Wednesday, October 4, 2023
முகப்புவரதட்சணைக்காக நிர்வாணப்படத்தை வைத்து மிரட்டிய வக்கிரக் கணவன்!!
Array

வரதட்சணைக்காக நிர்வாணப்படத்தை வைத்து மிரட்டிய வக்கிரக் கணவன்!!

-

vote-012ஞாயிற்றுக் கிழமை (14.02.10) டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் புரட்டிக் கொண்டிருந்த போது அந்தச் செய்தி கண்ணில் தென்பட்டது.

செல்பேசி செக்ஸ் முறைகேடுகள் மலிந்து விட்ட நாட்டில் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக சொந்த மனைவியை நிர்வாணப் படமெடுத்து வரதட்சணைக்காக மிரட்டியிருக்கிறான் ஒரு சென்னைக் கணவன்.

26வயது சதீஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) டிசம்பர் 2008இல் திருமணம் செய்து கொண்டான். பொன்னும், பொருளும், பணமுமாய் 20 இலட்சம் வரை வரதட்சணையாக பெண் வீட்டிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகும் வரதட்சணை வெறியடங்காத சதீஷ் வீட்டார் அந்தப் பெண்ணை மேலும் கொண்டு வருமாறு வற்புறுத்தியிருக்கின்றனர். இதற்காகவே அந்தப்பெண்ணுடன் தாம்பத்ய உறவு கூட வைக்காமல் இருந்திருக்கிறான் அந்தக் கணவன்.

பொறுமையிழந்த அந்தப்பெண் தனது பெற்றோரிடம் இந்தக் கொடுமைகளை சொல்லி அழுதிருக்கிறாள். அவர்களும் இது குறித்து சதீஷ் வீட்டில் நியாயம் கேட்டிருக்கின்றனர். இதற்குப் பிறகு கொடுமை அதிகரித்ததே தவிர குறையவில்லை. சதீஷும் அவனது சகோதரர்களும் அந்தப் பெண்ணை சித்திரவதை செய்திருக்கின்றனர். சதீஷின் அப்பா மருமகளிடம் எல்லை மீறி நடக்க முயற்சித்திருக்கிறார். இதை கணவனிடம் புகாராகச் சொல்லியும் அவன் அதை சட்டை செய்யவில்லை.

இறுதியாக அந்தப் பெண்ணை தனியறையில் அடைத்து சன்னல் வழியாக உணவு மட்டும் கொடுத்து, அவளது நிர்வாணப் படங்களை நண்பர்கள் மூலம் வெளியிட்டு நாசப்படுத்துவேன் என்று சதீஷ் மிரட்டியிருக்கிறான். இதற்கு மேலும் பொறுமை காப்பதில் பலனில்லை என்று அந்தப் பெண் அந்தச் சிறையிலிருந்து எப்படியோ தப்பிவிட்டு தனது வீட்டுக்குக் கூட போகாமல் நேராக போலீசிடம் போய் புகார் செய்திருக்கிறாள். போலீசும் வரதட்சணை பிரிவு, பெண்ணை அடித்து துன்புறுத்துதல் முதலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் சதீஷையும் அவனது உறவினர்களையும் தேடிவருகிறார்கள்.

இதுவரை இந்தச்செய்தியை படித்துவிட்டு செல்லும் ஆண்கள் சதீஷின் வக்கிரத்தை எல்லோரையும் போல் கண்டித்துவிட்டு மறந்துவிடக் கூடும். ஆனால் தம்முள்ளும் சதீஷ் அளவுக்கு வக்கிரமாயில்லையென்றாலும் சற்று மென்மையான ஒரு சதீஷ் இருப்பான் என்பதை எத்தனை பேர் மறுக்க முடியும்?

ஊடகங்களில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை மூலம் காதலர் தினம் தனது பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்தி விட்டுச் சென்று விட்டது. இந்து மதவெறியர்கள் வழக்கம் போல தாலிகளை வைத்து காதல் என்றால் ஆபாசம், மேலைநாட்டு வக்கிரமென்ற உதார்களும் நம்மில் பலர் பார்த்திருக்கக் கூடும். சாதிக்குள்ளே மணம் முடித்து இந்து மதத்தின் மேன்மையை காப்பாற்றுவது அவர்களது நோக்கம். ஆனால் அவர்களது நோக்கத்திற்குப் பங்கம் வராமல் பெற்றோர் பார்த்து முடிக்கும் சம்பிரதாய திருமணங்கள்தான் நாட்டில் அதிகம்.

காதலும் கூட சாதி மறுப்பு என்பதை விட சம தரத்திலான சாதி, வர்க்கம், அந்தஸ்து, பணம், வேலை எல்லாம் பார்த்துத்தான் நடக்கிறது என்பது வேறு விசயம். இதையே சாதிக்குள் நடத்தினால் அது நிச்சயிக்கப்பட்ட திருமணம். இந்த எழவுகளை பொருத்தம் பார்த்து எப்படியோ திருமணம் செய்து கொண்டு ஒழியட்டும். ஆனால் எனக்கு வரதட்சணை வேண்டாமென்று இத்தகைய திருமணங்களில் கூட செய்து காட்டலாமே?

தன்னை முற்போக்காளன், நல்லவன், புரட்சிக்காரனென்று அற்ப விசயங்களுக்காக சித்தரித்துக் கொள்ளும் இளைஞர்கள் கூட இந்த வரதட்சணையை வேண்டாமென்று மறுப்பதில்லை. அல்லது நாசுக்காக மொக்கையான காரணங்களைச் சொல்லி சமாளிக்கிறார்கள்.

மணம் முடிக்கும் பெண்களை ஆண்கள் ஆயுசு வரைக்கும் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த வரதட்சணையை பெண்ணின் தந்தை தரவேண்டுமென்று பாரம்பரிய விளக்கத்தை முதலில் சொல்வார்கள். இதன்படி பெண்ணென்பவள் சுமை. அல்லது மாடு. அந்த மாட்டிற்கு தீனியும், தண்ணீரும் கொடுத்து தொழுவத்தில் கட்டிவைப்பதற்குத்தான் அந்த தட்சணை. பதிலுக்கு அந்த மாட்டுப்பெண் சமையல், துவையல், இல்லப் பராமரிப்பு, விருந்தினர் உபசரிப்பு, குழந்தைகள் வளர்ப்பு, செவிலியர் வேலை, இரவில் தாசி வேலை எல்லாம் நேரத்திற்கு செய்யவேண்டும்.

இப்படி எல்லாவகையிலும் பெண்ணின் இரத்தத்தை அட்டைகள் போல உறிஞ்சிக்கொள்ளும் ஆணிணத்து புண்ணியவான்கள் என்றைக்காவது இந்த வேலைகளை செய்வதற்கு முன்வந்தது உண்டா? கிடையாது. போகட்டும். செய்யாத, செய்ய முடியாத, விரும்பாதா இந்த வேலைக்கு ஊதியம் கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு கணவனும் முழு ஆயுளில் பல இலட்சங்களை செலவிட வேண்டியிருக்கும்.  குடும்பத்து வேலையை எல்லாம் பணத்தால் மதிப்பிட முடியாது என்று நொள்ளை பேசும் வீட்டின் பெருசுகள் திருமண நேரத்தில் வாங்கும் வரதட்சிணையின் மதிப்பை வைத்தே அந்தப் பெண்ணை அளவிடுவார்கள். கூடவே இந்த மதிப்பிட முடியாத வேலை செய்வதற்கு ஒரு பெண்ணோடு வரதட்சணையாக பெரும் சொத்தையும் பிடுங்குகிறோமே என்று எள்ளளவும் குற்ற உணர்வு கிடையாது.

அடுத்து இந்த வரதட்சணையை அந்த பெண்ணின் நன்மைக்காகத்தானே வாங்குகிறோம் என்று அளப்பார்கள். விசேசங்களுக்கு குடும்பத்தின் அந்தஸ்தை நிலைநாட்டும் அலங்காரக்கடை பொம்மையாக மருமகள் அவதரிக்க உதவும் நகைகள் மற்ற நேரத்தில் பீரோவில் தூங்கும். பெரும் செலவுகள் வரும்போது கணவனுக்கு கைகொடுப்பது அந்த நகைகள்தான். பின்னர் பெண் குழந்தை ஆளாகி மணமகளாக செல்லும்போது அந்த நகைகளும் புதிய தட்சணையாக செல்ல நேரிடும். இதைத் தவிர அந்த நகைகள் அந்தப் பெண்ணுக்கு ஒரு மயிரும் பலனளிப்பதில்லை.

“பையனை செலவு செய்து படிக்க வைத்திருக்கிறோம், அதனால் கை நிறைய சம்பளம் வாங்குகிறான், அப்படி உயர்ந்த இடத்திற்கு வாக்கப்பட வேண்டுமென்றால் வரதட்சணை கொடுப்பதுதானே முறை” என்று வியாபாரக் கணக்கு பேசுவார்கள். இல்லையென்றால் ஏழை பாழைகளைக் கல்யாணம் செய்யலாம் என்றும் உபதேசிப்பார்கள். காசுக்கேற்ற தோசை மாதிரி ஏழைகளும் ஏதாவது செலவழித்துத்தானே திருமணங்கள் செய்யவேண்டியிருக்கிறது. சமூகத்தில் வரதட்சணை என்பது அழிக்க முடியாத விதி என்று ஆகிவிட்டபோது ஏழை மட்டும் அதை மீறுவது எப்படி சாத்தியம்?

ஏற்கனவே கை நிறைய சம்பளம் வாங்கும் கபோதிகள் அத்தோடு திருப்தி அடையவேண்டியதுதானே? நியாயமான உழைப்பில் கல்விச் செலவை செய்திருந்தால் இந்த அநியாயமான தட்சணையை எதிர்பார்க்கத் தோன்றாது. ஊரைக் கொள்ளையடித்தோ, லஞ்சம் வாங்கியோ, முறைகேடுகள் செய்தோ செலவழித்திருந்தால் கண்டிப்பாக தட்சணை மூலம் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்றுதான் தோன்றும். சுயநிதிக் கல்லூரிகளில் சில பல இலட்சங்கள் கொடுத்து சீட்டு வாங்கி டாக்டராகவோ, இன்ஜினியராகவோ குதிப்பவர்கள் திருமண வியாபாரம் மூலமே அதை சரிக்கட்டுகிறார்கள்.

இத்தகைய உயர் குடி ஆண் குதிரைகள் அதிகம் விலைபோகும் என்பது பெண்கள் விற்கபடும் சந்தையை வைத்தே உருவாக்கப்படுகிறது. மணமகளின் தந்தையும் ஊரைக் கொள்ளையடித்து வந்திருந்தால் தட்சணையை கணக்கு பார்க்காமல் கொடுப்பான். நேர்மையானவானாக இருந்தால் இருக்கும் சொத்துபத்துக்களை விற்றுவிட்டோ இல்லை கந்து வட்டிக்கு கடன்வாங்கியோ வரதட்சணை கொடுப்பதற்கு தயாராக இருப்பான். இதன் மூலம் அந்த தந்தை தனது எஞ்சிய வாழ்நாட்களை ஆயுள்கைதி போல கழிப்பதற்கு தயாராவார்.

இதில் 100பவுனுக்கு ஒரு பவுன் குறைந்தால் கூட போதும், பையன் வீட்டார் அந்தப் பெண்ணை ஏமாற்றுக்காரியாகவே நடத்துவார்கள். தமிழகத்தின் ஏழை மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை என்பது இந்த வரதட்சணை அநீதியின் காரணமாகத்தான் நடக்கிறது என்பது உண்மை. அந்த வகையில் வரதட்சணை வாங்கும் ஒவ்வொருவரும் தருமபுரியிலோ, உசிலம்பட்டியிலோ கொல்லப்படும் பெண் சிசுக் கொலைக்கு காரணமாகத்தான் இருக்கிறார்கள்.

சமீபத்திய வரவான ஐ.டிதுறை மற்றும் அமெரிக்க மாப்பிள்ளைகள் என்பது மேட்டுக்குடியின் வரதட்சணையை ராக்கெட் வேகத்தில் எகிற வைத்திருக்கிறது. தனது பெண் அமெரிக்காவில் சீரும் சிறப்புமாக வாழ்வாள் என்று நம்பி மொத்த வாழ்க்கை சம்பாத்தியத்தையும் மகளுடன் அனுப்பி வைக்கும் தந்தைமார்கள் அதன்பிறகாவது நிம்மதியாக வாழ்கிறார்களா? இல்லை காரில் இருந்து தள்ளப்பட்டு குற்றுயிரும் கொலையுயிருமாக வரும் மகளுக்காக விமான நிலையத்தில் காத்திருக்கிறார்களா?

வாரிசுகளில் இருபாலாரும் இருந்தால் வரதட்சணை கொடுப்பதற்காக வரதட்சணை வாங்குவதாக நியாயம் பேசுவார்கள். ஏன் வரதட்சணை வாங்காதவனுக்குத்தான் எனது மகள் என்று முடிவெடுக்க வேண்டியதுதானே? அப்படி முடிவெடுத்து விட்டு திருமணம் செய்ய நினைக்கும் இளைஞர்களை சமூகம் பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்று வைத்திருக்கிறது என்பதால் எந்தத் தந்தையும் தனது மகளின் வாழ்வில் ரிஸ்க் அல்லது நல்ல முடிவு எடுப்பதில்லை.

இன்னும் விதவையாக இருந்தால் மனிதாபிமானம் அதிகம் இருக்கும் என்று எண்ணாதீர்கள். விதவையைக் கல்யாணம் செய்யும் ‘தியாக’ உள்ளங்களுக்கு பிரதிபலனாக லஞ்சம் அதிகம் கொடுக்க வேண்டும். அதுவும் குழந்தை உள்ள பெண்ணாக இருந்தால் ரேட் இன்னும் அதிகம். இரண்டாம் மணம் என்றாலும் அங்கே முதல் மணம் ஏன் தோல்வியுற்றது என்று பாடம் கற்காமால் அதே போல தட்சணை கொடுத்துத்தான் அடுத்த மணமும் நிறைவேறும்.

இறுதியாக “வரதட்சணையை நாங்களாக ஏதும் கேட்கவில்லை, நீங்களாக பார்த்து செய்தால் போதும்” என்று நல்லவர்கள் போல பேசுவார்கள். உறவினர்களை விட்டு குடும்பத்தின் மேன்மை, சமீபத்தில் நடந்த திருமணங்களில் கொடுக்கப்பட்ட வரதட்சணையின் அளவு எல்லாம் சொல்லி மறைமுகமாக ரேட்டை நிர்ணயம் செய்வார்கள். நேரடியாக கேட்பதை விட இரகசியமாக கேட்பது மகா கேவலமானது. இதன்மூலம்தான் பெண் வீட்டார் தங்கள் தகுதிக்கும் மேல் சீர்வரிசை செய்வது நடக்கிறது. வரதட்சணையில் நல்லது கெட்டது என்று ஏதும் இருக்க முடியுமா என்ன?

இப்படி எல்லா வழிகளிலும், வகைகளிலும் கண்கொத்திப் பாம்பாக பெண்களை குதறக் காத்திருக்கிறது வரதட்சணை.

இந்தக் கயமைத்தனத்தை ஜீன்ஸ் பேண்டிலும், செல்பேசியிலும் நவீனத்தை தேடும் இளைஞர்கள் நேரடியாகவும், நாசுக்காகவும், மறைமுகமாகவும் செய்தே வருகிறார்கள். ரொம்ப இறுக்கிப் பிடித்துக் கேட்டால் “நான் வாங்க மாட்டேன், என் பெற்றோர் விரும்பினால் என்ன செய்வது” என்று வாகாய் நழுவுவார்கள். சாதி பார்த்து, ஜாதகம் பார்த்து, அந்தஸ்து பார்த்து எல்லா எழவும் பார்த்துக்கூட தொலையட்டும். குறைந்த பட்சம் வரதட்சணையாவது வாங்க மாட்டேன் என்று முடிவெடுப்பதற்குக்கூட நேர்மையற்ற இந்த இளைஞர்களை வைத்துத்தான் அப்துல் கலாம் 2020இல் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறாராம்.

குழந்தைகள் உழைப்பை எதிர்ப்பார்கள், சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுப்பார்கள், சுயமுன்னேற்ற நூலென்றால் விழுந்து விழுந்து படிப்பார்கள், ரோட்டோரத்துப் பிச்சைக்காரனுக்காக சில்லறைகளையும் கொடுப்பார்கள்…இப்படியெல்லாம் நல்லது செய்வதாக கற்பித்துக் கொண்டிருக்கும் இந்த இளைய சமூகம்தான் இந்த வரதட்சணைப் பேயை இன்னும் வீரியமாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது. குறுக்கு வழியில் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதன் சமூக அங்கீகாரத்தில்தான் வரதட்சணையும் சாகாவரம் பெற்று ஜம்மென்று உயிர் வாழ்கிறது.

வட இந்தியாவில் கேஸ் அடுப்பு வெடித்து கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. தென்னிந்தியாவில் படித்தவர்கள் அதிகம் என்பதால் இந்த வரதட்சணை கொடுமைகள் சதீஷ் போல நாகரீக கனவான்களின் நவீன தொழில்நுட்ப சித்திரவதையாக பரிணாமம் பெற்றிருக்கிறது. சதீஷைப் பொறுத்தவரை அவனது மனைவி என்பவள் வெறும் உடம்பு மட்டும்தான். அந்த உடம்பிற்கு மானமிருக்கிறது என்பதனால்தான் அவன் அவளது நிர்வாண படங்களை வெளியில் விடுவேன் என்று பயமுறுத்த முடிகிறது. உடல் மானம் மட்டுமல்ல குடும்ப மானமும் போனால் கூடப் பரவாயில்லை என்று துணிந்து அந்தப் பெண் போலீசுக்கு வரவேண்டுமென்றால் அவள் எவ்வளவு துன்பம் அடைந்திருக்க வேண்டும்?

வரதட்சணைக் கொடுமைகளை நிறுத்துவது பெண்களிடம் இருந்துதான் துவங்க வேண்டும். இப்படி பொன்னும், பொருளும் வாங்கிக் கொண்டு திருமணம் செய்ய விரும்பும் இளைஞர்களை காறித்துப்புவதற்கு பெண்கள் முன்வரவேண்டும். வரதட்சணை மறுப்பதுதான் ஆண்மையின் தகுதி, விரைக்கும் ஆண் குறியில் அல்ல எனுமளவுக்கு அந்தப் போர் நடைபெற வேண்டும். காதலோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ வரதட்சணை மறுப்புத்தான் முதல் தகுதி என்றாக்கப்படவேண்டும். ஊழலால் சூழ வாழும் இந்த சமூக அமைப்பில் வரதட்சணைக்கெதிரான போராட்டம் துவங்கினால் அது ஏனைய பிணிகளை எதிர்த்து விரியும் போராட்டமாகக்கூட மாறும்.

எதெல்லாம் வரதட்சணை?

  1. பவுன் கணக்கில் கொட்டப்படும் நகையோடு பெண் திருமணமாவது – தங்க தட்சணை!
  2. பணம் வாங்குவது, திருமணச்செலவு முழுமையும் பெண் வீட்டார் செய்வது – ரொக்க தட்சணை!
  3. வரதட்சணைப் பணத்தை வைத்து வேலை வாங்குவது, அமெரிக்கா செல்வது – வேலை தட்சணை!
  4. வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் பெறுவது – சொத்து தட்சணை!
  5. தீபாவளி, பொங்கள் இதர நாட்களை வைத்து பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – பண்டிகை தட்சிணை!
  6. முக்கியமாக பிரசவ செலவை மாமனார் வீட்டிற்குத் தள்ளிவிடுவது – பிரசவ தட்சணை!
  7. குழந்தை பிறந்தால் அதற்கும் காது  குத்து, மொட்டையடிப்பது என்ற பெயரில் பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – குழந்தை தட்சணை!
  8. மனைவியை வீட்டுவேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதில் பங்கேற்காமல் இருப்பது – வேலைக்காரி தட்சணை!
  9. மனைவியை இருட்டுக்கு மட்டும் இலவசமாய் பயன்படும் பொருளாய் பார்ப்பது – தாசி தட்சணை
  10. எந்த முக்கியமான விசயங்களிலும் மனைவியோடு கலந்தாலோசிக்காமல் இருப்பது – அடிமை தட்சணை!
  11. மனைவியை அடிப்பது, சித்திரவதை செய்தவது – டார்ச்சர் தட்சணை!

……… மொத்தத்தில் முடிவு பெறாது இந்த வரதட்சணை!

இப்போது சொல்லுங்கள் உங்களில் யார் சதீஷை கண்டிக்கிறீர்கள்?

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. என்னுடைய குரு வரதட்சணை கூடாது, எளிய முறையில் திருமணம் நடத்த வேண்டும், எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அந்தக் காலத்திலும்.வரதட்சணை வாங்குவது பாவம் என்று சொன்னார்.யார் கேட்டார்கள்.முதலில் பிராமணர்கள் வாங்குகிறார்கள் என்றார்கள்.இப்போது கிறித்துவர்கள், முஸ்லீம்களும் வரதட்சணை வாங்குகிறார்கள்/கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
    என்னதான் தீர்வோ ஈஸ்வரா?

    • ஹிந்துக்கள் மட்டும் தான் வரதட்சணை வாங்குகிறார்களா??? அல்லது ஹிந்துக்கள் மட்டும் தான் காதலர் தினத்தை எதிர்கிறார்கள??? நீ தாண்டா மதவெறியன்…இந்தியாவில் காதலர் தினம் அதிகம் கொண்டாடுவது ஹிந்துக்கள் தான்…தாக்கரே எதிர்த்தால் அது ஹிந்து மதவெறி….சப்னா ஆஸ்மி எதிர்த்தால் அது இஸ்லாமிய கோட்பாடு….எதுடா உன் நியாயம்???

  2. உண்மை. இதில் உள்ளது எல்லாம் நூற்றுக்கு 114 உண்மை. ஆனாலும் எல்லாவற்றையும் மாப்பிள்ளையின் மீதே போடாதீர்கள். மாமனார்கள் ஊரில் தம்முடையப் பெருமை தெரிய வேண்டுமென்பதற்காக அவர்களாக முன்வந்து சில பலவற்றைச் செய்கிறார்கள். மாப்பிள்ளையின் அம்மாக்களும் அநியாயமாக மகனிடம் கேட்கச் சொல்லாமல் மருமகளிடம் நேரடியாக கேட்கிறார்கள். மகன் மறுத்து பேசினாலும், மருமகள் தன் வீட்டு பெருமையை தக்கவைக்க தன் அப்பாவிடம் பேசி வாங்கி தருகிறாள்.

    சில பேர் உள்ளனர். பூர்விகச் சொத்து மகன், மகள் இருவருக்கும் சரி பாதியாகத் தரவேண்டுமென்பதற்காக, மகளுக்கு கொஞ்சமாக வரதட்சணைக் கொடுத்து விட்டு மகளையும் மருமகனையும் ஏமாற்றுகிறார்கள். இதை எந்த வகையில் சேர்ப்பது ?

    • //மாமனார்கள் ஊரில் தம்முடையப் பெருமை தெரிய வேண்டுமென்பதற்காக அவர்களாக முன்வந்து சில பலவற்றைச் செய்கிறார்கள். மாப்பிள்ளையின் அம்மாக்களும் அநியாயமாக மகனிடம் கேட்கச் சொல்லாமல் மருமகளிடம் நேரடியாக கேட்கிறார்கள். மகன் மறுத்து பேசினாலும், மருமகள் தன் வீட்டு பெருமையை தக்கவைக்க தன் அப்பாவிடம் பேசி வாங்கி தருகிறாள்.//

      மாப்பிள்ளை ஏன் வாங்க அனுமதிக்கிறார்? கட் அண்டு ரைட்டாக ஒரு பைசா வாங்க முடியாது என்று சொல்ல வேண்டியதுதானே? அதுதானே தன்மானம்?

      //பூர்விகச் சொத்து மகன், மகள் இருவருக்கும் சரி பாதியாகத் தரவேண்டுமென்பதற்காக, மகளுக்கு கொஞ்சமாக வரதட்சணைக் கொடுத்து விட்டு மகளையும் மருமகனையும் ஏமாற்றுகிறார்கள். இதை எந்த வகையில் சேர்ப்பது ?//

      இது ஏதோ ஒரு வகையில் சேர்த்தியாக இருக்கட்டும். அந்த சொற்ப தொகையையும் வரதட்சனையாக அந்த மாப்பிள்ளை ஏன் வாங்கிக் கொள்கிறார்?

    • கையும் காலும் unaku எதுக்கு ..
      சொத்து விறும்பி கொடுக்கறது அத கேட்டு வாங்கறது கேவலம்
      மாமனார் மாமியார் மச்சான் இவ்வளு kodukanumum கேகர oru ஆணாவது avanghallukku முடியலைன ஓரறு தலைவலி மதரையவது வங்கி குடுத்து irukingala . அன்ன உங்க்ஹா அம்மா அப்பா நின்ன உகரத மட்டும் உங்க்ஹா பொண்டாட்டி தந்கநூம்

  3. //வரதட்சணை வெறியடங்காத சதீஷ் வீட்டார் அந்தப் பெண்ணை மேலும் கொண்டு வருமாறு வற்புறுத்தியிருக்கின்றனர். இதற்காகவே அந்தப்பெண்ணுடன் தாம்பத்ய உறவு கூட வைக்காமல் இருந்திருக்கிறான் அந்தக் கணவன்.//

    அவன் ஆம்பளையான்னு எனக்கு சந்தேகமா இருக்கு!
    வரதட்சணை கிரிமினல் குற்றம் என்றாலும் யாரும் புகார் கொடுக்க முன்வராமல் இருப்பது நமது மக்களீன் விழிப்புணர்வு நிலை!,

  4. மிக நல்ல நோக்கம்.
    நேர்மையான அறைகூவல்.
    மிகச்சிறப்பான இடுகை.
    நன்றி வினவு.

    வரதட்சினை வாங்கி/கொடுத்து நடத்தப்படும் திருமணத்தை-அது தோழர்களுடையதாயினும் சரியே- கலந்து கொள்ளாமல் எதிர்த்து புறக்கணியுங்கள். பிரியாணி உட்பட. காலி மண்டபங்களில் திருமணம் செய்ய மானமுள்ளோர் தயங்கட்டும்? வரதட்சினை ஒழிப்பில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது.

    ///முஸ்லீம்களும் வரதட்சணை வாங்குகிறார்கள்/கொடுக்கிறார்கள்…-jeyandrar /// —இந்த கொடுமையான மூடப்பழக்கவழக்கம் படுவேகமாய் முஸ்லிம்களிடம் குறைந்து வருகிறது. கண்கூடாக காணலாம். இதில், tntj-வின் இருபத்தைந்து வருட அயராத அசுர இஸ்லாமிய பிரச்சாரம் அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதோ இஸ்லாத்தை விளங்காமல் வாங்கியவர்கள் கூட தவறுணர்ந்து இறைவனுக்கு அஞ்சி மாமனாரிடம்/மாமியாரிடம் திருப்பித்தந்துகொண்டு இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன்.

    • வரதட்சனை சாதி,மத வேறுபாடுகளை கடந்து இன்று அபரிவிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது .குறிப்பாக முஸ்லிம் மததில்தன் கிலோ கணக்கில் தங்கம் வாங்குவதும் நவீன அடம்பர கார்கள் வாங்குவதும் அதன் காரணமாக ஏழை முஸ்லிம் பெண்கள் முதிர்கன்னிகளாக இருப்பதும் முஸ்லிம் மதத்தில் மட்டுமே அதிகம் என்பதை மறைத்து முற்போக்கு மதமாக காட்டுவதுதன முஸ்லிம் மத தர்மமா ?எங்கள் பகுதியில் TNTJ அமைபினரே மேற்கண்ட வரதட்சணைகலை அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கித்தான் வரதட்சனை ஒழிப்பு புரட்சி செய்கின்றனர் .வரதட்சணையை ஒழிக்க முதலில் தொடர்புடைய சமுதாயம் தனது தவறை குறைந்தபட்சம் ஏற்றுகொல்வதர்கவது முன்வரவேண்டும் .

      • எதையாவது மறுத்துகொண்டிருகனும் என்று சிலபேர் இருக்கிறார்கள். சொல்லப்பட்ட விஷயத்தை உள்வாங்கி சொல்கிறார்களா என்றால் இல்லை.

        25 வருடமாக தமிழகத்தில் TNTJ மூலமாக ஒரு புரட்சி நடந்து கொண்டிருப்பதை அறியாதிருப்பது குற்றமில்லை. அறியாதது போல் நடிப்பது பெருங்குற்றம்.

        ஒரு சவால்: TNTJ பிரச்சாரத்தின் பயனாக பல முஸ்லிம் சகோதரர்கள் வாங்கிய வரதட்சணையை திருப்பி கொடுத்திருக்கிராகள். வேறு எந்த சமுதாயத்திலாவது இந்த அதிசய நிகழ்வு நடந்திருக்கிறதா? ஒருத்தரை ஒரே ஒருத்தரை காண்பிக்கமுடியுமா?

        • இன்மை மற்றும் நெற்றியடி நண்பர்களே,

          வரதட்சணை வாங்குவது தவறு என்று இசுலாத்தின் துணை கொண்டுதான் உங்களுக்கு விளங்க வைக்க முடியும் என்பது வருத்தமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலிருந்து யோசித்தாலே இதன் மானுட விரோதம் தெரியவரும். இதற்குக்கூட உங்களுக்கு மதம் தேவைப்படுகிறது என்றால் நாட்டில் நடக்கும் எல்லா அநியாயங்களுக்கும் அது இசுலாமிய விரோதம் என்று நிரூபிக்கப்பட்டால்தான் கண்டிப்பீர்கள் போலும். எங்கள் தோழர்கள் எந்த மத துணையுமின்றி வரதட்சிணை மறுப்பு மட்டுமல்ல சாதி, சடங்கு, ஆடம்பரம் எல்லாவற்றையும் மறுத்துவிட்டு திருமணம் செய்கிறார்கள். அத்தகைய திருமணங்களை நீங்கள் காண விரும்பினால் ஏற்பாடு செய்யலாம்.

        • வினவு,

          உங்கள் வருத்தம் கண்டு வருந்துகிறேன். உங்கள் அறியாமையை கண்டு மேலும் பரிதாபப்படுகிறேன்.

          நான் முஸ்லிம். இஸ்லாத்தின் ஊடாகவே தான் நல்லது கெட்டதை பிரித்தறிகிறேன். இஸ்லாம் தான் சரி என்று முழுமையாக நம்புகிறேன். இதில் நீங்கள் வருத்தமடைய என்ன இருக்கு என்று தெரியவில்லை.

          உங்கள் கொள்கையின் துணை கொண்டு நீங்கள் சரிகான்பதை நான் வருத்தப்பட்டால் அதை ஏற்றுக்கொல்லும்படியாகும். சரியா?
          வினவு, உங்களுக்கு என்ன பிரச்சனை? மதம் துணைகொண்டு அநியாயத்தை அக்கிரமத்தை கண்டிக்ககூடாதா? மதம் துணையில்லாமல் கண்டித்தால் எப்படி சரி?
          இஸ்லாம் துணைகொண்டு உங்களைவிட முழுவீச்சில் வெற்றி பெறுகிறோமே அதை கண்டு வருத்தபடுகிறீர்களோ?
          சரி. நான் கேட்ட சவாலுக்கு பதில் உண்டா?
          வினவு உங்களிடம் ஒரு கேள்வி. சம்பந்தம் இல்லை என்றாலும் உங்கள் சிந்தனைக்கு:
          நீங்கள் உங்கள் கொள்கையின் மீது நம்பிக்கை வைத்து பல நல்ல காரியங்கள், சமூக சேவைகள், அறிய பெரிய தியாகங்கள் செய்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை முழுவதுமே. இதனால் இவ்வுலக ஆசா பாசங்களை துறக்கிறீர்கள் மக்கள் நலன் கருதியே. பிறகு ஒரு நாள் இறந்தும் விடுகிறீர்கள். அவ்வளவு தானா? இதனால் உங்களுக்கு என்ன பலன்? உங்கள் அருமையான உழைப்புக்கும் தொண்டுக்கும் தியாகத்திற்கும் என்ன பிரதி பலன்?
          மக்கள் நலமடைவார்கள் என்று பிதற்ற மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு என்ன பலன் என்பது கேள்வி.
          மேலும், ஒருவன் வாழ்கை பூராவுமே அயோக்கியன், கொலை, கொள்ளை, கற்பழிப்பை தொடர்ந்து செய்பவனை ஒரு நாள் மரணம் கவ்விகொள்கிறது. இதற்கெல்லாம் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டாமலே. அதாவது இப்படியாகப்பட்ட ஒரு ரவுடியை திடீர் என்று போலீஸ் என்கௌன்டர் செய்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். இவன் செய்த அத்துணை தீமைகளுக்கும் இப்போது எப்படி தண்டனை கொடுப்பது?
          மரணம் தான் தண்டனை என்று பிதற்ற மாட்டீர்கள் என்று மீண்டும் நம்புகிறேன்.
          இவனால் பாதிக்கபட்டவர்களுக்கு என்ன நீதி?
          உங்கள் கொள்கை துணை கொண்டு பதில் சொல்லுங்கள்.

        • நானும் பிறப்பால் ஒரு முஸ்லிம்தான் .முஸ்லிம் மதத்தில் நடக்கும் வரதட்டனை கொடுமைகளை அனுபவரிதியாக உணர்துதான் கூறுகிறேன் .முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் ஆடம்பர திருமணங்களும் ,லட்சகணக்கில் வரதட்சணை பணங்களும் ,பொருள்களும் வாங்குவதை பார்த்த மற்றமதங்க்களை சேர்த்தவர்கள் சாதாரணமாக ஒரு சைக்கில் அளவிற்கு வரதட்சணை வாங்கியவர்கள் ,இன்று பலபவுன் தங்கநகைகளும்,ஆயிரகணக்கான ரூபாய் மதிப்புள்ள இரண்டுசக்கர வாகனங்கள் வாங்கும் அளவீர்க்கு வரதச்னைகொடுமைதலைவெரித்துஆடுகிறது . எனவே ,தயவுசெய்து காலாவதி ஆகிப்போன மதக்கருத்துக்களை மட்டுமே பிடித்துதொங்குவது எந்த பிரச்சனைக்கும் அறிவியல் ரீதியான தீர்வை நமக்கு தராது. உதாரனமாக முஸ்லிம் மதத்தில் ஆண்கள் வரதட்சணை (மஹார்) kodukkavaendum endru

        • நானும் பிறப்பால் ஒரு முஸ்லிம்தான் .முஸ்லிம் மதத்தில் நடக்கும் வரதட்டனை கொடுமைகளை அனுபவரிதியாக உணர்துதான் கூறுகிறேன் .முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் ஆடம்பர திருமணங்களும் ,லட்சகணக்கில் வரதட்சணை பணங்களும் ,பொருள்களும் வாங்குவதை பார்த்த மற்றமதங்க்களை சேர்த்தவர்கள் சாதாரணமாக ஒரு சைக்கில் அளவிற்கு வரதட்சணை வாங்கியவர்கள் ,இன்று பலபவுன் தங்கநகைகளும்,ஆயிரகணக்கான ரூபாய் மதிப்புள்ள இரண்டுசக்கர வாகனங்கள் வாங்கும் அளவீர்க்கு வரதச்னைகொடுமைதலைவெரித்துஆடுகிறது . எனவே ,தயவுசெய்து காலாவதி ஆகிப்போன மதக்கருத்துக்களை மட்டுமே பிடித்துதொங்குவது எந்த பிரச்சனைக்கும் அறிவியல் ரீதியான தீர்வை நமக்கு தராது. உதாரனமாக முஸ்லிம் மதத்தில் ஆண்கள் வரதட்சணை (மஹார்) கொடுக்கவேண்டும் என்று உள்ளது. இந்தியாவில் இது பெயரலவிர்க்கு இருந்தாலும், இக்கொள்கையை அரபு நாடுகள் தீவிரமாக கடைபிடிக்கின்றன. அங்கு என்ன விளைவை இது ஏற்படுத்தி இருக்கின்றது என்றால் பணக்கார ஆண்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப இரண்டு, மூன்று மனைவிகளை திருமணம் (பணத்தால் வாங்கிவிடுகின்றனர்) செய்துகொள்கின்றனர். வசதி இல்லாத ஆண்கள் திருமணத்திற்காக ஏங்கி நிற்கும் நிலையை அதாவது பெண்களை நுகர்வு பொருளாக மாற்றும் எதிர்மறை விளைவை ஏற்பபடுதி ருக்கின்றது.

          நண்பர்களே! நிரந்தர உண்மை என்று உலகில் எதுவும் இல்லை. எனவே இஸ்லாத்தின் கொள்கை அன்று முர்போக்கனதாக இருந்திருக்கலாம் . ஆனால் இன்று விவாதத்திற்கும்,ஆய்விர்க்கும் உட்படுத்தி புதிய மனித சமுதாயம் படைக்க வேண்டியது சமூக ஆர்வலர்களிடம் உள்ள பெரிய சவால்கல் இல்லையா?

        • //முஸ்லிம் மதத்தில்//

          நீங்கள் முஸ்லிம்களா? அப்படியா. ஒரு முஸ்லிமின்
          சொல்லாடல் இப்படி இறுக்காது. சரி போகட்டும்.

          அது இஸ்லாமிய மார்கத்தில் இல்லை மண்டுகளா.
          முஸ்லிம்களிடம். அதை போக்கத்தான்
          போராடிக் கொண்டிருக்கிறோம். கணிசமாக வெற்றியும்
          பெற்றுக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

          உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் நீங்களே
          இதை எதிர்த்து போராடி இருக்கலாமே. உங்கள் வீட்டில்
          காணும் ஒரு சில தவறுகளை கண்டு வீட்டை துறக்கும்
          அறிவிழியாக இருக்கிறீர்களே.

    • மதம்சாராமல் இசுலாமியர்களால் எதனையும் சிந்திக்க முடியாது. ஏனெனில் அது அறிவியல்பூர்வமானது. ஆனால் ஒப்புக்கு 1001 ரூபாய் மகர் கொடுத்துவிட்டு பவுன் கணக்கில் தங்கமும் கட்டில், பீரோ, வாசிங் மிஷின், டிவி, ஃப்ரிட்ஜ் என மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டாரிடம் கேட்காமலே தானகவருகின்றச (மறைமுகமாக மனக்கணக்கிட்டு) சீதனங்கள் வாங்கிக்கொள்ளலாம். ஏனென்றால் அது ஹலால் ( அனுமதிக்கப்பட்டது}. “மகர்’ என்பதும் படு பிற்போக்கானதே. அது பெண்ணை விலைகொடுத்து வாங்குவது.

  5. //வரதட்சினை வாங்கி/கொடுத்து நடத்தப்படும் திருமணத்தை-அது தோழர்களுடையதாயினும் சரியே- கலந்து கொள்ளாமல் எதிர்த்து புறக்கணியுங்கள். பிரியாணி உட்பட. காலி மண்டபங்களில் திருமணம் செய்ய மானமுள்ளோர் தயங்கட்டும்? வரதட்சினை ஒழிப்பில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது.//

    மிகச் சரியான வாதம்

  6.  “வரதட்சணையை நாங்களாக ஏதும் கேட்கவில்லை, நீங்களாக பார்த்து செய்தால் போதும்” என்று நல்லவர்கள் போல பேசுவார்கள். உறவினர்களை விட்டு குடும்பத்தின் மேன்மை, சமீபத்தில் நடந்த திருமணங்களில் கொடுக்கப்பட்ட வரதட்சணையின் அளவு எல்லாம் சொல்லி மறைமுகமாக ரேட்டை நிர்ணயம் செய்வார்கள். நேரடியாக கேட்பதை விட இரகசியமாக கேட்பது மகா கேவலமானது.”
    இது பணக்கார முஸ்லீம்களுக்கு முற்றிலுமாக பொருந்தும். முஸ்லீம்களில் வரதட்சனை வாங்குவது ஹராம் என்பதினால், இவர்கள் ஒன்றும் கேட்காத அப்பாவிகளைப் போல் நடித்துக் கொள்வார்கள்.

  7. நானும் ஒரு பைசா கூட வாங்கவில்லை. அதற்கு காரணமும் TNTJ தான். (TNTJ – னு சொன்னதால் நான் மத வெறி பிடித்தவன் என்று யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்). உண்மையைச் சொன்னேன்.

    • என்ன ஒரு பிதற்றல். TNTJ என்ன மதவெறி அமைப்பா? அதன் அற்புதமான கடுமையான உழைப்பால் உங்களை மாதிரி எத்தனையோ பேர் நல்வழி பெறவில்லையா? அதன் பிரச்சாரத்தினால் தானே நீங்கள் வரதட்சனை வாங்காது சுயமரியாதையான ஆண் மகனாக தலைநிமிர்ந்து நிற்கிறீர்கள்.

      அல்லாஹுக்கு நன்றி சொல்லுங்கள். அவனிடம் TNTJ ன் பனி மேலும் சிறப்புற நடக்க பிரார்த்தியுங்கள்.

      அவதூறு பேசுகிறவனையும் அபாண்டமாக குற்றம் சுமத்துகிற அல்லகைகளை பொருட்படுத்தாதீர்கள்.

      • என்ன ஒரு பிதற்றல். TNTJ என்ன மதவெறி அமைப்பா? /////////////////////////
        என்னது காந்திய சுட்டுட்டாங்களா?

        • முன்பெல்லாம், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மட்டும்தான் முஸ்லிம்களை மதவெறியர்கள் என்றார்கள். இப்போது நீங்களும் கிளம்பி விட்டீர்கள். உங்களிருவருக்கும் என்ன வித்தியாசம்? சரி போகட்டும். TNTJ-வின் மதவெறி என்னவென்று சொல்லமுடியுமா? எத்தனை ஹிந்துக்களை கொன்றிருக்கிறார்கள்? எத்தனை கிருத்துவர்களை எரித்திருக்கிறார்கள்? மதவெறி என்றாலாவது என்ன என்று விளங்கி வைத்திருக்கிறீர்களா? பற்று – வெறி இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றாவது தெரியுமா? ‘என் பெயர் முஹம்மத்’ என்று கூறுவதே மதவெறியாகி விட்டதா இப்போது?

        • முஹம்மத்,

          விடுங்கள். இவர்கள் என்னதான் கூவினாலும்
          நியாயமான சரியான மனம் படைத்த பல மாற்றுமத
          சகோதரர்களை TNTJ ன் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்
          மூலமாகவும் சமுதாய சேவைகளின் மூலமாகவும்
          இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படவைத்திருக்கிறாகள். இதை
          அறிந்துதான் இவர்கள் பதறுகிறார்கள்.

          இவர்களும் காழ்ப்பில்லாமல் இஸ்லாத்தை அணுகினால்
          உணர்ந்துகொள்வார்கள் இஸ்லாம் உன்னதமான
          மார்க்கம் என்பதை.

          பிரார்த்திப்போம். அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக.

      • இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. யாரும் நீ மத வெறியனா? என்று என்னை கேட்கவில்லை. இங்கே அப்படி ஒரு எண்ணம் இருப்பதால் நானாக முன்வந்து சொல்கிறேன். இதை பெரிதுபடுத்த வேண்டாம்.

  8. பாஸ், கல்யாணம் பண்ணிகுறது எதுக்குன்னனா, பொன்னும் பையனும் அவங்கவுங்க குடும்பத்தோட சந்தோசமா இருக்குறதுக்கு! பொண்ணு வீட்டுக்கு போன பொண்ணு வீட்டுக்கு செலவே! இதையே சாக்க வைச்சு டிமாண்ட் பண்ணினா தான் அது தப்பு.

    அவர் அவர் பெண் பிள்ளை, அவள் குடும்பம்  நன்றாக வாழவேண்டும் என பெண் வீட்டார் செய்வது வரதட்சணை ஆகாது. அவர்கள் பிரியப்பட்டு  வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் கொடுப்பது அவரவர் பெண் பெயரிலேய செய்யட்டும். டிமாண்ட் செய்து வாங்குவதே தவறாகும்.

    திருமண செலவை சரி பதியாக பகிர்ந்துக்கலாம்.  

    அவங்க பொண்ணு , மருமகன் வெளி தேசம் போயி சந்தோசமா இருக்கொனுன்னு பெற்றவர்கள் ஆசை படுவது எப்படி தப்பாகும்?  அவங்களாலே “முடிஞ்ச அளவு”க்கு பிரியப்பட்டு செய்வது எப்படி தப்பு சொல்லுவீங்க? பெண் வீட்டாரை வற்புறுத்தி வாங்கினா அது நிச்சயமா தண்டிக்க பட வேண்டிய தண்டனையே! 

    • நியாய தராசு!

      சமூகத்தில் வரதட்சணை என்பது இருப்பதால் தான், கேட்காமலும் கொடுக்கிறார்கள். வற்புறுத்தினாலும்… புறுத்தவிட்டாலும், வரதட்சணை, வரதட்சணை தான்.

  9. வரதட்சணை கொடுக்காமல் பென்விட்டின் சகோதர்கள் சொத்தை கொள்ளை அடித்த சம்பவங்கள் நெறைய உண்டு . ஒரு வீட்டில் பெண் பிறந்தால் அவளுக்கும் அந்த வீட்டின் சொத்தில் பங்கு உண்டு அதை தட்சணையாக தரவேண்டோம் அதை அவள் பேரில் எழுதினால் அவங்கள் பிள்ளைகள் வளம் பெறுவார்கள் . இதை வீனவு ஒரு இடத்திலும் தெளிவாக சொல்ல வில்லை முற்றிலும் ஒரு தலை பட்சமான கட்டுரை .

    • சொத்தே இல்லாவிட்டாலும், கந்து வட்டிக்கு வாங்கியதை மாப்பிள்ளை வீட்டார் புடுங்குகிறார்கள். இதில், சொத்து இருந்தால்… மாப்பிள்ளையாவது விடுவதாவது! கட்டுரையில் இருப்பதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் புலிக்குட்டி. பிறகு, விடுபட்டவைகளை பார்க்கலாம்.

  10. வாழ்க்கைத் துணை ஒப்பந்தம். பேசி முடிப்பவர். பெற்றோர், உறவினர் மற்றும் முகவர்.

    பெண்ணிற்கு 21 வயதில்ஆரம்பிக்கப்பட்ட துணை தேடும் படலம் 28-30 ல் முடிவடையும் அவலம். அதற்குள் ஏற்படும் அவமானங்கள், கேட்கப் பட்ட கேள்விகள், பார்வைகள், விசாரிப்புகள் ஏராளம். உதாரணமாக நாளிதழ் ஒன்றில் வரும் விளம்பரத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். கேட்கப்படும் கேள்வி நகை/பணம் எவ்வளவு, குறைவாக கூறினால் அழைப்பு துண்டிக்கப்படலாம்.

    பெற்றோர் நிலை அவர்கள் பெற்றோர் இவ்வளவுதான் சீர் செய்தனர். அதே சீர்தான் இப்போதும் தன் மகளுக்கு செய்யமுடியும் என்பது. இது பொருளாதார நிலையால். ஆண்டுகள் செல்ல பெண்ணின் நிலை ஏதோ ஒன்று அமைந்தால் போதும். துணை ஒன்று வேண்டும். படித்தவனா, உழைத்து சம்பாதிப்பவனா என்பது பின் தள்ளப் படுகிறது.

    அதே பெற்றோர் தன் மகனுக்கு பெண் பார்க்கும் போது ஒன்னுமில்லாதவன் உன் தங்கைக்கு இத்தனை கேட்டான் உனக்கு இப்படி கேட்கனும். வினவு கூறியதை போல அவர்கள் தேடுவது அதிக சொத்துள்ள, அல்லது அதிக நகையோடு வரும் மருமகள். ஆனால் அங்கும் ஏளனத்தை காண்பது உறுதி. ஆனால் அவர்களுக்கு பழகி விட்டது. அல்லது குறிக்கோள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டது.

    கொடுமை என்னவென்றால் சம்பத்தபட்ட பெற்றோரே சந்தித்து இம்முடிவுகளை எடுக்கின்றனர். குறுக்கே சாதக பொருத்தம் வேறு. மன்னிக்கவும் சோதிட பொருத்தம். இது ஒரு பெருங்கதை. ஆனால் வாழ்க்கையில் இணையும் நபர்கள் சந்திப்பதேயில்லை. கருத்து பரிமாற்றமோ அறவே இல்லை.

    என் சகோதரன் ஒருவர் சொல்வார் சொந்தத்தில் பெண் தேடாதே வெளியில் எடு. சொந்தம் பெருகட்டும் என. வினவு சாதி கடந்து செய் என்கிறது. சரிதானே

    தாலி மறுத்த தோழர்களின் திருமணத்தை கண்ட என்னால் அதை புறக்கணிக்க இயலாது போனது ……………..

    திருமணச் செலவுகள், இரு வீட்டிலும் என்றாலும், பெண் வீடு அதிகமான செலவுகளை செய்ய/ஏற்க வேண்டியுள்ளது. இனத்திற்கு இனம் இதுவும் வேறுபடுகிறது.

    தாலியும், பெண்ணின் சேலையும மாப்பிள்ளை வீட்டார் செலவு. பெண்ணிற்கு இத்தனை பவுன் நகை என்பதே பேரம். பட்டுப்புடவைக்கு செலவிடும் தொகை அதை பயன்படுத்து காலம் சம்பந்தமே இல்லை. ஆம் அந்த இனம் அப்படியே பழக்கப்படுத்தபட்டு விட்டது.

    அடுத்து பரம்பரைச் சொத்து – மன்னிக்கவும் இது மிகக்குறைவாக இருக்கும் நடுத்தர வர்கத்திற்கு – திருமணச் செலவுகள் செய்து விட்டதால் சொத்துரிமை வழங்கப்பட்டும் பெண்ணிற்கு மறுக்கப்படும் வாரிசு சொத்துக்கள். முழுவதும் ஆணுக்கே என்றொரு உயில் அல்லது நிர்பந்ததில் கையெழுத்து பெறுவது.

    இரணடு பெண்கள் உள்ள வீட்டில் இன்னொரு பிரச்சினை. மூத்தவளுக்கு இத்தனை பவுன் போட்டியே எனக்கும் அதே மாதிரி.

    திருமணம் முகவர் மூலம் முடிந்தால் கழிவுத் தொகை முகவருக்கு. இதற்கான இணையதளங்கள், முகவர்கள் பலபல. இவர்களுக்கு செலுத்திய தொகையில் என்னென்னவோ செய்திருக்கலாம்.

    உழைப்பை மறந்து ஓசியில் பணம் கிடைக்குமா, திடீர் பணக்காரனாக முடியுமா, குறைந்த பட்சம், இரு சக்கர வாகனம் அல்லது 4 சக்கர வாகனம் தன் உழைப்பால் வாங்க வக்கில்லாதவர்கள், இந்த சந்தையை பயன் படுத்திக் கொள்கின்றனர்.

    பட்டியலிட்ட தட்சணைகள் எல்லாம் எழுதாத சட்டங்களாக உள்ளன. மக்களும் அதற்கு பழக்கப்பட்டு விட்டனர்.

    இந்த இடுகை மாற்றத்தை ஏற்படுத்தட்டும் மனதில், மானுடம் செழிக்கட்டும் உறவில்.

  11. நல்ல பதிவு, திருமணம் செய்து கொள்பவர்கள் திருமணத்துக்கும் முன்னர் செல்போனில் பேசுவது வரதட்சனை பற்றியதாக இருந்தால் முக்கால் வாசி திருமணம நின்றே போகும். மணமகள் தப்பிக்கலாம்.

  12. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

    அருமையான பதிவு…மிக்க நன்றி…

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

  13. இந்த வரதட்சணை கொடுமை என்பது சராசரியாக நூற்றில் இரண்டு … இன்று பெரும்பாலும் திருமணமான முப்பது சதவீத குடும்பங்களில் பெண்கள் ஆட்சி தான் நிலவுகிறது… இதனை குறித்து எழுதும் நீங்கள் பல குடும்பங்களில் மனைவிமார்களால் சித்திரவதை படும் கணவர்களின் அவஸ்தையை எழுதுவதில்லையே ?

  14. தமிழக இஸ்லாமிய இளைஞர்களிடையே வரதட்சனை ஒழிப்பில் பிஜேவும் அவர் சார்ந்திருந்த இயக்கங்களும் ஆற்றிய பணிகள் மறுக்கவியலாதவை. இந்திய அளவில் வரதட்சினை எனும் தீமைக்கு எதிரான பரப்புரைகள் என இவைகளை கொண்டாலும், சாராம்சத்தில் இது பாதிதான். இஸ்லாத்தில் வரதட்சணைக்கு பதிலாக ஒருவிதத்தில் தனதட்சினை இடம்பெறுகிறது. வரதட்சினை கொடுமைகள் அளவிற்கு மோசமாகிவிடவில்லை என்றாலும் சௌதியில், குறிப்பாக எகிப்தில் நாற்பதை நெருங்கியும் திருமணம் செய்துகொள்ள பணமின்றி முதிர் கண்ணன்கள் அதிகம்.

    செங்கொடி 

    • //சௌதியில், குறிப்பாக எகிப்தில் நாற்பதை நெருங்கியும் திருமணம் செய்துகொள்ள பணமின்றி முதிர் கண்ணன்கள் அதிகம்.//
      –இல்லை செங்கொடி. இது மிக மிக மிக அரிது. ஏனென்றால், அரசே முன்வந்து ஆண்களுக்கு ‘திருமண லோன்’ கொடுக்கிறதே… சவுதியில் இருக்கும் தாங்களுக்கு இது தெரியாதா என்ன? அப்புறம் எப்படி //பணமின்றி முதிர் கண்ணன்கள் அதிகம்// என்கிறீர்கள்?

      ஆணின் படுகேவலமான குணநலன், குற்றப்பின்னணி ஆகியவற்றால் அவன் புறக்கணிக்கப்படுதல் (அல்லது) நோய், ஊனம், நிறம், வருவாயிண்மை போன்ற குறையுடன், பணக்கார அழகிக்காக வேண்டி தம் சக்தி மீறி ஆண் முயற்சிப்பது (அல்லது) எல்லாமிருந்தும் மகர் கொடுக்க மனமில்லாத படு கஞ்சனாக இருப்பது போன்றவைதான் காரணங்களாக முடியும். பத்தாயிரத்தில் ஒருவன் என்ற ரீதியில்…

    • //இஸ்லாத்தில் வரதட்சணைக்கு பதிலாக ஒருவிதத்தில் தனதட்சினை இடம்பெறுகிறது//

      இது ஒரு புரட்சி இல்லையா? பெண்ணை மணமுடிப்பதற்கு பெண்ணிடமோ பெண்ணைச் சார்தவர்களிடமோ தட்சிணை கேட்பதற்கு பதிலாக பெண்ணுக்கு கொடுத்து முடிப்பது சமுதாய மறுமலர்ச்சி இல்லையா?

      காமாலை கண்ணுக்கு வேறு எப்படித்தான் தெரியும்?

    • நண்பர்கள் நெ.முகம்மது, இனிமை

      முதலில், வரதட்சனை கொடுமைகளை பற்றி பேசவேண்டிய இந்த விவாதம் இஸ்லாமிய எதிர்ப்பாக திரும்பிவிடக்கூடாது என நினைக்கிறேன். எனவே சிறு விளக்கம் மட்டும்.

      சௌதியில் திரும‌ண‌ம் முடிக்க‌முடியாம‌ல் இருப்ப‌து எண்ணிக்கையில் எவ்வளவு என்ப‌தைவிட‌ மூன்றாயிரம் சௌதி ரியால் வ‌ரை சுல‌ப‌த்த‌வ‌ணை க‌ட‌னாக‌ கொடுத்து திரும‌ண‌ம் செய்விக்க‌த்தூண்டும் அள‌வில் இருக்கிற‌து என்ப‌தே போதுமான‌து. ஆனால் இது போன்ற‌ க‌ட‌னுத‌வித்திட்ட‌ங்க‌ள் எதுவும் எகிப்தில் இல்லை, இதை க‌ருத்தில் கொண்டுதான் முத‌ல் பின்னூட்ட‌த்தில் \\சௌதியில், குறிப்பாக எகிப்தில்// என்று குறிப்பிட்டிருந்தேன்.

      பெண் வீட்டாரை கொடுக்க‌வைப்ப‌த‌ற்கு ப‌தில் ஆண்வீட்டாரை கொடுக்க‌வைப்பதால் ம‌ட்டுமே அது புர‌ட்சிக‌ர‌ உள்ள‌ட‌க்க‌த்தை கொண்ட‌தாகிவிடாது. அர‌பு நாடுக‌ளில் பெண்வீட்டார் கொடுப்ப‌து ம‌ர‌பில் இல்லை, அவ்வ‌ள‌வுதான்.

      செங்கொடி

      • நபி (ஸல்) அவர்களால் இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர் பண்டைய அரபுக்களிடம் பலவித மௌட்டீகங்களுடன் பெண்ணடிமையும், பெண்களை ஒரு போகப்பொருளாக கருதிய நிலைமைதான். பெண் ணுரிமை பெண்ணுரிமை என்று இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் போல் அல்லாமல் இஸ்லாம் அப்போதே பெண்களுக்கு பல புரட்சிகரமான உரிமைகளை சட்டங்களாகவே அமுல் படுத்தியது. அவற்றில் ஒன்று தான் திருமணக்கொடை(மஹர்).

        இல்லறவாழ்க்கையில் அதிகமாக இழப்புக்குள்ளாவது(அழகு, இளமை) சிரமத்திற்குள்ளாவது(மகப்பேறு) தியாகங்கள் செய்வது(தன் பிறந்த வீட்டையே துறப்பது) பெண்கள் தான்.

        இவ்வளவையும் எதிர்நோக்கின்ற பெண்களிடம் வரதட்சணை வாங்குகின்ற அயோக்கியத்தனத்தை விட்டு அவர்களுக்கு மணக்கொடை கொடுங்கள் என்று சொல்லுகின்ற மார்க்கம் அதை சட்டமாக்கின கடவுள் எவ்வளவு தீர்க்கமான அறிவுள்ளவனாக இருப்பான்.

        இழப்புக்கும் சிரமத்திற்கும் தியாகங்களுக்கும் உரிய பெண்களிடம் மணக்கொடையை பெறுகின்ற உரிமையை அவர்களிடம் கொடுப்பதுதானே நியாயம் அறியுடைமை.

        இதை எந்த மனித சட்டம் இஸ்லாத்திற்கு முன்பும் பின்பும் அமுல்படுத்தியுள்ளது. இதை அறிவுள்ளவர்கள் பெண்களை மீட்டெடுக்க வந்த புரட்சிகர திட்டம் என்றே புரிந்துகொள்வர்.

        பெண்ணுக்கு மணக்கொடை கொடுக்க வேண்டும் என்று நிற்பந்தமாகும்போது ஆண் கண்டிப்பாக நன்றாக உழைக்க வேண்டும். அப்படி உழைப்பவர்களுக்கு தான் கல்யாணம். அவர்கள் தான் கல்யாணத்திற்கு பிறகும் மனைவி, மக்களை காப்பாற்றுவார்கள் என்று இஸ்லாம் அக்கறைகொள்கிறது.

        பெண்களிடம் வாங்கித்தின்று பேடிகளாக இருக்காதீர்கள் என்று போதிக்கிறது.

        இந்த பேடிகளை கண்டு இஸ்லாம் வெறுக்கிறது.

        பேடிகளுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு? பேடிகளுக்காக வக்காலத்து வாகுபவர்களை தவிர?

        • //பெண்களிடம் வரதட்சணை வாங்குகின்ற அயோக்கியத்தனத்தை விட்டு அவர்களுக்கு மணக்கொடை கொடுங்கள் என்று சொல்லுகின்ற மார்க்கம் அதை சட்டமாக்கின கடவுள் எவ்வளவு தீர்க்கமான அறிவுள்ளவனாக இருப்பான்.//

          சிறு சந்தேகம், அந்த கடவுள் ஏற்கனவே பல தூதர்களை அனுப்பியிருக்காராமே! பல வேத புத்தகங்களையும் கொடுத்துள்ளாராமே! அப்போதே ஏன் இன் இந்த அறிவுள்ள செயலை செய்யவில்லை

        • //பெண்களிடம் வாங்கித்தின்று பேடிகளாக இருக்காதீர்கள் என்று போதிக்கிறது.
          இந்த பேடிகளை கண்டு இஸ்லாம் வெறுக்கிறது.//

          வரதட்சணை வாங்குபவன் எவனாக இருந்தாலும் பேடி தான்! ஏன் பெண்ணுக்கு கொடுக்கும் வழக்கம்! அப்போது பெண்களுக்கு மட்டும் தட்சணை என்பது பெண்கள் தொகை குறைவாக இருந்திருக்கலாம் என்ற லாஜிக்கில் வரும் இல்லையா!?

        • பையா,

          பல தூதர்கள் மூலம் சொன்னார்தான். உம்மைப்போல்
          மூடர்கள் அதை மறுத்து மறைத்து நின்றதால் மீண்டும்
          சொல்லவேண்டிய நிலை. நீர் கடவுளையே மறுத்து
          நிற்கவில்லையா? அவர்கள் கடவுளின் வார்த்தையை.

          அதுசரி நீர் அறிவுபூர்வமாக எதையும் பேசமாட்டீரா?

          TNTJ அலுவலகத்தை இன்னுமா தொடர்புகொள்கிரீர்?

      • ///பெண் வீட்டாரை கொடுக்க‌வைப்ப‌த‌ற்கு ப‌தில் ஆண்வீட்டாரை கொடுக்க‌வைப்பதால் ம‌ட்டுமே அது புர‌ட்சிக‌ர‌ உள்ள‌ட‌க்க‌த்தை கொண்ட‌தாகிவிடாது.///—தவறு செங்கொடி. அதுதான் புரட்சி.

        ஆண், தான் திருமணம் ஆகி பல குழந்தை பெற்ற பின்னும் பல வருடங்கள் கழித்தும் புது மாப்பிள்ளை போல இருப்பான். (௬௦ வயசானாலும் இளமை மாறாமல் கதாநாயகர்களாகவே நடித்த/நடிக்கும் நடிகர்களை உதாரமாக்கிக்கொள்ளவும். நடிகைகள்?) ஆனால் பெண்கள், அப்படியா? தாய்மை அடைவதினாலும் குழந்தை பெறுவதினாலும் தங்கள் அழகை, வனப்பை, சக்தியை, தன் தனிப்பட்ட சுய வாழ்க்கையை, சுதந்திரத்தை (குழந்தை அழுதால் பாலூட்ட அருகில் இருக்க வேண்டும்… அலுவலகம் செல்ல முடியுமா? வீட்டிலிருந்தால் கூட சாப்பிடுவதை நிறுத்திவிட்டு…, பாதி குளியலில் ஓடி வருவது.., இரவு/பகல் தூக்கமிழந்து…) எல்லாம் இழக்கும் பெண்களுக்கு ஆண்கள் என்ன நஷ்ட்ட ஈட்டை வழங்கி உள்ளார்கள்? இஸ்லாம் இதைத்தான் ரொம்பவே அட்வான்சாக மகர் என்ற தனதட்சினையை வழங்கிய பின்னர் கையை வைக்க சொல்கிறது. மகர் தொகையை மணப்பெண்களே நிர்ணயிக்கும் உரிமையும் கொடுத்துள்ளது. இதெல்லாம்…. ஆணாதிக்க… மதவாதிகளின்….. பிற்போக்கான…. அடிப்படைவாத…. காட்டுமிராண்டிகால…. பழமைவாத…. மூடச்செயல்….. என்று எதிப்பவர்களை பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

        //அர‌பு நாடுக‌ளில் பெண்வீட்டார் கொடுப்ப‌து ம‌ர‌பில் இல்லை, அவ்வ‌ள‌வுதான்.// —மரபில் இல்லையா? இஸ்லாத்தில் உள்ளதா? மரபை இஸ்லாம் உடைத்தெறிய வில்லையா?

        • “ஆண், தான் திருமணம் ஆகி பல குழந்தை பெற்ற பின்னும் பல வருடங்கள் கழித்தும் புது மாப்பிள்ளை போல இருப்பான். (௬௦ வயசானாலும் இளமை மாறாமல் கதாநாயகர்களாகவே நடித்த/நடிக்கும் நடிகர்களை உதாரமாக்கிக்கொள்ளவும். நடிகைகள்?) ஆனால் பெண்கள், அப்படியா? தாய்மை அடைவதினாலும் குழந்தை பெறுவதினாலும் தங்கள் அழகை, வனப்பை, சக்தியை, தன் தனிப்பட்ட சுய வாழ்க்கையை, சுதந்திரத்தை (குழந்தை அழுதால் பாலூட்ட அருகில் இருக்க வேண்டும்… அலுவலகம் செல்ல முடியுமா? வீட்டிலிருந்தால் கூட சாப்பிடுவதை நிறுத்திவிட்டு…, பாதி குளியலில் ஓடி வருவது.., இரவு/பகல் தூக்கமிழந்து…) எல்லாம் இழக்கும் பெண்களுக்கு ஆண்கள் என்ன நஷ்ட்ட ஈட்டை வழங்கி உள்ளார்கள்? ”

          🙂 🙂 🙂 Are you serious?

          நீங்க‌ள் சொல்லும் நட்ட ஈடு, த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளில் ரெள‌டிக‌ளின் த‌லைவ‌ன் தான் கொலையைச்செய்துவிட்டு தனக்கு கீழிருக்கும் ஒருவனுக்கு காசு கொடுத்து சரணடையச் சொல்வது போலுள்ளது.

          இல்லைத் தெரியாமல்த்தான் கேட்கிறேன், பிள்ளையை உருவாக்குவதில் முழுதாக ஒத்துழைக்கத் தெரிந்த உங்களிற்கு அக்குழந்தையை வளர்ததெடுப்பதில் ஏன் பங்கெடுக்கக் கடினமாக உள்ளது? அப்படி உங்களிற்கு குழந்தை வளர்ப்பில் பங்கெடுக்க விருப்பமில்லையெனில் ஏன் குழந்தை வேண்டும் என்று முடிவெடுத்தனியள்?

          குழந்தை வளர்ப்பதில் நீங்களும் உதவினால் ஏன் உங்கள் மனைவி தனது முழு தனிப்பட்ட சுய வாழ்க்கையையும் இழக்க வேண்டும்? சுயமாக எந்தவித interests ஓ, metal stimulation ஓ இல்லாமல் robort மாதிரி வாழ்ந்து அவ்வாறே பிள்ளையும் வளர்ப்பின் அப்பிள்ளையின் எதிர்காலம் என்னாவது?

          “குழந்தை அழுதால் பாலூட்ட அருகில் இருக்க வேண்டும்… அலுவலகம் செல்ல முடியுமா? வீட்டிலிருந்தால் கூட சாப்பிடுவதை நிறுத்திவிட்டு…, பாதி குளியலில் ஓடி வருவது.., இரவு/பகல் தூக்கமிழந்து”

          தேவையில்லை. இப்போது தொழில்நுட்ப‌ம் எவ்வ‌ள‌வோ வ‌ள‌ர்ந்து விட்ட‌து. Mother can express milk and store it. Then anybody can feed the baby. Infact it is actually good for the father to feed the frequently, so it gives him a chance to bond with the baby and also gives the mother some much needed break.

          இங்கெல்லாம் ஒரு தாய் பிள்ளை பிற‌ந்து சில‌ மாத‌ங்க‌ளில் வேலைக்கு ப‌குதி நேர‌மாக‌வோ, முழு நேர‌மாக‌வோ வேலைக்கு வர‌ விரும்பின் அநேகமான வேலைத்த‌ள‌ங்க‌ளில் இடையிடையே பால் express ப‌ண்ண‌ அனும‌தி வ‌ழ‌ங்க‌ வேண்டும். அத்தோடு midwives, doctors, nurses and other birthing educators encourage the father to get up some nights to feed the baby, again to give the mother some rest.

          பிள்ளை வ‌ள‌ர்ப்பில் (வீட்டு வேலகளிலும் கூட) அம்மா அப்பா இருவ‌ரின் ப‌ங்க‌ளிப்பும் இருப்பின் ஒருவ‌ரே த‌னியத் த‌ம்மைத்தியாக‌ம் செய்ய‌த்தேவையில்லை, இருவருக்கும் தமது இலட்சியங்களை அடைய வாய்ப்புக்கள் கிடைக்கும், அதுவே பிள்ளைக்கும் மிக‌ ந‌ன்மையாகும்.

      • “–பெண் வீட்டாரை கொடுக்க‌வைப்ப‌த‌ற்கு ப‌தில் ஆண்வீட்டாரை கொடுக்க‌வைப்பதால் ம‌ட்டுமே அது புர‌ட்சிக‌ர‌ உள்ள‌ட‌க்க‌த்தை கொண்ட‌தாகிவிடாது–” எந்த விதமான சமூக கட்டமைப்பு கோட்பாடுகளை கொண்டு இவ்வாறு கூறுகிறீர்கள் என் தெரியவில்லை. திருமணம் என்பது ஆணும் பெண்ணும் உடலால் சேர்வதற்கான ஊடகம் அவ்வளவுதான் எனவே யாரும் யாருக்கும் பொறுப்பு அல்ல என்ற ரீதியிலேயே உங்கள் கருத்து இருக்கிறது.
        மாறாக இஸ்லாம் சொல்லும் சமூக கட்டமைப்பு குடும்பம் சார்ந்ததாகவும் அதன் மனிதர்கள் சார்ந்ததாகவும் இருக்கிறது. அந்த கட்டமைப்பில் ஆண் தான் குடும்பத்திற்கான bread winner. அதன் அணைத்து பொருளாதார தேவைக்கும் அவனே பொறுப்பாளி. ஒரு பெண்ணிற்கான, தனக்கு பிடித்த பெண் கேட்கின்ற மஹரை (அது அவளுக்கான வாழ்வாதாரமாக, இந்த கணவன் விட்டுச்சென்றால் மரணித்தல் அவளது பராமரிப்பிற்கான தேவையாக அவள் கேட்கிறாள்) கூட தர முடியாத சோம்பேறியாக ஒரு ஆண் இருக்க வேண்டும் என சொல்கிறீர்களா? ஒரு ஆண் மகன் உழைத்து அவன் குடும்ப பொறுப்பை ஏற்க கூடியவனாக இருந்தால் அவனுக்கு மஹர ஒரு பொருட்டாகவே இருக்காது. ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு தீர்ப்பளிப்பதற்கு இஸ்லாம் ஒன்றும் Sattellite டிவி க்கள் நடத்தும் ஒரு மணி நேர பேச்சு போட்டியோ பட்டி மன்றமோ அல்ல. அது இறைவன் வழங்கிய முழுமையான வாழ்க்கை திட்டம். அணைத்து சாதக பாதகங்களையும் அலசித்தான் ஒரு தீர்வு சொல்ல வேண்டும். உங்களை போல சொல்ல ஆரம்பித்தால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை தான். பானை ஒன்றில் ஒரு ஓட்டையை அடைகிறேன் என்று புதிதாக பல ஓட்டைகளை போட்டு விடக்கூடாது பாருங்கள். வரதட்சணைக்கு தீர்வு சொல்லி (சீரான) குடும்பம் என்ற ஒன்று இல்லாத சமூகமகத்தை உருவாக்கிவிட கூடாது.

  15. //இந்த எழவுகளை பொருத்தம் பார்த்து எப்படியோ//

    //பார்த்து எல்லா எழவும் பார்த்துக்கூட தொலையட்டும்.//

    இதில் “எழவு” என்ற வார்த்த்தை தேவை இன்றி பயன்படுத்தப்பட்டிருக்கிறது  என நினைக்கிறேன்,

    //…கை நிறைய சம்பளம் வாங்கும் கபோதிகள் அத்தோடு திருப்தி….//

    யாரு கபோதி? கை நிறைய சம்பாதிக்கிரவனா? அதில் திருப்தி அடையாதவனா?

    ” கை நிறைய சம்பாதித்தும் திருப்தி அடையாத  கபோதி ”  இப்படி எழுதுங்க அதை விட்டுபுட்டு சம்பாதிக்கறவனை எதுக்கு கபோதி என திட்டணும்?.