privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

-

த்தாண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் நடந்த ஒரு பாலியல் வன்முறை (கற்பழிப்பு) வழக்கில் நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்தது. அந்தக் குற்றவாளி 45 வயதுடையவன், காரோட்டும் பயிற்சி அளிக்கும் போது ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவன். கீழ் நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவன் மேல் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டான். காரணம் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்டட அந்தப் பெண் சம்பவம் நடக்கும் போது இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தாளாம். அதை அந்தப் பெண்ணின் அனுமதியில்லாமல் அகற்ற முடியாது என்பதால் நடந்தது கற்பழிப்பு இல்லை என விளக்கமளித்த நீதிமன்றம் மேலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தோடு நடந்த உறவு என்று அவனை விடுதலையும் செய்தது.

கார்டியன் செய்தித்தாளில் ஜூலி பின்டல் எழுதிய கட்டுரையை ஜூலை மாதம் இந்து பேப்பர் வெளியிட்டிருந்தது. ஆணாதிக்கத்தின் திமிரோடு படு பிற்போக்காக தீர்ப்பளித்திருக்கும் நீதிமன்றம் பத்தாண்டுகள் கழித்து இப்போது அந்த விளக்கத்தை வேறு ஒரு வழக்கில் திருத்திவிட்டதாம். தனது கூட்டாளியின் பதினாறு வயது மகளைக் கற்பழிக்க முயன்ற கயவன் மேற்கண்ட இறுக்கமான ஜீன்சு பேண்டு விளக்கத்தை வைத்து வாதிட்டபோது நீதிமன்றம் அதை ஏற்கவில்லையாம்.

இந்த சுயவிமரிசனத்தை எடுத்துக்கொள்வதற்கு பல போராட்டங்களும், பத்தாண்டு காலமும் ஆகியிருக்கிறது. பாலியல் வன்முறையின் பால் பல நீதிமன்றங்கள் உலகெங்கும் இப்படிப்பட்ட அணுகுமுறையைத்தான் கையாளுவதாக ஜூலி குறிப்பிடுகிறார். அதாவது ஒரு பெண் என்ன உடை அணிந்திருக்கிறாள், எப்படி நடந்துகொள்கிறாள் என்பதெல்லாம் கற்பழிப்பு வழக்குகளில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் பல குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்பித்துக் கொள்கின்றனர். உலகெங்கும் பாலியல் வன்முறைகளுக்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் விகிதம் குறைவாகத்தான் உள்ளது.

தன்னை வல்லுறவுக்குள்ளாக்கிய அயோக்கியனை ஒரு பெண் பொது அரங்கில் தண்டிக்க நினைப்பதே அரிது. இந்தியா போன்ற நாடுகளில் அது இன்னமும் கடினமான ஒன்று. கற்பு, புனிதம் என்ற சங்கிலியில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு பெண் தான் கற்பழிக்கப்பட்டவள் என்று நீதி கோரினாலே அவள் வாழ்க்கை அத்துடன் முடிந்தது. பார்ப்பனியத்தின் விழுமியங்களால் இயங்கிவரும் சமூகம் அவளை புனிதம் கெட்ட அபலையாகத்தான் பார்க்கிறது. தமிழ் சினிமாவில் கூட கற்பழித்தவனைக் காப்பாற்றுவதற்கு வழக்குரைஞர் பாதிக்கப்பட்ட பெண்ணிடன் அவன் எங்கே கை வைத்து என்ன செய்தான் என்று வாதிடும்போது, எதுவும் சொல்ல முடியாமல் அந்தப் பெண் அழுது அரற்றுவாள். நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் இதுதான் யதார்த்தமாக உள்ளது. சிதம்பரம் பத்மினி போன்ற வீரப் பெண்கள்தான் இந்தப் போராட்டத்தை எதிர் கொண்டு நீதியை நிலைநாட்டியிருக்கின்றனர். இவையெல்லாம் விதிவிலக்குகள்தான் என்ற போதும் சட்டமும், நீதிமன்றங்களும்கூட இதற்குத் தோதாகத்தான் இயங்குகின்றன என்பது முக்கியம்.

நீதிமன்றங்கள் மட்டுமல்ல கற்பழிப்புக்கு ஓரளவு பெண்களும் காரணமாக இருக்கின்றனர் என்பது உலகத்தின் பொதுப்புத்தியாக இருக்கிறது என்கிறார் ஜூலி. அம்னஸ்டி அமைப்பு சென்ற வருடம் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் பதிலளித்த கால்பங்கினர் கற்பழிப்புக்கு பகுதியளவோ, முழுமையாகவோ பெண்களும் செக்சியான உடை அணிவதின் மூலம் காரணமாக இருக்கின்றனர் என்று தெரிவித்தனராம். இதையே அயர்லாந்தில் நடந்த ஆய்விலும் நாற்பது சதவீதம் பேர் வழிமொழிந்திருக்கின்றனர்.

ஆண்களின் கற்பழிப்பு நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் இந்தக் கருத்துக்கள் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்கு மட்டுமல்ல முன்னேறிய நாடுளுக்கும் சொந்தமாக இருக்கிறது. ஒரு பெண் உடை அணிவதன் மூலம் ஒரு ஆணை கற்பழிப்பு நடவடிக்கைக்கு ஈர்க்கிறாள் என்ற வாதம் உண்மையில் பெண்ணைத்தான் குற்றவாளி ஆக்குகிறது. தப்பு செய்யும் ஆண்களெல்லாம் சூழ்நிலையின் கைதிகளாக கருதப்படுகிறார்கள். இதுதான் உலகத்தின் பொதுக்கருத்து என்றால் பெண்கள் சமூக வாழ்க்கையில் எத்தகைய அபாயத்துடன் வாழ வேண்டியிருக்கும்?

நைஜீரியாவில் ஒரு செனட்டர் ஒரு மசோதாவை முன்மொழிந்திருக்கிறாராம். அதன்படி ஒரு பெண் தனது அங்கங்கள் தெரியும் வண்ணம் உடையோ, குட்டைப் பாவாடையோ அணிந்து பொது இடத்தில் வலம் வந்தால் மூன்று மாதம் சிறை தண்டனையாம். இது அமலுக்கு வரும் பட்சத்தில் நைஜீரியாவின் சார்பில் ஒலிம்பிக் ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்ட வீராங்கனைகள் அனைவரும் குற்றவாளியாகி விடுவார்கள்! இதே போல போலந்திலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தெரு விபச்சாரத்தையும் கற்பழிப்புகளையும் குறைப்பதற்கு குட்டைப் பாவாடை அணிவதற்குத் தடை செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறாராம். வடக்கு மலேசியாவில் ஒரு பழமைவாத நகரக் கவுன்சில் குதிகால் செருப்புக்களையும், கண்ணைப் பறிக்கும் உதட்டுச் சாயங்களையும் தடை செய்வதன் மூலம் கற்பழிப்புக்களையும், முறையற்ற பாலியல் உறவுகளையும் குறைக்க திட்டமிட்டிருக்கிறதாம்.

இந்த விசயத்தில் இசுலாமியவாதிகளை யாரும் மிஞ்ச முடியாது. ஒரு தண்டியான சாக்குப்பையை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு சுண்டுவிரலைக்கூட காட்டாமல் பெண்கள் நடமாடவேண்டும் என்பது அவர்கள் கருத்து. இதில் அனைவரும் தாலிபான்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் ஆண்களின் காமம் தலைவிரித்து ஆடுமாம். ஏன்தான் ஆண்களை அப்படி காமவெறி பிடித்தவர்களாக அல்லா படைத்தார் என்பது தெரியவில்லை.

இறுதியாக ஜூலி பின்டால் பெண்களைப் பற்றி புனையப்பட்டிருக்கும் இக்கருத்துக்களைச் சாடி ஒரு பெண் என்ன அணிவது என்பதை அவள் தீர்மானிக்கட்டும், அதை மற்றவர்கள் கட்டளையிடத் தேவையில்லை, ஒரு பெண் குடித்திருந்தாலும், குட்டைப் பாவாடை அணிந்திருந்தாலும் யாரும் அவளைக் கற்பழிக்க முடியாது, அப்படி நடந்து கொண்டால் அது குற்றமே, அதற்கு பெண்ணைக் காரணமாக சொல்வதை ஏற்கமுடியாது என்கிறார்.

உண்மைதான். ஒரு பெண் சாக்குத் துணியை மூடியிருந்தாலும், திறந்த மார்பகத்தோடு நடமாடினாலும் அவளைக் கற்பழிக்க முடிவெடுத்து விட்ட கயவர்களுக்கு உடை ஒன்றும் ஒரு பொருட்டல்ல. ஒரு பெண் தனியாக ஆள் நடமாற்ற பகுதியில் சிக்குவதுதான் அவர்களுக்குத் தேவையான ஒன்று. இதைக் கடுமையான சட்டத்தின் மூலமே தண்டிக்க முடியுமேயன்றி பெண்கள் ஆபாசமாக ஆடை அணிகிறார்கள் என்று சால்ஜாப்பு சொல்வது பெண்ணை அடிமையாகக் கருதும் வெளிப்படையான ஆணாதிக்கத் திமிராகும்.

ஆனால் ஜூலி பின்டாலின் கருத்தோடு கூடுதலாக நாம் சொல்வதற்கு சில விசயங்கள் இருக்கின்றன. ஒரு பெண் எந்த ஆடை உடுத்த வேண்டும் என்பது அவளது விருப்பம, சுதந்திரத்தைப் பொறுத்தது என்பதில் சிறிய சிக்கல் இருக்கிறது. இன்றைய பெண்களின் நடை, உடை, பாவனைகளை அவர்கள் தெரிவு செய்வதில்லை. மாறாக பன்னாட்டு அழகு சாதன நிறுவனங்கள்தான் அவற்றைப் பயன்படுத்துமாறு பெண்களை நிர்ப்பந்திக்கின்றன. இந்நிறுவனங்களின் நோக்கம் பெண்களின் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவது அல்ல. மாறாக ஆணின் போகப்பொருளாக பெண்ணுடல் மாற்றப்பட வேண்டும் என்பதுதான். ஏனெனில் ஆண்களைக் கவருதற்குத்தான் ஆயிரக் கணக்கில் பொருட்கள் பெண்களின் மேக்கப் உலகில் குவிக்கப்படுகின்றன.

இந்தியாவில் பூவும், பொட்டும், வளையலும் அணிந்து ஒரு பெண் செல்வதற்கு காரணமென்ன? கணவனைக் கவருவதற்குத்தான். ஆனால் ஆண்கள் யாரும் பெண்களைக் கவருவதற்கு மல்லிகையைச் சூடுவதில்லை. தெருவோரம் நிற்கும் விலைமாது கூட இந்த அலங்காரங்களோடுதான் தனது வாடிக்கையாளரைக் கவருகிறாள். இவையின்றி அவளால் தொழிலைச் செய்ய முடியாது.

ஆண்களின் இன்பத்திற்காகப் பெண்களைக் கடைச்சரக்காக்கும் இந்த மாயவலையில் இருந்து பெண்கள் விடுபடவேண்டும். அரை நிர்வாண உடையுடன் நடக்கும் பேஷன் ஷோக்கள் எல்லாம் பெண்களின் விடுதலைக்காகவா நடத்தப்படுகின்றன? எந்த அளவுக்கு ஆண்களைக் கவர முடியும் என்பதே அவற்றின் அழகியல் விதி. உள்ளாடைகளைக்கூட ஆண்களின் கவர்ச்சிக்காகத் தயாரிக்கிறார்களேயன்றி பெண்களுக்கு அவை சிறப்பாகப் பயன்படவேண்டும் என்பதற்கல்ல.

எல்லா விளம்பரங்களிலும், ஏன் ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்குக் கூட பெண் மாடல்கள்தான் தேவைப்படுகிறார்கள். இப்படி எல்லா வழியிலும் அல்லும் பகலும் பெண்ணுடல் என்பது உலக முதலாளித்துவ நிறுவனங்களால் அன்றாடம் கற்பழிக்கப்படுகின்றன. அதனால்தான் சொல்கிறோம் ஒரு பெண் தனக்குரிய ஆடைகளை அணிவதற்கு சுதந்திரமில்லை. இதைப்பெறவேண்டுமானால் போகப்பொருளாகக் கருதி திணிக்கப்படும் இந்த அழகியல் பொருட்களை மறுக்க வேண்டும். இவற்றைத் துறப்பதில்தான் பெண்ணழகு உண்மையாக மலர முடியும். ஆண்களைக் கவரும் விசயத்திலிருந்து பெண்கள் விடுதலையாவதுதான் அவளின் சுதந்திரத்திற்கான முதல் நிபந்தனை.

சமத்துவமான பெண்ணுரிமை என்பது அப்படித்தான் மீட்கப்பட முடியும். அப்போதுதான் நீதிமன்ற உதவியோடு ஆணாதிக்கம் நடத்தும் பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராட முடியும். இது குறித்து பெண் வாசகர்கள், பெண் பதிவர்கள் என்ன நினைக்கிறார்கள்? அதனால் ஆண்கள் கருத்துச் சொல்லக்கூடாது என்பதல்ல. விவாதத்திற்காகக் காத்திருக்கிறோம்!

(மீள்பதிவு) முதல் பதிப்பு – செப்-22-2008

  1. Yes,
    Now after the NeoColonialism, fashion shows and use of cosmetics both for Ldies & Gents are became a big business.

    Even the synthetic cosmetics are too dangerous to skin and health, the Media, especially Advertisements changed dresse sensing, cosmetics on the People mind.

    Most of the youth and Rich(kizhadugalum) also wearing attractive dresses.

    They have changed their minds. The became addicts of new items and fashions.
    Instead of realising the “Real Beauty of Life (Love & Humanity)” they search the beauty in the dress and Cosmetics.

    Pickuping Girls and Correcting Fiugures, Apporaching Girl for Love and vice versa are done on the basis of Look & Feel. Not on the Character and Humanity.

    They fear to see other people if they are not well dressed. They exhibit them selves to the others. It is a psycho change.

  2. ////சிதம்பரம் பத்மினி போன்ற வீரப் பெண்கள்தான் இந்தப் போராட்டத்தை எதிர் கொண்டு நீதியை நிலைநாட்டியிருக்கின்றனர்///

    சிதம்பரம் பத்மினியின் உண்மையான கதை தெரியுமா ? தெரியாது என்றால் தனிமடலில் கேட்கவும். சிதம்பரம் பத்மினி கற்பழிக்கப்படவில்லை.

    • //சிதம்பரம் பத்மினியின் உண்மையான கதை தெரியுமா ? தெரியாது என்றால் தனிமடலில் கேட்கவும். சிதம்பரம் பத்மினி கற்பழிக்கப்படவில்லை.//

      கடந்த 30 வருடமாக சிதம்பரம் கொத்தன்குடி தெருவில் வாசித்து வருகிறேன். நீங்கள் சொல்லும் கதை எனக்கேய் புதுசா இருக்கு… விளக்கம் தான் சொல்லுங்களேன், அப்படி எனக்கு தெரியாதது அப்படி என்ன உங்களுக்கு தெரிந்தது பார்க்கிறேன்??

  3. சி.என்.என் தொலைக்காட்சியில் ஆண்டர்சன் கூப்பர் என்று ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் இருக்கார். அவரைப் பார்த்தால் அலங்கார பொம்மைப் போலவே தோற்றமளிப்பார். ஒரு முறை சீனாவின் மாசினை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதற்காக தன்னை விளையாட்டாக உடல் பரிசோதனையில் ஈடுபடுத்திக் கொண்டார். பரி சோதனைகளின் முடிவில் அவருக்கு தோல் புற்று நோயிருப்பதாக தெரியவந்தது.

    சீன நதியில் மாசு இருக்கிறதோ இல்லையோ இந்த செயற்கை அலங்காரப் பொருட்களில் ஆபத்து கண்கூடு.

    ***

    தொன்று தொட்டு வரும் பெண்ணை பெண்ணே ஆணுக்கு போகப்பொருள் ஆகு என்கிற விளம்பரங்களே இவ்வகை கணக்கெடுப்பில் பிரதிபலிக்கின்றனர். விக்டோரியா சீக்ரெட் உள்ளாடை விளம்பரங்கள் சாலை விபத்தை ஏற்படுத்தின. இன்று உலகெங்கும் உள்ள அழகிகளைப் பிடித்து ஒட்டறைக் குச்சி போல வாழுவது எப்படி என்று முன்னுதாரணமாக நிறுத்துகின்றனர். இந்த ஹய் ஹீல்ஸ் பார்க்க நன்றாக இருந்தாலும், கால்களையே காவுவாங்கக் கூடிய செருப்புகள்.

    பெட்டிக் கடை கலர் மிட்டாய் போல் பார்க்க நல்லா இருக்கு, பயன்படுத்துபவர்கள் பாடுதான் சிறிது நாளில் தள்ளாடுகிறது!

  4. ஆண்கள் பெண்களை கவர்வதும், பெண்கள் ஆண்களை கவர்வதும் இயற்கை. இதை யாராலும் தடுக்கவோ குறைக்கவோ முடியாது. அதர்க்காக இருபாலருமே உடல் மற்றும் உடைகளை உபயோகப்படுதுகிரார்கள். இருவருமே, கை மற்றும் மார்பழகை காண்பிக்க முயற்சி, குட்டை சட்டை, இருக்கமான உடைகள், எல்லாம் பொதுவாக பயன் படுத்துகிறார்கள். ஆக மற்ற பாலினத்தை கவரும் உணர்ச்சி என்பது இருவருக்கும் சமமே.

    இந்த சமூக கட்டமைப்பு என்பது ஆண்களாள் ஏற்படுத்தப்பட்டதும், ஆணாதிக்கம் உடையதாகவும் மாறிவிட்டதும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

    “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
    ஒண்டொடி கண்ணே உள”
    (கண்டும், கேட்டும், உண்டும், மோந்தும், தீண்டியும் அனுபவிக்கப்படும் இன்பங்கள் பெண்ணிடம் மட்டுமே உண்டு.)

    இது வள்ளுவன் மொழி. இப்படி ஓர் பெண் கவிஞர் சங்க காலத்தில் பாடினாரா எனபது தெரியாது. பாடியிருந்தாளும், வரலாற்றில் இடமில்லாமல் போகும் என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    ஆணால், பெண் கற்பழிப்பு என்பதற்கு ஆணாதிக்கத்தை மட்டும் காரணம் சொல்ல முடியாது. அதற்கு, முதல் மற்றும் முக்கியமாய், நாம் மறந்துபோன “தனிமனித ஒழுக்கம்” தான் காரணம்.

    இந்த சமூகம், ஒருவேலை பெண்ணாதிக்கச் சமூகமாயிருக்குமேயானால், ஆண் கற்பழிப்பு பற்றிய இப்படி ஒரு பதிவிற்கு, நிரைய பெண்கள் பின்னூட்டம் போட்டிருப்பார்கள். பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, கடவுளர்களோ… யாருக்கும் இதை கற்பிக்க நேரம் இல்லை. எதிர் வரும் தலைமுறையினர் ஒழுக்கம் என்றால் என்ன என்று கேட்கு அலவுக்கு வந்துவிட்டோம்.

    ஒழுக்கம் கற்பிக்காமல், நம்மால், எந்த கற்பழிப்பையும் குறைக்கவோ, நிருத்தவோ முடியாது. ஆண்கள், மேலை நாட்டு பொருட்கள், விளம்பரங்கள், இன்னும் எத்தனை சொன்னாலு, முழுமையான் முதற்காரணம், நம்முள் புரையோடிக்கொண்டிருக்கும், “தனி மனித ஒழுக்கக்குறைவே”!!!

    • Thani manidhan ozukkam avasiyam than nalan aanal adhu mattume podhuma kannu munnadi saaraayaththai vaiththu kondu pakkathileye kudikaranaium vaiththu kudikadhanu sonna endha vidhathula niyayam.

  5. The article pinpoints the status of women.Time changes but the condition of women remains the same. As many believed education has not contributed anything favour to the emancipation of women.

  6. பாலியல் தேவை என்பது வயிற்றுப் பசியைப் போன்றதே! பசிதாங்காமல் பலர் திருடி உண்கிறார்கள்! கூலிக்கு வேலை கிடைத்தால், வேலை செய்து பணம் கொடுத்து உண்கிறார்கள். அதேபோல் ஊருக்கு ஒரு விபச்சார விடுதிகள் இருந்திருந்தால் கற்பழிப்புகள் நிச்சயம் குறையும். உடல் பசி எடுத்தோர் பணம் கொடுத்து தீர்த்துக்கொள்ளட்டும். அல்லது ஆணும் பெண்ணும் வரையறையின்றி உடலுறவில் ஈடுபட அனுமதித்தால் பசியெடுக்கும் இருபாலாரும் தங்கள் உடற்பசியை தீர்த்துக்கொள்ளலாம் யாரும் யாரையும் வற்புறுத்தவேண்டிய அவசியம் ஏற்படாது. எங்காவது நாய் ஆடு மாடு ரேப் பண்ணுதுன்னு சொல்றாங்களா? அதுபோல் பிறியா விடுங்க எல்லாமே சரியாயிடும்.

  7. //சிதம்பரம் பத்மினியின் உண்மையான கதை தெரியுமா ? தெரியாது என்றால் தனிமடலில் கேட்கவும். சிதம்பரம் பத்மினி கற்பழிக்கப்படவில்லை.//

    ஒரு விபசாரியாக இருந்தாலும் அவளது விருப்பம் இல்லாமல் தொட்டால் அது பாலியல் வன்முறை தான். பத்மினிக்கு நடந்ததை பக்கத்திலே இருந்து பார்த்த மாதிரி “கற்பழிக்கப்படவில்லை”ன்னு அழுத்திச் சொல்றிங்க. நான் சிதம்பரத்தான் சார், எனக்கும் உங்க கதையை கொஞ்சம் தனி மடல்ல அனுப்புங்களேன். k v r a j a [at] g m a i l [dot] c o m

  8. தோழரே ஆண்ணாதிக்கத்தைப்பற்றிய உங்களுடைய பதிவுகள்,நிச்சயமாக பல தோழர்களையே அடுத்தக்கட்டத்துக்குக்கொண்டுசெல்லும் என்று நினைக்கிறேன்.மிகவும் நன்றி தோழரே.

  9. பாலியல் தேவை என்பது வயிற்றுப் பசியைப் போன்றதே! பசிதாங்காமல் பலர் திருடி உண்கிறார்கள்! கூலிக்கு வேலை கிடைத்தால், வேலை செய்து பணம் கொடுத்து உண்கிறார்கள். அதேபோல் ஊருக்கு ஒரு விபச்சார விடுதிகள் இருந்திருந்தால் கற்பழிப்புகள் நிச்சயம் குறையும். உடல் பசி எடுத்தோர் பணம் கொடுத்து தீர்த்துக்கொள்ளட்டும். அல்லது ஆணும் பெண்ணும் வரையறையின்றி உடலுறவில் ஈடுபட அனுமதித்தால் பசியெடுக்கும் இருபாலாரும் தங்கள் உடற்பசியை தீர்க்கொள்ளலாம் யாரும் யாரையும் வற்புறுத்தவேண்டிய அவசியம் ஏற்படாது. எங்காவது நாய் ஆடு மாடு ரேப் பண்ணுதுன்னு சொல்றாங்களா? அதுபோல் பிறியா விடுங்க எல்லாமே சரியாயிடும்.

    —- இது உண்மையில் சரியான கருத்து e.g) refer singapore’s real time practice and rape crimes

    • /// எங்காவது நாய் ஆடு மாடு ரேப் பண்ணுதுன்னு சொல்றாங்களா? //

      🙂 … really i dont know haha.

      Ya you are right. Govt should legalize and allow red light areas. That’s already proven in many countries that it will reduce sex crimes against women.

      But our people wont understand the black side of the real world. For example which ever politician allow red light in TN have to suicide from politics. So its about people awareness.. unless people understand that its not possible.

      In singapore its almost one party rule, no one can vote out that govt. So they have the power to do anything. We can’t expect that to happen here.

      • ///Govt should legalize and allow red light areas. ///////

        பாலியல் தொழிலுக்கு வரும் பெண்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? எதனால் வருகிறார்கள்? இந்த சமூகம் அவர்களை இந்த நிலைக்கு தள்ளியிருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

        பாலியல் வன்முறை குறைய, சிவப்பு விளக்கு பகுதிகள் தேவை, அவற்றுக்கு பெண்கள் தேவை, அதை ஏற்படுத்தும் வறுமை மற்றும் இன்ன பிற சமூக கசடுகளும் தேவை என்கிறீர்களா?

        சரி..
        எந்த பெண்களை, யாரை அங்கு பாலியல் தொழிலில்(விபச்சாரத்தில்) ஈடுபட செய்வீர்கள்?

      • மாண்புமிகு தமிழக முதல்வர் , பலதாரத்து நாயகன் கருணாநிதி மற்றும் சிரிப்பிலும் செயலிலும் நரியாய் மக்களையும் நாட்டையும் அமெரிக்க மச்சான்களுக்கு கூட்டிக் கொடுக்கும் மன்மோகன் சிங் மாமா அவர்களே …

        உங்களால் பெண்களுக்கான் இடஒதுக்கீடு மசோதாவைத்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. பெண்கள் வன்கொடுமைக்கு கீழ் கொடுமைப் படுத்தப் படாமல் இருக்க தயவு செய்து இந்திய மாதாவின் புதல்விகளை சிவப்பு விளக்குப் பகுதியில் அணிவகுக்கச் செய்வீராக … அதற்கு பெண்கள் வர மறுத்தால் வீட்டிற்கு ஒரு பெண்ணை வரச் சொல்லை சட்ட மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஒரு மசோதாவை நிறைவேற்றுக … அப்படியும் பெண்கள் வரவில்லை என்றால் கவலைப் படாதீர்கள். இதோ இங்கே சென்னைத் தமிழனும் , இந்தியனும் வரிசை கட்டிக் கொண்டு நிற்கிறார்கள் பெண்களை சப்ளை செய்ய ..

        வாழ்க பாரதம் … வாழ்க அதன் சுதந்திரம் …

        • You should have basic decency when writing in public forum.

          When you are talking about a dream world where there no one knows about corruption, prostitution…etc …i am saying its practically impossible to 100% avoid these things in a poor or developing or even developed country.

          I am not standing strongly to legalize red light areas …but what i saw in many articles girls from poor and uneducated families are misguided and misused end up they brought in to this illegal underground prostitution.

          Even its happens in many countries no one able to stop it 100%… But lot of countries controlled these issues by monitoring it clearly. These is what world women org saying… they said abusing women to prostitution is higher in countries which failed to monitor rather than country will allowed and monitor.

          This is just a point to discuss here only…. when you close mined and imagine and trying for a dream world which never exist …then you are not going to attain anything.

          If you don’t have manners to talk then stop writing here.

      • திரு இந்தியன்,
        நீங்கள் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறீர்கள்…
        விபச்சாரத்திற்கு வருமை, வேலை இல்லாமை தான் காரணம் என்கிறீர்கள்… பாலியல் வன்முறைக்கு தீர்வாக சிவப்பு விளக்கு பகுதிகளை பரிந்துரைத்திருக்கிறீர்கள்…

        ஆக, பாலியல் வன்முறை இல்லாமல் போகவேண்டுமானால், வறுமை – வேலையின்மை நீடிக்கவேண்டும். நீடித்தால் தானே சிவப்பு விளக்கு பகுதிக்கு பெண்கள் வருவார்கள்?

        சிவப்புவிளக்கு பகுதிகள், விபச்சாரம் ஒழியவேண்டுமானால், வறுமை – வேலையின்மையை ஒழிக்கவேண்டும்…. சரி, அப்படியானால் பாலியல் வன்முறை தொடரத்தான் செய்யுமா?

        உங்கள் கருத்துகளின் முரண்பாட்டை சொன்னால், கவித்துவம்- புரியவில்லை என்று கோவனம் கட்டிக்கொள்கிறீர்கள்..

        சரி! மேலே சேரிக்காரன் கேட்டதற்கு பதிலளியுங்கள்…

        நாங்கள் பாலியல் வன்முறையை நுகர்வு மோகம் “மேலும், மேலும்” தூண்டுகிறது என்கிறோம், அதற்கு காரணமான முதலாளித்துவ-உலகமயமாக்கலை எதிர்க்கிறோம். முதலாளித்துவ-உலகமய சுரண்டலால் உருவாகும் சிவப்பு விளக்கு பகுதிகளையும் எதிர்க்கிறோம்!

        • Boss….your are saying globalization and privatization only brings more prostitution ??? But take the facts and stats …these prostitution , child porn, Rape, Women slave, Kidnap …etc are all higher in African countries where there is no much MNC’s or US companies ….

          Even in india crimes agianst women is not higher in middle class or upper middle class …its very high only in slums, poor rural areas ??? So what does that mean ?

          You are saying globalization bring more money to people …so their spending power increases …that why they spend more for going for prostitution ?? Today India’s globalization or privatization created more number of middle class families ..(meaning lot of lower middle class and poor familes pushed a stage up) …….Stats shows crime rates in middles class is very less compared to any other …so how about that ?

          In tamil nadu …do you know where this prostitution grows higher and where HIV spreads more ??? Its in rural areas …the lorry drivers who driving through villages get more and more prostitutes in those village areas and these rubbish happens more there only….. Not an IT official or MNC official where the wife too educated and learn some what better to monitor her husband.

          Discussing Poverty and no education will only create these problem is like discussing world is sphere or rectangle ?? Everyone knows even you !!…….Just for arguments you all pretends like blur ?? 🙂 🙂

    • அப்படிங்களா.. நாலைந்து ஆண் நாய்கள் பெண்நாய்களுக்காக நடுத்தெருவில் கட்டிப் புரண்டு சண்டை போடுவதை பார்த்ததேயில்லையா நீங்கள் ?
      இனப்பெருக்க காலத்தில் பெண் நாயின் எச்சில் மற்றும் பிறப்புறுப்பில் வடியும் ஒரு விதத் திரவத்தின் மணம் ஆண் நாய்களை அதன் பக்கம் ஈர்க்கிறது. பெண்நாய் இங்கு ஒன்றும் செய்யாமல் அது பாட்டுக்குத் தான் இருக்கிறது. தேடி அலைபவர்கள் ஆண் நாய்களே. எனவே ஆண் நாய்கள் எல்லாவற்றையும் காயடித்துவிடுங்கள்… பிரச்சனையே வராது…

  10. தனி மனிதனுக்கு தேவையான கல்வி, வேலை, உறுதியாகும் போது சரியான வாழ்க்கைதுனை பாலியல் தேவையை பூர்த்தி செய்வதோடு.அவனை அடுத்தவரின் மீது வன்புணர்ச்சியை செய்ய வழியில்லாமல்போகிறது. உலகமயமாக்கல் கொள்ளையின் மிகமோசமான விளைவுதான் தனிநபர் ஒழுக்கத்தை தவிடுபொடியாக்கிவிடுகிறது.

    • Really ?? Crime rates are high in poor countries compared to developed countries.

      China and India are the two countries which gained so much from globalization. Its really baseless to oppose globalization in india.

      Compare India before 1990 and after 1990. Before 1990 every one was waiting in employment office to get a job, Now we don’t have enough manpower in many sectors. Ask the students studying in Universities how much they are confident to find job. In 1990 no one say he is confident now you know the status.

      • @ Indian,

        அப்போ எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ்ல க்கியூவுல நின்னாங்க… இப்ப நீங்க இன்னா சொன்னீங்கோ? பொண்ணுங்கள, பசங்கள எல்லாத்தயும் ரெட் லைட் ஏரியா வாசல் ல இல்ல நிக்க சொல்றீங்கோ?

        பொண்ணுங்க அங்க வேலைக்காக க்கியூவுல நிக்கனும், பசங்களும் அங்கன போயி க்கியூவுல நிக்கோனும். இதானே ரெட் லைட் திட்டம்?

        சரி, இப்ப மட்டும் இங்க எல்லாருக்கும் வேலை கிடச்சிருக்கா?
        அப்புறம் எதுக்கு வெளிநாட்டுக்கு நம்ம ஆளுங்க போறாங்க?
        இங்க கிடச்ச வேலக்கும் என்னா கூலி குடுக்குறான்? வெல வாசி என்னா வெல விக்குது?

        • To சேரிக்காரன்:

          Brother … i think you are twisting what i said. Even you allow red light areas or not still prostitutes go to do that anyway.

          I am taking about jobs before 1990 and after 1990 …Is that mean all women and child have to red light area ?? Why you are connecting things meaninglessly

          You are asking if more jobs created then why people going abroad ??

          Compared to 20 years back now the job market is very good and more number of jobs are created easily. It doesn’t mean you create 100% jobs which even developed countries can’t do.

          Even you create 100% jobs people will still go abroad if they get more pay there. It doesn’t mean there is no job for them here.

        • To Indian ..
          **********
          நான் முட்டாள்களை பார்த்திருக்கிறேன் .. அறிவுஜீவிகளையும் பார்த்திருக்கிறேன் .. உங்களைப் போன்றவரை (மிகப் பெரிய அறிவாளிகளை) இப்பொழுது தான் பார்க்கிறேன் ..

          Brother … i think you are twisting what i said. Even you allow red light areas or not still prostitutes go to do that anyway.

          ஆமாம் … மிகச் சரியான வார்த்தை சொன்னீர்கள் இந்தியன். சிவப்பு விளக்கு பகுதிகளை அனுமதிதாலும் அனுமதிக்காவிட்டாலும் விபச்சாரத்திற்கு செல்லும் பெண்கள் சென்று கொண்டு தான் இருக்கப் போகிறார்கள் என்று கூறுகிறீர்கள் .. சரி அல்லவா ?..

          என்னைப் போன்ற தொலைநோக்குப் பார்வை இல்லாத ஜீவனுக்கு வரும் ஒரு சின்ன சந்தேகம் ..

          விபச்சாரத்திற்கு தன்னை பலிகடா ஆக்கிய பெண்கள் தங்கள் உடல் சுகத்திற்காக வருகிறார்களா ?.. இல்லை வயிற்றுப் பிழைப்பிற்காக வருகிறார்களா ?.. இல்லை எல்லாம் வல்ல இறைவன் அவர்களை அதற்காக தான் படைத்திருக்கிறாரா ?..

          கொஞ்சம் பதில் சொல்லுங்கள் இந்தியன் …

          அவர்கள் வயிற்றுப் பசிக்காக இன்றும் அந்த தொழிலில் ஈடுபட்டு சிதையும் போது வயிற்றுப் பசி போக்க வேறு தொழில் செய்ய ஏற்பாடு செய்து தருவது ’இந்திய’ அரசாங்கத்திற்கு மிகவும் கஸ்ட்டமான வேலை என்பதால் விபச்சாரத் தொழிலை சட்டப் படி சரியான தொழிலாக மாற்றிவிடலாம் என்ற உங்கள் தொலை நோக்குப் பார்வையை எண்ணி எண்ணி பூரிப்படைகிறேன்.
          ————————————————————————————————————-
          I am taking about jobs before 1990 and after 1990 …Is that mean all women and child have to red light area ?? Why you are connecting things meaninglessly
          You are asking if more jobs created then why people going abroad ??
          Compared to 20 years back now the job market is very good and more number of jobs are created easily. It doesn’t mean you create 100% jobs which even developed countries can’t do.
          Even you create 100% jobs people will still go abroad if they get more pay there. It doesn’t mean there is no job for them here
          *************************************************************************

          அரசாங்கம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் சலுகைகள் மக்களின் வரிப் பணத்தில் இருந்து தான் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல கொலம்பஸோ அவனது அக்கா புருசனோ தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
          தவிர விபச்சாரத்தில் அதிகமாக ஈடுபடுவது வறிய நிலையில் உள்ள ஆதரவற்ற ஏழைகளே .. அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க சிறப்பு பொருளாதார மண்டலத்தில் என்ன திட்டம் என்பதைக் கண்டுபிடிக்க வாஸ்கோடகாமா கப்பலில் மறுபிறவி எடுத்து கிளம்பி வந்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.. நல்லது ..

          இதற்கான பதிலில் இந்தியாவின் ஏழைப் பெண்களுக்கு வாழ்வளிக்க இந்திய அரசாங்கம் சிவப்பு விளக்கு பகுதிகளை இந்தியாவில் திறக்க பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களை அறைகூவி அழைக்க வேண்டும் என்று பிரதமருக்கு நீங்கள் பரிந்துரைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்..

      • poorness push the girls jump into prositution but globalization itself a prosituional network.
        its like somebody push the girls in to thewell now she herself jump into well.

        globalization hasn’t bring nothing to women. instead before globalization makes the women a material for lust (eg fashion shows,miss universe ,miss world etc.) and other side it makes them to work for several hours (eg BPOs,IT etc.) and adds burden.

  11. உலகமயமாக்கலில் மனிதர்களே பண்டமாகிவிட்ட நிலையில், பெண்மைக்கு மதிப்பற்று விற்பனைப்பொருளாகிவிட்டது. இது குமுகாயச் சீரழிவைத் தூண்டுவதோடு, தனிமனித ஒழுக்கத்தைச் சிதைவுக்குள்ளாக்குகிறது. சுதந்திரமான பாலுறவு என்பது யாரும் யாருடனும் படுக்கலாம் என்பதைக் கண்ணியமாகச் சொல்லுவதே.இது மிருகங்களை ஒத்த நிலையாகும். இது பெரும்புள்ளிகளிடையே ஒரு காலத்தில் துறப்பு மாற்றும்விளையாட்டாக, இந்த அசிங்கம் நடைபெற்றதுமுண்டென அறிந்துள்ளேன். உடலுறவென்பது மனிதவாழ்வியலின் தேவை. இனவிருத்திக்கும், உடற்சுகத்துக்குமாக நிகழ்கிறது. இருபாலாருக்கும் தேவைப்படுவது. ஒரு சிலர் தாகத்தோடு அலைந்து தரம்கெட்டுச் சீரழிவதோடு, தமைச்சார்ந்த குடும்பத்தை சீரழித்துவிடுகின்றனர். உடலுறவு என்பது ஒரு அதியுச்ச பட்சமான உணர்வின் பரிமாற்றம். ஆனால் அதனை மலினப்படுத்திக் கேவலப்படுத்தி விடுவதென்பதும், அதனை ஒரு கூடாதவிடயமாகப் பார்த்தலென்பதுமே சமுதாயச் சக்கரத்தில் நசிபடும் ஒரு விடயமாக உள்ளது. இது ஒரு ஆரோக்கியமான , அந்தந்த வயதுவரும்போது ஈடுபடக் கூடியது என்று சொல்லுகின்ற துணிவு எப்போது வருகிறதோ, அப்போதுதான் இந்தப் பாலியல் வன்முறை முடிவுக்குவரும்.

    உலகமயமாக்கலில் மனிதர்களே பண்டமாகிவிட்ட நிலையில், பெண்மைக்கு மதிப்பற்று விற்பனைப்பொருளாகிவிட்டது. இது குமுகாயச் சீரழிவைத் தூண்டுவதோடு, தனிமனித ஒழுக்கத்தைச் சிதைவுக்குள்ளாக்குகிறது. சுதந்திரமான பாலுறவு என்பது யாரும் யாருடனும் படுக்கலாம் என்பதைக் கண்ணியமாகச் சொல்லுவதே.இது மிருகங்களை ஒத்த நிலையாகும். இது பெரும்புள்ளிகளிடையே ஒரு காலத்தில் துறப்பு மாற்றும்விளையாட்டாக, இந்த அசிங்கம் நடைபெற்றதுமுண்டென அறிந்துள்ளேன்.

    உடலுறவென்பது மனிதவாழ்வியலின் தேவை. இனவிருத்திக்கும், உடற்சுகத்துக்குமாக நிகழ்கிறது. இருபாலாருக்கும் தேவைப்படுவது. ஒரு சிலர் தாகத்தோடு அலைந்து தரம்கெட்டுச் சீரழிவதோடு, தம்மைச்சார்ந்த குடும்பத்தை சீரழித்துவிடுகின்றனர். உடலுறவு என்பது ஒரு அதியுச்ச பட்சமான உணர்வின் பரிமாற்றம். அது புனிதமானதும் கூட. ஒருத்திக்கு ஒருவனாக இருக்கும் வரை. மற்றவை யாவும் யோனி மடலுக்கும் ஆண்குறிக்குமான உறவன்றி வேறல்ல என்பதே பொருந்தும். ஏனென்றால் தன்னை விற்பவளோ இவனுக்கு விரைவாக விந்து வெளியேறி என்னை விட்டால் போதும், அடுத்த வாடிக்கையாளரை பிடிக்க என்றெண்ணியவாறே படுப்பாள் போனவனும் தனது அவசரத்தை முடித்துவிட்டுக் கிளம்பிவிடுவான். இன்னும் ஒரு படி மேலே போய் சில பாலியல் தொழில் செய்வோர் தன்னுடைய பெண் குறியை ஊத்தையாக்கி விடாதே என்பவர் கூட உண்டு. எனவே அந்த இடத்திலே அவளது பார்வையில் தனது உறுப்பைக் கூட ஒரு பண்டமாகப் (பொருளாக) பார்க்கிறாளேயன்றி வேறெதுவுமில்லை.

    எனவே உடலுறவையும் பாலியல் வன்முறையையும் இரு வேறுதளங்களில் நோக்கப்பட வேண்டியவை. ஆனால் உடலுறவை மலினப்படுத்திக் கேவலப்படுத்தி விடுவதென்பதும், அதனை ஒரு கூடாதவிடயமாகப் பார்த்தலென்பதுமே சமுதாயச் சக்கரத்தில் நசிபடும் ஒரு விடயமாக உள்ளது. இது ஒரு ஆரோக்கியமான , அந்தந்த வயதுவரும்போது ஈடுபடக் கூடியது என்று, எப்போது நாம் எமது பிள்ளைகளோடு, கதைக்கின்ற, சொல்லுகின்ற துணிவு வருகிறதோ, அப்போதுதான் இந்தப் பாலியல் வன்முறை முடிவுக்குவரும். இது ஒன்றும் ரகசியமல்ல என்பது தெரியும் போது பெரிதாக அதைப்பற்றிய மாயை விலகிவிடும். அப்போது குமுகாயமாற்றம் தானாக நிகழும். அதன் வழி ஒரு ஒழுக்கமான உலகைக் காணலாம். இல்லையேல் இது தொடரவே செய்யும்.

    • உலகமயமாக்கலில் மனிதர்களே பண்டமாகிவிட்ட நிலையில், பெண்மைக்கு மதிப்பற்று விற்பனைப்பொருளாகிவிட்டது. இது குமுகாயச் சீரழிவைத் தூண்டுவதோடு, தனிமனித ஒழுக்கத்தைச் சிதைவுக்குள்ளாக்குகிறது. சுதந்திரமான பாலுறவு என்பது யாரும் யாருடனும் படுக்கலாம் என்பதைக் கண்ணியமாகச் சொல்லுவதே.இது மிருகங்களை ஒத்த நிலையாகும். இது பெரும்புள்ளிகளிடையே ஒரு காலத்தில் துறப்பு மாற்றும்விளையாட்டாக, இந்த அசிங்கம் நடைபெற்றதுமுண்டென அறிந்துள்ளேன். உடலுறவென்பது மனிதவாழ்வியலின் தேவை. இனவிருத்திக்கும், உடற்சுகத்துக்குமாக நிகழ்கிறது. இருபாலாருக்கும் தேவைப்படுவது. ஒரு சிலர் தாகத்தோடு அலைந்து தரம்கெட்டுச் சீரழிவதோடு, தமைச்சார்ந்த குடும்பத்தை சீரழித்துவிடுகின்றனர். உடலுறவு என்பது ஒரு அதியுச்ச பட்சமான உணர்வின் பரிமாற்றம். ஆனால் அதனை மலினப்படுத்திக் கேவலப்படுத்தி விடுவதென்பதும், அதனை ஒரு கூடாதவிடயமாகப் பார்த்தலென்பதுமே சமுதாயச் சக்கரத்தில் நசிபடும் ஒரு விடயமாக உள்ளது. இது ஒரு ஆரோக்கியமான , அந்தந்த வயதுவரும்போது ஈடுபடக் கூடியது என்று சொல்லுகின்ற துணிவு எப்போது வருகிறதோ, அப்போதுதான் இந்தப் பாலியல் வன்முறை முடிவுக்குவரும்.

      உலகமயமாக்கலில் மனிதர்களே பண்டமாகிவிட்ட நிலையில், பெண்மைக்கு மதிப்பற்று விற்பனைப்பொருளாகிவிட்டது. இது குமுகாயச் சீரழிவைத் தூண்டுவதோடு, தனிமனித ஒழுக்கத்தைச் சிதைவுக்குள்ளாக்குகிறது. சுதந்திரமான பாலுறவு என்பது யாரும் யாருடனும் படுக்கலாம் என்பதைக் கண்ணியமாகச் சொல்லுவதே.இது மிருகங்களை ஒத்த நிலையாகும். இது பெரும்புள்ளிகளிடையே ஒரு காலத்தில் துறப்பு மாற்றும்விளையாட்டாக, இந்த அசிங்கம் நடைபெற்றதுமுண்டென அறிந்துள்ளேன்.

      உடலுறவென்பது மனிதவாழ்வியலின் தேவை. இனவிருத்திக்கும், உடற்சுகத்துக்குமாக நிகழ்கிறது. இருபாலாருக்கும் தேவைப்படுவது. ஒரு சிலர் தாகத்தோடு அலைந்து தரம்கெட்டுச் சீரழிவதோடு, தம்மைச்சார்ந்த குடும்பத்தை சீரழித்துவிடுகின்றனர். உடலுறவு என்பது ஒரு அதியுச்ச பட்சமான உணர்வின் பரிமாற்றம். அது புனிதமானதும் கூட. ஒருத்திக்கு ஒருவனாக இருக்கும் வரை. மற்றவை யாவும் யோனி மடலுக்கும் ஆண்குறிக்குமான உறவன்றி வேறல்ல என்பதே பொருந்தும். ஏனென்றால் தன்னை விற்பவளோ இவனுக்கு விரைவாக விந்து வெளியேறி என்னை விட்டால் போதும், அடுத்த வாடிக்கையாளரை பிடிக்க என்றெண்ணியவாறே படுப்பாள் போனவனும் தனது அவசரத்தை முடித்துவிட்டுக் கிளம்பிவிடுவான். இன்னும் ஒரு படி மேலே போய் சில பாலியல் தொழில் செய்வோர் தன்னுடைய பெண் குறியை ஊத்தையாக்கி விடாதே என்பவர் கூட உண்டு. எனவே அந்த இடத்திலே அவளது பார்வையில் தனது உறுப்பைக் கூட ஒரு பண்டமாகப் (பொருளாக) பார்க்கிறாளேயன்றி வேறெதுவுமில்லை.

      எனவே உடலுறவையும் பாலியல் வன்முறையையும் இரு வேறுதளங்களில் நோக்கப்பட வேண்டியவை. ஆனால் உடலுறவை மலினப்படுத்திக் கேவலப்படுத்தி விடுவதென்பதும், அதனை ஒரு கூடாதவிடயமாகப் பார்த்தலென்பதுமே சமுதாயச் சக்கரத்தில் நசிபடும் ஒரு விடயமாக உள்ளது. இது ஒரு ஆரோக்கியமான , அந்தந்த வயதுவரும்போது ஈடுபடக் கூடியது என்று, எப்போது நாம் எமது பிள்ளைகளோடு, கதைக்கின்ற, சொல்லுகின்ற துணிவு வருகிறதோ, அப்போதுதான் இந்தப் பாலியல் வன்முறை முடிவுக்குவரும். இது ஒன்றும் ரகசியமல்ல என்பது தெரியும் போது பெரிதாக அதைப்பற்றிய மாயை விலகிவிடும். அப்போது குமுகாயமாற்றம் தானாக நிகழும். அதன் வழி ஒரு ஒழுக்கமான உலகைக் காணலாம். இல்லையேல் இது தொடரவே செய்யும்.

  12. EDAMADAYANE CHENNAITHAMILA NEE

    SONNATHUBOL SEYTHAL INDIYAVIN ( MAKKAL

    THOKAIYIL ) BENKALIL 60 VEETHAMANAVARKAL

    விபச்சார விடுதிகளிள் இருப்பார்கள்.

    SILAVELAYIL UNATHU THAYO, SAKOTHATIYO KUUDA IRUKKALAM.

  13. nallan sonnatha naan ammodikiran

    “thani mandha ozukkam” irupallarukkam podhu ]

    adai tivirama ovovru vitili arambitha edirgala samudhaium menpada ore vhazi

    anna idaithan ella perivangalum solla matum siyranga

  14. if a girl in ful pardha if she comes in midnight 12 o clock will any men leave her alone. hence it is not the dress the mentality of the men to make attempt on her

  15. ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும்…

    உடை அணிவதன் மூலம் ஆணை பாலியல் வன்முறைக்கு ஈர்க்கிறாள் என்பதுதான் பொதுக்கருத்து என்றால் பெண்கள் சமூக வாழ்க்கையில் எத்தகைய அபாயத்துடன் வாழ வேண்டியிருக்கும்?…

  16. கவர்ச்சியான உடை பாலியல் வன்முறையை தூண்டுவதை சரி என்பவர்கள் மிதிவண்டியில் செல்பவன் காரில் பயணிப்பவனை அடித்து பிடுங்குவதும் சரிதான் என்பதை ஒத்துக்கொள்ளப்போவதில்லை.ஒழுக்கம் இன்மை என்பதுதான் பாலியல் வன்முறைக்கான காரணமாக இருக்க முடியுமே தவிர உடை அன்று. பெண் என்பவள் திருமணத்திற்கு முன் தந்தையின் உடைமை,பின் கணவனின் உடைமை எனும் ஆணாதிக்க கருத்துதான் பெரும்பான்மையினரின் கருத்தாக இருக்கிறது. இந்த கழிசடைப்பார்வையில் இஸ்லாம் முதலில் நிற்கிறது.

  17. It is also a fact among middle class women who brandish their physical charm to get things done in favour of them from their male superiors. In the Railway stations there is no separate queue for women. But a good number of women forming separate queue and demanding tickets is a common sight in many places. They should stop thinking they are weaker sex and inculcate the tradition of Chitamparam Padmini or those women in Manipur who braved the Indian army proclaiming ‘Indian army rape us’ when one of the women was molested by Indian army men. But my point here is not to say let women fight for themselves. It is the obligation of every right thinking person to condemn the violence against women-the better half of humanity.

  18. In cities like Bangalore now already most of the girls wear jeans and other modern dresses only. Is that all girls are rapped or abused ?

    If you compare the poulation Vs Crime ratio with cities like bangalore to villages …then for sure these crimes against women is higher in villages only. Where women wear traditional fully covered dress.

    Dress is not at all a reason for crimes. Its the men who think and treat women like slave mentality.

  19. பாலியல் வன்முறைகள் இருதளங்களில் பார்க்கப்பட வேண்டியது.

    ஒன்று, பெண்ணுடல் ஒரு வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டிருக்கின்றது. இந்த கட்டுரை அதனை சரியாக நிறுவிக்கின்றது. ‘தேவை’ உள்ள எல்லாவற்றையும் லாபம் சம்பாதிக்கும் வியாபாரமாகவே மாற்றி ருசி கண்ட முதலாளித்துவம், பெண்ணையும் ஒரு வியாபார பண்டமாக மாற்றுகின்றது. இதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடைகின்றார்கள்.

    1) பெண்னை ஒரு பண்டமாக மாற்றுவதன் மூலம் தங்கள் ஆணாதிக்கத்தை, அதன் மூலமான சொத்து சுரண்டலை அடைகின்றார்கள். மறுபுறத்தில் பெண்ணின் – ஆணுக்கினையான தகுதியை பறிப்பதன் மூலம் குறை கூலிகளை அடைகின்றனர். இது எதிர்மறையாக ‘ஒரு ஆணுக்கு உடைமையாக மாற்றப்படும் வாரிசு உருவாக்கும் இயந்திரமான பெண்ணை’ படைக்கின்றது. இது ஆண்களுக்கிடையிலான லாப போட்டியில் இந்த ‘வாரிசு இயந்திரத்தை’ – அதன் தூய்மையை அழிப்பதன் மூலமாக இன்னொரு ஆணின் மீதான வெற்றியாக நிறுவப்படுகின்றது. இதுவே பரந்த அளவில் இன, மத ரீதியான யுத்தங்கள் அல்லது வன்முறைகளில், பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கு காரணமாகும்.

    2) மேலும் ஆணை ஈர்க்ககூடிய ஒரு விளம்பர பொருளை உருவாக்குகின்றனர்.

    3) பெண் உடல் பற்றிய ஒரு ஆழமான எதிர்மறை எண்ணத்தை தொடர்ந்து சாதிப்பதன் மூலம் ஆண்களின் மத்தியில் பாலியல் மற்றும் பாலியல் மட்டுமே வாழ்க்கை என்ற கருத்தினை வெறித்தனமாக ஏற்றுகின்றனர்.இதன்மூலமாக ஆண்களின் மீது தமது உற்பத்தி பொருட்களை திணிக்கக்கூடிய ஒரு உபாயத்தை கண்டெடுக்கின்றனர்.

    இவையே எதிர்மறையாக பெண்ணின் மீதான ஒரு வன்முறையாக உருமாறுகின்றது.

    ஆக பெண்ணை அடிமையாக்கும் சொத்துடைமை இல்லாமல் ஒழிக்கப்படும் போதே, பெண்ணின் மீதான வன்முறை பூரணமாக ஒழியும். இல்லையென்றால், இந்த பெண்ணடிமை ஏதாவதொரு வகையில் அடுத்த தலைமுறைக்கு தொடரவே செய்யும்.

    ஆதவன்

    • முதலாளித்துவ, உலகமயதாசர்கள் இதற்கு சொல்லும் தீர்வு: சிவப்பு விளக்கு பகுதிகளை திறந்து பெண்ணுடலை மேலும் மேலும் சந்தைப்படுத்துவது!
      பெண்ணை மேலும் மேலும் ஆணுக்கான நுகர்வுபொருளாக்குவது!

      முதலாளித்துவ வாதிகளிடமிருந்து இதை தவிர, பெண்விடுதலையையா எதிர்பார்க்கமுடியும்??

      இதற்கு கம்யூனிசம் சொல்லும் தீர்வு….. பெண்ணை ஆணுக்கான நுகர்வுபொருள் என்ற நிலையிலிருந்து மாற்றி அமைப்பது.

      பெண் சமூகத்தில் உற்பத்திகருவி என்னும் நிலையிலிருந்து விடுவித்து சமூகத்தில் சுயமான பொருளாதார சார்புடையவளாக மாற்றுவதன் மூலம் தான், இப்படி தான் சாத்தியமாகும். இதற்கு பெண்ணை அடிமைபடுத்தும், நுகர்வுபொருளாக்கும் முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளை அழிக்கவேண்டும்.

      இந்த லட்சனத்தில் முதலாளித்துவ, உலகமயதாசர்கள் கம்யூனிசத்தை விமர்சிப்பதும், ஏளனம் செய்வதும் கேலிக்கூத்து தான்!

      • Instead of talking poetry way, can you talk straight to the point ??

        By using beautiful and inspiring words communists used to brain wash people …and that’s what you are also doing.

        1. Why womens and girls going for Prostitution ?

        Unemployment > Poverty > disease ..etc ..so the main root cause is Unemloyment.

        2. Is globalization increase prostitution ?

        Before 1990 (before india’s globalization) there were only few jobs created for womens. Now there are millions of jobs created for both rural and urban womens. Its very hard to see a unemployed women in cities in india now a days.

        If you rank which country got more jobs because of globalization. Then china will come first and india will come second. I already posted Glodman scahs report..that india going to create 12 cores of jobs in 10 years….no other country comes closer to this.

        3. What communism will do ?

        The communism your talking about which against globalization or privatization will shut down most of the companies and end up people will loose jobs and poverty will increase …you want proof ? See West bengal …

        Without any proper fundamental advantage you are supporting communism which will bring disaster to our country.

        Stop using poetry word to hide you don’t have any facts to show.

        • 1. Why womens and girls going for Prostitution ?

          Unemployment > Poverty > disease ..etc ..so the main root cause is Unemloyment.

          சரி .. கிராமப்புற நகர்ப்புற பகுதிகளில் பத்தாம் வகுப்பிற்கும் குறைவாக படித்த பெண்கள் தான் அதிகமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை தான் காரணம். சரி தான். ஆனால் எந்த பன்னாட்டு கம்பெனியில் படிக்காத மற்றும் குறைந்த படிப்பு படித்த பெண்களுக்கு வேலை தரப் படுகிறது ?.

          2. Is globalization increase prostitution ?

          Before 1990 (before india’s globalization) there were only few jobs created for womens. Now there are millions of jobs created for both rural and urban womens. Its very hard to see a unemployed women in cities in india now a days.
          If you rank which country got more jobs because of globalization. Then china will come first and india will come second. I already posted Glodman scahs report..that india going to create 12 cores of jobs in 10 years….no other country comes closer to this.

          ஆம் .. உலகமயமாக்கம் விபச்சாரத்தை அதிகரிக்கிறது. ஆதாரம் உங்களது சென்ற பதிவு. காசிற்காக உடலை விற்கும் மோசமான தொழிலை சிங்கப்பூர் , அமெரிக்கா போன்ற நாடுகள் சட்டமுறைப்படி அனுமதிக்கிறது என்பதே இதற்கான சாட்சி. காசிற்காக எதையும் செய்யலாம் என்பதை முதலாளித்துவம் இது போன்ற செயல்களால் நியாயப் படுத்துகிறது. உலகமயமாக்கத்தின் மற்றொரு பரிமாணமும் விபச்சாரத்தை ஊக்குவிக்கிறது. ஒரு சில ஆளும் வர்க்கத்தின் கையில் கட்டுக்கடங்காத பணத்தை சேர்த்து வைத்து , அதை எப்படி செலவளிப்பது என்று தெரியாமல் பணத்திற்காக ஏங்கும் பலருக்கு வலை வீசி நாகரீக விபச்சாரத்தில் தள்ளி விடுகிறது இந்த கலாச்சாரம்.(அதானப்பா யாரும் யாருடனும் கலாச்சாரம்). இது ஏழைகளிடம் வருவதில்லை. காசை வைத்து செலவழிக்கத் தெரியாத யுப்பிகளிடம் இருந்து தான் வருகிறது.

          மற்றபடி க்லாட் மேன் ஸ்கா அவர்களின் கூற்றுப் படி இந்தியாவில் பல கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அதனால் மக்களின் வாழ்வுக்கு வெளிச்சம் கிடைக்கும் என்றும் கனவு காண்பது ஒரு புறம் இருக்கட்டும். சமீபத்தில் சென்னை சிறிபெரும்புத்தூரில் உள்ள சான்மினா என்ற பன்னாட்டு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கொடுத்துள்ள ஒரு ஆண்டிற்கு பிறகுக்கான ஊதிய உயர்வுப் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

          லைன் ஆப்பரேட்டர்கள் :- ரூ.120 – ரூ.90
          லைன் சூப்பர்வைசர்கள்:- ரூ.640 -ரூ.520

          மேற்கூறியவற்றில் அதிக பட்ச தொகை அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு பணிரெண்டு மணி நேரமும் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வழங்கப் பட்ட ஊதிய உயர்வு.
          கடந்த ஒரு ஆண்டில் விலைவாசி உயர்வு பற்றி சொல்ல வேண்டியது இல்லை.

          நம்மைக் காக்கும் கர்த்தராகிய அமேரிக்க முதலாளிமார் நம்மை வாழ்விக்கவே இங்கு பிளைட் பிடித்து வந்து கம்பெனி நடத்துகிறார் என்று நாம் நம்புவோமாக .. இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களும் , அன்னிய முதலீடுகளும் நமது உழைக்கும் மக்களுக்கே என்று எண்ணி எண்ணி பூரிப்படைவோமாக .. ஆமென் ..

          3. What communism will do ?

          The communism your talking about which against globalization or privatization will shut down most of the companies and end up people will loose jobs and poverty will increase …you want proof ? See West bengal …
          Without any proper fundamental advantage you are supporting communism which will bring disaster to our country.
          Stop using poetry word to hide you don’t have any facts to show.

          மேற்கு வங்கத்தில் கம்யூனிச ஆட்சி நடக்கிறதா ?.. அப்படியா ?.. சே .. நக்சல்பாரிகளான எங்களுக்கு கூட தெரியாத ஒரு உண்மையை முதலாளித்துவ வாதியான நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் ?..
          எங்களுக்கு தெரிந்த வரையில் மேற்கு வங்கத்தில் ஆட்சி புரிவது ஒரு மாஃபியா கும்பல் தான். விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கி வெள்ளைக்காரனுக்கு கஞ்சா கடத்திக் கொடுத்த மாமாவுக்கு தாரைவார்க்க முயற்சித்த மாஃபியாக்கள். இந்தியன் அவர்களே .. மேர்கு வங்க ஆட்சியாளர்கள் உங்கள் இனம் தான் .. முதலாளிமார்கள். அங்குள்ள உழைக்கும் மக்கள் எங்கள் இனம்.

          முக்கியமாக உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு உள்ளது .. கம்யூனிசம் என்ன செய்யும் ?..

          மனிதனின் வேலையை மெசின்கள் மூலமாக செய்து அதிக இலாபம் பெறும் முதலாளிகள் ஒடுக்கப் பட்டு, மெசின்களுக்கு பதிலாக மனிதர்களின் வேலை நடைமுறைப் படுத்தப் பட்டு அதன் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். பன்னிரண்டு மணி நேரம் வேலை என்பது எட்டு மணி நேரமாக குறைக்கப்பட்டு
          மற்ற அனைவருக்கும் வேலை உறுதி செய்யப்படும். பணம் ஒரே ஓநாயின் வாய்க்குள் செல்வது தவிர்க்கப் பட்டு , முதலாளிகளுக்கும் அவர்கள் செய்யும் வேலைக்கு தகுந்த சம்பளம் மட்டுமே மாத வருமானமாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கப் படும். மீறி அதிக இலாபத்துக்கு ஆசைப் படும் முதலாளிகளின் ஆலைகள் உடனடியாக அரசுடைமை ஆக்கப் படும்.
          விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படும். அறிவியல் வளர்ச்சியில் சுயசார்புத் தன்மை வளர்க்கப் படும்.

          எல்லாவற்றிற்கும் மேலாக யாரும் யாருடனும் என்ற கழிசடைத்தனத்தையும் , விபச்சாரத்தை நாடு முழுக்க சட்டபூர்வமாக அனுமதிக்கும் அயோக்கியத்தனத்தையும் கலைந்தெறிந்து விபச்சாரம் இல்லாத 1925 – 1952 வரையிலான ரசியா போல் இந்திய மண் மாற்றப்படும். இது கம்யூனிசத்தால் முடிக்கக் கூடிய செயல். இதனை எந்த முதலாளியையாவது செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

          கடைசியாக … அக்காகி என்ன கம்பராமாயணமா எழுதியிருக்கிறார் ?.. தமிழ் நாட்டில் பிறந்த அனைவருக்கும் புரியக் கூடிய மொழியில் தான் எழுதியிருக்கிறார்.

          கடைசியாக எனக்கு உங்கள் பதிவை இந்த கட்டுரையில் பார்த்தவுடன் மனதில் தோன்றிய காமெடி சீன் எது தெரியுமா ?.. தனுசுடன் விவேக் நடித்த ஒரு படத்தில் விவேக்கிடம் அவரது அடியாள் ஒரு கேள்வி கேட்பார் .. “பாஸ் .. நாம காட்டியும் கொடுக்குறோம் .. கூட்டியும் கொடுக்குறோமா பாஸ்?.. “ ..
          வெளினாட்டு நிறுவனத்துக்கு தாராளமயம்,உலகமயம்,தனியார்மயம் என்ற பெயரில் நாட்டைக் காட்டியும் கொடுத்து விட்டு விபச்சாரத்தை ஒரு அங்கீகரிக்கப் பட்ட தொழிலாக மாற்றுவதன் மூலம் நாட்டுப் பெண்களை கூட்டியும் கொடுக்கும் இந்த முதலாளியத்தின் அடிவருடிகளை என்ன செய்ய ?..

  20. சென்ற பின்னூட்டத்தின் தொடர்ச்சி

    நான் குறிப்பிடப்படாமல் விட்டுப் போன விடையம் – இவ்வாறு ஒரு செல்வம் கொடுத்து வாங்கப்படவேண்டிய ஒரு பண்டமாற்றுப் பொருளான பெண்ணை, சராசரி மனிதன் அடைய முடியாத படி ஆக்குவதன் மூலமாக, சமூகத்தில் ஒரு பெரும்பான்மை பகுதி ஆண்களிடம் ஒரு பாலியல் வறட்சியை உண்டாக்குகின்றனர். மறுபுறமாக பாலியல் நுகர்வு பற்றிய விளம்பர வெறியின் மூலமாக இந்த மனிதர்களிடம் விரக்தியை ஏற்படுத்துகின்றனர். இது தவிர்க்க இயலாத வகையில் பாலியல் வன்முறையை நாடும் சமூக சீரழிவிற்கு கொண்டு செல்கின்றது.

    ஆனால், இதற்கெல்லாம் காரணமான முதலாளித்துவம் கடைசியில், சமூக ஒழுங்கினைப் பற்றி காட்டுக்கூச்சல் போடுகின்றது. இந்த வகையில் முதலாளித்துவம் பாசிசமாக பரிணமிக்கின்றது.

    • ஆதவன் உங்களின் கருத்துகள் படித்து புரிந்து கொள்ள சிரமமானதாக உள்ளது .இன்னும் சற்று விரிவாக எழுதும் பட்சத்தில் என் போன்ற புதியவர்களுக்கு உதவியாக இருக்கும்.

  21. ஆண், பெண்… இருப்பவன், இல்லாதவன்… ஆண்டான், அடிமை… ஒருவரை மற்றவர் அடிமைப்படுத்துதல் என்பது உலகம் உள்ளவரை இருக்கப் போவது. உலகம் தோன்றிய நாளில் இருந்து இருப்பது. யார் சொல்லியும், யாரும் தங்களை மாற்றி கொள்ள போவதில்லை. தண்டனைகளாலும் குறைய போவதில்லை, மறைத்து வைப்பதனால் மட்டும் தீரப்போவதில்லை என்பதே நிதர்சனம்.

      • ////அப்போ பகுத்தறிவு முழக்கம் எதற்கு!//// ஏணே பகுத்தறிவு பேசுன டைட்ட ஜீன்சு போட்டுக்கிட்டு வீட்டுக்குள்ள போடுற உள்ளடைகளை வேளியே போட்டுக்கிட்டு உடல் உறுப்புகளின் கன பரிமானாங்களை பிதுக்கி காட்டி திரியாறதுதான் பகுத்தறிவா? ஆனால் நம்ம ஸ்டாலின் ரோம்ப அருமையாக ஒரு பெண்ணு எப்படியேல்லாம் டிரேஸ் போடனுன்னு தன்னுடைய மகளுக்கு பன்னுன அறிவுரையை பாருங்க, மகளே ஸ்வெத்லானா உடலோடு ஒட்டிக்கொள்ளும் படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய்? வளர்ந்த பெண்தானே! தொளதொளப்பான ஆடைகளை அணிய பழகிக்கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்! (நூல் சர்வம் ஸ்டாலின் மயம், பக்கம்;135)

        • அய்யா tongue slip,

          ஓசை என்னா சொல்லியிருக்கிறாருன்னு படிச்சிட்டு பதில் எழுதுங்க. ரொம்ப அவசரப்படுறீங்க.

  22. பிதுங்கி திமிறும் மார்பகத்தோடு வளைய வரும் பெண்களை வெறி கொண்டு பார்க்கும் கண்கள் எத்தனை?
    பார்த்த நிமிடத்தில் மனதுக்குள் கற்பழித்து சுகம் கண்ட ஆண்கள் எத்தனை?
    ஆனால் இவர்களில் ஒருவனும் தன வீட்டு பெண் இவ்வாறு உடை அணிய விரும்ப மாட்டான்.
    வாய் கிழிய பேசலாம்,எழுதலாம்.உங்கள் வீட்டு பெண்ணுக்கு இது போன்ற உடை கொடுத்து வெளியே அனுப்பி புர்ர்ச்சி
    செய்துவிட்டு பின்னர் எழுதலாமே?

  23. நீ இப்படியே இஸ்லாத்திற்கு எதிராக எழுதிக்கொன்டிருப்பதால் எல்லாம் வல்ல இறைவனிடம் உன்னை முறையிடுகிறேன், மேலும் இஸ்லாமிய நண்பர்களுக்கு வினவை புறக்கணிக்க வேண்டுகிறேன்…

    • Vinavu writing about Hindu too …Can any Islam frenz let me know is there any bharathiyar, Periyar or thiru vi kaa in Islam ??? As there is no freedom given in islam …until now no one improving that religion up to date. Agree that…

      All religions are created by human only there is no god exits …if really god is there then he must be the worst person in the universe…

      Come out from religion and try to see people as human. I hate Hinduthuva or islam or christianity all these create hated thinking between people only.

  24. பெண்கள் கற்பழிக்கப்டுவதற்கு ஆண்கள் தான் காரணம் தவிர அவர்கள் அணியும் ஆடை இல்லை என்றும்,மேலும் அத்தகைய உடைகள் பெண்கள் அணிவதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் காரணமில்லை என்று சொல்லி நிங்களும் பெண்களை போக பொருளா தான் பார்க்கிற்ர்கள் என்று சொல்ல முடியும். ஆண்களின் போக பொருளாக பெண்ணுடல் மாற வேண்டும் என்ற பன்னாட்டுய் நிறுவனங்களின் சதிக்கு ஏன் பெண்கள் ஆளாக வேண்டும்.அப்படி போக பொருளாக மாறும் போது இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்

  25. what we can say? whether the law and justice is like that?Our human culture and habits are going like that?or male gendre is going as animal to always think the female as for mating only.But this particular incident is having so many dimensions If we study the case thoroughly; then only we will find the truth.Reports and revealed messages are not as to be a truth.

  26. communist kaarargalukku oru pennai endha aadail paarthaal mogam varum endru sollungal? communist galukku pennai eppadi paartaalum mogam varaadha?
    oru sarasari aanmaganukku pennin anga alagugal veliya therindhaal kaamam varum idhu iyarkai.
    oru pen kavarchiyaaga aadai aniumbodhudhaan avalai seendi paarkira ennam varugiradhu, muludaaga moodi iruppavalai seenda enna varuvadhu illai.
    indha katturai eludiya aasiriyarey ungal veetu pengal eppadi aadai anindaalum neengal kandu kolla maatteergala?
    ungal tholar stalin en avar magalukku loosana aadai aniumbadi sonnar, adhudhaan pennukku ganniyam endrum solli irukkiraarey appadi endraal stalinum pen adimaiyai virubiyavar endru thaaney artham? badhil sollungal editarey?

  27. ஆண்கள் எப்டி இருக்காங்களோ அதே போல பெண்களுக்கும் ஆடை சரியா இருக்கனும். ஆண்கள் ஜட்டியுடன் போனால் ஏற்று கொள்ளாத சமுதாயம் பெண்களை அரைகுறை ஆடை அணிய ஆதரவு கொடுப்பது ஏன். எப்டி வேணுன்னாலும் ஆடை இருக்கலாம் அப்டின்குற உங்களோட முட்டாள் தனதத்தான் உங்களுடைய பதிவே எதிர்த்து சொல்லுது. மற்ற பாலினத்த பாக்கும் போது ஆசை தூண்டுது அப்டிங்குறது உலகத்துல உள்ள எல்லா எடத்துலயும் ஒண்ணுதான். அதுக்கு சரியான ஆடைதான் தீர்வு.

    பெண்கள் அவங்க இஷ்டத்துக்கு போட்டுக்கலாம் அப்டின்னு சொல்லுறது, விளைவுகளை பற்றி அறிவு இல்லாத பொதுவுடைமை பேசும் வினவு போன்றோரின் கொள்கை.

    அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. இஸ்லாம் ஒன்றே சாத்தியம் என்பதை தங்களே ஒத்து கொண்டமைக்கு மிக்க நன்றி. இந்த கட்டுரையை படிக்கிற மத்தவங்களும் புரின்ஜிகுவாங்க.

  28. யார் கற்பளிக்க படுகிறாரோ அவரே கவனமாக இருக்கவேண்டும்.

    ஆண்கள் இல்லையே..

    பெண்தானே?

    அவள் நீச்சல் உடையில் போனாலும் சரிதான் கற்பழிப்பில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியுமானால்..

    கற்பழிப்பு உலகெங்கிலும் இருக்கு

    உடை மட்டுமே காரணமல்ல என்பது புரிகிறது.

    பசிக்கு பெண் தேவை

  29. வாத்தியார் மானவியை கற்பழிக்கிறார், அவருக்கு தெரிந்தது இவள் பென்.
    ஒரு மத குருமார் வரும் பக்தியோடு வரும் பென்னை கற்பழிக்கின்றார்..அவருக்கு தெரிந்தது இவள் பென்.. ஆனுக்கும் பென்னுக்குமாகவே இயல்பாகவே ஈர்ப்பு இருப்பது அறிவியல் உண்மை.

    ஈர்ப்பு என்பது அன்பாகி நல்ல உறவு நிலையோடு இருக்கும் வரை அதில் ஏதும் பிரச்சனை இல்லை.

    ஆனால் அதே ஈர்ப்பு இன்னும் அதிகமாகி அவளினை அடைந்தே தீரவேண்டும் என்று கொழுந்து விட்டு எறிய செயவது அவளின் உருவ அங்கங்களின் வெளிப்பாடு அதை தோற்றுவிக்கும் உடை அலங்காரங்கள்.

    ஒரே மாதிரியான உருவ அமைப்புகள் கொண்ட இரு சகோதரிகள் கடைத் தெருவில் நடந்து செல்கின்றனர், ஒருவர் முழுக்க மூடிய ,பென்களின் உடல் அங்கங்கள் வெளியில் தெரியாத அளவில் உடையனிந்துள்ளார்,
    இன்னொருவர் , தொடை தெரியும் அளவிற்கு ஜீன்ஸினால் ஆன டிரவுஸர்ஸ், மார்புகளின் வடிவம் முழுமையாய் தெரியும் அளவிற்கு
    இருக்கமான டி.சர்ட் போட்டும் ,அதற்கு மேல் இன்னும் கவர்ச்சியான வாசங்களுடனும் உதாரனத்திற்கு (FCUK ME IF YOU CAN, PRESS HERE , I HAVE
    BIG B()()PS…..LICK ME ..) கடை வீதியில் கவர்ச்சி நடை போடும் இன்னொரு சகோதரியும் சேர்ந்து செல்லும் போது ..அவர்களை கடந்து செல்லும் ஆன்களின் கூட்டத்தின் பார்வை எப்படி இருக்கும் என நினைப்பீர்கள்,

    அதாவது நான் இந்த கட்டுரையாளரை நேரடியாகவே கேட்கிறேன்.
    உங்களின் பார்வை எங்கு போகும், எந்த பென்னை உஙகளின் பார்வை தொடும் முழுதாய் மூடி செல்லும் பென்னையா இல்லை அரை குறையாய் கவர்சியுடான் போகும் பென்னையா?..
    உங்கள் மனதில் 1% அளவிற்கு கூட ஏதும் தோனாமல் முற்றிலும் துறந்த மா முனிவன் போல் கடந்து செல்வீர்கள் என்றால் மகிழ்ச்சி….
    ஆனால் சாதாரனமாக ஒரு ஆன் மகனின் மனதில் என்ன தோன்றும்?
    ஈர்ப்பை -கவர்ச்சியாக்கி- கவர்ச்சியை காமமாக்கும் –விளைவு பாலியல் பலாத்காரம்..இன்னும் கேட்க கூடாத நிகழ்வுகள் எல்லாம் உருவாகி கொண்டிருக்கின்றன.

    இதை மறுப்பவன் பழமைவாதி ,மூடன் .. மேலும் மேலும் கவர்ச்சி வேண்டும் என்று கூறி தன் காம எண்ணங்களை ஆற்றி கொள்பவன்
    நவின நாகரிகவாதி…மேலை நாடுகளில் 14 வயதுக்கு உட்பட்ட பென்களில் 45 % பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர், காரணம் அவர்களின் பாதளத்தில் பாயும் நாகரீகம்.

    அரை கோமனத்தில் காந்தி திரிந்தாலும் அவரை தேச பிதா என்று தூக்கி வைத்து ஆடும் சமுகம் ஒரு பென் இப்படி கோமனம் கட்டி திரிய அனுமதிக்குமா உங்கள் நாகரிக சமுகம்???

    காமத்தின் ஊற்றாக இருக்கும் கவர்ச்சியை நாம் கட்டுபடுத்தும் போது தான் அதன் விளைவுகளையும் கட்டுபடுத்த முடியும்.

    நோயின் காரணத்தை பார்க்காமல் அதன் விளைவுகளுக்கு மட்டுமே நாம் மருந்து கொடுக்கின்றோம்..

    இஸ்லாத்தில் ‘ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!’ என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.

    ‘ஹிஜாப்’ என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும்,
    அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

    இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும்
    இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.

    ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம் ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

    உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

    அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

    அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.

    ‘ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்’ என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

    ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

    பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.

    ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

    பெண்களுக்கு பாதுகாப்பு

    இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.

    பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

    ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் கூட இதை அறியலாம்.

    ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

    அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

    பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

    இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

    ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.

    இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

    அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.

    ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.

    பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். ‘இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்’ என்றெல்லாம் கூறுகின்றனர்.

    ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

    பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?

    பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?

    பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?

    பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

    எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.

    இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

    பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.

    ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

    அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

    இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

    கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது

  30. Hi,

    Rape is not accidental, it is intentional. One who has the idea of doing it, will do. Others won’t do.

    Compare dress with money in pocket. Good one never -rape/pickpocket- even if -dress is sexy/pocket is full of money. Bad fellow would -rape/pickpocket- even if -dress is decent/pocket is empty. So, are you not going out with money in your pocket? then why say girls not go with the dresses they like?. One prudential thing is, we usually wont have more money where pickpocket is prone to happen. As such, girls must be aware of such circumstances. Be with inner wears in Goa beach, no probs, but don’t do it here.

  31. பெண்களை கவர்வதும், பெண்கள் ஆண்களை கவர்வதும் இயற்கை. இதை யாராலும் தடுக்கவோ குறைக்கவோ முடியாது. அதர்க்காக இருபாலருமே உடல் மற்றும் உடைகளை உபயோகப்படுதுகிரார்கள். இருவருமே, கை மற்றும் மார்பழகை காண்பிக்க முயற்சி, குட்டை சட்டை, இருக்கமான உடைகள், எல்லாம் பொதுவாக பயன் படுத்துகிறார்கள். ஆக மற்ற பாலினத்தை கவரும் உணர்ச்சி என்பது இருவருக்கும் சமமே.

    இந்த சமூக கட்டமைப்பு என்பது ஆண்களாள் ஏற்படுத்தப்பட்டதும், ஆணாதிக்கம் உடையதாகவும் மாறிவிட்டதும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

    “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
    ஒண்டொடி கண்ணே உள”
    (கண்டும், கேட்டும், உண்டும், மோந்தும், தீண்டியும் அனுபவிக்கப்படும் இன்பங்கள் பெண்ணிடம் மட்டுமே உண்டு.)

    இது வள்ளுவன் மொழி. இப்படி ஓர் பெண் கவிஞர் சங்க காலத்தில் பாடினாரா எனபது தெரியாது. பாடியிருந்தாளும், வரலாற்றில் இடமில்லாமல் போகும் என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    ஆணால், பெண் கற்பழிப்பு என்பதற்கு ஆணாதிக்கத்தை மட்டும் காரணம் சொல்ல முடியாது. அதற்கு, முதல் மற்றும் முக்கியமாய், நாம் மறந்துபோன “தனிமனித ஒழுக்கம்” தான் காரணம்.

    இந்த சமூகம், ஒருவேலை பெண்ணாதிக்கச் சமூகமாயிருக்குமேயானால், ஆண் கற்பழிப்பு பற்றிய இப்படி ஒரு பதிவிற்கு, நிரைய பெண்கள் பின்னூட்டம் போட்டிருப்பார்கள். பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, கடவுளர்களோ… யாருக்கும் இதை கற்பிக்க நேரம் இல்லை. எதிர் வரும் தலைமுறையினர் ஒழுக்கம் என்றால் என்ன என்று கேட்கு அலவுக்கு வந்துவிட்டோம்.

    ஒழுக்கம் கற்பிக்காமல், நம்மால், எந்த கற்பழிப்பையும் குறைக்கவோ, நிருத்தவோ முடியாது. ஆண்கள், மேலை நாட்டு பொருட்கள், விளம்பரங்கள், இன்னும் எத்தனை சொன்னாலு, முழுமையான் முதற்காரணம், நம்முள் புரையோடிக்கொண்டிருக்கும், “தனி மனித ஒழுக்கக்குறைவே”!!!

  32. வெகுஜன ஊடகங்கள் செய்யும் மட்டமான காரியம் போலவே இந்த கட்டுரைக்கு இப்படி ஒரு படம் தேவைதானா?

  33. I totally disagree with the concept that females are also partially responsible for the sexual offences, because these are not done for the sake of sexual urges but to show their aggresion and dominence on the victim’s life.In history rapes were done systematically to destroy the occupied country’s social life as part of war scheme.Even in the recent communal clashes in orissa a nun was gangraped.In rural villages rapes have been done for various reasons like castesism,teaching them lesson or to threaten them.And in so many cases the victim is a minor who can’t understand what is happening to her and doesn’t know whom to report .The incident spoils her whole life both physically and physchologically.Rape is a crime against another human. In most of the incidents the rapist are not punished because of inefficiency of the legal system and apathy of the society towards the victim due the mindset that they are also responsible.The dress or makeup or age doesn’t make anyone a potential canditate for rape but their VULNERABILITY AND ARROGANCE OF THE AGGRESSOR.And majority of the cases go unreported due to ignorance and fear of stigma.And the legal system is of no use to them.When a victim reports an incident the first question would be about the character of the girl.The police has to submit the victim immediately for a medical examination for confirmation ,which is always delayed.The doctor has to collect a sample from the victim within 24 hours to nail the culprit which is not done in most of the cases for obvious reasons.This swab test has to be arranged by the police.When i was in my training i came across a rape victim suspect who has to examined by our professor. Even before examining the patient he told that was a fabricated case and he told that if she was a real victim she wouldn’t go to policestation.That is the attitude of the investigating team.When i argued with him about that he assured me 99% of cases are false cases and he knows by his experience.What i am saying is the investigating team should not be judgemental because anything could have happened .The job is to find the facts not to assume thing.Rape is a crime that has to be dealt like any other crime like murder.Don’t add insult to the injury by blaming the victim because it is an easy wayout .Sexuality,beauty and overexposure are all relative terms which vary with beholders eye.Let us not be sidetracked by the stereotyping or dress codes.

  34. ஆதவன் சூப்பர். உங்களுடைய இந்த விளக்கத்திற்கு இதுவரை யாரும் மறுப்பு சொல்ல வில்லை இனிமேலும் சொல்ல மாட்டார்கள். இந்த பதிவை பத்திரமாக வைத்திருங்கள். நாம் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் வினவு இதுபோன்ற ஹிஜாபுக்கு எதிரான வாதத்தை மீண்டும் முன்வைப்பார்கள். (உ. ம் – ஷகீலா – கவர்ச்சி சுதந்திரமா ? பர்தா கண்ணியமா ??) அதனை ‘வானம்’ என்பவரைப்போன்ற கழிசடைப்பார்வை கொண்டவர்கள் ஆதரித்து பின்னூட்டம் இடுவார்கள். பர்தா வை வினவு ஏன் இந்த அளவுக்கு எதிர்க்க வேண்டும்.. அதனை இஸ்லாம் சொல்கின்றது என்கிற காரணத்தினால் தானா? ஒருவேளை பெண் சுதந்திரம் என்ற பெயரில் திறந்த மார்புடன் வெளியில் வர அனுமதி தந்தால் பாராட்டுவீர்களோ என்னவோ?

    மறுபுறம், லீனா மணிமேகலையை பற்றி நீங்கள் எப்படி பேசலாம்? நீங்கள் சொல்லும் பெண்ணுரிமை அவருக்கு இல்லையா? இல்லை உங்களால் முன்மொழியப்படும் பெண்ணுரிமை வரையரைக்குள் அந்தப் பெண் இல்லையா? அப்படியென்றால் அந்த உரிமையை வரையறுக்க நீங்கள் யார்?

  35. டாய் ரொம்ப ஓவரா பேசாதீஙடா…. இன்னைக்கி ஆண்கள் தான் பெண்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இங்க பொட்டசிகளூக்கு ஆதரவா எழுதுர ஒருத்தனுக்கும் அரசு வேலை மட்டும் இல்ல, எந்த வேலையும் கெடக்காது. எல்லாத்தையும் பொட்டச்சிகளுக்கு கொடுக்கனும்னு அவளுக போராடிக்கிட்டு இருக்காளுக. எல்லாத்தையும் பொட்டச்சிகளுக்கு கொடுக்க போராங்க. அப்ப நீ வீடு கூட்டுரது… பொம்பளஙக் துணி தொவைக்கிரது.. அந்த வேலை தான் பாக்கனும். இந்த பொலப்பத்த வேலைய விட்டுட்டு ஆண் உரிமைக்காக போராடுங்கடா…

  36. நோபல் பரிசுப் பெற்ற யெமன் நாட்டின் தவக்குல் கர்மானிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வியொன்றை எழுப்பினார்!

    “ஏன் நீங்கள் ஹிஜாபை அணிகின்றீர்கள் ? அது எவ்வாறு உங்களுடைய கல்விக்கும், அறிவுக்கும் பொருந்துகிறது ?” என்று.

    தவக்குல் கர்மான் இவ்வாறு பதிலளித்தார்: “ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத் துவங்கினார்கள். நானும், எனது ஆடை முறையும் பிரதிபலிப்பது மனிதன் பெற்ற மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது துவக்க காலத்தை நோக்கி செல்வதன் அடையாளமாகும்.” என்றார்.

  37. இந்தக் கட்டுரை ஆண், பெண் இருபாலரின் உடல் மற்றும் உளம் சார்ந்த வேறுபாடுகளையும் வித்தியாசங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் மேலெழுந்தவாரியாக இஸ்லாத்தின் மீது குற்றச்சாட்டு எழுப்புகிறது. இது தொடர்பான குறிப்புகளுடன் வேறொரு சந்தர்ப்பத்தில் முழுமையான மறுமொழி இடுகிறேன்.

    • நோபல் பரிசுப் பெற்ற யெமன் நாட்டின் தவக்குல் கர்மானிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வியொன்றை எழுப்பினார்!

      “ஏன் நீங்கள் ஹிஜாபை அணிகின்றீர்கள் ? அது எவ்வாறு உங்களுடைய கல்விக்கும், அறிவுக்கும் பொருந்துகிறது ?” என்று.

      தவக்குல் கர்மான் இவ்வாறு பதிலளித்தார்: “ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத் துவங்கினார்கள். நானும், எனது ஆடை முறையும் பிரதிபலிப்பது மனிதன் பெற்ற மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது துவக்க காலத்தை நோக்கி செல்வதன் அடையாளமாகும்.” என்றார்.

  38. “இந்த விசயத்தில் இசுலாமியவாதிகளை யாரும் மிஞ்ச முடியாது. ஒரு தண்டியான சாக்குப்பையை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு சுண்டுவிரலைக்கூட காட்டாமல் பெண்கள் நடமாடவேண்டும் என்பது அவர்கள் கருத்து. இதில் அனைவரும் தாலிபான்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் ஆண்களின் காமம் தலைவிரித்து ஆடுமாம். ஏன்தான் ஆண்களை அப்படி காமவெறி பிடித்தவர்களாக அல்லா படைத்தார் என்பது தெரியவில்லை.”

    அறிவுகெட்ட வினவே, இஸ்லாத்தை முழுமையாக ஆராய்ந்து பார்த்துவிட்டு, அதன் பிறகு ஹிஜாப் பற்றி விமர்சியுங்கள். ஒரு தண்டியான சாக்குப்பையை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு சுண்டுவிரலைக்கூட காட்டாமல் பெண்கள் நடமாடவேண்டும் என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது. விபச்சாரத்திற்கு மரண தண்டனை என்று சொல்லக்கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

Leave a Reply to Kumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க