அறியப்படாத மேற்கு தமிழகத்தின் ஆதிக்க சாதிவெறி!
சாதிக்கலவரம், சாதிப் பிரச்சினை என்றாலே நம் எல்லோரின் நினைவுக்கு வருவது தென் மாவட்டங்கள்தான். சாதிவெறியர்கள் என்றாலே அது தேவர் சாதிவெறி என்றுதான் நினைவுக்கு வருகிறதே தவிர ஏனைய ஆதிக்க சாதிகள் குறித்த பார்வை பெரும்பாலும் மக்களிடத்தில் எடுத்துச் செல்லப்படவில்லை என்றே தோன்றுகிறது.
முக்கியமாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருக்கும் ஆதிக்க சாதிவெறியர்களின் கொடுமைகள் அதிகம் பேசப்படுவதில்லை. அப்படித்தான் கொங்கு பகுதிககளில் நடக்கும் சாதிக்கொடுமை சந்திக்கு வருவதே இல்லை. கொங்குப் பகுதிகளில் அதிகம் வசிக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் வன்னியர்களை கவுண்டர் என்று இன்றளவும் அழைப்பதில்லை.
ஆனால் வன்னியர்கள் அதிகம் வாழும் கொங்கு மண்டலத்தின் வடபகுதியில் கவுண்டர் என்றால் அது வன்னியரையும் குறிக்கிறது. “கவுண்டர்ன்னா வெள்ளாளக்கவுண்டரா?” என்று கேள்வி கேட்டால் அவர்கள் முகம் கோணலாகி இல்லை படையாச்சி என்று செருமுவதை பல இடங்களில் கேட்க முடியும். என்னதான் பணக்காரனாயிருந்தாலும் வன்னியர்கள், கொங்கு வேளாளக் கவுண்டருக்கு முன் ‘கீழ்சாதி’தான். வேளாளக் கவுண்டர்கள் “பள்ளி பசங்க” என்று வன்னியர்களை திட்டுவது சாதரணமான ஒன்று.
ஒரு தலித் “என்னா கவுண்டரு” என்று கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஒரு வேளாளக் கவுண்டர் “ஓ படையாச்சியா? பள்ளியா?” என்று கேள்வி கேட்க முடியும். தலித் அல்லாத சாதிக்காரர்கள் என்ன கவுண்டரே என்றால் வன்னிய சாதிக்காரர்களுக்கு ஒரே பெருமைதான். பார்ப்பன இந்து மதம் என்பதே வலம்புரி ஜான் சொன்னதைப்போல தனக்கு மேல் கால்களையும் தனக்கு கீழ் தோள்களையும் எப்போதையும் தேடும்.
ஆதிக்க சாதி என்பதே அடித்து வீழ்த்தப்பட வேண்டியதுதான் அதில் முற்போக்கு இருக்க முடியுமா? இதோ நாங்கள் இருக்கிறோம் என்கிறது வன்னியர் சங்கம். ராமதாஸ் ஒரு முறை சொன்னார் “வன்னிய சங்கம் மட்டும் சாதி வெறியற்றது. நாங்கள் எங்களுக்காக மட்டுமா போராடினோம்? மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வண்ணார், நாவிதர், மருத்துவர் எல்லா சாதிகளையும் நாங்கள்தானே கொண்டு வந்தோம்”.
வன்னியர் சாதி ஆதிக்க சாதியா என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. ஒரு முறை என்னுடைய தென் மாவட்டத்து நண்பர் சொன்னார் “வன்னியர் சாதியெல்லாம் ஒடுக்கப்படுற சாதிதான” அவருடன் 3 மணி நேரத்துக்கு மேல் வன்னிய சாதிவெறியினை விளக்க வேண்டியிருந்தது. சாதி ஆதிக்கத்துக்கு தேவர் என்றோ, நாடார் என்றோ, வன்னியர் என்றோ எதுவும் தெரியாது. தன் கோரப்பற்களால் உழைக்கும் மக்களை கடிப்பது மட்டும்தான் தெரியும். வன்னியர் சாதி ஆதிக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள நாமும் இப்போது அந்தக் கிராமத்துக்குள் நுழைவோம்.
கொளத்தூர் வட்டாரத்தில் கோலேச்சும் வன்னிய சாதிவெறி!
கொங்கு மண்டலத்தின் வடபகுதியில் உள்ள சேலம் மாவட்ட எல்லையையும் ஈரோடு மாவட்ட எல்லையையும் கொணடதுதான் கொளத்தூர். கொங்கு வெள்ளாள கவுண்டர்களும், வன்னியர்களும் பெரும்பான்மையாக வாழும் பகுதி.
கொளத்தூர் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டவுடனே பலருக்கும் தோன்றும் நினைவு “அட நம்ம வீரப்பன் ஊரு தான”. அது உங்கள் நினைவாயிருக்கலாம். ஆனால் “நம்ம” என்ற வார்த்தை இங்கு வன்னியர்கள் மட்டும்தான் உபயோகிப்பார்கள். கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பெரிய டிஜிட்டல் போர்டு இருக்கிறது பாருங்கள். அதில் வீரப்பன் படத்தைப் போட்டு “10 லட்சம் மானமுள்ள வீர வன்னியர்களே சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்” என்ற வாசகம் உங்கள் கண்ணுக்கு புலப்படுகின்றதா?
இங்கு மட்டுமல்ல சேலம் மாவட்டம் முழுக்க வீர வன்னியன் வீரப்பகவுண்டரு படத்தோடுதான், அய்யாவின் படமும் சின்ன அய்யாவின் படமும் இருக்கின்றது. வீரப்பனை தமிழனென்றும், தமிழக விடுதலையை சாதிக்க வந்த போராளி என்றும் கற்பனையில் இன்பம் தேடும் தமிழ்தேசக் குஞ்சுகள் ஒரு எட்டு கொளத்தூர் சென்று பார்க்கவும்.
கொளத்தூரைச் சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றன. தனிக்குவளை முறை அவ்வப்போது ஒழிக்கப்பட்டதாக சொல்வார்கள். வெளியூர்க்காரன் யார் வந்தாலும் அங்கு டிஸ்போசபிள் டம்ளர் தான். எந்த ஊரில் இறங்கினாலும் புதிய நபர் எந்தப்பக்கம் செல்கிறாரோ அது அவரின் ஜாதியாக இருக்கலாம். நீங்கள் தவறாக தலித் குடியிருப்புக்குள் சென்று விட்டு பேருந்து நிறுத்தத்தில் வந்து முகவரி விசாரித்தால் கிடைக்கும் மரியாதை அமோகமாக இருக்கும்.
இக்கிராமத்தில் ஒரு தாழ்த்தப்ப்ட்ட மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவராக பணி புரிந்தார். அவர் ஊசி போடும் போது வன்னியர்களின் மீது கை படுவதால் “பறையன் கை படையாச்சி மீது படுவதா என்று” அங்கு வேலை செய்த பெண்ணை வைத்து மருத்துவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவரை விரட்டியடித்தார்கள் வன்னிய வெறியர்கள். இதைப்போல பல நிகழ்ச்சிக்கு பேர் வாய்ந்ததுதான் கொளத்தூர் கிராமங்கள்.
நான் ஒருமுறை கொளத்தூரை ஒட்டிய கிராமங்களில் ஒன்றிற்கு சென்ற போது என் நண்பர் என்னை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன் மேற்கு பக்கம் வரச் சொன்னார். நான் இதை மறந்துபோக நிறுத்தத்தில் இறங்கி அவரின் பேரைச் சொல்லி “இந்த வேலை செய்கிறார் எந்தப்பக்கம் போக வேண்டும்” என்றேன். வந்த பதிலே “தெரியாது இடத்தைக் காலி பண்ணு” என்றதுதான்.
கருங்கலூர் துப்பாக்கி சூடின் பின்னணி!
இதோ இது தான் கருங்கலூர். இங்குதான் கடந்த 16-ம் தேதி துப்பாக்கி சூடு நடைபெற்றது. பா.ம.கவின் கோ.க.மணி இது குறித்து சட்டசபையில் கூட பேசினார். பத்திரிக்கைகளில் கூட துப்பாக்கி சூடு ஏன் நடந்தது என்பது பற்றி விரிவாக போடவில்லை. கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி சூடு, இரு சமூகத்துக்குள்ளே மோதல் இவை தான் செய்தியாக வந்தன.
ஆனால் உண்மை என்ன என்பதை அறிய காலம் அதிகம் பிடித்து விட்டது. காரணம் கடந்த 15.04.10 முதல் 24.04.10 வரை மேட்டூர் – கோவிந்தப்பாடி-க்கு பேருந்து மாலை 5 மணிக்கு மேல் இயக்கப்படவில்லை. நேற்று(25.04.10) அன்று இயக்கப்பட்டதாக சொன்னாலும் பாதுகாப்புடனே சென்றது. 24-ம் தேதி வரை கொளத்தூர் – கோவிந்தப்பாடி வரையிலான கிராமங்களில் போலீசுப்படைகள் குவிக்கப்படிருந்தன. 25ம் தேதிதான் கருங்கலூர் தவிர மற்ற கிராமங்களில் போலீசுப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. தாக்குதல் நடந்த கருங்கலூரில் தற்போது போலீசு குறைக்கப்பட்டிருக்கின்றது.
வன்னிய சாதி வெறியர்களைப் பொறுத்தவரை”பறையனுங்க வேணாமுன்னு தான நாங்க இருக்கோம், எதுக்கும் அவுனுங்கள கூப்புடறதுல்ல, தள்ளி வச்சிருக்கோம் , சும்மா மரியாத கொடு , மரியாத கொடுன்னு தேவையில்லாம பிரச்சினை பண்றாங்க. பெரியவங்க முன்னாடி கால் மேல கால் போட்டுகிட்டு இருக்கானுங்க, பெரியவங்க முன்னாடி சிகரெட்டு குடிக்கறாங்க புகைய வுடுறானுங்க” இது தான் அவர்கள் குற்றச்சாட்டு.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து போகக்கூடாது, குடைபிடித்து போகக்கூடாது, வன்னியர் வந்தால் மரியாதை தரவேண்டும், சைக்கிளில் செல்லக்கூடாது என எல்லா கொடுமைகளும் நடந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் வன்னிய நாட்டமைகள்தான் வருவார்கள். தீர்ப்பு சொல்வார்கள். பின்னர் இப்பகுதி இளைஞர்கள் தங்களை அப்போது உருவாகிக்கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகளில் இணைத்து சாதி ஆதிக்கத்தை எதிர்த்து வந்தனர்.
அடிவாங்கிக்கொண்டே இருந்த அவ்விளைஞர்கள் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் என்று பேசவும் ஆரம்பித்தார்கள். முன்பெல்லாம் சாதாரணமாக 19 வயது வன்னிய பெரியவருக்கு மரியாதை தராத 60 வயது பறைய சின்னக்குழந்தைக்கு அடி விழும். இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை. நாம் அடித்தால் அவர்களும் அடிப்பார்கள் என்ற எண்ணம் வன்னிய வெறியர்களின் மத்தியில் வேர்விட்டவுடனே, இவர்களை எப்படியாவது ஒழித்துக்கட்டவேண்டுமென்று ஒவ்வொரு வருடம் திருவிழாவின் போதும் முயற்சி நடக்கும். சில முறை அப்படிப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன. இந்த ஆண்டு அந்த ஆதிக்க சாதிவெறி அப்பட்டமாக வெடித்துவிட்டது.
இந்தப்பறையர்கள் தான் நாம் என்ன சொன்னலும் கேட்பதில்லையே அவர்களுக்கு ஏன் நாம் வேலை தர வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சமூகப்புறக்கணிப்பு விரிக்கப்பட்டது. எப்போதும் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவதற்கு அனுமதியில்லை, அவர்களுக்கு முடி வெட்டுவதற்கு இங்கு எந்த சலூனும் திறக்கப்படவில்லை. தலித்துக்கள் முடி வெட்ட வேண்டுமானால் கொளத்தூருக்குத்தான் வரவேண்டும். அதுவும் இல்லை எனில் சேரிகளிலேயே முடி வெட்ட தாழ்த்தப்பட்டவரிலேயே ஒருவர் இருக்கிறார். இது அனைத்து கொளத்தூர் கிராமங்களிலும் தொடர்ந்தாலும் கருங்கலூருக்கு சீக்கிரம் திருவிழா வந்து விட்டதால் சீக்கிரமே தாக்குதலும் நடந்து விட்டது.
கருங்கலூர் வன்னிய நாட்டமைகள் தீர்ப்பு சொன்னார்கள் ” நமக்கு அடங்காத பறையனுங்க இனிமே கோயில் விழாவுக்கு மேளம் அடிக்க கூடாது ,சக்கிலிங்கள வச்சு மேளம் அடிச்சுக்கலாம் “. திருவிழாவின் முதல் நாள் முடிவில் ஆதி திராவிடர்கள் சிலர் மேளம் அடித்த அருந்ததியர்களிடம் “ஏன் நீங்கள் மேளம் அடித்தீர்கள்?” என்று தகராறு செய்ய, அது வாய்ச்சண்டையில் முடிந்திருக்கிறது.
சில அருந்ததியர்கள் வன்னியர்களிடம் ” நீங்க அடிக்க சொன்னீங்க, அவங்க சண்டைக்கு வராங்க ” என்று சொன்னவுடன் தாக்குவதற்காகவே காத்திருந்த வன்னிய வெறியர்கள் 15ம் தேதி காலை 8 மணியளவில் பா.ம.க கவுன்சிலர் மாரப்பன் தலைமையிலான 200 பேர் கொண்ட கும்பல் கருங்கலூர் ஆதி திராவிட குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளை அடித்து நொறுக்குகிறது. 7 பேருக்கு பலத்தக்காயம். அடித்து முடித்த கும்பல் ஆதிதிராவிட குடியிருப்பிற்குள் யாரும் நுழையாதவாறு முற்றுகையிடுகிறது. ஆளும் கட்சி போன் பண்ணுனா உடனே வரும் 108 ஆம்புலன்ஸ் ஊருக்கு வெளியே நான்கு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தது.
வன்னியர்களின் தயவில்லாததால் மருத்துவம் பறையர்களுக்கு கிடைக்கவில்லை. தகவல் கொளத்தூர் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு தெரிய வர வேறு வழியின்றி அவர்கள் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை உடைத்தும் தாக்குதல் சம்பவத்தை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் கொளத்தூர் போலீசு தனது ஜீப்பில் போய் காயமடைந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்தது. உள்ளூர் வி.சி.யினர் பிரச்சினையை அதிகப்படுத்துவார்கள் என்றெண்ணிய காவல் துறை 16ம் தேதி காலை கருங்கலூருக்கு வந்தது கவுன்சிலர் மாரப்பன் உட்பட மூவரை கைது செய்ய வந்தது. வஜ்ரா வாகனக்கள் அணிவகுத்து வரிசையாய் நின்றன.
வெறியூட்டப்பட்ட வன்னிய மக்கள் மாதேஸ்வரன் மலைப்பாதையை மறித்து மறியலில் இட்டுபட்டு சாலையில் இருந்த ஒரு லோடு ஜல்லி கற்களையும் போலீசுப் படை மீது வீசித் தாக்குதல் நடத்தியது. ஓடிய காவலர்கள் துரத்தி துரத்தி மண்டையுடைக்கப்பட்டனர்.
பின்னர் துப்பாக்கிசூடு 9 ரவுண்ட் என்று சொல்லப்படுகின்றது. அதில் காயமடைந்த சின்ன துரை மட்டும் அரசு மருத்துவ மனையில் இருக்க, இன்னும் சிலர் வெளியூரில் ரகசியமாய் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பா.ம.க தலைவர் ஜீ.கே.மணி “சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம் துப்பாக்கி சூடென்று” அரசை குற்றம் சாட்டினார்.
எது சின்ன பிரச்சினை? தாழ்த்தப்பட்ட மக்களின் வீடு புகுந்து அடிப்பது சின்ன பிரச்சினையா? அவர்களுக்கு (கொளத்துர் தவிர) கொளத்தூர் கிராமங்களில் கோயிலிலே நுழைய அனுமதி இல்லை, தீ மிதிக்கவோ, கரகம் எடுக்கவோ அனுமதி இல்லை, கருங்கலூர் – கோவிந்தப்பாடி வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி வெட்ட சலூன் கடைகள் மறுப்புத் தெரிவிக்கின்றன. இதெல்லாம் சிறிய பிரச்சினைதானே ‘சத்திரியர்களுக்கு’?
ஆதிதிராவிடர்கள் மீது தாக்குதலும் தொடுத்துவிட்டு புது புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள் பா.ம.கவினர். “சக்கிலிங்கள பறையனுங்க வூடு பூந்து அடிச்சுட்டனுங்க, பாவம் சக்கிலி பொம்பளங்க சிலமண்டையெல்லாம் உடஞ்சு போச்சு, நாங்க ஏண்டா இப்படி பண்ணுறீங்கன்னு சும்மா அவங்க ஊட்டுல போய் ரெண்டு அறை விட்டோம் அவ்வளவுதான், இதை என்னவே பெரிய பிரச்சினையாக்கிட்டாங்க இந்தப்பசங்க ”
ஆதி திராவிடர்களுக்கும் அருந்ததியர்களுக்கும் இடையில் மோதல் ஏதும் நடக்கவில்லை, அப்படி நடந்தாலும் உன்னை யார் நாட்டாமையாக்கியது? சில ஆண்டுகளாக நடக்காத தாக்குதல் ஏன் இம்முறை நடந்தது?
கருங்கலூர் வன்னிய சாதிவெறியை எதிர்க்கும் தலித் இளைஞர்கள்!
இப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதி திராவிட இளைஞர்கள் அதிகமாவும் அருந்ததியர்கள் சிலரும் இருக்கின்றனர். அருந்ததியர்களைப் பொறுத்தவரை போதிய அளவுக்கு விழிப்புணர்வு இல்லாதிருப்பதாக கூறப்படுகின்றது. பறையர்கள் வன்னியர்களின் மேலாதிக்கத்தை தொடர்ந்து எதிர்த்து வருவது அவர்களின் கோபத்தை கிளறிக்கொண்டிருந்தாலும் அருந்ததியர்களும் ஆதிதிராவிடர்களோடு சேர்ந்து எதிர்க்க ஆரம்பித்ததுதான் இத்தாக்குதலுக்கு காரணம்.
சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அருந்ததிய இளைஞன் ஒருவர் அந்தியூரை சேர்ந்த வன்னிய பென்ணை காதலித்து கூட்டிக்கொண்டு வர, அந்தியூர் பா.ம.க மூலமாக கவுன்சிலர் மாரப்பனுக்கு தகவல் வர,அதற்குள் பயந்து போன இளைஞனின் தந்தை மாரியப்பன் “பையன் தெரியாம கூட்டிட்டு வந்துட்டான் பொன்ணை கூட்டிட்டு போயிடுங்க” என்றிருக்கிறார். அதற்குள் இளைஞனும் அப்பெண்ணும் காவேரிபுரம் விடுதலை சிறுத்தைகளிடம் தஞ்சம் புகுந்து விட்டனர்.
காவேரிபுரம், வி.சிக்களின் செல்வாக்கான பகுதி என்பதால் பா.ம.க வன்னிய வெறியர்கள் மாரியப்பனின் வீட்டை அடித்து நொறுக்கி அவரின் மனைவி மற்று இரு உறவினர்களை பலமாக தாக்கியிருக்கின்றனர். பின்னர் அவரின் ஆடு, மாடு, டி.வி.எஸ் வண்டியை திருடிக்கொண்டு போயிருக்கின்றனர். இதை ஒளிந்திருந்து பார்த்த மாரியப்பன் வி.சிக்களிடம் சொன்னவுடன், அவர்கள் அடுத்த நாள் ஈரோடு சாலையில் 3 மணி நேரம் மறியல் செய்கிறார்கள். வேறு வழியின்றி மாரப்பன் உள்ளிட்ட சிலர் மீதி பி.சி.ஆர் வழக்கு போடப்படுகின்றது. ஆனால் மாரப்பனோ கைது செய்யப்படாமல் சட்டத்தில் ஓட்டைகளை வைத்து போலீசின் உதவியால் எப்படியோ முன்ஜாமீன் பெற்று விட்டு தப்பிக்கிறார்.
“வன்னிய பொண்ணை சக்கிலி தொட்டுட்டான் என்பதுதான் பிரச்சினை, அதுவும் பொண்ணை மீட்க முடியாதிருப்பது வன்னியர்களுக்கு மாபெரும் அவமானம், இன்னும் அவர்கள் ஏதோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டிருப்பது மிகக் கேவலம்”. அதற்கு சின்ன பரிகாரம் பறையர்களின் மீதான தாக்குதல். நாங்க சொல்றதக் கேட்டுக் கொண்டு இருந்தால் ஏன் இந்தப்பிரச்சினை? என்கிறார்கள் வன்னிய சாதி வெறியர்கள்.
இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விசயம் இருக்கிறது. இது கூட எதேச்சையாக பேருந்தில் ஒருவர் பேசியதைக் கேட்டதுதான் “டி.எஸ்.பி தாழ்த்தப்பட்ட சாதிதான , அவரு போன முறை அந்தப் பையன் வன்னிய பொண்ணை கூட்டிக்கிட்டு வந்தப்போ பாதுகாப்பு கொடுத்தார், டி.எஸ்.பி நம்மாளுங்க கையை பிடிச்சு ஜீப்புல ஏத்துறத பார்த்தவுடனே நம்மாளுங்க செம டென்சன் ஆயிட்டாங்க, போலீசுக்கு செம அடி”.
இப்போது வன்னியர் சங்கத்தினர் கொளத்தூர் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களூக்கு மீண்டும் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பிரச்சினை எனில் வழக்குக்கான நிதியை நாம் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்றும் அது வன்னியசாதிக்கு கடைமை என்றும் சாதிவெறி பரப்பி வருகின்றனர்.
உழைக்கும் மக்களின் பிரச்சினையைத் திசைதிருப்பும் வன்னிய சாதிவெறி!
வீரப்பன் தேடுதல் வேட்டையில் அப்பாவி மக்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். சோளகர் தொட்டி என்ற நூல் சித்திரவதைகளின் சில பக்கங்கள்தான். வீரப்பனின் கூட்டாளி என்று சந்தேகித்து தினமும் பலரை இழுத்து வரும் அதிரடிப்படை அவர்களை தினமும் உதைத்துக் கொண்டே இருக்கும். அப்படி அடிபட்டவனில் ஒருத்தன் கூட வன்னியன் இல்லையா, அந்த சித்திரவதை முகாம்கள் அருகில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்குமா வன்னியர் சங்கம்?
கொளத்தூர் கிராமங்களில் விவசாயம் அறவே இல்லை, விவசாயம் செத்துப்போய் விட்டதே, நம் வாழ்வினை பறித்து விட்டார்களே என்ற கோபம் அரசாங்கத்துக்கெதிராக எப்போதும் வருவதில்லை. பி.டிபருத்தியை பயிரிட்டு நாசாமாய்ப்போன வன்னியனை எப்போதும் வன்னியர் சங்கம் முகர்ந்து பார்ப்பதில்லை. ஆனால் பறையன் கால்மேல் கால் போட்டால் கோபம் வரும். மக்களைத் தின்னும் ஆளும் வர்க்கத்துக்கெதிராக எப்போதும் தூக்கப்படாத அரிவாள், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமையைக் கேட்கும் போது சீறிப்பாய்ந்து வருகிறது.
“வடமாவட்டம் முழுவதும் வன்னியர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்து, எங்களுக்கு உள் ஒதுக்கீடு கொடு” என்ற போர்வையில் வன்னிய வெறி பரப்பும் பா.ம.கவினர், இந்த தனியார்மய தாராளமய உலகமய சூழலில் இட ஒதுக்கீடு செல்லாக்காசுதான் என்பதைப் பற்றி பேச மறுக்கின்றனர். கல்லூரிகளில் படிக்க லட்சக்கணக்கில் செலவு, தனியார்மயத்தின் விளைவால் மூடப்பட்ட ஆலைகளால் துரத்தப் படும் தொழிலாளர்கள் இது எதைப்பற்றியும் பா.ம.க மற்றும் எந்த சாதிச்சங்கமும் பேசுவதில்லை. ஏன் பேசுவதில்லை என்பதல்ல, அவர்கள் பேச மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
மேட்டூரில் CPM பொரட்சி கட்சியின் சி.ஐ.டி.யூ தான் மிகப்பெரிய தொழிற் சங்கம். ஏற்கனவே தோலர் சீரங்கன் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். மாவட்டச்செயலாளரும் இந்த மேட்டூர் தான். இந்தப் பிரச்சினையைப்பற்றி அவர்களுக்கு பேசவே நேரம் இல்லை. மேடை போட்டு எவ்வளவு அழகாக செயாவுக்கு சேலை துவைக்கிறோம் என்று சொல்லவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. தனிக்குவளை முறைக்கெதிராக போராடப்போன அந்த சி.பி.எம் தோலர்களையும் காணவில்லை. ஏற்கனவே கொளத்தூர் கிராமங்களில் தீண்டாமை இருப்பதாக சவடால் விட்ட தோலர்கள் தற்போது தங்களின் வாய்களை இருக்க மூடிக்கொண்டார்கள்.
வன்னிய சாதி வெறியர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்க ஜீ.கே. மணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். முதல் கட்டமாக அமைதிகமிட்டி அமைக்கப்பட்டு 21-ம்தேதி திருவிழா தொடங்கப்பட்டு முடிந்தும் விட்டது. வருகின்ற வாரத்தில் அரசு மூலமாக வழக்குகள் பைசல் செய்யப்படும் என்று தெரிகிறது. இது பற்றி திருமாவளவன் ஏதும் அறிக்கைகூடவிடவில்லை.
ஆளும் வர்க்கங்களிடம் சரணடைந்த விடுதலைச் சிறுத்தைகள்!
இந்த ஆதிக்கத்துக்கெதிராக போராடும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் என்ற ஆளும் வர்க்கங்களிடம் சரண்டைந்த கட்சியில் இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். சுமார் 4 அண்டுகளுக்கு முன் வன்னியர் தலித் பிரச்சினை தீவிரமாக இருந்த போது தேர்தலும் வந்தது. ஜி.கே மணி மேட்டூர் தொகுதியில் வேட்பாளராக நின்றார். அவருக்கு வி.சிக்கள் ஓட்டு சேகரித்தனர். பெரும்பான்மை தலித் மக்கள் பா.ம.கவிற்குத்தான் வாக்களித்தனர். “சாதிவெறி எல்லை மீறிபோன இங்கு பா.ம.கவோடு எங்களால் எப்படி இணைந்து வேலை செய்ய முடியும்? இதோ இப்போது கைகுலுக்கிக்கொண்டால் சாதி பிரச்சினை ஒழிந்து விடுமா?” என்று யாரும் கேட்கவில்லை.
சட்டசபையில் சின்ன பிரச்சினை என்று ஜி.கே மணி பேசும் போது வி.சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்ன செய்து கொண்டிருந்தார்? வன்னியர்கள் மீதான துப்பாக்கிச்சூடு என்று இதை மாநில பிரச்சினையாக்கினார் ஜி.கே.மணி. அப்போது திருமா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சியினருக்கு தெரிகிறதா என்பதும் புரியவில்லை.
சாதி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்கள் வி.சிக்களால் தொடர்ச்சியாக நடத்தப்படுவதில்லை. அவர்களுக்கு திருமாவளவன் புகழ் பாடவே நேரம் சரியாக இருக்கும். வி.சி கட்சிக்கு இப்போதைய வேலையே கட்டப்பஞ்சாயத்துதான். உழைக்கும் மக்களிடமிருந்து அவர்கள் வெகுதூரம் விலகிப்போய்விட்டார்கள். ஆதிக்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக போராடும் தருணங்களிலே ஒரு தேர்தல் வரும். தேர்தலில் எதை எதிர்த்துப் போராடுகிறார்களோ அதற்காக ஓட்டு கேட்கும் அவலமும் நடைபெறும். இந்த இலட்சணத்தில் விடுதலை எப்படி?
இப்படி பாதிக்கப்படும் இளைஞர்கள் போராடினால் அவை கட்சியின் துரோகத்தால் முற்று பெறாமலே போய்விடுகிறது. சாதிவெறியை ஒழிப்பதோ, சாதியை ஒழிப்பதோ அவ்வப்போது எடுக்கப்படும் தாக்குதலுக்கான எதிர் போராட்டத்தால் மட்டும் முடியாது. அது தொடர்ச்சியாக முனைப்புடன் அரசியல், பண்பாட்டு, கலாச்சார வடிவங்களில் ஊன்றி இருக்க வேண்டும். அதன்படி வி.சி இயக்கம் மூலம் சாதி ஒழியும் என்பது பகற்கனவே.
ஆனால் தாழ்த்தப்பட்ட இந்த இளைஞ்ர்கள் திருமாவைபோல கருணாநிதி வீட்டிற்கும், ஜெயா தோட்டத்திற்கும் சென்று பொறுக்கித் தின்னவில்லை. பாதிப்பு இருக்கும் வரை எதிர்தாக்குதலும் இருக்கும் என்பதுதான் நியதி . அவ்வகையில் அவர்களின் ஆதிக்கத்துக்கெதிரான போரில் பிற உழைக்கும் மக்களும், புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் அவர்களோடு களமிறங்க வேண்டியது அவசியம்.
______________________________________________________
– சேலம் மாவட்டத்திலிருந்து வினவு நிருபர்.
தொடர்புடைய பதிவுகள்
- சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!
- சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !
- பார்ப்பனியம் – ஒரு விவாதம்!
- தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!
- வெண்மணிச் சரிதம்
- தலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை!!
- காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா, அரிவாளா?
- தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!
// ///சுமார் 4 அண்டுகளுக்கு முன் வன்னியர் தலித் பிரச்சினை தீவிரமாக இருந்த போது தேர்தலும் வந்தது. ஜி.கே மணி மேட்டூர் தொகுதியில் வேட்பாளராக நின்றார். அவருக்கு வி.சிக்கள் ஓட்டு சேகரித்தனர். பெரும்பான்மை தலித் மக்கள் பா.ம.கவிற்குத்தான் வாக்களித்தனர். “சாதிவெறி எல்லை மீறிபோன இங்கு பா.ம.கவோடு எங்களால் எப்படி இணைந்து வேலை செய்ய முடியும்? இதோ இப்போது கைகுலுக்கிக்கொண்டால் சாதி பிரச்சினை ஒழிந்து விடுமா?” என்று யாரும் கேட்கவில்லை/// //
4 ஆண்டுகளுக்கு முன்பு கோ.க.மணி மேட்டூரில் போட்டியிட்ட போது, விடுதலை சிறுத்தைகள் பா.ம.க.வுக்கு எதிரணியில் அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்தனர்.
அப்புறம் எப்படி வி.சிக்கள் பா.ம.க.வுக்காக வாக்கு சேகரித்திருக்க முடியும்? பா.ம.க.வையும் திட்டவேண்டும், வி.சிக்களையும் திட்டவேண்டும் என்பதற்காக கட்டுக்கதைகளை அள்ளிவிடாதீர்.
கொளத்தூரில் வன்னியரின் நிலையும், தலித்துகளின் நிலையும் ஒன்றுதான். காலம் காலமாக நிலவிவரும் சாதி வேறுபாடுதான் இருவரையும் பிரிக்கிறது. கல்வி, பொருளாதார நிலைகளில் மிகமிகமிக பின் தங்கியிருக்கும் வன்னியர்களின் அறியாமையால் சில பிரச்சினைகள் எழலாம். அது தவறுதான். அதற்காக வார்த்தைக்கு வார்த்தை ‘வன்னிய சாதிவெறி’ என்பது வன்னியர்களுக்கு எதிரான உங்களின் காழ்ப்புணர்ச்சியைதான் காட்டுகிறது.
அருள்,
கடந்த தேர்தலில் வேண்டுமானால் நீங்கள் சொன்னது போல இருந்தாலும் பா.ம.கவும், வி.சிக்களும் ஒரே கூட்டணியில் இருக்கவில்லையா என்ன?
வன்னியரும், தலித்துக்களும் வர்க்கமென்ற நிலையில் ஒன்றுபட்டாலும் சாதி ரீதியில் சமமாக இல்லையே? இதை காலம் காலமாக நிலவி வரும் சாதி வேறுபாடு என்று ஏதோ இரு குழுக்கள் பிரிந்திருப்பது போல சொல்கிறீர்கள். இல்லை.வன்னிய சாதி, தலித் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதுதான் காலம் காலமாக நிலவிவரும் அந்த வேறுபாடு.
அதை ஒத்துக் கொண்டு வன்னிய சாதி வெறியை கண்டிக்காமல் சமப்படுத்தி பேசுவது கூட சாதி ஆதிக்கத்திற்கு உதவி செய்வதுதான்.
வன்னியரின் நிலையும், தலித்துகளின் நிலையும் ஒன்றுதான்… ///////
அருள், இதை உங்களால் விளக்க முடியுமா?
வினவு அய்யா, தாங்கள் என்ன ஜாதியோ? சொல்ல இயலுமா?
முதல்ல நீங்க யாரு என்னன்னு சொல்லிட்டுத்தானே கேக்கணும்ணே?
இந்த பதிலை தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன். அதையே சொல்லிவிட்டீர்கள். நான் யாருன்னு சொல்லிவிட்டால் நீங்கள் சொல்லுவீர்கள் என்று என்ன உத்திரவாதம் அய்யா?
அதனால் நீங்கள்
முதலில் சொல்லுங்கள் நான் பின்னர் சொல்லுகிறேன்.
தங்களுக்கு தைரியம் போதவில்லை என்று நெனைக்குறேன்.
Vinavu is manitha jaathi. neenga kandippa antha jaathi illa!
ஜாதி இல்லன்னு சொல்ரநன்பர்களே !நீஙகல் கலப்பு திருமனதில் பிரந்தவரா ? கட்டாயமக இருக மாட்டிர்கல் ! உஙல் மனைவியும் உன் ஜதியில்ல தான் இருபார் !
முட்டாஊ அண்ணே, சாதி பத்தி கேக்குறானே இவனையெல்லாம் செருப்பால அடிக்கவேணாமான்னு பக்கத்துல பேசிகிறாங்க.. சூதானமா இருங்க!!!
அசிங்க குறி அண்ணே வணக்கம். வந்துடீயலா. இங்க என் பக்கத்துலயும் பேசிக்குறாங்க உங்கள எல்லாம் விளக்குமாறால அடிகொனுமுன்னு. சும்மா சும்மா சாதி ஆதிக்க வெரின்னுட்டு உங்க கம்முனி வெறித்தனத்த காட்டுறேல்ன்னு
//சுமார் 4 அண்டுகளுக்கு முன் வன்னியர் தலித் பிரச்சினை தீவிரமாக இருந்த போது தேர்தலும் வந்தது. ஜி.கே மணி மேட்டூர் தொகுதியில் வேட்பாளராக நின்றார். அவருக்கு வி.சிக்கள் ஓட்டு சேகரித்தனர். பெரும்பான்மை தலித் மக்கள் பா.ம.கவிற்குத்தான் வாக்களித்தனர்.//
தவறான தகவலை கொடுத்து இருக்குறீங்க அதை ஒத்துக்கோங்க. கூட்டணி பற்றி பிறகு பேசலாம் 2006-ல் எப்படி விசிகவினர் ஜி.கே மணிக்கு ஓட்டு கேட்டனர்?
எந்த தரவின் அடிப்படையில் இந்த கருத்து?
அருமையான ரிப்போர்ட் தோழரே. வாழ்த்துக்கள்
தோழர் மா.சே நீண்ட நாட்களாக விவாதங்களில் உங்களைக் காண முடியவில்லை. மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பங்கெடுங்கள்.
தோழரே, அலுவலகத்தில் பின்னூட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் முன்போல விவாதங்களில் பங்கெடுக்க முடியவில்லை, மற்றபடி
வினவை தினமும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
இந்தச்செய்தி மிகவும் வருத்தமாகவும் தமிழர்களுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்துவதுமாய் உள்ளது. இந்த லட்சணத்தில் பார்ப்பான் பார்பனீயம் என்று சிலர் உளறிக்கொண்டுள்ளனர். தமிழகத்தின் தலையெழுத்து.
மணி, பார்பனியத்துள் வன்னிய சாதிவெறியும் அடக்கம்.
பார்பனியத்துள் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.
Oho.. ithil Paarppan engirundhu vandhaan? Avana vandhu unvalai sandai pooottukolLL sonnan?
Pongada velai vetti-illadha, padikkadha porukki pasangala!!!
நல்ல பதிவு
வினவு நிருபரின் இப்பதிவுக்கு, தமிழ் வலைபதிவுலகில் வன்னிய டோண்டுகளாக வலம் வரும் குழலி தமிழ்சசி ஆகியோரின் எதிர்வினை என்னவென்று அறிய அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம்
பிச்சைமணி,
நாங்கள் அறிந்தவரை குழலியை வன்னிய டோண்டு என்று சொல்லலாம். தமிழ்சசியை அப்படி சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லையே? நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்கள்?
பாமாக பற்றிய அவரது இடிபோன்ற மவுனத்தை வைத்து சொல்கிறேன்
வினவு , தங்களையும் ஒரு கம்முனி டோண்டு என்று கூட சொல்லலாமா?
ஆதிக்கம் செய்து அடிமைப்படுத்துவதை டோண்டு என்றால் ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைக்கு போராடுவது கம்யூனிசம் என்று சொல்ல்லாம். எப்படியோ மூட்டு அண்ணன் வெட்டி ஆபிசர் வேலையை விடுத்து இப்படி எப்பாவாச்சும் உருப்படியா ஒன்று இரண்டு எடுத்து விட தூண்டுகிறார்.
communistai காயடிபோர் சங்கம் என்ற பேரில் எழுவது டோண்டு தான்
சற்று தாமதமாக பதில் சொல்வதற்கு மன்னிக்கவும். ஆதிக்கம் செய்து அடிமைபடுதுவதை நான் கம்முனிசம் என்று சொல்லுவேன். என்னை பொறுத்தவை டோண்டு என்றால் அந்த டோண்டு ராகவனை தான் குறிக்கிறது. உங்கள் நினைப்பு செயல் சொல் நடத்தை எல்லாம் ஒரு தனி மனித காழ்ப்பைதான் உமிழ்கிறது. இதில் இருந்தே தெரிகிறது உங்கள் ஆதிக்க உணர்வு. அதுதான் உங்கள் எல்லோருடைய கம்முனிசம். நல்ல ஆபீசர் வேலை தான் பார்குறேல் போங்கோ.
டோண்டுங்குற உங்க குருநாதர் பார்ப்பனியத்தின் பதிவுலக குறியீடு, வெறும் தனிநபரல்ல. அதனால் சாதி ஆதிக்கத்தின் அடையாளமாக அவரைச் சொல்வது அவருக்கே பிடித்தமானது எனும்போது மூட்டு அண்ணனுக்கு ஏன் வேர்க்கிறது? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்?
அவருக்கு பிடித்தமானதை அவர் தைரியமாக சொல்லுகிறார். அவருடைய தைரியத்தை தான் நீங்கள் ஆதிக்க வெறி என்று சப்பை கட்டுகிறீர்கள். தங்கள்
நெஞ்சு ஏன் பதைபதைகிறது? அதை ஏன் உங்களால் சொல்ல
முடியவில்லை.
முட்டாஊ அண்ணே….வினவுக்கு பிடித்தமானதை வினவு தைரியாமாக சொல்லும் போது மட்டும் இந்த முட்டாஊ என்ன மயித்துக்கு மணியாட்டிகினு ஆதிக்கம், அடிமை, தப்புன்னு கருத்து சொல்ல வறான்னு..நான் கேக்கல பக்கத்துல இருக்குற கோவாலு கேக்குறான்
அசிங்க குறி அண்ணே . உங்களுக்கு பிடித்ததை நீங்கள் ஆட்டுகின்றேல். அவாளுக்கு பிடித்ததை அவாள் ஆட்டுகிறாள்.
தோழர் வினவு ஒரு கோரிக்கை தோழர் கேள்விக்குறியை(அருமையான பெயர்) இழிவுபடுத்துவது போலஅசிங்ககுறி, குறி என்றெல்லாம் ஆபாசமாக எழுதுவதை தாங்கள் அனுமதிக்ககூடாது
நன்பர் மரண அடி; வினவுதளத்தின் ஸ்பெஸலிட்டியை எடுக்க சொன்ன எப்புடி பின்னூட்டங்களை மட்டறுக்காமல் வெளியிடுவதற்கு ஒரு தில்லு வேனும் அது வினவுட்ட இருக்கு இதுக்கே பயந்த எப்புடி புரட்சி என்பது மாலை நேர பொழுதுபோக்கு அல்ல மிஸ்டர் மரண அடி
ஐதர் நான் பின்னூடத்த நீக்கனும்னு சொல்லவில்லை ஒரு தோழரை ஆபாசமாக எழுதுவதைதான் நீக்க சொன்னேன், அப்பறம் புரட்சி மாலை நேர பொழுது போக்கு இல்லை என்பது எனக்கும் தெரியும் , பயப்படுற ஆள் நான் இல்ல கண்ணு நம்ம பேரு மட்டும் மரண அடி இல்ல நம்ம அடியும் மரண அடிதான் ஐதர் நண்பா.
ஹைதர் , மரண அடி.. நீங்க அண்ணன் முட்டாஊ வ பத்தி பீல் பண்ணாதீங்க… அவரும் நானும் இப்பிடி ஒருத்தர ஒருத்தர் திட்டிகிட்டு எங்க மென்டல் டிப்ரசன கொரச்சுகிறோம்.. இதுக்கு போய் புரட்சி அது இதுன்னு …
ok boss
///கண்ணு நம்ம பேரு மட்டும் மரண அடி இல்ல நம்ம அடியும் மரண அடிதான் ஐதர் நண்பா/// அண்ணே மரணஅடி களறி தெரியும அதுல பல ஸ்டெப்பு இருக்கு அடிவரிசை. புடிவரிசை.குத்துவரிசை.பூட்டுவரிசை இப்புடி நம்ம இளையாங்குடி உசேன் கனி உஸ்தாத் அந்த நாட்டுக்கலையை சிறப்ப கத்துக்கொடுத்தார் பிராக்டிகல் பாத்து ரோம்ப நாளச்சு நம்ம அடியும் மரண அடியுன்னு சொன்னிங்களே நீங்கதான் எனக்கு சரியான ஆளு போட்டு பாப்பமா.
தமிழகத்தில் நிலவும் சாதிய அடக்குமுறைகளும், சாதிய மோதல்களும் முழுமையாக ஒழிந்தால் மட்டுமே தமிழன் மானத்தோடு நிம்மதியாக வாழமுடியும். இதற்கான பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பிற சமுதாயத்தினர் நிம்மதியாக வாழமுடியாமல் ஊரை காலிசெய்த நிகழ்வுகளையும்…, ஒருசில தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேற்று சாதி பெண்களுக்கு எதிராக திட்டமிட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடும் நிகழ்வுகளையும்… வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஒருசில தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வி.சி.போன்ற இயக்கத்தினருக்கும் பணம் காய்க்கும் மரமாக இருப்பதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சீ.பிரபாகரன்
//தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பிற சமுதாயத்தினர் நிம்மதியாக வாழமுடியாமல் ஊரை காலிசெய்த நிகழ்வுகளையும்…, ஒருசில தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேற்று சாதி பெண்களுக்கு எதிராக திட்டமிட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடும் நிகழ்வுகளையும்… வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஒருசில தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வி.சி.போன்ற இயக்கத்தினருக்கும் பணம் காய்க்கும் மரமாக இருப்பதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.//
பிரபாகரன் நீங்கள் எந்த இடத்தில் நடந்தது என்று சொல்லமுடியுமா?
சாதி வெறியை சாந்த்தமாக வெளிப்படுத்துகிறீர்கள்.
சொல்லக்கூசும் சோகக்கதைகள் நிறைந்ததுதான் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை.அவர்களின் நிலைக்கு எல்லாம் சாதிக்காரர்களும்தான் காரணம்.
நான் வன்னியர் சமூதாயத்தைச் சேர்ந்தவன். நீங்கள் சொல்வதுபோல் சாதிவெறி எனக்கு இல்லை. தாழ்த்தப்பட்வர்களுக்கு எதிராக நிகழ்ந்த சொல்லக்கூசும் சோகக்கதைகளை நான் அறிவேன். தாழ்த்தப்பட்ட சமூதாயம் தனக்கான அரசியல் அதிகாரங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற சிந்தனையோடு அவர்களோடு இணைந்து களப்பணியாற்றியவன் நான். அதற்காக சாதியின் பெயரால் யார் தவறுசெய்தாலும் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது. தாழ்த்தப்பட்டவர்களால் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளான பிறசமூகத்தினர் கடலூர் மாவட்டத்தில் ஏராளம். குறிப்பாக கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் செறிவாக வாழ்கிறார்கள். இப்பகுதியைச் சுற்றியுள்ள கொங்கராயனூர், எழுமேடு, அகரம், மேல்பட்டாம்பாக்கம் நகரம், வாழப்பட்டு போன்ற பகுதிகளில் வாழ்ந்த பிற சமூதாயத்தைச்சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் தாக்குதலுக்கு ஆளாகி பலர் ஊரை காலிசெய்துவிட்டனர். வன்கொடுமைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்கள் தமிழ்நாட்டில் உண்டு. கடலூர், விழுப்புரம் மாட்டத்தில் வசூல்வேட்டைக்கும், சொந்த விருப்புக்கும், கொடுக்கல் வாங்கல் பிரச்சனைக்கும், அரசியல் காரணங்களுக்காகவும் இந்தச்சட்டம் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து போராடிவரும் தோழர். கல்யாணி மீதே இந்தச்சட்டம் பயன்படுத்தப்பட்டது என்பதை தாங்கள் அறிந்துகொள்ளவேண்டும். இதுதொடர்பான ஆரோக்கியமான விவாதங்கள் தமிழ்நாட்டில் நடைபெறவேண்டும் என விரும்புகிறேன்.
குற்றம் யார் செய்தாலும் குற்றம்தான். நானும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவன் தான்.
சீ.பிரபாகரன் – நீங்கள் கூறுவது உண்மை என்று நான் சாட்சி கூறுகிறேன்.
SC/ST PARTY YAARU KOODA THAN SANDAI PODALA SOOLUNGA PARPOM?
சீ.பிரபாகரன்//
நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அது கண்டிக்க வேண்டியதுதான். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் செய்யும் தவறுகளை உளவியல்ரிதியில் பார்க்கவேண்டியது. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய நிகழ்வுகளை வைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக வைப்பது சரி இல்லை தோழர்.
தோழர் நந்தன் அவர்களுக்கு வணக்கம். ஒரு சில நிகழ்வுகளை வைத்துக்கொண்டு ஒரு சமூதாயத்தையே நான் குற்றம் சொல்லவில்லை. அதுபோல் ஒருசில வன்னியர்கள் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த வன்னியர்களும் சாதிவெறியர்களாக சித்தரிக்கப்படுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் நிலை குறித்த போதுமான அறிவோ தெளிவோ இல்லாத சமூகமாகத்தான் பெரும்பான்மையான வன்னியர்கள் வாழ்ந்துவருகிறார்கள். மாரியாத்தாளுக்கு கூழ் ஊற்றுவது, ஐயனாருக்கு கெடாவெட்டுவது, திரௌபதிக்கு நெருப்பு மிதிப்பது, முருகனுக்கு காவடி எடுப்பது அல்லது குடி, கூத்தியா, வீராப்பு, வீம்புக்கு கத்திமுழுங்குவது, ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு கொடி பிடிப்பது, அரைஅடி வாய்க்கால் வரப்புக்காக அண்ணன் தம்பியை பகைத்துக்கொள்வது போன்ற வட்டத்தைத்தாண்டி வன்னியர்கள் வெளிவரவில்லை என்பதே உண்மையான நிலை. இப்படிப்பட்டச் சூழலில் தாழ்த்ப்பட்டவர்கள் வன்னியர்களை எதிராயாக நினைப்பதும் வன்னியர்கள் தாழ்த்தப்பட்டவர்களை எதிராயாக நினைப்பதும் தமிழின எதிரிகளுக்கு மட்டுமே நன்மை பயப்பதாக இருக்கும்.
உன்மை
வன்னியனும் கருப்பு – நம்ம பறையனும் கருப்பு!
சிரிச்ச மட்டும் பல்லுல தெரியும் வெளுப்பு!
படிப்புல பாப்பான் பெரிய பருப்பு நம்ம ஆளுக்கு வருவது வெறுப்பு!
சாதின்னு வந்தா வன்னியன் கவுண்டனாம், ஆதிதிராவிடன் அடிமையாம்!
கஞ்சிக்கில்லாதவன்னாலும் கருமம் சாதிக்கு இருக்கு செருக்கு!
நீ அதை கவுரம் பாக்காம அடிச்சு நொறுக்கு!
அருள் அவர்களே,வன்னியரின் நிலையும், தலித்துகளின் நிலையும் ஒன்றுதான சற்று விளக்குகளே .
கொளத்தூர் பகுதியில் பா.ம.க. தலைவர் கோ.க. மணி மீது போடப்பட்ட ஒரு பொய் வழக்கினை காரணமாக வைத்து கோயில் விழாவில் மேளம் வாசிக்க ஆதிதிராவிடர்களை அழைக்கவேண்டாம் என்று முடிவுசெய்த வன்னியர்கள் அருந்ததியினரை அழைத்தனர்.
மேளம் வாசிப்பது ஒரு தொழில் என்று எடுத்துக்கொண்டால், அதனை எங்குவேண்டுமானாலும் செய்வதற்கு அருந்ததியினருக்கு உரிமை இல்லையா?
ஆனால், மேளம் வாசித்த அருந்ததியினரை ஆதிதிராவிடர்கள் மிரட்டியுள்ளனர். அருந்ததியினருக்காக வன்னியர்கள் பேசப்போய் கலவரம் ஏற்பட்டுள்ளது.
வன்னியர்கள் சண்டையிட்டது தவறுதான். ஆனால், அருந்ததியினருக்கு எதிராக ஆதிதிராவிடர்கள் நடந்துக்கொண்டது மட்டும் நியாயமா?
வன்னியர்கள் ஆதிதிராவிடர்களுக்கு எதிராக நடப்பது சாதி வெறிதான். அப்படியானால், அருந்ததியினருக்கு எதிராக ஆதிதிராவிடர்கள் நடந்துகொண்டதற்கு என்ன பெயர்?
வன்னியர்களை பார்ப்பனர்களுக்கு இணையாக பேசுவது எல்லாம் ரொம்ப ஓவர்.
திருவிழா, சுடுகாட்டு ஊர்வலத்திற்கு மேளம் அடிப்பது, கருமாதி வேலை, செத்த மாட்டை புதைப்பது, நகரசுத்தி வேலைகள், எல்லாம் வெறும் ‘தொழிலா’?
ஆதிக்கசாதித் திமிரை எதிர்க்கும் பறையருக்கு எதிராக அருந்ததியினரைப் பயன்படுத்துவது கூட பார்ப்பனியத்தின் நரித்தந்திரம்தான். அவ்வகையில் வன்னிய ஆதிக்க சாதியும் பார்ப்பனியத்தின் பிடியில்தான் இருக்கிறது.
அப்படி என்றால் அருந்ததியினரை மிரட்டிய தலித்களை நீங்கள் முதலில் கண்டிக்க வேண்டும், ஆதிக்கத்தை எதிர்கிறேன் பேர்வழி என்று தன்னைவிட இளைத்தவனிடம் கோபத்தை காட்டகூடாது.
அப்படி என்றால் அருந்ததியினரை மிரட்டிய தலித்களை நீங்கள் முதலில் கண்டிக்க வேண்டும், ஆதிக்கத்தை எதிர்கிறேன் பேர்வழி என்று தன்னைவிட இளைத்தவனிடம் கோபத்தை காட்டகூடாது.//
கண்ணா அன்பு உன் சுயசாதி வெறியை இப்படி அப்பட்டமாக
சொல்லக்கூடாது. நீ எதுக்குடா என்னை அடிச்ச என்றுக்கேட்டால்,
அவனை நீ ஏன் அடிச்ச என்று பதில் சொல்லுது பருப்பு.
இது பருப்பு இல்லை,பண்ணையார்,ஜெமிந்தான் என்ற
அதிகார நினைப்பு
அங்கு நடந்த பிரச்ச்சினை ஆதிக்க சாதிக்கான மோதல் அல்ல, ஏன் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்பதுதான் அங்கு யாரும் தாக்கப்படவோ இல்லை என்பதுதான் உண்மை. இதுவரை அருந்ததியர்களை தாக்கியதாக வழக்கோ ஆதிதிராவிடர்கள் மீது போடப்படவில்லை.
///அருள் அவர்களே,வன்னியரின் நிலையும், தலித்துகளின் நிலையும் ஒன்றுதான சற்று விளக்குகளே///
Kanisays:
‘நான் உயர்ந்த சாதி, நீ தாழ்ந்த சாதி’ என்கிற வீண் சாதிப்பெருமையை தவிர – கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை போன்ற எல்லாவற்றிலும் வன்னியரின் நிலையும், தலித் மக்களின் நிலையும் ஒன்றுதான்.
உண்மையில், தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கிய பகுதிகள் என்பவை எல்லாம் – வன்னியர்களும் பறையர் பிரிவினரும் அதிக அளவில் வாழும் பகுதிகள்தான்.
இந்த அவலத்தை எதிர்த்து போராடுவதே இன்றைய தேவை
நீங்கள் சொல்வது பாதி உண்மை அருள். ஏழை வன்னியர்களில் ஒரு சிறுபான்மையினர் பா.ம.க, அரசு வேலை, ஊரக தொழில்கள் என்று செட்டிலாகிவிட்டு தனது சுயசாதி ஏழைகளை சுரண்டுவதற்காக வன்னிய சாதி வெறியின் காவலர்களாக உலா வருகிறார்கள். இந்தக் கூட்டத்தை அப்புறப்படுத்தினால்தான, அடுத்து தீண்டாமைக்கெதிரான ஜனநாயகத்தை கொண்டு வரமுடியும். அதன் பிறகுதான் தலித்துகளும், வன்னியர்களும் ஏழைகள் என்ற முறையில் ஒன்று சேர்ந்து போராட வழிபிறக்கும்.
மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!! – “பசும்பொன் முத்துராமலிங்கம் படம் பொறித்த மஞ்சள் கொடிகளும், தேவர் வாழ்க! தேவர் படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா! பனமரத்துக்கே வவ்வாலா! தேவருக்கே சவாலா! என்கிற முழக்கங்களும் இம்முறை அகமுடையார் சாதியினரை விடவும் வெகு அதிகமாகவே வெளித்தெரிந்தன.”- இப்படிதான் கலைஞ்சர் “செஞ்சி ராமசந்திரனையும்,எல்.கணேசனையும் கையாண்டார்!,தற்போது டாக்டர் ராமதாசையும்,திருமாவளவனையும்!.
இந்தியாவும்,இலங்கையும் ஒரே பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தின் கீழ் இருந்தபோதே தற்போதைய “நாடுகளாக!” உருப்பெற்றன!.தற்போதைய பல பிரச்சனைகள்,”அந்த நிர்வாகத்திலிருந்து” விடுதலைப்? பெற்ற போது அமைந்த தோற்றுவாயாகவே உள்ளன.
இந்தியாவின் “காங்கிரஸ் அரசாங்கமும்”,இலங்கை “சிங்கள அரசாங்கமும்”,இலங்கைத் “தமிழ்த்? தலைமைகளும்” இந்த காலனித்துவ நிர்வாகத்திலிருந்து உதித்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஆகும்!.முப்பது ஆண்டுகளுக்கு முன்பு “இவர்களிடையே இணக்கப்பாடு ஏற்ப்படாமையினாலேயே” இலங்கைப் பிரச்சனை வெடித்தது.
இந்திராகாந்தி ஒரு தெற்காசிய சுதேசி?(போலி) போல்,இலங்கைத் தமிழ்த் தலைமைகளை கையாண்டார்.இது இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார நிர்பந்தமே தவிர,காங்கிரஸ் வெளிப்பாடு அல்ல.காங்கிரஸ் நிர்வாகம் என்பது,தற்போதைய “இலங்கை தமிழ்த்? தேசிய கூட்டமைப்பு” போன்றதே!.இதில் எங்குமே “மக்கள் சக்தி” தொழில் மயப்பட்டதாக தெரியவில்லை.இடையில் விடுதலைப் புலிகள் என்றும்,இயக்கங்கள் என்றும்,சோசியலிச? தமிழீழம் என்றும் ஆயுத போராட்டம் நடத்தி ஓய்ந்த பிறகு பலர் தற்போது “போஸ்ட்மார்ட்டம்” செய்கிறார்கள்.இதில் பல இணைய தளங்களில்,”லண்டன் ஈராஸ்” ரவி சுந்தரலிங்கம்,தேசம்நெட் ஜெயபாலன்,இனியொரு சபாநாவலன்,போன்றவர்கள் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் “யாழ்ப்பாணம்” என்ற சொல்லுக்கு சில விளக்கங்கள் தேவை.முல்லைதீவு,வன்னி,போன்ற அழகான தமிழ்ச் சொல்லான இது காலனிய ஆதிக்கத்திற்கு முன்பு,ஒரு சகோதரத்துவ “வேரின்” பிரதிபலிப்பாக இருந்தது.காலனித்துவ ஆதிக்க காலத்தில் “உள் முரண்பாடுகளின்” ஊற்றுக்கண்ணாக மறுவியது!.இதில் சபாநாவலன் என்பவர்,புலம்பெயர் இலங்கைத்தமிழர்களை,தொழிலாளர்களாக நிலை நிறுத்துவதற்கு,அவர்கள்,”ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் கடுமையாக உழைக்கிறார்கள் என்கிறார்.அவர்கள் தாங்கள் தஞ்சம் அடைந்த நாடுகளில்,ஒழுங்காக வரி கட்டி பதினாறு மணிநேரம் உழைக்க வில்லை,பிடிபட்டால் பல ஆயிரம் டாலர்கள் அபராதம் கட்டக்கூடிய “ரிஸ்க்” எடுத்து “பிளாக்கில்தான்” வரிகட்டாமல்,டாய்லட் கழுவுவது,உணவு விடுதிகளில் சமைப்பது,மூளை தொழிலாளிகளாக,போன்ற வேலைகளை செய்கிறார்கள்.இதை விட நல்ல வேலை,இந்திய – இலங்கை சம்பளத்தில்,தாய் நாடுகளில் வேலை கொடுத்தால் செய்யமாட்டார்கள்.இப்படி சேர்த்த பணத்தில்,”ரிஸ்க்” எடுத்து,மெர்சிடஸ் பென்ஸ்,பி.எம்.டபிள்யூ. கார்களை வாங்கி ஓட்டுவதற்கும்,ஈவிரக்கமில்லாமல் கொலை செய்து,தங்கள் அகதி அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள இயக்கங்களுக்கு பணம் கொடுக்கவுமே செலவழிப்பதை போதையாக கொண்டுள்ளனர்(எல்லாம் “எக்சேஞ்ச் ரேட்” செய்த புண்ணியம்).இங்கிருந்தே,இலங்கைத் தமிழர் பிரச்சனையின் பிரத்தியேக கனவான,”சக மனிதனை அடித்து சாப்பிடும் “CANNIBALISM” கருக் கொள்கிறது!.
இதை பல்வேறு வல்லரசு சக்திகள்,புரிந்தோ புரியாமலோ,சரியாக கையாண்டே,விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டியுள்ளனர்.
இதைப் படிப்பவர்கள் தமிழர்களாக இல்லாத பட்சத்தில் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.தமிழர்களாக இருந்தால்,இத்தகைய “CANNIBALISM” சத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முன்னேற்ப்பாடு செய்து கொள்வது நல்லது!.
இந்த “CANNIBALISM” சத்தின்,மூலம் என்ன?,தற்போது அது எங்கே மையம் கொண்டுள்ளது?.
நிச்சயமாக அது ஐரோப்பாவில்தான்!,மையம் கொண்டுள்ள இடம் “ஆப்கானிஸ்தான்”!.
இது அமெரிக்க வெளிவிவகார கொள்கையாக உருண்டு திரண்டு,ப.சிதம்பரம்,இலங்கைத்தமிழ் உருத்திர குமார்(ஹார்வர்ட)போன்றவர்கள் மண்டையில் “கல்வி அறிவாகி” இயல்பான இயங்கியலாக,இந்த இயங்கியல் சக்கரத்தில்,சட்டிஸ்கர்,வன்னி மக்கள் போன்ற பூர்வீக குடிகள் நசுக்கி அழிக்கப்படுகின்றனர்(அவதார்?).
அதாவது,1980 களில் தி.மு.க. கட்சிக்குள் இருந்தவர்களுக்கும் அப்போது,இலங்கைத் தமிழ் விடுதலை? இயக்கங்களைப் பற்றியும் அறிந்தவர்களுக்கு தெரியும்,தி.மு.க. தலைவரின் குடும்பம்,கட்சிகாரனிடமே கடன் வாங்கும் நிலையில் இருந்த நடுத்தரவர்க நிலையும்,இலங்கைத் தமிழ் இயக்கங்களின் தலைமைகள் “அனைவரின் பொருளாதார நிலையும்!”.தற்போது இவர்களெல்லாம் “பில்லியன் டாலர்கள்” ரேஞ்சுக்கு பேசும் நிலை எப்போது வந்தது?.இந்திய “புதிய பொருளாதாரக் கொள்கை” தாராளவாதத்தை நோக்கி அடியெடுத்து வைத்தபோது,இவர்கள் “இயங்கியலில்” மக்கள் சக்தி தொழில்ப்பாட்டின்,”மதிபின்மையை உணர்ந்து”,தங்களுக்கு வாய்த்த தரகு முதலாளித்துவ சந்தர்ப்பத்தை,தங்கள் தனிப்பட்ட பொருளாதார(குடும்ப) முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி விட்டனர்!.இந்த மாபெறும் அலையில்,இந்தியாவில் மாபெரும் கலாச்சார அடித்தளமிருந்தாலும்,இலங்கையில் ஒருவித “புத்தமத தேசியம்” இருந்தாலும் இந்த “எரியும் வீட்டில் பிடுங்கித் தின்னிகள்” சமூக கட்டுமானத்தை சிதைக்க முடியாமல்,தங்கள் நலத்தை மட்டும் பேண முடிந்தது!.ஆனால்,இலங்கைத் தமிழர் விஷயத்தில்(ஒட்டு மொத்த தமிழர் விஷயத்தில் என்றும் கொள்ளலாம்) இத்தகைய சமூக அடித்தளம் இல்லாததாலும்,அரசியல் தொழில்ப்பாடுகள்,தன்னலம் கொண்ட தனிநபர்களின் கூட்டாக இயங்கியதாலும்,சமூக கட்டமைபு சிதைந்து போனது!.இது “CANNIBALISM” மாக மறுவி நிற்கிறது!.
அடுத்தவர்கள் இந்த,ராஜா? அண்ணாமலை செட்டியார்கள்,”எச்சில் கையால் காக்காய் ஓட்டி அறியாத இந்தக் கும்பல்(PLUTOCRACY)” தமிழ்நாட்டு அரசியல் வாதிகளில் “புதிய பணக்காரர்களுக்கு” அறிவுறுத்துவது “உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ,அதற்கு தகுந்த அளவு குதிரைகளை வைத்து பராமரிக்க வேண்டும் என்பது”(அரபு நாடுகளில் பெண்களைப் போல).சில தலைமுறைகளுக்கு முன்பு மாடு மேய்த்துக் கொண்டிருந்த இவர்கள்( மாட்டு பாலை கறந்து விற்கலாமே,குதிரையில் என்னத்த கறக்கிறது?),ஆற்காட்டு நவாப்பாவது வெள்ளைக்கார துரைகளுக்கு பயந்து பயந்து,குதிரைகளை பராமரித்து வந்தான்.இவர்கள்,குதிரையை தொட்டுப் பார்த்ததே,காலனித்துவ ஆட்சி காலத்தில்தான்!.விஷயத்திற்கு வருவோம்,”தரகு முதலாளிகள் தேவையில்லை”!.
சிம்சன் ஆனாலும்,டி.வி.எஸ். ஆனாலும்,த இந்து ஆனாலும்,புலம் பெயர் இலங்கைத் தமிழர் ஆனாலும்,ஐரோப்பியரை காப்பியடித்தே “தமிழ் நடுத்தர வர்கங்களை” ஏமாற்றி வருகிறார்கள்!.கவலை வேண்டாம்,இவர்களிடையே ஒற்றுமை ஏற்ப்படாது என்பது நிறூபிக்கப்பட்டு விட்டது!.
பல விதமான அரசியல்,இயங்கியல் போக்குகள் “மக்கள் சக்தி” தொழில்ப் படாமலேயே நகருகின்றன,அதன் உச்சக்கட்ட நிலைதான் “இலங்கையின் முள்ளிய வாய்க்கால் வன்னி மக்கள் படுகொலை!”.வே.பிரபாகரன் இராஜீவ் கந்தியை கொன்றதால்தான் இத்தகைய ஒரு நகர்வு ஏற்ப்பட்டது,அதனால்,”அந்த மக்கள் படுகொலையினால் ஏற்ப்பட்ட பச்சாதாபத்தினால்” புலன் பெயர்ந்த இலங்கைத்தமிழரின் கவுரவத்தை(STATUS-QUO) காப்பாற்றும் வகையில் ஏதாவது ஒரு தீர்வை கொடுங்கள்!,என்ற வகையிலேயே தற்போதைய இலங்கைத் தமிழர் தலைமை நகர்ந்துக் கொண்டிருக்கிறது!.ஆனால் இலங்கைத் தமிழ் சமூக அமைப்பில் “உருபெற்றுவிட்ட” “CANNIBALISM” தான் ஒரு சமூக கட்டமைப்பிற்குள் புகுந்து படுகொலை நடத்தும் அளவுக்கு “இயங்கியல் நகர்வுக்கு அணுசரணை” வழங்கியுள்ளது என்பதே யதார்த்தம்!.
இந்த இயங்கியல் சக்கரம் அதே திசையில்தான் அடுத்த கட்டத்திற்கும் நகருகிறது என்பது என்னுடைய கணிப்பு!.
ஆகவே இந்த இயங்கியலின் “அச்சு” நிலைக் கொண்டிருக்கும் “ஐரோப்பிய சிந்தனை உலகில்” இது பற்றியான விழிப்புணர்வு எங்கே இருக்கிறது என்பதை உணர வேண்டும்!.
நிச்சயமாக “ஆப்கானிஸ்தானிலிருந்து”,துருக்கிய,அமெரிக்க,ஜெர்மன் படைகளை வெளியேற சொல்லும்,”உண்மையான இடதுசாரி சக்திகளாக” இவர்களை அடையாளம் காணலாம்!(original-sozial.de).
தமிழ்நாட்டை பொறுத்தவரை,”CANNIBALISM” சத்தை தவிர்க்க வேண்டும் என்றால்,முதலில் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தை அரசியல் அதிகாரத்திலிருந்து “அகற்றி வைக்க வேண்டும்”!.ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எத்துணை நூறு ஆண்டுகள் வேண்டுமானாலும் அவர்களின் குடும்பம் ஆண்டுக் கொள்ளட்டும்!.இயங்கியலின்,அடுத்தக் கட்டமான,”இரண்டாம் முள்ளிய வாய்க்காலை”,புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் நடத்துவதை இந்த நகர்வு தடுக்கும் என்பது என் கணிப்பு!.ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு,புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள்,எத்துணைப் பேரையும் கொன்று,எவ்வளவு கோடியாவது சம்பாதித்துக் கொள்ளட்டும்!.
இதை நடத்திக் காட்டிதான் பாருங்களேன்!!.
யோவ்! என்ன தாய்யா சொல்ல வர்ரே??
நீங்க பிஹெச்டி பெயில், நான் எட்டாங்கிளாஸ் பாஸ்! பெயில் பெருசா பாஸ் பெருசா? ஏழரை கிளாஸ் படிச்ச எனக்கே புரியலையே.. மத்தவங்களுக்கு எப்புடி புரியும்?? ம் ?
என்னது? இடி அமீன் வீட்டுல இடியாப்பம் சாப்பிட்டா, எல்லா பிரச்சனையும் தீந்துடுமா? என்ன கிரகம் சாமி இது?
ENVIRONMENT IS FIRST,BEFORE PROFIT!!.
GET OUT FROM AFGHANISTAN!.Baruch Spinoza and Georg Wilhelm Friedrich Hegel created the European scientific socio-political thinking which lead to MARXISM!.We must also work hard to create our own such thinkings!.Like “Avatar film” Europeans now slowly understanding by their own thinking the value of “ENVIRONMENT”,offcourse after earning profits.– original-sozial.de.But people like T.R.BALU earning profit, will never help society.I know him from his days of his first granite quarry near Tambaram,Chennai.
வினவில் இருந்து நீண்ட நாட்களுக்கு பின் தலித் கட்டுரை…. வாழ்த்துக்கள்..
இந்த அப்பாவி மக்களையும் அவர்களின் அறியாமையும் வைத்து அரசியல் பண்ணும் அரசியல் வாதிகள் ஒரு பக்கம், இப்படிப்பட்ட பத்திரிக்கை நிருபர்கள் ஒரு பக்கம். வன்னியரோ அரிஜன மக்களும் அருகருகே இயற்கையாய் அமைந்த கிராம சுழலில் வழ்துகொண்டு இருக்கின்றனர். ஏற்ற தாழ்வுகள் இருப்பதுவும் பிரிவினை வாதம், தீண்டாமை இர்ருபதுவும் உண்மைதான். என் உங்கள் விட்டுகுள்ளும் கூட இர்ருகிறதே.
இதை நீக்குவதற்கு என்ன முயற்சி எடுக்கப்பட்டது. அவர்களை மேலும் மேலும் சண்டையிட வைப்பதுதான் நடந்து கொண்டு இர்ருகிறது. உடையும் மண்டையோ, போலீஸ் கேசோ, இழப்போ ஒரு வன்னியருக்கும் ஒரு அரிஜன குடும்பத்துக்கோ தான்.
இதனை நீக்க என்ன முயற்சி எடுக்கப்பட்டது ..
என் இந்த ராமதாசோ இல்லை திருமாவளவனோ என்ன முயற்சி எடுத்தார்கள்…
அவர்கள் சண்டை இவர்கள் அரசியல் லாபம்.
ஓவர்களுக்கு ஏதும் மரபோவதில்லை. நமக்கு ஒரு செய்தி அவவளுவுதான்.
அவர்கள் உணர்சிகளை வைத்து ஒரு விளையட்ட்ட்டு
விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்…..எப்படி ஒற்றுமையாக இர்ருபது என்று.
அதை விட்டு சண்டை மூட்டாதீர்கள்
நழ்டம் அவர்களுக்குத்தான்…
எனது தம்பியினுடன் படித்த நண்பனொருவன் எங்கள் வீட்டில் தான் வெகு நாட்கள் இருந்தான், நாங்களும் சகோதரனாகவே தான் பார்த்தோம், நன்கு படித்து மெக்கானிக்கல் இஞ்சினியரிங்கில் கோல்டு மெடல் வாங்கி தற்பொழுது பெரும்புதூரில் வேலை செய்து கொண்டிருக்கிறான், அங்கே ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டு வீட்டின் சம்மதம் வாங்க என்னை அழைத்து சென்றான்,
அவனது அக்காவி கணவர் தான் அப்பொழுது குடும்ப தலைவர், மிக வேகமாக மறுத்ததோடு மட்டுமில்லாது, நாங்கள் படையாச்சி என்றார், எனக்கும் சாதியின் மேல் பெரிய மரியாதை இல்லாததால் அவர் சொன்ன சாதியின் அர்த்தம் எனக்கு புரியவில்லை! அப்படின்னா என்னாங்கன்னு கேட்டேன்!
நாங்க ராஜாவுக்கு படையில் சேவை புரிந்தவர்கள் அதான் படையாச்சி கவுண்டர் என்றார்! அப்படியில்லைங்க எல்லாரும் படையில் இருந்தாங்க, படிச்சிருபிங்களே வீட்டுக்கு ஒருத்தர்ன்னு மன்றாடி பார்த்தேன், மனிதர் அசரவில்லை! நீங்க ராஜ பரம்பரை அதனால ஒத்துக்க மாட்டேன்னு சொன்னா கூட போய் தொலையுதுன்னு நம்பலாம், ஆனா படையில குப்பை கொட்டினேன்னு ஒரு காரணத்துக்காக காதலுக்கு மறுப்பு சொல்வது கேனத்தனம், நானே அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிரேன்னு கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணி வச்சிட்டேன்!
அதன் பிறகு திருமண கோலத்தில் தம்பி கோவிலுக்குள் வர மாட்டேன்னு சொல்லி அதுக்கும் நான் தான் காரணமுன்னு பொண்ணு வீட்டு காரனுங்க என்னை அடிக்க வந்தது வேற கதை, எங்க போனாலும் கலகம் பண்றதே வேலையா போச்சு! ஆனா இந்த சாதிவெறியர்கள் பண்ற கலகத்துக்கு முன்னாடி என் கலகத்துக்கு நான் பெருமைப்படுறேன்!
ஆதிக்க சாதி வெறி படித்தால் மட்டும் குறைந்த்து விடுவதில்லை!
தோழர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவருடைய நன்பர் ஒருவருக்கு வாய்த்த அனுபவத்தை சொன்னார்!
மெடிக்கல், இஞ்சினீயரிங் படிக்கும் மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள், கல்லூரிக்குள்ளேயே எப்படி சாதி வெறியுடன் நடந்து கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார்! இது குறித்து அவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுவதில்லை! மாறாக பெறுமை கொள்கிறார்கள்…
நண்பரையும், அவரின் நண்பனான ஆதிக்கசாதி பெண்ணை காதலித்தவரையும், ஒரு பெண் செறி நாய் ”உனக்கு இந்த சாதி கேட்க்குதோ? அறுத்துடுவோம்” என்று மிரட்டிவிட்டு சென்றதை பகிர்ந்து கொண்டார்!
சாதியை வேரறுக்க, ஆரம்ப பாட சாலைகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்! இந்த சமூகத்தில் அதெல்லாம் சாத்தியமா????
ஹ்ம்…..
//சாதியை வேரறுக்க, ஆரம்ப பாட சாலைகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்! இந்த சமூகத்தில் அதெல்லாம் சாத்தியமா????
ஹ்ம்…..//
எனது மகளுக்கு நான் சாதி சான்றிதழ் தரவில்லை, தர மாட்டேன் என்று சொல்லியிருக்கேன்! அடுத்த தலைமுறையிலாவது சாதி ஒழிய அதை செய்வோம் முதலில்!
சாதிவாரியான கணகெடுப்பில் கூட நான் ”சாதி இல்லை” என்றே சொல்வேன்!
நான் சான்றிதழிலில் குறிப்பிடுவதை சொல்லவில்லை, நண்பரே! ஆரம்ப பாடசாலைகளில் இருந்தே குழந்தைகளின் மனதில் சாதி எதிர்ப்பு கருத்துகளை விதைக்க வேண்டும், என்பதை தான் கூறினேன்!
குழந்தைகள் எல்லாம், பிறக்கும் போதே சாதி வெறியுடனா பிறக்கிறார்கள்? ஆரம்ப வயதிலேயே சாதி வெறியை
திணிக்கப்படுகிறது அல்லவா?
சேரி.. அப்படின்னா நாம “ரேசெர்வதியன்” வேணாம்னு எழ்டுஹி குடுக்கலாமே?
ஏதாவது எழுதனும்னு எழுத கூடாது , உனக்கு படையட்சின தெரியாத என்ன இப்படி கதை விடாதப்ப, காதலுக்கு எல்லோரும் எதிர்ப்புதான் பண்ணுவாங்க நீங்கதான் ஒழுங்க ப்ரோப்லேம்இல்லாம பார்த்து பண்ணிக்கணும், எதோ மேல் ஜாதிகாரந்தன் ஓதிக்டுரன்போல எல்லோரும் பேசின என்ன அர்த்தம் எனக்கு தெரிஞ்சி பள்ளர் ஆதிதிராவிடர் இடையே இருக்கு முதல்ல அவ்னககுல்லவே நீ பெரியவன் தாழ்ந்தவன் ஒரு எண்ணம் இருக்கு அப்பரம் மற்றவங்கள் குறை சொல்ல உங்களுக்கு என்ன உறிமை இருக்கு
அருமையாக சொன்னீர்கள் நண்பரே,படையில் வேலை பார்த்தால் படையச்சியாம் ,இதே போல் ஒரு குரூப் நாங்கள் எல்லாம் தலித் இல்லை தேவேந்திர குல வேளாளர்கள் என்று சொல்லிக்கொண்டு இட ஒதுக்கிடு மட்டும் அனுபவித்து கொண்டு மற்ற பிரிவினரை மட்டம் தட்டுகிறது.
வேட்டி நியாயம் பேசுவது, வறட்டு கச்சேரி அடிப்பதும் இங்குள்ள அனைவருக்கும் வேலையாகி போய்விட்டது…
இந்த லெட்சன மயிரில் இந்திய 2020 ல் வல்லரசு ஆகிவிடுமாம், இங்க அவன் அவன் சாதியோட குஞ்சாமணிய புடிச்சு தொங்கிட்டு இருக்கானுங்க,
வன்னியன்னு மயிறு பறையன்னு என்ன மொட்டையா? கவுண்டன்னா புடுங்கி, பள்ளன்னா பருப்பா? மறவனா மண்ணாங்கட்டி, அருந்ததியன்னா வெள்ளகட்டியா? படையாட்சின்னா சொரியா, கள்ளன்னா சிரங்கா?
வெட்டி பயபுள்ளங்களா, IAS,Drன்னு படுச்ச நாய்களே இப்படி ஜாதி வெறி புடிச்சு அலையிரீன்களே வெக்கமா இல்ல?
பறையன் கோவிலுக்குள் வந்தால் என்ன இந்தியா பாகிஸ்தானிடம் அடிமையாகி போய்விடுமா?
படையாட்சி, நான் ஆண்ட பரம்பரைன்னு சொன்னவுடன் இந்தியாவில் ஊழல் குறைந்து விடுமா?
வன்னியன், நான் ஷத்ரிய குளத்தை சேர்ந்தவன் என்று சொன்னவுடன் இந்திய ஆர்மியில் 75% வன்னியர்களை சேர்த்துக்கொள்ள போகிறார்களா?
பறையன் வன்னிய பெரியவர்கள் முன்னாள் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தால் தப்பு, அதே சமயம் ஒரு வன்னிய வாண்டு 60வயது பறைய பெரியவரை பெயர் சொல்லி டே போட்டு கூப்பிடலாம் அப்படித்தானே?
உங்களுக்கெல்லாம் சுதந்திர தினம் கொண்டாட வெக்கமாயில்லை? கூட இருக்கும் மனிதருக்கே நீங்கள் சுதந்திரம் கொடுக்க விரும்பாத நாய்கள் ஏன் சுதந்திரம் தினம் கொண்டாடுகிறீர்கள்?
தமிழ் சினிமாவில் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள் “படித்த நாயே உள்ள வராத” என்று படித்தவர்கள் அதிகமாக அதிகமாக ஜாதி வெறியும் அதிகமாகிக்கொண்டுதான் போகிறதே தவிர குறையவில்லை. அதற்க்கு மேல உள்ளவர்களே உதாரணம்…
இந்தியாவில் ஜாதி கொடுமைகளில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது, விரைவில் முதலிடத்தை பிடிக்க முயற்சி செய்வோம்… வாழ்த்துக்கள்..
பிகார் முதலிடத்தில் உள்ளது..(அதுனாலதான் என்னவோ ஐயா ராமதாஸ் அவர்கள் லாலுவை சந்தித்தாரோ..)
ராமதாஸ் ஆன்லைன் வர்த்தகத்தினால் விலைவாசி ஏறுகிறது என்று ஒரே கூப்பாடு போட்டவர் .இன்றைக்கு அவரது டிவி யில் ஷேர் மார்க்கெட் ,ஆன்லைன் வர்த்தகம் எப்படிபன்னுவது என்று ட்ரைனிங் குடுக்கிறார் .ஒரு ரூபாய் ஊதுபத்தி முதல் உலகை சுற்றும் வானூர்தி வரைக்கும் விற்கலாம் வாங்கலாமாம் இவரது டிவியில் .ஓட்டுக்கு வன்னியன் வேணுமாம் .திருடி பிழைக்க ஆன்லைன் வர்த்தகம்(பிற சாதியினர் ) வேணுமாம் …
வெள்ளாள கவுண்டனுங்க சுத்ரனுங்க….வன்னியர்கள் க்ஷத்ரியர்கள்…. வெள்ளாள கௌண்டனுங்க தாண்ட கீழ் சாதி…இது கூட தெரியாத நாய்கள்..வன்னியரை பத்தி கேவலமா கட்டுரை எழுதறீங்களா….சத்திரியன் பெரியவனா??? வெள்ளாளன் பெரியவனான்னு இந்தியா புல்லா கேட்டு பாருடா முட்டாள் பயலே…… வன்னியர்கள் க்ஷத்ரிய வம்சம்….
//.சத்திரியன் பெரியவனா??? வெள்ளாளன் பெரியவனான்னு//
பெரியவன்னா எப்படி?
கிழே கிளை ஒன்னு முளைச்சிருக்குமா என்ன?
பெரியவனா நினைக்கிறவங்க என்னாத்துக்கு இடஒதுக்கீடு கேக்குறிங்க, இல்லாதவங்களுக்கு விட்டு கொடுத்து போக வேண்டியது தானே! உங்களை மாதிரி ஆட்களால தான் சாதி இன்னும் அழியாம இருக்கு!, தோழர் ஒருத்தர் சொன்னா மாதிரி நீங்க உண்மையிலே வன்னிய டோண்டு தான்! அவரது பார்பனீயத்திற்கும், உங்களுக்கும் துளியும் வித்தியாசமில்ல!
அட மூதேவி!
வன்னியன் பெரியவனா??? வெள்ளாளன் பெரியவனா??? இது தான் உன் கண்ணுக்கு தெரியுதா?
உன் கண்ணுக்கு வன்னிய சாதி வெறி தெரியாதா?
அந்த காலத்தில், ஆண்ட மன்னர்கள் எல்லாரும் வகை தொகை இல்லாம பெண்களின் விருப்பு வெறுப்பை கூட பாக்காம, ‘வெச்சி’ கிட்டாங்களாம்.
அதன் படி பாத்தா, நாஞ் சத்திரியன் ன்னு சொல்றதுக்கு கூனிக் குறுகித்தான் போகனும்!
அதெல்லாம் மான ரோசம் உள்ளவனுக்கு தானே? 🙂
சரி! அறிவாளியே, தோளில் இருந்து குழந்தை பிறக்க முடியுமா? படிச்சிருக்க இல்ல? யோசி முண்டம்! யோசி!
எல்லாரும் சமம் ன்னு அப்புறம் தெரியும்..
ஆராவதுஇருக்கீங்களா??????
வாங்க கவுண்டரே:-)
அப்புடியே ஐஸ் வச்ச மாரி இருக்குமே? சரி நீ பந்தல் வன்னியரா? அரசு வன்னியரா? நாயக்க வன்னியரா? கொங்கு படையாச்சியா? தெளிவா சொன்னா நல்லா இருக்கும் போட்டு வாரிபுடலாம்.
அட நெருப்புக்கு பொறந்த வன்னியக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்வூண்டரே!!!!!!!!
வீரம் வெளஞ்சவங்களா? சரி ராசா? துப்பாக்கி சூடு பண்ணும்போது நான் வன்னியன்னு நெஞ்சை பொளந்து காட்ட வேண்டியதுதான?
//அப்புடியே ஐஸ் வச்ச மாரி இருக்குமே? சரி நீ பந்தல் வன்னியரா? அரசு வன்னியரா? நாயக்க வன்னியரா? கொங்கு படையாச்சியா? தெளிவா சொன்னா நல்லா இருக்கும் போட்டு வாரிபுடலாம்.//சூப்பர் கேள்வி
சத்ரியர்களுக்கு ஏன் இட ஒதிக்கீடு ? பார்பனிய வருண ஓடுக்குமுறையை கட்டிகாத்தவர்கள் சத்ரியர்கள் .
வெள்ளாள கவுண்டனுங்க சுத்ரனுங்க….வன்னியர்கள் க்ஷத்ரியர்கள்…. வெள்ளாள கௌண்டனுங்க தாண்ட கீழ் சாதி…இது கூட தெரியாத நாய்கள்..வன்னியரை பத்தி கேவலமா கட்டுரை எழுதறீங்களா….சத்திரியன் பெரியவனா??? வெள்ளாளன் பெரியவனான்னு இந்தியா புல்லா கேட்டு பாருடா முட்டாள் பயலே…… வன்னியர்கள் க்ஷத்ரிய வம்சம்….
கண்ணு உனக்கு தைரியமிருந்தா கவுண்டன விட வன்னியர் பெரியவன்னு கொளத்தூர்ல வந்து சொல்ல முடியுமா? வன்னியனே இத நம்ப மாட்டான்யாவன்னியன் சத்ரியன்னு வன்னியன்தான் சொல்லிக்கனும் மத்தவன் யாரும் சொல்றது கிடையாது உண்மைய சொல்லனும்னா பறையன விட ஒரு படி மேர் பள்ளிங்க இதநான் சொல்லல ஒரு வன்னியன் என்னிடம் சொன்னது இந்நது மதத்தின் அடிப்படையான மனுதர்மத்தில் சத்ரியன் என்றால் என்ன? சூத்திரன் என்றால் என்ன என்று விலாவரியாக எழுதிவைத்துள்ளார்கள் அதன் படி பார்த்தால் வன்னியர்கள் சூத்திரர்கள்தான் , வர்ணாசிரமக்கோட்பாட்டின் படி பாப்பான்தான் மேல் சாதி மத்த எல்லாரு தே….யா பசங்கதான் இந்த இழிநிலை தீரனும்னா இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் அனைவரும் தங்கள் சாதி சுயபோதையில் இருந்து தெளிந்து இந்து மதத்திற்கெதிராக களமிறங்கி அனைவரும் பேதமின்றி வர்க்க உணர்வோடு ஓரணியாய் திரண்டு போராடவேண்டும் அதைவுட்டு போட்டு வன்னியன்,சத்ரியன்னு சுய இன்பம் பண்ணி்ட்டு இருந்தா வேலைக்கு ஆகாது,
மேலே உள்ள இந்த வார்த்தைகளை அடைப்புகுறியுடன் படிக்கவும்
//வெள்ளாள கவுண்டனுங்க சுத்ரனுங்க….வன்னியர்கள் க்ஷத்ரியர்கள்…. வெள்ளாள கௌண்டனுங்க தாண்ட கீழ் சாதி…இது கூட தெரியாத நாய்கள்..வன்னியரை பத்தி கேவலமா கட்டுரை எழுதறீங்களா….சத்திரியன் பெரியவனா??? வெள்ளாளன் பெரியவனான்னு இந்தியா புல்லா கேட்டு பாருடா முட்டாள் பயலே…… வன்னியர்கள் க்ஷத்ரிய வம்சம்//
//வன்னியன் சத்ரியன்னு வன்னியன்தான் சொல்லிக்கனும் மத்தவன் யாரும் சொல்றது கிடையாது//
தைரியம் இருந்தா கொங்கு வெல்லல சுதிர னைகள வடதமிழ்நாட்ல
வந்து அவனுங்க தான் பெரியா ஆளுன்னு சொல்ல சொல்லு
பார்க்கலாம் …..
டேய் அறிவு கேட்ட முட்டா பயலே தமிழ்நாடு சாதி பட்டியலை எடுத்து
பாருடா ” வன்னியகுல க்ஷத்ரியர்” ன்னு தான் சொல்லி இருக்கு..
பள்ளி என்றால் அரசன் என்று தான் அர்த்தம்…..தெரியாம பேசாதடா
ஈன பயலே…..
வன்னிய சாதி வெறியை தோலுரித்த கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள். அப்படியே விழுப்புரம் நெல்லிக்குப்பம் கடலூர் திருவண்ணாமலை திண்டிவனம் எல்லாமே இந்த இடத்தில் பொருத்திப்பார்க்கும் வகையில் உள்ளது…
//வீரப்பன் தேடுதல் வேட்டையில் அப்பாவி மக்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். சோளகர் தொட்டி என்ற நூல் சித்திரவதைகளின் சில பக்கங்கள்தான். வீரப்பனின் கூட்டாளி என்று சந்தேகித்து தினமும் பலரை இழுத்து வரும் அதிரடிப்படை அவர்களை தினமும் உதைத்துக் கொண்டே இருக்கும். அப்படி அடிபட்டவனில் ஒருத்தன் கூட வன்னியன் இல்லையா, அந்த சித்திரவதை முகாம்கள் அருகில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்குமா வன்னியர் சங்கம்?//
//இந்த ஆதிக்கத்துக்கெதிராக போராடும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் என்ற ஆளும் வர்க்கங்களிடம் சரண்டைந்த கட்சியில் இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.//
அருமையான கட்டுரை. ராமதாஸ், திருமாவளவன் போன்ற அரசியல் வியாபாரிகள் இருக்கும் வரை சாதி வெறி கொடுமைகளை ஒழிக்க முடியாது.
ரவிக்குமார் திருமா இருவரையம் கட்டுரைக்குள் இழுத்து வந்து அம்பலபடுதியவிதம் அருமை வாழ்த்துக்கள் தோழர்
தோழர் -திருமா/ரவிக்குமார் -போன்றவர்கள் -தலிதுகலூக்கு -போராடுபவர்கள்
வன்னியர்,தலித் இருவரும் பின் தங்கி இருந்தால் ஒற்றுமையை ஏற்படுத்தி உயர்த்த வேண்டிய வேலையை பா.ம.கவும், வி.சி அமைப்பினரும் ஏன் செய்யக் கூடாது.ஈழத்தமிழனுக்காக உயிரையும் கொடுப்போம் என்பவர்கள் உள்ளூரில் ஒற்றுமை ஏற்படுத்தக்கூடாதா?.
ஒரு சமூக இயக்கமாக தீண்டாமை ஒழிப்பை முன்னெடுக்க வேண்டும் என்று இவர்கள் செயல்படுவதில்லை.கொளத்தூர் மணியின் பெரியார் தி.கவினர் தீண்டாமை ஒழிப்பு பரப்புரை இயக்கம் நடத்துகிறார்கள்.அவரது ஊரிலேயே நிலவரம் இப்படியா.அடப் பெரியாரே 🙁
ராமதாஸ் கட்சியினர் தொடர்ச்சியாக தமது அரசியல் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளுக்காக மக்களிடம் அம்பலப்பட வேண்டும். அது ஓரளவுக்கு வன்னிய மக்கள் சாதி வெறியின் பிடியிலிருந்து மீள உதவலாம். இப்போது கலைஞரிடம் ஒட்டிக் கொள்ள நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மகனுக்கு ராஜ்யசபா சீட் வேறு வாங்க வேண்டும்.
சிறப்பான கட்டுரை. தாழ்த்தப் பட்டோருக்கு போராடும் தலித்களையும் தோலுரித்து உள்ளீர்கள். அதே சமயம் ஆதிக்க சாதியினரின் சாதி வெறிக்கு சற்றும் குறையாத சாதி வெறியை உயர் பதவியில் இருக்கும் தலித்கள் தன கீழ் வேலை செய்யும் தலித்களிடம் காட்டுவதையும், அவர்கள் செய்யும் கொடுமைகளையும் சொல்லுங்கள். உதாரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஒரு தலித் நீதிபதியிடம் வேலை பார்த்த அதே சாதியை சேர்ந்த ஓட்டுனர் பணியில் இருந்தவர் கூறும் கொடுமைகளை கேட்டால் நெஞ்சம் குமுறும். அந்த நீதிபதியின் கொடுமை தாங்காமல் அவர் வேறு நீதிபதிய்டம் பணி மாற்றம் பெற்று சென்று விட்டார். இது சாதி வெறி கொடுமையாக இல்லாமல் இருக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு கேள்வி. அந்த நீதிபதி இந்த கொடுமையை அவர் கீழ் பணி புரியும் ஒரு வெள்ளாள கவுண்டரிடம் செய்ய துணிவாரா?
சாதி வெறி அரசியல்(ராமதாஸ், திருமாவளவன், சரத்குமார், கார்த்திக் ) தலைவர் இற்கும்வரை ஜாதி ஒழிக்க முடியாது.
சரிங்க.வினவு நீங்கள் சொல்லுவதெல்லாம் சரித்தாங்க.இந்த சாதி வெறி,அரசியல்,அதிகாரம்,சட்டம் எல்லாமே வெத்துதான்.
ஆனால் நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அனுகிப்பாருங்கள்.அவர்களுடன் வாழ்ந்துப்பாருங்கள்.பிறகு சரியான தீர்வு சொல்லுங்கள். உங்கள் அமைப்பில் ஒரு தாழ்த்தப்பட்டவன், அதிகம் படிக்காதவன் யாராவது இருக்கிறார்களா? அவர்கள் உங்கள் அறிவிஜீவிகளைப்பார்த்து பணிவுதான் கொள்கிறார்கள்.அதாவது தாழ்வுமனப்பான்மைதான் கொள்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?உங்களை நெருங்குவதே எளிதான விசியம் அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?
//குழந்தைகள் எல்லாம், பிறக்கும் போதே சாதி வெறியுடனா பிறக்கிறார்கள்? ஆரம்ப வயதிலேயே சாதி வெறியை
திணிக்கப்படுகிறது //
அதை தான் சொல்கிறேன் தோழரே!
சாதி என்றால் என்னவென்றே தெரியக்கூடாது என்பதற்கு தான் சாதி சான்றீதழ் இல்லை!, பள்ளியில் கேட்டுவிட்டால் கூட, எங்களுக்கு சாதி இல்லை என்று தான் சொல்லச்சொல்லுவேன்!
நல்லது வால்பையா. அனால் அவர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் நாம் சாதி சான்றிதழை எடுத்து கல்லூரியில் இடம் வாங்கி கொள்ளலாம்.. ஏனெனில் நாம் போட்ட குட்டிகள் என்ன எண்பது சதவ்கிதமா வாங்க போகிறார்கள்?
சாதிவெறி குறித்த சாட்டையடி பதிவு தோழர்.
//“**** கை படையாச்சி மீது படுவதா என்று” அங்கு வேலை செய்த பெண்ணை வைத்து மருத்துவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவரை விரட்டியடித்தார்கள்//
இது உண்மை நீண்ட உறக்கம் உறங்கும் நேரம்
பொய் வழக்கு போடுவது , சட்டத்தை தவறாக பயன்படுத்துவது என்பதை யாரும் கண்டிபதில்லை.
பொய் ஊழல் வழக்குகள், பொய் வரதக்ஷணை வழக்குகள், பொய் கற்பழிப்பு வழக்குகள் , பொய் வன்கொடுமை வழக்குகள் , பொய் கொலை மிரட்டல் வழக்குகள் புனையப்பட்டு காவல் நிலையம் முதல் நீதி மன்ற பிணை(Bail ) மறுப்பு வரை கட்ட பஞ்சாயத்து என்பது நடைமுறை படுத்தப்பட்டு விட்டது
.நீதி மான்றதில் பொய் உரைப்பது என்பது சர்வ சாதாரணம். பெர்ஜுரி என்கிற குற்றம் நீதி மன்றங்களால் வளர்க்கப்படுகின்றன . நீதிமன்ற சீரழிவு நாட்டு மக்களை எல்லா வகையிலும் துன்பப்பட காரணமாக இருக்கிறது .நீதிபதிகளை செருப்பால் அடிப்பது பல முறை நடந்து விட்டது.
அதிகார போதையில் உள்ள நீதித்துறை சொரணை அற்று உள்ளது !!! மக்களின் எதிரி நீதி துறை தான்
ராமதாசு கட்சி ஊரெல்லாம் டிஜிட்டல் போர்டு முன்னாடி வச்ச்சிருந்தானுவ, வன்னிய இட ஒதுக்கீட்ட மத்த சாதிக்காரனுங்க புடிங்கி கிட்டாங்க அப்படீன்னு லிஸ்ட், அதுல ஒரு கூத்து இத்தனை போலீஸு க்கு இத்தனை வன்னிய போலீஸ்
இத்தனை தாசில்தாருக்கு இத்தனை வன்னிய தாசில்தாரு
இத்தனை அரசு ஊழியருக்கு இத்தனை வன்னிய அரசு ஊழியருன்னு போட்டுட்டு கடசியா
ஒரு டிஐஜி போஸ்ட் இருக்கு அதுல ஒரு வன்னியர் கூட இல்லை பாத்தியா வன்னியருக்கு உரிமை மறுக்கப்படுதுன்னு வெறிய ஏத்துனாரு அய்யாஆஆ
அதிகாரமிக்க பதவிகளில் வன்னியர்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்று சொன்னதில் என்ன தவறு கண்டீர்கள்?
டிஐஜி பதவி ஒன்றுதான். அந்த ஒன்றும் வன்னியருக்கு இல்லை என்று சொல்வதில் என்ன பிரச்சனை? டிஐஜி பதவி உருவாக்கப்பட்டதிலிருந்து ஒரு டிஐஜியும் வன்னியர் இல்லை.
உண்மையை சொல்வதால் வெறி ஏறும் என்றால், உண்மையை சொல்லக்கூடாதா?
மகனுக்கு சீட்டுக்காக நாக்கைத்தொங்கப்போடும் ராமதாசு,
சில வருடங்களுக்கு சொன்ன தேர்தல் பேச்சு”சும்மா தலித் சம்பந்தி தலித் சம்பந்தின்னு கருணா நிதி அவரு என்ன பெரிய மகாராஜா குடும்பமா? அவரு என்னா சாதின்னு தெரியாது”
வால்பையன்says:
// ///எனது மகளுக்கு நான் சாதி சான்றிதழ் தரவில்லை, தர மாட்டேன் என்று சொல்லியிருக்கேன்! அடுத்த தலைமுறையிலாவது சாதி ஒழிய அதை செய்வோம் முதலில்!சாதிவாரியான கணகெடுப்பில் கூட நான் ”சாதி இல்லை” என்றே சொல்வேன்/// //
இது என்ன முற்போக்குன்னு யாராவது விளக்குங்களேன்.
சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவைன்னு அண்ணல் அம்பேத்கர் “பல லட்சங்களிலிருந்து பின்னங்களுக்கு”னு ஒரு கட்டுரை எழுதியிருக்கார். அதப்படிங்க வால்பையன்
அவர் செய்தது சரி என்றே நினைக்கிறேன்
//இது என்ன முற்போக்குன்னு யாராவது விளக்குங்களேன்.
சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவைன்னு அண்ணல் அம்பேத்கர் “பல லட்சங்களிலிருந்து பின்னங்களுக்கு”னு ஒரு கட்டுரை எழுதியிருக்கார். அதப்படிங்க வால்பையன்//
அருள்
அம்பேத்கார் நினைத்தது பிற்படுத்தபட்டு முன்னேறாத மக்களுக்கு உரிமைகள் வாங்கி தர, நான் நல்லா தான் சம்பாதிக்கிறேன், இன்னும் இந்த சலுகைகளை பயன்படுத்தி தகுதியுள்ள ஒருவருக்கு போக வேண்டிய சலுகைகளை பயன்படுத்தி கொள்ள விருப்பமில்லை! என்னை போல் ஒவ்வொருவரும் இல்லாதவர்களுக்கு வழிவிடுங்கள் முதலில், கொஞ்சம் கொஞ்சமாக சாதியை ஒழிப்போம்!
விடுதலை சிறுத்தை கட்சினர் இருக்கும் இடம் எங்கும் கண்டிப்பாக ஜாதிவெறி தலை விரித்து ஆடுது முதலில் pcr சட்டத்தை ஒழிக்க வேண்டும் கட்டுரையாளர் தாழ்த்தப்பட்டவர்கள் ஆதரவாக எழுதிஉள்ளார்
அருணாக்குட்டி,
பிசிஆர் சட்டத்தினை பற்றி எல்லா வாயும் கிழியும் அளவுக்கு பேசுங்கிறீர்களே, அரசால் மூடப்படும் பள்ளிகள் குறித்து பேசுங்கள் அய்யா, ஏன் ஒரு வன்னியன் வூட்டுப்பையன் படிக்க கஷ்டப்[படுவது உன் காதுகளில் கேட்கவில்லையா?
ஆண்டாண்டு காலம் -அடிமையாக இருந்தவன் -இன்று சூய மரியாதைக்காக – ஆதிக்க -சாதிகளை எதிர்க்கவும் ,அடித்தால் -திருப்பி அடிக்கவும் -மூடிந்தது விடுதலை சிறுத்தைகலால்.
வன்கொடுமை சட்டம் இருந்தே -பல சாதி கொடுமை -இன்னும் தலைவிரித்து ஆடுகிறதே -அதை நீக்கீனால் -தலித் மக்களுக்கு -என்ன பாதுகாப்பு இருக்கும் ? -ஒரு சில இடங்க்களில் -வன்கொடுமை சட்டம்-தவறாக பயன்படுத்த -வாய்ப்பு இருந் தாலும் -வன்கொடுமை சட்டம் -தலித்துகளுக்கு -ஒரு பாதுகாப்பு.
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்……
கிராமங்களை பற்ற வைக்கும் இந்த சாதி சண்டைகள்……
ஏன் புதிது புதிதாக உருவாகும் நகர்களில் ஏற்படுவதில்லை…..
அவர்களை அடித்துக்கொள்ள வைத்து ஒரு லாபமா.. …. அவர்களிளின் ரத்தத்தில் ஒரு பிழைப்பா…….
இங்கு யாரை குறை சொல்லுகிறீர்கள்…….
அப்பாவியாக ….சாதி என்ற உணர்வில்..ஊறிப்போன அப்பாவி மக்களையா ….
இல்லை அந்த உணர்வை வைத்து அதில் என்னை ஊற்றி குளிர்காயும் அரசியல் வாதிகளைய…
அந்த …ஏழை அறிஜநானோ, வன்னியனோ….கள்ளரோ…எந்த சாதியை சேர்த்தவனோ …….
அவர்கள் அனைவரும்…ஒரு சாதியர்கள் ….ஆம்
அவர்கள் அனைவரும்……….ஏழை சாதிகள்….
அவர்களே பணக்காரர் ஆகிவிட்டால் இந்த சாதி பிரச்னை கிடையாது…
கோடிஸ்வர அரிசன பெண்ணை ஏழை வன்னிய பயன் காதலித்தால் …பிரச்னை வராது….
கோடிஸ்வர அரிசன பயன் ஏழை வன்னிய பெண்ணை காதலித்தாலும் பிரச்னை வராது….
இதிலிருந்து ஒன்றை புரிதுகொல்லுங்கள்….
இங்கு பிரச்சனைகளின் மூலம்…..ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு..
வினவு
முன்னர் எழுதிய 5 மறுமொழிகள் கிடப்பிலே உள்ளதே கருணை காட்ட மாட்டீர்களா, வால்பையன் கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணுங்க சாமி…………………………………………
நான் என்னங்க ரெகமண்ட் பண்றது!?
புரியலையே!
அருணா says:
கட்டுரையாளர் தாழ்த்தப்பட்டவர்கள் ஆதரவாக எழுதிஉள்ளார்/// //
அப்படி கூறிவிட முடியாது.
வன்னியர்களும் தலித் மக்களும் அடித்துக்கொள்ள வேண்டும் என்பது ஆதிக்க சாதியினரின் விருப்பம்.
அதைத்தான் இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகிறது.
வன்னியர்களும், தலித்துகளும் நேரடியாக பேசினால் பிரச்சனைகளை தீர்க்க முடியும். நடுவில் மற்றவர்களை விடுவது பூனைகள் தோசையை பங்கிட குரங்கிடம் போன நிலைதான் ஏற்படும்.
ஆதிக்க சாதியினரிடம் எச்சரிக்கையாக இருப்பது – வன்னியர், தலித் இரண்டு பிரிவினருக்குமே அவசியம்
அருள் சும்மா கதை விடாதீர்கள் என்னவோ வன்னியர்களும் ஒடுக்கப்படுபவர்கள் போல, வன்னியக்கிராமங்கள் குறிப்பாக கொளத்தூரின் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட ஏரியா பக்கம் போய் விட்டு வாருங்கள் . உங்களை கோயிலுக்குள் விடுகிறார்களா பார்ப்போம்
யார் இங்கு ஒடுக்கப்பட்டவர்கள்?
தாழ்த்தப்பட்ட மக்களை ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கி வந்த வன்னியர்கள் ஒடுக்கப்பட்டவர்களா? அப்புறம் எதற்கு ஆண்ட பரம்பரைன்னு சீன் காட்டுகிறீர்கள். இதே கருங்கலூரில் வி சி கொடிக்கம்பங்கள் பலமுறை வெட்டப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் எனில் ஏன் விசி கொடிக்கம்பத்தை வெட்டுகிறீர்கள். அந்தப்பக்கம் போய் கவுண்டர்கள் ஆதிக்க சாதி என்பது? இந்தப்பக்கம் தேவர் ஆதிக்க சாதி என்பது நீ யாரையும் ஒடுக்காத சாதியா என்ன?
கொளத்தூரின் அருகில் உள்ள தண்டா கிராமங்களில் எதுக்கும் சேராத வன்னியர்களும், கவுண்டர்களும் தாழ்த்தப்பட்டமக்களின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அருள் முதலில் வன்னிய சாதி வெறியை கண்டித்து விட்டு பின்னர் ஒன்றாய் போராடுவதை பற்றி பேசலாம்
அண்ணே அருள் ஆதி திரவிடர்கள் கொட்டு அடிக்க வரக்கூடாதுன்னு சட்டம் போட்டுட்டு எதுக்காக அருந்தாதி மக்களை கொட்டடிக்க கூப்பிட்டிங்க அதுக்கு நீங்களே கொட்டு அடிக்கலாமே கொட்டு அடிக்க கைதானே தேவை சாதி தேவையில்லையே
ஏன் அந்த போலீஸ் படை மீது வன்னியர் வெறியர்கள் கல் வீசினார்கள்?
கட்டுரையில் தெளிவாக குறிப்பிட்டதுபோல
1.டிஎஸ்பி தாழ்த்தப்பட்டவர்
2.முக்கியமாக அவர் காதல் ஜோடியை(அருந்ததியர்- வன்னியர்) காப்பாற்றியதாக
வன்னிய சதி வெறியா ? பணமா? எது ஒசத்தி
அங்கே இருந்து சுமார் 30 கி.மீட்டர் தள்ளி உள்ள வன்னியக்கிராமம். பயனும் பொண்ணும் காதலித்தார்கள். அப்புறாம் எஸ்கேப்பு . அன்னைக்கு இரவே பொண்ணு வூட்டுக்காரனுங்க மாப்புளய மிரட்டி தூக்கி கிட்டு போயிட்டானுங்க.இதுல என்ன புதுசுன்னு கேக்குறீங்களா?
மாப்புளயும் வன்னியர், புள்ளயும் வன்னியர் அதுவும் ரெண்டு பேரும் பந்தல் வன்னியர் தான். என்ன பொண்ணு சொந்தக்காரனுங்க கொஞ்சம் வசதி அதுவும் பாமக காரனுங்க. அள்ளிகிட்டு போயிட்டானுங்க
இங்கே அதிகம் விவாதிக்காத விசயம் இருக்கிறது
திருமா கட்சியின் துரோகம். இதே திருமா சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் என்ன வேணுமினாலும் செய்யுங்க நான் பார்த்துக்குறேன் என்றார். இப்போது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு மட்டும் இருக்கிறார். ஒரு விசியின் தீவிர ஆதரவாளர் என்னிடம் சொன்னார் ஏங்க நானே ஒரு பஞ்சாயத்துக்கு 3000 ரூவா கொடுத்தேன் என்று.
கட்ட பஞ்சயது – எல்லா கட்சி காரனும் தான் பண்ணுறான் !!!
ஒரு சிலர் தவறு செய்தால் -விடுதலை சிறுத்தைகள் எல்லோரையும் எப்படி குற்றம் சொல்லமுடியும்
இது நடந்து 10 ஆண்டுகள் இருக்கும்
அந்த கொளத்தூர் கிராமங்களில் எப்போது தாக்குதல் நடக்கும் என்றுத் தெரியாமல் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தங்களை பாதுகாக்க வீட்டுக்கொருவர் இரவு முழுவது குறிப்பிட்ட காலங்களில் இரவு முழித்தபடியே இருப்பார்களாம்.
சரி. என்னதான் முடிவு?
சாதி வெறி என்பது எல்லா மேல் மற்றும் நடுத்தர சாதிகளிடமும் இருக்கிறது. வன்னியர்களுக்கு மேல் பார்ப்பனர்கள் + வெள்ளாளர்கள், பறையர்களுக்கு மேல் வன்னியர்கள், அருந்ததியினர்களுக்கு மேல் பறையர்கள். இது இந்து மதம் கொடுத்த கொடை. காலம் காலமாக பலர் முயற்சித்தும் இன்றுவரை முடிவு எதுவும் இல்லை. நேற்றைவிட இன்று பரவாயில்லை என்பதே நிலை. அதற்காக சாதிவெறியை அனுமதிக்க வேண்டும் என்பது இல்லை.
குற்றம் இழைப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அது எந்த சாதியின் வெறியானாலும் சரி.
பா.ம.க வன்னியர்களை நம்பி அரசியல் செய்கிறது. ஆனால், சாதிவெறியை அதுதான் தூண்டுகிறது என்பதும், பா.ம.க.வால்தான் சாதிச்சண்டையே வருகிறது என்பது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு.
அதே போல விடுதலை சிறுத்தைகள் வேடிக்கை பார்க்கின்றனர் என்பதும் தவறு.
பா.ம.க இல்லாமல் போனால் வன்னியர்களுக்கு நல்லது என்பதும், வி.சி.க்கள் இல்லாமல் போனால் தலித்துகளுக்கு நல்லது என்பதும் – ஆதிக்க சாதி பிரச்சாரம்.
பா.ம.க இல்லாமல் போனால் மிகமிக பின் தங்கிய சமூகமான வன்னியர்களுக்காக பேச வேறு யார் இருக்கா?
வி.சி.க்கள் இல்லாமல் போனால் ஒடுக்கப்படும் சமூகமான தலித்துகளுக்காக பேச வேறு யார் இருக்கா?
வன்னியர்களுக்காக நீங்கள் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லுங்கள்? பெரும்பான்மை வன்னியர்கள் என்ன தொழில் செய்கிறார்கள்? அனத தொழிலைப்பாதுகாக்க பாமக என்ன போராட்டம் செய்தது? அதை விடுங்கள் கருங்கலூர் அருகே உள்ள சத்யா நகர் பள்ளியில் படிப்பவர்கள் முக்கால் வாசி வன்னியர் தானே? அந்த பள்ளி நாசமாகி சீரழிந்து கிடக்கிறாதே(தரத்தில்) நீங்கள் மீட்டீர்களா.
இதை நீங்கள் வன்னிய கிராமங்களில் சொன்னால் வன்னிய வெறியர்கள் யாரும் வாயால் சிரிக்க மாட்டார்கள் அய்யா,
உங்களுக்கு புரிய கஷ்டமாயிருந்தால் இந்த கருங்கலூருக்கு பறையர் வேசம் கட்டிக்கொண்டு போய் விட்டு வாருங்கள் அப்புறம் தெரியும்
அப்பவெல்லாம் தாரமங்கலம் முன்னாள் எம்லே கோவிந்தன் சைக்கிளில் பின்னாடி உக்கார்ந்து கிட்டு ராமதாசு வருவாரு. இப்ப முன்னாடி 20 காரு பின்னாடி 20 காரு. இப்ப ஆயரம் கோடிக்கு மேல சொத்து ஆனா ஓட்டுபோட்ட வன்னியனுக்கு கோடித்துணி
அருள்,
உங்க வாதப்படியே வருவோம்!
தலித் மக்களும் கஷ்டப்படுகிறார்கள், அடித்தட்டு வன்னியர்களும் கஷ்டப்படுகிறார்கள்! அப்படியானால் எதற்க்கு தனி தனியாக வன்னியர்களுக்கு போராட/பேச ப.ம.க, தலித்துகளுக்கு போராட வி.சி??
தலித்களையும், உழைக்கிற வன்னியர்களையும் பிரிக்கிற வேலையை தானே இவை செய்கின்றன?
உழைக்கிற வன்னியரையும் தலித்தையும் பிரிப்பவை பா.ம.கவும், வி.சியுமா? தலைக்கீழா மாற்றி பேசாதீர். இரண்டுசாதிகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்ததான் இரண்டு அமைப்புகளும் பாடுபட்டன.
“கொளத்தூர் வட்டாரத்தில் கோலேச்சும் வன்னிய சாதிவெறி!” இந்த தலைப்பிலுள்ள கட்டுரைக்கு உங்களுடைய விளக்கம் என்ன ?
இந்த மாதிரி மிருகத்தனமா வாழ்வதுதான் நல்லிணக்கமா ?
வன்னிய சாதிவெறியால் பலர் காதலனையும் ,காதலியையும் இழந்திருகிறார்கள் .அதிகம் பேர் வீட்டை விட்டு ஓட்டம் பிடிப்பது இந்த சாதிவெறியர் களால்தான் .பல இளைஞர்கள் இதிலிருந்து எப்படி தப்பித்து வாழ்கையை நடத்தலாம் என்றுதான் யோசிகிறார்கள் ஒழிய ,இதனை எப்படி ஒலிப்பது என்று யோசிக்க மாட்டேங்கிறார்கள் .
//இக்கிராமத்தில் ஒரு தாழ்த்தப்ப்ட்ட மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவராக பணி புரிந்தார். அவர் ஊசி போடும் போது வன்னியர்களின் மீது கை படுவதால் “பறையன் கை படையாச்சி மீது படுவதா என்று” அங்கு வேலை செய்த பெண்ணை வைத்து மருத்துவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவரை விரட்டியடித்தார்கள் வன்னிய வெறியர்கள். //
அந்த டாக்டரும் அவர் மனைவியும் பேர் போன மகப்பேறு நிபுணர்கள், வீரம் விளைந்த பல கோஷ்டிகள் அவர் நடத்தும் தனியார் மருத்துவமனையில் மூடிக்கொண்டு காசை கொடுத்துவிட்டு போகின்றன.
பாமக பேசியதன் பின்னணி தெரியுமா உங்களுக்கு?
1. நானோ என் மகனோ சட்டமன்றா நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன்
2. என் வாரிசுகள் யாரும் கட்சியில் சேர மாட்டார்கள்
………………………………………………….
மீறினால் என்னை முச்சந்தில் நிற்கவைத்து சவுக்கால் அடிக்கலாம்
ஏப்பா நெருப்புக்கு பொறந்த வீர வன்னியர்களே, உங்க ஒருத்தனுக்கு கூடவா சாட்டையப் புடிக்கத் தெரியாது?
//சாதிவெறியை ஒழிப்பதோ, சாதியை ஒழிப்பதோ அவ்வப்போது எடுக்கப்படும் தாக்குதலுக்கான எதிர் போராட்டத்தால் மட்டும் முடியாது. அது தொடர்ச்சியாக முனைப்புடன் அரசியல், பண்பாட்டு, கலாச்சார வடிவங்களில் ஊன்றி இருக்க வேண்டும். அதன்படி வி.சி இயக்கம் மூலம் சாதி ஒழியும் என்பது பகற்கனவே// பிரச்சனையை இவ்வளவு பெரிதாக தெளிவாக சாடிய தாங்கள் தீர்வை இவ்வளவு சிறிதாக சொல்லி விட்டீர்களே ?
விடுதலை சிறுத்தைகள் -தலித் மக்களுக்கு -குரல் கொடுகீரார்கள் .
சாதி ஒழிப்பு மக்களின் -மன மாற்றரத்தில் தான் -நிகளும் !!!
இதற்கு -விடுதலை சிறுத்தைகள் எப்படி பொறுப்பாகும் ?
த சேகர் M.E
மருதிபட்டி -அஞ்சல்
அரூர் -வட்டம்
தர்மபுரி
வினவு,
முதலில் இக்கட்டுரையை வெளியிட்டு வட மாவட்ட சாதிஆதிக்கம் குறித்த கண்ணோட்டத்தை தொடங்கியிருக்கிறீர்கள். இது தொடர வேண்டும். கொளத்தூரினைச்சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமக்களில் இதே நிலைதான். இதே பிரச்சினை வட மாவட்டம் முழுக்க தொடர்கிறது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, வன்னியர், கவுண்டர், முதலியார் என ஆண்டைகள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வளவுதான்.
அப்புறம் ரொம்ப பேசிட்டேன்னு நெனைக்குறேங்க, யாரும் மல்லுக்கு வராததால ரொம்ப போர் ஆயிடுச்சு. பல பேர் இதப்பத்தி பேசலைன்னு நெனைக்குறேன். அது ஏன்னுதான் தெரியலை. தேவர் சாதி வெறின்னு எழுதுனா அதுக்கு ஆதராவகவோ அல்லது எதிர்ப்பாகவோ குவியறதுல்ல, இருக்குற ஆக்ரோசம் இங்க வருவதில்லையே ஏன்?
இதைப்பத்தி நீங்க என்ன நெனைக்குறீங்க வினவு
அப்புறம் பார்க்கலாங்க
டாட்டா பைபை
கல்லூளி மங்கன், கருங்கல் பகுதியின் நிலவரங்களை இப்படி விரல் நுனியில் வைத்து வன்னிய சாதி ஆதிக்கத்தை அம்பலப்படுத்தும் போது எதிர்த்து பேசுவதற்கு கைவசம் சரக்கு வேணுமே? விவாத்தில் பங்கு பெற்றதற்கு நன்றி. நாளையும் தொடருங்கள்.
சிறப்பான தகவல்
கலகம்
கல்லூளி மங்கன்says:
// ///பாமக பேசியதன் பின்னணி தெரியுமா உங்களுக்கு
1. நானோ என் மகனோ சட்டமன்றா நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன்2. என் வாரிசுகள் யாரும் கட்சியில் சேர மாட்டார்கள்…………………………………………………./// //
ஓ, தெரியுமே.
1950களில் வன்னியர்களுக்காக அரசியல் கட்சி தொடங்கிய தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் இராமசாமி படையாட்சியும், பொதுநலக் கட்சியின் மாணிக்கவேல் நாயகரும் 1952 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் போட்டியிட்டு 25 இல் வெற்றிபெற்றனர்.
காங்கிரஸ் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாததால் மாணிக்கவேல் நாயகருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இராஜாஜி முதல்வர் ஆனார். 1954 இல் காமராஜர் முதல்வராக இராமசாமி படையாட்சியும் ஆதரவு கொடுத்து அமைச்சரானார்.
இரண்டு பேருமே கட்சியை கலைத்துவிட்டு தொண்டர்களை காங்கிரசில் சேரச்சொன்னார்கள்.
இதனால், வன்னியர்களுக்காக பேச அரசியல் கட்சி இல்லாமல் போய்விட்டது.
இதனால்தான் “நானோ என் மகனோ சட்டமன்றா நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன்” என்று மருத்துவர் இராமதாசு கூறினார்.
இதன்படி, அவர் இன்றுவரை எந்த பதவிக்கும் வரவில்லை.
மற்றபடி காலத்துக்கு ஏற்ப சத்தியத்தை கைவிடுவது ஒன்றும் கொடூர குற்றம் இல்லை.
இன்னும் சமூகம் பிர்போக்காய் உள்ளது என்பதை கட்டுரை காட்டுகிறது
நல்ல பதிவு தோழரே
//நானோ என் மகனோ சட்டமன்றா நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன்” என்று மருத்துவர் இராமதாசு //
காலத்திற்கு ஏற்ப மாறுபடுமா
சரி ஒரு தடவை தீ மூ கா மற்ற்றொரு முறை ஆ தீ மூ கா என்று மாருபடிகிறாரே அது கூட இதனால் தானோ
///ஒரு தடவை தீ மூ கா மற்ற்றொரு முறை ஆ தீ மூ கா என்று மாருபடிகிறாரே////
பா.ம.க கூட்டணி மாறுவது மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா? கூட்டணி மாறாத ஒரு தேர்தல் கட்சியை காட்டுங்களேன்.
வன்னிய சாதிவெறியர்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது .உங்க ராமதாஸ் மது அருந்த கூடாது ,சினிமாகாரங்களுக்கு பின்னால் போககூடாது என்று பினாத்துகிறார் .வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதியில் மதுக்கடையை ஒலித்துவிட்டரா ?ரசிகர் மன்றங்களை ஒளிதுவிட்டரா ?அப்படி என்னதான் ராமதாஸ் வன்னியர்களுக்கு வாழ்க்கை ஒழுக்க முறையை சொல்லி கொடுத்திருக்கிறார் ?கொஞ்சம் விளக்குங்களேன் ……
வன்னியர்களுக்கு கொள்கை இல்லை என்று சொன்னால், வேறு எவருக்குமே கொள்கை இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்
காலை 8 மணி முதல் இரவு 12 மணிவரை திறந்திருந்த டாஸ்மாக் கடைகள் இப்போது 10 to 10 என நேரம் குறைந்தது பா.ம.கவால்தான்.
முன்னணி சினிமா நடிகர்கள் திரைப்படஙகளில் புகைப்பிடிக்காமல் இருப்பதும் பா.ம.கவால்தான்.
மற்றபடி மதுக்கடைகளை ஒலிப்பதும், இரசிகர் மன்றங்களை ஒளிபதும் பா.ம.கவுக்கு நேர்ந்துவிட்ட வேலைகள் அல்ல. கடைவிரித்தோம் கொள்வார் இல்லை என்பது போல மருத்துவர் இராமதாசு போராடுகிறார். நடந்தால் நடக்கட்டும், நடக்காவிட்டால் போகட்டும்
மற்றபடி ‘வன்னிய சாதிவெறியர்கள்’ என்று எல்லா வன்னியர்களையும் பொத்தாம் பொதுவாக சொல்வதை கண்டிக்கிறேன்.
எல்லா வன்னியர்களும் சாதிவெறியர்கள் என்று சொல்லவில்லையே ,சாதியின் பெயரால் சக மனிதர்களை தாழ்மைபடுதுவதும்,அடிமைபடுதுவதும் ,பொது இடங்களில் அவர்களின் உரிமைகளை பறிப்பதும் ,ஊருக்கு ஒதுக்கு புறமாக அவர்களை தள்ளிவிடுவதும் இந்த மாதிரி கொடுஞ்செயல்களை செய்பவர்கள் தான் சாதி வெறியர்கள் .உங்களுக்கும் அதே உணர்வு ஒட்டிகொண்டிருந்தால் நீங்களும் சாதிவெரியரே……
ஒங்க அய்யா மருத்துவர் ராமதாஸ் அவுகள பத்தி எங்ளுக்கு தெரியாத என்ன ஒவ்வோரு வருடமும் ரம்ஜான் மாதத்துல வந்து தொப்பி போட்டு கிட்டு நோன்பு கஞ்சியை குடுச்சுப்புட்டு அறிக்கை விடுவர் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி தாரமல் இந்த ராமதாஸ் ஒய மாட்டான் அப்புடின்னு சொல்லிட்டு பாண்டிச்செரி சட்டசபையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு சம்பந்தமான தீர்மானத்திற்கு எதிராக ஒங்க ராமதாஸ் வேளிநடப்பு சட்டசபை புறக்கனிப்பு செஞ்சது தெரியாத என்ன
///////////சாதி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்கள் வி.சிக்களால் தொடர்ச்சியாக நடத்தப்படுவதில்லை. அவர்களுக்கு திருமாவளவன் புகழ் பாடவே நேரம் சரியாக இருக்கும். வி.சி கட்சிக்கு இப்போதைய வேலையே கட்டப்பஞ்சாயத்துதான். உழைக்கும் மக்களிடமிருந்து அவர்கள் வெகுதூரம் விலகிப்போய்விட்டார்கள்//////////////////
ரொம்ப சரி…இந்த விசிக்கள் பண்ணும் அரஜகம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.இதே போல் பூந்தமல்லி பகுதிகளில் புரட்சி பாரதம் ? கட்சியினர் தொடர்ந்து கட்டபஞ்சாயத்து நடத்தி வருகின்றனர்.சாப்பிட்டு விட்டு காசு தராமல் செல்வது,மீறி கேட்டால் அடி உதை என ஆதிக்க சாதி வெறியர்களுக்கு போட்டியாக ரவுடித்தனம் செய்ய தலித் இயக்க தோழர்கள் முன்னணியில் இருப்பதும் இப்படி செய்பவர்களை தலித் அமைப்புகள் ஆதரிப்பதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வெறுப்புணர்வையே வளர செய்யும்.தலித்துகளோடு தோழமையோடு பழகும் முஸ்லிம்களை கூட விட்டு வைப்பதில்லை இவர்கள்.சமீபத்தில் புதுபட்டனத்தில் (கல்பாக்கம்) மாநாட்டுக்கு வந்த சிறுத்தைகள் சாப்பிட்டு விட்டு பணம் கேட்ட முஸ்லிம் கடைக்காரரை அடித்து அது பெரிய கலவரமாகியது,சமீபத்தில் திண்டிவனம் அருகே இதே தகராறில் ஒரு விடுதலை சிறுத்தை நிர்வாகி கொல்லப்பட்டார்.தலித் மக்கள் மீது பொதுவான நேசம் இருந்தாலும் இது போன்ற செயல்கள் மற்ற மக்களிடம் அவபெயரையே ஏற்படுத்தும் என்பதை தலித் தலைவர்கள் உணர வேண்டும்.அதற்கான வழிகாட்டுதலை தங்கள் அமைப்பினருக்கு வழங்க வேண்டும்.
அய்யா முன்னால் தலித்//
எங்கேயே ஒரு சில இடங்களில் நடைபெறுவதை வைத்து,வன்னியசாதி வெறியைப்பற்றி விவாதிக்கும் இடத்தில்,இதை வெளிப்படுத்துவது,உங்கள் சுயசாதி வெறியைதான் அம்பலப்படுத்துகிறீர்கள்.
ஒரு சில இடங்கள் அல்ல.பல இடங்களில் தோழா.உண்மை கசக்கத்தான் செய்யும்.சுய சாதின்னா நான் எந்த சாதி.உண்மையான சாதிய எதிர்ப்பு போராட்டத்த எந்த தலித் அமைப்பு பண்றான்.(சிறிய அமைப்புகள் தவிர).பெரிய அமைப்புகள் எல்லாம் கட்டபனசாயதுக்கே நேரமில்லாமல் கெடக்குறான்.
சிறப்பான கட்டுரை. காலில்லாத நாய்க்கு வாலில்லாத நாய் இளப்பம் என்பது போல் இந்த சாதி அடுக்கு முறைகள் எல்லா மட்டத்திலுமே பிரச்சனைக்குரியது. மேல்மட்டத்தில் திருமாவும், இராமதாசும் ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டாலும் உயர்வு தாழ்வு பார்பது கிராமங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
வின் டிவி என்று ஒரு டிவி அதன் உரிமையாளரே அப்பட்டமாக கோனார் அவதாரம் எடுத்து தன் சாதி வெறியை ஊட்டி வளர்கிறது .இதெல்லாம் வினவும் பு ஜ வும் கண்டுகொள்ளாது. கண்டிக்காது.ஆனால் வன்னியர்களையும் தாழ்த்தப்பட்ட மக்கள் இயக்கங்களையும் குறை கூறுவது உமக்கு வாடிக்கை. இந்த மக்களது பங்களிப்பு இல்லாமல் உம்மால் எந்த விடுதலையை பெறமுடியும் என தெரிய வில்லை. ஏற்கனவே ஈழ விடுதலையில் உமக்கும் இந்திய ஏகதிபத்திய அரசின் கருத்துக்கும் சோவின் கருத்துக்கும் எந்த வித்யாசமும் கிடையாது .இப்போ இணைய தளம் மூலம் உமது பிரசாரத்தை பரப்புவதை தவிர எந்த வித்யாசமும் இல்லை . எவனும் அவனவன் நிலைபாட்டிலிருந்து மாறாதவரை ராமதாஸ் வன்னிய சாதி வெறியராய் இருந்தாலும் தப்பில்லை.
டொண்ட டொண்ட டொண்டடொய்ன்.. டொண்டடொய்ன்..
நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்ல… என்ன அந்த நாலு பேரும் நம்ப சொந்தகாரங்களா இருக்கனும்!
ஏண்டா நாயே சாதி வெறியனா இருக்க ன்னு கேட்டா, நான் மட்டுமா அப்படி இருக்கேன் எல்லாரும் தான் அப்படி இருக்கான்! (கோனார் பாக்கான், நாடார் பாக்கான், தேவர் பாக்கான், இன்னும் எவன் எல்லாமோ பாக்கான் நான் மட்டும் பாக்ககூடாதா? )
அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்…
இந்த அரைவேக்காடு லாஜிக் இல்லாத டயலாக்க இன்னும் எது எதுக்கு எத்தனை நாளைக்கு யூஸ் பண்ணுவீங்க டா?
கேள்வி குறி & மோட்டோ!
நீங்க ரெண்டு பேரும் போடுறது சாதி சண்டையா இல்லை கொள்கை சண்டையா!?
என்ன பிரச்சனை இப்போ?
சண்டை ஒன்றும் இல்லை. வினவு ஜகா வாங்கி விட்டார் . கேள்வி குறி முளைத்துள்ளர். அவர் வழக்கம் போல அசிங்கமாக ஆரம்பித்து விட்டார். அது தான் சண்டையாவதர்க்கு காரணம்.
அண்ணே முட்ட ஒங்கள பல மாதங்களாக இங்கு பார்க்கிறேன் கேள்வி முளைக்காமல் இருந்தாலும் சண்ட தான் போடுறிங்க எவ்வளவு எதிர் கொள்கையை கொண்டிருந்தாலும் அவர்களிடம் ஒரு சில நல்ல விஷயங்களும் இருக்கும் என்னையாக்காவது வினவு தோழர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை நீங்கள் சுட்டி காட்டியது உண்டா ஒரு பதிவையாவது நல்ல பதிவு என்று சொல்லி இருக்கிறீர்களா கொஞ்சம் யோசிங்க
வணக்கம் தோழர்களே…. ஒருவர் சொல்லும் சொல்லுக்கும்(அ) செய்யும் காரியங்களுக்காக நாம் தீர்ப்பு கூறுவதே ஆதிக்கம் தான்.இந்த இரு பிரிவில் மட்டும் அல்ல அனைத்து பிரிவுகளிலும் சில புல்லுருவிகள் இருக்கிறார்கள் அவர்களால் மட்டுமே பாதிப்பு.நாம் அதனை விடுத்து அனைவரையும் நேசிப்போம் இது எனது பணிவான வேண்டுகோள்
நன்றி ……..
வினவு ,
ஒரு மயிரும் தெரியாட்டியும் , பெரிய மயிறு மாதிரி தான் பதிவ போடுற.
//மற்றபடி ‘வன்னிய சாதிவெறியர்கள்’ என்று எல்லா வன்னியர்களையும் பொத்தாம் பொதுவாக சொல்வதை கண்டிக்கிறேன்.//
இப்படித்தான் பார்பனர்களும் அப்பாவியாக ஒட்டுமொத்தமாக குறை கூறாதீர்கள் என கூப்பாடு போடுகிறார்கள். சாதி கலகம், கைகலப்பு என்று வந்துவிட்டால் எல்லா சாதி அபிமானிகளும் சாதிவெறியன் ஆகிவிடுவார்கள். கொஞ்சம் மாக தின்றாலும் கவளமாக எடுத்து தின்றாலும் ‘பீ’ பீ தான்
பார்ப்பனர்களைப் போல (எல்லா) வன்னியர்களும் சாதிவெறியர்கள் என்பது உங்கள் கருத்தா? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.
அண்ணே அருளே.. நீங்க கொஞ்சம் எதாவது ஒரு பார்பனனை எடுத்துகாட்டாக சொல்லுங்களேன்??
/// முன்பெல்லாம் சாதாரணமாக 19 வயது வன்னிய பெரியவருக்கு மரியாதை தராத 60 வயது பறைய சின்னக்குழந்தைக்கு அடி விழும்/// இதுதான் சிரிப்போடு சிந்திக்க வைப்பது வாழ்த்துக்கள் வினவு
ஹைதர் அலி//
இதுதான் சிரிப்போடு சிந்திக்க வைப்பது வாழ்த்துக்கள் வினவு //
பார்த்து சிரிங்க.
//நீ பந்தல் வன்னியரா? அரசு வன்னியரா? நாயக்க வன்னியரா? கொங்கு படையாச்சியா? தெளிவா சொன்னா நல்லா இருக்கும் போட்டு வாரிபுடலாம்.//
இந்த கருமாந்திரம் என்னைக்கு தான்யா அழியும்!
தக்காளி வன்னியர்ன்னாய்ங்க, அதுகுள்ளயே இம்புட்டு உள்குத்தா! எதுக்குடா அடுத்தவனை அடிக்கிறிங்க, உங்களுகுள்ளயே அடிச்சிகிட்டு சாவுங்க!, சாதி வெறி பிடிச்ச சனியன்களா!
வால்ஜீ நீங்க ஈரோடுதானுங்ளே அப்டீனா கொளத்தூர் உங்களுக்கு பக்கத்து ஊருதான போய் ஒரு எட்டு என்னனுதான் பாத்துட்டு வறது இதுக்குனு தனியா போவ வேணாங்க மேட்டூர் போயி பார்க்குல மீன் சாப்புடறன்னைக்கு போய் பாத்தாக்கூட போதுங்
மேட்டூர் போய் மீன் சாப்பிடுற வசதி திமீர் இருந்தா எவண்டா எங்க சாதி வெறியன்னு கூப்பிட்ட காய் அடிச்சி விட்ருவேன் தோழரே!
தோழர் நான் சொன்னதை தவறாக நினைத்து விடாதீர்கள் பொதுவாக ஈரோடு,பவானி சுற்றுவட்டரத்தை சேர்ந்தவர்கள் ஞாயிறுகளில் மேட்டூர் பார்க் சென்று மீன் சாப்பிடுகிறார்கள்(அவர்களில் பெரும்பாலோனோர் மிடில் கிளாஸ் அல்லது அதற்கும் கீழ்) அதை வழக்கமாகவும் வைத்திருக்கிறார்கள் உங்களுக்கும் அப்படி பழக்கமிருந்தால் அப்படி கொளத்தூர் சென்று விசிட் செய்யுங்கள் என்ற அர்த்தத்தில்தான் கூறினேன் தவறான் பொருள் படும்படி கூறியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்,
என்னுங்க இதுக்கே சலிச்சிகிறீங்வெள்ளாளக் கவுணடர்ல 100க்கு மேற்பட்டபிரிவு இருக்குதுங்ணோய்
வால்! அப்புறம் நீங்களும் இது போன்ற செய்தியை தொகுக்கலாமே (உ.ம்: ஈரோட்டில் நடந்த கல்கி கேப்பமாரி நிகழ்ச்சி மாதரி)
எனது ஆச்சர்யமெல்லாம் எப்படி இந்த ங்கொம்மா பகவான்
இன்னும் நடமாடி கொண்டிருக்கிறார்கள் என்பது தான்!, இந்த கூட்டத்திற்கு செல்லும் மந்தைகளை பார்க்கும் பொழுது ஒரு பக்கம் பாவமாகவும் இருக்கு ஒரு பக்கம் கோவமாகவும் இருக்கு!
//சாதி வெறி பிடிச்ச சனியன்களா!// என்பது தமிழ்நாட்டில் எல்லோருக்குமே பொருந்தும் – ஏனென்றால், பலப்பல உட்பிரிவுகள் இல்லாத சாதி எதுவும் இல்லை.
சாதி இல்லாத தமிழனும் யாரும் இல்லை. கொஞ்சம் உங்கள சுத்தி பாருங்க. மாமா, சித்தப்பா, அண்ணன், தம்பி, அக்கா – எல்லா உறவுகளும் யாரை கல்யாணம் பண்ணியிருக்காங்க?
அருமையான கட்டுரை வினவு தோழர்களுக்கு வாழ்த்துக்கள் வினவு தன் வாசகர்களை படைப்பாளர்களாக்கி அவர்கள் அறிவு வளர்ச்சியை உயர்த்தியது இப்போது வினவுக்கான நிருபர்களையும் உருவகாக்கியது நல்ல வளர்ச்சி சிறப்பான விட்யம், இன்னும் ஒலி வடிவிளான செவ்விகளையும் எதிரிபார்க்கிறோம் .கண்டிப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன், அப்புறம் ஒரு வேண்டுகோள் வினவின் வாசகர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் இது போன்ற சாதி,வர்க்கரீதியான போராட்டங்களை வினவுக்கு அனுப்ப வேண்டும் அதில் முக்கியமானவற்றை வினவு பிரசுரிக்கவேண்டும் இதற்கு வினவின் அனுமதி வேண்டும்.
தோழர்கள் கார்க்கி,கேள்விக்குறி நீங்களும் கோவையின் சாதிக்கொடுரங்களைஎழுதலாமே!
//அதுகுள்ளயே இம்புட்டு உள்குத்தா! எதுக்குடா அடுத்தவனை அடிக்கிறிங்க, உங்களுகுள்ளயே அடிச்சிகிட்டு சாவுங்க!, சாதி வெறி பிடிச்ச சனியன்களா!//வால்பையன் உங்க ஏரியாவுல பவானி தாண்டி போனதில்லையா, சமீபமா சித்தார் பகுதிக்கு வந்த காடுவெட்டி குருவுக்கு குடுத்த வன்னிய வெறியர்கள் வரவேற்பை பார்க்கவில்லையா?
//வால்பையன் உங்க ஏரியாவுல பவானி தாண்டி போனதில்லையா, சமீபமா சித்தார் பகுதிக்கு வந்த காடுவெட்டி குருவுக்கு குடுத்த வன்னிய வெறியர்கள் வரவேற்பை பார்க்கவில்லையா?//
எனக்கும் குடும்பத்தார்க்கும் முதலிஅல் சோத்துக்கு உழைக்க வேண்டும் தோழரே! எனது அழுவலகம் விட்டால் வீடு, இது தான் எனது ரொட்டின் வேலை!, ஆங்காங்கே கட்சி பேனர் பார்ப்பேன், அது இந்த அளவு சாதிவெறியோட இருக்கும் என எதிர்பார்க்கவில்லை! இனி ரிப்பார்ட்டுக்காவது சென்று வர வேண்டும்!
காடுவெட்டி குருவுக்கு வரவேற்பு கொடுத்த வன்னியர்களை எந்த அடிப்படையில் “வன்னிய வெறியர்கள்” என்று கூறுகிறீர்கள்?
காடுவெட்டி குருவுக்கு வரவேற்பு கொடுத்த வன்னியர்களை எந்த அடிப்படையில் “வன்னிய வெறியர்கள்” என்று கூறுகிறீர்கள்?
சிறப்பான கட்டுரை வாழ்த்துக்கள் ,வன்னியரும் பறையரும் வர்க்க போராட்டத்தில் இணையும்போதுதான் சாதியை முழுமையாக ஒழிக்கமுடியும்.போராட்ட வாழ்கைதான் ஒற்றுமையை வளர்க்கும் .வன்னியர் பறையரோடு சேராமல் தன்பிரசினையை தீர்க்க முடியாது.
//தவறான் பொருள் படும்படி கூறியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்,//
தவறொன்றும் இல்லை தோழரே!
அம்மாதிரி தின்பதற்காக ஊர் சுற்றும் பழக்கமில்லை!,
ஞாயிற்றுகிழமைகளில் ஒரு குவாட்டர் ௨ வாட்டர் பாக்கெட்டுடன் டாஸ்மாக்கில் பொழுது கழிகிறது, இன்று சம்பாரித்தாலும் 14 வயதில் மாதம் 200 ருபாய்க்கு வேலைக்கு போனது இன்னும் மனதில் இருக்கிறது!, அது தான் இன்றும் அனையாமல் என்னை வைத்திருக்கும் நெருப்பு!
எவனனொருவன் தன் சாதி சிறந்தது/உயர்ந்தது, என் சாதிகாரர்கள் நல்லவர்கள் என்கிறானோ, அவன் நிச்சயமாக சாதிவெறியன், அதுவே மதத்திற்கும்!
//சாதி இல்லாத தமிழனும் யாரும் இல்லை. கொஞ்சம் உங்கள சுத்தி பாருங்க. மாமா, சித்தப்பா, அண்ணன், தம்பி, அக்கா – எல்லா உறவுகளும் யாரை கல்யாணம் பண்ணியிருக்காங்க?//
எல்லா நாயும் பீ திங்குதுனா நானும் திங்க முடியுமா!?
ஆக மொத்தம் சாதி ஒழியிறதுல உங்களுக்கு துளியும் விருப்பம் இல்ல!
உங்க சாதி உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சரியா!?
வால்பையன் says:
// ///எவனனொருவன் தன் சாதி சிறந்தது/உயர்ந்தது, என் சாதிகாரர்கள் நல்லவர்கள் என்கிறானோ, அவன் நிச்சயமாக சாதிவெறியன், அதுவே மதத்திற்கும்!// ///
எவனனொருவன் தன் சாதி சிறந்தது/உயர்ந்தது என்கிறானோ, அவன் நிச்சயமாக சாதிவெறியன் என்பது சரிதான்.
என் சாதிகாரர்கள் நல்லவர்கள் என்பதும் சாதிவெறியா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.
சாதி, மதம் எல்லாம் மனிதனை பிடித்த அடையாளம். மத அடையாளத்தை மாற்ற முடிகிறது. சாதி அடையாளம் பிறப்பிலேயே வருகிறது.
ஒருவன் எந்த அடையாளத்தினால் ஒடுக்கப்படுகிறானோ, சுரண்டப்படுகிறானோ, அந்த ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்க்க அதே அடையாளத்தை பயன்படுதுவதில் தவறு எதுவும் இல்லை. உண்மையில் அதுதான் விடுதலைக்கு வழி.
எனவே, அடையாளத்தின் அடிப்படையில் ஒன்றிணைவது அடக்குவதற்கா? அல்லது விடுதலைக்கா? என்பதுதான் முக்கியம்.
எனவே, தலித், ஓ.பி.சி, முஸ்லீம் என்கிற அடையாளங்கள் பெரும்பாலும் விடுதலைக்கானவைதான் என்பது எனது கருத்து.
//சாதி அடையாளம் பிறப்பிலேயே வருகிறது.//
இப்படி தான் பார்பனர்கள் சாதியை இறுக பற்றி வர்ணாசிரமத்தை வளர்த்து வருகிறார்கள், இனி அவர்களுடன் நீங்களும் சேர்ந்து கொண்டீர்கள்!
என் மகளுக்கு சாதி சான்றிதழ் தரவில்லை, தரமாட்டேன், இனிவரும் சமூகமாவது சாதியில்லாமல் வரட்டும்னு நான் கழுதையா கத்திகிட்டு இருக்கேன்!, நீங்க விட்டு வெளிய வர மாட்டிகிறிங்க!
சாதியை கொஞ்சம் கொஞ்சமாக துறப்பதால் குழு மனப்பான்மை மாறி மனித தன்மை வளரும்!, சாதிகாரனை பார்த்தால் வரும் சகோதரத்துவம் யாரை பார்த்தாலும் வரும்! சாதி ஒழியாத வரைக்கும் இப்படி அடிச்சிகிட்டு சாவறது தான் நடக்கும்!
////என் சாதிகாரர்கள் நல்லவர்கள் என்பதும் சாதிவெறியா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.//////////
அப்ப மத்தவங்க எல்லாம்?
////சாதி அடையாளம் பிறப்பிலேயே வருகிறது./////
எப்படி நெத்தியில எழுதி பிறக்குறாங்களா?
இல்ல ஒவ்வொரு சாதிக்கும் வேற எதாவது சாதா, ஸ்பெசல், ஸ்பெசல் சாதா இப்படி ஏதாவது மொளைச்சிருக்கா??
சாதி பிறப்பால வருதுன்னும், பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வருணாசிரமும் சொல்கிறதே??
////அடையாளத்தின் அடிப்படையில் ஒன்றிணைவது அடக்குவதற்கா? அல்லது விடுதலைக்கா? ////
தமிழ்நாட்டில் வன்னியர்கள் தலித் மக்களை அடக்கி ஒடுக்கவே இல்லை, இல்லை, அப்படி தானே?
தலித் மக்கள் ஒன்றினைவது சரிதான். அது விடுதலைக்கு தான்!
தலித் மக்களை போலவே (!) நீங்களும் ஒடுக்கப்படுவதாக கருதுகிறீர்களே, அப்படியானால் தலித் மக்களுடன் ஒன்றினைந்து போராடுவதை தடுப்பது எது? உங்களை தனியாக ‘வன்னியர்’ அடையாளத்துடன் ஒன்றினைய வைத்தது எது?
நீங்க தான் நல்லவங்களாச்சே! நேர்மையா பதில் சொல்லுங்க பாக்கலாம்!
[…] This post was mentioned on Twitter by Vanniyar_news. Vanniyar_news said: 2/2……..எதிர் கருத்தை&வாதத்தை அங்கே பின்னூட்டமாக இடுங்கள் . https://www.vinavu.com/2010/05/11/kolathur-dalith/ #vanniyar […]
வால்பையன் says:
//சாதி அடையாளம் பிறப்பிலேயே வருகிறது.// என்பது ஒரு உண்மை. சாதியை யாரும் தேர்ந்தெடுக்க முடியாது. இந்த உண்மையை சொன்னால் எப்படி வர்ணாசிரம தர்மத்தை வளர்ப்பதாகும்?
சான்றிதழில் சாதிப்பேரை போடாமல் விடுவது. இடஒதுக்கீட்டை ஒழிப்பது – இதனாலெல்லாம் சாதி ஒழியும் என்பது உயர்சாதியினர் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு வஞ்சகக் கற்பனை.
மகளுக்கு சாதிசான்றிதழ் தராமல் விடுவதனால் “இனிவரும் சமூகமாவது சாதியில்லாமல் வரும்” என்று மனப்பால் குடிப்பது ஒருமூட நம்பிக்கை.
//சாதி ஒழியாத வரைக்கும் இப்படி அடிச்சிகிட்டு சாவறது தான் நடக்கும்!// என்று நீங்கள் சொல்வது சரியான கருத்துதான். அப்படியே, சாதி ஒழிய ஒரு நல்லவழி சொன்னால் பயனாக இருக்கும்
//சாதி அடையாளம் பிறப்பிலேயே வருகிறது.// என்பது ஒரு உண்மை. சாதியை யாரும் தேர்ந்தெடுக்க முடியாது. இந்த உண்மையை சொன்னால் எப்படி வர்ணாசிரம தர்மத்தை வளர்ப்பதாகும்?//
இங்கே மட்டும் தான் மனுசன் பிறக்கிறானா, மத்த நாட்டிலெல்லாம் மனுசனை செய்யுறாங்களா!?, எல்லா நாட்டிலும் எல்லா தொழிலும் இருக்கு, ஆனா இந்தியாவில் தாழ்த்தப்பட்டவன் மட்டுமே சில தொழில் செய்கிறான், காரணம் சாதியை குறிப்பிடுகிறீர்கள்! மனித நாகரிகத்தின் ஆரம்பத்தில் சாதி இருந்ததா? இடையில் பார்பனர்களின் வர்ணாசிரமத்தில் வந்த சாதியை இவ்வளவு பற்றோடு பார்ப்பது தான் பார்பணியம், நீங்கள் டோண்டு பதிவில் சொன்னது தான், பார்பனீயம் அந்த சாதியில் மட்டும் தான் இருக்கனும்னு இல்ல!
//சான்றிதழில் சாதிப்பேரை போடாமல் விடுவது. இடஒதுக்கீட்டை ஒழிப்பது – இதனாலெல்லாம் சாதி ஒழியும் என்பது உயர்சாதியினர் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு வஞ்சகக் கற்பனை.//
உங்கள் சாதியை நீங்கள் போட்டு கொள்வது உங்கள் விருப்பம், நான் போடாமல் இருப்பது என் விருப்பம்!, நான் சொல்வது என்னுடய வருமானம் தேவையான அளவு இருக்கிறது, எனக்கு அரசின் சலுகை தேவையில்லை, அதனால் சாதி ஒழிப்பின் முதல் படியை நான் எடுத்து வைக்கிறேன்! உங்களுக்கு உங்க சாதி வேணும்னா பத்திரமா வச்சுகோங்க!, ஆனா அது அழியாம இருக்கப்போறதில்லை, நிச்சயம் அடுத்த தலைமுறை அழிக்கும்!
//மகளுக்கு சாதிசான்றிதழ் தராமல் விடுவதனால் “இனிவரும் சமூகமாவது சாதியில்லாமல் வரும்” என்று மனப்பால் குடிப்பது ஒருமூட நம்பிக்கை.//
ங்கொய்யால, நான் இந்த சாதின்னு சொல்றது நல்ல நம்பிக்கையாக்கும், சாதி எப்படி உருவானதுன்னு முதல்ல தெரிஞ்சிகோங்க, பிறகு மூடநம்பிக்கையை பற்றி பேசவரலாம்!, இந்து வர்ணாசிரமத்தை தவிர்த்து வேறு எதில் சாதியை கண்டீர்கள், அவர்கள் எல்லாம் மூடநம்பிக்கைவாதிகளா!?
/சாதி ஒழிய ஒரு நல்லவழி சொன்னால் பயனாக இருக்கும்//
உங்களிடமிருந்தே ஆரம்பியுங்கள், உங்கள் கொள்கையை!
///சாதி ஒழிய ஒரு நல்லவழி சொன்னால் பயனாக இருக்கும்///
பெரியார், அம்பேத்கர் சொன்னதெல்லாம் சுத்த வேஸ்டு! ஏன்னா அவங்கல்லாம் வீர வன்னியர் இல்லையே!
போயி உங்க ’அ(கொ)ய்யா’ கிட்ட கேளுங்க!
மரம் வெட்டிட்டு அப்புறம் செடி நடுற மாதிரி ஏதாவது திட்டம் வெச்சிருப்பாரு…….
தோழர் வினவு !!!
உங்கள் கள ஆய்வு கட்டுரை ,தாழ்த்தப்பட்ட மக்களின் -உண்மை நிலையை உணர்த்துகிறது ! வாழ்த்துக்கள் !!
வாள்பையனுகும் -என்னுடைய வாழ்த்துக்கள் !!(சாதி ஓழிக்க சாதி சான்றுதல் -தர மறுத்தது )
உங்கள் கட்டுரைக்கும் -அதில் உள்ள சில -பின்னுடங்கலூகும் -என்னுடைய கருத்தை இங்கே -பதிவு செய்கீரன்
//வன்னிய சாதி வெறியர்களைப் பொறுத்தவரை”பறையனுங்க வேணாமுன்னு தான நாங்க இருக்கோம், எதுக்கும் அவுனுங்கள கூப்புடறதுல்ல, தள்ளி வச்சிருக்கோம் , சும்மா மரியாத கொடு , மரியாத கொடுன்னு தேவையில்லாம பிரச்சினை பண்றாங்க. பெரியவங்க முன்னாடி கால் மேல கால் போட்டுகிட்டு இருக்கானுங்க, பெரியவங்க முன்னாடி சிகரெட்டு குடிக்கறாங்க புகைய வுடுறானுங்க” இது தான் அவர்கள் குற்றச்சாட்டு.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து போகக்கூடாது, குடைபிடித்து போகக்கூடாது, வன்னியர் வந்தால் மரியாதை தரவேண்டும், சைக்கிளில் செல்லக்கூடாது என எல்லா கொடுமைகளும் நடந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் வன்னிய நாட்டமைகள்தான் வருவார்கள். தீர்ப்பு சொல்வார்கள். பின்னர் இப்பகுதி இளைஞர்கள் தங்களை அப்போது உருவாகிக்கொண்டிருந்த ///விடுதலை சிறுத்தைகளில்/// இணைத்து சாதி ஆதிக்கத்தை எதிர்த்து வந்தனர்.
அடிவாங்கிக்கொண்டே இருந்த அவ்விளைஞர்கள் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் என்று பேசவும் ஆரம்பித்தார்கள்.//
ஆண்டாண்டு காலம் -அடிமையாக இருந்தவன் -இன்று சூய மரியாதைக்காக – ஆதிக்க -சாதிகளை எதிர்க்கவும் ,அடித்தால் -திருப்பி அடிக்கவும் -மூடிந்தது -யாரால் என்று -விடுதலை சிறுத்தைகலால் -என்று-உங்கள் கட்டுரையே ஒத்து கொள்கிறது -நன்றி !!!
வன்கொடுமை சட்டம் இருந்தே -பல சாதி கொடுமை -இன்னும் தலைவிரித்து ஆடுகிறதே -அதை நீக்கீனால் -தலித் மக்களுக்கு -என்ன பாதுகாப்பு இருக்கும் ? -ஒரு சில இடங்க்களில் -வன்கொடுமை சட்டம்-தவறாக பயன்படுத்த -வாய்ப்பு இருந் தாலும் -வன்கொடுமை சட்டம் -தலித்துகளுக்கு -ஒரு பாதுகாப்பு –
தோழர் திருமா , தோழர் -ரவிகுமார், தோழர் வினவு -போன்றவர்கள் தலித்துகளுக்கு -ஒரு பாதுகாப்பு
-த சேகர் M.E
மருதிபட்டி -அஞ்சல்
அரூர் -வட்டம்
தர்மபுரி
அருந்ததினரை பறையர் பிரிவினர் மிரட்டினர். தலித்துகளை வன்னியர்கள் தாக்கினர் – இந்த இரண்டு நிகழ்வுகளும் தவறுதான். இதில் வன்னையர்கள் இழைத்தது பெரிய குற்றம். இந்த குற்றத்தை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
மற்றபடி கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்களில் சில மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். கொளத்தூர் பகுதி நிலவரத்தை நேரில் காணாமல் இதில் கருத்து சொல்ல இயலாது.
கட்டுரைக்கான பின்னூட்டங்கள்தான் அதிகம் சிந்திக்கத் தூண்டுகின்றன. வன்னியர்களுக்கு எதிரான தலித்துகளின் கோபம் நியாயமானது. புரிந்துகொள்ளக்கூடியது.
ஆனால், ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக’ ஆளுக்கு ஆள் வன்னியருக்கு எதிரான வன்மத்தோடு எழுதுவதின் பின்னணி என்ன? தலித்துகள் மீதான பாசமா? அல்லது, வன்னியர்கள் மீதான வெறுப்பா?
தலித்துகளின் தோலின்மீது வன்னியர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். வன்னியரின் தோலின்மீது வேளாளர், பார்ப்பனர், நாயுடு, ரெட்டி, முதலியார் எல்லோரும் உட்கார்ந்திருக்கிறார்கள். வன்னியருக்கு எதிரான ஆதிக்க சாதிகள் எல்லோரும் இப்போது வன்னியர்கள் மீது பாய்கிறார்கள்.
இக்கட்டுரைக்கான பின்னூட்டம் ஒன்று “எல்லா வன்னியர்களும் சாதிவெறியர்கள்” என்று சுற்றிவளைத்து கூறுகிறது. (57. கோவி.கண்ணன்)
இதுதான் இன்றுள்ள உண்மை நிலைமை. எல்லா ஆதிக்க சாதிகளும் வன்னியர்களுக்கு எதிரான “சாதிவெறியுடன்” வாழ்கின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வன்னியர்களை ஓரம்கட்ட அணிவகுக்கின்றனர்.
ஆங்கிலேயர்காலத்தில் வன்னியரின் நிலத்தை பிடுங்கியவர்கள், அதற்கு பின் அரசியல் அதிகாரத்திலிருந்து வன்னியர்களை ஓரம் கட்டியவர்கள், அதிகாரமிக்க இடங்கள் வன்னியர்களுக்கு கிடைக்காமல் அபகரித்தவர்கள் – எல்லோரும் வன்னியர்கள் இனிமேலும் பஞ்சை பராரிகளாகவே உழல வேண்டும் என்று விரும்புகின்றனர்.
கல்லாமை, வறுமை, வேலையின்மை, நல்வாழ்வு குறியீட்டிலும் மனித மேம்பாட்டிலும் மிக பின் தங்கியநிலை, அதிகம்பேர் வேளாண்மையே கதியாக கிடப்பது – இது எல்லாவற்றிலும் தமிழ்நாட்டிலேயே உச்சத்திலிருப்பது வன்னியர்களும் பறையர்களும்தான்.
இந்த உண்மையைக்கூட உணரமுடியாமல், உண்மையான எதிரிகளை அடையாளம் காணாமல் – தலித்துகளுடன் சண்டையிடும் முட்டாள்தனமான வாழ்வில் வன்னியர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்.
வன்னியர்கள் உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டு, அவர்களது ஆதிக்கத்தை அகற்றும் போரில் இறங்காதவரை இந்த நிலை தொடரவே செய்யும்.
எப்படியோ, ‘வினவு’க்கு பின்னால் இருப்பதும் ஆதிக்கசாதி கூட்டம்தான் என்பதை வன்னியர்கள் புரிந்துகொண்டால், அதுவே இப்போதைக்கு போதும்.
///இது எல்லாவற்றிலும் தமிழ்நாட்டிலேயே உச்சத்திலிருப்பது வன்னியர்களும் பறையர்களும்தான்./// இதனால் அறிவிப்பது என்னவென்றால் கூடிய சீக்கிரம் வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கு இணையான இட ஒதுக்கீடு வேண்டும் என்று எங்கள் ‘அய்யா’ ஒரு கோரிக்கையை முன் வைத்து அடுத்த தேர்தலை சந்திப்பார்ர்ர்ர்ர்……
///‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக’ ஆளுக்கு ஆள் வன்னியருக்கு எதிரான வன்மத்தோடு எழுதுவதின் பின்னணி என்ன? தலித்துகள் மீதான பாசமா? அல்லது, வன்னியர்கள் மீதான வெறுப்பா?///
நீங்கள் வன்னியர்களுக்காக வரிந்துகட்டி வருவதின் பின்னணி என்ன?
சுய சாதி பாசமா? அல்லது வன்னிய சாதி வெறியா?
கோவி.கண்ணன் பதிலையும் படிக்கவும் வீர (!) அருளாரரே…
///சாதி பாசத்திற்கும், வெறிக்கும் கையில் தீவட்டி வைத்திருப்பதற்கும், அதைத் தூக்கி மற்றொரு சாதிக்காரன் வீட்டு கூரையில் வீசுவதற்கும் உள்ள வேறுபாடு தான். ///
திராவிட இயக்க நிறுவனர் மற்றும் பிராமண எதிர்ப்பியக்க நிறுவனர்,திரு அயோதிதாசன்(May 20, 1845–1914)அவர்கள்,”இந்திய புத்தமத இயக்கத்தில்” சேர்த்த “ஹென்றி ஓல்கட்” இயக்கத்தின் “முதல் தலைவரும்”,தலித்திய சிந்தணையாளரான “காய்ல் ஓம்வெட்” டின் முன்னோடியும்,ஜெர்மானிய சிந்தனையாளரான “Baruch Spinoza(November 24, 1632 – February 21, 1677)” வழிவந்தவருமான,”Paul Carus(18 July 1852 – 11 February 1919) was a German-American author, editor, a student of comparative religion,and professor of philosophy,Carus was born at Ilsenburg,Germany” இவர் ஒரு ஜெர்மன் நாட்டில் பிறந்த ஜெர்மானியர் ஆவார்!.
நல்லா காமெடி பண்றிங்கப்பு
”ஆதிக்க சாதிகளும் வன்னியர்களுக்கு எதிரான “சாதிவெறியுடன்” வாழ்கின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வன்னியர்களை ஓரம்கட்ட அணிவகுக்கின்றனர்.”
//இக்கட்டுரைக்கான பின்னூட்டம் ஒன்று “எல்லா வன்னியர்களும் சாதிவெறியர்கள்” என்று சுற்றிவளைத்து கூறுகிறது. (57. கோவி.கண்ணன்)//
சொன்னதில் என்ன தவறு ?
தலித்துகள் தவிர்த்து, சாதி உரிமை, பெருமை என்று கொடிப் பிடித்து சாதியை வெளியே சொல்கிறவர்கள் அனைவருமே சாதிவெறியர்கள் தான். சாதிகளுக்குக் கொடுக்கும் இட ஒதுக்கீடுகள் அந்தந்த சாதிக்கான சலுகை என்றாலும் கூட அவை கேட்கப்படும் இடத்தில் மட்டுமே சாதிப் பெயரைச் சொன்னால் போதுமே, மற்ற இடத்திலெல்லாம் நான் இந்த சாதி இந்த சாதி என்றால் அவன் சாதிவெறியன் தான்.
பிறக்கும் போதே யாரும் சாதி அபிமானிகளாகப் பிறப்பது இல்லை, முதலில் சாதி அபிமானம், பிறகு அதனால் கிடைக்கும் லாபம் (குறைந்த பட்சம் அடுத்தவனை தாழ்த்துவது) இவைதான் ஒருவனை சாதிவெறியன் ஆக்குகிறது. சாதி பாசத்திற்கும், வெறிக்கும் கையில் தீவட்டி வைத்திருப்பதற்கும், அதைத் தூக்கி மற்றொரு சாதிக்காரன் வீட்டு கூரையில் வீசுவதற்கும் உள்ள வேறுபாடு தான். ஒரு சாதி அபிமானி சாதிவெறியனாக மாற கலவரம் என்ற சூழல் இருந்தாலே போதும், இப்ப சொல்லுங்க சாதியை வெளியே சொல்லும் எவனும் சாதிவெறியனா இல்லையா ?
மதவெறி, சாதிவெறிகள் என்பவை வேற்றுலகவாசிகளால் நடத்தப்படுவதில்லை, அதன் மீது பற்று வைத்துள்ளவர்கள் தான் அப்படி மாறிப் போவார்கள்
///சாதி பாசத்திற்கும், வெறிக்கும் கையில் தீவட்டி வைத்திருப்பதற்கும், அதைத் தூக்கி மற்றொரு சாதிக்காரன் வீட்டு கூரையில் வீசுவதற்கும் உள்ள வேறுபாடு தான். //////
கோவி.கண்ணன்,
மிக சரியாக நடு மண்டையில் கொட்டி இருக்கிறீர்கள்!
🙂
அய் வலிக்கலியே என்று திரும்ப வருவார்கள் பாருங்களேன்! 🙂
மிக நல்ல கட்டுரை…ஆனால் நீங்கள் எங்கள் மாவட்டதைப்பற்றியம் கொஞ்சம் ஈழுத வீண்டும் …தூத்துக்குடி…இங்கு நாடர்கள் செய்யும் ஆதிக்கம் இதை விட மோசம்…ஒரு சிறிய ஈடுதுக்காட்டு..இங்கு கல்லூரியல் பயிலும் மாணவர்களில் ஒரு team உண்டு அஹன் பெயர் TNT — It meens Tirunelveli, Nagercoil an dTuthukkudi…அவர்கள் அனைவரும் ஒரு கூட்டம் (பெண்கல் உட்பட)..அவர்கள் மற்ற ஜாதியினருடன் சேருவார்கள் ஆனால் தலித்தை பார்க்கக்குஉட மாட்டார்கள்…கொழுthத நாய்கள் அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது…அவர்கள் அனைவரும் TMB account மாத்திரமே வைத்திருப்பார்கள் …தென் மாவட்டங்களில் அவர்களுக்கு கல்லூரிகளும் அதிகம் அதில அனைத்தும் tmb atm இருக்கும்….உள்ளூர் தாதா அரசியல் வாதிகளின் தலையீடும் உண்டு இதில்…
இது ஒரு மிகப்பெரிய வாதம் ….
என்ன இது சின்னபுள்ள தனம் ?
எது முட்டாஊ வ பத்தி பீல் பண்ணாதீங்க… அவரும் நானும் இப்பிடி ஒருத்தர ஒருத்தர் திட்டிகிட்டு எங்க மென்டல் டிப்ரசன கொரச்சுகிறோம்.. இதுக்கு போய் புரட்சி
நல்ல பதிவு
நல்ல பதிவு………
மனதில் எழுந்த சில எண்ணங்கள்….
வெள்ளாளக் கவுண்டர்களுக்கு கீழே வன்னியர்கள்…வன்னியர்களுக்கு கீழே பறையர்கள்….இன்னும் பறையர்களுக்கு க் கீழே அவர்கள் இவர்கள் என்ற படிக்கட்டு போய்க்கொண்டே இருக்கிறது…
பறையர்கள் தமக்குக் கீழே என்றெண்ணும் போது , வன்னியர்களுக்கு தமக்கு மேலிருக்கும் அல்லது கீழிருக்கும் ஒரு சாதியை எதிர்ப்பது என்பது வெறும் சுயசாதி அபிமானமாகிப்போகிறது…….
அதுபோலவே ஒவ்வொரு சாதியினரும்….
தலித்களோ , பறையர்களோ இன்னபல இன்னபல ஒடுக்குமுறைக்குட்பட்டொரோ தமது உரிமைக்காக ஆதிக்கசாதி மக்களை எதிர்த்துப்போராடுகின்ற போது அது மட்டும் எப்படி சுயசாதி அபிமானமல்ல என்ற நோக்கத்தில் பார்க்கப்படுகிறது ???
அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர்களது சுயசாதி அபிமானம் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது….அல்லது அதைக் கண்டுக்கொள்ளக் கூடாது என்று நினைத்துக்கொள்கிறார்கள்…
எந்தச்சாதியாகினும் , சுயசாதி அபிமானமோ , நான் உயர்ந்தவன் , நீ தாழ்ந்தவன் என்ற நினைவோ கண்டிக்கக் கூடியதே.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றார் வள்ளுவப்பெருந்தகை….
அத்தகையதோர் மாற்றத்தை எங்ஙனம் கொண்டு வருவது????
இது ஆழமான , அவசியமான கேள்வி….
சாதி வேற்றுமை அங்கிங்கெனாதபடி ஆழப்புரையோடியிருக்கும் இச்சூழலில் , கொளத்தூரிலோ , கருங்கலூரிலோ ஒரு சமூகத்தை அடக்கியாண்டார்கள் என்ற செய்தியை மற்றுமொரு செய்தியாகப் பார்க்கவேண்டுமே தவிர , அங்கே மட்டும் தான் சாதி வெறி இருக்கிறது என்று பார்ப்பது தவறு……..
ஆக , ஒட்டுமொத்தமாக இச்சாதிப் பேயை களைவதெப்படி?
மனம்…மக்களின் மன மாற்றமே ஒரே வழி…………
சண்டையிடுவாதாலேயோ , அரசாங்கத்தை நோக்கிப் படையெடுப்பாதாலோயோ கசப்புகள் மட்டுமே மீண்டும் , மீண்டும் வளரும்………இது சத்தியமான ஆனால் பெரும்பாலானவர்களால் ஒத்துக்கொள்ளவியலாத மனவியல் உண்மையாகும்….
மனமாற்றம் எவ்வாறு நிகழும்????
ஊருக்கு ஊர் பிரசங்கம் நடத்துவதாலா ????? இல்லை…
மனமாற்றம் என்பது ஒரு நீண்டகாலத்திட்டம்…மாத்திரை போட்டு காய்ச்சலை நிறுத்திவிடுவது போலல்ல அது…..மாற்றாக திட்டமிட்டு காய்ச்சலுக்கான காரணிகளை , புறச்சூழல்களை சரி செய்வதாகும் அது……..
அதற்கான வாய்ப்புகள்….
* கட்டாயக்கல்வியை கல்லூரி வரை உயர்த்துவது………அதிலும் தலித்துக்களுக்கான பள்ளி இடை நிற்றலை பூஜ்ய சதவீதத்தில் கொண்டு நிறுத்துவது.
* வேலைவாய்ப்பு அதிகரிக்கும் அதே சூழலில் , கிராமப்புறங்களில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை திறந்துவிடுவது…..ஆட்கள் பற்றாக்குறையினால் கொங்குப்பகுதியின் பல கிராமங்களில் “தலித்”கள் எல்லா வேலைகளையும் செய்வது இப்போதெல்லாம் ஒரு அதிசய விடயமல்ல…….அதே போன்றே வாய்ப்புகளின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சேரிகளிலிருந்து “தலித்”களை வெளிக்கொணர்வது……….
* வங்கிகள் “தலித்”களுக்கு தடையற்ற கடன்களைக் கொடுப்பதன் அவர்களைத் தொழில் முனைவோர்களாக்குவது….எதிர்ப்புக்கள் இருக்கும் தான்……அவை எப்போது இல்லாமல் இருக்கிறது….???
* சாதிக்கட்சிகளையும் , சாதிச்சங்கங்களையும் முற்றிலும் தடை செய்வது……..அது உயர்சாதிச்சங்கங்களாயினும் சரி , ஒடுக்கப்பட்டோர் சாதியாகினும் சரி…..
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்….ஆனால் , சாதியை விட்டு வெளியே வந்த ஒரு வெகுஜன அரசியல் இயக்கங்களையாவது , ஒரு வெகுஜன பத்திரிக்கைகளாவது கொண்டிராத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இது போன்ற யோசனைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பது வீண்வேலை என்பதே நிதர்சனம்….
ஆனாலும் , மனமாற்றம் நோக்கிச் செல்ல எந்தவொரு இயக்கமும் இங்கு தயாராயில்லை என்பதே உண்மை…காரணம் , எந்தவொரு இயக்கமுமே அவர்களுக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்வதன் மூலம் அவர்களின் ஓட்டுவங்கிகளை வென்றெடுக்கவே திட்டமிடுகின்றன….
வெளிச்சமற்று இருட்டில் கிடக்கும் இச்சமுதாயத்திற்கு ஒளியேற்ற ஒரு பெரியார் முயன்றார்….ஆனால் , எங்கே வெளிச்சம் வந்தால் நம் பிழைப்பு போய்விடுமோ என்பதால் அவரது சீடர்கள் மக்களை இன்னும் இருட்டிலேயே வைத்திருக்கிறார்கள்….
தாம் இருட்டிலிருப்பது தெரியாமல் நமக்குள்ளேயே அடித்துக்கொண்டு இருட்டில் வைத்திருப்பவர்களுக்கு கொடிபிடித்துக்கொண்டிருக்கிறோம்………
ஆக , ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்திற்கு மனமாற்றமே அடிப்படை….சண்டைகளாலும் , ரெட்டைத்தம்ளர் முறையை ஒழிப்பதாகச் சொல்லி நடத்தும் ஆர்ப்பாட்டங்களாலும் அம்மனமாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பது பேதைமை.
துரையும் வாதமும் 1967-1972 வரை முன்னெடுக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் பற்றி அறிய மாட்டார்களா?
மாவிட்டபுரம் கோவில் நுழைவுப் போராட்டத்தை முன்வைத்து எழுதப்பட்ட “கந்தன் கருணை” கூத்துப் பற்றி அறிய வேண்டிமானால் மூலப் பிரதியை எழுதிய என்.கே. ரகுநாதன் கனடாவில் உள்ளர். இறுதி வடிவைத் தயாரித்த பத்தண்ணா அவுஸ்திரேலியாவில் உள்ளார்.
நம்மிடையே அரசியல் வரலாறு என்பது வெறும் அரட்டையாகி விட்டதால் தான் நமக்கு இத்தனை அவலம். “துட்டுக்கு ரண்டு கொட்டைப் பாக்கு” கதை எல்லாம் நமக்கு வரலாறாக்கப் படுகிறது.— XXX, இனியொரு.காம் பின்னோட்டம்.
//மாவிட்டபுரம் கோவில் நுழைவுப் போராட்டத்தை முன்வைத்து எழுதப்பட்ட “கந்தன் கருணை” கூத்துப் பற்றி அறிய வேண்டிமானால் மூலப் பிரதியை எழுதிய என்.கே. ரகுநாதன் கனடாவில் உள்ளர். இறுதி வடிவைத் தயாரித்த பத்தண்ணா அவுஸ்திரேலியாவில் உள்ளார்./– XXX
“இலங்கையில் யார் உள்ளார்?!.”
Paul Carus, Ph.D. (18 July 1852 – 11 February 1919) was a German-American author, editor, a student of comparative religion, and professor of philosophy.
The ideas surrounding supposed ethnic groups in Rwanda have a very long and complicated history. The definitions of “Hutu” and “Tutsi” may have changed through time and location. Social structures were not identical throughout Rwanda. There was clearly a Tutsi aristocracy that was distinguished from Tutsi commoners, and wealthy Hutu were often indistinguishable from upper class Tutsi.
Beginning about 1880, Catholic missionaries arrived in the African Great Lakes region. Later, when German forces occupied the area, the conflict and efforts for catholic conversion became more pronounced. The Tutsi resisted conversion, and the missionaries found success only among the Hutu.
Both Germany (before World War I) and Belgium ruled the area in a colonial capacity. The Germans, like the Belgians before them, theorized that the Tutsi were originally not from sub-Saharan Africa at all. They thought that they had migrated from somewhere else. The German colonial government gave special status to the Tutsi, in part because they believed them to possess racial superiority.
போன்றவற்றைப் பற்றி விரியாக படியுங்கள்!!…XXX/
only 40 to 50 maarappans are there in total tamilnadu without them there wont be a single caste clash in the state i think maoism is the only answer.dont blame thiruma for going places if only the dalits become a political power these incidents wont happen as in uttar pradesh.
கட்டுரை சிறப்பு. நேரடி ரிப்போர்ட் போன்ற வார்த்தை பிரயோகங்கள் என்னைப் போன்ற வெகுஜன (?) பத்திரிகையாளர்கள் மட்டும் பயன்படுத்தட்டும். வினவு அவர்களுக்கு வேண்டாம்.
[…] […]
சாதிக்குப் பிறவாதே சாதிக்கப் பிறந்திடு
//வெள்ளாளக் கவுண்டர்களுக்கு கீழே வன்னியர்கள்…//
ஹா ஹா…. வன்னியர்கள் க்ஷத்ரியர்கள் … வெள்ளாளர்கள் சூத்திரர்கள்….. இதுவே தெரியாத நீ எல்லாம் எதுக்குடா கமெண்ட்ஸ் எழுதுற???? போடா டேய்…..
@மதிபாலா
ஹா ஹா…. வன்னியர்கள் க்ஷத்ரியர்கள் … வெள்ளாளர்கள் சூத்திரர்கள்….. இதுவே தெரியாத நீ எல்லாம் எதுக்குடா கமெண்ட்ஸ் எழுதுற???? போடா டேய்…..
//வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!//
உச்ச கட்ட பொய் இது தான்……………………….. 🙂
http://ncbc.nic.in/backward-classes/tamilnadu.pdf
படிக்க தெரிஞ்சா இதை படிச்சி பாருங்க…. வன்னியகுல க்ஷத்ரியர்ன்னு தான் போட்டு இருக்கு…தமிழர்கள் எல்லோரும் சூத்திரர்கள் தான்…ஆனால் வன்னியர் தமிழர் மட்டும் அல்ல… கர்நாடகாவில் திகல சம்புகுல சத்ரியாஸ் , ஆந்திராவில் அக்னிகுல க்ஷத்ரியர், ராஜஸ்தானில் சூரியகுல சத்ரியாஸ்……. பீகாரில் இந்திரகுல சத்ரியாஸ் , குஜராத்தில் தீபகுல சத்ரியாஸ்….. நீங்கள் சொல்வது போல் வன்னியர்கள் தமிழ்நாடக மட்டும் இருந்தால் சூத்திரர்கள் ஆனால் வன்னியர்கள் இந்திய முழுவதும் இருகிறார்கள்..வன்னியர்கள் தமிழர்கள் மட்டும் அல்ல……. தமிழ் சாதிகள் மட்டுமே சூத்திரர்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது…வன்னியர்கள் தமிழ் சாதி அல்ல…..எனவே தான் வன்னியர்களுக்கு “க்ஷத்ரியர்” பட்டம் கொடுக்க பட்டது…..
இதையும் படிங்க :
http://books.google.co.in/books?id=-JXDD0gcHgoC&pg=PA108&lpg=PA108&dq=vanniyakula+kshatriyas&source=bl&ots=mtUa_F2mxH&sig=hNK0UkDgo_oUHczGX_KdOLB3hx0&hl=en&ei=nF8HTPajI9K8rAffw5GOAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=9&ved=0CDoQ6AEwCDgU#v=onepage&q=vanniyakula%20kshatriyas&f=false
இங்கேயுமா ?, ம்ம் அப்புறம்
நண்பர் வினவு அவர்களே
தமிழ் நாட்டில் தமிழரின் (?) வாழ்வு நிலை பற்றி ஒரு பதிவு விடகூடதா?
why….. chinapulla thanama illa?
மனிதன் பாதுக்காப்பான இடத்தில் இருப்பதை உணரும் போதுதான் துணிச்சலாக தவறு செய்கிறான். பேசாம கிராமத்தில் இருக்கிற எல்லோரயும் வெளிமாநிலத்துக்கு அனுப்புங்கப்பா. அப்பயாவது திருந்துவாங்கலான்னு பார்போம். சாதியாம் சாதி, வெங்காயம்!
தாழ்த்த பட்டோரின் அடையாளமான நாடார் சமூகம் பஞ்சமருக்கு ( பச்சை தமிழருக்கு ) சமூக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவர்களை நாடார் உறவின் முறையாக அறிவிக்க வேண்டும். இதுவே பெருவாரியான நாடார் மக்களின் விருப்பம்.
jaathi veriyai kattavilthu vitta ramadaas – அடப்போட மானங்கெட்டவனே … உன் மவனுக்கு ஒரு MP சீட் வாங்குறதுக்கு ரெண்டு கட்சி கிட்டயும் நாயா அலையற …. இதுக்காக உன் கட்சி தொன்டர்கள மத்தவனுக்கு அடகு வெக்கிற …. ஜாதி வெறி புடிச்சு ஜாதி கட்சி ஆரம்பிச்சு இப்புடி ஓட்டாண்டி ஆயிட்ட …. ஜாதி பெற சொல்லி உன் சுயநலத்துக்காக வன்னியர் சமூகத்தையே ஏமாத்திட்டு திரியுற … நீயெல்லாம் வாய தெறந்து பேசவே அருகதையில்லாதவன் … சுயநலவாதி , நீ செய்றது குடும்ப ஆட்சி இல்லையா ? , நீ கூட்டணிக்கு நாயா அளயரையே அவங்களும் சினிமா காரங்க தான் , உன் குடும்ப உறுப்பினர் பதவிக்கு வந்த என்ன செருப்பால அடிங்கன்னு சொன்ன ? நீ மட்டும் ரோட்ல வந்து நின்னைன்ன உன்ன மக்கள் பிஞ்ச செருப்பால்தான் அடிப்பாங்க … நீ ஒரு சுயநலவாதி , உன் மகனுக்காக உன் கட்சி காரகளையும் வன்னியர் சமூக மக்களையும் பயன்படுத்தும் கேடு கேட்டவன் , பச்சோந்தி , அரசியல் அநாதை , கட்சி எனும் மரம் தாவும் குரங்கு … இன்னும் உன்ன என்ன சொல்லி திட்டுனா நீ அரசியல விட்டு வெளிய போவ. ….? சொல்லு அதையும் தினமலர் ஆன்லைனே வாசகர்கள் செய்ய தயார இருக்காங்க …
vanniar pathi tappa pesa evanukum thaguthi illa
தலித்துகளை பற்றி வாய் கிளியபெசும் போலி அமைப்புகளும் ,பிரசனைகளைமட்டும் பேசும் அமார்ச்களும்,தமிழ் இனம் ஈழத்தில் அழிய காரணமாக இருந்த தெலுங்கர் கருணாநிதியும் கருணாநிதியின் அடி வருடி சுப வீரபாண்டியங்களும் அம்பேத்காரியம் பேசி தலித்துகளை ஏமாற்றி பிளைப்புனடத்தும் தமிழ் இனத்தின் எதிரி ராஜபச்ஜெவுடன் கை குழிக்கிய எம் இன துரோகி திருமாவும் ஒரு பெண்ணை பெற்றெடுத்த தந்தை எப்படி இறந்தார் என்பதைப்பற்றி சிறிதும் யோசிப்பதே இல்லை,நகரத்தில் இருந்துகொண்டு ஏட்டை புரட்டுபவ்ர்களும் ஏட்டை எழுதி கிளிப்பவர்களும்
கிராமத்தில் உள்ள சதியத்தைபற்றி சிந்திப்பதே இல்லை,இவர்கள் நினைக்கும் சாதியை ஒலிப்பது அவ்வளவு சாதாரணம் அல்ல,தலித் ஆண்கள் வேண்டும் என்றே திட்டம் இட்டு பிற்படுத்தபட்ட பெண்களை திருமணம் செய்து பெண்ணின் குடுபத்த்தை சின்ன்ச்பின்ன மக்குகின்றனர் ,ஏன் சாதியை ஒலிக்கநினப்பவர்கள் ஒரு பறையர் ஒரு அருந்ததியர் வீட்டு பெண்ணுடன் திருமணம் செய்வதில்லை,எவ்வளவு அய்யோக்கிதனம்,இறந்தவரின் குடும்பத்துக்கு நியாயம் சொல்லுங்கள் போளிவாதிகளே ….
Excuse me Mr.Tamilan mind your words. Are you educated??.How come only guys from Dalits are cheating Vanniyar girls? Dont you know this 2 to 3 years back?How many complaints have you given to police.Do you have any proof? Speak at least logically or systematically.wHERE were you till now?Are you living in dream world? Wake up..Is this all vanniya girls are infant or new born girl babies?so funny speech given by your china ayya,periya ayya and the same thing vomited by you.
சாதீயபிரச்சனைகள் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். முக்கியமான பதிவுகளின் பின்னூட்டங்களை படிக்க வந்தால் அப்பக்கம் கருப்படித்துபோய் இருக்கே?. என்னுடைய கணனியில்தான் அப்பக்கங்களை பார்க்கமுடியாதபடிக்கு ஏதாவது பிரச்சனையா என தெரியவில்லை. எழுத்துக்களின் மேல் கர்சரை அசைக்கும் போது, டைப்பிங் கர்சராக மாறும் நிலையில் ஹைலைட் பண்ணிதான் பின்னூட்டங்களை வாசிக்க முடிகிறது.
Mr.Vinavu,
Instead of speaking about the atrocity which is done for us by vanniya veriyars or devar veriyars, This is the time to think about what savukadi we are going to give or we have to give for them.Yes we can give this by education. let us insist 100% education for our people. I am dalit woking in a leading software company in a good position ,am a team leader of three people belongs to goundar caste and a Brahmin guy and a nayudus.lets dorevolution.
தமிழகத்தில் வன்னியரை தவிற மற்றவன் ஆணடதுகிடையாது
வன்னியரை விட ஊயர்த சாதியும் ஏதுவும் கிடையாது
[…] தோள்களையும் எப்போதையும் தேடும். https://www.vinavu.com/2010/05/11/kolathur-dalith/ — தினமலர் கட்டுரை வாழ்வாதாரத்தை […]
வன்னியர் சாதி வெறி என்று எழுதும் வினவுக்கு தாழ்தபட்டமக்களுக்குள் சாதி வெறி இல்லையா? பள்ளர் பறையருக்கும், பறையர் சக்கிலிக்கும் பெண் குடுப்பதில்லை ஏன்? முதலில் உங்களுக்குள் ஒரு சமத்துவதை கொண்டுவந்து புரட்சி செய்யுங்கள்,அடுத்து அனைத்து தாழ்தப்படர்களும் சாதி ஒழிப்பு போராளியாய் பேசுகின்றீர்கள் முதலில் உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது சாதி சொல்லி சேர்க்காமல் இருங்கள் எங்கேயும் சாதியின் பேரால் சலுகை கேட்டாதீர்கள்,சாதியின் பேரால் அரசின் அத்தனை சலுகைகளையும் பெற்றுகொண்டு சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்வது பித்தலாட்டம் இல்லையா?இந்திய சமுகத்தில் சாதியை ஒழிக்க முடியாது என்பது அத்துனை தலைவர்களுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும் சாதி ஒழிப்பு என்பது நடக்காத ஒன்று சமுக ஒற்றுமையை வளர்க்க முயற்சிகலாம்,அதை விடுத்து சாதி இந்துகள் பெண்களை காதல் என்ற பெயரில் கூட்டி கொண்டு போவதன் மூலம் ஒரு போது சாதி ஒழிக்க முடியாது……….
This blog is to promote vanniyar status but reality is Both vanniyar and pariyar were same only difference is paraiyar were untouchables for higher castes but for vanniyars not so but they live and work together in the fields of jamindars.