கடந்த 26/07/2010 அன்று சௌதிகெஜட் நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் ஒரு செய்தி வந்திருந்தது, “கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது” என்று. வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணால் கடத்தப்பட்டு பின்னர் ஒரு பல்பொருள் அங்காடியில் விட்டுச் செல்லப்பட்டிருந்தது அந்த இரண்டரை வயதுக் குழந்தை. குழந்தையின் தந்தை குழந்தையை மீட்க பணம் தரவேண்டும் என்று தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்தச் செய்தியிலேயே (அதே நகரில்) கடந்த ஆண்டும் இதே போல் குழந்தைக் கடத்தல் ஒன்று நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்படி நடைபெறும் குழந்தைக் கடத்தல் நிகழ்வுகளை பணத்துக்காக நிகழ்த்தப்படுபவைகள் என்று பொதுமைப்படுத்திவிடவோ ஒதுக்கிவிடவோமுடியாது. ஏனென்றால் இவைகள் பணத்துக்காக நடைபெறுவதைப்போல் காட்டப்படுபவை. அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்களை உற்றுநோக்கினாலே தெரியும் இவைகளில் பணம் வினையூக்கியாகச் செயல்பட்டிருக்கமுடியாது என்பது.
- இந்தக் கடத்தலைச் செய்வது அந்தந்த வீடுகளில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணிப்பெண்கள்.
- இந்தக் கடத்தலில் அவர்கள் பணம் பெறுவதும் இல்லை, காவல்துறை கடத்தப்பட்டவர்களை மீட்பதும் இல்லை. ஏனென்றால் அதே நாளோ அல்லது மறுநாளோ எங்காவது பொது இடத்தில்
விட்டுச்செல்வதுதான் நடந்திருக்கிறது. - இக்கடத்தலை திட்டமிட்டோ சிலருடன் இணைந்தோ செய்வதில்லை
இது போன்ற காரணங்கள் அந்தக் கடத்தல்கள் பணத்துக்காக நடைபெறுவதில்லை என்பதை நிரூபிக்கின்றன. என்றால் அதன் உண்மையான காரணம் என்ன?
சௌதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை ஒரே வார்த்தையில் உச்சரிக்க வேண்டுமென்றால் ‘நரகம்’ என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அதிகாலையில் எழுந்து வீட்டை கழுவித் துடைத்து, காலை உணவுக்கான தயாரிப்புகளைச் செய்து, குழந்தைகளை எழுப்பி கவனித்துக் கொண்டு சற்று பெரிய குழந்தைகளென்றால் பள்ளிக்கூடத்திற்காக ஆயத்தப்படுத்தி, கடந்த நாளின் அழுக்கடைந்த ஆடைகளை துவைத்து உலர்த்தி தேய்த்து, மதிய உணவை தயாரித்து வழங்கி சுத்தப்படுத்தி, குழந்தைகள் பெற்றோரை தொந்தரவு செய்துவிடாமல் கவனித்துக்கொண்டு, இடையிடையே சௌதிகளின் தேவையறிந்து அவற்றில் உதவி, மாலையில் சௌதிப் பெண்களின் கடைவீதி உலாவுக்கு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு பின்சென்று அல்லது வேண்டிய பொருட்களை சுமந்து வருவதற்காக பின்சென்று பின் இரவுச் சாப்பாடு குழந்தைகளைத் தூங்கவைப்பது என்று பின்னிரவு வரை தன்னைத்தானே ஒரு இயந்திரமாய் மாற்றிக் கொள்ளவேண்டியதிருக்கும். வேலை நேரம் ஒழிவு நேரம் என்று தனித்தனியாக கொள்வதற்கு இடம்இருப்பதில்லை. இடையில் கிடைத்தால் சில நிமிடங்களை ஓய்வாக கொள்ளவேண்டியதுதான். இதில் நேர்ந்து விடும் தவறுகளுக்காக திட்டுக்கள் முதல் அடிஉதை வரை அனைத்தும் கிடைக்கும்.
வீடுகளில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையின் சிரமங்கள் அவர்களை ஒரு இயந்திரத்தைப் போல் உணரவைக்கிறது என்றால், நிலவும் சூழல் அவர்களை இயந்திரமாகவே ஆக்கும். வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை, குப்பைகளை கொட்டுவதற்குச் சென்றால்கூட அனுமதியின்றி செல்லமுடியாது. தனியாக செல்லிடப்பேசி வைத்துக் கொள்வதற்கோ, யாருடனும் தொலைபேசியில் பேசுவதற்கோ முடியாது. நாட்டில் பெற்றோர்களிடமோ, உறவினர்களிடமோ பேசுவதற்கு மட்டும் அனுமதிப்பார்கள். சம்பளப் பணத்தை ஊருக்கு அனுப்புவதற்குக்கூட சௌதிதான் வங்கிக்கு சென்று அனுப்புவான். இப்படி ஒழிவின்றி வேலை செய்வதாலும், தங்களின் மனக் குறைகளை பகிர்ந்து கொள்ள வழியின்றி கூண்டுக்குள் அடைபட்ட விலங்கைப் போன்ற சூழலாலும் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள்.
பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதில் சௌதியில் வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களின் நிலை சொல்லும் தரமன்று. வேலை செய்யும் வீடு பெரிய பணக்கார வீடாக இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பணிப்பெண்கள் இருந்தால் வேலையில் ஆறுதலுக்கும், பாலியல் கொடுமைகளிலிருந்து சிறிது தப்பித்தலுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் தனியாக மாட்டிக் கொள்ளும் பெண்களுக்கோ சொல்வதற்கும் யாருமின்றி, செல்வதற்கும் வழியுமின்றி அந்த பாலியல் வதைகளை சகித்துக் கொள்வதைத் தவிர வேறு கதியில்லை.
அண்மையில் விமான நிலையத்தில் 40 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த ஒரு பணிப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவர் கூறியதைக் கேட்டால் பணிப்பெண்கள் எத்தகைய நிலையில் அங்கு பணிபுரிய வேண்டியதிருக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். “பிறந்ததிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை, கொஞ்சம் விபரம் தெரிந்ததும் என் மாரிலேயே கைவைக்கிறான்” என்று கூறி உடைந்த போது அவர் கண்களிலிருந்து வழிந்தது இரத்தமாக தெரிந்தது.
“பணிப்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எங்களிடம் தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என்கிறது காவல்துறை. ஆனால் புகார் கொடுக்கும் அளவுக்கான சூழலை ஏற்படுத்தாமல், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்பது எந்த விதத்தில் சரியானது? ஒரு பணிப்பெண் தனக்கு நேரும் பாலியல்கொடுமைகளுக்கோ, வதைகளுக்கோ தொலைபேசி மூலம் காவல்துறைக்கு புகார் கொடுக்கிறாள் என்று கொள்வோம். என்ன நடக்கும்?
சௌதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. முதல் கட்டமாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை என வீட்டிலுள்ள அனைவரும் விசாரணைக்காக வரும் காவல்துறையினரிடம் கூறுவர். அப்படி ஒன்று நடந்தது என்று பாதிக்கப்பட்ட பெண்ணே நிரூபிக்க வேண்டியதிருக்கும். அப்படி நிரூபித்தாலும் குற்ற நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசி ஏதாவது இழப்பீட்டுத் தொகை வாங்கி சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதுதான் காவல்துறை செய்யும் அதிகபட்ச நடவடிக்கை. அன்றி கொடுமை நடைபெற்றதை நிரூபிக்க முடியாமல் போனால், இழப்பீடோ, பரிவுத் தொகையோ எதுவுமின்றி சொந்தநாடு திரும்ப வேண்டியதிருக்கும். ஏனென்றால், தொடர்ந்து அந்த வீட்டில் வேலை செய்தால் அது தற்கொலை முயற்சியாகத்தான் இருக்கும்.
முன்னிலும் அதிக சித்திரவதைகளுடனும், நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளுடனும் வேலை செய்ய முடியுமா? புகார் கொடுத்து நிரூபிக்க முடியாத நிலையிலுள்ள பணிப்பெண்களை வேறு இடத்திலிலோ, வேறு வேலையிலோ சேர்த்துவிட காவல்துறை முயலாது. ஏனென்றால் சட்டத்தில் அதற்கு அனுமதியில்லை. வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை வேலைக்காக தருவிக்கும் சௌதி அப்பெண்ணுக்கு வேலைவழங்குனர் மட்டுமல்ல, பாதுகாவலரும்தான்.
பாலியல் கொடுமைகளைச் செய்வது ஆண்கள்தான், வீட்டிலுள்ள பெண்களிடம் அவர்கள் முறையிடலாமே என நினைப்பதும் கொடுமையான அனுபவமாகவே அமையும். அதன்பிறகு பழிவாங்கும் நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதோடு பொருளாதார ரீதியிலும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். ஏனென்றால் சம்பளம் கொடுப்பது அதை பணிப்பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி வைப்பது போன்றவற்றைச் செய்வது சௌதி ஆண்தான்.
நடக்கும் இவைகளுக்கு எதிராக முறித்துக் கொண்டு நாடு திரும்பும் நிலையில் இங்கு வரும் பணிப்பெண்களில் பெரும்பாலானோர் இருப்பதில்லை. வாங்கி வந்த கடனும், வீட்டுச்செலவுகளும், தேவைகளும் அவர்களின் முன் பூதாகரமாக அச்சுறுத்துகின்றன. வறுமைக்குப் பயந்து, குடும்பத்தையும் குழந்தைகளையும் பிரியச் சம்மதிக்கும் பெண்கள் வந்த இடத்தில் எதிர்கொள்ளும் கொடுமைகளால், அதற்கு வடிகாலில்லாத நிர்ப்பந்தங்களால் நொறுங்கிப் போகிறார்கள். வேறுவழி தெரியாததால் பலபெண்கள் சம்மதித்து சகித்துப் போகிறார்கள். சிலர் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக குழந்தைகளை துன்புறுத்துவதையும், கடத்திச் செல்வதையும், ஏதாவது வழியில் பழிவாங்க முடியாதா? எனும் எண்ணங்களுக்கு ஆளாகிப் போகிறார்கள்.
கடந்த சில வருடங்களாகவே சௌதி அரசு உள்ளே வரும் அனைத்து வெளிநாட்டவர்களையும், புகைப்படமும், கைரேகையையும் விமான நிலையத்திலேயே எடுத்து பதிவு செய்து ஆவணமாக்கி வருகிறது. விடுப்பில் செல்லும், இகாமா (இருப்பிடஅனுமதி) புதுப்பிக்கும் யாரும் கைரேகையை பதிவு செய்யாமல் முடியாது எனும் அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஒரு குழந்தையை கடத்திச் சென்று அதன் மூலம் பொருளாதார பலன்களை அடைந்துவிட முடியும் என்பது நடக்க முடியாத ஒன்று. பெண்கள் வெளியேறிச் சென்று தனியாக எங்கும் வேலை செய்து விடவோ, ஊர் சென்று விடவோ முடியாத சூழலை ஏற்படுத்தி வரும் இந்நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண் தன்னுடைய பொறுப்பில் இருக்கும் குழந்தையை கடத்தி பணம் கேட்கிறாள் என்று கூறுவது அதன் பின்னணியில் தொழிற்படும் காரணங்களை மறைப்பதற்காகத்தானேயன்றி வேறொன்றுமில்லை.
இத்தகைய கொடுமைகள், பாலியல் வதைகள் குறித்து ஒரு சௌதி என்ன விதமான கருத்துகொண்டிருக்கிறான் என்பது இதில் இன்றியமையாத ஒன்றாகிறது. ஒரு சௌதிப் பெண் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்படும்போது ஒரு சௌதி ஆணுக்கு ஏற்படும் அதிர்வலைகள், ஒரு வெளிநாட்டு பணிப்பெண் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்டாள் எனும் போது ஏற்படுவதில்லை, அது ஒரு சாதாரண செய்தியாகவேபடுகிறது. இதை சொந்த நாட்டுப் பெண்ணுக்கும் அந்நிய நாட்டுப் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என எடுத்துக் கொள்ள முடியுமா? நிச்சயம் இல்லை. சௌதியின் உளவியலிலே இத்தகைய வித்தியாசங்கள் இருக்கிறது. இதை புரிந்து கொள்ள நாம் குரானிலிருந்து தொடங்கவேண்டும்.
சௌதி ஆணின் பாலியல் தேவைகளை பொருத்தவரை மதகலாச்சாரரீதியாக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. கட்டற்ற பாலியல் சுதந்திரத்திற்கு சில வரம்புகளை மட்டுமே நிர்ணயம் செய்திருப்பதன் மூலம் ஆணின் பாலியல் சுதந்திரத்தை பேணப்படுகிறது.
அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. குரான் 4:3
சட்டபூர்வமாக நான்கு மனைவிகள் அல்லாது எத்தனை அடிமைப் பெண்களையும் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள ஆணுக்கு அது அனுமதியளிக்கிறது. பரிகாரம் எனும் அடிப்படையில் அடிமைகளின் விடுதலை குறித்து குரான் பேசினாலும், அடிமையை வைத்திருப்பதும், அவர்களை பாலியல் ரீதியில் பயன்படுத்துவதும் மத அடிப்படையில் குற்றச் செயலல்ல. இந்த அடிப்படையிலிருந்து எழுந்து வருவதுதான் இப்போதைய சௌதிகளின் மனோபாவம். 1962ல் சட்டபூர்வமாக சௌதியில் அடிமையை வைத்திருப்பது தடை செய்யப்பட்ட பிறகும் இந்த மனோபாவம் தொடர்கிறது.வெளிநாட்டிலிருந்து வீட்டு வேலைக்கு வரும் பெண்களை பாலியல் அடிமைகளாய் வைத்திருப்பது குற்றமல்ல எனும் உளவியல்தான் அவர்களின் செயல்களில் பிரதிபலிக்கிறது.
வேலை செய்ய வரும் வெளிநாட்டு ஆண்களையும் சௌதிகள் இந்த மனோபாவத்துடனே அணுகுகிறார்கள் என்பதற்கு அனேக எடுத்துக்காட்டுகளைத் தரமுடியும். ஆனால், ஆண்களுக்கு இருக்கும் வாய்ப்பும், வேறு வேலை தேடிக்கொள்வதற்கான வசதிகளும், பணம் செலுத்தி தன் பாதுகாவலரை மாற்றிக் கொள்ள முடிகிற நிலையும் அவர்களை அடிமையாக நடத்துவதினின்றும் ஓரளவு பாதுகாக்கிறது. இதேபோல் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் கூட இத்தகைய கொடுமைகளை சந்திப்பதில்லை. வீட்டு பணிப்பெண்களுக்கு அதில் அழுந்திக் கிடப்பதைத் தவிர வேறுவழியில்லை எனும் சூழல் இருப்பதால் ஆணாதிக்கத் திமிரில் அடிமையாக நடத்துவதும் தொடர்கிறது.
அடுத்து பெரும் சொத்தாய் குவிந்திருக்கும் எண்ணெய் பணத்தின் மூலம் சௌதிகள் சாதாரண வேலைகள் எதனையும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் வேலையாட்களை வைத்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் வீட்டு வேலைகளுக்கான பெண்களும் அழைத்து வரப்படுகிறார்கள். வர்க்க ரீதியில் இருக்கும் இந்த மேட்டிமைத்தனமான மனோபாவமும் வீட்டு பணிப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் வெள்ளைக்காரர்களிடம் நாகரீகமாகப் பழகும் சௌதிகள் ஆசிய நாட்டவரைக் கண்டால் ஆண்டைகள் போலத்தான் நடத்துவார்கள். இதன்படி பணிப்பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவது குறித்து அவர்கள் குற்ற உணர்வு ஏதும் கொள்வதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பன்ஸ் நாட்டைச் சேர்ந்த சாரா எனும் இளம் பெண் தன்னை பாலியல் வன்முறை செய்ய வந்த ஒரு கிழட்டு ஷேக்கை குத்திக் கொன்றாள். அதற்காக அவளுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து முழு உலகும் போராட வேண்டியிருந்தது. காதல், கள்ளக் காதல், விபச்சாரம் போன்ற குற்றச்சாட்டுகளை வைத்தும் சௌதியில் இருக்கும் ஆசிய நாடுகளின் பெண்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது. இத்துடன் ஒப்பிடும் போது சௌதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை மிகவும் குறைவு.
சௌதிகளின் இருப்பை மதம் ஆளுமை செய்து கொண்டிருப்பது வரை அவர்களை இந்த மனோநிலையிலிருந்து மாற்றுவது கடினம். அதேநேரம் வெளியிலிருந்து வருபவர்களும் இவை குற்றம் எனும் நிலையை உணராது மத அடிப்படியில் ஆதரித்து நிற்பது வேதனை. காயம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட பிறகுதான் மருந்திடுவது குறித்து சிந்திக்க முடியும். அந்த வகையில் இதுபோன்ற நிகழ்வுகளை வெளியில் கொண்டு வருவதும், வெளிப்படையாக விவாதிப்பதும் அந்த அடிமைத்தனத்தைக் களைவதற்கான முதற்படியாகும்.
அரசியல், பொருளாதார ரீதியில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சௌதி ஷேக்குகள் உள்நாட்டு மக்களை ஒடுக்குவதற்கு மட்டும் இசுலாத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மதச் சட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டுவது, சவுக்கால் அடிப்பது முதலான கொடூரமான தண்டனைகளை அமல்படுத்தி வரும் ஷேக்குகள் அவர்களது சொந்த வாழ்வில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துதான் வருகிறார்கள். இவர்களை எதிர்த்து ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் எழாத வரைக்கும் இந்த வீட்டுப் பணிப்பெண்களுக்கு விடுதலை இல்லை.
உங்கள் பார்வைக்கு சிலஆதாரச் செய்திகள்
http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/07/070704_saudifeature.shtml
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=131847&d=26&m=1&y=2010
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=130001&d=22&m=12&y=2009
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=128343&d=11&m=11&y=2009
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=122151&d=3&m=5&y=2009
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=117683&d=31&m=12&y=2008
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=113798&d=3&m=11&y=2008
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=113929&d=6&m=9&y=2008
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2010072679168
_____________________________________________
வினவு செய்தியாளர், வளைகுடாவிலிருந்து.
______________________________________________
வினவுடன் இணையுங்கள்
தொடர்புடைய பதிவுகள்
-
வளைகுடா ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளர்கள் ! நேரடி ரிப்போர்ட் !!
- வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை !
- கருகும் கனவுகள் !
- துபாய் : உல்லாசபுரி சுடுகாடானது!
- மலேசிய சொர்க்கத்தின் தமிழ் அடிமைகள்! நேரடி ரிப்போர்ட்!!
- கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை !!
- நாப்கின் – சங்கரி.
- அவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி.
- ஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும் – டி.அருள் எழிலன்
- 2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!
- ஈழம்: வன்னி அகதி வதை முகாம்கள் – நேரடி ரிப்போர்ட், புகைப்படங்கள்!
- பெற்ற மகளை விற்ற அன்னை !
- தமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை!
சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!! | வினவு!…
இடுப்பொடியும் வேலை முதல் பாலியல் வன்முறை வரை எதிர்கொண்டு சௌதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை ‘நரகம்’ என்று சொன்னால் அது மிகையாகாது…
[…] This post was mentioned on Twitter by வினவு, Karthikeyan G and karthickphp, karthickphp. karthickphp said: RT @vinavu: சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!! https://www.vinavu.com/2010/08/13/saudi-women-labours/ RT Pls. […]
உண்மை உண்மை மிகவும் வருத்தமான உண்மை.
எனது மாமா அங்கு பணிபுரிகிறார், அவரது அரபி எனது மாமாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துள்ளார், சமிபகாலமாக சமபளம் எது கொடுக்கவில்லை, ஊருக்கி வரலாம் என்றால் பாஸ்போர்ட் இல்லை, அங்கு உள்ள போலீஸ் கூட அரபிகளுக்குதான் சப்போர்ட் செய்கிறது, வர முடியாமல் மிகவும் கஷ்ட பட்டு கொண்டிருக்கிறார்.
உண்மையில் அங்கு பணிபுரிபவர்களுக்கு அது நரகம்தான், அதுவும் மீண்டு வராத நரகம், சில பேர்களுக்கு நல்ல வேலை கிடைத்து விடுகிறது அது 5% பேர்தான் இருப்பார் மீதம் உள்ளவர்கள் மிகவும் கஷ்டபடுகிறவர்களே…
சகோதரர் Mastan Oli, ///எனது மாமா அங்கு பணிபுரிகிறார், அவரது அரபி எனது மாமாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துள்ளார், சமிபகாலமாக சமபளம் எது கொடுக்கவில்லை, ஊருக்கி வரலாம் என்றால் பாஸ்போர்ட் இல்லை, அங்கு உள்ள போலீஸ் கூட அரபிகளுக்குதான் சப்போர்ட் செய்கிறது, வர முடியாமல் மிகவும் கஷ்ட பட்டு கொண்டிருக்கிறார்/// ஒங்க மாமாவுடைய போன் நம்பர் கொடுங்க கண்டிப்பாக நான் அவருக்கு தேவையான உதவி செய்கிறேன் மற்றபடி போலீஸ் அரபிக்கி சப்போர்ட்டாக இருக்கிறது என்பாதல்லாம் சும்மா நான் இங்கு சவூதியில்தான் வேலை செய்கிறேன்
@ஹைதர் அலி, எனது இமெயில் mmastanoli@gmail.com அதில் உங்களது மெயில் அனுப்பவும் நான், எனது மாமுவின் போன் நம்பர் அனுப்புகிறேன், நல்லது நடந்தால் மிகவும் சந்தோசம். அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரர் மஸ்தான் ஒங்களுக்கு மெயில் அனுப்பி விட்டேன் பார்வையிடவும்
summa thevai illama arabihalukku support seyyarheerkal athu ina vathamahum
அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. குரான் 4:3
அங்கு வேலை செய்பவர்கள் அடிமை கிடையாது, அந்த காலத்தில் அடிமைகளை விலைக்கு வாங்கும் பழக்கம் இருந்ததாம்… வாங்கினால் அவர்களுக்கே சொந்தம். இப்போது இந்த வசனத்தை எடுத்துகாட்டி தவறு செய்தால் கண்டிப்பா தண்டனைக்கூறியதுதான் இல்லையா?
சொல்லப்பட்ட காலத்தையிம் நீங்கள் ஆராய வேண்டும்…
சகோதரர் மஸ்தான் ஒலி, வேலைக்காரின் நிலை வேறு பண்டைக்கால அடிமைகளின் நிலை வேறு என்று நீங்கள் விளங்கி வைத்திருப்பது முற்றிலும் சரியானது
The quranic verses quoted by Vinavu are applicable even now(or that is what a believing muslim would say). Remember, mohammed had sex with his maid. The modern day saudis claim that the quranic sanction is applicable in case of sex with maid servants. Unless the arabs come out of religion, there is no hope for the maid servants there. I have heard this many times from even muslim women! If you think I am lying, see this link someone else have also heard the same reply.
“I remember once on Ummah.com, AbuMubarak, in his defence of slavery, said that it was not slavery in the modern sense but having a slave in Islam is akin to having a Butler or a Maid. When I pointed out that you don’t own your butler or your maid, your butler or your maid is paid to do a specific job, and your maid does not have to have sex with you on demand, he said “being a slave in Islam is more like being a proffesional footballer”!!!! A proffessional footballer?! I don’t think Alex Ferguson is in any position to be demanding sex from Ryan Giggs!”
http://councilofexmuslims.com/index.php?topic=9204.10;wap2
I will give another example. This is a site which defends Islam. See how they are defending this quranic verses.
“Why does the Quran Allow Slavery? Here is the answer. In Islam if a master has sex with his slave, then when the slave girl is pregnant, she and her child is automatically freed after the masters death. But that’s not the only way a slave can get freedom, infact if a slave request his/her freedom, she or he can get it!”
http://www.answering-christianity.com/umar/slave_girls.htm
What a wonderful way to give freedom to a maid servant!! If Allah is giving heaven to these rapists who rape the hapless maids, then Allah must be a devil, not god!
சகோதரி ரேவதி எனக்கு சத்தியமாக ஆங்கிலம் தெரியாது தமிழில் நீங்கள் தரவுகளை தந்தால் நான் விவாதிக்க தயராக இருக்கிறேன்
4:3. அநாதைகளிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.. குரான் 4:3//
அடிமைமுறை தவறு என்றால் அல்லாஹ் ஒரு வசனம் இறக்கி உடனே அடிமை முறையை ரத்து செய்திருப்பாரே? காலாகாலத்துக்கும் நிரந்தரமான அல்குரானில் இந்த வரி இருக்கிறது என்றால், அடிமைமுறை சரியானது; அதன் மூலம் ஆண்கள் அடிமைப்பெண்கள் மூலம் பாலுறவு திருப்தி அடையலாம் என்றுதானே பொருள்?
//
2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் – இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு//
அதாவது ஒருவரது அடிமையை மற்றொருவர் கொலை செய்துவிட்டால், அவரது அடிமையை இவர் கொல்லவேண்டுமாம். இதுதான் நீதியாம்! என்ன கொடுமையடா இது! ஒருவரது பெண்ணை மற்றவர் கொலை செய்துவிட்டால், அவருடைய பெண்ணை இவர் கொல்லவேண்டுமாம். இது என்ன நீதியா? இதிலும் அடிமை முறை தவறு என்று சொல்லப்படவில்லை!
//4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) //
போரில் அடிமைப்பெண்களை கைப்பற்றலாம். அவர்களோடு உடலுறவு கொள்ளலாம். அடிமைப்பெண்களுக்கு கணவன் இருந்தாலும் அவர்களை மணமுடிக்கலாம். இது அல்லாவின் கட்டளை! இதிலும் அடிமைமுறை தவறு என்று சொல்லப்படவில்லை.
//
16:75. அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து லில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) – என்றாலும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை
16:76. மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் – இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?//
அல்லாவின் பார்வையில் அடிமையும் சுதந்திரமானவனும் சமமில்லை! இதிலும் அடிமை முறையை தவறு என்று சொல்லவும் இல்லை. இன்னும் கூடவே மேலே சென்று அடிமையும் சுதந்திரமானவனும் சமமில்லை என்றும் இந்த அல்லாஹ் பேசுகிறார்.
//30:28. உங்களிலிருந்தே அவன் உங்களுக்காக ஓர் உதாரணத்தை எடுத்துக் கூறுகிறான்: உங்கள் வலக்கரம் உரிமைப்படுத்திக் கொண்டவர்களில் (அடிமைகளில்) எவரையும், நாம் உங்களுக்கு அளித்திருப்ப(தான சம்பத்)தில் உங்களுடன் பங்காளிகளாக ஆக்கிக் கொண்டு அதில் அவர்களுடன் சமமாக இருக்கிறீர்களா? உங்களைப் போன்றோருக்கு பயப்படுவதைப்போல் அவர்களை பயப்படுகிறீர்களா? இவ்வாறாகவே நாம் நம் அத்தாட்சிகளை சிந்தித்துணரும் சமூகத்திற்கு விவரிக்கிறோம்.//
அடிமைமுறை அல்லாவின் அத்தாட்சிகளில் ஒன்று!
ரகு என்ற இந்த பார்ப்பன பயங்கரவாத வெரியனை அடித்து துரத்துங்கள். இவனுக்கு ஏன் இங்கே இடமலிக்கிறீர்கள்? இது போன்ற வெரியனுக்கு இடம் கொடுத்ததன் மூலம் வினவும் ஒரு பார்ப்பன பயங்கரவாத ஊடகம்தான் என்று தெலிவாகிரது.
ரகு பார்ப்பனியனா பயங்கரவாதியா என்றெல்லாம் எனக்குத்தெரியாது. ஆனால், இந்தப்பின்னூட்டத்தில் அவரை அடித்துத்துரத்தும்படியான ஒரு வார்த்தையைத்தானும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ரகு எடுத்துக்காட்டிய குர் ஆன் வாசகங்க குர் ஆனில் இல்லை, தவறான தகவல் என்று நீங்கள் கண்டால் அதனை ஆதாரத்துடன் மறுக்கலாமே?
மஸ்தான்,
எந்த ஒரு மனிதனும் தான் செய்யும் தவறான செயலுக்கு தனக்குத் தானே ஏதேனும் ஒரு நியாயத்தைக் கற்பிதம் செய்து கொண்டுதான் செயலாற்றுவான். அதற்காக எந்த ஒன்றையும் துணைக்கழைத்துக் கொள்வார்கள். இல்லையென்றால் அதனை அவர்களால் ஒருக்காலும் செய்யமுடியாது. இங்கு குரானில் சொல்லபட்ட இவ்வசனமும் கூட இப்படித்தான் சவூதிகளுக்கு துணைபுரிகிறது. அன்று விலைக்கு வாங்கப்பட்ட அவ்வடிமைப் பெண்களின் கணவன்மார்கள் அருகில் இல்லாத்தினால் அவர்களின் பாதுகாப்புக்காகவும் அவ்வடிமைப் பெண்களின் பாலுறவுத் தேவைக்காகவும் அவ்வடிமைகளிடம் உடலுறவு வைத்துக் கொள்ள இஸ்லாம் அனுமதித்ததாக இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கப்படுகிறது. இன்று சவூதியில் பணிபுரியும் பெண்களின் நிலை மட்டும் என்னவாக இருக்கிறது? இஸ்லாமிய சட்டம் இருக்கும் ஒரே நாடன சவூதியில் இப்பெண்களின் நிலைக்கு குரானிலிருந்து என்னவிதமான தீர்வை எடுக்கமுடியும்?. நீங்கள் கூறுவது போன்று அவ்வசனம் அக்கால சமுதாய சூழ்நிலைக்கு மட்டுமே பொருந்தும் என்றால் குரான் முழுமைக்குமே இக்கருத்து பொருந்தும் என்றாகிவிடும். அன்று, பிடிபட்ட பெண்ணடிமைகளை, ஆணடிமைகளோ அல்லது விலைகொடுத்து வாங்கிய எஜமானர்களோ மணமுடித்துக் கொள்ளுங்கள் என்று ஏன் முஹம்மதால் ஒரு வசனத்தைக் கூறமுடியவில்லை? இவராலும் அக்காலச் சூழ்நிலைக்கேற்பத்தான் சிந்திக்கமுடியும் என்றால், வேறு வழியில்லை குரானையும்,ஹதீதையும் ஒரு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு உங்கள் மாமாவும் நீங்களும் நாங்களும் நமது நாட்டிலேயே வாழ்வதற்குண்டான வழியில் போராடுவோம் வாருங்கள். ஹைதர் அலி நீங்களும்தான்.
//சொல்லப்பட்ட காலத்தையிம் நீங்கள் ஆராய வேண்டும்…//
:-(((
மஸ்தான்,
புனித குரானின் ஒவ்வொரு வரிகளும் வார்த்தைகளும் எழுத்துக்களும்…
1. எல்லாக் காலத்திற்கும்
2. எல்லா இடத்திற்கும்
3. எல்லா சமூகத்திற்கும்
4. எப்போதும்
5. எங்கும்
6. எதற்காகவும் பொற்ந்தும் இறைவனின் வார்த்தைகள்.
எல்லாம் அறிந்த இறைவன் ஒரு காலத்திற்கு மட்டும் என்றோ அல்லது ஒரு பகுதிக்கு மட்டும் என்றோவா இறைவசனத்தை புனித தூதர் முகம்மதுவின் வழியாக உலகிற்கு கொடுத்தார்?
புனித குரானின் ஒவ்வொரு வரிகளும் வார்த்தைகளும் எழுத்துக்களும் காலத்தால் மாறாதவை. எப்போதும் பொறுந்தும்.
உங்கள்மீது இறைவனின் சாந்தி நிலவட்டுமாக.
ஹைதர் அலி, சித்திக் போன்றவர்களிடம் பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான குரான் வசனங்களை உடனடியாக கேளுங்கள். அவர்கள் தமிழில் வசனம் தந்தால் அதற்குரிய மூல அரபி வசனத்தை எழுதி அவ்வசனங்களை உடனடியாக சவுதி(அனைத்து அரேபிய நாடுகள்) நாட்டுக்கு தந்தி அடியுங்கள். பெண்களுக்கான பிரச்சனை முடிந்துவிடும்.
இவ்வளவு எளிதான வழியிருக்க, எதற்கு இவ்வளவு பெரிய கட்டுரை என்று தெரியவில்லை!
இஸ்லாம்- பெண்கள்- இஸ்லாமிய நாட்டில் பெண்கள் போன்ற கட்டுரைகள் மூலம் வினவு தன்னை விளம்பரபடுத்திக்கொள்கிறது என புரிகிறது.
அமெரிக்கா- இங்கிலாந்து போன்ற கிறிஸ்தவ நாட்டில் உள்ள பெண்கள் நிலையை குறித்து வெளியிடுமா வினவு?
சீனா-ஜப்பான் இலங்கை திபெத் போன்ற புத்த நாட்டில் உள்ள பெண்கள் நிலையை குறித்து வெளியிடுமா வினவு?
ஹைதர் அலி, சித்திக் போன்ற முஸ்லீம் நண்பர்கள் சமீபத்தில் வினவுக்கு வரவில்லை! அதனால் தான் இந்த துணிச்சல் போலும்!
வாருங்கள் முஸ்லீம் நண்பர்களே! வினவுக்கு குரான் வசனத்தை எடுத்து கூறுங்கள்! தமிழில் வசனம் தவறாக் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாலும்,வரலாறு அறிவு இல்லாததாலும் அரபி மொழியையும், வரலாற்றையும் கற்றுக் கொடுங்கள் வினவுக்கு!
பெரும்பாலும் தமிழர்களுக்கு அரபி, தெரியவில்லை என்பதால் தான் குரானையும், அது எக்காலத்தில் சொல்லப்பட்டுள்ளது, அக்காலத்தில் ஒரு வசனத்தின் பொருள் என்ன, அதே வசனத்திற்கு இக்காலத்தில் பொருள்(அர்த்தம்) என்ன என்பது குறித்து தெரியாமல் இருக்கிறார்கள்.
எ.கா: தமிழில் “நாற்றம்” என்ற சொல் பழங்காலத்தில் ”நறுமணம்” என்ற பொருளிலும், அதே சொல் தற்காலத்தில் “கெட்ட வாசனை” என்ற பொருளிலும் பயன்படுத்தப்படிகின்றது.
எனவே, தமிழர்களே! அரபியை கற்றுக்கொண்டு இஸ்லாத்தை குறித்து விமர்சனம் செய்யுங்கள். அரபியை கற்றுக்கொள்வது என்பது வெறும் எழுத, பேச, படிக்க மட்டுமல்ல! அரபியின் இலக்கணம், வரலாறு,ஒரு சொல்லுக்கு, பல்வேறு கால நிலைகளில் உள்ள பொருள் நிலை போன்ற அனைத்தையும் கற்றுக்கொண்டு பின் விமர்சனம் செய்யுங்கள்!
அதற்குள் இறந்து விடுவீர்களானால் அதற்கு நான் பொருப்பாளியல்ல!
எல்லாம் அல்லாவின் செயல்!
முதலில் வினவுக்குழு அரபி டியூஷன் செல்ல தயாராயிருங்கள்! அல்லது அரபிக்கு சென்றால் அரபியையும் கற்றுக்கொள்ளலாம்! துட்டும் சம்பாதித்து கொள்ளலாம்! Mastan Oli மாமா போல் ஊருக்கு வரமுடியாமலும் போகலாம்!
அரபி மண்ணில் நீங்கள் உயிர் நீத்தும் போகலாம்! இவ்வாறு நடந்தால் உடனடியாக சொர்க்கம் தான் என்பதையும் மறக்க வேண்டாம்! சொர்க்கத்தில் என்னென்ன உண்டு என்பதை வால் பையனிடம் கேளுங்கள்!
கட்டுரையின் சாராம்சம் இஸ்லாமை விமர்சிப்பது என்பதல்ல. அது ஒரு சிறு பகுதி மட்டுமே. கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல ஒரு சௌதி பெண் வதைக்கப்படுவதோ, பாலியல் சுரண்டலுக்குளாக்கப்படுவதோ நம்மில் பலருக்கும் எந்த வித அதிர்வுகளையும் ஏற்படுத்துவதில்லை என்பதை உங்களது பின்னூட்டம் நிரூபிக்கிறது.
இவ்வளவு பெரிய கட்டுரையில் குறிப்பாய் சிலரின் அவலங்களைச் சொல்லி இருக்கும் ஒரு கட்டுரையில் அது சரி தவறு என்று ஒரு சின்ன முக்கல் முனகலைக் கூட சொல்லாமல் அது எப்படி நீ குரானை தவறு சொல்லலாம் என்று ஆரம்பித்து விட்டீர்கள்.
//அமெரிக்கா- இங்கிலாந்து போன்ற கிறிஸ்தவ நாட்டில் உள்ள பெண்கள் நிலையை குறித்து வெளியிடுமா வினவு?
சீனா-ஜப்பான் இலங்கை திபெத் போன்ற புத்த நாட்டில் உள்ள பெண்கள் நிலையை குறித்து வெளியிடுமா வினவு?//
என்னுடைய புரிதலில் வினவு தளத்திற்கு இந்த பாகுபாடு எல்லாம் இருந்ததே இல்லை. முதலில் ஒரு குற்றத்தைச் சொல்லும் போது அதை ஆம் என்றோ, இல்லை என்றோ ஒரு பதிலைச் சொல்லி விட்டு தொடர்ந்து அவன் யோக்கியமா, இவன் யோக்கியமா என்ற கேள்வியை முன் வைக்கவும்.
ஓட்டக்கூத்தன் ஏன் இவ்வளவு குறுகிய மனப்பான்மை. உங்களிடமிருந்து இதை நான் சத்தியமாக எதிர்பாக்கவில்லை. அல்லது இது ஒட்டக்கூத்தன் பெயரில் எதாவது போலியின் வேலையா?
வஞ்சப்புகழ்ச்சி அணியில் எழுதப்பட்டுள்ளது!
அதானே பாத்தேன் 🙂
//எனவே, தமிழர்களே! அரபியை கற்றுக்கொண்டு இஸ்லாத்தை குறித்து விமர்சனம் செய்யுங்கள். அரபியை கற்றுக்கொள்வது என்பது வெறும் எழுத, பேச, படிக்க மட்டுமல்ல! அரபியின் இலக்கணம், வரலாறு,ஒரு சொல்லுக்கு, பல்வேறு கால நிலைகளில் உள்ள பொருள் நிலை போன்ற அனைத்தையும் கற்றுக்கொண்டு பின் விமர்சனம் செய்யுங்கள்!//
சம்ஸ்கிருதம் பற்றிய பார்ப்பனர்களின் புலம்பலைப் போலவே அரபி பற்றிய மேலேயுள்ள புலம்பலும் உள்ளது.
நன்பர் வினோத்,////சம்ஸ்கிருதம் பற்றிய பார்ப்பனர்களின் புலம்பலைப் போலவே அரபி பற்றிய மேலேயுள்ள புலம்பலும் உள்ளது.///கண்டிப்பாக கேடயாது இது அவரே ஒத்துக்கொண்ட மாதிரி வஞ்ச புகழ்ச்சி
நண்பர் ஒட்டகூத்தான் நீங்க நல்லதானே இருந்தீங்க ஏன் இந்த வக்ர பஞ்சர் வேலையேல்லாம்
ஒட்டக்கூத்தான்,////ஹைதர் அலி, சித்திக் போன்றவர்களிடம் பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான குரான் வசனங்களை உடனடியாக கேளுங்கள். அவர்கள் தமிழில் வசனம் தந்தால் அதற்குரிய மூல அரபி வசனத்தை எழுதி அவ்வசனங்களை உடனடியாக சவுதி(அனைத்து அரேபிய நாடுகள்) நாட்டுக்கு தந்தி அடியுங்கள். பெண்களுக்கான பிரச்சனை முடிந்துவிடும்./// முற்போக்குவாதிகளுக்கேன்று ஒரு மரியாதை என் மனதில் இருந்தது ஆனால் வஞ்சக புகழ்ச்சியாக R.S.S காரனையும் மிஞ்சிவிடுவீர்கள் என்வதையும் தெரிந்துக்கொண்டேன் ஆமா அது என்ன தந்தி அடிப்பாது கலைஞர் ஆட்சியில இருக்கிறோம் என்கிற அடையாளமா நல்லது ஆனா ஒங்க ஐடியா வேலைக்காகது//
இவ்வளவு எளிதான வழியிருக்க, எதற்கு இவ்வளவு பெரிய கட்டுரை என்று தெரியவில்லை!/// புரட்சிகர கருத்துக்கள் மூலம் வீனாப்போனவய்ங்கள திருத்தத்தான்///
இஸ்லாம்- பெண்கள்- இஸ்லாமிய நாட்டில் பெண்கள் போன்ற கட்டுரைகள் மூலம் வினவு தன்னை விளம்பரபடுத்திக்கொள்கிறது என புரிகிறது.
அமெரிக்கா- இங்கிலாந்து போன்ற கிறிஸ்தவ நாட்டில் உள்ள பெண்கள் நிலையை குறித்து வெளியிடுமா வினவு?
சீனா-ஜப்பான் இலங்கை திபெத் போன்ற புத்த நாட்டில் உள்ள பெண்கள் நிலையை குறித்து வெளியிடுமா வினவு?/// கண்டிப்பாக வேளியிடும் காத்திருங்கள்
///ஹைதர் அலி, சித்திக் போன்ற முஸ்லீம் நண்பர்கள் சமீபத்தில் வினவுக்கு வரவில்லை! அதனால் தான் இந்த துணிச்சல் போலும்!/// நான் வர வேண்டும் என்பதற்காகத்தாம் இந்த கட்டுரையே தவிர பயந்துக்கிட்டு இல்ல அது ஒனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்
///வாருங்கள் முஸ்லீம் நண்பர்களே! வினவுக்கு குரான் வசனத்தை எடுத்து கூறுங்கள்! தமிழில் வசனம் தவறாக் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாலும்,வரலாறு அறிவு இல்லாததாலும் அரபி மொழியையும், வரலாற்றையும் கற்றுக் கொடுங்கள் வினவுக்கு!/// குர்ஆனை தெரிந்துக்கொள்ள அரபி மொழிதெரிய தேவையில்லை
////பெரும்பாலும் தமிழர்களுக்கு அரபி, தெரியவில்லை என்பதால் தான் குரானையும், அது எக்காலத்தில் சொல்லப்பட்டுள்ளது, அக்காலத்தில் ஒரு வசனத்தின் பொருள் என்ன, அதே வசனத்திற்கு இக்காலத்தில் பொருள்(அர்த்தம்) என்ன என்பது குறித்து தெரியாமல் இருக்கிறார்கள்.////இது மட்டும்தாம் உண்மை
///எ.கா: தமிழில் “நாற்றம்” என்ற சொல் பழங்காலத்தில் ”நறுமணம்” என்ற பொருளிலும், அதே சொல் தற்காலத்தில் “கெட்ட வாசனை” என்ற பொருளிலும் பயன்படுத்தப்படிகின்றது.//// ஒங்க தமிழ் அறிவை நேனச்ச எங்கையே போயிட்டீங்க
////எனவே, தமிழர்களே! அரபியை கற்றுக்கொண்டு இஸ்லாத்தை குறித்து விமர்சனம் செய்யுங்கள்.///இங்கே ஒங்க பிரிவனை தெளிவாக தெரிகிறது அப்ப அரபி ஒத தெரிஞ்ச நாங்க தமிழர்கள் கேடயாது அப்படித்தானே இந்துக்கள்+தமிழ்=தமிழர்கள்,முசுலீம்கள்+அரபி=அரபிக்களா சவூதியில நோன்பு திறக்கிற டயமச்சு நான் நோன்பு திறந்துட்டு வந்து மிச்சத்த பேசிகிருவோம்
//குர்ஆனை தெரிந்துக்கொள்ள அரபி மொழிதெரிய தேவையில்லை- ஹைதர் அலி//
பி.ஏ. ஷேக் தாவூத்.(31,74)https://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/
அன்புள்ள செங்கொடி அவர்களே,
இஸ்லாத்தைப் பற்றி ஒரு விமர்சனம் வைக்கும்போது அந்த கருத்தைப் பற்றி இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர்ஆன் ஹதீஸில் என்ன சொல்லியிருக்கிறது என்பதைப் பற்றி (முழுக் குர்ஆணையும் வாசிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. விமர்சனத்தின் விடயத்தை பற்றிய செய்திகளைத் தான் அறிந்து கொள்ள சொல்கிறேன்.) அறியாமலே கருத்து சொல்லுவது என்பது கண் தெரியாதவன் சரியான வழி காட்டுகிறேன் என்று சொல்லி காட்டுப் பாதையில் மக்களை அழைத்துச் செல்வதற்கு ஒப்பானது. முக்காலமும் தெரிந்த, உள்ளும் புறமும் அறிந்த, மறைவானவற்றின் சாவியை கையில் வைத்திருக்கும் அகிலத்தின் ஏக இறைவன் மிகத்தெளிவாகவே முகம்மது நபி தான் இறுதி நபி என்று குர்ஆனில் சொல்லியிருக்கிறான். பகுத்தறிவோடு படித்துப் பார்த்தால் கண்டிப்பாக இந்த உண்மை விளங்கும். அத்தியாயம் 33 வசன என் 40 மிகத் தெளிவாகவே சொல்லுகிறது. ஹாத்தமுன் நபி என்று மிகத்தெளிவாகவே முஹம்மது நபியைப் பற்றி இந்த வசனம் சொல்லுகிறது. “ஹாத்தமுன்” என்ற வார்த்தைக்கு (sealed) அதாவது முத்திரை என்பது பொருளாகும். இங்கு சிலர் முத்திரை என்ற தமிழ் வார்த்தைக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அதாவது சிறப்பானவர் என்ற பொருளை முன்வைக்கின்றனர். ஆனால் மூலமொழி எந்த பொருளை தருகிறது என்று பார்ப்பதே அறிவுடமையாகும். ஹாத்தமுன் என்ற அரபி வார்த்தைக்கு “(sealed)” என்பதே சரியான அர்த்தமாகும்.
மேலும் இவ்வுலகில் இறைத்தூதராக தெரிவு செய்யப்படுபவருக்கு வேதங்களை கொடுக்காமல் இருந்ததில்லை என்னும் கருத்தை வலியுறுத்தும் வசனமும் குர்ஆனில் இருக்கிறது. அத்தியாயம் 35 வசன என் 25 ல் போய் தாராளமாக பார்த்துக்கொள்ளலாம். எனவே அஹமதியாக்கள் நபி என கூறும் மிர்சா குலாம் எந்த ஒரு வேதத்தையும் கொண்டு வரவில்லை. இந்த குர்ஆண் வசனங்களை வைத்தே அஹமதியாக்கள் போலிகள் என்பதை எவரும் விளங்கிக்கொள்ளலாம். அசலையும் போலியையும் கண்டுபிடிக்க குர்ஆன் மற்றும் ஹதீஸை தெளிவாக படித்தாலே போதுமானது.
விருப்பபடி குர்ஆனுக்கு பொருள் கூறுகிறீர்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் செங்கொடி அவர்களே, எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்? உதாரணமாக ஒரு தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் சுய விருப்பபடி பொருள் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்க வேண்டுமானால் குற்றச்சாட்டு வைத்தவருக்கு கண்டிப்பாக தமிழும் ஆங்கிலமும் தெரிய வேண்டும். இரண்டு மொழியையும் தெரிந்த ஒருவர் தான் அத்தகைய குற்றச்சாட்டை வைக்க முடியும். ஏனெனில் மூலமொழியும் மொழிபெயர்க்கப்பட்ட மொழியும் தெரிந்தால் தான் அது சரியான விளக்கமா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலும். அந்த அடிப்படையில் அரபி மொழி தெரிந்தால் மட்டுமே இத்தகைய குற்றசாட்டை நீங்கள் வைக்க இயலும்? அரபி மொழியில் எத்தகைய அறிவை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் விளக்குங்களேன். அல்லது உங்களுக்கு அரபி மொழி தெரியவில்லை என்றால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றே நீங்கள் கருத்து சொல்லியிருப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.
உளுத்துப்போன கம்யூனிச சித்தாந்தம் என்று சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை எதிர்வினையாற்ற உங்களுக்கும் உரிமையிருக்கிறது. ஆனால் நாம் வைக்கும் குற்றச்சாட்டு வெறுமனே யூகங்களின் அடிப்படையில் இருக்க கூடாது. அது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்காது. நான் உளுத்துப்போன சித்தாந்தம் என்று கம்யூனிசத்தை சொல்வதற்கான காரணத்தை எம்மால் ஒரே வரியில் சொல்லிவிட முடியும்.
“நடைமுறைப் படுத்தியதால் தோற்றுப்போன சித்தாந்தம் கம்யூனிசம்’. அதனால் தான் இன்று கம்யூனிசம் அதல பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. கம்யூனிசம் என்று சொல்லி உருவாகிய நாடுகளான ருஷ்யாவின் , சீனா மியான்மரின் இன்றைய நிலை என்ன? உருவாகிய காலத்திலேயே மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து தானே அது உருவாகியது. தனிமனிதனின் உணர்வுகளுக்கு எத்தகைய முக்கியத்துவமும் கொடுக்காத இந்த சித்தாந்தம் எப்படி மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தும்? அதனால் தான் மீண்டும் சொல்கிறேன் கம்யூனிசம் உளுத்துப்போன சித்தாந்தம் என்று. ஆனால் இஸ்லாத்தின் கொள்கைகளை பொறுத்தவரை அது நடைமுறைப் படுத்திய காலங்கள் வரலாற்றின் பொற்காலமாகவே எல்லோருக்கும் இருந்தது. நபிகள் நாயகம் இஸ்லாமிய பேரரசின் ஆட்சியாளராக இருந்தபோது இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிகளாக இருந்த யூதர்கள் பாதுகாப்புடனேயே வாழ்ந்தார்கள். அப்படி அவர்கள் வாழ்ந்ததற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் நபிகள் நாயகத்தின் பாதுகாப்புக் கவசம் கூட ஒரு யூதரிடம் தான் அடமானம் வைக்கபட்டிருந்தது. அதேபோல நபிகளாரின் காலத்திற்குப் பிறகு அவரின் தோழர் உமருடைய ஆட்சிக்காலத்தில் பறந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் மிகவும் பாதுகாப்புடனும் கண்ணியமாகவும் வாழ்ந்தனர் என்பதை வரலாற்றை படித்தாலே விளங்கும். அதனால் தான் காந்தி அவர்களும் உமருடைய ஆட்சி போலவே இந்தியாவில் ஆட்சி மலர வேண்டும் என்று ஆசைப்பட்டார். இன்று இஸ்லாத்தின் பெரும்பான்மையான கொள்கைகளை அமுல்படுத்தும் சவூதி அரேபியா மற்ற நாடுகளை விட மிகவும் தரமாக தானே இருக்கிறது. அது முழுமையாக இஸ்லாமிய கொள்கைகளை அமுல்படுத்தினால் இன்னும் சிறப்பாகவே முன்னேறும். இஸ்லாமிய நாடு என்று வெறுமையாக பெயர் சூட்டிக் கொண்டு கொள்கைகளை அமுல்படுத்தாத நாடுகளான பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான், இராக் போன்ற நாடுகள் சீரழிவதற்கு காரணம் இஸ்லாத்தை சரியாக கடைபிடிக்காததே. இஸ்லாமிய கொள்கைகளை கடைபிடிக்காததால் தோற்றுப்போன நாடுகளை வேண்டுமானால் பட்டியலிடலாமே தவிர நடைமுறைப்படுத்தியதால் தோற்றுப்போன ஒரு நாட்டையும் உங்களால் காட்ட இயலாது.
சி.பி.ஐ., சி.பி.எம் போன்ற கட்சியை சார்ந்தவர்களால் போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப்படும் உங்களுக்கும் (ம.க.இ.க., மாவோயிஸ்டு போன்ற இயக்கங்கள் ) , உங்களால் போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப்படும் சி.பி.ஐ., சி.பி.எம் போன்ற கட்சிகளுக்கும் இடையே அசல் போலியை எவ்வாறு நாங்கள் கண்டுபிடிக்க இயலும் என்பதை எங்களுக்கு கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும் செங்கொடி அவர்களே. இதற்கு காரல் மார்க்ஸ் , லெனின், ஸ்டாலின் , மா. சே போன்றவர்கள் ஏதாவது விளக்கம் அளித்திருக்கிறார்களா? இலக்கு இலக்கு என்று சொல்கிறீர்களே அந்த இலக்கு தான் என்ன?
சகோதரத்துவத்துடன,
பி.ஏ. ஷேக் தாவூத்.
Reply
https://www.vinavu.com/2010/04/19/periyardasan-islam/
மறுமொழி எண் 42
Raja
ஹிந்து மதத்தை விமரிசிப்பதற்கு பெர்யர்தாசன் என்ன வடமொழி படித்து அதில் கரை கண்டு வேதங்களை முழுசாக படித்த பிராக விமர்சனம் செய்தார். தமிழில் படித்து தானே செய்தார். பிறகு ஏன் குரான் படிக்க மட்டும் அரபி படிக்க வேண்டும் என்று சப்பை கட்டு கட்டுகிறார். ஏன் குரான் மற்றும் மற்ற இஸ்லாமிய நூல்கள் தமிழில் இல்லையா…இல்லை தமிழில் இருப்பவற்றை கொண்டு விவாதம் செய்ய முடியாத …ஏன் இந்த சப்பை கட்டு…பௌத்தம் மதம் மாறுவதற்கு முன் அவர் பாலி மொழி கற்றார?
Reply
Posted on 20-Apr-10 at 9:50 am | Permalink
a rehman
அரபு படிக்க தெரிந்தல் மட்டும் தான் அதில் உள்ள அர்த்தம் மட்டும் கருத்து அறிய முடியும்
‘நாற்றம்’ எனபதற்கு உங்களின் விளக்கம் மிகச்சரியானதே. அந்தக் காலத்தில் செய்யுளில் நாற்றம் என்று எழுதியிருந்தால் சாக்கடையின் கெட்ட வாசனை என்று, இன்று பயண்படுத்துவதுபோல் பொருள் கொள்ளக்கூடாது. மலரின் நறுமணம் என்றே பொருள் கொள்ள வேண்டும். அது போல குர்ஆன் வசனத்திற்கும் இன்னறைய திரித்தல் அர்த்தங்களை தூக்கிக் கொண்டு வரக்கூடாது. அன்று எவ்வாறு பயன்பட்டதோ அந்த அர்த்த்திலேயே விவாதிக்கவேண்டும்.
மக்கா அங்கு இருப்பதால் சவுதியை இஸ்லாமியர்களின் சொர்க பூமின்னு இஸ்லாமியர்கள் மதிக்கிறார்கள். நீங்கள் சவுதியை நகரத்தீ என்று சொல்லி தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ரமழான் மாதத்தில் இவ்வாறு சொல்வது அவர்களை புண்படுத்தும்
//மக்கா அங்கு இருப்பதால் சவுதியை இஸ்லாமியர்களின் சொர்க பூமின்னு இஸ்லாமியர்கள் மதிக்கிறார்கள். நீங்கள் சவுதியை நகரத்தீ என்று சொல்லி தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ரமழான் மாதத்தில் இவ்வாறு சொல்வது அவர்களை புண்படுத்தும்//
வாங்க ஆர்எஸ்எஸ் அல்லக்கை….
உங்க பின்னூடம் தில்லானா மோகனாம்பா வைத்தியை நினைவு படுத்துது கோவி.
சகோதரர் கோவி.கண்ணன் ///மக்கா அங்கு இருப்பதால் சவுதியை இஸ்லாமியர்களின் சொர்க பூமின்னு இஸ்லாமியர்கள் மதிக்கிறார்கள். நீங்கள் சவுதியை நகரத்தீ என்று சொல்லி தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ரமழான் மாதத்தில் இவ்வாறு சொல்வது அவர்களை புண்படுத்தும்/// உங்களின் அன்புக்கு நன்றி அதே சமயத்தில் அரபிகளின் செயல்களுக்கு எந்த முசுலீம்களின் மனமும் புன்படாது இஸ்லாம் வேறு அரபிகளின் செயல்பாடுகள் வேறு அரபியர்கள் ஒன்றும் இஸ்லாத்திற்கு முழு அத்தாரிட்டிகள் அல்ல
சவூதிக்கு வேலைக்குச் சென்று வாழ்ந்து வந்த எவரிடமும் அராபிகள் பற்றிய எந்த நல்ல வார்த்தைகளும் கேட்டதில்லை அது ஏன்
//வாங்க ஆர்எஸ்எஸ் அல்லக்கை….//
//உங்க பின்னூடம் தில்லானா மோகனாம்பா வைத்தியை நினைவு படுத்துது கோவி.//
கோவி சார்! முத்திரை குத்திட்டாங்கய்யா!
முற்பகல் செய்யின்…
இதில் பெரும்பாலும் தமிழக பெண்களை விட, ஆந்திரா பெண்களே அதிகம் ஏமாறுகிறார்கள், துன்பம் அனுபவிக்கிறார்கள்.
இம்மாதிரி பதிவுகளை பிரிண்ட் எடுத்து பாச்ச்போர்ட் அலுவலகத்து வாசலில் ஒட்டி வைக்க வேண்டும். மீனம்பாக்கம் விமான நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில், தொலைக்காட்சி நெடும் தொடர்களின் விளம்பர இடைவேளைகளில் வெளியிட வேண்டும்.
ராம்ஜி யாஹூ, உங்களை நான் டிவிட்டரில் தொடர்கிறேன். எனது டிவிட்டர் முகவரி http://twitter.com/ezharai
ஹலோ ஒட்டக்கூத்தன்…. பெண்கள் படும் கஷ்டத்த சொல்றார் வினவு … அத விட்டுட்டு நீர் குரான், மதம், அர்த்தம் வேற , நு அரசியல் வாதி மாதிரி திசை திருப்புரிர் …
அவ்வளவு யோகியணைங்க இருந்தா உண்மையனா இஸ்லாமியனா இருந்தன இத செய்வானா ?. பதில் சொல்லுப்பா
தன மதம் நு சொன்னதும் ரோசம் வருதா …. அயோக்கியன் எந்த மதத்த சார்ந்து இருந்தாலும் தப்பு தப்பு தான்
சரியாக சொன்னீர்கள்
PLZ START SENDING E-MAIL TO CHEIF MINISTER TO BRING DOWN THE RETIREMENT AGE OF GOVT EMPLOYEES FROM 58 TO 55.IF U DON’T DO IT NOW IT WILL LIKELY TO GO UP TO 60 BECOZ OF THE ASSEMBLY ELECTIONS…
ALL ISLAMIC COUNTRIES ARE HELL OF THE WORLD. ISLAM IS GOOD RELIGION BUT PEOPLE MISUSED AND MISGUIDED IT.
NOW IT BECOME AGAINST HUMAN RELIGION. COUNTRIES LIKE MALAYSIA, MIDDLE EAST ..ETC ARE STILL TREATING WORKERS AS SLAVE.
ITS TIME TO BRING REVOLUTION IN MUSLIM RELIGION, NEED MORE PHILOSOPHERS LIKE PERIYAR, BHARATHIYAR…ETC
WHEN BHRAMINS MISUSED HINDU RELIGION THEY ARE THE ONE SAVED US .. BUT IN ISLAM NO ONE CAN VOICE AGAINST ITS STUPIDITY OTHERWISE THEY WILL BE KILLED NEXT DAY.
சற்று மிகைப்படுத்தி எழுதியிருந்தாலும், உண்மையே.
பல சவூதி வீடுகளில் அதிகமாக மாட்டிக்கொண்டு அவதிப்படுவது இந்திய, இலங்கை, இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த ஏழை இஸ்லாமியப்பெண்களே.
அதற்க்காக சவூதி மொத்தமும் உள்ள வீடுகள் நரகத்தீ என்ற கருத்து, இந்தியா பாம்புகளும் சாமியார்களும் மட்டுமே உள்ள நாடு என்ற பல மேற்கத்திய ‘அறிவாளர்களின்’ கூற்றுக்கு ஒப்பானது.
பணிப்பெண்கள், அடிமைகள் என்ற கூற்று, உங்கள் அறியாமையே காட்டுகிறது. சவூதியில் பணிப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது சட்டப்படி குற்றம். ஆனால் அந்தச்சட்டம், நம்து நாட்டின் வரதட்சிணைச் சட்டம் போலவே.
//அடுத்து பெரும் சொத்தாய் குவிந்திருக்கும் எண்ணெய் பணத்தின் மூலம் சௌதிகள் சாதாரண வேலைகள் எதனையும் செய்வதில்லை//
இந்த வரிகள் தவறு. (நான் நிறைய வருடங்கள் அங்கு பணி புரிந்த்தவன்) பிச்சை எடுப்பது முதல், வாகனங்களை சுத்தம் செய்வது, அலுவலகங்களில் துப்புரவு பணி செய்வது, நிறுவனங்களில் காவலாளி என எல்லா வேலைகளிலும் சவுதி அரேபியர்கள் இருக்கிறார்கள். மற்றபடி நீங்கள் சொல்லியிருப்பது எல்லாம் சரியே! என்னுடைய அரபு நாட்டில் வேலை செய்யும் அபலை பெண்கள் என்னும் பதிவையும் படியுங்கள்.
சவுதி பற்றிய முந்தைய பதிவைப் போலவே இந்தக் கட்டுரையும் மிக அருமையான முறையில் உண்மையைப் பேசுகிறது. சவுதி மக்களின் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபடும் அரபிகளின் உளவியல் குறித்துப் பேசுகிறதேயொழிய மதம் பற்றிய விமர்சனமாக இதை எடுத்துக்கொள்வது சரியானதாகாது என்பது எனது கருத்து.
எல்லா நிறுவனங்களுமே தங்கள் ஊழியர்களை அடிமைகளைப்போலத்தான் நடத்துகின்றன. முதல் வேலையாக ஊழியர்களின் பாஸ்போர்ட்களைத்தான் வாங்கி வைத்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு எதிராகவோ நமது உரிமைகளை வேண்டியோ நாம் எதுவும் செய்ய இயலாது. எங்கள் கஷ்டகாலம் இங்கு தான் இருக்கவேண்டியுள்ளது. மனிதம் மறந்த மனிதர்களுக்கு மத்தியில் வாழ்வதைப்போன்ற துயரம் எதுவுமில்லை. வீட்டு வேலை செய்யும் இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்களின் துயரமான நிலை பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். கண்ணீர் பெருகும் கதைகள் இங்கு கொட்டிக்கிடக்கின்றன.
இதுபோன்ற கட்டுரைகள் மனதிற்கு கொஞ்சமாவது நிம்மதியைத் தருகின்றன. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக ஏதாவது நிகழ்ந்துவிடாதா என்ற ஏக்கத்தையும்..
பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.
என்ன வளம் இல்லை இங்கே? என்ன வேலை இல்லை இங்கே? சீக்கிரம் பணம் செய்ய வேண்டும் எனும் பேராசை, அதிகம் படிக்காத பாமரரை, நாடு தாண்ட தூண்டுகிறது! இங்கே கவுரவம் பார்ப்பவகள் வெளிநாடு சென்றால், எந்த வேலையையும் செய்ய பணிகிறார்கள்!
கலாச்சாரம் சவுதி, மலேசியரிடம் எதிபார்க்கலாமா?
நன்பர் rammy,///என்ன வளம் இல்லை இங்கே? என்ன வேலை இல்லை இங்கே? சீக்கிரம் பணம் செய்ய வேண்டும் எனும் பேராசை, அதிகம் படிக்காத பாமரரை, நாடு தாண்ட தூண்டுகிறது! இங்கே கவுரவம் பார்ப்பவகள் வெளிநாடு சென்றால், எந்த வேலையையும் செய்ய பணிகிறார்கள்!
கலாச்சாரம் சவுதி, மலேசியரிடம் எதிபார்க்கலாமா?//// 2004ல் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தேன் 2500 சம்பளம் கலையில் 8மணியிலிருந்து இரவு 12மணிவரை வேலை அதே ஆண்டு சவூதி சென்றேன் சத்தியமாக போரசையேல்லாம் கேடயாதுண்ணே எதோ பொழைக்கலாம் என்று நினைத்துதான் வந்தோன் ஒரு கம்பேனியில் ஆபீஸ் பாய் வேலை அப்ப முதல் மாத சம்பளம் 2000 ரியால் சவூதிகளை பொருத்த வரை 2000 ரியால் சம்பளம் என்பது நம்ம சவுளிக்கடையில் கொடுத்தது மாதிரி குறைவான சம்பளம் ஆனால் இந்தியா மதிப்பிற்கு 12ஆல் பொருக்கும் போது 24000 மாகிறது அதனாலதான் குடும்பத்த விட்டுட்டு இங்கே வந்து கஷ்ட்டப்படுறேம் அண்ணே இந்த சம்பளத்திற்கு ஊரில் நான் கவுரவம் பார்க்காமல் நியாயமான எந்த வேலையும் பார்க்க தயார் கோஞ்சம் சொல்லுங்கண்ணே உடனே ஊருக்கு வந்து விடுகிறேன். பின்குறிப்பு நான் எட்டாப்பு வரை தான் படித்திருக்கிறேன்
எங்கள் கொங்கு நாட்டிற்கு வாருங்கள்! 6 மாதங்களில் கார்மெண்ட் தொழில் பழகிக் கொள்ளலாம்! ஓரிரு வருடங்களில், மாதம் சுமார் 10000 சம்பாதிக்கலாம்! பிறகு, சாமர்த்தியம் இருந்தால், குறு/சிறு/பெரு தொழில் முனைவராக முன்னேறலாம்!
please send your kangu nadu address. i send many people.(because india have lot of unemployee persons-authorsized news)
007 .. ask your bombrates..they know well about kongu naadu! welcome everybody! any body, who wants to migrate for blue collar jobs, come & visit our place! plenty of jobs awaiting for you!.. (particularly people from tamilnadu!)
அதியமான்
நீங்கள் எழுதியுள்ளதை படிப்பவர்களுக்கு கொங்கு நாட்டில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் என்று தோன்றும்.யதார்த்தம் அப்படித்தான் உள்ளதா.
நெசவுத்தொழில் நசிந்து போனதால் கடன் சுமையை தாங்கமாட்டாமல் ‘கிட்னி’ யை விற்று கடனை அடைத்த நெசவாளர்களும் கொங்கு நாட்டில்தானே வாழ்கிறார்கள்.
இந்தப் புனிதமாதத்தில் அசுத்தங்கள் நீக்கப்படட்டும்.
இது வரைக்கும் எத்தனை புனித மாதங்கள் வந்து போயின?
//அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. குரான் 4:3//
Adultery, Rape இரண்டையும் தெளிவாக குரான் விளக்கவில்லையா? எனக்கு புரியவில்லை.
Saudi America என்று Morgan Spurlock எழுதியதை படித்தபோது சிரித்துக்கொண்டேன். ஆனால், இந்த கட்டுரையை படித்தபின் அவர் சொன்னது சரிதான் என்று எண்ணத்தோன்றுகிறது. கஷ்டமாகவுள்ளது.
நன்பர் செ.சரவணக்குமார் அவர்களுக்கு, ////சவுதி மக்களின் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபடும் அரபிகளின் உளவியல் குறித்துப் பேசுகிறதேயொழிய மதம் பற்றிய விமர்சனமாக இதை எடுத்துக்கொள்வது சரியானதாகாது என்பது எனது கருத்து./// சரியாக சொன்னீர்கள் வினவின் கட்டுரையாளர் இதில் தேவையில்லாமல் மதத்தை கொண்டு வந்து தினித்துள்ளார்
இந்தக் கட்டுரையின் கருத்து ஒகே தான், இந்த அவல நிலைக்கு இஸ்லாத்தை துணைக்கழைத்திருப்பது தான் வினவின் நோக்கத்தையே சந்தேகப்பட வைக்கிறது. அடிமைப் பெண்களைப் பற்றிய குரான் வாசகம் எப்படி இந்த பணிப்பெண்கள் விசயத்தில் ஒன்றாகும். வைப்பு என்பதே இஸ்லாத்தில் இல்லை.
//சட்டபூர்வமாக நான்கு மனைவிகள் அல்லாது எத்தனை அடிமைப் பெண்களையும் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள ஆணுக்கு அது அனுமதியளிக்கிறது.//
ஆட்சேபத்துக்குரிய அறியாமையினால் விளைந்த வரிகள்.
நன்பர்Uthayam, ///ஆட்சேபத்துக்குரிய அறியாமையினால் விளைந்த வரிகள்./// இது அறியாமையினால் விளைந்த வரிகள் அல்ல வினவுக்கு நன்றாக தெரியும் இந்த குர்ஆன் வசனத்திற்கும் அரபிகளின் நடைமுறைக்கும் சம்பந்தமில்லை என்பது இன்னும் சொல்லாப்போனல் ஷெக்மார்கள் பணக்கார அரபிகள் இஸ்லாத்தை பின்பற்றுவதில்லை என்பது வினவின் ஆழ்ந்த நம்பிக்கையும் கூட அவருடைய மார்க்ஸிய பார்வையும் அதுதான் உதாரணத்திற்கு./பின்லேடன்: அப்பா இசுலாமியவாதி! மகன் அமெரிக்கவாதி!! | வினவு!/ அப்புடியின்னு ஒரு பதிவு எழுதினார் படித்து பருங்கள்அதில் வினவின் நிலைப்பாடுக்கும் இப்போழுது இந்த பதிவுக்கும் உள்ள முரன்பாடுகளை பாருங்கள் /// மேட்டுக்குடி ஷேக்ககுகள் ஏழை இசுலாமியர்களை இசுலாத்தின் படி வாழவேண்டும் என்று பிரச்சாரம் செய்து நிதி உதவி வழங்கிவிட்டு தங்கள் வாழ்க்கையில் தீவிர அமெரிக்க நுகர்வு வெறியர்களாகத்தான் உள்ளனர். அதில் எல்லா பொறுக்கித்தனங்களும் உண்டு/// இப்படியும் /////ஏழை இசுலாமிய மக்களை தீவிர மதவாதிகளாக மாற்றும் இந்தக் கூட்டம்தான் தங்கள் வாழ்க்கையில் இசுலாத்திற்கு எதிரான எல்லா விசயங்களையும் அனுபவிக்கிறது//// இசுலாத்திற்கு எதிராக எல்லா விசயங்களையும் அனுபவிக்கிதாம் ஆனால் வேலைக்கார பெண்கள் விசயத்தில் மட்டும் குர்ஆன் வசனத்த பலொ பன்னுறாய்ங்களாம் நல்ல கத அப்புறம் வினவு சொல்றத பாருங்க ///ஆக தீவிரமதவாதம், ஒழுக்கம் என்பது அப்பட்டமான பொய் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது//// அப்ப எந்த அரபியும் இசுலாத்த பின்பற்றவில்லை என்றால் வேலைக்கார பெண்கள் விசயத்தில் மட்டும் இசுலாத்த பின்பற்றுகிறார்களோ எது உண்மைண்ணே
உங்கள் மெயில் ஐடி அனுப்பமுடியுமா?
என்னுடைய ஐடி hyderali_1976@yahoo.com
super appu!!!
நூற்றுக்கு நூறு உண்மையான தகவல்கள். சௌதியில் மட்டுமல்ல எண்ணெய் வளம் பெற்ற எல்லா அரபு நாடுகளிலும் பணிப்பெண்களுக்கு இதே நிலைதான் .நம்முடைய தூதரகங்களின் மீதும் நிறைய தவறுகள் இருக்கிறது. நமக்காக சேவை செய்வதாக கூறிக்கொண்டு விருந்துகளிலும்,கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்கே தூதர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.
இங்கு குவைத்தில் கூட சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பிலிப்பின்ஸ் நாட்டு பெண் ஒரு குழந்தையை வாஷிங் மெசினில் போட்டு கொலை செய்து விட்டு நாட்டுக்கு தப்பி ஓடி விட்டால். ஒரு குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு இரக்கம் இல்லாத பெண் என்று நினைப்பதை விட அவள் எந்த அளவு கொடுமையை அந்த வீட்டில் அனுபவித்திருந்தால் இப்படி வேலையை செய்திருப்பாள் என்று நினைக்கிறேன்.
என்ன வளம் இல்லை எம் திருநாட்டில்? இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதி நாய்களால் தானே எங்களுக்கு இந்த கொடுமை எல்லாம். ருசிலதான். இதைப்பற்றி பதிவு எழுதினால் நூறு பக்கத்துக்கு எழுதணும்.
iraivan unkalukku nervaliyai katta pirarthanai seikiren,
vatham pannalam aanal tharkkam pannathirkal iraivanudaiya markkathin valarchi unkalai kavalai adaya seikirathu
இரண்டு கருத்துகள் இங்கே சொல்ல விருப்பம்:
1). சவுதி அரேபியாவில் பணிப்பெண் நிலமை நரக நிலைமைதான். வினவு எழுதிய இக்கருத்து சரியே. நமக்கெல்லாம் என்ன ஒரு சுயநலமான ஆறுதலென்றால் நம் தமிழகப் பெண்கள் இந்த வேலைக்கு வருவதில்லை.
ரேவதி, ஒட்டக்கூத்தன் என்ற பெயர்களில் பின்னூட்டம் எழுதியவர்கள் வினவின் கட்டுரையில் மதம் சார்ந்து வரும் சில வரிகளை வாய்ப்பாகக் கொண்டு, இஸ்லாமை இழித்து பழித்துப்பேசி தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர். (நந்தா கூறுவது போல, பெண்களுக்கெதிரான கொடுமைக்கு குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் கூட தங்கள் மதக்காழ்ப்பையே முன்னிலைப் படுத்தும் பிறவிகளைப் பார்த்து பரிதாபப்படத்தான் முடிகிறது).
இந்தக் கட்டுரையை வினவின் வளைகுடா செய்தியாளர் மனித உரிமை அமைப்புகளுக்கும், சவுதி கெஜட் போன்ற நாளிதழ்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.இக்கொடுமைகளை த் தடுக்க நம்மால் முடிகிற முயற்சியைசெய்யத்தான் வேண்டும்.
2). சவூதிகளின் மேட்டிமைக் கொழுப்பு மனப்பான்மைக்கு இஸ்லாம் காரணமாகாது. பணமே பிரதானக் காரணம்.
பணிப்பெண்கள் வேறு, அடிமைகள் வேறு என்பது விளங்கப்படவேண்டும்.
அடிமைகள் முறை தலைவிரித்தாடிய ஒரு தேசத்திலிருந்து அம்முறையை துடைத்தொழித்தது இஸ்லாமே. அந்த காட்டுமிராண்டி கால எச்சங்கள் சில மற்றவர்களை இன்றளவும் அடிமையாக நினைப்பதை/நடத்துவதை மறுப்பதற்கில்லை
முஹம்மதுநபிகளின் காலத்தில் அடிமைகள் சந்தையில் வாங்கப்படவும், விற்கப்படவும் செய்தனர்.அதில் மெல்ல, மெல்ல ஒழுங்கைக் கொணர்ந்து அவர்களுக்கான மனித உரிமையை மீட்டுக்கொடுத்ததும் அன்னாரின் புரட்சியில் ஒன்று.
விருப்பு வெறுப்பின்றி ஆராய்கிற, முன்முடிவுகளால் நிரப்பப்படாத மனங்கள் உண்மையைக் கண்டுகொள்ளும்.
ஒன்றை மட்டும் இங்கே சுட்டுகிறேன். வெற்றிகரமான அமெரிக்க அதிபராகக் கருதப்படும் தாமஸ் ஜெஃபர்சனும் 100க்கும் மேற்பட்ட அடிமைகளை வைத்திருந்தார். ஜெபர்சனுடைய மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரியும் அவருடைய பாலியல் அடிமையாகவே இருந்தார். ஜெபர்சனின் மறைவுக்குப் பின்னரே அவருடைய மகளால் அந்த அடிமை விடுதலை செய்யப்பட்டார் என்கிறது வரலாறு.
ஆக, இன்றைக்கு தவறாகச் சித்தரிக்கப்படும் பல வரலாற்றுச் செய்திகளையும் அதன் கால தேச வர்த்தமானங்களின் பின்னணியிலேயே புரிந்துகொள்ள வேண்டும்.
அடிமை முறையை துடைத்த்தொழித்த்து இசுலாம் என்பது பச்சைப்பொய். தெளிவாக அறிய படியுங்கள் எனது ‘அடிமை அது அல்லாவின் ஆணை’
பொய்சொல்லிஅண்ணே சாகித் ———————————————– நூல் அடிமை-அது அல்லாவின் ஆணை: பக்கம்72 – தலைப்பு 7.தொடரும் அடிமை முறை என்ற தலைப்புல நம்ம சாகித் இன்ன சொல்றாருன்ன. 1. புனித ஹஜ் யாத்திரையை பற்றி நீங்கள் அறிவீர்கள் அப்போது மக்காவிலே நடைபெறும் சடங்குகளில் அரபாத் மைதானம் என்ற இடத்தை அல்லாவின் புகழ்பாடிக்கொண்டு நடந்து கடக்க வேண்டும் அவ்வாறு நடந்து செல்ல முடியாதவர்களுக்காக அன்று முதல் இன்று வரை பல்லக்கும் அதனைச் சுமந்து செல்லும் அடிமைகளும் உள்ளனர் அன்றோ அவர்கள் அடிமை காட்டரபிகள் இன்று சற்று நிலை மாறி கூலியடிமைகள் சடங்கின் புனிதம் காக்க மனிதனை மனிதன் சுமக்கும் அவலம், ———————————————– சாகித்தின் முதல் பொய் நெ1. அராபா மைதானத்தை கடக்க வேண்டும் என்பது. ———————————————–உண்மை நெ.1 இதற்கு பதிலாக என்னுடைய சொந்த அனுபவத்தை பதிலாக பதிய போகிறேன் நான் 2004ல் ஹஜ் செய்தேன் (இந்த புத்தகம் முதல் பதிப்பு. பிப்ரவரி2003 இரண்டாம் பதிப்பு டிசம்பர்2008 என்பதை நினைவில் கொள்க) ஆனால் அராபா மைதானத்தில் டென்ட் போட்டு அதில் தங்கி இருக்க வேண்டும் என்பதுதான் சடங்காக செய்து வருகிறார்கள் ஹஜ்ஜின் மிக முக்கியமான கிரியை அரபாவில் தங்குவது தான் சிறிது நேரமேனும் அராபவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது, பார்க்க ஹதிஸ்: அறிவிப்பாளர் அப்துல்ரஹ்மான் பின் யமுர்(ரலி) நூல்கள்:நஸயீ2966.2994. திர்மீதி814 “ஹஜ் என்பதே அரபாவில் தங்குவது தான் பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் அரபாவுக்கு வந்து தங்கி விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வர், அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்:முஸ்லிம்2137 “நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சூரியன் மறையும் வரை அரபாவில் தாங்கினார்கள் சூரியன் மறைந்ததும் புறப்பட்டு முஸ்தலிபாவுக்கு வந்தார்கள், இதிலிருந்து இன்னா தெரியவருதுன்னா அரபாவை கடந்து செல்வது சடங்கல்ல அங்கே தாங்க வேண்டும் அதுவும் சூரியன் மறையும் வரை ———————————————– பொய் நெ.2 நடந்து செல்ல முடியாதவர்களுக்காக அன்று முதல் இன்று வரை பல்லக்கும் அதனைச் சுமந்து செல்லும் அடிமைகளும் உள்ளனர் அன்றோ அவர்கள் அடிமை காட்டரபிகள் இன்று சற்று நிலை மாறி கூலியடிமைகள் சடங்கின் புனிதம் காக்க மனிதனை மனிதன் சுமக்கும் அவலம், ———————————————–உண்மை நெ.2 மினாவிலிருந்து அரபா மைதானத்திற்கு போவதற்கு பஸ்ஸில் சொன்றால் அரபா மைதான டென்ட் வாசலில் இறக்கி விட்டு விடுவார்கள் 5ரியால் வடகை டாக்சி இருக்கிறது நம்ம பாகிஸ்தானி டிரைவர்கள் தான் அங்கு முக்கால் வாசி டாக்சி ஒட்டுனார்கள் (ஒருவேல இந்த டாக்ஸி ஒட்டுனார்களைத்தான் நம்ம சாகித்து அடிமையின்னு சொல்றாருன்னு நெனைக்கிறேன்) அவர்கள் வாசலில் கொண்டு போயி இறக்கிவிடுவார்கள் அப்புறம் பல்லாக்கு என்கிற ஒரு விஷயத்தை நான் பார்க்கவேயில்லை அப்புறம் இந்த கபாவை 7 ரவுண்டுகள் சுத்தி வரும்போது தான் நடந்து சுற்ற வேண்டும் இங்கு நடக்க முடியதாவர்களுக்காக கைட்ராலிக் நான்கு சக்கர ரிமோட்டை அமுக்கினால் இயங்கக்கூடிய நற்காலி கொடுக்கிறார்கள் அதுவும் இரண்டாவது தளத்தில் குளு குளு ஏஸியில் மெசைக் தரையில் ட்ராலி செல்வதற்கு தனி ப்ளாட் பாராம் தனி வழித்தடம் புதிதாக இயக்க தெரியதவர்களுக்கு அங்குள்ள தன்னர்வ தொண்டர்கள் சொல்லி கொடுக்கிறார்கள் முடியாத பச்சத்திற்கு அவர்களே தள்ளி கொண்டு செல்கிறார்கள் (நம்ம ஊருல ncc மாணவர்கள் மாதிரி சவூதியில் படிக்கும் அரபிய மாணவர்கள் ஹஜ் மாதத்தில் 10 நாட்களுக்கு ஸ்கூல் லீவு இந்த மாணவர்கள் சேவையில் இருப்பார்கள்) ஒரு வேல இவுங்கள நம்ம சாகித் அடிமையின்னு சொல்றாருன்னு நேனைக்கிறேன் ———————————————– இந்த புத்தகம் மாதிரி கமோடியான புத்தகம் வேற நான் படித்ததேயில்லை பக்கத்து பக்கம் பொய் ஒரே கிச்சு கிச்சு மூட்டல் நம்ம சாகித் நகைச்சுவை உணர்வு ரோம்ப அதிகமுன்னு இந்த புத்தகம் படிச்சு தெரிஞ்சுகிட்டேன்
கருப்பு ஆடைக்குள் காரிகையை அடைத்து வைத்து
வெள்ளை உடையில் கள்ளர் கூட்டம் உலா வரும்
எண்ணை வயல் பூமியில், மன்னர் மனுநீதியின் – நீதி
கிடைத்திடுமோ? மறத்தமிழர் கூட்டம் வாழ்ந்திடுமோ?
அன்புடன்
சிங்கம்
வினவு – வீ ண் .
Who told Saudi Arabia is a Hell. It feeds a better bread and jam for the millions of expatriates and Indian for past several years.
Whom ever comes to Saudi Arabia for job is feeling better conditions than any other county and willing to come again and again to Saudi Arabia.
If you are not believing, Check with any of your friends working in Saudi Arabia.Every country has merits and demerits. Always absorb the good merits and obey the land of the law. All Indians working in India are ready to come and settle in India. Will you or the Government will arrange for the Job. As a Muslim we cannot even dream for the job either in Private or Government. Even Saudi Arabia we are facing racism with Indians to getting a Job.
I recommend, it is not advisable to send the girls/ladies to send out of the country out of job as alone. It will cause problems to them.
As an Indian and we have to think about our country job development and job opportunities to our peoples.
What Revathi mentioned here are not true. All are fake Islamic web sites hosted by Anti Islamic elements.
Regards
Sadakka from Udumalpet of Tirupur District
What Sadakka said is absolutely true.
Wherever in this world, whether it may be muslim dominated saudi or Hindutuva dominated India or a captilastic America, girls/ladies goes to work lonely in a alien atmosphere is not recommendable.
For human, Selfishness and Lust comes before doctrines and principles.
Even IPS officers are being patted at the backside are the cases in India.
That is the point. So, NO meaning of taking such articles as a chance to criticize other cultures and religions.
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபு தாபியில் ஒரு அரபியின் வீட்டில் பணி புரியும் ஒரு பிலிபினோ பெண் இந்த மாதம் ஐந்தாம் (ஆகஸ்ட் 5, 2010) தேதி இஸ்லாத்தை சட்டப்படி ஏற்று கொண்டு முதல் ரமதான் நோன்பு கடைப்பிடித்து வருகிறார். தனது எல்லா கேள்விகளுக்கும் இங்கே விடை இருந்ததாக கூறும் இந்த பெண் இதனாலே இந்த முடிவிற்கு வந்தாராம். இவரை பற்றிய ஒரு படைப்பு இன்றாக அபு தபியின் ‘தி நேஷனல்’ நாளேடில் ஆகஸ்ட் 15, 2010 வெளிவந்தது.
அதை படிக்க இங்கே சொடுக்கவும்… http://www.thenational.ae/apps/pbcs.dll/article?AID=/20100815/NATIONAL/708149958/1041
இதற்கு என்ன சொல்றீங்கோ?
உண்மையாளன் சொல்லியிருப்பது உண்மையாக இருக்கக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது உண்மை என்பதால் வினவு சொல்லியிருப்பது உண்மையாக இருக்கத்தேவையில்லை என்ற தொணி உண்மையாளனின் பதிலில் இருக்கிறதே அதுதான் உண்மையில்லை. குரானில் இருக்கும் வரிகள் அடிமை முறையைப் பற்றி சொன்னது அது வேலைக்காரப்பெண்களுக்கு பொருந்தாது, இன்று பொருந்தாது என்றால், இன்று பொருந்தாத வரிகளை கடவுள் எதற்காக அன்று சொன்னார். அப்போது குரான் மொத்தமுமே இன்றைக்கு பொருந்தாத குப்பை தானே. குரானை தூக்கி எறிந்துவிடுவீர்களா அல்லது இது போன்ற நீங்களே ஒப்புக்கொள்ளும் ‘காலாவதியாகிப்போன’ கடவுளின் வசனங்களை(sic!) உளுத்துப்போன விஷயங்கள் என்று குரானிலிருந்து நீக்கிவிடுவீர்களா? அல்லது இன்றைய உலகிற்கு ஏற்றமாதிரியான ஒரு புது குரானை கடவுள் இப்போது இருக்கின்ற யாரையாவது ஒருவரை அல்லது பலரை தேர்ந்தெடுத்து சொல்வாரா?
ரேவதி சுட்டிக்காட்டியது ஒரு குறிப்பிட்ட சம்பவம். உங்களது “நபி” யே இப்படி வீட்டில் இருந்த பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்பது. அந்த நபி(sic!), இப்படி வேலைக்காரப்பெண்ணை பாலியல் வலுவந்தம் செய்தது உண்மையா பொய்யா என்பது குறித்து இங்கே கொந்தளிக்கும் மதவெறியர்கள் எவரும் பதிலளிக்கவில்லை. ஆனால் விஷயத்தை திசை திருப்புகிறார்கள்.உங்கள் நபி இந்த கேவலமான செயலை செய்தாரா இல்லையா என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். வினவு அரபிகளை குறித்து சொல்லியதை இழுப்பது சம்பந்தமில்லாத விஷயம். அப்படியே அதையும் இதையும் இணைத்துப்பார்த்தாலும் அரபிகள் தமது மதத்திலிருந்து தமக்கு சாதகமான விஷயங்களை எடுத்துக்கொள்கிறார்கள், தர்ம சங்கடமான விஷயங்களை வெளிநாட்டு ஏழை முஸ்லீம்கள் தலையில் கட்டிவிட்டு தாங்கள் அமெரிக்க வசதிகளை, கலாச்சாரத்தை, பொருட்களை அனுபவிக்கின்றார்கள்.
மூளைச்சலவை செய்யப்பட்ட இங்குள்ள மதம்மாறி முஸ்லீம்கள் இப்படி அரபிகளை ஆதரிக்கும்போதுதான் மதத்தின் வலு புரிகிறது. தாங்கள் ஏமாற்றப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கத்திமுனையில் மதம்மாற்றப்பட்டு எவ்விதமான தர்க்கங்களுங்கும், ஆய்வுகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு மூடநம்பிக்கையை ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக்கூட சிந்தித்துப் பார்த்து தெளிய வக்கில்லாத இந்த ஜன்மங்களின் நிலையைப் பார்த்தால் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
வெளி நாட்டில் வேலை செய்யும் பெண்கள் கொடுமைபடுத்தப்படுகிறார்கள் என்று சொல்லும் வினவு, அதற்க்காக சவுதியை மட்டும் எடுத்துக்கொண்டது ஏன்? இந்த குற்றம் அமெரிக்காவில், அறவே நடப்பது இல்லையா? ஆஸ்திரேலியாவில் நடப்பது இல்லையா? மரீஷியசில் நடப்பது இல்லையா? ஏன் அவ்வளவு தூரம் செல்ல வேண்டும், இந்தியாவில் எத்தனை வீட்டில் வேலை செய்பவர்களை கொடுமை செய்வதாக பத்திரிக்கையில் படிக்கிறோம்.
காசு கிடைக்கிறதே என்று இங்கே வந்து சம்பாதிக்க வேண்டியது, பிறகு சோற்றுக்கு வழி செய்தவர்களையே குற்றம் சொல்லவேண்டியது. இது எந்த வகையில் நியாயம். ஒரு முஸ்லீமில், இந்துவில், கிருஸ்துவத்தில் நல்லவன் கெட்டவன் இல்லையா? ஒரு மனிதன் செய்யும் குற்றத்துக்கு அந்த மதம் தான் காரணமா? சவுதி சட்டம் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் ஏன் இங்கே வருகிறீர்கள். யார் உங்களை சீட்டு போட்டு அழைத்தார்கள். உங்க தேவைக்காக வரவேண்டியது, இங்கே வந்து மத்தவன் இதைவிட சம்பாதிப்பதை பார்த்து பொறாமை கொண்டு பேராசை கொண்டு, தனக்கு கிடைக்கும் சம்பளத்தை துச்சமாக கருத வேண்டியது. இது தான் நியாயமா?
அடேய் “தீ”,
குர்ஆனை குற்றம் சொல்லும் நீ, ஒரு அறிவிலி என்று தான் நினைக்கிறேன். இதை நீ கேட்கும் கேள்வியே படிப்பவர்களுக்கு புரியவைக்கும். இன்று பொருந்தாத கட்டளைகள், சட்டங்கள், அறிவுறைகள் குர்ஆனில் இருப்பதால் அது எதற்க்கு என்று கேட்கிறாய். அப்படியென்றால் 1300 வருடங்களுக்கு முன் அன்று வாழ்ந்த சந்ததிகளுக்கு யார் சட்டங்களை சொல்வது, உன் அப்பனா?. இறைவன் என்பவன் முக்காலத்துக்கும் நடப்பவற்றை சொல்பவன். உன் அம்மா அன்று உன்னை பெற்றெடுத்தாள், பாலூட்டினாள் இன்று அதெல்லாம் அவளால் முடியாது, அதற்க்காக குப்பையில் போட்டுவிடுவாயா? (இப்போது புரிகிறதா கேடுகெட்டவனே). கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணேண்டா.
எவனோ ஆங்கிலத்தில் கிருக்கியதை லிங்க் குடுத்து இருக்கும் ரேவதியில் எழுத்தில் பூரித்துப்போன தீயே, அவரிடமே அதற்க்கு ஆதாரம் கேள். லிங்க் மட்டும் கொடுப்பதாக இருந்தால் 1000 லிங்க் நான் தருகிறேன். சாக்கடையை குடிக்கச்சொன்னால் நீ அப்படியே செய்வாயா? ….நக்கச்சொன்னால் நக்குவாயா?? ஆதாரமின்றி நாங்கள் எந்த குர்ஆன் வசனத்தையும் நம்புவதில்லை, முஸ்லீம்கள் சொன்னாலும் சரியே.
சகோதரர் ஹைதர் அலி, மற்றும் மற்ற மதத்தை மதிக்கின்ற மரியாதைக்குறிய சகோதரர்கள், உங்களுக்கு விஷயத்தை புரியவைக்க முயற்ச்சி செய்கிறார். உங்க மண்டையில் மசாலா இருந்தா தானே இதெல்லாம் வேலைக்காகும். சிந்திக்கும் சக்தியை இழந்த உன்னைப்போன்றவர்களுக்கு என்றும் உண்மை விளங்காது. நரகில் எரியும் பொருளாக இருக்கப்போகும் உன்னை நினைத்தால் கோபத்தைவிட எனக்கு பரிதாபம் தான் வருகிறது.
இஸ்லாத்தை பற்றி இல்லாததை பொல்லாததை இணையத்தில் பரப்பி, அதன் மூலம் இஸ்லாத்திற்க்கு வருவதை தடுக்கலாம் என்று தப்புக்கணக்கு போடும் வினவு, செங்கொடி போன்ற கிருக்கர்களின் முயற்ச்சிக்கு முஸ்லீம்களாகிய நாங்கள் கவலைப்படமாட்டோம். ஏன் என்றால், இண்டெர்னெட்டில் சொல்வதை அப்படியே நம்பும் உன்னைபோன்றவர்கள் மக்கள் தொகையில் அதிகம் இல்லை. உலகம் முழுவதும் இஸ்லாத்தை தழுவும் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது, நீ அறிந்திருப்பாய் என்று நினைக்கிறேன்.
தீ … நீ எங்கே குப்பை கொட்டுகிறாய். துபையிலா, குவைத்திலா சவுதியிலா?
முஸ்லீம்களை இழிவாக எழுதும் உன்னைப்போன்றவர்கள் சாப்பிடுவது வேறு எதுவும் இல்லாது சோறாக இருந்தால், நீங்கள் பிச்சை எடுக்கும் அரபு நாட்டில் உள்ள அரபியர்களிடம் சொல்லி பாருங்களேன், இஸ்லாத்தின் மீதுள்ள வெறுப்பை. பயம் இருக்குல்லே, எவனாவது இங்கே வந்து தைரியமாக சொல்லிவிட முடியுமா? அப்புறம் அட்ரஸ் காணாம போய்டும். இங்கே வந்து கை நிறைய சம்பாதிச்சு ஊரில் மாடி வீடு கட்டிவிட்டு கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் முதலாலிகளையே திட்டும் ஜென்மம் தானடா நீயெல்லாம்.
இஸ்லாம், குர்ஆன் இதெல்லாம் பிடிக்காதென்றால் எதற்க்கு முஸ்லீம் நாட்டுக்கு பிழைக்க போக வேண்டும். உங்களுக்கு உங்கள் மதம், கடவுள் முக்கியம் என்றால் மற்ற மதத்தை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அது தான் எங்கள் இஸ்லாம் சொல்கிறது. நான் இந்த அளவு கடுமையாக எழுத கூட இஸ்லாம் எனக்கு அனுமதிக்கவில்லை.
குற்றத்தை நியாயப்படுத்த வில்லை. ஆனால் குற்றங்களுக்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்ற பிதற்றலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
எனது மெயில் tmlmuslim@gmail.com
திரு வினவு அவர்களே,
நல்ல கட்டுரை, ஆனால் இந்த கட்டுரையில் இஸ்லாமையும் இழுத்திருப்பதுதான் வேதனையானது, நீங்கள் குர்-ஆனை முழுமையாக அறிந்து கொள்ளாமல் ஏதேதோ எழுதி இருக்கிறீர்கள், இஸ்லாத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அது தவறு மற்றும் குற்றங்களை குறைப்பதற்காகத்தானே தவிர குற்றங்களை விதைப்பதற்காக அல்ல, எனவே எதனையும் முழுமையாக அறிந்துகொண்டு எழுதுங்கள், அதனால் உங்களுக்கும் நன்மை உண்டாகும் மேலும் சௌதிகள் அனைவரும் அவ்வாறு அல்லர் அதனையும் நீங்கள் அறிந்து கொல்லுங்கள்…
நன்றி
இங்கு கருத்து சொல்லியிருக்கும் பல நண்பர்கள், நந்தா கூறியிருப்பதைப் போல் கட்டுரையின் மைய நோக்கத்தை விட்டுவிட்டு மதம் குறித்த சிறு பகுதியை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சவுதியோ, அரபிகளோ இஸ்லாத்தின் அத்தாரிடிகள் அல்ல என்பவர்கள், சிலவற்றை தெளிவுபடுத்தலாம். அடிமைகளை வைத்திருப்பது அல்லது அவர்களை பாலியல் பண்டமாக பயன்படுத்திக்கொள்வது குற்றச்செயல் என்பதை குரான் அடிப்படையில் விளக்க முடியுமா?
வீட்டில் வேலை செய்யும் பெண்கள் அடிமைகள் அல்ல என்பதை சவுதி எனும் நாட்டின் சட்டத்தைக் கொண்டுதானே கூறுகிறார்கள், இஸ்லாத்தின் அடிப்படையில் கூற முடியுமா?
இஸ்லாமிய அரசியலுக்கு எடுத்துக்காட்டாய் சவுதியை பல விதங்களில் முன்னிருத்தும் இஸ்லாமிய அன்பர்கள் எதிராக வரும்போது மட்டும் சவுதி அத்தாரிடி அல்ல எனக் கூறுவது ஏன்?
செங்கொடி
திரு.செங்கொடி,
அந்தக் காலத்தில் அடிமை முறை இருந்தது உண்மையே. அது தற்போது படிப்படியாக மாற்றப்பட்டுவிட்டது.
பிறிதொரு காலத்தில் அடிமை முறை மீளவும் வரலாம். இலங்கை, சோமாலியா போன்ற பல பகுதிகளில் இதற்கான சூழல்கள் தென்படுகின்றன. அடிமைகள் குறித்த குரானின் வசனங்கள் அப்போது விளங்கும்.
(பதிவுக்குச் சம்பந்தமில்லா விட்டாலும் ஒரு கருத்து:, விதவையராகிவிட்ட இலங்கைத் தமிழ்ப்பெண்கள் பலருக்கும் இஸ்லாம் கூறும் பலதாரமணம் அடிப்படையில் வாழ்வளிக்க நம் தமிழர்கள் முன்வருவது, அப்பெண்களை பேரினவாதிகளின் சீரழிப்பிலிருந்து பாதுகாக்கும் )
பணிப்பெண்கள் “இந்த சம்பளத்துக்கு இன்னின்ன வேலைகள்” என்ற ஒப்பந்தத்துடனேயே பணிக்கு வருவதால் அவர்களை அடிமையாகக் கருதக்கூடாது.முடியாது என்பது தான் இஸ்லாம். அப்படியும் அடிமையாக அவர்களைக் கருதுவது பெரும்பாவத்துக்காளாக்கும்.
ஆணின் வக்கிரம் ஓங்கிய சூழலில், அதுவும் அயல்நாடுகளில், பெண்கள் வீட்டுப் பணிபுரிய வராமலிருப்பதே நல்லது. அதில் சவூதி, இந்தியா, அமெரிக்கா என்ற நிலப்பிரிவுகள் இல்லை.
ஒரு சவூதிக்காரன் தவறு செய்கின்றான் என்னும்போது, ”ஆகா, மாட்டினானடா ஒரு முஸ்லிம்” என்ற மனநிலையில் பார்க்காமல், மனிதத்தின் குற்றவாளியாக மட்டும் பார்க்கும் மனநிலை வாய்க்கும் போது, அனைவருமே ஒன்றுசேர்ந்து இந்தக்கொடுமைகளுக்கு எதிராக போராடும் வழி பிறக்கும்.
//பிறிதொரு காலத்தில் அடிமை முறை மீளவும் வரலாம். இலங்கை, சோமாலியா போன்ற பல பகுதிகளில் இதற்கான சூழல்கள் தென்படுகின்றன. அடிமைகள் குறித்த குரானின் வசனங்கள் அப்போது விளங்கும்.//
அப்படி இலங்கையில் அடிமைமுறை திரும்ப வந்து தமிழர்கள் அடிமையாகும் போது, குரானை காட்டி அதை ஆதரிப்பீர்களா? தமிழ்ப்பெண்கள் அடிமைகளானால் அவர்களை சிங்கள முதலாளிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலாமா?
இந்த பதிவின் நோக்கம் இப்படிப்பட்ட பிற்போக்குத்தனங்களை அம்பலப்படுத்துவதுதான் என்று நினைக்கிறேன்.
அண்ணே போதெம்கின்,
///பிறிதொரு அப்படி இலங்கையில் அடிமைமுறை திரும்ப வந்து தமிழர்கள் அடிமையாகும் போது, குரானை காட்டி அதை ஆதரிப்பீர்களா?/// கண்டிப்பாக ஆதரிக்க மாட்டோம் ஏன் முஹம்மது நபி (ஸல்) இக்கால கட்டத்தில் வாழ்ந்தால் தடுக்கத்தான் செய்வர் அவர் தன்னுடைய வாழ்நாளிலே பலரை விடுதலை செய்திருக்கிறார் தன்னுடைய தோழர்களையும் அந்த அரபி சமுதாய மக்களையும் அடிமைதலையிருந்து விடுவித்துயிருக்கிறார் மேலே சகோதரர் தன்னுடைய சொந்த கருத்தாகத்தான் பதிய வைத்திருக்கிறார் இஸ்லாமிய தீர்வு அதுவல்ல ///தமிழ்ப்பெண்கள் அடிமைகளானால் அவர்களை சிங்கள முதலாளிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலாமா?/// அடிமை முறையே கூடாது என்று கூறும் போது துன்புறுத்தால் அயோக்கியத்னமானது
///இந்த பதிவின் நோக்கம் இப்படிப்பட்ட பிற்போக்குத்தனங்களை அம்பலப்படுத்துவதுதான் என்று நினைக்கிறேன்./// இல்லை உங்களை போன்றவர்கள் இஸ்லாத்தில் மேல் உள்ள காழ்ப்புனர்ச்சியால் எழுதப்பட்ட பதிவு இங்குள்ள பின்னூட்டங்களை பார்த்தாலே புரியும்
குண்டு வைக்கிறவனெல்லாம் முஸ்லீம்னு சொல்ற நாதாரிகளுக்கும், இசுலாம் பத்தி கேள்வி கேட்டால் முஸ்லீம் காழ்ப்புன்னு சொல்ற உங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது, ஹைதர் அலி. சிறுபான்மையினர் மீது மதகாழ்ப்புடன் திரிபவர்கள் மலிந்துள்ள சூழலில் உங்கள் ஆத்திரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால்… குரானை தவறாக (அப்படி இருப்பின் ?!) புரிந்து பரப்புகிற அந்த சிக்கந்தரிடம் தானே நீங்கள் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்? சரி… நபி அடிமைமுறையை ஒழித்தார் என்பது உண்மையாக இருப்பின், இசுலாத்தில் அடிமைப்பெண்களுடன் பாலுறவு கொள்ளலாம் என்று இருப்பதாக வந்த பின்னூட்டங்களுக்கு ஆதாரத்துடன் பதில் சொல்லலாமே. ‘அந்த காலத்துக்கு’ மட்டுமல்ல எக்காலத்துக்கும் பொருத்தமான மார்க்கம் இசுலாம் என்று நீங்கள் நிறுவலாமே.
நன்பர் போதெம்கின் அவர்களுக்கு,//// சரி… நபி அடிமைமுறையை ஒழித்தார் என்பது உண்மையாக இருப்பின், இசுலாத்தில் அடிமைப்பெண்களுடன் பாலுறவு கொள்ளலாம் என்று இருப்பதாக வந்த பின்னூட்டங்களுக்கு ஆதாரத்துடன் பதில் சொல்லலாமே. ‘அந்த காலத்துக்கு’ மட்டுமல்ல எக்காலத்துக்கும் பொருத்தமான மார்க்கம் இசுலாம் என்று நீங்கள் நிறுவலாமே.////இது கொஞ்சம் நீளமாக எழுத வேண்டிய விடயமாக இருந்ததால் முதலில் நன்பர்கள் கேட்கிற சின்ன கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு விரிவாக எழுதலாம் என்று இருந்தேன் ஆனால் நான் முதலிலே குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் கொடுத்திற்க வேண்டும் இப்போது கால அவகாசம் இல்லாமல் போய்விட்டது நான் இன்று 12மணியளவில் கிளம்பி நன்பர்களோடு மக்கா மதீனா உம்றா போக போகிறேன் வியாழன் வெள்ளி சவூதியில் விடுமுறை என்பாதல் புதன் கிழமை இன்று கிளம்பி வியாழக்கிழமை மதீனாவில் இருந்து விட்டு வெள்ளிக்கிழமை மக்காவில் ஜீம்மா தொழுகையை முடித்துவிட்டு சனிக்கிழமை கலையில் தான் வேலைக்கி வருவேன் (இன்ஷா அல்லாஹ்) அதற்குபிறகு நாம் கொட்பாடுரிதியாக விவாதத்தை தொடருவோம் அதவாது வினவு தளத்தின் பக்கம் மூன்று நாளைக்கி வர முடியாது லீவுப்பா
பத்திரமாக போயிட்டு வாங்க நண்பரே. எனக்கு அவசரமில்லை. ஆனால் புனிதநூல்களுக்கு தான் மிகச்சிறிய காலநேரத்துக்குள் out-date ஆகிவிடும் ‘ஆபத்து’ இருக்கிறது. 🙂
nanbargaley eathenaum oru ketta seithi muslimai patriyo, islamiya naadugalai patriyo vanthuvittal athudan isalathaiyum, athan kolgai sattangalai inaithu oppittu pesuvathu indraiya seithi oodagangalin kullanarithanamaagivittathu. intha seithiyil oru islamiya naaattil oru thani nabaraal seiyappadum aneethiyudan irai maraiyin oru vasanathai oppittu eluthi iruppathu intha oodaiyin kulla nari thanam endrey solgindren.ulagathil adimaiyai olithathu isalaam endrey koorugiren.athaaram vendubavargal nabigalin mulu sarithirathaiyum padithu paarungal.
good job keep it up
இங்கே கருத்துபரிமாற்றங்களை செய்கிறவர்கள் சவுதி வாழ்க்கையை நேரில் கண்டவர்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஐந்து வருடங்கள் சவுதியிலும் பத்து வருடங்கள் உலகின் பலபாகங்களிலும் பணியாற்றியவன் என்கிற முறையில் மூன்று கருத்துக்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
1 ) கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளபடி சவுதி, மதவெறியர் அல்லாதவருக்கும், மற்ற மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் (இஸ்லாம் மார்க்கத்தை தழுவாதவர்கள்) ஒரு நரகம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்தக் கருத்தை மறுப்பவர்கள் கண்டிப்பாக மத வெறியர்களாகவே இருக்க முடியும்.
2 ) கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளபடி பெண்களுக்கு எதிரான அத்துனை கொடுமைகளும் அங்கு நடப்பது உண்மை. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் ஒரு பெண்ணும் சமமாகவே பாவிக்கப் படுகிறார்கள். ஒரு சிறு உதாரணத்தை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தன்னுடைய வாகனத்தை தானே சாலையில் ஓட்டிச் சென்ற காரணத்திற்காக, சவுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அந்நாட்டு நீதிமன்றம் கடுமையாக தண்டித்தது. காரணம் பெண்களுக்கு இடப்பட்டுள்ள ஏராளமான தடைகளில் அதுவும் ஒன்று.
3 ) மேற்கூறிய இரண்டு காரணங்களுக்காக ஒரு நல்ல மதத்தையும், அதன் கருத்துக்களையும் பற்றி குறைகூற யாரும் முயன்றால் அது தவறு. எல்லா மதங்களும் அந்தந்த நேரத்தில் எது தேவையோ அதை தெளிவுபடுத்துவதற்காகவே உருவாயின. இன்றைய காலகட்டத்தில் அதிலுள்ள நல்ல கருத்துக்களை மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.
மிஸ்டர் (அ)சிங்கம், //////கருப்பு ஆடைக்குள் காரிகையை அடைத்து வைத்து
வெள்ளை உடையில் கள்ளர் கூட்டம் உலா வரும்
எண்ணை வயல் பூமியில், மன்னர் மனுநீதியின் – நீதி
கிடைத்திடுமோ? மறத்தமிழர் கூட்டம் வாழ்ந்திடுமோ?//// இப்புடி நீங்க கவுஜை எழுதும்போதோ பதில் கொடுக்கலாம் (அசிங்கமான கவிதையில)நினைத்தோன் இஸ்லாமிய நகரிகம் என்னை தடுத்துவிட்டது /////கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளபடி பெண்களுக்கு எதிரான அத்துனை கொடுமைகளும் அங்கு நடப்பது உண்மை. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் ஒரு பெண்ணும் சமமாகவே பாவிக்கப் படுகிறார்கள்.//// அப்புடியா மெய்யலுமா நீங்க எதாவது ரியாத் ஜித்தா போன்ற நகரத்துல கொஞ்ச நாளு வேல பாத்திருப்பீங்கன்னு நேனைக்கிறேன் கிராமத்துல ஆடு மெய்ச்சியிருக்கிகளா அந்த கிராம பெண்களுக்கு இருக்குற அதிகரத்த பாத்திகன்ன அசந்துருவீக ////ஒரு சிறு உதாரணத்தை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தன்னுடைய வாகனத்தை தானே சாலையில் ஓட்டிச் சென்ற காரணத்திற்காக, சவுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அந்நாட்டு நீதிமன்றம் கடுமையாக தண்டித்தது.//// இந்த காரணத்துக்காகத்த்தான் கண்டிச்சாய்ங்களா உண்மையை சொல்லவும் நானும் சவூதியில் தான் இருக்கிறேன் அப்புறம் இந்த கிராமத்து பெண்கள் TOYATA பிக்கப் வண்டியில ஆடுகளை ஏத்திகிட்டு சந்தைக்கி விக்க வருவாங்க பாருங்க அவுங்க வண்டியை ஒட்டுற வேகமென்ன அப்பப்பா. வாதி அல் தவாஸிர் அப்புடியின்னு கிராமம் அங்க ஒங்க நன்பர்கள் வேல பாத்தங்கன்ன வேசரிச்சு பாருங்க ///காரணம் பெண்களுக்கு இடப்பட்டுள்ள ஏராளமான தடைகளில் அதுவும் ஒன்று//// சவூதி அரபியவூடைய கட்டளையே தவிர இஸ்லாமிய அனுமுறையில்ல மிஸ்டர் (அ)சிங்கம்
நண்பர் ஹைதர் அலி உங்களுக்கு ஒரு கேள்வி
சவுதியில் இசுலாமிய நெறிகளின் படி ஆட்சி நடக்கிறதா, இல்லையா? அது ஒரு இசுலாமிய நாடா இல்லையா?
இல்லை இசுலாமிய நாடு கிடையாது இசுலாத்தை அரைகுறையாக பின்பற்றுகின்ற நாடு என்று வேண்டுமேனால் சொல்லி கொள்ளலாம்
அது இசுலாமிய நாடா, இல்லையா என்று முடிவு செய்வது யார்?
சவுதி அரேபியா இசுலாத்தை அரைகுறையாக பின்பற்றுகின்ற நாடு என்றால் இசுலாத்தை முழுதாக பின்பற்றுகின்ற நாடு எது?
அண்ணே வினவு,அங்கே ஒங்க இரண்டாவது கேள்விக்கிட்ட ரிப்லை பட்டன்யில்லை அதனால் இங்கிருந்து. ந மட்டும் பதிலு சொல்லிகினே இருந்த எப்படி நானும் ஒரு பதிலு ஒரு கேள்வி அப்புடியின்னு மாத்தி மாத்தி கேட்டதான் உண்மை தெரியும் இப்ப ஒங்ககிட்ட ஒரு கேள்வி சீனா மற்றும் கியூபா கம்னிச நாடா?
ஹைதரண்ணே, கேள்விக்கு பதில சொல்லிட்டு எதிர் கேள்வி கேளுங்கள், அதுதான் நியாயம், இசுலாத்தின் படியே கூட அதுதான் நியாயம்
கியூபா, சீனா இரண்டுமே தம்மை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்வதில்லை. முதலாளி, தொழிலாளி, ஏழை, பணக்காரன் எல்லாருக்குமான அரசு என்று அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் சவுதி தன்னை முழுமையாக இசுலாத்தை பின்பற்றுகின்ற நாடு என்று சொல்கிறது.
சரிங்கண்ணே ///அது இசுலாமிய நாடா, இல்லையா என்று முடிவு செய்வது யார்?/// (1.ஒன்று குர்ஆன் 2.மற்றோன்று ஹதீஸ்) 1.இறைவன் வழங்கிய வழிகாட்டல் 2.முஹம்மது நபியின் சொல் செயல் ஆங்கிகாரம்
சரி, இந்த இரண்டு விசயங்களையும் சவுதி அரசு பின்பற்றுவதாகத்தான் சொல்கிறது. அப்படி இருக்கும் போது அதை அரைகுறை என்று எப்படி சொல்கிறீர்கள்?
கியூபா சீனா அது கம்னிச நாடா இல்லையா என்று முடிவு செய்வது யார்?
அந்த இரண்டு நாடுகளுமே தங்களை முழுமையான கம்யூனிச நாடுகள் என்று அழைத்துக் கொள்ளாத போது அதில் முடிவு செய்வதற்கு என்ன இருக்கிறது?
///சரி, இந்த இரண்டு விசயங்களையும் சவுதி அரசு பின்பற்றுவதாகத்தான் சொல்கிறது. அப்படி இருக்கும் போது அதை அரைகுறை என்று எப்படி சொல்கிறீர்கள்?/// அது சொல்கிறது என்பதற்காக எற்றுக்கொள்ள முடியாது உதரணத்திற்கு பொதுவுடைமை பேசித்திரிகிற ஒரு இடதுசாரி அமைப்பின் தோழர்களை சந்தித்தேன் ஆனால் அவர்கள் சொத்துக்களை கொண்ட தனியுடைமையாளர்களாக அதனை நியாயப்படுத்த்க்கூடியவர்களாக கண்டேன்
1 )@சிங்கம்
// கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளபடி சவுதி, மதவெறியர் அல்லாதவருக்கும், மற்ற மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் (இஸ்லாம் மார்க்கத்தை தழுவாதவர்கள்) ஒரு நரகம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்தக் கருத்தை மறுப்பவர்கள் கண்டிப்பாக மத வெறியர்களாகவே இருக்க முடியும்//
ஐந்துவருடம் நரகத்தில் ஏன் இருந்தீர்கள் உங்கள் குடும்பம் சொர்கத்தில் இருக்கவேண்டும் என்பதாலா.
வலப்பூவில் எத்தனையோ சவுதி பதிவர்கள் இருக்கிறார்கள் இஸ்லாம் அல்லாதமாற்றுமதத்தினர் அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் உண்மைத்தெரியும்.
அதே நேரத்தில் பனிப்பெண்களுக்கு எல்லா நாட்டிலும் தொந்தரவு ஒரே போல்தான் என்பதில் மாற்றுக்கருத்துகிடையாது.
இரண்டாவது பாயின்ட் குறித்த உங்கள் கருத்து என்ன? சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டமுடியுமா?
வாகனம் ஓட்டக்கூடாது
தயவு செய்து யாரும் தவறாக நினைக்கவேண்டாம் நடந்த உண்மையிது.
விபச்சாரம் செய்ததர்க்காக ஒரு பெண்னை கோர்ட்டில் அபராதம் விதித்தார்கள் இந்தியாவில்.
அப்போது அப்பெண் சொன்னாள் தன் பெண்குறியைக்குறித்து இதுவரை இந்த சாமான் என்னுது என்று நினைத்தேன் இன்று தான் தெரிகிறது இது அரசாங்கசாமான் என்று.
அவள் வார்த்தை சரியா?
சௌதி அரசாங்கத்தில் சட்டம் பெண்கள் கார் ஓட்டக்கூடது அதில் நாம் ஏன் தலையிடவேண்டும்.
நமது நாட்டில் மது அறுந்துவது அரசாங்கமே அனுமதித்த செயல் கேடுகெட்ட செயல் இது சம்ந்தமாக சௌதி அரசு தலையிட்டால் நாம் என்ன சொல்வோம் உன் வேழையபாத்துக்கிட்டு போடா மயிராண்டி என்போம்.
இந்தவார்த்தையை இப்ப அவன் சொன்னால் நம்ம மூஞ்சியை கொண்டுபோய் இடுப்புக்கு கிழேதான் வச்சிக்கனும்.
அரசாங்கமே மது ஊத்திக்கொடுப்பது ஒரு கேடுகெட்ட செயல். அதுபோல, ‘ஒரு அரசாங்கமே பெண்கள் மட்டும் வாகனம் ஓட்டக்கூடாதுன்னு சொல்றது முட்டாள்தனமானது’- அப்படிங்கறத ஒத்துக்கொள்ள முடியாமல் உங்களை தடுக்கிறது எதுன்னு உங்க ஆராய்ச்சிக்கே விட்டுடுறேன்.
சட்டப்படி ஒட்ட முடியாது அதுக்கும் இசுலாத்திற்கும் இன்ன சம்பந்தம்ங்கிற
ஹைதர் அலி,
சவுதியில் பெண்களுக்கு உள்ள உரிமை குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். நான் இன்பர்மேசன் தானே கேட்டேன்? ஏன் இப்படி பாய்கிறீர்கள் ‘பாய்’? சவுதிக்கு வாக்காலத்து வாங்கிய ராஜவம்சத்திடம் நான் கேட்டது இசுலாம் குறித்தல்ல, சவுதி சட்டம் குறித்து.
இசுலாம் வசனத்தோடு சிலர் கேள்வி கேட்டிருக்கிறார்கள். பதிலிருந்தால் அங்கு பாயுங்கள்.
அப்புறம்… ஏக வசனத்தில் நீங்கள் பேசும் அநாகரீகத்துக்கும் உங்கள் ஏக கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்றும் கூட தெரியும்.
நன்பர் போதெம்கின், தவறாக ஏக வசனத்தில் பேசியிருந்தால் மன்னிக்கவும் உங்கள் மனதை புன்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்
பரவாயில்லை, ஹைதர் அலி. புண்படுவது பிரச்சனை இல்லை. மதவெறியோடு பேசுகிறவனை நீங்கள் கல்லால் கூட அடிக்கலாம். ஆனால் நான் அவனில்லை. 🙂
ஆசிரியரே நானும் சவூதி அரேபியாவில் ஜெட்டாவில் தான் பனி புரிந்து வருகிறேன்.நீங்க குறிப்பிடுவது போல இங்கு ஒன்றும் இஸ்லாமிய ஆட்சி நடை பெறவில்லை.மாறாக மன்னராட்சி மட்டுமே நடை பெறுகின்றது.இது முஸ்லிம் நாடு அதை நான் ஒத்துக்கொள்கின்றேன்.அதற்காக இந்த அரசாங்கத்தை இஸ்லாமிய அரசாங்கம் என்று தவறான கற்பனையை எழுதி இஸ்லாத்திற்கு மாற்றமான வெறுப்பான செய்திகளை எழுதாதீர்கள்.உங்களுக்கு உண்மையான ஆட்சி என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அபூபக்கர்,உமர்,உஸ்மான் போன்ற கலிபாக்களின் ஆட்சியை பற்றி தெரிந்து கொண்டு பின்னர் இஸ்லாமிய ஆட்சியை பற்றி எழுதுங்கள்.எனேற்றால் இப்பூது சவுதியுள் இப்பொழுது நடக்கும் ஆட்சி ஒன்றும் கலிபாக்களின் ஆட்சியை போன்ற இஸ்லாமிய ஆட்சி இல்லை.கலிபாக்களின் ஆட்சி காலத்தில் இறைவனுக்கு பயந்து மக்கள் உரிமை பெட்சுரிமை உட்பட அணிட்டும் கிடைத்தது.இந்து மன்னராட்சி காலத்தில் இவை அனைத்தும் மறுக்கப் படுகிறது
“இங்கு ஒன்றும் இஸ்லாமிய ஆட்சி நடை பெறவில்லை.மாறாக மன்னராட்சி மட்டுமே நடை பெறுகின்றது.” “சவுதியுள் இப்பொழுது நடக்கும் ஆட்சி ஒன்றும் கலிபாக்களின் ஆட்சியை போன்ற இஸ்லாமிய ஆட்சி இல்லை.”
அப்போ இஸ்லாம் தோற்றுவிட்டதா?
நல்ல கேள்வி. இங்கே எழுதும் மதவெறியர்களிடம் ஒரு கேள்வி. ஒரு இசுலாமிய நாட்டை காட்டுங்கள். பிறகு அந்த நாட்டின் செயல்பாடுகளை பற்றி பேசலாம். அப்படி ஒரு நாடு கூட இசுலாமிய மதத்தை பின்பற்றவில்லை என்றால் என்ன வெண்ணை கொள்கை கோட்பாடு இது. பெருசா பேசவந்துட்டீங்க இசுலாம் எளிமையானது, அமைதியான மார்க்கம் ப்ளாப்ளாப்ளா………..
(எடிட் செய்யப்பட்ட பின்னூட்டம்)
மாலதி நீங்கள் இசுலாத்தை விமரிசப்பதை சற்று நாகரீகமாக செய்யவும், நீங்கள் வரம்பு மீறி எழுதுவதை பார்த்தால் நீங்கள் இந்துமதவெறி அமைப்புகளில் உள்ளவரா என்று சந்தேகம் பலருக்கும் வரும். கருத்து மாறுபாட்டை விவாதங்களின் மூலம்தான் வெல்ல முடியுமே அன்றி வசைபாடுவதால் அல்ல.
//சவுதிக்கு வாக்காலத்து வாங்கிய ராஜவம்சத்திடம் நான் கேட்டது //
அண்னா என்ன பட்டுன்னு சொல்லிபுடிங்க நா எப்பன்னா வக்காலத்து வாங்கின நீங்க கேட்ட இரண்டாவது பாயிண்டுக்கு முதல் வரியிலயே சொல்லிட்டேன்னா அப்பரம் அந்த இரண்டாவது பாயிண்டுக்கு உள்ள பதில அவசரம் இல்லாமல் மறுபடியும் படிச்சிபாறுங்னா நா வக்காலத்தி வாங்கினேனா வாயிதா வாங்கினேனான்னு புரியும்
‘//ஒரு அரசாங்கமே பெண்கள் மட்டும் வாகனம் ஓட்டக்கூடாதுன்னு சொல்றது முட்டாள்தனமானது’- அப்படிங்கறத ஒத்துக்கொள்ள முடியாமல் உங்களை தடுக்கிறது எது//
எதுவும் இல்லைங்னா நா ஒத்துகிட்டது மன்னர் அப்துல்லாவுக்கு தெரிஞ்சா ஒடனே சட்டம் போட்டு பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிச்சிருவாருங்னா
அதேபோல நீங்க சொன்னது கலைஞர் காதுல விழுந்துதூன்னு வைங்க பூரனமதுவிலக்கு சட்டம் தமிழகத்துக்கு மட்டும் அல்ல பாண்டிக்கும் சேர்த்து அறிவிச்சிடுவாருங்னா
அப்ரம் ஒரேஒரு விசயங்னா நா எந்தநாட்டுக்கு வக்காலத்தில்லிங்னா உங்கள் புரிதலில் தவறுங்னா நன்றிங்னா.
கட்டுரையாளர் இஸ்லாம் மதத்தை அவதூறு செய்யவில்லை. பின்னூட்டமிட்டிருக்கும் இஸ்லாமிய(வெறிய)ர்கள் தான் தங்களது மதத்தை கேவலப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
சோமாலியாவிலும் இலங்கையிலும் அடிமை முறை வரப்போகுதாம். அதற்காக அல்லா 1300 வருடத்துக்கு முன்பே அந்த அடிமைகளின் பாலியல் தேவைகளை தீர்த்துவைக்கும் சட்டத்தை மனிதகுலத்துக்கு சொல்லியிருக்காராம். ஏங்கடா உங்க தலையிலதான் மசாலா இல்லை. எங்களுக்குமா இல்லை?
இன்னொரு ஜன்மம் சொல்கிறது, இலங்கையில் பலதார மணத்தை தமிழர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று. முதல்ல உன் பொண்ணையோ, சகோதரியையோ எவனாவது ஒரு அரபிக்கு அடிமையாகவோ அல்லது நாலாந்தாரமாகவோ அனுப்பி வை. பிறகு ஈழத்தமிழருக்கு அறிவுரை சொல் முண்டமே.
காறித்துப்ப வேண்டும் போல் இருக்கிறது. இஸ்லாம் பற்றி எனக்கு இருந்த மதிப்பெல்லாம் இந்த மூளைச்சலவை செய்யப்பட்ட ஜன்மங்களை படித்தபிறகு போய்விட்டது.
மாலதீ,
தெளிவாக புரிந்துகொள்ளாமல், பதில???கு ஏதோ எழுதியிருக்கிறீர்கள்.
பலதாரமணம் புரிவதால் அந்த அபலைப்பெண்களுக்கு பாதுகாப்பும் திருமண உறவு என்கிற அந்தஸ்தும் வாய்க்கும்.
இது முட்டாள்தனமாக தெரிந்தால், இலங்கைyil சிங்கள வெறியர்களால் சீரழிக்கப்படும் என் சகோதரிகளுக்கு வேறு நல்ல தீர்வை நீங்கள் சொல்லுங்களேன்.
அப்புறம், அடிமை முறை, அம்முறையை அகற்ற, குரான் கூறும் வழியில்தான் அந்த நபித்தோழர்கள் வெற்றி பெற்ற வரலாறு இருக்கிறது. ?
அதைப் புரிந்துகொள்ள கண்களை மட்டும் திறந்திருந்தால் போதாது. மனதையும் திறந்துவைக்க வேண்டும். முயற்சி செய்து பாருங்கள்..
‘அப்லைப்’ பெண்கள் மீது நீங்கள் உண்மையான அக்ரிசனை கொண்டிருந்தால் அவர்களது “திருமண உறவு எனும் அந்தஸ்து” தொடர்பாக அக்கறைப்பட வேண்டியதில்லை. அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
அவர்களுக்குத் தேவையானது சொந்தக்காலில் நின்று தம்மையும் தம் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வதற்கான தொழில் வாய்ப்பும், தேவைப்பட்டால் தொழிற் கல்வியுமே.
பெண்கள் தொழில் பார்ப்பதும் தமக்கான வருமானத்தை ஈட்டிக்கொள்வதுமே அவர்களை நிமிர்ந்து வாழ வைக்குமே ஒழிய திருமணம் என்ற “அந்தஸ்து” அல்ல.
சொந்தக்காலில் நிற்க முடிகின்ற பொழுது பெண்கள் தமக்கான ஆண் துணையையோ பெண் துணையையோ தாமாகவே தேடிக்கொள்வர்.
மற்றது நீங்காள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் ஈழத் தமிழ்ப்பெண்கள் தமது ஆண் துணைவருக்கு வேறு மனைவியரோ, பெண் தொடர்புகளோ இருப்பதை எப்போதும் ஏற்றுக்கொள்வதுமில்லை, மன்னிப்பதுமில்லை. குர் ஆன் சொல்லிவிட்டது என்பதற்காக பலதார மணத்தை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். அதற்காக ஈழத் தமிழ்ப்பெண்களின் அடிப்படை உளவியலைக்கூடப் புரிந்துகொள்ளாமல் இப்படிக் கருத்துச்சொல்வது அவர்களைக் கேவலப்படுத்துவதாகவே அமைகின்றது.
மு.மயூரன் அவர்களுக்கு சரியாக சொன்னீர்கள் இங்கு கருத்து சொன்னவர் முசுலீம என்பது கூட எனக்கு சந்தேகமாகவுள்ளது அபலை பெண்கள் விஷயமாக முஹம்மது நபியின் அறிவுரைகளை பாருங்கள், 1.அறிவிப்பளார்:அபூஹீரைரா(ரலி) விதவைகளுக்காகவும் வறியவர்களுக்காகவும் பாடுபடுபவர் இறைவழியில் அவர் இரவு மூழுக்க இறைவானின் சந்ததியில் நின்று களைப்படையாமல் வணங்கிக் கொண்டிருப்பவரைப் போன்றவர்; பகலில் உண்ணாமல் தொடர்ந்து நோன்பு நோற்ற வண்ணமிருக்கும் நோன்பாளி போன்றவர்”(நூல் புகாரி,முஸ்லிம்) அதாவது நோன்பு நோற்பதை விட தொழுவதைவிட அநாதைகளுக்காக உழைப்பது சிறப்பானது என்று முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள் 2.அறிவிப்பாளர்:அபூஹீரைரா (ரலீ) அண்ணல் நபி (ஸல்) நவின்றர்கள்: எந்த வீட்டில் ஒர் அநாதை இருந்து அவனுடன் நல்லவிதமாக நடந்துகொள்ளப்படுகின்றதோ அந்த வீடே முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகச்சிறந்த வீடாகும் எந்த வீட்டில் ஒர் அநாதை இருந்து அவனுடன் மோசமாக நடந்து கொள்ளப்படுகின்றதோ அந்த வீடுதான் மூஸ்லிம்களின் வீடுகளிலே மிகக்கெட்ட வீடாகும்” (நூல் இப்னுமாஜா) 2.அறிவிப்பாளர்: குவைலித் பின் உமர் (ரலி) அண்ணல் நபியவர்கள் நவின்றர்கள்: என் இறைவா! நான் இரு பலவீனர்களின் உரிமையை கண்ணியத்திற்குரியதாய்க் கருதுகிறேன்:3.அநாதையின் உரிமை 2. மனைவியின் உரிமை” (நூல் நஸாஈ)
tongue slip,
அப்போ அடிமை அநாதை இல்லையா!
ஐயா மயூர்ன்,
இலங்கை அபலைப்பெண்கள் என்றில்லை, உலகின் எந்தப்பெண்ணும் பொஸஸ்ஸிவ் நேச்சர் மிகுதியும் உடையவர்கள் தான்.
அதல்ல இங்கு பிரச்னை.
சீரழித்து சின்னாபின்னப்படுத்தும் பேரினவாதக் கொடுங்கோன்மையிலிருந்து அபலைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொன்னால், தீர்வாக, தொழில் ஏற்படுத்திக்கொடுக்கும் மாயாவாதத் தீர்வைச் சொல்கிறீர்கள், பலே…பலே…
உயிருக்கும் மயிருக்கும் கூட உத்தரவாதமில்லாத சூழலில் தொழில் ஏற்படுத்துவது சாத்தியமா?
அல்லது சக தமிழனிடம் வாழ்க்கைப்பெறுவது உசிதமா?
இஸ்லாம், இஸ்லாமியத் தீர்வு என்றாலே மறுப்பது முறுக்குவது என்று நினைக்காமல் நிதானமாக யோசியுங்கள் ஐயா
ரேவதி எழுதியதற்கு இன்னும் ஒரு ஜன்மம் கூட உருப்படியான பதிலை சொல்லவில்லை. மொஹம்மட் நபி தன்னுடைய வீட்டு வேலைக்காரப்பெண்ணுடன் பாலியல் வல்லுறவு கொண்டது உண்மையா இல்லையா?
முதலில் இதற்கு பதில் சொல்லிவிட்டு பிறகு தொடர்ருங்கள். (எடிட் செய்யப்பட்ட பின்னூட்டம்)
மாலதி மூதேவி ச்சீ டங்கு சிலிப்பயிடுத்து ரேவதி, ///ரேவதி எழுதியதற்கு இன்னும் ஒரு ஜன்மம் கூட உருப்படியான பதிலை சொல்லவில்லை. மொஹம்மட் நபி தன்னுடைய வீட்டு வேலைக்காரப்பெண்ணுடன் பாலியல் வல்லுறவு கொண்டது உண்மையா இல்லையா?
முதலில் இதற்கு பதில் சொல்லிவிட்டு பிறகு தொடர்ருங்கள்./// ரேவதி எழுதிய அன்னைக்கே நான் பதில் புன்னூட்டம் எழுதியிருத்தேன் பாக்கலைய சீதேவி நீ புன்னூட்டத்தத்துல காட்டுன வேகத்த இங்கிலிஷ்ஷ மொழி பெயர்த்து கொடுத்துருந்தீனா அன்னைக்கே விவாதத்த ஸ்டாட் பன்னியிருக்கலாம் கொஞ்சம் முயற்சி பன்னு
hello! tongue slip,
முஹம்மது நபி அடிமையுடன் உறவு (மணமாகாமல்) வைத்திருந்ததும் உண்மை. அவ்விருவருக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்ததும் உண்மை. அக்குழந்தை இறந்துவிட்டதும் உண்மை. இப்போ என்னா சொல்ல வர்றீங்க. வேலைக்காரின்னா அடிமை இல்லைங்கிறீங்களா! அல்லது அடிமைன்னா வேலைக்காரி இல்லைங்கிறீங்களா!
ஏதோ அந்த காலத்துல இருந்த ஆண்டைகளின் வழக்கப்படிதான் அவரும் இருந்தாருன்னு ஒத்துக்கிடுறதை விட்டுட்டு ரொம்பதான் வீம்புபண்றீங்கப்பா.
அய்யா காட்டரபி,(கீ பல ஹால்) ///முஹம்மது நபி அடிமையுடன் உறவு (மணமாகாமல்) வைத்திருந்ததும் உண்மை. அவ்விருவருக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்ததும் உண்மை. அக்குழந்தை இறந்துவிட்டதும் உண்மை. இப்போ என்னா சொல்ல வர்றீங்க. வேலைக்காரின்னா அடிமை இல்லைங்கிறீங்களா! அல்லது அடிமைன்னா வேலைக்காரி இல்லைங்கிறீங்களா!/// அண்ணே நீங்க ஒண்ன வேளங்கி கீரனும் அடிமையோடு குடும்பம் நடத்தினால் அவள் மனைவியாகி விடுவாள் அவள் குழந்தை பெற்றால் அவளும் குழந்தையும் அடிமைத்தளையிருந்து விடுபடுவார்கள் என்பது அன்றைய அடிமை சமூகம் இருந்தபோது வழக்கில் இருந்த சட்டம் அப்புறம் அடுத்த மேட்டருக்கு வருவோம் ////இப்போ என்னா சொல்ல வர்றீங்க. வேலைக்காரின்னா அடிமை இல்லைங்கிறீங்களா! அல்லது அடிமைன்னா வேலைக்காரி இல்லைங்கிறீங்களா!/////>>> அறிவிப்பாளர்: அபூபக்கர் சித்தீக்(ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: தன் அடிமைகள் மீதும் பணியாட்கள் மீதும் தன் அதிகாரத்தைத் தவறாகப் பிரயோகித்தவன் சுவனத்தில் நுழையமாட்டான் எனவே நீங்கள் உங்கள் குழந்தைகள் போல் அவர்களையும் உபசரியுங்கள் நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கும் உணவூட்டுங்கள்” (நூல் இப்னு மாஜா) இந்த ஹதீஸில் அடிமை வேறு வேலைக்காரர்கள் வேறு என்று பிரித்து கூறியிருப்பதை கவனிக்கவும்
”தன் அடிமைகள் மீதும் பணியாட்கள் மீதும் தன் அதிகாரத்தைத் தவறாகப் பிரயோகித்தவன் சுவனத்தில் நுழையமாட்டான்”
ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்குது. அப்போ அடிமையை வச்சுகிட்டு என்னா செஞ்சாங்கோ.
அய்யா காட்டரபி, முதலில் காட்டரபி நாகரிகம் கற்றுக்கொள்ளுங்கள் காட்டரபி ஒருவரிடம் பேச ஆரம்பிக்கும் முன் வட்டார அரபியில், கீ பல ஹால் (சவுக்கியமாக இருக்கீறிர்களா) என்று விசாரிப்பார் நானும் அப்படித்தான் விசாரித்தேன் பதிலில்லை எனோ?
அய்யா tongue slip,
நாம என்ன இங்க குசலம் விசாரிச்சிகிட்டா இருக்கோம். வேணுமின்னா உங்க விலாசத்தை கொடுங்க கடுதாசி போஉறேன். இப்போ விசயத்திற்கு வருவோம். அடிமையாக பிடிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட ஒரு அடிமை அநாதையா?, இல்லையா?. வேலைசெய்ய பணியாட்களை வைத்திருந்தார்கள் என்றால் அடிமைகளை எதற்காக வைத்திருந்தார்கள்.
பணியாட்கள் என்பது கூலிக்கு வேலைக்கு வைத்து கொள்ளப்பட்டவர்கள். அடிமைகள் என்பவர்கள் பிணை கைதிகள். பிணை கொடுத்ததால் அடிமைகள் விடுதலை அடைவார்கள். இதுதான் வித்தியாசம். இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.
நண்பர் நசீர்,
நான் கேட்டது, அடிமைகளை எதற்காக வைத்திருந்தார்கள்? பணியாட்கள் வேலை செய்தார்கள் என்றால் அடிமைகள் என்ன செய்தார்கள்?
எதோ ஒரு அறிவிலி அரைகுறையாய் எழுதியதையோ அல்லது பேசியதையோ கேட்டுக்கொண்டு முழுசா தெரிஞ்சுக்காம ஒரு முட்டாள் ரேவதி எழுதியதை இந்த அளவுக்கு முக்கியத்துவம் குடுக்கிறதப் பார்த்தா வினவு,அதன் பதிவர்கள் எல்லாமே மத வெறி பிடித்துப்போனவர்களாகத்தான் தெரிகிறது நபிகள் ஒருபோதும் பெண்களிடம் தவறாக நடந்ததில்லை அவர்கள் உறவுகொண்டதேல்லாமே முறைப்படி திருமணம் செய்த மனைவிகளிடம் மட்டுமே (ரேவதி என்பவள் கூறும் அடிமைப்பெண் உட்பட) இதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள் .
மேலும்
60000 மனைவிகள், ஆணுக்கு ஆண் புனருவதை புனிதமாக நினைப்பது இன்னும் பெரியார் அவர்களின் புத்தகங்களில் கூறுவது போன்ற கேவலமான நம்பிக்கைகளை பின்பற்றும் ரேவதி மாலதி தீ போன்ற இழி பிறவிகள் முதலில் தங்களின் கோட்பாடுகளை விமர்சனம் செய்யட்டும்
வினவு சொல்லியிருப்பது போல பின்னூட்டமிடுபவர்கள் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது. இஸ்லாமிய நண்பர்களின் சில கருத்துக்கள் மிகவும் வித்தியாசமானவைதான். ஆனால், அவர்கள் சொல்பவற்றை நமது தர்க்கத்தை மீறிய இறைவனின் வாக்காக பார்க்கும்போது அது தவறா சரியா என்பதை யோசித்துப்பார்க்கின் விளங்கும். உதாரணமாக, ஒரு பெண் விபச்சாரியாவது சரியா அல்லது அங்கே இஸ்லாம் கொடுக்கும் வழிமுறை சரியா என்பதை சீர்தூக்கி பார்த்தால் தெளிவுபிறக்கும். இந்து மதத்தில் தேவதாசி முறை பற்றி இங்கே கோபப்படும் பல சகோதரிகளுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அது நல்லதா அல்லது பலதார மணம் (பலவித நிபந்தனைகளுடன்) நல்லதா என்று யோசித்துப்பார்க்கும்போது புரியாத பல விஷயங்கள் புரியும். அடிமைகளின் உரிமைகள் பற்றி முதலில் பேசிய மதம் எது என்று நடுநிலையுடன் யோசிப்பவர்களுக்கும் பல புரியும். காழ்ப்புணர்ச்சியை தவிர்த்துவிட்டு பார்த்தால் தெளிவாக பல அத்தாட்சிகள் இறைவேதத்தில் புலப்படும். நான் இந்துதான். ஆனால் நடுநிலையுடன் சிந்தித்துப்பார்த்து எழுதுகிறேன். நீங்களும் சிந்தியுங்கள், தெளிவுபெறுவீர்கள்.
மனிதன் சொன்னதை ஆமோதிக்கிறேன். நானும் இந்துதான். ஆனால் குரான் கடவுளின் வசனம் என்று நம்புகிறேன். அது இறைவனின் வாக்கு. ஆக்வே நாம் அதனை பின்பற்ற வேண்டும். அல்லாஹ் அடிமைமுறையை ஆதரிப்பது மட்டுமல்ல. அதனை பின்பற்றவும் அறிவுறுத்தியிருக்கிறான். இந்தியாவில் அடிமைமுறை இல்லை என்பதால் உங்களுக்கு அதன் சாதகங்கள் புரியவில்லை. மீண்டும் அடிமைமுறை வந்தால் அது அனைவ்ருகும் பலனளிக்கும் என்பதை காண்பீர்கள். அல்லாஹ் கூறியுள்ளவை அந்த காலத்துக்கு மட்டும் பொருந்தும் என்று எடுத்துகொள்வது தவறாகும். ஒஒரு வசனம் இறங்கினால், அது அல்குரானில் இருந்தால், அது அனைத்து காலத்துக்கும் பொருந்தும் என்றுதான் பொருள். அப்படி அடிமைமுறை தவறு என்றால் அது குரானில் இருக்காது என்பது மட்டுமல்ல, அடிமை முறை தவறு அதனை பின்பற்றாதீர்கள் என்று தெளிவாகவே வசனம் இறங்கியிருக்கும். ஆகவே மக்களுக்கு எது நல்லது என்பதை அல்லாஹ் மட்டுமே அரிவான் என்று அரிந்து அல்குரானை பின்பற்றுங்கள்.
நண்பரே இஸ்லாத்தின் முழு பரிமானமும் புரியாவிட்டால் பக்கத்தில் உள்ள மார்க்க அறிஞர்கள் யாரிடமாவது விளக்கம் கேட்டிருக்கலாம். அதைவிட்டு, மனம் போன போக்கில் நூறு கோடிக்கும் அதிகமானோர் பின்பற்றும் நேர்வழியை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வந்துபோகும் இடத்தில் விமர்சித்துள்ளீர்கள்.
வினவும் இந்துத்துவா சக்திகளோடு கரம் கோர்த்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
இஸ்லாம் தனியே பெண்கள் செல்வதை தடுப்பது உண்மைதான். ஆனால் அது எதற்காக யாருடைய பாதுகாப்புக்காக என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். காரோட்டிக்கொண்டு செல்லும் பெண்கள் அடிக்கும் கும்ம்மாளங்களை அதனால் ஏற்படும் சமூக சீரழிவுகளை சிந்தித்து பாருங்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது எந்த மார்க்கம் தெரியுமா? நபிகள் நாயகம் பற்றி அவதூறாக எழுதுவதை நிறுத்தி, அவர் பணிப்பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு முஃமீன்களின் தாயாரென அந்தஸ்தும், அண்ணாரது புதல்வனை கருவில் தாங்கும் பேற்றையும் தந்ததையும் அறிந்துகொண்டு பிறகு எழுதுங்கள்.
இத்துடன் இந்த விஷயங்களை நிறுத்திவிட்டு எல்லா அவதூறு பின்னூட்டங்களையும் நீக்கிவிடுங்கள். இனிமேல் கட்டுரை எழுதும் முன்பு தெரிந்துகொண்டு எழுதுங்கள். இன்ஷா அல்லாஹ் எல்லாம் நன்மைக்கே.
ரியாஸ் எழுதியிருப்பது மடத்தனத்தின் உச்சம். இவர்களும் இந்துத்துவா தீவிரவாதிகளும் ஒரே மாதிரிதான் பேசுகின்றார்கள். சவுதியை இவர்கள் தங்களது நாடுபோலவே கருதி அதற்காக வாதாடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த உளவியலை புரிந்துகொள்ள முடியவில்லை.
இந்த விக்கி பக்கம் பல தகவல்களை சொல்கிறது.
http://en.wikipedia.org/wiki/Women's_rights_in_Saudi_Arabia
தங்களை அடிமைப்படுத்தும் பார்ப்பானைப் பற்றி அறியாத ஏராளமான பாமர மக்களைப்போலவே, தங்களை அடிமைப்படுத்தும் அரேபியர்கள் பற்றியும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் பெரும்பான்மையன இசுலாமியர்கள்… என்பது பின்னுட்டங்களைபப் படிக்கும்போது தெரிகிறது.
மிகவும் சரியாக சொல்லியிருக்கின்றீர்கள். வேதம், இந்து மதம் போன்றவற்றிற்கு பார்ப்பனர்கள் எப்படி பதில் சொல்வார்களோ அப்படியே இஸ்லாமியர்கள் சொல்வதை கவனியுங்கள். வேதங்கள்,மனுநீதி சாத்திரம் என்று பார்ப்பனர்கள் மற்றவர்களை ஏமாற்றினார்கள் இந்த கபோதிகள் குர்ஆன், ஷரீய்யா என்று தாங்களே ஏமாந்து போகிறார்கள், மற்றவர்களும் ஏமாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மதவாதிகள் அனைவரும் பெரிய ஏமாளிகள், மற்றவர்களையும் ஏமாற்றும் பிராடுகள் என்பதை நிரூபிப்பது போல் இருக்கிறது இவர்களின் பதில்கள்.
நன்பர் vivegan
////தங்களை அடிமைப்படுத்தும் பார்ப்பானைப் பற்றி அறியாத ஏராளமான பாமர மக்களைப்போலவே, தங்களை அடிமைப்படுத்தும் அரேபியர்கள் பற்றியும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் பெரும்பான்மையன இசுலாமியர்கள்… என்பது பின்னுட்டங்களைபப் படிக்கும்போது தெரிகிறது//// அரபிய நாய்கள் எங்கள அடிமப்படுத்த இவிய்ங்க யாரு செருப்பல அடி, நான் சவூதியில்தான் வேலை பார்க்கிறேன் காலையில் 8மணிக்கி வேலை ஆரம்பித்து மாலை 5ந்து மணிக்கி வேலை முடிந்து விடும் மதியம் 1மணிநேரம் சப்பாட்டுக்காக பிரேக் இப்படி சப்பாட்டுக்காக கிளம்பும் போது எங்க ஆபிஸில் உள்ள சவூதி குறுக்கிட்டு மலீஸ்(மன்னிக்கவும்) சின்ன வேலை இருக்கிறது முடித்துவிட்டு போ என்று கூறினார் எனக்கு பசி அதனால் சப்பிட்டுவிட்டு வந்து செய்கிறேன் என்று சொன்னேன் ஒரு கட்டத்தில் இருபக்கமும் வார்த்தைகள் தடித்த போது, அனா அமால் வல்ல அப்த் என்று கேட்டேன்( அரபியில் அமல் என்றால் வேலைக்காரன் அப்த் என்றால் அடிமை) மறு நிமிடம் அரபி மவுனமாக ஆகிவிட்டான் நான் சென்று விட்டேன் அதனால அடிம பார்ப்பன் அப்புடியிலாம் வேற யாருட்டையாவது கத விடுங்க ஈலு போட்டு கேப்பாங்க அத மாதிரி பிரம்மான் தலையில் பிறந்தாவன் அரபி அதனால் அரபி தலைசிறந்தவன் என்கிற சிந்தந்தம்மெல்லாம் இங்கே இசுலாத்துல கேடயாது
“டியுப் லைட் ராஜனும் டுபாக்கூரு கும்மியும்.”
சவுதியில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய இலங்கைப்பெண்ணின் உடம்பில் 23 ஆணிகளை ஏற்றி சித்திரவதை புரிந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எசமானர் தன்னைத் தூங்கவே விடுவதில்லை என்றும், உடம்பில் சூடாக்கப்பட்ட ஆணிகளை அறைந்து துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது குறித்த பெண் இலங்கையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலதிக செய்திகளை இத்தொடுப்பில் காண்க:
http://www.dailymirror.lk/index.php/news/6060-feb-to-press-saudi-.html
பணியாற்றிய வீட்டில் உள்ளவர்களினால் நீண்டநாட்களாக துன்புறுத்தப்படுவதால் தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு அழுத்தம் கொடுத்த பெண்ணை வீட்டின் உரிமையாளர் பல அளவிலான ஆணிகளை தனது உடலில் அடித்து தன்னை சித்திரவதை செய்து இலங்கைக்கு திருப்பிய அனுப்பியதாக ஆரியவதி குறிப்பிட்டுள்ளார்.
http://www.ndpfront.com/?p=9468
மனசு வலிக்குதுய்யா வலிக்குது என் இதயத்தில் ஆணியை ஏற்றியது போலிருக்கிறது
நல்லதொரு விழிப்புணர்வூட்டும் பதிவுன்னாலும்… இதிலே ஒரு பெருங்குறை என்னானா…
எங்க ஊருக்கு பக்கத்து ஊரிலே ஒரு முஸ்லிம் அம்மா ரொம்ப வருஷமா சவுதியில ஹவுஸ் மெய்டா குப்பை கொட்டுது. போதாக்குறைக்கு தன பக்கத்து வீட்டுக்காரம்மாவையும் கூட்டிக்கிட்டு போயிட்டுது. ரெண்டு வருஷத்துக்கு ஒருதபா வருங்க.. நிறைய சாமான் செட்டுங்க அள்ளிக்கிட்டு வருங்க. எல்லாருக்கும் கொடுப்பாங்க. புள்ளைங்களை எல்லாம் நல்லா படிக்க வச்சி பெரிய ஆளா ஆக்கிபுட்டாக.
‘ஏங்க அங்க போய் கஷ்டப்படுறீங்க… இங்கனேயே இருங்க, ராணியாட்டமா
வசசிக்கிறோம்’ என்று மருமகள்கள் மகன்கள் சொன்னப்போ அதுக்கு அந்தம்மா சொன்னது:”கஷ்டமா? எனக்கா?
அங்கெ எனக்கு சொர்க்கம் போல அல்லவா இருக்கு வாழ்க்கை? நான் இங்கே வந்து என்ன செய்ய? ”
ஆக இந்தம்மா சொல்றத வச்சு சவூதி முழுக்க சொர்க்கம்னியும் சொல்ல முடியாது, நீங்க சொல்றத வச்சு சவூதி முழுக்க நரகம்னும் சொல்ல முடியாது. இரண்டும் கலந்ததுன்னு வேணா சொல்லலாம். அது சவூதி மட்டுமல்ல உலகம் எல்லாம் எங்கும் பொருந்தும். எல்லாரும் மனுஷங்கதானே?. அதிலே நல்லவனும் இருப்பான், கெட்டவனும் இருப்பான்.
எதையுமே பொதுப்படுத்துதல் என்பது என்றுமே அறிவுடைமை இல்லை.
ஆத்திக விரோதம் புத்திய சில நேரம் இப்படி மழுங்கடித்து விடுகிறது. என்ன செய்ய?
100% ரைட் சார்.
இந்த கட்டுரையிலோ, வந்திருக்கும் பின்னூட்டங்களிலோ நான் ஆத்திக விரோதம் எதையும் பார்க்கவில்லை. ஆத்திகர்களிடையே தான் ஆத்திரத்தையும், அவசரத்தையும் பார்க்கிறேன்.
ஹைதர் அலிக்கு ரேவதி எழுதியது புரியவில்லை என்பதை நான் நம்புகிறேன். ஆனால், ரேவதி எழுதியிருப்பதையே பலரும் கேட்டும், அதற்கு பதிலை ஹதர் அலி, ராஜவம்சம், எவெ, ரியாஸ், மனிதன், நல்லவன் என்று பல பெயர்களில் எழுதியிருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் யாருமே கண்டுகொள்ளவில்லையே, பதில் சொல்லவில்லையே அது ஏன்?
சரி, நடந்ததை விட்டுவிடுவோம். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:
1. இஸ்லாமிய நாடுகள் எவை எவை?
2. சவுதி அரேபியா நாடு இஸ்லாமிய நாடா இல்லையா?
3. ஒரு நாடு இஸ்லாமிய நாடா இல்லையா என்பதை முடிவு செய்வது அந்த நாடா அல்லது பின்னூட்டங்களில் வசதிக்கேற்றபடி தக்கியா(பொய்/தகிடுதத்தம்) செய்யும் முகமதியர்களா?
4.இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை முறை என்று கூப்பாடு போடும் முஸ்லீம்கள் இந்த முழுமையான வாழ்க்கை முறை எந்த நாட்டில் இப்போது நிலவுகிறது என்ற விபரத்தை தரமுடியுமா?
5. அடிமைப்பெண்ணை அவளது மேலாளன் பாலியல் பலாத்காரம் செய்தால் அதற்கு சரியா சட்டத்தின் படி என்ன தண்டனை?
6. சரியா சட்டம் என்ற ஒரு சட்டம் எந்தெந்த நாடுகளில் சட்டமாக இருக்கிறது?
7. சரியா சட்டம் என்பது ஒரு சட்டமா அல்லது ஒவ்வொரு இஸ்லாமிய நாடும், குழுவும் தனக்குத்தானே குரான் – ஹதீஸ் படித்து தோன்றியபடி வகுத்துக்கொள்ளும் ஒரு குழப்பமான சட்டமா?
8. அந்த சரியா சட்டம் முழுக்க இந்த காலத்திற்கு பொருத்தமானதா?
9. இஸ்லாமியர்கள் கடவுளின் கடைசி தூதன் என்று நம்பும் முகம்மது நபிசல்லா, தனது வீட்டில் வேலை செய்த பெண்ணை பலாத்காரம் செய்தது உண்மையா? அவன் தனக்கு வசதியாக கடவுளின் சரியா என்று சொல்லி பல பெண்களை (21) அனுபவித்தானா? குரான் நான்கு எட்டு பதினாறு என்று பல பெண்களை மணக்கும் உரிமையையும், ஒரு பெண்ணை மணக்காமலேயே வைப்பாட்டியாக வைத்துக்கொள்ளும் வசதியையும் முஸ்லீம்களுக்கு கொடுத்திருப்பது உண்மையா?
10. முகம்மது நபிசல்லாவே இப்படி வைப்பாட்டிகளை வைத்திருந்தது உண்மையா?
11. ஒரு பெண் முழுக்க மூடவேண்டும் என்று இஸ்லாமிய சரியா சட்டம் பிரகாரம் சொல்லும் சவுதி அரசு, ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டு போலீஸாரிடம் சென்றால், நீ ஏன் தனியாக சென்றாய் சரியாவை ஏன் மீறினாய் என்று கேட்டு அவளுக்கு சவுக்கடி கொடுக்கும் சவுதி இஸ்லாமிய நீதிமன்றம், வேலைக்காரப்பெண்களை பலாத்காரம் செய்யும் ஆணியடித்து சித்தரவதை செய்யும் எத்தனை அரபிகளுக்கு சவுக்கடி அல்லது கல்லால் அடித்து கொல்லும் சரியா தண்டனையை தந்திருக்கிறது?
இந்த கேள்விகளுக்கு பதில் கோபப்படாமல் சொல்லுங்கள்.
//இந்த கேள்விகளுக்கு பதில் கோபப்படாமல் சொல்லுங்கள்.//
இவ்வளவு கேள்விகளை கேட்டுபுட்டு கோபப்படாதுன்ன எப்பூடி ராசா?
நன்பர் ஒட்டக்கூத்தன்,
////இவ்வளவு கேள்விகளை கேட்டுபுட்டு கோபப்படாதுன்ன எப்பூடி ராசா?//// எவ்வளவு கேள்வி கேட்டாலும் இசுலாமிய சகோதரர்கள் கோபப்படாமல் பதில் சொல்லுவர்கள் என்ற நம்பிக்கையில் தான் ராசா!
//ஒரு பெண் முழுக்க மூடவேண்டும் என்று இஸ்லாமிய சரியா சட்டம் பிரகாரம் சொல்லும் சவுதி அரசு, ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டு போலீஸாரிடம் சென்றால், நீ ஏன் தனியாக சென்றாய் சரியாவை ஏன் மீறினாய் என்று கேட்டு அவளுக்கு சவுக்கடி கொடுக்கும் சவுதி இஸ்லாமிய நீதிமன்றம், வேலைக்காரப்பெண்களை பலாத்காரம் செய்யும் ஆணியடித்து சித்தரவதை செய்யும் எத்தனை அரபிகளுக்கு சவுக்கடி அல்லது கல்லால் அடித்து கொல்லும் சரியா தண்டனையை தந்திருக்கிறது?//
இது வரைக்கும் அவுங்க 10000000000000 அரபிகள கல்லால அடிச்சு கொன்னுருக்காங்க. இப்ப இந்த இலங்கை பணிப்பெண்ணை ஆணியடிச்சு சித்தரவத செய்த அரபிக்கு, கண்ணுக்கு கண் என்ற ஷரியா சட்டத்தின்படி 27 இடத்துல முச்சந்தில வச்சு ஆணியடிச்சு தண்டன தந்திருக்காங்க. பாலியல் பலாத்காரம் செய்த 520000 அரபிகளின் ஆண்கு….யை நீக்கியிருக்காங்க.
குரான் சொல்றபடி சவுதி ஆண்கள் எல்லாம் பெண்களையே பார்க்குறதில்லீங்க. டிவிப்பொட்டிக்கு கூட படுதா போட்டுத்தான் பாப்பாக. பெண்களுக்கு முழு சொதந்தரம், பாதுகாப்பு கொடுக்குற ஒரே நாடு சவுதியரேபியா தானுங்க.
என்ன முழிக்கிறீங்க…. உண்மங்க……. நம்புங்க……. அட, எனக்கு கிறுக்குபுடிக்கலய்யா…… ஓடாதீங்க, ஓடாதீங்க………………
நன்பர் நிலா,///ஒரு பெண் முழுக்க மூடவேண்டும் என்று இஸ்லாமிய சரியா சட்டம் பிரகாரம் சொல்லும் சவுதி அரசு,/////>>>> சவூதி அரசாங்கம் சொல்லுதா மெய்யலுமா ஆனால் இசுலாமிய சட்டம் முழுக்க முட சொல்லவில்லை ////ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டு போலீஸாரிடம் சென்றால், நீ ஏன் தனியாக சென்றாய் சரியாவை ஏன் மீறினாய் என்று கேட்டு அவளுக்கு சவுக்கடி கொடுக்கும் சவுதி இஸ்லாமிய நீதிமன்றம்,//////>>>>>>கற்பனையில் சஞ்சரிக்கிறதுல ஒங்கள மாதிரி வேறு யாரலும் முடியாது இப்புடி தனியாக சென்றால் சவுக்கடியின்னு இசுலாமிய ஷரியத் சொல்லுதா நல்ல காது குத்துறீங்க கொஞ்சம் அதாரம் கொடுங்கப்பு சவுதி இசுலாமிய நீதிமன்றம்(அது இசுலாமிய நீதிமன்றம் கேடயாது அது வேற விஷயம்) இப்புடி எத்தன பேருக்கு தன்டன கொடுத்துச்சு சொல்லமுடியுமா எதித்து கேள்வி கேட்க ஆளு வரலை அப்புடி தெரிஞ்ச நல்ல அள்ளி விட வேண்டியதுதானா சூப்பரு கதாப்பூ ////வேலைக்காரப்பெண்களை பலாத்காரம் செய்யும் ஆணியடித்து சித்தரவதை செய்யும் எத்தனை அரபிகளுக்கு சவுக்கடி அல்லது கல்லால் அடித்து கொல்லும் சரியா தண்டனையை தந்திருக்கிறது?
இது வரைக்கும் அவுங்க 10000000000000 அரபிகள கல்லால அடிச்சு கொன்னுருக்காங்க. இப்ப இந்த இலங்கை பணிப்பெண்ணை ஆணியடிச்சு சித்தரவத செய்த அரபிக்கு, கண்ணுக்கு கண் என்ற ஷரியா சட்டத்தின்படி 27 இடத்துல முச்சந்தில வச்சு ஆணியடிச்சு தண்டன தந்திருக்காங்க. பாலியல் பலாத்காரம் செய்த 520000 அரபிகளின் ஆண்கு….யை நீக்கியிருக்காங்க./////>>>>>>இஸ்லாமிய சட்டம் பின்பற்றப்பட்டால் கண்டிப்பாக விபாச்சாரத்திற்குரிய தண்டனையை அனுபவித்து இருப்பார்கள் ஆண்குறியை நீக்குறதேன்ன தலையே போயிரும் அரபிகளுக்கு ஒரு சட்டம் ஆசியானுக்கு ஒரு சட்டம் என்ற பாகுபாடு இசுலாமிய சட்டத்திடம் கேடயாது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பாருங்கள், நூல்: புஹாரி 6787, அத்தியாயம்: குற்றவியல் சட்டங்கள்
ஆயிஷா (ரலி) கூறுகிறார்:
மக்ஸுமிய்யா எனும் (குரைஷிக்) குலத்தைச் சேர்ந்த பெண் ஒருமுறை திருடிவிட்டார். இது (உயர்ந்த குலமெனத் தம்மைக் கருதி வந்த) குரைஷிக் குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ‘இது குறித்து நபிகள் நாயகத்திடம் யாரால் பரிந்து பேச முடியும்? நபி (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, நபிகள் நாயகத்திடம் இது குறித்துப் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா? எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று குறிப்பிட்டார்கள். இதுதான் இசுலாமிய ஷரியா. அப்புறம் குர்ஆன் இன்னா சொல்லுதுனா, (அத்தியாயம்:அன்னிசா வசனம் 135ல், நம்பிக்கை கொண்டோரே உங்களுக்கோ உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோரகவும் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள் (வாதியோ பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே அல்லாஹ்வே பொருப்பாளன் நீதி வழங்குவதில் மனோஇச்சையைப் பின்பற்றாதீர்கள்)
////குரான் சொல்றபடி சவுதி ஆண்கள் எல்லாம் பெண்களையே பார்க்குறதில்லீங்க டிவிப்பொட்டிக்கு கூட படுதா போட்டுத்தான் பாப்பாக////>>>>குர் ஆன் பெண்களை பார்கக கூடாதுன்னு எங்கே சொல்லியிருக்கு கொஞ்சம் சொல்லுங்கப்பு .//// பெண்களுக்கு முழு சொதந்தரம், பாதுகாப்பு கொடுக்குற ஒரே நாடு சவுதியரேபியா தானுங்க.
என்ன முழிக்கிறீங்க…. உண்மங்க……. நம்புங்க……. அட, எனக்கு கிறுக்குபுடிக்கலய்யா…… ஓடாதீங்க, ஓடாதீங்க…/////>>>> மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இங்கு பெண்களுக்கு பதுகாப்பு அதிகம் தான் இன்னும் இவர்கள் இசுலாமிய சட்டங்களை முழுமையாக செயல் படுத்தினால் முழுபாதுகப்பையும் சுகந்திரத்தையும் பெற்று தர முடியும்
//அரபிகளுக்கு ஒரு சட்டம் ஆசியானுக்கு ஒரு சட்டம் என்ற பாகுபாடு இசுலாமிய சட்டத்திடம் கேடயாது//
is that true?
In Saudi Arabia, when a person has been killed or caused to die by another, the prescribed blood money rates are as follows[8]:
100,000 riyals if the victim is a Muslim man
50,000 riyals if a Muslim woman
50,000 riyals if a Christian man
25,000 riyals if a Christian woman
6,666 riyals if a Hindu man
3,333 riyals if a Hindu woman.
The amount of compensation is based on the percentage of responsibility. Blood money is to be paid not only for murder, but also in case of unnatural death, interpreted to mean death in a fire, industrial or road accident, for instance, as long as the responsibility for it falls on the causer.[8]
prothar truthseeker,////n Saudi Arabia, when a person has been killed or caused to die by another, the prescribed blood money rates are as follows[8]:
100,000 riyals if the victim is a Muslim man
50,000 riyals if a Muslim woman
50,000 riyals if a Christian man
25,000 riyals if a Christian woman
6,666 riyals if a Hindu man
3,333 riyals if a Hindu woman.
The amount of compensation is based on the percentage of responsibility. Blood money is to be paid not only for murder, but also in case of unnatural death, interpreted to mean death in a fire, industrial or road accident, for instance, as long as the responsibility for it falls on the causer.[8]////>>> this not a islamic low this saudi gavarmend roling low(எவ்வளவு காலம்தான் ஆங்கிலம் தெரியாம முழிக்கிறது துனிஞ்சு இறங்க வேண்டியது தான்)
ஒருவழியாய் சகோதரர் ஹைதரலி உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
ஹைதரலி உட்பட அனைத்து சகோதரர்களுக்கும் ஒன்றை மீண்டும் அழுத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது இங்கே கருத்துகளை கூறியவர்களில் வெகுசிலரைத்தவிர அனைவருமே முற்படுவது யாதெனில் “சௌதி சட்டம் ” நடைமுறையிலுள்ள சௌதி அரேபியாவைதான் “நரகம்” என்கிறார்கள். இஸ்லாமியச் சட்டத்தையோ அல்லது, மார்க்கத்தையோ யாரும் குறைகூறவில்லை. கொடுமை என்னவென்றால் இங்கு பலபேர் தன மனசாட்சியை மறைத்து வைத்துவிட்டு சௌதி ராஜாவின் தம்பிபோல் பதில் கூறியிருப்பதுதான். இதற்க்த்தான் தமிழில் “மதவெறி” என்று பெயர்.
பாப்பா மாலதி,
சவுதி சட்டம் எப்போதும் சூப்பர் தான். சவுதில ரேப் பண்ணுனா கொன்னுடுவாங்க, ரேப் நடக்குரதே இல்ல அங்கே, ஆனா இந்தியால ரேப் லாம் சாதாரண விசயமா ஆச்சு, இன்னும் ஆயிரக்கணக்கான பொண்ணுங்க சொல்ல முடியாம மனசுக்குள்ள வெந்துகிட்டு இருகாங்க, இந்திய நரக தீயில் பெண்கள் அப்டின்னு ஒரு பதிவு மொதல்ல போட்டுட்டு அப்பறம் சவுதிய பத்தி போட்ட சரியா இருக்கும்.
“ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்” அப்டின்னு இருக்கு உங்களோட ஜால்ரா.
mr. சிங்கம் நீங்க எப்ப மாலதியானிங்க ஒங்க பொம்மையை பாருங்க ஒரு வேல நீங்க பெண் சிங்கமோ பின்னூட்ட நம்பர் 20.அப்புறம் 28 யை பாருங்கள் பெயர மாத்தி எழுதுவது பிரச்சனையில்லை ஆனா சிங்கத்துக்கு கொடுத்த ஐ டி யை மாலதி என்ற பெயருக்கு கொடுத்த இப்புடித்தான் அசிங்கப்படனும்
சகோதரர் மதியழகன் அவர்களுக்கு,
///////இந்த கட்டுரையிலோ, வந்திருக்கும் பின்னூட்டங்களிலோ நான் ஆத்திக விரோதம் எதையும் பார்க்கவில்லை. ஆத்திகர்களிடையே தான் ஆத்திரத்தையும், அவசரத்தையும் பார்க்கிறேன்//////>>>>நானும் பார்க்கவில்லை இப்பதிவிற்கு சம்பந்தமில்லாமல் செருகப்பட்டிருக்கிற குர்ஆன் வசனத்தை தவிர இங்கு யாரும் வேலைக்காரர்களை அடிமையாக நடத்துவதுயில்லை எங்களுடைய விசாவில் கூட அப்த்(அடிமை) என்று இல்லை அமல் (வேலையாள்) என்றுதான் சில கம்னிச நன்பர்களும் இங்குதான் இருக்கிறார்கள் அவர்களிடமும் கேட்டு பாருங்கள்
/////ஹைதர் அலிக்கு ரேவதி எழுதியது புரியவில்லை என்பதை நான் நம்புகிறேன். ஆனால், ரேவதி எழுதியிருப்பதையே பலரும் கேட்டும், அதற்கு பதிலை ஹதர் அலி, ராஜவம்சம், எவெ, ரியாஸ், மனிதன், நல்லவன் என்று பல பெயர்களில் எழுதியிருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் யாருமே கண்டுகொள்ளவில்லையே சொல்லவில்லையே அது ஏன்?//////>>>>> எனக்கு புரியவில்லை அவர் எந்த லிங்கை கொடுத்தார் எந்த ஹதீஸில் இடம் பெற்று இருக்கிறது என்று தெளிவு இருந்தால் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்
சரி, நடந்ததை விட்டுவிடுவோம். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:
//////1. இஸ்லாமிய நாடுகள் எவை எவை?
2. சவுதி அரேபியா நாடு இஸ்லாமிய நாடா இல்லையா?
3. ஒரு நாடு இஸ்லாமிய நாடா இல்லையா என்பதை முடிவு செய்வது அந்த நாடா அல்லது பின்னூட்டங்களில் வசதிக்கேற்றபடி தக்கியா(பொய்/தகிடுதத்தம்) செய்யும் முகமதியர்களா?/////// ரேவதிக்கி நான் பதில் கொடுத்ததை படித்த நீங்கள் சகோதரர் வினவோடு இதே விஷயங்களை பற்றி விவாதித்திருக்கிறோம் பின்னூட்ட நம்பர் 28லிருந்து படித்துப் பாருங்கள்
////4.இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை முறை என்று கூப்பாடு போடும் முஸ்லீம்கள் இந்த முழுமையான வாழ்க்கை முறை எந்த நாட்டில் இப்போது நிலவுகிறது என்ற விபரத்தை தரமுடியுமா?////>>> எங்குமே இல்லை
////5. அடிமைப்பெண்ணை அவளது மேலாளன் பாலியல் பலாத்காரம் செய்தால் அதற்கு சரியா சட்டத்தின் படி என்ன தண்டனை?////>>>> விபாச்சாரத்திற்குரிய அதே தண்டனை தான்
////6. சரியா சட்டம் என்ற ஒரு சட்டம் எந்தெந்த நாடுகளில் சட்டமாக இருக்கிறது?////>>>> சவூதியில் மட்டும் அரைகுறையாக அமலில் இருக்கிறது
/////7. சரியா சட்டம் என்பது ஒரு சட்டமா அல்லது ஒவ்வொரு இஸ்லாமிய நாடும், குழுவும் தனக்குத்தானே குரான் – ஹதீஸ் படித்து தோன்றியபடி வகுத்துக்கொள்ளும் ஒரு குழப்பமான சட்டமா?/////>>>>>இல்லை எந்த குழுவிற்கும் மன இச்சைப்படி வகுத்துக் கொள்ள முடியாது சரியா சட்டம் என்பது இரண்டு விஷயங்கள் தான் 1. குர்ஆன் 2.ஹதீஸ்(இறைவனுடைய வேதம், முஹம்மது நபி (சல்) அவர்களின் சொல் செயல் ஆங்கிகாரம்) இதிலும் அவர்கள் மக்களுக்கு கட்டளையாக இடப்பட்டது தான் ஷரியா அவருடைய தனிப்பட்ட விருப்பம் தனிப்பட்ட செயல் இசுலாமிய ஷரியாவை கட்டுப்படுத்தது, முஹம்மது நபியிம் அவருடைய தோழர்(சஹாப என்றால் தமிழில் தோழர்கள் என்று பொருள் இப்படித்தான் முஹம்மது நபி அழைத்தார்கள்) காலித் பின் வாலித் என்றவரோடு தாயிப் என்ற ஊருக்கு சென்றிந்தபோது அங்கு விருந்தில் உடும்பு கறி பரிமாறப்பட்டது முஹம்மது நபி அவர்களுக்கு பிடிக்கவில்லை அவர்கள் சப்பிடவில்லை இதனை பார்த்த தோழர் நபியவர்களே உடும்பு கறி சப்பிடுவது ஹராம் (தடுக்கப்பட்டதா)என்றதற்கு இல்லை எனக்கு பிடிக்கவில்லை என்றார்கள் உடனே நபியவர்களுக்கு பரிமாறப் பட்ட இறைச்சியை அந்த தோழர் எடுத்து சப்பிட்டுவிட்டார் இப்படி நிறைய உதரணங்கள் இருக்கின்றன
////8. அந்த சரியா சட்டம் முழுக்க இந்த காலத்திற்கு பொருத்தமானதா?////>>>> ஆம்
////9. இஸ்லாமியர்கள் கடவுளின் கடைசி தூதன் என்று நம்பும் முகம்மது நபிசல்லா, தனது வீட்டில் வேலை செய்த பெண்ணை பலாத்காரம் செய்தது உண்மையா?/////>>> சத்தியமாக இல்லை அவதூறு அதாரம் இருந்தால் கொடுங்கள் விவாதிப்போம் ////அவன் தனக்கு வசதியாக கடவுளின் சரியா என்று சொல்லி பல பெண்களை (21) அனுபவித்தானா? குரான் நான்கு எட்டு பதினாறு என்று பல பெண்களை மணக்கும் உரிமையையும்,////>>>> இந்த வசனத்தை நீங்கள் தவறாக விளங்கியிருக்கீறிர்கள்(உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். அத்:4 வச3)இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு 4ன்கு மனைவி என்பதுதான் கடைசி அனுமதி சிலர் இதனை கூட்டி 18 என்றும் 21 என்றும் கூறுகிறார்கள் நல்ல வேளை பெருக்கல் கணக்கில் யாரும் சொல்லவில்லை முஹம்மது நபி 21மனைவிகளை வைத்திருந்தார் என்பது சுத்த பொய் ////ஒரு பெண்ணை மணக்காமலேயே வைப்பாட்டியாக வைத்துக்கொள்ளும் வசதியையும் முஸ்லீம்களுக்கு கொடுத்திருப்பது உண்மையா?//////>>>>>இல்லை இசுலாமிய சட்டப்படி முடியாது பார்க்க (அத்தியாயம் அல்மாயிதா 5வசனம்5, நம்பிக்கை கொண்டகணவனில்லாதபெண்களையும் உங்களுக்கு முன் வேதம்கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக்கொள்ளாமலும் விபச்சாரம் செய்யாமலும் கற்பு நெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது)
இங்கே கற்பு தவறமால் என்று ஆண்களை நோக்கி சொல்லப்படுகிறது அந்த கலத்துல அரபிகள் கணவன் இழந்த பெண்களை வைப்பாட்டிய வச்சுக்கிட்டு விபச்சாரம் பன்னிக்கிட்டு திரிசய்ங்க அவிய்ங்க நெறிப்படுத்தி முறைய கல்யாணம் பன்னிக்கங்கட என்று குர்ஆன் சட்டம் போட்டது
////10. முகம்மது நபிசல்லாவே இப்படி வைப்பாட்டிகளை வைத்திருந்தது உண்மையா?///>>>இல்லை
////11. ஒரு பெண் முழுக்க மூடவேண்டும் என்று இஸ்லாமிய சரியா சட்டம் பிரகாரம் சொல்லும் சவுதி அரசு,////>>>> சவூதி அரசின் சட்டமாக இருக்கலாம் இசுலாம் அவ்வாறு கூறவில்லை/////// ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டு போலீஸாரிடம் சென்றால், நீ ஏன் தனியாக சென்றாய் சரியாவை ஏன் மீறினாய் என்று கேட்டு அவளுக்கு சவுக்கடி கொடுக்கும் சவுதி இஸ்லாமிய நீதிமன்றம்,///// இதுவும் இசுலாமிய சட்டப்படி சவுக்கடி தண்டனை கொடுக்க முடியாது அப்படி கொடுட்தால் அது இசுலாமிய நீதிமன்றமாக இருக்காது அப்புறம் சவுதி இசுலாமிய நீதிமன்றம்(அது இசுலாமிய நீதிமன்றம் கேடயாது அது வேற விஷயம்) இப்புடி எத்தன பேருக்கு தன்டன கொடுத்துச்சு சொல்லமுடியுமா//// வேலைக்காரப்பெண்களை பலாத்காரம் செய்யும் ஆணியடித்து சித்தரவதை செய்யும் எத்தனை அரபிகளுக்கு சவுக்கடி அல்லது கல்லால் அடித்து கொல்லும் சரியா தண்டனையை தந்திருக்கிறது?////>>>>இசுலாமிய ஷரியா இருந்தால் குற்றவாளிகள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது
அய்யா,
கீ பல ஹால். என் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலையே! ஜனாப்.ஹைதர் அலி.
கேள்வி நெ 1. அடிமையாக பிடிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட ஒரு அடிமை அநாதையா?, அநாதையில்லையா?.
கேள்வி நெ. 2. வேலைசெய்ய பணியாட்களை வைத்திருந்தார்கள் என்றால் அடிமைகளை எதற்காக வைத்திருந்தார்கள்.
Dear kaattarabi
காட்டரபி-//பள்ளிக்கூடத் தம்பி, நீங்கள் கட்டுரையை ஒழுங்காவே படிக்கமாட்டீங்களா! இவங்க சொன்னாங்கன்னா எழுதியிருக்கிறாங்க?//
Reply
Posted on 13-Aug-10 at 8:20 pm | Permalink
schoolboy-//ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்துவிட்டு அதற்கு மேல் குறைந்தபட்சம் பத்து கிலோமீட்டராவது கையில் தண்ணீர் புட்டிகளைத் தூக்கிக் கொண்டு நடந்து கடக்கும் இவர்களிடம், இந்த தண்ணீர் விற்கும் நிறுவனங்களால் தான் உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது எனக் கூறும் போது வார்த்தைகள் வறண்டு விடுகின்றன. ithukku neengalay meaning thaangq mr.kaatarabi….//
Posted on 14-Aug-10 at 12:58 am | Permalink
விளக்கவும்(ஏனென்றால் நான் வேறுவிதமாக புரிந்துகொண்டேன் என்று நினைக்கிறேன்)
அண்ணே கட்டரபி (குவயிஸ்) கேள்வி நெ 1. அடிமையாக பிடிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட ஒரு அடிமை அநாதையா?, அநாதையில்லையா?. ————————————————–பதில் நெ1.அடிமைகளில் அநாதைகளும் இருந்தார்கள் அடிமை பெண்னை திருமணம் முடித்த அடிமை ஆண் அவர்களின் பிள்ளைகள் என்று குடும்பத்தோடு அடிமையாக இருந்திருக்கிறார்கள், சரி அநாதையான அடிமை யாரேன்று பார்ப்போம், ஸல்மான் ஃபார்சீ (ரலி) என்பவர் இவர் பாரசீக நாட்டை சேர்ந்தவர் அரபு வியாபரிகளின் கையில் சிக்கி மதீனாவிற்கு பக்கத்திலுள்ள கிராமம் வாதில் குரா என்ற இடத்தில் வசித்த பனூ குரைலா என்ற குலத்தை சார்ந்த யூதனுக்கு அடிமையாக விற்கப்படுகிறார் இவர் அநாதையான அடிமை 2.குடும்பமாக இருந்த அடிமைகள் அம்மர் பின் யாஸிர் அதாவது யாஸிருடைய மகன் அம்மர் இவருடைய தந்தை யாஸிர் ஒர் அடிமை இவருடைய தாய் சுமைய்யா அவர்களும் அடிமை ———————————————–
கேள்வி நெ. 2. வேலைசெய்ய பணியாட்களை வைத்திருந்தார்கள் என்றால் அடிமைகளை எதற்காக வைத்திருந்தார்கள். ———————————————–பதில்2.அடிமைகள் பேரிச்ச தோட்டங்களில் பேரிச்சை பழங்களை பிடுங்குவது ஒட்டகம் மேய்ப்பது ஆடு மேய்ப்பது அரபிகளுடன் வியாபரங்களுக்கு சிரியா ரோம் போன்ற நாடுகளுக்கு எஜமான்களுக்கு உதவியாக செல்லுவது போன்ற வேலைகளை செய்வதற்காக
//கீ பல ஹால்//????? haider baai athu kaif al hal ‘a illa ki pala haal ‘a
ஹைதர்,
கீ பலே ஹால். மன்னிக்கவும். குறிப்பாக நான் பெண் அடிமைகளைப் பற்றியே வினவுகின்றேன். போரில் பெண் அடிமைகளைப் பிடித்த எச்சமானர்களும் சரி மற்றும் பிடித்தவர்களிடமிருந்து அப்பெண் அடிமைகளை வாங்கிய எச்சமானர்களும் சரி அப்பெண்ணடிமைளை மணமுடிக்காமலேயும் அல்லது மணமுடிப்பதற்கு முன்பாகவும் அவர்களுடன் உடலுறவு வைத்திருந்திருக்கின்றனர். அதாவது இவ்வாறு உறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்டவர்களில் அநாதைகளும் இருந்தனர், அநாதைகளல்லாதவரும் இருந்தனர். இவ்வாறு அநாதையான அப்பெண்ணடிமைகளுடன் (மணமுடிக்காமல்) உடலுறவு வைத்திருந்தது என்பது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பையும் அவர்களின் பாலியல் தேவையையும் பூர்த்தி செய்தது என்றும் அதனாலேயே அது அனுமதிக்கப்பட்டது என்றும் நமது பீஜே சொல்கிறார் மற்றும் பல உலமாக்களும் கூட இதையே துப்புகிறார்கள் மன்னிக்கவும் சொல்கிறார்கள். இவ்வாறு அவ்வநாதைகளுடன் முறைதவறி உறவுகொண்டது அவர்கள் மீது பாவிக்கப்பட்ட மோசமான நடத்தைக் கெட்ட செயலில்லையா? இல்லை என்று மறுக்கிறீர்களா?
இன்று சமுதாயம் மாற்றமடைந்திருப்பதால் ஒருவளை அடிமையாக பாவிக்கும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றாலுங்கூட இப்பதிவில் கூறப்பட்டிருப்பதுபோன்று சவுதிக்கு சென்று பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாலியல் தேவை என்ற பிரச்சினை இருக்கிறது என்று யுவதிகளை கெடுக்கும் சவூதிகள் தங்களின் தரப்பில் ஹதீதுகளையும், வசனங்களையும் மேற்கோள்காட்டி நியாயப்படுத்தினால், எல்லாவற்றிற்கும் குரானில் தீர்வைத் தேடும் உங்களால் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் என்ன பதிலளிக்கமுடியும்?. தீவிர வஹாபியான உங்களை இப்பிரச்சினையில் குரானை பின்பற்ற தடுப்பது எது? விளக்களிக்கும் விதத்தில் பதிலளிக்கவும். இங்கு மதப்பிரச்சாரம் வேண்டாமே.
குறிப்பு: முஹம்மது இறந்த பிறகும் கலீபாக்கள் அடிமைகளை வைத்திருந்தனர். இஸ்லாம் அடிமைமுறையை ஒழித்தது என்பது காதில் நல்ல பூ சுற்றல்.
அண்ணே காட்டரபி,
மன்னிக்கவும். குறிப்பாக நான் பெண் அடிமைகளைப் பற்றியே வினவுகின்றேன். ———————————————–அண்ணே நான் பெண் அடிமைகளும் செய்யும் வேலைகளையும் சேர்த்துதான் சொன்னேன் உதாரணத்திற்கு, கதீஜா பின்த் குவைலித் என்பவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி அவர்கள் நபியவர்களை திருமணம் முடிப்பதற்கு காரணமாக இருந்தாவர் ஒரு அடிமைதான் பெரும் வணிகாரக திகழ்ந்த கதீஜா அம்மையார் தன் வியாபார பொருட்களை வேளிநாடுகளில் விற்பது ஆள் தேவை இங்கு கதீஜா அவர்களுக்கு ஒரு வேலையாளகத்தான் நபியவர்கள் அறிமுகமகிறார்கள் வியாபார பொருட்களோடு உடன் வியாபாரத்தை கண்கானிக்க கதீஜா அவர்களுடைய பெண் அடிமை மய்ஸரா என்பவரை முஹம்மது நபியுடன் அனுப்பி வைக்கிறார்கள் வியாபாரம் முடிந்து திரும்பி வந்ததும் மய்ஸரா தான் நபி (ஸல்) அவர்களிடம் கண்ட நற்பன்புகள் உயர் சிந்தனை பேச்சில் உண்மை நம்பகத்தன்மை ஆகியவற்றை கதீஜாவிடம் விவரித்தார் இதுவே இவர்களின் திருமணத்திற்கு காரனமாக இருந்தது ———————————————– போரில் பெண் அடிமைகளைப் பிடித்த எச்சமானர்களும் சரி மற்றும் பிடித்தவர்களிடமிருந்து அப்பெண் அடிமைகளை வாங்கிய எச்சமானர்களும் சரி அப்பெண்ணடிமைளை மணமுடிக்காமலேயும் அல்லது மணமுடிப்பதற்கு முன்பாகவும் அவர்களுடன் உடலுறவு வைத்திருந்திருக்கின்றனர். அதாவது இவ்வாறு உறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்டவர்களில் அநாதைகளும் இருந்தனர், அநாதைகளல்லாதவரும் இருந்தனர். இவ்வாறு அநாதையான அப்பெண்ணடிமைகளுடன் (மணமுடிக்காமல்) உடலுறவு வைத்திருந்தது என்பது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பையும் அவர்களின் பாலியல் தேவையையும் பூர்த்தி செய்தது என்றும் அதனாலேயே அது அனுமதிக்கப்பட்டது என்றும் நமது பீஜே சொல்கிறார் மற்றும் பல உலமாக்களும் கூட இதையே துப்புகிறார்கள் மன்னிக்கவும் சொல்கிறார்கள். இவ்வாறு அவ்வநாதைகளுடன் முறைதவறி உறவுகொண்டது அவர்கள் மீது பாவிக்கப்பட்ட மோசமான நடத்தைக் கெட்ட செயலில்லையா? இல்லை என்று மறுக்கிறீர்களா? ———————————————–இது அன்றைய அறியாமை சமூகத்திலிருந்த ஒரு பழக்கம் இதை தவறு என்று கூட அவர்கள் உணரவில்லை நான் பணம் கொடுத்து வாங்கினேன் நான் என்னமும் செய்வேன் நான் சுகந்திர பறவை என்ற மனநிலையில் இருந்தவர்களை நீ சுகந்திரமானவன் கேடயாது உன்னை ஒருவன் பார்த்து கொண்டிருக்கிறான் அந்த இறைவனுக்கு நீ பதில் சொல்லி ஆக வேண்டும் விபாச்சாரம் செய்யாதே அடிமையும் உன்னுடைய சகோதரன் தான் சகோதரிதான் இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்படுமுன்பு முந்தியகாலக்கட்டத்தில் நடைமுறையிலிருந்ததுதான் அடிமைமுறை. இஸ்லாம் எப்பொழுது அந்த அராபியத் தீபகற்பத்தில் ஒளிவீச ஆரம்பித்ததோ அன்றிலிருந்து அடிமைகளின் வாழ்வை சீர்திருத்தியது. மட்டுமல்லாமல் படிப்படியாக் அவர்களை அந்த அடிமைத்தளையிலிருந்து விடுவித்தது. இதோ அடிமைகள் விவகாரத்தில் இஸ்லாத்தின் வழிகாட்டுதலை பாருங்கள்:
அடிமைப்பெண்ணும், அடிமை ஆணும் உங்கள் உடன்பிறப்புகள் ஆவர். அவர்களை இறைவன் உங்கள் ஆதிக்கத்தில் தந்திருக்கிறான். உங்களில் ஒருவருடைய ஆதிக்கத்தில் இறைவன் ஒரு சகோதரனைத் தந்தால் அவர், தான் உண்பதையே அவனுக்கு ஊட்டட்டும், தான் அணியும் ஆடையையே அவனுக்கு அணிவிக்கட்டும். அவனுடைய சக்திக்கு மிஞ்சிய வேலைப்பழுவை அவன் மீது சுமத்த வேண்டாம். அவனுடைய சக்திக்கு மிஞ்சிய வேலைச்சுமையை அவனுக்குதந்தால்(அவன் அதைச்செய்ய முடியாமல் போனால்) அந்த வேலையில் அவர் அவனுக்கு துணை புரியட்டும்.” (நூல்:புஹாரி, முஸ்லிம்). பொதுவாக மனிதன் செய்யும் நல்லறங்களில் அடிமைகளை விடுவித்தல் சிறப்பானது எனவும் ஆர்வமூட்டினார்கள். தமது வாழ் நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்கள். (பார்க்க திருக்குர்ஆன் 4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 24:33, 24:58, 33:50, 33:52, 33:55, 70:30) ———————————————–
இன்று சமுதாயம் மாற்றமடைந்திருப்பதால் ஒருவளை அடிமையாக பாவிக்கும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றாலுங்கூட இப்பதிவில் கூறப்பட்டிருப்பதுபோன்று சவுதிக்கு சென்று பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாலியல் தேவை என்ற பிரச்சினை இருக்கிறது என்று யுவதிகளை கெடுக்கும் சவூதிகள் தங்களின் தரப்பில் ஹதீதுகளையும், வசனங்களையும் மேற்கோள்காட்டி நியாயப்படுத்தினால், எல்லாவற்றிற்கும் குரானில் தீர்வைத் தேடும் உங்களால் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் என்ன பதிலளிக்கமுடியும்?. ———————————————–கண்டிப்பாக என்னால் பதிலளிக்க முடியும் இன்று அந்த சமூக சூழல் இல்லை அப்புறம் அரபிகள் எங்களை யாரையும் அடிமைகளை வாங்குவது போல் விலை கொடுத்து வாங்கவுமில்லை போர் கைதிகளாக யாரும் பிடிபடவுமில்லை சுகந்திரமானவர்களை யாரும் அடிமைப்படுத்த முடியாது 1.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன். இன்னொருவன்,
சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்..மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்” (நபிமொழி புகாரி 2227) மன்னிக்கவும் கொஞ்சம் நீளமாகி விட்டது
அண்ணே காட்டரபி, பெர அடிக்க மறந்து அப்படியே அனுப்பிட்டேன் Anonymous வந்துருச்சு ஆனால் 43ம்நம்பர் பின்னூட்ட Anonymous நானில்லை இன்னும் பாக்கி இருக்கு தொடர்கிறேன்
// இஸ்லாமியர்கள் கடவுளின் கடைசி தூதன் என்று நம்பும் முகம்மது நபிசல்லா, தனது வீட்டில் வேலை செய்த பெண்ணை பலாத்காரம் செய்தது உண்மையா? அவன் தனக்கு வசதியாக கடவுளின் சரியா என்று சொல்லி பல பெண்களை (21) அனுபவித்தானா//
மதியழகன்,இசுலாமிய சகோதரர்கள் தம் வழிகாட்டி என ஏற்றுக்கொண்டுள்ள ஒருவரை அவர்களுடன் விவாதிக்கும் போதே அவன் இவன் என ஏக வசனத்தில் குறிப்பிடுவது என்ன வகை நாகரீகம்.
நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு முழுவதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கோளில் உள்ள குற்றச்சாட்டு ஆதாரம் அற்றது.ஆதாரங்களை முன் வைத்து வாதிடுமாறு கோருகிறேன்.
நண்பர் திப்பு, மதியழகன் அவர்களுக்கு பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது பார்க்கவும்
நன்பர்களுக்கு, இது அரபு நியூஸ் பத்திரிக்கையில் இருந்து எடுத்தது இந்த சம்பவம் தொடர்பாக நெறைய பேரு கருத்து சொல்லியிருக்காக அப்படி கருத்து சொல்லியிருக்கிறவர்களில் யார் நல்லவுக யார் கெட்டவுக அப்புடியின்னு நீங்களே முடிவு எடுத்துகோங்க RIYADH: A Sri Lankan housemaid with 24 nails embedded in her body after allegedly being tortured by her employer is to undergo surgery in a Colombo hospital on Friday.
Ariyawathi, 49, said her employer in Saudi Arabia inflicted the injuries on her as a punishment. She flew back to Sri Lanka last week and was admitted to Kamburupitiya hospital in the island’s south, hospital director Prabath Gajadeera said on Thursday.
“She was brought in complaining that her Saudi employer drove nails into her body, and X-rays showed that there were 24 nails and a needle,” Gajadeera said. “There is one nail on the forehead, just under the skin.”
The nails were up to two inches (five centimeters) long and were mostly beneath the skin of Ariyawathi’s hands, feet and legs.
Ariyawathi, a mother of three, traveled to Saudi Arabia in March to become a housemaid.
She told doctors she had undergone abuse for more than a month.
Doctors said Ariyawathi was deeply traumatized and unable to give full details of her experience. “She still can’t properly sit down and walk,” Dr. Kamal Weerathunga said.
But she is not in a serious condition and surgeons are expected to try to remove the metal objects from her body on Friday.
Sri Lankan authorities have told journalists in Colombo that an investigation has been launched.
“This is a serious case of ill-treatment which is against all norms of law,” said R.K. Ruhunuge, additional general manager of the Sri Lanka Bureau of Foreign Employment told Arab News from Colombo.
No information was available regarding the identity of the sponsor or whether the sponsor was being investigated or facing any criminal charges.
An official from the Sri Lankan Embassy in Riyadh said that it was trying to get in touch with the sponsor through the local recruiting agent, but that the Ramadan schedule has made getting in contact difficult.
Around 1.8 million Sri Lankans are employed abroad, of whom 70 percent are women. Most work as housemaids in the Middle East, while smaller numbers work in Singapore and Hong Kong.
— With input from agencies
PRINT EMAIL SHARE
DELICIOUS
DIGG
FACEBOOK
GOOGLE
YAHOO! BUZZ
COMMENTS
Post a comment
Read all comments (39)
AN MARINO
Aug 27, 2010 07:43
Report abuseAbsolutely barbaric.
SOHAIL
Aug 27, 2010 16:16
Report abuseA very humane behaviour in a country called “country of Humanity.” Where are the muslim scholars, where are the imams, where is the Haia, and where are the policy makers of labour? The downtrodden people who come here and give you every service, who have made and are the part and parcel of the infrastructure of this country, I don’t think deserve this type of vulgarity. The poor souls who become your house servants are round-the-clock on duty and by giving you every great service just to feed back their needy children back home deserve better. I don’t understand why this country has started a human rights organisation when it has totally failed.
HASAN
Aug 27, 2010 16:20
Report abuse This is outrageous. Every sponsor and their family members in Saudi Arabia should be physiologically evaluated prior to providing them housemaids.
This is inhuman. The religion should be thought in and out to these Cannibals!
ABDULLAH ABDUL
Aug 27, 2010 16:21
Report abuse first of all i hope allah will give her a full recovery from her ordeal (if she has not done it deliberately !). secondly i hope again she will forget and forgive and may allah open the doors of eeimaan in her heart and mind. if there is / was a culprit/criminal for this offence he/she will not get away with it in this world nor in the next as allah has cctv cameras with every one on the left and right !…no one will get away with it who/where ever you are in the world.
ANONYMOUS
Aug 27, 2010 16:23
Report abuse If you boast of kingdom of humanity, here is an opportunity to prove it. Bring that maid back in Saudi and give her justice by allowing her to put equal number of nails in to body of her sponsor publicly who did this coward and despicable act. That is the justice Islam, our religion calls for. Eye for eye, teeth for teeth and nail for nail.
SIRAJUDDIN CHANDA
Aug 27, 2010 16:35
Report abuse Investigate this matter in the fastest possible time and if found guilty, the sponsor of that Srilankan maid should be punished severly. Publicise his name and photo on TV & news papers and even on popular radio stations and defame him in society. Cancel all visa facilities to this type of person so that he can not recruit any one from foreign countries. And make him pay for treatment of poor woman and wage for atleast one year.
XENA
Aug 27, 2010 16:36
Report abuse How could anyone in their right minds commit such a barbaric and inhuman act on bodily harm on another human-being ??this poor mother of three left behind her family in order to provide for her loved ones, but instead was rewarded with such a heinous treatment from her sponsor . i hope that justice will be done and immediate action will be taken ageist these barbaric people. My heart goes out to Ariyawathi and hope her surgery turns out successful . Her employer will have to compensate in full all her medical expenses and much more for all the suffering they have caused on her.
KSA
Aug 27, 2010 16:42
Report abuse “Country of Humanity”. this is a sadistic country!
TAKORI
Aug 27, 2010 20:38
Report abuse you all are barbaric people and you will never learn. A fine Saudi judge will just fine SAR 670 for the culprit. Remember because of you Sri Lankan Muslims are suffering.
ALAN GARFIELD
Aug 27, 2010 20:43
Report abuseThis act of barbarity has hit the worlds newspapers and TV websites. It re-inforces the negative attitude towards Muslims. The authorities should be seen to react strongly to the perpetrators.
GAMAL
Aug 27, 2010 20:44
Report abuse I praise ARABNEWS for releasing such true-story of Saudia Arabian society. Surely this is very inhuman act and it happens regularly in Saudi society but no significate action taken from Govt. as the Govt. assume this is normal case. If same happen to Saudi national, surely the issue take place at TOP NEWS. Seems Saudi Govt. not in position to realize expat as human.
THAHA MUZAMMIL
Aug 27, 2010 21:01
Report abuse The world is anxiously awaiting Saudi’s response in this regard.
NETTIE
Aug 27, 2010 21:02
Report abuse This abuse of maids is still happening because nothing is done to reveal the identity of the abusers. The people responsible for this type of behavior should be held up to public ridicule and punishment.
ALBELAJEE
Aug 27, 2010 21:10
Report abuseThis is really horrible and against the all norms of human values and Islam. This shows how Saudis have scant respect of Islamic norms. This is shameful.
LAKMINA
Aug 27, 2010 21:11
Report abuse The operation to remove 18 nails and pins inserted into a Lankan maid from Matara who had been tortured while serving in Saudi Arabia has been successfully completed, said Kamburupitiya Government Hospital sources.
It is reported that 18 nails and pins were extracted from the body which contained a total of 23 nails and pins. Out of the extracted 13 are reported to be 2 inch nails and the rest pins.
The surgeons who conducted the operation today have remained 5 nails as they pose no threat to the woman. Removing the remaining nails would danger the life of the woman in concern and produce further complications.
MOHAMMED SHAHED
Aug 27, 2010 21:37
Report abuse It’s a outright fake story made out at the behest of some thugs in the maid’s locality.
JACOB
Aug 27, 2010 21:39
Report abuseIt is hard to understand how the maid got through airport security on her way home to Sri Lanka since every traveler is required to pass through a metal detector. How can justice be secured for her now that she has left the kingdom? Who will take her case in Saudi courts? Many foreign workers complain of mistreatment by their Saudi masters, but nothing is ever heard of their cases after they escape the kingdom.
MEHREEN
Aug 27, 2010 23:36
Report abuse WHY Is information about the sponsor unavailable? If the system is so broken (lack of info due to Ramadan, computer system problems, etc.), why don’t we ask the victim the name of the family and their address?
ATAAS
Aug 27, 2010 23:37
Report abuseI think, it would be better if the Government could deny recruitment of maids to those who are accused of abuse. Anyone abuses of maid should not be allowed to employ a maid. The family will do all of their household jobs.
SAEED
Aug 27, 2010 23:40
Report abuse What the legal department is doing here are they sleeping, they cant even disclose the name how can they take action, its really a shame on this.
SYED NOOR
Aug 27, 2010 23:40
Report abuseUnimaginable, Unbelievable, Inhumane, Cruel, absurd and “Bush”ly act. and of course punishable. Come on, Kingdom of humanity, stand up and punish publicly the criminal.
FATIMA FROM ALGERIA
Aug 27, 2010 23:55
Report abuse first of all Congratulations to this site to print this story I did not expect it to be published here . second i wish there was enough pressure on the saudi Government to investigate this incident and punish the criminals behind it . i wish they get the same punishment as the Maid , that is pushing nails into heir bodies and not a couple of days in Jail and later released . I hope the saudi Government pursue this and give justice to this sri lankan maid . this couple Gives a bad image to compassionate Islam . where did they learn this sadistic treatment from i wonder ? Evil people .
JACOB
Aug 27, 2010 23:55
Report abuse How could this woman pass airport security with metal nails in her body? If she were stopped and questioned at that time, steps could have been taken to investigate her condition and circumstances. Her sponsor and employer could have been confronted immediately. Now it is too late. She will never come back to confront the inhumane treatment she received.
HIDAYAT KAHN CHESHIRE UK
Aug 28, 2010 00:14
Report abuse No wonder Allah sent almost all prophets to the Arabs, who were and are the worse people on the face of the earth. They have no place in the civilized World.
RIYAZ AHMED
Aug 28, 2010 00:15
Report abuseIt is time to think about all asian countries to ban housemaids to gulf countries, there are lot incidents of housemaid abuse happening in gulf countries.
DON COX
Aug 28, 2010 00:17
Report abuse “Bring that maid back in Saudi and give her justice by allowing her to put equal number of nails in to body of her sponsor publicly who did this coward and despicable act. That is the justice Islam, our religion calls for. Eye for eye, teeth for teeth and nail for nail.”
That suggestion is just as barbarous and disgusting as the original crime.
DEAN
Aug 28, 2010 00:20
Report abuse To countries sending domestic helpers to Saudi Arabia, please stop the sending of women to this type of job only to be treated as animals. Civilized people don’t do this. Its not an excuse for being a poor country then send their own people to a life in prison in exchange for hard earned cash.
RAZA
Aug 28, 2010 00:21
Report abuse Mr Abdullah! Infact in the Kingdom most of the justice is left for the next world. What else could be a more comeplling evidence. Its a prosecutore’s nightmare not to have convictions in such cases. We know the maids lost their teeth, a couple of fingers, broken ribs, and many more inuries, 100% non-self infliciting. And the employer got away, on the pre-text “lack of evidence”. I am sure this maid also lack the necessary evidence to prove anything in the current judical system of the Kingdom. And you are right, she should forgive and forget, becuase there is no remedy available in this world for her. But you should better behave with humans in this world in the manner they deserve, and leave the next to Allah.
SYED OMAR
Aug 28, 2010 00:22
Report abuse URGENT ACTION NEEDED This is only one side of the story, but horrible enough to make the ‘Kindom of Humanity’ notorious worldwide over night. Medically, this news does not look correct – how come 24 nails can be embedded in a live human body??? Think logically. Saudi Arabia or NCHR must do an immediate and honest enquiry into this case and bring out the facts in front of the world. If the Saudi employer is guilty then he should be brought to justice. The people of the world may remain quiet, but the concerned authorities are answer to Allah one day.
MOHAMMED AMJAD
Aug 28, 2010 00:23
Report abuse THIS IS UNACCEPTABLE & UNHUMNAE. THANKS TO ARAB NEWS TO BRININGING THIS SHOCKING NEWS TO ALL. IF THIS CALLED ARAB THEN THANKS TO ALLAH IAM NOT ARAB.
NOMAN
Aug 28, 2010 00:23
Report abuseThis is pathetic.Is that guy a human or a cannibal. Can he torture his wife or daughter the same way he did to the maid.Servant are to be dealt with kindness this is what the religion tells us. A very shameful act and a great moment of concern for the Saudi society in general.
ANANDA WELLAPPILI
Aug 28, 2010 00:26
Report abuse We are Sri Lankans, According to the comments in your country we feel that every one of your country needn’t to responsible to this matter. As a member of same town Kamburupitiya in Sri Lanka I think the Sri Lanka authorities also must take the responsibility regarding this matter. However poor women in this country hope to get some income serving in your country as housemaids. But they do not have any experiences how to work in a large house in your country. I hope the people like you will see to this matter in reasonable way. We don’t need to punish any one. But you all can come to sri lanka and see this incident in your own otherwise help her to build her future. That is what I hope for the sake of Great God ALLAH. Ananda. Kamburupitiya Sri Lanka
NEV S
Aug 28, 2010 00:31
Report abuse What concerns me is that this might be the tip of the iceberg. There may be countless other maids who have no access to recourse, who’s passports have been confiscated by their sponsor, who have been cut off from the outside world and their families and who live and work in conditions of virtual slavery? Something is seriously wrong in a society where this type of inhumanity prevails and those who are responsible for creating an environment that allows for this type of inhumanity to thrive ought to be ashamed!
Y KHAN
Aug 28, 2010 00:33
Report abuse Its a shameful act. I think this Badoo must be Brought to the Justice. Srilankan Diplomats must intervein and i appeal Srilankan Community to Help the Victim & her Family. Islam is a Religion of Peace And Mercey. People like this are spoiling the Image of Islam.
ANONYMOUS
Aug 28, 2010 00:33
Report abuse shoking and inhuman
KHALID
Aug 28, 2010 00:34
Report abuse I do agree with GAMAL.
DIMAH
Aug 28, 2010 00:41
Report abuse Where is the Human Rights Group? Does it read Arab News? This news is in every international media including BBC and CNN – it did not know! or nobody filed any report.
A CONCERNED MUSLIM
Aug 28, 2010 00:41
Report abuseextremely horrific and barbaric act. totally unIslamic. may Allah punish all the persons involved and may He reward the maid and her family for her suffering and patience.a
PETER
Aug 28, 2010 00:42
Report abuse The image about Arabs in the rest of the world is not at all good. Their Sharia law, (eye for eye policy), imposing islam on others, lack of religious freedom and persecution of other relgions are well known in the wider world. The discrmination and racism towards Asians ( South Asians) in the middle east is suffered by many due to their poverty back home. But this is the height of everything, nailing a poor maid.
—
It is not correct to say that the sponsor cannot be identified. The authorities don’t want to reveal it. Without proper document or a sponsor it is very difficult to enter to saudi. Please remember what happened to an indonesian maid tortured by their sponsored and finally accused of giving false complaints even though her fingers were amputated in the hospital.
/அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. குரான் 4:3//
இந்த குரான் வசனம் கூறுவது அடிமை பெண்ணை மணம் செய்து
கொள்ள தவிர Rape செய்ய அல்ல . இந்த வசனம் வந்த காலம் அடிமைத்தனம் இருந்த நேரம் .அது மட்டும் இல்லாமல் முஸ்லிமான ஆண் வரதட்சனை கொடுத்துதான் திருமணம் செய்யமுடியும் என்பதால் அன்றுள்ள ஆண்களில் வரதட்சனை கொடுக்கும் சக்தி இல்லாதவர்கள் தங்கள் அடிமை பெண்களை திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தி இறைவனால் இறக்கப்பட்ட வசனம் அது . இதை உங்கள் கருத்துக்கு ஏற்ப
வளைக்காதீர்கள் . இஸ்லாம் என்றும் பெண்ணடிமைதனத்தை
கூறியதில்லை .
நானும் சௌதியில் தான் இருக்கிறேன் இங்கு பெண்கள் மட்டும் அல்ல வேலைக்கு வரும் ஆண்களும் (டிரைவர் ,அடிமட்ட பணியாளர்கள் அனைவரும் கஷ்டம் தான் அனுபவிக்கிறார்கள்.
அதை அனைவரும் ஒத்து கொள்கிறோம் .அதற்கு இஸ்லாம் காரணம் அல்ல . உண்மையான இஸ்லாமை கடைபிடித்தால் மன்னர் ஆட்சி நடத்த முடியாது என எது தங்களால் தங்களுக்கு பயனுள்ள கொள்கைகளை கடைபிடிக்கும் உதவாக்கரை மன்னராட்சி தான் காரணம்.
ஹைதர்அலி பொய் சொல்லாதீர்கள். இந்த வசனத்தின் வரிகளை மீண்டும் கவனமாக படியுங்கள்.
அண்ணே சாகித் எப்புடியிருக்கீக, //// பெர அடிக்க மறந்து அப்படியே அனுப்பிட்டேன் Anonymous வந்துருச்சு ஆனால் 43ம்நம்பர் பின்னூட்ட Anonymous நானில்லை இன்னும் பாக்கி//// 42ம் நம்பர் பின்னூட்டத்திற்கு மேலேயுள்ள Anonymous என்னுடையாது இன்னும் 4:3 குர்ஆன் வசனத்திற்கு வேளக்கம் கொடுக்க ஆரம்பிக்கவில்லை நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை 42ம் நம்பர் மேலேயுள்ள Anonymous க்கு என்னுடைய பேர பொடமா 43ம் நம்பருக்கு என்னூடைய பேர போட்டுயிருக்காங்க வினவு குழு
நலம். விழைவும் அதுவே!
அனாதைப் பெண்களுக்கும், பிற பெண்களுக்கு கொடுக்கும் மகரைப்போல் மகர் கொடுத்து திருமணம் செய்துக்கொள்ள நீங்கள் விரும்பாவிட்டால் பிற பெண்களை நான்கு, மூன்று, இரண்டு என்று எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளுங்கள். அதிக பெண்களை திருமணம் செய்துகொள்ள பொருளாதாரம் இல்லை என்றால் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்துக்கொள்ளுங்கள். அதுவும் முடியாவிட்டால் அடிமைப்பெண்களுடன் உறவு கொள்ளுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் எனபதே இவ்வசனத்தின் பொருள்.
பிஜே அவுலியாகூட அடிமைப்பெண்களுடன் திருமணம் செய்யாமல் உறவு கொண்டார்கள் என்று கூறியுள்ளார்களே.
//அதுவும் முடியாவிட்டால் அடிமைப்பெண்களுடன் உறவு கொள்ளுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் எனபதே இவ்வசனத்தின் பொருள்.
பிஜே அவுலியாகூட அடிமைப்பெண்களுடன் திருமணம் செய்யாமல் உறவு கொண்டார்கள் என்று கூறியுள்ளார்களே.//
உண்மையான இஸ்லாம் அது அல்ல. முகம்மது நபி உண்மையான இஸ்லாத்தை பின்பற்றவில்லை. குரான் கூட உண்மையான இஸ்லாத்தை கூறவில்லை. என்ற ரீதியில் ஹைதர் அலி பதில் தந்தால் ஆச்சரியப்பட மாட்டேன்.
I have a doubt. Fundamentalists repeatedly proclaim that Islam abolished slavery. But no body quotes from quran or hadees to substantiate this. Is there any verse in quran which talks about abolishing slavery in phases?
If nothing is available in quran then are there any hadees texts which say that slavery should be abolished in phases?
In the absence of any of these, we can only conclude that slavery got abolished due to the onset of modernity and due to the civilized values that crept into islamic society in due course of time.
Similar to the fact that untouchability was not abolished by hinduism, slavery was not abolished by islam. The changes that occured on both counts were mainly due to those who lived outside these two religious systems. Now religious fanatics try to stake claim for the reforms whereas left to them they would have wholeheartedly opposed such reformations.
கட்டுரையாளர் சவுதிகளின் பாலியல் குற்றங்களுக்கு இசுலாமிய மதத்தை வலிந்து பொறுப்பாக்க முனைந்துள்ளார்.அடிமை முறை பற்றிய விவாதங்கள் ஒரு புறம் இருக்கட்டும்.சவுதியில் பணிபுரிய வரும் வெளிநாட்டினர் அடிமைகளாக விலை கொடுத்து வாங்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவதில்லை.பணியாளர்கள் என்று நுழைவுச்சீட்டில் குறிக்கப்பட்டே தருவிக்கப்படுகிறார்கள்.இதை சகோதரர் ஹைதர் அலி தமது பின்னூட்டமொன்றில் தெளிவு படுத்தியுள்ளார்.
ஆகவே அந்த பணியாளரை பாலியல் வலுவந்தம் செய்யும் அரபி இசுலாமிய குற்றவியல் சட்டப்படி சாவுத்தண்டனைக்குரிய குற்றத்தை செய்கிறான்.ஆக இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது அந்த அரபி தாம் சார்ந்துள்ள மதத்தையே முழுமையாக பின் பற்றி நடக்காதவன் என்பதே.அப்படிப்பட்ட ஒருவன் தமது பாலியல் அத்துமீறல்களுக்கு இசுலாம் அனுமதித்த அடிமை முறையின் படி தர்க்க நியாயம் கற்பித்துக் கொள்கிறான் என்பது கற்பனையானது.
உடனே ஏன் அந்த அரபிக்கு சாவுத்தண்டனை அளிக்கப்படுவதில்லை என பின்னூட்டங்கள் பறந்து வரும்.சவுதி ஆளும் வர்க்கங்கள் அத்தகைய குற்றவாளிகளை பாதுகாப்பதாக கட்டுரையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.இருக்கலாம்.தொடர்ச்சியான பல மதக் கலவரங்களை நடத்தி முசுலிம்,கிறித்துவ மக்களை கொன்று குவிக்கும் பாசிச வெறியர்களும், சீக்கிய மக்களை 84 -ல் கொன்று குவித்த காங்கிரசு குண்டர்களும் பாதுகாக்கப்படும் நாட்டில் வாழும் நமக்கு இதை புரிந்து கொள்வது எளிதானதே.
[…] சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர… […]