முகப்புதிருப்பூர் காதல் !
Array

திருப்பூர் காதல் !

-

vote-012ஏழு ஆண்டுகளாக திருப்பூரில் வசிப்பவன் காதலைப் பற்றி எழுதாமலிருப்பதுதான் என் பாவக்கணக்கில் பிரதானமாயிருக்குமென்று நினைக்கிறேன்.

வெளியூரில் காதலித்து விட்டு இங்கு ஓடிவரும் சிலராலும் இங்கு வந்த பின்பு காதலிக்கும் பலராலும் நிறைந்திருக்கிறது எங்கள் நகரம். வேலை தேடி வரும் பலரும் இளையோர்கள், பெரும்பாலான பணியிடங்கள் நெருக்கடியானவை, நீண்ட பணி நேரங்கள் (குறைந்தபட்சம் 12 மணி நேரம் ), சினிமாவைத் தவிர வேறு பொழுது போக்கு கிடையாது. இவையெல்லாம் இளையோர்கள் ஒரு துணையைத் தேடிக் கொள்வதற்கான காரணத்தையும் வாய்ப்பையும் தருகின்றன. நான் தஞ்சாவூரிலோ அல்லது புதுக்கோட்டையிலோ மட்டும் இருந்திருந்தால் இந்த பதிவெழுதும் யோசனை கூட வந்திருக்காது என்பதுதான் நிஜம்.

என் அண்ணன் கல்லூரியில் படித்த போது அவனுடன் படித்த மாணவனின் பதிவுத் திருமணத்தை தஞ்சாவூரில் நடத்தி வைக்கும் வேலையை செய்தான் (ஒரு குழுவாக). சுமாராக ஒரு வாரம் ஜோடியை தலைமறைவாக வைத்து, தேடி வந்த மணமகனின் தந்தையை எதுவுமே தெரியாது என்று அப்பாவி போல சொல்லி நம்பவைத்து.., அவன் செய்த இந்த ஒரு செயற்கரிய செயலைத் தவிர வேறு சொல்லிக் கொள்ளும்படியான சம்பவம் அங்கு நடந்ததில்லை. அவனது அந்த காரியம் “எவ்வளவு பெரிய கிரிமினல் வேலை” என்று என் அம்மாவால் வருணிக்கப்பட்டது.

வேலை தேடி இங்கு வந்த போது நான் தங்கியது ஒரு அடித்தட்டு மக்கள் வசிக்கும் காலனி வீட்டில் (அது என் அப்பாவின் நண்பரின் அலுவலகம் அல்லது அது போன்றதொரு இடம், அவர் சாயத் தொழிலுக்கான வேதிப் பொருட்களை விற்பனை செய்பவர்.. ஆகவே மற்ற வட்டார வீடுகளில் அவர் மூலப் பொருட்களை இருப்பு வைக்க அனுமதிக்க மாட்டார்கள்). இதை நான் குறிப்பிடக் காரணம் எனது திருப்பூர் நண்பர்கள் பலர் இது போன்ற  வீடுகளை பார்த்தேயிராதவர்கள். அந்த தெருவில் வசிக்கும் யாவரும் வாரக் கூலி வாங்குபவர்கள். சரிபாதி பேர் பிரம்மச்சாரிகள். அங்குதான் காதல் திருமணங்கள் எத்தனை சுலபமானது என்பதை தெரிந்து கொண்டேன்.

எங்கள் காலனியின் முதல் வரிசை வீட்டிலிருந்த ஒரு தமிழ் இளைஞனும் இரண்டாம் வரிசை வீடு ஒன்றில் வசித்த கேரளப் பெண்ணும் காணாமல் போனார்கள். பதினைந்து நாட்கள் கழித்து அதே காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினார்கள். கொடுமையிலும் கொடுமையாக அது குறித்து தெருவில் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. எனது குழப்பத்தைப் பார்த்து பரிதாபப்பட்ட காலனிவாசி திருமணத்திற்கான எளிமையான வழியை சொன்னார்.

நண்பர்கள் சிலருடன் காதலர்கள் சிவன்மலைக்கு செல்வது, அங்கு திருமணம் செய்து கொண்டு பிறகு ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்துக் குடியேறுவது.. சுலபம். யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமா? ஏரியாவை மாற்றினால் போதும். நகரைச் சுற்றி புறாக் கூண்டு வீடுகள் சிதறிக் கிடக்கின்றன.

குடியிருப்புக்கு நேர் எதிரான நிலையில் இருந்தது அப்போது நான் வேலை செய்த அலுவலகம். அங்கு பணியாற்றிய எல்லோரும் முப்பது வயதுக்குக் குறைவான ஆண்கள் (ஓரிருவர் தவிர).

பிறகு அங்கு  ஒரு பெண் வரவேற்பாளராக நியமிக்கப் பட்டார். அதுவரை தூங்கி வழிந்த அந்த அலுவலகம் அதன் பிறகு வழிந்த படியேதான் விழித்தது. ஓயாது ஒலித்த தொலைபேசிகள், நிற்க இடமில்லாமல் நிறைந்திருந்த வரவேற்பறை, என எங்கள் தகுதிக்கு மீறிய கூட்டத்துடன் காணப்பட்டது அலுவலகம். ஸ்ரீராமனின் தோளை பார்த்தவர்கள் தோளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று கம்பர் சொன்னதைப் போல இங்கு அலுவலகம் வந்தோர் “ரேஷ்மா கண்டார் ரேஷ்மாவே கண்டார்” என்று சொல்லும் படியானது நிலைமை ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ).

தலைப்புக்கு அனாவசியமான சம்பவம் என்றாலும் இதில் ஒரு செய்தி இருக்கிறது, அதாவது சைட் அடிக்கவும் நம் ஆட்கள் தகுதி பார்க்கிறோம் என்பதுதான் அது. இதே தகுதி பார்க்கும் பழக்கம் காதலிலும் தொடர்கிறது. நான் பார்த்தவரை அலுவலகப் பணியில் உள்ளவர்கள் தங்கள் தகுதிக்கு நிகரான பணியில் உள்ளவர்களையே காதலியாகத் தெரிவு செய்கிறார்கள் (இதே தகவலை மூன்றாமாண்டு உளவியல் பாடமும் உறுதி செய்கிறது). நடுத்தர வர்க்கத்தவர்கள்தான் காதலிப்பதில் மிகவும் திட்டமிடலோடு இருப்பதாக நான் கருதுகிறேன்.

காதலிப்பவரின் பொருளாதார நிலை, அவரது சாதி ஆகியவை காதலை திருமணத்தை நோக்கி நகர்த்துவதற்கு மிக முக்கியமான காரணியாக உள்ளது. என் உடன் படித்த மாணவி, அவளது காதலன் விரும்புவதாக தெரிவித்த போது அவனது சாதியை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே தான் சம்மதித்ததாக தெரிவித்தாள். அதாவது துணைவர் தனது சாதிக்காரராக இருக்க வேண்டும் என்பதல்ல, ஆனால் தனக்கு நிகரான சாதிக்காரராக இருக்கவேண்டும் என்பதுதான் (பிற்பட்டவர் =பிற்பட்டவர்). மிடில் கிளாஸ் காதல் பெரும்பாலும் பெற்றோருக்கு பதிலாக மணமக்களே செய்து கொள்ளும் திருமண ஏற்பாடு எனும் கருத்து ஓரளவு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். (நான் பார்த்தவற்றை வைத்து சொல்கிறேன் உண்மை இதற்கு மாறானதாவும் இருக்கக் கூடும்).

இதுவரை திருப்பூர் மேல்தட்டு வட்டாரங்களில் காதல் திருமணத்தை நான் கண்டதில்லை. இங்கு அவர்களது திருமணமும்  ஒரு வியாபார ஒப்பந்தத்தைப் போலவே உள்ளது. ஆகவே நிதி மிகுந்தோரது காதல் பற்றிய தகவல் ஏதும் எழுதுவதற்கில்லை. எல்லா இடங்களிலும் போலிகள் வந்த பிறகு காதலிலும் இல்லாதிருக்குமா என்ன? அதற்கும் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.

என் சென்னை நண்பன் ஒருவன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ‘சின்சியராக’ காதலிப்பதாக சொல்லியிருக்கிறான். கொங்கு வட்டாரத்தில் உள்ள எனது கல்லூரி கால நண்பன் ஒருவன் கடைசிகட்ட நிலவரப்படி ஏழு பெண்களுடன் நட்புக்கும் காதலுக்கும் இடையேயான ஒரு விஷயத்தை தொடர்கிறான்.  ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனி செல்போன் எண் வைத்துக் கொண்டு அவன் அதை கையாளும் லாவகம் நம்மால் கற்பனைகூட செய்ய முடியாதது.

தொழில்முறை (ப்ரொபஷனல்) காதலனான அவனும் இதைப் படிக்கக் கூடுமென்பதால் அவன் ஓய்வு நேரத்தில் ஒரு நூற்பாலையில் பணி செய்வதையும் நான் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது ( நீங்க அவனை வெறுமனே காதல் மட்டும் செய்பவனாக நினைக்கக் கூடாதில்லையா?? ). ஆயினும் ஆறுதலான செய்தி யாதெனில் திருமணத்தில் முடியும் காதல்கள் திருப்பூரில் மிக அதிகம்.

காதல் என்பது காதலர்களுக்கு மட்டும் ஆச்சரியமளிப்பதல்ல, பார்வையாளர்களுக்கும் அவ்வாறானதே. நான் கடைசியாக வேலை பார்த்த அலுவகம் உள்ள அடுக்ககத்தில் ஒரு சேட்டு வீடு இருந்தது. அவரது வீட்டு பதினேழு வயது வேலைக்கார (உ.பி மாநில)  இளைஞன் ஒரு நாள் தனது முதலாளியம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு வெளியேறினான். அவன் வெளியேறிய அன்றே அருகிலிருக்கும் அங்காடியில் வேலை செய்த ஒரு இளம் பெண் அவனை தேடி எங்கள் வளாகத்துக்கு வந்தாள்.

நடந்தது என்னவென்றால் இளைஞன் கடைக்கு சென்று வந்த வகையில் இருவருக்கும் காதலாகியிருக்கிறது. கடையை மூடிவிட்ட கவலையில் இளைஞன் முதலாளியுடன் சண்டையிட்டு வெளியேற காதலியோ கடையில்லாவிட்டாலும் காதல் இருக்கும் நம்பிக்கையில் வந்துவிட்டாள். இதில் ஆச்சர்யப்படும் சங்கதி என்னவெனில் இவர்கள் சந்தித்து மூன்று மாதங்களே ஆகியிருக்கிறது, பையனுக்கு தமிழ் தெரியாது. பெண்ணுக்கு ஹிந்தி தெரியாது. இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. ஆண் பெண் என்ற காரணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்கு சாதகமானதாக இல்லை ஆயினும் காதல் வந்து விட்டது!!.

கிட்டத்தட்ட ஆயுளின் பாதியை தொட்டுவிட்ட என் முப்பது வருட வாழ்கையிலும் இதைவிட பேரதிசயம் ஒன்றை நான் கண்டதில்லை. ( விடுபட்ட தகவல்கள் இருக்கின்றன பதிவை தொடரும் எண்ணமும் இருக்கிறது… பார்க்கலாம் ).

______________________________________________________________

–          வில்லவன்

________________________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. //ஆண் பெண் என்ற காரணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்கு சாதகமானதாக இல்லை ஆயினும் காதல் வந்து விட்டது!!.//
    ஆம் எங்கள் ஊரில் இப்பொழுதெல்லாம் நீண்ட தொலைவில்யிருந்து பிழைக்க வருபவர்கள் காதல் ,கல்யாணம்,என்று தங்களுக்காக ஒரு சொந்த வாழ்க்கையும் சுயமாக அமைத்துக்கொள்கிறார்கள்.அதில் பாதிக்கு மேல் தவறான முடிவையும், குற்றத்திலும் முடிகிறது…

  2. A really classic article,.. In fact It was like reading a Sujatha’s katturai(Hmmm udane parpana …. endru badhil podadhirgal) . Midlle class kaadhalgal ellam vazhvin sumaigalai ninaithu ezhuvadhu dhane ! Enna saivadhu indarikku irukkum sandhai poruladharam nammai appadi aakki vittadhu. Any way it was nice to read such a article peppered with humour and sarcasm.. ( I relly enjoyed the description of love between a hindi boy and tamil girl) CHEERS and KEEP IT UP VINAVU

  3. படிக்காத வருமையிலுள்ளவர்கள் மட்டும்தான் காதல்திருமணம் செய்கிறார்கள் ,நடுத்தரமானவர்கள் சாதி மதம் பொருளாதாரம் வேலை பார்த்துதான் காதல் செய்கிறார்கள் இவை நான் கண்டவை

  4. அட !!! 

    இன்னும் கொஞ்சம் டீட்டெயிலிங் செய்யலாமே வில்லவன் ?

  5. வினவிலும் ஒரு மொக்கைப் பதிவா ?. காதல் பற்றிப் பேசும்போது அதில் உள்ள அரசியலையும் பேசுங்கள். காதலில் ஜாதி அரசிய்ல, பொருளாதார அரசியல் எல்லாம் உள்ளன.

    ஒவ்வொரு செயலுக்கு பின்பும் ஒரு வர்க்க நலன் உண்டு. வினவிடமிருந்து வரும் கட்டுரைகள் எல்லாவற்றிலும் இந்த அம்சம் உண்டு. இந்த கட்டுரையில் மேம்போக்காக (பணவசதியுள்ளவர்களிடம் காதலும் ஒரு வியாபார ஒப்பந்தம்) என்பதோடு நிறுத்தி விடுகின்றனர். கட்டுரையாளருக்கு இந்த உணர்வை வினவு (இனிமேல்) ஊட்டுவது நல்லது.

    • இல்லை இதிலும் அரசியல் உண்டு என்றே நினைக்கிறேன் .கடைசி வரிகள் ஆச்சர்யபடுவதன் மூலம் ….சம கால காதலை கேள்வி கேட்பது போல் உள்ளது

    • // கட்டுரையாளருக்கு இந்த உணர்வை வினவு (இனிமேல்) ஊட்டுவது நல்லது.// 

      சந்தேகமில்லை, நீங்கள் சொல்லும் கோணத்தில் விரிவாக எழுதுவதற்கு நான் கற்க வேண்டியது நிறையவே இருக்கிறது. இனிவரும் பதிவுகளில் மேம்படுத்த முயற்சிக்கிறேன்.  

  6. மேல்தட்டு வர்க்கத்தில் காதல் இல்லையென யார் சொன்னது. திருப்பூரில் தான் நெற்றிக்கண் ரஜினி ஏற்ற கதாபாத்திரங்களை நேரில் நான் பார்த்தது. இதே போல் எத்தனை டிரைவர்கள் காருடன் , காரையும் சேர்த்து ஓட்டினார்கள் என்று மிகப்பெரிய கல்யாண மண்டபங்களின் பார்க்கிங்கில் இருக்கும் வாகன ஓட்டிகளிடம் பேசிப்பாருங்கள். எத்தனை காதல் காமக்கதைகள் கிடைக்கும் என்று. தாங்கள் 30 வயது என்பதால் இது கொஞ்சம் மெதுவாகவே விளங்கும்.

  7. வில்லவன்,

    நோ டிஸ்டிராக்சன், கீப் கோயிங்கு…. உங்களது அடுத்த அனுபவப் பதிவுக்காக வெயிட்டிங்

  8. நல்ல பதிவு… திருப்பூரை பற்றியும் அதன் காதல் முறைகளை பற்றியும் ஒரளவு நன்கு உணர்ந்து பதிவிட்டுள்ளீர்கள்…. மேல்தட்டு வர்க்கத்தில் இந்த ஊரில் கண்டிப்பாக நடக்கும் திருமணம் என்பது கிட்டதட்ட ஒரு வியாபார ஒப்பந்தம்தான் இல்லையேனில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றும் கூறலாம்….

    தமிழ் உதயன்

  9. //நடந்தது என்னவென்றால் இளைஞன் கடைக்கு சென்று வந்த வகையில் இருவருக்கும் காதலாகியிருக்கிறது. கடையை மூடிவிட்ட கவலையில் இளைஞன் முதலாளியுடன் சண்டையிட்டு வெளியேற காதலியோ கடையில்லாவிட்டாலும் காதல் இருக்கும் நம்பிக்கையில் வந்துவிட்டாள்//

    ஆச்சர்யம் ……..நான் பார்த்த காதல் எல்லாமே வர்க்கம்
    சார்ந்ததாய் இருக்கிறது ஒன்று ஒரே பொருளாதார பின்னணி
    இல்லை என்றால் ஒரே ஜாதி ……….ஏழையாக இருந்தால் கூட நாளை பின் பெரிய திறமை சாலியை தான் இருப்பான் என்று பெண் நம்புகிறாள் அப்பொழுதுதான் காதலே வருகிறது இது கொஞ்சம் ஆச்சரியம்

  10. வில்லவன் நானும் திருபூர்லத்தான் இருக்கேன் நீங்க எங்க இருக்கீங்க

  11. காதல் திருமணம் நடத்தி வைக்கும் அனுபவம் வித்தியாசமானது,    விதவித காதல்ர்களை காண்பது அதைவிட வித்தியாசமானது. எனக்கும் அது போன்ற அனுபவங்கள் உண்டு 

  12. Instant love!!!! Auto Graph அனுபவங்கள்!!!! இதெல்லாம் தானே காதலின் மகோன்னதங்கள் என்றாகிவிட்டது. 

    காதலில் இந்த தொழில்நுட்பம் மற்றும் கணனியின் பாவக்கணக்கையும் யாராவது சொன்னால் நல்லது. 

  13. a.chandarsingh, tamil & தமிழ் உதயன்,திருப்பூருல திருவிக நகர்லதாங்க ரொம்ப நாளா இருக்கேன்.

  14. சாதாரண ஏழை மக்கள் பிரயாணம் செஞ்ச ஒரு பயணிகள் ரயில கவுக்குறது…. அப்பாவி மக்களை கொல்றது…..
    இதுதான் உங்க கம்யூனிசமா?
    உங்களோட கொள்கைதான் என்னன்னு சொல்லுங்கடா?
    நாட்ல ஒரு நாற்பது பேரு இருக்கும்போதே, இந்தளவுக்கு மக்களை கொன்னு குவிக்குறீங்க… இன்னும் உங்ககிட்ட ஆட்சி இருந்தா என்னென்ன பண்ணுவீங்க?

    மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு கூட்டமெல்லாம் நடத்துனீங்களே, இப்ப எப்படி அவங்களோட செயல்களை நியாயபடுத்துங்க போறீங்க?

    • நண்பர் தம்பி,
      ரயில் கவிழ்ப்பு குற்றச்சாட்டை மாவோயிஸ்ட்கள் மறுத்திருக்கிறார்கள். ஆனால் வேண்டுமென்றே நேற்று இரவு இந்த பொய்யை உறுதி செய்யும் விதமாக ‘டைம்ஸ் நவ்’ செய்தி பரப்பியது. மட்டுமின்றி, அதன் தொடர்ச்சியாக நடந்த விவாதத்திற்கு மாவோயிஸ்ட் அனுதாபிகள் என்று அந்த ஊடகம் இகழ்ச்சியாக குறிப்பிடும் மனித உரிமை ஆர்வலர்கள் அழைக்கப்படவில்லை. ஊடக அறத்திற்கு எதிராக அந்த செய்தி சேனலில் அவதூறுகளை வழக்கம் போல் அள்ளி வீசியது. மிக முக்கியமாக அவர்கள் பேசியது மாவோயிச்த்களுக்கு எதிரான தாக்குதில் கருத்தொருமிப்பு வேண்டும் என்பது தான். வேறு வார்த்தைகளில் சொன்னால், மனித உரிமை மீறல், அறமீறல் என்றெல்லாம் யாரும் சொல்லிக் கொண்டிருக்க கூடாது என்பது தான். அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை- மாவோயிஸ்ட்களை ஒழித்துக்கட்ட, மாநிலங்களுக்கிடையே மற்றும் மாநிலங்கள்- மத்திய அரசுக்கிடையே ஒற்றுமை, இதனூடாக வான் வெளி தாக்குதல் போன்ற கடுமையான தாக்குதலுக்கு அச்சாரமாகவே பார்க்க முடிகிறது. சி.பி.எம் இதனை ஆதரிக்கிறது. அதாவது மிகப்பெரிய தாக்குதலுக்கு உண்டான ஊடக அங்கீகாரம். மாவோயிஸ்ட்கள் பொறுப்பேற்காத இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இன்னும் தொடரலாம். அவசரப்பட்டு தீர்ப்பு எழுதாதீர்.

      • அப்டிங்களா சுக்தேவ், அப்போ இரண்டு வாரத்துக்கு முன்னாடி பயணிகள் பேருந்தை வெடி வச்சு காலி பண்ணுனது யாருங்க? பதினைந்து காவல் அதிகாரிகள் உட்பட பல அப்பாவி மக்களும் இறந்து போனாங்களே. அதை செஞ்சதும் நக்சல்கள் இல்லையா? நீங்க கேள்விக்குறியை விட பெரிய பொய்யை அடிச்சு விடுரிங்களே.

        • யோவ் ஜூஜூ ….உனக்கும் நெத்தியடிக்கும் புன்னூட்டம் போட்டே நேரம் போயி லீவு நாள்ல வேல பாத்துகினுகிறேன் … என்ன இன்னாத்துக்கு நோண்டற…????  கடுப்பேற்றுகிறார் யுவர் ஆனர்!!!

        • பக்கம் பக்கமா பின்னூட்டம் போடுரதையே ஹாபியா வச்சுருக்குற கேள்விக்குறி இப்போ வச்சுருக்குற கேள்விக்கெலாம் பதில் சொல்ல மாட்டாருங்களா? பதில் சொன்னா மாவோயிச தீவிரவாதம் வெளிச்சத்துக்கு வந்துடும் என்று பயப்படுறாரா? ஹைதர் அண்ணே
          கேள்விக்குறியை பதில் சொல்ல சொல்லுங்கண்ணே.

        • ஷாஜஹான்… நான் வரமாட்டேன்னு சொன்னப்புறம் ரெண்டு நாளா என்ன உதார் உட்டுகின் கீற??? இன்னிக்கு வச்சுகலாம் கச்சேரியா… ரெடிய்யா மாப்ளே… ????

      • சுக்தேவ் இல்லேனா இப்படி சொல்லுங்க. பஸ்லயும் ரயில்லையும் போனவங்களே வெடி வச்சு செத்துகிட்டாங்க. இதை நக்சல்கள் பண்ணலைன்னு. சாப்டரை சீக்கிரம் க்ளோஸ் பண்ணிடலாம் சுக்தேவ். அனாவசியமா மத்தவங்க கேள்வி கேட்க மாட்டாங்க.

        • சபாஸ் ஷாஜூ, இந்து மதவெறி ஆர்.எஸ். எஸ் ம் முசுலீம் மதவெறி தவ்ஹீது ஜமாத்தும் எப்படி அழகா ஒரே மாதிரி சிந்திக்கிறீங்க??
          இப்படித்தானே அவனும் கோத்ராவ பத்தி பேசுறான்… .. சூடு சுரணை இருந்தா இப்படி ஒரு வாக்கியம் உம்ம வாயில வருமா???

      • தீக்கதிரில் தீர்ப்பு எழுதிவிட்டார்கள் சிபிஎம் அலைஸ் ஆர்.எஸ்.எஸ். பன்னாடட்டு கம்பேனி பினாமிகள். மாதவராஜ் என்ற நல்லவர் என்ன சொல்லப் போகிறார் என்று பார்ப்போம்

  15. வினவின் இந்த கட்டுரை காதலை மேலோட்டமாக அணுகி இருப்பதாகவே தோணுகிறது.. இது சாதரண மூன்றாம் பார்வை கட்டுரை இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராயலாம்

  16. காதலை கொண்டாடும் இக்கட்டுரை சிறப்பாக உள்ளது. மத்தியதர வர்க்கத்தின் காதல் கால்குலேட்டர் காதல் என்பதில் காதலின் சமூக பண்பை பேசியுள்ளார். பெற்றோர், சாதி மட்டுமல்ல திருப்பூர் போன்ற பகுதிகளில் இவர்கள் இந்து முன்னணி என்ற பாசிச படையையும் காதலர் தினம் போன்ற நாட்களில் எதிர் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் காதலுக்கு ஒரு முற்போக்கு பாத்திரம் நமது சமூகத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

  17. http://www.ndtv.com/news/india/three-trains-passed-before-attack-mamata-banerjee-28593.php?u=2050

    Railway Minister Mamata Banerjee today alleged there was a “political conspiracy” behind the Gyaneshwari Express derailment without blaming Maoists for the disaster and demanded a CBI probe.

    As Banerjee and arch rival CPI-M indulged in a blame game, the train’s driver B K Das filed a FIR with the Government Railway Police(GRP) unit in Jhargram in which he referred to an explosion on the track when the Howrah-Kurla Lokmanya Tilak Gyaneshwari Super Deluxe Express derailed in West Midnapore district, about 150 kms from Kolkata at around 1:30 am. (Read: No mention of Maoists in FIR filed by Railways)

    Read more at: http://www.ndtv.com/news/india/three-trains-passed-before-attack-mamata-banerjee-28593.php?u=2050&cp

    • நீங்க குடுத்த அதே லின்க்லதான் கீழ இருக்குற வரிகளும் இருக்கு……..

      The West Bengal police had also said that Maoist-backed organization People’s Committee against Police Atrocities (PCPA) has claimed responsibility for the Gyaneshwari Express accident.

      “Two posters belonging to the Maoist-backed People’s Committee against Police Atrocities (PCPA) have been found at the site,” West Bengal Director General of Police Bhupinder Singh had told NDTV.

    • அண்ணே,
      எங்களுக்கு தெரியும்னே, நீங்க மம்தா அக்கா சொல்றதே வேதவாக்குன்னு சொல்லுவீங்கன்னு…

      புரட்சியெல்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை. காசு குடுத்த மம்தா அக்காவுக்கு நல்ல விசுவாசியா இருக்கீங்க… புரட்சிகர வாழ்த்துக்கள்…

  18. ஷாஜகான்,
    உங்களுக்கு சில சுட்டிகளை பூச்சாண்டி அளித்திருக்கிறார். அதனை பார்க்கவும். நான் கூடுதலாக சொல்ல விரும்புவது, மாவோயிஸ்ட்கள் தங்களுடைய தாக்குதலுக்கு பொறுப்பேற்கும் அரசியல் நேர்மையை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். இத தாக்குதலை அவர்கள் ஏற்கவில்லை. மேலும் சட்டிஸ்கர் மாநிலத்தின் தண்டேவாட பகுதியில் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களுடைய இலக்கு போலீஸ் தானே தவிர , மக்கள் அல்ல. முதல் தாக்குதலில் கொல்லப்பட்ட 76 பேரும் CRPF படையினர். இரண்டாவது தாக்குதலில் கொல்லப்பட்ட 31 பேரில் பெரும்பாலோர் CRPF படையினர். CRPF இன் கைகளில் மாவோயிஸ்ட்கள் சிக்கினால் என்ன கதி அவர்களுக்கு கிடைக்குமோ அதையே தான் மாவோயிஸ்ட்கள் CRPF க்கு வழங்கியிருக்கிறார்கள். இது போன்ற தாக்குதல்களில் அப்பாவி மக்கள் படுகொலை ஆவதை ஒரு போதும் ஏற்க முடியாது. மாவோயிஸ்ட்கள் இரண்டாவது தாக்குதலில் மக்களும் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்கள். அனால் அது போதுமான ஒன்று அல்ல. ஆனால், வகை தொகையின்றி பழங்குடியின மக்கள் வதைக்கப்படும் போதும், அவர்கள் வாழ்வுரிமை பறிக்கப்படும் போதும் கள்ள மவுனம் சாதிக்கும் அர்னப் கோஸ்வாமி போன்ற பார்ப்பன ஊடகவியியாலளர்கள் மாவோயிஸ்ட்களின் எதிர் தாக்குதலுக்கு மட்டும் கொதித்து எழுவதேன்? வெட்ட வெளியில் இந்து மதவெறி கும்பல் நடத்தும் வெறியாட்டங்கள் விவாதத்திற்கு வரும் போது ஸ்வபன் தாஸ் குப்தா. தருண் விஜய் போன்ற RSS அம்பிகளை விரிவாக பொய்யுரைக்க அனுமதிக்கிறார்கள். மாவோயிஸ்ட்கள் தரப்பில் கவுதம் நவ்லோக்கர் போன்ற மனித உரிமை போராளிகள் வந்தால் அவர்களை பேச விடாமல் குரல்வளையை நெரிப்பதேன்? மாவோயிஸ்ட்கள் முன்வைத்த சண்டை நிறுத்த கோரிக்கையை மாவோயிஸ்ட்களின் ஜோக் என்று கிண்டலடிக்கும் ‘டைம்ஸ் நவ்’, தான் பொறுப்பேற்ற பிறகு குண்டு வெடிப்புகளே நிகழவில்லை என்று இறுமாந்திருந்த சிதம்பரத்தை, ‘சிதம்பரம் முகத்தில் கரி’ என்று பூனே தாக்குதலை ஒட்டி செய்தியிடும் துணிவு இருக்கிறதா? அதிகமாக விளம்பப்படுவதால் ஒரு வதந்தி செய்தி ஆகி விடுவதில்லை. ஷாஜகான், உண்மை நீங்கள் முகம் கொடுக்க மறுக்கும் பக்கத்தில் இருக்கிறது.

    • //மாவோயிஸ்ட்களின் எதிர் தாக்குதலுக்கு மட்டும் கொதித்து எழுவதேன்?//
      இதையெல்லாம் ஒரு விவாதமா முன்வெக்காதீங்க.
      “அவன் செய்றான், அவன ஒண்ணுமே கேக்கமாட்றீங்க, என்னை மட்டும் கேக்குறீங்க”.. இதென்ன சின்னபசங்க வெளாட்டு மாதிரி இருக்கு…

      RSS க்கும் உங்களுக்கும் வித்யாசம் இல்லையா…

      மொதல்ல அவங்களோட கொள்கை என்ன, அதனை அடைய அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை சரிதானான்னு யோசிக்க சொல்லுங்க.

  19. சுக்தேவ்,
    மேற்கு வங்க இரயில் கவிழ்ப்பிற்கு PCPA என்ற அமைப்பு பொறுப்பு ஏற்று இருக்கின்றது. PCPA வுக்கும் மாவோயிச தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம் சுக்தேவ்? ஆர்.எஸ்.எஸ் க்கும் வி.எச்.பி க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அதைப்போல PCPA வுக்கும் மாவோயிச தீவிரவாதிகளுக்கும் வித்தியாசமும் இல்லை.

  20. சுக்தேவ்,
    // மாவோயிஸ்ட்கள் இரண்டாவது தாக்குதலில் மக்களும் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்கள். அனால் அது போதுமான ஒன்று அல்ல.//
    அது எப்படிங்க சுக்தேவ், அப்பாவி பொதுமக்களை படுகொலையும் செய்து விட்டு வருத்தமும் தெரிவிச்சு விட்டா போதுங்களா? பலியான அப்பாவி பொதுமக்களின் லிஸ்ட்டில் உங்க குடும்பத்தினர்களும் இருந்தால் இந்த வார்த்தையை சொல்லுவீங்களா? செஞ்ச படுகொலைக்கு வருத்தம் மட்டும் தெரிவிச்சா போதுங்களா? படுகொலைக்கு வருத்தம் தெரிவிக்கிற ரூலை மாவோயிச தீவிரவாதிகளுக்கு மட்டும் தான் அப்ளை பண்ணுவீங்களா இல்லை படுகொலை செய்கிற எல்லோரும் இதே ரூலை பாலோ பண்ண அனுமதிப்பிங்களா?

  21. சுக்தேவ், மாவோயிச தீவிரவாதிகள் செய்யும் படுகொலைகளை பற்றி வினவு கட்டுரை எழுதட்டுமே பார்க்கலாம். அப்படி எழுத தைரியம் இருக்கின்றதா வினவிற்கும் ம.க இ.க விற்கும்? உண்மையிலேயே மாவோயிச தீவிரவாதிகள் தவறு செய்யவில்லை என்றால் வினவு இதை பற்றி ஒரு கட்டுரை வெளியிடட்டுமே இங்கே.

    • ஷாஜகான்,
      மாவோயிஸ்ட்கள் தொடர்பாக கட்டுரை ஏதேனும் வினவில் வந்தால் மட்டுமே மேற்கொண்டு இது குறித்து பேச முடியும். பிரச்சினை, மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் இருந்து ஆரம்பிப்பதாக நீங்கள் முடிவு செய்து கருத்துரைக்கிறீர்கள். பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிப்பு, அடக்குமுறை, பாசிச சூழல், பாரபட்சமான அணுகல் முறை — பிரச்சினையின் தோற்றுவாய்க்கு இப்படி ஒரு விரிந்த தளம் இருப்பதை உணர்த்துவதே எனது பதில்.

      • சுக்தேவ்,
        இதைபற்றி பேசவே கூடாது என்பதை தான் உங்களுடைய கண்டிசன் காட்டுகிறது. மாவோயிச தீவிரவாதிகள் பற்றி வினவில் கட்டுரை வந்தால் தான் பேச முடியும் என்றால் நாம் கண்டிப்பாக பேசவே முடியாது. மாவோயிச தீவிரவாதத்தை பற்றிய கட்டுரையை வினவு எழுத வேண்டுமென கோரிக்கையை வைப்போம் நாமிருவரும் வினவிடம்.

      • ஷாஜகான்,ரயில் கவிழ்ப்பு மார்க்சிஸ்ட் சதி: மாவோ., குற்றச்சாட்டு

        மேற்கு வங்கத்தில் ரயில் கவிழ்ப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும், மார்க்சிஸ்ட் கட்சியே காரணம் என்றும் மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்.

        இது தொடர்பாக மாவோயிஸ்டு ஆதரவு அமைப்பான போலீஸ் அராஜகத்துக்கு எதிரான மக்கள் கமிட்டி (பிசிபிஏ) ஒருங்கிணைப்பாளர் அசித் மஹதோ கூறியதாவது,ரயில்களைக் குறிவைப்பது எங்கள் நோக்கமல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 4 உள்ளூர் தலைவர்கள் விபத்து நடந்த இடத்துக்கு அருகில் 15 நாள்களுக்கு முன் முகாம்களை நிறுவியுள்ளனர்.
        எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து எங்களைப் பிரிக்கவே இந்த சதித்திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீட்டியுள்ளனர்.

        இதன் மூலம் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியையும் அரசியல்ரீதியாக தனிமைப்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

        இதுபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜங்கல்மகால் பகுதியில் ஊர்வலம் நடத்தப்படும் என்றார்.

        ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும் ரயில் கவிழ்ப்பு சம்பவம் தனக்கு எதிரான அரசியல் சதி என்று சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
        http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=33078     

        எல்லாம் தெரிந்தது போல் பேச வேண்டாம் நீங்கள் சொல்லும் அமைப்பு பொறுப்பேற்றதற்கு ஆதாரம் உண்டா? அரசு பயங்கரவாதப்படையால் 700 கிராமங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன, பல மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அதைப்பற்றி ஷாஜகான் பேசி இருக்கிறீர்களா?
        கலகம் 

        • அப்டிங்களா கலகம்,
          http://www.hindu.com/2010/05/31/stories/2010053160881000.htm
          இந்த லிங்க் என்னா சொல்லுதுன்னு கொஞ்சம் படிச்சு பாருங்களேன்.
          தான் நடத்திய ஒரு விசயத்திற்கே பொறுப்பு ஏற்க முடியாத கோழைகளா
          மாவோயிச தீவிரவாதிகள்? கலகம் பதில் சொல்லுங்கள்.

        • தண்டேவாட பகுதியில் பொதுமக்கள் போன பஸ்ஸை குண்டு வச்சு மாவோயிச தீவிரவாதிகள் காலி பன்னுனாங்களே கலகம்,
          அதையுமா நீங்க மறுக்க போறீங்க? அந்த தாக்குதல்ல பல அப்பாவி மக்களும் செத்தாங்களே. இதுக்கு என்ன பதிலை சொல்ல போறீங்க. பஸ்ல போன மக்களே குண்டு வச்சு செத்துட்டாங்க என்று சொல்ல போறிங்களா கலகம்? இந்த லிங்கையும் பாருங்க
          http://www.ndtv.com/news/india/maoists-behind-train-mishap-some-identified-top-cop-28623.php

        • கலகம்,
          700 கிராமங்களை அழித்த அரசப்படையை சட்டத்தின் முன் நிறுத்தி
          தண்டிக்க வேண்டும். அதுக்கான சட்ட வேலையை பார்த்தா அவங்கல
          பாராட்டலாம். அந்த அயோக்கிய அரசப்படையை சட்டப்படி மரண தண்டனைக்கு கொண்டு போனாலும் சரியான வழிமுறையா இருக்கும். அதை விட்டுட்டு பொதுமக்கள் போற இரயிலையும் பஸ்ஸையும் தாக்குறதும் அதுல அப்பாவி பொதுமக்கள் சாகுறதும் எப்படி நியாயமுங்க?
          அரசு மாவோயிச தீவிரவாதிகளை ஒடுக்குனா அரசை தானே எதிர்க்கணும். எதுக்கு அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யுறாங்க மாவோயிச தீவிரவாதிகள்? இது எந்த ஊரு நியாயமுங்க?

        • //ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும் ரயில் கவிழ்ப்பு சம்பவம் தனக்கு எதிரான அரசியல் சதி என்று சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது//

          நல்லா தூக்குறீங்க மம்தா அக்காவுக்கு கூஜா….

  22. இத்துப்போன சினிமாவுக்குலாம் பக்கம் பக்கமா பதிவு போடுற வினவு மாவோயிச தீவிரவாதிகளை பற்றி ஏன் ஒரு பதிவு கூட போடலை? மாவோயிச தீவிரவாதிகள் எந்த வகையில் நல்லவங்கனு வினவு பதிவுல சொல்லலாமே? நாங்களும் அவங்க எவ்ளோ நல்லவங்கனு தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்ல.

    • முதலில் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்து ரயிலை கவிழ்த்தனர் மாவோயிஸ்டுகள் என்றும் பின்பு தண்டவாள பிளேட்டுகள் மற்றும் கொக்கிகளை அகற்றி ரயிலை கவிழ்த்தனர் மாவோயிஸ்டுகள் என்றும் புளுகியது அரசு. கேள்வி எழுப்புபவர்களுக்கு கூட, குண்டு வெடித்து இரயில் கவிழ்வதற்கும் தண்டவாளங்களை அகற்றுவதன் மூலம் ரயில் கவிழ்வதற்கும் வேறுபாடு தெரியாதவர்களா நமது வல்லுநர்கள் என்று கேட்கத் தோன்றுவதில்லை. மேலும் ரெயிலை கவிழ்த்தது “மாணிக்க புரா லோதா சுளி” என்ற அமைப்புதான் என்றும் உளவுத்துறை கூறியுள்ளது. இருந்தபோதிலும் நமது பத்திரிக்கைகள் இன்னமும் மாவோயிஸ்டுகள் பெயரையே உருபோட்டுக்கொண்டிருக்கின்றன, முன்பெல்லாம் இந்தியாவில் குண்டு வெடித்தவுடன் லஷ்கர் சதி என்று கூறியது போல. இப்பொழுதெல்லாம் நமது இந்திய அரசு, ஓட்டல்களிலும், அதிகமான மக்கள் கூடும் இடங்களில் குண்டு வெடித்தால் பாகிஸ்தான் சதி என்றும், இரயில் கவிழ்ந்தால் மாவோயிஸ்டுகள் சதி என்றும் உடனடியாகக் கூறுவதை வழமையாக்கிக் கொண்டுள்ளது. 

      • கலை,
        நான் சொன்ன மாதிரி சொல்லிடுங்க யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. ரயிலில் போனவங்களே ரயிலை பிடிக்காம கவுத்துட்டாங்க. இதுல மாவோயிச தீவிரவாதிகள் பங்கு எதுவும் இல்லைன்னு சொல்லிட்டா சாப்டர் குளோஸ் ஆயிடும் கலை. ஏன் நீங்க இவ்ளோ கஷ்டப்படுரிங்க விளக்கம் கொடுக்க ? தண்டேவாடா வுக்கு தான் என்ன பதிலை சொல்ல போறிங்கன்னு தெரியலை. வேற நல்ல பதிலா யோசிச்சு வையுங்க கலை.

        • பஜ்ரங்தளின் இசுலாமிய பதிப்பான ஷாஜஹானே 
          இப்படித்தானே அவனும் கோத்ராவ பத்தி பேசுறான்… .. சூடு சுரணை இருந்தா இப்படி ஒரு வாக்கியம் உம்ம வாயில வருமா???

      • எந்த பிரச்சனை ஆனாலும் அது பார்ப்பனர்களின் வேலை , சூது அல்லது முதலாளித்துவம் என்று கூறுவதை நீங்களும் உங்கள் தோழர்களும் வழமையாக கொண்டுள்ளதை போல ……

        • அவை அல்ல என்றால் வேறு என்ன என்று நீங்கள்தான் கூறுங்களேன்

  23. ஷாஜஹான்,
    1] நாம் விவாதிக்கும் இந்த பிரச்சினை, வில்லவனின் கட்டுரையோடு தொடர்பில்லாதது. மேலே கட்டுரையை படித்து விட்டு வரும் வாசகர்கள் பின்னூட்டமிட நமது கருத்து மோதல் தடையாக இருக்க கூடாது என்று மட்டுமே நினைத்தேன். மற்றபடி மாவோயிஸ்ட்கள் குறித்து வினவின் நிலைப்பாடை ஓரளவு அறிந்தவன் என்ற முறையில், ‘வினவு மாவோயிஸ்ட்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியே தீர வேண்டு’ என்ற உங்கள் கோரிக்கையுடன் உடன்பட மறுக்கிறேன்.
    2 ] நீங்கள் அதிகமாக இங்கு குறிப்பிடுவது அரசின் கூற்றுகளைத் தான். அவை எனக்கு வேண்டியதில்லை. PCPA மீது வழக்கு பதிவு செய்தது, மாவோயிஸ்ட்கள் இருவரை கைது செய்தது ஆகியவை பத்திரிககளில் படித்த விஷயங்கள். உங்கள் தராசு தட்டில் மாவோயிஸ்ட்களின் தாக்குதலை மட்டும் வைக்கிறீர்கள். அரசை அதில் நிறுத்த அஞ்சுகிறீர்கள், ஏன்?
    3] மக்கள் எப்போதுமே மாவோயிஸ்ட்கள் குறித்து அஞ்சியதில்லை. போலீசும், அரசும் தான் அவர்கள் எதிரிகள்.
    4] காங்கிரசின் திக் விஜய் சிங், மணி சங்கர் ஐயர் அளவிற்கு கூட சமூகப் பார்வை உங்களிடம் இருக்கிறதா என்று ஐயப் படுகிறேன். மாவோயிச்த்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை அவர்கள் ஆதரிக்கவில்லை. ஈழம் போன்ற பேரழிவுக்கே அது வழிவகுக்கும். வளர்ச்சி திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதன் மூலமாக மாவோயிஸ்ட்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்பது இவர்கள் வாதம். இதன் சாத்தியபபாடு சம்பந்தமாக நேற்று ‘இந்து’ பத்திரிகையில் சந்தன் யாதவ் என்ற காங்கிரஸ் தலைவர் ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். வளர்ச்சி திட்டங்கள் சமூக ஏற்றத்தாழ்வை எந்த அளவும் குறைக்கவில்லை என்பதை உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். [உ.ம] தலித் மக்கள் கிணற்றில் தண்ணீர் எடுக்க செல்ல பாதை வந்திருக்கிறது. ஆனால் கிணற்றில் தண்ணீர் இல்லை என்று குறிப்பிடுகிறார். [கோக், பெப்சிக்கு தாரை வர்க்கப்பட்டிருக்கலாம்.] இந்த ஏற்றத்தாழ்வு புதிய முறைகளில் தொடரவே செய்வதை சுட்டிக் காட்டுகிறார்.
    5] ஆக மாவோயிஸ்ட்கள் பிரச்சினை என்பது இசுலாமிய தீவிரவாதம் போன்ற ஒன்றல்ல. ‘சிமி’யை முடக்கி விடுவது போன்ற எளிமையான ஒன்றல்ல. இந்தியாவில் மாவோயிஸ்ட்கள் தீவிரவாதிகள். பீகாரின் எல்லையை தாண்டினால், நேபாளத்தில் அவர்கள் saviours of democracy. எனவே இங்கு அவர்கள் தீவிரவாதிகள் என்பது ஒரு பார்வை– It’s perception and not reality. வெறுப்பையும், காழ்ப்பையும் ஒதுக்கி வைத்து பார்த்தால் நீங்களே கூட மாவோயிஸ்ட்களை புரிந்து கொள்ளலாம்; வினவு தனியாக கட்டுரை எழுத வேண்டிய அவசியமில்லை.

  24. சுக்தேவ்,
    //மாவோயிஸ்ட்கள் குறித்து வினவின் நிலைப்பாடை ஓரளவு அறிந்தவன் என்ற முறையில், ‘வினவு மாவோயிஸ்ட்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியே தீர வேண்டு’ என்ற உங்கள் கோரிக்கையுடன் உடன்பட மறுக்கிறேன்.// மாவோயிச தீவிரவாதிகள் குறித்த வினவின் நிலையை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் வினவை படிக்கின்ற எல்லோரும் அறிந்திருப்பார்களா? உருப்படாத சினிமாக்குலாம் விமர்சனம் எழுதுற வினவு மாவோயிச தீவிரவாதிகளை பற்றி எழுதுவதற்கு என்ன தடை? வினவு இதைபத்தி கட்டுரை ஒன்றை எழுத வேண்டும் என்ற எனது கோரிக்கை நியாயமானதே.

  25. சுக்தேவ்,
    //மாவோயிஸ்ட்கள் குறித்து வினவின் நிலைப்பாடை ஓரளவு அறிந்தவன் என்ற முறையில், ‘வினவு மாவோயிஸ்ட்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியே தீர வேண்டு’ என்ற உங்கள் கோரிக்கையுடன் உடன்பட மறுக்கிறேன்.// மாவோயிச தீவிரவாதிகளை பற்றி வினவின் நிலை எதுவென்று உங்களுக்கு தெரியும். ஆனால் இங்கு வினவு படிக்க வரும் எல்லோருக்கும் தெரியுமா சுக்தேவ்? உருப்படாத சினிமாவுக்கு பதிவு போடும் வினவு மண்டை பிளக்கும் மாவோயிச தீவிரவாதத்தை பத்தி பதிவு எழுதுவதில் என்ன பிரச்சனை? வினவு இதைபத்தி எழுத வேண்டுமென என்னுடைய கோரிக்கை நியாயமானதே. இதை நீங்களும் வலியுறுத்த வேண்டும்.

  26. சுக்தேவ்,
    //உங்கள் தராசு தட்டில் மாவோயிஸ்ட்களின் தாக்குதலை மட்டும் வைக்கிறீர்கள். அரசை அதில் நிறுத்த அஞ்சுகிறீர்கள், ஏன்?// அரசை நான் எங்கே ஆதரிச்சுருக்கேன் என்று சொல்லுங்கள்? மாவோயிச தீவிரவாதிகளுக்கும் அரசுக்கும் பிரச்சனை என்றால் மாவோயிச தீவிரவாதிகள் அப்பாவிகளை எதுக்கு கொல்லுராங்கனு தான் கேட்குறேன். அரசு அப்பாவி மலைவாழ் மக்களை கொன்னா அதுக்கு பதிலா மாவோயிச தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களை கொல்லணுமா? அரசும் மாவோயிச தீவிரவாதிகளும் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யுறாங்கனு ஒத்துக்கிறீங்களா? அப்போ உங்கள் தராசு தட்டில் அரசும் மாவோயிச தீவிரவாதிகளும் சமமா இல்லைங்களே சுக்தேவ்.

  27. //மக்கள் எப்போதுமே மாவோயிஸ்ட்கள் குறித்து அஞ்சியதில்லை. போலீசும், அரசும் தான் அவர்கள் எதிரிகள்.//
    அப்போ படுகொலையானவங்க எல்லாம் போலிஸ்காரங்களா? யாரும் அப்பாவி மக்கள் இல்லையா?

  28. மக்களை படுகொலைகள் செய்து கொண்டிருக்கின்ற பாவோயிச தீவிரவாதிகளை இராணுவம் கொண்டு தான் ஒடுக்கக் வேண்டும். அதே சமயம் மலைவாழ் மற்றும் ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் அவர்கள் தம்மை பாதுகாப்பாக உணரச் செய்வதன் மூலமே மாவோயிச தீவிரவாதிகளின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். மாவோயிச தீவிரவாதிகள் வேறு அப்பாவி மலைவாழ் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வேறு. அப்பாவி பொது மக்களை கேடயமாக பயன்படுத்தும் மாவோயிச தீவிரவாதிகளை அந்த பொது மக்களிடமிருந்து அப்புரப்படுத்துவத்தின் மூலமே இந்திய அரசு மாவோயிச தீவிரவாதத்தை வெல்ல முடியும்.

  29. இன்றைய நிலையில் அரசுக்கு தேவை தெளிந்த பார்வை. மாவோயிச தீவிரவாதத்தை ஒடுக்க அரசு துணிந்து சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதே சமயம் மாவோயிச தீவிரவாதிகள் பலமாக உள்ள பகுதிகளில் சரியான வளர்ச்சி திட்டங்களையும் மாவோயிச தீவிரவாதிகளால் பொதுமக்களுக்கு எத்தகைய துன்பங்கள் இழைக்கப்படுகின்றன என்பதையும் விரிவாக விளக்குவதன் மூலம் மாவோயிச தீவிரவாதத்தை வெல்ல முடியும். மாவோயிச தீவிரவாதிகள் பொதுவாக கல்வியறிவு இல்லாத பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அந்த பகுதிகளில் பள்ளிக்ககூடங்கள் இருந்தாலும் அதை குண்டு வைத்து தகர்த்து விடுகின்றனர். கேட்டால் இராணுவ முகாமாகி விடும் என்று சமாளிப்பு வேறு. அரசு அந்த மக்களுக்கு குறைந்தபட்ச கல்வியறிவை கொடுத்தாலே போதும். மக்களே மாவோயிச தீவிரவாதிகளை தங்கள் பகுதியை விட்டு துரத்தி விடுவார்கள். மக்கள் வேறு மாவோயிச தீவிரவாதிகள் வேறு.

    • இசுலாமிய தீவிரவாதின்னு சொன்னா தனது பீ.பி எகிறிப் போவது போல மாவோயிச தீவிரவாதின்னு சொன்னா இங்க எல்லோரும் டென்சன் ஆவாங்கன்னு நெனச்சு ஒரு வரிக்கு ஒரு மாவோயிச தீவிரவாதத்தை சேத்திருக்கும் ஷாஜஹானின் அறிவின்மை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை… இருந்தாலும் 4 வரிகளில் மாவோயிச தீவிரவாதி என்பது விடுபட்டிருப்பதால் மீண்டும் அதை சேர்த்து ஒருமுறை எழுதவேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். 

  30. பதிவுக்கு சம்பந்தமான விவாதம் இல்லை தான். ஆனால் அருந்ததி ராய் போன்ற சமூக போராளிகள் மற்றும் தெஹல்கா போன்ற நேர்மையான ஊடகங்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையிலாவது பதிவிடலாமே?.
    வினவு தன்னுடைய நேர்மையை நிலைநாட்டுமா??இல்லை இவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையான “பிழைப்புவாதத்திற்கு” இலக்கணமாவார்களா???

    • அஸ்ஸலாமு அலைக்கும் ஷாநவாஸ் கான்,
      வினவு கிட்ட நேர்மையை எதிர்பார்க்கும் நீங்கள் கண்டிப்பா வினவுக்கு புதிய ஆளாக தான் வர்றீங்கன்னு நினைக்கிறேன். பழைய பதிவுகளை எல்லாம் போய் பாருங்க. குறிப்பா அகமதியா பிரச்சனை, பார்ப்பநீயத்திடம் சரணடைந்த இஸ்லாம் என்ற கட்டுரைகள எல்லாம் பாருங்க. வினவோட கேவலமான முகம் உங்களுக்கு தெரியும். எதையும் படிச்சு தெரிஞ்சுக்குங்க. வினவு (அல்லது கேள்விக்குறி மாதிரி கேவலமான) மாதிரியான பொய்யர்களிடம் கேட்டு தெரியனும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் இஸ்ரேல் காரனுங்க கிட்ட மனிதாபிமானத்தை கத்துகிட்ட கதையா ஆகிடும்.

    • அருந்ததிராய் எழுதிய ஒரு கட்டுரையில் தங்களுக்கு எதிரா இருக்குற பல செய்திகளை பக்காவா எடிட் பண்ணி வெளியிட்டது ம.க.இ.க. இவங்க கிட்ட போய் நேர்மையை எதிர்பார்க்காதிங்க சகோதரரே. அப்புறம் இவங்க ஆர்.எஸ்.எஸ் ஐ எதிர்ர்க்குராங்கனு நெனச்சு பல அப்பாவிங்க ம.க.இ.க வலையில விழுறாங்க. ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனீயமும் , ம.க.இ.க பார்ப்பனீயமும் அடிப்படையில் ஒன்னு தான்னு பாவம் இந்த அப்பாவிகளுக்கு தெரியலை. ஆர்.எஸ்.எஸ் பேய்க்கு பயந்து ம.க.இ.க பிசாசு கிட்ட போய் அடைக்கலம் கேட்ட கதை இவங்களோடது.

  31. அன்பு நண்பர் ஹானவாஸ், முதலில் நீங்கள் இந்த மேலூரு ஷாஜஹானை ஒரு முத்திப்போன மென்டல் என புரிந்து கொள்ளவும்… அந்த ஜந்து சொல்வதை கேட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டாம். இப்போது வட இந்தியாவில் மாவோயிஸ் பயங்கரவாதம் என்று பத்திரிக்கைகள் எழுதும் விசயங்களை பற்றி வினவில் ஒன்றல்ல பல படைப்புகள் வந்துள்ளன அதன் தொடுப்பு https://www.vinavu.com/category/operation-green-hunt/ 
    ஆத்திரத்தால் அறிவிழந்த ஷாஜூவுக்கு அது தெரியாமல் போனது ஆச்சரியமில்லை. 

  32. ஷாஜூ என் கருத்தை கேட்டீங்கல்ல இதுதான் அது…
    பொதுமக்களை கொல்வதை பொருத்தவரை இந்து தீவிரவாதி இசுலாமிய தீவிரவாதிக்கு எதிராய் என்ன மதிப்பீடு வைத்திருக்கிறேனோ அதுதான் மற்றவர்களுக்கும். மாவோயிஸ்டுகள்தான் இந்த பொதுமக்களின் உயிரிழப்புக்கு காரணம் என்றால் அது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதுதான். 

    அதே நேரத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளை குண்டுவைத்துகொல்வதையோ தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதையோ  எப்படி தேசப்பற்றாக பார்க்கிறேனோ அதே போலத்தான் மாவோயிஸ்டுகளின் போலீசு இராணுவத்தின் மீதான தாக்குதலையும் பார்க்கிறேன். 

    இந்த குறிப்பிட்ட சம்பவம் ஆர்எஸ்எஸ் காரன் குண்டு வைத்தாலும் முசுலீமை கைகாட்டும் நமது நேர்மையான அரசு மற்றும் ஊடகத்தின் மற்றொரு சதியாகத்தான் தெரிகிறது. மாவோயிஸ்டுகள், pcpa ஆகியோர் மறுத்திருக்கும் வேளையிலும், அரசின் முரண்பாடான கருத்துக்களாலும் இந்த சந்தேகம் வலுப்பெற்றிருக்கிறது.  உண்மை தெஹல்கா போன்ற நாளேடுகளின் உதவியுடன் வெளிச்சத்திற்கு வரும் போதுதான் தெரியும். 

    மாவோயிஸ் தீவிரவாதம் என்று நீங்கள் புலம்பும் விசயங்களை பற்றி வினவில் ஒன்றல்ல பல படைப்புகள் வந்துள்ளன அதன் தொடுப்பு https://www.vinavu.com/category/operation-green-hunt/ ஆத்திரத்தால் அறிவிழந்த உங்களுக்கு அது தெரியாமல் போனது ஆச்சரியமில்லை.

  33. http://www.icawpi.org/en/peoples-resistance/statements/467-both-the-cpi-maoist-and-pcapa-have-denied-their-involvement-in-the-friday-train-derailment

    Both the CPI (Maoist) and PCAPA have denied their involvement in the Friday train derailment
    E-mail Print PDF

    by G. N. Saibaba

    Yesterday’s( 28 May 2010) Gnaneshwari Express and a goods train tragedy near Kharagpur in West Bengal in which 80 people were killed and 200 injured was attributed to CPI(Maoist) and Peoples Committee Against Police Atrocities (PCAPA) by the media. The media unscrupulously played false news stories blaming CPI (Maoist) and Peoples Committee for two days. Some political parties like Trinomial Congress and the ruling CPI(Marxist) also blamed these organisations without any verification. Significantly Union Home Minister P. Chidambaram has declined to attribute the blame on the CPI (Maoist) and also announced that there was no evidence of any bomb blast in the incident.

    The Union Home Minister has ordered an enquiry to find out any possibility of sabotage. During the day the leaders of CPI (Maoist) clarified through a long statement that they were not responsible for the train tragedy and condemned any possible sabotage work if any force involved behind the incident. They have also expressed their condolences for the families of deceased. The PCAPA also clarified that their activists are not involved in this incident. They suspected the ruling CPI(Marxist) to have been involved in the sabotage desperately trying to tilt the public opinion against the fighting forces.

    Purposefully the media did not cover the statement issued by the CPI (Maoist) while playing the false stories and commentaries blaming the CPI (Maoist) for the incident.

    Some all India newspapers like The Hindu wrote editorials blaming the CPI (Maoist) for the incident. Many other newspapers wrote major articles decrying the CPI (Maoist) as terrorist attributing the blame on them. Now when the clarifications come from CPI (Maoist) and PCAPA, will these media houses withdraw their false stories and give the facts to the people? Will they regret for propagating the false news?

    These two days of false propaganda is made with a malicious intension of maligning the CPI (Maoist) and PCAPA.

    I attach here news reports covering the statement of clarification from the CPI (Maoist) and PCAPA by a section of newspapers in West Bengal. The same newspaper didn’t cover it in their editions coming from all other cities.

    ———————————————————————–
    Statement on Train(Jnaneswari Express) accident by the Maoists

    The following report was published in the Bengali Ananda Bazar Patrike dt. 29 May 2010, page 7, Kolkata edition. It bore the caption ‘Denying allegations about their involvement, the Maoists demand enquiry’ and written by Prasun Acharyya. The statement was issued in the name of Aakash, the Maoist WB State Committee leader.

    On Friday night, the following statement was issued on behalf of the CPI(Maoist) WB State Committee. “We are in no way involved in this incident. We did not carry out any explosion in the railway line. Killing innocent people by sabotaging railway line is not our agenda. When we carry out any action, there are always some specific reasons behind. We also acknowledge responsibility for that. Whenever we commit mistakes we admit it. However, responsibility is being placed on us now for an incident in which we are in no way involved”. Accusing the CPI(Marxist) of putting blame on them the Maoists said “The CPI(M) is haunted by the prospect of a landslide defeat in the coming municipal elections. Thus they have opted for a strategy of killing two birds with a single stone. On the one hand, attempts are being made to brand us as terrorists and thus isolate us from the people. On the other hand, they are seeking to prove that Mamata Banerjee is completely misfit as the railway minister”. The Maoists did not directly state that the CPI(M) was involved in the incident. But what they said is: “In the coming days also such unfortunate incidents can take place in order to malign Mamata and the Maoists”. The WB State Committee of the Maoists strongly condemned this act and stated: “This act deserves unequivocal condemnation. We are extending our sympathies to the members of the bereaved families. We also wish the speedy recovery of those who are injured”.

    Meanwhile, the People’s Committee Against Police Atrocities has accused the CPI(M) of being involved in it. In reply to a query, the Maoists said: “We are not accountable for whatever one might say. We are not saying that the CPI(M) was involved in it. Let the railways make enquiry. The members of our party have made investigation after the incident. It was the removal of fish plates that led to the accident. There was no line for one metre stretch, side-clips were open. That led to derailment. Let the railways enquiry why side clips were open at the junction points of rail lines. No explosion took place at the site. Had there been any explosion, stones would have broken up and thrown out. But nothing like it happened”.

    The Maoists said that whenever any untoward incident takes place along the railway route, the tendency is always to accuse them for such incidents. “Three days back, eleven bogies of the New Delhi -Gwahati Rajdhani Express were derailed near Naogachhia Station in Bihar. It was not a major accident. However, initially the blame was put on us. Later on, it was found that it was the fault of the railways that led to such a mishap”.

    Even though the Maoists claim not to have directed any attack on the innocent people, why did they carry put land mine explosion in a passenger bus at Dantewada? The statement reads follows: “Special Pollce Officers(SPOs) and the CRPF were travelling in that bus. We have told people in Chhattisgarh time and again not to travel in the same bus along with the police and CRPF personnel. But it was the state government which had forced the common people to travel along with the police in the same bus. That is why common people also died along with the police”.

    The Maoists accepted responsibility for the Dantewada incident; but not for this mishap. “We are not involved in the Sardiha incident, so we take no responsibility of it”, the Maoist statement said.

    The Hindustan Times dt. 29 May 2010 carried only a brief statement from the Maoists: “Killing innocent civilians is not on our agenda. We have no links with this tragic incident, and we sympathise with the families of the deceased and the injured”. Akash, Member, CPI(Maoist) State Committee, West Bengal.

    ‘Not We, CPI(M) is to blame’

    Both the CPI(Maoist) and PCAPA have denied their involvement in the Friday train derailment of the Maharashtra-bound Gyaneshwar Express, and condemned it as an act of criminal conspiracy on part of the ruling CPI(M), as reported by the Bengali daily Sangbad Pratidin, 29 May).

    The statement by CPI(Maoist) state committee secretary, Kanchan, says, “This incident is against the line practised by our Party. We are not involved in it. CPI(M) and Police have jointly conspired to effect it.”

    Confirming it, Com Khokan representing the State Committee leader Akash of CPI(Maoist) said, “We are not at all involved in this incident. We do not kill innocent people. Fearing losing its rule, this is a ploy by CPI(M) to kill two birds with one stone. To paint the Maoists as terrorists and to declare the Railway minister, Mamata Banerjee as incapable. Even before this when the Rajdhani met with an accident, the State government pointed the finger on us. Our State Committee fully condemns this act. We share the pain with the families of the deceased and stand by them in this hour of grief.”

    The PCAPA has also denied its involvement with the incident, and declared it as an act of sabotage by the ruling CPI(M). Its leader, Asit Mahato said, “We are not involved with this incident. CPI(M) is directly involved in it, and writing posters in our name and planting the same on the site, is trying to put the blame on us.”

    Meanwhile the student union, USDF, leader Soumya Mandal also said, “Whether this incident is a handiwork of the CPI(M) or the Maoists, we completely condemn it. We offer our condolences to the families of the deceased and demand a comprehensive inquiry into the incident.”

  34. கோவி. கண்ணன் என்று ஒருத்தங்கீறான் அவன் மேல உள்ளதுக்கு பதில் சொல்றானான்னு பாக்கலாம்.

  35. வழக்கமா பிரஷர் ஏறிப்போய் எதிர் கருத்து சொல்லுவரங்கவளை என்னடா இன்னும் கேள்விக்குறி வந்து திட்டலையே நேற்று யோசிச்சுகிட்டு இருந்தேன். கேள்விக்குறி வந்தாச்சு. கேள்விக்கு பதில் சொல்லாம கேள்வி கேட்டவங்களை திட்டுவது. இதெல்லாம் கண்டிப்பா கீழ்பாக்கம் போறதுக்கான அறிகுறிதான் கேள்விக்குறி. அதெல்லாம் சரி. ஒரு முக்கியமான விஷயம். அதெப்படி “கேள்விக்குறியும் வினவும் ஒரே சமயத்துல ஆப்சென்ட் ஆகுறாங்க. ஒரே சமயத்துல பிரசன்ட் ஆகுறாங்க.”. இது தான் அவதார விளையாட்டோ?

  36. ரயில்லையும் பஸ்லையும் குண்டு வச்சு பொதுமக்களை படுகொலை செய்யுற மாவோயிச தீவிரவாதிகளை பற்றி ஏன் வினவு இப்போ எழுதலைன்னு கேட்டா அதான் ஏற்கெனவே எழுதிட்டோமேனு பதில் சொல்லுது வினவு. ஆர்.எஸ்.எஸ் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதத்தை பற்றிக் கூட தான் முன்னாடியே பல பதிவு போட்ட்ருக்கு வினவு. ஆனால் புதுசா ஒரு இன்சிடென்ட் நடந்தா உடனே கீபோர்டை தூக்கிட்டு பெரிய்ய்ய பதிவா வினவு போடுதே அது ஏன்? எல்லா தீவிரவாதத்திலும் அப்பாவி மக்கள் தானே சாவுறாங்க. அதுல என்னய்யா மாவோயிச தீவிரவாதம் மட்டும் புனிதமான ஒண்ணா? அதைப் பற்றி மட்டும் நாங்க முனாஆஆஅடியெ எழுதிட்டோம்னு சொத்தை பதிலை கொடுக்குறிங்க.முடிஞ்சா நக்சல்களோட உண்மை முகத்தை பற்றி கட்டுரை எழுதுங்க. இல்லேனா மக்கள் நலன் என்று உட்டாலக்கடி வேலை காட்டாம அடங்கி இருக்கட்டும் வினவு கும்பல்.

  37. //மாவோயிஸ்டுகள்தான் இந்த பொதுமக்களின் உயிரிழப்புக்கு காரணம் என்றால் அது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதுதான். // இன்னும் விளங்காதது மாதிரியே ஷோ காட்டும் கேள்விக்குறியே, தண்டேவாடா இடத்துல பொதுமக்கள் போன பஸ்ல வெடி குண்டு வச்சு மக்களை கொன்னது மாவோயிச தீவிரவாதிகள் தான். இவர் கண்டிக்கிரார்ராம். அந்த அயோக்கியத்தனத்தை செஞ்ச நாதாரிங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம். அதை முதல்ல சொல்லு. ரெண்டு கண்ணாடி போட்டு எல்லா விசயத்தையும் பார்க்காதே. இரட்டை வேஷம் கட்டாதே. என்னைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிங்களும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிங்களும் மாவோயிச தீவிரவாதிங்களும் ஒழிக்கப்பட வேண்டியவங்களே. இந்த மூணு நாதாரிங்களை ஆதரிக்குற எந்த நாதாரியையும் நான் மதிக்கவும் செய்யுறதில்ல.

  38. ஜோவ் ஷாஜகான் !
    உன் போன்ற மென்டல்களை நிற்க வைத்து சுரண்டுகிரானே கருணாநிதி !அதி முடியுமென்றால் தட்டி கேள்.
    ” என்னைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிங்களும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிங்களும் மாவோயிச தீவிரவாதிங்களும் ஒழிக்கப்பட வேண்டியவங்களே.” என்ன தத்துவம் ! அப்போ அல்கைடா ஜனநாயக வாதிகளா ? அமெரிக்காவில் உன் போன்று பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்ன நடக்குது தெரியமா ?

  39. அல்லாவின் ஆடுகள் ஜனநாயகத்தை பற்றி பேச கூடாது .முடியுமானால் அல்லாவின் கார்டூன் படத்தை ஏதாவது ஒரு இஸ்லாமிய வெப்சைட் இல் வெளியுடு பார்க்கலாம். அப்போ தெரியும் நீ பேசுகிற உண்மை ,நீதி ,ஜனநாயகம் எல்லாம் .
    ஷாஜகான் ! இது உனக்கு ,நீ பேசும் வீர வசனங்களை பேசும் உன் வாய்க்கு விட பட்டிருக்கும் சவால். முடியும் என்றால் செய்து காட்டு .இல்லை என்றால் அடக்கம் காட்டு .அல்லாவின் படத்தை வெளியிட்டு நீ ஒரு ஜனநாயக வாதி என்று நிலை நாட்டு.முடியுமா ! முடியாதா ?
    எங்கே உன் வீரத்தை பாப்போம் !!!!!!

  40. வீரண்ணே இதயச்சந்திரன்:///////அல்லாவின் ஆடுகள் ஜனநாயகத்தை பற்றி பேச கூடாது .முடியுமானால் அல்லாவின் கார்டூன் படத்தை ஏதாவது ஒரு இஸ்லாமிய வெப்சைட் இல் வெளியுடு பார்க்கலாம். அப்போ தெரியும் நீ பேசுகிற உண்மை ,நீதி ,ஜனநாயகம் எல்லாம் .ஷாஜகான் ! இது உனக்கு ,நீ பேசும் வீர வசனங்களை பேசும் உன் வாய்க்கு விட பட்டிருக்கும் சவால். முடியும் என்றால் செய்து காட்டு .இல்லை என்றால் அடக்கம் காட்டு .அல்லாவின் படத்தை வெளியிட்டு நீ ஒரு ஜனநாயக வாதி என்று நிலை நாட்டு.முடியுமா ! முடியாதா ?எங்கே உன் வீரத்தை பாப்போம் !!!!!! அல்லாவின் ஆடுகள் ஜனநாயகம் பேசப்பிடாது என்ன ஒரு ஸ்ட்ராங்கான கட்டளை நான் நேனக்கீரேன் நீ ஜனநாயக புலியாக இருப்பன்னு ஆனா நீ சொன்ன அடுத்த வார்த்த நீ கேனத்து பண்ணி ஸாரி கேனத்து தவள என்பதை நிருபித்துவிட்டாய் இறைவனுக்கு உருவமில்லை அப்புடின்னு சொல்லிகினு கிரோம் நீ இன்னான்ட உருவமில்லாத இறைவனுக்கு கார்டூன் போட சொல்லிகினுகீறயே கயிதே ///அல்லாவின் படத்தை வெளியிட்டு நீ ஒரு ஜனநாயக வாதி என்று நிலை நாட்டு.முடியுமா ! முடியாதா ? ///ஷாஜஹான் இன்ன அத்தினி முச்லீமு செந்துகீனு ட்ரை பன்னினாலும் நடுக்காது இந்த மேட்டருல நாங்க அல்லரும் தோத்துட்டோம் போ எனா எங்க இறைவனுக்கு உருவம் கடியதுப்பா இன்னா அறுக்க போற ஆடு மாதிரி முழிஞ்சுக்கினு கிற மொய்யாலுமே இது ஒ ஆத்தா மேல சத்தியமா  

    • ஹைதர் சபாசு, இதுதான் சரியான பதில்… மாற்று மதத்தை விமரிசனம் பண்ண கொஞ்சமாவது விவரம் வேண்டாமா??? பலான பார்ட்டிக்கு பொது அறிவு தம்தூண்டுக்கு கூட இல்லயே??? 

      @@அமெரிக்காவில் உன் போன்று பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்ன நடக்குது தெரியமா ? @@

      அந்த அமெரிக்கா காரனுக்கு இராக்குல என்ன நடக்குது தெரியுமா???

  41. சரி தான் ! முகம்மது என்பதற்ற்கு பதில் அல்லா விழுந்து விட்டது !அல்லாவிற்கு உருவம் இல்லை என்கிற விஞ்ஜான பூர்வம்மான் விடயத்தை புரிய வைத்ததற்கு முதலில் நன்றி.
    அல்லாவிற்கு தான் உருவமில்லை ஒப்பு கொள்கிறேன் மாவோ சொன்னது போலே சுய விமர்சனம் செய்கிறேன் !!
    ” கேள்விக்குறி ஐய்யா” நீங்கள் சிறந்த அறிவு ஜீவியாக எழுதுகிறீகள் .நீங்களாவது ஹைதர் அலி க்கு உதவி செய்து வெளிஇடுங்கள்.
    தயவு செய்து முகமட்டின் படத்தை வெளியிடுங்கள்.அதை பார்த்தால் ஆவது சொர்க்கத்துக்கு இலகுவாவ்க வழி கிடைக்கலாம்.
    சும்மா ஆவேஷ படக்கூடாது.ஆண்ன்மை இருந்தால் வெளியிடு.!!!!
    “நீ கேனத்து பண்ணி ஸாரி கேனத்து தவள”… அப்பப்பா ..என்ன வேகம் ! கிணற்று தவளைகளுக்கு இந்த அல்லாவின் அற்புத உலகத்தை காட்டுங்கள்.
    அந்த படத்துக்காக பலர் ஆவலுடன் காத்திருக்கிறோம்.வெளியிடும் அந்த வெப் சைட் முகவரியையும் தாருங்கள். பிளீஸ் !!!!!

    • மறுபடியும் அதே தப்பு, அல்லாவுக்கு மட்டுமல்ல முகம்மதையும் உருவ வழிபாடு செய்யக்கூடாது என்பதும் அந்த மத நம்பிக்கையை சார்ந்த ஒன்றே. உருவ வழிபாட்டு மரபை உடைத்த மதம் என்பதால் அந்தளவில் அது முற்போக்கானது. 

      இசுலாத்தை விமர்சனம் பண்ணனுமின்னா அதுக்கு ஆர்எஸ்எஸ் அம்பி பாணி ஒத்து வராது… பிளீஸ் விசிட் http://senkodi.wordpress.com அது விமர்சனம் விவாதம்

      ஒகே

        

    • இதயச்சந்திரன் ///சரி தான் ! முகம்மது என்பதற்ற்கு பதில் அல்லா விழுந்து விட்டது !அல்லாவிற்கு உருவம் இல்லை என்கிற விஞ்ஜான பூர்வம்மான் விடயத்தை புரிய வைத்ததற்கு முதலில் நன்றி///இருக்கட்டும் இருக்கட்டும் /////அல்லாவிற்கு தான் உருவமில்லை ஒப்பு கொள்கிறேன் மாவோ சொன்னது போலே சுய விமர்சனம் செய்கிறேன் !!//////>>>ஏன் மாவோ சுய விமர்சனம் செய்யாட்டி நீங்கள செய்யமாட்டீகளா இதுகூட மாவோ சொல்லித்தான் ஒங்களுக்கு தெரியனுமா இல்ல மாவோ பத்தி எனக்குதெரியும் எனது அறிவை பார் என்கிற விளம்பரமா ////” கேள்விக்குறி ஐய்யா” நீங்கள் சிறந்த அறிவு ஜீவியாக எழுதுகிறீகள் .நீங்களாவது ஹைதர் அலி க்கு உதவி செய்து வெளிஇடுங்கள்////>>>நீங்க சரியான திசையில் விவாதம் பன்னியிருந்த கண்டிப்பாக கேள்விக்குறி ஒனக்கு ஒதவியிருப்பார் ///தயவு செய்து முகமட்டின் படத்தை வெளியிடுங்கள்.அதை பார்த்தால் ஆவது சொர்க்கத்துக்கு இலகுவாவ்க வழி கிடைக்கலாம்..////>>> மறுபடியும் மிஸ்டேக் முஹம்மதுக்கு உருவப்படம் இல்லை அவர் அதை தடுத்துவிட்டார் தீர்க்கதர்சி இயேசுக்கு அம்மக்கள் ஒவியம் வரைந்து காப்போக்கில் அவரை வணங்கியது போல தன்னுடைய உருவப்படத்தையும் வணங்கிவிடுவார்கள் என்ற முன்னேச்சரிக்கை நடவடிக்கை அது சாத்தியமாக முஹம்மது நபிக்கி உருவப்படமில்லப்பா ////சும்மா ஆவேஷ படக்கூடாது.ஆண்ன்மை இருந்தால் வெளியிடு.!!!!////>>> அய்யோ அய்யோ மறுபடிக்குமா இந்த விஷயத்துல எந்த முசுலீமும் ஆண்மையை நிருபிக்க முடியாது எனா அவருக்கும் உருபடமில்லை இப்பவும் நாங்க தோத்துட்டம் /////“நீ கேனத்து பண்ணி ஸாரி கேனத்து தவள”… அப்பப்பா ..என்ன வேகம் !///// அல்லாஹ்வின் ஆடு நீ ஜனநாயகம் பேசப்பிடாது ஆண்மை இருந்தால் இது போன்று நீங்க எழுதுனது அப்பப்பா என்ன ஒரு சந்தம் இவ்வளவு பவ்யியமாக ஒங்கள தவிர வேறு யாரல் எழுத முடியும் 
       

  42. மதத்தில் முற்போக்கானது எது என்று தெரியாமலா கார்ல் மார்க்ஸ் அபின் என்றார்.சர்சவதியை அம்மனமாக்கிவிட்டார் என்றுதானே அம்பிகள் குசைனை கண்டித்தார்கள்.
    ஸ்டாலின் ஏன் சர்ச்சுகளை மூடினார் ,மாவோ புத்தமதத்தை ஏற்கவில்லை .
    கேள்வி குறி சும்மா சப்பைகட்டு கட்ட வேண்டாம் .முஸ்லிம்கள் சிறுபான்மையினர் ஒடுக்கபடுகிரார்கள் அவர்களுக்காக குரல் கொடுக்கவேண்டியதே .வரவேற்கின்றோம்.ஆனால் மாவோயிஸ்டுக்களை
    சகட்டுமேனிக்கு தாக்குவதை ஏற்கமுடியாது.
    எல்லாவற்றையும் சந்தேகி என்றார் மார்க்ஸ்.கிறிஸ்தவ மதத்தை பின்னி எடுத்தார்கள் ஐரோப்பிய பொதுவுடைமைவாதிகள்.
    பொதுவுடைமைவாதிகள் என்று சொல்லி கொள்பவர்கள் ஏன் முஸ்லிம்களுக்கு பயபட வேண்டும் ? இந்து மத வெறியை ,பாரபநீயத்தை எல்லாம் நார்நாராக கிழிக்கிறீர்கள் ,செய்ய வேண்டியதே.
    வரலாற்றில் பிந்திய மதம் அதாவது latest ( fashion ) என்று சலுகை காட்டுகிறீர்களோ.

    • இதயச்சந்திரன் ////முஸ்லிம்கள் சிறுபான்மையினர் ஒடுக்கபடுகிரார்கள் அவர்களுக்காக குரல் கொடுக்கவேண்டியதே .வரவேற்கின்றோம்.ஆனால் மாவோயிஸ்டுக்களைசகட்டுமேனிக்கு தாக்குவதை ஏற்கமுடியாது.////>>>ஒங்க யாரு ஏற்க சொன்னது சரியான திசையில் விவாதம் செய்யுங்கள் மாவோயிஸ்டுக்களை போல ////எல்லாவற்றையும் சந்தேகி என்றார் மார்க்ஸ்.கிறிஸ்தவ மதத்தை பின்னி எடுத்தார்கள் ஐரோப்பிய பொதுவுடைமைவாதிகள்////>>> இங்கே மட்டும் பின்னி எடுக்கமா சப்பிட்டு விட்டு துங்கிட்ட இருக்காங்க கேள்விக்குறி ஒரு லிங்க் கொடுத்தார்ள அதுல போயி பாருங்க முடிஞ்ச அதுல ஒங்க பங்களிப்ப செய்யுங்க ////பொதுவுடைமைவாதிகள் என்று சொல்லி கொள்பவர்கள் ஏன் முஸ்லிம்களுக்கு பயபட வேண்டும் ? இந்து மத வெறியை ,பாரபநீயத்தை எல்லாம் நார்நாராக கிழிக்கிறீர்கள் ,செய்ய வேண்டியதே. ./////>>>இங்கே யாரும் யாருக்கும் பயப்படுவதில்லை ////வரலாற்றில் பிந்திய மதம் அதாவது latest ( fashion ) என்று சலுகை காட்டுகிறீர்களோ////>>> அண்ணே நீங்க கமொடி கிமொடி பன்னலையே வினவுடைய இஸ்லாம் சம்பந்தமான இடுகைகளை படித்து பாருங்கள் புரியும் அப்புறம் இந்த இடுகை திருப்பூர் தொழிலாளிகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட இடுகை இங்கே நாம ஒவராக மதத்த பத்தி சண்டை போடம இருந்து வினவு தோழர்களுக்கு ஒதவலாம் இன்ன சொல்லுறீங்க 

  43. ஹைதர் அலி!
    முகமட்டின் படமென்று ஒன்று வெளிவந்துள்ளதே ,அது என்னதான் படம் என்று அறிய கூடாதோ ? அதை ஏன் தடை பண்ண வேண்டும் ? என்பது அடுத்த கேள்வி ! அவர்களின் நம்பிக்கை .புனிதம் கெட்டு விடும் அல்லவா ?
    அப்பப்பா என்ன அக்கறை.!?
    “கிறுக்கிய புத்தகங்களுடன்” விவாதித்து நல்லாத்தான் புரட்சியை கொண்டு வரபோகிரீர்கள். பார்க்கலாம்.
    வினவு உடன் ஒவராக மதத்த பத்தி சண்டை போட நான் வரவில்லை.

  44. என்ன பெரிய அதிசயம் நடந்துள்ளது .திருவாளர் சிவசேகரம் “பார்ப்பனர் ” என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளா.அப்படி எல்லாம் அதாவது பார்பனர் என்று எழுதுவது தவறு என்றும் காலச்சுவட்டில் எழுதிய நினைவுக்கு வருகிறது.

  45. அய்யா வில்லவன்,

    உங்கள் முட்டு சந்து தெருவில் இன்னும் கொஞ்சம் நல்லா பாரும்…
    வீடு தாண்டிய காதலும் நிறைய இருக்கும். குடும்பத்தை மறந்து விட்டு ஓடி வந்த ஆணும், குடும்பத்தை மறந்து விட்டு ஓடி வந்த பெண்ணும் சேர்ந்து வாழும் எண்ணிக்கை இங்குமட்டுமே அதிகம் எனபது உங்கள் காதல் கணக்குகளின் உச்சகட்ட கொடுமை. வந்தாரை வால வைக்கும் தமிழகம் என்பதற்கு உதாரணம் எங்கள் திருப்பூர். எப்படி வந்தாலும் வாழ வைக்கும்.

    — காவல்துறை அறிவிப்பு.
    க்ரைம் குற்றங்கள் சென்னை அடுத்து திருப்பூர் மட்டுமே அதிகம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க