும் முயல்கிறேன்.
பொதுவில் குர்ரானை இசுலாமிய அறிஞர்கள் கூட படிக்கும் கோணத்துக்க்குத் தக்கபடி அர்த்தம் காண்கிறார்கள்.. அவர்கள் நடைமுறையில்
உள்ள ஒரு விஷயத்துக்கு குர்ரானின் சில வசனங்களை நீட்டியும் குறுக்கியும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள் – ஒவ்வொருவரும் தாம் சொல்லும்
அர்த்தமே சரி என்று வாதிடுகிறார்கள்..
சமீபத்தில் பி.ஜே ஏதோவொரு டி.வியில் இன்னொரு பிரிவைச் சேர்ந்த அறிஞர்களுக்கு சவடால் விட்டுக் கொண்டிருந்ததைக் காண நேர்ந்தது.
ஏதோவொரு விஷயம்.. அதை தான் சொல்வதே சரியென்றும் நபித்தோழர்களில் இந்த வசனத்தை உறுதிப் படுத்தியிருக்கிறார்கள் என்றும்
சொன்னதோடு… எதிர்தரப்பு தமது வாதத்துக்கு வலுசேர்க்கும்படி அவர்கள் ஒரு நபித்தோழர் ஒருவரை சுட்டிக் காட்டினர்.. இப்படியே இவ்விவாதம்
நீண்டு கொண்டே போனது..
இது ஒரு விவாத முறையே அல்ல – மண்டை குழம்பிப் போனவர்கள் பிதற்றிக் கொள்வதைப் போலத்தான் இருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை(08-01-10) தொண்டியைச்(pj சொந்த ஊர்) சேர்ந்த 60 வயது மலுங்கு சாஹிபு என்ற கிழவன் அவ்வூரைச் சேர்ந்த 6 வயது சிறுமியை கற்பழித்துள்ளான். இந்த கிழட்டு நாய்க்கு 6 வயது சிறுமியிடம் காமத்தை தூண்டிய விடயம் எதுவாக இருக்கும். அச்சிறுமி பர்தா போடாததுதான் காரணமாக இருக்குமோ? இருக்கலாம்.
இந்த பர்தாவும் ஆணுறையும் ஒண்ணு, ஆம்பளைங்க பாதுகாப்புக்கு ஆணுறை மாட்டிக்குவோம், பொம்பளைங்க பாதுகாப்புக்கு ‘பெண்ணுறை’ பர்தா மாட்டிவிடுவோம், அட அதுக்கு ஆம்பளைங்க ஊர்மேயரதை நிறுத்தி காயடிச்சுட்டா ஆணுறையும் தேவையில்ல பர்தாவும் தேவையில்லங்கறீங்களா..அந்த நாயத்த எந்த நாதாரி ஏத்துக்குவான், பர்தாவபோடுன்னு சட்டம் போட்டது ஆம்பளசாமியாச்சே.
இப்படிக்கு ‘ஆண்’line PJ வின் இன்னுமோரு எடுபிடி
பர்தா விவகாரம் விஜய் டிவிக்கு எதிராக முஸ்லிம்கள் கடும் கொந்தளிப்பு விவரம்
படியுங்கள் படித்து பாருங்கள் http://athiradenews.blogspot.com/2010/01/blog-post_3697.html
செங்கொடியின் நண்பர் ஷேக் தாவூத் தளத்தில் படித்தது. இதற்கு செங்கொடியின் பதில் என்ன?
ஆனால் கம்யூனிசத்தை வாழ்வியல் சித்தாந்தமாக ஏற்றுக் கொண்ட பதிவர் செங்கொடி (ம.க.இ.க வை சார்ந்தவர்) இத்தகைய நேரடி விவாதத்திற்கு வருவதற்கு சம்மதித்திருக்கின்றார். http://onlinepj.com/vimarsanangal/vivathakalam// . வெளிநாட்டில் இருப்பதால் விவாதத்திற்கு வருவதற்கு குறைந்த பட்சம் ஆறு மாத காலமாவதாகுமென சொல்லியிருக்கின்றார். இது ஏற்கத்தக்க காரணம் என்றாலும் இத்தகைய காலக்கெடுவை செங்கொடி தான் விதித்திருக்கின்றார் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். செங்கொடி உண்மையாளராக இருப்பின் இஸ்லாத்தைப் பற்றிய தமது விமர்சனத்தை நேரடி விவாதத்தில் தான் வைக்க வேண்டும். அது தான் கொள்கை பிடிப்புள்ளவர்களுக்கு அழகு. ஒரு வேளை அத்தகைய இஸ்லாமிய விமர்சனம் பண்ணித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் செங்கொடிக்கு இருக்குமேயானால் அவர் முதலில் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு விட்டு பிறகு எழுதட்டும். இது தான் உண்மையாளர்களுக்கு அழகு செங்கொடி.
கம்யூனிசமே உலகை உய்விக்க வந்த சித்தாந்தம் என்று போற்றி கொண்டாடுகின்ற ம.க.இ.க வின் புதிய ஜனநாயகமும் வினவு இணையதளமும் அவ்வப்போது இஸ்லாமிய கோட்பாடுகளை எந்த அடிப்படையுமின்றி விமர்சனம் செய்து வருகின்றன. இவர்கள் வைக்கின்ற குற்றச்சாட்டைக் குறித்து முஸ்லிம்கள் எந்த ஒரு உரையாடலுக்கும் முன்வராத போது தான் இவர்கள் வெளியில் விமர்சிக்க வேண்டும். இவர்களுடன் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விவாதிக்க தயார் (விவாத விபரம்) என்ற நிலையில் அவர்களுடன் விவாதிக்க வேண்டும் அல்லது இஸ்லாத்தைப் பற்றிய விமர்சனத்தை செய்யாமல் இருக்க வேண்டும். இது தான் பிழைப்புவாதமற்ற குழுவிற்கு அழகாகும். கோழைகள் போன்று நேரடி விவாதத்திற்கு வராமல் வெளியில் நின்று விமர்சனம் செய்வது சங்கபரிவார்களுக்கும் இவர்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமுமில்லை என்ற எண்ணத்தை வலுப்படுத்தவே செய்யும். ஒருவேளை செங்கொடி விவாதத்திற்கு வரும் போது தான் நாங்களும் வருவோம் என்ற பதிலை புதிய ஜனநாயகமும் வினவு இணையதளமும் சொல்லுமேயானால் நேரடி விவாதத்திற்கு வரும் வரை எத்தகைய விமர்சனத்தையும் வைக்காமல் இருப்பதே நேர்மையான செயலாக இருக்க முடியும். பலரை நேர்மையற்றவர்களென்றும் பிழைப்புவாதிகளென்றும் முத்திரை குத்தும் புதிய ஜனநாயகம் இதழும் வினவு இணையதளமும் தங்களை நேர்மையானவர்களென்றும் பிழைப்புவாதிகளல்ல என்றும் நிரூபிப்பார்களா?
சகோதரர் ஷாஜஹான்,
இவர்களுடன் நான் இங்கு விவாதித்ததில் அறிந்து கொண்டவை:
இவர்கள் எல்லா நல்ல விஷயத்தையும் எதிர்ப்பார்கள். ஆனால், அதற்கு எத்தீர்வையும் மாற்றாக கூற மாட்டார்கள். இந்த ஹிஜாப் விஷயத்தில் கூட என்ன நடக்கிறது?
///ஒரு பெண்ணுக்கு தனக்கு தேவையான அளவிற்கான உடைகளை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கவேண்டும் என்பது அறைகுறையாய் இருப்பதற்கான அதிகாரம் என புறிந்துகொள்ளவேண்டியதில்லை. இதற்காக உடை அளவுகளை செம்புரட்சி வலியுறுத்தவேண்டிய தேவையும் இல்லை.-செங்கொடி///
அப்படிஎன்றால் ஒரு “செம்பெண்” தனக்கு பிகினியை விட, ஹிஜாப் தான் சரியான உடை என்று தேர்ந்தெடுத்து அணிந்தால் இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும்? அது அந்த பெண்ணின் உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் எதிராகாதா? எந்த ஊரிலாவது முஸ்லிம் பெண்கள் அனைவரும் புர்காவை எதிர்த்து ஊர்வலம் ஆர்ப்பாட்டம் தர்ணா செய்திருக்கிறார்களா? “சூரியன் இனி நாளை காலை முதல் கிழக்கில்தான்(???) உதிக்கவேண்டும்” எனக்கூறி பந்த் நடத்துவதைப்போல செம காமடியாக உள்ளது.
///‘ஒரு பெண் எந்த ஆடை உடுத்த வேண்டும் என்பது அவளது விருப்பம், சுதந்திரத்தைப் பொறுத்தது என்பதில் சிறிய சிக்கல் இருக்கிறது. இன்றைய பெண்களின் நடை, உடை, பாவனைகளை அவர்கள் தெரிவு செய்வதில்லை. மாறாக பன்னாட்டு அழகு சாதன நிறுவனங்கள்தான் அவற்றைப் பயன்படுத்துமாறு பெண்களை நிர்ப்பந்திக்கின்றன. இந்நிறுவனங்களின் நோக்கம் பெண்களின் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவது அல்ல. மாறாக ஆணின் போகப்பொருளாக பெண்ணுடல் மாற்றப்பட வேண்டும் என்பதுதான். ஏனெனில் ஆண்களைக் கவருதற்குத்தான் ஆயிரக் கணக்கில் பொருட்கள் பெண்களின் மேக்கப் உலகில் குவிக்கப்படுகின்றன. ஒரு பெண் எந்த ஆடை உடுத்த வேண்டும் என்பது அவளது விருப்பம், சுதந்திரத்தைப் பொறுத்தது என்பதில் சிறிய சிக்கல் இருக்கிறது. இன்றைய பெண்களின் நடை, உடை, பாவனைகளை அவர்கள் தெரிவு செய்வதில்லை. மாறாக பன்னாட்டு அழகு சாதன நிறுவனங்கள்தான் அவற்றைப் பயன்படுத்துமாறு பெண்களை நிர்ப்பந்திக்கின்றன. இந்நிறுவனங்களின் நோக்கம் பெண்களின் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவது அல்ல. மாறாக ஆணின் போகப்பொருளாக பெண்ணுடல் மாற்றப்பட வேண்டும் என்பதுதான். ஏனெனில் ஆண்களைக் கவருதற்குத்தான் ஆயிரக் கணக்கில் பொருட்கள் பெண்களின் மேக்கப் உலகில் குவிக்கப்படுகின்றன’–வினவு///
என்று தெளிவாக எழுதிவிட்டு அதற்கு தீர்வு எதுவும் சொல்லமாட்டார்களாம். அப்புறம் “செம்பெண்” என்ன செய்வாள்?
யார் இதற்கு தீர்வு சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்பாள். ///அப்படிஎன்றால் பெண்கள் ஆடையின் வரையறை என்ன? இஸ்லாம் ஒன்றே சரியான தீர்வு சொல்லி இருக்கிறது. அது ஹிஜாப்- நாம்///
இந்த இடத்தில் முக்கியமாக ஒரு கேள்வி:
///ஆண்களைக் கவரும் விசயத்திலிருந்து பெண்கள் விடுதலையாவதுதான் அவளின் சுதந்திரத்திற்கான முதல் நிபந்தனை. சமத்துவமான பெண்ணுரிமை என்பது அப்படித்தான் மீட்கப்பட முடியும்-வினவு////
—என்று தெளிவாக நம் பக்கம் கருத்து கூறிவிட்டு ஹிஜாபை எதிப்பதன் மூலம் யாருக்கு மறைமுகமாக உதவி செய்கிறார்கள்? ஹிஜாப்தானே அந்த முதலாளித்துவ பெண்ணியத்துக்கு சரியான ஆப்படிக்கிறது? அப்புறம் அதை ‘எதிர்ப்பேன்’ என்பது பன்னாட்டு காற்பறேட்டுகளுக்காகவா? அவர்களின் நலனுக்காகவா? அவர்களிடம் கையூட்டு வாங்கிவிட்டு இப்படி போலியாக போலி கம்யூனிஸ்ட் வேஷம் கட்டி ஊரை ஏமாற்றுகிறார்களா இந்த மக்கு இக கைக்கூலிகள்? அப்படித்தான் நம்பவேண்டி உள்ளது. நயவஞ்சகர்கள். மற்றவர்களை பற்றி பேச என்னை அருகதை இருக்கிறது இவர்களுக்கு?
///முதலாளித்துவ பெண்ணியம் பற்றி சரியான பார்வையை கொண்டுள்ள நீங்கள் அதை எந்த நோக்கில் பயன் படுத்துகிறீர்கள்? முதலாளித்துவம் தீர்மானிப்பதை விட கடவுள் தீர்மானிப்பது சிறந்தது என்றா?-செங்கொடி/// —இல்லையா பின்னே? செம்புரட்சியும் ஒன்னும் கிழிக்காது. இறைவன் சொல்வதையும் ஏற்கக்கூடாது. அப்புறம் என்னதான் இதற்கு தீர்வு?
பசியால் வாடும் ஒருவருக்கு ஊரில் ஒரே ஒருவர் உணவிடுகிறார்.
உடனே மற்றொருவர் வந்து தடுத்து…”அவரிடம் வாங்கித்தின்னாதே” என்கிறார்.
“அப்படியா சரி. நீ ஏதாச்சும் சாப்பிட கொடேன், என் பசிக்கு”, என்கிறார் பசித்தவர்.
“என்னிடம் எதுவுமில்லை, நானெல்லாம் தர முடியாது, தர மாட்டேன் ஆனால் நீ அவனிடம் எதுவும் பெற்றுக்கொள்ளாதே” என்கிறார் தடுப்பவர்.
“நான் பசிக்கு இப்போ என்ன பண்ணுவது?”-பசித்தவர்.
அதற்கு, தடுப்பவர் : (சொன்னது-சொல்வது-சொல்லிக்கொண்டே இருப்பது-எப்போதும் சொல்லப்போவது இதுதான்…..)
“சாப்பிடு…… ஆனால்….. சாப்பிடாதே, அப்புறம்… என்னிடமும் கேட்காதே”
(இதுதான் வினவு/செங்கொடி நாட்டாமை சொம்புகளின் செம்புரட்சி தீர்ப்பு)
பசித்தவர் : “லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதர்ரசூலுல்லாஹ்” என்ற உணவை தருபவரிடம் பெற்றுக்கொள்கிறார்.
(பின் குறிப்பு: கொஞ்ச நாளாய் நான் இந்த பக்கம் வரவேயில்லை. புதிய பதிவுகள் ஏதும் உண்டா என்று பார்த்தால்….ச்சீ…படிக்கவே கூசுகிறது….இவர்கள் கும்பிடும் ஒரு ‘தெய்வத்தை’, ஒரு ‘பின் நவீனத்துவ(?) முற்போக்கு(?) புரட்சிசிந்தனாவாதி(?) கண்ணிய(?)பெண்ணியம்(?)’ ஒன்று அசிங்கமாய் எதோ ஒரு வரி கிறுக்கிவிட்டதால் என்னமாய் கொந்தளித்து கூப்பாடு போட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா பாய்? அதே போன்ற தவறை நம்மீது இட்டுக்கட்டிய இவர்களிடம் நாம் இப்படி அமைதியாய் சாதுவாய் பேசுவது கண்டு நம்மை எள்ளி நகையாடுகிறார்களோ? ஆனாலும் அப்படியெல்லாம் தரம் தாழ்ந்து அசிங்கமாய் எழுத நமக்கு கூசுகிறதே. இதெல்லாம் நமக்கு சரி வராது. என்னமோ போங்க.)
சகோதரர் முஹம்மத் அவர்களுக்கு உங்களின் மீது இறைவனின் அமைதி என்றென்றும் நிலவட்டுமாக. நீங்கள் குறிப்பிட்ட அந்த அசிங்கம் பிடித்த “குறி” வைத்து தாக்குகின்ற அந்த பதிவுகளை நானும் படித்தேன். இந்த “புரட்சிப்பெண்” ரொம்ப காலமாகவே இந்த மாதிரி கவிதைகளை எழுதி வருகின்றார். அப்போதெல்லாம் பொங்கி எழாத கேடுகெட்ட வினவு மற்றும் அறிவு கெட்ட கம்யூனிஸ்ட்டுகள் அவர்களின் தெய்வத்தை பற்றி ஒருவரி எழுதியவுடன் அந்த “புரட்சிபென்னை” வேசி ரேஞ்சுக்கு விமர்சனம் பண்ணி கேவலப்படுத்தியிருக்கின்றனர். இதை கேடு கெட்ட வினவுக்கு கொஞ்சம் டீசண்டாக மஸ்தான் என்ற சகோதரர் கேள்வியாக கேட்டிருக்கின்றார். ஆனால் இந்த புரட்சிக் கொழுந்துகள் எந்த பதிலையும் அளிக்கவில்லை.
ஆடு,கோழி, பன்னிக்கெல்லாம் நல்லா தீனி போடறது எதுக்கு? வேறெதுக்கு ‘போட’றதுத்குத்தான். நல்லா கொழுப்பெடுத்து திரியவுட்டு அப்புறம் போடறதுலதான் ருசியே.. இது அந்த ஆட்டுக்கோ, பன்னிக்கோ தெரியாம போறதுல ஆச்சரியமில்ல… என்ன நாஞ் சொல்றது????
கம்யூனிஸ்டுகளின் இன்றைய நிலை மிகவும் வருத்தமானது. பாப்பாத்தி உப்பு கண்டத்தை பறி கொடுத்ததைப் போன்று கம்யூனிஸ்டுகள் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்கே கருத்து சொல்லுகின்ற மக்கு இ க வினரின் எழுத்துக்களே காட்டி கொடுத்து விடுகின்றன. நேரடி விவாதம் தான் சிறந்தது என்பதை மிகத் தெளிவாக எடுத்து சொல்லி விட்டோம். இதற்குப் பிறகும் எழுத்து விவாதத்திற்கு வா என்று அழைப்பதை பார்த்தால் கம்யூனிஸ்ட்டுகள் அரை மடையர்களல்ல, மாறாக முழு மடையர்கள் என்பதை சொல்லாமல் சொல்லுகின்றது.
நேரடி விவாதத்திற்கு வராமல் மக்கு இ க வினர்கள், மருதைய்யன் போன்ற அரை அல்லது முழு மடையர்கள் வெளியில் நின்று வீர வசனம் பேசிக் கொண்டு திரிவது காமெடி நடிகர் வடிவேலு விடும் உதாரை விட பல மடங்கு உதாராகும். இங்கு கருத்து சொல்லும் முஸ்லிம் சகோதரர்கள் கவனிக்க பாவம் கம்யூனிஸ்ட்டுகள் அவங்க செட்டுலயே கொஞ்சம் படித்தது செங்கொடி மட்டுமே.அதனால் தான் அவர் வரும் வரை இவர்கள் நேரடி விவாதத்திற்கு கத்திருக்கின்றார்கள். செங்கொடியே அரையாக இருக்கும் போது மற்றவர்கள் எல்லாம் முழுசு தான். பாவம் பிஜே எப்படித்தான் இந்த மிகப் பெரிய அறிவாளி(???)களுடன் விவாதம் செய்யப் போகின்றாரோ?
சகோதரர் ஷாஜஹான் அவர்களுக்கு….
உங்களின் மீது இறைவனின் அமைதி என்றென்றும் நிலவ பிரார்த்திக்கிறேன்.
https://www.vinavu.com/2010/01/19/questions-vithagan-3/
இங்கு இதே ஹிஜாப் விஷயத்துக்காக…. மீண்டும் ஒரு முறை விவாதித்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை முறை இது பற்றி ‘பதிவு’ எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி…..
schoolboy என்பவரின் தெளிவான ஆநித்தரமான கேள்விகளுக்கு ‘விவாதம்’ என்றபெயரில் வெற்றுக்கமென்ட்களாய் போட்டு போட்டு போட்டு போட்டு போட்டு போட்டு ….
ச்சே..! டையம் வேஸ்ட்.
இதில் உள்ள இவர்களின் (…(கேள்வியே புரியாமல் பதில் சொல்லும் அறிவாளிகளும், கேள்வியைப் புரிந்து கொண்டு பதில் தேடி வரும் முட்டாள்களும்) …ஆன இவர்களின் )… முழு ‘விவாதங்களையும்(?)’ படித்தால்……
//பாவம் பிஜே எப்படித்தான் இந்த மிகப் பெரிய அறிவாளி(???)களுடன் விவாதம் செய்யப் போகின்றாரோ?// —ரொம்ப சரி.
முன்பு நீங்கள் இவர்களை ‘சில்லறை’ என்று ரொம்ப மட்டமாய் சொன்னபோது சற்று வருத்தமாய் இருந்தது. இப்போது அது கொஞ்சம் அதிகப்படியான புகழ்ச்சியோ என்று நினைக்கத்தோன்றுகிறது. ஏனென்றால், சில்லறைகள் இன்றும் நம் பொது வாழ்வில் சிறிய அளவிலான கொடுக்கல் வாங்கலில் பயன்படுகின்றன. சில்லறை என்ற உங்கள் கருத்தைவிட ‘செல்லாகாசுகள்’ என்ற பதம் இவர்களுக்கு சரியான தகுதியாக இருக்கும்.
இப்போதே இப்படி என்றால், ஆறு மாதம் கழித்து இன்னும் ரொம்ப ‘முத்திடுமே’…?
வேறொரு பதிவில் ஒரு அனானி இந்த தளத்தை ‘கம்யூனிஸ்ட் கீழ்பாக்கம்’ என்று கமென்ட் போட எனக்கு அது மிகப்பெரிய காமடியாக இருந்தது. இதற்கு அப்போது பலமாய் சிரித்து வைத்தேன்.
https://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/#comment-12907
ஆனால், இப்போதுதான் புரிகிறது….. இவர்களிடம் விவாதித்து நொந்து நூலான பின்னர் அவர் ரொம்ப சீரியஸாக தன் கருத்தை சொல்லி இருப்பாரோ என்று தோன்றுகிறது. அந்த அனானி, நம்மைவிட இவர்களிடம் நிறைய அனுபவபட்டவர் போல…
வேறென்ன சொல்ல….. பாவம்… அண்ணன் பி.ஜே & சகோதரர்கள்..! தங்கள் வாழ்வில் ஆஹிரத்துக்காக உண்மையிலேயே ரொம்ப கஷடப்படுகிறார்கள், பாய்.
வேலிக்கு ஓனான் சாட்சி, பன்னாடைக்கு பொறம்போக்கு சாட்சி
ஏம்பா பன்னி அறுப்புக்கு ரெடியாயிடிச்சான்னு பாருங்க? பசி தாங்கல
தவறுக்கு மன்னிக்கவும். வழக்கத்தில் உள்ள ஒரு தவறான வார்த்தையை (……… உப்புக் கன்டத்தை பறி கொடுத்தது போல ) பயன்படுத்தியதற்கு அனைத்து சகோதரர்களும் மன்னிக்கவும். எவர் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. கம்யூனிஸ்ட்டுகளின் பரிதாப நிலைமையை குறிப்பதற்கே அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். தவறான வார்த்தையை பயன்படுத்தியதற்கு எண்ணை மன்னிக்கவும்.
இதில் சாகித் என்ற புனை பெயரில் ஒரு நக்சலைட்.அவர் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் அடிமைகள் பற்றி.இந்த புரட்சி வீரர்களுக்கு வேறு வேலை ஏதும் இல்லை போலிருக்கிறது.அதுதான் இஸ்லாமிய எதிர்ப்பு ஆராய்ச்சியில் இறங்கி இருக்கின்றனர்.இவர்களை முஸ்லிம் மக்கள் மத்தியில் அடையாளம் கட்டுவதுதான் நமது முக்கிய வேலையாக இருக்க வேண்டும்.