வலையுலகில் ஒரு வன்புணர்ச்சி நடந்தேறியிருக்கிறது. சந்தனமுல்லை என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவரை பார்ப்பன சாதியைச் சேர்ந்த பதிவர் நர்சிம் தன் எழுத்துக்களால் (PDF) கொடூரமாக பாலியல் வன்முறை (RAPE) செய்திருக்கிறார்.
முதலில் அது தொடர்பான பிரச்சினையை சுருக்கமாகப் பார்க்கலாம். பதிவர் ஆதிமூலக் கிருஷ்ணன் என்பவர் இந்த நர்சிமிடம் ஒரு நேர்காணலை (PDF) எடுத்து வெளியிட்டார். அந்த நேர்காணலில் ஆ.விகடன் பாணியில் மரண மொக்கை கருத்துக்களை அதுவும் தன்னை முன்னிறுத்தி நர்சிம் பேசியிருப்பார். இந்த நேர்காணலை அதற்கே உரிய அற்பத்தனத்தை போட்டுடைத்து பெண் பதிவர் மயில் என்பவர் நகைச்சுவையாக ஒரு பதிவு (ZIP) வெளியிடுகிறார். அதில் பதிவர் சந்தனமுல்லை பின்னூட்டமிடுகிறார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த நர்சிம் “பூக்காரி“ (PDF) என்ற கதையை வெளியிடுகிறார். அதில் சந்தனமுல்லையை எவ்வ்வளவு கீழ்த்தரமாக குறிப்பிட முடியுமோ அவ்வளவு குதறியிருக்கிறார். அதன் பி.டி.எஃப்பை இணைப்பில் படித்தால் நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.
பார்ப்பனியத் திமிர் என்பதைத் தாண்டி இதில் வேறு எதுவும் இல்லை என எளிமைப் படுத்தி இந்தச் சம்பவத்தை குறுக்கிவிட முடியாது. இப்படியொரு கொடூரத்தை நிகழ்த்தியிருக்கும் பதிவர் நர்சிம்மை என்ன செய்யலாம் என்று பார்ப்பதற்கு முன்னர் இது தொடர்பான இன்னொரு கேள்விக்கு விடை தேடுவது நம் புரிதலுக்கு வழிவகுக்கும்.
‘ஏன் செய்யவேண்டும்?’
இந்த இரண்டாவது கேள்விக்கு முதலில் விடை தேடுவோம். இதற்கு சில பழைய கணக்குகளை தூசி தட்ட வேண்டியிருக்கிறது. பல பதிவர்களும் குறிப்பிடுவது போல் இது ‘ஒரு இடுகை’ சார்ந்த பிரச்னை இல்லை. கிட்டத்தட்ட 18 மாத ஆணாதிக்க பகை. நரித்தனத்துடன் வஞ்சம் தீர்க்கும் பார்ப்பனியத்தின் விஷத்துக்கு பல நூறாண்டு கால வரலாறு உண்டு, எனில் பதிவுலகில் அதற்கான பல மாத வரலாறு உண்டு.
பழைய கணக்கு
‘நான் கடவுள்’ திரைப்படம் வெளிவந்த நேரம். பல ஆண் பதிவர்கள், இந்தப் படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று விமர்சனம் எழுதியிருந்தார்கள். இன்று வன்புணர்ச்சி செய்திருக்கும் நர்சிம் தரப்பில் நியாயம் இருப்பதாக பேசும் வடகரை வேலன் உட்பட பலரும் இந்த வகையான கருத்தையே முன் வைத்தார்கள். அப்போது சந்தனமுல்லையும், ராப்பும் (வெட்டி ஆபிசர் என்ற பெயரில் வலைத்தளம் நடத்திய பெண் பதிவர். இப்போது வலையுலகில் அவர் எழுதுவதில்லை) “இது அபத்தமான கருத்து. பிரசவ வேதனையையே அனுபவித்து கடந்து செல்லும் துணிவு பெண்களுக்கு உண்டு. அப்படியிருக்க ஒரு படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று தடுக்க நீங்கள் யார்? அப்படத்தில் பெண்களே நடிக்கவில்லையா?” என்ற பொருள் பட எதிர்வினை புரிந்தார்கள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஆண் பதிவர்களுக்கு சந்தனமுல்லை – ராப் மீது வெறுப்பு படிய ஆரம்பித்தது. இந்த வகையான ஆண்கள், தங்கள் வீட்டு பெண்களை வேலைக்கு அனுப்புவார்கள் – அனுப்புகிறார்கள். அதையே சுதந்திரம் என்றும் அறிவிக்கிறார்கள். ஆனால், இந்த சுதந்திரத்தை அவர்கள் அனுமதித்ததே ஏடிஎம் மிஷினாக மட்டுமே பெண்களை பார்க்கும் பார்வைதான். பொருளாதார ரீதியாக தாங்கள் உயர பெண்களை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த நினைக்கிறார்கள். இதைத் தாண்டி பெண்கள் வேறு எந்த விதமான உரிமைகளையும் கேட்டு விடக் கூடாது என்பதோடு ஒரு சுயேச்சையான சமூக ஆளுமையாக தலையெடுக்கக் கூடாது என்பதில் 24 மணி நேரமும் கவனமாக இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பார்வை கொண்ட ஆண்களுக்கு சந்தனமுல்லை – ராப் ஆகியோரின் எதிர்வினை எந்தளவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்த புள்ளியிலிருந்து அவர்களின் ஆழ்மனதில் இவர்கள் இருவர் மீதும் வெறுப்பு படிய ஆரம்பித்தது என்று கொள்ளலாம். இந்த ஆண் பதிவர்கள் அனைவரும் பிறப்பால் பார்ப்பனர்கள் அல்ல. ஆனால், பார்ப்பனர்களுக்கு மட்டுமே அறிவு உண்டு என்பதை ஆழ்மனதில் ஏற்று மனு தர்மத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள். அதனால் ஆணாதிக்கத்தை இயல்பாக எழுத்திலும் சிந்தனையிலும் வரித்தவர்கள்.
கார்க்கி – ராப் – சந்தனமுல்லை
முன்னணி படைத் தளபதியாக இப்போது நர்சிம்மை ஆதரிக்கும் கார்க்கி பவா (வினவில் எழுதும் தோழர் கார்க்கி அல்ல ), முன்பு ஹைதராபாத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். இப்போது சென்னையில் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாக அறிகிறோம். தனது வலைத் தளத்தில் தன் அக்கா மகன் குறித்து அவ்வப்போது இடுகைகள் எழுதுவார். அந்தச் சிறுவன் சிரித்தாலும் பதிவு. அழுதாலும் பதிவு. கிண்டல் அடித்தாலும் பதிவு என்று எழுதும் இந்த கார்க்கி –
தன் மகள் பப்புவின் வளர்ச்சி குறித்து பொது வெளியில் பகிர்ந்து கொள்ளும் சந்தனமுல்லையின் பதிவுகளை உண்மையில் ஆதரிக்க வேண்டுமல்லவா? ஆனால், எதிர்க்கிறார். என்ன காரணம்?
கார்க்கியின் ‘சாளரம்’ வலைத் தளத்தை ஒன்றிரண்டு முறை பார்வையிட்டாலே எந்தளவு ஆணாதிக்கத் திமிருடன் அவர் எழுதுகிறார் என்பதை உணரலாம். காமம் சார்ந்த பார்வையோடு, ஒரு போகப்பொருளாக அன்றி வேறு எப்படியும் அவர் பெண்களை அணுகுவதில்லை. இந்த கார்க்கியும் – வெளிநாட்டில் வசிக்கும் ராப்பும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தார்கள். கார்க்கி தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்தி எழுதுவதை, ராப் கண்டித்தார். உடனே கார்க்கி, ‘ராப்’ என தலைப்பிட்டு எவ்வளவு மோசமாக முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பெண்களை இழிவுப்படுத்தி ஒரு இடுகையை எழுதினார். இதற்கு எதிர் வினையாக ராப், ஒரு இடுகையை பதிவிட்டார். அதில் எந்த வாசகமும் இடம் பெறவில்லை. ஒரேயொரு குப்பைத் தொட்டியின் படம். அதில் கார் கீயை தூக்கிப் போடுகிறார்கள். இடுகையே அவ்வளவுதான்.
இதற்கு ‘சபாஷ்… கலக்கிட்ட… சரியான எதிர்வினை’ என்று பொருள் தரும் மறுமொழியை சந்தனமுல்லை எழுதினார். சந்தனமுல்லை மீது கார்க்கி கொள்ளும் கோபத்துக்கு அடிப்படை இந்த மறுமொழிதான். அதனால்தான் இப்போது ‘மயில் (விஜி) தளத்தில் சந்தனமுல்லையின் மறுமொழி கண்டிக்கத்தக்கது’ என கார்க்கி கூச்சலிடுகிறார். உண்மையில் அந்த பழைய மறுமொழியை மனதில் வைத்துத்தான் இப்போது லபோ திபோ என உறுமுகிறார். சந்தனமுல்லை அன்று சொன்னதை, இப்போது வினவு மேலும் அழுத்தமாகச் சொல்கிறது,“ராப் எழுதிய குப்பைத் தொட்டி பதிவிற்கு பொருத்தமாக அதில் புரண்டு நெளியக்கூடிய ஆண்வெறித் திமிரான விலங்குதான் இந்த கார்க்கி”
ஆணாதிக்க பதிவர்கள்
புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் சில ஆண் பதிவர்கள் வல்லவர்கள். ‘ஆபரேஷன் சல்மா’ மூலம் பார்ப்பன ஜெயராமனின் முகத்திரையை கிழித்த பதிவர் பாலபாரதிக்கும், மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் சென்ஷிக்கும் இது தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரியும். அவற்றை இவர்கள் இருவரும் எப்போது பொது வெளியில் வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அவர்கள் இது குறித்து மௌனம் காப்பது இந்த ஆணாதிக்க வெறியர்களைக் காப்பாற்றுவதற்கும், இவர்களால் கடித்துக் குதறப்படும் பெண்பதிவர்கள் பதிவுலகை விட்டு ஓடுவதற்கும்தான் துணை புரியும் என்பதை அவர்களுக்கு தோழமையுடன் சுட்டிக் காட்டுகிறோம்.
மேலே குறிப்பிட்ட ஆண்வெறி ஜொள்ளு பார்ட்டிகளின் நடவடிக்கைகள் அரசல் புரசலாக சந்தனமுல்லைக்கு தெரியும். அதனாலேயே புதிதாக எழுதவரும் பெண் பதிவர்களிடம் சீனியர் என்ற முறையில் இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வார். இதை அறிந்த அந்த பதிவர்களுக்கு சந்தனமுல்லை மீது கோபமும் ஆத்திரமும் எப்போதும் உண்டு. அதனால்தான் இந்தக் கழிசடைகள் பொறுக்கி நர்சிம்மை ஆவேசத்துடன் ஆதரிக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டுமே ராப் – ‘சோம்பேறி’ உட்பட பல பெண் பதிவர்கள், எழுதுவதை நிறுத்தி, வலையுலகை விட்டே ஒதுங்கியிருக்கிறார்களே… அதற்கு என்ன காரணம்? சுரணையுள்ள ஒவ்வொரு பதிவரும் இதற்கு விடையளிக்க வேண்டும்.
யார் இந்த நர்சிம்?
பிறப்பால் மட்டுமல்ல, சிந்தனையாலும் கடைந்தெடுத்த பார்ப்பனர். இவரது தந்தையார், பிராமண சங்கத்தின் (தாம்ப்ராஸ்) உயர் பொறுப்பில் இருப்பதாக அறிகிறோம். பன்னாட்டு நிறுவம் ஒன்றின் உயரதிகாரியாக பணிபுரியும் நர்சிம், வலைத் தளத்தில் எழுத வந்த புதிதில் யாரும் இவரை சீண்டவில்லை. மறுமொழியும், ஹிட்ஸும் குறைச்சலாக பெற்ற இவர், பிரபல பதிவர்களின் வலைத் தளத்துக்கு சென்று தானாக மறுமொழி இடுவார். எனது வலைத் தளத்துக்கு வாருங்கள் என்று கெஞ்சுவார். அந்த வகையில் ஒவ்வொரு இடுகையை தான் எழுதியதும், சந்தனமுல்லைக்கு லிங்க் அனுப்பியிருக்கிறார். ஆனால், சந்தனமுல்லை அதை கண்டுகொள்ளவில்லை என்பது நர்சிமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில்தான் பிரபல பதிவர்களின் அன்பைப் பெற்றால், தன் கடையும் பிரபலமாகும் என்று திட்டமிட்ட நர்சிம், யார் யார் பிரபலமானவர்கள் என லிஸ்ட் எடுத்திருக்கிறார். அதில் தன் சாதியை சேர்ந்த ஜ்யோவ்ராம் சுந்தர், பைத்தியக்காரன் ஆகியோரையும் (இவர்கள் பார்ப்பனியத்தை ஏற்காதவர்கள் என்றாலும்), தன் சாதியாக இல்லாவிட்டாலும் வருணாசிரமத்தை ஏற்கக் கூடிய பிற ஆதிக்க சாதியை சேர்ந்த பதிவர்களையும் அணுகி நட்பு பாராட்டி தானாகவே சீடனாகி இருக்கிறார். நன்றாக கவனித்தால் தனது ‘குரு’வாக எந்த பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களையும் தலித்துகளையும் இவர் ஏற்கவில்லை என்பது புரியும். அதுமட்டுமல்ல, எந்த பெண் எழுத்தாளரையும் குறைந்த பட்சம் வழிகாட்டியாகக் கூட நர்சிம் ஏற்றதில்லை. அறிவு ஆண்களுக்கு மட்டுமே – அதுவும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே – சொந்தம் என்பதில் அவ்வளவு நம்பிக்கை!
பணத்தை தின்று, பணத்தில் மலம் துடைத்து, பணத்தில் குளிக்கும் அளவுக்கு செல்வந்தராக இருக்கும் நர்சிம், பணத்தாலேயே தனது ‘குரு’க்களை மகிழ்வித்திருக்கிறார். ஒரு பியர் வாங்கிக் கொடுத்தாலே ‘இவர் மிகச்சிறந்த இலக்கியவாதி’ என்று அறிவிக்கும் சாருநிவேதிதா, ‘தனது சீடர்’ என மனமுவந்து நர்சிம்மை அறிவிக்கவும், தனது வலைத்தளத்தில் இவருக்கு லிங்க் தரவும் என்ன காரணம்? கள்ளநோட்டிலும் புன்னகைக்கும் காந்திதானே? இந்த இடத்தில் சாருநிவேதிதாவின் இப்போதைய மனைவியும், நர்சிம்மும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இன்று நர்சிம்முக்கு ஆதரவு தரும் யுவகிருஷ்ணா, அதிஷா, இரும்புத்திரை… ஆகியோர் சாருநிவேதிதாவின் அபிமானிகள் என்ற காரணத்திற்காகவே நர்சிம்மை வெட்கம், நேர்மை, சுரணையின்றி ஆதரிக்கிறார்கள்.
எதற்கெடுத்தாலும் சாதியை பார்க்கிறீர்கள்… நர்சிம்மின் எழுத்துக்களை வாசித்திருக்கிறீர்களா? என்ற கேள்வியை அவரது ஆண்வெறி ஆதரவாளர்கள் எழுப்பலாம்.
நல்லது, நர்சிம்மின் எழுத்துக்கள் எப்படிப்பட்டவை? பொது புத்தியில் உறைந்து போன விஷயங்களை மூன்றாம் தர எழுத்தாளர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார் போல எழுதுவதை தவிர வேறென்ன செய்திருக்கிறார்? இதையும் அவர் திருடித்தான் செய்திருக்கிறார். “பழைய புத்தகக் கடையில் கிடைக்கும் பேப்பரை பார்த்து காப்பி அடிப்பதாக”, பதிவர் மயில் கிண்டலடித்ததற்கு காரணம் இதுதான். இந்த ‘உண்மை’யை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது யார் தெரியுமா? இப்போது நர்சிம்மை ஆதரிக்கும் ‘முற்போக்கு’ பதிவரான லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணாதான்.
ஒருமுறை நர்சிம் ஒரு கதையை எழுதியிருந்தார். அந்தக் கதை மின்னஞ்சலில் வலம் வரும் ஒரு ஆங்கிலக் கதையின் அப்பட்டமான காப்பி என்ற உண்மையை லக்கிலுக் போட்டு உடைத்தார். உடனே என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்? அந்த இடுகையையே தன் தளத்திலிருந்து நர்சிம் தூக்கிவிட்டார்! இப்படித்தான் நர்சிம் கதைகளை எழுதுகிறார். பழைய குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களில் வெளிவந்த ஒருபக்க, இருபக்க கதைகளை டிங்கரிங் செய்து புனைவாக்குவதுதான் அவர் வேலை.
கம்பரையும், வள்ளுவரையும், குறுந்தொகையையும் தன் தளத்தில் எழுதும் இந்த நர்சிம், ஒருபோதும் எந்த அறிஞரின் விளக்கவுரையிலிருந்து தான் எடுத்திருக்கிறோம் என்று சொல்லியதில்லை. வார்த்தை மாறாமல் அந்த விளக்கவுரையை டைப் செய்து தன் தளத்தில் வெளியிடுவது மட்டுமே இவரது வேலை. இந்த உழைப்புக்கு கிடைத்த பட்டம்தான் ‘கார்ப்பரேட் கம்பர்!’ வாங்கிய காசுக்கு மேல் கூவுவது என்பது இதுதான். கம்பனை இதற்கு மேல் இழிவுபடுத்துவதற்கு ஒன்றுமில்லை என்பது தமிழறிஞர்களுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.
எந்தவொரு பொதுப் பிரச்னை குறித்தாவது எப்போதாவது நர்சிம் எழுதியிருக்கிறாரா? ஈழப் பிரச்னை தொடர்பாக ‘சோ’த்தனமாக ‘தினமலரை’ காப்பியடித்து ஒரு இடுகையை எழுதப் போக, பெயரிலி என்ற பதிவர் வெளுத்து வாங்க, ‘ஐயனே என்னை மன்னித்துவிடுங்கள்’ என சரண்டர் ஆன கதை அனைவருக்கும் தெரிந்ததுதானே? நித்தியானந்தா அம்பலப்பட்ட போது, பிரேமானந்தாவையும் உடன் இணைத்து பதிவு எழுதியவர், ஜெயேந்திரனை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ‘அவாள்’ பாசம். நித்தியானந்தரின் இணையதள பி.ஆர்.ஓ.வாக செயல்பட்ட சாருநிவேதிதாவையாவது கண்டித்தாரா என்றால் அதுவும் இல்லை. இதில் மக்கள் இந்த சாமியார்களை நம்பி ஏமாறக்கூடாது என்று அட்வைசு வேறு. சாருவை நம்பி பல வாசகர்கள் நித்தியிடம் ஏமாந்தது எல்லாம் இந்த கார்ப்பரேட் கம்பனின் கணக்கில் வராது போல.
ஆக எந்த பொதுப்பிரச்சினைக்கும் ஆவேசமோ, கோபமோ வராத டிப்பிக்கல் நடுத்தர வர்க்க, அதுவும் சென்னைப் பார்ப்பானின் சபா டைப் ஜிகினா அறிவாளிதான் இந்த நர்சிம். வங்கியிலோ, எல்.ஐ.சியிலோ, இல்லை ஐ.டி துறையிலோ வேலை செய்யும் பார்ப்பனர்களின் பொது அரட்டைப் பண்பைத் தாண்டி நர்சிமிடம் எந்த வெங்காயமுமில்லை. இப்படிப்பட்ட அக்மார்க் சுயநலவாதிதான் இன்று தன்னை கேலிசெய்தார் என்பதற்காக ஒரு பெண்ணை எழுத்தில் கடித்துக் குதறியிருக்கிறார். இப்படிப்பட்ட ஆண்வெறியனின் இரண்டரைக் கதைகளையும், ஒன்னேமுக்கால் கவிதைகளையும் வெளியிட்டதற்கு ஆ.விகடன்தான் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால், சந்தனமுல்லை தொடர்ந்து பொதுப் பிரச்னைகள் சார்ந்து எழுதிவருகிறார். ஏப்ரல் மாத ‘உன்னதம்’ இதழில் ‘தெலுங்கானா’ பிரச்னை குறித்து ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’யில் வந்த கட்டுரையை தமிழாக்கம் செய்தவர், மே மாத ‘உன்னதம்’ இதழில் ‘தலித்துகள் ஏன் நீதிபதியாக வரமுடியவில்லை?’ என்ற கட்டுரையை தமிழாக்கம் செய்திருக்கிறார். தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தின் வழியே சமூக பிரச்னைகளை ஆராய்கிறார். வினவில் கூட மகளிர் தினப்பதிவுகளில் எழுதியதோடு மற்ற பெண் பதிவர்களின் கட்டுரைகளை உற்சாகத்துடன் ஆதரித்தார். வினவு போன்ற இடதுசாரி ‘தீவிரவாதி’களை ஆதரிப்பதற்கு கூட பயப்படும் சில ஆண் பதிவர்களின் சூழலில் இதுவே பெரிய கலக நடவடிக்கையில்லையா? தண்ணீர் தினத்தை முன்னிட்டு ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ நூலை வெகு அழகாக சென்னை கூவம் நதிக்கரையோர அடித்தட்டு மக்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு சந்தனமுல்லை எழுதிய இடுகைக்கு சமமான இடுகையை எப்போதாவது நர்சிம் எழுதியிருக்கிறாரா?
நர்சிம்மின் எந்த இடுகையிலும் சந்தனமுல்லை மறுமொழிகள் இட்டதில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது. தன்னை மீறி ஒரு பெண்பதிவர் பிரபலமடைவதும், சொல்லப் போனால் வினவு போன்றவர்கள் சந்தன முல்லைக்கு பின்னூட்டமிடுவதும், தனது தளத்தில் எழுதவைப்பதும், நர்சிம் என்ற அப்துல்கலாம் மரண மொக்கைக்கு இதுவரை வினவு பின்னூட்டம் போடாததும் கூட இந்த பார்ப்பன ஆண்வெறி பதிவருக்கு ஆத்திரத்தை உருவாக்கியிருக்கும். என்றால் இவர் சந்தன முல்லையை வேறு எப்படி எதிர் கொள்ள முடியும்?
குட் டச் பேட் டச்
தன்னைத்தானே நேசிக்கும், தன் அழகை மட்டுமே ஆராதிக்கும், தன் எழுத்தை தானே வழிபடும் சுயமோகியாக நர்சிம் இருப்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம், ‘குட் டச் பேட் டச்’ நிகழ்வு. பதிவுலகம் சார்பில் நடந்த சமூக நிகழ்வில் இதுவும் ஒன்று. கிழக்கு மொட்டை மாடியில் டாக்டர்களான ருத்ரனும், ஷாலினியும் பங்கேற்ற அந்த நிகழ்வுக்கு முழுக்க முழுக்க அடித்தளமிட்டவர் பதிவர் தீபா. சிறுமிகள் மீது நிகழும் வன்கொடுமைகளை கண்டித்து தீபா ஒரு பதிவு எழுத, இது குறித்து அரங்கக் கூட்டம் நடத்தலாம் என பதிவர்கள் மறுமொழியில் சொல்ல… அப்படித்தான் இக்கூட்டம் அரங்கேறியது. பெண் பதிவர்கள்தான் இதற்கான முயற்சியில் இறங்கினார்கள். ஆனால், அப்போது இவர்களுடன் நட்பு பாராட்டிய நர்சிம், தானும் உதவுவதாக சொல்லி களத்தில் இறங்கினார். அவ்வளவுதான். வந்தது வினை. டாக்டர் ருத்ரனுக்கு அழைப்பு செல்லவே இல்லை. அந்தப் பொறுப்பை ஏற்ற நர்சிம், டாக்டரை தொடர்பு கொள்ளவேயில்லை. பதிவுகளில் வந்த அறிவிப்பை பார்த்துவிட்டு டாக்டர் போட்ட பின்னூட்டம் இன்றும் நினைவில் இருக்கிறது. “யாரும் என்னை முறைப்படி தொடர்பு கொண்டு தேதியை சொல்லவில்லை. இருந்தாலும் பதிவர்களுக்காக நிகழ்ச்சிக்கு வருகிறேன்” என்று பொருள்பட எழுதினார். இதற்கு அடுத்து நடந்த க்ளைமாக்ஸ்தான் முக்கியம்.
இந்நிகழ்வு குறித்து ‘ஜூனியர் விகடனில்’ செய்தி வெளியிட்ட ரமேஷ் வைத்யா, இந்நிகழ்வு நடக்க முழுக்க முழுக்க நர்சிம்தான் காரணம் என கூலிங் க்ளாஸ் அணிந்த நர்சிம்மின் புகைப்படத்துடன் எழுதியிருந்தார். பிரமாதமாக ஏதோ தானே உழைத்து நிகழ்ச்சியை நடத்தியதுபோல் நர்சிம்மும் பேட்டியளித்திருந்தார். இப்படி பார்ப்பன ஊடகங்களில் அவாள்களுக்கு மட்டுமே ஒளிவட்டம் போடப்படும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ‘ஜூ.வி’ வெளிவந்ததும் வழக்கம்போல் ‘நன்றி ஜூ.வி’ என இடுகை எழுதிய நர்சிம், மறுமொழியில் பல பதிவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தீபாதான் காரணம் என்று சொன்னதும், அந்த இடுகையையே தூக்கிவிட்டார். ஆக, தான் அம்பலமாகாத இடுகைகளை மட்டுமே நர்சிம் தன் வலைத்தளத்தில் வைத்திருக்கிறார். திருட்டுக் குற்றம் வெளிப்பட்ட இடுகைகளை சத்தமில்லாமல் தூக்கிவிடுவார்.
இந்த நிகழ்வில் சமூகப் பொறுப்புணர்வுள்ள சந்தனமுல்லை தன்னாலான உதவிகளை தீபாவுக்கு செய்தார். எதுவும் செய்யாமல், ஆனால், எல்லாம் தன்னால்தான் என்று சீன் காட்டும் நர்சிம்மை நண்பனாகக் கூட இதன் பிறகு சந்தனமுல்லை மதிக்கவில்லை. ஆக, சந்தனமுல்லை மீது நர்சிம் ஆத்திரப்பட இதுமாதிரியான பல திருட்டுகளே காரணம். அறிவுச்சரக்கும் சமூக அக்கறையும் இல்லாமல் ஆதிக்க சக்திகளின் பலத்தில் தானும் ஒரு எழுத்தாளராக வலம் வரவேண்டுமென்ற ஒற்றைக் குறிக்கோளைத் தவிர இவருக்கு எந்த கொள்கையும், வெங்காயமும் இல்லை.
இந்த அரங்கக் கூட்டம் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு தன் வலைத்தளத்தில் பாலபாரதி ஒரு மின்னஞ்சலை வெளியிட்டார். அது ஒரு பெண் பதிவர் அவருக்கு அனுப்பிய பர்சனல் கடிதம். தனக்கு செக்ஸ் டார்ச்சர் தரும் திருமணமான ஒரு ஆண் பதிவரால் தன் குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெயர் குறிப்பிடாமல் பாலபாரதி இந்த மின்னஞ்சலை வெளியிட்டார். அத்துடன் தக்க சமயத்தில் அந்த ஆண் பதிவர் யார் என்று அம்பலப்படுத்துவேன் என்றார். இன்றுவரை பாலபாரதி அந்த ஆண் பதிவரை அம்பலப்படுத்தவில்லை. ஒருவேளை தக்க சமயம் இன்னும் வரவில்லை போல! ஆனால் பாலபாரதி அவர்களே அதை இனியும் வெளியிடவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆண் வெறி விலங்குகள் இன்னும் ஆடுவார்கள் என்பதை மட்டும் இங்கே என்பதை நட்புடன் சுட்டிக் காட்டுகிறோம்.
தீபா – நர்சிம் – நகைச்சுவை – மயில்
கலாய்த்தல் அல்லது ஒரு பதிவுக்கு நகைச்சுவையாக எதிர் பதிவு எழுதுவது என்பது பதிவுலகில் சகஜம். கண்ணுக்கு தெரிந்த உதாரணம் குசும்பன். நகைச்சுவை என்ற லேபிளின் கீழ், குசும்பன் எது செய்தாலும் பதிவர்கள் அனைவரும் மறுமொழியில் தங்கள் சந்தோஷத்தை தெரிவிப்பார்கள். உண்மையில் எந்தவொரு பிரச்னையையும் நீர்த்துப் போக செய்வதில் இதுமாதிரியான ‘குசும்பு’ பதிவுகளே முன்னிலை வகிக்கின்றன. அரசர்களின், ஆளும் வர்க்க பிரதிநிதிகளின் அவையில், அவர்களை மகிழ்விக்க கோமாளிகள் நியமிக்கப்படுவார்கள். மக்களின் பிரச்னைகள் அல்லது போராட்டங்கள் அரசரின் செவியை ‘எட்டாதபடி’ கண்ணும் கருத்துமாக கோமாளி செயல்படுவான். இதன்மூலம் அரசர் மக்கள் பிரச்சினைகளுக்காக எப்போதும் காது திறந்திருப்பார் என்று பொருளல்ல. ஆனால் எப்போதும் அரசனை பிரச்சினைகளின்றி மகிழவைப்பதே கோமாளியின் வேலை. பதிவுலக அரசர்களை அப்படி மகிழ்விக்கும் திருத்தொண்டைத்தான் பதிவர் குசும்பன் என்ற அரசவைக் கோமாளி செய்து வருகிறார்.
இப்போது கூட நர்சிம் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம் ‘பதிவுலகிற்கு நாட்டாமைகள் தேவை’ என்று ஒரு பதிவை குசும்பன் வெளியிட்டிருக்கிறார். அப்பட்டமாக ஒரு பாலியல் வன்முறை நடக்கும் போது கூட அதை கேலியாகப் பார்க்கும் நகைச்சுவை உணர்வு இந்த உலகில் குசும்பனுக்கு மட்டுமே உண்டு. நர்சிம்மையோ அல்லது அவரது ஆணாதிக்கவெறி ஆதரவாளர்களையோ பார்த்து மட்டுமல்ல உங்களைப் பார்த்தும் ஆத்திரம் வருகிறது குசும்பன். முடிந்தால் கொஞ்சம் வெட்கப்படுங்கள். உங்களது பதிவுலக சேவையின் பரிணாம வளர்ச்சி இப்போதுதான் பொருத்தமாக வந்திருக்கிறது.
‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்’ என்று பெயர் வாங்கத் துடிக்கும் நர்சிம், அவ்வப்போது இதுமாதிரியான நகைச்சுவை இடுகைகளை எழுத முயன்றிருக்கிறார். உரையாடல் அமைப்பு சார்பில் சிறுகதைப் பட்டறை நடத்தப்பட்டபோது அது தொடர்பாக ஒரு ‘காமெடி’ இடுகையை நர்சிம் எழுதியது ஒரு உதாரணம். எப்படியாவது பதிவுலகில் பெயர் பெற்ற வழிமுறைகளுடன் தானும் ஒரு பிரபல பதிவராக மாறவேண்டும் என்பதின் மலிவான முயற்சிகள்தான் இவை.
ஆனால் இவர் நகைச்சுவையாக எழுத முயன்றது போன்று முன்பு தீபாவும், இப்போது மயிலும் செய்தபோது நர்சிம் துள்ளி குதித்து விஷத்தை கக்குகிறார். தீபா விஷயத்தில் என்ன நடந்தது?
சுயமோகியான நர்சிம், தனக்கு வந்ததாக ஒரு வாசகர் கடிதத்தை தன் தளத்தில் பிரசுரித்தார். அதில் அவரை இந்திரன், சந்திரன் என்றெல்லாம் புகழப்பட்டிருந்தது. உண்மையிலேயே அப்படியொரு வாசகர் கடிதம் வந்ததா இல்லையா என்பது வேறு விஷயம். படு மொக்கை இடுகைகளை எழுதும் நர்சிம்மையும் மதித்து பாராட்டும் மொக்கைகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
நர்சிம்மின் இந்த வாசகர் கடிதத்தை கிண்டல் செய்து தீபா ஒரு இடுகையை எழுதினார். அந்த இடுகையில் சந்தனமுல்லை மறுமொழி எழுதினார். இப்போது நர்சிம்மை ஆதரிக்கிறார்களே… அவர்களேதான் அப்போதும் தீபாவுக்கு எதிராக பொங்கி எழுந்தார்கள். சந்தனமுல்லைதான் இதற்கெல்லாம் காரணம் என டார்கெட் செய்தார்கள். வலையுலகமே இரண்டு பட்டது.
இந்த பழைய வரலாறுதான் இப்போதும் நடந்திருக்கிறது. ஆதிமூல கிருஷ்ணன் என்ற பதிவர், நர்சிமை பேட்டியெடுத்து வெளியிட்டார். அதில் ஆ.விகடன் பாணியில் தன்னை முன்னிறுத்தி மரண மொக்கை கருத்துக்களை நர்சிம் வீசியிருந்தார். அதை கிண்டல் செய்து பதிவர் மயில் ஒரு பதிவு வெளியிட அதில் சந்தனை முல்லை பின்னூட்டம் போட இதுதான் நர்சிம் வெறி கொண்ட பின்னணி.
அப்போது நர்சிம்முக்கு வந்த வாசகர் கடிதம். இப்போது நர்சிம் அளித்த பேட்டி. இரண்டு இடங்களிலும் நர்சிம்மை கிண்டல் செய்தவர்கள் பெண் பதிவர்கள். இரண்டிலும் அந்த கிண்டலை ஆதரித்து மறுமொழி எழுதியவர் சந்தனமுல்லை.
ஒருவேளை இருமுறையும் நர்சிம்மை கலாய்த்தது ஆண் பதிவர்களாக இருந்தால், கோமாளியான குசும்பனே இதை செய்திருந்தால், என்ன நடந்திருக்கும்? நர்சிம் இதேபோல் பார்ப்பன விஷத்தை கக்குவாரா? நர்சிம்மை ஆதரிக்கும் பதிவர்கள் இதேபோல் எதிர்வினை புரிவார்களா? கலாய்த்தல் என்பதும், கிண்டல் என்பதும் ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமா? பெண்கள் அப்படி செய்யக் கூடாதா? இப்போது அந்த பெண்பதிவர்கள் செய்த கிண்டலை சீரியஸாகவே வினவு ஆமோதிக்கிறது.
ஆதிமூலகிருஷ்ணன் எடுத்த நர்சிம்மின் பேட்டியை கிண்டல் அடித்து மயில் எழுதிய இடுகையை வரிக்கு வரி ஆமோதிக்கிறோம். திருஞான சம்பந்தன் போல குழந்தையாக இருக்கும் போதே ஞானப்பால் குடித்த மேதையாக தன்னைக் கருதிக் கொள்ளும் நர்சிமை, மிகச்சரியான முறையில் பதிவர் மயில் நகைச்சுவை பாணியில் எழுதியிருக்கிறார். அதை வரிக்கு வரி நாங்கள் பாராட்டுகிறோம். பழைய புத்தகக் கடையிலிருந்து திருடித்தான் நர்சிம் பதிவு எழுதுகிறார் என்பது நகைச்சுவை மட்டுமல்ல, உண்மையும் கூட. இதை சந்தனமுல்லை ஆமோதித்து மறுமொழி எழுதியதில் என்ன தவறு இருக்கிறது?
குசும்பன் செய்தால் அதை பாராட்டுவீர்கள், முல்லையும், மயிலும் செய்தால் கடித்து குதறுவீர்களா? ஏன் வினவைக்கூட கிண்டலாகவும், வன்மத்துடனும் சிலர் பதிவாகவும், இங்கே பின்னூட்டமாகவும் எழுதுகிறார்கள். இதற்காக என்றைக்காவது நாங்கள் கோபப்பட்டிருக்கிறோமா? இவ்வளவிற்கும் நாங்கள் நர்சிமைப் போலவோ, அவரது ஆதரவாளர்களைப் போலவோ மரணமொக்கைகளை எழுதுவதில்லை. அதுவும் நாங்களெல்லாம் பதிவுலகில், ஊடகங்களில் மாபெரும் எழுத்தாளராக பவனி வரவேண்டும் என்ற பச்சையான சுயநலத்திற்காக எழுதவில்லை. அத்தனையும் மக்களுக்கான நோக்கில் எழுதுகிறோம். அப்படியெனில் எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்க வேண்டும்? வரவில்லை என்றால் அது நடைமுறையில் பதிவுலகில் ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்ற பொறுப்புதான் அப்படி வழிநடத்துகிறது. அற்பவாதியும், பொதுநலவாதியும் இப்படித்தான் வேறுபடுகிறார்கள்.
விதூஷ் – டி.ஆர்.அசோக்
எந்தளவுக்கு நர்சிம்மும் அவரது ஆதரவாளர்களும் பார்ப்பன வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் டி.ஆர்.அசோக். இவர் பதிவர் சங்கம் குறித்து ஒரு இடுகை எழுதினார். அதில் சங்கத்தின் முதல் பெஞ்சில் இருப்பவர்களெல்லாம் பார்ப்பனர்களாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பின்னூட்டமிட்ட விதூஷ் (வித்யா) என்ற பெண்பதிவருக்கு பதிலளிக்கும் போது நீங்கள் அழகாக அடக்கமாக இருக்கிறீர்கள் என்று பதிலளித்திருந்தார். உடனே நர்சிம் சாமியாடினார் பாருங்கள்… அடேங்கப்பா நினைத்தாலே புல்லரிக்கிறது. ‘ஒரு பெண்ணை ஈவ்டீசிங் செய்வதற்கு சமம்… இப்படியெல்லாம் ஆண்கள் இருந்தால் எப்படி பெண்கள் எழுத வருவார்கள்…’ என்றெல்லாம் கேள்வி கேட்டார். மறுமொழியிலும் பலர் நர்சிம்மை ஆதரித்து, டி.ஆர்.அசோக்கை எதிர்த்து எழுதினார்கள். உண்மையில் பார்ப்பனர்களை கேள்வி கேட்ட அசோக்கை வஞ்சம் தீர்க்கவே நர்சிம் இதை எழுதினார் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஏனெனில் இப்போது சந்தனமுல்லையை குறிவைத்து எழுத்தில் வன்புணர்ச்சி செய்திருக்கும் நர்சிம்மின் செயல் எப்படிப்பட்டது? இதை ஆராய வேண்டிய அவசியமே இல்லை. விதூஷ் என்கிற வித்யா ஒரு பார்ப்பனப் பெண். அவரது அழகை வர்ணித்த டி.ஆர்.அசோக் பார்ப்பனரல்லாதவர். பார்ப்பன பெண்ணை வேறொரு சாதி ஆண் எப்படி ரசிக்கலாம் என்ற பார்ப்பன இளைஞனின் சுயசாதிக் கோபம் அதுவும் நாயகிகளைக் காப்பாற்றும் எம்.ஜி.ஆர் டைப் ஹீரோயிசம்தான் நர்சிம்மிடம் அப்போது வெளிப்பட்டது. மற்றபடி பெண்களை காப்பாற்றும் எந்த புண்ணாக்கு செயலும் இதில் இல்லை. ஒருவேளை டி.ஆர்.அசோக் பார்ப்பனராக இருந்திருந்தால், நர்சிம் இந்த ‘கமெண்ட்டை’ ரசித்திருப்பார்.
சந்தனமுல்லை மிக பிற்பட்ட வகுப்பை சேர்ந்த பெண். அதனால் நர்சிம் துணிந்து அவரை எழுத்தில் குதறியிருக்கிறார். யாரும் அவரை கேள்வி கேட்டமாட்டார்கள் என்ற நம்பிக்கை. நூற்றாண்டுகளாக பார்ப்பனர்களின் இந்த நம்பிக்கைதானே சமுதாய ‘இயல்பாக’ இருக்கிறது. அதனால்தானே பெண்ணாக இருந்தும் இன்னொரு பெண்ணை தரம் தாழ்த்தி நர்சிம் எழுதியதை இதே விதூஷ் ஆதரிக்கிறார்? சனிக்கிழமை மாலையே விதூஷ் ‘பொழுதுபோகலைனா…’ என இடுகை எழுத வேறென்ன காரணம் இருக்கமுடியும்?
நர்சிம் செய்த வன்புணர்ச்சி
சந்தனமுல்லை மீது இந்தளவுக்கு கீழ்த்தரமான வசவுகளை நர்சிம் பயன்படுத்தக் காரணம், ஆண் என்ற வெறியும், ஆதிக்க சாதிக்காரன் என்ற ஆணவமும்தான். இத்துடன் முதுகெலும்போடு சந்தனமுல்லை நிமிர்ந்து நிற்பது நர்சிம்முக்கு வயிற்றெரிச்சலை கிளப்பியிருக்கிறது. அதனால்தான் சந்தனமுல்லையை குறிவைத்து நர்சிம் எழுதிய ‘பூக்காரி’ என்ற படுமட்டமான செக்ஸ் கதையில் இந்த //நம்ம வளர்ப்பு வேற மாப்ள.// சொற்பிரயோகம் வருகிறது.
என்ன சொல்ல வருகிறார் நர்சிம்? தன் குலம் பார்ப்பனக் குலம்… தன் வளர்ப்பு மேம்பட்ட வளர்ப்பு என்பதுதான் இதன் பொருள்.
” இவ பஜாரி முண்டைப்பா…அவ காரியம் ஆகணும்னா எவனையும் ஊ.. துபத்தி வாங்கி கும்புடுற கொலமகளப்பா..ஒக்காலி நல்ல மாடுன்னா உள்ளூர்ல விலபோகும்..இவ பவுசு தெரியாத வெளிநாட்டுப் பயலுகலோட தொடுப்பு வச்சு சம்பாதிக்கிற தொழில்காரிய என்னாண்டு சொல்லச் சொல்ற?” இதற்கு என்ன பொருள்?
” “அப்பிடித்தான் மாப்ள ஒதுங்கிப்பேனேன்.. தேவிடியா கைய்யி சும்மா இருக்குமா, அரிக்குது போல..கையக்காட்டுறா, கண்ணக்காட்டுறா.. ஒக்காலி ரோட்டுல விட்டுத்திருப்புனா சரியாப் போகும்” இதன் பொருள் என்ன?
இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்தபோது அதை எதிர்த்து பார்ப்பன வன்மத்துடன் குரல் கொடுத்த சத்தியமூர்த்தி ஐயரின் இருபத்தியோராம் நூற்றாண்டு குரல்தான் நர்சிமினுடையது. ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களோ இல்லை பதிவர்களோ அடக்க ஒடுக்கமாக இருப்பதைத்தான் இந்த வெறியர்கள் விரும்புவார்கள். வெள்ளையும் சொள்ளையுமாக ஹீரோ போல உலா வருவதையும், ஓசிக்காசுக்காக ஹீரோ என மொக்கைகள் உசுப்பேத்தி விடுவதையும் ரசித்து வாழும் நர்சிம் போன்ற அற்பங்களை இந்த பெண்கள் போட்டுடைத்தால் என்ன நடக்கும்? அதுதான் நர்சிமின் ஆண்குறித் திமிர் வெறி.
நர்சிமின் அசிங்கமான கொடுரமான முகம் இப்படி வெளிப்பட்டாலும் அதை ஜவ்வாது பூசி மறைப்பதற்கு சில பதிவர்கள் வெட்கமின்றி முயல்கிறார்கள். அவர்களெல்லாம் யாரென்று நர்சிமின் பின்னூட்டத்தில் பார்க்கலாம். இவர்களுக்குள்ளும் அப்பட்டமான ஆணாதிக்க வெறி மறைந்திருக்கிறது. இருப்பினும் அதை சற்றே நாசுக்காக மயில், முல்லையின் வினைக்கான எதிர்வினைதான் நர்சிமின் பூக்காரி என்று முட்டுகொடுக்க முயல்கிறார்கள். ஆனால் இந்த அற்பங்கள் முல்லை எழுதியது என்ன, நர்சிம் எழுதியது என்ன என்று தெரியாமலா பேசுகிறார்கள்? இல்லை தெரிந்தே ஊளையிடுகிறார்கள்.
“நர்சிமின் மேல் யாராவது அதுவும் ஒரு பெண் கைவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?” என்பதே இவர்களது எச்சரிக்கை. இவர்களது கருத்துதான் பொதுவில் செல்வாக்குடன் இருக்கிறது. இந்த செல்வாக்கில் சிக்குண்ட அப்பாவிப் பதிவர்களைப் பார்த்து கேட்கிறோம். முல்லை எழுதியதில் கருத்து வேறுபாடு என்றிருந்தால் அதை வெளிப்படையாக தெரிவித்து அதைக் கண்டிக்கிறேன் என்று எழுதுவதை யார் தடுத்தது? ஆனால் முல்லை எழுதியதால் அவரது கையை உடைப்பதோடு, அவரது ஆளுமையையும் கடித்துக் குதறுவேன் என்று நர்சிமை எழுத வைத்தது எது? அந்த வினைக்கு இதுதான் எதிர்வினை என்றால் நர்சிமின் வினைக்கு நாங்கள் எங்கள் வினையாக அவரை பாலியல் வன்முறை செய்த குற்றவாளி என்று ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறோம். பத்துவருட சிறைதண்டனை வழங்கப்படவேண்டுமென்று கோருகிறோம். உங்கள் பதில் என்ன? வினையின் விளைவுதான் இந்த எதிர்வினை என்று ஜல்லியடிக்கும் ‘நடுநிலைமையாளர்கள்’ அத்தனை பேரும் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.
நித்தியானந்தா பிரச்சினையில் சாருவை அம்பலப்படுத்தி வினவு எழுதிய கட்டுரையின் பின்னூட்டத்தில் ரியல் என்கவுண்டர் என்ற தோழர் சாரு அபிமானிகளாக லக்கிலுக், அதிஷா, நர்சிம், கேபிள் சங்கர் முதலானோர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்ட போது பதிவர் தண்டோரா துள்ளிக் குதித்தார். “எப்படி சக பதிவர்களை தாக்கி எழுதலாம்” என்று “வினவு என்னும் பிடுங்கிகள்” என்பதாய் பதிவு போட்டார். சகபதிவர்கள் ‘தாக்கப்படுவதை’க் கண்டு பொங்கியெழுந்த பதிவர்கள் பத்துப்பேர் தண்டோரா கட்டுரைக்கு ஓட்டு போட்டு ஜல்லியடித்தார்கள். பதிவர்களின் மீது இவ்வ்வளு பாசம் வைத்திருக்கும் இந்த வேடதாரிகள் இப்போது எங்கே போனார்கள்? அதுவும் எழுத்தால் ஒரு பெண்பதிவர் வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஒரு நாய்க்கும் சுரணை வரவேயில்லையே?
இதுவரை மாதவராஜ், காமராஜ், செந்தழல்ரவி, தீபா, மலர்வனம், முகுந்த அம்மா ஆகியோர்தான் நர்சிமைக் கண்டித்து பதிவிட்டிருக்கிறார்கள். சில பதிவர்கள் பின்னூட்டத்தில் கண்டித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர பெரும்பான்மையினர் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள் இல்லையென்றால் நர்சிமிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். “பர்தா நற்குடி” பிரச்சினையில் இந்துப் பெண்களின் மானம் கப்பலேற்றப்பட்டதாக பொங்கி எழுந்த இந்துப்பதிவர்கள் இப்போது ஒரு ‘இந்து’ பெண் பதிவர் மீது நடத்தப்பட்டிருக்கும் கொடூரத்தைக் கண்டு மேல் கீழ் வாய்மூடி இருப்பதற்கு காரணமென்ன? ஏனெனில் முல்லையின் மானத்தை விட ஒரு பாப்பானின் மானம் பெரிதல்லவா? ஆக இங்கும் இந்துப் பதிவுலகம் அப்படியேதான் செயல்படுகிறது.
பதிவுலக வரலாற்றிலேயே இல்லாத அளவு ஏன் போலி டோண்டு பிரச்சினையை தூக்கிச் சாப்பிடும் அளவு உள்ள இந்த நர்சிமின் வெறியை ஆதரிப்பவர்கள்தான் கடும் விமரிசனத்திற்குறியவர்கள். நர்சிம் ஒன்றும் முகமூடி அணிந்த அனானி அல்ல. எவ்வளவு திமிர் இருந்தால் பூக்காரி இடுகையை புனைவு என்ற வகையில் தைரியமாக வெளியிட்டு விட்டு இப்போது அந்த இடுகையைத் தூக்கிவிட்டு பதிவுலகை விட்டு தற்காலிகமாக விலகுகிறேன் என்றெல்லாம் சீன் போட்டு ஏதோ அவர்தான் இப்போது பாதிக்கப்பட்ட அப்பாவி போல நடிக்க முடியும்? இந்த தைரியம் – இல்லை வெறி கொண்ட திமிரின் அடிப்படை அவரது செயலை – இல்லை வன்மத்தை நடுநிலைமை என்ற பெயரில் நியாயப்படுத்தும் பதிவர்களிடம்தான் குடி கொண்டிருக்கிறது. இல்லை, அதற்கும் நர்சிம் வாங்கிக் கொடுத்த காஸ்ட்லியான பீரும், ஃபாரின் சரக்கும்தான் காரணமோ தெரியவில்லை. அ.மார்க்சின் சீடப்பிள்ளை கூட இதுவரை வாய் திறக்காததற்கு இந்த நன்றிக் கடன்தான் காரணமோ புரியவில்லை.
சீமாட்டி லீனா விவகாரத்தை நர்சிமின் கொடுரத்தோடு இணை வைத்து வினவு மீது சிலர் இப்போது வன்மம் தீர்க்க முனையலாம். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம். லீனா பிரச்சினையில் எங்களை ஆதரித்த பதிவர்கள் கூட இப்போது நர்சிமுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். லீனாவை ஆதரித்தவர்கள் இப்போது எங்களை ஆதரிக்கலாம். ஆனால் இந்த எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவம் எங்களுடையதல்ல என்பதை மட்டும் குறிப்பிடுகிறோம். லீனா புனைவு என்ற பெயரில் ஒடுக்கப்படும் மக்களை, அவர்களது விடுதலையை, இயக்கங்களை, தலைவர்களை காறி உமிழ்ந்திருந்தார். அது குறித்து வெளிப்படையான விமரிசனத்தை வினவிலும், நேரிலும், தெரிவித்தோம். புனைவு என்ற பெயரில் அழுகுணி ஆட்டம் ஆடவில்லை. நர்சிமின் முதுகிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு லீனா ஆதரவாளர்கள் வினவை முத்திரை குத்த முயன்றால் அதுவும் நல்லதுதான். ஏனெனில் லீனாவும், நர்சிமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வாசகர்கள் உணர இது ஒரு அரிய வாய்ப்பு.
தமிழ்மணத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கின்றோம். இதுநாள் வரை இப்படி ஒரு கோரிக்கை வைக்கும்படியான சூழ்நிலை வருமென்று நாங்களே எதிர்பார்த்ததில்லை. பதிவுலகில் வலது, இடது,முற்போக்கு, பிற்போக்கு என்று எல்லாமும் இடம் பெறுவதுதான் ஜனநாயகம். அதை நாங்கள் மதிக்கிறோம். அதனால்தான் எங்களைத் திட்டுவதையே அல்லது வினவை தடை செய்யவேண்டுமென்றும், கைது செய்ய வேண்டும் என்றும் கூப்பாடு போடும் ஜந்துக்களைக்கூட நாங்கள் தடை செய்யவேண்டுமென்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் நர்சிம் இழைத்திருப்பது கருத்து வேறுபாடு பற்றிய பிரச்சினை அல்ல. ஒரு அப்பட்டமான பாலியல் வன்முறை. அதற்கு அந்த எழுத்தே சான்று. இத்தகைய நபர்களை தமிழ்மணத்திலிருந்து அறிவிப்பு செய்து தூக்குவதே பெண் பதிவர்களுக்கு செய்யக்கூடிய உதவியாக, நம்பிக்கையாக, ஆதரவாக, நீதியாக இருக்கும். இதை மற்ற பதிவர்களும், வாசகர்களும் ஆதரிக்க வேண்டுமென்று கோருகிறோம்.
பெண் பதிவர்களில் சிலர் கூட நர்சிமை ஆதரிக்கும் அவலமான நிலையும் இருக்கிறது. சிலர் கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிக்கவும் கூடும். சிலர் யாரையும் விரோதித்துக் கொள்ளக்கூடாது என்று குழம்புகிறார்கள். சிலர் இந்த அநீதியை அப்பட்டமாக கண்டித்திருக்கிறார்கள். ஆனால் பெண்பதிவர்கள் அனைவரும் இந்த பிரச்சினையை ஒரு பரபரப்பான பதிவரசியல் பிரச்சினையாக பார்க்காமல் பொதுவெளியில் பெண் இயங்கும் போது ஆணாதிக்கம் போடும் தடைகள் என்பதை உணரவேண்டும். இல்லையேல் ஆயுசுக்கும் யாருக்கும் நோகாமல் மொக்கைகளையும், கும்மிகளையும் போட முடியும். காத்திரமான சமூக, அரசியல் பிரச்சினைகள் குறித்து வாயைத் திறக்க முடியாது. சந்தன முல்லை உறுதியாக இருக்கிறார். அந்த உறுதியை எங்களால் மட்டுமல்ல எல்லா பெண் பதிவர்களாலும், மற்ற பதிவர்கள், வாசகர்களாலும் பலப்படுத்த வேண்டும். இல்லையேல் முல்லை இல்லை. பெண் பதிவர்களின்றி பதிவுலகமும் இல்லை.
இனி பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு சில ஆலோசனைகள்:
1) ஏற்கனவே சொன்னது போல தமிழ்மணத்திற்கு மட்டுமல்ல தமிழிஷ் போன்ற திரட்டிகளிலிருந்து நர்சிம் மற்றும் ‘சாளரம்’ கார்க்கியை விலக்குவதை எல்லாரும் கோரலாம்.
2) இத்தகைய நபர்களை தனிமைப் படுத்தி ஒதுக்குவதன் மூலம்தான் அவர்களுக்குரிய பாடத்தை கற்பிக்க முடியும் என்பதால் சுரணையுள்ள ஒவ்வொரு பதிவரும் நர்சிமோடு நட்பிருந்தால் அதை முறித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கலாம்.
3) நர்சிமின் அலுவலத்தில் வேலை செய்யும் பெண்களிடம் இந்த ஆணாதிக்க வெறியரின் இழி செயலை நேரில் சென்று விளக்கலாம்.
4) நர்சிமின் வீட்டிற்கு சுரணையுள்ள பதிவர்கள் ஒன்று சேர்ந்து நீதி கேட்க போகலாம். அண்டை வீட்டாரிடம் இந்த செயலுக்கு நியாயம் கேட்கலாம்.
இதற்குள் நர்சிம் மன்னிப்பு கேட்டார் என்றால் என்ன செய்வது? பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகள் மன்னிப்பு கேட்டால் சட்டமும், நீதியும் கணக்கில் கொள்ளாது. நாமும் கொள்ள வேண்டியதில்லை. தனது இமேஜை தூக்கி நிறுத்த, தனது ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ள நர்சீம் இப்போதே இந்த முயற்சியைத் துவக்கி விட்டார்.
ஆனால் நடந்திருப்பது ஒரு பாலியல் வன்முறை. தேவை நமது தண்டனை. ஆதரவு தாருங்கள்! இந்தப் போராட்டத்திற்கு தோள் கொடுங்கள்!!
_______________________________________________
தொடர்புடைய பதிவுகள்
- பர்தாவின் ‘நற்குடியும்’, அய்யப்பனின் ஆணாதிக்கமும், பதிவுலகின் யோக்கியதையும்!!
- லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?
- பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!
- லீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni !!
- சுந்தரி அக்காவும், பதிவர்கள் அறியா கோவையும்!
- மொக்கைப் பதிவு உடல் நலத்திற்க்குக் கேடு !
- தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!
- பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!
- வினவு ஓராண்டு நிறைவு: கற்றவையும் கடமையும்!!
- வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !!
- வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!
- சமூகம் – பெண் – கட்டுரைகள்
இணைப்புகள்
சல்யூட்
What would be your reply if you conducted the good touch seminar????
ஒ இப்படியும் திசைதிருப்பலாமா!!
பல விகாரங்கள் இவ்வாறாக புரிகின்றன.
//வலையுலகில் ஒரு வன்புணர்ச்சி நடந்தேறியிருக்கிறது. சந்தனமுல்லை என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவரை பார்ப்பன சாதியைச் சேர்ந்த பதிவர் நர்சிம் தன் எழுத்துக்களால் (PDF) கொடூரமாக பாலியல் வன்முறை (RAPE) செய்திருக்கிறார்.//
முதல் பத்தியை தவிர்த்திருக்கலாம்
கார்க்கி இனி நீ “கார்க்” பால்தான், வொக்காளி ஒன்ன வெளுக்கிறதுக்கு இதான்டா வழி.. நர்சிம்’க்கு பொறுக்கி சொல்வதைவிடவேற ஏதாச்சம் சொல்லியிருக்கலாம்.. பார்ப்பன ஓநாய், ஒரு பெண்ணிடம் உன்ற மொள்ளமாரித்தனத்த காட்றியே நீயெல்லாம் #@@#$@!! வேணா உன் தாய் கொடுத்த பாலே வெளி’ல வர்ற அளவுக்கு வார்த்தைய சொல்ல வச்சிறாதே…. நல்ல இடுகை வினவு..
யார்ரா இந்த கார்க்கி பேர பார்த்தாலே காரி துப்புறமாதிரில்ல.. இவன் நார்றசிம்முக்கு எடுபுடியா இருக்கட்டும்..
பல விவரமும் தந்து இருக்கிறீர்கள். நன்றி.
மிகவும் கண்டிக்கத்தக்க செயல்
நர்சிம் என்ற நாதாறி செய்தது இந்த விசயத்தில் வினவின் கருத்தை ஆமோதிக்கிறேன்
பதிவுக்கு எனது அமோகமான வரவேற்பைப் பதிவு செய்கிறேன்.
//பெண் பதிவர்களில் சிலர் கூட நர்சிமை ஆதரிக்கும் அவலமான நிலையும் இருக்கிறது.//
இப்போது நடந்துள்ள விஷயத்தில் இதை எந்த விதத்திலும் நியாயப் படுத்த முடியாது.
//கோமாளியான குசும்பனே இதை செய்திருந்தால், // அண்ணே நான் எப்பவும் கோமாளியா இருந்துட்டு போறேன், நீங்க அரசனாகவே இருங்கள் பிரச்சினை இல்லை. என் நிலை என்ன? நான் என்ன பேசினேன் யாருக்கு எதிராக பேசினேன் எனக்கு தெரியும், உங்களை போல் எனக்கு பொதுவில் திட்ட வராது மற்றவர்களை:( இதுதான் என் கேரக்டர்.
குசும்பன்,
பொதுவெளியில் ஒரு குற்றம் நடந்திருக்கும் போது அதை நாம் பொதுவெளியில் தடுத்து நிறுத்தாமல் தனியறையில் செய்ய முடியுமா? இது கருத்து தெரிவிக்கும் பிரச்சினையல்ல. ஒரு அநீதியை தண்டிக்கிறோமா, இல்லை பொது வெளியில் மௌனமாக கடந்து போகிறோமா என்பதே கேள்வி.
இதை உங்கள் நண்பர் ருத்ரனிடம் கூறுங்கள் வினவு. பலசமயம் அவர் உங்கள் குழுப்பற்றி கூறுவதும் குசும்பன் கூறுவது போல தான்.
அதே சமயம் நரசிம் எழுதியதை எதிர்த்து முல்லை போலீசிடம் புகார் கூறினால் அதற்கு நான் ஆதரவளிக்கிறேன். எழுதப்பட்ட வார்த்தைகள் அப்படிப்பட்டது.
உங்களைப் போன்றவர்களால் “அனைத்தையும் அரசியல் ஆக்கு” அதுவும் “ஜாதி அரசியல் ஆக்கு” என்ற கொள்கையுடன் எழுதப்பட்ட இடுகையின் மூலம் பிரச்சனையை உங்களுக்கு சாதகமாக ஆக்கி கொள்ள முயற்சி செய்கிறீர்கள். மொக்கை பதிவர்கள் ஹிட் வாங்க செய்யும் உத்திகள் எவ்வளவோ மேலானது. அது என்ன இந்த பதிவில் சாரு நிவேதிதாவின் மனைவி ஜாதி, ஜ்யோவ்ராம் சுந்தரின் ஜாதி, பைத்தியக்காரனின் ஜாதி மட்டும் எழுதி இருக்கிறீர்கள். ஏன் லக்கிலுக், அதிஷாவை எல்லாம் சாருவின் தொண்டர்கள் என்ற வகையில் குறுக்கிவிட்டு இவர்களின் ஜாதி மட்டும் குறிப்பிடபடவேண்டும். சுந்தர் கூட தான் சாருவால் ஏற்றுகொள்ளபட்ட அவரது வாரிசு. ஆனால் அவரை குறித்து கூறும்போது ஜாதி ? நீங்கள் செய்வது பொறுக்கித்தனம்.
ஐயா மணிகண்டா .. பார்ப்பானின் குணம் தெரியாமல் பேசுகிறீரா இல்லை தெரிந்தே தெரியாதது போல் பேசுகிறீரா என்று எனக்கு தெரிய வில்லை . . இவர்கள் எல்லாம் சாகும் தருவாயிலும் ஜாதி பார்க்க கூடிய கொடுமைக்காரர்கள் …
மணிகண்டன்
“பூக்காரி” விஷத்தில் ” இவ வளப்பு என்ன, நம்ம வளப்பு என்ன என்று “என்று சாதி வெறியை கக்கியது நீங்கள் மென்மையாக கண்டிக்கும் பொறுக்கி நர்சிம். அந்த வளப்பு பெருமைதான் பார்ப்பனியத் திமிர். அதைச் சுட்டிக்காட்டியது மட்டுமல்ல அதற்கு தேவையான விவரங்களையும் கொடுத்துள்ளோம். ஆகவே நர்சிம் நல்லவர், வினவு பொறுக்கி என்று நீங்கள் கோபப் படலாம். உங்களைப் போன்ற ஒன்னுமே தெரியாத ‘அப்பாவிகளைப்’ பாரத்து எங்களுக்கு கோபமே வருவதில்லை என்ன செய்வது?
வினவு – உங்கள் இடுகையில் வந்து கண்டித்தால் தான் கண்டிப்பு என்று அவசியம் இல்லை. நான் நர்சிம்மை எவ்வித தடங்களும் இன்றி வன்மையாக தான் அந்த பதிவிற்கு கண்டிக்கிறேன். அதை முல்லையிடமும் தெரிவித்தேன். எனக்கு முல்லையுடன் விஜி பதிவில் நான் ஆரம்பித்த பின்னூட்ட கும்மி கூட காரணமாக இருக்குமோ என்ற வருத்தமும் உண்டு.
எனக்கு ஏன் உங்கள் மீது கோபம் வருகிறது என்றால் எனக்கு இந்த பதிவை எழுதியது பைத்தியக்காரன் என்று சந்தேகம். அப்படி இருக்கும் பொழுது அவர் அவருடைய ஜாதி மற்றும் அவருடைய நண்பரின் ஜாதியை பற்றி எழுதியது எல்லாம் மொள்ளமாரித்தனம். இந்த பதிவை அவர் எழுதவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா ?
மணிகண்டன்
இந்தப் பதிவு நர்சிம் என்ற பொறுக்கியைப் பற்றியது. ஊரே கண்டிக்கும் இடத்தில் நானெல்லாம் கண்டிக்கவேண்டியதில்லை என்பது உங்களது விருப்பம்.
அடுத்து பைத்தியக்காரன் பெயரை தேவையில்லாமல் இழுப்பதில் என்ன உள்நோக்கமோ தெரியவில்லை. ஒன்று தெரிகிறது மணி, நீங்கள் பைத்தியக்காரனின் பதிவுகளையோ, வினவின் பதிவுகளையோ தொடர்ந்து படித்ததில்லை என்று தெரிகிறது. படித்திருந்தால் இருவரின் எழுத்து நடையைப்பற்றியும் அதில் உள்ள வித்தியாசத்தைப் பற்றியும் தெரிந்திருக்கும். நீங்கள் வினவின் விமரிசனத்தை ஏற்கவில்லை என்றால் நேரடியாக தெரிவிக்கலாம். இப்படி சுற்றிவந்து தெவங்கி, தெவெங்கி ஓடி வரவேண்டியதில்லை.
உங்களுடைய விமர்சனத்தை ஏற்கவில்லை என்றால் நேராக கூறுவதில் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. எனக்கு எந்தவித முற்போக்கு இமேஜும் கிடையாது. உடைந்து போக. ஆனால் பைத்தியக்காரன் அழகான மொழியில் கிசு கிசு பாணியில் அருமையாக எழுதுவார். . இந்த பதிவில் தேவையான தகவலுக்கு இடையில் பல கிசு கிசு பாணி எழுத்துக்கள் இருந்ததால் சந்தேகப்பட்டேன். நரசிம் தந்தை பற்றியெல்லாம் தெரிந்திருக்க அவருக்கு வாய்ப்புக்கள் அதிகம். அவரை எனக்கு யாரென்றே தெரியாத போது எனக்கு என்ன உள்நோக்கம் இருக்கமுடியும்.? அதைத்தவிர வினவிற்கு கார்க்கி ராப் போன்றவர்கள் போட்ட சண்டையை எல்லாம் படித்து ஞாபகம் வைத்து இருப்பீர்களா என்ற சந்தேகமும் இருந்ததால். நீங்கள் தான் எழுதினீர்கள் என்று நேரடியாகவே கூறிவிட்டீர்கள். உங்களை நம்புகிறேன். மற்றபடி நீங்கள் கூறியது போல் எங்கு எனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்பது எனது தேர்வு தான். ஜ்யோவ்ராம் சுந்தரின் ஜாதி என்ன என்று எழுதியதில் எல்லாம் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை வினவு.
‘குட் டச் பேட் டச்’ கருத்தரங்கம் பல பதிவர்களின் கூட்டு முயற்சி. இடுகை எழுதியது மட்டுமே நான் செய்தது. (பதிவின் நோக்கத்தைச் சிறு தகவற்பிழைகள் திசை திருப்பிவிடக்கூடாது என்பதற்காகவே இதை இங்கே சொல்லக் கடமைப் படுகிறேன்.
மிகவும் வருத்தப்படவேண்டிய விஷ்யம்.
[…] This post was mentioned on Twitter by வினவு and Kishore, Gobi Chinnadurai. Gobi Chinnadurai said: RT @vinavu: பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்? https://www.vinavu.com/2010/05/31/narsim-mullai/ RT Pls. […]
பதிவின் சில இடங்களில் நான் வேறுபடுகிறேன். அது என்ன ஏது என்று சொல்ல விரும்பவில்லை. எனினும் பதிவின் அடிநாதமான அமிலத்தை பொழிந்த ஆணாதிக்க வெறியை கடுமையாக கண்டிக்கிறேன்…
/////பெண்பதிவர்கள் அனைவரும் இந்த பிரச்சினையை ஒரு பரபரப்பான பதிவரசியல் பிரச்சினையாக பார்க்காமல் பொதுவெளியில் பெண் இயங்கும் போது ஆணாதிக்கம் போடும் தடைகள் என்பதை உணரவேண்டும்-/////
100 சதம் உண்மை..!!!
குறைந்தபட்சம் வலைப்பதிவின் இடுகைகளில் கண்டனம் தெரிவிக்கவேண்டும். அது தான் நீங்கள் வலைப்பதிவை நடத்துவதன் உண்மையான அர்த்தம். இல்லையென்றால் அங்கே எக்காளமிடும் ஆணாதிக்க வெறியர்கள் இது அநீதியை, ஒரு வன்கொடுமை என்று உணர்ந்துகூட பார்க்கமாட்டார்கள்..தொடர்ந்தும் இது ஒரு பதிவுக்கான எதிர்வினை என்ற வகையிலேயே பூசி மெழுகிவிடுவார்கள்.
//எனினும் பதிவின் அடிநாதமான அமிலத்தை பொழிந்த ஆணாதிக்க வெறியோடு முழுதும் ஒத்துப்போகிறேன்…//
அர்த்தம் மாறுகிறது
சில விஷய்ங்கள் தேவையற்றதாய் எனக்குப் பட்டாலும், பதிவில் தெறிக்கும் அறச்சீற்றத்திற்கு என் வணக்கங்களும்., வாழ்த்துக்களும் வினவு நண்பர்களே! பொதுவெளியில் பெண்களை அவமதிப்பவர்களுக்கு, பாடம் கற்றுக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
அருமையான கட்டுரை. இவ்வளவெல்லாம் உள்ளரசிய்ல புரியவில்லை என்றாலுமே கூட நர்சிம்மின் அந்த ஒற்றை பதிவினாலேயே எரிச்சலாய் இருந்தேன். புரியாத பல விஷயங்களை புரிய வைத்ததற்கு நன்றி. உரக்க உங்கள் ஆதரவை பதிவு செய்ததற்கு பெண் பதிவர்கள் சார்பில் நன்றி.
மிகவும் வருத்தப்படவேண்டிய விஷ்யம்.
கட்டுரையோடு உடன்படுகின்றேன்.
நர்சிம்மின் followers லிஸ்டில் இருந்து வெளியேறி விட்டேன்.
வலையுலகில் ஒரு வன்புணர்ச்சி நடந்தேறியிருக்கிறது. சந்தனமுல்லை என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவரை பார்ப்பன சாதியைச் சேர்ந்த பதிவர் நர்சிம் தன் எழுத்துக்களால் (PDF) கொடூரமாக பாலியல் வன்முறை (RAPE) செய்திருக்கிறார்.///
முதலில் இந்த பத்தியை நீக்குங்கள்…!
ஒரு பெண் பதிவருக்கு ஆதரவாக இந்த பதிவா ? அல்லது முதல் பத்தியில்
இப்படி வாசகங்களை போட்டு மேலும் அசிங்க படுத்தவா?
பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் அந்தக் கொடுமைகளை பொது வெளியில் பேசமாட்டார்கள் என்பதுதான் அந்த கொடூரங்களைச் செய்யும் கயவர்களின் பலம். அதை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் தமிழ் அமுதன்?
காலையில் இருந்து சுற்றி சுற்றி வருகிறேன். என்ன நடக்கிறதென்று புரிந்துகொள்ள இயலவில்லை. இதை வாசித்ததும் விஷயம் தெரிந்துகொண்டேன்.
கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
நன்றி தோழர்..
கண்டிக்கத்தக்க செயல்
பதிவுலகை, வினவு கூர்ந்து கவனித்து வருவதற்கு பாராட்டுக்கள். பதிவுலகை விட்டு விலகிய பெண்கள் பட்டியல் இன்னும் நீளமானது. ஒரு சிறு திருத்தம் : நர்சிம் எனக்கு நேரடியாக மடலிட்டதில்லை. ஆனால், ஆரம்பத்தில் எனது தொலைபேசி எண்ணைக் என்னுடன் தொடர்பிலுள்ள பதிவர்களிடம் கேட்டு நச்சரித்துள்ளார். இல்லை என மறுத்துவிடுமாறு எனது நண்பர்களிடம் வலியுறுத்தியிருக்கிறேன்.
இப்புடி ஒரு பன்னாட இருக்குன்னா ஒதுங்கி போறதுதானங்க நல்லது. இல்லாட்டி மோதி மிதித்துவிடு பாப்பானு மோதீரணும். அத விட்டுப்போட்டு பாவம் அந்தம்முனிய பகடையாக்கி பின்னூட்டத்துல ஏங்க சீண்டினீங்க? இடுகைய தூக்கறதா? அப்புறம் எப்புடி கும்மறதுன்னு ஏங்க போட்டீங்க. இப்ப ரெண்டு பேரும் நல்ல புள்ளையா இடுகைய தூக்கிட்டீங்க. இங்க ஒரு ஜாதிக்கலவரமே உருவாகி, ஆம்பள பொம்பளன்னு தரம் பிரிச்சி அடிச்சிக்கிறாங்க. மத்தவங்கள உடுங்க. பப்புவோட சுட்டித்தனத்த பாராட்டின சஞ்சய், காமராஜ எல்லாம் அந்தாளு கேவலமா எழுதுனாரே. உங்களுக்காக பரிஞ்சு பேச இத்தன பேரு இருக்காங்க. அவங்களுக்காக நீங்க ஏதாவது சொன்னீங்களாங்க. அட ஒரு திமிர்ல நான் நக்கலடிச்சேன். அனியாயமா என் குழந்தையை பாராட்டின உங்களுக்கும் இதனால ஒரு அவமானம். மன்னிச்சிக்கிங்கன்னு. நல்லா இருக்குப்பா நியாயம்.
ஏதோ இரு தரப்பு அடித்துக்கொள்வது போல மனிதநேயம் பஞ்சாயத்து பேசும் மாய்க்கான் முதலில் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் இடுகையில் பதில் உள்ளது. நர்சிமை கிண்டல் செய்தது போறாது இன்னும் அதிகம் செய்திருக்க வேண்டுமென்பதுதான் வினவின் கருத்து. அந்த கிண்டலுக்கு உரிய அற்பத்தனங்கள் கொண்டவர்தான் நர்சிம் என்ற பொறுக்கி
வருத்தமே! இவ்வாறான தரம்தாழ்ந்த தனிமனித தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியதே. அவரின் பதிவை படிக்கும்போது இதன் பின்னணி முழுமையாக புரியவில்லை. ;((
வக்காளி உங்கள எல்லாம் சுடனுண்டா உங்க வீட்டு பொண்ணுங்கள இப்படித்தான் நீங்க பேசுவீங்களா? பொறம்போக்கு நாய்ங்களா. நீங்க எல்லாம் வாழவே தகுதி இல்லாதவனுங்கடா நர்சிம்,யுவகிருஷ்ணா,அதிஷா,கார்க்கி, அபி அப்பா, இன்னமுள்ள மொள்ளமாரி, முடிச்சவிக்கி பசங்க எல்லாரும் ஒழிஞ்சி போங்கடா. எங்க போனாங்க எதுக் கெடுத்தாலும் பார்ப் பார்ப்பனீயத்திற்கு எதிராக பேசுகிறோம் என கதிகிக்கிட்டு கடக்கும் வால்பையன், ராஜன் எல்லாம்.
//எங்க போனாங்க எதுக் கெடுத்தாலும் பார்ப் பார்ப்பனீயத்திற்கு எதிராக பேசுகிறோம் என கதிகிக்கிட்டு கடக்கும் வால்பையன், ராஜன் எல்லாம்.//
வந்துடோம் அய்யா! சனி ஞாயிறு லீவுக்கு கூட வீட்டு பக்கம் தலை வைக்க கூடாதய்யா!
அட நேர்மையற்றவானே இம்புட்டுத்தானா உன்னுடைய பதிலு இன்னேரம் இசுலாம் சம்பந்தமாக எதாவது ஒரு பதிவு எழுதியிருந்தால் என்ன வாங்கு வாங்குவ ஒ மூஞ்சியில துப்பானும் ஒ கடவுள் மூஞ்சியில துப்பானும் வீரம் பேசுவீயே இப்ப என்னமோ பம்முற
ஹைதர் அலி ஏன் வேறு பிரச்சினைகளுக்காக வால்பையன் மீது பாய்ந்து பிடுங்குகிறீர்கள். அவர் கீழே தனது கருத்தை, கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஒரு பொதுப் பிரச்சினைக்கு ஆதரவாகத்தனாஃ மற்றவர்களை திரட்ட வேண்டுமே ஒழிய வருபவர்களையும் இப்படி அவசர்ரப்பட்டு விரட்டுவது சரியல்ல.
நட்பு வேறு, கருத்து வேறுன்னு ஒரு தடவை சொல்லிட்டேன், நான் எங்க போனாலும் சண்டை கட்டிகிட்டே வர்றார்!.
ஒரு விசயத்தை முழுமையாக உள் வாங்கி கொண்டு, கருத்தை தெரிவித்தல் நலம், அதற்கான நேரம் தான் எடுத்து கொண்டது!
கேவலமான விடயங்கல் 🙁
முழுக்க முழுக்க உடன்பட்டு என் ஆதரவை தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால் மேலே மயில் என்பவர் எழுதிய நகைச்சுவை பதிவின் ஜிப் கொப்பை என்னான் என் கணிணியில் வாசிக்க முடியவில்லை. அந்த பதிவையும், பின்னூட்டத்தையும் இங்கே தர முடியுமா? அதை வாசிக்காமலும் நான் இந்த பதிவின் கருத்துக்களை ஆதரிக்கிறேன் என்றாலும், வாசித்து விட்டால் மிக தெளிவான நிலைப்பாடு எடுக்க உதவும். அதற்காக இந்த வேண்டுகோள். மிக்க நன்றி! (இந்த பிரச்சனை குறித்து விரிவாக இங்கேதான் முதலில் படிக்கிறேன்.)
Roza.. chk out … http://webcache.googleusercontent.com/search?q=cache:xgxxtXGVTGUJ:ojasviviji.blogspot.com/2010/05/blog-post_28.html+http://ojasviviji.blogspot.com/2010/05/blog-post_28.html&cd=2&hl=en&ct=clnk&client=firefox-a
இது வந்துட்டாங்கஆயா, நியாயம் பேச, புடவைய புடிச்சி இழுக்கறாங்கலாமே. இந்த நீலி கண்ணீரெல்லாம் இங்க வேணாம். ஒழுங்கு மரியாதையா இருந்துக்கோ.
நன்றியும் ஆதரவும்.
பொறுக்கியை அடி செருப்பால! தமிழ் மணம் வேண்டுகோளை கவனத்தில் எடுக்குமா?
இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதா பகிர்வுக்கு நன்றி வினவு, பெரும்பாலான பதிவர்கள் வெற்றுப் பரபரபுக்காரர்கள்தானே. but நீங்கள் சொல்லுற ஆள் கொஞ்ச நாள் தமிழ்மணத்தை விட்டு போறேன்னு இருந்தாரே ஏன் திரும்பி வந்தார்.
பதிவின் பல இடங்களில் நானும் முரண் படுகிறேன் உங்களுடன்.
இருந்தும் தனி மனிதர் குறித்த கேலி, கிண்டலா, பகடி, தனி மனித துதி பாடல் தவிர்க்க பட வேண்டும் பதிவுலகில், இல்லாவிடில் பதிவுலகமும் அடுத்த கட்டம் (பள்ளிக்கொடம், கல்ல்லோர்ரிகள் உள்ளே கொண்டு செல்ல படாது என்பதே என் எண்ணம்).
நான் இந்த நபர் இந்த ஜாதி என்று பார்க்க விரும்ப வில்லை.
காந்தி பிறந்த நாடு இது, நல்ல கண்ணுவும் செங்கோட்டையனும் ஒன்றாக வலம் வரும் காலம் இது.
எனவே மறப்போம் மன்னிப்போம், சக பதிவர்கள் எழுதும் நல்ல பதிவுகளை மட்டும் போற்றுவோம்.
தீய பதிவுகளுக்கு ( நான் நரசிம் , விஜி, சநதன் முல்லை மூன்று பேரது பதிவுகளையும் ) இவ்வளவு கொடிய தண்டனைகள் தர விரும்பும் நாம் நல்ல பதிவுகளுக்கு இந்த அளவு பாராட்டும், சன்மானமும் அளிக்கிறோமா.
இன்று தான் முழு விவரமும் தெரிந்தது. எனது கண்டனத்தை பதிகிறேன்
என்ன வினவு இன்னும் நிறைய பேரை கானுமே ::))
நர்சிம்முடன் ஏற்பட்ட மடல் உரையாடல். இந்த கேள்விகள் என் பதிவின் பின்னூட்டத்திலேயே உள்ளது. அவரது பதில் மட்டும் ஆச்சர்யம் தருவதாக இருப்பதால் இங்கே வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம்.
Hi Narsim
but நீங்கள் காயப்பட்டது ஏன் என்பதை சொன்னால் நான் எடுத்த நிலை சரியா தவறா என்ற புரிதலை எனக்கு நானே ஏற்படுத்திக்கொள்ள உதவும்.
நர்சிம்மிடம் சில கேள்விகள். இதனை அவருக்கு மடலாகவும் அனுப்ப விருப்பம். வெளிப்படையான பதில்களை எதிர்பார்க்கிறேன்.
1. குட் டச் பேட் டச் நிகழ்வை மருத்துவர்கள் ருத்ரன் ஷாலினி ஆகியவர்களை வைத்து அற்புதமாக ஆர்கனைஸ் செய்தீர்கள். அவ்வமயம் உங்களுக்கு தோளோடு தோள்கொடுத்த சகோதரி தீபாவுடன் அதன் பிறகான மோதல் ஏன், என்ன காரணம் ?
2. பதிவர் லதானந்த் பதிவில் மருத்துவர் ஷாலினியை பற்றிய பின்னூட்டம் இட்டது யார் ? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன ?
3. முல்லை – தீபா ஆகியவர்களுடன் அதன் பின்னர் என்னவிதமான மனத்தாங்கல் ஏற்பட்டது ?
4. விஜி பதிவில் வெளியான பகடி பதிவை எழுதியது யார் ? விஜியுடன் நீங்கள் தொலைபேசியில் பேசிய நிகழ்வு பற்றி சொல்லுங்கள். நீங்கள் அந்த பதிவை நீக்கும்படி விஜியிடம் கோரினீர்களா ?
5. குறிப்பிட்ட பதிவை எழுத உங்களை தூண்டிய very moment என்ன ? யார் உங்களுக்கு அப்படியா பதிவை பற்றியும் பின்னூட்டங்கள் பற்றியும் சொன்னது ? அதனால் அவர்கள் அடையும் ஆதாயம் என்ன ?
6. இது போன்ற பதிவுகள் சம்பந்தபட்ட பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று அறிந்திருக்கிறீர்களா ? கோபத்தில் நடந்துவிட்ட நிகழ்வு கொஞ்சம் ஓவர் ரியாக்ட் செய்யப்பட்டது என்று அறிந்திருக்கிறீர்களா ? அதனால் மனம் வருந்துகிறீர்களா ? அவர்களிடம் வரும் காலத்தில் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நெகிழ்வான மனநிலை உங்களுக்கு உள்ளதா ?
7. இது குறித்து அவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்தால் அதில் நீங்கள் குற்றவாளி என்று உணர்வீர்களா ? உங்கள் பதில் என்ன ? உங்களுக்கு உதவி செய்யும் நன்பர்கள் உண்மையில் அதனை செய்யவில்லை, மாறாக உங்களை தூண்டிவிடும் பணியை தான் செய்கிறார்கள் என்று உணர்கிறீர்களா ?
Monday, May 31, 2010
இதுவரை நான் சந்தனமுல்லையிடம் பேசியதோ, பார்த்ததோ,மடலோ கிடையாது. மற்ற கேள்விகள் அதிலேயே அடிபட்டுவிடுகிறது. யார் என்றே தெரியாத ஒருவர் ஏன் என்றே தெரியாமல் தாக்கியதால் வருத்தம் ஏற்பட்டது. புனைவுக்கு என்னங்க சட்டம்? அன்பிற்கு நன்றிஅன்புடன்நர்சிம்
செந்தழல் ரவி இந்தப்பிரச்சினைக்காக இதன் நியாயத்திற்காக பேசும் எல்லா பதிவர்களின் பதிவுகளிலும் ஆதரவை தெரிவிப்பதற்கு நன்றி.
நண்பர் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது. இவர்கள் எல்லோரு பதிவுலகத்தின் தாதாக்கள்.
வலை உலகத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதை விட மொத்தமாக இடுகையை நீக்கி விட்டு பார்த்துக்கொண்டுருக்கும் கார்ப்ரேட் சேவையை பார்க்கப் போகலாம்.
காப்பி அடிப்பதன் கலையை பல முறை பார்த்து ஆச்சரியம்பட்டவன்.
எழுதும் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லாதவன் வாழ்க்கை இப்படித் தான் ஐயோ என்று போகும்………………………..
ராயல் சல்யூட் வினவு.
பின்குறிப்பு / இதில் பல விசயங்கள் என்னாலும் உங்களைப் போலவே குறிப்பிட முடியும். ஆனால் நீங்கள் கொடுத்த கொடுப்பு போதுமானது.உங்கள் தலைப்பு என்பது அவனை சார்ந்தவர்களுக்கும்.
படித்தவன் சூதுவாது செய்தால் ஐயோ ஐயோ என்று போவான்,,,,,,,,,, போகனும்
ஆஹா ஒஹோ அருமை கலக்கல்
உங்களால மட்டும் தான் முடியும்
அர டிக்கெட்டு, மிக்க நன்றி.
மயில் என்பவரின் கிண்டல் எந்த வகையிலும் நாகரீக வரம்பை அத்துமீறியதாக சொல்லமுடியாது. நர்சிம்மின் பதிவு, அதை விட அதை பாராட்டுபவர்கள், சால்ஜாப்பு சொல்பவர்கள், கண்டிக்காமல் தடவி கொடுத்து அறிவுரை சொல்பவர்கள் (இதில் நான் மதித்த கவிஞர் ராஜசுந்தர்ராஜனும் அடக்கம்) ..எத்தனை அற்ப ஆணாதிக்க பிறவிகள்! எனக்கு ஏனோ திருநெல்வேலியில் புதிய தமிழகம் ஊர்வலத்தில் போலீஸ் தாக்குதலில் தலித் மக்கள் கொல்லப்பட்ட போது, மக்கள் பொதுப்புத்தியில் பேசிய வசனங்கள் ஞாபகம் வருகின்றன.
ரோசா வசந்த், நர்சிம் கூட இப்போது தனிமைப்படுத்தப்பட்டு விட்டார். ஆனால் நடுநிலை என்ற பெயரில் இவரது ஆதரவாளர்கள் போடும் நியாயவான் வேடம்தான் சகிக்க முடியவில்லை. புரிந்துணர்வுக்கு நன்றி
பதிவர்கள் ஒன்றும் தேவதூதர்களில்லை,
சாதரண மனிதர்கள் பெரும்பாலும் நடுதர வர்க மனிதர்கள் நடுதரவர்க கண்ணோட்டம் கொண்டவர்கள் தாம். டீவியில் செய்திகளை பார்த்தபடி நுண் அரசியலை புரிந்துக்கொள்ளாமல் தங்களின் பச்சோதாபத்தை பொழிந்து கருத்து கூறுமே அந்த நடுத்தர வர்க குடும்பம், அதன் பிரதிநிதிகள் தாம். நடுத்தர வர்க பிரதிநிதிகள் முற்போக்கு முகமூடி போட்டு அபத்தமாக பகுத்தறிவையும், சோஷலிசத்தை பேசும் சாதரணமானவர்கள் தான்.
பெரும்பாலானவர்கள் (நான் உள்பட) சுயமோகிகள், நாலு பேர் முன்னிலையில் என்ற கருத்துடன் பதிவிடுபவர்கள். முற்போக்குமில்லை பிற்போக்குமில்லை, யாராவது சொன்னதை சொல்லி பேரெடுப்பவர்கள் தாம். சமுதாய பிரச்சனைகள் கூட பின்னூட்டம் பெறுமா? ஹிட்கள் கிடைக்கும் என்றளவில் தான்?.
நான்கு ஹிட்களும் நாற்பது ஃபாலோயர்களும் வந்துவிட்டபின் இவர்கள் அனைவருமே மாறிவிடுகிறார்கள், மனதில் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் நினைவு, அவர் போலவே தன் வீட்டிலிருக்கும் அழுக்கு துணி முதல் அல்சேஷன் நாய் வரை எழுத முன் வந்துவிடுகிறார்க்ள். இவர்களில் உண்மையாகவே தன்னை பற்றி பகிர்ந்துகொள்பவர்கள் மிக குறைவானவர்க்ள் அவர்க்ளை விட்டுவிடுவோம்.
பதிவுலகில் ‘பிரபல’ என்பதே வேடிக்கையானது; அனைவரின் பதிவுக்கும் ‘நல்ல பதிவு’ ‘சூப்பர்’ போன்ற டெம்ப்ளேட்களை போட்டு, லின்கை கொடுத்து, அதிகமாக படிக்கப்படுபவர்களின் தளத்தில் பின்னூட்டமிட்டு, அவர்க்ளுக்கு வெத்தான எதிர்வினைகள் புரிந்து. அனைவரும் நன்றாக இருக்கு என்று சொல்லும் படத்தை நல்லாயில்லை என்று , மொக்கை படத்தை உலக படமாக்கி, ஷாக் வேவ் பிரபலமடையும் ‘சாருநிவேதா’தனத்தை மூலதனமாக கொண்டு.. போதும் இனி
நர்சிமின், சாதி தெரியாது, அவர் எங்கு வேலை பார்கிறார் என்று தெரியாது, அவர் தளத்தில் நான் மூன்று பதிவுகளை தவிர வேறு எதுவுமே படித்ததில்லை என்ற காரணத்தினால், பொதுவாக இல்லாமல், இந்த விடயத்தில் மாத்திரம் அவரின் செயலை முழுவதுமாக கண்டிக்கிறேன்.
பகடிகளை குசும்பன் என்றில்லை, லக்கிலுக் என்றிலை விஜி எழுதினாலும் அதை ஆதரிக்கிறேன். ஏன் நர்சிமே எழுதினாலும் கூட ஆதரிக்கிறேன்.
நர்சிம் புனைவு என்ற பெயரில் செய்தது ஒன்றும் புதியதல்ல, காலம்காலமாக பாரதி முதல் , சுந்தர ராமசாமி தொடர்ந்து சுஜாதா வரை இலக்கியம் என்ற பெயரில் பார்பனீயம் பரப்பப்பட்டதே அதன் நீட்சி..
அதே நேரம் இங்கு பதிவை ஆதரிப்பவர்க்ளும் நர்சிம்மையும், கார்கியையும் திட்ட போகிறர்வர்களில் சிலரையும் கவனியுங்கள், பின்னூட்ட ஹிட் ஃபாலோயர்கள் போட்டியில் வெட்டபட்ட போட்டியாளனின் நிலைகண்டு ஆனந்தமும், அந்த போட்டியாளன் மீதான பொறாமையும் தெரியும், அவர்களுக்கும் பின்னால் அகப்படும் போது இதே நிலைமை தான்..
இலக்கியம், புனைவு, பதிவர், பார்பனீயம் எந்த பெயரில் பெண்ணீயம் நசுக்கபடும்போது அதை எதிர்க்கும் உங்களுக்கு ஒரு சல்யூட்..
இப்படிக்கு,
தோழர் அக்னிபார்வை
நீங்கள் நர்சிமை ஆதரிக்கிறீர்களா இல்லை எதிர்க்கிறீர்களா ???? புனைவு
என்ற பெயரில் பெண்ணை அசிங்கப்படுத்துவது தவறு , நீங்கள் சொல்வது போல் சுஜாதாவின் நீட்சியாய் பார்த்தால் , இது நீர்துபோயவிடும் அப்பொழுது நரசிம் செய்தது தவறு தான் ஆனால் அந்த அளவு தவறு இல்லை என்கிறீர்களா அது பிரச்னையை நீர்த்து போக செய்யுமே அக்னிபார்வை ,ஒரு கேள்விக்கு இரண்டு விடை இருக்க முடியாது …..நீங்கள் சொல்வது போல் புனைவு ஒன்றும் புதிதல்ல அதே நேரம் ஆணாதிக்கம் கூடாது என்கிறீர்கள் …..இங்கு பிரச்சனை ஆணாதிக்கம் புனைவு அல்ல அக்னி உங்களுக்கு சொல்லத்தேவை அல்ல
எந்த வடிவத்திலும் ஆணதிக்கமோ, பார்பனீயமோ, முதலாளித்தவமோ வந்தாலும் எதிர்க்கிறேன். இந்த விடயத்தில் ஒரு சந்தெகமும் இல்லை தெளிவாக நர்சிம்மை எதிர்க்கிறேன்.
அழுத்தமாய் பதிவு செய்திருக்கும் வினவினோடு முழுக்க உடன்படுகிறேன்.
ஆதரவும், பாராட்டுக்களும்.
நன்றி அய்யனார், உங்களைப் போன்றவர்கள் இது குறித்து தனியா இடுகை எழுதி இந்த பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையாக இருக்கிறது என்ற கோரிக்கையுடன் மீண்டும் நன்றி
வணக்கம் வினவு கடந்த இரு நாள்களாக பல பதிவுகளை படிக்க வில்லை மற்றும் தோழர் மாதவராஜின் பதிவை படிக்க நேர்ந்தது அதில் அவர் கொடுத்த லிங்கில் நாய்சிம்-இன் பதிவு நீக்கப்பட்டு இருந்தது. இதனால் என்ன அவன்(ர்) எழுதினான் என்பதை உங்களின் “பூக்காரி“ (PDF) அனைத்தை படித்தே தெரிந்து கொண்டேன். மற்றும் அவர்களின் வன்பத்தின் வரலாறையும்தக்க சமயத்தில் இதில் இணைத்து எழுதியதால் என்னை போல் பலரும் முழு உண்மையை தெரிந்து முடிந்தது.
இதற்கு நன்றி தெரிவிப்பதை விட நமது அனைவரின் கடமையாகவே நினைக்கிறேன்.
உங்களுடன் இனைந்து எனது கண்டனத்தை நரசிம் & குழுக்களுக்கு பதிவு செய்கிறேன்.
புதவை சிவா உங்கள் பதிவிலும், உங்கள் நண்பர்கள் பதிவிலும் இந்தக் கருத்தை எழுதினால் இந்த போராட்டத்தை வலுவாக கொண்டு செல்ல முடியும். நன்றி
மவுனிகளா இருக்குறதும் கண்டனம் தெரிவிக்கிறதுக்கு சமானந்தான்!
சில பதிவர்களை குறிப்பிட்டு பாலியல் புகார் கூறி இருக்கிறீர்கள். ஆதாரம் இல்லாத செய்திதானே அது?
நிச்சயம் தண்டிக்கப் படவேண்டிய விஷயம்…. யார் என்ன சப்பைக் கட்டு கட்டினாலும் சரி
கமெண்ட்ஸ் மெயிலில் பெருவதுக்காக!
வினவுக்கு நன்றிகளும், பாராட்டுகளும்…
சென்ஷி நீங்களும் உங்கள் தளத்தில் இதை எழுதி வெளியிட்டால் போராட்டத்திற்கு வலு சேர்க்குமே? நன்றி
இவ்வளவு நடக்கிறதா பதிவுலகில்? இந்த இடுகையை படிக்கும் முன்னர்வரை இது குறித்து தெரியாமல், சூழ நடப்பதை தெரிந்து கொள்ள முனையாமல் இருப்பது கண்டு வெட்கமடைகிறேன். எனக்கு கிடைக்கும் குறைந்த நேரத்தில் இவ்வளவு விரிவாக கவனிக்க முடியுமா என்பதும் ஐயம் தான். மெய்யாகவே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பல பதிவர்களை படித்ததில்லை செவியுற்றதில்லை.
ஆனாலும் வக்கிரம் பிடித்த ஆணாதிக்க வெறியோடு பெண்பதிவர்களைக் குதறும் இதுபோன்ற பார்ப்பனீய மிருகங்களுக்கான எச்சரிக்கையாகவேனும் அவர்களைத் தண்டிக்கவேண்டும். பதிவுலகின் திரட்டிகளிலிருந்து தடை செய்யவேண்டும். இது குறித்த வினவின் கோரிக்கைகளை செங்கொடியாகிய நான் ஆதரிக்கிறேன்.
செங்கொடி
பின்குறிப்பு: பதிவர்களும் வாசகர்களும் வெறுமனே நிகழ்வின் மீதான விமர்சனமாக தங்கள் கருத்துகளை கூறிச்செல்லாமல் தங்கள் ஆதரவை வார்த்தைகளால் உறுதியாக தெரிவிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
பின்னூட்ட அறிதலுக்கு
முழுமையான விபரங்களை இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன். கண்டிக்கத்தக்க விடயம். வருந்துகிறேன்.
நர்சீமின் பதிவைப் படித்தேன்…. சமுக உணர்வோடு எழுதும் சந்தனமுல்லையை இபப்டி கீழ்த்தரமாக எழுதும் துணிச்சலை நர்ச்மீகுக்கு எது கொடுத்தது. பார்ப்பன திமிரும்….பணத்திமிரும்தானே? பின்னூட்டமிடுகிறவர்களின் மனோபாம் எழுதியவரின் பண்பை விட மோசமான இருக்கிறது. பல பேர் வேடிக்கை பார்க்க நடத்தப்படும் பாலியல் வன்முறை போல இருக்கிறது. இதில் நக்கலாய் பீன்னூட்டம் போடுகிறவர்கள். வேடிக்கை மனோபாவத்திலிருந்து இதை ரசிக்கிறார்கள்.சந்தனமுல்லையை நாம் முழுமையாக அதரிக்க வேண்டும். …. மொக்கையாய் எழுதுகிறவர்களுக்கு மத்தியில் உருப்படியாய எழுதுகிறவர்களை ஆதரிக்க வேண்டும்.
உண்மை அருள் எழிலன் , முல்லையை நாம் ஆதரிக்க வேண்டும் . இதில் தெரிவது பார்பனிய திமிரும் ஆணாதிக்கமும்
நானும் ஒரு பதிவர் தான். இந்த பதிவுலகத்துல இவ்வளவு விஷ(ய)ங்கள் இருப்பதை தெரிந்து கொள்ளாமலே இருந்து இருக்கேன்.
//பொறுக்கி நர்சிமை என்ன பண்ணலாம்?//
வினவு கும்பல்,பெரியதாடி,சின்னதாடி போன்ற ரெள்டி /பொறிக்கி பசங்களை என்ன செய்யலாமோ அதையே செய்யலாம்.
ஸ்ஸ்ஸ் பா… இன்னைக்கு ஒரே நாளில் எத்தனை இடுக்கை தான் படிக்கிறது !!! மிக பெரிய ஆராய்ச்சி செய்து எழுதியதை படிப்பதற்கே எனக்கு நாலு நாள் வேணும்.. ஒரு இடத்தின் புள்ளியில் இருந்து ஆரமித்தது இந்த தீ அடுத்து அடுத்து நகரங்களை போசிக்கி கொண்டே செல்கிறது. வெளியே வெயில் அதிகமா இருக்கு, இருந்தாலும் இங்கு குளிர் காய்ந்து கொண்டே தான் இருக்கு ஒரு கும்பல். தவறு யார் செய்தார்கள் என்பதை விட அந்த தவறை வைத்து கட்ட பஞ்சாயத்து செய்வது தான் அதிகமா இருக்கு. வினவு என்றாலே ஒரே ஏலவா போச்சுன்னு சொல்லவைகாதிங்க. பதிவில் சொல்லப்பட்டு இருக்கும் எல்லாவற்றையும் ஏற்றக முடியாது, தவிர்க்க வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளது.
பாவம் நரசிம் தனி ஆளா மாட்டிகினு முழிகுராறு. வினவு மாதிரி ஒரு groupa செயல்பட்டா அது கலவரம் மாதிரி .. லிஸ்ட்ல அது varaathu. ஆனா தனியா செய்ஞ்சா அது கொலை மாதிரி. நரசிம் தனியா இருக்காருன்னு நெனைக்குறேன். கொஞ்சம் அட்ஜச்டு பண்ணுப்பா வினவு க்ரூப்பு. ப்ளீஸ்.
உங்கள் வீட்டு பெண்களை பற்றி இப்படி மோசமாக விமர்சித்தாலும் இப்படித்தான் அனுசரித்து நடந்து கொள்வீர்களா mootoo. ( தவறாக நினைத்தால் மன்னிக்கவும்)
அய்யா வினவு குரூப் தமிழ்செல்வன் அவர்களே, நல்லா மடக்கி உங்க ட்ரேடு மார்க் பாணியில் கேள்வி கேட்டுள்ளீர்கள். மோசமாக நரசிம் மட்டும் தான் நடந்துகொல்லுற மாதிரியும். நீங்கள் என்னவோ புத்தர் காந்தி போல உத்தமர்கள் மாதிரியும் பேசுகின்றீர்கள்.
உங்கள் பார்வையில் நரசிம் ஒரு வலை பதிவின் வழியாக ஒரு பெண்ணை வந்புனராச்சி செய்யும் பொருக்கி என்று சொல்லுகின்றீர்கள் . என்னுடைய பார்வையில் நரசிம் உங்க குருப்பை விட எவ்வளவோ மேல். நீங்கள் போடும் எந்த ஒரு பதிவிலும் எப்படியாவது பார்பனர்களை கேவலமாக கீழ்தரமாக அசிங்கமாக திட்டுவது இல்லையா. என் அந்த டோண்டு ராகவனை எப்படியெல்லாம் குருப்பாக சேர்ந்துகொண்டு இழி மொழியில்
பேசியிருப்பீர்கள். பெண்ணை வன்புணர்ச்சி செய்வதை விட இது கொடுமையான ஆண்புணர்ச்சி செயும் கும்பல் தானே நீங்கள். அதுவும் குருப்பாக சேர்ந்து கொண்டு ஒரு தனி ஆளை தொடர்ந்து புணர்ச்சி செயுகின்றீர்களே
இதற்க்கு உங்களை பொருக்கி என்று ஒரு வார்த்தையில் சொல்லி திட்டினால் போதுமா?
ஜாதி ஜாதி என்று சொல்லி கொண்டு டோண்டு போன்றவர்கள் நீங்கள்
தனி மனித தாக்குதல்களை தொடர்ந்து செய்து ஆண்புணர்ச்சி சேயும் நீங்கள் செய்யும் செயல் நரசிம் செய்ததை விட குறைவல்ல. அவன் செய்தது பொறுக்கித்தனம் என்றால் நீங்கள் செய்வது கலவடை கழிசடை தனம். ஆகவே நீங்கள் என்னை கேள்வி கேட்பதற்கு எந்த ஒரு சிறு தகுதியும் இல்லாதவர்.
அப்படியா, உங்களை கேள்வி கேட்க நான் சிறு அது
தகுதியும் இல்லாதவனா, அப்படி என்றால் உங்களை
கேட்க யார்தான் தகுதியான ஆள் என்று சொல்லுங்கள்
பார்போம். ஒரு விஷயம் ஒரு பெண்ணை இழிவாக
சிதரிப்பவனை எதிர்க்க வேண்டியது அனைவருடைய
கடமை, அதை விட்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து
கொள்ளுங்கள் என்று நகைச்சுவையாக சொல்வது
எந்த வகையில் சரி அதையே உங்கள் குடும்ப பெண் என்று
வரும்போது மட்டும் இவ்வளவு கோபம் வருகிறதே.இதை
ஏன் சந்தன முல்லை இன் விசயத்தில் நீங்கள்
காட்டவில்லை சரி இப்போது முதலில் நரசிம் இன்
கதை பற்றி உங்கள் கருத்து என்ன.
உங்கள் கருது என்ன
தமிழ்செல்வா, பொருக்கிகளுக்குள் அட்ஜச்டு செய்ஞ்சி கொள்ளுங்கள் என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். அது புரியாமல் கேவலமாக ஒரு கேள்வி வேறு கேட்கின்றீர். கேள்வி கேட்டு திசை திருப்பும் கேவலமான பிழைப்பை முதலில் விடுங்கள். அடுத்தவன் வீட்டு பெண்களிடம் காட்டும் கரிசனத்தை முதலில் உங்கள் வீட்டில் அதுவும் காட்டுங்கள். ஏன் என்றால், உங்களுக்குள்ளே அந்த பொறுக்கித்தனம் இருப்பதை கொஞ்சம் யோசியுங்கள். அது உங்கள் வீடு ஆண்களையும் விட்டுவைக்காது என்பதையும் உணருங்கள்..
நீங்கள் இதுவரை நரசிம் இன் கதைக்கு ஒரு சிறு எதிர்ப்பை கூட
தெரிவிக்க வில்லை குறைந்த பட்சம் உங்கள் கருத்தை தெரிவிக்க
கூட மறுக்கும் நீங்கள் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள், உங்களை விட
நரசிம் எவ்வளவோ மேல் இதெல்லாம் நரசிம் யை ஆதரிப்பதாகவே தெரிகிறது . அப்படி என்றால் அதை வெளிப்படியாகவே செய்ய வேண்டியது தானே. மற்ற படி நீங்கள் சொல்லும் கருத்து கந்தசாமி காரணங்கள்
எல்லாம் வெறும் கண்துடைப்பு என்று இதை பார்த்து கொண்டிருக்கிரவர்களுக்கே தெரியும்.
///(PDF) கொடூரமாக பாலியல் வன்முறை (RAPE) செய்திருக்கிறார்.//// ரோம்ப அசிங்கமாக எழுதியிருக்கிறான் இவனை அனைவரும் செர்ந்து தனிமைப்படுத்த வேண்டும்
சென்னையில் நடந்த ‘குட் டச் பேட் டச்’ பற்றி இங்கே குறிப்பிட்டு இருப்பதால் அதில் ஒரு விதத்தில் நானும் தொடர்புடையவன் என்ற விதத்தில், இதை இங்கே கூற வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது.
பதிவர் தீபா அவர்களும் முன்னமே கூறியும் விட்டார்கள். நன்றி தீபா
1. குட் டச் பேட் டச் நிகழ்வின் ஆரம்ப புள்ளி தீபாவின் பதிவே.
2. அதை சென்னையில் நல்ல படியாக நடத்த ஏற்பாடுகள் அனைத்தும் செய்தது நர்சிம் / லக்கிலுக் /அதிஷா மற்றும் தோழர்கள். பல பதிவர்கள் இதற்கு பதிவிட்டு ஏற்பாடு செய்ய மேலும் தகவல் பரப்ப உதவினார்கள் என்பதும் உண்மை.
3. டாக்டர் ருத்ரன் அவர்கள் பெயர் பதிவில் வந்தது ஒரு தகவல் பிழை. அதை உணர்ந்ததும் பதிவு வந்த ஐந்து நிமிடத்திலேயே நான் அவருக்கு மன்னிப்பு கோரி மெயில் எழுதினேன். அதற்கு டாக்டர் அவர்களும் பதில் அளித்து இருந்தார்.
சென்னையில் இந்த நிகழ்ச்சி நடந்த போது அதை முன்னெடுத்து நடத்தியது நர்சிம், லக்கிலுக், அதிஷா மற்றும் தோழர்களே. மற்ற பதிவர்களும் இதற்கு உதவினார்கள். இப்பொழுது நடக்கின்ற நிகழ்வுகளுக்கும் இதையும் தொடர்பு படுத்துவது சரியா என்று எனக்கு தெரியவில்லை.
வருத்தத்துடன்
– எஸ். கே.
நண்பர் எஸ் கே ஜூனியர் விகடனில் நர்சிம் படம் பட்டும் ஹீரோ போல வந்த்தே, லக்கி, அதிஷா படம் ஏன் வரவில்லை? நீங்களே பலர் சேர்ந்து நடத்தியது என்கிறீர்கள், நர்சீம் இப்படியான சீப் மார்கெட்டிங்கில் விருப்பமுள்ளவர் என்பது இந்த இடுகைக்கு தேவைப்பட்டது, அதனால்…
முழுமையான விபரங்களை இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன். கண்டிக்கத்தக்க விடயம். வருந்துகிறேன்
நர்சிமின் பார்பனிய ஆணாதிக்க திமிரை மட்டுமல்லாமல், பிற கழிசடைகளின் கோர முகத்தையும், பதிவிலகின் திருட்டு தனங்களையும் அம்பலப்படுத்தியமைக்கு வினாவுக்கு பாராட்டுகள், நன்றிகள்!
இந்த பொறம்போக்கு தனங்கள் கண்டிக்கதக்கது அல்ல!
செருப்பால் அடித்து தண்டிக்கதக்கது!
எனது பதிவில் இந்த இடுகைக்கு முதன்மைத்தொடுப்புக் கொடுத்து தங்கள் கருத்தினையும் நிலைப்பாட்டினையும் ஆதரிக்கிறேன்.
இதில ஜாதிய எதுக்கு கொண்டு வற்றேள்னு பூணூல உருவிக்கிட்டு நோண்டு மாதிரி சில பேர் குதிக்கலாம். பார்ப்பணப் பெண்ணைப் பற்றி பார்ப்பனரல்லாத ஒருவர் ஜொள்ளு விட்டதற்கு இந்த கக்கூஸ் கம்பன் (நன்றி: மாதவராஜ்) குதித்ததைப் பார்க்கும் போது இது ஆணாதிக்க வெறியே அல்ல. அக்மார்க் பார்ப்பண வெறி கல்வெட்டிலேயே எழுதி வைக்கலாம்.
மார்க்சிய போதையில் அறிவரசியல் நடத்துவதாக சொல்லும் வினவே திட்டுவதற்கான உலகம்தான் உனக்கு இனி
//இத்தகைய நபர்களை தமிழ்மணத்திலிருந்து அறிவிப்பு செய்து தூக்குவதே பெண் பதிவர்களுக்கு செய்யக்கூடிய உதவியாக, நம்பிக்கையாக, ஆதரவாக, நீதியாக இருக்கும். இதை மற்ற பதிவர்களும், வாசகர்களும் ஆதரிக்க வேண்டுமென்று கோருகிறோம்.//
இதை நானும் வரவேற்கிறேன்.அதே போல் இந்த பார்ப்பனர்களின் ஆதிக்கம் வலையுலகிலும் அதிகமாக இருக்கிறது.அதனால் மற்றவர்களின் எழுத்துகள் நெறைய வாசிப்பாளர்களிடம் போய் சேர கடினமாக உள்ளது.இவர்களின் ஆ(ணா)திக்கத்தை ஒழிக்க வேண்டும்
நானும் படித்தேன் நர்சிமின் பதிவை, படித்தால் நா கூசும் வாத்தைகள். கண்டிப்பாக கண்டனத்துக்குரிய விஷயம்.
//
இதுல சாதி பிரச்சனை வேற இருக்கா.( தமிழகத்தில் சாதி நுழையாத இடமே கிடையாதா )
பின்னுட்டங்களை பெறுவதற்காக !
பின்னூட்டங்கள் அஞ்சலில் பெற்று படிப்பதோடு இங்கும் கருத்து தெரிவித்திருக்கலாமே டிபிசிடி
ப்சேக் நாத சைபாத்.தமிழ்மணம் வப்சே வன்யாயுத்.வினவு தி கரசோ ப்சேக் இய்ப்யோஷ்.ஸ்பசிபா.kadapparaikandhan@gmail.com
சரியான நேரத்தில் சரியான பதிவு. வாழ்த்துக்கள் தோழர். பல விவரங்களை விசாரித்து விரிவாக எழுதியிருப்பது பதிவுலகின் பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரையை காட்டுகிறது. தோழர் அசுரன் விட்டுச்சென்ற இந்த இடுகையுடன் வெற்றிடம் முழுமையாக நிற்ப்பப்ட்டுள்ளது. இதே போல புரட்சிகர அரசியலை முன்வைக்கும் தோழர்களும் பிற அரசியல் சமூக பதிவர்களும் பதிவுலகை விமரிசனம் செய்யத்துவங்கினால் விரைவில் நல்ல மாற்றத்தை காணலாம். புதிய எழுத்தாளர்கள் பழைய மொக்கை மொந்தையில் சிக்காமல் சிறப்பாக செயல்படுவர்.
பதிவர் சந்தனமுல்லையின் வாசகன் என்ற முறையில், அவர் பெரும்பான்மை ஆண் பதிவர்களை விட பன்மடங்கு திறமையும் ஆற்றலும், சமூக அக்கரையும் மிக்கவர் என்பதை இங்கே பதிவு செய்கிறேன். அவருக்கு வாழ்துக்களும் தோழமையும்.
இப் பதிவை படிக்கும் வாசகர்கள், பதிவர்கள் தாங்கள் தங்களுடைய வீட்டுப்ப்பெண்களை எப்படி நடத்துகிறோம் என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும் என்பது எனது கோரிக்கை
பதிவுலிகில் மட்டுமல்ல இந்த உலகிலிருந்தே ஆணாதிக்கத்தையும் பாரப்பனியத்தையும் ஒழிக்க அனைவரும் முற்போக்கு சக்திகளுடன் ஒன்றினைய வேண்டும்
தமிழ்மணம் போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட குழு, யாவரும் கேளிர் நர்சிமையும் , சாளரம் கார்க்கியையும், உடனடியாக நீக்கி பெண்பதிவர்களுக்கு விடப்பட்ட சவாலை தகர்த்தெரியுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை மற்ற பதிவர்களும் வலியுறுத்தி எழுதுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்
தோழமையுட்ன
நரசிம் எழுதியது கண்டிக்கத்தக்கது. மிக மிக அநாகரீகமானது. தண்டிக்கப்பட வேண்டியது. எந்த சந்தேகமுமில்லை. ஆனால் ஒரு சாதாரண பகடி பதிவுக்காக ஒரு மனிதன் இந்தளவு கேவலமாக நடந்து கொள்ள முடியுமா…? நர்சிமின் நூற்றுக்கணக்கான பதிவுகளில் அவர் இப்படிப் பட்ட ஒரு அசிங்ககமான மனநிலை உடையவர் என்பது எங்கும் வெளிப்பட்டதில்லை.. . . அவர் நல்லவரோ கெட்டவரோ… இந்த குறிப்பிட்ட விஷயத்தில் இந்த எல்லைக்கு செல்கிறார் என்றால் அதற்கு அந்த பகடி மட்டுமோ பொறாமை மட்டுமோ நிச்சயம் காரணமாக இருக்க முடியாது. ஏற்கனவே மனஸ்தாபம் உள்ள ஒரு நபரை குறி வைத்து ஏன் பகடி செய்ய வேண்டும்….. அதன் நோக்கம் வெறும் பகடி மட்டுமே என்றால்…..? நர்சிம் சொல்வதைப் பார்த்தால் பல விஷயங்களில் மோதல்கள் இருப்பது போல தெரிகிறதே…நர்சிம் கண்டிக்கப்பட வேண்டிய அதே சமயம் அதற்கு பின் புலத்திலிருக்கும் முல்லை மற்றும் பிறரது சீண்டல்கள் குறித்தும் கண்டனம் தெரிவித்தல் அவசியம் என்று நினைக்கிறேன். எழுத்து திறனிலும், கருத்து தெளிவிலும் நர்சிமை விட நான் உயர்வாக கருதும் முல்லை எதற்காக தொடர்ந்து அவரை பகடி செய்ய வேண்டும்…? வினவு சற்றே இரு பக்கமும் உள்ள தவறுகளை வெளிப்படுத்த வேண்டும்.
அய்யய்யோ. இப்படி நியாயமா கேக்கறீங்களே. நீங்களும் பார்ப்பனரா சார்?
நர்சிம் மீது செய்யப்பட்ட காமடியும் சீண்டலும் தகுதியானவைதான், அது ஏன் என்பதை கட்டுரையில் விலாவாரியாக சொன்ன பிறகும் மீண்டும் முதலிலிருந்தா?
வினவு விளக்குமா?
1. ஒரு குழுமத்தில் நர்சிம் இடுகை வருமுன்னரே இந்தப் பகடி வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டும் பிடிவாதமாக கும்மியவர்களுக்கு என்ன திமிர் என்பதைச் சொல்ல முடியுமா?
2. எங்களுக்கு அட்வைஸ் செய்ய நீங்கள் யார். எது வந்தாலும் சந்திப்போம் என்றவர்கள் என்ன நோக்கத்தில் இருந்தார்கள்.
3.இடுகை பகடியாக இருக்கலாம். விஜியின் இடுகையை தூக்க முடியாது என்று சந்தனமுல்லை சொல்லும் அதிகாரம் எப்படி? அப்படியானால் வேண்டுமென்றே நர்சிம்மை குறிவைத்துத்தான் செய்தார்களா?
4.இடுகையிட்டது விஜி. இடுகை போட்டது நர்சிம். சந்தனமுல்லையைத்தான் சொன்னார் என்று கோர்த்துவிட்டது யார்?
5.நர்சிம் இடுகை கேவலமான ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அப்படிப் பேசத்தள்ளப்பட்டவர் என்ற முறையில் அனுதாபம் இருந்தது. ஆனால் அந்த எழுத்தை மன்னிக்கவோ, தூண்டப்பட்டவர் என்பதால் தடவிக் கொடுக்கவோ மனமில்லை . நரகலை மிதித்த உணர்வில் கண்டிக்காமல் போனது தவறா?
6.விஜியின் இடுகையிலும், கும்மியிலும் பல பேரின் நல்லுணர்வுகளை புறக்கணித்த திமிரிலும் எது வந்தாலும் எதிர் கொள்ளத் தயார்த்தனம் தெரிந்ததால் அங்கும் பின்னூட்டமிடவில்லை என்றால் தவறா?
7.பெண் என்பதால் யாரை வேண்டுமானலும் சீண்டலாம் சீண்டப்பட்டவர் மரியாதையாக நடத்தவேண்டும் என்ற சட்டம் எங்கே ஐய்யா இருக்கிறது? ஏன் சீண்டவேண்டும் என வினவு சொல்லுமா?
8.ஆதி பீருக்கும் பிரியாணிக்கும் நர்சிம்மை பேட்டி எடுத்தார் என்றே வைத்துக் கொள்ளுங்கள். விஜி எதைக் குறி வைத்து இடுகையிட்டார் என்பதோடு, அதில் கும்மியடிக்கவும், கீழ்த்தரமாக சீண்டவும் அனுமதித்தார்?
இந்த கொழுப்பெடுத்த திமிரெடுத்த பதிவுக்கு ஆதரவு கொடுக்காதவர்கள் குற்றவாளியா வினவு? இது ஏதும் தெரியாதவர்கள் நீங்கள் என்னமோ எல்லாம் தெளிவு படுத்தியதாகப் போகிறார்கள். சந்தனமுல்லை எழுதிய இடுகை இது என்பதையோ, இது குறித்து ட்விட்டரில் வந்த லிங்கையோ, ஏன் விஜியை பகடைக்காய் ஆக்கினார் என்பதையோ விசாரித்து வெளியிடுமா?
ஊசி டப்பாசு நீங்கள் கருணாநிதி, ஜெயலலிதா, என்று எல்லோரையும் சீண்டுவீர்கள், விமரிசிப்பீர்கள், கோபப்படுவீர்கள். இதை போல பதிவுலகில் பிரபலங்களின் போலித்தனத்தை அப்படி சீண்டுவதில் என்ன தவறு? உண்மையில் மயில், முல்லையின் சீண்டல் போதாது என்பதே எங்கள் கருத்து. இதை கட்டுரையிலும் எழுதியிருக்கிறோம்.
வினவு தோழர்களுக்கு..
”பெண்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை” என்ற வகையில் மட்டுமே.. அந்த பெண்பதிவரின் அனுமதியோடு அப்பதிவு எழுதப்பட்டது. அதே சமயத்தில்.. எனக்கும் தம்பி சென்ஷிக்கும் சில விசயங்கள் தெரிந்திருந்தாலும்.. தனிப்பட்ட பெண்பதிவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் விசயங்களை பெயர்களோடு பொதுவில் எங்களால் வைக்க முடியவில்லை. அதனால்.. எங்களின் நிலை உணர்வீர்கள் என்றே நம்புகிறோம்.
பாதிக்கப்பட்ட பெண் தோழியின் அனுமதியின்றி என்னால் அந்த அயோக்கியனின் பெயரை வெளியிட முடியாது. அதே சமயம்.. அவரே வெளியிடுவார் என்று எதிர்பார்த்தேன்/பார்த்துக்கொண்டுமிருக்கிறேன்.
நன்றி
//வினவு தோழர்களுக்கு..
”பெண்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை” என்ற வகையில் மட்டுமே.. அந்த பெண்பதிவரின் அனுமதியோடு அப்பதிவு எழுதப்பட்டது. அதே சமயத்தில்.. எனக்கும் தம்பி சென்ஷிக்கும் சில விசயங்கள் தெரிந்திருந்தாலும்.. தனிப்பட்ட பெண்பதிவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் விசயங்களை பெயர்களோடு பொதுவில் எங்களால் வைக்க முடியவில்லை. அதனால்.. எங்களின் நிலை உணர்வீர்கள் என்றே நம்புகிறோம்.
பாதிக்கப்பட்ட பெண் தோழியின் அனுமதியின்றி என்னால் அந்த அயோக்கியனின் பெயரை வெளியிட முடியாது. அதே சமயம்.. அவரே வெளியிடுவார் என்று எதிர்பார்த்தேன்/பார்த்துக்கொண்டுமிருக்கிறேன்.
நன்றி//
பாலபாரதியை வழிமொழிகிறேன்…
அந்த பெண் பதிவர்களே வெளியிட முன்வர வேண்டும் ….
நர்சிம்மின் பதிவிற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதே வேளையில் வினவையும் எதிர்க்க வேண்டி இருக்கிறது
சந்தன முல்லை யை ஆதரிப்பதாக கூறி கொண்டு,இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொண்டு தங்கள் அரிப்பை தீர்த்து கொண்டு அவரையும் கொச்சை படுத்தி உள்ளனர்
நர்சிமிடம் பார்பனிய திமிர் தெரிகிறது , ஆணாதிக்கம் தெரிகிறது . கட்டாயம் தமிளிஷ் தமிழ்மணத்தில் ஒதுக்கி வைக்க வேண்டும் என்றே நினைக்கிறேன் .சந்தன முல்லை மக்களுக்கான படைப்புகளையே படைக்கிறார் . தனிமனித தாக்குதல் கண்டிக்கத்தக்கது , அதுவும் ஆணாதிக்க திமிருடன் , அதில் வரும் வார்த்தை பிரயோகம் கொடுமையாக இருந்தது , நரசிம் அதை தூக்கி விட்டார் இப்பொழுது தான் உங்கள் PDF படித்தேன், நரசிம் என்றால் நன்றாக எழுதுகிறாரே என்ற பிம்பம் எனக்குள் இருந்தது அதை கண்டு வருந்துகிறேன் . நான் அதை படிக்காததால் பதிவு போடவில்லை , கட்டாயம் நர்சிமை கடுமையாக தண்டிக்க வேண்டும் , ஆணாதிக்கம் ஜாதித்திமிர் என்ன சொல்வது ????
வாய்யா வெண்ணை இரவு. சாருக்கு அடியாள்னு பெருமையா இடுகை போட்ட வெண்ணை நீதானே? உன்னை நர்சிம் என்ணங்கள்ள குறிப்பிட்டார்னு சாமி வந்தவன் மாதிரி ஆடினவன் நீதானே. உன்ன என்னமோ சொல்லிட்டாங்கன்னு பதிவுலகை விட்டுப் போறேன்னு போய்ட்டு சீன் போட்ட நாட்டாம நீதானே. நீ உணர்ச்சி வசப்படுவ. அடிபட்டவன் கத்துனா சொம்பதூக்கிட்டு வந்துடுவியா?
நான் சாரு படித்தது உண்மை .அடியாள் என்று சொன்னது உண்மை . ஆனால் அதற்க்கப்புறம் அவரின் எழுத்து சமூக நோக்கத்தில் இல்லாமல் இருப்பதை இயல்பாய் புரிந்து கொண்டேன் …………………..நான் ஒன்றும் பெண்களை இழிவிபடுத்தி எழுதியதில்லை …………….??????உங்களை போல லிங்க் இல்லாமல் வர வில்லை லிங்குடன் தான் வந்துள்ளேன் ………………..ஆரம்பத்தில் நரசிம் அறிமுக படுத்திய பதிவில் நானும் ஒருவன் …………………..அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட வெறுப்பு எல்லாம் இல்லை …………..ஆனால் தவறு என்று வந்தபொழுது கண்டிக்கிறேன் ………………
ஏன் தவறு செய்தவன் செய்துகொண்டே தான் இருக்கனுமா ……………நான் சாருவின் அடியாள் என்று சொன்னேன் இப்பொழுது படிப்பதில்லை …………..பிறந்தவுடனே எவனும் தவறு செய்யாமல் எதையும் கற்றுக்கொள்ள முடியாது …………………..என்றே நினைக்கிறேன் ………உங்களை மறுபடியும் கெட்ட வார்த்தையால் திட்ட முடியும் வெண்ணை என்று ……………ஆனால் அதை செய்து ஏன் என் தரத்தை தாழ்த்தி கொண்டு
‘துன்பம் என்றும் ஆணுக்கல்ல, அது அன்றும் இன்றும் என்றும் பெண்களுக்கே’.
நல்ல பதிவு.
குழலி / Kuzhali said…ரவி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய பதிவு… கிண்டல்களை எதிர்கொள்ளும் முறை என்பது நிச்சயம் நர்சிம் எதிர்கொண்டது போல அல்ல… நர்சிம்மின் அந்த புனைவு மிக கோழைத்தனமானது,
அந்த பேட்டி கிண்டல் பதிவை பார்த்தேன் , இந்த கிண்டல்களையும் விட அதிகமாகவும் மூர்க்கமாகவும் இதற்க்கு முன் இணையத்தில் முகமூடி, (இணைய)குசும்பன் (இப்போது எழுதும் குசும்பன் அல்ல) எழுதுவார்கள், மற்றவர்கள் சிரித்தாலும் அதில் தொடர்புடையவர்கள் படிக்கும் போது ரத்தத்தை கொதிக்க வைக்கும், ஆனால் அப்போதும் கூட தொடர்புடையவர்கள் முகமூடியையும் இனைய குசும்பனையும் திரும்ப கிண்டலடித்துவிட்டோ அல்லது கண்டித்து கடுமையாக எழுதிவிட்டோ போவார்களே தவிர யாரும் நர்சிமை போல கேவலமாக நடந்து கொண்டதில்லை…
அந்த பேட்டியை கிண்டலடித்து எழுதியதில் அடிநாதமாக பிரியாணி வாங்கி கொடுத்து பேட்டி எடுக்க வைத்துள்ளார்கள் என்ற கிண்டலே… அய்யா நர்சிம் இதற்க்கே இப்படி கொத்தித்தெழுந்தால் நீங்கள் ஒரு இலட்ச ரூபாய் செலவு செய்து தண்ணி பார்ட்டி வைத்ததாலும் பலருக்கும் பணத்தை தண்ணீராக செலவு செய்வதாலுமே உங்களின் மொக்கையை கூட சூப்பர் என்று ஜால்ரா தட்டுகிறார்கள் என்று பலரும் பேசுகிறார்களே அதுவாவது தெரியுமா? இதை வெளியில் சொன்னதற்காக “பூக்காரன்” என்ற புனைவு வந்தாலும் கவலைப்படப்போவதில்லை.
எனக்கு இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது எந்த அளவு வக்கிரம் மனதில் இருந்தால் அது இப்படி வெளிப்படுமென்று. நல்லவனாக நடிப்பது என்பது நல்லவனாக இருப்பதை விட கடினமானது, ஏதேனும் ஒரு நொடியில் அது வெளியாகிவிடும்.
இந்த பிரபல பதிவர் என்பது எனக்கு செக்க காமெடியாக தோன்றுகின்றது, வலையுலகம் என்பது வெறும் 4000-5000 பேர் புழங்குகின்ற இடம், இதில் பிரபலம் என்பது மாலன் ஒரு முறை சொன்னது போல பனிப்பெய்து குடம் நிரம்பாது என்பதுவே அப்போது என்ன இப்படி சொல்கிறார் என வருத்தப்பட்டேன் ஆனால் நான் பிரபல பதிவர் பிரபல பதிவர் என்று சட்டையை கிழித்துகொள்ளும் அளவிற்க்கு முத்திப்போய் இருப்பதை பார்த்தால் தமிழ்நாடே எம் பின்னால என்கிற ரேஞ்ச் வசனங்கள் பேசும் சிம்பு, தனுஷ், பரத் போன்றவர்களே தேவலாம் போல…
ஈமெயில் ஃபாலோ அப்புக்காக
நிச்சயம் நர்சிம்மின் வார்த்தைப் பிரயோகங்கள் தண்டிக்கத் தக்கது. ஆனால்…கீழ்க்கண்டது கார்க்கியின் பதிவின் பின்னூட்டங்களில் செந்தழல் ரவிக்கு லக்கியின் கேள்வி:
//1) வெள்ளிக்கிழமை அன்று http://madhuranee.blogspot.com/ – என்று புதியதாக ஒரு வலைப்பதிவு தொடங்கப்பட்டு, முதலில் அந்தப்பேட்டி அதில் வெளிவருகிறது. வலைப்பூவின் பெயரைப் பார்க்கவும் 🙂
2) அதன் சுட்டி ட்விட்டரில் சந்தனமுல்லையால் பகிரப்படுகிறது.
3) அது காப்பி & பேஸ்ட் செய்யப்பட்டு மயில் விஜி பதிவிலேற்றப்பட்டு, தமிழ்மணத்தில் இணைக்கப்படுகிறது. மதுரநீ பதிவில் இருந்து பதிவு நீக்கப்படுகிறது.
4) மீண்டும் ட்விட்டரில் மயில் விஜய் வலைப்பூவில் இப்பதிவு இடப்பட்டிருப்பதின் விவரத்தை சந்தனமுல்லை பகிர்கிறார்.
5) மயில் விஜியின் பதிவில் பின்னூட்ட கும்மி. நர்சிம் டென்ஷன்.
6) கதிர் போன்றவர்கள் அந்த பதிவினை நீக்குமாறு விஜியை கேட்டுக் கொள்கிறார்கள். போட்டால் போட்டதுதான் நீக்க முடியாது என்று அடம் பிடிக்கிறார்.
7) மறுநாள் நர்சிம் பூக்காரி என்று பதிவிடுகிறார்.
நர்சிம்மின் பதிவில் இருக்கும் வார்த்தைகள் ஆட்சேபத்துக்குரியவையாக இருக்கலாம். அவரிடம் இப்படி ஏன் செய்தீர்கள் என்று கேட்டால், “உங்களை இப்படி செய்தால் சும்மா இருப்பீர்களா?” என்றுதான் திருப்பி கேட்பார்.
நர்சிம் எதிர்தரப்புக்கு போதிய அவகாசம் வழங்கினார் என்றே நான் கருதுகிறேன். உச்சக்கட்ட கோபத்தின் விளைவாக எழுதிய பதிவுக்கும் இப்போது அவரது வலைப்பூவில் விளக்கமளித்திருக்கிறார்.
நிற்க : சந்தனமுல்லைக்கும், எனக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் மோதலோ, விவாதமோ நடந்ததில்லை. எனவே அவருக்கு எதிராக நான் எந்த கருத்தையும் எந்த சந்தர்ப்பத்திலும் வைத்ததில்லை. உண்மையில் நர்சிம்மின் கதை அவரை சுட்டுவதாக கூட நான் அப்போது நினைக்கவில்லை. எனவே நான் சந்தனமுல்லைக்கு எதிரானவன் அல்ல. நர்சிம்மின் நண்பன் என்ற அடிப்படையில் என்னுடைய பின்னூட்டங்களை புரிந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்//
இந்தப் பின்னூட்டத்திற்கான பதிலை தோழியும், வினவு தோழர்களும் விளக்கலாமே?
//6) கதிர் போன்றவர்கள் அந்த பதிவினை நீக்குமாறு விஜியை கேட்டுக் கொள்கிறார்கள். போட்டால் போட்டதுதான் நீக்க முடியாது என்று அடம் பிடிக்கிறார்.//
வெள்ளிக்கிழமை அலைபேசியில் வாசித்ததால் எனக்கு பிரச்சனையின் முழு வடிவம் தெரியவில்லை. அதேசமயம் அந்த இடுகை தேவையில்லை என்று மட்டுமே கூறினேன்.
அந்த மின்மடல் குழுமத்திலிருந்த பல பதிவர்கள் அந்த இடுகை அல்லது சந்தன முல்லையின் பின்னூட்டத்தை நீக்கச் சொன்னார்கள். அது மிக மோசமாக நிராகரிக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டது… அதன் நீட்சிதான் அடுத்த வந்த பிரச்சனைகள்..
உச்ச பட்ச காமெடி என்னவென்றால்..
இப்போது மயில் விஜி பக்கத்தில் அந்த இடுகை நீக்கப்பட்டிருக்கிறது… அதற்கு முன்பே நர்சிம் இடுகையும் நீக்கப்பட்டிருக்கிறது.
//உச்சக்கட்ட கோபத்தின் விளைவாக எழுதிய பதிவுக்கும் இப்போது அவரது வலைப்பூவில் விளக்கமளித்திருக்கிறார்.//
காமராஜ் அவர்கள் ஒரு பதிவில் இட்ட பதில்”சமாதானம் சொல்ல முல்லை வீட்டுக்கு போன் பண்ணினேன் ‘முல்லையும் இல்லை மல்லிகையும் இல்லை வையி போன’ என்று யாரோசொன்ன பதில் வந்தது. அந்த வீடு எப்படிச்சிதறிப் போயிருக்கும்?.”
நாராச விளக்கத்தை அந்த குடும்பம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? ‘இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்’ என்று பதிவெழுதிய நாராசம், முல்லை விஷயத்தில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டிருக்ககூடும்’?
அதை புனைவாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று வாதிடும் நாராச நண்பர்களே, முல்லை வீட்டில் அதை புனைவாகப் பார்க்கவில்லையே! நண்பராய் இருப்பதைவிட மனிதராய் இருப்பது நன்று.
//1) வெள்ளிக்கிழமை அன்று http://madhuranee.blogspot.com/ – என்று புதியதாக ஒரு வலைப்பதிவு தொடங்கப்பட்டு, முதலில் அந்தப்பேட்டி அதில் வெளிவருகிறது//
நீங்கள் குறிப்பிடும் வலைப்பூ 2009 டிசம்பரில் தொடங்கப்பட்டதாகக் காட்டுகின்றதே!
//உச்சக்கட்ட கோபத்தின் விளைவாக எழுதிய பதிவுக்கும் இப்போது அவரது வலைப்பூவில் விளக்கமளித்திருக்கிறார்.//
காமராஜ் அவர்கள் ஒரு பதிவில் இட்ட பதில்”சமாதானம் சொல்ல முல்லை வீட்டுக்கு போன் பண்ணினேன் ‘முல்லையும் இல்லை மல்லிகையும் இல்லை வையி போன’ என்று யாரோசொன்ன பதில் வந்தது. அந்த வீடு எப்படிச்சிதறிப் போயிருக்கும்?.”
நாராச விளக்கத்தை அந்த குடும்பம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? ‘இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்’ என்று பதிவெழுதிய நாராசம், முல்லை விஷயத்தில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டிருக்ககூடும்’?
அதை புனைவாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று வாதிடும் நாராச நண்பர்களே, முல்லை வீட்டில் அதை புனைவாகப் பார்க்கவில்லையே! நண்பராய் இருப்பதைவிட மனிதராய் இருப்பது நன்று.
எத்தனை தடவை சொல்வது? நர்சிமை கிண்டல் செய்வதில் தப்பில்லை, மயில் அப்படி ஒன்றும் வரம்பை மீறி எதுவும் எழுதவில்லை, முல்லையும் வரம்பை மீறி பின்னூட்டமிடவில்லை. இதற்கு மேல் உள்ள உண்மை என்னவென்றால் பதிவுலகில் பெண்பதிவர்கள் கூரிய அரசியல் சமூக பிரச்சினைகளை எழுதுவதற்கே தயங்கும் சூழ்நிலையில் அவர்களைப் போய் ஏதோ பெரிதாக சீண்டினார்கள் என்று எழுதுவும், புரிந்து கொள்வதும் யதார்த்தமல்ல.
இந்தப் பின்னூட்டத்திற்கான பதிலை தோழியும், வினவு தோழர்களும் விளக்கலாமே?
//
வினவு???
அல்லது புனைவு???
சில விஷயங்கள் தேவையற்றதாக தெரிந்தாலும், சந்தனமுல்லைக்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த கதையை சாதாரணமாகவே படித்தாலே ‘பயங்கர’ ‘முற்போக்காக’ தெரிகிறது. அந்த கதைக்குள் இப்படி ஒரு விஷயம் இருப்பது தெரிந்தால், வெட்கித் தலை குனியத்தான் வேண்டியுள்ளது.
ஆனால், பலருடைய ஜாதி என்ன என்று என்னமாய் ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறீர்கள் 😉
//குறைந்தபட்சம் வலைப்பதிவின் இடுகைகளில் கண்டனம் தெரிவிக்கவேண்டும். அது தான் நீங்கள் வலைப்பதிவை நடத்துவதன் உண்மையான அர்த்தம்.//
இந்த பிரச்சியை பற்றின முழு விபரமும், என்னை போன்ற பார்ட் டைம் ப்ளாக்கர்களுக்கு தெரிவதில்லை. அதனால் இந்த தளத்திலேயே என் கருத்தை பதிவு செய்கிறேன். (சிலருடைய பேர்களை இப்பொழுது தான் கேள்வியே படுகிறேன்).
பதிவு மையமாக பல விஷயங்களைப் பேசுகின்றது. நர்சிம் எழுதிய அந்த பதிவு பச்சை ஆணாதிக்க வன்மம் மிகுந்த வெறும் காழ்ப்புணர்ச்சி கொண்ட, மிக மிக கேவலமான பதிவு என்பதில் சந்தேகம் தேவையில்லை. மிக நிச்சயமாய் இப்படிப்பட்ட ஒரு பதிவுக்காக அவரை கேள்வி கேட்க வேண்டியதாய் இருக்கிறது.
பதிவுகளில் உபயோகப்படுத்தபட்டிருக்கும் வார்த்தைப் பிரயோகங்களில் எனக்கு பலமான மாற்றுக் கருத்து உண்டு. சில சமயங்களில் உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் வார்த்தைகள் மிகவும் அதீதமாய் தெரிகின்றது.
பதிவு மிக முக்கியமாய் பேசியிருக்கும் இந்த செயலுக்கு காரணம் ஆணாதிக்கத் திமிர் வன்மம் என்பதில் எந்தளவுக்கு உடன்படுகின்றேனோ, அதே அளவுக்கு இதன் மற்றொரு காரணமான பார்ப்பனீயத் திமிர் என்பதில் வேறுபடுகின்றேன் என்பதை பதிவு செய்ய வேண்டியதாய் உள்ளது.
என்ன மயிறு காரணமாய் இருந்தாலும் அவ்வளவு கேவலமான ஒரு பதிவை அவர்கள் எழுதி இருக்கக் கூடாது என்கின்ற அதே வேளையில், சந்தன முல்லை குழுவினர் மீது வைக்கப்படும் தொடர் சீண்டல்கள், குறிப்பிட்ட நபர் மீதான தொடர் பகடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கோ அல்லது வினவுக்கோ உள்ளதாய் நினைக்கின்றேன். இல்லாவிடின் இது வெறுமனே ஒருபக்கத்தன்மையுடையதாய் போய் விடக் கூடும்.
மிக மிக கசப்பான அனுபவம்.
சீண்டல் குறித்து இடுகையிலும் மேலே உள்ள பல பின்னூட்டங்களிலும் சொல்லியாகி விட்டது. நம்ம வளர்ப்பு எப்புடி அவ வளப்பு எப்புடி என்று சாதித் திமிரை நர்சீம் தெளிவாக எழுதியும், அதற்கு ஆதாரமாக பல விவரங்களைச்சொல்லியும் நந்தா போன்ற ஒன்னுமே ‘தெரியாத’ அப்பாவிகளுக்கு விளங்கவில்லை என்றால் வினவு என்ன செய்ய முடியும்?
அது மட்டுமல்ல வினவு சக்கட பாக்கம் நம்ம போக முடியாது கரகாட்டகாரி அப்பட்டமாக ஜாதியை பற்றி பேசிய இடங்கள் பிறப்பால் ஒருவன் இழிந்தவன் என்கிற கருத்து அந்த பதிவில் பாமரனுக்கும் புரியும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது இந்த அறிவாளிகளுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமானதுதான்
என்னுடைய கண்டனங்களையும் இணைத்துக்கொள்கிறேன். மிகச்சரியாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள் பாலியல் வன்முறை என்று. பூக்காரி என்ற மோசமான எழுத்து வன்முறையை வாசித்தவுடன் என்னுள் எழுந்த எண்ணத்தை எனது வலைதளத்திலும் பதிவு செய்திருக்கிறேன். .
நீளும் குறிகள்
உள்ளுறைந்த ஆதிக்க நீட்சியின் தினவு
குறிகளினூடாய் அடக்கத் தேடியலைகிறது
ஒளிந்து கொண்டு
யாரையும் புணர்ந்து
உரையெழுத புனைவு ஆணுறைகள்
பங்கிட்டுச் சுவைத்த
குழந்தையின் குருதியோடு
எழுத்துக்காயம் ஆற மருந்திடுகிறது
மென்
நுண்
மெய்யுணர்ந்த
நட்பு
இன்னொரு முறையும்
புனைவுகளாய்
இக்குறிகள் கோபமடையக்கூடும்
அன்னைகளே பத்திரம்
உங்கள் யோனிகள்
பின்னூட்ட அறிதலுக்கு
வினவு,உங்க பல விஷயங்கள் தேவையற்றதாக ,ஒத்துக்கொள்ள முடியாமலிருந்தாலும் , பதிவர் சந்தனமுல்லைக்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.பெண் மீதான இந்த வன்முறை களையப்பட வேண்டும்,
தலைப்பு சூப்பர் & உண்மை!
நரசிம் மற்றும் அவரது அல்லக்கை கார்க்கிக்கு எனது காட்டுத்தனமான கண்டனங்கள். அவுசாரி, ஒக்காளி, தேவிடியா போன்ற வார்த்தைகள் அவரது சுயரூபத்தைக் காட்டுகிறது! பெண்கள் மேல் அவர் கொண்ட பாசத்தைக் காட்டுகிறது! குழந்தையை கொள்வேன் என்று மிரட்டிய கார்க்கி, தைரியம் இருந்ததால் இதையே ஒரு ஆணிடம் சொல்லி பார் அப்போ தெரியும் சேதி! இன்று ஒரு பெண் தன்னை பகடி செய்தார் என்பதற்காக கேவலமாக எழுதிய நரசிம்…நாளை தன்னைத் தொடரும் 500 + நபர்கள், தன்னை புகழவில்லை, பின்னூட்டம் இடவில்லை, ஓட்டுப்போடவில்லை என்பதற்காக இதே புனைவை தன்னை தொடர்பவர்களுக்கு சமர்ப்பிக்கலாம். சொல்ல முடியாது…அப்போதும் இந்த அல்லக்கைகள் ஜால்ரா போடுவார்களா? பார்ப்போம்!
உங்களுக்கெல்லாம் வேலையே இல்லையா..போங்கய்யா பொய் புள்ள குட்டிகள படிக்க வைங்க … கப்பிதனமா பேசிகிட்டு…
அவனவன் விளம்பரத்துக்கு பதிவுலகம் தான் கிடைத்ததா..ஒரு நல்ல விசயத்த பத்தி எவனும் எழுத மாட்டான்…அடுத்தவன் சண்டைன்னா ஆவலா கருத்து சொல்வானுங்க……இந்த பதிவுகளும் பதிவுலகமும் நாசமாய் போகட்டும்.( பி.எஸ்.வீரப்பா மாதிரி படிக்கவும். )
அந்த நர்சிம் நாயை முதலில் போலீஸில் பிடித்துக் கொடுங்கள், மற்றதைப் பின்னர் பேசலாம். தப்பு செய்தவனைப் பற்றி விவாதமென்ன வேண்டிக் கிடக்கிறது… தப்புக்கு அப்போதே தண்டனை தர வேண்டும்.
நாகரீக முன்னேற்றம் என்பது, தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இல்லை, தனி மனித ஒழுக்கத்தில் இருக்கிறது என்பதற்கு நரர்சிம் எழுத்தும் ஒரு சாட்சி.
(வினவு கட்டுரையிலும் தேவையற்ற சில வார்த்தைகள் இடம் பெற்றிருக்கின்றன. தவிர்க்கவும்.)
சாதி, மத ரீதியான பிளாக்குகள் வைத்திருப்பவர்களையும் பதிவுலகம் வெளியேற்ற வேண்டும்.
நர்சிமின் பார்ப்பன ஆணாதிக்க திமிரை கண்டிக்கிறேன்
You always Good
முதலில் இந்த விவகாரத்தை விளக்கமாக தந்த வினவிற்கு நன்றி.
நல்லாத்தானே போயிட்டுருந்தது என்றிருந்த பதிவுலகம் திடீரென இப்படி ஆகியிருப்பது வருந்ததக்கது.
இருவருக்கும் இடையில் உள்ள முழுப்பிரச்சினையும் தெரியாமல் நான் பேசக்கூடாது. ஆனால் நான் உன்னை கிள்ளினால் பதிலுக்கு கத்தியால் குத்துவேன் என்பது போல உள்ளது பதிவுகள்.
வக்கிரமான தாக்குதல்களும், அதற்கான ஆதரவுகளும் வருத்தமளிக்கிறது.
அதே நேரத்தில் வினவிற்கு,
பிரச்சினையை பற்றி மற்றும் பேசினால் நன்று. அதைவிட்டு சம்பந்தமில்லாதவர்களை இழுப்பது நோக்கத்தை திசைதிருப்பும். அவரவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் பதிவிடுவதுதான் இயல்பு. இவர் சொல்லவில்லையே என டிமாண்ட் செய்வது நல்லதல்ல.
//பிரச்சினையை பற்றி மற்றும் பேசினால் நன்று. அதைவிட்டு சம்பந்தமில்லாதவர்களை இழுப்பது நோக்கத்தை திசைதிருப்பும். அவரவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் பதிவிடுவதுதான் இயல்பு. இவர் சொல்லவில்லையே என டிமாண்ட் செய்வது நல்லதல்ல.//
அவ்வாறு கோருவது சரி என்றே கருதுகிறேன். எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பில்லாதவர் பிற்பாடு விளக்கம் கொடுத்தால் முடிந்தது பிரச்சினை. ஆனால் இவ்வாறு கோராமல் இருந்தால் அந்த மௌனமே அநீதிக்கான அங்கீகாரமாகிவிடும். எனவே, இங்கு மௌனம் உடைக்கப்பட வேண்டும் என்ற வினவின் அனுகுமுறை 1௦௦% சரியே
ச.ழு ஒரு பிற்படுட்தபட்ட பெண் என்பதை வைத்து பாப்பானை எதிர்த்து சீன் காட்டுகிறீர்கள். பண்ணிய முடிச்சவுக்கிதனம், மொள்ளமாறிதனம் எல்லாமே இந்த பெண்களிடமிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது. அதை கேள்வி கேட்க உங்களுக்கு திராணியில்லை. வந்துட்டானுங்க.. பெரிய புடுங்கிங்க..
//வலையுலகில் ஒரு வன்புணர்ச்சி நடந்தேறியிருக்கிறது. சந்தனமுல்லை என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவரை பார்ப்பன சாதியைச் சேர்ந்த பதிவர் நர்சிம் தன் எழுத்துக்களால் (PDF) கொடூரமாக பாலியல் வன்முறை (RAPE) செய்திருக்கிறார்//
இங்கே உபயோகிக்கப்பட்டுள்ள வர்த்தைப்பிரயோகங்கள் குறிப்பாக எழுத்து வன்புணர்ச்சி பாலியல் வன்முறை என்பது கற்பழிப்பு என்ற அநாகரீகமானதும் மூடத்தன வெளிப்பாட்டிற்கும் மாற்றான நாகரீகமான வர்த்தை என்பதை முதலில் சுட்டிக்காட்டுகின்றேன்.
பூக்காரி என்ற கதையில் முதல் பந்தியிலே சந்தனம் முல்லை தீபம் என்று நபர் இனம்காட்டப்படுகின்றார்
அடுத்து பஜாரி முண்டை ஒக்காலி விபச்சாரத் தொழில் தேவிடியா என்ற வர்ணனை
அவ பொறப்பு அப்பிடி, நம்ம வளர்ப்பு வேற என்று அப்பட்டமாக சாதித் தாழ்வு குறிப்பிடப்படுகின்றது
மேலும் கதையில் வறுமைப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து மிகமோசமான ஆதிக்க வெறியுடனான கீழ்த்தரமான வர்ணனை தாண்டவமாடுகின்றது.
வினவின் இந்த தலைப்பும் வலையுலகில் ஒரு வன்புணர்ச்சி என்பதும் மிகச்சரியானது. பிழைகள் திருத்தப்படவேண்டுமே தவிர நியாயப்படுத்தமுடியாது. அந்த வகையில் இந்தக் கதையில் சாதியம் ஆணாதிக்கம்மே வெளிப்படுகின்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்தச் சம்பவம் ஒரு நல்ல புரிதல். எவ்வளவுதான் படித்திருந்தாலும் பல்வேறு நாடுகளில் பல்வேறு கலாச்சார மக்களுடன் வாழ்ந்த போதிலும் இரத்தத்தில் கலந்த சாதியம் உறங்கிக் கொண்டே இருக்கின்றது சமயம் வரும்போது கதைகளாக பின்னூட்டங்களாக வெளியே வருகின்றது. தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை சுரண்டிப்பார்த்தமாதிரி சம்பவம் இது. சாதியம் அழிக்க முடியாத ஒரு மோசமான நிரந்தர வியாதி என்பதை நியாயப்படுத்தல் ஊடாக ஒவ்வொருவரும் தங்களை அறியாமலே பதிவுசெய்கின்றனர்.
நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே. வலையுலகம் பூக்காரி எழுத்தாளரையும் அதற்கு ஆதரவாளிகளையும் புறக்கணிப்பது மானுடநேயமாகும்.
பூக்காரி வலைப்பதிவு வரலாற்றில் சாதியச் சாக்கடையில் மதிக்கும் மிக அருவருப்பான பதிவு.
இந்த பதிவிற்கு வந்துள்ள ஜால்ராக்களை பார்க்கும் போது, ரொம்ப கவனமா எழுதணும் போல?
தனி மனித தாக்குதல் என்று அந்த பூக்காரி பதிவில் எனக்கு ஒன்றும்தென்படவில்லை. கெட்டவார்த்தைகள் தவிர்த்திருக்கலாம்!
சரி ஆபிஸ் நேரத்தில், வேலை செய்யாமல் – ப்ளாகில் உலவுபவர்களை பற்றி ஏதாவது எழுதியிருக்கிறீர்களா வினவு?
கெட்ட வார்த்தைகள் தனிமனித தாக்குதல் இல்லையா …….வக்கிரத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்
பலவற்றை இன்றுதான் வாசித்து அறிய முடிந்தது. என்ன எது எங்கே ஆரம்பிக்கப்பட்டு, வளர்ந்து தொடர்ந்தன என்பனவற்றிற்கு அப்பால் பொதுவெளியில் ஒரு பெண்ணை எதிர்ப்பதற்கு, அல்லது அழிப்பதற்கு அவளின் ஒழுக்கத்தை ஆயுதமாகக் கையிலெடுத்து அடித்தால் போதும் என்று புரிந்து வைத்திருக்கிற, கடைப்பிடிக்கிற ஒரு சமூகத்தின் ஆகக்கொடிய நோய்க்கூற்றைச் சுமந்திருக்கிற யாரும் பெரிதும் கண்டிக்கப்படவேண்டியவர்கள்.
நடந்த நிகழ்வில் சந்தனமுல்லைமீது வீசப்பட்ட கேவலமான ஆண்மொழிக்கு எனது கண்டங்கள்.
செல்வநாயகியின் கருத்தை முற்று முழுதாக ஆமோதிக்கின்றேன். .
//வலையுலகில் ஒரு வன்புணர்ச்சி நடந்தேறியிருக்கிறது. சந்தனமுல்லை என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவரை பார்ப்பன சாதியைச் சேர்ந்த பதிவர் நர்சிம் தன் எழுத்துக்களால் (PDF) கொடூரமாக பாலியல் வன்முறை (RAPE) செய்திருக்கிறார்.//
இந்த வார்த்தை ஏற்று கொள்ள முடியாதது!
நர்சிம்மை தண்டிக்க வேண்டும் என்பதற்காக சக தோழியை இப்படி கேவல படுத்தியிருக்க வேண்டாம்!
உங்களை நான் வழி மொழிகிறேன்
நானும் வழிமொழிகிறேன்
இதற்கான விளக்கத்தை மேலே சொல்லியிருக்கிறோம்.
நெத்தியடி..!
நேற்று மாலை தான் நீக்கப்பட்ட நர்சிமின் பதிவை கூகிள் கேச்சில் படிக்க முடிந்தது. இது குறித்து ஒரு பதிவு எழுத அமர்ந்த போது வினவு
இது பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்தால் – நீங்கள் மிகக் கச்சிதமாக சரியாக அந்தக் காவாளியை அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள்.
நான் எழுத உத்தேசித்திருந்த தகவல்களையும் தாண்டி மிக விரிவாகவும் சிறப்பாகவும் பல ஆதாரங்களை உள்ளடக்கியும் எழுதப் பட்டுள்ள இந்தப்
பதிவுக்கு எனது பாராட்டுக்கள். இந்த ஆனாலும் வேறு கோணத்தில் எனது பதிவை மாற்றம் செய்து வெளியிட முடியுமா என்று பார்க்கிறேன்.
கார்க்கி,
வினவின் இந்தப் பதிவை ஒட்டி கூட்டணி கட்டியுள்ள பழமைபேசி, உ.த., போன்றவர்களின் அவதூறுகளை மறுத்து, அதனூடாக அவர்களை அம்பலப்படுத்தி பதிவு எழுதினால் நன்றாக இருக்கும்.
இதை மறுமொழியாக வெளியிட வேண்டும் என்ற அவசியமில்லை, அனால் இதையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்………. சம்பவம் இததான். கடந்த சில மாதத்திற்கு முன்பு செந்தில்நாதன் என்கின்ற சிங்கபூர் பதிவர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், எல்லோரிடம் இருந்தும் பணம் சேகரிக்க பட்டது நினைவிருக்கும் என்று நினைகின்றேன். நடந்த கொடுமை என்ன வென்றால், பணம் முழுமையாக சிங்கபூர் வந்து சேரவில்லை எனபது தான். இதை வினவு கையில் எடுக்க வேண்டும் எனபது எமது தாழ்மையான கருத்து.
நர்சிம் மேல் நீங்கள் பரிந்துரைக்கும் நடவடிக்கைகளுக்கு எனது ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விவகாரத்தை துணிவுடன் எதிர்கொண்டுள்ள சந்தனமுல்லைக்கும் பார்ப்பனிய ஆணாதிக்க வக்கிரத்தின் முன் மண்டியிட்டுப் பணியாத அவரது
துணிவுக்கும் மற்றும் அவரை இந்த நேரத்தில் ஆதரித்து நிற்கும் மற்ற பெண் பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
நர்சிமின் பார்ப்பன ஆணாதிக்க திமிரை கண்டிக்கிறேன்
வருத்தமாக உள்ளது. ஒரு பெண்ணை இவ்வளவு கீழான மன நிலையில் எழுதும் நிலைக்கு சென்ற மனிதனை மனிதனாக ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. இத்தனை நாள் இவர்களது வேடம் வெளி உலகுக்கு தெரியாமல் இருந்தது. நீங்கள் இந்த பதிவே எழுதி இருக்க தேவை இல்லை. அந்த ” பூக்காரி” என்ற புனைவு என்று சொல்லி எழுதி சென்ற சாக்கடை வார்த்தைகள் போதும் அவனை அடையாளம் காண!
மனித நாகரிகம் சற்றும் இல்லாத ஒரு பிறவி!
பதிவுலகில் நிலவும் ஆணாதிக்கத்தின் முகத்திரையைக் கிழித்தெறியவும், பார்ப்பனீயத் திமிரை ஒடுக்கவுமான வினவின் முன்முயற்சியும், போராட்டமும் முன்மாதிரியாக விளங்குகிறது.
தங்கள் கருத்துக்களை வழிமொழிகிறேன் வினவு. தாங்கள் முன்வைத்துள்ள ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த விரும்புபவர்கள் செய்ய வேண்டிய குறிப்பான வழிமுறைகளை தெரிவிக்க வேண்டுகிறேன்.
சில ஆலோசனைகளையும் முன்வைக்க விரும்புகிறேன்.
1. “ஆணாதிக்கத் திமிர் பிடித்த நர்சிமை தமிழ்மணத்தை விட்டு நீக்குக!” என ஒரு பேட்ஜை தயாரித்து அளித்தீர்களானால், வினவு கருத்தை ஆதரிக்கும் அனைவரும் தத்தமது பதிவுத் தளங்களின் முகப்பில், அந்த பேட்ஜை வெளியிட்டு எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
2. இந்தப் பதிவையே ஒரு கடிதமாக்கியோ அல்லது முறையாக ஒரு கடிதம் தயாரித்தோ, அக்கடிதத்தின் உள்ளடக்கத்தினது சாராம்சத்தை ஆதரிக்கும் அனைவரும் தத்தமது மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து, தமிழ்மணம் நிர்வாகத்திற்கு அக்கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரலாம். அனுப்பும் பொழுது CC-ல், வினவு இக்கடிதத்திற்கென உருவாக்கும் ஒரு புது இமெயில் முகவரிக்கு ஒரு காப்பியும், பொறுக்கி நர்சிம்மின் இமெயில் முகவரிக்கு ஒரு காப்பியும் அனுப்பி வைக்கக் கோரலாம். இந்த நடைமுறையானது, எத்தனை பேர் வினவு கருத்தை செயல்பாட்டுரீதியாக ஆதரிக்கிறார்கள் என்பதன் துல்லியமான வெளிப்பாடாகவும், பதிவராகவுள்ள, பதிவராக இல்லாத நண்பர்களும் தமது எதிர்ப்பை தெரிவிப்பதற்கான குறிப்பான வழிமுறையாகவும், நர்சிம் தான் செய்த குற்றத்திற்கான எதிர்ப்பை முழுமையாக புரிந்து கொள்வதற்கான வழிமுறையாகவும் இருக்கும் எனக் கருதுகிறேன்.
தனித்தனியாகக் கடிதங்கள் எழுதுவது என்பதுகூட சிலரால் தள்ளிப்போடப்பட்டு நிறைவேற்றாமல் விடுபட்டும் போகலாம். புதியதாய் “தமிழ்மணத்திற்கு ஒரு கடிதமாக” இந்தச் செயலுக்காக பதிவர் நர்சிம்மை தமிழ்மணத்திலிருந்து நீக்கக்கோரி ஒரு இடுகையை வினவு எழுதினால் அதில் பின்னூட்டங்களாக மற்றவர்களும் ஆதரவைத் தெரிவித்து விடலாம். நானேவும் அப்படி ஒரு இடுகையை எழுத நினைத்தேன், குழந்தை தோள்மீது தூங்கிக்கொண்டிருக்கிறது, இயலவில்லை.
போராட்டத்தின் கருத்தை வழி மொழிகிறேன்.
ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்ற
பார்ப்பன பயங்கரவாதிகளை வெளியேற்றியதை போல
பொறுக்கி நாய் நர்சிம்மையும் தமிழ்மணத்திலிருந்து
வெளியேற்ற அனைவரும் ஒன்றினைந்து
போராட வேண்டும்.
இப்பிரச்சனையில் தமிழ்மணம் தனது கருத்து என்ன
என்பதை கால தாமதம் செய்யாமல் உடன் தெரிவிக்க வேண்டும்.
//1. “ஆணாதிக்கத் திமிர் பிடித்த நர்சிமை தமிழ்மணத்தை விட்டு நீக்குக!” என ஒரு பேட்ஜை தயாரித்து அளித்தீர்களானால், வினவு கருத்தை ஆதரிக்கும் அனைவரும் தத்தமது பதிவுத் தளங்களின் முகப்பில், அந்த பேட்ஜை வெளியிட்டு எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
2. இந்தப் பதிவையே ஒரு கடிதமாக்கியோ அல்லது முறையாக ஒரு கடிதம் தயாரித்தோ, அக்கடிதத்தின் உள்ளடக்கத்தினது சாராம்சத்தை ஆதரிக்கும் அனைவரும் தத்தமது மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து, தமிழ்மணம் நிர்வாகத்திற்கு அக்கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரலாம். அனுப்பும் பொழுது CC-ல், வினவு இக்கடிதத்திற்கென உருவாக்கும் ஒரு புது இமெயில் முகவரிக்கு ஒரு காப்பியும், பொறுக்கி நர்சிம்மின் இமெயில் முகவரிக்கு ஒரு காப்பியும் அனுப்பி வைக்கக் கோரலாம். இந்த நடைமுறையானது, எத்தனை பேர் வினவு கருத்தை செயல்பாட்டுரீதியாக ஆதரிக்கிறார்கள் என்பதன் துல்லியமான வெளிப்பாடாகவும், பதிவராகவுள்ள, பதிவராக இல்லாத நண்பர்களும் தமது எதிர்ப்பை தெரிவிப்பதற்கான குறிப்பான வழிமுறையாகவும், நர்சிம் தான் செய்த குற்றத்திற்கான எதிர்ப்பை முழுமையாக புரிந்து கொள்வதற்கான வழிமுறையாகவும் இருக்கும் எனக் கருதுகிறேன்.//
இதை நானும் ஆதரிக்கிறேன். யாராவது பேட்ஜ் தயாரித்துக் கொடுக்கலாம். தோழர் கலகம் இதற்கு உதவலாம்.
தோழர் கலகம் பொருத்தமான தோழர்.
தோழர் உடனடியாக இதை செய்து அனைத்து
தோழர்களுக்கும் அனுப்ப வேண்டும்.
இதை மட்டும் என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்களது எழுத்துக்கள் திரட்டிகளில் இருந்தால்தான் பலரும் படித்து இவர்களை இனம் காண முடியும்.
மதிப்பிற்குரிய டாக்டர் அவர்களுக்கு
எதிர்ப்பு என்பது கண்டனத்தோடு முடிந்து விட்டால், நர்சிம் போன்ற எந்தக் கூச்சமுமற்று குற்றம் புரியும் பொறுக்கிகளுக்கு உறைப்பதில்லை. மேலும், இது தமிழ்மணத்திற்கான கோரிக்கை மட்டுமே. இவ்வாறு கோரிக்கை வைப்பது எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு போராட்ட வடிவம்தான். இறுதி முடிவு, தமிழ்மணம் நிர்வாகத்தின் கையில்தான் இருக்கிறது. ஒரு வேளை, நர்சிம் வெளியேற்றப்பட்டாலும், திரட்டிகளிலிருந்து அவரது கருத்துக்களை நாம் படிக்க இயலா விட்டாலும், அது விஜய பாரதம் எல்லாக் கடைகளிலும் கிடைக்காமல் போவதற்கு இணையானதுதான். அவசியமான சமயங்களில் நர்சிம்-மின் ‘விஜயபாரதக் குமுதத்தை’ தேடிப் படிக்க முடியாத அளவிற்கு அவரது தளத்தையே இயங்க விடாமல் செய்வதென வினவோ, பிற தோழர்களோ கருதவில்லை. எனவே, தங்கள் கருத்தை பரிசீலிக்க வேண்டுகிறேன்.
வினவு விடுத்த வேண்டுகோளை நாம் ஆதாரிக்கின்றோம்.
சமூகத்தில் பெண்ணை ஆண் என்ற ஆணாதிக்க வடிவத்தில் எப்படி பெண்ணை அனுகி ஒடுக்கின்றனரோ, அதையே இவர்கள் எழுத்து உலகில் எந்த கூச்சமும் இன்றி தீமிருடன் செய்கின்றனர்.
ஆணாதிக்க பாலியல் மூலம் ஒடுக்குவது, தான், இந்த ஆணாதிக்க அமைப்பின் “ஆண்மை” சார்ந்த உச்ச வக்கிரமுமாகும். இதை பார்ப்பானிய சாதிய திமரும் சேரும் போது, ஆளும் வர்க்க கொழுப்பும் சேர்ந்து பெண்ணை இழிவுபடுத்தி புணர்ந்து அதை ரசிக்கிறது. இது தான் இன்று நிலவும், இந்து ஆதிக்க பார்பானிய பண்பாடும் கூட.
பூக்காரி பதிவை இப்போது தான் பார்த்தேன், அதில் இருக்கும் அய்யனாரின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்!
பதிவுலகம் பற்றி மிக்க பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தேன் . இப்படி ஒரு வஞ்சம் தீர்ப்பதையே தொழிலாய் செய்துக்கொண்டிருப்பதை நினைத்தால் மாதவராஜ் அவர்கள் சொன்னதுப்போல் த..தூ என்று துப்ப தான் தோன்றுகிறது .
I Salute Achi akka `s Confidence
போங்கடா தெரு நாய்களா
//அதுவும் எழுத்தால் ஒரு பெண்பதிவர் வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஒரு நாய்க்கும் சுரணை வரவேயில்லையே?//
woof woof bow wow bow wooof wooof afr arf woof woof woof vau vau waouh; ouah; vaf vaf; wouf; wouaf-waf wuff, wuff; wau, wau hav, hav; woof woof bho, bho voff, voff guau-guau; gua,gua or jau, jau gâu gâu; ẳng ẳng loll loll loll woof woof bow wow bow wooof wooof
பாலோ அப்
நல்லவர்களின் புனிதக் கூட்டணி மீண்டும் கூடியுள்ளது. நர்சிம்மை சும்மா மென்மையாகத் தட்டியுள்ள உ.த. அண்ணாச்சிதான் வினவை வெளியேற்றுவோம் இயக்கத்துக்கு மீண்டும் தலைவராக முன்னிலை வகிக்கிறார். இந்தப் பிரச்சினைக்கு இவர்களின் தீர்வு, ரேப் செஞ்சிட்டு 2000 ரூவா அபராதம் கட்டிட்டு போயிடு என்ற மைனர் குஞ்சு தீர்ப்புதான். அட்வான்ஸ் புக்கிங்கில் இனிமேல் ரேப் செய்யும் வசதி வரவுள்ளதாக பட்சி சொன்னது.
அட்வான்ஸ் புக்கிங் விவரத்தை வினவை புறக்கணிக்கும் இயக்கத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு உ.த. அண்ணாச்சி அறிவிப்பார்(பிறகு தனது பெயரையும் அதற்குப் பொருத்தமாக மாற்றிக் கொள்வாரா’மாம்(ஸ்)’).
இதனிடையே சிலரது வரலாற்றை மீண்டும் ஒரு முறை கிழித்து பார்ப்போம்.
STD1:
குசும்பன் நெம்ப நல்லவனைப் போல தனது பதிவில் இன்று எழுதுயிள்ளார்.
//இதுவரை பதிவுலகில் நடந்து வந்த பிரச்சினைகளின் பொழுது எல்லாம் அந்த அந்த சமயத்தில் பிரச்சினனகளள பற்றி பதிவு போட்டே வந்திருக்கிறேன், எவ்வித உள்நோக்கமும் இன்றி, இப்பொழுதும் அதன் படியே செய்திருக்கிறேன்.//
இது குசும்பு எழுதியுள்ளது. குசும்பு ஏற்கனவே இது போல பெண்களுக்கெதிரான வன்முறைகளை குசும்பாக எழுதியுள்ளார் என்பதற்கு உதாரணம் தமிழச்சி விவகாரம். அவரை இங்கு சொல்லிக் காட்டியவுடன் அவருக்கு கோபம் வருகிறது, ஆனால் அவரோ இஸ்டம் போல பாதிக்கப்பட்டவர்களையே கிண்டல் நையாண்டி செய்து எழுதுவார், யாருக்கும் கோபம் வரக்கூடாது. இதுதான் ‘குசு’ம்பனுடைய ஆட்ட விதி. இனி தமிழச்சி விவகாரத்தில் ‘குசு’ம்பனுடைய ஆட்டம் எப்படிப்பட்டது என்பது குறித்து அசுரன் பதிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது:
http://poar-parai.blogspot.com/2008/02/blog-post_26.html
//குசும்பன் பதிவில் உண்மையில் குசும்புதான் செய்துள்ளார். அவற்றில் எனக்கு ஒப்புதல் இல்லை. உண்மையில் அக்கறையெனில் தமிழச்சியை நேரடியாக சரியான தர்க்க முறையில் விமர்சித்திருக்க வேண்டும். அதைவிடுத்து குசும்பன் எழுதியது ஒரு கீழ்த்தரமான விளம்பர யுக்தியே. ஏனெனில் இதற்க்கு முன்பு தமிழச்சி எழுதியதை சாக்கிட்டு தமிழ்மண பதிவர்கள் சிலர் அதே போன்ற பாணியில் கிண்டல் நடையில் பல பதிவுகள் எழுத கடைசியில் பாதிக்கப்பட்டது தமிழச்சியே. சில்லுண்டி வேலை செய்த பதிவர்கள் பாதுகாப்பாக ஒதுங்கி கொள்ள பாதிக்கப்பட்டவருக்கே தண்டனை கொடுக்கப்பட்டது.
விசயம் அப்படியிருக்க அதே உத்தியை மீண்டும் குசும்பன் செய்வார் எனில் தமிழச்சி பார்த்து கொண்டு சும்மாயிருப்பார் என்று எனக்கு தெரியவில்லை. குசும்பன் தமிழச்சியை கிண்டல் செய்யலாம் எனில் Provided அந்த சூழல் தமிழச்சியை கிறுக்கச்சியாக்கும் எனில் தமிழச்சிக்கும் ‘யாருடா டேய்’ என்று கேட்க்க அதே சுதந்திர உரிமையுள்ளது என்றே கருதுகிறேன்.//
இப்படி குசும்பனை குறித்து எழுதியவுடன் குசும்பன் அன்றைக்கும் வந்து இதே போல வசனம் பேசித் திரிந்தார்.
இதுல இன்னொரு முக்கிய புரளி என்னவென்றால் நர்சிம் மன்னிப்பு கேட்டு விட்டாராம். இப்படி அவரது கொ.ப.செக்கள் புரளி கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் (அதில் உ.த.வும் உண்டு).
யாரிடம் கேட்டார் என்பது தெரியாது. அவரது பதிவில் அப்படி எதுவும் இல்லை.
இவர்களின் இன்னொரு நியாயம், அதான் ரேப் செஞ்சவனும், பாதிக்கப்பட்டவனும் சகஜமா போயிட்டானுங்கள்ள என்ற வாதம். இது அப்படியே சாதிக் கொடுமை நடந்த இடங்களில் வன்கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஆதரவாக பேசுபவர்களை எதிர்த்து ஆதிக்க சாதி அடிவருடிகள் வைக்கும் வாதத்தின் இன்னொரு பிரதியே ஆகும்.
நடந்துள்ள அநீதி இரு சாரரும் அமைதியாக போனவுடன் ஆறிப் போகின்ற ஒன்று அல்ல. பதிவுலகில் தொடரும் ஆணாதிக்க வக்கிரத்தின் ஒரு வெளிப்பாடுதான் நர்சிம். எனவே இதை தனியொரு சம்பவமாக திரிக்கும் உ.த. போன்றவர்களின் நோக்கம் மிக கேவலமானது மட்டுமல்ல, அது மிகவும் சுயநலமான ஆணாதிக்க தன்மை கொண்டது.
இந்தப் பிரச்சினையில் சாதி எங்கே வந்தது என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது. பொதுவாக சாதிய ஒடுக்குமுறை நிகழும் விதம் எப்படிப்பட்டது என்பதை இங்கு பொருத்திப் பார்த்தால் புரியும்.
ஒரு கவுண்ட சாதி பன்னியும் இன்னொரு கவுண்ட சாதி பன்னியும் சண்டையிட்டுக் கொண்டால் அவர்கள் கொலை செய்து கொள்வார்கள். அடித்துக் கொள்வார்கள். ஆனால் இதுவே ஒரு தரப்பு தாழ்த்தப்பட்ட சாதி எனில் வாயில் பீ திணிப்பது, அம்மாவையும் – பையனையும் வன்புணர வைத்து கொடுமைப்படுத்துவது போன்ற மனு தர்ம தண்டனைகளை கையிலெடுப்பார்கள்.
இதுதான் நர்சிம்மின் எதிர் பதிவிலும் நிகழ்ந்துள்ளது. ‘அவளோட பிறப்பு அப்படிப்பட்டது’ என்றும் ‘ என்னோட வளர்ப்பு அப்படிப்பட்டது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளவை, அதுவும் தாம்புராஸ் என்ற பார்ப்பன சாதி வெறி சங்கத்தில் உயர் பொறுப்பில் இருப்பவரின் பிள்ளையிடம் இந்த கருத்து வருகிறது எனில் அது அப்பாவித்தமான ஒன்றாக கருத இயலாது.
சாதி குறித்து வினவுதான் பேசுகிறது என்று கதறும் ஜாக்கி சேகர், உ.த. போன்ற நல்லவர்கள் நடைமுறையில் இது போல சாதி சங்கங்களுடன் ஒட்டி உறவாடி, சாதியத்தை நடைமுறையில் கொள்ளும் நபர்களுடன் விமர்சனமின்றி பழகி வருகிறவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அங்கு விமர்சனமின்றி சாதியத்தை ஆதரிக்கும்(மௌனமாக இருப்பதன் மூலம்) ஆதரிக்கும் இவர்கள். இங்கு சாதியை வினவுதான் கிளப்புகிறது என்று சீன் போடுகிறார்கள்.
அப்புறம் மாதவராஜ் குறித்து சொல்ல வேண்டும்,
அவரும் கூட நர்சிம் பிரச்சினையை தனிப்பட்ட ஒன்றாக பார்க்கிறாரே ஒழிய, ஆணாதிக்க வக்கிரத்தின் ஒரு வெளிப்பாடு இது என்ற பொது அம்சத்தை அவர் விமர்சனம் செய்யவே இல்லை. இது குறித்து அவர்தான் கருத்து சொல்ல வேண்டும். அவரிடம் இந்த அடிப்படையிலான ஒரு கண்டனக் கருத்து பகிர்வை எதிர்ப்பார்ப்பதில் தப்பில்லை என்று கருதுகிறேன்.
தோழர் அசுரன் மாதவராஜின் முதல் இடுகை இது. http://mathavaraj.blogspot.com/2010/05/blog-post_30.html சரியாகத்தான் எழுதியிருக்கிறார்
முதல் இடுக்கையிலும் கூட அவர் நர்சிம்மின் ஆணாதிக்கத்தைத்தான் சுட்டியுள்ளார். இது நர்சிம்மால் முன்னிறுத்தப்படும் பதிவுலக ஆணாதிக்கம் என்பதால்தான் அவ்ருக்கு பின்னே ஒரு கதமபக் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த விமர்சனம் அவரிடம் மிஸ்ஸிங்
நீங்கள் சொல்வது சரிதான் தோழர் அசுரன்.
தோழர் அசுரன்!
நிச்சயமாய் இதனை தனிப்பட்ட பிரச்சினையாக இதனைப் பார்க்கவில்லை. ஆணாதிக்கச் சிந்தனையின் அருவருப்பான வெளிப்பாடாகவே பார்க்கிறேன். பதிவில் அதனை இன்னும் அழுத்தமாக விமர்சனம் செய்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
//தோழர் அசுரன்!
நிச்சயமாய் இதனை தனிப்பட்ட பிரச்சினையாக இதனைப் பார்க்கவில்லை. ஆணாதிக்கச் சிந்தனையின் அருவருப்பான வெளிப்பாடாகவே பார்க்கிறேன். பதிவில் அதனை இன்னும் அழுத்தமாக விமர்சனம் செய்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.//
உங்களுடைய இந்தக் கருத்துக்கள் பதிவு செய்யப் பட வேண்டும் என்று விரும்பியே நான் அந்தப் பின்னூட்டமிட்டேன். ஏனேனில், இந்தப் பிரச்சினையை தனிப்பட்ட நர்சிம் பிரச்சினையாக சுருக்கப் பார்க்கிறார்கள்.
follow up
இதில் தேவையில்லாமல் பிற பதிவர்களை இழுத்துள்ளதாகக் குறைப்பட்டுள்ள நல்லவர் அன் கோவினர் அந்த இத்யாதி பதிவர்களின் ஆணாதிக்க வக்கிர ஆதரவுதான் இங்கு கேள்விக் குட்ப்படுத்தப்பட்டுள்ளது என்கிற விசயத்தையோ அல்லது அவ்வாறான ஆணாதிக்க வக்கிரம் தொடர்ந்து இங்கு நிகழ்கிறது என்கிற உண்மையையோ அல்லது அவ்வாறு தொடரும் ஆணாதிக்க வக்கிரத்துக்கு ஆழ்ந்த மௌனத்தையும், அதனை எதிர்க்கும் நடவடிக்கைகளுக்கு அழுத்தமான கண்டனத்தையுமே அவர்கள் பதிந்துள்ளார்கள் என்கிற உண்மையையோ திட்டமிட்டே மறைத்து வருகிறார்கள்.
பழமைபேசி என்கிற சாதிக்கு புனுகு பூசும் நல்லவருக்கு யாராவது சாதியை தட்டிக் கேட்டு எழுதிவிட்டால் பொங்கிவிடும். சாதி என்பது சாதி எதிர்ப்பாளர்களிடம் மட்டுமே நிலவும் ஒரு கற்பனை பொருள் என்பதாகத்தான் அவரது எழுத்தை படித்தால் புரிந்து கொள்ள முடியும். அவரது கருத்தில் வாயில் பீ தினிக்கும் கவுண்டனும், அதை ‘மகிழ்ச்சியுடன்’ சுவைக்கும் தாழ்த்தப்பட்ட சாதிக்காரனும் ஒன்றுதான். அதாவது அவர்கள் இருவரும் ச்ண்டை போட்டுக் கொள்கிறார்களாம். இரண்டு பேரும் நிறுத்துங்கடா என்று போலீஸ்க்காரன் குரலில் சொல்வதுடன் தன்னை வரம்பிட்டுக் கொள்கிறார் இந்த புனுகு வியாபாரி. அதே நடைமுறையைத்தான் நர்சின் விவகாரத்திலும் கை கொள்கிறார்.
பஸ்ல டிக்கெட் கொடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மட்டுமே பொங்கு ஜாக்கி சேகர் என்ற நல்லவர் பொதுவாக மக்கள் கொத்து கொத்தாக செத்தொழிவது குறித்தெல்லாம் கருத்து சொல்வதில்லை(ஈழப் பிரச்சினை ஒரு எக்ஸெப்சன்). ஆனால் அது போன்ற மக்கள் பிரச்சினைகளை பேசுபவர்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நல்லவன் வேசம் கட்டி திட்டுவதற்கு அணி சேர்வார். அவருக்கு ஏற்ற ஆட்களின் சேர்மானம் அவருக்கு தேவைப்படுகிறது அல்லவா?
ஜாக்கி சேகர்: இவரும் சாதியை ‘எதிர்க்கும்’ ஒரு நல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது, அதாவது சாதி வெறியுடன் நடக்கும் தாக்குதல்கள் குறித்தது எல்லா காலங்களிலும் வாய் திறாவதிருந்து விட்டு அவ்வாறான சாதி வெறியை நுட்பமான வேறொரு தளத்தில் அம்பலப்படுத்தும் போது ‘மட்டும்’ அம்பலப்படுத்துபவரையே சாதி வெறியர் என்று அவதூறு செய்து எதிர்க்கும் டிகால்டி சாதி ‘எதிர்ப்பாளர்கள்’ இவர்கள்.
சுருக்கமா சொன்னாக்க, “ஏம்பா நாங்க அமைதியா வாழ்க்கையை ரசிக்க வந்திருக்கோம் இங்கயும் வந்து பொதுப் பிரச்சினையை பேசி எங்க அமைதியை ஏம்பா கெடுக்குற” என்ற ரகம் இவர்கள்.
//சுருக்கமா சொன்னாக்க, “ஏம்பா நாங்க அமைதியா வாழ்க்கையை ரசிக்க வந்திருக்கோம் இங்கயும் வந்து பொதுப் பிரச்சினையை பேசி எங்க அமைதியை ஏம்பா கெடுக்குற” என்ற ரகம் இவர்கள்.//
:)))))))))))))))))))))))))))
well said
ஒருவேளை ஆணாதிக்க வக்கிரமும் ஒரு கருத்து சுதந்திரம்தான் என்ற அதி உன்னத கருத்து சுதந்திர காவாளிகளா உ.த. அன் கோவினர் இருக்கலாம். ஆனால் வினவுக்கு மட்டும் கருத்து சுதந்திரத்தை இவர்கள் புறக்கணிக்கும் மர்மம் என்ன? லீனா விவகாரத்திலும் சரி, நர்சிம் விவகாரத்திலும் சரி பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் பார்ப்பனிய நரித்தனமே இவர்களின் அளவு கோலாக இருக்கும் மர்மம் என்ன? நாட்டாமைகளின் தவறுகளுக்கு ஒரு மன்னிபே போதும் என்று இவர்கள் தடவிக் கொடுக்கும் மர்மம் என்ன?
//லீனா விவகாரத்திலும் சரி, நர்சிம் விவகாரத்திலும் சரி பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் பார்ப்பனிய நரித்தனமே இவர்களின் அளவு கோலாக இருக்கும் மர்மம் என்ன?//
அதாவது நாட்டாமை நம் வாயில் பீ திணிக்கலாம் அல்லது ஆண்குறியை திணிக்கலாம். ஆனால் நீ அதனை எதிர்க்கும் பொழுது சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு, அவாளின் நாகரிக வரம்புகளுக்கு உட்பட்டே எதிர்க்க வேண்டும் என்பதே இவர்கள் சொல்ல வரும் தீர்ப்பு.
பதிவுலக மனுதர்ம வாதிகள்… அவர் நல்லவர், வல்லவர்,கண்ணியமானவர் ஆகையால் மன்னித்து விட்டுவிடலாம் என்று சப்பைகட்டு கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
சாதிக்கொழுப்பும், ஆணாதிக்க வன்மமும் நிறைந்த வக்கிரத்தை கண்டிக்க மறந்தவர்கள். மனிதர்களா!?
சீண்டல்கள், உரசல்கள், எதிர் பதிவுகள் வந்தாலென்ன… ஒரு குழந்தையை கொலை செய்வேன் என்று எழுதுகிறவன் மனிதனா?
நர்சிம் பொறுக்கியின் பதிவை ஆயிரமாயிரமாய் அச்சடித்து, அவனோடு தொடர்புடைய தாய் முதல் சகோதரி உட்பட, உடன் பணியாற்றும் பெண் ஊழியர்களிடமும் கொடுக்க வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் பெண்கள் மீதான சாதி,பாலியல் வன்ம தாக்குதலை தொடுக்க அஞ்சுவார்கள்
பதிவுலக சர்வாதிகாரம் என்று வினவு குறித்து பேசும் உ.த. ஜாக்கி சேகர் போன்ற ஜனநாயகவாதிகள் (அல்லது ஆணாதிக்கவாதிகள்) பதிவுலகில் நிகழும் பெண்களுக்கு எதிரான சர்வாதிகாரம் குறித்து வினவு எழுப்பிய கேள்விக்கு ஏன் மௌனம் சாதிக்கிறார்கள். இது தொடர்பில் ஒரு வார்த்தை என்பவரது பதிவிலிருந்து சில வரிகள்:
http://oruvaarthai.blogspot.com/2010/06/blog-post.html
//நானெல்லாம் பதிவுலகத்துக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகின்றது.பதிவுலகம் ஒரு ‘சுதந்திரமான உலகம்’ என்று தான் நான் கேள்விப்பட்டு வந்தேன்.
அதில் என்ன வேண்டுமானாலும் நம் மனம் விட்டு எழுதலாம், நாம் வெளியிலே சொல்லத் தயங்கும் கருத்துகளை துணிந்து வெளிஉலகுக்கு சொல்லலாம் என்று தான் கேள்விப்பட்டு வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது இந்த பதிவுலகமும் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது என்று.
புதிதாக யார் வந்தாலும் அவர்கள் பதிவுலகில் தாக்கு பிடிப்பது மிகவும் கடினம் தான்.
ஏற்கனவே இங்கு கோட்டை கட்டி கோவணத்தை கொடியாக்கி பறக்க விட்டுக் கொண்டிருக்கும் ஒரு கும்பல் புதியவர்கள் எழுதும் நல்ல எழுத்துகளை எல்லாம் மட்டமாக விமர்சனம் செய்தும்,கேவலமான முறையில் பின்னூட்டங்கள் போட்டும் அவர்களை பதிவுலகை விட்டே துரத்தி விடுவார்கள் என்று நண்பர் ஒருவர் சொன்னதை கேட்டு நான் அதிர்ந்து போனேன்.
இப்படி இவர்களின் கையில் பல பிரபலங்களும் (பெயர்கள் வேண்டாம்…) சிக்கி, கடைசியில் அவர்களும் பதிவுலகம் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருக்கிறார்கள் என்றும் அவர் சொன்ன போது இங்கும் இலங்கை அரசாங்கத்தைப் போல ஒரு சர்வாதிகார ஆட்சி தான் நடக்கிறதோ..? என்ற சந்தேகம் எழுந்தது.
அங்கே தமிழர்களுக்கு எதிரான சர்வாதிகாரம் என்றால்…! இங்கே நல்ல எழுத்துகளுக்கு எதிரான சர்வாதிகாரம்..!//
வினவின் கருத்துக்களால் தமது பொந்துகளில் இருந்து பதறி துடித்து வெளிவந்துள்ள இந்த கரப்பான் பூச்சி பதிவர்கள் அத்தனை பேரும் நர்சிம் நடு ரோட்டில் ஒரு பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கிய பொழுது தமது பொந்துகளில் பதுங்கிக் கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில உ.த. கரப்பான் பூச்சிகள் ஸ்லைட்டாக தலையை தூக்கிப் பார்த்துவிட்டு அவர்களின் மென்மையான இதயத்திற்கு நர்சிமின் பயங்கரவாதம் ஒத்து வராது என்பதால் தமது முகம் கோண மீண்டும் பொந்துகளில் பதுங்கிக் கொண்டனர். சொலல் மறந்துவிட்டேனே, நர்சிம்மின் காதில் விழுமாறு அவர்கள் இவ்வாறு கூறிய பிறகுதான் தமது பொந்துகளில் பதுங்கினர்: ‘அய்யா நர்சிம் அவர்களே, உங்களிடம் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்பார்க்கவில்லை, நன்றி வணக்கம்’ (நன்றி வணக்கம் – நமது உபயம், பொருத்தமா இருக்குமென்பதால்).
அதே அவர்கள் இந்த வன்முறை குறித்து பேசி வினவு தோழர்கள் அதே களத்திற்க்கு வந்தவுடன் ஆக்ரோசத்துடன் ஒன்று கூடி கரப்பான் பூச்சி பாதுகாப்பு அமைப்பாக அன் அபீசியலாக அணி திரண்டு வினவை புறக்கணிப்போம் இயக்கம் ஆரம்பித்துள்ளனர். நல்ல கூட்டணி.
இந்த புதிய கூட்டணியில் ‘முக்கி’ய நபர் ஒருத்தரை சொல்லாமல் விட்டு விட்டேன். அவர்தான் கோவி கண்ணன். நர்சிம் பிரச்சினை பற்றிய பதிவுகளில் கூட தனது மனிதாபிமான கோ’மணத்தை’ கழற்றி காயப் போட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் பற்றிய தனது நெம்ப நல்லவன் கருத்தை எழுதிக் கொண்டு செல்கிறார். இதில் சில விசயங்கள் உள்ளன, ஒன்று ரயில் தகர்ப்புக்கு மாவோயிஸ்டுகள் பொறுப்பேற்கவில்லை என்று அன்றைக்கே ஒரு அறிக்கை விட்டனர் இரு நாட்கள் கழித்தும் விரிவான அறிக்கை விட்டுள்ளனர் ஆனால் அது கோவிக்கு தேவையில்லாத விசயம். மேலும், ‘அப்பாவி’ சி ஆர் பி எப் மற்றும் போலீஸால் அங்கு கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கிலானவர்கள் பற்றியும் அவருக்கு கவலையில்லை. அவரது கவலையெல்லாம் நர்சிம் பற்றிதான் … ஸாரி சேத்துப் போன அப்பாவி போலீசு பற்றிதான். அதே சிங்கப்பூர் சிந்தனையோட்டம் நர்சிம் விசயத்திலும் வெளிப்படுகிறது, நர்சிம் விசயத்தில் இவர் நடுநிலைவாதியாம். சூப்பரப்பு…
வட நாட்டில் வசிக்கிறேன். வலைத்தளத்திற்கு புதியவன். இந்தச்சண்டை அதிர்ச்சியையும் ,மனவேதனையையும் ஏற்படுத்துகிறது. நான் பிறப்பால் பாப்பாந்தான். அதற்காக ஆணாதிக்க திமிரை ஏற்கவில்லை.நாம் அத்துனைபேரும் ச.முவின் கால்களில் விழுந்து மன்னிப்புகேட்போம். அதுதான் நர்சிமவர்களுக்கு நாம் புகட்டும் படமாகும்.இதற்காக என்னை பாப்பான் என்று திட்டினால் எனக்கு கவலை இல்லை ..காஷ்யபன் .
வாழ்த்துக்கள் காஷ்யபன்
பின்னூட்ட அறிதலுக்கு
[…] அம்பலப்படுத்தியிருக்கும் வினவின் இந்தப் பதிவை முதலில் வாசித்து விடுங்கள். ஏற்கனவே […]
ippoothaikku uthaa patri mattum – http://kaargipages.wordpress.com/2010/06/01/narsim-uththai-dubakoor/
நர்சிமின் பார்ப்பன நரகல் புத்தியை மிகக் கச்சிதமாக அம்பலப்படுத்தியிருக்கும் வினவின் இந்தப் பதிவை முதலில் வாசித்து விடுங்கள். ஏற்கனவே வினவு தளத்தின் பின்னூட்டத்தில் நர்சிமுக்கு எனது கண்டனத்தையும் அப்பதிவுக்கான எனது ஆதரவையும் தெரிவித்துள்ளேன். மீண்டும் அதை இங்கே வலியுறுத்துகிறேன். கண்டனம் எனும் அம்சத்திலும் அதையும் கடந்து நர்சிமின் மன அழுக்கின் சமூகப் பிண்ணனியையும் வினவு தோழர்கள் ஏற்கனவே சிறப்பாக தோலுரித்திருக்கிறார்கள்.
இப்போது புதிதாக வலைபதிவர்களின் எட்டுப்பட்டி பஞ்சாயத்து நாட்டாமையான உண்மைத் தமிழன் எனும் பெயரில் எழுதும் சரவணன் சவடமுத்து ஏதோ குடும்பத்தில் சின்னப் பிரச்சினை, இதில் நம்ம குடும்ப மெம்பர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் – வினவு கருத்து சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று ஒரு அரிய கருத்தை உதிர்த்திருக்கிறார்.
முதலில் வினவு தோழர்கள் வலைபதிவர்கள் இல்லை என்று தீர்ப்பு எழுதும் உரிமையை இவருக்கு கொடுத்தது யார்? ஏதோ வினவு தளத்தை இவர் தான் பின்னூட்டமிட்டு பிரபலப்படுத்தியதாக பீற்றிக் கொண்டிருக்கிறார். முதலில் எமது தோழர்களுக்கு உம்மைப் போன்ற பார்ப்பன சொம்பு தூக்கிகளின் அறிமுகத்தை நாங்கள் நாடி நிற்பது எனும் நிலையே எமது அரசியலுக்கு நேர்ந்த ஆகக் கேவலமான இழுக்கு. அவ்வாறிருக்க எமது தோழர்கள் எப்போது உங்கள் அறிமுகத்தை நாடி நின்றார்கள் என்பதையும் உம்மை எப்போது ஒரு ப்ளாட்பார்மாக பயன்படுத்தினார்கள் என்பதையும் விளக்கும் யோக்கியதை உமக்கு இருக்க நியாயமில்லை – ஆனால், கேட்கும் தைரியம் எமக்கு இருக்கிறது.
துக்ளக்கையும் இன்னபிற பார்ப்பன கழிசடைத் தத்துவங்களையும் தூக்கிப்பிடிக்கவும் சக்கீலாவை ஜொள்ளுவிட்டு இரசிக்கவும் உப்புமா
திரைபடங்களுக்கு விமர்சனம் எழுதி மக்களுக்கு அறிமுகப்படுத்தவும் உமக்கு எப்படி உரிமை இருக்கிறதோ.. அதை விட அதிகமாக மக்கள்
அரசியலைப் பேசவும் மக்கள் விடுதலைக்கான தத்துவத்தை இணையதளங்களிலும் வலைப்பதிவுகளிலும் உயர்த்திப்பிடிக்கவும் எமக்கு உரிமை இருக்கிறது.
இப்போது நான் கலைந்து போன பதிவர் சங்கம் எனும் கூழ்முட்டையை நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை அந்தக் கூழ்முட்டை பொரித்திருந்து
அதற்கு சரவணன் சவடமுத்து (உண்மைத்தமிழன்) பொறுப்பாளராய் இருந்த்திருந்தால் எமது அரசியலைப் பேசும் உரிமைக்கு என்ன கதி
நேர்ந்திருக்கும்? பதிவர் சங்கம் எனும் அலையில்லாத கடலை விமர்சித்து விட்டதால் எமது தோழர்கள் மேல் வன்மத்தைக் கக்கும் உண்மைத்தமிழன்,
அப்படியான பொறுப்பில் இருந்திருப்பாரேயானால் எம்மேல் தனது வீட்டோ அதிகாரத்தை செலுத்தி எமது குரல்வளையை நெரிக்கத் தயங்கியிருக்க
மாட்டார்.
இதைத் தான் லீனா விவகாரத்தின் போது ஒரு பின்னூட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தேன். உமது சுதந்திரம் என்பது எமது உரிமையை மறுக்கும். ‘நடுநிலையான’ கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்ற ஒன்று கிடையவே கிடையாது. லீனா விவகாரத்தில் நேரில் சென்று கேள்வி எழுப்பும் எமது உரிமையை மறுப்பதன் மூலம் தங்கள் கருத்துரிமையை நிலைநாட்டிக் கொண்ட உ.த உள்ளிட்ட லும்பன்கள், இப்போது சகோதரி சந்தன முல்லையை நாக்கூசும் விதத்தில் போலி டோண்டுவுக்கு எந்த வகையிலும் குறையாத வகையில் ஆபாசமாக நர்சிம் எழுதியுள்ளதை ‘குடும்ப பிரச்சினை’ என்று அமுக்கப் பார்க்கிறார்.
வினவு தளத்தில் வெளியான ஒரு பின்னூட்டத்திற்காக வினவு தோழர்களை கூண்டில் ஏற்றுகிறார் ச.சவடமுத்து. அதே வினது தளத்தில் வேறு பல
பதிவுகளில் எமது தோழர்களின் பிறப்பு முதற்கொண்டு இழித்துப் பேசி பின்னூட்டங்களை பார்ப்பன கும்பல் எழுதிக் கொண்டிருந்த போது எதைப்
பிடுங்கிப் போட போயிருந்தார் என்று தெரியவில்லை. வினவு ஆரம்பத்திலிருந்தே எப்படியான பின்னூட்டங்களையும் கூட தடுத்து வைப்பதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். அதையும் மீறி பல சந்தர்பங்களில் சகபதிவர்கள் சுட்டிக் காட்டிய போது திருத்திக் கொள்ளவும் தயங்கியதில்லை. இதற்கு நானே ஒரு உதாரணம் – சமீபத்தில் டோண்டுவின் மகள் பற்றி ஒரு தகவலை எவனோ ஒரு லூசு வெளியிட்டதை நான் சுட்டிக் காட்டிய பின் நீக்கியிருக்கிறார்கள். பதிவில் தவறான தகவல்களைச் சுட்டிக் காட்டி வரும் பின்னூட்டங்களை – அது அனானிமஸாக இருந்த போதும் கூட – திருத்தியிருக்கிறார்கள். கமெண்ட் மாடரேஷனை ஆரம்பத்திலிருந்தே கடைபிடிக்காத வினவு தளத்தை அதில்
வெளியார்கள் இடும் பின்னூட்டங்களுக்கு பொறுப்பாக்கி பதிவின் மைய்யமான விசயத்திலிருந்து எஸ்கேப்பாகப் பார்க்கிறார்.
நட்பு எனும் பெயரில் இணைந்துள்ள குடும்பமாம். யாரு காதுல சாமி பூ சுத்தறீங்க? யாருக்கும் யாருக்கும் நட்பு? இங்கே இயங்கிக் கொண்டிருக்கும் எல்லோரும் நிஜ உலகில் நிலவும் ஏதோவொரு கருத்தையோ தத்துவத்தையோ அரசியலையோ பிரதிபலித்துக் கொண்டுதான்
இருக்கிறார்கள் – நீங்கள் துக்ளக்கை பிரதிபலிப்பது போல. அவ்வாறிருக்க நட்பு என்பது ஏற்றுக் கொண்ட கருத்துக்களின் அடிப்படையில் ஏற்படுவது தானேயன்றி எதிரெதிர் துருவங்களுக்குள் நட்பு என்று சொல்வது ‘காதுல பூ’ கதை தான்.
தனது எழுத்தின் மூலம் கடுமையான விசத்தைக் கக்கி ஒரு பெண்ணை அவரது சுதந்திரமான கருத்துக்களை வெளியிட்டதற்காக தன் எழுத்தின்
மூலம் குத்திக் கிழித்துள்ள நர்சிம்மை சும்மா அப்படியே உண்மையார் வருடிக் கொடுக்கிறார். அவுக மாப்பு கேட்டுட்டாகளாம் அது அவுக குடும்ப
மேட்டராம். ஏண்டா வெண்ணை.. அந்த நாதாறி புனைவு எனும் பெயரில் போலி டோ ண்டுத்தனமாய் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தி எழுதிய
போது எங்கேயடா போய் மேய்ந்து கொண்டிருந்தது உன் புத்தி. ‘குடும்ப பிரச்சினை’ என்று சொல்லிக் கொண்டு நீ இப்போது சொம்பைத் தூக்கிக் கொண்டு கிளம்பி வந்திருக்கிறாயே… அந்தச் சகோதரி அசிங்கப்பட்டு நின்ற போது எங்கேயடா போயிருந்தாய்?
அதான் போலி டோண்டு மூர்த்தி மன்னிப்பு கேட்டு எழுதிக் குடுத்தாச்சில்ல.. அப்புறமும் ஏன் தூக்கிக் கொண்டு அலைகிறாய். குடும்பப் பிரச்சினை
என்று விட்டுவிட வேண்டியது தானே.. அவன் விசயத்தில் குடும்ப பிரச்சினை இல்லை – இன்னொரு பெண்ணின் பிரச்சினையின் போது மட்டும் குடும்பப் பிரச்சினையா? உனக்கு ஒரு நாயம் அடுத்தவிங்களுக்கு ஒரு நாயமா? மூஞ்சப் பாரு மூஞ்ச
தனது பதிவு நெடுக “அவர்கள் vs நாம்” எனும் பதத்தைப் பிரயோகிக்கும் ச.சவடமுத்து, “அவர்களை” ஆதரிக்கும் எல்லோரையும் பதிவர்கள் இல்லை
என்று தீர்ப்பெழுதுகிறார் – மறைமுகமாக மிரட்டுகிறார். மேட்டுக்குடி பார்ப்பனியவாதிகளின் காலைக் கழுவிக் குடிக்கும் அடிமைத்தனத்திலிருந்து
எழுகிறது உண்மைத்தமிழனின் வார்த்தைகள். அது நரகல் தோய்ந்த விஷ வரிகள். தன்னையொத்த அல்பைக்கூட்டத்தோடு சிண்டிகேட் அமைத்து
எமது தோழர்களைத் தனிமைப்படுத்தி விட முடியும் என்று பகல்கனவு காண்கிறார். அந்தோ பரிதாபம்… எமது தோழர்களின் பதிவுகளுக்கு
வரும் வருகையாளர்களின் எண்ணிக்கையின் உயர்வு என்பது எமது அரசியல் நேர்மையிலிருந்தும் சித்தாந்த வலிமையிலிருந்தும் மக்களின்
பால் ஒரு கம்யூனிஸ்டு கொள்ளும் மாறாத காதலின் வெளிப்பாடுகளிலிருந்துமே ஏற்படுகிறது எனும் எளிய உண்மை சவடமுத்துவுக்கு விளங்கவில்லை.
அது விளங்கவும் விளங்காது. தனது டாஸ்மார்க் கடையில் ஈயோட்டிக் கொண்டிருக்கும் போது எதிரே உருபெற்று எழும் புரட்சிகர அரசியலுக்கான
அங்கீகாரத்தையும் வரவேற்பையும் அவரால் விளங்கிக் கொள்ளவியலாத பொறாமையிலிருந்தே தனது பதிவை எழுதியிருக்கிறார். வினவு தான்
பதிவுலகில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதோர் பிரிவை ஏற்படுத்துகிறதாம்.. வினவு தனது நர்சிம் பதிவில் தெட்டத் தெளிவாக எப்படி நர்சிமுக்கு
ஆதரவாக பார்ப்பன பதிவர்கள் கள்ளக் கூட்டு அமைத்துள்ளார்கள் என்று அம்பலப்படுத்தியுள்ளனர். அந்த விவரங்களில் தொனிக்கும் உண்மைக்கு
அருகில் கூட ச.ச.முத்து செல்லவில்லை – அது முடியவும் முடியாது. ஒதுங்கி நின்று சேறடித்துப் பார்க்கிறார்.
தோழர் அசுரன் லீனா விவகாரத்தில் இவர்களின் கள்ளக் கூட்டணியை அம்பலப்படுத்தி எழுதியதில் பலமாக காயம்பட்டுப் போன உண்மைத்தமிழன், இப்போது “அவர்கள் vs நாம்” அரசியலை நடத்துவதன் மூலம் தனது காயங்களுக்கு மருந்திட்டுக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறார். இவர் பேசும் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்பதெல்லாம் யாருக்கு? மாற்றி மாற்றி சொரிந்து விட்டுக் கொள்ளும் சொம்பு தூக்கிகளுக்கும் லும்பன்களுக்கும் தான். இவர்கள் அமைப்பதாக சொல்லிக் கொண்டிருந்த – கூழ்முட்டையாகிப் போன – பதிவர் சங்கம் என்பதும் கூட உண்மைத்தமிழனை ஒத்த லும்பன்களின் முதுகு சொறிஞர்கள் சங்கம் தான்.
ஆனால் எமது தோழர்களோ பதிவுலகை ஒலிக்காத குரல்கள் ஒலிக்கச் செய்வதற்கான தளமாகக் காண்கிறோம். வெகுஜன ஊடகங்களால்
பேசப்படாத மக்களின் வேதனைகளை பதிவு செய்யும் ஒரு மாற்று ஊடகமாக இணையத்தைப் பாவிக்கிறார்கள். புதிதாய் உருவாகும் ஒரு உலகின் பிரதிநிதிகளாய் செத்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் காதுகளில் இடியாய் இறங்கிக் கொண்டுள்ளது எமது தோழர்களின் எழுத்துக்கள். இணையத்தில் இயங்கும் எமது தோழர்கள் இத்தனை வருடங்களாக எழுதி, இணையவெளியில் பிரிக்க முடியாதவொரு அங்கமாக நிரந்து நிற்கும் பதிவுகள் அத்தனையுமே இதற்கு சாட்சி.
யாரை யார் பதிவர்கள் இல்லை என்று தீர்மானிப்பது? சாக்கடையில் பிறழும் பன்றி அந்தச் சாக்கடையே உலகம் என்று நம்பிக் கொள்ளுமாம்.
மொக்கைப் படங்களுக்கெல்லாம் என்பது பக்கத்தில் விமர்சனம் எழுதுவதும், தம்பி – அண்ணே கூழைத் தனமாய் குழைந்து திரிவதும், வாய்ப்புக் கிடைக்கும் போது முதுகில் குத்திக் கொள்வதும், தனது தனிமனித கோழைத்தனங்களூடாய் சமூகத்தைப் பார்த்துப் பதிவதுமே இத்தனை காலமாய் இந்த ச.ச. முத்து (அலைய்ஸ்) உண்மைத்தமிழன் எழுதி வந்துள்ள விசயங்கள். மிஞ்சிய நேரத்தில் துக்ளக் தனமான அரசியல் கருத்துக்களை உளரிக் கொட்டிக் கொண்டிருக்கும் இவர் – எமது தோழர்களை பதிவர்கள் இல்லை என்று தீர்ப்பெழுதுகிறார். நல்ல காமெடி.
நரி நாட்டாமை செஞ்சா கிடைக்கு ரெண்டு கேக்குமாம்..!
(கூகிள் ரீடரில் உ.த பதிவைப் படித்ததால் பின்னூட்டங்களை இன்னும் பார்க்கவில்லை. பார்த்தபின் எதையாவது சேர்க்க வேண்டும் என்றால்
சேர்க்கப்படும்)
நர்சிம்’s PSEUDO INTELLECTUAL TRASH
மற்றும் unabashed bigotry –
அவரின் பூக்காரி பதிவென்னும்
சாக்கடைக்கு நாற்றம் மட்டுமே போதும்
கல்லெறிந்து விளம்பரம் வேண்டாம்
கல்லிற்கு கூட பெருத்த அவமானமாய் போய்விடும்
//நர்சிமின் அசிங்கமான கொடுரமான முகம் இப்படி வெளிப்பட்டாலும் அதை ஜவ்வாது பூசி மறைப்பதற்கு சில பதிவர்கள் வெட்கமின்றி முயல்கிறார்கள். அவர்களெல்லாம் யாரென்று நர்சிமின் பின்னூட்டத்தில் பார்க்கலாம். இவர்களுக்குள்ளும் அப்பட்டமான ஆணாதிக்க வெறி மறைந்திருக்கிறது. இருப்பினும் அதை சற்றே நாசுக்காக மயில், முல்லையின் வினைக்கான எதிர்வினைதான் நர்சிமின் பூக்காரி என்று முட்டுகொடுக்க முயல்கிறார்கள். ஆனால் இந்த அற்பங்கள் முல்லை எழுதியது என்ன, நர்சிம் எழுதியது என்ன என்று தெரியாமலா பேசுகிறார்கள்? இல்லை தெரிந்தே ஊளையிடுகிறார்கள்.//
இதைத் தான் தாங்கவே முடியவில்லை. தூ!
பொதுவாக வினாவில் வெளியிடப்படும் பதிவுகளில், ஒரு ௯௦ சதவீதம் எனக்கு உடன்பாடு இருக்கும். மீதமிருக்கிற ௧௦ சதவீதத்தில்தான் என்னுடைய எதிர்ப்பும் விமர்சனமும் இருக்கும்.
ஆனால் இந்த பதிவை பொறுத்தவரையில் ௧௦௦ சதவீதம் நான் உடன்படுகிறேன்.
கஜினி தமிழ் படத்தில் கதாநாயகி பேசுவதாக ஒரு வசனம் இருக்கும்:
“இப்பதான் பெண்கள் வெளிய வரவே ஆரம்பிச்சிருக்காங்க… அவங்கள திரும்பவும் சமையலறைக்குள்ளேயே போக வெச்சிராத…”
நர்சமின் இந்த செயலை மிகக்கடுமையாக கண்டித்த வினாவிற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும்.
பொதுவாக வினாவில் வெளியிடப்படும் பதிவுகளில், ஒரு 90 சதவீதம் எனக்கு உடன்பாடு இருக்கும். மீதமிருக்கிற 10 சதவீதத்தில்தான் என்னுடைய எதிர்ப்பும் விமர்சனமும் இருக்கும்.
ஆனால் இந்த பதிவை பொறுத்தவரையில் 100 சதவீதம் நான் உடன்படுகிறேன்.
கஜினி தமிழ் படத்தில் கதாநாயகி பேசுவதாக ஒரு வசனம் இருக்கும்:
“இப்பதான் பெண்கள் வெளிய வரவே ஆரம்பிச்சிருக்காங்க… அவங்கள திரும்பவும் சமையலறைக்குள்ளேயே போக வெச்சிராத…”
நர்சமின் இந்த செயலை மிகக்கடுமையாக கண்டித்த வினாவிற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும்.
தோழரே, யார பார்க்க கிளம்பிட்டீங்க?
நரசிம்மை வன்மையாக கண்டிபடவேண்டியவர்.
வினவு தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
பெண்களைச் சீண்டிப்பார்க்கும் ஆண் தற்குறிகளின் ரெளடித்தனத்தை எந்த வன்மத்துடன் எதிர்க்கின்றோமோ அதைப் போலவே பெண்ணின் அடாவடித்தனத்தையும் சமன்படுத்தி விவாதிக்கும் துணிச்சல் வினவு தோழர்களிடம் இருப்பது பன்பட்ட கருத்தாடலுடன் ஆக்கச் சிந்தனையை முன்னெடுக்க முயலும் மானிட சக்திகளுக்கே கைக்கூடும். இங்கே விவாதிக்கும் போது ஆண் பெண் என்ற அங்காலாய்ப்பு தேவையில்லை. தொடரட்டும் தோழர்களின் அநீதிக்கு எதிரான போராட்டம்.
இவ்வளவு நடக்கிறதா பதிவுலகில்?
இந்த இடுகையை படிக்கும் முன்னர்வரை இது குறித்து தெரியாது
ஆனாலும் வக்கிரம் பிடித்த ஆணாதிக்க வெறியோடு பெண்பதிவர்களைக் குதறும் இதுபோன்ற பார்ப்பனீய மிருகங்களுக்கான எச்சரிக்கையாகவேனும் அவர்களைத் தண்டிக்கவேண்டும்.
உங்களுக்கு இது தேவை இல்லாத வேலை தோழர்களே
வலைத்தளம் வந்தபிறகுதான் பாட்டளிமக்கள் ,பெண்கள் ,தாழ்த்தப்பட்ட மக்கள், கிராமப்புற மக்கள்,சிறுபான்மை மக்கள் பிரிவைசெர்தவர்கள் பலாயிரம் ஆண்டுகளாக படிப்பறிவு மறுக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்கிறார்கள்,அவர்களை வரவேற்கவேண்டும் அதைசெய்யாமல் அவர்களை ஒழிக்க முன்வருபவர்களை நாம் தண்டிக்க வேண்டும்
இங்கு பதிவர் முல்லைக்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கின்றேன். பதிவர் நரசிம்-க்கு எனது கண்டனங்களையும் பதிவு செய்கின்றேன். என்னை பொறுத்தவரை பகடியாக எழுதப்படுவது/பேசப்படுவது இவ்வலை உலகில் மட்டும் அல்ல, தின வாழ்வில் நிகழ்வது. ஆனால் அதற்க்கு இந்த அளவு மூர்கதனத்துடன் எதிர் வினை செய்வது வன்மைமாகவே பார்க்க முடிகின்றது.
I read the article my Mr. Narsim…
எதற்காக அதை எழுதினர் என்று அவருக்கே வெளிச்சம். பண்பு வேண்டும்… சொல்லும் கருத்தில் பண்பு வேண்டும்…. இதை திரு. நர்சிம் அறிய வேண்டும். மனதில் தோன்றியதை எல்லாம் எழத முடியாது. அநாகரீகமான வார்த்தைகளை எழுதிஉள்ளார். பெண்ணைப் பற்றி அப்படி எழுத என்ன காரணம் என்றால், அது அவருடைய மன விகாரத்தை தெள்ளத் தெளிவாக எடுத்து காட்டுகின்றது. ” தேவர் அடியாள்” என்ற வார்த்தை நாளிடையில் “அந்த” வார்த்தை ஆகி போனது. இந்த ” virginity ” என்ற கான்செப்ட் புகுத்தியது ஆண் மக்களே என்று நான் எண்ணுகிறேன். கோபம் வந்தவுடன் பெண்ணை அப்படி அழைக்க உன் மனம் நாணவில்லையா திரு. நரசிம்? பெண் மற்றும் சக மனிதர்களிடம் நாம் செலுத்த வேண்டியது மரியாதையை மற்றும் அன்பு மட்டுமே. நரசிம் ….உனக்கும் விருப்பமான பெண் என்று ஒருவர் இருப்பார் அல்லவா? அத்தகைய பெண்ணை பற்றி, இப்படி தவறாக நீங்கள் எழுதிருக்க கூடாது.
மறப்போம் மன்னிப்போம்
எனது கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.
தன்னை எவனும் கேக்க முடியாதுங்கர திமிர்பிடிச்சவன் தான் இந்த நர்ஷிம். மூஞ்சியூட நாலு அப்பு அப்பினா இந்த நாய்க்கு எல்லாம் சரி ஆகிடும் ….
அப்புறம் கார்க்கிபன்னாடைக்கு …. டேய் முதல்ல உன்னோட **** பாருடா …அப்புறம் பொய் நர்சிம்க்கு சப்போர்ட் பண்ணலாம் ….
உனக்கு இருக்குடி ….
நான் தமிழ்மனம என்ற ஓடற வண்டியில் இப்பத்தான் பாதியில் வந்து ஏறினேன். பூக்காரியும் படித்தேன். ஆனால் அதுக்கு மேலே ஒன்னும் புரியவில்லை? அது என்னா கதை என்றும் புரியவில்லை.
அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?
நான் அதிகமாக பதிவுகளை படிப்பதைவிட்டு ஓராண்டுக்குமேல் ஆகிறது. ரீடரில் உள்ளவற்றை தவிர. காரணம் பதிவுக்ள என்ற பெயரில் மன-உளைச்சலை அதிகரிக்கும் எழுத்துக்கள்தான் உள்ளது. அல்லது காப்பிகள்.
அதனால் இந்த சம்பவங்கள் எதுவும் தெரியவில்லை. இன்று ஒரு நண்பர் எனக்கு அஞ்சல் அனுப்பி இது குறித்து கேட்டபோதுதான் தெரிந்தது. காலையிலிருந்து சுற்றி சுற்றி வந்தால் தலையும் புரியல காலும் புரியல. தோழர் இந்த பதிவுதான் மிகச்சரியாக முழு சித்திரத்தையும் அதன் உள் உள்ள மனோபாவங்களையும் அம்பலப்படுத்தி உள்ளது. இப்பதிவின் கருத்துக்களுடன் முழுதாக உடன்படுகிறேன். புனைவு என்ற பெயரில் எழுதப்பட்ட நர்சிம்மின் அக்கதை வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு 3-ந்தரப் பத்திரிக்கைகூட அப்படி ஒன்றை எழுதாது. உண்மையில் பாதிக்கப்ட்ட பெண்களின் மனநிலை எத்தகைய வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நர்சிம் மற்றும் அவருக்கு சார்பாக பேசும் பதிவுலக ஆணியவாதிகள் கடுமையான கண்டனத்திற்கு உரியவர்கள். இனியாவது பதிவுலக வாசகர்கள் பதிவுகளை தேர்ந்தெடுத்து படிக்கவும், இத்தகையவர்கள புறக்கணிப்பதும் அவசியம். வினவு தோழர்களின் இந்த பதிவிற்கு எனது உடன்பாட்டை பதிய வைக்கிறேன்.
பதிவுலகில் நடப்பவற்றைப் பற்றித் தொடர்ந்து நான் அவதானிப்பதில்லை. வெகுசில பதிவுகள், இணையதளங்களை மட்டுமே வாசிக்கிறேன், அதற்குமட்டுமே நேரம் கிடைக்கிறது. நர்சிம்மைப் பற்றி எழுதப்பட்ட பகடி, எதிர்வினை என்று சொல்லப்படுகிற நர்சிம்மின் கதை பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். கதையையும் வாசித்தேன். தந்தைவழி மற்றும் நிலவுடைமைச் சமூகச்சொல்லாடல்களுக்கே உரித்தான பெண் ’ஒழுக்கத்தைச்’ சந்தேகிக்கும், அதை நிலைநிறுத்தத் துடிக்கும் ’கெட்ட’ வார்த்தைகளே அன்றி அவரது கதையில் வேறெதுவும் இல்லை. என் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.
பெருந்தேவி
ஆணாதிக்க பொறுக்கி நர்சிமையும் அவனுக்கு ஆதரவாக நிற்கும் பொறுக்கிகளையும் தனிமைப்படுத்துவோம்.
http://supperlinks.blogspot.com/2010/06/blog-post.html
பால பாரதி, சுகுனா திவாகர் போன்றோர் இன்னும் கருத்து சொல்லவில்லையே?
பாலபாரதி வந்து அவரிடம் வெளியிட சொன்ன விடயத்திற்க்கு மட்டும் பதிலளித்து சொன்றிருக்கிறார்! சுகுனா ஆளையே காணும்?
சாதி அரசியல் செய்யும் வினவு என்னும் மலத்தை என்ன செய்யலாம் ???
பொறுக்கிதனத்தை மிக நன்றாகவே அனுகியிருக்கிறீர்கள்
நரசிம் எனும் பார்ப்பன ஆதிக்க வெறியர் கண்டிக்க மட்டுமல்ல… தண்டிக்கப்படவும் வேண்டியவர்…
பூக்காரிகள் என்றால் அவ்வளவு இழிவாக விபசாரி என புனைய முடிகிறதே… அப்படி துப்பிருந்தால்… ஆயிரம் பெண்களுடன் விபசாரம் செய்த சின்ன, பெரிய சங்கராக்காரிகளை பற்றி புனைய வேண்டாம்… அந்த பொறுக்கிகளை பற்றி… நரசிம் உண்மை கதை எழுத முடியுமா?
இப்போது கிளம்பி இருக்கும் லௌதீக பார்ப்பனர்களை இனம் கண்டு மட்டுமல்ல… அவர்களின் கோர முகத்தை உலகம் காண வேண்டி இருக்கிறது…
நியாத்திற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களுக்காகவும் குரல் கொடுப்பேன் என சொல்லும் லக்கிலுக் போன்றவர்கள்… பார்ப்பன ஜாதி வெறி கொண்ட… வன்மத்துடன்… விளிம்பு நிலை பூக்காரியை விபசாரியாக எழுதும் போது எப்படி ரசிக்கிறார்கள் என தெரியவில்லை…
பார்ப்பனீய விஷ ஜந்துக்கள் எந்த உருவில் வந்தாலும்… அதன் விஷம் சமுதாயத்தில் கலக்கமால் காக்க வேண்டியவர்களே… பாம்புகளுக்கு பால் கொடுத்து கொண்டுள்ளார்கள்… பால் கொடுப்பவர்களாக இருந்தாலும் பார்ப்பன பாம்புகள் கடிக்காமல் விடுமா என்ன?
இன்று பூக்காரி எப்படி விபசாரி என புனையப்பட்டாரோ அது போல்… நாளை லக்கி போன்றவர்கள் கூட பார்ப்பன பாம்புகளின் பல்லை பிடுங்க புற்படும் போது… அவர்களும் எவ்வளவு இழிவாக புனையபடுவார்கள் என ஒரு முறை சிந்தித்து விட்டு… பார்ப்பன பாம்புகளுக்கு பால் ஊற்றட்டும்…
மற்றபடி பிறப்பால் எளிய சாதியில் பிறப்பது குற்றமல்ல…
எவ்வளவு படித்திருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும், ஆதிக்க சாதி சங்கத்தில் செல்வாக்குடன் இருந்தாலும்… சாரு போன்ற குருட்டு கபோதிகளுக்கு சாராயம் வாங்கி கொடுத்தாலும்… ராமனையும், கிருஷ்ணனையும் பிடித்து… விகடனில் வாந்தி எடுத்து வைத்தாலும்…
பார்ப்பனீய முகம்… கோரமானதே…
பார்ப்பனீயத்தை யார் ஆதரித்தாலும்… அவர்கள் இழி பணியை செய்கிறார்கள் என்று அவர்களுக்கும் தெரியும்…
எளிய சாதியை சேர்ந்தவரை பற்றி எழுதியாகி விட்டது… அழித்தாகி விட்டது… மன்னித்து விடாலாம்… என ஆல மர பஞ்சாயத்து தலைவர்களின் தீர்ப்பு எப்படி இருக்கிறது என்றால்…
பெண்ணை கற்பழித்த அயோக்கியனை… மன்னிக்க வேண்டும் என்பது போன்ற கருத்தே ஆகும்…
இன்று பூக்காரியை விபசாரி என எழுதிய பார்ப்பனீயம்… அந்த பார்ப்பனீய கோர முகத்தை ஆதரிப்பவர்களின் வீட்டு பெண்களை இழிவாக எழுதி புனைந்தாலும் ரசிக்க போகிறதா?
வரிக்கு வரி வழிமொழிகிறேன்.. லக்கி பொன்றவர்களின் பணீ சுமையும் கணக்கில்கொள்ள வேண்டும் மற்றபடி இந்த விடயத்தில் அவர் கருத்தை அறிய ஆவலுடன்..
கார்ப்பொரேட் தேவிடியாத்தனம்
http://allinall2010.blogspot.com/2010/06/blog-post.html
[…] ஒரு பெண்ணை எதிர்கொள்வதற்க்கு அவளின் பால் ஒழுக்கத்தை கையிலெடுத்தாலே போதும் என்ற வக்கிரபுத்தி பார்ப்பனியம் பன்னெடுங்காலமாக கைகொண்டுவருவதே! அதே ஆயுதத்தை கையிலெடுத்து, தனது பார்ப்பனிய வக்கிரபுத்தியை கழிந்து வைத்திருக்கும் நர்சிம் என்கிற பெறுக்கியை – அம்பலப்படுத்தி அவரை தனிமைப்படுத்தி தண்டிக்கவேண்டும் என்று வினவு கட்டுரை வெளியிட்டது! […]
ஆக, நாங்கள் என்ற இந்த வாதத்தின் ஊற்றுகண், நான் எனும் தனிமனித வாதமே! பல்வேறு சந்தர்ப்பங்களில் வினவு தோழர்களால் அம்பலப்படுத்தப்பட்ட, அவர்களுடைய மொழியில் சொன்னால் ’புண்படுத்தப்பட்ட’ தனிமனித மணங்கள் சேர்ந்தே இப்புனித கூட்டணி அமைக்கப்படுகிறது! அக்கூட்டணி அமைக்கப்படுவது மட்டிமின்றி தமது குடும்பப் பிரச்சனை என்றும் முன்வைக்கப்படுகிறது! அது உங்களுடைய புனிதக் குடும்பம் என்பதாலேயே, பெண்கள் மீதான குடும்ப வன்முறையை நீங்கள் ஆதரிப்பவர்களாக இருக்கலாம்! வக்கிரமான முறையில் பார்ப்பன ஆணாதிக்க வெறியை கட்டவிழ்த்து விட்ட பொறுக்கியை குடும்பத்தை விட்டு நீங்கள் துரத்தியடிக்காமல் இருக்கலாம்! உங்கள் முற்போக்கு முகமுடியும் அத்துடன் முடிவடையலாம்! ஒவ்வொரு முகமுடியும் கிழிய கிழிய மற்றொன்று துருத்திக்கொண்டு வெளித்தெரியும் ! குடும்பம் என்பதே பெண்களை கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக ஒடுக்கும் வன்முறை கருவியாகவும் இருப்பதால் அப்புனித குடும்பத்தையும் சேர்த்தே முற்போக்காளர்களாகிய நாங்கள் எதிர்க்க வேண்டியுள்ளது! எதிர்ப்போம். அதை நாங்கள் தான் எதிர்ப்போம். மற்றவர்களையும் எதிர்க்கச்சொல்லி அணிதிரட்டுவோம். இதற்கெதிராக மொக்கை போடுவதை தவிர உங்களால் என்ன செய்ய முடியும் மொக்கைகளே ?
http://vrinternationalists.wordpress.com/2010/06/01/1397/
நர்சிம் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவரே. வினவு குழுவினருடன் கருத்து மாறுபாடுகளுக்கும் இந்த பதிவின் பேசுபொருளுக்கும் சம்பந்தம் வைப்பது பயித்திரகானதனமானது. உண்மைத்தமிழன் கருத்துக்களை எல்லாம் சீரியஸாக எடுக்க வேண்டாம். அவர் எழுதும் செய்திகளை மட்டும் படித்துக்கொண்டு போகவும்.
எதிரியை எந்த இடத்தில் அடித்தல் வலிக்குமோ அந்த இ டத்தில் தான் அடிக்க வேண்டும்
நர்சிம் செய்தது 100% சரி
இதில் ஏன் சாதி கலந்திதிருக்கிறது என்று எழுதிய நர்சிமை கேட்கவேண்டும். சுத்த பத்தமான வளர்ப்பு முறை பற்றி அவர்தான் பெருமையடிக்கிறார். எங்களைப் போன்ற அசுத்தமான வளப்பு உள்ளர்வகளுக்குத்தான் அந்த சாதித்திமிர் தெரியும். அதுசரி போன்ற ரொம்ப நல்லவர்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?
உங்களை போன்றவர்கள் இன்றும் என்றும் சாதியை வைத்து ஈன பிழைப்பை நடத்தும் வரை சாதி என்றைக்குமே ஒழியாது. மறையாது.
ஈனசாதி என்று தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்துவது ஆதிக்கசாதித்த திமிர். அந்த ஈன என்ற வார்த்தையை உங்களைப்போன்ற வெறிர்களிடமிருந்துதான் வரும்.சொந்த செல்வில் சூன்யம் நன்றி மூட்டு
உங்களுக்கெல்லாம் வேலையே இல்லையா..போங்கய்யா பொய் புள்ள குட்டிகள படிக்க வைங்க … கப்பிதனமா பேசிகிட்டு…
இப்படி சொல்ல வந்ததை திரித்து கூறும் பழக்கத்தை தான் ஈன பிழைப்பு என்று சொல்லுகிறேன். உங்கள் பொழப்பை ஈன பிழைப்பு என்று கூறும்
போது அதிலும் சாதியை நுழைகுரீரே அதுதான் ஈன பிழைப்பு என்று சொல்லுகிறேன். so சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டது இப்போது நீங்கள் தான்.
அது சரி அதான் ஜாதியை நரசிம் எழுதியுள்ளார் என்பதை
வினவு குரிப்பிட்டுவிட்டது அல்லவா? அது குறித்து உங்களது கண்டனங்களை சொல்லுங்கள் அது சரி.
அது சரி… அதுதான் அவரது நோக்கமா என்ன?
பிற பதிவர்களின் பெயர்களைப் பொறுத்தவரை அங்கு முன்னித்தபபட்டிருப்பது பொதுவாக பதிவுலகில் நிகழும் ஆணாதிக்க வக்கிரங்களை பற்றி. இந்த காரணத்தால் வெளியேறிய பெண்களை பலர் உள்ளனர் என்ற தார்மீக கோபமே பதிவின் சாராம்சம்.
இன்று இவவளவு பேசும் இவர்கள் யாருமே இது நாள்
வரை பெண் பதிவர்கள் மீது ஏவிவிடப்பட்ட
வன்முறைகளின் போது இது போல தாமே முன் வந்து பேசியதில்லை.
சூப்பர்….பதிவு…. ஆணாதிக்க, மற்றும் பெண்களை இழிவுபடுத்துபவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்… கூடவே சொம்பு துக்கிகளுக்கும் இதை செய்ய வேண்டும.
மொதல்ல நீ கூஜா தூக்குவதை நிறுத்தப்பா. வினவு குரூப் என்ன பெரிய காந்திய வாதிங்கள? அசிங்கமா திட்டுவதை கீழ்தரமாக பேசுவதையே தொழிலாக செய்துவரும் இவர்களை உன்னை மாதிரி உள்ளவர்கள் ஆதரிக்கரதுனால தான் பதிவுலகமே நாரிபோய் குடுஇருக்கு.
ulakathulaye nee thanda periiiya sombu thookki
MANIDHANAIமனிதன் arivaan
MANIDHANAI MANIDHAN ARIVAAN. MADA NAYAI THADIKKAMBUDHAN ARIYUM. Narsim meedhu neengal parindhuraithulla nadavadikkaigal yedukka pada vendum.
மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
http://www.narsim.in/2010/06/blog-post.html
//மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
நான் எழுதிய புனைவு சில பேரை காயப்படுத்தியிருக்கிறது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். சந்தனமுல்லை அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். //
வெறும் பய இன்னுமும் அதை புனைவுன்னு சொல்லிட்டு இருக்கான் வினவு….
அப்ப பின்னுட்டத்துல கார்கி போட்டதுக்கு பேரு என்ன சொல்லுவாங்க நாயிங்க
http://www.narsim.in/2010/06/blog-post.html
நரசிமுக்கு என் கண்டனங்கள்.
தமிழக சிற்றூர்ப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு மனிதனை மனிதனறிவான் மட நாயை தடிக்கம்புதான் அறியும். நரசிம் மீது நீங்கள் பரிந்துரைத்துள்ள நடவடிக்கைகள் எடுக்கப் படவேண்டும்.மேட்டுகுடி வளர்ப்பு பெருமைக்கு ஒரு சான்று.மங்களூரில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி ஸ்ரீராம் சேனாவிடம் உதை வாங்கிய பெண்கள் யார்/
உங்களின் பதிவுகளில் இன்னும் நடு நிலைமை இருந்தால் சிறப்பு.
anonymous நடுநிலைமை என்பதே பொய்யானது,மோசடியானது.எந்த பிரச்னையானாலும் இரு தரப்பு குறை நிறைகளை சீர்தூக்கி பார்த்து யார் பக்கம் நியாயம் உள்ளது அநீதி இழைத்தவர் யார் அநீதி இழைக்கப்பட்டவர் யார் என முடிவுக்கு வந்து அதன்படி கருத்துரைப்பதே நேர்மையானது குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல், நரசிம்-முல்லை மோதலை பரிசீலிப்பவர் எவரும் வரம்பு மீறியது யார் என எளிதாக சொல்லமுடியும் நர்சிம்மின் பேட்டியை வஞ்சப்புகழ்ச்சியாக விமர்சித்தார் முல்லை.பதிலுக்கு நரசிம் தனது பேட்டியின் மாண்பை எடுத்தோதி இருக்கலாம்.அல்லது எனது பேட்டியை விமர்சிக்க நீ யார் பதிவுலகிற்கு நீ என்ன நாட்டாமையா.மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என்பது போல பொத்தாம்பொதுவாக ஒரு பதிலை சொல்லியிருக்கலாம் மாறாக நரசிம் புனைவு என்ற பெயரில் முல்லை மீது அவதூறு வசவுகளை பொழிந்துள்ளார்.இத்தகைய அவதூறுகளை சொல்லவே நாக்கூசும் வசவுகளை ஒரு நாகரீக சமூகம் அனுமதிக்க முடியுமா.ஆக இந்த பிரச்னையில் வரம்பு மீறியது யார்.அநீதி இழைத்தவர் யார். நர்சிம்தானே. எனவே இந்த பிரச்னையில் நடுநிலைமை என்பதே நரசிம்மை மறைமுகமாக ஆதரிப்பதாகவே இருக்கும்.அநீதி இழைக்கப்பட்ட முல்லையை ஆதரிப்பதே,அவருக்கு நியாயம் கிடைக்க பாடுபடுவதே நேர்மையானதாக இருக்கமுடியும்.
ஒருவரின் தவறுகளை சுட்டிகாட்ட பயன்படுத்தும் வார்த்தை நடுநிலமையாக இருந்தால், நீங்கள் சொல்ல வரும் விஷயம் அனைவராலும் எளிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். நீங்கள் சொல்ல வரும் விசயமும் அதன் மைய்யக்கருதை விட்டு விலகாமல் முழுமை அடையும்.
நர்சிம்’இன் ‘புனைவு’ ஆணாதிக்க, (பார்பனிய) சாதியக் கழிசடை
கற்பிதங்களால் தொய்ந்துபோயுள்ள ஒன்று. இந்த அடாவடித்தனத்தை
வினவு சரியாக அடையாளம் கண்டுள்ளதாகவே நினைக்கிறேன். மாற்றுக்
கருத்துக்கள் சில இருந்தாலும் இந்த இடுகைக்கு பொதுவான ஆதரவை
அளிக்கிறேன். நிற்க.
ஆனால், வினவு மற்றும் பிறரின் (அசுரன் உள்ளிட்டோர்)
திரும்பத் திரும்ப பயன்படுத்தியுள்ள ‘வன்புணர்ச்சி’, rape,
‘பாலியல் வன்முறை’ போன்ற சொற்பதங்கள் எவ்வளவு சரி என்று
தெரியவில்லை. இது ஒரு வகையில் நரசிம்’இன் எழுத்துக்களின்
மூர்கதனத்தை காட்டும் அதே வேளையில் ‘பாதிக்கப் பட்டவர்’ அதை
எப்படி பார்கிறார் என்பதற்கு மூன்றாமவராகிய நீங்கள் (அத்துமீறி) சாயம்
பூசுவதுபோல் ஆகும். (கவனிக்க: இந்த விஷயத்தில்
சந்தனமுல்லைக்கு ஆதரவு அளிப்பதே — அவரே கேட்காமல் — ஒரு
வகை அத்துமீறல் என்ற அதிகப்படியான பின்
நவீனத்துவ/அமைப்பியல்வாத (இத்யாதி) நிலைப்பாட்டை நான்
முன்வைக்கவில்லை). உங்கள் மேற்சொன்ன சொற்பிரயோகம் பற்றிப் பேச நிறைய இருந்தாலும், இப்பதிவின் நோக்கத்தை திசை திருப்பாமல் இருக்கும் பொருட்டு இப்போதைக்கு இத்தோடு விடுவோம்.
அதே போல நர்சிம்’இன் ஒவ்வொரு செயலுக்கும் சாதியக் காரணங்களை சுட்டுவது
(அது சரியான அனுமானமாக இருக்கக்கூடும் என்றாலும்) உங்களின்
மற்ற, அழுத்தமான வாதங்களை நீர்த்துப்போகச் செய்யக்கூடும். வெளிப்படையான ஆதாரங்கள் பல இருக்கும்பொழுது அதையும் மீறி psycholanalytic speculation செய்வது தேவையற்றது என்பதே என் கருத்து (even though there is circumtantial evidence).
பின் குறிப்பு: நான் தமிழ் வலைப்பதிவுகள் அதிகம் படிப்பதில்லை; இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பலரைப்/பலவற்றைப் பற்றி அதிகம் தெரியாது.
பல நண்பர்கள் சுட்டி காட்டியும் தோழர்கள் வன் புணர்ச்சி மற்றும் ரேப் போன்ற வார்த்தைகளை நீக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.
டியர் நரசிம்
இரண்டு நாட்களாக நன் இட்ட பின்னூட்டங்கள், உங்களுக்கு வலி ஏற்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
அன்புடன்
ராம்ஜி_யாஹூ
இது அழுக்கைப் பற்றிய வேண்டுகோள்தான் ஆனால் அழுக்கான வேண்டுகோளல்ல
http://senkodi.wordpress.com/2010/06/01/santhanamullai-narsim/
செங்கொடி
கடும் கண்டணங்கள், நர்சிம்மின் பதிவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அதையும் ஆதரிக்க சிலர் இருக்கிறார்கள் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை!
இன்று தான் முழு விவரமும் தெரிந்தது. எனது கண்டனத்தை பதிகிறேன்
நான் இலங்கையைச் சேர்ந்தவன். வினவுவின் வாசகன் என்பதனை விட புதிய ஜனநாயகம் புதிய கலாசாரம் என்பவற்றின் வாசகன் என்பது தான் பொருந்தும். இன்னும் மனஓசை கேடயம் என்பவற்றையும் வாசித்திருக்கிறேன். என்னுடைய வளர்ச்சியில் இவை எல்லாவற்றிற்;கும் ஒரு பங்கிருக்கிறது என்பது உண்மை.
எனது அண்மைக்கால அவதானிப்புக்கள் சில கேள்விகளை என்னுள் எழுப்பி விட்டுள்ளன. லீனா மணிமேகலை விவகாரத்தில் லீனா இலங்கை நண்பரை ஏமாற்றிய விடயத்தை முன்னரே நான் அறிந்திருந்தேன். ஆக, லீனா மீது எனக்குத் தனிப்பட்ட நல்ல அபிப்பிராயம் எல்லாம் கிடையாது. எனவே வினவு எழுதியபோதும் அது நியாயமென்ற எண்ணமே என்னிடம் ஓங்கியிருந்தது. எனினும் அதில் வினவுக்கு ஆதரவாகப் பின்னூட்டமிட்டோர் எழுதியவைகள் சற்றுத் துணுக்குறச் செய்தது. நாம் எங்கோ தவறிழைக்கிறோம் என்று அது திரும்பத் திரும்ப உறைத்துக் கொண்டே இருந்தது. இருக்கிறது. இப்போது சந்தனமுல்லை என்ற பெண் பதிவர் குறித்து நர்சிம் எழுதியதையும் அது குறித்து வினவு எழுதியதையும் அதன் பின்னரான பின்னூட்டங்களையும் வாசிக்கும் போது நாம் தவறிழைத்து வருகிறோம் என்பது எனக்கு இன்னும் உறுதியாகிறது.
வினவு குறிப்பிடுவது போல பெண்கள் பொதுவெளியில் எழுத வருவதே குறைவு. அதுவும் சமூகம் சார்ந்த விடயங்களை எழுத வருவது என்பது அரிதிலும் அரிது. அவ்வாறு பொது வெளிநோக்கி வருபவர்களை துரத்தியடிப்பதாய் நமது உலகு இருக்கக் கூடாது. இந்த அடிப்படையில் வினவுவில் ஈழ அனுபவங்கள் எழுதியவருக்கு எதிராக ரஜாகரன் வைத்த வரட்டு விமர்சனங்களை நான் நிராகரித்திருந்ததோடு அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஆதரவும் தெரிவித்திருந்தேன.; – (அவருடைய பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்.)
பிராமணிய சமூகமென்றாலென்ன, ஒடுக்கப்படும் தலித் சமூகமென்றாலென்ன பெண்கள் பொதுவெளியில் வருவதை அவை பெருமளவில் அனுமதிப்பதில்லை.
சந்தனமுல்லையை பொதுவெளியில் இருந்து துரத்த நர்சிம் பாவித்திருப்பது இழிவான பாலியல் வக்கிரம் கொண்ட ஒரு வன்மத்துடனான எழுத்தை. ஆணாதிக்க அகங்காரம் அதில் விளைந்து கிடக்கிறது. பெண்ணை பாலியல் ரீதியாக எவ்வளவு நிந்தனை செய்யமுடியுமோ அவ்வளவு நிந்தனை செய்கிறது அவ்வெழுத்து.
அந்த வகையில் நர்சிம் நமது கண்டனத்துக்குரியவராகிறார்.
ஆனால், லீனா மணிமேகலை என்ற பிராமணிய சமூகத்துள் இருந்து பொது வெளிக்கு வந்த பெண்ணை நாம் என்ன வார்த்தைகள் கொண்டு திட்டியிருக்கிறோம். (மிகத் தெளிவாக லீனாவின் தவறுகளை இங்கு நியாயப்படுத்துவதோ அவருக்கு வக்காலத்து வாங்குவதோ எனது நோக்கம் இல்லை. எனது நோக்கமெல்லாம் எம்மை நாமே சுயபரிசோதனை செய்வது தான். அதற்காகக் கேள்விகளை எழுப்புவது தான்.) நாம் உண்மையில் விமர்சனம் என்ற பெயரி;ல் செய்தது விமர்சனம் தானா? அதுவும் பின்னூட்டமிட்ட பலரது பின்னூட்டத்தை திரும்பப் படிக்கும் போது நர்சிம்இல் ஏற்படும் அதேகோபம் அவர்களிலும் ஏற்படுகிறது. ஆனால் சற்று நிதானித்து யோசித்தால் அவர்களைக் கோபப்பட முடியவில்லை. ஏனென்றால் அது அவர்களின் தவறல்ல. பொதுவெளியில் இயங்கும் எல்லாக் கட்சிகளும் எல்லா அமைப்புக்களும் மக்களுடைய பலவீனத்தின் மீதும், சமூகத்தில் மேலாட்சி செய்யும் கருத்தின் மீதும் ஏறியே தங்களுடைய சவாரியைச் செய்து வருகின்றன. இடதுசாரியம் என்ற பெயரில் நாமும் அதனையே செய்கிறோமா என்ற கேள்வி தான் எனக்கு எழுந்தது.
மக்களிடையே பார்ப்பனியத்திற்கு எதிரான உணர்வு இருக்கிறது. அதேயளவுக்கு பெண்கள் பொதுவெளிக்கு வருவதற்கு எதிரான உணர்வும் ஊட்டப்பட்டு இருக்கிறது. இது இரண்டையும் கலந்து தான் லீனாவுக்கு எதிரான எதிர்வினை ஆற்றப்பட்டிருக்கிறது. ஆக்கபூர்வமான விமர்சனமாக அல்ல.
பின்னூட்டமிட்டோர் அவ்வாறு எழுதும் போது அதனை வினவு வழிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. வலதுசாரிகளின் மலினத்துவ அரசியல் உத்திக்குள் வினவுவும் விழுந்து விட்டதாகவே நான் உணர்கிறேன்.
இதே மலினத்துவ உத்தியைத் தான் ஷோபாசக்தி முதலான புலம் பெயர் தலித் பிரமுகர்களும் கையாண்டிருக்கிறார்கள்.
யாழ். நூலகம் இரண்டு முறை தீயிடப்பட்டது. சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் அவசர அவசரமாக அது வெள்ளையடிக்கப்பட்டது. தமிழ் புத்திஜீவிகளும் ஆர்வலர்களும் அதன் ஒரு பகுதியையாவது தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றின் ஞாபகார்த்தமாக அப்படியே பேண வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அவர்களுடைய கோரிக்கையை எல்லாம் முற்றாகப் புறக்கணித்து விட்டு அதனை வெள்ளையடித்து திறக்க முனைந்தது அரசாங்கம். அதற்கு அரசாங்கத்தின் நிர்வாக அலகான யாழ் மாநகரசபையையும் அதிலிருந்த ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த செல்லன் கந்தையன் என்ற பிரமுகர் ஒருவரையும் பயன்படுத்தி திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தது. ஆனால் புத்திஜீவிகளும் ஆர்வலர்களும் மேற்கொண்ட பிரச்சாரம் காரணமாக மக்கள் அதன் திறப்பு விழாவை நடாத்த விடாமல் எதிர்ப்புத் தெரிவித்தனர். உடனே ஷோபாசக்தி போன்ற தலித் பிரமுகர்கள் செல்லன் கந்தையன் என்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரைக் கொண்டு யாழ். நூலகத்தைத் திறக்க உயர்சாதியினர் விரும்பாததால் தான் அதனைத் திறக்க விடாது தடுக்கின்றனர் என்ற மலினத்துவமான பிரச்சாரத்தை உண்மையை மறைத்து கட்டவிழ்த்து கட்டவிழ்த்து விட்டனர்.
உயர்சாதியினருக்கு எதிரான ஒரு மனநிலையை தமது தவறான நோக்குக்காகப் பயன்படுத்தி இருக்கின்றனர். இதேபோல் தான் பார்ப்பனியத்திற்கு எதிரான ஒரு மனநிலையை பொதுப் புத்தியில் உள்ளுறைந்து போயுள்ள பெண்களுக்கெதிரான உணர்வுடன் கலந்து லீனாவுக்கு எதிராக பயன் படுத்தி இருக்கிறோமா என்று மீளவும் யோசிக்கத் தூண்டுகிறது.
மார்க்சிய மூலவர்களை லீனா பரிகசித்து விட்டார் என்பதற்காக நாம் அப்படி எல்லாம் எழுதலாம் என்றால் மதத்தை அவமதித்ததற்காக பெண்களைக் கல்லாலடிக்கும் வழக்கத்தைக் கண்டிக்கும் தார்மீக தகுதியை நாம் இழந்து விடுவோம்.
மீளவும் தயவு செய்து லீனாவின் தவறுகளை, பதிலளிக்கிறேன் பேர்வழி என்று யாரும் பட்டியலிட வேண்டாம்.
என்னுடைய அடிப்படையான கேள்வியெல்லாம் லீனா பற்றியதல்ல. நமது பார்வை மற்றும் அணுகுமுறை பற்றியதே. இன்னும் அழுத்திச் சொல்லப் போனால் இடதுசாரித்துவப் பண்பாடு பற்றியதே. லீனாவுக்குப் பதிலாக நாளை வேறொருவர் வரலாம். அவரையும் இதே செக்ஸிஸ்ட் மொழியால் தான் அணுகப் போகிறோமா? இதே வன்முறை கொண்டு தான் எதிர் கொள்ளப் போகிறோமா?
அன்பின் விஸ்வன்,
நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. வினவில் நீங்கள் பின்னூட்டங்களில் பேசியிருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனது கவனக்குறைவுகளினால் அவற்றை வாசித்துமிருக்கவில்லை. ஆனால் உங்களின் இந்தப் பின்னூட்டமும் அதில் லீனா விசயத்தில் வினவு இழைத்த தவறுகளைச் சுட்டிக்காட்டி நீங்கள் பேசியிருக்கும் விதமும் உங்களுக்கு ஒரு வணக்கம் சொல்ல வைக்கிறது, எவ்வளவோ பேர் சொல்லியும் தான் லீனா மீது அள்ளியிறைத்த வரம்பு மீறிய வசைகளை நியாயப்படுத்தியே வந்துகொண்டிருந்த நண்பர்களோடு அது சம்பந்தமான உரையாடல் முயற்சியைக்கூட மேற்கொள்ளவைக்கும் ஆர்வத்திலிருந்து பின்னிழுத்து விட்டிருந்தது. அதை மட்டும் மடலொன்றில் சுட்டியிருந்தேன்.
இன்றைக்குப் பதிவுலகத்தில் ஒரு ஆண்வன்மத்திற்கு எதிராக அறச்சீற்றத்தோடு எழுந்து நிற்கிற வினவும் அதன் தோழர்களும் செய்திருக்கும் காரியம் பெரியது. வழக்கமாகப் பதிவுலக வரலாற்றில் பெண்கள் மீது தொடுக்கப்படும் ஆண்திமிர் நையாண்டிகள் கொஞ்சம் சுதந்திரமாகத்தான் வலம் வந்துகொண்டிருந்தன. பொறுக்க முடியாத மனமும், எதிர்க்கிற வலிமையும் உள்ளவர்கள் அவர்தம் வழிகளில் கண்டனங்களைப் பதிவதோடு அவை அமுங்கி ஆனால் வேறுவழிகளில், வடிவங்களில் விகாரமாய்ப் பல்லிழுத்து நிற்கும். இவற்றையெல்லாம் தம் துணிச்சலால் புறக்கணித்துக் கடக்கிற பெண்களே இங்கு சமூகம்சார்ந்த விடயங்களில் உரையாடலில் பங்குபெறுகிறார்கள்.
ஆனால் இன்றைய நிலமை கடந்தகாலங்களை விட மேலாக நம்பிக்கையளிக்கிறது. இந்த நம்பிக்கையை வழங்கியதில் பெரும்பங்கு வினவின் இந்த இடுகைக்கு உண்டு.
சந்தன முல்லைமீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலும்கூட ஒப்புக்குச் சப்பாணிக் கண்டனங்களோடோ ரெடிமேட் கருணை வழங்கள்களோடோ முடிந்து போயிருக்கக்கூடிய அல்லது முடித்துவிடப்படக்கூடிய ஒன்றாகப் போயிருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் வினவு இதைக் கையிலெடுத்துத் தீர்க்கமாகவும், துணிச்சலோடும் தவறு செய்திருபவர்களை, அதன் பின்னான மனநிலையைப் படம்பிடித்துக் காட்டியது இப்போது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக இத்தகைய தவறுகளுக்குக் கண்டனங்கள் மட்டும் போதாது என வேறு போராட்ட முறைகளையும் கையிலெடுக்க வேண்டும் என வினவு முன்வைத்தது இன்னும் விழிப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சி. அதுமட்டுமல்லாமல் வினவு நண்பர்கள் இதை அதிகமான கவனத்துக்கும் உட்படுத்தியிருப்பது நாளை இதுபோன்ற தவறுகளின் விகிதத்தைக் குறைக்கும். வருத்தப்பட்டாலும்கூட வாயைத் திறந்து இம்மாதிரி வன்முறைகளில் கருத்துச் சொல்லாத கூட்டமொன்றைக்கூட முடிந்தவரையில் அங்கங்கே உரையாடிப் பேசவும் வைத்துள்ளது இவ்விடுகை. செய்யப்பட்ட தவறைத் திரும்பத் திரும்ப நியாயப்படுத்தியும் பேசிக்கொண்டிருந்தவர்கள் வருத்தம் தெரிவிப்பதோ அல்லது மன்னிப்புச் சொல்வதோகூட இவ்விடுகையின் விளைவுகளில் ஒன்றாகவும் இருக்கலாம். .
அதேசமயம் இப்போதேனும் வினவின் நியாயமான போராட்டங்களைப் புரிந்துகொள்கிற, அதில் கலந்துகொள்ள விரும்புகிற பலரின் மனநிலையை உள்வாங்கி ஒரு நிமிடம் முடிந்தால் வினவு யோசித்துப் பார்க்கலாம் “லீனாவை விமர்சனம் மட்டும்தான் செய்தோமோ, அதில் ஆண்மொழித்திமிர் இல்லவே இல்லையா என”. இன்னொருவர் செய்த தவறுக்குத் தண்டனை தரத் துடிக்கிற நாம் இன்னொரு இடத்தில் அதே தவறைச் செய்கிறோம் என்பது வெறுமனே தின்று செத்து மடிகிற ஒரு மனித உயிருக்கு இயல்பாயிருக்கலாம். ஆனால் தேவைப்பட்டால் ஒரு அநீதிக்கெதிராக உயிரையும் தரத் தயாராக இருக்கிறவர்களுக்கும் அதே இயல்பென்றால் எங்கே போய் முட்டிக்கொள்வது?
இதுவரை தெரியாதிருந்த தோழர்களின் வசவுகளில் ஒன்றை இன்று தெரிந்துகொண்டேன் அ.மார்க்ஸையும், சுகுமாரனையும் பார்த்துப் பெண் தோழர்கள் சொல்லிவிட்டு வந்தார்களாமே
‘லீனாகூடப் போய்ப் படுங்கடா” என்று. துக்கம் தொண்டையை அடைத்தது….வேறென்ன சொல்ல?
மீண்டும் நன்றி விஸ்வன் உங்களுக்கு.
செல்வநாயகி, வினவு மேல் லீனா தொடர்பான விமரிசனங்கள் எனக்கும் உண்டு. லீனா எழுதிய ‘கலக’ மொழியிலேயே ஏன் தோழர்கள் பதிலளித்தனர் என்பதுதான் என் விமரிசனம். ஆனால் கூட்டத்தைப்பற்றிய உங்கள் குறிப்பு தவறானது. அப்படி நடக்கவில்லை. அது அ.மா கோஷ்டியினால் தெரிந்தே பேசப்படும் பொய். நியாயம் கேட்ட பெண்களை அதிமுக பிரமுகருடன் தொடர்பு வைத்திருப்பவர் என்று அவதூறு பேசும் வாய் சொல்லும் இதை எப்படி உங்களால் நம்ப முடிகிறது?
லீனா பிரச்சனைக்கும் இதற்குமான தொடர்பு முல்லையும் லீனாவும் பெண் என்பதுதான் என நீங்கள் நினைத்தால் அது எனக்கு ஏமாற்றமே. ஏனெனில் நாளை ஜெயலிலிதாவைக்கூட வினவால் விமர்சிக்க முடியாமல் போய்விடும்.
அல்கோ,
நான் உண்மையில் இதற்கு உங்களிடமிருந்தோ, வேறு தோழர்களிடமோ பதிலை எதிர்பார்த்தோ பிறகு அதற்கும் பதிலாக நான் எதைச் சொல்ல வருகிறேன் என மீண்டும் எழுதிச் சொல்லவோ நினைத்து என் பின்னூட்டத்தை எழுதவில்லை. ஏனென்றால் அதை ஏற்கனவே எத்தனையோ பேர் சொல்லியிருந்தும் அது உதாசீனப்படுத்தப்பட்டு விட்டதெனத் தெரியும். சரியான நேரத்தில் சரியான இடத்தில் மீண்டும் அதைச் சுட்டிக்காட்ட நினைத்த விஸ்வனுக்கு நன்றி சொல்லத் தோன்றியது, எனவே எழுதினேன்.
அவர்கள் சொல்வது பொய், உங்கள் தோழர்கள் கூட்டத்தில் அப்படிச் செய்யவில்லை என்றால் நல்லதுதான். ஆனால் அவை இல்லாமலுமே எழுத்தால் வினவு மூலம் லீனா மேல் எறியப்பட்ட வரம்பு மீறிய வசைகள் மட்டுமே எனினும் எனது கடைசிப் பத்திக் கருத்துக்களில் எனக்கு மாற்றமில்லை.
தோழர் விஸ்வனின் கருத்து முக்கியமானது என்றே கருதுகிறேன். வர்க்க கோபம் என்ற பெயரில் பலர் லீனா விவகாரத்தில் வெளியிட்டவை அவருடைய கவிதை என்ற கிறுக்கலுக்கு எதிரான தார்மீக கோபத்தை நீர்த்து போக செய்தது. அ. மார்க்ஸ் அன்று பேசிக் கொண்டிருந்த போது, இவர்கள் என்ன புரிந்து கொண்டு ஓடி, ஓடி சென்று குறுக்கிடுகிறார்கள் என்ற எண்ணமே ஏற்பட்டது.
உங்களுக்கு புரிந்த அளவுக்கு அவர்களுக்கு புரியவில்லை என்கிறீர்கள், அது தானே உங்கள் கேள்வி ?
பின் நக்கியவாதிகள் மன்னிக்கவும், நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள் கேளுங்கள்..
லீனா = சந்தன முல்லை
நர்சிம் = வினவு. (இந்த equal to கணக்கெல்லாம் அறிவிலிகளுக்கே, சாரி அறிவாளிகளுக்கே வர்ர விசயம் போல, நமக்கு அதெல்லாம் வராது!)
வினவு சொன்னதோ, லீனாவும் நர்சிம்மும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!
நானும் நீயும் ஒன்றென்று லீனா ஒத்துகொண்டாலும், ஒத்துக்கொள்ளாவிட்டாலும், முல்லை ஒத்துக்கொள்ளப்போவதில்லை!
நானும் நீயும் ஒன்றென்று பொறுக்கி நர்சிம் ஒத்துகொண்டாலும், ஒத்துக்கொள்ளாவிட்டாலும், வினவு ஒத்துக்கொள்ளப்போவதில்லை!
அட வெண்ணை வெட்டிகளா…. அப்ப, லீனா எழுதியதும் நோக்கமும் முல்லை எழுதியதும் நோக்கமும் ஒன்ன்றாகுமா??
இவங்க நர்சிம்மை வன்மையா கண்டிக்குறானுங்களாம்!!! அதே சமயம் லீனாவும் முல்லையும் ஒன்னாம்.
வினவை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு நீங்கள் நர்சிம் தனது பொறுக்கித்தனத்துக்கு நியாயம் கற்பிக்கும், காரணமாக கூறும் முல்லையின் பகடியை லீனாவின் அவதூறு கழிதலுடன் ஒப்பிட்டு, நர்சிம்மிற்க்கு மறைமுக ஆதரவளிக்கிறீர்கள். இதை விட நீங்கள் நர்சிம் செயலை நேரடியாகவே ஆதரித்திருக்கலாம்! பின் நவீனத்துவ லும்பன்கள் பார்பனிய பொறுக்கிகள் கூட்டணி மிக நன்றாக இருந்திருக்கும்!
அ.மார்க்ஸ், லீனா கும்பல் அங்கு நடந்த அனைத்தையும் வீடியோ எடுத்தார்களே, ஒரு லூஸு தோழர்களை குளோஸ் அப்ப்பில் கூட போய் படமெடுத்ததே! வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பின் என்ன வேண்டுமானாலும் எழுதலாமே??? என்ன தயக்கம்! ஆதாரம் வெளியிட்டால் புனைவெழுத முடியாதோ? லீனா விவகாரத்தில் தோழர்கள் கோவத்துடன் நடந்தது உண்மை தான்! அப்படி தான் நடந்து கொள்வார்கள்!!! ஆனால் அதையே திரித்து அவதூறு கிளப்பினால்….. ஆதாரத்தை கேட்போம்! அதையும் அம்பலப்படுத்துவோம்!!!
உங்களுக்கு தான் வரைமுறை இல்லையே, பின் ஏன் எங்களுக்கு வரைமுறையை திணிக்கிறீர்கள்? கட்டற்ற – வரைமுறையற்ற சுதந்திரத்தை கோருபவர்கள், எதிராளிகளை வரைமுறைக்குள் தள்ள எத்தனிப்பது நல்ல கூத்து தான்!
அய்யோ அய்யோ! முன்-பின் நக்கியத்துவமே சாட்சி!!!
சூப்பர் லிங்க்ஸ்,
ம.க.இ.க தோழர்களை சிறுமைப்படுத்தும் நோக்கில் நான் எழுதவில்லை. அன்றைய கூட்டத்திற்கு 40 பேர் தோழர்கள் தேவையில்லை என்பது என் கருத்து. ‘கூட்டம் முடிந்த பின்னர் வாய்ப்பு தருகிறோம்’ என்று கூறப்பட்ட பின்னரும் குறுக்கீடுகள் அவசியமற்றவை. தோழர்கள் வெளியேறிய பின்னர் அங்கு ம.க,இ,கவிற்கு எதிரான பேச்சுகள் லீனாவின் எழுத்தில் இருந்ததை விட அதிகம். அதனை எதிர்கொள்ள யாரும் இருக்கவில்லை. எனவே எனது விமர்சனம் floor strategy மற்றும் அரசியலற்ற வசவுகள் பற்றியது மட்டும். இது குறித்து மூத்த தோழர் ஒருவரிடமும் உரையாடினேன். அதன் பிறகும், அமைப்புக்கு ஆதரவாக எத்தனை முறை சிந்தித்துப் பார்த்தும் முடியாத ஒரு முக சுளிப்பே என்னிடம் இப்போதும் நிறைந்துள்ளது.
இங்கே அக்காகி என்பவன் கேள்வி எழுப்பியவரின் நோக்கத்தையும், நிலைப்பாட்டையும் புரிந்து கொள்ளாமல் [அல்லது, புரிந்து கொள்ளாதது மாதிரி நடித்து] என்னையும் பின் நவீனத்துவர் லிஸ்டில் சேர்த்து வெண்ணை, முன்,பின் நக்கி என்றெல்லாம் வசைபாடியுள்ளான். இந்த அக்காகி யாரென்று ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. தனிப்பட்ட பகைமையை இப்படி சொரிந்து தீர்த்துள்ளான். தோழர்கள் சிலர் முரண்படும் நேரம் பார்த்து தாம் அடை காத்து வைத்திருக்கும் வெறுப்பை உமிழும் சிலரின் அயோக்கியத்தனம் பற்றி மாவோ எழுதியிருப்பதை படித்தது நினைவு. இங்கே இந்த நபர் செய்திருப்பதும் அதுவே. என்னை வெளியே நிறுத்தி, வினவு மீது விசுவாச நடிப்பைக் காட்டும் தந்திரம். அக்காகி எனக்கு பதிலாக தந்துள்ளவை லும்பினியிலும், சுகுணா திவாகர் தளத்திலும் சென்று பேசப்பட வேண்டியவை. அதற்கு இந்த ஆளுக்கு துப்பு இருக்கிறதா? ஆதரவு சக்திகளை இனம் காண தெரியாத இவன் எப்படி ம.க.இ.க தோழனாக இருக்க முடியும்?
சுகதேவ்,
அது உங்களை குறிவைத்து எழுதப்பட்டதல்ல…
உங்களின் பின்னூட்டத்திற்க்கு கீழ் (பதிலைப்போல) நான் அதை போட்டதால் உங்களை குறிவைத்ததை போல் புரிந்து கொண்டிருப்பீர்களேயானால், மன்னித்துவிடுங்கள்!
நான் தான் தவறு செய்துவிட்டேன். அதை தனி பின்னூட்டமாக இட்டிருக்கவேண்டும்!
மேலும் லும்பினியில் பின்னூட்ட வசதியே இல்லை
என்பதை அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
சுகுணாவின் தளத்தில் பின்னூட்டமிட்டு அது
இன்னும் வெளிவரவில்லை! இதையும் வினவில்
ஒரு பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கிறேன்!
/////ஆதரவு சக்திகளை இனம் காண தெரியாத இவன் எப்படி ம.க.இ.க தோழனாக இருக்க முடியும்?//////////////
இதற்கு நான் சுயவிமர்சனம் ஏற்கிறேன்.
அப்படியா… பார்ப்பனிய எதிர்ப்பும் ஆணாதிக்கமும் சமூகத்தில் பொதுப்புத்தியில்தான் நிலவுகின்றதா… அல்லது தங்களுக்கு சம்பந்தமில்லாத விசயங்களில் சரியாக சொன்னால் தன்னை தவிர்த்து விட்டு பேசும் விசயங்களில் கருத்து சொல்லும் மனிதர்களின் மூளையில் நிலவுகின்றதா என்பதை கூறுங்கள் ஐயா
பதிவுலகம் பற்றிய என் புரிதலும், எண்ணமும் கடந்த ஓரிரு நாட்களாக கேள்விக்குள்ளாகியிருக்கிறது. பதில் தான் இன்னமும் கிடைக்கவில்லை. சந்தனமுல்லைக்கு எல்லோரும் ஆதரவளித்த போதும் பதிவுலகம் ஏதோ இரண்டு பட்டது போல் தோற்றமளிக்கிறது. நிற்க, “பூக்காரி” என்ற பதிவை/புனைவை முதன்முதல் படித்தபோது கோபம் கலந்த அதிர்ச்சி தான் என்னிடமிருந்தது. சரி, கதையை எழுதியவர் கடைசியில் டிஸ்கி ஏதாவது போட்டு தன் அதிர்ச்சியை, கருத்தை (அப்பாவித்தனமாய் நான் அதை வெறும் கதை என்று நம்பியதால்) பதிந்திருப்பார் என்று தேடினேன், காணவில்லை. ஆனால், அது தனிநபர் தாக்குதல் என்று தமிழ்மணத்தில் சில பேரின் பதிவை படித்தபோது தான் புரிந்தது. வினவின் பதிவை படித்தபோது பிரச்சனையின் நதிமூலம், ரிஷிமூலம் என்று சொல்வார்களே, அது புரிந்தது போலுள்ளது. பதிவுலகம் தனக்குள் இவ்வளவு ரகசியங்களை, அசிங்கங்களை ஒளித்து வைத்திருக்கிறதா என்று மனம் கசந்துபோகவும் செய்கிறது.
சந்தனமுல்லை மீதான இந்த வக்கிரப்பதிவை கண்டிப்பதோடு, பெண் பதிவர்கள் மீது இவ்வாறான தனிநபர் தாக்குதல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க வேண்டும் என்று பதிந்துகொள்கிறேன். [Edited]
பார்பன பாம்பு எங்கு தலை தூக்கினாலும் நசுக்கப்பட வேண்டியவை.
நர்சிம் என்னும் திமிர் பிடித்த மிருகத்தின் செயலை நான் கண்டிக்கிறேன்.என்ன தான் எதிர் வினை என்று சப்பைக் கட்டு கட்டினாலும்,அதில் இருக்கும் வார்த்தைப் பிரயோகமும்,திமிரும்,அடக்குமுறை வெறியும் அசிங்கமானது.கண்டிக்கத்தக்கது.
நர்சிம் தண்டிக்கப் பட வேண்டியவன்.அவனை எதிர்த்து போலீஸ் கம்ப்ளைன்ட் செய்யப்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன் .
வால் பையன் சொன்னது போல நர்சிம்மின் பதிவில் அய்யனார் என்பவர் சொன்னதை ஆதரிக்கிறேன்…
“சுய அரிப்பின் காரணமாக கொள்ளிக்கட்டையை எடுத்து சொரிந்து கொள்ளுவது இது தான்….”
[…] […]
பார்ப்பான், பார்ப்பனியம் என்று காலங்காலமாக நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோமே தவிர. அவர்களுக்கு எதிராக இதுவரை ஒரு துருமைபைக்கூட அசைக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.
கோயிலாக இருந்தாலும், கார்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும், ஊடகமாக இருந்தாலும் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள அவர்கள் எந்த இழைசெயலையும் செய்ய எப்போதுமே ஆயத்தமாகவே இருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு எதிராக அனைத்து நிலைகளிலும் எதிர்வினையாற்றவேண்டியது மானமுள்ளவகளின் கடமை.
கரிகாலன்
says: June 2, 2010 at 12:50 pm
பார்ப்பான், பார்ப்பனியம் என்று காலங்காலமாக நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோமே தவிர. அவர்களுக்கு எதிராக இதுவரை ஒரு துருமைபைக்கூட அசைக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.
கோயிலாக இருந்தாலும், கார்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும், ஊடகமாக இருந்தாலும் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள அவர்கள் எந்த இழிசெயலையும் செய்ய எப்போதுமே ஆயத்தமாகவே இருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு எதிராக அனைத்து நிலைகளிலும் எதிர்வினையாற்றவேண்டியது மானமுள்ளவகளின் கடமை.
[…] […]
வினவு தோழர்களுக்கு நண்பர் சுகுணா அர சீற்றதுடன் புதிய பதிவிட்டு இருக்கிறார். அதற்கு வினவின் நேர்மையான பதிலை எதிபார்க்கிறேன். தோழமையுடன்
அந்த அல்லக்கைக்கு என்ன நேர்மையா பதில் சொல்லனும் ?
சொல்ல வேண்டியதை எல்லாம் இங்கு பின்னூட்டத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது.
மிதக்கும்வெளி அய்யாவுக்கு அது யார் எழுதினது இது யார் எழுதினது என்று தோண்டித்துருவி கிசுகிசு பாணியில் பேசுவது என்றால் ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறது. அவருடைய அரிப்புக்கு எல்லாம் நாங்க சொறிந்து விட முடியாது அரிப்பெடுக்கும் இடத்தை அந்தோணிச் சாமி மார்க்சிடம் போய் காட்டச்சொல்லுங்கள்.
அன்பு தோழரே எனக்கு பதிவுலக அரசியல் பற்றி அதிகமா தெரியாது.
நான் ஒரு பார்வையாளன் அவ்வளவே. ஆனால் தங்களுடைய பதிலில் உச்ச கட்ட கோபம் தெரிகிறது. தோழமையுடன்
சுகுணா எழுதியதில் பல விஷயங்கள் தெளிவுபடுத்தப்படவும் தெரிந்து கொள்ளவும் உள்ளன. இதற்கு உங்கள் பதில் அவசியம்.
இதற்கு உங்கள் பதில் அவசியம்
வினவு பதில் சொல்லும் என்ற அசட்டு நம்பிக்கை உங்களுக்கு சார். எனக்கு அந்த நம்பிக்கை சுத்தமா இல்ல டாக்டர் சார். பாருங்கலேன் இனிமே வர்ற கமென்ட் எல்லாம் சுகுணா திவாகரை திட்டி தான் வரும். நர்சிம்க்கு இனி ரெண்டாவது இடம் தான்.
பதில் வந்துவிட்டது ஷாஜஹான்.
டாக்டரை வழிமொழிகிறேன்! விவாதத்தின் மையம், ஆணாதிக்க, பார்ப்பனிய திமிர் என்பதிலிருந்து, வினவின் நேர்மையை வினவுதாக மாறுகிறது. 🙁 வினவு தோழர்கள் விரைந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்.
ஆம் டாக்டர் வினவு தெளிவு படுத்த வேண்டும்
I fully agree with Vinau & asuran
அசந்து அசந்து அசந்து அசந்து asdasd
விவாதங்கள் மையக் கருத்தில் இருந்து திசைமாறிக் கொண்டிருக்கின்றன. அல்லது திசைமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தோழர் சுகுணா திவாகர் கேள்வியெழுப்புகிறார். நல்லது கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.
சோபாசக்தி சுகுணா திவாகருக்கு 1 லட்சம் கொடுத்ததாக செய்தி கிடைத்தபோது அதை ஆதாரமற்ற செய்தியாக அலட்சியப்படுத்தினோம். ஆனால் நம்பகமான இடத்தில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் அதை பொதுவில் வைக்க முடியுமா?
சோபா சக்தியோ புலம்புகிறார் நான் ஏன் தொழிலாளியை அடிக்கப்போகிறேன். நானே பிரான்சில் தட்டுக்கழுவும் தொழிலாளி. கடன்உடன் பட்டு இந்தியாவுக்கு வருகிறேன் என்று புலம்புகிறார். ஆனால் மாதம் ஒரு நாட்டுக்குச் சென்று வருபவர் பொதுவெளியில் உளறும் போது ஏன் இந்திய பயணத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்கிறார்?
சரி அதை விடுங்கள்.
தோழர் சுகுணா நீங்கள் பணம் வாங்கியது உண்மையா?
நீங்கள் ஆனந்த விகடன் ஊடகத்தில் பணிபுரிகிறீர்கள். நாம் கேட்கும் கேள்விகள் வேறு சிக்கலை உங்களுக்கு கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக இத்துடன் விட்டு விடுகிறோம். இன்னொரு கேள்வி. இன்னொரு ஊடகத்துறையில் பணிபுரியும் பெண் மூலமாக சோபாசக்தி குறித்து விளாவாரியாக பேட்டி எடுக்கப்பட்டு நிர்வாகத்தினர் பார்வைக்கு சென்ற போது குப்பைக்கு அனுப்பப்பட்டது. அப்பெண் சோபா சக்தியோடு செக்ஸ் தொடர்பு உடையவர். இப்படிப்பட்ட செய்திகள் எல்லாம் தோழர் சுகுணா திவாகருக்கு தெரிந்திருந்தும் அதைக் குறித்து ஆராய்ச்சி செய்யாமல் வினவு தோழர்களை விம ர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? இதில் என்ன அரசியல் உள்ளது?
வினவு தோழர்களுக்கு,
இன்றுதான் லீனா மணிமேகலை குறித்து எழுதப்பட்டிருந்த கட்டுரையில் சில மோசமான பின்னூட்டங்களையும் படிக்க நேர்ந்தது. அவைப்போன்ற பின்னூட்டங்களை நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள் என்று புரியவில்லை. நீங்கள் என்ன காரணம் சொன்னாலும் அப்பின்னூட்டங்களை அனுமதித்தது தவறானது.
தோழர்கள் சுயசோதனைக்குட்படுத்தி பாருங்கள்.
தவறுக்கு வருந்தும்பட்சத்தில் லீனா குறித்த தேவையில்லாத ஆபாச பின்னூட்டங்களை நீக்கிவிடுங்கள்.
வினவு… நீங்கள் சுகுணா திவாகரின் கருத்தை ஆதாரத்துடன் மறுக்க வேண்டியது உங்களது தார்மீகக் கடைமை மற்றும் உங்கள் மீதுள்ள நம்பிக்கையைத் தக்க வைப்பதற்கும்….அவசியம்
சுகுணா புலனாய்வுப் புலியைப் போல கண்டு பிடித்து விட்டதாக பீற்றி கட்டுரையின் விவாத மையத்தை திசை திருப்புகிறார். கட்டுரையை யார் எழுதுகிறா என்பது பிரச்சனை இல்லை. கட்டுரையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான் பிரச்சனை. தவிறவும் அட மாங்கா மடையா சுகுணா! பைத்தியக்காரன் எழுதி அனுப்பிய அந்தக் கட்டுரையை அப்படியே போட்டிருந்தால் வினவை குற்றம் சொல்லலாம். அவர்கள் அதை எடிட் செய்துதானே போட்டிருக்கிறார்கள். நீ குப்பையில் போட்ட ரப்ஃ காப்பியை தேடி எடுத்து வந்து தாம் தூமென்று குதிக்கிறாரே? நீ எத்தனை பெயர்களின் எழுதுகிறாய் என்று சொல்லவா? ஆனந்த விகடனில் நீ எழுதுகிற எல்லாம் வெளி வந்து விடுமா? என்ன? முட்டாள் பிரச்சனையை அதற்குரிய நேர்மையோடு எதிர்கொள்….
நர்சிம் தனது வலைத்தளத்தில் ஒரு வாசகர் கடிதம் வெளியிடுகிறார்
2. அதை கேலி செய்து தீபா பகடி வெளியிடுகிறார்
3. பிரச்சனை வருகிறது. சமாதானம்
அதன் பிற்கு
1. ஆதி தனது தளத்தில் நர்சிமின் பேட்டி வெளியிடுகிறார்
2. அதன் பிறகு மதுர நீ தளத்தில் ஒரு அனானி பேட்டி வருகிறது
3. அந்த மதுர நீ தளத்தின் சுட்டி சந்தன முல்லையா டிவிட்டரில் அளிக்கப்படுகிறது
கேள்வி 1. அந்த தளத்தை நடத்துவது யார்
2. அது சந்தனமுல்லைக்கு எப்படி கிடைத்தது அங்கு யாரும் பார்க்க வில்லை
3. மயில் விஜி போன் செய்து நர்சிம் உங்களை பற்றி எழுதுகிறேன் என்கிறார்
6. மதுர நீயில் இருந்து பேட்டி மறைந்து மயில் தளத்தில் வருகிறது
கேள்வி
3. மதுர நீ தளத்திற்கும் மயிலுக்கு என்ன சம்மந்தம்
கேள்வி 4 : ஏன் முதலில் அது மயில் தளத்தில் வெளியிடப்படவில்லை
கேள்வி 5 மயில் விஜி இது போல் எத்தனை அனானி / போலி தளங்களை நடத்துகிறார்
7. மயில் தளத்தில் சந்தனமுல்லை நர்சிமை குறிவைத்து தாக்குகிறார்
8. இடுகையை நீக்குமாறு சிலர் கூறுகிறார்கள்
9. சந்தனமுல்லை முடியாது என்கிறார்
கேள்வி 6 : அந்த இடுகை மயில் எழுதியதாக இருந்தால் சந்தனமுல்லை ஏன் முடியாது என்கிறார்
10. இப்ப நர்சிம் பூக்காரி எழுதுகிறார். அதில் பூக்காரியை (பார்க்க பூக்கரியை – எந்த பெயரும் இல்லை) விபச்சாரி என்கிறார்
ஆனால் மயிலோ நர்சிமிடம் தொலைபேசி அது நீ என்று சொல்லிவிட்டார்
நர்சிம் பெயர் குறிப்பிட வில்லை
கேள்வி 7 : பிறகு ஏன் இவர்களுக்கு பொத்துகிட்டு வருது
ஏன். அப்படி என்றால் இது வரை முல்லை செய்தது தெரிந்தவர்களுக்கு தானே பொருள்படும். அப்படி பட்டவர்கள் முல்லையை கண்டிக்காமல் நர்சிமை மட்டும் வெளுத்து வாங்குவது சரியா
முல்லையை விடுத்து நர்சிம் கண்டிக்கப்படுவது மொழிக்காகவும் தொனிக்காகவும், அவை வெளிப்படுத்தும் திமிருக்காகவும்.
நரசிம் எழுதியதும் தவறு. லீனாவை எதிர்த்து இதே போன்ற மொழி நடயில் வினவு எழுதியதும் தவறு. நாகரீகமான வார்த்தைகளால் கருத்து பரிமாற்றம் என்பது தமிழ் பதிவர்களில் பெரும்பாலானவர்களுக்கு allergy ஆகவே உள்ளது.
Vinavu, dont bother about the negative comments, keep going like smoking guns
வினவு நிலைப்பாடு சரியானது.ஆதரிக்கிறோம்
நர்சிம்மின் அந்தப் பதிவிற்கு எனது கண்டணங்களைப் பதிவு செய்கிறேன். “யாவரும் கேளிர்” என்ற உயர்ந்த சிந்தனையைத் தலைப்பாக வைத்துக் கொண்டு இப்படி ஒரு பதிவு எழுதியதை அக்கணியன் பூங்குன்றனார் ஏற்றுக் கொள்ளவே மாட்டார் நர்சிம்.
கடலையூர் செல்வம்.
//சுகுணா புலனாய்வுப் புலியைப் போல கண்டு பிடித்து விட்டதாக பீற்றி கட்டுரையின் விவாத மையத்தை திசை திருப்புகிறார். கட்டுரையை யார் எழுதுகிறா என்பது பிரச்சனை இல்லை. கட்டுரையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான் பிரச்சனை. தவிறவும் அட மாங்கா மடையா சுகுணா! பைத்தியக்காரன் எழுதி அனுப்பிய அந்தக் கட்டுரையை அப்படியே போட்டிருந்தால் வினவை குற்றம் சொல்லலாம். அவர்கள் அதை எடிட் செய்துதானே போட்டிருக்கிறார்கள். நீ குப்பையில் போட்ட ரப்ஃ காப்பியை தேடி எடுத்து வந்து தாம் தூமென்று குதிக்கிறாரே? நீ எத்தனை பெயர்களின் எழுதுகிறாய் என்று சொல்லவா? ஆனந்த விகடனில் நீ எழுதுகிற எல்லாம் வெளி வந்து விடுமா? என்ன? முட்டாள் பிரச்சனையை அதற்குரிய நேர்மையோடு எதிர்கொள்…//
முதலில் மணிகண்டன் கேட்டதற்கு வினவு தோழர்கள் அப்படி இல்லை என்று மழுப்பல். இப்போது சுகுணா மௌனம் கலைத்ததும் அவர் ‘மடையன்’ ஆகிவிட்டார்…. தோழர்கள் வெளிப்படையாக பதில் சொல்லவேண்டும் அதை விடுத்து வந்த நாய் போன நாய் எல்லாம் சுகுணாவை வம்பிழுக்கத் தேவையில்லை
[…] […]
வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்?
அட்ரா சக்கை,அட்ரா சக்கை
ஏன் வினவை புறக்கணிக்க வேண்டும்? தன்னுடைய ஆணாதிக்க சிந்தனையை பார்ப்பன ஆதிக்கத்தை கேள்வி கேட்பதால் அதை புறக்கணிக்க வேண்டும். போரிலே / மக்கள் பாதிக்கப்படும் போது / சக பதிவர் பாதிக்கப்படும் போது வாய் மூடி இருக்காதே போராடு, அந்த நாயை அடித்து விரட்டு என்பதால் அவர்களில் குடும்பம் போல் வாழும் உறவு சிதையுமாம். சிதையட்டுமே அந்த மானங்கெட்ட உறவுகள்!!!!
சக பதிவர் பாதிக்கப்படும் போது வாய் மூடி இருத்தலை கற்றுக்கொடுக்கும் அந்த உறவு முறைக்குப்பேர் என்ன? “அவனைத்திட்டினால் அவன் கோவித்துக்கொண்டு விடுவான், அப்புறம் யார் மச்சி நமக்கு தண்ணி வாங்கி கொடுப்பா? என்ற ஊதாரியின் / பொறுக்கியின் பேச்சுக்கும் உங்களுக்கும் வித்யாசமிருக்கிறதா? இது வரை சாதிவெறிப்பதிவுகள்/மதவெறிப்பதிவுகள்/ஆணாதிக்கவெறிப்பதிவுகள் இல்லாத இடமாக தமிழ் வலை இருந்ததாகவும் வினவு அதை வலிந்து ஏற்படுத்துலது போலவும் கதை விட்டுக்கொண்டு திரிகிறார்கள்.
வினவை புறக்கணிக்கச்சொல்வதன் நோக்கமே அவர்கள் எல்லாவிதமான ஆதிக்கத்தை எதிர்க்க மட்டும் செய்யவில்லை எதிர்க்கவும் சொல்கிறார்கள், அதுதான் இவர்களுக்கு வலிக்கிறது. எனக்கு விடுதலை வேண்டும் ஆனால் நான் போராட மாட்டேன் என்ற சுயநலவாத ஊற்றுக்கண்ணே இவர்களின் மூதாதையன். அது அப்படியே பரவி நீ எதுக்கு போராடுகிறாய் , அவர்கள் எல்லாவற்றையும் திட்டுவார்கள், நம்மைப்பிரிப்பார்கள் என்று பஜனை பாட ஆரம்பித்து விட்டார்கள். வினவை திட்டுவதற்கு இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. வினவில் தனிநாபர் தாக்குதல் என்று கிழிய பேசுபவர்கள் உண்மைத்தமிழனின் பதிவிலிருக்கும் எழுத்துக்களை பார்ப்பது நலம்.
வினவு இல்லையென்றால் ,இவர்கள் எல்லை மீறி ஆடுவார்கள்
தடித்த வார்த்தைகளுக்கு தடி எடுக்கவேண்டும் தப்பில்லை
வினை விதைத்தால் வினை அறுக்கும் வினவு
ருத்ரன் ஐயா
குறைந்த பட்சம் இதை தூண்டியதர்காவது ” வெகு குறைந்த ” பட்சம் மனசாட்சியோடு சந்தன முல்லையை என் கண்டிக்க வில்லை ?
மனோ தத்துவ மருத்துவர் நீங்கள், உங்களுக்கு தெரியாதா ஒருவனை எப்படி அடித்தால் அவன் எப்படி வெறி கொண்டு வருவான் என்று ? அப்படித் தானே முல்லை செய்த காரியம் அதை எப்படி நியாயப் படுத்த முடியும்.
ஒரு மனோ தத்துவ மருத்துவர் என்ற முறையில் இதற்க்கு எனக்கு பதில் தேவை . மற்றபடி பதிவுலக அரசியல் அப்புறம்
வினவுடன் பல கருத்துகளில் நான் வேறு பட்டாலும் நரசிம்மை வன்மையாக கண்டிக்கிறேன்.ஆனால் பல தோழர்கள் சுட்டி காட்டியும் சில வார்த்தைகளை நீக்காமல் வைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது.வினவு பல கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. தோழர் கஷ்யபனுக்கு நன்றி.
என்ன கேள்விகுறி என்ன ஆச்சு இந்த பக்கமே காணமே
நரசிம்மை தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் கண்டிக்க ஒன்றுகூடுவோம்,மெரினா பீச்சில் இதற்கான கூட்டத்தை நடத்தியே தீருவோம்,வினவின் ஆதரவை வேண்டி நிற்கிறோம்,உங்கள் நிலைப்பாடை இந்த பதிவின் மூலம் ஆணித்தரமாய் சொன்னதற்கு நன்றி,ஜாதிசாயம் பூசாமல் இருந்திருக்கலாம்,என் வழக்குறைஞர்கள் நண்பர்கள் இந்த வழக்கை இலவசமாய் எடுத்து நடத்த மிக ஆர்வமாய் உள்ளனர்.அவர்களும் விரைவில் உங்களுக்கு போன் பேசுவார்கள்,வாழக ஜனநாயகம்.ஜெய்ஹிந்த்
வினவு அவர்களுக்கு , நல்ல பதிவு. வலைதள பதிவில் கூட பெண்களுக்கு இவ்வளவு தொந்தரவு இருக்கா?
இதை ஆணாதிக்க சிந்தனை நு எடுத்துக்கொள்வதா இல்லை வக்கிர புத்தின்னு எடுத்துக்கிறதா?
[…] […]
வினவும் வினவுக்கெதிராக ஒரு ஆணாதிக்க சிண்டிகேட்டும் « எம்.ஆர். ராதா
http://mrradha.wordpress.com/2010/06/02/post-10a/
இரண்டுநாளாக எங்கு தேடியும் கிடைக்காத நர்சிம்மின் பூக்காரி பதிவு வினவுவில் தான் படித்தேன். அனைத்து விபரங்களும் தெரிந்து கொண்டேன். நர்சிம்மின் பாப்பானின் சாதி திமிர் வேறு என்ன சொல்ல!!! என் கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்.
மகாராஜா.
ஜாதி முலாம் பூசுகிறார்கள் என்று எழுதி திசை திருப்பபடுகிறதே அதற்க்கான பதிவு
http://vennirairavugal.blogspot.com/2010/06/blog-post.html
இந்த விசயங்கள் எல்லாம் படிக்கும்போது,
இது மாதிரியான பதிவர்கள்(நரசிம், கார்க்கி) அரசியல் வாதிகளை விட மோசமானவர்கள்.
என்னமோ போ! எப்ப தான் இந்த மக்கள் திருந்த போறாங்களோ???
அதற்காக நீங்க அவங்க வீட்டுக்கு போய் கேட்பேன்னு சொல்லுவதெல்லாம் மிகவும் தவறு.
வினவின் பதிவில் இப்போதுதான் நான் இரண்டாவது பின்னூட்டம் இடுகிறேன்.
//முல்லையை விடுத்து நர்சிம் கண்டிக்கப்படுவது மொழிக்காகவும்
தொனிக்காகவும், அவை வெளிப்படுத்தும் திமிருக்காகவும்.
//
Dr. rudhran, then why dont you condemn the language and tone used by vinavu in leena issue. Was that in the “permissible limits” in your metrics?
நல்ல பதிவு!!!
ஆணாதிக்க சிந்தனையை, பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிப்போம்!!!
தமிழ்மணம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்….
பூக்காரி கட்டுரை ஒரு சாதாரண மனிதனையும் காயபடுதும் செயல், வன்மையான கண்டனத்துக்குரியது
முன்னாள் வலைப்பூ எழுதியவன் என்ற முறையில் எனக்கு வலைப்பூ உலகம் நன்கு அறிந்ததே. நர்சிம்மோ அல்லது கார்க்கியோ மற்றும் இன்ன பிற அடிவருடிகளின் வலைப்பதிகளோ எதுவாக இருந்தாலும் அவ்வலைப்பூக்களின் மேல் எனக்கு எந்த வித நல் அபிப்ராயங்களும் இருந்ததில்லை இந்த நாகரீக மீறலின் மூலம் மேலும் அது வலுப்பெறுகிறது. எனது கண்டனங்கள்.
வினவு தோழர்களும், ஆணாதிக்கத்தின் பின் கூடிக் கும்மியடிக்கும் கும்பலும்சில நாட்களாக பதிவுலகம், இரண்டாகப் பிளவுண்டு கிடக்கின்றது. நண்பர்கள் எதிரிகளாகின்றனர். எதிரிகள் நண்பர்களாகின்றனர். எதிரிக்கு எதிராக புதிய கூட்டுகள். ஆம் ஆணாதிக்கம், பார்ப்பனியம், சாதியம் முதல் வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கும் கூட்டமெல்லாம் ஒன்றாக பதிவுலகில் காட்சியளிக்கின்றது.இப்படி சமூகத்தின் நேரெதிரான இரண்டு போக்குக்குள் உட்பட்டு, பதிவுலகம் புதிதாக தன்னை மீள் கட்டமைக்கின்றது. புதிய அரசியல் அணிச்சேர்க்கைகள் உருவாகின்றது. இந்தளவுக்கும் அடிப்படையாக இருந்தது பதிவுத்தளத்தில் இயங்கிய பெண்கள் மேல் ஏவிய, ஆணாதிக்கத்தை வினவுதளம் அம்பலம் செய்ததுதான் காரணமாக இருந்தது.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7143:2010-06-03-08-11-35&catid=322:௨௦௧௦
சகா அருமை! உங்களுடைய திறமை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்களுடைய பதிவு நர்சிம் மற்றும் அவர்களை சுற்றி இருப்பவர்களை சினிமா வில்லர்களை விட மோசமாக காட்டுகிறது அதற்கு வாழ்த்துக்கள்! நான் நர்சிம் செய்தது சரி என்று சொல்லவில்லை. அவர் செய்தது பெரிய தவறு ஆனால் உங்களுக்கும் அவருக்கும் என்ன பெரிய வித்தியாசம். அவர் ஒரு பெண்ணை இழிவு செயதார் நீங்களும் அவர்களை காப்பாற்ற வந்தது போல் எழுதி அதே செய்துள்ளீர்? அவராவது அதோடு நிறுத்தி கொண்டார் ஆனால் நீங்கள் ஜாதி என்னும் சாக்கடையை கலந்து உங்களையும் அந்த பென்ன்களையும் அசிங்க படுத்தி உள்ளீர். நீங்கள் சொன்ன கருத்து சரி ஆனால் நீங்க சொன்ன முறை சரியா என்று யோசித்து பாருங்கள்?
http://tinyurl.com/3y8um4k முகில் எழுதிய பதிவு, நர்சிம் என்ற ஒருவரால் மட்டும் அல்ல நம் அனனவராலும் அவர் எத்தனை தூரம் காயப்பட்டு இருக்கிறார் என்று பாருங்கள், நர்சிம் & கார்க்கி இருவரும் மனதார மன்னிப்பும் கேட்டு விட்டார்கள்.
இதோ முல்லையின் கணவர் முகில் கேட்கிறார்…
@@@@@@@@ நர்சிம் பதிவிலும் அவர் நண்பர்கள் பின்னூட்டத்திலும் ஒரு ஆணாய் ஆத்திரப்பட்டேன், கணவனாய் கொதித்தேன், தந்தையாய் அழுதேன்…..
போதும் பதிவர்களே, உங்கள் இருதரப்பு நியாங்களுக்கும் மேலாய் இறைவன் இருக்கிறான், இருப்பான். இனியாரும் இதைப்பற்றி எழுதாதீர்கள். எங்களுக்கு நியாயம் வாங்கித்தாருங்கள் ப்ளீஸ். அதுபோதும்!!! @@@@@@@@@@
பதிவர்களே வாசகர்களே … அவர் கேட்பது நியாயம் மட்டுமே….. இப்போதாவது சொல்லுங்கள் பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்? முல்லையின் குடும்பத்திற்கு எப்படி நியாயம் வழங்கலாம்?
@ விஸ்வன், செல்வநாயகி, சுக்தேவ்
வினவின் எதிரிகளும், நண்பர்களும் ஒரு சேர வினவைக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்தப் பின்னூட்டத்தை எழுத வேண்டியிருக்கிறது. தங்கள் மூவரின் உள்ளார்ந்த அக்கறையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், தற்போதைய சூழலில், லீனா விவகாரத்தை, நர்சிம் விவகாரத்துடன் இணைப்பதன் மூலம், லீனாவுக்காக நேரிடையாகவும், மறைமுகமாகவும் போராடி வரும் ‘போராளிகள்’, தமது அடங்காத காழ்ப்புணர்ச்சி காரணமாக வினவுடன் கணக்கு தீர்க்க முயன்று வருகின்றனர். இதன் மூலம் நர்சிம் எனும் ஆணாதிக்கப் பொறுக்கியின் மீதான எதிர்ப்பை தாம் திசை திருப்புகிறோம் என்பது நன்கு தெரிந்திருந்தும், அவர்கள் அது குறித்து கவலைப்படவில்லை. இவ்வாறு, பலர் திட்டமிட்டும், சிலர் திட்டமிடாமலும் எழுதியும், பேசியும் வருகின்றனர்.
ஆணாதிக்கப் பொறுக்கி நர்சிம் விவகாரமும், லீனாவின் மீதான ம.க.இ.க-வின் சீற்றமும் அடிப்படையிலேயே வேறுபட்டவை. எந்த அம்சத்திலும் இணை வைக்க இயலாதவை. சுக்தேவ் குறிப்பிடுவது போல சில குறிப்பான விமர்சனங்கள் லீனா விவகாரத்தில் ஆதரவாளர்கள் பலருக்கும் இருக்கலாம். ஆனால், வினவின் ஆதரவாளர்கள் எனத் தம்மை கருதுபவர்கள், அந்த விமர்சனங்களை தற்பொழுது வைப்பது முறையல்ல என்பது மட்டுமல்ல, மேற்கூறிய திட்டமிட்ட திசைதிருப்பலுக்கு அது பயன்படுகிறது, அதன் மூலம் நர்சிம்முக்கு எதிரான எதிர்ப்பின் கூர்மை மழுங்கடிக்கப்படுகிறது, தாமும் ஒருவகையில் அதற்கு பங்காற்றுகிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
மற்றபடி, தர்மசங்கடமாகவே இருப்பினும், அகாகி குறித்தும் கூறித்தானாக வேண்டியிருக்கிறது. நீங்கள் கூறும் விமர்சனம் சரிதான். விஸ்வன், செல்வநாயகி மற்றும் தங்களது கருத்துக்களை எந்த முறையில் அணுக வேண்டுமோ, அதற்கு நேர் எதிரான முறையில், சினமூட்டும் வகையில் மட்டும்தான் அவர் எழுதியிருக்கிறார். எனினும், குறிப்பிட்ட திட்டமிட்ட நகர்த்தல்களைக் கணக்கில் கொண்டு தங்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
லீனா விவகாரத்தில் எமது தோழர்களின் அணுகுமுறை, நடைமுறை குறித்த விமர்சனங்களை தற்பொழுதே கூறித் தானாக வேண்டுமெனில், குறிப்பிட்ட லீனா குறித்த பதிவில் பதிவு செய்யுங்கள். மாறாக, இந்தப் பதிவில் பதிவு செய்வதும், இரண்டையும் ஒருவாறாக ஒப்புமைப்படுத்துவதும், எதிரிகள் மற்றும் நண்பர்கள் போல நடிப்பவர்களின் திட்டங்களுக்கு மட்டுமே உதவி செய்யும். கூடுதலாக, சற்று காலம் தாழ்த்தியும் கூட தங்கள் விமர்சனங்களை வைக்கலாம். அவ்வாறு காலம் தாழ்த்தி வைப்பது, குறிப்பிட்ட நர்சிம் விசயத்தில் கருத்துக்களை ஒன்று குவிக்க பயன்படும். இக்கருத்துக்களை சற்று நிதானமாக பரிசீலிக்க வேண்டுகிறேன்.
போராட்டம்,
பதிவுலகம் குறித்தும், பதிவுலக சூது குறித்தும் நான் தெரிந்து கொண்டது குறைவு. உங்கள் விளக்கத்தில், எதிரிகள் குறித்த எச்சரிக்கையை புரிந்து கொள்கிறேன். மேலே, அக்காகியின் விளக்கத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். நன்றி.
சிலர் அல்ல பலரும் சொல்லுகிறார்கள் கல்லூரியிலும், அலுவலகத்திலும் தங்களுடன் பழகிய நண்பர்களின் சாதி என்னவென்று சத்தியமாகத் தெரியாது என்று. இவர்கள் இப்படி வெண்ணெயைப் போல உருகினாலும் தனக்கு நண்பனாக வருபவனின் உடல்மொழியை வைத்துத்தான் பழகுகின்றனர். இவர்களனைவருமே தங்களின் திருமணத்தின் போது சாதி பார்க்கவில்லை என கூறாததை கவனிக்கவும். இவ்வாறு சமூகத்தில் தங்களுடைய மதிப்பிற்காக டீசன்டான இவர்கள், டீசண்டாக வெளிக்காட்டிக்கொண்ட இவர்கள் அனைவருடனும் சமமாகவே பழுகுவதைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை கொடுப்பதாக புளுகுகிறார்கள். யதார்த்தத்தில் இவர்களை பெண்கள் மிகைக்கும்போது அல்லது தனது கீழான சாதிக்காரன் மிகைக்கும்போது தங்களுடைய டீசண்டு காரணமாக தங்களினுள்ளே மறைந்திருந்த ஆணாதிக்கத்திமிரை, சாதித்திமிரை இயல்பாகவே வெளிப்படுத்தி அம்பலமாகிவிடுகின்றனர். இதனால் இவர்கள் குற்றுணர்ச்சி கொள்வதில்லை.
இங்கு 1400 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தவர்கள் கூட அம்பலப்பட்டு போயுள்ளனர். இவர்கள், பெண்கள் பொதுவெளிக்கு வருவதை வர விரும்பாதவர்கள். இவர்களது சுதந்திரம் படுக்கையறை வரைதான். அதனால்தான் இப்பிரச்சினையின் ஆணாதிக்கத்தை கண்டிப்பதை விடுத்து லீனாவின் மயிரை
பிடுங்கிக்கொண்டுள்ளனர். வினவு எழுதுவதில் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல்தான்.
////இங்கு 1400 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தவர்கள் கூட அம்பலப்பட்டு போயுள்ளனர். இவர்கள், பெண்கள் பொதுவெளிக்கு வருவதை வர விரும்பாதவர்கள். இவர்களது சுதந்திரம் படுக்கையறை வரைதான்/// பொதுப்பிரச்சனையில் எனது மார்க்கத்தை கொண்டு வந்து திணிக்கிறாய் உங்களுடைய புத்தி அப்புடி கலை ஒங்களுக்கு ஒரு பகிரங்க அழைப்பு என்னுடைய வீட்டுக்கு விருந்தினராக வந்து நான் எப்படி இஸ்லாமிய சட்டப்படி என் மனைவியை நடத்துகிறேன் என்று நீங்கள் நேரடியாக தெரிந்து கொண்டு அதன்பிறகு நாங்கள் எதுவரை அவர்களுக்கு உரிமை கொடுக்கிறோம் என்பதை எழுதவும் பின்குறிப்பு.உங்களுடைய சகோதரியிடம் நீங்கள் விசாரனை செய்யும் போது என்னுடைய எந்த குறிக்கிடும் இருக்காது இன்னும் சொல்லப்போனல் நான் வேளியே சென்று விடுகிறேன்
நர்சிமின் அக்கட்டுரை அவரின் ஆதரவாளர்களும் அவரும் சொல்வது போல அவசர தொனியில் அல்ல,பொறுமையாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. சாதி ரீதியாகவும், பூக்கடடை மணக்கிறது, கொழுத்துப்போய் இருக்கா, அவகடை ஓடணும் அதுக்குத்தான் போன்றா வசனங்கள் திட்ட மிட்டு எழுதப்பட்டவை. நர்சிம் தெரியாமல் எழுதிவிட்டார் என்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாது. அவசரத்தில் திட்டுபவன் கூட சில கெட்ட வார்த்தைகளோடு முடித்துக்கொள்கிறான். ஆனால் ஒரு கதை எழுதும் போது ஆற அமர யோசித்து தன் வன்மத்தை விதைக்கிறார்.
ரவியின் தளத்தில் முகிலின் கட்டுரைக்குப்பின் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார். இதெல்லாம் மாட்டிகிட்டேன் பேர் கெட்டுப்போச்சு மறுபடியும் பேர் வேண்டுமே அவ்வளவுதான். சிலர் கேட்கலாம் இதுக்கு மேல அவர் என்ன செய்ய முடியும்? அதான் மன்னிப்பு கேட்டுட்டாரு இல்லை?
ஊரை ஏமாற்றும் மன்னிப்பு தேவை இல்லை, உண்மையான தன்னை திருத்திக்கொள்வதற்காக ஒரு விளக்கம் தேவை. அதை விட்டு விட்டு பழைய ரீலையே அவரின் ஆதரவாளர்கள் ஓட்டிக்கொண்டிருந்தால் பூக்காரிக்கு பதில் ஊர்சுற்றி பதில் கதைகூட வரலாம். ஒருவர் சூப்பர்லின்க்ஸ் தளத்தில் ஒருவர் சொல்லியிருந்தார்”முல்லையின் கணவர் சும்மாவா இருந்தார்” ஏன் அதை முல்லையின் கணவர்தான் கேட்க வேண்டுமா என்ன?
உனக்கு பொறுப்பில்லையா? உன் நிலை என்ன? தன் உறவுக்காரர்களை சொன்னால் தான் கோவம் வரும் எனில் அதுக்கு பேர் கோவம் இல்லை சுய நலம் / போலி கவுரவம்.
இன்னும் சிலருக்கு அதான் மன்னிப்பு கேட்டுட்டாரு இல்ல?
இதே பூக்காரியின் மகனாக ஒருவரை எழுதி பின்னர் மன்னிப்பு கேட்டு விட்டால் போதுமா? விபச்சாரி என்று சொல்வது அவ்வளவு பெரிய குற்றமா? இதுதான் பெரிய பிரச்சினை. பலரையும் நர்சிமுக்கு ஆதரவாய் நிற்க வைப்பதே இக்கருத்துதான். ஏனெனில் பெண்ணை சாதாரணமாக பிடிக்கவில்லையெனில் விபச்சாரியாக வர்ணிக்கலாம், ஆணாதிக்க சமூகம் கற்றுத் தந்திருக்கிறது. அதை எப்படி உடைப்பது? இப்படிப்பட்ட பொறுக்கிகளை/ அவ்வெழுத்துக்களை உடைப்பது மூலம்தான் இது சாத்தியம்.
கடைசியாய் நடுநிலை நாயகர்களே!!!!
உங்களின் வீட்டில் யாருக்காவது இப்படி நடந்திருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா? ஏன் தேவையில்லாமல் வீட்டை இழுக்கிறீர்கள் எனலாம், உங்களின் நடுசென்ட்டர் என்ற ஆணாதிக்க ஆதரவு கருத்தை எனக்கு உடைக்க வேறு வார்த்தை தெரியவில்லை.
கலகம்
பூக்காரி கட்டுரைக்கு எனது மிகக் கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
பைத்தியகாரன் தடுமாறியிருக்கிறார்.அவர் தனது கருத்துக்களை எந்தவிதமான மறைவும் இல்லாமல் தனித்தே தெரியப்படுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து.அப்படிச் செய்திருந்தால் இந்தப் பிரச்சினை திசை திரும்பாமல் இருந்திருக்கும்.அவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது வருத்தங்களும்,கண்டனமும்.
பதிவர் பைத்தியக்காரன் செய்த துரோகம் !
http://vrinternationalists.wordpress.com/2010/06/03/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/
“போராட்டத்”தின் கருத்துக்கள் குறித்து சில அபிப்பிராயங்கள்:
லீனா விவகாரத்தில் நமது தவறுகளை ஒத்துக் கொள்வது என்பது நர்சிம் விவகாரத்தில் வினவின் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தும். திசை திருப்பும்.
அதை வினவின் எதிரிகள் சாதகமாகப் பயன்படுத்துவர்.
இதனால் நர்சிமுக்கு எதிரான போராட்டத்தின் முனை மழுங்கடிக்கப்படும்.
எனவே அந்த விமர்சனங்களை காலம் தாழ்த்தி பின்னர் வைக்கலாம்.
என்று சுருக்கமாக போராட்டம் என்பவர் தனது அபிப்பிராயங்களை எழுதி அவற்றை நிதானமாகப் பரிசீலிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
முதற்கண் அவருக்கு நன்றி. ஏனெனில் ஏறத்தாழ வினவுவின் பெரும்பாலான வாசகர்களின் அபிப்பிராயத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பரிசீலனை என்பது என்னளவில் ஆக இருக்காமல் அது ஒரு திறந்த விவாதமாகவே இருக்கலாம் என்றே நான் எண்ணுகிறேன். அது நான் மட்டும் அல்லாது ஒவ்வொருவரும் பரிசீலனை செய்ய உதவும்.
முதலிலேயே கூறி விடுகிறேன். இதனை நாகரீகமான ஒரு விவாதமாக இடதுசாரிப் பண்பாடு குறித்த ஒரு கலந்துரையாடலாக நடாத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். ஏனெனில் புரட்சிகர அல்லது மாற்று அரசியலில் நாம் கொண்டிருக்கும் கவனம் புரட்சிகரப் பண்பாட்டில் அல்லது மாற்றுப் பண்பாட்டில் கொண்டிருக்கவில்லை என்பது எனது அனுபவமாக எண்ணமாக இருக்கிறது.
போராட்டம் கூறுவது போல நர்சிம் விவகாரமும் லீனா விவகாரமும் ஒன்றல்ல. அவை வேறு வேறானவை. ஆனால் சில பொதுப் பண்புகளைக் கொண்டிருப்பவை.
அந்தப் பொதுப் பண்பு என்னவென்றால் நர்சிம் என்பவர் ஒரு பெண் பதிவரை சாதிய பாலியல் நிந்தனை மொழி மூலம் இழிவு செய்திருக்கிறார்.
லீனாவின் கவிதை குறித்தும் அவரது சினிமா தயாரிப்புக்குழறுபடிகள் குறித்தும் கண்டனம் தெரிவிக்க விமர்சனம் செய்ய வந்த நாமும் அதே சாதிய பாலியல் நிந்தனை மொழிகளைப் பயன்படுத்தி இருக்கிறோம் என்பது தான்.
ஆனால் நர்சிம் ஒரு ஆணாதிக்கவாதி, பார்ப்பான். நாமோ புரட்சியாளர்கள், இடதுசாரிகள்.
ஒரு ஆணாதிக்க பார்பனியவாதிக்கும் ஒரு இடதுசாரிப் புரட்சியாளருக்கும் இடையிலான பண்பு அடிப்படையிலான வேறுபாடு என்ன? இது தான் எனது அடிப்படையான கேள்வி.
இனி, இவ்வாறான விமர்சனத்தை இப்போது முன்வைப்பது நர்சிமுக்கு எதிரான போராட்டத்தின் முனையைப் பலவீனப்படுத்தி விடும் என்ற “போராட்டத்”தின் கூற்றைப் பார்ப்போம்.
இடதுசாரித்துவத்தின் அடிப்படையான ஆதாரசுருதி விமர்சனம் சுயவிமர்சனம் தான். நாம் எப்போது நமது செய்கை தவறு என்று உணர்கிறோமோ அன்றே அக்கணமே எம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொண்டு திருத்திக் கொள்ள வேண்டும். அது ஒன்று தான் எம்மை தோல்வியுறா வகையில் முன்னகர்த்திச் செல்லும். தவறுகளை ஒத்துக் கொள்வது பலவீனம் அல்ல. அது தான் உண்மையிலேயே மிகப் பெரிய பலம். தவறுகளைத் தவறு என்று தெரிந்த உணர்ந்த பின்பும் ஒத்துக்கொள்ளாதிருப்பது தான் மிகப் பெரிய பலவீனம்.
உதாரணமாக விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய போது அது தவறு எனச் சொன்னோம். விமர்சித்தோம். வாதாடினோம். ஆனால் அவர்கள் தாம் செய்தது தவறு என்று ஏற்றுக் கொண்ட பின்னரும், தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்வது என்பது இன்றைய சூழ்நிலையில் பொது எதிரிக்கெதிரான போராட்டத்தில் விடுதலைப்புலிகளைப் பலவீனப்படுத்தி விடும்.
போராட்டத்தைப் பலவீனப்படுத்தி விடும் என்றார்கள். எங்களுக்கு அது உடன்பாடானதாக இருக்கவில்லை. அவர்கள் தவறை ஏற்றுக் கொண்டு சுயவிமர்சனம் செய்துகொள்ளாததள் விளைவு தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையிலான ஆழமான பிளவு மட்டுமல்ல தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமான வடக்கையும் கிழக்கையும் துண்டாடவும் வகை செய்து விட்டது.
தவறுகளை விமர்சனம் சுயவிமர்சனம் ஊடாக திருத்திக் கொண்டு போராட்டத்தை முன்னெடுக்காததன் விளைவு அவர்கள் மாபெரும் அழிவை நோக்கித் தள்ளியது. விடுதலைப் புலிகள் என்ற அரசியல் தலைமை இழைத்த அரசியல் தவறுக்கு மக்கள் இரத்தத்தால் பதில் சொல்ல வேண்டியதாகிப் போனது.
இப்படி ஏராளம் உதாரணங்கள் எம்மிடையே உண்டு. இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.
இலங்கையில் (மக்கள் விடுதலை முன்னணி) ஜேவிபி என்று ஒரு இடதுசாரிக் கட்சி உண்டு. பலஸ்தீன மக்களின் மேல் இஸ்ரேல் குண்டு வீசியதற்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடாத்துவார்கள்.
ஆனால் அயலில் தமிழ் மக்கள் மேல் இலங்கை இராணுவம் குண்டு வீசுவதை ஆதரிப்பார்கள். காரணம் கேட்டால் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்பார்கள்.
இஸ்ரேலும் தான் ஹமாஸை பயங்கரவாதிகள் என்கிறது என்பதைப் பற்றி அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள். விடுதலைப் புலிகளின் தலைமையின் அரசியல் தவறுக்காக ஒட்டு மொத்த மக்களின் மேல் குண்டு வீசி அழிப்பதை ஆதரிப்பது எப்படி நியாயமாகும். ஆனால் அவர்கள் அதனை ஆதரித்தார்கள்.
இந்த இரட்டை நிலைப்பாடு தான் தவறு என்கிறேன். அதனால் தான் நாங்கள் மக்கள் விடுதலை முன்னணியை ஒரு போதும் ஒரு இடதுசாரிக் கட்சியாகப் பார்ப்பதில்லை. ஒரு இனவாதக் கட்சியாகவே பார்க்கிறோம்.
அ.மார்க்ஸ், ஷோபாசக்தி வகையறாக்களிடமும் இத்தகைய இரட்டை நிலைப்பாடு உண்டு. அது எப்போதுமே அவர்களுடைய பிழைப்பு அரசியலுக்கானது.
இன்னும் ஒரு உதாரணத்தின் மூலம் விளங்கச் சொன்னால் ஈழ விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ் தேசிய வாதிகள் காஷ்மீரிய விடுதலையையோ அஸாமிய விடுதலைiயையே எதிர்ப்பதை நாம் எவ்வாறு மதிப்பிடப் போகிறோம்
இங்கு தான் நாம் ஈழத்துக் கவிஞர் சிவசேகரம் குறிப்பிடுவது போல ஒன்றைப் பற்றிப் பேசும் போது இன்னொன்றைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. அது தான் புரட்சிகரப் பாதையைச் செப்பனிடும் என்பது எனது அபிப்பிராயமாக இருக்கிறது.
இன்னுமொரு விடயம், நாம் எதிர்ப்பது பார்ப்பனியச் சிந்தனை முறைமையையே ஒழிய தனிப்பட்ட பார்ப்பனரை அல்ல. ஒருவர் பார்ப்பனராய் பிறப்பது அவருடைய தெரிவு அல்ல. பார்ப்பனரிடையே இருந்தும் போராட்டத்திற்கு ஆதரவு சக்திகள் வரலாம். வரும்.
அதனை நாம் மறுப்பது அடிப்படை மார்க்ஸியத்தையே மறுப்பதாகி விடும். மார்க்ஸிய மூலவர்களில் ஒருவரான ஏங்கெல்ஸையே அவமதிப்பதாகி விடும்.
செல்வந்தரான ஏங்கெல்ஸ் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலவரானது எப்படி?
ஆனால், லீனா குறித்த எமது விமர்சனத்தில் இந்தப் பொறுப்பணர்வு எதனையும் காண முடியவில்லை.
நமது விமர்சனத்தின் தன்மை பார்ப்பனிய சமூகத்தில் பிறந்து அதனோடு முரண்பட்டு பொது வெளிக்கு வர விரும்பும் இன்னொரு பெண்ணை அச்சத்துக்குள்ளாக்காதா? தான் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது தவறு செய்து விடின் இப்படித் தான் விமர்சனம் இருக்கும் என்று அஞ்ச வைக்காதா?
தனது தந்தை கணவன் குடும்பம் பிள்ளைகள் எல்லோரும் அவமானப்படுத்தப்படுவார்கள் என்று அவர்கள் அச்சத்துக்குள்ளாவார்கள் இல்லையா?
இதனால் தான் குறிப்பான விமர்சனம் அவசியமாகிறது. தவறு எந்த இடத்தில் விடப்படுகிறதோ அந்த இடம் தான் சுட்டிக்காட்டப்படல் வேண்டும். விமர்சிக்கப்படல் வேண்டும்.
போகிற போக்கில் வார்த்தைகளை அதுவும் இழிதொனியுடனான நிந்தனையான வார்த்தைகளை எறிந்து விட்டுப் போவது முறையான இடதுசாரித்துவ விமர்சனமாகாது.
மீளவும் சொல்கிறேன். விமர்சனமும் சுயவிமர்சனமும் தான் எமது சரியான ஆயுதம்.
நர்சிமைக் கண்டிப்போம். நமது தவறுகளைச் சுயவிமர்சனம் செய்து கொள்வோம்.
Straight & BOLD.
Hats of visvan.
விஸ்வன் உங்களுடன் உரையாட விருப்பம் ஆனால் உங்கள் நோக்கத்தைப் பற்றி என்க்கு ”வெயிட்டான” சந்தேகம் இருக்கிறது….
லீனா கட்டுரையில் வினவுக்கு நீங்கள் எழுதிய https://www.vinavu.com/2010/01/06/leena/#comment-15196 பின்னூட்டத்தில்
@@@ ஈழத்து நண்பர்கள் சிலரை படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஏமாற்றியதாகவும் எழுதி இருக்கிறீர்கள். ஈழத்து நண்பர்கள் எவராவது லீனா தன்னை ஏமாற்றியதாக சொன்னதாக நான் அறியவில்லை. அது தொடக்கம் மேலும் பல குற்றச்சாட்டுக்கள் எவ்வித ஆதாரமுமற்ற சராசரிக் குமுத எழுத்தாகப் போய் விட்டது. இந்த இடத்தில் தான் நியாயமான விமர்சனப் பார்வை அவசியம் என்கிறேன்@@@
என்று சொன்ன நீங்கள் நேற்று
@@@ https://www.vinavu.com/2010/05/31/narsim-mullai/#comment-24177 லீனா மணிமேகலை விவகாரத்தில் லீனா இலங்கை நண்பரை ஏமாற்றிய விடயத்தை முன்னரே நான் அறிந்திருந்தேன். ஆக, லீனா மீது எனக்குத் தனிப்பட்ட நல்ல அபிப்பிராயம் எல்லாம் கிடையாது. எனவே வினவு எழுதியபோதும் அது நியாயமென்ற எண்ணமே என்னிடம் ஓங்கியிருந்தது. @@@
என்று எழுதுகிறீர்கள்… கூடுதலாக உங்கள் பொருந்தாத உபதேசம் அதை வலுப்பெறச் செய்கிறது…….
அதை தீர்க்க உதவுங்கள்
வினவில் லீனாவை விமர்சித்து 4 பதிவுகள் வந்துள்ளன அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள ”’சாதிய”’ நிந்தனை மொழியை வினவு எழுதியிருக்கிறது என்பதை நீங்கள் நிரூபித்தால் நீங்கள் இங்கு நர்சிமை காப்பாற்ற வரவில்லை என என்பதை விளங்கிக்கொண்டு உரையாடலை துவங்குவேன்.
நன்றி
அபிமன்யு வாகிய எனது கருத்துகள்
//ஆனால், லீனா குறித்த எமது விமர்சனத்தில் இந்தப் பொறுப்பணர்வு எதனையும் காண முடியவில்லை.
நமது விமர்சனத்தின் தன்மை பார்ப்பனிய சமூகத்தில் பிறந்து அதனோடு முரண்பட்டு பொது வெளிக்கு வர விரும்பும் இன்னொரு பெண்ணை அச்சத்துக்குள்ளாக்காதா? தான் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது தவறு செய்து விடின் இப்படித் தான் விமர்சனம்
இருக்கும் என்று அஞ்ச வைக்காதா?
தனது தந்தை கணவன் குடும்பம் பிள்ளைகள் எல்லோரும் அவமானப்படுத்தப்படுவார்கள் என்று அவர்கள் அச்சத்துக்குள்ளாவார்கள் இல்லையா? //
நல்லது. தெரிந்தும் தெரியாமலும் கலந்து ஒரு கருத்து நிலவ முடியாது.தெரியாமல் செய்பவர்களிடம் கருத்தின் மீதான கர்வமும், தெரிந்து செய்பவரிடம் தனது கருத்து மீது ஐயமும் நிலவ முடியாது. தவறுக்கு பொறுப்பேற்பது என்பது செய்யும் தவறைப் பொறுத்து மாறுபடத்தானே செய்யும். சிறுநீர் கழிக்குமிடம் நாய்க்கு தெரியாமல் இருக்கலாம். ஒரு குழந்தையில் வாய் அந்த இடமாக இருக்கும் பட்சத்தில் நாயின் அறியாமைக்காக வருந்தி சும்மா இருக்க முடியாது. நாய் சுயமாக சிந்தித்து அதனை செய்யாத போதே மனிதர்கள் இப்படித்தான் செய்ய முடியும் என்றால் தனது செயலின் நியாயம் பற்றியும் பேச முன்வரும் ஆற்றிவு உள்ள விலங்குகளுக்கு இழைக்கப்பட்டது குறைவுதானே..
தான் செய்யும் எந்த தொழிலிலும் அதன் சமூக விளைவின் அடிப்படையில் எல்லா தரப்பு மக்களும் சாதக மற்றும் பாதக அம்சங்களை விளைபொருளாக பெற்றுக் கொண்டிருஃக்கும் போது எழுதுபவர்கள் மாத்திரம் அதில் விதிவிலக்காவது எப்படி எனத் தெரியவில்லை.
ஆனால் ஒன்று ஆயிரம் முறை மறைத்தாலும் பெண்ணீய திரைச்சீலைக்கு பின்னால் நின்று அட்டைக்கத்திகளை ஏந்தும் உங்களது பெட்டி பூர்ஷ்வா நாடித்துடிப்பை நிறுத்த உங்களாலே முடியவில்லை. அதுதானே உங்களது மறுமொழிகளின் சாரமும் கூட•
இந்த ஒரு பிரச்சனைக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருப்பது இப்போதான் தெரியுது. நன்றி வினவு…..
நர்சிம்முக்கும் அவருடைய சகாக்களுக்கும் என்னுடைய கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன். கோவம் கோவமா வருது … Public-ஆ கருத்து சொல்வதானால் கெட்ட வார்த்தைகளை தவிர்த்து உள்ளேன். நன்றி….
டீச்சர் அடிக்கும் முன்பே அம்மா அம்மா என்று கத்தும் ஸ்கூல் பையன், கல்லை எடுத்ததுமே குலைத்துக்கொண்டு ஓடும் நாய். இருட்டைப்பர்த்தே வீறிடும் குழந்தை இதெல்லாம் நினைவிற்கு வருகிறது, நீங்கள் பூக்காரி விஷயத்தில் அடிக்கும் கூத்தை பார்த்தால்.
இது ஏன் பாஸ்?
வன்கொடுமை என்பதெல்லாம் ரொம்ப டூ மச். என் முழுகருத்தையும் இங்கே சொடுக்கி பார்க்கவும்.
@விஸ்வன்
தங்களது நீண்ட பதிலுக்கு நன்றி. இரு விசயங்களை மட்டும் கூற விரும்புகிறேன்.
1. தங்கள் கருத்துக்கள் அனைத்தும், “லீனா விவகாரத்தில் நமது தவறுகளை ஒத்துக் கொள்வது என்பது நர்சிம் விவகாரத்தில் வினவின் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தும்” என நான் கூறுகிறேன் என்பதான தவறான புரிதலின் அடிப்படையிலிருந்து எழும்பி வெளிப்படுகின்றன. அதற்கான காரணி ஒரு அடிப்படை முரண்பாட்டில் அடங்கியிருக்கிறது.
அது, “ஆணாதிக்கப் பொறுக்கி நர்சிம் விவகாரமும், லீனாவின் மீதான ம.க.இ.க-வின் சீற்றமும் அடிப்படையிலேயே வேறுபட்டவை. எந்த அம்சத்திலும் இணை வைக்க இயலாதவை.” என்ற எனது கருத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் கருத்து மாறுபாட்டால்தான். இரு விவகாரங்களிலும் சில பொதுப் பண்புகள் இருக்கின்றன என்பது உங்கள் வாதம். அந்த வாதத்தின் சரி, தவறைப் பற்றியே இன்னமும் விவாதம் நடைபெறவில்லை, அதனை எல்லொரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வினவு மற்றும் பிற தோழர்கள் தமது தவறுகளை புரிந்து கொண்டிருப்பதாகவும், அதனை வெளியில் ஒத்துக் கொள்ள மட்டுமே தயங்குவதாகவும் எனத் தாங்கள் கருதுவதும், அதிலிருந்து விமர்சனம்-சுயவிமர்சனம் குறித்த விளக்கங்களை எடுத்தியம்புவதும் அடிப்படையற்றதாகும். தாங்கள் கூறும் பொதுப் பண்புகள் குறித்த விவாதத்தில் வினவோ, பிற தோழர்களோ, யாரும் இன்னமும் பதிலளிக்கவே இல்லாத நிலையில், வினவு மற்றும் பிற தோழர்களின் மெளனத்தை நீங்கள் தவறாக வியாக்கியானம் செய்கிறீர்கள்.
வினவு தவறுகளை ஏற்றுக் கொண்டிருப்பதால் தான் மெளனம் காக்கிறது என்பது தவறான கருத்து என நான் உறுதியாகக் கருதுகிறேன். மாறாக, நர்சிம் விசயத்தை திசை திருப்ப பலர் பிரம்ம பிரயத்தனம் செய்து வரும் சூழல் காரணமாகத்தான் மெளனம் காக்க வேண்டியிருக்கிறது.
லீனா விசயத்தில், நீங்கள் மொழிசார்ந்து சில விமர்சனங்களை முன்வைக்கிறீர்கள். சுக்தேவ் கூட்டத்தில் தோழர்களின் நடைமுறை குறித்து சில விமர்சனங்களை முன்வைக்கிறார். சிலருக்கு இரண்டிலும் உடன்பாடிருக்கலாம். சிலருக்கு கூடுதலாக வேறு சில விமர்சனங்கள் இருக்கலாம்.
ஆனால், ஒரு அடிப்படையான உண்மையை விமர்சனம் வைக்கும் நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒரு விமர்சனத்தை முன்வைப்பதும், அதற்கு வினவு பதிலளிக்காமல் இருப்பதும் என்ற ஒரே காரணத்தால், வினவு அந்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் ஒத்துக் கொள்ள தயங்குகிறது என்ற முடிவுக்கு வருவது தவறானதும், அடிப்படையற்றதுமாகும்.
2. விமர்சனம்-சுயவிமர்சனம் குறித்த தங்கள் கருத்துக்களில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால், எதிரிகள் நமது கவனத்தை திசை திருப்பி, நமது தற்போதைய நியாயமான போராட்டத்தை சீர்குலைக்க முனையும் சூழலில், அவசியமான விமர்சனங்கள் எனத் தான் கருதுவனவற்றை நம்பகமான ஆதரவாளர்களே எழுப்பினாலும், அத்தகைய தருணங்களில் அமைதி காத்து குறிப்பான திசையில் பயணிப்பது அவசியமானதும், இன்றியமையாததுமாகும்.
இதனை ஆதரவாளர்கள் புரிந்து கொள்வது என்பது, தன்னை முன்னிறுத்தாமல் அரசியல் பலன்கள் குறித்த புரிதலின் அடிப்படையிலானது. ஆனால், இதன் பொருள் பொது வெளியில் விமர்சனம் வைக்கக் கூடாது என்பதோ, மனம் கோணாமல் விமர்சனம் வைப்பது என்பதோ அல்ல என்பதை விளக்க வேண்டியதில்லை எனக் கருதுகிறேன்.
மற்றபடி எனது முந்தைய கருத்துக்களில் எந்த மாற்றமுமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலாவது வினவு விமர்சனத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ஒத்துக் கொள்ளத் தயங்குகிறது என்ற எடுகோளில் இருந்து எனது அபிப்பிராயத்தை நான் எழுதவில்லை.
வினவு அதனை ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம், ஏற்றுக் கொண்டும் இப்போது அவசியமில்லை என்றும் மௌனம் காக்கலாம். அதுவல்ல எனது பிரச்சினை.
எனது நோக்கமெல்லாம். எமது விமர்சனங்களுடைய நோக்கம் குறித்ததே. தவறான போக்குகளை அம்பலப்படுத்துவதனூடாக எதிரியின் கருத்தியலுக்குள் உள்வாங்கப்பட்டிருப்பவர்களை வென்றெடுப்பதனையே அது அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். மாறான விளைவுகளை அது ஏற்படுத்தின் நமது நோக்கத்தையே அது சிதறடித்துவிடும் என்பதைச் சுட்டுவதே.
இரண்டாவது எனது விமர்சனம் வெறும் மொழி சார்ந்தது மட்டுமல்ல. அது எமது அணுகுமுறை சார்ந்தது. குறிப்பாக இடதுசாரிப் பண்பாடு சார்ந்தது என்பதை வலியுறுத்துவது
இந்தச் சூழ்நிலையில் குறிப்பான திசையில் பயணிப்பதற்காக அமைதி காப்பது என்ற தங்களுடைய கருத்தின் பலவீனம் பற்றி முன்னரே முடிந்தளவுக்கு விளக்கி உள்ளேன். எனவே முன்னர் குறிப்பிட்டதில் எனக்கு ஏதும் மாற்றமில்லை.
அதேபோல், ஓன்றைப் பற்றிப் பேசும் போது இன்னொன்றைப் பற்றியும் பேசுவதைத் தவிர்க்க முடியாத ஒரு சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முயல்வீர்கள் என்றும் நான் நம்புகிறேன். அவை தான் குறிப்பான திசையில் பயணிக்க உதவும் என்பது எனது நம்பிக்கை.
பலநாடுகளில் இடதுசாரித்துவத்தின் வீழ்ச்சிக்கு அதன் எதிரிகள் மட்டுமல்ல அதனுள்ளிருந்த தவறான போக்குகளும் நபர்களும் காரணமாயிருந்ததை நாம் வரலாற்றில் இருந்து அவதானிக்கலாம்.
இறுதியாக நரசிம் விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்வதோ திசை திருப்பவதோ எனது நோக்கமல்ல என்பதை எனது அபிப்பிராயங்களிலிருந்து புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஏனையவை பற்றி முன்னரே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். எனக்குத் தேவை பதில்களல்ல. முன்னேற்றகரமான மாற்றமே.
தங்கள் கருத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்றுதான் நம்புகிறேன். எனினும், தத்தமது கருத்துக்களில் மாற்றம் இல்லாத சூழலில், மேற்கொண்டு தற்பொழுதே நாம் இருவர் மட்டும் விவாதித்த விசயங்களையே மீண்டும் வெவ்வேறு கோணங்களில் விவாதிப்பதில் பொருள் இல்லை எனக் கருதுகிறேன். எனினும், மேற்கூறிய ஒன்றைப் பற்றி கூறுகையில், இன்னொன்றையும் கூற வேண்டியிருக்கிறது. 🙂 தங்களது விவாத முறையும், கருத்துக்களை முன்வைப்பதில் உள்ள பொறுப்புணர்ச்சியும் உண்மையில் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. எனது மின்னஞ்சலுக்கு(porattamtn@gmail.com) தங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பி வைக்க வேண்டுகிறேன். நன்றி.
ஆணாதிக்க வெறியர்கள் கூறும் தண்டனை ஒருமுறை தோழர்.மருதையன் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் கூறியதை நினைவுபடுத்துகிறது.
தில்லை நடராஜ கோயிலில் நகைகள் களவு போனது பற்றி அதிகாரிகள் தீட்சிதர்களிடம் கேட்டதற்கு,”அப்படியா சரி இந்தா வைச்சிட்டோம்” என்றனராம். என்னங்கயா திருடியிருக்கீங்கள்ள! என்றதற்கு ”அதான் வைச்சுட்டோம்ல என்றார்களாம் ” தீட்சிதர்கள். அதுபோன்று என்னங்கயா சக பிளாக்கர தனது எழுத்துக்களால் பாலியல் வன்முறை செய்திருக்கிறார் அவர என்ன செய்யலாம் எனக் கேட்டால் ”அதான் மன்னிப்பு கேட்டுட்டாருல்ல” என்று பிடில் வாசிக்கிறார்கள். இந்த நியாயங்கள் அவாள்களுக்கு மட்டும் பொருந்துவதுதான் அவாள்களின் சிற்ற்றப்பு.
நன்றி. இத்தகைய பொறுப்புணர்ச்சியுடன் கருத்துக்களை முன்வைக்கும் பாங்கை வினவு தனது ஆதரவாளர்களிடம் வளர்த்திருக்குமாயின் இதைவிட மகிழ்வேன். எனது மின்னஞ்சல் முகவரி- visvan24@googlemail.com
பார்பனிய ஆதிக்க வெறிக்கும்,ஆண் ஆதிக்க வெறிக்கும்,என் கண்டணங்கள்.
என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும் நாகரீகமான வார்தைகளை பயன்படுத்துவது பதிவிற்கு நல்லது..அரசியல்வதிகள் அடிக்கும் கூத்தைவிட
கேவலமாக உள்ளது.பதிவுலக போதையில்,புகழ் போதையில் சிக்கினால் அதற்காக ஆபாசமாக எதை வேண்டுமானாலும் எழுதலாமா?
கும்மி அடிப்பதுதான் எல்லா பிரச்சனைக்கும் காரணமா?
[…] […]
இதோ இன்னொரு அயோக்கியன் ! நாட்டாமையே வருக வருக…
http://vrinternationalists.wordpress.com/2010/06/06/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/
நர்சிமின் பார்ப்பன ஆணாதிக்க திமிரை கண்டிக்கிறேன்
நான் இதை ஆதரிக்கின்றேன் .ஆணாதிக்கம் செயல் அளவில் ஒழித்துவிடலாம். ஆனால் சிந்தனை அளவில் ஒழிப்பது மிகவும் கடினம். அதற்கான போராட்ட வடிவமாகவே இதை நான் காண்கிறேன் .
நரசிம்மத்தை (இந்த மரியாதை போதும்) வன்மையாக கண்டிக்கிறேன்.
அறிவிப்பு:
நர்சிம் விவகாரத்தில் சந்தனமுல்லை தெளிவாக தன் நிலையை விளக்கிவிட்டார். இது தொடர்பாக வினவில் வெளிவந்த கட்டுரை பல உறுதிப்படுத்தல்களுக்குப் பிறகே வெளியிடப்பட்டாலும் சில விசயங்களுக்கான ஆதாரங்களை பொதுவெளியில் வைக்க இயலாத சூழலில் பதிவுலகம் இருக்கிறது. இந்த நிலையை பதிவர்களும், வாசகர்களும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். எனவே ‘சர்ச்சைக்குரிய’ பெயர்களையும், அது தொடர்பான பின்னூட்டங்களையும் கட்டுரையிலிருந்து நீக்குகிறோம். இது தொடர்பாக மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் கருத்து தெரிவித்த நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி!
[…] […]