privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்!

ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்!

-

வினவில் திரைவிமரிசனம் எழுதி நாளாயிற்றே, ஆடுகளத்தை எழுதலாமே” என்று தோழர் ஒருவர் கேட்டார். சற்றே காத்திரமான கதைகளை கொண்ட படங்களை எழுதவேண்டுமென்றால் அத்தகைய வாய்ப்புகள் அதிகமில்லை. வாய்ப்புகள் இல்லை என்பதற்காக திரை விமரிசனங்கள் எழுதாமலும் இருக்க கூடாது. அரசியல், சமூக கண்ணோட்டத்தை கூட சினிமா வழியாக சொன்னால் நமது மக்கள் கொஞ்சம் பரிசீலிப்பார்களில்லையா? ஆக துணிந்து ஆடுகளம் சென்றோம்.

வெளியே தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது “இந்த படத்தை பாக்காதீங்க, கதையே இல்லை” என்று ஒரு ஆட்டோ ஓட்டுநர் அவரது நண்பரிடம் எச்சரித்துக் கொண்டிருந்தார். அதுவேறு வயிற்றில் பீதியைக் கிளப்பியது. வளாகத்தில் விஜயின் காவலன் படத்திற்குத்தான் கூட்டம் கொஞ்சம் அதிகம். ஆடுகளத்திற்கு அந்த அளவுக்கில்லை. சன் டி.வியின் ஏகபோகம் உருவாக்கியிருக்கும் சதுரங்க ஆட்டத்தில், விஜய் போன்ற நட்சத்திரங்கள் தாமே உருவாக்கியிருந்த இமேஜை துறக்க முடியாமல் அதனாலேயே சிக்கிக் கொண்டிருக்கும் கதையை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

சமீப காலமாக கிராமங்களை மையமாக வைத்து நிறைய படங்கள் வருகின்றன. யதார்த்தத்தில் கிராமப்புறங்கள், விவசாயத்தை அரசு திட்டமிட்டு புறக்கணித்து வரும் நிலையில் தமிழ் சினிமா மட்டும் நாட்டுப்புறங்களின் மேல் அளவிலா காதல் கொண்டிருக்கும் மர்மமென்ன?

சிலம்பு வாத்தியாரைப் போல சேவல்களை பழக்கி சண்டைப் போட்டிக்கு விடும் பேட்டைக்காரனாக கவிஞர் வ.ஜ.ச.ஜெயபாலன். அவரிடம் சேவல்களை பழக்கும் சீடர்களாய் தனுஷும், கிஷோரும். கிஷோர் மதுவறை நடத்தும் வசதியானவர். தனுஷ் அப்படியில்லை. வெறுமனே எடுபிடியாக வருகிறார். ஏதாவது ஒரு போட்டியிலாவது பேட்டைக்காரனை வெல்ல வேண்டும் என்ற இலட்சிய வெறியோடு வரும் இன்ஸ்பெக்டராக ரத்தினம்.

இடையில் ஆங்கிலோ இந்தியப் பெண் தப்சியோடு தனுஷின் காதல். அப்புறம் முழு வீச்சாக நடக்கும் பிரம்மாண்டமான சேவல் சண்டை போட்டி. போட்டியில் குருவின் மதிப்பீட்டை பொய்யாக்கி, அவரது உத்திரவை மறுத்து  தனுஷின் சேவல் வெற்றி பெறுகிறது. சீடனின் வெற்றியை சீரணிக்க முடியாமல் பிறகு அவனையே பழி தீர்க்க முயலும் பேட்டைக்காரன். கிஷோர், தனுஷ் இருவரையும் மோதவிட்டு, காதலியை பிரித்து, அதற்காக இளம் வயது மனைவியை விரட்டி, எல்லாம் செய்கிறார் ஜெயபாலன். இறுதியில் அவர் மனம் திருந்தியோ இல்லை இன்னும் தனுஷை பழிவாங்க வேண்டுமென்றோ தற்கொலை செய்ய, அந்த பழியுடன் தனுஷ் காதலியோடு ஊரைவிட்டு போகிறார்.

முற்பாதியில் தனுஷின் காதல். பிற்பாதியில் ஜெயபாலனது துரோகம். இரண்டு உணர்ச்சிகளும் ரசிகர்களுக்கு பழக்கப்பட்டவை. முன்னது இதயத்திற்கு தாலாட்ட, பின்னது வயிற்றில் பதைபதைப்பை உருவாக்கும். அந்த பலத்தில் இந்த இரு உணர்ச்சிகளையும் சேவற் சண்டை பின்னணிக் களத்தில் துணிந்து  கதையாக்கியிருக்கிறார் இயக்குநர். இது போதாதா? கிராமம், முதன்முறையாக சேவற் சண்டை களம் என்று அறிஞர் பெருமக்கள் பாராட்டுகிறார்கள்.

முதலில் காதல். இது கதையோடு பொருத்தமின்றி திணிக்கப்பட்ட காதல் என்று சிலருக்குத் தோணலாம். எந்தக் கதையில் காதல் இயல்பாக வந்திருக்கிறது? ஆஸ்திரேலியா போக வாய்ப்பிருக்கும் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண், சேவற் சண்டைக்காக ஊரைச் சுற்றும் ஒரு லுங்கி கட்டிய இளைஞனை காதலிக்கும் அபத்தம் இருக்கட்டும். அதிலும் தனுஷ் வம்படியாகத்தான் அந்த பெண்ணைக் காதலிக்கிறார். அதற்காக வலிந்து சுற்றுகிறார். அவரைத்தான் காதலித்தாக வேண்டுமென்ற நிலையில் அந்தப் பெண் வேறு வழியின்றி காதலிக்கிறாள்.

அந்த வகையில் தமிழ் சினிமா காதலின் ஜனநாயகத்தைக் கூட இன்னும் கற்றுத் தரவில்லை. மட்டுமல்ல, அந்த இடத்தில் ஆணாதிக்க சர்வாதிகாரத்தையே இளைஞர்களின் ஆளுமைப் பண்பாகவும் உணர்த்துகிறது. படியாத மாட்டை படிய வைப்பது போல அந்த பெண்ணை படியவைக்கும் தனுஷின் முயற்சிகளில் தங்களது ஆளுமைகளை உணர்கிறார்கள், கைதட்டும் இரசிகர்கள். காதல் என்பது இருபாலாரின் சமத்துவத்தையும், அதன் பால் வரும் விருப்பத் தெரிவையும் கொள்ளாமல் இருந்தால் அது காதலா, இல்லை பெண்டாளும் ‘கொலை’யா?

ஏழை இளைஞன் தனது வீரத்தால் பணக்கார வீட்டுப் பெண்ணை காதலிப்பது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே தொடர்கிறது. பரிசாரர்கள் புடை சூழ வாழும் அந்த பெரிய இடத்து மங்கைகள் பின்னர் காதலனுக்காக குடிசையில் மூக்கு சிந்தி அடுப்பூதும் தியாகத்தை ஏற்கிறார்கள். யதார்த்தத்தில் இது சாத்தியமா? படத்தில் டேபிள் மேனர்சோடு விருந்துண்ணும் நாகரீகம் உள்ள அந்த பெண் ஒரு நாள் தனுஷோடு சுற்றிவிட்டு, பிய்த்துப் போட்ட புரோட்டாவை சாப்பிட்டுவிட்டு, கை கழுவிய பின் உடையில் துடைக்கும் தனுஷைப் போலவை துடைக்கிறாள். இயக்குநரின் மெய்சிலிர்க்க வைக்கும் ‘டச்’!

இது போல பல படங்களில் பார்த்திருக்கிறோம். மாளிகையிலிருந்து இறங்கும் பெண்கள் குடிசைகளில் ஒன்றி வாழ்வதையும், ஐந்து நட்சத்திர விடுதிகளில் உண்ணும் வழக்கமுள்ளவர்கள், கையேந்தி பவன்களில் இரசித்து சாப்பிடும் அழகையும் சகித்திருக்கிறோம். இது சாத்தியமே இல்லை என்பதை அறிந்தும் நமது இரசிகர்கள் ஏன் இரசிக்கிறார்கள்? இது யதார்த்தமே இல்லை என்று தெரிந்தும் இயக்குநர்கள் தொடர்ந்து இப்படி ஏன் படுத்துகிறார்கள்?

வெள்ளையும் சொள்ளையுமாக உள்ள அழகு பெண்களை துய்க்க விரும்புவதாக, ஏழைகளை இப்படித்தான் இழிவு படுத்த வேண்டுமா? அப்படி ஒரு விருப்பமிருந்தால் அது விமரிசனத்திற்குரியதா இல்லை போற்றுதலுக்குரியதா? நுகர்வுக் கலாச்சாரம் வழங்கியிருக்கும் வாழ்க்கையை நிறைவேற்ற ஓடியும் வாடியும் வரும் பெண்கள் இப்படி தங்களது நிலையிலிருந்து அதை துறந்து விட்டு சாமியார் போல வருவார்களா என்ன? புறாக்கள் சூழ, தோட்டமே பூத்திருக்க, தளைய தளைய கட்டிய பட்டுச் சேலையுடன், இத்தாலி பாணி நவநாகரீக கிச்சனில் லியோ காபி போட்டு, லேப்டாப்பில் கணவனுடன் மகிழ்ந்திருக்கும் அந்த பெண், தெருவில் குப்பை அள்ளும் இளைஞனைப் பார்த்து காதலிக்கிறாள் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?

காதலைக் கூட யதார்த்தமாக, அந்தெந்த வர்க்கங்களின் வாழ்க்கை பிரச்சினைகளோடு காட்டினால் குடி முழுகிவிடுமா என்ன?

அடுத்தது கிராமம்.

கிராமமென்றால் வெள்ளேந்தியான மனிதர்கள், மீசையை உருவும் வில்லன்கள் என்ற ஃபார்முலாவை ஆடுகளத்தின் இயக்குநர் வெற்றி மாறனும் மீறவில்லை. சமீப காலமாக நிறைய படங்கள் கிராமத்து வாழ்க்கையை மையமாக வைத்து வருகின்றன. இந்த போக்கில் நாம் இன்றைய கிராமங்களை மட்டுமல்ல, நேற்றைய கிராமங்களையும் உண்மையாக பார்க்க இயலாது என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்?

தனுஷின் தந்தை இறந்துவிட, அவரது தாய் ரேஷன் கடைக்கு சென்று, பையனுக்கு ஆக்கிப் போட்டு, அவன் கோபத்தில் ஏறியும் பொருட்களை கண்டு புலம்புவதை நிறுத்தி இறுதியில் இறந்தே போகிறாள். சேவல் வாத்தியாரோடு ஊரைச்சுற்றி வரும் தனுஷ், காதலிக்கிறார், நண்பனுடன் குடிக்கிறார், சேவலை பாசத்துடன் வளர்க்கிறார். உழைக்கும் பெண்களது காசில் குடித்துவிட்டு ஊரைச் சுற்றும் ஆண்கள்தான் தமிழக கிராமத்து யதார்த்தம்.

அந்த யதார்த்தத்தை சுட்டிக்காட்டும் அந்த விதவை பெண்ணை அரட்டி மிரட்டுகிறார் தனுஷ். அவரது மிரட்டலைப் பார்த்து கைதட்டுகிறார்கள் இரசிகர்கள். விமரிசனத்திற்குரியது இங்கே பாராட்டப்படுகிறது என்றால் என்ன பொருள்? அந்தப் பிரச்சினை படத்தின் மையப் பொருளிலேயே இருக்கிறது. சேவற்சண்டை என்ற பொழுது போக்கு ஓரிரு பத்தாண்டுகளுக்கு முன்னர் பிரபலமாக இருந்திருக்கலாம். குறுகிய வாழ்க்கையைக் கொண்டிருக்கும் கிராமத்தில் இத்தகைய சேவல் வளர்ப்பு, புறா வளர்ப்பு, மாடு வளர்ப்பு, ஜல்லிக் கட்டு போன்றவை வீராப்பு, கௌரவத்தின் அடையாளமாக கூட இருக்கலாம்.

“சேவற் சண்டை போட்டி என்பது கஞ்சி குடிக்கும் உயிர்ப்பிரச்சினை அல்லை, அது மானப்பிரச்சினை” என்று தனுஷ் வசனம் பேசுகிறார். இரசிகர்களும் அதை தமது பிரச்சினையாக ஏற்கிறார்கள். பாரம்பரிய விவசாயத்தை பறித்தெடுத்துவிட்டு, விவசாயத்தை அடிமைகளின் தொழிலாக மாற்றிவரும் மான்சாண்டோ காலத்தில் எது மானப்பிரச்சினை? விளைபொருளுக்கு விலை இல்லாமல் கமிஷன் மண்டி வணிகர்களிடமும், அம்பானியிடமும் அடிபணிந்து நிற்கையில் போகாத மானம் சேவலுக்காக போகிறது என்றால்?

எனில் அத்தகைய அர்த்தமற்ற மானம் இங்கே இடித்துரைக்கப்படவேண்டும். மாறாக அது ஒரு மகாபாரதப் போராக மாபெரும் கௌரவப்பிரச்சினையாக காட்டுகிறார், இயக்குநர். சமூக உறவுகளோடு நெருக்கமாக வாழும் கிராம சமூகத்தில், முழு வாழ்க்கையும் அங்கேயே பிறந்து மரிக்க வேண்டுமென்ற குறுகிய வட்டத்தில் இத்தகைய சேவல் சண்டைகள் கூட வாழ்வா, சாவா பிரச்சினையாக இருக்கலாம், தவறில்லை. ஆனால் அது அந்த குறுகிய உலகின் மீதான யதார்த்தமான விமரிசனப் பார்வையாக பார்வையாளனுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

சான்றாக, கிராமங்களில் வாழும் சாதி ஆதிக்கமே இத்தகைய சேவல், மாடு பிடி சண்டைகளின் அடிநாதமாக இருக்கிறது. தேவர் வீட்டு சேவலை, பள்ளர் வீட்டு சேவல் வென்று விட்டது என்றால் வரும் சண்டைதான் அந்த குறுகிய உலகின் அற்பத்தனத்தை விரிந்த அளவில் காட்டும். ஆள் போட்டு வளர்க்கும் கவுண்டரின் மாட்டை, ஒரு அருந்ததி இளைஞர் அடக்கிவிட்டார் என்றால்தான் அங்கே கதையே எழும். அதன்றி இங்கே மானம் ஏது? சாதியின்றி எடுக்கப்படும் ஒரு படம் எங்கனம் கிராமப் படமாக இருக்க முடியும்? ஆதிக்க சாதி பெண்ணை ஒரு தலித் மணந்துவிட்டால் ஏற்படும் பதட்டங்கள்தான் சேவல் சண்டையிலும் இருக்க முடியும். அப்படி இருந்திருந்தால் இந்த படம் உண்மையிலேயே சமகால வாழ்க்கையை நெருங்கிச் சென்றிருக்க முடியும். அத்தகைய தைரியமில்லாததால் இயக்குநர் இதை துரோகத்தின் கதையாக எடுத்திருக்கிறார்.

சாதி ஆதிக்கம் கோலேச்சும் கிராமங்களில் ஜனநாயகம் இல்லை. அங்கே நிலவுவது நிலவுடைமை வர்க்கங்களின் கட்டைப்பஞ்சாயத்துதான். ஒடுக்கப்பட்ட சாதிகளின் உரிமை மறுப்பிலேயே நீதி நியாயம் என்பது நாட்டுப்புறங்களில் பேசப்படும். அதிலும் விவசாயத்தை மையமாக கொள்ளாமல் வெறுமனே சேவல் வளர்ப்பு என்று இருக்கும் போது அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் என்ன நீதி இருக்க முடியும்? கிராமத்து லும்பன்களான இவர்களிடம் சேவற் சண்டைகளில் கிடைக்கும் பணம், புகழ்தான் முக்கியமென்றால் அதற்காக இவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். அதில் நீதி, நியாயம் என்று ஒரு கதை செய்வது பொருத்தமாக இல்லையே?

சாதி மற்றும் நிலவுடைமை ஆதிக்கம் கோலேச்சும் கிராமங்களில் மூத்தோர் சொல் தட்டக்கூடாது என்பது ஒரு வகையில் ஜனநாயக மறுப்புதான். அந்த ஜனநாயக மறுப்பின் அற்பத்தனத்தை காட்டவேண்டுமென்றால் அது விரிந்த சமூக யதார்த்தத்தில்தான் சாத்தியம். சேவற் சண்டை வாத்தியாரது கோணத்தில் அதைக் காட்டும்போது அது ஏதோ ஒரு வில்லனது நடவடிக்கையாக சுருங்கி விடுகிறது. ஏனெனில் தந்தை, பண்ணையார், கணவன், அண்ணன், ஆதிக்க சாதி என்று எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் அந்த மூத்தோர் அதிகாரத்தால் பல்வேறு வகைகளில் மக்கள் துன்பப்படுகிறார்கள். அதற்கு கிராமத்தின் மையமான பொருளாதார வாழ்விலிருக்கும் பாத்திரமே பொருத்தமாக இருக்கும்.

சேவற்சண்டை தொடர்பாக போலீசு, அரசியல் கட்சிகள், சாதி, ஊர் கௌரவம், என்று சமூகம் தழுவிய பின்னணியோடு இந்த கதை இருந்திருந்தாலும் இதன் பரிமாணம் விரிந்திருக்கும். அதற்கு மாறாக நாயகன்,காதல், வில்லன் என்று எளிமைப்படுத்தப் பட்ட சுருங்கிய இடத்திலேயே கதை சுற்றுவதால் பார்வையாளன் இதில் எதையும் புதிதாகப் பெறப்போவதில்லை.

இது வெற்றிமாறனுக்கு மட்டும் நேர்ந்த விபத்தல்ல. தமிழ் சினிமாவின் எல்லா இயக்குநர்களும் கதை என்றாலே அதை சில உணர்ச்சிகள், பாத்திரங்களின் வழியாக மிக மிக எளிமைபடுத்தியே உருவாக்குகிறார்கள். ஆனால் இத்தகைய கதைகள் கேரளாவில் எடுக்கப்பட்டிருந்தால் (80.90களில்) அது சம கால கேரளத்தின் வாழ்வோடு வண்ணமயமாகவும், விரிந்த அளவில் வாழ்க்கையை உணர்த்துவதாகவும் இருந்திருக்கும். சங்க இலக்கியங்களிலிருந்தெல்லாம் சேவற் சண்டைகளை ‘ஆய்வு’ செய்து சேகரித்திருக்கும் இயக்குநர் சமகால கிராம வாழ்வு குறித்து எதையும் பார்த்த மாதிரி தெரியவில்லையே?

எனினும் இந்தப்படத்தின் பாத்திரங்களும், கதை அமைப்பும், காதலை தவிர்த்துவிட்டு பார்த்தால் அழுத்தமாகவும், இயல்பாகவும் படைக்கப்பட்டிருப்பதாக சிலருக்குத் தோன்றலாம். அதற்கு காரணம் நட்பு, துரோகம், அவலம், கையறுநிலை முதலான உணர்ச்சிகளை சமூக யதார்த்தத்தில் பட்டை தீட்டப்படாத சினிமா புனைவு மூலம் நாம் ஒரு இரசனையாக பயன்றிருக்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் நமது வாழ்க்கையில் கூட இத்தகைய பிரச்சினைகளே ஆழமான முக்கியத்துவமின்றி நெடுங்காலம் மனதை ஆக்கிரமித்திருக்கும் வண்ணம் வாழ்கிறோம். அற்ப விசயங்களுக்காக ஆழமான மன பாதிப்பு அடைவது உண்மையென்றாலும் அதுவே வாழ்க்கையின் ஆழம் ஆகிவிடாது இல்லையா? அதனால்தான் இந்த படம் பாத்திரங்களின் சித்திரப்பில் கொண்டிருக்கும் ‘ஆழத்தை’  சமூக வாழ்க்கையில் கொள்ள வேண்டிய ஆழமாகா பயணிக்கவில்லை. நாமும் தெரிந்த உணர்ச்சிகள், அறிந்த அனுபவங்கள் என்று அதிலேயே நின்றுவிடுகிறோம்.

கிராம வாழ்க்கையில் இருந்து கொண்டு கதை சொல்வது வேறு. ஒரு கதைக்காக கிராமத்தை பின்னணியாகக் கொள்வது வேறு. அந்த வகையில் இந்தப் படம் தொப்பிக்காக தலையை வெட்டுகிறது. நல்ல நடிப்பு, ஒளிப்பதிவு, அசலான கிராமக் காட்சிகள் எல்லாம் இருந்தும் இது வழக்கமான ஃபார்முலா கதைகளை பார்த்த எரிச்சலையே தருகிறது.

இதுதான் உண்மையான கிராமத்தை காட்டுவதாக நம்புபவர்கள், உண்மையான கிராமத்தை காட்டினால் என்ன சொல்வார்களோ தெரியவில்லை. நகரத்தின் வாழ்வை அனுபவித்துக் கொண்டே, அதை ஒரு போதும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்கள் எப்போதாவது கிராம வாழ்வு குறித்து ஏங்குவது போல பேசுவார்கள். அத்தகைய அக்மார்க் நகரத்து மனிதர்களுக்கு இந்த சினிமா கிராமம் நிச்சயம் பிடிக்கும்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்! | வினவு!…

    நகரத்தின் வாழ்வை அனுபவித்துக் கொண்டே, அதை ஒரு போதும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்கள் எப்போதாவது கிராம வாழ்வு குறித்து ஏங்குவது போல பேசுவார்கள். அத்தகைய அக்மார்க் நகரத்து மனிதர்களுக்கு இந்த சினிமா கிராமம் நிச்சயம் பிடிக்கும்….

  2. சினிமாவை சினிமாவா பாருங்கப்பா.. அதுல போய் உங்க செத்துப்போன கம்யுனிச வரட்டுவாதங்கள் இருக்கான்னு தேடாதிங்க. நீங்க எழுதி இருக்கிற மாதிரி படம் எடுக்க வேனுமின்ன ஒன்னு நீங்க எடுக்கணும் ( நீங்க எடுக்க மாட்டிங்க ஏன்னா உங்க பொழப்பே அடுத்தவன் செயல வயத்தெரிச்ச்சளோட விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் உளறிக்கொட்டுவது தானே) அல்லது உங்க ஆதர்ஷ? நாயகர்கள் ஸ்டாலின், மார்க்ஸ், மாசே துங் தான் வந்து படம் எடுக்கணும்.

    • Edisan super comments… nethi adi ponga… evenga vera vella yenna .. america muthal africa vari yellarukum advice penniye theen romba methaavinu nenapu.

      Communisum oru sethu pona veti kathai !

    • அதானே..ஓட்டலுக்குப் போய் ஆர்டர் கொடுக்கிறோம்..பிரியாணிங்கிற பேர்ல என்ன எழவையோ போடுறான்..பிரியாணிய பிரியாணியா பாக்காம அதுல போய் காரம் இருக்கா சோறு வெந்திருக்கான்னு பார்க்கறதும் கறி இருக்கா? அது ஒரிஜினல் ஆட்டுக்கறிதானான்னு பாக்குறதும்..சுரணை இருக்கறவன் செய்வான்…பிரியாணின்னு ஒன்னு தந்தானா..தின்னமா..தின்னுட்டு பேண்டமான்னு கிடக்காம..நீ சொல்ற மாதிரி பிரியாணி பண்ணனும்னா ஒங்க அப்பத்தாவ மாஸ்டராக்கி விடுறா..கேக்கவந்திட்டான் பாரு..தின்னுட்டுப் போலேய் மூதேவி..துட்டக் குடுத்தமா சுரணையில்லாம தின்னமான்னு கிடக்காம..வந்துட்டுதுக..பாரு…என்ன எடிசன் அண்ணாச்ச்சி..நான் சொல்றது சரிதானே..எங்கேயோ படிச்சேன் பாருங்க…கோழி முட்டை நல்லாருக்கா இல்லையான்னு சொல்றதுக்கு ஒருத்தன் முட்டை விட்டுருக்கணும்கிறது முன்நிபந்தனை இல்லையாம்..இதுவும் சரியாத்தாமுண்ணே இருக்கு! என்ன சொல்லுதீக!!

      • பிரியாணி கொடுத்தா அதுலயும் கருமாதியாகிப்போன கண்றாவி கம்யுனிசத்தை தேடுற லூசுங்களா நீங்க தெரியாம போச்சே.

        • ஒக்காலி மேப்புடியாயிங்க எல்லா பயபுள்ளைகளும் பேசி வச்சு வர்ரமாரி இருக்கு
          சேவல அறுத்துருவோமா?

      • Edisan, Tamil MA, Indian, 45Ram67898789@bikees, ramji_yahoo

        மூக்குல ரத்தம் மாதிரி தெரியுது தொடச்சிக்குங்க.

        • //மூக்குல ரத்தம் மாதிரி தெரியுது தொடச்சிக்குங்க//

          அது தக்காளி சாஸுண்ணே…..

      • நெத்தியடி கமென்ட் அலெக்சான்டர்.

        சினிமாவை சினிமாவா பார்க்கனும் அதற்குள் வாழ்க்கையைத் தேடக்கூடாது என்று சொல்லும் கனவான்கள், அப்புறம் என்ன வெண்ணைக்கு இது போன்ற படங்களை மண்சார்ந்த கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதாக சொல்ல வேண்டும்?

        ஒரு படம் மதுரை வட்டார வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என்று சொன்னால், அதே மதுரையின் சுற்றுவட்டாரங்களில் இருக்கும் சாதிப் பிரச்சினையை பிரதிபலிக்கிறதா இல்லையா என்று கேட்பது காசு கொடுத்தவன் கடமை தானே?

        இல்லையா… “அய்யா சாமி, இது மதுரைல இருக்கிற சல்லிப்பயலுவலோட வாழ்க்கையை மட்டும் தான் பிரதிபலிக்கிறது. எங்களைப் பொருத்த வரை மதுரைன்னா வெளங்காத பயலுக ஊர் தான்” என்று விளம்பரத்திலேயே நேர்மையா சொல்லி விட வேண்டியது தானே? கலாச்சாரம், கிராமம், வெங்காயம், வெளக்கெண்ணை என்று எதுக்கு வெட்டியா சீன் போடனும்? காசு குடுத்துப் பாத்தவன் பிடிக்கலைன்னா சொல்லத்தான் செய்வான். வாழ்க்கைன்னு சொன்னியே எங்கேய்யா என் வாழ்க்கைன்னு கேட்கத்தான் செய்வான்.

        ரோட்ல கஷ்ட்டப்பட்டு கூடை சுமக்கும் காய்க்காரக் கிழவியிடம் கன்ஸ்யூமர் ரைட்ஸ் பேசும் சாப்ட்வேர் வெங்காயங்களுக்கு தியேட்டரில் ஒன்றைச் சொல்லி இன்னொன்றைக் காட்டி காசை லவட்டும் சினிமாக்காரன் கிட்ட மட்டும் ப்யூஸ் புடுங்கிட்டுப் போயிடுது.

        நல்லா இருக்குடா ஒங்க நாயம்.

        • ஆமாயா கசிடபட்டு படிச்சு சாப்ட்வேர் வேலையே செய்யறவன் கேன, மாசம் பல ஆயிரம் வரி கட்டி அரசாங்கத்திடம் எந்த சலுகையும் அவனுக்கு கெடையாது , இணைக்கு ஏழை மக்களுக்கு எல்லாம் இலவசமா கிடைகுரதுகு அவன் கட்டும் வரிபன்மும் தான உதவுது … … வெட்டி கதை பேசி யாருக்கும் உதவாத நீங்க எந்த மாதிரி ??

          Please note i am not a software engineer anyway. As usual dont bring corruption of politicians to this…i am taking about why you people never help any one or the country but just keep complaining EVERYONE ???

          MOVIE ?? ya i agree they should have some social responsibility … i agree they are projecting wrong image of madurai …but i oppose to talk communism in everything unnecessarily.

          See the example of Mr. Alex ! thats what communist know ? No wonder why people laugh at communism 🙂

      • கிராமத்துல காட்றதுக்கு என்ன இருக்கு?
        ஏதோ கற்பனைக் கிராமத்தைக் காட்டினாலும்-
        அதையும் விமர்சனம் செய்தா எப்படி?

        யதார்த்தம் – யதார்த்தம்- னு பேசிட்டு இருக்கற நீங்க
        குண்டிகழுவுரத படதுலக் காட்டுவீங்களா?

        யதார்த்தம்னு சொல்லி சேகுவாரா பாலியல் நோயினால்
        அவஸ்தைப் படுவதைக் காண்பிபீர்களா?

        அஞ்சு பேர் சேந்து கொடி புடிச்சு -புரட்சி பண்ணி
        கருமாந்தரம்- தட்டி போர்டு எழுதி
        இறுதியில் நாடு வளம் பெற்றதாகக் காண்பிக்க சொல்வோமா?

        நல்ல மனுஷனா இருந்தா
        சினிமாவுக்கே போகப் படாது…..சரிதானுங்களா?

    • எனக்கு தெரியும் கிராமதுல சாவல் சண்டைகு போரவங்க ரெம்ப நல்லவங்கனு

  3. சிறுத்தை படத்தை விமர்சனம் பண்ண மாட்டீரோ. உங்களுக்கு நிறைய மேட்டர் கிடைக்கும். கிழித்து தோரணம் கட்டலாம். உங்களுக்கும் உங்க வயதெரிச்ச்சல் கொறஞ்ச மாதிரி இருக்கும், எங்களுக்கும் கொஞ்சம் பொழுது போகும்.

  4. […] This post was mentioned on Twitter by வினவு, sandanamullai. sandanamullai said: RT @vinavu: https://www.vinavu.com/2011/01/24/aadukalam-movie-review/ ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்! […]

  5. //வெள்ளையும் சொள்ளையுமாக உள்ள அழகு பெண்களை துய்க்க விரும்புவதாக, ஏழைகளை இப்படித்தான் இழிவு படுத்த வேண்டுமா? அப்படி ஒரு விருப்பமிருந்தால் அது விமரிசனத்திற்குரியதா இல்லை போற்றுதலுக்குரியதா?//

    சரியாகச் சொன்னீர்கள்.எனக்கு இன்னொன்று தோன்றி இருக்கிறது. ஃபான்டஸி என்று வந்து விட்ட பிறகு அப்படியே ரிவர்ஸில், வெள்ளையும் சொள்ளையுமான பணக்கார ஆண், கரிய நிற ஏழைப் பெண்ணைக் காதலிப்பதாகக் காட்டக் கூடாதா? அதை மட்டும் ஏன் நினைத்துக் கூடப் பார்க்க மறுக்கிறார்கள்?
    கஜினியில் கூட அசின் ஏழையாக இருந்தாலும் அழகான மாடலாக இருப்பதாகத் தான் காட்டி இருந்தார்கள்.

    //காதலைக் கூட யதார்த்தமாக, அந்தெந்த வர்க்கங்களின் வாழ்க்கை பிரச்சினைகளோடு காட்டினால் குடி முழுகிவிடுமா என்ன?//
    🙂

    //நகரத்தின் வாழ்வை அனுபவித்துக் கொண்டே, அதை ஒரு போதும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்கள் எப்போதாவது கிராம வாழ்வு குறித்து ஏங்குவது போல பேசுவார்கள். அத்தகைய அக்மார்க் நகரத்து மனிதர்களுக்கு இந்த சினிமா கிராமம் நிச்சயம் பிடிக்கும்.//
    சாட்டையடி!

    • என்ன மண்ணாங்கட்டி சாட்டையடி ? இந்த கம்யூனிஸ்ட் பசங்க மட்டும் முதலாளித்துவ இந்தியாவில் வளமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டே கழிசடை சித்தாந்தங்களையும் காலாவதியான சோவியத் கனவுகளையும் இன்னும் கட்டிக் கொண்டு அழவில்லையா ? இருபது வருஷமாச்சுடே, விட்டுட்டு வாங்கடேன்னு சொன்ன கேக்க மாட்டேங்கான்…

      நகரத்து ஆளு கிராமத்து கனவு கண்டானாம், வரிஞ்சு கட்டி விமர்சனம் எளுதறான், இத பாராட்டி மொக்கை பசங்க கமெண்டு வேற !!

  6. திருத்தம்: அசின் “அழகான மாடலாக” என்பதை “வெள்ளை நிற மாடலாக” என்று திருத்திக் கொள்ளவும்! 🙂

  7. நல்ல அருமையான விமர்சனம். சும்மா மட்டியடி அடிக்காமல் ஒவ்வொரு ‘அடி’க்கும் தெளிவான காரணங்கள்,யதார்த்தங்கள் மற்றும் நியாயங்களை கூறிய விதம் பாராட்டுக்குரியது. டெக்னிக்கலாகவும், முழுப்படைப்பாகவும் இந்த மாதிரி போனியாகக்கூடிய விற்பனைப் பொருட்களை (சினிமாக்களை) எடுப்பது மட்டுமே இனி வரும் காலங்களில் இயக்குநர்களின் முக்கியமான நோக்கமாக இருக்கும். இருக்கிறது. அரசியலாவது, சமூகவிழிப்புணர்வாவது, யதார்த்தமாவது. மூச்.

    ஒருத்தர் சினிமாவை மட்டும் பாருங்கப்பா, கம்யூனிச வரட்டு வாதம் பேசாதீங்க என்று அறிவுறுத்துகிறார். சினிமாவில் என்னத்தையாவது அவுத்துப்போட்டுட்டு ஆடட்டும். பாத்துட்டு டைம்பாஸ் பண்ணிப்புட்டு வூட்டுக்குப் போகவேண்டியது தானே அவர். இந்த விமர்சனத்தை ஏன் வேலை மெனக்கெட்டு உக்காந்து படிச்சாராம்.

    இதற்குப் பின்னூட்டமிடுபவர்களின் எரிச்சலிலிருந்தே அவர்கள் சினிமாவை இப்படி மாற்றுக் கோணத்தில் விமர்சிப்பதைக் கூட ஜீரணிக்கமுடியாமல் இருப்பது புரிகிறது. பல ஆசாமிகள் இன்னும் பின்னூட்டமிடவில்லை. பின்னூட்டங்கள் வரும் பாருங்கள். இந்த லட்சணத்தில் வினவு மாற்றுச் சினிமா எடுத்தால் மட்டும் ஏதோ ரசித்துவிடுபவர்கள் போல் இவர்கள் பேசுவதைப் பார்த்தால் சிரிப்பாய் வருகிறது. நம்ப மணிரத்தினம் ஆய்த எழுத்தில் காப்பியடித்த திரைக்கதை அமைப்பு கொண்ட ஸ்பெயின் நாட்டுப்படம் அமோரோஸ் பெர்ரோஸ்(Amoroes Perroes – காதலும் நாய்களும் என்று அர்த்தமாம்). அப்படம் நாய்ச்சண்டையை வைத்து மனித வாழ்வின் யதார்த்தத்தை, கோரங்களை, குரூரங்களை, உன்னதங்களை காட்டும் ஒரு படம். பாருங்கள்.

    வினவில் பல கட்டுரைகளில் எழுதியது யார் என்று ஒரு பெயர் போடுவதை மறந்துவிடுகிறீர்கள்(தேதியும்). எழுதியவர் தனது உண்மையான பெயரை அடையாளமிட விரும்பவில்லை என்றால் புனைப்பெயரும், பலபேர் சேரந்து எழுதியிருந்தால் அனைவரின் பெயரும் குறிப்பிடுவது தானே சரி.

  8. இதே மதுரைல தான் ராத்திரி பகல்னு பாக்காம தள்ளுவண்டில கையேந்திபவன் நடத்துபவரின் வாழ்க்கை இருக்கு. காலைல கந்துவட்டிக்காரன்ட்ட நூறு ரூபாயா வாங்கி சாயந்திரம் நூத்தி முப்பது ரூபாயா திருப்பிக் கொடுக்கனுமேங்கற தவிப்புல கைல கடலைய பொட்டலமா கட்டி ஓவ்வொரு பஸ்ஸா ஏறி இறங்கற சின்னச் சின்ன பசங்களோட வாழ்க்கையும் இதே மதுரைல தான் இருக்கு.

    ஏன்..? அதெல்லாம் வாழ்க்கையில்லையா? தென்மாவட்டங்களின் மக்கள் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகச் சொல்லிக் கொண்டு வெளியான எத்தனை படங்களில் அந்த மண்ணின் உண்மையான மக்களுடைய வாழ்க்கையிருக்கு?

    பருத்திவீரன்லேர்ந்து ஆடுகளம் வரைக்கும் ஹீரோ அத்தினி பேரும் ரவுடிப் பய பொறுக்கிப் பய மொள்ளமாரிப்பய கேப்மாரிப்பய. இவ்வளவு சின்ன உலகமா அது? இவர்கள் தான் நாயகர்களாக இந்த இயக்குனர்களுக்குக் கிடைத்தார்களா? மேலே சொல்லியிருக்கும் – பேருந்தில் வேர்கடலை விற்கும் சிறுவன் போன்றவர்களுக்கு இந்த இயக்குனர்கள் கற்பனையில் காணும் மதுரையில் இடமே இல்லையா என்ன? இது போன்ற படங்களின் மூலம் மட்டுமே மதுரையின் அறிமுகம் கிடைக்கும் ஒருவருக்கு அந்த ஊரைப் பற்றிய மனப்பதிவு எவ்வாறு உருவாகியிருக்கும்?

    மண்சார்ந்த கலாச்சாரப் பின்புலத்தோடு வரும் திரைப்படங்கள் என்று சொல்லி வெளியாகும் இது போன்ற படங்கள் பெரும் மோசடி. இதை அம்பலப்படுத்தும் வினவின் இது போன்ற பதிவுகள் அடிக்கடி வர வேண்டும்.

    மேலே லூசுத்தனமாக உளரிக் கொட்டியிருக்கும் எடிசனுக்கு வேண்டுமானால் பருத்திவீரன் ஆதர்ச நாயகனாக இருக்கலாம் – இது போன்ற படித்த லும்பன்களுக்கு தமது ஆதர்ச நாயகர்களான ரவுடிகளைக் கொண்டாடுவது உரிமையாக இருந்து விட்டுப் போகட்டும். நாளைக்கு அவரது குடும்பத்திலிருந்தே ஒரு பருத்திவீரனோ, ஆடுகளம் தனுஷ் போன்ற “வீரர்களோ” உருவாகி விட்டுப் போகட்டும். எம்மைப் பொருத்தவரையில் இது போன்ற அல்பத்தனங்களை எத்தனை கடுமையாக விமர்சித்தாலும் ஏகோபித்த வரவேற்பு வினவுக்கு எப்போதும் உண்டு.

    வாழ்த்துக்கள்!

  9. உண்மையான விமர்சனங்கள் படித்து நாட்கள் ஆகிவிட்டது… உங்கள் விமர்சனம் உண்மையில் படத்தின் சாதக பாதகங்களை சொல்லி இருந்தாலும்…. மருந்து கொடுக்கும் மருத்துவர் வலி தெரியாது ஊசி போட தெரிந்தவராக இருந்தால் தான் குழந்தைகள் அஞ்சாமல் அருகில் வருவார்கள்… வேறன்ன சொல்ல நல்ல விமர்சனம்

  10. ஆடுகளம்!

    ஆபாசமில்லை! வறட்சியான கதை எனினும், திரைக்கதை நன்று! முதலில் சற்று நேரம், படம் ஒட்டவில்லை! போகப் போக மனம் ஒன்றிவிடுகிறது! படத்தின் ஒன் – லைன், வேற்று மொழி படத்தின் நாய் சண்டையின் மருவு, என படித்ததாக நினைவு!

    படம் சொல்லும் சேதி – துரோகம் அல்ல! பொறாமை! அதுவும் சீடனின் மேல் வாத்தியின் பொறாமை!

    காதல், சேவற்சண்டை போன்றவை படத்தின் சுவைக்காக! லட்டில் திராட்சை போல! பிரியாணியில் முந்திரியைப் போல!

    எந்திரன் போன்ற படங்களுக்கு ஆடுகளம் மேல்! பகட்டையே பார்த்த கண்கள், கொஞ்சம் இருட்டையும் காணலாமே!

  11. ஈரானிய திரைப்படங்களைப் பார்ப்பவர்கள், ஈரானிய பண்பாட்டின் செழுமையை உணரலாம். அதேபோல ருஸ்ய திரைப்படங்களும் அந்த மண்ணினைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழ் படங்களைப் பார்க்கும் யாராவது, இந்த கோணத்தில் தமிழ்நாட்டினை உணரத் தலைப்பட்டால், நம்மை மிகக் கேவலமாக நினைப்பார்கள்.

    உண்டு கழிந்து – உண்டு கழிந்து என்று வருகின்ற ஒரு நுகர்வு – எந்த விழுமியங்களும் அற்ற தமிழ்நாட்டினர் என்று நினைப்பார்கள்.

    வினவின் விமர்சனம் நியாயமானது. கமர்ஸியலாக இருக்கட்டும் – மண்ணின் உண்மையான மைந்தர்களான உழைக்கும் மக்களைப் பற்றி ஒரு திரைப்படம் எடுப்பார்களா?. அதற்கு இவர்களின் சுபலாபம் என்ற எஜமானர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

    ஆதவன்

  12. ‘பொதம்கின்’ திரைப்படத்திற்கான உங்கள் விமர்சனம் –
    மெய்சிலிர்க்கவைத்தது.
    ஆடுகளத்துக்கெல்லாம் நீங்கள் விமர்சனம் எழுதுவது
    ‘படித்தவன் பாட்டைக் கெடுத்தான்’ என்கிற கதையாக இருக்கிறது.
    அடுத்து எப்போதாவது வரப்போகும் ‘ராம நாராயணன்’ படத்துக்கும் ஒரு விமர்சனம் போட்டுவிடுங்கள்!

  13. எம்மைப் பொருத்தவரையில் இது போன்ற அல்பத்தனங்களை எத்தனை கடுமையாக விமர்சித்தாலும் ஏகோபித்த வரவேற்பு வினவுக்கு எப்போதும் உண்டு.
    வாழ்த்துக்கள்!

    Repeat!!!

  14. Eppo oru short film potanga kalingar tv la intha communism pesura pasanga news kedaikala nu oru tv la Hindi varuthu nu odacharu nu news podura nu news ku kaga communism pesura velambara priyarigal ivargal summa nalathu pananum na natula irangi panu atha vittutu mokkaiya oru mokka padam nu nee nenacha athai eluthi vimarsam endra peyaril un pathiva pathi eluthinalae thangika mudiyatha nee ellam vinavu nu peru vara vachikitu intha palakam ellam oru naal pscho thanama unnai ariyamal unnil irukum poi polapa parunga sir natula evalavo pirachanai iruka kasu koduthu padam parthutu athuku oru pathivu vera… summa nottam soli peru vanga nenaikum communisa thozhalare china la richest village mathiri irangi purachi pani role model avunga.. vetti pasngala pola parunga… etho pora pokil parthu unga blog a padichi sirichitaen ethuku intha vilambaram

  15. அருமையான விமரிசனம் வினவு..
    இந்த பாணியில் தொடர்ந்து எழுதுவது ஒரு சரியான பார்வையை பெற உதவியாக இருக்கும். அந்த காரணத்துக்காகவாவது தமிழ் சினிமாவை தயங்காமல் பார்க்கும் மன உறுதியை உங்களுக்கு எப்போதும் அளிக்க கோடம்பாக்கத்து குல தெய்வங்களை பிரார்திக்கிறேன் 🙂

  16. வெற்றி மாறன் ஒரு முட்டாள். எங்காவது ஒரு இடத்தில் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வந்தே தீரும் என்று சொல்லியிருந்தால் இந்தப் படம் உலகத்தின் மிகச் சிறந்த படம் என்று வினவால் சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கும். (பா. வ. சர். வந்து கம்மூனிஸுக்கள் ஆட்சி செய்து பாட்டாளிகளையே கொன்று குவிப்பர் என்பது எங்களுக்குத் தேவையில்லாத விடயம்) வாழ்க கம்மூனிசம்… வாழ்க லெனினின் கு*.. வாழ்க ஸ்டாலினின் *

    • லிமா, அர வேக்காட்டுத்தனமா உள்ளது உங்க விளக்கம். உற்சாகம் சோர்வை சர்வாதிகாரம் செய்வது என்பது இயல்பு. இதில் கேலி செய்வதற்கு என்ன உள்ளது?

      • ஹா ஹா ஹா…. எது உற்சாகம் எது சோர்வு??? கம்மூனிசம்தான் உற்சாகமா???? அதான் போகிற இடமெல்லாம் மக்கள் அடித்துத் துரத்துகிறார்களே கம்மூனிசுக்களை. அதுவும் வினவு போன்ற ஸ்டாலின், லெனின் அடிவருடிகள் உற்சாகமா???? நல்ல காமெடி. கம்மூனிஸ் கால் பதிச்ச எல்லா இடமுமே சர்வநாசம்

        • கிருத்திகன், லிமா, ஆடுகளம் பற்றி வினவின் விமர்சனத்தில் என்ன புரிந்து கொண்டீர்? முதல்ல ஒரு கட்டுரையில என்ன சொல்ல வர்றாங்க என்பதையே புரிஞ்சிக்க முடியாத தாங்கள் கம்யூனிசத்தப் பத்தி பேசினால் எப்படி இருக்கும்?

    • அதான பாத்தன். என்ன இன்னும் சொம்புதூக்கி வரலையே என்று. ஏற்கனவே உங்க பதிவுல சொம்பு தூக்கிட்டீங்கதான வெ.இ.?? பிறகுமேன்??

  17. சிறப்பான விமர்சனம்… தொடர்ந்து சினிமா விமர்சனங்களை வினவிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

    அதில் அடுத்ததாக மிஷ்கினின் ”’யுத்தம் செய்” திரைப்படத்தை…

  18. நல்ல விமர்சனம். சினிமாவை சினிமாவாகதான் பார்க்கவேண்டும் என்றால் எம்.ஜி.யார்.விஜயகாந்த், சரத்குமார், இன்னும் பல பேர் ஏன் அரசியலுக்கு வராங்க. ஏன் அரசியல்வாதிகளின் கால்களை நக்கரானுங்க.சன் டீவி என்ன சினிமா நிறுவனமா?

  19. இவர்சினிமா விமர்சனம் எழுதினா சாப்ட்வேர் வெங்கயவெண்ணெய்களுக்குத்தான் புரியும்.இவரு ஓடாத படங்களை
    எல்லாம் ஓடவைப்பாரு, முன்னொரு காலத்தில “ரோஜா”ன்னுஒருபடம்
    கூட்டமும்இல்ல,வசுலும்இல்ல,அந்தப்படத்த எதிர்த்து போஸ்டர்ஒட்டி
    ஓடவச்சாரு, அப்புறம் எந்திரன், இப்படி………….அடிக்கிக்கொணடே
    போகலாம். அய்யா,சினிமா விமர்சனம் எழுதுனா, தியேட்டர்லிருந்து
    படத்தை துாக்கினபிறகு எழுதுங்கய்யா!!!!! வந்தே மாதரம்!
    வந்ததே ழூத்திரம்!!!!

    • எப்பா…எத்தனை தடவதான் சொல்றது..அய்யன் வள்ளுவரே விமர்சனம் செய்யாம இருந்தேன்னா ராசாகூட வீணாப் போயிருவான்னு சொல்லீருக்காரேப்பா..என்ன அது..ம்ஹ்ம்..இடிப்பாரையோ கடப்பாரையோ மன்னன்னு வருமேப்பா..பின்னூட்டம் போடுற எல்லாருமே கேக்கிறது என்ன..? எதையும் விமர்சனம் பண்ணாதே..படத்தைப் படமாப் பாரு…நீங்களே சொல்றீங்க..அது ஒரு கலைப் படைப்புன்னு..கலை..அது கலைஞனால் ஒத்திகைபார்க்கப்பட்டு அவன் வீட்டுக்குள்ளேயே நிகழ்த்தப்படும்னா அதை அவன் சம்சாரம் தவிர யாரும் ஏன்னு கேக்கப் போறதில்ல…விலைபொருளாக வந்துச்சுன்னா விமர்சனம் வந்துதானே ஆகணும்!! கத்தரிக்கா முத்திருச்சுன்னா கடத் தெருவுக்கு வருது..காசு குடுத்து வாங்குறவன்..சொத்தையா இல்லையான்னு பாக்கக் கூடாதுன்னு சொல்லுவியா? குழந்தை பிறந்த வீட்டுக்கு பாத்துட்டு வர்ற சனங்க கூட பிள்ளை எப்படி இருக்குன்னு சொல்லாமலா இருக்காங்க? அதிலயும் விமர்சனம் இருக்கத்தான் செய்யுது… அப்படின்னா ஏன் சினிமா விமர்சனம் மீது இந்த அலர்ஜி? காரணம் இருக்கு…இதுவரைக்கும் பத்திரிக்கை மாமாக்கள் விமர்சனம்ங்கிற பேர்ல என்ன எழுதி நம்மாளுகளுக்கு பழக்கி இருக்காங்கன்னு பாக்கணும்? சில்க் ஆடும் பாம்பு நடனத்தில் தியேட்டரே அதிர்கிறது..நமீதாவின் கவர்ச்சி தூள்..சீயான் போடும் சண்டை சூப்பர்…வாங்கிந்தின்ன துட்டுக்குத் தக்கன இப்படி சொறிஞ்சு குடுத்துட்டு மக்களையும் மந்தை ஆடுகளா ஆக்கிருக்கானுக குமுதம், ஆ.வி. மாமாப் பயலுக…இந்த மொந்தைத்தனத்தைக் கீறிப் பார்க்கும் சிறிய விமர்சனம் கூட இந்த லும்பன்களுக்கு சகிக்க முடியல…வினவு இதை தொடர்ச்சியாக செய்து வரணும்..சினிமா விமர்சனம்னா என்னன்னு புரிய வைக்கணும்..வருசத்துக்கு 200 படம் தயாரிக்கானுக..அதை எந்த விமர்சனமும் இல்லாம சுரணை இல்லாமப் பாக்குறதுக்கு பழக்கி வச்சுருக்கானுக…200 படம் எடுத்தாலும் அது ஏதாவது தரமா இருக்கா…கைநிறைய கழுதை விட்டை கணக்காத்தானே இருக்கு..கழுத விட்டையை பார்க்கறதோட நிறுத்திக்கோ..வினவுல வந்து நாறுதுன்னு சொல்லாதே என்று சொல்லும் குரல்..அராஜகமான குரல்..விமர்சனத்தைக் கண்டு அஞ்சி நடுங்கும் நபர்கள், அந்தப் படத்தின் அற்புதத்தையும் அழகியலையும் தொகுத்து எழுதுங்களேன்..அதை வரவேற்போம்..உங்களைப் போல ‘அதை எல்லாம் ஏண்டா எழுதறேன்’னு கதற மாட்டோம்..

      • குடுத்த காசுக்கு மேல கூவாத .காது கிழிஞ்சு ரதம் வருது …. டேய் வினவு விமர்சனத்த கூட தாங்கிக்கலாம் உன்னோட கமெண்ட் அ என்னால தாங்க முடிலடா…ப்ளீஸ் நீ இனிமேல் கமெண்ட் மட்டும் எழுதாத …. சத்தியமா முடியல … வினவ விட உன்னோட மொக்க ஓவர்.

        • @ manikandans next comment

          கைநிறைய கழுதை விட்டை கணக்காத்தானே இருக்கு..கழுத விட்டையை பார்க்கறதோட நிறுத்திக்கோ..வினவுல வந்து நாறுதுன்னு சொல்லாதே என்று சொல்லும் குரல்..அராஜகமான குரல்..etc etc …by alex

          ஏன்டா இது தான் உங்க நாகரீகமா ???
          புல்லரிக்குது உங்க தீர்ப்பு …

          உடன் பிறப்பே நீ என்ன வேண்டுமானாலும் சொல் நான் கேட்டுக்கொள்கிறேன் ஆனால் அவனை (அலெக்ஸ்) மட்டும் கமெண்ட் எழுதுவதை நிறுத்தச் சொல்லிவிடு

  20. ஏன் பாஸ் எதையுமே நேரா பார்க்கமாட்டேங்கறீங்க?

    /அதிலும் தனுஷ் வம்படியாகத்தான் அந்த பெண்ணைக் காதலிக்கிறார். அதற்காக வலிந்து சுற்றுகிறார். அவரைத்தான் காதலித்தாக வேண்டுமென்ற நிலையில் அந்தப் பெண் வேறு வழியின்றி காதலிக்கிறாள்.//

    எதார்த்தத்தை எடுங்கன்னு சொல்லறீங்க. படத்தில் வரும் தனுஷ் கதாபாத்திரம் மாதிரி பெண்களை மிரட்டி காதலிக்க சொல்லும் இளைஞர்களே இல்லை என்கிறீர்களா? நிறைய இருக்காங்க..

    /வெள்ளையும் சொள்ளையுமாக உள்ள அழகு பெண்களை துய்க்க விரும்புவதாக, ஏழைகளை இப்படித்தான் இழிவு படுத்த வேண்டுமா?//

    இதில ஏன் ஒட்டுமொத்த ஏழைகளும் இழிவுபடுத்தப்படுகிறாங்கன்னு நினைக்கறீங்க. நல்ல அழகான பொண்ணை கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு எந்த ஏழையும் நினைக்கறதில்லையா? அப்படி ஆசைப்பட்டாலும் நடக்காதுன்னு நினைக்கறவங்க நம்ம மாதிரி ஒரு ஆளை ஒரு அழகான பொண்ணு காதலிப்பதா படத்தில் காணிபிக்கும்போது தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தறான். இதில் எந்த தப்பும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல.

    /அந்த யதார்த்தத்தை சுட்டிக்காட்டும் அந்த விதவை பெண்ணை அரட்டி மிரட்டுகிறார் தனுஷ். அவரது மிரட்டலைப் பார்த்து கைதட்டுகிறார்கள் இரசிகர்கள். விமரிசனத்திற்குரியது இங்கே பாராட்டப்படுகிறது என்றால் என்ன பொருள்? //

    இங்கே பிரச்சினை. ரசிகர்களா? இயக்குனரா?.. எனக்கு என்னவோ கைதட்டும் ரசிகன்தான்னு தோணுது. கதாநாயகன் எது செஞ்சாலும் சரிதாங்கிர மனநிலையில் இருப்பது ரசிகனின் தவறே..

    /சாதியின்றி எடுக்கப்படும் ஒரு படம் எங்கனம் கிராமப் படமாக இருக்க முடியும்?//

    படத்தில் சின்னதா ஒரு சாதி பேர சொன்னாலே அந்த சாதி சங்கத்துக்காரன் கொடி பிடிச்சுக்கிறான். இந்த லட்சணத்தில் கிராமங்களில் இன்றும் நிலவும் ஆதிக்க சாதியினரைப் பற்றி படம் எடுத்தால், படம் எடுத்தவர் மட்டும் பார்க்க வேண்டியதுதான். இது ஆதிக்க சாதியினர் மட்டுமல்ல. ஒடுக்கப்பட்ட சாதியினரும்தான். ஒரு ஒடுக்கப்பட்ட சாதிக்காரனை, ஆதிக்க சாதிக்காரன் திட்டற‌ மாதிரி (இன்னிக்கும் கிராமங்களில் இருக்கும் வழக்கம்தான்), படம் வேணாம், சின்ன காட்சி வச்சாகூட போதும், ரெண்டு சாதி சங்கத்துக்காரங்களுமே சண்டைக்கு வந்துடுவாங்க. இதில நீங்க சொல்லற மாதிரியெல்லாம் படம் எடுக்க வாய்ப்பே இல்லை.

    வெற்றிமாரன் ஒன்னும் நான் இந்த படம் மூலமா சமூக கருத்தை சொல்லறேன்னு சொல்லி படம் எடுக்கலையே. இது ஒரு பொழுதுபோக்குப் படம். அதை பொழுதுபோக்கா பாருங்க. எனக்கு தெரிஞ்சு இந்த படத்தை பாத்தவங்க எல்லாம் இதை சாதாரண படமாகத்தான் பார்த்தாங்க, யாரும் கிராமத்தை இந்தப் படத்தை வச்சு அளவிடலை. நீங்கதான் தேவையில்லாம கவலைப்படறீங்க.

    • நான் பின்னூட்டம் அதிகம் இட்டதில்லை. ஆனாலும் ஒரு சின்ன திருத்தம்.

      //இங்கே பிரச்சினை. ரசிகர்களா? இயக்குனரா?.. எனக்கு என்னவோ கைதட்டும் ரசிகன்தான்னு தோணுது. கதாநாயகன் எது செஞ்சாலும் சரிதாங்கிர மனநிலையில் இருப்பது ரசிகனின் தவறே//

      இயக்குனருடைய தவறு என்றுதான் சொல்வேன். அந்த மாதிரியான பாத்திரங்களை சாதாரண கதாபாத்திரங்களாக இருந்தால் தவறில்லை. ஆனால் கதாநாயகனாக இருக்க வைக்கும் இயக்குனருடைய தவறுதான் அது.

  21. இப்ப எல்லாம் யாரு யாதர்த்ம் பார்க்கிறாங்க படம் பார்ப்பதே  நேரம் போக்கத்தானே

  22. வினவு.. இன்னொரு பாயிண்ட உட்டுட்டீங்கவ்வா…

    சேவல் சண்டைதான் காட்டுகிறார்கள். கோழிச்சண்டை அல்ல. என்னே ஆணாதிக்கம் என்னே ஆணாதிக்கம்???

  23. தமிழ் சினிமா உலகம் கற்றுக் கொள்ள தொடர்ந்து மறுத்து வரும் ஒன்று – விதவிதமான மசாலாக்களை பல்வேறு வகையான பண்டங்களில் தூவித் தந்து விட்டால் அது வெற்றி பெற்றுவிடும் என்பது. சகிக்க முடியாத நெருக்கடியில் தள்ளப்பட்டாலும் ஏதேனும் வித்தைக் காட்டி வென்றுவிடலாம் எனும் மமதையோடு இருக்கிறார்களே தவிர, சினிமா மனிதர்களின் வாழ்வை ஓரளவேனும் பிரதிபலிக்க வேண்டும் என்ற சிந்தனையை புறந்தள்ளும் தங்களது தவறை ஒப்புக்கொள்ளும் மன நிலையை வரிக்க முயல்வதில்லை.

    எப்போதாவது ஒரு முறை வரும் தேவர்மகன்களும், பருத்தி வீரன்களும் சரிப்படுத்தல்களைச் செய்தாலும் அதே போக்கில் வரும் மற்றவை இதை நோக்குவதில்லை அல்லது அது இல்லாமல் வெல்ல முடியாதா எனும் மமதையோடுதான் படம் எடுக்கிறார்கள். மிகச் சிறிய வெற்றியோ அல்லது தோல்வியோதான் கிடைக்கிறது. பின்வருபவர்களும் அதையே பிடித்துக் கொள்கிறார்கள்.

    ஒவ்வொரு இயக்குநரும் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படை தர்க்கம் கூட தமிழ் சினிமா வரலாற்றில் கிடையாது. நான் சொல்ல வருவது சிந்தனையில், அணுகுமுறையில், பாணியில், கதைக்களங்களைத் தேர்ந்தெடுப்பதில் இப்படி. அதற்காக பாரதிராஜாவும், பாலசந்தரும் வேறுபடவில்லையா எனக் கேட்கக் கூடாது. நான் சொல்ல வருவது அதுவல்ல. நம்மைப் போன்ற நாடுகளான சீனா, கொரியா ஆகியன வளமான பண்பாடு, மரபு, அரசியல் வரலாறு போன்றவற்றைக் கொண்டிருந்தாலும் (தமிழ் நாட்டை மட்டுமே எடுத்துக்கொண்டாலும்) ஒவ்வொரு இயக்குநரும் எப்படி வேறுபட்டிருக்கிறார்கள் என்பதைச் சர்வதேசப் படங்களைக் காண்கின்ற இதே தமிழ் இயக்குநர்கள் நன்கு அறிவார்கள் என்பதில் எனக்கு அய்யமில்லை.

    இருந்தாலும் வர்த்தகம் எனும் மாய வலையில் வீழ்ந்து (அது பற்றி அவர்கள் அறிவதில்லை- குறிப்பாக சந்தைப்படுத்தல் என்பது அவர்களுக்குத் தெரியாது. (அரங்கங்கள், எ,பி,சி ஏரியாக்கள் என்றெல்லாம் பேசுவார்கள், நுணுக்கங்கள் தெரியாது என்கிறேன்).

    எதைப்பற்றியும் கவலைப்படாமல் பல வெற்றிப்படங்களைக் எடுத்தவர்களும் உண்டு. வார இதழில் தொடராக வெளிவந்த தில்லானா மோகனாம்பாளில் நடிக்கும் போது சிவாஜி, பத்மினி ஆகியோர் கிட்டத்தட்ட நடுத்தர வயதை அடைந்து விட்டனர். அன்று பிரபலமானதொரு கதைக்கு நட்சத்திர தகுதி பற்றி யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை; அது போன்றதொரு திரைப்படம் திரைக்கென்றே எழுதப்பட்ட கதையுடன் வந்த படம் வேறு ஏதேனும் உள்ளதா?

    இவர்கள் தொலைக்காட்சிகள் திரையின் நீட்சியாக இருப்பதால் அல்லது அவ்வாறு நிலைநிறுத்தப்பட்டிருப்பதால் அதன் வீர்யத்தை நம்பி மமதையோடு படம் எடுக்கிறார்கள்.

    ஒருநாள் எந்தப்படமும் ஓடாது இலவசமாகத் திரையிட்டாலும் யாரும் பார்க்க மாட்டார்கள் எனும் நிலை வரும் வரை இந்தப் போக்கு தொடரும். அதன் பின்?????????

  24. தேவர், தனிமனித தனிப்பட்ட நடவடிக்கையை பொது அரங்கில் காட்டுவதுதான் யதார்த்தம் என்று ஏற்கும் நீங்கள் கிராமத்தின் அவலத்தையும், அதன் பின்னணியும் மூடி மறைப்பது மட்டும் யதார்த்தமாக ஏற்பீர்களோ?

  25. மயக்கும் கற்பனை காவியம்.இன்றய சூழலுக்கு தேவையில்லாத ஒன்று.

  26. ஒரு பொருளை வாங்குகிறோம்.பொருளின் அளவு,தரம்,செயல்பாடு சரியில்லை என்றால் விடுகிறோமா?எம்.ஜி ஆர் ,ரஜினி ,விஜய்(காந்த்)பாணி படங்களைப் பார்த்துப் பழக்கப்பட்டுவிட்டால் மக்கள் நல அக்கறையுடன் எழும் திறனாய்வுகள் பிடிக்காமல்தான் போகும்.பொதுவுடைமையாளரின் நேர்மையை சமூக அக்கறையை கறுப்புப்பண முதலாளிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யுங்கள். வினவுவின் கட்டுரை அருமை.கட்டுரை எழுதவும் அதில் பயணம் செய்யவும் கருத்தியல் தளம் தேவை.

  27. // ஆள் போட்டு வளர்க்கும் கவுண்டரின் மாட்டை, ஒரு அருந்ததி இளைஞர் அடக்கிவிட்டார் என்றால்தான் அங்கே கதையே எழும் //

    என்னது கொங்கு மண்டலத்தில் மாடு அடக்கிற காட்டுமிராண்டித்தனம் நடக்கிறதா? எங்கே எந்த பகுதியில் என்று தகவல் இருந்தால் கொஞ்சம் தெரிவியுங்கள். எனக்கு தெரிந்து இந்த மாடு பிடிக்கிற காட்டுமிராண்டித்தனம் இங்கு நடப்பதாகத் தெரியவில்லை

      • சாதிக் கண்ணோட்டத்தில் பாதி, “பிறப்பால் தான் சிறப்பு” என்ற மூடநம்பிக்கை மற்றும் அறியாமை – இதனால் வெளிப்படும் பெருமை. மீதி அன்றைய விவசாய நிலபிரபுத்துவ வர்த்தக ஆதிக்கம். அறியாமை நீங்குகையில் வர்க்க ஆதிக்கம் குறைகையில் சாதிக் கண்ணோட்டம் வெள்ளத்தில் போய் விடும்.

        மற்றபடிக்கு //ஆள் போட்டு வளர்க்கும் கவுண்டரின் மாட்டை, ஒரு அருந்ததி இளைஞர் அடக்கிவிட்டார் என்றால்தான் அங்கே கதையே எழும்// – இதெல்லாம் உங்களின் மிகைப்படுத்தப்பட்ட டூ மச் கதை கற்பனைக் கதை!

  28. காதல் ஒரு ஆரோக்கியமான விசயம் தான். கம்யூனிச பிதாமகன் கார்ல்மாக்ஸே காதல் காவியம் படைத்தவர் தானே. சினிமா படம் “பொழுதுபோக்கிற்காகத்தான்” என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது இயல்பாக எடுக்கும் போது காவியமாகிறது. நம் நாட்டு சினிமாக்களில் மக்களால் எதையெல்லாம் செய்ய முடியவில்லையோ, அதையெல்லாம் சினிமா ஹீரோ செய்வது மாதிரி காட்டினால், மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். 2 லட்சம் கோடி நாசமாயிருக்கு. நாம நண்பர்களோட கொஞ்சம் கோபமாக பேசுறோம், வீட்டில் தோசையை சாப்பிட்டுகிட்டே மனைவியிடம் இந்த அரசியல்வாதிகளை இரண்டு திட்டு திட்டிவிட்டு கையை கழுவிடுறோம். அவ்வளவுதான்.

    அந்த மாதிரி ஓர் அரசியல்வாதியை கேப்டன் விஜயகாந்த் புள்ளி விபரங்களோடு இரண்டு பக்கத்து வசனத்தை பேசிமுடித்து விட்டு 15 பேரை சுழன்று சுழன்று அடிச்சு துவைக்கும் போது, நம் கையாலாகதனத்திற்கு ஒரு வடிகால அமைகிறது அக்காட்சி. இது சினிமாக் காதல் காட்சிகளுக்கும் பொருந்தும். சினிமாவில் காதலை காண்பிக்கலாம். அது அக்கதைக்கு அவசியம் ஏற்படும்போது. சேவல் சண்டை போடுகிற பயலை, ஆஸ்திரேலியாவுக்கு போற எத்தனை பெண்கள் விரும்புவர். இதற்கு பதிலை நம் பெண்கள் தான் சொல்லனும். கல்யாண விசயத்தில் ஆண்களை விட பெண்கள்தான் படு உசார். பாஸ்டன், சியாட்டில் சாப்ட்வேர் ஆசாமி முதல் அண்டர்வேர் தெரிய கைலி கட்டும் ஆசாமி வரை எத்தனை பேர் காதலித்து கல்யாணம் செய்கிறீர்கள்? எத்தனை மேட்ரிமோனியல் இணையத்தளங்கள் இவர்களை வைத்து பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள்! ஆக, மைக்ரோசாஃப்ட்டில் வேலையில் இருக்கிற சாப்ட்வேர் ஹீரோக்களுக்கே காதலிக்க பெண் கிடைக்காத போது, எப்படிய்யா சேவல் சண்டைக்காரனுக்கு ஆஸ்திரேலியாவுக்கு போற பொண்ணு சிக்கிறதை நம்புறது. இதைவிட கொடுமை ரவுடி ஹீரோக்களை மெடிக்கல் காலேஜ் பெண்கள் விரட்டி விரட்டி காதலிப்பது போல் காண்பிப்பது.

    அதையெல்லாம் விடுங்கள், எத்தனை பேர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறோம். எத்தனை ரவுடிகள் விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள்?இப்படி இருக்கையில் ரவுடிகள் காதலிப்பது போல சினிமாவில் காண்பிப்பது, ஒரு திணிப்பாகவே தெரிகின்றது. பெரும்பாலான படங்கள் காதல், பாடல்கள் இல்லாமல் இருந்தாலே விரு விருப்பாக இருக்கும். நான் காதலுக்கு எதிரியல்ல. தேவையில்லாமல் அதை சினிமாவில் திணிப்பதற்குதான் எதிர்க்கின்றேன்.

Leave a Reply to ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்! « நல்லூர் முழக்கம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க