privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்மரணம் தொடரும் கொடூரம்! மருத்துவத்துறையில் தனியார்மயம்!!

மரணம் தொடரும் கொடூரம்! மருத்துவத்துறையில் தனியார்மயம்!!

-

 

 

சிவகங்கை நகருக்கு அருகிலுள்ள வல்லாங்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் நடுத்தர விவசாயி சிவலிங்கத்தின் மகன் முத்துராஜா. இவருக்கு வயது 19. இவர் சிவகங்கை அரசு மன்னர் கல்லூரியில் இளங்கலை கணிதவியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த 11.12.2009 அன்று இராமனாதபுரத்தில் நடந்த போலீஸ் தேர்வில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பிய போது  காய்ச்சல் அடித்ததால் சிவகங்கை அரசுப் பொது மருத்துவமனைக்கு மதியம் 2.30 மணிக்கு சிகிச்சைக்காக நண்பர்களோடு வந்துள்ளார். அவரை சோதித்த மருத்துவர் ரத்தப்பரிசோதனை செய்யச் சொல்லியிருக்கிறார். மானாமதுரை மாதா நர்சிங் பயிற்சிக் கல்லூரிப் பயிற்சி மாணவிகள் முத்துராஜாவை ரத்தப்பரிசோதனை செய்வதற்காக ரத்தம் எடுத்துள்ளனர். சரியான முறையில் ரத்தம் எடுக்கப்படாததால் முத்துராஜாவின் கை வீங்கியுள்ளது.  மறுநாள் கழுத்து, மார்பு என வீக்கம் பரவ ஆரம்பித்துள்ளது.

இதனால் அவரை மதுரையிலுள்ள ஜெ.கே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிக்கிறார்கள். அங்கு போதிய வசதிகள் இல்லையென சொல்லிவிட்டபடியால் 15.12.2009 அன்று மதுரை மீனாட்சி மிஸன் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றுள்ளனர். உடனடியாக அய்.சி.யூ பிரிவில் முத்துராஜா  அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறு நாட்களுக்குப் பிறகு கடந்த 21.12.2009 அன்று காலை 8.30 மணிக்கு முத்துராஜா இறந்துவிட்டதாகச் சொல்லி உடலை மருத்துவமனையினர் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டனர்.

தவறான முறையில் ரத்தம் எடுத்த மாதா நர்சிங் பயிற்சிக்கல்லூரி மாணவிகள் மீதும் அரசு மருத்துவமனையின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முத்துராஜாவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அரசுக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினார்கள்.  உடலைப் பிரேதப்பரிசோதனை செய்வதற்கு முத்துராஜாவின் தந்தை சம்மதிக்காததால் பிரேதப்பரிசோதனை செய்யப்படாத முத்துராஜாவின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது. பிரச்னை எப்போதும் வெடிக்கலாம் என்பதால் கல்லூரியை பத்து நாட்களுக்கு மூடிவிட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்பாக பாம்பு கடித்துக் கொண்டுவரப்பட்ட பள்ளி மாணவியை மருத்துவர் பழனிக்குமார் பார்க்கவே வராமல் போனதால் சிவகங்கை அரசுப் பொது மருத்துவமனையிலேயே இறந்துபோய் பெரும் பிரச்னை ஏற்பட்டது.

பரிசோதனைக்காக ரத்தம் எடுக்கப்பட்டபோது ஸிரிஞ்சுக் குழாயில் காற்று இருந்துள்ளது. ரத்தம் எடுத்த பயிற்சி மாணவி காற்றை ரத்தக்குழாய்க்குள் அழுத்தி செலுத்திவிட்டபடியால் காற்று உட்புகுந்து ரத்தம் ஆங்காங்கே உறைய ஆரம்பித்துள்ளது. இந்த ரத்த உறைவுதான் மாணவர் முத்துராஜாவின் மரணத்திற்குக் காரணம் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

நர்சிங் பயிற்சிக்கல்லூரி மாணவியின் தவறுதான் இதற்குக் காரணம் என்றாலும் இதற்கும் மூலமாகச் சில காரணங்கள் உள்ளன.

பயிற்சிக் கட்டணமாக 50,000, ஒரு லட்சம் என வாங்கும் மருத்துவப் பயிற்சிக் கல்லூரி முதலாளிகள் தங்களது மாணவர்களை அப்போலோ, மீனாட்சி மிசன், விஜயா, மலர் போன்ற தனியார் நட்சத்திர மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்காக அனுப்புவதில்லை, மாறாக அரசுப் பொது மருத்துவமனைக்குத்தான் அனுப்புகிறார்கள். பயிற்சிபெறும் மாணாக்கர்களுக்கு பரிசோதனைக்கூடமாக அரசாங்க மருத்துவமனைகள் இருக்கின்றன, பரிசோதிக்கப்படும் எலிகளாக ஏழை, எளிய மக்கள் இருக்கிறார்கள்.

பயிற்சிக்கு வரும் மாணவ, மாணவியரை நோயாளிகளுக்கு நேரடியாகப் பரிசோதனையும், சிகிச்சையும் செய்யும் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு தங்களது கிளினிக்குகளுக்கு ஆள் பிடிக்கும் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள். இது போன்ற தவறு, அலட்சியங்களால் உயிரிழந்த சிறார்கள், கர்ப்பிணிகள், சிசுக்கள் ஏராளம். இவ்வாறான தவறுகளெல்லாம் மிகப் பெரும்பாலும் மூடிமறைக்கப்படுகின்றன. தனியார் கல்லூரி முதலாளிகள், கல்லூரி துவங்கியது முதற்கொண்டு தான் செய்து வருகிற லஞ்சம் கொடுக்கிற வேலையின் மூலமாக  அரசு மருத்துவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், போலீசு, பத்திரிகைகள் வரை வாயடைக்கின்றன. இடையில் விசயம் கசிந்தவுடன் உடனே ஓடிவருகிற ஓட்டுக்கட்சிக் குட்டி அல்லக்கைகளிலிருந்து நகர்மன்ற,  சட்டமன்ற, நாடாளுமன்ற பெரிய அல்லக்கைகள் வரையிலும், கவனித்துவிடுகிறது.

அதிலும் மரணமடைவது முத்துராஜா போன்ற மாணவர்களாக இருந்தால் கல்லூரி நிர்வாகத்தையும், மாணவர்களின் பிரதிநிதிகளையும் கூட நைச்சியமாக வளைத்துவிடுகிறது.

முத்துராஜாவின் சிகிச்சைக்காக மீனாட்சி மிசன் மருத்துவமனை கேட்டது 5 லட்சம் வரை என மாணவர்கள் சொல்கிறார்கள். கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முடிந்தவரை வசூலித்துவிடலாம் என தைரியமாகப் பில்லைப் போடுகின்றன தனியார் மருத்துவமனைகள். சாதாரணத் தலைவலி என்றாலும் கூட ஸ்கேன், டெஸ்ட், மருந்துகள் எனப் பல ஆயிரங்களை வெகுவிரைவாக சுருட்டுகின்றன. கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது, அரசுப்பணத்தை தனியார் மருத்துவத்துறை முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டமே தவிர வேறொன்றுமல்ல. இது கலைஞர்-முதலாளிகள் மருத்துவச் சுருட்டீட்டுத்திட்டம்.

அரசு மருத்துவமனைக்குள் மாணவராக நுழைபவரை ஒரு மருத்துவராக உருவாக்குவதற்கு அரசானது 5 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கிறது. இது மக்களின் வரிப்பணம். ஆனால் மருத்துவப்படிப்பிற்குள் நுழைவதற்கே 5 லட்சம் நன்கொடை வாங்கும் முதலாளிகள் இங்கு இருக்கிறார்கள். இவர்கள் ஏன் பயிற்சிக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள்? கூடுதலான பயிற்சி பெறுவதற்காகவா? இல்லை. அவர்களது கல்லூரிகளில் இந்த வசதிகள் இல்லையென்பதால்தான் அனுப்பி வைக்கிறார்கள். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வேண்டுமானால் அவர்களிடம் இருக்கலாம், ஆனால், விதவிதமான நோயாளிகளுக்கு எங்கே போவார்கள்? எந்த மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரிகள் பொது மருத்துவமனைகளை நடத்துகின்றன?

ஒரு வகுப்பிற்கு 60, 70 மாணவர்களைச் சேர்க்கும் கல்லூரிகள் பத்துப்பேரை மட்டும் பகுதி பகுதியாகப் பிரித்து பயிற்சிக்கு சீருடை, கழுத்தில் தொங்கும் அடையாள அட்டைகளோடு அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் தனக்கு ஒரு பெருமை இருப்பதாகக் காட்டிக்கொள்ள முனைகிறது. ஆனால் அவ்வளவும் மோசடியே!

இன்றைய முதலாளித்துவ உலகமயமாக்கப் பண்பாட்டுச்சூழலானது, மருத்துவத்தை மட்டுமல்ல, மருத்துவம் செய்யவேண்டும் என்கிற லட்சியத்தையும் வியாபாரச்சிந்தனையாக மாற்றியிருக்கிறது. மருத்துவப்பணி என்கிற அர்ப்பணிப்பான சேவை மனப்பான்மையை காசு பறிக்கும் கலையாக தனியார் மருத்துவத்துறை முதலாளிகள் மாற்றியிருக்கிறார்கள்.

காசுள்ளவனுக்கே கல்வி என்றாக்கியுள்ள மருத்துவக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடி முறியடிக்கவேண்டும். தனியார் மருத்துவக்கல்லூரிகளை அரசே எற்று நடத்த வேண்டும். அலோபதி தவிர ஹோமியோபதி மற்றும் சித்த வைத்தியக் கல்விக்கும் கூட மாவட்டந்தோரும் கல்லூரிகள் அமைக்கவேண்டும். இவர்களாக இதைச் செய்ய மாட்டார்கள் என்பது தெரிந்ததுதான். நாம்தான் அவர்களைச் செய்ய வைக்கவேண்டும்.

  1. <<>> உண்மையே உண்மை… மிகவும் கொடுமையான விசயம். இறந்தவர்களுக்கு என்ன இழப்பீடு செய்ய போகிறார்கள்? மருத்துவத்துறையே ஒரு சுழச்சிக்கு கொண்டுவர வேண்டும். இப்படிதான் எங்கள் ஊரில் பிரசவத்திற்கு அரசு மருத்துவமையில் சேர்த்த பெண்னை அந்த நேரம் டாக்டர் யாரும் இல்லாமல், நர்ஸ் மட்டும் இருந்து குழந்தையை தள்ளுவதற்காக பெண்ணின் வயிற்றில் ஏறி நின்றுள்ளார்… பாவம் குழந்தை பிறந்தவுடன் அப்பெண் இறந்து விட்டது… நமக்கு தெரிந்தது சிலதான் தெரியாதது பல உள்ளது… இவர்களுக்கு ஒரு முடிவு செய்ய வேண்டும். தயவு செய்து இவற்றை அதிகம் வெளிப்படுத்தவும்.

    • Mastan 

      //குழந்தையை தள்ளுவதற்காக பெண்ணின் வயிற்றில் ஏறி நின்றுள்ளார்…// நிஜமாவா? நம்புவதற்கு மட்டுமல்ல, நினைப்பதற்கே கஷ்டமாகவுள்ளது.  

  2. கலைஞர் காப்பீட்டு திட்டம் நல்ல முறையில் செயல்பட அதிகாரிகள் ஒத்துழைப்பு தேவை.ஆந்திராவில் வெற்றிகரமாக செயல்படுகிறது. இந்த திட்டம் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது என்பது நாங்கள் எடுத்த ஒரு சர்வே முடிவு.

  3. மற்றபடி நீங்கள் சொல்வது எல்லாம் இங்கு சாத்தியமில்லை.எழுதலாம், பேசலாம், வாழ்க்கையை அனுபவிக்கலாம் கஷ்டங்களொடு. அவ்வளவுதான

    • தண்டோரா அவர்களே! கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் இலட்சணத்தை பற்றி திருச்சி மருத்துவ கல்லூரி மாணவர்களுடன் விவாதிக்க தயாரா?

      • அதே திருச்சி மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ௩௬ மணிநேரம் வேலை செய்ய வைக்கப்படுகிறார்களே

        அதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்

        இது போல் தொடர்ந்து ஒருவர் ௩௬ மணிநேரம் வேலை செய்வது சரியா
        ஏன் வினவு அதற்கு எதிராக போராடவில்லை

        வாரவிடுப்பு கூட மறுக்கப்படும் திருச்சி மருத்துவ கல்லூரி மாணவர்களின் நலனிற்காக நீங்கள் போராடியது உண்டா

        கிடையாதே

        ஏன்

        அங்கு உங்களுக்கு பணம் கிடைக்காது

        பணம் கிடைக்கும் விஷய்த்தில் தான் நீங்கள் வரிந்து கட்டுவீர்கள்


        இங்கு கூட அந்த தனியார் பயிற்சி கல்லூரியை ப்ளாக்மெயில் செய்து பணம் பறிப்பது தான் உங்களின் நோக்கம்

        என்றால் திருச்சி மருத்துவ கல்லூரி மாணவர்கள் கொத்தடிமைகளாக
        வாரத்தில் ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல்
        தொடர்ந்து 40 மணி நேரம் வேலை செய்கிறார்கள

        நீ யோக்கியன் என்றால் அதை எதிர்த்து போராடு

        சும்மா ப்ளாக்மெயில் செய்யும் வேலை வேண்டாம்

    • //எழுதலாம், பேசலாம், வாழ்க்கையை அனுபவிக்கலாம் கஷ்டங்களொடு. அவ்வளவுதான//

      இது தான் நக்கிப் பிழைப்பதன் நேரடி உதாரணம்..!

      தண்டோரா பிச்சை போட்ட மவரசனை ஏன் நொள்ளை சொல்றீங்க என்கிறார்.

    • காசு கொடுத்தா “பீ”க்கு சென்டு அடிச்சு potpourri என் விக்கும் விளம்பரகாரவகுளுக்கு கலைஞர் திட்டம் என்னா எல்லா இழவு திட்டமுமே பணம்காய்ச்சி மரம்தான்..நக்குறதுக்கு கசக்குமா?

      • என்னண்ணே டபார்னு இப்புடி சொல்லிட்டியஎல்லாத்தையும் அப்பிடி சொல்…..ல முட்டியா…..துநல்லவங்களும் இருக்காங்ண்ணே

  4. /தண்டோரா அவர்களே! கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் இலட்சணத்தை பற்றி திருச்சி மருத்துவ கல்லூரி மாணவர்களுடன் விவாதிக்க தயாரா?
     அண்ணே கிளர்ச்சி.. நான் ஏன்?அதுக்கு நிறைய அரை டிக்கெட் இருக்கே!!

  5. தரகு முதலாளிகள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கு வசதியாக கிராமப்புற சாலைகளை அமைத்துவிட்டு மக்கள் போக்குவரத்திற்காக சாலை அமைத்ததாக கதை விடுவதில்லையா அதுபோல் தான் கலைஞர் காப்பீட்டுத்திட்டமும். தனித்தனியாக இதுபோன்ற நிகழ்வுகளை கேட்டுவிட்டு ஐயோ என்று இரங்கும் மனிதாபிமானிகள் அதில் ஒளிந்திருக்கும் அரசியலை வெளிப்படுத்தினால் சாத்தியமில்லை என்று பின் வாங்குகிறார்கள்.
    தோழமையுடன்செங்கொடி

  6. //சரியான முறையில் ரத்தம் எடுக்கப்படாததால் முத்துராஜாவின் கை வீங்கியுள்ளது. மறுநாள் கழுத்து, மார்பு என வீக்கம் பரவ ஆரம்பித்துள்ளது.//

    இரத்தம் எடுப்பதன் மூலம் இப்படி ஏற்பட வாய்ப்பே கிடையாது. எனவே உங்கள் குற்றச்சாட்டு தவறு

    // அங்கு போதிய வசதிகள் இல்லையென சொல்லிவிட்டபடியால் 15.12.2009 அன்று மதுரை மீனாட்சி மிஸன் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றுள்ளனர். உடனடியாக அய்.சி.யூ பிரிவில் முத்துராஜா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறு நாட்களுக்குப் பிறகு கடந்த 21.12.2009 அன்று காலை 8.30 மணிக்கு முத்துராஜா இறந்துவிட்டதாகச் சொல்லி உடலை மருத்துவமனையினர் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டனர்.//

    தவறான முறையில் இரத்தம் எடுப்பதால் ஒருவர் இறக்க முடியாது. இது முழு பொய். ப்ளாக்மெயில் செய்து பணம் பறிக்க கூறுவது

    //பரிசோதனைக்காக ரத்தம் எடுக்கப்பட்டபோது ஸிரிஞ்சுக் குழாயில் காற்று இருந்துள்ளது. ரத்தம் எடுத்த பயிற்சி மாணவி காற்றை ரத்தக்குழாய்க்குள் அழுத்தி செலுத்திவிட்டபடியால் காற்று உட்புகுந்து ரத்தம் ஆங்காங்கே உறைய ஆரம்பித்துள்ளது.//

    சிரிஞ்சிக்கும் இருக்கும் காற்று அதிகபட்சம் 1 சிசி. இது உள்ளே சென்றாலும் அதனால் இரத்தம் உறையாது – ஏய்ட்ஸ் கான்சர் போன்ற நோய்களில் தான் இரத்தம் உறையும்

    // இந்த ரத்த உறைவுதான் மாணவர் முத்துராஜாவின் மரணத்திற்குக் காரணம் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.//

    முழுப்பொய்

    //நர்சிங் பயிற்சிக்கல்லூரி மாணவியின் தவறுதான் இதற்குக் காரணம் என்றாலும் இதற்கும் மூலமாகச் சில காரணங்கள் உள்ளன.//

    தவறே காரணம் கிடையாது

    //பயிற்சிக் கட்டணமாக 50,000, ஒரு லட்சம் என வாங்கும் மருத்துவப் பயிற்சிக் கல்லூரி முதலாளிகள் தங்களது மாணவர்களை அப்போலோ, மீனாட்சி மிசன், விஜயா, மலர் போன்ற தனியார் நட்சத்திர மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்காக அனுப்புவதில்லை,//

    அங்கும் அனுப்பப்படுகிறார்கள்.

    //பயிற்சிக்கு வரும் மாணவ, மாணவியரை நோயாளிகளுக்கு நேரடியாகப் பரிசோதனையும், சிகிச்சையும் செய்யும் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு தங்களது கிளினிக்குகளுக்கு ஆள் பிடிக்கும் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.//

    ஆதாரமில்லாத குற்றச்சாட்டு

    // இது போன்ற தவறு, அலட்சியங்களால் உயிரிழந்த சிறார்கள், கர்ப்பிணிகள், சிசுக்கள் ஏராளம். இவ்வாறான தவறுகளெல்லாம் மிகப் பெரும்பாலும் மூடிமறைக்கப்படுகின்றன.//

    ஆதாரமில்லாத குற்றச்சாட்டு

    // தனியார் கல்லூரி முதலாளிகள், கல்லூரி துவங்கியது முதற்கொண்டு தான் செய்து வருகிற லஞ்சம் கொடுக்கிற வேலையின் மூலமாக அரசு மருத்துவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், போலீசு, பத்திரிகைகள் வரை வாயடைக்கின்றன. இடையில் விசயம் கசிந்தவுடன் உடனே ஓடிவருகிற ஓட்டுக்கட்சிக் குட்டி அல்லக்கைகளிலிருந்து நகர்மன்ற, சட்டமன்ற, நாடாளுமன்ற பெரிய அல்லக்கைகள் வரையிலும், கவனித்துவிடுகிறது.//

    தோழர்கள் பணம் பெற்றதே இல்லையா. அவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏன் விட்டு விட்டீர்கள்

    //சாதாரணத் தலைவலி என்றாலும் கூட ஸ்கேன், டெஸ்ட், மருந்துகள் எனப் பல ஆயிரங்களை வெகுவிரைவாக சுருட்டுகின்றன.//

    சாதாரண தலைவலி தானே. ஏன் மருத்துவமனை வருகிறீர்கள். ஒரு வேளை அது மூளை புற்றுநோய் என்றால், ஸ்கேன் எடுக்க வில்லை என்றால் இதே வினவு “முதலிலேயே ஸ்கேன் செய்து பார்த்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். மருத்துவரின் அலட்சியத்தால் உயில் போனது” என்று எழுதுவீர்கள்

    /அரசு மருத்துவமனைக்குள் மாணவராக நுழைபவரை ஒரு மருத்துவராக உருவாக்குவதற்கு அரசானது 5 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கிறது.//

    ஆதாரம் தாருங்கள்

    • உண்மையிலேயே சிறந்த மற்றும் சீரியசான மறுமொழி. நன்றி ‘விடையளி’.

      எதையும் ச்சாய்ஸில் விடாமல்(?) எல்லா கேள்விகளுக்கும் திரு.குருசாமி மயில்வாகனன் அவர்கள் ‘விடையளிக்கு’ பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

      மற்றபடி, திரு.குருசாமி மயில்வாகனன் அவர்களின் இந்த பதிவு, பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பயிற்சி செவிலியர் பற்றி ஒரு பயம் கலந்த விழிப்புணர்வையும் எச்சரிக்கையுனர்வையும் வாசகருக்கு ஊட்டுவதை மறுக்க முடியாது.

      • //மற்றபடி, திரு.குருசாமி மயில்வாகனன் அவர்களின் இந்த பதிவு, பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பயிற்சி செவிலியர் பற்றி ஒரு பயம் கலந்த விழிப்புணர்வையும் எச்சரிக்கையுனர்வையும் வாசகருக்கு ஊட்டுவதை மறுக்க முடியாது.//

        இல்லை
        பிளாக்மெயில் செய்பவர்களுக்கு வழி சொல்லி தருகிறது

    • நமக்கு மருத்துவ அறிவு இல்லாததால் மேற்கண்ட மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கோ அல்லது பதில்களுக்கோ அறுதியிட்ட விமர்சனம் வைக்க இயலவில்லை ஆயினும் இதர வினாக்களுக்கு……….

      //பயிற்சிக் கட்டணமாக 50,000, ஒரு லட்சம் என வாங்கும் மருத்துவப் பயிற்சிக் கல்லூரி முதலாளிகள் தங்களது மாணவர்களை அப்போலோ, மீனாட்சி மிசன், விஜயா, மலர் போன்ற தனியார் நட்சத்திர மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்காக அனுப்புவதில்லை,//
      அங்கும் அனுப்பப்படுகிறார்கள். என்பது பொய்
      ஆதராரம் தந்தால் நன்று. ஏனெனில் அவர்களே அதற்கான பயிற்சிபள்ளி நடத்துவதால் வெளி மாணவர்களை இந்த நட்சத்திர மருத்தவமனைகளில் அனுமதித்தாக செய்தி இல்லை.
      //பயிற்சிக்கு வரும் மாணவ, மாணவியரை நோயாளிகளுக்கு நேரடியாகப் பரிசோதனையும், சிகிச்சையும் செய்யும் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு தங்களது கிளினிக்குகளுக்கு ஆள் பிடிக்கும் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.//
      ஆதாரமில்லாத குற்றச்சாட்டு – உண்மையான குற்றச்சாட்டு
      எத்தனை அரசு மருத்துவர்கள் மேற்கண்ட நட்சத்திர மருத்துவமனைகளில் பகுதிநேர மருத்துவர்களாக இருக்கிறார்கள் தெரியுமா. சென்னை அண்ணா நகரில் இருக்கும் சித்த மருத்துவர்கள் கூட மருந்து எழுதி கொடுத்துவிட்டு தங்கள் மருத்துவ மனைக்கு வரச் சொல்கிறார்கள். மேற்கொண்டு விரிவான விவாதம் மற்றும் மருந்துகளுக்கு.
      எத்தனை மருத்துவர்கள் கமிசன் பெறுகிறார்கள் தெரியுமா. CT scan, blood test, மருந்து மாத்திரைகள் எழுதி தருவதற்கு. என்னோடு வாருங்கள் அடையாளம் காண்பிக்கிறேன்.
      MBBS படிக்க 25 இலட்சம் கொடுத்து சீட்டு வாங்கினவனும் MD படிக்க ஒரு கோடி கொடுத்தவனும் என்ன இலவசமாக மருத்துவம் பார்ப்பான் என கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு வாக்காலத்து வாங்கும் உங்களை போன்றோர்…….

      //தோழர்கள் பணம் பெற்றதே இல்லையா. அவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏன் விட்டு விட்டீர்கள்//
      நீங்கள் ஆதாரம் கொடுங்கள் தோழர்கள் பணம் பெற்றதற்கு
      கலைஞரின் காப்பீட்டுத் திட்டத்தை மிக விலாவரியாக அலசி விட்டோம் இதே தளத்தில் ஏற்கனவே. அதை பாருங்கள் அங்கேயும் உங்கள் கருத்தை பதியுஙகள்

      • //நமக்கு மருத்துவ அறிவு இல்லாததால் மேற்கண்ட மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கோ அல்லது பதில்களுக்கோ அறுதியிட்ட விமர்சனம் வைக்க இயலவில்லை ஆயினும் இதர வினாக்களுக்கு…//

        இதை எழுதியவர் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கத்தயாரா

      • //ஏனெனில் அவர்களே அதற்கான பயிற்சிபள்ளி நடத்துவதால் வெளி மாணவர்களை இந்த நட்சத்திர மருத்தவமனைகளில் அனுமதித்தாக செய்தி இல்லை.//

        நீங்கள் குறிப்பிடும் மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்கள் உண்டா இல்லையா என்பது தான் கேள்வி

        ப்ளாக்மெயில் செய்யும் நோக்கத்துடன் எழுதப்பட்ட இந்த கட்டுரையில் கட்டுரை ஆசிரியர் எழுதிய ”மருத்துவப் பயிற்சிக் கல்லூரி முதலாளிகள் தங்களது மாணவர்களை அப்போலோ, மீனாட்சி மிசன், விஜயா, மலர் போன்ற தனியார் நட்சத்திர மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்காக அனுப்புவதில்லை” என்ற வரிகள் தவறு

        // உண்மையான குற்றச்சாட்டு
        எத்தனை அரசு மருத்துவர்கள் மேற்கண்ட நட்சத்திர மருத்துவமனைகளில் பகுதிநேர மருத்துவர்களாக இருக்கிறார்கள் தெரியுமா.//

        பகுதிநேர மருத்துவர்களாக இருக்கலாம்
        ஆனால் ஆள்பிடிக்கிறார்கள் என்பது ஆதாரமில்லாதது

        நீங்கள் கூட ஏதோ ஒரு வேலை பார்க்கலாம்
        இந்த தளத்திலும் எழுதுகிறீர்கள்

        நீங்கள் இந்த தளத்தில் எழுதும் ஒரே காரணத்தினால் உங்களை அலுவல் ரீதியாக சந்திக்க வருப்வர்களை இந்த தளத்தை பார்க்க நீங்கள் வற்புறுத்துவதாக நான் கூறுவது எவ்வளவு அபத்த்மோ அதே போல் அபத்தமானது உங்கள் குற்றசாட்டு

        // சென்னை அண்ணா நகரில் இருக்கும் சித்த மருத்துவர்கள் கூட மருந்து எழுதி கொடுத்துவிட்டு தங்கள் மருத்துவ மனைக்கு வரச் சொல்கிறார்கள். //

        எந்த மருத்துவர். எந்த நோயாளி. பெயர் சொல்லுங்கள்

        //மேற்கொண்டு விரிவான விவாதம் மற்றும் மருந்துகளுக்கு.
        எத்தனை மருத்துவர்கள் கமிசன் பெறுகிறார்கள் தெரியுமா.//

        தெரியாது
        பெயர் சொல்லுங்கள்

        // CT scan, blood test, மருந்து மாத்திரைகள் எழுதி தருவதற்கு. என்னோடு வாருங்கள் அடையாளம் காண்பிக்கிறேன்.//
        இங்கு பெயர் சொல்லுங்கள்

        //MBBS படிக்க 25 இலட்சம் கொடுத்து சீட்டு வாங்கினவனும் MD படிக்க ஒரு கோடி கொடுத்தவனும் என்ன இலவசமாக மருத்துவம் பார்ப்பான் என கேள்வி கேட்கிறார்கள்.//
        அரசு மருத்துவக்கல்லூரிகளில் ௨௫ லட்சம் கிடையாது. இது கூடவா
        தெரியாது

        வினவு என்பது வேலையற்ற மூடர்களின் கற்பனையை எழுதும் தளம் என்று கேள்விப்பட்டது சரிதான் போலிருக்கிறது

        //நீங்கள் ஆதாரம் கொடுங்கள் தோழர்கள் பணம் பெற்றதற்கு//

        தோழர்கள் நன்கொடை ரசீது புத்தக்ம் வைத்துள்ளார்களா, இல்லையா
        கேள்விக்கு பதில் கூறுங்கள்

        • //எந்த மருத்துவர். எந்த நோயாளி. //எனக்கு சித்த டாக்குடர்ர தெரியாதுங்கோ ஆனா சித்தபிரமைவந்த  இங்கிலீசு மருத்துவரு ஒருத்தர் இருக்காரு பெயர் மரியே வாழ்க அண்டோர்ஸ்டான்ட் ரஹ்டுல்கர் மாஸ்கோடகாமா.. ‘மதம்’ புடிச்ச டாக்குடர்ர்ர்ர்ரு. விடையளி கிட்ட போகாதீங்க ..எட்ட நின்டு பாத்துட்டு பொறி-கடல வீசிட்டு அப்படியே ஓடிப்போயிறனும்..

          இப்படிக்கு,
          மக்கள் காசுல எச்சி சம்பளம் வாங்கி, பிளாக் எழுதி சம்பாதிக்குற இன்னொரு மொள்ளமாறி

        • வேலையற்ற மூடராக இருந்தாலும் தங்கள் கருத்தை இத்தளத்தில் பதிந்தமைக்கு நன்றி

        • தோழர் விடையளி திரித்து பதில் அளிக்க கூடாது. நர்சிங் பயிற்சி மாணவர்களைதான் இங்கு குறிப்பிட்டோம். மருத்துவர்களை அல்ல. மேற்கண்ட மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பயிற்சி முடித்த மாணவர்கள் 5000 அல்லது 7000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிகிறார்கள். உண்மையே.

          ஆள் பிடிக்கிறார்கள் என்றால் எல்லா மருத்துவர்களும் என்று அல்ல. ஆள் பிடிக்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையே. அரசு மருத்துவனையில் மிகச் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. அவர்களில் தன்னலம் கருதாது உழைக்கும் மருத்துவர்கள் சிலர் என்பதும் உண்மையே. விரைவான சிகிக்சை, பல்வேறு வசதிகள் தனியார் மருத்துவம்னைகளில் இருப்பதாகவும் அங்கே தன்னை சந்திக்குமாறு சொல்லும் மருத்துவர்களும் இருக்கதான் செய்கிறார்கள். தன் தனிப்பட்ட கிளினிக்கு வரும் வசதி வாய்ப்பில்லதாவர்களை அரசு மருத்துவமனைக்கு வரச் சொல்லி தனிப்பட்ட அக்கறையில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களும் இருக்கிறார்கள். அதற்கு தனியாக பணம் பெறும் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.

          மருத்துவம் உயிர் காக்கும் ஒரு புனிதமான சேவை. மருத்துவர்களும் தன்னலம் என்பதை காட்டிலும் பொதுநலம் அதிகம். அதனால் அவர்களுக்கு தனி சுதந்திரம் மற்றவர்களை போல் கிடையாது.. இருப்பினும் நேர மேலாண்மையால் சில மருத்துவர்கள் மிகச் சிறந்த முறையில் பணியாற்றுகிறார்கள்.

          சித்த மருத்துவ நோயாளி நானேதான். மருத்துவர் பெயர் தெரியாது. நேரில் என்னுடன் வரவும்.

          பாரத் ஸ்கேன், ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தின் மார்கெட்டின் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும், எவ்வளவு கமிசன் மருத்துவர்களுக்கு என்ன என்ன என தெளிவாக சொல்வார்கள். மேலும் இந்த மருந்து கடையில் மருந்து வாங்க சொல்லும் மருத்துவர்கள் எத்தனை பெயர் தெரியுமா. மருந்து கடை தொடங்கும் நபர்கள் மருத்துவரையும் தேடி அவருக்கும் சேர்த்து ஒரு அறை பிடித்து கொடுத்து அதன் வாடகையை செலுத்தி வரும் மருந்து கடை ஆட்களையும் தெரியும்.

          அரசு மருத்துவமனை 25 லட்சம் வாங்குவதாக நான் சொல்லவே இல்லை. 25 இலட்சம் கொடுத்து மருத்துவம் படிக்கிறவன் இலவசமா சேவை செய்ய வருவானா என்ற தொனியில் எழுதினேன். உண்மையா இல்லையா என்று சொல்லுங்கள். மருத்துவ இனம் என்ற பாசத்தை கழற்றி வைத்து விட்டு சமூகத்தில் ஒருவன் என்று சிந்திக்கவும்.

          நன்கொடை புத்தகம் மிரட்டி வாங்குவதற்கு அல்ல. ஆதாரத்துடன் நிருப்பிக்கவும். என்னால் பத்து ரூபாய் மட்டுமே அளிக்க முடியும் உண்டியல் ஏந்தி வரும்போது கொடுத்தேன். உங்களால் முடியாது என்றால் கொடுக்காதீர்கள். அவதூறு செய்யாதீர்கள்.

          இப்போதும் என்னுடைய விமர்சனம் ஓட்டு மொத்த மருத்துவர்களை பற்றியல்ல. இதுபோன்ற தவறு செய்பவர்களை பற்றிதான். மேலும் ஆதாரம் வேண்டுமானால் தங்கள் மின்னஞல் முகவரி அளிக்கவும். கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன்.

    • நண்பருக்கு, நீங்கள் கேட்கிற ஆதாரங்களைத் தந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?. அதை முதலில் சொல்லுங்கள். குருசாமிமயில்வாகனன்.

    • நண்பருக்கு, ஆதாரங்களைத் தந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள். குருசாமிமயில்வாகனன்.

  7. vinavu arumaiyana katturai (Vinavu its nice article), nengal thayavu seithu nedumsalaikalil sunga sawadi vassol pathi eluthavum ( please write one more article about the tollgate collection on highways for longer period, why our govt not having enough amount or people or land to do, they also not making separate road but they just modifying existing road, can you write more details about it later , thanks in advance.

  8. //சிவகங்கை அரசுப் பொது மருத்துவமனைக்கு மதியம் 2.30 மணிக்கு சிகிச்சைக்காக நண்பர்களோடு வந்துள்ளார். அவரை சோதித்த மருத்துவர் ரத்தப்பரிசோதனை செய்யச் சொல்லியிருக்கிறார்.//
    இங்கு மருத்துவரின் தவறு எதுவும் இல்லை..ஏனெனில் dengue போன்ற காய்ச்சலை platelet போன்ற இரத்த பரிசோதனை மூலமே எளிதாக அடையாளம் காணலாம் .

    //மானாமதுரை மாதா நர்சிங் பயிற்சிக் கல்லூரிப் பயிற்சி மாணவிகள் முத்துராஜாவை ரத்தப்பரிசோதனை செய்வதற்காக ரத்தம் எடுத்துள்ளனர். சரியான முறையில் ரத்தம் எடுக்கப்படாததால் முத்துராஜாவின் கை வீங்கியுள்ளது. மறுநாள் கழுத்து, மார்பு என வீக்கம் பரவ ஆரம்பித்துள்ளது.//
    நோயின் தாக்கம் என்னவென்று தெரியாமல் இதுதான் காரணம் என்று தாங்களாகவே முடிவு செய்து கூறுவது ஏற்பு உடையது அல்ல.

    //உடலைப் பிரேதப்பரிசோதனை செய்வதற்கு முத்துராஜாவின் தந்தை சம்மதிக்காததால் பிரேதப்பரிசோதனை செய்யப்படாத முத்துராஜாவின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது.//

    சந்தேகம் என்று வரும்போது ஏன் பிரேத பரிசோதனை செய்ய ஒத்துழைக்க வில்லை?.ஒருவேளை உண்மை காரணம் தெரிந்துவிடும் ..மருத்துவர்களை குறை கூற முடியாது என்பதற்காகவா?

    //15.12.2009 அன்று மதுரை மீனாட்சி மிஸன் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றுள்ளனர். உடனடியாக அய்.சி.யூ பிரிவில் முத்துராஜா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறு நாட்களுக்குப் பிறகு கடந்த 21.12.2009 அன்று காலை 8.30 மணிக்கு முத்துராஜா இறந்துவிட்டதாகச் சொல்லி உடலை மருத்துவமனையினர் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டனர்.//

    பரிசோதனை முடிவுகள் பற்றி எதனையுமே தாங்கள் கூறாதது வியப்பு அளிக்கிறது..6 நாட்கள் ஒரு மருத்துவமனையில் நோயாளி இருக்கும் பட்சத்தில் என்ன நோய் என்பதனை கண்டுபிடித்திருக்கும் வைப்பு உள்ளது

    //.பரிசோதனைக்காக ரத்தம் எடுக்கப்பட்டபோது ஸிரிஞ்சுக் குழாயில் காற்று இருந்துள்ளது. ரத்தம் எடுத்த பயிற்சி மாணவி காற்றை ரத்தக்குழாய்க்குள் அழுத்தி செலுத்திவிட்டபடியால் காற்று உட்புகுந்து ரத்தம் ஆங்காங்கே உறைய ஆரம்பித்துள்ளது. இந்த ரத்த உறைவுதான் மாணவர் முத்துராஜாவின் மரணத்திற்குக் காரணம் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.//
    இப்படி நடக்க வைப்பு குறைவு.. dengue காய்ச்சலில் கூட இரத்தம் உறைதலில் பிரச்னை ஏற்பட்டு இப்படி நடக்க வைப்பு உள்ளது.

    //பயிற்சிக்கு வரும் மாணவ, மாணவியரை நோயாளிகளுக்கு நேரடியாகப் பரிசோதனையும், சிகிச்சையும் செய்யும் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு தங்களது கிளினிக்குகளுக்கு ஆள் பிடிக்கும் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.//
    இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு..இப்போது உள்ள மருத்துவர்கள் ஒருகாலத்தில் பயிற்சி மருத்துவர்கள்தான் என்பதும , நோயாளிகளை நேரடியாக பயிற்சி மருத்துவர் அணுகும்போது மட்டுமே முழுமையான மருத்துவர் ஆகும் தகுதியை பெறுவார் என்பதும் தங்களுக்கு தெரியாதா..?

    //முத்துராஜாவின் சிகிச்சைக்காக மீனாட்சி மிசன் மருத்துவமனை கேட்டது 5 லட்சம் வரை என மாணவர்கள் சொல்கிறார்கள். கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முடிந்தவரை வசூலித்துவிடலாம் என தைரியமாகப் பில்லைப் போடுகின்றன தனியார் மருத்துவமனைகள்//
    கலைஞர் காப்பீடு திட்டத்தில் இதுபோன்ற வியாதிகளுக்கு காப்பீடு கிடையாது .இந்த திட்டத்தில் எந்தெந்த வியாதிகளுக்கு காப்பீடு உண்டு என்பதை தெரிந்துகொண்டு இதனை பற்றி தங்கள் பேசுவது நல்லது.

    //அரசு மருத்துவமனைக்குள் மாணவராக நுழைபவரை ஒரு மருத்துவராக உருவாக்குவதற்கு அரசானது 5 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கிறது//

    என்ன ஆதாரம்.. ? நீங்கள் கலைக்கலூரியில் ஒரு பட்ட படிப்பு படிக்கும்போது பேராசிரியர்களின் சம்பளத்தை உங்களின் படிப்புக்காக அரசு செலவு செய்யும் தொகை என்பதாக எடுத்து கொள்ளலாமா?

    //எந்த மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரிகள் பொது மருத்துவமனைகளை நடத்துகின்றன?//

    போரூர் ராமச்சந்திரா உட்பட அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் குறிப்பிட்ட படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை இருந்தால் மட்டுமே அவர்கள் மருத்துவ படிப்பு தொடங்க முடியும்.. இது இந்திய மருத்துவ கவுன்செலின் அங்கிகாரம் பெற அடிப்படை தேவை..

    //காசுள்ளவனுக்கே கல்வி என்றாக்கியுள்ள மருத்துவக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடி முறியடிக்கவேண்டும். தனியார் மருத்துவக்கல்லூரிகளை அரசே எற்று நடத்த வேண்டும்//

    தங்கள் சொன்ன அனைத்திலும் நான் முழுதாக ஆதரிக்கும் ஒரே கருத்து இதுதான்..ஆனால் தயவுசெய்து.. மருத்துவம் பற்றியும்,மருத்துவர்களை பற்றியும் எதுவுமே தெரியாமல் இதுதான் காரணம் என்று மனம் போன போக்கில் விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை செய்தால் மருத்துவர்களாக நாங்கள் அதனை எதிர்கொள்ள தயார்.. நன்றி

    • //நோயின் தாக்கம் என்னவென்று தெரியாமல் இதுதான் காரணம் என்று தாங்களாகவே முடிவு செய்து கூறுவது ஏற்பு உடையது அல்ல.//

      யார் சொன்னார்கள் ஏற்புடையது இல்லை என்று
      நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதை கூறுவோம்

      நீங்கள் மறுத்தால் உங்களை திட்டுவோம்
      நீங்கள் ஆதாரம் தந்தாலும் ஏற்றுக்கொள்ள் மாட்டோம்

    • ////காசுள்ளவனுக்கே கல்வி என்றாக்கியுள்ள மருத்துவக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடி முறியடிக்கவேண்டும். தனியார் மருத்துவக்கல்லூரிகளை அரசே எற்று நடத்த வேண்டும்//

      தங்கள் சொன்ன அனைத்திலும் நான் முழுதாக ஆதரிக்கும் ஒரே கருத்து இதுதான்..///

      அப்படி செய்தால். புதிதாக எந்த மடையனும், புதிய தனியார் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை ஆரம்பிக்கமாட்டார்கள். இப்போதே, அரசும், நிதிப்பற்றாக்குறையினால், புதிய கல்லூரிகள் மற்றும் மருத்த்துவமனைகளை போதிய அளவில் ஆரம்பிக்கமுடியவில்லை. தனியாரும் இல்லையென்றால், இன்னும் பற்றாகுறை அதிகரிக்கும். அரசு ஈட்டும் பல லச்சம் கோடி வரி வசுலை, இலசச டி.வி. ராணுவம், ராக்கெட்டு, போன்ற வெட்டி செலவுகளுக்கு அதிகம் செலவிடாமல், மருத்துவம், கல்வி, போன்ற துறைகளுக்கு ஒதுக்கவேண்டும். நடக்கிற காரியமா ?

      • அப்படியென்றால் செம்புரட்சி ஒன்றே தீர்வு என்கிறீர்கள். சரியான தீர்வு அதியமான்.

        • ஓ.. யாருக்கும் எதுவும் கிடைக்கக்கூடாது.. யாரும் நன்றாக வழகூடது இருக்ககூடாது ..எப்போதும் எதனமீதும் குறை காண்பது என்பதுதான் செம்புரட்சி… . இப்போ புரியுது …வாழ்க

        • அதேதான் ஆனா வார்த்தையில மட்டும் சின்ன மாற்றம், சுரண்டுரவனுக்கு எதுவும் கிடைக்கக்கூடாது, சுரண்டுரவன நன்றாக வாழவிடக்கூடாது, குறைய ‘கண்டு பிடிப்பதன்’  மூலமா உங்கள மாதிரியும் உங்க தோஸ்து ‘மதம்’ புடிச்ச டாக்குடர்ர்ர்ர்ரு மாதிரியும் நடுவாப்புல இருக்கறவுங்க மனசாட்சியை குத்திகிட்டே இருக்கோனும்.. இப்ப புரியுதா?

        • அதாவது நீங்கள் பார்த்த வேலைக்கு சம்பளம் வாங்குவது என்பது அடுத்தவனை சுரண்டுவது என்கீறீர்கள்..
          செய்யும் வேலைக்கு கூலி பெறக்கூடாது.. புரியுது..எல்லோரும் இலவச சேவை செய்யணும்.. தோழர்களின்
          மனசாட்சிய ரொம்ப குத்திட்டேனோ..

        • //பார்த்த வேலைக்கு சம்பளம் வாங்குவது என்பது அடுத்தவனை சுரண்டுவது என்கீறீர்கள்// அடேங்கப்பா என்னா ஞானம் என்னா ஞானம்… டாக்டரூ சூப்ப்ப்ப்ப்பரூ

      • தாரளமாக செய்யலாம்..
        இலவசமாக கிடைக்கிறதே என்பதற்காக எல்லா இலவசங்களையும் வாங்குவதுபோல் நோய் இருக்கிறதோ இல்லையோ தினமும் அரசு மருத்துவமனை சென்று மாத்திரையையும்,ஊசியையும் இலவசமாக பெற்றுக்கொள்வோம் என்று வாங்கும் நிலை மாறி ,
        நோய் இருந்தால் மட்டுமே மருத்துவர் சொல்லும் அளவு மட்டும் மாத்திரை உட்கொள்ளுவோம் என்ற விழிப்புணர்வு வரும் பட்சத்தில் , மருத்துவம் மற்றும் அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும்…
        ஊசிக்காக மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு தினம் வரும் மக்கள் உண்டா இல்லையா ? தேவையின்றி மாத்திரைகளை வாங்கி வீசி எறியும் மக்கள் உண்டா இல்லையா ? இதனால் மக்கள் பணம் விரயம் ஆகிறதா இல்லையா ? அந்த பணம் சேமிக்கப்பட்டால் உண்மையான நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவம் கிடைக்க மேலும் வசதிகள், மருந்துகள்,வாங்கவும் மருத்துவமனைகள் கட்டவும் முடியுமா இல்லையா… நோய்கள் பற்றி மக்களின் புரிதல் இதற்கு தீர்வாகுமா…?

  9. //சந்தேகம் என்று வரும்போது ஏன் பிரேத பரிசோதனை செய்ய ஒத்துழைக்க வில்லை?.ஒருவேளை உண்மை காரணம் தெரிந்துவிடும் ..மருத்துவர்களை குறை கூற முடியாது என்பதற்காகவா?//

    ஆமாம்
    உண்மை காரணம் தெரிந்தால், ஏய்ட்ஸ் இருப்பது தெரிந்தால், டிரக் அடிக்சன் காரனமாக டிரைகஸ்\பிட் எண்டோ கார்டைட்டிஸ் இருப்பது தெரிந்தால் ப்ளாக்மெயில் செய்ய முடியாதே

    இது கூட தெரியாதே

    /பரிசோதனை முடிவுகள் பற்றி எதனையுமே தாங்கள் கூறாதது வியப்பு அளிக்கிறது..6 நாட்கள் ஒரு மருத்துவமனையில் நோயாளி இருக்கும் பட்சத்தில் என்ன நோய் என்பதனை கண்டுபிடித்திருக்கும் வைப்பு உள்ளது//
    கண்டுபிடிச்சாச்சு

    ஆனா சொன்னா உண்மை வெளிவந்துவிடுமே
    அதன் பிறகு ஏமாற்றி ப்ளாக்மெயில் செய்ய முடியாதே

    //இப்படி நடக்க வைப்பு குறைவு.. dengue காய்ச்சலில் கூட இரத்தம் உறைதலில் பிரச்னை ஏற்பட்டு இப்படி நடக்க வைப்பு உள்ளது.//
    ஏய்ட்சிலும் கூட வரும்
    போதை மருந்து சாப்பிட்டால் கூட வரும்

    //இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு..இப்போது உள்ள மருத்துவர்கள் ஒருகாலத்தில் பயிற்சி மருத்துவர்கள்தான் என்பதும , நோயாளிகளை நேரடியாக பயிற்சி மருத்துவர் அணுகும்போது மட்டுமே முழுமையான மருத்துவர் ஆகும் தகுதியை பெறுவார் என்பதும் தங்களுக்கு தெரியாதா..?//
    தெரியாது
    நாங்கெல்லாம் பயிற்சி எடுப்பது கிடையாது
    தலைவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்வோம். நீ அதிகம் கேள்வி கேட்டால் உன்னை திட்டுவோம்

    //கலைஞர் காப்பீடு திட்டத்தில் இதுபோன்ற வியாதிகளுக்கு காப்பீடு கிடையாது .இந்த திட்டத்தில் எந்தெந்த வியாதிகளுக்கு காப்பீடு உண்டு என்பதை தெரிந்துகொண்டு இதனை பற்றி தங்கள் பேசுவது நல்லது.//

    எங்களுக்கு தேவை ப்ளாக்மெயில் செய்து பணம் சம்பாதிப்பது. நாங்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்

    //என்ன ஆதாரம்.. ? நீங்கள் கலைக்கலூரியில் ஒரு பட்ட படிப்பு படிக்கும்போது பேராசிரியர்களின் சம்பளத்தை உங்களின் படிப்புக்காக அரசு செலவு செய்யும் தொகை என்பதாக எடுத்து கொள்ளலாமா?//
    கண்டிப்பாக
    ஆனால் அரசு மருத்துவமனைகளில் அந்த செலவு கூட இல்லை. பேராசிரியர்கள் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் எனவே கலைக்கலூரி மாணவனை விட மருத்துவ கல்லூரி மாணவனுக்கு ஆகும் செலவு குறைவு

  10. நல்ல கட்டுரை கருசாமி மயில்வாகனன், விடையளின் வாதங்கள் சலிப்படைய வைக்கிது, சரியில்ல, அவர்தரப்புக்கு யாரையும் வெல்லும் அளவுக்கு கோர்வையாகவும் கன்வின்சிங்காகவும் இல்ல

    • நாங்கள் சொல்வதை மட்டுமே நீங்கள் கேட்க்க வேண்டும்… உங்கள் தரப்பு விளக்கம் எங்களுக்கு தேவை இல்லை என்ற உங்களது தொனி சரியல்ல.. ‘ ”விடையளியின் ” எந்த வாதங்கள் உங்களுக்கு சலிப்படைய வைக்கிறது என்று கூறினால் நான் வாதிக்க தயார்.. என் விளக்கங்களுக்கு கருசாமி மயில்வாகனன் அவர்களின் பதில் என்ன? … காத்திருக்கிறேன்…

      • நண்பருக்கு, உங்களின் விளக்கங்களுக்கு நான் பதில் தந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சொன்னால் நான் பதில் தருகிறேன். குருசாமிமயில்வாகனன்.

        • நீங்கள் சில குற்றச்சாட்டை வைப்பதனால் நாங்கள்
          விளக்கம் அளிக்கிறோம்.நாங்கள் அளித்த விளக்கங்களில் தங்களுக்கு மாற்றுகருத்து இருக்கும் பட்சத்தில் நீங்கள் வாதிட வேண்டும்.. அதற்கு பதிலாக விளக்கம் தந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்பது விதண்டவாதம்தானே ..

  11. கலைஞர் காப்பீட்டு திட்டம் மிக மோசமான விழைவுகளை ஏற்படுத்த போவது நிச்சயம். அமெரிக்கா இன்று மோசமான நிலையில் இருப்பதற்கு அவர்களின் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் ஒரு பெரிய காரணம். இந்திய தனியார் மருத்துவ மனைகள் ஏற்கனவே அதிக தொகையை வசூலிக்க ஆரம்பித்து விட்டன. கூடிய விரைவில் இது ஏழைகள் என்ற வட்டத்தை தாண்டி அனைவரும் காப்பீடு செய்திருக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவோம். ஒபாமா இன்று அமெரிக்காவின் இன்சூரன்ஸ் கட்டமைப்பை சீரமைப்பது குறித்து முயற்சி மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. வெள்ளம் தலைக்கு மேல் போய் விட்டது. அவர் எதாவது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், இன்சூரன்ஸ் கம்பெனிகள் திவால் ஆகா ஆரம்பிக்கும் என்று பலரும் எச்சரித்திருக்கிறார்கள். கருணாநிதி காப்பீட்டு திட்டம் ஆரம்பித்த
    தற்கு பதில் மருத்துவ கருவிகளை வாங்கி இருந்தால் உபயோகமாக இருந்திருக்கும். ஒரு காலகட்டத்தில் இன்சூரன்ஸ் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளபடுவார்கள்(அமெரிக்காவில் இன்சூரன்ஸ் இல்லாமல் ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது). நான் இந்தியாவை நினைத்து பல நேரங்களில் பெருமை பட்டுள்ளேன். அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை உலகின் முதன்மை நாடான அமெரிக்காவில் கூட கிடையாது. நமது எதிர் காலத்தை நினைக்கும் போது கவலை மனதை நிறைக்கிறது.. ஆண்டவன் நம்மை காப்பற்றட்டும்.

    • //ஒரு காலகட்டத்தில் இன்சூரன்ஸ் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளபடுவார்கள்(அமெரிக்காவில் இன்சூரன்ஸ் இல்லாமல் ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது). நான் இந்தியாவை நினைத்து பல நேரங்களில் பெருமை பட்டுள்ளேன். அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை//

      ஒத்துகொள்கிறேன் ..இந்த இலவச சேவையை எப்போதும் குறை கூறுபவர்கள் இதனை அறிவார்களா.? . அமெரிக்காவில் மருத்துவர்களின் நிலை என்ன ? இங்கு மருத்துவர்களின் நிலை என்ன ? ..மருத்துவர்களின் மீதான தனிப்பட்ட காழ்புணர்ச்சி காரணமாக எப்போதும் மருத்துவர்களை குறை கூறும் போலி முகமூடி அணிந்தவர்களிடம் இதற்கு விளக்கம் இருக்கிறதா…

    • ஆசுபத்திரி, இன்சூரன்சுர, கல்லூரி முதலாளிகள்தாம் இந்த கட்டுரையின் மைய இலக்கு ஆனால் என்ன செய்ய டாக்குடர்களுக்கு பொத்துக்கொண்டு வருகிறது.. என்ன ஆனாலும் இன்றைய டாக்டர் நாளைய முதலாளியாச்சே.. ரத்த பாசம் உடுமா?

      • //மருத்துவர்களின் மீதான தனிப்பட்ட காழ்புணர்ச்சி காரணமாக எப்போதும் மருத்துவர்களை குறை கூறும் போலி முகமூடி அணிந்தவர்களிடம் இதற்கு விளக்கம் இருக்கிறதா…//

        //ஆசுபத்திரி, இன்சூரன்சுர, கல்லூரி முதலாளிகள்தாம் இந்த கட்டுரையின் மைய இலக்கு ஆனால் என்ன செய்ய டாக்குடர்களுக்கு பொத்துக்கொண்டு வருகிறது.. என்ன ஆனாலும் இன்றைய டாக்டர் நாளைய முதலாளியாச்சே.. ரத்த பாசம் உடுமா?//

        நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் ஆசுபத்திரி, இன்சூரன்சுர, கல்லூரி முதலாளிகள் பற்றி எழுதுங்கள்..அதில் மருத்துவர்களை பற்றிய விமர்சனம் வரும்போதுதான் எங்களுக்கு பொத்துக்கொண்டு வருகிறது.

        //பயிற்சிக்கு வரும் மாணவ, மாணவியரை நோயாளிகளுக்கு நேரடியாகப் பரிசோதனையும், சிகிச்சையும் செய்யும் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு தங்களது கிளினிக்குகளுக்கு ஆள் பிடிக்கும் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.//

        இது மருத்துவர்களை பற்றிய மோசமான விமர்சனம் இல்லையா நண்பரே…

        //ஆனால் என்ன செய்ய டாக்குடர்களுக்கு பொத்துக்கொண்டு வருகிறது.. என்ன ஆனாலும் இன்றைய டாக்டர் நாளைய முதலாளியாச்சே..//

        உங்கள் நோக்கம் மருத்துவர்களை அவமானபடுத்துவது என்பதுதான் நன்றாக தெரிகிறதே.. நீங்கள்தான் கட்டுரையின் மைய இலக்கினை விட்டு தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுகீறீர்கள்..இந்த கட்டுரையின் என்னுடைய பின்னூட்டங்களை படித்துபார்த்தல் கட்டுரையாளரின் சில கருத்துகளை நான் ஏற்றுக்கொள்வது நன்றாகவே தெரியும்.. என்னுடைய சில நேரடியான கேள்விகளுக்கு உங்கள் யாவரிடமும் பதில் இல்லாததால்தான் திருவாளர் அரைடிக்கெட் விதண்டாவாதம் புரிகிறார் ..

  12. தோழர் வேல் அவர்கள் January 5, 2010 at 1:15 பம் அளித்த மறுமொழிக்கு (6.2.2.3) நன்றி

    //தோழர் விடையளி திரித்து பதில் அளிக்க கூடாது.//
    மன்னிக்கவும்

    // நர்சிங் பயிற்சி மாணவர்களைதான் இங்கு குறிப்பிட்டோம். மருத்துவர்களை அல்ல.//
    மறுமுறை இந்த மறுமொழிகளை வாசித்து பார்த்தால் உங்களை போன்ற தோழர்களுடன் சில மனநலம் பிறழ்ந்தவர்களும் கழிந்து விட்டு சென்றிருப்ப்தை உணர முடியும். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் !!

    // மேற்கண்ட மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பயிற்சி முடித்த மாணவர்கள் 5000 அல்லது 7000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிகிறார்கள். உண்மையே.//
    அப்படி 5000 அல்லது 7000ூரூபாயில் வேலை பார்ப்பது மருத்துவமனையின் முதலாளி அல்ல

    ஒரு விவசாயியின் மகன் அல்லது ஒரு அச்சு தொழிலாளியின் மகள் தானே. அவர்களுக்காக, அவர்களை ஆதரித்து நீங்கள் ஏதாவது போராட்டம் நடத்தினீர்களா என்று தெரிந்து கொள்ள ஆவல்

    //ஆள் பிடிக்கிறார்கள் என்றால் எல்லா மருத்துவர்களும் என்று அல்ல./
    இதை நீங்கள் முதலிலேயே தெளிவாக கூறியிருக்க வேண்டும்

    // ஆள் பிடிக்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையே.//
    அவர்களை மட்டும் நீங்கள் விமர்சித்தால் போதுமே. ஏன் அனைவரையும் சேர்த்து விமர்சிக்கிறீர்கள்

    // அரசு மருத்துவனையில் மிகச் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. அவர்களில் தன்னலம் கருதாது உழைக்கும் மருத்துவர்கள் சிலர் என்பதும் உண்மையே.//
    அப்படி பட்டவர்களை பாராட்டி ஒரு வரியாவது எழுதியிருக்கிறீர்களா என்று உங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளுங்கள்

    பாரட்டினால் அவர்கள் பணம் தர மாட்டார்கள். ஆனால் தவறு செய்பவர்களிடம் தட்டி போர்டு வைத்து அதை எடுக்க பணம் கேட்கலாம். அப்படித்தானே நடக்கிறது.

    // விரைவான சிகிக்சை, பல்வேறு வசதிகள் தனியார் மருத்துவம்னைகளில் இருப்பதாகவும் அங்கே தன்னை சந்திக்குமாறு சொல்லும் மருத்துவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.//
    உண்மை தான்

    // தன் தனிப்பட்ட கிளினிக்கு வரும் வசதி வாய்ப்பில்லதாவர்களை அரசு மருத்துவமனைக்கு வரச் சொல்லி தனிப்பட்ட அக்கறையில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.//
    அவர்களை பாரட்டியுள்ளீர்களா

    // அதற்கு தனியாக பணம் பெறும் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.//
    உண்மைதான்

    //மருத்துவம் உயிர் காக்கும் ஒரு புனிதமான சேவை. மருத்துவர்களும் தன்னலம் என்பதை காட்டிலும் பொதுநலம் அதிகம். அதனால் அவர்களுக்கு தனி சுதந்திரம் மற்றவர்களை போல் கிடையாது.. இருப்பினும் நேர மேலாண்மையால் சில மருத்துவர்கள் மிகச் சிறந்த முறையில் பணியாற்றுகிறார்கள்.//
    அப்படிப்பட்டவர்களை என்றாவது பாராட்டி ஒரு வரியாவது எழுதியிருக்கிறீர்களா 🙂 🙂

    //சித்த மருத்துவ நோயாளி நானேதான். மருத்துவர் பெயர் தெரியாது. நேரில் என்னுடன் வரவும்.//
    அப்படி சிலர் இருக்கிறார்கள்
    ஆனால் சிலர் தான்
    நீங்களோ ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டுகிறீர்கள்

    //பாரத் ஸ்கேன், ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தின் மார்கெட்டின் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும், எவ்வளவு கமிசன் மருத்துவர்களுக்கு என்ன என்ன என தெளிவாக சொல்வார்கள். மேலும் இந்த மருந்து கடையில் மருந்து வாங்க சொல்லும் மருத்துவர்கள் எத்தனை பெயர் தெரியுமா. மருந்து கடை தொடங்கும் நபர்கள் மருத்துவரையும் தேடி அவருக்கும் சேர்த்து ஒரு அறை பிடித்து கொடுத்து அதன் வாடகையை செலுத்தி வரும் மருந்து கடை ஆட்களையும் தெரியும்.//
    இதை யாரும் மறுக்கவில்லை
    ஆனால் இன்று தமிழக அரசு பணியில் இருக்கும் பல மருத்துவர்கள் தனியாக பிராக்டிஸ் செய்வது கிடையாது என்று உங்களுக்கு தெரியுமா

    //அரசு மருத்துவமனை 25 லட்சம் வாங்குவதாக நான் சொல்லவே //
    ஆனால் நீங்கள் எழுதியதை மறுபடி படியுங்கள்

    //இல்லை. 25 இலட்சம் கொடுத்து மருத்துவம் படிக்கிறவன் இலவசமா சேவை செய்ய வருவானா என்ற தொனியில் எழுதினேன்.//
    நீங்கள் முதலில் பொதுமைப்படுத்தி தான் எழுதியிருந்தீர்கள்
    உண்மையா இல்லையா என்று சொல்லுங்கள்.

    //மருத்துவ இனம் என்ற பாசத்தை கழற்றி வைத்து விட்டு சமூகத்தில் ஒருவன் என்று சிந்திக்கவும்.//
    நீங்கள் என்றாவது மருத்துவரை சமூகத்தில் ஒருவர் என்று சிந்தித்து ௩௬ மணி நேரம் தொடர்ந்து வேலை. வார ஓய்வு இன்மை ஆகியவற்றிற்கு எதிராக போராடியுள்ளீர்களா என்று உங்கள் மனசாட்சியை கேட்கவும்

    //நன்கொடை புத்தகம் மிரட்டி வாங்குவதற்கு அல்ல. ஆதாரத்துடன் நிருப்பிக்கவும். என்னால் பத்து ரூபாய் மட்டுமே அளிக்க முடியும் உண்டியல் ஏந்தி வரும்போது கொடுத்தேன். உங்களால் முடியாது என்றால் கொடுக்காதீர்கள். அவதூறு செய்யாதீர்கள்.//
    நன்கொடை வாங்குகிறார்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி

    //இப்போதும் என்னுடைய விமர்சனம் ஓட்டு மொத்த மருத்துவர்களை பற்றியல்ல.//
    இதை நீங்கள் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும்

    // இதுபோன்ற தவறு செய்பவர்களை பற்றிதான். மேலும் ஆதாரம் வேண்டுமானால் தங்கள் மின்னஞல் முகவரி அளிக்கவும். கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன்.//
    இதை நீங்கள் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும்

    • //பயிற்சிக்கு வரும் மாணவ, மாணவியரை நோயாளிகளுக்கு நேரடியாகப் பரிசோதனையும், சிகிச்சையும் செய்யும் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு தங்களது கிளினிக்குகளுக்கு ஆள் பிடிக்கும் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.////ஆனால் என்ன செய்ய டாக்குடர்களுக்கு பொத்துக்கொண்டு வருகிறது.. என்ன ஆனாலும் இன்றைய டாக்டர் நாளைய முதலாளியாச்சே../அரடிக்கட்டின் இந்த மறுமொழிகளை நீங்கள் மறுப்பவரென்றால் நீங்கள்தான் விதண்டாவாதம் செய்பவர். தங்களுடைய கிளினிக்கிற்கு வரச்சொல்வது,இல்லையென்றால் தாங்கள் பகுதி நேரமாக வேலை செய்யும் கிளினிக்கிற்கு வரச்சொல்வது, தாங்கள் குறிப்பிடும் கிளினிக் நிலையத்திலேயே எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் அறுவை சிகிச்சை செய்யச்சொல்வது,பயமுறுத்துவது போன்றவற்றினால் பாதிக்கப்படாத எந்தவொரு தனி நபரும் இருக்கமுடியாது. இதைக் கட்டாயமாகவே மருத்துவர்கள் கூறுகின்றனர். வேண்டுமானால் பல ஆதாரங்களை தருகிறேன். ஒரு சில மருத்துவர்கள் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையினர் அப்படி அல்ல. விலைவாசி உயர்வு மற்றும் கல்வியுடன் மருத்துவத்தை ஒப்பிட முடியாது. இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். இதை பயன்படுத்திக்கொன்டுதான் மருத்துவர்கள் மக்களை பயமுறுத்துகின்றனர்.”செம்புரட்சி… அது எந்த கடையில் கிடைக்கும் சார்”தனியாரும் சரியில்லை அரசும் சரியில்லை எனும்போது என்ன செய்யலாம் சார் நீங்களே சொல்லுங்களேன்! வெந்ததைத்தின்று விதி வந்து சாவுங்கள் என்கிறீர்களா?

      • மன்னிக்கவும். மேற்கண்ட எனது பின்னஊட்டம் மருத்துவர்.ராம் அவர்களுக்கு இட்டது .

        • //தங்களுடைய கிளினிக்கிற்கு வரச்சொல்வது,இல்லையென்றால் தாங்கள் பகுதி நேரமாக வேலை செய்யும் கிளினிக்கிற்கு வரச்சொல்வது, தாங்கள் குறிப்பிடும் கிளினிக் நிலையத்திலேயே எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் அறுவை சிகிச்சை செய்யச்சொல்வது,பயமுறுத்துவது போன்றவற்றினால் பாதிக்கப்படாத எந்தவொரு தனி நபரும் இருக்கமுடியாது. இதைக் கட்டாயமாகவே மருத்துவர்கள் கூறுகின்றனர்.//

          மன்னிக்கவும். பெரும்பான்மையான அரசு மருத்துவர்கள் இதுபோல் செய்வதில்லை.. நான் சொல்வது அரசு மருத்துவர்களை பற்றி மட்டுமே.. ஆரம்ப சுகாதார நிலையங்கள் சென்று மருத்துவர்களை
          பார்த்திருக்கீறீர்களா ?
          பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்க்கும் அரசு மருத்துவர்கள் சமூகத்தின் சராசரி குடும்பத்தில் இருந்து படித்து அரசு வேலைக்கு வந்தவர்கள்..அவர்களையும், நன்கொடை கொடுத்து பெருமைக்காக மருத்துவம் படித்து, சொந்த
          மருத்துவமனை வைத்திருக்கும் மருத்துவர்களையும்
          ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதைத்தான் தவறு என்கிறேன்..

          //என்ன ஆனாலும் இன்றைய டாக்டர் நாளைய முதலாளியாச்சே../அரடிக்கட்டின் இந்த மறுமொழிகளை நீங்கள் மறுப்பவரென்றால் நீங்கள்தான் விதண்டாவாதம்
          செய்பவர்.//

          நான் விதண்டாவாதம் செய்யவே இல்லை..திருவாளர் அறைடிச்கேட்டிற்கு நான் அளித்திருக்கும் பதில்களை பார்த்தாலே இது உங்களுக்கு தெளிவாக தெரியும்..மருத்துவர்களை பற்றி பொதுவாக ஒரு கருத்தை வைத்துக்கொண்டு அவர்களை அவமானபடுத்துவதைதான்
          நான் எதிர்க்கிறேன்.

          பெரும்பான்மையான கார்பொரேட் மருத்துவமனைகளின் முதலாளி மருத்துவர்கள் இல்லை.. தொழிலதிபர்கள் மற்றும்
          அரசியல்வாதிகள்தான் என்பதை ஒத்துகொள்வீர்களா ..

          //தாங்கள் குறிப்பிடும் கிளினிக் நிலையத்திலேயே எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் அறுவை சிகிச்சை செய்யச்சொல்வது,பயமுறுத்துவது போன்றவற்றினால் பாதிக்கப்படாத எந்தவொரு தனி நபரும் இருக்கமுடியாது//

          அப்படி ஒரு நிலை இருந்தால் அப்படிப்பட்ட மருத்துவர்களை புறக்கணிக்கும் உரிமை தாரளமாக உங்களுக்கு இருக்கிறது..
          நேர்மையான இன்னொரு மருத்துவரை தாங்கள் நாடி
          செல்லலாமே..

          //தனியாரும் சரியில்லை அரசும் சரியில்லை எனும்போது என்ன செய்யலாம் சார் நீங்களே சொல்லுங்களேன்! வெந்ததைத்தின்று விதி வந்து சாவுங்கள் என்கிறீர்களா?//

          நான் அப்படி கூறவில்லை..புரட்சி என்பது இவர்கள் இப்படிதான் என்று முடிவு செய்துகொண்டு ஒரு சாராரை மட்டும் குறைகூறிக்கொண்டே
          இருப்பதல்ல..மருத்துவ துறையில் சில குறைகள்
          இருப்பதனால் அதற்கு மருத்துவர்கள் மட்டும்தான்
          காரணம் என்று நினைப்பதை விட்டுவிட்டு மக்களும் காரணம் என்பதை உணரவேண்டும்..
          மருத்துவர்களின் மீதான காழ்ப்புணர்ச்சியை அரைடிக்கெட் போன்றவர்கள் வெளிப்படுத்தும் விதத்தினை வைத்து தோழர்கள் அனைவருமே
          இதுபோல்தான் இருப்பார்கள் என்று நினைப்பது எவ்வளவு
          தவறோ ,அதுபோலதான் ஒரு சில மருத்துவர்களை உதாரணம் காட்டி
          பொதுவாக மருத்துவர்கள் அனைவரும் இப்படித்தான் என்று முடிவு செய்வது என்பதும் தவறு.

          மேலும் விளக்கங்கள் வேண்டுமானால் தர தயாராகவே இருக்கிறேன் நண்பரே..

          குறிப்பு.; அரைடிக்கெட் அவர்கள் என்னுடைய கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் தனிப்பட்ட விமர்சனம் செய்யும்பட்சத்தில்
          அதனை விதண்டாவாதம் என்று சொல்வது எப்படி
          தவறாகும் நண்பரே..

        • @@@நேர்மையான இன்னொரு மருத்துவரை தாங்கள் நாடி செல்லலாமே.@@@
          அட்டே அப்ப நேர்மையில்லாத மருத்துவரும் இருக்காங்களா? என்னடா இது ஆச்சரியம்?இதப்போயி உங்க பிரன்டு ‘மதம்’ புடிச்ச யானை வந்து பின்னூட்டங்கர பேருல லத்தி போட்டுட்டு போச்சே அதுகிட்ட சொல்லுங்க…பிளாக்மெயிலு, ஏமாத்தி பணம்புடுங்கறதுன்னு அவர் செய்யுற தொழில ‘கன்பெசன்’ செஞ்சுட்டு போனாறில்ல..அவருக்கும் தெரியட்டும் 
          நேர்மையில்லாத டாக்டர்கள பத்தி நாங்க உடச்சா பொன்குடம் நீங்க ஒடச்சா மண்குடமா? எப்படியோ குட்டு ஒடஞ்சா சரிடேங்க்ஸ் திரு டாக்டர் இராம்.. உங்கள மாதிரி நல்லவங்க எப்படி அந்தாளோடல்லாம் போயி… பாத்துக்ங்க

        • //அப்படி ஒரு நிலை இருந்தால் அப்படிப்பட்ட மருத்துவர்களை புறக்கணிக்கும் உரிமை தாரளமாக உங்களுக்கு இருக்கிறது..நேர்மையான இன்னொரு மருத்துவரை தாங்கள் நாடிசெல்லலாமே//
          டாக்டர் ராம் யார் என்று இங்கு புரிந்து கொள்ளுங்கள்இஷ்டம்னா வா, கஷ்டம்னா போ என்கிற அதிகாரத்தில் எழுதுகிறார்(இவரிடம் மருத்துவம் பார்ப்பவர்களின் நிலைமையை நினைத்து பாருங்கள்)இவர் மட்டுமல்ல இவரை போன்று 99% டாக்டர்கள் அதிகார போதையில்தான் திரிகிறார்கள்.
          \\செம்புரட்சி எங்கு கிடைக்கும்\\
          நான் முன்பே சொன்னது போல நோயாளியை product ஆக பார்க்கும்குணம் புரட்சியையும் productஆக தோன்றுகிறது,

        • //அப்படி ஒரு நிலை இருந்தால் அப்படிப்பட்ட மருத்துவர்களை புறக்கணிக்கும் உரிமை தாரளமாக உங்களுக்கு இருக்கிறது..நேர்மையான இன்னொரு மருத்துவரை தாங்கள் நாடிசெல்லலாமே//
          //டாக்டர் ராம் யார் என்று இங்கு புரிந்து கொள்ளுங்கள்இஷ்டம்னா வா, கஷ்டம்னா போ என்கிற அதிகாரத்தில் எழுதுகிறார்(இவரிடம் மருத்துவம் பார்ப்பவர்களின் நிலைமையை நினைத்து பாருங்கள்)//

          மன்னிக்கவும் ..திரு. மருதன் அவர்களின்
          குற்றச்சாட்டிற்கு என்னுடைய விளக்கத்தையே நீங்கள் வேண்டுமென்றே திரித்து கூறுகீறீர்கள். திரும்ப படித்து பாருங்கள்..
          “” //தாங்கள் குறிப்பிடும் கிளினிக் நிலையத்திலேயே எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் அறுவை சிகிச்சை செய்யச்சொல்வது,பயமுறுத்துவது போன்றவற்றினால் பாதிக்கப்படாத எந்தவொரு தனி நபரும் இருக்கமுடியாது// “”

          —————————இதற்கு என் பதில்.————————–

          “” அப்படி ஒரு நிலை இருந்தால் அப்படிப்பட்ட மருத்துவர்களை புறக்கணிக்கும் உரிமை தாரளமாக உங்களுக்கு இருக்கிறது..
          நேர்மையான இன்னொரு மருத்துவரை தாங்கள் நாடி
          செல்லலாமே..””

          —- இதில் அதிகார போதை எங்கே வந்தது..தவறு செய்வபவர்களை புறக்கணியுங்கள் என்பதுதான் என் கருத்து…

          தங்களில் வீணான விவாதத்திற்கு இனிமேலும் நான்
          பதில் சொல்வதாக இல்லை.. நன்றி.. தாங்கள் என்னை புரிந்துகொண்ட, உங்களை புரிந்து கொள்ள உதவியதற்கு..

          குறிப்பு… என்னிடம் வரும் நோயாளிகளை பற்றி தங்கள் கவலைப்பட ஒன்றும் இல்லை.. என்னிடம் நேர்மை இல்லை என்றால் அதனை அவர்கள் முடிவு செய்யட்டும்..

          என்னுடைய பதில்களை படித்து பின்பு பின்னூட்டம இடவும்..
          பார்க்க..மறுமொழி எண் .. 8, 8-2-2, 11-2-1,12-1-1-1,

    • பிளாக்மெயில் , பிளாக்மெயில் ,பிளாக்மெயில் ,பிளாக்மெயில்,பிளாக்மெயில் என்று அள்ளிவிடும் விடையளி உங்களிடம் யார் பிளாக்மெயில் பண்ணினார்கள்?

      மக்கள் போராட்டத்திற்காக மக்களிடம் நன்கொடை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதியாய் மாறி விட்டீரோ, விலைவாசி உயர்வு , மறுகாலனியாதிக்க எதிர்ப்பு விவாசாய அழிப்புக்கு எதிரான போராட்டங்களுக்கு மக்களிடம்தான் நன்கொடை வாங்கவேண்டும் நன்கொடை என்பதை வெறும் பணமாக பார்க்கவேண்டாம் ,

      தோழர்களின் அரசியல் பிரச்சாரத்தினுடான நன்கொடை அது, உழைக்கும் மக்களிடம் மக்கள் போராட்டத்திற்காக தோழர்கள் வாங்கும்போது மக்கள் இன்முகத்தோடு கொடுப்பதை நீர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.உங்களிடம் வரும் நோயாளிகள் வாடிய முகத்தோடு பணத்தை கொடுப்பதையும் நீங்கள் உணர முடியாது.   

      சரி மக்கள் போராட்டத்திற்காக நன்கொடையை இழிவுபடுத்தும் வெள்ளகோர்ட் ஆசாமிகள் உங்கள் போராட்டத்திற்காக உழைக்கும் மக்களிடம் ரசீது நீட்டி பாருங்கள் அப்போது நீங்கள் யாரென்று புரியும். 

      கூலிப்படை பணத்திற்காக கொலை செய்கிறது நீங்களோ பணம் தரவில்லை என்றால் சிகிச்சையளிக்காமல் கொல்கிறீர்கள் உங்களுக்கும் கொலைகாரனுக்கும்         பெரிய வேறுபாடு எமக்கு தெரியவில்லை,
      மக்களுக்காக மக்களிடமிருந்து வெளிப்படும் உண்மையே
      வினவின் இக்கட்டுரை.  

    • தோழர் விடையளி தாங்கள் இந்த கட்டுரையாளரும் நானும் ஒன்று என்ற தொனியில் பதில் அளித்துள்ளீர்கள். தவறு. இந்த தளம் தொடர்பான இயக்கங்களை நீண்ட காலமாக அறிவேன். அவர்களின் சமூக அக்கறை அதற்கான போராட்டங்கள் சந்தித்த இழப்பீடுகளையும் அறிவேன். அதனால் அவர்களின் ஒருவன் என்ற தொனியிலே என் விளக்கத்தை அளித்தேன்.

      மேலும் பொதுவாக என் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டீர். நன்றி. ஆயினும் குறை கண்டீர். ஏன் பாரட்டவில்லை, ஏன் முதலில் சொல்ல வில்லை என்று. அதே போன்றுதான் மருத்துவ துறையின் தவறுகளை வினவோடு சேர்ந்து நான் குறிப்பிட்டேன்.
      விதண்டாவாதம் ஏற்படும்போது சில தோழர்கள் வரம்பின்றி வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள் தங்களை போன்றே. அதை தவறு என சுட்டி காட்டதான் முடியும். திருத்தி கொள்ள வேண்டியது அவரவர் கடமை.

      5000 அல்லது 7000ூரூபாயில் வேலை பார்ப்பவன் மருத்துவமனையின் முதலாளியாக இருக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.
      குறையை சுட்டி காட்டும் போது நான் அவனில்லை என்று தனியாக பிரிந்து கொண்டு அரசு மருத்துவர்கள் அப்படி செய்வதில்லை என்று பொதுவாக சொல்வது தப்பிக்கும் நோக்கம்.
      போராட நீங்கள் தயார் என்றால் களத்தில் நிற்க நான் தயார். அந்த போராட்ட செலவுகள் உதாரணமாக ரூ 500 என்றால் களத்தில் நிற்கும் சக மருத்துவ மற்றும் ஆதரவு தோழர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவீர்களா அல்லது மொத்தமாக தாங்களே ஏற்றுக் கொள்வீர்களா. நீங்களே ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ரசீது தேவையில்லை. ஒரு அமைப்பாக செயல்படும் போது தேவை. தோழர் தவறை சுட்டிக் காட்டுங்கள் தொடராமல் இருக்க. ஆனால் விதண்டாவாதம் புரியாதீர்கள்.
      மேலும் மருத்துவர்களை பாராட்டவே இல்லை என்று சொல்லுவதால் ஒட்டு மொத்த சமுகத்தின் சார்பாக சொல்கிறேன் மக்களுக்காக தன்னை அர்பணித்து மனித இனத்தை காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி.

  13. Like no other country it is only in india where health care expenditures  are met out of their own pocket,it is 8 times more expensive to take treatment in a private hospital than a govt. hospital; less than 1percent of our gdp is spent on health,

  14. ஆதாரம் frontline ஒரு தோழர்களின் பேபராக இருந்தாலும் படிக்கலாம் .health is mainly a subject of state  in india.but  தோழர்கள் கோப படக் கூடாது தமிழகம் கேரளா மேற்குவங்கம் த்தய் விட மிக நல்ல நிலையிலே உள்ளது .கவனிக்க recent visit by ghulam nabi azad 

  15. //காசுள்ளவனுக்கே கல்வி என்றாக்கியுள்ள மருத்துவக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடி முறியடிக்கவேண்டும். தனியார் மருத்துவக்கல்லூரிகளை அரசே எற்று நடத்த வேண்டும். அலோபதி தவிர ஹோமியோபதி மற்றும் சித்த வைத்தியக் கல்விக்கும் கூட மாவட்டந்தோரும் கல்லூரிகள் அமைக்கவேண்டும். இவர்களாக இதைச் செய்ய மாட்டார்கள் என்பது தெரிந்ததுதான். நாம்தான் அவர்களைச் செய்ய வைக்கவேண்டும்.//

    நாம்தான் செய்யவேண்டும், ஒரு வீட்டிற்கு ஒரு மருத்துவரையோ அல்லது தெருவிற்கு நான்கு மருத்துவரோ உருவாக வேண்டும், இதெல்லாம் தற்போதையபோலி ஜனநாயக ஆட்சிமுறையில் நடக்க வாய்ப்பில்லை. உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடக்கும் புதிய ஜனநாயக புரட்சியின் மூலமே சாதிக்க முடியும். 
    மின்சாரம் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்வதற்கு எலக்ட்ரீசியன்களுக்குபஞ்சமில்லை அது போல் டாக்டர்கள் பெருகவேண்டும். டாக்டர் என்பவன் தொழிலாளியாக மாற்றபட வேண்டும் அதுவரை தீர்வு இல்லை.
    பொதுவாக மனிதனுக்கு இரக்ககுணம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது, இது டாக்டர் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும், இவர்கள் அரசு மருத்துவமனையில் பயிற்சி எடுக்கும்போது நோயாளிகள் ‘கேஸ்’ ஆக மாறுகிறார்கள் ஒரு டாக்டர் நோயாளியை Productஆக பார்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால்தான் அவதிப்படும் நோயாளிகளை மரியாதையில்லாமல் ‘வா”போ’ என்று திட்டுவது, காப்பாத்தனும்னா இவ்வளவு பணம் கொடு என்று மிருகத்தன்மையில் கேட்பது சகஜமாகி விட்டது. டாக்டர் businessman ஆக இருக்ககூடாது அவன் ஒரு சாதரண சம்பளம் வாங்கும் Labour ஆக மாற்றப்பட வேண்டும். அதற்கு மக்கள் புரட்சிக்கு அணி திரள வேண்டும்.

  16. அன்புள்ள திரு டாக்டர் இராம், மேலே தோழர் மயல்(வாகனன்) அவர்கள் உங்களிடம் வினவியிருக்கிறார் ‘விடையளி’யுங்களேன், அப்படியே அந்த மதம் புடிச்ச பதிவுலக ‘தா(த்)தா’ டாக்குடரிடமும் சொல்லிவிடவும்

    • போதுமான அளவு தோழர் மயில் அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது..என் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக திரும்பவும் கேள்வி கேட்டால் என்ன செய்வது. பார்க்க..மறுமொழி எண் .. 8, 8-2-2, 11-2-1,12-1-1-1,

  17. “பதிலளியும்” டாக்டர் ராம்மின் பின்னனூட்டங்களிலும் மீனாட்சி மிஷனின் வாடைவீசுகிறது. எனினும் சரியான பதிலைத் தரவேண்டியது கட்டுரையாளரின் கடமையே. ஆனாலும் பதிலளி என்பவர் பிளாக் மெயில் பணம் பறிப்பதற்காக இப்பிரச்சனையை வினவு எழுதியுள்ளதாகவும் கம்யூனிஸ்ட்கள் ரசீது அடித்து வசூல் செய்து ஏப்பம் விடுவதாகவும் குற்றமும் சுமத்தியுள்ளதால் தோழர் குருசாமி மயில்வாகனின் “ஆதாரம் தந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்” என்ற எதிர்பாப்பும் நேர்மையானதே. 
     தோழர் குருசாமிமயில்வாகனன் பறையோசைக்குழுமத்தின் ஒரு அங்கத்தினர் என்பதால் பறையோசை அவர் தரப்பிற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. எங்களது முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அதில் உள்ளது. அறிவு நாணயமும், மானம் ரோஷமும் இருந்தால் “பதிலளி” தனது உண்மைப் பெயரையும்  முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை இங்கே பதிவு செய்யட்டும். பதில் எழுத காத்திருக்கிறோம். 

  18. “விடையளியும்”, “டாக்டர் ராம்”மும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள பயந்து ஓடிவிட்டாலும்  நமது பொறுப்பை நாம் நிறைவேற்றியே தீரவேண்டும். பிற பின்னூட்ட தோழர்கள் தொடர்ந்து கவணித்து வரவும்.அடிக்கு பயந்து உளறுபவன் போல் “விடையளியும்”, “டாக்டர் ராம்”மும் பின்னூட்டங்களை இட்டுள்ளனர். இரத்த நாளங்களில் 1 சிசி வரை காற்றை செலுத்தினாலும் செத்துவிடமாட்டார்கள், ஒருவேளை டெங்கு காய்சல், எய்ட்ஸ், புற்றுநோய் மற்றும் மது அருந்தியிருந்தால் மட்டுமே இறந்துவிடுவார்கள் என்கின்றனர். 
    அந்த முத்துராஜா காய்சல் என்றே மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அந்த காய்சல் டெங்கு என்றே வைத்துக்கொள்வோம். அதனை யூகித்து அறிந்த அந்த மருத்துவரும் பயிற்சி மாணவியும் திட்டமிட்டு இரத்த நாளங்களில் காற்றை செலுத்தி படுகொலை செய்தனர் என்று இவர்கள் சாட்சிகளாக வாக்குமூலம் தந்துள்ளனர். ஏனெனில் முத்துராஜாவிற்கு டெங்கு காய்சல், எய்ட்ஸ், புற்றுநோய் ஏதும் இல்லை என்று மருத்தவம் செய்த அவர்களுக்கு தெரியாது. எனெனில் இரத்த நாளங்களில் காற்றை செலுத்துவதற்குமுன் இரத்தப் பரிசோதனை செய்து நோயை அடையாளம்  காணப்பட்டிருக்கவில்லை. மது அருந்தியிருக்கவில்லை என்றும் அவர்கள் உறுதி செய்துக்கொண்ட report –ம் இல்லை.
    தோழர் குருசாமிமயில்வாகன்ன்கூட அஜாக்கிரதை என்றே குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் இந்த இரு போலி டாக்டரும் திட்டமிடட கொலை என்று தெளிவாக கூறுகின்றன். இவர்களின் வாதப்படி அந்த அரசு மருத்துவரும் பயிற்சி நர்சும், டெங்கு காய்சல், எய்ட்ஸ், புற்றுநோய் மற்றும் மது அருந்தியிருந்தால் இறந்துவிடுவார்கள் என்று அறிந்தே இருக்கவேண்டும். அப்பொழுதான் அந்த மருத்துவர் முறையாக பட்டம் பெற்ற உண்மையான மருத்துவராக இருக்கமுடியும். இல்லை என்றால் இலஞ்சம் கொடுத்து மருத்துவ சான்றிதழ் பெற்ற சமூக விரோதியாவார்.

  19. பயிற்சிக் கட்டணமாக 50,000, ஒரு லட்சம் என வாங்கும் மருத்துவப் பயிற்சிக் கல்லூரி முதலாளிகள் தங்களது மாணவர்களை அப்போலோ, மீனாட்சி மிசன், விஜயா, மலர் போன்ற தனியார் நட்சத்திர மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்காக அனுப்புவதில்லை***

    நீங்கள் தனியார் மருத்துவமனையில் தான் தரம் அதிகமாக உள்ளது என்று கூறுகீர்களா? அங்குதான் செவிலியர்களுக்கு தரமான பயிர்ச்சி அளிக்கப் படுகிறது என்பதை
    ஒத்துக்கொள்கீரீர்களா? தமிழகத்தில் உள்ள அனைத்தும் அரசு மருத்துவமனைகளில் தரமான ஸெவிலியர் பயிற்சி அளிக்கப்படவில்லை என்று கூறுகிறீர்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க