ஒரு அரசு ஊழியர் முன்னர் சொன்ன உண்மைச் சம்பவம் இது. தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாத்தான்குளத்திற்கு ராஜீவ் காந்தி வருகிறார். அதாவது பயண வழிப்பாதையில் ஒரு நிறுத்தம். அவ்வூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தைச் சேர்ந்தோர் உடனே சென்னை தலைமைச் செயலகத்துக்கு போன் போட்டு ராஜீவ் குடும்பம் என்னென்ன சாப்பிடுவார்கள் என்பதையெல்லாம் நுணுக்கமாகக் கேட்டுக் கொண்டு ஏற்பாடு செய்தார்கள். விருந்தினர் விடுதிக்கு குளிர்சாதன வசதி. கூடவே மேற்கத்திய கழிப்பட அறை ஒன்றும் கட்டி முடித்தார்கள். விதவிதமான உணவு, பழங்கள், குளிர்பானங்கள் எல்லாம் தயார்.
முந்திய நாள்தான் கழிப்பறைக்கு டாய்லட் ரோல் அவசியமல்லவா என்பதை யாரோ கண்டுபிடிக்க நெல்லை, தூத்துக்குடியில் விசாரித்து இல்லை என்று ஆக உடனே ஒரு வாடகைக் கார் ஏற்பாடு செய்து மதுரை சென்று வாங்கிவிட்டு நள்ளிரவில் திரும்பினார்கள். கடைசியில் ராஜிவ் அங்கே ஒரு ஐந்து நிமிடம் இறங்கி ஹாய் சொல்லிவிட்டு போனாராம். ஒரு துண்டு ஆப்பிளைக்கூட கடிக்கவில்ல. ஒரு நூறு மில்லி சிறுநீர் கூட கழிக்கவில்லை. செலவெல்லாம் என்ன கணக்கு என்று கேட்டதற்கு ஒப்பந்தாரர்கள் கணக்கு என்றார் அந்த ஊழியர்.
அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள், தனியார் முதலாளிகள் எல்லாரும் திக் விஜயம் செய்யும் போது இப்படித்தான் ஏற்பாடுகள் நடக்கின்றன. துளிக்கூட அழுக்கில்லாமல் மாற்றப்படும் சாலைகள், வெண்பட்டையான பிளீச்சிங் பவுடர்கள், அழகு தோரணங்கள், வி.ஜ.பி சமையல் கலைஞர்களின் விருந்துகள், வாயில் கைபொத்தி ஐயாவுக்கு என்ன வேண்டுமென்று கருத்தாய் கவனிக்கும் உள்ளூர் அதிகாரிகள்……… பல இடங்களில் அரசு வேலையே இதுதான் எனும் அளவுக்கு இவை அதி கவனமாகச் செய்யப்படுவதுண்டு.
ஆனால் ஒரு எழுத்தாளர் பயணம் செல்லும் போது இந்த ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றால் என்ன அபாயம் ஏற்படுமென்பதை ஜெயமோகனைது பயண அனுபவத்தில் பார்க்கலாம். எழுத்தாளருக்கு அதிகாரம் இல்லை என்றாலும் பண்டைய ரிஷிமார்களின் பரம்பரை என்பதால் தங்களை வசதியாகவும், தூய்மையாகவும், பணிவாகவும் கவனிக்காத இடம், ஊர், சிப்பந்திகளை நாசமாகப் போங்கள் என்று சாபம் கொடுத்து விடுகிறார்கள்.
______________________________________
ஜெயமோகன் கேரள சுற்றுப்பிரயாணம் சென்றதை சமீபத்தில் எழுதியிருக்கிறார். இடங்கள், கடற்கரைகள், கோட்டைகள், போன்ற அஃறிணைகளின் அழகை, தனிமையை, வாழ்வின் வரலாற்றை மௌனமாக தேக்கி வைத்திருக்கும் விதத்தை………….. என்றெல்லாம் அவரது ரம்பமான இத்துப்போன போன சொற்றொடர்களின் மூலம் அளக்கும் அவர் கூடவே அவரது கண் பார்த்த அழுக்குகள், உடலுக்கு கிடைக்காத கவனிப்பு குறித்து மட்டும் அங்கலாய்க்கிறார். ஆனால் அது அங்கலாய்ப்பாக மட்டுமில்லை.
சுனாமிக்குப்பிறகு அமிர்தானந்தா மாயி கட்டிக் கொடுத்த சிமிட்டி வீடு குடியிருப்பை மீனவர்கள் குப்பைகள் கொட்டிக்கிடக்கும் கேவலமான சேரியாக மாற்றிவிட்டார்களாம். வீட்டுக்கு வீடு டி.வி இருந்தாலும் இப்படி சுகாதாரமற்ற வகையில் வாழுவதற்கு காரணம் வறுமை கிடையாதாம், அதற்கான மனப்பயிற்சி இல்லையாம். இதை விட வறுமையில் இருக்கும் ராசிபுரம் பழங்குடி மக்கள் சுத்தமாக வாழ்கிறார்களாம்.
கேரளாவில் நல்ல சுத்தமான ஓட்டல், நாக்குக்கு ருசியான சாப்பாடு கிடையாதாம். இத்தகைய ஓட்டல் வேலைகளுக்கு ஆள் தட்டுப்பாடாம். இந்த வேலையை அவமானமாகக் கருதும் ஓட்டல் தொழிலாளிகள் வாடிக்கையாளர்களிடம் திமிராக நடந்து கொள்வார்களாம். இடதுசாரி இயக்கம் தொழிலாளிகளிடம் இத்தகைய தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியிருக்கிறதாம். வேலையே செய்யாமல் தொழிற்சங்கம் மூலம் கூலியை மட்டும் வாங்கிக் கொள்வது இப்போதும் இருக்கிறதாம்.
சுற்றுலா போன ஜெயமோகனது சொந்தப் பிரச்சினைகள் மூலம் சம கால கேரளாவின் வரலாறும் உருவாகிவிடுகிறது. நாக்கு ருசியும், ஓய்வறை வசதிகள் கூட ஒரு எழுத்தாளன் உருவாக்கும் வரலாறுக்கு காரணமாகிவிடுகிறது என்றால்………..நல்லவேளை, இவர்களெல்லாம் அரசியலில் இல்லை. இருந்திருந்தால் நான்காவது உலப்போர் முடிந்து ஐந்தாவதற்கு காத்துக் கொண்டிருந்திருப்போம்.
_____________________________________________
ஜெயமோகனது சுத்தம் குறித்த தத்துவப் பித்தத்தைப் பார்க்கும் போது இந்து முன்னணியின் புகழ் பெற்ற மற்றொரு பித்தம் நினைவுக்கு வருகிறது.
“இந்துக்கள் கிறித்தவராகவோ, இசுலாமியராகவோ மதம் மாறினால் பாரதப் பண்பாடும் மாறிவிடுகிறது. அதிகாலையில் குளித்து வாசல் தெளித்து, கோலமிட்டு, முற்றத்தில் இருக்கும் துளசி மாடத்தை சுற்றி வந்து………….” என்று போகும் அந்த பித்தத்தை சகல இந்துக்களுக்கும் பொருத்திப் பார்த்தால் பெரும்பாலானோர் இந்துக்கள் இல்லை என்றாகிவிடும்.
முதலில் முற்றம், துளசிமாடம் போன்றவையெல்லாம் இருக்க வேண்டுமென்றால் வீடும், வீட்டைச்சுற்றி விசலாமான இடமும் வேண்டும். இதிலேயே முக்கால்வாசி இந்துக்கள் அவுட். அப்புறம் மீனவர் குடிசை முன்பு கருவாடும், கோனார் வீட்டு முன்பு ஆட்டுப்புழுக்கைகளும், கறிக்கடை தேவர் வீட்டு முன்பு உப்புத் துண்டமும், சென்னை சேரி மக்களின் குடிசை முன்பு குழந்தைகளின் கக்காவும், விவசாயி வீட்டு முன்பு சாணமோ, தானியமோ இருக்கும். ஐயர் வீட்டு முன்புதான் துளசி மாடம் இருக்கும்.
உழைக்கும் இந்துக்களின் வீட்டை அவர்களது உழைப்பின் விளைபொருள் அலங்கரிப்பது இந்து முன்னணிக்கு மட்டுமல்ல ஜெயமோகனுக்கும் அருவருப்பாக இருக்கிறது. சுத்தத்திற்கு வறுமை காரணமில்லையாம். அதற்கு அவர் காட்டும் ஆதாரம் ராசிபுரம் மலைவாழ் மக்களின் சுத்தமான குடியிருப்புக்கள்.
என்னுடைய அனுபவத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக கேரள எல்லையில் இருக்கும் பல டீ எஸ்டேட்டுகள், ஆந்திரா, ஒரிசாவின் மலைப்பகுதிகள் மற்றும் சமவெளிகளில் இருக்கும் பழங்குடி மக்களின் கிராமங்களையும் பார்த்திருக்கிறேன்.
எல்லா டீ எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பும் வீடுகளும் சுத்தமாகத்தான் இருக்கும். காரணம் அங்கு வரும் எல்லாப்பொருட்களும் கீழே சமவெளியிலிருந்துதான் வரவேண்டும். அதனால் எதையும் வீணாக்க மாட்டார்கள். மலசல, குளியல்கள் நீர் கிடைப்பதைப் பொறுத்தது என்பதால் மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவார்கள். அவையும் மலையில் வடிந்து விடும். தேங்காது. நகரங்களின் புழுதி, பெரும் நிறுவனங்கள், ஓட்டல்களின் குப்பைகள் எல்லாம் அங்கே சாத்தியமில்லை. உடை கூட அவ்வளவு சீக்கிரம் அழுக்கடைவதில்லை. பட்டினி கிடப்பவர்கள் கூட அங்கே பளிச்சென்றுதான் இருப்பார்கள். குளிருக்கான உடைகளை அணிந்து கொண்டு அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிதான் குடிக்கிறார்கள் என்பதை யாரும் நம்ப முடியாது.
மலைகளிலோ சமவெளிகளிலோ வாழும் பழங்குடி மக்கள் இன்னமும் மற்ற மக்களின் வாழ்க்கையை கண்டறியாதவர்கள். ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தின் அடர்த்தியான மலைகளில் இருக்கும் பழங்குடி மக்கள் கிராமத்தைப் பார்த்த போது அது கிராமம் என்று கூட சொல்ல முடியுமா தெரியவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் 20 அல்லது 50 குடும்பங்களே இருந்தனர். 100 குடும்பங்கள் இருந்தால் அது பெரிய கிராமம். அந்த மக்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்போதுதான் தமது கானக நிலங்களை கொஞ்சம் திருத்தி நிலையான விவசாயம் செய்கின்றனர். குடிசைகளில் இருக்கும் பொருட்களை எண்ணிவிடலாம். உடைகள், பாத்திரங்கள், வீட்டுப்பொருட்கள் எதுவும் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு குறைவானது. வீட்டு முற்றத்தில் விவசாயம் சார்ந்த சில கருவிகளைத் தவிர அங்கே எதுவும் இல்லை. இப்படி பொருளே இல்லாத குடிசைகளில் குப்பை எப்படி சேரும்? இத்தகைய குடிசைகளை தமிழகத்தின் பின்தங்கிய சில மாவட்டங்களில்கூட பார்க்கலாம்.
சென்னையின் சேரிப்பகுதிகளில் மிகவும் நெரிசலான இடங்களில் பல இலட்சம் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்கின்றனர். 100, 200 சதுர அடிகளில் குடும்பங்கள் கூண்டில் அடைபட்ட கோழிகள் போல எல்லா வேலைகளையும் முடிக்கின்றனர். வீட்டின் இடத்தை பல விதமான சில்லறைப்பொருட்கள் ஆக்கிரமித்திருக்கும். சமைக்க, துணி துவைக்க, குளிக்க, படுக்க எல்லாம் ஒரே இடம்தான். ஒரு சேரியில் சில ஆயிரம் மக்கள் இப்படி வாழம் போது தெருவெங்கும் குப்பைகளும், கழிவு நீரும், எல்லாம் கலந்துதான் இருக்கும். திருமணப் பந்தல், சாவுக்கான பந்தல், விருந்துக்கான சமையல் எல்லாம் தெருவில்தான். பார்க்க ரணகளமாகத்தான் இருக்கும். சென்னையின் சேரி ஒன்றில் சிலவருடங்கள் வாழ்ந்தவன் என்ற முறையில் நானும் அப்படித்தான் ‘அசுத்தமாக’ வாழ்ந்திருக்கிறேன். சென்னையிலிருக்கும் எங்கள் தோழர்கள் பலர் இத்தகைய சேரிகளைச் சேர்ந்தவர்கள்தான்.
நகரங்களை ஒட்டி வாழும் மீனவர் குடிசைகளும் இப்படித்தான் இருக்கின்றன. விசாலமான கடல் சார்ந்த இடங்கள் இன்று அவர்களது பயன்பாட்டிற்கு இல்லை. இருக்கும் குடிசை கூட தனது பரப்பளவை சுருக்கிக்கொண்டேதான் வருகிறது. கேரளாவில் இந்த நகரமயமாக்கத்தின் பிரச்சினைகள் அதிகம். கடல் எனும் இயற்கைத் தாயை எதிர்கொண்டு சற்றே கடினமான வாழ்க்கை வாழும் அம்மக்களிடம் நயக்கத்தக்க நடுத்தர வர்க்கத்தின் ‘நாகரிக’த்தை எதிர்பார்ப்பது அயோக்கியத்தனம்.
நகரத்து சேரிகளில் இருக்கும் நெரிசல் உருவாக்கும் எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டு அந்த மக்கள் இந்தப் பாழாய்ப் போன நகரின் மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கத்தினருக்கு எல்லா சேவைகளையும் செய்கின்றனர். இதற்காக அந்த மக்களை கோவில் கட்டி வணங்குவது கூட அதிகம் என்று சொல்ல முடியாது. அந்த மக்களின் வாழ்விடத்தைப் பார்த்து குப்பைக்கூளமென்றும் அதற்கு மனப்பயிற்சி இல்லையென்றும் எக்காளமிடும் ஜெயமோகன் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தனிவீடுகட்டி வாழும் வாழ்க்கையை துறந்து விட்டு சென்னை வியாசர்பாடியில் ஒரு வருடம் வாழ்ந்து பார்க்கட்டும்.
____________________________________________
கேரளாவின் அநேக நகரங்களுக்குச் சென்றிருக்கிறேன். சிறு, நடுத்தர உணவு விடுதிகளில் சாப்பிட்டிருக்கிறேன். நெல்லையில் கோக் ஆலைக்கெதிரான போராட்டப் பிரச்சாரத்திற்காக தோழர்கள் திருவனந்தபுரத்தில் ஒருவாரம் தங்கி வேலை செய்தோம். தெரிந்தவர்கள் யாருமில்லாமல் குறைவான கட்டணமுள்ள விடுதிகளை மக்கள் உதவியுடன் கண்டறிந்து, ஒரே அறையில் பல தோழர்கள் தங்குவதை விடுதிக்காரர்கள் பிரச்சினையாக்காதது மட்டுமல்ல கூடுதல் படுக்கை விரிப்புகளையும் – ஏனைய வசதிகளையும் சலிக்காமல் செய்ததையும், சிறு உணவு விடுதிகளில் கேரளாவின் எல்லா பிரத்யோக உணவுகளையும் – ஃபீப் உள்ளிட்டு – ருசி பார்த்து, பத்திரிகை செய்தி வினியோகத்திற்காக மலிவு கட்டணத்தில் சேட்டன்களது ஆட்டோக்களை நாள் வாடகைக்கு ஏற்பாடு செய்து……..மொத்தமாகப் பார்த்தால் கேரள மக்களது உபசரிப்பில் திணறிப் போனோம்.
ஜெயமோகனுக்கு பார்த்த பரிசாரர்களது அலட்சியத்தை நாம் எங்கும் காணவில்லை. ஒருவேளை இவையெல்லாம் மேட்டிமைத்தனமாக பண்ணையார் மனோபாவத்துடன் வாழும் விலங்குகளுக்குத்தான் தோன்றும் போலும்.
“எந்தா வேண்டே” என்று கேட்கும் ஒரு சர்வர் தொழிலாளியது உழைப்பின் அருமையை உணர்ந்தவர்கள் எவரும் அவர்களது அணுகுமுறையில் எப்போதாவது கொஞ்சம் சலிப்பும், எரிச்சலும் தெரிந்தால்கூட பெரிதுபடுத்த மாட்டார்கள். நிச்சயம் அதை வைத்து ஜெயமோகன் போல கேரளா தொழிலாளிகளின் சமூக வரலாற்றை வன்மத்துடன் எழுதமாட்டார்கள்.
__________________________________________
பசிக்காக ஓட்டல்களுக்குப்போகும் சாதாரண மக்கள் என்ன சாப்பிடப் போகிறோம் என்பதை முதலில் தெளிவாக தெரிவித்து விடுவார்கள். ஒருவேளை அவர்கள் விசாரணை விலைப்பட்டியல் குறித்து மட்டும் இருக்கலாம். ஆனால் டோண்டு ராகவன், ஜெயமோகன் போன்ற எழுத்துலகப் பண்ணைகள் ஓட்டல்களுக்கு சென்றால் என்ன நடக்கும்?
சார் என்ன வேணும்?
சாப்பிட என்ன இருக்கு?
இட்லி, வடை, பொங்கல், கிச்சடி, சாதா, ஸ்பெஷல், பூரி, ரவா தோசை, ஆனியன் தோசை, ஊத்தப்பம், சப்பாத்தி, புரோட்டா (எழுதும் போதே மூச்சு வாங்குது)
சூடா ரெண்டு இட்லி குடுங்க ( இதை முதலிலேயே சொன்னா என்னடா….சர்வர் நினைப்பார்)
சூடு கம்மியா இருக்கே?
இப்ப எடுத்ததுதான் சார், அடுத்து என்ன வேணும்?
சாப்பிட்டு முடித்து சொல்கிறேன்
(சர்வர் மற்றவர்களை கவனித்துவிட்டு வருகிறார்) என்ன கண்டுக்காம போறீங்க? ஒரு தோசை குடுங்க ( அதுவும் சாதாவா, ஸ்பெஷலா, மசாலாவா என்றெல்லாம் சர்வர்தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்)
சட்னி கொடுங்க…
(சட்னி வந்தப்பிறகு) சாம்பார் கொடுங்க…
முதல்லேயே சொன்னா என்ன சார், ஒண்ணா கொண்டுவந்திருப்பேனே…
இதான் கஸ்டமர டீல் பண்ற இலட்சணமா, யார் உங்க மேனேஜர், அவாள கூப்பிடு, நான் பேசிக்குறேன், என்ன ஓசியிலயா கொட்டிக்கிறோம்
(மிரண்டு போன சர்வர் கோபத்தை மென்று முழுங்க)
காபி வேணுமா, இல்ல பில் போடலாமா?
இன்னும் சாப்பிட்டே முடியல அதுக்குள்ள பில்லுனு கத்துற, ஒரு காபி கொண்டா…(பயந்து போன சர்வர் காபி, டிகாஷன் ஸ்ட்ராங், சர்க்கரை அளவு எல்லாம் கவனமாக கேட்கிறார். பதட்டத்தில் குறிப்புகள் தவறாகப் போக காபி காம்பினேஷன் மாறுகிறது)
பிறகென்ன…. முதலாளி வந்து பண்ணைகளை சமாதானப்படுத்த அடுத்த நாள் பிளாக்கில் அந்த சர்வரை வைத்து ஆப்ட்ரால் சர்வர்கள் தங்களை அமெரிக்க அதிபர்கள் போல கருதி நடப்பதாக முக்கியமான கட்டுரை இரண்டு வலையேற்றப்படுகிறது.
____________________________________________
இந்த உலகில் கஷ்டமான வேலைகளில் ஒன்று ஓட்டல் சர்வர் வேலை. பசியோடு வரும் வாடிக்கையாளர்களின் கோபங்களை சமாளித்து ஒரே வேலையை அலுப்பூட்டும் விதத்தில் அலைந்தவாறு குறைந்த பட்சம் 12 மணிநேரம் செய்ய வேண்டும். அநேக ஒட்டல் தொழிலாளிகள் திருமணம், குடும்ப வாழ்க்கையை வாழமுடியாமல், பல நகரங்களுக்கு சுற்றியலைந்து நாடோடி வாழ்க்கையை வாழ்கிறார்கள். தங்குமிடம், உணவு இலவசம் என்ற இரண்டு பாதுகாப்பு அம்சங்களுக்காகப் பல கிராமப்புறத்து இளைஞர்களை கவரும் வேலை இதுதான்.
இன்று A, B வரிசை ஓட்டல்களை விடுத்துப் பார்த்தால் பல சிறிய ஓட்டல்கள் நடத்தமுடியாமல் சிரமப்படுகின்றன. விலைவாசி உயர்வினால் உணவுப்பண்டங்களை தொடர்ந்து உயர்த்த முடியாது. உயர்த்தினால் வியாபாரம் பாதிக்கப்படும். விலையைப் பற்றிக் கவலைப்படாத வாடிக்கையாளர்கள் வரும் சரவணபவன், உடுப்பி, வசந்தபவன் ஓட்டல்களைப் போன்று இந்த சிறிய ஓட்டல்கள் செயல்படமுடியாது. அதே போல வழக்கமான கூலிக்கு தொழிலாளிகளும் நிரந்தரமாக கிடைப்பதில்லை. இப்போது வடக்கிலிருந்து குறைந்த கூலிக்கு தொழிலாளிகள் இறக்கப்படுகின்றனர்.
ஓட்டல்களின் இந்திய நிலைமை இதுவென்றாலும் கேரளாவில் தொழிலாளிகளின் கோணத்தில் பார்த்தால் நிலைமை சற்றே மேம்பட்டிருக்கிறது. குறைந்த கூலிக்கு வடகிழக்கு மக்களை இறக்குமதி செய்யும் பணியை தொழிற்சங்கங்கள் தடுத்து வருகின்றன. மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் சர்வர்கள் கிரமமான நிலையான வாழ்க்கையை வாழும் வண்ணம் பணிநிலைமை மேம்பட்டிருக்கிறது.
கேரள இடதுசாரி இயக்கம் உருவாக்கிய இந்த தொழிலாளர் வலிமையின் முக்கியமான குறை என்வென்றால் அது முக்கியமாக பொருளாதார, தொழிற்சங்க வாதத்தில் மூழ்கடிக்கப்பட்டு அரசியல் ரீதியில் முன்னணிப்படையாக வளர முடியாமல் போனதுதான். தமக்கான பிரச்சினைகளுக்காகத்தான் தொழிற்சங்கம் என்ற மனநிலையில் உருவாக்கப்படும் அந்தத் தொழிலாளி மற்ற உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கும் தலைமை தாங்கி தீர்வு கண்டால்தான் தானும் விடுதலை அடைய முடியும் என்ற அரசியல் அறிவை பெறுவதில்லை. போலிக்கம்யூனிஸ்டுகள் தமது சந்தர்ப்பவாத அரசியலுக்காக அதை திட்டமிட்டே உருவாக்கவில்லை.
ஆனால் இந்தக் குறைபாட்டைத் தாண்டி ஒரு தொழிலாளி கொண்டிருக்க வேண்டிய தன்மானத்தையும், சுயமரியாதையையும் கேரள இடதுசாரி இயக்கம் கற்றுக் கொடுத்திருக்கிறது. இதைத்தான் ஜெயமோகனும், டோண்டு ராகவனும் தாழ்வு மனப்பான்மை, பிச்சைக்காரத்தனம் என்று வசைபாடுகிறார்கள். ஒரு ஓட்டல் தொழிலாளி என்ற நிலையில் வாடிக்கையாளன் என்ற முறையில் வரும் ஒரு கொழுப்பெடுத்த மேட்டிமைத்தனத்தை கேரள தொழிலாளிகள் சகிப்பதில்லை. மற்ற மாநில ஓட்டல்களில் என்ன ஆர்ப்பாட்டம் செய்தாலும் தொழிலாளி செய்வதறியாது திகைத்து நிற்பார். கேரளாவில் வலுவாக இருக்கும் தொழிற்சங்கத்தின் தைரியத்தில் இந்த அநீதிகளை ஒரு தொழிலாளி எதிர்ப்பதை மக்களை நேசிக்கும் எவரும் வரவேற்கத்தான் வேண்டும்.
இதனால் அங்கே தொழிலாளிகள் தமக்கான வேலைகளைச் செய்யாமல் எப்போதும் அலட்சியமாகவும், அகங்காரத்துடன் நடக்கிறார்கள் என்பது தமிழ்சினிமாவின் பா வரிசைப்படங்களில் பண்ணைகளின் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கும் சேவகர்களை விரும்பும் மேட்டுக்குடி ஜென்மங்களுக்கு மட்டுமே தோன்றக் கூடிய மனவிகாரம். ஒரு ஓட்டல் தொழிலாளியை தொழிலாளியாகக் கருதாமல் அவரை ஒரு அடிமையாக கருதுவதுதான் இத்தகைய உழைக்கும் மக்களைப்பற்றி அறியாத மேல்தட்டு வர்க்கத்தின் இயல்பு.
கேரள ஓட்டல் தொழிலாளியில் உடல்மொழி, குரல், பாவனை எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கும் ஜெயமோகன் இன்னும் பீம்சிங் காலத்து திரைப்பட லயத்தில்தான் வாழ்கிறார். நவீன தொழிலாளியின் பாவனைகளில் அக்மார்க் அடிமைத்தனத்தை எதிர்பார்க்கும் அவரைப் போன்றவர்களுக்கு நவீன வாழ்க்கை மாறியிப்பது பற்றித் தெரியவில்லை.
அழுக்குப் பிடித்த வேட்டியோடு வியர்வையில் குளித்துக் கொண்டு தோசை மாவோடு வாழ்க்கையை முடித்துக் கொண்ட அந்தக்கால மாஸ்டர்களின் அவல வாழ்க்கை இன்றும் பெரிதும் மாறிவிடவில்லை என்றாலும் பொதுவில் நிறைய மாற்றங்களைக் காணலாம். முன்னர் இத்தகைய கடுமுழைப்பு மற்றும் கீழ்மட்ட வேலைகளுக்கு குறிப்பிட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் கிடைத்தார்கள். இன்று எல்லா பிற்பட்ட சாதிகளைச் சார்ந்தோரும் வேலை செய்கின்றனர்.
ஜீன்ஸ் பேண்டோடு, ஒரு கையில் செல்பேசியுடனும், மறுகையில் சிக்கன் ஃபிரைடு ரைசை தூக்கிப்போட்டவாறும் இருக்கும் இன்றைய மாஸ்டர்களை சாப்பிட வரும் இளைஞர்கள் “தலைவா ஆயில் கொஞ்சம் கம்மியாப் போடு” என்று உரிமையுடன் கேட்பதும், அதற்கு அந்த மாஸ்டர்கள் “சரி தல” என்று சகஜமாக பழகுவதும் இப்போது பரிசாரர்களுக்கும் சாப்பிட வருபவர்களுக்கும் ஒரு வித சமமதிப்பு உருவாகிவிட்டது. இதுதான் ஜெயமோகன்களுக்கு பொறுக்கவில்லை. கீழ்மட்ட ஓட்டல்களில் காணப்படும் இந்த சமத்துவம் பெரிய ஓட்டல்களில் இல்லை என்றாலும் அங்கும் கூட முந்தைய அடிமைத்தனம் இன்று இல்லை.
________________________________________
பொக்லைன் போன்ற எந்திரங்கள் வேலை செய்ய வேண்டி வந்தாலும் அதற்குப் பகரமாக அந்த எந்திரத்தினால் வேலையிழக்கும் தொழிலாளிகளுக்கு நோக்கு கூலி என்று நிவாரணம் கொடுக்கப்படுகிறதாம் கேரளத்தில். அதே போல சுமைதூக்கும் தொழிலாளிகள் வேலையை யார் செய்தாலும் அவர்களுக்கும் அட்டிமறிக்கூலி என்று கொடுக்க வேண்டுமாம். டோண்டு ராகவன் இதை ஒரு மாபெரும் தொழிலாளி வர்க்க சுரண்டல் போல சித்தரிக்கிறார்.
சென்னையின் சென்டரல் நிலையத்தில் வந்திறங்கும் இந்தியப் பயணிகள் இப்போது சக்கரம் வைத்த சூட்கேஸ் மற்றும் ட்ராலி மூலம் தள்ளிக் கொண்டு போவதால் தாங்கள் வருமானமிழப்பதாக சுமைதூக்கும் தொழிலாளிகள் வருந்துகிறார்கள். கேரளாவில் வருந்தாமல் அதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால் அதைப் பாராட்ட வேண்டியதற்குப் பதில் அவதூறு செய்வதற்கு என்ன காரணம்?
ஜெயமோகன் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலையே செய்யாமல் போங்காட்டம் ஆடிவிட்டு உலகம் பூராவும் சுற்றுலாப்பிரயாணம் செய்து டன் கணக்கில் எழுதுவதை யாரேனும் கண்டித்திருக்கிறார்களா? டத்தோ சாமிவேலு போன்ற முழு பெருச்சாளிகளின் ஊழல் பணத்தில் மலேசியா போகும் ஜெயமோகனைப் போலவா போர்ட்டர்கள் வாழ்கிறார்கள்? அவர்கள் அன்றாடம் சுமை தூக்கினால்தான் வீட்டில் அடுப்பு எரியும். அப்படி சுமை தூக்குவதில் வருமானமில்லை என்றால் அவர் என்ன செய்ய முடியும்?
சத்யம் தியேட்ரின், நல்லி சில்க்சின், சரவணபவனின் சேவையை உயர்தர விலையை கொடுத்து அனுபவிப்பவர்களுக்கு தன்மானத்தோடு உழைக்கும் ஒரு சுமைதூக்கும் தொழிலாளிக்கு குறைந்தபட்ச கூலி கொடுக்க மனம் வருவதில்லை.
எந்திரமயமாக்கமோ, கணினி மயமாக்கமோ எதுவனாலும் சம்பந்தப்பட்ட தொழிலாளிகளின் வாழ்க்கைக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டுத்தான் கொண்டுவரவேண்டும் என்பதில் என்ன தவறு? சமீபத்தில் கூட அமெரிக்க தொழிலாளிகளின் நலனிற்காக ஒபாமா வெளிநாட்டில் அவுட்சோர்சிங் கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் கிடையாது என்று கொண்டு வரப்போவதாக பேசுகிறார். இதெல்லாம் சரி என்றால் அந்த நீதி சுமை தூக்கும் தொழிலாளிக்கு மட்டும் கிடையாதா?
ஜெயமோகனது ஒரு சுற்றுலாப் பயணத்திலேயே மீனவர் குடியிருப்பும், கேரள ஓட்டல் தொழிலாளியும் இத்தகைய வன்கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதற்கு என்ன காரணம்? ஜெயமோகனது இந்த தொழிலாளர் வன்மத்தை மட்டும் கண்டு அகமகிழ்ந்த டோண்டு ராகவன் அதற்கு லிங்க் கொடுத்து “கேரள தொழிலாளரை பிச்சைக்காரர்களாக மாற்றிய இடதுசாரி இயக்கம்” என்று தலைப்பிட்டு தனிப்பதிவாக வெளியிட்டு கொண்டாடுவதற்கும் என்ன காரணம்?
ஒன்று அந்த தொழிலாளிகள் இந்த பதிவுகளை படிக்கமாட்டார்கள் என்ற தைரியம். இரண்டு அந்த தொழிலாளிகளின் வாழ்க்கையை உணராத, வலையுலகை வைத்து மட்டும் அறிவு பெற்ற நடுத்தர வர்க்கம்தான் படித்து வரவேற்கும் என்ற நம்பிக்கை.
ஆனால் இந்த ‘தைரியத்திற்கும், நம்பிக்கைக்கும்’ நிச்சயம் எதிர்காலமில்லை என்பதை அந்த தொழிலாளிகள் நிரூபித்துக் காட்டுவார்கள். ஏனெனில் இந்த உலகில் எதிர்காலத்தை கொண்டிருக்கும் ஒரே வர்க்கம் அதுதான்.
________________________________________________
தொடர்புடைய பதிவுகள்
சபாஷ்.
வேலை செய்யாமல் கூலி வாங்குபவர்கள் கேரேளத்தில் இருக்கிறார்கள். தொழிர்சங்கவதிகளான இவர்கள் வேலையில் பிரச்னை செய்யாமல் இருக்க பணம் வாங்குகிறார்கள். இவர்கள் கூலிகள் மாதிரி இருக்க மாட்டார்கள். அனைவரும் பைக்’ல் வருவார்கள். இதை லஞ்சம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். கேரளத்தில் அணைத்து இடத்திலும் இது உண்டு…நான் இதை கண்கூடாக பார்த்திருக்கேன்…
வரிக்குவரி வழிமொழிகின்றேன்.
///உழைக்கும் மக்களைப்பற்றி அறியாத மேல்தட்டு வர்க்கத்தின் ///
உதைக்குதே!
பொதுத்துறை ஊழியாரான ஜெயமோகனும் உழைக்கும் வர்க்கம் தானே உங்கள் கண்ணோட்டப்படி !
//நகரத்து சேரிகளில் இருக்கும் நெரிசல் உருவாக்கும் எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டு அந்த மக்கள் இந்தப் பாழாய்ப் போன நகரின் மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கத்தினருக்கு எல்லா சேவைகளையும் செய்கின்றனர். இதற்காக அந்த மக்களை கோவில் கட்டி வணங்குவது கூட அதிகம் என்று சொல்ல முடியாது. // உண்மை. உழைப்புக்கு மரியாதை செலுத்தத் தெரியாவிட்டாலும் / மனதில்லாவிட்டாலும் இவர்கள் அவமதிக்காமல் இருக்கலாம்.
//பொதுத்துறை ஊழியாரான ஜெயமோகனும் உழைக்கும் வர்க்கம் தானே //உங்கள் கண்ணோட்டப்படி !// என்ன கிண்டலா?பொதுத் துறையில் உழைக்கிறாங்களா?
ஆம் இது உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் தான்// ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை. அது வரும்போது ஜெயமோகன் இன்னும் என்ன என்ன எழுதுவாரோ. அரும்மையான பதிப்பு வாழ்த்துக்கள் தொடரட்டும்.
நல்ல பதிவு
Wonderful article!
A very good post. Very thorough, hard hitting, and insightful. Your post will make any ‘thinking’ person angry and furious at creatures like Jeyamohan and his club! It also shows the enormous work and challenge that lies ahead for people who want to change the society radically. Keep up your good work, Com. Vinavu.
Wonderful article.great article.only vinavu and other comrades can write like this.keep it up.
கட்டுரை அருமை. இது போன்ற சமயங்களில்தான் வினவு தளத்தை கொண்டாட வீண்டியதாய் இருக்கிறது. 🙂
ஜெயமோகன் வெகு சீக்கிரத்தில் ஒரு ஆசிரமம் ஆரம்பிக்க போகிறாரோ என சந்தேகமாக இருக்கிறது! இந்துத்துவா ஜால்ரா சத்தம் சமீப காலமாக அதிகமாகவே இருக்கிறது!
வால் பையன்,
இந்துத்தவாவிற்க்கு ஜெயமோகன் எங்கு, எப்படி ஜால்ரா அடிக்கிறார் என்று ஆதாரத்துடன் நிறுபியுங்களேன். யோகம் பற்றிய அவரின் கட்டுரைகள், அரைவேக்காடான உங்களுக்கு இந்துத்விற்க்கு ஜால்ரா என்றுதான் தெரியும் போல.
நீங்க எந்த அடுப்புல உட்கார்ந்து முழுசா வெந்திங்க அண்ணே!
யோகம்னா என்ன நித்தியானந்தரோட சிஷ்யை பெயரா!? ஒரு எழவும் புரியலயே!?
வால்,
நீங்க எம் நண்பராக இருப்பதால் உரிமையோடு உங்களை இன்னும் திட்டலாம்.
நான் எங்கும் அமர்ந்து வேகவில்லை. ஏதாவது sweeping statements அளித்தால், அதை ஆதாரத்துடன் நிருப்பிக்க வேண்டும். நித்யானந்தர் விவகாரம் பற்றிய அவரின் பல கட்டுரைகளில் இருந்து எடுத்தியம்பி நிருபியுங்களேன். முழுசா படிக்காமல் இப்படி பேசினால் அரைகுறை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் பல சமயங்களில்
பெரிய புடிங்கி மாதிரிதான் உங்கள் கமெண்டுகள் உள்ளன. வயசான சரியாகிவிடுவீக. பார்க்கலாம்.
அதியமான் அவர்களே சாக்கடை மீது கல் எரிவதை நிறுத்துங்கள். உங்களுக்கு தான் அசிங்கம். கண்டவர்களுக்கு பதில் சொல்லாதீர்கள்.
கவலைபடாதீர்கள் உங்கள் மீது நாங்கள் கல் எறிய மாட்டோம
பொய், அரை உண்மைகளை வைத்து இது போன்று புனைகதைகளை சுருட்டுவது ஜெயமோகன் முதல்முறை செய்வதல்ல. RSS ஐ செல்லமாக கண்டித்து ஒரு கட்டுரை எழுதினார். முழு வன்மத்தையும் இடதுசாரிகள் மற்றும் பத்திரிக்கைகளின் மீது கொட்டியிருந்தார். இவர்கள் எதிர்ப்பு தான் RSS ஐ வளர்த்து விடுவதான கண்டுபிடிப்பு அது. ஏதோ தமிழ் பத்திரிகைகள் அனைத்தும் RSS க்கு எதிராக எழுதிக் கொண்டிருப்பதாக வேறு குற்றச்சாட்டு. சமூக, அரசியல் விசயங்களை மேலோட்டமாக கவனிப்பவர்களுக்கு கூட இதில் இருக்கும் அபத்தம் தெரியும்.
நன்றி, நாம்தான் இவர்களை அம்பலபடுத்த வேண்டும். அலுவல் தொடர்பாக நான் திருவனந்தபுரம் சென்ற போது ஒரு சொத்து தொடர்பான விவரங்களை சேகரிக்க வேண்டும். எனக்கு உதவியது ஒர் ஆட்டோ ஒட்டுநர், ஆம் அவரே என்னை தாலுகா அலுவலக்ம், மற்றும் வஞ்சியூர் VAOஅலுவலகம் அழைத்துச் சென்று தகவல்களை பெற்று அச்சொத்தின் விலாசத்திற்கே அழைத்து சென்றுவிட்டார். மற்றொரு முறை கோழிக்கோடு சென்றபோதும் இவ்வாறே அப்பகுதி மக்களும் உதவினர். ஏன் கேரளா? கொல்கத்தா சென்றேன். ஒரு காவலாளி மூன்று கி.மீ என்னுடன் பயணம் செய்து நான் தேடி வந்த இடத்தை அடையாளம் காட்டினார். ஆம் நாம் நடந்து கொள்ளும் முறையே அடுத்தவர் நமக்கு உதவும் காரணம். வினவு கூறியது போல் மேட்டிமைதனத்தோடு நடப்பவர்களை அத்தோடு விட்டது நலம்தானே
நல்ல கட்டுரை. இதில் டோண்டு? அப்புறம் இங்கே இதைப் பாராட்டியதால் என் பதிவில் எனக்குப் பொழுது வேடிக்கையாகப் போகும்!
யோவ் வினவு, இந்த மாதிரி ஆளுங்க நல்லா கவர்மெண்டு ஆபீசுலெ நல்லா தூங்கிட்டு வீட்டுக்கு வந்து சோம்பல் முறிக்க எழுதுறானுங்க. ஒனக்கு வேற வேலை இல்லையா???
மொதல்ல தமிழ்நாட்டுல நடக்குற அநீதியைப் பற்றி எழுது. அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதற்காக செய்யும் செயல்களிலிருந்து மக்களை விழிப்படையச் செய். அதெல்லாம் இருக்கட்டும் தமிழ்நாட்டு புதிய சட்டசபைக்கு கலைஞரின் வீட்டு நாய்க்கு எலும்பு போடும் நிதியிலிருந்து இரண்டு கோடி ரூபாய் எடுத்து சினிமா செட் போடப்பட்டதே அதைப்பற்றி ஒன்னுமே காணோம்…………………..
அழகிய தமிழ் மகனே முதல்ல உன் பெயரை மாத்து உழைக்கும் மக்களின் அருமையை பற்றி தெரியாத நீ எப்படி ஒரு பெயரை வைத்து கொள்ளாத ராசா.
டோண்டுவையும் ஜெயமோகனையும் சேர்த்து எழுதியதால் டோண்டு கவலைப்படுவார் என்று நினைக்கிறீர்களா ? :))))
துழ்டர்களை கண்டால் தூர போகவேண்டும் என்று நினைத்து இருப்பார்.
நல்ல சிந்தனை , அருமையான பதிவு.
சிறப்பான கட்டுரை. வாழ்த்துகள்! மீட்டர் கட்டணம் மட்டுமே வசூலிக்கும் கேரள ஆட்டோத் தொழிலாளர்கள், ஜெயமோகன் & கோ கண்ணில் படுவதே இல்லை போலும் . வாழ்வியலைப் புரிந்துக் கொள்ள முடியாத, பிற்போக்குதனத்திற்குக் காவடித் தூக்குகின்ற இவர்களெல்லாம் எழுத்தாளர்கள் என்று கூறிக்கொள்வது தமிழுக்கு ஏற்பட்ட இழுக்கு.
Dear Mr. Kummy. yaaru sonna meeter kattanam mattume naan anubavichirukken. yethum pothu meter kasuthaan solluvanga. appurama yella driverum sernthu kittu mirattuvaanga. unga veetu samaana neenga irakkurathukku kooda “nokku koolie” kodukkanum. anubavikkumpothuthaan athanoda vali theriyum. nantri.
பாராட்டுக்கள், பாராட்டுக்கள், அருமையான பின்கட்டுரை! ஒக்காந்து யோசிப்பீயலோ? எதோ அவர் பாட்டுக்கு ஒரு கட்டுரை எழுதினார். அத நோண்டி பின்னி பெடல் எடுத்து இந்த கட்டுரைய எழுதிய வருக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். சூப்பர் அப்பு.
அருமையான சிந்தனைக்கு குட்டும் தலைப்பில்லாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
//எல்லா டீ எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பும் வீடுகளும் சுத்தமாகத்தான் இருக்கும். காரணம் அங்கு வரும் எல்லாப்பொருட்களும் கீழே சமவெளியிலிருந்துதான் வரவேண்டும். அதனால் எதையும் வீணாக்க மாட்டார்கள். மலசல, குளியல்கள் நீர் கிடைப்பதைப் பொறுத்தது என்பதால் மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவார்கள். அவையும் மலையில் வடிந்து விடும். தேங்காது. நகரங்களின் புழுதி, பெரும் நிறுவனங்கள், ஓட்டல்களின் குப்பைகள் எல்லாம் அங்கே சாத்தியமில்லை. உடை கூட அவ்வளவு சீக்கிரம் அழுக்கடைவதில்லை. பட்டினி கிடப்பவர்கள் கூட அங்கே பளிச்சென்றுதான் இருப்பார்கள். குளிருக்கான உடைகளை அணிந்து கொண்டு அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிதான் குடிக்கிறார்கள் என்பதை யாரும் நம்ப முடியாது.//
கிராமமுமல்லாத,நகரமுமல்லாத ஒரு வித்தியாசமான வாழ்க்கை வாழும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கால் வயிற்றுக் கஞ்சி,முதலாளி வர்க்க சுரண்டல் கூடவே தொழிற்சங்கங்களின் சமரசங்களின் காரணமாகவே ஒரு பகுதியினர் திருப்பூர் நோக்கி நகர்ந்து விட்டார்கள்.
//ஜெயமோகனது ஒரு சுற்றுலாப் பயணத்திலேயே மீனவர் குடியிருப்பும், கேரள ஓட்டல் தொழிலாளியும் இத்தகைய வன்கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதற்கு என்ன காரணம்? ஜெயமோகனது இந்த தொழிலாளர் வன்மத்தை மட்டும் கண்டு அகமகிழ்ந்த டோண்டு ராகவன் அதற்கு லிங்க் கொடுத்து “கேரள தொழிலாளரை பிச்சைக்காரர்களாக மாற்றிய இடதுசாரி இயக்கம்” என்று தலைப்பிட்டு தனிப்பதிவாக வெளியிட்டு கொண்டாடுவதற்கும் என்ன காரணம்?//
இடுகையின் தலைப்பு இங்கே தொக்கி நிற்கிறதா!!தென்னகத்தின் மற்ற மாநிலங்களின் வளர்ச்சியோடு ஒப்பிடும் போது அனைத்து வளங்களும் இருந்தும் இடதுசாரி வீச்சால் பின் தங்கியிருப்பதும் சொந்த மாநிலத்திலிருந்து வெளியேறும் மனநிலைக்கு காரணமாக இருப்பதும் மறுப்பதிற்கில்லை.
//இந்த உலகில் கஷ்டமான வேலைகளில் ஒன்று ஓட்டல் சர்வர் வேலை. பசியோடு வரும் வாடிக்கையாளர்களின் கோபங்களை சமாளித்து ஒரே வேலையை அலுப்பூட்டும் விதத்தில் அலைந்தவாறு குறைந்த பட்சம் 12 மணிநேரம் செய்ய வேண்டும். அநேக ஒட்டல் தொழிலாளிகள் திருமணம், குடும்ப வாழ்க்கையை வாழமுடியாமல், பல நகரங்களுக்கு சுற்றியலைந்து நாடோடி வாழ்க்கையை வாழ்கிறார்கள். தங்குமிடம், உணவு இலவசம் என்ற இரண்டு பாதுகாப்பு அம்சங்களுக்காகப் பல கிராமப்புறத்து இளைஞர்களை கவரும் வேலை இதுதான்.//
மனிதர்களின் வாழ்க்கையையும்,மனவியலையும் அழகாக படம் பிடிக்கிறீர்கள்.
உழைப்பாளிகளின் உரம் சேர்ந்த உடல்வாகுடன் உழைப்பாளர்களின் முகங்களையும் படம் பிடித்துப் போட்டிருந்தால் பதிவின் அழகுகூடியிருக்கும்.
நல்ல பதிவு வினவு. ஜெயமோகனின் பதிவைப் படித்த போதே யாராவது இதைக் கண்டித்து எழுத மாட்டார்களா என்றுத் தோன்றியது.
//எழுத்துலகப் பண்ணைகள் ஓட்டல்களுக்கு சென்றால் என்ன நடக்கும்?//வாசித்த போது; காட்சி மனதில் படம் போல் விரிந்தது. சிரித்தேன். நுணுக்கமான அவதானிப்பு.
நல்ல அலசல்;
அந்த உழைக்கும் மக்கள் இந்த கட்டுரையை வாசிக்க கேட்டால் எவ்வளவு சந்தோசபடுவார்கள்
நீங்கள் ஒரு தமிழ் dhrogi
““ஒரு ஓட்டல் தொழிலாளியை தொழிலாளியாகக் கருதாமல் அவரை ஒரு அடிமையாக கருதுவதுதான் இத்தகைய உழைக்கும் மக்களைப்பற்றி அறியாத மேல்தட்டு வர்க்கத்தின் இயல்பு.”
அருமையான அலசல். இதுதான் நெத்தி அடி என்பது. தனிச்சொத்தை பொதுவுடமையாக்கவதாக மார்க்ஸ் குறிப்பிட்டதை பெண்களை பொதுவுடமையாக்குகிறார்கள் என்று அலறிய முதலாளித்துவத்தி்ன் குரல் இது. பெண்களை தனிச்சொத்தாக பாவிப்பதால் வரும் பயம், என்று அதற்கு நெத்தியடியாக மார்க்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டார். கம்யுனிஸ்டுகள் பெண்களை ஒரு சகஜீவியாகக் கருதுபவர்கள். அதைப்போல் தொழிலாளிகளை தோழனாக கருதுவதைவிட்டு அடிமையாக பார்ப்பதால் வரும் விளைவு இது.
////ஒன்று அந்த தொழிலாளிகள் இந்த பதிவுகளை படிக்கமாட்டார்கள் என்ற தைரியம். இரண்டு அந்த தொழிலாளிகளின் வாழ்க்கையை உணராத, வலையுலகை வைத்து மட்டும் அறிவு பெற்ற நடுத்தர வர்க்கம்தான் படித்து வரவேற்கும் என்ற நம்பிக்கை.
ஆனால் இந்த ‘தைரியத்திற்கும், நம்பிக்கைக்கும்’ நிச்சயம் எதிர்காலமில்லை என்பதை அந்த தொழிலாளிகள் நிரூபித்துக் காட்டுவார்கள். ஏனெனில் இந்த உலகில் எதிர்காலத்தை கொண்டிருக்கும் ஒரே வர்க்கம் அதுதான்./// அருமையான வரிகள் தோழர்களே கண்டிப்பாக இங்கே செம்புராட்சி நிகழும்
ஜெயமோகன், போன்ற வர்ணாசிரம கிரிமினல்களுக்கு உழைக்கும் மக்களை அடிமைகளாக பார்க்கும் மனோபாவம் இல்லையென்றால்தான் அதிசயம். வர்ணாசிரமத்தை நிறுவத்தானே இவர்களெல்லாம் சங் பரிவார பிரச்சாரத்தை வலையுலகில் கர்ம சிரத்தையாக செய்கிறார்கள்.
அருமையான பதிவு..
ஜெயமோகன்…. இது ஒரு திருந்தாத ஜென்மம்… இதற்கு சரியான ஜோடி ஒரே ஆள் தான்.. நம்ம சாரு. சாருக்கு ஒரு நித்யா மாதிரி ஜெயமொஹனுக்கும் ஒரு வித்யா கிடைத்தால் நல்லது…
சூப்பர் ….
இன்னும் புரட்சிகர தகவல்கள் வர ஆவலாக இருக்கிறேன் …
வினவு
இந்த கட்டுரையின் கருத்துகள் ஆழமான சமூகப் பார்வைக் கொண்டது. என்னைப் போன்ற புதியவர்களுக்கு புதிய பார்வையின் ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஒரு தொழிலில் ஈடுபடுபவர்களின் மனநிலையில் இருந்து கொண்டு அவர் பக்கம் உள்ள நியாயங்களை சொல்வது என்பது சிந்தனையின் உச்சம் என்று சொல்லாம். ஆனால் ஜெயமோகன் போன்றோர் தொழிலாளர்களை தான் வாழும் நிலைக்கு ஏற்ப நினைத்து அவர்களைப் பற்றி கட்டுரை எழுதுவது கயமையின் உச்சம்தான். சிறந்த இடுகை!
–புதியவன்–
///““ஒரு ஓட்டல் தொழிலாளியை தொழிலாளியாகக் கருதாமல் அவரை ஒரு அடிமையாக கருதுவதுதான் இத்தகைய உழைக்கும் மக்களைப்பற்றி அறியாத மேல்தட்டு வர்க்கத்தின் இயல்பு.”////
உண்மை.
செருப்பால் அடித்தால் கூட தூசு மாதிரி தட்டிவிட்டு போவார். டோண்டு ராகவன் இந்த மாதிரி எழுதுறது எல்லாம் கண்டுக்க கூட மாட்டார்.
நெத்தியடி பதிவு. வாழ்த்துக்கள்.
மீட்டர் கட்டணம் மட்டுமே வசூலிக்கும் கேரள ஆட்டோத் தொழிலாளர்கள், மற்றும் 99% மீட்டரே போடாத தமிழக ஆட்டோத் தொழிலாளர்கள்(!!!???) பற்றி உங்கள் கருத்து என்ன?.
மீட்டர் போடாத தமிழக ஆட்டோக்களின் அரசியல் குறித்தும், பின்னாலிருந்து இயக்கும் கழக அரசியல்வாதிகள், காவல் துறையினர் மற்றும் தாதாக்கள் குறித்தும் நீங்கள் அறிந்திருக்காவிட்டால், உம்மை பார்த்து பரிதாபப்பட மட்டுமே முடியும்.
அதே திருவனந்தபுரம் ரயில் நிலையம் ,தேங்கைபட்டினத்தில் இருந்து கையில் இரண்டு பெட்டிகளோடு தமிழ்நாடு அரசு பேருந்தில் வந்திறங்கி நேராக உள்ளே செல்ல முயல்கிறேன் . “பாண்டி” என்று தெரிந்து விட்டதனால் பெட்டிக்கான காசை கொடுத்து விட்டு செல் என்று வறிமழித்து சண்டித்தனம் செய்த தொழிலாளர்களின் மேன்மையை என்ன சொல்வது.எனக்கு இது நடந்தது இரு வருடம் முன்பு . கம்முனிசம் சக மனிதனுக்கு கொடுத்த பரிசு இது.. மெச்சி கொள்ளுங்கள் தோழர்களே!!!! கேரளாவும் உருப்படும் … மேற்கு வங்கமும் உருப்படும் !!!!!
//சத்யம் தியேட்ரின், நல்லி சில்க்சின், சரவணபவனின் சேவையை உயர்தர விலையை கொடுத்து அனுபவிப்பவர்களுக்கு தன்மானத்தோடு உழைக்கும் ஒரு சுமைதூக்கும் தொழிலாளிக்கு குறைந்தபட்ச கூலி கொடுக்க மனம் வருவதில்லை.//
உண்மை நானும்
நிறைய மேட்டுக்குடி மக்களிடம் கண்டிருக்கிறேன்…வெண்ணிற இரவுகள்
விற்காத பூரியை மூன்று நாள் ஆன பின்பும் அக்கார வடிசல் என்றும் அதுவும் விற்காவிட்டால் அதற்கும் புதிதாய் ஒரு பேர் வைத்து விற்கும் நம்மூர் ஆரியபவன் போல் அங்கே நடக்குமா…. இல்லை வெந்நீர் இல்லாத ஹோட்டலை காட்ட முடியமா ? …. ‘தொழிலாளி என்றாலே அடிமையாய்த்தான் இருக்க வேண்டும் என்ற பார்பனிய திமிர் தான் ஜெயமோஹனிடமும் டோண்டு ராகவநிடமும் காணப்படுகிறது..
ஐயா syed அவர்களே…….. /// “பாண்டி” என்று தெரிந்து விட்டதனால் பெட்டிக்கான காசை கொடுத்து விட்டு செல் என்று வறிமழித்து சண்டித்தனம் செய்த தொழிலாளர்களின் மேன்மையை என்ன சொல்வது’. //// பாண்டிக்காரன் என்றில்லை, எல்லோரிடமும் பெட்டிக்கான காசை வாங்குகிறார்கள் …
கேரள மக்கள் மத்தியில் எனக்கு சில நாட்கள் சுற்றிய அனுபவம் உண்டு. ஒருமுறை மூன்று நாள் திட்டமிடாத சுற்றுலாவாக, வாகனம் சென்ற திக்கில் மக்களிடம் விசாரித்துக் கொண்டே சென்றோம். செங்கோட்டையில் ஆரம்பித்து ஆலப்புழா, மலம்புலா அணைக்கட்டு வரை சென்றோம். இந்த நெடிய ஓய்வில்லா பயணத்தில் ஆழப்புழா, கொச்சி, குருவாயூர், அதிரம்பிழை, ஜோட்டானிக்கரை, மலம்புலா என கேராளாவின் பேர்வாதி நிலப்பரப்பை கடந்தோம். பல வகை மக்களையும் சந்தித்தோம். எங்களை கவர்ந்த விசயம் ஒன்றே ஒன்றுதான், தமது சொந்த வேலைகளைக் கூட விட்டுவிட்டு நமக்கு வழிகாட்டி, இடம் கொடுத்த உதவியர்களை மட்டுமே சந்தித்தோம்.
இதே போல ஒரு பரிட்சை ஒன்று எழுத திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த நாட்கள் மறக்க இயலாதவை. ஒரு முறை நண்பர்களுடன் கொச்சின் சென்று மெரைன் டிரை கரையில் தங்கியிருந்தோம். அன்று வேலைநிறுத்தம் என்பதால் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள் இல்லை. எனவே சில ஆட்டோக்காரர்களிடம் பேசி அவர்கள் ஒருவழியாக வருவதற்கு சம்மதித்தார்கள். அவர்களுடனான அனுபவம். பின்பு ஒரு சமயம் எனது கேரள நண்பனொருவனின் இல்லத்தில் தங்கியிருந்த அனுபவம். இவையனைத்துமே இனிமையான அனுபவங்களாகவே உள்ளன. இந்த அனைத்து சுற்றாலாக்களிலும் பீப் முதல் பல்வேறு உணவுகளை எளிமையான உணவகங்களிலேதான் உட்கொண்டோம்.
அதற்கும் முன்பு சிறு வயதில் எனது பெற்றோரின் அலுவலக ஊழியர்கள் ஒரு கேம்ப் ஒன்று கேரளாவில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த அனுபவங்களும் இனிமையானவையே.
ஒப்பீட்டளவில் கேரள மக்களின் உபச்சாரம் மிக நட்புடன் இருந்ததாகவே உணர்ந்தேன்.
ப்ளே பாய் , அது தான் இல்லை , சிறிது சினம் கலந்த கடுமையான வார்த்தைகளை மலையாளத்தில் உபயோகித்து , எதிர்கொண்ட பொது , இவன் ” முறி பாண்டி ” எண்டறிந்து விலகி சென்றனர் அவர்கள் . இவர்களை இருபது வருடங்களாக அறிந்தவன் என்றதால் தப்பித்தேன் . இந்த மனோபாவம் தான் எரிச்சலூட்டுகிறது என்கிறேன் நான் .
டியர் ப்ளே பாய் , அப்படி என்றால் பெட்டிக்கான காசு வாங்குவது நியாயம் என்கிறீர்களா? உங்களை அந்த இடத்தில வைத்து பாருங்கள் . இங்கிருந்து செல்லும் எல்லோரும் பணக்காரர்கள் அல்ல , கூலி வேலைக்காக வட கேரள செல்லும் பயணிகளிடம் சண்டித்தனம் செய்வதை ஏற்க முடியுமா உங்களால்?
நல்ல பதிவு
நல்லா இருக்குங்க.. அத்தனையும் உண்மை …. சகமனிதன் தன்னை கும்பிட வேண்டும் என்று நினைக்கும் இந்த பார்ப்பனிய தனமும் மேட்டுக்குடி தனமும் .. சக மனிதனை விரும்ப தெரியாத எவனும் வாழ தேவையில்லை… இவர்களை எதிர்த்ததால் இவன் ஜெயமோகன் பெரிய ஆளாகி விட்டன.. நாய் குறைக்கட்டும் இன்னும் பல பார்ப்பனிய மேட்டுக்குடி நாய்களும் சேர்ந்து குறைக்கட்டும் …
//சத்யம் தியேட்ரின், நல்லி சில்க்சின், சரவணபவனின் சேவையை உயர்தர விலையை கொடுத்து அனுபவிப்பவர்களுக்கு தன்மானத்தோடு உழைக்கும் ஒரு சுமைதூக்கும் தொழிலாளிக்கு குறைந்தபட்ச கூலி கொடுக்க மனம் வருவதில்லை.//
பாதிபேர் இப்படித்தான் இருக்காங்க .
மேட்டுக்குடி கீழ்க்குடி என்ற பிரிவினை என்று மாறும் என்று தெரியவில்லை . சில இடங்களில் பேரம் பேசி பொருள் வாங்கும் நான் வேகாத வெய்யிலில் செருப்பு தைக்கும் உழைப்பாளிகளிடம் மட்டும் பேரம் பேசுவதில்லை .அவர்கள் வயதான காலத்திலும் தன உழைப்பை மட்டுமே நம்பி வாழ்வார் .
அருமையான பதிவு .
ஜெயமோகனை “நாய்” என்று சொன்னால் எனக்கு ரொம்ப பிடிக்கும்
அப்படி கூப்பிட வேண்டுமென்றால் நீங்கள் ஒரு நாயுக்கு பொறந்திருக்க வேண்டும்.
//அப்படி கூப்பிட வேண்டுமென்றால் நீங்கள் ஒரு நாயுக்கு பொறந்திருக்க வேண்டும்//
ரொம்ப பேசக்கூடாது அனானி
நீங்க ஒரு ஆம்பிளையா இருந்தா பெயரை சொல்லிட்டு கமென்ட் அடிக்கலாமே,அனானிங்கிற பேர்ல பொட்டைத்தனமா சொல்கிற நீங்கள் (………) பொறந்தவரா?
என் பேரு ரொம்ப முக்கியம்டா போக்கத்தவனே.
thani maitha kunathai avarkal inathudan oppida vendom … ungal kannotathil ella brahmins sum kettavanga !? avanga lal than india intha alavukku munneri irukku
கேரளாவில் இருக்கும் ஹோட்டல் பணியாளர்களை பற்றிதான் ஜெ சொல்லியிருக்கிறார். இந்தியாவின் பிற பகுதியில் உள்ள தொழிலாளர்களை அப்படி கருதவில்லை. அதற்க்கு அவருக்கு கிடைத்த அனுபவங்கள் காரணமாக இருக்கலாம்.
அவரின் கருத்து பிழையாக இருக்கலாம் அல்லது பலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உடனே அவர் மேட்டிமைவாதி, நிலப்பிரவுத்தவ சிந்தனை உடையவர் என்று சாடுவது jumping to hasty conclusions and shallow interpretations.
அவர் தொழிலாளர்கள் நலன் பற்றியும், தொழிற்சங்களின் அவசியம் பற்றியும், சங்கங்கள் இல்லத நிறுவனங்களில், துறைகளில் அவர்கள் ஏய்க்கபடுவார்கள் என்றும் எழுதியிருக்கிறார்.
தொழிலாளர்களை அடிமைகளாக நடத்துவதை அவர் எப்போது ஆதரித்துள்ளார் ?
ஏழைகளின் துன்பம் மற்றும் தொழிலாளார்களின் கஸ்டங்கள் பற்றி பல நாவல்களில் மிக sensitiveஆகத்தான் சித்தரித்துள்ளார். (ஏழாவது உலகம், etc)
தொழிலாளர்களை அடிமைகளாக நடத்த வேண்டாம் / கூடாது. ஆனால் வாடிக்கையாளர்களிடம் அடிப்படை மரியாதை அல்லது பண்புடன் தொழிலாளர்கள் இயல்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்பதில் என்ன தவறு ? தமிழ்நாட்டில் கூட அரசு TTDC ஹோட்டல்களில் பணியாளர்களின் தன்மைக்கும், அதே தரத்தில் இயங்கும் தனியார் ஹோட்டல் தொழிலாளர்களின் தன்மைக்கு இருக்கும் வேறுபாடு உடனடியாக தெரியும்
/////இடங்கள், கடற்கரைகள், கோட்டைகள், போன்ற அஃறிணைகளின் அழகை, தனிமையை, வாழ்வின் வரலாற்றை மௌனமாக தேக்கி வைத்திருக்கும் விதத்தை………….. என்றெல்லாம் அவரது ரம்பமான இத்துப்போன போன சொற்றொடர்களின் மூலம் அளக்கும் அவர்////
இயற்க்கை அழகை வர்ணிப்பது குற்றமா ? அல்லது புரட்சிக்கு பின் அதை செய்ய உங்கள் ‘அனுமதி’ வேண்டுமா ? உங்களுக்கு அது ரம்பமாக தெரியலாம். பலருக்கு அது பிடித்திருக்கிறது. படிக்கிறார்கள். உங்களுக்கு போர் அடித்தால் படிக்காமல் இருக்க தடையில்லையே. ”கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்ற பழமொழி நினைவிற்க்கு வருகிறது.
//// குறைந்த கூலிக்கு வடகிழக்கு மக்களை இறக்குமதி செய்யும் பணியை தொழிற்சங்கங்கள் தடுத்து வருகின்றன///
இது வடகிழக்கு தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என்று தெரியவில்லையா ? இந்த வேலை கூட கிடைக்காமல் அவர்கள் செத்தால் உங்களுக்கு கவலையில்லை ? அப்படிதானே ? இந்தியாவில் யாரும் எங்கும் சென்று வேலை செய்ய அடிப்படை உரிமைகள் உள்ளன. அதை தடுக்க முயல்வது ஃபாசிசம். கேரள தொழிற்சங்ககள் செய்வதும் ஃபாசிசம் தான். Monopoly என்று வகைபடுத்தலாம். மகாராஸ்ட்ராவில் பால் தாக்ரே கும்பல் செய்வதும் இதுதான். கேரளத்தவர் பல மாநிலங்களுக்கு சென்று பல ஆண்டுகளாக வேலை செய்கின்றனர். அம்மாநில தொழிற்சங்கங்கள் இதெ பாணியில் அவர்களை தடுக்க முனைந்தால் ?
பொதுவாக இந்திய தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மிக குறைவாக, கொடுமையாக உள்ளது என்பதை மறுக்கவில்லை. விசம் போல் உயரும் விலைவாசி, பெருகிவரும் ஜனத்தொகையால வேலை இல்லா திண்டாட்டம், குறைந்த கூலி, மோசமான working conditions, lack of proper and sufficient social security, lack of decent living spaces, corruption of govt machiney which prevents many govt services from reaching the poor, etc.
ஆனால் something is better than nothing. இந்த வேலை வாய்ப்புகளாவது வடகிழக்கு தொழிலாளர்களுக்கு இன்று கிடைக்கிறதே. இதுவும் இல்லையென்றால் ?
இன்று இருப்பதை விட மிக குறைவான ஜனத்தொகை இருந்த காலத்தை விட இன்று நிலைமை பரவாயில்லை. வறுமை குறைந்து, working conditions and living conditions சற்று பரவாயில்லை.
இவைகளுக்கு காரணிகள் மற்றும் தீர்வுகள் பற்றி விரிவான விவாதங்கள் உள்ளன.
செம்புரட்சி செய்த பிறகும், இவைகளை தீர்க்க உங்களால் முடியாது என்பதே வரலாறு கூறும் உண்மை. There is no guarantee for any easy and workable solution for these in post revolution India. On the contrary things may be even worser.
அதியமான்,
இடம்பெயரும் தொழிலாளிகளுக்கு வேலை தருவது இங்கே உள்ள முதலாளிகளின் காருண்யம் என்பது போலவும்; அவர்கள் வரவை கம்யூனிஸ்டுகள் தடுத்து அவர்கள் பிழைப்பில் மண்ணைப் போடுகிறீர்களா என்பது போலவும் நீங்கள் கேட்கிறீர்கள்..
இரண்டிலும் உண்மையில்லை..
ஜெயராம் பிரச்சினையின் போது வினவு வெளியிட்ட கட்டுரையை வாசிக்கவும். மேலும் “குறைந்தகூலிக்கு” இறக்குமதி செய்வது தான்
எங்கள் பிரச்சினை – நியாயமான கூலிக்கு அழைத்து வருவதில் எங்களுக்கு பிரச்சினை என்று சொன்னோமா?
“சம்திங்கு ஈஸ்ஸு பெட்டரு தென் நத்திங்கு” எனும் தத்துவமெல்லாம் கொஞ்சம் ஓவருங்ணா – கிடைக்கிறதெல்லாம் கைக்கும் வாய்க்கும்
பற்றாத ‘நத்திங்கு’ தானுங்க.
இதைத் தான் பார்வைக் கோணத்தின் முரண் என்று முந்தைய ஒரு விவாதத்தில் சொல்லியிருந்தேன். நீங்கள் சோரு கிடைக்கிதில்லே.. பத்தாதா
என்கிறீர்கள் – நாங்கள் சுயமாரியாதையும் உரிமையும் வேண்டும் என்கிறோம்…
உரிமையும் சுயமரியாதையும் எதிர்பார்க்கும் தொழிலாள தோழர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல – பிச்சைதான் போடுவேன்; பணிந்து வாங்கிக் கொண்டு
போக வேண்டியது தானே என்று சொல்லும் டோ ண்டு / ஜெமோவுக்குத் தான் ஆண்டைத் திமிர்.
கார்கி,
//// நியாயமான கூலிக்கு அழைத்து வருவதில் எங்களுக்கு பிரச்சினை என்று சொன்னோமா?//// நியாயமான கூலி என்பதை யார் எப்படி நிர்னியம் செய்வது. அது எப்போதும் demand and supply of labour and jobs, and inflation levelகளை பொறுத்தே நிர்ணியக்கப்படுகிறது. வேறு எதுவும் காரணியில்லை. கம்யூனிச நாடுகளில் தான நீங்கள் சொல்வது சாத்தியம். ஆனால் அதற்க்கான விலை மிக அதிகம். மேலும் பல கொடூரங்கள் நடத்தி, அதன் பிறகு தான்..
Minimum wages Act பல நாடுகளிலும் unskilled labourers மற்றும் கருப்பின மக்களிடம் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்திருபது பற்றி பல ஆய்வுகள் பல வருடங்களாக விவாதிக்கின்றன.
////நீங்கள் சோரு கிடைக்கிதில்லே.. பத்தாதா
என்கிறீர்கள் – நாங்கள் சுயமாரியாதையும் உரிமையும் வேண்டும் என்கிறோம்…///
அப்படி நான் சொன்னதாக நீங்களே அனுமானம் செய்து கொள்கிறீர்கள். தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும். வளர்ந்த நாடுகளில் (உதாரணமாக நெதர்லாந்த நாடு போல) உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் அளவிற்க்கு உலகெங்கும் உள்ள அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரமும் உயர வேண்டும் என்று தான் விரும்புகிறேன். அதை அடைய வழிமுறைகளில் தான் மாற்று கருத்து. செம்புரட்சி தான் ஒரே தீர்வு என்று நீங்கள் நம்புகிறீர்கள். அல்ல, அது தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகும் என்று நான் கருதுகிறேன். வரலாற்று பாடங்களை கொண்டு சொல்கிறேன். மேலும் இரண்டாம் உலகப் போரில் முற்றாக அழிந்த நாடுகளான ஜப்பான், ஜெர்மனி, கொரியா, தைவான், மலேயா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கடந்த 60 ஆண்டுகளில், எந்த வகை பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வறுமை அளவை மிக மிக குறைத்து, இன்று வளர்ந்த நாடுகளாக மாறின என்பதை பற்றி தான் திரும்ப திரும்ப விவாதிக்க அழைக்கிறேன்.
Something is better than nothing என்பது மிக மிக practical ஆன விசியம். உங்களாலும் ஒரு நல்ல தீர்வை அளிக்க முடியாது. சீரழிந்த நிலையில் இங்கு, பிறகு என்ன தான் செய்வது ?
////பிச்சைதான் போடுவேன்; பணிந்து வாங்கிக் கொண்டு
போக வேண்டியது தானே என்று சொல்லும் டோ ண்டு / ஜெமோவுக்குத் தான் ஆண்டைத் திமிர்.////
இல்லை. அவர்கள் அப்படி சொல்லவில்லை. நீங்களாக அப்படி அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் பார்வையில் தான் கோளாறு என்கிறேன்.
திரு அதியமான் அவர்களே ! எழுத்தாளர் ஜெயமோகன் சிந்தனையின் அடிப்படை என்ன ? அவர், பெரும்பான்மை மக்கள் ஒடுக்கப்படும் இந்த சமுகத்தை மாற்ற விரும்புகிறாரா ? பழைய ஒடுக்குகிற சமுக அமைப்பை காக்க விரும்புகிறாரா என்று அவரது எழுத்துக்களை தொகுத்துப் பாருங்கள் !அப்போது புரியும் அவர் யார் என்று .வினவின் பதிவு சரியானது,சிறப்பானது!
மொக்கை தாங்கலடா சாமீ…..சின்ன பதிவா போடுறா ங்கொய்யால
எப்பூடி
செவிடன் காதில் சங்கு….. செத்துப் போன கம்யுனிசத்தை முதலில் புதையுங்கள் அல்லது எரியுங்கள்…
தனிமனித தாக்குதல் பதிவுகள் போடுவது நாகரிகமாகத் தெரியவில்லை நான் ஏதாவது சொல்ல அப்புறம் என்னையும் தாக்கி பதிவு போடுவேங்களோஎன்ன கருத்துச்சுதந்திரம்! அளவிடுங்கட
வினவு ,
உங்கள் கட்டுரை மிக மிக அருமை ,உழைக்கும் மக்களை சுரண்டும் மேட்டுகுடி மக்களையும் ,corporate கம்பெனி களின் முதாளிகளின் அவுட் சோர்சிங் முறையும் சுரண்டும் வேலைதான்,என் அனுபவம ,எனக்கு 15000 ரூபாயை சம்பளமாக வழங்கு கிறது ஒரு நிறுவனம் ,ஆனால் அதில் 7500 ரூபாயை பிடித்து கொண்டு 7500 ரூபாயை சம்பளமாக தருகிறது இன்னொரு நிறுவனம் ,என்னக்கு இதை பற்றி கேள்வி பட்டதும் மனது மிகவும் வேதனை பட்டது .இது எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை,இங்கே இருந்து Communism பேசும் அரசியல் கட்சிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறன என்று தெரியவில்லை ,என்னக்கு உங்களை போல் சரளமான மொழி நடை கிடையாது ,தவறு இருந்தால் வருந்துகிறேன் ,திருத்திகொள்கிறேன்…,
வினவு ,
இந்த சுரண்டல் பற்றி கேள்வி பட்டவுடன் முதலில் எங்கள் அலுவலகத்தில் இதை பற்றி கேள்வி எழுப்பியவன் நான் ,ஆனால் அவர்கள் பதில் முடிந்தால் இரு இல்லை என்றல் வேலையை விட்டு சென்று விடு ,சம்பளமும் ஒழுங்காக தருவதில்லை கேட்டால் இபோழுது வரும் என்று சொல்லியே 12 ,13 தேதி ஆக்கிவிடுகிறார்கள் ,மன்னிக்கவும் உள்ளுக்குளேயே புலம்பி கொண்டு இருந்தேன் ,வேறு வழி இல்லாமல் தான்
எழுதினேன் ,பதில் இல்லைஎன்றாலும் பரவில்லை ,அரசாங்கம தொழில் சட்டம் எல்லாம் பேப்பரில் மட்டும் தான ,மக்களையும் ,என்னை போன்றோரையும் ஏமாற்றுவதற்காக தான …,vilangavillai
அந்த மாதிரி கம்பெனியில் ஏன் வேலைக்கு சேர்ந்தீர்கள் ?
பு.ஜ.தொ.முவுக்கு தொடர்பு கொண்டு பேசுங்கள் சங்கர். அ.முகுந்தன், 110,2- வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. செல்பேசி 94448 34519
குறி தம்பி எங்க காணும்? அதாம்பா அந்த கேள்விகுறி தம்பி?
உடல் வருந்தி உழைப்பவனுக்கு வருத்தம் தெரியும். ஜெயமோகன் போன்ற அட்டைகள் அடுத்தவரது உழைப்பை உறிஞ்சிக்குடிக்கும் கயவர்கள். தான் வேலை செய்யும் நிறுவனத்துக்கு கூட உண்மையாக இல்லாமல், அலுவலக வேலை செய்யாமல் தனது எழுத்து குப்பைகளை கொட்டும் மனிதன். அடுத்தவன் காசில் உலக பயணம் போகும் நாதாரி. பல கோடிக்கணக்கான மக்களை கொடுமைப்படுத்தும் சாதியத்தை வர்ணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கும் கொடூரன். அடிமட்ட மக்களோடு எவ்வித தொடர்பும் இல்லாமல் வாழும் சுயநலவாதி. அப்படிப்பட்ட பன்னாடை ஒரு வேளை உணவுக்காக அல்லல்படும் தொழிலாளர்கள் பற்றி வேறு எப்படி எழுதும்???
இந்த கட்டுரையை ஆராய்விலும் இணைத்துள்ளோம்.
அதியமான்,
//நியாயமான கூலி என்பதை யார் எப்படி நிர்னியம் செய்வது//
சரி.. நீங்கள் தான் சொல்லுங்களேன் யார் நிர்னயம் செய்வது?
//ஜப்பான், ஜெர்மனி, கொரியா, தைவான், மலேயா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கடந்த 60 ஆண்டுகளில், எந்த வகை பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வறுமை அளவை மிக மிக குறைத்து, இன்று வளர்ந்த நாடுகளாக மாறின என்பதை பற்றி தான் திரும்ப திரும்ப விவாதிக்க அழைக்கிறேன்//
ஒரு சின்னக் கணக்கு சொல்கிறேன் – நூறு பேர் கொண்ட ஒரு ஊரில் ஒரு கேணி இருக்கிறது. அதில் தினசரி இருநூறு வாளி தண்ணீரை
இறைக்க முடியும். அடுத்த நாளுக்கு மீண்டும் இருநூறு வாளி தண்ணீர் ஊறியிருக்கும்.
இப்போது ஊரில் இருக்கும் A என்பவனோடு B,C,D,E & F என்று ஒரு ஆறு பேர் கூட்டு வைத்துக் கொண்டு அவர்கள் மட்டுமே மற்றவர்களை
மிரட்டி அச்சுறுத்துவதன் மூலம் நூறு வாளி தண்ணீரை எடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மிச்சம் இருக்கும் 94 பேரும் இருக்கும் நூறு வாளி தண்ணீரை தமக்குள் பங்கிட்டுக் கொள்ள போட்டி போடுகிறார்கள்.
இப்போது அதியமான் எனும் ஞானி அந்த ஊர் வழியே ஒருநாள் கடந்து போகிறார். அவர் தரும் தீர்வு என்னவென்றால், எல்லோரும் A,b.c.d.e&f
போலவே முன்னேறிக் கொள்ள வேண்டியது தானே என்பதாகும். என்றால், அந்த இருநூறு வாளி தண்ணீருக்காக நூறு பேரும் அடித்துக் கொள்ள
வேண்டியது தவிர வேறு வழியிருக்கிறதா?
இப்போ விசயத்துக்கு வருவோம். உலகில் இருக்கும் வளங்கள் மொத்தமும் இருக்கும் நூற்றி சொச்ச நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும்
போதுமானது. ஆனால், முன்னேற்றம் என்பது அடுத்தவர்களுக்கு கிடைக்க வேண்டியதை தட்டிப்பறிப்பதல்ல.
நீங்கள் சொன்ன நாடுகளில் இருப்பது உண்மையான முன்னேற்றம் தானா என்பதற்குள்ளேயே நான் போகவில்லை. அந்தப் புள்ளிவிபரங்களை
நிறைய முறை கொடுத்தாயிற்று. அங்கு இருக்கும் வறுமை / இல்லாமை பற்றி அசுரன் தளத்தில் நீங்கள் நடத்திய விவாதங்களில் எங்கள்
தோழர்களால் நிறைய பேசப்பட்டு விட்டது. ஆனால் ஒரு வாதத்துக்காக நீங்கள் சொல்லும் கோணத்திலிருந்து பார்த்தால் கூட கணக்கு
இடிக்கிறதே? எல்லோரும் ஜப்பான், ஜெர்மனி போல் ஆகவேண்டுமென்றால், இதே போல் இன்னும் ஒரு பத்து பூமி உருண்டைகளை அல்லவா
கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்? உயிரிணங்களற்ற கோள்கள் என்றால் உசிதம் – இல்லாவிட்டால் அங்கும் ஒரு கார்ல் மார்க்ஸ் தோன்றும் ஆபத்தும்
செம்புரட்சி நடந்துவிடும் பேராபத்தும் இருக்கிறது.
இல்லாவிட்டால், இருக்கும் முதலாளித்துவ சமூக அமைப்புக்குள்ளேயே இருக்கும் வளங்களை எல்லோரும் சமமாக பங்கிட்டுக் கொள்வதற்கு / எல்லா நாடுகளும் ஜப்பான், ஜெர்மனியாவதற்கு ஏதாவது ஒரு வழி உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.
//////நியாயமான கூலி என்பதை யார் எப்படி நிர்னியம் செய்வது//
சரி.. நீங்கள் தான் சொல்லுங்களேன் யார் நிர்னயம் செய்வது?///
இதற்க்கான விடை ஆங்கிலத்தில் தெளிவாக எழுதியிருந்தேன். படித்து உள் வாங்கவில்லை போல. (பல விசியங்களை இதே போல் சரியா புரிந்து படிக்காமல், தொடர்ந்து மேலோட்டமான. பொத்துப்படையான பதில்கள் தான் உங்களிடமிருந்து)
///இப்போது அதியமான் எனும் ஞானி அந்த ஊர் வழியே ஒருநாள் கடந்து போகிறார். அவர் தரும் தீர்வு என்னவென்றால், எல்லோரும் A,b.c.d.e&f
போலவே முன்னேறிக் கொள்ள வேண்டியது தானே என்பதாகும். என்றால், அந்த இருநூறு வாளி தண்ணீருக்காக நூறு பேரும் அடித்துக் கொள்ள
வேண்டியது தவிர வேறு வழியிருக்கிறதா?///
இப்படிதான் நான் சொன்னதை அர்த்தம் செய்துகொள்வதா ? உங்கள் புரிந்தல் அவ்வளவு மேலோட்டமானது. the point is to make the cake bigger so that all may get a larger share of the benefits. That is what happened / happens in all developed and newly developed nations. Increased productivity and wealth creation trickles down to the poorest of poor and reduced their poverty levels greatly in the past 100 years.
////
இப்போ விசயத்துக்கு வருவோம். உலகில் இருக்கும் வளங்கள் மொத்தமும் இருக்கும் நூற்றி சொச்ச நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் போதுமானது. ஆனால், முன்னேற்றம் என்பது அடுத்தவர்களுக்கு கிடைக்க வேண்டியதை தட்டிப்பறிப்பதல்ல.////
யாரும் அதை தட்டிபறிக்க சொல்லவில்லை. முன்பு காலனிய ஆதிகக காலங்களில், அது நடந்தது. ஏகாதிபத்தியம் மற்றும் ஃபாசி பாணிகளில் நிகழ்ந்தன. இந்திய பொருளாதார வரலாறு பற்றி இன்னும் விரிவாக படியுங்கள், ஒரு திறந்த மனதோடு.
//////நீங்கள் சொன்ன நாடுகளில் இருப்பது உண்மையான முன்னேற்றம் தானா என்பதற்குள்ளேயே நான் போகவில்லை./////
போகாமல் எப்படி எமது தரவுகளை மறுக்க போகிறீர் ?
////ந்தப் புள்ளிவிபரங்களை நிறைய முறை கொடுத்தாயிற்று. அங்கு இருக்கும் வறுமை / இல்லாமை பற்றி அசுரன் தளத்தில் நீங்கள் நடத்திய விவாதங்களில் எங்கள்
தோழர்களால் நிறைய பேசப்பட்டு விட்டது. ஆனால் ஒரு வாதத்துக்காக நீங்கள் சொல்லும் கோணத்திலிருந்து பார்த்தால் கூட கணக்கு
இடிக்கிறதே? எல்லோரும் ஜப்பான், ஜெர்மனி போல் ஆகவேண்டுமென்றால், இதே போல் இன்னும் ஒரு பத்து பூமி உருண்டைகளை அல்லவா
கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்?/////
இது மிக தவறான வாதம். 60 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா போன்ற நாடுகள் இந்தியாவை விட மோசமான நிலையில், கொடிய அழிவில் இருந்தன. சரியான, விவேகமான பொருளாதார கொள்கைகளை கடைபிடித்து, படிப்படியாக வளர்ந்த நாடுகளாக மாறின. நான் முட்டாள்தனமான கொள்கைகளை கடைபிடித்து சீரழந்தோம். அவர்களை போல வளர நல்ல சந்தர்பங்களை இழந்தோம். இதை பற்றி மிக விரிவாக எமது பதிவுகளில் எழுதியுள்ளேன். It is not the issue of
Availability of natural resources or technology. It is the question of economic and political systems that are put in place in each nation, that determines the prosperity and poverty levels in each nation.
உதாரணமாக, வட கொரியாவையும், தென் கொரியாவையும் இன்று ஒப்பிடுங்கள்.
http://nellikkani.blogspot.com/2009/05/blog-post.html வட கொரியா என்னும் நரகக்குழி
ஆப்பிரிக்காவில், போஸ்த்வான என்ற நாடு இன்று ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. One of the best governed nations in the entire African continent and with a better standard of living and low levels of corruption. போஸ்த்வானாவை நைஜீரியா அல்லது ஜிம்பாவே போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் புரியும். http://en.wikipedia.org/wiki/Botswana
இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம், ஒரு நாடு வளம் பெற பொருளாதார கொள்கைகள் மற்றும் அடிப்படை ஜனனாயகம் தான் மிக முக்கியம் என்பதை.
அதியமான் ஞானி, இது தமிழ் தளம் தானே! உங்களுக்கு தமிழ் அடிக்கும் தெரியும் தானே? பிறகு என்ன இங்கிலீபீஷ். தமிழ் அடித்து தொலைய்யா! இதை எத்தனை முறை உமக்கு சொல்வது? பிறகு, சொன்னது பிரியல போல! என அங்காலாய்ப்பு வேறு?
சில சமயங்களில் சில விசியங்களை ஆங்கிலத்தில் சுலபமாக சொல்ல முடிகிறது.
Demand and supply போன்ற விசியங்களுக்கு சரியான தமிழ் சொற்கள் சட்டென்று கண்டுபிடிப்பதில் சிக்கல். அதனால்தான். இது ஒரு பெரிய விசியம் இல்லை.
சரி, அதை படித்தால் புரியவில்லை என்பது கதை. முடிந்தால் விவாதிக்கவும்.
எங்க தலைமுறையிலேயே நான் தானுங்க 10ல் பெயில். இந்த நாட்டில.. அடிப்படை கல்வி கூட கொடுக்க முடியலைன்னு இந்திய அரசும் ஒத்துக்குது. இந்த் தேசத்துல… தமிழ்ல விவாதிக்கிற ஆட்களே கிடையாது. ஆங்கிலத்தில் விவாதிக்கிற ஆட்கள் குறைவு தான். உங்களுக்கு விவாதிக்கனும்னு நோக்கம் இருந்தா தமிழ்ல அடியுங்க! ‘நான் அறிவாளின்னு’ காட்டனும்னா இங்கீலீஷ்ல எழுதுங்க! அம்புட்டுதான். ஆங்கிலம் தெரியலைன்னு சொல்றதில்ல எனக்கு கூச்சமில்ல!
அதியமான்,
//the point is to make the cake bigger so that all may get a larger share of the benefits//
என்னாமா தேன் வடியுது.. ச்ச்ச்ச்
Then why dont you make the cake bigger and share a piece of profit with your employee? கேட்க நல்லாத் தான் இருக்கு அதியமான், எல்லா நாடுகளிலிலும் தொழிலாளி-முதலாளி இடைவெளி அதிகமானது தான். நீங்கள் குறிப்பிடும் நாடுகள் உட்பட. ஆனால், மேற்கில் இந்தியாவை விட
வாழ்நிலைகள் மேம்பட்டதாக இருக்கிறது என்பதும் உண்மை. ஆனால் இதை எவ்வாறு சாத்தியப்படுத்தினார்கள்?
மொத்த உலக நாடுகளும் ஒன்றுக்கொன்று பின்னப்பட்டுள்ளது – இதில் மூன்றாம் உலகநாடுகளின் சுரண்டப்பட்ட வளங்களும் உழைப்புமே முதலாம்
உலக நாடுகளை வளப்படுத்துகிறது. ஆப்ரிக்க / ஆசிய கனிவளங்கள் மேற்கில் குவிந்ததாலும், ஆப்ரிக்க ஆசியர்களின் உழைப்பின் பலன் மேற்கில்
குவிந்ததாலுமே அங்கே வாழ்நிலை நம்மைவிட மேம்பட்டதாய் இருக்கிறது. சென்னை ஹூண்டாய், ஃபோர்டு, டொயோட்டா, நிஸ்ஸான்
தொழிற்சாலைகளில் குறைந்த கூலிக்கு சி.எல்லாக வேலை செய்யும் தொழிலாளிக்கு நியாயமான கூலி கொடுப்பதாக இருந்தால் – மேற்கில்
கார்களை சல்லிசு விலைக்கு விற்கமுடியாது.
சீனத்துக் கொத்தடிமைகள் நியாயமான கூலியைக் கேட்டால் – முதலாம் உலகநாடுகளின் வீடுகளை நிறைக்கும் பொருட்களின் விலை பத்து
மடங்காவது அதிகரித்து விடும். அப்புறம் எங்கே மேம்பட்ட வாழ்நிலை??
நீங்கள் அசால்ட்டாக ஹோட்டலுக்குப் போய் நூறு ரூபாய் கொடுத்து பிரியானியை வெட்டி விட்டு வருகிறீர்களே – அங்கே பரிமாறும் ஆசாமிய
இளைஞனும் உள்ளே சமையல்காரர்களும் நியாயமான கூலி கேட்டு விட்டால் – நீங்கள் ஒரு பிரியானிக்கு ஐநூறு ரூபாய் கொடுக்க
வேண்டியிருக்கும். அவ்வாறு அவன் முதலாளி கொடுத்து உங்களை அவர் ஹோட்டலுக்கு வராமல் செய்து விடமாட்டார் என்பது ஒருபக்கம்.
நீங்கள் விஷயத்தை கீழ்மேலாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வேலைக்கான போட்டியும், வேலைக்கான டிமாண்டும் மட்டும் தான் சம்பளத்தை
இப்போது தீர்மானித்துக் கொண்டிருக்கிறதா? அது ஒரு மிகச்சிறிய காரணம் என்றாலும் அது மட்டுமே காரணமல்ல. மிக முக்கியமான காரணம் –
முதலாளிகளுக்கு இடையே நடக்கும் சந்தையைக் கைப்பற்றுவதற்கான போட்டி. விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் – குறைந்த
கூலிக்கு மேலும் மேலும் வேலையை பிழிந்தெடுக்கச் சொல்கிறது.
tricklesஆ??? அது அப்படியே தலைகீழானது. கீழே இருந்து தான் மேலே செல்வம் வெள்ளம் போல் பாய்கிறது – ஓரிரு துளிகளை மட்டும்
விட்டுச் செல்கிறது.
கார்கி,
நான் சொன்ன விசியங்களுக்கும், நாடுகளின் மாற்றத்திற்க்கும் நேரடியான பதில் சொல்ல முயல்க. முக்கியமாக வட மற்றும் தென் கொரியா நாடுகளின் நிலை. இவை இரண்டும் ஆசிய நாடுகள். 1950 வரை பின் தங்கிய மூன்றாம் உலக நாடுகள் தாம். வட கொரியா இன்று படு மோசமான நிலையில் இருக்கிறது.
All developed nations were once deveopling nations and they prospered thur free enterprise system based on liberal democracy. They improved their productivity and greatly increased the size of the ‘cake’ ; and trickle down really occurred. Results speak for themselves. All these talk of exploitation is mere talk and unscientific.
கார்ல் மார்க்ஸ் காலத்தில் அவர் கண்ட அய்ரோப்பிய தொழிலாளர்களின் நிலை படு மோசமாக இருந்தது. செம்புரட்சி ஃப்ரான்ஸின் தான் முதலில் வரும் என்று அனுமானித்தார். ஆனால் 150 ஆண்டுகளில் அந்நாடுகளில் ஏற்பட்ட சுபிட்ச்ம் அங்கு உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை வெகுவாக உயர்தியது.
பாஸ்ட்வான நாட்டை பற்றி சொல்லியிருந்தேன். 40 ஆண்டுகளுக்கு முன் மிக மிக வறுமையான நாடு. இன்று அதன் மாற்றம் பற்றி சுட்டியில் தகவல்கள்.
கம்யூனிச பாணி அமைப்பை முயன்ற அனைத்து (repeat : அனைத்து) நாடுகளும் கொடூரமான மனித உரிமை மீறல்களை சந்தித்து, பின்பு சீரழந்தன. விதிவிலக்கே இல்லை. அந்த அமைப்புதான் சரியான தீர்வு என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
சரி, இதெல்லாம் இருக்கட்டும். கேராளாவில் வேலை செய்யாமலேயே கூலி கேட்க்கும் தொழிலாளர்களின் நிலை பற்றி டோண்டு எழுதியிர்ருந்தார். உடன்படுகிறேன். அதற்கான சுட்டி இது : http://dondu.blogspot.com/2010/02/blog-post_27.html மேலும் அதன் தொடர்சி : http://dondu.blogspot.com/2010/03/blog-post_17.html (இனி இப்படி ஒரு பதிவை விமர்சித்து நீங்கள் பதிவெழுதினால், விமர்சிக்கப்படும் பதிவின் சுட்டியையும் அளிக்கவும். அதுதான் முறை) முக்கிய கேள்வி : செம்புரட்சி அரசில், இப்படி வேலை செய்யாமல் கூலி கேட்டால், அளிப்பீர்களா என்ன ? அல்லது அவர்களை கூண்டோடு வேறு இடத்திற்கு ‘ஏற்றுமதி’ செய்து forced labour வாங்குவீர்களா ? நடந்த வரலாறு தான் தெரியுமே.
http://en.wikipedia.org/wiki/Forced_labor_in_the_Soviet_Union
http://en.wikipedia.org/wiki/Forced_labour_camps_in_Communist_Bulgaria
இவைகளை நிதானமாக படிக்கவும்.
விவசாயத்தில் டிராக்ட்டர் வந்த உடன், ஏர் உழுபவர்களுக்கு வேலை போயிற்று. டெம்போக்கள் வந்த பிறகு மாட்டு வணிகள், கட்டை வண்டிகள் மிக குறைந்துவிட்டன. அதில் வேலை செய்தவர்கள் வேலை இழந்தனர். படிப்படியாக வேறு வேலைகளுக்கு மாறினர். ஆனால் கேரளாவில் மட்டும் மாற மாட்டார்கள். அதுதான் உங்களை பொறுத்த வரை சரி.
//கேராளாவில் வேலை செய்யாமலேயே கூலி கேட்க்கும் தொழிலாளர்களின் நிலை//
என்னவொரு விந்தை பார்த்தீர்களா மஹாஜனங்களே!! டாடாவுக்கு காவடி தூக்கும் சிபிஎம் பாரம்பரியத்தில் வந்த கேரளாவில் உழைக்காமல் தொழிலாளி என்று பேட்ஜ் வைத்துக் கொண்டு துட்டு சேர்க்கலாமாம். இதை ஏன் விந்தை என்கிறேன் என்றால் இந்தியாவின் பிச்சைக்காரர்கள் எல்லாம் ஏன் அங்கு இன்னும் படையெடுக்காமல் இருக்கிறார்கள் என்பது புரியாததாலேயே விந்தை என்கிறேன். தொழிலாளி என்ற பெயரும் உழைக்காமல் கூலியும் கிடைக்கும் ஒரு தேசத்தில், கடவுளின் கொடையாக பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு உழைக்காமலேயே கூலி கிடைக்கும் தேசத்தில் இருந்து ஏன் கேரளத்து சேட்டன்கள் பிற மாநிலங்களுக்கு படையெடுக்கிறார்கள் என்று புரியவில்லை.
உழைப்புக்கு கூலியில்லை, நாட்டில் 80% பரம ஏழைகள், உலகில் உள்ள 50% ஏழைகள் இந்தியாவில் போன்ற பிரச்சினைகளை பேசும் போதோ அல்லது வரி சலுகை, முதல் கடன் சலுகை வரை முதலாளி என்ற பேட்ஜை மட்டும் காட்டி கோடிகளில் சுருட்டும் இன்போசிஸ், அம்பானிகளை பற்றி பேசினாலோ அதியமானும் டோண்டுவும் இதே போல ஆதரித்து விமர்சித்து பதிவு போடுவார்களா?
மாட்டார்கள், மாறாக, இவ்வாறான சுரண்டல்களை பேசுவிடாமல் தடுக்கும் பொருட்டே கேரள தொழிலாளி உழைக்காமல் துட்டு சேர்க்கிறான் என்று வலிய பிரச்சாரம் செய்கிறார்கள்>
என்ன இருந்தாலும், முதலாளி உழைக்காமல் கோடிகளில் துட்டு சேர்ப்பதை சட்டப்பூர்வமாகவே செய்கிறான் என்பதை கட்டாயம் இங்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
அசுரன்
//இது மிக தவறான வாதம். 60 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா போன்ற நாடுகள் இந்தியாவை விட மோசமான நிலையில், கொடிய அழிவில் இருந்தன.//
60 வருடங்களுக்கு முன்பு எனில், 1960க்கு முன்பு. அந்த காலத்திற்கும் முன்பு ஏழை நாடான ஜப்பானை, ஜெர்மனியைப் பார்த்து அமெரிக்காவும், பிரிட்டனும் பயந்தன் என்பது விந்தையான சமன்பாடாக உள்ளது.
அதியமானுக்கு 1000 வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்ற கொடுஞ் மனித அவலங்கள் நிகழ்ந்தால்தான் சிறிது மனசாட்சி உதறும் போலிருக்கிறது. அது வரை அப்போதைக்கு இப்போ பரவாயில்லை என்றே சமாளித்து வருவார்.
அசுரன்,
ரொம்ப புத்திசாலித்தனமாக பேசறதா நினைபா. (முதல்ல, இன்ஃபோஸிஸ் நிறுவனத்தர் கயவர்கள் என்று நீர் சொல்லி, பின் என் கேள்விகளுக்கு இதுவரை பதில் சொல்லாம நழுவியவர் நீர் என்பதை மறக்க வேண்டாம்). இரண்டாம் உலக்போரில் ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் முற்றாக அழிந்தன. 1945இல் அவர்கள் நிலை மிக மிக கொடுமையாக இருந்தது. 60 வருடங்களுக்கு முன்பு என்று நான் சொன்னது இதைதான் என்பதை நன்றாக தெரிந்தும், இப்படி //// அதியமானுக்கு 1000 வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்ற கொடுஞ் மனித அவலங்கள் நிகழ்ந்தால்தான் சிறிது மனசாட்சி உதறும் போலிருக்கிறது. அது வரை அப்போதைக்கு இப்போ பரவாயில்லை என்றே சமாளித்து வருவார்.//// உளருவதுதான் உமது மேதமையோ ?
//(முதல்ல, இன்ஃபோஸிஸ் நிறுவனத்தர் கயவர்கள் என்று நீர் சொல்லி, பின் என் கேள்விகளுக்கு இதுவரை பதில் சொல்லாம நழுவியவர் நீர் என்பதை மறக்க வேண்டாம்).//
இன்போசிஸ் வரியே கட்டாமல் மொத்தமாக அள்ளிக் கொள்வதற்கும், அன்னியச் செலவானி என்ற உங்களது பொய்க்கு பின்னே அந்நியக் கடன் இருப்பதும், அதுவே இந்தியாவின் விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணியாய் (இது உங்கள் வாயால் நீங்கள் சொன்னது) இவற்றில் எல்லாம் லாபம் அடிக்கும் ஒருவனை கயவன் என்றே சொல்ல முடியும் என்பதையும் எடுத்துக்காட்டியதற்கு பதில் சொல்லாமல், கீறல் விழுந்த சோவியத் குலாக் கேசட்டை திரும்ப திரும்ப ஓட விடும் அதியமான் அவர்களே….
நழுவல் மன்னனாக மான் பட்டத்தை பெயரிலேயே தாங்கியிருப்பவர் நீரே
அசுரன்
//(முதல்ல, இன்ஃபோஸிஸ் நிறுவனத்தர் கயவர்கள் என்று நீர் சொல்லி, பின் என் கேள்விகளுக்கு இதுவரை பதில் சொல்லாம நழுவியவர் நீர் என்பதை மறக்க வேண்டாம்).//
இன்போசிஸ் வரியே கட்டாமல் மொத்தமாக அள்ளிக் கொள்வதற்கும், அன்னியச் செலவானி என்ற உங்களது பொய்க்கு பின்னே அந்நியக் கடன் இருப்பதும், அதுவே இந்தியாவின் விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணியாய் (இது உங்கள் வாயால் நீங்கள் சொன்னது) இவற்றில் எல்லாம் லாபம் அடிக்கும் ஒருவனை கயவன் என்றே சொல்ல முடியும் என்பதையும் எடுத்துக்காட்டியதற்கு பதில் சொல்லாமல், கீறல் விழுந்த சோவியத் குலாக் கேசட்டை திரும்ப திரும்ப ஓட விடும் அதியமான் அவர்களே….
நழுவல் மன்னனாக மான் பட்டத்தை பெயரிலேயே தாங்கியிருப்பவர் நீரே
அசுரன்
//இரண்டாம் உலக்போரில் ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் முற்றாக அழிந்தன. 1945இல் அவர்கள் நிலை மிக மிக கொடுமையாக இருந்தது. 60 வருடங்களுக்கு முன்பு என்று நான் சொன்னது இதைதான் என்பதை நன்றாக தெரிந்தும், இப்படி //// அதியமானுக்கு 1000 வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்ற கொடுஞ் மனித அவலங்கள் நிகழ்ந்தால்தான் சிறிது மனசாட்சி உதறும் போலிருக்கிறது. அது வரை அப்போதைக்கு இப்போ பரவாயில்லை என்றே சமாளித்து வருவார்.//// உளருவதுதான் உமது மேதமையோ ?//
முதலாளித்துவத்தின் இயங்கியல் அறியா பேதமையில் உறங்கும் கற்பனவாத சுதந்திர முதலாளித்துவவாதியே, உமது அறியாமை வாழ்க.
ஏகாதிபத்தியங்கள் தமது உற்பத்தி முடக்கத்தை உடைப்பதற்கு அழிவு வேண்டும். இன்றைக்கு நாம் அனுபவிக்கும் பல்வேறு முன்னேறிய கண்டுப்பிடிப்புகளுக்கான தேவையை உருவாக்கியதே இரண்டாம் உலகப் போரின் ஆதிக்க வெறியும், அழிவும்தான் எனவே போரில் ஈடுபட்ட முதலாளித்துவ சக்திகள் தமக்குரிய செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்வது அதிசயமானதுஅல்ல.
இத்தனை பேசும் அதியமான் அதே உலகப்போரில ஒப்பிட முடியாத அளவு பேரழிவை சந்தித்த சோவியத் பீனிக்ஸ் பறவை போல வந்ததை சொன்னால் மீண்டும் தனது குலாக் கேசட்டைஓடவிட்டு காதில் ரத்தம் வர வைப்பார்.
அசுரன்
//கம்யூனிச பாணி அமைப்பை முயன்ற அனைத்து (repeat : அனைத்து) நாடுகளும் கொடூரமான மனித உரிமை மீறல்களை சந்தித்து, பின்பு சீரழந்தன. விதிவிலக்கே இல்லை. அந்த அமைப்புதான் சரியான தீர்வு என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.//
இப்படியெல்லாம் மனிதாபிமான பிளிறல்களை அதியமான் முழங்குவது கண்டு யாராவது மயங்கினால், அவர்களுக்கு ஒரு தெளிவுரை. இவையனைத்தும் முதலாளித்துவத்தின் அன்றாட வழமையாகிப் போன மனித உரிமை ஒடுக்குமுறைகள், கோடூரங்களை அம்பலப்படுத்தும் போது அதன் வீரியத்தை மட்டும் படுத்தும் தந்திரமாகவே அதியமான் சொல்கிறார். இவர் இதுவரை லட்சம் முறை பல்லவி பாடியுள்ள சோவியத் குலாக் கோடூரங்களைப் என்றோ நடந்த ஒன்றை மிகைப்படுத்தி சொல்லப்படுகின்றதைப் போல பல மடங்கு அதிகமாக அன்றாடம் உலக மக்களை சித்திரவதை செய்து வரும் முதலாளித்துவ அநீதியின் முழு பரிமாணத்தை தெரியவிடாமல் தடுக்கும் தந்திரமாகவே அதியமான் இதனைச் செய்கிறார்.
ஒரு கோடு வரைந்தால் அது சிறிதாக்க அருகில் பெரிய கோடு வரையும் பழைய தந்திரம்தான் இது.
சோசலிசமாவது குறுகிய காலம் நிலவி மக்களின் வாழ்வில் வசந்தத்தை உருவாக்கியது ஆனால் அதியமான் பேசும் கற்பனையான பியூர் முதலாளித்துவம் இதுவரை எங்கும் இருந்ததில்லை. ஓப்பீட்டளவில் இருந்த இடங்களிலும் சோசலிசம் சாதித்ததில் எள் முனையளவு கூட சாதித்ததில்லை. இத்தனைக்கும் முதலாளித்துவத்தின் வயது சில நூறு வருடங்கள். முதலாளித்துவமும் தனது இளம் பிராயத்தில் பல சறுக்கல்கள் தோல்விகள் இழப்புகளை கடந்தே செழுமை பெற்றது. அதெல்லாம் வரலாற்றை படித்தால் தெரியும். விக்கிபிடியா படித்தால் புரியாது.
அசுரன்
உலகு தழுவிய முதலாளிகளால் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்புப் பண விபரங்கள் அடங்கிய சிடி ஒன்று ஏலத்திற்கு வந்தபோது ஜெர்மனிய அரசு 2.5 மில்லியன் யூரோ வரை கொடுத்து அந்த சிடியை வாங்குகிறது. இது ஜெர்மனி பற்றி எதை குறிக்கிறது?
செல்வம், வளம் இதெல்லாம் முதலாளிகளாக உருமாறும் திறமையை பிறப்பால் பெற்ற சிலருக்கே கிடைக்க வேண்டும் என்பதுதான் இயற்கை விதி, இதுவே முதலாளித்துவ கடவுள் நமக்களித்த பைபிள். ஆமேன்
ஆகவே, அன்பர்களே மனிதரிடையே ஏற்றத்தாழ்வு இருந்தால்தான் சிலர் அவ்வாறான முதலாளிகளாகவும்(திறமையுள்ள படியளக்கும் தேவதைகள் என்று பியூர் முதலாளித்துவ சமூகத்தில் சொல்வார்கள்), பலர் அண்டிப் பிழைக்கும் அய்யோ பாவம் உழைப்பவர்களாகவும் எப்போதும் நிலவி இந்த சமூகம் தொடர்ந்து முன்னேறும்.
முன்னேறும் ஆனாலும் ஏற்றத்தாழ்வு தொடரும் அப்போதானே சந்தை என்று ஒன்று இருக்கும். சிலர் 10அடி முன்னேறினால், பலர் 1அடி மட்டுமே முன்னேறுவார்கள். அப்போதானே ஓரிடத்தில் செல்வம் குவியும், டிமாண்டு என்று ஒன்று இருக்கும். சும்மாயிருந்த சிரங்கை சொறிந்து விட்டால்தானே சுகமே. அப்படித்தான் டிமாண்டும், சந்தையுமாகா சொறிந்து கொண்டே மனித சமூகம் தொடர்ர்ர்ர்ந்து முன்னேறி பரலோகத்தில் எங்கள் பிதாவை 2012க்குள் சந்திக்கும் என்பதை அதியமான் சார்பில் தெரியப்படுத்திக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
உழைக்கும் மக்கள் தங்கள் நிலையை முதலில் உணரவேண்டும் ,தங்கள் வாழ்க்கை தரத்தை உணரவேண்டும் .தங்கள் வாழ்க்கை முறையை மாற்றவேண்டும் .பாக்கு,பீடா,பீடி ,பிராந்தி போன்ற தீய பழகவழக்கங்களை விட்டொழிய வேண்டும் .சக உழைக்கும் தோழர்களிடத்தில் மரியாதை மிக்க சொற்களை பயன்படுத்த வேண்டும் .ஆபசசொர்களை அகற்றவேண்டும் .கூலிக்கு அடிமையாக கூடாது .இந்தியா போன்ற நாடுகளில் புரட்சி நடத்தி ஆட்சியை கைபற்றுவது மிக எளிது .உழைக்கும் மக்கள் கூலியை புரகநிக்கவேண்டும் .கூலிக்கான மாற்று வடிவத்தை அவர்கள் உருவாக்க வேண்டும் ,அந்த மாற்று வடிவம் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக அமைய வேண்டும்.பணம் என்ற முதலாளியின் கூலி எங்கு அதிகம் சேமித்து வைகப்படுள்ளதோ (வங்கி bank) அதை அனைத்தையும் தீயிட்டு கொழுத வேண்டும் .கூலியாக கொடுக்கப்படும் பணம் செல்லாது என அறிவிக்கவேண்டும் .முதலாளியை நடுதெருவுக்கு கொண்டுவரவேண்டும் .ஆட்சி அதிகாரம் முழுவதையும் உளைபவர்கள் கைப்பற்றவேண்டும் .பூமியின் மையத்தில் கொதிக்கின்ற நெருப்பை போல் ,இயற்கையான நம்மிடத்தில் சிறிதளவேனும் கொதிக்கவேண்டும் .
இப்படி எந்த இடத்தில அய்யா தெரிந்து கொண்டீர்கள்.
புரட்சி செய் !
சார் எங்க வேலை பாக்குறாரு? டெய்லி தீனிக்கு என்ன செயுராறு.?
தோழர் anonymous , நானும் ஒரு கூலிக்கு வேலை செய்பவன் தான் கொஞ்சம்
படிச்ச கூலி ஆள் . தினமும் நூறு தடவ வணக்கம் அல்லது sir போட்டாதான் நாள ஓட்டமுடியும். தீனி என்னமோ இதுலதான் கிடைக்குது .இப்படிஎல்லாம் வாழ்வதற்கு சாகலாம் … புரட்சி ஒன்றே இதற்கெல்லாம் தீர்வு …
உங்க முதாலலிய பாத்து எனைகாவது கேட்டு புரட்சி பண்ணி இருக்கீங்களா கூலி
நான் தான் decide செயுவேன்னு?
நான் கேரளா சென்று பணி ஆற்றி இருக்கிறேன்… ஒரு தமிழன் என்பதற்காக என்னை யாரும் இழிவாக நடத்தவில்லை, ,,… உதவி செய்துள்ளார்கள் என்பதை நன்றியுடன் இங்கு பதிவு செய்கிறேன்….
அதியமான் அவர்களுக்கு ……கூலியை உழைப்பவர் தான் நிர்ணயம் செய்ய வேண்டும் ;அல்லது அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட,அவருக்கான அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். .பெரும்பான்மை மக்களால் தீர்மானிக்கப்படுவதே ஜனநாயகம் .பெரும்பான்மை உழைக்கும் மக்களால் உருவாக்கப்படுவதே புதிய ஜனநாயகம்! கம்யுனிசம் மட்டுமே இந்த தீர்வை முன் வைக்கிறது .உழைக்கும் மக்கள் கையில் அதிகாரம் என்பதை உலகில் வேறு எந்த இசமும் முன் வைக்கவில்லை .வைக்கமுடியாது. ஏன் என்றால் அவர்கள் எல்லாம் போகாத ஊருக்கு வலி சொல்லுபவர்கள் .அதிகார மாற்றம் எப்போதுமே சாத்வீகமாக நடந்தது கிடையாது .சாத்வீகம் வேலைக்காகாது .நீங்கள் சொல்வது கதை .பொது உடமை தத்துவம் உண்மை!நேர்மையாக சிந்திக்க வேண்டும்.
ஏங்க . ரஷ்யாவைப் பார்த்தும் சீனாவைப் பார்த்தும் கூடவா திருந்த மாட்டீர்கள் ? பேசிப் பேசியே இப்படிப் பேசியே……
அதியமான், விக்கிபீடியாவில் நேரத்தை வீண்டிக்கவேண்டாம்…
உங்கள் சுட்டி நம்பர் 1
http://en.wikipedia.org/wiki/Forced_labor_in_the_Soviet_Union
@@@This article does not cite any references or sources.@@@
சுட்டி நம்பர் 2
http://en.wikipedia.org/wiki/Forced_labour_camps_in_Communist_Bulgaria
In 1990, the Bulgarian Communist Party set up an inquiry commission into the camps. It found that between 1944 and 1962 there were approximately 100 forced labour camps in a country of 8 million inhabitants. Between 1944 and 1953, some 12,000 men and women passed through these camps, with an additional 5,000 between 1956 and 1962. According to one witness, Belene alone held 7,000 in 1952. Another estimates a total of 186,000 prisoners during this period. Definitive figures remain elusive.
இது அப்படியே உண்மை என்று எடுத்துக்கொண்டாலும் 80 லட்சம் பேர் வசிக்கும் நாட்டில் 17000 பேர் கடும் உழைப்புச் சிறைகளில் வேலை செய்தார்கள்.. உங்கள் முதலாளித்துவ sweatshop களில் வாடும் தொழிலாளர்கள் புள்ளிவிவரங்களை ஒப்பிடும் போது இது ஒரு கொசு…
முதலில் உங்கள் சுட்டிகளை நீங்கள் நிதானமாக படியுங்கள்,
கேள்விக்குறி,
உம்மை அந்த forced labour campsஇல், 17,000 பேர்களில் ஒருவராக அடைந்த்திருந்தால் உலகம் வேறு மாதிரி தெரியும். நான் கேரளா பற்றி, கொரியா, ஜெர்மனி பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும். முக்கியமாக, கேரளா தொழிலாளர்களை போல வேலை செய்யாமல் கூல் கேட்பவர்களை உங்கள் ‘புரட்சி’ அரசில் எப்படி நடத்துவீர்கள் ? இவைகளையும் ’நிதானமாக’ பார்க்கவும் :
http://gulaghistory.org/nps/onlineexhibit/stalin/work.php
http://gulaghistory.org/nps/onlineexhibit/stalin/crimes.php
http://econfaculty.gmu.edu/bcaplan/museum/comfaq.htm#part7
பல புகைபடங்களும் உள்ளன. இவை அனைத்தும் அவதூற்கள் என்று சொல்வீர்கள். ஆனால் அந்நாட்டு மக்கள் அப்படி மூடத்தனமாக கருதுவதில்லை. எனென்றால் அனுபவதிதவர்கள் அவர்கள் தாம். நாமல்ல. முகாம்களின் அடைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டவர்கள் செய்த குற்றங்கள் தாம் என்ன என்றும் அதில் விவரங்கள் உள்ளன.
இவற்றை நியாயப்படுத்தும் உம்மை போன்றவர்கள், இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களை பற்றி மட்டும் ‘அறச்சீற்றம்’ கொள்வது இரட்டை வேடம். நேர்மையில்லா செயல்.
///// உங்கள் முதலாளித்துவ sweatshop களில் வாடும் தொழிலாளர்கள் புள்ளிவிவரங்களை ஒப்பிடும் போது இது ஒரு கொசு…/// Sweat Shops are NOT forced labour or prison camps where there is no chance for escape or protest. Get that first. When a nation prospers, sweat shops vanish automatically. What Marx and Engels saw in Europe 150 years ago, no longer exists in those areas. Why and how ?
கம்யூனிசத்தால் சாமானிய மக்களுக்கு நன்மை விளையும், ஆனால் தமக்கு தீமைவிளையும் என்று எல்லா முதலாளிகளுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்கம்யூனிசம் வருவதை தடுக்க அவர்கள் எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்
சைபீரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள், என்னதான் பயங்கரமான வர்க்க எதிரியாக இருந்தாலும், அவர்கள் வேலை செய்த போது வேதனம் வழங்கப்பட்டது. பிற்காலத்தில் சுரங்க தொழிலில் அதிக ஊதியம் கிடைப்பது கேள்விப்பட்டு, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சாதாரண தொழிலாளர் கூட, சைபீரியா சென்று குடியேறினர்.
Crazy. prove this first. and who were those ‘workers’ who voluntarily migrated to Siberia ? even nut cases did not try that, as far as i know. and read those last uRL links about gulags and their conditions and the ‘crimes’ of ‘political’ prisioners…
நீங்கள் (முதலாளிகள்) அந்நாட்டின் எந்த வர்க்க மக்களிடம் கருத்து கேட்டீர்கள்?
கார்ல் மார்க்சின் கூற்றுப்படி, சர்வாதிகாரம் எங்கும் எதிலும் உள்ளது.ஆனால் அந்த சர்வாதிகாரம் எந்த வர்க்கத்தின் நலன் சார்ந்தது என்பதே முக்கியம்.முதலாளித்துவ சர்வாதிகாரத்தை விட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை சிறந்ததாக தெரிவுசெய்தார். “பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்களின் கைகளில் அதிகாரம் வருவதே உண்மையான ஜனநாயகம்” (அரசும் புரட்சியும் நூலில்) -லெனின்.
அய்யா அதியமான், எனக்கு வாதிட அவ்வளவாக தெரியாது ஏனென்றால் உதாரணம் சொல்ல நான் அதிகமாக படித்ததில்லை.. எனக்கு தெரிந்த உதாரணம் தாய் பெற்றதால் மகன் பிறந்தான் .. இங்கு உழைத்தது தாய் .. யார் சொல் சரியாக இருக்கும்.. உழைத்தவனுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும் .. எனவே அவளே எல்லாவற்றையும் தீர்மானம் செய்கிறாள் தன பிள்ளைக்கு … நாற்பது வருடங்கள் தாய் மாறுவதில்லை .. உழைப்பாளியும் மாறியதில்லை.. உழைக்க இடமிள்ளததல் அவன் உழைப்பாளி இல்லை என்று ஆகி விடாது தாய் அந்த வருடம் பெற்றெடுக்க வில்லை என்றாலும் அவன் மகன் மாறிவிடுவதில்லை போல.. வேலை கொடு செய்கிறேன் .. வேலை இல்லை ன்றால் சம்பளம் கொடு.. வேலை கொடுக்காதது உன் தவறு .. சமுகத்தின் தவறு.. நங்கள் உழைக்கவே இருக்கிறோம் ஈநேன்றல் என்னிடம் வயலில்லை சாப்பிட ..
Vinavu, Kelvikuri, and other arailoosus,
why are you wasting time with this blogs and PJ, etc…Why dont you start your real program of killing the people?? Where are all your guns?? When are we going to see your real revolution???
Dear proud capitalist
Revolution is a celebration to whom to be suffered by your colleaques. You do in the name of law and justice which is survey for you. That biased things procecute by police and military for your peoples. But you didnt sae and see the guns there. But one day seens to be changed. It should. But you will raise your voice for the old one. Based on reality on that days your bitter wines cant survey with new vessels.
என்ன இருந்தாலும், முதலாளி உழைக்காமல் கோடிகளில் துட்டு சேர்ப்பதை சட்டப்பூர்வமாகவே செய்கிறான் என்பதை கட்டாயம் இங்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.அசுரன்100%
அன்பு செல்வன் ,ரஷியாவைபார்த்தும் சீனாவைபார்த்தும் யார் திருந்த வேண்டும் ? இந்த நாடுகள் ஏன் இப்படி மாறின ?எங்கே போய் சேர்ந்துள்ளன?வேறு ஒரு புதிய உலகையா படைத்துள்ளன?நன்னீர் பாயும் சிற்றோடையில் சாக்கடை கலந்ததுதான் காரணம் .உலகை சாக்கடையாக மாற்ற தீவிர முயற்சியில் இருப்பது முதலாளிகளே .நீங்கள் அவர்களது பங்காளிகளாக ஒட்டிக்கொள்ள ஓடினாலும் உங்களிடம் பணம் இல்லைஎன்றால் அவர்களுக்கு நீங்களும் ஓர் கழிப்பறை காகிதமே ,ஜாக்கிரதை!
கம்யுனிசம் வர்க்கப் புரட்சி எல்லாம் பொய்.. மாயை என்பதை ரஷ்யாவும் சீனாவும் உணர்த்திய பின்னும் திருந்த மாட்டீர்கள் என்றால் யார் என்ன செய்ய முடியும் …
http://dondu.blogspot.com/2010/03/blog-post_17.html
டோண்டு போன்ற சாதிவெறியர்களை எல்லாம் அடையாளப்படுத்தி எழுத வேண்டியதில்லை. தமிழ் பதிவுலகில் அவருடைய பார்ப்பனீய வெறியும், கம்யூனிச எதிர்ப்பும் போதிய அளவுக்கு நம்முடைய தோழர்களால் ஏற்கெனவே அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவரையும் அவருடைய பதிவுகளையும் அவரை ஒத்த சாதிவெறியர்களைத் தவிர வேறு யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்ல இந்நிலையில் அவரை முதன்மைப்படுத்தி எழுதி அவருக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று கருதுகிறேன். இப்போது பாருங்கள் அவர் ஒரு பதிவு போட்டுவிட்டார். இது போன்ற நபர்களின் தரத்திற்கு வினவு இறங்க வேண்டாம் அது வினவின் தரத்தை தான் குறைக்கும்.
அதியமானுக்கு ஒரு பதில் பதிவு எழுதி அவரை அம்பலப்படுத்தும் முயற்சியை நாம் கனவில் கூட செய்யமுடியாதல்லவா ?
இது ஏற்கனவே தரம் தாழ்ந்த தளம் தான். பொழுது போக்குகாகதான் பலபேர் படிகின்றார்கள் பின்னூட்டம் போடுகிறார்கள். அடுத்தவன் மலத்தில் எதனை புழுக்கள் நெளிகின்றன என்று கணக்கு எடுப்பது தான் இந்த தளத்தின் வேலை. நீங்கள் ஒன்றும் வருத்தப்பட வேண்டாம்.
அடி மூதேவி..
அப்படின்னா இன்னா மயித்துக்கு நீ மட்டும் இங்க வற்ற ?
மூக்க மூடிட்டு போவேண்டியது தானே.
ங்கொய்யால… போட்டேன்னா பாரு
ஜஸ்ட் டைம் பஸ்சுக்காக இங்க வரேன் சீதேவி சார்.
இனிமே இங்க சும்மா டைம்பாசுக்கா வராத கண்ணு (கண்னுக்கு ரெண்டு சுழி ன்னா மூனு சுழி ன்னான்னு தெரியல) அதியமான் அண்ணாச்சி அடிக்கடி சொல்லுவாரில்ல தகவல் தொழில்நுட்பம் வளர்ந்ததால தான் நீங்கள்லாம் நெட்டுல இப்படி எழுதுறீங்கன்னு அந்த எழவெடுத்த சனியன் தொழில்நுட்பத்தால தான் இப்படி எல்லாம் மறந்து போகுது. ( ஒன்னால பாரு அதியமானை பத்தி பேசி என்னோட டைம் எப்படி வேஸ்டாகுதுன்னு )
சரி மோட்டோ இனிமே டைம் பாஸ் பன்ன இங்க வராதா அந்த நேரத்தில டைம் பாஸ் ஆகலைன்னா கழுத்தை திருப்பிக்கிட்டு மோட்டு வளையை பார்த்துக்கிட்டு இரு டைம் நல்லா பாஸாகும், அதுமட்டுமில்லாம கூடுதல் பலன்களும் கிடைக்கும். வாழ்த்துக்கள்.
தங்கள் அறிவுரைக்கு ரொம்ப நன்றி.
அசுரன்,
இன்ஃபோசிஸ் பற்றிய விவாதத்தில் கடைசியாக நான் எழுப்பிய விசியங்களை, தரவுகளை மீண்டும் முழுசா படித்து, பிறகு முழங்கவும். Balance of payments crisis பற்றியும், அதை தீர்க்க இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்களின் பங்களிப்பையும், இதுவரை அந்நிறுவனம் கட்டிய வரிகள் பற்றியும் பல முறை விளக்கியும், சும்மா வெற்று வார்த்தைகள் தாம் உம்மிடம். அவர்களை போல உருப்படியாக ஏதாவாது செய்ய வக்கிலாத இணைய புலியான நீர், நேருவையும், கலாமையும் மாமா என்று தூற்றுவது மட்டும்தான் இதுவரை செய்ய முடிந்தது. நேரு, கலாம் அவர்களோடு முரண்படலாம். அவர்களின் செயல்களை விமர்சிக்கலாம். ஆனால் அதற்க்கும் ஒரு முறை உள்ளது. நிஜ வாழ்க்கையில், நேரில் இது போன்ற கீழ்தரமான சொல்லாடல்களை பயன்படுத தைரியாம் இல்லாத கோழைகள் தாம் இணையத்தில் மட்டும் ஏசுபவர்கள். Tenth rate perverts who cannot and do not contribute anything really useful to the society or themselves.
இரண்டாம் உலகபோரின் பின், சோவியத் யூனியனும் எழுந்ததுதான். ஆனால் அதை அவர்களால் ஏன் தக்கவைக்க முடியவில்லை ? 60களில் கனடாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யும் நிலை. மேலும் பல கோடி மக்கள் பல பத்தாண்டுகளாக வதை முகாம்களில் அடைக்கபட்ட கடும் சித்தரவதை செய்யப்பட்ட கொடிய வரலாறு. ///// சோசலிசமாவது குறுகிய காலம் நிலவி மக்களின் வாழ்வில் வசந்தத்தை உருவாக்கியது ////// tell that to the Ukranians who joined the Nazi invaders in 1942. Why do you think then people tried to escape from USSR right from 1917 ? Why should all kinds of people try to escape from a ‘paradise’ ? ஆங்கிலம் அறியாத அம்மக்கள், 1991வரை மூடப்பட்ட நாடுகளில் வாழ்ந்திருக்கும் போது, அமெரிக்க மற்றும் இதர முதலாளித்துவ ஊடக ’பொய்’ பிரச்சாரங்களால், ஸ்டாலின் மற்றும் மாவோ பற்றி ‘அவதூறுகளை’ நம்பினர் என்று சொல்வது பைத்தியக்கராத்தனம். கொடுமைகளை அனுபவித்த மக்களுக்கு தெரியாத உண்மைகள் வேறு யாருக்கு தெரியப்போகிறது.
Facts speak for themselves about the German miracle after 1945 and about the South and North Koreas and about the economic history of W.Europe. and about Bostwana and other African nations. Anyone is free to refute them.
அதியமான் அவர்களுக்கு ,மூலதனம் சுரண்டல் அடிப்படையினால் ஆனது. .இது மார்க்சிசம் மட்டும் அல்ல; யதார்த்தமும் அதுதான்,
உண்மையும் அது தான் .உற்பத்தியில் இருந்து தான் வர்க்கங்கள் தோன்றுகின்றன. வர்க்கங்கள் என்ற சொல்லாடலை ஒருவர் விரும்பவில்லை என்றாலும் உற்பத்தி தான் மனித சமூகத்தின் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிப்படை. கடவுள், தலைவிதி இவற்றை நம்புகிறவர்கள் தவிர நேர்மையானவர்கள் யாரும் இதை ஒப்புக்கொள்வார்கள் .இந்த அடிப்படையை ஏற்றுக்கொள்பவர்களேபெரும்பான்மை மனித குலத்துக்கு சேவைசெய்ய முடியும் என்று செயல்படுபவர்கள் ஒரு புறம் இதனை பல்வேறு காரணங்களால் மறுப்பவர்கள் மறுபுறம். நீங்கள் எந்தப் புறம்?
நண்பர் மலையப்பன்,
உபரி மதிப்பை தான் முதலாளிகள் ‘சுரண்டி’ லாபாமாக எடுத்து, பின் மூலதனமாக உருவாக்குகின்றனர் என்கிறது மார்க்சிசம். முதலில் உபரி மதிப்பு என்று ஒன்றும் இல்லை என்பதே அடிப்படை. அதை பற்றிய எம் பதிவு :
http://nellikkani.blogspot.com/2009/11/blog-post.html ‘உபரி மதிப்பு என்னும் மாயயை’
An old joke : “In capitalism man exploits man, in communism it is the opposite”
யோவ் உனக்கு வேற வேலையே இல்லையா
லூசு மாதிரி உளறிட்டே இருக்க
காரல் மார்க்ஸ்,
லூஸு யாரு, யார் உளருகிறார்கள், யார் நிஜ பெயர், புகைபடத்துடன் எழுத தைரியம் இல்லாத கோழை கபோதி என்பதை வாசகர்கள் அறிவார்கள். கார்ல் மார்க்ஸ் பெயருக்கு, உம்மை போன்ற இழிபிறவிகளால் இங்கு இழுக்கு. வேறு ஏதாவது பெயர் வைத்துக்கொள். மேலும் ஏதாவது பேச வேண்டுமானால் நேரில் வைத்துக்கலாமே.
முதலில் நான் எழுதிய கருத்துக்களை ஆதாரபூர்வமாக மறுக்க முயலவும். சும்மா one liner abuses தான் உன்னை போன்ற வெத்து வேட்டுகளால் முடியும்.
//லூஸு யாரு, யார் உளருகிறார்கள், யார் நிஜ பெயர், புகைபடத்துடன் எழுத தைரியம் இல்லாத கோழை கபோதி என்பதை வாசகர்கள் அறிவார்கள். //
//
உபரி மாயை என்பதற்கு என்னைய்யா ஆதாரம் கொடுத்து
இருக்கிற
சும்மா இடம் கிடைச்ச இடத்தில் எல்லாம் ஆதாரமில்லாம
உளரிட்டு இருக்கிற
எம் பதிவில் ’ஆதாரங்கள்’ உள்ளன. பின்னூட்டங்களில் மேலும் விவாதங்கள் உள்ளன. முழுசா படித்து, அங்கு வந்து ’ஆதாரத்துடன்’ மறுக்கவும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. ஆனால்…
மிக எளிமையான ஆதாரம் இது : மார்க்ஸ் கட்டி அமைத்த சித்தாந்தத்தின் அடிப்படை உபரி மதிப்பு. அது உண்மையென்றால், அச்சித்தாந்தப்படி, இன்னேறம் முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முற்றாக அழிந்திருக்க வேண்டும். மீளவே முடியாது இறுதி அழிவு பற்றி அவர் சொல்கிறார். மேலும், நிகர உபரி மதிப்பு காலம் செல்லச் செல்ல குறைந்து கொண்டே போய், தொழிலாளர்களின் வாழ்க்கை தரமும் அதற்கேற்ப தேய்ந்து கொண்டே போய், பொருளாதார மந்தங்கள், ஒன்றைவிட அடுத்தது மோசமாகவே உருவாகி, இறுதியில் பேரழிவு. ஆனால் கடந்த 150 ஆண்டுகளாக இதற்க்கு நேர் மாறாகதான் நடந்தது. முக்கியமாக தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் 150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. முக்கியமாக, மார்க்ஸ் கண்ட மே.அய்ரோப்பிய தொழிலாளர்களின் நிலை. பொருளாதார மந்தங்களின் அளவு மற்றும் வீச்சி அவர் கணித்தபடி படிப்படியாக மோசமாகவில்லை. இறுதி அழிவு வருவதாகவும் தெரியவில்லை. அவரின் அடிப்படையான உபரி மதிப்பு பொய்யானது என்பதற்க்கு இதைவிட பெரிய ஆதாரம் எதுவுமில்லை. மேலும் பல விசியங்கள் பதிவில் உள்ளன. இதுவரை இவை பற்றி உருப்படியாக, தர்க்க ரீதியாக, ஆதாரத்துடன் வாதிட முயற்சி கூட செய்யாமல், வெறும் தனிமனித தாக்குதல் மட்டும் தான் செய்திருக்கிறாய். உனக்கு பதில் சொல்ல முயல்வதுதான் எம் தவறு..
தோழர் சிந்தன் இங்கே தெளிவாக மூலதனத்தை பற்றி
எழுதி வருகிறார் இதை படிக்கவும்
http://www.sindhan.info/2010/03/blog-post_5722.html
உலகம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்… அது இன்று பல்லாயிரம் அமெரிக்கர்கள் உள்ளிட்ட உலக மக்களின் வேலை வாய்ப்பைக் காலி செய்திருக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையைச் சிதைத்திருக்கிறது.
இப்படிச் சொல்வதால் இதற்கு முந்தைய காலகட்டத்தில் உலகம் சொர்கபுரியாக இருந்தது என்பதில்லை. கடந்த காலங்களில் பேராசையால் உலகைப் பீடித்த உலகமயச் சூறாவளி, தினமும் பல்லாயிரக் கணக்கான எளிய மக்களின் வாழ்க்கையை சிதைத்தே வந்தது. அதுபோலவே இந்தியாவிலும் வாழ்க்கை மிகப் பிரகாசமாக அமைந்திருப்பதாகச் சொல்ல முடியாது. ஏழைகள் சாவை நோக்கி அனுதினமும் தள்ளப்படுகிறார்கள்.
இதனை உணர, நாம் எங்கேயோ இருந்து உதாரணம் தேடத் தேவையில்லை. உலகமயம் தீவிரமடைந்ததற்கு பின்னர், நம் இந்தியாவில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள், இதனை அரசின் புள்ளிவிபரங்களே காட்டுகின்றன.
எந்த ஒரு சூழலிலும், முதலாளியச் சமூகம், லாபம் … அதிக லாபம்… என்பதை நோக்கியே செல்கிறது. பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையே தொலையும்போதும் கூட அதற்கு லாபம் குவிப்பதில் தான் ஈடுபாடு.
“புவி வெப்பமடைதல்” பிரச்சனை தலைமேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது. என்றபோதிலும், எந்த முன்னேறிய நாடும் அதுகுறித்து அக்கறை காட்டவில்லை. காரணம்? இப்போதைக்கு அவர்கள் பத்திரமாக வாழ்கிறார்கள்.
இவையெல்லாம் பார்க்கும் மக்களுக்கு… பேராசையும் சுயநலமும் தவிர்த்த சமூக அமைப்பு சாத்தியமே இல்லையா என்ற கேள்வி எழுவது இயல்புதான்..
சோசலிச மாற்று:
இந்த சூழலில்தான், சோசலிச நாடான சீனாவின் செயல்பாடுகள் அங்கு வியத்தகு வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உலகின் பெரும் பணக்காரர்களில் அங்கே ஒருத்தர் தான் வாழ்கிறார். ஆனால் மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. அதேசமயம் முதல் பத்து இடங்களுக்குள் 2 பணக்காரர்களையும், 40 க்கும் மேற்பட்ட பன்னாட்டு முதலாளிகளையும் தன்னிடம் கொண்டு இந்தியா பணக்காரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. மக்கள் நலவாழ்வைப் பொருத்தமடில் அதல பாதாளத்தில் வீழ்ந்துகொண்டிருக்கிறது. நல்ல வாழ்க்கையை அளிப்பதில் சோசலிச நாடுகள் முன்னணியில் நிற்கின்றன. கியூபா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் நலம் சார்ந்த செயல்பாடுகள் அனைவரையும் சிந்திக்க வைக்கின்றன.
கம்யூனிச பூதம்:
19 ஆம் நூற்றாண்டி முதல் பாதியில், ஆளும் சக்திகளை ஒரு பூதம் ஆட்டி வைத்தது. அது குறித்த கனவு கூட அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. “கம்யூனிசம்” எனும் அந்தப் பூதம் இப்போது மீண்டும் உயிர்த்தெழத் துவங்கியுள்ளது. பலநாடுகளில் உருவாகியுள்ள தொழிலாளி வர்கம் வீருகொண்டு எழும், அநீதிகளுக்கு எதிராக தன் போரினை மீண்டும் துவக்கும் என்றே தோன்றுகிறது. இந்த நேரத்தில் தொழிலாளி வர்கத்தின் வேதப் புத்தகமாக அறியப்படும் ”கார்ல் மார்க்ஸ் -ன் மூலதனம்” அறிவித்ததெல்லாம் உண்மை தானோ என்று சகலரும் யோசிக்கத்துவங்கியுள்ளனர்.
அதில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறது?
1859 இல் கார்ல்மார்க்ஸ் ஒரு புத்தகம் எழுதினார், அதன் பெயர் ”அரசிய பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு”, அந்த நூலின் தொடர்ச்சியாக அவரே எழுதிய ”மூலதனம்” புத்தகம் 1867 இல் வெளியானது. இரண்டு புத்தகங்களுக்கும் இடையிலான கால இடைவெளி அதிகமாக இருப்பதால் முதல் புத்தகத்தின் சுருக்கத்தையும் இணைத்தே மூலதனத்தை மார்க்ஸ் எழுதிவிட்டார். அதன் முதல் பாகத்தில், இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் பொருளுற்பத்தி முறையின் மீதான பகுப்பாய்வும், இரண்டாம் பாகத்தில் மூலதனத்தின் சுற்றோட்ட நிகழ்முறையையும், வளர்ச்சிப் போக்கில் அது மேற்கொள்ளும் பலதரப்பட்ட வடிவங்களும், கடைசி பாகத்தில் தத்துவத்தின் வரலாற்று வளர்ச்சி குறித்த ஆய்வும் அடங்கியுள்ளது.
இன்றைய சமூகத்தை ஒவ்வொரு அங்குலமாக ஆராயும் மார்க்ஸ், அது குறித்த தீர்க்கமான பார்வையை நமக்குள் விதைக்கிறார். இருக்கும் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கு குறித்து தெரியும்போதுதான், அதனை மாற்றும் வழிமுறையும், மாற்றத்திற்கான தேவையும் புரிபடுகிறது.
இந்த முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சிப்போக்கு எவ்வாறு வெளிப்படும்? , மனித சமூகத்தின் முன்புள்ள ஒரே வாய்ப்பு முதலாளித்துவம் தானா?, வலுத்தவன் வாழ்வான் என்பதே நியதியா?, இது எப்போது மாறூம்?. மாறி வரும் புதிய சமூக அமைப்பும் மாற்றத்திற்கு உட்படுமா? .. என பல்வேறு கேள்விகளுக்கும் விடை கிட்டும் என்ற நம்பிக்கையிலேயே இந்தப் புத்தகத்தின் வாசிப்பு துவங்குகிறது.
அதன் முன்னுரையில் மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போல, தொடக்கம் என்பது எப்போது கடினமானதுதான், எந்த வகையான விஞ்னான ஆராய்ச்சிக்கும் இது பொருந்தும்.
உடலை மேலோட்டமாகப் பார்ப்பது எளிது, ஆனால் அதனை புரிந்து கொள்ள முயலும் போது ஒவ்வொரு செல்லாக நுண்ணோக்கியில் வைத்தல்லவா தெரிந்துகொள்ள முடியும்?.
பொருளாதாரத்திர்கென எந்த நுண்ணோக்கியும் இல்லை, இதன் உட்பொருள்கள் வேறுமாதிரியானவை. எனவே, கார்ல்மார்க்ஸ் தனது நுண்ணோக்கியாக தர்க்கங்களைப் பயன்படுத்துகிறார்.
விற்பனை பண்டம் (சரக்கு) என்பதுதான் இந்த உலகை ஆட்டிப்படைக்கும் முதலாளித்துவத்தின் அடிப்படை அலகு என்பதால், சரக்கு என்பது என்ன?. என்ற கேள்வியிலிருந்தே இந்தப் புத்தகம் துவங்குகிறது.
துவக்கமே பொருளாதார ஆய்வாக இருப்பதால், படிக்கத் துவங்கும்போது கொஞ்சம் பிரம்மிப்பு ஏற்படுவதை தவிற்கமுடியவில்லை. இது அறிவு ஜீவிகள் மட்டுமே வாசிக்கத்தகுந்த புத்தகமோ என்றும் தோன்றுகிறது. ஆனால், மிக எளிதான ஆய்வு முறை அந்த பிரம்மிப்பை வெகு சீக்கிரமே போக்கிவிடுகிறது.
மொழிபெயர்ப்புப் புத்தகங்களுக்கேயான கடினத் தன்மையும், மொழியாக்கம் செய்த ஆசிரியர், மார்க்ஸ் இன் வார்த்தைகளை சிதைத்துவிடக் கூடாதே என்பதில் காட்டியுள்ள அக்கரையும் சாதாரண வாசகர்களுக்கு வாசிப்பின் தடங்கல்களாக அமைந்துவிடுகின்றன. ஆனால் இவற்றைக் குறைகளாகப் பார்க்கத் தேவையில்லை.
மலை உச்சியை அடைய முயல்பவர்கள், கரடு முரடான பாறையைக் கடந்துதான் ஆகவேண்டும். மனித சமூகத்திற்கான விடியலை நோக்கிய பயணமும் அப்படியானதுதான்.
Jeyamohan and Dondu have some biases and pre-conceived views.Jeyamohan forgets that once he was living like a nomad and it is the ordinary persons who gave him food and place to stay.In Kerala labour unions create problems and some practices are not correct. But there labourers cannot be cheated and minimum wages has to be paid.That is why many tamilians go there for doing all sorts of works- road construction,mason,digging well,hotel server, shop supervisor.In Tamil Nadu they wont get such wages for 8 hours of work. In Kerala they wont work for more than 8 hours unless overtime is paid.So there are pluses and minuses in Kerala. Dondu and Jeyamohan do not like communists.They dont like trade unions deciding issues. That is why they write so.Jeyamohan is an employee of BSNL and thanks to union his job is secure.He is able to take long leave, do what he wants in spare time and there is no exploitation of his labour.He wont even get 50% of what he gets for the same job in private sector. He knows all this.Still to prove that he is an intellectual he writes like that and some of his fans like that. Thanks to unions his job and job of his wife have been protected. Had BSNL been privatised he would have been kicked out. Had Post Office been privatized job of his wife wont be secure.Now he earns in lakhs, flys off to many countries and has joined the club of rich and elite.So to prove that he writes so.This like kicking the ladder after reaching the top. He longer needs trade unions, the ladders that helped him and the sheilds that protected him.Ingrateful fellows often write with arrogance.He is also like that.
முதலாளித்துவத்தின் முற்றுமுணர்ந்த அதியமான் அவர்களுக்கு எளியோன் மணியின் சில ஐயங்கள் உள்ளன•. சரிங்க•. மார்க்ஸ் சொன்ன உபரிமதிப்பு மாத்திரம் என்று வைத்துக் கொள்வோம். அதனால் பிரச்சினை ஆகி விடவில்லை என்று சொன்னீர்கள். ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் பொருளாதார வீழ்ச்சி என்ற பெயரில் நடக்கும் வேலையிழப்பு, திவால்களில் ஏமாற்றப்டும் மனிதர்கள் ஏன் இதில் வாழ தகுதியற்றவர்கள் ஆனார்கள் என கூற முடியுமா..
வாழ்க்கைத்தரத்தை எதன் அடிப்படையில் அளக்கிறீர்கள். இந்தியா போன்ற நாடுகளில் 80 சதவீதமாக இருக்கும் விவசாயிகள் நிலைமையில் இருந்து அலசி பேச முடியுமா.. அவர்களது தற்கொலைக்கு முதலாளித்துவம் காரணமில்லை என எதாவது லிங்க கொடுப்பதற்கு முன்னால் இந்த தளத்தில் அதனை மறுத்து வாதிடுங்கள் ஐயா..
அதியமானுக்கு கேள்விகள்
கொஞ்சமாவது [obscured] இருந்தால் பதில் சொல்லவும்
மார்க்ஸ் கேட்ட அதே கேள்விகள் தாம்
௧.சமமதிப்புள்ள பண்டங்கள் எப்படி பரிவர்த்தனை செய்யப்படும்
அப்படி பரிவர்த்தனை செய்யப்பட்டால் உலகத்தில் செல்வம் தொடர்ந்து எப்படி வளரும் அதாவது உங்கள் மூலதனம் எப்படி வளர்ந்து இருக்கும்
பண்டத்தின் மதிப்பை எதை வைத்து வரையறை செய்கிறீர்கள்
மேலும் கேள்விகள் வரும்
[obscured] இருந்தால் இங்கே பதில் சொல்லவும்
இல்லாவிட்டால் [obscured]
கார்ல் மார்க்ஸ்,
சொந்தமாக பதில் சொல்ல சரக்கில்லை போல. அது இருக்கட்டும், தோழர் சிந்தன் ’போலி’ கம்யூனிஸ்டுகளின் குழுவில் உள்ளவர் ஆச்சே !!! :)) தேவை பட்டல் எங்கும் கடன் வாங்கிக்குவீக போல !! இதுல ரோசம் பற்றி வேறு முழக்கம் !!! :)))
முதலில், நான் கேட்ட மிக அடிப்படை கேள்விக்கு விடை சொல்ல முயலவும். பிறகு உமது பதில் கேள்விகளை பார்க்கலாம். அதாவது டாஸ் கேப்பிடல் சொல்லும் பேரழிவு. உள் முரண்பாடுகளால், தானாகவே முதலாளித்துவம் அழியும் பற்றி ; பொருளாதார மந்தங்கள் படிப்படியாக மோசமாக உருவெடுக்கும் என்பதை பற்றி ; தொழிலாளர்கள் நிலை படிப்படியாக படு மோசமாக ஆகும் என்பதை பற்றி. இந்த மூன்று அடிப்படை ஆருடங்கள் பலிக்கவில்லை இதுவரை. பொருளாதார மந்தங்கள் மார்க்ஸ் சொன்னபடி ஒன்றை விட அடுத்தது மோசமாகவில்லை. Proportionally worser business cycles. And standard of living of workers have IMPROVED considerable when compared to 150 years ago, of Marx’s time.
இதுவரை இந்த மூன்று அடிப்படை விசியங்கள் பற்றி யாரும் விவாதிக்க முயலவில்லை.
தோழர் மணி, உங்க கேள்விகளுக்கும் இதில் விடை உள்ளது.
முதலாளித்துவம் அதன் உள்முரண்பாடுகளால் தானே அழியும் என மார்க்ஸ் சொன்னது உண்மைதான் ஆனால் அந்த வேலையை நாம் தான் துரித படுத்த வேண்டும் என்றார்
தானா அழியும்னு நினைச்சா எதுக்கு கட்சி கிட்சி எல்லாம்
அடிப்படை விசயமே புரியாத கோமாளியா இருக்கீறே
http://blog.mises.org/8476/the-well-read-marxist/
http://stumblingandmumbling.typepad.com/stumbling_and_mumbling/2007/07/marx-wrong-and-.html
http://mises.org/daily/3323
Try these too :
http://blog.mises.org/8476/the-well-read-marxist/ http://stumblingandmumbling.typepad.com/stumbling_and_mumbling/2007/07/marx-wrong-and-.html
யோவ் முதல் வந்து உபரி மாயைன்ன
சரி எப்படின்னு விவரின்னா அங்க இருக்கு இங்க இருக்கு விவாதம் கிற
அடுத்து ஏன் மார்க்ஸ் சொன்னமாதிரி அழியல முதலாளித்துவம்
அப்படிங்கிற
உபரி மாயை எப்படி என விளக்கு விளக்குன்னு விளக்கு முதலில்
உபரி என்பதுதான் மார்க்ஸின் ஆகபெரிய பங்களிப்பே
இதை மாயை என்பதன் மூலம் மார்சியமே பொய் என சொல்ல துடிக்கும்
இந்த அதியமான்
மாயை எப்படின்னு ஒன்னும் சொல்லவில்லை
டேய் [obscured],
எனது இந்த பதிவில் மிக விரிவாக எழுதியிருக்கிறேன் என்று முன்பே சுட்டி அளித்திருந்தேன் : http://nellikkani.blogspot.com/2009/11/blog-post.html ‘உபரி மதிப்பு என்னும் மாயயை’ ; அந்த பதிவில் வந்து விவாதிக்க துப்பில்லாமல், தொடர்ந்து தனிமனித தாக்குதல் செய்தால் இப்படி தான் திருப்பி பேசுவேன்.
Give respect and take respect. Ok.
வினவு : இது போன்ற [obscured] ‘புரியும்’ மொழியில் தான் பேச வேண்டிய கட்டாயம் இங்கு அடிக்கடி ஏற்படுகிறது.
கலை,
விவாதிக்க வேண்டும் என்று சீரியசாக இருப்பவர்கள், இந்த கார்ல் மார்க்ஸ் போல ஏச மாட்டார்கள். எங்கு வேண்டுமானாலும் ஒழுங்கா விவாதிக்க தயாராக இருப்பார்கள். எனது பதிவு விரிவானது. பின்னூட்டங்களில் ஏற்கெனவே விரிவான விவாதங்கள் உள்ளன். அதன் தொடர்ச்சியாக மேலும் விவாதித்திருக்கலாம். அதனால் தான் சுட்டி அளித்தேன். இந்த பதிவிற்க்கு நேரடியான சம்பந்தம் இல்லாத விசியம் அது என்ற காரணத்தாலும்.
அதியமான் எனக்கு தெரிந்து சுட்டிகளை மட்டும்தான் கொடுப்பார். அதிலுள்ளவற்றை சுருக்கமாகக் கூட விளக்க மாட்டார்.
அசுரன்,
தமிழில், மிக எளிமையாக, விரிவாக எமது பதிவுகளில் எழுதியிருக்கிறேன். அதை படித்து புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கும், மேலும் என்ன ‘விளக்கம்’ அளிக்க வேண்டும் ? உங்களுக்கு தேவை என்றால் பல முறை சுட்டிகள் (விக்கிபீடியாவில் இருந்ந்தும் கூட) அளிப்பீர்கள். ஆனால் நான் செய்தால், அதற்க்கு கோனார் நோட்ஸ் / விளக்கம் அளிக்க வேண்டும். நல்ல கதை. சரி, இங்கு நான் இட்ட பின்னூட்டங்களில் அளித்த ’விளக்கங்களுக்கு’ வந்த எதிர்வினைகள், ’அறிவுபூர்வமான’ விவாதங்களே போதுமப்பா.
இது குறித்தும் முந்தைய பல்வேறு விவாதங்களில் நாம் பேசியிடுக்கிறோம். இந்த விவாதத்திற்கு அது தொடர்புடையது அல்ல எனவே நிறுத்திக் கொள்கிறேன்.
//இந்த கார்ல் மார்க்ஸ் போல ஏச மாட்டார்கள். எங்கு வேண்டுமானாலும் ஒழுங்கா விவாதிக்க தயாராக இருப்பார்கள். எனது பதிவு விரிவானது. பின்னூட்டங்களில் ஏற்கெனவே விரிவான விவாதங்கள் உள்ளன். அதன் தொடர்ச்சியாக மேலும் விவாதித்திருக்கலாம். அதனால் தான் சுட்டி அளித்தேன். இந்த பதிவிற்க்கு நேரடியான சம்பந்தம் இல்லாத விசியம் அது என்ற காரணத்தாலும்.//
சரி அதியமான் நான் ஏசவில்லை
பேசவில்லை நீங்கள் உங்களுடைய கண்டு பிடிப்பை இங்கே பதிவிட்டு
ஒரு விவாதை கிளப்பலாமே
ஏன் அவ்வாறு செய்யவில்லை
அதெல்லாம் முடியாது [obscured] அதியமான்
இங்கேயே நீ சொல்லு எப்படி அவ்ளோ தைரியமா உபரி மாயைன்னு நீ சொல்லப்போச்சு
[obscured]
காரல் மார்க்ஸ் நீங்கள் தோழராக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய விவாத முறையும், வார்த்தைகளும் தவறாக இருக்கின்றன. அதியமான் உபரி மதிப்பு ஒன்றுமில்லை என்று கூறியிருப்பதில் எங்களுக்கும் உடன்பாடு இல்லை. உங்களுக்கும் இல்லை என்ற பட்சத்தில் அது மறுப்பதற்கான கருத்துக்களை முன்வைப்பதுதான் சரி. சிந்தனைக்கு வசவுகள் மாற்று அல்ல. எதிர் கருத்து வைத்திருப்பவர்களை ஆவேசமாகத் திட்டி விடுவதால் கிடைக்கும் சுயதிருப்தியினால் எந்தப் பயனும் இல்லை என்பதோடு விவாதிக்க வரும் மற்றவர்களையும் முகம் சுளிக்க வைக்கும். வினவில் விவாதங்கள் நடப்பதற்குத்தான் தோழர்கள் உதவ வேண்டும். விவாதங்களை வசைகளாக திசைதிருப்புவதில் ஒருவேளை மற்றவர்கள் ஈடுபட்டாலும் தோழர்கள் ஈடுபடுவது மிகவும் தவறு. உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டு விவாதிக்குமாறு கோருகிறோம்.
//சிந்தனைக்கு வசவுகள் மாற்று அல்ல. எதிர் கருத்து வைத்திருப்பவர்களை ஆவேசமாகத் திட்டி விடுவதால் கிடைக்கும் சுயதிருப்தியினால் எந்தப் பயனும் இல்லை என்பதோடு விவாதிக்க வரும் மற்றவர்களையும் முகம் சுளிக்க வைக்கும். //
இப்படி சொல்லும் நீங்கள் கேள்வி குறி என்ற நபர் இங்கே அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார் அதை அனுமதிப்பதில் உள்நோக்கம் யாதோ
கார்ல்மார்க்ஸ் உங்களுக்கு தெரியாதா? கேள்விக்குறியும் வினவும் ஒ.கு.ஊ.ம. இருவரும் ஒன்றுதான்.
வினவுக்கு எனது கேள்விகள்.
பதிவு சம்பந்தம் இல்லாத இடங்களில் வந்து உபரி மாயை என சொல்லும்
அதியமானை எந்த இடத்திலாவது அவரை மட்டறுத்து சம்பந்தம் இல்லாத மறுமொழிகள் இடத்துக்கு கொண்டு செல்லனும் செய்தீர்களா
அல்லது அதியமானையாவது இந்த பதிவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லி இருக்கிறீர்களா
இதெல்லாம் முதலில் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
மார்க்ஸ் எடுத்துக்காட்டிய உபடி சரியானது என்பதை எந்த கொம்பனிடமும்
விவாதிக்க தயார்
வினவு போன்ற இடத்தில் மட்டுமே விவாதிக்க முடியும்ன்
அவன் தளத்துக்கு எல்லாம் போய் விவாதித்தால் நான் போடும்
நாலு மறுமொழிகளை மட்டறுப்பான்
வீணே நமக்குத்தான் டென்சன்
காரல்மார்க்ஸ் அதியமான் சம்பத்தத்தோடுதான் உபரி மதிப்பை இங்கு எழுதியிருக்கிறார். இடுகைக்கு எது சம்பந்தம் எது சம்பந்தமில்லை என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டியதில்லை. அவர் உபரிமதிப்பு குறித்து எழுதிய கருத்துக்களை முறியடிக்க முடியாமல் இப்படி வெத்துவேட்டு சீனைப் போட்டு ஆறுதல் அடையும் உங்களைப்பார்த்து அனுதாபம்தான் வருகிறது. உங்களிடம் அறிவுப்பூர்வமாக விவாதிப்பதற்குப்பதில் அகங்காரமான வசவுகள்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இனியும் நீங்கள் வசைச்சொற்களையோ, இல்லை விவாதிப்பவர்களை அவன், இவன் என்று எழுதுவதையோ அனுமதிக்க முடியாது. தோழர்களும் தோழர்கள் போல மாறும் ஆசை கொண்டவர்களுக்கும் கட்டுப்பாடும், கண்டிப்பும் அவசியம். மற்றபடி இணையத்தில் வெட்டியாக நேரத்தை செலவழிப்பதை விட உருப்படியான வேலைகளை செய்யலாம். அப்படி ஏதும் வேலைகள் இல்லை என்றால் உங்களுக்குத் தெரிந்த தோழர்களிடம் கேட்டால் நிச்சயம் கொடுப்பார்கள். நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவிடுங்கள்.
/தோழர்களும் தோழர்கள் போல மாறும் ஆசை கொண்டவர்களுக்கும் கட்டுப்பாடும், கண்டிப்பும் அவசியம். மற்றபடி இணையத்தில் வெட்டியாக நேரத்தை செலவழிப்பதை விட உருப்படியான வேலைகளை செய்யலாம்// you pls follow as you says
//விவாதங்களை வசைகளாக திசைதிருப்புவதில் ஒருவேளை மற்றவர்கள் ஈடுபட்டாலும் தோழர்கள் ஈடுபடுவது மிகவும் தவறு. உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டு விவாதிக்குமாறு கோருகிறோம்.
//
உங்களின் இந்த கருத்தை ஆமோதிக்கிறேன்
வசவு முதலில் அவரிடம் இருந்தே வந்தது
ஆரோக்கியமான விவாதத்துக்கு தயார்
அதியமான் தயாரான்னு சொல்லவில்லை இன்னும்
எங்கே ஓடி ஒழிந்து கொண்டாரோ டோண்டு ராகவனுக்குத்தான் தெரியும்
அதியமானுக்கு சரியான ஜோடி கிடைச்சாச்சு போல…. 🙂
(@ அதியமான் & காரல் மார்க்ஸ்-பெயருடையவர், உங்க அக்கப்போர் தாங்க முடியலியே!)
அதியமான்,
உபரி – மாயை, அதனால் பெருகும் மூலதனம் – மாயை …..
மார்க்ஸின் உபரி மதிப்பு பற்றி பேச, குறைந்த பட்சம் “ஆடம் ஸ்மித், டேவிட் ரிகார்டோ” இவங்களை படிச்சுட்டு வந்து பேசலாம்…
ஆதிசங்கரர், பெர்க்லி பாதிரியார் இவங்களை கண்மூடித்தனமா பின்பற்றி பொருளாதாரம் பேச முயுமோ?? 🙂
//“ஆடம் ஸ்மித், டேவிட் ரிகார்டோ” இவங்களை படிச்சுட்டு வந்து பேசலாம்…
ஆதிசங்கரர், பெர்க்லி பாதிரியார் இவங்களை கண்மூடித்தனமா பின்பற்றி பொருளாதாரம் பேச முயுமோ?? // பெரிய பொருளாதார நிபுணர்கள் கருத்து எல்லாம் தேவையே இல்லைங்க லீமாகோ அன்றாடம் ஒரு லேத்தில் வேலை செய்யும் நபர்களின் உபரி சுரண்டப்படுவதே போது உபரி என்பது மாயை இல்லை என தெரியதெரிந்து கொண்டே மறுக்கும் இந்த நபர் ஒரு பெரிய ஏமாற்று கார முதலாளி அதை ஆதரிக்கும் வினவு ஒரு போலி மார்க்சிய வாதி
ஐயா,
ஏன் வெறும் வெற்றுப் பேச்சு! அதியமான் அவருடைய வலைத்தள இணைப்பை கொடுத்திருக்கிறார். ஒன்று அதைப்படித்துவிட்டு அங்கேயே விவாதம் செய்யுங்கள் இல்லையென்றால் அதை மறுத்து இங்கு பின்னூட்டமிடுங்கள். அவர் நிச்சயம் உங்களுடன் விவாதம் புரிய ஓடிவருவார்.
கேரளா தொழிலார்கள் பற்றி தெருவாளர் ஜெயமோகன் கூறுவது மிக நகைச்சுவையாக உள்ளது ,, இவர் பெரிய முடிய புடுங்கி .. இவருக்கு பக்கத்துல வந்து மரியாதையா காப்பி சாப்பிடு ரிங்களா னா ?.. டிபன் சாபிடுரிங்கள அண்ணா நு கேக்கணுமாம் …
அவன் கிடக்குறான் கோமாளிப் பய .. அவனுக்காக ஒரு பதிவு போட்டு நேர விரயம் தான் போங்க ..
ஏன்டா ஜெயமோகா .. நீ கொடுக்குற காசுக்கு உன் காலையுமா நக்கி விட முடியும் ..
என்னாச்சு யாரும் உருப்படியா விவாதம் செய்தா வினவுக்கு பிடிக்காதே
அவர் மட்டும்தான் நாட்டாமை செய்வார்
அதியமான் எங்கே ஓடி போச்சு அந்த மான்
கே. ஆர். ஏ._____ இன்றைய முதளிதுவப் பொருளாதாரம் காரல் மார்க்ஸ் சொன்னதைப் போலஅழிவு நிலையை நோக்கி செல்லவில்லை .தொழிலாளர்களுடைய வாழ்க்கை தரம் முன்னேறியிருக்கிறது என்று உங்களது உபரி என்ற மாயை பதிவில் குறிப்பிட்டிருக்கிறிர்கள்.இதைத்தான் திருவாளர்கள் மன்மோகன்சிங் ,சிதம்பரம் ,பி முக்கர்ஜி போன்றவர்களும் கூறுகிறார்கள் .உங்கள் கருத்துப்படி இந்த தலைவர்களெல்லாம் ஏழை மக்களை உய்விக்க வந்த உத்தமர்கள் ! இதை ஒரு வேளை கஞ்சிக்கு ஏங்கும் மக்கள் ஏற்றுக்கொண்டால் காரல் மார்க்சின் உபரி ஒரு மாயை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் ; பலரும் ஒப்புக்கொள்வார்கள்.
மலையப்பன்,
/////உங்கள் கருத்துப்படி இந்த தலைவர்களெல்லாம் ஏழை மக்களை உய்விக்க வந்த உத்தமர்கள் ! இதை ஒரு வேளை கஞ்சிக்கு ஏங்கும் மக்கள் ஏற்றுக்கொண்டால் காரல் மார்க்சின் உபரி ஒரு மாயை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் ; பலரும் ஒப்புக்கொள்வார்கள்////
அவர்கள் ஏழை மக்களை உய்விக்க வந்தவர்கள் என்பது ஒரு விதத்தில் சரிதான். உத்தமர்கள் என்று சொல்ல முடியாது. மன்மோகன் சிங் அவர்கள் மட்டும் அப்படி வகை படுத்தலாம். சுத்தமானவர். லஞ்சம் வாங்க மாட்டார். நேர்மையானவர். (ஆனால் அவர் கட்சியினர் சுருட்டுவதை கட்டுபடுத்த மாட்டார் அல்லது முடியாதவர்).
பல கோடி ஏழைகளின் துன்பத்தை அன்றாடம் காணும் போதும், பணக்காரகளின் சுகபோக வாழ்வை இதனுடன் ஒப்பிடும் போதும், மனிதாபிமானம் உடையவர்கள், உங்களை போன்றே கருதுவர். இது மிக இயல்பானதுதான். ஆனால் பொருளாதார வரலாறு தெரியததால் ஏற்படும் குழப்பம். இந்த ஏற்ற தாழ்வை, ஏழ்மையை ஒழிக்க பல வகையான அமைப்புகளை மனிதன் கையாண்டு பார்த்துவிட்டான். சோசியலிச அமைப்பை சேவியத் ரஸ்ஸியாவிலு, சீனாவிலும், வட கொரியாவிலும், கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலும் முயன்று பார்த்து தோல்வி அடைந்ததை அறிந்திருப்பீர்கள். (அவற்றின் வீழ்ச்சிக்கு பல ‘விளக்கங்களை’ அளிப்பீர்கள் !) சுந்தந்திர சந்தை பொருளாதார முறைகளை, ஒரு நல்ல லிபரல் ஜனனாயக நாட்டில் அமலாக்கிய நாடுகள் அனைத்தும் வளம் பெற்று, வறுமையை பெருமளவில் அளித்தன. இரண்டாம் உலகப் போருக்கு பின், ஜப்பான், ஜெர்மனி, தைவான், வட கொரியா போன்ற நாடுகள் அழிவிலிருந்து, கடும் வறுமையிலிருந்து மீண்ட வரலாறு பற்றி ஒரு திறந்த மனதுடன் படித்து பாருங்கள்.
இந்தியாவில் உள்ள வறுமை மற்றும் கொடுமைகளை அகற்றா சுலபமான வழிகள் / மாற்று வழிகள் இல்லை. 1991 வரை கடைபிடிக்கப்பட்ட ஜனனாயக பாணி (போலி) ’சோசியலிசம்’ அல்லது Statism or planned economy or mixed economy : இவை ஏற்படுத்திய பேரழிவை பற்றி விரிவாக பல பதிவுகள் எழுதியிருக்கிறேன். மேலும் பல்லாயிரம் பதிவுகள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. ஊழல் மயமாகி சீரழந்தோம்.
இங்கு செம்புரட்சி சாத்தியமே இல்லை. 60களில் நக்ஸ்ல்பாரிகள் உருவாகி வளர்ந்த காலத்திலேயெ சாத்தியம் இருந்ததில்லை. மேலும் அதைவிட முக்கியமாக புரட்சி உருவானால், அது கண்டிப்பாக நம் பிரச்சனைகளை, வறுமையை அகற்றாது. மாறாக தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகிவிடும். பல கோடி மக்கள் கொல்லப்பட்டு, பஞ்சம் உருவாகி அழிவு உண்டாகும் சாத்தியம் மிக மிக அதிகம். வரலாறு அதை தான் சொல்கிறது.
படிப்படியாக தான் வளர முடியும். வறுமையை குறைக்க முடியும். ஜனத்தொகை இன்று 110 கோடிகள். மேலும் கூடுகிறது. வறுமை ஒழிப்பு திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் அனைத்து அரசு செயல்பாடுகளிலும் ஊழல் பெருமளவில் உள்ளதால், அவை பாழாகிவிடுகிறது. உரியவர்களுக்கு போய் சேருவதுல்லை.
பார்ககவும் :
http://swaminomics.org/articles/20091115.htm
Delayed economic reform killed 14.5 million children
அதியமானுக்கு பதில்:
உபரி மதிப்பு என்னும் மாயயை’
உபரி மதிப்பு (surplus value) என்பதே மார்க்சிசத்தின்
மையக்கூறு என்று சொல்லலாம : http://en.wikipedia.org/wiki/Surplus_value
//தொழிலாளர்களின் உழைப்பிற்க்கு அளிக்கப்படும் சம்பளம்,
அவர்களால் உருவாக்கப்படும் பெருட்களின் மதிப்பை விட
(அல்லது உழைப்பின் ‘சரியான மதிப்பை’ விட) மிக மிக
குறைவானது, அந்த ‘கொடுக்கப்படாத’ சம்பளமே, உபரி
மதிப்பு என்று மார்க்சிசம் சொல்கிறது. அந்த உபரி மதிப்பு
‘சுரண்டப்பட்டு’, லாபமாக வெளிப்படுகிறது. அதுவே பின்
முலதனமாக உருவெடுக்கிறது. இதுதான் மார்கிசியத்தின்
மைய்யக் கரு. இது எப்படி மிக தவறான, பொய்பிக்கப்பட்ட
‘போலி’ விஞ்ஞானம் என்பதை பார்ப்போம்.//
சரி பார்ப்போம்
//மதிப்பு என்பது வாங்குபவரின் கோணத்தில் தான் நிச்சியக்கப்
படுகிறது.//
வாங்குபவரின் கோணம் என்றால் என்ன
பயன் இல்லாத பொருளை எவன் வாங்க போகிறான்
பயன்பாட்டு மதிப்பு பரிமாற்ற மதிப்புன்னு மார்க்ஸ்
இரண்டு மதிப்பை சொல்கிறார் இதன் அடிப்படையே இந்த அதியமான் புரிந்து கொள்ளவில்லை பரிமாற்ற மதிப்பின் அடிப்படையில் உபரியை விளக்குகிறார்
(பயன்பாட்டு மதிப்புக்கு உதாரணம் நீங்கள் ஒரு சட்டையை தைக்கிறீர்கள்
அதை போட்டுகொள்கிறீர்கள் அதனுடன் அதன் மதிப்பு முடிந்து விட்டது
இதில் சுரண்டல் ஏதும் இல்லை)
பயன் இல்லாவிட்டால் வாங்கவே மாட்டான் என்பது
ஒரு வாதமே அல்ல என்பது எனது நிலைப்பாடு
பயன் இருக்கும் ஒரு பொருளில் மதிப்பு எதை வைத்து உருவாகிறது
என்பது அதன் உழைப்பு சக்தியின் அ
வாங்குபவருக்கு பயன் இல்லாவிட்டால், பெரும்
உழைப்பில் உருவான எந்த பெருளுக்கும் மதிப்போ,
தேவையோ இருக்காத். உதாரணமாக, பாலைவனத்தில்
சிக்கி, குடிநீருக்கு ஏங்குபவருக்கு, ஒரு மர மேசை தேவை
படாது. பயன் படாது. அம்மேசையை ஒரு தொழிலாளி
எத்தனை பாடுபட்டு, உழைத்து உருவாக்கியிருந்தாலும்,
அங்கு அதற்க்கு மதிப்பில்லை / தேவையில்லை. அதே
போல் தான் அனைத்து பொருட்க்கள் / சேவைகளுக்குமான
‘மதிப்பு’. ஒரு பொருளின் மதிப்பு என்பது அதை உருவாக்க
உழைத்த தொழிலாளியின் உழைப்பின் சாரம் மட்டுமே
என்பது மார்கிசிய கருத்து.
உபரி மதிப்பு என்று ஒன்று உள்ளது என்று வைத்துக்
கொள்வோம். அந்த ‘உபரியை’ ‘சுரண்டி’ லாபாமாக
மாற்றுகிறார் ஒரு முதலாளி (இந்த சொல் எமக்கு
ஏற்புடையதாக இல்லை. வில்லத்தனமான அர்த்தம்
இதற்க்கு, பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ளதால், ‘தொழில்
முனைவோன்’ என்ற சொல்லே சரியனது.) இந்த லாபம்
என்பது தொழிலாளர்களின் உழைப்பின் உபரி மதிப்பு
என்கிறது மார்க்சியம். சில கேள்விகள் :
1.தொழில்முனைவோரின் ‘உபரி மதிப்பு’ என்ன ? ஒரு
நிறுவனத்தை கட்டமைக்க, organisational and managerial ability
மிக மிக மிக தேவை. Risk taking mentality, pioneering spirit,
innovative thinking, will power, leadership and communication skills :
இவை இல்லாமல் தொழில் முனைவோர் ஒரு நிறுவனத்தை
உருவாக்கி, வெற்றிகரமாக நடத்த முடியாது. இவற்றின்
உபரி மதிப்பு என்ன ?
தன்முனைப்பு என்பது உபரி மதிப்பா
முதலாளிக்கு இருக்கும் தன்நம்பிக்கை என்பது உபரி மதிப்பா
இதென்ன கேள்வி மண்டையில் மறை கழண்டவன் கூட கேட்க மாட்டான்
ஏனெனில் இதெல்லாம் அந்த தொழில் தொடங்க உபயோகமாக இருக்கும்
மன ஏற்பாடுகள் ஆனால் உபரியை சுரண்டாமல் அவன் தொழிலே நடத்த முடியாது
2. ஒரு தொழிற்பேட்டையில், ஒரே வகையான இரு
தொழிற்சாலைகள் (சம அளவிலான முதலீட்டில்), ஒரே
நாளில் துவக்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம்.
இரண்டும் ஒரே வகையான எந்திரங்களை கொண்டு, ஒரே
வகையான பொருட்களை உற்பத்தி செய்து, ஒரே சந்தையில்
விற்க்க முயல்கின்றன. இரண்டிலும், ஏறக்குறைய சம
அளவு திறமை, உற்பத்தி திறன் கொண்ட தொழிலாளர்கள்
வேலை செய்கின்றனர். ஒராண்டிற்க்கு பிறகு, ஒரு
தொழிற்சாலை ஒரளவு லாபமும், மற்றொன்று நட்டத்தையும்
அடைகின்றன. முதல் தொழிற்சாலையின் நிகர லாபம்,
அதன் தொழிலாளர்களின் உழைப்பின் உபரிதான் என்றால்,
பிறகு நட்டத்தில் இயங்கும் இரண்டாவது தொழிற்சாலையின்
தொழிலாளர்களின் ‘உபரி மதிப்பு’ எங்கு சென்றது ?
இரு நிறுவனங்களிலும் சம திறன் கொண்ட தொழிலாளர்கள்,
சம எண்ணிக்கையில், சம திறன் கொண்ட எந்திரங்களை
கொண்டு, ஒரே ரகபொருட்களை தான் உற்பத்தி செய்தனர்.
பிறகு லாப அளவில் வித்தியாசம் எப்படி ஏற்பட்டது ?
3.// கூட்டுறவு அல்லது அரசு துறையில், மேற்கொண்ட
உதாரணத்தில் உள்ளதை போன்ற அதே வகை / அளவிலான
நிறுவனத்தை (தொழிலாளர்களுக்கு அதே சம்பளம் என்று
வைத்துக்கொள்வோம்) உருவாக்கினால், அதன் லாபம்
மற்றும் உற்பத்தி திறன், தனியார் நிறுவனங்களை விட
குறைவாக இருப்பது இய்லபு. ஏன் ? காரணம், உரிமையாளர்
என்று யாரும் இல்லாவிட்டால் ஏற்படும் பெறுப்பற்ற
மனோபாவம். Sense of ownership gives rise to sense of responsibity.
அரசு துறையின் managers மற்றும் workers : இவர்களின்
உற்பத்தி திறன் (productivity) தனியார் துறையை விட
குறைவாகவே இருக்கிறது. இவர்களின் ‘உபரி மதிப்பு’
எப்படி குறைந்தது ? அது எங்கு சென்றது ?
//
ஒரு சின்ன நிறுவனத்துக்குத்தான் உரிமையாளரின் மேற்பார்வையில்
தொழில் நடக்கும் உரிமையாளர் எங்கோ இருக்கையிலேயே
தொழில் நடக்கிற நிருவனங்களை பாவம் அதியமான் பார்த்தது இல்லை
அந்நிருவனங்கள் ஒரு திட்டமிட்டு இயங்கும் இந்த திட்டத்தை
இப்போ உருவாக்கி தர அனேக அமைப்புகள் வந்துவிட்டன
இதற்கும் உபரிக்கும் சம்பந்தம் இல்லை
உரிமையாளர் இல்லாவிட்டாலும் இருந்தாலும் உபரி இருந்தால்தான்
நிறுவனம் இயங்கும் அடுத்த பாயிண்டும் அவுட்டு
//மார்க்ஸ் அனுமானித்த அடுத்த முக்கிய விசியம் : ஒரு
சமூகத்தின் நிகர உபரிமதிப்பு படிப்படியாக சுரண்டப்பட்டு,
ஒரு கட்டத்தில் மிக மிக மிக குறைந்து, அந்த சமூக
கட்டமைப்பே அழியும் என்பது. Business cycles என்று சொல்லப்படும்
பொருளாதார சுழற்சிகள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை
நிகழ்கின்றன. மார்க்ஸின் ‘விஞ்ஞானப்படி’ ஒவ்வொறு சுழற்ச்சியின்
மந்த நிலையின் முடிவில், சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்து,
குறைந்த எண்ணிக்கையிலான பெரு நிறுவனங்கள் மட்டும்
பிழைக்கும்.//
அப்படித்தான் நிகழ்ந்து இருக்கிறது சிறு முதலீட்டு காளி மார்க்
எங்கே டிங் டாங் குளிர்பாணம் எங்கே
மதுரையில் இருந்த மிட்டாய் கம்பெனிகள் எங்கே
திருவாள மாமுனி அதியமான் விளக்குவாரா
// மனித ம்உழைப்பை குறைக்கும் திறன் கொண்ட
புதிய எந்திரங்களை பெரு முதலாளிகள் மேலும் மேலும்
உருவாக்கி, தொழிலாளர்களின் உழைப்பின் )உபரி மதிப்பை
மேலும் மேலும் ‘சுரண்டி, ஒரு கட்டத்தில் இனி சுரண்டவே
முடியத நிலை உருவாகி, முதலாளித்துவ பெருளாதார
கட்டமைப்பே இயல்பாக அழியும். //
ஆமாம் இது உண்மைதான்
ஆனால் கடந்த 150 வருட
பொருளாதார வரலாறு இதை பொய்பிக்கிறது. ஒவ்வொறு
பொருளாதார மந்தமும், அதன் முன்பு உருவான மந்தத்தை
விட மோசமானதாக இருக்கும் என்ற கணிப்பும் பொய்யானது.
தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மார்க்ஸ் சொன்னது போல
படுமோசமாக ஆகாமல், மாற்றாக மிக மிக உயர்ந்துள்ளது.
எப்படி பொய்பித்து இருக்கிறது மார்க்ஸ் கொடுக்கும் அனேக புள்ளியியல் உதாரணங்களில் போல எதையும் தரவில்லையே
மாறாக சிறு உற்பத்தியாளன் தேசிய உற்பத்தியாளன் நாள்தோறுன்
மறைந்து வருகிறான் என்ன காரணம்
//இன்றைய உலகப் பொருளாதார மந்தம், 1930களின் பெரு
மந்தத்தை விட மிக மோசமானதாக மாறி, முதலாளித்துவமே
அழியும் நிலை (மார்க்ஸ் சொன்ன இறுதி பேரழிவு) வந்துவிட்டது
என்று ஆர்பாரித்த மார்க்ஸியவாதிகள் இன்று
world economic recovery அய் கண்டு வாயடைத்துப் நிற்கின்றனர்.//
அதற்கு காரணம் இந்தியாவில் நீங்கள அடிக்கடி சொல்லும் அமெரிக்க பா
ணி பொருளாதார கட்டமைப்பு இல்லாமையால் இந்தியா மீண்டது
மாறாக சிகாகோ பாய்ஸ் சொன்ன பொருளாதாரத்தை பின்பற்றி
சிதைந்து போன நாடுகளின் கதி என்ன
//மார்க்சியம் ஒரு போலி விஞ்ஞானம். அதன் தாக்கத்தால் சென்ற
நூற்றாண்டில் ஏற்பட்ட பேரழிவு மிக மிக கொடுமையானது.
ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் லட்சியவாதம், எதிர் மறையான
விளைவுகளையே ஏற்படுத்தியது. The road to hell is paved with
good intentions என்கிறது ஒரு ஆங்கில முதுமொழி.
அதை நீங்கள் விஞ்ஞானரீதியில் நிரூபிக்க வேண்டும்
உலக இயக்கமே உள்முரண்பாடுகளால் வளர்ச்சி அடைகிறது என சொன்ன
மார்க்ஸ் சமூகமும் அத்தகைய உள்முரண்பாடுகளால் வளர்கிறது என்றார்
மேலும் இன்னொரு பாய்சல் வளர்ச்சி என்பது இந்த கட்டத்தில் இருந்து தாவுதலில் நிகழும் அது சரிதான் இதை யாரும் பொய்யாக்கவில்லை
பயன்பாட்டு மதிப்பு, பரிமாற்ற மதிப்பு என்றெல்லாம் வேறுபாடு எதுவும் நடைமுறையில் இல்லை. வெறும் வார்த்தை ஜாலங்கள். மதிப்பு என்பதை இன்னும் சரியாக define செய்ய முடியவில்லை. எமது பதிவில், எமது பொருளாதார பேராசியரிரின் மின்மடலை பின்னூட்டமாக இட்டிருந்தேன். பார்க்கவும்.
///// ஒரு பொருளின் மதிப்பு என்பது அதை உருவாக்க
உழைத்த தொழிலாளியின் உழைப்பின் சாரம் மட்டுமே
என்பது மார்கிசிய கருத்து.////
ஆனால் நடைமுறையில் தொழில்முனைவோரின் ‘உழைப்பும்’ சேர்ந்தே நிகர மதிப்பு உருவாகிறது. தொழில் முனைவோரின் ’மூளை உழைப்பு’ பற்றி சரியான மதிப்பிட்டை
மார்க்ஸ் அனுமானிக்க தவறிவிட்டார். மேலும் மனித இயற்க்கை பற்றியும் தவறான மதிப்பீடு. அதை பற்றிய எமது சமீபத்திய பதிவு :
http://nellikkani.blogspot.com/2010/02/blog-post.html
கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?
//// உரிமையாளர் இல்லாவிட்டாலும் இருந்தாலும் உபரி இருந்தால்தான்
நிறுவனம் இயங்கும்//// உரிமையாளர் எங்கு இருந்தாலும் அவருடைய பொறுப்பு (responsibility) மாறாது. நஸ்டம் அல்லது விபத்து நடந்தால் அவர் அல்லது அவர்கள் தாம் முழு பொறுப்பு. நிறுவனம் பெரிதாகும் போது, delegation of powers will be done. If it is done is a professional and efficient method, the company will flourish. Or loose. Depends on efficient management.
’இதனை இதானல் இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற திருக்குறள் இங்கு பொருந்தும்.
/////அப்படித்தான் நிகழ்ந்து இருக்கிறது சிறு முதலீட்டு காளி மார்க்
எங்கே டிங் டாங் குளிர்பாணம் எங்கே
மதுரையில் இருந்த மிட்டாய் கம்பெனிகள் எங்கே
திருவாள மாமுனி அதியமான் விளக்குவாரா////
இந்த பெப்ஸி, கோக் கம்பெனிகள், காளிமார்க்கை ‘அழித்த’ விசியம் மட்டும் தான் தொடர்ந்து முழங்குவீக போல. Economy of scale என்று ஒன்று உண்டு. பெரிய தொழிற்சாலைகளில், பெரிய அளவில், நவீன முறைகள் உற்பத்தி செய்யப்பட்டால் தான் உற்பத்தி விலை குறைந்து, மிக மலிவாக, மிக அதிகாமக பொருட்கள் கிடைக்கும்.
முக்கியமாக உணவு, உடை, மற்றும் பல்லாயிரம் பொருட்கள். கார்பெரெட் பெரும் பண்னைகள் உருவான வளர்ந்த நாடுகளில் உணவு விலை மிக மிக குறைவு. Food costs are dirt cheap in developed nations wih mega corporate farms, while they are too costly in nations like India where modern, corporate farms are not allowed. ஜவுளி உற்பத்தியிலும் இதே கதை தான். எனக்கு தெரிந்து, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பரம ஏழைகள் உடுத்தியிருந்த கந்தல் ஆடைகளை விட இன்று பரவாயில்லை. ஒரு நாள் கூலியில் இன்று ஒரு சட்டை அல்லது புடவை வாங்கிவிட முடியும் அளவிற்க்கு உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது.
சரி, காளி மார்க் உற்பத்தியாளர்களுக்கு தொழில் அழிந்தது. அதான்ல் அவர்கள் பட்டினி கிடந்து இறந்துவிடவில்லை. வேறு தொழில்களுக்கு மாறினர். தொழிலாளர்களுக்கு வேறு வேலைகள், பல புதிய துறைகளில் உருவாகின. இந்த மாற்றம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். டிராக்டர் வந்தவுடன் ஏர் உழுபவர்களின் வேலை போயிற்று. மாற்று வேலைகளுக்கு படிப்படியாக மாறினார்கள். (அதையும் 1991வரை இருந்த லைசென்ஸ் ராஜிய கட்டுபாடுகள், தனியார் துறையை கட்டிபோட்டிந்ததால், சரியாக மாற முடியாமல் அவலம்). இதே போன்று புதிய டெக்னாலஜிகள், புதிய துறைகள் உருவாகும். சில பழைய துறைகள் மற்றும் தொழில்கள் அழியும். இவை தொடர்ந்து நடக்கும் மாற்றங்கள். இவை ஒழுங்காக, இயல்பாக நடந்த நாடுகள் படிப்படியாக வளம் பெற்று முன்னேறிய நாடுகளா மாறின. சமீபத்திய உதாரணங்கள் : ஜப்பான், தைவான், தென்.கொரியா, ஹாங்காங் போன்றவை. நாம் சொதப்பிவிட்டோம்.
பொருளாதார மந்தங்கள் அடுத்தடுத்து, மோசமாகும். நிகர உபரி மதிப்பு குறைந்து, லாபம் குறைந்து, முதலாளித்வ அமைப்பே இறுதி அழிவை அடையும் என்ற மார்ஸ்சின் கணிப்பு பொய்த்துவிட்டதுதான். பொருளாதார மந்தங்களின் progression பற்றிய அவரின் கணிப்பை பற்றி தெளிவாக பேசுங்கள் முதலில். தொழிலாளர்களின் கூலி மற்றும் வாழ்க்கை தரம் படிபடியாக மிக மோசமாகும் என்றார். உபரி மதிப்பு என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாக வைத்து அனுமானித்தார். ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இன்று தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மிக உயர்ந்தே உள்ளது. எப்படி ? மார்க்ஸ் கண்ட மே.அய்ரோப்பிய தொழிலாளர்களின் நிலை இன்று பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் அவர் அதற்க்கு மாற்றான அனுமானத்தை தான் டாஸ் கேபிடலில் எழுதினார். உபரி மதிப்பு என்ற் அஸ்திவாரத்தை, கருத்தாக்கத்தை கொண்டே அவரின் சித்தாந்தம் கட்டமைக்கப்பட்டது. அவை பொய்க்கப்பட்டதால் தான் அவற்றின் அடிப்படையான உபரி மதிப்பு என்பது மாயை என்று சொன்னேன்.
////அதற்கு காரணம் இந்தியாவில் நீங்கள அடிக்கடி சொல்லும் அமெரிக்க பா
ணி பொருளாதார கட்டமைப்பு இல்லாமையால் இந்தியா மீண்டது மாறாக சிகாகோ பாய்ஸ் சொன்ன பொருளாதாரத்தை பின்பற்றி சிதைந்து போன நாடுகளின் கதி என்ன////
இல்லை. மிக தவறான வாதம். Indian banking sector is well regulated and lending norms are strict here, while it was the opposite in USA. Nothing to do with nationalization of Indian Banks. The private Indian banks too were not affected. The point is good regulation and lack of sofestication of Indian debt market unlike US markets. பொருளாதார மந்தம் பற்றி ஆங்கிலத்தில் யான் எழுதிய பதிவுகள் :
சிகாகோ பாய்ஸ்களின் பரிசோதனை மிக வெற்றிகரமாக சிலே நாட்டில் தான் நடத்தப்பட்டது. 1973இல் உண்மையில் சிலேவின் பொருளாதாரம் சிதைந்தது. சிகாகோ பாய்ஸின் கொள்கைகாள படிப்படியாக மீண்டது. அதைவிட முக்கியமாக சர்வாதிகார ஆட்சியை அழித்து, ஜனனாயக ஆட்சிக்கு வழி வகுத்தது. இன்று சிலே மற்றும் பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளில், 40 ஆண்டுகளுக்கு முன்பு முயலப்பட்ட இடதுசாரி பொருளாதார கொள்கைகளை யாரும் முன்மொழிவதில்லை. கடுமையான பாடம் கற்றுக்கொண்டனர். புரட்சி பற்றி அன்று இருந்து வேகம் மற்றும் கோசங்கள் இன்று இல்லை. காரணம் வரலாற்று பாடங்கள். பெருவில் டீ சாட்டோ என்று பெரும் மேதையில் வழிகாட்டுதலில், நாட்டின் பொருளாதார கொள்கைகள் மாற்றி அமைக்கபட்டு, இன்று நல்ல நிலையில் உள்ளது. யாரும் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த ‘பாதைகளை’ நோக்கி மீண்டும் செல்ல போராடவில்லை. மேலும்…
பொருளாதார மந்தம் பற்றி ஆங்கிலத்தில் யான் எழுதிய பதிவுகள் : http://athiyaman.blogspot.com/2009/04/distortions-in-money-markets-due-to.html http://athiyaman.blogspot.com/2008/10/who-murdered-financial-system.html
http://athiyaman.blogspot.com/2009/04/how-to-turn-recession-into-depression.html
கம்யூனிஸ்டுகள் விட்டால் பண்ணை வைத்து ஆடு கோழி வளர்ப்பவர்கள் எல்லோரும் வேட்டைக்காரனுக்கு நொக்கு கூலி தரவேண்டும் என்று கூட போராடுவார்கள்.
வெளிநாட்டு கம்யூனிஸ்டுகளுக்கும் இந்தியக்கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா ?
இந்தியாவில் தான் முட்டாள்கள் மட்டுமே கம்யூனிஸ்டுகளாக இருப்பார்கள்.
வெளிநாடுகளில் ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளாக இருந்தவர்கள் எல்லாம் புத்தி தெளிந்து மாறிவிட்டார்கள்.
//இந்தியாவில் தான் முட்டாள்கள் மட்டுமே கம்யூனிஸ்டுகளாக இருப்பார்கள்.
வெளிநாடுகளில் ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளாக இருந்தவர்கள் எல்லாம் புத்தி தெளிந்து மாறிவிட்டார்கள்//
உன்னைப்போல முட்டால்கள் அப்படித்தான் நினைப்பார்கள் தவறில்லை
//ஆனால் நடைமுறையில் தொழில்முனைவோரின் ‘உழைப்பும்’ சேர்ந்தே நிகர மதிப்பு உருவாகிறது. தொழில் முனைவோரின் ’மூளை உழைப்பு’ பற்றி சரியான மதிப்பிட்டை//
அப்பூ உபரி மதிப்பு இருக்கு அதில முதலையின் வேலையையும் சேர்க்காமவிட்டு விட்டாரென சொல்றீங்களா
உங்கள் வாயாலேயே உபரி இருக்குன்னு ஒத்து கொண்டதற்கு நன்றி
//மார்க்ஸ் அனுமானிக்க தவறிவிட்டார். மேலும் மனித இயற்க்கை பற்றியும் தவறான மதிப்பீடு. அதை பற்றிய எமது சமீபத்திய பதிவு ://
http://nellikkani.blogspot.com/2010/02/blog-post.html
கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?
உங்க டுபாக்கூர் பதிவெல்லாம் படிச்சா மறை கழண்டுவிடும்
//// உரிமையாளர் இல்லாவிட்டாலும் இருந்தாலும் உபரி இருந்தால்தான்
நிறுவனம் இயங்கும்////
//உரிமையாளர் எங்கு இருந்தாலும் அவருடைய பொறுப்பு (responsibility) மாறாது. நஸ்டம் அல்லது விபத்து நடந்தால் அவர் அல்லது அவர்கள் தாம் முழு பொறுப்பு. நிறுவனம் பெரிதாகும் போது, delegation of powers will be done. If it is done is a professional and efficient method, the company will flourish. Or loose. Depends on efficient management.
’இதனை இதானல் இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற திருக்குறள் இங்கு பொருந்தும்.//
இதுல அவரோட உபரி எங்க போச்சு சும்மா மழுப்ப கூடாது
நிர்வாகதிறமை உபரிங்கிறது சரியா பதில் சொன்னா
முதலாளி இல்லாமலே கம்பெனி நடக்கும் அளவுசமூக உழைப்பு
மாறிவிட்டதுன்னு சொன்னா
அதனை அவன் காண் விடல் என டாபாய்கிறது உங்கள் வாதம் வழுவற்று போவதை காடுகிறது அதியமானே
/////அப்படித்தான் நிகழ்ந்து இருக்கிறது சிறு முதலீட்டு காளி மார்க்
எங்கே டிங் டாங் குளிர்பாணம் எங்கே
மதுரையில் இருந்த மிட்டாய் கம்பெனிகள் எங்கே
திருவாள மாமுனி அதியமான் விளக்குவாரா////
//இந்த பெப்ஸி, கோக் கம்பெனிகள், காளிமார்க்கை ‘அழித்த’ விசியம் மட்டும் தான் தொடர்ந்து முழங்குவீக போல.//
வேற விசயம் எல்லாம் அதற்குள் அடக்கம் தானே
சின்ன முதலாளி எங்க போனான் உங்களை தவிர அனேகம் சின்ன உற்பத்தி நடந்து வந்ததது அதெல்லாம் எங்கே என கேட்டால் பதில காணோம்
//Economy of scale என்று ஒன்று உண்டு. பெரிய தொழிற்சாலைகளில், பெரிய அளவில், நவீன முறைகள் உற்பத்தி செய்யப்பட்டால் தான் உற்பத்தி விலை குறைந்து, மிக மலிவாக, மிக அதிகாமக பொருட்கள் கிடைக்கும்.
முக்கியமாக உணவு, உடை, மற்றும் பல்லாயிரம் பொருட்கள். கார்பெரெட் பெரும் பண்னைகள் உருவான வளர்ந்த நாடுகளில் உணவு விலை மிக மிக குறைவு. Food costs are dirt cheap in developed nations wih mega corporate farms, while they are too costly in nations like India where modern, corporate farms are not allowed. ஜவுளி உற்பத்தியிலும் இதே கதை தான்//.
தவறு அப்படி இருந்தால் இந்தியாவில் இருந்து ஒரு பனியன் கூட அமெரிக்காவுக்கும் மத்திய ஐரோப்பாவுக்கும் போகாது
அங்கே கூலி கொடுக்க முடியாமத்தான் திருப்பூருக்கு ஆடர் போகுதுங்கோ
// எனக்கு தெரிந்து, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பரம ஏழைகள் உடுத்தியிருந்த கந்தல் ஆடைகளை விட இன்று பரவாயில்லை. ஒரு நாள் கூலியில் இன்று ஒரு சட்டை அல்லது புடவை வாங்கிவிட முடியும் அளவிற்க்கு உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது.//
ஒரு சட்டை வாங்க ஆரம்பிச்சுட்டான் அதே நேரத்தில் தற்கொலைகள் அதிகரித்து விவசாயிகள் சாவு ௧௯௭௦ இல்லையே அது ஏன்
//சரி, காளி மார்க் உற்பத்தியாளர்களுக்கு தொழில் அழிந்தது. அதான்ல் அவர்கள் பட்டினி கிடந்து இறந்துவிடவில்லை. வேறு தொழில்களுக்கு மாறினர். தொழிலாளர்களுக்கு வேறு வேலைகள், பல புதிய துறைகளில் உருவாகின. இந்த மாற்றம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். //
இல்லை
நிறைய முதலாளிகள் வட்டிக்கு கொடுத்து பிழைத்தனர்
இன்று அவர்களுது வாரிசுகள் வேலை கேட்டு ரோட்டில் அழைகின்றன
மாற்றம் எல்லாம் வரவில்லை மதுரையில் இருந்த அப்பள கம்பெனிகள் பெரிய கம்பெனிகள் வரவால்
இழுத்து மூடப்பட்டு விட்டது ஒரு உதாரணம்
//டிராக்டர் வந்தவுடன் ஏர் உழுபவர்களின் வேலை போயிற்று. மாற்று வேலைகளுக்கு படிப்படியாக மாறினார்கள். (அதையும் 1991வரை இருந்த லைசென்ஸ் ராஜிய கட்டுபாடுகள், தனியார் துறையை கட்டிபோட்டிந்ததால், சரியாக மாற முடியாமல் அவலம்). இதே போன்று புதிய டெக்னாலஜிகள், புதிய துறைகள் உருவாகும். சில பழைய துறைகள் மற்றும் தொழில்கள் அழியும். இவை தொடர்ந்து நடக்கும் மாற்றங்கள். இவை ஒழுங்காக, இயல்பாக நடந்த நாடுகள் படிப்படியாக வளம் பெற்று முன்னேறிய நாடுகளா மாறின. சமீபத்திய உதாரணங்கள் : ஜப்பான், தைவான், தென்.கொரியா, ஹாங்காங் போன்றவை. நாம் சொதப்பிவிட்டோம்.//
டெக்னாலஜி வளர்ச்சியை வைத்து சிறு உற்பத்தி யாளன் முடிவுக்கு
சமாதானம் சொல்லாதீரும்
விட்டா மோட்டார் சைக்கிள் வந்ததால் மாட்டு வண்டி போச்சுன்னு விவாதம் செய்வீரோ
கொஞ்சம் லாஜிக்கா பேசினா பேச முடியும் இல்லன்னா
///பொருளாதார மந்தங்கள் அடுத்தடுத்து, மோசமாகும். நிகர உபரி மதிப்பு குறைந்து, லாபம் குறைந்து, முதலாளித்வ அமைப்பே இறுதி அழிவை அடையும் என்ற மார்ஸ்சின் கணிப்பு பொய்த்துவிட்டதுதான். பொருளாதார மந்தங்களின் progression பற்றிய அவரின் கணிப்பை பற்றி தெளிவாக பேசுங்கள் முதலில். தொழிலாளர்களின் கூலி மற்றும் வாழ்க்கை தரம் படிபடியாக மிக மோசமாகும் என்றார். உபரி மதிப்பு என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாக வைத்து அனுமானித்தார். ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இன்று தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மிக உயர்ந்தே உள்ளது.//
எங்க உயர்ந்து உள்ளது அப்போ ௨௦ பவுன் நகையை வாங்கி ஒரு பெண்ணை ஒருமனிதன் திருமணம் செய்ய முடிந்தது இன்று ௨ பவுன் வாங்க முடியுதா உங்கள மாதிரி முதலாளிக்கு வேணா உயர்ந்து இருக்கும்
// எப்படி ? மார்க்ஸ் கண்ட மே.அய்ரோப்பிய தொழிலாளர்களின் நிலை இன்று பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் அவர் அதற்க்கு மாற்றான அனுமானத்தை தான் டாஸ் கேபிடலில் எழுதினார். உபரி மதிப்பு என்ற் அஸ்திவாரத்தை, கருத்தாக்கத்தை கொண்டே அவரின் சித்தாந்தம் கட்டமைக்கப்பட்டது. அவை பொய்க்கப்பட்டதால் தான் அவற்றின் அடிப்படையான உபரி மதிப்பு என்பது மாயை என்று சொன்னேன்.//
ஆரம்பகால உற்பத்தி முறைகளில் இருந்து முதலாளித்துவ உற்பத்தி முறை வரை விவரித்து வரும் மார்க்ஸ் வெறும் லாபம் என சொல்லி
செல்வ உற்பத்திக்கு எந்த ஒரு விளக்கமும் தரமுடியாது பொருளாதார
மேதைகளுக்கு உபரிதான் செல்வ உற்பத்திக்கு காரணம் என்றார்
நான் சொன்ன பல விசயங்களுக்கு நீங்கள் இன்னும் வாயே திறக்க வில்லை
சமமதிப்புள்ளவை பரிமாற்றி கொள்ளப்பட்டால் உலகின் செல்வம் எப்படி அதிகரிக்கும்
உழைப்பு தான் உபரியின் தோற்று வாய் கூலி கொடுக்கப்படாத உழைப்புதான் என்பதற்கு மாறாக அது மாயை என்பதற்கு என்ன சரியான
விளக்கம் தரப்பட்டு உள்ளது உங்களால்
இதைத்தான் உளறல் என்றேன்
////அதற்கு காரணம் இந்தியாவில் நீங்கள அடிக்கடி சொல்லும் அமெரிக்க பா
ணி பொருளாதார கட்டமைப்பு இல்லாமையால் இந்தியா மீண்டது மாறாக சிகாகோ பாய்ஸ் சொன்ன பொருளாதாரத்தை பின்பற்றி சிதைந்து போன நாடுகளின் கதி என்ன////
இல்லை. மிக தவறான வாதம். Indian banking sector is well regulated and lending norms are strict here, while it was the opposite in USA. Nothing to do with nationalization of Indian Banks. The private Indian banks too were not affected. The point is good regulation and lack of sofestication of Indian debt market unlike US markets. பொருளாதார மந்தம் பற்றி ஆங்கிலத்தில் யான் எழுதிய பதிவுகள் :
சிகாகோ பாய்ஸ்களின் பரிசோதனை மிக வெற்றிகரமாக சிலே நாட்டில் தான் நடத்தப்பட்டது. 1973இல் உண்மையில் சிலேவின் பொருளாதாரம் சிதைந்தது. சிகாகோ பாய்ஸின் கொள்கைகாள படிப்படியாக மீண்டது. அதைவிட முக்கியமாக சர்வாதிகார ஆட்சியை அழித்து, ஜனனாயக ஆட்சிக்கு வழி வகுத்தது. இன்று சிலே மற்றும் பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளில், 40 ஆண்டுகளுக்கு முன்பு முயலப்பட்ட இடதுசாரி பொருளாதார கொள்கைகளை யாரும் முன்மொழிவதில்லை. கடுமையான பாடம் கற்றுக்கொண்டனர். புரட்சி பற்றி அன்று இருந்து வேகம் மற்றும் கோசங்கள் இன்று இல்லை. காரணம் வரலாற்று பாடங்கள். பெருவில் டீ சாட்டோ என்று பெரும் மேதையில் வழிகாட்டுதலில், நாட்டின் பொருளாதார கொள்கைகள் மாற்றி அமைக்கபட்டு, இன்று நல்ல நிலையில் உள்ளது. யாரும் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த ‘பாதைகளை’ நோக்கி மீண்டும் செல்ல போராடவில்லை. மேலும்…
மதிப்பு பற்றிய தங்களது மதிப்பீட்டை படித்தேன். சட்டை எடுக்க போனேன். குரோக்கடைல் சர்ட் ஒன்று மாத்திரம் 2600 ரூபாய்க்குதான் இருந்து. இதுதான் குறைந்த ஒன்று. தைத்து எடுத்த சட்டைக்கு ஆன செலவு அதாவது தனி பீசு ஒன்றுக்கு மொத்தமாகவே 460 ரூபாய் வந்த்து. ஒருவேளை தரம் இருக்கும்னா கூட இன்னொரு 460 ரூபாய் வச்சுக்கோங்க• நிறைய பீசு அடிக்குற குரோக்கடைல் ஏன் குறைவான காசுக்கு சட்ட விக்கல•.. அப்புறம் மதிப்புக்கிடையில் வித்தியாசம் ரூபாயில் எப்படி நேர்ந்த்து என விளக்க முடியுமா..
முட்டாள்கள் முதலாளிகளாக இருந்து மேலாளர்கள் மூளை உழைப்பை செலுத்தும் இடங்கள்தான் அதிகம். ஒருவேளை குறைவு என்றாலும் அந்த இடத்தில் இலாபம் மேலாளருக்குத்தானே செல்ல வேண்டும். என் செல்லவில்லை.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அதில் உள் கட்டமைவில் சிறப்பாக இருந்தாலே போதும் என்ற தங்களது வாதம் சந்தை என்ற ஒன்றைப் புறக்கணிக்கிறது. இது தவறானது. முதலாளிகள் தோற்பதற்கு உதவ கூடியது. சந்தையை கவனிக்க முதலாளிகள் எப்பொழுதும் ஆட்களையும் வைத்து அல்லது அவர்களே சிந்தித்து செயல்படுவது வாடிக்கைதான். உதாரணம் சென்னை சரவணா ஸ்டோரை எடுத்துக் கொள்வோம். விலை குறைவு என்ற சந்தையின் விருப்பத்தை கண்டறிந்து செயல்படும் அவர்கள், அதனை கைவிட்டு விட்டு மேனேஜ்மெண்டை சரியாக வைத்தால் வெற்றி பெறலாம் என்பது சுத்த பேத்தல் இல்லாம என்னது.
ஆம். எல்லா மதிப்புகளுமே தனித்து இயங்குவதில்லை. முதலாளிய நாடுகளில் விவசாயத்திற்கு தரப்படும் மானியங்களும் நமது நாட்டில் விவசாயிகளின் தற்கொலையும் தெரிந்த பிறகும், 20 ரூபாய் சராசரி வருமானத்தில் 80 சதவீத மக்களை பெற்ற தேசத்தில் ஒரு நாள் கூலியில் ஜட்டி கூட வாங்க முடியாது. அது என்னங்க சட்டை தான் வாழ்க்கை தரத்தை எடைபோட அளவுகோலா.. கொஞ்சம் லாஜிக் ஆக திங்க பண்ண பாருங்க•. உணவு, மருத்துவம், உறைவிடம், உடை, கல்வி இந்த வரிசை அவ்வளவாக சரியில்லையா..
ஏர் போய் டிராக்டர் வந்த்து அறிவியல் முன்னேற்றம். பெவண்டா போய் கோக் வந்த்து முன்னேற்றம் இல்ல, ச்ந்தை அபகரிப்பு, தேசத்தின் நுகர்வு வெறியை தூண்டும் ஒரு நடவடிஃக்கை. நிலத்தடி நீரை எடுத்து விற்பனை பொருளாக்கிய நிலைமை பெவண்டா காலத்தில் இல்லை. லிட்டர் 5 பைசாவுக்கும் குறைவாக அரசிடம் பெற்று, எந்த அறிவியல் முறைப்படியும் சுத்தம் செய்யாமல் 12 ரூபாய்க்கு பாட்டிலில் அடைத்து விற்பதற்கு முதலாளிக்கு தேவைப்படும் அறிவை நினைத்தால் புல்லரிக்கிறது. அயோக்கியத்தனமே அறிவாளி என்னும் தேசத்தில் அதியமான் நெல்லிக்கனி தராவிட்டாலும் பரவாயில்லை. கழுமரத்தை தேசத்திற்கு காட்டுவது எப்படி சரி.
ஜெர்மனியில் புரட்சி முந்திக் கொள்ளும் என்று கூடத்தான் கம்யூனிஸ்டு மெனிபாஸ்டோவில் எழுதினார் மார்க்ஸ். அதனை அனுமானம் என்றுதான் புரிந்து கொள்கிறோம். ஜோதிடம் போல அதனை எடுத்துக் கொண்டிருந்தால் உங்களைப் போலவே மார்க்சு தப்பாக கணித்தி விட்டார். எனவே குரு தவறாக கணித்து விட்டது. குரு தப்பு அப்படினு பிதற்றிக் கொண்டிருப்போம். மேற்கு ஐரோப்பாவை உதாரணத்திற்உக எடுத்துக் கொள்ளும் தங்களுக்கு அதனை விட அதிக தொழில் வளர்ச்சி அடைந்துள்ள ஆசிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத்ரம் ப்ற்றி ஒப்பிட ஒன்றுமில்லையா… இந்திய விதர்பா விவசாயிகளை கொன்றோழித்த நிலை ப்றிற சொல்ல ஒன்றுமில்லையா..
அலண்டே ஐ கொன்றது அந்த நாட்டின் தாமிர சுரங்கங்களை கைப்பற்றுவதற்காகத்தான் என்பது ஊரறிந்த ரகசியம். ஊர அடிச்சு உலையில போட்டவன் கூட சொல்லு வதற்கு கூசும் இந்த நியாயப்படுத்தலை பேசுவதற்கு வாங்குவதற்கு மேல கூவுறது அவ்வளவு நல்லாயில்ல
//ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அதில் உள் கட்டமைவில் சிறப்பாக இருந்தாலே போதும் என்ற தங்களது வாதம் சந்தை என்ற ஒன்றைப் புறக்கணிக்கிறது. இது தவறானது. முதலாளிகள் தோற்பதற்கு உதவ கூடியது. சந்தையை கவனிக்க முதலாளிகள் எப்பொழுதும் ஆட்களையும் வைத்து அல்லது அவர்களே சிந்தித்து செயல்படுவது வாடிக்கைதான். உதாரணம் சென்னை சரவணா ஸ்டோரை எடுத்துக் கொள்வோம். விலை குறைவு என்ற சந்தையின் விருப்பத்தை கண்டறிந்து செயல்படும் அவர்கள், அதனை கைவிட்டு விட்டு மேனேஜ்மெண்டை சரியாக வைத்தால் வெற்றி பெறலாம் என்பது சுத்த பேத்தல் இல்லாம என்னது.//
மணி ,
அதியமான் இதெற்கெல்லாம் பதில் சொல்லவே இல்லை பார்த்தீர்களா
நீங்கள் குறிப்பிடும் நாடுகளில் ஊழல் நடக்கவில்லை என உங்களால் உறுதி கூற முடியுமா.
ஐனநாயக்ம் னா என்ன• இப்போ கொஞ்சம் பேரு கஷ்டப்படுறாங்க, கொஞ்சம் பேரு வசதியா இருக்காங்கனு கூட வச்சுக்குவோம். இவங்களுக்குள்ள ஜனநாயகம் இருக்கணும்னா இரண்டு பேரையையு சம்மா அதாங்க ஜனநாயகமா பாவிச்சா வசதியானவன் மாத்திரம்தானே வெல்ல முடியும். ஏற்கனேவை முடிவு செய்யப்பட்ட இந்த ரிசல்ட ஜனநாயகம்னு சொன்னா எப்படி சிரிக்காம இரிக்க முடியும்.
நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வாரன் ஜனநாயக பூர்வமா ஒன்னா கலந்து ஊதி ஊதி சம்மா பிரிச்சு சாப்பிடலாம் அப்படினு நான் சொன்னா நீங்க ஒத்உதக்குவீங்களா
உலகு தழுவிய முதலாளிகளால் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்புப் பண விபரங்கள் அடங்கிய சிடி ஒன்று ஏலத்திற்கு வந்தபோது ஜெர்மனிய அரசு 2.5 மில்லியன் யூரோ வரை கொடுத்து அந்த சிடியை வாங்குகிறது. இது ஜெர்மனியின் முதலாளிகளாலும் அரசியல்வாதிகளாலும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அன்றி வேறென்ன.
”புதிய டெக்னாலஜிகள், புதிய துறைகள் உருவாகும். சில பழைய துறைகள் மற்றும் தொழில்கள் அழியும். ”
பழைய டெக்னாலஜியை பயன்படுத்தி உழைத்தவர்களிடமே புதிய டெக்னாலஜியைப் பயன்படுத்தும் வசதியை செய்துகொடுக்கவேண்டும். ஏர் போய் டிராக்டர் வரலாம் ஆனால் அந்த டிராக்டர் ஏற்கெனவே ஏரை பயன்படுத்திய உழவனின் உழைப்புக் கருவியாக இருக்கவேண்டும்
/////ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அதில் உள் கட்டமைவில் சிறப்பாக இருந்தாலே போதும் என்ற தங்களது வாதம் சந்தை என்ற ஒன்றைப் புறக்கணிக்கிறது. இது தவறானது. முதலாளிகள் தோற்பதற்கு உதவ கூடியது. சந்தையை கவனிக்க முதலாளிகள் எப்பொழுதும் ஆட்களையும் வைத்து அல்லது அவர்களே சிந்தித்து செயல்படுவது வாடிக்கைதான். உதாரணம் சென்னை சரவணா ஸ்டோரை எடுத்துக் கொள்வோம். விலை குறைவு என்ற சந்தையின் விருப்பத்தை கண்டறிந்து செயல்படும் அவர்கள், அதனை கைவிட்டு விட்டு மேனேஜ்மெண்டை சரியாக வைத்தால் வெற்றி பெறலாம் என்பது சுத்த பேத்தல் இல்லாம என்னது./////
மணி,
இதுதான் உங்க ’புரிதலா’ ? எனது பதிவுகளில் இருந்து இப்படி அர்த்தபடுத்திக் கொள்பவரிடம் என்ன பேசுவது ? Try to read about Management and entrepreunership.
///20 பாய் சராசரி வருமானத்தில் 80 சதவீத மக்களை பெற்ற தேசத்தில் ஒரு நாள் கூலியில் ஜட்டி கூட வாங்க முடியாது.///
இந்த 20 ரூபாய் கூலியில் 80 சத மக்கள் வாழ்வது மகத்தான பொய். அப்படினால் வறுமைகோட்டிற்க்கு மிக கீழே 80 சதவீதம் வாழ்கின்றனரா ? ரூ.20 தினக் கூலி வாங்குபவர்களை காட்டுங்க பார்க்கலாம் ? முக்கியமாக தமிழகத்தில்.
இந்த சுட்டியையும் பார்க்கவும் :
Er. . . just how poor is India?
http://www.rediff.com/money/2008/sep/04poor.htm
கலை,
ஊழல் 100 சதவீதம் இல்லாத நாடு எங்கும் இல்லை. 100 % perfect ஆன மனிதனோ, அமைப்போ, சித்தாந்தமோ எதுவும் இல்லை. நடைமுறையில் சாத்தியமில்லை. ஜெர்மனி போன்ற நாடுகளில் வரி விகிதம் 40 சதத்திற்க்கும் அதிகம். Mis management of economy by govts and over spending creates high tax rates. And humans will try to evade taxes that they consider to be unfair and too high. அந்த சுவிஸ் வங்கி பணங்கள் வரி ஏய்ப்பினால் உருவானவை. ஊழலிலனால் அல்ல. அங்கு இந்தியா அளவிற்க்கு ஊழல் இல்லை. வரி ஏய்ப்பை நியாயப்படுத்தவில்லை. ஆனால் அதை தவிர்க்க வரி விகிதத்தை முடிந்தவரை குறைப்பதே வழி. இல்லாவிட்டால் நேர்மை குறைந்து, வரி ஏய்ப்பு அதிகரிக்கவே செய்யும். அல்லது கருப்பு மார்க்கெட் உருவாகும். இது பற்றிய ஒரு முக்கிய சுட்டி :
http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html
கார்ல் மார்க்ஸ்,
முதலில் மரியாதையா பேச கற்றுக்கொள். வினவு இத்தனைதூரம் சொல்ல்யும் திருந்தாத ஜென்மம் நீர்.
////நிர்வாகதிறமை உபரிங்கிறது சரியா பதில் சொன்னா முதலாளி இல்லாமலே கம்பெனி நடக்கும் அளவுசமூக உழைப்பு மாறிவிட்டதுன்னு சொன்னா அதனை அவன் காண் விடல் என டாபாய்கிறது உங்கள் வாதம் வழுவற்று போவதை காடுகிறது அதியமானே////
பெரும் நிறுவனங்களை உருவாகி நடத்தும் ‘முதலாளிகள்’ (தொழில்முனைவோர் என்பதே சரியான சொல். முதலாளி என்பது கெட்ட வார்த்தையாகிவிட்டது இங்கு)
அனைத்து நிர்வாக வேலைகளையும் தாங்களே செய்ய முடியாது / கூடாது. ஆனால் துறை நிர்வாகிகளை கண்காணித்து வேலை ஒழுங்காக நடக்கிறதா என்று தொடர்ந்து கண்காணித்து, தவறுகளை திருத்தி, மேம்பட ’உழைக்க’ வேண்டியிருக்கிறது. ஒரு நிர்வாக இயக்குனர் சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் ‘உழைக்கிறார்’ என்று அறியாதவர் நீர். 12 மணி நேரம் உழைக்கும் M.Ds and CMDs கள் பற்றி அறிவேன் நான். மத்திய அளவு நிருவனங்களில் அதை விட அதிக நேரம் உழைக்கும் தொழில்முனைவோர்களை பற்றி கேள்விப்பட்டதுண்டா ?
சரி, முதலாளிகளை ஒழித்துவிட்டு, அனைத்து நிறுவனங்களையும் பொது உடைமையாக்கி, சோசியலிச பாணியில் மாற்றும் பாருங்களேன். உடனே அதன் விளைவுகள் தெரியும். அரசு பொதுத்துறை நிறுவனங்களில் முதலாளிகள் இல்லை. அவற்றின் உற்பத்தி திறன், ஊழல், பொறுப்பற்ற தனம் மற்றும் பல ஓட்டைகள் பற்றி அனுபவத்தில் பார்க்கிறோம்.
//// சின்ன முதலாளி எங்க போனான் உங்களை தவிர அனேகம் சின்ன உற்பத்தி நடந்து வந்ததது அதெல்லாம் எங்கே என கேட்டால் பதில காணோம்///
1991அய் விட இன்று சிறுதொழில் துறை மிக அருமையாக வளர்ந்துள்ளது.
அன்று இருந்த நிலை பற்றி அறியாமையில் உள்ளீர். சிறு தொழில்கள் அழியவில்லை. மாறாக மிக அதிக்ம் வளர்ந்துள்ளது. சிறுதொழில் சங்கம் ஏதாவது அப்படி புலம்பியது பற்றி கேள்வி பற்றிருக்கோமா என்ன ?
150 ஆண்டுகளுக்கு முன் உலக தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மிக மிக கொடுமையாகத்தான் இருந்தது. இன்று பல விசியங்களை take it for granted ஆக் கொள்கிறோம். அன்று நினைத்து கூட பார்க்க முடியாது. மார்க்ஸின் அனுமானப்படி படிப்படியாக இன்னும் மோசமாகியிருக்க வேண்டும். தொழிலாளர்களின் ’உபரி மதிப்பு’ குறைந்து கொண்டே போவதால், அவர்கள் நிலையும் மிக மோசமாக மாறும் என்றார்.
ஆனால் நடந்தது வேறு..
அதியமான் ,
அப்போ என்பதை அப்பூ என விழுந்து விட்டது மாறாக இது மரியாதை குறைவான சொல் என்று யார் சொன்னது
மேலும் உங்களை மரியாதை இன்றி பேச சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னும் கேவலமாக பேசுவேன் இதுக்காக டென்சனாகிடாதீங்க
முதலாளி தொழிலாளிக்குள்ள இதெல்லாம் சகஜம்தானே
நீங்க எத்தனை தொழிலாளிய திட்டுறீங்க தினமும்
பொது தளத்தில் நான் கொஞ்சம் திட்டிகிறேன் 🙂
( சும்மா காமெடி)
நான் கேட்ட எந்த கேள்விக்கும் அல்லது எதிர்வாதத்துக்கும் உங்களிடம் பதில் இன்னும் வரவில்லையே
மாயை என்றீர் பிறகு முதலாளியின் உழைப்பு சொல்லாமல் மார்க்ஸால் விடப்பட்டது என்றீர்
இன்னும் சரியான விளக்கம் தரவில்லை நீர்
//150 ஆண்டுகளுக்கு முன் உலக தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மிக மிக கொடுமையாகத்தான் இருந்தது. இன்று பல விசியங்களை take it for granted ஆக் கொள்கிறோம். அன்று நினைத்து கூட பார்க்க முடியாது. மார்க்ஸின் அனுமானப்படி படிப்படியாக இன்னும் மோசமாகியிருக்க வேண்டும். தொழிலாளர்களின் ’உபரி மதிப்பு’ குறைந்து கொண்டே போவதால், அவர்கள் நிலையும் மிக மோசமாக மாறும் என்றார்.
ஆனால் நடந்தது வேறு..//
அதெல்லாம் சன் டிவியில் காலையில் சொல்லும் சோசசியம் மாதிரி இல்லைங்கோ
தொழிலாளர்களின் வேலைநேரத்தை அதிகரிப்பதன் மூலம்
அவர்களை மேலும் மேலும் ஓட்டாண்டிகளாக மாற்றும் போக்கும்
விவசாயிகளை ஏதுமற்றவர்களாக ஓட்டாண்டிகளாக மாற்றுவது
இந்தியாவில் கண்கூடாக தெரியவில்லை சென்னையில் ரோட்டில்
படுத்து கிடப்பவர்கள் எல்லாம் யாராக இருக்க கூடும்
அவர்களது வீடுகளை பிடிங்கியது சோசலிசமா இல்லை கம்யூனிசமா
பாழாய் போன முதலாளித்துவம் தானே
/// சரி, முதலாளிகளை ஒழித்துவிட்டு, அனைத்து நிறுவனங்களையும் பொது உடைமையாக்கி, சோசியலிச பாணியில் மாற்றும் பாருங்களேன். உடனே அதன் விளைவுகள் தெரியும். அரசு பொதுத்துறை நிறுவனங்களில் முதலாளிகள் இல்லை. அவற்றின் உற்பத்தி திறன், ஊழல், பொறுப்பற்ற தனம் மற்றும் பல ஓட்டைகள் பற்றி அனுபவத்தில் பார்க்கிறோம்.///
k.r.a அவர்களுக்கு
நீங்கள் முதலில் கார்ல் மார்சை நன்றாக படியுங்கள் அவர் கனவு கண்ட உலகம் வேறு அரசு நிறுவனங்கள் மக்கள் நலனுக்காக மட்டுமே ஏங்குகின்றன என்பதை உணர்த்த சொன்னார் மக்களை அரசியல் படுத்த சொன்னார் அப்போது அரசாங்கத்தில் உழல் இருக்காது புரிகிறதா
//// //Economy of scale என்று ஒன்று உண்டு. பெரிய தொழிற்சாலைகளில், பெரிய அளவில், நவீன முறைகள் உற்பத்தி செய்யப்பட்டால் தான் உற்பத்தி விலை குறைந்து, மிக மலிவாக, மிக அதிகாமக பொருட்கள் கிடைக்கும்.
முக்கியமாக உணவு, உடை, மற்றும் பல்லாயிரம் பொருட்கள். கார்பெரெட் பெரும் பண்னைகள் உருவான வளர்ந்த நாடுகளில் உணவு விலை மிக மிக குறைவு. Food costs are dirt cheap in developed nations wih mega corporate farms, while they are too costly in nations like India where modern, corporate farms are not allowed. ஜவுளி உற்பத்தியிலும் இதே கதை தான்//.
தவறு அப்படி இருந்தால் இந்தியாவில் இருந்து ஒரு பனியன் கூட அமெரிக்காவுக்கும் மத்திய ஐரோப்பாவுக்கும் போகாது அங்கே கூலி கொடுக்க முடியாமத்தான் திருப்பூருக்கு ஆடர் போகுதுங்கோ/////
உணவின் விலை வளர்ந்த நாடுகளில் மிக மிக குறைவு. எப்படி என்று விளக்கமளிக்காமல் சும்மா கதை பேசுகிறீர். அங்கு மிக அடினிலையில் பணி புரியும் கடை நிலை தொழிலாளர்களின் மாத சம்பளத்தில், உணவிற்க்கு செலவிடும் தொகை அல்லது விகிதம் மிக மிக குறைவு. எப்படி ? (அங்கு உறைவிடம் மற்றும் மருத்துவ செலவுகள் அதிகம் என்பது வேறு விசியம்).
//உணவின் விலை வளர்ந்த நாடுகளில் மிக மிக குறைவு. எப்படி என்று விளக்கமளிக்காமல் சும்மா கதை பேசுகிறீர். அங்கு மிக அடினிலையில் பணி புரியும் கடை நிலை தொழிலாளர்களின் மாத சம்பளத்தில், உணவிற்க்கு செலவிடும் தொகை அல்லது விகிதம் மிக மிக குறைவு. எப்படி ? (அங்கு உறைவிடம் மற்றும் மருத்துவ செலவுகள் அதிகம் என்பது வேறு விசியம்).//
அங்கு உபரி மாயையாகிவிட்டது
////ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அதில் உள் கட்டமைவில் சிறப்பாக இருந்தாலே போதும் என்ற தங்களது வாதம் சந்தை என்ற ஒன்றைப் புறக்கணிக்கிறது. இது தவறானது. முதலாளிகள் தோற்பதற்கு உதவ கூடியது. சந்தையை கவனிக்க முதலாளிகள் எப்பொழுதும் ஆட்களையும் வைத்து அல்லது அவர்களே சிந்தித்து செயல்படுவது வாடிக்கைதான். உதாரணம் சென்னை சரவணா ஸ்டோரை எடுத்துக் கொள்வோம். விலை குறைவு என்ற சந்தையின் விருப்பத்தை கண்டறிந்து செயல்படும் அவர்கள், அதனை கைவிட்டு விட்டு மேனேஜ்மெண்டை சரியாக வைத்தால் வெற்றி பெறலாம் என்பது சுத்த பேத்தல் இல்லாம என்னது.//
மணி ,
அதியமான் இதெற்கெல்லாம் பதில் சொல்லவே இல்லை பார்த்தீர்களா/////
Market analysis, Marketing and Sales promotion : இவைகளும் Business Management இன் கீழ் அடங்கும். இதை கூட ‘விளக்கி’ சொல்ல வேண்டுமா ? இத்தனை அறியாமையில் இருப்பவர்ளிடம் விவாதம்… சந்தை பொருளாதார அமைப்பை தான் தொடர்து வழிமொழிகிறேன். சந்தையை புறக்கணிகிறேனா ? என்னத்த சொல்லறது இனி ?
////இந்தியாவில் கண்கூடாக தெரியவில்லை சென்னையில் ரோட்டில்
படுத்து கிடப்பவர்கள் எல்லாம் யாராக இருக்க கூடும்
அவர்களது வீடுகளை பிடிங்கியது சோசலிசமா இல்லை கம்யூனிசமா
பாழாய் போன முதலாளித்துவம் தானே////
இந்தியா வளர்ந்த நாடாக மாறியிருக்க முடியும். இந்திய பாணி சோசியலிசம் தான் நம் சீரழிவிற்கு காரணம். இவை பற்றி பல முறை எழுதியாயிற்று.
இந்தியாவில் உள்ள வறுமை அளவு குறைந்த விதம் பற்றி :
http://epw.in/epw/uploads/articles/14445.pdf
அது சரி அதியமான்,
உபரி மாயை எப்படி எனபதையே இன்னும் சரியாக விளக்காமல் எங்கெங்கோ ஓடிக்கொண்டு இருக்கிறீர்
௧.உபரி மாயை – எதனால் அது தொழில் முனைவோனின் உழைப்புதான்
உபரியாக வருகிறது
நீங்கள் முதலில் சொன்னது
௨. உபரி மாயை – எதனால் என்றால் உபரியில் தொழில் முனைவோனின்
உழைப்பை சேர்க்க மார்க்ஸ் தவறி விட்டார்
இரண்டாவது அடித்த பல்டி
௩.உபரி மாயை – எதனால் என்றால் தொழிலாளிகளின் உபரி (அதுக்கு பேரு சம்பளம்ங்க முதல்ல சம்பளம் என்றால் என்ன உபரி என்றால் என்ன வென்பதை நல்லா படிச்சுட்டு வாங்க) குறைந்து கொண்டே வந்து முதலாளித்துவம் அழியும் என மார்க்ஸ் சொல்லி இருக்கார் 150வருடம் ஆச்சு இன்னும் ஒன்னும் நடக்கவில்லை அதனால் உபரின்னு ஒன்னும் இல்லை
இது மூன்றாவதாக நீங்கள் சொல்வது
இப்படி ஒரு தெளிவில்லாமல் இருக்கும் உங்களிடம் என்னத்தை விவாதித்து என்னத்த செய்யறது
அடிப்படை கேள்விக்கு முதலில் பதில் சொல்லும் முடியாவிட்டால் நல்லா படிச்சு விட்டு தெரிந்த தோழர்களிடம் கேட்டுவிட்டு வாரும் பேசுவோம்
பிழையான ஒரு பாட்டுக்கு பரிசு தரமுடியாது
கே. ஆர். எ .அவர்களே! “சோஷலிச அமைப்பை சோவியத் ரஷியாவிலும் ………………………….முயன்று பார்த்து தோல்வி அடைந்ததை அறிந்திருப்பிர்கள்” என்று சொல்கிறிர்கள் ,சோசலிசம்(மார்க்சிய) தோல்வி அடைந்து விட்டதாக கம்யுனிஸ்டுகள் யாரும் சொல்லவில்லை .மார்க்சியத்தை புரிந்து கொண்டவர்கள் அப்படி சொல்ல முடியாது. .மேற்குலக முதலாளிகள்தான் அவ்வாறு மூச்சு விடாமல் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.சோசலிசம் தோற்றுவிட்ட பின் என்ன வாழ்ந்து கொண்டிருக்கிறதாம்?இன்றைய உலக முதலாளிகளின் முகவிலாசம் என்ன என்று கற்றறிந்த நண்பராகிய உங்களுக்கு நான் விளக்கத் தேவை இல்லை .நீங்கள் சொல்லுகிறபடி மெல்ல மெல்ல எல்லோரும் நல்வாழ்வு வாழும் காலம் வரும் .மன்மோகன் போன்ற உத்தமர்கள் நிறைய தோன்றுவார்கள்.அப்போது முதலாளிகள் மட்டும் தான் இருப்பார்கள்.உழைக்கும் மக்கள் அனேகமாக கொன்று ஒழிக்கப்படுவார்கள். இது தான் முதலாளிகளின் சோஷலிச திட்டம்.இன்றே அதுதான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. நீங்களும் உங்களைப்போன்றவர்களும் அவர்களுக்கு ஒத்துழைக்கலாம்..ஆனால் மார்க்சியவாதிகள் ஒத்துளைக்கமட்டார்கள்.நீங்கள் காத்திருக்கும் நேரத்தில் பாட்டாளி மக்கள் முதலாளி வர்க்கத்தை அடக்கி விடுவார்கள் .உழைக்கும் வர்க்கம் இழப்பதற்கு எதுவும் இல்லாதது.இது வெறும் பொருளாதாரம் அல்ல; அரசியல்; அறிவியல்.
நன்றி மலையப்பன் அவர்களே
“.நீங்கள் சொல்லுகிறபடி மெல்ல மெல்ல எல்லோரும் நல்வாழ்வு வாழும் காலம் வரும் .மன்மோகன் போன்ற உத்தமர்கள் நிறைய தோன்றுவார்கள்.அப்போது முதலாளிகள் மட்டும் தான் இருப்பார்கள்.உழைக்கும் மக்கள் அனேகமாக கொன்று ஒழிக்கப்படுவார்கள். இது தான் முதலாளிகளின் சோஷலிச திட்டம்.இன்றே அதுதான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ”
முட்டாள் தனமான வாதம். உழைக்கும் மக்கள் ஒழிக்கப்படி மாட்டார்கள். உழைக்கும் மக்கள் இல்லாமல் முதலாளி வர்க்கம் இல்லை.
கட்டுரையின் சாரம் நன்றாக இருக்கிறது கேரளத்ததில் ஓட்டல்களுக்கு வணிக விடயமாக சென்று பலமுறை ருசியான மாட்டுக்கறியை சாப்பிட்டுள்ளேன் அங்குள்ள சப்ளையர்கள் ரொம்ப மரியாதையா வேட்டி சட்டை கட்டிகிட்டு படிமானமா சர்வீஸ் பண்றாங்க கேரளான்னாலே ஓட்டல் கடையும் சப்பளையர்களின் கனிவான உபசரிப்பும் (கூடவே பீப்) நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை, அப்படிபட்ட தொழிலாளிகளை குறைகூறுவது மேட்டிமை திமிர் அல்ல பார்ப்பன கொழுப்பு என்பதுதான் சரியானது என்பது என் தனிபட்ட கருத்து.
//இதிலேயே முக்கால்வாசி இந்துக்கள் அவுட். அப்புறம் மீனவர் குடிசை முன்பு கருவாடும், கோனார் வீட்டு முன்பு ஆட்டுப்புழுக்கைகளும், கறிக்கடை தேவர் வீட்டு முன்பு உப்புத் துண்டமும், சென்னை சேரி மக்களின் குடிசை முன்பு குழந்தைகளின் கக்காவும், விவசாயி வீட்டு முன்பு சாணமோ, தானியமோ இருக்கும். ஐயர் வீட்டு முன்புதான் துளசி மாடம் இருக்கும்.// அதென்ன ஐயர்,
பார்ப்பனர் என்று எழுதுவதுதான் சரிநம் அமைப்பிலேயே பார்ப்பனர் என்றுதான் பயன்படுத்த சொல்கிறார்கள்,
அதியமான்,
///ஆனால் நடைமுறையில் தொழில்முனைவோரின் ‘உழைப்பும்’ சேர்ந்தே நிகர மதிப்பு உருவாகிறது. தொழில் முனைவோரின் ’மூளை உழைப்பு’ பற்றி சரியான மதிப்பிட்டை மார்க்ஸ் அனுமானிக்க தவறிவிட்டார். ///
சரி அந்த உழைப்பையும் கணக்கில் கொண்டு தொழில்முனைவோரும் ஒரு சம்பளத்தை எடுத்து கொள்ளலாம் அல்லது குறிப்பிட்ட பண்டத்தை உருவாக்குவதில் பங்கு வகித்த அனைவரும் லாபத்தை சமமாக பங்கிட்டு கொள்ளலாமே? ஏன் முதலாளி மட்டும் மிக அதிகமாக எடுத்து கொண்டு தொழிலாளர்களுக்கு மிக குறைந்த கூலியை அளிக்க வேண்டும்?
உழைப்பு என்பதில் உடல் உழைப்பு முளை உழைப்பு என்று மார்க்ஸ் பிரித்து பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. மேற்பார்வையிடும் முதலாளியின் முளை உழைப்பை (மேலதிகமாக தொழிலாளர்களை சுரண்ட உழைக்கும் அவர்கள் மூளையையும்) அவர் சரியாகவே அவதானித்து இருப்பார்! பண்டங்களின் பயன் மதிப்பை தவிர்த்து விட்டு பார்த்தால் உழைப்பை தவிர அங்கு எஞ்சி இருப்பது என்ன எனும் அதார கேள்வியை நீங்கள் மட்டும் அல்ல எந்த கொம்பனும் இனி உடைக்க முடியாது. need-demand-supply என்று எவ்வளவு வியாக்கியானம் குடுத்தாலும் இறுதியில் ஒரு பண்டத்தின் மதிப்பு உழைப்பினால் (உடலோ-மூளையோ!) மட்டுமே உருவாகிறது என்பதை மிக பெரிய பொருளாதார நிபுனர் ஆன உங்களுக்கு புரிந்து கொள்வதில் என்ன பிரச்சனை?
உதாரணமாக ஒரு தங்க நகையை எடுத்து கொள்ளுங்கள். தங்கத்தை மண்ணில் இருந்து வெட்டி எடுத்த போது அதன் மதிப்பும், பின் சுத்திகரிக்கபட்ட்ட பின் அதன் மதிப்பும், அதில் வேலைபாடுகள் செய்த நகையாய் உருமாறிய பின் அது அடையும் மதிப்பிலும் ஏன் வேறுபாடு இருக்கிறது. முதல் படியில் இருந்து இறுதி வடிவத்திற்கு வரும் வரை ஏன் அதன் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது? ஒவ்வொரு படியிலும் அதன் மீது செலுத்தப்படும் உழைப்பை தவிர வேறு என்ன மாற்றம் நிகழ்ந்து விடுகிறது? demand-supply-rarity of the ore-psychological need-emotional connection (இந்த கர்மம் எல்லாத்தையும் சேர்த்துத்தான் மார்க்ஸ் பயன் மதிப்பு என்று சொல்லிவிடுகிறார்! இது போன்ற பல காரணிகள் எந்த காலத்திலும் தீர்மானமாய் இருக்க போவது இல்லை) அதன் மீது நிகழும் மனித உடல்/ முளை உழைப்பு மட்டுமே அதன் விலையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி கொண்டு செல்கிறது. இதில்தான் முதலாளிகள் நடுவில் புகுந்து உழைப்பை ( ஒரு ‘designer’இன் முளை உழைப்பு மற்றும் கொல்லனின் உடல் உழைப்பு இரண்டையும்) சுரண்டி கொழுக்கிறார்கள்.
அதை மேற்பார்வையிட்டு வேலை வாங்கும் அவன் திறனுக்கு ஏற்ற கூலியை எடுத்து கொள்வதில் எந்த கம்யுனிஸ்ட்க்கும் தடை கிடையாது! தொழில்முனைவோன் எங்கும் வானத்தில் இருந்து குதித்து உருவாகி வரவில்லை, இந்த சமுகத்தில் இருந்தே உருவாகிறான், இந்த சமுகம் ஒரு பெரும் அறிவு களஞ்சியமாக இருந்து அவனுக்கு எல்லாம் கற்று தருகிறது, இந்த சமுகத்தில் இருந்து திருடப்பட்ட அறிவை கொண்டே அவன் எந்த தொழிலையும் முனைய முடியும். ( கிருஷ்ணனின் ‘எதை எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்க பட்டுது…’ என்ற வரிகள் உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்… சட்டென்று நினைவில் வந்தது தவிர்க்க முடியவில்லை! ) அப்படி உள்ள ஒருவர் ஏன் மற்ற மனிதர்களின் உழைப்பை சுரண்டுகிறார் எனும் கேள்விக்கு முதலில் பதில் கூறுங்கள்.
///மதிப்பு என்பது வாங்குபவரின் கோணத்தில் தான் நிச்சியக்கப் படுகிறது. வாங்குபவருக்கு பயன் இல்லாவிட்டால், பெரும் உழைப்பில் உருவான எந்த பெருளுக்கும் மதிப்போ, தேவையோ இருக்காத். உதாரணமாக, பாலைவனத்தில் சிக்கி, குடிநீருக்கு ஏங்குபவருக்கு, ஒரு மர மேசை தேவை படாது. பயன் படாது. அம்மேசையை ஒரு தொழிலாளி எத்தனை பாடுபட்டு, உழைத்து உருவாக்கியிருந்தாலும், அங்கு அதற்க்கு மதிப்பில்லை / தேவையில்லை. அதே போல் தான் அனைத்து பொருட்க்கள் / சேவைகளுக்குமான ‘மதிப்பு’. ///
சரிதான்! யாரும் வாங்க போவது இல்லை எனவே அதற்கு ‘பயன்’ மதிப்பு இல்லை. அனால அந்த பண்டத்தின் (மேசை) சாரமாய் இருக்கும் உழைப்பின் மதிப்பு எந்த காலத்திலும் மாற போவது இல்லை. ஒரு பண்டம் உருவாக்க செலுத்தப்பட்ட உழைப்பை எந்த விதியாலும் திருப்பி எடுக்க முடியாது. ‘பயன்’ மதிப்பு நாள்தோறும், காலந்தோறும், இடம்தோறும் மாறி கொண்டே இருக்கும், ஆனால் ‘உழைப்பின்’ மதிப்பு அப்படி மாற்றம் அடைவது இல்லை. ஒரு சிக்கன் பிரியாணி செய்ய தேவையான முதல் + உழைப்பு + பயன்மதிப்பு எல்லாம் இணைந்து தான் அதன் இறுதி விலையை நிர்ணயம் செய்ய முடியுமே தவிர இத ‘அய்யரு’ சாப்பிட மாட்டாரு (இப்பெல்லாம் சாப்பிட்றாங்க!) எனவே இதற்க்கு ‘பயன்’ மதிப்பு கிடையாது எனவே அதன் விலை ‘ஜீரோ’ (பாலைவன மேசையை ஒத்த அபத்தம் இதுவும்) என நிர்னையிக்கும் உங்கள் மேதமை புல்லரிக்க வைக்கிறது!
இந்த குறிப்பிட்ட பண்டத்தின் equation’இல்
மு + உ = அ என்று வைத்து கொள்வோம்
ப = ௦ எனும் பொழுது
மு + உ + ௦ = அ + ௦ எனவும்
ப = 1 என்றால்
மு + உ + 1 = அ + 1 எனவும்
மாறி கொண்டே இருக்கும்…ஆனால் எக்காலத்திலும் ‘உழைப்பு’ (உ) மாறாது ஏனெனில் அது ஏற்கனவே அந்த பண்டத்தின் ஆக்கத்தில் வினை ஆற்றி விட்டது. இதில் உள்ள ‘முதல்’ (மு) கூட முந்தைய உழைப்பின் உபரியாய் எஞ்சி இருப்பது தானே தவிர புதிய ஆக்கம் அல்ல. இதுதான் பிரபஞ்ச விதி ‘பொருளும் ஆற்றலும் நிலைமாற்றம் பெறுமே தவிர ஆக்கவோ அழிக்கவோ முடியாது’ (matter & energy can neither be created nor destroyed, but can change its state of being). மனிதன் இயற்கையோடு வினையாற்றி உருவாக்கிய எந்த பண்டதிலும் மாறாமல் சாரமாய் இருக்க கூடியது ‘உழைப்பின்’ மதிப்பு மட்டுமே, அனைத்து பௌதிக விதிகளுக்கும் உட்பட்டு! பயன்மதிப்பு என்பது ஒரு மாயை அதற்க்கு ஸ்தூல வடிவம் கிடையாது (உழைப்புக்கு உண்டா என கேட்டு விடாதீர்கள்! ஆற்றலை அளக்கும் பல கருவிகள் நம்மிடம் உண்டு) அதை ஒரு உதாரணமாக வைத்து உங்கள் பேராசிரியரையும் சேர்த்து கொண்டு சும்மா உளராதிர்கள். நீங்கள் பாலைவனத்தில் விட்டு வந்த மேசையை தயவு செய்து திருப்பி எடுத்து வந்து இங்கு எங்காவது விற்று விடுங்கள்!
///ஒரு பொருளின் மதிப்பு என்பது அதை உருவாக்க உழைத்த தொழிலாளியின் உழைப்பின் சாரம் மட்டுமே என்பது மார்கிசிய கருத்து. ///
வேறு எதாகவும் இருக்க முடியாது தோழா! பயன் மதிப்பை ஒரு முதலாளி தான் உருவாக்குகிறார் என்று வைத்து கொள்வோம் (நிஜத்தில் அப்படி அல்ல) அந்த பயன் மதிப்பை கணக்கில் கொண்டு ஊதி பெருக்கப்படும் ஒரு பண்டத்தின் விலையில் மிக பெரிய சமுக சுரண்டலும் நடக்கிறது. ஒரு பண்டத்தின் விலை = முதல் + உழைப்பு + லாபம்(தவறான சொல், இது அந்த தொழில் முனைவோனின் உழைப்புக்கான ஊதியமாக மட்டுமே இருக்க முடியும், எனவே அதுவும் உழைப்பில் தான் அடங்கும், வசதிக்காக இங்கு லாபம் என்று வைத்து கொள்வோம். முதல் என்பதும் உபரி முந்தைய உபரி உழைப்பு என்று நிறுவியாகி விட்டது) என்றிருந்தால் அதற்க்கு ஈடான வேறொரு பண்டத்தை மாற்றீடாக வாங்கி கொண்டு பண்ட மாற்றம் செய்து கொள்ளலாம். தவிர்க்க இயலாமல் ஒரு தொழிலதிபர் ‘முதலி’ல் அதிகமாக கை வைக்க முடியாது, எனவே உழைப்பாளியின் கூலியில் கை வைத்து உழைப்பை சுரண்டுகிறார், பின் தனக்கு லாபம் (தனது உழைப்புக்கு கூலி) என நிர்ணயிக்கும் தொகையை மிக அதிகமாக காண்பித்து மக்களை சுரண்டுகிறார். மக்களின் பணம்* என்பதும் வேறெங்கோ உழைத்து பெற்ற ஊதியம் தான் என புரிந்த பின், ஒரு தொழில் முனைவான் மனித சமுகத்தின் உழைப்பைதான் சுரண்டுகிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என புரிந்து விடும்.
ஒரு பண்டத்தின் மதிப்பு உழைப்பினால் மட்டுமே உருவாக முடியும் அதற்க்கு மேற்பட்டு அதற்க்கு ஏதேனும் மதிப்பு உருவானால் அது சமுக சுரண்டல் ஆகும்.
*பணம் என்பது அருவமான ஒன்று அல்ல, அது ஒரு இடையீடு. மனிதர்கள் தங்கள் உழைப்பின் விளைவாய் உருவாக்கும் பண்டகளுக்கு ஒவ்வொரு முறையும் பண்டமாறறே செய்து கொண்டிருக்க முடியாது என்பதால் ஏற்படுத்தி கொண்ட ஒரு ஏற்பாடு.
மேலும் நீங்கள் குறிப்பிட்டு கொண்டு இருக்கும் பல்வேறு ஐரோப்பிய சமூகங்களில் மக்கள் கடனாளியாகத்தான் தங்கள்வாழ்வை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அடைந்திருக்கும் குறைந்தபட்ச வசதியும் வாழ்வும் முன்றாம் உலகநாடுகளை சுரண்டி கொழுத்ததால் உருவானது. அங்கெல்லாம் உணவு விலை மிகவும் குறைவு என நீங்கள் கூறுவதில் இருந்து உங்கள் பொருளாதார அறிவு என்னை திகைக்க வைக்கிறது. அங்குள்ள சம்பள விகிதத்தொடும் முன்றாம் உலக நாடுகளில் உள்ள விலைகளோடும் ஒப்பிடுகையில் அங்கு உணவின் விலை மிகவும் அதிகம். உலக அளவில் ‘ purchasing power parity’ மற்றும் உணவின் விலையை ஒப்பிட்டு அறிந்து கொள்ள பொருளாதார நிபுணர்கள் உபயோகபடுத்தும் மெக்’டி’யின்
http://en.wikipedia.org/wiki/Purchasing_power_parity
http://en.wikipedia.org/wiki/Big_Mac_Index
விலை பட்டியல் சுட்டிகள்
http://www.oanda.com/currency/big-mac-index
http://neweconomist.blogs.com/new_economist/2006/01/big_mac_index.html
http://neweconomist.blogs.com/.shared/image.html?/photos/uncategorized/20060113_bigmacindex_1.gif
கடைசி லிங்கில் உள்ள படத்தை சற்று பெரிது படுத்தி பார்க்கவும், ஒப்பிட்டு அளவில் சீனாவில்தான் விலை மிக குறைவு (போலி கம்யுனிசமே ஆனாலும் கொஞ்சம் பெருமையாய் தான் இருக்கிறது). அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் முன்னேறிய நாடுகளில் மிக அதிகம்!
/// மார்க்சியம் ஒரு போலி விஞ்ஞானம்.///
ஹ்ம்ம் சரிதான், நமக்கு அவளோ விஷய ஞானம் இல்லிங்கன்னா, ஆனா உங்க டுபாகூர் எகனாமிக்ஸ் அறிவ இங்க வந்து கொட்டாதீங்க. பாவம் புள்ளைங்க பயந்து முதலாளித்துவமே சரியான வழின்னு ஏத்துக்க போறாங்க! அப்புறம் கோமனமும் திருடு போச்சு கனேசான்னு மக்கள் கதற போறாங்க.
சொல்ல வந்ததை முழுமையாக சரியாக சொன்னேனா என தெரியவில்லை. கம்யூனிசம ‘implement’ செய்யப்பட்ட வகையில் எனக்கும் சில மாற்று கருத்துக்கள் உண்டு அதற்காக ‘free market economic system’ மட்டுமே இந்த சமுகத்தை சமநிலைபடுத்தும் அல்லது உழைக்கும் மக்களின் நிலையை மேம்படுத்தும் எனும் உங்கள் கூற்றை ஏற்று கொள்ளமுடியாது. அது நகைப்புகுரியதும் கூட. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட எந்த முதலாளியிடமும் மனிதாபிமானத்தையோ நல்லதனத்தையோ எதிர்பார்க்க முடியாது. சுரண்டும் நோக்கில் / விதத்தில் வித்தியாசபடுவார்களே தவிர எல்லா ‘நாராயனன்களும்’ ஒன்றுதான் முடிவாக.
சபாஸ் தோழர் புலிகேசி
மிக நேர்த்தியாக வாதம் வைத்துள்ளீர்கள்
உழைப்பின் உபரி சுரண்டப்படுவதை ஒத்துகொள்ளும் அதியமான்
அடுத்து அதில் முதலாளிக்கு பங்கு கேட்பார்
அடுத்து அதில்லை முதலாளிதான் எல்லாம் செய்தார் என்பார்
விளக்கத்தை சொல்லியாச்சு
அடிப்படை விசயத்தில் இன்னும் காலூன்றி தனது வாதத்தை அதியமான் வைக்கிறாரா பார்போம்
புலிகேசி,
///சரி அந்த உழைப்பையும் கணக்கில் கொண்டு தொழில்முனைவோரும் ஒரு சம்பளத்தை எடுத்து கொள்ளலாம் அல்லது குறிப்பிட்ட பண்டத்தை உருவாக்குவதில் பங்கு வகித்த அனைவரும் லாபத்தை சமமாக பங்கிட்டு கொள்ளலாமே?//////
அதைதான் பொதுதுறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவற்றில் முயன்று பார்க்கிறார்கள். லாப நோக்கம் மனித இயல்பு. அதாவது சுயனலலில்லாமல், தேனிக்கள் போல முழு உழைப்பை ஆற்ற மாட்டான். முதலில் ஒரு நிறுவனத்தை சிறிய அளவில் இருந்து உருவாக்கும் ஊக்கம், உழைப்பு மற்றும் MOTIVE POWER : இவற்றை மாதச் சம்ளம் அளித்து வெளி கொண்டுவர முடியாது. உலகில் இன்று பெரும், மாபெரும் நிறுவனங்களாக வளர்ந்து உள்ள அனைத்து நிறுவனங்களும் பல பத்தாண்டுகளுக்கு முன்பு அல்லது நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு தனி மனிதனின் கனவு மற்றும் உழைப்பு பற்றும் ஊக்கம். பெட்ரோலிய துறையில் பெரும் நிறுவனமான
Standard Oil (இன்று உடைக்கபட்டு பல் வேறு பெயரிகளில் உள்ளது) அய் ஆரம்பித்த ஜான் டி ராக்ஃபெல்லார் போன்றவர்கள் சம்ளத்திற்க்கு மட்டும் உழைக்க மாட்டர்கள். 16 வயதில் சாதாரண வேலையில் சேர்ந்தவர் பல ஆண்டுகள் உழைத்து சேர்த்த ‘முதலீட்டில்’ சொந்த நிறுவனம் ஆரம்பித்தார். இதே போல் தான் அனைத்து நிறுவனங்களும். சோனி முதல் நம்து டாடா, பிர்லா சாம்ராஜியங்களும். All started by men of strong character and super human will power and MOTIVE power. MOTIVE POWER பற்றி உம்மால் விளங்கி கொள்ள முடியாது. மிக சமீபத்திய உதாரணம் Dell Computers. மிக பெரும் நிறுவனங்களான அய்.பி.எம்., மைக்ரோசாஃப்ட், ஹெச்.பி போன்றவர்கள் கோலோச்சும் துறையில் ஒரு கல்லூரி மாணவரான டெல் சொற்ப சேமிப்பில் ஆரம்பித்து, பெரும் நிறுவனங்களுடன் போட்டி போடும் நிலைக்கு உயர்ந்தார். He gave them a run for their money !
////ஒவ்வொரு படியிலும் அதன் மீது செலுத்தப்படும் உழைப்பை தவிர வேறு என்ன மாற்றம் நிகழ்ந்து விடுகிறது?////
தொழிலாளர்களின் உழைப்பின் ’மதிப்பை’ யாரும் மறுக்கவில்லை. ஆனால் அது ’மட்டும்’ தான் ’லாபமாக’ உருமாறி. மூலதனமாக ஆகிறது என்பதில் தான் மாறுபாடு. தொழில் முனைவோரிகளின் உழைப்பு (organising and entrepreuueral skills and determination and will power to withstand failure and great odds, etc). அந்த முனைப்பு இல்லாமல் நிறுவனங்கள் உருவாக்க முடியாது. வெற்றியை தக்க வைக்கவும் அவை தொடர்ந்து தேவை.
ரஸ்ஸியாவில் செம்புரட்சி முடிந்தவுடன் ஒரு சில ஆண்டுகளில் லெனின் முயன்ற ‘புதிய பொருளாதார கொள்கை’ பற்றி படித்து பாரும் : http://en.wikipedia.org/wiki/New_Economic_Policy
////அதை மேற்பார்வையிட்டு வேலை வாங்கும் அவன் திறனுக்கு ஏற்ற கூலியை எடுத்து கொள்வதில் எந்த கம்யுனிஸ்ட்க்கும் தடை கிடையாது!///// நடைமுறையில் அப்படி அளிக்கபடும் ‘கூலியை’ மட்டும் வாங்கி கொள்பவன் முழு மனதோடு தொழில் முனைவோனாக ஊக்கதுடன் ‘உழைக்க’ மாட்டான். நடைமுறை யாதார்த்தம் மற்றும் வரலாறு அதை மீண்டும் மீண்டும் நிறுபிக்கிறது. மேலும் accumulated profitsஅய் விவகமான முறையில் மறுமுதலீடு செய்து நிறுவனத்தை தொடர்ந்து வளர்க்க ‘லாப நோக்கு’ தேவை. இல்லாவிட்டால் இன்று எந்த பெரிய வளர்ச்சியும் இருக்காது.
/////தொழில்முனைவோன் எங்கும் வானத்தில் இருந்து குதித்து உருவாகி வரவில்லை, இந்த சமுகத்தில் இருந்தே உருவாகிறான், இந்த சமுகம் ஒரு பெரும் அறிவு களஞ்சியமாக இருந்து அவனுக்கு எல்லாம் கற்று தருகிறது, இந்த சமுகத்தில் இருந்து திருடப்பட்ட அறிவை கொண்டே அவன் எந்த தொழிலையும் முனைய முடியும்.////
உண்மைதான். ஆனால் அனைவரும் தொழில் முனைவோனாக உருவாக எந்த தடையும் இல்லையே. ஒரு நிறுவனத்தில் ஒரே சமயத்தில், ஒரே தகுதியுடன், ஒரே மாதிரி வேலைக்கு சேரும் தொழிலாளர்களில், ஒருவர் அல்லது சிலர் மட்டும் சில ஆண்டுகள் கழித்து தொழில் கற்று, சிறு முதலீடு சேர்த்து, தொழில் முனைவோனாக உருவெடுக்க முயல்கிறான். அம்முயற்ச்சியில் தோல்வி அடைபவர்கள் அனேகம்.
மனிதர்கள் அனைவருக்கும் சம உரிமைகள் அளிப்பதே ஜனனாயகம். ஆனால் திறனில்,
ஊக்கத்தில், உழைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் அல்லர்.
////மேலும் நீங்கள் குறிப்பிட்டு கொண்டு இருக்கும் பல்வேறு ஐரோப்பிய சமூகங்களில் மக்கள் கடனாளியாகத்தான் தங்கள்வாழ்வை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அடைந்திருக்கும் குறைந்தபட்ச வசதியும் வாழ்வும் முன்றாம் உலகநாடுகளை சுரண்டி கொழுத்ததால் உருவானது.////
அங்கு தனி நபர் கடன் அதிகம் என்பது உண்மைதான். அது ஒன்றும் பெரிய சிக்கல் இல்லை. ஆனால் உலகெங்கிலும் இருந்து அகதிகள் (all kinds of refuges, esp economic refugees) புலம் பெயர தேர்ந்தெடுப்பது அந்நாடுகளைதான். சீனா அல்லது கூபாவை அல்ல. மாற்றாக திறந்துவிட்டால் அனைத்து வகை கம்யூனிச நாடுகளில் இருந்தும் பெரும் திரளானவர்கள் வெளியேற முயன்ற வரலாற்றை படிக்கவும். Berlin Wall பற்றி படித்து பார்க்கவும். முன்னாள் மூன்றாம் உலக நாடான தென்.கொரியா மற்றும் தைவான் போன்ற நாடுகள் இன்று முன்னேறிய நாடாக எப்படி மாறின என்று ஆராயுங்கள். சுரண்டல், ஏகாதிபத்தியம், வர்கம் என்று சில சொல்லாடல்களை மட்டும் வைத்துகொண்டு தொடர் ஜல்லி !! Proof of pudding is in eating. And history proves what system works and what does not.
////அங்கெல்லாம் உணவு விலை மிகவும் குறைவு என நீங்கள் கூறுவதில் இருந்து உங்கள் பொருளாதார அறிவு என்னை திகைக்க வைக்கிறது. அங்குள்ள சம்பள விகிதத்தொடும் முன்றாம் உலக நாடுகளில் உள்ள விலைகளோடும் ஒப்பிடுகையில் அங்கு உணவின் விலை மிகவும் அதிகம்.///
அங்கு உண்மையில் உணவு விலை மிக குறைவுதான் அய்யா. PPP என்பது வேறு.
அங்கு ஒரு சராசரி ’ஏழை’ தொழிலாளியின் சம்பளத்தில் எத்தனை சதம் உணவிற்க்காக செலவிட வேண்டி உள்ளது ? அதை இந்திய அல்லது பிற நாடுகளின் data உடன் ஒப்பிட்டால் போதும். வளர்ந்த நாடுகளில் வாழும் தோழர்களிடம் விசாரித்து பார்க்கவும்.
நான் இந்த பதிவில் பல இதர தகவல்கள், சுட்டிகள் அளித்துள்ளேன். அவற்றை பற்றியும், டாஸ் கேபிடலில் மார்க்ஸ் விவரித்த hypothesis about recurring economic depressions being worse than previous ones, while the standard of living of the workers grow worser due to depletion of surplus value over time and the ultimate doom of ‘capitalism’ due to inherent contradictions (without the need for any ‘revolution’ : இவை பொய்த்துவிட்டது பற்றி பேசலாமே.
/////அதற்காக ‘free market economic system’ மட்டுமே இந்த சமுகத்தை சமநிலைபடுத்தும் அல்லது உழைக்கும் மக்களின் நிலையை மேம்படுத்தும் எனும் உங்கள் கூற்றை ஏற்று கொள்ளமுடியாது. அது நகைப்புகுரியதும் கூட. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட எந்த முதலாளியிடமும் மனிதாபிமானத்தையோ நல்லதனத்தையோ எதிர்பார்க்க முடியாது. சுரண்டும் நோக்கில் / விதத்தில் வித்தியாசபடுவார்களே தவிர எல்லா ‘நாராயனன்களும்’ ஒன்றுதான் முடிவாக./////
ஏற்றிகொள்ள வேண்டாம் தோழர். Results speak for themselves. அவ்வளவுதான்.
வேண்டுமானால், இந்தியாவில் ஒரு செம்புரட்சி உருவாக்கி, அதன் பிறகு உங்கள் திட்டங்களை நனவாக்க முயன்று பாருங்கள். சில ஆண்டுகளில் நீங்களே ’புரிந்து’ கொள்வீர்கள். One who ignores history is condemned to repeat it என்பது மிக மிக ஆழமான முதுமொழி…
புலிகேசி,
டெல்லியில் அமைந்துள்ள Liberty Insititute http://www.libertyindia.org/about.htm இன் நிறுவனர்
திரு.பருன் மித்ரா அவர்கள் எழுதியுள்ள இந்த கட்டுரையை பார்க்கவும் :
‘Grassroots Capitalism thrives in India’
http://www.heritage.org/index/pdf/2006/index2006_chapter3.pdf
இந்திய சிறுதொழில் முனைவோர்கள் பற்றிய மிக அருமையான கட்டுரை.
அவரை சென்னையில் ஒரு முறை சந்தித்து உரையாடினேன். மிக அபூர்வமான மனிதர்.
/////லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட எந்த முதலாளியிடமும் மனிதாபிமானத்தையோ நல்லதனத்தையோ எதிர்பார்க்க முடியாது. சுரண்டும் நோக்கில் / விதத்தில் வித்தியாசபடுவார்களே தவிர எல்லா ‘நாராயனன்களும்’ ஒன்றுதான் முடிவாக.////
தொழில்முனைவோர்கள் வில்லன்கள் அல்ல. மாறாக ஹீரோக்கள் தாம். தொழிலாளர்களின் உண்மையான நண்பர்கள். இதை புரிந்துகொள்வது உங்களை போன்றவர்களுக்கு கடினம். வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பொருட்கள் அதிக அளவில், மலிவாக தயாராத்து, வரி கட்டி, நாட்டிற்க்கும், தொழிலாளர்களுக்கும் மிக நன்மை செய்யும் ஹீரோக்கள் தாம் அவர்கள். யாரும் தொழில்முனைவோனாக ‘முனைய’ முயலாமல், வேலை கொடுங்கள் என்று பிறரை போல வரிசையில் நின்றால், இன்றும் நாம் கற்காலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருப்போம். மனித நேயம் கூட அவர்களுக்கு தேவையில்லை. (ஆனால் அவர்களில் பலரும் நல்ல மனிதனேயர்களாக உள்ளனர் தாம்) நல்ல அருமையான நிறுவனங்களை உருவாக்கி, மேம்படுதுவதே உலகின் மிக சிறந்த ‘மனிதாபிமானம்’ ; அதன் நிகர விளைவுகளால் தான் வளர்ந்த நாடுகளில் வறுமை அளவை மிக மிக குறைக்க முடிந்தது.
இங்கு ஒரு சிறு தொழில் ஆரம்பித்து நடத்தி பாருங்கள். அப்பதான் புரியும். இங்கு என்ன எழுதினாலும் ’புரிய’ வைக்க முடியாது.
அதியமான் , உங்கள் சிந்தனை முழுவதும் அந்தரத்தில் தொங்குகிறது .ஒரு நாட்டின் உயர்ந்த /தாழ்ந்த நிலையை அந்த நாட்டில் உள்ள உத்தமர்களோ நல்ல மனம் கொண்ட முதலாளிகளோ தீர்மானிப்பதில்லை மாறாக அந்த நாட்டில் நிலவும் உற்பத்தியே தீர்மானிக்கிறது.இது சமூக அறிவியலின் பால பாடம் இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் பட்டப் படிப்பில் பாஸ் மார்க் வாங்க முடியாது.எழுதுகின்ற வியாக்யானங்களுக்கும் மதிப்பெண் கிடைக்காது! உங்கள் முயற்சி பெரும்பான்மை மக்களுக்கு வீணாகவும் பணக்காரர்களுக்கு உரமாகவும் மாறிவிடும் , பாவம்!அதுதானா உங்கள் நோக்கம்?
உலகில் எவனாவது முதலாளி ஆக விரும்பாமல் தொழிலாளிஆகவே
இருக்க விரும்பினால் காரல்மார்க்ஸ் -கொள்கை சரிதான்
வினவு,
’அங்காடி தெரு’ படத்தில் ஜெயமோகன் எழுதிய வசனங்களில் அவரின் ’மேட்டிமை திமிர்’ தெரியவில்லையா ?
படம் பார்க்கல அதியமான், ஆனா அங்காடியில ஜெயமோகன் எழுதனது படைப்பா, இல்ல சம்பளத்துக்கு கதையின் சட்டகத்துக்கு எழுதன வேலையா?
வினவு,
‘சம்பளத்துக்கு’ கதையின் சட்டகத்துக்கு எழுதன வேலையில் ‘படைப்பு திறன்’ (அதாவது creativitiy, original viewpoints and ideas) இருக்கவே முடியாதா ? எப்படி வேண்டுமானாலும் பேசுவீக போல. அப்படத்திற்க்கு வசனமும் ஒரு பலம் தான். ’மேட்டிமை திமிர்’ கொண்டவரால் அது போன்ற powerfulஆன வசனங்களை எழுத முடியாது என்பதை ‘புரிந்து’ கொள்ள dialectical materialismத்தில் டாக்டரேட் தேவையில்லை. Anyone can understand that.
//சம்பளத்துக்கு’ கதையின் சட்டகத்துக்கு எழுதன வேலையில் ‘படைப்பு திறன்’ (அதாவது creativitiy, original viewpoints and ideas) இருக்கவே முடியாதா ? எப்படி வேண்டுமானாலும் பேசுவீக போல. அப்படத்திற்க்கு வசனமும் ஒரு பலம் தான். ’மேட்டிமை திமிர்’ கொண்டவரால் அது போன்ற powerfulஆன வசனங்களை எழுத முடியாது என்பதை ‘புரிந்து’ கொள்ள dialectical materialismத்தில் டாக்டரேட் தேவையில்லை. Anyone can understand that.//
மனிதா..மனிதா.. என்று ஒரு அற்புதமான பாடல், கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்திற்கு வைரமுத்து எழுதிய பாடல். இளையராஜா இசையும் வெகு அருமையாக இருக்கும். உடனே இந்த
இரண்டு பேரும் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிவிட முடியுமா?\
கொடுக்குற துட்டுக்கு என்ன கூவனுமோ அத கூவுறாங்க அவ்வளவுதான்
////கொடுக்குற துட்டுக்கு என்ன கூவனுமோ அத கூவுறாங்க அவ்வளவுதான்////
மிக மிக கீழ்தரமான, முட்டாள்தனமான வாதம். ஒரு படத்தில் தயாரிப்பாளர் தவிர மற்றவர் அனைவரும் சம்பளம் வாங்கி வேலை செய்பவர்கள் தாம். மேற்கொண்ட வாதம் படத்தில் கதாசிரியர் மற்றும் இயக்குனரான வசந்தபாலன் அவர்களுக்கும் சேர்த்தியா ? இங்கு பதிவின் தலைப்பு ’மேட்டிமை திமிர்’ பற்றிதான். இது போன்ற அருமையான படங்களுக்கு வசனம் எழுத ’மேட்டிமை திமிர்’ உடையவர் யாரும் வர மாட்டார்கள். மேட்டிமை திமிர் உடையவர்களுக்கு இது போன்று மிக sensitiveஆன, வலிகளை உணர்ந்த வசனங்கள் சாத்தியமில்லை.
வைரமுத்து கம்யூனிஸ்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதா, மனிதா பாடலை வெறு காசுக்காக எழுதியிருக்க முடியாது. கம்யூனிஸ்ட் அல்லாதவர்களுக்கு மனிதாபிமானம், sensitivity மற்றும் சமூக பொறுப்புணர்வே இருக்க முடியாதா என்ன ?
இப்படி சகட்டுமேனிக்கு சாடுவதுதான் மார்க்சிய விஞஞானபூர்வ பாணியா என்ன ?
கேவலமா இருக்கு.
தொழிலாளர்களைச் சுரண்டும் எப்பேர்பட்ட முதலாளியாக இருந்தாலும் சரி, நமது நாட்டு மக்களின் உழைப்பை அந்நியனுக்கு தாரைவார்க்கும் மகா பிரபுக்களும் சரியே ஒரு வெளிப்படையான மேடையில் பேசும்போது தொழிலாளிகளின் நண்பன், ஏழைகளின் பங்காளன்,மக்களின் காவலன் என்றுதான் தன்னை வெளிக்காட்டிக்கொள்வார்கள். இதுவெல்லாம் உண்மையா என்ன!
//கம்யூனிஸ்ட் அல்லாதவர்களுக்கு மனிதாபிமானம், sensitivity மற்றும் சமூக பொறுப்புணர்வே இருக்க முடியாதா என்ன ?
இப்படி சகட்டுமேனிக்கு சாடுவதுதான் மார்க்சிய விஞஞானபூர்வ பாணியா என்ன ?//
அதெல்லாம் எல்லாருக்கும் வரவைப்பதுதான் கம்யூனிஸ்டின் நோக்கமா இருக்க முடியும் கம்யூனிஸ்டு அல்லாத எத்தனையோ பேர் சமூகத்துக்கு நல்லது செய்து இருக்காங்க அன்னை தெரேசா மாதிரி
அவர் பேர சொன்ன உடனே மருதையன் கட்டுரைய எடுத்து யாரும் போடா இருந்தா சரி
காந்தி கம்யூனிஸ்டு கிடையாது அவருக்கு மனிதாபிமானம் இல்லையா
ஆனால் அவர்களது மனிதாபிமானம் வெறும் சேவையுடன்
நின்றுவிடும் கம்யூனிஸ்டு மட்டும் அதை செயல்வடிவகாமமாற்றுகிறான்
அதியமான் எழுதுற மாதிரியே நடக்கிற நல்ல மனிதர் அதனால் ஜெயமோகனுக்கு வாக்காலத்து வாங்குகிறார்.
விண்ணை தாண்டி வருவய படத்த மாட்டும் ரிலீஸ் ஆன வுடனே பாத்து கேவலமா திட்டி திட்டி விமர்சனம் எழுத மட்டும் தெரியுதோ?
//கம்யூனிஸ்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதா, மனிதா பாடலை வெறு காசுக்காக எழுதியிருக்க முடியாது. கம்யூனிஸ்ட் அல்லாதவர்களுக்கு மனிதாபிமானம், sensitivity மற்றும் சமூக பொறுப்புணர்வே இருக்க முடியாதா என்ன ?
இப்படி சகட்டுமேனிக்கு சாடுவதுதான் மார்க்சிய விஞஞானபூர்வ பாணியா என்ன ?
கேவலமா இருக்கு.//
எதுக்குய்யா இந்த பீலிங்க்சு? எதுக்கு இப்படி தேவையில்லாம மொட்டைக்கும் முழங்காலுக்கும் கனெக்சன்? துட்டு கொடுத்தாக்க செக்ஸ் வெறி கிளப்பும் பாடலைக் கூடஎழுதுவான், வசனம் எழுதுவான். துட்டு கொடுத்தாக்க சைக்கோவாக் கூட நடிப்பான் உடனே அவன் செக்ஸ் வெறியன், அவன் ஒரு சைக்கோ என்று சொல்ல முடியும் என்றால், அதியமான் சொல்வது போல பொதுமைப்படுத்த இயலும்.
ஒரு கலைஞன் சமூகத்தின் பல்வேறு உணர்வுகளையும் உள்வாங்கி வெளிப்படுத்தும் திறமை படைத்தவனாக இருந்தால் மட்டும்தான் அவன் வெற்றிகரமாகச் செயல்பட முடியும். வைரமுத்து, இளையராஜா, ஜெமோ போன்றொர் அப்படிப்பட்டவர்களே. வைரமுத்து ஒரு பாட்டு கம்யூனிச உணர்வை வடித்து எழுதிவிட்டதாலோ அல்லது ஜெமோ அடித்தட்டு மக்களின் வாழ்வை வசனங்களில் வடித்துவிட்டதாலொ அவர்களிடம் மேட்டிமைத்தனம் இல்லைஎன்ற பொதுமைப்படுத்துதலை செய்வதுதான் அடி முட்டாள்தனமானது என்பதை திருவாளர் அதியமான் எப்பொழுது புரிந்து கொள்வதாக அறிவிப்பாரோ தெரியவில்லை.
பூச்சாண்டி சரியாக சொல்கிறீர் ஏன் பூச்சா
ண்டின்னு வச்சு இருக்கீங்க பயமா இருக்கு பேரப்பார்த்தா
🙂
mootoo,உங்க பெயர் பார்த்த சாரதி தானே …
அதியமான் அவர்கள் நிகழ்த்தி வரும் வாதப் பிரதிவாதங்களின் சாரம் :தனி மனிதர்களிடம் காணப்படும் திறன் எல்லா மனிதர்களிடமும் இருக்காது .திறன் படைத்தவர்கள் சமுகத்திற்காக என்ன செய்கிறாரர்களோ அதை சமுகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் .சமுகம் ஏற்றதாள்வாகத்தான் இருக்கும் .அதுதான் இயற்கை விதி. காரல் மார்க்ஸ் அல்லது கம்யுனிசம் காட்டுகின்ற பாதையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்பதுதான். .மார்க்சிய பாதையில் ஒரு புதிய சமூகம் அமைக்கப்பட்ட பின்பும் கூட கே ஆர் ஏ போன்றவர்கள் இது போன்ற விமர்சனங்களை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.காசு வாங்கிக்கொண்டு ஒரு சட்டகத்துக்குள் வேலை செய்கிறவர்களிடம் காணப்படுகிற திறமை ,கலை இல்லையா?கலைதான்.ஆனால் அது காசுக்காகவே “படைக்கப்பட்டு”விற்கப்படுகிற கலை.அதன் கலைநுட்பம் விலைபோகிரவரைதான் கலை.இல்லாவிட்டால் வெறும் எச்சிலை .இது ஜெ மோ க்கு தெரியாததல்ல .இந்த ஒரே விதியைத்தான் உலக முதலாளிகள் அனைவரும் கடை பிடிக்கின்றனர்.இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்தது தான் .இதில் என்ன தவறு இருக்கிறது, நீங்களும் அதையே கடைபிடியுங்கள் என்கிறார்.இது’அதிய’ பிரசங்கித்தனம் என்றுகூட நீங்கள் புரிந்துகொள்ளலாம்!!
வினவுன்னே… உங்க ஃபிகரோட அப்பா கேரளாவுல சர்வரா வேலை செய்யுறாரா..?
போர்டர்களின் குறைந்த படச்ச கூலியை யார் நிர்ணயம் செய்கின்றார்கள். எக்மோரில் கேட்ல் இருந்து மூன்றாம் பிளாட் போரம் போக என்னிடம் 150 கூலியாக வந்கிகொண்டான் ஒருவன். இது தான் குறைந்த பச்ச கூலி என்று வினவக்கு தெரிகின்றதா.
அன்புள்ள வினவு,
வாழ வழியின்றி ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் குடியேறி விடும் ஆசையுடன் படகுகளில் சட்டவிரோதமாய் செல்லும் ஏராளமான தொழிலாளர்கள் அங்கிருக்கும் அரசாங்க கெடுபிடிகளில் சிக்கி நீரில் மூழ்கி இறப்பது என்பது அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வாய் இருக்கிறது. அதனை அங்கிருக்கும் ஆதிக்க வர்க்க, இதே மேட்டிமைக் குண அரசாங்கங்கள் தான் நடத்துகின்றன.
வடகிழக்கில் இருந்து இந்த ஓட்டல் வேலைக்காக வரும் தொழிலாளர்கள் கேரள மாநிலத்தில் தொழில் முனைந்து வீடு பங்களா கட்டிக் கொள்வதற்காக தொழிலதிபர்களாக வரவில்லை. அவர்கள் இதற்கும் குறைகூலி பெற்றுக் கொண்டு இதே உண்ணும் உணவும், இருப்பிடமும் இப்போதைக்கு போதும் என்று எண்ணிக் கொண்டு அங்கு இறங்குகிறார்கள். அவர்களை சக தொழிலாளர்களே தடுத்து விடுவதாய் நீங்கள் பெருமிதத்துடன் கூறுகிறீர்கள். அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட மேலாதிக்க நாடுகளின் சுயகாப்புவாதத்தையும் (Protectionism) இதனோடு ஒப்பிட்டு அது சரி என்றால் இதுவும் சரி தான் என்கிறீர்கள். இந்த ஒப்பீடு உரிய சரியான மாற்று இல்லை என்பதற்கான தப்பித்தலா?
இந்த விடயத்தை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் அல்லது அணுகுவீர்கள் என்பது தெரிந்தால் விடயத்திற்கான முழுமை கிடைக்கும்.
நன்றி.
kandaev
20 ரூபாய் கூலியில் 80 சத மக்கள் வாழ்வது மகத்தான பொய். அப்படினால் வறுமைகோட்டிற்க்கு மிக கீழே 80 சதவீதம் வாழ்கின்றனரா ? ரூ.20 தினக் கூலி வாங்குபவர்களை காட்டுங்க பார்க்கலாம் ? முக்கியமாக தமிழகத்தில்
வினவு
1. வேலை இழப்பால் பாதிக்கப்படும் உழைப்பாளர்களின் நிலையை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் வேறு மாநிலத்தவர்களிற்கு வேலை கொடாதே என்று சொல்வது சரியா? பாட்டாளி வர்க்க சர்வதேசியம் எங்கே?
2. நீங்கள் ஏதோ அலுவலாக வாரம்தோறும் கேரளாவிற்குச் சென்று வர வேண்டும் அதுவும் ஒவ்வொரு தடவையும் பெட்டியுடன் சென்று வர வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் பெட்டியைத் தூக்க வேறு ஒருவர் உங்களிடம் பணம் கேட்டால் என்ன செய்வீர்கள்?
3. ஒருவர் மலத்தை இன்னொருவர் அள்ளுவது தவறு என்று கூறும் நீங்கள்(நோயாளிகள் போன்றவர்கள் தவிர) ஒருவர் பெட்டியை இன்னொருவர் தூக்குவதை எவ்வாறு நியாயப்படுத்துவீர்கள்?
இதைவிட மோசமாக நீங்கள் உங்கள் பெட்டியைத் தூக்க வேறு ஒருவரிற்கும் கூலி கொடுக்கவேண்டும் என்று எப்படிக் கூறுவீர்கள்? (இப்படிப்பார்த்தால் இன்றைக்கும் கல்லில் ஆயுதம் செய்த கற்கால மனிதனின் பரம்பரை ஒன்று சும்மாயிருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும். பார்ப்பனர்கள் போல)