வாசகர்களுக்கு புவனேசுவரியைத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. விபச்சார வழக்கில் போலீசால் கைது செய்யப்பட்ட அந்த அம்மையார் சொன்னதாக சில பிரபல நடிகைகளின் பெயர்களை தினமலர் வெளியிட்டதைத் தொடர்ந்து, பத்திரிகை உலகத்துக்கு எதிராகக் கலை உலகம் கொதித்தெழுந்தது.
தமிழ்ச் சமூகத்தை தாங்கி நிற்கும் மூன்று தூண்களில் சினிமா, பத்திரிகை ஆகிய இரண்டு தூண்கள் மோதிக் கொண்டு வீழ்ந்துவிட்டால், டாஸ்மாக் என்ற மூன்றாவது தூணின் மீது தமிழ்ச்சமூகத்தின் மொத்த வெயிட்டும் இறங்கி, அந்தத் தூணும் தள்ளாடி நிலைகுலைந்து விடக்கூடும் என்ற அபாயத்தை தொலைநோக்குடன் புரிந்து கொண்ட கலைஞர், உடனே தலையிட்டு, அவ்விரு தூண்களுக்கிடையில் போர்நிறுத்தம் செய்து வைத்தார். அப்புறம் புவனேசுவரியைப் பற்றி நாம் எல்லோருமே மறந்து விட்டோம்.
இப்படி தனியொரு பெண்ணாக நின்று தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த புவனேசுவரி ‘யார்’ என்பதை அறிந்து கொள்ளும் அக்கறை, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமனுக்கு மட்டுமே இருந்திருக்கிறது. அந்த அம்மையார் யார் என்று புரிந்து கொண்ட மறுகணமே, அவரை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணித் தலைவியாக நியமித்துவிட்டார் டாக்டர் சேதுராமன். அந்த அம்மையார் தேவர் குருபூசைக்கும் சென்று வந்துவிட்டார். தமிழகத்தையே கட்டி ஆண்ட மூவேந்தர் பரம்பரையில் வந்தவர்தான் புவனேசுவரி என்ற தெரிந்த பிறகு, இனி அவர் மீது கைவைக்கும் தைரியம் போலீசுக்கு வருமா என்று பார்ப்போம்.
ஒரு வேளை வெள்ளைக்காரன் மட்டும் நம் நாட்டைப் பிடிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும், யோசித்துப் பாருங்கள்!
மன்னர் சேதுராம பாண்டியர், இளவரசி புவனேஸ்வரி, இளவரசர் கார்த்திக், தளபதி ஸ்ரீதர் வாண்டையார் போன்ற மாணிக்கங்களின் ஆட்சியின் கீழ் நாம் குடிமக்களாக இருந்திருப்போம். காந்தி கிடையாது, சுதந்திரம் கிடையாது, அரசியல் சட்டம் கிடையாது, அம்பேத்கரும் கிடையாது. எனவே பாப்பாபட்டி கீரிப்பட்டியும் கிடையாது. அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் அரச பரம்பரையினர் படிக்கவேண்டிய கட்டாயமோ, தேவர் குருபூஜைக்கு போஸ்டர் அடிக்க வேண்டிய தேவையோ, அப்புறம் அடிபட வேண்டிய அவசியமோ கிடையாது. என்ன செய்வது, வரலாறு என்பது வேந்தர் பரம்பரைகள் விரும்பும் வழியில் செல்வதில்லையே!
சென்னை சட்டக்கல்லூரி பிரச்சினையையே எடுத்துக் கொள்ளுங்களேன். புவனேசுவரி என்ற மாதர் குல மாணிக்கத்தை மகளிர் அணித் தலைவியாகவும், கார்த்திக் போன்ற தெளிந்த சிந்தனையாளர்களை கட்சித்தலைவர்களாகவும் கொண்டாட முடிந்த மூவேந்தர் வாரிசுகளான மாணவர்களுக்கு அம்பேத்கர் பெயரைப் போட்டு போஸ்டர் அடிப்பது கவுரக் குறைச்சலாக பட்டிருக்கிறது. எது கவுரவம் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்கக் கூடாதா என்ன?
வெள்ளையனை எதிர்த்துப் போராடித் தூக்கில் தொங்குவது மருது சகோதரர்களுக்கு கவுரவமாகப் பட்டிருக்கிறது. அந்த மருது சகோதரர்களைத் தோற்கடிப்பதற்கு வெள்ளைக்காரனுக்கு வழி சொல்லிக் கொடுத்து, படை கொடுத்து, அவன் படைகளுக்கு சோறும் ஆக்கிப் போட்ட புதுக்கோட்டை தொண்டைமானுக்கு, வெள்ளைக்காரன் கொடுத்த மெடலைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வது கவுரவமாக இருந்திருக்கிறது. வெள்ளைக்கார துரையால் வளர்க்கப்பட்ட இந்த தொண்டைமானின் இளவல், அந்த துரையைத்தான் அப்பா என்று கூப்பிடுவானாம். அவன் மகனுக்கு அதுதான் கவுரவமாகப் பட்டிருக்கிறது. இப்படி வெள்ளைக்காரனிடம் அப்பன் பதவியையே பறிகொடுத்த தொண்டைமான், சின்ன மருதுவை நாய் என்று ஏசியிருக்கிறான். இவையெல்லாம் கவுரவப் பிரச்சினை குறித்த சில வரலாற்று விவரங்கள்.
சரி நிகழ்காலத்துக்கு வருவோம். புவனேசுவரியை மகளிரணித் தலைவியாகக் கொண்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர், தேவர் குருபூசைக்கு ஒட்டுவால் மாதிரி மருதிருவர் குருபூசை என்று ஒரு கூத்தையும் கடந்த 5 ஆண்டுகளாக அரங்கேற்றத் தொடங்கியிருக்கின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கம் படம் பொறித்த மஞ்சள் கொடிகள், “”தேவர் வாழ்க! தேவர் படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா! பனமரத்துக்கே வவ்வாலா! தேவருக்கே சவாலா!” என்ற தேவர் குருபூசையின் கொள்கை முழக்கங்கள்தான் மருதிருவர் குருபூசைக்கும்!
மருது சகோதரர்கள் அகமுடையார் சாதியில் பிறந்தவர்கள். எனினும் உடம்பில் ஐரோப்பிய ரத்தம் ஓடும் ஆங்கிலேய கைக்கூலிகளைத் தவிர மற்ற அனைவரையும் ஒரே மக்களாகக் கருதி, அணிதிரட்டியவர்கள். மேலும் வேலைக்காரர்களாக இருந்து பாளையக்காரர்களாக மாறியவர்கள் என்பதால், அவர்கள் மூவேந்தர் பரம்பரைக்குரிய தகுதி இல்லாதவர்கள். எனவே வேந்தர் பரம்பரையில் வந்த சேதுராமன், புவனேசுவரி அம்மையார் போன்றவர்கள் மருதிருவருக்கு குருபூசை நடத்துவது தங்களுடைய கவுரவத்துக்கு இழுக்கு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பக்கத்திலேயே இருக்கிறது புதுக்கோட்டை! விஜரகுநாத தொண்டைமான், முக்குலத்தில் ஒர் குலமான புதுக்கோட்டை கள்ளர் சாதியைச் சேர்ந்தவர். ஒரிஜினல் ஆண்ட பரம்பரை. மூவேந்தர் பரம்பரையின் கவுரவத்துக்கு ஏற்றவர்.
எனவே அடுத்த ஆண்டு முதல் மருதிருவர் குருபூசையைக் கைவிடுமாறும், புவனேசுவரி அம்மையார் தலைமையில் தொண்டைமான் குருபூஜையை துவக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். சிறப்பு விருந்தினர்களாக மன்மோகன் சிங்கையும் சிதம்பரத்தையும் அழைக்கலாம். தட்டாமல் வருவார்கள்.
– புதிய கலாச்சாரம், ஜனவரி – 2010
தொடர்புடைய பதிவுகள்
என்ன பண்றது எல்லாம் இருட்டும் வெளிச்சத்துக்கு வருது சரி. அடுத்து ஷகிலா சரி அவங்க தன எதாவது போஸ்ட் கொடுக்க சொல்லுங்
Good sarcasm. Love the article.
புரிய வேண்டியவர்கள் போதையில் இருப்பது போல் இருக்குரார்கள்…
naye…thil irunthaal neril solli paar…yengeyo irunthu kondu netil ezthuthathe
ada nama ellam tahamilan da venna. unga sathi veriya vittiu velaya paruinga.
தேவமாரு தளபதிக எல்லாம் புரட்சித் தலைவியோட காலுலயும், கூடப் பிறக்காத சகோதரியோட முன்னாலயும் விழுந்து கிடந்தாக. இப்ப பூனைக்கண் அம்மாவ தலைவியாக்கிருக்காக. நல்ல பரிணாம வளர்ச்சிடே. இதுல இவுகதான் வீராதி வீரன்னு ஒரு பேச்சு வேற!
பொன் முத்துராமலிங்க தேவரை வசைபாடல் அல்லது விபூதியால் வந்த விபரீதம்
—————————————————————————————————————————————
முற்போக்குவாதிகளின் தற்போதய டார்கெட், தேவர் அவர்கள்!!! நானும் ஏனென்று பலமுறை யோசித்தேன். முதலில் கொஞ்சம் குழப்பம், பின்பு புரிந்தது!
வெலாவாரியாக வருகிறேன்! ஆனால் முதலில், முற்போக்கு மற்றும் பிற்போக்கு என்பதென்றால் என்னவென்பதை நான் முன்னமே எழுதி இருந்ததை மறுபடியும் வலியுறுத்துகிறேன்!
முற்போக்கு என்றால் சிறுநீர் கழித்தல், பிற்போக்கு என்றால் மலம் கழித்தல்! இதைத்தவிர நம்ம அறிவிஜீவி வேடதாரிகள் சொல்லும் முற்போக்கு மற்றும் பிற்போக்கிற்கு வேறு அர்த்தம் கிடையாது! இருந்தாலும் இவர்களின் அகாராதியில் வேறொரு அர்த்தம் உண்டு!
முர்போக்க்கெனப்படுவது யாதெனின் நமக்கு சம்மந்தேமே இல்லாத, ஏதோ தேசத்தில் யாருக்காகவோ யவரோ செய்த செயல்களை சுட்டிக்காட்டி இதுதான் சரி நாம் செய்வதெல்லாம் தவறு என்று தன் மக்களையும், கலாசாரங்களையும், நம்பிக்கைகளையும், கேவலமாக திட்டி, அந்த ஏதோ தேசத்தின் உள்ள வாயில் நுழையமுடியாத பெயர்கொண்ட சிலரின் படங்களை பச்சை குத்திக்கொண்டு அவரே நமக்கும் தலைவர், மக்களே நம்புங்கள் சொர்க்கம் மிக அருகில் என்று பொய் சொல்லி மக்களை குழப்பி ஆள் திரட்டுவது!
பிர்போக்க்கெனப்படுவது யாதெனின், இந்த பைத்தியக்காரத்தனத்தை சுட்டிக்காட்டி பேசுபவர்களை திட்ட பயன்படுவது! அவ்வளவே!
சரி விடயத்திற்கு வருவோம், பிரெச்சனை எங்கே உள்ளது என்பது இன்னுமா புரியவில்லை? மேல சொன்ன அடையாளங்கள் எந்த அளவு முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு பொருந்துகிறது என்று முதலில் பார்ப்போம்!
அடையாளம் ஒன்று : இவர்களின் இறக்குமதி சரக்கை என்றுமே ஏற்காதவர்! இவர்கள் சொல்லும் சித்தாந்தங்கள் வன்முறையை தூண்டுபவை, மக்களை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லக்குடியவை என்பதை நன்கு உணர்ந்தவர்!
அடையாளம் இரண்டு: இந்திய தேசியம் மற்றும் இறையாண்மையை முற்றிலும் நம்பியவர், மற்றும் அதை காக்க தான் சார்ந்த சமூக மக்களை ஊக்கப்படுத்தியவர்!
அடையாளம் மூன்று: முற்போக்கு, பிற்போக்கு என்று சொல்லி வந்தவர்களை இனம்கண்டு, ஒன்று இவர்கள் ஆள் பிடிக்கும் கூட்டம் அல்லது மக்களை பிளவிட்டு சொத்து சேர்க்கும் கூட்டம் என்பதை முதலிலேயே உணர்ந்து இவர்களிடம் சேராது ஒதுங்கி நின்றவர்!
அடையாளம் நான்கு: ஒழுக்கத்தின் உதாரணம்! அநாகரீகமாக அசிங்கமாக காழ்ப்புணர்ச்சியுடன் யாரையும் சாடாதவர்! முக்கியமாக எதிர்க்கருத்துள்ளவர்களை
கண்டபடி பேசி அசிங்கப்படுத்தாதவர்!
அடையாளம் ஐந்து: காலத்தின் கோலத்தால் நடந்த சில வரலாற்று பிழைகளை அதன்மூலம் உருவான சமூக தவறுகளை அதே வன்முரைக்கொண்டு மாற்ற முடியாது என்று உணர்ந்து, நல்லிணக்கம் ஒன்றே , அதுவும் உணர்ச்சிகளை கிளப்பாமல் உருவாகும் நல்லிணக்கம் ஒன்றே நிலையான நீதியினை தரும்
என்பதையும் உணர்ந்தவர்!
அடையாளம் ஆறு: (இதுதான் விபரீதம்): தான் சார்ந்த கலாசாரத்தை மதித்து, அதை பின்பற்றுவதில் எந்த ஒரு கேவலமும் இல்லை என்று உரத்த குரலில் கூறி, அதன் அடையாளமாக, திருநீர் இட்டு, தேசியமும் தெய்வீகமும் ஒன்றென முழக்கமிட்டவர்!
மேலே கூறிய தேவரின் ஆறு ஆடயாளங்களும்தான் நம் முற்போக்கு நண்பர்களுக்கு ஏற்கும்படியாக இல்லை! இருந்தாலும், எப்பொழுதும், என்னதான் வசவுகளை எய்தாலும், எவ்வளவுதான் கேவலமாக எய்தாலும், எதிர்ப்பு என்பதே வாராத ஒரு கட்டமைப்பை மட்டுமே திட்டி தங்கள் பொழுதை கழிக்கும் நம்முடைய பயந்தான்கொளி போலி முர்ப்போக்குவாதிகள், கடைசியாக தேவரையும் பழிக்க முற்பட்டார்களேன்றால், அதற்க்கு ஒரே காரணம் அவரின்
அடையாளம் நம்பர் ஆறுதான்!
ஒரு புதிய கலாசாரத்தன்மையை, ஒரு புதிய வாழ்க்கை சூழலை (அது எவ்வளவு அநாகரீக தன்மையுடையதாய் இருந்தாலும், எவ்வளவு அராஜகமாக இருந்தாலும்) காலம்காலமாக இருந்த ஒரு நாகரீக அமைப்பின்மேல் சுமத்த துடிக்கும் எந்த ஒரு கூட்டமும் முதலில் செய்வது, அதன் மனவடிவுங்களையும் அதன் மூலம் உருவான தொன்று தொட்ட செயல் வடிவங்களையும் வேரறுக்க செய்வது!
அதற்க்கு அவர்கள் மேற்கொள்ளும் உத்தி, நம்பிக்கை சாடல், திரிபு, வன்முறை தூண்டல், புதுமரபின் உயர்சொல்லல் மற்றும் அதன் கீழ்ப்படிதலால் ஒரு அற்புதமான சமூக சுழல் உருவாகக்கூடும் என்ற ஒரு மாயத்தோற்றம் உருவாக்குதல்! மேலே சொன்னவைகளில் மிக முக்கியமானது, நம்பிக்கை சாடல்!!
இதுதான் முதல் படி! இது மாரவில்லைஎன்றால் வேறு எதுவும் நகராது என்பதை நன்கு உணர்ந்தவர்கள்!
இதை சரியாக செய்யமுடியாததால்தான் இன்றைக்கு இடிந்து விழுந்த கம்யூனிச தேசங்களில் மத நம்பிக்கை கொடி கட்டி பறக்கிறது! குறிப்பாக மதம் சார்ந்த மக்கள் மிகவும் தாக்கப்பட்ட, கொல்லப்பட்ட ரஷ்யாவில் இன்று ஒர்தொடாக்ஸ் சர்ச் கொடி கட்டி பறக்கிறது! போலந்து, ருமானியா, உக்ரைன் போன்ற பல
தேசங்களிலும் நிலைமை இதேதான்! புடின் முதற்கொண்டு அன்றைய சோவியத் வெளி உறவுத்துறை மந்திரியாக கொடிகட்டி பரந்த, கம்முனிச கடவுள் மறுப்பு கோட்பாடுகளை ஏற்ற, ஜார்ஜியன் ஆன எடுவார்ட் சேவர்நட்சேவே வரை வாரம் தவறாமல் சர்ச்சுக்கு செல்கிறார்கள்!
அங்கே நாம் ஏன் போகவேண்டும், தமிழ் நாட்டின் நிலைமையும் ஏறக்குறைய இதுதான். இந்தியாவிலே அதிகமான கோவில் ஆராதனைகள் நடக்கும் இடம், கோவில்கள் நிரம்பும் இடம், ஆந்திரத்திற்கு பிறகு தமிழகம்தான்! பெரியார் சொல்லியும்கூட இவ்வளவு கூட்டமென்றால், ஸ்டாலின் பெயரைச்சொல்லி
மாவோவின் பெயரைச்சொல்லி வியாபாரம் நடத்தும் உங்களால் என்ன செய்யமுடியும்? இதை உணர்ந்துதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (உங்கள் மொழியில் போலி கம்யூனிஸ்ட்) தலைவர் பிரகாஷ் கரட் போன வாரம் விட்டார் பாருங்கள் ஒரு அறிக்கையை. அதன் சாராம்சம், மத நம்பிக்கை உள்ளவர்களை நாங்கள் கட்ச்சியில் சேர்ப்போம், நம்ம்பிக்கையுடன் இருக்கலாம், கோவிலுக்கோ, மசூதிக்கோ, சர்ச்சுக்கோ போகலாம், கடவுளார்களை வணங்கலாம், ஆனால் கம்முனிஸ்டு தலைமைக்கு உட்பட்டு மட்டும் நடந்து கொள்ளவேண்டும்!!!!!!! இது எப்படி இருக்கு!
இந்த காம்பரமைஸ்ஐ செய்ய மனமில்லாத நீங்கள், அதாவது உங்கள் ஒரிஜினல் கம்யூனிஸ்ட் கூட்டம், வேறு வழியில்லாமல், ஸ்டாலின் மற்றும் மாவோ புகழ் பாடலுடன் பெரியாரின் புகழ் பாடலையும் பாட தொடங்கியிருக்குரீர்கள்!! அதாவது உங்கள் வியாபாரத்திற்கு காவலுக்காக, எங்கே நாமும் பிரகாஷ் காரத் காட்டிய வழியில் போகப்போகிறோமா என்று பயந்து கடைசி ஆயுதமாக பெரியாரின் பெயரை உள்ள்வாங்கி, திராவிடர் கழகம் என்பது நீங்களா அவர்களா என்ற நிலைமைக்கு வந்திருக்கிறீர்கள்! இதற்க்கு வலு சேர்பதற்கு, தமிழ் தேசியத்தை அப்பப்போ தொட்டுக்கொண்டு, விடுதலை புலிகளை எதிர்ப்பதுபோல எதிர்த்து, அதே சமயம் அவர்களின் தலைமையின் படங்களையும் உங்கள் தளத்தில் போட்டு, ஒரு வித கபட வேடதாரிகளாக உலவுகிறீர்கள்!
சொல்லவருவது என்னவென்றால், அந்நிய சித்தாந்தங்களை, அவர்கள் எழுப்பிய நாகரீகத்தை இந்த மண்ணில் உள்ள சமூகங்களின் மேல் இறக்குவதற்கு தடையாக இருப்பவைகள் எதுவாக இருந்தாலும் அதை பழித்து தூற்றி ஒதுங்க வைப்பது என்ற வழிமுறையில், முத்துராமலிங்க தேவர் என்ற ஒரு மனிதர், தடையாக இருப்பதாக நீங்கள் கருதுவதால், அதுவும், அவர் தன்னுடைய கலாசார அடையாளங்களை துறக்காமல், பழிக்காமல் உங்களைப்போல அதை எதிர்த்து ஒத்து ஊதாமல்,மேலும், அதைப்பார்த்த அவரைச்சார்ந்த ஒரு பெரும் சமூகமும் அதையே செய்வதால், உங்களுக்கு வருகுதுபார் கடுங்கோபம்!!!!
முத்துராமலிங்க தேவர் மட்டும் தெய்வீகமும் தேசியமும் ஒன்றென்ன கூறாமல் இருந்திருந்தால், மேலும் முக்கியமாக திருநீரிடாமல் இருந்திருந்தால், அவருக்கும் ஒரு முற்போக்கு சாயம் இட்டு உங்களின் கடுவுளார் வரிசையில் அவருக்கு இடம் அளித்த்ருப்பீர்கள்!!! ஆனால் பாருங்கள் அவர் அப்படி செய்யவில்லை! செய்யவும் மாட்டார்! அது புரிந்த உங்களுக்கு கோபம்!
ஆகமொத்தம், மற்ற எதவும் உங்களுக்கு கணக்கில்லை, விபூதி இட்டதால் மட்டுமே வந்த விபரீதம் இது, விபூதி இட்டதால் மட்டுமே அவருக்கு நீங்கள் கொடுக்கும் சாபம் இது!!!!
(தேவரை நீங்கள் திட்டினால் அந்த அற்புதமான உண்மையான தேசியவாதிக்கு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை, இருந்தாலும் என் மனதில் தோன்றியதை, அதுவும் உங்களையும் உங்களைப்போன்ற இந்திய பண்பாட்டின்மேல் வெறிகொண்டு தாக்கி இகழ்ந்து தூற்றும் மற்றவர்களையும் இணைக்கும் மையப்புள்ளி எது என்பதை ஒரு சிலருக்காவது அறியவைக்கும் பொருட்டே இதை எழுதினேன்)
நன்றி
ஹே வு இஸ் திஸ் ‘NO’ மேன் வித் பட்டையும் கொட்டையும்!
அட இப்பத்தான் கொஞ்ச நாளா பார்ப்பனர் தவிர்த்த ‘சாதி’ வெறி பிடித்த மற்றவரையும் வினவு காய்ச்சுவதை படித்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறோம், நீங்கள் வேறு ‘பயிரமுத்து’வுக்கு தம்பி போல் இங்கு வந்து குழப்ப வேண்டாம்!
மற்றப்படி இந்த கட்டுரையில் எங்கே முத்துராமலிங்க த்தேவரை பற்றி எழுதி இருக்கிறார்கள்? பாலியல் தொழிலாளி ‘புவனேஸ்வரி’ மற்றும் ‘சேதுராம தேவர் பற்றியும் இச்சமூகத்தில் புழுத்து நாறி கொண்டிருக்கும் சாதி வெறி பற்றியும் தானே எழுதி இருக்கிறார்கள். இந்த டுபாகூர் தேசியம் தெய்விகம் பற்றி எல்லாம் வேறு தளத்தில் விவாதிக்கலாம் தோழரே. இப்போதைக்கு கட்டுரையின் மையமான கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்கவும்.
ada pulikasi nee pulikasi ella pulltha kasi
‘நோ’ என்ற வீர மறவனின் கட்டுரைக்கு நன்றி.
@NO
///////அடையாளம் ஒன்று : இவர்களின் இறக்குமதி சரக்கை என்றுமே ஏற்காதவர்! இவர்கள் சொல்லும் சித்தாந்தங்கள் வன்முறையை தூண்டுபவை, மக்களை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லக்குடியவை என்பதை நன்கு உணர்ந்தவர்!
///////////////////////////////////////
ஆமாம் இம்மானுவேலை கொலை செய்தது வன்முறை ஆகாது அல்லவா ?..
///////////////////////////////////////
அடையாளம் இரண்டு: இந்திய தேசியம் மற்றும் இறையாண்மையை முற்றிலும் நம்பியவர், மற்றும் அதை காக்க தான் சார்ந்த சமூக மக்களை ஊக்கப்படுத்தியவர்!
/////////////////////////////////////////
அது என்ன இறையாண்மை ?..
எப்படி தமது ஆயுதங்களை அளித்து இந்தியா ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க ஆயுதங்களை கொடுத்து விட்டு இலங்கையின் இறையாண்மையை முற்றிலும் நம்பியது போல
இங்கே தாழ்த்தப்பட்டோர்களுக்கு எதிராக தேவர்களைத் தூண்டி விட்டு தேசிய தெய்வீக இறையாண்மையை காத்தாரே ?.. அந்த இறையாண்மையா ?.
//////////////////////////////////////////////////////////////
அடையாளம் மூன்று: முற்போக்கு, பிற்போக்கு என்று சொல்லி வந்தவர்களை இனம்கண்டு, ஒன்று இவர்கள் ஆள் பிடிக்கும் கூட்டம் அல்லது மக்களை பிளவிட்டு சொத்து சேர்க்கும் கூட்டம் என்பதை முதலிலேயே உணர்ந்து இவர்களிடம் சேராது ஒதுங்கி நின்றவர்!
/////////////////////////////////////////////////////////////////
ஆமாம் ஒதுங்கி நின்று தனியாக சாதி வெறியாட்டம் நடத்திய நடுநிலை வாதி தான் தேவரய்யா ..
////////////////////////////////////////////////////////////
அடையாளம் நான்கு: ஒழுக்கத்தின் உதாரணம்! அநாகரீகமாக அசிங்கமாக காழ்ப்புணர்ச்சியுடன் யாரையும் சாடாதவர்! முக்கியமாக எதிர்க்கருத்துள்ளவர்களை
கண்டபடி பேசி அசிங்கப்படுத்தாதவர்!
///////////////////////////////////////////////////////////////////////
காமராஜரை , இம்மானுவேலை சாதி ரீதியாக வர்க்க ரீதியாக பேசியபோது அது நாற வாயா ?. இல்லை மற்ற வேரங்களில் அது வேற வாயா ?
அவரது நாகரீகம் பளபள என்று தெரிகிறது …
////////////////////////////////////////////////////////////
அடையாளம் ஐந்து: காலத்தின் கோலத்தால் நடந்த சில வரலாற்று பிழைகளை அதன்மூலம் உருவான சமூக தவறுகளை அதே வன்முரைக்கொண்டு மாற்ற முடியாது என்று உணர்ந்து, நல்லிணக்கம் ஒன்றே , அதுவும் உணர்ச்சிகளை கிளப்பாமல் உருவாகும் நல்லிணக்கம் ஒன்றே நிலையான நீதியினை தரும் என்பதையும் உணர்ந்தவர்!
////////////////////////////////////////////////////////////////////////////////
நல்லிணக்கனதின் அடையாளமாகத்தான் இம்மனுவேலைக் கொன்றாரா ?..
//////////////////////////////////////////////////////
அடையாளம் ஆறு: (இதுதான் விபரீதம்): தான் சார்ந்த கலாசாரத்தை மதித்து, அதை பின்பற்றுவதில் எந்த ஒரு கேவலமும் இல்லை என்று உரத்த குரலில் கூறி, அதன் அடையாளமாக, திருநீர் இட்டு, தேசியமும் தெய்வீகமும் ஒன்றென முழக்கமிட்டவர்!
//////////////////////////////////////////////////////////////
ஆமாம் .. இந்த தேசியமும் தெய்வீகமும் பழைய கலாச்சாரமும் தானே அவரது சாதியை உயர்த்திப் பிடித்து மற்றவர்களை இழிவுபடுத்தியது. அதனை எப்படி விட்டுவிட்டு வெளியே வருவார் தேவர்..
/////////////////////////////////////////
முடிவாக … தேவர் நெற்றியில் பட்டை இருப்பதை பார்க்கும் போது என்ன தோன்றுகிறது தெரியுமா ?..
பன்றியை குளிப்பாட்டி பட்டை போட்டு நடு வீதியில் நிறுத்தினாலும் அது மீண்டும் எதையோ திங்கத் தான் போகுமாம்.
///////////////////////////////////////////////////////////
அன்பான நண்பர் திரு புலிகேசி,
I am just an ordinary nobody
So dont you please worry
If at all you have any query
on the reasons of my anti-vinavu flurry
Why dont you please hurry
and read their leaders murderous glories
The lies and farce that they have spelt
Is something that this humanity has never before felt
With such a father for a figure
And with such a hate as their mother
Are they the worthy ones to comment
After loading this humanity with such a torment
yet they come in their red jackboots
trying their best to twist all truths
The blood they spilt all these years
is more than human race’s combined tears
the agony they caused to all humanity
is nothing but an evil beings futility
yet they come again and again
in various garbs to establish their rein
yet you sir are still very blind
and ask me if i have something to grind
with such a story hehind
it is not me that is a fiend
Pulikesi dear Pulikesi
தயவு செய்து கொஞ்சம் யோசி
விடங்கள் வேடம்போட்டு வந்தாலும் வாய்க்கு இனிய பண்டமாகாது
நிஜங்கள் கண்முன்னே இருக்க மாற்றாரை விமர்சிக்க இவர்களுக்கு தகுதியும் கிடையாது
மய்யக்கருத்தின் முழு அர்த்தத்தை புரிந்துகொள்ளாதவர் நீங்கள். இந்த கட்டுரை மட்டுமே சார்ந்தது எனது பதில் என்றும் பாதியை மட்டுமே புரிந்து கொண்டவர் நீங்கள். இந்த பாதி புரிதலின் விளைவுதான் உங்களின் இந்த பதில் மற்றும் அறிவுரை!
நண்பரே, உங்களைப்போல சிலர் இருக்கும் வரை, அதாவது இவர்களின் உண்மையான குறிக்கோளை அறியாமல் ஏதோ கனவுலகில் உங்களைப்போன்ற சில நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை, மறுபடியும் உள்ளே நுழைவதற்கு இவர்களுக்கு ஒரு சிறு இடைவெளி உள்ளது! இந்த ஆபத்தை ஆபத்தென்று சொல்லுவதர்க்காகத்தான் அப்பப்போ இது போல சில பதில்கள்!
நன்றி
அவர்களுடைய குறிக்கோள் கிடக்கட்டும் உங்கள் குறிக்கோள் என்ன ? இங்கு தமிழகத்தில் சாதி வெறி கொண்டு வாழும் தேவர் சாதியினர் பாவம் பசுக்களா? அல்லது கழுவி புறம் தள்ள பட வேண்டியவர்களா? குறிப்பாய் சாதி இந்த சமூகத்தில் இருக்க வேண்டுமா அல்லது ஒழிக்கப்பட வேண்டுமா? உங்கள் ஆங்கில கவிதையில் உள்ளது போல் மனித குலத்துக்கே எதிராக கொலை வெறியாட்டம் நிகழ்த்திய அத்தனை தேவர் இன குண்டர்கள் மற்றும் ரௌடிகளை காமராசர் ஏரியில் ஓட விட்டு சுட்டு கொன்றது போல் கொன்று விடலாமா? இந்த குண்டர் லிஸ்டில் முத்துராமலிங்க தேவரும் அடக்கம்! எனவே அவருக்கு குரு பூஜை செய்யும் அனைவரையும் இந்த தொகுப்புக்குள் கொண்டு வந்து விடலாம். 🙂
நீண்ட இடைவெளிக்கு அப்புறம் வந்தாலும் சரியான கட்டுரை.
அதில் குறிப்பிட்டுள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (வாண்டையார் ), இல்லை அது மூவேந்தர் முன்னணி கழகம் (சேதுராமன்). இரண்டுக்கும் பாரிய வேறுபாடுகள் ஒன்றும் இல்லை.
மருதிருவரை யாரும் கொண்டாடலாம்.நீங்கள் சென்னையில்,தஞ்சையில்,திருச்சியில்,சிவகங்கையில் கொண்டாடுங்கள்.யார் தடுத்தார்கள்.. மருதிருவரை,கப்பலோட்டிய தமிழனை,பகத்சிங்கை,பெரியாரை கொண்டாடுங்கள்,விழா எடுங்கள்.
அதை விடுத்து மருதிருவருக்கு அவர்கள் கொண்டாடுகிறார்கள்,சாதி விழாவாக மாறுகிறது என்றால் என்ன அர்த்தம்.உங்களிடம் வம்புக்கு இழுக்கும் நோக்கம் மட்டுமே இருக்கிறது.அதுதான் கீழ்க்கண்டதில் வெளிப்படுகிறது.
‘மருது சகோதரர்கள் அகமுடையார் சாதியில் பிறந்தவர்கள். எனினும் உடம்பில் ஐரோப்பிய ரத்தம் ஓடும் ஆங்கிலேய கைக்கூலிகளைத் தவிர மற்ற அனைவரையும் ஒரே மக்களாகக் கருதி, அணிதிரட்டியவர்கள். மேலும் வேலைக்காரர்களாக இருந்து பாளையக்காரர்களாக மாறியவர்கள் என்பதால், அவர்கள் மூவேந்தர் பரம்பரைக்குரிய தகுதி இல்லாதவர்கள். எனவே வேந்தர் பரம்பரையில் வந்த சேதுராமன், புவனேசுவரி அம்மையார் போன்றவர்கள் மருதிருவருக்கு குருபூசை நடத்துவது தங்களுடைய கவுரவத்துக்கு இழுக்கு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பக்கத்திலேயே இருக்கிறது புதுக்கோட்டை! விஜரகுநாத தொண்டைமான், முக்குலத்தில் ஒர் குலமான புதுக்கோட்டை கள்ளர் சாதியைச் சேர்ந்தவர். ஒரிஜினல் ஆண்ட பரம்பரை. மூவேந்தர் பரம்பரையின் கவுரவத்துக்கு ஏற்றவர்.
எனவே அடுத்த ஆண்டு முதல் மருதிருவர் குருபூசையைக் கைவிடுமாறும், புவனேசுவரி அம்மையார் தலைமையில் தொண்டைமான் குருபூஜையை துவக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். சிறப்பு விருந்தினர்களாக மன்மோகன் சிங்கையும் சிதம்பரத்தையும் அழைக்கலாம். தட்டாமல் வருவார்கள்’.
சிவகங்கையில் பெரிய அளவில் மருதிருவரைப் போற்றி விழா எடுங்கள்.தமிழகமெங்கும் எடுங்கள்.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு,
பூலித்தேவனுக்கு,சுந்தரலிங்கத்திற்கு விழா எடுங்கள்.சிபிஎம் பகத்சிங்கை கொண்டாடினால் நீங்களும் கொண்டாடுங்கள்.பிள்ளைமார் சங்கம் கப்பலோட்டிய தமிழரை கொண்டாடினால் நீங்களும் கொண்டாடுங்கள்.
காலம்சென்ற தேவரய்யாவின் பெயரில்
ஒரு ஜாதி கட்சி தொடங்கவே கூடாது.
இதுல ஒரு தே… ஒரு பிரச்சாரமா?
மானம் கெட்ட பிழைப்க்கு செத்து தொலைங்கட நாய்களா…………
இவன் ….. தேசபற்று மிககவன்
புவனேஸ்வரி ஒரு தேவ்………………….. லோகமங்கை அவளை பேசுவது நமவரை நாமே அசிங்கபதுவ்தோகும்
தேவர் சாதி வெறியர்கள் என்ன பெரிய வீரர்களா ? சி சீ .. அம்மா ஜெயாவின் காலில் விழுந்து விழுந்து எழும்புகிறார் மாவீரன் பன்னீர் செல்வம் .மீதமுள்ள தேவர் சாதி வெறியர்கள் எல்லாம் புவனேஸ்வரிக்கு காவல் காக்க போகிறர்கள் .நல்ல முன்னேறற்றம் .தேவர் ஐயா இருந்திருதால் பூரித்து போய் இருப்பார் .
எதற்காக அய்யா இந்த கட்டுரை? இருக்கிற சாதி சண்டைகள் போதாது என்று, நீர் வேறு இந்த தேசிய ஒற்றுமை ஓங்க பயனுள்ள கட்டுரை எழுதி உள்ளீர்.
அடுத்த தமிழக முதல்வர் இவர்தான் வாழ்க புவநேஸ்வரியம்மா. நம் நாடு மேலும் புனிதம் அடையும்
வினவு தளத்திற்கு ஒரு அன்பு வேண்டுகோள். குறிப்பிடத்தக்க பின்னூட்டங்களின் பின்னர் இறுதியாக வினவின் கருத்தையையும் ரத்தினச்சுருக்கமாக அளிப்பது பதிவிற்கும்,பின்நூட்டங்களிற்கும் ஒரு முத்தாய்ப்பாக அமையும்.
நல்லதொரு வேண்டுகோள்.அது பின்னூட்டம் இடுபவர்கள் தங்களின் கருத்தை சீர் தூக்கி பார்க்கவும் அவர்களின் கருத்து மீதான உங்களின் கருத்து அவர்களுக்கு பின்னூட்ட மிட ஒரு ஊக்கமாகவும் மேலும் விவாதத்தில் மையமான சில விடயங்கள் விவாதிக்க படவும் உபயோகமாக இருக்கும் .
amma
ஏண்டா நாதாரி, உனக்கு இப்படி ஒரு பிழைப்பு…
எவ்வித சம்பந்தமுமில்லை.விஜய நகர அந்நிய ஆட்சியின்போது சேதுபதி மன்னர்களாக இருந்தவர்கள்.மூவேந்தர்கள் யார் என்று அறிய வேண்டுமென்றால் சங்க இலக்கியங்களைப் படியுங்கள் கம்ப ராமாயணம் உட்பட
மூவேந்தருக்கும் முக்குலதொருக்கும் என்ன சம்மந்தம்?
ஐயா சேது ராமர் , புவனேஸ்வரியை வைத்து தொழில் ஏதும் செய்ய போகிறாரா …
ஐயா அவர்கள் புவனேஸ்வரி யை வைத்து கொண்டு படுக்கையை காட்டி , எலெக்சன் ல சீட் வாங்கலாம் என்று கணக்கு போட்டு காய் அடித்திரூக்கிறார்,
மன்னிக்கவும் காய் நகர்த்திருக்கிறார்
எதை வைத்து பூனைக்கண் புவனேஸ்வரிக்கு தேவர் பேரவையில் பதவி கொடுத்திருக்கிறார் , சேது ராமன், அப்படி என்றால் இனி தமிழ் நாட்டில் எல்லா [obscured] தேவர் பேரவையில் இடம் உண்டு என்று நினைக்கிறோம் .. நல்ல சாதி தான் நீங்கள் ….
ஏன் புவனேஸ்வரி சீட் கொடுத்த என்ன தப்பு .புவனேஸ்வரி தேவடியாஎல் என்றல் அவகிட்ட போய்ட்டுவண்ட்த எல்லோரும் தேவடியான் . அவர் ஓருsex வோர்கர் .அதனால் என்ன தப்பு
புவனேஸ்வரி திருமா கட்சியுல சேந்துருன்தா அவங்க நல்லவங்க ,இப்ப அவங்க தேவர் கட்சியுல ..சேர்ந்ததாலே?
கட்சி ஆரம்பிங்க ….கொடி பிடிங்க ஒன்னும் ஆக போரது இல்ல…..கடைசி வரைக்கும் பறையன், மத்த ஜாதிக்கு அடிமை தான்.உன்க்கு ஜாதி ஒழியும்னு ஆர்வம் இல்ல….மத்த ஜாதி பொல நம்ம ஜாதிக்கு மவுசு இல்லையே என்ற ஆதங்கம் ….ஒன்னும் பன்ன முடியாது…அது உங்க விதி……………………டா
பாரதிராஜா,வைரமுத்து,கருணாஸ்,விவேக்,இலங்கை ஆறுமுகத்தொண்டைமான்…இவர்கள் அனைவரும் முக்குலத்தோர் என்ற சாதிவெறியர்கள்,மேலும் இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் மற்ற சாதி மக்களை அடக்கி ஆள ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் உடன் எளிதில் தங்கள் சாதி கூட்டத்தை காண்பித்து கூட்டு வைத்து முன்னேற துடிக்கும் சுயநலவாதிகள். இன்றைக்கு இவர்களை போன்றவர்களால் தான் தமிழ்நாடு சாதியின் பிடியில் இருண்டு கிடக்கிறது.
மற்ற சாதி மக்கள் இணக்கமாக வாழ நினைத்தாலும் இவர்களை போன்றவர்கள் சாதி என்ற அடிப்படையில் அரசியலை கைக்குள் கொண்டு வரதுடிப்பதும், சில நேரங்களில் கருணாநிதி போன்ற ஆடகள் இவர்களை பயன்படுத்தி கொள்வதும் தாராளமாக நடந்திருக்கிறது. இவர்களை பார்க்கும் மற்ற சாதி மக்களும் அவர்களுக்கு சாதி பற்றி பெரிய விழிப்புணர்வு இல்லாவிட்டாலும் கூட சாதி அடிப்படையில் போக நினைக்கும் அளவு இவர்களின் செய்கை இருக்கிறது. பாரதிராஜா எடுக்கும் படங்களில் அவரின் சாதி வீரத்தை! காட்டுவது போல் இருக்கும். வைரமுத்துவின் கவிதைகள் கருவாச்சி காவியம் என்ற பெயரிலும்,கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற பெயரிலும் ஒன்றுக்கும் உதவாத இவர்களது வட்டாரத்தை பெரிதாக ஆக்கி பூச்சாண்டி காட்டுவதாக இருக்கும்.
இப்படி கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் தங்களது சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த பயன்படுத்திக் கொள்பவர்கள்தான் இவர்கள். ஒரு கோமாளி விவேக் கூட ஒரு சந்தர்ப்பத்தில் 1 கோடி தேவர் மக்கள் எனது பின்னால் என்று சொல்ல முடிகிறது என்றால், இவரின் மனோபாவம் என்ன? ஆனால் இவரது கோமாளித்தனத்தை காசு கொடுத்து பார்ப்பது எல்லாம் சாதிபேதமில்லாத தமிழ்மக்கள். அதாவது இந்த சாதிக்காரர்களின் பிடியில் ஜெயலலிதாவும்(சசிகலா கூட்டம்),அழகிரி( சுற்றியிருக்கு ரவுடி கூட்டம் அனைத்தும் இந்த சாதிக்காரர்கள் தான்) இப்படியாக பலமுனைகளிலும் அரசு அதிகாரத்தை ஆக்கிரமித்து வளரத் துடிக்கும் கூட்டம் இது. இவர்கள் யாரையும் காவு கொடுப்பார்கள் தங்கள் வளர்ச்சிக்கு.
எனவே பாரதிராஜைவைப் போன்றவர்கள் ஆவேசப்பட்டு தமிழருக்காக பேசுகிறேன் என்பதையெல்லாம் இனிமேலாவது நம்பாதீர்கள். முக்குலத்தோரை அடக்கி வைக்க எதுவும் செய்ய வேண்டாம்.அவர்களை குறிவைத்து ஒன்றிரண்டு தாக்குதல்கள் நடந்தால் போதும். சுருண்டுவிடுவார்கள், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அது மீசையை முறுக்கி கொள்ளும் இவர்களுக்கு மட்டுமே பொருத்தம்.அது வெத்து மீசை.
அவர்களை அவர்கள் வீட்டு பெண்கள் அழைக்கும் அழகான வார்த்தை எது தெரியுமா?
:டேய் பொண்டுகா:
கைது செய்யப்பட்டாலே குற்றவாளியா? உங்களுக்கு ஊர் பாசம் மட்டும் நியாயமா?
இன்னா நைனா சிங்கம்! ரொம்ப உதார் உடுரே,உன் தலைவன் தொல்.திருமாவளவை போய்க் கேளு,உனக்கு சென்னையில் 1985 களில் ஒரு நண்பன் இருந்தானா என்று,அவன் வீட்டுக்கெல்லாம் போயிருக்கியே என்று,அவன் தியாகம் மட்டுமே செய்தவனா,எவ்வளவு சமூக நீதி கருத்துக்களை சொன்னான்,உன் நண்பன் அரசு கணேசன் அடிப்பட்டிருந்த போது,அவன் தந்தை ஓடோடி சென்று உதவி செய்தாரே,ஜாதி பார்க்கப்பட்டதா?,அல்லது பாசத்தை தவிர அது போன்றதொரு உடல் மொழியாவது காட்டப்பட்டதா?.ஆனால் அவர்களின் மொத்தக் குடும்பமும்,சொத்துக்களை இழந்து சென்னையை விட்டே ஓட வேண்டியது எதனால்?.பிறகு உன்னை வந்து பார்க்க வந்தால்,அமரக் கூட வைக்காமல் ஜமீந்தாராக அல்லவா நீ நடந்துக் கொண்டாய்,கையில் காசு ஏறிவிடால் பறையன்(மன்னிக்கவும்) ஜாமீந்தாராகவும்,பண்புள்ளவன் பறையனாகவும் மாறுவதுதான் சமூக நீதிய?.
Great!thanks for your writing.
வாழ்க ஜனநாயகம், வாழ்க பாரதம், வாழ்க ஜாதி வெறி.
ஜாதி வைத்து அரசியல்செய்யும் மலந்தின்னி பன்றிகளை விட, படித்த இந்த மலந்தின்னி பன்றிகள் செய்யும் ஜாதி கொடிமைகள் தான் அதிகம். என்ன மயித்துக்கு இவர்கள் படிக்க வேண்டும்? பேசாமல் ஜாதி மயிரை கட்டிக்கொண்டும் மீசை மயிரை முறுக்கி கொண்டும் திரிய வேண்டியதுதான்…. ஜாதியை இவர்கள் வீட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே, என்ன மயிருக்கு தெருவுக்கு கொண்டுவரவேண்டும். பறையனும் பள்ளனும் இவர்கள் சொத்திலா பங்கு கேட்டார்களா, இவர்களிடம் போய் பெண் கேட்டார்களா? அல்லது இவர்களை போல வேலைக்கு வரும் பெண்களின் சேலையை பிடித்து இழுத்து கற்பழித்தார்களா? புதைத்த பிணத்தில் கூட ஜாதி இருக்கிறதா என்று பார்க்கும் இவர்கள் தேசீயம் பற்றி பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஒரு Prostitute என்று தெரிந்து அவளை தன் ஜாதி சங்கத்துக்கு தலைவராக்கி இருக்கும் இவர்களை எந்த வகையில் சேர்ப்பது? இவர்களுக்கு ஜிஞ்சக் போட படித்த முட்டா பசங்களை எதில் சேர்ப்பது? இவர்கள் திரு,முத்துராமலிங்கத்தின் பெயரை கெடுக்காமல் ஓயமாட்டார்கள். அவராவது “தேசீயமும் தெய்வீகமும் என் இரு கண்கள்” என்று சொன்னார்!!!!! இந்த மலந்தின்னி பன்றிகள் “தீண்டாமையும், ஜாதி வெறியும் எங்கள் இரு கண்கள்” என்று முழங்குகிறார்கள். இவர்கள் பார்வையில் தேசீயம் எனபது தீண்டாமையோ? தெய்வீகம் என்பது ஜாதி வெறியோ? இவர்கள் திரு.முத்துராமலிங்கத்தை பின்பற்றுகிரார்கலாம்!!!! அப்படி இவரள் அவரை பின் பற்றுவது உண்மை என்றால், அவர் என்ன ஜாதி வெறி ஆட்டம் போடவா சொல்லி குடுத்தார்? பறையன் பஞ்சாயத்து தலைவரானால் கழுத்தை அருக்கவா சொல்லி குடுத்தார்? ஒண்ணுமே புரியல, நான் அவரை பற்றி படித்தது பொய்யா இல்லை இவர்கள் சொல்லுவது போல ஜாதிவேரியாட்டம் போடத்தான் சொல்லி கொடுத்தாரா? எது உண்மை யாராவது விளக்குங்களே.. ப்ளீஸ்..
கள்ளர் பறையர் கனத்த அகம்படியார் மெள்ள மெள்ள இங்கு வந்து வெள்ளாளர் ஆகினர்.
இன்றைய யாழ்ப்பாண வெள்ளாளர் 100 வருடஙகளுக்குமுன் சாதி மாறியவர்கள். இது வரலாற்றின் அடிப்பைடயில் மிகவும் உண்மையானது. இவர்கள் ஒரு கலப்புச் சாதியினர். மடப்பள்ளி, வடுகர், இடயர், நயினார், வெள்ளாளர், கள்ளர், மறவர், அகம்படியர், செங்குந்தர், சேணியர், தனக்காரர், சாலியர்( நெசவுப்பறையர்), தவஷிகள்ஆகியோரின் கலப்புத்தான் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர். இது வரலாற்றினடிப்படையிலும் நடைமுறைச்செய்ற்பாடுகளினடிப்படையிலும் மிக மிகத் தெளிவான உண்மையாகும். இச் சாதி மாற்றங்கள் அன்று கண்டுகொள்ளாமல் அல்லது வெளிக்கொணரப்படாமலிருந்தமைக்கு, வெள்ளாளர் எனும் பெயரின் கீழ் அல்லது அதன் மூலம் ஒருமித்த சாதியப்பெரும்பான்மை தேவையாயிருந்தமையே காரணமாகும். இக்கலப்புப் பெரும்பான்மை பிற்காலங்களில் யாழ்மாவட்டத்தில் ஏனைய சமூகப்பிரிவினர்ககு எதிரானதாக இருந்துவந்துள்ளது. இவைபற்றிய உண்மைகளை பின்வரும் வரலாற்றுத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன்.அன்று யாழ்மாவட்டத்திலிருந்த சாதிக்குழுக்களின் தரவுகள்( census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரசவர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச்செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன?
அன்றிருந்த, அதாவது நூறுவ௫டங்களுக்குமுன்பு இ௫ந்த சாதிகள்:
Burgher ——-477
Bramman ——-1935
Chetty ——— 1807
Madappally —12995
Moors —2166
Paradesy — 1830
Mallagam — 1501
—
Cariar —- 7562
Brassfounder — 105
Masons —- 47
Tuners — 76
Welper —50
Cycolas — 1043
Chandar —- 2173
Dyers —902
Chevia — 1593
Pandaram—- 41
Parawa — 35
Tannecaras — 1371
Silversmith — 899
Blacksmith — 904
Carpenters — 1371
Barbers — 1024
slave of Burgher — 18
Washermen — 2152
Moquah —2532
Malayalam —210
Covias — 6401
Company Nalum — 739
Pallas —6313
Parayars — 1621
Torampas — 197
Weavers — 272
Cawere chetty —18
Tawesy — 437
Nattowen — 22
Oil monger — 4
Tunmilah — 1291
Pallevely —376
Simpadawer — 40
cadia —970
Nallua — 7559
Potters — 329
Ship carpenter — 33
Marava — 54
Choyaroot-Digger —408
Paramber — 362
–
Free slaves — 348
இந்த வரலாற்றின்படி தங்களை அவரவர் சாதிகளின் பெயரால் அழைத்துக்கொள்ளாது, வெள்ளாளர் என அழைத்துக்கொள்கிறார்கள்.இது மிகவும் சிரிப்புக்குரயது.வெள்ளளாளர் என்றால்,வெள்ளத்தை அடக்கிஆள்பவெரன்றும்,மண்ணை உழுது பயிர்த்தொழிலில் ஈடுபடுபவர் என்றே பொ௫ள்படும்.வெள்ளாளர் என்று தங்களை அழைப்பவர்கள் தங்கள் சாதிப்பெயர்களுக்குக்கொஞ்சமேனும் தொடர்பில்லாத தொழில்களையே இன்றுவரை செய்துவ்௫கின்ற்னர்.ஏனென்றால் அவரகளில்பலர் வெள்ளாளர்களே அல்ல என்பதுதான்.இந்த வரலாற்றாதாரங்கள் அதனைமெய்ப்பிக்கும்.இந்த இலட்சணத்தில் இவர்க
சிறு திருத்தம்:
“கள்ளர் மறவர் கனத்த அகம்படியார்” என்று தான் வரும்.
(பறையர் வெள்ளாளராகினார் என்று சொல்லச் சாதித் தடிப்புள்ள வெள்ளாளர் விடுவார்களா?)
தொழில்கள் மாறக் காரணம் முற்றிலும் பொருளாதாரமே. சாதித் தோற்றுவாயல்ல.
பார்ப்பனர் எல்லாரும் விதிக்கப்பட்ட தெழிலையா செய்கிறார்கள்?
வேளாளப் பெற்றோர் இன்னமுங் கூட, நல்ல வருமான வாய்ப்புள்ள சிகை அலங்காரம், லோண்டரி போன்ற துறைகளை தங்கள் பிள்ளைகள் நாட விடுவதில்லை.
?கள்ளரும் மறவரும் தொடக்கத்தில் சமூகத்துக்கு வெளியே, புறக் குடிகளாக, பாலை நிலக் குடிகளாக இருந்தனர். அவர்களில் முதலில் இந்த சமூகத்துக்கும் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள் தான் சேர்வை என்று சொல்லப்படுவோர். இவர்கள் குதிரைக்காரர்களாக, பின்னர் குதிரைப் படை வீரர்களாக சமூகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதிலும் நம்பிக்கைக்குரியவர்களாகப் பயிற்சி பெற்றோர் அகப் பரிவாரங்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் அணுக்க சேவை செய்வோராகப் பயிற்றுவிக்கப் பட்டனர். இப்படியாக, அகத்தில் படி வேலை செய்வோராக மாறினர். இந்த அகத்தில் படிவேலை செய்தோர் என்பதுதான் ‘அகம்படி’ என்று குறிப்பிடப் படுகிறது.
முதலில் கள்ளர், மறவர் இருவரும் ஒரு சாதி அல்ல..இப்போதும் இல்லை..பாலை நிலத்தில் இருந்தவர் மறவர் , எயினர் மட்டுமே ..கள்ளர்கள் கிடையாது. இணையத்தில் சில முண்டங்கள் புலம்புவதை எல்லாம் கருத்தில் கொண்டால் இப்படிதான் பிதற்ற தோன்றும். மேலும் எயினர் தான் விலலவர்கள் , இவர்களே சேரர்கள் என்பது பெரும்பாலர் கருத்து. மறவர்கள் பாண்டியர்கள் என்பதையும் நிறைய பேர் கூறியிருக்கிறார்கள்..அப்படி இருக்க இந்த பாலை நிலம் என்ற ஒன்றே தமிழ்நாட்டில் கிடையாது..தொல்காப்பியரும் சொல்லவில்லை..ஆனால் உரை எழுதியவர்கள் விட்ட கதை அது. பாலை மக்கள் பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள் என்று கூறுகின்றனர் . சோழனின் குலதெய்வம் கூட கொற்றவை துர்க்கை பெண்தான் . கள்ளர்களுக்கு குலதெய்வம் பெரும்பாலும் அய்யனார், கருப்பண்ண சாமி போன்ற ஆண் கடவுள் தான். இந்த பாலை நில குடி எல்லாம் காணபடுவது பெரும்பாலும் களபிறர் ஆட்சியில் எழுதப்பட்ட நூல்களிதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..இப்போது இருக்கும் சாதிகளில் கள்ளர் என்ற சாதி மட்டும் தான் அரச குடியாக இலக்கியங்களில் காணபடுவது ..”கள்ளர் கோன் புள்ளி”, “கள்ளர் பெருமகன் பாண்டியன் “. எனவே மறவர் என்ற குடியில் எல்லோரையும் சேர்ந்து புதுக்கதை விடுவது சாணர்களின் பிழைப்பு..அதை அப்படியே வந்து இங்கே வாந்தி எடுக்காதீர்…ஏதோ கம்ப ராமாயணம் பாருங்கள் என்று கூறுகிறீரே , ராமாயணத்தில் தமிழ்நாட்டில் குரங்குகள் இருப்பத கூறுகிறார்கள் ஏற்று கொள்கிறீரா? ஹ ஹ கம்பன் மல்ல இன விவசாயிகள் அவர் காலத்தில் விவசாயம் செய்வதை பழகாலத்தில் ராமரின் படை செய்த போர் காட்சிகளோடு ஒப்பிட்டு இருக்கிறார்.அவ்வளவே. தமிழர்கள் யாரும் இராமாயண காலத்தில் போர் செய்ததாக கூறவில்லை அவர். கம்பர் வெள்ளாளர் சாதியின் மீது பற்று கொண்டு, அரச குலத்தை வெறுத்தவர் என்பது அவரின் வேறு படைப்புகளை பார்த்தல் புரியும்..அவர் கவுண்டர் இனத்தின் அபிமானி, வெள்ளாளர் சாதியை சேர்த்தவர்..பலல்களுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை…
மள்ளர்கள் பள்ளராக ஏன் வீழ்ந்தனர்?
மள்ளர்கள் பள்ளராக ஏன் வீழ்ந்தனர்?ஏன் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர் என்று கேள்வி எழுப்பி அதற்கான விடையையும் வரலாற்று அறிஞர் Dr.கே.ஆர்.அனுமந்தன் பின்வருமாறு குறிப்பிடுவார்.
மூவேந்தர்கள் பார்ப்பனர்களை குருக்களாக நியமிக்காததாலும்,பார்ப்பனர்கள் மதமாகிய இந்து மதக் கோட்பாடுகளைப் பின்பற்றாததாலும்,நாயக்க மன்னர்களைத் தங்கள் கைக்குள் வைத்திருந்த பார்ப்பனப் புரோகிதர்கள் இவர்களைத்”தீண்டத்தகாதவர்கள்”
என்று அறிவித்தார்கள்.
வட இந்தியாவில் விதிக்கப்பட்ட சமூகவிதிகளை இவர்களுக்குப் புகுத்தினார்கள்”(மேலே குறிப்பிட்ட நூல் பக்கம் 12)
கரிவலம்வந்த நல்லூர் கல்வெட்டு(ஏ ஆர் ஈ.432/1914),சீவில்லிப்புத்தூர் கல்வெட்டு(ஏ ஆர் ஈ.588/1926)ஆகியவற்றின்படி பாண்டியன் உக்கிரப்பெருவழுதி தனது மரபினரான தேவகன்னியின் புத்திரர்களான தேவேந்தர்கள்(மள்ளர்கள்) நால்வரைச் சென்னெல்,கன்னெல்,பனை,கதலி வித்துக்களுடனும்,எருதுடனும் தேவலோகத்திலிருந்து தனது நாட்டிற்கு அழைத்து வந்ததாகவும்,அவருள் முதல்வனுக்கு தேவேந்திரக்குடும்பன் என்ற பட்டமும்,மற்ற மூவருக்கும் வாரியன்,அக்கசாலை,இளந்தாரி என்ற பட்டங்களும் கட்டினதாகவும்,அவர்கள் ஒரே நாளில் பன்னீராயிரம் கிணறுகள் தோண்டி,வேளாண்மை கண்டு,நாட்டைச் செழிப்பித்ததாவும்,அதனால்,பாண் டியன் தனது சிறப்புக்களை தனது மரபினரானத் தேவேந்தர்களுக்கும் வழங்கியதாகவும் இந்த இரண்டு கல்வெட்டுக்களும் குறிப்பிடுகின்றன.இந்த நான்கு பட்டங்களை,இன்றும் தென் தமிழ்நாட்டில் பள்ளர்கள் பயன்படுத்துகிறார்கள்.இந்த கல்வெட்டு ஆதாரத்தை சில வரலாற்று அறிஞர்கள் மறைக்க செய்த முயற்சியும் நடந்தது.இந்த கல்வெட்டு ஆதாரம் வேறு எந்த இனத்தவருக்கும் இல்லை என்பது நிச்சயமான ஒன்று.
மள்ளர்கள் பள்ளராக ஏன் வீழ்ந்தனர்?ஏன் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர் என்று கேள்வி எழுப்பி அதற்கான விடையையும் வரலாற்று அறிஞர் கே.ஆர்.அனுமந்தன் பின்வருமாறு குறிப்பிடுவார்.
“தமிழ் மூவேந்தர் மன்னன் அரசு வீழ்ந்தது,மதுரையில்(விஜயநகரப் பேரரசின் பிரதிநிதி அரசான)நாயக்கர் ஆட்சி இருந்த காலத்தில்தான் இவர்களின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.மராத்தியர்களு ம்,நாயக்கர்களும் தமிழர்கள் இல்லையாதலால்,அவர்கள் தங்கள் சொந்தக்கரத்தால் மட்டும் ஆட்சியை வேரூன்ற முடியவில்லை.இங்கிருந்த சில சமூகத்தாரை அணைத்துக் கொள்ளவேண்டியிருந்தது.சோழ மண்டலத்தில் வன்னியரும்,பாண்டிய மண்டலத்தில் கள்ளர்களும் அவர்களுக்குத் துணை நின்றார்கள்.இதன் மூலம் பல மானியங்களைப் பெற்றார்கள்.”(அனுமந்தன் கே.ஆர்.தேவேந்தர்களை வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்டதே நாயக்கர் ஆட்சியின் பாளையப்பட்டுமுறை(ஆங்கில மூலம்)தமிழில்,பேராசிரியர் தங்கராஜ்,பாட்டாளி முழக்கம்,ஜூலை1993,பக்கம் 10)
“நாயக்கர் பாளையப்பட்டு முறை என்று ஒரு நிலமானியத் திட்டத்தை உருவாக்கினார்கள்.இதில் தங்களுக்கு வேண்டியவர்களை பாளையக்காரர்களாக நியமித்தார்கள்.பெரும்பாலும் தெலுங்கர்களையும்,ஒரு சில பகுதிகளில் குறிப்பாக இராமநாதபுரம்,புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் முறையே மறவர்,கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் நியமித்தார்கள்.பூர்வீகமாக நிலவுடைமையாளர்களாக இருந்த பள்ளர்கள் பாளையப்பட்டு முறை மூலம் நிலவுடைமை இழந்தார்கள்.
பலவந்தமாக நிலங்கள் பிடுங்கப்பட்டன.பறித்த நிலங்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமையாக்கினார்கள்.அடுத்து,மூ வேந்தர்கள் பார்ப்பனர்களை குருக்களாக நியமிக்காததாலும்,பார்ப்பனர்கள் மதமாகிய இந்து மதக் கோட்பாடுகளைப் பின்பற்றாததாலும்,நாயக்க மன்னர்களைத் தங்கள் கைக்குள் வைத்திருந்த பார்ப்பனப் புரோகிதர்கள் இவர்களைத்”தீண்டத்தகாதவர்கள்” என்று அறிவித்தார்கள்.
வட இந்தியாவில் விதிக்கப்பட்ட சமூகவிதிகளை இவர்களுக்குப் புகுத்தினார்கள்”(மேலே குறிப்பிட்ட நூல் பக்கம் 12)
நண்பர் குமரன் அவர்களுக்கு, அனுமந்தன் எழுதிய புத்தகம், தேவ ஆசீர்வாதம் , சித்தன் எழுதியதை எல்லாம் ஆதராமாக கட்டுவீறேயானால் , நாடர்களின் நெடுமாறன், கணேச மூர்த்தி எழுவதைஎல்லாம் நீங்கள் சரித்திரமாக ஒத்து கொள்ள வேண்டும்.
முதலில் தேவலோகம் எங்கேனும் இருக்கிறதா? (நானும், ரம்பை , ஊர்வசியை பார்க்க வேண்டும் என்று அவலாக உள்ளேன்). அப்படி ஓன்று இல்லை என்று நமக்கு தெரியும், அப்படியிருக்க பிரக்டிகல் ஆக பார்த்தோமேயானால் வெளியிருந்து பாண்டியனால் கொண்டு வரப்பட்டவர்கள் பள்ளர்கள் என்று கொள்ளலாம்.அப்போ பாண்டியன் ஏற்கனவே இருந்திருக்கிறான். அவனின் கொடி மீன் கொடி, மீனவர் சம்பந்தப்பட்ட குலத்தில் ஒன்றே பாண்டியன் குடி என்றும் கொள்ளலாம்.மீனவரோடு அறிவியல் பூர்வமாக genetically தொடர்புடைய சமூகம் மறவர், பறையர் இரண்டும்தான். இவர்கள் இருவருமே மற்ற எல்லா குடிகளையும் விட பூர்வ குடிகள். ஆரிய சம்பந்தம் இல்லாத குடிகள். ஆனால் பள்ளர்களோ ஆரிய சம்பந்தம் உடையவர்கள் மரபணுக்களை கொண்டவர்கள் .
பள்ளன் என்ற சொல் 7 ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் கல்வெட்டுகளில் காணப்படும் சொல். ஆனால் இடைகால சோழர்களோ, (அதன் பின் வந்த) மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனோ அதன் பின்னர் வந்தவர்கள். பள்ளன் என்ற சொல்லை பாண்டியன் ஆட்சியில் பயன்படுத்த பட்டதற்கு கல்வெட்டு சாட்சியம் உண்டு. அனுமந்தன் இதற்கே முன்னே இப்படி எழுதிருப்பார். எனவே “மூவேந்தர் வீழ்ச்சிக்கு பின், மூவேந்தர் வீழ்ச்சிக்கு பின்” என்று சொல்லாதீர்கள்.அவ்வளவு பெரிய கதை எல்லாம் தமிழகம் காணவில்லை. கண்டிருந்தால் ஆயிரம் நூல்கள் முன்னரே வந்து இருக்கும்.
அப்போது 7 ஆம் நூற்றாண்டு முன் என்னாவாய் இருந்தீர்கள் என்பதை தேடுவதை விட பல்லவர் காலத்திற்கு பின் தான் தமிழகத்திற்குள் வந்தீர்கள் என்பதே உண்மை. வடக்கே பள்ளீ, தெற்கே பள்ளன் இரண்டும் பல்லவன் வந்த பிறகு காணப்படும் சாதிகள். அதற்கு முன் இல்லை. இரண்டும் genetical ஆகவும் ஒரு மூதாதையரை கொண்டதாக தான் இருக்கிறது.
நாயக்கர் ஆட்சியில் குலபெயரையே மாற்றினால் அதை ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் பள்ளர்களுக்கு இல்லை. ஆடு, மாடு இல்லை பள்ளர்கள்.அவர்களுக்கு ரோசம் இருந்திருக்கும். இதை அவர்களோ போட்டு கொண்ட பெயர். தமிழ்நாட்டில் 200 க்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கும் போது ஒரு சாதி பெயரை, அதுவும் மூவேந்தர் என்று வேறு சொல்லிவிட்டீர்கள் , அதை மாற்ற எவனுக்கும் துணிச்சல் கிடையாது.அதை ஏற்றுகொள்ள மூவேந்தர் வம்சம் ஒன்றும் ஆடு, மாடுகள் இல்லை.இதையெல்லாம் ஏற்று கொள்ள. சினிமா கதை போல் உள்ளது நீங்கள் சொலவது. நாயக்கர் காலத்திலும் தென்காசி பாண்டியன் இருந்தான். அவன் காலத்திலும் பள்ளன் என்று தான் அழைக்கபட்டீர்.அவன் ஒன்னும் என்சாதியாட பல்ல என்று சொல்லவில்லை. பல்லு இலக்கியமும் “பாண்டியன் குலத்தில் வரினும்”, என்று எல்லாம் எழுதவில்லை.மழல்ர் குலத்தில் வரினும் என்றுதான் வருகிறது, (நாயக்கர் பூர்வீக பூமியான ஆந்திரத்தில் மள்ள என்ற உழுகுடி மக்கள் உண்டு, அதன் காரணமாக இந்த சொல் வந்திருக்கலாம்) நீங்கள் சொல்வதை பார்த்தால் ஏதோ தமிழ்நாட்டில் வன்னியர், கள்ளர் , மறவர் சாதிகள் மட்டும் ஏதோ ஒரு தனித்தீவில் இருந்துகொண்டு யாருக்கும் தெரியாவன்னம் பலல்ர்களுக்கு கொடுமை செய்தது போல் உள்ளது. தமிழ் சமூகம் அவ்வளவு குருட்டு சமூகம் அல்ல. இது போல கதை எல்லாம் பொதுவாக ஆராய்ச்சி நூலாக ஏற்று கொள்ளபடாததின் காரணம் இதுதான்.
தேவேந்திரக்குடும்பன், வாரியன்,அக்கசாலை,இளந்தாரி போன்றவற்றை ஒத்துகொல்வோமானால் மற்ற சாதிகளின் பட்டங்களையும் ஒத்துகொள்ள வேண்டும், இவைதான் ஆதாரம் என்றால் கள்ளர்களுக்கு மூவேந்தர் என்று நிறுவதில் சிறுதுளி கூட கஷ்டம் இருக்காது. ஏன் என்றால் எல்லா அரசகுல, போர் கால பட்டங்களும் கள்ளர்களில் மட்டுமே உண்டு. 2000 பட்டங்கள் உலகத்திலயே எந்த சாதிக்கும் கிடையாது . கள்ளர்களுக்கு மட்டுமே உண்டு. எனவே இவை எல்லாம் பெரிய ஆதாரம் இல்லை.
“தாழ்ப்பட்ட சாதி என்பதால்” என்று சொல்கிறீர்களே, அது என்ன கேவலமா? வன்னியர்களை பறையர் என்று சென்ற நூற்றாண்டு வரை அழைத்தது தெரியுமா? கள்ளர்களை தாழ்த்தப்பட்ட வகுப்பில் சேர்க்க சொல்லி கேட்டது தெரியுமா? இவர்கள் தான் நாயக்கர் காலத்தில் வாழ்வாங்கு வாழ்தார்க்லா? குடித்துவிட்டு கற்பனை செய்வது அல்ல வரலாறு. அது சமஊக சாத்தியம் உடையதாக இருக்கவேண்டும்.
நீங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருப்பதால் யாரும் உங்களை தவறாக் நினைக்கவில்லை. சரியான ஆதாரம் இருந்தால் தமிழ் சமுகமே சொல்லும் மூவேந்தர் யார் என்று. உண்மையை வெளிக்கொண்டுவர இம்மானுவேல் கொலையை பற்றி எழுதி தன்னுயிரை ஈந்த தினகரன் யார் தெரியுமா? அவரும் தேவன் தான். உண்மை இருந்தால் தானே வெளிவரும். ஒரு வேந்தனை தன் ஜாதி என்று கூறி கொள்ளவே மூச்சு முட்டுகிறது, நீங்களோ மூவேந்தர் என்று எதை வைத்து சொல்கிறீர்களோ தெரியவில்லை. மிகவும் கடினமான விஷயத்தை மிக எளிதாக சொல்கிறீர். முக்குலத்தோரை மூவேந்தர் என்று சொன்னதெல்லாம் மற்றவர்கள், வெளிநாட்டவர். பெரியார் கூட சொன்னார் ” சோழர் படைகள் கள்ளர் களாகவும், பாண்டிய படைகள் மறவர் களாகவும், பல்லவ படைகள் வன்னியர்கலகவும் ஒரே சாதியாக தன்னை அடையாளபடுத்தி கொண்டன என்றார். அதுதான் உண்மை , கள்ளர்களே பல்வேறு சாதிகலாகிய சோழர் படைகளின் கூட்டு. ஒரே மூதாதையர் வழிவந்த சாதி அல்ல. அப்படி இருந்தால் genetical ஆகவும் ஒரே சாதி என்று நிறுவ முடியும். ஆனால் உண்மையோ அப்படி அல்ல இவை எல்லாம் வேறு வேறு இனங்களாகிய போற்குடிகளில் கலப்பு அவ்வளவே… அதனால் தான் இங்கே சிங்களவர், மீனவர் என்ற பட்டம் எல்லாம் கனபடுவத்தின் காரணம்.
நம்மில் பல இனத்தவரைப் பற்றி தவறான கருத்துகளை சிலர் கொண்டுள்ளனர். குறிப்பாக ஜாதி என்ற சொல்லைப் பற்றி தெளிவான கருத்துக்கள் நம்மிடையே இல்லை. வரலாற்று அடிப்படையில் ஜாதிகளைப்பற்றி அறிந்தால் சமுதாயச் சீர்திருத்தங்களை செவ்வனே செய்ய இயலும். இதற்கு நம்மிடையே வரலாற்று அறிவு வளர்தல் வேண்டும். வரலாற்று அறிவு சிறக்க அடிப்படை ஆதாரங்களாக விளங்குபவை கல்வெட்டுகள்.
இடிகரையில் வீரபாண்டியன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டில் (14ஆம் நுற்றாண்டில்) “கொற்றமங்கலத்திருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையன்” என்று உள்ளது. வெள்ளாளரில் பைய்யரில் என்ற பிரிவில் பறையர் என்ற உட்பிரிவினர் இருந்துள்ளனர் என இதன் வாயிலாக அறிகிறோம். இதே ஊரில் உள்ள மற்றொரு கல்வெட்டில் “வெள்ளாளன் பைய்யரில் சடையன் நேரியான பறையன் என்பவன் கூறப்படுகிறான். இது போல் வெள்ளாளர் உட்பிரிவுகளில் புல்லி என்ற பிரிவிலும் பறையன் குறிக்கப்படுகிறான். விக்கிரம சோழன் காலத்தில் 1292ல் ஒருவன் தீபங்கொடுத்தான். “வெள்ளாளன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக்காமுண்டன்” என்பவன் குறிக்கப்பெறுகிறான். இதிலிருந்த்து 13ஆம் நூற்றாண்டு- 14ஆம் 15ஆம் 16 ஆம்ஆம்நூற்றாண்டுகளில் வெள்ளாளர்களில் பறையன் என்ற ஒரு பிரிவு இருந்துள்ளது.
சகோதரி புவனேசுவரிக்கு நீதிகிடைக்கவேண்டும்.சகல தமிழ்ப்பெண்களுக்காகவும் சேர்த்துத்தான் நாங்கள் இலங்கையில் போராடினோம்.
-குமரன்-
நண்பர் thondaiman அவர்களுக்கு,
பள்ளர்/மள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு ஆயிரக்கணக்கில் ஆதாரங்கள்( சங்க இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள் உட்பட) இலங்கை இந்தியா உட்படப் பல இடங்களில் உண்டு.ஆதலால் மள்ளர் குலத்தவர்கள் கண்டபடி அலட்டிக்கொள்வதில்லை.
பள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு மன்னர்க்கு ஏற்பட்டிருந்த உரிமைகளில் சிலவாவது இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மன்னர்க்குரிய உரிமைகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா? நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டில் ( கல்வெட்டு இலக்கம். 432/1914) பாணடியன் உக்கிரப் பெருவழுதி இம்மரபினர்க்கு வெள்ளை யானை வண்வட்டக் குடை கெராடி பகற்பந்தம் பாவாடை இரட்டைச்சிலம்பு இரட்டைக்கொடுக்கு நன்மைக்குப் பதினாறு கால்பந்தல் துண்மைக்கு இரண்டு தேர் பஞ்சவன்(பாண்டியன்) விருது பதினெட்டு மேளம் வளங்கி அன்றுதொட்டு இம்மரபினர் அவற்றை அனுபவித்து வந்துள்ளனர்.
குறிப்பு:
தெய்வேநதிர குலத்தார்க்கு( மள்ளர் / பள்ளர்) வளங்கப்பட்ட மேலே கூறிய உரிமைகள் தமிழகத்தில் பிராமணர் உட்பட இன்று உயர்சாதியெனப் பாராட்டும் வகுப்புகள் ஒன்றிற்க்காவது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்
– என்று திவாகர நிகண்டும்.
செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப
– என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன
“மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கு ஓர் பள்ளக்கணவனாய்…”(முக்கூடற்பள்ளு)