நர்சிம்மைக் கண்டித்து வினவு தளத்தில் வெளிவந்த பதிவை பைத்தியக்காரன் என்ற பெயரில் எழுதும் சிவராமன் தான் எழுதியிருக்கிறார் என்றும், அவர் வினவுக்கு எழுதி அனுப்பிய பிரதியை எடிட் செய்து வெளியிட்டிருப்பதாகவும், இதையும் வினவில் வந்துள்ள கட்டுரையையும் வாசகர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறி சுகுணா திவாகர் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
“நண்பனைப் போல எப்படி நடிக்கிறீர்கள் சிவராமன்” என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள பதிவில், வினவு தளத்தையும் விமரிசித்திருக்கிறார். ஆணாதிக்கத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் நடந்த அறமற்ற செயல் குறித்து எழுதுவதற்காகத்தான் இந்தப் பதிவு என்றும் பதிவுக்கான நோக்கத்தை குறிப்பிட்டிருக்கிறார். பச்சைப் பார்ப்பனியத்தைக் கடைப்பிடித்து வரும் ஒருவரிடம் (சிவராமனிடம்) பார்ப்பன எதிர்ப்பு குறித்து பதிவு வாங்கி அதையும் வினவு பெயரில் வெளியிட வெட்கமாக இல்லையா என்றும் கேட்டிருக்கிறார்.
சிவராமன் எழுதிய பதிவு தனக்கு எப்படி எப்படி கிடைத்தது என்பது தேவையில்லை என்றும், தேவையானால் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறவேண்டாம். அதை நாங்களே கூறுகிறோம்.
இந்த விவகாரம் குறித்து எழுத வேண்டும் என்று நாங்கள் எண்ணும் பொழுதே பல வலையுலக நண்பர்களும் தொலைபேசியில் அழைத்து எழுதச்சொல்லி வலியுறுத்தினார்கள். நாங்களும் பலரைத் தொடர்பு கொண்டோம். அவர்களில் தோழர் பைத்தியக்காரனும் ஒருவர். நர்சிம் உள்ளிட்ட நபர்களைப் பற்றி தனக்குத் தெரியும் என்றும் சொல்லப்போனால் நர்சிம் தனது நண்பர் என்றும் அவர் தனக்கு கடனுதவி செய்திருக்கிறார் என்றும் இருந்தபோதிலும், இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டித்தாக வேண்டும் என்பதால், தான் ஒரு பதிவு எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அதை வினவில் வெளியிட்டால் பரவலாகப் போய்ச்சேரும் என்பதால், அதனைக் கோரிப்பெற்றோம். அதை திருத்தங்கள், சேர்க்கைகள் செய்வதற்கு அவர் ஒப்புதல் தந்தார்.
தேவையற்றவை, பொருத்தமற்றவை என்று நாங்கள் கருதியவற்றை எடிட் செய்தோம். அவர் அனுப்பிய பதிவின் அளவு சுமார் 1945 சொற்கள். அதில் அவர் சுகுணா திவாகர் பற்றி எழுதியுள்ள பகுதி உட்பட பலவற்றை எடிட் செய்திருக்கறோம். வேறு சிலர் தந்த தகவல்களையும் சேர்த்திருக்கிறோம். அந்தக் கட்டுரைக்கான தரவுகளைப் பலர் கொடுத்திருந்தாலும் கட்டுரை வினவினுடையதுதான். இவ்வாறு வினவு வெளியிட்டுள்ள கட்டுரையின் அளவு 3456 சொற்கள். எனவே இரண்டும் ஒன்றுதான் என்று கூறுவது உண்மையல்ல.
மேற்கூறிய பதிவை தனது மின் அஞ்சல் முகவரியிலிருந்துதான் சிவராமன் எங்களுக்கு அனுப்பியிருந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு தனது மின் அஞ்சல் முகவரியின் பாஸ் வேர்டை சிவராமன் கொடுத்திருக்கிறார். தற்போது வினவில் இந்தக் கட்டுரை வெளிவந்தவுடன் சிவராமனுக்கு அந்த நண்பர் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறார். வாசகம் இதுதான். “உங்களுடனான நட்பை இத்துடன் முறித்துக் கொள்கிறேன். நரசிம்முக்கு நீங்கள் செய்தது பச்சைத் துரோகம்”.
இப்படியாக சிவராமனின் “துரோகத்தை” இடித்துரைத்த நண்பர், மின் அஞ்சல் பெட்டியிலிருந்து அவர் எழுதி வினவுக்கு அனுப்பியிருந்த கட்டுரையை சுகுணா திவாகருக்கு கொடுத்து, நரசிம்மைக் காப்பாற்றுவதற்காக சுகுணா திவாகரைத் தட்டி விட்டிருக்கிறார். தன்னைப் பற்றி சிவராமன் எழுதியிருப்பதைப் படித்தவுடனே அறம் கொன்ற சீற்றம் அவரை ஆட்கொண்டு விட்டதா, அல்லது நர்சிம்மை எழுதியதால் வந்த கோபமா, அவருடைய உள் விவகாரம் நமக்குத் தெரியாது. மாபெரும் ஊழலைக் கண்டு பிடித்து வினவை அம்பலப்படுத்தி விட்டதைப் போல எழுதியிருக்கிறார் சுகுணா திவாகர்.
அந்த நண்பர், சிவராமனின் கட்டுரையை சுகுணா திவாகருக்கு கொடுத்ததன் நோக்கம் நர்சிம்மை காப்பாற்றுவது. நர்சிம்முக்கு எதிராக எழுதியவர்களை காரெக்டர் அசாசினேசன் செய்வது அதற்கு ஒரு சிறந்த வழி. அந்த வேலையை தான் செய்வதை விட ‘பெண் விடுதலைப் போராளி’யாகிய சுகுணா திவாகர் செய்வது பொருத்தம் என்று கருதி இந்த அடியாள் வேலையை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார். சுகுணா திவாகர் ஒப்படைக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்து விட்டார்.
சந்தன முல்லையைப் பற்றி நர்சிம் எழுதி வெளியிட்டது முதன்மையான பிரச்சினை இல்லை. தன்னைப் பற்றி சிவராமன் எழுதி வெளியிடாத தகவல்தான் (அதாவது வினவால் எடிட் செய்யப்பட்டது) அவருக்கு முக்கியப் பிரச்சினை. அதில் சிவராமன் சுகுணா திவாகரைப் பற்றி கூறியது உண்மையா, பொய்யா என்பது பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை. ஏனென்றால் அது வினவினால் எடிட் செய்யப்பட்டுவிட்டது. வெளியிடப்படாத ஒரு விசயம்,
தனிப்பட்ட முறையில் இரு நபர்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்படுபவை ஆயிரம் இருக்கும். அவை சரியாகவோ தவறாகவோ மிகையாகவோ இருக்கலாம். எழுத்தில் என்ன வெளிவந்தது என்பதுதான் வாசகனைச் சென்று அடைந்திருப்பது. அதுதான் வெளியிடப்பட்ட கருத்து. ஒரு கட்டுரையின் மூலத்தைக் கூட ஒரு எழுத்தாளன் தானே எடிட் செய்துதான் வெளியிடுகிறான். “இதோ பார் எடிட் செய்யப்படாத மூலக்கட்டுரை” என்று எந்த யோக்கியனும் புலனாய்வு செய்து வெளியிடுவதில்லை. அதனை எந்த வாசகனும் மதிப்பதும் இல்லை.
சுகுணா திவாகர் என்ன சொல்ல வருகிறார்? தன்னைப் பற்றி சிவராமன் சொன்னது பொய் என்று கூரை மீது ஏறி எதற்கு கூவுகிறார்? சுகுணா திவாகர் கூறுவது போல சிவராமன் தனிப்பட்ட வாழ்க்கையில் பார்ப்பனியத்தை ‘கைவிடாத’ நபராகவே இருக்கட்டும். அவர் நர்சிம்மை பற்றி சொன்னது உண்மையா இல்லையா? அவர் நர்சிம்மிடம் கடன் வாங்கியிருந்தாலும் நர்சிம் அவருக்கு தனிப்பட்ட நண்பராக இருந்தாலும், நட்பு முறியும் என்று தெரிந்த போதும் அவர் வெளிப்படையாக நர்சிம்மை எதிர்த்து அவருடைய கட்டுரையிலேயே “காறித் துப்புகிறேன்” என்று பின்னூட்டம் போட்டார்.
வினவு கட்டுரை நீ எழுதியதா என்ற கேள்விக்கு “நான் எழுதினாலும் வரிக்கு வரி அப்படித்தான் எழுதுவேன்” என்று தனி பதிவே போட்டார். தன்னோடும் ஜ்யவரோம் சுந்தரோடும் சாதி அடிப்படையிலும் உறவு கொண்டாட நர்சிம் முயல்வதாகவும் வெளிப்படையாக எழுதி நர்சிம்மை அம்பலப் படுத்தியிருக்கிறார் சிவராமன். இவையனைத்தும் வலைப்பூக்களில் காணக் கிடக்கின்றன.
சுகுணா திவாகர் கூறுவதைப் போல சிவராமன் இன்னமும் பார்ப்பானாகவே இருந்தாலும், சாதி அடிப்படையில் நர்சிம்மை ஆதரிக்காமல் சொந்த சாதிக்கு துரோகம் இழைத்திருக்கிறார் என்பதே இச்சம்பவத்தில் நடந்திருக்கிறது.
ஜெயேந்திரனை சங்கரராமன் என்கிற பார்ப்பனர் அம்பலப்படுத்தியபோது, “நாங்கள் ஜெயேந்திரரை ஆதரிப்பவர்கள் இல்லை. இருந்தாலும் சங்கரராமன் பெரிய யோக்கியனா?” என்று ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்தப் பிரச்சாரத்தை நடத்தியவர்கள் ஜெயேந்திரனின் அல்லக்கைகள். ஜெயேந்திரனின் கிரிமினல் வேலைகளை நேரடியாக அம்பலப்படுத்த முடியாத போது, அவரைத் தப்ப வைப்பதற்கான குறுக்கு வழி, குற்றம் சாட்டுபவன் மீது சேறு வாரி இரைப்பதுதான் என்று புரிந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட பிரச்சாரம் அது. அதே வேலையைத்தான் சுகுணா திவாகர் இப்போது செய்கிறார்.
இதுதான் புதிய பார்ப்பனியம்.
சிவராமன் உண்மையிலேயே பார்ப்பனியத்தை எதிர்க்கவில்லை, சொந்த வாழ்க்கையில் எதையும் கடைப்பிடிக்க வில்லை என்ற விமரிசனங்களையெல்லாம், நட்புடன் பழகும்போது அவரிடம் நேரில் சொல்லியிருக்கவேண்டும். கண்டித்திருக்க வேண்டும். தன்னைப் பற்றி சொன்னவுடன் “நீ பத்தினியா?” என்று லாவணி பாடுவது குழாயடிச் சண்டையைக் காட்டிலும் தரம் தாழ்ந்த அணுகுமுறை.
நர்சிம்மின் ஆணாதிக்கத் திமிரையும் வக்கிரத்தையும் எதிர்த்து பல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சொந்த வாழ்க்கையில் எப்படி என்று ஆராய்ச்சி செய்து, யார் யார் நர்சிம்மை விமரிசிக்கலாம் என்று தீர்ப்பு வழங்குவாரா சுகுணா திவாகர்? “லீனாவின் கவிதையை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள், மாறுபடுபவர்களும் இருக்கிறார்கள், வேறுபடுபவர்களும் இருக்கிறார்கள். கருத்துரிமைதான் பிரச்சினை” என்று லீனாவுக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசிய அதே நாக்குதானே பேசுகிறது? அங்கே பேசியவர்கள் எல்லாம் பெண் விடுதலைப் போராளிகளா என்று உரசிப் பார்த்து தான் மேடையேற்றினீர்களா?
சிவராமன் போன்ற நயவஞ்சகர்களிடம் நாங்கள் ஏமாந்துபோவதாக எச்சரித்திருக்கிறார் சுகுணா திவாகர். நன்றி. அந்த ‘நயவஞ்சகரிடம்’ ஏமாந்து நர்சிம்மைப் பற்றி என்ன தவறாக எழுதிவிட்டோம்? ஏன் சுகுணா திவாகர் துடிக்கிறார்? அந்த விசயத்தை அவர் சொல்லட்டும். “நர்சிமிக்கு நீங்கள் செய்தது பச்சைத் துரோகம்” என்று சொல்லித்தான் தோழர் சிவராமனது மடல் அவரது நண்பர் மூலம் சுகுணாவுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. இன்வெஸ்டிகேஷனது நோக்கமே நர்சிம் என்ற பொறுக்கியைக் காப்பாற்றுவது என்ற பிறகு நடிப்பு எதற்கு?
மற்றப்படி ம.க.இ.க என்ற அமைப்பின் தோழர்கள் பின்பற்றும் ஒழுக்க நெறிகளுக்கு சிவராமன் போன்றோரால் நேரக்கூடிய ‘ஆபத்து’ பற்றி ம.க.இ.க தோழர்கள் பார்த்துக் கொள்வார்கள். ம.க.இ.க வினரை பழமைவாதிகள், ஒழுக்கவாதிகள் என்று என்று எள்ளி நகையாடும் கலகக்காரர்கள் அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
இறுதியாக ஒரு விசயம். சுகுணா திவாகரைப் பற்றி சிவராமன் எழுதியது பொய்யே ஆனாலும், அது வினவு தளத்துடன் நடைபெற்ற ஒரு தனிப்பட்ட கடிதப் பரிவர்த்தனை. அதனை வெளியிட்டு வினவு தளத்தை ‘அம்பலப்படுத்தியிருக்கிறார்’ சுகுணா திவாகர் என்கிற ரீ.சிவகுமார். அவர் ஆனந்த விகடனில் வேலை பார்க்கிறார். பல விதமான ஊழல்கள், முறைகேடுகள் பற்றிய செய்திகள் ஆனந்த விகடனுக்கு வந்தாலும், எவற்றை வெளியிடலாம், எவற்றை வெளியிட வேண்டாம் என்பதை ஆனந்த விகடன் ஆசிரியர் குழு முடிவு செய்யும். மக்களுக்குத் தெரிந்தே தீரவேண்டிய பல அநீதிகள் ஆனந்த விகடன் நிர்வாகத்தின் நலன் காரணமாகவோ அல்லது போதிய ஆதாரமல்ல என்ற காரணத்தினாலோ அவ்வாறு தணிக்கை செய்யப்பட்டிருக்கும்.
தன்னைப் பற்றி சிவராமன் எழுதியதை வெளியிட்டிருக்கும் சுகுணா திவாகர், ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்ட அத்தகைய தகவல்களையும் தன்னுடைய தளத்தில் வெளியிடுவாரா? அவருடைய தனிப்பட்ட கவுரவப் பிரச்சினையைக் காட்டிலும் சமூகப் பிரச்சினைகள் பெரிதென்று அவருக்கு தெரியாதா என்ன? அல்லது இது நர்சிம்முக்கு மட்டும் செய்யப்படும் உதவியா?
அவரே பதில் சொன்னாலும் சரி. அல்லது அவரது ‘பத்திரிகை அறம்’ குறித்து ஆனந்த விகடன் நிர்வாகத்திடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
_______________________________________________
தொடர்புடைய பதிவுகள்
- பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்?
- பர்தாவின் ‘நற்குடியும்’, அய்யப்பனின் ஆணாதிக்கமும், பதிவுலகின் யோக்கியதையும்!!
- லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?
- பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!
- லீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni !!
- சுந்தரி அக்காவும், பதிவர்கள் அறியா கோவையும்!
- மொக்கைப் பதிவு உடல் நலத்திற்க்குக் கேடு !
- தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!
- பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!
- வினவு ஓராண்டு நிறைவு: கற்றவையும் கடமையும்!!
- வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !!
- வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!
- சமூகம் – பெண் – கட்டுரைகள்
இணைப்புகள்
விளக்கம் தந்ததற்கு நன்றி. இப்போது இந்த விஷயம் சுகுணா-சிவராமன் என்று திசை மாறுமோ என்று கவலை.
ஆணாதிக்க சாதிய வெறியை எதிர்க்கும்போது கவனம் இப்படி தனிநபர்கள் மீது சிதறுவது வருத்தம்.
டாக்டர் சார் அப்போ நேத்து கேள்வி கேட்ட மணிகண்டனை நெனச்சு பாருங்க. என்னமோ போங்க சார். வினவு அம்பலப்பட தெஹல்கா தேவையில்லை. சுகுணா திவாகரே போதும் போல.
ஜூஜூ மோதல்ல உன் அல்லக்கை நெத்தியடி அம்பலப்பட்டு போயாச்சு அதுக்கு பதில் சொல்லு… அப்புறம் மணிகண்டனுக்கு ்சொன்ன து 100க்கு 100 உண்மை பதிவு வினவு எழுத்து நடையில்தான் எழுதப்பட்டிருக்கிறது.. காரணம் சிவராமன் கொடுத்த விவரங்களை தொகுத்து வினவு மீண்டும் எழுதியிருப்பதால்… இது எல்லா பத்திரிக்கைகளிலும் நடப்பது தானே… என்ன பிரச்சனை இதுல உனக்கு???
ஷாஜஹான், நெத்தியடி மற்றும் ஷேக்தாவூத்..
இப்ப இவ்வளவு காத்து பிரியுதே… 3 நாளா ஆப்ட்ரால் ஒரு கண்டனத்தையாவது பதிவு செஞ்சீங்களாயா ஆணாதிக்கவியாதி புடிச்ச பாசிஸ்டுகளா…. வந்துட்டானுங்க நாயம் சொல்ல
In seeking the truth these are unavoidable. Let it take its ஓவன் course. If exposed, we could discard these two சுகுணா-சிவராமன்…Nothing is lost.
அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?
இங்கு என்ன நடக்கிறது
? ஏன் இந்த ஜாதி வெறி? ஏன் இந்த அசிங்கமான வார்த்தைகள்? பார்தால் படித்தவர் போல தெரியல .
* ஆணாதிக்க பொறுக்கிகளை அம்பலப்படுத்தி விரட்டியப்போம் !
*
* பெண்களை நுகர்பொருளாக்கும் எழுத்து புரோக்கர்களுக்கு பதிலடி கொடுப்போம் !!
*
* தமிழ்மணத்திலிருந்து ஆணாதிக்க பொறுக்கிகளை தூக்கியறியவைப்போம் !!!
ஆக பதிவுலக பொம்பளை பொறுக்கிகளையும் சாதி வெறியர்க்ளையும் , காசுக்கும் பீருக்கும் ஓட்டு போடறவனையும், வினவுக்கு அடையாளம் காட்டியது சிவராமன் என்ற மாவீரன்… அவனை பதிவுலகில் கும்மிக்கொண்டிருக்கிறார்கள்… தோழர்களே சிவராமனுக்கு தோள் கொடுங்கள்… பொம்பளை பொறுக்கி நர்சிமையும், குழைந்தையை கொலை செய்ய சொன்ன சைக்கோ சாளரம் கார்க்கியையும் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்…
இவர்கள் பலருடைய முகத்திறையை கிழிப்பார்களாம்…
அடி..சக்கை…இன்று இவர்களே கிழித்துக்கொண்டார்கள்….
பாவம்…அப்பாவி…மணிகண்டன்…
‘மொத்தத்தில் (தாம் உட்பட…!!) யாரையும் நேர்மையானவர்கள் என நம்புவதற்கு இல்லை’ என்ற உண்மையை தோழர்கள் இன்றாவது தெரிந்து கொண்டார்களே….
ஐயோ நெத்தியடி இன்னாய்யா ஈமெயில மாத்தி போட்ட்டியா… ஆனா விதி பத்தியா? வினவு முகத்திரை கிழியிதுன்னு சொன்ன அதே பின்னூட்டத்துல உன் முகத்திரையும் கீஞ்சுது… அது போக்டும்..்மணிகண்டனுக்கு வினவு சொன்னது உண்மைதானே??? அவர் எழுதிக்கொடுத்த விசயங்கள வச்சு இவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கார்…இதுல உன்பிரச்சனை என்னயா?
சத்தியமாய் இந்த பின்னூட்டம் நான் இப்பதிவுக்கு நெத்தியடி முஹம்மது வின் மெயில் ஐடியில் போட்டதல்ல…. சென்ற பதிவுக்கு ஜாக்பாட் ஜே என்ற பெயரில் அதன் ஐடியில் போட்டது.
அது எப்படி இங்கே வந்தது?
இது வினவின் கைங்கர்யம் மீண்டும் வெட்டவெளிச்சம் ஆகும் இடம்… நான் ஒரு பதிவில் ஒரே பெயரில் அன்றி வேறு பெயரில் மருமொழிபோடகூடாது என்பதுதான் வினவின் டீல்…. அதை பின்பற்றி வருகிறேன்… மறுமொழியை வெளிவராமல் கட்டம் கட்டப்பட்ட என் ஐ பி யை நீங்க கண்டுபிடிப்பது எனக்கு தெரியாதா?
நீண்ட நாள் கழித்து ஜாக்பாட் ஜே என்ற பெயரை அனுமதித்தது நீங்கள் ஏமாந்த நேரத்திலா? அல்லது மப்பிலா? செம ஆப்பு….
நான் (ஒரே ஆள்) அவர்களின் நிர்பந்தத்தால் வேறு வழியின்றி வேறொரு பெயரில் பின்னூட்டம் இடுவதும்…
வேறொரு நபரின் பதிவை தம்முடைய பெயரில் தம் தளத்தில் வெளியிட்டுக்கொள்வதும், அதை கண்டுபிடித்து கேட்டவரை நக்கலிட்டதும், பதிவு போட்டவரை எதிர்ப்பதிவு போட்டு அர்ச்சிப்பதும், தம் ஆட்களை வைத்தே தம்மை பாராட்டிக்கொள்வதும்… மற்றவர்களை திட்டித்தீர்ப்பதும் …
ஆகிய இவை இரண்டும்
ஒன்றா…? …ஒன்றா?.. ஒன்றா?
@@@ ஒன்றா…? …ஒன்றா?.. ஒன்றா?@@@
ஒன்றில்லை ஒன்றில்லை ஒன்றில்லை… நீங்க ஒங்க சொந்த அறிப்ப சொரிஞ்சுக்க பல பேருல புண்ணூட்டம் போடறதும் … சமூக மாற்றத்துக்காக வேறு பெயர்களில் எழுதுவதும் எப்படி ஒன்றாகும்?? ஒன்றாகும்?? ஒன்றாகும்???
@@@வேறொரு நபரின் பதிவை தம்முடைய பெயரில் தம் தளத்தில் வெளியிட்டுக்கொள்வதும், @@@
இதுதான் நெத்தியடியின் டிரேட்மார்க் பிராடுத்தனம் ….. பதிவின் மூலத்தை எழுதிய சிவராமனே இது வினவு பெயரில் வெளிவரவேண்டும் என்று விரும்பியபின் வேறு என்ன செய்ய முடியும்???
வினவு சிவராமனின் தரவுகளை பெற்று மீண்டும் கட்டுரையை முழுசாக எழுதியிருக்கிறது.. அப்புறம் எப்படி அது வேறொருவர் பதிவு ஆகும்
எந்த ஒரு பத்திரிக்கையாளனும் தனக்கு தகவல் வந்த சோர்ஸை சொல் மாட்டான், அது துரோகம். வினவும் சிவராமனை போட்டுக்கொடுக்கவில்லை. போட்டுக் கொடுப்பவன் துரோகி, தோள் கொடுப்பவன்தான் தோழன்
வினவு தோழன்..
செங்கொடியின் தளத்திலே தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கும் நெத்தியடிக்கு யான் செருகிய ஆப்பு — jus for recordx-x-x-x-x-x-x–x-x-x-x–x-x-x-x-x–x-x-x–x-x-x–x-
தனது அரிப்பை சொரிந்து கொள்ள போகும் இடமெல்லாம் சுவரைத்தேடும் இந்த நெத்தியடியை பார்க்க பாவமாய் இருக்கிறது….அது எப்படித்தான் இப்படி புளுக முடிகிறதோ அப்பப்பா..
இவரு இத்தனநாளா திட்டி பின்னூட்டம் போட்டாறாம் அது வரவேயில்லியாம் இன்னிக்கு திட்டி போட்ட மட்டும் உடனே வந்திடுச்சாம்..கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எரும ஏரேப்பிளேன் ஒட்டும்பாங்கனுவாரு பெரியார்தாச அப்துல்ல சேஷாசல சித்தார்த்தன் …அது இதுதான்
@@@முத்துக்குமார் இடுகைக்குப்பின் மொத்தமாய் கட்டம் கட்டப்பட்டுவிட்ட என் ஐ.பி யும், மெயில் ஐ டியும், அதன் பிறகு வந்த எந்த பதிவிலும் பின்னூட்டம் செல்லாது செத்து விடும்.@@@
இன்னிக்கு திட்டும் போது மட்டும் செத்த பின்னூட்டம் உயிர்த்தெழுந்ழுத்சாம்.. இன்னா கிரிஸ்டீனா கன்வர்ட் ஆயிட்டியா???
@@@பெரியார்தாசன் அப்துல்லா ஆகிய வினவின் இடுகையிலும் கூட நான் எத்தனை கருத்துகளை சொல்ல எத்தனித்தேன்… (பாருங்கள் ஒன்று கூட இருக்காது) என்னை சில சகோதரர்கள் ‘ஒதுங்கி இருப்பதாய்’ கூறினர்…என்ன செய்வது… நொந்து போவதைத்தவிர… அவர்களின் போலி @@@
அதே பதிவுல மேலூரு ‘மென்டல்’ ஷாஜூவோட பின்னூட்டத்தையும் காணோம் என்பதை நோட் செய்யுங்கள் யுவர் ஆனார்…..
@@கடைசியில் அவர்களே ஏமாந்த நேரம்.. ஒரு மிட் நைட்டில்… பெப்சி-கோக்கில் ‘ஜாக்பாட் ஜே’ என்ற பெயரில் நுழைந்துவிட்டேன்…கடைசி வரை உண்மைகளை உரத்துக்கூறினேன்… ஏனோ ஆச்சரியப்படும் வகையில் அப்பதிவில் மட்டும் தொடர்ந்து அனுமதித்தனர்@@
இதப்பாத்தியா கொடுமையா தான் எப்பேற்பட்ட பிராடுன்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தத ஆக மொத்தம் இவரு எந்த பேருல வந்தாலும் அங்க போட்டுகிட்டுதான் இருக்காங்க… இவரு சொல்லுற அதே கோக்கு – பெப்புசி பதிவுல மேலூரு மென்டல் ஷாஜஹானும் பேரே மாத்தாம புன்னூட்டம் போட்டதையும் நோட் செய்யுங்கள் யுவர் ஆனர்..
@@@இந்த என் தன்னிலை விளக்கத்தை எல்லாம் வெளியிடாமல் மீண்டும் என் பின்னூட்டத்தை இல்லாமல் ஆக்குவது சரியா? இதுதான் நேர்மையா? இனி ஜாக்பாட் ஜே யும் அனுமதிக்கப்படவில்லை என்றால்… வேறொரு பெயரில்தான் வர வேண்டும்@@@
இன்று நெத்தியடி – ஜாக்பாட் ரெண்டு பேருலயும் இவரு போடும் பின்னூட்டம் வந்திருக்கிறது.. இருப்பினும் இவர் ஓடி வந்து உங்களிடம் இப்போது தன்னிலை விளக்கம் கொடுப்பது எதனால்..இவர் ஜாக்பாட் ஐடியில் நெத்தியடி ஈமெயிலை கொடுத்ததனால வசமாக மாட்டிக்கொண்டார் அதனால்….
ஆக இந்த ஷாஜூ நெத்தியடி கூட்டனி , தன் பக்கம் வீக்காக இருந்த பெரியார்தாசன் பதிவுக்கு வரவில்லை, கோக்பதிவுக்கு வந்தால் என்னமோ கயட்டி புடலாம் என்று வந்து என்னிடம் வாங்கிக்க்கட்டிக்கொண்டு பதிலே சொல்லாமல் ஓடிப்போயினர்.. அங்கேயே நெத்தியடிதான் இது என அம்பலப்படுத்தியதற்கு ஷாஜஹான் காட்டிய சீன் சூப்பர் டூப்பர் காமெடி
இப்போது சுகுணா திவாகர் எழுதியிருப்பதை மறுபடியும் அறைகுறையா படித்து முட்டாள்தனமாக புரிந்து கொண்டு என்னவோ வினவுக்கு கேவலம் நேர்ந்து விட்டது போல புளகாங்கிதம் அடைந்து நானும் விடுரேன் 2 கல் என நெத்தியடி பெயரிலேயே வந்தார்.. அதுவும் வினவு சைட் வீக்காக இருப்பதான தவறான புரிதலால்.. திருப்பி அடிக்கமாட்டான்னு தெரிஞ்சப்புறம் வர்ற வீரம் இது..
ஆனால் வழக்கம் போல இந்த மரமண்டைகளுக்கு புரியாத ஒரு விசயம் உண்டு அதுதான் ”உண்மை”…. முதலில் சுகுணாவின் பதிவில் எடுத்து போடப்பட்டுள்ள பதிவை சிவராமன் அவரும் வினவும் சேர்ந்து எழுதியாக கூறியிருக்கிறார்… வினவும் சிவராமன் கொடுத்த தகவல்கள் அடிப்படையில்தான் தாங்கள் கட்டுரை எழுதியிருக்கிறோம் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டனர்.
இதில் மூக்குடை பட்ட இந்த மரமண்டைகள் அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லாத காரணத்தினால், தங்கள் திட்டம் ஆண்டி கிளைமாக்ஸில் முடிந்து போனதால்… இணையத்தெருக்களில் புலம்பிக்கொண்டு திரிகின்றனர்… அவ்ளோதான் மேட்டரே..
இனி நெத்தியடிக்கு நான் வினவில் எழுதிய மேட்டரை ctrl+v
@@@ ஒன்றா…? …ஒன்றா?.. ஒன்றா?@@@ஒன்றில்லை ஒன்றில்லை ஒன்றில்லை… நீங்க ஒங்க சொந்த அறிப்ப சொரிஞ்சுக்க பல பேருல புண்ணூட்டம் போடறதும் … சமூக மாற்றத்துக்காக வேறு பெயர்களில் எழுதுவதும் எப்படி ஒன்றாகும்?? ஒன்றாகும்?? ஒன்றாகும்???
@@@வேறொரு நபரின் பதிவை தம்முடைய பெயரில் தம் தளத்தில் வெளியிட்டுக்கொள்வதும், @@@இதுதான் நெத்தியடியின் டிரேட்மார்க் பிராடுத்தனம் ….. பதிவின் மூலத்தை எழுதிய சிவராமனே இது வினவு பெயரில் வெளிவரவேண்டும் என்று விரும்பியபின் வேறு என்ன செய்ய முடியும்???வினவு சிவராமனின் தரவுகளை பெற்று மீண்டும் கட்டுரையை முழுசாக எழுதியிருக்கிறது.. அப்புறம் எப்படி அது வேறொருவர் பதிவு ஆகும்எந்த ஒரு பத்திரிக்கையாளனும் தனக்கு தகவல் வந்த சோர்ஸை சொல் மாட்டான், அது துரோகம். வினவும் சிவராமனை போட்டுக்கொடுக்கவில்லை. போட்டுக் கொடுப்பவன் துரோகி, தோள் கொடுப்பவன்தான் தோழன்
வினவு தோழன்..x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
நான் செங்கொடி தளத்தில் பின்னூட்டம் இடாத காரணம் இங்கே மட்டறுத்தல் இல்லாததால் எனக்கு பதில் சொல்லும் சாக்கில் இங்கேயே குந்தியிருந்து இந்த இரண்டு மென்டல் கேசும் உங்கள் தளத்தை நாரடித்துவிடுவார்கள்…நான் இங்கு வரமாட்டேன் என்ற அந்த தைரியத்தில்தான் இப்போது பதிந்த்தனர்… நான் வந்துவிட்டேன் என்ன செய்ய
@@@உப்புத்திண்டவர்கள்…குடித்தே தீரவேண்டும்… குடிக்கிறார்கள்@@@
குடிக்கிறார்கள்…
வர்ட்டா நெத்தியடி
சரியானதொரு எதிர்வினை. சுகுணா பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆகும் கேள்விகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது.
உண்மை இப்படி இருக்க, பலர் எழுத்து நடையை புடம்போட்டு மிகத்துல்லியமாக மோப்பம் பிடித்து கேட்ட மணிகண்டன் அவர்களிடம் நேற்று எதற்கு அவ்வளவு நக்கல்…?
அரைகுறை நெத்தியடி…. மணிகன்டன் பைத்தியகாரனுக்கு எழுதிய பதிலைப்பார்
@@நேற்று நான் வினவில் நேரடியாக கேட்டதுக்கு எழுத்து நடையை வைத்து பதில் சொல்லி இருந்தார்கள். எடிட் செய்ததால் அவர்கள் நடை தான். ஆனால் உங்கள் கிசுகிசு பாணி எழுத்துக்கள் காட்டிக்கொடுத்துவிட்டன.@@
ஆக வினவின் எழுத்துதான் என்பதை மணி ஒத்துக்கொண்டு விட்டார்… எனவே பதிவுலக பொம்ப்ள பொருக்கிகளை காட்டிக்கொடுத்த (கிசு கிசு) காரணத்திற்காக சிவராமனை எல்லோரும் கும்முகிறார்கள்… நீ பொம்பள பொறுக்கியான்னு எனக்கு தெரியாது….
ஒழிக உமது போலி பின்னூட்ட ஜனநாயகம்….
நெத்தயிடி ஜாக்பாட் ஜே அப்படின்னு போலி பின்னூட்டம் போட்டுகிட்டிருந்தியே அத சொல்றியா???
சுகுணா, நடந்த அயோக்கியத்தனத்தை ஆணாதிக்க தடித்தனம் என்ற ஒற்றை சொல்லுடன் கடந்துசெல்வதுதான் வேதனை.
பாஸிட்டிவ் வாக்கை செலுத்திவிட்டேன்.
//
சுகுணா, நடந்த அயோக்கியத்தனத்தை ஆணாதிக்க தடித்தனம் என்ற ஒற்றை சொல்லுடன் கடந்துசெல்வதுதான் வேதனை.
பாஸிட்டிவ் வாக்கை செலுத்திவிட்டேன்.
//
பாவம் சுகுணா அவ்வளுவுதான் அவரால முடியும் 🙂
ஸ் அப்பாடா… இப்ப தான் நிம்மதியே வருது!
சுகுணாவின் பதிவில் போய் சில-பல புண்ணூட்டங்கள போட்டேன்! அது இன்னும் வரல.. வருமா?? வராதா (மட்டுறுத்தப்படுமா) ??
வரும்! ஆனா வராது!!!! 🙂
சுகுணாவின் பதிவிற்கும், இதற்கும் (வினவின் எதிர் வினைக்கும்) பாலபாரதியின் கருத்தை எதிர்பார்க்கிறேன்! 🙂
//விளக்கம் தந்ததற்கு நன்றி. இப்போது இந்த விஷயம் சுகுணா-சிவராமன் என்று திசை மாறுமோ என்று கவலை.
ஆணாதிக்க சாதிய வெறியை எதிர்க்கும்போது கவனம் இப்படி தனிநபர்கள் மீது சிதறுவது வருத்தம்.//
இதுதான் அவர்களின் நோக்கம் சுகுணா நிறைவேற்றிவிட்டார். சுகுணாவின் பரிணாம வளர்ச்சி சரியாகத்தான் செல்கிறது.
//விளக்கம் தந்ததற்கு நன்றி. இப்போது இந்த விஷயம் சுகுணா-சிவராமன் என்று திசை மாறுமோ என்று கவலை.//
டாக்டர் அய்யா, இந்தப் பிரச்சினை அமீபா மாதிரி பல திசைகளில் பரவும். சில நாட்களுக்கு வலையுலகம் அல்லோலகல்லோகப்படும். அதுக்கப்புறம் எல்லோரும் அவனவன் வேலையப் பாக்கப் போயிருவாங்கே!
இது போதும். இது தான் விளக்கம்.
இந்த நாலுமணி நேர கேப்புக்குள்ள என்னென்னவெல்லாம் நடந்துவிட்டது.
எதிரிகளும் எதிரிகளும் கூட அடுத்த புனிதக்கூட்டனிக்கு தயாராகி விட்டார்கள். ஆனால் அதற்குள் வினவு குறி பார்த்து அடித்து விட்டது.
அவிங்களுக்கு எல்லாம் இப்ப சப்புன்னு ஆயிருக்கும்.
அதிலயும் அந்த திருப்பூர் பேமானி இருக்கானே அவனுக்கு தான் கப்பலே கவுந்திருக்கும். அல்லக்கையோட பதிவை படிக்கிறதுக்குள்ள இந்தாளு ஒரு பதிவே போட்டுட்டான்னா பார்த்துக்குங்களேன்.
இந்த நார வாய் நாராயணன் தான் போன மாதம் நமது தோழ்ர்களிடம்
‘நானும் அமைப்பில் தான் தோழர் இருக்கிறேன்’ என்றது.
நீ அமைப்பில் இருக்கும் லடசணம் எல்லாம் எங்களுக்கு அப்பவே தெரியும். நீ அமைப்பில் இருப்பதெல்லாம் இருக்கட்டும் ஒரு அல்லக்கைக்கு அல்லக்கையா இருக்கியே இதுவும் ஒரு பொழைப்பாடா ? த்தூ.. வெக்கமா இல்ல ? கேவலமா இல்ல ?
நல்ல விளக்கம் இதை தான் எதிர்ப்பார்த்தேன் வினவு.ஏன் என்றால் பிரச்சனை திசை திருப்ப பார்த்தார்கள் , அந்த நேரத்தில் உரிய விளக்கம் தேவை நன்றி வினவு
“வினவில் ‘எல்லாரும்’ எழுதலாம்”, “இங்கு ‘அனைவருக்கும்’ வாய்ப்பளிக்கப்படும் என்றதற்கு “உண்மை அர்த்தம்” இதுதானா?
அடுத்து யாரெல்லாம் எழுதுவார்கள்…? …..RV, டோண்டு?
சுகுணா இப்போது செய்து கொண்டிருப்பது பிரச்சினையை ஹைஜாக் செய்யும் வேலை. அதை வினவு மிகச் சரியாக அம்பலப்படுத்தியுள்ளது.
தோழர் அத வினவு மட்டும் செஞ்சா பத்தாது அத்தனை பேரும் செய்யனும். விடாதீங்க அந்த அல்லக்கைய பாத்துடுவோம் ஒரு கை…
தம்பி சுகுணா உனக்கு ஏன் இந்த வேலை பைத்திரக்காரனின் பாத்ரூமுக்குள் போய் எட்டிப் பார்த்து என்ன ஆய் போய் இருக்கிறார். அது மஞ்சளா? சிகப்பா என்று ஆராய்ந்து அதை ஏதோ புலனாய்வுப் போர்வையில் செய்திருக்கிறாயே? கொஞ்சாமவது யோசித்தாயா? வெளியிடப்பாடாத பிரதியை எடுத்து வைத்துக் கொண்டு என்னைப் பற்ரியா? இப்படி எழுதினாய் என்று தாம் தூம் என்று குதிக்க்றாயே? உண்மையில் பார்ப்பனராக இருந்தாலும் சிவராமன் சொந்த சாதிக்கு துரோகம் செய்திருகிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். அதே நேரம் சந்தனமுல்லை வன்னியர் ஆர்க்குட்டில் இருக்கிறார் என்கிறீர்களே? இதென்ன சந்தனமுல்லையைப் பற்றி எழுதியதை பல வீனப்படுத்துக்ற முயர்ச்சியா? அவர் வன்னியர் ஆர்க்குட்டிலேயே இருக்கட்டுமே அதற்காக இப்படியா? எழுதுவது? தவிறவும் இதை ஏதோ மாபெரும் கண்டுபிடிப்பு போலச் செய்திருக்கிறீர்களே? ரியல் ஜர்ணலிசம் என்றால் என்ன வென்று தெரியுமா? அது தமிழில் இருக்கிறதா? அதை உங்களால் செய்ய முடியுமா? அப்படிச் செய்பவராக இருந்தால் ஆனந்தவிகடனால் நிராகரிக்கப்பட்ட ஒரு அதிரடியை அண்டர் கிரவுண்ட் வழியாகவேனும் எடுத்துக் கொடுங்கள் அதுதான் ரியல் என்கவுண்டர்……….ஆமா தம்பி நீங்க என்ன சாதி? ஒரு தவறும் இல்லை உங்கள் சாதியைச் சொல்லுங்கள் சில கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது.
கட்டுரை சிவராமிடமிருந்து பெறப்பட்டது என நீங்களே அறிவித்திருக்கலாம்! இப்பொழுது வினவின் மீதும் நம்பிக்கை இழக்க வேண்டியுள்ளது.
கார்மேக ராஜா நர்சிமுக்கு பதிலாக யார் அந்த பூக்காரிவேறு யாராவது எழுதியிருந்தால் ஆதரித்திருப்பீர்களா???? எழுதியவனல்ல எழுதப்பட்ட விசயம்தான் முக்கியம்… திசை விலகல்களுக்கு வீணாக பலியாகாதீர்… மேலும் வினவு சிவராமன் பதிவை மொத்தமாக திருத்தி எழுதியபின் அது எப்படி சிவராமன் பதிவு ஆகும்???
கார்மேகராஜா…. சுகுணா வேலை பார்க்கிற விகடனில் கூட சில நேரங்களில் எழுதுகிறவர்களின் பெயர்கள் தெரியக்கூடாது என்பதற்காக நமது நிருபர்கள் என்று போடுவார்கள். அல்லது புனைப்பெயரில் எழுதுவார்கள் உங்களுக்குத் தெரியுமா?
சுகுணா இதை வரிக்கு வரி படித்து பதிலளிப்பாரா???
அந்த சந்தேகம் இருக்கட்டும். மைனஸ் ஓட்டு போடும் அறிவாளிகள் படித்து விட்டு தான் ஓட்டு போடுகிறார்களா?
பதிவுகள் எழுதித்தள்ளி, படித்த பிறகும், நர்சிம்மிற்கு ஆதரவு, சுகுணாவிற்க்கு ஆதரவு என்ற போக்கில் எழுதிதள்ளுவார்களா?
தள்ளட்டும்! காழ்ப்புணர்ச்சிகள் ஒவ்வொன்றாக வெளிவரட்டும்.
ஒரு பெண் பதிவரை நர்சிம் பொறுக்கித்தனமாய், அருவருக்கதனமாய் எழுதுவான். அதைக் கண்டிக்கும் நேர்மையில்லை சுகுணாவிற்கு. போகிற போக்கில் மெல்ல சாடுகிறார்.
தன் மீது தூசுபட்டதாய், எகிறி துடிக்கிறார். தெரிந்தே மடைமாற்றி ‘நர்சிம்’ஐ காப்பாற்றுகிற வேலை இது.
சுகுணா இந்த எதிர்வினையை எதிர்பார்த்திருக்க மாட்டார், வினவை திட்ட வெறும் வாயை மென்றவர்களுக்கு இது அவல். வாய் என்ன அட்சைய பாத்திரமா அவலாய் உற்பத்தி செய்ய, அவல் தீர்ந்த பின்னால் வாய் அடங்கும். தோழர்கள் பதிவுலகில் முற்போக்கு யார் பிற்போக்கு யார் என்பதை சிறப்பாக அடையாளம் காட்டியுள்ளனர். இது ஒன்றே மிகப்பெரும் வேலை… நாளையிலிருந்து சுகுணாவோ யுவகிருஷ்ணாவோ முற்போக்கு வேசம் கட்டவியலாது.. செருப்புகள் பிய்ந்து போகும்
‘ஜென்டில்மேன்’ நர்சிம்மும்! ஆதரிக்கும் கண்ணியவான்களும்!
பதிவர் சந்தனமுல்லையை நர்சிம் என்ற பதிவர் தன் எழுத்துக்களால் குதறியிருக்கிறான் என்பதை வினவின் மூலம் ‘பூக்காரி’ படித்து அதிர்ந்தேன். அதைவிட அதிர்ச்சியாக இருக்கிறது. “அது தான் மன்னிப்பு கேட்டுட்டாருல்ல! பிரச்சனையை இத்தோடு முடிச்சுக்கலாம்” என சில நர்சிமை ஆதரிக்கும் ‘கண்ணியவான்கள்’ கிளம்பிவிட்டார்கள்
“பாருங்க! இவ்வளவு நாளும் நர்சிம் ஒரு ஜென்டில்மேன். கோவத்தில இப்படி எழுதிட்டார்” என்கிறார்கள். ஒருவனின் அறத்தன்மை, பண்பு என்பது நெருக்கடியில் தான் வெளிப்படும். ‘ஜென்டில்மேனின்’ பச்சையான ஆணாதிக்க, பார்ப்பனிய குணம் இந்த விசயத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
தொடர்ச்சியாய்… பல பதிவர்கள் நர்சிமை கண்டித்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்கவாதிகள் ‘ஜென்டில்மேன்’ நர்சிம்மை ஆதரித்து எழுதி கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு சுகுணா திவாகரும்.. ‘அரிய உண்மையை’ கண்டுபிடித்ததை போல எகிறுகிறார். இதுவெல்லாம், நர்சிம்மின் பொறுக்கித்தனத்தை வலுவிழக்க செய்யும் வேலை.
நர்சிம், பயித்தியக்காரன், சுகுணா, வினவு இவர்களை எனக்கு தெரியாது. ஆனால் என்ன நடக்கிறது என்று ஓரளவு அறியமுடியரது. இருந்தாலும் சில விசயங்களை ஆராய்ச்சி செய்ததால் வந்த பின்னூட்டம் இது:
வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு. அப்படி செய்திருந்தால் (Note: செய்திருந்தால்) இது முதல் தடவையாக இருக்க முடியாது. கட்டயாம் இது முதல் தடவையாக இருக்க முடியாது. அப்படியிருக்க ஏன் அவ்வாறு பயித்தியக்காரன் இப்பொழுது அதை வெளியில் கொன்டு வர வேண்டும்—அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது– அதாவது தான் எழுதிக்கொடுத்ததை தான் வினவு பதிவாக போடுகிறார் என்று.?
இங்கு கவனிக்க வேண்டியது இவர்களுடைய “Relationship.”
பயித்தியக்காரன்-வினவுக்கு-தொழில் முறை “Relationship.”
பயித்தியக்காரன்-நர்சிம்-நண்பர்கள்! மற்றும் ஒரே ஜாதி என்றும் கேள்விப்பட்டேன்!!
இதில் நடுவில் சுகுணா. சுகுணாவிற்கு கோபம்—வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று. ஒரே ஆறுதல் தன்னைப்பற்றி பயித்தியக்காரன் அசிங்கமாக எழுதியதை வினவு “Edit” செய்துவிட்டார் என்று. இருந்ததாலும் சுகுணா வினவை மன்னிக்க தாயாராக இல்லை. அதனால் வந்த பதிவு தான் சுகுணா எழுதியது.
சுகுனாவிர்ர்க்கு ஒரு கேள்வி? இதை அதாவது, மேற்கூறியவற்றை (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று.) உங்களிடம் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஏன் இவ்வளவு நாட்களாக உங்களிடம் வினவு இப்படித்தான் தந்து எல்லா பதிவையும் போடுகிறார் என்று சொல்லவில்லை? இதை நீங்கள் யோசிக்க வேண்டும், அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது!
இந்த உண்மையை வினவு தான் எடுத்து சொல்ல வேண்டும் : அதாவது, தான் அது மாதிரி பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று மற்றும் சுகுணா சொன்ன மாதிரி “Edit” செய்திகளும் வினவிற்கு அனுப்பப்பட்டதா என்று? அப்படி “Edit” செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றாலும் வினவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி. ஆனால் அவ்வாறு சுகுனாவைபற்றி “Edit” செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றால் வினவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு (நர்சிம் மன்னிப்பு கேட்ட மாதிரி மன்னிப்பு கேட்கலாம்.) பயித்தியக்காரன் தோலை உரிக்கலாம். அப்புறம், நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவர் தோலையும் உரிக்கலாம்.
சுகுணா! நீங்கள் அவசரப் பட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் ஒரு கருவியாக மட்டும் பயன் படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். அவர்கள் “Double-game” or double-cross” செய்து விட்டார்கள்.
என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி. வினவுக்கு திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று). சுகுணா திவாகர் ஒரு கருவி. ஆகா மொத்தம் ஏமாந்தது நீங்கள் தான். வென்றது அவர்கள். உங்களையே நீங்கள் அவசரப்பட்டு அசிங்கபடுத்திக் கொண்டீர்கள் .எதற்கும் எப்பொழுதும் கூட்டு வைக்ககூடாத ஒரே கும்பல் அவாள் தான்.
வாய்மையே வெல்லும் இது பழமொழி!
வருணாஸ்ரமே வெல்லும் இது புது மொழி!!
அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?
“ஒரு பார்ப்பனியவாதியிடம் எழுதி வாங்கி பார்ப்பனியத்தை எதிர்ப்பீர்களா?” என்று கேட்கும் கூழ்முட்டைகளுக்காக..
சிவராமனின் தனிப்பட்ட வாழ்க்கையை வினவு தோழர்கள் கட்டுப்படுத்தவியலாது – அவர் ஒரு ஆதரவாளர்; உடன் வேலை
செய்யும் சக தோழரல்ல. பல்வேறு சொந்த அரசியல் நிலைப்பாடுகள் கொண்டுள்ள ஒருவர் எமது அரசியலின் அத்தனை நிலைப்பாடுகளையும்
அப்படியே ஆதரிக்க வேண்டும் என்பதோ எமது தோழர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடிக்கும் அதே நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தோழர்கள் நிர்பந்திப்பதோ சாத்தியமற்றது. பிரச்சினைகளின் அடிப்படையில் இணைவது தான் சாத்தியம். இங்கே இந்த விவகாரத்தில்
சிவராமன் தனது சொந்த வாழ்க்கையில் பார்ப்பன அடையாளங்களை (அவர் அவ்வாறு கடைபிடித்து தான் வருகிறார் என்பதை அவரே சொல்லாத வரையில் இது சுகுணாவின் யூகம் என்றே நான் கொள்கிறேன் – அதன் அடிப்படையில் நானும் இதை ஒரு வாதத்துக்காகவே உண்மையென்று
வைத்துக் கொண்டே தொடர்கிறேன்) கடைபிடிப்பவராயினும், இந்த பிரச்சினையைப் பொருத்தளவில் நேர்மையாக தனது தனிப்பட்ட
இழப்புகளுக்கும் கூட அஞ்சாமல் (நர்சிமிடம் கொடுக்கல் வாங்கல் இருந்த போதும்) முதன் முதலாக தனது கண்டனங்களை வெளிப்படையாக
பின்னூட்டங்களில் பதிவு செய்துள்ளார். வினவு தோழர்களுக்கும் அவரே முன்வந்து பதிவுக்கான தரவுகளைக் கொடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அவரது செயல்பாட்டினூடாகவே அவரை நாம் எடை போடுகிறோம். அவரது சொந்த வாழ்க்கையின் அழுத்தங்களையும்
தாண்டி இவ்விவகாரத்தில் அவர் ஒரு நேர்மையான நிலைப்பாட்டை எடுக்கிறார் – அவர் எமது தோழர்களுக்கு சில தரவுகளைத் தந்துதவுகிறார்
எங்கள் தோழர்கள் அதைத் தமது பதிவில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சுகுணாவின் – ‘மற்றுமுள்ள கூழ்முட்டைகளின்’ – இதே அளவு கோலை சுகுணாவுக்கு எதிராக இன்னொருவர் கொள்வதானால், அவர் ஜெயேந்திரன்
கைதான சமயத்தில் எழுதிய
கட்டுரையை ம.க.இ.க சிறு வெளியீடாக கொண்டுவந்ததைக் கூட ‘ஒரு குடிகாரனிடமிருந்து எப்படி கட்டுரை எழுதி வாங்கலாம்.. ம.க.இ.க தனது தோழர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கநெறிகளை வலியுறுத்த்திக் கொண்டே ஒரு குடிகார கபோதியிடம் கட்டுரை எழுதி வாங்கியிருக்கிறார்களே.. அதுவும் ஆனந்த விகடன் போன்ற ஒரு பார்ப்பன பத்திரிகையில் வேலை செய்கிறார் இப்போது’ என்று ஒருவர் சொல்லி விட முடியும்..
அன்று உங்களை எப்படி எடை போட்டார்களோ அப்படியே இன்று சிவராமனை எடை போட்டிருக்கிறார்கள் சுகுணா..
நாளை இதே சிவராமன் பொதுவெளியில் தனது செயல்பாடுகளில் ஒருவேளை பார்ப்பனியத்தைக் கடைபிடிப்பாரானால் அவரையும் அம்பலப்படுத்த
எமது தோழர்கள் தயங்க மாட்டார்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை – உங்களுக்கும் சந்தேகமிருக்காது என்றே நம்புகிறேன். எனில்
இப்போதைய உங்கள் பதிவின் நோக்கம் என்ன? அது நர்சிமின் பார்ப்பன சாதி வெறிக்கு எதிராக பரவலாக கிளம்பியிருக்கும் கருத்துக்களை
மடைமாற்றிவிடுவதே. அந்த அம்சத்தில் இப்போது நீங்கள் தான் பார்ப்பனியத்துக்கு வால்பிடிக்கிறீர்கள்.
வழிமொழிகிறேன்.
நன்றி கார்க்கி, இதைவிட எளிமையாகவோ மென்மையாகவோ சுகுணா திவாகருக்கு பதிலுரைக்க இயலாது.
போக வேண்டிய பாதை தூரம். பாதை முழுக்க கல்லும் முள்ளும். ஒரே இடத்தில் நின்று சரி செய்து விட்டு வருகின்றேன் என்று எத்தனை இடுகை இவ்வாறு வரப்போகின்றது??? ஓட்டுப்பட்டைகளை களைப்புறச் செய்யுங்கள்.
வினவு.., தனது தார்மீக நியாயங்களிலிருந்தும்,.விவாத பொருளினின்றும்.., நம்பகத்தன்மையின்றும் விலகி முரட்டு பிடிவாதாதத்துடன் வாதம் செய்வதென்பது… முழுமையான.., உள்நோக்கற்ற ..,நிபந்தனையற்ற என்னைப்போன்ற ஆதரவாளர்களிடத்தில் அவநம்பிக்கையை உருவாக்க நேரிடும் என்பதை மனத்தாங்களுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..
அன்புடனே.,
கும்க்கி.
@@2னது தார்மீக நியாயங்களிலிருந்தும்,.விவாத பொருளினின்றும்.., நம்பகத்தன்மையின்றும் விலகி @@@
இங்க எதுங்க தார்மீக நியாயம்.. ஆணாதிக்க பார்ப்பனிய வக்கிரத்தை கண்டிப்பதா?? இல்லை துணை நிற்பதா???
எது விவாதப்பொருள்.. நார்சிமின் பொறுக்கித்தனமா இல்லை பதிவை யார் எழுதியது என்பதா
எது நன்பகத்தன்மை? தனக்கு இந்த கட்டுரையை எழுத இன்னார் உதவினார் என்று போட்டுக்கொடுப்பதா???? இல்லை விளைவுகளுக்கு பொறுப்பேற்பதா???
கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்…
நக்கீரன் நான் இங்க இருக்கேன்…
பார்த்தேன் முன்னாடியே அங்கே போட்டேன். கலக்குங்க
தாமதத்துக்கு மன்னிக்கவும். நர்சிம் பற்றி நீங்க (எடிட் செய்து வெளியிட்ட) வெளியிட்ட பதிவிற்கும் உங்கள் நிலைப்பாட்டிற்கும் என்னுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆமா. உண்மைத் தமிழன்னு (இவர் உண்மைத்தமிழன்னா மத்தவனெல்லாம் டூப்ளிகேட் தமிழனா?) ஒருத்தர் பதிவுலகத்த குத்தகைக்கு எடுத்திருக்காராமே. இந்த பதிவ எழுதுறதுக்கு முன்னாடி அவர்கிட்ட அனுமதி வாங்கிட்டீங்களா.
நற்குடி மேட்டர்லேயே ஒரு டவுட் வந்தது. ஆனா இப்போ அவரோட அரை டவுசர் வெளியே வந்துடுச்சு. விசாரிச்சுப் பாருங்க உண்மை(!?) தமிழன் ஏதாவது ஷாகாவுல தென்பட்டதா தகவல் கிடைக்கலாம்.
வினவின் உதவியால் பல ஆணாதிக்கவாதிகளுடைய மற்றும் அரை டவுகளுடைய முகமூடிகள் கிழிக்கப்பட்டுள்ளது.
http://bikeel.blogspot.com/2010/06/blog-post.html
சுகுணா ஏன் இந்த தீசல் புத்தி
சரியா ஒருவருசம் ஓவர்சீஸ் கிளையன்ட சைட் இம்ளிமென்டேசன் முடிச்சிட்டு வந்தா இங்க ரத்த ஆறு ஓடுது…. நல்ல வேளையா எல்லா பதிவையும் படிச்சதனாலையும் பதிவர்கள் யாரையுமே எனக்கு தெரியாததாலையும் சுதந்திரமா ஒரு சிந்தனையை தக்க வச்சுக்க முடிஞ்சது….
ஆக இந்த பஞ்சாயத்துல என்னோட 2 பைசாவ நான் போட்டே ஆகனும்
அதாவது பதவுலகில் பெண்கள் எழுதுவதே கஷ்டம் அப்படி எழுதறவங்களுக்கும் சில பேரு டார்சர் கொடுக்கறான்… என்ன செய்யலாம்? பிரச்சன கொடுக்கறவங்கள தட்டிக்கேட்கலாம், இல்ல பொறுத்துகிட்டு சும்மா இருக்கலாம்..
இத்தனநாளா பொறுத்துகிட்டு சும்மா இருந்த சிவராமன் பூக்காரிக்கப்புறம் அவரு பொறுமையை தூக்கி எரிஞ்சிட்டு யாரெல்லாம் பெண் பித்தர்கள், யாரெல்லாம் சாதி பாக்குறவங்கன்னு ஒரு லிஸ்ட் எடுத்து கொடுக்க வேண்டிய எடத்துல கொடுத்திட்டாரு.. நல்ல வேலதான் அது…
சரி இனிமேலாவது இந்த சில்லறைங்க பயந்து கம்முனு இருப்பாங்க பெண்கள் நிம்மதியா எழுத முடியும்ன்னு நென்ச்சா இப்ப நம்ம அண்ணன் சுகுணா திவாகர் சிவராமன அம்பலப்படுத்தறேன்னு பிரச்சனைய அழகா டைவர்ட் பண்ணிட்டாரு.. இப்போ எல்லாரும் சிவராமன கும்கும்முன் கும்முறாங்களா… பூக்காரியின் பீத்த பதிவர் எஸ்கேப்..
ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சுகங்க மக்கா சிவராமன் செஞ்சது தியாகம். பெண்பதிவர்களுக்கு ஒரு சுதந்திர வெளி வேணும்னுதான் அவர் இந்த வேலைய செஞ்சிருக்காரு. இதுக்காக அவர பாராட்டியே ஆகனும்…
அவ்வளவுதாம்பா
இப்படிக்கு
பி.கிள்ளி வளவன் (எல்லோருக்கும்) பிகில்
பி.கு. இதுல வினவ பத்தி ஏதாவது எதிர்பாத்தீங்களா.. சாரிப்பா
ஏற்கனவே கேட்ட கேள்விக்கு பதில் இல்லாததால், மறுபடி கேட்கிறேன்
வாசகன் says:
June 2, 2010 at 9:28 pm
ருத்ரன் ஐயா
குறைந்த பட்சம் இதை தூண்டியதர்காவது ” வெகு குறைந்த ” பட்சம் மனசாட்சியோடு சந்தன முல்லையை என் கண்டிக்க வில்லை ?
மனோ தத்துவ மருத்துவர் நீங்கள், உங்களுக்கு தெரியாதா ஒருவனை எப்படி அடித்தால் அவன் எப்படி வெறி கொண்டு வருவான் என்று ? அப்படித் தானே முல்லை செய்த காரியம் அதை எப்படி நியாயப் படுத்த முடியும்.
ஒரு மனோ தத்துவ மருத்துவர் என்ற முறையில் இதற்க்கு எனக்கு பதில் தேவை . மற்றபடி பதிவுலக அரசியல் அப்புறம்
யார் முதலில் அடித்தார்கள் என்பதுதானே உங்கள் கேள்வி? உங்கள் கேள்வியின்படியே பார்த்தாலும், அடிக்கத்துண்டிய விதத்தில் நடந்து கொண்டதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே. இப்படி ரிஷிmuulam kuடைந்து கொண்டே போகலாம்.
முல்லையை நியாயப்படுத்தவரவில்லை, கிண்டலை தாங்கிக்கொள்ள முடியாமல் கொலை செத்தான், சாகட்டும் கிண்டல் செய்த வாய் என்று இந்த விஷயத்தை விட முடியாது என்பதே என் கருத்து.
அப்புறம் பதிவுலக அரசியல் இதில் எனக்கு தேவையில்லை.
பொதுவாக வேறுதளங்களில் நான் ஒரு விவாதத்தை மையக் அருத்திளிருந்து விளக் விவாதிப்பதில்லை. உண்மையிலேயே, பதிவுலக அரசியல் நோக்கின்றி என்னிடம் தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டால் dr.rudhran@gmail.com எனும் முகவரியில் நேரடியாகவே கேட்கலாம் விவாதிக்கலாம்.
யார் முதலில் அடித்தார்கள் என்பதுதானே உங்கள் கேள்வி? உங்கள் கேள்வியின்படியே பார்த்தாலும், அடிக்கத்thuuண்டிய விதத்தில் நடந்து கொண்டதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமேஇப்படிரிஷிமூலம் குடைந்து கொண்டே போகலாம்.
முல்லையை நியாயப்படுத்தவரவில்லை, கிண்டலை தாங்கிக்கொள்ள முடியாமல் கொலைசெய்தான் , சாகட்டும் கிண்டல் செய்த வாய் என்று இந்த விஷயத்தை விட முடியாது என்பதே என் கருத்து.
அப்புறம் பதிவுலக அரசியல் இதில் எனக்கு தேவையில்லை.
பொதுவாக வேறுதளங்களில் நான் ஒரு விவாதத்தை மையக் கருத்திலிருந்து விலகி விவாதிப்பதில்லை. உண்மையிலேயே, பதிவுலக அரசியல் நோக்கின்றி என்னிடம் தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டால் dr.rudhran@gmail.com எனும் முகவரியில் நேரடியாகவே கேட்கலாம் விவாதிக்கலாம்.
[…] வினவு: பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்? மற்றும் சுகுணா திவாகர்: பொறுக்கி நர்சிம்மின்… […]
வினவும் வினவுக்கெதிராக ஒரு ஆணாதிக்க சிண்டிகேட்டும் « எம்.ஆர். ராதா
http://mrradha.wordpress.com/2010/06/02/post-10a/
போர் followup
ஷேக் தாவூத்தின் சுய இன்பம் —
ஜோக் தாவூத்துன்னு ஒரு மென்டல் இருக்கு அது பார்ப்பனியதிடம் கம்யூனிசம் சரண்டைந்துவிட்டது என ஒரு பதிவு எழுதி….
இவர்களைப்போல தட்டையான புரிதலை நாம் வைத்திருப்பதை போலும் இந்த தலைப்பை இவர்கள் எழுதினால் நம்மை கோவப்படுத்தும் என்ற பேன்டஸியில் சுய இன்பம் காண்கிறது….
பதிவுலகில் தலைவிரித்தாடும் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி ஒரு பார்பனன் எழுதியிருந்தா அது பார்ப்பனியத்துக்கு எதிரான காரியமல்லவா.
(தோழர் சாகித் இசுலாமை விமர்சிக்கும் போது இந்த மென்டல்கள் நீயெல்லாம் ஒரு முஸ்லிமா என் கேட்கவில்லையா) கிளைமேக்சை எட்டும் வெறியில் அதை பரிசீலிக்கும அறிவு கூட இல்லாமல் போன இந்த ஜோக்கைப் போய் அறிவாளி என்று காலில் விழும் நெத்தியடி ஷாஜுவின் நிலைமையைப்பார்.. அந்தோ ஓஓஓ பரிதாஆஆஆபம்…..
32 வது பின்னூட்டத்திற்கு பிறகு நான் உணர்ந்தது.. ஒத்து வராத மறு மொழிகள் பகுதிக்கு கூட செல்லவிடாமல் Your comment is awaiting moderation என்று இதைக்கூட edit செய்யும் உரிமை உள்ளவர் நீங்கள் என தெரிகிறது. 28 ஆக நான் பதிவு செய்ய இருந்த நேரத்தில் ( 3.53 ), 12.12,12.29,12.33 & 1.33 ஆகிய நேரத்தில் உங்கள் custody ல் இருந்த பின்னூட்டங்களை release செய்திருக்கிறீர்கள். எனவே என்னுடையது 32 ஆக பதிவானது. ஆக, மருத்துவரின் பார்வைக்கு படைக்கப்பட்ட பின் பிரசாதங்கள் பக்தர்களுக்கு பகிரப்படும். மருது கருதுவது அல்லகையின் அல்லக்கைக்கு அல்லல்! இதற்கு பதில் எழுதினால் வினவின் விழியில் விழுந்து, விரும்பினால் பதிவு செய்யப்படும். நல்லா use பண்றீங்க… சவ்வாசு … continue… congrads!! all the best !!!
http://mrradha.wordpress.com/2010/06/02/post-10a/
வினவும் வினவுக்கெதிராக ஒரு ஆணாதிக்க சிண்டிகேட்டும்
ஜூன் 2, 2010 mrradha மறுமொழியவும் Go to comments
பதிவு எழுத வரும் முன்பாக நான் எடுத்துக் கொண்ட ஒரு உறுதிமொழி, எக்காரணம் கொண்டும் வலையுலகின் செயற்பாடுகளைக் குறித்து வினையாற்றுதல் அல்லது எதிர்வினையாற்றுதல், இரண்டையுமே செய்யக் கூடாது என்பதே. வலையுலகின் சமீபத்திய நிகழ்வுகள் அந்த உறுதியிலிருந்து என்னைச் சற்றே விலகி வரச் செய்திருக்கிறது.
எதிரியின் பாலியல் ஒழுக்கங்களைக் குறை சொல்லி நிகழ்த்தப்படுகிற கருத்தியல் வன்முறைக்கெதிரான விவாதங்கள் முன்னெடுக்கப்பட இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன். கருத்தியல் வன்முறைகள் வரவேற்க்கத் தக்கதல்ல என்ற போதும், ஆண் பெண் சமத்துவம் குறைந்தபட்சம் இந்தக் கருத்தியல் வன்முறையிலேனும் இருக்குமா என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
பெண்ணின் மீதான கருத்தியல் வன்முறை என்பது அவளைக் தேவிடியாளாக, அவுசாரியாக, குச்சிக்காரியாக, விபச்சாரியாக, வேசியாக நிறுவுகிறதென்றால் ஆணின் மீதான கருத்தியல் வன்முறை, மேலே சொன்ன சொற்களுக்குப் பக்கத்தில் “மகனே” என்ற ஒரே ஒரு பதத்தைச் சேர்த்துக் கொள்வதாக மட்டுமே இருந்து வருகிறது. ஆக ஆணின் மீது நிகழ்கிற கருத்தியல் வன்முறையும் சுற்றி வளைத்துப் பெண்களையே குறிவைக்கிறது.
பெண்கள் மீதான இவ்வகை வன்முறை ஆண்களால் மட்டுமே ஏவப்படுகிறது என்றோ ஆண்கள் மீதான இதே வகை வன்முறை பெண்களால் மட்டுமே ஏவப் படுகிறது என்று சொன்னால் அது பச்சைப் பொய். எத்தனையோ குழாயடிச் சண்டைகளில் மேலே சொன்ன சொற்களைப் பெண்கள் மீது பெண்களே பிரயோகிப்பதைப் பலரும் பார்த்திருக்கலாம் கேட்டிருக்கலாம். “ஒரு அப்பனுக்குப் பொறந்திருந்தா என் மேல கை வைடா” என்று ஒரு ஆணிடம் இன்னொரு ஆண் அறைகூவல் விடுப்பதும் நாம் அறிந்திராத ஒன்றல்ல. இதில் சுட்டப்படுவது யாராக இருந்தாலும் சுடப் படுகிறவர்கள் அணைவரும் பெண்களாகவே இருக்கிறார்கள்.
தேவிடியா மகன் அல்லது மகள் என்று சொல்லி ஒருவரை வசைபாடும் போது, “தேவிடியாளுக்கு மகனாகவோ மகளாகவோ பிறந்தவர்கள் பாலியல் ஒழுக்கத்துடன் வாழ்ந்ததே இல்லையா, அல்லது வாழ வாய்ப்பே இல்லையா” என்று தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுகிற பகுத்தறிவு ஏன் ஒருவருக்குமே இல்லை?
எல்லாமே வருவாயை முன்னிறுத்தி வயிற்றுப்பாட்டுக்காகச் செய்யப்படுகிற தொழில்கள்தான் எனும் போது கோயில் குருக்கள், பண்ணையார்களின் வாரிசுகளாகப் பிறப்பதில் என்ன பெருமை இருந்துவிட முடியும் அல்லது விபச்சாரிகள், விபச்சாரத் தரகர்களின் பிள்ளைகளாகப் பிறப்பதில் என்ன இழிவு இருந்துவிடப் போகிறது? இதில் ஒரு சாரார் பெருமையாக உணரவும், ஒரு சாரார் அவமானத்தில் கூனிக் குறுகவும் எது காரணம்?
பொறுப்பு மிக்க வலையுலகம் இதற்கு என்ன செய்யப் போகிறது? பாலியல் ஒழுக்கங்களை முன்னிறுத்திச் செய்யப் படுகிற கருத்தியல் வன்முறைகளைத் தவறு என்று உணர்ந்து அவற்றைக் கைவிடப் போகிறதா? அல்லது பாலியல் ஒழுக்கத்தை முன்னிறுத்திய கருத்தியல் வன்முறை செய்வதற்கு உதவியாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாகக் கலைச் சொல் அகராதி தயாரித்தளிக்கப் போகிறதா?
இந்த சிந்தனைகளுக்கு தூண்டுதலாக இருந்த, விரிவான விவாதத்திற்கு வழியமைத்துக் கொடுத்த, வினவு தோழர்களைப் பாராட்டுகிறேன். அதே வேளையில் வீரியமிக்க இந்த விவாதத்தை முன்னிறுத்தி வினவு தோழர்களுக்கு எதிராக ஒரு சிண்டிகேட் உருவாகியிருப்பதையும் அறிகிறேன். இத்தறுவாயில் வினவை ஆதரிப்பது உண்மையிலேயே ஆணாதிக்க சிந்தனைகளுக்கு எதிராக நிற்கிற ஒவ்வொருவரின் கடமையுமாகிறது. அந்த வகையில் வினவுக்கு என்னுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு: இது குறித்த விவாதத்தில் விருப்பமுள்ளோர் இப்பதிவில் உள்ள கருத்துக்களைக் குறித்த தங்களது சிந்தனைகளைப் பதிவுகளாகவும் பின்னூட்டங்களாகவும் எழுதக் கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்புடைய இடுகைகள்:
வினவு: பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்? மற்றும் சுகுணா திவாகர்: பொறுக்கி நர்சிம்மின் புதிய அடியாள் !!
தோழர் கார்கி: கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில மொக்கைகளும்
பைத்தியக்காரன் @ சிவராமன்: வினவு தோழர்களை ஆதரிப்போம் வாருங்கள்
மாதவராஜ்: நர்சிம், கார்க்கி…. த்தூ! மற்றும் சிராய்ப்புகளையும், சேதங்களையும் தாண்டி…
ஒருவார்த்தை: பதில் சொல்லுங்கள் பதிவர்களே…?
சூப்பர் லிங்க்ஸ்: ஆணாதிக்க பொறுக்கி நர்சிமையும் அவனுக்கு ஆதரவாக நிற்கும் பொறுக்கிகளையும் தனிமைப்படுத்துவோம்.
செந்தழல் இரவி: புனைவாக எழுதுதல் !
தோழர் அசுரன்: ஆணாதிக்க பார்ப்பனியத்தை எதிர்த்து!
எஸ். பாலபாரதி: பதிவரசியல்: என் இரண்டு பைசா
அக்கினிப் பார்வை: உண்மைதமிழன் யார் போதைக்கு நீங்கள் ஊறுகாய்
மருத்துவர் ருத்திரன்: நடுநிலை நாடகம்
சர்வதேசவாதிகள்: ஆணாதிக்கப் பொறுக்கித்தனத்தை தனிமைப்படுத்துவோம் !
சந்தன முல்லை நரசிம் -ஐ பற்றி விமர்சித்து பதிவிட்டார்
– போலிப்பெயரில் இட்டாரா? : அதனால் என்ன? – முகம் மறைத்து எழுதுவது புதிதல்ல, தவறல்ல.
– தோழியின் பதிவில் இட்டாரா?: அதனால் என்ன? – பிறர் தளத்தில் எழுதுவது புதிதல்ல தவறல்ல.
– அவர் பெயரில் இட்டாரா?: அதனால் என்ன? – விமர்சன தாகுதல்தல்கள் பதிவுகளில் புதிதல்ல. தவறல்ல.
– அறிவித்து விட்டு இட்டாரா?: அதனால் என்ன?
– அறிவிக்காமல் இட்டாரா?: அதனால் என்ன?
– பகடி செய்தாரா?: நல்லது வரவேற்போம்.
– சீரியஸா எழுதினாரா? : ரொம்ப நல்லது.
– அவதூறு செய்தாரா?: தவறுதான் – ஆனால் அனுமதிக்கப் பட்டதுதான்.
– பின்னூட்டத்தில் சீன்டினாரா?: அதனால் என்ன? – ஆபாசமற்றவை எதுவும் அனுமதிக்கப் பட்டவை. தவறல்ல.
– ஒன்றரை வருடம் சீன்டினாரா?: அதனால் என்ன? – வருடக்கணக்கில் நடப்பதெல்லாம் இங்கே சகஜம்.
– ஜொள்ளு விட்டாரா?: அதனால் என்ன? – செக்ஸ் டார்ச்சர் இல்லாதவரை ஓகே.
– கண்ணியமானவரா?: மிக்க நல்லது.
– சாதி அபிமானம் உள்ளவரா?: ஏற்பில்லை – எனினும், சாதிப்பாசம் இங்கே பலருக்கும் உள்ளது.
– இவர் முற்போக்கானவரா?: நல்லது – பரவாயில்லை
– இவர் பிற்போக்கானவரா?: ஹி ஹி – இவர் மட்டும்தானா?
– பெண்ணியவாதி இல்லை?: அதனால் என்ன?
வினவு சிவராமனிடம் பதிவு வாங்கி வெளியிட்டனர்.
– சிவராமன் பச்சை பார்ப்பான்.
– சொந்த பதிவு என்று வினவு பொய் சொன்னது
– பிற பதிவர்களை பற்றியும் தவறாக / சரியாக எழுதினர். (அவதூறென்றால் விளக்கவேண்டும்)
– சிவராமன் காசு வாங்கிக்கொண்டு காட்டி கொடுத்துவிட்டார். (ஆனால் பொய் சொல்லவில்லை)
– நேரில் நண்பன் போல் நடித்தார். மறைவில் துரோகமிழைத்தார்.(ஆனால் நல்ல செயல் ஒன்றை துரோகத்தால் தடுத்து நிறுத்திவிடவில்லை. தீய செய்கையை துகிலுரித்தார்)
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எதுவும் நரசிம் மற்றும் கார்கியின் செயல்களுக்கு இணையானவை அல்ல.
நரசிம் முல்லையைப் பற்றி ஆபாசமாக எழுதினார். கார்க்கி தன் மனநோயை வெளிப்படுத்தினார்.
– புனைவாகத்தான் எழுதினாரா?: அதனால் என்ன? – தவறுதான்.
– நிஜமாகவே எழுதினாரா?: அதுவும் தவறுதான்.
– நேட்டிவிட்டிக்காக எழுதினாரா?: தவறுதான். ஏனெனில் வார்த்தைகளில் கோளாறு உள்ளதை அவர் உட்பட அனைவரும் ஏற்பர்.
– ஆத்திரத்தில் செய்துவிட்டாரா?: தவறுதான். மன்னிப்பு கேட்டது நல்லது.
– கார்க்கி சிறு குழந்தையை கொல்லச் சொன்னாரா?: சிறையிலேயே அடைக்கலாம். பள்ளி மாணவன் என்றால் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பலாம்
லோ ஐ – க்யூ பேர்வழிகள் தங்களை ஹீரோக்களாக நினைத்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்வது சினிமாவில் மட்டுமல்ல பதிவிலும் நடப்பதுதான். அதன் உதாரணங்கள் தான் இந்த நரசிம், கார்க்கி, ஆதிமூல கிருஷ்ணன், முல்லை, சந்தனம், விஜி, மயில், உ . த மற்றும் இன்ன பிற கோடான கோடி வாசகர் வட்டம் கொண்ட பதிவர் மாணிக்கங்கள். தங்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். அதில் தவறு என்று எதுவுமில்லை. ஆனால் தாம் வரம்பு மீறுவது கூட தெரியாது கண்ணை மறைக்கும் அளவிற்கு சுய மோகிகளாக திரிந்தால் கண்டனத்திற்குள்ளாக நேரிடும் என்பதை இவர்களுக்கு உணர்த்தியாக வேண்டும். வினவிற்கு பாராட்டுக்கள்.
நரசிம்மை அடியுங்க உதையுங்க! ஆனால் சந்தன முல்லை எழுதியது கண்டிப்பாக பகடி அல்ல என்று ஏன் யாருக்கும் உரைக்க வில்லை?
மயில் மற்றும் சந்தனமுல்லை என்று வாசிக்கவும்
ஜாதி முலாம் பூசுகிறார்கள் என்று எழுதி திசை திருப்பபடுகிறதே அதற்க்கான பதிவு
http://vennirairavugal.blogspot.com/2010/06/blog-post.html
பின்னூட்டங்களைத் தொடர்வதற்காக…
உங்கள் அனைவருடைய நோக்கமும் திசை மாறி செல்கிறது…
கட்டு படுத்தவேண்டியதை, எதை எதிர்க்க வேண்டுமோ அதை விட்டு இப்பிரச்சனை அருமையாக மாறிவிட்டது( மாற்றப்பட்டது)
வாழ்க உங்கள் அனைவரின் சமுகத்தின் அக்கறை!
கருத்துரிமைக் காவாளித்தனம்: இன்னும் கொஞ்சம் ஆப்பு..! – http://kaargipages.wordpress.com/2010/06/03/kaavaalithanam-parti/
//அவரிடம் ஒப்படைத்திருக்கிறார். சுகுணா திவாகர் ஒப்படைக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்து விட்டார்.//
சிவராமன் உமக்கு கொடுத்த வேலை நீர் கச்சிதமா முடிகலையா.. ஆமா முதல்ல பெரியார் தாசன உம மேடையில வுபயோகிசிங்க … பிறகு கலட்டி விட்டிங்கே அப்பறம் சுகுணா திவாகர் கட்டுரைய புக வெளியிட்டிங்கே இப்போ கலட்டி விட்டிங்க … இப்போ சிவராமன் வந்துருக்கறாரு … அவர என்னிக்கி இத போல கலட்டி விட போறீங்க …
யாரு பா அது என்ன நடக்குது இங்க
சுகுணா திவாகர் தமது பதிவில் எழுதியது:
//நர்சிம்மின் ‘பூக்காரி’ பதிவு, ‘ஒரு பெண் பொதுவெளிக்கு வந்தாலே அவளைத் தேவடியாளாகப் பார்க்க வேண்டும்’ என்கிற உச்சபட்ச ஆண்திமிர். அதைப் புனைவு என்றோ பழிக்குப் பழி என்றோ நியாயப்படுத்தி விட முடியாது.//
பிறகு ராம்ஜி என்பவருக்கு பதிலாக பின்னூட்டத்தில் எழுதியது:
//என்னைப் பற்றிச் சுயவிளக்கம் கொடுத்துத்தான் என்னை நிரூபிக்க வேண்டும் என்பதில்லை.ஆனால் அரசியல் விமர்சனம் செய்யாமல், அவதூறு பரப்புகிற சிவராமனின் இரட்டை வேடத்திற்குப் பின்னால் உள்ள வன்மத்தையும், மார்க்சிய அரசியலை விட இதுமாதிரியான தனிநபர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதைத் தன் பதிவில் போட்டுக்கொள்கிற வினவின் அறமற்ற தன்மையையும்தான் அதிகம் பேசியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.//
‘உச்சபட்ச ஆண்திமிர்’ தனிநபர் பிரச்சினையா என்பதையும், ‘உச்சபட்ச ஆண்திமி’ரை விமர்சிப்பதும், முக்கியத்துவப்படுத்துவதும் ‘மார்க்சிய அரசியலுக்கு’ அப்ப்பாற்ப்பட்ட விசயங்களா என்பதையும் சுகுணா விளக்குவார் என நம்புவோமாக. இக்கேள்விகள் தவிர, பாஸ்வேர்ட் முறைகேட்டில் ஈடுபடுவது எத்தகைய அறம் என்பதையும், மொத்தத்தில் எது அரசியல் விமர்சனம் என்பதையும் விளக்கிப் புரிய வைப்பார் என்றும் நம்புவோமாக.
இக்கேள்விகளை சுகுணாவின் தளத்திலும் பின்னூட்டமாக இட்டிருக்கிறேன்.
இக்கேள்விகளை சுகுணாவின் தளத்திலும் பின்னூட்டமாக இட்டிருக்கிறேன்.
/////////////////
அக்காகி சொன்னது தான்!
பின்னூட்டம் வரும் ஆனா வராது! 🙂
இவ்வளவு நடந்திட்டும் சந்தன முல்லை வாயே துறக்க வில்லை. ஏன். மொத்தத்தில் வினவு மீது வைத்திருந்த நம்பிக்கை கலங்கப்பட்டு விட்டதா இல்லையா???
அன்பு தோழர் அவர்களுக்கு, நான் இந்த தளத்தில் கடந்த வாரம் தான் புதியதாக சேர்ந்தேன். எனக்கு இதை பற்றி முழுமையான தகவலை மின்னஞ்சல் முலமாக அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் பிரச்னைகளுக்காக களமிறங்கி போராடகூடியவர்கள், எழுதுபவர்கள் என்று மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் மீது அபிமானம் கொண்டவன் நான். தொடர்ச்சியாக ஒத்தை பைசாவுக்கும் பிரயோசனபடாத பதிவர் வட்ட உள்ளரசியலில் வினவு தளத்தின் ஆற்றல் வீணாவதை கண்டு வருத்தம் கொள்கிறேன்.
வினவு தோழர்களும், ஆணாதிக்கத்தின் பின் கூடிக் கும்மியடிக்கும் கும்பலும்
சில நாட்களாக பதிவுலகம், இரண்டாகப் பிளவுண்டு கிடக்கின்றது. நண்பர்கள் எதிரிகளாகின்றனர். எதிரிகள் நண்பர்களாகின்றனர். எதிரிக்கு எதிராக புதிய கூட்டுகள். ஆம் ஆணாதிக்கம், பார்ப்பனியம், சாதியம் முதல் வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கும் கூட்டமெல்லாம் ஒன்றாக பதிவுலகில் காட்சியளிக்கின்றது.இப்படி சமூகத்தின் நேரெதிரான இரண்டு போக்குக்குள் உட்பட்டு, பதிவுலகம் புதிதாக தன்னை மீள் கட்டமைக்கின்றது. புதிய அரசியல் அணிச்சேர்க்கைகள் உருவாகின்றது. இந்தளவுக்கும் அடிப்படையாக இருந்தது பதிவுத்தளத்தில் இயங்கிய பெண்கள் மேல் ஏவிய, ஆணாதிக்கத்தை வினவுதளம் அம்பலம் செய்ததுதான் காரணமாக இருந்தது. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7143:2010-06-03-08-11-35&catid=322:2010
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7143:2010-06-03-08-11-35&catid=322:2010
இந்தளவுக்கும் வினவு தளம் செய்தது என்ன?
1.பெண் எழுத்தாளர்களை இழிவாடிய ஆணாதிக்க எழுத்தாளர்களை அம்பலமாக்கியது தான். இதுதான் அவர்கள் செய்த ”குற்றமாக” இருந்தது. இதை செய்யக் கூடாத அறமாக முன்னிறுத்தி, ஆணாதிக்க கூட்டமே அலைபாய்கின்றது.
2.இதன் மேல் இந்தக் கட்டுரைக்காக மற்றொருவரிடம் பெற்ற தரவுகளில் இருந்து அதை வெளியிட்டதை குற்றமாக்குகின்றது. தரவைத் தந்தவரின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறி, ஆணாதிக்கத்துக்கு எதிரான விவாதத்தை பார்ப்பனிய குள்ளநரித்தனத்துடன் களத்தில் எதிர்த்து வசைபாடுகின்றனர்.
ஆணாதிக்கத்தை பாதுகாக்க, மற்றவர் தந்த தரவு பற்றிய உரிமை குறிப்பிடவில்லை என்கின்றனர். வேடிக்கை என்ன வென்றால் குறிப்பைக் கொடுத்தவர், அது வினவுவின் கட்டுரையாக கூறுவதுடன், தன் உரிமை பற்றி எந்த ஆட்சேபனையையும் வினவுக்கு எதிராக எழுப்பவில்லை என்பதுதான். இப்படியிருக்க ஆணாதிக்க அணி, அதற்கு கொள்கை விளக்கம் வழங்கி, அதில் கும்மியடிப்பதன் மூலம் பெண்களுக்கு எதிரான விடையத்தை திசைதிருப்புகின்றனர்.
தரவுகளை கட்டுரைக்காக வழங்கியவர், வினவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை வினவு மதிக்கின்றது. இதில் யாரின் அறிவையும், வினவு திருடவில்லை. வினவுக்கு எழுதும் ஆற்றல் இல்லை என்று சொல்லும் மக்குகள் வரை, பதிவுகளில் இருப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. வினவு தன்னை ஒரு குழுவாகத்தான் அறிமுகம் செய்கின்றது. கூட்டு உழைப்புத் தான், வினவுவின் ஆதாரமாகும். இதில் தரவுகளை கொடுத்தவரும் பங்காற்றுகின்றார். இதைக் குறிப்பிட வேண்டும் என்பது கேலிக்குரியது.
////வினவுக்கு எழுதும் ஆற்றல் இல்லை என்று சொல்லும் மக்குகள் வரை, பதிவுகளில் இருப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.///
அட அதாம்பா… நீங்ளே எழுதியிருககாம் எதுக்கு சம்பந்தப்படாத நபர் (அதாவது உங்க கச்சி) இதல சேத்து அவரு ஏதோ பழைய கணக்க தீர்த்துக்க எடம் கொடுத்து….
/////வினவு தன்னை ஒரு குழுவாகத்தான் அறிமுகம் செய்கின்றது. கூட்டு உழைப்புத் தான்,/////
யாரச் சொல்றிய சிவராம அய்யர சேத்துக்கிட்டா…
இதோ முல்லையின் கணவர் முகில் கேட்கிறார்…
@@@@@@@@ நர்சிம் பதிவிலும் அவர் நண்பர்கள் பின்னூட்டத்திலும் ஒரு ஆணாய் ஆத்திரப்பட்டேன், கணவனாய் கொதித்தேன், தந்தையாய் அழுதேன்…..
போதும் பதிவர்களே, உங்கள் இருதரப்பு நியாங்களுக்கும் மேலாய் இறைவன் இருக்கிறான், இருப்பான். இனியாரும் இதைப்பற்றி எழுதாதீர்கள். எங்களுக்கு நியாயம் வாங்கித்தாருங்கள் ப்ளீஸ். அதுபோதும்!!! @@@@@@@@@@
பதிவர்களே வாசகர்களே … அவர் கேட்பது நியாயம் மட்டுமே….. இப்போதாவது சொல்லுங்கள் பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்? முல்லையின் குடும்பத்திற்கு எப்படி நியாயம் வழங்கலாம்?
நியாயம்ன என்ன பணமா !? அதன் அவரு மன்னிப்பு கேட்டன்ள்ள அந்த நா !? ஒரு பெண் ஒரு ஆணை திட்டலாம் , எழுதலாம் இது பிறப்புரிமை ஆனால் ஒரு ஆண் ஒரு புனைவு எழுதினால் தப்பா – பேசாம நரசிம் அந்த புனைவு கிழ் “இதில் வரும் பாத்திரங்கள் கற்பனைன்னு சொல்லி இருக்கலாம் ”
௧. இதனால் அறிய படுவது என்ன வென்றல் ஒரு பெண் நான் எவ்வளவு பெரிய போராளிய நடித்தாலும் பிரச்னை என்று வந்தால் ஊரை கூட்டி ஒப்பாரி வைப்பார்கள்
௨. குடும்ப பெண்கள் குடும்ப வேலைய மட்டும் பார்க்கவேண்டும் வேண்டுமானால் சீரியல் பார்க்கலாம்
௩. அரசியல் பெண்கள் அரசியல் மட்டும் பார்க்க வேண்டும்
௪. முதலில் இந்த ப்ளாக்களை தடை செய்ய வேண்டும்
௫. எல்லாருக்கும் கருது சொல்ல உரிமை உண்டு அது தப்பு ன்ன உனக்கு மட்டும் தான் – அதை ஏற்று கொள்வருகளும் உண்டு – மறுப்பு சொல்வார்களும் உண்டு .
இப்ப இதுதாயா ரொம்ப முக்கியம்.
இத வச்சுக்கிட்டு இன்னும் எவ்வளவு நாளேத்தான் ஒட்டப்போறீகளோ….தெரியல…
இந்த லிங்கப் பாருங்க…
அடுத்த சுனாமி வருறருதுக்குள்ள முடிந்தவரை பொழைப்பைப் பார்க்கும் வழியைப் பார்க்கவும்.
திசை திருப்புவதே வேலையாக போய்விட்டது.கண்டிக்கப்பட வேண்டிய நரசிம் போன்ற ஆட்களை கண்டிக்க மட்டும் பின்னுட்டம் இட்டால் நன்று. மற்றவர்களை இழிவாக எழுதி பேர் வாங்க விரும்பும் நரசிம் அவர்களே உங்கள் தாய் மனைவி ஆகியோரை யாராவது அப்படி புனைவு எழுதினால் என்ன சொல்விர்கள் அவர் ஒப்புக்கு உங்களை போல மன்னிப்பு கேட்டால் விட்டு விடுவீர்களா??? நரசிம் போன்றவர்களின் பதிவுகளை தமிழ் மணத்தில் இருந்து நீக்கினால் என்ன??????
பதிவர் பைத்தியக்காரன் செய்த துரோகம் !
http://vrinternationalists.wordpress.com/2010/06/03/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/
திரு.செங்கொடி…இன்று தெரிய வந்த உண்மை(சுகுணா திவாகர்) அதிர்ச்சிகரமாய் இருக்க, அன்றே… பலருடைய எழுத்து நடையை புடம்போட்டு மிகத்துல்லியமாக மோப்பம் பிடித்து கேட்ட மணிகண்டன் அவர்களிடம் அன்று எதற்கு வினவிடம் இருந்து அவருடைய படிக்கும் திறனின் மீது அவ்வளவு நக்கல்…எள்ளல்?இதில் எல்லாம் அறிந்த சந்தனமுல்லை, வினவை //பதிவுலகை, வினவு கூர்ந்து கவனித்து வருவதற்கு பாராட்டுக்கள்// என்கிறார்… இது செம காமடி. தன் முதுகில் தானே சபாஷ் தட்டா?“இனி ‘எல்லாரும்’ வினவில் எழுதலாம்… “இனி ‘அனைவரின்’ எழுத்துக்களும் வினவில் இடம்பெறும்” என்பது இப்படித்தானா? ஆப்படியானால், இனி அடுத்து… (காரியம் ஆகவேண்டுமானால் தம்மால் பலமுறை பார்ப்பான் பார்ப்பான் என வசைமாரி பொழியப்பட்ட)ஆர்.வி, டோண்டு…? வினவின் புதிய பாப்பநீய கூட்டணி வாழ்க…‘தன் கொள்கை கடவுள்களை இழிவு படுத்தினார் என்று எவ்வளவு கேவலமாய் ஒரு பெண்ணை இழித்து பதிவுகள் போட்டு அதற்கு அசிங்க அசிங்கமாய்… காமுகன் நர்சிமே படிக்க வெட்கி கூசி தலைகுனியும் அளவுக்கு(???).. அவ்வளவு ஆபாசமாய் பின்னூட்டங்கள் போட்டு கொட்டமடித்த வினவு தோழர்களா இப்போது ஒரு பெண்மையின் மானம் காக்க புறப்பட்டுவிட்டார்கள்?’ என்று ஆச்சரியப்பட்டால்… ச்சே… இல்லை…வினவு இல்லை வேறொருவர்… அப்பாடா…(உண்மையை உலகுக்கு அறிவித்த சுகுணா திவாகர் : நன்றி )வினவு என்ற ‘பின்னூட்ட ஜனநாயகத்தின் ரஷ்ய ஸ்டாலின்’, ‘பதிவுலக நாட்டாமை’, ‘வலையுலக ஹிட்லர்’க்கு இன்று சரியான எழமுடியா நெத்தியடி கொடுத்துவிட்டார் சுகுணா திவாகர்…சில மாதங்களாக நான் எத்தனையோ பின்னூட்டங்கள் போட்டும் அவற்றை பிரசுரிக்காமல் கொன்று புதைத்தனர்…முத்துக்குமார் இடுகைக்குப்பின் மொத்தமாய் கட்டம் கட்டப்பட்டுவிட்ட என் ஐ.பி யும், மெயில் ஐ டியும், அதன் பிறகு வந்த எந்த பதிவிலும் பின்னூட்டம் செல்லாது செத்து விடும்.பெரியார்தாசன் அப்துல்லா ஆகிய வினவின் இடுகையிலும் கூட நான் எத்தனை கருத்துகளை சொல்ல எத்தனித்தேன்… (பாருங்கள் ஒன்று கூட இருக்காது) என்னை சில சகோதரர்கள் ‘ஒதுங்கி இருப்பதாய்’ கூறினர்…என்ன செய்வது… நொந்து போவதைத்தவிர… அவர்களின் போலி பின்னூட்ட ஜனநாயகம் அப்படி…கடைசியில் அவர்களே ஏமாந்த நேரம்.. ஒரு மிட் நைட்டில்… பெப்சி-கோக்கில் ‘ஜாக்பாட் ஜே’ என்ற பெயரில் நுழைந்துவிட்டேன்…கடைசி வரை உண்மைகளை உரத்துக்கூறினேன்… ஏனோ ஆச்சரியப்படும் வகையில் அப்பதிவில் மட்டும் தொடர்ந்து அனுமதித்தனர்…சரி, திருந்திவிட்டார்களோ(?) என்று என் பழைய ஐடியில் நான்போட்ட மேற்கூறப்பட்ட பெரும்பாலான கருத்துகள் வரவே இல்லை. வெறுத்துபோய் ‘ஒழிக பின்னூட்ட ஜனநாயகம்’ என்று போட்டதை மட்டும் வைத்துக்கொண்டு என்னை தூற்றுகின்றனர்.நான் (ஒரே ஆள்) அவர்களின் நிர்பந்தத்தால் வேறு வழியின்றி வேறொரு பெயரில் பின்னூட்டம் இடுவதும்…வேறொரு நபரின் பதிவை தம்முடைய பெயரில் தம் தளத்தில் வெளியிட்டுக்கொள்வதும், அதை கண்டுபிடித்து கேட்டவரை நக்கலிட்டதும், பதிவு போட்டவரை எதிர்ப்பதிவு போட்டு அர்ச்சிப்பதும், தம் ஆட்களை வைத்தே தம்மை பாராட்டிக்கொள்வதும்… மற்றவர்களை திட்டித்தீர்ப்பதும் …ஆகிய இவை இரண்டும்ஒன்றா…? …ஒன்றா?.. ஒன்றா?இந்த என் தன்னிலை விளக்கத்தை எல்லாம் வெளியிடாமல் மீண்டும் என் பின்னூட்டத்தை இல்லாமல் ஆக்குவது சரியா? இதுதான் நேர்மையா? இனி ஜாக்பாட் ஜே யும் அனுமதிக்கப்படவில்லை என்றால்… வேறொரு பெயரில்தான் வர வேண்டும்…
உப்புத்திண்டவர்கள்…குடித்தே தீரவேண்டும்… குடிக்கிறார்கள்.
இதற்கு மறுமொழி வினவிடம் இருந்து எதிர் பார்கிறேன் ..நான் தொடர்ச்சியான வாசிப்பாளன் இல்லை என்பதால் பதில் தெரிந்து கொள்ள கேட்கேறேன் வினவு மட்டும் பதில் சொல்ல வேண்டுகிறேன்
ஹலோ நக்கீரன், வாட் இஸ் திஸ்… அந்த பதிவுலயே அந்த ஆளுக்குகான பதிலை எழுதி அத இங்கேயும் காப்பி போட்டப்புறம் https://www.vinavu.com/2010/06/02/suguna-narsim/#comment-24320
எதுக்காக மறுபடியும் அதே கேள்வி..
அந்த நெத்தியடி ஒரு பிராடு… இசுலாமிய மதவெறியர்களை வினவுல அம்பலப்படுத்தி எழுதுனதுலேருந்து இதுமாதிரி பினாத்திகிட்டிருக்காரு…
ஏதாவது விமர்சனம் உங்களுக்கு இருந்தா வெளிப்படையா சொல்லுங்க அத விட்டுட்டு இந்த மாதிரி செஞ்சா உங்களுக்கு உள் நோக்கம் இருக்கறதா அர்த்தமாயிடும்
நன்றி
நக்கீரன் வினவு கிட்ட கேள்வி கேட்டா நீ ஏன்பா துள்ளிக்கிட்டு ஓடியாரா?
வினவு பேரு மாத்தி வந்துருக்கணும். கேள்விக்குறின பேருல வந்து பதில் சொல்லிருக்கிங்க. போய் ஐடியை மாத்திகினு வாங்க கேள்விக்குறி. ஓஹோ வினவு தான் கேள்விக்குறி. கேள்விக்குறி தான் வினவுனு ஐயோ பாவம் நக்கீரனுக்கு தெரியலை.
அத அவரே கேக்கல நீ ஏன்பா கேக்குற…? ரொம்ப நாளா உனக்கு யார் வினவுன்னு கேள்வி அறிக்குதே ஏன் டைரக்டா ஃபோன் பண்ணி கேட்டு ஒரு நட நேர்ல போய் பாக்ககூடாது??? மேலூரு தானே மெல்போர்ன் இல்லயே…????
திருப்பி திருப்பு இவ்ளோ கேக்கறதுனால சொல்றேன்… நான் வினவு கிடையாது, ஆனா வினவா இருந்தா நல்லாயிருக்கும் 😉
கேள்விக்குறி மின்மடலில் தொடர்பு கொள்க. அவசரமில்லை.
தோழர் சும்மா உல்லுலாங்காட்டிக்கு சொன்னேன் நீங்க மெயில் அனுப்ப சொல்றீங்களே ???
இல்ல தோழர் ஆத்திர அவசரத்துக்க்கு (வினவு என்ற முறையில் மட்டும்) உங்கள தொடர்பு கொள்ளணும்னா வழி வேண்டாமா?
மடலில் தொடர்புகொண்டமைக்கு நன்றி தோழர். ஆனா நீங்க ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில வாரீங்கன்னு கொஞ்சம் குழப்பமா இருக்கு. உல்லூலாங்காட்டிக்கு உங்க கால்ஷீட்ட முன்னாடியே சொன்னீங்கன்னா அவங்களும் கரெக்டா வருவாங்கல்ல.
எங்களையும் கொஞ்சம் கண்டுக்க பா
//வினவு says:June 4, 2010 at 1:11 am
கேள்விக்குறி மின்மடலில் தொடர்பு கொள்க. அவசரமில்லை.//
ஆக்ச்டன் ரிப்பீட்டு. நம்பிட்டோம் வினவு கேள்விக்குறி இல்ல. கேள்விக்குறி வினவு இல்லபா. நல்லா எழுதுராங்கய்ய ஸ்கிரிப்ட்டு.
vinavu than kelvikuri nu artham illama solla kudathu i know about vinavu and i respect tht peoples who are invloved in vinavu group i just want to know tht they r deleting ur replys or not.THEY PROVED THT THEY WILL NOT DO LIKE BY ALLOWING ME TO COPY PASTE UR QUESTIONS HERE SO U SHUT UP UR MOUTH AND GO.
KELVIKURI I JUST WANT TO PROVE THT VINAVU WILL NOT DO LIKE THIS NOW IT PROVEN AND SHAJAHAN NEED ANOTHE NAME TO POST HIS BLOODY PINUTTAM
யோவ் ஷாஜூ 6 மாசமா ராப்பகலா பின்னூட்டம் போட்டு இப்பத்தான் மொதொ தபா என்ன கேட்டு மெயில் அனுப்பிச்சிருக்காங்க,, அது பொருக்கலியா உனக்கு… சரியான வயித்தெரிச்சல் கேசுய்யா நீர்….
கிர்ர்ர்ர்ர்ர
இவ்வளவு விசியம் இருக்கா இங்கே. நா புதுசு கொஞ்சம் ஒதுங்கி இருந்து கவனிக்கறேன்
http://sandanamullai.blogspot.com/2010/06/blog-post_04.html
இடையில் ரவியும் முகிலும் தொடர்பு கொள்கிறார்கள். கவிதாவும் ஏதோ உடன்படிக்கை கொண்டு வர முயற்சி செய்கிறார். இதில் எதுவும் எனது consensus இல்லாமலே நடைபெறுகிறது. ஏனெனில் எனக்கு வேண்டியது தனிப்பட்ட தீர்வுகள் அல்ல.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை யாராவது ஒரு பெண் பதிவரை இப்படி பலியாக்குகிறார்கள். உதாரணங்கள் சொல்ல விரும்பவில்லை. இதற்கு சில வருடங்களுக்கு முன்பு கூட உதாரணம் காட்டலாம். கடைசி பலியாக என்னோடு இது முடியட்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். முகிலிடம் நான் பார்த்துக்கொள்கிறேன், என்னால் முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறேன்.
”அவரை மயக்க நான் பிராக்கெட் போட்டதாகவும், அதற்கு அவர் ‘மசியாததால்’ அவரை வஞ்சம் தீர்க்க நான் செயல்படுவதாகவும்” தனது நண்பர்களிடம் சொன்னதுடன், எனக்கு ஆதரவாக நிற்கும் நண்பருடன் நான் ‘கள்ளத்தொடர்பு’ வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக டிவிட்டரில் தன் நண்பர்கள் மூலம் கிசுகிசு எழுத வைத்திருக்கிறாரே…
இப்படிப்பட்ட ஒரு நபரை நான் மன்னிக்க வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்
வினவு திங்களன்று இடுகையை எனக்கு அனுப்பிவிட்டு சம்மதத்தை கேட்கிறார். பழைய இடுகைகளிலிருந்தும், அவரை தொடர்பு கொண்ட பிற பதிவர்கள் சொன்ன தகவல்களை வைத்தும் எழுதியிருப்பதாக கூறுகிறார். வன்புணர்ச்சி என்ற வார்த்தை ஒன்றும் “பூக்காரி”யை விட
என்னை பாதித்துவிடவில்லை. தாராளமாக இடுகையிடுங்கள் என்று சம்மதிக்கிறேன். பதிவுலகில் பூக்காரியின் அருமை பெருமைகளை வார்த்தைகளால் நாறடித்த பிறகு அதை கண்டிப்பவர்களின் கையை கட்டிப்போட நான் விரும்பவில்லை. சொல்லப்போனால் எனது உணர்ச்சிகளின் குமுறலாய் அதைப் பார்க்கிறேன். தனிமையில் சலித்திருந்த என்னை அந்த இடுகை தோளில் கை போட்டு பார்க்கலாம் ஒரு கை என்றது.
தொடர்ந்து தோழர்கள் நர்சிமின் வக்கிர புத்தியை அம்பலப்படுத்துகிறார்கள். இமேஜ் நாசமாவதை தாங்க முடியாமல் புனைவு சிலரை காயப்படுத்தியதாகவும் என்னிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாகவும் இடுகிறார். ஆனால் அதாவது என்னை கேவலபடுத்தியதற்கும், பப்புவின் இடுகைகளை ரசித்து மறுமொழி இட்டவர்களை கேவலப்படுத்தி இருந்ததையும், மற்ற பெண்பதிவர்களை சில்வண்டுகள் என்றும் “அவளுகளுக்கு இருக்கு” என்ற அச்சுறுத்தலையும் விட்டு விட்டார். பூக்காரி என்ற உண்மையான ‘புனைவினால்’ நைந்திருந்த எனக்கு அந்த மன்னிப்பு ஒரு பச்சையான புனைவு என்று புரிந்து கொள்வதற்கு மெனக்கெடவில்லை.
இனி யாரும் பெண் பதிவர்களை கிண்டலடிக்க இந்த ஒரு வழியை எடுக்க மாட்டார்கள் என்பது இதற்கு கிடைத்த வெற்றி. அதற்கு வினவுக்கும் மற்ற தோழர்களுக்கும் நன்றி! வினவின் அந்த இடுகை ஒரு கல்வெட்டாக இருக்கட்டும்.
இது குறித்து சாதி வெறியையும் ஆணாதிக்கத்தையும் அம்பலப்படுத்திய அத்தனை தோழர்களுக்கும் நன்றி!
இனி நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நானோ, முகிலோ மட்டும் முடிவு செய்வது நியாயமாக இருக்காதோ என்று தோன்றுகிறது. தோழர்களும், நண்பர்களும் கூறட்டும்!
தோழர் சந்தனமுல்லையின் முன்னுதாரணத்தை அடியொற்றி, இதுவரை வலையுலகில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தம்மீது ஆணாதிக்க, பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டவர்களை வெளிப்படையாக அம்பலப்படுத்த முன் வர வேண்டும்.
சந்தனமுல்லை இதனை தனது தனிப்பட்ட சொந்தப் பிரச்சினையாக பார்க்காமல் பெண்கள் மீதான ஆணாதிக்க தாக்குதல் என்ற அம்சத்தில் முறியடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளார் என்ற வகையில் பிற பெண் பதிவர்களும் அவரது இந்த முன் முயற்சியில் பங்கேற்க வேண்டும் என்று கோருகிறேன்.
தோழமையுடன்,
அசுரன்.
வாழ்த்துக்கள் சந்தன முல்லை
இனி
நீ பேசு
உனக்க நீ பேசு.
/////சந்தனமுல்லை இதனை தனது தனிப்பட்ட சொந்தப் பிரச்சினையாக பார்க்காமல் பெண்கள் மீதான ஆணாதிக்க தாக்குதல் என்ற அம்சத்தில் முறியடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளார் என்ற வகையில் பிற பெண் பதிவர்களும் அவரது இந்த முன் முயற்சியில் பங்கேற்க வேண்டும் என்று கோருகிறேன்.////
தோழமைகளுக்கு உங்களுடன் எம்மையும் இணைத்துக் கொள்ளுங்கள். தோழர் சந்தனமுல்லைக்கு எம் ஆதரவு உண்டு.
//யாரைப் பற்றி அந்த இடுகை? எழுதியது யார்? – என்று எதுவும் தெரியாமல், யதேச்சையாகப் பார்த்தமாத்திரத்தில் அருவருப்படைந்து பதிவுலகில் தன் முதல் மைனஸ் ஓட்டைப் போட்டு விட்டு நகர்ந்தார் அம்பிகா அக்கா.
அப்படி இருக்கையில், முல்லையுடன் இத்தனை ஆண்டுகள் பழகி, அவரது எழுத்துக்களையும் மகளின் செல்லப் பேச்சுக்களையும் ரசித்துப் பின்னூட்டமிட்டு, அவர் தொடங்கிய அம்மாக்களின் வலைப்பூக்களில் உறுப்பினராகி இடுகைகள் எழுதிக் கை கோர்த்து வந்த சகோதரிகளில் குறைந்தது நான்கைந்து பேராவது கண்டனம் தெரிவிப்பார்கள் என்று மிகவும் எதிர்பார்த்தேன்.
நான் ஏற்கனவே மோதிக் கொண்டவள் என்பதால் ரொம்பச் சொல்ல வேண்டாம், நிச்சயம் மற்ற பெண்பதிவர்கள் காட்டமாக எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று உறுதியாக நம்பினேன். ஏமாந்து போனேன். வருந்துகிறேன்.//
கேளுங்கள்… சரியாகச் சொன்னால் வினவுங்கள்… இதுதான் வினை செய்ய மற்றவர்களை வர வைக்கும்….
பொறுத்திருந்தது போதும் பெண் பதிவர்களே, ஆணாதிக்க வக்கிரங்களை எதிர்த்து சமரசமற்ற உங்களது எதிர்ப்புகள் கிளம்பட்டும்.
[…] […]
இதோ இன்னொரு அயோக்கியன் ! நாட்டாமையே வருக வருக…
http://vrinternationalists.wordpress.com/2010/06/06/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/
சிவராமனின் பதிவில் இந்த பின்னூட்டத்தை வெளியிட்டால், bX-y60cx4 என்று பிழை அறிவிப்பு வருகின்றது.
சிவராமன், நர்சிம்மிடம் முன்னாடியே இதைப் பற்றி விவாதித்ததாகவும், அதைப் பற்றி கட்டுரை எழுதப்போவதாக சொன்னதாகவும், நரசிம் அதற்கு ‘எனக்கு கவலையில்லை ணா’ என்று பதிலளித்ததாகவும் சொல்லியுள்ளார். மேலும் இருவருக்கும் பொதுவான நண்பர்களிடம் பேசும்போது அனைவரின் மனநிலையும் நர்சிம்மை ஆதரிப்பதாக இருந்ததாகவும், அதனாலேயே இந்த கட்டுரை எழுதும் முடிவுக்கு வந்ததாகவும் சொல்லியுள்ளார். இதனிடையில், சந்தனமுல்லை மூலமாக சிவராமன் கட்டுரைப் பற்றி அறிந்த வினவு சிவராமனுடன் சேர்ந்து கட்டுரை எழுத விருப்பம் தெரிவிக்க அதற்கு சிவராமன் சம்மதிக்க சிவராமின் கட்டுரையை தன்னது நடையில் (இரு மடங்கு) வார்த்தகளோடு வினவு எழுதியுள்ளது. மேலும் வினவில் எல்லாம் ஒருவர் அல்ல – குழுவாக எழுதுவது என்பதும் – தனி சூப்பர்ஸ்டார் போன்று சாகசம் செய்பவர்கள் அவர்கள் இல்லை என்பதும் – தனிமரம் தோப்பாகாது – அமைப்பின் மூலமான வேலைதிட்டமும் – கொண்ட கொள்கைக்கு ஒத்த வர்க்கத்தை சார்ந்த கருத்துடையவர்களிடம் (ஒத்த கருத்து என்பது ஒவ்வொரு பிரச்சனையிலும்), வாசர்களிடமும் எழுதும் பழக்கத்தை தூண்டவும் அரசியல் மயப்படுத்தவும், வென்றெடுக்கவும் என வினவில் எல்லோருடைய கட்டுரையையும் வாங்கி வெளியிடுவது இல்லை என்பது யாவரும் அறிந்த ஒன்று. இப்படி இருக்கும் போது, நம்பிக்கைத்துரோகி என்று சிவராமனை திட்டுவதும், சிவராமின் ஜாதியை காட்டி வினவு அவர் கட்டுரையை வெளியிட்டது தவறு என்றும், பெயர் குறிப்பிடாமல் வினவு கட்டுரையை வெளியிட்டது தவறு என்று கூவுவதும் தவறானவை – விவாதத்தின் திசையை திருப்பும் தீய நோக்கம் கொண்டவை என்பது எனது தனிப்பட்ட கருத்து. மேலும் இந்த தந்திரத்திற்கு ருத்ரன் முதலானோர் பலியாகிவிட வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
நர்சிம்
நீ எழுதிய அந்த பூக்காரி பதிவு பச்சை ஆணாதிக்க, வன்மம் மிகுந்த வெறும் காழ்ப்புணர்ச்சி பார்ப்பனியத் திமிர் கொண்ட, மிக மிக கேவலமான பதிவு.
உன் வீட்டு பொண்ணுங்கள கூட இப்படித்தான் நீ பேசுவியா?
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
-senthil.g,tiruppur.