ஒரு மாதம் முன்பு பதிவர் அக்னி பார்வையை சந்தித்த போது நித்தியானந்தாவிற்கும் சாருவுக்கும் உள்ள மெய்சிலிர்க்கும் உறவை விரிவாகப் பேசினார். அதையே ஒரு கட்டுரையாக எழுதவும், வாய்ப்பு கிடைக்கும் போது பெங்களூருவிலிருக்கும் நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்குச் சென்று தகவல் திரட்ட வேண்டுமென்றும் கேட்டபோது உற்சாகமாக ஒத்துக்கொண்டார்.
ஆசிரமம் செல்வதற்கு சற்று காலதாமதம் ஆகி ஒரு வழியாக சென்று விவரம் திரட்டப்பட்டது. சென்ற ஞாயிறு அவர் எழுதி அனுப்பியிருக்க வேண்டும். வேலைச்சுமையால் பெரும்பகுதி முடிக்கப்பட்ட அந்தக்கட்டுரை அவரது ட்ராப்ட்டில் இருந்தது. புதன் இரவு நடக்க இருக்கும் திவ்ய தரிசனத்திற்குப் பிறகுதான் அந்தக் கட்டுரை எழுதப்பட வேண்டுமென்பது காலத்தின் விருப்பமென்றால் நாம் என்ன செய்ய முடியும்?
________________________________________
புதன் இரவு 8.00 மணி: நண்பரொருவர் தொலைபேசியில் உடன் சன் நியூஸ் பார்க்குமாறு அவசரத்துடன் கூறினார். என்ன விடயம் என்றதும் சொன்னார். ஆனால் நாம் இருந்த இடத்தில் டி.வி இல்லை என்பதால் வாய்ப்பிருக்கும் நண்பர்களிடம் பார்க்கச் சொல்லி விட்டு அக்னி பார்வையிடம் விசயத்தைச் சொன்னோம். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வழியிலிருந்தவர் ப்ரேக்கிங் நியூஸைக் கேட்டதும் உற்சாகமடைந்தார். உடன் சென்று கட்டுரையை முடித்து அனுப்புவதாக கூறினார். டி.வியைப் பார்த்தவர் இவ்வளவு தெளிவாக எடுத்திருக்கிறார்களே என்று வியந்து விட்டு கட்டுரையை அனுப்பினார்.
_________________________________
அதற்குள் தமிழ்மணத்தில் வார்த்தைகளாகவும், யூ டியூபில் காட்சியாகவும் நித்தியானந்தாவின் பள்ளி இரவு பவனி வர ஆரம்பித்தது. இடையில் தோழர் கில்லியிடம் சொல்லி சாருநிவேதிதா தளத்தின் முகப்பு பக்கத்தை காப்பி செய்யுமாறு கூறிவிட்டு காத்திருந்தோம்.
இரவு 12.00 மணி சுமாருக்கு சாருவின் தளத்தில் போஸ் கொடுத்த நித்தியானந்தா மாயமாக மறைந்து போனதை அக்னி பார்வை தெரிவித்தார். நல்லவேளை அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தை சேமித்து விட்டோம்.
_______________________________________
கதவைத் திற காற்று வரட்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர், கொஞ்சம் கவனிக்காமல் கதவை திறந்து வைத்ததால் அவரின் படுக்கையைறையில் காமிர நுழைந்து இப்பொழுது டீவிக்களில் நித்தியானந்தரின் காமக்களியாட்டம் அரைமணி நேரத்திற்கொருமுறை நவராத்திரி பூஜையாக ஓடுகிறது.
முன்பு நினைத்தவுடன் அந்த பின்நவீனத்துவ எழுத்தாளரின் எதிரில் திடீரென்று காரில் கடந்து போகும் நித்தியானந்தர், இனி நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் உங்கள் செல்போன்களில் சிரித்தபடி ஒரு பெண்ணுடன் காட்சி தருவார்..
நித்தியானந்த சுவாமிகள், பக்தர்களுக்கு ஜீவன முக்தி கொடுத்து, தியான பீடம் நடத்தி, வாழக்கை வாழ கற்று கொடுத்துக்கொண்டிருந்தவர் ஒரு சில நொடி சலனப்படத்தால் இப்பொழுது சலனப்பட்டுக் கொண்டிருக்கலாம்!
___________________________________
திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகர் ஏதோ குறி சொல்லிக் கொண்டிருந்த பையனாக இருந்தவர் ஒரு இனிய நாளில் கார்ப்பரேட் சுவாமியாக களமிறக்கப்பட்டார். அகமுடை முதலியார் எனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த இந்த பையன் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆன்மீகம், நிறைய சரக்கு என்று சுற்றிக் கொண்டிருந்தான். திருவண்ணாமலையில் ஓரளவு கணிசமாக வாழும் இந்தச்சாதிப் பிரமுகர்கள்தான் நித்தியானந்தாவை திட்டமிட்டு உருவாக்கினர். அரசியலில் அண்ணா, அன்பழகன் என்று பெரும் கைகள் உருவாயிருந்த இந்த சாதி வட தமிழகத்தில் எல்லா விதங்களிலும் முன்னேறிய சாதியாகும். எல்லாத் துறையிலும் கொடி கட்டிப் பறந்த இவர்களுக்கு ஆன்மீகத்தில் மட்டும் ஆளில்லை என்ற போது இந்தப்பையன் கிடைத்தான்.
ஆனந்த விகடனில் சுகபோதானந்தா ‘மனசே ரிலாக்ஸ்’ என்று பக்தர்களை பரவசப்படுத்திக் கொண்டிருந்த போது குமுதம் போட்டிக்காக நித்தியை ஆரவாரமாக இறக்கியது. சில வருடங்களுக்குள் நித்தியானந்தா கார்ப்பரேட் தரத்தை அடைந்து விட்டார்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேல் சென்னை புத்தகக் கண்காட்சியில் நித்தியானந்தா ஸ்டாலுக்கு சென்று பார்த்தால் ஏகப்பட்ட புத்தகங்கள், ஒளிக் குறுந்தகடுகள், திரும்பிய இடமெல்லாம் விவேகானந்தர் போல, பரமஹம்சர் போல, முண்டாசு கட்டி, சிரித்தவாறு, என்று என்னன்னமோ தினுசுகளில் படங்கள்……….என்னடா ஒரு அரைலூசுப் பையன் இந்த போடு போடுகிறானே என்று தெரிந்தவர்களுக்கு ஆச்சரியம்.
___________________________________
பெங்களூரு மைசூர் சாலையில் புறநகரில் பல பத்து ஏக்கர் நிலத்தில் நித்தியானந்தாவின் தலைமை ஆசிரமம் இருக்கிறது. நவீன பளிங்குகள் பதிக்கப்பட்ட கட்டிடங்களைப் பார்த்தால் அது ஆசிரமம் அல்ல, ஐந்து நட்சத்திர விடுதி என்றே தோன்றும். விடுதிகள், தியான மண்டபங்கள், சாமி அருள்பாலிக்கும் அரங்குகள், புத்தக விற்பனை நிலையம் என்று எல்லா வசதிகளும் அங்கே நேர்த்தியாக இருக்கின்றன.
ஆங்கிலம், இந்தி மற்றும் இந்திய மொழிகள் தெரிந்த உதவியாளர்கள் – பெண்களையும் உள்ளிட்டு – எல்லா பக்தர்களையும் மொழிபெயர்த்து சாமியிடம் சேர்ப்பதும் பின்னர் சாமி தமிழிலும், கன்னடத்திலும் பேசுவதை பக்தர்களிடம் சேர்ப்பிப்பதுமாய் இருப்பார்கள். பல்வேறு தியான பேக்கேஜ்கள் காலத்தைப் பொறுத்து 2500, 5000, 10,000 என்று எழுதி வைத்திருக்கிறார்கள். காசுக்கேற்ற தோசை. அல்லது சேலம் சிவராஜ வைத்தியரின் சிட்டுக்குருவி லேகியம், தங்க பஸ்பம், சாதா செட், ஸ்பெஷல் செட் போலவும் சொல்லலாம்.
நித்தியானந்தா தமிழகத்தை விட கர்நாடகத்தில் அதிக செல்வாக்குடன் திகழ்ந்ததற்குக் காரணம் அரசியல்வாதிகள். முதலமைச்சர் எடியூரப்பா முதல் ஏனைய எதிர்க்கட்சி பிரபலங்கள் எல்லாம் சாமியின் தீவிர பக்தர்கள். அடுத்து குறுகிய காலத்தில் உடலையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் பாதுகாப்பதற்கு விரும்பும் நவீன இளைய சமூகம் அதாவது ஜ.டி ஜென்டில்மேன்கள் ஆசிரமத்தை எப்போதும் நிரப்பி வந்தனர்.
திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் முக்கியமான இடத்தை நித்தியின் ஆட்களை கைப்பற்றி ஆசிரமம் வைத்திருக்கிறார்கள். இந்த இடம் குறித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு உள்குத்து இருப்பதால் இப்போது இவர்கள் சாமி அம்பலப்பட்ட பிறகு எதிர்த்திருக்கிறார்கள். இரண்டு ஊர் ஆசிரமங்களையும் சேர்த்தால் நித்தியானந்தா பல கோடிகளுக்கு அதிபதி.
நித்தியானந்த சுவாமிகளின் ஆன்மீக வகுப்புக்கள பல சுயநிதிக் கல்லூரிகளில் நடந்திருக்கின்றன. தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் பிடுங்கிக்கொண்டு கல்லூரி முதலாளிகள் மாணவர்களை மிரட்டி கொண்டு வந்திருக்கின்றனர். சில கல்லூரிகளில் மாணவர்கள் எதிர்ப்பு காட்டியதும் அவ்வப்போது செய்தியாக கசிந்தது உண்டு.
அப்புறம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிம்மதியை இடைவிடாமல் தெடும் வெள்ளைத் தோல் மனிதர்கள் வந்து சாமியை கண்டம் கடந்து தூக்கி சென்றார்கள். இப்படியாக ஒரு இளைஞன் பக்காவான கார்ப்பரேட் சாமியாக நிலைபெற்றான்.
____________________________________
கார்ப்பரேட் சாமியார்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் உள்ள உறவு என்பது சொல்லில் புரியவைக்க கூடியதல்ல. ஏனெனில் அந்த உறவு ஒரு நேர்த்தியான மார்க்கெட் தந்திரம். சாமியாரின் அசட்டு பிசட்டு தத்துவ அவஸ்தைகளை விறுவிறுப்பான மொழியில் நுட்பமான கதை சொல்லாடல்களுடன் பக்தர்களிடம் அள்ளி வீசுவதற்கு நவீன இலக்கியவாதிகள் கட்டாயம் தேவை.
விசிறி சாமியாரைப் பற்றி பாலகுமாரன், சுகபோதானந்தாவிற்கு ஆனந்த விகடனின் உதவி ஆசிரியர்கள், ஈஷா யோக ஜக்கி வாசுதேவிற்கு இரட்டையர்கள் சுபா என்றால் நித்தியானந்தாவை குமுதம் பத்திரிகையே தத்து எடுத்துக் கொண்டது. ஆனாலும் குமுதம் விரும்பிய அளவிற்கு நித்தியானந்தாவின் பத்திகள் அவ்வளவாக எடுபடவில்லை.
இந்த இடத்தில் சாரு வருகிறார்.
__________________________________
சாருவின் அபிமானிகள் என்ன கருதுகிறார்கள் என்றால் அவர் தெரியாமல் நித்தியானந்தாவிடம் சிக்கிக் கொண்டாராம். ஸீரோ டிகிரி என்ற கொலாஜ் கூட்டெழுத்து கதை நாவலாக தமிழில் முளைத்து, மலையாளத்தில் திளைத்து, ஆங்கிலத்தில் கொடிநாட்டி, அப்புறம் பிரெஞ்சு வரைக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்றால் அது நிச்சயம் சிக்கிக் கொண்டவரின் தகுதியல்ல.
பார்க், சோழா டீக்கடைகளில் அந்துமணி இரமேஷோடு குடிக்கும் அளவு உயர்மட்டங்களில் நெருக்கம் உள்ள சாரு விரும்பியே இந்த பிராண்ட் அம்பாசிடர் வேலையை இணையத்தில் செய்து வந்தார். தனது எழுத்தின் அக்கப்போர் சுவராசிய வலிமை காரணமாக நித்தியானந்தாவை வலையுலகில் நிலைநாட்டுவதை ஒரு சவாலாகவே செய்து வந்தார்.
இதற்காக சாரு எவ்வளவு பணம் பெற்றிருப்பார்? கூச்சல் நிறைந்த டாஸ்மார்க் பாரில் ஒரு உன்னத தமிழ் எழுத்தாளனை குடிக்கவைத்து சித்ரவதை செய்யும் தமிழ் உலகோடு அற ஆவேசப் பகை கொண்டுள்ள அந்த எழுத்தாளன் ஒரு பெருங்கனவோடு இந்த காரியத்தை விருப்பத்துடனே ஏற்றிருக்க வேண்டும். ரிசல்ட் காட்டிய பின்புதான் பணம் என்பாதாகக் கூட அந்த ஒப்பந்தம் இருந்திருக்கலாம். ஒப்பந்தம் குறித்து சாருவே தெரிவித்தால்தான் உண்டு.
சாய்பாபாவின அற்புதக் கதைகள், வாயிலிருந்து லிங்கம், கையிலிருந்து தங்க நகை, காலன்டரிலிருந்து விபூதி, நிலவில் சாய்பாபா முகம் என்றெல்லாம் ஆன்மீக உலகை நிறைவித்து பழக்கியிருக்கிறது என்பதால் சாருவும் துணிந்து அடித்தார். விழுப்புரம் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது எதிர் காரில் நித்தியானந்தா ஆசிர்வதித்து சென்றாராம். உண்மையில் அந்த நேரம் நித்தியானந்தா பெங்களூருவில் இருந்தாராம். இவையெல்லாம் நமது கற்பனை அல்ல. நேரம் பார்த்து வைரசால் அழிக்கப்பட்ட சாருவின் புதைபொருள் பத்திகளில் எழுதப்பட்ட அற்புதக் காவியங்கள்.
மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்ட சாருவும், அவரது மனைவியும் பெங்களூரு ஆசிரமம் சென்றார்களாம். சாமியும் அவர்கள் காலில் குச்சியை தட்டியதும் வீக்கம் குறைந்து நோய் மறைந்ததாம். டி.ஜி.எஸ் தினகரின் முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள், என்ற சாட்சிக்கதைகள் சாருவால் நவீன ஊடகமான இணையத்தில் அள்ளி வீசப்பட்டன.
இவையெல்லாம் தெரியாமல் செய்த தவறுகளா? இல்லை தெரிந்தே செய்த சதிகளா? நித்தியானந்தாவிற்கு தான் பொறுக்கி என்பது தெரிந்திருந்தாலும் முகத்தில் தேஜஸ்ஸுடன் ஆன்மீகத்தை ஒன்றிப் பேசும்போது அவனை மார்கெட் செய்யும் ஒரு தரகனும் தனது மோசடியை நீதியாக நிலைநாட்டத்தான் செய்வான். சாரு செய்தார்.
அவரது பின் நவீனத்துவ அறத்தின் படி இது ஒன்றும் தவறல்ல. இப்போது நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் குடும்பம் நடத்தும் காட்சிகளும் கூட அந்த அறத்தின் படி தெற்றல்ல. என்ன இருந்தாலும் செக்ஸ் என்பது கூட தாந்தீரிக யோகத்தின் படி முக்தியை அடையும் ஒரு வழிதானே? ஆனாலும் சாரு தனது தளத்தில் தனது குருநாதனின் படத்தை அழித்து விட்டார். இது வேறு எதனைக்காட்டிலும் பின் நவீனத்துவத்திற்குச் செய்யப்படும் துரோகமாகும்.
இலக்கிய உலகின் கிசுகிசுக்களையும், அக்கப்போர்களையும் வாரமலரின் துணுக்கு மூட்டை தரத்தில் எழுதி இரசிகனுக்கு தீனி போட்ட ஒரு எழுத்தாளனின் குருநாதனும் அதே முறையில் ஆனால் கிசுகிசுவாக இல்லாமல் தெளிவான வீடியோ காட்சிகளாக பரபரப்பாக தமிழக இளைஞர்களுக்கு தீனி போட்டது நகை முரணல்ல. ஒத்ததை ஒத்ததுதான். ஆனால் முரண்பாடாக இருப்பது சாரு ஒரு நிலபிரபுத்தவ ஒழுக்க சீலனாக தன்னை இப்போது காட்டிக் கொள்ள நினைப்பதுதான்.
ஆனால் நாம் பின் நவீனத்துவத்தை ஏற்கவில்லை. பெரும் பணக்காரர்களின் பணத்தைக் கொண்டு உல்லாசமாக பொறுக்கியாக வாழும் ஒரு ஆசிரமப் பொறுக்கிக்கு இணையத்தில் தரகு வேலை பார்த்தவர்தான் சாரு நிவேதிதா. நித்தியானந்தாவை காறி உமிழ்பவர்கள் முதலில் குமுதத்தையும் அடுத்து சாருவையும்தான் கவனிக்க வேண்டும். ஆன்மீகத்திற்கு அறிவின் பெயராலும், மொழியின் கருவியாலும் அச்சாரம் போட்டு வாசகனை இழுத்து விட்டவர்கள் இவர்கள்தான்.
__________________________________________
சாய்பாபா, பிரேமானந்தா, சங்கராச்சாரி, தேவநாதன் என்ற வரிசையில் இப்போது நித்தியானந்தா. ஆனாலும் நித்தியானந்தா செய்திருப்பது சட்டப்படி குற்றமல்ல. அவர் நடிகை ரஞ்சிதாவை பாலியல் வன்முறை செய்யவில்லை. இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியிருக்கின்றனர். வேண்டுமானால் ரஞ்சிதாவிற்கு திருமணம் ஆகியிருந்தால் இது கள்ள உறவு. ஒரு வேளை அவர் விவகாரத்து பெற்றிருந்தால் இது கள்ள உறவும் அல்ல. ஆனால் இது ரஞ்சிதாவோடு மட்டும் இருந்திருக்கக்கூடிய உறவல்ல. ஊர்மேய்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் இருந்தால் ஒரு பொறுக்கி ஒன்றோடு நிறைவு பெறுவதில்லை.
தேவநாதனும் யாரையும் கற்பழிக்கவில்லை. இந்து ஆகம விதியின் படி கருவறையை பள்ளியறையாக பயன்படுத்துவது கல்லாலான சிலைகளுக்கு மட்டுமல்ல அந்த பேசா சிலைகளுக்கு தரகர்களாக இருக்கும் புரோகிதர்களுக்கும் உள்ள உரிமைதான் என்பதைக்கூட சாத்திரத்தை வைத்து நியாயப்படுத்தலாம். இப்போது தேவநாதன் ஜாமீனில் வெளியே கிராப் வைத்த தலையுடன் ஊர் உலகத்தில் செய்யாத தவறையா செய்து விட்டேன் என்று பேட்டி கொடுக்கிறான்.
சங்கரராமனை ரவுடிகளை வைத்து கொன்ற ஜெயேந்திரனும் கூட இப்போது எல்லா சாட்சிகளையும் பிறழ வைத்திருப்பதால் குற்றவாளியில்லைதான். மற்றபடி ஜெயேந்திரன் பெண்டாண்ட காட்சிகளை எந்த காமராவும் அவ்வளவு சுலபாமா எடுத்திருக்க முடியாது. அப்படி எடுத்திருந்தால் காமராக்காரன் இந்நேரம் பரலோகம் போயிருப்பான். நாளை நித்தியானந்தாவை மன்மதனாக சித்தரிக்கும் எல்லாப் பத்திரிகைகளும் ஜெயேந்தரனுக்கு பழைய லோககுரு பட்டத்தை எப்போதோ வழங்கி விட்டன.
சாய்பாபா ஆசிரமத்தில் நடந்த கொலைகளும், பாபாவின் பாலியல் வன்முறைகளை வெளிநாட்டு சானல்களே அம்பலப்படுத்தியிருந்தாலும் அந்த ஹிப்பித் தலையனின் செல்வாக்கு மங்கவில்லை. இன்றும் பிரதமர், குடியரசுத் தலைவர்கள் அங்கே அடிபணிந்தே வணங்குகிறார்கள். மற்றொரு கார்ப்பரேட் சாமியாரிணியான மாதா அமிர்தானந்த மாயியின் ஆசிரமத்திலும் கூட கொலைகள் நடந்துள்ளன. ஆனால் அம்மாவை யாரும் அசைக்க முடியவில்லை.
கந்து வட்டிக்காரனிடம் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்யும் விவசாயிகளின் நாட்டில்தான் இந்த இந்து மத சாமியார்கள் என்ற ஒரிஜனல் கிரிமினல்கள் சுத்த சுயம்புவாக வலம் வருகிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டு போனாலும் இவர்களை மீட்டு வந்து பாதுகாப்பதற்கு ஆளும் வர்க்கங்கள் கர்ம சிரத்தையாக தயாராக இருக்கின்றன. வேறு எதனையும் விட மதநம்பிக்கைகள் உளுத்துப் போவதை அவர்கள் தமது வலிமையால் எப்போதும் ஒட்டவைத்து வருகிறார்கள்.
மக்களும் குறிப்பாக நடுத்தர வர்க்கம் இந்த ஊழலை மத வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக்கொண்டு விடமால் பின் தொடர்கிறது. குறுக்கு வழியில் முன்னேறலாம் என்பது பொருளாதாரத்தில் கோலேச்சும்போது இந்த மோசடிப் பேர்வழிகளில் அவ்வளவு செல்வாக்கு இல்லாத சாமியார்களை போலிகள் என்று ஒதுக்கி வைத்துவிட்டு செல்வாக்குடன் திகழும் உண்மையற்ற சாமியார்களை நல்லவர்கள் என்று கொண்டாடப்படுகின்றனர். ஜெயேந்திரன் லீலைகள் சந்தி சிரித்துக்கொண்டிருந்த போது பார்ப்பனர்கள் மட்டும் கர்ம சிரத்தையாக பெரியவாள் தப்பு செய்யவில்லை என்று உறுதியாக நிற்கவில்லையா என்ன?
__________________________________
நித்தியானந்தாவாவோடு முரண்பட்ட ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவரால் இந்த வீடியோ வெகு சிரத்தையாக எடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்கு முன்னரே எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை யாரும் வெளியிட விரும்பவில்லை. பெரும்பாலான பத்திரிகைகள் கார்ப்பரேட் சாமியார்களை வைத்து தமது நடுத்தரவர்க்கத்து வாசகர்களுக்கு நன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்ற மாயைகளை விதைத்து வந்தவர்கள் தங்களையே வில்லன்களாக காட்டுவதற்கு சம்மதிப்பார்களா என்ன?
சன் டி.வி இதைக் காட்டியதில் ஊடக முதலாளிகளிடம் உள்ள போட்டி பெரிதும் பங்காற்றியிருக்கிறது. கலைஞர் டி.வி தொடரில்தான் நடிகை ரஞ்சிதா நடித்து வருவதால் சன்.டி.விக்கு பாதிப்பில்லை. ஒரு வேளை சன் தொடர்புடைய நடிகைகளை கலைஞர் டி.வி காண்பிக்கும்பட்சத்தில்தான் சன்னுக்கு பிரச்சினை. ஆனாலும் இரண்டும் கழக கண்மணிகளின் சொத்து என்பதால் பெரிய பிரச்சினையில்லை.
நக்கீரன் பத்திரிகை நித்தியானந்தாவை வெளியிடுவதும் கூட போட்டி மற்றும் தனது குழும சாமியார் அல்ல என்ற தைரியம் மட்டும்தான். ஜக்கி வாசுதேவை நக்கீரன் உட்பட எல்லா பத்திரிகைளும் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன என்பதும் இங்கே முக்கியம்தான். ஒருவேளை ஜாக்கிக்கு இது நடந்திருந்தால் இந்த விடயம் வெளியே வந்திருக்காது. ஏனெனில் எல்லா பத்திரிகைகளும் அவரது அன்பில் நனைந்தவைதான்.
_________________________________________
கடந்த சில ஆண்டுகளாக நித்தியானந்தா புராணம் படித்த குமுதம் பத்திரிகை இதைப்பற்றி என்ன எழுதும்? பிரபலங்களின் காமக் களியாட்டங்களை ஆபத்தில்லாமல் கிசுகிசுவாக எழுதும் குமுதம் இப்போது தனது சாமியார் இப்படி அப்பட்டமாக சிக்கிக் கொண்டது குறித்து என்ன எழுதும்? அந்த பத்திரிகையை பத்து ரூபாய்க்கு வாங்கிப்படிக்கும் வாசகர்கள் என்ன கருதுவார்கள்?
யாரும் குமுதம் பத்திரிகைக்கு செருப்படி தரப்போவதில்லை என்பதால் சற்று காலம் கழித்து இது மறக்கப்படும் என்பதுதான் அவர்களின் நம்பிக்கை. நித்தியானந்தா கூட இது மோசடிப்புகார் என்று சவடால் விட்டு இதை நீதிமன்றத்தில் நீருபிப்பேன் என்று பேசமாட்டார் என்பதற்கு உத்திரவாதமில்லை. அதனால் சாருவும் கூட நம்பிக்கையை கைவிடவேண்டியதில்லை.
சாருவின் தளத்தில் வலப்பக்கத்தில் இருந்த நித்தியானந்தா இப்போது மறைந்துவிட்டார். இடப்பக்கத்தில் இருப்பது நல்லி விளம்பரம். நல்லி இடத்தில் காமரா நுழைவது சாத்தியமல்ல என்பதால் சாரு சற்று நிம்மதியாக இருக்கலாம். இத்தனைக்குப் பிறகும் இந்தப்பொறுக்கி சாமியாரின் இணையத் தரகனுக்கு அனுதாபம் தெரிவித்து ஆதரவு தெரிவிப்பதற்கு ஆட்கள் இல்லாமலா போய்விடுவார்கள்?
– அக்கினிப்பார்வை, இராவணன் உதவியுடன் வினவு.
************
தொடர்புடைய பதிவுகள்
- குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !
- பாரு நிவேதிதா – சுயமோகன் ஒரு லடாய் !
- ஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை – டாக்டர்.ருத்ரன் !
- கட்டைவிரல் கேட்கும் நவீன துரோணாச்சாரியர்கள் – டாக்டர் ருத்ரன்
- சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !
- பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!
- முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!
- திருப்பதி ஏழுமலையானை கைது செய்!
- சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் !!
- ‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !
- ஆபாச நடிகை நக்மா நடத்திய ‘அல்லேலூயா’ மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி
- ” நமீதா அழைக்கிறார் ” – நாசரேத் ஆயர்
இமேஜ் அடிவாங்கிய குழப்பத்தில் சாரு !!! போட்டார் – தூக்கினார் !!!
பெரியதாய் பார்க்க படத்தை சொடுக்கவும் – நன்றி பதிவர் ரோமியோ
ரோமியோவின் இந்தப் பதிவில், சாரு ஒரு பதிவை போட்டு.. அதை உடனே அழித்ததை… (நித்யானந்தன் என்ற அயோக்கியன்) ஸ்னேப் ஷாட்டாக எடுத்துப் போட்டிருக்கார். பாருங்க! 🙂 🙂
I sent a mail to Vikatan editor to stop articles and stories of SERU NEE THAN when he wrote about incest in that weekly,(b cas i scared what the teens think about the family members when they read this kind of stories) this guy is a killer worm for our tamil community,more over he is getting more importance with the support of some good writers too, my dear brothers, all human beings having cruel thoughts, and naturally majority of humans over powering the thoughts to be a better part of the society, but these kind of Kuppai manithargal தன் தீய ஒழுக்க கேடான செயல்களை anaivaraiyaum seyya thounduvathan moolam கலாச்சார seralivai undakka muyarchi seigirargal, if i got a chance to share the bar table with him sure i will mix urine in his liquor bottle to teach a lesson for the story in vikatan, who knows may somebody did already
//ஜக்கி வாசுதேவை நக்கீரன் உட்பட எல்லா பத்திரிகைளும் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன என்பதும் இங்கே முக்கியம்தான். ஒருவேளை ஜாக்கிக்கு இது நடந்திருந்தால் இந்த விடயம் வெளியே வந்திருக்காது. ஏனெனில் எல்லா பத்திரிகைகளும் அவரது அன்பில் நனைந்தவைதான்.///
அதனால்தான் அவரது மேட்டர்களெல்லாம் வெளியே வருவதில்லை. ஆனால் ஜக்கி மடம் அடிப்பது பகல் கொள்ளை.
எப்படா வினவுல கட்டுரை வருமுணு காத்துக்கிட்டு கிடந்தது வீணாப் போகலை. தலைப்புல குமுதானந்தாவையும் சேத்துருக்கலாம். ம்…..இந்தக் கட்டுரைய எந்தப்பயபுள்ளைகளும் எதுக்க மாட்டாகங்கறதுதான் வருத்தமா இருக்கு.
நன்றி வினவு..
சாருவின் தளத்தில் இருந்து எடுத்த வார்த்தைகள் இவை.
// I am not disappointed but i am only worried that i may not be able to learn the Yoga from Nitya after this, if he winds up his ashram now.//
எப்படியெல்லாம் சமாளிக்கிரானுங்க பாருங்க..
இதுல இறுதி தீர்ப்பு வேற சொல்றாராமாம்..
// This too shall pass, so, just chill out and relax Boss,//
இந்த நேரத்திலாவது நித்யானந்த சுவாமிகளைப்பற்றி அறிவதோடல்லாமல், சாரு, ஜெயமோகன் போன்ற கழிசடைகளையும் நன்கு புரிந்துகொள்ளவேண்டிய அவசியமிருக்கிறது நமக்கு.
சாருவுக்கு, ராஜன் என்ற புனைப்பெயரோ? அந்த பன்னாடை பேரு நித்தியானந்தன் உண்மையான பேரு என்ன? அவன் கூட எழுதியிருப்பான்.
மேனகைகளுக்கு நன்றி!
கடவுள் இல்லை என்பதை எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் செய்ய முடியாத சாதனையை உங்கள் ‘தியாகங்களால்’ செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
நித்தியானந்தாவின் பரம பக்தன் சாருவின் சிஷ்ய கோடிகள் லக்கி லுக், அதிஷா, நர்சிம், கேபிள் சங்கள் இத்யாதிகள் சாருவை கடவுளாக தூக்கிப்பிடித்து பதிவுலகில் டான்ஸ் போட்டார்கள். அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பது சரியா, இல்லை சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது சரியா, இல்லை உதைப்பது சரியா? ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள்.
கந்து வட்டிக்காரனிடம் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்யும் விவசாயிகளின் நாட்டில்தான் இந்த இந்து மத சாமியார்கள் என்ற ஒரிஜனல் கிரிமினல்கள் சுத்த சுயம்புவாக வலம் வருகிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டு போனாலும் இவர்களை மீட்டு வந்து பாதுகாப்பதற்கு ஆளும் வர்க்கங்கள் கர்ம சிரத்தையாக தயாராக இருக்கின்றன. வேறு எதனையும் விட மதநம்பிக்கைகள் உளுத்துப் போவதை அவர்கள் தமது வலிமையால் எப்போதும் ஒட்டவைத்து வருகிறார்கள்.
மக்களும் குறிப்பாக நடுத்தர வர்க்கம் இந்த ஊழலை மத வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக்கொண்டு விடமால் பின் தொடர்கிறது. குறுக்கு வழியில் முன்னேறலாம் என்பது பொருளாதாரத்தில் கோலேச்சும்போது இந்த மோசடிப் பேர்வழிகளில் அவ்வளவு செல்வாக்கு இல்லாத சாமியார்களை போலிகள் என்று ஒதுக்கி வைத்துவிட்டு செல்வாக்குடன் திகழும் உண்மையற்ற சாமியார்களை நல்லவர்கள் என்று கொண்டாடப்படுகின்றனர்.
யாரும் குமுதம் பத்திரிகைக்கு செருப்படி தரப்போவதில்லை என்பதால் சற்று காலம் கழித்து இது மறக்கப்படும் என்பதுதான் அவர்களின் நம்பிக்கை. நித்தியானந்தா கூட இது மோசடிப்புகார் என்று சவடால் விட்டு இதை நீதிமன்றத்தில் நீருபிப்பேன் என்று பேசமாட்டார் என்பதற்கு உத்திரவாதமில்லை. அதனால் சாருவும் கூட நம்பிக்கையை கைவிடவேண்டியதில்லை.
//கடந்த சில ஆண்டுகளாக நித்தியானந்தா புராணம் படித்த குமுதம் பத்திரிகை இதைப்பற்றி என்ன எழுதும்? பிரபலங்களின் காமக் களியாட்டங்களை ஆபத்தில்லாமல் கிசுகிசுவாக எழுதும் குமுதம் இப்போது தனது சாமியார் இப்படி அப்பட்டமாக சிக்கிக் கொண்டது குறித்து என்ன எழுதும்? அந்த பத்திரிகையை பத்து ரூபாய்க்கு வாங்கிப்படிக்கும் வாசகர்கள் என்ன கருதுவார்கள்?//
குமுதம் ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளின் பாதி பக்கங்கள் விளம்பரம் எனில் மீதி பாதியில் முக்கால் பங்கு சினிமா நடிகர்கள் சார்ந்த கவரப்புகள், சாமியார்களின் போதனை பக்கங்கள் இத்யாதி இத்யாதி தனிமனித க்ளோஸ் ஸ்ப் என்று இருக்கும்.
இவை அனைத்தும் அந்த மாகணம் பொருந்திய தனிமனிதர்களின் பி ஆர் ஓக்கள் பத்திரிகைக்கு காசு கொடுத்து பிரசுரிக்க வைக்கும் விளம்பரங்கள் என்பது எனது சந்தேகம். குமுதம் நித்தியாவை தூக்கி வைத்து ஆடியது என்பதை விட அவனது விளம்பரத்தை பிரசுரித்து வந்தது அவ்வளவே. இதில் இருவருக்கும் அனுகூலம் இருந்தது. அவனது பக்தர்கள் இவனது வாசகன். இவனது வாசகன் அவனது பக்தன்.
இந்த உறவு என்றும் மாறாத அன்பு உறவு
அசுரன்
இன்னும் எத்தனை பெரியார் வரவேண்டும் இவர்களை விரட்ட. ஆனால் மக்கள் ஏன் இப்படி எவ்வளவு அடி வாங்கினாலும் விட மாட்டோம் என்கிறார்களே. சுயமாக சிந்திக்கும் எண்ணம் மக்களுக்கு வரும் வரை இது முடியப்போவதில்லை. அண்ணல் எப்போது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
சாரு,சுபா போன்ற எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகைகளின் கூட்டு ஆன்மீக விற்பனையை காட்டமாக ஆனால் தெளிவாக விவரித்துள்ளீர்கள்.
சாருவாவது பாவம் வேலையில் இல்லை.. அவரை மன்னிக்கலாம்…….ஆனால் இந்த சுபா வகையாறக்கள் பேங்க் ஊழியர்கள் ஆயிற்றே.. அவர்களுக்கு பணத்துக்கு என்ன பஞ்சம்…
நாகராஜ்
என்னது எப்படி அநியாயமா கல்கியைக் கண்டுக்காம விட்டிடீங்க!
தனிப் பதிவு தயாராகுதோ?
கல்கி சாமியார் சிஷ்ய கோடிகளுடன் போதையடித்துக் கொண்டு கூத்தடிப்பதை தெலுங்கு சேனல் ஒன்று ஒளிபரப்பிய செய்தியை இப்போதுதான் பார்த்தோம். பட்டியலில் கல்கி விடுபட்டது தூக்கக் கலக்கத்தில் நடந்த தவறு. எத்தனை சாமியார்களைத்தான் நினைவு வைத்திருப்பது…….?
அதென்னமோ கரெக்ட் தான். நானும் ஸ்ரீஸ்ரீன்னு சிரிச்சு இன்னொருத்தரை மறந்திட்டேன்.
Still you have many ppl..
Melmaruvathur…….. 🙂
மிக்க நன்றி நான் காலையிலிருந்து காத்திருந்தேன் உங்கள் பதிவிற்காக
//நித்தியானந்தாவின் பரம பக்தன் சாருவின் சிஷ்ய கோடிகள் லக்கி லுக், அதிஷா, நர்சிம், கேபிள் சங்கள் இத்யாதிகள் சாருவை கடவுளாக தூக்கிப்பிடித்து பதிவுலகில் டான்ஸ் போட்டார்கள். அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பது சரியா, இல்லை சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது சரியா, இல்லை உதைப்பது சரியா? ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள்///
இவர்கள் சாருவின் நண்பர்கள், பினாமிகளல்ல,சாருவின் வாசகர்களும், குடும்பத்தாரும், நண்பர்களும் திட்டபடுவதும், கட்டம்கட்டபடுவதும் வருத்தமானது கண்டனத்திற்குறியது.
எந்த நிலையிலும் சாமியர்கள் ஆதரிக்கப்படகூடாது, அதே போல் சமுகத்தை சீர் திருத்த வேண்டிய எழுத்தாளன் எக்காரணத்தைக்கொண்டும் சாமியாருக்கு சொம்பு தூக்க கூடாது.
இதில் கல்கியின் மோசடி செய்திகள் மறைந்துவிட்டது இன்னொரு ஆபத்து..
அதுத்து ஜக்கியும், ஸ்ரீஸ்ரீயும் கண்டுக்கொல்லபட வேண்டும் .
அக்னிபார்வை இந்தக் கட்டுரையில் உங்கள் பங்களிப்புக்கு வாழ்த்து.
சாருவை சமூகத்தை சீர்திருத்தும் எழுத்தாளன் என்று நீங்கள் எழுதியது காமடிதானே?
சாரு தனது மனைவி சாமியாரின் பெரும் பக்தை என்று பலமுறை சொன்னவர். சாருவை தனது கடவுளென்றும் தான் பக்தனென்றும் லக்கி பிரகடனமே செய்துவிட்டு இப்போது வாயைத் திறக்காத லாஜிக் என்ன? எல்லா மொக்கைகளும் நித்யாவை வாங்கும்போது மொக்கைகளின் சூப்பர் ஸ்டார் லக்கி மட்டும் வாயை ஷட்அப் செய்திருக்கும் காரணம்?
தோழர் நந்தாவின் பின்னுட்டதை வழிமொழிகிறேன்
//சாருவை தனது கடவுளென்றும் தான் பக்தனென்றும் லக்கி பிரகடனமே செய்துவிட்டு இப்போது வாயைத் திறக்காத லாஜிக் என்ன?//
ரியல் என்கவுண்டர். நித்தியானந்தன் மாட்டிக்கிட்டான். அவரை சாரு ஆதரிச்சாரு. சாருவை லக்கி ஆதரிச்சாரு. அடுத்து லக்கியை ஆதரிச்ச பதிவர்களையும் கேள்வி கேப்பீங்க போல.
லக்கி ஏற்கனவே சாருவோட கடவுள் நம்பிக்கை மற்றும் நித்தியானந்தர் வழிப்பாட்டை பகடி செஞ்சிருக்காரு. ஒரு பதிவும் போட்டிருக்காரு. லக்கி மீது விமர்சனம் வெக்கணும்னா வேற வெக்கலாமே தவிர இந்த விமர்சனத்தை எல்லாம் ஏத்துக்க முடியாது.
@@@லக்கி ஏற்கனவே சாருவோட கடவுள் நம்பிக்கை மற்றும் நித்தியானந்தர் வழிப்பாட்டை பகடி செஞ்சிருக்காரு.@@@
திருப்பதியில போய் மொட்ட போடுற பக்தனுக்கு இருக்கும் கடவுள் நம்பிக்கையும், காசுக்காக சாமியார புகழ எழுதும் சாருவுக்கு இருக்கும் ”நம்பிக்கை”யும் ஒன்று கிடையாது… முந்தையது அறியாமை பிந்தையது அயோக்கியத்தனம்… சாரு அயோக்கியர்.
ஏதோ அறியாத பிள்ளை போல பகிடி செய்வதெல்லாம் அயோக்கியத்தனத்துக்கு துணை போவதுதான்…. அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துவதே சரியானது. லக்கி உள்ளிட்ட பதிவர்கள் சாருவின் இந்த மோசடியை அம்பலப்படுத்தாமல் இருந்த்து அவர்களின் சந்தரப்பவாதமே..
//அதுத்து ஜக்கியும், ஸ்ரீஸ்ரீயும் கண்டுக்கொல்லபட வேண்டும்///
என்னைக்கு மாட்டுவார்களோ.
Jai Guru Dev
சாரு சாரு சாரு… போதும்பா அவன பத்தி பேசனது.. நித்தியானந்த வ பத்தி மட்டும் அவனோட அயோக்கிய தந்த மட்டும் பேசுங்கப்பா. இந்த கட்டுறிய படிக்கும் போது , எந்த அளவுக்கு சாரு வினவ பாதிச்சிருகாணு தெரியுது. எப்படா எதிரி மாடிக்குவானு ரா பகல தூங்காம வினவு சாறு காத்துகுனு இருந்தான் போல. வினவு இனிமே நிம்மதியா தூங்குவான் போல. போட்டி தளம் அழிஞ்சிருச்சி இல்ல.
ஐயா நீங்க சாருவோட விசிரியா
கார்திக்கு, அண்ணன் முட்டாஊ சாருவோட விசிறி இல்ல, வினவுக்கு எதிரி.. வினவு என்ன எழுதுனாலும் இவருக்கு பின்னால பச்சமொளகா வச்சமாதிரி பத்திக்கும். தட்ஸ் ஆல்
ஒ அப்படியா உண்மை இவருக்கு கசக்கும் போல
சாருவுக்கு பார்க் ஷெரட்டனில் மூத்திரம் வாங்கித்தருகிறேன் வா என்று அழையுங்கள், வருவான்.
அற்புதமான கமெண்ட்
செம்ம 😛
//அதுத்து ஜக்கியும், ஸ்ரீஸ்ரீயும் கண்டுக்கொல்லபட வேண்டும்// தம்பி அக்னிபார்வை இரண்டு சாமிகளை கண்டு கொள்ளணும்னு சொல்லுதீகளா இல்லை கண்டு கொல்லணும்னு சொல்லுதீகளா? எனக்கு இரண்டாம் விசயந்தான் நல்லதுன்னு படுது பாத்துக்கிடுங்க!!
சில நேரங்களில் எழுத்து பிழைக்கூட சரியான விடையை சொல்லிவிடுகிறது
திருடனுக்கு தேள் கொட்டிய கதை இப்போது சாருநிவேதித்தாவுக்கு, இவர்களை போன்ற அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொண்டு திரியும் எழுத்தாளர்கள்தான் பல சாமியார்களுக்கு அஸ்திவாரமாக உள்ளனர். இவர்கள் எல்லாம் என்றைக்காவது ஓட்டுச்சீட்டு அரசியல் ரவுடிகளால் நசுக்கப்படும் உழைக்கும் மக்களின் உரிமைக்காக, வாழ்கைக்காக பேசி இருப்பார்களா ? அல்லது கட்டுரையாவது எழுதியிருப்பார்களா ? மக்களிடம் இருந்து ஒதுங்கி நிற்க்கும் இவர்கள் விரைவில் மக்கள் காலடியில் விழும் நாள் நெருங்குகிறது. நித்தியாநந்தனுடன் படுக்கை அரையில் இருப்பது எந்த நடிகை என்று விவாதிப்பவர்கள் மத்தியில் சாருநிவேதிதா போன்ற பின்நவீனத்துவ வாதிகளை அம்பலப்படுத்திய வினவிற்க்கு வாழ்த்துக்கள். அடுத்து, உழைக்கும் மக்கள் தலைமையில் அனைத்து சாமியார்களுக்கும் மூலவர் ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகேடி சங்கரரச்சாரிக்கு பாடை கட்டுவோம்.
சாரு தன் வளைத்தளத்தில் நித்தியானந்தாவை மறைய வைத்தது போல், ஷீரடி சாய்பாபாவையும் மறைய வைத்து விட்டாரே!!
சாரு தன் வளைத்தளத்தில் நித்தியானந்தாவை மறைய வைத்தது போல், ஷீரடி சாய்பாபாவையும் மறைய வைத்து விட்டாரே!!………..
இன்றிலிருந்து சாரு நாத்திகர்.
ரவி இப்படி சொல்லக்கூடாது அவர் நாத்திகர் இல்ல.. இஸ்லாத்தை பின்பற்றுபவர்..
//சாருவை தனது கடவுளென்றும் தான் பக்தனென்றும் லக்கி பிரகடனமே செய்துவிட்டு இப்போது வாயைத் திறக்காத லாஜிக் என்ன?//
ரியல் என்கவுண்டர். நித்தியானந்தன் மாட்டிக்கிட்டான். அவரை சாரு ஆதரிச்சாரு. சாருவை லக்கி ஆதரிச்சாரு. அடுத்து லக்கியை ஆதரிச்ச பதிவர்களையும் கேள்வி கேப்பீங்க போல. 🙂
லக்கி ஏற்கனவே சாருவோட கடவுள் நம்பிக்கை மற்றும் நித்தியானந்தர் வழிப்பாட்டை பகடி செஞ்சிருக்காரு. ஒரு பதிவும் போட்டிருக்காரு. லக்கி மீது விமர்சனம் வெக்கணும்னா வேற வெக்கலாமே தவிர இந்த விமர்சனத்தை எல்லாம் ஏத்துக்க முடியாது.
நந்தா
சாருவும், நித்தியாவும்தான் விவாதப் பொருள். அதை ஒட்டித்தான் அப்படி கேட்டது. இப்போது இந்து மக்கள் கட்சியும் நித்தியாவை எதிர்க்கிறார்கள். எனவே நாமும் அந்த கட்சியோடு ஒன்ற முடியுமா? ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என்பதால் ஒரு கருத்துள்ள அணி உருவாகாது என்று படுகிறது. இந்து முன்னணி இராம கோபாலன், ஜயேந்திரன் போன்றோர் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. குமுதம் பத்திரிகை ஸ்டாண்ட் என்ன அதுவும் தெரியவில்லை. எப்படியும் ஜயேந்திரனை பாதுகாத்த்து போல நித்தியாவையும் உடனடியாக பாதுகாக்க மாட்டார்கள். ஆனால் நாளை என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?
இத்தகைய சாமியார்கள் ஆயிரம் முறை மாட்டினாலும் ஆயிரத்து ஓராவது ஒரு சாமியார் வந்தால் அவருக்கு மடங்கள் என வந்து கிட்டே இருக்கு
மதம் மக்களை மயக்கும் அபினின்னு சரியாத்தான் சொன்னார் மார்க்ஸ்
ஆனா ஒரு சந்தேகம் சத்திய சாயிபாப இப்படி இன்னொரு ரஞ்சிதாவுடன் இருக்கும் விடீயோவை பார்த்தால் கருணாநிதி என்ன சொல்லுவார்
ராஜாத்தி அம்மாவை காலில் விழவைத்து தன் வீட்டு பாபாவை வரவழைத்த மகா நாத்திகராச்சே
small correction, விழுந்தது துணைவி அல்ல மனைவிங்கோ
சே எல்லாமே துணைவியா தெரியுது சன் நீயூசை ஆப் பண்ணுங்கப்பா
அம்மாபகவான் தம்பதியராக? கிளம்பியிருக்கின்றனரே. வினவு தெளிவுபடுத்துமா?
//சமீபத்துல நித்யானந்தர் இப்படி எழுதியிருந்தாரு… ‘நிஜமான ஒரு யோகியால்தான் தன்னைத்தானே கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி வெற்றி பெறுவதெல்லாம் சாத்தியம். சரியான நுட்பம் தெரியாமல் புலன்களைச் சாதாரண மனிதர்கள் அடக்க முயற்சிப்பது பல நேரங்களில் தோல்வியில்தான் முடிவடைந்துவிடுகிறது.’
சரியாத்தான் சொல்லியிருக்காரு. நித்யானந்தர் நிஜமான யோகி இல்லை. சாதாரண மனிதர்தான். அதனாலதான் அவர் புலன்களை அடக்க முயற்சி பண்ணவே இல்லை.//
பதிவர் கிருபாநந்தினி பதிவிலிருந்து………
எனக்கென்னவோ சாதாரண மனிதர்கள்தான் அடக்கத்துடன் வாழ்வதாகவும், சாமியார்கள்தாதன் அடக்கமின்றி ஆடுவதாக தெரிகிறது
“சாருவை தனது கடவுளென்றும் தான் பக்தனென்றும் லக்கி பிரகடனமே செய்துவிட்டு இப்போது வாயைத் திறக்காத லாஜிக் என்ன?//”
லக்கிலுக் எபங்க வாய திறந்தரு…
அள்ளக்கைங்க எபாவுமே இப்படிதான்.விக்கிபீடியா இருக்குறதுனால இவங்க எல்லாம் பொளைக்குரங்க
சாரு நித்யாவுக்கு பல்லக்கு தூக்கினது அவரோட சொந்த விஷயம். ஆனா அவர் செஞ்சதுல எரிச்சல் ஊட்டுற விஷயம் என்னன்னா, தான் செய்றது தான் உலகத்துலே சரி, மத்தவங்க எல்லாம் கேணப் பயலுங்க அப்படீன்ற ரேஞ்சுக்கு எல்லாரையும் வறுத்து எடுப்பாரு. இதே நித்யா அமெரிக்காவுல இருந்தே சென்னையில மருத்துவமனையிலே இருந்த இவருடைய நண்பர் ஒருத்தருடைய உடம்புல புகுந்து டாக்டர்களே கை விட்ட கேஸ் ஐ குணப்படுதினாரு அப்படீன்னு அளந்து விட்டு, இது எல்லாம் சாதாரண மர மண்டைகளுக்கு புரியாது அப்படீன்னு எழுதுனது அயோகியதனத்தின் உச்சம்.
இந்த ‘ஏழை எழுத்தாளன்’ நித்யா கிட்டே கேட்டு இருந்தா தினம் ஒரு ‘அப்சல்யூட்’ வோட்காவை இவர் வீட்டுல மாயமா வர வச்சு குடுத்து இருப்பாரே. இப்ப கூட பாருங்க நான் ஒரு அப்பாவி. வழக்கம் போல எல்லாரும் என்னை தான் ஏமாத்துறாங்க, அப்படீன்னு புலம்பிட்டு, யாராவது இந்த ‘ஏழை எழுத்தாளனுக்கு’ டென் டி பார்ல 5000 ரூபா பிரான்ஸ் வைன் வாங்கி குடுப்பாங்களா அப்படீன்னு வாயில விரலை வச்சுக்கிட்டு கேப்பாரு பாருங்க.
சி.பி.எம் கட்சியின் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய பதிவிலிருந்து……….
//எனக்கு அக்காட்சியை பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது.பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அவனும் சாதாரண மனிதன்தானே.சின்னப்பையனான அவன் அவனோடு விரும்பி உறவு கொள்ளும் பெண்ணோடு இருக்கும் கணத்தைப் படம் பிடித்து ஊருக்கே காட்டுவது நாகரிகமாக எனக்குப்படவில்லை.காஞ்சி சாமிகள், பிரேமானந்த சாமிகள் போல பெண்களிடமிருந்து அவன் வல்லந்தம் செய்ததாக புகார் வராமல்- அவர்கள் இருவரும் காதலால் ஒருமித்தது போன்ற ஒரு வீடியோ காட்சியைக் காட்டும் போது அய்யோ பாவம் அவன் என்கிற உணர்வுதான் முதலில் எனக்கு ஏற்பட்டது.//
ஒரு தந்தையின் நிலையிலிருந்து தமிழ்ச்செல்வன் வருத்தப்படுவது போல சாரு கூட சிந்திக்க முடியாது. உ.ரா.வரதராஜன் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புனாறுன்னு சொல்லி அவரை கட்சியில இருந்து வெளியேத்தி கொன்னுட்டு ஒரு பொம்பள பொறுக்கி சாமியாரின் செக்ஸ் ஃபீலிங்குக்காக ஃபீல் பண்றது நல்ல தமாஸ்!!!
ஹாஹாஹாஹா…..
அப்பா வயித்த புடிச்சுக்கிட்டு சிரிச்சு சிரிச்சு…
ரொம்ப நாளுக்கப்பறம் இப்படிச் சிரிச்சு…போதும்.. நம்ம தோழர் தமிழ்ச் செல்வனுக்கு இத்தனை காமடி சென்ஸ் இருக்குமா….?
நாக்ராஜ்
தோழர் தமிழ்செல்வனுக்கு சொல்லுங்கள் , இங்கு பிரச்ச்னை நித்ய பெண்ணுடன் உடலுறவு கொண்டதல்ல, சாமியார் வேஷம் போட்டது.
ஆமாம் அக்னி இங்கு சாமியார் வேடம் போட்டது தான் மிகத் தவறு .இன்னும் மீதம் இருக்கும் அணைத்து சாமியார்கள் பற்றியும் எழுத வேண்டும் அக்னி
சரியாச்சொன்னீங்கன்னே………..
அண்ணன் ஏன் இவ்ளோ கவலை படுகிறார் ……..?
கடவுள் இல்லை என்பதை அப்போது பிரச்சாரம் செய்தார்கள்.. தற்போது பிரச்சாரம் தேவையில்லாமல் தானாகவே நடக்கிறது..
நாகராஜ்
நாகராஜ்…. ஜூப்பர!!!
//// நித்யானந்தரைப் பற்றி சாருவின் கட்டுரை இன்று மாலையில் வெளிவரும் ////
காலேல அயோக்கிய நித்யானந்தன் சாயங்காலம் நித்யானந்தரா, சாரு நெம்ப மனக்குழப்பத்துல இருக்காறு போலகீதே??????
சாருவின் கோவணம் கிழிந்தது…அவர்தான் மூடிக்கொள்ள வேண்டும்.
அப்புறமா என்ன சொல்லுவாரு, விடாமல் இந்து கடவுளின் திருவிளையாடல் என்பார், நான் தொடர்ந்து இவரைத்தான் பின்பற்றுவேன் என்று சொல்லி அதிர்ச்சி கொடுப்பார், இப்படி எதையாவது சொல்லி சம்மாளிக்க வேண்டியதுதானே. சாருவின் சிஷ்ய கேடிகள் (எழுத்துப்பிழை இல்லை) தொடர்ந்து “இவரு எது செய்தாலும் அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்” என்று பாயை பிராண்டி கொண்டிருப்பார்கள்.
கதவை திற நடிகை வரட்டும்!
…கதவை திற நடிகை வரட்டும்!…
அய்யா உடனே கட்டுரைய நிறுத்துங்க இல்ல பின்னுாட்டத்த துாக்குங்க
இதுக்கு மேல சிரிக்க முடியா சாமி…
நாகராஜ்
மிக்க நன்றி நான் காலையிலிருந்து காத்திருந்தேன் உங்கள் பதிவிற்காக
வெறிபிடித்தலையும் பதிவர்கள் !? http://agnipaarvai.blogspot.com/2010/03/blog-post.html
உங்களுடைய சோவியத் ராச்சியத்தில் இது போன்ற சம்பவங்களே நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்?உங்கள் கம்முனிஸ்டு தோழர்கள் ”தடுமாறியதே” இல்லாதது போல ஏன்டா கத விடுறீங்க?.முதல்ல உங்க முதுகுல இருக்கறத பாருங்கட..
சிவனை வணங்குபவர்களா நீங்கள்?
சிவனை விட நித்தியானந்தம் மோசமானவரா என்ன!
சாருவின் தளத்திலிருந்து நித்யானந்தம் படம் மாயமாய் மறைந்தது இருக்கட்டும். உங்கள் வீடுகளிலிருக்கும் சிவன் எப்பொழுது மறைவார்?
கல்பதரை விமர்சிப்பவர்கள் அனைவரும் சிவனையும் ஒரு பிடி பிடியுங்களேன் பார்ப்போம்.!
அவசியமான பதிவு, இந்த கார்பரேட் சாமிகளின் மற்றும் எழுத்தாள கழிசடைகளின் முகத்திரையை கிழிக்கிறது என்ற வகையில். அது மட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம் என புரிந்தாலும், 60 மற்றும் 70 களில் மேற்க்குலகில் துவங்கிய இந்திய ஆன்மிக போதை கலாசார வளர்ச்சி, அதை பரப்பிய ஹிப்பிகள், பின் 80களிலும் 90களிலும் உலகமயமாக்கலின் விளைவாக திரண்ட உயர்நடுத்தர வர்க்கம் இந்த சாமிகளுக்கு பல்லக்கு தூக்கியது, அவர்களின் உளவியல் சிக்கல்களுக்கு இந்த ஆன்மிகம் வடிகாலாக இருப்பது, அழிந்து வரும் இந்து மத்ததை தூக்கி நிறுத்த இந்த சாமிகள் பயண்படுத்தபட்டது, என இன்னும் பல விஷயங்களில் ஆய்வு நடத்தி ஒரு முழுமையான கட்டுரையாக ஆக்காமல், பரபரப்புக்காக என்ற வெகுஜன பத்திரிக்கைகள் மேற்கொல்லும் அதே பானியில் வினவின் கட்டுரையும் இருப்பது வருத்தம்.
குற்ற்ம் கண்டுபிடிப்பதே புலிகேசியின் வேலை என நினைக்கும் வினவின் அடிபொடிகளுக்கு ‘பதிவு சுப்பரூ’!
அடையாளம் இருக்கிற ஒருத்தனவாது பின்னூட்டம் போடுங்கப்பா. சும்மா பதிவர்களை வம்புக்கிழுக்காதீங்க..ரியல் என்கவுண்டர்லாம் காமெடிபீஸ்..தகரம் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே உண்டியலை கண்டு பிடிச்சவல்லாம் கூச்சல் போடறதோட நிறுத்துங்கப்பு
எந்த உண்டியல்லையும காசு போடம, உண்டியையே திருடிகிட்டு ஓடுற உன்னமாதிரி ஆளுக்கல்லாம் எல்லாத்தையும் மூடிக்கிட்டு போங்கப்பு…
ஏண்டா லூசாடா நீ? ஏதோ சனம் சுப்புனி மேட்டருக்கு அப்புறம் இப்பத்தான் கொஞ்சம் கவலை மறந்து சந்தோசமா இருக்கோம்..
உனக்கு அது புடிக்கலையா..?
கேள்வி.. ரியலு.. இவிங்கள கண்டுக்காதீங்க பாஸு.. சும்மா அப்படியே அடிச்சு ஆடுங்க
இந்த மாதிரி சான்செல்லாம் எப்பவும் கிடைக்காதே?
சம்பந்தமே இல்லாம பதிவர்களின் பெயர்களை ஏன் இழுக்கிறீர்கள்? வினவுங்கள்..வினை செய்யுங்கள்..எல்லோரும் உங்களை படிக்கிறார்கள்.
பதிவில் வந்துள்ள ஒரே பதிவர் பெயர் அக்னி பார்வை அவர் கோ-ஆதர், அதனால அவருக்கும் சம்பந்தம் இருக்கே.. நீங்க யார பத்தி பேசுறீங்க???
ஜகிவாசுதேவ் பற்றி விலாவரியாக ஒரு கட்டுரை எழுதுங்களேன்..
/நித்தியானந்தாவின் பரம பக்தன் சாருவின் சிஷ்ய கோடிகள் லக்கி லுக், அதிஷா, நர்சிம், கேபிள் சங்கள் இத்யாதிகள் சாருவை கடவுளாக தூக்கிப்பிடித்து பதிவுலகில் டான்ஸ் போட்டார்கள். அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பது சரியா, இல்லை சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது சரியா, இல்லை உதைப்பது சரியா? ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள்.//
வா..வந்து வாங்கிட்டு போ..
சரி இதுக்கு என்ன இப்ப??? மேற்படி பிராடு சாமியாருக்கு பீ.ஆர்.ஓ வேல பார்த்த பிராடு எழுத்தாளருக்கு இவங்க பிஆர்ஓ வேல பாத்தாங்களா இல்லயா??? அந்த வகையில இவங்க சம்பந்தமுடையவங்கதானே????
அந்த வகையில இவங்க பதிவரா இருந்தா என்ன பிரதமரா இருந்தா என்ன???
//அவனும் சாதாரண மனிதன்தானே.சின்னப்பையனான அவன் அவனோடு விரும்பி உறவு கொள்ளும் பெண்ணோடு இருக்கும் கணத்தைப் படம் பிடித்து ஊருக்கே காட்டுவது நாகரிகமாக எனக்குப்படவில்லை.காஞ்சி சாமிகள், பிரேமானந்த சாமிகள் போல பெண்களிடமிருந்து அவன் வல்லந்தம் செய்ததாக புகார் வராமல்- அவர்கள் இருவரும் காதலால் ஒருமித்தது போன்ற ஒரு வீடியோ காட்சியைக் காட்டும் போது அய்யோ பாவம் அவன் என்கிற உணர்வுதான் முதலில் எனக்கு ஏற்பட்டது//
த.தமிழ்செல்வனின் வரிகள் மனதை தைத்தது.. என்னனமோ வார்த்தைகள் தோன்றி மறைகிறது மனதில்.
/பதிவில் வந்துள்ள ஒரே பதிவர் பெயர் அக்னி பார்வை அவர் கோ-ஆதர், அதனால அவருக்கும் சம்பந்தம் இருக்கே.. நீங்க யார பத்தி பேசுறீங்க???
//
வினவு ஒன்றும் கேனையல்ல..அவர்கள் குறிப்பிட மாட்டார்கள். ரியல்என்கவுணடரின் பின்னூட்டத்தை பாருங்கள்..
மனிதனை கடவுள் என்று நம்பினால்,
மனிதனிடம் கடவுளின் தன்மைகளை எதிர்பார்த்தால்….
கடவுள் என கருதப்பட்ட அந்த மனிதன்….
“இல்லை… தான் ஒரு மனிதன்தான்”… என்று நிரூபிக்கும் பொழுது,
இப்படித்தான் ‘அந்த மனிதனின் பக்தகோடிகள்’ எல்லாரும் அவமானப்பட நேரிடும். எத்தனைமுறைதான் பாடம் கற்றுக்கொள்வதோ….
கலை சூப்பரு
//வினவு ஒன்றும் கேனையல்ல//
தண்டோரா அவர்களே இதில் ஒன்னும் உள்குத்து இல்லையே ???
அசோக்கு, சாருவதிட்டுன இவருக்கு குத்துது, இவரு பதிலுக்கு குத்துராரு. ஆக மொத்தம் செம்ம குத்துப்பா…
:-)))
மாற்றான் மனைவியை மகேந்திரன் பெண்டாளுவதை பற்றி கலைஞர் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
தண்டோரா இனிஷியல் உள்ள பார்பனனயிற்றே உண்டியல் தூக்குவதை தகர டப்ப என்று கேலி சேய்யும் ஆதிக்க மனப்பான்மை எப்படி போய்விடும்.தண்டோர கலக்குங்கள்
பெண்ணாகரம் வரைக்கும் நீங்க அங்கதானே காவடி தூக்கறீங்க!! உண்டியல் சில்லறையா பேசாதீங்க….
எத்தனை இடத்தில் நான் பார்ப்பான் என்று சொல்லியிருக்கிறேன் நண்பரே. உங்களை அடிக்க நீங்கள் மட்டுமே போதும்…
Charu Nivetha_kadavulai kanda kathai1.pdf
http://www.sendspace.com/file/dd3268
Charu Nivetha_kadavulai kanda kathai2.pdf
http://www.sendspace.com/file/i4vhyz
நீங்கள் யாருக்காக போராடுவதாக சொல்லிக்கொள்கிறீர்களோ, நிச்சயம் இந்த பதிவுகள் அவர்களை எட்டப்போவதில்லை. உங்கள் சுய அரிப்பை எழுதி தீர்த்து கொள்கிறீர்கள். உங்கள் சித்தாந்தம் இவ்வளவு நீர்த்து போனது துரதிர்ஷ்டவசமே..தனி மனித தாக்குதல்களுக்கு மட்டுமே இடம் இருக்கிறது. என் பின்னூட்டங்களையும் சேர்த்துதான். ஆரோக்கியமாக விவாதம் புரிய உங்கள் தளம் நிச்சயம் இடம் தரவில்லை. எனவே விடை பெறுகிறேன்..நன்றி..நண்பர்கள் கேள்விக்குறி மற்றும் ரியல் என்கவுண்டர் அடையாளங்களுடன் வாருங்கள்…எதற்கும் தயாராக ..9340089989
விவாதத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு வந்து மூக்குடைப்பட்டு போனதற்கு வாழ்த்துக்கள்.
//மூக்குடைப்பட்டு போனதற்கு வாழ்த்துக்கள்.//
செருப்படி வாங்கியதற்கு வாழ்த்துக்கள்
வேலூர் பக்கத்தில் ஒரு இளம் தடியன் ஊரைக் கொள்ளையடித்து பொற்கோவில் கட்டி வைத்திருக்கிறானே. அவனை அம்பலப்படுத்தப்போவது யார்?
உரையாடல் திசை திரும்பாமல் பார்த்து கொள்ளுங்கள்!
இல்லையென்றால் வழக்கம் போல் நாளை நித்திப்பய சத்சங்கத்தை ஆரம்பிச்சிடுவான்!
சாருவும், தன்னூடய புத்தகம் செவ்வாய் கிரக நூலகத்தில் நித்தியானத்தரின் தயவால் இடம்பிடித்ததுன்னு பதிவு போடுவாரு!
அதுக்கு, கடவுளே நீங்க இல்லாம தமிழ் இலக்கியமான்னு நாலு பேர் லெட்டர் போடுவான்!
நல்ல எழுத்தாக்கம் எத்தனை அறிவு ஜீவிகள் இதை படிப்பார்கள் அப்படி படித்தாலும் அதற்கும் ஒரு சால்ஜாப்பு வைத்திருப்பார்கள்
.
it is a super articles……..
really
அங்கிட்டு சாரு தளத்தையே காணோம். மற்றபடி, நானும் முதல்ல கவனிக்கல. பதிவர்களை சாருவுடன் பழகினார்கள் என்பதாலேயே அவர்களது அனைத்து கருத்துக்களுக்கு ஒத்துப்போனார்கள் என்று சொல்லமுடியுமா வினவு ?
அண்ணே,
அப்படியில்லே விசயம்.. ஒருத்தர் எவனோ ஒரு பன்னாடையை கடவுள் சாமி etc., etc., என்று சொல்லி விளம்பரம் செய்யிறான்.. அந்த
விளம்பரம் செய்யிரவனை இன்னொருத்தன் விளம்பரம் செய்யிரான்…
இப்ப நீங்களே சொல்லுங்க.. சொக்காய பிடிக்கிறதா இருந்தா எல்லாத்தையும் தானே பிடிக்கனும்?
லக்கி, சாருவின் கடவுள் நம்பிக்கைகளை தான் ஏற்றுக் கொள்ள வில்லை என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார் – எனவே கும்மும் நன்பர்கள்
லக்கியை விட்டுவிட்டு மற்றவர்களை ( அதாவது சாருவை எந்தக் கேள்விவரைமுறையும் இல்லாமல் தூக்கிக் கொண்டாடியவர்களை) எந்த
நிர்தாட்சன்யமும் இல்லாமல் தொடர்ந்து கும்ம வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
செந்தழல் ரவி -@@@நானும் முதல்ல கவனிக்கல.@@@ இந்த பதிவுல், பதிவர்கள பத்தி ஒன்னுமே இல்ல நீங்க எங்க கவனிச்சீங்க, ஒரு மாட்டுகறி தின்னும் பாப்பான் உளரிக்கொட்டியிருந்தானே அங்கேயா???
பின்னூட்டத்துல வற்றதுக்கெல்லாம் கொம்பேனி பொறுப்பேத்துக்க முடியுமா ?? 🙂 இப்ப சாரு மூத்திரம் குடிப்பான்னு நீங்க போட்ட பின்னூட்டத்துக்காக வினவ திட்டினா அது எவ்வளவு லூசுத்தனாமோ அந்த மாதிரி ஒரு லூசுத்தனத்த்தான் அந்த பாப்பான் செஞ்சது, அதுக்கு என்னமோ ரொம்ப பீல் பண்ணி பீல் பண்ணி அவன சமாதானப்படுத்தி நாலு பேரு பின்னூட்டம் போடுறாங்க.. எதுக்காக பதிலெழுதறோன்னே தெரியாம பதிலெழுதுற பதிவுலக ‘அறிவாளிகள்’ யாருன்னு அங்க போய் பாத்தா தெரியும்.. (இனிமே முடியாது, தூக்கிட்டான். ) அந்த பாப்பான் இன்னாடான்னா டவுசர கீச்சுடுவேங்கறான்.. நக்சலைட்டுங்க டவுசர் இன்னா பேர்பர்லயா செஞ்சுகீது???
சரி, அப்படியே பின்னூட்டத்துல ஒருத்தரு பதிவருங்கள் கேள்விகேட்டான்னு வையி அதனால என்ன??? சாரு துட்டுவாங்கினு நித்திய பலபேருக்கு பகவானாக்குன மோசடிய தெரிஞ்சுதானே இந்த பதிவருங்கெல்லாம் சாரு பத்தி பெருமை பெருமையா எழுதுனாங்க???
நித்தி ஒரு பிராடுன்னு சாருவ கேள்விகேட்பது சரி எனும் போது
சாரு ஒரு பிராடுன்னா சாருவின் பதிவர்களை கேள்வி கேட்பதில் என்ன தப்பு.???
அதுபோகட்டும் கலைஞர சப்பேட்டு செஞ்சதுக்காக லக்கிய நீங்க யாருமே கேள்விகேட்டதில்லையா??? என்னவோ புரியாத மாதிரி கேக்குறீங்களே???
சாமிக்கு சக்தி இருக்குனு சாரு சொல்றாரே?
சுப்பிரமணி சாமிக்கா? ஐயையோ! ஆள விடுங்க சார்…
just see dinamalar.com.
this i time for dinamalar to punish tn cinema
மிக பெரிய குழபத்தில் இருக்கிறார் போல் சாரு. சிறிது நேரம் முன்பு தான் http://charuonline.com/Feb2010/nit33.html என்ற பக்கத்தில் புலம்பி தள்ளி இருந்தார். இப்பொழுது அந்த பக்கத்தையே காணோம்.
//புதன் இரவு 8.00 மணி: நண்பரொருவர் தொலைபேசியில் உடன் சன் நியூஸ் // புதன் இரவு நடக்க இருக்கும் திவ்ய தரிசனத்திற்குப் // நேற்று செவ்வாய் கிழமை இன்று தான் புதன் கிழமை. மாத்துங்க
இதெல்லாம் ஒன்னும் பெரிய தப்பே இல்லை 33 வயதான அந்த இளைஞனுக்கு பாலுணர்வு மறுக்கப்படுவது நியாயமே இல்லை. அவனும் சாதாரண மனிதன்தானே என்று நித்தியானந்தத்துக்காக வருத்தப்படுள்ளவர் யார்
தெரியுமா ? இதே போன்ற பாலியல் சேட்டைகளை வெளிப்படையாக செய்து கொண்டிருக்கும் சாருநிவேதிதா அல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் “தோழர்” ச.தமிழ்செல்வன்.
இது அவருடைய தனிப்பட்ட கருத்தா அல்லது அவர் சார்ந்துள்ள மார்க்சிஸ்ட் (போலி)கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் நிலைப்பாடா என்பதை விளக்கியும் ஒரு பதிவு போட்டுவிட்டார் என்றால் சசதியாக இருக்கும்.
http://satamilselvan.blogspot.com/2010/03/blog-post_03.html
//அந்த ஹிப்பித் தலையனின் செல்வாக்கு மங்கவில்லை.// LOL
//வேண்டுமானால் ரஞ்சிதாவிற்கு திருமணம் ஆகியிருந்தால் இது கள்ள உறவு. ஒரு வேளை அவர் விவகாரத்து பெற்றிருந்தால் இது கள்ள உறவும் அல்ல. //
என் கருத்தும் இது தான்.
சண் டிவி, ரஞ்சிதாவுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்கிறது. ஒரு வேளை ரஞ்சிதாவை மிரட்டியோ இல்லை ஏமாற்றியோ இல்லை பாலியல் தொழில் செய்ய வைத்திருந்தால் இரு சட்டப்படி குற்றம்.
எத்தனை சாமியார்கள் அடுக்கடுக்காக அகப்பட்டாலும் தமிழ், இந்துப் பெண்களிடம் இருக்கும் சாமியார் மோகம் மட்டும் குறையப்போவதில்லை. குமுதம், ஆனந்த விகடன் , கல்கி போன்ற சஞ்சிகைகளும் சுபா, சாரு போன்ற எழுத்தாளர்களும் அந்த மோகத்தை குறைய விடப்போவதும் இல்லை. சாமியார்களும் சாரு போன்ற ஊரை ஏமாற்றும் பன்னாடைகளும் சமூகத்திலிருந்து அடித்து விரட்டப்படும் போதுதான் ஏனையவர்களுக்கு புத்தி வரும்.
saw this also http://pagalavantamil.blogspot.com/2010/03/blog-post_03.html
see http://www.nakkheeran.in also they say if u want full video sinup and download fullvideo with hd quality. how they do business
if the same thing happnes to ஜக்கியும் then they …… tell like this….
//இது விடயத்தில் முக்கிய அரசியல் பிரபலம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. அந்த அரசியற் புள்ளிக்கும், நித்தியானந்தருக்கும் ஏற்பட்ட சொத்துப் பிணக்கு ஒன்றில் எழுந்த மோதல் காரணமாக, விலைக்கு வாங்கப்பட்ட நித்தியானந்தரின் சீடர்கள் மூலமாகவே இந்த ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகவும், எதிரணித் தொலைக்காட்சி ஒன்றுக்கே இந்த ஒளிப்பதிவு முதலில் கிடைத்ததாகவும், இந்து மக்களின் ஒட்டுவங்கியைக் கருத்தில் கொண்டு அது ஜாகா வாங்கிவிட, ஆளும் கட்சித் தொலைக்காட்சியும், அதே காரணத்துக்காகப் பின்வாங்கிவிட, சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியதாகவும் அறிவருகிறது. //
from http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/5634-2010-03-03-11-46-51
இன்று நித்யானந்தரின் இடத்தில் ஒரு பெண்மணி இருந்திருந்தால்… எவ்வளவு இழிவாக அழைக்கப்பட்டிருப்பார்… அதே போல் இவனையும் ஆண் விபசாரி என அழைப்பதே சரியாக இருக்கும்…
நித்யானந்தர் செய்த வேலைகள் குற்றமோ… தண்டனைகுரியதோ இல்லை… அவனுடைய பாலியல் தேவைகள் பணம் கொடுத்தோ… வேறு ஏதோ வழிகளிலோ தீர்த்து கொண்டான்…
அவனை குருவாக, அதற்கும் மேலாக ஏற்று கொண்ட… அறிவிழிகள் எப்போது திருந்துவார்கள்? கொஞ்ச நாளில் வேறு ஒரு பொறுக்கி சாமியார் கிளம்புவான்… அப்போதும்… இன்னொரு கோரு… அந்த பொறுக்கியையும் கடவுள் என எழுதுவார்… மக்களும் மடையர்களாய்… பொறுக்கிகளான சாமியார் பின் செல்வார்கள்…
பொறுப்பில்லாத… குறுக்கு வழியில் முன்னேற வேண்டும் என செல்லும்… தார்மீக அடிப்படைகளை இழந்த சமுதாயத்தில் நித்யானந்தர் போன்ற பொறுக்கிகள் சாமியாராக வலம் வந்து கொண்டே இருப்பார்கள்…
இன்னொன்றையும் குறித்து கொள்ளுங்கள்… சங்கராச்சாரிகள் கொலை குற்றம்… பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்தது போன்ற செய்திகள் வந்த போது இந்து மக்கள் கட்சி என்ன செய்து கொண்டிருந்தது திரும்பி பாருங்கள்?
இப்போது சங்கராச்சாரிகளை விட குறைவான குற்றம் செய்த நித்யானந்தரை கைது செய்ய சொல்லும் அர்ஜுன் சம்பத்… சங்கராச்சாரிகளை கைது செய்ய சொல்வாரா?
மனு தர்மம்… நன்றாகவே உள்ளது… பார்ப்பனர் குற்றம் செய்தால்… மயிரை உதிர்த்து கொண்டால் போது… மற்றவன் குற்றம் செய்தால் தலையை வெட்ட வேண்டும்…
GONE WITH WIND
விவேகனந்தர் முதல் நித்தியானந்தா வரை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ….இதில் ஆச்சர்ய பட ஒன்னும் இல்லை .
முட்டாள் மக்கள் ..இருக்கும் வரை ,இவர்கள் லீலை தொடர்ந்துகொண்டு தான் இருக்கும் .
சாரு ஒரு பேக்குன்னு தெரியும்… இருந்தாலும் சாருவ எனக்கு பிடிக்கும் வினவு. எழுதறவனயேல்லாம் பிடிக்கும்… இதுல சாருக்கு ஒரு சாப்ட்கார்னர் உண்டு.
அப்புறம் பதிவு நல்லாவே வந்திருக்கு.
நித்தியாணந்தர்னால நேத்துலயிருந்து கொஞ்சம் மன உளச்சல் இருந்தது. இப்ப பரவாயில்லை. அப்புறம் நான் ஆஸ்திகன்தானப்பா.
சாரு ந யாருங்க நா புதுசுங்க
சாருன்னா சாருமதின்னு ஒரு பெண் ரைட்டர் செந்தில் 🙂
நமது அடிமைத்தனத்தை விட்டு, நாம் வெளிவரப் போவதில்லை. மன்னனுக்கு அடிமை, வெள்ளையனுக்கு அடிமை, கூத்தாடிகளுக்கு அடிமை, மூட நம்பிக்கைகளுக்கு அடிமை, இலவசத்துக்கு அடிமை, அரசியல் வியாதிக்கு அடிமை, சின்னத்திரைக்கு அடிமை, சாமி என்று ஒரு கூட்டம், ஆசாமி என்று ஒரு கூட்டம்…நல்லா வெளங்கும் நமது எதிர்காலம்!!
குறை ஒன்றும் இல்லை மறை முர்த்தி கண்ணா, இத்தனை குமுறல்களும் என் இதயத்தை குறு போடுகின்றது.நித்தியானந்த என்னய்யா செய்து விட்டார்? குடிகாரன், பொறுக்கியை எல்லாம் அவரோடு ஒப்பிடுவதா? தமிழன் நல்லாய் வருவது பொறுக்காதே உமக்கு.
//சன் டி.வி இதைக் காட்டியதில் ஊடக முதலாளிகளிடம் உள்ள போட்டி பெரிதும் பங்காற்றியிருக்கிறது. கலைஞர் டி.வி தொடரில்தான் நடிகை ரஞ்சிதா நடித்து வருவதால் சன்.டி.விக்கு பாதிப்பில்லை.//
நீங்கள் சொல்வது உண்மை என்றாலும், இந்த தொடரின் பாதிப்பால் எந்த அளவுக்கு சன் லாபம் அடைந்து விட போகிறது? சொற்பமே.
ஆனால், சன் டிவியின் இன்றைய செய்தி வழங்கும் ‘முறை’யை பார்த்தால், இருவருக்கும் உள்ளே வேறு ஏதோ கசமுசா இருக்குமே என்று தோன்றுகிறது. சன் டிவி பெரும்பாலும் ஒரு பாடலாக இருந்தாலும், திரைப்பட காட்சியாக இருந்தாலும், அதில் சற்றே ஆபாசம் தெரிந்தாலும் சுய கட்டுப்பாட்டுடன் வெட்டிவிடுவார்கள். உதா, ‘தேவதையை கண்டேன்…’ பாடலில் வரும் முத்தக் காட்சி. மற்ற சேனல்களில் தாராளமாக இந்த காட்சியை காட்டினாலும், சன் டிவியில் மட்டும் சென்சார் செய்து காட்டுவார்கள். ஆனால், ‘இந்த’ க்ளிப்பிங்கில் மட்டும் எல்லை மீறியது. என் சக ஊழியர் குடும்பத்துடன் செய்தி பார்த்த பொழுது இந்தெ க்ளிப்பிங் ஒட, அனைவரும் நெளிந்து விட்டனர்…
நித்தியாநந்தன் பண்ணியது தப்பு என்றால் இந்த சன் தொலைக்காட்சி அதை அவ்வளவு மோசமாக
ஒரு வீடியோவை குழந்தைகள் , மாணவர்கள் எல்லோரும் பார்க்கின்ற வகையிலே
வெளியிட்டது அநியாயம்.
ஆங்கில திரைப்படங்களையே எங்கே குழந்தைகள் பார்த்து விடுவார்களோ என்று பெரியவர்கள்
பயந்து கண்காணித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த சன் தொல்லைகாட்சி எந்தவிதமான
சமூக உணரவும் இல்லாமல் அப்பட்டமான நீல படத்தை போன்றதொரு காட்சியை
வெளியிட்டது கண்டிக்கதக்கது!
இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர்களது வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பதற்கு
மிகபெரிய சவாலை சந்திக்கவேண்டியிருக்கும்
தங்களைப் போன்று உண்மையை மறைக்காமல் எழுதும் தைரியம் ஜனரஞ்சக பத்திரிக்கைகளுக்கு இருந்தால் பல லட்சம் மக்கள் பல விசயங்களில் விழிப்புணர்வுடன் இருப்பார்கள்.
பினவீனத்துவ பகடி பற்றி பலவாறு எடுத்துரைத்த அந்த எழுத்தாளர் நான் எழுதியிருக்கும் கீழ்க்கண்ட பதிவையும் பின் நவீனத்துவமாக எடுத்துக்கொள்வாரா?
http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_03.html
–
நித்தியானந்தா போன்ற சாமியார்கள் விவகாரம் வெடிக்கும்போழுது எல்லோரும் பதிவெழுத கிளம்பிவிடுகிறார்கள்.இது அந்த விவகாரத்தை விட பயங்கரமானதாக இருக்கிறது.இதில் என்ன பிரச்சினை என்றால் யாருக்கும் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உணர்ச்சி வயப் பட்ட நிலையிலேயே இதை அணுகிறார்கள் என்பது தான்.
நித்யானந்தா செய்தது சட்டப்படி எந்த தவறும் இல்லை.அடுத்தவன் அந்தரங்கத்தை வீடியோவாக எடுத்தவன் தான் குற்றவாளி அதை ஒரு போர்நோக்ராபீ தொலைக் காட்சி அளவுக்கு கீழிறங்கி ஒளிபரப்பிய சன் டி.வீ இரண்டாவது குற்றவாளி சைபர் சட்டப் படி இவர்கள் தண்டனைக்குரியவர்கள்.எல்லா மதிப்பீடுகளும் புழுத்து நாறும் ஒரு சமூக அமைப்பில் சாமியார்கள் என்ற உடனே பெரும் புயல் கெளம்பி விடுகிறது.அவர்களுக்கு இடையில் உறவு என்பது “ஒரு கோப்பை தேநீர் குடிப்பது ” போன்று இயல்பாக இருவரும் ஒத்துப் போய் தான் நடந்திருக்கிறது.மக்களை ஏமாற்றிவிட்டான் என்று சொல்வதும் மடத்தனமே.மக்களை அவர் வா வா என்று வற்புறுத்தவில்லை மக்களாகத்தான் சென்றார்கள்.அவர் “தியான” முறைகள் என்று சிலவற்றை உருவாக்கியுள்ளார் அதை பின்பற்றினால் நல்லது என்று சொன்னார் என்றால் அதை செய்து பார்த்து அது நல்லதா கெட்டதா என்று முடிவெடுத்திருக்க வேண்டும் தவிர.இதை ஒரு உபதேசமாகத்தான் சொல்லியிருக்கிறார்.அதை அவர் எல்லா நேரமும் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன் எங்கேயும் அவர் உறுதி மொழி அளித்துள்ளதாகத் தெரியவில்லை.அப்படிப் பார்த்தால் நமக்கு புகை பிடிப்பது தீங்கானது என்று சொல்லிகொடுத்த வாத்தியார் சொந்த வாழ்க்கையில் புகை பிடித்தார் என்றால் அவரும் குற்றவாளியே.
இதை நீடித்துக்கொண்டே சென்றால் யாரும் மிஞ்ச முடியாது அந்த அளவு மதிப்பீடுகளின் குப்பைதொட்டியாகத்தான் தமிழ்/ இந்திய சமூகம் இருக்கிறது.அவர் சொல்லியதை எடுத்துக் கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது அவரைப் பின்பற்றியவர்களின் தெரிவு.அதை அவருடைய தனி பட்ட வாழ்வில் பொருத்திப் பார்ப்பது என்பது நம்முடைய கற்பிதங்களில் இருந்து உதித்தவை தான்.
இன்று இதை இவ்வளவு பெரிதாக ஊதி பெருக்கும் சன் டி.வீ எல்லாவற்றையும் நேர்மையாகத்தான் செய்ததா?.இவர்கள் seytha muraikedukal , araajangal eththanai eththanai ? ozhukkam enru paesinaal avarkal seythathum ozhukka vithi meerale.
தம்பி எழில், பதிவ முழுசா படிச்சிட்டுதானே பதில் எழுதுனீங்க??? ஏன் கேக்குறேன்னா பதிவுல் ஒழுக்கத்த பத்தியெல்லாம் எழுதல, நித்தியா ஏன் ஒரு பிராடு, மக்களை ஏமாற்ற எப்படி குமுதமும் எழுத்தாளர் சாருநிவேதிதாவும் , துணை போனாங்கன்னு அம்பலப்படுத்தியிருக்காங்க பாத்தீங்களா???
சாருவின் தன்னிலை விளக்கம். I read his article in the new Charuonline.com, sometime back through the link http://charuonline.com/blog/2010/03/03/நித்யானந்தா-கபட-வேடதாரி, but it is not working now.
Please see hte copy paste of his article. I have the screenshot of this article to prove this authenticity.
நித்யானந்தா: கபட வேடதாரியின் கலைந்த முகம்
டியர் சாரு,
நான் தங்களிடம் எனக்கு தோன்றிய சில எண்ணங்களை பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.
ஒரு யோகி அல்லது குரு வழிகாட்டிதானே தவிர அவருக்கும் சில கர்ம வினைகளை அனுபவித்துதான் கடக்க வேண்டும். ரமணருக்கு புற்று நோய் வந்தது போல. அவரது செயல்கள் அதன் வெளிபாடுகளாக அமைகின்றன. அதனால் அவர் யோகி இல்லை என்று கூறி விட முடியாது. கோரக்கர் முதல் பல சித்தர்கள் சறுக்கி அதன் பின் எழுந்து இருக்கிறார்கள்.
நித்யாவும் ஒரு யோகிதான். அவர் மூலம் நாம் பெற்ற பயிற்சிகள் மற்றும் அடைந்த நன்மைகளை பார்க்க வேண்டும். நமக்கு ஒத்து வரகூடியவற்றை எடுத்து கொண்டு மற்றதை விட வேண்டும். நித்யாவின் மீது வைத்த மன பிம்பம் உடைந்தது ஒருவேளை நமது spritual path க்கு மிகவும் நன்மை செய்வதாக இருக்கும். நீங்கள் “Kill the buddha when u meet him on the path ” பற்றி கேள்வி பட்டு இருப்பிர்கள் தானே.
ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி.
Regards,
S.N.Ramakrishnan
But I need to a explanation from you. If you don’t have any explanation, please stop writing about this bullshit since you have already have bad experience with people like Nithyanantha.
I deserve a reply from you since I spend time as well as money in Nithya after reading your blog. என்று ஒரு வாசகர் எனக்கு எழுதியிருந்தார். அதற்கு என்னுடைய உடைந்த ஆங்கிலத்தில் எழுதிய பதில்:
i request you not to read my writings. i am writing for 20 hours a day daily . and i get a bullshit from my readers. i starve for my food. who is paying for me. everything here in my site is a free fuck. pl dont read this site.
Hi Charu,
I have already written an email to you. I don’t want to take your precious time by sending junk emails. I decided to write my second email to convey a message to you.
The message is as your true readers (not followers, because you taught us to read and think , not to follow) , we are searching god inside us as you said in your writings. The external controversies and its repercussions, like issues of Usman siddhar and Nithayananda , won’t transform or mislead that searching process.You don’t have to feel sorry about any scandals.
இந்த சம்பவத்தையும், தங்களையும் நினைக்கும் போதெல்லாம் , Aftermath of a lengthy Rejection slip சிறுகதை நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. அந்த கதையில் வரும் bukowsky ஐயும் தங்களையும் ஒன்றாகவே பார்கிறேன். நீங்கள் உண்மையை கண்டறிந்து சொல்லும் ஞானியோ அல்லது விஞ்ஞானியோ அல்லர் என்பதை தங்கள் வாசகர்களாகிய நாங்கள் அறிவோம். தாங்கள் ஒரு எழுத்தாளன், உன்மத நிலையில் இருப்பவர் என்பதையும் அறிவோம்.
Please excuse me or correct me, if I differ with your opinion on this.
நன்றி.
மோகனசந்திரன்,
மும்பை.
Charu,
I am sure by now ur mail box must have been inundated with all types of mails about the ‘Sun News Expose’ of Nithyananda.understandable but i suggest you maintain some much needed equanimity.dont react emotionally at the spur of this moment.Probably ur regular remarks of ” i am some body very easy for people to take a ride” and ” even peace loving Vallalar would become violent with me and my friendship would be ruined with all good souls too” has become partially true.It is not your fault, at least this time 100%.
What had happened was something that was waiting to happen, considering the youth of Nithya.the guy is bubbling with so much energy and may be at the peak of his manly vigour. he works so hard for about 16 hours a day and might have fallen for the bodily pleasures offered by some attractive women. Even great kingdoms have fallen due to the whims and fancies of Women and certainly this proves that Nithya is after all a mere mortal and not a ‘God”.
I consider/considered him purely as a gifted Yoga Master.i was looking forward to meeting him and learn one particular Yoga from him, even if it means i have to pay some donation/fee. since i am settled in Bangalore for the past 10 years, i was thinking of riding on my bike on some weekend and learn the one yoga you mentioned which brings deep sleep quickly. I have been suffering from lack of sleep right from my college hostel days and at 40, i am fit despite a slipped disc, but spend time on web, watch News channels/sports and get disturbed sleep for a few hours every night.My interest in visiting his Bidadi ashram was/is purely to get a relief for that alone.
I could not bring myself in to treating him as a ‘god’, he might have other ‘gifts’, other than an experienced Yoga master, but likening him to ‘God’ was a bit stretching it too far. it is easy to say this in hindsight but that had been my opinion of him for long.
I am not going to blame Raga sudha or any attractive females for this fiasco. I am sure she would not have been the first for him and certainly not the last.If we accept that most men( 99.99%) are susceptible for this particular weakness, then we would not be so upset.
I remember reading a remark of Late writer Sujatha in a magazine some where, he had mentioned something very close to this- “when it comes to adultery, 99% men arfe ready with a hand on the zip”, or something close to that. So, i am surprised about this violent reaction and i do wnder whether these guys are hypocrites.
We have a different set of rules for ourselves and set a very high benchmark for our Heroes.
Individual self discipline is not easy to follow.one may not succeed in restraining in such situations when some women who adore you and respect you voluntarily offer to massage you to clear head ache and then all resistances may dissolve when the act breaks the barrier. after the first time, the mind would get corrupted and involuntarily seek such pleasure and may overpower the individual. absolute power corrupts absolutely!!!
I am not disappointed but i am only worried that i may not be able to learn the Yoga from Nitya after this, if he winds up his ashram now.
it may have been a bigger shock for you because as usual u were deeply taken by his acts and considered him as ‘Living God”.so, it may take time for you to recover and in fact to some extent you would be justified if you feel he had betrayed your enormous trust and conviction. but i am also sure that , this is not the first time and may i add, the last time for you!
you need not apologise to your genuine readers for publicising Nithya among us. i think those of us who have been following up your writings , do take your appreciation of Nithya or for that matter everything with a pinch of salt. this may shatter a few who are die -hard fan(atic)s of Charu. But for some one who accepted Charu with all his limitations, habits and self confessed weaknesses, This does not come as a surprise.
This too shall pass, so, just chill out and relax Boss,
Charu:
I disagree with Rajan completely. This guy (Nithyananda) called himself as Swami in the Kalpatharu program and claimed many times he is an enlightened being. True enlightened being are supposed to transcend everything as they don’t see difference between men and women. Hence, they should transcend flesh and sex, So, this guy as indeed betrayed the trust of millions as he made his millions by declaring himself as god. Had he been with family and declared himself an enlightened being (ex: Buddha), I would been OK but he did not.
If one needed a yoga teacher, they can go to many yoga teachers who are around the corner of the street. Baba Ramdev is a yoga teacher and he does not claim to be an enlightened being. So, godman like Nithyananda should be put behind bars and all his wealth should be confisticated!
மணிவண்ணன்,
நீலாங்கரை.
இப்போது நீங்கள் உங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வீர்கள்? அந்த விடியோ இட்டுக்கட்டி உருவாக்கப்பட்டது என்று சொல்வீர்களோ?
ஒரு வாசகர்.
என் பதில்:
நான் எதற்கு என் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும். எந்த அயோக்கியனாவது எதையாவது செய்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? விடியோ பொய் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாள் கிடையாது. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்? ஒரு அயோக்கியனை நம்பியதற்காக நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
இப்போது நாம் பிரச்சினைக்குள் செல்வோம். நேற்று இரவு ஹமீது போன் செய்து விஷயத்தைக் கூறினார். அப்போது மன்ஹாட்டன் பாரில் விவேக் நாராயணன் என்ற ஆங்கில எழுத்தாளருடன் தில்லியில் நடக்க இருக்கும் சர்வதேச எழுத்தாளர் கருத்தரங்கு பற்றி விவாதித்துக் கொண்டிருந்தேன். பிறகு வீட்டுக்கு வந்து தொலைக்காட்சியைப் பார்த்த போது விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். ஆம், விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். அதிர்ச்சி அடையவில்லை. ஒரு நிறுவனத்தில் இருக்கும் எல்லா விதமான பிரச்சினைகளும், ஊழல்களும் நித்யானந்தரின் ஆசிரமத்திலும் உண்டு என்பது என் கவனத்துக்கு வந்தது. அதன் காரணமாக, நான் ஆசிரமத்திலிருந்து விலகியே இருக்க விரும்பினேன்; இருந்தேன். ஆனால் நித்யானந்தரின் அளப்பரிய வித்யாஞானத்தால் அவரோடு மட்டும் அவ்வப்போது உரையாடி வந்தேன்.
மேலும், நித்யானந்தரின் பக்த கோடிகள் அனைவருமே ஏதோ மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல் அவர் பின்னே திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எது பற்றியும் சுயமான சிந்தனையே இல்லை. நித்யானந்தர் எதைச் சொல்கிறாரோ அதைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பினார்கள். பல லட்சக்கணக்கான அவருடைய பக்த கோடிகளுக்காக நித்யானந்தர் ஒருவரே சிந்தித்தார். அவரது சீடர்களில் பலருக்கு ஆச்சாரியார் என்ற பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்குத் துறவறம் ஒரு அவசியத் தகுதியாக வைக்கப்படவில்லை. அந்த ஆச்சாரியார்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். அந்த ஆச்சாரியார்களின் உரைகள் அவ்வளவும் பேத்தலாக இருந்தன. அதனால் அந்த ஆச்சாரியார்களின் பக்கமே நான் திரும்பிப் பார்க்காமல் இருந்தேன். உதாரணமாக, ஒரு பெண் ஆச்சாரியார் உலகம் முழுவதுமே மங்களமாக உள்ளது என்று லெக்சர் கொடுத்துக் கொண்டிருந்தார். அபத்தக் களஞ்சியமாக இருந்ததால் நான் எழுந்து வெளியே போய் விட்டேன். பிறகு அந்தப் பெண் என்னை சந்தித்த போதும் அதையே உளறிய போது “அப்படியானால் கும்பகோணத்தில் ஒரு குடிசைப் பள்ளிக்கூடம் எரிந்து 90 குழந்தைகள் எரிந்து போனார்களே, அதுவும் மங்களமா?” என்று கேட்டேன். ஆமாம் என்று மேலும் உளறினார் அந்தப் பெண்.
மேலும், நித்யானந்தரின் ஆன்மீகம் முழுமையாகவே இந்து மத சம்பிரதாயங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்ததால் இஸ்லாமியக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட என்னால் அதனுடன் ஒன்ற முடியவில்லை. உதாரணமாக, நித்யானந்தரின் வழிமுறையில் ‘சொஸ்தப்படுத்துபவர்கள்’ என்று ஒரு பிரிவு உண்டு. அந்தப் பயிற்சியை யார் வேண்டுமானாலும் எடுத்து ஹீலராக ஆகி விடலாம். நித்யானந்தரின் மேல் மிகுந்த பற்றுக் கொண்ட என்னையும் ஹீலராக ஆகச் சொல்லி பலரும் கேட்டனர். நிர்மலாவும் (முன்னாள் ராக சுதா) பலமுறை என்னிடம் இதுபற்றிக் கேட்டார். அதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்தப் பயிற்சியை எடுத்தால் நீங்கள் சைவ உணவுக்காரராக மாற வேண்டும். மது அருந்தக் கூடாது. அப்போது நான் நிர்மலாவிடம் சொன்னேன்: நான் கலாச்சார ரீதியாக இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டவன். என்னால் மாமிசம் உண்ணாமல் இருக்க முடியாது.
மேலும், பல முன்னாள் நீலப்பட நடிகைகள் வெள்ளை ஆடை உடுத்திக் கொண்டு ஆசிரமத்தில் வலம் வந்து கொண்டிருந்தனர். அது எனக்கு ஒருவித அசூயையை அளித்தது. நாம் என்ன வேண்டுமானாலும் அயோக்கியத்தனம் செய்து பணம் சம்பாதித்து விட்டு நம்முடய குற்ற உணர்ச்சியைப் போக்கிக் கொள்ள ஒரு சாமியாரைப் பிடித்துக் கொண்டால் போதுமா? இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் என்னை நித்யானந்தரிடமிருந்து ஒதுங்கச் செய்து கொண்டிருந்தன.
என்னுடைய ஆங்கிலச் சிறுகதையில் இது பற்றிய என் மன வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறேன். வாசகர்கள் யாரும் படித்துப் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை.
இப்போது இந்த செக்ஸ் பிரச்சினை. இந்த விடியோக்கள் எதுவும் பொய்யாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இத்துறையில் வல்லுநர்களாக இருப்பவர்கள் இந்நேரம் எளிதில் கண்டு பிடித்துச் சொல்லியிருப்பார்கள். இதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடையவில்லை. ஆச்சரியப்படவில்லை. காவி கட்டியவர்கள் செய்யும் கயவாளித்தனங்களை நாம் பார்ப்பது இதுவா முதல் தடவை? நான் திருவண்ணாமலை சித்தரிடம் ஏமாந்த போதே பல வாசகர்கள் நித்யானந்தரைப் பற்றி எச்சரித்து, இவர் பற்றியும் உங்களுடைய (வசை) கட்டுரையை எதிர்பார்க்கிறோம் என்று சொன்னார்கள். அவர்கள் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும். ஆனால் இனிமேல் ஏமாற மாட்டேன். ஏனென்றால், இனிமேல் சாமியார், சித்தர் என்று யார் பின்னாலும் செல்ல மாட்டேன்.
பல வாசகர்கள் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். அவர்களையெல்லாம் மனசுக்குள் நன்றாகத் திட்டினேன். அவர்கள் ஆறுதல் சொல்லும் அளவுக்கு எனக்கு என்ன சோகம் நடந்தது? எந்தக் கயவாளிப்பயலோ எவள் குண்டியையோ நக்கினால் எனக்கு என்ன? ஆனால் அந்தக் கயவாளியை நான் நம்பி விட்டேன். என்னால் பல ஆயிரம் பேர் நம்பி விட்டார்கள். சரி, கபட சந்நியாசி என்று தெரிந்து விட்டது. தூக்கிப் போட்டு விட்டேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இவ்வளவு ஏமாந்தும் இன்னமும் ஏமாளியாக இருக்கிறோமே என்ற சுய பச்சாதாபம் மட்டுமே கொஞ்சமாய் மனதில் தோன்றுகிறது.
ஒரு வாசகர் அழுதார். கோபப்பட்டார். நடிகையின் பெயரைச் சொல்லி ”அவள் அவனுக்கு ப்ளோ ஜாப் செய்கிறாள் சாரு; இவனை ஜெயிலில் போட வேண்டும்” என்று ஆவேசப்பட்டார். இந்தக் காரணத்துக்காக ஒருவரை ஜெயிலில் போட வேண்டும் என்றால் நம் வாழ்நாள் முழுவதையும் ஜெயிலில்தான் கழிக்க வேண்டும் என்றேன். விஷயம் என்னவென்றால், அவர் காவியைக் கட்டிக் கொண்டு அந்த வேலையைச் செய்கிறார். நாம் வெள்ளை வேஷ்டியைக் கட்டிக் கொண்டு செய்கிறோம்.
நித்யானந்தர் தன்னை ஒரு பிரம்மச்சாரி என்றும், ஞானி என்றும், இந்திய ஞான மரபில் வந்தவர் என்றும், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்றவர்களின் வாரிசு என்றும் சொல்லிக் கொண்டார். இப்படிச் சொல்லி லட்சக்கணக்கான மக்களை நம்ப வைத்து அவர்களை ஏமாற்றினார். அவரை நம்பி பல இளம் பெண்கள் சந்நியாச வாழ்வை மேற்கொண்டனர். ஒரு பத்திரிகை அதிபரிடம் நான் நித்யானந்தரின் அருமை பெருமை பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன விஷயம் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவருக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் நித்யானந்தரின் சீடர்கள். அவர்களின் ஒரே செல்ல மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே நித்யானந்தரின் ஆசிரமத்தில் துறவியாகச் சேர்ந்து விட்டாள். அதனால் அந்தக் குடும்பமே சிதைந்து போனது.
போகட்டும் என்கிறார் நித்யானந்தர். புத்தர் துறவியாகவில்லையா என்று கேட்கிறார். புத்தர் என்ன நடிகைகளின் குண்டியையா நக்கினார் என்று இப்போது எனக்குக் கேட்கத் தோன்றுகிறது.
எனக்கும் ஒருமுறை இதுபோல் நடந்தது. நான் வைரஸ் ஜுரம் வந்து தனியாக, அநாதையாக என் வீட்டில் படுத்துக் கிடந்த போது என் மனைவி நித்யானந்தரின் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்துக்குத் தகவல் அனுப்பிய போது “ஐயாவுக்கு சரியாகி விடும்” என்று ‘சாமி’ சொன்னதாக செய்தி வந்தது. அப்போதே துணுக்குற்றேன். படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளவே முடியாத என்னை ஹமீது தான் ஆள் அனுப்பி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி என்னைக் காப்பாற்றினார். ஒரு வாசகி எனக்கு கஞ்சி அனுப்புவார். அந்தக் கஞ்சிப் பாத்திரத்தைத் திறக்கத் தெம்பு இல்லாமல் ஒருநாள் அரை மணி நேரம் போராடினேன். இப்படித் தொடர்ந்து பிரச்சினைகளாகவே இருந்ததால் நித்யானந்தரிடமிருந்து சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தேன். அவருடைய நூலின் மொழிபெயர்ப்பிலிருந்து என்னை டிசம்பரிலேயே விடுவித்துக் கொண்டேன். அதற்குப் பிறகும் நித்யானந்தரின் புத்தக வெளியீட்டுப் பிரிவிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதை நிறுத்தினேன்.
நித்யானந்தரிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு நான் அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதுவதாக இலக்கியத்தில் மாமா வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர் எழுதியிருக்கிறார். ஒரு லட்சம் கொடுத்தாலே சினிமாக்காரனின் குண்டியை நக்கத் தயாராக இருக்கும் இவர்களைப் போன்றவன் நான் அல்ல. நித்யானந்தரின் கூட்டத்துக்குப் போக வேண்டுமானால் கூட ஆயிரம் ரெண்டாயிரம் என்று பணம் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறேன். இன்னமும் நித்யானந்தரின் புத்தக வெளியீட்டுப் பிரிவு எனக்கு 4000 ரூ . பாக்கி. அவருடைய எழுத்தை டைப் செய்து கொடுக்கும் டைப்பிஸ்ட் என்னை வந்து பணம் கேட்ட போது ஆசிரமத்தின் பப்ளிகேஷன் டிவிஷனில் ‘நீங்கள் கொடுத்து விடுங்கள்; நாங்கள் உங்களுக்குக் கொடுத்து விடுகிறோம்” என்று சொன்னதால் கொடுத்தேன். இன்னமும் அந்தப் பணம் வந்து சேரவில்லை.
ஒருவரை ஏமாற்றினாலே சிறைத் தண்டனை உண்டு. ஆனால் இந்தக் கபட சாமியார் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றியிருக்கிறார்.
ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது ஒருவருடைய அந்தரங்கமான விஷயம். அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை. ஆனால் நித்யானந்தர் மிக உயரிய ஒழுக்கக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசி விட்டு இப்படி ப்ளோ ஜாப் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். மற்ற எல்லா விஷயங்களிலும் ஓஷோவின் சிந்தனைகளையே தன்னுடையதாக எடுத்துக் கொண்ட இந்த நித்யானந்தர் ஓஷோவின் செக்ஸ் வாழ்க்கையை ஏன் விட்டு விட்டு அதை மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டார்? பிரேமானந்தரிலிருந்து தமிழ்நாட்டு சாமியார்கள் அத்தனை பேரும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?
இப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள். அல்லது, அதைக் காணத் தவறுகிறார்கள். நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய அளப்பரிய சக்தியை வைத்துக் கொண்டுதான் அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் உருவாக்கிய நித்ய தியான் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு எந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்படாது. அதற்குக் காரணம், அவர் அதையெல்லாம் உருவாக்கியது பதஞ்சலியின் யோக சூத்திரத்திலிருந்துதான். ஆனால் நித்யானந்தர் தனது அளப்பரிய சக்தியை நடிகைகளின் குண்டியை நக்குவதற்கும் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பிரச்சினை.
ஆனால் அவருடைய ஆசிரமத்தில் இருப்பவர்கள் அனைவரும் மந்திரித்து விட்ட ஆடுகள். ஊடகங்களில் ‘சாமி’யைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் போட்டு ’சாமி’க்கு சோதனை கொடுத்துக் கொண்டிருப்பதாக அழுது கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அழுது கொண்டிருக்கும் போது நித்யானந்தரின் தனியறையில் ஏதாவது ஒரு நடிகை அவருடைய ஆண்குறியை சுவைத்துக் கொண்டிருக்கலாம்.
அடிச்சார் பார்யா அந்தர்பல்டி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
தொடர்வதர்க்காக மட்டும்.
சண் டிவி காரங்க ஏமாற்று பேர்வழிகள் என்பது வேறு விடயம். ஆனால் நித்தியானந்தாவின் காம லீலையை அம்பலப்படுத்தியதில் என்ன தவறு?
இதை சண் டிவியும் வெளியிடாமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும். சும்மா சைபர் சட்டப் படி இவர்கள் தண்டனைக்குரியவர்கள்..அது இது என உளறி பலன் இல்லை. சண் டிவி இல்லாத ஒன்றையா காட்டியது? இவ்வளவு பேசும் நேர்மையானவர்கள் இந்த விடயத்தை பதிவிடாமல் இருந்திருக்கலாமே….அதிலும் போட்ட தலையங்கங்கள் விடியோவை விட ஆபாசம். இது போல சகல ஊழல்களும் அம்பலப்படுத்தப்பட வேண்டும். சண் டிவி யின் ஊழல்களும் அம்பலப்படுத்தப்பட வேண்டும். சும்மா ஊழல் ஊழல் என்று சொல்லாமல் அம்பலப்படுத்துங்கள். வெளியிடபயமாக இருந்தால் எனக்கு அனுப்புங்கள். ஆராய்வில் வெளியிடப்படும். jeevendran@gmail.com
நச்சுன்னு சொன்னீங்க ஆராய்வு. சன் டிவி செஞ்சது தனி மனித உரிமை மீறல் அப்படீன்னு இப்போ கோடி பிடிக்கிறவங்க, ஒன்னு புரிஞ்சிக்கனும். ஒரு வேளை சன் டிவி அந்த பதிவை அப்படியே காட்டாம, out-of-focus ல காமிச்சி இருந்தா உடனே, இது நித்யாவை அசிங்கபடுதறத்துக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செஞ்சி இருக்காங்க அப்படீன்னு ஆரம்பிச்சு பெரிய பெரிய இடத்துல இருந்து அதை அமுக்கறத்துக்கு சகல விஷயங்களும் நடந்திருக்கும். அப்படியே அமுக்கவும் செஞ்சி இருப்பாங்க. மக்கள் சன் டிவி யை காய்ச்சி இருப்பாங்க. அப்புறம் இதையே நித்யா அவருடைய publicity க்கு பயன் படுத்தி இன்னும் பெரிய மகான் ஆயிருப்பாரு. சாரு மாதிரி அவருடைய அடிபொடிகள் உண்மை தெரிஞ்சாலும் மீசையில மண் ஒட்டாத கணக்கா பூசி மொழுகி எதையாவது எழுதி escape ஆயிருப்பாருங்க. இப்ப பாருங்க அப்பட்டமா வெளிய வந்ததால சாரு வேற வழி இல்லாம ‘அயோக்கிய பயல’ நம்பி ஏமாந்துட்டேன், அங்க நடக்குற எதுவும் சரியில்லேன்னு நான் கொஞ்சம் காலமா விலகி தான் இருந்தேன் அப்படீன்னு எழுதி சந்தர்பவாதி ஆயிட்டாரு. ஆனாலும் நித்யா கிட்ட புற்று நோயவே குணப்படுதுற சக்தி இருந்ததுன்னு இப்பவும் சொல்றாரு. ரெண்டு மூணு மாத்திரைய அப்புறம் ஏன் இந்த பரதேசி முழுங்குதுன்னு விளங்கலே. ஒரு வேளை முழு விடியோவையும் சாரு பார்க்கலையோ என்னமோ. இனிமே எந்த சாமியார் பின்னாடியும் போக மாட்டாராம். இனிமே பாருங்க எந்த சாமியார் பின்னாடியும் அவர் போகாததால தான் ஒரு உலக மகா புத்திசாலி, மத்தவங்க எல்லாம் கேணப் பயலுங்க அப்படீன்னு தோசைய திருப்பி போட்டு சுடுவாரு. ஏன் இதை சொல்றேன்னா 2002 ஆம் வருஷம் இவர் A R Rahman எல்லாம் ஒரு ஆளா அப்படீன்னு கலாய்ச்சி எழுதி இருந்ததை நேத்து ஒரு blog ல பார்த்தேன். இப்போ A R Rahman அவருக்கு Hero. இளையராஜா அவருக்கு டுபாக்கூர்.
மிகச்சரியாக சொன்னீர்கள் கண்ணையா. இதுதான் எனது கருத்தும். தயவு செய்து சண் டிவியின் ஊழலை அம்பலப்படுத்துங்கள். அதை வரவேற்கிறோம். ஆனால் நித்தியானந்தாவின் விடயத்தில் சன்டிவி செய்தது சரிதான். வேண்டுமானால் அதை ஒளிபரப்ப முன்னாள் சிறு பராயத்தினருக்கு உகந்தது அல்ல என ஒரு கார்ட் போட்டிருக்கலாம். (இப்படி மறைத்து மறைத்துதான் இந்தியாவில் செக்ஸ் குற்றங்கள் அதிகமாக இருக்கிறதோ என்னவோ)
கட்டுரை அருமை. இனியும் இந்த விவாதம் தொடருமா ??
சில லூசுகள் அதெப்படி சாருவை ஆதரித்ததற்காக வினவு தளத்தின் பின்னூட்டத்தில் பதிவர்களின் பெயரையெல்லாம் இழுக்கலாம்? என்று
கேட்டிருக்கிறார்கள்.. தண்டோ ரா எனும் மயிர் புடுங்கி அதைப் பற்றி ஒரு பதிவு போட்டு வினவுக்கு இதே பொயப்பா போச்சு யாரும்
அங்க போகாதீங்க என்று ஒப்பாரி வைத்திருக்கிறது. டூ லேட் மிஸ்ட்டர் மயிர்… டூ லேட்
இந்த சமாச்சாரத்தில் லக்கிலூக்கை இழுப்பது மட்டும் தேவையற்றது என்று கருதுகிறேன். சாருவை அவரும் கூட பலமாகத் தூக்கிப் பிடித்தார்
என்றாலும் சாருவின் சாமியார் வீக்னெஸ் சாமி வீக்னெஸ் போன்றவைகளை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே சொல்லிவந்திருக்கிறார்..
ஆனால், இன்றைக்குக் குதிக்கும் இந்த தண்டோ ரா லூசு என்னைக்காவது சாருவின் இந்த பிராண்டு அம்பாஸிடர் (ப்ரோக்கர்) வேலையை
சும்மாவாவது விமர்ச்சித்திருப்பானா என்று தெரியவில்லை.
இதெல்லாம் நீ அந்தாளுக்கு சொம்பு தூக்கும் போது யோசித்திருக்க வேண்டும் மிஸ்டர் மயிர்..
மாட்டுக்கறி திங்கும் பார்ப்பானாம்.. தக்காளி போன் நெம்பர் குடுத்துட்டா நீ யெல்லாம் பெரிய வீரன்னு நெனப்பாடா? உன்ன மாதிரி எச்சிக்கலை
இலைய தூக்கிப் போடறது தான் எங்க வேலையா? ஆயிரத்தெட்டு வேலையிருக்கு – இந்த இணையமெல்லாம் உன்ன மாதிரி சுயசொரிச்சல்
அல்ப்பைகளை ஜஸ்ட் ஒரு தட்டு தட்டற எடம் தான்.. எங்க களமே வெளில இருக்கு. அங்கெ வந்து நெம்பர் குடுத்துப்பாரு வந்துட்டான் நெம்பரத்
தூக்கிட்டு… ராஸ்க்கல்
இவனுகெல்லாம் சேந்து அந்தாளுக்கு ஒரு இமேஜ் பில்ட்டப் குடுப்பானுகளாம்.. அந்தாளு அதை சாக்கா வச்சிட்டு எவனோ ஒரு லூசுப் பரதேசிக்கு
ப்ரோக்கர் வேலை பார்ப்பானாம்.. மாட்டிக்கிட்டதுக்கப்புறம் ப்ரோக்கர் வேலை பார்த்தவனெல்லாம் யோக்கியனாயிடுவானாம். என்னாங்கடா….
அசிங்கமா கக்கத்துல லெதர் பைய்யோட வந்தீங்களேடா அப்பவே “டேமேஜுக்கு கம்பெனி பொறுப்பல்ல”ன்னு டிஸ்க்கி போட்ருக்க வேண்டியது
தானே? அன்னிக்கு பீ மேய போயிருந்த புத்திக்கு இன்னிக்குத்தான் அறிவு வந்ததா?
பதிவர்களை விமர்சிக்கக் கூடாதாம்.. தண்டோ ரா தான் அதைக் கண்கானிக்கும் போலீஸாம்.. பதிவர்ன்னா என்னா கொம்பு மொளச்சிருக்கா?
தப்பு எவன் செஞ்சாலும் தப்புதானே… பதிவர் என்பதால் தப்பு எப்படிச் சரியாகும்?
முந்தைய மறுமொழியை ஆத்திரத்தில் அடித்ததில் இன்னும் சில திட்டுகள் விடுபட்டுவிட்டது –
இவன் மாட்டுக்கறி தின்பானாம் அதனால் பெரிய சூராதி சூரனாம்.. நீ பீயக் கூட தின்னு அதையேண்டா எங்ககிட்ட சொல்றே? இங்கெ
உன் மெனு கார்டை எவன் கேட்டான்? வேணும்னா நீ திங்கறதையும் குடிக்கறதையும் எளுதி கழுத்தில கட்டித் தொங்கவுட்டுட்டு ரோட்டுல திரி யார்
வேண்டாம்னா.
சந்து கிடைச்சா ஜிப்பக் கழட்டிட்டு திரும்பி நிக்கற கும்பல் ஒன்னு இருக்கு.. எவனோ நோ-ன்னு ஒருத்தன் சந்தடி சாக்குல அங்கெ போய்
தோழர் ஸ்டாலின் மேலும் மாவோ மேலும் அவதூறுகளை எழுதிவைக்கிறான்.. நல்லா கழுவுன வீட்டுக்குள்ள சொரி நாய பேள வச்சி அழகு பாக்குற
மாதிரி தண்டோ ரா அதையும் பார்த்து புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறான். இவன்களின் அறிவுக் குறைபாட்டை – தாழ்வு மனப்பான்மையை
இடம் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். இதே இணையத்தில் எத்தனை விவாதங்கள் நடந்தது – எத்தனை முறை
எமது தோழர்கள் ஸ்டாலின் மேலும் மாவோ மேலும் வைக்கப்பட்ட அவதூறுகளை பொய் என்று நிரூபித்திருக்கிறோம் – அப்போதெல்லாம்
கால்களுக்கிடையே வாலைச் சொருகிக் கொண்ட சொரி நாய்களைப் போல பதுங்கிக் கிடந்து விட்டு இப்போ தண்டோ ராவின் பொதுக்
கக்கூசுக்குள் போய் சுவற்றில் கிறுக்குகிறார்கள் இந்தக் கோழைகள்.
இவர்களிடம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதை இன்னுமொரு முறை நிரூபித்திருக்கிறார்கள். இவர்களுக்கு மேற்கில்
கழித்துக் கட்டப்பட்ட புத்திஜீவிகளின் பெயர்களை மனப்பாடமாய் ஜெபிப்பவர்களெல்லாம் ஹீரோக்கள் – பிச்சைக்கார புத்தி.
எது இலக்கியம்? தனக்குக் குடிக்க காசில்லை என்று எழுதுவதும், தான் போட்டிருக்கும் ஜட்டியின் பிராண்டு இன்னதென்று சொல்வது, ஓசியில்
வாங்கிக் குடித்ததை எழுதி வைப்பதும், சாமியாருக்கு லெதர் பை தூக்குவதும்.. இதெல்லாம் தானா இலக்கியம்? இதை எழுதுபவன் தானா
இலக்கியவாதி? மாட்டுக்கறிய மட்டும் தின்னியா அதோட மூளையையும் சேர்த்துத் தின்னயா?
இந்த அல்ப்பைத்தனத்தை விமர்சித்து இங்கே எழுதப்பட்டுள்ளது – அதைப் பற்றி பேசக்கானோம்; அவம் பேர ஏன் சொன்னே இவம் பேர ஏன்
சொன்னேன்னு ஏன்யா உன்னோட கூமுட்டை மூளைய நீயே பிரிச்சிக் காட்டறே?
டக்லஸ் அண்ணே, பய புள்ள பொய் சொல்லிட்டான் போலிருக்கு
இன்னும் மக்கள் இது தப்பு இல்லைன்னு நினச்ச உங்கள திருத்த அந்த கடவுள் தான் வரணும், There is a Difference between Ordinary Man and Extra Ordinary Man, No One is Perfect, then how he can be???
https://www.vinavu.com/2009/03/06/gurus/
– “அவர்கள் ஏற்கெனவே ஏகப்பட்ட பேர். இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போதெல்லாம் அவர்கள் திக்குத்தெரியாக் காடுகளில் கண்காணாத ஒரு மூலையில் ஒதுங்கியிருப்பதில்லை. அவர்களுடைய வாசஸ்தலம் குகைப்பொந்துகளும் இல்லை. மலை உச்சிகளும் இல்லை.
ஊடகங்கள் அனைத்திலும் அவர்கள் வாசம் செய்கிறார்கள். அவர்களைத் தேடிப்போக நீங்கள் விரும்பாவிட்டாலும் அவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள். ஆம். ஆன்மீகச் சந்தை முன்னெப்போதும் இத்தனை சூடாக இருந்ததே இல்லை
–
முட்டாள்கள் மட்டுமே இந்த வியாபாரத்தின் வாடிக்கையாளர்கள் என்ற போதிலும், நாம் இதனை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க முடியாது. ஏனென்றால் இது வெறும் முடி சமாச்சாரம் இல்லையே!”
அன்பான நபர் திரு கார்கி,
An idiot is a one who does the same thing again and again but expects different results!
அறிவே இல்லாத, அல்லது இருந்த கொஞ்ச அறிவையும் சீனாவிற்கும் ஸ்டாலினுக்கும் அடகு வைத்த அநாகரீக அறைகுரையே, நீங்கள் கொடுக்கும் குப்பை விளக்கங்களுக்கு பெயர் நிரூபித்தலா???? அதையே திருப்பி திருப்பி பல பெயர்களில் வந்து சொன்னால் வேறு புது அர்த்தம் வந்து நீங்கள் சொல்லுவது குப்பை இல்லை என்று ஆகிவிடுமா???
ஹா ஹா ஹா ……
ஒரு நாலு பக்கம் கண்டதை எழுத வேண்டியது, அதுக்கு அவர்களில் ஒருவரே எழுதிய ஒரு நாலு பக்க ஓட்டைக்கு ஒரு லிங்க் தரவேண்டியது! அதைப்படிகசொல்லி, இந்த அசட்டுத்தனத்தை யார் படிப்பார்கள் என்று கூறினால், பாரு நிரூபித்து விட்டோம், பாரு நங்கள் தூயவர்கள், பாரு ஓடிவிட்டான், பாரு அடித்து துரத்திவிட்டோம் என்று மைக் போட்டு பஜனை அடிப்பது !! !
இவர்கள்ளிடம் பேசுவதில் ஒரு பயனும் இல்லை என்று வேறு இந்த மகான் சொல்லுகிறார்! ஏன் சாமி கண்ணாடியப்பார்த்து இத சொல்லுங்களேன்!! பொருத்தமாக இருக்கும்!
கக்கூசுக்குள் கிருக்கிரோமா!! கரெக்டாக சொனீங்க அண்ணே! அதான வினவு தளத்தில் வந்து பின்னூட்டம் இடறேன்!
வாங்க சார், மேலும் பழகலாம், ரொம்ப நல்லவரா தெரியறீங்க, எனக்கும் கொஞ்சம் practice செய்தாமாதிரி இருக்கும்!!!
நன்றி
//வாங்க சார், மேலும் பழகலாம்//
நோவு.. ஒரு சானி – ச்ச்ச்சீய் – ஒரு ஞாநி சொன்ன பொன் மொளிய மட்டும் முதல்ல சொல்லிக்கிறேன் –
An idiot is a one who does the same thing again and again but expects different results!
அதனால.. நம்மாள லூசுக் களுதைகளோட பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்க முடியாது – நீ போய் உன்னோட சேக்காளி; அதான் இன்னொரு நட்டு கயண்ட கேசான பண்டோரா கிட்ட பேசு – எனக்கு வேற வேலை இருக்கு.
மீ த எஸ்கேப்பு
நோ போன்ற நாயிகிட்டே எது சொன்னாலும் நோதான் சொல்வான். சாருவின் [obscured] திருந்த போவதில்லை.
நோவுக்கு பொறந்த நோவு, நீ கக்கூசுக்குள்ள இருந்து சாருவ நல்ல ஏத்திவிடு. பிரடீஸ் பண்றாராம்…போ போய் அந்த தே[obscured](இதை அவனே ஒதுகிட்டதுதான்) bj பண்ணு.
டேய் சொன்னா கேளுங்கடா..
நான் இலக்கியவாதிடா -அதுலயும்
பின் நவீனத்துவ வியாதிடா.
நித்தி வாழும் கடவுள்னு
நான் சொன்னா கேட்கோனும்.
சும்மா ஆராயக் கூடாது
அந்த நாட்டுல இவனையும்
இந்த நாட்டுல அவனையும்
படிச்சவன்டா.
எனக்கு தெரியாதா
சாமி யாரு?
ஆசாமி யாருன்னு?
பிரான்சு மாதிரி
இரவு விடுதி
இருக்கா இந்த நாட்டுல?
எங்கடா போவும் கடவுள்?
அதான் வந்த பக்தைகிட்ட
கொஞ்சம் அன்பை பொழிஞ்சா..
உனக்கு எங்க வலிக்குது?
ஒரு ஆம்பள கடவுள் மனசு -ஒரு
ஆம்பள பக்தனுக்கு தான் புரியும்.
நித்தியை புனிதப் படுத்தி
ஒதுக்குதல் முன் நவீனத்துவம்.
ஒத்துக் கொள்ளுதலே
பின் நவீனத்துவம்.
-பெருமாள்.
சாருவின் [obscured] கிழிந்து பீயுடன் குருதியும் ஒழுக்குகிறது
இந்த விசயத்தில் சாரு’ மிகப் பெரிய தப்பு செய்ததாகத் தோன்றுகிறது.
சாரு இத்தனை நாட்கள் அந்த சாமியாரைப் புகழ்ந்து எழுதியது கூட எனக்கு தப்பாகத் தெரியவில்லை.நாம் நம்பும் ஒருவர் நம்மோடு பலரையும் ஏமாற்றும் போது, அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?அவருக்கு யாராவது மெயிலில் எனக்கு உடல் உபாதைகள்,மன நிம்மதி இல்லை என்று சொல்லி,இவரும் அதற்கு அந்த சாமியாரைப் போய் பாருங்கள்,உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார் என்று மெயிலிலே சொல்லியிருந்தாவது பரவாயில்லை.ஆனால் பெரும்பாலனவர்கள் படிக்கும்,தன்னுடைய வலைத் தளத்தில் அவரைக் கடவுளின் அவதாரம் என்று தொடந்து சொல்லி வந்ததுதான் தவறு.அதையும் கூட பெரிய தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை.சாமியாரைப் பற்றி விசயம் வெளியானவுடன் “சாமியார் தப்பானவர் என்று தெரியாமல் ‘திரும்பவும்’ ஏமாந்துவிட்டேன்.எத்தனையோ பக்த கோடிகள் ஏமாந்ததுபோல்,நானும் அந்த சாமியாரை நம்பி ஏமாந்துவிட்டேன்.எவ்வளவே உலக விசயங்களெல்லாம் தெரிந்த எனக்கு,ஒண்ணாம் வகுப்பிலேயே சொல்லிக் கொடுக்கப்படும் ‘கண்ணால் காண்பதும் பொய்;காதால் கேட்பதும் பொய்;தீர விசாரிப்பதே மெய்’ என்கின்ற பாலபாடம் கூட தெரியாமல் இருந்து விட்டேன் என்பதை நினைக்கையில் என் மேல் எனக்கே கோபம் வருகிறது.இனிமேல்,இது போன்ற தவறை செய்ய மாட்டேன் என்று என் வாசகர்களுக்கு ‘திரும்பவும்’ உறுதியளிக்கிறேன் என்று சொல்லி இருந்தாலாவது பரவாயில்லை.அவர் மாட்டிக் கொண்டார் என்றவுடன் ‘இந்த சந்தேகம் எனக்கு முன்பே இருந்தது’ என்று அந்தர் பல்டி அடிப்பதை என்ன சொல்வதென்று தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரைக்கும் சாரு செய்ததிலே மிகப் பெரிய தவறு என்னவென்றால் ‘இந்த விசயத்தைப் பற்றி அவருக்கு முன்பே சந்தேகம் இருந்தது’ என்று இப்போது சொல்லியிருக்கின்றார்.அதைப் பற்றி முன்பே வலைத் தளத்தில் பதிவிட வேண்டியதுதானே என்று கேட்டால் ‘பண பலம்,அதிகார பலம்’ பொருந்திய சாமியாரை இந்த ஏழை எழுத்தாளன் எப்படி எதிர்த்து,என்னுடைய வலைத் தளத்தில் கருத்திடுவது என்பார்.ஆனால் குறைந்தபட்சம்,தன்னையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும்,தான் தெய்வமாக மதிக்கும் தன் மனைவியிடமாவது அவருக்கு சாமியாரைப் பற்றி தெரிந்ததைச் சொல்லி,தன் மனைவி சாமியார் ஆசிரமத்திற்கு செல்வதைத் தடுத்திருக்கலாமே.முந்தா நாள் கூட தன் மனைவி ஆசிரமத்திற்கு சென்றதை இவரே ஒப்புக் கொண்டிருக்கிறாரே.தன் மனைவியின் நலன் கருதி,தன் மனைவியிடம் கூட,தனக்கு தெரிந்த உண்மைகளை சொல்லாததை என்னவென்று சொல்வது?எது அவரை சொல்ல விடாமல் தடுத்தது?
இதில் பதிவர்களைத் தப்பு சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.நமக்குப் பிடித்த நடிகனோ,நாம் ஓட்டுப் போட்ட அரசியல்வாதியோ தப்பு செய்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.அதுவும்,பதிவு எழுதுபவர்கள் யாரும்,பதிவு எழுதுவதையே முழு நேரத் தொழிலாக செய்பதில்லை;Timepassக்குத்தான் பதிவு எழுதுவதும்,படிப்பதும்..
நித்யானந்தா: கபட வேடதாரியின் கலைந்த முகம் தலைப்பை போட்டு
சாரு நிவேதிதா இப்படி எழுதுறாரு…
//அடங்கொக்கா மக்கா, நித்யானந்தர் என்ற போலி சாமியாருக்கு வந்த கெட்டதற்கும் எனக்கும் என்ன மிஸ்டர் சம்பந்தம்? என் இணையதளத்தில் அந்த சாமியாரின் படத்தைப் போட்டு விட்டதால் நானும் அந்த நபரின் கயவாளித்தனங்களுக்கு உடந்தை என்று அர்த்தமா? ….
நித்யானந்தரோ ஊருக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை உபதேசம் செய்து விட்டு நடிகையின் குண்டியை நக்கிக் கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட அயோக்கியனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் கண்டீர்கள்? அந்தக் கபட சாமியாரின் வார்த்தைகளை நம்பி என் இணைய தளத்தில் அவருடைய புகைப்படத்தைப் போட்டு விட்டதால் நானும் அவரும் ஒன்றா?//
நித்யாவோட புகை படம் மட்டும் தான் போட்டாராம். கவுண்டமணி ஸ்டைல் ல சொல்லனும்னா “அட்ரா சக்க…அட்ரா சக்க…அட்ரா சக்க… அடங்கொய்யா… நானும் அந்தர் பல்டி ஆகாச பல்டி எல்லாம் பார்த்து இருக்கேன். இது அதுக்கல்லாம் மேலடா சாமி.”
//கும்பமேளா யாத்திரைக்காக அவந்திகா நித்யாந்தாவின் ஆசிரமத்துக்குச் சென்றிருந்தாள். நேற்று முழுவதும் அவள் அங்கேதான் இருந்தாள். அவளுடைய உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடக் கூடாது என்று பயந்துதான் நேற்று முழுவதும் இந்தப் பிரச்சினையைப் பற்றி நான் எழுதவில்லை.//
இப்படிப்பட்ட கொலைகார கும்பலோட தலைவனை பத்தி இத்தனை நாள் சொம்பு அடிச்சிருக்கார் பாருங்க.
//நித்யானந்தரின் பக்த கோடிகள் அனைவருமே ஏதோ மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல் அவர் பின்னே திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எது பற்றியும் சுயமான சிந்தனையே இல்லை. நித்யானந்தர் எதைச் சொல்கிறாரோ அதைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பினார்கள்.//
அடடே! அமெரிக்காவுல இருந்துக்கிட்டு இங்க சென்னையில மருத்துவமனையில இருந்த உங்க நண்பர் உடம்புல நித்யா புகுந்து குணப்படுதினாருன்னு கொஞ்சம் கூட அறிவியலுக்கு ஒவ்வாத ஒரு விஷயத்தை நம்பின நீங்க எந்த மந்தை சாரு?
//அடடே! அமெரிக்காவுல இருந்துக்கிட்டு இங்க சென்னையில மருத்துவமனையில இருந்த உங்க நண்பர் உடம்புல நித்யா புகுந்து குணப்படுதினாருன்னு கொஞ்சம் கூட அறிவியலுக்கு ஒவ்வாத ஒரு விஷயத்தை நம்பின நீங்க எந்த மந்தை சாரு?//
அவ்வளவு வித்தை தெரிஞ்ச நித்யா, ரஞ்சிதாவை சென்னையிலேயே இருக்க சொல்லிட்டு, பிடதியில இருந்துக்கிட்டே அவங்க கூட, மேல சொன்ன டெக்னிக்ல செக்ஸ் வச்சிக்கிட்டு இருந்திருந்தா, கதவும் தொறந்து இருக்காது, காமிராவும் உள்ள வந்து இப்படி நாறிப் போய் இருக்காது. சாருவும் இந்நேரம் அவங்க மனைவிய கும்பமேளா யாத்திரைக்கு அனுப்பிட்டு இங்க சரக்கு அடிச்சிக்கிட்டு இருந்து இருப்பாரு.
நல்ல வேளை…சாரு website’ல பூந்த வைரஸ் கூகுள்ல பூராம இருந்திச்சு…
😀
” நித்யானந்தர் யார்? ” என்று என்னிடம் கேட்டார் ஒரு நண்பர். அவரிடம் நான் சொன்னேன்:
அவர் ஒரு ஆன்மீக குரு அல்ல;
அவர் ஒரு ஞானி அல்ல;
அவர் ஒரு மகான் அல்ல;
அவர்
கடவுள்! — சாரு
இன்னும் நெறையா காமெடி இருக்கு…
one
two
three
four
five
six
seven
ORU VELAI SAMIYA VINAKKINATHU INTHA SARUVA !????
saaru sorry vinavu – nengal ithao adikkaki SUN TV la kattiyathai oru idathilum kantikkavilla – enna payama !?
Vinavu you never condemn abt sun tv to display this nonsense visual on their TV – are you fearing !?
மிஷ்டர் புலிகுட்டி, பீளீஸ் சீ ஸ்பெசல் பூஜை ஃபான் சன்டிவி இன் டுடேஸ் பிளாக்கு
சூப்பர் DK.
சாரு உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் DK போட்டிருக்கும் பதிவு தொடர்பில் இருக்கும் உங்கள் கட்டுரைகளை நீங்களே இன்னொருமுறை படித்துவிட்டு நீங்கள் வெறும் நித்யாவின் படத்தை மட்டும் தான் உங்கள் இணைய தளத்தில் போட்டீர்களா அல்லது ஆட்டு மந்தை கூட்டத்தில் நீங்களும் ஒருவரா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.
ஆதி சங்கரன் முதல் எல்லா ஆனந்தர் வரையில் இந்த வேலைதான். சௌந்தரிய லகரி முதல் நக்கீரன் வரையில் இதே தொடர் கதைதான். ஒரு லாபம் கருதிதான் எல்லோரும் இந்த புள்ளியில் இணைகிறார்கள். அந்த புள்ளி வியாபாரம், மூலதனம், லாப வேட்டை. காட்டு வேட்டை குறித்து பேசாத, தடித்த தோலுடைய இந்த பன்றிகள் (நக்கீரன் & சன் டி வி) இப்போ நல்லாவே தனக்கு வேண்டியதை திங்குது. வேலன்
தவறு செய்தவனும ஒரு மனிதன்தான்.அவன் செய்த தவறு ஒவ்வொரு மனிதனும் காலம் காலமாக செய்கிற தவறு.சன் தொலைகாட்சிக்கும் இந்த கட்டுரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.நீங்கள் ஏன் அந்த வீடியோவை ஒளிபரப்புகிரீர்கள்? அவன் செய்த தவறு கடவுள் நிலையில் இருந்து மனிதனாக மாறியது.அவனும் அவளும் உறவு கொண்டார்கள்.அதை ஒளிபரப்பியது சன் டிவியின் பணம் குவிக்கும் கீழ்த்தரமான எண்ணம்.வினவும் அதே காட்சியை ஒளிபரப்பி இன்னொருவரின் படுக்கைஅறைக்கு அழைத்து செல்கிறது.சன் டிவிக்கும் வினவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
//அவன் செய்த தவறு கடவுள் நிலையில் இருந்து மனிதனாக மாறியது.அவனும் அவளும் உறவு கொண்டார்கள்.//
கடவுள் நிலை என்பது என்ன…….
சாமியார்களும் சாரு போன்ற ஊரை ஏமாற்றும் பன்னாடைகளும் சமூகத்திலிருந்து அடித்து விரட்டப்படும் போதுதான் ஏனையவர்களுக்கு புத்தி வரும்.
உப்பு கல்லை வைரம் என்று சொன்னால் -நம்பி
ஒப்புகொள்ளும் மூடருக்கு முன்னால் -நாம்
குளறி என்ன கதறி என்ன
ஒன்றுமே நடக்கவில்லை தோழா
ரொம்ப நாளா – பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்
யார் எதை சொல்கிறார்களோ அதன்படி வாழ வேண்டும் அதற்க்கு மாறாக நடந்தால் அது மாபெரும் குற்றமாகும் ப.செல்வராஜ் நீலாங்கரை சென்னை
சாரு கவலைவேண்டாம் பின் நவினத்துவப்படி ‘அதில என்ன தப்பு அப்படின்னு சொல்லி தப்பிக்கலாம் அல்லது விமர்சனம் எழுதுபவர்களின் அறிவை கிண்டல் செய்தால் போதும் .சரி சாரு உங்க ஜீரோ டிக்ரீள இல்லாததா?யதார்த்தம் பின் நவீனத்துவம் அப்பிடீன்னு தப்பித்தீர் .ஆனா ஆயிரத்தில் ஒருவனில் காண்டம் இருக்குன்னு சொன்னத அசிங்கம் என்று சொல்றிங்களே! அது யதார்த்தம் இல்லையா? ஒரு கருத்தியலில் உறுதியாக இருக்கவேண்டுமா என்பீர் !தினமலர் வாரமலரில் முற்போக்கு இலக்கியம் படித்த லட்சணத்தை யார் அறியாதவர் ? இளையராஜாவை இழிவுபடுத்த ரகுமானை தூக்குவீர்.ஆனால் சாரு “படித்தவன் சூதும்வாதும் செய்தால் போவான் ஐயோ ஐயோ என்று “பாரதி சொன்னது உண்மைதானோ !’கவிதை எழுதுவது மட்டும் கவிஞ்சன் வேலை அல்ல அவன் சமூக மாற்றத்திற்கு போராடவேண்டும்- மாஓ சொன்னது . .நீர் போராடாவிட்டாலும் பொய்த்தவ வஞ்சகரை புகழாது நிறுத்துவீர் .இனி உமக்கு அறிவு வரட்டும் ?போதி போகாதீர் ?சேரி பக்கம் போவீர் ?
சாரு இன்னும் உயிரோடவா இருக்கிறான்?
Yes, Selling sex as usual, M***** F*****
http://charuonline.com/blog/?p=89
”
நான் இப்போது ஒரு சொந்த சோகத்தில் இருக்கிறேன். (விண்ணைத் தாண்டி வருவாயா?) அந்த சொந்த சோகத்தைக் கூட அனுபவிக்க முடியாமல் எந்தெந்த அயோக்கிய சாமியார்களின் சோகங்களையோ நான் சுமக்க வேண்டி ஆகி விட்டது என்ற இன்னொரு சோகமும் சேர்ந்து கொண்டது”
சாரு ஒரு காமெடி பீஸ். பயபுள்ள என்னம்மா டபாய்கிறான் இப்போ.
இவன் நினைத்தானாம்…. நித்தி உடனே அவன் கண் முன்னே காரில் சென்றானாம்…
அப்பப்பா…. எந்த சரக்கை அடித்துவிட்டு இப்படி மன பிறழ்ச்சி அடைந்தானோ.
இவன் எழுதும் காமெடி கதம்பத்தை படிக்க படிக்க வயிறு வலிக்கும்.. சிரிச்சி…சிரிச்சி..
1) வாழும் கலை பற்றி ஒரு பதிவு போட்டு கலக்கவும்.
இந்த கலை எல்லாம் பணம் உள்ளவனுக்கு மட்டுமே. அதிலிந்து இவர்கள்
“சிறப்பு” தெரியும்.
2)
சங்கரச்சாரி முன் நித்தி ஒன்றும் இல்லை இருந்தும் நித்திக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? காஞ்சி மடம் அப்படியே உள்ளதே. நித்தி மட்டும் இளிச்சவாயனா ?
இவ்வளவு நாறியும், சங்கரச்சாரியை மாற்றாமல் ஏன் இருக்கிறார்கள்?
3)இவர்களை எல்லாம் ஏன் இப்படி சமுகம் பொருத்து கொள்கிறது ?
பார்பனியம் அந்த அளவிற்கு இங்குள்ள மனிதர்களை மழுங்க அடித்து இருக்கிறதோ?
மிகச் சிறந்த பதிவு
வழக்கம் போல் சரியான நேரத்தில் வெளி வந்த படைப்பு. நன்றி வினவு.
ஒரு நண்பரின் அறிமுகத்தால் கடந்த ஐந்து மாதங்களாக சில படைப்புகளை படித்து வருகிறேன். பெரும்பாலான கருத்துக்களில் ஒன்றி போகின்றேன். முக்கியமான நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து காரண காரியங்களை எழுதுகின்றீர்கள் மகிழ்ச்சி. பாரபட்ச மற்ற சமுக உருவாவதற்கு உண்டான உங்கள் கோட்பாடுகள், எதிர்கால பயணம் குறித்த கட்டுரைகள் வெளிவந்தால் நன்றாக அமையும். மேலும் தவறை சுட்டி காட்டுதலோடு இல்லாமல் எந்த சமுக பழக்க வழக்கங்களால் இது போன்று நடக்கிறது, எந்த மாதிரியான கோட்பாடுகள் இது போன்ற இழி செயல்களை தடுக்கும் என்ற விளக்கங்கள், மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சிந்திக்க செய்வதுடன் சில காலங்களுக்கு பிறகு பின்பற்ற வைக்கும் என்று எண்ணுகிறேன். சில மறு மொழிகளில் உள்ள ஆக்ரோசங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. வளர்த்த நிலையிலும் இதே போன்று பாரபட்ச மற்ற சமுகத்திற்க்கான உங்களின் கோட்பாடு மாறது என்று நம்புகிறேன்.
உங்கள் ஆக்கிரோஷம் உம்மையந்தகதான் உள்ளது
என்ன சார் மனுஷன் இவன் ஒரே லூசு க்கணக்கா எழுதுறான், இவன பத்தி கேள்வி பட்டிருக்கேன். உங்களால அவன் சைட் க்கு போனேன் வெளியே இருக்கிறேன், வா…ன்னு ஒரு கட்டுரை எழுதி இருக்கான். இப்படி எல்லாம் கூட முட்டாட்தனமா எழுத முடியுமா ன்னு தோணுது. இவனுக்கு ரசிகர்கள் வேற இருக்காங்கன்னு கேள்வி படும் பொது ரொம்ப பாவமா இருக்கு.
அவன் ரரிகர்களை நிதியானதம் தான் காப்பாத்தனும்.
சாருவின் வார்த்தையில்… “நித்தி நடிகையின் கு…யை நக்கினான்”. அப்போ நீ ஏன்டா அவன் கு…யை நக்கினே? நித்தியோட கல்பதருவுக்கு போ, அதற்கு போ, இதற்கு போ என்று காசு வாங்கி கொண்டு அவனுக்காக விளம்பரம் செய்தாயே. அது மட்டும் இல்லாமல் அவனை பற்றி கடவுள், சகலமும் தீர்க்க வல்லவன், அது இது என்று எழுதினே. இப்ப கேட்டா, எனக்கு முதலிலேயே சந்தேகம்… ஆசிரமத்தின் நிர்வாக அமைப்பில் சீரின்மை…நீல பட நாயகிகள் நடமாட்டம்… என்று சப்பை கட்டு கட்டுகிறாய். அப்படியானால் தெரிந்தே மற்றவர்களிடம் அவனை பரிந்துரை செய்த நீ கயவாளிதனத்தின் மொத்த உருவம். உனக்கு சிறிதேனும் மனித தன்மை இருந்தால், எழுத்துலகில் இருந்து விலகி ஏதேனும் சாராய கடை வைத்து பிழைத்து கொள்.
இன்ன ஹமீது.. இப்படி சாருவ உழைச்சி சம்பாதிக்க சொல்லிபுட்டீக? அப்புறமா நோகம நோம்பு கும்பிடுவது எப்படி? ஒரு நாளைக்கி 18 மணி நேரம் எழுதேனுனு சொல்லி கவுரவமா பிச்சை எடுப்பது எப்படி? , (2 மணி நேரம் லெதர் பாருக்கு நடந்தே போவேன். குடிக்க 4-6 மணி நேரம், நடந்தே வர இன்னொரு 2 மணி நேரம்.. அப்புறம் எப்படி 18 மணி நேரம் எழுதேனுல்லாம் சின்ன புள்ள தனமா கேக்க புடாது.)
சாரு சொல்றது எப்படி இருக்குனா “ஒருத்தன் என்னைய குனியா சொல்லி பின்புறத்த காட்டுன்னான்.. அப்பவே எனக்கு சந்தேகம்! அப்புறம் டவுசர கழட்டுன்னான்..அப்பவும் எனக்கு சந்தேகம்! கடைசியில் எனக்கு டவுசரும் கிழிச்சி போச்சி! என் பின் பக்கமும் கிழிச்சி போயி இரத்தமும் கொட்டி போச்சி! இது உலகத்துக்கும் தெரிஞ்சி போச்சி! ஆனா நான் அதற்காக என்ன செய்ய முடியும்? ஆனா இப்பவும் சொல்றேன், நித்தி நூறு மேதைகளுக்கு சமமான அறிவு உள்ளவன்! ஏன்னா என்னயவே ஆப்பு அடிச்சு கிழிச்சுட்டானே. ” இது தான் ‘பின்’ நவீனத்துவம் என்பதோ?
சன் டிவி பாய்ஸ் போன்ற மட்டமான திரைப்படங்களை கூச்சமின்றி ஒளிபரப்பியபோது இவ்வளவு விமர்சனம் வரவில்லையே. பெரும்பாலான படக்காட்சிகள்
பாடல்கள் இதை விட மோசமாக இருக்கும் போது, எல்லோரும் பார்க்கும் செய்தியில் வெளியிட்டதை தவறு என்பவர்கள் அதே செய்திக்கிடையில் வரும் விளம்பரங்களின் யோக்யதையை பரிசீலிக்கிறர்களா? ஆனால் சன் செய்தியில் நித்யானந்தாவின் சேட்டை வீடியோ ஓரளவு பொறுப்போடு தணிக்கை செய்யப்பட்டதுதான். சாமியார்களிடம் கோடிகளைக் கொடுத்து அல்லது கொடுத்ததாக கணக்கெழுதி வருமான வரிவிலக்கு பெறமுடியும் என்கிற அரசின் விதிகளே ஊழலின் ஊற்றுக்கண். அதுவே சாமியார்களின் அதீத வளர்ச்சியின் ஊற்றுக்கண்ணும் கூட. இவனைப்போன்றவர்கள் தெளிவாக திட்டமிட்டே ரூ2000 ,5000 என்று காசு வாங்கிக்கொண்டு அருளுரை வழங்குகிறார்கள். அங்கு போய் வந்தால் ஒரு மாற்றம் நமக்குள்ளே வரும் என்று கண்களில் ‘ஒளி’ வர பேசும் நடுத்தர வர்க்க படிப்பாளிகள்,சாப்ட்வேர் கனவான்கள் தர்கரீதியாக தமக்கு நேரும் சின்ன சின்ன பிரச்சினைகளை கூட எதிர் கொள்ள திராணியற்றவர்கள். அவர்கள் கற்ற ‘உயர்’ படிப்பின் லட்சணம் அதுவே. அவர்களுக்கு தான் பங்கு சந்தை வீழ்ச்சி போல இது ஒரு அதிர்ச்சி. மற்றபடி சாதாரண மக்கள் யாரும் இவனைப் பற்றி எதுமறியதவர்களாகவே உள்ளனர் ( வீடியோ வரும் வரை).நம் கிராமங்களில் சாமியாடிகள் கூட ‘அருள்’ வந்த அந்த தருணங்களைத் தவிர மற்ற நேரங்களில் சாதாரண மனிதர்களாகவே நடத்தப்படுகிறார்கள்.
டேய் சா.நி (மாடுகள் மன்னிக்க.)…. த்தூ.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு! (நாய்கள் மன்னிக்க.)
nalla katturai koduthamaiku nantri .
good information. thank u vinavu
[…] […]
ஏன்டா பு@ட நியம்கிரி மலையில நடகுறதேல்லாம் அரசு தான செய்யுது அது மட்டும் நேர்மை இளைய.ஒங்க ம க இ க பறையன் புடிச்சு உள்ள போட்டா அது பழி வாங்கற நடவடிகையா. இதே ஜெயந்தரர செஞ்சா அது நேர்மையான நடவடிக்கையாம். சீனா கைக்கூலி நாயே உன்னை நேர்ல பாத்தேன் செருப்பால அடிப்பேன்.
sss இதுதாண்டா போன் நம்பர் 97100 82506, போன் செஞ்சு நேர்ல போக உனக்கு தில்லிருக்கா மச்சி????
நித்யானந்தா பற்றி இதுவரை சுமார் 400 நண்பர்கள் பேசியிருப்பார்கள். அவர்கள் இவ்விஷயம் பற்றி என்னிடம் விவாதிக்க விரும்புகிறார்கள். இவர்களோடு தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தால் நான் எப்படி, எப்போது எழுதுவது? இனிமேல் இந்த ‘நாற’ விஷயம் பற்றி விவாதிக்க விரும்பும் அன்பர்கள் – இந்தியர்களாக இருந்தால் 2000 ரூ.; வெளிநாடுகளில் வசிப்பவர்களாக இருந்தால் 100 டாலர் – கட்டணம் கட்டிவிட்டு என்னுடன் விவாதிக்கலாம். கட்டணத்தை என்னுடைய ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.
“சிவ சூத்திரத்தின் தாந்திரீக வழிமுறை…”அப்டீன்னா இன்னா..?
http://www.tamilhindu.com/2010/03/what-should-nithyananda-do-now-rajiv-malhotra-2/#comment-12289
நித்தியானந்தன் ஒரு ஆன்மீக கழிசடை என்றால் சாரு ஒரு இலக்கிய கழிசடை
நித்யானந்தா: அம்பலமாகும் ஆன்மீகம்.
தனது கவர்ச்சிகரமான பேச்சுத் திறமையைக் குறைந்தபட்ச மூலதனமாகவும், துதி பாடும் ஊடகங்களின் வியாபாரக் குணத்தை அதிகபட்ச மூலதனமாகவும் கொண்டு 2010 பிப்ரவரி 28 வரை தனது எல்லாவிதமான மகிமைகளோடும், புகழோடும், கீர்த்தியோடும், கடந்த இருபது வருடங்களாகப் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மிகவும் பிரபலமடைந்திருந்த, இளம் வயதில் காவி கட்டிய, இந்து ஆன்மீகத் துறவி ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள், நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக மார்ச்-2-ந் தேதியன்று வீடியோப் படங்கள் வெளிவந்ததின் காரணமாக அம்பலப்பட்டு நாறிப் போயிருக்கிறார்.
நேற்றுவரை அவரது பக்தர்களாகவும், சீடர்களாகவும் இருந்தவர்கள் இன்று அவரது படத்தைச் செருப்பாலடிக்கிறார்கள்; கிழித்துத் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள்; அவரது மடமான தியான பீடத்தின் கட்டிடங்களை அடித்து நொறுக்குகிறார்கள். ஸ்ரீ பரஹம்ச நித்யானந்தா தலைமறைவாகியிருக்கிறார்.
இது தமிழகத்திற்குப் புதிதானதல்ல. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல, பக்தி பகல் வேஷமிட்டதைக் கண்டிப்பதற்காக என்று அனல் பறக்க கருணாநிதி எழுதிய பராசக்தி வசனத்தை ஒரு தலைமுறைத்தமிழர்கள் முழுவதும் நன்கு அறிவார்கள். தமிழ் சினிமாவில் சாமியார்களைக் கேலி செய்யாத நகைச்சுவை நடிகர்களே இல்லை. சமீபத்தில் விவேக் நடித்த பல்பானந்தா சுவாமிகள் நகைச்சுவை மிகவும் பிரபலமான ஒன்று. சாமியார்களை அம்பலப்படுத்தி எள்ளி நகையாடுகிற திராவிட, பகுத்தறிவு இயக்கங்களின் எழுத்துக்களுக்கும் செயல்பாடுகளுக்கும் ஒரு தனி வரலாறே எழுத முடியும்.
சாமியார்கள் அம்பலப்படுவதும், அடிவாங்குவதும் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அவ்வப்போது நடப்பதுதான். சாய்பாபா, பிரேமானந்தா, தேவநாதன், கல்கி, இன்னும் பிரபலமடையாத குட்டிச்சாமியார்களின் லீலைகள்….இது தவிர வடநாட்டுச்சாமியார்களின் லீலைகள் என ஏராளமாக அம்பலமாகியிருக்கின்றன. இந்து தவிர இஸ்லாமிய, கிறித்தவ மற்றும் பல மதங்களின் சாமியார்களுக்கும் இதே நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் தொடர்ந்து இது போன்ற சாமியார்களின் பின்னால் ஆசி வாங்க அலைந்து கொண்டு தானிருக்கிறார்கள். இது ஏன் என்கிற கேள்வியை எல்லோருமே எழுப்புகிறார்கள். ஆனால் அதற்கான பதிலைத்தான் அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆயினும் இது முக்கியமான ஒரு கேள்விதான்.
மக்கள் சாமியார்களின் பின்னால் ஏன் அலைகிறார்கள்? இதில் மக்கள் என்கிற சொல் யாரைக் குறிப்பிடுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். எந்த மக்கள் நித்யானந்தா போன்றவர்களின் பின்னால் போகிறார்கள்? அன்றாடம் உழைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மக்களா? நடுத்தர வர்க்கமா? மேல்தட்டுவர்க்கமா?. நிச்சயமாக அவர்கள், மேல்தட்டு மற்றும் upper middle class எனப்படுகிற மேல்மட்டநடுத்தர வர்க்கத்தினைச் சேர்ந்தவர்கள்தான் என உறுதியாகக் கூற முடியும்.
வீட்டிற்கு வந்து ஆசி வழங்க ஒரு லட்சம் ரூபாய்: வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரம் பிரசங்கம் செய்து இரண்டு மணி நேரம் ஆசி வழங்க பதினோரு லட்சம் ரூபாய்: தியான வகுப்புகளுக்கான கட்டணம் மூவாயிரம் ரூபாய்: உறுப்பினர் கட்டணமாக ஆயிரம் ரூபாய்: சிறப்புப் பிரச்னைகளுக்கான சிறப்பு வருகை, பிரசங்கம், மற்றும் ஆசீர்வாதங்களுக்குச் சிறப்புக் கட்டணங்கள்: முப்பத்தி மூன்று நாடுகளில் கிளைகள்: பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள்: ஏராளமான தகவல் தொடர்பு வலைப் பின்னல்கள்: மாதந்தோறும் பலகோடி ரூபாய்கள் புழங்குகிற நிர்வாகம்: இடைவிடாமல் உயர்ந்து கொண்டே போகும் தியானபீடத்தின் சொத்துமதிப்பு, இவையெல்லாம் நமக்குக் காட்டுவது என்னவென்றால், நிச்சயமாக உழைத்துச் சாப்பிடும் மக்கள் இவர்களது சீடர்களாக, பக்தர்களாக இல்லை என்பதைத்தான்.
மேல்மட்ட நடுத்தர வர்க்கமாகவும் மேல்தட்டு வர்க்கமாகவும் இருக்கிற இந்தச் சீடர்கள் யார்? இந்தப் பட்டியல் நீளமானது. தமிழகத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டு, ராஜசன்னியாச ஜாதகம் கொண்டவன் என்றும், பனிரெண்டு வயதினிலேயே குண்டலினியை ஏற்றிக் காண்பித்தவன் என்றும், தனது ஆன்மீக வியாபாரத்தைத் துவக்கியவனை உலகம் முழுவதும் பரப்பிவைத்த குமுதம் போன்ற பத்திரிகை முதலாளிகள், இவர்களுடைய நண்பர்களான பிற துறை முதலாளிகள், கருப்புப் பணத்திலேயே உயிர் வாழும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், நடிக, நடிகையர்கள், உயர்மட்ட அரசியல்வாதிகள், போலீசு, இராணுவம் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர்மட்ட அரசுஅதிகாரிகள். இந்த அதிகாரிகளின் மூலமாக ஆதாயங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தரகர்கள், வியாபாரத்துறையினர், ஒப்பந்தக்காரர்கள்- இவர்களும் அதிகாரிகள் தஞ்சம் புகுகிற சாமியார்களிடம்தான் தஞ்சம் புகுகிறார்கள். இவர்களுடைய எல்லாத் தேவைகளையும், பிரச்னைகளையும் சாமியார்கள் மூலமாகவே அதிகாரிகளிடமிருந்து தீர்த்துக்கொள்கிறார்கள். அம்பானியின் குடும்பச்சண்டை நாறியபோது ஜெயேந்திரன் பஞ்சாயத்து செய்யவில்லையா என்ன?
வரிச்சலுகை பெற, வரிமோசடி செய்ய, வரிமோசடி செய்ததை மறைக்க, லஞ்சம் பெற, லஞ்சம் கொடுக்க, லஞ்சம் கொடுத்ததையும் வாங்கியதையும் மறைக்க, அரசு ஒப்பந்தங்களைப் பெற, தொழில் கூட்டணீ அமைக்க பாலியல் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளில் தோன்றும் வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ள, மொத்தத்தில் அரசுக்கு எதிரான, சமூகத்திற்கு எதிரான, சட்ட விரோதக் குற்றங்களை யெல்லாம் செயல்படுத்தவும், மறைத்துக்கொள்ளவும், இவர்கள் சாமியார்களிடமே தஞ்சம் புகுகிறார்கள்.
இப்படியான சமூகக் கிரிமினல் கும்பல்களுக்கு ஒரு இணைப்புத் தளமாகத்தான் இத்தகைய சாமியார்கள் இருக்கிறார்கள். இப்படி இணைப்புத் தளமாக இருப்பதன் மூலம் இந்தக்கிரிமினல் கும்பல்களுக்கான பாதுகாப்பு வளையமாகவும் இந்தச் சாமியார்கள் ஆகிவிடுகிறார்கள். அதுபோலவே இந்தக்கிரிமினல் கும்பல்களின் அதிகார பலத்தைக் கொண்டு தனக்கான பாதுகாப்பு வளையத்தையும் இந்தச் சாமியார்கள் உருவாக்கி விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட மோசமான சமூக விரோதக்கும்பல்களின் கூட்டாளியாக இருக்கும் சாமியார்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவது எப்பொதென்றால், பாலியல் ஒழுக்கக்கேடுகள் அம்பலப்படும் போது மட்டும்தான். பாலியல் கேட்டைவிடவும் ஆகக்கேடான சமூகக்கிரிமினல் குற்றவாளிகளின் அடைக்கலகர்த்தாவாகவும், கூட்டாளியாகவும் சாமியார்கள் இருப்பதை யாரும் குற்றமாகக் கருதுவதில்லை.
நடிகை ரஞ்சிதாவுடனான தொடர்பிற்காக அவனைக் கைது செய்யவேண்டுமென்றால், இந்த சமூக விரோதக் கும்பல்களுடான தொடர்பிற்காக அவனைத் தூக்கில் தான் போடவேண்டும்.
ரியல் எஸ்டேட் திருடன், கந்துவட்டிக் கொள்ளைக்காரன், சட்டவிரோதமாய்ப் பணம் சேர்ப்பவன், சமூக விரோதச் செயல்களைச் செய்து பணம் சேர்ப்பவன், சாதி வெறியன், மதவெறியன், மக்களின் பணத்தைச் சூறையாடும் காண்ட்ராக்டர்கள், அரசை ஏமாற்றும் கருப்புப்பணக்காரன், தொழிலாளிகளை ஏமாற்றும் முதலாளி, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதி, அரசையும் மக்களையும் ஏமாற்றும் அரசு அதிகாரி — இவர்களையெல்லாம் பக்தர்களாகவும், சீடர்களாகவும் வைத்திருக்கிறார்களே என்பதற்காக இந்தச் சாமியார்கள் மீது யாரும் கோபம் கொள்வதுமில்லை, குற்றவாளியாகப் பார்ப்பதுமில்லை.
ஓய்வில்லாமல் உடல் உழைத்தும்கூட ஒருநாள் உணவினை முழுமையாகச் சாப்பிடமுடியாமல் நைந்துபோய் வாழும் சாலையோர உழைப்பாளிகளையெல்லாம் காரிலிருந்து வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டே போய், வியர்வையின் கசகசப்பைக்கூட உணராத பணக்காரர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஆனந்த வாழ்வை வழங்க ஆசி வழங்குகிறார்களே என்பதற்காக இந்தச் சாமியார்கள் மீது யாரும் கோபம் கொள்வதுமில்லை, குற்றவாளியாகப் பார்ப்பதுமில்லை.
ஆளும் வர்க்கத்தால் செயற்கையாக உருவாக்கப்படுகின்ற விலைவாசி உயர்வும், வேலையில்லாத்திண்டாட்டமும் நோய்களும் உழைக்கும் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கையில் உழைக்காத சோம்பேறிகளுக்காக ஆனந்தத்தீர்த்தம் வழங்குகிறார்களே என்பதற்காக இந்தச் சாமியார்கள் மீது யாரும் கோபம் கொள்வதுமில்லை, குற்றவாளியாகப் பார்ப்பதுமில்லை.
அரசுப் பொது மருத்துவமனைகளிலே தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், மருத்துவர்களும், மருத்துவக்கருவிகளும், மருந்தும் இன்றி மடிந்து கொண்டிருக்க, பெரும் பணக்காரர்களுக்கு மட்டும் வெறுங்கையால் தலையைத் தொட்டே கேன்சரையும் குணமாக்குகின்றராரே, ஏன் இவர்கள் இதை ஏழைகளுக்குச் செய்யமாட்டேனென்கிறார்கள் என்பதற்காக இந்தச் சாமியார்கள் மீது யாரும் கோபம் கொள்வதுமில்லை, குற்றவாளியாகப் பார்ப்பதுமில்லை.
ஒன்றுமில்லா ஏழை மக்களுக்கு இவர் நித்யானந்த ரகசியத்தையும் ஆசியையும் வழங்க மறுக்கிறாரே என்பதற்காக இந்தச் சாமியார்கள் மீது யாரும் கோபம் கொள்வதுமில்லை, குற்றவாளியாகப் பார்ப்பதுமில்லை.
இந்தக் காரணங்களுக்காகவெல்லாம் கோபப்பட்டிருந்தால், படங்களைக் கிழித்து, ஆசிரமங்களை அடித்து நொறுக்கியிருந்தால் இப்படிப்பட்ட சாமியார்களின் பின்னால் ஆசி வாங்க யாருமே அலைந்திருக்க மாட்டார்கள். சொல்லப்போனால் இப்படிப்பட்ட சமியார்களே உருவாகியும் இருக்க மாட்டார்கள்.
ஆனால் அவ்வாறு யாரும் நினைப்பதில்லை. காரணம் அவைகளெல்லாம் குற்றங்கள் என யாரும் இப்போது கருதுவதில்லை. ஆன்மீகம் போதிப்பவனுக்கு அக்கவுண்ட் எதற்கு? துறவிக்குப் பங்களா எதற்கு? சொகுசு வாழ்க்கை எதற்கு? என இவர்கள் சிந்திப்பதேயில்லை. ஏனென்றால் இவர்களின் வாழ்க்கை முறையும், வாழும் விருப்பமுமே அப்படிப்பட்டதுதான். அதனால்தான் மாட்டிக் கொள்ளாத வரைக்கும் அவனைத் தலையில் தூக்கிக் கொண்டு ஆடுகிறார்கள். மாட்டினால் கீழே போட்டு விட்டு ஓடுகிறார்கள். ஒரு சாமியார் அம்பலமானால் இன்னொரு சாமியாரிடம் போவதற்கு இந்த மனோபாவமே அடிப்படைக் காரணமாக இருக்கிறது.
பாலியல் ஒழுங்கீனமில்லாமல் சாமியார்களால் இருக்கவே முடியாது. உயிரினத் தேவைகளில் ஒன்றான பாலியல் என்பதையே ஒழுங்கீனம் என ஆன்மீகப் பிரச்சாரம் என்ற போர்வையில் பொய் பேசுகிற இந்தச் சாமியார்களெல்லோரும் மனித சமூக நாகரிகத்தையே இழிவு செய்கிற குற்றவாளிகள். ஒழுங்கீனம் என்று பிரச்சாரம் செய்வதின் மூலமாக பாலியல் உணர்வுகளைத் தடுத்து விடமுடியுமா?
சாமியார் யாரோடு படுத்துக்கிடந்தார் என்பது அல்ல அளவுகோல். சாமியார் யாரோடெல்லாம் பழகுகிறார், தொடர்பு வைத்திருக்கிறார், என்ன செய்கிறார், என்ன சொல்கிறார்? என்பதுதான் அவன் குற்றவாளியா, இல்லையா என்பதற்கான அளவுகோல். கடவுள் சாராத ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக்கொள்கிற இந்தச் சாமியார்கள் என்ன சொல்லுகிறார்கள்?
நித்யானந்த வாழ்விற்கு துறவறமும், பிரம்மச்சர்யமும் வேண்டுமென்று சொல்கிறார்கள். அப்படியானால் குடும்ப வாழ்க்கையென்ன கொடூரமானதா? அதில் ஆனந்தமில்லையா? எவ்வளவோ துன்பங்கள் துயரங்கள் இருப்பினும் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சியைத்தான் மனிதர்கள் எப்போதுமே விரும்புகிறார்கள். குடும்ப வாழ்க்கையை அறியாத, குடும்ப வாழ்க்கைக்குப் பயப்படுகிற ஒரு சாமியாருக்கு அதன் இன்ப துன்பங்கள் மட்டும் எப்படித்தெரியும்? இவர்களிடம் போய் குடும்ப வாழ்க்கை வாழ்பவர்கள் ஏன் ஆசி வாங்க வேண்டும்? இதையும் யாரும் சிந்திப்பதில்லை.
பிரம்மச்சர்யம் என்பது மோசடித்தனமானது, சிலர் அதை உண்மை என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். சரி, நம்பட்டும். ஆனால் ஐந்து லிட்டர் பாலை ஒரு லிட்டராக சுண்டவைத்து அதில் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போட்டுக் குடிப்பது, அசல் துபாய் பேரீச்சைகளை தேனில் ஊற வைத்து மென்று தின்பது, போதுமென்று நினைக்கிறேன். இது தவிர, பெண் சிஷ்யைகளோடு பூஜை, யோகா செய்வது, ரஞ்சிதாவின் கையால் வயாகரா சாப்பிடுவது, இப்படி சொகுசாக வாழும் நித்யானந்தா போன்றவர்கள் பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று நம்புவது ஏமாளித்தனமில்லையா? சகல வசதிகளோடும் வாழுகின்ற சாமியார்கள் பிரம்மச்சர்யத்தைப் பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த மோசடித்தனமில்லையா? ஒரு சாதாரணமான மனிதனாக இருந்தே பிரம்மச்சர்ய பிரச்னையைப் புரிந்துகொள்ள முடிகிறபோது, அதே பிரச்னை சாமியார்களுக்கும் இருக்காதா?
யதார்த்த வாழ்விற்குப் பொருந்தாத, பொய்யான கருத்துக்களை ஆன்மீகம் எனும் பெயரில் செய்யும் வியாபாரமும், கிரிமினல் பணக்காரர்களோடு கூட்டாளியாக உள்ள குற்றமும் சாமியார்களிடம் பகிரங்கமானதாகவே இருக்கிறது.
சாமியார்கள் அந்தரங்கமாகச் செய்கிற தவறுகளைத்தான் பத்திரிக்கைகள் எழுதுகின்றன, படம் போடுகின்றன ஆனால் பகிரங்கமாகச் செய்கிற குற்றங்களைப் பற்றி எழுதுவதுமில்லை. படம் போடுவதுமில்லை. இவர்களின் பகிரங்க சமூக விரோதச் செயல்களுக்காக எப்போது அம்பலப்படுகிறார்களோ, அப்போதுதான் இவர்களைப்போன்ற கிரிமினல் சாமியார்கள் உருவாவதையும் அவர்கள் பின்னால் சென்று மக்கள் ஏமாறுவதையும் தடுக்க முடியும்.
ஸ்ரீ பரஹம்ச நித்யானந்தா அம்பலமானதால் யாருக்கெல்லாம் லாபம்? சன்டி.வி, தினகரன், பக்கம் பக்கமாய்க் கலர்ப் படம் போட்டு ஏழுரூபாய் நக்கீரனை முப்பது ரூபாய்க்கு வித்துக் காசு பார்த்த கோபால், இந்த மானங்கெட்டதுக்கு தந்தை பெரியார் விருது கொடுத்திருக்கிறது தமிழக அரசு. தூ!
இன்று நித்யானந்தாவின் ஆபாசம் அம்பலமாகியிருக்கிறது. ஆனால் அவனது ஆன்மீகம் ஏற்கனவே அம்பலமாகியிருப்பதை நாம் மக்களிடம் சொல்லியாக வேண்டும்.
குருசாமிமயில்வாகனன்
இந்தக் கட்டுரை எழுதிய நேரம் நான் அரேபிய எழுத்தாளர் அகமது இஸாமி கபீர் எழுதிய மூன்று பக்க கட்டுரை பற்றி எழுதி தமிழ் மொழிக்கு உதவி இருக்கலாம். என் கட்டுரைகள் மலையாளத்தில் தொடங்கி கென்யா, எத்தியோப்பியா, ஸ்பெயின், பிரான்ஸ் வரைக்கும் வெளியாகின்றன. இந்த மரத்துப் போன தமிழ் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு மட்டும் என் கட்டுரை மீது வெறுப்பு. எல்லாம் அந்த ஒ.த.எ(ஒன்றரை அடி தமிழ் எழுத்தாளன் வள்ளுவன்) செய்யும் சதி என்பது என் வாசகர்களுக்கு தெரியும்.
வள்ளூஸ் ரிடர்ன்ஸ்-1 எழுத வேண்டிய வேலை இருக்கிறது. அதற்குள் ஒ.த.எ பற்றி என் வாசகர் பத்ரிநாத் கடிதத்திற்கு பதில் எழுத வேண்டும்.
இருபத்திநாலு மணிநேரமும் எழுத்தை மட்டுமே உண்டு வாசித்து சுவாசித்து வரும் என் கட்டுரைகள் வெளிவராத தமிழ் மொழியில் நான் இனிமேல் எழுதப் போவதில்லை. ஆப்பிரிக்காவின் ‘உட்லாமீதி’யில் மட்டுமே எழுதப்போகிறேன். அங்கேதான் என்னை கொண்டாடுகிறார்கள். அங்கு இருக்கும் ‘அஸ்கு பிஸ்கு’ பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ராஸ்மிகி என் எழுத்தை பற்றி உருகி உருகி எழுதுகிறாள்.
வாசித்துவிட்டு தினமும் கதறி அழுகிறாளாம். கண்ணீரை துடைப்பதற்கென்றே ஒரு லோடு கதர் துண்டை அவளுக்கு அனுப்பவேண்டும். ஒரு லட்சம் வரை செலவாகும். வாசகர்கள் அனுப்பலாம். யாராவது எனக்கு ‘அவளை டிஷ்யூ பேப்பரில்’ கண்ணீரை துடைக்கச் சொல்லவும் என்று அட்வைஸ் பண்ணி எனக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்க வேண்டாம்.
தென் ஆப்பிரிக்கா செல்கிறேன். அதற்கு மூன்று லட்சம் ஸ்பான்ஸரும் உதவிக்கு வர ஒரு பெண்மணியும் தேவை. பயப்படாமல் வரலாம், நான் ஒன்றும் கடித்து தின்னப்போவதில்லை.
ஒ.த.எ பற்றி நான் எழுதிய கடைசி வரிகள்தான் இவை. இனி நான் என் நேரத்தை வீண்டிக்கப் போவதில்லை. என் பதிவின் ஹிட் ரேட் குறையும் போது யோசிக்க்லாம்.
yentha swamiyar nalla swamiyaroa avarhal pakkam mediyakkal selvathillai ..polysamiyarhalai pirabalabpaduthi avanum nallu kasu parthu thanum nalu kasu parthu vasathiyai valvuthuthanay puthiya synthanai puratchi yeluthalanin parvaikkum devanathanin seyalukkum vithiyasam kidaiyathu .ennum yethanai kalam yethanai perukku yethanai samiyarhal puttru noayai @vayetru valiyai
இருள் சூழ்ந்துள்ள் தமிழகத்தை மீட்பதற்கு பெரியார் இல்லை. பெருச்சாளிகளும் எலிகளும், பாம்புகளும் கொடிய விலங்குகளும் வேட்டைக்காடாக்கி தின்று வருகின்றன தமிழகத்தை.நம்பிக்கை ஒளி ஏற்றும் பணி செய்து வருகிறீர்கள். சாரு ஒரு அரைவேக்காடு உங்கள் தாக்குதலை தாக்குப்பிடிக்கமாட்டார். அரசியலை மாற்றினால்தான் கலாச்சாரம் மாறும்.
It is very easy to book Nithi on various charges like sex-scandal, kidnapping, looting public money, cheating of young and married women etc. but the present Political System and Legal system protects him…
Nature is the God and people must realise this and should blindly follow such cong men..
nithyanandha very dangars felo
அறிவு கெட்ட ______ உங்கள் கருத்தை ஆபாசம் இல்லாம சொல்லுங்க___ உங்களுக்கு குழந்தைகள் இல்லையா , குடும்பம் இல்லையா . மண்ணிக்கணும் தயவு செய்து திருந்துங்க_______