வெனிசுவேலாவின் அதிபர். ஹியூகோ சாவேசை நோக்கி நடைபெற்ற சதிபுரட்சியில் எப்படி ஊடகங்கள் எல்லாம் மக்களை நோக்கி கலவரக்காரர்கள் சுடுவதைப் போல திரும்ப திரும்பக் கூறி மனித உரிமை படுகொலைகள் நிகழ்ந்து விட்டதாக உண்மைக்கு புறம்பாக சித்தரித்தனவோ. அதே போல காசுமீரிகள் கல்லெறிவதை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி கல்லெறிவதை ஏதோ பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் போல சித்தரிக்க முயல்கின்றன செய்தி ஊடகங்கள். இதன் ஒரு பகுதியாக தான் “நல்ல வேளை என் மீது செருப்பைத் தான் எறிந்தார், கல்லை அல்ல என்ற காசுமீரின் முதல்வர் பரூக் அப்துல்லாவின்” பேச்சைக் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. இந்த பொய்யை மட்டுமே கூறும் ஊடகங்களுக்கு நடுவே கடந்த வாரம் தெகல்கா வாரஇதழில் வெளிவந்ததுள்ளது இந்த கட்டுரை. காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ? என்ற கேள்விக்கு விடை தான் இந்த கட்டுரை. கட்டுரையாளர் சாகித் இரஃபிக் ஒரு காசுமீரி, இவர் தில்லியில் வாழ்ந்துவரும் ஒரு ஊடகவியலாளர்.
…………………………………………………………….
நான் எப்பொழுதும் சண்டையை விரும்பியது கிடையாது. கல்லூரி காலங்களில் என் நண்பர்கள் குழு என்னை எப்போதும் கோழை என்றே விமர்சனம் செய்வார்கள். என்னால் ஒரு உடல் வலு இல்லாதவனை கூட அடிக்க இயலாது என்றும் கூட சொல்வார்கள். ஆனால் நான் கோழை அல்ல. என்னை பொருத்தவரை பெரும்பான்மையான சண்டைகள் பயனில்லாதவை. அகிம்சாவாதி என்ற வார்த்தை எனக்கு பிடிக்காது என்றாலும் நான் ஒரு அகிம்சாவாதி தான். வன்முறையை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, கருத்து விவாதங்கள் போன்ற பல நல்ல வழிகள் உள்ளன என்பதே என் கருத்து.
ஆனால் இன்று நான் ஒரு ஊடகவியலாளனாக எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக நான் கொண்டிருக்காவிட்டால், எனது நண்பர்களை போலே நானும் காசுமீரத்து நகரவீதிகளில் கல்லெறிந்து கொண்டிருப்பேன்.
ஆரம்ப காலங்களில் காசுமீரில் நான் கண்ட அடக்குமுறைகளும், படுகொலைகளும் என்னுள் எப்பொழுதும் ஒரு தெளிவின்மையை மட்டுமே ஏற்படுத்தி வந்தன. ஆனால் கடந்த இரு மாதங்களாக காசுமீரில் நடப்பவை எல்லாம் தெளிவான நீரோடையை போல உள்ளது. உலகம் காசுமீரில் நடப்பதை கண்டும் காணாமல் வாய் மூடி மௌனித்துள்ளது. இந்த மௌனம் அகிம்சாவாதத்தை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக தின்றுகொண்டே வருகின்றது. இந்த கள்ள மௌனமே எல்லா வன்முறைகளும் ஆரம்பிக்க காரணமாகும்.
வீட்டிலிருந்து வருகின்ற எல்லா அலைபேசி அழைப்புகளுமே இதயத்தை பிளக்கக் கூடிய செய்திகளாக உள்ளன. என்னுள் வன்முறை கொஞ்சம் கொஞ்சமாய் வளர்வதை உணர்கின்றேன் நான். எங்கள் வீட்டின் அருகிலுள்ள காய்கறி கடைக்காரர் அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று என் அம்மா எனக்கு கூறிய போது நான் தில்லியில் இருந்தேன். நான் காசுமீரிலிருந்து தில்லிக்கு வரும் முன்பு என் பக்கத்து வீட்டிலிருந்து கடைசி நபர் அவர் ஒருவர் மட்டும் தான். விடைபெறும் முன் இருவரும் புன்னகையை பரிமாறிக் கொண்டோம். ஆனால் இப்பொழுது என் மனதை கடுங்கோபம் சூழ்ந்துகொண்டுள்ளது. மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள் மிகக்கடுமையான கோபத்துடன் வீடுகளின் சாளரக் கண்ணாடிகளை உடைத்து, வீட்டினுள்ளே உள்ள அனைவரையும் கடுமையாக தாக்குகின்றனர் என என்னிடம் கூறினான் என் தம்பி.
தில்லியில் காசுமீரை மேற்பார்வையிடும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் என் நண்பன் கடந்த வாரம் ஒரு நாள் மாலையில் என்னை அழைத்தான். அவனது பணிகளுக்கு இடையிலும் அவன் காசுமீரில் அரச படையினால் அடித்தே கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுவன் சமீர் அகமதின் உடலை அவனும் பார்த்திருப்பான் என நினைக்கின்றேன்.அவனது உடலெங்கும் லத்தி குச்சியின் வரிகள் சாரை, சாரையாக உள்ளன. அவன் தின்று கொண்டிருந்த மிட்டாயின் மீதம் இன்னும் அவனது வாயில் அப்படியே உள்ளது. நான் அவனை சமாதனப்படுத்த முயல இறுதியில், இருவரும் ஒருவரை ஒருவர் சமாதனப்படுத்திக் கொண்டோம். அடுத்த நாள் காலை அவன் தில்லியிலிருந்து காசுமீருக்கு செல்லப் போவதாக கூறினான். “இங்கு எல்லோரும் பொய்யை மட்டுமே கூறுகின்றனர். மேலும் அவர்களின் பொய்யை அவர்கள் உண்மையென்று நம்புகின்றார்கள்” என்றான் அவன்.
இந்தியாவில் ஒரு “பொய்” எல்லோராலும் பரவலாக நம்பப்படுகின்றது, அதாவது அரச படைகள் காசுமீரத்து மக்களை பாதுகாக்கின்றனர் என்பதே அந்த “பொய்”. ஆனால் காசுமீரிகள் தாங்கள் அரசபடைகளால் பாதுகாக்கப்படுவதாக நம்புவதே இல்லை. இந்தியாவில் உள்ளவர்கள் அரசபடையை “பாதுகாவலர்கள்” என்றும், அவர்கள் தான் தீவிரவாதிகளிடம் இருந்து காசுமீரிகளை பாதுகாக்கின்றனர் என்றும் எண்ணுகின்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து தான் காசுமீரிகளை பாதுகாக்க வேண்டியுள்ளது என்பதே உண்மை. காசுமீரிகள் தங்களை ஆக்கிமிரத்துள்ள இந்த படைகள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோருகின்றனர். அரசபடைகள் மீது அவர்கள் கொண்டுள்ள உணர்வு பயம், வெறுப்பு, பழிஉணர்ச்சி போன்றவை மட்டுமே.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் காவல் துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படை சுட்டதில் 55 ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் காசுமீரில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். ஒன்று இவர்கள் கல்லெறிந்து கொண்டிருந்திருக்கலாம் அல்லது அண்டை வீடுகளில் விளையாடிக் கொண்டிருந்திருக்கும் போது சுடப்பட்டிருக்கலாம். காசுமீரில் பதட்டநிலை ஆரம்பிக்கும் காலகட்டங்களில் நான் அங்கு இருந்தேன். ஒவ்வொரு இறுதி ஊர்வலத்திற்கும் சென்ற நான் மக்கள் மிகக்கடுமையான கோபத்துடன் இருப்பதை கண்டேன். கங்பக் என்ற பகுதியில் 17 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவனது இரு நண்பர்கள் அவனை காவல்துறை அழைத்துச் சென்றதாகவும், பின்னால் அவன் நீரில் மூழ்கி இறந்துவிட்டான் என காவல் துறையை கூறியதாகவும் ஊடகங்களுக்கு சொன்னார்கள். ஆனால் இறந்த சிறுவன் நன்கு நீச்சல் தெரிந்தவன், ரண அறுவை சிகிச்சையில் தலையில் இரண்டு பலத்த காயங்கள் இருப்பது தெரிந்தது.
இதற்கு மறு நாள் “NDTV” என்ற செய்தி ஊடகத்தில் பேசிய மாநில முதல்வர் பரூக் அப்துல்லா “அவனது நண்பனது உயிர் முக்கியம் எனத் தெரிந்திருந்தால், இந்த இருவரும் அவனை நீரிலிருந்து காப்பாற்றியிருக்க வேண்டியது தானே” என கேட்டார். இவ்வாறு கேட்பதற்கு பரூக் அப்துல்லாவால் மட்டும் தான் முடியும், அதிகாரவர்க்கத்தின் பார்வை இவ்வாறு தான் இருக்கும். இவர்களை பொருத்த வரையில் காசுமீரிகள் “PDP” யின் பணத்திற்காகவும், பாகிசுதானின் உளவு நிறுவனங்களுக்காகவும் உயிரை விடும் தரகர்கள் தானே. இந்தியாவில் 40 ஆண்டு காலம் வாழ்ந்ததால் பரூக் அப்துல்லாவிற்கு இந்த உலகப்பார்வை வந்துள்ளது. முஃப்திகளோ இவர்களை விட மோசம், அவர்கள் எப்பொழுது பிரிவினை கோருவார்கள், எப்பொழுது இந்திய தேசியவாதிகளாக மாறுவார்கள் என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. அவர்களின் தேவை எல்லாம் ஆட்சி அதிகாரம் மட்டும் தான். மத்திய அரசு பரூக் அப்துல்லாவை தூக்கியெறிந்து விட்டு மெகபூபாவை முதல் மந்திரி ஆக்கவேண்டும் என்பதே அவர்கள் எண்ணம்.
காசுமீரிகளுக்கும், அப்துல்லாக்களுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. காசுமிரீகளை நோக்கி எப்பொழுதும் துப்பாக்கிகள் தயாராக இருக்கும், அப்துல்லாக்களை நோக்கி அல்ல. தங்கள் உயிரை பற்றிய கவலையில்லாமல் ஏன் தடையையும் மீறி இறுதி ஊர்வலத்திலும், அரச படைகளை எதிர்த்தும் கல்லெறிந்து கொண்டிருக்கின்றனர் என அப்துல்லாக்களும், முப்திக்களும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். இருபது வருட காலங்களில் இங்கு கொல்லப்பட்டுள்ள 70,000 மக்களின் புதைகுழிகளில் தங்கள் பொய்யையும் சேர்த்தே அவர்கள் புதைத்து வந்துள்ளனர். ஒரு காலத்தில் தேசிய காங்கிரசின் தீவிரமான ஊழியராக இருந்த எங்கள் உறவினர் ஒருவர் பிற்காலத்தில் அதே கட்சி காசுமீரிகளுக்கு துரோகம் செய்து விட்டது எனக் கூறினார் என்பதன் பொருள் எனக்கு இப்பொழுது தான் புரிகின்றது. சேக் அப்துல்லா டோர்கா மன்னர்களின் இரும்புப் பிடியிலிருந்து காசுமீரை மீட்டு அதை விட மோசமான அடக்குமுறை அரசிடம் ஒப்படைத்து விட்டார் என அவர் தினமும் கூறுவார்.
சிறீநகரின் கசூரி பாக் பகுதியில் வயதான தந்தை ஒருவர் கொல்லப்பட்ட தனது மகனின் உடலை பிடித்து கொண்டிருந்த படத்தை பார்த்தேன். ஆனால் ஆறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அவரை அவரது மகனின் உடலை விட்டு பிரித்துச் செல்ல முயன்று கொண்டிருந்தனர். ஆனால் அவர் மகனின் உடலை விட்டு பிரியாமல் அருகிலேயே இருந்தார். அவரது சட்டை மகனின் இரத்ததில் நனைந்து போனது, அவரது வெள்ளை தாடி இரத்தத்தால் சிகப்பு நிறமானது. அந்த படத்தை நான் பார்க்க பார்க்க என்னுள் ஏற்படும் வலியின் ரணம் அதிகரித்துக் கொண்டே சென்றது. இறந்த தனது மகனின் உடலை கட்டியணைத்து தனது சோகத்தை ஒரு தந்தை வெளிபடுத்துவதை தவிர அவரால் என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரியவில்லை. பரூக் அப்துல்லாவால் அந்த தந்தையை அடக்குமுறையை மீறி அரச படைக்கு எதிராக கல்லெறிவதை தடுக்க குடியுமா? அந்த வயதான மனிதரின் இடத்தில் பரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்படி நடந்திருப்பார், ஒரு தந்தையைப் போலவா? ஒரு முதல்வரை போலவா?. இந்நேரம் இந்நகரமே துண்டாடப்பட்டிருக்காதா? சிறீநகரம் பற்றி எரிந்திருக்காதா?
தங்களின் நேசத்திற்குரிய இறந்த உறவுகளை கல்லெறிவதன் மூலமாகவும், அரசு வாகனங்களை எரிப்பதன் மூலமாகவும் மிகச்சிறிய அளவில் மட்டுமே நினைவு கொள்கின்றார்கள் அவர்களின் தந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள். இது மட்டும் எப்படி தவறாகும்?
காசுமீரை சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று சுருக்கி பார்த்திட முடியாது, அது ஒரு மீக நீண்ட குருதி தோய்ந்த வரலாற்றை கொண்டது. மத்திய ஆயுத படையால் அனாதையாக ஆக்கப்பட்ட சிறுவர்கள் மட்டும் கல்லெறிய ஆரம்பித்தால் உங்களால் 60,000 கல்லெறிபவர்களை காண முடியும், இவர்களுடன் அரச படையால் விதவையாக்கப்பட்டவர்களும் சேர்ந்தாலே 30,000 பெண்கள் ஒவ்வொரு பதுங்கு குழி மற்றும் ஒவ்வொரு படை வீரரை நோக்கியும் கல்லெறிவதை நீங்கள் காணலாம்.
கையில் கல்லுடன் ஒரு சிறுவன் படை வீரருக்கு எதிராக வந்து நிற்கும் போது அவனுக்கு படை வீரனுக்கும், தனக்கும் இடையே உள்ள படை வலுவின் வித்தியாசம் நன்கு தெரியும். அவன் என்ன தான் சரியாக குறி பார்த்து எறிந்தாலும் ஒரு சிறிய காயமோ அல்லது ஒன்றிரண்டு தையல்களுடனான காயத்தை மட்டும் தான் படை வீரனுக்கு கொடுக்க முடியும் இதற்கே அவன் படைவீரனின் காலில் உள்ள பாதுகாப்பு உறை, குண்டு துளைக்காத மேல் சட்டை, தலைக் கவசம் இதை எல்லாம் மீறி அவன் எறியும் கல் செல்ல வேண்டும். ஆனால் படை வீரனின் துப்பாக்கியில் இருந்து வரும் துவக்கு(Bullet) மற்றும் படை வீரன் எறியும் கண்ணீர் புகைக்குண்டுகளினால் அந்த சிறுவன் மிகக் கடுமையாக பாதிக்கப்படலாம் அல்லது உயிரையும் கூட இழக்கக்கூடும் என்பது அந்த சிறுவன் மற்றும் படைவீரன் என இருவருக்குமே தெரியும்.
தனது ஆயுதமாக எப்பொழுது அந்த சிறுவன் கல்லை கையிலெடுக்கத் தொடங்கினானோ அப்பொழுதே அவனது போராட்டம் சமூக நெறிகளின் படி(Social Moral) உயர் நிலையை அடைந்துவிடுகின்றது. அந்த சிறுவனது நோக்கம் படைவீரனை கொல்வது தான் என்பது மிகவும் முட்டாள்தனமான ஒரு கருத்து. இந்த ஒரு காரணத்தினால் தான் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்றுவரும் கல்லெறியும் போராட்டங்களில் ஒரு படை வீரனோ, காவல் துறையைச் சேர்ந்தோரோ கூட இதுவரை இறக்கவில்லை. ஐந்து கல்லெறியும் போராளிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட காவல்துறை அல்லது படை வீரர்கள் பலரது புகைப்படங்களை நாம் பார்த்திருக்கின்றோம் ஆனால் இவர்களில் ஒருவர் கூட இது வரை இறந்ததில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.
உலகமும், இந்தியாவும் தங்கள் துயரமான வரலாற்றை கேட்பார்கள் என பல காலம் காசுமீரிகள் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் மொழியை யாரும் புரிந்துகொள்ளவில்லை. இதனால் எல்லா மனிதர்களும் புரிந்த ஒரு மொழியில் பேச வேண்டும் என காசுமீரிகள் எண்ணினார்கள். கடந்த இரண்டு மாதங்களாக கல்லெறியும் மொழியின் மூலமாக தங்கள் துயரத்தை காசுமீரிகள் உலகத்தாரிடம் எடுத்துக் கூறுகின்றார்கள்.
எந்த தாயிடம் உங்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் என பரூக் அப்துல்லா கேட்டுக் கொண்டாரோ அந்த தாயே வீதிகளுக்கு வந்து கல்லெறிய துவங்கியுள்ளார். கடந்த மாதம் தொலைக்காட்சியில் “இலசுகர் இ தொய்பாவின்” பணத்திற்காக இந்த கல்லெறிதல் நிகழ்வதாக காட்டிய போது அந்த “பணத்திற்காக கல்லெறியும் கும்பலில்” நான் எனக்கு அடையாளம் தெரிந்த சிலரை பார்த்தேன். அவர்கள் இருவரும் எனது வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் இரு பெண்கள். 2005ஆம் ஆண்டு அந்த பெண்களின் தம்பியை மத்திய ஆயுதப் படை கைது செய்து அழைத்துச் சென்ற பொழுது இவர்களில் ஒருவர் வெறும் கால்களில் மத்திய ஆயுதப் படை வண்டியை துரத்திக் கொண்டு நெடுதூரம் சென்றார். பத்து நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணின் தம்பியின் உடல் பக்கத்து தெருவில் கிடந்தது. அவனது தோல்கள் எரிந்த நிலையில் இருந்தன. அவனது உடலில் கனரக சக்கரங்கள் ஏறியது போலிருந்தது. அவனது பிறப்புறுப்பில் மின்சார கம்பிகள் இருந்தன. இந்த நிகழ்வுக்கு பின்னால் அந்த பெண்கள் முன்பு போல் இல்லை. 1995ல் தனது கணவனை தொலைத்து விட்ட (காணாமல் போன) ஒரு பெண்ணையும் நான் அந்த “பணத்திற்காக கல்லெறியும் கும்பலில்” பார்த்தேன். அரச படையால் கொல்லப்பட்ட மகனை பறிகொடுத்த தாயை நான் அந்த “பணத்திற்காக கல்லெறியும் கும்பலில்” பார்த்தேன். அந்த கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரின் பின்னும் கடந்த 20 வருடங்களாக சொல்லாத துயரமான கதை உணடு அதை அவர்கள் தங்கள் கைகளில் உள்ள கல்லின் மூலமாக சொல்லுகின்றனர். அவர்கள் எறியும் கல் படைவீரரை நோக்கி செல்கின்றதா என்பது அவர்கள் நோக்கமல்ல. அவர்கள் நோக்கம் கல்லை எறிவது மட்டும் தான். குறிபார்த்து அடிப்பது அல்ல. இதற்காக தான் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்துள்ளனர்.
பெண்கள் தான் இந்த பிரச்சனையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். கற்பழிப்புகளும், பாலியல் வன்முறைகளும் அரச படைகள் நடத்தும் உளவியல் தாக்குதல்களாகும். ஆனால் இவை எல்லாம் மிகவும் குறைத்தே இது வரை மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அந்த வலி பெண்களுக்கும், மனவியல் மருத்துவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்றாகும். கல்லெறிவதை அவர்கள் இராணுவத்திற்கு தரும் பேதி மருந்தாக பார்க்கின்றனர். ஒவ்வொரு முறை கல்லை எறியும் போதும் தங்கள் இதயக்கூட்டினுள் எரிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பாடத்தையும் அவர்கள் இராணுவத்திற்கு கற்பிக்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு பாட்டிமலூவில் உள்ள தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த எனது அத்தையின் மகன் அதாரை உன்னை நாங்கள் கொன்று விடுவோம் என மிரட்டி உள்ளனர் மத்திய ஆயுத படையைச் சார்ந்தவர்கள். அவன் உள்ளே சென்று ஒழிந்து கொண்டான். எனது அத்தையின் பத்து நிமிட கெஞ்சலுக்கு பின்னரே அவன் படைவீரர்கள் அவனை பார்த்து மிரட்டிய வார்த்தைகளை சொன்னான். எனது அத்தை வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். கோபத்தில் தன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தனது வீட்டின் அருகே நடந்து கொண்டிருந்த விடுதலை போராட்ட ஊர்வலத்தில் தன்னையும் தன் மகனையும் இணைத்து கொண்டு, தங்களின் பயன் போகும் வரையில் விடுதலை முழக்கங்களை எழுப்பினார். இது அவர்களுக்கு பயனும் தந்தது. அவர்கள் இருவருமே வீட்டை விட்டு வந்து இது போன்ற ஊர்வலத்தில் கலந்து கொள்வது இது தான் முதல் முறை. எனது அத்தை தனது கைகளில் உள்ள ரூபாய் நோட்டுகளில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு, இந்தியாவே திரும்பி போ (Go India, Go Back)” என்ற வாசகங்களையும், அந்த ஐந்து வயது சிறுவனோ அதே வாசகங்களை தனது வீட்டு சுவர்களில் எழுதிவைத்தான். இந்த ஒரு வாக்கியம் மட்டும் தான் அவனுக்கு ஆங்கிலத்தில் அவனுக்குத் தெரியும்.இது போன்ற சிறுவர்கள் தான் சிறீநகரின் அடைக்கப்பட்ட கடைக் கதவுகளிலும், யாருமில்லாத சாலைகளிலும், சுவர்களிலும் இது போன்ற விடுதலை முழக்கங்களை எழுதுகின்றனர்.
பாகிசுதான், ஆப்கானிசுதான் போன்ற பிரச்சனைகளை எல்லாம் தாண்டி காசுமீர் விடுதலை நிகழ்வு சென்று விட்டது. காசுமீர் துப்பாக்கிகளிலிருந்து விடுதலை முழக்கங்களுக்கு மாறிவிட்டது. இதில் கல்லெறிவது கூட தங்கள் அமைதி வழி போராட்டம் அரசால் மிகக்கடுமையாக அடக்கப்படும் போது மட்டுமே நிகழ்கின்றது. 2008ல் 3 இலட்சம் மக்கள் வீதிகளுக்கு வந்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மனித சங்கலி போராட்டம் நடத்தினர். அப்பொழுது ஒருவர் கூட எந்த ஒரு பதுங்கு குழியையும், படை வீரரையும் தொடக்கூட இல்லை. ஆனால் இந்த வருடம் காசுமீர் மக்களின் அமைதி ஊர்வலங்கள் அரசால் கட்டாயமாக தடை செய்யப்பட்டன. கூட்டத்தை கலைப்பதற்காக மக்களை சுடுவதற்கு இராணுவத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த வருடத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்கள் கூடுவதற்கு இராணுவம் அனுமதியே கொடுக்கவில்லை. இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களை நோக்கி அவர்கள் பலமுறை சுட்டனர். இதனால் பலர் கல்லெறிபவர்களாக ஆக்கப்பட்டார்கள்.
காசுமீரில் இன்று இராணுவத்தினால் ஒரு மருத்துவமனையையோ, தங்களுக்கு உதவக் கூடிய வீட்டையோ காண்பது அரிதான ஒன்று. காசுமீரிகள் இந்தியாவுடனான தங்கள் பிரச்சனையை துப்பாக்கிகள் இல்லாமல் தீர்வு காணுகின்றனர். ஊடகங்கள் காசுமீரிகளை பாகிசுதானின் உளவு நிறுவனத்தின் காசுக்காகவும், PDP யின் காசுக்காகவும் போராடுபவர்களை போல காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீநகரின் எல்லா தொகுதிகளையும் வென்றது தேசிய காங்கிரசு, PDP அல்ல. இந்த இடம் தான் கல்லெறிதலில் மிக முக்கியமான நகரமாகும். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஒரு நேர்காணலில் பரூக் அப்துல்லாவிடம் இந்த கேள்வியை கேட்டேன், நீங்கள் உங்களை காசுமீரிகளின் தலைவராக பார்க்கின்றீர்களா?, அல்லது காசுமீரில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் தலைவராக பார்க்கின்றீர்களா?. அவர் மிகவும் கோபமாக சொன்னார் நான் 60 விழுக்காடு வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளேன். இப்பொழுது அந்த வாக்குகள் எல்லாம் எங்கு சென்று விட்டன என எண்ணுகிறார் அவர்?
கல்லெறிபவர்களும், அமைதி வழியில் போராடுபவர்களும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுவது தொடர்ந்தால் காசுமீரிகள் தாங்கள் முன்பு வைத்திருந்த துப்பாகிகளை கண்டிப்பாக மீண்டும் கையிலெடுப்பார்கள். உலகிலேயே அதிக ஆயுத கொள்வனவு செய்யும் நாடான இந்தியாவிற்க்கும், காசுமீரில் உள்ள 7,00,000 துருப்புகளுக்கும் எதிரான இன்னொரு ஆயுத புரட்சியும் தீவிரவாதம் என்ற பெயரில் மறைத்து அழிக்கப்படும். AK 47 துப்பாக்கிக்கு எதிராக கையில் கல்லுடன் மோதும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கையில் உள்ள கல்லை கீழே வைத்து விட்டு தாங்களும் AK 47 துப்பாக்கியை கையிலெடுத்தால் நிலைமை 1990களில் இருந்ததைவிட மிக மோசமாக மாறிவிடும். காசுமீர்களுக்கு தெரியும் எவ்வாறு ஆயுதப் போராட்டம் தங்கள் குழந்தைகளையே அரித்து தின்னும் என்று, ஆனாலும் அவர்கள் தங்கள் விடுதலைக்காக அதைச் செய்வார்கள். ஆனால் தற்போது காசுமீர் போராட்டம் வெறும் கற்களுடன் மட்டுமே நடைபெறுகின்றனது. ஆனால் தங்களைச் சுற்றி உள்ள இந்த கண்ணாடி மாளிகைகள் அப்படியே இருக்காது. போர் மிகத் தீவிரமான ஒன்றாக மாறும், இருந்தபோதிலும் என்னுள் உள்ள அமைதி விரும்பி அந்த நிலைக்கு காசுமீர் தள்ளப்படாது என்று கூறுகிறான்.
காசுமீரில் இசுலாம் என்ற வார்த்தை தொன்று தொட்டு இருந்து வருகின்றது, இதை காசுமீரிகள் தங்களுக்கே உரிய தனித்துவ முறையில் புரிந்துகொண்டுள்ளனர். எனது தாயார் புனித தளங்களுக்கு செல்வார். எனது பெண் தோழியும் கூட. எனக்கு தெரிந்த எல்லா பெண்களும் அங்கே செல்வார்கள். மசூதிகளை விட அதிகமான கூட்டம் இந்த புனித தளங்களில் எப்போதும் இருக்கும். சூபி இசுலாம் இங்கு பல நூறு வருடங்களாக இருந்து வருகின்றது. இந்த புரட்சிகளும் கூட ஒழுக்கு நெறிகளை பின்பற்றியே நடக்கின்றது. காசுமீரிகள் பணிவானவர்கள் மற்றும் விட்டுக் கொடுப்பவர்கள் என்பதை எப்பொழுது எங்களின் பலவீனமாக அரசு கருத ஆரம்பிக்கின்றதோ அப்பொழுது அரசு அடக்குமுறை தகர்க்கப்படும்.
1990களில் காசுமீர் பண்டிட்டுகளுக்கு என்ன நடைபெற்றது என்பது எனக்கு தெரியாது. நான் அப்பொழுது சிறியவன். ஆனால் இன்று அந்த நிகழ்வு பல திரிபுகளுக்கு உள்ளாகிவிட்டது. காசுமீரில் பண்டிட்டுகளையே காணாத இசுலாமிய இளைய தலைமுறைகளில் நானும் ஒருவன். ஆனால் அந்த வருடம் என்ன நடைபெற்றது என்பது பற்றிய பல கதைகளை நான் கேள்விப்பட்டுள்ளேன். எப்பொழுதெல்லாம் அன்று என்ன நடைபெற்றது என தெளிவாக தெரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றோனோ அப்பொழுதே அது தெளிவில்லாமல் செல்ல ஆரம்பிக்கின்றது. எங்களது பழைய குடும்ப புகைப்படங்களில், பல காசுமீர் பண்டிட்டுகளை நான் பார்த்ததுண்டு. எங்களது குடும்பத்தை பொருத்தவரையில் பண்டிட்டுகளுக்கு எதிராக பேசுவது தவறு, அவர்கள் விடுதலையை எதிர்க்கும் வலது சாரி இயக்கத்தை சார்ந்தவர்களாக(இதை ஒரு மத போராட்டமாக பார்ப்பவர்கள்) இருந்தாலும் சரி. பண்டிட்டுகள் மீண்டும் அவர்களின் பூர்விக நிலங்களில் வந்து குடியேற வேண்டும். என்னை போன்ற இளைஞர்கள் அவர்களை வேறு யாரோ ஒருவர் என எண்ணாமல் நண்பர்கள் போல பழகவேண்டும் என்ற எண்ணம் என்னுள் எப்போதும் உண்டு.
என்னை பொருத்தவரை காசுமீர் என்பது கென்றி காரிட்டர் பிரசனின் புகைப்படத்தை போல. அந்த புகைப்படத்தில் ஒரு பெண்கள் கோ.இ.மாரன் மலை உச்சியில் நின்று கொண்டு தங்களது தெய்வங்களை வணங்கிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் பழைய காசுமீரி பர்காவிலும், இன்னொருவர் காசுமீரின் பாரம்பரிய உடையுடனும் மலைகளையும், அகண்ட வானவெளியை பார்த்த மாதிரி இருப்பார்கள். அவர்களின் இறைவழிபாட்டு முறைகளில் வேறுபாடிருப்பினும், அவர்களின் கோரிக்கை ஒன்றாக இருந்தது. இந்த பிரச்சனை ஏற்கனவே அவர்கள் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது. அமைதி வழி போராளிகள் கொல்லப்படுவது தொடர்ந்தால் இந்த பெண்களும் ஒரு நாள் காணாமல் போய் விடுவார்கள். நாம் கனவு கண்ட காசுமீர் கனவிலேயே போய்விடும் போல் உள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் நானும் “விடுதலை” போராட்டம் முடிவடைந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் துப்பாக்கிகளிலிருந்து கல் என்ற ஆயுதமாக மாற எடுத்துக் கொண்ட காலம் தான் அது என்பது எனக்கு இன்று புரிகின்றது. 1953களில் சர்வசன வாக்கெடுப்பு என்று இருந்தது. 1970களின் ஆரம்பத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமான “Al Fatah” (அல் பாத்தா என்பதற்கு வெற்றி எனப் பொருள். இந்த இயக்கம் முன்னெடுத்த போராட்டமே சுய நிர்ணய உரிமை போராட்டம் ஆகும்) என்றானது , 1989களில் சம்மு காசுமீர் விடுதலை அமைப்பு என்றானது, இன்று ஒன்பது வயது கல்லெறியும் சிறுவன் என்றிருக்கும் போராட்ட நிலையில் என்றும் விடுதலை முழக்கம் மட்டும் மாறவே இல்லை. போராட்ட வழிமுறைகள் மட்டுமே மாறியுள்ளன.
“பெரிய பொருளாதார மற்றும் அதிகார போட்டியில் வளர்ந்து வரும் நாடான இந்தியா” காசுமீரி மக்களின் மனங்களை கவர பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து முயற்சி செய்தது. பெரும்பான்மையானோர் அந்த பணத்தை பெற்றிருப்பினும் தங்கள் உணர்வுகளை ஒரு பொழுதும் அவர்கள் மாற்றிகொள்வதாயில்லை. இது வழிமுறை 1. இது சரியாக நடைபெறாததால் வழிமுறை 2ல் தவறான நபர்களுக்கு நட்சத்திர விடுதிகளில் கவனிப்பு நடந்தது. ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை. இந்தியா தனது பணத்தையும், ஆயுதத்தையும் கீழே வைத்து விட்டு காசுமீர் பிரச்சனையை காசுமீரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும். இரண்டு வழிகளில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம். முதலில் இதை பிரச்சனை என்றுணர்து, பிரச்சனையில் சம பங்குள்ளவர்கள் என கருதி தில்லி காசுமீரி மக்களுடன் சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது. அல்லது இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை எனக் கூறி நோயை அல்லாமல் நோயின் அறிகுறிகளை மட்டும் குணப்படுத்தும் வேலையில் ஈடுபடுதல். தேசிய காங்கிரசு PDP போன்ற அரசியல் கட்சிகள் கூறும் இந்திய அரசமைப்பின் எல்லைக்குள் “சுயாட்சி” போன்றவற்றை எல்லாம் மைய அரசு தூக்கியெறிந்து பல நாளாகி விட்டது.
மக்கள் கூட்டமைப்பின் தலைவர் “சாச்சத் லோனோ கூறும் “அடையக்கூடிய தேசியம்” என்பதை பற்றி இரண்டு வருடமாக ஒருவர் கூட இதுவரை வாயே திறக்கவில்லை. குரியத் கூட்டமைப்பின் தலைவரான மிர்வாசு உமர் கூறுகையில் “தில்லியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நாங்கள் எங்கள் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை ஊசலாட்டதில் வைத்துள்ளோம்” என்கிறார். இந்தியா வெறும் புகைப்படத்திற்கு மட்டும் அல்லாமல் குறைந்தபட்சம் நேர்மையுடன் பேச்சு வார்த்தை நடத்தும் என நாங்கள் நம்புகின்றோம் என்றார் அவர்.
இந்திய படை வீரர்களோ மிகவும் ஏழ்மையான கிராமத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை யாருமற்ற பதுங்கு குழிகளில் கழிக்கின்றனர். கல்லுக்கு பதிலாக காசுமீரத்து சிறுவர்களின் வாழ்க்கையை முடித்து விடுகின்றார்கள். சுற்றி போடப்பட்டுள்ள முள்வேலிகள், உளவியல் ரீதியான கோளாறுகளால் அதிக பட்சமான தற்கொலைகளும், தங்கள் குடும்பத்தினரையே கொலை செய்தல் போன்றவையும் காசுமீரில் மிக அதிக அளவில் உள்ளன. இந்தியா இவர்களை தேச பகதிக்காக எரியும் மெழுகாய் மட்டும் பார்க்காமல் தகுதி வாய்ந்த குடிமகன்களாய் என்று பார்க்கத் தொடங்குகின்றதோ அன்று தான் காசுமீரிகளுக்கும், படையினருக்கும் உண்மையான விடுதலை ஆகும்.
இந்தியா ஒன்று காசுமீரை விட்டு வெளியேறலாம் அல்லது அங்குள்ள மக்களின் மனதில் இடம்பிடிக்கலாம். ஆனால் 63 வருடங்களாகியும் இந்தியாவால் காசுமீர் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவே இல்லை.
________________________________________________________________________________
மூலப்பதிவு : http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne280810Iamapracifist.asp
தமிழாக்கம். ப.நற்றமிழன்.
________________________________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்
- காஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!
- “காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு!”
- பற்றி எரிகிறது காஷ்மீர் !!
- இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்!!
- வந்தே மாதரமும் – தேசபக்தி வெங்காயமும் !!
- காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் !
- காஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !
- அமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் !
- சசியின் டைரி : காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை
- அசுரன் – காஷ்மீர் விடுதலைப் போராட்டம் வெல்க!!!
காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ? | வினவு!…
காசுமீரிகள் கல்லெறிவதை ‘மட்டும்’ காட்டி பயங்கரவாதம் போல சித்தரிக்க முயல்கின்றன செய்தி ஊடகங்கள். அவர்கள் ஏன் கல்லெறிகின்றார்கள் என்ற கேள்விக்கு விடை தான் இந்த கட்டுரை….
நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது….நன்றி.
இது முற்றிலும் உண்மை என்றால் வேட்கப்பட வேண்டிய விஷயம்….(இந்திய அரசு).
http://timesofindia.indiatimes.com/india/For-the-first-time-securitymen-kill-more-civilians-than-terrorists-in-JK/articleshow/6508298.cms
For the first time, securitymen kill more civilians than terrorists in J&K
Read more: For the first time, securitymen kill more civilians than terrorists in J&K – India – The Times of India http://timesofindia.indiatimes.com/india/For-the-first-time-securitymen-kill-more-civilians-than-terrorists-in-JK/articleshow/6508298.cms#ixzz0ypjveFlp
அருமையான கட்டுரை
கட்டுரை அருமை! //இந்தியா ஒன்று காசுமீரை விட்டு வெளியேறலாம் அல்லது அங்குள்ள மக்களின் மனதில் இடம்பிடிக்கலாம். ஆனால் 63 வருடங்களாகியும் இந்தியாவால் காசுமீர் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவே இல்லை//
கத்தியின்றி, ரத்தமின்றி, எதிரியின் மனதை கூட புன்படுத்தாமல் சுதந்திரம் பெற்றதாக புளுகிக்கொல்லும் இந்திய தேசத்தின் உண்மை முகம்தான் காசுமீரில் வெளிப்படுகிறது, இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இதை ஆச்சரியத்தோடு பார்க்கும் சில நடுத்தர கணவான்களின் போலி தேசியப்பற்றுதான் இந்திய அரசாங்கம் பயணம் செய்யும் பீரங்கி வண்டியாகும். இப்போது கூட இவர்களின் தேசியப்பற்றை தினசரி பார்பணப் பத்திரிக்கைகளில் வாசகர் கருத்துக்களில் காணலாம்.
சாதாரண ஜனங்களே கையில கிடைகிகற கல்ல வச்சு போராடுறாகளே ஏன்னு ஒரு கேள்வி இந்த கட்டுரைய படிக்கும் போது இருக்காது. நற்றமழின் தொடர்ந்து மொழிபெயர்க்க வாழ்த்துக்கள்!
இந்தியநாடு பல இனங்களின் கூட்டமைப்பு .. இதை இந்திய பார்ப்பன அரசியல் புரிந்துகொண்டாலும் தனது ஆதயாதிருக்குரிய அரசியலை நம் மீது திணிக்கிறது.. இதை நன்றாக புரிந்தே பெரியார் அவர்கள்.. தமிழ் நாட்டை தனிநாடாக கேட்டார்.. அப்படி பெற முடியாமல் போனதன் காரணத்தால் இலங்கையில் நம் குழைந்தைகள்.. பெண்கள் போன்றோர்களை இந்திய இலங்கை வெறிதனத்திருக்கு நாம் பலி கொடுத்தோம் … காஷ்மீரிகளின் வரலாறும் நம்மை போல் வஞ்சிக்கபட்டதே.. விரைவில் இந்தியாவில் பெரும் சிக்கலை கொண்ட அரசியல் நெருக்கடி ஏற்படும் எனது நம்பிக்கை..
கொல்லப்பட்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே இருக்க, நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக செய்திகளை மறைப்பதற்குத்தான் அரசு பெரிதும் முயல்கிறது இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பாதுகாப்புப் படையினர் பதின்பருவ இளைஞர்களைக் குறி வைத்துத் தாக்கி வருகிறார்கள் மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி 57க்கும் மேற்பட்டவர்கள் இது வரை கொல்லப்பட்டார்கள். சிலர் விளையாட்டு மைதானத்திலும் வீட்டுச்சரிவுகளின் அருகிலும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் இவ்வாறு கடந்த juneல் மட்டும் 13 குழந்தைகள் துடிதுடித்துச் செத்திருக்கிறார்கள், ஸ்ரீநகரில் கனி மெமோரியல் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற பதின்மூன்று வயதே ஆன வமிக் பாரூக் ஜனவரி 31ஆம் நாள் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகி இறந்தான் அடுத்த ஐந்து நாள்களுக்குள் ஷாஹித் பாரூக் எனும் பதினாறு வயது இளைஞன் தன் வீட்டின் அருகிலேயே எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) கொல்லப்பட்டான் ஏப்ரல் 13ஆம் நாள் ஜீலம் நதிக்கரை ஒரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் சுபைர் அஹமது பட்(17) இராணுவத்தினர் தங்களை நோக்கி வருவதைக் கண்டதும் பிள்ளைகள் நதியில் குதித்து விட்டனர். மற்றவர்கள் எல்லாம் நீந்திக் கரை சேர்ந்தபோது சுபைர் மட்டும் வெள்ளத்தில் மட்டிக் கொண்டன். அவனைக் காப்பாற்றப் படகுக்காரர்கள் சிலர் முயன்ற போதும் அவர்கள்மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டி அடித்தது இராணுவம். அதனால் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சுபைரின் சாவை சாதாரண விபத்து என்று குறிப்பிட்டு வழக்கை முடித்திவிட்டார்கள் நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை இதுதான் இந்திய அரசாங்கம் கஷ்மீரிகளுக்கு வழங்கும் பாதுகாப்பின் இலட்சனம் ஒரு சுகந்திர நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படவேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பும் மரியாதையும் கூட காஷ்மீர் மக்களுக்கு கிடைப்பதில்லை
நற்றமிழன் தொடர்ந்து மொழிபெயர்க்க வாழ்த்துக்கள்!
நாடெங்கிலும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்..
காஷ்மீரில், வடகிழக்கில், வங்கத்தில், ஒரிசாவில் இன்னும் பல இடங்களில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள்..
ஆனால், தெருவில் கால்வைக்காத நடுத்தரவர்க்க சீமான்களுக்கோ நாட்டுப் பற்று பொங்கி வழிகிறது!
உரிமைகளுக்காக, வாழ்வாதரங்களுக்காக, அடக்குமுறைக்கெதிராக போராடும் மக்களை தேச விரோதிகளென்று மக்கள் விரோத- தேச துரோக கருத்தை கக்கிவிட்டு, தின்று கழிந்து வருகிறார்கள்…
அவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை!
மிகச்சிறப்பான கட்டுரை. மொழிபெயர்ப்பும் நேர்த்தியாக உள்ளது. தோழர் நற்றமிழன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த உண்மைகளை எந்த ஊடங்களுக்கும் மக்களுக்கு தெரிவிக்க விரும்பவே இல்லை…
ஆனால் இந்த கேடு கெட்ட பார்ப்பன ஆதிக்க ஊடங்கள்… தங்களை சனநாயகத்தின் 4வது தூண் என சொல்வதன் மூலம்…
ஹிந்தியாவில் சனநாயகம் சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை…
இதுவே என் மக்களுக்கும் என் தாயகத்தில் நடந்தது….நடக்கின்றது…முற்றுப்புள்ளி தமிழீழமாய் தேவைப்படுகின்றது..
நன்றி தோழரே
சிறப்பாக பதிவு செய்தியிறுகிறீர்கள்
விடியும் என்று விடியலை நோக்கி சாதாரன பொது ஜனம்.
Kashmir is an integral part of India and solutions have to be found with that understanding.In the state of jammu and kashmir, neither the hindus in jammu region nor the buddhists in ladhak region want a separate nation nor support secession from india.so how can people in one part of a state can claim that they represent the entire population of a state.the unstated truth is that the demand for separate kashmir nation is based on the idea of an islamic state in kashmir. Geelani once said that for kashmiri muslims living among non-muslims would be like a fish living in desert for muslims.the so called azadi movement has support from islamic fundamentalists and groups like talibans and the pakistan government supports them.so it is fundamentalist islam+nationalism that is being put forth as a solution.how can the indian people accept this solution.but do these kashmiris support the demand for a separate baluchistan nation?.what about human rights violation in the area under control of pakistan.struggles in baluchistan and Pakistan occupied kashmir are brutally suppressed by the pakistan state. in sum and substance the kashmir issue can be resolved only kashmiris give up their unreasonable demands and dreams of an islamic nation in kashmir and if both sides i.e. groups there and the indian govt. agree to resolve the issue amicably within the framework of constitution of india.india cannot afford to endanger its security and integrity by compromising on this issue when it is surrounded by states that are hostile to it, i.e.
china and pakistan. the demand for secession is supported by some islamic nations and some fringe groups which are hostile to india.because most nations now know that islamic terrorism supported by pakistan is a threat to the whole world, not just india. vinavu& its supporters can blindly accept whatever the islamic fundamentalists and those who dream of an islamic nation in kashmir say with the vain hope that this dream of independent islamic kashmir will be fulfilled and will help in disintegration of india.
//neither the hindus in jammu region nor the buddhists in ladhak region want a separate nation nor support secession from india.s//
how do you know this?
Hi Asuran, I had been to Ladakh region in J & K. It consists of 90% buddhists. All most all the people I interacted don’t like the muslims (from Kashmir Valley) who do business in Ladakh..One person even remembered a major clash happened between Muslims and Buddhists in the past. Ladakh people wants ladakh to be declared as union territory (they even formed Ladakh council to fight for this purpose). Basically they don’t want to live in Administration by Kashmir valley people. Based on this we can conclude that even when kashmir becomes independent country ladakhis don’t want to join with them.
I don’t know what is the stand of people in Jammu in this case.
//இது பற்றி இத்தளத்தின் வாசகர்களுக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தால் கட்டுரையின் மூலமாகவோ பின்னூட்டம் மூலமாகவோ எழுதலாமே? பண்டிட்டுகள் காஷ்மீரில் இருந்து முஸ்லிம் மக்களால் விரட்டியடிக்கப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். முழுமையாக தெரியாது.//
சரிதான். ஆனால், 1990களுக்கு முன்பு ஏன் இது நடக்கவில்லை என்பதும், காஷ்மீர் பண்டிட்டுகள் இன்றும் கூட காஷ்மீரின் மதச்சார்பின்மை குறித்து பெருமிதத்துடன் குறிப்பிடுவதும் ஏன் என்பதுதான் இங்கு கேள்வி. இந்த அற்புதமான சூழல் கெடுக்கப்பட்டது யாரால் என்பதுதான் கேள்வி. இதற்கான பதிலில்தான் விடுதலை காஷ்மீர் என்ற முழக்கத்தின் பின் உள்ள இந்திய மேலாதிக்க அரசியல் இருப்பது தெரிய வரும்.
And ladakh region is not affected by violence or terrorism so far.
//”1990களில் காசுமீர் பண்டிட்டுகளுக்கு என்ன நடைபெற்றது என்பது எனக்கு தெரியாது.” //
இது பற்றி இத்தளத்தின் வாசகர்களுக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தால் கட்டுரையின் மூலமாகவோ பின்னூட்டம் மூலமாகவோ எழுதலாமே? பண்டிட்டுகள் காஷ்மீரில் இருந்து முஸ்லிம் மக்களால் விரட்டியடிக்கப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். முழுமையாக தெரியாது.
ஊடகங்கள் காசுமீரிகளை பாகிசுதானின் உளவு நிறுவனத்தின் காசுக்காகவும், PDP யின் காசுக்காகவும் போராடுபவர்களை போல காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீநகரின் எல்லா தொகுதிகளையும் வென்றது தேசிய காங்கிரசு, PDP அல்ல. இந்த இடம் தான் கல்லெறிதலில் மிக முக்கியமான நகரமாகும்.
63 வருடங்களாகியும் இந்தியாவால் காசுமீர் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவே இல்லை
நடுத்தரவர்க்க சீமான்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை!
//ஊடகங்கள் காசுமீரிகளை பாகிசுதானின் உளவு நிறுவனத்தின் காசுக்காகவும், PDP யின் காசுக்காகவும் போராடுபவர்களை போல காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீநகரின் எல்லா தொகுதிகளையும் வென்றது தேசிய காங்கிரசு, PDP அல்ல. இந்த இடம் தான் கல்லெறிதலில் மிக முக்கியமான நகரமாகும்.//
//63 வருடங்களாகியும் இந்தியாவால் காசுமீர் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவே இல்லை//
நடுத்தரவர்க்க சீமான்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை!
Anyone knows why there is no such problems in Jammu and Ladakh regions of J & K?
Kashmir should have been part of Pakistan during partition itself. the muslim majority areas (esp in the borders) were given to Pakistan. The K is paKistan stands for Kashmir. India should have kept the Hindu majortiy Jammu with itself. But..
Until early 80s, there was only talks and peaceful agitations. The Afghan inavsion by USSR fuelled Islamic jehadis (encouraged by US to fight the Russians) and it spread across Asia. and Indira and Rajiv Gandhi take the cake for destroying any goodwill that the Kashmiri’s had for India. The dismissal of a legally elected Farook Abdullah govt in 1983 started all this. more about this history at :
http://tamilopinion.blogspot.com/2007/05/kashmir-view-from-india-by-tavleen.html
Ideally, India should refer the Kashmir issue to UN or EU or Norway and be ready for a referendem. We can quit Kashmir (and keep Jammu and Ladak) to its fate. the poor Kashmiris (as shown in this placard in the photo above) are under illusions that Pak will let them live as a free nation. no chance. they will be swallowed by the Pak and suppressed mercilessly like the former E.Pakistan (now Bangaldesh).
anyway, that is their problem and it is wiser for India to abandon Kashmir to its fate. They will starve if they are independent or be ruthlessly suppressed by Paksitani Punjabi ruling elite if they are merged with Pak. either way, they will be worse off than they are now. that is not our problem.
If we can solve Kashmir dispute, then there is every chance to reduce the border tensions and reduce our military spending. Same formula can be tried with North Eastern states.
It is costly in both human and economic terms to maintain all these unwilling ‘brothers’ with us. and fedaralism means free to separate.
but funny that communists, who worship Stalin should worry about all this. the way ‘Russification’ was thrust down ruthlessly on non-Russian soviet states is glaring. If given a chance, they will certainly repeat their former ruthless and oppressive methods anywhere in this world.
///குரியத் கூட்டமைப்பின் தலைவரான மிர்வாசு உமர் கூறுகையில் “தில்லியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நாங்கள் எங்கள் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை ஊசலாட்டதில் வைத்துள்ளோம்” என்கிறார். இந்தியா வெறும் புகைப்படத்திற்கு மட்டும் அல்லாமல் குறைந்தபட்சம் நேர்மையுடன் பேச்சு வார்த்தை நடத்தும் என நாங்கள் நம்புகின்றோம் என்றார் ///
This group is more corrupt and immoral than any Indian political party. The amount of money channelled and swindeled thru them is as high as any ruling party. hence they have little respect from people.
and this post skips the vital issue of Paksitan’s role in kindling the agitations and funding and sending terrorists from its territory. Pak is no angel and is worser than India in violations and suppression.
//this post skips the vital issue of Paksitan’s role in kindling the agitations and funding and sending terrorists from its territory. Pak is no angel and is worser than India in violations and suppression.//
வழக்கம் போல கட்டுரையை முழுசாப் படிக்காமாலேயே கருத்துச் சொல்றாரு.
ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்.
இந்திய ஒநாய் பாகிஸ்தான் சொறிநாய், சீனா மொள்ளமாறி நாயை காட்டி நேபாளம், ஈழம், காஷ்மீர், வட கிழக்கு என்று எல்லா இடத்திலும் அழுது இழவு கொட்டிக் கொண்டுதான் உள்ளது.
ஒரு பிரதேசத்தின் ஆட்சி உரிமை அந்த மக்களுக்கே சொந்தம், சட்டப் பூர்வமாகக் கூட காஷ்மீரை இந்தியாவுக்கு சொந்தமாகா அறிவிக்க இயலாததாலேயே சர்வதேச ரீதியில் டிஸ்பியுட்டட் ஏரியா என்றோ, இந்தியா ஆக்குபைட் காஷ்மீர் அல்லது பாகிஸ்தான்/சீனா ஆக்குபைட்ட் காஷ்மீர் என்றோ குறிப்பிடப்ப்படுவதை இவர்களால் எதிர்க்க இயலவில்லை.
காஷ்மீரின் வரலாற்றை படிக்க்வும், மேலும், அநாகரிகமாக அடுத்தவனுக்கும் சேர்த்து சிந்தித்து அவனது பிரச்சினைக்கு இதுதான் தீர்வு என்று அவனிடமே வலுக்கட்டாயமாக திணிப்பதை தட்டிக் கேட்க்கவும்.
///காஷ்மீரின் வரலாற்றை படிக்க்வும், //
your first read that link about Tavleen Singh’s excellent book about Kashmir that i had given above. Do you honestly belive that there is no hidden Pakistan / ISI hand in the ‘agitations’ in Kashmir every summer ? are you sure that all of these agitations are ‘spontaneous’ and no hidden instigation is there. notice that whenever there are street agitations, the violance by terrorists stops or pauses. there is perfect co-ordiantion between these two issues.
anyway, i have clarified my stand about Kashmir clearly aboovand no Hinduthva person will agree with me.
//anyway, i have clarified my stand about Kashmir clearly aboovand no Hinduthva person will agree with me.//
உங்க ஸ்டேண்டுதான் மன்னர் அதியமான் பிரச்சினையே. அவர்கள் பாகிஸ்தானுடன் இருப்பதா, இந்தியாவுடன் இருப்பதா அல்லது தனியாக இருப்பதா என்பதை அவர்கள் முடிவு செய்யட்டும் என்பதுதான் எந்த ஒரு நேர்மையானவனும் எடுக்கும் முடிவாக இருக்கும். நீங்களோ பாகிஸ்தானுடன் இருந்திருக்கலாம் என்று கருத்து கூறியதைத்தான் தவறு என்று குறிப்பிட்டேன்.
அங்கு சர்வதேச மேற்பார்வையில் வோட்டெடுப்பு நடத்தட்டும் அதுதானே ராஜ ஹரிசிங்குடனான ஒப்பந்தம்?
மேலும் எனது எதிர்வினை உங்களது இந்தக் கீழ்கண்ட கருத்து குறித்தானது.
// //this post skips the vital issue of Paksitan’s role in kindling the agitations and funding and sending terrorists from its territory. Pak is no angel and is worser than India in violations and suppression.//
// அவர்கள் பாகிஸ்தானுடன் இருப்பதா, இந்தியாவுடன் இருப்பதா அல்லது தனியாக இருப்பதா என்பதை அவர்கள் முடிவு செய்யட்டும் என்பதுதான் எந்த ஒரு நேர்மையானவனும் எடுக்கும் முடிவாக இருக்கும்.///
நான் இதை மறுத்தேனா என்ன ? இது இன்று பொருந்தும்.
//நீங்களோ பாகிஸ்தானுடன் இருந்திருக்கலாம் என்று கருத்து கூறியதைத்தான் தவறு என்று குறிப்பிட்டேன்.//
1947 பிரிவினையின் போது, வங்காளாம், பஞ்சாப் போன்று ஜம்மு / காஸ்மீரையும் பிரித்திருப்பதே சரியாக இருந்திருக்கும். அன்று மற்ற பகுதிகளில் செய்யப்பட்ட பிரிவினையை அங்கு செய்ய தவறினார்கள். அதைதான் சொன்னேன்.
///அங்கு சர்வதேச மேற்பார்வையில் வோட்டெடுப்பு நடத்தட்டும் அதுதானே ராஜ ஹரிசிங்குடனான ஒப்பந்தம்// ஆம். நேரு வாக்களித்திருந்தார். ஆனால் செய்யவில்லை.
எப்போதும் மயான அமைதி!
நடு இரவில் தட்டி எலுப்பும் பூட்ஸ் கால்களின் சப்தம்,
பல நாட்களுக்கு எதற்கென்றே தெரியாத பள்ளி விடுமுறை,
வெண்பனியில் ஏரிக்கரையில் கிரிகெட் விளையாடும் காலமும் போய்விட்டதே,
நான் தினமும் ஒன்றாக விளையாடும் ஹரிசிங்கும் , மதன் மோகனையும் நாங்கள் அடித்தோம் என்று அத்வானி பொய் பேசுகிறாரே,
அன்றொரு நாள் காய்கறி விற்க சென்ற என் அப்பாவை சுட்டு கொன்று விட்டார்களே இந்த இந்திய சிப்பாய்கள்,
அடுத்த நாள் எனது தந்தையை பற்றி செய்தி “அல் உம்மாவின் லடாக் பிரிவு
தலைவர் சுட்டு கொல்லப்பட்டார்” என்று வருகிறது
கிரிகெட் விளையாட சென்ற என் அண்ணன் வீடு திரும்பவில்லை, விசாரித்த போது இளம் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டதாக அங்கு பேசிகொண்டார்கள்,
எங்கள் குடும்பத்தை போல பல குடும்பங்கள் அழிக்கபட்டது , மண்ணோடு மண்ணாக சிதைக்க பட்டது,
என் அன்னை வெளியே சென்று உள்ளாள், அவளுக்கு இப்போது எல்லாம் மிகவும் பிடித்த வேலை இந்திய படையின் மீது கல் எரிய, கற்களை பொருக்கி தருவது தான் எனது தாயின் முழுநேரப்பணியும்,
என் அன்னை இன்று இரவு வீடு திரும்பா விட்டால் நான் முடிவு செய்து கொள்வேன் என் அன்னையும் இந்த போராட்டத்தில் சுட்டு கொல்லபட்டார் என்று,
ஆனாலும் நானும் செல்வேன் நாளைக்கு! இந்திய ராணுவத்தின் மீது கல் ஏறிய,
காஷ் மீரத்து சிறுமி கேட்கிறாள் ?
எங்கள் காஷ்மீரிகள் கல் எறிகிறார்கள்
Everyone knows that Pakistan sponsored terrorist groups and these groups were responsible for killing Pandits, looting property and destroying places of worship.Pandits were forced to flee as musim fundamentalists supported these terrorists.In Jammu Hindus are the majority, in Kashmir Valley it is Muslims while in Ladhak it is Buddhists.The exodus of Pandits was engineered by the terrorists and separatists who wanted an islamic nation in Kashmir. They indulged in ethnic cleansing . Kargil War of 1999 and the continued terrorist activists and the infiltration across the broder were responsible for the massive deployment of Army in Kashmir Valley. You cannot expect that a nation of billion plus people will sacrifice its integrity and soverignty to please these terrorists and separatist forces. Vinavus and Asurans and others who support them should understand this.
If you throw stones at the army/police dont expect the army or police to greet you with flowers and smiles in the faces.
1990களில் காசுமீர் பண்டிட்டுகளுக்கு என்ன நடைபெற்றது என்பது எனக்கு தெரியாது. நான் அப்பொழுது சிறியவன். ஆனால் இன்று அந்த நிகழ்வு பல திரிபுகளுக்கு உள்ளாகிவிட்டது. காசுமீரில் பண்டிட்டுகளையே காணாத இசுலாமிய இளைய தலைமுறைகளில் நானும் ஒருவன்
Who is responsible for this.- the Indian state or the terrorists?. This fellow pretends that he is ignorant of what has happened then.Cant he atleast acknowledge the fact that the muslim fundamentalists and terrorists who are up against the indian state are responsible for this.
For Asurans and Vinavus such killings of Pandits and their exodus is of no concern because they are Hindus and that too Brahmins. You commies
should know how Stalin treated the nationalities
when he ruled.
காஷ்மீர் மக்களை பார்த்து பிரிவினைவாதிகள், பிரிவினைவாதிகள் என்று கூறும் பன்னாடைகள் முதலில் போய் வரலாற்றை படிக்கட்டும்.
காஷ்மீர் எப்பவுமே உங்களுக்கு சொந்தமானது இல்லடா..
அதை மாநிலம் மாநிலம் என்று இந்தியா பச்சையாக பொய் பேசி வருகிறது
அது இந்தியாவுக்கு நிகரான ஒரு தனி நாடு என்பதாவது இந்தியாவுக்கு சொம்படிக்கும் தமிழ்நாட்டு அடிமைகளுக்கு தெரியுமா ? தெரியலைன்னா போய் படி
What was part of “Original India” before British? Were the entire Tamil Nadu region belongs to India during British times? India is country formed by Sardar Patel..Kashmir annexed to India because of the Kashmir King Raja Harisingh. If the argument holds good we can even split Nagaland, Manipur, Mijoram, Tripura, Arunachal into different countries..anyway like kashmiris they also don’t feel that they are Indians.
//.Kashmir annexed to India because of the Kashmir King Raja Harisingh.//
அப்படியா புது விசயமாக் கீது? காஷ்மீரு ராஜா ராஜா கரிசிங் உங்க கனவுல வந்து சொன்னாரா?
mr asuran
if u donot know read or atleast listen , donot lampoon becau it is a fact that kashmir is annexed to india becas of raja hari singh who is a hindu raja in muslim majoruty area.
vinavu kashmir s CM is omar abdullah and not farooq abdullah.
My god! Have you studied in history how the present India formed????
//lampoon becau it is a fact that kashmir is annexed to india becas of raja hari singh who is a hindu raja in muslim majoruty area.//
எங்கே எப்போ எந்த அடிப்படையில் ஆதாரம் பிலீஸ்…
அனெக்ஸ் என்றால் என்ன? அந்த ஒப்பந்தத்தின் சரத்துக்கள் என்ன?
ஒரு மனிதன் யாருக்காக சிந்திக்கிறான் என்பதை அவனுடைய கருத்துக்கள் அமபலமாக்கி விடுகின்றன. அந்த வகையில் இந்த தளத்தில் நான் பார்த்தவரை இந்த அதியமான் என்கிற நபர் பச்சையாக மக்கள் விரோதக்கருத்துக்களை இங்கு பேசி வருகிறார். ஒவ்வொரு விசயத்திலும் வக்கிரமான முறையில் பெரும்பாண்மை மக்களுக்கு எதிராகவும் பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். இவ்வளவு வெளிப்படையாக கொலைகார கொள்ளைக்கார முதலாளிகளை ஒரு நபர் ஆதரிக்கிறார் அதை ஏன் வினவாலும் மற்றுமுள்ள ம.க.இ.க தோழர்களாலும் எதிர்கொண்டு வீழ்த்த முடியவில்லை ?
இது வருத்தத்திற்குறியது.
குறிப்பு :
தனது கருத்துச்சார்பு அப்பட்டமாக தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக தான் எப்போதுமே இவர் ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுகிறார். தனது கருத்துக்கள் அனைத்தையும் துணிவிருந்தால் இவர் தமிழில் பின்னூட்டமாக போட்டுப்பார்க்கட்டும் அதன் பிறகு அதியமான் டவுசர் கழட்டப்படுவதை இணைய உலகம் தரிசிக்கலாம்.
//இந்த தளத்தில் நான் பார்த்தவரை இந்த அதியமான் என்கிற நபர் பச்சையாக மக்கள் விரோதக்கருத்துக்களை இங்கு பேசி வருகிறார். ஒவ்வொரு விசயத்திலும் வக்கிரமான முறையில் பெரும்பாண்மை மக்களுக்கு எதிராகவும் //
அது உமது கருத்து. இதுதான் எல்லாரின் கருத்து என்று சொல்ல முடியாது.
மக்கள் விரோத கருத்துகள் என்றால் என்ன ? முதலில் எனது பிளாகில் நான் எழுதியுள்ள விசியங்களை நிதானமாக படித்து உள்வாங்கி, பிறகு இத்தகைய பொதுபடுத்துதல்களை வீசவும்.
அலுவலகத்தில் இருந்து தமிழில் விரைவாக டைப் அடிக்க முடியாததால், பல சமயங்களில் ஆங்கில பின்னூட்டம். அவ்வளவுதான் விசியம்.
”தரகு” முதலாளி,
வெறும் முதலாளித்துவத்தை யான் ஆதரிக்கவில்லை. மனித உரிமைகளை மிக ஆதரிக்கிறேன். அதில் முதலாளித்துவத்தின் ஆணிவேறான சொத்துரிமையும் ஒன்று. சர்வாதிகாரத்தை, ஃபாசித்தை மிக வெறுக்கிறேன். எனது நிலைபாடு பற்றி தெளிவாக அறிய :
http://athiyaman.blogspot.com/2008/10/holiest-of-all-holies.html
அதியமான்,
போட்டியும்,பொருளாதார ஏற்றஇறக்கங்களையும் கொண்ட முதலாளித்துவ சமூகத்தில் நீதி, நேர்மை, மனித உரிமைகளை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
கலை,
If you look at current India, your views may be as above. But try to look at the 100 year history of W.Europe and how they conquered poverty within the framework of a liberal democracy. Nations like Denmark, Sweden, Finland have very little poverty and offer a very high standard of living with the best possible human rights. Their way is the only way to acheive all this. your polices will not and cannot acheive them. You cannot understand them here. may be later…
//100 year history of W.Europe and how they conquered poverty within the framework of a liberal democracy. //
மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா இவையெல்லாம் தமது பொருளாதாரங்களை மூடி வைத்து தேசிய பொருளாதாரங்களாக வைத்திருந்ததன் மூலமே பொருளாதாரா வல்லரசாக-முதலாளித்துவ வல்லரசாக உயர்ந்தன.