ஞாயிற்றுக் கிழமை (14.02.10) டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் புரட்டிக் கொண்டிருந்த போது அந்தச் செய்தி கண்ணில் தென்பட்டது.
செல்பேசி செக்ஸ் முறைகேடுகள் மலிந்து விட்ட நாட்டில் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக சொந்த மனைவியை நிர்வாணப் படமெடுத்து வரதட்சணைக்காக மிரட்டியிருக்கிறான் ஒரு சென்னைக் கணவன்.
26வயது சதீஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) டிசம்பர் 2008இல் திருமணம் செய்து கொண்டான். பொன்னும், பொருளும், பணமுமாய் 20 இலட்சம் வரை வரதட்சணையாக பெண் வீட்டிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகும் வரதட்சணை வெறியடங்காத சதீஷ் வீட்டார் அந்தப் பெண்ணை மேலும் கொண்டு வருமாறு வற்புறுத்தியிருக்கின்றனர். இதற்காகவே அந்தப்பெண்ணுடன் தாம்பத்ய உறவு கூட வைக்காமல் இருந்திருக்கிறான் அந்தக் கணவன்.
பொறுமையிழந்த அந்தப்பெண் தனது பெற்றோரிடம் இந்தக் கொடுமைகளை சொல்லி அழுதிருக்கிறாள். அவர்களும் இது குறித்து சதீஷ் வீட்டில் நியாயம் கேட்டிருக்கின்றனர். இதற்குப் பிறகு கொடுமை அதிகரித்ததே தவிர குறையவில்லை. சதீஷும் அவனது சகோதரர்களும் அந்தப் பெண்ணை சித்திரவதை செய்திருக்கின்றனர். சதீஷின் அப்பா மருமகளிடம் எல்லை மீறி நடக்க முயற்சித்திருக்கிறார். இதை கணவனிடம் புகாராகச் சொல்லியும் அவன் அதை சட்டை செய்யவில்லை.
இறுதியாக அந்தப் பெண்ணை தனியறையில் அடைத்து சன்னல் வழியாக உணவு மட்டும் கொடுத்து, அவளது நிர்வாணப் படங்களை நண்பர்கள் மூலம் வெளியிட்டு நாசப்படுத்துவேன் என்று சதீஷ் மிரட்டியிருக்கிறான். இதற்கு மேலும் பொறுமை காப்பதில் பலனில்லை என்று அந்தப் பெண் அந்தச் சிறையிலிருந்து எப்படியோ தப்பிவிட்டு தனது வீட்டுக்குக் கூட போகாமல் நேராக போலீசிடம் போய் புகார் செய்திருக்கிறாள். போலீசும் வரதட்சணை பிரிவு, பெண்ணை அடித்து துன்புறுத்துதல் முதலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் சதீஷையும் அவனது உறவினர்களையும் தேடிவருகிறார்கள்.
இதுவரை இந்தச்செய்தியை படித்துவிட்டு செல்லும் ஆண்கள் சதீஷின் வக்கிரத்தை எல்லோரையும் போல் கண்டித்துவிட்டு மறந்துவிடக் கூடும். ஆனால் தம்முள்ளும் சதீஷ் அளவுக்கு வக்கிரமாயில்லையென்றாலும் சற்று மென்மையான ஒரு சதீஷ் இருப்பான் என்பதை எத்தனை பேர் மறுக்க முடியும்?
ஊடகங்களில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை மூலம் காதலர் தினம் தனது பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்தி விட்டுச் சென்று விட்டது. இந்து மதவெறியர்கள் வழக்கம் போல தாலிகளை வைத்து காதல் என்றால் ஆபாசம், மேலைநாட்டு வக்கிரமென்ற உதார்களும் நம்மில் பலர் பார்த்திருக்கக் கூடும். சாதிக்குள்ளே மணம் முடித்து இந்து மதத்தின் மேன்மையை காப்பாற்றுவது அவர்களது நோக்கம். ஆனால் அவர்களது நோக்கத்திற்குப் பங்கம் வராமல் பெற்றோர் பார்த்து முடிக்கும் சம்பிரதாய திருமணங்கள்தான் நாட்டில் அதிகம்.
காதலும் கூட சாதி மறுப்பு என்பதை விட சம தரத்திலான சாதி, வர்க்கம், அந்தஸ்து, பணம், வேலை எல்லாம் பார்த்துத்தான் நடக்கிறது என்பது வேறு விசயம். இதையே சாதிக்குள் நடத்தினால் அது நிச்சயிக்கப்பட்ட திருமணம். இந்த எழவுகளை பொருத்தம் பார்த்து எப்படியோ திருமணம் செய்து கொண்டு ஒழியட்டும். ஆனால் எனக்கு வரதட்சணை வேண்டாமென்று இத்தகைய திருமணங்களில் கூட செய்து காட்டலாமே?
தன்னை முற்போக்காளன், நல்லவன், புரட்சிக்காரனென்று அற்ப விசயங்களுக்காக சித்தரித்துக் கொள்ளும் இளைஞர்கள் கூட இந்த வரதட்சணையை வேண்டாமென்று மறுப்பதில்லை. அல்லது நாசுக்காக மொக்கையான காரணங்களைச் சொல்லி சமாளிக்கிறார்கள்.
மணம் முடிக்கும் பெண்களை ஆண்கள் ஆயுசு வரைக்கும் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த வரதட்சணையை பெண்ணின் தந்தை தரவேண்டுமென்று பாரம்பரிய விளக்கத்தை முதலில் சொல்வார்கள். இதன்படி பெண்ணென்பவள் சுமை. அல்லது மாடு. அந்த மாட்டிற்கு தீனியும், தண்ணீரும் கொடுத்து தொழுவத்தில் கட்டிவைப்பதற்குத்தான் அந்த தட்சணை. பதிலுக்கு அந்த மாட்டுப்பெண் சமையல், துவையல், இல்லப் பராமரிப்பு, விருந்தினர் உபசரிப்பு, குழந்தைகள் வளர்ப்பு, செவிலியர் வேலை, இரவில் தாசி வேலை எல்லாம் நேரத்திற்கு செய்யவேண்டும்.
இப்படி எல்லாவகையிலும் பெண்ணின் இரத்தத்தை அட்டைகள் போல உறிஞ்சிக்கொள்ளும் ஆணிணத்து புண்ணியவான்கள் என்றைக்காவது இந்த வேலைகளை செய்வதற்கு முன்வந்தது உண்டா? கிடையாது. போகட்டும். செய்யாத, செய்ய முடியாத, விரும்பாதா இந்த வேலைக்கு ஊதியம் கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு கணவனும் முழு ஆயுளில் பல இலட்சங்களை செலவிட வேண்டியிருக்கும். குடும்பத்து வேலையை எல்லாம் பணத்தால் மதிப்பிட முடியாது என்று நொள்ளை பேசும் வீட்டின் பெருசுகள் திருமண நேரத்தில் வாங்கும் வரதட்சிணையின் மதிப்பை வைத்தே அந்தப் பெண்ணை அளவிடுவார்கள். கூடவே இந்த மதிப்பிட முடியாத வேலை செய்வதற்கு ஒரு பெண்ணோடு வரதட்சணையாக பெரும் சொத்தையும் பிடுங்குகிறோமே என்று எள்ளளவும் குற்ற உணர்வு கிடையாது.
அடுத்து இந்த வரதட்சணையை அந்த பெண்ணின் நன்மைக்காகத்தானே வாங்குகிறோம் என்று அளப்பார்கள். விசேசங்களுக்கு குடும்பத்தின் அந்தஸ்தை நிலைநாட்டும் அலங்காரக்கடை பொம்மையாக மருமகள் அவதரிக்க உதவும் நகைகள் மற்ற நேரத்தில் பீரோவில் தூங்கும். பெரும் செலவுகள் வரும்போது கணவனுக்கு கைகொடுப்பது அந்த நகைகள்தான். பின்னர் பெண் குழந்தை ஆளாகி மணமகளாக செல்லும்போது அந்த நகைகளும் புதிய தட்சணையாக செல்ல நேரிடும். இதைத் தவிர அந்த நகைகள் அந்தப் பெண்ணுக்கு ஒரு மயிரும் பலனளிப்பதில்லை.
“பையனை செலவு செய்து படிக்க வைத்திருக்கிறோம், அதனால் கை நிறைய சம்பளம் வாங்குகிறான், அப்படி உயர்ந்த இடத்திற்கு வாக்கப்பட வேண்டுமென்றால் வரதட்சணை கொடுப்பதுதானே முறை” என்று வியாபாரக் கணக்கு பேசுவார்கள். இல்லையென்றால் ஏழை பாழைகளைக் கல்யாணம் செய்யலாம் என்றும் உபதேசிப்பார்கள். காசுக்கேற்ற தோசை மாதிரி ஏழைகளும் ஏதாவது செலவழித்துத்தானே திருமணங்கள் செய்யவேண்டியிருக்கிறது. சமூகத்தில் வரதட்சணை என்பது அழிக்க முடியாத விதி என்று ஆகிவிட்டபோது ஏழை மட்டும் அதை மீறுவது எப்படி சாத்தியம்?
ஏற்கனவே கை நிறைய சம்பளம் வாங்கும் கபோதிகள் அத்தோடு திருப்தி அடையவேண்டியதுதானே? நியாயமான உழைப்பில் கல்விச் செலவை செய்திருந்தால் இந்த அநியாயமான தட்சணையை எதிர்பார்க்கத் தோன்றாது. ஊரைக் கொள்ளையடித்தோ, லஞ்சம் வாங்கியோ, முறைகேடுகள் செய்தோ செலவழித்திருந்தால் கண்டிப்பாக தட்சணை மூலம் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்றுதான் தோன்றும். சுயநிதிக் கல்லூரிகளில் சில பல இலட்சங்கள் கொடுத்து சீட்டு வாங்கி டாக்டராகவோ, இன்ஜினியராகவோ குதிப்பவர்கள் திருமண வியாபாரம் மூலமே அதை சரிக்கட்டுகிறார்கள்.
இத்தகைய உயர் குடி ஆண் குதிரைகள் அதிகம் விலைபோகும் என்பது பெண்கள் விற்கபடும் சந்தையை வைத்தே உருவாக்கப்படுகிறது. மணமகளின் தந்தையும் ஊரைக் கொள்ளையடித்து வந்திருந்தால் தட்சணையை கணக்கு பார்க்காமல் கொடுப்பான். நேர்மையானவானாக இருந்தால் இருக்கும் சொத்துபத்துக்களை விற்றுவிட்டோ இல்லை கந்து வட்டிக்கு கடன்வாங்கியோ வரதட்சணை கொடுப்பதற்கு தயாராக இருப்பான். இதன் மூலம் அந்த தந்தை தனது எஞ்சிய வாழ்நாட்களை ஆயுள்கைதி போல கழிப்பதற்கு தயாராவார்.
இதில் 100பவுனுக்கு ஒரு பவுன் குறைந்தால் கூட போதும், பையன் வீட்டார் அந்தப் பெண்ணை ஏமாற்றுக்காரியாகவே நடத்துவார்கள். தமிழகத்தின் ஏழை மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை என்பது இந்த வரதட்சணை அநீதியின் காரணமாகத்தான் நடக்கிறது என்பது உண்மை. அந்த வகையில் வரதட்சணை வாங்கும் ஒவ்வொருவரும் தருமபுரியிலோ, உசிலம்பட்டியிலோ கொல்லப்படும் பெண் சிசுக் கொலைக்கு காரணமாகத்தான் இருக்கிறார்கள்.
சமீபத்திய வரவான ஐ.டிதுறை மற்றும் அமெரிக்க மாப்பிள்ளைகள் என்பது மேட்டுக்குடியின் வரதட்சணையை ராக்கெட் வேகத்தில் எகிற வைத்திருக்கிறது. தனது பெண் அமெரிக்காவில் சீரும் சிறப்புமாக வாழ்வாள் என்று நம்பி மொத்த வாழ்க்கை சம்பாத்தியத்தையும் மகளுடன் அனுப்பி வைக்கும் தந்தைமார்கள் அதன்பிறகாவது நிம்மதியாக வாழ்கிறார்களா? இல்லை காரில் இருந்து தள்ளப்பட்டு குற்றுயிரும் கொலையுயிருமாக வரும் மகளுக்காக விமான நிலையத்தில் காத்திருக்கிறார்களா?
வாரிசுகளில் இருபாலாரும் இருந்தால் வரதட்சணை கொடுப்பதற்காக வரதட்சணை வாங்குவதாக நியாயம் பேசுவார்கள். ஏன் வரதட்சணை வாங்காதவனுக்குத்தான் எனது மகள் என்று முடிவெடுக்க வேண்டியதுதானே? அப்படி முடிவெடுத்து விட்டு திருமணம் செய்ய நினைக்கும் இளைஞர்களை சமூகம் பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்று வைத்திருக்கிறது என்பதால் எந்தத் தந்தையும் தனது மகளின் வாழ்வில் ரிஸ்க் அல்லது நல்ல முடிவு எடுப்பதில்லை.
இன்னும் விதவையாக இருந்தால் மனிதாபிமானம் அதிகம் இருக்கும் என்று எண்ணாதீர்கள். விதவையைக் கல்யாணம் செய்யும் ‘தியாக’ உள்ளங்களுக்கு பிரதிபலனாக லஞ்சம் அதிகம் கொடுக்க வேண்டும். அதுவும் குழந்தை உள்ள பெண்ணாக இருந்தால் ரேட் இன்னும் அதிகம். இரண்டாம் மணம் என்றாலும் அங்கே முதல் மணம் ஏன் தோல்வியுற்றது என்று பாடம் கற்காமால் அதே போல தட்சணை கொடுத்துத்தான் அடுத்த மணமும் நிறைவேறும்.
இறுதியாக “வரதட்சணையை நாங்களாக ஏதும் கேட்கவில்லை, நீங்களாக பார்த்து செய்தால் போதும்” என்று நல்லவர்கள் போல பேசுவார்கள். உறவினர்களை விட்டு குடும்பத்தின் மேன்மை, சமீபத்தில் நடந்த திருமணங்களில் கொடுக்கப்பட்ட வரதட்சணையின் அளவு எல்லாம் சொல்லி மறைமுகமாக ரேட்டை நிர்ணயம் செய்வார்கள். நேரடியாக கேட்பதை விட இரகசியமாக கேட்பது மகா கேவலமானது. இதன்மூலம்தான் பெண் வீட்டார் தங்கள் தகுதிக்கும் மேல் சீர்வரிசை செய்வது நடக்கிறது. வரதட்சணையில் நல்லது கெட்டது என்று ஏதும் இருக்க முடியுமா என்ன?
இப்படி எல்லா வழிகளிலும், வகைகளிலும் கண்கொத்திப் பாம்பாக பெண்களை குதறக் காத்திருக்கிறது வரதட்சணை.
இந்தக் கயமைத்தனத்தை ஜீன்ஸ் பேண்டிலும், செல்பேசியிலும் நவீனத்தை தேடும் இளைஞர்கள் நேரடியாகவும், நாசுக்காகவும், மறைமுகமாகவும் செய்தே வருகிறார்கள். ரொம்ப இறுக்கிப் பிடித்துக் கேட்டால் “நான் வாங்க மாட்டேன், என் பெற்றோர் விரும்பினால் என்ன செய்வது” என்று வாகாய் நழுவுவார்கள். சாதி பார்த்து, ஜாதகம் பார்த்து, அந்தஸ்து பார்த்து எல்லா எழவும் பார்த்துக்கூட தொலையட்டும். குறைந்த பட்சம் வரதட்சணையாவது வாங்க மாட்டேன் என்று முடிவெடுப்பதற்குக்கூட நேர்மையற்ற இந்த இளைஞர்களை வைத்துத்தான் அப்துல் கலாம் 2020இல் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறாராம்.
குழந்தைகள் உழைப்பை எதிர்ப்பார்கள், சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுப்பார்கள், சுயமுன்னேற்ற நூலென்றால் விழுந்து விழுந்து படிப்பார்கள், ரோட்டோரத்துப் பிச்சைக்காரனுக்காக சில்லறைகளையும் கொடுப்பார்கள்…இப்படியெல்லாம் நல்லது செய்வதாக கற்பித்துக் கொண்டிருக்கும் இந்த இளைய சமூகம்தான் இந்த வரதட்சணைப் பேயை இன்னும் வீரியமாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது. குறுக்கு வழியில் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதன் சமூக அங்கீகாரத்தில்தான் வரதட்சணையும் சாகாவரம் பெற்று ஜம்மென்று உயிர் வாழ்கிறது.
வட இந்தியாவில் கேஸ் அடுப்பு வெடித்து கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. தென்னிந்தியாவில் படித்தவர்கள் அதிகம் என்பதால் இந்த வரதட்சணை கொடுமைகள் சதீஷ் போல நாகரீக கனவான்களின் நவீன தொழில்நுட்ப சித்திரவதையாக பரிணாமம் பெற்றிருக்கிறது. சதீஷைப் பொறுத்தவரை அவனது மனைவி என்பவள் வெறும் உடம்பு மட்டும்தான். அந்த உடம்பிற்கு மானமிருக்கிறது என்பதனால்தான் அவன் அவளது நிர்வாண படங்களை வெளியில் விடுவேன் என்று பயமுறுத்த முடிகிறது. உடல் மானம் மட்டுமல்ல குடும்ப மானமும் போனால் கூடப் பரவாயில்லை என்று துணிந்து அந்தப் பெண் போலீசுக்கு வரவேண்டுமென்றால் அவள் எவ்வளவு துன்பம் அடைந்திருக்க வேண்டும்?
வரதட்சணைக் கொடுமைகளை நிறுத்துவது பெண்களிடம் இருந்துதான் துவங்க வேண்டும். இப்படி பொன்னும், பொருளும் வாங்கிக் கொண்டு திருமணம் செய்ய விரும்பும் இளைஞர்களை காறித்துப்புவதற்கு பெண்கள் முன்வரவேண்டும். வரதட்சணை மறுப்பதுதான் ஆண்மையின் தகுதி, விரைக்கும் ஆண் குறியில் அல்ல எனுமளவுக்கு அந்தப் போர் நடைபெற வேண்டும். காதலோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ வரதட்சணை மறுப்புத்தான் முதல் தகுதி என்றாக்கப்படவேண்டும். ஊழலால் சூழ வாழும் இந்த சமூக அமைப்பில் வரதட்சணைக்கெதிரான போராட்டம் துவங்கினால் அது ஏனைய பிணிகளை எதிர்த்து விரியும் போராட்டமாகக்கூட மாறும்.
எதெல்லாம் வரதட்சணை?
- பவுன் கணக்கில் கொட்டப்படும் நகையோடு பெண் திருமணமாவது – தங்க தட்சணை!
- பணம் வாங்குவது, திருமணச்செலவு முழுமையும் பெண் வீட்டார் செய்வது – ரொக்க தட்சணை!
- வரதட்சணைப் பணத்தை வைத்து வேலை வாங்குவது, அமெரிக்கா செல்வது – வேலை தட்சணை!
- வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் பெறுவது – சொத்து தட்சணை!
- தீபாவளி, பொங்கள் இதர நாட்களை வைத்து பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – பண்டிகை தட்சிணை!
- முக்கியமாக பிரசவ செலவை மாமனார் வீட்டிற்குத் தள்ளிவிடுவது – பிரசவ தட்சணை!
- குழந்தை பிறந்தால் அதற்கும் காது குத்து, மொட்டையடிப்பது என்ற பெயரில் பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – குழந்தை தட்சணை!
- மனைவியை வீட்டுவேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதில் பங்கேற்காமல் இருப்பது – வேலைக்காரி தட்சணை!
- மனைவியை இருட்டுக்கு மட்டும் இலவசமாய் பயன்படும் பொருளாய் பார்ப்பது – தாசி தட்சணை
- எந்த முக்கியமான விசயங்களிலும் மனைவியோடு கலந்தாலோசிக்காமல் இருப்பது – அடிமை தட்சணை!
- மனைவியை அடிப்பது, சித்திரவதை செய்தவது – டார்ச்சர் தட்சணை!
……… மொத்தத்தில் முடிவு பெறாது இந்த வரதட்சணை!
இப்போது சொல்லுங்கள் உங்களில் யார் சதீஷை கண்டிக்கிறீர்கள்?
************
தொடர்புடைய பதிவுகள்
என்னுடைய குரு வரதட்சணை கூடாது, எளிய முறையில் திருமணம் நடத்த வேண்டும், எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அந்தக் காலத்திலும்.வரதட்சணை வாங்குவது பாவம் என்று சொன்னார்.யார் கேட்டார்கள்.முதலில் பிராமணர்கள் வாங்குகிறார்கள் என்றார்கள்.இப்போது கிறித்துவர்கள், முஸ்லீம்களும் வரதட்சணை வாங்குகிறார்கள்/கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
என்னதான் தீர்வோ ஈஸ்வரா?
ஹிந்துக்கள் மட்டும் தான் வரதட்சணை வாங்குகிறார்களா??? அல்லது ஹிந்துக்கள் மட்டும் தான் காதலர் தினத்தை எதிர்கிறார்கள??? நீ தாண்டா மதவெறியன்…இந்தியாவில் காதலர் தினம் அதிகம் கொண்டாடுவது ஹிந்துக்கள் தான்…தாக்கரே எதிர்த்தால் அது ஹிந்து மதவெறி….சப்னா ஆஸ்மி எதிர்த்தால் அது இஸ்லாமிய கோட்பாடு….எதுடா உன் நியாயம்???
டக்லஸு,
சூப்பரு…
உண்மை. இதில் உள்ளது எல்லாம் நூற்றுக்கு 114 உண்மை. ஆனாலும் எல்லாவற்றையும் மாப்பிள்ளையின் மீதே போடாதீர்கள். மாமனார்கள் ஊரில் தம்முடையப் பெருமை தெரிய வேண்டுமென்பதற்காக அவர்களாக முன்வந்து சில பலவற்றைச் செய்கிறார்கள். மாப்பிள்ளையின் அம்மாக்களும் அநியாயமாக மகனிடம் கேட்கச் சொல்லாமல் மருமகளிடம் நேரடியாக கேட்கிறார்கள். மகன் மறுத்து பேசினாலும், மருமகள் தன் வீட்டு பெருமையை தக்கவைக்க தன் அப்பாவிடம் பேசி வாங்கி தருகிறாள்.
சில பேர் உள்ளனர். பூர்விகச் சொத்து மகன், மகள் இருவருக்கும் சரி பாதியாகத் தரவேண்டுமென்பதற்காக, மகளுக்கு கொஞ்சமாக வரதட்சணைக் கொடுத்து விட்டு மகளையும் மருமகனையும் ஏமாற்றுகிறார்கள். இதை எந்த வகையில் சேர்ப்பது ?
//மாமனார்கள் ஊரில் தம்முடையப் பெருமை தெரிய வேண்டுமென்பதற்காக அவர்களாக முன்வந்து சில பலவற்றைச் செய்கிறார்கள். மாப்பிள்ளையின் அம்மாக்களும் அநியாயமாக மகனிடம் கேட்கச் சொல்லாமல் மருமகளிடம் நேரடியாக கேட்கிறார்கள். மகன் மறுத்து பேசினாலும், மருமகள் தன் வீட்டு பெருமையை தக்கவைக்க தன் அப்பாவிடம் பேசி வாங்கி தருகிறாள்.//
மாப்பிள்ளை ஏன் வாங்க அனுமதிக்கிறார்? கட் அண்டு ரைட்டாக ஒரு பைசா வாங்க முடியாது என்று சொல்ல வேண்டியதுதானே? அதுதானே தன்மானம்?
//பூர்விகச் சொத்து மகன், மகள் இருவருக்கும் சரி பாதியாகத் தரவேண்டுமென்பதற்காக, மகளுக்கு கொஞ்சமாக வரதட்சணைக் கொடுத்து விட்டு மகளையும் மருமகனையும் ஏமாற்றுகிறார்கள். இதை எந்த வகையில் சேர்ப்பது ?//
இது ஏதோ ஒரு வகையில் சேர்த்தியாக இருக்கட்டும். அந்த சொற்ப தொகையையும் வரதட்சனையாக அந்த மாப்பிள்ளை ஏன் வாங்கிக் கொள்கிறார்?
கையும் காலும் unaku எதுக்கு ..
சொத்து விறும்பி கொடுக்கறது அத கேட்டு வாங்கறது கேவலம்
மாமனார் மாமியார் மச்சான் இவ்வளு kodukanumum கேகர oru ஆணாவது avanghallukku முடியலைன ஓரறு தலைவலி மதரையவது வங்கி குடுத்து irukingala . அன்ன உங்க்ஹா அம்மா அப்பா நின்ன உகரத மட்டும் உங்க்ஹா பொண்டாட்டி தந்கநூம்
//வரதட்சணை வெறியடங்காத சதீஷ் வீட்டார் அந்தப் பெண்ணை மேலும் கொண்டு வருமாறு வற்புறுத்தியிருக்கின்றனர். இதற்காகவே அந்தப்பெண்ணுடன் தாம்பத்ய உறவு கூட வைக்காமல் இருந்திருக்கிறான் அந்தக் கணவன்.//
அவன் ஆம்பளையான்னு எனக்கு சந்தேகமா இருக்கு!
வரதட்சணை கிரிமினல் குற்றம் என்றாலும் யாரும் புகார் கொடுக்க முன்வராமல் இருப்பது நமது மக்களீன் விழிப்புணர்வு நிலை!,
மிக நல்ல நோக்கம்.
நேர்மையான அறைகூவல்.
மிகச்சிறப்பான இடுகை.
நன்றி வினவு.
வரதட்சினை வாங்கி/கொடுத்து நடத்தப்படும் திருமணத்தை-அது தோழர்களுடையதாயினும் சரியே- கலந்து கொள்ளாமல் எதிர்த்து புறக்கணியுங்கள். பிரியாணி உட்பட. காலி மண்டபங்களில் திருமணம் செய்ய மானமுள்ளோர் தயங்கட்டும்? வரதட்சினை ஒழிப்பில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது.
///முஸ்லீம்களும் வரதட்சணை வாங்குகிறார்கள்/கொடுக்கிறார்கள்…-jeyandrar /// —இந்த கொடுமையான மூடப்பழக்கவழக்கம் படுவேகமாய் முஸ்லிம்களிடம் குறைந்து வருகிறது. கண்கூடாக காணலாம். இதில், tntj-வின் இருபத்தைந்து வருட அயராத அசுர இஸ்லாமிய பிரச்சாரம் அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதோ இஸ்லாத்தை விளங்காமல் வாங்கியவர்கள் கூட தவறுணர்ந்து இறைவனுக்கு அஞ்சி மாமனாரிடம்/மாமியாரிடம் திருப்பித்தந்துகொண்டு இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன்.
வரதட்சனை சாதி,மத வேறுபாடுகளை கடந்து இன்று அபரிவிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது .குறிப்பாக முஸ்லிம் மததில்தன் கிலோ கணக்கில் தங்கம் வாங்குவதும் நவீன அடம்பர கார்கள் வாங்குவதும் அதன் காரணமாக ஏழை முஸ்லிம் பெண்கள் முதிர்கன்னிகளாக இருப்பதும் முஸ்லிம் மதத்தில் மட்டுமே அதிகம் என்பதை மறைத்து முற்போக்கு மதமாக காட்டுவதுதன முஸ்லிம் மத தர்மமா ?எங்கள் பகுதியில் TNTJ அமைபினரே மேற்கண்ட வரதட்சணைகலை அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கித்தான் வரதட்சனை ஒழிப்பு புரட்சி செய்கின்றனர் .வரதட்சணையை ஒழிக்க முதலில் தொடர்புடைய சமுதாயம் தனது தவறை குறைந்தபட்சம் ஏற்றுகொல்வதர்கவது முன்வரவேண்டும் .
எதையாவது மறுத்துகொண்டிருகனும் என்று சிலபேர் இருக்கிறார்கள். சொல்லப்பட்ட விஷயத்தை உள்வாங்கி சொல்கிறார்களா என்றால் இல்லை.
25 வருடமாக தமிழகத்தில் TNTJ மூலமாக ஒரு புரட்சி நடந்து கொண்டிருப்பதை அறியாதிருப்பது குற்றமில்லை. அறியாதது போல் நடிப்பது பெருங்குற்றம்.
ஒரு சவால்: TNTJ பிரச்சாரத்தின் பயனாக பல முஸ்லிம் சகோதரர்கள் வாங்கிய வரதட்சணையை திருப்பி கொடுத்திருக்கிராகள். வேறு எந்த சமுதாயத்திலாவது இந்த அதிசய நிகழ்வு நடந்திருக்கிறதா? ஒருத்தரை ஒரே ஒருத்தரை காண்பிக்கமுடியுமா?
இன்மை மற்றும் நெற்றியடி நண்பர்களே,
வரதட்சணை வாங்குவது தவறு என்று இசுலாத்தின் துணை கொண்டுதான் உங்களுக்கு விளங்க வைக்க முடியும் என்பது வருத்தமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலிருந்து யோசித்தாலே இதன் மானுட விரோதம் தெரியவரும். இதற்குக்கூட உங்களுக்கு மதம் தேவைப்படுகிறது என்றால் நாட்டில் நடக்கும் எல்லா அநியாயங்களுக்கும் அது இசுலாமிய விரோதம் என்று நிரூபிக்கப்பட்டால்தான் கண்டிப்பீர்கள் போலும். எங்கள் தோழர்கள் எந்த மத துணையுமின்றி வரதட்சிணை மறுப்பு மட்டுமல்ல சாதி, சடங்கு, ஆடம்பரம் எல்லாவற்றையும் மறுத்துவிட்டு திருமணம் செய்கிறார்கள். அத்தகைய திருமணங்களை நீங்கள் காண விரும்பினால் ஏற்பாடு செய்யலாம்.
வினவு,
உங்கள் வருத்தம் கண்டு வருந்துகிறேன். உங்கள் அறியாமையை கண்டு மேலும் பரிதாபப்படுகிறேன்.
நான் முஸ்லிம். இஸ்லாத்தின் ஊடாகவே தான் நல்லது கெட்டதை பிரித்தறிகிறேன். இஸ்லாம் தான் சரி என்று முழுமையாக நம்புகிறேன். இதில் நீங்கள் வருத்தமடைய என்ன இருக்கு என்று தெரியவில்லை.
உங்கள் கொள்கையின் துணை கொண்டு நீங்கள் சரிகான்பதை நான் வருத்தப்பட்டால் அதை ஏற்றுக்கொல்லும்படியாகும். சரியா?
வினவு, உங்களுக்கு என்ன பிரச்சனை? மதம் துணைகொண்டு அநியாயத்தை அக்கிரமத்தை கண்டிக்ககூடாதா? மதம் துணையில்லாமல் கண்டித்தால் எப்படி சரி?
இஸ்லாம் துணைகொண்டு உங்களைவிட முழுவீச்சில் வெற்றி பெறுகிறோமே அதை கண்டு வருத்தபடுகிறீர்களோ?
சரி. நான் கேட்ட சவாலுக்கு பதில் உண்டா?
வினவு உங்களிடம் ஒரு கேள்வி. சம்பந்தம் இல்லை என்றாலும் உங்கள் சிந்தனைக்கு:
நீங்கள் உங்கள் கொள்கையின் மீது நம்பிக்கை வைத்து பல நல்ல காரியங்கள், சமூக சேவைகள், அறிய பெரிய தியாகங்கள் செய்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை முழுவதுமே. இதனால் இவ்வுலக ஆசா பாசங்களை துறக்கிறீர்கள் மக்கள் நலன் கருதியே. பிறகு ஒரு நாள் இறந்தும் விடுகிறீர்கள். அவ்வளவு தானா? இதனால் உங்களுக்கு என்ன பலன்? உங்கள் அருமையான உழைப்புக்கும் தொண்டுக்கும் தியாகத்திற்கும் என்ன பிரதி பலன்?
மக்கள் நலமடைவார்கள் என்று பிதற்ற மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு என்ன பலன் என்பது கேள்வி.
மேலும், ஒருவன் வாழ்கை பூராவுமே அயோக்கியன், கொலை, கொள்ளை, கற்பழிப்பை தொடர்ந்து செய்பவனை ஒரு நாள் மரணம் கவ்விகொள்கிறது. இதற்கெல்லாம் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டாமலே. அதாவது இப்படியாகப்பட்ட ஒரு ரவுடியை திடீர் என்று போலீஸ் என்கௌன்டர் செய்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். இவன் செய்த அத்துணை தீமைகளுக்கும் இப்போது எப்படி தண்டனை கொடுப்பது?
மரணம் தான் தண்டனை என்று பிதற்ற மாட்டீர்கள் என்று மீண்டும் நம்புகிறேன்.
இவனால் பாதிக்கபட்டவர்களுக்கு என்ன நீதி?
உங்கள் கொள்கை துணை கொண்டு பதில் சொல்லுங்கள்.
நானும் பிறப்பால் ஒரு முஸ்லிம்தான் .முஸ்லிம் மதத்தில் நடக்கும் வரதட்டனை கொடுமைகளை அனுபவரிதியாக உணர்துதான் கூறுகிறேன் .முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் ஆடம்பர திருமணங்களும் ,லட்சகணக்கில் வரதட்சணை பணங்களும் ,பொருள்களும் வாங்குவதை பார்த்த மற்றமதங்க்களை சேர்த்தவர்கள் சாதாரணமாக ஒரு சைக்கில் அளவிற்கு வரதட்சணை வாங்கியவர்கள் ,இன்று பலபவுன் தங்கநகைகளும்,ஆயிரகணக்கான ரூபாய் மதிப்புள்ள இரண்டுசக்கர வாகனங்கள் வாங்கும் அளவீர்க்கு வரதச்னைகொடுமைதலைவெரித்துஆடுகிறது . எனவே ,தயவுசெய்து காலாவதி ஆகிப்போன மதக்கருத்துக்களை மட்டுமே பிடித்துதொங்குவது எந்த பிரச்சனைக்கும் அறிவியல் ரீதியான தீர்வை நமக்கு தராது. உதாரனமாக முஸ்லிம் மதத்தில் ஆண்கள் வரதட்சணை (மஹார்) kodukkavaendum endru
நானும் பிறப்பால் ஒரு முஸ்லிம்தான் .முஸ்லிம் மதத்தில் நடக்கும் வரதட்டனை கொடுமைகளை அனுபவரிதியாக உணர்துதான் கூறுகிறேன் .முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் ஆடம்பர திருமணங்களும் ,லட்சகணக்கில் வரதட்சணை பணங்களும் ,பொருள்களும் வாங்குவதை பார்த்த மற்றமதங்க்களை சேர்த்தவர்கள் சாதாரணமாக ஒரு சைக்கில் அளவிற்கு வரதட்சணை வாங்கியவர்கள் ,இன்று பலபவுன் தங்கநகைகளும்,ஆயிரகணக்கான ரூபாய் மதிப்புள்ள இரண்டுசக்கர வாகனங்கள் வாங்கும் அளவீர்க்கு வரதச்னைகொடுமைதலைவெரித்துஆடுகிறது . எனவே ,தயவுசெய்து காலாவதி ஆகிப்போன மதக்கருத்துக்களை மட்டுமே பிடித்துதொங்குவது எந்த பிரச்சனைக்கும் அறிவியல் ரீதியான தீர்வை நமக்கு தராது. உதாரனமாக முஸ்லிம் மதத்தில் ஆண்கள் வரதட்சணை (மஹார்) கொடுக்கவேண்டும் என்று உள்ளது. இந்தியாவில் இது பெயரலவிர்க்கு இருந்தாலும், இக்கொள்கையை அரபு நாடுகள் தீவிரமாக கடைபிடிக்கின்றன. அங்கு என்ன விளைவை இது ஏற்படுத்தி இருக்கின்றது என்றால் பணக்கார ஆண்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப இரண்டு, மூன்று மனைவிகளை திருமணம் (பணத்தால் வாங்கிவிடுகின்றனர்) செய்துகொள்கின்றனர். வசதி இல்லாத ஆண்கள் திருமணத்திற்காக ஏங்கி நிற்கும் நிலையை அதாவது பெண்களை நுகர்வு பொருளாக மாற்றும் எதிர்மறை விளைவை ஏற்பபடுதி ருக்கின்றது.
நண்பர்களே! நிரந்தர உண்மை என்று உலகில் எதுவும் இல்லை. எனவே இஸ்லாத்தின் கொள்கை அன்று முர்போக்கனதாக இருந்திருக்கலாம் . ஆனால் இன்று விவாதத்திற்கும்,ஆய்விர்க்கும் உட்படுத்தி புதிய மனித சமுதாயம் படைக்க வேண்டியது சமூக ஆர்வலர்களிடம் உள்ள பெரிய சவால்கல் இல்லையா?
//முஸ்லிம் மதத்தில்//
நீங்கள் முஸ்லிம்களா? அப்படியா. ஒரு முஸ்லிமின்
சொல்லாடல் இப்படி இறுக்காது. சரி போகட்டும்.
அது இஸ்லாமிய மார்கத்தில் இல்லை மண்டுகளா.
முஸ்லிம்களிடம். அதை போக்கத்தான்
போராடிக் கொண்டிருக்கிறோம். கணிசமாக வெற்றியும்
பெற்றுக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் நீங்களே
இதை எதிர்த்து போராடி இருக்கலாமே. உங்கள் வீட்டில்
காணும் ஒரு சில தவறுகளை கண்டு வீட்டை துறக்கும்
அறிவிழியாக இருக்கிறீர்களே.
மதம்சாராமல் இசுலாமியர்களால் எதனையும் சிந்திக்க முடியாது. ஏனெனில் அது அறிவியல்பூர்வமானது. ஆனால் ஒப்புக்கு 1001 ரூபாய் மகர் கொடுத்துவிட்டு பவுன் கணக்கில் தங்கமும் கட்டில், பீரோ, வாசிங் மிஷின், டிவி, ஃப்ரிட்ஜ் என மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டாரிடம் கேட்காமலே தானகவருகின்றச (மறைமுகமாக மனக்கணக்கிட்டு) சீதனங்கள் வாங்கிக்கொள்ளலாம். ஏனென்றால் அது ஹலால் ( அனுமதிக்கப்பட்டது}. “மகர்’ என்பதும் படு பிற்போக்கானதே. அது பெண்ணை விலைகொடுத்து வாங்குவது.
//வரதட்சினை வாங்கி/கொடுத்து நடத்தப்படும் திருமணத்தை-அது தோழர்களுடையதாயினும் சரியே- கலந்து கொள்ளாமல் எதிர்த்து புறக்கணியுங்கள். பிரியாணி உட்பட. காலி மண்டபங்களில் திருமணம் செய்ய மானமுள்ளோர் தயங்கட்டும்? வரதட்சினை ஒழிப்பில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது.//
மிகச் சரியான வாதம்
அருமை. குறிப்பாக அந்தப் பட்டியல்.
“வரதட்சணையை நாங்களாக ஏதும் கேட்கவில்லை, நீங்களாக பார்த்து செய்தால் போதும்” என்று நல்லவர்கள் போல பேசுவார்கள். உறவினர்களை விட்டு குடும்பத்தின் மேன்மை, சமீபத்தில் நடந்த திருமணங்களில் கொடுக்கப்பட்ட வரதட்சணையின் அளவு எல்லாம் சொல்லி மறைமுகமாக ரேட்டை நிர்ணயம் செய்வார்கள். நேரடியாக கேட்பதை விட இரகசியமாக கேட்பது மகா கேவலமானது.”
இது பணக்கார முஸ்லீம்களுக்கு முற்றிலுமாக பொருந்தும். முஸ்லீம்களில் வரதட்சனை வாங்குவது ஹராம் என்பதினால், இவர்கள் ஒன்றும் கேட்காத அப்பாவிகளைப் போல் நடித்துக் கொள்வார்கள்.
நானும் ஒரு பைசா கூட வாங்கவில்லை. அதற்கு காரணமும் TNTJ தான். (TNTJ – னு சொன்னதால் நான் மத வெறி பிடித்தவன் என்று யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்). உண்மையைச் சொன்னேன்.
என்ன ஒரு பிதற்றல். TNTJ என்ன மதவெறி அமைப்பா? அதன் அற்புதமான கடுமையான உழைப்பால் உங்களை மாதிரி எத்தனையோ பேர் நல்வழி பெறவில்லையா? அதன் பிரச்சாரத்தினால் தானே நீங்கள் வரதட்சனை வாங்காது சுயமரியாதையான ஆண் மகனாக தலைநிமிர்ந்து நிற்கிறீர்கள்.
அல்லாஹுக்கு நன்றி சொல்லுங்கள். அவனிடம் TNTJ ன் பனி மேலும் சிறப்புற நடக்க பிரார்த்தியுங்கள்.
அவதூறு பேசுகிறவனையும் அபாண்டமாக குற்றம் சுமத்துகிற அல்லகைகளை பொருட்படுத்தாதீர்கள்.
என்ன ஒரு பிதற்றல். TNTJ என்ன மதவெறி அமைப்பா? /////////////////////////
என்னது காந்திய சுட்டுட்டாங்களா?
முன்பெல்லாம், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மட்டும்தான் முஸ்லிம்களை மதவெறியர்கள் என்றார்கள். இப்போது நீங்களும் கிளம்பி விட்டீர்கள். உங்களிருவருக்கும் என்ன வித்தியாசம்? சரி போகட்டும். TNTJ-வின் மதவெறி என்னவென்று சொல்லமுடியுமா? எத்தனை ஹிந்துக்களை கொன்றிருக்கிறார்கள்? எத்தனை கிருத்துவர்களை எரித்திருக்கிறார்கள்? மதவெறி என்றாலாவது என்ன என்று விளங்கி வைத்திருக்கிறீர்களா? பற்று – வெறி இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றாவது தெரியுமா? ‘என் பெயர் முஹம்மத்’ என்று கூறுவதே மதவெறியாகி விட்டதா இப்போது?
முஹம்மத்,
விடுங்கள். இவர்கள் என்னதான் கூவினாலும்
நியாயமான சரியான மனம் படைத்த பல மாற்றுமத
சகோதரர்களை TNTJ ன் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்
மூலமாகவும் சமுதாய சேவைகளின் மூலமாகவும்
இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படவைத்திருக்கிறாகள். இதை
அறிந்துதான் இவர்கள் பதறுகிறார்கள்.
இவர்களும் காழ்ப்பில்லாமல் இஸ்லாத்தை அணுகினால்
உணர்ந்துகொள்வார்கள் இஸ்லாம் உன்னதமான
மார்க்கம் என்பதை.
பிரார்த்திப்போம். அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக.
இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. யாரும் நீ மத வெறியனா? என்று என்னை கேட்கவில்லை. இங்கே அப்படி ஒரு எண்ணம் இருப்பதால் நானாக முன்வந்து சொல்கிறேன். இதை பெரிதுபடுத்த வேண்டாம்.
பாஸ், கல்யாணம் பண்ணிகுறது எதுக்குன்னனா, பொன்னும் பையனும் அவங்கவுங்க குடும்பத்தோட சந்தோசமா இருக்குறதுக்கு! பொண்ணு வீட்டுக்கு போன பொண்ணு வீட்டுக்கு செலவே! இதையே சாக்க வைச்சு டிமாண்ட் பண்ணினா தான் அது தப்பு.
அவர் அவர் பெண் பிள்ளை, அவள் குடும்பம் நன்றாக வாழவேண்டும் என பெண் வீட்டார் செய்வது வரதட்சணை ஆகாது. அவர்கள் பிரியப்பட்டு வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் கொடுப்பது அவரவர் பெண் பெயரிலேய செய்யட்டும். டிமாண்ட் செய்து வாங்குவதே தவறாகும்.
திருமண செலவை சரி பதியாக பகிர்ந்துக்கலாம்.
அவங்க பொண்ணு , மருமகன் வெளி தேசம் போயி சந்தோசமா இருக்கொனுன்னு பெற்றவர்கள் ஆசை படுவது எப்படி தப்பாகும்? அவங்களாலே “முடிஞ்ச அளவு”க்கு பிரியப்பட்டு செய்வது எப்படி தப்பு சொல்லுவீங்க? பெண் வீட்டாரை வற்புறுத்தி வாங்கினா அது நிச்சயமா தண்டிக்க பட வேண்டிய தண்டனையே!
நியாய தராசு!
சமூகத்தில் வரதட்சணை என்பது இருப்பதால் தான், கேட்காமலும் கொடுக்கிறார்கள். வற்புறுத்தினாலும்… புறுத்தவிட்டாலும், வரதட்சணை, வரதட்சணை தான்.
வரதட்சணை கொடுக்காமல் பென்விட்டின் சகோதர்கள் சொத்தை கொள்ளை அடித்த சம்பவங்கள் நெறைய உண்டு . ஒரு வீட்டில் பெண் பிறந்தால் அவளுக்கும் அந்த வீட்டின் சொத்தில் பங்கு உண்டு அதை தட்சணையாக தரவேண்டோம் அதை அவள் பேரில் எழுதினால் அவங்கள் பிள்ளைகள் வளம் பெறுவார்கள் . இதை வீனவு ஒரு இடத்திலும் தெளிவாக சொல்ல வில்லை முற்றிலும் ஒரு தலை பட்சமான கட்டுரை .
சொத்தே இல்லாவிட்டாலும், கந்து வட்டிக்கு வாங்கியதை மாப்பிள்ளை வீட்டார் புடுங்குகிறார்கள். இதில், சொத்து இருந்தால்… மாப்பிள்ளையாவது விடுவதாவது! கட்டுரையில் இருப்பதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் புலிக்குட்டி. பிறகு, விடுபட்டவைகளை பார்க்கலாம்.
வாழ்க்கைத் துணை ஒப்பந்தம். பேசி முடிப்பவர். பெற்றோர், உறவினர் மற்றும் முகவர்.
பெண்ணிற்கு 21 வயதில்ஆரம்பிக்கப்பட்ட துணை தேடும் படலம் 28-30 ல் முடிவடையும் அவலம். அதற்குள் ஏற்படும் அவமானங்கள், கேட்கப் பட்ட கேள்விகள், பார்வைகள், விசாரிப்புகள் ஏராளம். உதாரணமாக நாளிதழ் ஒன்றில் வரும் விளம்பரத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். கேட்கப்படும் கேள்வி நகை/பணம் எவ்வளவு, குறைவாக கூறினால் அழைப்பு துண்டிக்கப்படலாம்.
பெற்றோர் நிலை அவர்கள் பெற்றோர் இவ்வளவுதான் சீர் செய்தனர். அதே சீர்தான் இப்போதும் தன் மகளுக்கு செய்யமுடியும் என்பது. இது பொருளாதார நிலையால். ஆண்டுகள் செல்ல பெண்ணின் நிலை ஏதோ ஒன்று அமைந்தால் போதும். துணை ஒன்று வேண்டும். படித்தவனா, உழைத்து சம்பாதிப்பவனா என்பது பின் தள்ளப் படுகிறது.
அதே பெற்றோர் தன் மகனுக்கு பெண் பார்க்கும் போது ஒன்னுமில்லாதவன் உன் தங்கைக்கு இத்தனை கேட்டான் உனக்கு இப்படி கேட்கனும். வினவு கூறியதை போல அவர்கள் தேடுவது அதிக சொத்துள்ள, அல்லது அதிக நகையோடு வரும் மருமகள். ஆனால் அங்கும் ஏளனத்தை காண்பது உறுதி. ஆனால் அவர்களுக்கு பழகி விட்டது. அல்லது குறிக்கோள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டது.
கொடுமை என்னவென்றால் சம்பத்தபட்ட பெற்றோரே சந்தித்து இம்முடிவுகளை எடுக்கின்றனர். குறுக்கே சாதக பொருத்தம் வேறு. மன்னிக்கவும் சோதிட பொருத்தம். இது ஒரு பெருங்கதை. ஆனால் வாழ்க்கையில் இணையும் நபர்கள் சந்திப்பதேயில்லை. கருத்து பரிமாற்றமோ அறவே இல்லை.
என் சகோதரன் ஒருவர் சொல்வார் சொந்தத்தில் பெண் தேடாதே வெளியில் எடு. சொந்தம் பெருகட்டும் என. வினவு சாதி கடந்து செய் என்கிறது. சரிதானே
தாலி மறுத்த தோழர்களின் திருமணத்தை கண்ட என்னால் அதை புறக்கணிக்க இயலாது போனது ……………..
திருமணச் செலவுகள், இரு வீட்டிலும் என்றாலும், பெண் வீடு அதிகமான செலவுகளை செய்ய/ஏற்க வேண்டியுள்ளது. இனத்திற்கு இனம் இதுவும் வேறுபடுகிறது.
தாலியும், பெண்ணின் சேலையும மாப்பிள்ளை வீட்டார் செலவு. பெண்ணிற்கு இத்தனை பவுன் நகை என்பதே பேரம். பட்டுப்புடவைக்கு செலவிடும் தொகை அதை பயன்படுத்து காலம் சம்பந்தமே இல்லை. ஆம் அந்த இனம் அப்படியே பழக்கப்படுத்தபட்டு விட்டது.
அடுத்து பரம்பரைச் சொத்து – மன்னிக்கவும் இது மிகக்குறைவாக இருக்கும் நடுத்தர வர்கத்திற்கு – திருமணச் செலவுகள் செய்து விட்டதால் சொத்துரிமை வழங்கப்பட்டும் பெண்ணிற்கு மறுக்கப்படும் வாரிசு சொத்துக்கள். முழுவதும் ஆணுக்கே என்றொரு உயில் அல்லது நிர்பந்ததில் கையெழுத்து பெறுவது.
இரணடு பெண்கள் உள்ள வீட்டில் இன்னொரு பிரச்சினை. மூத்தவளுக்கு இத்தனை பவுன் போட்டியே எனக்கும் அதே மாதிரி.
திருமணம் முகவர் மூலம் முடிந்தால் கழிவுத் தொகை முகவருக்கு. இதற்கான இணையதளங்கள், முகவர்கள் பலபல. இவர்களுக்கு செலுத்திய தொகையில் என்னென்னவோ செய்திருக்கலாம்.
உழைப்பை மறந்து ஓசியில் பணம் கிடைக்குமா, திடீர் பணக்காரனாக முடியுமா, குறைந்த பட்சம், இரு சக்கர வாகனம் அல்லது 4 சக்கர வாகனம் தன் உழைப்பால் வாங்க வக்கில்லாதவர்கள், இந்த சந்தையை பயன் படுத்திக் கொள்கின்றனர்.
பட்டியலிட்ட தட்சணைகள் எல்லாம் எழுதாத சட்டங்களாக உள்ளன. மக்களும் அதற்கு பழக்கப்பட்டு விட்டனர்.
இந்த இடுகை மாற்றத்தை ஏற்படுத்தட்டும் மனதில், மானுடம் செழிக்கட்டும் உறவில்.
நல்ல பதிவு, திருமணம் செய்து கொள்பவர்கள் திருமணத்துக்கும் முன்னர் செல்போனில் பேசுவது வரதட்சனை பற்றியதாக இருந்தால் முக்கால் வாசி திருமணம நின்றே போகும். மணமகள் தப்பிக்கலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
அருமையான பதிவு…மிக்க நன்றி…
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
இந்த வரதட்சணை கொடுமை என்பது சராசரியாக நூற்றில் இரண்டு … இன்று பெரும்பாலும் திருமணமான முப்பது சதவீத குடும்பங்களில் பெண்கள் ஆட்சி தான் நிலவுகிறது… இதனை குறித்து எழுதும் நீங்கள் பல குடும்பங்களில் மனைவிமார்களால் சித்திரவதை படும் கணவர்களின் அவஸ்தையை எழுதுவதில்லையே ?
வசந்தசேனன்,
கட்டுரையில் இருக்கும் விசயத்தை விவாதியுங்கள். உங்க சொந்த புலம்பலை பிறகு பார்க்கலாம்.
தமிழக இஸ்லாமிய இளைஞர்களிடையே வரதட்சனை ஒழிப்பில் பிஜேவும் அவர் சார்ந்திருந்த இயக்கங்களும் ஆற்றிய பணிகள் மறுக்கவியலாதவை. இந்திய அளவில் வரதட்சினை எனும் தீமைக்கு எதிரான பரப்புரைகள் என இவைகளை கொண்டாலும், சாராம்சத்தில் இது பாதிதான். இஸ்லாத்தில் வரதட்சணைக்கு பதிலாக ஒருவிதத்தில் தனதட்சினை இடம்பெறுகிறது. வரதட்சினை கொடுமைகள் அளவிற்கு மோசமாகிவிடவில்லை என்றாலும் சௌதியில், குறிப்பாக எகிப்தில் நாற்பதை நெருங்கியும் திருமணம் செய்துகொள்ள பணமின்றி முதிர் கண்ணன்கள் அதிகம்.
செங்கொடி
//சௌதியில், குறிப்பாக எகிப்தில் நாற்பதை நெருங்கியும் திருமணம் செய்துகொள்ள பணமின்றி முதிர் கண்ணன்கள் அதிகம்.//
–இல்லை செங்கொடி. இது மிக மிக மிக அரிது. ஏனென்றால், அரசே முன்வந்து ஆண்களுக்கு ‘திருமண லோன்’ கொடுக்கிறதே… சவுதியில் இருக்கும் தாங்களுக்கு இது தெரியாதா என்ன? அப்புறம் எப்படி //பணமின்றி முதிர் கண்ணன்கள் அதிகம்// என்கிறீர்கள்?
ஆணின் படுகேவலமான குணநலன், குற்றப்பின்னணி ஆகியவற்றால் அவன் புறக்கணிக்கப்படுதல் (அல்லது) நோய், ஊனம், நிறம், வருவாயிண்மை போன்ற குறையுடன், பணக்கார அழகிக்காக வேண்டி தம் சக்தி மீறி ஆண் முயற்சிப்பது (அல்லது) எல்லாமிருந்தும் மகர் கொடுக்க மனமில்லாத படு கஞ்சனாக இருப்பது போன்றவைதான் காரணங்களாக முடியும். பத்தாயிரத்தில் ஒருவன் என்ற ரீதியில்…
//இஸ்லாத்தில் வரதட்சணைக்கு பதிலாக ஒருவிதத்தில் தனதட்சினை இடம்பெறுகிறது//
இது ஒரு புரட்சி இல்லையா? பெண்ணை மணமுடிப்பதற்கு பெண்ணிடமோ பெண்ணைச் சார்தவர்களிடமோ தட்சிணை கேட்பதற்கு பதிலாக பெண்ணுக்கு கொடுத்து முடிப்பது சமுதாய மறுமலர்ச்சி இல்லையா?
காமாலை கண்ணுக்கு வேறு எப்படித்தான் தெரியும்?
நண்பர்கள் நெ.முகம்மது, இனிமை
முதலில், வரதட்சனை கொடுமைகளை பற்றி பேசவேண்டிய இந்த விவாதம் இஸ்லாமிய எதிர்ப்பாக திரும்பிவிடக்கூடாது என நினைக்கிறேன். எனவே சிறு விளக்கம் மட்டும்.
சௌதியில் திருமணம் முடிக்கமுடியாமல் இருப்பது எண்ணிக்கையில் எவ்வளவு என்பதைவிட மூன்றாயிரம் சௌதி ரியால் வரை சுலபத்தவணை கடனாக கொடுத்து திருமணம் செய்விக்கத்தூண்டும் அளவில் இருக்கிறது என்பதே போதுமானது. ஆனால் இது போன்ற கடனுதவித்திட்டங்கள் எதுவும் எகிப்தில் இல்லை, இதை கருத்தில் கொண்டுதான் முதல் பின்னூட்டத்தில் \\சௌதியில், குறிப்பாக எகிப்தில்// என்று குறிப்பிட்டிருந்தேன்.
பெண் வீட்டாரை கொடுக்கவைப்பதற்கு பதில் ஆண்வீட்டாரை கொடுக்கவைப்பதால் மட்டுமே அது புரட்சிகர உள்ளடக்கத்தை கொண்டதாகிவிடாது. அரபு நாடுகளில் பெண்வீட்டார் கொடுப்பது மரபில் இல்லை, அவ்வளவுதான்.
செங்கொடி
நபி (ஸல்) அவர்களால் இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர் பண்டைய அரபுக்களிடம் பலவித மௌட்டீகங்களுடன் பெண்ணடிமையும், பெண்களை ஒரு போகப்பொருளாக கருதிய நிலைமைதான். பெண் ணுரிமை பெண்ணுரிமை என்று இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் போல் அல்லாமல் இஸ்லாம் அப்போதே பெண்களுக்கு பல புரட்சிகரமான உரிமைகளை சட்டங்களாகவே அமுல் படுத்தியது. அவற்றில் ஒன்று தான் திருமணக்கொடை(மஹர்).
இல்லறவாழ்க்கையில் அதிகமாக இழப்புக்குள்ளாவது(அழகு, இளமை) சிரமத்திற்குள்ளாவது(மகப்பேறு) தியாகங்கள் செய்வது(தன் பிறந்த வீட்டையே துறப்பது) பெண்கள் தான்.
இவ்வளவையும் எதிர்நோக்கின்ற பெண்களிடம் வரதட்சணை வாங்குகின்ற அயோக்கியத்தனத்தை விட்டு அவர்களுக்கு மணக்கொடை கொடுங்கள் என்று சொல்லுகின்ற மார்க்கம் அதை சட்டமாக்கின கடவுள் எவ்வளவு தீர்க்கமான அறிவுள்ளவனாக இருப்பான்.
இழப்புக்கும் சிரமத்திற்கும் தியாகங்களுக்கும் உரிய பெண்களிடம் மணக்கொடையை பெறுகின்ற உரிமையை அவர்களிடம் கொடுப்பதுதானே நியாயம் அறியுடைமை.
இதை எந்த மனித சட்டம் இஸ்லாத்திற்கு முன்பும் பின்பும் அமுல்படுத்தியுள்ளது. இதை அறிவுள்ளவர்கள் பெண்களை மீட்டெடுக்க வந்த புரட்சிகர திட்டம் என்றே புரிந்துகொள்வர்.
பெண்ணுக்கு மணக்கொடை கொடுக்க வேண்டும் என்று நிற்பந்தமாகும்போது ஆண் கண்டிப்பாக நன்றாக உழைக்க வேண்டும். அப்படி உழைப்பவர்களுக்கு தான் கல்யாணம். அவர்கள் தான் கல்யாணத்திற்கு பிறகும் மனைவி, மக்களை காப்பாற்றுவார்கள் என்று இஸ்லாம் அக்கறைகொள்கிறது.
பெண்களிடம் வாங்கித்தின்று பேடிகளாக இருக்காதீர்கள் என்று போதிக்கிறது.
இந்த பேடிகளை கண்டு இஸ்லாம் வெறுக்கிறது.
பேடிகளுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு? பேடிகளுக்காக வக்காலத்து வாகுபவர்களை தவிர?
//பெண்களிடம் வரதட்சணை வாங்குகின்ற அயோக்கியத்தனத்தை விட்டு அவர்களுக்கு மணக்கொடை கொடுங்கள் என்று சொல்லுகின்ற மார்க்கம் அதை சட்டமாக்கின கடவுள் எவ்வளவு தீர்க்கமான அறிவுள்ளவனாக இருப்பான்.//
சிறு சந்தேகம், அந்த கடவுள் ஏற்கனவே பல தூதர்களை அனுப்பியிருக்காராமே! பல வேத புத்தகங்களையும் கொடுத்துள்ளாராமே! அப்போதே ஏன் இன் இந்த அறிவுள்ள செயலை செய்யவில்லை
//பெண்களிடம் வாங்கித்தின்று பேடிகளாக இருக்காதீர்கள் என்று போதிக்கிறது.
இந்த பேடிகளை கண்டு இஸ்லாம் வெறுக்கிறது.//
வரதட்சணை வாங்குபவன் எவனாக இருந்தாலும் பேடி தான்! ஏன் பெண்ணுக்கு கொடுக்கும் வழக்கம்! அப்போது பெண்களுக்கு மட்டும் தட்சணை என்பது பெண்கள் தொகை குறைவாக இருந்திருக்கலாம் என்ற லாஜிக்கில் வரும் இல்லையா!?
பையா,
பல தூதர்கள் மூலம் சொன்னார்தான். உம்மைப்போல்
மூடர்கள் அதை மறுத்து மறைத்து நின்றதால் மீண்டும்
சொல்லவேண்டிய நிலை. நீர் கடவுளையே மறுத்து
நிற்கவில்லையா? அவர்கள் கடவுளின் வார்த்தையை.
அதுசரி நீர் அறிவுபூர்வமாக எதையும் பேசமாட்டீரா?
TNTJ அலுவலகத்தை இன்னுமா தொடர்புகொள்கிரீர்?
///பெண் வீட்டாரை கொடுக்கவைப்பதற்கு பதில் ஆண்வீட்டாரை கொடுக்கவைப்பதால் மட்டுமே அது புரட்சிகர உள்ளடக்கத்தை கொண்டதாகிவிடாது.///—தவறு செங்கொடி. அதுதான் புரட்சி.
ஆண், தான் திருமணம் ஆகி பல குழந்தை பெற்ற பின்னும் பல வருடங்கள் கழித்தும் புது மாப்பிள்ளை போல இருப்பான். (௬௦ வயசானாலும் இளமை மாறாமல் கதாநாயகர்களாகவே நடித்த/நடிக்கும் நடிகர்களை உதாரமாக்கிக்கொள்ளவும். நடிகைகள்?) ஆனால் பெண்கள், அப்படியா? தாய்மை அடைவதினாலும் குழந்தை பெறுவதினாலும் தங்கள் அழகை, வனப்பை, சக்தியை, தன் தனிப்பட்ட சுய வாழ்க்கையை, சுதந்திரத்தை (குழந்தை அழுதால் பாலூட்ட அருகில் இருக்க வேண்டும்… அலுவலகம் செல்ல முடியுமா? வீட்டிலிருந்தால் கூட சாப்பிடுவதை நிறுத்திவிட்டு…, பாதி குளியலில் ஓடி வருவது.., இரவு/பகல் தூக்கமிழந்து…) எல்லாம் இழக்கும் பெண்களுக்கு ஆண்கள் என்ன நஷ்ட்ட ஈட்டை வழங்கி உள்ளார்கள்? இஸ்லாம் இதைத்தான் ரொம்பவே அட்வான்சாக மகர் என்ற தனதட்சினையை வழங்கிய பின்னர் கையை வைக்க சொல்கிறது. மகர் தொகையை மணப்பெண்களே நிர்ணயிக்கும் உரிமையும் கொடுத்துள்ளது. இதெல்லாம்…. ஆணாதிக்க… மதவாதிகளின்….. பிற்போக்கான…. அடிப்படைவாத…. காட்டுமிராண்டிகால…. பழமைவாத…. மூடச்செயல்….. என்று எதிப்பவர்களை பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
//அரபு நாடுகளில் பெண்வீட்டார் கொடுப்பது மரபில் இல்லை, அவ்வளவுதான்.// —மரபில் இல்லையா? இஸ்லாத்தில் உள்ளதா? மரபை இஸ்லாம் உடைத்தெறிய வில்லையா?
“ஆண், தான் திருமணம் ஆகி பல குழந்தை பெற்ற பின்னும் பல வருடங்கள் கழித்தும் புது மாப்பிள்ளை போல இருப்பான். (௬௦ வயசானாலும் இளமை மாறாமல் கதாநாயகர்களாகவே நடித்த/நடிக்கும் நடிகர்களை உதாரமாக்கிக்கொள்ளவும். நடிகைகள்?) ஆனால் பெண்கள், அப்படியா? தாய்மை அடைவதினாலும் குழந்தை பெறுவதினாலும் தங்கள் அழகை, வனப்பை, சக்தியை, தன் தனிப்பட்ட சுய வாழ்க்கையை, சுதந்திரத்தை (குழந்தை அழுதால் பாலூட்ட அருகில் இருக்க வேண்டும்… அலுவலகம் செல்ல முடியுமா? வீட்டிலிருந்தால் கூட சாப்பிடுவதை நிறுத்திவிட்டு…, பாதி குளியலில் ஓடி வருவது.., இரவு/பகல் தூக்கமிழந்து…) எல்லாம் இழக்கும் பெண்களுக்கு ஆண்கள் என்ன நஷ்ட்ட ஈட்டை வழங்கி உள்ளார்கள்? ”
🙂 🙂 🙂 Are you serious?
நீங்கள் சொல்லும் நட்ட ஈடு, தமிழ்ப்படங்களில் ரெளடிகளின் தலைவன் தான் கொலையைச்செய்துவிட்டு தனக்கு கீழிருக்கும் ஒருவனுக்கு காசு கொடுத்து சரணடையச் சொல்வது போலுள்ளது.
இல்லைத் தெரியாமல்த்தான் கேட்கிறேன், பிள்ளையை உருவாக்குவதில் முழுதாக ஒத்துழைக்கத் தெரிந்த உங்களிற்கு அக்குழந்தையை வளர்ததெடுப்பதில் ஏன் பங்கெடுக்கக் கடினமாக உள்ளது? அப்படி உங்களிற்கு குழந்தை வளர்ப்பில் பங்கெடுக்க விருப்பமில்லையெனில் ஏன் குழந்தை வேண்டும் என்று முடிவெடுத்தனியள்?
குழந்தை வளர்ப்பதில் நீங்களும் உதவினால் ஏன் உங்கள் மனைவி தனது முழு தனிப்பட்ட சுய வாழ்க்கையையும் இழக்க வேண்டும்? சுயமாக எந்தவித interests ஓ, metal stimulation ஓ இல்லாமல் robort மாதிரி வாழ்ந்து அவ்வாறே பிள்ளையும் வளர்ப்பின் அப்பிள்ளையின் எதிர்காலம் என்னாவது?
“குழந்தை அழுதால் பாலூட்ட அருகில் இருக்க வேண்டும்… அலுவலகம் செல்ல முடியுமா? வீட்டிலிருந்தால் கூட சாப்பிடுவதை நிறுத்திவிட்டு…, பாதி குளியலில் ஓடி வருவது.., இரவு/பகல் தூக்கமிழந்து”
தேவையில்லை. இப்போது தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. Mother can express milk and store it. Then anybody can feed the baby. Infact it is actually good for the father to feed the frequently, so it gives him a chance to bond with the baby and also gives the mother some much needed break.
இங்கெல்லாம் ஒரு தாய் பிள்ளை பிறந்து சில மாதங்களில் வேலைக்கு பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ வேலைக்கு வர விரும்பின் அநேகமான வேலைத்தளங்களில் இடையிடையே பால் express பண்ண அனுமதி வழங்க வேண்டும். அத்தோடு midwives, doctors, nurses and other birthing educators encourage the father to get up some nights to feed the baby, again to give the mother some rest.
பிள்ளை வளர்ப்பில் (வீட்டு வேலகளிலும் கூட) அம்மா அப்பா இருவரின் பங்களிப்பும் இருப்பின் ஒருவரே தனியத் தம்மைத்தியாகம் செய்யத்தேவையில்லை, இருவருக்கும் தமது இலட்சியங்களை அடைய வாய்ப்புக்கள் கிடைக்கும், அதுவே பிள்ளைக்கும் மிக நன்மையாகும்.
“–பெண் வீட்டாரை கொடுக்கவைப்பதற்கு பதில் ஆண்வீட்டாரை கொடுக்கவைப்பதால் மட்டுமே அது புரட்சிகர உள்ளடக்கத்தை கொண்டதாகிவிடாது–” எந்த விதமான சமூக கட்டமைப்பு கோட்பாடுகளை கொண்டு இவ்வாறு கூறுகிறீர்கள் என் தெரியவில்லை. திருமணம் என்பது ஆணும் பெண்ணும் உடலால் சேர்வதற்கான ஊடகம் அவ்வளவுதான் எனவே யாரும் யாருக்கும் பொறுப்பு அல்ல என்ற ரீதியிலேயே உங்கள் கருத்து இருக்கிறது.
மாறாக இஸ்லாம் சொல்லும் சமூக கட்டமைப்பு குடும்பம் சார்ந்ததாகவும் அதன் மனிதர்கள் சார்ந்ததாகவும் இருக்கிறது. அந்த கட்டமைப்பில் ஆண் தான் குடும்பத்திற்கான bread winner. அதன் அணைத்து பொருளாதார தேவைக்கும் அவனே பொறுப்பாளி. ஒரு பெண்ணிற்கான, தனக்கு பிடித்த பெண் கேட்கின்ற மஹரை (அது அவளுக்கான வாழ்வாதாரமாக, இந்த கணவன் விட்டுச்சென்றால் மரணித்தல் அவளது பராமரிப்பிற்கான தேவையாக அவள் கேட்கிறாள்) கூட தர முடியாத சோம்பேறியாக ஒரு ஆண் இருக்க வேண்டும் என சொல்கிறீர்களா? ஒரு ஆண் மகன் உழைத்து அவன் குடும்ப பொறுப்பை ஏற்க கூடியவனாக இருந்தால் அவனுக்கு மஹர ஒரு பொருட்டாகவே இருக்காது. ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு தீர்ப்பளிப்பதற்கு இஸ்லாம் ஒன்றும் Sattellite டிவி க்கள் நடத்தும் ஒரு மணி நேர பேச்சு போட்டியோ பட்டி மன்றமோ அல்ல. அது இறைவன் வழங்கிய முழுமையான வாழ்க்கை திட்டம். அணைத்து சாதக பாதகங்களையும் அலசித்தான் ஒரு தீர்வு சொல்ல வேண்டும். உங்களை போல சொல்ல ஆரம்பித்தால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை தான். பானை ஒன்றில் ஒரு ஓட்டையை அடைகிறேன் என்று புதிதாக பல ஓட்டைகளை போட்டு விடக்கூடாது பாருங்கள். வரதட்சணைக்கு தீர்வு சொல்லி (சீரான) குடும்பம் என்ற ஒன்று இல்லாத சமூகமகத்தை உருவாக்கிவிட கூடாது.
//இந்த எழவுகளை பொருத்தம் பார்த்து எப்படியோ//
//பார்த்து எல்லா எழவும் பார்த்துக்கூட தொலையட்டும்.//
இதில் “எழவு” என்ற வார்த்த்தை தேவை இன்றி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்,
//…கை நிறைய சம்பளம் வாங்கும் கபோதிகள் அத்தோடு திருப்தி….//
யாரு கபோதி? கை நிறைய சம்பாதிக்கிரவனா? அதில் திருப்தி அடையாதவனா?
” கை நிறைய சம்பாதித்தும் திருப்தி அடையாத கபோதி ” இப்படி எழுதுங்க அதை விட்டுபுட்டு சம்பாதிக்கறவனை எதுக்கு கபோதி என திட்டணும்?.
தவறுதான் அரங்கப்பெருமாள். கட்டுரையின் வீச்சில் இப்படி சில நடந்துவிடுகின்றன. திருத்திக் கொள்கிறோம். இனி எச்சரிக்கையாக இருக்கிறோம். நன்றி
திருமணம் பேசி நிச்சயிப்பது என்பது வரதட்சணை பேசி முடிப்பது தான். வரதட்சணை பேசும் பொழுது… உடனிருந்து யாராவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு வியாபார விசயம் மாதிரி, மிகவும் கறாராக, இரக்கமேயில்லாமல் விவாதிப்பார்கள். இந்த விவாதத்தில்… சம்பந்த பெண் உடனிருந்து பார்த்தால்… சுய மானமுள்ள எந்த பெண்ணும் கோபப்படுவாள்.
//இப்போது சொல்லுங்கள் உங்களில் யார் சதீஷை கண்டிக்கிறீர்கள்?//
இப்படி படிக்கிறவர்களை கேள்வி கேட்டு துளைக்கிறீர்கள். பாருங்கள். பின்னூட்டங்களே இல்லை. எல்லோருக்குள்ளும் சதவித ஏற்ற இறக்கத்தோடு சதீஷ் நீக்கமற நிறைந்திருப்பது தான் காரணம்.
//உறவினர்களை விட்டு குடும்பத்தின் மேன்மை, சமீபத்தில் நடந்த திருமணங்களில் கொடுக்கப்பட்ட வரதட்சணையின் அளவு எல்லாம் சொல்லி மறைமுகமாக ரேட்டை நிர்ணயம் செய்வார்கள். நேரடியாக கேட்பதை விட இரகசியமாக கேட்பது மகா கேவலமானது.//
இது பரவலாக இருக்கும் சமூக நடைமுறை தான். எனக்கே நேரிடையான அனுபவம் ஒன்று உண்டு. நெருங்கிய குடும்பத்தில்… பெண் பார்த்து பேசி முடித்தார்கள். அந்த குடும்ப நபரிடம் எவ்வளவு வரதட்சணை? என்றேன். அதெல்லாம்.. பேசவேயில்லை. “நீங்கள் உங்க பெண்ணுக்கு போடுவதை போடுங்கள்! என சொல்லிவிட்டோம்” என நல்ல பிள்ளையாய் பேசினார்கள்.
“இவ்வளவு போடு என பேசுவதை விட… இது ரெம்ப அயோக்கியத்தனம்” என்றேன்.
திருமண நாளில்… பெண் உம்மென்று இருந்தது. ஏன்? ஏதும் பிரச்சனையா? என விசாரித்தால்… நடுத்தர வர்க்கம் கூட அந்த பெண் குடும்பம் இல்லை. இருப்பினும் 30 பவுன் போட்டிருக்கிறார்கள். அது பத்தாது என அப்பாவிடம் சண்டை போட்டதாம் அந்த பெண். நல்ல பொண்ணுய்யா! ஜாடிக்கேத்த மூடி தான் என நினைத்துக்கொண்டேன்.
என்னுடையது காதல் திருமணம். கணவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் அவருடைய வீட்டாரே முன்நின்று செய்தனர். திருமண செலவுகளை இருவரும் பகிர்ந்து செய்வதாக திட்டம். ஆனால் கணவர் வீட்டாரின் தேவையில்லாத செலவுகளால் என் வீட்டில் பணம் கேட்க வேண்டியதாகி விட்டது. என்னுடைய சேமிப்பும் என் பெற்றோர் கொடுத்த பணமுமாக கணவரைவிட பல மடங்கு என்னுடைய பணம் செலவானது. ஆனால் என் மாமியார் ஊரிலிருந்து திருமணத்துக்கு வந்த பெற்றோரை பைசா செலவில்லாமல் கல்யாணத்தை முடிச்சிட்டீங்களே என எல்லோர் முன்னிலையில் வைத்து கேட்டார். திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆன பின்னும் மாமியார், என்னைப் பார்க்க வரும் பெற்றோரிடம் தவறாமல் சொல்லும் வாக்கியம் இது. இத்தனைக்கும் வரதட்சணை தரவே மாட்டேன் என உறுதியாக கூறிக்கொண்டுதான் திருமணம் செய்தேன். கணவரைவிட நான்கு மடங்கு அதிகமாகவே சம்பாதிக்கிறேன். திருமணத்துக்காக அவர் வாங்கிய கடன்களை நானே அடைத்தேன். 2 பேர் குடும்பம் நடத்துவதற்கான பொருட்களோடுதான் திருமணம் செய்துகொண்டேன். என் மாமியாருக்கு இதெல்லாம் கணக்கில் வராதது. மூத்த மருமகள் 2 லாரி நிறைய வரதட்சணை பொருட்களோடு வந்தது மட்டும்தான் கணக்கில் இருக்கிறது. மாமியார் குடும்பத்துக்கும் பணம் கொடுத்தாலும் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து படிக்க வைத்த என் பெற்றோருக்கு பணம் கொடுப்பது அவர்களுக்கு உறுத்தலாக தெரிகிறது. பணமும் சம்பாதித்துக் கொடுத்து வேலைக்காரியாக, பொண்டாட்டியாக இருந்தும் பெரிதாக நல்ல பெயர் கிடையாது. சம்பாதிக்கிற திமிறு, அடங்காப்பிடாரி என பேர் கொடுப்பார்கள். இன்னும் நிறைய இருக்கிறது…திருமண அமைப்பில் இத்தனை எழவுகள் இருக்கும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பதைவிட அதைவிட்டு வெளியே வந்துவிடலாம் என்றால், சமூகத்தை நினைத்தால் இன்னும் கடுப்பாகிறது. இப்போதைக்கு என்னுடைய தேர்வு, அறியாமையில் இருக்கும் கணவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஏதாவது சொல்லி புரியவைக்கலாம் என்பதுதான். வேறு என்ன செய்ய?!
வாழ்த்துக்கள். தொடர்ந்து போராடுங்கள். ஒரு ஆண் என்ற முறையில் நீங்கள் சமூகம் பற்றி கூறிய சொற்களின் உண்மைக்கு முன்னால் கூனிக் குறுகுகிறேன். வெட்கமாக இருக்கிறது.
உங்களைப் போன்று பல பெண்கள் இந்தக்கையறு நிலையில் தத்தளிக்கிறார்கள். இருப்பினும் சூழ்நிலையைப்புரிந்து கொண்டு போராடும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்களைப்போன்றவர்கள்தான் ஆண்களின் உலகில் குற்ற உணர்ச்சியை சொரணையோடு ஏற்படுத்த முடியும். சொந்த வாழ்க்கை விசயத்தைக்கூட பொது நலனுக்காக பகிர்ந்து கொண்ட உங்கள் சமூக அக்கறைக்கு நன்றி
அருமையான இடுகை. இப்போது வேலைக்கு போகும் பெண்களே பெரிதும் மணமகளாக விரும்பப்படுகிறார்கள். அதுவும் ஏடிஎம் கார்டை கணவனிடம் கொடுத்து விட வேண்டும். தேவையைச் சொல்லிவிட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற ஏற்பாட்டோடு! இது என் தோழிக்கு உண்மையில் நடந்தது. சிறிது நாட்கள் கழித்து கார்டை கேட்ட தோழிக்கு கிடைத்தது அடியும் உதையும் பின்னர் நடு இரவில் வீட்டை விட்டு துரத்தியதும்! உண்மையில் இது பெண்கள் விரும்பாவிட்டாலும் தகுதிக்காக கொடுக்க ஆரம்பிக்கும் பெற்றோர்களும் திருந்த வேண்டும்!
உங்கள் தோழிக்கு இத்தகைய பிற்போக்குத்தனங்களை எதிர்த்து போராடுவதற்கு நம்பிக்கை ஊட்டுங்கள் சந்தனமுல்லை.
தோழர் வினவு நீங்கள் சொல்வதைப்பார்க்கும்போது இன்றைய திருமணங்கள்,காதல் யாவும் பெண்ணடிமைத்தனமாகவும்,ஆண்ணாதிக்கமாகவும் இருப்பது நன்றாக தெரிகிறது. நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்
சுய மரியாதையுடன் வளர்க்கப்படும் அநேகமான பெண்கள் சீதனத்தை நிச்சயம் எதிப்பார்கள். சீதனம் ஒழிவதற்கு சமூகம் மாறவேண்டும். பெண்கள் பிறந்ததிலிருந்து திருமணமே பிறப்பின் ஒரே இலட்சியம் என்பதாகவே வளர்க்கப்படுகிறார்கள். பெண்களால் ஏன் முடியவில்லை, சீதனம் கேட்பவனுக்கு கழுத்து நீட்ட மாட்டேன் என்று சொல்வதற்கு? பெண்களைச் சுதந்திரமாகச் சிந்தித்து முடிவெடுக்க சிறுவயது முதல் பயிற்றுவிக்காமல் எப்பவும் ஒரு ஆண் மேல் சார்ந்து வாழவே பழக்குகின்றார்கள். சமூகத்தில் ஆண்பெண் சமத்துவம் கொஞ்சமாயினும் வராமல் சீதனத்தை ஒழிப்பது கடினம். பெண்கள் தமது சிந்தனையை மாற்றாது சீதனத்தை ஒழிக்க முடியாது. பெண்கள் சீதனம் கேட்பவனைத் திருமணம் செய்ய மாட்டோம் என முடியு செய்யின் ஆண்கள் காலத்தில் மாறத்தானே வேண்டும். கேட்கக் கேட்க கொடுப்பவர்கள் இருக்கும் மட்டும் கேட்பவர்களையும் ஒழிக்க முடியாது.
நிறையத்தடவை யோசித்துள்ளேன் இவ்வளவு பணம், வீடு, நகை கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்வேன் என்பவனுடன் எவ்வாறு முழு மனத்துடன் குடும்பம் நடத்துவது என்று. என்னால் கற்பனை பண்ணியே பார்க்க முடியவில்லை அப்படி ஒரு வாழ்வை. என்னை ஒருத்தனுக்கு காசு கொடுத்து கட்டி வைத்து கேவலப்படுத்துவதற்குப் பதிலாக கருவிலேயே கலைத்து விடுவது எவ்வளவோ மேல் என்றே நிச்சயமாகச் சொல்வேன். அத்தோடு நான் இது பற்றி கதைக்கும் போது சொல்வதுண்டு, தமது மகளை இந்தளவு கேவலப்படுத்த முடிந்த பெற்றோரை முதலில் நடுத்தெருவில் நிற்க வைத்து சுட வேண்டும் என்று. ஆனால் அவர்களும் இச்சமூகத்தால் உருவாக்கப்பட்டவர்களே. எமது சமூகத்தில் தான் ஒரு பெட்டிக்கு வெளியே சிந்திக்கும் ஆட்கள் கிடைப்பதே கடினமே. அப்படிச் சிந்திப்பின் அதை செயற்படுத்த துணிந்தவர்களைக் கண்டு பிடிப்பது அதையும் விடக் கடினம்.
உங்களின் உறுதிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தோழி. நாங்கள் சார்ந்திருக்கும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் வரதட்சணை மறுப்பு மட்டுமல்ல, சாதி – தீண்டாமை மறுப்பு, பார்ப்பன சடங்குகள் மறுப்பு முதலிவற்றோடு மணமக்கள் ஜனநாயக ரீதியில் மணம் சம்பந்தமாக உறுதி மொழி எடுத்துக் கொண்டு எளிய முறையில் பல தோழர்கள் திருமணம் செய்கிறார்கள். பல இடங்களில் இத்தகைய திருமணங்களுக்கு பிரச்சாரம் செய்து பொதுமக்களை அழைத்து இந்த விசயங்களை அறிமுகப்படுத்துகிறோம். வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் அத்தகைய திருமணங்களை பார்வையிடலாம்.
🙂 நானும் எனது வாழ்க்கைத்துணையும் கிட்டத்தட்ட அவ்வாறே திருமணம் செய்து கொண்டோம்.
மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்! அதையே உங்கள் நட்பு வட்டத்திலும் பரப்புங்கள். டிசம்பருக்குப்பிறகு உங்கள் வலைப்பூவில் பதிவில்லை. தொடர்ந்து எழுதுங்கள்.
“மணம் முடிக்கும் பெண்களை ஆண்கள் ஆயுசு வரைக்கும் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த வரதட்சணையை பெண்ணின் தந்தை தரவேண்டுமென்று பாரம்பரிய விளக்கத்தை முதலில் சொல்வார்கள். இதன்படி பெண்ணென்பவள் சுமை. அல்லது மாடு. அந்த மாட்டிற்கு தீனியும், தண்ணீரும் கொடுத்து தொழுவத்தில் கட்டிவைப்பதற்குத்தான் அந்த தட்சணை. பதிலுக்கு அந்த மாட்டுப்பெண் சமையல், துவையல், இல்லப் பராமரிப்பு, விருந்தினர் உபசரிப்பு, குழந்தைகள் வளர்ப்பு, செவிலியர் வேலை, இரவில் தாசி வேலை எல்லாம் நேரத்திற்கு செய்யவேண்டும்.”
Exactly. இந்தக் காரணத்தை நான் நிறையத் தடவை கேட்டுள்ளேன். எல்லாம் வீட்டில் செய்யும் வேலைகளுக்கு சம்பளம் யாரும் கொடுக்காததால் அதுக்கு எந்தவித மதிப்பும் இல்லை என்ற இந்த முட்டாள்களின் எண்ணம் தான் காரணம். அத்தோடு எப்பவாவது ஒருநாள் செய்து பார்த்தால் தானே அவ்வேலைகளின் அருமை தெரிவதற்கு. அத்தோடு பெண்ணும் ஆணுக்கு சமமாக வேலை செய்து சம்பாதித்தாலும் சீதனம் கொடுத்துத் தானே கட்டித்தொலைக்கிறார்கள்.
போங்கடா லூசுக்…………….
சமுகம் பற்றிய நீங்கள் எழுதிய அனைத்தும் உண்மை.. எதெல்லாம் வரதட்சணை? என்று விவரித்துள்ள நிகழ்வுகள் எனது திருமணதிலேயும் நடந்துள்ளது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியிருகிறது.. ஆனால் என் மனைவியை அடிமையாகவோ, தாசியாகவோ நான் ஒருபோதும் நடத்தியதில்லை..
*** நம்முடைய சமுதாயத்தில் இரு குடும்பங்கள் ஒன்றிணைந்தே திருமணங்களை நடத்துகின்றன, நானும் அவ்வாறே விரும்பி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு இரு வீட்டார்களுக்கிடையே நடந்த குழப்பங்கள் அனைத்திற்கும் நானே காரணம் என்று என் மனைவி என்னிடம் விவரித்தபோது என் திருமண முடிவு எனக்கே கேள்விகுறியாகி விட்டது..!! ***
நல்லது கார்த்திக், உங்கள் கருத்துக்களை உங்கள் நண்பர்க்களிடம் பேசிப்பாருங்கள், குறைந்த பட்சம் வரதட்சணை வாங்கக்கூடாது என்பதாவது நிறைவேற முடியுமா பாருங்கள்.
சதீஷின் மனைவி மற்றும் இங்கே பெயர் குறிப்பிடாது எழுதியிருக்கும் தோழியின் நிகழ்வுகள் எல்லாம் வருத்தம் அளிப்பனவாகவும், எம் சமூகத்தின் முகங்களை எமக்குக் காட்டுவதாகவும் உள்ளன. சக துணையைத் தமக்குரிய உரிமைகளோடும், கடமைகளோடும் அங்கீகரிக்கிற மனங்களில் வரதட்சணை போன்ற பேச்சுக்களுக்குத் தேவையிருக்காது. ஆனாலும் இப்பிரச்சினைகளில் எமது பெண்களின் பங்களிப்பும் இருக்கவே செய்கிறது. தன் பெரியப்பா பெண்ணின் கல்யாணப் புடவையைவிடத் தன்னுடையது சில ஆயிரங்களேனும் அதிகமாகக் காட்டிக்கொள்வதில் பெருமையடைகிற பி.ஈ படித்த பெண்ணும், மேலைத்தேயங்களுக்கு வாழ்வு நடத்த வந்த பின்பும்கூட தம் தோழியர் கூட்டத்தில் தான் மட்டும் சும்மா இல்லை என்று காட்டுவதற்காகக் கணவனிடம் வாதிட்டு வென்று தங்கக் காப்பு வாங்கிக்கொள்கிற, அதைக் கூடிய வழிகளில் தோழியருக்கு அறிவித்து மகிழ்கிற எம்.சி.ஏ படித்த பெண்ணும் எமது சமூகத்தில் இருக்கிறார்கள் எனும்போது இவர்களின் தலைமுறைக்கு இவர்கள் எதைச் சொல்லித்தர இருக்கிறார்கள் எனும் கேள்வி இன்னும் வருத்தம் தரக்கூடியது.
பதிவுக்கு நன்றி.
//தன் பெரியப்பா பெண்ணின் கல்யாணப் புடவையைவிடத் தன்னுடையது சில ஆயிரங்களேனும் அதிகமாகக் காட்டிக்கொள்வதில் பெருமையடைகிற பி.ஈ படித்த பெண்ணும், மேலைத்தேயங்களுக்கு வாழ்வு நடத்த வந்த பின்பும்கூட தம் தோழியர் கூட்டத்தில் தான் மட்டும் சும்மா இல்லை என்று காட்டுவதற்காகக் கணவனிடம் வாதிட்டு வென்று தங்கக் காப்பு வாங்கிக்கொள்கிற, அதைக் கூடிய வழிகளில் தோழியருக்கு அறிவித்து மகிழ்கிற எம்.சி.ஏ படித்த பெண்ணும் எமது சமூகத்தில் இருக்கிறார்கள் எனும்போது இவர்களின் தலைமுறைக்கு இவர்கள் எதைச் சொல்லித்தர இருக்கிறார்கள் எனும் கேள்வி இன்னும் வருத்தம் தரக்கூடியது.//
பெண்களுக்கு சமூகத்தில் கிடைக்கப்பெறும் சுதந்திரத்தில் இருந்துதான் மேலே செல்வநாயகி குறிப்பிட்டுள்ள அவர்களது பிற்போக்குத்தனம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
அவர்களது வாழ்நாள் கடமைகளாக, குழந்தை வளர்ப்பும், இரவு நேரம் கணவனுக்கு செய்யும் கட்டில் சேவைகளும், இல்லப் பராமரிப்புமே முன்னிறுத்தும் படும் ஒரு சமூகத்தில், பெண்களிடமிருந்து வேறெதையும் அதிகபட்சமாக எதிர்பார்த்துவிட முடியாது. அவ்வாறு இல்லையெனில் பெண்களை இந்த இருட்டு உலகிலிருந்து தப்பிக்க வைக்க நாம் என்ன வகையான போராட்டத்தை மேற்கொண்டோம் என்ற அனுபவத்திலிருந்துதான் செல்வநாயகி குறிப்பிட்டுள்ள அவர்களின் பிற்போக்குத்தனம் எடை போடப் படவேண்டும்.
பூச்சாண்டி,
பெண்களின் மீது ஏவப்படுகின்ற குடும்ப அல்லது பொதுவெளி வன்முறைகள், அப்படியான வன்முறைகளில் சிக்குண்டு நசுக்கப்படுகின்ற பெண்களை அல்ல நான் குறிப்பிட்டது. வரதட்cஅணையால் பாதிக்கப்படுகின்ற பெண்களின் மீதான அதே பார்வையைக் குறைந்தபட்ச சுதந்திரங்களோடும், வாய்ப்புகளோடும் வெளிவந்து அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான ஆதரவோடும் நிற்க முடிகிறபோதும் அந்தஸ்து, பெருமை, பீத்தல்களை விடமுடியாது அவற்றைத் தமக்குரிய ஆபரணங்களில் காட்டிக்கொள்கிற பெண்களின் மீது செலுத்த முடிந்ததில்லை என்னால். பெண்களும் இவற்றிலிருந்தெல்லாம் வெளிவருகிறபோதே நாம் நினைப்பது நடக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுவரமுடியும்.
என் கொள்ளுப்பாட்டியும், பாட்டியும், அம்மாவும் வாழ்ந்த வாழ்விலிருந்து கொஞ்சமேனும் விடுபட முடிந்தபிறகு நானும் சமூகம் குறித்த, வாழ்வு குறித்த பார்வைகளில் அவர்கள் கொண்டிருந்த அதே மூடத்தனங்களைக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு அவர்களுக்கிருந்த அதே காரணிகளைச் சொல்லி என் தவறுகள் இயல்பென்று ஏற்றுக்கொள்ளப் படுவதைவிட நான் என் தவறுகளுக்காக விமர்சிக்கப்படவேண்டும் என்று கருதுகிறேன். நான் என்பதை இங்கு ஒரு குறியீடாகவே சொல்கிறேன். நன்றி.
//அவர்களது வாழ்நாள் கடமைகளாக, குழந்தை வளர்ப்பும், இரவு நேரம் கணவனுக்கு செய்யும் கட்டில் சேவைகளும், இல்லப் பராமரிப்புமே முன்னிறுத்தும் படும் ஒரு சமூகத்தில், பெண்களிடமிருந்து வேறெதையும் அதிகபட்சமாக எதிர்பார்த்துவிட முடியாது.//
செல்வநாயகி,
இது குறித்து உங்கள் கருத்து என்ன? பெண்களிடம் பேரதிகமாக செல்வாக்கு செலுத்தும் கருத்து நிறுவனம் மேலே உள்ளதுதான். எவ்வளவுதான் புரட்சிகர பாரம்பரியத்தில் புடம் போட்ட பெண்ணாயிருந்தாலும் சமூகத்தில் வலுவாக செல்வாக்குச் செலுத்தும் மேற்சொன்ன கருத்து நிறுவனம் அந்தப் பெண்களிடம் தனது வேலையை காட்டிவிடவே செய்கிறது. இதனை மீறி பெண்கள் முற்போக்கு, புரட்சிகர நடைமுறையில் ஊன்றி நிற்பது என்பதும், அற்பத்தனங்களை விட்டொழிப்பது என்பதும் வெகுவாக பாராட்டி, சிலாகித்து வரவேற்கப்பட வேண்டிய விசயமாகத்தான், அரிதான ஒன்றாகத்தான் இந்தியாவின் நிலை உள்ளது.
இதில் இணைச் சேர்க்கையை தேர்வு செய்யும் உரிமை, கற்புநிலையும்-குடும்ப வாழ்க்கையும், இனப் பெருக்கம் ஆகிய விசயங்களில் பெண்களுக்கு வழங்கப்படும் ஜனநாயகமும் விவாதிக்கப்பட வேண்டிய மையப் பொருளாக உள்ளது.
இப்படி ஒட்டு மொத்த சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்த கருத்துக்களை, நடைமுறைகளை கவனிக்காமல் ஒரு சில பெண்களிடம் ஓப்பிட்டளவில் நிலவும் சுதந்திரம், ஜனநாயகம், பொருளாதார கொழிப்பை வைத்து மட்டுமே அவர்களை ஒத்த மொத்த பெண்களின் அவர்களையொத்த அற்ப நடவடிக்கைகளை எடை போடுவது சரியாக இருக்காது. ஏனேனில், பெண்கள் நேரடி மறைமுக வன்முறைகளுக்கு ஆட்படுவதை வைத்து மட்டுமே பெண்களுக்கு கிடைக்கப்பெறும் சுதந்திரம் ஜனநாயகத்தை அளவிடுவது என்றால் நாம் தவறான புரிதலுக்கு ஆட்படுவோம். உண்மையில் பெண்களின் சிந்தனைப் போக்கில் ஆதிக்கம் செலுத்தும் சமூக கருத்துக்கள், பொருளாதார அடிப்படைகள் எவையெவை என்பதிலிருந்துதான் பெண்களின் நிலையை நாம் நோக்க வேண்டும்.
இந்த அடிப்படையில்தான் உங்களது கருத்தில் சிறிது மாறுபட்டேன்.
பூச்சாண்டி
பூச்சாண்டி,
சமூகத்தின் கருத்தியல் ஆதிக்கமே பெண்களையும் அப்படிச் சிந்திக்க வைக்கிறது என்பதை ஒரு கருத்தாக ஒத்துக்கொண்டே பேசுகிறேன். ஆனால் அக்கருத்தாக்கங்களில் இருந்து விடுபடும் வாய்ப்புகளிருந்தும் அதிலேயே உழல்வதும் பேசப்பட வேண்டும். விடுதலை என்பது என்ன? யாருக்கு விடுதலை தேவையோ அவர்களுக்கும் தமது தளைகளில் இருந்து விடுபடும் முனைப்பின்றி அவ்விடுதலை எப்படி சாத்தியமாகும்? நான் சில பெண்கலை வைத்து பொதுமையாக என் கருத்தை எல்லோருக்கும் பொருத்தவில்லை என்பதைக் குறிப்பிட்டே பேசுகிறேன். ஆனால் நான் குறிப்பிட்டிருக்கும் சிலரை வெகு சிலராக நீங்கள் எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களும் பொருட்படுத்தத்தக்க அளவினராகவே இருக்கிறார்கள். இதை அனுபவப்பூர்வமாக அறிந்தும் இருக்கிறேன். வரதட்சணைப் பிரச்சினை, அழகிப்போட்டி எதிர்ப்பு என்று செயலாற்றிய அனுபவஙள்தான் எனக்குள் இப்படியான கருத்தையும் ஏற்படுத்தின.
//ஆனால் அக்கருத்தாக்கங்களில் இருந்து விடுபடும் வாய்ப்புகளிருந்தும் அதிலேயே உழல்வதும் பேசப்பட வேண்டும். விடுதலை என்பது என்ன? யாருக்கு விடுதலை தேவையோ அவர்களுக்கும் தமது தளைகளில் இருந்து விடுபடும் முனைப்பின்றி அவ்விடுதலை எப்படி சாத்தியமாகும்?///
இதனை கருத்தில் கொண்டுதான் பின்வரும் விசயத்தையும் எனடுஹ் முதல் பின்னூட்டத்தில் கூறியிருந்தேன்.
//அவ்வாறு இல்லையெனில் பெண்களை இந்த இருட்டு உலகிலிருந்து தப்பிக்க வைக்க நாம் என்ன வகையான போராட்டத்தை மேற்கொண்டோம் என்ற அனுபவத்திலிருந்துதான் செல்வநாயகி குறிப்பிட்டுள்ள அவர்களின் பிற்போக்குத்தனம் எடை போடப் படவேண்டும்.//
//அதே பார்வையைக் குறைந்தபட்ச சுதந்திரங்களோடும், வாய்ப்புகளோடும் வெளிவந்து அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான ஆதரவோடும் நிற்க முடிகிறபோதும் அந்தஸ்து, பெருமை, பீத்தல்களை விடமுடியாது அவற்றைத் தமக்குரிய ஆபரணங்களில் காட்டிக்கொள்கிற பெண்களின் மீது செலுத்த முடிந்ததில்லை என்னால்.//
செல்வநாயகி/பூச்சாண்டி,
நானும் இவ்வாறான பெண்களை பல தடவை சந்தித்துள்ளேன்.இவர்களின் சிந்தனை/நடத்தைகள் ஏன் இந்த மாதிரி குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருக்குது எனப் பலதடவை யோசித்துள்ளேன். ஒருவர் எப்படியான ஆளாக வளர்கின்றார் என்பது அவர்கள் பிறந்த சூழல், வளர்க்கப்படும் விதம், அவர்களின் பெற்றோரின் நடப்பு/சிந்தனைகள், சமூகம், பின் வளரும் போது அவர்கள் முகம் கொடுக்கும் சூழ்நிலைகள், அவர்களின் personality என்று பலவற்றில் தங்கியுள்ளது. அநேகமாக எமது சமூகத்தில் கிணற்றுத்தவளையாகவே எல்லோரும், குறிப்பாகப் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அவர்களின் அக்குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வரவோ சிந்திக்கவோ (சிந்திக்கும் தன்மையைத்தான் எமது கலாச்சாரமும் வளர்ப்பு முறையுமே சிறு வயதிலேயே ஒடுக்கிவிடுமே.) சந்தர்ப்பம் வருவதில்லை. அப்படிச் சிந்திப்பதே மிகப் பெரிய குற்றமாவே பார்க்கப் பழக்கப்படுகின்றனர்.
என்னதான் மருத்துவமும் engineering உம் படித்து பட்டம் பெற்றாலும் அவர்களால் இவ்வாறு வட்டத்திற்கு வெளியே சிந்திக்க முடிவதில்லை. பெண்களால் மட்டுமல்ல அநேகமான ஆண்களாலும் தான். அவர்களுக்குப் புத்தகப் படிப்பால் மருத்துவமும் engineering உம் நன்றாகத் தெரிந்திருக்கும் ஆனால் வாழ்க்கையில் அவர்கள் எந்த traditional values உடன் வளர்க்கப்பட்டார்களோ அவற்றையே பின்பற்றுவர்.
இவ்வகையில் பூச்சாண்டி எழுதிய பின்வரும் கருத்தை ஆமோதிக்கின்றேன்.
//அவர்களது வாழ்நாள் கடமைகளாக, குழந்தை வளர்ப்பும், இரவு நேரம் கணவனுக்கு செய்யும் கட்டில் சேவைகளும், இல்லப் பராமரிப்புமே முன்னிறுத்தும் படும் ஒரு சமூகத்தில், பெண்களிடமிருந்து வேறெதையும் அதிகபட்சமாக எதிர்பார்த்துவிட முடியாது.//
இதை மாற்றுவது சரியான கடினம். நானும் இங்கிருக்கும் எம்மவர்களுடன் சில முயற்சிகள் செய்கின்றேன். ஆனால் படிப்படியாகத் தான் முடியும் என நினைக்கின்றேன். Not sure whether there are any other effective ways. There should be a cultural revolution, I reckon.
/// வரதட்சணையை நாங்களாக ஏதும் கேட்கவில்லை, நீங்களாக பார்த்து செய்தால் போதும /// ……………..//// ஊடகங்களில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை மூலம் காதலர் தினம் தனது பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்தி விட்டுச் சென்று விட்டது /// ///// காதலும் கூட சாதி மறுப்பு என்பதை விட சம தரத்திலான சாதி, வர்க்கம், அந்தஸ்து, பணம், வேலை எல்லாம் பார்த்துத்தான் நடக்கிறது என்பது வேறு விசயம். இதையே சாதிக்குள் நடத்தினால் அது நிச்சயிக்கப்பட்ட திருமணம் ///// நச்…..
தமிழ்நாட்டுல ஆண்களுக்கு இணையா பெண்கள் இல்லன்னு சொல்லுது ஒரு கணக்கெடுப்பு.. ஆனாலும் இந்த பயலுக கல்யாணமே இல்லனாலும் பரவில்லை,,,,, ஆனா, வரதச்சனை தெளிவாத்தான் இருக்கானுக..
Dear vinavu,
Any concept can only be explained through a spectrum. For vinavu, you have a makkal kalai ilakkiya kazhagam glass. In reply to analyst, you mentioned that your marriage vow is democratic. So you have some goggles. You view the world through that. Whereas for a Muslim, Islam is the glass through which they view the world so is Christianity for a Christian. There is nothing called neutral in this world. If someone says they are neutral and don’t belong to any platform then that itself becomes a platform.
What is important is that is your platform causing harm to the world. If killing people are a crime then anyone who does that is to be taken as a criminal no matter in which platform he is.
Vinavu doesn’t have to object Nethiyadi and inimai for their platforms. By doing that you are deviating from the crux of the discussion which is dowry.
If I know only Tamil and if I say that what you saying in English is bullshit for me, then I am right and it’s not something which has to be condemned. I can understand it only when its explained in Tamil.
Coming to the issue, despite the incidents of dowry among Muslims Islam as a religion stands tall against dowry and also goes well beyond those 11 points bulleted by you in the article and explaining those are beyond the scope of your article.
We are proud to the fact we are the only religion on the face of the earth which says dowry is prohibited. We are the biggest nation on earth which has the highest number of males who contributed much to the marriage without burdening the bride side.
I am a Muslim and in my family there has never been a talk about dowry whether it’s giving or taking. And I have not seen any disputes between the in-law families in the last two decades where I have visible memory.
Kudos to you for your fight against dowry!!!. All the best.
உங்கள் கடந்த பதிவுக்கும் சேர்த்து இந்த பின்னூட்டம்.
எனக்கு இப்பூது நாற்பத்திஈழு வயது.முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னாள் எனுடன் படித்து ,படிப்பை விட்ட என் அப்பாவின் கடைநிலை ஊழியரின் பெண்(sakkiliyar) பாதுகாப்பிற்காகவும் ,வேலைக்காகவும் கொண்டுவந்து விடப்பட்டால் .(அவளுடைய வீட்டில் நிறைய பிரச்சினை, ஆகையால் அவளுடைய பேரூர் எங்களிடம் விட்டார்கள்)
என் அப்பா காலையில் காயத்ரி சொல்லுபவர்.ஆனால், வினைவு ,ஒரு நாளும் நாங்கள் சாதி பார்த்ததில்லை.மனசாட்ட்சி தொட்டு சொல்கிரீன்.வர்க்கரீதியான சில்லரைதனங்கள், இருந்தது.அவள் வேரு அறையிலும் நாங்கள் வேரு அறையிலும் படுத்தும் . ஆனால் அவள் எங்குடநீய் தான் இருந்தால் . எல்லா அறைக்குளும் வருவாள் .அப்பாவின் பூஜை அரை உட்பட .ஆனால் உங்கள் கொங்கு நாட்டு katturaiyaippadiththu ஆச்சரியமாகவும் varuthamaagavum இருந்தது.
என்னுடைய முதல் திருமணத்தில் சாதி இல்லாமல் thirumaNam வேண்டும் enru solli maNanthEn.avar udal nalamillaamal iRanthuvittaar.ஆனால் enggaL thirumaNathin pOthu avarudaya viitil ethirppu, EnenRaal naan vErU சாதி enru .
athEy pOl varathaTCiNai..naan varathatchiNai kodupppathu kevalam enru ninaippavaL.ஆனால் innum இந்த irndu thImaigaLum nam naattil உள்ளது என்று எண்ணூM மனது வலிக்கிரது. இங்கே முஸ்லிம் சஹோதரர்கள் மிகவும் கோவப்பட்டு எழுதும் போது ஒன்ரு சொல்கிரேன். என் சித்தி இஸ்லாமியரை மணம் முஇத்துள்ளார். எனக்கு அதில் என்ன வருத்தம் என்றால் அவருடய் மபுகுந்த வீத்தில், அவர் மற்றவர்கள்ஐ விட வரதட்ச்சிணாஇ ஏதும் இல்லாமல் வந்தவர் என்பதால் ,பலவருடன்க்களுக்கு பின்னும் அவமானப் படுத்தபுகிறார்.அவருடய் மைத்துனரின் மனைவியை படுத்தும் கொடுமையைக்கேத்தால் கண்ணீல் ரத்தக் கண்ணீர் வரும். அதுவும் மததின் பேரால்.எல்லா மதங்களும் சொலும் நல்லதை எடுத்துக்கொண்டு த்தீயதை வித்தால் எவ்வள்வு நல்லது.எதர்காக இதை சொல்கிறேன் என்றால் பெண்பார்ப்பது, வரதச்சிணை ,சாதீ எல்லாம் நாம் பெரிதானால் மறைந்து விடும் என்ரு எண்ணினேன்.ஆனால் இவையெல்லாம் மிகவும் வலுவாகவே உள்ளது.நஆகர்கோவில் , நாடார் க்ரிஸ்தவர்கள் கொடுக்கும் வரதத்ச்சிண்ஐக்காகவே , விருதுனகர் நாடர்கள் அங்கிருந்து பெண் எடுப்பார்கள்.
//
பல தூதர்கள் மூலம் சொன்னார்தான். உம்மைப்போல்
மூடர்கள் அதை மறுத்து மறைத்து நின்றதால் மீண்டும்
சொல்லவேண்டிய நிலை. நீர் கடவுளையே மறுத்து
நிற்கவில்லையா? அவர்கள் கடவுளின் வார்த்தையை.
அதுசரி நீர் அறிவுபூர்வமாக எதையும் பேசமாட்டீரா?
TNTJ அலுவலகத்தை இன்னுமா தொடர்புகொள்கிரீர்?//
பல தூதர் மூலம் சொன்னதை என்னை போன்ற மூடர்கள் மறுத்ததால் மீண்டும் மீண்டும் தூதர்களை அனுப்பினார் என்பது உங்கள் கருத்து, இன்றும் என்னை போன்று மூடர்கள் உள்ளனரே பின் எவ்வாறு முகமது நபி கடைசி தூதர் என்கிறீர், என் போன்ற மூடர்களூக்கும் இன்னோரு தூதரை அனுப்ப மாட்டார் என்பதில் எவ்வாறு உண்மை தன்மை இருக்கிறது!
அறிவுபூர்வமாக நீங்களே பேசி கொள்ளுங்கள்! அப்படியே காது வழி வழியும் அறிவையும் துடைத்து கொள்ளுங்கள்!
என் தொடர்பு எண் கொடுத்தும் என்னை தொடர்பு கொள்ளாதது உங்கள் அமைப்பு தான்! உங்களுக்கு தான் வேறு பொழப்பு இல்லை, எனக்குமா இல்ல!
“பல தூதர் மூலம் சொன்னதை என்னை போன்ற மூடர்கள் மறுத்ததால் மீண்டும் மீண்டும் தூதர்களை அனுப்பினார் என்பது உங்கள் கருத்து, இன்றும் என்னை போன்று மூடர்கள் உள்ளனரே பின் எவ்வாறு முகமது நபி கடைசி தூதர் என்கிறீர், என் போன்ற மூடர்களூக்கும் இன்னோரு தூதரை அனுப்ப மாட்டார் என்பதில் எவ்வாறு உண்மை தன்மை இருக்கிறது!”
அதற்குத்தான் பிஜே இருக்கிறாரே! அவரு தூதர் இல்லை தூதர் மாதிரி.
//அதற்குத்தான் பிஜே இருக்கிறாரே! அவரு தூதர் இல்லை தூதர் மாதிரி.//
இது நல்லாயிருக்கே! புதுசா குரான் மாதிரி எதாவது கதை சொல்லுவாரா!?
இது நல்லாயிருக்கே! புதுசா குரான் மாதிரி எதாவது கதை சொல்லுவாரா!?”
குரான் முழுமையுமே கதையல்ல. முஹம்மது தனது வாழ்நாளுக்கு முன்பானவைகளை கதையாக அளந்திருக்கிறார். பிறகு தனது வாழ்நாளில் தன்னிடம் கேட்கப்பட்ட சந்தேகங்கள், கேள்விகள் பிரச்சினைகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். தான் கூறுவதாக கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதற்காக வஹீ மூலம் அல்லா தனக்கு சொல்வதாக கொஞ்சம் அதிகப்படியாக அளந்திருக்கிறார்.
இவற்றுக்கெல்லாம் தற்கால அறிவியலுக்கு தகுந்தபடி முலாம் பூசிக்கொண்டிருக்கிறார் பிஜே. இவருடைய விளக்கத்தை முஹம்மது காண நேரிட்டால் நிச்சயமாக ஆச்சரியப்படுவார்.
வாலு, இவங்க பக்கத்துல போயி நின்னா கூட இவங்க நம்மள கூப்பிடமாட்டாங்க, டிஸ்டன்ட மெயின்டேயின் பண்ணி உடு என்ன உடு என்ன்னஃனு உதார் விடும் கேசுங்க, நானும் வினவுக்கோ, உங்களுக்கோ பறையோசைக்கோ போன் போட்டு பேசுவாங்கன்னு பாத்தேன்.. யாருக்கும் பண்ணல…
ஒரு வேள பண்ணிட்டாங்கன்னு வச்சுகங்க அப்பவும் இவங்கிட்ட போயி வாதாட போறீங்களா??? நான் கூடாதுங்கறேன்.ஊத்தவாய் ஜயேந்திரன மாதிரியான கேசுங்களையெல்லாம் பேசக்கூட தகுதியில்லாத ஆளுன்னு எப்படி ஒதுக்கி வைக்குறோமா அதுமாதிரிதான் இந்த ஆன்லைன் பிஜே அடிப்படைவாத கூட்டத்தையும் நோயைப்போல ஒதுக்கனும்.
கான்சர்கிட்ட பேச்சுவார்தையா நடத்தமுடியும்..
//
Author: நெத்தியடி முஹம்மத்
Comment:
///பெண் வீட்டாரை கொடுக்கவைப்பதற்கு பதில் ஆண்வீட்டாரை கொடுக்கவைப்பதால் மட்டுமே அது புரட்சிகர உள்ளடக்கத்தை கொண்டதாகிவிடாது.///—தவறு செங்கொடி. அதுதான் புரட்சி.//
அடேங்கப்பா!
என்ன ஒரு புரட்சி! அதே இஸ்லாம், பெண் விடுதலைக்கும், பெண் முன்னேற்றத்திற்கும் செய்துள்ள பிரட்சியை இந்த சுட்டியில் பாருங்கள், எனக்கு பல பக்கங்களில் சிரிப்பு வருது!
http://dharumi.blogspot.com/2010/02/blog-post.html
நண்பர்கள் நெ.முகம்மது, இனிமை,
மதத்தின் வழியாக தெரிவதை மட்டுமே ஏற்போம் என்பதற்கும், ஒன்றை காரண காரியங்களோடு அலசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
அரபு நாடுகளில் பெண்வீட்டார் கொடுப்பது மரபில் இல்லை, இது முகம்மது ஏற்படுத்திய ஒன்றும் இல்லை. இஸ்லாம் மரபை உடைக்கவில்லையா? என்றால் இஸ்லாம் மரபை ஏற்கவில்லையா? முகம்மதின் காலத்திற்குமுன் அரபில் யூத கிருஸ்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களும் பெண்களுக்கு கொடுத்திருக்கிறார்களே யன்றி வாங்கவில்லை. ஒரு ஒழுங்கின்றி இருந்ததை முகம்மது ஒழுங்குபடுத்தியிருக்கிறார். மரபில் ஆண் வாங்குவதாக இருந்திருந்தால் அதையும் முகம்மது ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும். பெண்களை போகப்பொருளாக கருதிய நிலைமை முகம்மதுவுக்கு முன்பும் இருந்தது. பின்பும் தொடர்ந்தது. மகரை பெண்களுக்கான பாதுகாப்பு என்பதெல்லாம் உயர்வுநவிற்சி தான். மகர் பெண்களை பாதுகாக்கவும் முடியாது. முகம்மது அப்படி சிந்திக்கவும் இல்லை. சில குரான் வசனங்களை கற்றுக்கொடுப்பதை மகராக அங்கீகரித்திருப்பது ஹதீஸ்களில் பதிவாகியிருக்கிறது அதுவும் மணப்பெண் கோராமல் முகம்மதுவாகவே முன்மொழிந்தது. ஆக மகரை பெண்களின் பாதுகாப்பிற்கு என்று முகம்மது புதிதாக ஏற்படுத்தவும் இல்லை, பாதுகாப்பு எனும் ரீதியில் அதை மாற்றீடாக வலியுறுத்தவும் இல்லை.
பெண்வீட்டார் கொடுக்காமல் வாங்குவது புரட்சியாகுமா? பெண்ணையும் கொடுத்து பொன்னையும் கொடுப்பது ஆணாதிக்கத்தின் உச்சவடிவம் என்றால் பெண்ணை கொடுத்து பொன்னை பெறுவது ஆணாதிக்கத்தின் நீச்சவடிவம் என்று வேண்டுமானால் வித்தியாசப்படுத்திக்கொள்ளலாம். இரண்டிலுமே பெண்ணின் பாத்திரத்தில் ஒரு இருப்புமில்லை. வரதட்சனை கொடுமைகள் இந்தியாவில் இருப்பதற்கு பாதிக்கப்படும் பெண் ஒரு உரிமையுமின்றி அடிமையாக உழல்வது ஒரு காரணமென்றால் அரபு நாடுகளில் தனதட்சனையால் பாதிக்கப்படும் ஆண்கள் இந்தியப் பெண்கள் அளவிற்கு இழிவுகளை சந்திக்காததற்கு ஆண் எனும் சமூகஆதிக்கம் காரணம். இதில் புரட்சி எங்கிருந்து வருகிறது.
புரட்சி எனும் சொல்லாடல் இருக்கட்டும், புரட்சியின் வீச்சை கற்பனையாகவேனும் உணரவேண்டுமென்றால் மதக்கண்ணாடியை துடைத்துவிட்டு வரலாற்றை பாருங்கள்.
செங்கொடி
///மரபில் ஆண் வாங்குவதாக இருந்திருந்தால் அதையும் முகம்மது ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்///
—-ஆஹ்… ஹா… ஹா ….ஹா …ஹாஆஆ
அப்புறம் செங்கொடி…. இதெல்லாம் மறந்துட்டீங்களே…
அந்தக்கால் அரபுக்களிடம் இருந்த கீழ்க்காணும் “உயர்ந்த பண்புகளான”…
“விபச்சாரத்தை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
பெண் சிசுக்கொலையை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
சிலை வணக்கத்தை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
பல தெய்வ வணக்கத்தை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
குடிப்பத்தை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
வட்டியை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
சூதாட்டத்தை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
செத்த பிராணிகளை உண்பதை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
திருமணத்தை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
அடிமை முறையை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
நிறவெறியை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
மதவெறியை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
மொழிவெறியை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.
கொலைப்பழிவாங்கலை ஏற்றுக்கொண்டு ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும்.”
இதுபோல இன்னும் நிறைய இருக்கிறது செங்கொடி… சொல்ல மறந்து விட்டீர்கள்.
அப்படியே இஸ்லாம் ஒழுங்குபடுத்த மறந்த கீழ்க்காணும் இந்த ஒரு விஷயத்தையும் ஒழுங்குபடுத்தி ‘புரட்சி’ செய்து விடுங்கள்.
அது என்னவா?
இனி இவ்வுலகில் பிறக்கும் அனைத்து பெண்களுக்கும், ஈஸ்ட்றோஜெனும், ஓவரிகளும், மாதவிடாயும், கர்ப்பப்பையும், மார்பகமும், பெண்ணுறுப்பும் இல்லாமல் பிறக்க ஏற்பாடு செய்துவிடுங்கள். ஆணும் பெண்ணும் சமம் என்றாகி விடும். அதற்குப்பிறகு எங்காவது தப்பித்தவறி “கல்யாணம்”(??? அது என்னத்துக்கா?) என்று ஒன்று நடந்தால்… ஒருவேளை நடந்தால்…. நாம் இருவரும் சேர்ந்து அங்கே தரப்படும் வரதட்சினை & மகரை எதிர்ப்போம்.
வரவர ரொம்ப காமடி பண்ண ஆரம்பிச்சுட்டீங்க, செங்கொடி.
நண்பர் செங்கொடி,
முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் முதற்கொண்டு இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை இறைவழிகாட்டல்கள் அந்தந்த கால மனித தேவையை கருத்தில்கொண்டு அருளப்பட்டன. அவைகள் தூதர்கள் மறைவுக்குப்பின் அந்தந்த கால மக்களால் மறைத்து திரித்து வழிகெட்டுப் போகும்போது அவசியமாகின.
இது முதல் மனிதரும் முதல் இறை தூதருமான ஆதம்(அலை) அவர்கள் காலத்திளிருந்தே இந்த வழிகேடு ஆரம்பமாகிவிட்டது. ஏனென்றால் மனிதன் தவறிளைப்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
இவ்வாறு அருளப்பட்ட இறை வழிகாட்டல்களை விட்டு மக்கள் பாதை மாறிப்போகும்போது அவர்களை முறைப்படுத்தி நெறிப்படுத்தி வழி நடத்துவதும் ஒரு புரட்சிதான்.
அவ்வாறுதான் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்களுக்கு நடந்த பல கொடுமைகளை விட்டு சீர்திருத்தியதில் ஒன்றுதான் மணக்கொடை.
இதில் மணப்பெண்ணே மணக்கொடையை நிர்ணயிக்கும் உரிமையை பெறுகிறாள். அந்த உரிமையைபெற அவள் சார்பாக உறியவரை நியமித்துகொள்ள அனுமதிக்கபடுகிறாள்.
அந்த மணக்கொடை அளவில் சிறிதாகவோ பெரிதாகவோ இருக்க வேண்டுமானால் மணப் பெண்ணையோ அவள் உரிமையாலரையோ அணுகி முடிவெடுத்துகொள்ளலாம். இது இஸ்லாத்தின் அற்புதமான வழிகாட்டல்.
ஆண் பெண் இரு பாலரில் படைப்பிலேயே பலகீனமானவள் பெண். என்னதான் முற்போக்குவாதம் பேசினாலும் ஆண்வர்கத்தால் பெண் எந்த வகையிலாவது காலாகாலமாக பாதிப்புகுள்ளாகத்தான் செய்கிறாள்.
இதை கருத்தில் கொண்டுதான் பெண்களே நீங்கள் திருமணத்திற்கு முன்பே உங்கள் மணக்கொடையை பெற்றுகொள்ளுங்கள். அது திருமணத்திற்கு பின்பும் ஒருவேளை மண முறிவு ஏற்பட்டாலும் உங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று இஸ்லாம் வழியுறுத்துகிறது.
இதில் என்ன பிரச்சனை. பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்க வழிகண்டால் பெண்கள் உரிமைபற்றி போலியாக வாதாடுபவர்கள் ஏன் மிரட்சியடைகிறார்கள்.
தங்களிடம் இதுபோல் எந்த தீர்வும் இல்லை என்பதாலா? பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் இவர்கள் யார் என்று.
இதுபோல் எந்த தீர்வும் இறைவனால் மட்டுமே வழங்க முடியும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
நண்பர்கள் நெ.முகம்மது, இனிமை,
நான் எடுத்து வைத்திருப்பவைகளை விட்டுவிட்டு ஏதேதோ சலம்பி இருக்கிறிர்களே. நான் சொல்லியிருக்கும் கருத்துகளுக்கு உங்கள் எதிர்வினை என்ன?
முன்பு ஒரு தோழர் கூறியதுபோல் மான் கராத்தே காட்டிவிடுவது தான் சிறந்தது என நினைக்கிறேன்.
செங்கொடி
நண்பர் செங்கொடி….
என்னாச்சு உங்களுக்கு? தங்களின் கருத்துகளுக்கு எங்கள் கருத்துகள் எதிர்வினையாக தெரியவில்லையா?
மான் கராத்தே காட்டுவது இருக்கட்டும். முதலில் சற்று சிந்தையை காட்ட வேண்டாமா?
வரதட்சினை கொடுஞ்செயல் என்கிறீர்கள். வழிமொழிகிறோம்.
அதை ஒழித்துவிட்டால் ஆணும் பெண்ணும் சமம் ஆவார்கள் என்கிறீர்கள். ஆகமாட்டார்கள் என்கிறோம். மஹர் கொடுத்த பின்னர்தான் சமமாவார்கள். எப்படியெனில், திருமண உறவில் சுகங்கள் இருவருக்கும் ஒரே அளவுதான் எனினும், நான் ஏற்கனவே சொன்னதுபோல அவ்வுறவால் ஆணைவிட பெண் -தான் பெண்ணாய் இருப்பதால்- ஆணால் ஈடுசெய்யமுடியா நிறைய இயற்கையான சுமைகளை ஆணைவிட அதிகம் சுமக்க வேண்டி உள்ளதால், திருமணம் என்ற (ஒப்)பந்தத்தில் வரதட்சினை தரப்படாவிட்டாலும் அங்கே இயற்கையான அநீதி நிலவுகிறது. அதற்கு ஒரே செயற்கை நீதி மஹர் தான் என இஸ்லாத்தின் நிழலில் கூறுறோம். இதில் என்ன தவறு?
வட்ட டிராக்கில் ஓட்டப்பந்தயம் ஓடுபவர்கள் தத்தம் ட்ராக்கில் முன் பின்னாக நிற்பது நீதி. உள்வட்டத்தைவிட இயற்கையாக வெளிவட்டம் பெரிது. எனவே பந்தய தூரத்தை சரியாக அளவெடுத்து செயற்கையாக முன்பின் நிற்கவைத்தல் நீதி. அது போலல்லாமல் அங்கு அனைத்து ட்ராகினரையும் ஒரே கோட்டில் இருந்து ஓட ஆரம்பிக்கச்சொல்வது எப்படி நீதி? உங்களுக்கு நீதிபோல தெரிந்தாலும் சிந்தித்தால் அது அநீதி அன்றோ?
முதலில் சிகப்புக்கண்ணாடியை கழட்டிவிட்டு பாருங்கள், நீதியும் அநீதியும் இரு வெவ்வேறு வண்ணங்களில் தெரியும். எங்கள் பதிலைப்படிக்காமல் வரட்டுவாதம் புரியும் உங்களிடம் மான்கராத்தே காட்டவேண்டியது நிஜமாலுமே நாங்கள் தான். வரவர காமடி செய்வதையே சீரியஸ் ஆக்கிக்கொள்ள வேண்டாம் நண்பரே.
சரி நெத்தியடி முஹம்மது. நீங்கள் கூறுவதையே ஒரு பேச்சுக்கு சரியென்றே வைத்துக்கொள்வோம். மஹராக ஒரு குரான் சூராவை ஓதி ஊதி மனமுடித்துக்கொள்ளலாம் என்றாரே முஹம்மது. அதற்கென்ன சொல்கிறீர். இந்த சூரா அப்பெண்ணின் பூரா பாரத்தையும் தாங்கிவிடுமா?
கலை… நீங்கள் ஏன் இப்படி கருத்துக்களை செய்கிறீர்கள் கொலை?
சொல்லப்பட்டது, தன் ஒரே இடுப்புத்துண்டை தவிர்த்து வேறு சொத்தில்லா பரம எழையிடமா அல்லது ஒரு பெரும்பனக்காரரிடமா என்பதை மூடி மறைத்ததை சொல்லவா?
பணக்காரர்கள் ஒரு பொற்குவியலையேனும் மஹராக கொடுக்கும்படி சொன்னதை இருட்டடிப்பு செய்ததை சொல்லவா?
இதில் சொல்லப்பட்ட (ஒருவர் எவ்வளவு ஏழையாயினும் மஹர் என்பது அவர் திருமணம் புரிவதற்கு தடையாக இருத்தல் கூடாது & மஹர் எனப்படுவது பணம், பொருள், நிலம், சொத்து இதன்றி ‘கற்ற தகுதி’, ‘கற்பித்தல்’ போன்ற வேறாகவும் அமையும்) போன்ற கருத்துக்கு எதிரான கருத்தை எடுத்துக்கொள்வதை சொல்வதா? எதைச்சொல்ல?
ஊனமுற்றோர் யாரும் பேருந்தில் ஏறாத நிலையில் காலியாக கிடக்கும் ஊனமுற்றோருக்கான இருக்கையில் ஒருநாள் அமர்ந்து கொண்டால், அதையே தன் தகுதியாக வைத்துக்கொண்டு ஊனமுற்றோருக்கான அரசு இடஒதுக்கீட்டில், ‘அனைத்தும் நல்லாயிருக்கும்’ ஒருவர் விண்ணப்பித்தால்… என்னத்த சொல்ல?
‘இஸ்லாமிய எதிர்ப்பு’ என்ற ஒரே அஜெண்டாவை மட்டுமே வைத்துக்கொண்டு விவாதிக்க வேண்டாம். நல்லது என்று தெரிந்தபின்னும்…. ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை (அது வந்த இடம் பிடிக்காது என்ற பொறாமை காரணமாய்) வளர்த்துக்கொள்ளாவிடினும் எதிர்க்காமலாவது விட்டுவிடும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவும். காரணமின்றி எல்லாத்தையும் எதிர்ப்பவர்களிடம் விவாதிப்பதே முட்டாள்த்தனம். //ஓதி ஊதி //, //இந்த சூரா அப்பெண்ணின் பூரா பாரத்தையும் // —சபாஷ்…
கேள்விக்குறி, வஜ்ரா, வால்பையன்… ‘புகழுக்கு’ சரியான போட்டி….
நண்பர் நெ.முகம்மது,
மகருக்கு புதுப்புது விளக்கங்கள் அளிக்கிறீர்கள். நீங்கள் அளிக்கும் விளக்கங்கள் இஸ்லாமிய இறையியலின் படியே பொருந்தாமல் போகிறது. நான் மேலே குறிப்பிட்ட ஹதீஸில், அந்தப்பெண் முகம்மதைத்தான் மனமுடிக்கக் கோருகிறாள். முகம்மதிற்கு விருப்பமின்றிப் போகவே வேறொருவர் முன்வருகிறார். அதற்கு முகம்மது மகராக உம்மிடம் என்ன உள்ளது என்று கேட்கிறார், எதுவும் இல்லாமல் போகவே ஒரு இரும்பு மோதிரமாவது கொண்டுவாருங்கள் என்கிறார். அவரோ அதுவும் இல்லை, வேண்டுமானால் என் ஆடையில் பாதியை கிழித்துத் தரவா? என்கிறார். அதன் பின்னர் தான் குரானின் வசனங்கள் கற்றுத்தருவது மகராக்கப்படுகிறது. ஆக பெண்மையின் ஈடு செய்யமுடியாத வாழ்சுமைகளுக்கு நீங்கள் கூறும் செயற்கையான நீதி ஒரு இரும்பு மோதிரத்தினால் கூட சமன் செய்யப்படும் என்றால், மகர் என்பதன் உட்கிடக்கை நீங்கள் குறிப்பிடுவது போன்று ஈடுகட்டலா? இல்லை எதையாவது கொடுத்தாக வேண்டும் எனும் மரபா? இது ஒரு புறமிருக்க, மகரை பெண்களுக்கான உரிமை என விதந்தோதும் நீங்கள், இந்த ஹதீஸில் முகம்மது தன்னை மணக்க வந்த பெண்ணிடம் இன்னொருவரை மணப்பதற்கான சம்மதத்தை கேட்டாரா? குரான் வசனங்களை மகராக பெற்றுக்கொள்ள சம்மதமா என்று கேட்டாரா? எந்த அடிப்படையில் இதை பெண்ணுரிமை என்பீர்கள்?
தன்னிடம் விவாகரத்து கோரி வந்த ஒரு பெண்ணிடம் நீ பெற்ற மகரை திருப்பிக்கொடுக்க சம்மதமா என்று கேட்டுவிட்டுத்தானே விவாகரத்து செய்கிறார் முகம்மது. என்றால் நீங்கள் கூறும் மணவாழ்வினூடான சுமைகளும், இழப்புகளும் விவாகரத்தின் மூலம் நீங்கி விடுகிறதா? இதில் பொற்குவியலே நீங்கள் மகராக கொடுத்திருந்தாலும் அதை திரும்பக்கேட்டு நிர்ப்பந்திக்கவேண்டாம் என ஆண்களுக்கு அறிவுரை வேறு? ஆதாவது மகரை விவாகரத்தின் பொது திரும்பப் பெறுவதும், வேண்டாமென்பதும் ஆணைச்சார்ந்தது. பெண் விவாகரத்து கேட்டு ஆண் மகரை திரும்பத்தர வேண்டும் என கேட்டால் கொடுத்தால்தான் விவாகரத்து. இல்லையென்றால் இல்லை. இந்த நடப்புகளில் மகர் என்பது மரபாக தெரிகிறதா? இல்லை நீங்கள் கூறும் விளக்கங்கள் போல் பொருளாகிறதா?
அன்றைய நடப்பாக இருந்த பலதார மணத்தை சீர்திருத்தி அங்கீகரிக்கவில்லையா?அன்றைய நடப்பாக இருந்த அடிமை முறையை சீர்திருத்தி அங்கீகரிக்கவில்லையா?அன்றைய நடப்பாக இருந்த வணக்க முறைகளை சீர்திருத்தி அங்கீகரிக்கவில்லையா?அன்றைய நடப்பாக இருந்த வணிக விதிகளை சீர்திருத்தி அங்கீகரிக்கவில்லையா?அன்றைய நடப்பாக இருந்த போர்ச் சூரையாடல்களை சீர்திருத்தி அங்கீகரிக்கவில்லையா?அதேபோல் மகரையும் அங்கீகரித்திருக்கிறார் சீர்த்திருத்தங்களுடன் அவ்வளவு தான், இதை நீங்கள் உங்கள் கற்பனைகளால் மகர் தான் பெண்களுடன் ஆணை சமமாக்கும் என்றும் பெண்ணுரிமை என்றும் முலாம் பூசுகிறீர்கள்.
செங்கொடி
//பெண்வீட்டார் கொடுக்காமல் வாங்குவது புரட்சியாகுமா? பெண்ணையும் கொடுத்து பொன்னையும் கொடுப்பது ஆணாதிக்கத்தின் உச்சவடிவம் என்றால் பெண்ணை கொடுத்து பொன்னை பெறுவது ஆணாதிக்கத்தின் நீச்சவடிவம் என்று வேண்டுமானால் வித்தியாசப்படுத்திக்கொள்ளலாம்.//
தோழர் செங்கொடி!
இந்த விசயத்தை ஆணாதிக்கத்தின் நீச வடிவமாக நான் பார்க்கவில்லை, இதையும் ஆணாதிக்கமாக தான் பார்க்கிறேன்! அதிலும் நிலபுரபுத்துவ பாசிசமாக, முகமது காலத்தில் அடிமைகளை விற்கும், வாங்கும் பழக்கம் இருந்தது யாவரும் அறிந்ததே! அதையே தான் மாற்று வடிவில் கொடை என்ற பெயரில் கொடுத்து பெண்னை அடிமையாக அழைத்து செல்கிறான்!
அப்படி இல்லாமலா மனைவியை எப்படியெல்லாம் அடிக்கலாம் என சொல்லி வைத்திருப்பான் அந்த கூறு கெட்ட குப்பன்!
நண்பர் வால்பையன்,
நான் நீச வடிவம் என்று சம்ஸ்கிருத நீசத்தை குறிப்பிடவில்லை. அது தமிழ் நீச்சம். உச்சம், நீச்சம். ஆணாதிக்கத்தின் இருவேறு வடிவங்கள் எனும் பொருளிலேயே நானும் குறிப்பிட்டிருக்கிறேன்.
செங்கொடி
அப்படி இல்லாமலா மனைவியை எப்படியெல்லாம் அடிக்கலாம் என சொல்லி வைத்திருப்பான் அந்த கூறு கெட்ட குப்பன்!
///// Dear vinavu, valpaiyan is doing two unwanted things here. I am wondering how these happens in moderated discussions. 1. He is hijacking the thread from the core issue that your article discusses which is dowry 2. He is using abusive language against the prophet which is against blogging ethics.
valpaiyan, you are free to prove what prophet said is wrong and that’s freedom of speech. But that shoudn’t be by abusing someone who is respected by more than one billion people of the world.
இதையும் கொஞ்சம் படியுங்களேன்.
http://paraiyoasai.wordpress.com/பெண்ணுரிமை/ஆ-கர்பப்பை-இல்லாவிட்டாலு/
@ Streams of பீஸ்
வரதட்சணை பற்றிய பதிவில், இஸ்லாமியர்களில் ஆண்கள் கொடுக்கிறோம் என்று வந்தது நீங்கள் தான்!
திருமணத்திற்கு பின் எவ்வாறு அடிமையாக நடத்துகிறீகள் என்பதற்கு சுட்டி கொடுத்தால் ஒரு பில்லியன் பேர் நம்புகிறார்கள் என்கிறீர்கள்! ஒரு பில்லியன் இஸ்லாமியர்களும் பொண்டாட்டிய அடிப்பிங்க, அது மனிதர்கள் அல்ல வேறு எதோ விலங்குன்னு நாங்க கண்டுக்காக போகனுமா!?
கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுமய்யா!
குப்பனாயிருந்தாலும், சுப்பனாயிருந்தாலும் இங்கே விமர்சனம் பண்ணுவோம்!
//He is using abusive language against the prophet which is against blogging ethics.//
உங்கள் குரான் படி இறுதிநாளில் என்னை தானே எண்ணைய் சட்டியில் போட்டு வறுப்பாங்க! அப்போ சட்டியை பத்த வைக்க குனிபவனை பார்த்து கொள்கிறேன் நான்! நீங்கள் கவலைபட வேண்டாம்!
எனக்கும் அல்லாவுக்கும் இருக்குற டீலிங்கே! வேற!
பத்தவைப்பது அல்லாவாக இருந்தாலும் என் கொள்கை படி அதே தண்டணை தான்!
🙂
Valpayyan,
I did say that in Islam the dower is given from groom side and no dowry is demanded from bride. I still say the same. I myself have practiced it two months ago. So nothing new in it. Dowry is prohibited in Islam and no religion has done it before or after.
Also, I am sticking on to the crux of the discussion which is dowry. I neither tried to go away from it nor did I abuse anyone like you did. And I would continue to debate on the topic as long as there is a decorum and decency in the language used.
In the link you have given there is nothing which says that one billion Muslims are beating their wives. Did it say that one billion Muslims are beating their wives? Don’t spread hoax news. If you just send a video from you tube that can’t be taken as Islamic verdict. The talk is given in Arabic and neither you nor I know it. Any one can upload a video in you tube and also give an English subtitle associated. You know it well. And if you don’t know, I never thought that a blogger like you will be so naïve like this.
Also, I did not say that you will be boiled in oil. And I also don’t care about your dealing with Allah. That’s immaterial to the discussion topic here. Don’t hijack the thread with your hasty conclusions.
//is prohibited in Islam and no religion has done it before or after.//
நினப்பு தான் பொழப்பை கெடுத்துச்சாமா!
உலகில் இந்து, கிறிஸ்டீன்,இஸ்லாம் மட்டும் மதமல்ல!
நிறைய இருக்கு! மேலும் மதமற்ற பல பழங்குடி இனங்கள் எந்த தட்சணையும் வாங்காமல் திருமணம் செய்யும்!
அஸ்ஸாமில் ஒரு மலைவாசி கிராமத்தில் சுயம்வரம் போல் காலம் காலமக திருமணம் நடக்குது! அங்கே வரதட்சணையும் இல்லை! மஹர் கொடையும் அல்ல! உனக்கு பிடிச்சிருக்கா!? எனக்கும் பிடிச்சிருக்கு அம்புட்டு தான்! மேலும் மஹர் கொடையை போல் ஆண் கொடுத்து திருமணம் செய்யும் முறை கிஸ்லாத்துக்கு முன்னாடியே பல குழுக்களில் உண்டு! உங்களுக்கு இஸ்லாத்தை தவிர வேற ஒன்னும் தெரியாட்டி சும்மா இருக்க வேண்டியது தானே!
//The talk is given in Arabic and neither you nor I know it. //
உங்கள் தற்போதைய தூதர் பி,ஜே அதற்கு விளக்கம் அளிக்கலாம், கேட்டுகிட்டு வாங்க!
//Don’t hijack the thread with your hasty conclusions. //
வரதட்சணையினால் இங்கே ஒரு பெண் திருமணம் ஆகாமாலோ, அல்லது தற்கொலை செய்து கொள்வதோ அல்லது கொலை செய்யப்படுவதோ நடக்கும் போது, ஏன் பின்னாளில் இஸ்லாம் ஆண்கள் மஹர் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்ய மாட்டார்கள்! அதையும் தானே விவாதத்துக்கு உள்ளாக்கனும்!
நாங்கள் வரதட்சணை என்பதே தப்புன்னு சொல்றோம், நீங்கள் ஆண்கள் கொடுத்து கொண்டிருக்கிறோம்னு நியாயப்படுத்துறிங்க! அப்ப ஆண்கள் கொடுத்தால் பெண்னை என்னவேணும்னாலும் செய்யலாம்! எத்தனை வேணும்னாலும் கடலாம்னு அர்த்தம் ஆகுதே!
உங்களுக்கு பதில் சொல்ல முடியலைனா விட்றுங்க! நான் ஹைஜாக் பண்றதா கதையை மாத்தாதிங்க!
//ஆதம்(அலை) அவர்கள் காலத்திளிருந்தே இந்த வழிகேடு ஆரம்பமாகிவிட்டது. ஏனென்றால் மனிதன் தவறிளைப்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.//
மனிதன் தவறிளைப்பவனாக தவறாக படைத்த கடவுளை என்ன செய்யலாம்! முதல் தண்டனை கடவுளுக்கு தானே கொடுக்கனும்!
//ஆண் பெண் இரு பாலரில் படைப்பிலேயே பலகீனமானவள் பெண். என்னதான் முற்போக்குவாதம் பேசினாலும் ஆண்வர்கத்தால் பெண் எந்த வகையிலாவது காலாகாலமாக பாதிப்புகுள்ளாகத்தான் செய்கிறாள்.//
அய்யா! பெண் பலகீனமானது ஆதி படைப்பிலேயே அல்ல! பரிணாம வளர்ச்சியில் தான்! அவள் செய்யும் வேலைகேற்ப அவளது உடல்வாகு அமைந்தது! அதற்கு முன் ஆணும், பெண்ணும் வேட்டையாடி தான் சாப்பிடனும்! விலங்குகளுக்குள் சமூக அமைப்பு வந்த பிறகு தான் ஆண் வேட்டையாட, பெண் வீட்டை காத்தாள்! உங்களுக்கு தான் பரிணாவளர்ச்சி என்றால் எனவென்றே தெரியாதே!
//இதை கருத்தில் கொண்டுதான் பெண்களே நீங்கள் திருமணத்திற்கு முன்பே உங்கள் மணக்கொடையை பெற்றுகொள்ளுங்கள். அது திருமணத்திற்கு பின்பும் ஒருவேளை மண முறிவு ஏற்பட்டாலும் உங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று இஸ்லாம் வழியுறுத்துகிறது.//
அப்படியே அடிச்சாலும் வாங்கிகோங்கன்னு வழியுறுத்துதே! சமிபகாலமாக ப்ளாக்கில் இஸ்லாம் பெண் ஆணுடன் பேசியதற்காக, விருப்பபட்ட உடை அணிந்ததற்காக தண்டிக்கப்பட்டால்னு கட்டுரைகள் ஓடுதே! அதையெல்லாம் படிக்கிறதே இல்லையா!?
//பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்க வழிகண்டால் பெண்கள் உரிமைபற்றி போலியாக வாதாடுபவர்கள் ஏன் மிரட்சியடைகிறார்கள்.//
நாங்கள் போலின்னு வச்சுகுவோம்! உங்கள் ஐ.எஸ்.ஓ முத்திரையை கொஞ்சம் காட்டுங்கள்!
//தங்களிடம் இதுபோல் எந்த தீர்வும் இல்லை என்பதாலா? பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் இவர்கள் யார் என்று.//
பெண்களை என்னைகைய்யா இஸ்லாத்தில் சுதந்திரமாக கருத்து சொல்ல சொல்லியிருக்கிறீர்கள்! பர்தா பத்தி பேசலாம்னுனா கூட்டமா போய் பிரச்சனை பண்றிங்க! அவுங்க பக்க நியாயமும் என்னான்னு கேட்பது தானே சமதர்மம்! நீ அடிமைன்னு சொல்லால சொல்லிட்டு ஏன் இப்படி ஜல்லி அடிக்கிறிங்க!
//இதுபோல் எந்த தீர்வும் இறைவனால் மட்டுமே வழங்க முடியும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.//
சரி , இந்த கட்டுரைக்கு ஒரு தீர்வை உங்கள் இறைவனை வந்து சொல்ல சொல்லுங்கள்!
//முன்பு ஒரு தோழர் கூறியதுபோல் மான் கராத்தே காட்டிவிடுவது தான் சிறந்தது என நினைக்கிறேன்.//
ஹாஹாஹா!
நாம ஒன்னு சொன்னா அவுங்க வேற ஒன்னு சொல்றாங்கன்னு டென்ஷன் ஆயிட்டிங்களா தோழரே!
முஸ்லீம்கள் ஷே(ர்)க்கானவர்கள். பார்ப்பனீயத்திடம் சரனடைந்த இஸ்லாம் என்றால் ஒத்துக்கொள்ள மறுத்தார்கள். தாங்கள் தனித்துவமானவர்கள் என்றார்கள். ஆனால் அரபியிலோ இஸ்லாத்திலோ இல்லாத வரதட்சனை முறை இந்திய முஸ்லீம்களிடம் உள்ளது. இப்பொழுதாவது பார்ப்பனீயத்திடம் அல்லது இந்துமத்திடம் அல்லது எந்த கன்றாவியிடமோ சரணடைந்த இஸ்லாம் என்பதனை ஒத்துக்கொள்கிறீர்களா?
Valpaiyan,
Somewhere in assam??? Some hilly tribal village??.. What a fantastic quantitative data. Wow. I take it as a solid evidence… Continue your jokes
//Somewhere in assam??? Some hilly tribal village??.. What a fantastic quantitative data. Wow. I take it as a solid evidence… Continue your ஜோக்ஸ்//
குரானில் சொல்லியிருந்தால் மட்டுமே நம்புவோம்னு சொல்றவங்க கிட்ட எதையும் சொல்லமுடியாதுன்னு எனக்கும் தெரியும்!
எந்த தடயமும் இல்லாமல் எங்கிருந்தோ மேற்கோள் காட்டுவதுதான் உங்கள் பாணி என்றால் நான் மட்டுமல்ல யாருமே நம்பமாட்டார்கள் .
Please try to talk quantitatively rather than sweeping with generalizations.
எல்லா விசயத்தையும் தடயத்தோடு மட்டுமே நம்பும் நீங்கள் எப்படி குரானை நம்புகிறீர்கள்! அது அல்லாவால் தான் சொல்லப்பட்டது என்பதற்கு என்ன தடயம் வைத்துள்ளீர்கள்!?
நான் சொன்ன அஸ்ஸாம் கிராமம் சம்பவத்தை நான் நேசனல் ஜியோகிராபிக் சேனலில் ட்ஸ்கவர் இந்தியா என்ற நிகழ்ச்சியில் பார்த்தேன்! உங்களுக்கு யூ.டியூப் வீடியோ தேடி தருகிறேன்!
வால்பய்யனின் நகைச்சுவை நன்றாக உள்ளது. வரதட்சினை விட்டு இப்போது பரிணாமம் பற்றி பேசுகிறார்.
“வால்” பய்யன் என்ற பெயர் இருப்பதால் அவர் பரிணாமம் பெற்றுரிக்கிறார் என்பதில் சந்தேஹமே இல்லை .
உங்களுடய குரான் படி மனித இனம் தோன்றி எத்தனை ஆண்டுகள் ஆகிறது!?
சம்பந்தமே இல்லாமல் இன்னொரு subject இ இங்கே இழுக்கிறீர்கள். சந்தேகமே இல்லாமல் நீங்கள் “வால்” பய்யன் தான். இல்லையென்றல் இவளவு தூரம் தாவ முடியுமா? . Fantastic..
For the sake of discussion, குரான் படி மனித இனம் தோன்றி 1,234,567 வருடங்கள் ஆகிறது. நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை வைத்து உங்கள் வருட கணக்கை சொல்லுங்கள். தகவல் அஸ்ஸாம் அல்லது சந்திர மண்டலத்தில் இருந்தும் பெற்று கொள்ளலாம் . ஏன்உங்கள் குரங்கு தாதா சார்லஸ் டார்வின் கூட ஓகே தான். But it should be an established scientific proof and not based on theories and postulates.
@@@எல்லா விசயத்தையும் தடயத்தோடு மட்டுமே நம்பும் நீங்கள் எப்படி குரானை நம்புகிறீர்கள்! அது அல்லாவால் தான் சொல்லப்பட்டது என்பதற்கு என்ன தடயம் வைத்துள்ளீர்கள்!?@@@
டைட்டான இந்த கேள்விக்கு பதில் சொல்லாமால் எஸ்கேப்பு ஆகும் அமைதியின் சிற்றோடை, லூசாக 1234567 என்று ஒரு எண்ணை சொல்லி அதை ஆதாரபூர்வமாக மறுக்க வேறு சொல்கிறார்.
இது ஒன்றே ஏன் இவர்களுடன் விவாதிப்பதை தவிர்த்து ஊட்டுக்கு போயி புள்ளகுட்டிங்க படிக்கவைக்கோனுமுங்கறத்து சிறந்த முறையில் விளக்கும். புரிந்தால் சரி, இல்லேன்னா சாரி
அறிவியல் சிக்கிமுக்கி கல் காலந்தொட்டு இன்று வரை வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றது, இனிமேலும் வளரும். அது என்ன 1500 வருச பழய பொஸ்தகமா மக்கி மண்ணாகி போக, வேணுமின்னா ஆன்லைன பீ.. ச்சே என் வாய் மூடுதா பாறேன்?????
///எங்கள் தோழர்கள் எந்த மத துணையுமின்றி வரதட்சிணை மறுப்பு மட்டுமல்ல சாதி, சடங்கு, ஆடம்பரம் எல்லாவற்றையும் மறுத்துவிட்டு திருமணம் செய்கிறார்கள். அத்தகைய திருமணங்களை நீங்கள் காண விரும்பினால் ஏற்பாடு செய்யலாம்/// இதற்கு வால் பையனின் மறுப்பு.நிறைய இருக்கு! மேலும் மதமற்ற பல பழங்குடி இனங்கள் எந்த தட்சணையும் வாங்காமல் திருமணம் செய்யும்!அஸ்ஸாமில் ஒரு மலைவாசி கிராமத்தில் சுயம்வரம் போல் காலம் காலமக திருமணம் நடக்குது! அங்கே வரதட்சணையும் இல்லை! மஹர் கொடையும் அல்ல! உனக்கு பிடிச்சிருக்கா!? எனக்கும் பிடிச்சிருக்கு அம்புட்டு தான்!ஆண் கொடுத்து திருமணம் செய்யும் முறை முன்னாடியே பல குழுக்களில் உண்டு! உங்களுக்கு கம்னிஸத்தை தவிர வேற ஒன்னும் தெரியாட்டி சும்மா இருக்க வேண்டியது தானே!! என்ன செய்றது வினவு எங்க இஸ்லாமிய சகோதரர்கள் தங்களிடம் வரதட்சனை இல்லை என்று சொல்லுபோதும் மட்டும் வால் பையனுக்கு மலைவாசி சகோதரர்கள் ஞாபகம் வருகிறது நாங்கள் வரதட்சனை இல்லாமல் கல்யாணம் செய்கிறோம் வந்து பாருங்கள் என்று தோழர்கள் சொல்லும்போது துங்கி விடுகிறார் அதனால் தான் இந்த paste copy வோலை
புரியலையே தோழரே!
வரதட்சணை வாங்காமல், எந்த சடங்கும் செய்யாமல் திருமணம் செய்வதை நான் ஏன் கேள்வி கேட்கனும்! அங்கே இருக்கும் சுயம்வர முறை தான் உலகெங்கும் காதல் என்ற பெயரில் இயங்குகிறதே! தீவிர மதவாதிகள் மட்டுமே காதலை எதிர்க்கிறார்கள்! தோழர்கள் என்ன பண்ணாங்க உங்களை!?
வால்
குரான்அல்லாஹ்வால் தான் அருளப்பட்டது என்பதற்கான தடயங்கள் ஒரு வரியில் சொல்ல முடிவதல்ல. உங்களுக்கு நேரம் ஒதுக்க முடிந்தால் கீழே இருக்கும் you tube video பாருங்கள். இது ஒரு பகுதி தான். உங்கள் நேர வசதிப்படி அடுத்து வரும் பகுதிகளையும் பாருங்கள். There are more than twenty parts and it runs for more than 2 hours. அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக.
எதாவது தடயம் கொடுப்பார்ன்னு பார்த்தா உருதுவில் மொக்கை போட்டுகிட்டு இருக்கார்!
அப்படி என்னாத்தை தான் சொல்றாருன்னு தமிழில் மொழி பெயர்த்து சொல்லுங்களேன்! தடயம் ஏதும் இருக்கான்னு நானும் பார்க்கிறேன்!
வால்,
நான் குடுத்து பார்க்க சொன்னது ஒரு ஸ்பீச். பெரிய வீடியோ நு வேறே தமிழ் ல தான் சொன்னேன். உங்களுக்கு நேரம் இருந்தால் அடுத்த பார்ட் குட பாருங்க என்றும் சொன்னேன்.பேசுற பெரியவர் குரான் ல உள்ள சில வசனங்களை சொல்லி அதுக்கு இங்கிலீஷ் ல விளக்கமும் சொல்கிறார்.ரெண்டு செகண்ட் கூட நீங்க வீடியோ பாக்கல. இந்த லட்சணத்துல அது மொக்க என்று தீர்ப்பு வேறே. என்ன கொடுமை சார் இது.
கொஞ்ச நாளா மறுமொழி , நான் எஸ்கேப் ஆகவே இல்ல . இது ஒரு பெரிய டாபிக். ஒரு வரில பதில் சொல்றதுக்கு இல்ல. அதுனால தான் வீடியோ லிங்க் குடுத்திருக்கேன் . புள்ள குட்டிங்களா படிக்க வச்சிட்டு வீடியோ பாத்திட்டு வாங்க . அப்புறம் பேசலாம். சும்மா எதையுமே படிக்காம பாக்காம இருக்கா இல்லியா எடுத்து காட்டுவியா மாட்டியா என்று கேப்பது தான் உங்கள் பாணி யா. கொஞ்சம் திருந்துங்க சார்.
அதில் என்ன தடயம் என்று தமிழில் சொல்லுங்களேன்!
அதில் பேசி கொண்டிருப்பவர் தற்கால தூதுவரா!? அவரு எப்பவுமே உண்மையை தான் பேசுவாரா!? பொய் என்றால் என்னவென்றே தெரியாதா!?
சரி அதை விடுங்க தடயத்தை மட்டும் சொல்லுங்க அல்லது காட்டுங்க!
அவர் தூதுவர் அல்ல. உங்களையும் என்னையும் போன்ற ஒரு மனிதர் மட்டுமே. நீங்க எப்டி எப்பவுமே உண்மையை தான் பேசுவீர்களா. பொய் என்றால் என்னவென்றே தெரியாதா. தடயம் எடுத்து கொடுப்பதற்கு ஒரு பொருள் அல்ல. ஒரு விஷயத்தை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் அப்படித்தானே சொல்லவேண்டும். அதுக்கு தான் ஒங்களுக்கு பொறுமையே இல்லியே.வீடியோ வும் பாக்கமாட்டேங்க. தடயம் வேணும் தடயம் வேணும் நு கூவுனா எப்டி. ஸ்கூல் கூட போகமாட்டேன் ஆனாலும் MBBS நு போடணும் நு சொல்ற மாதிரி இருக்கு.
அதை தான் அய்யா! தமிழில் சொல்ல சொல்கிறேன்!
குரான் உண்மை என்று குரானில் இருக்கும் வசனத்தையே தடயமாக தரும் உங்கள் அறிவு எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது!
ஆமா அறிவியல் உண்மைகளை இவரு history வச்சு தடயம் காட்டுவாரு. யாருக்காவது புவியியல் ல சந்தேகம் இருந்த வால் பயன் கிட்ட போனீங்கன்னா அவரு economics வச்சு தடயம் காட்டுவாரு. எங்கே ஒங்களோட கொரங்கு தாத்தா சார்லஸ் டார்வின் கொள்கைய ஒங்க “வால் ” கொரங்கு கொள்கையில் இருந்தே தடயம் வச்சு நிருபிச்சு காட்டுங்களேன்.
தமிழில் சொல்ல முடியாதா!? சொல்லத்தெரியாதா!?
சும்மா ஜால்ஜாப்பு சொல்லிகிட்டு இருக்கக்கூடாது!
உங்களை மாதிரி நானும் ஜல்லி அடிக்கனும்னா! , அந்த மலைவாசி கிராமம், காங்கோ பக்கத்துலயோ, பெர்முடா பக்கத்துலயே இருக்குன்னு பொய் சொல்லிருப்பேன்! இந்தியாவிலேயே இருக்கும் அஸ்ஸாமை சொல்லியிருக்க மாட்டேன்!
தமிழிலேயே குரானும் இருக்குல்ல! அந்த வசனத்தை காப்பி பண்ணி போடுங்க!
அடடே!
கேள்வி கேட்டா பதில் சொல்லாம திரும்ப கேள்வி கேக்குறது தான் உங்க குல வழக்கமா!? டார்வின் குரங்குல இருந்து மனுசன் வந்தான்னு உங்க கிட்ட சொன்னாரா!?, குரங்கின் மூதாதையரும், மனிதனின் மூதாதையரும் ஒன்னுன்னு தான் சொன்னாரு!
அப்துல்கலாம் இந்தியாவில் மட்டும் பொறக்கலைனா அவரால விஞ்ஞானியெல்லாம் ஆகியுர்க்க முடியாது, எதாவது பள்ளிவாசல் முன்னாடி சட்டி தான் தூக்குகிட்டு இருக்கனும்! ஏன்னா படிப்புக்கு அவ்வளவு முக்கியதும் கொடுக்கும் உங்கள் இஸ்லாம்!
அதனால தான் திரும் திரும் உங்க புள்ளகுட்டிகளை படிக்க வைக்க சொல்றோம்! உங்க தலைமுறை தான் மததின் பெயரால் நாசமா போச்சு! உங்க குழந்தைகளையாவது நல்லபடியா மனுசனா வாழவிடுங்க!
மனிதர்களை மனிதர்களா பாக்குறவன், அடிப்படையிலேயே மனிதநேயம் உள்ளவனா இருப்பான்! அவனுக்கு எந்த மதமும் ,கடவுளும் தேவையில்லை!
நண்பர் Streams of பீஸ்,
நீங்கள் கூறும் தடயங்கள் என்பதை செங்கொடி தளத்தில் ஒரு தொடரின் மூலம் உடைத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு அங்கு அழைப்பு விடுக்கிறேன்.
http://senkodi.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%A4%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/
செங்கொடி
thanks chenkodi.
I can’t access wordpress or blogspot from here. will check it later. So, are you explaining only about islam. Please also write about the obsolete ideologies of the world like fascism,nazism,communism and darwinism.
//Please also write about the obsolete ideologies of the world like fascism,nazism,communism and darwinism.//
எதையும் கேள்வி கேட்டால் தான் தெளிவு பிறக்கும் என்பதில் எந்த மாற்றமு இல்லை!
குரான் உண்மை என்று குரானில் இருக்கும் வசனத்தையே தடயமாக தரும் உங்கள் அறிவு எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது!
தமிழிலேயே குரானும் இருக்குல்ல! அந்த வசனத்தை காப்பி பண்ணி போடுங்க!
மேலே இருக்கிற ரெண்டு பதில் உம என் முரண்படுகிறது.
நேரம் இருந்தால் வீடியோ பாருங்கள். தமிழ் லிங்க் இருந்தால் அதையும் அனுப்புகிறேன்.
செங்கொடியின் பதிவுகளை படித்ததுண்டு!
அதில் தமிழ் வசனங்களை வைத்து தான் துவைத்து காயப்போட்டு கொண்டிருக்கிறார்!
படிச்சி பாருங்க! மற்ற தெரியாத மொழியில் படிப்பதையும், பார்ப்பதையும் விட அது எவ்வளவோ மேல்!
வால் நீ என்ன லுசா? உலகத்தை புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் அனைத்தையும் ஆராய வேண்டும். அதை விட்டுட்டு குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டற ஆளாக இருந்துக்கிட்டு உலகத்தை நல்லாவே ஆராய்கின்றாய் ஐயா!
உன்னிடம் உள்ளது ஒன்றே ஒன்று தான்யா…. அது தான் வார்த்தை ஜவடால்.
குரானை தவிர வேறு எதையும் நம்ப மாட்டேன் என்பவர்கள் குண்டுசட்டியா!? இல்லை நானா!?
கேள்விகள் கேட்டால் அது உங்களுக்கு வார்த்தை ஜவடாலா!?
நல்லாயிருக்குதய்யா விவாத முறை!
திருமறைக் குர்ஆன் என்ன பெரியார் எழுதிய புத்தகமா உன்னைப் போன்ற ஆளையே சுத்திக்கிட்டு இருக்க? அது உலகம் எல்லாம் பரந்து விரிந்து கிடக்குதய்யா!. தினந்தோறும் உலகமெல்லாம் பல்லாயிர மக்கள் படித்து பின்பற்றக் கூடியதய்யா!
உன்னுடைய கேள்வியெல்லாம் கடைசியில் உள்ள இரண்டு வரிக்கு மட்டுமான கேள்வியாகத் தானே உள்ளது? மற்றதையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு நான் கேள்வித்தானே கேட்கிறேன் என்று பிலா விடவேண்டியது.
இஸ்லாமியச் சகோதர்களெல்லாம் இன்னும் ஏன் உனக்கு பதில் அளித்துக் கொண்டுள்ளார்கள் என்றே தெரியவில்லை?
@@@அது உலகம் எல்லாம் பரந்து விரிந்து கிடக்குதய்யா!. தினந்தோறும் உலகமெல்லாம் பல்லாயிர மக்கள் படித்து பின்பற்றக் கூடியதய்யா!
@@@ பலான புத்தகங்களுக்கும் இது பொருந்தும், பலபேர் படிப்பது என்பது மட்டுமே ஒரு விசயம் சரி என்பதாகாது
செங்கொடி பற்றி சொல்லாதீர்கள். அவருக்கு வானும் தெரியவில்லை வெளியும் தெரியவில்லை. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள் என்று தைரியமாக பதிவு எழுதுகிறார். அவரின் அந்த பதிவில் நான் சில கேள்விகள் கேட்டிருந்தேன் அதர்க்கு அவர் பதில் ஏதும் தரவில்லை. குரானை கிண்டல் செய்ய புறப்பட்டு வான் அலைகளை Satellite மட்டுமே திருப்பி அனுப்புகிறது என்று ஐந்தாம் வகுப்பு அறிவியலுக்கு எதிராக கருத்து சொல்கிறார். கேள்வி கேட்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை நல்லா கேள்வி கேளுங்க. ஆனா நல்ல தெரிந்ததை வைத்து கேள்வி கேளுங்க திரும்ப கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியாத கேள்வியெல்லாம் ஏன் கேட்கிறீங்க
நண்பர் மி,
வழக்கமாக ஆங்கிலத்தில் பேசுபவர்களை கண்டால் நான் ஓடி விடுவேன்.
வலைமனையிலும் அது தொடர்கிறது. தமிழில் வாருங்கள் நாம் நிறைய பேசலாம்.
செங்கொடி
nanbar sengodi ungal ‘விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்’ andra pathivil naan pinnoottiya keligalai tamil paduththiyirukkiren. Atharkku Vinavin tamil thattachchu pattiyaye uboyokithen. Athu google control use pannuvathu pola therikirathu. Athu sarivara velai seyyavillai. idayin irukkum tamingalaththirkku mannikkavum. Intha pinnoottam kooda vinavin karuvi pattayil sarivara thamilaaga maaravillai
நண்பர் வால்பையன்,இஸ்லாமியர்களின் இறைநம்பிக்கையை உங்களால் கேள்விக்குள்ளக்க முடியாது. அது முழுக்கமுழுக்க உண்மைக் கடவுளால்(!) பலப்படுத்தப்பட்டது. அது கப்ர்(மண்ணறை) வேதனை, நரக வேதனை என்ற பயமுறுத்தல்களால் உரமேற்றப்பட்டது. குரான் மீது கேள்வி எழுப்புவர்களை அநியாயக்காரர்கள் என்றும், அவர்களுக்கு கொடிய வேதனையுண்டு என்பன போன்ற சொற்றடர்கள் குரான் முழுவதும் விரவிக் காணப்படும். இந்தப் பயமுறுத்தல்களையும் மீறி அவர்களால் சிந்திக்கமுடியுமா என்ன.
நண்பர் பீஸ் உங்களை ஜகீர் நாயக்கின் வீடியோப் பதிவை பார்த்து இஸ்லாத்தை நம்பச் சொல்கிறார். ஆனால் பீஜே, ஜகீர் நாயக்கை நம்பக்கூடாது என்கிறார்.http://onlinepj.com/vimarsanangal/jakir_nayak/
இவர்களில் யாரை நாம் நம்புவது. மேலும் குரானின் மொழிபெயர்ப்புகளில் தவறு ஏற்படுவது சகஜம் என்றும் பீஜே கூறுகிறார்.http:/onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/pamarar_quranai_vilangamudiyuma/ அரபி தெரியாத நாம் தவறான மொழிபெயர்ப்பை படித்து எவ்வாறு இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொள்ளமுடியும் என்று கேள்வி கேட்டால் நம்மை அநியாயக்காரர்கள் என்றும் விதாண்டாவாதக்காரர்கள் என்றும் கூறுகிறார்கள். நம்மை விடுங்கள் அல்லாவின் வாடையையே அறியாத பழங்குடியின மக்கள் எவ்வாறு முஸ்லீமாக முடியும்? அவ்வாறு அறியாமல் மரணித்துவிட்டால் அவர்களுக்கு நரகமா? சுவர்க்கமா? அல்லாவின் ஏட்டில் இவர்களுக்கு என்ன வகையான தண்டனை. விளக்குவாரா பீஜே.
the total subject of discussion has been diverted. From dowry and its evils, those who are writing comments are much interested in involving arguments that islam and quran or unscientific. Dear vinavu, is this your objective in writing this article?. Is this the way you and your fellow comrades are spreading dowry awareness?
//dowry awareness?//
அடடே!
இதை பற்றியெல்லாம் உங்களுக்கு அக்கறை இருக்கா!?
Yes. We do have. That’s why are against dowry as a religion and as a nation. We are the biggest nation of people who don’t practice dowry.
We do advocate dowry awareness that’s why I am talking to headless chickens like you who drag unnecessary topic and divert the focus of the discussion.
We do have campaigns against dowry and due to that youths who got dowry previously are giving back the money that they have got and have apologized to the in-law family which is very rare anywhere in the world except the world of Islam.
பொதுவுல கொடுத்துட்டு திரை மறைவில் வாங்காமல் இருந்தால் நலம்!
காசு வாங்க வேணாம்னு சொல்லிட்டு, எப்படியெல்லாம் அடிக்கலாம் சொல்லி கொடுக்குறு கொஞ்சம் வருத்தம்! அது பற்றி இங்கே பேச வேண்டாம்! என் பெயரை அழுத்தினால் என் ப்ளாக்கிற்கு வரலாம், அங்கே வந்து அது ஏன்னு கொஞ்சம் என்னை தெளிவு படுத்திட்டு போங்க!?
இசுலாத்த பெண்களின் அழுகையை துடைக்க வல்ல கர்சீப்பாக நீங்கள் முன்வைக்கும் போது, அந்த கர்சீப்பில் ஆசிட் இருப்பதாக மற்றவர்கள் கூறினால் அதற்கு நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும் . அது திசைவிலகல் அல்ல விமரிசனம். கேள்வியே கேக்க்கூடாதுன்னு எழுதியிருக்குற ஒரு பழைய புஸ்தகத்த அப்படியே நம்புறவங்க, மத்தவங்கள பாத்து தலையில்லா கோழிகள் என்று சொல்வது நல்ல வேடிக்கை
கலை மறுபடியும் டைட்டு வைக்க சிற்றோடை மறுபடியும் எஸ்கேப்பு, உங்களுக்கு அனுபவம் பத்தாது அதனால இப்படி வெளிப்படையா எஸ்ஸாவுரீங்க… இதே எனக்கு சத்தியமா தெரியவே தெரியாத வேற ரெண்டு பேரா இருந்தாங்கன்னு வையுங்க.. நேர்ல வாடான்னு இன்னேரம் கச்சேசி வச்சிருப்பாங்க
//திருமறைக் குர்ஆன் என்ன பெரியார் எழுதிய புத்தகமா உன்னைப் போன்ற ஆளையே சுத்திக்கிட்டு இருக்க? //
ஆமாங்க!
பெரியார் எழுதிய புத்தகத்தில் நான்காம் அதிகாரம் எட்டாம் வசனத்தை தானே நான் உதாரணமா இப்போ காட்டிகிட்டு இருக்கேன்!
உலகத்துல பல மதம் இருக்குது, பல வேதம் இருக்குது, ஆனா எதுலயும் பொண்டாட்டியை அடிக்கிறது எப்படின்னு சொல்லி தரல! நியாயமா உங்க குரானை பாட புத்தகமா உலகெங்கும் சொல்லிதரணும்! அப்போ தான் பெண்கள் உலகெங்கும் சந்தோச அடிமைகளா வாழ்வாங்க!
வால் பையன், பார்ப்பனியம் இசுலாத்தை விட கேவலமானது, பெண்களை கேவலப்படுத்துவதில் நம்பர் ஒன் பார்ப்பனியமே. இசுலாம் நம்பர் 2
//பார்ப்பனியம் இசுலாத்தை விட கேவலமானது, பெண்களை கேவலப்படுத்துவதில் நம்பர் ஒன் பார்ப்பனியமே. இசுலாம் நம்பர் ௨//
நிச்சயமாக அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை! சில நாட்களாகவே இஸ்லாமும் பார்பனீய சிந்தனைகளுடன் கருத்து வெளியிடுவது தான் வருத்தம் தரும் செய்தி! எல்லாத்தையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தினால் மகிழ்ச்சி!
உண்மைதான் வால் இந்த ‘பார்ப்னியத்திடம் சரண்டைந்த இசுலாமிய மதவாத கூட்டம்’ சமீபத்தில் இணையத்தில் அதிமாக உளரி வருகின்றது
கூடவே நேரடிவிவாத்திற்கு வான்னு பேட்டை ரவுடி போல காட்டுக் கத்தல் கத்துது.
//ஆனா எதுலயும் பொண்டாட்டியை அடிக்கிறது எப்படின்னு சொல்லி தரல!//
அப்ப நீங்க பெண்களை அடித்ததே கிடையாதா? அடிக்கிறது என்றவுடன் ரொம்பவே டெரரா பாக்குறீங்க?
உங்களுக்கு உரிமையுள்ள குடும்பத்து பெண்களைத்தான்க கேட்கிறேன்? அதுக்காக போற வர்ர பெண்களை என்று எல்லாம் எடுத்துக்காதீங்க.
போய் போலீஸ் காரன்ட கேளுங்க ஆண்களை எப்படி அடிக்கிறது? பெண்களை எப்படி அடிக்கிறது என்று பாடமே நடத்துவார்கள். ஏன் உங்க வாத்தியார் அடித்ததே கிடையாதா?
எதையும் காரண காரியத்துடன் பாருங்க?
டெஸ்டிங்கு போலீசு கிட்ட கேக்கறத விடுங்க, புருசன எப்படி இசுலாமிய முறைப்படி அடிக்கறதுன்னு வீடியோ இருக்கா????
ஒரு கணவன் பொண்டாட்டியை அடிக்கிறது,அடிக்கக்கூடாது என்பது இருக்கட்டும். அது மனித சமாச்சாரம். அதை கடவுள் சொல்லலாமா என்பதுதான் கேள்வி. அதுவும் உலகம் அழியும் வரைக்குமான நேர்வழி மறையில். தவறு செய்த மனைவியை அடிக்கச் சொன்ன கடவுள், தவறு செய்த கணவனை ஏன் அடிக்கச் சொல்லவில்லை.
மனைவியை கணவன் அடிப்பதற்கும், மாணவனை ஆசிரியர் அடிப்பதற்கும், குற்றவாளியை காவலர் அடிப்பதற்கும் சட்டப்படி உரிமை இல்லை நண்பரே!
எனது மணவாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள தனிமெயில் செய்யுங்கள்!
விரிவாக சொல்கிறேன்!
ஏம்பா அரவேக்காடுகளா, ஒன்ன எதிர்க்கணும் என்று முன் முடிவோடு இருந்தா எப்படி. நீங்களேலல்லாம் அரவேக்காடுதான்னு உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கும் படிதான் ஆகும், அப்படித்தான் இருக்கு உங்க பின்னூட்டங்களும்.
///கூடவே நேரடிவிவாத்திற்கு வான்னு பேட்டை ரவுடி போல காட்டுக் கத்தல் கத்துது/// அப்ப பேட்டை ரவுடி சாகித் உன்னை மாதிரியே எல்லாத்தையும் நினைக்கதே உங்க ஊருல விவாதத்திற்கு கூப்பிட்ட பேட்ட ரவுடியா எங்க ஏரியால(வினவுல) உங்களுக்கு என்னட வேலை என்கிற பேட்ட திமிர்த்தனம் உங்க பின்னுட்டத்தை நீங்களே படித்துப்பாருங்கள் தெரியும்.
///மதம்சாராமல் இசுலாமியர்களால் எதனையும் சிந்திக்க முடியாது. ஏனெனில்/// சாகித் எங்கே நீ வர்க்கம் சாராமல் எதாவது சிந்தித்து சொல்லிரு பாப்போம் போலி முசுலிம்களின் செயல்களை கராணம் கட்டுவதை எப்போது விட போகிறீர்கள் சாகித் கேரளாவுல குரங்கு செத்ததுக்கு கம்னிஸ்ட் சிகப்பு துனி பொத்துகிறான் ஒ கம்னிஸமே இப்படித்தான என்று கேள்வி கேட்ட அவர்கள் போலி கம்னிஸ்ட் என்று சொல்ல தெரிதில்ல நம்ம செங்கொடி மாதிரி அடிப்படையில் இருந்து கேள்வியை கேளு இனி அடுத்த முறை போலி இசுலாமியார்களின் செயல்களை நீ பட்டியல் போட்டால் போலி கம்னிஸ்ட்களின் பட்டியலை எழுத வேண்டிய அவசியம் வ்ரும்
பின்னே எதுக்கு உலக முஸ்லீம் மக்கள் தொகை இரண்டு பில்லியன்னு பெருமையட்ச்சுக்கிறீங்க.
வேற என்னத்தைச் சொல்லச் சொல்றீங்க? இஸ்லாத்தை பின்பற்றதுக்கு ஆளே இல்லாதது போல் பேசினால் இப்படித்தான் பதில் கொடுக்க முடியும்.
இரண்டு மில்லியன்னு சொன்னா ஏன் உங்களுக்கு வலிக்குது? பொறாமைத்தானே?
//ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் சென்னையில் ம.க.இ.க பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி !!//
கூத்தாடி கூத்தாடுனாவே ஆயிரக்கணக்கா மக்கள் கூடுது. அப்படி கூடுன ஒரு கூட்டத்தை கூறி நீங்க பெருமையடிக்கலாமா?
கூடிய அனைவரையும் க்ம்யூனிஸ்டுனு சொல்லி பெருமையடிச்சாங்களா? அதைச் சொல்லு டெஸ்டு. உங்களுக்கு டெஸ்ட் செய்யவே தெரியலை..
பல பொண்டாடிங்கள கட்ட சான்ஸ் இருக்கறதனால நீங்க இசுலாம பெருமையடிச்கறதுனால உங்களுக்கு யார பாத்தாலும் அப்படி தெரியுது போல… நடக்கட்டும் நடக்கட்டும்
ஆமாய்யா… இன்னும் விட்டா கம்யுனுஸ்டுன்னு சொல்லி பெருமையடிச்சாங்களா? லெப்டுன்னு சொல்லி பெருமையடிச்சாங்களா? ரைட்டுன்னு சொல்லி பெருமை அடிச்சாங்களா? ன்னு இப்படியே அறிவுப்பூர்வமாக கேளுங்க நல்லா இருக்கும். அங்க ஓடுர பின்னூட்டத்தை பார்க்கும் போதே தெரியவில்லையா? எப்படியெல்லாம் பெருமை அடிக்கிறீங்கன்னு? இதை வேற விளக்குனுமா? ஏதாவது பேசப்பட்ட செய்தி உண்டா அங்கே? உங்களின் பெருமையைத்தவிர வேற எதையும் பார்க்கமுடியவில்லையே?
நண்பரே ஹைதர், இன்னார் இன்னார் போலி கம்யூனிஸ்டுகள் என்று நாங்கள் பகிரங்கமாக அறிவிக்கின்றோம், உங்களால் அப்படி முடியுமா? பதின் வயது சிறுமிகளை பாலியல் வல்லுரவுக்குள்ளாக்கும் ஷேக்குகள் முதல் சினமா ஷாருக்கான் வரை , அப்துல்கலாம் முதல் ஏ,ஆர் ரஹ்மான் வரை பலரும் அந்த பட்டியலில் இடம் பெற வேண்டுமே??? உங்கள் பீ.ஜே அவரது தளத்தில் அந்த பட்டியலை அறிவிப்பாரா????
பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நேர்ல வா நேர்ல வா என்று சிலர் கூச்சல் போடுகின்றனர், மதவெறி பிடித்த ஆர்எஸ்எஸ் சங்கராச்சாரியுடன் எப்படி நேரில் விவாதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லையோ அது போலத்தான் இசுலாமிய மதவெறியரான பீ.ஜேவுடனும் நேரில் பேசுவதும். மத நம்பிக்கை வேறு மதவெறி வேறு, நாங்கள் எல்லா மதவெறிக்கும் எதிரானவர்களே….
நாங்கள் வர்க்கம் சாராமல் சிந்திப்பது இருக்கட்டும், நீங்கள் அப்படி சிந்திக்க முடியுமா??? உலகில் ஏழை, பணக்காரன் வித்தியாசம் இருக்கும் மட்டும் எல்லோருடைய சிந்தனையும் வர்க்கம் சார்ந்ததே..
//பல பொண்டாடிங்கள கட்ட சான்ஸ் இருக்கறதனால //
உங்களை கமண்டு அடிச்சா எரியுதுல்ல? இப்படித்தான் மத்தவங்களுக்கும்.
சரி அய்யா டெஸ்டு.. யார் யாரெல்லம் முஸ்லீமுன்னு ஒரு சிறு பட்டியல் தர முடியுமா?
கேள்வியாரே, காலம் காலமாக உங்களிடம் இருந்த வரதராஜன் அய்யாவையே உங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. கட்சியை தூக்கி பிடிப்பதற்காக ஆளை காவு கொடுக்கிற ஆளுங்க நீங்க. உங்களுக்கு முஸ்லிம்களைப் பற்றி தெளிவா விளக்கினா மட்டும் விளங்கிடுமா?
முதலில் மனிதன் என்கின்ற உணர்வு வேண்டும், அவனுக்குன்னு ஒரு ஒழுங்கு முறை இருக்கு. அது உங்களுக்குத் தெரிந்தாவே முஸ்லிம்னா யாருன்னு விளங்கிடும்.
அதனால் மனிதனுக்கான ஒழுங்கு முறை என்றால் என்னவென்று உங்களுக்கு தெரிந்தலை விளக்குங்க?
கீஞ்சுது போ, வரதராஜன் எங்க கட்சின்னு உமக்கு யாருய்யா சொன்னது???
அது போலி கம்யூனிஸ்டு கம்பெனி பிரைவேட் லிமிடெட்… நாங்க நக்சலைட்டு, யாருகிட்ட பேசறோன்னே தெரியாம இவ்வளவு நேரம் ஜல்லியடிச்சுகிட்டிருக்கீங்களே
//கீஞ்சுது போ, வரதராஜன் எங்க கட்சின்னு உமக்கு யாருய்யா சொன்னது???
அது போலி கம்யூனிஸ்டு கம்பெனி பிரைவேட் லிமிடெட்… //
எது போலி….நீங்களா? அவங்களா? எனக்கு நீங்க ரெண்டு பேரும் ஒன்னுதான்.
முஸ்லிம்னா யாருன்னு தெரிந்து கொள்ள ஆசைப்பட்டீங்களே என்னா ஆச்சு?
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா, உங்களுக்கு விளக்க எனக்கு வசதியாக இருக்கும்.
இசுலாமிய மதப்பிரச்சாரம் செய்வது நீங்கள், இசுலாமே சிறந்த்து என்று எழுதிவருவது நீங்கள் எனவே நீங்கள் பதில் சொல்வதுதான் முறை, தவிர என்கேள்விக்கு எதிர் கேள்வி கேட்பது மூலமாக உண்மையான முசுலீம்கள் யாரென்று உங்களுக்கு பதில் தெரியவில்லை என்பதை சூசகமாக உணர்த்தினீர்களோ??? தெரியாது என்று நேரடியாக சொல்லவும்…
“எது போலி….நீங்களா? அவங்களா? எனக்கு நீங்க ரெண்டு பேரும் ஒன்னுதான்”
எப்படி ரெண்டுபேரும் உங்களுக்கு ஒண்ணா தெரியுறாங்க. அத முதல்ல சொல்லுங்க.
//உங்களுக்கு பதில் தெரியவில்லை என்பதை சூசகமாக உணர்த்தினீர்களோ??? தெரியாது என்று நேரடியாக சொல்லவும்… //
தெரிதோ தெரியவில்லையோ அதை அப்பறம் பார்க்கலாம். இப்ப நீங்க நான் கேட்டதில் உங்களுக்கு தெரிந்ததை கூறவும். நான் கேட்டது உங்களுக்கு தெரியுமான்னு நான் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?
இசுலாமியன் என்றால் யார் என்ற சிம்பிளான கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் விதண்டாவாதம் செய்வதன் மூலமாக உங்களிடம் இதற்கு மேல் பேச சரக்கில்லை என்பதை தெளிவாக்கிவிட்டீர்கள்.எனக்கு வேறு வேலையுள்ளது… உங்களுக்கு??????
அப்ப கேள்வி கேட்கின்ற தகுதி உங்களுக்குத்தான்! எங்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்கின்றீர்களா?
அப்ப உங்களுக்கும், பார்ப்பனுக்கும் என்ன வித்தியாசம்?
கேள்வி சிம்பிள்தான் பதில் சிப்பிளான்னு தெரியுமா?
உங்களின் புரிதல் எப்படின்னு தெரிஞ்சிக்கிறத்துக்குத்தான் நாங்கள் உங்களை கேள்வியே கேட்கின்றோம்.
உலகத்திலேயே அதிகமான கேள்விக்கு உட்பட்டது இஸ்லாமாகத்தான் இருக்கும்? அதற்கு எல்லாம் சலைக்காமல் பதில் சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் இஸ்லாமியர்காளகத்தான் இருக்கும். இதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்.
//உலகத்திலேயே அதிகமான கேள்விக்கு உட்பட்டது இஸ்லாமாகத்தான் இருக்கும்? அதற்கு எல்லாம் சலைக்காமல் பதில் சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் இஸ்லாமியர்காளகத்தான் இருக்கும். இதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்.//
உலகில் முதன் முதல் உருவான மதம் இஸ்லாம்னு சொல்விங்கன்னு எதிர்பார்த்தேன் நண்பரே!
இங்கே மட்டும் பதில் சொல்வதால் உங்களுக்கு அப்படி இருக்கு, கொஞ்சம் மற்றவர் பதிவுக்கும் வாங்க, எல்லா கடவுள்களையும் துவைச்சு காயப்போட்டிருக்கோம்!
@@@அதற்கு எல்லாம் சலைக்காமல் பதில் சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் இஸ்லாமியர்காளகத்தான் இருக்கும்@@@ சரி அப்ப பதில் சொல்லத் தெரிஞ்ச யாராவது ஒரு நல்ல இஸ்லாமியரை அனுப்பி வைங்க, வெட்டி அரட்டை மட்டும் அடிக்கும் நீங்க கிளம்புங்க… பதில்தான் வரல காத்தாவது வரட்டும் 🙂 🙂 🙂
I like testing… அவரோட மொக்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..
பெண்ணுக்கு மஹ்ர் கொடுப்பது சமூகப் புரட்சி நிகழ்வா என்ன? இதை முஹம்மதுதான் ஏற்படுத்தினரா? இல்லை. முஹம்மதிற்கு முன்பே அதாவது இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே யூத மக்களிடம் இருந்த வழக்கம். யூதர்கள் ஆடு அல்லது மாடு போன்றவற்றை கொடுத்து மணமுடித்திருந்திருக்கின்றனர்.(இப்பொழுதைய நிலைமை என்னவென்று எனக்குத் தெரியாது). இதை பைபிளின் பழைய ஏற்பாட்டில் காணலாம். நாம் ஒரு பொருளை பணம் கொடுத்து உடைமையாக்கிக் கொள்வது போன்றே இவர்கள் பெண்ணை உடைமையாக்கிக் கொள்ள ஏதேனும் ஒன்றை கொடுத்திருக்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை பெண் ஒரு போகப்பொருள், விளைநிலம்,சதைப்பிண்டம்.
முஹம்மது கூறுகிறார்.நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் தரும் ‘மஹ்ர்’ தான்.
இஸ்லாமியர்களே நீங்கள் இஸ்லாத்தின் மீது எவ்வளவு வேண்டுமானாலும் நம்பிக்கை கொள்ளுங்கள். அதற்காக ஏன் பொய்யான தகவலை கூறுகிறீர்கள்.? மற்றவர்களையும் வழி கெடுக்கிறீர்கள்?
கலையாரே, என்ன ஆச்சு உங்களுக்கு? இஸ்லாமியர்கள் என்ன பொய் சொன்னார்கள்? மஹர் கொடுப்பது எங்களுக்கு என்று உள்ள சொத்து என்றா கூறினார்? யூதர்கள் எல்லாம் எங்களுடைய சகோதர மார்க்கத்தை உடையவர்கள் என்றுதானே நாங்களும் சொல்கின்றோம்?
அப்ப உங்களுக்கு உங்கள் மனைவியைக் கண்டால் போதை ஏறாதா? உங்கள் மனைவியிடம் உங்களின் விதையை நடாமல் வேறு எங்கு நடுவீர்கள்? வேறு எங்கு நட்டாலும் அது விளைநிலம் அல்ல களை நிலமாகத்தான் இருக்கும்.
கழிவிடத்தில் நட்டால் ஏதும் விளையாதுங்க. அங்கு துர்நாற்றம் தான் எடுக்கும்.
உங்க விதையை விதைத்து நல்ல பலன் காணவேண்டுமென்றால் உங்கள் மனையிடம் தான் காண முடியும்.
வேறு ஏதாவது நல்ல பலன் இருந்தால் கூறுங்களேன் பார்ப்போம்?
மனைவிய தவிர இருக்கும் துணைவியரெல்லாம் களைநிலங்களா!? தமிழ்நாட்டிலேயே ஒருவர் மூன்று நிலங்களில் செமத்தியா விளைய வச்சு கல்லா கட்டியிருக்காரே! அவரை விடுங்க!
மனைவி விளைநிலம்னு சொன்னிங்க, எத்தனையாவது மனைவின்னு சொல்லலையே! முகமதுக்கு ஒரு மனைவி மட்டும் இல்லையே, அவரே குரானில் சொல்லியிருப்பாரே! (வளர்ப்பு மகனின் மனைவியா இருக்குமோ)
மனைவிக்கும், துணைவிக்கும் விளக்கம் தெரியாத ஆளா நீங்க?
போய் அதை படித்துவிட்டு வாங்க?
//வால்பையன்
says: February 24, 2010 at 3:34 பம் இங்கே மட்டும் பதில் சொல்வதால் உங்களுக்கு அப்படி இருக்கு, கொஞ்சம் மற்றவர் பதிவுக்கும் வாங்க, எல்லா கடவுள்களையும் துவைச்சு காயப்போட்டிருக்கோம்!
//
வால் சார், நான் 2005 லேந்து இந்த மார்கெட்டிலே இருக்கேன்.
இப்ப நான் நல்ல மூடுல இருக்கேன் அதான், இங்கு டைப்பிக்கிட்டு இருக்கேன்.
ஐந்து வருடமாகவா கேள்விக்கு சரியான பதிலை உங்களால் சொல்லமுடியவில்லை! அதுசரி, பதில் இருந்தா தானே சொல்வதற்கு!
நல்ல கண்டுபிடிப்பு? நான் 5 வருடமாக பதில் சொல்லமுடியாமபோனதை கண்டுபிடித்துவிட்டீர்களே?
பதில் இல்லாமல்தான் இஸ்லாத்தை தழுவுறவுங்க உலக அளவில அதிகரித்துக் கொண்டு உள்ளார்கள் போல?
//பதில் இல்லாமல்தான் இஸ்லாத்தை தழுவுறவுங்க உலக அளவில அதிகரித்துக் கொண்டு உள்ளார்கள் போல?//
குற்றவாளிகள் கூடத்தான் உலகளவில் அதிகரித்து உள்ளார்கள்!
வீட்டுக்கு பத்து, பதினைந்து பொருளாதார பிரச்சனையை பற்றி கவலைப்படாமல் பெத்து போட்டா இஸ்லாம் தான் உலகத்தில் பெரிய மதமாக இருக்கும்!
@@வீட்டுக்கு பத்து, பதினைந்து @@ வால்பையன் இந்த ஒரு விமரிசனத்தை நான் ஆட்சேபிக்கிறேன், இது ஆர்.எஸ்.எஸ் காரன் பேசும் அவதூறுகளில் ஒன்று…
தெரிந்த இசுலாமிய குடும்பங்களை பாருங்கள் எத்தனை இசுலாமியர்கள் பலதாரத்தை மணமுடிந்தோ அல்லது பத்து பதினைந்து பிள்ளைகளை பெற்று இருக்கிறார்கள்???? மூன்றாம் உலக நாட்டு கிராம்பபுற சிறு நகர அடித்தட்டு மக்களிடம் மதவேறுபாடில்லாமல் அனைவரிடமும் உள்ள பிரச்சனை குடும்ப கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது,
அதே நேரத்தில் இந்தியாவில் பெரும்பான்மை முசுலிம்களும் வறுமையில் வாடுபவர்களாக இருப்பது ஒன்றும் தற்செயலான நிகழ்வு அல்ல, அது ஒருவகையான ஒடுக்குமுறையின் விளைவே.
நாம் மதவெறியர்களை எதிர்க்கலாம், ஆனால் . அவர்களையெல்லாம் இசுலாமிய சமூகத்தினருக்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை, விமரிசனத்தையும் பொதுமைப்படுத்த தேவையில்லை
//எல்லா கடவுள்களையும் துவைச்சு காயப்போட்டிருக்கோம்!//
நான் உலகளவில் பேசிகிட்டு இருக்கேன். நீங்க என்னான்னா தமிழ்நாட்டை தாண்ட மாட்டென்கிறீங்களே?
கடவுள் என்றாலே எங்களுக்கு ஒரே அர்த்தம் தான் நண்பரே!
இதில் அல்லா என்ன கர்த்தர் என்ன சிவன் என்ன!?
அதை விட கேள்வி கேட்க வேண்டியது அந்த மதத்தின் வேதங்கள் தானே! இஸ்லாத்தை கேள்வி கேட்டால் அது தமிழ்நாட்டிற்குள்ளயேவா!?
வேதத்தை கேள்வி கேட்டாலும் அதே தானா?
சாப்பிட்டிங்களா!? ஏன் தெளிவில்லாம பேசுறிங்க!?
//வெட்டி அரட்டை மட்டும் அடிக்கும் நீங்க //
அப்ப நீங்க என்னத்த உறுப்படியா கிழிச்சீங்க? சொல்ல முடியுமா?
அண்ணே கேள்விக்குறி நீங்களே நியாயத்த செல்லுங்க இந்த சாகித் எப்ப பாத்தாலும் முசுலிம் பெயர்தாங்கிகளின் செயல்களை பட்டியல் போட்டு கொண்டு இருக்கிறார் அடிப்படையில் இருந்து பேசுப்ப என்று நியாயமான முறையில் சொன்ன அதுவும் தப்பா எங்க இசுலாமிய சகோதரர்கள் போலி கம்னிஸ்ட்களின் செயல்களை பட்டியல் போட்ட நீங்க ஏத்துகிறிவிகாள எங்க ஊருல இந்த சி பி எம் கம்னிஸ்ட் கட்சிகரய்ங்க சிறு வியாபாரிகளிடம் கூட்டாம் அது இதுன்னு சொல்லி பணம் வசூல் பன்னி இரவில் டஸ்மார்க் கடையில போயி அந்த பணத்தையேல்லாம் பிரிச்சு தன்னி அடிச்ச விவகாரம் எங்க ஊருக்கே தெரியும் அவிய்ங்க பார்த்து கம்னிஸமே இப்படித்தனு எட போட முடியுமா அதனால போலிகளை விட்டுபுட்டு அடிப்படை கொள்கை சம்பந்தமா பேசுவோம்
நண்பரே ஹைதர்,
சாகித் உள்ளிட்ட தோழர்கள் இங்கே எதிர்ப்பது இசுலாமிய மதவெறியை மட்டும்தான்… நாங்கள் பெரும்பான்மை இசுலாமியர்களுக்கு நண்பர்களே….நீங்கள் உங்களை தயவுசெய்து மதவாதிகளுடன் அடையாளப் படுத்திக்கொள்ளாதீர்கள்….
முன்னர் நான் உங்களுக்கு எழுதிய மறுமொழியை மீண்டும் வாசியுங்கள்
https://www.vinavu.com/2010/02/05/goa-tamil-padam/#comment-16968
//@@வீட்டுக்கு பத்து, பதினைந்து @@ வால்பையன் இந்த ஒரு விமரிசனத்தை நான் ஆட்சேபிக்கிறேன், இது ஆர்.எஸ்.எஸ் காரன் பேசும் அவதூறுகளில் ஒன்று…//
உண்மை தான் நண்பரே! இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள், இந்திய சமூக கட்டுபாட்டிற்கு உட்பட்டு ஒரு தாரத்துடனும் குறைவான குழந்தைகளுடன் வாழ்கிறார்கள் என்பதை நானும் ஒப்பு கொள்கிறேன்!
அதிக மக்கள் தழுவும் இஸ்லாம் என்று சொன்னதற்காக நான் கிண்டலாக சொன்ன ஐடியா அது!
பெரியார் இருந்தும் கோவில்களில் கூட்டம் குறையவில்லை என்று வேதம் ஓதிய பார்பனர்களுக்கும் நான் இதையே தான் சொன்னேன்!
மதவாதிகள், மதத்தை வளர்க்க நன்மைகள் செய்வது குறைவு, மதவாதிகளை அதிகரிப்பதே அதிகம்! நம் குழந்தைகளுக்கு மதத்தை சொல்லிதராமல் மனிதத்தை சொல்லிதர வேண்டும் என்பதே என் அவா!
நான் இஸ்லாத்தையும், இஸ்லாமிய நண்பர்களையும் வேறு வேறாகத்தான் பார்க்கிறேன்!
@@கு மதத்தை சொல்லிதராமல் மனிதத்தை சொல்லிதர வேண்டும் என்பதே என் அவா!@@ வழிமொழிகிறேன்…! இதை இங்கே எதிர்த்து பின்னூட்டம் எழுதுபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இதில் என்ன தவறு என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும்
உங்கள் கருத்துப்படி மதக் கொள்கைகள்தான் சரியில்லை. மனிதம் என்று ஒரு கொள்கையை ஆரம்பித்துள்ளீர்களே? அதன் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் என்ன என்று தெளிவாக சொல்ல முடியுமா?
இதற்கும் பதில் உள்ளதா? அல்லது கிண்டலும், கேலியுமான நலுவல்தானா?
Dear Valpaiyan!,
Don’t be emotional in your arguments. Could you dare to challenge the below article from the brother hamza?
http://hamzatzortzis.blogspot.com/2010/01/dawkins-delusion-response-to-richard.html
I really appreciate if you could come up with some logic and intelligence…
For more info: http://hamzatzortzis.blogspot.com/
http://www.facebook.com/h.a.tzortzis
I suggest u to see his debate videos with promenient athesit is UK and US , which will be available in this website.
http://hamzatzortzis.blogspot.com/2009/07/debate-on-religion-logic-of-submissio.html
http://dharumi.blogspot.com/search/label/WHY%20I%20AM%20NOT%20A%௨௦ஊளீ
தருமி ஐயா! நன்கு படித்தவர், அவரிடம் போய் அந்த லிங்க் கொடுங்கள்!
ஏற்கனவே அவர் பல கேள்விகளும் கேட்டுள்ளார், அதற்கு பதிலும் சொல்லுங்கள்!
பெரிதாக எனக்கு ஆங்கிலபுலமை இல்லாததால் நான் அங்கு பங்கெடுத்து கொள்கிறேன்!
With no knowledge on Islam u just criticise it. Unfortunately i couldn’t find any good Muslim agnostics as like brother Hamza, Adam Deen in tamil. Insha allah soon there will people like him Will come and expose the Atheist. As how the leader of Atheist are running after his debates.
pls help dharumi.., in the above link u provided…
//அப்துல்கலாம் இந்தியாவில் மட்டும் பொறக்கலைனா அவரால விஞ்ஞானியெல்லாம் ஆகியுர்க்க முடியாது, எதாவது பள்ளிவாசல் முன்னாடி சட்டி தான் தூக்குகிட்டு இருக்கனும்! ஏன்னா படிப்புக்கு அவ்வளவு முக்கியதும் கொடுக்கும் உங்கள் இஸ்லாம்!//
வால் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் ? இந்தியாவில் பொறந்த முஸ்லிம் எல்லாம் scientist ஆயிட்டானா? இல்ல வெளிநாட்டுல பொறந்த எந்த முஸ்லிமும் scientist ஆகலையா? Please explain ..
// அதனால தான் திரும் திரும் உங்க புள்ளகுட்டிகளை படிக்க வைக்க சொல்றோம்! உங்க தலைமுறை தான் மததின் பெயரால் நாசமா போச்சு! உங்க குழந்தைகளையாவது நல்லபடியா மனுசனா வாழவிடுங்க! //
Please address me and not my generations. I know how to bring up my generation. I don’t need tips from an onlooker like you. My generation is well educated and employed. We pay taxes and living peacefully in India. Religion has never spoiled us but it has only groomed us.
// மனிதர்களை மனிதர்களா பாக்குறவன் //
ஒங்க சயின்ஸ் ல மனுஷனும் ஒரு மிருகம் தானே. பரிணாம வளர்ச்சியடைந்த மிருகம். அப்போ எப்டி மனுஷன மனுஷனா பாக்குறீங்க? கொஞ்சம் சொல்லுங்களேன் …
// மனிதர்களை மனிதர்களா பாக்குறவன், அடிப்படையிலேயே மனிதநேயம் உள்ளவனா இருப்பான்! அவனுக்கு எந்த மதமும் ,கடவுளும் தேவையில்லை //
1. மனித நேயம் என்றால் என்ன? ஒங்களுக்கு அது யார் சொல்லிகுடுத்தா ? why are you practicing it?. what is the gain for you becoz of that practice?
@@@அப்துல்கலாம் இந்தியாவில் மட்டும் பொறக்கலைனா அவரால விஞ்ஞானியெல்லாம் ஆகியுர்க்க முடியாது,@@@
இது தவறான கருத்து, கிறுத்துவ வாடிகன் அறிவியலை அழித்தபோது அறிவியலின் புறவலர்களாக இருந்தவர்கள் இசுலாமியர்கள் என்பது வரலாற்று உண்மை. அதுமட்டுமல்லாமல் பல இசுலாமியர்கள் அறிவியல் விஞ்ஞானம், மருத்துவம், மற்றும் கலை இலக்கியத்தில் மத்திய காலம் தொட்டே சாதனை புரிந்துள்ளனர். இதில் பெண்கள் சதவிகிதம் கிட்டத்தட்ட பூஜ்யம் எனுமளவுக்கு இருப்பதற்கு அந்த மதத்தின் பெண்ண்டிமைத்தனம் ஒரு முக்கிய காரணம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
பழைமைவாதம் ஒங்கும் போது தானாய் எல்லாம் மக்கிப்போவது போல அவர்களின் சாதனைகளை இசுலாமிய பாசிஸ்ட்டுகளின் செயல்பாடுகள் இருட்ட்டிப்பு செய்துவிட்டன. இன்று இசுலாம் என்றால் ஒரு காட்டுமிராண்டி கூட்டம் என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டதில் இசுலாமிய பாசிஸ்டுகளுக்கும் பங்குன்டு. ஆனால் உண்மையிலேயே மத்திய கால வரலாற்றை முற்போக்காய் நகர்த்தி உலகை முன்னுக்கு கொண்டுவந்த வரலாற்று கடைமையை இசுலாமியர் ஆற்றினார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஆனால் உலகம் இப்போது மத்தியகாலத்திலும் இல்லை இசுலாம் உள்ளிட்ட எந்த மதங்களும் இனி உலகின் வளர்ச்சிக்கு தேவையும் இல்லை. மதம் மனிதனை பின்னுக்கு இழுத்துக்கொண்டிருக்கின்றது….. நண்பர்களே மதநம்பிக்கை இருக்கலாம் தவறில்லை ஆனால் மதவாதிகளுடன் உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாதீர்கள் அது மனிதகுல வளர்ச்சிக்கு நீங்கள் செய்யும் தீங்கு.
என்னுடைய கட்டுரை ‘இஸ்லாமிய பெண் கல்வியாளர்ஹள்’ என்ற தலைப்பில் சமரசம் இதழில் காணுங்கள் .www.samarasam.net.
//வால் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் ? இந்தியாவில் பொறந்த முஸ்லிம் எல்லாம் scientist ஆயிட்டானா? இல்ல வெளிநாட்டுல பொறந்த எந்த முஸ்லிமும் scientist ஆகலையா? Please explain ..//
உங்கள் விவாதமுறை இந்த அளவுக்கு குழந்தைதனமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை!
உங்கள் நம்பிக்கை, குரானில் எல்லாம் இருக்கிறது, இதுவரை உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட, ஆனால் இனிமேல் என்ன வரும்னு கேட்டா பேந்த பேந்த தான் முழிக்கனும்!
ஏன், எதற்கு, எப்படி என்று கேட்க ஆரம்பித்தது தான் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு ஆரம்பம்! அப்படி யாராவது இஸ்லாம் நாடுகளில் கேட்டால் அவனுக்கு என்ன என்ன இல்லாம போகுமோ யார் கண்டா!?
*******
சமூக பொருளாதாரத்துக்கு போட்டி போட உங்கள் குடும்பம் கல்வியை கையிலெடுத்ததை குறித்து மகிழ்ச்சி, அதை விட மிக்க மகிழ்ச்சி உங்கள் குடும்பமும் அதை செய்வது! இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வோரு பொருளுக்கும் வரியுண்டு! அந்த பொருளை வாங்குவது பிச்சைகாரனாக இருந்தாலும் அதே! எனக்கும் அதே! எல்லாருக்கும் அதே!
*******
மிருக இனத்தை சேர்ந்தவன் தான் மனிதன், அவன் குழுப்பெயர் மனிதன்! அதனால் மனிதநேயம், புலி என்றால் புலிநேயம்!
********
என்னைவிட யாரும் தாழ்ந்தவருமில்லை, என்னைவிட எவரும் உயர்ந்தவரும் இல்லை என்பது எனக்கு மனிதநேயத்தை கற்று கொடுத்தது!
******************
நான் இஸ்லாம் என்ற மதம், அதன் நாடு, பெரும்பான்மையான இஸ்லாம்கள், அவர்களின் நடைமுறைகள், கட்டுபாடுகள், கொள்கைகள், மதநம்பிக்கைகள் அடிப்படையாக பேசி கொண்டிருக்கிறேன்! அதன்படியே உரையாட கேட்டு கொள்கிறேன்!
ஒரு நண்பர் உங்கள் மொக்கை பிடித்திருக்கிறது என்று சொன்னதற்காக என்னை கொல்லாதீர்கள்!
உடன்படுகிறேன் கேள்விகுறி!
நண்பரின் விவாதம், தனது மதத்தை கடைசி வரை நியாயபடுத்த வேண்டும் என்று இருக்கிறதே தவிர சரியான பதில்கள் எங்கும் இல்லை!, வரதட்சணை பற்றிய பதிவில் தடம் மாற்றுகிறார்கள் என்று அவர்தான் முதலில் கவலைப்பட்டார்! மஹரும் வரதட்சணை போல தானே என்றதும் அவரே கருத்தை விட்டு விழகி கொண்டிருக்கிறார்!
உதாரணங்களை அடையாளங்களுக்கு எடுத்து கொள்ளலாம்! கடைசி வரை உதாரணத்தையே விவாத பொருளாக மாற்றினால் நான் செய்ய தோழரே!
// உங்கள் விவாதமுறை இந்த அளவுக்கு குழந்தைதனமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை!//
கீழே இருக்கும் வரிகளை படித்து யாருடைய விவாத முறை குழந்தைத்தனம் என்பதை வாசிக்கும் நண்பர்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.
அப்துல்கலாம் இந்தியாவில் மட்டும் பொறக்கலைனா அவரால விஞ்ஞானியெல்லாம் ஆகியுர்க்க முடியாது, எதாவது பள்ளிவாசல் முன்னாடி சட்டி தான் தூக்குகிட்டு இருக்கனும்! ஏன்னா படிப்புக்கு அவ்வளவு முக்கியதும் கொடுக்கும் உங்கள் இஸ்லாம்!
Ever know abt ibn Sinna? Father of modern medicine and surgery? Or abt ibn Hatim. . So who have written al jeebra(Al Jabar in arabic). atleat now learn abt muslim invention the below link:
http://www.1001inventions.com/
http://www.muslimheritage.com/Default.aspx
http://www.facebook.com/?ref=home#!/1001inventions?ref=nf
Savior of Iraq
நீங்கள் வியக்கும் அந்த ஆங்கில சுட்டிகளை நீங்களே தமிழில் இங்கே பதியவும், புன்னியம் கிடைக்கும் உங்களுக்கு.
// இது தவறான கருத்து, கிறுத்துவ வாடிகன் அறிவியலை அழித்தபோது அறிவியலின் புறவலர்களாக இருந்தவர்கள் இசுலாமியர்கள் என்பது வரலாற்று உண்மை. அதுமட்டுமல்லாமல் பல இசுலாமியர்கள் அறிவியல் விஞ்ஞானம், மருத்துவம், மற்றும் கலை இலக்கியத்தில் மத்திய காலம் தொட்டே சாதனை புரிந்துள்ளனர். இதில் பெண்கள் சதவிகிதம் கிட்டத்தட்ட பூஜ்யம் எனுமளவுக்கு இருப்பதற்கு அந்த மதத்தின் பெண்ண்டிமைத்தனம் ஒரு முக்கிய காரணம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது//
அய்யா கேள்விக்குறி,
கம்யுனிச தலைவர்களில் பெண்கள் எத்தனை பேர் அய்யா. இதுவரை உலகில் வந்த கம்யுனிச தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களில் பெண்களின் சதவீதம் எத்தனை? எனக்கு தெரிஞ்ச கொஞ்சம் தலைவர்கள் mao,karl marx, engels,vladimir putin,hugo chavez,fidel castro,che guevera, jiang zemin, gorbachev,surjeet, namboothiripad, somnath chatterjee, jothibasu, mukherjee,lenin, dictators like stalin,leon Trotsky ,deng xioping, prachanda, இதுல யாருமே எனக்கு தெரிஞ்சு பெண்கள் இல்ல. இது என்ன அடிமைத்தனம் நு கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்.
அய்யா பீஸ்,
இஸ்லாம் கோருவது மதமாற்றம். கம்யூனிசம் கோருவது சமூக மாற்றம். முதலாளித்துவ சமுதாயத்திற்குள்ளேயே அனைவரும் முஸ்லீமாக மாறிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நீங்கள் கருதுகிறீர்கள். (பிரச்சினை தீராது என்று உங்கள் கடவுள் கூறுகிறார்,அது வேறு விஷயம்.). பெரும்பான்மை முஸ்லீம்களைக் கொண்ட வளைகுடாநாடுகளில் மக்கள் சுமூகமாக வாழ்கிறார்களா என்ன? 1400 வருடங்களாக உழைக்கும் மக்களின் பிரச்சினையை தீர்க்கமுடியாத இஸ்லாம், ஒரு நூற்றாண்டு கூட நிறைவடையாத கம்யூனிசத்தைப் பார்த்து கேலி செய்வது அதிகமாகத் தெரியலையா! இஸ்லாம் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது, கம்யூனிசம் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதனை தெரிந்துகொண்டு வாருங்கள். பிறகு விவாதிக்கலாம்.
@ Streams of பீஸ்
இஸ்லாமியநாடுகள் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கு உதாரண்மாக தான் அப்துல்கலாமை சொன்னேன்!
கல்வி இருந்தால் விழிப்புணர்வு இருக்கும், அது இருந்தால் மூடநம்பிக்கைகள் இருக்காது, ஏன் என்ற கேள்வி பிறக்கும்! பின் இந்த பதிவின் முக்கிய அம்சமான வரதட்சணைக்கு வேலையிருக்காது! இது இஸ்லாம் மட்டுமல்லாது அனைத்து சமூகத்திற்கும் பொருந்தும், மக்களுக்கு அடிப்படை கல்வியும் விழிப்புணர்வும் தேவை!
முதலிலேயே சொல்லிவிட்டேன் நான் மொத்த இஸ்லாம் சமுகத்தையும் மனதில் வைத்து தான் விவாதிக்கிறேன்! உங்களை மட்டும் கருத்தில் கொண்டு பதி வாதம் செய்தாரீர்கள், நீங்கள் எந்த தவறும் செய்யவில்லையென்றால் மொத்த இஸ்லாமும் புனிதம் என்பதாக அர்த்தமில்லை!
எங்களை சொல்லிவிட்டு ட்ராக் மாறி இப்போ நீங்கள் தான் கம்யூனிசத்தில் எத்தனை பெண்கள் என்று கேட்கிறீர்கள்!
கம்யூனிசம் ஒரு நாட்டின் ஆட்சி கொள்கையாக மாறும் முன்னர் அதன் தோற்றம் பற்றி கொஞ்சம் படியுங்கள்! இந்தியாவில் உள்ள தொழிற்சங்கங்கள் ஆணுக்கு ஒரு நீதியாகவும் பெண்ணுக்கு ஒரு நீதியாகவுமா போராடுகிறது என்று கவனியுங்கள்!, பெண் உறுப்பினர்கள் வந்தால் சேர்த்து கொள்ளமாட்டோம் என எந்த தொஇஒழர் அமைப்பு சொன்னது என ஆதாரம் காட்டுங்கள்!
பெண்ணுரிமை என்றால் வீட்டில் இருக்கும் பெண்ணை வலிய போய் வேலைக்கு துரத்துவதில்லை, அவள் விருப்பபடுவதை செய்ய அனுமதிப்பது!
சலிப்படைய செய்கிறீர்கள் அய்யா!
@ Saviour of Iraq பெஒப்லே
சேவியர் என்றால் என்ன!?
அது ஏன் ஈராக் மக்களுக்கு மட்டும்! உங்களிடம் வந்து ஐயா நீங்க தான் காப்பாத்தனும்னு மனு கொடுத்தாங்களா!? உங்க கடவுள் எங்கே போயிட்டார்!?
Hamza Andreas Tzortzis is an geek Atheist, accepted Islam and is an international public speaker on Islam, a writer and intellectual activist. He has debated prominent intellectuals and academics. Some of his interlocutors include the leading humanist and best selling author Peter Cave, the editor of the Philosophy Now mazagine Rick Lewis and the highly aclaimed Professor Simon Blackburn. In the summer Hamza will debate one of the leading American atheists and secular activists Dr. Ed Buckner, the president of American Atheists. for more info : http://hamzatzortzis.blogspot.com http://www.facebook.com/h.a.tzortzis#!
பின்னர் பெண் குழந்தை ஆளாகி மணமகளாக செல்லும்போது அந்த நகைகளும் புதிய தட்சணையாக செல்ல நேரிடும். இதைத் தவிர அந்த நகைகள் அந்தப் பெண்ணுக்கு ஒரு மயிரும் பலனளிப்பதில்லை.
சரியாக சொன்னீர்கள் தோழரே !
இஸ்லாம் இஸ்லாம் என்கிறாங்களே ,எனது பாகிஸ்தான் நண்பன் ( அவனும் முஸ்லீம் தான் ) சொன்னான் “லண்டனில் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம்களில் பெரும்பான்மையானவர்கள் தொழுகை முடித்து விட்டு அவசரமாக போவது சூதாடும் இடத்திற்கே ” என்று .பெண் விடுதலை ,பெண்ணுரிமை என்பதெல்லாம் நவீன சிந்தனைகள் ,1400 வருடங்கலுக்கு முன் வாழ்ந்தமனிதன் பூமியை தட்டை என்றே நம்பினான்.அவனின் அறிவு அவ்வளவே ! சும்மா மதம் என்ற குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாதீர்கள் !
சுயஇன்பம் எனும் சுலப வழி உள்ளது சகோதிரிகளே. ஆணோடு உறவு கொள்வதைவிட அது சுகமானது, சுலபமானது. பணம் இல்லை என்றாலும், இன்பம் உண்டு.
okay your point very nice but our body comes any problems in futures
முட்டாள்தனமான மூடத்தனமான ஒரு செய்தி . இன்றைய வரதட்சனை வழக்குகளில் வரதட்சனை வாங்காதவர்கல்தான் அதிகம் பாதிப்படைந்துள்ளார்கள். இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மைக்கு மாறாக உள்ளது. பெண் சொத்துரிமை சட்டப்படி யாரவது சொத்தை பிரித்து கொடுத்துள்ளீர்களா? எவனாவது இழிச்சவாயன் மாட்டினால் அவனுக்கு(கணவன்) இரண்டு சோள பொரியை கொடுத்து விட்டு அந்த பெண்ணின் அப்பனும் அண்ணனும் சொத்துக்களை அபகரித்து கொள்ளுவதால் அந்த பெண்ணே அதிகம் கஷ்டபடுகிறாள் . கணவனிடம் ஜீவானாம்சம் கேட்பது மட்டுமே இவர்களுக்கு தெரிந்த ஒன்று . அந்த பெண்ணின் சொத்தை அந்த கொள்ளைக்கார அப்பனிடமிருந்து வாங்கி கொடுக்க ஒருவரும் குரல் கொடுப்பதில்லை. இது பெண் ஆதரவு போன்ற நாடகம். உண்மையான அக்கறை எவனுக்கும் இந்த நாட்டில் கிடையாது.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் குற்றங்கள் அதிகம் செய்கிறார்கள் . அவர்களை பற்றி எழுத எவனுக்கும் தைரியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒன்று அது ஒரு ஓட்டு வங்கி! இன்னொன்று சபலபுத்தி படைத்த ஆண்கள் பெண்கள் ஆதரவாகவே பேசுவது! தனி மனித ஒழுக்கம் பற்றி தவறான கருத்துக்களே இன்று மக்களிடம் உள்ளது. சாப்பிட வாயை மட்டுந்தான் பயன் படுத்த முடியும். வேறு வழியாக சாப்பிட முயற்சிப்பது …………….
சுய புத்தி இல்லாதவர்களே இது போன்ற ஓர் சார்புடைய கருத்துக்களை எழுதுகிறார்கள் . சுய சிந்தனை வேண்டும் நம் மக்களுக்கு.
தோழரே !
கம்யூனிசம் தற்போதைய உலகத்தின் தோல்வியுற்ற மாடல் . குடும்பம் தான் பெண்ணுரிமைக்கு எதிரானது. முதலில் உங்கள் தோழர்களை மற்றும் தோழிகள் திருமணம் செய்வதை தடை செய்யுங்கள் . அதன்பின் பாருங்கள் பெண்ணுரிமையை எளிதாக கொண்டு வர முடியும். கட்சியில் ஐம்பது விழுக்காடு பதவிகள், தேர்தலில் ஐம்பது விழுக்காடு இடங்களை பெண்களுக்கு ஒதுக்குங்கள் . சும்மா வாயாலேயே சோறு போட வேண்டாம்.
ஒரு பெண் தன் காதலனின் ஆண் குறியை அறுத்து விட்டால் என செய்தி தாளில் வந்தது . பழைய கணவன் மீது ஆத்திரம் . இதுவும் பெண்ணுரிமை தானோ ! சப்பைகட்டான செய்தி உங்கள் அனைத்தும் மிகவும் பிற்போக்காக உள்ளன.