privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி

கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி

-

கன்னித்தன்மை பரிசோதனை:

ஏழ்மையின் காரணமாகத் திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி, மணமேடை வரை அழைத்துச் சென்ற பிறகு, மணப்பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால்தான் திருமணம் என்று சொல்லி, அவர்களை இழிவுபடுத்திய கொடுமை மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசே இதனைச் செய்துள்ளது என்பதுதான் இன்னமும் கொடுமை.

‘முக்கிய மந்திரி கன்யாதான் யோஜனா’ (முதலமைச்சர் திருமண உதவித் திட்டம்) என்ற திட்டத்தின் மூலம் அம்மாநிலத்தில் இலவசத் திருமணங்கள் மாதந்தோறும் நடத்தி வைக்கப்படுகின்றன. இதில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்குச் சீதனமாக, ஒரு  பெட்டியில் சமையல் பாத்திரங்களும், ஒரு கைபேசியும், 6500 ருபா ரொக்கமாகப் பணமும் வழங்கப்படும். 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட தொன்னூறாயிரம் தம்பதிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதம் 30-ஆம்தேதி இத்திட்டத்தின் கீழ் 152 தம்பதிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைப்பதாக இருந்தது. ஆனால், திடீரென மணப்பெண்களின் கன்னித்தன்மை பரிசோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டால்தான், அவர்களுக்குத் திருமணம் நடத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். அதன்படி, திருமணத்திற்காக வந்திருந்த மணப்பெண்கள் 152 பேருக்கும் உடனடியாக கன்னித்தன்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது. முடிவில் 14 பேர் தவிர்த்து மீதமுள்ள 138 பேருக்கு திருமணம் நடத்தப்பட்டது.
தங்களது திருமணத்திற்குக் கூட அரசிடம் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மணமேடைக்கு வந்த பெண்களை இத்தகைய சோதனை மூலம் உளவியல் ரீதியாக வதைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களில் இருவர் போலீசில் புகார் செய்ததையடுத்து, இந்த விசயம் வெளிஉலகிற்குத் தெரியவந்து பெரும் அதிர்ச்சியை நாடெங்கும் உருவாக்கியது. காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள்  நாடாளுமன்றத்தில் இதனை விவாதிப்பதாகக் கூறி, அந்த ஏழைப் பெண்களை மீண்டும் அவமானப்படுத்தின.

முதலில் அவ்வாறு பரிசோதனை ஏதும் செய்யப்படவில்லை என்று மறுத்த பா.ஜ.க.வினர், பின்னர் பொதுவான உடல்நலப் பரிசோதனை மட்டும் நடத்தப்பட்டதாகக் கூறினார்கள். இறுதியாகக் குட்டு வெளிப்பட்டவுடன், தங்களது செயலுக்கு நியாயம் கற்பிப்பதற்காக “மணப்பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா எனப் பரிசோதித்தோம்; ஆனால் கன்னித்தன்மைப் பரிசோதனை எதுவும் நடைபெறவில்லை” என்று கூறினார்கள்.  இதன்  மூலம் திருமணம் செய்ய வந்திருந்தவர்கள் அனைவரையும் ஏமாற்றுக்காரர்களாகச் சித்தரித்ததுடன், அரசுக்கு எதிராகப் புகார் கொடுத்த அந்த இரு பெண்களையும் மிரட்டி தங்களது புகாரைத் திரும்பப்பெற வைத்து, ஒரு வழியாகப் பிரச்சனைக்கு முடிவு கட்டியுள்ளனர்.

கற்பு நெறியைக் காப்பாற்றுவது எனும் பெயரில், பருவமடைந்த பெண்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் அடுக்களையில் பூட்டிவைக்கும் சனாதானிகள், பெண்ணின் உடலில் உள்ள கன்னித்திரைதான் அவர்களது கன்னித்தன்மையைப் உறுதி செய்வதாகக் கருதுகிறார்கள். ஆனால், காட்டுமிராண்டித்தனமான இவ்வரையறை  பெரும்பாலான உழைக்கும் பெண்களுக்கு அறிவியல்ரீதியாகப் பொருந்தாது. ஆண்களுக்கு நிகராக விவசாய வேலைகள், விறகு வெட்டுதல், தையல்வேலை உள்ளிட்ட கடினமான வேலைகளைச் செய்வதாலும் சைக்கிள் ஓட்டுவதாலும்  இயல்பாகவே உழைக்கும் பெண்களில் பெரும்பாலானோர், கன்னிப்பரிசோதனை எனும் இந்த வக்கிரமான சோதனையில் தோல்வியடையவே செய்வர். விளையாட்டு வீராங்கனைகளுக்கும் கூட இது பொருந்தும். ஏழைப் பெண்களை இச்சோதனைக்கு உட்படுத்துவது என்பது ஆணாதிக்க வக்கிரம் மட்டுமல்ல; அடுப்பூதும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது எனும் பார்ப்பனியத் திமிரும் கூட.

திருமண உதவித் திட்டத்திற்கு கன்னிப்பரிசோதனையை முன்நிபந்தனையாக்குவதன் மூலம், விதவைப்பெண்களும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் மறுமணம் செய்வதை நேரடியாகத் தடுத்து, பெண்களுக்கெதிராகக் காலந்தோறும் கொடுமை இழைத்துவரும் இந்துப் பார்ப்பனியத்தை பா.ஜ.க. அரசு நிலைநிறுத்த நினைக்கிறது. ஆண்-பெண் சமத்துவத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் இந்தப் பரிசோதனைக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் பா.ஜ.க. அரசு சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏழைகளாக இருப்பதாலேயே அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் ஆளும் வர்க்கத் திமிரில் இது நடந்து கொண்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் பா.ஜ.க. வடமாநிலங்களில் மோசமாகத் தோற்றிருப்பினும், அதன் மக்கள் விரோதத் தன்மை கொஞ்சம்கூட மாறிவிடவில்லை. கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை ஏற்றிக் கொல்லும் சதியைக் கூச்சமின்றிப் போற்றும் அதன் சனாதனப் பாரம்பரியம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. பா.ஜ.க. கும்பலின் ஆணாதிக்க பார்ப்பனீயக் கொடுமைதான் மத்தியப் பிரதேசத்தில் ‘கன்னிப் பரிசோதனை’ என்ற பெயரில் வக்கிரமாக அரங்கேறியுள்ளது. தன் மனைவியின் கற்பையே சந்தேகித்து அவளைத் தீக்குளிக்க வைத்த ஸ்ரீராமனைத் தேசிய நாயகனாகப் போற்றுபவர்களிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?

____________________________________

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு  2009
____________________________________

  1. கன்னித்தன்மை பரிசோதனை: வக்கிரப் புத்தி…

    ஏழ்மையின் காரணமாகத் திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி, மணமேடை வரை அழைத்துச் சென்ற பிறகு, மணப்பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால்தான் திருமணம் என்று சொல்லி, https://www.vinavu.com/2009/08/14/virginity/trackba

  2. இந்த ஆணாதிக்கத்திலிருந்து எப்படித்தான் விடுதலை பெறுவது?ஆண்டுக்கொரு தரம் பெண்கள் தினம் கொண்டாடி கேக் தின்று தண்ணீர் குடித்தால் மட்டும் வராது உரிமைகள்.அது போராட்டம் இன்றி கிடைக்காது.போராட்டத்திற்கு தேவை பெண்களிடம் ஐக்கியம்.அரசியல் ரீதியிலான ஐக்கியம் மட்டுமே நீடிக்கும்.ஆபரணம்,அழகு,ஆதிக்கம்,மதம் என அனைத்தாலேயும் கட்டிப்போட்டிருக்கின்றது ஆணாதிக்கம். இவற்றை தூக்கி எறியாமல் பேசும் நம் பேச்சுக்கள் ஆணாதிக்கத்துக்கு முதுகு சொறிவதாகவே இருக்கும்

    //படத்தை கிளிக் செய்தால் சிறியதாக இருக்கிறது , அத்வானியின் எழுத்துக்கள் புரியவில்லை.//

  3. அத்வானியின் எழுத்துக்கள் “பதிலுக்கு எவனாவது சீதா பிராட்டிக்கு பரிசோதனை செய்யச்சொன்னா நம்ம டங்குவாரு கிழிஞ்சிடாது????”

    மனைவியை சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்பினான் ராமன். ராமனின் குல கொழுந்துகள் பெண்களை இழிவு படுத்த கன்னி பரிசோனை செய்கின்றனர்.

  4. கொஞ்சம் வுட்டாக்கா,பெத்தவங்களின் அறுபதாங் கல்யாணத்தின்போது சொந்த ஆத்தாவுக்கே கன்னித்தன்மை பரிசோதனை செய்து பாத்தாலும் பாப்பானுங்க இந்த கம்மனாட்டிங்க!

    நாசமா போவ! பீடைங்க என்னைக்குத்தான் இந்தியாவ விட்டு ஒழிஞ்சி போவுமோ!

  5. Nee palla naavo paraiyanaavo porandhadhu thappu illa. But your blog shows your inferiority complex. Think and write in a decent manner. Only by tht way you can reach more people and get to the point.
    By,

    Ulagaalum paapaan 🙂

  6. Do you know anythhng about FGM and where it is practised.
    Do a google search and find out and also find why it is sanctioned by clergy of a particular religion.

    This incident you have written about has nothing to do with
    Hinduism. The decision to do this test should be condemned but why bring in Hindusim here as if Hinduism mandated that. It was a wrong decision and you should condemn BJP govt. You are anti-Hindu and however much you try your efforts to spread such lies will fail.

    • I accept Mr.Hindu’s statement.

      கன்னித்தன்மை சோதித்து தான் கல்யாணம் செய்யவேண்டும் என்று கட்டாயம் இருந்திருந்தால் ஒரு இந்து சாமிக்கும் கல்யாணம் நடந்திருக்காது.

      Hindu-க்கு பரிந்துரை: மகாபாரதம், புராணங்கள் படிக்கவும் (Top டக்கர் ADULTS only matter)
      ***எச்சரிக்கை: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்.

  7. கவலை படாதே வினவு இனி இஸ்லாமியர் ஆதரவு உனக்கு தான் இது போல் அடிக்கடி பார்ப்பனீய கொடுமைகளை பற்றி எழுது

    • உசேன் என்கிற பேரில் வந்திருக்கும் பாலவாக்கம் மாங்குடி அயிரே,

      உங்க ஊட்டு மாமியும் ஆணதிக்கத்துல மாட்டிண்டு தான் இருக்கா, அதை பத்தி பேச மாட்டேங்குறேளே

      • கலகம்,

        உங்கள் பொய்யான குற்றச்சாட்டு, அதை தவறு என்று கூட ஒத்துக்கொள்ளாத தன்மை ஆகியவற்றுக்கு பிறகு உங்களிடம் பேசுவதே வேஸ்ட் என்று எண்ணுகிறேன். ஆனால் வினவு தளத்தில் ஓரளவு அக்கறை இருப்பதால் இதை எழுதுகிறேன்.

        ஒவ்வொரு முறையும் பதிவுகளையோ, இசைவான மறுமொழிகளையோ யாராவது எதிர்த்து பேசும்போது, வினவு தளத்தின் பாடிகார்ட் மாதிரி நீங்கள் செய்யும் அலும்பல் ரொம்ப ஓவராக இருக்கிறது. தரக்குறைவான வார்த்தைகள் சாதாரணமாக புழங்குகின்றன. யாராவது கேனத்தனமாக பதில் எழுதினால் நீங்களும் கேனத்தனமாக பதில் எழுதித்தான் ஆக வேண்டுமா? வினவு தளம் ஒத்த கருத்துள்ளவர்கள் ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்து கொள்ள உருவாக்கப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். உங்கள் மறுமொழிகள் பல சமயங்களில் மற்றவர்களை இந்த தளத்துக்கு ஏண்டா வந்தோம் என்று சலித்து கொள்ள வைக்கின்றன. எப்போ பார்த்தாலும் நீ சிபிஎம்காரன், நீ பார்ப்பனன், நீ ஹிந்துத்துவவாதி, நீ கருத்துரிமை காவலன், வேறு பெயரில் எழுதுகிறாய் என்று மற்றவர்கள் மேல் ஒரு label ஒட்டுவதும், அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும்தான் உங்கள் மறுமொழிகளில் பெரும்பாலும் காணப்படுகின்றன. இந்த் அணுகுமுறை தேவைதானா, இது வினவு தளத்தின் நோக்கங்களை அடைய எப்படி உதவி செய்யும் என்று உங்களுக்கு உண்மையிலேயே எந்த கேள்வியும் இல்லையா?

      • ஆர்வீ,

        நீங்கள் சொல்வது கண்டிப்பாக சிந்திக்க வைக்கிறது. இது மாற்று கருத்து கொண்டோருக்கான களம்தான் அதில் மாறு பாடில்லை. ஒரு விசயம் முன்னர் ஆர்வியை கலகம் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதியிருக்கலாம்,முன்னர் சொன்ன கருத்துக்களை வேறொரு கட்டுரையில் சொல்லியிருக்கலாம். தனிப்பட்ட முறையில் தாக்குவது தவறு என்பது உண்மைதான். ஒரு முறை வினவு கூறியதிலிருந்து தனிப்பட்ட முறையில் விவாதம் செய்ய வருபவர்களை விமர்சிப்பதில்லை(ஆவீ, அதியமான்……). காரணம் அவர்கள் சொல்ல வருகிற கருத்து தான் உலகில் பலரிடமும் பரவியிருப்பதால் அக்கருத்து கொண்டோரையும் பாதிக்கும்.

        எல்லோரும் கற்று கொள்பவர்கள் தானே. போகிற போக்கில் கற்க வேண்டும் . அது ஆர்வீ போன்ற கொஞ்சம் ஜனனாயகமாக சிந்திப்பவர்களுக்கு மட்டும் தான் சரி, நம்ம டொமில் மணி, அனானி போன்று தேவையற்று விதண்டா வாதம் செய்யும் நபர்களுக்கு என்ன பதில் தரலாம் என சொல்லுங்கள். வேண்டுமென்றே திசை திருப்புவோருக்கும் செவிட்ட்டில் அறையாமல் புத்தி வருமா? வேறு ஏதாவது ஏதாவது வழி சொல்லுங்கள். வினவுக்கு கலகம் பாடிகார்டுமில்லை.

        இன்னொன்று தெரியுமா ஆர்வீ கலகத்தில் கூட நீங்கள் பலமுறை கேள்வி கேட்டீர்கள் பதில் சொல்லவில்லை அதுவும் தவறு தான் பிற்காலத்தில் வினவின் போக்கினை பார்த்து சரி செய்து கொண்டோம்.
        கலகத்துக்கு ரொம்ப சின்ன வயசுதான் ஆர்வீ, உங்களை மாதிரி அனுபவமான ஆளா இருந்தாகூட பரவாயில்லை. தப்பா இருந்தா சொல்லுங்க கண்டிப்பா மாத்திக்குறோம் . மாற்றம் ஒன்று தானே மாறாதது. வயசான அனுபவமிக்க கட்டை நீங்களே வேஸ்ட்ன்னு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க. (அப்புறம் உங்க சிதம்பரம் கட்டுரை நல்லா இருந்தது)

      • கலகம்,

        உங்கள் மறுமொழி படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களிடம் பேசுவது வேஸ்ட் என்று நான் நினைத்தது தவறு என்று தெரிந்துகொண்டேன். வாழ்த்துக்கள்.

        வெட்டி பேச்சு கோபப்படுத்துவது இயற்கைதான். ஆனால் பதில் வெட்டி பேச்சில் எந்த லாபமும் இல்லை. முடிந்த வரையிலும் கூலாக எடுத்துக்கொள்ள முயற்சி செய்து பாருங்களேன்!

        சிதம்பரம் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தது என்று எழுதி இருந்தீர்கள். நன்றி! அப்புறம் இந்த தளத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் என்னை அண்ணன் என்று அனுபவசாலி என்றும் வயசாளி என்றும் மாற்றி மாற்றி ஏன் குத்திக்காட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்? 🙂

      • அண்ணன் ஆர்.வி. அவர்களுக்கு,
        உண்மையில் எனக்கு வயசு கம்மிங்க! அனுபவமும் கம்மிங்க! அதனால் தான் அண்ணன் என்கிறேன்.
        உங்க படம் ஏன் இருட்டுல இருக்கிறது? கொஞ்சம் நல்லா தெளிவா இருக்கிற படமா எடுத்துப் பொடுங்களேன்!

      • //வினவு தளம் ஒத்த கருத்துள்ளவர்கள் ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்து கொள்ள உருவாக்கப்படவில்லை என்று நான் நினைக்கிறேன்.//

        இதில் ஆர்வி-யினுடைய கருத்து நூறு சதவிகிதம் சரியானது.

  8. many of those brides were already married. Some were pregnant. They remarry to get govt money. Thats is why this happened. In any case government has no rights to do these tests. But you guys never write the full story but use the parts of the story to fit your agenda.

    • அது சரிய்யா அனானி, ஆம்பளைங்களுக்கு எப்படி இந்த சோதனையை செய்வீங்க… உங்க அஜென்டாவுல ஃபிட்டு பண்ணி நீங்கதான் சொல்லுங்களேன்!

  9. இது தான் ஆணாதிக்கத்தின் வக்கிரபுத்தி

    ஆம்பிளைக்கு கன்னித்தன்மை பரிசோதை பண்ண வேண்டியது தான. ராமாயணத்துல சிதை சொல்லுற மாதிரி ராமன் பேடியா இல்லையான்னு டெஸ்ட் பண்ணுனியா?
    அனானியின் பதில் என்ன சொல்ல வருகிறது? ஏன் ஏற்கன்வே கல்யாணம் ஆண பெண்கள் மறு படியும் கல்யாணம் பண்ணக்கூடாதா/

    பெண்ணியம் சம்பந்தப்ப்ட்ட மேட்டர்களில் தன்னோட வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தன் cஈட்டுப்பெண்கள் ஆணாதிக்கத்தின் கரங்களில் மாட்டிக்கொண்டு தவிப்பதற்கு என்ன தீர்வு சொல்லப்போகிறார் அனானி

  10. The BJP Government or the BJP party announces now and then that they are the saviours of Hinduism: that they are the ones to bring to reality the real Hndu Rashtra; that they are the ones to cleanse the Indian history of Islamic and British imperialism(the adventure, sorry the misadventure in the text books of Indian school children); The list goes on.

    Now, how do we to consider the BJP Government or the BJP as the political unit? I do want the real Hindus to deny that fact first. Then it is easy to consider the BJP political unit as “a fancy unit consiting mainly of some lunatics, who are led by the misconceptions of HINDUISM.”

  11. //ஏன் ஏற்கன்வே கல்யாணம் ஆண பெண்கள் மறு படியும் கல்யாணம் பண்ணக்கூடாதா//

    அரசாங்கம திருமணத்துக்கு பணம் கொடுக்குது. இலவசத்தை வாங்க மீண்டும் மீண்டும் திருமணம் செய்துக்கொள்வது மோசடி. எழுதற கதையை முழுசா எழுதாமல் அரைகுறை யாக எழுதறதும் மோசடி வேலைதான்.

    • அரசாங்க பணம் = மக்கள் பணம். நியாயமான முறையில் மக்களிடமே போய் சேர வேண்டிய பணம். மக்களில் விதவைகள், விவாக ரத்து செய்தவர்கள், ஏற்கனவே காதலித்து ஏமாந்தவர்கள், கற்பழிக்கப்பட்டவர்கள் என போன்ற அனைத்து ரக மனிதர்களும் உண்டு.

      எனவே, திருமணம் செய்து வைக்கிறேன் என்கிற திட்டத்தை வகுத்த பிறகு பெண்களுக்கு “மட்டும்” கன்னித்தன்மை பரிசோதனை என்பது மகா முட்டாள்தனம். கல்யாணம் செய்துகொள்பவர்கள் தங்கள் விருப்பப்படிதான் இணைகிறார்கள். இதில், இடையில் பூச்சி புழு மேய்கிறதா என சோதிப்பதற்கு இந்து மத புடுங்கிகள் என்ன குரங்கு வர்க்கங்களா?

    • என்ன் நீங்க, புரியாம பேசுறீங்க? வட இந்தியாவும் தென் இந்தியாவும் ஒரே இந்தியாதானே! பொதுவாக, அநீதியும் அநியாயமும் எங்கு இழைக்கப்பட்டாலும் அதை தட்டி கேட்பதற்கு அனைத்து இந்தியருக்கும் பொறுப்பு உண்டு. மேற்கொண்டு, வட இந்தியாவில் புழங்கும் அதே இந்து மதமும் இதை சார்ந்த் ப.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற குழுக்கள் தமிழ்நாட்டிலையும் இருப்பதால், அவர்களது நோய் நம் சமூகத்தை தொற்றிக்கொள்வதற்கு முன் நம்மை தற்காத்துக்கொள்வது அவசியம்.

  12. பணத்தை வாங்கி அரசியல்வாதியை உருவாக்கும் மக்கள் கூட்டமே நீ இந்தியத் தாயையே விற்றுப்பிழைப்பதை மறந்துவிட்டாயா. இதில் பூச்சி மேய்ந்தாலென்ன?புழு மேய்ந்தாலென்ன?

    • என்னது? இந்தியத் தாயா? யாரு அவங்க? எங்க வசிக்கிறாங்க? அவங்கள எதற்கு இங்க கூப்புடுறீங்க? சும்மா இல்லாத அம்மாவையும் ஆத்தாவையும் கூவி புலம்பறதை விட்டுவிட்டு நல்ல கருத்தோடு வாதிக்க வாங்க.

  13. //ஒவ்வொரு முறையும் பதிவுகளையோ, இசைவான மறுமொழிகளையோ யாராவது எதிர்த்து பேசும்போது, வினவு தளத்தின் பாடிகார்ட் மாதிரி நீங்கள் செய்யும் அலும்பல் ரொம்ப ஓவராக இருக்கிறது. தரக்குறைவான வார்த்தைகள் சாதாரணமாக புழங்குகின்றன. யாராவது கேனத்தனமாக பதில் எழுதினால் நீங்களும் கேனத்தனமாக பதில் எழுதித்தான் ஆக வேண்டுமா?//

    Well said. Keep it up. Congrats.

    Here whatever vinavu writes, always jaalraased by Half Ticket and Kalagam. If any one refuses, then they will emerging as body guards.

    I strongly suspect vinavu = 1/2 ticket.

    • கருமான்,
      ஆர்.வியின் விமரிசனங்களை கலகம் பொதுவாக ஏற்றுக்கொண்டு சில கேள்விகளையும் தெரிவித்துள்ளார். அடுத்து குறிப்பிட்ட அரசியல் அமைப்பு, செயல்பாடுகளில் ஒன்றுபட்ட கருத்துள்ளவர்கள் என்றமுறையில் பல தோழர்கள் இணையத்தில் செயல்படுகின்றனர். இதில் வினவிற்கு ஆதராவாக கருத்து சொல்வது ஒன்றும் குற்றமல்ல. அப்படி சொல்பவர்களெல்லாம் வினவின் அவதாரங்களும் அல்ல. எங்கள் தோழர்களின் தவறான கருத்துக்களுக்கு கூட வினவில் விமரிசனம்செய்துள்ளோம். பலமுறை சொன்னது போல வினவு தனது கருத்துக்களை வினவின் பெயரில் மட்டும்தான் சொல்லும். மேலும் எமது அரசியலுக்கு அப்பாற்பட்ட பல நண்பர்களும் கூட ஆதரவாக கருத்து போடுவதை செய்து வருகின்றனர். எமது கருத்துக்களின்பால் இருக்கும் கூர்மையும், மறுக்கமுடியாத தன்மையை வைத்து இந்த தோழர்களை ஜால்ராக்கள் என்று எழுதுவது என்ன வகை பண்பாடு? எமது கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் எந்த பின்னூட்டத்தையும் நாங்கள் மட்டுப்படுத்துவதில்லை. இதை வைத்து நீங்கள் குறிப்பிடும்”ஜால்ராக்”களை விவதாத்தின் மூலம் வெல்வதற்கு என்ன தடை? உங்களுக்கு வினவின் கருத்துக்களின் பால் வேறுபாடு இருக்கிறது என்றால் அதை நாணயமாக வைத்து விவாதிப்பதை விட்டு ஜால்ராக்கள், ஜால்ரா அடிப்பவர்களே வினவு என்றும் பாதுகாவலர்கள் என்றும் தப்பிப்பதில் பயனில்லை. அடுத்து எல்லா பின்னூட்டங்களுக்கும் வினவு சார்பில் பதில் சொல்வது சாத்தியமில்லை என்பதையும் பலமுறை தெரிவித்துள்ளோம். வாசகர்களும், தோழர்களும். நண்பர்களுமே விவாதிப்பதையே ஊக்குவிக்கிறோம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கருமான் உங்கள் வேறுபாடுதான் என்ன, பிரச்சினைதான் என்ன?

  14. நண்பர் வினவு,
    நீங்கள் இப்படி நாகரீகமா பதில் அழிப்பது போல் உங்கள் நண்பர்களும் அளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு ‘மிக மோசமான ரீதியில் கேலி செய்வது போல் உங்களுக்காக பரிந்து கொண்டு வரும் பேர்வழிகளின் செயலால் பதிவோடு ஒன்ற முடியவில்லை என்பதே உண்மை.

    விவாதங்கள் வேண்டும். ஆனால் அது ஆரோக்யமான விவாதமாக இருந்தால் நல்லது. ‘அனானிகளின் தொல்லைகளை நீங்கள் மட்டுப்படுத்தலாமே.

    எதிர் கருத்துக்களுக்கு நீங்கள்தான் பதிவர் என்ற முறையில் பதில் சொல்ல வேண்டும்.
    நன்றி.

    • கருமம், உங்க பிரச்சனை என்ன, இதுவரைக்கும் உங்களை இங்க நான் பார்த்ததே இல்லையே, இங்கே ‘மிக மோசமான ரீதியில் கேலி செய்வது போல் ‘ என்று என்னை பற்றி நீங்கள் கூறியிருப்பது அபாண்டம் அவதூறு, ஒரு வேளை நீங்கள் ஆள் மாறாட்டம் செய்து பல பெயரில் பின்னூட்டம் போட்டு பிடிபட்டிருந்தால் அது உங்கள் தவறுதான், மற்றபடி உங்கள் கருத்தான வினவு தளத்துக்கு வினவு தான் பதில் செல்லமுடியும் என்ற கொள்களையை ஏற்க முடியாது, உங்களுக்கு மாற்று கருத்து சொல்ல உரிமை இருக்கும் போது எங்களுக்கு இல்லையா?

      இங்கே பல ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன, நீங்கள் அவைகளில் பங்கெடுக்கவேயில்லை. பங்கெடுத்தவர்களுக்கு தெரியும் யார்யாரெல்லாம் போசமாக திட்டிவிட்டு ஓடினார்கள் என்று….

      போனது போகட்டும், இனி இதே பெயரில் நீங்கள் தொடர்ந்து ஆரோக்கியமான விவாதம் செய்ய முன்வருவீர்கள் என நம்புகிறேன்…

    • //நண்பர் வினவு,
      நீங்கள் இப்படி நாகரீகமா பதில் அழிப்பது போல் உங்கள் நண்பர்களும் அளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு ‘மிக மோசமான ரீதியில் கேலி செய்வது போல் உங்களுக்காக பரிந்து கொண்டு வரும் பேர்வழிகளின் செயலால் பதிவோடு ஒன்ற முடியவில்லை என்பதே உண்மை.//

      நாகரீகமாக எழுதுபவர்ளை தோழர்கள் யாரும் கேலி செய்வதில்லை ஆனால்
      அநாகரீகமாக எழுதுபவர்களிடம் உட்கார்ந்து கொண்டு வட்டமேஜை மாநாடு போட முடியாது, இதையும் வினவுக்கு சால்ரா தட்டுவதாக நினைக்க வேண்டாம், இங்கு கண்மூடித்தனமாக யாரும் வினவை ஆதரிப்பதில்லை
      எங்கள் கொள்கையை ஒத்த கருத்தை வினவு பிரதிபலிப்பதாலே இங்கு வருகிறோம் அதிலிருந்து எங்கள் கருத்தை இடுகிறோம், அதே போல சில காரணங்களுக்காக வினவு சில இடங்களில் அமைதியாக இருந்தால் நாங்களும்
      அப்படி அமைதியாக இருப்பதில்லை , பொது நோக்கம் என்னவோ அதில் இருந்தே தோழர்கள் விவாதம் செய்கிறோம், நாகரீகம், அநாகரீக பதில் என்று
      பிரிப்பதில் எமக்கு உடன்பாடில்லை, நாகரீகமோ, அநாகரீகமான பின்னூட்டமோ அது எதன் விளைவு என்பதை கவனியுங்கள்,
      சரி எது நாகரீகம்? சிரித்து கொண்டே நாகரீகமாக சீண்டினால் உங்களுக்கு
      நாகரீகமா?

    • டோண்டு ராகவன், ஏன் உங்க ஃபோட்டோ வரல, இந்த பின்னூட்டத்த போட்டது போலி இல்லையே? நீங்கள் மேலே சுட்டியில் குறிப்பிட்டுள்ள செய்தி உண்மையெனில் அதுவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதே!

    • ஐயா, டோண்டு அவர்களே தமிழ் மணியின் கட்டுரையில் தன்னார்வக்குழுக்களின் ஆதாரமற்ற செய்திகளே பொதுவாக பட்டியலிடப்பட்டுள்ளன. திபெத்திய பெண்கள் வேலைக்கு செல்வதற்காக கன்னிமைத்தன்மைக்காக சோதனை செய்வதற்கு என்ன ஆதாரம்? தமிழ் நாட்டு பார்ப்பனப்ப்பெண்களை அப்படித்தான் வருங்கால மாமனார் பார்ப்பனர்கள் சோதனை செய்வதாக எழுதினால் நீங்கள் ஆதாரம் கேட்பீர்களா மாட்டீர்களா?

      சீனா ஒரு முதலாளித்துவ நாடு. பல மில்லியனர்களை உள்ளடக்கி உழைக்கும் மக்களை ஒடுக்கும் நாடு. இந்த சீன்த்தை போலிக்கம்யூனிஸ்டுகள்தான் கம்யூனிச நாடு என்று போற்றுகிறார்கள், நாங்களல்ல என்று பல முறை எழுதினாலும் பல முட்டாள்கள் அதை புரிந்து கொள்வதில்லை. அடுத்து மணிப்பூரிலும், காஷ்மீரிலும் இந்திய இராணுவம், ஈழத்தில் சிங்கள இராணுவம் நடத்தியிருக்கும் பாலியல் வக்கிரங்களையெல்லாம் பாரத தேசபக்தி என்று போற்றும் கயவாளிக் கும்பல்கள் சீனாவை வைத்து தமக்கு கோமணம் கட்ட முயற்சிக்கின்றன. டோண்டுவின் நண்பர் வால்பையன் இருக்கும் ஏரியாவில் திருமணமாகாத பெண்களுக்கு சுமங்கலித்திட்டம் என்ற பெயரில் ஒட்டச்சுரண்டி வருவதெல்லாம் ராகவன் ஐயாவுக்கு தெரியுமா?

      சீன மக்களின் உழைப்பை ஒட்டச்சுரண்டி தயாரிக்கப்படும் பொருட்கள்தான் அமெரிக்காவின் வால்மார்ட்டில் விற்கப்படுகின்றன. இந்த வால்மார்ட்டில்தான் அமெரிக்க அடிமை தமிழ்மணி ஜட்டி, பனியன், மவுஸ் எல்லாம் வாங்குகிறார். அமெரிக்கா இப்படி வாழ்வதற்காக சீன மக்களை கொல்கிறது சீன அரசு.

      திபெத்தில் சீன அரசு அடக்குமுறை செய்வது உண்மைதான். என்றாலும் திபெத்தை பண்ணையார்களின் ஆதிக்கமாகவே லாமாக்கள் வைத்திருந்தார்கள். அதை மாவோவின் சீன அரசு முறியடித்து திபெத்திய மக்களை விடுதலை செய்த்து. தமது அதிகாரம் பறிபோனதால்தான் லாமாக்கள் தாலாய் லாமா தலைமையில் அமெரிக்க நடிகர் நடிகைகளை வைத்து திபெத்திய விடுதலை, சீன அடக்குமுறை என ஃபிலிம் காட்டுகின்றனர். இந்த லாபிக்கள் துப்பிய எச்சில்களைத்தான் அமெரிக்க அடிமை தமிழ் மணி அடிக்கடி தனது பிளாக்கில் போட்டு மணக்க வைக்கிறது.

      திபெத்தில் நடப்பது தேசிய இனவிடுதலைப்போரா என்ற இந்த கட்டுரையை சென்று வாசிக்கவும். http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1328:2008-05-10-21-15-55&catid=68:2008

      அப்புறம் டோண்டுவின் இந்துமதவெறி பங்காளிகள் ம.பிரதேசத்தில் நடத்திய கன்னிமை பரிசோதனை பற்றி பேச்சுக்கு கூட ஒரு வார்த்தை கண்டிக்காதவர் தமிழ்மணியின் உதவியுடன் சீனாவும் அதைத்தான் செய்கிறது என்று உள்ளம் களிக்கிறார். இதன் பொருள் நான் மட்டுமல்ல நீங்களும் யோக்கியர்களல்ல என்பதே. இப்படி ஐயா தன்னைப் பற்றி ஒத்துக்கொண்டதற்கு நன்றி

  15. வாயா டோண்டு பார்ப்பான்
    நீயே ஒரு ரெக்கமண்டு! இதுல நீ இன்னொருத்தனுக்கு ரெக்கமண்டா!
    இந்துத்துவால கைய வெச்ச உடன பூணூல் துடிக்குது (அடிங்கொப்பம்மவனே)
    அவன்(டும்மில் மணி) பதிவா எழுதியிருக்கான்? அத படிக்கசொல்லி ரெக்கமண்டு வேற!
    கட்டுரைய படிச்சி விவாதம் பண்ணு உன்ன யார் வேணான்னா?
    உன் பாப்பான் வேலையெல்ல்ம் லிங்க் குடுத்து இங்க காட்டாத’செய்யற வேலைய உட்டுட்டு செ…யாட்டுக்கு ம….புடுங்குற’ உன்ன என்ன பண்றது (இது கெட்ட வார்த்தையில்லீங் ஒரு கிராமத்து பேச்சு அர்த்தம் புரியாதவிங்க யாராவது கோயமுத்தூர், ஈரோட்டுகாரங்க இருந்தா அவிங்கிட்ட கேட்கோங்)

    • டோண்டு “நாங்கதான் மோஷமா நீங்களூம்தான் மோஷம்ம்ம்ம” என்ற ரீதியில்
      எழுதியிருக்கிறார், எங்க எவன் பண்ணுனாலும் தப்புதான்(சீனாவுல இருக்கறவன் திருட்டு கம்யூனிஸ்டு அதாவது நம்மவூரு பூணுலிஸ்டு சீபீஎம் மாதிரி), பிஜேபிகாரன்பண்றது தப்பா ரைட்டா அதுக்கு பதில் சொல்லு டோண்டு!

      பதில் வர்றது கஷ்டம்தான் ஏனா இந்த சங்கராச்சாரியூட்டு
      எச்சிகால் நாயீங்க லொள்ளுக்குனே வர்றானுங்க இவுனுங்கள நம்மாள சமாளிக்கமுடியாது இதுக்கெல்லாம் நம்ம தோழர் ஏகலைவன்தான் சரி. (
      வருவாரா!!!)

  16. விடுதலை,

    // நாகரீகமாக எழுதுபவர்ளை தோழர்கள் யாரும் கேலி செய்வதில்லை ஆனால் அநாகரீகமாக எழுதுபவர்களிடம் உட்கார்ந்து கொண்டு வட்டமேஜை மாநாடு போட முடியாது, //

    This is factually incorrect. சந்தேகம் இருந்தால் டோண்டு என்ற பேரில் டோண்டுவோ வேறு யாரோ எழுதிய மறுமொழிக்கு – ஒரு சுட்டி மட்டுமே கொடுத்திருக்கிறார் – மரண அடி எழுதிய மறுமொழிகளை இந்த பதிவிற்கான மறுமொழிகளிலேயே பார்க்கலாம். உதாரணத்துக்கு ஒன்று – // இந்த சங்கராச்சாரியூட்டு எச்சிகால் நாயீங்க லொள்ளுக்குனே வர்றானுங்க //

  17. @ஆர்வி.
    அதை இட்டது டோண்டு ராகவனாகியா நானேதான். சந்தேகமே வேண்டாம்.
    அதே போல இந்த வினவு தங்கெட்ட பின்னூட்டங்களை அனுமதிப்பவர் என்பதிலும் சந்தேகம் வேண்டும். மனுஷனுக்கு மேனர்ஸ் லேது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  18. //டோண்டு ராகவன், ஏன் உங்க ஃபோட்டோ வரல, இந்த பின்னூட்டத்த போட்டது போலி இல்லையே? //
    இல்லை நாந்தான். இப்பதிவு பிளாக்கரில் இருந்து, போட்டோ எனேபிள் செய்யப்படிருந்தால் எனது போட்டோ வந்திருக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    • //இல்லை நாந்தான். இப்பதிவு பிளாக்கரில் இருந்து, போட்டோ எனேபிள் செய்யப்படிருந்தால் எனது போட்டோ வந்திருக்கும்.//

      antha moonjikku intha moonjiye romba nalla irukku perusu

  19. //விடுதலை,

    // நாகரீகமாக எழுதுபவர்ளை தோழர்கள் யாரும் கேலி செய்வதில்லை ஆனால் அநாகரீகமாக எழுதுபவர்களிடம் உட்கார்ந்து கொண்டு வட்டமேஜை மாநாடு போட முடியாது, //

    //@ஆர்வி.
    அதை இட்டது டோண்டு ராகவனாகியா நானேதான். சந்தேகமே வேண்டாம்.
    அதே போல இந்த வினவு தங்கெட்ட பின்னூட்டங்களை அனுமதிப்பவர் என்பதிலும் சந்தேகம் வேண்டும். மனுஷனுக்கு மேனர்ஸ் லேது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    //

    🙂

    This is factually incorrect. சந்தேகம் இருந்தால் டோண்டு என்ற பேரில் டோண்டுவோ வேறு யாரோ எழுதிய மறுமொழிக்கு – ஒரு சுட்டி மட்டுமே கொடுத்திருக்கிறார் – மரண அடி எழுதிய மறுமொழிகளை இந்த பதிவிற்கான மறுமொழிகளிலேயே பார்க்கலாம். உதாரணத்துக்கு ஒன்று – // இந்த சங்கராச்சாரியூட்டு எச்சிகால் நாயீங்க லொள்ளுக்குனே வர்றானுங்க ////

  20. அங்கு நடந்தது கணிதன்மை பரிசோதனை இல்லை. அறைவேகடுதனமாய் எழுதாதீர்கள். சில கர்ப்பிணி பெண்களும் கல்யாணம் செய்து கொள்ள வந்திருகிறார்கள். அதை கண்டுபிடிகத்தான் சோதனை நடத்தி உள்ளார்கள்.

    • சில தந்தைமார்களும் வந்திருப்பார்களே. அதை எப்படி கன்டுபிடிபீர்கள். …………………….
      சும்மா escape ஆகாதீங்க BOSS. தைரியமா ஆம்பிள புத்திய அவுத்து வுடுங்க. பக்கத்தில வுங்க அம்மா இல்லாம பார்த்துக்கோங்க.

  21. இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தா, அது ரொம்ப கண்டிக்கத் தக்க ஒன்று தான்.ஆனால், கம்யூனிஸ்ட், தி க கோஷ்டி சொல்றதுல 2 சதவிகிதம் தான் உண்மை இருக்கும்னு நாட்டுல எல்லோருக்கும் தெரியும்.

  22. உங்கள் கொள்கை உயர்வாக இருக்கலாம் .உங்கள் போக்கை பார்த்தால், வறுமையை தனது படத்தில் பதிவு செய்து அல்லது ஏழை குழந்தையை முத்தமிட்டு ஒட்டு பெரும் அரசியல்வாதியை போன்றதே அன்றி வேறெதுவும் இல்லை. நீங்கள் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இப்படி எழுத முடியும் . அதுவே பெண்ணுரிமை என்னவென்று புரியாமையை காட்டுகிறது . ஒரு சில பெண்கள் மருமகளை கொடுமை படுத்துவதை எடுத்து கொண்டு மொத்த மாமியார்களையும் திட்டுவதை போன்றது. ஒரு சில பெண்கள் மருமகளை கொடுமை படுத்துவதை எடுத்து கொண்டு மொத்த மாமியார்களையும் திட்டுவதை போன்றது ஆணாதிக்கம் என்ற வார்த்தையும் அது போலத்தான் . உங்கள் நோக்கம் ஆணாதிக்கத்தை எதிப்பதா அல்லது பெண்ணுரிமையை பாதுகாப்பதா ?உங்கள் நோக்கம் ஆணாதிக்கத்தை எதிப்பதா அல்லது பெண்ணுரிமையை பாதுகாப்பதா ?இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தது என சொல்லலாம்ஆனால் உண்மை அதுவல்ல .ஆணாதிக்கம் எனும் போதே ஏதோ எதிர் பார்த்து இருப்பதாக தோன்றும் . யாரையோ வெல்ல போராடுகிறீர்கள் .அந்த உரிமை கிடைத்தால் சரியாக பயன்படுத்துவீர்களா?ஒரு சிறிய வார்த்தை உங்கள் நோக்கத்தை தவறாக காட்டுகிறது.நீங்கள் முன்பே குறிப்பிட்டது போல “ஆணாதிக்கம் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது ” நானும் ஆண்தான் எனது அம்மாவை உயர்வாகவே பார்கிறேன் (அப்பாவை விட ). பழகும் பெண்களிடமும் நன்றாகவே பழகுகிறேன் .யாரோ அல்லது பெரும்பான்மையினர் செய்யும் தவறுக்காக அந்த இனத்தையே தவறாக சித்தரிக்க எண்ணுவதை நினைக்கும் போது நீங்களும் கைதட்டல் வாங்க என்னும் ஆசாமியோ என தோன்றுகிறது . நிற்க . சுதந்திரம் நிறைய பெற்ற பெண்களும் நிறைய இருக்கிறார்கள் நம் சுற்று புறத்தில் , அவர்களை தொடர்பு கொண்டு ஆக்க பூர்வ செயல்களில் என்ன செய்திருகிறீர்கள் ? நான் சென்னையில் வாழ்கிறேன் . தினமும் பல சிக்னலில் பிச்சை எடுப்போர்கள் நிறைய பார்கிறேன் .வயதானவர்கள் ஆதரவற்றோர்களாக இருக்கலாம், ஆண் குழந்தை வளர்ந்த பிறகு எப்படியோ போகலாம் ? ஆனால் ஒரு பெண் குழந்தை என்ன ஆவாள் ? பிச்சை எடுப்பது சட்டத்திற்கு புறம்பானது . பெண் உரிமை அல்லது ஆணாதிக்கம் பற்றி பேசும் பெண்கள் நிறைய செல்லும் சாலைதான் . ஆனாலும் அந்த சிறுமிகளை கடந்து செல்லும் போது குற்ற மனப்பான்மையிலிருந்து விடுபட முடியவில்லை . முடிந்தால் அந்த வேலையை செய்வோம் . பிறகு விவாதிக்கலாம் பெண்ணுரிமையா அல்லது ஆணாதிக்கமா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க