Wednesday, March 29, 2023
முகப்புஎவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?
Array

எவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?

-

யாரங்கே?
டௌ கெமிக்கல்சை எதிர்த்து சவுண்டு கொடுப்பவன் எவன்?

முதலில் இந்த வீடியோவை பாருங்கள்

வெறி கொண்ட வலதுசாரி சானலான டைம்ஸ் நௌவுக்கே பொறுக்க முடியவில்லையா? அல்லது தனது கோர முகத்தை மறைத்துக் கொள்ள அந்த தொலைக்காட்சிக்கு இப்படி ஒரு அமெரிக்க எதிர்ப்பு சவடால் தேவைப்பட்டதா, தெரியவில்லை. அடேங்கப்பா, அமெரிக்க அரசை அம்பலப்படுத்தி விட்டது டைம்ஸ் நௌ.

விசயத்துக்கு வருவோம். இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள பறவைப்பார்வையில் சில விவரங்கள்.

போபால் நீதிமன்றம் கேசவ் மகிந்திராவை ஜாமீனில் விட்டதைத் தொடர்ந்து மறுபிறவி எடுத்த போபால் பிரச்சினையைக் கேள்விப்பட்டு, துணுக்குற்றுப்போன நமது பிரதமர் “யாரங்கே, போபால் வழக்கில் என்ன நடந்தது என்ற ரிப்போர்ட் பத்து நாளில் என் டேபிளுக்கு வரவேண்டும்” என்று உத்தரவிட்டு அமைச்சர் குழுவின் தலைவராக ப.சிதம்பரத்தையும் நியமித்தார். எட்டே நாளில் அறிக்கையை பிரதமரின் டேபிளுக்கு கொண்டுவந்தார் சிதம்பரம்.

இப்பேர்ப்பட்ட சுறுசுறுப்புக்கு காரணம் என்ன? இந்தோ அமெரிக்கன் சி.இ.ஓ ஃபோரம் அமெரிக்காவில் கூட இருந்தது. போபால் பிரச்சினை குறித்த இந்திய அரசின் அதிகாரபூர்வமான முடிவை, அந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே அறிவிக்காவிட்டால் அமெரிக்க முதலாளிகள் அப்பிரச்சினையை அந்தக் கூட்டத்தில் கிளப்புவார்கள் என்பது இந்திய முதலாளிகளின் அச்சம்.

2001 இல் யூனியன் கார்பைடு நிறுவனத்தை டௌ கெமிக்கல்ஸ் வாங்கியது. 1984 இல் நடைபெற்ற விபத்து மற்றும் அதற்கான நிவாரணம் போன்றவையெல்லாம் யூனியன் கார்பைடுடன் முடிந்த்து. அதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பது டௌ கெமிக்கல்சின் முதல் வாதம்.

போபாலில் யூனியன் கார்பைடு ஆலை அமைந்துள்ள நிலம் அரசுக்கு சொந்தமானது. அது யூனியன் கார்பைடுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தை யூனியன் கார்பைடு ம.பி அரசிடம் ஒப்படைத்து விட்டதால், அங்கே குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான டன் இரசாயனக் கழிவுகளைச் சுத்தம் செய்வதும் (இதற்கான உத்தேச செலவு 150 கோடி ரூபாய்) அந்தக் கழிவுகளை வேறு எங்காவது கொண்டு சென்று அப்புறப்படுத்துவதும் தன்னுடைய பொறுப்பல்ல, ம.பி அரசின் பொறுப்புதான் என்பது டௌவின் இரண்டாவது வாதம்.

போபாலில் யூனியன் கார்பைடு ஒரு மருத்துவமனையை நடத்தி வருகிறது. அந்த மருத்துவமனையை நடத்தும் செலவுக்கும் தான் பொறுப்பேற்க இயலாது. அதையும் அரசாங்கம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது டௌ கெமிக்கல்சின் மூன்றாவது வாதம்.

“கூடுதல் நட்ட ஈட்டை அரசே வழங்கும். ஆலையின் கழிவுகளை அரசே சுத்தம் செய்யும். மருத்துவமனையை அரசே ஏற்று நடத்தும்” இவை மூன்றும் மேற்கூறிய பிரச்சினைகளில் சிதம்பரம் தலைமையிலான குழு அறிவித்த முடிவுகள்.

இந்திய அரசின் தரப்பிலிருந்து டௌ கெமிக்கல்சுக்கு மனவருத்தம் ஏற்படுத்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. டௌ கெமிக்கல்சுக்கு எதிராக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல தனிநபர்கள் தொடுத்திருக்கும் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்வதற்கும் மன்மோகன் அரசு உறுதியாக மறுத்து வருகிறது. இப்படியெல்லாம் வழக்கு போட்டு தொந்திரவு செய்தால் அமெரிக்க முதலாளிகள் இந்தியாவில் மூலதனம் போடமாட்டார்கள் என்றும், அத்தகைய எல்லா வழக்குகளையும் மூட்டை கட்டிவிட வேண்டும் என்றும் ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோர் பிரதமருக்கு சிபாரிசு செய்திருக்கின்றனர்.

ஆக, டௌ வுக்கு எதிராக இந்திய அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பதே உண்மை. தனக்கெதிராக எந்தவித நடவடிக்கையும் இந்தியாவில் எடுக்கப்படாதபோது, டௌ வுக்கு ஏன் கோபம் வருகிறது? நடவடிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தனக்கு எதிராக இந்தியாவில் பேசுகிறார்களே அவர்கள் வாயையும் அடைக்கவேண்டும். அதுதான் டௌ எழுப்பும் பிரச்சினை.

போபால் பிரச்சினையை மையப்படுத்தி இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்று, போபால் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்ட மக்கள் 50 பேரை அழைத்து வந்து, சென்ற ஆண்டு சென்னையில் உள்ள டௌ கெமிக்கல்ஸ் அலுவலக வாயிலில் ஒரு போராட்டம் நடத்தியது. தனக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதையும் தனது தொழிலுக்கு இடையூறு விளைவிப்பதையும் தடுக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டௌ கெமிக்கல்ஸ் ஒரு மனு தாக்கல் செய்ததுடன், போராடியவர்கள் 20 இலட்சம் ரூபாய் நட்ட ஈடு தரவேண்டும் என்று வழக்கும் தொடுத்த்து. ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்காக இந்தியக் குடிமகனின் கருத்துரிமையைத் தடை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தார் நீதிபதி சந்துரு. மேல்முறையீடு செய்து அந்த தீர்ப்புக்கும் ஒரு தடையாணை வாங்கி வைத்திருக்கிறது டௌ கெமிக்கல்ஸ். இது போன வருசத்துக் கதை.

தற்போது நாடாளுமன்றத்தில் போபால் பற்றி நடந்த விவாதத்தில் பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜும், மார்க்சிஸ்டுகளும் கொஞ்சம் சவுண்டு கிளப்பினர். பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்டுகளின் சவுண்டு பற்றி அமெரிக்கா கவலைப்படுவதுமில்லை, கவலைப்படத் தேவையுமில்லை.

வேறு யார் “குரல்” எழுப்புவதைப் பற்றி அமெரிக்க அரசு மான்டேக் சிங் அலுவாலியாவிடம் கவலை தெரிவிக்கிறது? டௌ கெமிக்கல்சுக்கு எதிராக குரல் எழுப்புவதைக் கூட அமெரிக்க முதலீட்டாளர்களால் சகித்துக் கொள்ள இயலாது என்கிறார் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் துணைச் செயலர்.

அலுவாலியா பேசிய விசயம் உலகவங்கியிடம் கடன் வாங்குவது குறித்த பிரச்சினை. பேசியதோ பாதுகாப்புத் துறை துணைச்செயலரிடம். அவர் அளித்த பதிலோ அமெரிக்க கார்ப்பரேட் நிறவனங்களின் நலனை மட்டுமின்றி, இந்தியக் குடிமக்களின் ஜனநாயக உரிமையை நசுக்க கோருகிறது. அரசியல் வேறு, பொருளாதாரம் வேறு, இராணுவம் வேறு என்று கூறும் அறிஞர்களின் பார்வைக்கு இதனை சமர்ப்பிக்கிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களின் குமுறலை, இந்திய மக்களின் குரலை சித்தரிக்க அமெரிக்க அதிகாரி பயன்படுத்தும் வார்த்தையைக் கவனித்தீர்களா? NOISE!

போலி சுதந்திரம், மறுகாலனியாதிக்கம், அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொன்னால் உடனே முகம் சுளிக்கும் இந்திய யுப்பிகள் (yuppies) இதற்கென்ன சொல்வார்கள்? kewl dude…என்பார்களோ? அதை அர்னாப் கோஸ்வாமியிடம் சொல்லட்டும்.

ஆனானப்பட்ட அர்னாபுக்கே ஆத்திரம் வருகிறது என்றால் என்ன சொல்வது?

“டைம்ஸ்…. தே ஆர் சேஞ்சிங்..” என்ற பாப் டைலனின் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது.

_____________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. எவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது? | வினவு!…

    புரட்சி, மறுகாலனியாதிக்கம், போலி சுதந்திரம், அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொன்னால் உடனே முகம் சுளிக்கும் இந்திய யுப்பிகள் இதற்கென்ன சொல்வார்கள்? kewl dude …என்பார்களோ?…

  2. //“கூடுதல் நட்ட ஈட்டை அரசே வழங்கும். ஆலையின் கழிவுகளை அரசே சுத்தம் செய்யும். மருத்துவமனையை அரசே ஏற்று நடத்தும்” //

    கூடுதல நட்ட ஈடா? அத இப்போ உதவின்னு(AID) மாத்திடாங்க வினவு… கூடுதல் உதவின்னு அமெரிக்க எசமானர்களிடம் மண்டியிட்டு கேட்க பழகிக் கொள்ள வேண்டும்.

  3. சில நேரங்களில் சில மனிதர்கள்!

    என்ன செய்வது?
    இந்த உலகில் குப்பை கொட்ட, சிலவற்றை அனுசரித்துதான் செல்ல வேண்டியிரிக்கிறது!
    அது தான் அமெரிக்கா!

    இது நாயை நாய் திங்கும் உலகம்! நாம் பிழைக்க வேண்டும் எனில், பலசாலியை அண்டிதான் நடக்க வேண்டும்!

    புரட்சி, போராட்டம், எதிர்ப்பு என்று பிதற்றினால், நம்மை போட்டுத் தள்ளிவிடுவார்கள்! இலங்கையில் நடந்ததைப் போல்!

    இந்தோ – சீனோ பாய்! பாய்! கதை தெரியுமல்லவா? பஞ்ச சீலக் கொள்கையால், சீனா நம் முதுகில் குத்தியது மறந்துவிட்டதா?

    உலகமயமாக்கலுக்குப் பின்,நாம் தனித்து செயல் பட முடியாது! அமெரிக்காவை மிஞ்சினால், அடிபடுவோம்!
    இது தான் நிதர்சனம்!

    சில இழப்புகள், வலிக்கத்தான் செய்யும்! பொது பலன்களுக்காக சிலவற்றை நாம் மறக்கத்தான் வேண்டும்! இழப்பீடுகளை, இந்திய அரசு தன் கையில், இருந்து கொடுக்கத் தான் வேண்டும்!

    • //இது நாயை நாய் திங்கும் உலகம்! நாம் பிழைக்க வேண்டும் எனில், பலசாலியை அண்டிதான் நடக்க வேண்டும்!

      புரட்சி, போராட்டம், எதிர்ப்பு என்று பிதற்றினால், நம்மை போட்டுத் தள்ளிவிடுவார்கள்! இலங்கையில் நடந்ததைப் போல்!//

      ஓ.. இதே மாதிரிதான் நேபாளமும் அனுசரித்துச் சென்று தனது ஜனநாயகத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில் முன்னேறியதோ?

      ஏற்கனவே இந்திய மக்களில் பெரும்பகுதியினர் சொறிநாயைப் போல அடி வாங்கிக் கொண்டுதான் உள்ளனர். இவர் இந்தியா என்று யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை.

      • //சில இழப்புகள், வலிக்கத்தான் செய்யும்! பொது பலன்களுக்காக சிலவற்றை நாம் மறக்கத்தான் வேண்டும்! இழப்பீடுகளை, இந்திய அரசு தன் கையில், இருந்து கொடுக்கத் தான் வேண்டும்!//

        அது சரி விடுதலைப் போராட்டம் செய்தவர்களைப் பற்றி ரம்மி அவர்களின் கருத்து என்ன?

      • //இதே மாதிரிதான் நேபாளமும் அனுசரித்துச் சென்று தனது ஜனநாயகத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில் முன்னேறியதோ? //

        நேபாளை பொறுத்திருந்து பார்ப்போம்! (ஒரு தலைவனை தேர்ந்தெடுக்கத் தெரியாமல், நேபாளம் தடுமாறுவதைக் கவனிக்கவும்)!

        அதற்கு முன்னர் பங்களாதேசம், ஒரு பெரியண்ணனை அனுசரித்துப் போய் சாதிக்கவில்லையா? முக்திபா(வா)கினி படையினரும் தான், ஆயுதம் ஏந்திப் போராடினர்!

        அந்த சரித்திரம், அரசியலின் சூத்திரம், புலிகளுக்கு விளங்காமல், போனதால்தானே இனப்பலி?!

    • /புரட்சி, போராட்டம், எதிர்ப்பு என்று பிதற்றினால், நம்மை போட்டுத் தள்ளிவிடுவார்கள்! இலங்கையில் நடந்ததைப் போல்!/
      vietnameil evaragalai pottuthaliyathu ninaivilaiya

      • அதே வியட்நாம், தற்போது, அமெரிக்க அரவணைப்பில் தான் குளிர் காய்கிறது!

    • டொயிண்ட டொயிண்ட டொட டொய்ன்…
      நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவுமே தப்பில்லை!!!
      *

      எனக்கு கொஞ்சம் டவுட்டு, கிளியர் பண்ணுங்க
      1) ஆமா யார் அந்த நாலு பேரு? அவங்களுக்கும் உங்களுக்கு என்ன சம்பந்தம்?

      2) நாலு பேருக்காக, நானூறு, நாலாயிரம் ங்கிறதெல்லாம் போயி இப்போ நாப்பது லட்சம், நாப்பது கோடி பேர் கஷ்டப்படுறாங்க சாகுறாங்களே? அது சரிதானா? அதும் தப்பில்லையா?

      3) ஒருவேளை நாப்பது கோடி பேருக்காக நாலு பேரை கொல்றது எங்களை பொறுத்த வரை சரின்னு சொல்லி உங்களையோ, அல்லது உங்க அந்த நாலு பேரையோ கொன்னா அதும் சரியா? அதும் தப்பில்லையா?

      டவுட்டு, டவுட்டேய்!!!

    • //இந்த உலகில் குப்பை கொட்ட, சிலவற்றை அனுசரித்துதான் செல்ல வேண்டியிரிக்கிறது!
      அது தான் அமெரிக்கா!
      இது நாயை நாய் திங்கும் உலகம்! நாம் பிழைக்க வேண்டும் எனில், பலசாலியை அண்டிதான் நடக்க வேண்டும்!
      புரட்சி, போராட்டம், எதிர்ப்பு என்று பிதற்றினால், நம்மை போட்டுத் தள்ளிவிடுவார்கள்! இலங்கையில் நடந்ததைப் போல்!//

      இதேமாதிரி எங்க (நம்ம) தாத்தாவும்,பாட்டனும் நினைத்திருந்தால் நீங்கள் இந்த மாதிரி சுதந்திரமாக கருத்துக்கூட சொல்லியிருக்க முடியாது .

      உங்க வீட்டில் வேறொருவர் வந்து அமர்ந்துகொண்டு உங்களை அதிகாரம் செய்தால் அனுசரித்துதான் செல்வீர்களா?

      • //உங்க வீட்டில் வேறொருவர் வந்து அமர்ந்துகொண்டு உங்களை அதிகாரம் செய்தால் அனுசரித்துதான் செல்வீர்களா?//

        அவன் பலவானாக இருப்பின், இன்னொரு பலவானை துணைக்கு அழைக்கத் தான் வேண்டும்! ஆக்கிரமிப்பாளர்/ அரவணைப்பாளர் இருவரினாலும் கிடைக்கும் பலாபலன்கள்,காலம் தான் பதில் சொல்லும்!

        • ஆக..மொத்தத்துல உங்கள மாதிரி சொரனைகெட்ட(எடிட்)அனைவரையும் இருக்கச்சொல்றீங்க அப்படித்தானே…ரம்மி.

        • தம்மததூண்டு KUBA நாடு அமெரிக்காவை எதிர்த்து வாழவில்லை ( தன்மானத்துடன் ) ??
          வீரனுக்கு ஆயிரம் வழி, கோழைக்கு ஒரு வழி ( ரம்மி வழி)

        • விடுங்க குமாரு. அப்புறம் ரம்மி அழுதுறுவாறு. அவருதான் சொரனை இல்லைன்னு ஒத்துக்கிட்டாருல்ல…

        • ரம்மி, (மங்காத்தா ???) …….

          பஞ்சசீல கொள்கைன்னா இன்னா?

          அதை எப்படி இந்திய அரசு பின்பற்றியதாக சொல்கிறீர்கள்?

          வெளக்கம் பிளீசு!

    • ///இந்தோ – சீனோ பாய்! பாய்! கதை தெரியுமல்லவா? பஞ்ச சீலக் கொள்கையால், சீனா நம் முதுகில் குத்தியது மறந்துவிட்டதா/// Who stabbed on who’s back? Dabar mama Nehru betrayed Zhou Enlai and China and become a puppet of American gov and started to give hard time to China at a very crucial time (when Khuruchev as well as US both were intimidating China at both borders) .
      Sorry for typing in English.

      • உலகன்,

        தீவிர வலதுசாரி பத்திரிக்கையான இந்தியா டுடே ஏடே இதை ஒத்துக்கிட்டது எல்லாம் இவர மாதிரி ரம்மி ஆடுரவுங்களுக்கு தெரியாது!

        ’என்னது இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா’ அப்பிடீன்கிற ரேஞ்சுக்கு ஏதாவது பீலா உடுவாரு பாருங்க!

      • asuran…விருமாண்டிப் படக் கதைப் போல், ஒரு சம்பவத்தை, பல கோணங்களாக திரிபுவாதம் செய்வது அனைத்து இடங்களிலும் உண்டு!

  4. //பொது பலன்களுக்காக சிலவற்றை நாம் மறக்கத்தான் வேண்டும்!//

    அது என்ன பொதுநலன் – பூடகமான வார்த்தை? பா. சிதம்பரம் வகையாறாக்களின் நலனா?

    • நிறைய இருக்கிறது!
      நமது நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம்!
      கச்சா எண்ணெய் இறக்குமதி!
      பாதுகாப்பு!(முக்கியமாக சீனாவிடமிருந்து)
      மின்சாரம் – (அமெரிக்காவை எதிர்க்கும் காரத் வம்சாவளியினர் சீனாவிடம் இருந்து யுரெனியம் வாங்கித் தரவும்!)

      • //சீனாவிடம் இருந்து யுரெனியம் வாங்கித் தரவும்!///

        இந்தியாவிலேயே தோரியம் அதிகமா கொட்டிக்கிடக்குதாம்!

        உங்கள மாரி ரம்மி ஆடிக்கிட்டு இருந்தா அதெல்லாம் எங்க தெரியப்போகுது?

      • /நமது நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம்!
        கச்சா எண்ணெய் இறக்குமதி!//

        ஹா.. ஹா.. இதுதான் காமெடி என்பது… வர்த்தக பற்றாக்குறையில் நமது நாடு இருப்பது தெரியுமா ரம்மி?

        //பாதுகாப்பு!(முக்கியமாக சீனாவிடமிருந்து)//

        இந்தியாவில் அமெரிக்க முதலான் ஏகாதிபத்தியங்கள் விவசாயத்தில் பசுமை புரட்சி என்ற பெயரில் பல லட்சக்கணக்கான நஸ்டங்களையும், புதிய பொருளாதாரக் கொள்கையால் செத்து போன லட்சக்கணக்கான விவசாயிகள், போபால் போன்ற நேரடி யுத்தங்கள், லால்கர், நந்திகிராம் – தண்டகாரன்யாவில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இவர்களெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்காக கொல்லப்பட்டவர்கள். இதில் சீன நிறுவனங்களும் அடங்கும் (இரும்புத் தாது கனிம சுரங்கத்திற்காக).

        சீனா பூச்சாண்டியை நியாயமாக இரும்பில் காட்டுங்கள் ரம்மி அவர்களே.

        //
        மின்சாரம் – (அமெரிக்காவை எதிர்க்கும் காரத் வம்சாவளியினர் சீனாவிடம் இருந்து யுரெனியம் வாங்கித் தரவும்!)//

        மின்சாரப் பூச்சாண்டி மற்றும் அணு பூச்சாண்டி பற்றிய பொய்களை அம்பலப்படுத்தும் விரிவான கட்டுரை இங்குள்ளது.

        அணு ஒப்பந்தம் குறித்து…
        http://poar-parai.blogspot.com/2008/08/i.html

        இதில் இந்தியா அணு சக்தித் துறையில் வேறு எந்த நாட்டையும் விட மிகமுன்னேறியுள்ளதையும், மின்சாரத் தன்னிறைவு சாத்தியம் என்பதையும் இந்த கட்டுரை நிறுவும்.

        மேலும் நேற்று அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணனின் பேட்டி இந்து பத்திரிகையில் வந்துள்ளது படித்து தேசப் பற்றை வளர்த்துக் கொள்ளுங்கள்.

        • இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், அடுத்த நாட்டுக்காரன் மிரட்டும் போது கூழைக் கும்பிடு போடும் ரம்மி பாகிஸ்தான், சீனா விசயத்திலும் இதையே செய்து விட்டு போக வேண்டியதுதானே?

        • ”பாகிஸ்தான், சீனா விசயத்திலும் இதையே செய்து விட்டு போக வேண்டியதுதானே?”

          கூழைக்கும்பிடு போடுவதற்கும் ஒரு தராதரம் பார்க்கவேண்டாமா தோழர். அடிவாங்கினாலும் பெரியண்ணன் கிட்டதான் அடிவாங்கினேன்னு பெருமையா சொல்லிக்கிலாம்ல.

        • நெஞ்சை நிமிர்த்து நின்று, தம் மக்களை பலி கொண்டு/கொடுப்பது வீரமில்லை! விவேகத்துடன் செயல்பட்டு, காரியம் சாதிப்பதுதான் வீரம்!

        • //விவேகத்துடன் செயல்பட்டு, காரியம் சாதிப்பதுதான் வீரம்!//

          ஆமாம்…தொபுக்காடினு ராஜபாக்சே காலுழ விழுந்துடனும், ரம்மி சொல்லுற வீரம் இதுதான்…
          சும்மா சொல்ல கூடாது மங்குனி அமைச்ேரே தோதார் போங்க….

          உங்கள என்னமொனு நினைச்சேன் ஆனா காமெடீ பீஸ்னு தெரியாது

  5. ஜான் பெர்கின்ஸின் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் படித்தேன். இப்போது அமெரிக்க பேரரசின் கதை படித்து வருகின்றேன். அவர் இந்தியாவில் பணியாற்றிய போது நடந்த கூத்துக்களைப் பற்றி கேட்க வேண்டும்.

    வினவு நீங்கள் செய்கிறீர்களா ?

  6. //சில இழப்புகள், வலிக்கத்தான் செய்யும்! பொது பலன்களுக்காக சிலவற்றை நாம் மறக்கத்தான் வேண்டும்! இழப்பீடுகளை, இந்திய அரசு தன் கையில், இருந்து கொடுக்கத் தான் வேண்டும்!//

    இது விவேக் பட காமெடீ ல வர மாதிரில இருக்கு!!!. ..
    “பாஸ் நாம காட்டியும் கொடுக்குறோம்,கூட்டியும் கொடுக்கரமா ?”

    • நமக்கு வேண்டியது இழப்பீடு! அதை டவ் கொடுத்தால் என்ன? நமது அரசாங்கம் கொடுத்தால் என்ன?உலக அரசியலில், எடுத்தோம்,கவிழ்த்தோம் என்று செயல் முடியாது!

      • //நமக்கு வேண்டியது இழப்பீடு! அதை டவ் கொடுத்தால் என்ன? நமது அரசாங்கம் கொடுத்தால் என்ன?உலக அரசியலில், எடுத்தோம்,கவிழ்த்தோம் என்று செயல் முடியாது!//

        Dow கொடுத்தால் அது அவனது சுரண்டல் பணம், நமது அரசு கொடுத்தாள் அது ஏழைகளின் வரி பணம்.
        கடை தேங்காய்ய எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைகிரீங்களா ..??

  7. யப்பா நாட்டுக்கு ரொம்ப முக்கியமான சேதி…. எம் பிக்கள் ஊதியத்தை உயர்த்திக்கிட்டாய்ங்க..

    இதப் பத்தி யாராவது எழுதினால் நல்லாயிருக்கும்…

    எம்பிக்கள் ஊதிய உயர்வுக்கும் ஒப்புதல்:

    இந் நிலையில் எம்பிக்களின் ஊதியத்தை உயர்த்தும் மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

    இதன்படி எம்.பிக்களின் சம்பளம் ரூ. 16,000ல் இருந்து ரூ. 50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தினசரி படி ரூ. 1,000ல் இருந்து ரூ. 2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • இந்த பொறுக்கித் துன்னுற கூட்டத்துக்கு 50,000 ரூவாயும் பத்தாதாம் 80,000 வேணுமாம். இந்த கொள்ளைக்காக எல்லாக் கட்சிக்காரனுங்களும் இன்னைக்கு அந்த பன்றித்தொழுவத்த நடத்தவுடாம களேபரம் பன்னிட்டானுங்களாம்.

      அது நடந்தா என்ன! நடக்காட்டிதான் என்ன!

  8. Nam nattiley – manushana manushnu mathikarathu illai…. atleast veli nattil irunthu oruthan thozil saitha athu nammalakku thane nallathu….athuvum nammalakku thane nallathu.,…oru kalathil ethuku eduthallum matra nattineyeah nambi irunthom.. eppo kaalam maari poyachu… nammayodia potential athiga maagi kondey irrukuthu….kaalam maarum…namma atkal pathi sollavey thevai illai…appuram yeri methichiveduvanga….appa vianu matheri oru aall antha nattil irunthu ethu matheri blogil palambi thalluvanga….. antha naal vegu thooram illai….

    Am I making sense…

  9. என்னைக் கிண்டல் அடித்த வென்றுகளுக்கு நன்றி!

    1.உமக்கு அமெரிக்கா! எமக்கு சீனா! பூச்சாண்டி மக்கா!

    2.//இந்தியாவிலேயே தோரியம் அதிகமா கொட்டிக்கிடக்குதாம்!//
    இதற்கான டெக்னிகல் அறிவு, கிடைக்கும் கடையில் இருந்து வாங்கிக் கொடுக்கவும்!

    3.//அடுத்த நாட்டுக்காரன் மிரட்டும் போது கூழைக் கும்பிடு போடும் ரம்மி பாகிஸ்தான், சீனா விசயத்திலும் இதையே செய்து விட்டு போக வேண்டியதுதானே?//

    சீனா விசயத்தில் அப்படித்தான் இருக்கிறோம்!
    1962 முதல்!

    4.சொரணை உள்ள , வீரமுள்ள ‘வசவு’ மக்கா! துப்பாக்கி பற்றை விட, நாட்டுப்பற்று மேல்! உங்க துப்பாக்கியை விட, பெரியது இருக்குதப்பு!

    உங்கள் தீவரவாதக் கும்பலுக்கு, மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளது! யதார்த்தம், உங்கள் கண்ணில் படாது!

    5.//Dow கொடுத்தால் அது அவனது சுரண்டல் பணம், நமது அரசு கொடுத்தாள் அது ஏழைகளின் வரி பணம்.//
    வரி கட்டுபவன் எல்லாம் ஏழையா? ஏழை கட்டும் வரியெல்லாம், எப்படி செலவாகிறது?முக்கால் பாகம் சம்பளம்/இலவசத்திற்கே போகிறது!

    • //வரி கட்டுபவன் எல்லாம் ஏழையா? ஏழை கட்டும் வரியெல்லாம், எப்படி செலவாகிறது?முக்கால் பாகம் சம்பளம்/இலவசத்திற்கே போகிறது!//

      இது அடுத்த பொய் பட்ஜெட் டெபிசிட்டான 4 லட்சம் கோடி முதலாளிகளுக்கான வரிச் சலுகைகளால், கடன் தள்ளுபடியால் வந்தது ஆகும்.

      வர்த்தக் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மின்சாரம் பற்றிய அவரது பூச்சாண்டிகள் பொய் என்பதைத்தான் அசுரன் தளக் கட்டுரைச் சுட்டி விரிவாக எடுத்தியம்புகிறது. ரம்மிக்கு படிப்பதில் சோம்பேறித்தனமோ என்னவோ வெறுமனே பின்னூட்டக் கருத்துக்களை/புரளிகளை மட்டும் இட்டுச் செல்கிறார்.

      • வரி சலுகைகளை மட்டும் குறிப்பிடும், அசுரன் சார், வரிகளைப் பற்றி கூற மறந்ததேனோ? ஒரு தொழிற்கூடத்திற்காக, சுமார் பத்திற்கும் அதிகமான, அரசு இயந்திரங்களுக்கு, நேரடி/மறைமுக வரி விதிப்பு செய்யப் படுகிறது! ஒரு குறிப்பிட்ட தொழில் ,சந்தை நிலவரங்களால்,பாதிக்கப்படும்போது,விதிக்கப்பட்ட வரிகளில், சிறு விலக்கு அளிக்கப்படுகிறது, சிறிது காலத்திற்கே!

        திட்டமிடப்படாத செலவீனங்களே, நம் நாட்டின், வளர்ச்சிக்குத் தடை!

        நாட்டின், பொருளாதாரம், ஏற்றுமதி/இறக்குமதியையும் சார்ந்துள்ளது! நமது முக்கிய ஏற்றுமதி பொருட்களான, ஜவுளி,நகை,மென்பொருள், நுண்ணறிவு ஆகியவை, 75 சதம், அமெரிக்காவை நம்பியே! இறக்குமதியில், முக்கியமானது கச்சா எண்ணெய்! ஈரான் வாயுவைக் கொண்டு வர, அமெரிக்கா தடை போடுவதைக் காணுங்கள்! அமெரிக்காவிடம், முட்டிக் கொண்டு நின்றால், பயனில்லை!

        சீனாவும், அமெரிக்க மார்க்கெட்டை நம்பியே உள்ளது! (ஜப்பானைப் போல)

        டிரேட் பேலன்ஸ், அமெரிக்காவிடம், நமக்கு சாதகமாகவும், சீனாவிடம் மைனஸாகவும் உள்ளது!

        அணு மின்சாரத்தைப் பற்றியும், நமது நுட்ப அறிவையும் தாங்கள் நமது நாட்டை மெச்சியதற்கு நன்றிகள்! ஒன்றை மறந்துவிட்டிர்கள்! என்னவெனில், கால வித்தியாசம்! சுயசார்பு நிலையை நாம் அடைவதற்கு, நீண்ட காலம் பிடிக்கும்! காத்திருக்க முடியாத சூழலில் தான் கையெந்துகிறோம்/வாய் பொத்தி இருக்கிறோம்!

        நாமும், சீனாவைப் போல், சவுண்டு கொடுக்கும் காலம், விரைவில் மலர, வாருங்கள் உழைப்போம்! துப்பாக்கியைத் தூக்கித் திரிந்தால், காடுகளில் தான் வசிக்க நேரிடும்!

        • //ஈரான் வாயுவைக் கொண்டு வர, அமெரிக்கா தடை போடுவதைக் காணுங்கள்! அமெரிக்காவிடம், முட்டிக் கொண்டு நின்றால், பயனில்லை!//

          நம்மாளுக்குதானே முதுகெலும்பு இல்ல, பாகிஸ்தான் எப்பவோ இராண் கூட agreement போட்டு வேலை நடக்குது.
          அமெரிக்க கொசுவ கண்டுகல, போங்கடா பிக்காலி பசங்களானு சொல்லுதுச்சு …

    • //சொரணை உள்ள , வீரமுள்ள ‘வசவு’ மக்கா! துப்பாக்கி பற்றை விட, நாட்டுப்பற்று மேல்! உங்க துப்பாக்கியை விட, பெரியது இருக்குதப்பு!//

      கொஞ்சம் வேவரமா சொல்லிடுங்க சாமி..எந்த நாட்டு பற்றுனு…அமெரிக்கவாதான சொல்லுறீங்க ??

  10. /நமது நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம்!
    கச்சா எண்ணெய் இறக்குமதி!//

    ஹா.. ஹா.. இதுதான் காமெடி என்பது… வர்த்தக பற்றாக்குறையில் நமது நாடு இருப்பது தெரியுமா ரம்மி?// … asuran

    பற்றக்குறை தொடர வேண்டும் என்பது உமது விருப்பமா?

    மின்சார பற்றாக்குறை என்பது பூச்சாண்டி அல்ல! நம் கண் முன்னே அறையும் நிதர்சனம்! தமிழகத்தில் இன்று, தொழிற்சாலைகளில் 6 மணி நேர கட்டும், பவர் இருக்கும் போது 20 சதம் கட்டும்,அமலில் உள்ளது.ஏறக்குறைய, 45 சத உற்பத்தி இழப்பு! நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதே கதை தான்!( வங்காளம்,கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு பவர் பிரச்சனை இல்லை! ஏனெனில் அங்கு விளக்கெரிக்க மட்டும் தான் மின்சாரத்தை பயன் படுத்துகிறார்கள்)

    மின் பற்றாக்குறையைத் தீர்க்க — அணு/புனல்/காற்று – இவைதான் இனி வழி! அணுவில் நுட்பத்தை விட பொருள் தான் நமக்கு வேண்டும்! புனல் மின்சாரத்திற்கு -பூடான்/மியான்மரிடம் பேச வேண்டும்! காற்று வழி மட்டும் தான் நம்மிடம்- ஆனால் அது தொடர்ச்சியாக ஒரே சீராகக் கிடைப்பதில்லை!

  11. இன்று (சனி) 03.00 IST அளவில் http://firstaudio.net – Sunrise வானொலியில் தோழர்.மருதையனின் ஈழம் தொடர்பான செவ்வி இடம்பெருகிறது

  12. while starting video some advertisement are being displayed. Please edit those advertisement.

    Vinavu’s article now not able to take to printout or not able to convert into pdf. In this regard I already spoke to vinavu office so far not rectified. In coimbatore earlier i was circulating vinavu article to my friends, relatives and comrades. now i couldn’t. Please help me in this regard.

    To read vinvu in mobile may be good but for others this is not much easy and circulating by printing also not possible. vinavu word press version was very good.

    I don’t like speculate this matter in this article. after so many reminders i am sending this revert.

    Miguntha thozhamaiyudan

    Velan

    • அன்புள்ள வேலன்…
      பதிவின் இறுதியில், Print/PDF சுட்டி சேர்க்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தவும்.
      தாமதமான நடவடிக்கைக்கு வருந்துகிறோம்.
      தோழமையுடன்
      வினவு
      பி.கு – இந்த வீடியோ டைம்ஸ் தொலக்க்காட்சியின் வலைத்தளத்திலிருந்து வழங்கப்படுகிறது, விளம்பரங்கள் அவர்களுடையது, அதை எடிட் செய்ய இயலாது

  13. Mr.Kumar,

    ராஜபக்ஷேவிடம் போராடாமல்,பதுங்கிக் கொண்டுத் திரிந்து, மற்றவரின் வாயில், சயனைடைத் திணித்து, மக்களைக் கேடயமாக்கி, எளிய இலக்குகளான சகோதார்களையும்,நண்பர்களையும் கொன்று, சூரப்புலி என்று, அனைவரையும் நம்ப வைத்து, இறுதியில்,நாயைப் போல் அடிபட்டதே, அது தான் சிறந்த காமெடி பீஸ்!

    எமக்கு நீரும், உமக்கு நானும் காமெடி பீஸ்களாகவே இருப்போம்! வயிற்றெரிச்சல் பீஸ்களை விட, காமெடி நல்லதுதானே!

    • சம்பந்தமில்லாமல் பேசுவது தான் உங்க விவாத திறமையா ரம்மி?

      எதாவது ஒரு பதிவுல, விவாதிக்கலாமா? நீங்க மாறி மாறி புலம்ப தோழர்களும் நிறய மெனக்கெடுகிறார்கள்! ஏதாவது ஒரு பதிவில், எல்லா பிரச்சனைகளுக்குமாக சேர்த்து ஒங்க கல்வெட்டு கருத்துகளை- தீர்வுகளை சொன்னீங்கன்னா புன்னியமா போகும்!

      உங்க அரசியல் என்ன? (கவனிக்க, நீங்க யாருன்னு கேட்கலை)
      கோடிக்கனக்கான மக்கள் ஒடுக்கப்படுவதற்கு உங்கள் தீர்வு என்ன?

      (நக்கி பிழைப்பது தீர்வுன்னு ஏற்கனவே சொல்லி மாட்டிகிட்டீங்க! வேற எதாவது சொல்லுங்க….)
      பொய், புரளி பேசாதீங்க….

      ஆமா, ரம்மி ஆட்டத்துல ராஜா, ராணிக்கு இல்லாத மவுசு ஜோக்கருக்கு இருக்காமே? அப்படியா? அது உண்மையா? ரம்மி???

      • //நக்கி பிழைப்பது தீர்வுன்னு ஏற்கனவே சொல்லி மாட்டிகிட்டீங்க! வேற எதாவது சொல்லுங்க….//
        நமது குறிக்கோளை அடைவதுதான் வீரம்! சவடால் பேசி, அடிபட்டு, உள்ளதையும் இழப்பது முட்டாள்தனம்! சாணக்கியமும்,சத்திரியமும் ஒன்றாகச் சேர்ந்தால்தான் வெற்றி!

        //சம்பந்தமில்லாமல் பேசுவது தான் உங்க விவாத திறமையா ரம்மி?//

        கேள்விக்கு சம்பந்தப்பட்டு தான் பதில் அளித்துள்ளேன்!

        உங்கள் குழாம் உறுப்பினர்கள், எழுத்துக்களைப் பார்க்காமல்,எழுதியவனை மட்டம் தட்டுவதால், அதற்கு counter கொடுக்க விழையும்போது கோமாளி பட்டம் கட்டிவிடுகிறீர்! மாற்றுக் கருத்துக்களை, வெறி கொண்டு புறம் தள்ளுவது அழகல்ல!

      • ஆஹா அருமையான கருத்துகள் !! நல்லா தான போய்கிட்டு இருக்கு எதுக்கு இப்போ இந்த கோல வெறி ! நல்லா கேளபுரீன்களே பீதிய !

  14. Rammy Rocks ! Indians have no unity. North indians don’t like South indians. Thevars don’t like Thaliths. When 10 Indians are put together in a room they cannot agree on anything. Tamilians history is about fighting among themselves (Chera Chola Pandya). Tamilians cannot achieve anything. If each Tamilian become entreprenial and start making money and becoem economically strong only then there will be some kind of light at the end of the tunnel. No Tamilian or Indian has the qualification to criticise America. Tamilians are stupid

    • நுற்றுக்கு 100 உண்மைதான்… ரம்மியின் எண்ணங்களில் விசயம் உள்ளது.. வெறும் அசட்டுத்தனமான வெள்ளேந்தியான தட்டையான அனைத்தும் தழுவாத வெத்து முற்போக்கால் ஒரு எழவு பயனும் இல்லை என்பது என் கருத்து…தேவையில்லாம்ல் அவதுறு பேசாமல் கீழ் கண்ட வற்றுக்கு மனசாட்சி இருந்தால் போலித்தனம் இல்லாமல் பதில் தேவை
      1) ஈழத்தில் நடந்த ஆயுதப் போராட்டத்தால் பயன் என்ன…? எத்தைனை உயிர்கள் பலியானது….? அது தோல்வியா இல்லையா…?
      2) உலகமய முதலாளத்து era வில் வாழ்ந்து கொண்டு ஒரேயொரு MNC யோடு மல்லுக் கட்டி பயன் என்ன…?
      3) இந்தியா மட்டும் (உலக நாடுகள் அன்றி) சோசலிச அரசாக மாறிவிடுமா… அப்படியே மாறுவதான ஒத்துக் கொண்டாலும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பதுதான் உண்மை மறுக்க முடியுமா..?
      தொடரும்…
      R. நாகராசு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க