முகப்புதஞ்சை பெரிய கோவில் - கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்டத் திருவிழா !!
Array

தஞ்சை பெரிய கோவில் – கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்டத் திருவிழா !!

-

வரும் செப்டம்பர் 25, 26 தேதிகளில் தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாண்டு நிறைவு விழா தஞ்சையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக கருணாநிதி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், கலைஞர்கள், வாரிசுகள் அனைவருமாய் கூடி விரிவாக ஆலோசித்து முடிவெடுத்திருக்கின்றனர்.

இதன்படி தஞ்சை நகர் முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்களின் தெருவோர நிகழ்ச்சிகள், பெரிய கோவிலில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி, நூறு ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கம், பெரிய கோவிலில் பொது அரங்கம், மாலையில் திலகர் திடலில் கருணாநிதி தலைமையில் அஞ்சல் தலை, நாணயம் வெளியிடுதல், பெரிய கோவிலின் வரலாற்றை நினைவு கூரும் கண்காட்சி, இந்த விழாவுக்காக தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் எல்லாம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இனி செம்மொழி மாநாட்டுக்கு என்ன நடந்ததோ அத்தனையும் திரும்ப நடக்கும். ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு அமைச்சர் தலைமையில் நியமிக்கப்படும் குழு அடிக்கடி கலந்து பேசி நடத்தும். தமிழக அரசின் அனைத்து அதிகாரிகளும் இனி இரண்டு மாதங்களாய் பெரிய கோவில் விழாவுக்கான வேலையை கவனிப்பார்கள். ஊடகங்களும் இது குறித்து சிறப்பு மலர் வெளியிட்டு கருணாநிதி சோழனது புகழ் பாடும். தொலைக்காட்சிகளில் இசையும், காட்சியும் இதற்கென்றே தயாரிக்கப்பட்டு ஓடும்.

இந்தக் குத்தாட்டத்திற்கு எத்தனை கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை அரசு இன்னும் சொல்லவில்லை. இதிலிருந்து அவர்களது பட்ஜெட் இன்னும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. மக்களும் தமது வாழ்வியல் பிரச்சினைகளை ஒதுக்கி விட்டு இனி இரண்டு மாதங்களாக இந்த கிளாடியேடட்ர் ஷோவை இரசிப்பார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில், சோழ சாம்ராஜ்ஜியத்தின் வலிமையை நினைவுகூரும் வண்ணம் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருக்கிறது. அன்றைய நிலைமையில் இருந்த நிலவுடைமை சமூகத்தின் மிகவும் குறைவான உபரி உற்பத்தி இந்தக் கோவிலுக்காக பயன்பட்டிருக்கிறது. அதன் பொருள் மிகவும் வறிய நிலையில் பசியும் பட்டினியுமாகவே ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோவிலை கட்டியிருக்கிறார்கள். பாறையே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் இது போன்ற எண்ணற்ற கற்கோவில்கள் ஏராளமிருக்கின்றன. அவற்றையெல்லாம் நினைத்துப் பார்ததால் நமது கட்டிடக் கலையின் மகத்துவத்தை விட மக்கள் பட்ட துன்பங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

ராஜராஜ சோழன் காலத்து மக்கள் வாழ்க்கை நிலையிலிருந்து இன்றும் நமது மக்களின் நிலைமை பெரிதும் மாறவிடவில்லை. ஒரு ரூபாய் அரிசிக்கும், குடிசை வீட்டின் பத்து ரூபாய் மின்கட்டணத்திற்கும், வேலைக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பயணத்திற்கும்தான் நமது மக்கள் இன்றும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். எனில் இந்த ஆயிரம் வருட நிறைவின் பொருள் என்ன?

அன்று ராஜராஜ சோழன் தனது சாம்ராஜ்ஜியத்தின் வலிமையினை பறைசாற்றும் வண்ணம் இந்தக் கோவிலை கட்டினான். இன்று அதே கோவிலின் ஆயிரமாண்டு நிறைவை கருணாநிதி சோழன் தனது கட்சி, குடும்ப சாம்ராஜ்ஜியத்திற்காக கொண்டாடுகிறார். ஆக சோழர்களின் சர்வாதிகார ஆட்சி இன்னும் நீடிக்கிறது. அன்று பட்டினியுடன் கோவிலுக்கான கற்களைச் சுமந்த மக்கள் இன்று பசியுடன் அந்த கோவில் கொண்டாட்டத்தினை கண்டு களிக்கிறார்கள். ஆக அன்றைக்கு மேட்டுக்குடிக்கு மட்டும் இருந்த பொழுது போக்கு இன்று எல்லோருக்கும் இருக்கிறது என்பதுதான் இந்த ஆயிரமாண்டு இடைவெளியின் முன்னேற்றமா?

சரி, கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்ட திருவிழா எதுவோ, நினைத்தாலே கிலியாக இருக்கிறது!

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்டத் திருவிழா !!…

    கருணாநிதி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், வாரிசுகள் கூடி விரிவாக ஆலோசித்து முடிவெடுத்திருக்கின்றனர். செம்மொழி மாநாட்டுக்கு என்ன நடந்ததோ அத்தனையும் திரும்ப நடக்கும்…

  2. […] This post was mentioned on Twitter by வினவு, ஏழர and ஏழர, ஏழர. ஏழர said: அடடா இன்னிக்கு வினவு கருணாநிதி எதிர்ப்பு பதிவு எழுதிட்டாங்களே… http://bit.ly/9o5lBt #vinavu […]

  3. தமிழகத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய மக்களின் அடிப்படை வசதிகளுக்கு அரசிற்கு நேரம் இல்லை அதே நேரத்தில் இந்த மக்களின் வரிப்பணத்தை எப்படி எல்லாம் வீணடிக்க முடியுமு அப்படியெல்லாம் வீணடித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு

    நாளொரு பேட்டியும் பொழுதொரு புகழ் மழையும் வேண்டும் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது

    எழுத்தாளன் எனக்கூறி எழுத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது
    செய்தி தொடர்பு துறையை தனது குடும்ப நிகழ்வுகளை பதிக்கும் குடும்ப நிறுவனம் ஆக்கி விட்டது

    நலேடுகளோ அமாம் சாமி போட்டு கூழை கும்பிடு போடுகிறது

    இப்போது இந்த தஞ்சை பெரிய கோயில் திருவிழா

    யார் ஊட்டு எழவோ பாய போட்டு அழுவு

  4. கருணாநிதி மும்முடிச் சோழர்

    வடதமிழகத்தை (தொண்டை மண்டலத்தை) ஸ்டாலின் இளவரசருக்கும்,

    கொங்கு மண்டலத்தை தனது நேரடி ஆளுகையிலும்

    பாண்டிய மண்டலத்தை அழகிரி இளவரசருக்கும் அளித்து ஆட்சி செய்கின்றார்.

    அவரைப் போய் நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறீர்களே ?

    • //கொங்கு மண்டலத்தை தனது நேரடி ஆளுகையிலும்// ஏனுங்கோ,விவரம் தெரியாம பேசுரிங்கோ!
      கொங்கு மண்டலத்தை செம்மொழி மண்டலமாக்கி கனிமொழிக்கு
      சீராக தாரை வார்த்தாச்சு…..தெரியாதுங்களா?!!!

  5. அடடடட…வினவு தொல்லை தாங்க முடியலேப்பா. பாவம் அவர் பாட்டுக்கு வயசான காலத்துல சிவனேன்னு (300 -400 கோடி செலவுல) ஒரு விழா எடுக்கனும்னு ஆசைப்படறார். எடுத்துட்டு போகட்டுமே…அவர் அப்பன் வீட்டு காசில்லையே..எல்லாம் ம..க்கள் வரிப்பணம் தானே. தமிழனுக்குத்தான் பெருமை.

    இப்பதான் திட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க, அதுக்குள்ளே எதிர்க்க ஆரம்பிச்சா எப்படி…இருங்க, பொறுங்க, விழா எடுக்கணும், எல்லாரும் போற்றி போற்றி பாடனும், சிலபல திட்டங்களை அவர் அறிவிக்கனும், இன்னும் எவ்வளவு வேலை பாக்கி இருக்கு…

    மதுரையில் பரந்த மீன்கொடியை
    உன் மகனிடம் கண்டேனே

    கனி மொழியின் இனிமை, புலமை
    இரண்டும் மகளிடம் கண்டேனே

    தஞ்சையில் சோழன் மண்ணில்
    சரித்திரம் படைத்திட கண்டேனே

    அன்றும் இன்றும் என்றும் உன்னை
    தமிழகம் என்றேனே!

    • Dear pinktamilian: ///(300 -400 கோடி செலவுல) ஒரு விழா எடுக்கனும்னு ஆசைப்படறார். எடுத்துட்டு போகட்டுமே…அவர் அப்பன் வீட்டு காசில்லையே..எல்லாம் ம..க்கள் வரிப்பணம் தானே.///

      ஆமாம்! கருணாநிதி செய்வது தப்பு. மிக மிக தப்பு. யார் பணத்தை எடுத்து எவன் செலவு செய்வது.? நீங்கள் சொன்னது மிகவும் சரி. உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது. 300 -400 கோடி பணம் வீணாவதை உங்களால் தாங்க முடியவில்லை. மிக்க மகிழ்ச்சி! உங்களை மாதிர் தைர்யமாக கேள்வி கேட்கும் இந்திர்யர்கள் இருப்பதினால் தான் மாதம் மும்மாரி மழை பொழிகிறது. உங்கள் சேவை மேன் மேலும தொடரட்டும்…

      ஆனாலும் எங்களுக்கு ஒன்று புரியவில்லை. தெரிந்தால் பதில் சொல்லுக்னால் pinktamilian அவர்களே!

      இருபதாயிரம் கோடிக்கு மேல் பண விரயம் செய்து (அதுவும் 1999 -ல்) ஒரு செத்துப் போன மொழியை சமஸ்க்ரித்த ஆண்டு என்று ஒரு வருடம் கொண்டாடினீர்கள். இன்று அந்த இருபதாயிரம் கோடி மதிப்பு 50,000 கோடியை தாண்டும்.

      ஏன் அப்ப நீங்க இந்த அநீதியை எதிர்த்து கூவலே? பாசமோ? நேசமோ? இல்லை அப்ப நீங்க பிறக்கவே இல்லையா? இல்லை உங்களுக்கும் “Selective Amnesia” யா? நீங்கள் மட்டும் கூவு கூவுன்னு கூவி இருந்தால் ஆளுக்கு மூன்று வேளை பிரியாணியும் ஒரு க்வார்ட்டரும் தினமும் கிடைத்து இருக்கும். தவறு செய்து விட்டர்கள் pinktamilian அவர்களே!

      நீங்க 1999 இல எங்கு சென்றீர்கள்???

      • அம்பி

        ஒன்று நன்றாக புரிகிறது. உங்களை பொறுத்த வரை தமிழ்நாட்டில், தமிழ் கூறும் நல்லுலகத்தில் யார் என்ன செய்தாலும் அவற்றை விமர்சிக்கவோ, கிண்டலடிக்கவோ, கருத்து சொல்லவோ ஐயர்களுக்கு உரிமை கிடையாது. அவர்கள் என்ன சொன்னாலும் அது பார்பனீயம், அப்படித்தானே! வாழ்க ஜனநாயகம், வளர்க கருத்து சுதந்திரம்!

        • PinkTamilan:

          நான் உங்கள்ளுக்கு சொன்னதில் எங்க ஐயர் வந்தார்? நான் சொல்லாததை நான் சொன்னா மாதிரி சொல்லி விவாதத்தை திசை திருப்ப உங்களை அடிச்சுக்க ஆள் இல்லை. வாழக உங்களது தொழில்!

          அதை கூட மன்னிக்கலாம். ஏனென்றால் என்றைக்கு நீங்கள் நேர்மையாக விவாதம் செய்துள்ளீர்கள்.

          ஆனால் இதை முழுவதும் படிக்காமால் எங்களது சூத்திர கண்மனிகள் எங்கே சொம்பு? எப்போ சொம்பு தூக்கணும்? எப்படி தூக்கணும். இரண்டு கையில் ஒரே ஒரு சொம்பு தூக்கனுமா? இல்லை ஒவ்வொரு கைக்கும், ஒரு சொம்பா? இப்படி கேள்வி கேட்டுக்கொண்டு கண்மண தெரியாமல் வரும் எங்களது சூத்திர கண்மணிகளை நம்பித்தான் உங்களது பிழைப்பு உள்ளது.

          எங்களது சூத்திர கண்மனிகள் விழித்துக் கொண்டால் நீங்கள் புஸ்வானம் தான் அப்பு!

          விழிப்பீர்களா எனது சூத்திரக் கண்மணிகளே???

        • நீங்கள் சொவது படி சம்ச்க்ரிததை எதிர்த்தால் அது ஐயரை எத்ரிதால் மாதிர். அப்படித்தானே?

          நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் நான் சொன்னது சம்ச்க்ரிதம் படித்தால் அதற்க்கு பெயர் பிரியானியம்! பார்பனீயம் அல்ல!!!

  6. சரியாக சொன்னீர்கள்.
    இவங்க சரி என்று சொன்னா சரி
    தவறு என்று சொன்னா தவறு.

    வறுமையை ஒழிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்து
    தான் சுற்றத்தாரின் வறுமையை போக்கி கொண்டார்கள்.

    வேலை இல்லாமையை தீர்க்க வேண்டும் அதற்கு ஒரு சட்டம் கொண்டு வந்து
    தான் உறவினர்களின் வேலை இல்லாமையை போக்கி கொண்டார்கள்.

    இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலைமை தான் நீடிக்கும் என்று நினைக்கிறேன்.

  7. தற்போது ஆந்திரத்தில், சில ஆண்டுகள் முன்னர் கோவையில், ஆடம்பரமாக செங்கொடி மாநாடு நடந்ததே! வசூலும் நடந்ததே! செலக்டிவ் அம்னீஷியா?
    அனைத்து வகை மாநாடுகளினாலும் பொருள்/கால விரயம்! மக்களுக்கு கடும் இன்னல்!

    • Dear rammy:

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இது மாதிரி 300 – 400 கோடி செல்வழிப்பது முட்டாள் தனம. எங்களுக்கு சுயமாகா சிந்திக்க தெரியாது. பேசவும் தெரியாது. உங்களை மாதிரி மற்றும் தினமலர் பத்திரிக்கை எடுத்து சொன்னால் தான் எங்களுக்கு உரைக்கும்.

      ஆனாலும் எங்களுக்கு ஒன்று புரியவில்லை. ஏன் இருபதாயிரம் கோடிக்கு மேல் பண விரயம் செய்து (அதுவும் 1999 -ல்) ஒரு செத்துப் போன மொழியை சமஸ்க்ரித்த ஆண்டு என்று ஒரு வருடம் கொண்டாடினீர்கள். ஏன்????

      How did you manage to avoid the controversy in spite of this mega fraud…Hats off to your people…

      ஆனால் எங்களுக்கு, சூத்திர கண்மணிகளுக்கு, நீங்கள் மற்றும் தினமலர் அப்புறம் உன்னோரு முழு முட்டாள், மன்னிக்கவும், முழு மொட்டை சொlல்வது தான் வேத வாக்கு.

      எங்கள், சூத்திரக்கண்மனிகள், பனி உங்களுக்கு சொம்பு தூக்குவதே!

      அதுவும் எப்பொழுதும். நேரம் காலம் கிடையாது. ஒரு குரல் கொடுத்தா போதும். வந்து ஒவ்வொரு கைக்கும் ஒரு சொம்பை நாங்கள் தூக்குவோம். அதான் எங்கள் மகிமை!

      We are specialists in that art! ஆமாம்! சொம்பு தூக்குவது எங்களது குலத்தொழில்.

      • Dear Mr.Ambi,
        what do you want to say?
        dont try to brand your op posers!
        me also suuthran!
        just am trying to expose your black side!
        you people are always hiding ,covering misdeeds of communism and their followers!

        தினமலர் மட்டுமல்ல உங்கள் வசவு… மன்னிக்கவும்…வினவு எழுத்துகளும், ஒரு தலைப் பட்சமானவையே!

        please try to write satires about comrades, also!

  8. இதுல பெரிய தப்பு ஒண்ணும் இருக்கரமாதிரி தெரியல்லை. ஆயிரமாண்டு காலம் கடந்து உயர்ந்து நிற்கும் இந்த பொக்கிஷத்தை கொண்டாடுவதில் தப்பே இல்லை.
    கொஞ்சம் கோடிகள் சுருட்டப்படலாம்.
    அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் மக்களுக்கே வந்தால், நல்லதுதானே?

    • வாங்க சர்வேசா … எப்படி இப்படிலாம் சிந்திக்க முடியுது உங்களால மட்டும் ..

      சரி நைனா எந்த ஓட்டுப் பொறுக்கி கட்சி ல இருக்கீறு ?.. ஆயிரம் ஆண்டு அது நிலைத்து நிற்குறதுக்கு காரணமா இருந்த தொழிலாளர் வர்க்கம் இன்னைக்கு வரைக்கும் கஸ்டப் பட்டுகிட்டு இருக்கு … இதுல விழா எடுக்கலைனு அந்த பெரிய கோவில் வந்து உங்கிட்ட சொல்லி அழுதுச்சா ?..

      அது எப்படி?.. உனக்கு சம்பளம் கொடுக்குரதுக்கு பதில் உன் முதலாளி அக்கவுண்டுல காசு போட்டுட்டு வட்டிக் காசு மட்டும் நீ எடுத்துக்கோ நு சொன்னா சரி நு சொல்லுவியா நைனா ?.. எப்படியோ அப்படி இப்படி நு உனக்கு தான் வட்டியா வந்து சேர்ந்திடும்ல ?..

  9. அன்புள்ள அம்பியே

    “நான் உங்கள்ளுக்கு சொன்னதில் எங்க ஐயர் வந்தார்?”

    சம்ச்க்ரிதம் வந்தவுடனே வந்துவிட்டாரே ஐயர், இது கூடவா எங்களுக்கு புரியாது! இல்லேன்னா தமிழ், கலைஞர் விழா பத்தி பேசும்போது நீங்க ஏன் பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை பத்தி பேசணும் (நான் அதை பற்றி ஒன்றுமே சொல்லாத போது)? நான் சொன்னதை உங்களால் ஏற்றுக்கோள்ள முடியவில்லை, அதனாலதான் சம்ஸ்ரிதம் அப்படி இப்படின்னு கதைய மாத்தறீங்க.

    “நான் சொல்லாததை நான் சொன்னா மாதிரி சொல்லி விவாதத்தை திசை திருப்ப உங்களை அடிச்சுக்க ஆள் இல்லை. வாழக உங்களது தொழில்!”

    இது ஊரறிஞ்ச விஷயம். நான் சொல்லல அப்படின்னு சொல்லி நீங்க தப்பிக்க பாக்கறீங்க.

    “அதை கூட மன்னிக்கலாம். ஏனென்றால் என்றைக்கு நீங்கள் நேர்மையாக விவாதம் செய்துள்ளீர்கள்.”

    எங்களை எங்கே விவாதம் செய்ய விடறீங்க? உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே பல்லவி.

    “எங்களது சூத்திர கண்மனிகள் விழித்துக் கொண்டால் நீங்கள் புஸ்வானம் தான் அப்பு!”

    நீங்கள் சொல்லுகிற அந்த கண்மணிகள் விழித்து ரொம்ப நேரம் ஆச்சு. அவங்களுக்கு தெரியும் யார் எப்படி என்று!

    “நீங்கள் சொவது படி சம்ச்க்ரிததை எதிர்த்தால் அது ஐயரை எத்ரிதால் மாதிர். அப்படித்தானே?”

    நான் சம்ச்க்ரிததை ஆதரித்தால் தமிழின் எதிரின்னு சொல்ற ஆளே நீங்கதான். ஐயர்கள் என்ன செஞ்சாலும் குத்தம். சம்ச்க்ரிதம் படிச்சா குத்தம், தமிழை ஆதரித்தாலும் குத்தம், கலைஞரை கிண்டலடித்தாலும் குத்தம். வாழ விடுங்கப்பா!

    “நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் நான் சொன்னது சம்ச்க்ரிதம் படித்தால் அதற்க்கு பெயர் பிரியானியம்! பார்பனீயம் அல்ல!!!”

    பிரியானியமா பார்பனீயமா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கலைஞர் கூட்டும் மாபெரும் விழா பற்றி பதிவு, அதற்கு எனது பதில்…நீங்க ஏன் சம்ஸ்ரிததை உள்ள கொண்டு வந்தீங்க? கலைஞர் செய்வது சரியா தப்பான்னு பேசுங்க. திட்டவட்டமா உங்களால சொல்ல முடியுமா?

    • Dear Pinktamilan: ///சம்ச்க்ரிதம் வந்தவுடனே வந்துவிட்டாரே ஐயர், இது கூடவா எங்களுக்கு புரியாது!///

      நான் அப்படி நினைக்கவில்லை. நீங்களாக ஒன்று நினைதுக் கொண்டு அப்புறம் அதற்க்கு நாங்கள் உங்களுக்கு பதில் கூற வேண்டும். இது மாதிரி விவாதம் செய்வது உங்களது வாடிக்கை! இது என்ன நியாமோ? இருந்தாலும் உங்க வாக்குமூலத்திற்கு நன்றி!

      ///நீங்கள் சொவது படி சம்ச்க்ரிததை எதிர்த்தால் அது ஐயரை எத்ரிதால் மாதிர். அப்படித்தானே?///

      நான் அப்படி நினைக்கவில்லை. இது நான் கேள்விப்படாத ஒன்று. நீங்களாக ஒன்று நினைதுக் கொண்டு அப்புறம் அதற்க்கு நாங்கள் உங்களுக்கு பதில் கூற வேண்டும். இது என்ன நியாமோ? ஆனால் இது மாதிரி விவாதம் செய்வது உங்களது வாடிக்கை! அப்புறம் என்ன நடத்துங்க!

      உங்கள் சமூக அக்கறை என்னைப் புல்லரிக்கவைக்கிறது! பின்னே (300 -400) கோடி சாதாரண பணமா? இதே மாத்ரி தான் தமிழ் மாநாட்டுக்கும் எல்லா பார்ப்பன பததிரிக்கையும் கூவின. 300 கோடி வீண் என்று! அதேமாதிரி சமூக அக்கறை 50000 கோடி செலவு செய்த போது ஏன் வரவில்லை? எல்லா பார்ப்பன பததிரிக்கையும் அப்போது எங்கு சென்றன? அது தான் கேள்வி. ஆனால் எங்களது சூத்திர கண்மணிகள் உங்களை கேள்வி கேட்க மாட்டார்கள். என்னிடம் தான் விவாதம் செய்வார்கள். அது தான் உங்கள் பலம்; எங்களது பலவீனம்.

      உங்களது எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுத்து ஆகிவிட்டது. அவற்றை மறுபடியும் படியுங்கள்.

      ///கலைஞர் செய்வது சரியா தப்பான்னு பேசுங்க. திட்டவட்டமா உங்களால சொல்ல முடியுமா?///
      தவறு தான். 300 – 400 கோடி இதுக்கு வீண், அப்புறம் 300 – 400 கோடி தமிழ் மாநாட்டுக்கும் செய்து வீண் தான் என்று கூவர நீங்க “50000 கோடி ச்ச்மச்க்ரிததிர்க்கு செலவு செய்த போது எங்கே போனீர்கள்.” நான் உங்களது மொழிப் பற்றை கண்டு வியக்கிறேன். தமிழ் மேல் உள்ள உங்களது வெறுப்பை கண்டு கோபப்படுகிறேன். தமிழுக்கு பத்து பைசா செலவு செய்யக்க் கூடாது. என்ன கோபம.

      அதேமாதிரி, கருணாநிதி எது பண்ணினாலும் தப்பு. அவர் ஒழிய வேண்டும். அவரை நோன்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உங்கள் கொள்கையை எங்களுது சூத்திரக் கண்மணிகள் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் தான். இது தான் பார்ப்பன பத்திரிக்கைகளின் வெற்றி—இது நாள் வரை—இனி இந்த internet யுகத்தில் சாணி பேப்பரில் பத்திர்க்கை நடத்தி காலத்தை ஒட்ட முடியாது.

      கல்வி அறிவு மறுக்கப்பட்ட எங்களது சூத்திரக் கண்மணிகள் இப்பொழுது படிக்கிறார்கள். இல்லாவிட்டாலும் ஒன்பது வகுப்பு வரை படித்த எங்களது கண்மணி இரட்டை “வால்” ரங்குடு என்ற ஒரு “பையன்” “அந்த” ஒரு “ரோட்டில் (road)” உக்காந்து அழகாக எழுதிகிறார். அவரது நேர்மை எனக்கு பிடித்தது, எழதுவது தனது சொந்த சரக்கு இல்லை. அது “கற்றதும் பெற்றதும்” என்று சொன்னார்.

      ஆனால் “original” கற்றவர்களும் பெற்றவர்களும் நேர்மையாக ஆங்கிலத்தில் இருந்தது தமிழில் மொழி பெயர்தததாக சொல்லவில்லை. ஏதோ அவர்கள் அறிவு ஜீவி என்றும் எல்லாம் சொந்த சரக்கு என்று காட்டிக் கொண்டார்கள். அதையும் எங்களுது சூத்திரக் கண்மணிகள் நம்புகிறார்கள். இனிமேல் அப்படி இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறன்.

      யார் பணமாக இருந்தால் என்ன? 300 – 400 கோடி கருனாநிதி செலவு செய்வது வீண் என்று சொல்லும உங்கள் சமூக அக்கறை சரி தான். கருணாநிதி செய்தது தவறு என்றால் நீங்கள் செய்தது கடைந்து எடுத்த அயோக்கியத்தனம். ஏன் நீங்கள் 50000 கோடி செலவு செய்த போது கூவ வில்லை?

      ஒரு வேளை நீங்கள் 1999 க்கு அப்புறம் பிறந்து இருக்கலாம்! ஒரு வேளை உங்களுக்கு பத்து வயது இருந்தாலும் இருக்கும் யார் கண்டது நீங்களும் ஞானப்பால் குடித்த ஞானசம்பந்தராகவும் இருக்க்லாம்.

      அனால, நீங்க எதை அளந்தாலும் நம்புவதற்கு நம்ம “டமிலர்கள்” இருக்கிறார்கள்! அளந்து உடுங்க சார்!

  10. MR.?MARK,

    NOT MUCH SEEN IN YOUR “LINK”. ONLY FEW AND ALL ARE VERY OLD! NO NEW’S!

    காம்ரேடுக்களுக்கான பதிவுகளில் காரமில்லையே! சாமரம் வீசியதைப் போல இருக்கிறது! காம்ரேடுக்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தவும்!

    மிஸ்டெர் ?மார்க், சூடோ,சூடோ என்கிறீர்களே! யார் தான் உங்களில் ஒரிஜினல்?

    • ரம்மி, செய்யும் அய்யோக்கியத்தனத்துக்கு ஏற்றார்போலத்தான் இட ஒதுக்கீடெல்லாம் வழங்க முடியும்.. எனவே முதலாளித்துவத்துக்கும், பார்ப்பன பாசிசத்துக்குத்தான் வினவில் எப்போது அதிக இடம்

  11. As we all know about karunanidhi’s and his family’s self promotion through these dramas.But in saying that blaming the ancient tradition is not right. You said those days people built the temple with lot of pain and without food. I don’t believe that unless u give a strong evidence behind that. The economy and the population of olden days were much better and the governance must had been good to built it. Corruption were less and harsher punishments were given to protect some order. Raja raja chozhan left a mark for us to known the way he ruled and lived for the people. Politicians and people should take positive ways from that era and should should move on. BOOMEE

    • நல்லா வக்கனையா பேசத்தெரியுது … இங்கிலிபீஸ் ல எழுதத் தெரியுது … ரின் விளம்பரம் மாதிரி ஆதாரம் இருக்கானு கேக்கத் தெரியுது … என்ன பயவுலைக்கு சிந்திக்கத் தான் தெரிய மாட்டேங்கிது …

      ராஜ ராஜ சோழன் மக்களுக்காக வாழ்ந்தானா ?.. பாப்பாரப் பயலுகளுக்காக வாழ்ந்தானா ?.. போய் உண்மையான மக்களின் பதிவுகளை கல்வெட்டு குறித்து ஆராய்ச்சி செஞ்சவங்களோட புத்தகத்துல படிச்சி பாரு .. அங்க விவசாய மக்களுடைய போராட்டம் எவ்வளவு நடந்த்தது ?.. இராஜ இராஜன் கட்டுன கோவிலுக்கு இடம் எத்தனை பேரோட வயுத்துல அடிச்சி புடுங்கி கட்டுன இடம் ?… கூலிகள் எவ்வளவு கீழ்தரமாக நடத்தப் பட்டனர் ?.. கோவில் பேர்ல எவ்வளவு விவசாய நிலங்கள் எழுதி வைக்கப் பட்டன ?.. அந்த கோவிலில் நேர்ந்து விடப் பட்ட தேவ தாசியரின் நிலை ?.. இதெல்லாம் படிச்சிட்டு வா .. அப்புறம் ராஜ ராஜன் கட்டுன கோவிலை கொண்டாடலாமா ?.. இல்லை காறித் துப்பலாமானு தெரியும் ?…

      • சொல் இருந்தால் போதுமா வினவு?
        சோழர் ஆட்சில் மக்கள் துன்ப பட்டனர் என்பதை எப்படி arinthaai ….
        ராஜா ராஜன் மக்களை துன்பபடுத்தி இருந்தால் ராஜேந்திரன் கம்போடியா வரை வென்றது எப்படி? மக்கள் ஒத்துழைப்பு எப்படி இரண்டாம் தலைமுறைக்கு கிடைத்திருக்கும்? வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ன உள்ளது உங்கள் கட்டுரை. யாரையோ குறை கூற… ஏன் சோழப் பரம்பரையை கேவலபடுதுகிரிர்கள்?

        • செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் சோழனைப் பார்த்து, அவன் தாத்தா ராஜராஜனை பற்றி அறிந்துள்ளார்கள்! பாசக்காரப் பசங்க!

        • ராஜராஜன் காலத்திலும் அவன் மகன் காலத்திலும் மக்களின் துயரத்தைப் பற்றி , மக்களின் போராட்டத்தை பற்றி மிகப் பெரிய ஆய்வுப் புத்தகமே உள்ளது. என்ன அறிவு உனக்கு மணி ?.. முட்டாளுக்கு கூட தெரியும் .. இராணுவம் என்பது மக்கள் படை அல்ல. அது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கான கூலிப் படை என்று ..

          கம்போடியா வென்றதற்கு தினவுள்ள வீரர்கள் , உழைத்து ஓடான மக்களை ஒடுக்குவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்.
          இங்கே தாண்டே வாடாவில் பழங்குடி இன மக்களை அரசின் அடியாளான சி.ஆர்.பி.எஃப் காரன் கொல்லவில்லையா ?.. எதற்கு கொன்றான். கொன்றால் சி.ஆர்.பி.எஃப். காரனுக்கு கோடி ரூபாய் கிடைக்குமா ?.. அரசை கையகப் படுத்தி வைத்திருக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு தான் கோடானுகோடி கிடைக்கும். இதில் சி.ஆர்.பி.எஃப்ஃபை குறை சொல்லுவீரா ?.. அரசை குறை சொல்லுவீரா ?..

          • சனியன் சகடை, பின்னூட்டங்களில் கொஞ்சம் நாகரீகமாக விவாதிக்கவும். நீ, நாய், தூ போன்ற சொற்களை பயன்படுத்தினால் உங்கள் பின்னூட்டங்கள் இடம்பெறாது. மற்றவர்கள் எவ்வ்வளு கோபம் அடைந்தாலும் தோழர்கள் நிதானமிழக்க கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். விவாதப் பொருள்தான் முக்கியமே அன்றி வெறுமனே வசைபாடுவதில் பயனில்லை. தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்.!

        • //சனியன் சகடை
          ராஜராஜன் காலத்திலும் அவன் மகன் காலத்திலும் மக்களின் துயரத்தைப் பற்றி , மக்களின் போராட்டத்தை பற்றி மிகப் பெரிய ஆய்வுப் புத்தகமே உள்ளது. என்ன அறிவு உனக்கு மணி ?//

          நன்றி உங்கள் பதிலுக்கு.
          எங்கள் வீட்டில் பெரியவர்கள் இருகிறார்கள். “பெரியவாள்” இல்லை :).
          ஒரு சிறு வேண்டுகோள். அந்த “ஆய்வு” புத்தகம் பெயரும் கிடைக்கும் இடமும் தெரிவித்தால் என்னுடைய சிறிய அறிவை வளர்த்து கொள்வேன்.

          ராஜா ராஜனின் “கொடுங்கோள் ஆட்சி ” பற்றி யார் எழுதியது…..?

          500 வருடங்களுக்கு பிறகு “அதிமுக” எழுதிய வரலாறை படித்தால் திமுக “கொடுங்கோள் ஆட்சி ” செய்தது “அதிமுக” நல்லாட்சி செய்தது எண்டுதான் இருக்கும்.

          நீங்கள் படித்து “அதிமுக” எழுதிய வரலாறு.
          நான் படித்து “திமுக” எழுதிய வரலாறு. 🙂

        • @மணி ..

          சோழர் ஆட்சிக் காலத்தில் எதிர்கட்சிகள் இல்லை மணி அவர்களே ..

          அங்கே இரண்டு வர்க்கங்கள் தான் இருந்தன .
          உழைக்கும் வர்க்கம் , உட்க்கார்ந்து திண்ணும் வர்க்கம்.

          உழைக்கும் வர்க்கம் எழுதிய போராட்டங்கள் இன்றுவரை உண்மையான வ்ரலாற்றில் இருந்து மறைக்கப் பட்டு வருகிறது.
          எவ்வாறு நேற்று ம.க.இ.க அமைப்பை சேர்ந்த தோழர்கள் நியாயம் கேட்டு நடத்திய டவ் முற்றுகை போராட்டம் பத்திரிக்கைகளால் இருட்டடிப்பு செய்யப் பட்டதோ அது போல உழைக்கும் வர்க்கங்களின் பதிவுகள் இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளன.

          பின் குறிப்பு :

          மேலும் விவரங்களுக்கு ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் நேர்க்காணலின் ஒரு பகுதி:

          http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8216:2010-05-05-10-48-42&catid=1074:08&Itemid=346

          கூகுளில் இவரைப் பற்றியும் இவரது ஆராய்ச்சிகளைப் பற்றியும் தேடிப் பார்த்து படிக்கவும் ..

      • //விவசாய நிலங்கள் எழுதி வைக்கப் பட்டன ? //

        வயலுக்கு முன்னாடி, காடு இருந்தது! காடுகளை அழித்து, விலங்குகளின் வாழ்வாதாரங்களை அழித்த, ராஜராஜனின் அப்பன் பராந்தகன் சோழனின் மேட்டிமைத் திமிரும் கண்டிக்கத்தக்கதே!

        • உங்களது உண்மை முகத்தை பதிவிட்டதற்கு நன்றி ரம்மி. விலங்குகளின் காடுகள் பறிக்கப் பட்டதற்கும் , உழைக்கும் மக்களின் நிலம் பறிக்கப் பட்டதியும் ஒன்றாகப் பார்க்கும் உங்களை .. என்ன சொல்வது என்றே தெரியவில்லை போங்கள் …

        • //ராஜராஜனின் அப்பன் பராந்தகன் சோழனின் மேட்டிமைத் திமிரும் கண்டிக்கத்தக்கதே!//

          ஓ இவர்தான் நமது வயல்களுக்காக எம் மூதாதயரோடு காடுகளில் இறங்கி மரம் பிடுங்கினாரா? வயலுக்கு வந்தவரா? நாற்று நட்டவரா?

          இவர் ஒருத்தரே இவ்வளவையும் செய்துள்ளார் என்று அவர் ஒரு அதிசயப் பிறவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க