privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காசெல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் !

செல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் !

-

புதிய மாடல் செல்போன்களின் விலை நாளுக்கு நாள் மலிவாகிக் கொண்டே போகிறது. உணவுப் பொருட்களின் விலையோ தொடர்ந்து ஏறுமுகமாய் இருந்து வருகிறது. சென்ற ஆண்டின் இறுதி மாதத்தில் குறிப்பிட்ட சில காய்கறிகளின் விலை அதன் முந்தைய மாதத்தை விட 82% அதிகரித்துள்ளது. சந்தைக்குக் காய்கறிகள் வாங்க வந்த நடுத்த வர்க்கக் குடும்பத்தினர் அதன் விண்முட்டும் விலையைக் கண்டு மலைத்துப் போய், தங்கள் ஏமாற்றத்தைத் தம் குடும்பத்தாரோடு பகிர்ந்து கொள்ளத் தான் மலிவு விலை செல்பேசிகள் பயன்படுகின்றன.

இதில் குறிப்பாக வெங்காயத்தின் விலை 70 ரூபாயிலிருந்து 90 ரூபாய்கள் வரை விற்கப்பட்டது. தற்போது சில மாநிலங்களில் மட்டும் விலை சற்று குறைந்திருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை வெங்காயத்தால் பதம் பார்க்கப்பட்டிருக்கும் ஆளும் வர்க்கம் உடனடியாக வெங்காய ஏற்றுமதியின் மேல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினாலும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளாலும் கூட பெரிதாகப் பயன் ஏதும் இல்லாத நிலையில் பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய தற்போது முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

வெங்காய விலையேற்றம் என்பதை மற்ற பொருட்களின் விலையேற்றங்களில் இருந்து தனியே பிரித்துப் புரிந்து கொள்ள முடியாது. கடந்த சில ஆண்டுகளாகவே மற்ற உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள், சமையல் எண்ணை விலைகளும் தொடர்ச்சியாக உயர்ந்தே வந்துள்ளது. 2008இல் 5.62 சதவீதமாக இருந்த சர்க்கரையின் விலை உயர்வு, 2010இல் 58.94 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2008இல் 5.94 சதவீதமாக இருந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு, 2010இல் 8.33 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2008ல் 1.3 சதவீதமாக இருந்த பருப்பு வகைகளின் விலை உயர்வு, 2010இல் 45.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. (இணைப்பு / சுட்டி – 1).

இதற்கிடையே காய்கறிகளின் இந்த விலையேற்றத்தால் தொழிலாளிகள் அதிகக் கூலி கேட்டுப் போராடும் நிலை வரலாம் என்று கவலை தெரிவித்திருக்கிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் தலைவரான சக்ரவர்த்தி ரங்கராஜன். இதற்கு மேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று களத்தில் இறங்கியுள்ள அரசு, வெங்காயத்தின் விலை உயர்வுக்கு பதுக்கல்காரர்கள் தான் பெருமளவு காரணம் என்று அறிவித்துள்ளது. நாடெங்கும் உள்ள விவசாயச் சந்தைகளில் இருக்கும் வெங்காய மண்டிகளில் சோதனைகள் நடத்தியுள்ளது. பதுக்கல்காரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் நிதிமந்திரி பிரணாப் முகர்ஜி.

வெங்காயத்தின் உண்மைக் கதை!

னால், இந்தப் பருவத்தில் (kharif season ) விளையும் வெங்காயத்தில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். அதாவது விளைந்த வெங்காயத்தை காயவைக்க முடியாது. மழையும், பனியும் இக்காலத்தில் அதிகம் என்பதால் விளைந்த வெங்காயத்தை எவ்வளவு சீக்கிரம் நுகர்வோரை அடைகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நாட்கள் நீடித்தால் காலநிலை காரணமாக ஈரப்பதம் அதிகரித்து வெங்காயம் அழுகிவிடும். எனவே அறுவடை முடிந்த நாளில் இருந்து அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்கு மேல் கையிருப்பில் வைத்திருக்க முடியாது.

இதில் விவசாயி சந்தைக்குக் கொண்டு வருவதில் ஒரு நாளும், உள்ளூர் சந்தையில் இருந்து வெளி மாநில சந்தைகளுக்கு மூன்று நாட்கள் வரையும் ஆகிவிடுகிறது. வெங்காயம் ஈரப்பதத்துடனேயே பயணிப்பதால் அது அழுகல் நிலை ஏற்படுவதற்கு முன்பாகவே  நுகர்வோரிடம் சேர்க்க வேண்டும். எனவே இந்த பருவத்தில் வரும் வெங்காயத்தை ஒரு வியாபாரி எத்தனை நாட்கள் ‘பதுக்கி’ வைக்கிறாரோ அந்தளவுக்கு இழப்பு அவருக்குத் தான் ஏற்படும் (இணைப்பு 2ஐ பார்க்க). எனவே பிரணாபின் உண்மையான அக்கறை பதுக்கலின் மேல் இல்லை – எனில், இந்த பதுக்கல்காரர் பூதத்தை அவர் கிளப்பி விடுவதன் காரணத்தை பின்னர் பார்க்கலாம்.

இதற்கிடையே வெங்காய விலை உயர்வு பற்றி தேசிய அளவிலான பத்திரிகைகள் தொடர்ந்து எழுதத் துவங்கின. பொதுமக்களின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் துவங்கிய நிலையில், இதற்கான ஆறுதலையும் விலை உயர்வு பற்றிய தத்துவ விளக்கத்தையும் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்தியில் ஆளும் கும்பல் தள்ளப்பட்டது.

வெங்காய விலை உயர்வு தற்காலிகமானதென்றும், கூடிய விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார் மத்திய விவசாய மந்திரி சரத் பவார். ஒரு படி மேலே போன பிரதமர், ஜனவரி 13ஆம் தேதி “உணவுப் பொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த ஒரே வழி உற்பத்தியைப் பெருக்குவது தான்” என்கிற மாபெரும் பொருளாதார உண்மையைத் தெரிவித்துள்ளார். மான்டேக் சிங் அலுவாலியாவோ இந்திய கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாகத் தான் தற்போது அதிகளவு உணவுப் பொருட்கள் நுகரப்படுகிறது என்றும், அதனாலேயே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார்.

வாங்கும் சக்தி அதிகரிப்பு என்ற மோசடிப் பிரச்சாரம்!

மேலும், ஆளும் வர்க்க ஊதுகுழல்களான முதலாளித்துவ பத்திரிகைகள் சில, மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) அதிகரிப்பதுதான் விலையேற்றங்களுக்கு ஒரு காரணம் என்று எழுதுகின்றன. அதாவது உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பால் கிராமத்து மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதாகவும், இதனால் நுகர்வு அதிகரித்து விலைவாசி உயருகிறது என்றிகிறார்கள் இந்த ‘ஆய்வாளர்கள்’. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு மிகவும் குறைவு என்பது பல ஆண்டுகளாக மாறவே இல்லை. இது உண்மையாகும் பட்சத்தில் கிராம மக்களுக்கு வாங்கும் சக்தி எப்படி அதிகரிக்கும்? விவசாயம்தான் கிராமங்களின் முதன்மையான தொழில் என்பதிலும் மாற்றமேதுமில்லை.

மேலும் இணைப்பு – 1இல் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைக் கூர்ந்து கவனித்தால், இந்த விலையேற்றங்கள் குறிப்பாக 2008ஆம் ஆண்டிலிருந்து துவங்கிய உலகப் பொருளாதார பெரு மந்த காலத்தில் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. அந்தச் சமயத்தில் தான் ஆட்குறைப்பு, வேலை பறிப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை பொரும்பாலான தனியார்  நிறுவனங்கள் அமல்படுத்தின. நியாயமாகப் பார்த்தால், வாங்கும் சக்தி குறைந்து போன இந்தக் காலகட்டத்தில் நுகர்வும் குறைந்திருக்க வேண்டும் – விலைகளும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக விலைகளோ தொடர்ந்து நிலையாக உயர்ந்தே வந்துள்ளது.

கிராமப்புறங்கள், நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவற்றால் கொழிப்பதாகவும், அதனால் நுகர்வு அதிகமாகியிருப்பதாகவும், சந்தையில் பொருட்களுக்கான போட்டி அதிகரித்திருப்பதால், விலைகளும் அதிகமாகிறது என்று சொல்கிறார் அலுவாலியா. இந்தப் புளுகை ஐ.நா சபையின் குழுவொன்று இந்தியாவில் நிலவும் வறுமை பற்றி நடத்திய ஆய்வொன்றே தகர்த்தெரிகிறது. உலகிலேயே வறுமையான நாடுகளாகக் குறிப்பிடப்படும் 26 ஆப்ரிக நாடுகளைச் சேர்ந்த ஏழைகளை விட இந்தியாவின் 8 மாநிலங்களில் மிக அதிகளவில் ஏழைகள் இருப்பதாக அந்த ஆய்வு சொன்னது. மேலும், சப் சகாரா பாலைவன நாடுகளைக் காட்டிலும், ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகள் இந்தியாவில் தான் அதிகம் என்றும் பிற ஆய்வுகளில் வெளியானது. (இணைப்பு 3- வினவு கட்டுரை / ஐ.நா குழுவின் ஆய்வு பற்றி)

அடுத்து உற்பத்தி குறைந்து போனதே விலையேற்றத்திற்கான முக்கிய காரணம்  என்று முதலாளித்துவ பத்திரிகைகள் எழுதுகின்றன. உற்பத்திக் குறைவு என்பது விலையேற்றத்திற்கு ஒரு காரணம் தான் என்றாலும் இப்படிச் சுணங்கிப் போவதற்கு என்ன காரணம்? முதலாளித்துவப் பத்திரிகைகளில் குறித்த காலத்திற்கு மேல் நீண்ட பருவ மழையைக் காரணம் காட்டியிருக்கிறார்கள். அது உண்மை தான் என்றாலும் உண்மையின் ஒரு சிறிய அங்கம் மட்டும் தான்.

வெங்காயத்தின் உற்பத்தி நிலவரமும், உலகமயமாக்கத்தின் பாதிப்பும்!

லகளவில் இந்தியாவில் தான் அதிகமான நிலப்பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சீனத்திற்கு அடுத்தபடியாக இந்தியா தான் உலகில் அதிகளவில் வெங்காய உற்பத்தி செய்கிறது.  மகாராஷ்ட்டிரா, குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் தான் இதில் அதிகளவு பங்களிப்பைச் செய்கின்றன. 2008-09 நிதியாண்டில் 8,34,000 ஹெக்டேரில் வெங்காய சாகுபடி நடந்து 1,35,65,000 டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இதுவே 2010-11 நிதியாண்டில் 1.17 லட்சம் டன்களாக  உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் 2008ஆம் ஆண்டு இருந்ததை விட 2010ஆம் ஆண்டு வெங்காயத்தின் சாகுபடிப் பரப்பு 20% அளவுக்குக் குறைந்துள்ளது.

அரசாலேயே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளி விவரங்கள் சொல்வது என்னவென்றால், பருவமழைக் கோளாறு காரணமாகவும், சாகுபடிப் பரப்புக் குறைந்ததன் காரணமாகவும், சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது; இதன் காரணமாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதாகும். மேலும், இந்த நிதியாண்டில் நவம்பர் மாதம் வரையில் 11,58,000 மெட்ரிக் டன் வெங்காயம்  ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் சென்ற நிதியாண்டு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் அளவு 18,73,002 மெட்ரிக் டன்கள். (EPW Jan 08, 2010 மற்றும் தி இகனாமிக்ஸ் டைம்ஸ்)

இது இரண்டு முக்கியமான விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று – ஏற்றுமதி வெங்காயத்தை உள்நாட்டுச் சந்தைக்குத் திருப்பி விட்டாலும் அது சந்தையின் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யாது. இரண்டு – சென்ற நிதியாண்டின் உற்பத்தியில் ஏற்றுமதி அளவைக் கழித்து விட்டால் ஏறக்குறைய இந்த ஆண்டின் உற்பத்தி அளவை எட்டுகிறது. இந்த நிதியாண்டின் மொத்த உற்பத்தியில் செய்யப்பட்டிருக்கும் 11லட்சம் டன்கள் ஏற்றுமதி சந்தைத் தேவையில் உண்டாக்கியிருக்கும் இடை வெளியை விட தற்போது ஏற்பட்டிருக்கும் விலையேற்றம் கற்பனைக்கெட்டாத வகையில் அதிகமானதாகும்.

மேலும், ஏற்றுமதி ரகங்கள் உள்நாட்டு ரகங்களை விட தரத்தில் மேம்பட்டதாகும். ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் அளவு குறைந்தது 6 செ.மீ இருக்க வேண்டும். மேலும் எல்லா வெங்காயங்களும் ஒரே சீரான நிறம், அளவில் இருக்க வேண்டும். இந்த வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படாமல் உள்நாட்டுச் சந்தைக்கு திருப்பப்பட்டாலும் கூட, இதன் தரம் கருதி உள்நாட்டுச் சந்தையில் இதன் விலை கிலோ 70 ரூபாய்களுக்குக் குறையாமல் தான் இருக்கும். (தினமணி தலையங்கம் 21-12-2010).

ஆக, பிரதமர் சொல்வது போல விலையேற்றத்திற்கு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைவு முழுகாரணம் அல்ல. அதைப் பற்றிப் பார்க்கும் முன் உற்பத்தி பரப்பு குறைந்ததற்கான காரணத்தைப் புரிந்து கொள்வதும் அவசியமாகும். விவசாயத்தின் ஒரு பொதுப் போக்காக விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விலக்கப்படுவது உலகமயமாக்கலுக்குப் பின் தீவிரமாக நிகழ்ந்து வருகிறது.

விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்து என்று அனைத்தும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் வைக்கும் கொள்ளை விலைக்குத் தான் வாங்கியாக வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் இருக்கும் விவசாயிகளுக்குப், பயிர்க்கடன்களும் விவசாய இயந்திரங்களை வாங்கவும் வங்கிகள் கடன் கொடுக்க ஆயிரம் நிபந்தனைகள் விதித்தும் மறுத்தும் வருகின்றது. இதனால் கந்து வட்டி கும்பல்களிடம் மாட்டிக் கொள்ளும் அப்பாவி விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். காலம் தப்பிப் பெய்த பருவ மழையால் பயிர்கள் நாசமானதால் கடந்த செப்டெம்பர் மாதம் மூன்று வெங்காய விவசாயிகள், மராட்டிய மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக மழையின் பாதிப்பை அந்த விவசாயி மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அளவில்தான் நமது அரசின் அக்கறை இருக்கிறது.

இதே மாராட்டிய மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் ஒரு பணக்காரக் கிறுக்கன் 65 கோடி மதிப்பிலான 150 மெர்சிடஸ் பென்ஸ் கார்களை வாங்க வெறும் ஏழு சதவீத வட்டிக்கு 40 கோடிகளை அள்ளிக் கொடுத்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. ஒரு விவசாயி டிராக்டர் வாங்கக் கடன் கோரினால் அதற்கான வட்டி 12%. (ஆதாரம் – ஹிந்துவில் பி.சாய்நாத்தின் கட்டுரை)

விவசாயப் பொருட்களில் ஊக வணிகம்

க, மன்மோகன் கும்பல் விசனப்பட்டுச் சொல்லும் பருவ மழையோ – அதனால் குறைந்து போன காய்கறி உற்பத்தியோ, கிராமப் புறக் கொழிப்போ – அதனால் பொருட்களுக்கு சந்தையில் உண்டாகியிருக்கும் போட்டியோ, மொத்த உள் நாட்டு உற்பத்திக் குறியீட்டின் வீக்கமோ – அதனால் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் பெருக்கமோ அல்ல காரணம் என்பது தெளிவாகிறது.

சர்வதேசப் பொருளாதார மந்த நிலைக்குக் காரணமான நிதி மூலதனச் சூதாடிகள், ரியல் எஸ்டேட், தங்கம், இரும்பு, வெள்ளி போன்ற மூலப் பொருட்களில் தமது நிதிகளை இறக்கிச் சூதாடத் துவங்கிய போதே உலகளவில் உணவுச் சந்தையிலும் தமது சூதாட்டத்தைத் துவங்கி விட்டிருந்தனர். விவசாய விளை பொருட்களிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களிலும் முன்பேர வர்த்தகத்தை அனுமதிக்குமாறு உலகவங்கியே இந்தியாவுக்குக் கட்டளையிட்டுள்ளது. உலகவங்கியின் முன்னாள் நேரடி ஊழியரும், இந்நாள் மறைமுக ஊழியருமான மன்மோகன் சிங் சுமார் நாற்பது முக்கியமான விவசாய உற்பத்திப் பொருட்களில் முன்பேர வணிகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

சர்வதேச பொருளாதார பெரு மந்தத்தை அடுத்து பங்குச் சந்தைகளிலும், நாணயங்கள், நிதிப் பத்திரங்கள், வீட்டுக்கடன் பத்திரங்களில் நடந்து வரும் பங்குச் சந்தை சூதாட்டங்களில் லாபம் இல்லாத காரணத்தால், இப்போது மக்களின் அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களில் சூதாட்டத்தை முடுக்கி விட்டுள்ளனர் சர்வதேசச் சூதாடிகள். உலகளவில் உணவுப் பொருள் விலையேற்றம் என்பது இதன் காரணமாகத் தான் ஏற்பட்டுள்ளது. தற்போது உலகின் பல பாகங்களில் தொடர்ந்து நடந்து வரும் உணவுக் கலகங்களுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்தப் பின்னணியிலேயே இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் உணவுப் பொருள் விலையேற்றத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 2009-10 நிதியாண்டில் மட்டுமே இந்தியாவில் நடந்த முன்பேர சூதாட்டத்தின் மதிப்பு சுமார் 78 லட்சம் கோடிகள். நடப்பு நிதியாண்டில் இதன் மதிப்பு 110 லட்சம் கோடிகளை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டுமே விவசாய விளை பொருட்களில் நடந்த முன்பேர வர்த்தகத்தின் அளவு 25 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டில் நவம்பர் வரையிலான கால கட்டத்தில் மட்டும் விவசாய விளை பொருட்களில் நடந்த முன்பேர வர்த்தகச் சூதாட்டத்தில் புழங்கிய தொகையின் அளவு 6.51 லட்சம் கோடிகள்.

கடந்த ஆண்டின் இறுதி மாதங்களில் துவங்கி இந்த வருடத்தின் துவக்கம் வரையில் உணவுப் பொருட்களில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றத்திற்கான காரணத்தை இந்தப் புள்ளிவிவரங்களே தெளிவாக எடுத்துரைக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் திணிக்க முயற்சி

டுத்து ‘பதுக்கல்காரர்கள்’ குறித்து பிரணாப் முகர்ஜிக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் அக்கறை குறித்து பார்ப்போம்.

வெங்காய விலையும் பிற காய்கறிகளின் விலைகளும் விஷம் போல் ஏறிக்கொண்டிருந்த நிலையில் விவசாயத் துறை அமைச்சர் ஒரு பக்கம் பார்வையற்றவன் யானையைத் தடவிய கதையாய் விலையேற்றத்தைப் பற்றி உளறிக் கொட்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒருநாளும் இல்லாத திருநாளாய் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா இதில் காட்டிய அக்கறை கவனத்திற்குரியது. மொத்த விவகாரத்திற்கும் காரணம் பதுக்கல்காரர்கள் தானென்றும் சந்தைக்குப்  போதுமான வெங்காயம் கையிருப்பில் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

இதற்கான தீர்வாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில்லறை வணிகத்தில் நுழைவதற்காக இருக்கும் கொஞ்ச நஞ்ச கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது பற்றி டிசம்பர் மாத இறுதிவாக்கில் ஆனந்த் சர்மா காபினெட் மட்டத்தில் ஆலோசனைகளைத் துவங்கியிருக்கிறார். அந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். டிசம்பர் 23ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆனந்த் சர்மா, மொத்த விலைக்கும் சில்லறை விலைக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்கவும், பன்னாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் இறக்கி விடுவது தான் சரியான தீர்வு என்று அறிவித்துள்ளார்.

பன்னாட்டுக் கம்பெனிகளை சில்லறை வர்த்தகத்தில் அனுமதிப்பதை ஆதரித்துப் பேசும் முதலாளித்துவ ஊடகங்கள், அவ்வாறு செய்வது இடைத்தரகர்களை ஒழித்து விடுமென்றும், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உத்திரவாதப்படுத்தும் என்றும் சொல்கின்றன. ஏற்கனவே பகுதியளவில் சில்லறை வணிகம் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையிலேயே இது போன்ற பகாசுர நிறுவனங்களால் விவசாயிகளுக்குப் பெரியளவில் பலன் ஏதும் கிடைத்து விடவில்லை. மேலும், அசுரத்தனமான மூலதன பலத்துடன் சந்தையில் இறங்கும் இவர்களால் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வரும் சில்லரை வணிகம் ஒழிந்து போய் விடும் அபாயமும் இருக்கிறது.

ஏற்கனவே ரிலையன்ஸ், ஐ.டி.சி, பெப்சிகோ போன்ற நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து வரும் நிலையில், இவர்களை விட அதிகமான மூலதன பலத்துடனும் அளும் வர்க்க ஆசீர்வாதத்துடனும் அமெரிக்காவின் பின்புலத்துடனும் களமிறங்கும் வால்மார்ட்டால் விவசாயிகள் பலனடைவார்கள் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. சுதந்திரச் சந்தையின் கோட்டையான அமெரிக்காவில் விவசாயச் சந்தையை வால்மார்ட்டும் கேரிஃபோர் நிறுவனமுமே கைப்பற்றி வைத்துள்ளது. இந்நிறுவனங்கள் வளர்ந்த அதே வேகத்தில் அமெரிக்க விவசாயிகளின் எண்ணிக்கை படுபாதாளத்தில் விழுந்துள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளில் விவசாயிகளைச் சேர்க்காமல் விடும் அளவுக்கு விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விரட்டப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிலோ ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு விவசாயி விவசாயத்திலிருந்து விரட்டப்படுகிறார்.

முதலாளித்துவ நாடுகளைப் பொருத்தவரை நவீன தொழில் நுட்ப உற்பத்தியில், பிரம்மாண்டமான அளவில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்நாடுகளில் 5 சதவீதம் மக்களே விவசாயிகளாக இருக்கின்றனர். தற்போது இந்த உடமை உறவு கூட ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் பெரும் நிறுவனங்கள் விவசாயத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

ஆனால், ஆனந்த் சர்மா வால்மார்ட் தான் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இருக்கும் ஒரே கதி மோட்சம் என்பது போலச் சொல்கிறார். இதுவும் கூட அவராகச் சொல்லவில்லை. சென்ற நவம்பரில் இந்தியாவில் எழுந்தருளிய ஒபாமாவதார் இட்டுச் சென்ற முக்கியமான கட்டளைகளில் ஒன்று சில்லறை வணிகத்திலும் விவசாயத்துறையிலும் பன்னாட்டு மூலதனத்தை இந்தியா அனுமதிக்க வேண்டும் என்பதாகும்.

நவம்பரில் ஒபாமா வருகை – டிசம்பரில் வெங்காய விலையேற்றம் – அதே டிசம்பர் இறுதியில் வால்மார்ட்டை அனுமதிப்பதற்கான் காபினெட் சந்திப்பு. நிகழ்ச்சிப் போக்கு வரிசைக்கிரமமாக அமைந்துள்ளது தற்செயல் இல்லை அல்லவா?

அரசின் திட்டமிட்ட துரோகத்தனத்தால் ஓய்ந்து போன விவசாய உற்பத்தியினால் உயர்ந்து போயிருக்கும் விலைவாசியைக் காரணமாக்கிக் கொண்டு, கிடைக்கும் இடைவெளியில் பன்னாட்டுக் கம்பெனிகளை நுழைக்கும் நரித்தனத்தில் அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே விதைக்கும் உரத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முன் இந்திய விவசாயிகளை கையேந்த விட்டுள்ள அரசு, இப்போது விளைச்சலுக்கான விலைக்கும் அவர்களிடமே கையேந்தச் சொல்கிறது. கீழ்மட்ட அளவில் உணவுப் பொருள் உற்பத்தியைக் கைபற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், இன்னொரு பக்கம் உணவுப் பொருள் வினியோகச் சங்கிலியைக் கைப்பற்றுவதன் மூலம் நுகர்வுச சந்தையையும் கட்டுப்படுத்தும்  வெறியுடன் களமிறங்கியுள்ளன.

இயற்கையான காரணிகளையும் அதனோடு செயற்கையான காரணிகளையும் இணைத்து சந்தையில் விலைவாசிகளை தாறுமாறாக ஏற்றுவதும், அதனால் மக்கள் பீதியடைவதை சாதகமாக்கிக் கொண்டு ஒரு  பொதுக்கருத்தை உண்டாக்கி அதை தமக்குச் சாதமகாப் பயன்படுத்திக் கொள்வது இவர்களின் புதிய செயல்தந்திரம் அல்ல. சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களில் இதே போன்ற உத்தியை உலகின் வேறு பாகங்களிலும் செயல்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

2008ஆம் ஜனவரி மாதம் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் வர்த்தகத் துறை அதிகாரிகள் மட்டத்தில் நிகழ்ந்த சந்திப்பு ஒன்றில், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களுக்கு நுகர்வோர் இடையே வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று விவாதிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டு ஜூன் மாத வாக்கில் வரலாறு காணாத வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் ஏறியுள்ளது. முழு விபரம் அறிய – (<http://foodfreedom.wordpress.com/2010/12/14/leaked-cable-bubble-gmo-eu/>)

இப்போது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் உணவுப் பொருள் விலைவாசி உயர்வை வழமையான  விலை ஏற்றம் என்பதாக மட்டும் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. இது இந்நாட்டின் உணவுத் தன்னிறவை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் ஆளும் வர்க்கத்தின் துரோகத்தனமான தொடர் நிகழ்ச்சிப் போக்கின் ஒரு அங்கமாகவே புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே விலைவாசி உயர்வுக்கெதிரான மனப்புழுக்கமாக மட்டும் அடங்கி விடாமல், விவசாயத்தை திட்டமிட்டு அழித்த அரசின் துரோகத்தனத்திற்கு எதிரான கோபமாகவும், அரசின் நேரடி ஆசீர்வாதத்துடன் மக்களைக் கவ்விப் பிடிக்க களமிறங்கியிருக்கும் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுக் கம்பெனிகளின் நயவஞ்சகத்தை எதிர்த்து முறியடிக்கும் போராட்டமாகவும் மலர வேண்டும்.

________________________________________________________

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

  1. செல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் ! | வினவு!…

    காய்கறிகள் வாங்க வந்த நடுத்த வர்க்கக் குடும்பத்தினர் அதன் விண்முட்டும் விலையைக் கண்டு மலைத்துப் போய், தங்கள் ஏமாற்றத்தைத் பகிர்ந்து கொள்ளத் தான் மலிவு விலை செல்பேசிகள் பயன்படுகின்றன….

  2. முன்பேர வர்த்தகம் என்றால்? எண்ணெய், பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை குறுகிய எதிர்காலத்தில் – உதாரணத்திற்கு 3 மாதங்களுக்குப் பிறகு – ஒரு குறிப்பிட்ட விலையில் விற்பதற்கு (வாங்குவதற்கு) உற்பத்தியாளரிடமோ அல்லது மொத்த விற்பனையாளரிடமோ இன்றே ஒப்பந்தம் செய்து கொள்ளும் வணிகத்திற்கு பெயர் முன்பேர வர்த்தகம் (Futures… – இப்படி புரிந்து கொள்ளலாமா?

    • நொந்தகுமாரன்,

      இந்த ஊக வணிக சந்தையால பெரும் பயன் அடைந்த உ.பி மென்தால், உருளை விவசாயிகள் பற்றி :

      http://www.mcxindia.com/knowledgehub/casestudy/PDF/StudyPotatoMentha.pdf

      மிக முக்கிய ஆய்வு இது. முழுசா படித்துப் பார்க்கவும். ஊக வணிகம் என்பது வெறும் சூதாட்டம் அல்லது ஏமாற்று வேலை அல்ல. அது ஒரு முக்கிய பங்களிப்பு செய்கிறது. மிக முக்கியமான information exchangeஅய் மிக அருமையாக செய்ய இயல்கிறது

  3. வெங்காயத்தை உரித்துப் பார்த்தால்,ஒன்றுமில்லை என்பார்கள். அந்த வெங்காயத்தை வினவு உரிச்சா, மன்மோகன்சிங், மற்றும் அமைச்சர்களின், பன்னாட்டு நிறுவனங்களின் சதித்தனம் அம்பலமாகிறது. கட்டுரை புள்ளி விவர ஆதாரங்களுடன் இருக்கிறது.

  4. சமீபத்தில் செல்பென் இணைப்புகளின் எண்ணிக்கை (பழைய இணைப்பு கணக்கு 60 கோடியிலிருந்து ) 72 கோடியாக உயர்ந்திருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் 100 கோடியை தொட்டுவிடும். சிதம்பரம் கணக்குப்படி இந்தியாவில் வறுமையை ஒழித்துவிட்டதாக அப்பொழுதும் அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார்.

      • அவுக, இப்போதைக்கி அவுக மடத்தோட சீஃப் ஆண்டி ஜெயமோகன்ஜி உடன் பைட்டக்ல இருக்காக.

        அது முடிஞ்சதும் ஜெயமோகன்ஜி தன்னோட சீடப் புள்ளைங்களுக்காக தானே சொந்தமாய் சிந்தித்து இந்திய தத்துவ மரபையும் யதிராஜ மாமுனி எழுதிய யதிநந்தோபனிசத்தையும் மார்க்சிய முரணியக்க வரலாற்று பொருள்முதல்வாத நீட்சேயிச ஃப்ராயிடிச தத்துவங்களையும் கலந்து கட்டி துளசி தீர்த்தத்தோடு அரை நாழிகை கொதிக்க விட்டு வடிகட்டித் தயாரித்த உள்நாட்டுச் சரக்கான “ஜெயமோகனோயிச”த்தின் படி ஒரு பௌத்திக் நிகழ்த்த விருக்கிறார். (ஹப்பா…. ஒன் நிமிட். மூச்சு வாங்கிக்கிடுதேன்)

        அந்த பௌத்திக் முடிந்ததும் எடிசன், ஹெக்டேர், சோத்தாங்கைசாரி, லிபர்ட்டேரியன் போன்ற சீட கோடிகள் இங்கே படையெடுத்து இதை மறுத்து வாதாடுவார்கள். தங்கள் வாதத்திற்கு பலம் சேர்க்கும் விதமாய் விக்கிபீடியா சுட்டிகளையும் தருவார்கள்.

        ப்ளீஸ் வெயிட் பார் சம் டைம் சார்.

        பைட்டக் = ஆலோசனை
        பௌத்திக் = உரை

        • சரி, பீச்சாங்கைசாரி ஏக்கமா கூப்பிட்டதினால வந்தேன் 🙂

          செல்போன்களின் எண்ணிக்கை அதிகமானதால் அவற்றின் கட்டணங்கள் பெருமளவு குறைந்தன. (பாத்து வருடம் முந்தைய ரேட் ஞாபகம் இருக்கா?). செல்போன் வந்ததினால் எங்கள் தெரு ஆட்டோக்காரர் எப்படியெல்லாமோ ‘கிராக்கி’ புடிக்கிறார், ஒய்வு நேரத்தில் நிலபுலன் விற்று வாங்கி பெண்டாட்டிக்கு கால் பவுன் கம்மல் வாங்கிப் போட்டாராம். தெருவோரத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர் கூட சேலத்தில் தங்கள் அம்மா அப்பாவுடன் அடிக்கடி பேச முடிகிறது. வாழ்க்கை தரம் முன்னேறுகிறது அய்யா…வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உழைப்பனைய உயர்வு.

          பெஞ்சு தேச்சு குண்டி பெருத்த சோம்பேறி உதவாக்கரை யூனியன் பசங்கள் அல்லாரையும் ஜெயில்ல போடணும்.,

        • நாங்க ஒன்னும் ஏக்கமா கூப்பிடலை…எங்கே நீங்க திருந்தீட்டிங்களோன்னு நெனைச்சோம். இந்த பதிவு உங்க மனச மாத்திடுசொன்னு நெனைச்சோம். இப்போதான் தெரியுது நீங்க மா.சா. சொன்ன மாதிரி ரூம் யோசிச்சிட்டு இருந்திருக்கீங்கன்னு.

          எவ்வளவு சொன்னாலும் உங்களுக்கு உரைக்காது…பட்டாத்தான் தெரியும். எங்க உங்க டீம்ல இருக்குற மத்த அல்லக்கைகல்லாம்? ஓ…நித்யானந்தவுக்கும், பிரேமானந்தவுக்கும், சிறீ சிறீக்கும் சொம்பு தூக்கிட்டு இருக்கீங்களா?

        • //செல்போன் வந்ததினால் எங்கள் தெரு ஆட்டோக்காரர் எப்படியெல்லாமோ ‘கிராக்கி’ புடிக்கிறார், ஒய்வு நேரத்தில் நிலபுலன் விற்று வாங்கி பெண்டாட்டிக்கு கால் பவுன் கம்மல் வாங்கிப் போட்டாராம்//

          எங்கூட்டுக்கு பின்னாடி ஒரு ஆட்டோக்காரர் இப்படித்தான் ரிலையன்ஸ் செல்போன வைச்சி பல ‘கிராக்கி’களப் புடிச்சி நிலபுலன் வாங்கி கட்சீல அந்த அம்பானிய விட பெருசா மாளிகை கட்டிட்டு இருக்காரு. அவரு பேருகூட ஆட்டோக்கார அம்பானியாம். கா… தூ… ல… பூ…….

  5. மக்கள் விலைவாசி உயர்வினால் மனப்புழுக்கமே கொள்கின்றனர்.மேலும்,ஆட்சியாளர்களை மக்கள் அதிகம் திட்டித்தீர்க்கவும் செய்கிறார்கள்.கட்டுரையில் சொல்லப்பட்டவாறு புரிந்துகொள்ளவும்,போராடவும் இன்னும் நாளாகும்.விரிவான பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும்.

  6. மிக முக்கியமான கட்டுரை ஆனால் சற்று தாமதமாக வந்துள்ளது வருத்ததிற்குரியது .காஷ்மீர் பற்றி எரிந்தபோது எவனோ ஒருவனின் பிரச்னை என்று எந்த சலனமும் இன்றி வாழ்த்த நாம், ஈழத்தில் ஆயிரக்கனக்கானோர் கொல்லப்பட்டபோது நம்மால் என்ன செய்ய முடியும்? என்று இயலாமையை வெளிபடுத்தியதொடு முடித்துகொண்ட நாம், பருப்பு விலை நூறாக உயர்ந்த போது புளிதண்ணிய வச்சி பொங்கி தின்றோம், வெங்காயமும் நூறானபோது வெறும் ரசம் வச்சி பொழப்ப ஓட்டுறோம். என்னக்கிதான் ஏன்னு கேள்வி கேப்போம்?

    • ஆனா யூனியன்ல பேசி உங்க சம்பளத்தை மட்டும் கரெக்டா வருஷத்துக்கு ஒரு தபா எத்திப்பீங்க !! ஏம்ப்பா, நீங்க ரொம்ப சம்பளம் கேக்கறதை குறைச்சுக்குங்களேன், விலைவாசி தானா குறையும்.

      • நீங்க குடுக்குற நாலணாவையும், எட்டனாவையும் வச்சித்தான் நாங்க விலைவாசிய ஏத்துரோமா….? நீங்க சினிமா-ல காமெடி ரோலுக்கு நல்லா பிட் ஆவிங்கண்ணா….

        அந்த நாலணாவையும், எட்டனாவையும் நாங்க சங்கம் வச்சி, போராடித்தான் வாங்க வேண்டி இருக்கு. இல்லேன்னா அதுக்கூட வக்கில்லை.

        பெட்ரோல் விலை ஏறினா என்ன…காய்கறி விலை ஏறினா உங்களுக்கு என்ன…ஊரைக்கொள்ளை அடிச்சு நெறைய சேத்து வச்சிருக்கிங்க…என்ன விலை வித்தாலும் வாங்குறதுக்கு நீங்க தயார்.

        நாங்க வருஷா வருஷம் போராடி, தொண்ட கிழிய கத்தி ஒரு நாலனாவோ, எட்டனவோ சம்பள உயர்வு வாங்குறதலேதான்…அரை வயிறு, கால் வயிறு காஞ்சி குடிச்சுட்டு உயிரோட இருக்கோம்.

        நாங்க உயிரோட இருக்குறது உங்களுக்கு ரொம்ப முக்கியம் சார்…இல்லேன்னா யாரு வந்து ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வியர்வை சிந்தி வேலை பாக்குறது…?

      • unga annan ambaniya petrola summa kudukka sollen parppom. 4.50/- ku oru ltr petrola ingaye edutthu 65/- vikkaravan kaala nakkara unukku nokia -la maasam 3000/- sambalam vanga oadaa theyarathu theriyuma? indha sambalatthaiyum korachuttu unna mathiri.”…………” thinga solriya? naanga uzaikkaravanga! unagala ozhikkaravanga!!

  7. ஏமாளிகளாய் இருக்கும்வரை
    இந்த விந்தைகள் தொடரும் :

    நம் வீட்டு குடும்ப உறுப்பினர் அனைவருக்கும்
    செல்போன் இருந்தும்
    அலுமினியத் தட்டுக்கள்
    உணவின்றி காய்ந்து கிடக்கும்போது…!

    தவணைமுறை ‘பல்சரில்’
    ப்ளாஸ்டிக் குடங்களைக் கட்டி
    குழாயடியிலிருந்து தண்ணீர் கொணரும்போது…!

    பன்னாட்டுக் கம்பெனிகளின்
    எலிப்பொறிக் காசில்
    காதலிக்கு கால்முழப் பூ வாங்க
    (கிலோ ஆயிரம் ரூபாய்)
    முடியாதென்று தெரியும்போது…!

    – பல்சர் அல்ல –
    சைக்கிளைக்கூட சீதனமாகக் கொடுக்கமுடியாது
    தட்டிக் கழியும் தங்கயின் மண நாளை நினைக்கும்போது…!

    அறுவைச் சிகிச்சைக்கு
    லட்சங்களைக் கேட்கும் அப்பொல்லோக்களால்
    அற்பாயுசில் மாளப்போகும் அம்மாவைப் பார்க்கும்போது…!

    • செல்போன் இருக்கு, பல்சர் இருக்கு, கம்ப்யுட்டர் பொட்டி தட்டி கிவிதை பாட முடியுது, ஆனா சோறு மட்டும் இல்லை…கேக்கறவன் கேனையனா இருந்தா கே.ஆர்.விஜயா கொண்டயிலயும் கலைஞர் டிவி தெரியும்னு சொல்லுவீங்க.

      உங்களுக்கு பரிசாக ஒரு குறள் 🙂

      யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
      அதனின் அதனின் இலன்
      .

      • //செல்போன் இருக்கு, பல்சர் இருக்கு, கம்ப்யுட்டர் பொட்டி தட்டி கிவிதை பாட முடியுது, ஆனா சோறு மட்டும் இல்லை…கேக்கறவன் கேனையனா இருந்தா கே.ஆர்.விஜயா கொண்டயிலயும் கலைஞர் டிவி தெரியும்னு சொல்லுவீங்க//

        கே.ஆர்.விஜயா கொண்டயிலயும் கலைஞர் டிவி காட்டுறது நீங்க தான்…இந்தப்பதிவின் சாரம்சமே அதுதான்…செல்போன் இருக்கு, பல்சர் இருக்கு, கம்ப்யுட்டர் இருக்கு…ஆனா தின்ன சோறு இல்லேங்குறதுதான்.

        சூப்பர் சார்…அருமையான யோசனை…குறள் எங்களுக்கு, கொண்டாட்டம் உங்களுக்கு….அப்படித்தானே. அந்தக்குறளை நீங்களும், உங்க சிஷ்ய கோடிகளும் கொஞ்சமாவது, கடுகளவுக்காவது follow பண்ணினா வினவு கஷ்டப்பட்டு இப்படி பதிவு எழுத வேண்டியதே இருக்காதே…

  8. பொதுவாக விலைவாசி உயர்வுக்கள் அடிப்படை காரணி : demand is high while supply is less. அதாவது தேவைகளுக்கு ஏற்ற அளவில் பண்டங்கள் மற்றும் சேவைகள் சந்தையில் இல்லாத நிலை. ஆனால் இதை விட இன்னொரு முக்கிய காரணி : அந்த அமைப்பில் உள்ள பணத்தின் நிகர அளவு. அதாவது this medium of exchange (which is legal tender currency, and which is solely issued and controlled by govt thru RBI) திடீரேன மிக அதிகாமானால், பண வீக்கம் உருவாகி விலைவாசி உயர்கிறது.

    கடந்த இரண்டு வருடங்களில் மைய அரசு ’பொருளாதார ஊக்கி’ எனப்படும் fiscal stimulas packagaeஅய் செய்ததன் விளைவுதான் அது. (’முதலாளித்துவ’ அமைப்பிலும், பொருளாதார மந்தகளுக்கு காரணிகளும் தீர்வுகள் பற்றி மாற்று கருத்துக்கள் நிறைய உள்ளன. இந்த சிக்கலே அரசு மிக அதிகமாக பற்றாக்குறை பட்ஜெட்டுகளை உலகெங்கும் போட்டதுதான் காரணம் என்பது எம் கோணம்.) பல லச்சம் கோடி புது பணம் இந்த அமைப்பிற்க்குள் திடீரென செலுத்தப்பட்டால், அது வெள்ள நீர் பள்ளத்தை நோக்கி பாய்வதை போல, எந்த பணடம் பற்றாக்குறையில் உள்ளதோ அந்த சந்தையை நோக்கி பாய்ந்து, அதன் விலையை மிக அதிகம் உயர்த்தும். (ரியல் எஸ்டேட் விலை தொடர்து அதிகரிப்பதன் சூட்சமம் இதுதான்.)

    யூக வணிகம் காரணமல்ல. 60களில், 70களில் இந்த யூக வணிகமே இங்கு இல்லை. ஆன்லைன் வர்த்தம் இல்லை. மிக கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலங்கள். அன்று விலைவாசி உயர்வு ஆண்டுக்கு சுமார் 18 % வரை சர்வசாதாரணமாக இருந்தது. தேடிப்படித்து பார்க்கவும். எப்படி ? அன்றைய பற்றாக்குறை பட்ஜெட்டுகளின் defict as a percentage of GDP மிக மிக அதிகம். கடுமையான விலைவாசி உயர்வுகள் அன்று. நம் அடிப்படை நேர்மையை குலைத்த விசியம் இது.

    90களுகு பிறகுதான் பணவீக்கமும், வட்டி விகுதங்களும் ஒற்றை இலக்கத்திற்க்கு சரிந்தன.

    உண்மையான ‘முதலாளித்துவ’ பாணியை இன்னும் பல நாடுகள் அடையவில்லை. (நீங்க
    ‘தூய’ கம்யூனிசம் பற்றி பேசுவீங்கள்ள. அதே மாதிரி !!). பற்றாக்குறை பட்ஜெட்டுகள் பல காலமாக தொடர்கின்றன. (இது ஒரு வகை இடதுசாரி கொள்கை. கீயினிஸிஸம் எனப்படுவது. லிபர்ட்டேரியன்கள் இதற்க்கு எதிரான கொள்கைகளை உடையவர்கள். முதலாளித்துவத்திற்க்குள்ளும் இது போன்ற இடது / வலது கொள்கைகள் உள்ளன்). அதன் நிகர விளைவுகள் தாம் இந்த பொருளாதார மந்தங்கள், திவால்கள் மற்றும் விலைவாசி உயர்வுகள்.

    An old definition for ‘socialism’ : ‘It is spending money which you don’t have’ ; அதாவது இல்லாத பணத்தை (அரசுகள்) செலவு செய்வது. அது இது போன்ற சுழற்சிகளை தான் உருவாக்கும்.

    • பிரமாதம், இதை விடத் தெளிவாக யாராலும் விளக்க முடியாது.

      என்ன செய்ய, இந்தப் பசங்களுக்கு இதெல்லாம் அதிகம். தூங்குறாப்புல நடிக்கிறானுங்க, தலையில ஐஸ் தண்ணியைதான் கொட்டணும், இல்லாட்டி சூடா மூச்சா போகணும். அப்பதான் எந்திரிச்சு ஒடுவானுங்க.

    • சார்…நீங்க இத எழுதும்போது உங்களுக்கே சிரிப்பு வரல்ல….???
      நீங்க சொல்ற எல்லா காரணிகளும் தவறுன்னு அழகா ஆதரத்தோட இருக்குது இந்த பதிவு.
      60களில், 70களில் விலை உயர்விற்குக் காரணம் உணவு உற்பத்தி குறைவு…அது மட்டுமல்லாமல், உங்களைப்போல முதலாளிகள், உங்களின் ஆதரவாளர்கள், அல்லக்கைகள், சுயநலவாதிகள் நிறைய பதுக்கல்களில் ஈடுபட்டார்கள்…அதுதான் காரணமே தவிர….நீங்கள் சொல்வது இல்லை…

      சும்மா எதிர்க்கணும்னு எதிர்க்கக்கூடாது…

      எதோ கொஞ்ச அரை குறை முதலாத்துவம் இருக்கும் போதே இவ்வளவு பிரச்சனை…இன்னும் நீங்கள் சொல்வது போல ‘தூய முதலாத்துவம்’ வந்தால் யாருமே உயிரோடயே இருக்க முடியாது போல இருக்கே…of course..நீங்க கழுவி விட்டிட்டு இருக்கீங்களே அந்த முதலாளிகள் தவிர….அவங்க உங்களையும் உயிரோட விட மாட்டாங்க…ஜாக்கிரதை…அவங்களுக்கு தேவை லாபம் மட்டுமே… Libertarian அல்ல…

      • //நீங்க சொல்ற எல்லா காரணிகளும் தவறுன்னு அழகா ஆதரத்தோட இருக்குது இந்த பதிவு.
        60களில், 70களில் விலை உயர்விற்குக் காரணம் உணவு உற்பத்தி குறைவு…அது மட்டுமல்லாமல், உங்களைப்போல முதலாளிகள், உங்களின் ஆதரவாளர்கள், அல்லக்கைகள், சுயநலவாதிகள் நிறைய பதுக்கல்களில் ஈடுபட்டார்கள்…அதுதான் காரணமே தவிர….நீங்கள் சொல்வது இல்லை///

        உளரல் என்று தான் சொல்லவேண்டும். அடிப்படை பொருளாதார அறிவற்றா சிறிவனின் உளரல் தான் இது. உற்பத்தி பற்றாக்குறை ஒரு காரணி மட்டும் தான். மிக விரிவான ஆதரங்களை அளிக்க முடியும். ஆனால் உங்களிடன் வேண்டாம் என்று தோன்றுகிறது. இருந்தாலும் ஒன்றே ஒன்று :

        http://athiyaman.blogspot.com/2007/08/deficit-financing-rajaji-in-swarajya.html

        ஒரு கருத்தை இங்கு சொன்னாலே அவர் ஒரு ///அல்லக்கைகள், சுயநலவாதிகள் // என்று ஏசினால், இங்கு பின்னூட்டம் இடுவதை முற்றாக தவிர்க்க தோன்றுகிறது.

        • இங்கு நமது விவாதம் எது சரி எது தவறு என்பதை ஆய்ந்து அறிவதில் இருக்க வேண்டுமே தவிர, ஒருவரை ஒருவர் தாக்கிகொள்வதில் அல்ல. மன்னிக்கவும்.

    • “பொதுவாக விலைவாசி உயர்வுக்கள் அடிப்படை காரணி : demand is high while supply is less. அதாவது தேவைகளுக்கு ஏற்ற அளவில் பண்டங்கள் மற்றும் சேவைகள் சந்தையில் இல்லாத நிலை.

      “ஆனால் இதை விட இன்னொரு முக்கிய காரணி : அந்த அமைப்பில் உள்ள பணத்தின் நிகர அளவு. அதாவது this medium of exchange (which is legal tender currency, and which is solely issued and controlled by govt thru RBI) திடீரேன மிக அதிகாமானால், பண வீக்கம் உருவாகி விலைவாசி உயர்கிறது.

      “கடந்த இரண்டு வருடங்களில் மைய அரசு ’பொருளாதார ஊக்கி’ எனப்படும் fiscal stimulas packagaeஅய் செய்ததன் விளைவுதான் அது. (’முதலாளித்துவ’ அமைப்பிலும், பொருளாதார மந்தகளுக்கு காரணிகளும் தீர்வுகள் பற்றி மாற்று கருத்துக்கள் நிறைய உள்ளன. இந்த சிக்கலே அரசு மிக அதிகமாக பற்றாக்குறை பட்ஜெட்டுகளை உலகெங்கும் போட்டதுதான் காரணம் என்பது எம் கோணம்.)

      “பல லச்சம் கோடி புது பணம் இந்த அமைப்பிற்க்குள் திடீரென செலுத்தப்பட்டால், அது வெள்ள நீர் பள்ளத்தை நோக்கி பாய்வதை போல, எந்த பணடம் பற்றாக்குறையில் உள்ளதோ அந்த சந்தையை நோக்கி பாய்ந்து, அதன் விலையை மிக அதிகம் உயர்த்தும். (ரியல் எஸ்டேட் விலை தொடர்து அதிகரிப்பதன் சூட்சமம் இதுதான்.)

      “யூக வணிகம் காரணமல்ல. 60களில், 70களில் இந்த யூக வணிகமே இங்கு இல்லை. ஆன்லைன் வர்த்தம் இல்லை. மிக கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலங்கள். அன்று விலைவாசி உயர்வு ஆண்டுக்கு சுமார் 18 % வரை சர்வசாதாரணமாக இருந்தது. தேடிப்படித்து பார்க்கவும். எப்படி ? அன்றைய பற்றாக்குறை பட்ஜெட்டுகளின் defict as a percentage of GDP மிக மிக அதிகம். கடுமையான விலைவாசி உயர்வுகள் அன்று. நம் அடிப்படை நேர்மையை குலைத்த விசியம் இது.
      90களுகு பிறகுதான் பணவீக்கமும், வட்டி விகுதங்களும் ஒற்றை இலக்கத்திற்க்கு சரிந்தன.

      “உண்மையான ‘முதலாளித்துவ’ பாணியை இன்னும் பல நாடுகள் அடையவில்லை. (நீங்க
      ‘தூய’ கம்யூனிசம் பற்றி பேசுவீங்கள்ள. அதே மாதிரி !!). பற்றாக்குறை பட்ஜெட்டுகள் பல காலமாக தொடர்கின்றன. (இது ஒரு வகை இடதுசாரி கொள்கை. கீயினிஸிஸம் எனப்படுவது. லிபர்ட்டேரியன்கள் இதற்க்கு எதிரான கொள்கைகளை உடையவர்கள். முதலாளித்துவத்திற்க்குள்ளும் இது போன்ற இடது / வலது கொள்கைகள் உள்ளன்). அதன் நிகர விளைவுகள் தாம் இந்த பொருளாதார மந்தங்கள், திவால்கள் மற்றும் விலைவாசி உயர்வுகள்.

      “An old definition for ‘socialism’ : ‘It is spending money which you don’t have’ ; அதாவது இல்லாத பணத்தை (அரசுகள்) செலவு செய்வது. அது இது போன்ற சுழற்சிகளை தான் உருவாக்கும்.

      ****

      இவையெல்லாம் விலைவாசி உயர்வுக்கு அய்யா லிபெர்ட்டேரியன் அவர்கள் ‘ஆய்விற்குப்’ பிறகு வந்தடையும் முடிவுகள். அடிப்படைக் காரணியில் தொடங்கி முக்கிய காரணியையும் தொட்டு பிறகு பல்வேறு காரணிகளையும் அடுக்கிவிட்டு வழக்கம் போலவே “ஒரு வகை இடதுசாரி கொள்கை” தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என இங்கேயும் முடித்துள்ளார்.

      ஹோமியோபதியில் “Superstitious” என்றோரு மனக்குறி உண்டு. இதற்கு “குருட்டு நம்பிக்கை வாய்ந்த மனநிலை” என்று பொருள். என்னதான் புள்ளி விவரங்களைக் கொண்டு நீங்கள் வாதிட்டாலும் தனது குருட்டுத்தனமான நம்பிக்கையிலிருந்து இத்தகைய நபர்கள் மாறமாட்டார்கள் என்பதனால்தான் இதை ஒரு மனதளவிலான நோய்க்குறி என ஹோமியோபதி மருத்துவம் கூறுகிறது.

      வழக்கம் போலவே பிற கட்டுரைகளில் எதைச் சொல்லி வந்தாரோ அதையேதான் இங்கேயும் சொல்லிருக்கிறார். இதுதான் libertatian அவர்களின் superstitious.

      என்னதான் வாதப் பிரதிவாதங்கள் செய்தாலும் இப்போது அவருக்குத் தேவை Conium maculatum என்றே நான் கருதுகிறேன். மேல் விவரங்களுக்கு Conium maculatum மனக்குறிகளைப் பாருங்கள்.

      இது தனிநபர் தாக்குதல் அல்ல.

      ஒரு பிரச்சனை குறித்து CFT (Cross Functional Team) ஒன்றை அமைத்து RCA (Root Cause Analysis) மூலம் அடிப்படை காரணியைக் கண்டு பிடித்தாலும் ( அவரே இங்கு ஒரு அடிப்படைக் காரணியைக் கூறியுள்ளார்) தனது கருத்தை மாற்றிக் கொள்ளாதவர் libertarian என்பது அவரது பல பின்னூடங்களிலிருந்து தெரிய வருகிறது. அதனாலேயே எனது இந்தப் பின்னூட்டம்.

      • ஊரான்,

        யாருக்கு மனோவியாதி, யார் மூட நம்பிக்கை கொண்டவர் என்பதை பற்றி வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். உருப்படியாக பதில் எழுத முடியாமல் இப்படி உளருவது தான் விஞ்ஞானபூர்வமான மார்க்ஸிய விவாத முறையா ?

        ’ஒரு தமிழ வலதுசாரி’ இதற்க்கு இட்ட பின்னூட்டம் உம்மை போன்ற அன்பர்களை ஓவரா தாக்குது என்று கருதினேன். இல்லை, அவரின் கூற்று மிக சரிதான் என்றே இப்ப தோன்றுகிறது.

        சரி அப்பனே. என்ன வேண்டுமானாலும் ’கருதிக்’ கொண்டு, திரியுங்க. சில உண்மைகளை வாசகர்களுக்காக இங்கு வெளிப்படுத்தினேன். அவ்வளவுதான்.

        • “சரி அப்பனே. என்ன வேண்டுமானாலும் ’கருதிக்’ கொண்டு, திரியுங்க. சில உண்மைகளை வாசகர்களுக்காக இங்கு வெளிப்படுத்தினேன். அவ்வளவுதான்.

          நானும் அதையேதான் செய்துள்ளேன்.

        • லிபர்ட்டேரியன்,

          //demand is high while supply is less//

          சப்ளை சர்ப்ளஸ்ஸாக இருக்கும் நிலையிலேயே விலை உயர்ந்து வந்துள்ளது. கோதுமை, அரிசி உள்ளிட்டு பல்வேறு உதாரணங்களை அடுக்க முடியும்.

          //this medium of exchange (which is legal tender currency, and which is solely issued and controlled by govt thru RBI) திடீரேன மிக அதிகாமானால், பண வீக்கம் உருவாகி விலைவாசி உயர்கிறது.//

          கடந்த இரண்டாண்டுகளாக இருந்த பொருளாதாரப் பெருமந்தம் பணப்புழக்கத்தை அதிகரித்து விட்டதால் தான் விலையேறியது என்கிறீர்களா?

          இப்புடியெல்லாம் துணிந்து ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்டுகளை விடனும்னா ஒன்னு அசட்டுத் துணிச்சல் இருக்கனும் – இல்லைன்னா ‘லிபர்ட்டேரியனா’ இருக்கனும்.

          //எந்த பணடம் பற்றாக்குறையில் உள்ளதோ அந்த சந்தையை நோக்கி பாய்ந்து, அதன் விலையை மிக அதிகம் உயர்த்தும். (ரியல் எஸ்டேட் விலை தொடர்து அதிகரிப்பதன் சூட்சமம் இதுதான்.)//

          தெய்வமேஏஏஏஏ… உங்க பொருளாதார அறிவு புல்லரிக்க வைக்குதுங்க. தயவு செஞ்சி இதை மட்டுமாவது ( உங்க பதிவுலயோ / இங்கேயோ) கொஞ்சம் விளக்கமா எழுதுங்க. வாய் விட்டு சிரிச்சி நாலஞ்சி நாள் ஆச்சி.

          //இது ஒரு வகை இடதுசாரி கொள்கை. கீயினிஸிஸம் எனப்படுவது.//

          கீனீஷிய பொருளாதாரம் இடதுசாரி கொள்கையா? தாங்க முடியலை. கீனீஷிய பொருளாதாரம் இடதுசாரி, இந்தியா 90களுக்கு முன் சோசலிச நாடு. பற்றாக்குறை பட்ஜட் இடதுசாரி கொள்கை. ஹப்பா… உண்மையிலயே இந்த அசுரன் அசுரன்னு சொல்லி ஒரு தோழர் வாறாரே அவரு தான் எனக்குத் தெரிஞ்சு உலகத்திலெயே பெரிய பொருமைசாலியா இருக்கனும். ஏன்னா உங்ககிட்டயே வருசக்கணக்கா பேசிருக்காறே??? நீங்க இப்படி “பிம்பிலிக்கி பிலாப்பி”ன்னு சொல்லும் பொருளாதார கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் ஈடுகொடுத்து விவாதிச்சிருக்காருன்னா ஹீ ஈஸ் சோ கிரேட்டு.

          அப்டியே ஒரு நாலு விக்கிபீடியா கட்டுரைக்கான லிங்க்கையும் கொடுத்திட்டீங்கன்னா.. இன்னிக்கு சோறு செமிச்சிரும்.

    • லிபெர்டரியன்

      \\யூக வணிகம் காரணமல்ல. 60களில், 70களில் இந்த யூக வணிகமே இங்கு இல்லை. ஆன்லைன் வர்த்தம் இல்லை. மிக கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலங்கள். அன்று விலைவாசி உயர்வு ஆண்டுக்கு சுமார் 18 % வரை சர்வசாதாரணமாக இருந்தது. தேடிப்படித்து பார்க்கவும்.//

      இந்தியாவில் நீங்கள் சொல்வது போல் 18 விழுக்காடு பண வீக்கம் இருந்ததாக தகவேலேதும் தேடியும் கிடைக்கவில்லை.கிடைத்ததெல்லாம் உங்கள் கூற்றை பொய்ப்பிப்பதாக உள்ளன.
      பார்க்க; சுட்டிகள்;

      http://www.inflation.eu/inflation-rates/india/historic-inflation/cpi-inflation-india-1970.aspx

      http://www.tradechakra.com/indian-economy/inflation.html

      இந்த சுட்டிகளை படிப்போர் இந்தியாவில் தாராளமயம் கொண்டுவந்த இறக்குமதியின் மீதான கட்டுபாடுகள் தளர்வு,ஊக வணிக அனுமதி,கணினிவழி வணிகம்-online trading- போன்றவை உக்கிரமடைந்த பின் கடந்த மூன்று ஆண்டுகளில் பணவீக்கம் மேலும் மேலும் கூடுதலாகி வருவதை புரிந்து கொள்ளலாம்.

      • திப்பு,

        80கள் வரை வட்டி விகுதங்கள் (வங்கி வட்டிகளை தான் சொல்கிறேன்) சுமார் 18 சதம் மற்றும் அதற்க்கும் அதிகமாக இருந்தது. உமது பெற்றோரிடம் கேட்டு பாருங்க. பணவீக்கதை ஒட்டியே வட்டி விகுதமும் இருக்கும். 60களில், 70களில் இருந்த வருடாந்திர விலைவாசி உயர்வை ஒப்பிட்டால் இன்று ஜுஜூபி. 1960இல் வெளிவந்த மிக முக்கிய கட்டுரை இது. முழுசா படிச்சுவிட்டு அப்பறம் முழங்க.

        http://athiyaman.blogspot.com/2007/08/deficit-financing-rajaji-in-swarajya.html

        இந்த தாரளமயமாக்ல மட்டும் 1991இல் செய்யாமல் இருந்திருந்தால், அன்னிய செல்வாணி முற்றாக இல்லாமல், கடனும் வாங்க முடியாமல், நமது ரூபாயின் மதிப்பு பல நூறு மடங்கு குறைந்து, இறக்குமதி நின்று போய், விலைவாசி பல பல மடங்கு உயர்ந்து ,hyper inflation உருவாகி, சர்வ நாசம் அடைந்திருப்போம்.

        • லிபர்டேரியன்,
          இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க? விலைவாசி உயர்வே கற்பிதம் என்கிறீர்களா? அல்லது 91 ல் தனியார்மயம் கொண்டுவரப்பட்டதிலிருந்து உணவுப் பொருளுட்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்தியதே தனியார்மயம்தான் என்று சொல்ல வர்றீங்களா? பல் வேறு வார்த்தை ஜாலங்களால் பக்கத்தை நிரப்பினாலும் நீங்கள் சொல்ல வருவது இதுதானே? பொதுவாக அப்புறம் பேசலாம். குறிப்பாக, வெங்காய விலையேற்றத்துக்க்கு முதன்மையான காரணம் என்ன ? பற்றாக்குறையா? ஏற்றுமதியா? உணவுப் பொருள் ப்துக்கல் தடைச் சட்ட்த்தை நீக்கியது தனியார் கொள்ளைக்கா? விலையை குறைக்கவா? விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு தடை போட மறுப்பது தனியார்மயமா? இல்லையா? கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய விவசாயிகளிடமிருந்து மலிவான விலையில் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து, அவற்றை சர்வ தேச சந்தையில் விற்று அமெரிக்க டாலர்களை இலாபமாக ஈட்டும் கொள்ளைக்குப் பேரு தனியார்மயமா? இல்லையா? முன் பேர வர்த்தகம், இணைய தள வர்த்தகம் என்ற பெயரில் நிதியாதிக்க கும்பல்கள் உணவுப் பொருளை வைத்து சூதாட்டம் நடத்துவது தனியார்மயமா? இல்லை சமூகத் தொண்டா? விலையேற்றத்தை குறைப்பதற்கு உற்பத்தி செலவை கட்டுப்படுத்த நடவடிக்ககளை எடுப்பதற்கு பதிலாக இடு பொருட்களின் விலையை பன்னாட்டுக் கம்பெனிகளே தீர்மானிக்க அனுமதிப்பது தனியார்மயமா? இல்லையா? அரசு ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களை செயலிழக்கச் செய்வது தனியார்மயத்திற்கா? இல்லை தேசிய நலனிற்கா? கடந்த ஒரே மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை இரண்டு முறை அதிகரித்தது நாட்டு மக்களுக்காகவா? தனியார்மயத்திற்காகவா? இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் உங்கள் தனியார்மயத்தின் யோக்கியதைகளை. காலனிய இந்தியாவில் எப்படி உணவு தற்சார்பை இழந்து உணவுப் பஞ்சம் ஏற்பட்டதோ, அதே போல் ஒரு உணவுப் பஞ்சதை ஏற்படுத்துவதில் போய் முடியும் இந்த தனியார்மயக் கொள்கையின் விளைவு. ஆக, தன்மானமும், நாட்டுப் பற்றும் உள்ள எவரும் இதை அனுமதிக்க முடியாது என்பதுதான் எனது வாதம்.

        • லிபெர்டரியன்
          இந்த பின்னூட்டத்திற்கான பதிலை தவறுதலாக கீழே பதிந்து விட்டேன்.பின்னூட்டம் எண்.17

        • //இந்த தாரளமயமாக்ல மட்டும் 1991இல் செய்யாமல் இருந்திருந்தால், அன்னிய செல்வாணி முற்றாக இல்லாமல், கடனும் வாங்க முடியாமல், நமது ரூபாயின் மதிப்பு பல நூறு மடங்கு குறைந்து, இறக்குமதி நின்று போய், விலைவாசி பல பல மடங்கு உயர்ந்து ,hyper inflation உருவாகி, சர்வ நாசம் அடைந்திருப்போம்.//

          நல்ல திகில் நாவல் எழுதும் திறமை இருக்கிறது.

        • இரா.மணிகண்டன்,

          //இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க? விலைவாசி உயர்வே கற்பிதம் என்கிறீர்களா? அல்லது 91 ல் தனியார்மயம் கொண்டுவரப்பட்டதிலிருந்து உணவுப் பொருளுட்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்தியதே தனியார்மயம்தான் என்று சொல்ல வர்றீங்களா? ///

          கற்பிதம் செய்ய இதென்ன புனைவிலக்கியமா. விலைவாசி தொடர்ந்து ஏறிக் கொண்டே தான் உள்ளது. சில வருடங்கள் கடுமையான அளவில். சில வருடங்கள் மிதமான அளவில்.ஆனால் தாரளமயமாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக இன்று நிலைமை திவால் தான். உணவு பண்டங்களின் விலை கடுமையாக இன்னும் உயரப்போகிறது. பற்றாகுறை ஒரு காரணிதான். உலகெங்கும் (இந்தியாவிலும், சீனாவிலும்), மிக மிக அதிக அளவில் பணத்தை அரசுகள் அச்சடித்து, இந்த ‘பொருளாதார ஊக்கி’ செய்ததின் side effect இது. மேலும்..

          எமது முக்கிய பதிவுகள் :

          http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html
          விலைவாசி ஏன் உயர்கிறது ?

          http://nellikkani.blogspot.com/2008/05/1991.html
          1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

          ‘தாரளமயமாக்கல்’ என்றால் என்ன ?
          http://nellikkani.blogspot.com/2008/01/blog-post_9749.html

        • லிபர்டேரியன்,
          ///ஆனால் தாரளமயமாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக இன்று நிலைமை திவால் தான். உணவு பண்டங்களின் விலை கடுமையாக இன்னும் உயரப்போகிறது.///
          உங்கள் கூற்றை கொஞ்சம் உற்றுக் கவனியுங்கள். அதாவது தாராளமயமாக்கல் செய்யாமல் இருந்திருந்தால் இன்று விலைவாசி விண்ணைத்தொட்டு நாடு திவால் ஆகியிருக்கும் என்கிறீர்கள். அடுத்த வரியிலேயே இன்னும் விலைவாசி கடுமையாக உயரப்போகிறது என்கிறீர்கள். இப்பொழுது தாராளமயமாக்கல் அமலில்தானே இருக்கிறது? பிறகு ஏன் விலைவாசி உயர வேண்டும்? முன்னுக்குப் பின் முரணாக உள்ளதே! பின்நவீனத்துவத் தத்துவவாதிகளும் முதலாளித்துவத்தின் ஒன்னுவிட்ட ஒறவுக்காரங்கதான் என்பதை ஒங்க கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இன்றைய விலைவாசி உயர்வை அனுமதிப்பதும், தனியார்மயத்தை அனுமதிப்பதும் வேறு வேறு அல்ல. இந்த எதிர்ப்பின் வெளிப்பாடுதான் துனிசிய, எகிப்திய மக்களின் போராட்டம். அங்கு போய் உங்கள் வாதத்தத்தை (தனியார்மய ஆதரவு) வைக்க முடியுமா?

        • //இப்பொழுது தாராளமயமாக்கல் அமலில்தானே இருக்கிறது? பிறகு ஏன் விலைவாசி உயர வேண்டும்? முன்னுக்குப் பின் முரணாக உள்ளதே!//

          தாரளமயமாக்கல் முழுசா, ஒழுங்கா இல்லை. முக்கியமாக விவசாயத்தில் இல்லை. முழுமையாக முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு விவசாயம் இன்னும் மாறவில்லை. (நில உச்ச வரம்பு சட்டம் ஒரு முக்கிய தடை). ஆடை உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், விவசாயத்தில் இன்னும் இல்லை. இதை பற்றி எமது சுட்டியில் விரிவாக எழுதியுள்ளேன். ராஜாஜி எழுதிய கட்டுரைகளின் சுட்டிகளையும் பார்க்கவும்.

          மேலும் ஊழல் மற்றும் வீண் செலவுகள் அரசு செய்வதின் ‘விலை’ மக்கள் தலையில் தான் விடியும். பல பத்தாண்டுகளாக செய்பட்ட தவறுகளின் நிகர விளைவுகள் இன்றும் தொடர்கின்றன. cumulative effects of past follies.

          மேற்க்கு ஜெர்மனியில் 60கள் முதல் சில பத்தாண்டுகள் உற்பத்தி மிக மிக அதிகமாக வளர்ந்து நாடு மிக மிக பணக்கார நாடாக மாறியது. ஆனால் விலைவாசி மிக மிக குறைவாகவே உயர்நது. 10 வருடங்களாக பல பண்டங்கள் விலை அப்படியே இருந்தது. இதுவும் முதலாளித்துவம் என்று லேபில்க்குள் தான் வருகிறது.

          உற்பத்தி உயரும் அளவை விட அதிக அளவில் (விகுதத்தில் ) அரசு பணத்தை அடித்து செலவு செய்தால், விலைவாசி அந்த விகிதத்தில் உயரத்தான் செய்யும். இது அடிப்படை பொருளாதார விதி. முதலாளித்துவ, சோசியலிச, கம்யூனிச நாடுகள் அனைத்திற்க்கும் இது பொருந்தும். யுகோஸ்லாவியில் முன்பு விலைவாசி உயர்வு பிற சோசியலிச நாடுகளை விட குறைவாகவே இருந்தது. ஆனால் அதே காலங்களில் பிரட்டனின் பண வீக்க அளவு மிக அதிகமாக இருந்தது. பற்றாக்குறை பட்ஜெட்டுகளின் அளவு தான் காரணி. இதை பற்றி எமது பதிவுகளில் விரிவாக எழுதியிருக்கிறேன். பார்க்கவும்.
          பொருளாதார விதிகள் இயற்பியல் விதிகளை போன்றவை. யாரும் மீற முடியாது. அது எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான அமைப்பானாலும் சரி.

        • //பொருளாதார விதிகள் இயற்பியல் விதிகளை போன்றவை. யாரும் மீற முடியாது. அது எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான அமைப்பானாலும் சரி.//

          அதியமான் சார்,

          பொருளாதார “விதிகள்” குறித்து உங்கள் favorite “விக்கிபீடியா” என்ன சொல்லுகிறது என்பதை கீழே கொடுத்திருக்கிறேன்.

          Laws of economics are an attempt in modelization of economic behavior. Marxism criticized the belief in eternal “laws of economics”, which it considered a product of the dominant ideology. It claimed that in fact, those so-called “laws of economics” were only the historical laws of capitalism, that is of a particular historical social formation. With the advent, in the 20th century, of the application of mathematical, statistical, and experimental techniques to economics, economic theory matured into a corpus of knowledge rooted in the scientific method rather than in philosophical argument.

          அப்படியே பொருளாதார “விதிகள்” பற்றிய இந்த சுட்டியையும் கொஞ்சம் பாருங்கள்.
          http://www.economicsconcepts.com/nature_of_economic_laws.htm

          உங்கள் பொருளாதார அறிவையோ, பொது அறிவையோ குறைத்து மதிப்பிடவில்லை. அதேபோல் வினவு வெளியிடும் அனைத்து கருத்துகளும் எனக்கு உடன்பாடானவையும் இல்லை. ஆனால் இந்த கட்டுரையின் சாராம்சமான “உணவுப் பொருட்கள் விலையேற்றத்திற்கு ஊக வாணிகம் ஒரு முக்கியமான காரணம்” என்பதை மறுப்பதற்கு நீங்கள் வைக்கும் வாதங்களில் வலுவில்லை என்றே தோன்றுகிறது.

          அதேபோல் திரு. திப்பு அவர்களின் பணவீக்கம் பற்றிய பின்னூட்டத்திற்கும் CPI (நுகர்வோர் விலைக் குறியீட்டெண்), WPI (மொத்த விலைக் குறியீட்டெண்) காரணமாக ஏற்பட்ட வித்தியாசம்என்று பதில் கூறியிருக்கிறீர்கள். இரண்டு குறியீட்டெண்கள் முறையிலும் inflation ஒரே மாதிரிதான் இருக்கும் (வித்தியாசம் சிறிதளவே). இல்லை என்றால் ரிசர்வ் வங்கி WPI முறையை தேர்ந்தெடுத்திருக்காது.

        • ராம்,

          எல்லா பொருளாதார விதிகளையும் அப்படி பொதுப்படுத்தி நிராகரிக்க முடியாது. Economics of scale, laws about productivity and price levels, demand and supply, etc போன்றவற்றில் மறுக்க முடியாத விதிமுறைகள் அல்லது கருத்துகள் உள்ளன. இல்லாத பணத்தை செலவு செய்யவே முடியாது என்பது பொது புத்தி. அப்படி அரசு ‘கடன்’ வாங்கி அல்லது நோட்டடித்து மிக அதிகமாக செலவு செய்தால், கண்டிப்பாக பண வீக்கம் அதே விகிதத்தில் உருவாகும். இதை பற்றி நோபல் பரிசு பெற்றி பொருளாதார நிபுணர் Milton Friedman அவர்களின் magnum opus ஆனா A monetary history of USA நிருபிக்கிறது. இன்றைய சீனாவில் வளார்ச்சி மற்றும் பண வீக்கம் 10 சதம் அளவில். முக்கிய காராணம் சீன அரசு பல பில்லியன் புதிய பணத்தை உள்ளே ‘ஊக்கி’யாக செலுத்தியுள்ளது. இது மிகவும் அபாயகரமான அளவில் சென்று கொண்டிருக்கிறது. சீனா பொருளாதாரம் குமுழி போல் implode ஆக் வாய்ப்பு நிறைய உள்ளதாக அச்சம் உள்ளது. எங்க போய் எப்படி முடியம் என்று சரியா தெரியல.

          inflation பற்றி அந்த சுட்டி சரியான தகவல்கள் சொல்லவில்லை. மிக முக்கியமாக base yearஅய் அவ்வப்போது அரசு மாற்றி ஏமாற்று வேலை செய்கிறது. கடந்த 60 வருடங்களில் தங்கம் விலை இந்தியாவில் எப்படி உயர்ந்தது என்பதை ஒரு சார்ட் போட்டு பார்த்தால் தான் புரியும். வட்டி விகிதங்கள் are always directly proportional to inflation rates. இதுவும் ஒரு மாற்ற முடியாத ’பொருளாதார விதி’ தான் !!! இந்தியாவில் வட்டி விகுதங்களிகன் வரலாற்றை சார்ட் போட்டு பார்த்தால் புரியும். எனக்கு தெரிந்து வங்கிகளில் 18 சதம் அல்லது அதற்க்கு மேலும் இருந்தது. நானி பல்க்கிவாலாவின் அருமையான நூலில் 60களில், 70களி இருந்த பணவீக்கம் மற்றும் வட்டி விகுதங்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அன்று இருந்த நிலையை விட இன்று எவ்வளவோ பரவாயில்லை என்பதில் பொருளாதார நிபுணர்களிடம் மாற்றும் கருத்து இல்லை.
          மேலும் விவரங்களை சேகரித்து தருகிறேன். இணையத்தில் சரியாக இல்லை.

          இது அடிப்படைகளை சொல்கிற்து :
          http://indianblogger.com/inflation-what-why-and-how-unraveling-the-mystery/

          கந்து வட்டி விகுதங்களை பற்றி ஆராய முயல்கிறேன். 50 வருடங்களுக்கு முன்பு இருந்த விகுதங்கள், பின்பு படிப்படியாக உயர்ந்தாக தெரிகிறது. it proves that real rates of interests in India rose alarmingly during the ‘socialist’ decades. ராஜாஜி 1960இல் எழுதிய கட்டுரை மிக முக்கியமானது. பார்க்கவும்.

          ஊக வணிகமும் ஒரு காரணிதான். ஆனால் முக்கிய காரணி அல்ல. ஊக வணிகம் இருக்கும் அனைத்து வருடங்களுலும் இதே அளவில் உணவு பொருட்களின் விலை உயரவில்லையே ? ரஸ்ஸியாவில் கோதுமை பயிர் உற்பத்தில் சென்ற ஆண்டு பெரும் வீழ்ச்சி அடைந்துவிட்டது ஒரு மிக முக்கிய காரண்ம். பற்றாகுறை உள்ளது. வேறு பல உணவு பண்டங்களிலும் தான். இது ஒரு அடிப்படை காரணம். புதுப்பணம் பல டிரில்லியன் டாலர்கள் அளவிற்க்கு உலகெங்கிளும் systemத்திற்க்குள் செலுத்தப்பட்ட காரணம் மிக மிக முக்கியம். இரண்டையும் கொண்டு தான் ஊக வணிகத்தில் விலையை ஏற்ற முடியும். இந்த இரண்டு அடிப்படை காரணிகளும் இல்லாத வருடங்களில் இப்படி செய்ய முடியாது. சில வருடங்கள் விலை குறைந்தும் உள்ளது. ஊக வணிகம் இருந்தும். எப்படி அது ? same balancing of demand and supply of food articles, while money supply is not drastically increased. ஊக வணிகம் helps in avoiding sudden spikes. இந்த ஊக வணிக சந்தையால பெரும் பயன் அடைந்த உ.பி மென்தால் விவசாயிகள் பற்றி :

          http://www.mcxindia.com/knowledgehub/casestudy/PDF/StudyPotatoMentha.pdf

          மிக முக்கிய ஆய்வு இது. முழுசா படித்துப் பார்க்கவும். ஊக வணிகம் என்பது வெறும் சூதாட்டம் அல்லது ஏமாற்று வேலை அல்ல. அது ஒரு முக்கிய பங்களிப்பு செய்கிறது. மிக முக்கியமான information exchangeஅய் மிக அருமையாக செய்ய இயல்கிறது.

          பங்கு சந்தையில் கூட ஊக வணிகம் அதிக அளவில் தொடர்கிறது. அதற்க்காக பங்கு சந்தைகளையே ஒழித்துக்க்ட்டினால் என்ன ஆகும் ? மேலும்…

        • லிபர்டேரியன், ஆக, தனியார்மய, தாராளமயக் கொள்கையை தீவிரப்படுத்தி முழுமையாக அமல்படுத்துவது ஒன்றுதான் விலைவாசி உயர்வை ஒழித்துக்கட்டுவதற்கான ஒரே வழி என்கிறீர்கள். அய்யா ஒரு விசயத்தை தாங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். தனியார்மயமாக்கலின் குணாம்சமே என்னவென்றால் அது உண்மை பொருளாதாரத்தை (உற்பத்தி சார்ந்த பொருளாதாரம்) பின்னுக்குத் தள்ளிவிட்டு நிதி மூலதனத்தை (சூதாட்ட நிதி மூலதன சுழறசியை) முதன்மைப் படுத்துவதுதான். ஒரு கெட்ட பழக்கம் இருந்தாலே அடுத்தடுத்த கெட்ட பழக்கத்தை செய்யத் தூண்டுவது போல் ஊழல், பதுக்கல், ஊக வணிகம், பாரம்பரிய விவசாயத்தை ஒழித்துக்கட்டுவது, அரசின் மானியத்தை ஒழிப்பது, சேவைத் துறையை தாரைவார்ப்பது, சில்லறை வணிகத்திலிருந்து மக்களை விரட்டியடிப்பது ……போன்றவற்றையும் தனியார்மயமாக்கல் குணாம்சத்தின் வெளிப்பாடாகவே தொடர்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக விலைவாசி உயர்வு என்பது முதலாளித்துவ சமூக அமைப்பின் தவிற்கவியலாத பொருளாதார விதி. முதலாளித்துவத்தின் இருப்பே இந்த அராஜக பொருளாதாரக் கொள்கையில்தான். சமூக இயக்க விதிப்படி நீடிக்க மடியாத இக்கொள்கைக்கு எதிராகத்தான் துனிசிய, எகிப்திய மக்கள் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள்.

  9. //இந்தியாவில் இப்போது அந்நியச் செலாவணி கணிசமாக உள்ளது என்பதால் என்ன பிரச்னை வந்தாலும், உணவு விலை சிகரத்தைத் தொட்டாலும் இறக்குமதி செய்து சரிசெய்து விடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டதால் வரும் வினைகள் இவை. வெங்காயம் பாகிஸ்தானில் விளைகிறது. தக்காளி அமெரிக்காவில் விளைகிறது. துவரை கென்யாவிலும் தான்சேனியாவிலும் விளைகிறது. உளுந்து பர்மாவில் உண்டு. கபூலி சென்னா (வெள்ளைக்கடலை) காபூலில், ஆஸ்திரேலியாவில், துருக்கியில் விளைகிறது. (கருப்புக்கடலை இந்தியாவில்தான் விளைகிறது) பட்டாணிக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் கோதுமை, தாய்லாந்தில் அரிசி, பிலிப்பைன்ஸில் தேங்காய், பிரேசிலில் வேர்க்கடலை, சீனத்தில் எள், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சூரியகாந்தி கோப்புகளில் உள்ள விவரங்கள் இப்படித்தான் பேசும்.

    எந்த நாட்டிலிருந்து எவ்வளவு இறக்குமதி செய்யலாம்? என்று படித்துவிட்டு அமைச்சர்கள் யோசிக்கிறார்கள். நிலைமை முன்பு மாதிரி இல்லை. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வரலாறு காணாத வெள்ளம் உணவு உற்பத்தியைப் பாதித்துவிட்டது. அந்தந்த நாடுகளிலும் போதிய வழங்கல் இல்லை.//

    – தினமணியில் நாராயணன் எழுதிய கட்டுரை இத் தலைப்பு தொடர்பானது தான். படித்துப்பாருங்கள்.
    http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=369383&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF

  10. உள் நாட்டு சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும், அதாவது தேசிய உற்பத்தி என்று சொல்லப்படும் எந்த ஒரு நுகர்வுப் பொருளாக இருந்தாலும் அதன் சந்தை மதிப்பு அல்லது அப்பொருளின் விலை ஏற்ற, இறக்கத்திற்கு மட்டும்தான் பருவ மழை கோளாரு, இயற்கை சீற்றத்தால் உற்பத்தி பாதிப்பு, நுகர்வில் ஏற்பட்டிருக்கும் பெருக்கம் போன்ற காரணிகளைச் சொல்லலாம். ஆனால் சர்வ தேச சந்தை அல்லது நிதி மூலதன சூதாட்டத்தின் கீழ் உற்பதியில் நுகர்வுப் பொருளின் விலை உயர்வுக்கு மேற் சொன்ன காரணிகள் முதன்மை அம்சத்தை இழக்கின்றன. அது மட்டுமல்ல, உள் நாட்டுச் சந்தையின் கீழ் விலைவாசி உயர்வை இந்த நிதி மூலதன சூதாட்ட முறையின் கீழ் ஏறும் விலைவாசி உயர்வோடு இணைத்து புரிந்து கொள்ளக் கூடாது. முன்னதில் உணவு தற்சார்பின் உத்திரவாதம் உண்டு. பின்னதில் நாட்டின் மொத்த உணவு தற்சார்பையும் பன்னாட்டு பகாசூர கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்கு ஒப்படைக்கும் இலக்கின் ஒரு நடவடிக்கை. அந்த வகையில் உலக வங்கியின் உத்தரவிற்கேற்ப இந்திய அரசின் இந்த காய் நகர்த்தலின் விளைவு, இன்று விலைவாசி உயர்வு, நாளை நாட்டின் உணவு தற்சார்பை பன்னாட்டு நிறுவனங்கிடம் ஒப்படைப்பு என்ற உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளும் வண்ணம் கட்டுரை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

  11. ஊதாரி அரசும்,நாதாரி பத்திரிக்கையும் செய்யும் சித்து வேலையில்
    அவர்களுக்கு ஆதரவாக இந்த பாதசாரி களும் சேர்ந்துவிட்டார்களா?பேஷ் பேஷ் இனி 25தாம் றுாற்றாண்டுக்கு சீக்கீர
    மாக போகலாம்

  12. விஜயகாந்த்க்கு அரசியல் அறிவோ, பொது அறிவோ இருக்கு என்று யாரும் அவரை ஆதரிக்கவில்லை. விருதுநகர் சீனிவாசனுக்கும், திண்டுக்கல் சீனிவாசனுக்கும் வித்தியாசம் தெரியாதவர் தான் இந்த ஆள். மாநில சராசரிக்கும், மத்திய சராசரிக்கும் வித்தியாசம் தெரியாதவர் தான் இவர். ஆனால் தமிழக மக்கள் என்ன எதிர்பார்கிறார்கள் ? மக்கள் தி மு க வுக்கு எதிராக பலமான கூட்டணி ஒன்றை எதிர் பார்கிறார்கள். அப்படி இருந்தால் தான் தேர்தல் திருவிழா நன்றாக இருக்கும் என்பது மக்கள் நினைப்பு. தமிழக மக்கள் அரசியல் அறிவு மற்றும் அரசியல் உணர்வு அதிகம் உள்ளவர்கள்.

    தி மு க ஏன் தோற்க வேண்டும் என்று மக்கள் நினைகிறார்கள் ? கரணம் இதோ..

    1 ) கடந்த ஆட்சியில் அரிசி கிலோ 4 ரூபாய். தற்போது 1 ரூ . என்ன பெரிய வித்தியாசம் ? ஆனால் பருப்பு, எண்ணை, காய்கறி விலை எவ்வளவு ? 1 ரூ அரிசி கடத்தலுக்கு மட்டும் நல்ல பயன்படுது.

    2) 2 ஏக்கர் நிலம் கொடுத்து விவசாயம் செய்து இருந்தால் விளை பொருட்கள் விலை குறைந்து இருக்க வேண்டும். ஆனால்.. நடப்பது என்ன ?

    3) சென்னையில் மெட்ரோ ரயில் 14000 கோடி ரூபாய் செலவில் கட்டபடுகிறது. இன்னும் இரண்டு புதிய மெட்ரோ வழிகள் (மூலக்கடை டு திருமங்கலம், திருவான்மியூர் – ரூ 4000 கோடிக்கு மேல் )
    ஆனால் செங்கல்பட்டு – திண்டுக்கல் ரயில்வே திட்டம் என்னவாயிற்று ? ஏன் தமிழா அரசாங்கம் ஒரு 500 கோடி தரக்கூடாதா ? கர்நாடக அரசு 2500 கோடி மாநில பங்கு, 2500 கோடி மத்திய பங்குடன் மாநிலம் முழுவதும் ரயில்வே திட்டம் செய்கிறதே ? அது எப்படி ?

    சென்னை மட்டும் தான் தமிழகமா ?

    4) சேது திட்டம் – வராது என்று தெரிந்தும் ரூ 2000 கோடி கடலில் கொட்டியாச்சு. TR பாலு அடித்தது, தலைவர் குடும்பத்துக்கு !!! இந்த பணத்தில் கொஞ்சமாவது தென் மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு தந்து இருக்கலாமே ?

    5) சென்னையில் எத்தனை பாலங்கள் ? ரோடு அதே ரோடு தான் !!! ஆனால் எதற்கு இத்தனை பாலங்கள் ? கொள்ளை அடிக்கவா ?

    6) அடுத்து 2G . இந்த பூமியின் மிக பெரிய ஊழல். இந்த பணத்தை கொண்டு நமது நாட்டின் ஒரு ஆண்டின் நிதி பற்றா குறையை சமாளித்து இருக்கலாம். அப்படி நடந்து இருந்தால் வரும் ஆண்டுகளிலும் நிதி பற்றாக்குறை குறைவாகவே இருந்து இருக்கும்.

    மக்களில் பலருக்கு ஒரு எண்ணம். தி மு க கொள்ளை அடித்தாலும் ஏதோ செய்கிறார்கள் .. சில திட்டங்களை செய்கிறார்கள்… ஆனால் அ தி மு க அவ்வாறு இல்லை என்று. அது தவறு. ஒரு நாடு வளர்ச்சி பெறும்போது உள் கட்டமைப்பு வசதிகள் தான் தேவையே ஒழிய கவர்சிகரமான திட்டங்கள் இல்லை.

    மின்சாரம், போக்குவரத்து (ரயில்வே, சாலை), கல்வி, மருத்துவம், etc etc மட்டுமே. கவர்சிகரமான திட்டங்கள் அல்ல. அது தி மு க வாக இருந்தாலும் சரி, அ தி மு க வாக இருந்தாலும் சரி. பார்க்கலாம் .. தேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ளன. யார் வெற்றி பெறுகிறார்கள் என்று.

  13. “ஏற்கனவே ரிலையன்ஸ், ஐ.டி.சி, பெப்சிகோ போன்ற நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து வரும் நிலையில்..”

    Summa ularakkoodathu. Do you have any idea how successful Pepsi has been in contract farming? Farmers are benefiting massively. You are also ignoring the fact that Indian farmers are basically selfish, greedy bastards who will sell at the highest price regardless of how it affects the economy or their own people.

    Neenga yetho ella indhiya vivasayigalum appavinga maathiriyum, yogiyanga maathiriyum pesareenga. The Indian farmer has been romanticized too much. He is as much a crook as the rest of us.

    Take something like coffee. Prices have zoomed ever since exports were allowed in the 90s. Farmers decided to sell to exporters rather than local markets simply because it fetched more money. So, ultimately it is the market that determines price. You can’t have it both ways; if retail prices are to be low, farmers will also suffer.

  14. As a layman we don’t want any economic theories. We want the price control that can be realized by communism otherwise socialism to some extent. Bloody capitalism will not help the population from poverty, instead it try to earn the money from all sort of possibilities. Finally it has the justification of “SURVIVAL OF THE FITTEST”. It is the right time to f**k off all capitalist through agitation and go back to the situation of early eighties. We want food first then only TV. If not at least give cyanide to all the people who are under poverty line and lower middle class. Because these class should not fit for survival.

    • My Dear Friend

      1) Do you realize that price controls are the primary problem ? If you control just the price and not the supply, then you control nothing. (I seriously suggest you read a basic course in economics. It is not difficult at all)

      2) Even Communism is ‘Survival of the Fittest’ – take a look at the history of Soviet Union and China – their politics was brutal and repressive.

      If you believe you could solve all the problems of the world through Communism, then you are mistaken. Democratic Capitalism at least gives you the methods and solutions, Conmmunism just offers empty dreams built on hot air.

  15. //It is the right time to f**k off all capitalist through agitation and go back to the situation of early eighties.//

    sure. great idea. do that first by all means. and start by banning and expelling all MNCs and FIIs and FDIs. raise taxes to 70s levels. impose stringent import controls. re introduce MRTP act and the license raaj. nationalise all large private companies and let them be run by ministers and IAS officers. raise income tax levels to 70 % and above as before. then see the ‘f… g’ result.

  16. \\80கள் வரை வட்டி விகுதங்கள் (வங்கி வட்டிகளை தான் சொல்கிறேன்) சுமார் 18 சதம் மற்றும் அதற்க்கும் அதிகமாக இருந்தது. உமது பெற்றோரிடம் கேட்டு பாருங்க. பணவீக்கதை ஒட்டியே வட்டி விகுதமும் இருக்கும்.//

    ஆதாரத்துடன் தவறு சுட்டிக்காட்டப்பட்டாலும் தவறை ஒப்பு கொள்ள மனமின்றி எதிர்வாதம் என்ற பெயரில் பிடிவாதம் செய்கிறீர்கள்

    \\60களில், 70களில் இந்த யூக வணிகமே இங்கு இல்லை. ஆன்லைன் வர்த்தம் இல்லை. மிக கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலங்கள். அன்று விலைவாசி உயர்வு ஆண்டுக்கு சுமார் 18 % வரை சர்வசாதாரணமாக இருந்தது.//

    இது நீங்கள் சொன்னதுதானே.விலைவாசி உயர்வின் குறியீட்டு சொல்தானே பணவீக்கம்.அது எப்போதுமே 18 விழுக்காடு இருந்ததில்லை என ஆதாரம் காட்டுகிறேன்.நீங்களோ பணவீக்கத்தை ஒட்டியே வட்டி விகிதம் இருக்கும்.வட்டி விகிதம் 18 இருந்தது.அதற்கு மேலும் இருந்தது.எனவே நான் சொன்னது சரிதான் என்கிறீர்கள்.உங்களுக்கே அபத்தமாக தெரியவில்லையா.

    பணவீக்கம் 18 விழுக்காடு இருந்தது என்பதற்கு ஆதாரம் காட்டினால் நான் சொன்னது தவறு என ஒப்புக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்.

    \\60களில், 70களில் இருந்த வருடாந்திர விலைவாசி உயர்வை ஒப்பிட்டால் இன்று ஜுஜூபி.//

    சரி ஒப்பிடுவோம்.

    Between 1950-1960
    The inflation on an average was at 2.00%

    Between 1960-1970
    The inflation on an average was at 7.2%

    Between 1970-1980
    The inflation on an average was at 8.5%.

    The average inflation of India in 2010: 12.35 %

    • What about inflation in 1980-90, 1990-2000, and through the entire last decade? Was it in double digit? People weren’t complaining so much because things were never so bad as they are now.

      Moreover, what matters is employment, purchasing power and average income. Are we faring better now compared with the 80s and 90s?

  17. Ram Kameswaran/Libertarian
    //பொருளாதார விதிகள் இயற்பியல் விதிகளை போன்றவை. யாரும் மீற முடியாது. அது எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான அமைப்பானாலும் சரி.//

    மேற்படி கூற்றை Ram Kameswaran மறுத்தமை மிகச் சரியானது.
    .
    விதிகளில் பொது வகைகள் இரண்டு உண்டு:

    மனிதரால் மனிதருக்காக விதிக்கப் பட்டவை, ஒரு வகை. (மதங்களினதும் நாடுகளின் சட்டங்களினதும் விதிகளும், சமூகப் பொது வழக்கிலிருந்தும் எழும் விதிகளும், தொழில்சார் விதிகளும் இவற்றுள் அடங்கும்.
    இவற்றை எவரும் மீற இயலும்.
    எவரும் மீறாமைக்குக் காரணமாகத் தண்டனை பற்றிய அச்சம் அல்லது அவற்றுடனான உடன்பாடு இருக்கக் காணலாம்).

    மனித ஆளுமையை மீறியவை இன்னொரு வகை.
    அவற்றுள் இயற்பியல் விதிகள் முக்கியமானவை. அவற்றை அறிய மனிதர் முயலுகின்றனர். அத் தேடல், விஞ்ஞானத்தின் முக்கியமான பகுதியாகும்.
    விஞ்ஞான விதிகளை மனிதர் அறிவதிற் குறைபாடுகள் இருந்து வந்துள்ளன.
    தகவல்களின் போதாமையும் அணுகுமுறைத் தவறுகளும் அதற்குக் காரணமாகின்றன.

    விஞ்ஞான விதிகளாக ஒரு காலத்தில் அறியப்பட்டவை “மீறப் பட்டதை” நாம் கண்டுள்ளோம.
    அதன் பொருள் விஞ்ஞான விதிகள் செல்லாதவை என்பதல்ல. அவ் விஞ்ஞான விதிகளின் கூற்றுக்கள் முழுமையானவை அல்ல என்பது தான் அதன் பொருள்.

    குறைகள் காணப்படும் போது கூற்றுக்கள் செம்மைப் படலாம் அல்லது ஒன்றினிடத்தை இன்னொன்று பிடிக்கலாம்.
    பல சமயங்களில் ஒரு விதி இன்னின சூழல்களிற் செல்லும் எனவும் நாம் முடிவுக்கு வரலாம்.
    .
    மனிதர், அடிப்படையில் மாறாத சடப்பொருளின் இயல்பைப் பற்றி வகுத்துள்ள விதிகளின் கதியே இதுவெனின், தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் சமூகம் என்ற, மனிதரின் அகச் சார்பான செயற்பாடுகளின் தாக்கத்திற்குட் பட்ட சமூகமும் அதன் பல்வேறு இயக்கப்பாடுகளும் பற்றி எவ்வாறு எப்போதைக்கும் எவ்விடத்துகுமான விதிகள் இருக்க முடியும்?
    .
    இன்று பலராலும் பொருளியல் விதிகள் எனப்படுவன, பொருளியலின் இயக்கப்பாடு பற்றிய ஒரு புரிதலின் வழி வந்த கூற்றுக்களே.
    இப் பொருளியல் விதிகள் பொதுவான செல்லுபடியான தன்மை உடையன என்று எவரும் சொல்லுவதற்கு முன், அவர் கருதும் பொருளியல் எவ்வகையான சமூகத் தளத்திற்குரியது என்று அறிந்து அதன் செயற்பாட்டின் வரையறைகளையுங் குறிப்பிட்டாக வேண்டும்.
    அத் தளமும் வரையறைகளும் வேறுபடும் போதும் மாறும் போதும், குறிப்பிட்ட ஒரு சூழலுக்குரிய விதிகள் இன்னொறு சூழலிற் பொய்க்கின்றன.

    தவிர்க்கவோ மாற்றவோ இயலாதன என்று, உயிரியல் சார்ந்த உண்மைகள் போக, மனிதரது வாழ்வில் அதிகம் இல்லை.
    எனவே, இவ்வாறான நிச்சயமின்மை மிக்க சூழல்களில், விதிகளை வழிபடுவது அறிவுடைமையல்ல.

    • ///எனவே, இவ்வாறான நிச்சயமின்மை மிக்க சூழல்களில், விதிகளை வழிபடுவது அறிவுடைமையல்ல.///

      அப்படியா ? அப்ப இது மார்க்ஸ் சொன்ன ‘விதிகளுக்கும்’ பொருந்தும் அல்லவா ?
      ஆனால் ஒத்துக்க மாட்டீங்களே !!! மேற்சொன்ன கூற்று மிக சரியாக இருந்தால், பிறகு
      பொருளாதார நிபுணர்கள் அனைவரும் வேலை இழப்பர். துறையையெ மூடிவிடலாமே. ஏன் இங்கு வீண் வாக்குவாதம் !! :))))

      ராம், இரா.மணிகண்டன் மற்றும் தோழர்களுக்கு,

      ‘முதலீட்டியமும் மானிட பேரழிவும்’ என்ற நூலை எழுதிய திரு.ராஜன் குறை கிருஷ்ணன் அவர்களுடன் மார்க்ஸின் ‘உபரி மதிப்பு’ பற்றி ஒரு நல்ல விவாதம் :

      http://www.facebook.com/karur.athiyaman/posts/180902765274120

    • மார்க்ஸ் சொன்னவை, அத்தகைய எச் சூழலுக்கும் எக் காலத்துக்கும் எல்லாவற்றுக்குமான விதிகளாக உங்களுக்குத் தெரிந்தால் அது உங்கள் பிரச்சனை.
      எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்து என்பது மார்க்ஸின் முக்கியமானவொரு கூற்று.

      மார்க்ஸ் முன்வைத்த விதிகளைக் கால இடப் பொருத்தம் கருதிப் பயன் படுத்திய லெனின், மாஒ, கப்ரால் போலப் பல தலைவர்களைப் பற்றியும் மார்க்சிய ஆய்வாளர்களைப் பற்றியும் கட்சிகளைப் பற்றியும் நீங்கள் ஒருவேளை அறியக் கூடும்.

      பொருளாதார விதிகள் என்பன ஒவ்வொரு சூழலின் அடிப்படையிலும் உருவாவன; வேறுபடும் சூழல்களிலும் ஒவ்வொரு சூழலும் மாறும் போதும் அவை மாறுவன என்பதைத் தான் சொன்னேன்.
      அதை விளங்கிக்கொள்ளச் சிரமமாயிருந்தால் நான் மேலும் சொல்ல எதுவுமில்லை

      பொருளியலாளர்களின் வேலை வாய்ப்புக்கள் பற்றி ஒரு பட்டிமன்றத்தை தொடங்க நீங்கள் விரும்பின் தொடங்குக.
      மறுப்புமில்லை; பங்கேற்கும் எண்ணமுமில்லை.

      • //பொருளாதார விதிகள் என்பன ஒவ்வொரு சூழலின் அடிப்படையிலும் உருவாவன; வேறுபடும் சூழல்களிலும் ஒவ்வொரு சூழலும் மாறும் போதும் அவை மாறுவன என்பதைத் தான் சொன்னேன்.
        //

        உதாரணத்துடன் நிருபியுங்கள் பார்க்கலாம். பொத்தாம் பொதுவாக தான் தொடர்ந்து பேசுகிறீர்கள். Laws of demand and supply, relationship between govt deficts, inflation and interest rates, laws about economies of scale, productivity and price theory : இவை எல்லாம் ‘மாறுவனவா’ ? முக்கியமாக the relationship between inflation rates and interest rates and currency values ? இவை பற்றி ஏதாவது specific ஆக பேசுங்கள் பார்க்கலாம்.

        ////மார்க்ஸ் முன்வைத்த விதிகளைக் கால இடப் பொருத்தம் கருதிப் பயன் படுத்திய லெனின், மாஒ, கப்ரால் போலப் பல தலைவர்களைப் ///

        மார்க்ஸ் உபரி மதிப்பு பற்றி சொன்னதும் காலம் இடப் பொருத்தம் கருதி மாறுபவாயா என்ன ? சுரண்டல் பற்றி சொன்னது ? சரி, இருக்கட்டும், ஃபேஸ்புக் சுட்டியில், திரு.ராஜன் குறை கிருஸ்ணன் அவர்களுடன் உபரி மதிப்பு பற்றி ஒரு முக்கிய விவாதம். அதில் எதாவது ‘கருத்து’ கூறமுடியுமா ?

  18. நீங்கள் சொல்லுகிற அத்தனையும் குறிப்பிட ஒரு வகையான முதலாளிய சமுதாயத்துக்குரியவை மட்டுமே.

    தயவு செய்து, லெனின், மாஒ, கப்ரால் பற்றிச் சொன்னவை உங்களது கூற்றொன்றுக்கு எதிர்வினையாகக் கூறப் பட்டது என்று உங்களுக்கு விளங்கவில்லையா அல்லது அதை விளங்கிக் கொள்ளுவதில் வசதியீனம் உல்லதா தெரியவில்லை.
    .
    நான் சொன்னதெல்லாம்: மனிதர் செய்யும் எந்த ஒரு விதியும் அதற்குரிய குறிப்பான சூழல்கட்குள் மட்டுமே செல்லும்.

    இதை விளங்க மறுக்கிற ஒருவருக்கு என்னால் எதையும் விளக்கவும் இயலாது. நிரூபிக்கவும் இயலாது.

    “மேலும் கீழும் கோடுகள் போடு அது தான் ஓவியம்;
    நீ சொன்னால் காவியம்”

    மீண்டும் வெற்றி உங்களதே!

    • //நீங்கள் சொல்லுகிற அத்தனையும் குறிப்பிட ஒரு வகையான முதலாளிய சமுதாயத்துக்குரியவை மட்டுமே//

      அது என்ன குறிப்பிட்ட வகையான முதலாளிய சமுதாயத்ததுகுரியவை மட்டுமே ? economics of scale and level of productivity என்பதை பற்றி கேட்டிருந்தேன். அவை அனைத்து வகை அமைப்புகளுக்கும் பொதுவானவை. சோசியலிச, கம்யூனிச அமைப்புகளுக்கும் தான். அதனால் தான் பெரும் கூட்டுப்பண்னைகள், பெரும் தொழிற்சாலைகளை உருவாக்கினார்கள்.

      நான் பேசும் அடிப்படை விசியங்களுக்கு உள்ளேயே வராமல், வெளியே இருந்து கொண்டு சும்மா வார்த்தை ஜாலம் புரிகிறீர். உபரி மதிப்பு மற்றும் லாபம், முதலீடு பற்றி மார்க்ஸ் சொன்ன கருத்துகள் மிக முக்கியமானவை. அடிப்படையானவை. மாறாதவை என்று மார்க்சியர்கள் கருதுகிறார்கள். அதை பற்றி ஒரு விவாதத்தில் ஏதாவது உருப்படியான எதிர் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்க என்று கேட்டால், ‘பின் நவீனுத்தவவாதி’ போல்
      என்னவோ பேசுகிறீர்கள்.

      ///நான் சொன்னதெல்லாம்: மனிதர் செய்யும் எந்த ஒரு விதியும் அதற்குரிய குறிப்பான சூழல்கட்குள் மட்டுமே செல்லும். இதை விளங்க மறுக்கிற ஒருவருக்கு என்னால் எதையும் விளக்கவும் இயலாது. நிரூபிக்கவும் இயலாது.///

      ஆம். உம்மால் எதையும் விளக்க முடியாது தான். எல்லா விதிகளும் அப்படிதான் (மார்க்ஸின் உபரி மதிப்பும் தான்) என்று கருதும் உம்மால் முடியாதுதான்.

      //“மேலும் கீழும் கோடுகள் போடு அது தான் ஓவியம்;
      நீ சொன்னால் காவியம்//

      ரொம்ப சரி தோழர். இப்படியே தொடர்து ’விவாதியுங்க’. ஒரு நாள் கண்டிப்பாக செம்புரட்சி மலரும்.

      “மேலும் கீழும் கோடுகள் போடு அது தான் ஓவியம்;
      நீ சொன்னால் காவியம்”//

      • லிபர்டேரியன்,
        ///பொருளாதார விதிகள் இயற்பியல் விதிகளை போன்றவை. யாரும் மீற முடியாது. அது எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான அமைப்பானாலும் சரி.///
        மக்களின் தேவைகளை ஈடேற்றுவதற்காக ஒரு முதலாளியை நட்டப்பட வேண்டுமென்றோ அல்லது லாபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்றோ முன்வைத்த கோரிக்கை இது வரை சாத்தியமான வரலாற்று அனுபவம் கிடையாது. அப்படியிருக்கும் போது ஒரு முதலாளித்துவ சமூக பொருளாதார அராஜக சித்தாந்தத்தையும், லாபத்திற்கான வேரை அடியோடு பிடுங்கி எடுத்துவிட்ட மக்களின் தேவையை அடிப்படையாகக்கொண்ட திட்டமிட்ட சோசலிச பொருளாதர சிந்தாந்ததையும் ஒன்றாக இணைத்து அனைத்துக்கும் பொதுவான பொருளாதார விதி என்கிறீர்கள். உங்கள் வாதத்தின் மொத்த சாராம்சமும் இப்படித்தான் உள்ளது. முதலாளித்தும் என்பதே அராஜகம், லாப வெறி, இதில் தனியார்மயம், தாராளமயம் மட்டும் எங்கிருந்து வந்தது? யாருக்காக வந்தது?

      • நிச்சயமாக, எனக்கு விளங்குகிற எல்லாவற்றையும் எல்லாருக்கும் விளக்க என்னால் இயலாது.
        ஒருவருக்கு ஒன்று விளங்காமைக்கு அவர் முட்டாளாகவோ பித்தராகவோ புலனறிவுக் குறைபாடுடையவராகவோ இருக்க வேண்டியதில்லை.
        அவற்றை விட மோசமான காரணங்கள் உள்ளன.

        எவருடைய சமூக விதிகளும் ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலுக்குரியன என்ற வகையில், மார்க்ஸ் கூறியதற்கும் வரையறைகள் உள்ளன.
        இது என்போல அஞ்ஞானிகளின் கருத்து.

        ஏலவே, வெற்றி உங்களதே என்று சொல்லி விட்டேனே.
        பிறகேன் கவலை?
        ஒரு திருத்தம்: நீங்கள் சொன்னால் காவியம்.
        (“நீ சொன்னால் காவியம்” என்ற ஒருமை வாக்கியம் 35 வருடப் பழைய பாட்டில் வந்தது).

        உங்கள் வெற்றியை மேலும் முழுமைப் படுத்த இன்னமும் சொல்லுகிறேன்:
        பொய் சொல்லப் போறேன்; பொய் சொல்லப் போறேன்; நீ* ரொம்ப ரைட்டு ஐயா;
        பொய் சொல்லப் போறேன்; பொய் சொல்லப் போறேன்; நான் கொஞ்சம் ராங்கு ஐயா.
        [* நீங்க என்று போட்டால் சவுண்டு கொஞ்சம் பிழைக்கிறதனால் ஐயன்மீர் பிழை பொறுத்ருள வேண்டும்.]

        மேலும் சொல்லுகிறேன்:
        கற்காலத்துக்கு முன்பிருந்தே, மனித சமூகத்தின் உற்பத்தி அனைத்தும் –எவ்விதக் கால, இட, சமூக, பால், நிற, இன, இனக்குழும, மொழி, வர்ண, சாதி, கோத்திர, வயது, ஆற்றல், அறிவு மற்றும் இங்கு பட்டியலிடப் படாத அனைத்து வேறுபாடுகளையும் கடந்து– திருவாளார் தாராண்மைவாதி என்று கூறக் கூடிய Libertarian என்னும் பேரறிவுச் செம்மல் கூறியருளிய பொருளியல் விதிகட்கமயவே நிகழ்ந்து வந்துள்ளன என்பதுடன் அப் பெருமானார் என்றேன் கருணைகூர்ந்து பெருமானார் அவர்கள் முன்னர் கூறியதற்கு முரணாகத் திருவாய் மலர்ந்தருளும் வரை மனித சமூகத்தின் உற்பத்தி அனைத்தும் அவர் சொன்னவாறே தொடர்ந்த்தும் நிகழக் கடவதாகும்.
        .
        ஓம்! திருச்சிற்றம்பலம்!

      • Ram,

        Yes, Economics is not a pure science like Physics or Chemistry. Hence it comes under arts and humanities stream. primary reason is human behaviour is part of the this subject. I knew this already.

        நான் சொன்ன சில அடிப்படையான ‘விதிகள்’ அல்லது concepts பற்றி specific ஆக எதாவது சொல்ல முயலுங்களேன். அவை எல்லாம் நிலையற்ற தன்மை கொண்ட விதிகளா என்ன ? எல்லாவற்றையும் இப்படி பொத்தாம் பொதுவாக வகைபடுத்த முடியாது. கூடாது. பணவீக்கத்திற்க்கும், அரசின் பற்றாகுறை பட்ஜெட்டுகளுக்கும் உள்ள தொடர்பை பற்றி ஏதாவது மாற்று ‘விதி’ இருந்தால் சொல்லுங்களென். வட்டி விகுதங்கள், பண வீக்கம், exchange rates : இவைகளுக்குள் உள்ள தொடர்பை பற்றி ஏதாவது fuzzy or uncertain rules இருந்தால் சொல்லுஙகளேன். Let us argue about the issues and concepts per se, instead of being diverted like this.

  19. To get out of the economic fall, America is printing the dollars (many fold higher than its Gold reserve) and that money is spending in India like Third World Countries as FDI. We, the Indian ‘idiots’ purchase those dollars with the belief that the exchange rate of dollar will rise in future. If it goes like this America has not have enough man power to print those enormous quantity of dollars. Finally, printing of dollars may be out sourced to India and China. Our private companies printing two copies of each dollar and one will be send to America and the other will be used by themselves. Why we are worried about the economic theories when we are witnessing the real facts.

  20. தனியார்மயத்தின் தவிர்க்கவியலாத விளைவு விலைவாசி உயர்வு எனும்போது செலபோன் மட்டும் ஏன் மலிவாக கிடைக்க வேண்டும்? தனியார்மயத்தின் விதி இதற்குப் பொருந்தாதா?

    • //தனியார்மயத்தின் தவிர்க்கவியலாத விளைவு விலைவாசி உயர்வு எனும்போது செலபோன் மட்டும் ஏன் மலிவாக கிடைக்க வேண்டும்? தனியார்மயத்தின் விதி இதற்குப் பொருந்தாதா?//

      செல்போன சாப்பிட முடியாது. வெங்காயத்துல ஸ்பெக்ட்ரம் ஊழல் செஞ்சி டாடா அம்பானி கொள்ளையடிக்க முடியாது.

    • பிரேம்,

      நல்ல கேள்வி. சில துறைகளில் தனியார்மயம் மற்றும் சுதந்திர சந்தை பொருளாதார உற்பத்தி முறைகள் முழுமையாக, அரசின் தலையீடு மிக குறைவாக இருப்பதால், அத்துறை சார்ந்த பொருட்க்கள் மற்றும் சேவைகள் மிக மிக மலிவாகவும், தாரளமாகவும் கிடைக்கின்றன. எந்தெந்த துறைகளில் இது இல்லையோ அல்லது சரியா, முழுமையாக செயல்படுத்தப்படவில்லையோ, அத்துறை சார்ந்த பண்டங்கள் விலை மிக அதிகமாக, பற்றாகுறைகளுடன் இருக்கும். இதெற்க்கு மேல் அரசாங்கம் போடும் பற்றாக்குறை பட்ஜெட்டுகளினால் ஏற்படும் பணவீக்கத்தால் ஏற்படும் விலைவாசி உயர்வு.

      இந்திய விவசாயத்துறை வளர்ந்த நாடுகள் போல முற்றாக சுதந்திர சந்தை பொருளாதார அடிப்படைக்கு மாறாவில்லை. (ஆனால் இந்தியா ஜவுளி துறை மாறியதால், நல்ல விளைவுகள் உள்ளன). அதன் நிகர விளைவுகள் தான் தொடர்கின்றன. வட அமெரிக்காவில் உணவு பண்டங்களின் விலை குறைவுதான். காரணம் அங்கு முற்றாக சந்தை பொருளாதார அமைப்பு. அரசின் மான்யங்களும் ஒரு காரணிதான். ஆனாலும் economics of scale in very large and modern farms using latest technologies தான் அடிப்படை காரணம். இங்கு அதை அனுமதிக்காமல் சிக்கலில் உள்ளோம்.

      • //வெங்காயத்துல ஸ்பெக்ட்ரம் ஊழல் செஞ்சி டாடா அம்பானி கொள்ளையடிக்க முடியாது.//

        உணவுப் பொருள் விலைவாசி உயர்வுக்கு சர்வதேச சூதாட்டம் காரணமில்லை என்று பிரேமும், அதியமானும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னால் அடுத்தக்கட்டமாக பேச வசதியாக இருக்கும்.

        • Asuran,

          இந்த ஊக வணிக சந்தையால பெரும் பயன் அடைந்த உ.பி மென்தால், உருளை விவசாயிகள் பற்றி :

          http://www.mcxindia.com/knowledgehub/casestudy/PDF/StudyPotatoMentha.pdf

          மிக முக்கிய ஆய்வு இது. முழுசா படித்துப் பார்க்கவும். ஊக வணிகம் என்பது வெறும் சூதாட்டம் அல்லது ஏமாற்று வேலை அல்ல. அது ஒரு முக்கிய பங்களிப்பு செய்கிறது. மிக முக்கியமான information exchangeஅய் மிக அருமையாக செய்ய இயல்கிறது.

          Food inflation has many other reasons. crop failure and shortages is one major reason. Govts pump in extremely high amount of
          money into the system recently to counter the recession. that is second major reason. Without these causes, pure speculation and online
          trading alone cannot be held responsible for the hikes.

        • Instability of commodity prices has always been a major concern of the producers, processors,
          merchandisers as well as the consumers in an agriculture-dominated country like India. Farmers‘
          direct exposure to price fluctuations, for instance, makes it too risky for them to invest in otherwise
          profitable activities. There are various ways to cope with this problem. Apart from increasing the
          stability of the market by direct government intervention, various actors in the farm sector can better
          manage their activities in an environment of unstable prices through derivatives markets mainly
          futures and options on futures. These markets serve a risk-shifting function, and can be used to
          lock-in prices in advance instead of relying on uncertain price developments in future. Apart from
          being a vehicle for risk transfer among hedgers and from hedgers to speculators, these markets
          also play a major role in price discovery.

          Futures markets have played a vital role in the development of agricultural sector in many countries
          in the world. The US, the UK, and even some of the developing countries in Africa especially Kenya
          and Zambia and Asian countries like Philippines, Malaysia have benefited from futures markets.
          Most of these countries have utilized agricultural commodity futures for reducing direct government
          subsidy to farmers. The Chicago Mercantile Exchange (CME); Chicago Board of Trade (CBOT);
          NewYork Mercantile Exchange (NYMEX); International Petroleum Exchange (IPE), London; London
          Metal Exchange (LME); Euronext London International Financial Futures Exchange (LIFFE); Tokyo
          Commodity Exchange (TOCOM); Central Japan Commodity Exchange (C-COM); Sidney Futures
          Exchange; Singapore Exchange (SGX); Bursa Malaysia Derivatives; —Bolsa de Mercadorias &
          Futuros“ (in Brazil), the Buenos Aires Grain Exchange, etc are some of the leading commodity
          exchanges in the world engaged in futures trading.

          The analysis of production trends, supply chain and marketing practices in mentha oil and potato
          reveals that, farmers in general and small farmers in particular are unable to realize fair price
          for their output. The potato and mentha farmers are exposed to many uncertainties as regards
          to their production, marketability and price realization. While their production is highly sensitive
          to weather conditions and other extraneous factors, the price realization greatly depends on the
          farmers‘ financial position to store them for meeting the off-supply season demand which optimizes
          prices in their markets. Growing potato and mentha is essentially a profitable economic activity.
          However, farmers often fail to realize profitable price primarily due to inadequate formal marketing
          facilities and lack of collateral credit availabilities from formal sources. The long supply chain which
          accommodates large number of middlemen in both the markets is prohibiting farmers from realizing
          fair return on their investments.
          It is observed that the prevailing imperfections in the supply chain of potato and mentha oil and
          consequent price disadvantage to the respective farming community make futures markets more
          relevant and beneficial to them. Futures markets benefit them in two ways; directly and indirectly.
          Farmers benefit from direct participation in the market by initiating positions while they benefit
          indirectly by making use of the price information that futures markets transmit to spot markets on a
          regular basis. The continuous price discovery in futures markets help farmers predicts their future
          cash flows and evens out supply and demand imbalances through out the year. The analysis of the
          spot market price trends of potato and mentha oil after MCX launched futures in them shows that
          there was substantial improvement in these prices which has undoubtedly helped farmers realize
          relatively higher price. This advantage is very clearly visible in mentha oil market. First, the spot
          market prices of mentha oil have strengthened after the launch of futures. Secondly, the area under
          mentha cultivation and its production have shown substantial increase after the launch of futures
          and finally, the official trade data show that the average export price of mentha oil has recorded
          substantial increase after the introduction of futures.

          Yet another issue examined in the present study is the potato and mentha farmers access to futures
          markets. The major highlight of the survey result is that farm size prohibits majority of them from
          participating directly in futures markets. Therefore, the important question to be addressed is how
          to make farmers participate in futures markets. The present study has emphasized on the role of
          commodity pool investors (aggregators) as a feasible remedy. Experiences of many countries show
          that farmers associations, marketing agencies and co-operatives could be potential aggregators in
          farm sector. This however requires initiative of the government, regulator and exchanges towards
          establishing pool operators in commodity futures markets.

        • //Food inflation has many other reasons. crop failure and shortages is one major reason. Govts pump in extremely high amount of
          money into the system recently to counter the recession. //

          அப்போ ரிசெசன் பீரியட்ல விலைவாசி குறைவா இருந்திச்சின்னு சொல்ல வற்றீங்களா அதியமான்?

          உங்க லாஜிக் படி அப்படித்தானே இருக்க வேண்டும்? ஆனால் இதற்கு மாறாக விலைவாசி உயர்வு ரிசெசனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏறிக் கொண்டேதானே செல்கிறது ஏன்?

          பெட்ரோல் விலைவாசிக்கு உணவுப் பொருள் விலைவாசிக்கும் என்ன தொடர்பு? பெட்ரோல் விலை சராமாரியாக உயர்வத ஏன்?

      • Onion Futures Act என்ற சட்டத்தின் மூலம் 1940களுக்குப் பிறகு வெங்காயத்தில் சூதாட்டம் செய்வதை அமெரிக்கா தடை செய்துள்ளதே ஏன்?

        சமீபத்தில் விலை உயர்ந்த கச்சாப் பருத்தி மற்றும் பருத்தி இழை ஜவுளி உற்பத்தித் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உண்மையில் இந்தியாவின் உற்பத்தி அடுத்த ஆண்டுக்கு தேவைப்படும் ரிசர்வ் அளைவை விடவும் அதிகமான உபரியில் இருந்த போதும் விலை ஏன் உயர்ந்தது? (சர்வதேச சந்தையில் சீனா, பங்களாதேச நிலைமைகளின் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரச் சூழல் பருத்தியில் சூதாட்டத்தை சூடேற்றியதே காரணம்)

        இது போல விலை உயரும் ஒவ்வொரு முறையும் அந்தக் குறிப்பிட்ட பொருள் மீதான முன்பேர வர்த்தகத்தை இந்தியப் பிரதமர் தடை செய்வதும் அதனையொட்டி விலை உயர்வு மட்டுப்படுவதும் நடக்கிறதே எப்படி?

        • //பெட்ரோல் விலைவாசிக்கு உணவுப் பொருள் விலைவாசிக்கும் என்ன தொடர்பு? பெட்ரோல் விலை சராமாரியாக உயர்வத ஏன்?//

          உலகமே இழவு விழுந்த மாதிரி சுணங்கிப் போய் இருந்த ரிசெசன் காலத்தில் உணவுப் பொருள் நிறுவனங்கள்(Food and Agro) மட்டும் பிரமிப்பூட்டும் சதவீதங்களில் லாபம் (சில 500%, 1000% களில் கூட அடைந்தன என்று நினைவு) அடைந்தனவே எப்படி?

        • அசுரன்,

          யூக வணிகம் மட்டும் தான் அப்ப விலைவாசி உயர்வுக்கு காரணம். வேறு காரணிகளே இல்லை என்கிறீர்களா என்ன ? இந்தியாவில் அப்பப்ப forward tradingஅய் தடை செய்கிறார்கள் தாம். பிறகு தடையை நீக்கியும் விடுகிறார்கள். இத்தனை லச்சம் கோடி பணத்தை அரசு புதுசா வருசந்தோரும் வெளியிட்டால், எந்த பண்டங்களில் பற்றாக்குறை உருவாகிறதோ, அவை நார்மல் விகிதத்தை விட மிக மிக அதிகமாக உயரும்தான்.
          அதே அளவு பற்றாக்குறை இருந்து, அரசு புது பணம் அடிக்கும் விகிதம் மிக குறைவாக இருந்தால், விலை உயர்வு இத்தனை கடுமையாக இருக்காது.

          அமெரிக்காவில் 1940இல் வெங்காயத்தில் முன்பேர வணிகத்தை தடை செய்திருக்கலாம். ஆனால் இன்றும் அது தொடர்கிறதா என்ன ? முக்கியமாக இதர உணவு பண்டங்களில் ?

          நான் அளித்த ஆய்வு சுட்டி மிக விரிவாக விளைவுகளை ஆராய்கிறது. Price discovery and hedging of future prices and suppliesக்கு இது எப்படி மிக துணை செய்து, நன்மை செய்கிறது என்பதை விவரிக்கிறது.

          இன்றைய food inflationக்கு பற்றாக்குறைகள், அரசு புது பணம் உருவாக்கியதால் விளைந்த பண வீக்கம் : இவை இரண்டும் மிக முக்கிய காரணிகள். futures trading இல்லாமல் இருந்திருந்தாலும் விலை உயர்வு இருக்கும். ஆனால் திடீர் திடீரென்று பெரிய்
          spikes in prices and instabiltiy இருந்திருக்கும்.

        • என்னுடைய பின்னூட்டங்களுக்கான பதில் உங்களது எதிர்வினையில் இல்லை அதியமான். உங்களது பழைய பின்னூட்டங்களையே மீண்டும் இட்டுள்ளீர்கள். அரசு பணத்தை வெளியிடுவதால் வீக்கம் ஏற்படுகிறது என்ற தட்டையான பழைய உலகப் புரிதல் பொருந்தவில்லை என்பதற்கு உதாரணம் கொடுத்து கேள்வி கேட்டிருந்தேனே? மீண்டும் படித்து பதில் சொல்லலாம்.

        • யூக வணிகம் மிக மிக அதிகம் உள்ள இடம் கச்சா எண்ணை வர்த்தகத்தில். NYMEXஇல் crude futures மிக மிக மிக அதிகம் வர்த்தகம் செய்யப்படுகிறது. ஆனால் யாரும் இதுவரை அதை தடை செய்ய வேண்டும் என்று சொல்வதில்லை. 150 டாலர்க்கு அதிகம் ஏறி, பிறகு கடுமையான விலை வீழ்ச்சியும் அதில் நடந்தது. current demand and supply, projected demand and supply, inflation rates, hedging of risks,expected inflation and exchange rates : all these factors are in play here. இந்த அமைப்பே இல்லாமில் இருந்தால், price instabiltiy மிக மிக அதிகம் இருக்கும்.

          இந்தியாவில் நிலைமை சில முக்கிய வேறுபாடுகள் உள்ளது. கருப்பு பணம் மற்றும் கருப்பு வர்த்தகம் மிக மிக அதிகம். (வளர்ந்த நாடுகளில் இல்லை). இந்த கருப்பு பணத்தின் விளைவுகள் பெரும் market distortionsஅய் ஏற்படுத்துகின்றன.

          Economic and Political Weeklyயில் சென்ற ஆண்டு வந்த ஆய்வு இது :
          http://www.indiaenvironmentportal.org.in/files/food%20inflation.pdf
          understanding the nature and Causes of food inflation

        • அசுரன்,

          நான் இட்ட ஒரு பின்னூட்டத்தின் ஒரு பகுதி தான் இது :

          The Chicago Mercantile Exchange (CME); Chicago Board of Trade (CBOT);
          NewYork Mercantile Exchange (NYMEX); International Petroleum Exchange (IPE), London; London Metal Exchange (LME); Euronext London International Financial Futures Exchange (LIFFE); Tokyo Commodity Exchange (TOCOM); Central Japan Commodity Exchange (C-COM); Sidney Futures Exchange; Singapore Exchange (SGX); Bursa Malaysia Derivatives; —Bolsa de Mercadorias & Futuros“ (in Brazil), the Buenos Aires Grain Exchange, etc are some of the leading commodity exchanges in the world engaged in futures trading.

          இவை பல காலங்களாக அந்தந்த நாடுகளில் வெற்றிகரமாக இயங்குகின்றன. நீங்க சொன்ன அமெரிக்கவிலும் தான். யூக வணிகமும் இதில் ஒரு அங்கம் தான். ஆனால் பெரும் விலை உயர்வுகள் அங்கு ஏற்படவில்லை. யாரும் இவைகளை தடை செய்ய கோரவும் இல்லை. இந்தியாவின் நிலை வித்யாசமானது. பல distortions மற்றும் fragmented market உள்ள நிலை. யூக வணிகம் தான் காரணம் என்றால், ஏன் மேற் சொன்ன நாடுகளில் விளைவுகள் இந்தியாவை போல் இல்லை ?

          60களில், 70களிலும் இதே சிக்கல்கள் தான் இங்கு. அன்று online futures trading இங்கு இல்லை. மண்டிகடைகள் தான். ஆனால் அன்று இதை விட கடுமையான விலை உயர்வுகள். 1966இல் கத்திர்க்காய் விலை உயர்வு விகுதம் பற்றி காமராஜர் நொந்து கொண்டார். காரணிகள் பல உள்ளன. இங்கு நிலைமை simple ஆக கணிக்க முடியாது.

        • //60களில், 70களிலும் இதே சிக்கல்கள் தான் இங்கு. அன்று online futures trading இங்கு இல்லை. மண்டிகடைகள் தான். ஆனால் அன்று இதை விட கடுமையான விலை உயர்வுகள். 1966இல் கத்திர்க்காய் விலை உயர்வு விகுதம் பற்றி காமராஜர் நொந்து கொண்டார். காரணிகள் பல உள்ளன. இங்கு நிலைமை simple ஆக கணிக்க முடியாது.///

          அவ்வப்போது ஏற்படும் விலை உயர்வையும் தொடர்ந்துஏறுமுகமாக இருக்கும் விலையுயர்வையும் ஒப்பிட இயலாது. மேலும், 60-70களில் விலைவாசி உயர்வுக்கும் இன்றைய தாராளமயமாக்களுக்குப் பிறகான நிலைக்கும் வித்தியாசம் உள்ளதை ஒரு தோழர் சுட்டிக் காட்டினால் நீங்கள் அந்த அளவீடு வேறு இது வேறு என்று சொல்கிறீர்கள். அதை சொன்னால் இதைச் சொல்வது, இதைச் சொன்னால் அதைச் சொல்வது என்கிற உங்களது வாதமுறை முன்னேற்றமடையவேயில்லை என்பதுதொன்று மட்டும்தான் உண்மை.

        • //ஆனால் பெரும் விலை உயர்வுகள் அங்கு ஏற்படவில்லை. ///

          நீங்க இப்படிச் சொல்றீங்க கொஞ்ச நாள் முன்னதான் உலகம் முழுவதும் கடும் விலையுயர்வு ஏற்பட்ட போது ஜார்ஜ் புஷ் என்னா சொன்னாரு? விலை வாசி உயர்வுக்கு காரணம் இந்தியர்கள் நிறைய சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்கன்னாரு. ஆனா புள்ளிவிவரம் அதை ருசுப்படுத்தவில்லை. கட்டுரையில கொடுத்துருக்குற முக்கிய விசயம்தான் இதற்கு பதில் சொல்லும், அது என்னவென்றால் சப்ளை டிமாண்டு உருவாக்கும் மதிப்பு உயர்வுக்கும், சந்தையில் முன்பேர வர்த்தகம் சூதாடி உருவாக்கும் மதிப்பு உப்புலுக்கும் மடுவுக்கும் – மலைக்குமான வித்தியாசமுள்ளது என்று சொல்லும் பகுதி (பிரேம் விளக்கச் சொல்லியிருந்த பகுதி).

          ரியல் எக்கானமிக்கும், அதன் மீது கட்டியமைக்கப்படும் சூதாட்ட எக்கானமிக்குகம் உள்ள இயங்கியல் தொடர்புதான் பணவீக்கம் ஒரு பக்கமும் மக்களிடம் பணமுடை இன்னொரு பக்கமும் என்ற விசித்திர நிலையை உருவாக்குகிறது. இதை இட்டு நிரப்பத்தான் கடன் அட்டைகள் உள்ளிட்டவைகள்.

        • மத்த அறிவாளிங்க முன்பேர வர்த்தகம் பத்தி இன்னா சொல்றாங்கோ…

          IFPRI, for India “rising expectations, hoarding and hysteria played a role in increasing the level and volatility of food prices, as did the flow of speculative capital from financial investors.”

          United Nations Conference on Trade and Development.
          A view close to above has been advanced by Unctad in its 2009 Annual report, stating that “…a major new element in commodity trading over the past few years is the greater presence on commodity future exchanges of financial investors that treat commodities as an asset class. The fact that these market participants do not trade on the basis of fundamental supply and demand relationships and that they hold, on average, very large positions in commodity markets, implies that they can exert considerable influence on commodity price developments”

          மேலும் உங்களது அரசின் புதுப்பணம் காரணமாக விலைவாசி உயர்கிறது என்ற வாதத்தை மறுத்து சொன்னஎனது பின்வரும் கருத்துக்கு உங்களிடம் பதில் இல்லை.

          நீங்க சொன்னது:
          @@
          இன்றைய food inflationக்கு பற்றாக்குறைகள், அரசு புது பணம் உருவாக்கியதால் விளைந்த பண வீக்கம் : இவை இரண்டும் மிக முக்கிய காரணிகள்.
          @@

          எனது முந்தைய பின்னூட்டம்:
          //பெட்ரோல் விலைவாசிக்கு உணவுப் பொருள் விலைவாசிக்கும் என்ன தொடர்பு? பெட்ரோல் விலை சராமாரியாக உயர்வத ஏன்?//

          உலகமே இழவு விழுந்த மாதிரி சுணங்கிப் போய் இருந்த ரிசெசன் காலத்தில் உணவுப் பொருள் நிறுவனங்கள்(Food and Agro) மட்டும் பிரமிப்பூட்டும் சதவீதங்களில் லாபம் (சில 500%, 1000% களில் கூட அடைந்தன என்று நினைவு) அடைந்தனவே எப்படி?

          சமீபத்தில் விலை உயர்ந்த கச்சாப் பருத்தி மற்றும் பருத்தி இழை ஜவுளி உற்பத்தித் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உண்மையில் இந்தியாவின் உற்பத்தி அடுத்த ஆண்டுக்கு தேவைப்படும் ரிசர்வ் அளைவை விடவும் அதிகமான உபரியில் இருந்த போதும் விலை ஏன் உயர்ந்தது? (சர்வதேச சந்தையில் சீனா, பங்களாதேச நிலைமைகளின் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரச் சூழல் பருத்தியில் சூதாட்டத்தை சூடேற்றியதே காரணம்)

          ++++++++++++++++++++++++++++

          நீங்கதான் பற்றாக்குறையையும், அரசு புதுப் பணத்தையும் காரணமாச் சொல்றீங்க. பெரும்பாலான ஆய்வுகளோ மிகத் தெளிவாக ஊக வணிகம், முன்பேர வர்த்தகம் உள்ளிட்டவை மற்றும் இதை குறிவைத்து இயங்கும் அந்நிய நிறுவன மூதலீடுகள் (FII) யை கை காட்டுகின்றன.
          அமெரிக்க வீட்டுக்கடன் குமிழி உடைந்த பொழுது ஆப்பு வாங்கிய முதல் வரிசை நிறுவனங்கள் காப்பீட்டு நிறுவனங்கள் என்பதும், சூதாட்டத்தையே பல வடிவங்களில் வெட்டி, ஒட்டி செய்ததன் விளைவு என்பதையும், அத்தகைய வெட்டி ஒட்டலில் முன்பேர ஒப்பந்தங்களும் உண்டு என்பதையும் மறந்துவிட்டால் உங்களது வாதமான முன்பேர வர்த்தகம் ரிஸ்க்கை குறைக்கும் என்பது உண்மை போலவே தோன்றும்.

        • உலகம் முழுவதும் உயரும் உணவு விலை.

          http://www.nouse.co.uk/2011/02/08/ascending-world-food-prices-sparks-inflation/

          The rising cost of world food prices is set to cause greater concern for worldwide inflation this year. The United Nations released its latest figures of the Food and Agriculture Organisation Food Price Index, which showed its highest rating since records began 20 years ago. This has increased for the seventh month in a row, and worryingly looks set to continue.

          The last time prices rose to a similar level in 2008, food riot protests were held in many countries around the world, including Cameroon.

          உணவு விலை உயர்வுக்கும் டிமாண்டு சப்ளைக்கும்தான் தொடர்பு என்றால் பெட்ரோல் விலை உயர்வு கட்டாயம் உணவு விலையை பாதிக்க வேண்டும். பெட்ரோல் விலையோ டிமாண்டு சப்ளைக்கு பொருத்தமாக இல்லாமல் சர்வதேச ச்ந்தையில் சகட்டு மேனிக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது – காரணம் ஊக வணிகம்.

          மேலும், பிரிட்டன் நிலை என்ன?

          It has been reported that weekly food bills in Britain have risen by 6.1 per cent in the last 12 months, adding an average of £317 extra per year. British shoppers have already had to deal with a VAT rise of 2.5 per cent and are bracing themselves for an additional fuel duty rise.

          அமெரிக்காவின் நிலை:
          Food Inflation is very real yet certain Congressman are working to disarm the American people which will potentially kill thousands of citizens who would be unable to protect them selves during food riots or a martial law type scenario.

          Figures recently released by the Food and Agriculture Organization (FAO) index of 55 food commodities indicates that worldwide food prices hit a record high in December.

          இந்த லிங்கில் உணவு விலையேற்றம் பற்றிய பல கட்டுரைகள் உள்ளன
          http://marcfaberchannel.blogspot.com/2011/01/inflation-and-food-riots-worldwide.html

          இவையெல்லாம் நெருப்பில்லாமல் கிளம்பும் புகையல்ல (கச்சாப் பருத்தி விசயத்தில் சொன்னது போல). ஆனால் ஈறைப் பேனாக்கி, பேனை பெருமாளுக்கும் ஊக வணிகம் சிறு சிறு பிரச்சினைகளையும் மிகப் பெரிதாக்கி அதனை வைத்து நிதிப் பொருளாதாரத்தை தாக்குகிறார்கள். அதுவோ இன்னொரு பக்கம் உண்மைப் பொருளாதாரத்தை முடக்குகிறது. விளைவு, கச்சாப் பருத்தியில் நமது உற்பத்தி உபரியாக இருந்தும் நமக்கு விலை உயர்வு.

        • ///மேலும், 60-70களில் விலைவாசி உயர்வுக்கும் இன்றைய தாராளமயமாக்களுக்குப் பிறகான நிலைக்கும் வித்தியாசம் உள்ளதை ஒரு தோழர் சுட்டிக் காட்டினால் நீங்கள் அந்த அளவீடு வேறு இது வேறு என்று சொல்கிறீர்கள். அதை சொன்னால் இதைச் சொல்வது, இதைச் சொன்னால் அதைச் சொல்வது என்கிற உங்களது வாதமுறை முன்னேற்றமடையவேயில்லை என்பதுதொன்று மட்டும்தான் உண்மை///

          அசுரன்,

          அன்று விலைவாசி உயர்வு மிக மிக கடுமையான விகுதத்தில் இருந்தது. அன்று இந்திய ரூபாயின் உண்மையான மதிப்பு மிகவும் குறைவு. official rate was artifically pegged at high rates while REER (real effective exchange rate) was different and very low. 20 சதம் வங்கி கடன் வட்டி விகுதம் இருந்ததே முக்கிய சாட்சி. inflation rates history பற்றி தெளிவான, ஆதாரபூர்வமான தகவல்கள் இணயத்தில் இல்லை. பிறகு இதை பற்றி எழுதிகிறேன். முரண்பாடு எதுவும் எனது வாதங்களில் இல்லை.

          தாராளமயமாக்கல் செய்யாமல் நமது ரூபாயின் மதிப்பை இன்று எப்படி பலம் கொண்டதாக மாற்ற முடியும் என்று விளக்குங்களேன். தொடர்ந்து அய்.எம்.எஃப் இடம் ஆண்டு தோறும் கெஞ்சி கூத்தாடி, டாலர் கடன் பெற decades தான் இன்றைய நிலையை விட பரவாயில்லை என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் ?

          சரி, இருக்கட்டும். உலகெங்கும் food inflation உருவாவதற்க்கு futures trading மட்டும் தான் ஒரே காரணம் என்று யார், எங்கு சொல்கிறார்கள் என்று நிருபியுங்களேன். Flood of new money pumped into the sytem (as fiscal stimulas packages), wheat crop failures in Russia, supply constraints : இவைகள் ஒரு விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. யூக வணிகம் மட்டும் தான் காரணி என்று நிருபிக்கப்பட்டால், forward tradingஅய் முற்றாக உலகெங்கிலும் தடை செய்யவதை நானும் ஆதரிப்பேன். I have an open mind and is not dogmatic (like you). I have no hesitation in supporting any economic policy which is prudent and pragmatic and will work in reality. that is all.

        • ////பெட்ரோல் விலைவாசிக்கு உணவுப் பொருள் விலைவாசிக்கும் என்ன தொடர்பு? பெட்ரோல் விலை சராமாரியாக உயர்வத ஏன்?///

          பெட்டோரிய பொருட்கள் விலை உயர்ந்தால், அனைத்து விலைவாசிகளும் proportionately உயரும் என்பது பொது விதி. ஏனென்றால் petrol and diesel is the life blood of modern industrial economy. All production and transportation costs depend on energy prices, esp petro products. ok.

          Asuran, no one has so far disproved the relationship between change in M1 (that is total money supply) and change in inflation rates. They have a directly proportional relationship. இதை பற்றி ஒராயிரம் சுட்டிகள் அளிக்க முடியும். சதுக்க பூதத்துடன் நடந்த விவாதத்தில் செய்திருக்கிறேன். ஆனால் டால்ர் இன்னும் வீழ்ச்சி அடையாமல் இருப்பதற்க்கு சில செயற்கையான காரணிகள் உண்டு : சீனாவும் இதர ஆசிய ஏற்றுமதி செய்யும் நாடுகளும், தங்கள் ஈட்டும் டாலர்களை சந்தையில் விற்க்காமல், தொடர்ந்து அமெரிக்க அரசு கடன் பத்திரங்களில் முதலிடு செய்வது ஒரு மிக முக்கிய காரணம். this artificially distorts the exchange rates and huge imbalances are building. no one knows where it will end.

        • அசுரன்,

          1974-75 ஆம் வருட பட்ஜெட் பற்றி, நானி பல்கிவாலா (எமது ஆதர்ச நாயகர்), We the people என்னும் அருமையான நூலில் எழுதுகிறார் :

          “The single gravest danger facing India today is that of inflation. While it took prices 65 years – 1873 to 1938 – to rise 12 percent, in just four years from the end of 1969 to the beginning of 1974 wholesale prices rose 60 percent, and food prices 62 percent. During the same period the supply of paper money increased by 70 percent ; while the real output of the necessities of life increased only by 12 percent.”

          And highest rate of income tax was some 97.75 % then !!!

        • //இவையெல்லாம் நெருப்பில்லாமல் கிளம்பும் புகையல்ல (கச்சாப் பருத்தி விசயத்தில் சொன்னது போல). ஆனால் ஈறைப் பேனாக்கி, பேனை பெருமாளுக்கும் ஊக வணிகம் சிறு சிறு பிரச்சினைகளையும் மிகப் பெரிதாக்கி அதனை வைத்து நிதிப் பொருளாதாரத்தை தாக்குகிறார்கள். அதுவோ இன்னொரு பக்கம் உண்மைப் பொருளாதாரத்தை முடக்குகிறது. விளைவு, கச்சாப் பருத்தியில் நமது உற்பத்தி உபரியாக இருந்தும் நமக்கு விலை உயர்வு.//

          அதியமான் இதப் படிக்கலனு நினைக்கிறேன். அவருக்காக திரும்பவும்

  21. ///இந்த நிதியாண்டின் மொத்த உற்பத்தியில் செய்யப்பட்டிருக்கும் 11லட்சம் டன்கள் ஏற்றுமதி சந்தைத் தேவையில் உண்டாக்கியிருக்கும் இடை வெளியை விட தற்போது ஏற்பட்டிருக்கும் விலையேற்றம் கற்பனைக்கெட்டாத வகையில் அதிகமானதாகும்///
    இதில் கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்று, எளிய முறையில் புரிந்து கொள்ளும்படி யாராவது விளக்குங்களேன்?

  22. //உலகளவில் இந்தியாவில் தான் அதிகமான நிலப்பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சீனத்திற்கு அடுத்தபடியாக இந்தியா தான் உலகில் அதிகளவில் வெங்காய உற்பத்தி செய்கிறது.//
    அப்படியென்றால் இந்தியாவைவிட குறைந்த நிலப்பரப்பில் சீனாவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டாலும் உலகில் சீனாவே முதல் இடம் என்று எடுத்துக்கொள்ளலாமா? (அதாவது இந்தியாவில் அதிக நிலப்பரப்பில் குறைந்த் உற்பத்தி, சீனாவில் குறைந்த நிலப்பரப்பில் அதிக உற்பத்தி)

  23. ///ஏற்கனவே ரிலையன்ஸ், ஐ.டி.சி, பெப்சிகோ போன்ற நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து வரும் நிலையில்,///

    அப்பட்டமான பொய். கசக்கி பிழிவதை நிருபியுங்களேன் பார்க்கலாம். மண்டி கடைகாரகளும், பல இடை தரகர்களும் இத்தணை ஆண்டுகளாக என்ன செய்தார்களாம் ?

    அய்.டி.சி நிறுவனத்தில் e-choupal திட்டத்தின் விளைவுகள் :

    e-Choupal is an initiative of ITC Limited, a large multi business conglomerate in India, to link directly with rural farmers via the Internet for procurement of agricultural and aquaculture products like soybeans, wheat, coffee, and prawns. e-Choupal was conceived to tackle the challenges posed by the unique features of Indian agriculture, characterized by fragmented farms, weak infrastructure and the involvement of numerous intermediaries. The programme involves the installation of computers with Internet access in rural areas of India to offer farmers up-to-date marketing and agricultural information.

    Problems addressed :

    Traditionally, commodities were procured in mandis (major agricultural marketing centres in rural areas of India), where the middleman used to make most of the profit. These middlemen used unscientific and sometimes outright unfair means to judge the quality of the product to set the price. The difference in price between good quality and inferior quality was little, and therefore there was no incentive for the farmers to invest and produce good quality output. With e-Choupal, the farmers have a choice and the exploitative power of the middleman is neutralised.

    Statement of a farmer who is a member of E-choupal: “Before ITC introduced us to e-Choupal, we were restricted to selling our produce in the local mandi. We had to go through middlemen and prices were low. ITC trained me to manage the Internet kiosk and I became the e-Choupal Sanchalak in my village. Today we are a community of e-farmers with access to daily prices of a variety of crops in India and abroad – this helps us to get the best price. We can also find out about many other important things – weather forecasts, the latest farming techniques, crop insurance, etc. e-Choupal has not only changed the quality of our lives, but our entire outlook

    ITC Limited has now provided computers and Internet access in rural areas across several agricultural regions of the country, where the farmers can directly negotiate the sale of their produce with ITC Limited. This online access enables farmers to obtain information on mandi prices, and good farming practices, and to place orders for agricultural inputs like seeds and fertilizers. This helps farmers improve the quality of their products, and helps in obtaining a better price. Each ITC Limited kiosk having Internet access is run by a sanchalak — a trained farmer. The computer is housed in the sanchalak’s house and is linked to the Internet via phone lines or by a VSAT connection. Each installation serves an average of 600 farmers in the surrounding ten villages within about a 5 km radius. The sanchalak bears some operating cost but in return earns a service fee for the e-transactions done through his e-Choupal. The warehouse hub is managed by the same traditional middle-men, now called samyojaks, but with no exploitative power due to the reorganisation. Indeed these middlemen make up for the lack of infrastructure and fulfill critical jobs like cash disbursement, quantity aggregation and transportantion.
    Since the introduction of e-Choupal services, farmers have seen a rise in their income levels because of a rise in yields, improvement in quality of output, and a fall in transaction costs.

    Even small farmers have gained from the initiative. Customized and relevant knowledge is offered to the farmers despite heterogeneous cultures, climates and scales of production. Farmers can get real-time information despite their physical distance from the mandis. The system saves procurement costs for ITC Limited. The farmers do not pay for the information and knowledge they get from e-Choupals; the principle is to inform, empower and compete. At the same time ITC Limited has obtained benefits from the programme:
    elimination of non value added activities differentiated product through identity preserved supply chains value added products traceable to farm practices e-market place for spot transactions and support services to futures exchange. There are presently 6,500 e-Choupals in operation. ITC Limited plans to scale up to 20,000 e-Choupals by 2012 covering 100,000 villages in 15 states, servicing 15 million farmers.

    • லிபர்டேரியன்,

      தனியார்,தாராளமயமாக்கலை ஆதரிக்கும் உங்களிடம் சில வினாக்கள்.

      1.உங்கள் வாதப்படி நாடு திவாலாகி பெரும் பணவீக்கம் ஏற்பட்டு நாசமாக போகாமல் காப்பாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த தா.த.உ.மயமாக்கல் அமுலுக்கு வந்து இரு பத்தாண்டுகள் கழிந்த பின்னும் மைய இந்திய மாநிலங்கள் எட்டில் மட்டும் 42 கோடி பேர் வறுமையில் சிக்கி தவிப்பது தாராளமயமாக்கலின் சாதனை என கொள்ளலாமா. .இது சகாரா பாலைவன நாடுகளில் வாழும் ஏழைகளின் எண்ணிக்கையை விட கூடுதலானது.இந்திய மக்களின் ஏழ்மையை ஒழிக்கத்தவறிய இந்த பொருளாதார நடைமுறை நாட்டுக்கு தேவையா.
      http://www.thehindu.com/news/national/article512387.ece

      2. இந்திய மக்களில் 41.6 விழுக்காட்டினர் உலக அளவில் வறுமை கோட்டின் அளவாக வரையறுக்கப்பட்டுள்ள 1.25 டாலருக்கும் குறைவான வருமானத்தில் காலம் தள்ளுகின்றனர்.இதையும் ஒரு சாதனை என கொள்ளலாமா.
      http://www.thehindu.com/news/national/article63692.ece

      3.இந்த சுட்டியில் உள்ள படத்தை பாருங்கள்.இது போன்ற நகர்புற சேரிகளின் வாழ்நிலையில் இந்திய மக்கள் தொகையில் பத்தில் ஒரு பகுதியை இருக்க வைத்து விட்டு நாடு முன்னேறுவதாக சொல்வது எத்தகைய மோசடி.கடந்த பத்தாண்டுகளில் இந்திய சேரி மக்கள் தொகையில் 1.8 கோடி கூடுதலாகி தற்போது அதன் எண்ணிக்கை 9.3 கோடி.இந்த படத்தில் காணப்படும் குடிசையில் ஒரே ஒரு நாள் தங்கியிருக்க மன்மோகன் சம்மதிப்பாரா.

      http://www.thehindu.com/news/national/article896697.ece

      • திப்பு,

        தாரளமயமாக்கல் முழுசா ஒழுங்கா இன்னும் செய்யவில்லை. அதை விட முக்கியமாக, கடந்த காலங்கள் செய்த முட்டாள்தனங்கள், அயோக்கியத்தனங்களின் நிகர விளைவுகள் இன்றும் தொடர்கின்றன. அத்தனை சுலபமாக உடனடியாக தீர்வு காண முடியாது. இந்த தாரளமயமாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், வறுமை அளவு இன்னும் மிக மிக அதிகமாக இருந்திருக்கும். இந்த விவாதம் இங்கு நம்மிடம் இப்படி இணையத்தில் சாத்தியாமாகியிருக்காது. பர்மா போல் இருந்திருப்போம்.

        இதற்க்கு தீர்வு உங்க வழிமுறைகளில் இல்லை. சாத்தியமும் இல்லை. வறுமையை ஏறக்குறைய வென்ற இதர ஆசிய நாடுகள் பற்றி எழுதியிருக்கிறேன். நம்மை விட பின் தங்கி இருந்த நாடுகள், இன்று வளர்ந்த நாடுகளாக மாறி உள்ளன. நாம் தான் கோட்டை விட்டு விட்டோம்.

        • லிபெர்டரியன்,
          இந்திய மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியவில்லை.தாராளமயமாக்கல் முழுமையடையாததால் வறுமையை போக்க முடியவில்லை என்கிறீர்கள்.”பாதி” நிறைவேற்றிய நிலையிலேயே ஆப்ரிக்க நாடுகளை விட கீழான நிலைக்கு கொண்டு போய் விட்டது. இன்னும் ”முழுமை” அடைந்தால் நாடு என்ன ஆகுமோ. இந்திய மக்கள் மீது அப்படி என்ன உங்களுக்கு அடங்காத ஆத்திரம்.

          இப்போதைய ஏகாதிபத்திய அடிவருடி ஆட்சியாளர்கள் தாராளமயமாக்கலை அமுல் படுத்துவதில் நான்குகால் பாய்ச்சலில் போய் கொண்டிருக்கிறார்கள். சில்லறை வணிகம் முதற்கொண்டு எதையும் விட்டு வைப்பதாக இல்லை. இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் குழி தோண்டி புதைப்பதற்கான வேலைகளை கனகச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
          பார்க்க சுட்டி.
          http://www.thehindu.com/news/national/article1200623.ece

          அவர்களே ஏழ்மையை தாராளமயமாக்கல் ஒழித்து விடும் என்று ஒப்புக்கு கூட சொல்வதில்லை.அவர்கள் சார்பாக நீங்கள் சொல்கிறீர்கள்.\\ அத்தனை சுலபமாக உடனடியாக தீர்வு காண முடியாது. இந்த தாரளமயமாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், வறுமை அளவு இன்னும் மிக மிக அதிகமாக இருந்திருக்கும்.//

          ”more loyal than the king”என்ற ஆங்கில பழமொழிக்கு அருமையான எடுத்துக்காட்டு நீங்கள்.

        • ////”பாதி” நிறைவேற்றிய நிலையிலேயே ஆப்ரிக்க நாடுகளை விட கீழான நிலைக்கு கொண்டு போய் விட்டது. இன்னும் ”முழுமை” அடைந்தால் நாடு என்ன ஆகுமோ. இந்திய மக்கள் மீது அப்படி என்ன உங்களுக்கு அடங்காத ஆத்திரம்///

          திப்பு,

          இதுதான் உமது புரிதலா ? 1980கள் வரை இருந்த நிலை பற்றி அறியாமையில் உள்ளீர்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும். சரி, இந்த தாரளமயமாக்கலை reverse செய்து பழைய நிலைக்கே சென்றுவிட போராடுங்கள். நிகழ்த்துங்கள். அப்பறம் புரியும்.

          எமது பழைய பதிவுகள் :

          http://nellikkani.blogspot.com/2007/09/blog-post.html
          வறுமைக்கு காரணமும், விளைவுகளும்

          Shining for the poor too ? (EPW report)

          https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B-zhDOdupGDUMzFjMDAyOWUtOTI4OS00YmJkLWI2N2UtNTllNTM0ODE2Yjc4&hl=en

        • ஆம்,லிபெர்டரியன்,
          இதுதான் எனது புரிதல்.அது சரியான புரிதல்தான்.தவறானது என்பது உமது கருத்தென்றால் எப்படி தவறானது என விளக்குவதை விடுத்து வழக்கம் போல் அறியாமை என்று கதைக்கிறீர்கள்.

          மேலும் 90 க்கு முந்தைய இந்தியா ”மண்ணுலகில் ஒரு பொன்னுலகம்”ஆக இருந்தது என்பது எனது கருத்தல்ல.அப்போதும் வறுமை தாண்டவமாடியது.இப்போதோ அது கோரத்தாண்டவமாடுகிறது என்பதே எனது வாதம்.வறுமையின் கொடுமையை நிறுவும் வகையில் சுட்டிகளையும் கொடுத்திருக்கிறேன்.

          வறுமை ஒழிப்பில் தாராளமய காலத்தை விட அதற்கு முந்தைய காலம் தரக்கேடில்லை [பரவாயில்லை] .பார்க்க சுட்டி;
          http://timesofindia.indiatimes.com/india/One-third-of-worlds-poor-in-India-Survey/articleshow/3409374.cms

          90 க்கு முன்பு இந்தியா ஏழை நாடு,வறுமையை ஒழிப்போம்,நாங்கள் ஏழை பங்காளர்கள், வறுமையே வெளியேறு என்று வாயளவிலாவது ஆட்சியாளர்கள் சொல்லி கொண்டிருந்தார்கள். இப்போதோ இந்தியா வளர்ந்து வரும் மாபெரும் பொருளாதார ஆற்றல்,எதிர்கால வல்லரசு,இந்தியா ஒளிர்கிறது,8 9,10 விழுக்காடு வளர்ச்சி,என்று கூச்சல் போட்டு உண்மையில் வளர்ச்சியின் பயன்களை ஒரு சிறு கூட்டம் அனுபவித்து கொண்டு பெரும்பாலான மக்களை ஒட்ட சுரண்டி ஓட்டாண்டிகளாக்கி கொண்டிருக்கிறது.வளர்ந்து வரும் வறுமையின் கொடுமையே இதற்கு சான்று.
          மக்கள் அதை உணர்ந்து விடாமல் தடுக்க வல்லரசு கனவில் மூழ்கடித்து வெற்று பெருமை பேச வைத்திருக்கிறார்கள்.அதனால்தான் பாதுகாப்பான குடிநீர் வசதியின்றி பல லட்சம் சிற்றூர்கள் தவித்திருக்க சந்திரனில் தண்ணீரை கண்டுபிடிக்க கேட்பார் யாருமின்றி பல லட்சம் கோடிகளை வாரியிறைக்கிறது ஆட்சியாளர்கள் என்ற ஊதாரி கும்பல்.நீங்களே உங்கள் இடுகை ஒன்றில் குறிப்பிட்டது போல் பல்லாயிரம் கோடிகளை ராணுவத்துக்காக வாரியிறைக்கிறது. [இந்த ஆண்டு பாதுகாப்பு துறைக்கான ஒதுக்கீடு 1,60,௦௦௦ 000.கோடிகள்].உலகிலேயே மிகப்பெரிய அளவில் ஆயுத கொள்முதல் செய்யும் நாடு இந்தியாதான்.வல்லரசு போதையில் இதை யாரும் கேள்வி கேட்பதில்லை.

          ஆக மொத்தத்தில் மக்களை ஏமாற்றி ஆளும் வர்க்க கும்பல் நாட்டை கொள்ளையிடவே தாராளமயமாக்கல் பயன்படுகிறது.

    • அதியமான் அவர்களுக்கு,

      நீங்கள் கொடுத்திருந்த சுட்டியை கவனமாக பட்டித்தேன். அதன் பிறகு ஃப்யூச்சர்ஸ் டிரேடிங் பற்றி அபிஜித் சென் கமிட்டி அரசுக்கு அளித்த அறிக்கையையும் கவனமாகப் படித்தேன்.

      http://www.fmc.gov.in/htmldocs/Abhijit%20Sen%20Report.pdf

      அக்கமிட்டியின் முக்கியமான முடிவுகளானவை:

      1) ஃபியூச்சர்ஸ் மார்கெட்டினால் ரிஸ்க் மானேஜ்மெண்ட்டுக்கு எந்த நன்மையும் இல்லை.
      2) ஃபியூச்சர்ஸ் பங்குசந்தை ஸ்பெக்குலேட்டர்களுக்குத்தான் சாதகமாக இருக்கிறது, ஹெட்ஜிங் மூலம் ரிஸ்க்கை குறைக்க உதவவில்லை.
      3) விவசாயப் பொருட்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான விலையை கண்டு பிடிப்பதிலோ, ரிஸ்க்கை குறைப்பதிலோ,விலையில் நிச்சயமற்ற தன்மையை குறைக்கவோ இந்த ஃபியூச்சர்ஸ் எக்ஸ்சேஞ்சுகள் உதவவில்லை என்பதுதான் உண்மை.

      கிட்டத்தட்ட இதே முடிவுகளை வேறு சில ஆராய்சிகளும் சொல்கின்றன.
      http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1087904

      The upshot of all this is that the spectacular growth of National Exchanges has not
      been accompanied so far by significant delivery on any of the benign contributions
      expected from futures markets: price discovery, provision of more reliable risk
      management tools or reduced spot price volatility.

      துண்டை போட்டு கையை மூடிக்கொண்டு வியாபாரிகளும் ஏஜெண்டுகளும் நடத்தும் பேரமானாலும், (http://hubpages.com/hub/Great-Agricultural-Produce-Market-Committee-APMC-towel-trick-decides-your-onion-price) கம்ப்யூட்டர் திரைக்கு முன்னால் அமர்ந்து செய்யும் பேரமானாலும் சரி, விவசாயிக்கு கிடைப்பது என்னவோ பட்டை நாமம்தான் என்பது தெளிவு.

      for Marxists speculation does not cause shortages, though shortages can lead to speculation – which makes the shortages worse. (http://www.marxist.com/hedge-funds-speculation-and-capitalism.htm)

      So the problem is capitalism, not speculation. Prices go up anyway because capitalism is unplanned. Capitalism inevitably creates shortages at some points and gluts elsewhere. Firms go bust and workers lose their jobs because that’s how capitalist ‘competition’ works.

      • ராம்,

        MCX exchange மிக அருமயான சேவை செய்கிறது. அதன் ஆய்வறிக்கையை முழுசா படிச்சீங்களா ? உருளை கிழங்கு விவசாய்கள் அடையும் புதிய பயன்களை பற்றி படித்து பாருங்க. அதை பற்றி நீங்க அளித்த சுட்டிகள் என்ன சொல்கின்றன ? ITCயில் e-choupals என்ன சிக்கல்களை அளிக்கனறனவாம் ? விவசாயிகள் மற்றும் social activists யாரும் இவற்றை எதிர்க்கவில்லையே. ஏன் ?

        சரி, இதெல்லாம் இருக்கட்டும். மிக எளிமையான கேள்வி : நீங்கள் வசிக்கும் கனடாவில் அல்லது அமெரிக்காவில், அய்ரோப்பாவில், பல commodity trading exchangesகள் வெற்றிகரமாக இயங்குகின்றன. futures trading in food and agri products பல பத்தாண்டுகளாக நடக்கின்றன. அவ்வப்போது பொருளாதார சுழ்ற்சிகள், பற்றாகுறைகள் அங்கும் உண்டு. ஆனால் யாரும் இதுவரை இந்த forward tradingஅய் குறை சொல்லவில்லை. இங்கு போல் தடை செய்ய முயல்வதில்ல. ஏன் ?

        இந்தியாவின் நிலை வேறு. சிக்கலானது. lot of distortions while agriculture is still not in the full capitalistic production mode. மேலும்..

      • // Prices go up anyway because capitalism is unplanned. ///

        Ram,

        Very very wrong assumption. It seems you have not followed my lengthy arguments with Sathukka Bootham about the root causes of inflation and business cycles. In India, we had enormous amounts of inflation precisely due to this ‘planning’ in the heydays of planning. Germany had lowest rates of inflation while implementing free market polices as against ‘planning’ ;

        sure, this recession is caused partly by investment banks uncontrolled speculation. But they were incentivised by US Fed and US govt policies. Pls go thru my debate with Sathukka bootham here recently.

        agriculture in India is fragmented (due to this stupid land ceiling acts) and lots of middlemen between the producer and the consumer. more distortions. It is a complex issue.

        • அதியமான் அவர்களுக்கு,

          யு.எஸ், கானடா, ஐரோப்பிய நாடுகளில் commodity exchangeகள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவதும் விவசாய விளைபொருட்களை சந்தை படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதையும் நான் அறிவேன். ஆனால் இந்தியாவில் இத்தகைய exchangeகள் அறிமுகப்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள் எத்தனை தில்லுமுல்லுகள், சூதாட்டங்கள், மோசடிகள். ஏன் இந்த நிலை? உதாரணமாக “டப்பா ட்ரேடிங்” முறையை சொல்லலாம்.

          http://www.indianexpress.com/news/dabba-trading-hurting-investors-ncdex/662120/0

          அடிமட்டத்தில் இருக்கும் விவசாயியோ, அன்றாடங்காய்ச்சிகளும், குறைந்த மாத சம்பளக்காரர்களுக்கும், இந்த commodity exchangeகளினால் எதாவது நன்மை நடந்திருக்கிறதா என்று சொல்லுங்கள்?

        • Ram,

          Why are you neither reading nor analysing my links, esp the one about MCX and menthol farmers in UP, while you continue to argue for argument sake ? Indian scene is different and the reach and depth of these new commodity exchanges in very limited when compared to US. this is only the beginning. it may take decades to evolve into mature markets. most importantly, Indian agriculture system is fragmented with average land holding of about 1 acre, and modern farming technics and inputs are sadly lacking. But in the west, you know the situation.

          I had pointedly asked you whether these commoditiy exchanges there in the west have been accused of promoting only speculation and price rise and is against the interests of the people and farmers ? any such arguments there ? why not ? why all these arguments only here in India ?

          So what do you suggest? close down all these new exhanges in India and ban all kinds of forawrd trading ?

        • ராம்,

          நீங்க அளித்த சுட்டியில் இருந்து :

          The dabba trading is exactly the same like any other trading on the exchange, the only difference is that the investor’s trades do not get executed on the stock exchange system but in the dabba operator’s books only.

          A dabba operator acts as a principal to all the trades and not as an agent of the client.

          Stressing that there have been many instances of commodity investors having lost their money in Dabba trading, he cautioned investors to stay away from it and invest through recognized commodity exchanges.

          இந்த டப்பா டிரேடிங் என்பது சட்ட விரோதமாக, ரகசியமாக நடை பெறுவது. வெட்டு சீட்டு போல். இதில் பணத்தை இழக்காதீர்கள் என்று சொல்கிறார் NCDEX அதிகாரி.

          உங்க சுட்டியில், சட்ட ரீதியாக நடக்கும் commodity exchangesகள் பற்றி எதிர்மறையாக ஒன்றும் இல்லையே ? நாம் விவாதம் செய்வது அதை பற்றி தானே ? பல வகையான ரகசிய சூதாட்டங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் உங்க சுட்டி ஒரு வகையை பற்றி பேசுகிறது. அதை தடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.

  24. லிபர்டேரியன், உங்க அளவுக்கெல்லாம் எனக்கு பொருளாதாரம் பேசத் தெரியாது. இந்த தனியார்மயம் மக்களுக்கானதா? முதலாளிகளுக்கானதா? அப்பறம் இந்த ஊழல் ஊழல்ன்னு பேசிக்கிறாங்களே அதுக்கும் தனியார்யத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? முக்கியமா ஊழல் நல்லதா? கெட்டதா?

  25. ///விளைவு, கச்சாப் பருத்தியில் நமது உற்பத்தி உபரியாக இருந்தும் நமக்கு விலை உயர்வு.////

    இல்லை. அத்தனை சிம்பிள் இல்லை. பருத்தி உற்பத்தியில் ஒரு பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி முற்றிலும் தடை செய்யப்பட்டால், விவசாயிகளுக்கு விலை கிடைக்காது. அதே சமயம் ஏற்றுமதி தடையில்லாமல் தாரளமாக அனுமதிக்கப்பட்டால், ஜவளி துறை பாதிக்கப்படும். இரண்டிற்க்கு ஒரு balance செய்ய வேண்டிய நிலை. முதலில் பருத்தி உற்பத்தி எவ்வளவு என்பதை பற்றி accurate data கிடைப்பதில்லை. அல்லது தாமதம் ஆகிறது. vested interests வேறு இடையில் புகுந்து குழப்பி, குட்டையில் மீன் பிடிக்கும் ஊழல் பிரச்சனை வேறு உண்டு. கருப்பு பணமும் புகுந்து விளையாடும்.

    ஆனால் இந்த ஆண்டு உலகெங்கிலும் பருத்தி விலை அதிகரித்தே உள்ளது. பல காரணிகள் உண்டு.

    சரி, இதெல்லாம இருக்கட்டும். ஒரு கற்பனையான scenario :

    1. Let us assume that there is a perfect balance between demand and supply in commodities market (world wide or within a system) and full information is freely available to all stakeholders. And suppose future projections about change in demand is readily met by projected change in supply. no shortages or mismatches.

    2. Suppose if all govts of the world balance their budgets perfectly and increase money supply exactly in proportion to the increase in their GDPs, so that real inflation levels are less than 0.5 %. That is the liquidity in the system is neither in excess nor in deficit but perfectly equals to the real production.

    In the above scenario, if full free market forces are allowed to play in the forward markets and speculative markets, then will there be price rises matching todays trends ?

    இப்படி ஒரு சூழ்நிலையில், யூக வணிகம் ‘தாரளமாக’ அனுமதிக்கப்ட்டால், அதன் விளைவாக பண்டங்களின் விலை கண்டபடி உயர்ந்தால், பிறகு நீங்கள் சொல்வதை ஏற்பேன். யூக வணிகமே முற்றாக தடை செய்யப்பட வேண்டியது என்பதை ஒத்துகொள்வேன்.

    • /////விளைவு, கச்சாப் பருத்தியில் நமது உற்பத்தி உபரியாக இருந்தும் நமக்கு விலை உயர்வு.////

      இல்லை. அத்தனை சிம்பிள் இல்லை. பருத்தி உற்பத்தியில் ஒரு பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி முற்றிலும் தடை செய்யப்பட்டால், விவசாயிகளுக்கு விலை கிடைக்காது. அதே சமயம் ஏற்றுமதி தடையில்லாமல் தாரளமாக அனுமதிக்கப்பட்டால், ஜவளி துறை பாதிக்கப்படும். இரண்டிற்க்கு ஒரு balance செய்ய வேண்டிய நிலை. முதலில் பருத்தி உற்பத்தி எவ்வளவு என்பதை பற்றி accurate data கிடைப்பதில்லை. அல்லது தாமதம் ஆகிறது. vested interests வேறு இடையில் புகுந்து குழப்பி, குட்டையில் மீன் பிடிக்கும் ஊழல் பிரச்சனை வேறு உண்டு. கருப்பு பணமும் புகுந்து விளையாடும்.

      ஆனால் இந்த ஆண்டு உலகெங்கிலும் பருத்தி விலை அதிகரித்தே உள்ளது. பல காரணிகள் உண்டு.

      சரி, இதெல்லாம இருக்கட்டும். ஒரு கற்பனையான scenario :

      1. Let us assume that there is a perfect balance between demand and supply in commodities market (world wide or within a system) and full information is freely available to all stakeholders. And suppose future projections about change in demand is readily met by projected change in supply. no shortages or mismatches.

      2. Suppose if all govts of the world balance their budgets perfectly and increase money supply exactly in proportion to the increase in their GDPs, so that real inflation levels are less than 0.5 %. That is the liquidity in the system is neither in excess nor in deficit but perfectly equals to the real production.

      In the above scenario, if full free market forces are allowed to play in the forward markets and speculative markets, then will there be price rises matching todays trends ?

      இப்படி ஒரு சூழ்நிலையில், யூக வணிகம் ‘தாரளமாக’ அனுமதிக்கப்ட்டால், அதன் விளைவாக பண்டங்களின் விலை கண்டபடி உயர்ந்தால், பிறகு நீங்கள் சொல்வதை ஏற்பேன். யூக வணிகமே முற்றாக தடை செய்யப்பட வேண்டியது என்பதை ஒத்துகொள்வேன்.//

      நெருப்பே இல்லாமல் புகை விடும் சூதாட்ட டெக்னிக் இன்னும் பரவலாகவில்லையே அதியமான்? அதனால் அடிப்படையில் சில, பல பிரச்சினைகள் இருப்பதை ஊதிப் பெருக்க வைத்து சூதாடி மக்களின் வாழ்வில் விளையாடுவதுதான் இங்கு பிரச்சினையே. அதை நீங்களும் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். பிறகு என்ன உங்களுக்கு குழப்பம்?

      பெட்ரோல், உணவு, பருத்தி போன்ற உதாரணங்கள் அனைத்திலும் சப்ளை, டிமாண்டு என்கிற உறவு பெரியளவில் பாதிக்கப்படாத பொழுதும் கூட அரசியல், பொருளாதார ஊகங்களின் அடிப்படையில் சூதாடிகளே போலியாக பற்றாக்குறை இருப்பது போலவோ, உபரி இருப்பது போலவோ முன்னிறுத்தி சூதாடி விலையேற்றுதானே இங்கு பிரச்சினை? அந்த விலையேற்றம்தானே ஒரே மாதத்தில் இருமுறை பெட்ரோல் விலை உயர்வாகவும், பருத்தி பற்றாக்குறையாகவும், உணவுப் பொருள் விலையேற்றம் (அல்லது விலைச்சரிவு) உலகளவில் ஏற்பட்டு அது இன்னும் பல கோடி பேரை வறுமையில் தள்ளும் என்று ஐநா சபை போன்றோர் புலம்புவதாகவும் நிலை உருவாக்கியுள்ளது? இந்த ஏற்றம்/இறக்கத்திற்கும் மக்களின் வாங்கும் சக்தியின் ஏற்ற/இறக்கத்திற்கும் சம்பந்தமே இல்லையே? இந்த இடைவெளி உருவாக்கும் அபரிமித லாபம் எங்கு செல்கிறது? சூதாடிகளின் சட்டைப் பைக்குத்தானே?

      இந்த இடம் எங்குமே ஊக வணிகத்தின் பலன் என்பது சில பல நிதி முதலீட்டு சூதாடிகளின் அபரிமித லாபம் என்கிற விசயம் தவிர்த்து வேறொன்றும் நல்லதாக கண்ணுக்குப் புலப்படவில்லையே? சூதாடிகளுக்கு மட்டும் பலனளிக்கிற ஒன்றை நல்லது என்று ஏற்றுக் கொள்வது நகைப்புக்கிடமானது.

      • மேலும் நீங்களே சொல்வது போல ஊக வணிகம் இல்லாத காலத்திலும் இதே போன்ற விலைவாசி உயர்வுகள் இருந்தது என்று. நாங்கள் இந்த அளவுக்கு இல்லை அது கொஞ்சம் பரவாயில்லாத நிலைமைதான் என்கிறோம். எப்படிப் பார்த்தாலும் ஊக வணிகம் இல்லாத காலகட்டம் என்பது இன்றுள்ள நிலையை விட மோசமானது இல்லை எனும் போது என்னாத்துக்கு அதை கட்டிக் கொண்டு அழ வேண்டும்?

  26. லிபர்டேரியன், ஒரு நாட்டின் திட்டமிட்ட பொருளாதாரம் அந்நாட்டை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லுமா? தாராளவாதப் பொருளாதாரம் இட்டுச் செல்லுமா?

  27. //ஏற்றுமதி வெங்காயத்தை உள்நாட்டுச் சந்தைக்குத் திருப்பி விட்டாலும் அது சந்தையின் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யாது. இரண்டு – சென்ற நிதியாண்டின் உற்பத்தியில் ஏற்றுமதி அளவைக் கழித்து விட்டால் ஏறக்குறைய இந்த ஆண்டின் உற்பத்தி அளவை எட்டுகிறது.//

    வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை கிலோவுக்கு ரூ. 4-5 க்கு சரிந்து விட்டதால், தடை செய்யப்பட்டிருந்த ஏற்றுமதியை மீண்டும் அனுமதிக்க கோரி விவசாயிகள் போராட்டம்.

    http://timesofindia.indiatimes.com/city/mumbai/Centre-likely-to-lift-onion-export-ban/articleshow/7478571.cms

  28. லிபர்டேரியன் அவர்களுக்கு,
    1.உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தி, சர்வதேச சந்தைக்கான உற்பத்தி எது நன்மை? (மக்களுக்கு)
    2.தாராளவாத பொருளாதாரம், திட்டமிட்ட பொருளாதாரம், எது சரி?
    3.உற்பத்தி சார்ந்த பொருளாதாரம், சூதாட்டப் பொருளாதாரம், எது சரி?
    4.தண்ணீர் லாபத்திற்கா, தாகத்திற்கா?
    5.ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டுமா? தனியார் முதலாளிங்க கட்டுப்படுத்த வேண்டுமா?
    6.தனியார்மயம் மக்களுக்கா? உலக் முதலாளிங்களுக்கா?
    7.ஊழலை ஒழிக்க, கடும் தண்டனை, முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டுவது எது தீர்வு?
    8.விலைவாசிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சந்தைக்கான உற்பத்தியா? தேவைக்கான உற்பத்தியா?
    9.தனியார்மயம் மேலிருந்து திணிக்கப்பட்டதா? அல்லது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றா?
    10.இந்திய பட்ஜெட்டைத் தீர்மானிப்பது உலக வங்கியா? உள்ளூர் மந்திரியா?
    …………………. …………………????????????
    இக்கேள்விகளுக்கு yes, or no என்ற வகையில் பதில் சொல்லிவிட்டு அப்புறம் சொல்லுங்கோ “நான் தனியார்மய ஆதரவாளந்தான்” என்று.

Leave a Reply to Libertarian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க