இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.
தற்போதைய இந்திய வாழ்க்கையின் ஆழ்மனதில் பதிந்துவிட்ட பெப்சி – கோக்கின் படிமத்திற்கு இணையாக வேறு எதையும் ஒப்பிட இயலாது. கேவலம் இரு குளிர்பான நிறுவனங்களுக்கு அப்படி ஒரு மகிமையா, அது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம்.
எனில் அவை வெறும் தாகம் தீர்க்கும் குளிர்பானம் மட்டுமல்ல. எதைக் குடிப்பது – உண்பது – உடுத்துவது – பார்ப்பது – படிப்பது – கருதுவது – ரசிப்பது – நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம். அத்தகைய அமெரிக்க தாகத்தை, ஏக்கத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்துவதே அதன்முதன்மைப் பணி.
கொக்கோ – கோலாவைப் போல அமெரிக்கப் பண்பாட்டினைப் பிரதிநிதித்துவம் செய்யும் பன்னாட்டு நிறுவனம் வேறு எதுவுமில்லை. ஹாலிவுட், வால்ட்-டிஸ்னி, மெக்டோனால்டு, ஃபோர்டு கார், பாப் – ராக்கிசை என பல அமெரிக்க வகை மாதிரிகளில் கோக் மட்டுமே நெடுங்காலமாய் அமெரிக்காவின் தூதுவனாய் உலகெங்கும் செல்வாக்குடன் இடைவிடாமல் சுற்றி வருகிறது. இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் கோக் அதற்கான சாதனையை முதலில் தான் அவதரித்த திருத்தலத்திலேயே செய்து காட்டியிருக்கிறது.
ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி எனன்தான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.
_____________________________________________
இரண்டு அமெரிக்க சோடாக் கம்பெனிகள் உலகை ஆக்ரமித்த வரலாறு!
1886- ஆம் ஆண்டு, அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் ஜான் ஸ்டித் எனும் மருந்தாளுநர் கோக்கின் சோடா இனிப்பு கரைசலை உருவாக்கினார். அன்று நாளொன்றுக்கு 9 பாட்டில்கள் தலா 2 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோக், 2000ஆம் ஆண்டின் முதல் 4 மாத இலாபமாக மட்டும் 5000 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. மேலும் இன்று தனது சோடாக் கரைசலையும் கோக், கிளாசிக் கோக், காஃபின் இல்லாத கோக், டயட் கோக், செர்ரி கோக், ஃபேண்டா, ஸ்பிரிட், மிஸ்டர் பிப், மெல்லோ யெல்லோ என 25 வகைகளாய் பெருக்கியிருக்கிறது. இன்று அதன் சொத்து மதிப்பு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய்.
1898ஆம் ஆண்டு பெப்சியின் சோடாக் கரைசலை கால்ப் ப்ராதம் என்ற மருந்தாளுநர் உருவாக்கினார். குளிர்பானம், நொறுக்குத் தீனி, உணவகங்கள் என்று பெப்சியின் பேரரசு 150 நாடுகளில் 4,80,000 ஊழியர்களுடன் நடந்து வருகிறது. சொத்துமதிப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய்.
உலக குளிர்பான சந்தையில் 46 சதம் வருவாய் கோக்கிற்கும், 21 சதம் பெப்சிக்கும் போய்ச் சேருகிறது. இப்படி இரண்டு நிறுவனங்ளும் உலகின் தாகம் தீர்க்கும் தேவன்களாக, பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டுதோறும் சுருட்டி வருவது எப்படி சாத்தியமானது? நம்மூரில் தயாரிக்கப்படும் கலர் கோலி சோடாவின் கரைசலை விட பெப்சி – கோக்கின் கரைசல் அப்படி ஒன்றும் உயர்ந்ததல்ல. கார்பன் வாயு, இனிப்பு, வண்ணம், நீர் கொண்டு கலக்கப்படும் இக்கரைசல் தயாரிப்பதற்கு எளிதானதே. அதி உயர் தொழில்நுட்பமோ, ரகசியமோ எதுவும் கிடையாது. அதே சமயம் இந்தக் கோலாக்களில் இருக்கும் மற்ற வேதிப்பொருட்கள், போதை போல அடிமைப்படுத்தும் பொருட்கள் எதுவும் மற்றவர்களுக்குத் தெரியாது. இவற்றை கண்டுபிடிப்பு இரகசியம் என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் வெளியிட மறுக்கின்றன.
ஆனாலும் உலகெங்கும் சாதாரணத் தொழிலாக நடத்தி வந்த இத்தகைய சிறு குளிர்பான உற்பத்தியாளர்களை இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் ஒரு நூற்றாண்டாய் ஒழித்து விட்டன. இந்த இரண்டு கோலாக்களும் ஏதோ சொர்க்கத்தில் தயாரித்து அளிக்கப்படும் அழகான, தரமான அமுது என்ற சித்திரத்தையும் தமது வஞ்சகமான பிரச்சாரத்தால் ஏற்படுத்தி விடட்ன.
________________________________________________
கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு!
இதற்கு நமது இந்திய எடுத்துக்காட்டையே பார்க்கலாம். 77இல் ஜனதா அரசால் கோக் வெளியேற்றப்பட்ட பிறகு குளிர்பானச் சந்தையில் பார்லே நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. பார்லேயின் தம்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்ற பானங்கள் அப்போது பிரபலமாக இருந்தன. 90களின் ஆரம்பத்தில் 60 சதவீத சந்தையைக் கைப்பற்றிய பார்வே நிறுவனம் கேம்பா கோலா, த்ரில், டபுள் கோலா போன்ற போட்டி பானங்களை எளிதில் வென்றது. இவை இந்திய அளவில் விற்கப்பட்ட பானங்கள். இது போக மாநில, வட்டார, உள்ளூர் அளவில் ஏராளமான பானங்கள் இருந்தன.
தமிழகத்தில் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் இன்னபிற நிறுவனங்கள் பிரபலமாயிருந்தன. விருதுநகரில் 1916இல் பழனியப்ப நாடாரால் துவங்கப்பட்ட காளிமார்க் 80கள் வரை 30 சதவீத தமிழக சந்தையை வைத்திருந்தது. மேலும் இந்திய அளவில் பழரச பானத்திற்கு கிராக்கி இருந்தது. பார்லேயின் ப்ரூட்டி, பயோமா இன்டஸ்ட்ரியின் ரசனா போன்றவை பழரச சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.
பெப்சி – கோக் வருகைக்குபிறகு இந்நிலைமை அடியோடு மாறியது. 1980களில் இருந்தே பெப்சி நிறுவனம் சில இந்திய தரகு முதலாளிகளின் உதவியுடன் இந்தியாவில் நுழைய முயன்று, இறுதியில் 1990ஆம் ஆண்டு வென்றது. 100 சதவீத பங்குகள் வைத்திருக்கவும், உள்நாட்டு பாட்டில் தொழிற்சாலைகளை வாங்கவும், காய்கனி, டப்பா உணவு ஏற்றுமதி செய்யவும்… என ஏராளமான சலுகைகள் இந்திய அரசால் பெப்சிக்கு வழங்கப்பட்டன. பெப்சியும் வந்த வேகத்தில் 20 சதவீத குளிர்பான சந்தையைக் கைப்பற்றியது.
இங்கிருந்து வெளியேற்றப்பட்ட கோக் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1993ஆம் ஆண்டு மீண்டும் குதித்தது. கோத்ரெஜ், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் கோக்குடன் கூட்டு சேர்ந்தன. சந்திரசாமியின் அரசியல் பினாமியான சந்திரசேகர் தலைமையிலான மைய அரசு கோக்கிற்கு அனுமதி வழங்கியது. இப்படியாக அமெரிக்காவின் இரண்டு சோடாக் கம்பெனிகள் வறண்டு போன இந்தியாவைக் குளிப்பாட்டி கொள்ளையடிக்கும் வேலையை ஆரம்பித்தன.
அன்றைய இந்தியாவின் குளிர்பான சந்தை 1200 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஒரு இந்தியன் ஒராண்டுக்கு குடிக்கும் பாட்டில்கள் 3 மட்டுமே தனிநபர் சராசரியாய் இருந்தது. மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதம்தான். இன்றோ வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக மாறிவிட்டது. அன்று விற்பனையான குளிர்பான பாட்டில்கள் 276 கோடி, இன்று 350 கோடி பாட்டில்களாக உயர்ந்து விட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் இதை 1200 கோடிப் பாட்டில்களாக உயர்த்தப் போவதாக கோக்கும் – பெப்சியும் மார்தட்டி வருகின்றன.
இன்று குளிர்பானச் சந்தையில் ஏக போகம் வகிக்கும் நிலையை கோக்கும் – பெப்சியும் அடைந்துவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை நேரடியாகவும், சதி, ஏமாற்று, மிரட்டல், கைப்பற்றுதல், பிரம்மாண்டமான விளம்பர இயக்கம் என மறைமுகமாகவும் பயன்படுத்தி இந்த ஏகபோகம் எட்டப்பட்டது.
கோக் வருகைக்கு முன்பு இங்கே கோலா வகை பானங்களுக்கு வரி அதிகமாகவும், பழரச வகைகளுக்கு குறைவாகவும் இருந்தது. இந்தியாவில் பழவகை விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயத்துக்கு ஆதரவாக அரசால் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பின்னர் காட் ஒப்பந்தப் படி கோலாவுக்கான வரி குறைக்கப்பட்டது. அதன் பின்பே கோலாக்களின் விற்பனை பழரசத்தை விட உயர்ந்தது. இப்படி அரசால் பெற்ற சலுகைகள் ஏராளம்.
அடுத்து 50% குளிர்பான சந்தையை வைத்திருந்த பார்லே நிறுவனத்தை இந்தியா வந்த ஆறே மாதங்களில் கோக் 123 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் 60 பாட்டில் தொழிலதிபர்களும், 2 இலட்சம் சில்லறை விற்பனையாளர்களும், நாடு தழுவிய வலுவான விற்பனை வலைப்பின்னலும் கோக்கிடம் சரணடைந்தன. தம்ஸ் அப்பும், லிம்காவும், கோக்கின் தயாரிப்பு என விற்கப்பட்டன. பார்லே நிறுவனத்தில் அதிபர் ரமேஷ் சவுகானும், கோக்கின் யானை பலத்துடன் போட்டியிட முடியாது எனத் தெரிந்து கொண்டு தனது நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்.
மிகப்பெரும் தரகு முதலாளியான பார்லேவுக்கே கதி இதுதான் எனும்போது காளிமார்க் போன்ற சிறுமுதலாளிகள் என்ன செய்வார்கள்? தினத்தந்தியின் உள்ளூர் பதிப்பில் விளம்பரம், காடாத் துணி பேனர் விளம்பரம் என்றிருந்த காளிமார்க், அமெரிக்க சோடாக் கம்பெனிகளின் அதிரடியான வானொளி விளம்பரத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்படியாக கோக் – பெப்சி எனும் அமெரிக்க கழுகுகள் ஆளின்றி நாட்டைக் கவ்வ ஆரம்பித்தன.
இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும் பிரம்மாண்டமான முதலீடு, மிக விரிவான உற்பத்தி – வலைப் பின்னல், குண்டு வெடிப்பைப் போன்ற விளம்பரங்கள் ஆகிய முப்பெரும் அஸ்திரங்கள் கொண்டு இந்தியாவில் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 53 சதவீதம் கோக்கிடமும், 40 சதவீதம் பெப்சியிடமும் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.
______________________________________________________________
விற்பனை ஜனநாயகமல்ல, விற்பனை சர்வாதிகாரம்!
தங்களது ஆதிக்கத்தை திணிக்க இவர்கள் சாம, தான, பேத, தண்டம் என சகல வழிகளிலும் போர் நடத்தினர். ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், தெண்டுல்கர் ஆகியோர் பல்லிளிக்கும் விளம்பரங்களைப் பார்த்து வாய் பிளக்கும் நெஞ்சங்களுக்கு இந்நிறுவனங்ளின் கோர முகம் தெரியாது.
பிடித்த பொருள் கிடைக்க வில்லையென்றால் கிடைக்கும் பொருளை வாங்குவது நுகர்வோர் வழக்கம். அதன்படி தமது பானங்களை மட்டுமே கடைக்காரர் விற்க வேண்டும் என்பதை இந்நிறுவனங்கள் தமது வர்த்தகக் கொள்கையாக வைத்திருக்கின்றன. கடைக்காரருக்கு குளிர்பதன பெட்டியை மலிவு விலையில் அல்லது இலவசமாய் வழங்குவார்கள். முதல் மிச்சம் என கடைக்காரர் நினைப்பார். ஆனால் கோக் அல்லது பெப்சி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும், அதை விற்றே கடன் அடைக்க வேண்டும், அதனால் அதிகமாக அந்த பானங்களை இருப்பு வைக்க வேண்டும் என்ற சுழலில் தாம் சிக்குவோம் என்பதை அவர் அறியமாட்டார். மேலும் பெயர்ப் பலகைகள், சுவர்க்கடிகாரம், பனியன், தொப்பி என்ற பரிசுப் பொருட்கள், முதல் கொள்முதல் இலவசம் போன்ற சலுகைகளாலும் கடைக்காரர்களை அவர்களை அறியாமலே விலை போக வைத்துவிட்டனர்.
தமது பானங்கள் போகாத புதிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கு தாதா ஏஜெண்டுகளை வைத்திருக்கின்றனர். தாதாக்கள் அப்பகுதியைப் பழக்கிய பிறகு நிறுவனங்களின் ஏஜெண்டுகள் சந்தையைத் தொடருவர். உணவகங்கள், பெரும் அங்காடிகள், திரையரங்குகள் போன்ற பெரிய விற்பனையாளர்களுக்கு பெரும் தொகையைக் கொடுத்து தமது குளிர்பானங்களை மட்டும் விற்க வைக்கின்றனர்.
புது தில்லியில் பி.வி.ஆர் மல்டி பிளக்ஸ் திரையரங்கிற்கு 60 இலட்சமும், பம்பாயின் ஸ்டெர்லிங் திரையரங்கிற்கு 30 இலட்சமும் கொடுத்த பெப்சி சமீபத்தில் மதுரை மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கிற்கும் ஒருபெரும் தொகை கொடுத்து தனது பாட்டில்களை மட்டும் விற்க வைத்திருக்கிறது. கோக், பெப்சி இரண்டும் இதற்காக மட்டும் வருடந்தோறும் 10 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கின்றன.
குளிர்பான விற்பனையில் பாட்டில்கள் சுழற்சி அதாவது பாட்டில் தொழிற்சாலை – கடை – மீண்டும் தொழிற்சாலை என இடையறாமல் பயணம் செய்வது முக்கியம். ஒரு வருடத்தில் ஒருபாட்டில் 10 முறையாவது விற்கப்பட்டால்தான் லாபம். இதில் 30 சதவீதம் பாட்டில்கள் உடைபடும். மீதி சுற்றிவரும். அப்படி சுற்றி வரும் தனது எதிர் நிறுவன பாட்டில்களை முடக்குவதற்கு இந்நிறுவனங்கள் ஏராளமான சதி வேலைகள் செய்கின்றன.
அடுத்து குளிர்பானத் தயாரிப்பு – விற்பனைக்கான அடிப்படை கட்டுமான வசதிகளுக்காக இந்நிறுவனங்கள் பாதியை மட்டும் முதலீடு செய்கின்றன. மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலம் முதலீடு செய்ய வைக்கின்றன. பெப்சி – கோக்கின் ரசாயன கரைசல் கூழ் (எசன்ஸ்) மட்டும் அமெரிக்காவிலிருந்து வரும். கூழை நீரில் கலந்து பாட்டிலில் விற்பதற்கென்றே உலகம் முழுவதும் பிராந்திய அளவில் ஏராளமான பாட்டில் தொழிற்சாலைகளை வைத்திருக்கின்றனர். இந்தியாவில் கோக்கிற்கு 60, பெப்சிக்கு 26 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் கோக் மட்டும் பாதியை சொந்தமாகவும் மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் வைத்திருக்கின்றது.
இத்தகைய பாட்டில் தொழிற்சாலைகளின் அதிபர்கள் கோக் கோருகின்ற அளவு முதலீடு செய்ய வேண்டும். கோக் பானங்களை மட்டும் தயாரிக்க வேண்டும். தேவைப்பட்டால் தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும். இவையெல்லாம் ஒப்பந்த விதிகள். தற்போது இத்தொழிற்சாலைகளை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கி வருகிறது கோக். சிலரை பாதி பங்குகளை தருமாறு கட்டளையிடுகிறது. கோக்கின் மிரட்டலை எதிர்த்து 23 அதிபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். “எங்களை அதிக முதலீடு செய்ய வைத்துவிட்டு, இப்போது ஒப்பந்தத்தை ரத்துசெய், அல்லது விற்றுவிடு” என்று கோக் மிரட்டுவதாக பூனா பாட்டிலிங் தொழிற்சாலை அதிபர் தனது வழக்கில் கூறியிருக்கிறார்.
அதே போன்று மொத்த வியாபாரிகளும் கோக்கினால் அச்சுறுத்தப்பபடுகின்றனர். தமிழக நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் கணேஷ், “கோக்கின் அநீதியான வர்த்தகப்படி எங்களுக்கு மாதம் 2000 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. எதிர்த்துக் கேட்டால் வேறு வணிகர்களை நியமனம் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள்” என்கிறார்.
இது போக பெப்சியும், கோக்கும் தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள். தனது நிர்வாகிகளை கோக் விலைக்கு வாங்குவதாக பெப்சி வழக்குத் தொடுத்திருக்கிறது. இதில் பெப்சிக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் தேசபக்த ஆர்.எஸ்.எஸ் இன் அருண் ஜெட்லி, “2000 கோடி முதலீடு செய்திருக்கும் பெப்சிக்கு இழைக்கப்படும் அநீதி” என்று நீதிமன்றத்தில் உருகினார். “இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பபடி ஒரு ஊழியர் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யும் உரிமையை தடை செய்ய முடியாது” என்று கோக் திருப்பியடித்தது. பெப்சியும், கோக்கின் பானங்களைத் தயாரித்து வந்த குஜராத், கோவா பாட்டில் தொழிற்சாலைகளை விலைக்கு வாங்கியிருக்கிறது. இப்படி இருவரும் தங்களது வியாபார மோசடிகளுக்காக இந்தியாவில் மட்டும் 300 கோடி ரூபாய் ஒதுக்குகிறார்கள்.
இப்போது குடிநீர் என்றாலே ‘மினரல் வாட்டர்’ என்றாக்கி விட்டார்கள். இந்தியாவின் மினரல் குடிநீர் சந்தை மதிப்பு 1250 கோடி ரூபாயாகும். வருடந்தோறும் 100 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் இத்துறையையும் அமெரிக்க சோடாக் கம்பெனிகள் விட்டு வைக்கவில்லை. கோக் – கின்லே, பெப்சி – அக்வாபினா எனும் குடிநீர் பாட்டில்களை அறிமுகப்படுத்தி அதை மட்டுமே விற்குமாறு தமது விற்பனையாளர்களை மாற்றி வருகின்றனர். தற்போது குடிசைத் தொழில்போல நடந்துவரும் இத்தண்ணீர் வியாபாரமும் அவர்களால் வெகு விரைவில் ஒழிக்கப்படும்.
இதற்கு மேல் பல மாநிலங்களில் பல ஏக்கர் நிலங்களை வாங்கியிருக்கின்றனர். ஆய்வகம், சரக்கு லாரி கட்டும் பனிமணை, பழரச உற்பத்தி, காய் – கனி பண்ணை, நொறுக்குத்தீனி, டப்பா உணவு ஏற்றுமதி என ஏராளமான திட்டங்களையும் வைத்திருக்கின்றன. இந்தியாவின் 15 கோடி நடுத்தவர வர்க்க மக்களைக் கொண்ட வலுவான சந்தையைக் கைப்பற்றுவதை தமது நோக்கமாகக் கொண்டுள்ளன. மாத சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பம் ஒருமாதம் பல நூறு ரூபாய்களை தங்களுக்கு மொய் எழுதவேண்டும் என்பதே அவர்களது இலக்கு.
கனவில் வாழும் நடுத்தர வர்க்கத்தைக் கள் ஊற்றி மதி மயங்க வைக்கும் வித்தைக்காக பல விளம்பர படைப்பாளிகள் பெப்சி – கோக்குக்காக உழைக்கின்றனர். விளம்பர நிறுவனங்களுக்கு மட்டும் இரு நிறுவனங்களும் தலா 50 கோடியை கட்டணமாகக் கொடுக்கின்றன. இதுபோக வானொளி, ஏனைய விளம்பரங்களுக்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகின்றன. ஷாருக்கான், டெண்டுல்கர், ஐஸ்வர்யாராய் போன்ற நிழலுலக நட்சத்திரங்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
“உலக அளவில் கொள்ளையடிக்க உள்ளுர்ககாரனாக வேடம் போடு” என்பது பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டும் செயல் திட்டம். அதற்கேற்ப தங்களது விளம்பரங்களுக்கு அந்தந்த மாநில நடிகர்களை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். கோக் ஆந்திராவில் சிரஞ்சீவியையும், தமிழ்நாட்டில் விஜயையும், பெப்சி தமிழகத்தில் மாதவனையும், தெலுங்கில் கல்யானையும் விளம்பரங்களில் இறக்கியிருக்கின்றன. இனி இன்பத் தமிழிலும் சுந்தரத்தெலுங்கிலும் “என்ஜாய் கொக்கோ கோலா, ஏ தில் மாங்கே மோர் – ஆஹா”வும் கவிதையாய் பொழியும்.
இதுவும் போக டி ஷர்ட், தொப்பி, கிரிக்கெட், சினிமா ஸ்பான்சர், மூடி சேகரிப்பு, ஹாலிவுட் – மல்யுத்த நட்சததிரங்களின் ஸ்டிக்கர்கள், அறிமுக விலை தள்ளுபடி, சென்னையில் இட்லிக்கு கோக் இலவசம், மும்பையில் சப்பாத்திக்கு இலவசம், பெங்களூருவில் பிஸ்ஸா வாங்கினால் பெப்சி கேன் இலவசம் என மேட்டுக்குடியைக் கவர ஏராளமான மினுக்குத் திட்டங்கள்.
____________________________________________________________
இது அமெரிக்காவின் குளிர்பானக் கம்பெனிகள் இந்தியாவில் தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்பு போர்!
3 ஷிப்ட்களில் 150 தொழிலாளிகள் வேலைபார்த்த காளிமார்க்கின் விருதுநகர் பாட்டில் தொழிற்சாலையில் இன்று இருபது பேர், ஒரு ஷிப்ட் மட்டும் வேலை செய்கின்றனர். தென் மாவட்டங்களில் இன்று காளிமார்க்கை பரிதாபமான ஒரிரு பெட்டிக் கடைகளில் மட்டும் காணலாம். திருச்சியில் வின்சென்ட் குளிர்பான அலுவலகப் பெயர் பலகை பாழடைந்து சவக்களையுடன் காணப்படுகிறது. மதுரை மாப்பிள்ளை விநாயகர் குளிர்பானம் தமது திரையரங்குகளில் கூட விற்க முடியாத அவல நிலையில் இறந்து வருகிறது. காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற பன்னீர் சோடா நிறுவனங்களை இனி தொல்பொருள் ஆராய்ச்சியில்தான் தேட வேண்டும். மோரும், இளநீரும், போஞ்சியும், பானகமும் அருகி வருகின்றன. நீராகாரம் என்பது என்னவென்றே நகர்ப்புற இளைஞர்களுக்குத் தெரியாது.
10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இந்திய குளிர்பான நிறுவனங்களும், இலட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழந்திருக்கின்னர். நமது விவசாய பொருளாதார, தட்ப வெப்ப நிலைக்கு பொருத்தமான மரபு வகை பானங்களை மறந்துவிட்டோம். அமெரிக்காவின் கார்பன் வாயு கலந்த ஆல கால விடத்தை குடிக்க பழக்கப்படுத்தப்படுகிறோம். பெப்சியும், கோக்கும் தமது எசன்ஸை மட்டும் அமெரிக்காவில் இருந்து அனுப்பி, உள்ளூர் பாட்டில் தொழிலதிபர்களை வைத்து நீர் கலந்து, ஏஜெண்டுகளை வைத்து விநியோகித்து, விளம்ரங்களுக்கு நுகர்வோரிடமே பிடுங்கிக் கொண்டு, ஏராளமான சொத்துக்களை வாங்கிக் கொண்டு, டப்பா உணவு ஏற்றுமதி – கோலா விற்பனை இரண்டிலும் சில ஆயிரம் கோடிகளை கொள்ளையடிக்கின்றனர்.
இந்தியா மட்டுமல்ல முழு உலகும் இந்தக் கொள்ளையிலிருந்து தப்பவில்லை. அமெரிக்காவுக்கு கீழே இருக்கும் மெக்சிகோ நம்மைப் போன்ற ஏழை நாடுதான். அங்கேயும் ஆண்டுக்கு ஒருவர் 500 பாட்டில்களை குடிக்கும் அளவுக்கு தனிநபர் நுகர்வை ஏற்றி விட்டார்கள். எங்கெல்லாம் அமெரிக்க இராணுவம் நுழைந்ததோ அங்கெல்லாம் பெப்சியும், கோக்கும் நுழைந்தன. பின்னர் இராணுவம் திரும்பினாலும் கோலாக்கள் திரும்பவில்லை.
ஜப்பான், கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து இங்கெல்லாம் கோலாக்கள் அம்மக்களின் ரத்தத்தில் கலந்துவிட்டன. சிங்கப்பூரில் ஒரு ஓட்டலுக்கு சென்றால் முதலில் குடிநீர் வைக்கமாட்டார்கள். கோக்தான் தருவார்கள். இப்படி தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டு வருகிறது.
தொன்மையான புகழ் பெற்ற நாகரிகங்களெல்லாம் நதிக்கரையில் தோன்றின. மனித குலநாகரிகத்தில் நீரின் பங்கு அத்தகையது. இன்றும் நல்லநீர் கிடைக்காமல், மழை பெய்யாமல், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் ஏராளமான நாடுகள் உள்ளன. வருடா வருடம் ஒரிஸா, ராஜஸ்தான், குஜராத்தில் பிளந்து கிடக்கும் மண்ணுக்கும், மக்களுக்கும் அந்த நீரின் அருமை தெரியும். தண்ணீர் நமது உடலில் இரண்டறக் கலந்தது. நமது பண்பாடு. விவசாயத்தின் உயிர். அத்தகைய நீரை நமது சிந்தனையில் இருந்து அழிக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொடூரம்?
பெப்சி – கோக்கின் ரசாயனக் கலவையில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. வியாபார ரகசியம் என்ற உரிமையால் பாதுகாக்கப்படும் அந்தக் கலவையின் தீங்கை மேற்குலகிலேயே பலர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். பெப்சி – கோக் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘டயட்’ என்ற பானத்தில் (கலோரி இல்லாத இனிப்பு நீர்) உள்ள ‘ஆஸ்பார்ட்டாம்’ என்ற ரசாயனப்பொருள் உடலுக்கு நேரடித் தீங்கை விளைவிக்கக் கூடியது என அமெரிக்காவில் எதிர்ப்பு இயக்கம் கிளம்பியிருக்கிறது. ஆனால் அதிகார வர்க்கத்தைச் சரிகட்டி கோக் தொடர்ந்து அதை விற்கிறது.
பிரான்சில் மக்கள் அருந்தும் பானமும், ஏற்றுமதி செய்யப்படுவதும் ஒயின்தான். பிரெஞ்சு நாடு திராட்சை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு. அந்த விவசாய பொருளாதாரத்தை வைத்து இந்த பானம் அவர்களிடையே மரபு வகை பழக்கமாக உள்ளது. கோக், பெப்சியின் வருகையால் பிரெஞ்சு விவசாயிகள் பாதிக்கப்பட்டு எதிர்த்துப் போராடுகின்றனர்.
இப்படி உலகம் முழுவதும் அந்தந்த மக்களது வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம் மூன்றும் அமெரிக்காவின் ஆக்ரமிப்பு நுகர்வுப் பண்பாட்டால் அழிக்கப்படுகின்றது. பிஸ்ஸா, பர்கர், எம்.டி.வி, ஹாலிவுட், துரித உணவகம், பேரங்காடி, டபிள்யூ. டபிள்யூ. எஃப், நைக், மெக்டோனால்டு போன்றவையே நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. கற்றுக்கொடுக்கின்ற தேவன்களாக மாறிவிட்டன.
உழைப்பாளிகளின் பானமான தேநீரை நடுத்தர – மேட்டுக்குடி இளைஞர்களிடம் கொண்டு செல்ல நெஸ்லேயும் – கோக்கும், பெப்சியும் – இந்துஸ்தான் லீவரும் இணைந்து ஐஸ் டீ, ரெடிமேடு டீ போன்றவைகளைத் தர இருக்கிறார்கள். கோக், பெப்சி இரண்டும் உலகம் முழுவதும், ஏன் கழிப்பறைகளில் கூட கிடைக்க வேண்டும் என்பது வரை போய்விட்டன. சமீபத்தில் போன் செய்தால் கோக் டின் கொட்டும் ‘டயல் எ கோக்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இந்தக் கொள்ளையடிக்கும் உத்திக்கு முடிவு கிடையாது.
இது வெறும் குளிர்பானமல்ல. உங்களை உங்கள் மண்ணிலிருந்து பிடுங்கி எறியும் ஒரு வெடிகுண்டு. பெப்சி – கோக் காசு கொடுத்த்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது. இந்த மண்ணையும், மக்களையும் உதறித்தள்ளி அமெரிக்க நாய்களுக்கு அடிமையாக இருப்போம் என்பவர்கள்தான் கோக் குடிக்க முடியும். ஆம். பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்.
______________________________________________________
• புதிய கலாச்சாரம், மே – 2001
_______________________________________________
தொடர்புடைய பதிவுகள்
- புதிய கலாச்சாரம் கட்டுரைகள்
- கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!
- ரிலையன்ஸ் ஃபிரஷ்ஷில் மனிதக்கறி !
- டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி!
- பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!
- குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல்
- கென்சாரோ-விவா படுகொலை: ஷெல் நிறுவனம் தண்டிக்கப்பட்டதா?
- கோபன்ஹேகன் தட்ப-வெப்பநிலை மாநாடு: பூவுலகின் முதன்மை எதிரிக்கு வெற்றி!
- தடுப்பூசி மருந்து தனியாருக்கு – பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்
- பன்றிக் காய்ச்சல்: முதலாளிகளின் பயங்கரவாதத்தை முகமூடிகள் தடுக்குமா?
பெப்சி, கோக் கூட குடிக்காமல் இருந்து விடலாம். ஆனால் குடி தண்ணீர் என்றாலே இந்தக் கம்பனிக்களின் மினரல் வாட்டர் என்றாகிவிட்டதை எப்படிச் சமாளிப்பது?
அரசாங்கம் இந்த தண்ணீர் கொள்ளையை நிறுத்த வேண்டும் என்றால் நாம் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும்.
இங்கே அமெரிக்க சாலைகளில் விபத்து ஏற்பட்டால் இரத்தக் கரையை அலசிவிட
ரோந்து போலீசார் வைத்திருப்பது இந்த கோக் பாட்டில்கள்தான்.
காசு கொடுத்தால் கழுதை மூத்திரத்தைக் கூடக் குடிக்கும் சினிமா நடிகர்களில் ஒருவரான
விஜய் கோ கோ கோலா விளம்பரத்தில் வந்தபின் அவரது மார்கட் சரிந்தது.
காசுக்காக ஒரு தலைமுறை உடல்நலம் கெட – சிகரெட்-கோக் விளம்பரங்களில்
நடிப்பவர் படங்களை பார்க்காதே என்று தேவர் சங்கம் கேட்டுக் கொள்கின்றது.
டாக்டர்.இராமதாஸ் போன்றவர்கள் இதன்யும் வலியுறுத்த வேண்டும்.
சமுதாயம் என்பது சும்மா வேடிக்கை பார்பதற்கு அல்ல என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.
இனி, ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது- குடிப்பது- என்று நடித்தாலே- அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
அசின், திரிசா, ஆயிஸ்வர்யா, விஜய், எல்லோரையும் தேவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
http:thevarsangam.blogspot.com
மக்களுக்கு அறிவு வேணுமே. நாமும் பல வருஷங்களா சொல்லி பார்த்தாச்சு. எழுதி பார்த்தாச்சு. புரியோஜனம் என்ன. பூஜ்யம் தான். ஆனாலும், நாம் நம் விழிப்புணர்வு வேலையை செய்து கொண்டிருப்போமே. ஒருத்தர், ரெண்டு பேர் மாறினாலே, இப்போதைக்கு நம் பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றி தான்.
நமக்கும் தேவை ஒரு ஹ்யூகோ சாவேஸ்.
http://www.straitstimes.com/BreakingNews/World/Story/STIStory_531501.html
//நம்மூரில் தயாரிக்கப்படும் கலர் கோலி சோடாவின் கரைசலை விட பெப்சி – கோக்கின் கரைசல் அப்படி ஒன்றும் உயர்ந்ததல்ல. கார்பன் வாயு, இனிப்பு, வண்ணம், நீர் கொண்டு கலக்கப்படும் இக்கரைசல் தயாரிப்பதற்கு எளிதானதே. அதி உயர் தொழில்நுட்பமோ, ரகசியமோ எதுவும் கிடையாது//
Coke also have pesticides, stimulant for making you active (like drugs) and some more secrete formulation for keeping people addicted.
Please correct it
உங்கள் திருத்தம் சேர்க்கப்பட்டது, நன்றி.
///பெப்சி – கோக் காசு கொடுத்த்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது/// என்று சொன்ன வினவு …
…இதை விட அதிகம்பேர் குடித்து சீரழியும்…. சொல்லப்போனால் இதைவிட தனக்கும், குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பெருநாசம் விளைவிக்கும்… மேலும் இதைவிட பெரிய விற்பனை சாம்ராஜ்யம் நடத்தும் வெளிநாட்டு…. (கவனிக்கவும்:வெளிநாட்டு) ….மதுபான வகைகளுக்கும்….. இவ்வரிகளைவிட ….. வேண்டாம்….. atleast … இதேபோல கண்டன வரிகளையாவது எழுதுவீர்களா?
நெத்தியடி, கோக் பெப்சிய பத்தி எழுதுனா சாரயத்த பத்தி எழுதுவியான்னு கேட்டா அது வினவு மேல உங்களுக்கு இருக்குற வெறுப்பு போதை தலைக்கு ஏறிடிச்சுன்னு அர்த்தம்… சாராயம் குடிக்காத 3 வயசு குழந்தை கூட கோக் பெப்சி குடிக்குது….. சாராயத்த எதிர்த்து யார் வேணுமின்னாலும் பக்கம் பக்கமா எழுதலாம்… ஆனா கோக் பெப்சிபை எதிரத்து இயக்கம் நடத்துனவங்கள விரல் விட்டு எண்ணிடலாம். உங்க வெறுப்பை கொஞ்சம் மூட்டை கட்டி வச்சிட்டு நிதானமா யோசீங்க பாய்!!!
நான் ஆரம்பத்தில் மற்றவர் வாங்கிகொடுத்தால்மட்டும் குடிப்பேன் அனால் இந்த கட்டுரையை மே 2001 படித்தபிறகு நான் இலவமாகவோ அல்லது காசுகொடுத்தோ குடிபதில்லை .முடிந்தவரை அனைவருக்கும் எடுத்து சொல்கிறேன் .உங்கள் மறு வெளிஈட்டுகிர்ற்கு மிக்க நன்றி
mikka அருமை nanba
அருமையான பதிவு.
நல்ல கட்டுரை வினவு!
பூச்சிக்கொல்லிகள் கலந்திருப்பது பற்றி கேள்விப்பட்டதிலிருந்து கோக்-பெப்சியை தவிர்க்கிறோம். தங்கள் கட்டுரையின் மூலம் தற்போது கோக்-பெப்சி பின்னாலுள்ள அரசியல் புரிகிறது.
சிலநேரங்களில் மாஸா போன்ற பழரசங்களை வாங்காமல் தவிர்க்க முடிவதில்லை! 🙁
maaza குடிப்பதற்கு நீங்கள் பழரசங்களை குடியுங்கள் என்பது என் வேண்டுகோள் முல்லை
பஸ் பயணங்களின் போது பழரசங்கள் கிடைப்பதில்லை… அதே போல் கடைகளிலும் பெப்சி, Coke in பானங்களை தவிர வேறு எதுவும் சுலபத்தில் கிடைபதில்லை. இது போன்ற சூழ்நிலைகளில் maaza,Slice தவிர்க்க முடியாத பானங்கள் ஆகி விடுகின்றன.
அருமையான கட்டுரை தோழர்…
நிலத்தடி நீர் கோக்,பெப்சி தயரிப்பதர்கக உரிஞ்சபடுவத்தையும் தெளிவு படுத்தி இருக்கலாம்.
மதுரை மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கில் அவர்கள் பொருள் விற்க முடியாது கொடுமை
பெப்சி கோக் அடித்து விரட்டப்பட வேண்டும் .
//ப்சி – கோக் காசு கொடுத்த்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது. இந்த மண்ணையும், மக்களையும் உதறித்தள்ளி அமெரிக்க நாய்களுக்கு அடிமையாக இருப்போம் என்பவர்கள்தான் கோக் குடிக்க முடியும். ஆம். பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்.//
சரியான வரிகள் பல பேர் பெப்சி கோக் குடிப்பதை ஒரு முன்னேற்றத்தின் அடையாளமாய் பார்கிறார்கள் நல்ல சவுக்கடி வினவு
பிளாச்சிமடா போன்ற இடங்கள் வறண்டு போனதை சுற்றுசுழல் பாதிக்க பட்டதை
இன்னொரு பதிவு போடுங்கள் ….நான் ஏற்க்கனவே போட்டிருந்தேன் ஆனால் வினவு அளவு உள்ளே போக முடியாது ஒரு விடயத்தில் அதனால் பெப்சி கோக் எங்கே எங்கே சுற்றுசுழல் பாதிக்க பட்டதை வினவு எழுத வேண்டும் விளக்கமாய்
உங்க பிளாச்சிமடா கட்டுரைக்கு லிங்கு குடுங்க வெ.இ
http://vennirairavugal.blogspot.com/2010/03/blog-post_23.html
கோக் குடிப்பவர்களின் தரப்பு நியாயத்தை கேட்க்காமலேயே அராஜகமாக ‘மானங் கெட்டவர்கள்’ என்று எழுதுகிறது வினவு. ஒவ்வொரு விசயத்தையும் ஆய்ந்து வித்தியாசமான கோனங்களில் சிந்திக்கும் அறிவுத் திறமை வினவு கும்பலுக்கு கிடையாது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. அப்படியே கோக் குடிப்பவர்களை வினவு கண்டிக்க வேண்டுமெனில் அதற்கு ஏன் இந்த் தேவையற்ற வார்த்தை பிரயோகமெல்லாம்? ஆகவே, முதலில் வினவின் இந்த அராஜகத்தை கண்டித்துவிட்டு பிறகு ஒருவேளை விருப்பமும், நேரமும் வந்தால் கோக் பிரச்சினையை பேசுவதே ஜனநாயகமாகும். கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வினவின் இது போன்ற அத்துமீறல்களை கண்டிக்க கோக் குடிப்போர் சங்கம் அமைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
கருத்துரிமை காவாலி தியாகுவுக்கு கவித்துவமாய் ஆப்பு வைத்திருக்கிறார் கருத்துரிமை காவலாளி . அடடா அடடடடா
சரி குடிக்கவில்லை. சரக்குக்கு மிக்ஸிங் ஆக சேர்க்கலாமா ?
சரியான கேள்வி ரவி. தோழர்கள் பலரும் மிக்ஸிங் செய்ய என்ன பயன்படுத்துகின்றனர் ? சரக்கடிக்கும் ’புரட்சியாளர்கள்’ பலர் உள்ளனர்..
அதியமான், பாத்து ரொம்ப நாளாச்சு, எதுக்கு இந்த அனானி வேசம்??? நீங்க தோழர்களுக்கு ஊத்தி கொடுத்ததா நான் கேள்விப்படவேயில்லையே ???
இந்த கட்டுரையை படிச்சுட்டு அடிக்கப்போற சரக்க பத்திதான் ரவிக்கு சிந்தனை போகுதுன்னா .. அதுக்கு கோக்கையே குடிக்கலாம். ”அமெரிக்க மூத்திரம் கோக்” அப்படினீன்னு ஒருஸ்டிக்கர் பாத்த நியாபகம்
ரவி கம்யூனிச சரக்கு அடிக்கலேன்னு திட்டுரீன்களோ கேள்விக்குறி.
வாலு சரக்கு அடிச்சா திட்ட மாட்டேங்குறீங்க. ரவி அடிச்சா மட்டும் ஏன் திட்டுறீங்க கேள்விக்குறி?
நெத்தியடி முஹம்மது ஏன் ரவிக்கு பதில் சொல்லாம வால்பையனுக்குமட்டும் ஏன் உபதேசம் பண்றார் நீங்க ஆன் த ராக்ஸ் அடிச்சுட்டு வாந்தியெடுக்குற இசுலாமிய சரக்குல போதையில்லன்னு வால்பையன் எழுதிட்டாரே அதனாலயா ஷாஜூ
இங்கு ரவி…
//சரக்குக்கு மிக்ஸிங் ஆக சேர்க்கலாமா ?//
–என்று வினவை கேட்கிறார்….
இதற்கு அனானி…//தோழர்கள் பலரும் மிக்ஸிங் செய்ய
என்ன பயன்படுத்துகின்றனர் ?
சரக்கடிக்கும் ’புரட்சியாளர்கள்’ பலர் உள்ளனர்..//
என்று கேள்வியை வலுப்படுத்துகிறார்….
ஆனால், வால்பையன்,
//நான் எந்த சூழ்நிலையிலும் மிக்ஸிங்கிற்க்கு குளிர்பானங்கள் எடுத்து கொள்வதில்லை!, தண்ணீர் மட்டுமே!//
….என்று தான் சரக்கடிப்பதையும்….அதன்மூலம்…
“சரக்கைவிட கோக்கும் பெப்சியும் தான் மோசம்”
……. என்ற ஒரு தவறான மாய பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்….
(இது பதிவுக்கு வலு சேர்க்கும் என்று நினைத்த வினவுக்கு எதிர்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது…)
ஆனால், தவறான கருத்தை சொன்ன வால்பையனை எதிர்க்கவேண்டும்
என்ற நிலை எனக்கு…
வினவுக்கு கிடுக்கிப்பிடி போட்டதால்….
‘குடிப்பவன் எக்கேடு கேட்டால் என்ன’….என்று
குடிப்பவருக்கு எதிராய் கேள்வி கேட்ட ரவியை மட்டும்
எதிர்த்தால் போதும் வினவுக்கு…
குடியை எதிர்ப்பது உங்கள் நோக்கமென்றால் முதலில் ரவியை எதிரத்திருக்க வேண்டும்.. அதை விடுத்து வாலை மட்டும் வெட்ட முனைவது எந்த வகையில் நியாயம்.. ரவிக்கு ஒரு நியாயம் வாலுக்கு ஒரு நியாயமா..
@@குடிப்பவருக்கு எதிராய் கேள்வி கேட்ட ரவி @@@ அப்படியா எதை மிக்ஸ் செய்துகுடிப்பது என்ற ரவியின் கேள்வி எப்படி குடிப்பவருக்கு எதிரானது என்று உங்கள் மேதகு மூளையைக்கொண்டு விளக்க முடியுமா???
@@@இது பதிவுக்கு வலு சேர்க்கும் என்று நினைத்த வினவுக்கு எதிர்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது…@@@
உம்மால உங்களுக்காகவே சிந்திக்க சரக்கு இல்ல இதுல வினவுக்காக சிந்திப்பு வேறையோ….. தவிர நீங்க பதில் சொல்ல பயந்து நடுங்கம் சவால் இங்கே https://www.vinavu.com/2010/05/26/boycott-pepsi-coke/#comment-23586 மண்டைக்குள் மூளை இருந்தால் பயன்படுத்த ஏற்ற தருணம் … இது…
கோக் பெப்சி ஒரு வகை போதை வஸ்துக்கள் என்பதை மறுக்க முடியாது… கொஞ்சம் கொஞ்சமாக அவைகளை ஒதுக்க நான் முனைய வேண்டியது அவசியம் தான்.
உங்கள் பின்னூட்டம் பதிவின் நோக்கத்தைத் திசைதிருப்புவதாக அமைகிறது.
இன்னும் நிறைய எழுத வேண்டும்.
bovonto எப்படி?
நான் இதுவரை குடித்த கோக் பானங்களில் போவோன்டோ தான் மிக சிறந்தது… அதிக கேஸ் அடைப்பு இல்லை, கூடவே அபரீதமான மணம் மற்றும் சுவை…
நல்ல ஒரு விற்பனை முகவர் இருந்தால் இந்தியா அளவில் போவோன்டோ போட்டி போட முடியும்….
Doctor, Bovonto is made by KaliMark. But,I am sure you will agree that Bovonto too is made off artificial carcinogenic coloring agents and with lots and lots of simple sugar.
என்னுடைய பதிவு
http://vennirairavugal.blogspot.com/2010/03/blog-post_23.html
உமா அவர்கள் சொன்னது போல் அவசரத்துக்கு குடிக்கும் தண்ணீர்க்கு அவர்களை விட்டால் வேறு யாருமில்லை என்ற நிலை!
நான் எந்த சூழ்நிலையிலும் மிக்ஸிங்கிற்க்கு குளிர்பானங்கள் எடுத்து கொள்வதில்லை!, தண்ணீர் மட்டுமே!
///நான் எந்த சூழ்நிலையிலும் மிக்ஸிங்கிற்க்கு குளிர்பானங்கள் எடுத்து கொள்வதில்லை!, தண்ணீர் மட்டுமே!///
ஹலோ…! வால்..! a million dollar question….for you….
‘சரக்கு’…. கோக்/பெப்சி இரண்டில் எது உடலுக்கு மிகக்கொடியது?
“ஆமாம்…ஆமாம்…. சரக்கு எல்லாம் உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லதாம்… அமிர்தம்போல….
ஆனால்,
அதில் மிக்சிங் செய்யப்பயன்படும் கோக்கும் பெப்சியும்தான் உடலுக்கு கெடுதியாம்…. அமெரிக்க மூத்திரமாம்….” == >> இப்படி புரிந்து கொண்ட இந்த ஆளுக்கு வினவு என்ன பதில் சொல்லப்போகுதோ…. வெளங்கிடும்…..
மற்றவர்களுக்கு ஓர் உபரித்தகவல்:
என் ரசாயன பரிசோதனை சாலையில் நான் சில பாணங்களின் pH என்ன என்று பரிசோதித்தேன்….
கோக்: 1.8 , பெப்சி: 2.1 , மிரிண்டா: 3.0 , பேண்டா: 3.3 ஸ்பிரிட்: 3.5 , செவன் அப்: 5.6 (இதில் 7-up என்ற பெயர்க்காரணமே அது ஏழைவிட pH வேல்யூ அதிகமாய் இருக்கும் என்பதற்குத்தானாம், ஆனால், பெயரை இனி மாத்த வேண்டும்: ”7-down ” என்று…) ஆக இவைகள் எல்லாமே ஆசிட் தான் … கார்பானிக் ஆசிட் + பெஸ்டிசைட் + இனிப்புக்கலவை….. தண்ணீரையே குடித்தாலும் அது ஆறு pH வேல்யூக்கு அதிகமாய் இருந்தால் மட்டுமே குடிப்பது உடலுக்கு நல்லது….
கொஞ்சம் கொஞ்சமா எனக்கு சாவ பிடிக்காது!, செத்தாலும் சிரிச்சிகிட்டே சாவனும்னு நினைப்பேன்!, அதுக்கு கோக்கு, பெப்ஸி லாயகில்ல!
///கொஞ்சம் கொஞ்சமா எனக்கு சாவ பிடிக்காது!,///
அட..! அப்படியா கண்ணு….
உங்களுக்காகவே தற்போது விற்பனையில் ….
டிக் 20 ….
டேமக்றான்…
ஒரு டப்பா தூக்க மாத்திரைகள்,
கொஞ்சம் பொட்டாசியம் சயனைட்…
====>இதில் எதையாவது பயன் படுத்தலாமே…
//செத்தாலும் சிரிச்சிகிட்டே சாவனும்னு நினைப்பேன்!//
–அட..! கொஞ்சம் அப்படியே உங்களுக்கு பக்கத்திலே
உள்ள ஏதாவது அரசு மருத்துவ மனைக்கோ அல்லது
குடிகாரர்கள் மருவாழுவு மையத்துக்கோ போய்
பார்த்தீர்கள் என்றால், குடித்து குடித்து
கேன்சர் வந்து வயிறு புண்ணாகிப்போன என்புதோல் போர்த்திய உடம்புகள், எப்படி கண்ணீர்விட்டு கதறி கதறி அழுது சாகின்றனர்
என்பதனை பார்த்து விட்டு வந்து அடுத்த பின்னூட்டமிடுங்க்களேன்….
அவர்களின் குடும்பத்தினர் அழுது படும் வேதனை தனிக்கதை…
வால்பையன் , இந்த நெத்தியடி முஹம்மதுவுக்கு உங்க மேல பழையை பகை… இப்படித்தான் வம்புக்க இழுப்பாரு… இவரோட மல்லுக்கு போகவேணாம்…
///பின்னூட்ட புலி/// — அட… நீங்கவேற…
இந்தியாவுல மிச்சம் இருக்குற கொஞ்ச நஞ்சம் புலியும்
தூக்குபோட்டுக்கபோகுது….
மிக அருமையான தகவல் …. மிக்க நன்றி ……. தண்ணீரை விட சிறந்த பானம் எதுவும் இல்லை ……………
மிக மிக அதிகமாக தண்ணீரை அருந்துங்கள் நண்பர்களே ……..
குளிர் பானம் குறை பானம் ………………………………சிந்தியுங்கள். …….
நான் இதுவரை குடித்த கோக் பானங்களில் போவோன்டோ தான் மிக சிறந்தது… /////////////
பொவண்டோ இருமல் மருந்து வாசனை அடிப்பதாக ஒரு குடிமகன் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்…
வால்பையன், பாரின் சரக்கை தண்ணீர் ஊற்றி அடித்தாலும் அது பெப்சிக்கும் கோக்குக்கும் சமம்.
இது மல்டி மில்லியன் டாலர் பிஸினஸ். இதில் அமெரிக்க முதலைகள் மட்டுமல்லாது லோக்கல் திமிங்கலங்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், இது ஒருவகை கூட்டுக்களவானித்துவம். பணம் பாதாளம் வரை பாயும் என்பது போல இதனை எதிர்ப்பவர்களை எப்படியும் Fix செய்துவிடுவார்கள் என்பது என் நம்பிக்கை. நம்ம ஊருக்கே வந்து. நம்மூர் தண்ணியை. பாட்டிலில் அடைத்து. லிட்டர் பதிமூன்று ரூபாய்க்கு விற்கும் மினரல் வாட்டர் விற்று. அந்த காசை சுருட்டிக்கொண்டு போகிறான். அதையும் கேனையர்கள் மாதிரி வாங்கி குடிக்கிறோம்.
ஒரு நாட்டின் very own சொத்து அதன் இயற்கை வளங்களான தண்ணீர் போன்றவை. அதை எப்படி அடுத்தவன் நமக்கு காசுக்கு விற்க முடியும் ?
இது நம்ம வீட்டுக்குள்ளார வந்து அடுப்படியில் இருக்கும் மாவை எடுத்து இட்லி ஊத்திக்கொடுத்து காசு வாங்கிக்கொண்டு போவது போல இல்லையா ? எரிச்சல் எரிச்சலா வருது.
இன்று இந்தியா இந்த அளவுக்கு வளர்திருகுணா அதுக்கு அமெரிக்காதான் காரணம். நம்பளாலே அவுங்க வேலை இல்லாமே கஷ்டப்படும்போது இது ஒன்றும் பெரிதில்லை
இங்கே விவசாயி தண்ணீ இல்லாம கஷ்டப்படறான் . விதர்பால தற்கொலை பணிக்கிறாங்க .
பிளாச்சிமடா என்னும் ஊரின் சுற்று சுழல் கெடுக்க பட்டிருக்கு . அது எல்லாம் உங்களுக்கு முக்கியமா படல ?????????? அமெரிகானோட வேலை தான் முக்கியமா படுதா விநீதா
சும்மா ஒன்னும் காசு தரலையே கூலி மாதிரி 1000 டாலருக்கு உழைச்சா பத்து டாலர் தானே தரான்
உசா புரத்திலே (usa puram) பொறந்து வளந்த பொரப்பா நீயி
அமெரிக்கா காரன் வர்ரதுக்கு முன்னாடி இங்க என்ன எவனும் சோறு திங்கலையா? உடுப்பு போடலையா? வீடு கட்டி மானத்தோட வாழலையா? என்ன, உங்கள மாதிரி மானங்கெட்டவங்க கொஞசம் பேரு வளந்துருக்காஙக, அவ்ளோ தான்.
நல்ல கட்டுரை
23 ம் புலி கேசி படத்தில் குப்சி மற்றும் அக்க மாலா என்று இதை பற்றி எடுத்தார்கள்.
//இது மல்டி மில்லியன் டாலர் பிஸினஸ். இதில் அமெரிக்க முதலைகள் மட்டுமல்லாது லோக்கல் திமிங்கலங்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், இது ஒருவகை கூட்டுக்களவானித்துவம். பணம் பாதாளம் வரை பாயும் என்பது போல இதனை எதிர்ப்பவர்களை எப்படியும் Fix செய்துவிடுவார்கள் என்பது என் நம்பிக்கை. நம்ம ஊருக்கே வந்து. நம்மூர் தண்ணியை. பாட்டிலில் அடைத்து. லிட்டர் பதிமூன்று ரூபாய்க்கு விற்கும் மினரல் வாட்டர் விற்று. அந்த காசை சுருட்டிக்கொண்டு போகிறான். அதையும் கேனையர்கள் மாதிரி வாங்கி குடிக்கிறோம்.
ஒரு நாட்டின் very own சொத்து அதன் இயற்கை வளங்களான தண்ணீர் போன்றவை. அதை எப்படி அடுத்தவன் நமக்கு காசுக்கு விற்க முடியும் ?
இது நம்ம வீட்டுக்குள்ளார வந்து அடுப்படியில் இருக்கும் மாவை எடுத்து இட்லி ஊத்திக்கொடுத்து காசு வாங்கிக்கொண்டு போவது போல இல்லையா ? எரிச்சல் எரிச்சலா வருது. //
செந்தழல்,
பாயிண்டை சரியாகப் பிடித்துள்ளார்(அவர மாதிரியே எழுத ட்ரை பண்னேன்). தண்ணீர் தனியார்மயம் என்பதே கோக் எதிர்ப்பின் அரசியல் என்பதை எளிமையாக எழுதியுள்ளார். ரவியின் இந்த கருத்தில்தான் அவரது சரக்குக் கருத்துக்கும் பதில் உள்ளது. கோக், பெப்ஸி குடிக்காதே என்ற முழக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்று விலாவாரியாகப் பேசலாம். இங்கு அதுவல்ல நோக்கம். இந்த முழக்கத்தின் மூலம் நம்ம வீட்டுச் சொத்து திருடு போவது குறித்த அரசியல் விழிப்புணர்வு வரவைப்பதே நோக்கம். எனவே, கோக் பெப்ஸி எதிர்ப்பு எனில் சரக்கு எப்படி அடிப்பது? சரக்கே கிட்டத்தட்ட கோக் பெப்ஸிதானே? தண்ணிக் கேன் பாட்டிலை நம்பித்தானே சிட்டியில வாழ்க்க ஓடுது? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதை விட கோக் பெப்ஸி அமெரிக்க மூத்திரம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் அவற்றை நிராகரிக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை நடைமுறைப்படுத்துவதே சிறந்தது. அதன் உடனடி விளைவு என்றால் ஒன்றுமில்லை. தாமிரபரணி கோக்கை நாம் விரட்டிவிட்டோமா என்ன? ஆனால் அந்த இயக்கம் உருவாக்கிய அரசியல் எழுச்சி? அது இன்றும் காணக் கிடக்கிறது அல்லவா?
எனக்கு தெரிந்து பல நண்பர்கள் வீட்டில் காளிமார்க் போவொண்டோ தேடி வாங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையில் நான் போகும் இடங்களில் போவொண்டோ கடைகளை அறிவேன்.. என் வீட்டு மளிகை பட்டியலில் போவொண்டோ என்றும் இருக்கும்..
பூச்சாண்டி…
இங்கே தேவை மனமாற்றம் மட்டுமே. இந்த ஒற்றைசொல்லில் அனைத்து பதில்களும் தங்கியுள்ளது..
மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டு, அது ஒரு அமைதிப்புரட்சியாக மாறவேண்டும். கடைகளில் வாங்க ஆளில்லாமல் திருப்பி அனுப்பபடவேண்டும். அப்போது தான் அவன் வெளியேறுவான்…ஆனால் அது நடைபெறுவது அதிகாலை கனவில் மட்டும் தான் என்ற நிலை உள்ளதே ?
ஊடகங்களின் மெகா பிரச்சாரம் எப்படி நடக்கிறது >? அதில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், சினிமா கூத்தாடிகளின் உற்சாக விளம்பரங்கள், ஹோர்டிங்குகள், க்ரியேட்டிவ் விளம்பரங்கள், அதனை குடித்தால் உற்சாகம் பிறக்கும் போன்ற கான்ஸெப்டுகள், லோக்கல் டீலர்கள், கடைக்காரர்கள், மிகப்பெரிய சர்வீஸ் மற்றும் சப்போர்ட் நெட்வொர்க் என்று இது உள்ளேயே வேர்விட்டு உடலெங்கும் வளர்ந்துவிட்ட புற்றுநோயை போன்றது.
பெப்ஸி குடித்தால் எயிட்ஸ் வரும் என்று எதாவது வதந்தி கிளப்பினால்தான் சரிப்படும் போலிருக்கிறது !!!