செம்மொழி மாநாடு என்ற பெயரில் 500 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் கருணாநிதி நடத்தும் ஜால்ரா மாநாட்டின் காட்சிகளை பார்த்து தமிழகமே காறித் துப்பி வருகிறது. செம்மொழி மாநாட்டினை அம்பலப்படுத்தியும், கருணாநிதி தமிழுக்கு செய்திருக்கும் துரோகத்தை விளக்கியும் எமது தோழர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் மூலம் நகரங்கள், கிராமங்கள், பேருந்துகள், ரயில்கள் என்று எல்லா இடமும் இந்த பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இந்த ஜனநாயக உரிமை கூட நமக்கு இல்லை எனும் விதமாக கருணாநிதி அரசு பாசிச வெறியுடன் பல இடங்களில் தோழர்களை கைது செய்து சிறையலடைத்திருக்கிறது. இது பற்றி எந்த ஊடகமும், செய்தித்தாட்களும் மூச்சு விடவில்லை. தோழர்கள் அது பற்றிய விவரங்களை எழுதிக்கொடுத்தாலும் அவற்றை படிப்பதற்கே பத்திரிகை முதலாளிகள் அச்சப்படுகின்றனர்.
சென்னை குரோம் பேட்டையை சுவரொட்டிகளால் நிறைத்து தோழர்கள் செய்த பிரச்சாரத்தைக் கண்டு உறுமிய போலீசு, பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை அமைப்பாளர் தோழர் உஷாவையும், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் இரு தோழர்களையும் வீடு தேடிக் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருக்கிறது. பல தோழர்களது வீடுகளுக்கு சென்று அவர்கள் இல்லாத காரணத்தினால் அச்சுறுத்தியும் ஆட்டம் போட்டிருக்கிறது.
விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் நீதிமன்றத்தில் தமிழுக்காக போராடும் வழக்குறைஞர்களை ஆதரித்து சுவரொட்டி ஒட்டியிருக்கின்றனர். அதனால் ஆத்திரமடைந்த போலீசு இரு தோழர்களை கைது செய்து சிறையலடைத்திருக்கிறது. கடலூரில் இதே காரணத்திற்காக பு.மா.இ.மு அமைப்பாளரான தோழர் பாலு உட்பட இரு தோழர்கள் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
செம்மொழி மாநாடு நடக்கும் கோவையில் போலீசு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் வீரமுடன் பகுதி மக்களிடம் துண்டறிக்கை விநியோகித்த மக்கள் கலை இலக்கிய கழக கோவை அமைப்பாளர் தோழர் மணிவண்ண்ணையும் வேறு இரு தோழர்களையும் கோவை போலீசு கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது. காங்கேயத்தில் போபால் பிரச்சினைக்காக சுவரொட்டி ஒட்டிய இரு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மாநாடு நடக்கும் போது எந்த சுவரொட்டியும் அரசை எதிர்த்து ஒட்டக்கூடாது என்று காங்கேயம் போலீசு அதற்கு ‘ஜனநாயக’ முறையில் விளக்கம் கொடுத்திருக்கிறது.
திருச்சியில் சுமை பணி பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த நான்கு தோழர்கள் ரயில் நிலையத்திலிருந்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருவெறும்பூரிலும் தோழர்கள் கைது. திருச்சி நகரமெங்கும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மெனக்கெட்டு கிழித்து வருகிறது திருச்சி நகர போலீசு. கோவில்பட்டியில் நான்கு தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். விளாத்திகுளத்தில் ஒரு தோழரைக் கைது செய்ய முடியாத போலீசு அவரது ஆட்டோவை கொண்டு சென்று வீட்டாரை அச்சுறுத்தியிருக்கிறது. மதுரையில் இந்த முழக்கங்களை அச்சிடுவதற்கு எந்த அச்சகமும் தயாராக இல்லை.
இது போக இன்னும் பல இடங்களிலும் தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த விவரங்கள் எமக்கு கிடைக்கவில்லை. செம்மொழி மாநாட்டை எதிர்த்து ஒரு சிறு எதிர்ப்பு கூட வரக்கூடாது என்பதற்காக கருணாநிதியின் காட்டு தர்பார் தொடர்கிறது.
செம்மொழி மாநாட்டில் கருணாநிதியின் பாதத்தை நக்கி தமிழத் தொண்டு புரியும் அறிஞர்களுக்கு போட்டியாக வெளியே கருணாநிதியின் நிழலுக்கு கூட ஆபத்து வரக்கூடாது என்று தமிழக போலீசு லத்தித் தொண்டு புரிகிறது.ஆனாலும் செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடக்கும் இந்த மக்கள் விரோத ஆடம்பர கேளிக்கையை எமது தோழர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவார்கள். அடக்குமுறைக்கும், கைது, சிறையடைப்புக்கும் அஞ்சமாட்டார்கள்.
______________________________________________
தொடர்புடைய பதிவுகள்
- செம்மொழி மாநாடு: கலைஞர் எதற்காகக் கூச்சப்படவேண்டும்?
- செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் தமிழகமெங்கும் கைது ! போஸ்டர் கிழிக்கிறது போலீஸ்
- செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!
- செம்மொழி மாநாடு – கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை !!
- செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!!
- நீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா?
______________________________________________
கருணாநிதி அரசை அம்பலப்படுத்திய எமது முழக்கங்கள் கீழே:
தமிழால் ஏய்த்து தமிழினத் துரோகத்தால் கொழுத்த கருணாநிதி குடும்பத்தாரின் இல்லத் திருவிழாவே செம்மொழி மாநாடு!!
கலைஞர் என்பது பெயரல்ல… அது தமிழினத் துரோகத்தின் வரலாறு!
கலைஞரின் துரோகத்தால் ஈழமே சுடுகாடு
துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு!…
பள்ளிகளில் தமிழ் இல்லை
கல்லூரிகளில் தமிழ் இல்லை
நீதிமன்றத்தில் தமிழ் இல்லை
தமிழில் படித்தால் வேலை இல்லை
தமிழ் கற்ற தமிழனுக்கு திருவோடு –
உயர் தனிச் செம்மொழிக்கு மாநாடு!
***
அமெரிக்கா பறக்கிறான் ஐ.டி. தமிழன்
சிங்கப்பூர் குருவியாய் தஞ்சைத் தமிழன்
துபாயில் துவள்கிறான் துறையூர்த் தமிழன்
அகதியாய் அலைகிறான் ஈழத்தமிழன்
உள்ளூர்த் தமிழா … ஊர் ஊராய் ஓடு!..
உலகத் தமிழா …! கோவையில் கூடு!..
***
விவசாயித் தமிழனுக்குத் தண்ணியில்ல…
நெசவாளித் தமிழனுக்கு நூல் இல்ல…
தொழிலாளித் தமிழனுக்கு உரிமையில்ல..
பட்டதாரித் தமிழனுக்கு வேலையில்ல…
மாணவத் தமிழனுக்கு கல்வியில்ல…
மீனவத் தமிழனுக்கு கடல் இல்ல…
தமிழன் வாழாமல் தமிழ் வாழுமா?
தண்ணியே இல்லாமல் மீன் வாழுமா?
***
மழலையர் வாயிலிருந்து
அம்மா அப்பாவை பிடுங்கிவிட்டு
மம்மி டாடியை ஊட்டியவர் யார்?
தமிழைப் படிப்பது தரக்குறைவு என்று
தமிழனையே சிந்திக்கத் தூண்டிய
தலைமகன் யார்?
கொள்ளையர் மனம் குளிர
கோவிந்தராசன் கமிட்டி அமைத்த
கொற்றவன் யார்?
’’தண்ணி’’யையே பிளேடாக்கி
தமிழச்சிகளின் தாலியறுத்த
தவப் புதல்வன் யார்?
உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காட
உண்ணாவிரதமிருந்த வழக்குரைஞர்களை
உள்ளே தள்ளி அழகு பார்த்த
காவல் தெய்வம் யார்?
அவர் தான் கலைஞர்…
அவ்ர் தா………ன் கலைஞர்!.
***
ஃபோர்டுக்கு சேர நாடு
சோனிக்கு சோழ நாடு
கோக்குக்கு பாண்டிய நாடு
ஹூண்டாய்க்கு தொண்டை நாடு
நாதியற்ற தமிழனுக்கு
நாலுநாள் மாநாடு!
வள்ளலுக்கு வள்ளலாம்
கலைஞருக்கு ஓ போடு!
***
மம்மி டாடி படிக்கும் நர்சரிகளே!
மெட்ரிக் படிக்கும் ஸ்டூடண்டுகளே!
கான்வெண்டில் தமிழ் கற்ற கனிமொழி
அழைக்கிறார்!
“கோவைக்கு வெல்கம்!”
***
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
விவசாயிகள் விடுதலை முன்னணி.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
______________________________________________
மேலும் தொடர்புடைய பதிவுகள்
- ‘தல’யும் ‘தலி’வரும் தமிழனின் தலையெழுத்தும் !!!
- தலைவர்களின் சுயமோக போதை !
- அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!
- அழகிரி அண்ணன் வர்றாரு , எல்லாம் ஒதுங்கி நில்லுங்க !
- முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!
- ஈழம்: கருணாநிதியின் கோழைத்தனம் !
- அழியும் ஈழத் தமிழினம்…அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி !
- ஈழப் ‘போர் நிறுத்தம்’: காங்கிரசு – தி.மு.க கம்பெனியின் கபட நாடகம்!
- கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்!
- கருணாநிதியின் இறுதி நாடகம்?
தோழர் நீங்கள் போராடுவதெல்லாம் சரிதான்.ஆனால் உங்கள் போராட்டத்தை எல்லாம் ஓட்டு சீட்டு கட்சிகள்தானே அனுபவிக்கப்போரார்கள். அதிமுக என்கிற பார்ப்பன கட்சிக்குதானே லாபம்?
நத்தா அதுக்காவ என்ன செய்ய முடியும்? போராடித்தானே ஆவனும்
தோழர்களின் போஸ்டரை நான் மாம்பல ரயில் நிலையத்தில் பார்த்தேன் ………..
தோழர்களுக்கு வீர வணக்கம்
தோழர்களே என் கருத்தை தளத்திலே பதிவு செய்து உள்ளேன் ,,,,, அரசிற்கு கண்டனங்கள் http://vennirairavugal.blogspot.com/2010/06/blog-post_26.html
இதுவல்லவோ ஜனநாய(ய்)க நாடு. இவரல்லவோ தமிழினத் தலைவன். இவ்விழா எப்படி நடந்தாலும் உண்மை மக்களுக்கு புலப்பட வேண்டும். அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமை தமிழனுக்கு இருக்கிறது.
ஜனநாயகமா?…. இல்லை..இல்லை… மன்னராட்சி அல்லவா நடக்கிறது?…
நல்ல செயல் தான். எட்டப்பன் என்றால் “காட்டி கொடுப்பவன்” என்பது போல ’கலைஞர்’ கருணாநிதி என்றால் “துரோகி” எனும் பொருள் கொள்வோம். இதுவே இவர் தமிழுக்கு செய்த ‘மாபெரும்’ பங்களிப்பு.
துண்டுப் பிரசுரம் வினியோகித்த அதே காரணத்திற்காக ம.ஜ.இ.க வினரும்…………. கிட்டதட்ட இருபதிற்கும் மேற்பட்டவர்கள் கைதாகியிருக்கிறார்கள்.
Dear Vinavu, no response for my phone call. Recently, I am unable to discuss with you in Tamil due to some modification.Can you please explain us so that there is no communication gap amongst us.Hope Chemmozhi Manaadu is a grand sucess by achieveing this by not permitting me to discuss with you in tamil here!. Vazha tamil. Valarga Tamilagam!!
கிருஷ் டி.வி,
கூகிள் வழி ஆங்கில – தமிழ் மொழிமாற்றி வினவு தளத்தில் செயலற்று போய்விட்டதால் அதை தற்போது பயன்படுத்த இயலாது. அந்த சேவையை பயன்படுத்த http://tamileditor.org தளம் செல்லவும்.
உங்கள் கணிணியில் தமிழ் எழுதும் வசதியை ஏற்படுத்த http://tamilblogging.tamilmanam.net/?p=20 இந்த வழிகாட்டியை பயன்படுத்தவும்
ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்கள் அலைபேசியில் அழையுங்கள்
நன்றி
Firefox add-on ‘Tamil Visai’ பயன்படுத்தலாமே…
‘Tamil Key’ என்று தேடவும்.
கோவைப் பந்தலிலே, கோடிகளிலேதமிழுக்குக் காப்பு.முன்வரிசையில் முதல்வர்;பாராட்டுகளில் திகட்டிப் போனார் – (முதல் மாங்காய்).அடுத்த தேர்தலில் தமிழ்க் குடிகளின்ஓட்டுகளில் மூழ்கிப் போவார் – (இ.மா)(ஆயிரம் கோடிகளில் இத்தனை மாங்காய்கள்.பாராட்டாமல் போஸ்டர் ஒட்டினால்கிழித்தெறியாமல் என்ன செய்வார்கள்?)முதல்வருக்குப் பக்கத்தில்அமைச்சர் பெருமக்கள்;ஆடி, ஓடி, ஆய்ந்து, ஓய்ந்து, அலுத்து,முதல்வர் சிரித்தால் இவர்களும் சிரித்து,அவர் அழுதால், இவர்கள் மூக்குச்சிந்தி,அரங்கத்தில் ஓய்வெடுக்கிறார்கள்.பாராட்டும் பதவிகளும்அவர்களின் வாரிசுகளுக்கும்உண்டென்றரிக.
பின் வரிசயில்பாதம் நக்கிப் பாவலர்கள்.எச்சிலால் பாதம் கழுவிப்பரிசில் வாங்க்கிப் போவார்கள்.பணமுடிப்பும் உண்டு.சிலருக்கு மகாபலிபுரத்தில்நிலவொளியில் அடிவருடவருடாந்திர வாய்ப்புமுண்டு.
பிற்பாடு பேச்சாளர்கள்.”தமிழே, இலக்கியமே,எங்களை வாழ வைக்கும்எம்குலத்தாயே” என்றுசிலேடையில் சிலாகிப்பார்கள்.(தமிழுக்குமாச்சு, ரெண்டு தானைக்குமாச்சு)ஆனால்,தன்னைப் புகழ வேண்டாமெனக்கையமர்த்தும் முதல்வர்.பெருந்தன்மயே, உன் பேர்தான் கருணா நிதியா?
அதற்கும்பின்னே அதிகாரிகள், அலுவலர்கள்.’அடுத்த பிரமோசனுக்கு?’கண்டிப்பாக ஆகட்டும் பார்க்கலாம் – கருணா நிதி ஆட்சியிருந்தால்.கண்டிப்பாக உங்களுக்கு ‘எஸ்மா’ – மண்புமிகு மேடம் வந்தால்.
அதற்குப் பின்னால் கூஊஊஊட்டம்.கட்டுக்கடங்கா உடன்பிறப்புக்கள்.தமிழ் வெறி தலைக்கேறி,டப்பாங்க்குத்து ஆடினால் தேவலைஎன்னும் நிலையிலும்,அரங்க நாகரீகமும், அரசியல் நாகரீகமும்,தமிழ்ப் பண்பும், வட்டத்தின் முறைத்தலும்,அவர்களைத் தடுத்தாள்கிறது.
அதர்கப்பாலே கூர்ந்து பார்த்தால்,நூற்றுக்கணக்கில் அலைகடலெனத் திரண்டுகாற்று வாங்கிக்கொண்டிருக்கும்பூர்வத் தமிழ்க்குடிகள்.ஒரு ரூபாய் அரிசியின் செரிமானத்துக்காககாலாட நடந்துவந்தவர்கள்.
அரங்கைச்சுற்றும் பத்திரிகையாளர்கள்.அரசு விளம்பரங்களுக்கு ஆலாய்ப்பறக்கிறார்களோஎன்று யொசிக்கவைக்குமளவுக்குவேகம், விவேகம்.
(தொடரும்)- புதிய பாமரன்
[…] This post was mentioned on Twitter by Tamil_News, Mau. Mau said: செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் தமிழகமெங்கும் கைது ! போஸ்டர் கிழிக்கிறது போலீஸ் !! http://bit.ly/b6GIgu […]
-உ-/~=திருமறைமலை-=ஓம்=-யடிகள் துணை=~//=> #ஓர் ஒற்றைக் காட்சியூடகங் கூடக் கழக,முன்னணித் தொண்டர்கள் தளைப்பாடு பற்றி மூச்சுக்கூட விடவில்லை யென்பது பெருத்த இறும்பூதா வுள்ளது…பெரிய்ய்ய ’புரட்டிப்போடும் புரட்சிக்கார’ப்-புலனாய்வு ஊடகமாக் காட்டிக்கொள்ளுஞ் சிலவுங்கூட வாய்திறவா ஊமைநோன்பு பூண்டுநிற்கும்படி அப்படியென்ன அச்சுறுத்தலோ..??–அரசின் கையில் அப்படி “வெருவந்த செய்தொழுகு”மாறு உள்ள படைக்கலங்கள் யாவையோ..??_அன்றி, எல்லாத் தமிழனும், தமிழியச் சார்பு ஊடக அமைப்பும் காயடிக்கப்பட்டுப் பொதியெருதா(-கழுதையா..!) மாற்றப்பட்டனரா-பட்டனவா, %உலகத் தமிழ்ச் ”செம்பழி” மாநாட்டைப் பாதுகாத்துத், ’தென்புல’த்தில் இழைத்த வஞ்சகச் ”செங்குருதி வெம்பழி” மறைப்புச் செவ்வனே நடைபெற..??~”சேரர் கொற்ற”த்தோம்,_*நாவலந் தமிழகக் **கொங்குதேய-நின்று.|=சிவ**சிவ=|
இந்திய கருணா நடத்திக்கொள்ளும் மற்றுமொரு பாராட்டு விழாவுக்கு எதிர்ப்பு காட்டினால் சிறைதான் கிடைக்கும்.இந்தியாவில் அடிப்படை மனித உரிமைகள் அனைத்தும் காப்பாற்றப்பட்டுகொண்டு இருப்பதாக நீங்கள் நம்பிக்கொண்டு இருந்தால் அதற்கு இந்திய கருணா எப்படி பொறுப்பாக முடியும்? திரை நடிகைகளின் குட்டைப்பாவாடை குத்தாட்டத்தை தவிர்த்தன் மூலம் இது மற்றொரு பாராட்டு விழாவாக இருக்க முடியாது என தமிழ் மக்கள் நம்பிக்கொண்டு இருக்கும்போது நீங்கள் இப்படி நடந்துகொண்டால் , பாவம் இந்திய கருணா வேறு என்ன செய்ய முடியும்?
VAZHTTHUKKAL PARAATTUKKAL NATRIKAL PALA.MATRA MURPOKKU IYYANKAL PANGU PERATHADU VARUTTHAMAGA IRRUKKIRATHADU.
11 தோழர்கள் சட்ட விரோத காவல். வீடுகளில் சோதனை. 01/07/10 மாலை, விழுப்புரத்தில் கண்டன பொதுக்கூட்டம் உரை… பழ. நெடுமாறன் , வை.கோ. , நல்லகண்ணு , மா. நடராசன், அவசியம் வாங்க.
— தமிழ் வேங்கை . ஐந்தினை பாதுகாப்பு இயக்கம்
http://endrayathevai.blogspot.com/2010/06/blog-post.html
///// மாநாடு நடக்கும் போது எந்த சுவரொட்டியும் அரசை எதிர்த்து ஒட்டக்கூடாது என்று காங்கேயம் போலீசு அதற்கு ‘ஜனநாயக’ முறையில் விளக்கம் கொடுத்திருக்கிறது.///// இது ‘ஜனனாயகம’ அல்ல. ஃபாசிசம். தமிழகத்தில் இது அதிகமாகிவிட்டது. தொடர்ந்து போராடும் தோழர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
””””””””””””ஃபோர்டுக்கு சேர நாடு
சோனிக்கு சோழ நாடு
கோக்குக்கு பாண்டிய நாடு
ஹூண்டாய்க்கு தொண்டை நாடு
நாதியற்ற தமிழனுக்கு
நாலுநாள் மாநாடு!
வள்ளலுக்கு வள்ளலாம்
கலைஞருக்கு ஓ போடு!”””””””””””””””””
கலக்கிடீங்க.போங்க……………………
migavum nanraga katutrai irundadu keep it up
[…] செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் … […]
[…] செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் … […]
SEMMOLI MAANAATTIL KARUNAANITHIKKU MIKAP PERIYA PUKAL MAALAI ONTRAI MATHIYA AMAICHAR A.RAASAA ANIVITHAR.ATHAAVATHU KARUNAANITHIYAI AVAR “tamilai semmoliyaaka uyarthiya kalaingare”entru kurippittaar.TARAM TAALNTHU,VALAM OLINTHU POOY IRUNTHA TAMIL MOLIYAI KARUNAANITHI AVARATHU ULAIPPAAL SEMMOLIYAAKA UYARTHIYATHAAKA AA.RAASAA KOORUKIRAAR.SEYARKARIYA SAITHA KARUNAANITHIYAI NIINGAL VASAI PAADINAAL SUMMAA VEEDIKKAI PAARTHK KONU IRUPPATHU JANANAAYAKAMAA SOLLUNGAL PALSAANTIIRE?!