முடித்துக் கொள்ளலாம்தான் – முடிவு நியாயமானதாக இருந்தால். தவறிழைத்தவர் உண்மையிலேயே மனம் வருந்தியிருந்தால்.
ஆனால் முல்லையின் துணைவர் முகில் எழுதிய பதிவை முன்வைத்து முடித்துக் கொள்ள சிலர் துடிக்கிறார்கள்.
முகிலின் கடிதம் வெளிப்படுத்தும் வேதனையையும் சங்கடத்தையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். குறிப்பாக வினவு எழுதியுள்ள பதிவில், நர்சிம்மின் எழுத்தை “வன்புணர்ச்சி” என்ற சொல்லால் குறித்திருப்பதை “கொச்சைப்படுத்தியிருப்பதாக” அவர் குறிப்பிட்டிருக்கிறார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண்ணோ அவரது குடும்பத்தினரோ அதை வெளியில் கூறுவதற்குக் கூசும் துயரத்தின் வெளிப்பாடே அவரது கூற்று என்றே நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
இந்தப் புரிதல் எங்களுக்கு இருந்ததனால்தான் எமது பதிவை வலையேற்றுவதற்கு முன் அதனை முல்லைக்கு அனுப்பி, அவரது ஒப்புதல் பெற்று அதன் பின்னரே பிரசுரித்தோம். பிரச்சினையை மிகைப்படுத்திக் கூறி பரபரப்பு உண்டாக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல “ரேப்” என்ற அந்தச் சொல்.
பண்டிட் குயின் திரைப்படத்தில் வரும் கொடூரமான அந்தக் காட்சியைப் போன்ற ஒன்றை மனத்திரையில் ஒடவிட்டு, அது ஒரு பெண்ணுக்குத் தோற்றுவிக்கும் துன்பத்தை எண்ணி, ரசித்து எழுதப்பட்டதுதான் நர்சிம்மின் புனைவு. பணத்திமிர், பார்ப்பன சாதித்திமிர் போன்றவையெல்லாம் வினவின் புனைவுகள் அல்ல. நாங்கள் சாதி பிளவை உறுவாக்கவும் இல்லை அது நர்சிம்மின் எழுத்துக்குள் புழுத்து நெளிகின்றது, அவருக்கு கிடைக்கும் ஆதரவில் தனித்து தெரிகின்றது.
சந்தனமுல்லை என்ற பதிவருடன் வினவு கொண்டிருக்கும் நட்புக்காகவோ, அல்லது நர்சிம் என்பவர் மீதான பகைமைக்காகவோ எங்கள் பதிவு எழுதப்படவில்லை என்பதை முகில் புரிந்து கொள்வார் என்றே நம்புகிறோம். இந்த விவகாரம் எழும்புவதற்கு முன் நர்சிம் என்பவர் யார் என்றே எங்களுக்குத் தெரியாது என்பதே உண்மை.
நடுவீதியில் ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறையில் யாரேனும் ஒரு கயவன் ஈடுபடும்போது, நேர்மையான எந்த மனிதனும் என்ன செய்வானோ, செய்ய வேண்டுமோ அதைத்தான் நாங்கள் செய்தோம். அந்தப் பெண்ணின் பெயர் சந்தன முல்லை, அவரது கணவர் முகில் என்பதெல்லாம் அப்புறம் தெரியவரும் விவரங்கள். அவ்வளவுதான். நண்பர் முகில் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம்.
முகில் எழுதிய பதிவுக்கு பின்னூட்டமிட்டிருக்கும் பலர், “ஒரு பெண்ணின் நலனில் கணவனைத் தவிர வேறு யார் அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கமுடியும்?” என்ற பாணியில் எழுதியிருக்கிறார்கள். புரியாமல் எழுதியிருந்தால் இது அசட்டுத்தனம். புரிந்து எழுதியதாகவே தெரிவதால் இது விசமத்தனம்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட பெண்களும் சரி, அவளது குடும்பத்தினரும் சரி அதனை வெளியில் சொல்வதற்கே தயங்குகின்றனர். குடும்பத்தின் கவுரவம் மற்றும் பெண்ணின் எதிர்காலம் கருதி மறைக்கவும் விரும்புகின்றனர். இந்தச் சந்தில் ஒளிந்து கொண்டுதான் பல ஆணாதிக்கப் பெருச்சாளிகள் அடிபடாமல் தப்புகின்றன. மறப்பதற்கோ, மன்னிப்பதற்கோ நண்பர் முகில் தனது சொந்தக் காரணங்களையும் அளவுகோல்களையும் வைத்திருக்கலாம். அவற்றில் முகிலும் முல்லையும் ஒன்றுபடலாம் அல்லது வேறுபடலாம். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் அவர்களுக்கிடையில் ஒத்த கருத்து வரவேண்டும் என்பதே நம்முடைய விருப்பம்.
ஆனால், அந்த அளவில் மட்டுமே இது அவர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை. மற்றப்படி “திரௌபதியை துச்சாதனன் துகிலுரிந்தான். பிறகு திரௌபதியிடமோ தருமனிடமோ மன்னிப்பு கேட்டு விட்டான். அவையோரே கலைந்து செல்லுங்கள். மகாபாரதம் முடிந்தது” என்று பஞ்சாயத்து செய்ய முனைபவர்கள் துச்சாதனனை விடக் கொடிய அயோக்கியர்கள். இப்போது நடந்து கொண்டிருப்பது அதுதான்.
“வினவு என்ன பதிவுலகின் நாட்டாமையா?” என்று குமுறுபவர்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது இதைத்தான்: இந்த பாரதக் கதையை வினவு தொடங்கி வைக்கவில்லை. அதே நேரத்தில், “இது பாஞ்சாலியின் பாடு அல்லது தருமனின் பாடு.. நமக்கென்ன” என்று அவையில் நெடுமரமாய் சமைந்திருக்கவும் எங்களால் முடியாது. அவமானப் படுத்தப்பட்டிருப்பது சபையோராகிய நாம் அனைவரும்தான்.
ஏனென்றால் இந்தப் பிரச்சினையில் அநாகரிகங்களின் அத்தனை வகைகளையும் பார்த்து விட்டோம். தொடங்கி வைத்த நர்சிம், அதற்கு விசிலடித்து கைதட்டி பின்னூட்டமிட்டவர்கள், பின்னர் டிவிட்டரில் முல்லையைப் பற்றி அவதூறு செய்தவர்கள், ஒரு பக்கம் முல்லையிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டே இன்னொரு பக்கம் வினவின் பதிவுக்கு மைனஸ் ஓட்டு போட்டவர்கள் வரிசையில் கடைசியாக பைத்தியக்காரனையும் வினவையும் தாக்குவது போலக் காட்டிக் கொண்டு நர்சிம்முக்கு முட்டுக் கொடுக்க தனது புலனாய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தார் சுகுணா திவாகர். அதுதான் ஆபாசத்தின் உச்சம். அநாகரிகத்தின் எல்லை. ஐந்தாம்படை வேலைக்கு இலக்கணம்.
இந்த இடத்தில் தோழர் ரயாகரனை ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தம். அவருடன் கடுமையான கருத்துப் போராட்டத்தை வினவு ஏற்கெனவே நடத்தியிருக்கிறது என்ற போதிலும், ஆணாதிக்க எதிர்ப்பு என்ற நியாயத்துக்காக தானே முன்வந்து அவர் தோழமைக் கரம் நீட்டியிருக்கிறார். இதற்குப் பெயர்தான் தோழமை உறவு. தனது தனிப்பட்ட வன்மத்தைத் தீர்த்துக் கொள்ள எதிரிகளுக்கு ஐந்தாம்படை வேலை பார்ப்பவர்கள் நட்பு பற்றியோ, தோழமை பற்றியோ பேசும் அருகதை அற்றவர்கள்.
இன்று, “பூக்காரிகளுக்கும் சுய மரியாதை உண்டு“ என்ற முல்லையின் பதிவுக்கு தமிழ்மணத்தில் மைனஸ் ஓட்டு குத்தித் தள்ளுகிறார்கள் சில ஐந்தாம்படைப் பேர்வழிகள். இவர்கள் சிறுபான்மை என்றாலும் இதுவும் பதிவுலக நாகரிகத்தின் இலட்சணம்தான்.
நர்சிம்மை முல்லை கேலி செய்தார். நர்சிம் எதிர் வினையாற்றினார் என்று இன்னமும் சிலர் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச்சு அசலாக இதுதான் மகாபாரதக் கதை. “இந்திரப்பிரஸ்தத்தின் அரன்மணையில் துரியோதனனைக் கேலி செய்து திரௌபதி சிரித்தாள்; பதிலுக்குப் பழிவாங்க துரியோதனன் அவளைத் துகிலுரிந்தான்” என்ற துவாபர யுகத்தின் நியாயம் இந்தக் கலியுகத்துக்கும் பொருந்தும் என்றால், வேறு வழியில்லை – யுத்தம்தான் முடிவு.
கலியுகம் பிறந்து விட்டது உண்மையானால், பெண்ணுரிமை, சமத்துவம் போன்ற சொற்களிலாவது பதிவுலகத்துக்கு நம்பிக்கை இருக்குமானால், நாம் நாகரிகமான தீர்வுகளைப் பற்றி யோசிக்கலாம்.
“முல்லையையோ முகிலையோ நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்க தயார்” என்று கூறியிருக்கிறார் நர்சிம். நல்லது. சந்திக்கட்டும். ஆனால் ஒரு இனிய மாலை நேரத்தில் சரவணபவனிலோ அல்லது எதாவது ஒரு காபி ஹவுஸிலோ சந்தித்து டிபனுக்கும் காப்பிக்கும் இடையிலான இடைவெளியில் நாசூக்காக “சாரி” சொல்லி முடித்துக் கொள்ளும் பிரச்சினை அல்ல இது.
முல்லையையும் முகிலையும் நம்மையும் நர்சிம் சந்திக்கும் இடம் பதிவர் சந்திப்பாக இருக்க வேண்டும். பெண் பதிவர்கள் உள்ளிட்ட எல்லாப் பதிவர்களின் முன்னிலையில், இந்த விவாதத்தில் பங்கு பெற்ற எல்லா பதிவர்கள் மற்றும் வாசகர்கள் முன்னிலையில், உண்மைத் தமிழர் உள்ளிட்ட எல்லாத் தமிழர்களின் முன்னிலையில், நர்சிம், கார்க்கி முதலானோரும் தங்களது மன்னிப்பை வெளியிடட்டும். கள்ள உறவு கதை கட்டிப் பரப்பிய பெருமக்களும் தங்கள் முகத்தை அங்கே காட்டட்டும். முகத்தை வெளிக்காட்டும் தேவை இல்லாததால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
இது வினவின் நாட்டாமைத்தனம் அல்ல, நாகரிகமாக பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு ஆலோசனை மட்டுமே. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை உண்மைத்தமிழனே முன்நின்று செய்யட்டும். நாங்கள் ஓரமாக நின்று கொள்கிறோம்.
எழுத்தில் கம்பீரமாக உலவும் ஆணாதிக்கவாதிகள் தமது முகத்தைக் காட்டுவதற்கு வெட்கப்படத் தேவையில்லையே! என்றைக்கு வைத்துக் கொள்ளலாம், எங்கு வைத்துக் கொள்ளலாம் சொல்லுங்கள்.
சும்மா வெக்கப்படாதீங்க சார்! வாங்க!
_______________________________________________
தொடர்புடைய பதிவுகள்
- பூக்காரிகளுக்கும் சுய மரியாதை உண்டு
- வினவு தோழர்களை ஆதரிப்போம் வாருங்கள்
- நடுநிலை நாடகம்
- வினவு தோழர்கள்
- சுய விமர்சனம் செய்யத் தயங்கும் பதிவுலகின் ஆணாதிக்க வக்கிரம் – ஒரு முழுப் பார்வை!!
- கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில மொக்கைகளும்
- கருத்துரிமைக் காவாளித்தனம்: இன்னும் கொஞ்சம் ஆப்பு..!
- நசுங்கும் சொம்புகள்!
- நர்சிம், கார்க்கி…. த்தூ!
- பதில் சொல்லுங்கள் பதிவர்களே…?
- வினவும் வினவுக்கெதிராக ஒரு ஆணாதிக்க சிண்டிகேட்டும்
- ஆணாதிக்க பொறுக்கி நர்சிமையும் அவனுக்கு ஆதரவாக நிற்கும் பொறுக்கிகளையும் தனிமைப்படுத்துவோம்.
- புனைவெனும் பொறுக்கித்தனம்!
- கார்ப்பொரேட் தேவிடியாத்தனம்
- புனைவாக எழுதுதல் !
- ஆணாதிக்க பார்ப்பனியத்தை எதிர்த்து!
- சுகுணா ஏன் இந்த தீசல் புத்தி
- உண்மைதமிழன் யார் போதைக்கு நீங்கள் ஊறுகாய்
- இது அழுக்கைப் பற்றிய வேண்டுகோள்தான் ஆனால் அழுக்கான வேண்டுகோளல்ல
- வினவு தோழர்களும், ஆணாதிக்கத்தின் பின் கூடிக் கும்மியடிக்கும் கும்பலும்
- ‘ஜென்டில்மேன்’ நர்சிம்மும்! ஆதரவு தரும் ‘கண்ணியவான்களும்’…
- மிக்க நன்றி சுகுணா
- பதிவர் பைத்தியக்காரன் செய்த துரோகம் !
- பர்தாவின் ‘நற்குடியும்’, அய்யப்பனின் ஆணாதிக்கமும், பதிவுலகின் யோக்கியதையும்!!
- லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?
- பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!
- லீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni !!
- சுந்தரி அக்காவும், பதிவர்கள் அறியா கோவையும்!
- மொக்கைப் பதிவு உடல் நலத்திற்க்குக் கேடு !
- தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!
- பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!
- வினவு ஓராண்டு நிறைவு: கற்றவையும் கடமையும்!!
- வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !!
- வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!
- சமூகம் – பெண் – கட்டுரைகள்
இணைப்புகள்
🙂 பாலோஅப்புக்காக…
ஏனோ
நன்றி கூற தோன்றுகிருகிறது. நீங்கள் பார்பனரா?பிரசாதம் ரொம்ப நன்னா இருக்கு போங்கோ!
இன்னமுமா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டு இருக்கு கைப்புள்ள-
நன்றி வடிவேலு
,
பாலோஅப்புக்காக…
நல்ல பதில்! முதல் பதிவை பார்த்திருந்தால் உங்கள் இந்த பதிவுக்கு வினவு சார்பாக இன்னுமொரு சவாஸு!!
நல்ல முடிவு வினவு.
நாகரிகமாக பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு ஆலோசனை மட்டுமே
//
????
வினவுவிடம் எதிர் பார்க்ககூடாது..??
உங்க பிண்ணுட்ட படைகளிடம் சொல்லுங்கள் நாகரிகமாக பின்னுட்ட
நரிகள் நாட்டாமைக்கு
[…] This post was mentioned on Twitter by antonyanbarasu, Santhappan Sambandam and ravi srinivas, ஆயில்யன். ஆயில்யன் said: முடித்துக்கொள்ளலாம் முடிவு நியாயமாக இருந்தால் https://www.vinavu.com/2010/06/04/mullai-justice/ #வினவு […]
ஆணாதிக்கத்தை அகற்ற நமக்கு பாதிக்கப்பட்ட முல்லை, முகில் தேவை இல்லை. உண்மையில் அந்த பெண்மைக்கு மரியாதை தரவேண்டும் என்பதில் மாற்று கருது இல்லைஎனில், சற்றே விலகி இருப்போம். எந்த பதிவர் சந்திப்பும் சினிமா ஆக வேண்டாம் என்பது என் எண்ணம்.
இது அவர்கள் பிரச்சனை.. அவர்கள் உணர்வுகள் .
பதிவுலகத்தில் ஆணாதிக்கம் அகற்றுவது பற்றி சந்திப்பில் பேசுவோம்
politically correct.
முடிவு தெரிந்து கொள்ள…
இதுக்கு மேல இந்த விஷயத்தை வைத்து அரசியல் நடத்தும் பதிவுகளில் மைனஸ் ஓட்டு ஒன்றே தீர்வு ! என்னுடைய மைனஸ் ஓட்டு இந்தப் பதிவுக்கு !
பதிவுலகத்தை சாதி வாரியாக,கும்பல் வாரியாக பிரித்த பெருமை வினவையே சாரும் ! வரலாற்றி நீங்கா இடம் ஐயா !
நியாயமான கேள்விகள்.
அய்யா நான் நியாயமான கேள்விகள்னு சொன்னது நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு அல்ல..திரு. ராம் கேட்ட கேள்விகளுக்கு..இதிலும் அரசியலா..முடியல சாமி..
பாலோஅப்புக்காக!!!!
//பதிவுலகத்தை சாதி வாரியாக,கும்பல் வாரியாக பிரித்த பெருமை வினவையே சாரும் ! வரலாற்றி நீங்கா இடம் ஐயா !//
வாங்க கபிலன் இத்தன நாள் எங்க இருந்தீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்?
வினவுதான் சாதியக் கண்டுபிடிச்சதுன்னு கூப்பாடு போடுகிற உங்களது யோக்கியதைக்கு அசுரன் தளக் கட்டுரையில் வந்த பதில் இங்கு இடுகிறேன்.
//
சாதி குறித்து வினவுதான் பேசுகிறது என்று கதறும் ஜாக்கி சேகர், உ.த. போன்ற நல்லவர்கள் நடைமுறையில் இது போல சாதி சங்கங்களுடன் ஒட்டி உறவாடி, சாதியத்தை நடைமுறையில் கொள்ளும் நபர்களுடன் விமர்சனமின்றி பழகி வருகிறவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அங்கு விமர்சனமின்றி சாதியத்தை ஆதரிக்கும்(மௌனமாக இருப்பதன் மூலம்) ஆதரிக்கும் இவர்கள். இங்கு சாதியை வினவுதான் கிளப்புகிறது என்று சீன் போடுகிறார்கள். இன்று வினவு சாதி பேசிவிட்டதாக கதறும் பழமை பேசி முதலான இவர்கள் இதே தமிழ்மணத்தில் நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டு பார்ப்பனசாதியை தூக்கிப் பிடித்துக் கொண்டு திரியும் டோண்டுவை என்றாவாது இப்படி சொல்லியிருப்பார்களா?
//
உ.த. ஜாக்கி லிஸ்டில் உங்க பேரையும் சேத்துக் கோங்க. சாதிப் பிரிவினை குறித்து ரொம்ப அக்கறையெனில் சாதி வெறிய எதிர்த்து அல்லவா கபிலன் செயல்பட்டிருக்க வேண்டும்? அப்படி எதுவும் செய்துள்ளாரா? குறைந்த பட்சம் டோண்டு என்ற பாப்பன வெறியனை எதிர்த்து?
அவர் ரொம்ப கஸ்டம் பட வேண்டாம் டோண்டு ஒரு சாதி வெறிபிடித்த மிருகம் என்பதை இங்கு பதிவு செய்து விட்டு இடத்தை காலி செய்தால் கூட போது,
பிரச்சினையை திசை திருப்பாமல் விஷயத்துக்கு வாங்க அசுரன். இதுல எந்த கும்பலிலும் நான் இல்லை. பிடித்திருக்கும் இடுகையை யார் எழுதினாலும் வாசித்து விமர்சித்து கமெண்ட் இடும் சாதாரண வாசகன்.
இது இருவருக்கும் நடந்திருக்கும் பிரச்சினை. எதனால, எப்படி என்கிற உண்மை சம்பந்தப்பட்ட இருவருக்கு மட்டும் தான் தெரிந்திருக்கும்.
இந்த விஷயத்துல சாதி என்கிற மேட்டர் நுழைத்தது யார் ?
முல்லை என்ன சாதி ? நர்சிம் என்ன சாதி ? என்று ஊருக்கு அறிவித்த சமுதாயத் தொண்டர் யார் ? இதில் சாதி கொண்டு வர அவசியம் என்ன ?
//இந்த விஷயத்துல சாதி என்கிற மேட்டர் நுழைத்தது யார் ?//
இந்த பதிவு முல்லையின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது எனில் சமந்தப்பட்ட இருவரில் ஒருவரான முல்லை இதில் சாதி உள்ளது என்கிறார்
மேலும், இன்று சாதி பேசும் நீங்கள் இது நாள் வரை சாதிக்கு எதிராக என்ன செய்தீர்கள் என்று கேட்பது எனது சனநாயக கடமை. பதில் சொல்லுங்க
மனசாட்சியோட பேசுங்க அசுரன். சம்பந்தப்பட்டவரில் ஒருவர் சாதி உள்ளது என்கிறார்..அப்ப மற்றொருவர்….? ஒருதரப்பு வாதத்தைக் கேட்டு தீர்ப்பு எழுதுறதுதான் நியாயம்ங்களா ? வினவில் வரும் விஷயம் எல்லாம் நல்லா ஆராய்ந்த பிறகு தான் வெளிவரும் என்கின்ற என் நம்பிக்கையை காலி பண்ணிடுவீங்க போல…
“மேலும், இன்று சாதி பேசும் நீங்கள் இது நாள் வரை சாதிக்கு எதிராக என்ன செய்தீர்கள் என்று கேட்பது எனது சனநாயக கடமை. பதில் சொல்லுங்க”
என் சாதிக்காக கொடி பிடிக்கவில்லை, மற்றவனை இகழவில்லை, யாரையும் புண்படுத்தவில்லை. என்னுடைய சாதிக்காக எதுவும் செய்யாமல் இருப்பதே நான் சாதிக்காக செய்யும் மிகப் பெரிய நல்லது.
இன்னொரு சின்ன மேட்டர் அசுரன்…
அமெரிக்க ஜனாதிபதியைப் பற்றி பேசணும்னா….நான் ஜனாதிபதியா இருக்கணும்னு அவசியம் இல்லைங்க…..
//முல்லை என்ன சாதி ? நர்சிம் என்ன சாதி ? என்று ஊருக்கு அறிவித்த சமுதாயத் தொண்டர் யார் ? இதில் சாதி கொண்டு வர அவசியம் என்ன ?//
இதே போல சாதி அறிவிக்கும் டோண்டு போன்றோரை நிங்கள் எதிர்பதில்லேயே ஏன் ?
அவர்களெல்லாம் சமுதாய தொண்டர்களா? அப்போதெல்லாம் வாழவிருந்துவிட்டு இப்பொது குதிக்கும் உங்களது உள்நோக்கம் என்ன?
கேட்ட கேள்விகளை திசை திருப்புவதில் இருக்கும் ஆர்வத்தை கொஞ்சம் பதில் சொல்வதிலும் காட்டுங்கள் அசுரன். டோண்டுவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாதவர்கள் மட்டுமே திசை திருப்பும் வேலையில் ஈடுபடுவர் என்பது அனைவரும் அறிந்ததே.
அடுத்தவன் தப்பு பண்றான் அதனால தான் நானும் தப்பு பண்றேன் என்று சொல்வது சின்னப் புள்ளத் தனமா இருக்குங்க.
என்னுடைய உள்நோக்கம், வெளிநோக்கம், சைடு நோக்கம் எல்லாம் ஓண்ணும் இல்ல. ரெண்டு பேரை சண்டை மூட்டி விட்டு, வேடிக்கைப் பார்த்து எஞ்சாய் பண்ணாதீங்க. அந்த ரெண்டு பேரின் தனிப்பட்ட பிரச்சினை, இப்போ குழுக்களாக, சாதிகளாக பெருசா ஊதி வளர்த்து விட்டது யாருங்க ?
அமெரிக்க ஜனாதிபதியை பற்றி பேசுவதற்கு மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாதுதான். ஆனால் நேர்மை மற்றும் விமர்சனங்களை முன்வைப்பதற்கு இது அவசியம். ஒழுக்கவாதம் என்று இதனை விமர்சிப்பதற்கு முன் இவற்றில் பரிச்சயம் இருக்க வேண்டுமானால் அந்த அனுபவம் மாத்திரமே அவசியமாகிறது என்ற உண்மை தங்களுக்கு உரைக்க வேண்டுமால்லாவா
அமெரிக்க ஜனாதிபதியைப் பற்றி பேசணும்னா….நான் ஜனாதிபதியா இருக்கணும்னு அவசியம் இல்லைங்க…..
…..ஆனால் கபிலன், தாழ்த்தப்பட்டவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்களாகவோ அல்லது அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளக் கூடிய மனதோ இருக்கவேண்டும்
//டோண்டுவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாதவர்கள் மட்டுமே திசை திருப்பும் வேலையில் ஈடுபடுவர் என்பது அனைவரும் அறிந்ததே.//
கபிலனுக்கு நான் சொல்ல வருகின்ற் விசயங்கள் புரியவில்லையா அல்லது எனது எழுத்துக்கள் குழப்பகரமாக உள்ளதா என்று தெரியவில்லை. ஆயினும் தொகுப்பாக அவரது கேள்விகளுக்கு என்னால் இயன்ற அளவு எளிமையாக எதிர்வினை புரிகிறேன்.
அவரது கேள்வி நர்சிம் பிரச்சினையில் எங்கு சாதி வந்தது என்பது.
எனது பதில், அவரது ‘புணைவில்’ ‘பூக்காரியின் பிறப்பு அப்படி, நம்மோட வளர்ப்பு அப்படி’ என்ற பிரயோகம் இருந்ததுடன் அல்லாமல், ஏற்கனவே இது போல சாதி பார்த்து அனுகுவதற்கும் உதாரணங்கள் இருந்தன(ஒரு பெண்ணைப் பற்றிய பிரச்சினையில்) மேலும் அவரது தந்தை பார்ப்பன சங்க முக்கிய பிரமூகர் என்பது கூடுதல் தகவல், இவைதான் அந்த ‘புணைவில்’ உள்ள கருத்துக்கள் குறித்த எமது முன் முடிவுகளுக்கான அடிப்படை.
மேலும், சாதி குறித்து பொதுவாக சாமியாடுபவர்களின் நடுநிலையை குத்திக் காட்டியே டோண்டு பிரச்சினையை எடுக்கிறேன். எப்பொழுதெல்லாம் சாதியத்தின் நுண்ணிய ஒடுக்குமுறைகளை (உதா: நர்சிம் பிரச்சினை) அம்பலப்படுத்துகிறோமோ அப்போதெல்லாம் சாதியைப் பேசி பிரிவினை செய்கிறாய் என்று பேசுபவர்கள் என்றைக்குமே சாதியை வெளிப்படையாகப் பேசி ஆதரிக்கும் டோண்டு போன்றோரை கண்டுகொள்வதில்லை. இந்த இரட்டை நிலையை இப்போதுதான் நான் கேள்வி கேட்க முடியும்.
அசுரன்
கஷ்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, துயரை நீக்கும் செயல்களை செய்ய வேண்டும். அது தாழ்த்தப்பட்டோராக இருந்தாலும் சரி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முன்னேறிய வகுப்பினரா இருந்தாலும் சரி என்பது என் கருத்து.
சாதிகளுக்கு நடுவே பகைத் தீயை மூட்டி, அதில் குளிர் காய நினைப்பது புரட்சியா என்பதை இதைப் படிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்.
அசுரன் சார்,
வணக்கம்; அவரை விமர்சிப்பவர்களுக்கு பல முறை நான் ஆதரவு கொடுத்து இருக்கிறேன். எதிர்வரும் காலத்தில், தேவைப்படின் இடுகையும் இடுவேன். புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். இணையத்தில் மற்றவரது தளங்களுக்குச் செல்ல கால அவகாசம் கிடைப்பதில்லை. மற்றபடி, மெளனம் என்பது ஆதரவு ஆகிவிடாது. விளிம்புநிலை மக்களுக்கான உங்களது தொண்டை மதிக்கிறேன். அதே வேளையில், சூழ்நிலையைப் பொறுத்துத் தேவையில்லாத திணிப்புகளை ஏற்க மறுக்கிறேன். அவ்வளவுதான்.
நன்றி!
//வணக்கம்; அவரை விமர்சிப்பவர்களுக்கு பல முறை நான் ஆதரவு கொடுத்து இருக்கிறேன். எதிர்வரும் காலத்தில், தேவைப்படின் இடுகையும் இடுவேன். புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். //
புரிந்து கொள்கிறேன் பழமைபேசி… சாதிக்கு எதிரான செயல்பாடுகளில் உங்களது எழுத்துக்களும் இருந்தால் அது எனக்கு மகிழ்ச்சியே
மற்றபடி ‘பூக்காரி’யில் சாதி எங்கு ஒழிந்திருந்தது என்பதை பலமுறை பலரும் எழுதியாகிவிட்டது. மீண்டும் அதை பிரேத பரிசோதனை பன்னுவதற்கு கபிலன் தயார் என்றால் நானும் தயார் என்ன கபிலன் வற்றீங்களா?
சாதியை மையப்படுத்தியா பிரச்சினை வந்துச்சுங்க அசுரன் ?
அவ பொறப்பு அப்படி…………. நம்ம வளப்பு அப்படின்னா என்ன அர்த்தம் கபிலன்
எனக்கு உண்மையாவே தெரியாதுங்க, சொல்லித்தாங்க அதுல சாதி இல்லன்னு
ஆணதிக்கத்திமிர் பார்ப்பனீய கொழுப்போடு வெளிப்பட்டிருக்கிறாது அதை மறுக்க முடியுமா??
sariyaka sonneerkal kalagam
//அவ பொறப்பு அப்படி…………. நம்ம வளப்பு அப்படின்னா என்ன அர்த்தம் கபிலன் //
கபிலன் இந்தக் கருத்துக்கு ‘மட்டும்’ பதில் சொல்லாமல் செலக்டிவாக பதில் சொல்லுவதேன்?
இதுதான் சாதியை உள்ளிழுத்ததற்கு காரணமாக பூக்காரி பதிவு எழுத்துக்கள்
“//அவ பொறப்பு அப்படி…………. நம்ம வளப்பு அப்படின்னா என்ன அர்த்தம் கபிலன் //
கபிலன் இந்தக் கருத்துக்கு ‘மட்டும்’ பதில் சொல்லாமல் செலக்டிவாக பதில் சொல்லுவதேன்? ”
ஒருவரை திட்டினதற்கு விளக்கத்தை கேட்டிருக்கிறீர்கள். அதற்கு பதில் சொல்வது சம்பந்தப்பட்டவரை புண்படுத்தும் என்பதால் தான் அந்த கேள்வியைத் தவிர்த்தேனே தவிர செலக்டிவாக சொல்லல.
பொதுவாகவே, ஒரு சிறுவன் வெளி இடங்களில் உணவருந்தப் போகிறான். எனக்கு தயிர் பிடிக்காது, கீரை பிடிக்காது என்ன ஒவ்வொன்றாய் சொல்கிறான். அப்போ அவனை சுற்றி இருக்கவங்க என்ன சொல்வாங்க அசுரன் ? புள்ளைய எப்படி வளர்த்து வச்சிருக்கா பாரு ? அப்படின்னு தானே சொல்வாங்க……குடிச்சிட்டு கலாட்டா பண்ற வாலிபர்களை, அவன் வளர்ப்பு சரி இல்லை…அதான் இப்படி அலையுது என்று சொல்வது சமூகத்தில் ஒரு சாதாரண் சொல்லாடல். இதில் சாதி இல்லை.
“அவ பொறப்பு அப்படி..”…இது நர்சிம்மின் அசிங்கமான தாக்குதல். இதற்கு விளக்கம்,உதாரணம் தேவையில்லை. இதிலும் சாதி இல்லை.
என் மனசாட்சிப்படி,கேவலமும், அசிங்கமும் தான் தெரியுதே தவிர,சாதி தெரியவில்லை.
கப் பிலன்,
”அவ பொறப்பு அப்புடி” ன்னு அந்த பொறுக்கி சொன்னதை விட்டுட்டீங்களே. ”அவ பொறப்பு அப்புடி, என் வளர்ப்பு வேற மாப்ளே” இரண்டையும் சேர்த்து படிச்சுப்பாருங்க மாப்ளே
//இதுக்கு மேல இந்த விஷயத்தை வைத்து அரசியல் நடத்தும் பதிவுகளில் மைனஸ் ஓட்டு ஒன்றே தீர்வு ! என்னுடைய மைனஸ் ஓட்டு இந்தப் பதிவுக்கு !//
இதுக்கு மேலே என்றால் எதுக்கு மேலா? உங்களது அந்த புனிதமான வரையறை என்ன?
முல்லை முதலான பெண்கள் முல்லையின் பதிவில் வேறு ஒரு ‘இதுக்கு மேலே’ என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்.
அதாவது, ‘இதுக்கு மேலே’ பதிவுலகின் ஆணாதிக்க வக்கிரத்தை பொறுத்துக் கொள்வதற்கு பதில் கபிலன் போன்ற ரிஜெண்டு பார்டிகளின் மன அமைதியை குலைப்பதே சரி என்கிறார்கள்.
எனக்கென்னவோ ரெண்டாவது ‘இதுக்கு மேலே’ ஓகே என்று படுகிறது.
உங்களுக்கு எப்படி கபிலன்? எதுக்கும் உங்க வீட்டு பெண்களிடமும் கருத்து கேளுங்களேன்? (நீங்கதான் நல்லவராயிற்றே?)
செய்த தவறுக்கு பதிவுலகமே சேர்ந்து திட்டியாச்சு. அவர் எவ்வளவு மோசமா எழுதினாரோ…அதை விட மோசமா பல பேரிடம் திட்டு வாங்கியாச்சு. மன்னிப்பும் கேட்டுட்டார். அதைத் தான் இதுக்கும் மேல ந்னு சொன்னேங்க.
லீனா மணிமேகலையை பற்றி வினவு எழுதியதையும் எங்கள் வீட்டுப் பெண்களிடம் கருத்துக் கேட்கிறேன் அசுரன்.
மார்க்ஸ் பற்றி விமர்சனம் செய்தால், அதை எதிர்கொண்டு கருத்து வாதத்தில் தானே இறங்கி இருக்க வேண்டும். அந்தப் பெண்ணைப் பச்சையாக பேசுகிறீர்களே..
அது ஆணாதிக்கம் இல்லீங்களா அசுரன் ?
ஏனுங்க கபிலன்,
முதலில் லீனாவையும் முல்லையையும் இவ்விசயத்தில் பொறுத்திப்பார்ப்பதே தவறு. இருவரும் பெண் என்பதால் ஒன்றாகிவிடாது கருத்துக்கள். இன்னொன்று யார் பச்சையாக பேசியது? லீனாவுக்கு பச்சையாக தவிர எப்படியும் பேசத்தெரியாது அதற்கு வினவு பச்சையாக அல்ல சிவப்பாகத்தான் பேசியது. ஷோபாவுல இருந்து நீங்க வரைக்கும் பேசுறாங்க பேசுறாங்கன்னு சொல்லுறீயளே என்னத்த பேசுனாங்களோ தெரியல? நீங்க தான் அப்புடி சொன்னாக இப்புடி சொன்னாக இன்னு சொல்லுறீங்க.
இதுக்கு பேர் மன்னாப்பு நீங்க சொல்லுறீங்க? நர்சிமை ரொம்ப கேவலமா கெட்ட வார்த்தையெல்லாம் போட்டு கட்டுரை எழுதுறேன் அப்புறம் மன்னாப்பு கேட்டுடுறேன். கபிலன் முதலில் லீனாவின் கவிதையை கொடுத்துவிடு அப்புறம் வினவின் கட்டுரையும் கொடுக்கலாம்.
அது உண்மையான மன்னிப்பா? நீங்க சொல்லுங்க கபிலன் உங்களுக்கு அப்புடி நடந்து நர்சிம் மாரி ஒரு மொள்ளமாரி இப்படி ஒரு மன்னாப்பு கேட்டா சும்மா உட்டுடுவீகளா? முல்லையின் தளத்தில் ஒரு லூசு எழுதுகிறது “மன்னிப்பு கேக்குறவன் மனுசன் மன்னிக்கத்தெரிஞ்சவன் பெரிய மனுசனாம்”
மொதல்ல நீயெல்லாம் மனுசனான்னுதான கேக்கத்தோணுது, கபிலன் நீங்களும் அப்ப்டித்தான கேப்பீங்க
கலகம்
//லீனா மணிமேகலையை பற்றி வினவு எழுதியதையும் எங்கள் வீட்டுப் பெண்களிடம் கருத்துக் கேட்கிறேன் அசுரன். //
கேளுங்களேன் தாராளமாக மறக்காமல் லீனாவின் அந்த ரெண்டு
கவிதை என்ற கண்றாவியையும் எடுத்து செல்லுங்கள்.
பிறகு உங்க வீட்டு பெண்கள் என்ன சொல்கிறார்கள் என்று சொல்லுங்கள்
//மார்க்ஸ் பற்றி விமர்சனம் செய்தால்,//
இது kapilanutaiya முதல் பொய். அநதக் கவிதை உழைக்கும் மக்கள், போராடுபவர்கள், புரட்சிக்காரர்கள் என அனைத்து எளியவர்களையும் செக்ஸ் வெறிபிடித்தவர்கள் என்று சொல்லியது
கபிலன் கவிதை என்ற கண்றாவியை படிக்கமலேயே தீர்ப்பு சொல்ல வந்தவிட்டார் என்று நினைக்கேறேன்.
இன்னொரு பொய்:
// அதை எதிர்கொண்டு கருத்து வாதத்தில் தானே இறங்கி இருக்க வேண்டும். அந்தப் பெண்ணைப் பச்சையாக பேசுகிறீர்களே..
அது ஆணாதிக்கம் இல்லீங்களா அசுரன் ?//
விமர்சனத்திற்கு விமர்சனம்; அவதுஉருக்கு அவதுஉறு இதுவே எமது நடைமுறை. வினாவில் இதற்கு முன்பும் பலர் மார்க்ஸ் முதல் புரட்சி வரை பலத்தை விமர்சனம் செய்துள்ளனர்.
இதெல்லாம் கபிலனுக்கு தெரியாமல் இல்லை. இருந்தாலும் இன்னொரு எதிர்கால பதிவிலும் வந்து இதே கருத்துக்களை அவர் சொல்லுவார் பாருங்களேன். அவரோட பிரச்சினையே வேற
பல ஊர்களிலும் லீனாவின் கவிதைக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் பண்ணாங்களே…அது மார்க்ஸ்க்காக இல்லீங்களா….கவிதையை இருமுறை படிச்சேங்க.
நர்சிம்மின் இடுகை மோசமானது, கேவலமானது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அது மட்டும் கேவலமானது…ஆனால் அதையே நீங்க திட்டினா…அது கேவலம் இல்லை…அது அவதூறுக்கு அவதூறாம்…நல்லா சொல்லுறீங்கய்யா டீடெய்லு….இதைப் பற்றி பேசினால், மையக் கருத்து திசை மாறும்.
இந்த மேட்டரை இதோடு க்ளோஸ் பண்ணுங்க. சம்பந்தப்பட்டவர்கள் சட்ட ரீதியாகவோ, பேச்சு வார்த்தைரீதியாகவோ, அல்லது அவர்களின் எதாவது ஒரு விருப்பப்படி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளட்டும்.
அடுத்தவங்க புண்ணில் சொறிந்து விளையாடி, அரசியல் இன்பம் காணுதல் அநாகரிகம்!
அப்புறம் ஒரு சில்லரை மேட்டர். அழகியில் டைப் பண்ணி வினவில் காப்பி பண்ணி போட்டால் மட்டும்…சரியா அலைன் ஆகமாட்டேங்குது…ஹெல்ப் ப்ளீஸ்…
//.கவிதையை இருமுறை படிச்சேங்க.//
கவிதைய சரியாகப் படிக்கவும். இரு கவிதைகள் உள்ளன. தேவைப்படின் வினவு கட்டுரையில் இரண்டு கவுஜைகளும் கிடைக்கின்றன.
////லீனா மணிமேகலையை பற்றி வினவு எழுதியதையும் எங்கள் வீட்டுப் பெண்களிடம் கருத்துக் கேட்கிறேன் அசுரன். ////
வணக்கம் தோழர் கபிலன்
உங்கள் வீட்டு பெண்களிடம் இன்னொன்றும் நீங்கள் கேட்க வேண்டும். அதாவது பெண்ணோடு பெண் புணருதலில் விருப்பமா? அல்லது ஆணோடும் பெண்ணோடும் இணைந்து இருபால் புணர்ச்சிகளில் ஈடுபட விருப்பமா? அல்லது ஒரே நேரத்தில் 3 ஆண்களுடன் இணைந்த அனுபவித்த புணர்ச்சி ஒரு பெண்ணுடன் இணைந்தால் கிடைக்குமா என்று கேளுங்கள் தோழரே!
உங்கள் வீட்டு பெண்கள் என்ன சொல்வார்கள்?
என்ன வினவு தோழர்களை விட மோசமாக பேசுகிறோம் என்று சிந்திக்கிறீர்களா?
கொஞ்சம் ஆதாரத்தையும் பார்த்துவிட்டு சிந்தியுங்கள் தோழரே!
http://www.shobasakthi.com/shobasakthi/?p=85
///// jeyasri
April 1st, 2007 at 18:09
மேற்கு நாடுகளில் பாலியல் தொழிலாளர்களின் பிரத்தியேக இடங்களில் போய் எவ்வளவு காசு என்றுதான் கேட்கிறது வழமை.
ஆனால் வாடிக்கையாளர்கள் தெருக்களில் சந்தித்து பாலியல் தொழிலாளி என்று சரியாக நிச்சயிக்க முடியாத நிலையில் நீங்கள் வேலை செய்பவரா? என்றுதான் கேட்கிறார்கள். நீங்கள் புறொஸ்ரிரியூட்டா என்று கேட்பதில்லை. சிலவருடங்களுக்குமுன் ஒரு பாலியல் தொழிலாளியின் கணவரை பேட்டிகாண தொலைக்காட்சிபோனது. உங்கள் மனைவி விபச்சாரம் செய்வது குறித்து உங்க்கள் கருத்தென்ன என்று கேட்டபோது அவர் அது என் மனைவியின் தொழில் , எனக்கு என் மனைவி வேலைக்குப் போய்விட்டு வருபவர் என்ற நினைப்பைத்தவிர வேறு மாதிரி உணார்வதில்லை என்று பதில் சொன்னார். அழகு நிலையங்களில் மசாஜ் நிலையங்களில் நடைபெறுவதுபோல் தான் இதுவும். ஆண்குறியை உள் நுளைப்பதுக்கு இப்போது எந்த முக்கியத்துவமும் இல்லை. இருவர் கைகள் முட்டுப்படுவதுபோல்தான் இதுவும். குறியாயிருந்தாலென்ன, மூக்காயிருந்தாலென்ன எல்லாம் ஒன்றுதான்.
***
jeyasri
April 9th, 2007 at 21:19
முகுந்தன், மேலே உள்ள கட்டுரையில் ஒரு வரி வருமே! லெஸ்பியன் களிடையில் எப்படி பாலியல் இன்பம் சாத்தியமாகிறது என்று மூளையைப்போட்டு பிசைபவர்களை எனக்குத்தெரியும் என்று , வாய்வழிப்புணர்ச்சி, ஆசனவாய்ப்புணர்ச்சி, இப்படி ஆயிரத்தெட்டு புணர்ச்சிவகைகள் இருக்கு. முன்னர் ஒரு பத்திரிகையில் ஒரு லெஸ்பியன் பெண் ஒரு பேட்டி கொடுத்திருந்தார், ஒரே நேரத்தில் மூன்று ஆண்கள் இயங்கியும் ஒரு பெண்ணுக்கு கொடுக்கமுடியாத திருப்தியையும் சந்தோசத்தையும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் சேரும்போது அடைய முடியும் என்று. ஒருவருடைய உணர்வுகளை இன்னொருவருக்கு விளங்க வைக்கிறது கஸ்ரம்தான்./////////
யார் இந்த ஜெயசிறீ என்று யோசிக்கிறீர்களா? லீனாவுடனும் சோபாசக்தி மற்றும் வேறு பல ஆண்களுடனும் செக்ஸ் தொடர்பில் இருப்பவர். இதன் மூலம் லீனா பெண் பாலியல் புணர்ச்சி தொடர்பில் இருப்பவர் என்பதை உணர முடிகிறதா?
பின்னூட்டத்தில் தன் உணர்ச்சிகளை குறித்து குமுறும் ஜெயசிறி யார் என்று தெரிகிறதா? ராஜன்குறையின் மனைவியான மோனிகா ராஜன்குறை. லீனா சர்ச்சையில் சமீபத்தில் பெண்ணியம் குறித்து அழகாக ஊடகத்திற்கு செய்தி கொடுத்திருந்தார். அதற்கான ஆதாரம்
http://thoomai.wordpress.com/2010/04/26/1291/
நர்சிம்-மின் ஆபாசமான ‘புனைவுக்கும்’ தமிழச்சி இங்கு குறிப்பிடும் ஜெயஸ்ரீ போன்றவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இதுபோன்ற தொடர்பில்லாத பேச்சுகளை வினவு அனுமதிப்பது விவாதத்தை திசை திருப்பவே உதவும்.
நர்சிம்-மின் ’புனைவு’ மற்றும் அதை ஆதரிப்பவர்களைப் பற்றிய விமரிசனங்கள் எந்தக் குவிப்புமின்றி, ப்ளாட்டிங் காகிதத்தில் பரவும் மை போல இன்னும் தெளிவற்றுப்போவதற்கே இத்தகைய பின்னூட்டங்கள் துணைசெய்யும்.
யம்மா என் பொண்டாட்டிகிட்ட இத பத்தி கருத்து கேட்டேன். அவ என்ன சொல்லறன்ன நீயெல்லாம் பெண்ணுரிம்மை பேச தகுதியில்லாதவள் அப்படிங்கற.
தூ நீயும் உன் speculationum. மேல நீ கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் தரவும் இல்லை என்றால் பொத்திக்கொண்டு இருக்கவும்.
நீ சிவரமன்னெல்லாம் ரூம் போட்டு யோசிபிங்க போலருக்கு. மத்தபடி சுதந்திரம் அப்படின்னா ஒரு பொண்ணோ ஆணோ நடு ரோட்டுல நின்னு விபசாரம் பண்ணினா கூட அவள்/அவன் சம்மதம் இல்லாமல் அவர்களை தொடகூடாது என்பதுதான். வினவு உங்களின் ஒரு சில கருதுக்களுடுன் மட்டுமே உடன்படுகிறேன். இந்த விஷயத்தில் நான் நரசிம்மை வன்மையாக கண்டித்தாலும் பல ஆதரமட்ற்ற குற்றச்சாட்டுக்களை பலரும் பல பேர் மீது விசுகிறரர்கள். எனக்கு என்னவோ குமுதத்தின் லைட்ஸ் ஆன் சுனில் படிப்பது போலத்தான் இருக்கிறது.
நீங்கள் கேட்கிற அந்த மூன்று கேள்விகளையும் எங்கள் வீட்டில் கேட்கிறேன். இதுல என்ன இருக்கு. நீங்கள் பேசியதில் எதுவுமே எனக்கு மோசமாக தெரியவில்லை. ஆனால் நீங்க சொல்ல வந்து கருத்து எனக்கு புரியலைங்க.
ஒரு பெண் ஒரு கருத்தை எடுத்து வைக்கிறார். ஒரு கருத்தை கதை, கவிதை,கட்டுரை,பாட்டு,நகைச்சுவை,நையாண்டி என பல்வேறு வகையாக எடுத்து வைக்கலாம். செக்ஸ் மூலமாக ஒரு கருத்தை எடுத்து வைக்கிறார். அந்த கருத்து சரியா..இல்லையா, அவர் நல்லவரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால்,அதற்கு எப்படி பதிலளித்தார் வினவு என்பது தான் நான் கேட்ட கேள்வி. அது ஆணாதிக்கம் இல்லையா ?
“லீனா பெண் பாலியல் புணர்ச்சி தொடர்பில் இருப்பவர் என்பதை உணர முடிகிறதா?”
சரி. இது உண்மையாகவே இருந்தால் கூட, அது அவங்க சொந்த விஷயம். யாரையும் பாதிக்காமல், அவங்க யார் கூட எப்படி வேண்டும்னாலும் இருக்கட்டும் . அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை ? ஆக, அப்படிப்பட்ட பெண்கள் எதாவது கருத்து சொன்னா, பச்சை பச்சையா பேசணுமா ? அப்போ அப்படிப்பட்ட பெண்கள் எல்லாம் உங்க கண்களுக்கு பெண்களா தெரியாதா ?
நான் கேட்டதற்கும், நீங்கள் சொல்வதற்கு என்ன சம்பந்தம் என்று விளங்க வில்லை.
///மார்க்ஸ் பற்றி விமர்சனம் செய்தால், அதை எதிர்கொண்டு கருத்து வாதத்தில் தானே இறங்கி இருக்க வேண்டும். அந்தப் பெண்ணைப் பச்சையாக பேசுகிறீர்களே..
அது ஆணாதிக்கம் இல்லீங்களா அசுரன் ?///
ராமேஸ்வரம் படப்பிடிப்பின் போது சோபாசக்திக்கும் லீனாவுக்கும் நடந்த செய்திகளை தொழிலாளர்
தோழர்கள் கூறியபோது வினவு தோழர்களோ அல்லது பெ.தி.க.வில் இருந்த சில தோழர்களோ ஒன்றும் சொல்லவில்லை. படப்பிடிப்பில் என்னென்ன கூத்துக்கள் நடந்ததென்று தோழர்களுக்கும் தெரியும். ஆனால் சோபா சக்தியும் லீனாவும் தொழிலாளியை அடித்தபிறகே அடிவாங்கிய தொழிலாளரான தீபக் அவர்களுக்கு ஆதரவாக வினவு கேள்வி எழுப்பியது.
தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் ஏமாற்றுவதை கண்டித்து வந்த வினவின் கருத்தை ஆதரிக்கிறேன்! அதில் மாற்றுக் கருத்து இல்லை.
/ஒரு பெண் ஒரு கருத்தை எடுத்து வைக்கிறார். ஒரு கருத்தை கதை, கவிதை,கட்டுரை,பாட்டு,நகைச்சுவை,நையாண்டி என பல்வேறு வகையாக எடுத்து வைக்கலாம். செக்ஸ் மூலமாக ஒரு கருத்தை எடுத்து வைக்கிறார். அந்த கருத்து சரியா..இல்லையா, அவர் நல்லவரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால்,அதற்கு எப்படி பதிலளித்தார் வினவு என்பது தான் நான் கேட்ட கேள்வி. அது ஆணாதிக்கம் இல்லையா ? ///
லீனா சொல்லிய அந்தக் ‘கருத்து’ போராடுபவர்கள், உழைப்பவர்கள், புரட்சிக்காரர்கள், கம்யூனிஸ்டுகள், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், சே வரை அனைத்து ஆண்டுகளும் யோனி தேடி அழையும் வெறி பிடித்த ஆண்குறிகளே ..
இதற்கு வினவின் கேள்வி, இத்தகைய கருத்துக்கு
வருவதற்கு லீனா எத்தனை (அத்தகைய) ஆண்குறிகளை
பார்த்த பிறகு வந்தார் என்பதே ஆகும்.
சரிதானே? கேள்விக்குப் பொருத்தமான எதிர்வினை
லீனாவின் நோக்கம் நேர்மையானது எனில், வெகு
எளிமையாக பெண்கள் மீது பாயும் கம்யுனிஸ்டு, புரட்சிக்கார ஆண்குறிகளை அம்பலப்படுத்திவிட்டுச் செல்ல
வேண்டியதுதானே?
எங்களை அவர் வேசி என்று சொல்லலாம் எனில்,
எங்களைப் போன்ற எத்தனை வேசிகளை நீ பார்த்தாய்
என்றுதான் நாங்கள் திருப்பிக் கேட்போம்?
அப்படி கேட்டதற்கே அய்யோ என்னை
அவமானப்படுத்திவிட்டான் என்று கதறுபவர்கள், எங்களை
அவர் வேசி என்றுள்ளாரே அதற்கு ஏன் எந்த கருத்தும் சொல்ல
மறுக்கிறீர்கள்?
“இதற்கு வினவின் கேள்வி, இத்தகைய கருத்துக்கு
வருவதற்கு லீனா எத்தனை (அத்தகைய) ஆண்குறிகளை
பார்த்த பிறகு வந்தார் என்பதே ஆகும்.”
சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய தலைவரையோ, புரட்சியாளர்களையோ, மாற்றுக்கருத்துடையவர்கள் பலரும் பலவாறு விமர்சித்து தங்கள் கருத்தை கூறுவது இயல்பான ஒன்று. அப்பொழுது கூட, தனி ஒருவரை மட்டுமே விமர்சிப்பர். வினவின் கட்டுரை அப்படி அல்ல, லீனா, அவரின் கணவர், நண்பர் என பிரச்சினைகளுக்கு சம்பந்தமே இல்லாதவர்களை இழுத்து காரி உமிழ்வது நல்லாவா இருக்கு.
இது எப்படி இருக்கு தெரியுமாங்க…வண்டியில போயிட்டே இருக்கோம்…டக்குன்னு ஒரு பைக் காரர் தவறான ரூட்ல வந்து நம்மல இடிச்சிட்டு நிக்காம போயிடுறார்….அதற்கு நாம அவரை…தெ..பை….ந்னு திட்டுறதுக்கு சமம். அவனை தானே திட்டணும்…அவங்களுக்கு நெருங்கியவர்களை எதற்குத் திட்டணும்?
“அவர் வேசி என்றுள்ளாரே அதற்கு ஏன் எந்த கருத்தும் சொல்ல
மறுக்கிறீர்கள்? ”
அசுரன் இதுல கருத்து சொல்ல என்ன இருக்குங்க. யாரோ ஒருவர் விருப்பப்பட்டு வேசியாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை ?
வினாவை பார்த்து மஊன்றவது நபர் உனக்கு உரிமை இல்லை என்று உரிமையுடன் பேசும் கபிலன். தானே ஒரு மூன்றாவது நபர் என்பதை வசதியாக மறந்துவிட்டு நரசிம்மை போதிமான அளவு தண்டித்து விட்டோம் என்கிறார்
ஐய்யா உங்களுக்கு ஒரு சிறு விளக்கம் கொடுக்கக் வேண்டிய வரலாற்று கடமை எனது தலையில் பெரும் பாரமாக இந்த இடத்தில் சுமத்தப்பட்டு விட்டது.
பாதிக்கப்பட முல்லை மற்றும் பிற பெண்கள் உறுதியுடன் நின்று கேட்ப்பது தண்டனையை அல்ல, அதைவிட முக்கியமாக நிவாரணம் மற்றும் நிரந்தர தீர்வு.
மூன்றவது நபரான உங்களுக்கு இது புரிய வாய்பில்லை. வேண்டுமானால் பெண்கள் எழுப்பியுள்ள ‘இதுக்கு மேலே’ என்ற அங்கலாய்ப்புக்கு பதில் சொல்ல முயறசி செய்து பாருங்கள் உங்களுக்கு உங்களது அங்கலாய்ப்பின் அபத்தம் புரியும்
//பதிவுலகத்தை சாதி வாரியாக,கும்பல் வாரியாக பிரித்த பெருமை வினவையே சாரும் ! வரலாற்றி நீங்கா இடம் ஐயா !//
ஒத்துமையா இருந்து மொக்கை போட்ட இழவுக்கு கும்பல் கும்ப்லா இருந்து பெண்ணுரிமையாயாவது பாதுகாக்க முடிகிறதே என்ற என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி. அதது அதது அவரவர் சொந்த நலனின் அக்கறையிலிருந்து பார்க்கும் போது கிடைக்கும் மனவுணர்வு.
கபிலன் போன்ற ரொம்ப நல்லவர்களுக்கு ப்ளாக்கில் எழுதி மொக்கை போடும் மகிழ்ச்சி போச்சு – (அடடா வட போச்சே)
முல்லையின் பதிவில் குமுறியுள்ள பெண் பதிவர்களுக்கும், பிற ஜனநாயகவாதிகளுக்கு பதிவுலகு ஆக்கப்பூர்வமான ஒரு நிலையை நோக்கிச் செல்ல இந்த ரண சிகிச்சை உதவியுள்ளதே என்று மகிழ்ச்சி.
வடை போனதெற்க்கெல்லாம் மைனஸ் குத்து குத்துவது கபிலனுக்கு சரி எனில் பூக்காரிக்காக நாங்கள் இந்த ஆட்டம் ஆடுவது சரி என்றே சொல்வேன்.
மன்னிக்கவும். யாருடைய குமுறலையும் நான் தப்பாகச் சொல்லலைங்க. எல்லாம் குமுறியாச்சு. முடிச்சிப்போம்.
மொக்கை என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது. உங்களுக்கு மொக்கையாக தெரியும் ஒன்று மற்றொருவருக்கு நல்ல பதிவாகப் தெரியும்.
இந்த மாதிரி பகையை வளர்க்கும், சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும், பதிவுலக அரசியலில் ஈடுபடும் பதிவுகளை விட, மொக்கைப் பதிவுகள் எவ்வளவோ மேல் !
//மொக்கை என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது. உங்களுக்கு மொக்கையாக தெரியும் ஒன்று மற்றொருவருக்கு நல்ல பதிவாகப் தெரியும்.///
உங்களுக்கு வினவு பதிவு சாதி பதிவா தெரியுது எங்களுக்கு சாதி எதிர்ப்பு பதிவா தெரியுது. அதை நாங்க விளக்கி சொல்லிருக்கோம் நிங்கலோ மொட்டையா தீர்ப்பு எழுதிருககீங்க
சரி என்னோட பின்னூட்டத்தில் உள்ள மத்த விசயங்களுக்கும் உங்க மேலான கருத்துக்களை பதிவு செஞ்சிட்டு போங்க
போதும் ப்ளீஸ் வினவு… இந்த thread கண்டிப்பாக சம்பந்தபட்டவர்களுக்கு வருத்தத்தை தான் தரும். ஒரு புன்னை மீண்டும் மீண்டும் சொரிந்து பார்ப்பது நல்லது அல்ல… ப்ளீஸ் Stop adding comments regarding this…. A humble request
//கபிலன்
says: June 4, 2010 at 5:17 pm
இதுக்கு மேல இந்த விஷயத்தை வைத்து அரசியல் நடத்தும் பதிவுகளில் மைனஸ் ஓட்டு ஒன்றே தீர்வு ! என்னுடைய மைனஸ் ஓட்டு இந்தப் பதிவுக்கு !
பதிவுலகத்தை சாதி வாரியாக,கும்பல் வாரியாக பிரித்த பெருமை வினவையே சாரும் ! வரலாற்றி நீங்கா இடம் ஐயா ! //
கபிலனுடன் உடன்படுகிறேன்.
எப்படியோ பதிவுலக தாதா ஆகிட்டீங்கண்ணா! மேட்டர தொடர்ந்து, லைவ்வா நடத்தி கொண்டு போகிறிங்க! வாழ்க வினவானிசம்!
//ஆனால் வினவு தளத்தின் மீது சாதி வெறி எதிர்ப்பு, ஓட்டுக்கட்சி எதிர்ப்பு, ஆபிரகாமிய மத எதிர்ப்பு, பெண் அடிமைத்தன எதிர்ப்பு, சமூக பிரச்சினைகள் ஆகியவற்றின் காரணமாக ஏதோ எரிச்சலில் இருந்தவர்கள் தங்கள் கோபத்தை இப்போது எதாவது ஒரு வழியில் காட்டுகிறார்கள்.//
ரிபீட்டு
வினவை வழி மொழிகிறேன்….
உண்மை தமிழன் அண்ணாச்சி இந்த விசயத்தில் ஊமை தமிழானாக இல்லாமல் பொது சபையில் விவாதித்து நர்சிம் மன்னிப்பை அவராலேயே கேட்கப்பட வேண்டும் அதுதான் நியாயமான முறை…
நன்றி