முகப்புபெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கெதிரான நீதிமன்றப் போராட்டம்!
Array

பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கெதிரான நீதிமன்றப் போராட்டம்!

-

vote-0122008 ஆம் ஆண்டு நாளிதழ்களில் இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மக்களுக்கு கண்பார்வை பறிபோனதை படித்திருப்பீர்கள். இந்தப் பிரச்சினைக்காக மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC, ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) நடத்திய நீதிமன்ற போராட்டத்திற்கு இடைக்கால வெற்றி கிடைத்திருக்கிறது.

முதலில் அந்தப் பிரச்சினையை மீண்டும் நினைவு கூர்வோம். விழுப்புரம் மாவட்டம் நைனார்பாளையம் கடுவனூர் பகுதியிலிருந்து 66பேரை மருத்துவர் அசோக் தலைமையிலான குழு தேர்வுசெய்து பெரம்பலூர் ஜோசப் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவச கண் அறுவை சிகிச்சை செய்தது. இப்படி செய்யப்படும் ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் மூலம் அரசு பணம் 750 ரூபாய் வாங்கிக் கொண்டுதான் இலவசம் என்று நாடகம் போடுகிறார்கள். மேலும் வெளிநாட்டில் இதை வைத்து பிரச்சாரம் செய்தும் நன்கொடை திரட்டுகிறார்கள்.

29.7.2008 அன்று கண் அறுவைச் சிகிச்சை செய்த அனைவரும் கடுமையான வலியால் அவதிப்பட்டதை மருத்துவமனை ஊழியர்கள் கூட பொருட்படுத்தவில்லை. மறுநாள் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் பெரிய டாக்டர் வந்து மீண்டும் சிகிச்சை செய்கிறார். பலன் இல்லை. கண்களில் சீழ்பிடித்து தலைமுழுவதும் கடுமையான வலியில் அந்த ஏழைகள் அலறுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யக்கூட அருகில் உறவினர்கள் யாருமில்லை. கொஞ்ச நேரத்தில் வலி சரியாகிவிடும், பத்து நாட்களுக்கு சொட்டு மருந்து போடுங்கள் என்று தேனொழுக பேசிய மருத்துவமனை நிர்வாகம் அந்த மக்களை கொளுத்தும் வெயிலில் விட்டுவிட்டு ஓடிவிட்டது.

கண் பறிபோய்விடுமோ என்ற அவலநிலையில் அந்த ஏழைகள் கையிலிருக்கும் சொத்து பத்துக்களை விற்று, கடன்வாங்கி வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அப்போதுதான் கண் சீழ் பிடித்துவிட்டது, இனி தெரியாது, வலியை மட்டும் நிறுத்த மருந்து சாப்பிடலாம் என்ற அதிர்ச்சி உண்மையை மக்கள் தெரிந்து கொண்டார்கள். கண்ணில்லாமல் வேலைக்கு கூட போகமுடியாது என்ற நிலையில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். வேறு சிலர் கோவை சங்கரா மருத்துவமனை சார்பில் நடந்த முகாமில் கலந்து கொண்டனர். அங்கேயும் கண் போனது போனதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

பிறகு மீண்டும் பெரம்பலூர் மருத்துவமனைக்கு ஓடினார்கள். அங்கே கண்ணுக்கு ஆபத்தில்லை, சொட்டு மருந்து போடுங்கள் சரியாகிவிடும் என்று கொஞ்சம் கூட கருணையோ மனிதாபிமானமோ இன்றி பச்சைப்பொய் சொன்னார்கள். மக்கள் கூடி நின்று இந்த அநீதியைக் கேட்டபோது டாக்டர்கள் “மருந்து கெட்டுவிட்டது நாங்கள் என்ன செய்ய முடியும்” என்று கைவிரித்தனர். இதற்குப் பிறகுதான் அந்த மக்கள் நடுத்தெருவில் இறங்கி மறியல் செய்ய, கண் பறிபோன இந்த அயோக்கியத்தனம் வெளிவுலகிற்குத் தெரியவந்தது.

அதுவரை கோமாவில் இருந்த அரசு நிர்வாகம் நடவடிக்கைகள் எடுப்பது போல காட்டிக்கொண்டது. இலவச கண் சிகிச்சை முகாமுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று அப்ரூவர் ஆன அரசு அதை மீறியதற்காக ஜோசப் மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்கள். கண்பறிபோனவர்களுக்கு ஆளுக்கொரு இலட்சம் என்று அறிவித்தார்கள். கண்பறிபோன செய்தி காட்டுத்தீயாய் பரவாமல் இருப்பதற்காக பொது விசாரணை நடத்தப்போவதாகவும் அறிவித்தது அரசு. சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கெட்டுப்போன மருந்து அளித்திருந்தால் அந்தக் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒரு இலட்சம் பணம் அதுவும் அரசு பணம் வழங்கப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களின் சோகத்தை அவர்களின் வார்த்தையிலேயே கேளுங்கள்:

மூகனூர் கிராமத்தின் சுப்பராயலு, “கண் தெரியாட்டியும் வலியில்லாமல் இருந்தா போதும்னு தாங்கமுடியாம தற்கொலைக்கும் முயற்சி செய்தேன்”. மூகையூரின் வள்ளியம்மை, “தலைவலின்னு போனேன், அப்போ கண் நல்லா தெரிஞ்சுது. டாக்டர் ஆப்பரேஷன் செஞ்சா சரியாயிடும் என்றார். என் பொண்ணுங்க வேணாண்ணு சொல்லியும் வலுக்கட்டாயமா அழைச்சிட்டுப்போய் கண்ணை கெடுத்துட்டாங்க, வலி தாங்க முடியல.” கடுவனூரைச் செர்ந்த புத்தி சுவாதினம் இல்லாத குப்புவின் அம்மா,” லேசா தெரிஞ்ச கண்ணை லென்சு வைச்சா சரியாயிடும்னு டாக்டர கூட்டிக்கிட்டு போய் சுத்தமா கெடுத்துட்டாங்க, என்ன செய்யறதுன்னு தெரியல” என்று கண்ணீர் விடுகிறார்.

நைனார்பாளையத்தின் மருதாயி” ஒரு கண்ணு தெரியலைன்னு போனேன், இப்ப ரெண்டு கண்ணும் தெரியலை, இந்த டாக்டர்களை விடக்கூடாது”. நாவம்மாள், ” இடது கண்ணு தெரியலைன்னு போனேன் வலது கண்ணுல ஆபரேஷன் செஞ்சு இரண்டு கண்ணும் தெரியலை” முருகேசன்,” கால் வலின்னு காட்ட போனேன், கண்ணுல ஆப்ரேஷன் செய்யனும்னு சொல்லி கட்டாயப்படுத்தி கூப்டாங்க. இப்போ கண் போச்சு”. மற்றொரு முருகேசன்,” ஒரு நாளைக்கு ஏர்மாடு ஓட்டி ரூ.500 சம்பாதிப்பேன். இப்போ முடியல, கண் போயிடுச்சு. என் காட்ட வித்து அரசாங்கம் கொடுத்த ஒரு இலட்சம் செக்கோடு நானும் ஒரு இலடசம் தாரேன், என் கண் பார்வை கிடைக்குமா” என்கிறார்.

இப்படி எல்லா மக்களின் துயரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்கும் போது இலக்கை அடைய வேண்டும் என்ற வெறியுடன் இம்மக்களை வற்புறுத்தி ஆடுமாடுகள் போல நடத்தியிருக்கின்றனர் என்பது தெரிகிறது. மக்களுக்கு கண்பார்வையை பிடுங்கிய ஜோசப் மருத்துவமனை இந்த உண்மையை 25நாட்களுக்கு மறைத்து வைத்தது. மக்களிடமும் வெள்ளை மாத்திரை, சொட்டு மருந்து என்று ஏமாற்றி வந்தது. இந்த இடைவெளியில் எல்லா தடயங்களும், ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருக்கும் என்பது இப்போது புரிகிறது.

அப்போது பாதிக்கப்பட்ட இந்த ஏழை மக்களை அணிதிரட்டிய மனித உரிமை பாதுகாப்பு மையம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் பலனில்லை என்பதால் உயர்நீதிமன்றத்தை நாடினார்கள் தோழர்கள். கண்பார்வை பறிபோனவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கியது அரசுதான், ஆனால் மருத்துவமனை உரிய இழப்பீடு வழங்கவேண்டும், கிரிமினல் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டுமென்று ம.உ.பா.மை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இறுதி தீர்ப்புக்கு முன் இடைக்கால தீர்ப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு கண்புரை சிகிச்சை வல்லுனர் குழுவைக் கொண்டு அளிக்க வேண்டுமென்றும் எதிர்காலத்தில் தனியார் மருத்துவமனையின் தகுதியை பறிசோதித்து உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்க வேண்டுமென்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.

இறுதி தீர்ப்பில் ஜோசப் மருத்துவமனையும் கண் பறிப்புக்கு பொறுப்பான மருத்துவர்களும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு ஏழைகளுக்கு உரிய நீதியை பெறுவதற்காக மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடுகிறது.

ஏழைகள் என்பதால் கண்ணைப்பறிகொடுத்த மக்களுக்கான நீதி கூட அரசால் வழங்கப்படுவதில்லை என்பதை தோழர்களின் இந்த நீதிமன்றப்போராட்டம் நிரூபிக்கிறது. மேலும் ஜோசப் மருத்துவமனை எந்த குற்ற உணர்வுமின்றி, நிவாரணம் கூட வழங்காமல் தனது மருத்துவ வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இப்படி கண் பறிபோன விசயம் நடுத்தர வர்க்கத்திற்கோ, அல்லது மேல் தட்டு வர்க்கத்திற்கோ நடந்திருந்தால் ஆங்கில சேனல்கள் முதல் பலருக்கும் இது ஒரு தேசியப்பிரச்சினையாகி இருக்கும். நடவடிக்கைகளும் துரித கதியில் எடுக்கப்பட்டிருக்கலாம். ஏழைகள் என்றால் கண்ணைக்கூட பிடுங்கலாம் என்ற யதார்த்தம் மனிதாபிமானம் என்ற ஒன்று தங்களுக்கு உள்ளதாக நினைக்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கட்டும்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. This is outrageous! What is more atrocious is the fact that no media house or newspaper even covered it properly! The scale of this violence is enormous. All progressive forces must join hands against this murderous lot. All the very best to HRPC.

  2. இதெல்லாம் பரபரப்பு தருவதற்கு உதவாது என்பதாலும் இதில் அரசாங்க மெத்தனமும் இருக்கு என்பதாலும் இதெற்கெல்லாம் ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் கொடுத்து சிரமப் படுவதில்லை.

    ஏழைகள் ஏழைகளாகவே இருந்து விடுதல் இலவசங்கள் அள்ளி அல்லது ‘தள்ளி’ யாவது வழங்குவதற்கு அவசியமான அடிப்படை.

    விருட்சம்

  3. நல்லது செய்ய போய் ஒரு கெட்டது நடந்து விட்டது. வேண்டுமென்றே குறி வைத்து செய்த குற்றம் போல இப்படி எழுதுவது சரியா? இந்த மாதிரி கூட்டம் போட்டு போராட்டம் நடத்துவதால் நல்லது செய்ய நினைபவர்களும் செய்யாமல் போக நேரிடும். எதற்கு எடுத்தாலும் போராட்டமா?

    • முட்டாஊ அண்ணே, கண்ணு போனது உங்க ஆயாவுக்கா இருந்தாலும் இப்படித்தான் வக்கன பேசுவீகளோ????

      • அடேய் குறி தம்பி! என்னோட் ஆயாவுக்கு கண் போனா நானும் சட்டபூர்வமாக நியாமா என்ன வேணுமோ அதுக்காக முயற்சி செய்வேன். உங்கள மாதிரி சகட்டு மேனிக்கு ஊற கெடுக்குற மாதிரி நல்லது செய்யனும்னு நினைக்குற கொஞ்ச நெஞ்ச கூட்டத்தையும் போராட்டம் கன்றாவின்னு செய்ஞ்சி கலைச்சிற மாட்டேன். செய்ய விடாம பண்ண மாட்டேன். நீங்கள் எல்லாம் கூட்டம் போராடம்ம்னு செய்ஞ்சி மக்கள் மத்தியில நஞ்ச வெதைக்குற கூட்டங்க.

        • மூடாஊன்னா மூடாஊதான், ஏன்னே நீங்க மட்டும் சட்டபூர்வமாக நியாயமா கேப்பீங்களாம் அதே சட்டபூர்பவமா நியாயமா நாங்க கோர்ட்டுக்கு போராட்டம் கன்றாவியா????

        • மோட்டோ தம்பி நீ முதல ஒன்ன புரிஞ்சிக்கணும் உண்மையேலைய நல்லது செய்ய நினைபவர்கள் இது போன்ற ஆர்பாட்டங்களை கண்டு அஞ்ச மாட்டார்கள் புரிகிறதா தோழரே

      • தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி புரட்சி தோழரே. தங்கல் போராட்டம் புரிந்து விட்டது நல்ல விளங்கி விட்டது. நடத்துங்கள் நடத்துங்கள். இப்படி கண் இழந்து தவிப்பவர்களுக்கு நீங்கள் எதாவது பண பொருள் உதவி செய்தீர்களா? இல்லை வெறும் போராட்டம் புனஸ்காரம் மட்டும் தானா ? அடுத்து எந்த செய்திக்காக காத்து கொண்டு இருக்குறீர்கள்? காது செவிடான செய்தி? அல்லது மூக்கு அடைத்து கொண்ட செய்தியா? அல்லது ஒண்டிபுலி சாமியார ஓடையில ஒன்னுக்கு அடிச்சிட்டாருருரூர் ….அப்படீன்ற செய்திகாகவா? கவலை படாதீர்கள் ஒரு நியூஸ் கிடைகலன்னாலும் இருக்கவே இருக்கு ரஞ்சிதா மேட்டர் சும்மா பூந்து விளையாடுங்க… எனக்கு பொழுது போகணும்…வெட்டியா.

        • மோடோ தோழரே எங்களிடம் அவர்களுக்கு உதவும் அளவுக்கு பணம் இல்லை எனவே பணம் கொட்டி கிடக்கும் மருத்துவமனை நிர்வாகத்திடம் நஷ்ட ஈடு வாங்க போராடி கொண்டு இருக்கிறோம் புரிகறதா உங்களாட்டும் சும்மா உக்காந்து கொண்டு பேசவில்லை

          முதலில் மனிதாபிமானமாக சிந்தியுங்கள் வெட்டி தோழரே

      • போராடுங்க தோழரே..அது நல்லது தான். ஆனா அவங்க என்னமோ கொலை குற்றம் பண்ண மாதிரி ட்ரீட் பண்ணறது தான் தப்புங்குறேன். புரியுதா? ஒருத்தவங்கள பத்தி தப்பு தப்ப எழுரதுக்கு முன்னாடி கொஞ்சம் நல்ல புத்தி மனசாட்சியோட எழுத கத்துக்குங்க. மனுஷன பொறந்த எல்லாருக்கும் மனசாட்சி இருக்கு தெய்வமே.. அத ஒழுங்கா பயன்படுத்த கத்துக்குங்க.

        • நன் சற்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திவிட்டேன் ஒத்துகொள்கிறேன் இதுவே ஒரு பணக்காரர் ஒருவற்கு அல்லது ஒரு கட்சி தலைவருக்கு இது போன்று ஏற்படிருந்தால் அந்த மருதுவமனைன் நிலைமை என்ன ஆயிற்கும் சிந்தித்து பாருங்கள் அணைத்து தொலைகாட்சிகளும் அலறி இருக்கும் ஏழை என்றால் ஒரு சட்டம் பணக்காரன் என்றால் ஒரு சட்டம் பணமே இங்கு அனைத்தையும் நிர்னையும் செய்கிறது பிறகு மனசாட்சி பற்றி ஏதோ சொல்லி இருகிறிர்கள் நாங்கள் மனசாட்சியோடு இருந்ததால் தான் போராடுகிறோம் புரிகிறதா தோழரே

        • அட பாவி உன் கண் போனா தெரியும் டா! கண்ணை கட்டி ஒரு ஒரு மணி நேரம் இருந்து பார் ! ப்ரீ என்பதால் என்ன வேண்டுமானால் செய்து விடலாம் அப்புறம் எல்லாரும் மன்னித்து விட வேண்டும் ! என்ன நீதி
          பாதிக்கப்பட்ட மக்களுக்காக வருந்துகிறேன் !

      • போராட்டம் என்ற பேருல நல்லது செய்ய நினைக்கும் நீங்கள் எல்லாரும் என்ன சாத்தான்களா? ஆம் என்றால் நான் கடவுள் தான்.

        • நீ பொழுது போகாம வெட்டியா பின்னூட்டம் போடுறவன் ஒனக்கு போய் தோழர்கள் பதில் சொல்வது வேடிக்கைதான்.

  4. இது ஒரு மஹா அடாவடித்தனம்
    இதை நீங்கள் மட்டும்மின்றி PUCL pondra ammaippugalodu sendhu
    poradalama?
    s seshan

  5. ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு அலுவலகத்தில் அல்லது வீட்டில் நடந்து பாருங்கள் கண் இழந்தவர்களின் வலியும் வேதனையும் புரியும் கொஞ்ச கூட இரக்கமில்லாமல் பின்னூட்டம் போடதிர்கள் கண் என்ன விளையாட்டு காரியமா இதே மாதிரி ஒரு தொழில் அதிபருக்கு அல்லது கூத்தாடி நடிகனுக்கு ஏற்ப்பட்டிருந்தல் எத்தனை தலைப்பு செய்தி வந்திருக்கும் பாவம் இவர்கள் என்ன செய்வர்கள் ஏழைகள் இவர்களுக்காக போரடுகின்ற ஒவ்வோரு தோழர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  6. போராட்டத்தை முன் எடுத்து சென்ற வழக்ரின்ஞர் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

  7. போராட்டத்தை முன் எடுத்து சென்ற தோழர்களுக்கு பாராட்டுக்கள்.

    மிக கொடுமையான விசியம் இது. வேறு யாரும் செய்ய முயற்சிக்காத போது, தொடர்ந்து இது போன்ற விசியங்களுக்காக போராடுவதற்க்கு வாழ்த்துக்கள்.

    ஜோசப் கண் மருத்துவமனை தனியார் மருத்துவமனை அல்ல. டிரஸ்ட் தான் நிர்வாகம்.
    பல பத்தாண்டுகளாக பல லச்சம் ஏழைகளுக்கு சிறப்பான சேவைகள் செய்து வருவதையும் மறக்க கூடாது. இந்த நிகழ்விற்க்கு முன்பும், பின்பும், இதுவரை எத்தனை முகாம்கள் மற்றும் காட்ராக்ட் அறுவை சிகிச்சைகள், பிரச்சனையில்லாமல், வெற்றிகரமாக செய்துள்ளனர் என்ற விபரங்களையும் அறிந்து வெளியிட்டிருக்க வேண்டும். அப்பதான் ஒரு பேலன்ஸ் இருக்கும்.

    10 ஆண்டுகளுக்கு முன் காலாமான எம் அண்ணன் ஒருவரின் கண்களை கரூர் ஜோசப் கண் மருத்துவமனை மூலம் தான் தானமாக வழங்கினோம். மதுரையில், இரு ஏழைகளுக்கு அவை வெற்றிகரமாக பொறுத்துப்பட்டு, புது வாழ்வு பெற்ற செய்தி அறிந்தோம். இது போன்ற லச்சக்கணக்கான நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்..

    • அருமையாக சொன்னீர்கள்! அனால் என்ன பயன் இந்த மாதிரி கட்டுரை எழுதுபவர்களுக்கு மேட்டர் மட்டும் கிடைத்தால் போதும் யாரை பற்றியும் எதை பற்றியும கவலை பட மாட்டார்கள். ஆமாம் சாமி போட ஆட்கள் இருக்குற வரை. இதுல சினிமா டயலாக் மாதிரி ஆயா வ வச்சி வசனம் வேற.

    • அதியமான் அவர்களே /ஜோசப் கண் மருத்துவமனை தனியார் மருத்துவமனை அல்ல. டிரஸ்ட் தான் நிர்வாகம்/ என கூறி உள்ளீர்கள் இன்னைய தேதிக்கு டிரஸ்ட் எல்லாமே தனியார் சொத்துதான் என்று உங்களுக்கு தெரியாத என்ன வரி எய்ப்பு செய்யத்தான் டிரஸ்ட் என்ற பெயரில் செய்யல்படுகிரர்கள் .அவர்கள் என்றும் லாப நோக்கு இல்லாமல் செயல்பட மாட்டார்கள் மருத்துவத்தை இன்று யாரும் சேவையாக செய்வதில்லை பணமே அவர்களது முதல் குறிக்கோள்

      • தேவரே ஏற்நேச்டோ. தங்கள் பார்வையில் பணத்தை குறிகோளாக வைக்காமல் சேவையை மட்டுமே இலக்காக கொண்டிருக்கும் எதாவது டிரஸ்ட் பத்தி உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பாக எதாவது இருக்கணும் இல்லையா? கொஞ்சம் சொல்லுங்களேன்.

        • நான் என்ன சொல்லிருக்கிறேன் என்பதை மறு முறை படித்து பாருங்கள் அதியமான் அவர்களது கம்மேண்டுகு நன் எனது கருத்தை பதிவு செய்து உள்ளேன் அதியமான் அவர்கள் ஜோசப் மருத்துவமனை தனியார் சொத்து அல்ல அது ஒரு டிரஸ்ட் மூலம் செயல்படுகிறது என்றார் எனவே நான் இன்னைய தேதிக்கு டிரஸ்ட் எல்லாமே தனியார் சொத்துதான் என்று உங்களுக்கு தெரியாத என்ன வரி எய்ப்பு செய்யத்தான் டிரஸ்ட் என்ற பெயரில் செய்யல்படுகிரர்கள் .அவர்கள் என்றும் லாப நோக்கு இல்லாமல் செயல்பட மாட்டார்கள் மருத்துவத்தை இன்று யாரும் சேவையாக செய்வதில்லை பணமே அவர்களது முதல் குறிக்கோள் என்று பதில் அளித்து உள்ளேன் நீங்கள் மறுமுறை அதை படியுங்கள் தோழரே

      • இது தவறான கருத்து நண்பா. சும்மா சகட்டு மேனிக்கு எல்லோருமே பணத்துக்காக தான் டிரஸ்ட் வச்சி நடத்துற மாதிரி சொல்லகூடாது. வன்மையாக கண்டிக்கிறேன். உங்க பார்வையில ஒன்னு ரெண்டு பேரு சேயுற தப்பு தான் எல்லோரும் செய்யுற மாதிரி தெரியுது. இந்த ஜோசப் ஹோச்பிடல் செய்ய நினைத்தது ஒரு நல்ல காரியம்தான் அத purinjikoonga. அதுல தவறு நேர்ந்து விட்டது வேணுமுன்னே தப்பான மருந்து குடுப்பாங்களா சொல்லுங்க ? கொஞ்சம் கடிவாளத்த எடுத்துட்டு பெரிய கண்ணோட பாருங்க.

        • அவர்கல் வேண்டுமனே செய்தார்கள் என்று நான் சொல்லவில்லை அவர்கள் அலட்சியமாக இருததல்தான் இது நடந்தது இதுவே லட்சகணக்கா பணம் கொடுத்து ஆபரேஷன் செய்து கொண்டால் இந்த அலட்சியம் வருமா தோழரே

        • ஏய்யா மூட்டூ,
          உனக்கு மூட்டு வலின்னு போனா உன்னோட கண்னை ஆபரேஷன் பண்ணி ஒண்ண நொள்ளையாக்குனா நீ ஒத்துக்குவியா. பல பேரோட கண்ணை நாசமாக்கியிருக்கிறார்கள் உங்களுக்கு அது தவறுதலாக நடந்த செயலாக தெரிகிறதா!  ஏழைகள் என்றால் இவர்கள் அலட்சியமாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு சான்று

        • Mootoo,
          அதியமான் சொன்னது போல் பல வெற்றிகரமான சிகிச்சைகளை ஜோசப் மருத்துவமனை செய்துள்ளது – அச்சமயங்களில் கிடைத்த பாராட்டுக்களை ஏற்று கொண்ட நிர்வாகம் இன்று நடந்த தவறுக்கு போருபெற்றிருக்க வேண்டாமா… நீங்கள் சொல்லும் மனித தன்மை இருந்தால் கண்டிப்பாக அதை செய்திருக்க வேண்டும்… பாதிக்கப்பட்டவர்களுக்கு தானே முன்வந்து நல உதவிகளை செய்திருக்கவேண்டாமா??? ////இந்த மாதிரி கூட்டம் போட்டு போராட்டம் நடத்துவதால் நல்லது செய்ய நினைபவர்களும் செய்யாமல் போக நேரிடும். எதற்கு எடுத்தாலும் போராட்டமா?/// கேள்வி கேட்பதற்கு அரசாங்கமே யோசிக்கும் போது போராட்டம் இல்லாமல் எப்படி நியாயம் பெறுவது???

  8. In the year 1936, Dr. Joseph Gnanadhickam, an eminent ophthalmologist in Tiruchirapalli, started Joseph Eye Hospital, with the vision to give quality eye care to the people, especially to the poor and downtrodden. The ownership of the hospital was unconditionally transferred to the church mission in 1960. In 1976, the Comprehensive Ophthalmic Health Programme was started with the view to extend the eye care to the entire district, utilizing the services of 10 peripheral units.

    Rehabilitation Services for the Rural Blind in the district was started in 1980. To meet the demand for the trained personnel, the Institute of Ophthalmclogy was started in 1983, which extends helping hands to the mission hospitals whose survival is a challenge. Today Joseph Eye Hospital, with its huge buildings, state of the art technology, wider network, beautifully designed departments, corporate office setups, etc. is a super speciality, non-profitable voluntary Christian institution.

    Joseph Eye Hospital offers services to the unaffordable segment of the community over six decades. Every year JEH achieves new heights in its services. The demand for quality eye care services is always on the rise. Being a tertiary care eye hospital, JEH is sensitive to the community’s need by constant up-gradation of strategies. Today JEH caters to the needs of around 4.5 million people and provides surgical treatment to more than 24,000 people. Most of our patients are from the unaffordable segment of the community. In 2001, 80% of its patients have received free treatment.’ http://josepheye.in/History.htm

  9. கால் வலிக்கு போனவரிடன் கண் சிகிச்சை செய்தது மிகத்தவறு ….
    பெரிய இடம் என்றால் ஊடகங்கள் வரும் நித்யானந்தன் படுயக்கை என்றால் வரும் ……இது ஏழைகள் பிரச்சனை அப்படி ஊடகங்கள் வரும் வினவு ……..தோழர்களுக்கு வாழ்த்துக்கள் …..கண் போன மக்களுக்கு வருத்தங்கள் ..

  10. //ஏழைகள் என்பதால் கண்ணைப்பறிகொடுத்த மக்களுக்கான நீதி கூட அரசால் வழங்கப்படுவதில்லை என்பதை தோழர்களின் இந்த நீதிமன்றப்போராட்டம் நிரூபிக்கிறது. மேலும் ஜோசப் மருத்துவமனை எந்த குற்ற உணர்வுமின்றி, நிவாரணம் கூட வழங்காமல் தனது மருத்துவ வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.//

  11. //ஏழைகள் என்பதால் கண்ணைப்பறிகொடுத்த மக்களுக்கான நீதி கூட அரசால் வழங்கப்படுவதில்லை என்பதை தோழர்களின் இந்த நீதிமன்றப்போராட்டம் நிரூபிக்கிறது. மேலும் ஜோசப் மருத்துவமனை எந்த குற்ற உணர்வுமின்றி, நிவாரணம் கூட வழங்காமல் தனது மருத்துவ வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இப்படி கண் பறிபோன விசயம் நடுத்தர வர்க்கத்திற்கோ, அல்லது மேல் தட்டு வர்க்கத்திற்கோ நடந்திருந்தால் ஆங்கில சேனல்கள் முதல் பலருக்கும் இது ஒரு தேசியப்பிரச்சினையாகி இருக்கும். நடவடிக்கைகளும் துரித கதியில் எடுக்கப்பட்டிருக்கலாம். ஏழைகள் என்றால் கண்ணைக்கூட பிடுங்கலாம் என்ற யதார்த்தம் மனிதாபிமானம் என்ற ஒன்று தங்களுக்கு உள்ளதாக நினைக்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கட்டும்.//

  12. //ஏழைகள் என்பதால் கண்ணைப்பறிகொடுத்த மக்களுக்கான நீதி கூட அரசால் வழங்கப்படுவதில்லை என்பதை தோழர்களின் இந்த நீதிமன்றப்போராட்டம் நிரூபிக்கிறது. மேலும் ஜோசப் மருத்துவமனை எந்த குற்ற உணர்வுமின்றி, நிவாரணம் கூட வழங்காமல் தனது மருத்துவ வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இப்படி கண் பறிபோன விசயம் நடுத்தர வர்க்கத்திற்கோ, அல்லது மேல் தட்டு வர்க்கத்திற்கோ நடந்திருந்தால் ஆங்கில சேனல்கள் முதல் பலருக்கும் இது ஒரு தேசியப்பிரச்சினையாகி இருக்கும். நடவடிக்கைகளும் துரித கதியில் எடுக்கப்பட்டிருக்கலாம். ஏழைகள் என்றால் கண்ணைக்கூட பிடுங்கலாம் என்ற யதார்த்தம் மனிதாபிமானம் என்ற ஒன்று தங்களுக்கு உள்ளதாக நினைக்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கட்டும்.//

    இந்திய மக்களை மருத்து பரிசோதனைக்கான எலிகளாக பயன்படுத்திக் கொள்ளும் சட்டம் சில வருடம் முன்பு அமுலுக்கு வந்தது. இதன் அடிப்படையில் ஏற்கனவே கோவை பகுதிகளிலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் மருந்துகள் ஏழை மக்களுக்கு இலவசமாகவோ, அல்லது குறைந்த விலையிலோ கொடுக்கப்பட்டது புதிய ஜனநாயகத்தில் கட்டுரையாக வந்தது.

    மேற்படி டிரஸ்டுகளும், என் ஜி ஓக்களும் இது போன்ற மருத்துவ பரிசோதனை திட்டங்களில் இணைந்துள்ளனரா என்பது ஆராய வேண்டிய விசயமாக உள்ளது.

    இரண்டாவதாக, மருத்துவத்துறை தனியார்மயம் மருத்துவத்துறையின் தரத்தை குறைத்துள்ளது குறித்த பிரச்சினை. இன்று சென்னையில் எடுத்துக் கொண்டால் லைப் லைன் என்று ஒரு ஹாஸ்பிடல் செய்யும் அயோக்கியத்தனங்கள் உச்சக்கட்டமான வழிப்பறியாக உள்ளது. இது போல பல மருத்துவமனைகள் உள்ளன. அப்போலோ முதல் மதுரை மீனாட்சி மிஷன் வரை பல மருத்துவமனைகள் கிட்னி திருட்டில் மாட்டிக் கொண்டு, பிறகு அந்த விவகாரம் அமுக்கப்பட்டதை அனைவரும் வசதியாக மறந்தும் விட்டோம். அத்தியாவசிய, அடிப்படை மருத்துவத்திற்கே செலவு அத்துக் கொண்டு செல்லும் அளவுக்கு தனியார்மயம் இங்கு சீரழித்துள்ளது. தனியார்மய தாசர்கள் சொல்வது போல போட்டி இங்கு தரத்தை உயர்த்தவில்லை. மாறாக, கூட்டுக் கொள்ளையின் அளவைத்தான் உயர்த்தியுள்ளது.

    மூன்றாவதாக, இன்றைக்கு ஜோசப் மருத்துவமனையின் தவறுகளை அது இலவசமாகக் கொடுக்கிறது என்பதால் பெரிது படுத்தாதே என்று சொல்லும் அதியமான் போன்றவர்கள், தனியார்மயத்தை நியாயப்படுத்துவதற்காக பொதுத்துறை தவறுகளை பெரிதுபடுத்தும் போது மட்டும் இந்த லாஜிக்கை முன் வைப்பது இல்லை. அனைத்து கஸ்ட நஸ்டத்திலும், இன்றும் பொதுத்துறைகள்தான் பெரும்பான்மை மக்களை பாதுகாக்கிறது என்பதால் அதிலுள்ள சிறு தவறுகளை களைந்து கொள்வதே சரி என்று இதே லாஜிக்குடன் அதியமான் வகையாறாக்கள் என்றைக்கு சொல்வார்களோ அன்றைக்கு பூமியே அழிந்துவிடும் 😉

  13. பாதிக்கப்பட்டவர்களுக்கு தானே முன்வந்து நல உதவிகளை செய்திருக்கவேண்டாமா??? …………………..

    அதானே ???

  14. கண் போன சேதி தெரிஞ்ஜும் 20 நால சொல்லாத டாக்டர் மக்கல் மருத்துவமனை மேது கல் உட்ட பின்னாடிதான் சொன்னான். இவுனுகல உல்ல வைக்காம வெட்டி பேச்சி எதுக்கு. வக்கில்.தேவன்

  15. இலவசமாக இருந்தாலும் இது கண் சம்பந்தப்பட்ட விசயம் அல்லவா. ஜாக்கரதையாக செயல் பட்டிருக்க வேண்டாமா? கெட்டு போனமருந்து கொடுத்து இவர்கள் சேவை செய்வதற்கு அதை செய்யாமலே இருந்திருக்கலாம். தவறு நடந்தவுடன் அதை உணர்ந்து அவர்களுக்கு மறு சிகிச்சை கொடுத்திருக்கலாமே. இந்த பிரச்சனையை உணராமல் கொச்சைபடுத்துபவர்கள் கண் இருந்தும் குருடர்களே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க