போபால்:தடையை மீறி டௌ கெமிக்கல்ஸ் முற்றுகைப் போராட்டம்!
சரியாக சன் செய்திகள் முடிந்து, ‘சுதந்திர வம்சம்’ தொடங்கிய நேரம் –
எல்லா மக்களையும் போல சாதாரணமாக இருந்த ஒரு குடும்பத்தின் ‘வம்சம்’, அரசியல் வியாபாரத்தில் வலது காலை எடுத்து வைத்து நுழைந்து ‘குறுகிய காலத்தில்’ முன்னேறி, ஆசிய பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறியதுடன் இன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழகத்தை ஒட்டு மொத்தமாக அடகு வைக்கும் தரகு வேலையை கச்சிதமாக செய்தும் வருகிறது. அந்த ‘வம்சத்தின்’ ஆணிவேரான மாண்புமிகு தமிழக முதல்வரின் பேரன் அருள்நிதி, சன் டிவி நேயர்களுக்கு ‘சுதந்திரதின நல்வாழ்த்துகளை’ புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தபோது –
சென்னை ஈகாட்டுத்தாங்கல் கூவம் நதி மேம்பாலத்தில் ஆரம்பித்து டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் வரை சாலையின் இருபுறமும் காவல்துறையினர் வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பதினைந்தடி இடைவெளியில் நிற்க ஆரம்பித்த காவல்துறை வாகனங்களையும் கருத்தில் கொண்டால் –
‘அமைதிப் பூங்காவான’ தமிழகத்தின் தலைநகரான சென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், அதுவும் ஆகஸ்ட் 15 – 64வது ‘சுதந்திரதினத்தில், ஆயிரம் அடி சுற்றளவுக்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.
காரணம், மகஇக, விவிமு, புமாஇமு, புஜதொமு, பெவிமு ஆகிய அமைப்புகள் அறிவித்திருந்த முற்றுகை போராட்டம். அதுவும் அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ‘டெள’ கெமிக்கல்ஸ் நிறுவனத்தை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொல்லி இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் நடத்தப் போவதாக அறிவித்திருந்த முற்றுகை போராட்டத்தை முறியடிப்பதற்காகத்தான் இந்த அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு.
அதாவது அமெரிக்ககாரன் ‘சுதந்திரமாக’ வாழ, ‘இந்தியர்களை’ கைது செய்ய, ‘இந்திய’ சுதந்திரதினத்தில், ‘இந்திய’ அரசின் அனுமதியுடன், தமிழக காவல்துறை அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.
இந்த ஆரம்பப் புள்ளியே 64ம் ஆண்டு சுதந்திரதினம் யாருக்கு என்பதை தெளிவாக உணர்த்திவிட்டது. ஏகாதிபத்தியத்துக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவர்களது அடிவருடிகளான இந்திய தரகு முதலாளி வர்க்கங்களுக்கும்தான் சுதந்திரம். அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கல்ல என்பதை நிரூபித்துவிட்டது.
‘மாதம் மும்மாரி பொழிகிறதா..?’ என எட்டப்பன் பரம்பரையில் வந்த மாமன்னர் கருணாநிதி தன் கைத்தடிகளிடம் கேட்டிருக்கக் கூடும். அதற்கேற்ப தூறலும் ஆரம்பித்தது. எனவே குதூகலத்துடன், ‘ஆம் மன்னா… இப்போது கூட தூறிக் கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் அஞ்சா நெஞ்சன் அழகிரி வெளியிட்ட ‘தமிழ்ப்பட’த்தையும், ‘எந்திரன்’ படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா உருவான விதத்தையும் பார்த்துக் கொண்டு சந்தோஷமாக வீட்டுக்குள் அடைந்துக் கிடக்கிறார்கள்…’ என்று நா கூசாமல் புளுகியிருக்கவும் கூடும்.
இதற்கேற்றபடி காசி தியேட்டருக்கு அருகிலிருந்த ‘உயர்தர’ சைவ உணவகத்தில் ஓசியில் டிபன் சாப்பிட்டுவிட்டு கீழே இறங்கிய காவல்துறை உயரதிகாரி ஒருவர், ஒயர்லெஸ்ஸில், ‘500லேந்து ஆயிரம் போலீஸ்காரர்கள் இருக்காங்க. நம்மை மீறி எதுவும் நடக்காது. சி.எம்.மை சந்தோஷமா இருக்கச் சொல்லுங்க…’ என பின்பாட்டு பாடவும் செய்தார்தான்.
ஆனால், உண்டுக் கொழுத்தவர்களுக்கு தெரியாது நக்சல்பாரி அமைப்பினரின் போராட்ட வடிவம் ஒருபோதும் பிசுபிசுத்ததில்லை என்று.
இத்தனைக்கும் காசி தியேட்டரிலிருந்து கிண்டியிலுள்ள ‘டெள கெமிக்கல்ஸ்’ அலுவலகம் வரை பேரணி நடத்த அனுமதி வாங்கும் பொருட்டு காவல்துறையை அணுகியபோதே அனுமதி மறுக்கப்பட்டது. போதும் போறாததுக்கு ‘சட்டப்படி’ ஸ்டேவும் வாங்கியிருந்தார்கள். எனவே பேரணியும் நடைபெறாது, தோழர்களும் வரமாட்டார்கள் என்றுதான் காவல்துறை நம்பியது.
ஆனால், ‘தமிழ்ப்படமும்’, ‘எந்திரன்’ பாடல் கேசட் வெளியீட்டு விழா உருவான விதத்தையும் பார்ப்பதற்காக நாங்கள் வாழவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் போபாலில் நிகழ்த்தப்பட்ட படுகொலையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி உழைக்கும் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் ஊனமாகியிருக்கிறார்கள். இன்றும் அந்த மக்களின் ‘வம்சம்’ ஊனத்துடனேயே பிறக்கிறது. அவர்களுக்குரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இந்தப் படுகொலை சம்பவத்துக்கு காரணமான ஆண்டர்சனை கைது செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்து அவனை தப்பிக்க விட்ட காங்கிரஸ் தலைமை தண்டிக்கப்பட வேண்டும். ‘யூனியன் கார்பைட்’ நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கும் ‘டெள கெமிக்கல்ஸ்’ தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்கும் ‘இந்தியப் பிரதமர்’ மன்மோகன் சிங்கையும், உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளோடு தோழர்கள் சென்னையின் காசி தியேட்டர் இடத்தில் குவிந்தார்கள்.
இதை நிச்சயம் இப்போதிருக்கும் ஆளும் வர்க்கமும், காவல்துறையும் எதிர்பார்க்கவில்லை.
தடையை மீறி பேரணி காலை 10.30க்கு புறப்படும் என்று தோழர்கள் பிரசாரம் செய்திருந்தார்கள். எனவே 8 மணி முதலே காசி தியேட்டர் அருகில் காவல்துறையினர் குவிந்தார்கள். தாம்பரத்திலிருந்து வரும் பேருந்து காசி தியேட்டர் நிறுத்தத்தில் நின்றதுமே, சிவப்புச் சட்டை அல்லது சிவப்பு பனியன் அணிந்து யார் இறங்கினாலும் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டார்கள். இதே நிலைமைதான் வடபழனியிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்து விஷயத்திலும் நடந்தது. காசி தியேட்டர் நிறுத்தத்தில் இறங்கும் ஆண், பெண், குழந்தை உட்பட ஒவ்வொரு பயணியும் கண்காணிக்கப்பட்டனர்.
காலை 9.30 மணிக்குள் இப்படியாக 6 பேருந்து வாகனங்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டு விஜயா தியேட்டர் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். வாகனத்தில் ஏறி சென்றபடியே தோழர்கள் எழுப்பிய கோஷம் அப்பகுதி முழுக்கவே எதிரொலித்தது.
9.35 மணிவாக்கில் செங்குன்றத்திலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் பேருந்து காசி தியேட்டர் நிறுத்தத்தில் நின்றது. கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான சிவப்புச் சட்டை தோழர்கள் இறங்கினார்கள். அவர்களை அப்படியே கைது செய்வதற்காக காவல்துறையினர் விரைந்தார்கள்.
அப்போதுதான் பறை ஒலிக்க ஆரம்பித்தது.
விஜயா தியேட்டர் இருக்கும் சாலைக்கு நேர் எதிரான சாலை. மேற்கு சைதாப்பேட்டையை கடந்து ஜாபர்கான் பேட்டை வழியே வடபழனி செல்லும் பேருந்துகள் வரும் சாலையும் அதுதான். அச்சாலையின் முனையிலிருந்துதான் – காசி தியேட்டர் திருப்பத்தில் – பறையொலி எழுந்தது. பேருந்திலிருந்து இறங்கிய தோழர்கள் அந்த ஒலி வந்த திசையை நோக்கி விரைந்தார்கள். அவர்களை கைது செய்ய வந்த காவலர்களும் தோழர்களை பின்தொடர்ந்தார்கள்.
அங்கே மெல்ல மெல்ல பூக்க ஆரம்பித்த காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.
சாரிசாரியாக, எந்தெந்தப் பகுதியிலிருந்து எந்தெந்த அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் வருகிறோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்கும் சிவப்பு பேனர் ஏந்தியபடி செஞ்சேனை தோழர்கள் ‘டெள் கெமிக்கல்ஸை’ எதிர்த்தும், போபால் படுகொலைக்கு நீதி கேட்டும் வர ஆரம்பித்தார்கள். பேருந்திலிருந்து இறங்கிய தோழர்கள் அவர்களுடன் இரண்டற கலந்தார்கள்.
திகைத்த காவல்துறை உடனடியாக செயலில் இறங்கியது. இரு காவல்துறை வாகனங்கள் இருபதடி இடைவெளியில் மறித்து நின்றது. ஊர்வலமாக வரும் தோழர்கள் காசி தியேட்டர் மெயின் ரோட்டை அடையக் கூடாது. போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்யக் கூடாது என்பதே காவல்துறையினரின் நோக்கம். அதற்கேற்ப பச்சை நைலான் கயிற்றை எடுத்து இரு வாகனங்களுக்கும் இடைப்பட்ட பகுதியை மறித்தார்கள்.
ஆனால், காவலர்களின் இந்த பயம் அர்த்தமற்றது என்பதை தோழர்களின் தொடர் கோஷங்களும், போராட்டங்களும் உணர்த்தின. உணர்ச்சிக்கு அடிமையாகி நிலைதவற தோழர்கள் என்ன ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சி உறுப்பினர்களா என்ன? சுய ஒழுக்கமும், சுய கட்டுப்பாடும் நிரம்பிய புரட்சிகர நக்சல்பாரி அமைப்பின் அங்கத்தினர்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை எந்தவகையிலும் பாதிக்கக் கூடாது; அதேநேரம் போராட்டத்தின் ஆணிவேரையும் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். தங்களுக்காகத்தான் கொட்டும் மழையிலும் தோழர்கள் போராடுகிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்… என்பதற்கு ஏற்பவே செஞ்சேனை தோழர்கள் களத்தில் நின்றார்கள். சாலை ஒருபோதும் தோழர்களால் மறிக்கப்படவில்லை. தோழர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயன்ற காவலர்களால்தான் போக்குவரத்து ஸ்தம்பித்தது என்பது அப்பகுதியை கடந்த ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும், வாகனத்தில் அமர்ந்துக் கொண்டிருந்தவர்களுக்கும் தெரியும்.
காலை 8 மணி முதலே கைது செய்யப்பட்ட தோழர்களை தவிர்த்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் அப்பகுதியில் குவிந்ததும், குழுகுழுவாக பேட்டரியால் இயங்கும் மைக் வழியே தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். யாருக்காக போராடுகிறோம்; யாரை எதிர்த்து போராடுகிறோம்; எதற்காக இந்த முற்றுகைப் போராட்டம் என்பதை மக்களுக்கு உணர்த்தியதும், புமாஇமு அமைப்பை சேர்ந்த தோழர்கள் வீதி நாடகம் நடத்த ஆரம்பித்தார்கள்.
மழை நிற்கவில்லை. தோழர்களும் அசரவில்லை, கலைந்து செல்லவுமில்லை. காவலர்கள்தான் மழைக்கு பயந்து ஆங்காங்கே ஒதுங்க ஆரம்பித்தார்கள். ஆனால், பகுதி மக்கள் தோழர்களுக்கு தோள் கொடுக்கும் வண்ணம் மழையை பொருட்படுத்தாமல் நின்றார்கள். பத்து நிமிடங்கள் நடைபெற்ற அந்த வீதி நாடகத்தில், போபால் படுகொலை சம்பவம் அப்பட்டமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது.
அமெரிக்க கொடியை தலைப்பாகையாக கட்டிய ஒரு தோழரை, உலகவங்கி தொப்பி அணிந்த மற்றொரு தோழர் அழைத்து வருகிறார். கதர் குல்லா அணிந்த தோழர் அவர்கள் இருவருக்கும் கூழை கும்பிடு போட்டு இடங்களை சுற்றிக் காட்டுகிறார். ஓரிடத்தை அமெரிக்க தலைப்பாகை அணிந்த தோழர் தேர்வு செய்கிறார். உலக வங்கி தொப்பி அணிந்த தோழர், கதர் குல்லா அணிந்த தோழரை அழைத்து நிபந்தனைகளை விதிக்கிறார். கதர் குல்லா தோழர் அனைத்தையும் தலையசைத்து ஏற்கிறார். யூனியன் கார்பைடு நிறுவனம் உருவாகிறது. அதை தட்டியில் எழுதப்பட்ட எழுத்துகள் வழியே தோழர்கள் உணர்த்துகிறார்கள். பிறகு சாம்பிராணி புகையின் மூலம் விஷவாயு கசிவையும், அதனால் மக்கள் பட்ட வேதனையையும், இறப்பையும் ரத்தமும் சதையுமாக தோழர்கள் நடித்து கண்முன்னால் கொண்டு வருகிறார்கள். அதுவும் தூளியில் தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையைப் போன்ற பொம்மையை ஏந்தியபடி ஒரு பெண் தோழர் அழுதக் காட்சி, நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த அனைவரது நெஞ்சிலும் அறைந்தது. எப்பேர்ப்பட்ட அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை முகத்திலறைந்தது போல் இந்த வீதிநாடகம் படம் பிடித்து காட்டியது.
இதனையடுத்து அமெரிக்க கொடியை தலைப்பாகையாக அணிந்த தோழரை, நான்கைந்து தோழர்கள் தூக்கிக் கொண்டு செல்ல, கதர் குல்லா அணிந்த தோழர் கையசைத்து அவரை அனுப்பிவைக்கும் காட்சி, நடந்த உண்மைகளை மக்களுக்கு அப்பட்டமாக உணர்த்தியது.
இந்த நாடகத்தை வீடியோவில் படம் பிடிக்க வந்த காவல்துறையினரை தோழர்கள் தடுத்தார்கள். குரலை மட்டுமே உயர்த்தி, ‘படம் பிடிக்கக் கூடாது’ என்றார்கள். மறுபேச்சில்லாமல் அதற்கு காவலர்கள் கட்டுப்பட்டார்கள். இத்தனைக்கும் தடுத்த தோழர்களிடம் சாதாரண தென்னங்குச்சிக் கூட இல்லை. ஆனால், இமயமலையையே பெயர்த்து எடுக்கும் சக்திப் படைத்த மக்கள் திரள் அவர்களின் பின்னால் இருந்தது. துப்பாக்கி ஏந்திய காவலர்களை கட்டுப்படுத்தும் வலுவான ஆயுதம், மக்கள் திரளே என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சி.
அதேபோல் காவலர்களை புகைப்படம் எடுக்கவும் தோழர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால், முற்றுகைப் போராட்ட பேட்ஜ் அணிந்த தோழர்கள் வளைந்து வளைந்து வீடியோவும் எடுத்தார்கள். புகைப்படமும் எடுத்தார்கள். காதில் புகை வர வர இக்காட்சியை காவல்துறை உயரதிகாரிகள் பார்த்தார்கள்.
செய்தி ஊடகங்களில் என்.டி.டி.வி சேனல் மட்டுமே வந்திருந்தது. தோழர்களிடம் அனுமதி பெற்று அனைத்து நிகழ்வையும் அவர்கள் படம் பிடித்தார்கள்.
வீதி நாடகம் முடிந்ததும் பேரணிக்கு முன்பு வந்த புஜதொமு அமைப்பின் தலைவரான தோழர் முகுந்தன், பேட்டரியால் இயங்கும் மைக்கை வாங்கி முழக்கங்களை எழுப்ப, தோழர்கள் அதை எதிரொலித்தார்கள்.
இதன் பிறகு மகஇக-வின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் 20 நிமிடங்கள் சிறப்புரை நிகழ்த்தினார். ஸ்பீக்கர் இல்லை. மின்சாரத்தால் இயங்கும் மைக் இல்லை. ஆனால், மருதையன் தோழரின் உரையை அங்கிருந்த அனைவரும், காவலர்கள் உட்பட அமைதியாக கேட்டார்கள். கட்டுப்பாடுக்கும், ஒழுக்கத்துக்கும் எந்தளவுக்கு அமைப்புத் தோழர்கள் பெயர் போனவர்கள் என்பது மீண்டும் நிரூபனமானது.
ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும், இரு பிரிவினர்தான் அதிகாலையிலேயே பணிக்கு செல்கிறார்கள். பள்ளி மாணவர்கள் ஒரு பிரிவினர். காவலர்கள் மறுபிரிவினர். பள்ளி மாணவர்களுக்காவது மிட்டாய் கிடைக்கும். காவலர்களுக்கு அதுக் கூட கிடைக்காது. பிரதமர் வந்தாலும் சரி, முதல்வர் சென்றாலும் சரி, ரவுடிகள் நடந்தாலும் சரி பாதுகாப்புத் தர வேண்டியது காவலர்களின் கடமையாகிறது… என்ற பொருள்பட தோழர் மருதையன் தன் உரையை ஆரம்பித்ததும் அங்கிருந்த செஞ்சேனை தோழர்கள் பலத்த கரவொலி எழுப்பினார்கள் என்றால், பல காவல்துறையினர் முகமலர்ந்து தங்கள் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்கள்.
தொடர்ந்து மறுகாலனியாக்கத்தால் நம் நாடு திவாலாகி வருவதை குறித்து பேசிய தோழர், இந்த முற்றுகைப் போராட்டத்தை தடுப்பதன் மூலம், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சுதந்திரம் கிடைத்திருக்கிறது… மக்களுக்கல்ல என்றார்.
இதனையடுத்து மீண்டும் தொடர் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்தும் பேனர்களையும், தட்டிகளையும் ஏந்தியபடி செஞ்சேனை தோழர்கள் தாம்பரம் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரமாக நிற்க ஆரம்பித்தார்கள். இதன் மூலமாக சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒவ்வொருக்கும் பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படும் அவலங்களும், போபால் படுகொலையில் மூடி மறைக்கப்பட்ட உண்மைகளும் உணர்த்தப்பட்டன.
‘தயவுசெஞ்சு அரெஸ்ட் ஆகிடுங்க… இல்லைனா எங்களுக்கு வேலை போயிடும்…’ என காவல்துறை உயரதிகாரியின் கெஞ்சலுடன் செஞ்சேனை தோழர்களை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்ற ஆரம்பித்தனர்.
இந்தக் கைது நடவடிக்கை வைபவம் முழுமையாக நடந்து முடிய இரண்டு மணி நேரங்களானது. அந்தளவுக்கு தோழர்கள் புறமுதுகிட்டு ஓடாமல் கைதாகிக் கொண்டேயிருந்தார்கள். கைதான தோழர்களில் கணிசமானோர் பெண்கள். சில பெண் தோழர்கள் குழந்தைகளோடு கைதானார்கள்.
எம்.ஜி.ஆர்.நகர், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், ஜாபர்கான்பேட்டை பகுதிகளிலுள்ள அனைத்து திருமண மண்டபங்களும் தோழர்களால் நிரம்பி வழிந்தன.
அதுவரை மழையும் நிற்கவில்லை.
ஒரு பிஞ்சுக் குழந்தை. ஒண்ணரை வயதுதான் இருக்கும். சிவப்புச் சட்டை, சிவப்பு டிராயர் அணிந்திருந்தார். தன் அப்பாவின் தோளில் அமர்ந்தபடி குடையை விலக்கிவிட்டு மழையில் நனைந்தபடியே போராட்டத்தை கண்கொட்டாமல் பார்த்தார். மழையில் நனைந்தால் தன் மகனுக்கு ஜலதோஷம் பிடிக்கும், காய்ச்சல் வரும் என்றெல்லாம் யோசிக்காமல் நேரடி போராட்டத்தை காணும் வாய்ப்பை தன் மகனுக்கு வழங்கிய அந்தத் தோழருக்கு சிவப்பு வணக்கங்கள்.
சவுகார்பேட்டையிலிருந்து இருவர் இப்போராட்டத்தை காண்பதற்காகவே வந்திருந்தனர். அவர்களுக்கு இப்போராட்டம் குறித்து தெரிந்தது, மின்சார ரயிலில் நடைப்பெற்ற பிரசாரம் மூலமாகத்தான். போபால் படுகொலை நிகழ்வை அம்பலப்படுத்தும் ஜூலை மாத ‘புதிய ஜனநாயக’ சிறப்பிதழையும், ஆகஸ்ட் 15 ‘டெள கெமிக்கல்ஸ்’ முற்றுகைப் போராட்டத்தை வலியுறுத்தும் 2 ரூபாய் பிரசுரத்தையும் விற்பனை செய்வதற்காகவும், நிதிவசூலுக்காகவும் தோழர்கள் வார இறுதியில் சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்தடத்தில் பிரசாரம் மேற்கொண்டார்கள். அப்போது அறிமுகமானவர்கள்தான் அந்த சவுகார்பேட்டை நண்பர்கள். செஞ்சேனை தோழர்களின் போராட்டத்தை முழுமையாக பார்த்த அவர்கள், அமைப்பில் தாங்கள் சேர விரும்புவதாக சொன்னது நிச்சயம் உணர்ச்சிவசப்பட்டல்ல.
குளிர்சாதன அறையில் அமர்ந்து, ஸ்காட்ச் விஸ்கியை குடித்தபடி ‘டெள கெமிக்கல்ஸ்’ நிறுவனத்தின் இந்திய அடியாள்களும், மற்ற பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய தரகர்களும், ஆளும் வர்க்க எட்டன்களும் முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்கிவிட்டதாக மகிழ்ச்சியடையலாம். அதற்கேற்ப காவல்துறையினரும், உளவுத்துறையினரும் ‘சும்மா 10 பேர்தான் போராடினாங்க…’ என பொய்யான தகவல்களை சொல்லி அவர்களை குளிப்பாட்டலாம்.
ஆனால், தில்லி செங்கோட்டையில் பிரதமரும், தமிழகத்தில் முதல்வரும் நாம் சுதந்திரம் வாங்கிவிட்டதாகச் சொல்லும் தேசியக் கொடியை ஏற்றிய அதேநேரத்தில்தான் –
செங்கொடியை ஏந்தியபடி நாம் இன்னும் சுதந்திரம் வாங்கவேயில்லை என்பதை முன்பே கைதானவர்கள் போக மீதமிருந்த தோழர்களில் ஒரு பகுதியினராகிய இரண்டாயிரத்துக்கும் அதிகமான தோழர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.
உண்மையான சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு அச்சாரமாய் இந்த முற்றுகை போராட்டம் அமைந்தது. ஆம். போலி சுதந்திர தினத்தில் ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம்.
_________________________
– அறிவுச்செல்வன்
_________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
படத்தை பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்
தொடர்புடைய பதிவுகள்
- போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை !!
- போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!
- பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்
- புதிய ஜனநாயகம், போபால் – சிறப்பிதழ், ஜூலை-2010, மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
- போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!
- ஒரு பறை… தொடர்ந்து விசில்கள்! மே நாள் போராட்டம் – படங்கள் !!
- போபால் அநீதிக்கெதிரான தமிழ் வலைப்பதிவர்களின் படைப்புகள்
- மனிதம் இருந்தால் படியுங்கள் (தொடர்) – புலவன் புலிகேசி
- இது துரோகத்தின் விளைநிலம் – 2- அசுரன்
- விடத்தை கக்கிய சட்டம் – போபால் – வெண்ணிற இரவுகள்
- இந்தியனின் உயிரின் விலை மூன்று ரூபாய் – போபால் உணர்த்தும் உண்மை – வெண்ணிற இறவுகள்
- மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!
- ரிலையன்ஸ் ஃபிரஷ்ஷில் மனிதக்கறி !
- டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி!
- பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!
- கென்சாரோ-விவா படுகொலை: ஷெல் நிறுவனம் தண்டிக்கப்பட்டதா?
- கோபன்ஹேகன் தட்ப-வெப்பநிலை மாநாடு: பூவுலகின் முதன்மை எதிரிக்கு வெற்றி!
- தடுப்பூசி மருந்து தனியாருக்கு – பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்
- பன்றிக் காய்ச்சல்: முதலாளிகளின் பயங்கரவாதத்தை முகமூடிகள் தடுக்குமா?
- சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை, ஒரு தொழிற்சங்கம் உருவான கதை!
- வினவு கட்டுரைக்காக 5 தொழிலாளிகள் சஸ்பெண்ட்! ஜேப்பியாரின் வெறியாட்டம்!!
- மக்கள் மீதான போருக்கு எதிராக… சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் – வீடியோ!
- காட்டு வேட்டைக்கெதிரான ம.க.இ.க பொதுக்கூட்டம் – புகைப்படங்கள்!
- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் சென்னையில் ம.க.இ.க பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி !!
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!
- பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கெதிரான நீதிமன்றப் போராட்டம்!
- திருச்சி: மகளிர் தினத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் !!
- குமுதம் ‘மாமா’வுக்கு ம.க.இ.க கண்டனம்! ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!!
- ஈழம் – வதை முகாம்களை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !
- ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!
- முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு !
- கருணாநிதி கூட்டத்தில் தோழர்கள் முழக்கம்: தாக்கப்பட்டு படுகாயத்துடன் கைது!
- முதலாளித்துவ பயங்கரவாதம் முறியடிப்போம் – புதுவையில் மே நாள் பேரணி !!
போலி சுதந்திர தினத்தில் ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம் !…
‘அமைதிப் பூங்காவான’ தமிழகத்தின் தலைநகரான சென்னையின் ஆகஸ்ட் 15 – 64வது ‘சுதந்திரதினத்தில், ஆயிரம் அடி சுற்றளவுக்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது….
[…] This post was mentioned on Twitter by வினவு, Kirubakaran S. Kirubakaran S said: போலி சுதந்திர தினத்தில் ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம் ! http://bit.ly/bQGsWf […]
கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு செவ்வணக்கங்கள்!
இடத்திற்க்கு (காசி தியேட்டர்) சற்று தாமதமாகவே செல்ல நேர்ந்தது!
அங்கு சென்றதும் ஒரு போலீஸ்காரரிடம் என்ன சார் ஒரே போலீஸ், கூட்டம் என்ன நடக்குது இங்கே என்று பேச்சு கொடுத்தோம்!
அவர் :போராட்டம் தம்பி.
நாம்: யாரு பண்றாங்க.
அவர்: ம.க.இ.க ன்னு ஒரு கம்யூனிஸ்ட்காரங்க இருக்காங்க இல்ல அவங்க தான்.
நாம்: எதுக்கு போராட்டம்?
அவர்: அவங்க நோட்டீஸ் கொடுக்குறாங்க வாங்கி படிங்க!
போபால் விசவாயுல நிறய பேர் செத்து போயிட்டாங்க இல்ல, அந்த கம்பெனி இன்னும் இங்க தான் இருக்காம் அத எதிர்த்து பண்றாங்க!
ரயில் பிரச்சாரத்தை பார்த்து ஈர்க்கப்பட்டு, வேறு ஒரு நண்பரும் வந்திருந்தார்!
அவர் சொன்ன வார்த்தைகள் :
இவ்வளவு ஒழுங்காக போராட்டம் நடத்துறாங்களே, ஏன் அரெஸ்ட் பண்றாங்க?
நம் மக்கள் 23,000 பேரை கொன்னிருக்கான், அவனை எதிர்த்து எதுவுமே பண்ணக்கூடாதா? அப்ப என்ன தாங்க பண்றது?
நாங்கள், அவருக்கு இது தான் போலி சுதந்திரம் என்பதை புரியவைத்தோம்!
பின்னர் அவரும் அமைப்பில் சேர என்ன செய்யவேண்டும் என்றார். பின்னர் பேசுவோம் என்று பிரிந்தோம்…
தோழர்கள் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் நகர் பகுதியில் அங்கிருந்த கூலி, கட்டட தொழிலாளர்களிடம் பேச்சு கொடுத்து எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று விளக்கினோம்.
இப்படி 23000 மக்களை கொன்றதற்க்கு கோவமும் ரோசமும் வரமாட்டீங்குது, ஆனா அரசியல்வாதிகளை திட்டினால் கோவம் வந்துவிடுகிறது சிலருக்கு என்றதும், அவர்களில் சிலர் மன்னை வாறி தூற்றாத குறையாக, இந்திரா- ராஜீவ் முதல் சோனியா-மன்மோகன் -ப.சி வரையும், மற்ற ஓட்டு பொறுக்கிகளையும் தூற்றிவிட்டு, கோவம் வர்ரவனுங்களை எல்லாம் எங்ககிட்ட கூப்பிட்டு வாங்க, செருப்பால அடிக்கிற மாதிரி கேக்குறோம் என்றார்கள்!
(இப்ப தெரியுதா? நான் ஏன் அதியமானை மக்களிடம் போய் பிரச்சாரம் பண்ண சொன்னேன்னு? அவர் ஏன் பயப்படுறார்ன்னு…)
அவர்களில் சிலரும் அமைப்பில் சேர நம்பர் வாங்கிக்கொண்டார்கள்.
தோழரக்ளின் பிரச்சாரமும், போராட்டமும், எந்த மக்களிடம் போய் சேர வேண்டுமோ அவர்களிடம் போய் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நொல்லை சொல்லும் இணையப்புலிகள் தெருவுக்கும் வரலாமே??
இந்த போராட்டத்திற்காக ரயில்களிலும் போரூந்துகளிலும், வீடுவீடாக, தெருத்தெருவாக பிரச்சாரம் செய்த அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள். உண்மையான சுதந்திர தினத்தை நோக்கி நம் பயனம் தொடரட்டும்…
போராடியத் தோழர்களுக்கு என் வணக்கங்கள்….
தோழர்களுக்கு செவ்வணக்கம்!
மக்கள்திரள் என்றுமே ஆட்டுமந்தைகளாக இராது என்ற நம்பிக்கையை சுவாசித்துத்தான் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் வாழ்கிறான் என்பதை மெய்ப்படுத்திக்கொண்டே இருக்கின்றீர்கள்!
பணத்துக்கும், பிரியாணிக்கும் ஓட்டு விற்கிறார்கள் என்று அடித்தட்டு மக்களை எள்ளிக்கொண்டே, மக்கள் திருந்தமாட்டார்கள் என்று அவநம்பிக்கைவாதத்தை விதைக்கும் நடுத்தர, உயர்தர ‘அறிவுஜீவி’ப் ‘பெரு’மக்கள் என்றைக்கு வீதிக்கு வந்து போராடி இருக்கிறார்கள்?
If you arrange a peace protest in a ordinary day we all ready to join .
But it should not political protest. You should not use your red flag or union names in those protest.
Then it will be truly peoples protest. But as you politicize people wont join with you.
As you are conducting this in independence day no educated person will join you.
We will think you are using Bhopal accident as cheap popularity tool for your union.
If you arrange a peace protest in a ordinary day we all ready to join .
சரி .. சுதந்திர தினத்தில் இந்த போராட்டத்தை வைத்ததில் உங்களுக்கு என்ன பிரச்சனை நண்பா ?..
சுதந்திர தினம் யாருக்கானது என்பதை கேள்வி கேட்க ஒரு போராட்டம் நடத்தக் கூட ஒரு சுதந்திரம் இல்லையா எங்களுக்கு ?..
உங்கள் கணக்குப் படி பார்த்தால் கூட இந்த சுதந்திரம் பல போராட்டங்களுக்கு பின்னர் தான் கிடைத்தது என்று பள்ளிக்கூட புஸ்தகத்தில் படித்ததில்லையா ?.. எனதருமை இந்தியக் குடிமகனே ….
But it should not political protest. You should not use your red flag or union names in those protest.
அந்த போராட்டத்தின் நோக்கத்தை மக்களிடம் எடுத்துச் சென்றது ம.க.இ.க , பு.ஜ.தொ.மு. , பு.மா.இ.மு , வி.வி.மு தோழர்கள். மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது நீங்களும் வந்திருந்தீர்களா ?.. இல்லை எந்த ஓட்டுப் பொறுக்கி கட்சியை சேர்ந்தவனாவது வந்திருந்தானா ?.. இந்திய சுதந்திரப் போராட்டம் கூட பலதரப் பட்ட மக்கள் காங்கிரஸ் கொடியின் கீழ் அணிதிரண்டு போராடியதால் கிடைத்ததாக சொல்லுகிறார்கள் ?.. மக்கள் போராட்டதில் எப்படி காங்கிரஸ் கொடியை வைக்கலாம்னு உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியாரு கிட்ட கேட்டிருக்கலாம் இல்லையா ?..
போலி சுதந்திரத்துக்கு கண் துடைப்பு போராட்டங்கள் நடத்தின காங்கிரஸ்காரனே தன்னுடைய கொடியை வைத்து போராடினான். உண்மையான சுதந்திரத்துக்கு போராடும் அமைப்புகள் கொடி வைத்துக் கொள்வதில் என்ன பிரச்சனை உங்களுக்கு ?.. சிவப்பைக் கண்டால் மிரளும் நோய் உங்களுக்கு எதேனும் உண்டா ?..
Then it will be truly peoples protest. But as you politicize people wont join with you.
As you are conducting this in independence day no educated person will join you.
We will think you are using Bhopal accident as cheap popularity tool for your union.
சின்ன திருத்தம் தம்பி இந்தியனே ..
போபால் விபத்து கிடையாது .. படுகொலை. போய் வரலாற்று செய்திகளை படி . உன் பழைய பாட புத்தகத்தில் படித்ததை நம்பி எமாற வேண்டாம். ஏன் மற்ற நாளில் போராட்டம் நடத்தினால் மட்டும் உங்கள் இனமான படித்த ”அறிவாளிகள்???” வந்து கலந்து கொள்வார்களா ?.. இந்த ”படித்த அறிவாளிகளுக்கு” என்ன செய்யத்தெரியும் ?.. இது போன்ற போராட்டங்கள் எங்கு நடந்தாலும் “சே .. இவங்களுக்கு வேற வேலை இல்லை. கொடியை தூக்கிட்டு வந்திடுறானுங்க” என்று புலம்புவது தான் தெரியும். தனக்கு பிரச்சனை வராத வரை இப்படி இணையத்தில் வந்து நீலிக் கண்ணீரும் வடிக்கத் தெரியும். உணர்ச்சி இல்லாத இவர்களது கண்ணீர் மூத்திரத்திற்கு சமானமானது என்று தோழர்.மருதையன் ஏதோ ஒரு கட்டுரையில் கூறியது நினைவிற்கு வருகிறது.
இந்த கேள்விகளுக்கு உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன் இந்தியன் அவர்களே …
நல்லா சொன்னீங்க விந்தை மனிதன். தோழர்களுக்கு செவ்வணக்கம்.
அலைகடலைப் போல் ஆர்ப்பரிக்கும் முழக்கங்கள் !! .. காலை நான் காசி தியேட்டரை அடைந்த போது விண்ணை முட்டியது .. காசி தியேட்டர் சிக்னலில் திரும்பிய திசை எல்லாம் சிவப்பு சட்டையும் காக்கி சட்டையும் .. சிவப்பு சட்டைகள் ஆர்ப்பரித்தன. அந்த ஆர்ப்பரிப்பில் காக்கி சட்டைகள் அடங்கி நின்று வேடிக்கை பார்த்தன . பெண்களும் குழந்தைகளும் இந்த போராட்டத்தில் கோசங்களை எழுப்பி கலந்து கொண்டதைப் பார்த்து அந்த பகுதி மக்கள் ஆச்சரியப் பட்டதையும் காண முடிந்தது.
தோழர் மருதையனின் பேச்சு வாள்வீச்சாக சீறியது. பு மா இ மு தோழர்களின் நாடகத்தைக் காண முடியவில்லை என்ற வருத்தத்தைத் தவிர மற்றபடி போராட்டம் ம.க.இ.க வின் அதே பாணியில் பட்டையை கிளப்பியது.
போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கு செவ்வணக்கங்கள் ..
நல்ல அருமையான கட்டுரை ….அங்கு சென்றேன் உணர்வுபூர்வமாய் இருந்தது ஆனால் டொவ் வரை போகாதது வருத்தம்
போராடுவது சுதந்திரம். போராடமல் இருத்தல் அடிமைகளின் அடையாளம். இதைத்தான் இந்தியாவின் போலிச் சுதந்திரத்தை, தங்கள் “சுதந்திரம்” என்று நம்பும் மந்தைகள், தங்கள் நடத்தைகள் மூலம் அம்பலமாகின்றனர்.
மனித குலம் சந்தித்த, சந்திக்கின்ற அடக்குமுறைகளும் அவலங்களும் “சுதந்திரம்” என்றால், அந்த “சுதந்திரத்தை” ஓழித்துக்கட்ட போராடுவது தான், மனிதனின் முன் உள்ள சமூகக் கடமையாகும். இதையே ம.க.இ.கவும், அதன் தோழமை அமைப்புகளும் தங்கள் சமூக கடமையாக முன்னெடுத்துள்ளது. வாழ்த்துகள் தோழர்களே.
அய்யா நல்லவனுகளா … இது எனவோ சரி தான் பலரை கொன்ற விபத்துக்கு தண்டை சரிஇல்லை … அமைதியான வழியில் உங்கள் போராட்டம் பாராட்ட வேண்டியது தான் …
ஆனால் வருசா வருஷம் ரயில்வே உழியர்களின் கவனக்குறைவால் பல ஆயிரம் பேர் சாவுராணுக ….ஏன் இந்த ரயில்வே union நை எதிர்த்து போராடுவது ?? ஏதோ முதலாளிங்க மட்டும் தான் கெட்டவங்க போலவும் தொழிலாளிங்க எல்லாம் தியாகி போலவும் பேசுவது வேடிக்கையா இருக்கு ….
விணனுக்கு கேள்வி ….
1 . இந்திர காந்தி , ராஜீவ் காந்தி , சோனியா காந்தி எல்லாம் கெட்டவங்க சரி அதுக்கு எது இந்தியாவ கேவலபடுதுறீங்க ??? என்ன அவர்கள் இந்த நாடு ராஜாவா என்ன ??
2 . சுதந்திர நாள் எனபது நாட்டிற்காக தியாகம் செய்த தியாகிகளுக்கு மரியாதையை செலுத்துவது …ஒன்னும் ராஜீவ் காந்திக்கோ , சோனியா காந்திக்கோ இல்ல …உங்க போராட்டம் ஏன் இந்த விடுதலை தியாகிகளை கேவலபடுதுவதாக இருக்கு ?? வேற நாளே இல்லையா போராட்டம் பண்ண ??
3 . நீங்கள் ரொம்ப அழகா மக்கள் எல்லாம் நீங்க சொல்லுறத அப்படியே கேட்டு உங்க இயக்கத்துல சேருவதா சொல்லுறீங்க …. இவளவு நியாயம் பேசும் நீங்கள் உங்கள் கருத்தை கூறி தேர்தலில் நின்னு நாட்டை மக்கள் அனுமதியுடன் …ஜனநாயக முறையில் மாத்துவது தான ??? என்ன நீங்களும் இந்தியர் தான ? சோனியா மட்டுமா ?
நீங்கள் என்ன கத்தினாலும் மக்கள் உங்களுக்கு அதரவு கொடுக்கமாட்டாங்க …. நீங்க சம்மந்தம் இல்லாம போபால் விபத்தையும் சுதந்திர தின நாளும் உங்கள் சூய விளம்பரத்துக்காக பயன் படுத்துறீங்க நு ஸ்கூல் பயனும் சொல்லுவிடுவான் …
உடனே நா என்னவோ போபால் விபத்தை பெரிதாக எதுகவில்லை என்று உளறவேண்டாம் … நான் உங்களை போல அதை cheap popularity காக பயன்படுத்த மாடேன் ..
Happy Independence day !!! Long Live india !!
எனக்கு ஒரு விசயம்தான் புரிய மாட்டக்குது..அது சுதந்திரம்.
இன்னைக்கு யாருக்கு சுதந்திர நாள்…25 ஆயிரம் பேரக் கொண்ணுட்டு சுதந்திரமா நியூயார்க்கிலே இருக்கானே ஆண்டர்சன் அவனுக்கா? இல்லை 25 ஆண்டுகளாப் போராடிக்கிட்டும் நச்சு கலந்த நீரைக் குடிச்சிட்டும் இருக்காங்களே போபால் இந்தியர்கள் அவர்களுக்கா? சுதந்திரம்னா என்ன? பொருளாதார சுதந்திரமா? கருத்து சுதந்திரமா? ரெண்டும் இருக்கா இங்கே?
64 வருசத்திலே ஒவ்வொரு அரசு நிருவனத்தையும் தனியாருக்கும் வெளிநாட்டுக்கும் வித்துட்டு பேச்சுரிமையை மறுக்கும் தடா பொடா போன்ற கொடுஞ்சட்டம்..124ஏ எனும் வெள்ளைக்காரன் சட்டம் இன்னும் இருக்கு..47இல் என்னத்தை மாத்தினீங்க? அரசை மாத்தினீங்களா? இல்லை..அரசியல் சட்டம்..35இல் போட்டதை கொஞ்சம் தூசி தட்டி பெயரை மட்டும் மாத்தினீங்க..அப்புறம் வெள்ளைக்காரனை அனுப்பீட்டு அவனோட பிரதிநிதியான காங்கிரசு காந்தியக் கொள்ளைக்கும்பலை தூக்கி வச்சீங்க..இதுக்குப் பேரு சுதந்திரம்னா..எனக்கு சிரிப்பு வாய் வழியா வரலை இப்போ..
சரியான காமெடி பன்னரிங்க !! 🙂
ஒரு நாட்டுல சுதந்திர நாள் அன்று அரசாங்கம் உங்களை இதைபோன்ற போராட்டம் நடத்தவும் அன்னும்திருகுணா அது பேச்சு சுதந்திரம் இல்லையா ??
உங்க கம்முநிசம் நாடான சீனாவில் என்ன நடந்திருக்கும் தெர்யுமா ?? நீங்கள் வெளிபடையாக ஆலும் கட்சியின் அனைத்து பிரதமர்களையும் கொலைகார பட்டம் கொடுத்ததும் உங்களை யாரும் ஒன்னும் செய்யவில்லை ….இந்த சுதந்திரத்தை எந்த கம்முநிசம் நாடு கொடுக்கு சொல்லுங்க ???
உங்கள் நக்சல் இயக்கத்தில் பேச்சு சுந்தந்திரம் இருக்கா என்ன வெறும் வீச்சு சுதந்திரம் தான்
சரியான காமெடி பன்னரிங்க !!
ஒரு நாட்டுல சுதந்திர நாள் அன்று அரசாங்கம் உங்களை இதைபோன்ற போராட்டம் நடத்தவும் அன்னும்திருகுணா அது பேச்சு சுதந்திரம் இல்லையா ??
*************************************************************************************************
அட எனதருமை படிச்ச அறிவாளியே … ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் ..
இப்படி அறிவாளித்தனமா பேசுவதற்கு முன்னாடி , போராட்டம் நடந்ததன் பின்னனி தெரிஞ்சு வச்சிட்டு பேசனும். இந்த போராட்டதிற்கு உங்களது இந்த சுதந்திர அரசாங்கம் எந்த விதமான அனுமதியும் தரவில்லை. தடையை மீறித் தான் போராட்டம் நடை பெற்றது.
உண்மையிலேயே நீ சரியான ஆளாக இருந்தால் .. இந்த சுதந்திரம் போலி சுதந்திரம் என்பதை இதில் இருந்தே தெரிந்து கொண்டிருப்பாய்.
ஆனால் சும்மா வெட்டிப் பெருமைக்கு பேசுபவனாக இருப்பவனாக இருந்தால் இன்னும் ஏதாவது நுரை நாட்டியம் பேசிக் கொண்டிருப்பாய்.
இதோ உன் வாயாலேயே தெரிந்து விட்டது இது போலி சுதந்திரம் என்று.
_____________________________________________________________________________________________________________
உங்க கம்முநிசம் நாடான சீனாவில் என்ன நடந்திருக்கும் தெர்யுமா ?? நீங்கள் வெளிபடையாக ஆலும் கட்சியின் அனைத்து பிரதமர்களையும் கொலைகார பட்டம் கொடுத்ததும் உங்களை யாரும் ஒன்னும் செய்யவில்லை ….இந்த சுதந்திரத்தை எந்த கம்முநிசம் நாடு கொடுக்கு சொல்லுங்க ???
************************************************************************************************
முதலில் வரலாறு படித்து விட்டு வினவு போன்ற தளங்களில் விவாதிக்க வரவும். இன்று சீனா ஒரு முதலாளித்துவ நாடு. சீனா ஒரு காலத்தில் உண்மையான கம்யூனிச நாடாக இருந்தது. அது தோழர். மாவோ காலத்தில். அங்கு அப்பொழுது இருந்த சுதந்திரத்தை பற்றி படித்துப் பார்த்து விட்டு வந்து கருத்து சொல்லவும். எதையும் பற்றி படிக்காமல் காது வழி வந்த செய்திகளை வைத்துக் கொண்டு பேசக் கூடாது. தோழர்.மாவோ வின் ஆட்சியில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களை மக்கள் விமர்சனம் செய்ய முழு உரிமை இருந்தது. அனைவரும் செய்யும் விமர்சனங்கள் மீது நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப் பட்டன. சீன வரலாற்றில் 1960 – 1974 வரையிலான மக்கள் வாழ்வு முறையைப் பற்றி உரிய புத்தகங்களில் படித்து விட்டு விவாதிக்க வரவும்.
********************************************************************************************
உங்கள் நக்சல் இயக்கத்தில் பேச்சு சுந்தந்திரம் இருக்கா என்ன வெறும் வீச்சு சுதந்திரம் தான்
——————————————————————-
அது என்ன பாஸ் வீச்சு சுதந்திரம் ?..
பேச்சு சுதந்திரம் இருக்கா?. என்று கேட்பதற்கு முன்னால் லெனின் எழுதிய உட்கட்சிப் போராட்டம் பற்றிய புத்தகங்களைப் படிக்கவும். அதில் கட்சி அமைப்பில் இருக்கும் கருத்து சுதந்திரம் தெரியும்.
நீங்க இன்னும் வளரனும் தம்பி..
நிறைய படிங்க .. கம்யூனிஸத்தை பற்றி முதலாளிகள் சொல்லக் கூடிய வாய்வழி அவதூறை நம்பி ஏமாறதிங்க .. படிச்சிட்டு விவாதத்திறு வாங்க .. நாம இன்னும் நிறைய பேசலாம்.
பின் குறிப்பு: என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறவும்.
To செங்கொடி மருது:
1. இந்த போராட்டதிற்கு உங்களது இந்த சுதந்திர அரசாங்கம் எந்த விதமான அனுமதியும் தரவில்லை. தடையை மீறித் தான் போராட்டம் நடை பெற்றது.
Brother I didn’t mean govt give you permission to do protest… I said if it’s any other country they will simply arrest your leader and few hundreds the day before the protest easily…and they won’t release them for few days or years … How about USA, China, Russia, Malaysia, Singapore…etc…Etc. then why India is so much different from any other country in the world? Is this is not enough for u? You want govt to happily allow you to protest in Independence Day?? Answer me Is there any freedom or democracy or human rights or enquiry or free trial in Naxal Policy??
——————————————————-
2. முதலில் வரலாறு படித்து விட்டு வினவு போன்ற தளங்களில் விவாதிக்க வரவும். இன்று சீனா ஒரு முதலாளித்துவ நாடு. சீனா ஒரு காலத்தில் உண்மையான கம்யூனிச நாடாக இருந்தது. அது தோழர். மாவோ காலத்தில். அங்கு அப்பொழுது இருந்த சுதந்திரத்தை பற்றி படித்துப் பார்த்து விட்டு வந்து கருத்து சொல்லவும். எதையும் பற்றி படிக்காமல் காது வழி வந்த செய்திகளை வைத்துக் கொண்டு பேசக் கூடாது.
You know one proverb in tamil “நிறை குடம் நீர் ததும்பாது” by saying your slef genius and other as stupid is not going to prove you genius.
As you ask i say here… What?? You mean china?? I personally went to china many times (even i know little bit mandarin) …I spoken to many Chinese…and attend many seminars about china … Few years back china was fully communist….after understood communism is failed policy which created huge poverty in china and unemployment then only the communist govt give us the useless communism and alter that ….now they are not capitalist and not fully commnist… now they are second biggest economy in the world…they created millions of jobs and they reduced povery very much … of course i am not saying chinses way is correct. They are crushing people like anything. But much better than what they did when they are fully communist …these is what most of the Chinese people saying and experts (not me) saying…. you just studied biased communist books and talking like you the genius of the world….
So me any one country which succeed because of communism or any state in India?
—————————
3. லெனின் எழுதிய உட்கட்சிப் போராட்டம் பற்றிய புத்தகங்களைப் படிக்கவும். அதில் கட்சி அமைப்பில் இருக்கும் கருத்து சுதந்திரம் தெரியும்.
Thiruvalluar also wrote very good philosophy to tamilans are we all following now? ..anyway When Lenin wrote communism philosophy the world was different… the market was monopoly…no transparency in the market… no media to report atrocities of capitalist … no globalisation and its can be called “slaves age”….. that philosophy mostly not valid now… other why Russia now begging for investments from the world ?? I know you will refuse to agree…
Simply answer why communist countries and states are giving up communism and turing around ?? Because they understood communism wont work … Is it ?
Brother I didn’t mean govt give you permission to do protest… I said if it’s any other country they will simply arrest your leader and few hundreds the day before the protest easily…and they won’t release them for few days or years …
How about USA, China, Russia, Malaysia, Singapore…etc…Etc. then why India is so much different from any other country in the world? Is this is not enough for u? You want govt to happily allow you to protest in Independence Day??
அப்படியா ?.. எந்த நாட்டில் அப்படி நிகழ்ந்திருக்கிறது இந்தியாவைத் தவிர ?..
ஒரு சான்றை கூறவும். தமிழகத்தில் செம்மொழி மா நாட்டிற்கு எதிராக போஸ்ட்டர் ஒட்டியவனைக் கூட கைது செய்தனரே ?.. மாநாட்டிற்கு முந்தைய நாளே போராட்டம் அறிவிக்காத பல தலைவர்களையும்!!?!! கைது செய்தது உங்கள் சன நாயக அரசு .. அன்றைக்கு மட்டும் உங்கள் நாடு அமெரிக்காவாக மாறியிருந்ததா ?. முட்டாளே .. உங்கள் அரசாங்கத்தை எதிர்த்து இந்த போராட்டம் என்றால் அதை அந்த அரசாங்கம் அனுமதிக்காது என்றால் எங்கு வாழ்கிறது சனநாயகம் ?.. வாழ்க இந்தியனின் சனநாயகம்..
****************************************************************************************************
Answer me Is there any freedom or democracy or human rights or enquiry or free trial in Naxal Policy??
மனித உரிமைகள் , சன நாயகம் , விசாரனை, பிரி டிரையல் எல்லாம் உண்டு உழைப்பவர்களுக்கு மட்டும். உட்கார்ந்து தின்னும் , கந்து வட்டி வாங்கி முழுங்கும் முண்டக் கலப்பைகளுக்கு கொடுஞ்சிறை தான் உண்டு.. உனக்கு எப்படி வசதி ?..
———————————————————————————————————————————–You know one proverb in tamil “நிறை குடம் நீர் ததும்பாது” by saying your slef genius and other as stupid is not going to prove you genius.
As you ask i say here… What?? You mean china?? I personally went to china many times (even i know little bit mandarin) …I spoken to many Chinese…and attend many seminars about china … Few years back china was fully communist….after understood communism is failed policy which created huge poverty in china and unemployment then only the communist govt give us the useless communism and alter that ….now they are not capitalist and not fully commnist… now they are second biggest economy in the world…they created millions of jobs and they reduced povery very much … of course i am not saying chinses way is correct. They are crushing people like anything. But much better than what they did when they are fully communist …these is what most of the Chinese people saying and experts (not me) saying…. you just studied biased communist books and talking like you the genius of the world….
So me any one country which succeed because of communism or any state in India?
————————————————————————————————————————————————————-
சரி தெளிவாக சொல். சீனாவில் கம்யூனிஸம் இல்லை என்பதை ஒத்துக் கொண்டு விட்டாய்.. முதலாளித்துவம் அங்கு ஆட்சி செய்கிறது என்கிறாய்?.. கொஞ்ச நாளைக்கு முன் இட்ட பதிவில் அங்கு இன்றும் மக்கள் கஸ்ட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்றாய் .. மக்களின் கஸ்ட்டதிற்கு காரணம் முதலாளித்துவம் தானே ?..
சீனாவிலும், ரஸ்யாவிலும் உண்மையான கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் காலத்தில் தான் மக்கள் சிறப்பாக வாழ்ந்தார்கள். உழைக்கும் மக்களுக்கான சுதந்திரம் அங்கு இருந்தது. திரிபுவாதிகளின் ஆட்சியில் தான் வீழ்ச்சி ஆரம்பமானது.
ஸ்டாலின், மாவோ போன்றவர்களின் ஆட்சி காலத்தில் என்ன நடந்தது என்று படித்துப் பார். கம்யூனிஸ்ட்டுக்கள் எழுதிய புத்தகங்களை அல்ல. அமெரிக்க , இன்கிலாந்து நாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்துப் பார். பிறகு இங்கு வந்து கம்யூனிசத்தை நொல்லை சொல்லலாம்.மீண்டும் சொல்கிறேன் .. படிக்காமல் பேசாதே ..
—————————————————————————————******************************************************************** Thiruvalluar also wrote very good philosophy to tamilans are we all following now? ..anyway When Lenin wrote communism philosophy the world was different… the market was monopoly…no transparency in the market… no media to report atrocities of capitalist … no globalisation and its can be called “slaves age”….. that philosophy mostly not valid now… other why Russia now begging for investments from the world ?? I know you will refuse to agree…
————————————————————————————————————————
கொடுமைடா சாமி … தம்பி நீ கம்யூனிஸ புத்தகங்களை முகர்ந்தாவது பார்த்து விட்டு வந்து பேசு .. விவாதிக்கலாம். சும்மா எதோ ஒரு முட்டாள் கம்யூனிஸம் சரி இல்லை என்று கூறியதை வைத்துக் கொண்டு அது அன்றைக்கு சரியான தத்துவம் இன்றைக்கு சரியில்லாதது என்று கூறாதே .. நீயே படி .. படித்து விட்டு விவாதி.. உனக்கு மதிப்பளித்து பதில் தர தயார்.
உனக்கு யார் கூறினார்கள் ?.. இப்பொழுது ரஸ்யா மற்ற நாடுகளிடம் பிச்சை எடுக்கிறது என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று ?. முதலாளித்துவத்திற்கு மாறிய ஓனாய்கள் பிச்சை எடுப்பது தெரிந்த விசயம் தானே ?.. ரசியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முதலாளித்துவத்தின் சாயல் விழுந்து விட்டது. அன்றிலிருந்து இன்று வரை மக்களின் வாழ்க்கை கஸ்ட்டத்திற்கு குறைவில்லாமல் போய்கொண்டிருக்கிறது.
***************************************************************************************************************************************
Simply answer why communist countries and states are giving up communism and turing around ?? Because they understood communism wont work … Is it ?
கம்யூனிஸ நாடுகளில் ரசியாவில் 1920 முதல் 1952 வரையிலான அரசை பார். சீனாவில் 1950 முதல் 1974 வரையிலான அரசைப் பார். அங்கு மக்களின் வாழ்வு முறையை படி. அதன் பிறகு வந்த முட்டாள்கள் தனது சுயநலத்திற்காக பொருளாதார முறையை மாற்றியதன் பொருட்டே அங்கு மக்கள் வறுமையை தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது. வரலாற்றை படி … நீ இந்திய வரலாற்றைப் படிப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் போது எங்கே ரஸிய வரலாற்றையும் , சீன வரலாற்றையும் படித்திருக்க போகிறாய் ?.. விக்கிபீடியாவில் படித்து விட்டு உளற வேண்டாம்.
///ஆனால் வருசா வருஷம் ரயில்வே உழியர்களின் கவனக்குறைவால் பல ஆயிரம் பேர் சாவுராணுக …///
நாட்டில் பொட்டி தட்டுவோரின், மிடில் கிளாஸ் மாதவன்களின் கவனக்குறைவால், ச் சீ தப்பு, சினிமா, கிரிக்கெட் மீதான அதீத கவனத்தால், நுகர்வு மோகத்தால் என்ன என்ன எழவெல்லாம் நடக்குது?
23,000 பேர் வீட்டுல எழவு விழுந்ததுக்கு கோவம் வரல, 2லட்சம் விவசாயிகளின் வீட்டில் எழவு விழுந்ததுக்கு கோவம் வரலை, இதெல்லாம் தொடந்து நடந்துகிட்டே இருக்கிற இந்த அமைப்பின் மேல கோவம் வரலை, ரோசம் வரலை! சும்மா நொல்லைக்கு ரயில் அது இதுன்னு கதை விட்டால்????
சரி நாங்க நம்பிட்டோம்! உங்களுக்கு ’உண்மையிலேயே’ நாட்டு பற்று இருக்கிறது, அதிகம் இருக்கிறது! 🙂
உங்களை போன்ற தேசப்பற்றாளர்களுக்கு தான் திரும்ப திரும்ப சொல்லிவருகிறேன், நீங்கள் எங்கள் அமைப்புகளில் சேர வேண்டாம்.
குறைந்த பட்சம் உங்கள் கருத்துகளை, கொள்கைகளையாவது மக்களிடம் கொண்டு சேர்க்க, மக்கள் எங்கள் கருத்துகளை கேட்டு ‘கெட்டுப்போகாமல்’ காப்பாற்ற, தெருவிலிறங்கி பிரச்சாரம் செய்யலாமே???
அண்ணே …. இத போல விபத்துக்கள் மிகவும் கண்டிக வேண்டியதுதான் , இதற்கு கவன குறைவாக இருத்த அனைவரையும் தண்டிக்கவேண்டும் தான் ….
ஆனால் எதுக்கு இப்படி பல எழவுகள பத்தியே இந்த சுதந்திர நாள் அன்று பேசுறீங்க …. வேற நாள பண்ணலாமில்ல ? மக்களுக்கு இதனால உங்க மேல வெறுப்பு தான் வரும் ….. ஏன் இந்தியாவுல கம்முநிசும் சாவுது ? அத பின்பற்றின மேற்கு வங்கமும் மாவ்சிஸ்ட் நாச வேலைகளால் வீன்னாகி கொண்டு இருக்கு …
எழவ பத்தி எழவடுத்த நாள்ல தானே பேச முடியும்?
அதவுட்டுட்டு மத்த எல்லா நாள்லயுமா புலம்புவீங்க?? டவுட்டு!!!
சுதந்திர தினம் ன்னு உங்களுக்கு தான் ரோசம்!
எங்கள் முழக்கங்களையும் பேனர்களையும் பார்த்த மக்கள் யாரும் முகம் சுழிக்கவில்லை!
பிரச்சாரத்துக்கோ, போராட்டத்துக்கோ தான் தெருவுக்கு வர்ரதில்லை! சரி….
இத பத்தி கருத்து கேட்க்கவாவது மக்களிடம் போகலாமே??
இந்தியா, இந்தியன் என்ற பெயரில் நாட்டை கூறு போட்டு விற்றுக்கொண்டிருந்தால், அதில் நமக்கும் பங்கு வருமா என்று எதிர்பார்ப்பவர்கள் வேண்டுமானால் சுதந்திரம், நாட்டு பற்று என்று சலாம் போடலாம்! போடுகிறார்கள்…
நாங்கள் அதை போலி சுதந்திரம் என்றும் போலி நாட்டுப்பற்று என்றும் அம்பலப்படுத்தவே செய்வோம், செய்கிறோம்!
யாராவது கழிந்து வைத்தால், நாங்கள் அதை சுத்தம் செய் என்கிறோம்! சில இடங்களில் சுத்தம் செய்கிறோம்!
நாங்களோ, திப்பு, மருது, பகத்சிங் கின் வாரிசுகள்!!!
நீங்களோ, ஒரு புறம் முகம் சுழித்துக்கொண்டும் மறுபுறம் அதன் அழகை ரசித்துக்கொண்டும், அதன் அற்புதத்தை சிலாகித்துக்கொண்டும் இருக்கிறீர்கள்…
ம்ம் என்ன செய்வது! நீங்கள் மகா………………..ஆத்துமாவின் பேரன்களாச்சே!
அய்யா நல்லவனுகளா … இது எனவோ சரி தான் பலரை கொன்ற விபத்துக்கு தண்டை சரிஇல்லை … அமைதியான வழியில் உங்கள் போராட்டம் பாராட்ட வேண்டியது தான் …
ஆனால் வருசா வருஷம் ரயில்வே உழியர்களின் கவனக்குறைவால் பல ஆயிரம் பேர் சாவுராணுக ….ஏன் இந்த ரயில்வே union நை எதிர்த்து போராடுவது ?? ஏதோ முதலாளிங்க மட்டும் தான் கெட்டவங்க போலவும் தொழிலாளிங்க எல்லாம் தியாகி போலவும் பேசுவது வேடிக்கையா இருக்கு ………………………………………………………………………………………
அன்பு இந்தியனுக்கு .. உங்களுக்கு எதாவது மல்டிப்பில் பெர்சனாலிட்டி டிஸார்டர் பிரச்சனையா ?.. முந்தைய பதிவில் சுதந்திர தினத்தில் போராட்டம் எதுக்கு ?.. அப்படின்னு கேட்டீங்க .. இப்போ என்னடானா.. போராட்டம் பாராட்ட வேண்டியது தான்னு சொல்லுறீங்க ?.. என்ன கொடுமை சார் இது ?..
தவிர .. மீண்டும் கூறுகிறேன். போபால் விபத்து அல்ல .. இலாப நோக்கத்துக்காக செய்யப்பட்ட படுகொலை .. இரயில்வேயில் இதைப் போல இலாப நோக்கத்திற்காக் படுகொலை ஏதாவது இருந்திருந்தால் சொல்லுங்கள் ஐயா .. போராட நாங்கள் தயார் .. ஆனாலும் தக்காளி நீங்கள் இணையத்தில் இருந்து நீலிக் கண்ணீர் தான் வடிப்பீர்கள் . சுதந்திர நாளில் போராடக் கூடாது என்பீர்கள் . சிவப்புக் கொடி பிடிக்கக்கூடாது என்பீர்கள். கடைசியில் பின்னொரு பதிவில் இரயில்வே எதிர்த்து போராட்டத்தை பாராட்ட வேண்டியது தான் .. ஆனாலும் விமானத்துறையில் பிரச்சனையை எதிர்த்து நீங்கள் போராட்டம் நடத்துங்கள் பார்போம் என்று கூறுவீரே ஒழிய போராட்டத்தின் பிண்ணனி என்ன ?.. அதில் உள்ள மக்கள் பிரச்சனை என்ன?. என்று யோசிக்க மாட்டீர்கள் இல்லையா ?..
****************************************************************************************
விணனுக்கு கேள்வி ….
1 . இந்திர காந்தி , ராஜீவ் காந்தி , சோனியா காந்தி எல்லாம் கெட்டவங்க சரி அதுக்கு எது இந்தியாவ கேவலபடுதுறீங்க ??? என்ன அவர்கள் இந்த நாடு ராஜாவா என்ன ??
______________________________________________————————————————————————–
இந்தியாவை யார் கேவலப் படுத்தியது .. ’இந்தியா ஒழிக’னு அங்க எதாச்சும் பேனர் இருந்துச்சா ?.. உன் காமெடிக்கு அளவில்லையப்பா ..
*********************************************************************
2 . சுதந்திர நாள் எனபது நாட்டிற்காக தியாகம் செய்த தியாகிகளுக்கு மரியாதையை செலுத்துவது …ஒன்னும் ராஜீவ் காந்திக்கோ , சோனியா காந்திக்கோ இல்ல …உங்க போராட்டம் ஏன் இந்த விடுதலை தியாகிகளை கேவலபடுதுவதாக இருக்கு ?? வேற நாளே இல்லையா போராட்டம் பண்ண ??
———————————————————————————————————–
அப்படியா ?.. நாங்களும் தியாகிகளுக்கு மரியாதை செய்பவர்கள் தான் .. பகத் சிங் எங்களின் முன் மாதிரி. சின்ன மருது பெரிய மருது ,திப்பு , கட்டபொம்மன் என அனைவரையும் உயர்த்திப்பிடிப்பவர்கள் தாம். ஜாலியன் வாலபாக் படுகொலையை எதிர்த்து பகத்சிங் தனது அரசியல் வாழ்வை
ஆரம்பித்தார். போபால் நிகழ்வை எதிர்த்து எங்கள் போராட்டங்களும் அப்படியே ?.. ஜாலியன் வாலாபாக் என்பது விபத்து என்று சொன்னால் சரி என்று காந்திய வாதிகளான படித்த “அறிவாளிகள்??” நீங்கள் வேண்டுமானால் ஒத்துக் கொள்ளலாம். பகத் சிங்கின் வாரிசான நாங்கள் ஒத்துக் கொள்ள முடியாது. போராட்டம் நடத்துவோம். ஜாலியன் வாலாபாக்கும் போபாலும் எங்களுக்கு வேறு வேறு அல்ல. உண்மையான் சுதந்திரப் போராட்ட தியாகிகள் இன்று இருந்திருந்தால் இந்த சுதந்திர தினத்தில் எமது போராட்டத்தில் பங்கேற்றிருப்பார்கள்.
****************************************************************************************************
3 . நீங்கள் ரொம்ப அழகா மக்கள் எல்லாம் நீங்க சொல்லுறத அப்படியே கேட்டு உங்க இயக்கத்துல சேருவதா சொல்லுறீங்க …. இவளவு நியாயம் பேசும் நீங்கள் உங்கள் கருத்தை கூறி தேர்தலில் நின்னு நாட்டை மக்கள் அனுமதியுடன் …ஜனநாயக முறையில் மாத்துவது தான ??? என்ன நீங்களும் இந்தியர் தான ? சோனியா மட்டுமா ?
——————————————————————————————————————–
சுதந்திரம் என்றால் என்ன என்று தெரியாமல் சுதந்திர தினத்தன்று போடும் சிறப்பு திரைப்படங்களையும் , தொப்புளாட்ட நடிகைகளின் பேட்டியையும் ரசிக்கும் நடுத்தரவர்க்க கனவானே …
தம்பி.. இதற்கான பதிலை உனக்கு போன கேள்வியிலே சொல்லி விட்டேன். நாங்கள் பகத் சிங் வழியில் வந்தவர்கள். துரோகி காந்தியின் வழியில் வந்தவர்கள் அல்ல.
விடுதலை அடையும் முன்பிருந்தே இந்த காங்கிரஸ் துரோகிகள் வெள்ளைக்காரனின் அரசில் பங்கேற்றிருந்திருக்கிறார்கள் என்பது சுதந்திரப் போராட்ட வரலாற்றை பாடப் புத்தகத்தை தவிர்த்து மற்ற புத்தகத்திலும் படித்தவர்களுக்கு தெரியும். உங்களைப் போன்ற பாடப்புத்தகத்தை படித்த ”அறிவாளிகளுக்கு” தெரிந்திருக்க வாய்ப்பில்லை. போய் படியுங்கள். வெள்ளைக்காரன் ஆட்சியின் தொடர்ச்சியாக அதே முறையில் மக்களை சுரண்டும் இந்த போலி ஜன் நாயக முறையில் தேர்தலில் நிற்பதில் எமக்கு ஏற்பில்லை. உழைக்கும் மக்களுக்கான எமது தீர்வு புரட்சிகர அரசியலே. இந்த அமைப்பிற்கு வருபவர்கள் , அரசியல் கொள்கையை பார்த்து வருபவர்கள். பணத்திற்கோ பதவிக்கோ ஆசைப்பட்டு வருவதாக இருந்தால் நீங்கள் சொன்னது போல தேர்தலில் நின்று பெரிய பெரிய கம்பேனி முதலாளிகளிடம் வாங்கித் தின்று மக்களுக்கு துரோகம் செய்து வயிறு வளர்க்கலாம். உழைக்கும் மக்களுக்காக உண்மையாக உழைக்கக்கூடியவர் எவராலும் இந்த போலி ஜனநாயக முறையில் ஐக்கியமாக முடியாது.
****************************************************************************************************
நீங்கள் என்ன கத்தினாலும் மக்கள் உங்களுக்கு அதரவு கொடுக்கமாட்டாங்க …. நீங்க சம்மந்தம் இல்லாம போபால் விபத்தையும் சுதந்திர தின நாளும் உங்கள் சூய விளம்பரத்துக்காக பயன் படுத்துறீங்க நு ஸ்கூல் பயனும் சொல்லுவிடுவான் …
உடனே நா என்னவோ போபால் விபத்தை பெரிதாக எதுகவில்லை என்று உளறவேண்டாம் … நான் உங்களை போல அதை cheap popularity காக பயன்படுத்த மாடேன் ..
Happy Independence day !!! Long Live india !!
——————————————————————————————————————————–
உண்மையிலேயே ரொம்பவும் உணச்சிப்பூர்வமா … ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் பாடலைக் கேட்டு மயிர் சிலிர்க்கும் இந்தியன் அவர்களே .. மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன் போபால் விபத்து அல்ல படுகொலை. உங்களைப் பொறுத்தவரை இணையத்தில் உட்க்கார்ந்து கொண்டு உணர்ச்சியற்ற கண்ணீரை (மூத்திரத்தை) தட்டச்சு செய்யும் மனிதர்கள் தான் மக்கள் என்றால் அப்படிப்பட்டவன் இந்த அமைப்பிற்கு தேவையில்லை. எங்களைப் பொறுத்தவரை. அன்றாடம் கஸ்ட்டப்படும் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் தான் மக்கள். அவர்கள் சரம் சரமாக அமைப்பை நோக்கி வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் ஜெயா டி.வி.யில் காலையில் ஜோசியம் சொல்லுவதற்கு வேண்டுமானால் விண்ணப்பித்து பாருங்கள். வேலை கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது உங்கள் பதிவில்.
To செங்கொடி மருது :: Sorry have to type more…so no i type in english (may be bad english 🙂 )
1. இந்தியாவை யார் கேவலப் படுத்தியது .. ’இந்தியா ஒழிக’னு அங்க எதாச்சும் பேனர் இருந்துச்சா ?.. உன் காமெடிக்கு அளவில்லையப்பா .. பகத் சிங் எங்களின் முன் மாதிரி. சின்ன மருது பெரிய மருது ,திப்பு , கட்டபொம்மன்
You said you love Bahat Sing, Mardu…etc then…by protesting against freedom day means your are insulting those freedom fighters too..
———-
2. சுதந்திரம் என்றால் என்ன என்று தெரியாமல் சுதந்திர தினத்தன்று போடும் சிறப்பு திரைப்படங்களையும் , தொப்புளாட்ட நடிகைகளின் பேட்டியையும் ரசிக்கும் நடுத்தரவர்க்க கனவானே …
Another extremist imagination … 🙂 ..dont think all are same…
————
3. பணத்திற்கோ பதவிக்கோ ஆசைப்பட்டு வருவதாக இருந்தால் நீங்கள் சொன்னது போல தேர்தலில் நின்று பெரிய பெரிய கம்பேனி முதலாளிகளிடம் வாங்கித் தின்று மக்களுக்கு துரோகம் செய்து வயிறு வளர்க்கலாம்…
So your party wont participate in election ? then how can you represent people ? So you agree even you get a political post you too will corrupt like others ??? In india Majority Vs Minority (not religion)….while majority keep silent some minority group make huge noise and think they are winners…. because you have few thousands of supports you cant say people support you…… You must participate in election and only when majority people elect you then only you have the rights to represent people…. there are millions of small groups in india (same like your) with different policy ….every one have their own different policy… PEOPLE KNOW WHO IS THE BETTER LEADER TO RULE A COUNTRY…
——————–
4. மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன் போபால் விபத்து அல்ல படுகொலை. உங்களைப் பொறுத்தவரை இணையத்தில் உட்க்கார்ந்து கொண்டு உணர்ச்சியற்ற கண்ணீரை (மூத்திரத்தை) தட்டச்சு செய்யும் மனிதர்கள் …
Every one agrees the ignorance of these Bhopal tragedy should be severely punished and the people who affected should be the first priority to us to help….. but if you say its planned murder ….hats off for your fiction story… First learn to type in a decent manner dont talk rubbish like Urine, shit …etc
You said you love Bahat Sing, Mardu…etc then…by protesting against freedom day means your are insulting those freedom fighters too..
——————————————————————————————————-
இது போன்ற கற்பனை உலகில் இருந்து வெளியே வாரும் .. சுதந்திரம் இங்கே யாருக்கு என்ற கேள்வி தான் இங்கு உமது முன்னால் வைக்கப் பட்டுள்ளது.
வீரன் திப்பு , கட்டபொம்மன்,மருது சகோதரர்கள் , மாவீரன் பகத் சிங்
போன்றோரின் விடுதலைப் போராட்டம் நாள் கிழமை பார்த்தா இருந்தது ?.. இன்று அவர்கள் இருந்திருந்தால் காறி உமிழ்ந்திருப்பார்கள் .. உன் நாட்டின் மீதும், அதன் ஜனநாயகத்தின் மீதும்.
வரலாற்றைப் படித்து விட்டு வா ..
உன்னைப் போன்ற சமரசம் பேசும் காங்கிரசும், சொட்டைக் காந்தியும் சேர்ந்து சுதந்திரம் என்ற பெயரில் அதிகாரத்தை வெள்ளைக்காரனிடம் இருந்து இங்கு உள்ள மாமா முதலாளிகளின் கையில் ஒப்படைத்ததற்கு பெயர் தான் சுதந்திரமா ?.. முட்டாள்தனமாக பாட புத்தகத்தை மட்டும் படித்து விட்டு உளறாதே .. உண்மையான சுதந்திரம் கிடைத்து இருந்தால் நாங்கள் ஏன் போராடப் போகிறோம்?.. போலி சுதந்திர நாளில் போராடாமல் கொண்டாடவா முடியும் ?..
———————————————————————————————————————————————
Another extremist imagination … ..dont think all are same…
————
சரி நீங்கள் எப்படி நடிகர்களின் தொப்புளாட்டத்தை பார்ப்பீர்களா ?.. சுதந்திர தினத்தில் என்ன செய்தீர் என்பதை சிறிது இங்கு கூற முடியுமா ?..
—————————————————————————————————————————————————————–
So your party wont participate in election ? then how can you represent people ?
அதைத் தான் கூறி விட்டேனே .. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் வழி ..
So you agree even you get a political post you too will corrupt like others ???
நரித்தனமான புரிதல் மூளை உமக்கு ..
இன்று இருக்கக் கூடிய போலிக் கம்யூனிஸ்ட்டுகளும் , மற்ற ஓட்டுப் பொறுக்கிகளும் செய்வதை எடுத்துக் கூறினால் , குதர்க்கமாக நரித்தன மூளையை காட்டுகிறாயே?..
In india Majority Vs Minority (not religion)….while majority keep silent some minority group make huge noise and think they are winners…. because you have few thousands of supports you cant say people support you…… You must participate in election and only when majority people elect you then only you have the rights to represent people…. there are millions of small groups in india (same like your) with different policy ….every one have their own different policy…
அந்த மெஜாரிட்டி என்ன மயிற்றிற்கு அமைதியாக உள்ளது. தன் பக்கத்தில் தவறில்லை என்றால் உங்கள் மெஜாரிட்டியை பேசச் சொல். எனக்கு எதுவுமே தெரியாது என்று ப.சிதம்பரம் சொல்கிறானே ?.. அவனை இந்த ஜனநாயக நாட்டின் உள்துறை அமைச்சராக ஏற்றுக் கொண்டுள்ள உன்னை எந்த இனத்தில் நான் சேர்க்க ?..
மெஜாரிட்டியான உன்னால் எந்த போராட்டத்தில் வெற்றி பெற முடிந்தது ?.. இவ்வளவு பேசுகிறாயே ?.. நீ இது வரை எதாவது ஒரு விசயத்திற்காவாவது போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறாயா ?. முதலில் உன் மனசாட்ச்சியைத் தொட்டு சொல் . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப் போட்டாயா ?.. அப்படியெனில் யாருக்கு ஓட்டுப் போட்டாய் ?.. அது இரகசியம் என்று சொல்லாதே .. கட்சி பெயரை மட்டும் சொல் .. நாம் விவாதிக்கலாம். இல்லை எந்த கட்சிக்கு ஓட்டுப் போடலாம் என்று சொல். இந்த போலி ஜனநாயக முறையில் ஒரு மயி**யும் புடுங்க முடியாது .. ஒட்டுமொத்த மக்களுக்கான மாற்றம் தேவை. அது நக்சல்பாரிகளால் மட்டுமே முடியும். பல பேர் பல விதமான கொள்கைகள் வைத்திருந்தாலும் நக்சல்பாரி அமைப்புகள் அனைவரின் கொள்கையுமே பாட்டாளி மக்களின் புரட்சிகர அரசாங்கமே ..
***********************************************************************************************************************************************
PEOPLE KNOW WHO IS THE BETTER LEADER TO RULE A COUNTRY…
சரி .. நீயும் அந்த மக்களில் ஒருவன் தானே .. நீயே சொல். யாரு இன்னைக்கு இருக்குற அரசியல்வாதிகளில் நல்ல தலைவன் ?.. சொல்லு ராசா ?..
மன்மோகன் சிங்கா ?.. ப.சிதம்பரமா ?.. சோனியாவா ?.. வாஜ்பாயா ? .. அத்வானியா?. , நரேந்திர மோடியா ?.., கருனா நிதியா , செயலலிதாவா , விசயகாந்தா , ஜே.கே.ரித்தீஸா ?..
——————————————————————————————————————————–
——————–
Every one agrees the ignorance of these Bhopal tragedy should be severely punished and the people who affected should be the first priority to us to help…..
மக்கள் ஒத்துக் கொண்டு என்ன ஆகப் போகிறது ?.. இருபத்தாறு ஆண்டுகளாக நீங்கள் ஒத்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள் .. என்ன நடந்திருக்கிறது அந்த மக்களுக்கு ?.. அவர்களும் இருபத்தாறு ஆண்டாக
போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.. என்ன நீதி கிடைத்து விட்டது?.. உங்களது ஃபர்ஸ்ட் பிரியாரிட்டியே இருபத்தாறு ஆண்டாக இழுத்தடிக்கிறது என்றால் மற்ற பிரியாரிட்டிக்கள் முடிக்க எத்தனை நூற்றாண்டு காத்திருக்க வேண்டும் ?.
———————————————————————————————————————————————————————————————————-
but if you say its planned murder ….hats off for your fiction story… First learn to type in a decent manner dont talk rubbish like Urine, shit …etc
1982 இல் இருந்தே அங்கு இயக்கப் படும் ஆலையில் சரியான பாதுகாப்பு இல்லை என்று பாதுகாப்பு கூட்டப் பட வேண்டிய இடங்கள் என்று ௪௦ இடங்களை சுட்டிக் காட்டி இருந்திருக்கிறது ஒரு அமேரிக்க கம்பெனி. ஆனால் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் பாதுகாப்பு கருவிகளை மாற்றாமல் , பழுதான பாதுகாப்பு கருவிகளை சரி செய்யாமல் விட்ட அயோகியத்தனத்தை விபத்து என்று சொல்லுவாயா ?.. மெதில் ஐச