privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்தலாக் - ஷரியத் சட்டமும் இஸ்லாமியப் பெண்களின் அவலமும் !

தலாக் – ஷரியத் சட்டமும் இஸ்லாமியப் பெண்களின் அவலமும் !

-

உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு  – 11

இசுலாமியப் பெண்களைப் பற்றி எங்கு விவாதம் நடந்தாலும் “புர்கா”வும் தலாக் என்பதும் முதன்மையான தலைப்பாக அமைந்துவிடுகிறது. மற்ற பிரச்சினைகளெல்லாம் பிற மத பெண்களுக்கும் பொதுவானதாக அமைந்து, இவ்விரண்டிலும் மட்டும் இசுலாமியப் பெண்கள் தனித்து எதிர் கொள்வதால்  இவை பிரதானமாக விவாதிக்கப்படுகிறது, அது தவிர்க்க முடியாததாகவும் உள்ளது. உயர் கல்வியும் வேலைக்குச் செல்வதும் பிரச்சனையான ஒன்றாக இருந்தாலும் இப்பொழுது அது வெகுவாக உடைக்கப்பட்டுவிட்டது.

புர்கா, தலாக் குறித்த பிரச்சனைகளில் 1400 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிலையே தொடர்கிறதா என்ற கேள்வியை எழுப்பி சமூகத்தை பார்ப்போமானால் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லலாம். காலத்திற்கு ஏற்ப மாறிவரும் இவர்களிடம் இது குறித்தான சரியத் சட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி இன்னும் நாம் அதில் செய்யவேண்டியதைப் பற்றி பேசினால் உடனே அவர்களிடம் வரட்டுத்தனமான விவாதம் தலை தூக்கிவிடுகிறது. மத நம்பிக்கையில் மட்டும், அதாவது மதம் சார்ந்த இயக்கங்களில் அணி திரட்டப்படாதவர்களிடம் இது குறித்தான விவாதங்களை முன் வைக்கும் போது காலத்திற்கேற்ற மாற்றங்களை வரவேற்கவே செய்கின்றனர். இதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பில்லை என்பதையும் உணர்கின்றனர். ஆனாலும் அதனை ஒரு தீர்மானகரமாக நடைமுறைப்படுத்த ஏனோ பயப்படுகின்றனர். தமது சொந்தப் பிரச்சினைகளில் ஜமாத்துகளோடு இவர்கள் போராடினாலும் இமாம்கள் அல்லது அமைப்புகளின் முன்னோடிகள் “சரியத்” என்ற ஆயுதத்தைக் கொண்டு வெட்டி வீழ்த்தி விடுகின்றனர்.

அதனால் “தலாக்” பற்றிய சரியத் சட்டம், நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தேவையான மாற்றம் என்ற வகையில் இக் கட்டுரையை எழுத முயற்சித்துள்ளேன். சற்று நீளமாக இருக்கலாம். தவிர்க்க முடியாதது என்பதை புரிந்து கொண்டு கருத்தாய்வு தாருங்கள்.

சரியத் சட்டம் என்பது இந்திய பீனல்கோடு போல வரிசையாக தெளிவாக எழுதி வைக்கப்பட்ட புத்தகம் அல்ல. குர்ஆன் வசனங்களிலும் நபிமொழிகளிலும் ஆங்காங்கே காணப்படுபவைகளைக் கொண்டு எடுத்தாளப்படுபவைகள். அவற்றில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இன்று சுன்னத் ஜமாத்தினரும் தவ்ஹீத் ஜமாத்தினரும், முரண்பாடுகளை அவரவருக்குப் பிடித்த மாதிரி எடுத்துக் கொண்டு சண்டையிடுவதும், தமக்குத்தாமே அக்மார்க் முத்திரைக் குத்திக் கொள்வதும் போல அன்று முதல் இன்றுவரை தர்க்கமும் சண்டையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு அரபிமொழியின் வளமின்மையும் ஒரு காரணம்.

எடுத்துக்காட்டாக குர்ஆன் 2:228-ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள குருஉ எனும் சொல்லின் வினைச் சொல்லான அக்ரஅத் எனும் சொல்லுக்கு ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது (மாதவிடாய் ஆரம்பம்) என்ற பொருளும், ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது (மாதவிடாய் நின்றுவிட்டது) என்ற எதிரிடையான பொருளும் உண்டு. இதனை நான் கூறவில்லை. புகாரி அவர்களே பதிவுசெய்துள்ளார்கள். (பார்க்க பாகம்:6 பக்கம் 78) எக்காலத்திற்கும் பொருந்தும் அருள்மறை என்று கூறும் குர்ஆனின் சொல்லிலேயே குழப்பம் என்றால் என்ன சொல்லவது?

தலாக் என்றால் என்ன?

மணவிலக்கு என்று புத்தகங்களில் எழுதுகின்றனர். விவாகரத்து (திருமண முறிவு) என்று பொதுவானவர்கள் புரிந்து வைத்துள்ளனர். நடைமுறையும் இதனையே உணர்த்துகிறது. ஆனால் அதன் நேரடிப் பொருள் விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் ஆகியன. ஒரு அரபி இச்சொல்லினை எப்படி புரிந்து கொள்வார் என்பதிலிருந்து தலாக் என்பதன் மூலம் ifif, நடைமுறையில் பெண்ணின் உணர்வுக்கும் உரிமைக்கும் எவ்வளவு மதிப்பளித்திருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தலாக் என்பதுபோல் ஈலா, ழிஹார் என் இருவகை மணமுறிவுகளும் இருந்துள்ளன. ஈலா என்றால் நீ எனக்கு விலக்கப்பட்டவள் (ஹராம்) என சத்தியம் செய்வதால் ஏற்படும் மணமுறிவு. ழிஹார் என்றால் நீ என்க்கு தாயைப் போன்றவள் என்று கூறிவிடுவதால் ஏற்படும் மணமுறிவு. இன்று இது ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இல்லை. அதனால் இதற்குள் செல்ல வேண்டாம் என் கருதுகிறேன்.

ஒருவர் தன் மனைவியை தலாக் செய்ய விரும்பினால் “அவிழ்த்து விடுகிறேன்” அதாங்க தலாக் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். இதனை ஏறக்குறைய ஒருமாத கால இடைவெளியில் மூன்று தவணையாகச் சொல்ல வேண்டும் என்றும் ஒரே தவணையில் சொல்லிவிடலாம் என்றும் அன்றுமுதல் இன்று வரை அறிஞர்கள் ஆய்வு செய்து கொண்டும் தர்க்கம் செய்துகொண்டும் இருக்கின்றனர். சாதாரண மக்கள் எப்படிச் சொன்னாலும் ஒன்றுதான் என்ற புரிதலிலும் நடைமுறையிலும் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எப்படிச் சொன்னாலும் பலன் ஒன்றுதான்.

ஒரு ஆண் மூன்று தவணைகளில் தலாக் சொல்லுகிறான் என்று வைத்துகொள்வோம். தலாக்கிற்கு காரணமான தன் கோபம் தனியவோ, அல்லது தன் மனைவி ஒழுங்கங் கெட்டவள் என்று கருதி தலாக் சொல்லியிருந்தால் அது உண்மையா பொய்யா என்று நிதானமாக புரிந்து கொள்ளவோ அவகாசம் கிடைக்கும். மூன்றாவது தலாக் சொல்வதற்கு முன் தன் மனைவியை சேர்த்துக் கொள்ளலாம். பெண்ணைப் பொறுத்தவரை தன் கணவன் மனம் மாறி தன் மீது இரக்கம் காட்டமாட்டானா என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒருமுறை தலாக் என்று சொல்லிவிட்டாலே பெண்ணானவள் “இத்தா” இருக்கத் தொடங்கவேண்டும். (இத்தா பற்றி இங்கு படித்துக்கொள்ளுங்கள்) மூன்றுமுறை சொல்லாவிட்டாலும் ஒரு முறை இந்தச் சிந்தனைக் கணவனுக்கு தோன்றிவிட்டால் காலம் முழுவதும் இந்த நெருக்கடியிலிருந்து அவள் மீளவே முடியாது. அதாவது ஆணாதிக்க வடிவமே “கைவிடுதல்” என்ற சரியத் சட்டம். முத்தலாக்கையும் ஒரே தடவையில் சொன்னாலும் ஆணாதிக்கமே கோலோச்சும். அதுவே ஒரு பெண் தன் சுய வருமானத்தில் இருந்தால்…..

பாத்திமா . அரசுத் துறையில் ஒரு பொறியாளர். கணவர் ஒரு ஆசிரியர். கை நிறைய சம்பளம் வாங்கும் பாத்திமாவிற்கு மேலும் ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. வெளிநாட்டில் அரசுத் துறையில் பொறியாளர் வேலை. இலகரத்தில் ஊதியம். வீடு கார் மற்றும் குடும்பத்திற்கான விசா என்று அனைத்து வகையிலும் ஏராளமான சலுகை. ஆனால் பிரிந்து வாழ மனைவியை அனுமதிப்பதில் கணவனுக்கு அளவில்லாத தன்மான உணர்வு. மனைவியை தடுக்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பாத்திமாவிற்கு இந்த பொன்னான வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. முதலாளித்துவ உலகத்தில் வாழும் அவரால் அதை இழக்க முடியாதுதானே. அப்படி இழக்க பொதுவாக எவரும் விரும்பவும் மாட்டார்கள். பாத்திமா தனது விருப்பத்தில் மாற்றம் செய்துகொள்ள தயாரில்லை. தன் கணவனையும் வேலையை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு அழைக்கிறார். பெண் உழைப்பில் தாம் வாழ்வதா என்ற உணர்வு அவருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. தலாக் செய்து விடுவதாக மிரட்டுகிறார். பலனில்லை. குடும்பத்திலுள்ளவர்கள் சமாதானம் செய்ய இன்று அவர்கள் இருவரும் வெளிநாட்டில். இது நடந்து பதினைந்தாண்டுகளுக்கு மேலாகிறது. இப்பொழுது அவர்கள் அந்நாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளிகள்.

பொதுவாக வருமானம் ஈட்டும் பெண்களுக்கு தும்மினாலும் தலாக் என்ற நெருக்கடி இல்லை. அந்த பயமுறுத்தலையும் பெண்கள் எளிதாக கைகொள்கின்றனர். அதுபோல ஆண்களிடமும் மணவாழ்க்கையின் காதல் உணர்வை புரிந்து கொள்ளும் மனமுதிர்ச்சியையும் இன்று நிறையவே காணமுடிகிறது. அதாவது வெளியில் போகக் கூடாது, ஒரு ஆணுடன் பேசிவிட்டாலே சந்தேகம் கொள்வது என்ற பண்புகளில் நிறையவே மாற்றம் உள்ளது.

தலாக் என்பதற்கான “நபிவழி” என்று பின்வருமாறு கூறுகின்றனர். 1. மாதவிடாய், பிரசவ இரத்தப்போக்கு ஆகியவற்றிலிருந்து நீங்கி மனைவி தூய்மையாக இருக்க வேண்டும். 2. மனைவியுடன் தலாக் சொன்னபிறகு உடலுறவுக் கொள்ளக்கூடாது. 3. இரு சாட்சிகள் முன்னிலையில் மணவிலக்கு அளிக்க வேண்டும்.

இரண்டாவது விதியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தலாக் என்றாலே அதுதானே. முதலாவது விதிப்படி மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்லக்கூடாது. ஆனால் சொல்லக்கூடாது என்ற தலைப்பில் குர்ஆன் வசனம் 65: 1 ஐ ஆதாரமாகக் கூறும் புகாரி அவர்கள், அடுத்த தலைப்பிலேயே தலாக் செல்லும் என்றும் தலைப்பிட்டு, இரண்டிற்கும் சாட்சியாக காலிபா உமர் அவர்களின் மகன் அப்துல்லா செய்த ஒரே தலாக் நிகழ்ச்சியை (புகாரி 5251, 5252, 5253) ஆதாரமாக எழுதியுள்ளார். வேடிக்கையான முரண்பாடு. இவர்கள் ஏன் தங்களுக்குள் காலம் காலமாக அடித்துக் கொள்கிறார்கள் என்று புரிகிறதா? இதற்குப் பெயர் தெளிவான மார்க்கமாம்.

தலாக் பற்றி புகாரி அவர்கள் தொகுத்துள்ள எந்த நபிமொழியிலும் இரு சாட்சிகள் முன்னிலையில்தான் தலாக் சொல்ல வேண்டும் என்பதற்கான நபிமொழி ஒன்றும் இல்லை. தலாக் சொல்லிவிட்டு வந்து தான் தலாக் சொல்லிவிட்டதாக பிறரிடம் கூறியதான நபிமொழிகளே காணப்படுகிறது. முகம்மது நபியும் தனது ஒரு மனைவியை தலாக் செய்தபோது எந்த சாட்சியையும் முன்னிருத்தியும் தலாக் செய்யவில்லை. உமையா என்ற அப்பெண்ணிடம் தாம்பத்திய உறவுகொள்ள முற்பட்டபோது அப்பெண் குலப் பெருமைகூறி இணங்க மறுத்துவிடவே, முகம்மதுநபி “உன் குடும்பத்தாரிடம் சென்றுவிடு” என்று கூறிவிட்டு வெளியில் வந்து அபு உசைத் என்பவரிடம் இரு வெண்ணிற சணலால் நெய்யப்பட்ட ஆடைகளை உமையா அவர்களுக்கு கொடுத்து அவரது குடும்பத்தாரிடம் கொண்டு விட்டுவிடுங்கள் என்று கூறியதாக (புகாரி: 5254,5255) நபிமொழி உள்ளது. இந்நிகழ்சி முத்தலாக்கையும் ஒரேதடவையில் முகம்மதுநபியே கூறியதற்கு சாட்சியாகவும் இருக்கிறது.

ஒருவர் தம் மனைவி மீது விபச்சாரக் குற்றச்சாட்டைக் கூறினால் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வரத் தவறினால் அவருக்கு எண்பது கசையடிகள் தண்டனையும் அதன் பிறகு அவர் அளிக்கும் எந்த சாட்சியும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என்று குர்ஆன் வசன எண் : 24:4 கூறுகிறது.

ஹிலால் பின் உமய்யா என்பவர் ( மற்றொரு நபிமொழியில் இவர் பெயர் உவைமிர் அல் அஜ்லானி என்றுள்ளது. ஆனால் நிகழ்சி ஒரே மாதிரியுள்ளது. பெயரிலுமா இவர்களுக்குள் குழப்பம்?) தன் மனைவி மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முகம்மது நபியிடம் கூறி தனக்கு என்ன தீர்வு எனக் கேட்கிறார். அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வரும்படியும் இல்லையேல் கசையடி கொடுக்கப்படும் என்றும் முகம்மது நபி கூறுகிறார்கள். அதற்கு ஹிலால் அவர்கள் தன் மனைவி அடுத்தவருடன் உடலுறவு கொள்வதை பார்த்ததிற்குமா நான்கு சாட்சிகள் வேண்டும் என்று மீண்டும் கேட்க நடைமுறைச் சிக்கலை புரிந்துகொண்ட முகம்மது நபி தமக்கு வேறு கட்டளை அல்லாவிடமிருந்து வந்துவிட்டதாக (குர்ஆன் வசனம் 24:6-9) கூறி நான்கு முறை தாம் சொன்னது உண்மை என்று சத்தியம் செய்து அதன் பிறகு அப்படி தாம் செய்த சத்தியம் பொய்யானால் தன்மீது அல்லாவின் சாபம் உண்டாகட்டும் என்று கூறினால் போதும் என்றும் கூறிவிடுகிறார்கள். இதற்கு லிஆன் செய்தல் என்று பெயர். அது சரி குற்றம் சுமத்தப்பட்ட பெண் என்ன செய்ய வேண்டும்? ஹிலால் அவர்களின் மனைவி ஷரீக் பின் சஹ்மா அவர்களையும் இவ்வாறு சத்தியம் செய்யச் சொல்லகிறார்கள். (அதாவது அல்லாவிற்கு அஞ்சி சொல்லமாட்டார் என்ற கருத்தில் என கருதுகிறேன்) அவரும் அதேமாதிரி சத்தியம் செய்கிறார். இருவருமே தம் மீது குற்றமில்லை என்று கூறிவிட்டபொழுது என்ன தீர்ப்புச் சொல்லவது? தீர்ப்பை குற்றம் சுமத்தியவரே எழுதிவிடுகிறார். “ நான் இவள் மீது குற்றம் சுமத்திவிட்ட பிறகு இவளை கைவிடாவிட்டால் (தலாக் சொல்லாவிட்டால்) நான் சொன்னது பொய் என்றாகிவிடும் என்று கைவிட்டுவிட்டார். (புகாரி 4747, 5308)

இன்றைய நடைமுறையில் அப்படி தன் விருப்பத்திற்கு ஏற்ப தலாக் என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் தன் மனைவியை தலாக் செய்ய விரும்பினால் அதற்கான காரணத்தை சொல்லி தன்னுடைய ஜமாத்தில் சொல்லவேண்டும். காரணம் சொல்லத் தேவையில்லை என்று சரியத் சட்டமிருந்தாலும் காரணம் சொல்லாமல் ஜமாத் ஏற்றுக் கொள்வதில்லை. உடலுறவு தொடர்பான ஒழுக்கக் கேட்டிற்குத் தவிர பிற காரணங்களுக்கு தலாக் என்பதை உடனடியாக அனுமதிப்பதில்லை. உடலுறவு தொடர்பான ஒழுக்கக் கேட்டிற்குக் கூட தீர விசாரிக்காமல், அதற்கான சாட்சிகள் இல்லாமல் அனுமதிப்பதில்லை. பிறவகை குற்றச்சாட்டுகளுக்கு சில மாதங்கள், வருடங்கள் கூட தீர்ப்புக் கூறாமல் தள்ளிவைத்து பின்னர்தான் தலாக் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆனாலும் உலமாக்கள் மன்றங்களும் இசுலாமிய அமைப்புகளும் தன்னிச்சையாக சொல்லப்படும் தலாக்குகளை அங்கீகரிக்கின்றனர். செல்போன் மூலமும் தலாக் சொல்லலாம் என்றும் இவர்கள் அனுமதித்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். விதிவிலக்காக ஜமாத்துகள் கூட பிரச்சனைக்குரியவரின் வசதி வாய்ப்பைப் பொறுத்து ஏற்றுக் கொள்கிறது.

குலா

தலாக் – ஆண் தன் மனைவியைக் கைவிடுதல்- என்பது போல பெண் தன் கணவனை தலாக் சொல்ல முடியுமா?

குலா (அல்குல்வு) என்ற இச்சொல்லிற்கும் கழற்றிவிடுதல் என்றுதான் பொருள். ஆனால் தன்வினையில் பயன்படுத்தக் கூடாது. பிறவினையில் பயன்படுத்த வேண்டும். அதவது பெண் தன் கணவனைப் பிடிக்காவிட்டால் நடுவரிடமோ அல்லது தமக்குப் பொறுப்பாக இருந்து யார் திருமணம் செய்து வைத்தார்களோ அவர்களிடம் முறையிட்டு தன் கணவனை “கழற்றிவிடச் சொல்லுங்கள்” என்று சொல்வதாகும். இதற்கு ஒருமுறை, மூன்றுமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது. கழற்றிவிடச் சொல்ல விரும்பும் பெண் தான் பெற்ற மகர் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். அல்லது ஏதாவது நட்ட ஈட்டுத்தொகை கொடுக்க வேண்டும்

இதிலும் முரண்பாடு இவர்களிடையே உள்ளது. குலா என்பது முழுமையான தலாக் என்றும் இல்லை என்றும் இரண்டு கருத்துண்டு. அதாவது இசுலாமியச் சட்டப்படி தலாக் சொல்லி விட்டால் அவ்விருவரும் மீண்டும் இணைந்து (திருமணம்) வாழ முடியாது. அவ்வாறு வாழ விரும்பினால் அப்பெண் வேறொருவரை திருமண்ம் செய்து அவருடன் உடலுறவு கொண்ட பிறகு அவரிடமிருந்து தலாக் பெற்று அதன் பிறகே ஏற்கனவே வாழ்ந்தவருடன் இணைய முடியும். குலாவில் அதுபோல் வேறு திருமணம் செய்யத் தேவை இல்லை; விரும்பினால் இணைந்து கொள்ளலாம். அது பிரிவினையே தவிர தலாக் இல்லை என்பது ஒருசாரரின் கருத்து.

இதற்கு அவர்கள் கூறும் ஆதாரம் குர்ஆன் வசனம் 4:20. அது, “ஒரு மனைவியிடத்தில் (விவாகரத்து செய்துவிட்டு) மற்றொரு மனைவியை (திருமணம் மூலம்) மாற்றிக் கொள்ள விரும்பினால் அவர்களில் ஒருத்திக்கு ஒரு (பொற்)குவியலையே கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் (திரும்ப) எடுத்துக்கொள்ளாதீர்கள்.” என்று கூறுகிறது.

குலாவும் தலாக்தான் என்று கூறுபவர்கள் குர்ஆன் வசனம் 2:229 மற்றும் புகாரி 5373 மற்றும் 5230 ஆகியவற்றை ஆதாரமாக கூறுகிறார்கள். “கணவன் மனைவியிடையே இசுலாமிய நெறிப்படி வாழ முடியாது என்று பிணக்கு எற்பட்டால் மனைவியிடம் ஈட்டுத் தொகை பெறுவதில் குற்றமில்லை” என்று குர்ஆன் கூறுகிறது. (குர்ஆனின் எந்த வசனத்தை சரி என்று எடுத்துக்கொள்வது? உங்களுக்கு எதுபிடிக்குதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.)

ஸாயித் பின் கைஸ் என்பவரின் மனைவி முகம்மது நபியிடம் சென்று தனது கணவர் உடலுறவுக்கான தகுதியில்லாததைக் குறிப்பிட்டு தமக்கு தலாக் பெற்றுத் தருமாறு வேண்டுகிறார். அதற்கு முகம்மது நபி, அப்பெண்ணிடம் கணவரிடமிருந்து பெற்ற தோட்டத்தை திருப்பிக் கொடுத்துவிட சம்மதம் பெற்றுக்கொண்டு  ஸாயித் பின் கைஸ் அவர்களை தலாக் செய்யச் சொல்லுகிறார்கள். (புகாரி 5373)

பனூமுகிரா குலத்தினர் தங்கள் புதல்வியை அலி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகின்றனர். ஆனால் அதற்கு முகம்மது நபி அனுமதியளிக்க மறுத்துவிட்டு, “பாத்திமா  என்னில் பாதியாவார். அவரை வருத்தமடையச் செய்வது என்னை வருத்தமடையச் செய்வது போலாகும். வேண்டுமானால் பாத்திமாவை தலாக் செய்துவிட்டு வேறு திருமணம் செய்து கொள்ளட்டும்” என்று கூறுகிறார்கள். (4 மனைவி ஆதரவாளர்கள் கவனிக்க)

இவைகள் மூலம் முரண்பாடு ஒருபக்கமும், குலா என்பது தலாக் போலல்லாத கழற்றிவிடச் சொல்லி சொல்லுதல் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

குலா என்பது எப்படியிருந்தாலும் பெண், ஜமாத்தில் முறையிட விசாரணை நடத்தும் ஜமாத் கணவன் மீது குற்றமிருப்பின் கணவனுக்கு தண்டத் தொகை வழங்கவும், அவன் பெற்ற வரதட்சிணையை திருப்பித் தரவும் உத்தரவிடுகின்றனர். வரதட்சணை பெறாவிட்டாலும் இழப்பீட்டுத் தொகை உண்டு. குற்றம் யாருடையது என்பது மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது. ஆண் தலாக் செய்தாலும் இதுவே இன்றைய நடைமுறை. உலமாக்களின் தலையீடும் செல்லுபடியாவதாகத் தெரியவில்லை. காரணம் திருமணம் என்பதில் பெண்ணைப் பெற்றவர்கள் அல்லவா பெரிதும் இழக்கின்றனர். வரதட்சிணை மட்டுமல்ல பிரச்சனை. திருமணச் செலவு என்பதும் திரும்பப் பெறமுடியாத இழப்பல்லவா. பெண்ணைப் பொறுத்தவரை மறுமணம் என்பது முதல் திருமணத்தை விட கூடுதலாகவே செலவு செய்ய வேண்டியுள்ளது. அல்லது கொஞ்சமும் பொருத்தமில்லாத வயது கூடியவர்களை திருமணம் செய்ய வேண்டும். ஏழைகளைப் பொறுத்தவரை மறுமணம் என்பது கானல் நீர்தான்.

மணவிலக்கு நடந்தால் சரியத் சட்டப்படி குழந்தைகள் கணவனையே சாரும். ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் பெண்ணே குழந்தைகளைப் பொறுப்பேற்று கொள்கிறாள். மறுமணம் என்று வரும்போது ஏற்படும் பிரச்சனையால் ஆண் தற்காலத்தில் குழந்தைகளை ஏற்றுக் கொள்வதில்லை. பெண்ணைப் பொறுத்தவரை உணர்வுவகை சார்ந்த பாசம் என்ற பிணைப்பால் குழந்தைகளை தன்மீது திணிக்கப்படுவதாக கருதுவதில்லை. குழந்தைகளுக்கான எதிர்காலம், பராமரிப்பு என்ற வகையில் மாதம் மாதம் அல்லது ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகையையும் ஜமாத் கணவனிடமிருந்து பெற்றுத் தருகிறது.

அந்தக் காலத்தில் சந்தையில் வாங்கும் பொருள்போல பெண்களை அன்பளிப்பு (மகர்) கொடுத்து திருமணம் செய்துகொண்டனர். பெற்றவர்களும் யாராவது வாங்கிக் கொண்டால் சரிதான் என்று பருவமடையாத பெண்களைக்கூட 50 வயதுக் கிழவனுக்கும் திருமணம் செய்துகொடுத்தனர். ஒவ்வொருவரும் 5, 10 என்று பெண்களை திருமணம் செய்துகொண்டனர். இன்று அப்படி முடியுமா? என்னதான் சரியத்தைக் காக்கும் சட்டமேதையாக இருந்தாலும் தனது 6 வயது மகளுக்கு திருமணம் செய்து வைப்பாரா? இல்லை இரண்டாந்தாரமாக தன் மகளை மணமுடித்துக் கொடுப்பாரா? எந்தப் பெண்ணாவது தன் கணவன் வேறு திருமண்ம் செய்துக் கொள்ளத்தான் அனுமதிப்பாரா? காலம் ரொம்பத்தானே மாறிவிட்டது!

ஆமாம்! மிகவும் மாறிவிட்டதுதான். ஆனாலும் இசுலாமிய ஆண்கள் மனதில் தலாக் பற்றிய சிந்தனை மட்டும் மாறவில்லை. இரு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த பேரூந்து கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு இசுலாமிய ஜோடி மூன்றுபேர் இருக்கையில் பயணித்தனர். ஜன்னலோரத்தில் மனைவி. அவருக்கு அருகில் அவரது கணவர். அதற்கடுத்து வேறு ஒருவர். திடீரென்று அவர்களது கைக்குழந்தை அழ ஆரம்பிக்கிறது. எவ்வளவு சமாதனம் செய்தும் அழுகை நிற்கவில்லை. கணவராகப்பட்டவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்படி கூறுகிறார். மனைவி வெட்கப்பட்டுக்கொண்டு மறுக்கிறார். சர்ச்சை முற்றி அப்பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு இறங்கப் போவதாக எழுந்திருக்க, அவரது கணவன் அடித்துவிட, மூன்றாவதாக இருந்தவர் மேல் அந்தப் பெண் விழுந்துவிடுகிறார். எதிர் இருக்கையில் அதுவரை அமைதியாக இருந்த ஒருப்பெண் (அநேகமாக அப் பெண்ணின் தாயார்போல் தெரிகிறது) குழந்தையை தூக்கிக் கொண்டு “இப்படி பஸ்ஸிலயும் சண்டை போடுகிறீர்களே” என்று கூறுகிறார். கணவராகப்பட்டவருக்கு கோபம் உச்சமடைய மேலும் அதிகமாக அப்பெண்ணை (அசிங்கமாகவும்) திட்டிவிட்டு “உன்னை தலாக் சொன்னாதான்டி சரிவரும். எனக்கு ஒரு தம்ளர் பால் போதும்டி தலாக் சொல்ல. (பால் எதுக்கு என்று எனக்குப் புரியவில்லை) எனக்கு ஆயிரம் பொண்ணு கிடைக்கும்டி” என்று கத்திக் கொண்டே வருகிறார். நல்லவேளையாக ப்ட்டுக்கோட்டை வந்துவிடுகிறது. முன்னாடியே உள்ள நிறுத்தத்தில் நம்ம அற்புதவிளக்கு இறங்க வேண்டிருந்ததால் இறங்கிவிட பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லையாம்.

இலட்சாதிபதி முகம்மது அலி. 55 வயதிருக்கும் அவருக்கு. திருமணம் செய்தநாளிலிருந்து அவரது மனைவிமீது அவருக்கு அலாதியான அன்பு. எதற்கெடுத்தாலும் மஹ்மூதாபீ என்று கூப்பிடாமல் அவருக்கு நேரம் நகராது. எதையும் தன் மனைவியிடம் கலந்து கொள்ளாமல் முடிவெடுக்கமாட்டார். ஆனால் அவருக்கு இந்த வயதில் திடீரென்று என்னானது என்று புரியவில்லை. சில மாதங்களாக இருவருக்கும் பிணக்கு. ஒருநாள் திடீரென்று தம் மனைவியை தலாக் சொல்லிவிடுகிறார். ஜமாத்திற்கெல்லாம் செல்லவில்லை. அவரது பேத்திகளே பிள்ளை பெற்றுவிட்ட இந்த வயதில் பஞ்சாயத்தெல்லாம் சரிபட்டுவருமா? பணக்காரராகவும் உள்ள அவருக்கு அதெல்லாம் அசிங்கமில்லையா! அவரது மகன்களால் (3பேர்) ஏதும் சொல்ல முடியவில்லை. காரணம் சொத்து முழுவதும், இந்து மதத்திலிருந்து சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிவந்து இசுலாத்தில் இணைந்த அவரே உழைத்து சேர்த்த சொத்து. (கொஞ்சம் கடத்தல் தொழிலும்தான்). மூச்சுவிட்டால் அனைவரும் வெளியே போகவேண்டியதுதான். அதனால் தந்தைக்கு பிள்ளைகளும் ஆதரவு. அதற்கு சரியத்தும் சென்னை உலமாக்களும் ஆதரவு. சில தினங்களில் தலாக்கிற்கான காரணம் புரிந்தது. முகம்மதலி கேரளப் பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்டு கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

நிறைய எடுத்துக்காட்டுகள் தரலாம். தானும் ஒரு பெண்ணுக்கு தகப்பனாக இருந்தாலும் தலாக் என்பதை எளிதாகச் செய்துவிடலாம் என்ற மனநிலையில், அது தன்னுடை ஆண்மைக்கான அடையாளம் என்ற சிந்தனையில் இவர்கள் இன்றும் வாழ்வதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

இசுலாமிய சமூகத்திலும் சரியத்திற்கு அப்பாற்பட்டு நிறையவே மாற்றங்கள் நடந்துள்ளன. சரியத்தை கடைபிடிப்பதும் முடியாத காரியமாக உள்ளதையும் பார்க்கிறோம். சில பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ வழியில்லாமல் தொடர் ஜீவனாம்சம் கேட்கும்போது மட்டும் இந்த “சரியத்தின் காவலர்கள் என்ற போலிகள்” உச்சாணிக் கொம்பில் ஏறிகொண்டு அனைவரையும் உசுப்பிவிட்டு அதாவது இசுலாத்தை சிதைக்க ஆர்.எஸ்.எஸ்சின் சதி, கம்யூனிஸ்டகளின் சதி என்று இசுலாமியர்களை உசுப்பிவிடுகின்றனர். வழக்கு தொடுப்பவரே இசுலாம் அழிந்துவிடுமோ என்று பயந்துபோய் தனது கோரிக்கையை திரும்பப் பெறும்வகையில் தமது பிற்போக்குத்தனத்தை சாதித்துக் கொள்கின்றனர்.

ஆண்களின் நேரடியாக மணவிலக்கு செய்வதற்கான உரிமையை தடுப்பது, முறைகேடான மணவிலக்கிற்கு ஜீவனாம்சம் பெறுவது, எல்லாவற்றிற்கும் மேலாக சுயமாக வருமானம் ஈட்டவும் அதனை தனது விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தும் உரிமையைப் பெறுவது ஆகியனவற்றில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததாக பொருளாதாரச் சூழ்நிலை இன்றுள்ளது. இசுலாமியப் பெண்கள் இதனைப் புரிந்துகொண்டு காலத்திற்கேற்ற தமது உரிமைகளை பெறுவதற்கு போராடவேண்டும். வாழும் உரிமைக்கும் மத நம்பிக்கைக்கும் முடிச்சுப்போட முயற்சிப்பவர்களை அடையாளங்கண்டு அம்பலப்படுத்த வேண்டும்.

__________________________________________________

– சாகித்
__________________________________________________

  1. தலாக் – சரியத் சட்டமும் இசுலாமியப் பெண்களின் அவலமும் ! உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு – 11 | வினவு!…

    இசுலாமியப் பெண்களைப் பற்றி விவாதம் நடந்தால் “புர்கா”வும் தலாக்கும் முதன்மையான அமைந்துவிடுகிறது. மற்ற பிரச்சினைகள் பிற மத பெண்களுக்கும் பொதுவானதாக அமைந்து, இவ்விரண்டு மட்டும் இசுலாமியப் பெண்கள் தனித்து எதிர் கொள்வதால் இவை பிரதானமாக விவாதிக்கப்படுகிறது,…

  2. நல்ல பதிவு
    எதிர் வாதங்கள் வந்து குவியும் பாருங்கள்.நடைமுறையில் உள்ள தவறுகளை சுட்டினால் ,பிற மதத்தில் சரியாக உள்ளதா,இஸ்லாமை விமர்சிப்பதை விட்டால் வேறு வேலை இல்லையா என்பது போலவே பதில்கள் வரும்.

    இந்த ஷாரியாவில் பல பிரிவுகள் உள்ளன.நடை முறைப்படுத்துவதற்கு அதில் உள்ள மிக சிறந்ததை(இப்போதைய மனித உரிமை சட்டங்களுக்கு பொருந்துவதை) செயல் படுத்த முடியும்.ஆனால் செய்ய மாட்டார்கள்.

  3. தமக்கு சாதகமான இடங்களில் மட்டும் ஷாரியத் சட்டதை கையில் எடுக்கும் இஸ்லாமிய ஆண்களுக்கு ஒரே ஒரு கேள்வி :

    விவகாரத்து, பல தார மணம், ஜீவனாம்சம், சொத்துரிமை போன்ற சிவில் விசியங்களில் மட்டும் தான் சாரியத்தை எடுத்துகொள்கிறீர்கள். கிரிமினல் கேஸ்களான திருட்டு, கொள்ளை, கொலை, பண மோசடி போன்ற விசியங்களில் மட்டும் இந்திய கிரிமினல் சட்டத்தை ஏற்பதில் தயக்கம் இல்லை. இவைகளில் (இன்றைய சவுதி அரோபியாவில் உள்ளது போல்0 ஷாரியத் சட்டங்களை ஏற்பதில்லை. ஏன் இந்த இரட்டை வேடம் ?

    http://www.cfr.org/religion/islam-governing-under-sharia/p8034

    Marriage and divorce are the most significant aspects of sharia, but criminal law is the most controversial. In sharia, there are categories of offenses: those that are prescribed a specific punishment in the Quran, known as hadd punishments, those that fall under a judge’s discretion, and those resolved through a tit-for-tat measure (ie., blood money paid to the family of a murder victim). There are five hadd crimes: unlawful sexual intercourse (sex outside of marriage and adultery), false accusation of unlawful sexual intercourse, wine drinking (sometimes extended to include all alcohol drinking), theft, and highway robbery. Punishments for hadd offenses–flogging, stoning, amputation, exile, or execution–get a significant amount of media attention when they occur.

    வட்டி வாங்ககூடது என்பதும் இஸ்லாமிய கோட்பாடு. அது இன்றைய complex economy with inflaton and monetisations களின் சாத்தியம் இல்லை என்று நியாயப்படுத்திக்கொள்கிறிர்கள். இதே நியாயம் தலாக் போன்ற மேல் சொன்ன விசியங்களில் மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது இரட்டை வேடம் தான் ?

    • இவர்கள் கிரிமினல் குற்றங்களுக்கு சரியத் சட்டத்தை நடைமுறை படுத்தமாட்டார்களா என்று உள்ள கேள்வி பிற்போக்குகளை ஆதரிப்பதுபோல் உள்ளது. அனேகமாக இக்கேள்வி பின்வருமாறு இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
      வட்டிவாங்கும் இசுலாமியர்களை சரியத் சட்டப்படி தண்டிக்க மாட்டார்களா? அல்லது சரியத் சட்டப்படி அரசாங்கத்தை தண்டிக்கச் சொல்லி போராடாமாட்டார்களா? தங்கம், போதைப்பொருள், அன்னியச்செலவாணி, உண்டியல் என்ற (வட்டி)க்கு பணப்பரிமாற்றம செய்யும் இசுலாமயர்களை, வியாபாரத்தில் போலிப்பொருள்களை விற்பனை செய்யும், எடை திருட்டு செய்யும் இசுலாமியர்களை சரியத் சட்டம் கொண்டு தண்டிக்க மாட்டார்களா? அல்லது அரசாங்கத்தை நிர்பந்திக்க மாட்டார்களா? அபலைப் பெண்களுக்கான ஜீவனாம்சம் என்றதும் சரியத் சட்டத்தை தூக்கிக் கொண்டு ஓடிவருகிறீகளே! என்று இருந்தால் சரியான கேள்வியாக இருக்கும்

  4. முஸ்லீம்கள், பிற சமயத்தவரிடம் பெருமையாக சொல்லி கொள்வது “முஸலீம் மதத்தில் வரதட்சனை கிடையாது. ஆண்கள் தான் தரவேண்டும்”. அப்படி ஆண்கள் தருவது – பெண்ணை விலைக்கு வாங்குவது போன்றது. விலைக்கு வாங்கப்பட்ட பொருள் – எந்த கேள்வியும் கேட்காமல் வாழ பழகி கொள்ள வேண்டும். மீறி பேசினால் – நான் கொடுத்ததை கொடுத்து விட்டு போ என்பது தான் தீர்வு. இந்திய சமுகத்தில் – முஸ்லீம் பெண்களுக்கு இருபது வருஷங்களுக்கு முன் இருந்த சுதந்திரம் இன்று இல்லை என்பதே உண்மை. பிற சமய பெண்கள் – சுதந்திர காற்றை சுவாசிக்க, சுவாசிக்க் – இவர்கள் மீதான பிடி இறுகுகிறது. மத பிற்போக்குவாதிகளின் கைகள் ஓங்க – உங்களை போன்ற முற்போக்காளர்களும் ஒரு காரணம். நீங்கள் எதற்கோ செய்யும் உதவிகளை – அவர்கள் எதற்கோ பயன்படுத்தி கொள்கிறார்கள். எதிர்காலத்தில் நிலைமை மோசமாக தான் மாறும். பெண்கள் போராடி எதையும் பெற இயலாது. அரசாங்கத்தால் எதுவும் செய்ய இயலாத நிலை தான் வரும். மீறி செய்தால் – மனித உரிமை ஆர்வலர்கள் வரிந்து கட்டி கொண்டு வருவார்கள். கவலையே படாதீர்கள்- இனி கொஞ்ச நாளில் எல்லாம் தலிபான் மயம் தான்.

    • எதையும் விவாதிக்காமல், போராடாமால் தீர்க்கமுடியாது ஓஷோ.

  5. விவாதத்திற்குள் ஆழமாக செல்ல விருப்பமில்லை.(அதற்க்கான அறிவு போதுமானதாக இல்லை)
    முடிந்தால்,நீதி மன்றங்களில் பதியப்படுவதில்லை என்று காரணம் சொல்லாமல்
    புள்ளி விபரம் கொடுங்கள்.சமீப காலங்களில் எவ்வளவு தலாக் நடந்துள்ளது என்று.இது ரொம்ப ஈசி.
    முஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் ஊர்களில் நான்கை தேர்ந்தெடுத்து கணக்கெடுத்து விடலாம்.
    சட்டங்கள் எப்படியோ.நடைமுறையில் அப்படி இல்லை என்பதே நிதர்சனம்.அந்த பேருந்து நபர்
    ஆணாதிக்க நபர்.அவர் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் இப்படிதான் பேசியிருப்பார்.மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்ப தயங்கியவரும் இதே ரகமே.வாய்ப்புகள் எளிதாக இருந்தாலும் விவாகரத்து
    அதிகம் நடைபெறாமல் இருந்தால் நல்ல விஷயம் தானே.(சாராயக்கடையில் வேலை செய்துகொண்டு
    குடிக்காமல் இருப்பவனை போல)

    “” விவகாரத்து, பல தார மணம், ஜீவனாம்சம், சொத்துரிமை போன்ற சிவில் விசியங்களில் மட்டும் தான் சாரியத்தை எடுத்துகொள்கிறீர்கள். கிரிமினல் கேஸ்களான திருட்டு, கொள்ளை, கொலை, பண மோசடி போன்ற விசியங்களில் மட்டும் இந்திய கிரிமினல் சட்டத்தை ஏற்பதில் தயக்கம் இல்லை. இவைகளில் (இன்றைய சவுதி அரோபியாவில் உள்ளது போல்0 ஷாரியத் சட்டங்களை ஏற்பதில்லை. ஏன் இந்த இரட்டை வேடம் ? “”

    மிஸ்டர் அம்பி! யார் வேண்டாம்னு சொன்னாங்க.கொண்டு வாங்களேன்.
    முஸ்லீம்கள் சந்தோசமா
    ஏத்துப்பாங்க.சட்டமியற்றும் இடங்களில் க்ராஸ் பெல்ட் கோஷ்டி தானே ஆதிக்கம் செலுத்துகிறது!
    ட்ரை பண்ணுங்களேன்.

  6. ஒரு புர்கா கூடாரத்துக்குள்
    ஒளித்து வைக்கப்பட்ட
    எம் சகோதரிகளின் பரிமாணங்கள்.
    பரிமாணங்களனைத்தும்
    சுதந்திரந் தேடிய கூர்மத்திலிருந்தன.

    இருளுக்குள் இருந்துகொண்டு
    அவர்களின் கண்கள் மட்டும் ஒளிபாய்ச்சும் –
    விலங்கொடிக்கும் விவரந்தேடி…
    அந்த கையறு நிலையின் வீச்சம்
    அவர்களின் கண்களில்.
    அந்த ஒளிவெள்ளத்தில்
    சமுதாயம் கண்கள்
    கூசித்தான் போகவேண்டும்.
    ஆனால் சமுதாயத்தின் கண்கள்
    பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டன!

    அந்த ஒளிவெள்ளம்
    ஆண்டவனை நோக்கியும்
    பிரார்த்தித்துப் பாய்ச்சப்பட்டது.
    அப்போது அந்த ஆண்டவன்
    ஆண்களுக்கு மட்டுமே
    போதனை செய்துகொண்டிருந்தான் –
    பெண்களை எவ்வெவ்விதத்தில்
    வழி நடத்த வேண்டுமென்று.

    செய்வதறியாது திகைத்து,
    அந்தக் க்ண்களிலிருந்து
    ஒளிவெள்ளம் ஆண்டைகளின்,
    ஆண்களின் குவியலுக்குள் பாய்ச்சப்பட்டது.
    அவர்களோ போதனைகளின் போதையில்
    அந்த இறைவனிடமே
    சந்தேகங்களைக் மேலும் மேலும்
    கிளறிக்கொண்டேயிருந்தார்கள்!
    பெண்கள் எப்படியெல்லாம்
    நடத்தப்பட வேண்டுமென்று!

    இருளின் விடை காண
    ஒளி பாய்ச்சித் தேடியபோதும்
    கிடைத்தது…
    மீண்டும் இருள்தான்!

    அடிக்குங் கைகளைத்
    தடுத்த போதும்,
    இயலாமையில் அறற்றிப்
    புலம்பியபோதும்,
    இதயம் குமைதலால்
    ஏனென்று கேட்டபோதும்,
    சுமை பாரம் பூமிக்குள் அழுத்த
    கைதொழுது அழுதபோதும்…
    எம் சகோதரிகளுக்கு
    கேட்காமலேயே கொடுக்கப்பட்ட
    ஆறுதல் சுதந்தரம்
    தலாக்!

    புர்காவுக்குள் இருக்கும்
    மூட்டை பளுவாயிருக்குமென்று
    நினக்கும் நிமிடத்திலேயே
    தலாக் எனும் வார்த்தை மூலத்தால்
    ஒரு மூலையில் இறக்கிவைக்கப்பட்டு
    ஆண்களின் பயணம்
    தொடர்ந்துகொண்டேதானிருக்கிறது…

  7. கருத்துக்களை முழுமையாக உள்வாங்குவதிலும் ,புரிதலில் ஏற்ப்பட்டுள்ள வெற்றிடமே இது போன்ற குறை பதிவு .

    அரபி கற்றறிந்த இமாம்களுக்கே “அரபிமொழியின் வளமின்மை” -என்று குறை கூறி ஆராயந்திருக்கும் பதிவு பதிந்தவர் அரபியில் கரைகண்டவரோ ? ” திருக்குரான்”-னையும் , நபி-மொழியையும் குறை என்று கூறி நக்கல் செய்வதற்கு ?

    உண்மையில் உங்களுக்கு முஸ்லீம் பெண்களைப் பற்றி கவலை என்றால் , இஸ்லாமை முழுமையாக அறிந்து அதற்கு பிறகு ஷரியத் சட்டத்தைப் பற்றி எழுதுங்கள்.

    • அரபியுலுள்ள குறையை நான் சொல்லவில்லை “பாதிப்பே”.
      புகாரி சொன்னதைதான் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். ஓரு சொல் மாடவிடாய் நின்றதையும் குறிக்கும், மாதவிடாய் ஆரம்பிம்பதையும் குறிக்கும் என்பது அறிவுடமையாகுமா என்று கூறுங்கள்?

    • ஆமாங்க- எங்க இந்து மதத்தைப் பத்திக் கூட இந்த மடையனுங்க ஒண்ணுமே தெரிஞ்சுக்காம விமர்சனம் செய்யறானுங்க, நாமெல்லாம் சேந்து எதாவது நடவடிக்கை எடுப்பமா ?

  8. நிச்சயமாக, நீங்கள் கூறுவது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளதெ தவிர பெரும்பான்மை அவ்வாறு இல்லை. முதன் முதலில் பெண்கல்வியை, பெண்சிசுக்கொலையை தடுத்தது, விபச்சாரத்தை தடுத்தது, வரதட்சணை வாங்குவது மற்றும் முறைகேடான விசயங்களை தடுத்தது இஸ்லாம்தான். நீங்கள் ஒரு தெளிவு பெற்ற நபரிடம் கேட்டு தெரிந்திருந்தால் இவைகளை கூற மாட்டீர்கள். மேலும் பகுத்துணர்ந்து அறிதலும் இஸ்லாத்தில் உண்டு. சில மத வியாபாரிகளின் நடவடிக்கை காரணமாக எழுந்த சந்தேகங்களே இவை இதற்கு காரணம் அவாளின் பாதிப்பு தவிர வேறு ஏதுமில்லை

  9. ‘முஸ்லிம் இளம் பெண் ஸ்டவ் வெடித்து சாவு’ என்று நாம் பத்திரிக்கைகளில் பார்க்க முடிகிறதா? இல்லை. இதற்கு காரணம் ‘தலாக்’ என்ற ஒன்றை மார்க்கத்தில் இலேசாக்கியதுதான். மற்ற மதங்களில் விவாகரத்தை சிரமமாக்கியதாலும், வாழும் வரை ஜீவனாம்சம் கொடுக்க வெண்டும் என்பதாலும், பல வருடங்கள் கோர்ட் படிக்கட்டுகளை ஏற வேண்டும் எனபதாலும் இதெற்க்கெல்லாம சிரமப்படாமல் ஸ்டவ்வை வெடிக்க வைத்தோ அல்லது வேறு முறைகளிலோ பெண்ணை கொலை செய்து விடுகிறார்கள்.

    ‘இவ்வாறு விவாகரத்து செய்தல் இரண்டு தடவைகளே! இதன் பிறகு நல்லமுறையில் சேர்ந்து வாழலாம்.’ -குர்ஆன் 2:229
    எனவே இரண்டு தடவைகளில் கோபத்தில் கூறி விட்டாலும் அந்த மனைவியோடு சேர்ந்து வாழலாம்.

    ‘தலாக், தலாக், தலாக்’ என்று ஒரே நேரத்தில் மூன்று முறை சொன்னாலும் ஒரு முறை சொன்னதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது முகமது நபியின் அறிவுரை.

    இந்த சட்டங்களை தவறாக உபயோகிப்பவர்களை விளக்கி அவர்களுக்கு உபதேஷம் செய்யலாம்.

    ‘அவ்விருவருக்கிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தில் சார்பில் ஒரு நடுவரையும் அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள். அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இறைவன் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான்.’
    -குர்ஆன் 4:35

    ‘நல்ல முறையில் விட்டு விடுங்கள். அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்க்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.’
    -குர்ஆன் 2:231

    விவாகரத்தை சிரமமாக்கியதால் பெயருக்கு மனைவியை வைத்துக் கொண்டு சின்ன வீட்டோடு வாழ்ந்து வரும் பல நண்பர்களை எனக்குத் தெரியும். விவாகரத்து சுலபத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காக ‘என் மனைவி இன்னாரோடு கள்ள தொடர்பு வைத்துள்ளாள்’ என்று நெஞ்சறிந்து பொய் சொல்லும் பலரைப் பார்த்திருக்கிறேன்.

    எனவே வினவு அவர்கள் இஸ்லாமிய பெண்களின் மேல் பரிதாபப்படுவதை விட மற்ற மதங்களில் ஸ்டவ் வெடிக்காமல் இருப்பதற்கு என்ன வழி என்று ஆராய்ந்தால் நலம். மேலும் நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்று எந்த இஸ்லாமிய பெண்ணும் இது வரை கொடி பிடிக்கவும் இல்லை.

    சரி …இஸ்லாமிய மார்க்கத்தை நான் துறந்தால் அடுத்து என்ன வழி என்ற விளக்கத்தையும் அளிக்க வேண்டும். நீங்களும் செங்கொடியும் மற்ற தோழர்களும் கம்யூனிஸமே நிரந்தர தீர்வு என்பீர்கள். ரஷ்யாவிலும் சைனாவிலும் காலத்துக்கு ஒவ்வாத சட்டங்கள் என்று கம்யூனிசத்தை என்றோ ஓரம் கட்டி விட்டார்கள்.

    நம் நாட்டில் இந்த கம்யூனிஸ்டுகள் பண்ணும் காமெடி கொஞ்ச நஞ்சமல்ல. இரண்டு சீட் அதிகம் கொடுத்து விட்டால் ‘அம்மாதான் நிரந்தர முதல்வர்’ என்கின்றனர். அடுத்த தேர்தலில் கலைஞர் இரண்டு சீட்டு அதிகரித்து விட்டால் ‘கலைஞரைப் போல் வருமா’ என்கிறார்கள்.

    இந்த நிலையில் நீங்களும் செங்கொடியும் மற்ற தோழர்களும் இஸ்லாத்தை விமரிசித்து கம்யூனிஸத்தை எப்படி வளர்க்கப் போகிறீர்கள் என்று எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது வினவு. 

    • //சரி …இஸ்லாமிய மார்க்கத்தை நான் துறந்தால் அடுத்து என்ன வழி என்ற விளக்கத்தையும் அளிக்க வேண்டும். நீங்களும் செங்கொடியும் மற்ற தோழர்களும் கம்யூனிஸமே நிரந்தர தீர்வு என்பீர்கள். ரஷ்யாவிலும் சைனாவிலும் காலத்துக்கு ஒவ்வாத சட்டங்கள் என்று கம்யூனிசத்தை என்றோ ஓரம் கட்டி விட்டார்கள்.//

      உங்களை யாரும் இஸ்லாமை விட்டு விட சொல்ல வில்லை.ஷாரியாவில் உள்ள சில இக்காலத்திற்கு ஒவ்வாத விஷயங்களை சுட்டிக் காட்டி மாற்றுங்கள் என்றே கேட்கிறோம்.

      பல்தாரம்ணத்திற்கு மதவாதிகளால் சொல்லப் படும் காரணம் என்ன?
      பலதார மணத்திற்கு காரணமாக முல்லாக்களினால் கூறப்படுவது (இஸ்லாமிய) ஆண்களுக்கு காம உணர்வு அதிகம் ஆகவேதான் இஸ்லாம் அனுமதிக்கிறது.

      ஆனால் சுவனப் பிரியன் ,பி.ஜே உட்பட 99.9% தமிழ் இஸ்லாமியர்கள் ஒரு தாரம் உடையவர்கள் ஏன் இப்படி?.99.9 % பேர் இஸ்லாமை விட ந்ன்னெறி கொண்டவர்கள் அப்ப்டித்தானே!!!!.0.1% ஆட்களுக்காக மொத்த சமுதாயமும் ஏன் பேச வேண்டும்?
      அதனையும் கண்கானித்து ஒழுங்கு செய்தால்தானே நல்லது.ஒருவன் காம இச்சைக்காக இன்னொரு கல்யாணம் செய்ய அனுமதிக்கிறோம் என்பதை விட அவருக்கு மனநல சிகிச்சை அளித்தால் அவர் குணம் அடைவார்..அதிகப்படியான காம இச்சை என்பது ஒரு மன் வியாதியே.

      முதல் மனைவியின் அனுமதியின்றி இன்னொரு திருமணமென்பது சரியாக படவில்லை.

      //மேலும் நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்று எந்த இஸ்லாமிய பெண்ணும் இது வரை கொடி பிடிக்கவும் இல்லை.//

      நான்காவது மனைவியாக மகிழ்சியாக வாழ்வார்கள் என்பதும் இதுதான் இறைவனின் கட்டளை என்பதும் ,சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்தாது.

    • சுவனப்பிரியனே.
      நம்புதாளை என்ற கிராமத்திலுள்ள சாகுல்ஹமீது என்பவரின் மகள் இராமநாதபுரத்தில் திருமணம் செய்துகொடுத்து மணமகனால் எரித்துக் கொள்ளப்பட்டால். காரணம் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு.
      பொதுவாக இதுபோன்ற கொடூரங்கள் வெளியில் தெரிவதில்லை. காரணம் போஸ்மார்டம் செய்யப்ட்டு உறுப்புகளை அகற்றபடுவதால் சொர்கத்திற்கு போகமாட்டார்கள் என்ற கோட்பாடு. அதுபோல இறந்த உடலை வேதனை செய்யக்கூடாது என்ற கோட்பாடு. பிறகென்ன? தினமும் மாப்பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தானே!

  10. ஷரியத்தும் வேண்டாம்,எந்த மத அடிப்படையிலான தனி நபர் சட்டமும் வேண்டாம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் வேண்டும்.இதுதான் சரியான தீர்வு.ஆண்-பெண் சமத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் சட்டம் இருக்க வேண்டுமே தவிர மதவாதிகளின் விளக்கங்களின் அடிப்படையில் இல்லை.
    பெண்களுக்கு தேவையான கல்வி,சமூக பாதுகாப்பு,பொருளாதார சுதந்திரம்- இந்த மூன்றும் இல்லாமல் பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. ஷரியத் இதற்கு உதவுமா என்று கேளுங்கள்.உடனே சுவனப்ப்ரியன்கள் போன்றவர்கள் சொல்வார்கள் ஆண்களும்,பெண்களும் சேர்ந்து வேலை செய்வது இஸ்லாமிய நெறிக்கு முரணானது, பெண் தனியே தொலைதுரார பயணம் செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று. நீங்கள் ஷரியத்தின் மூலமா இத்ற்கு தீர்வு காணப் போகிறீர்கள்.

    ‘தமது சொந்தப் பிரச்சினைகளில் ஜமாத்துகளோடு இவர்கள் போராடினாலும் இமாம்கள் அல்லது அமைப்புகளின் முன்னோடிகள் “சரியத்” என்ற ஆயுதத்தைக் கொண்டு வெட்டி வீழ்த்தி விடுகின்றனர்.’

    ஆக பிரச்சினை ஷரியத் என்று தெரிந்த பின்னும் ஏன் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கட்டுரையாளர் வாதிடவில்லை.

    • //பெண் தனியே தொலைதுரார பயணம் செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று.//

      அய்யா அப்பாவியே!!! முடிந்தால் உங்கள் குடும்பத்துப் பெண்ணை தனியா தொலை தூரப் பயணம் அனுப்பிப் பாருங்களேன்?

      தனக்குன்னா ஒரு சட்டம்!!! …. ஊரான்களுக்கென்றால் வேறொரு சட்டமா? இதைத்தான் பாப்பார பய புத்திங்கறது.

      திருந்துங்க.

      • இப்பொழுது பெண்கள் விண்வெளிக்கே சென்று வருகிரார்கள்.இன்னும் சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டக் கூடாது என்ற சட்டமும் வைத்துள்ளார்கள்.

  11. அய்யா,’ வேண்டாமே!!!’ அவர்களே , இன்று பெண்கள் தனியே நெடுந்தூர பயணம் செல்வதே இல்லை என்றா சொல்கிறீர். இன்று தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு போகும் பேருந்துகளையும் ரயில் வண்டியையும் சென்று பாருங்கள். எல்லோரும் அவர்கள் குடும்ப பெண்களை நம்பிக்கையோடு அனுப்பி வைக்கிறார்கள், பூனை கண்ணை மூடி கொண்டால் உலகமே இருட்டு என்று நினைப்பது போல் நீங்கள் உங்கள் குடும்பப்பெண்களை அனுப்பாவிட்டால் யாருமே செல்வது இல்லை என்று நினைப்பா? அது சரி பெண்கள் நெடுந்தூர பயணத்தை பற்றி மட்டும் பதில் சொன்ன நீர் ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை செய்வது இஸ்லாமிய நெறிக்கு முரணானது என்பதற்கு பதில் சொல்ல வில்லையே. ஏன் அந்த கருத்தில் தங்களுக்கும் உடன்பாடா அல்லது கண்டுகொள்ளாது விட்டுவிட்டீர்களா?

    • // ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை செய்வது இஸ்லாமிய நெறிக்கு முரணானது என்பதற்கு பதில் சொல்ல வில்லையே. //

      இது நடுநிலையான கட்டுரையே இல்லை. அப்புறம் எதற்கு இதற்கெல்லாம் வரிக்கு வரி பதில் சொல்வது?

      ஆனா!!!, வக்கனையா ஜால்ரா போடுறீங்களே? நீங்களெல்லாம் அப்படித்தானா என்பதை உங்க மனசு ஒத்து பதில் தரீங்களான்னு பார்க்கத்தான் அப்படி கேட்டேன்.

      உங்க வண்டவாலங்கள் தான் நல்லாத் தெரியுதே?

      ஆம், அப்புறம் உங்க வீட்டுப் பெண்களை அன்னிய ஆண்களுடன் கலந்துத்தான் வேலைக்கு அனுப்புகின்றீர்களா?

      இதற்கு பதில் உங்களிடமிருந்து எப்படி வரும்னா… என்னுடைய வீட்டுற்கு பத்து வீடு தள்ளி ஒரு பெண் இரவு வேலைக்குக்கூட போகுதுன்னு சொல்லப் போறீங்களா?

  12. பொதுவாக இஸ்லாமிய நண்பர்களிடம், இது போன்ற விசியங்களை ‘விவாதிக்க’ முடியாது. அந்த அளவு brain wash செய்யப்பட்டு, உணர்ச்சி பூர்வமாக மட்டும் அனுக பழக்கப்படுவிட்டார்கள்.

    ஏறக்குறையே இதே பாணி தான் தீவிர மார்க்சியர்களுக்கும். ஒரே ஒரு வித்யாசம் : மார்க்சியம் ‘விஞ்ஞானபூர்வமானது’ என்று கருதுவதால், scientific method and rational, logical conepts என்று இன்னும் உணர்சிபூர்வமாக வாதாடுவார்கள். காரணம் மார்க்ஸின்ம் பெரும் படைப்பான மூலதனம் ; அதில் highly complex mathematical derivations for surplus value, profits, capital இருப்பதால், அது நிருபிக்கப்ட்ட விஞ்ஞானம் என்று தீவிரமாக நம்புகிறார்கள். அதுதான் இவர்களின் பைபிள். ஆனால் உண்மையில் மார்சியத்தின் அச்சாணியான Labour theory of surplus value, விஞ்ஞான ரீதியாக, empiricalஆ நடைமுறையில் பொய்பிக்கபட்ட hypothesis.

  13. தலாக் – சரியத் சட்டமும் இசுலாமியப் பெண்களின் அவலமும்! இதற்கான பதிலை ’மாற்றங்கள் தேவை’ வெகுவிரைவில் தர இருக்கின்றது.

    காத்திருங்கள்.
    http://changesdo.blogspot.com

    thanks

  14. It clearly shows the writer does not have enough knowledge about Islam. Its not his fault also he has time to study about Islam . The only Religious scholars who are welcoming others to ask about their religion in this world is Muslims scholars.

    I am requesting the writer to Meet TNTJ(Tamilnadu Dowheed Jamaat) leaders to clear his clarifications and after once he has met them the he can publish those things in this Vinavu.com. The writer have dare to meet them or Dr.Zakir Naik regarding this.????

    Any way the following link will guide you or you can make calls to the following mobile numbers and you can ask all your questions.

    http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/
    9865584000
    9003225959
    984674337

    • இது குரான் 4.3 க்கு அண்னன் பி.ஜே அவர்களின் விளக்கம். இத்னை படித்து பர்க்கவும். அதாவது அடக்க முடியாக் காமம் கொண்ட இஸ்லாமிய ஆண்கள் ,விபச்சாரம் செய்யாமல் இறன்ரடாவது திருமணம் செய்யலாம் என்கிறார்.முன்று நான்கு திருமணம்ம் என்று அடக்க முடியாக் காமம் என்றால் அவரையும்.அவருக்கு ஆதரவு தரும் மதகுருக்களையும் மன் நல மருத்துவமனையில் சேர்ப்பது நலம். இனி அண்னன் பி.ஜே
      ___________________

      http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/106-palatharamanam/
      106. பலதார மணம்

      இவ்வசனம் (4:3) நான்கு மனைவியர் வரை திருமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி வழங்குகிறது. இது பெண் களுக்கு இழைக்கப்படும் அநீதி எனப் பரவலாகக் கருதப்படுகிறது. இது பற்றி சரியாக ஆய்வு செய்தால் இஸ்லாம் இவ்வாறு அனுமதித்திருப்பதன் நியாயத்தை உணர முடியும்.முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பதால் இது பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதி என்று கருதப்படுகிறது.

      முதல் மனைவி பாதிக்கப்படுவாள் என்பது உண்மை தான்.

      இன்னொரு பெண்ணை இரண்டா வதாக மணப்பதால் மட்டும் முதல் மனைவி பாதிக்கப்பட மாட்டாள். மணக்காமல் வைப்பாட்டியாக வைக்கும் போதும், கணவன் பல பெண்களிடம் விபச்சாரம் செய்யும் போதும் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள். இன்னொரு பெண்ணை மணப்பதால் ஏற்படும் பாதிப்பை விட இது அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். பல பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் நோயைப் பெற்று முதல் மனைவிக்குப் பரிசளிக்கும் கூடுதலான பாதிப்பு இதனால் முதல் மனைவிக்கு ஏற்படுகிறது.
      இரண்டாம் திருமணத்தை எதிர்ப்பவர் கள் வைப்பாட்டி வைப்பதையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமாகத் தடுக்க வேண்டும். பலதார மணத்தை மறுக்கும் எந்த நாட்டிலும் (நமது நாடு உள்பட) விபச்சாரத்துக்கோ, வைப்பாட்டி வைத்துக் கொள்வதற்கோ தடை இல்லை. அது குற்றமாகவும் கருதப்படுவதில்லை.
      பெண்ணுரிமை பாதிக்கிறது என்பது தான் பலதார மணத்தை எதிர்க்கக் காரணம் என்றால் சின்ன வீட்டையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமான குற்றம் என்று அறிவிக்க வேண்டும்.
      சின்ன வீடு வைத்துக் கொள்ளும் ஆண்களையும், விபச்சாரம் செய்யும் ஆண்களையும் தடுக்க முடியவில்லை. இன்னொருத்தியின் கணவன் என்று தெரிந்தும் அவனைக் கைக்குள் போடும் பெண்களையும் தடுக்க முடியவில்லை என்பதால் தான் ‘சட்டப்பூர்வமான மனைவி என்ற தகுதியை வழங்கி விட்டு குடும்பம் நடத்து’ என்று இஸ்லாம் கூறுகிறது.
      திருமணம் ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும், கைவிடப்படுவதும் மலேசிய இந்து சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக் கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். (மலேசிய நண்பன் நாளிதழ் – 05.01.2002)
      பலதார மணத்தை இஸ்லாம் அனுமதிப்பதற்குப் பல நியாயமான காரணங்கள் உள்ளன.
      1. திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திரு மணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.
      2. ஆண்களை விட பெண்களே மக்கள் தொகையில் அதிகமாக இருக்கிறார்கள்.
      3. இறப்பு விகிதத்தில் ஆண்களை விட பெண்கள் குறைவாக இருக்கிறார்கள்.
      4. போர்க் களங்களில் இளம் மனைவியரின் கணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் மாண்டு வருகின்றனர்.
      5. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக் காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.
      6. பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காக பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது.
      7. வரதட்சணை கொடுக்க இயலாத வர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயிருடன் கொலை செய்வதும், கருவிலேயே சமாதி ஆக்குவதும் அன்றாட நிகழ்ச்சிகளாகி வருகின்றன.
      8. திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக் குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.
      9. பெற்றோரால் வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்து தர முடியாது என்பதை உணரும் இளம் பெண்கள் தாமாகவே வாழ்வைத் தேடிக் கொள்வதாக எண்ணி ஏமாந்து கற்பிழந்து வருகின்றனர்.
      10. தனக்குத் திருமணம் நடக்காது என்றெண்ணி தற்கொலை செய்யும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர்.
      இது போன்ற நியாயமான காரணங்களின் அடிப்படையிலும், ஆண்கள் விபச்சாரத்தில் விழுவதைத் தடுப்பதற்காகவும் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கிறது.
      இதனால் பல பெண்களுடன் தொடர்பு வைப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பது தான் யதார்த்த நிலை.
      ஏனெனில் திருமணம் எனும் போது பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருப்ப தால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆண்கள் மட்டுமே பலதார மணத்தை நாடுவர். விபச்சாரத்திற்கோ, சின்ன வீடு வைத்துக் கொள்வதற்கோ எவ்விதப் பொறுப்பையும் சுமக்க வேண்டியதில்லை என்பதால் ஆண்கள் சீரழியும் நிலைமை தான் உருவாகும்.
      மேலும் இது போன்ற தகாத உறவுகள் மூலம் பாலியல் நோய்களைத் தானும் பெற்று, தனது மனைவிக்கும் பரிசளிக்கும் அவலங்களும் அதிகரிக்கும்.
      இவை எல்லாவற்றிற்கும் மேலாக பலதார மணம் செய்யுமாறு இஸ்லாம் கட்டளை ஏதும் பிறப்பிக்கவில்லை. தேவையுள்ளவர்களுக்கு அனுமதி மட்டுமே வழங்கியுள்ளது.
      இரண்டாம் தாரமாகவாவது ஒரு கணவன் கிடைத்தால் போதும் என்ற நிலையில் ஏராளமான பெண்கள் இருப்பது பலதார மணத்தின் நியாயத்தை உணர வைக்கிறது.
      ஆணுக்கு அனுமதிப்பது போல் பெண்ணுக்கும் பலதார மணத்தை அனுமதிக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்க முடியாத வாதமாகும்.
      மேலே நாம் சுட்டிக் காட்டிய காரணங்களில் எதுவும் பெண்களுக்குப் பொருந்தாது. பெண்களுக்குப் பலதார மணத்தை அனுமதித்தால் மேலே சொன்ன தீய விளைவுகள் மேலும் அதிகரிக்கும். எனவே, பெண்களுக்குப் பல கணவர்களை அனுமதிக்க நியாயமான ஒரு காரணமும் இல்லை.
      மாறாகப் பெண்ணுக்கும் இந்த அனுமதி வேண்டும் என்போரின் விருப்பப்படி அனுமதிப்பதனால் விபரீ தங்களும், கேடுகளும் தான் ஏற்படும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
      ஒரு ஆண் நூறு பெண்களுடன் ஒரு ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்த நூறு பெண்களும் நூறு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்! ஒரு பெண் நூறு ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் நூறு குழந்தைகளைப் பெற முடியுமா?
      ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மூலம் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் அந்தப் பத்துப் பிள்ளைகளின் தந்தை யார்? தாய் யார்? என்பதை அறிந்து கொள்ள முடியும். பல ஆண்களிடம் உறவு வைத்துள்ள ஒரு பெண் பெற்றெடுக்கும் ஒரே ஒரு பிள்ளைக்குத் தாய் யார்? என்பது தான் தெரியுமே தவிர, தந்தை யார்? என்பதை அறிந்து கொள்ள முடியாது.
      இந்த நிலையை விட அந்தக் குழந்தைக்கு வேறு கேவலம் எதுவுமிருக்க முடியாது. இது போல் உருவாகக் கூடிய, தகப்பன் யார் என்று தெரியாத சந்ததிகள் உள்ளம் நொறுங்கி மனோ வியாதிக்கு ஆளாவார்கள்.
      ஒரு ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தை களையும் பராமரிக்கும் பொறுப்பை அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா? ஒவ்வொருவனும் அக்குழந்தை தன்னுடையதில்லை என்று மறுத்து விட்டால் எந்தச் சான்றின் அடிப்படையில் அவன் மீது பொறுப்பைச் சுமத்த முடியும்? அதற்குரிய செலவினங்களைக் கொடுக்கு மாறு அவனை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும்? வளரப் போகும் அந்தக் குழந்தையின் எதிர்காலம் இருள் நிறைந்ததாக அல்லவா ஆகும்?
      அது போல் ஒவ்வொருவனும் அந்தக் குழந்தை தன்னுடையது என்று உரிமை கொண்டாடினால் அந்தக் குழந்தையைக் கூறு போட்டு ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொடுக்க முடியுமா?
      ஒருவனுக்குப் பல மனைவியர் மூலம் பல நூறு குழந்தைகள் இருந்தாலும் அவன் இறந்த பின் பல நூறு குழந்தைகளுக்கும் தந்தை இன்னார் என்று தெரிவதால் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவனது சொத்தில் பங்கு கேட்க முடியும்.
      பல ஆண்களை மணந்தவளின் கணவர்களில் எவர் இறந்தாலும், அவளது பிள்ளைகள் தந்தையின் சொத்து என்று உரிமை கொண்டாட வழியில்லாது போகும்.
      இஸ்லாம் வழங்கியுள்ள இந்த அனுமதியை சில முஸ்லிம்கள் முறைகேடாகப் பயன்படுத்துவதையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
      இரண்டாம் திருமணம் செய்யக் கூடியவர்கள், முதல் மனைவிக்கு அதைத் தெரிவிக்காமல் இரகசியமாகத் திருமணம் செய்கின்றனர். முதல் மனைவிக்கு இது பற்றித் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இவர்கள் கருதுகின்றனர்.
      உண்மையில் முதல் மனைவியின் உரிமை இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கண்டிப்பாக உள்ளது.
      ஒரு மனைவியுடன் ஒருவன் வாழும் போது, அவனது எல்லா நாட்களையும் அவளுக்கே கொடுக்கிறான். அவளுக்கே தனது பொருளாதாரத்தையும் செலவு செய்கிறான். இந்த நிலையில் அவன் மற்றொரு திருமணம் செய்தால் முதல் மனைவிக்குக் கிடைத்து வந்த நாட்களில் பாதி நாட்கள் குறைந்து விடுகின்றன. பொருளாதாரத்திலும் பாதி பறி போகிறது.
      இரண்டாம் திருமணத்தின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படும் போது, அவளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் தானாகவே ஏற்பட்டு விடுகின்றது.
      ‘முழு நாட்களையும் எனக்கே தருவீர்கள் என்பதற்காகத் தான் உங்களை நான் மணந்து கொண்டேன்; அதில் பாதி நாட்கள் எனக்குக் கிடைக்காது என்றால், அத்தகைய வாழ்க்கை எனக்குத் தேவையில்லை’ என்று கூட அவள் நினைக்கலாம்.
      இரண்டாம் திருமணத்தைப் பற்றி அவளுக்குத் தெரிவிக்கப்படும் போது தான் மேற்கண்ட உரிமையை அவள் பெற முடியும்.
      முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்தால் இரண்டாம் மனைவியும் பாதிக்கப்படு கிறாள். ஏனெனில் முதல் மனைவிக்குத் தெரியாமல் திருமணம் செய்பவர்கள், அவளுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக சரிசமமாக இரண்டு மனைவிகளிடமும் நாட்களைக் கழிக்காமல் அவ்வப்போது ஏதேனும் பொய்க் காரணங்களைக் கூறிக் கொண்டு இரண்டாம் மனைவியிடம் செல்கின்றனர்.
      இதனால் இரண்டாம் மனைவிக்கு, அவளுக்குச் சேர வேண்டிய உரிமையை அவனால் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
      முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்திருக்கும் நிலையில் அவன் மரணித்து விட்டால் அப்போதும் அவனது மனைவியர் பாதிக்கப்படுகின்றனர்.
      கணவனின் சொத்துக்கள் தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் மட்டுமே உரியது என்று முதல் மனைவி நினைத்துக் கொண்டிருப்பாள். அவன் மரணித்தவுடன் இரண்டாம் மனைவியும் அவளது பிள்ளைகளும் சொத்தில் பங்கு கேட்டு வந்தால் அதனாலும் முதல் மனைவியும் அவளது பிள்ளைகளும் ஏமாற்றப்படுகிறார்கள்.
      இரண்டாம் திருமணம் பற்றி முதல் மனைவியிடம் தெரிவிக்கும் போது, அவள் ஏற்றுக் கொண்டால் பிரச்சனை இல்லை. இரண்டாம் திருமணம் செய்தால் உன்னோடு வாழ மாட்டேன்’ என்ற முடிவை அவள் எடுத்தால் அதற்கான உரிமை அவளுக்கு உண்டு.
      தனது கணவன் தன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்று ஒரு பெண் வலியுறுத்தினால் ஆண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையை அவள் மறுத்தவளாக மாட்டாள்.
      அலீ (ரலி) அவர்களுக்குத் தமது புதல்வியை மணம் முடித்துக் கொடுக்க ஹிஷாம் பின் முகீரா என்பவர் அனுமதி கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அனுமதிக்க மாட்டேன்; மீண்டும் அனுமதிக்க மாட்டேன்; மீண்டும் அனுமதிக்க மாட்டேன். வேண்டுமானால் அலீ, எனது மகளை விவாகரத்துச் செய்து விட்டு, அவரது மகளை மணந்து கொள்ளட்டும்’ எனக் கூறினார்கள். (நூல்: புகாரி 5230)
      )

      10.07.2009. 11:26
      __________________

      இத்னை பி.ஜே தனது வாழ்வில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

      • சங்கர் சாரே!!!,

        ஃஃஇத்னை பி.ஜே தனது வாழ்வில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.ஃஃ

        இதை நீங்க கேட்பதற்கு முன்பு நான் எனக்கு அடக்கமுடியாத காம உணர்வு ஏற்படுவதால் நான் இவர்கள் கூறியவாறு இரண்டாம் திருமணம் பண்ணாமல் விபச்சாரிகளிடம் சென்று எனது உணர்வை தனித்துக் கொள்கின்றேன். அதனால் எனக்கு எந்தவித கேடும் ஏற்படவில்லை. எனது மனைவி இதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றாள் எனக் கூறிவிட்டு உங்கள் கேள்வியைக் கேட்டால் நியாயமாக இருக்கும்.

        அப்படி ஒரு வாக்குமூலம் உங்களால் கொடுக்க முடியுமா?

        • எனக்கு அடங்கா காமம் ஏற்படுவது இல்லை.நடுத்தர வாழ்வின் சிக்கல்களும் ,வருமான வரி,கட்ட வேண்டிய கடன் தவணை,குழந்தைகளின் கல்வி,அவர்களது எதிர்காலம் என்று நினைத்தால் வருகிற காம உணர்வும் காணாமல் போகிறது.

        • ஆனால் அலிக்கு வேறுதிருமணம் செய்ய முயற்சிக்கும்போது மட்டும் ஏன் பாத்திமாவை தலாக் செய்துவிட்டு வேறு திருமணம் செய்யச் சொல்கிறார்கள் முகம்மது நபி. ஏன் இந்த ஓரவஞ்சனை? தன் மகள் மட்டும்தான் ஆத்மா உள்ள பெண்ணோ? அவரவருக்கு அவரவர் மகள் உசத்தியில்லையா?
          ஆனாலும் அடிமைப்பெண்களை மட்டும் மருமனுக்கு கொடுக்கிறார்கள். (இவர்கள் வைப்பாட்டியாக மாட்டார்களா?)

      • ///இத்னை பி.ஜே தனது வாழ்வில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்//
        சங்கர் சாரே, பீஜேக்கு காம உணர்வு அதிகமில்லை என்றே கருதுகிறேன். வேண்டுமானால் பாக்கருக்கு நான்கு மனைவிகளை முடித்து வைத்திருக்கலாம். பாக்கரையும் வெளியே அனுப்பியிருக்கத் தேவையில்லை. பீஜே மிஸ் பண்ணிட்டாரு.

        • ந ந்தினியோட ஜல்ஷா பன்னும்போது காப்பாத்தின பிஜே சக்கிலாவோட
          ஜல்ஷா பன்னும்போது காப்பாத்த முடியாம போச்சு. காரணம் ஹாமிம் என்ற படுபாவி. நோட்டீஸ் அடிச்சி தெரு தெருவா ஒட்டிபுடுவேன்னு மிரட்டிபுட்டாரு. இத வீடியோவில பாக்லாமுங்களா? இரண்டு நாள் பொறுங்க. வீடியோ காட்டுரேன்

      • I was waiting for somebody to rip these “facts” apart. Since nobody has (probably coz, it is just stating the obvious), here is my attempt. இதை இன்னும் ஒரிரு இணையப் ப‌க்க‌ங்க‌ளில் வாசித்த‌தால், இத‌ற்கு எதிர்க்க‌ருத்துச் சொல்வ‌து முக்கிய‌ம் என்று நினைக்கின்றேன்.

        ப‌ல‌தார‌ ம‌ண‌த்தை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள், அதற்கான உண்மையான காரணங்களையும் தேவையையுமே குறிப்பிட்டு வாதிட வேண்டுமே ஒழிய, சிறுவயதிலிருந்தே கேள்விகள் கேட்காமல் நம்ப வளர்க்கப்பட்டவர்களை, யாரும் கேள்விகள் கேட்க மாட்டார்கள் என்பதற்காக ஒருவர் தனது நிலைக்கு ஆதாரமென மனதில் வந்ததெல்லாம் சும்மா சொல்வது நம்பமுடியாமல் உள்ளது. இவ்வாறு பொய் சொல்வதால் உங்கள் கடவுளுக்கு உங்களில் கோபம் வராதா அல்லது தன்னைத் தான் ஆதரிக்கிறான் என்பதால் நீங்கள் என்ன சொன்னாலும் விட்டு விடுவானா அந்தக் கடவுள்?

        பலதார மணத்தை இஸ்லாம் அனுமதிப்பதற்குப் பல நியாயமான காரணங்கள் உள்ளன.
        1. திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திரு மணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.
        2. ஆண்களை விட பெண்களே மக்கள் தொகையில் அதிகமாக இருக்கிறார்கள்.

        Seriously, உண்மை இக்கட்டுரை சொல்வதற்கு முற்றிலும் மாறானது. ச‌தார‌ண‌மாக‌ ஒரு ச‌ம‌மின்மையும் இல்லாதிருந்தாலே உல‌கில் 105-107 ஆண்க‌ளுக்கு 100 பெண்க‌ளே பிற‌ப்பார்க‌ள். இள‌வ‌திலும் திரும‌ண‌ வ‌ய‌திலும் கிட்ட‌த்த‌ட்ட‌ இதே sex ratio தான் அநேக‌மான‌ நாடுக‌ளில் உள்ள‌து. ஆயினும் இந்தியா, சீனா நாடுக‌ளில் ந‌ட‌த்த‌ப்ப‌டும் பெண் சிசுக் கொலைக‌ளால் இந்நாடுக‌ளில் பொதுவாக‌ ச‌ராச‌ரிக்கு மிக‌க் கூடுத‌லாக‌வே ஆண்க‌ளின் எண்ணிக்கை உண்டு. சீனாவில் த‌னிய‌ ஒவ்வொரு ஆண்டும் பெண்க‌ளை விட‌ ஒரு மில்லிய‌ன் ஆண்க‌ள் கூடுத‌லாக‌ப் பிற‌க்கிறார்க‌ள் என‌க் க‌ருத‌ப்ப‌டுகின்ற‌து. இத‌னால் பெண்க‌ளுக்குத்தான் ப‌ற்றாக்குறையே ஒழிய‌ ஆண்க‌ளுக்கு அல்ல‌. சீனாவில் 28-49 வ‌ய‌திற்கு இடைப்ப‌ட்ட‌ திரும‌ண‌மாகாத‌வ‌ர்க‌ளில் 94 ச‌த‌வீத‌மானோர் ஆண்க‌ள். இந்நில‌மை தொட‌ரின், அடுத்த‌ 20 ஆண்டுக‌ளில் ப‌ர‌ந்த ஆசியாவிலும், குறிப்பாக இந்தியாவிலும் சீனாவிலும் இளவயது ஆண்கள் பெண்களை விட 10-15 ச‌த‌வீதம் அதிக‌ள‌வு இருப்பார்க‌ள் என‌க் க‌ணிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. திரும‌ண‌ம் ஒருவ‌ரின் வாழ்வில் மிக‌ முக்கிய‌மாக‌க் க‌ருத‌ப்ப‌டும் இச்ச‌மூக‌ங்க‌ளில் இவ்வாண்க‌ள் திரும‌ண‌ம்
        செய்ய‌வோ குடும்ப‌ம் நட‌த்த‌வோ வாய்ப்புக‌ள் கிடைக்க‌ப்போவ‌தில்லை. இத‌னால் ச‌முக‌த்தில் வ‌ன்முறைக‌ள் கூட‌ப் ப‌ல‌ம‌ட‌ங்கு அதிக‌ரிக்கிற‌தாம்.
        Abnormal sex ratios in human populations: Causes and consequences

        Socio-cultural aspects of the high masculinity ratio in India

        Characteristics of sex-ratio imbalance in India, and future scenarios

        3. இறப்பு விகிதத்தில் ஆண்களை விட பெண்கள் குறைவாக இருக்கிறார்கள்.

        இது point. ஆனால் ஒரெயொரு பிர‌ச்ச‌னை என்ன‌ தெரியுமா? பெண்க‌ள் ஆண்க‌ளை விட‌க் கூடுத‌ல் ஆண்டுக‌ள் உயிர் வாழ்வ‌தால் 65 வ‌ய‌திற்கு மேற்ப‌ட்டொரிலேயே பெண்க‌ளின் எண்ணிக்கை ஆண்க‌ளைவிட‌க் கூடுத‌லாக‌க் காண‌ப்ப‌டுகின்ற‌து. ஆனால் இங்கு யாரும் 65 வ‌ய‌திற்கு மேற்ப‌ட்ட‌ பெண்க‌ளைத் ஆண்கள் திரும‌ண‌ம் செய்ய‌லாமென‌ வாதிடுவ‌தாக‌த் தெரிய‌வில்லையே.

        4. போர்க் களங்களில் இளம் மனைவியரின் கணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் மாண்டு வருகின்றனர்.

        உண்மை. Although போர்க்கால்ங்க‌லிலும் போருக்கு பிந்திய‌ உட‌ன‌டிக்கால‌ங்க‌ளிலும் பிற‌க்கும் ஆண் குழ‌ந்திஅக‌ளின் எண்ணிக்கை சாதார‌ண‌ கால‌ங்க‌ளை விட‌ சிறிது கூட‌. போரினால் ஆத‌ர‌வ‌ற்று விட‌ப்ப‌டும் பெண்க‌ளுக்கு உட‌ன‌டித் தேவை இன்னொரு திரும‌ண‌ம‌ல்ல. அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து அவர்களை முன்னேற்றி தமது கால்களில் நிற்கப் பண்ணுவதே. அதன் பின் அவர்களுக்குத் திருமணம் செய்ய வேண்டுமெனில் அவர்களே அதைத் தீர்மானிக்கலாம். ஈழ‌த்தில் இன்று தாண்ட‌வ‌மாவும் இப்பிர‌ச்ச‌னைக்கும் இதே முத‌ல் தீர்வாக‌ வேண்டும். இத்தேவையைப் பூர்த்திசெய்வ‌த‌ற்குத் தேவைக்கும் அதிக‌மாக‌ புல‌ம் பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள் வெளிநாடுக‌ளில் ந‌ல்ல‌ நில‌மைக‌ளில் உள்ளார்க‌ள். ப‌ல‌ர் செய்துகொண்டும் உள்ள‌ன‌ர். இதை வசதியுள்ள எல்லோரையும் செய்ய‌த் தூண்ட‌வேண்டுமே ஒழிய‌ இப்பெண்க‌ளை ப‌ல‌தார‌ம‌ண‌மென்னும் போர்வையில் exploit ப‌ண்ணுவ‌து நியாய‌மேயில்லை.

        5. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக் காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.

        விப‌ச்சார‌ம் பெருகி வ‌ருவ‌த‌ற்குக் கார‌ண‌ம் நிச்ச‌ய‌மாக‌ இதுவ‌ல்ல‌. ஆண்க‌ள் கூடுத‌லாக‌ இருப்ப‌தால் அவ‌ர்க‌ளின் பாலிய‌ல் தேவைக‌ள் பூர்த்தி செய்ய‌ப‌ட ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் இல்லாத‌தாலும் விப‌ச்சார‌மும் trafficking உம் கூடுவ‌த‌ற்குத் துணைபோக‌லாமென‌வே ப‌ல‌ அறிஞ‌ர்க‌ள் எண்ணுகின்ற‌ன‌ர்.

        6. பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காக பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது.
        7. வரதட்சணை கொடுக்க இயலாத வர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயிருடன் கொலை செய்வதும், கருவிலேயே சமாதி ஆக்குவதும் அன்றாட நிகழ்ச்சிகளாகி வருகின்றன.

        இத‌ற்கு ஒரே யொரு வ‌ழி வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுப்ப‌தையோ வாஞ்குவ‌தையோ த‌டைசெய்வ‌தும் பெண்க‌ளை த‌ம் சொந்த‌க்காலில் நிற்க‌ப் ப‌ண்ணுவ‌துமே.

        8. திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக் குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.

        🙂 Too funny.

        10. தனக்குத் திருமணம் நடக்காது என்றெண்ணி தற்கொலை செய்யும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர்.

        Really?

        மேலே நாம் சுட்டிக் காட்டிய காரணங்களில் எதுவும் பெண்களுக்குப் பொருந்தாது. பெண்களுக்குப் பலதார மணத்தை அனுமதித்தால் மேலே சொன்ன தீய விளைவுகள் மேலும் அதிகரிக்கும். எனவே, பெண்களுக்குப் பல கணவர்களை அனுமதிக்க நியாயமான ஒரு காரணமும் இல்லை.

        மேலே நான் சொன்ன‌ உண்மைக் கார‌ண‌ங்க‌ளை வைத்துப் பார்க்கும் போது பெண்க‌ளுக்குப் ப‌ல‌தார‌ ம‌ண‌த்தை அனும‌தித்தால் ப‌ர‌வாயில்லை போல‌ல்ல‌வா தோன்றுகின்ற‌து.

        மாறாகப் பெண்ணுக்கும் இந்த அனுமதி வேண்டும் என்போரின் விருப்பப்படி அனுமதிப்பதனால் விபரீ தங்களும், கேடுகளும் தான் ஏற்படும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
        ஒரு ஆண் நூறு பெண்களுடன் ஒரு ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்த நூறு பெண்களும் நூறு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்! ஒரு பெண் நூறு ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் நூறு குழந்தைகளைப் பெற முடியுமா?

        Of course. I forgot that marriage is all about us being reproductive machines.

        ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மூலம் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் அந்தப் பத்துப் பிள்ளைகளின் தந்தை யார்? தாய் யார்? என்பதை அறிந்து கொள்ள முடியும். பல ஆண்களிடம் உறவு வைத்துள்ள ஒரு பெண் பெற்றெடுக்கும் ஒரே ஒரு பிள்ளைக்குத் தாய் யார்? என்பது தான் தெரியுமே தவிர, தந்தை யார்? என்பதை அறிந்து கொள்ள முடியாது.

        Oh don’t worry. 1,400 ஆண்டுக‌ளுக்கு முன் போலெல்லாம் இல்லை. இப்ப‌ மிக‌ச் சுல‌ப‌ம். The answer is just a simple DNA test away.

        இந்த நிலையை விட அந்தக் குழந்தைக்கு வேறு கேவலம் எதுவுமிருக்க முடியாது. இது போல் உருவாகக் கூடிய, தகப்பன் யார் என்று தெரியாத சந்ததிகள் உள்ளம் நொறுங்கி மனோ வியாதிக்கு ஆளாவார்கள்.
        ஒரு ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தை களையும் பராமரிக்கும் பொறுப்பை அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா? ஒவ்வொருவனும் அக்குழந்தை தன்னுடையதில்லை என்று மறுத்து விட்டால் எந்தச் சான்றின் அடிப்படையில் அவன் மீது பொறுப்பைச் சுமத்த முடியும்?

        ஜ‌யோ பாவ‌ம். எம‌து கிட்டிய‌ உற‌வின‌ர்க‌ளான‌ ம‌ற்றைய‌ இன‌ வில‌ங்குக‌ள் செய்வ‌து போல் செய்தால் ந‌ன்றாயிருக்குமோ?

    • வினவு,

      இந்த இஸ்லாமிய நண்பர்களை, உங்க பிரச்சார பலத்தால், திறமையால், ‘திருத்தி’ உங்க வழிக்கு கொண்டு வாங்க பார்க்கலாம். அதில் நீங்க வெற்றி பெற முடிந்தால், இந்தியாவில் கண்டிப்பாக உங்களால் செம்புரட்சியை கொண்டு வந்துவிட முடியம் என்பதை ஒத்துக்கிறேன் ; இதுவரை நான் ’பூஸ்வாதனமாக’ எழுதியதையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொண்டு, உங்க அணியில் சேர்ந்து கம்யூனிசத்தை ஏற்றுக்குறேன் !! சத்தியமாக முடியாது என்ற தைரியத்தில் தான் இந்த டைலாக் !! அவர்கள் கும்பிடும் கடவுளே வந்தாலும் இவர்களை ’திருத்த’ முடியாது !!!

  15. சார் விண்வெளி போவதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். நீங்க உங்க வீட்டுப் பெண்களை தனியாக தொலை தூரம் அனுப்புவீர்களா? அதாவது தனியாக இரயிலில் ஏற்றி டெல்லி வரை சென்றுவர அனுமதிப்பீர்களா?

    உங்களைக் கேட்டா வேறு யாரையாவது உதாரணம் காட்டுகின்றீர்களே?

    ஆம் அனுப்பியிருக்கின்றேன்! இல்லை இனி அனுப்புவேன் என்று பொய்யாக கூட உங்களால் உதார் விட முடியவில்லையே இதை என்னவென்று கூறுவது?

    • ஏன் அனுப்பாமல் எனக்கு என் மனைவி ,மகள் மேல் நம்பிக்கை இருக்கிறது.
      பலமுறை விமானப் பயணம் செய்து இருக்கிறார்கள்.தனன்ம்பிக்கையும்,செயல் திறனும்,சுயமரியாதையும் உடையளாகவே என் மகளை வளர்க்கிறேன். இந்தியாவில் இருந்து அயல் நாடுகளுக்கு(அமெரிக்கா,ஆஸ்திரேலியா) கல்வி கற்க செல்லும் மாணவிகள் பலர் தனியாத்தான் செல்கிறார்கள்.இரு வருடம் முடித்த பின்பே இந்தியா வந்து போகிறார்கள். இது ஒரு இஸ்லாமியரல்லாத சமுகத்தில் இது ஒரு விஷயமே இல்லை.

      இஸ்லாமியர்களுக்கு இன்னும் ஒரு பெண் ஆண் துணையில்லாமல் பயணம் செய்வதை கூட கற்பனை செய்ய முடியவில்லை.

    • நானும் பெண்தான். என் வீட்டில் என்னை சேலம் – சென்னை தனியாகத்தான் அனுப்புகின்றர்.

      • sankar and vithya///இஸ்லாமியர்களுக்கு இன்னும் ஒரு பெண் ஆண் துணையில்லாமல் பயணம் செய்வதை கூட கற்பனை செய்ய முடியவில்லை.///

        முஹம்மது நபி[ஸல்] அவர்கள்,வரும் காலங்களில் ஹீரா என்ற இடத்திலிருந்து தனது குதிரையில் பெண் ஒருவர் தனித்தே ஹஜ் செய்வார் ‘என்று கூறினார்கள்,அவர்களின் மரணத்திற்கு பிறகு அவ்வாறு ஒரு பெண் ஹஜ் செய்ய வந்ததை நான் பார்த்தேன்என்று அலி கூறியதாக ஒரு நபி வழி தொகுப்பு செய்தி கூறுகிறது..

        வித்யா ,ஹீரா என்னுமிடம் மக்காவிலிருந்து சுமார் அறுநூறு கிலோமீட்டர் தூரம் உள்ள இடமாகும்..பெண் தனித்து குதிரையில் பாதுகாப்பாக வருவாள் ,அத்தனை தைரியமும் ஒழுக்கமும் உள்ள இஸ்லாமிய பெண்கள் உருவாகுவார்கள் ,கொள்ளையர்கள் ,காமுகர்கள் அச்சப்படக் கூடிய அளவில் நாடும் அத்தனை பாதுகாப்பாக மிக்கதாக இருக்கும் என்ற கருத்திலே முஹம்மது நபி[ஸல்]சொல்லியுள்ளார்கள். வேறு வழியில்லை என்ற நிர்பந்த நிலைகளில் தன்னை கற்பிலும்,திருடர்களிடமிருந்தும் காத்துக் கொள்ள தைரியமான பெண்கள் தனியாக பயணிக்கலாம் என்றே இந்த நபி வழி செய்தி தெரிவிக்கிறது.

  16. what about the reverse cae ? பெண்களுக்கு ‘அடக்க முடியாத’ காமம் வந்தால் என்ன செய்வதாம் ? ஆணாதிக்க பேச்சாகவே இருக்கிறதே !!!

    சரி, இவர்களுடன் விதண்டாவதம் செய்ய முடியாது. ஒரே ஒரு விசியம் மட்டும் :

    இத்தணையும் இந்தியா போன்ற நாடுகளில், பொது சிவில் சட்டம் இல்லாததான் தான் பேசுகின்றனர். அமெரிக்கா, அய்ரோப்பா, ஆஸ்த்ரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்தால், அல்லது அங்கு வாழும் முஸ்லீம்கள் ஒழுங்க, மரியாதையா அந்நாட்டு சிவில் சட்டப்படி, (அதாவது பொது சிவில் சட்டம் மட்டும் தான், முஸ்லீம்களுக்கு தனி சட்டம் எல்லாம் இல்லை) வாழ்வார்கள். இங்க தான் இப்படி. என்றாவது ஒரு நாள் இங்கும் பொது சிவில் சட்டம் (மட்டும்) உறுதி செய்யப்படும்.

    1930களில் இந்து சட்டம் முதன்முறையாக சீர்திருத்தம் செய்ப்பட்டு, பால்ய விவாகம் தடை, கலப்பு திருமணங்களுக்கு அனுமதி, சிவில் திருமணம் அனுமதி என்று மாற்றப்பட்ட போதும் வைதீக இந்துக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது தான். பிறகு அடங்கிவிட்டது.

  17. இஸ்லாமிய நண்பர்களே,

    ஒரு கணவனாக மட்டுமே நீங்க இந்த ‘பிரச்சனையை’ பார்குறீங்க. ஒரு தகப்பனாக, சகோதரனாக, மகனாக பாருங்களேன். உங்க தந்தை அல்லது மருமகன் அல்லது சகோதிரியின் கணவன் : இவர்கள் இதே லாஜிக் பேசி, அற்ப அல்லது அயோக்கியத்தனமான காரணங்களை காட்டி, தம் மனைவிகளை தலாக் செய்து, மறுமணம் புரிந்தால், எத்தனை வேதனை அடைவீக ? குடும்ப உறவுகள் எப்படி உடைந்து, விரக்தி அடைவீக ? கைவிடப்படும் உங்கள் தாயார் அல்லது சகோதரி அல்லது மகள் படும் வேதனையை, இழப்பை பற்றி யோசித்து பாருங்க. வெறும் கணவனாக மட்டும் ஒரு ஆண் இருக்க முடியாது. தந்தையாக, மகனாக, சகோதரனாகவும் ரூபங்கள் உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

  18. allah quranil avarkaludaya idhyangalukkum &kadhukalukkum pottapattulladhu endru solvadhai pol kafirkalukku adhavadhu irai marupalarkkalukku evlavu thaan vilakam sonnalum vilangadhu enbathey unmai..

    • //irai marupalarkkalukku evlavu thaan vilakam sonnalum //

      நான் இறை மறுப்பாலன் எல்லாம் இல்லை தோழர். மிகுந்த நம்பிக்கை கொண்டவன் தான். என்ன, அல்லா என்ற பெயருக்கு பதிலாக வேறு பெயர்களில், மொழிகளில் தொழுகிறேன். இந்த பெயர்கள், உருவங்கள், வழிபாட்டு முறைகள் எல்லாம், மனிதர்கள் தங்கள் சூழல் மற்றும் காலத்திற்கு ஏற்ப உருவாக்கி கொண்டதுதான். மற்றபடி கடவுள் என்பது ஒரு மகா சக்தி. எங்கு நிறைந்திருப்பது. அவ்வளவுதான்.

      இஸ்லாமிய தொழுகை முறை மிகவும் அருமையானது என்பதை அறிவேன். மசூதிக்குள் ஏழை பணக்காரன் வித்தியாசம் இன்று, மற்ற மதங்களை போல் இடை தரகரான பாதிரிமார்கள் இன்று, எல்லோரும் ஒன்று பட்டு, ஒரே குரலில் இறைவனை வழிப்படுவது அருமையான முறை. மேலும் மண்டியிட்டு தொழுவது உடல் நலத்திற்க்கு மிகவும் நல்லது. ஒரு வகை யோகாசன posture தான் அது. நெற்றி தரையில் பதியும் முறை, நம் அகங்காரத்தை அகற்றி, அடக்கத்தையும், எளிமையையும் அளிக்கிறது. மேலும் பல சூட்சமங்கள் உள்ளன. இவை பற்றி எல்லாம் கேள்விகள் இல்லை. பெண்களுக்கு எதிரான ஷாரியத் சட்டங்கள் தான் சரியில்லை.

      மேலும், திருகுரானில் கூறப்பட்டதால், அல்லது நபிகள் சொல்லியிருந்தால் மட்டும் அப்படியே ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கால சூழல் மற்றும் நம் அறிவையும் உபயோகப்படுத்தி, எவை சரியானவை, எவை தவறானவை என்று ஆராய்ந்து, வேண்டாதவற்றை தள்ளுவதே விவேகம் மற்றும் உண்மையான ஆன்மீக முறை. இது இந்து, கிருஸ்துவ, சீக்கிய மதங்களுக்கும் பொருந்தும் தான். இந்து மதங்களில் மிக கொடுமையான, அநியாயமான விசியங்களும் உள்ளன. மிக அருமையான, உனதமான விசியங்களும் உள்ளன. நல்லவற்றை மட்டும் எடுத்து பயன்படுத்துவதே விவேகம். அதை தான் நான் செய்ய முயல்கிறேன்..

  19. //பல்தாரம்ணத்திற்கு மதவாதிகளால் சொல்லப் படும் காரணம் என்ன?//

    சங்கர் ஸார்,பலதாரமண எதிர்ப்புக்கு ‘பகுத்தறிவுவாதிகள்’ சொல்ற காரணத்த சொன்னா நல்லா இருக்கும். அத பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லையே ஏன்?

    ஒருவனுக்கு ஒருத்தி , தமிழர் பண்பாடு அப்டினு எதாவ்து சொல்ல போறீங்களா ?

    இப்ப தான் எல்லாரும் ‘consenting adults’ என்ன செஞ்சாலும் (அதாங்க homosex, heterosex எல்லா எழ்வும்தான்) ஓகேன்ற நிலமைக்கு வந்துட்டீங்களே.
    அப்றம் ஏன் ‘consenting adults’ பலதாரமணம் செஞ்சா மட்டும் தப்புன்னு சொல்றீங்க ?

    பலதாரமணம் ஏன் பகுத்தறிவுக்கு எதிரானது,அறிவியலுக்கு எதிரானதுன்னு காரண்ங்கள‌ சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் (நம்ம முதல்வர்ட்ட வேனா ஆலோசனை செஞ்சுகோங்க‌).

    அதுக்கு மொதல்ல மதவாதிகள் பண்ற திருமணத்த ஏங்க ஆதரிக்கிறீங்க ? இந்த ‘பெண்ணை அடிமையாக்கும்’ முறையிலிருந்து விடுதலை செய்றத பத்தி யோசிங்க. அப்றம் பலதாரமணம் , தலாக்னு பிரச்னையே இருக்காது.

  20. சார்வாகன்!

    //நான்கு(நான்காவது) திருமணம் செய்த ஆணோ, பெண்ணோ அது எப்படி சிற‌ந்தது என்று பதிவு எழுதினால் விவாதிக்க நலமாக இருக்கும்.ஒரு திருமணம் செய்த இஸ்லாமிய நண்பர்கள் பல திருமணத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஒரு நகை முரண்.//

    //ஆனால் சுவனப் பிரியன் ,பி.ஜே உட்பட 99.9% தமிழ் இஸ்லாமியர்கள் ஒரு தாரம் உடையவர்கள் ஏன் இப்படி?.99.9 % பேர் இஸ்லாமை விட ந்ன்னெறி கொண்டவர்கள் அப்ப்டித்தானே!!!!.0.1% ஆட்களுக்காக மொத்த சமுதாயமும் ஏன் பேச வேண்டும்?
    அதனையும் கண்கானித்து ஒழுங்கு செய்தால்தானே நல்லது.//

    சுவாரஸ்யமான கேள்வி!

    நான் திருமணம் முடித்த நாளிலிருந்து இன்று வரை எனக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து அதற்கு காரணம் என் மனைவி என்று மருத்துவர் சொல்ல வேண்டும். இரண்டாவதாக என் மனைவி தாம்பத்திய உறவுக்கு உடல் ரீதியாக தகுதியில்லாதவராக இருக்க வேண்டும்.

    கல்யாணம் ஆன முதல் வருடமே குழந்தை பிறந்தது. தாம்பத்திய உறவிலும் எந்த சிக்கலும் இல்லை. திருப்தியான வேலை. இறைநம்பிக்கையோடு கூடிய மனைவி மக்கள் சொந்தபந்தங்கள் என்று சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நான் இரண்டாம் திருமணம் மூன்றாம் திருமணத்தைப் பற்றி சிந்திப்பது தவறல்லவா!

    மேலே சொன்ன குறைகள் ஏதும் என் மனைவியிடத்தில் இருந்தால் நான் கண்டிப்பாக இரண்டாம் திருமணம் செய்திருப்பேன். ஏனெனில் எனது மார்க்கம் இதற்கு அனுமதி அளிக்கிறது. இதை எல்லாம் விளக்கிச் சொல்லி என் மனைவியின் சம்மதத்தோடு நான் இரண்டாம் திருமணம் முடித்திருப்பேன். அதற்க்கெல்லாம் அவசியம் இல்லாமல் செய்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

    மேலும் குறை என்னிடம் இருப்பதாக மருத்துவர் சொன்னால் அந்த நிமிடமே என் மனைவியை பிரிந்து அவருக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்க முயற்ச்சிப்பேன். என்னால் அந்த பெண்ணின் வாழ்வு பாழ்படக் கூடாதல்லவா!

    ‘கல்லானாலும் கணவன்: புல்லானாலும் புருஷன்’, ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ என்பதெல்லாம் இன்று காணாமல் போய் விட்டது.

    மேலும் பலதார மணம் என்பது தேவையுடையவர்களுக்கு உள்ள அனுமதிதானேயொழிய கட்டாய கடமை கிடையாது.

    //ஷாரியாவில் உள்ள சில இக்காலத்திற்கு ஒவ்வாத விஷயங்களை சுட்டிக் காட்டி மாற்றுங்கள் என்றே கேட்கிறோம்.//

    ஷாரியாவில் வேண்டுமானால் குர்ஆனுக்கு மாற்றமில்லாமல் சில திருத்தங்கள் கொண்டு வரலாம். ஆனால் பலதார மண அனுமதியை தடை செய்ய முடியாது. ஏனெனில் அது குர்ஆனில் உள்ள சட்டம். இறை சட்டத்தை மனிதர்கள் எப்படி மாற்ற முடியும்? விருப்பமில்லாதவர்கள் தங்கள் பெண்களை இரண்டாம் தாரமாகவோ மூன்றாம் தாரமாகவோ திருமணம் முடித்து கொடுக்காமல் தடை செய்து கொள்ளலாம். மேலும் இன்றைய விலைவாசியில் ஒரு மனைவியோடு வாழ்வதே பெரும்பாடாக இருக்கிறது. இதில் மற்ற திருமணங்களை பற்றி சிந்திக்க நேரம் ஏது?

    நமது தமிழக முதல்வர் இரண்டு மனைவியோடு சந்தோஷமாக இல்லையா? நமது முன்னால் முதல்வர் இன்றும் செல்வியாக இருந்து கொண்டிருப்பதும் வருத்தப்பட வேண்டிய விஷயமல்லவா! திருமணம் முடிக்காமல் அந்தரத்தில் விட்டுச் சென்றது எம்.ஜி.ஆர் செய்த தவறல்லவா! இவை எல்லாம் இந்திய சட்டத்தில் உள்ள குளறுபடிகளே!

    • //நமது தமிழக முதல்வர் இரண்டு மனைவியோடு சந்தோஷமாக இல்லையா? நமது முன்னால் முதல்வர் இன்றும் செல்வியாக இருந்து கொண்டிருப்பதும் வருத்தப்பட வேண்டிய விஷயமல்லவா! திருமணம் முடிக்காமல் அந்தரத்தில் விட்டுச் சென்றது எம்.ஜி.ஆர் செய்த தவறல்லவா! இவை எல்லாம் இந்திய சட்டத்தில் உள்ள குளறுபடிகளே!//
      குளறுபடி மட்டுமல்ல கொடுமையும் கூட.பெரிய இடத்து விவகாரம் அப்ப்டித்தான் கேவலமா இருக்கும்.ஊருக்குத்தான் உபதேசம்.இரண்டு கொஷ்டியையும் (திமுக,அதிமுக)சொல்லி அடிக்கிறீங்க.ஆட்டோ அனுப்பிருவானுங்க .

    • சுவனப்பிரியன்,

      ஆணுக்கு காம உணர்வு அதிகம், பெண்கள் அதிகமாகி விடுவார்கள் என்றெல்லாம் கூறி 4 மனைவி ஷரத்துக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். உலகில் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாகவும் வெகுசிலர் வசதிபடைத்தோறுமாகவே இருக்கின்றனர், இந்த நிலை மாறுவதற்கு பிச்சை கொடுக்கும் சட்டத்தை விடுத்து உருப்படியாக ஏதேனும் பொருளாதாரக் கொள்கையை அல்லா கூறியிருக்கிறாரா?

  21. இந்தப் பதிவு பெண்களின் பிரச்சினையை பற்றிப் பேசுகிறது. ஆனால் இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் போடுறவங்க எல்லாம் ஆண்களாகவே இருக்கின்றனர். முஸ்லிம் பெண்கள் இதைப்பற்றி கருத்துச் சொல்லவேண்டும்.

    • ஜானி!
      உங்கள் கோரிக்கை கொஞ்சம் மிகையானது. ஆண்களே வெளிப்படையாக சொல்லப் பயப்படும்போது பெண்கள் கருத்துச் சொல்லிவிட்டு இவர்களிடமிருந்து தப்பிக்கவா? போலிப் பெயர்களில் வேண்டுமானால் சாத்தியமாகலாம்.

  22. //கல்யாணம் ஆன முதல் வருடமே குழந்தை பிறந்தது. தாம்பத்திய உறவிலும் எந்த சிக்கலும் இல்லை. திருப்தியான வேலை. இறைநம்பிக்கையோடு கூடிய மனைவி மக்கள் சொந்தபந்தங்கள் என்று சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நான் இரண்டாம் திருமணம் மூன்றாம் திருமணத்தைப் பற்றி சிந்திப்பது தவறல்லவா!//
    வாழ்த்துக்கள் நண்பர் சுவன பிரியன்,
    நானும் இதைத்தான் சொல்கிறேன். இந்த இரண்டாம் திருமணம் என்பதே ஒரு இக்கட்டான நிலைக்கு தீர்வு என்பதை பெரும்பாலான இஸ்லாமிய பிரச்சாரகர்கள் சொல்லாமல் ஏதோ ஆண் இஷ்டப்பட்டால் செய்யலாம் போல் சித்தரிப்பது பிற மதத்தவிரிடம் நல்ல கருத்தை ஏற்படுத்தாது.இந்த இரண்டாம் திருமணத்தை சரியான காரணத்தோடு செய்யப் படுகிறதா என்பதையும் முதல் மனைவி குழந்தைகளுக்கு பாதிப்பு வராத வகையில் ஏதாவது செய்ய வேன்டும் என்பதே நமது ஆசை.மூன்று நான்கு மனைவிகள் என்பது தவறு என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

    இஸ்லாமில் உள்ள நடைமுறைகளை பிற மதத்தினர்,இறை மறுப்பாளர் விமர்சனம் செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன?

  23. கட்டுரை ஆசிரியர் இஸ்லாம் பற்றிய போதிய அறிவு இல்லாமல் தனக்கு தோன்றியதை எழுதியுள்ளார். ஏதாவது கட்டுரை எழுதும் பொது அதுகுறித்து கற்று அறிந்தவர்களிடம் கலந்து ஆலோசித்து விட்டு கட்டுரை பிரசுரிப்பது நல்லது. தோன்றியதையும் கேட்டதையும் வைத்து அவசரத்தில் அள்ளி தெளித்துள்ளார். உதாரணங்கள் எல்லாம் தனி மனித ஒழுங்கையும் ஒரு மத கோட்பாடையும் வேறு படுத்தி பார்க்க தெரியாத கட்டுரை ஆசிரியரின் அறிவை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. அது என்னவோ தெரியவில்லை? ஒரு சீரான இடைவெளியில் இஸ்லாம் பற்றி எதையாவது கூறிகொண்டே இருப்பது என்று யாரிடமாவது சபதம் எடுத்திருக்கிறிர்களா?

  24. சார்வாஹன்!

    //இஸ்லாமில் உள்ள நடைமுறைகளை பிற மதத்தினர்,இறை மறுப்பாளர் விமர்சனம் செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன?//

    தாராளமாக விமரிசிக்கலாம். ஆனால் விமர்சனம் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும். கேள்வி கேட்டால்தானே விளக்கம் பிறக்கும். முகமது நபியை அவரது தோழர்கள் எந்த நேரமும் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்ததால்தான் குர்ஆனுக்கு பல விளக்கங்கள் கிடைத்தது. பல யூதர்களும் கிறித்தவர்களும் சிலை வணங்கிகளும் முகமது நபியுடன் பல கேள்விகள் கேட்டுள்ளனர்.

    நானும் எங்கள் ஊர் முல்லாவிடம் தர்ஹா, மற்றும் மூடப்பழக்கங்கள் சம்பந்தமாக சில கேள்விகள் சில வருடங்களுக்கு முன்பு கேட்கப் போக ‘நீ பள்ளிக்கே வராதே!’ என்று கோபத்தில் கத்தினார். சில வருடங்களில் அவரே அந்த பள்ளியில் நுழைய முடியாத நிலை. இன்று நான் அந்த பள்ளியில் ஐந்து நேரமும் சென்று தொழுது வருகிறேன்.:-)

    ‘விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!’
    -குர்ஆன் 16:125

  25. கட்டுரையாளர் சாகித் அவர்களுக்கு,

    ஒரு இசுலாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பின்னாளில் கடவுள் மறுப்பாளராக நீங்கள் மாறியிருக்கிறீர்கள் என உங்கள் பெயரை வைத்து ஊகிக்கிறேன்.அது உங்கள் உரிமை.இருக்கட்டும்.மனித குல வரலாறு நெடுகிலும் தேடினாலும் கடவுள் மறுப்பாளர்கள் தங்கள் கொள்கையின் பெயரால் பிற மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவோ,கடவுள் நம்பிக்கையாளர்களை கொன்று குவித்ததாகவோ செய்தி ஏதும் கிடைக்காது.ஆனால் கடவுளை நம்புவோர் அக்கடவுளின் பெயராலும் தங்கள் மதத்தின் பெயராலும் பிற மதத்தினரை கழுவில் ஏற்றியதும் கொன்று குவித்ததும் வரலாற்று உண்மைகள்.ஆகவே நீங்கள் கடவுள் மறுப்பாளராக இருப்பதில் எம்மை போன்றோர் வருந்துவதற்கு ஏதுமில்லை.

    ஆனால் இசுலாமிய பெண்கள் குறித்து கட்டுரை வரைய வந்த நீங்கள் கட்டுரை நெடுகிலும் இசுலாம் குறித்து வெறுப்புணர்வுடன் பேசுவதை காண முடிகிறது.இசுலாம் மீதான உங்கள் வெறுப்பு அம்மதத்தின் மூல நூல்கள் அமைந்துள்ள அரபு மொழியின் மீதும் பாய்ந்து அம்மொழியை வளமற்ற மொழி என சாடுகிறீர்கள்.அதற்கு நீங்கள் சொல்லும் காரணம் அம்மொழியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் தருவதாக உள்ளது என்கிறீர்கள்.ஆகவே அச்சொற்களை பயன்படுத்தும் இறைவனின்
    திருமறையிலும் குழப்பம் என நிறுவ முயற்சிக்கிறீர்கள்.ஆனால் உங்கள் முயற்சி பரிதாபகரமாக தோற்று போகிறது.

    அரபு மொழியில் மட்டுமல்ல உலகில் பல மொழிகளிலும் ஒரு சொல் பல பொருள் தருவதாக உள்ளதை காண முடியும்.எடுத்துக்காட்டாக தமிழை எடுத்துக்கொள்ளுங்கள்.”திங்கள்” என்ற சொல் மாதம்,கிழமை,நிலவு என பல பொருள் தருகிறது. இந்த சொல்லுக்கு முன்னும் பின்னும் இடம் பெறும் சொற்களே அச்சொல்லுக்கான பொருளை தீர்மானிக்கின்றன. இந்தியில் நேற்று என்பதற்கும் நாளை என்பதற்கும் ”கல்”என்ற ஒரே சொல்தான் பயன்படுத்தப்படுகிறது.அச்சொல்லை ஒட்டி வரும் வினை சொல்லே கடந்த காலமா எதிர்காலமா என்பதை உணர்த்தும். ஆங்கிலத்திலும் இது போல் ஒரு சொல் பல பொருள் தருகிறது என்று சொல்லித்தான் இங்கிலாந்திலேயே பிரஞ்சு மொழியை வெகுகாலம் நீதிமன்ற மொழியாக வைத்திருந்தார்கள்.

    உண்மையில் ஒரு சொல் பல பொருள் தருவதை அம்மொழியின் வளமாகத்தான் கருத வேண்டுமேயன்றி குறைபாடாக கருத கூடாது.ஏனென்றால் அச்சொல் பயன்பாட்டில் வரும்போதெல்லாம் படிப்பவரை அல்லது கேட்பவரை அறிவை பயன்படுத்தி பொருள் கொள்ள கோருகிறது.ஐ,கை.என விரட்டினால் ஓடுவதும் ஒ’ஓ’என கூறினால் நிற்பதும் என நாம் மாடுகளிடம் பேசுவது போல் ஆறறிவு கொண்ட மனிதர்களிடம் பேச வேண்டியதில்லையே.அவர்களின் அறிவாற்றலுக்கு வேலை கொடுத்து பேசும் மொழி வளமானதா,வறட்சியானதா.

    அடுத்து நீங்கள் எடுத்துக்காட்டாக கூறும் இரு நிகழ்வுகளுமே கூடுதல் குறைவின்றி சொல்லப்பட்டிருக்கிறதா என நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வாய்ப்பற்றவையாக உள்ளன. இருப்பினும் நீங்கள் பொய்யுரைக்க மாட்டீர்கள் என்று நம்பிக்கை வைத்து அவற்றை பரிசீலிக்கலாம்.

    பேருந்தில் மனைவியுடன் சண்டையிட்ட நபர் ஒரு நாகரீகம் அற்ற முட்டாள் முரடனாக நடந்து கொண்டுள்ளார்.பொது இடத்தில் பலர் பார்த்திருக்க மனைவியை அடித்து அந்நிய ஆடவன் ஒருவர் மேல் விழ வைத்து அநாகரிகமாக நடந்து கொண்ட ஒரு மனநோயாளியின் செயல்களுக்கு இசுலாமிய மதத்தின் மீது குற்றம் சொல்ல முடியுமா.மனிதனாகவே இருக்க அருகதை அற்ற ஒரு மூடனின் பிதற்றல்களை [தலாக் சொல்லிடுவேன்.ஒரு குவளை பால் போதும்] இசுலாமியரின் குரலாக எடுத்துக்கொள்வது சரியா.

    அடுத்து முதுமை அடைந்த ஒருவர் கொடுத்த மணவிலக்கு. அவர் ஒரு கேரள பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொள்வதற்காக முதல் மனைவியை ”அவிழ்த்து”விட்டார் என குற்றம் சாட்டுகிறீர்கள்.[கேரள பெண் என சொல்லாமல் பொதுவில் வேறொரு பெண் என சொல்லியிருக்கலாம்]. ஐயா,அவர் முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவது திருமணத்தை அனுமதிக்கும் மதத்தில்தானே இருக்கிறார்.முதல் திருமணத்தை முறிக்காமலே இரண்டாவது திருமணத்தை செய்ய வாய்ப்பிருக்கும்போது தக்க காரணம் எதுவும் சொல்லாமலே அம்முதியவர் தம்மனைவியை விலக்கி வைக்க வேண்டியதில்லையே.

    இந்த பதிவையும் இதற்கான பின்னூட்டங்களையும் படிக்கும்போது இசுலாமியர்கள் பெண்களை கொடுமை செய்து வருவது போன்ற கற்பனையில் பலர் இருப்பதை உணர முடிகிறது.அவர்களின் பார்வைக்கு ஒரு சில சொற்கள்.

    இசுலாமியர்களும் மனிதர்கள்தான்.அவர்களும் உங்களை போலவே தாயின் மீது,தங்கையின் மீது,மகள் மீது, மனைவியின் மீது பாசம் கொண்டவர்களே.

    ”மனிதர்களில் சிறந்தவர் தன மனைவியிடம் நற்பெயர் பெற்றவரே” என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழியை மதித்து நடப்பவர் எவரும் மனைவியை புண்படுத்தி இன்புறமாட்டார்.

    • தமிழ் வாழ்வதாக சொல்லப்படும், நம்பபடும் நமது கிராமங்களில் மணவிலக்கு என்பதை குறிப்பிடும் வார்த்தைகள் தீர்த்தல், அத்து விடுதல் என்பதுதான். இப்போது நகரத்தில் வாழ்பவர்களின் முந்தைய தலைமுறையினர் பயன்படுத்திய வார்த்தைகளும் அதுவாகத்தான் இருந்திருக்கும். ஆக தமிழர்கள் நடைமுறையில் பெண்ணின் உணர்வுக்கும் உரிமைக்கும் எவ்வளவு மதிப்பளித்திருப்பார்கள் என்பதை இந்த வார்த்தைகள் மூலம் புரிந்து கொள்ளலாமா?

      இந்த பதிவு கட்டுரையாளரின் இஸ்லாமிய வெறுப்பின் எச்சம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

  26. கட்டுரைக்குள் விமர்சனம் வைப்பது என்பது மிகவும் அரிதாக உள்ள நிலையில் நண்பர் திப்பு அவர்களின் விமர்சனத்தை மகிழ்வோடு வரவேற்கிறேன்.

    அரபி மொழியில் நான் வைத்துள்ள விமர்சனத்திற்கு பதிலாக “அரபு மொழியில் மட்டுமல்ல உலகில் பல மொழிகளிலும் ஒரு சொல் பல பொருள் தருவதாக உள்ளதை காண முடியும்” என்று சில சொற்களை எடுத்துக்காட்டாக தந்துள்ளார். அச் சொற்களிலிருந்தே அதனைப்பற்றி விவாதிப்போம்.
    தமிழில் உள்ள திங்கள் என்ற சொல்லை மூன்றுவித சொற்றொடர்களில் அமைப்போம்.
    1. திப்பு அவர்கள் திங்கள் மாலாவை கொலைசெய்தார் என்று காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
    இப்பொழுது திங்கள் என்ற சொல்லுக்கு மாதம், நிலவு, திங்கட்கிழமை என்றுள்ளதில் எது பொருந்துவதாக உள்ளது.
    திப்பு அவர்கள் மாதம் மாலாவை கொலை செய்தார்.
    திப்பு அவர்கள் நிலவு மாலாவை கொலை செய்தார்.
    திப்பு அவர்கள் திங்கட்கிழமை மாலாவை கொலை செய்தார்.
    திங்கட்கிழமை என்பது மட்டுமே பொருந்துகிறது.
    2. ஆறு என்ற தமிழ் சொல் ஒன்றையும் பார்ப்போம். நதி, ஆறு (6) என்ற எண், வழி என்று பொருளுண்டு இதற்கு.
    ஆறு கல்லணை வழியாகக் கடலை அடைகிறது. இதற்கு எந்தப் பொருள் பொறுத்தமாக அமைகிறது?
    ஆறு மாம்பழம் எனக்கு கிடைத்தது.
    ஆறு = வழி என்று செய்யு
    அடுத்ததாக இந்தியிலுள்ள “கல்” என்றச் சொல்லை எடுத்துக்காட்டுத் தந்துள்ளார்.
    மே கல் சென்னை கயா தா. –நான் நேற்று சென்னைச் சென்றிருந்தேன்.
    மே கல் சென்னை ஜாதா ஹூம். — நான் நாளை சென்னை செல்வேன்.
    இந்த இரண்டு சொற்கலிலும் “கல்” என்றச் சொல் பயன்படுத்தப்பட்டாலும் ஒன்றில் “நேற்று” என்றும் மற்றொன்றில் “இன்று” என்றும் பொருள் தருகிறது. இந்தியின் இலக்கணப்படி ‘கல்’ என்ற சொல் அதனுடன் இணையும் வினைச்சொல்லினைப் பொறுத்து நேற்று அல்லது இன்று என்று பொருள்படும். நாளை சென்றிருந்தேன், நேற்று போவேன் என்று எவரும் பொருள்கொள்ள முடியாது. அதனால் கல் என்றச் சொல் எந்தக் குழப்பத்தையும் எவருக்கும் தராது.
    மேலுள்ள தமிழ் மற்றும் இந்தி சொற்களிலிருந்து ஒரு வரையரை தெளிவாகத் தெரிகிறது. “ இந்தி, தமிழ் மற்றும் பிறமொழிகளில் ஒரு சொல் பல பொருள் தந்தாலும் சொற்றொடரில் உள்ள காலம், இடம், எண், பால் ஆகிய விதிகளுக்கு உட்பட்டு அச்சொல்லின் பொருள் இதுதான் என்று நான், நீங்கள், அல்லது பிற எவரும், எக்காலத்திலும் சொல்லமுடியும். அவரவர் விருப்பத்திற்கோ கற்பனைக்கோ இடம் தராது. இப்பொழுது ‘திப்பு திங்கள் மாலாவை கொலை செய்தார் என்பதை அவரது கற்பனைக் கேற்ப திப்பு நிலவு மாலாவை கொலைசெய்தார் என்று மாற்றி கொலை வழக்கிலிருந்து தப்பிவிடமுடியும் என்று கற்பனை செய்யகிறார். முடியாது திப்பு அவர்களே.
    திப்பு அவர்களே. அக்ரஅத் என்றச் சொல்லைவைத்து என் முயற்சி பரிதாபமாக தோற்றுப் போக ஒரு சொற்றொடர் அமைத்து அரபி மொழியின் சிறப்பை விளக்குங்கேன்.
    ஒரு மொழியில் ஒரு சொல்லுக்கு பல பொருள் இருப்பதென்பது மொழியின் வளமைக்குச் சான்றல்ல. மொழியின் வளமையின்மையே காரணம். அதற்கு அம்மொழியிலுள்ள எழுத்துகளின் எண்ணிக்கையும் ஒரு காரணம். இதனை திப்பும் உணர்நிருப்பதால்தான் உலகின் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் பிரஞ்சு மொழியில் எழுதப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். பல பொருள் தரும் சொற்கள் பிரஞ்சு மொழியில் குறைவு என்பதால்தானே அது சிறப்புற்று உலக ஒப்பந்தங்களின் மொழியாக ஜொலிக்கிறது. அறிவாற்றலுக்கு வேலைகொடுத்து தில்லுமுல்லு செய்ய உதவும் ஒரு மொழி எப்படி சிறப்பானதாகும்?
    அடுத்ததாக பேருந்தில் நடந்த சம்பவம் எடுத்தாளப்பட்டுள்ளது இசுலாமியர்களின் மத்தியில் தொட்டதற்கெல்லாம் தலாக் என்ற சிந்தனை அதிகதிமாக இருப்பதை காட்டவே. பிற மத கணவன் மனைவிகளிடம் சச்சரவு ஏற்படுமானால் கணவன் அதிகராக பயன்படுத்தும் சொல் “உன் அப்பன் ஆத்தா வீட்டுக்குப் போடி” என்றச் சொல். அதுவே இசுலாமிய குடும்பமாக இருந்தால் “தலாக் செஞ்சிடுவேன்” என்ற சொல்.
    அடுத்த தாக கேரளப்ப பெண் என்று குறிப்பட்டது கவன்குறைவிற்கு சுயவிமர்சனம் ஏற்றுக்கொள்கிறேன். கேரளப் பெண்கள் என்றால்…… என்ற சிந்தனையை கவனத்தில் எடுத்துக்கொள்ள தவறியது எனது தவறு. ஆனால் உண்மையில் அவர் திருமணம் செய்தது கேரளத்துப் பெண்தான். அதனைச் சுட்டவே எழுதினேன். அதுபோல பேரன் பேத்தி எடுத்தபிறகும்கூட அதுவும் மனைவிடம் அதிக பாசம் வைத்திருந்தவர் தலாக் செய்யும் சிந்தனைக்கு ஆட்படுவது எதனால்? மதம் அனுமதிக்கிறது என்பதால்தானே. அது மட்டுமல்ல இந்த திருமணத்தில். பொருந்தா வயதும் உள்ளது. ஆக வயது முதிர்ந்த நிலையும் தலாக் என்ற சிந்தனைக்கு விதிவில்காக இல்லாதவர்கள் இசுலாத்தில் இருப்பவர்கள் என்ற சான்றுக்காகத்தான் இவர் எடுத்தாளப்பட்டுள்ளார்.
    அடுத்ததாக பொத்தாம் பொதுவாக இசுலாமியர்கள் என்றால் பெண்களை கொடுமை படுத்துபவர்கள் என்று கட்டுரை எங்கும் உணர்த்தவில்லை. கட்டுரையை மீட்டும் நிதானமாக படித்துப்பாருங்கள். ##அதுபோல ஆண்களிடமும் மணவாழ்க்கையின் காதல் உணர்வை புரிந்துகொள்ளும் மனமுதிர்ச்சியையும் இன்று நிறையவே காணமுடிகிறது. அதாவது வெளியில் போகக் கூடாது, ஒரு ஆணுடன் பேசிவிட்டாலே சந்தேகம் கொள்வது என்ற பண்புகளில் நிறையவே மாற்றம் உள்ளது## என்றே எழுதியுள்ளேன்.
    ஆனாலும் பல பிரச்சனைகளில் நடைமுறையில் மாற்றம் நடந்துள்ளது நிலையிலும்## தானும் ஒரு பெண்ணுக்கு தகப்பனாக இருந்தாலும் தலாக் என்பதை எளிதாகச் செய்துவிடலாம் என்ற மனநிலையில், அது தன்னுடை ஆண்மைக்கான அடையாளம் என்ற சிந்தனையில் இவர்கள் இன்றும் வாழ்வதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.## என்று கட்டுரையில் தலாக் என்ற சிந்தனைக்கு இவர்களிடம் மாற்றம் குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளேன்.
    “இசுலாமியர்களும் மனிதர்கள்தான். அவர்களும் உங்களை போலவே தாயின் மீது, தங்கையின் மீது, மகள் மீது, மனைவியின் மீது பாசம் கொண்டவர்களே” என்ற திப்புவின் கருத்துக்கு மாறாக இக்கட்டுரை இல்லை என்பதை நிதானமாக கடிக்கும் எவரும் உணரலாம். தவறு இருப்பின் இடத்தை சுட்டிக்காட்வும்.
    இக்கட்டுரையின் முக்கிய கோரிக்கையாக ## ஆண்களின் kநேரடியாக மணவிலக்கு செய்வதற்கான உரிமையை தடுப்பது, முறைகேடான மணவிலக்கிற்கு ஜீவனாம்சம் பெறுவது, எல்லாவற்றிற்கும் மேலாக சுயமாக வருமானம் ஈட்டவும் அதனை தனது விருப்பத்திற்கேற்ப பயண்படுத்தும் உரிமையைப் பெறுவது ஆகியனவற்றில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததாக பொருளாதாரச் சூழ்நிலை இன்றுள்ளது. இசுலாமியப் பெண்கள் இதனைப் புரிந்துகொண்டு காலத்திற்கேற்ற தமது உரிமைகளை பெறுவதற்கு போராடவேண்டும். வாழும் உரிமைக்கும் மத நம்பிக்கைக்கும் முடிச்சுப்போட முயற்சிப்பவர்களை அடையாளங்கண்டு அம்பலப்படுத்த வேண்டும்.## எழுதியுள்ளேன். இது பற்றி திப்பு அவர்கள் கருத்துக்களை கூறினால் சிறப்பாக இருக்கும்.
    ஜோதா அக்பர் என்ற திரைப்படத்தைப் பாருங்கள். இப் படத்திற்கும் ஒரு நகைமுரன் உள்ளது. ஆதரிக்கவேண்டிய ஆர்எஸ்எஸ் எதிர்க்கிறது. சரியத் சட்டங்களை புறக்கணிக்கும் அக்பரின் வாழ்க்கைக்கு இசுலாமியர்கள் ஆதாரிக்கின்றனர்.

    • நண்பர் சாகித்,

      நான் விவாதத்தை ஆரம்பிக்கும்போதே நீங்கள் கடவுள் மறுப்பாளராக இருப்பது குறித்தோ இசுலாத்தை விமரிசிப்பது குறித்தோ எனக்கு வருத்தம் ஏதுமில்லை என உலக வரலாற்றை சுட்டிக்காட்டி எழுதியிருந்தேன்.

      நீங்களோ வாதத்தின் போக்கில் ”திப்பு கொலை செய்தார்”என எடுத்துக்காட்டு [கற்பனையாகத்தான்]கூறி வாதிடுகிறீர்கள்.தீ என்று சொன்னாலே நாக்கு வெந்து விடாதுதான்.இருந்தாலும் குறைந்தபட்ச நாகரீகம் கருதி பொதுவான பெயரையோ அல்லது உங்கள் பெயரையோ பயன்படுத்தாமல் திப்பு என்ற பெயரை பயன்படுத்துமாறு உங்களை தூண்டுவது எது.எதிர்வாதம் செய்வோரை கற்பனையாகவேனும் சிறுமைப்படுத்தும் உங்கள் உள்ளக்கிடக்கையே இங்கு வெளிப்படுகிறது. நம்மிருவர் வாதங்களில் எது நாகரீகமானது என்பதை பொதுவுடைமை பண்புகளை பற்றி ஒழுகும் உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

      சரி,வாதத்திற்கு வருவோம்,”திங்கள்” தொடர்பாக நீங்கள் அமைத்த மூன்று சொற்றொடர்களில் ஒன்றுதான் சரியான பொருள் தருகிறது.ஏனைய இரண்டும் பொருளற்றவையாக உள்ளன.ஆகவே ஒரு சொல்லுக்கு பல பொருள் இருந்தாலும் சொற்றொடர் ஒன்றில் இடம் பெறும்போது ஒரே பொருளைத்தான் குறிக்கும்.மாற்றி சொல்ல முடியாது என்கிறீர்கள்.அதே போல்தான் ”கல்” என்ற இந்தி மொழி சொல் குறித்த உங்கள் விளக்கமும் இருக்கிறது.அந்தோ;பரிதாபம்.தடுப்பாட்டம் ஆடுவதாக நினைத்துக்கொண்டு தன அணி மீதே கோல் போட்டுவிட்ட கால்பந்து வீரனின் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்.

      நீங்கள் சொல்வதைத்தானே நானும் இப்படி சொல்லியிருக்கிறேன்.
      \\”திங்கள்” என்ற சொல் மாதம்,கிழமை,நிலவு என பல பொருள் தருகிறது. இந்த சொல்லுக்கு முன்னும் பின்னும் இடம் பெறும் சொற்களே அச்சொல்லுக்கான பொருளை தீர்மானிக்கின்றன. இந்தியில் நேற்று என்பதற்கும் நாளை என்பதற்கும் ”கல்”என்ற ஒரே சொல்தான் பயன்படுத்தப்படுகிறது.அச்சொல்லை ஒட்டி வரும் வினை சொல்லே கடந்த காலமா எதிர்காலமா என்பதை உணர்த்தும்.//
      ஆகவே ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் இருந்தாலும் சொற்றொடர் ஒன்றில் இடம் பெறும்போது அந்த சொற்றொடருக்கு பொருத்தமான பொருளைத்தான் தரும்.அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பொருள் கொள்ளமுடியாது.

      நான் ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன்.
      ”திப்பு சாகித் இடம் ஓராயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்” [கவனிக்கவும்,கடன் வாங்குபவனாக என்னையும் கொடுக்கும் உயர்ந்த நிலையில் உங்களையும் வைக்கிறேன்].இதற்கு எக்காலத்திலும் ஒரே பொருள்தான். ”திப்பு சாகித் இடத்தை ஓராயிரம் ரூபாய் கடனுக்கு வாங்கியுள்ளார்” என யாரும் பொருள் சொல்ல முடியாது.

      \\ அக்ரஅத் என்றச் சொல்லைவைத்து என் முயற்சி பரிதாபமாக தோற்றுப் போக ஒரு சொற்றொடர் அமைத்து அரபி மொழியின் சிறப்பை விளக்குங்கேன்.//
      நான் அரபு மொழி அறிந்தவன் அல்ல.என்னால் அரபு மொழியில் சொற்றொடர் எதுவும் அமைக்க இயலாது.அரபு மொழியின் வளத்தையும் வளமின்மையும் நன்கறிந்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிவிக்கும் அளவுக்கு அம்மொழியில் புலமை பெற்ற நீங்களே அரபு மொழிச்சொற்றொடர் ஒன்றை அமைத்து ஒரு சொல் ஒரே சொற்றொடரில் பல பொருள் தருவதை விளக்குங்களேன்.அதன்மூலமாக உங்கள் முயற்சி வெற்றிகரமானது என காட்டுங்களேன்.

      மற்றபடி ஒருசொல்-ஒரேபொருள் ”வளம்”கொண்ட பிரஞ்சு மொழியில் நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் எழுதப்படுகிறதென்றால் அது ஒப்பந்தம் போடும் அந்நாடுகளின் ஆளும் வர்க்கத்தின் நம்பகத்தன்மையையும் யோக்கியதையையும் காட்டுகிறதே அன்றி அதனால் அந்நாடுகளின் மொழிகளுக்கு சிறுமை ஏதுமில்லை.

      ஆகவே ஒரு சொல்லுக்கு பல பொருள் தரும் மொழி வளமற்றது, அது ”தில்லுமுல்லுக்கு” வழிவகுக்கும் என்ற உங்கள் வாதம் ஏற்கத்தக்கதல்ல.

      மற்றபடி பேருந்து நிகழ்வு,முகம்மது அலி மண விலக்கு குறித்து புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன்.நாமிருவர் சொல்வதில் எது சரியானது என்பதை படிப்பவர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

      \\வெளியில் போகக் கூடாது, ஒரு ஆணுடன் பேசிவிட்டாலே சந்தேகம் கொள்வது என்ற பண்புகளில் நிறையவே மாற்றம் உள்ளது//

      இப்போது அப்படி இல்லையென்றால் ஏற்கனவே அப்படி இருந்தது என்று நேற்றைய இசுலாமியர்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்.நீங்கள் முசுலிம் விவசாய குடும்பங்களை பற்றி அறிந்திருந்தால் நேற்றைய முசுலிம்கள் மட்டுமல்ல அதற்கு முந்திய முசுலிம்கள் மீது கூட இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்லியிருக்க மாட்டீர்கள்.முசுலிம் பெண்களின் வெளியுலக நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் மதத்தை போலவே அவரவர் பொருளியல்,வாழ்நிலை சூழல்களும் வர்க்கமும் முதன்மையான பங்காற்றுகின்றன.மதத்தை மட்டும் பொறுப்பாக்குவது சரியான கண்ணோட்டமாகாது..

      • ஆழமான கண்ணியமான பதில். அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக! உங்களுடைய நண்பனாக இருக்க ஆசைப்படுகிறேன்.

  27. அன்பு சகோ. சாகித்,

    நீர் முஸ்லிமோ இல்லையோ, நீர் இஸ்லாத்தை விட்டு வெயியே போயுள்ளதால் இஸ்லாத்துக்கு ஏதும் நன்மை கிடைக்கப் போவதுமில்லை. நீர் இஸ்லாத்தில் இருந்தாலும் இஸ்லாத்துக்கு ஏதும் நன்மை கிடைக்கப் போவதுமில்லை. எல்லாம் அதனை ஏற்று நடப்பனுக்கு இலாபமாக அமையும்.
    சரி தாங்கள், காழ்ப்புணர்வு கொண்டு இவ்வறைகுரை ஆய்வை? எழுதியுள்ளீர் என்பதை ஒரு தினம் கழித்து புட்டுவைக்கிறேன். எதிர் பாருங்கள்.
    நன்றி
    அன்ஸார்

  28. இஸ்லாத்தில் விவாகரத்து பெறுவது ஆண்களுக்கு எளிது போலவும் பெண்களுக்கு அவ்வளவு சுலபமானது அல்ல போலவும் ஒரு தோற்றத்தை உருவகப்படுத்த கட்டுரையாளர் முயற்சித்திருக்கிறார். ஆண்களைப் போலவே பெண்களும் சுலபமாக மணவிலக்கு பெற்ற கதைகள் ஹதீதில் (புஹாரி 5275) உண்டு. இப்போதைய ஆலீம்கள் செய்யும் தவறிற்கு குரானை இழுக்கக்கூடாது என்பது என் கருத்து. அதற்காக குரானில் தவறே இல்லை என்று கூறவரவில்லை. இப்பதிவில் எடுத்துக்கொள்ளப்பட்ட “தலாக்” அதாவது ”விவாகரத்து” ஐப் பொருத்தவரையில் மற்ற மதங்களை விடவும் இஸ்லாம் முற்போக்கானது

  29. //இப்பதிவில் எடுத்துக்கொள்ளப்பட்ட “தலாக்” அதாவது ”விவாகரத்து” ஐப் பொருத்தவரையில் மற்ற மதங்களை விடவும் இஸ்லாம் முற்போக்கானது//

    முதல் மனைவியின் அனுமதி இல்லாமல் இரண்டாவது திருமண‌ம் செய்ய முடியும் என்பது முற்போக்கா?
    ஒரு ஆண் ஒரே சமயத்தில் நான்கு மனைவிகளை உடையவனாக இருக்க முடியும் என்று கூறுவது முற்போக்கா?

    மனைவியை அடிக்கலாம் என்பது முற்போக்கா?

    பெண்ணுக்கு குறைந்த பட்ச திருமண‌ வயது நிர்ணயிக்க கூடாது என்பது முற்போக்கா?

    விவாக இரத்து பெற்ற பெண் கணவனுடன் திருப்பி சேர வேண்டுமென்றால் இன்னொருவனை மணந்து, ……., விலக்கு பெற்று பிறகே முதல் கணவனுடன் சேர முடியும் என்பது முற்போக்கா?

    • விவாகரத்தை ஏற்பது “இந்து” மதத்தை விட முற்போக்கானது தானே!

    • sankar,
      நான் முன்பு எழுதியதை மீண்டும் நீங்கள் படிக்கவேண்டும் என நினைக்கின்றேன். தலாக்- ஷரீயத் சட்டமும் இசுலாமியப் பெண்களின் அவலமும் எனத் தலைப்பில் தொடரும் சாஹித், விவாகரத்து பெறும் விஷயத்தில் பெண்களுக்கு இஸ்லாத்தில் ஏதோ மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது போன்று எழுதியிருக்கிறார். ஆனால் ஏனைய மதங்களைவிட விவாகரத்து என்பது இஸ்லாத்தில் இருபாலாருக்கும் சுலபமானதுதான். மற்றபடி 4 மனைவி சமாச்சாரங்களுக்கெல்லாம் நான் வக்காலத்து வாங்கவில்லை. அது தவறு என்பதுதான் என்னுடைய கருத்தும்.

  30. இங்கு எழுதியுள்ள முகமது அலியைப் பற்றி படித்தபோது ஆச்சர்யமாக இருதது. இவர் எந்த முகமதுஅலியைப் பற்றி எழுதியிருகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இவர் சொல்லிருக்கிர மாதிரி ஒத்துமையுடைய ஒருவர் சென்னையில் இருந்தர். அவர் கடையில்தான் என் தகப்பனார் வேலை செய்தார். அவது பெயரும் முகமதுஅலி. பிராமனராக இருந்து முஸ்லீமாக மாறியவர் என அப்பா கூறியிருக்கிறார். அஞ்சுவேளை தொழக்கூடியவர். எப்போதும் தொப்பியுடன்தன் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர் கடத்தல் ஏதும் செய்யவில்லை. அவருடைய பிள்ளகள்தான் கடத்தல் தொழில் செய்தனர். நல்லவர் என்று என் அப்பா கூறுவார். அவர் கடையில் வெலை செய்த ஒருவர்க்குதான் அவருடைய மகள் ஒருவரை திருமணம் முடித்துகொடுத்தாராம். ஜமாத்திடம் சொல்லாமலா தலாக் செய்தார் என கேட்டேன், இல்லை புரசவாக்கம் ஜமாத் அறியத்தான் செய்தார் என கூறினார். ஏன் செய்தார் என கேட்டபோது, பிரச்சினை என்னன்னு தெரியலை ஆனால் அவர் மனைவி ஆடம்பரமாக செலவு செய்வார், அடிக்கடி சண்டை போடுவார் என்றும் கூறினார். பிறகு கேரளாவில் ஒருவரை மணமுடித்துக்கொண்டாராம்.

  31. திப்பு அவர்களே, விளையாட்டாகத்தான் தங்கள் பெயரை சொற்றொடரில் அமைத்தேன். மனவருத்தத்தை தந்தால் சுயவிமர்சனம் ஏற்றுக்கொள்கிறேன்.
    நானும் அரபிமொழியில் புலமை பெற்றவன் இல்லை. படித்தது இமாம்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுதல் ஆகியவழிகளைத்தான் பின்பற்றுகிறேன். யாராவது ஒரு இமாமிடம் கேட்க முயற்சி செய்து வாக்கியத்தை எழுதுங்களேன்.
    தடுத்தாடுகிறேனா? ஸேம் சைடு கோல் போடுகிறேனா? ஓரு சொல்லிற்கு பல பொருள் இருந்தாலும் ஏதாவது ஒன்றைத்தான் சொற்றொடருக்கு பொருத்தமுடியும் என்று நீங்களும் கூறிவிட்டீர்கள். அப்படியானால்
    புகாரி அவர்கள் அக்ரஅத் என்றச் சொல்லிற்று இருபொருளும் உண்டு என்பதை எடுத்தாண்டு மாதவிடாய் காலத்தில் தலாக் சொன்னால் கூடும் என்றும் கூடாது என்றும் கூறுகிறார். இப்பொழுது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.? கூடும் என்கிறீர்களா? கூடாது என்கிறீர்களா? இதற்கும் இமாம்களின் உதவியை நீங்கள் நாடலாம்.

    பிரஞ்சுமொழியின் சிறப்பை நீங்கள்தானே கூறினீர்கள. இப்பொழுது பெருமை இல்லை சிறுமை இல்லை என்று கூறுகிறீர்களே.

    இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் கிராமங்களில் விவசாய வேலைகளிலும், நகரங்களில் பீடி சுற்றும் தொழில்களிலும் உழைப்பில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல குடும்ப ஆண்களுக்கும் மதம் பண்பாட்டை போதிக்கவில்லை. வர்க்கம்தான் வழிகாட்டுகிறது என்பதே உண்மை. அதனை மறுக்கவில்லை இதனை உணர்ந்துள்ள உங்களுக்கும் நன்றி.

    • \\நானும் அரபிமொழியில் புலமை பெற்றவன் இல்லை. படித்தது இமாம்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுதல் ஆகியவழிகளைத்தான் பின்பற்றுகிறேன்.//

      அரபு மொழி தெரியாது என நேர்மையாக ஒப்புக்கொண்டமைக்கு பாராட்டுக்கள்.ஆனால் தெரியாத நிலையிலும் ஒரு மொழி வளமற்றது என தீர்ப்பெழுதிய உங்கள் துணிச்சலை என்னவென்பது.

      \\யாராவது ஒரு இமாமிடம் கேட்க முயற்சி செய்து வாக்கியத்தை எழுதுங்களேன்.//

      நான் கேட்டுக்கொண்டது போல் ஒரு சொற்றொடர் அமைக்க [ஒரு இமாமின் உதவி கொண்டு கூட] நீங்கள் முன்வரவில்லை.எனக்கும் இன்னொருவர் உதவியுடன் சொற்றொடர் அமைக்க விருப்பமில்லை.ஏனெனில் பார்வையற்ற ஐவர் கரங்களின் உதவி கொண்டு யானையை தடவி பார்த்து அது எப்படி இருக்கிறது என சொன்ன கதையாக அது முடியக்கூடும்.

      அடுத்து நீங்கள் தன்னணி கோல்தான் போட்டுள்ளீர்கள்.விவாதத்தை மீண்டும் படித்துப் பார்த்தால் புரியும்.”அக்ரஅத்” க்கும் மேலே சொன்னதுதான் விடை.

      \\பிரஞ்சுமொழியின் சிறப்பை நீங்கள்தானே கூறினீர்கள. இப்பொழுது பெருமை இல்லை சிறுமை இல்லை என்று கூறுகிறீர்களே.//

      பிரஞ்சு மொழியின் ஒரு சொல்-ஒரே பொருள் ”வளத்தை” காட்டி, ஆங்கிலத்தின் ஒரு சொல்-பல பொருள் ”வளமின்மை” காரணமாக ஆங்கிலத்துக்கு அதன் சொந்த நாட்டிலேயே இழைக்கப்பட்ட அநீதியைத்தான் இப்படி சுட்டிக்காட்டினேன்.\\ஆங்கிலத்திலும் இது போல் ஒரு சொல் பல பொருள் தருகிறது என்று சொல்லித்தான் இங்கிலாந்திலேயே பிரஞ்சு மொழியை வெகுகாலம் நீதிமன்ற மொழியாக வைத்திருந்தார்கள்.//

      மற்றபடி பிரஞ்சு மொழி ஒப்பந்தமொழி,மின்னுகிறது என்பதெல்லாம் நான் சொன்னதாக நீங்களே செய்துகொண்ட கற்பனை.பின்னூட்டத்தை மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தால் புரியும். இப்படி தவறாக புரிந்து கொள்வதை மாற்ற நீங்கள் ”இன்னும் வளர வேண்டும்”.அதுக்கு ”காம்ப்ளான்” சாப்பிடுங்கள்.

  32. ஜானி அவர்களே! பெண்களுக்கு தலாக் பெறுவது எளிமையானதா இல்லையா என்பதல்ல பிரச்சனை. குலா என்பது ஆண்களுக்கான தலாக் உரிமைபோல் பெண்களுக்கான உரிமை இல்லை என்பதை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளேன். எடுத்துக்காட்டிற்கு கணவன் ஒரு மனநோயாளி என்றால் தலாக்குடைய சரியத் சட்டப்படி சிக்கல் ஏற்பட்டுவிடும்.
    எளிமையாக இருந்தாலும் கடினமாக இருந்தாலும் பாதிப்பு பெண்களுக்குத்தானே! இசுலாமிய சட்டம் விவாகரத்து செய்வதை ஆண்களுக்கு எளிமையாக்கி உள்ளது என்றாலும் இன்றைய நடைமுறையில் அப்படி ஒன்றும் இருபாலரையும் எளிமையாக தலாக் செய்துவிட ஜமாத்துகள் அனுமதிப்பதில்லை என்பதே கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது. விவாகரத்துக்குப் பின் ஜீவனாம்சம் குறித்து கட்டுரையில் கேட்கப்பட்டுள்ளதற்கு தங்களின் கருத்து என்ன?

  33. விவாகரத்தை ஏற்பது என்பது மட்டுமே முற்போக்காக அமையாது. அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும், பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால் அவள் தன் கணவனுக்கு தனது இளமையையும் உழைப்பையும் வழங்கியதற்கான நட்ட ஈடும், அதன் பிறகு அவளுக்கான வாழ்க்கைக்கு ஜீவனம்சமும் தருவதுதான் முற்போக்கானது.
    கார்பரல் ஸீரோ. இது பற்றிய தங்கள் கருத்தினை பதிவு செய்யுங்களேன்.

  34. Fathima’s example is completely false.

    Fathima’s husband went abroad in the year 1993.

    Fathima went to join husband in the year 1996.

    Now readers please go back to the article and read what is written.

    As a family member of fathima i know completely what has been in this article is false and writen with bad intentions.

    Rizwan

  35. தமிழகத்தின் சிறந்த இஸ்லாமிய அறிஞர் பி.ஜேவின் தலாக் பற்றிய விளக்கம்

    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/66-vivakaraththu/
    66. விவாகரத்து (தலாக்)

    ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விவாகரத்துச் செய்யும் உரிமை, பெண் களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.
    கணவனுக்கு மனைவியைப் பிடிக் காத போது விவாகரத்துச் செய்ய அனுமதி இல்லாவிட்டாலோ அல்லது விவாகரத்துச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டதாக இருந்தாலோ அதனால் பெண்களுக்கு நன்மையை விட தீமைகளே விளையும்.
    1. விவாகரத்துப் பெற முடியாது என்ற நிலையையும், மிகுந்த சிரமப்பட்டே விவாகரத்துப் பெற முடியும் என்ற நிலை யையும் சந்திக்கும் ஒருவன் மனைவி யோடு வாழாமல் சின்ன வீட்டை ஏற்பாடு செய்து கொள்வான்; மனைவியைத் துன் புறுத்துவான்; பராமரிக்கவும் மாட்டான்.
    2. அல்லது விவாகரத்துப் பெறுவதற் காக நடத்தை கெட்டவள் என்று மனைவி யின் மீது பொய்யாகப் பழியைச் சுமத்துவான்.
    3. அல்லது மனைவியைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டுத் தற் கொலை என்றோ, விபத்து என்றோ நாடகமாடித் தப்பித்துக் கொள்வான்.
    விவாகரத்தை அனுமதிக்காத போதும், விவாகரத்தின் விதிகள் கடுமையாக இருக்கும் போதும் இத்தகைய விளைவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது.
    ஆண்களின் கொடூரத்தை உணர்ந்த இஸ்லாம், பெண்களின் உயிர், உடமை, மானம், மரியாதை ஆகியவை காக்கப்பட வேண்டுமென்று கருதி விவாகரத்துக்கு அனுமதி வழங்கி அதன் விதிகளையும் எளிதாக்கியிருக்கிறது.விவாகரத்துச் சட்டம் எளிமையாக்கப் பட்டிருக்கும் அதே சமயம் எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று விவாகரத்துச் செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை.

    முதலில் மனைவிக்குச் சிறந்த முறையில் அறிவுரை கூறித் திருத்த முற்பட வேண்டும்.அது பயன் தரவில்லை என்றால் தற்காலிகமாகப் படுக்கையிலிருந்து அவர்களை விலக்க வேண்டும்.அதுவும் பயன் தராத போது அடித்துத் திருத்த வேண்டும் என்று திருக்குர்ஆன் 4:34 வசனம் கூறுகிறது.எந்தச் சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும் படி அடிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள். (நூல்: புகாரி 1294, 1297)விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.இலேசாக அடியுங்கள் என்று கூறும் இஸ்லாத்தை ஏற்றவர்களை விட, அடிப்பது பற்றிப் பேசாத மற்ற சமுதாயத் தினர் தான் பெண்களை அதிகமாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்கிறார்கள்.ஆண் வலிமை உள்ளவனாகவும், பெண் வலிமை குறைந்தவளாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இருவரும் தனித்திருக்கும் போது இரண்டு பாது காவலரைக் காவலுக்கு நிறுத்தி வைக்க முடியாது. இந்த நிலையில் கோபம் ஏற்பட்டால் பலம் வாய்ந்தவர்கள் பலவீனர்கள் மீது பாய்வது வழக்கமான ஒன்று தான். இதை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியாது.’இலேசாக அடியுங்கள்’ என்று கூறுவதன் மூலம் கண் மண் தெரியாமல் அடிப்பதைத் தடுத்து நிறுத்த முடியும். இதனால் தான் மனைவியரைத் துன்புறுத்துவது மற்றவர்களை விட குறைவாகவே முஸ்லிம்களிடம் இருக்கிறது.இதன் பிறகும் இருவருக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவில்லையானால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நடுவர் கள் மூலம் பேசித் தீர்க்குமாறு திருக் குர்ஆன் 4:35 வசனம் வழிகாட்டுகிறது.இந்த நான்கு நடவடிக்கைகளாலும் கூட இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை. இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.

    விவாகரத்துச் செய்யும் முறை

    ‘உன்னை விவாகரத்துச் செய்கிறேன்’ என்று மனைவியிடம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டு விடும். இதற்கென எவ்விதச் சடங்குகளும் இல்லை. ஆனால் இவ்வாறு விவாகரத்துச் செய்திட மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
    ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் அடியோடு திருமண உறவு முடிந்து விடும் என்று கருதிவிடக் கூடாது. மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம். (திருக்குர்ஆன் 65:4)
    இந்தக் காலக் கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லை யானால் அவர் களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.
    இதன் பிறகு அவர்களுக்கிடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் முன்பு கூறிய எல்லா வழி முறைகளையும் கையாண்ட பின் இறுதி யாக மீண்டும் விவாகரத்துச் செய்யலாம்.
    முன்பு கூறியது போல குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மீண்டும் சேர்ந்து கொள்ளவும் செய்யலாம். அந்தக் காலக் கெடு முடிந்து, இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து கொள்ளலாம்.
    இவ்வாறு மூன்றாம் முறை சேர்ந்து வாழும் போது மீண்டும் அவர்களுக் கிடையே நல்லிணக்கம் ஏற்படாது போனால் மூன்றாம் தடவையாக விவாகரத்துச் செய்யலாம். இது தான் இறுதி வாய்ப்பாகும்.
    மூன்றாவது தடவை விவாகரத்துச் செய்து விட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டு விடுகிறது.
    ஆயினும் விவாகரத்துச் செய்யப் பட்டவள் இன்னொருவனை மணந்து அவனும் அவளை விவாகரத்துச் செய்து விட்டால் இந்த நேரத்தில் மட்டும் முதல் கணவன் மறுபடியும் அவளது சம்மதத்துடன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
    ‘(திரும்பவும் அழைத்துக் கொள்ளத் தக்க) இத்தகைய தலாக் இரண்டு தடவை தான்’ (2:229) என்ற இறை வசனத்திலிருந்து இதை அறியலாம்.
    இஸ்லாம் வழங்கியுள்ள இந்தச் சட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சில முஸ்லிம்கள் தங்கள் இல்லற வாழ்வைப் பாழாக்கி வருகிறார்கள். ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ கூறி மனைவியை விவாகரத்துச் செய்கின்றனர். அதன் பிறகு சேர்ந்து வாழ்வதற்கு வழி இல்லை என்றும் நினைக்கின்றனர்.
    இது முற்றிலும் தவறாகும். ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முன்னூறு தலாக் என்றோ கூறினாலும் ஒரு விவாகரத்து தான் நிகழ்ந்துள்ளது. ஒரு விவாகரத்துச் செய்த பின் எவ்வாறு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாமோ, அல்லது குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமோ அது போல் இப்போதும் செய்து கொள்ளலாம்.
    ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 2691)
    ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்று கூறி அது மூன்று தலாக்காகவே கருதப் படுதல் நபிகள் நாயகத்துக்குப் பின்னர் ஏற்பட்ட தவறான நடைமுறையாகும்.
    பெண்களின் விவாகரத்து உரிமை
    விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ் வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறை வனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக் கிறேன்’ என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்ப மில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவ ரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ‘சரி’ என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் ‘தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு’ என்றார்கள். (நூல்கள்: புகாரி 5273, 5275, 5277, நஸயீ 3409)
    மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தி லிருந்த நடைமுறையை அறியலாம்.
    ஒரு பெண்ணுக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், கணவனிடமிருந்து அவள் பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும், அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும், திருமணத்தை யும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
    பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியம். ஏனெனில் பெண்கள் கணவர்களிட மிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும் அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    மேலும் விவாகரத்துப் பெற்ற பின் அதிகச் சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.
    பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழி உலகில் எங்குமே காண முடியாததாகும். இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப் படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.
    இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப் பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதிலிருந்து இதை உணரலாம்.
    திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாக இஸ்லாம் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது. ‘அப்பெண்கள் உங்களிடம் உறுதி யான உடன்படிக்கை எடுத்து, ஒருவர் மற்றொருவருடன் கலந்து விட்டீர்களே’ (4:21) என்றும்
    ‘கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று மனைவி யருக்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு’ (2:228) என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.
    பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படாவிட்டால் அதனாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.
    கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்ப தால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.
    விஷம் கொடுத்துக் கணவரைக் கொல்கிறார்கள். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்கின்றனர். கணவனிட மிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, விரும்பியவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.
    எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாக ரத்துச் சட்டத்தை இஸ்லாம் மிக மிக எளிமையாக்கியுள்ளது. ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம். (பார்க்க: திருக்குர்ஆன் 2:228-232)
    இது பற்றி மேலும் விபரம் அறிய 386வது குறிப்பைக் காண்க!

    10.07.2009. 09:06

    ·

  36. அறைகுரை தொடர் 2

    அன்புச் சகோ. சாகித்,

    தாங்கள் “தலாக் – சரியத் சட்டமும் இசுலாமியப் பெண்களின் அவலமும் !“ என்ற இவ்வரை குறை ஆய்வை நீக்கி விட்டு, இறுதியாக சகோ. சன்கர் தந்த பீ. செய்னுலாப்தீனின் தெளிவான-முழு விளக்கத்துடன் உள்ள தரமான இவ்வாய்வை மீள்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    இன்று சிலர், இணையங்களில் ஆய்வு என்ற தோரணையில் விளக்கப் புகுந்து, தன் (ஆய்வின்?) தரத்தை வெளிக்கொனர்த்துவது வேடிக்கையாகிவிட்ட இக்காலத்தில், சகோ. சாகித்தும் ஆய்வு என்ற தோரணையில் நுனிப் புல் மேய்ந்து, எது வால்? எது தலை? என்றறியாமல் அறைகுறையாக உளரியுள்ளதை இவ்வாய்வை?? வாசிக்கும் முஸ்லீம்கள் நன்கு அறிவர். தவறுகள் சுட்டிக் காட்டப் படும் பட்சத்தில், அதனை ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடமை. ஆனால், தாங்கள் செய்த ஆய்வு நியாயமானது-சரியானது என்று விளங்கிக் கொண்டாலும் தங்களின் விளக்கத்தில் ஏற்பட்ட குழப்பம்தான் அதனை “சரி“ என்று குழம்பி, எழுத வைத்துள்ளது. இது போன்ற விமர்சனங்கள் இன்று நேற்று வந்தவைகளல்ல. பல தடவைகள் வந்த வண்னமும் அதற்கான பதில் வழங்கப் பட்டுக் கொண்டும்தான் இருக்கிறது.
    அது போல், இங்கு சாகித் ஒன்றும் புதிதாக எழுதவில்லை, அரைத்த மாவையே திருப்பி அரைத்துள்ளார். இது ஒன்றும் வியற்பதற்கில்லை.வேண்டுமெனில் புதிய புதிய கப்ஸா (கற்பனைக் கதை)களை அழகாக புணைந்துள்ளார். அதுவும் உண்மையாக இருக்குமோ என்று நினைத்தேன். கமான்டுகளைப் பார்க்கும் போது, சாகித், ஒரு வடிகட்டிய பொய்யன் என்பது, வெள்ளிடை மலையானது.

    இங்கு சகோ. சாகித் தடுமாரிய குழப்பங்களுக்கு சில விமர்சனங்களை அளித்து விட்டு, அவருடைய தவறுக்கு கீழே விளக்கம் தரப்படும்.

    //உயர் கல்வியும் வேலைக்குச் செல்வதும் பிரச்சனையான ஒன்றாக இருந்தாலும் இப்பொழுது அது வெகுவாக உடைக்கப்பட்டுவிட்டது//

    வெகுவாக உடைக்கப் பட்டு விட்டது என்பது, இஸ்லாத்தைப் படித்து அறியாமல் (முஸ்லீம்களைப்) பார்த்து இஸ்லாத்தைப் பின் பற்றிய ஓரிரு அறை குரையைத்தான் நீர் மிகைப் படுத்தி, உடைக்கப்பட்டுவிட்டது போன்று புழுகியுள்ளது.

    முதலாவது உயர் கல்வி மற்றும் வேலைக்குப் போவதை இஸ்லாம் தடைசெய்கிறதா? ஏன் தடைசெய்கிறது? எந்த தரத்தில் உள்ளவர்கள் வேலைக்குப் போக வேண்டும்? ஏன் யார் போகக் கூடாது? போன்று, அறிவுப்பூர்வமாக ஆராயாமல் பொத்தாம் பொதுவாக “உயர் கல்வியும் வேலைக்குச் செல்வதையும் இஸ்லாம தடை செய்கிறது“ என்று கூறுவது, தங்கள் ஆய்வின்?? இலட்சணம் எந்தளவு தரம் தாழ்ந்தது என்பதை நன்கு புரிய வைக்கிறது.(இது ஆய்வா? அல்லது அரைகுரையா?)

    //இன்னும் நாம் அதில் செய்யவேண்டியதைப் பற்றி பேசினால் உடனே அவர்களிடம் வரட்டுத்தனமான விவாதம் தலை தூக்கிவிடுகிறது.//
    இஸ்லாம் என்பது முழுமைப் படுத்தப் பட்ட மார்க்கம். அதன் சட்டங்கள்,அதன் கோட்பாடுகள் உம்போன்றோர், அறைகுறையாக இல்லாமல் முழுமையான ஆய்வில் இறங்கினால் நிச்சயம் அதன் யதார்த்தம் புலப்படும். உம் போன்ற குறுட்டுத்தனமானவர்கள் அறைகுறையாக உளரும் போது, எம்போன்றவர்கள் அறிவுப் பூர்வமாக விவாதம் புறிவதில் என்ன வரட்டுத்தனம் உள்ளது?

    //இன்று சுன்னத் ஜமாத்தினரும் தவ்ஹீத் ஜமாத்தினரும், முரண்பாடுகளை அவரவருக்குப் பிடித்த மாதிரி எடுத்துக் கொண்டு சண்டையிடுவதும், தமக்குத்தாமே அக்மார்க் முத்திரைக் குத்திக் கொள்வதும் போல அன்று முதல் இன்றுவரை தர்க்கமும் சண்டையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.//

    எங்கு கேள்வி கேட்பதர்க்கு அனுமதிக்கப் படுகிறதோ, எங்கு ஒரு விஷயம் குறித்து அதிகம் வாதப் பிரதிவாதங்கள் நடக்கிறதோ அங்கு தெளிவுகள், மற்றும் விடைகள் கிடைப்பதர்க்கு அது வழிகோலாக அமைந்து விடுகிறது. இதைப் பார்த்து சண்டை என்று நீர் புரிந்து கொள்வதிலிருந்தே, நீர் மேலும் ஒரு படி மேலே போய் அறைகுரை என்பதை உறுதி செய்துள்ளீர்.(இது சண்டையல்ல, முஹம்மது நபியவர்கள் சொல்லாத, செய்யாத, அங்கீகரிக்காத சில விஷயங்களை, மார்க்கத்தை சரியாக விளங்காத முஸ்லீம்களில் சிலர் செய்வதை, செய்ய வேண்டாம் என்று தடுப்பதே அது. இல்லாத இவ்விஷயங்கள் ஹிஜ்ரீ 3ம், 4ம் நூற்றான்டுகளில் இஸ்லாத்திற்குள் (இல்லாததை) இருப்பதாக யூத மற்றும் கிரிஸ்தவர்களால் நுழைவிக்கப் பட்ட நூதன விஷயங்களைக் களைவதே அது.)

    // இதற்கு அரபிமொழியின் வளமின்மையும் ஒரு காரணம்//
    அம்பி அறை குறை! மேலும் அறைகுரைங்குரத நிரூபிச்சிட்டீய! நீங்க எந்த (அறபு) கல்லூரியில-கலாசாலையில அறபி படிச்சி சான்றிதழ் வாங்கியிருக்கீய? இந்த வாசகத்தை சொல்வதர்க்கு கிஞ்சிற்றும் (லாயக்) அருகதையில்லாதவர்தான் நீர், (ஏன் என்பதை சறுக்கி விழுந்த தவறுகளில் தோலுரிக்கிறேன்)

    இனி தங்களின் அறைகுரை ஆய்வில்? ஏற்பட்ட தவறுகளை இங்கு காணலாம்.

    அறைகுரை சாகித்தின் தவறு-01

    //எடுத்துக்காட்டாக குர்ஆன் 2:228-ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள குருஉ எனும் சொல்லின் வினைச் சொல்லான அக்ரஅத் எனும் சொல்லுக்கு ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது (மாதவிடாய் ஆரம்பம்) என்ற பொருளும், ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது (மாதவிடாய் நின்றுவிட்டது) என்ற எதிரிடையான பொருளும் உண்டு. இதனை நான் கூறவில்லை. புகாரி அவர்களே பதிவுசெய்துள்ளார்கள். (பார்க்க பாகம்:6 பக்கம் 78) எக்காலத்திற்கும் பொருந்தும் அருள்மறை என்று கூறும் குர்ஆனின் சொல்லிலேயே குழப்பம் என்றால் என்ன சொல்லவது? //

    தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லீம்களுக்கு அறபி மொழி தெரியாது என்பதர்க்கு தாங்கள் தரும் (குறுட்டுத் தனமான) எடுத்துக் காட்டுதான் அது.
    பொதுவாக அறபியிலே ஒரு சொல், ஒரு அர்த்தத்தைத் தரும் அதே வேளை, அவ்வினைச் சொல், இன்னுமொரு சொல்லோடு சேறும் போது வேறு பொருளைத் தருவது இயல்பு. (இதர்க்கு சகோ. திப்புவின் தமிழ் விளக்கம் போதும் என நினைக்கிறேன்) ஆனால் தாங்கள் //ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது (மாதவிடாய் ஆரம்பம்) என்ற பொருளும், ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது//என்று குறிப்பிட்ட தன் மூல வாக்கியத்தைப் பார்த்தால், நீங்கள் அறைகுரையாக எழுதியுள்ளது அம்பலமாகிறது. அதாவது “அக்ரஅத்” என்ற வார்த்தை இன்னுமொரு வார்த்தையோடு சேர்ந்து வருவதைக் கூறாமல் “அக்ரஅத்” என்ற தனிச் சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உள்ளது போன்று உளரியுள்ளீர்கள். (அக்ரஅத்தில் மர்அத்து இதா தனா ஹைலஹா-ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது என்பதர்க்கும், அக்ரஅத்தில் மர்அத்து இதா தனா துஹ்ரஹா-ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது)என அச்சொல் இன்னுமொரு சொல்லோடு சேறும் போதுதான் கருத்து மாறும் என்ற விளக்கத்தைப் பற்றிக் கூறியதை இங்கு புஹாரி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    மேலும் //இதனை நான் கூறவில்லை. புகாரி அவர்களே பதிவுசெய்துள்ளார்கள்//என்று தம்பட்டம் வேறு. இது புஹாரி அவர்கள் மஃமர் என்ற அறிஞரின் கூற்று என்றே கூறுகிறார். அதன் அறபி வடிவத்தை இங்கு தருகிறேன் இதோ வாசித்துப் பாருங்கள்
    ب قول الله تعالى والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء وقال إبراهيم فيمن تزوج في العدة فحاضت عنده ثلاث حيض بانت من الأول ولا تحتسب به لمن بعده وقال الزهري تحتسب وهذا أحب إلى سفيان يعني قول الزهري وقال معمر يقال أقرأت المرأة إذا دنا حيضها وأقرأت إذا دنا طهرها ويقال ما قرأت بسلى قط إذا لم تجمع ولدا في بطنها
    http://www.islamweb.net/newlibrary/display_book.php?idfrom=5115&idto=5115&bk_no=0&ID=2971

    //எக்காலத்திற்கும் பொருந்தும் அருள்மறை என்று கூறும் குர்ஆனின் சொல்லிலேயே குழப்பம் என்றால் என்ன சொல்லவது?// குழப்பம் குர்ஆனில் அல்ல. உம் போன்ற அரைகுரையிடமே! எனவே உம் போன்றவர்களை என்ன சொல்வது? என்று கேட்பதே மேல்! அறபி மொழி தூசுக்கும் நுகராத உம்மை நீரே சித்தரித்துள்ளதை அடுத்து வரும் அறைகுரைகளிலிருந்து விளங்கலாம்.

    அறைகுரை சாகித்தின் தவறு-02

    //…….அதாவது வெளியில் போகக் கூடாது, ஒரு ஆணுடன் பேசிவிட்டாலே சந்தேகம் கொள்வது என்ற பண்புகளில் நிறையவே மாற்றம் உள்ளது//
    இங்கும் மிகைப்புத்தான் அதிகமாகவுளளது. பேசவே கூடாது என்று இஸ்லாத்தில் எங்கேயும் கூறவில்லை. ஆனால் பேச்சுக்கள் ஒழுங்காக இருக்க வேண்டு்ம் என்பதைத்தான் இஸ்லாம் போதிக்கிறது. இதனை உதாரணத்தோடு விளக்கினால்தான் புரியும். உதாரணமாக சாகித்தின் மனைவி அவருக்கு முன்பே தெரியாத ஆணோடு சந்தோச சல்லாபத்தில் தொடுவதும் படுவதும் உரசுவதுமாய் இருப்பதை, வேண்டுமெனில் சாகித் போன்ற கணவர்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் சூடு சுரணையுள்ள எந்தக் கணவனும் அதனைப் சகித்துக் கொ்ண்டிருக்க மாட்டான். (இந்த வகைப் பேச்சைத்தான் இஸ்லாம் வண்மையாக தடை செய்கிறது.)

    அறைகுரை சாகித்தின் தவறு-03

    //தலாக் என்பதற்கான “நபிவழி” என்று பின்வருமாறு கூறுகின்றனர். 1. மாதவிடாய், பிரசவ இரத்தப்போக்கு ஆகியவற்றிலிருந்து நீங்கி மனைவி தூய்மையாக இருக்க வேண்டும். 2. மனைவியுடன் தலாக் சொன்னபிறகு உடலுறவுக் கொள்ளக்கூடாது. …….இரண்டாவது விதியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தலாக் என்றாலே அதுதானே. முதலாவது விதிப்படி மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்லக்கூடாது. ஆனால் சொல்லக்கூடாது என்ற தலைப்பில் குர்ஆன் வசனம் 65: 1 ஐ ஆதாரமாகக் கூறும் புகாரி அவர்கள், அடுத்த தலைப்பிலேயே தலாக் செல்லும் என்றும் தலைப்பிட்டு, இரண்டிற்கும் சாட்சியாக காலிபா உமர் அவர்களின் மகன் அப்துல்லா செய்த ஒரே தலாக் நிகழ்ச்சியை (புகாரி 5251, 5252, 5253) ஆதாரமாக எழுதியுள்ளார். வேடிக்கையான முரண்பாடு.//
    உம் மங்கிய புத்தியை என்னவென்பது?? இதில் என்ன முரண்பாடு உள்ளது?? எதையும் அறைகுரையாகவே எழுதி “நீரே ஒரு அறைகுரை“ என்பதை மேலும் நிரூபித்துள்ளாய்.
    அந்த வசனத்திற்கேற்ப அந்த சம்பவத்தை ஆதாரமாகக் காட்டலாமே தவிர, முரண்பாடாக எப்படி புரிந்து கொண்டீர்?? மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்லக்கூடாது.(65-1) என்பது குர்ஆனின் கூற்று. இதை அறியாத அப்துல்லாஹ், தனது மனைவி மாதவிடாயாக இருக்கும் தருணத்தில் விவாகரத்து செய்கிறார் பின் இது நபியவர்களுக்குத் தெரியும் போது, அப்படி செய்வதைத் தடுத்து, அவளை மீட்டும் படியும், மாதவிடாய் முடிந்த பின் கூறும் படியும் கட்டளையிடுகிறார். அந்த சம்பவத்தை இதோ திரும்பவும் வாசியுங்கள்.
    حدثنا إسماعيل بن عبد الله قال حدثني مالك عن نافع عن عبد الله بن عمر رضى الله عنهما أنه طلق امرأته وهي حائض علي عهد رسول الله صلى الله وا سلم فسأل عمر بن الخطاب رسول الله صلى الله وسلم فقال ذلك عن رسول الله صلى الله وا سلم مره فليراجعها حتى تطهر ثم ليمسكها ثم تحيض ثم تطهر ثم إن شاء أمسك بعد وإن شاء طلق قبل أن يمس فتلك العدة التي أمر الله تطلق لها أن النسا

    அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
    நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள்.
    எனவே, (என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) இதைப் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவியபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், ‘உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும் வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவர் விரும்பினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளை) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலக் கட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (திருக்குர்ஆன் 02:228 வது வசனத்தில்) அனுமதித்துள்ள (‘இத்தாக்’ காலத்தைக் கணக்கிட்டுக் கொள்வதற்கு ஏற்ற) காலக் கட்டமாகும்’ என்று கூறினார்கள்.
    பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5251

    //இதற்குப் பெயர் தெளிவான மார்க்கமாம்//
    புரிகிறது! நீங்கள் எந்தளவு மதி கெட்டு குழம்பி, மேலும் அறைகுரை என்று நிரூபித்துள்ளதை! சாகித்! தடுமாற வேண்டாம்! அதனால்தான் உமக்கு தெளிவற்ற மார்க்கம் போல் காட்சி தருகிறது.

    அறைகுரை சாகித்தின் தவறு-04

    //தலாக் பற்றி புகாரி அவர்கள் தொகுத்துள்ள எந்த நபிமொழியிலும் இரு சாட்சிகள் முன்னிலையில்தான் தலாக் சொல்ல வேண்டும் என்பதற்கான நபிமொழி ஒன்றும் இல்லை. தலாக் சொல்லிவிட்டு வந்து தான் தலாக் சொல்லிவிட்டதாக பிறரிடம் கூறியதான நபிமொழிகளே காணப்படுகிறது //

    அறைகுரைக்கு இந்த வசனத்தைப் (65:2) பார்க்குமாறு எச்சரிக்கிறேன் அதாவது விவாகரத்து அத்தியாயத்தை அறைகுரையாகப் படித்த சாகித், அதற்கடுத்துள்ள வசனத்தைப் படிக்காததன் விளைவுதான் மடத்தனமாக, (அரைகுரையாக) இப்படி உளரியிப்பது.
    ”உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள், அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோறுக்கு இவ்வாறே அறிவுரை கூறப் படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோறக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.(65:2) ஆய்வு? செய்ய முற்பட்டால் ஒழுங்காக ஆய்வு செய்ய வேண்டும். புஹாரியில் இல்லாவிட்டால் வேறு இடங்களில் தேடிப் பார்க்க் கூடாதா? அறபு மொழி வளமற்றவர்கள், வறட்டுத்தனமுள்ளவர்கள் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி வசைபாடலாமெனின் ஏன்? இதையெல்லாம் ஆய்வு செய்ய மதி கெட்டுப் போனது??
    “தலாக் – சரியத் சட்டமும் இசுலாமியப் பெண்களின் அவலமும் !“ என்று தலைப்பு வேறு!

    அறைகுரை சாகித்தின் தவறு-05

    //முகம்மது நபியும் தனது ஒரு மனைவியை தலாக் செய்தபோது எந்த சாட்சியையும் முன்னிருத்தியும் தலாக் செய்யவில்லை. உமையா என்ற அப்பெண்ணிடம் தாம்பத்திய உறவுகொள்ள முற்பட்டபோது அப்பெண் குலப் பெருமைகூறி இணங்க மறுத்துவிடவே, முகம்மதுநபி “உன் குடும்பத்தாரிடம் சென்றுவிடு” என்று கூறிவிட்டு வெளியில்……….//

    தலாக் என்றால் என்ன என்ற சாதாரண அறிவு கூட இல்லாத ஒருவாராக சாகித் தன்னை மேலும் ஒரு படி உசத்தி “தான் ஒரு அறைகுரை“ என்பதை நிலைநாட்டி அதர்க்கு “சான்றிதழ்“ வேறு பெற்றுவிடுவார் போலும். தலாக் என்றால் ஒருவர் மனைவியோடு (இல்லறத்திற்குப் பின்)வாழ்ந்து அதன் பின் அவருக்-அவளுக்குப் பிடிக்க வில்லையெனின் விவாகரத்து செய்வதையே இஸ்லாம் “தலாக்” என்று கூறுகிறது. இங்கு முஹம்மது நபி இல்லறமே நடத்தவில்லை! பின் எதர்க்கு அவர் தலாக்? (சாட்சிக்கு வேண்டுமெனில்) அவருடன் அங்கு சிலர் இருந்தனர் என்ற வாசகத்தை வைத்தே சாட்சிகள் இருந்துள்ளனர் என்பதை அறிய முடியும். (இதன் மேலதிக விளக்கம் தொடரும்…)

    அறைகுரை தொடர் 2 தொடரும்

    • நண்பர்களே
      இங்கு மத ஆராய்சி நடை பெறவில்லை.அதற்கு அவசியமும் இல்லை. குடும்ப வாழ்வில் சிக்கல் வருவது அனைத்து மதத்தவருக்கும் பொதுவானது. இதில் மத ரீதியான சட்டங்கள் பயன் படுத்தப் ம்படுவதால்தான் இந்த விவாதத்தின் அடிப்படை.

      முதலில் என்ன நடைமுறையில் இருக்கிறது? அத்னால் சாதகமா,பாதகமா என்று சிலரின் வாழ்க்கையில் இருந்து தோழ்ர் சாகித் உதாரணம் காட்டியுள்ளார்.
      இதனை தவறு என்று எப்படி கூற முடியும்?

      நடைமுறையில் உள்ளதை,அப்படியே கூறுங்கள்.உங்களுடைய விளக்கத்தை இப்படி கூறுங்கள்.
      ___________________________

      இஸ்லாமியர்களுக்கு மட்டுமான இந்திய குடும்ப சட்டடத்தின் படி

      ஒரு ஆண் தன் மனைவியை விவாகைரத்து செய்ய வேண்டுமென்றால் என்னெ செய்கிறார்?

      ஜமாத்தில் முறையிடுகிறாரா.அதற்கு ஜமாத் என்ன செய்கிறது?

      இதே போல் ஒரு பெண் தன் கணவரை விவாகைரத்து செய்ய வேண்டுமென்றால் என்னெ செய்கிறார்?

      பல பிரிவு இஸ்லாமியர்களின் நடமுறை என்ன?

      இப்படி ஏதாவது உபயோகமான் தகவல்கள் கொடுத்தால் பிற‌ மதத்தவருக்கு இஸ்லாமியர்களை புரிந்து கொள்ள‌ உதவும்.

      இந்த புரிதல் மிக அவசியமான் கால கட்டத்தில் வாழ்கிறோம்.ஆக்வே என் வீட்டில்,மதத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் யாரும் கேட்க கூடாது
      என்று சொல்ல முடியாது.________________

  37. vinavu don’t think like that u r the only prodigy in the world. u may be the followers of communism watever it may be. but u have to think. communism is completely failed in that world. islam is the only religion would bring peace, moral, equality in that world. don’t have communism did like that? i do n’t know who’s the writer of the article. dear writer u should read and now abt islam. in 2o th century all philosophy get down in that world. be it communism, be it atheism whatever it may be. once all of gone are the day. islam is the only religion can bring peace,moral , humanity.. it maybe taken one decade but islam is the only source to eradicate poverty. obscenity, captalism, communism, whichever philosophy it may be

  38. Dear Sir,

    May peace be upon you.

    My doubts are;

    1. We all fight on something. My basic question goes back to the root of the human.
    Well, when it is believed that we all born from a single semen of a father. Then answer me ( anybody) ;

    If all our brothers and sisters and decendents of the adam or whatever, are we not doing prostitution by saying that all are the childrens of adam. How can children’s of adam get marry each other;

    2. Why god didnt protect earlier holy scriptures and made it a perfect one already.

    Hope somebody can reply.

    Syed Ibrahim.A

  39. அன்புச் சகோ. சங்கர்,

    //இங்கு மத ஆராய்சி நடை பெறவில்லை.அதற்கு அவசியமும் இல்லை//

    இங்கு அது பற்றி பேசவில்லை. இருப்பினும் மதம் சார்ந்த விஷயங்கள் தவறாக சித்தரிக்கப் படுகின்ற போது, அது மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் அல்லவா? மட்டுமல்லாமல் இஸ்லாம் பற்றிய தவறான கண்னோட்டத்தை உலகிற்கு அறிமுகப் படுத்தும் இது போன்ற அறைகுரை (அண்டப்புலுகு) மூட்டைகளை தக்க சமயத்தில் தோலுரித்துக் காட்ட வேண்டிய தருணமாதலால்தான் இதற்கு மறுப்பு எழுத நிர்பந்திக்கப் பபடுகிறோம். குப்பைத் தொட்டிக்கு நிகரான இந்த ஆய்வை? படிக்கும் போது, இது தெரியாமல் எழுதியதாக ஏற்றுக் கொள்ள முடியாது. வேண்டுமென்றே காழ்ப் புணர்வு கொண்டு அறைகுரை விளக்கத்தோடு விமர்சிக்க முற்படும் இது போன்ற அறைகுரைகளை இணையத்திற்கு அம்பலப் படுத்துவது காலத்தின் கட்டாயம் கறுதி செய்யப் படவேண்டியதே!

    //ஆக்வே என் வீட்டில்,மதத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் யாரும் கேட்க கூடாது என்று சொல்ல முடியாது//

    சரியாகச் சொன்னீர்கள்.அதர்க்காக இல்லாத கப்ஸாக்களை (கற்பனை கதைகளை) ஆதராமாக நிறுவலாமா? ஆய்வு செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அது சார்ந்தவர்ளோடு அதனை ஊர்ஜிதப் படுத்துவதும் சரியான அணுகுமுறைாயகும்.

    நன்றி
    அன்ஸார்

  40. அறைகுரை சாகித்திற்கு தொடர் – 02.

    அறைகுரை சாகித்தின் தவறு-06

    //முகம்மது நபியும் தனது ஒரு மனைவியை தலாக் செய்தபோது எந்த சாட்சியையும் முன்னிருத்தியும் தலாக் செய்யவில்லை. உமையா என்ற அப்பெண்ணிடம் தாம்பத்திய உறவுகொள்ள முற்பட்டபோது அப்பெண் குலப் பெருமைகூறி இணங்க மறுத்துவிடவே, முகம்மதுநபி “உன் குடும்பத்தாரிடம் சென்றுவிடு” என்று கூறிவிட்டு வெளியில் வந்து அபு உசைத் என்பவரிடம் இரு வெண்ணிற சணலால் நெய்யப்பட்ட ஆடைகளை உமையா அவர்களுக்கு கொடுத்து அவரது குடும்பத்தாரிடம் கொண்டு விட்டுவிடுங்கள் என்று கூறியதாக (புகாரி: 5254,5255) நபிமொழி உள்ளது.//

    சகோ. சாகித்!
    சாட்சி கூட இல்லாமல் முஹம்மது நபியே “முத்தலாக்” செய்துள்ளார்கள் என்று நுனிப் புல் மேய்ந்துள்ளீர்கள் என்பது இதிலிருந்து விலங்குகிறது. தாங்கள் எந்த நபி மொழியை இங்கு மேற்கோள் காட்டினீர்களோ அதே நபி மொழியில் வரும் வாசகத்தைக் கவனியுங்கள் “வெளியில் வந்து அபு உசைத் என்பவரிடம் இரு வெண்ணிற சணலால் நெய்யப்பட்ட ஆடைகளை உமையா அவர்களுக்கு கொடுத்து அவரது குடும்பத்தாரிடம் கொண்டு விட்டுவிடுங்கள்” என்று கூறியதிலிருந்து, அபூ உசைதும், இந்த நபிமொழியை அறிவிப்பவரும் (இரண்டு பேர்) அவ்விடத்தில் இருந்துள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்நபி மொழியின் ஆரம்பத்திலே “பன்மை“ (خَرَجْنَا-நாங்கள் சென்றோம்) என்ற சொல்லைப் பயன் படுத்தியே ஒரு “பெறும் கூட்டம்” நபியவர்களுடன் சென்றுள்ளதை புஹாரி:5255 நபி மொழியில் இடம் பெரும் அறபி வாசகத்தை வைத்து அறியலாம்.(அது போல் உமைமா என்ற பெயரை, தங்களின் தடுமாற்றத்தில் உமைய்யா என்று எழுதியுள்ளீர்கள்.அதுவும் தவறாகும்.)
    இதோ அறபி வாசகமும் அதன் மொழி பெயர்ப்பும்.
    1 – خرجنا مع النبي صلى الله عليه وسلم حتى انطلقنا إلى حائط يقال له : الشوط ، حتى انتهينا إلى حائطين ، فجلسنا بينهما ، فقال النبي صلى الله عليه وسلم : ( اجلسوا ها هنا ) . ودخل ، وقد أتي بالجونية ، فأنزلت في بيت في نخل في بيتن أميمة بنت النعمان بن شراحيل ، ومعها دايتها حاضنة لها ، فلما دخل عليها النبي صلى الله عليه وسلم قال : ( هبي نفسك لي ) . قالت : وهي تهب الملكة نفسها للسوقة ؟ قال : فأهوى بيده يضع يده عليها لتسكن ، فقالت : أعوذ بالله منك ، فقال : ( قد عدت معاذ ) . ثم خرج علينا فقال : ( يا أبا أسيد ، اكسها رازقيتين وألحقها بأهلها ) .
    الراوي: أبو أسيد الأنصاري مالك بن ربيعة المحدث: البخاري – المصدر: صحيح البخاري – الصفحة أو الرقم: 5255
    خلاصة حكم المحدث: [صحيح]
    http://www.dorar.net/enc/hadith/%D9%81%D9%8E%D8%AC%D9%8E%D9%84%D9%8E%D8%B3%D9%92%D9%86%D9%8E%D8%A7+%D8%A8%D9%8E%D9%8A%D9%92%D9%86%D9%8E%D9%87%D9%8F%D9%85%D9%8E%D8%A7/+p
    அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
    அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து ‘உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!’ என்று கூறினார்கள். அந்தப்பெண் ‘ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?’ என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் ‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி ‘கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு’ என்று கூறினார்கள்
    (பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255 http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php)

    அறைகுரை சாகித்தின் தவறு-07

    //இந்நிகழ்சி முத்தலாக்கையும் ஒரேதடவையில் முகம்மது நபியே கூறியதற்கு சாட்சியாகவும் இருக்கிறது.//

    இங்கும் “முத்தலாக்” என்றால் என்னவென்றே தெரியாத அறைகுரையாகத்தான் உளரியுள்ளீர்கள். இமாம் புஹாரி தனது நூலில் இட்ட தலைப்பை மாத்திரம் பார்த்து அதற்கேற்ப “முத்தலாக்” என்று முடிவு வழங்கியுள்ளீர்கள்.(அம்பி சாகித், எது தலை எது வால் என்று தெரியாமல் தட்டுத் தடுமாறியுள்ளதர்க்கு இதுவும் சரியான உதாரணம்)
    இமாம் புஹாரி அவர்கள் இட்ட தலைப்பின் கீழ் வரும் அந் நபி மொழியில் ”தலாக்“ என்ற வாசகம் எங்கு இடம் பெற்றுள்ளது என்று தயவு செய்து தாருங்களேன். இதோ நானே அவ்வரபி வாசகத்தையும் மொழி பெயர்ப்பையும் தருகிறேன்.
    خرجنا مع النبي صلى الله عليه وسلم حتى انطلقنا إلى حائط يقال له : الشوط ، حتى انتهينا إلى حائطين ، فجلسنا بينهما ، فقال النبي صلى الله عليه وسلم : ( اجلسوا ها هنا ) . ودخل ، وقد أتي بالجونية ، فأنزلت في بيت في نخل في بيتن أميمة بنت النعمان بن شراحيل ، ومعها دايتها حاضنة لها ، فلما دخل عليها النبي صلى الله عليه وسلم قال : ( هبي نفسك لي ) . قالت : وهي تهب الملكة نفسها للسوقة ؟ قال : فأهوى بيده يضع يده عليها لتسكن ، فقالت : أعوذ بالله منك ، فقال : ( قد عدت معاذ ) . ثم خرج علينا فقال : ( يا أبا أسيد ، اكسها رازقيتين وألحقها بأهلها ) .
    http://www.dorar.net/enc/hadith/%D9%81%D9%8E%D8%AC%D9%8E%D9%84%D9%8E%D8%B3%D9%92%D9%86%D9%8E%D8%A7+%D8%A8%D9%8E%D9%8A%D9%92%D9%86%D9%8E%D9%87%D9%8F%D9%85%D9%8E%D8%A7/+p
    அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் ‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி ‘கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு’ என்று கூறினார்கள். (எண் 5255)

    இதில் “முத்தலாக்“ செய்தார்கள் அல்லது “தலாக்“ செய்தார்கள் என்று இடம் பெற்ற அறபு மற்றும் தமிழ் வாசகங்கள் இடம்பெறின் தயவு செய்து தரவும்?

    இமாம் புஹாரி அவர்கள் தலைப்பை ஒரு கேள்வியாகவேதான் தருகிறாரே தவிர, அதுதான் அந்த நபிமொழியிலிருந்து எடுக்க வேண்டிய சட்டம் என்பது தங்களின் அறைகுரை விளக்கத்தில் ஏற்பட்ட குழப்பமே! இதோ அந்த தலைப்பின் மூலமும் அதன் மொழி பெயர்ப்பும்:
    باب من طلق وهل يواجه الرجل امرأته بالطلاق؟
    விவாகரத்து செய்பவர், தன் மனைவியை நேரடியாக விவாகரத்து செய்யலாமா? இதுதான் அந்த தலைப்பு.அவர் கேள்வியாக வைத்து விட்டு அதர்க்குக் கீழ் இந்நபிமொழியை கொண்டுவருகிறார். தாங்கள் இத்தலைப்பையே தீர்வாக எண்ணியதன் விளைவுதான் தடுமாறக் காரணம்.

    அறிஞர் அறை குரை சாகித்திடம் ஒரு வேண்டுகோள்
    “முஹம்மது நபி அவர்கள், தனது மனைவியை நெறுங்கும் போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிய பெண்” என்ற தலைப்பில் செய்யப்பட்ட ஆய்வை இங்கு சென்று வாசிக்கவும். http://www.islamqa.com/ar/ref/118282

    அறைகுரை சாகித்தின் தவறு-08

    //இன்றைய நடைமுறையில் அப்படி தன் விருப்பத்திற்கு ஏற்ப தலாக் என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் தன் மனைவியை தலாக் செய்ய விரும்பினால் அதற்கான காரணத்தை சொல்லி தன்னுடைய ஜமாத்தில் சொல்லவேண்டும். காரணம் சொல்லத் தேவையில்லை என்று சரியத் சட்டமிருந்தாலும் காரணம் சொல்லாமல் ஜமாத் ஏற்றுக் கொள்வதில்லை//

    ஏதோ இஸ்லாத்தில்தான் அதிக விவாகரத்து நடைபெறுவது போலவும் ஜமாத்கள் அதனை அங்கீகரிக்காதது போலவும் அறைரையாக வழமையான பல்லவியை சாகித் பாடியுள்ளார். இதில் ஓரளவு நியாயம் இருப்பினும் மிக அரிதானவையே. ஆனால் ஆய்வு? செய்பவர் மிகவும் அவதானாமாக ஆய்வு செய்ய வேண்டும். ஊர் ஊராக சென்று அந்தந்த ஜமாத்களில் இது விஷயத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்துத்தான் இவ்வாய்வை? மேற்கொண்டீர்களோ? எதையும் நுனிப் மேயும் சாகித்துக்கு இதுவொன்றும் ஒரு பொருட்டல்லவே!

    சகோ.சாகித்தின் புரிதல்-09

    //ஒருவர் தன் மனைவியை தலாக் செய்ய விரும்பினால் அதற்கான காரணத்தை சொல்லி தன்னுடைய ஜமாத்தில் சொல்லவேண்டும். காரணம் சொல்லத் தேவையில்லை என்று சரியத் சட்டமிருந்தாலும் காரணம் சொல்லாமல் ஜமாத் ஏற்றுக் கொள்வதில்லை//

    இம்மாதிரியான மார்க்கத்தில் இல்லாத நடைமுறையைத்தான் முஸ்லீம்கள் மத்தியில் களைவதை முயற்சியாகக் கொண்டு, அதன் விளைவாக இன்று தமிழகத்தில் கணிசமான அளவு வெற்றியைக் (மாற்றங்களை) காண்கிறோம். அதுவும் இன்னும் சொற்பக் காலத்தில் இறைவன் நாட்டப் படி களையப் படும்.

    சகோ.சாகித்தின் புரிதல்-10

    //செல்போன் மூலமும் தலாக் சொல்லலாம் என்றும் இவர்கள் அனுமதித்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். விதிவிலக்காக ஜமாத்துகள் கூட பிரச்சனைக்குரியவரின் வசதி வாய்ப்பைப் பொறுத்து ஏற்றுக் கொள்கிறது//

    செல்போன் தலாக் என்பது, இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாத புதிய நடை முறை. இதன் விளைவை அறியாத சிலர், இதனை மேற் கொள்கின்ற போது இதர அமைப்புக்கள் அதனை விளக்கி தடுக்கின்றனர். அதனை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதை சகோ. சாகித் அறிந்து கொள்ளவும். இஸ்லாத்தை முஸலீம்களிடமிருந்துதான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இஸ்லாத்தில் ஒரு விஷயம் குறித்து (அறைகுரையாக ஆய்வு செய்யாமல்) முழுமையான ஆய்வில் இறங்குவீர்களாயின் அதிலுள்ள நியாயம் என்னவென்பதை தானாக உணர்வீர்கள் என்பதை உறுதியாக் கூறலாம்.

    மேலுமுள்ள அறைகுரைகளோடு தொடர்-03

  41. அன்சாரின் முதல் குற்றச்சாட்டிற்கும் மூன்றாம் குற்றச்சாட்டிற்கும்
    பாடம்: 40. ( பாகம் 6. பக்கம் 77)
    மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்கள்வரை தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும் எனும் (2:228 ஆவது) வசனத் தொடர்.
    இபுராகிம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்.
    ‘இத்தா’வில் உள்ள ஒரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்து அவரிடம் வந்தபின் அவளுக்கு மூன்று மாதவிடாய்க் காலம் முடிந்தால் முதல் கணவனிடமிருந்து அவள் முற்றாக பிரிந்தவள் ஆவாள். (ஆனால்) இந்த மாதவிடாய் காலத்தை இரண்டாம் கணவனுக்கான இத்தாவாக அவள் கணக்கிட முடியாது.
    அவ்வாறு கணக்கிடலாம் என ஸூஹ்ரி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ஸூஹ்ரி (ரஹ்) அவர்களின் கருத்தே சுஃப்யான் (ரஹ்) அவர்களுக்கு மிக உவப்பானதாகும்.
    மஅமர் பின் முஸனைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். (2:228 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள குரூஉ எனும் சொல்லின் வினைச்சொல்லான) அக்ரஅத் என்னும் சொல்லுக்கு “ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது” என்ற பொருளும், “ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது” என்ற (எதிரிடையான) பொருளும் உண்டு. ஒரு பெண் தன் வயிற்றில் சிசுவை ஒன்று சேர்ப்பதைக் குறிக்கவும் அரஅத் எனும் சொல் ஆளப்படுவது உண்டு.
    அடைப்புக் குறிக்குள் உள்ளது உட்பட அப்படியே புகாரி பாகம் 6 பக்கம் 77, 78ல் உள்ளது. அதற்கு மொழிபெயர்ப்புச் செய்துள்ளவர்களின் அடிக்குறிப்பு பின்வருமாறு உள்ளது.
    மணவிலக்கு அளிக்கப்பட்ட ஒரு பெண் இத்தாவில் இருக்கும்போது அவளை யாரும் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது. அதையும் மீறி அவளை ஒருவர் மறுமணம் செய்து கொண்டுவிட்டால் அத்திருமணம் செல்லாது என்பதுடன் இருவரையும் பிரித்து வைக்க வேண்டும். இந்தப் பிரிவினையை முன்னிட்டும் அவள் இத்தா இருப்பது அவசியமாகும். இப்போது இரண்டு இத்தாக்களை அவள் மேற்கொள்ள வேண்டிருக்கிறது. இரண்டுக்கும் சேர்த்து ஒரே இத்தா போதுமா? அல்லது ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இத்தா இருக்கவேண்டுமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. இப்ராகிம் அந்நகஈ (ரஹ்) முதலானோர் தனித் தனி இத்தா இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இரண்டாவது கணவனிடம் வந்தபின் மூன்று மாதவிடாய் காலம் முடியுறுமானால் முதல் கணவனுக்கான இத்தா முடிந்து அவனிடமிருந்து அவள் முற்றாகப் பிரிந்துவிடுவாள். இதற்குப்பின் இரண்டாவது கணவனுக்கான இத்தாவை அவள் தொடங்கவேண்டும் என இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஸூஹ்ரி. சுஃப்யான் (ரஹ்) ஆகியோர் இரண்டிற்கும் சேர்ந்து ஒரே இத்தா போதும் என்கிறார்கள். (உம்மத்துல் காரீ).
    இந்த ஹதிதுடைய முற்பகுதியும் அதற்கான குறிப்பும் மாதவிடாய் எத்தனை மாதங்கள் எனபதற்கானது என்பது புரிகிறது. வசன எண் 2:228ற்கு மஅமர் கூறியதான விள்கக்ம் எதற்கு? இத்தா எத்தனைமாதம் என்பதற்கும் மாதவிடாய் தொடங்குவதைக் குறிக்கும், மாதவிடாய் முடிவடைவதைக்குறிக்கும் என்ற விளக்கத்திறகும் என்ன தொடர்பு? ஒன்றுமில்லை. பிறகு ஏன் அந்தக் குறிப்பு?
    குர்ஆனின் அந்த வசனத்தைப் பார்போம்.
    விவாகரத்துச் சொல்லப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் எதிர்பார்க்க வேண்டும். அல்லாஹ்வையும் இறுதிநாளையும் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அவர்களுடைய கற்பக் கோளறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை அவர்கள் மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல. மேலும் அவர்களுடைய கணவர்கள் (அவர்களை திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை அவர்கள் நாடினால் அதில் (மூன்று மாதவிடாய் காலத்திற்குள் அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அதிக உரிமை பெற்றவர்கள். (மனைவியாராகிய) அவர்களின்மீது (கணவர்களுக்கு) முறைப்படி (கடமைகள்) இருப்பது போன்று, (கணவர்கள்மீதும் மனைவிநாராகிய) அவர்களுக்கும் (கடமை) உண்டு. (எனினும்) ஆண்களுக்கு அவர்களின் மீது (ஓர் உயர்வான) தகுதி இருக்கிறது. அல்லாஹ் (யாவற்றையும்) மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான்.
    இந்த வசனமும் மூன்று மாதவிடாய்கள் இத்தா இருக்க வேண்டும் என்பதையே கூறுகிறது. மாதவிடாய் தொடங்கும் காலம், முடிவடையும் காலம் என்பதற்கான குறிப்பு இல்லை . அது தேவையும் இல்லை. பிறகு எதற்குத்தான் இந்தக் குறிப்பு?
    நண்பரின் 3வது குற்றச்சாட்டையும் படித்துவிட்டு மேலும் தொடருங்கள்.
    மணவிலக்கு பற்றி புகாரி தொகுப்பின் பாடம் 1.
    உயர்வான அல்லாஹ் கூறுகிறான்.
    நபியே! (மக்களிடம் கூறுக) நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு அளிப்பீர்களானால் அவர்களுடை இத்தாவிற்கேற்ற நேரத்தில் மணவிலக்கு அளித்து இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள் (65:1)
    –என்று குறிப்பிட்டுவிட்டு நண்பர் அளித்துள்ள ஹதீது எண் 5251ஐ புகாரி ஆதாரமாகத் தந்துள்ளார். அது பின்வருமாறு உள்ளது.
    அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
    நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள்.
    எனவே, (என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) இதைப் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவியபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், ‘உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும் வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவர் விரும்பினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளை) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலக் கட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (திருக்குர்ஆன் 02:228 வது வசனத்தில்) அனுமதித்துள்ள (‘இத்தாக்’ காலத்தைக் கணக்கிட்டுக் கொள்வதற்கு ஏற்ற) காலக் கட்டமாகும்’ என்று கூறினார்கள்.
    அடுத்ததாக புகாரி அவர்கள் கூறுவதைப்பாரப்போம்.
    புகாரி அவர்களின் பாடம் 2ன் தலைப்பு:
    மாதவிடாயிலிருக்கும் பெண்ணுக்கு மணவிலக்கு அளிக்கப்பட்டாலும் அந்த மணவிலக்கு நிகழ்த்தாகவே கருதப்படும்.
    5252:
    அனஸ் பின் சீரீன் (ரஹ்0 அவர்கள் கூறியதாவது.
    இப்னு உமர் அவர்கள் கூறினார்கள். மாதவிடாயிலிருந்த எனது மனைவியை நான் மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே இது குறித்து (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (உங்கள் புதல்வர்) தம் மனைவியை திரும்ப அழைத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
    அறிவிப்பாளர் அனஸ் பின் சீரின் அவர்கள் தொடர்ந்து கூறுகின்றார்கள்.
    நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (மாதவிடாயின்போது சொல்லப்பட்ட இந்த தலாக்) ஒரு தலாக்காகக் கருதப்படுமா? என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் “(தலாக்காகக் கருதப்படாமல்) வேறென்ன என்று கேட்டார்கள்.
    இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள தகவலில் (பின்வருமாறு) காணப்படுகிறது.
    நபி (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் “(உங்கள் புதல்வர்) தம் மனைவியை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு அவருக்கு நீங்கள் கட்டளையிடுங்கள்” என்று கூறினார்கள். நான் இப்னு உமர் அவர்களிடம் (மாதவிடாய்ப் பருவத்தில் செய்யப்பட்ட இந்த மணவிலக்கு) மண விலக்காக க் கருதப்படும? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்து கொள்ளாமலும் இருந்துவிட்டால் (மண விலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன? என்று கேட்டார்கள்.
    5253:
    இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
    (என் மனைவி மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தபோது நான் அளித்த)அந்த மணவிலக்கை நான் சொன்ன ஒரு தலாக் என்றே கணிக்கப்பட்டது.
    —–
    நன்கு கவனியுங்கள். ஹதீது எண் 5251ல் குர்ஆன் வசனம் 2:228ஐ ஆதாரமாகத் தந்துவிட்டு அவ் வசனத்திற்கு விளக்கம் எழுதிய பகுதியில் குரூவு என்ற சொல்லின் வினச்சொல் மாதவிடாய் தொடங்கும் காலத்தையும், முடிவடையும் காலத்தையும் பொருளாகக் கொண்டுள்ளது என்ற விளக்கத்தை முன் வைப்பதன் மூலம் மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்லக்கூடாது என்றும் சொல்லாம் என்றும் (இரு வேறுபட்ட முரண்பாடுகளையும்) பதிவு செய்துள்ளார்.
    அதுமட்டுமல்ல. இரு முரண்பாடான கொள்கைக்கு இரு வேறுபட்ட நிகழ்ச்சியை எடுத்துக்காட்டு தருவதே மோசடிதான். ஆனால் புகாரி அவர்களோ ஓரே நிகழ்ச்சியை இரு முரண்பாடுகளுக்கும் பொருத்துகிறார். இரு முரண்பாடான கொள்கைகளிலும் எது சரியானது என்று கூறுவதுதானே சிறந்த பதிவாக இருக்கும்?
    ஆனால் நண்பர் அனசார் ## உம் மங்கிய புத்தியை என்னவென்பது?? இதில் என்ன முரண்பாடு உள்ளது?? எதையும் அறைகுரையாகவே எழுதி “நீரே ஒரு அறைகுரை“ என்பதை மேலும் நிரூபித்துள்ளாய்.## என்றும் ## ! நீங்கள் எந்தளவு மதி கெட்டு குழம்பி, மேலும் அறைகுரை என்று நிரூபித்துள்ளதை! சாகித்! தடுமாற வேண்டாம்! அதனால்தான் உமக்கு தெளிவற்ற மார்க்கம் போல் காட்சி தருகிறது.## என்றும் கூறுகிறார். மதி கெட்டுப்போயுள்ள எனக்கு அவர், ##மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்லக்கூடாது.(65-1) என்பது குர்ஆனின் கூற்று. இதை அறியாத அப்துல்லாஹ், தனது மனைவி மாதவிடாயாக இருக்கும் தருணத்தில் விவாகரத்து செய்கிறார் பின் இது நபியவர்களுக்குத் தெரியும் போது, அப்படி செய்வதைத் தடுத்து, அவளை மீட்டும் படியும், மாதவிடாய் முடிந்த பின் கூறும் படியும் கட்டளையிடுகிறார்.## என்று விளக்கம் அளிக்கிறார்.
    புகாரிக்கு மொழியாக்கம் செய்தவர்களுடைய கருத்துக்கள் என்னவென்று பாரப்போம்.
    மாதவிடாய் பருவத்தில் உள்ள பெண்ணை மணவிலக்கு செய்வது முறைகேடான செயலாகும் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் அவ்வாறு ஒருவர் செய்துவிட்டால் அந்த மணவிலக்கு செல்லுமா என்பதில் கருத்துவேறுபாடு காணப்படுகிறது. செல்லும் என்பதே இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். ஏனெனில், பின் வரும் ஹதீதுகளிலும் முன் சென்ற ஹதீகளிலும் மாதவிடாய் பருவத்தில் தம் மனைவிக்கு மணவிலக்கு அளித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மணவிலக்கு செல்லாது என்று இருப்பின் திரும்ப அழைக்க வேண்டிய தேவை இருக்காது. (இர்ஷாதுஸ் ஸாரீ)
    நபி திரும்ப அழைத்துக்கொள்ளச் சொன்னதற்கும் இரு முரண்பட்ட கருத்துக்கள். நணபர் மாதவிடாயாக இருக்கும் தருணத்தில் தலாக் கூடாது என்பதால் திரும்ப அழைத்துக்கொள்ள சொன்னார்கள் என்கிறார். இம்மொழிபெயர்ப்பின் மேலாய்வாளர் மௌலானா அப்துல் காதிர் பாகவி, பேராசிரியர் அ. முகம்மது கான் பாகவி, மொழிபெயர்பாலர்கள் மௌலவி சா. முகம்மது கான் பாகவி, மௌலவி அ. ஜாகிர் ஹுசைன் பாகவி எம்.ஏ., மௌலவி எம்.ஏ. ரஹ்மத்துல்லாஹ் ஜமாலி ஆகியோர் ‘மணவிலக்கு செல்லாது என்று இருப்பின் திரும்ப அழைக்க வேண்டிய தேவை இருக்காது” என்று சொல்லவதன் மூலம் மாதவிடாயாக இருக்கும் தருணத்தில் தலாக் கூடும் என்கின்றனர். இசுலாமிய சட்டமேதை புகாரி அவர்களும் கூடும் என்கிறார்கள். நண்பர் என்னை மதிகெட்டு போயுள்ளதாக கூறினால் இது இவர்களுக்கும் பொருந்துவதாக அமைந்துவிடும்.
    அதுபோல
    அக்ரஅத்தில் மர்அத்து இதா தனா ஹைலுஹா = ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது
    அக்ரஅத்தில் மர்அத்து இதா தனா துஹ்ருஹா = ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது என்றுதான் புகாரி கூறுகிறார்.
    ஆனால் அனசார்
    ##//ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது (மாதவிடாய் ஆரம்பம்) என்ற பொருளும், ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது//என்று குறிப்பிட்ட தன் மூல வாக்கியத்தைப் பார்த்தால், நீங்கள் அறைகுரையாக எழுதியுள்ளது அம்பலமாகிறது. அதாவது “அக்ரஅத்” என்ற வார்த்தை இன்னுமொரு வார்த்தையோடு சேர்ந்து வருவதைக் கூறாமல் “அக்ரஅத்” என்ற தனிச் சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உள்ளது போன்று உளரியுள்ளீர்கள். (அக்ரஅத்தில் மர்அத்து இதா தனா ஹைலஹா-ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது என்பதர்க்கும், அக்ரஅத்தில் மர்அத்து இதா தனா துஹ்ரஹா-ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது)என அச்சொல் இன்னுமொரு சொல்லோடு சேறும் போதுதான் கருத்து மாறும் என்ற விளக்கத்தைப் பற்றிக் கூறியதை இங்கு புஹாரி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.##

    — “அச்சொல் இன்னுமொரு சொல்லோடு சேறும் போதுதான் கருத்து மாறும்” என்ற விளக்கத்தைப் பற்றிக் கூறியதை இங்கு புஹாரி அவர்கள் குறிப்பிடுகிறார்கள என்று கூடுதலாக புகாரி சொல்லாததை சேர்த்துக் கொள்கிறார். புகாரி எழுதியுள்ளது
    அக்ரஅத்தில் மர்அத்து இதா தனா ஹைலுஹா. அக்ரஅத்தில் மர்அத்து இதா தனா துஹ்ருஹா. வ யூகாலு மா கராஅத் பிசலன் கத்தூ இதாலம் தஜ்மஹ் வலதன் பீ பத்தனிஹா. இதுதான் புகாரி எழுதியுள்ளது. அதற்கான மொழிபெய்ரப்பு “ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது” என்ற பொருளும், “ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது” என்ற (எதிரிடையான) பொருளும் உண்டு. ஒரு பெண் தன் வயிற்றில் சிசுவை ஒன்று சேர்ப்பதைக் குறிக்கவும் அரஅத் எனும் சொல் ஆளப்படுவது உண்டு.
    2வது குற்றச்சாட்டு:
    ##//…….அதாவது வெளியில் போகக் கூடாது, ஒரு ஆணுடன் பேசிவிட்டாலே சந்தேகம் கொள்வது என்ற பண்புகளில் நிறையவே மாற்றம் உள்ளது//
    இங்கும் மிகைப்புத்தான் அதிகமாகவுளளது. பேசவே கூடாது என்று இஸ்லாத்தில் எங்கேயும் கூறவில்லை. ஆனால் பேச்சுக்கள் ஒழுங்காக இருக்க வேண்டு்ம் என்பதைத்தான் இஸ்லாம் போதிக்கிறது. இதனை உதாரணத்தோடு விளக்கினால்தான் புரியும். உதாரணமாக சாகித்தின் மனைவி அவருக்கு முன்பே தெரியாத ஆணோடு சந்தோச சல்லாபத்தில் தொடுவதும் படுவதும் உரசுவதுமாய் இருப்பதை, வேண்டுமெனில் சாகித் போன்ற கணவர்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் சூடு சுரணையுள்ள எந்தக் கணவனும் அதனைப் சகித்துக் கொ்ண்டிருக்க மாட்டான். (இந்த வகைப் பேச்சைத்தான் இஸ்லாம் வண்மையாக தடை செய்கிறது.)

    கேட்டு கேட்டு புளித்துப்போனது. ##//…….அதாவது வெளியில் போகக் கூடாது, ஒரு ஆணுடன் பேசிவிட்டாலே சந்தேகம் கொள்வது என்ற பண்புகளில் நிறையவே மாற்றம் உள்ளது என்பதற்கும் ## சாகித்தின் மனைவி அவருக்கு முன்பே தெரியாத ஆணோடு சந்தோச சல்லாபத்தில் தொடுவதும் படுவதும் உரசுவதுமாய் இருப்பதை, வேண்டுமெனில் சாகித் போன்ற கணவர்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்பதற்கும்## என்ன தொடர்புள்ளது? ஆத்திரத்தில் உளறிக்கொட்டும் சிறுமதியாளர்களின் வழமையான உளரல் இது.
    4வது குற்றச்சாட்டு:
    ##அறைகுரைக்கு இந்த வசனத்தைப் (65:2) பார்க்குமாறு எச்சரிக்கிறேன் அதாவது விவாகரத்து அத்தியாயத்தை அறைகுரையாகப் படித்த சாகித், அதற்கடுத்துள்ள வசனத்தைப் படிக்காததன் விளைவுதான் மடத்தனமாக, (அரைகுரையாக) இப்படி உளரியிப்பது.
    ”உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள், அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோறுக்கு இவ்வாறே அறிவுரை கூறப் படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோறக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.(65:2) ஆய்வு? செய்ய முற்பட்டால் ஒழுங்காக ஆய்வு செய்ய வேண்டும். புஹாரியில் இல்லாவிட்டால் வேறு இடங்களில் தேடிப் பார்க்க் கூடாதா?##
    ##தலாக் பற்றி புகாரி அவர்கள் தொகுத்துள்ள எந்த நபிமொழியிலும் இரு சாட்சிகள் முன்னிலையில்தான் தலாக் சொல்ல வேண்டும் என்பதற்கான நபிமொழி ஒன்றும் இல்லை. தாலாக் சொல்லிவிட்டு வந்து தான் தலாக் சொல்லிவிட்டதாக பிறரிடம் கூறியதான நபிமொழிகளே காணப்படுகிறது## என்று கட்டுரையில் எழுதியுள்ளேன். உண்மையும் அதுவே. முகம்மதுநபியும் தனது ஒரு மனைவியை தலாக் செய்தபோது எந்த சாட்சியையும் முன்னிருத்தியும் தலாக் செய்யவில்லை என்று குறிப்பிட்டுவிட்டு அதனை ஆதாரமாக எடுத்து எழுதியுள்ளேன்.
    வேறு ஏதாவதில் ஆதாரமிருந்தால் நீங்கள் எடுத்துக்காட்டலாமே.
    குற்றச்சாட்டு 5;
    ##தலாக் என்றால் என்ன என்ற சாதாரண அறிவு கூட இல்லாத ஒருவாராக சாகித் தன்னை மேலும் ஒரு படி உசத்தி “தான் ஒரு அறைகுரை“ என்பதை நிலைநாட்டி அதர்க்கு “சான்றிதழ்“ வேறு பெற்றுவிடுவார் போலும். தலாக் என்றால் ஒருவர் மனைவியோடு (இல்லறத்திற்குப் பின்)வாழ்ந்து அதன் பின் அவருக்-அவளுக்குப் பிடிக்க வில்லையெனின் விவாகரத்து செய்வதையே இஸ்லாம் “தலாக்” என்று கூறுகிறது. இங்கு முஹம்மது நபி இல்லறமே நடத்தவில்லை! பின் எதர்க்கு அவர் தலாக்? (சாட்சிக்கு வேண்டுமெனில்) அவருடன் அங்கு சிலர் இருந்தனர் என்ற வாசகத்தை வைத்தே சாட்சிகள் இருந்துள்ளனர் என்பதை அறிய முடியும்##
    அய்யா முகம்மதுநபி செய்த தாலாக்கை நான் கூறவில்லை. புகாரி அவர்களும் அதற்கு மொழிபெய்ர்புச் செய்தவர்களும் கூறுகின்றனர். புகாரி 5254, 5255, 5256, 5257 ஆகியனவைப் பார்க்கவும். ஒருவர் தம் மனைவிடம் நேரடியாக தலாக் என்று கூறலாம் என்ற தலைப்பில் ஆதாரமாக தந்துள்ளவைகள் இவைகள். சாதாரண அறிவுகூட இல்லை என்று நீங்கள் என்னைத் திட்டவில்லை. புகாரியைத் திட்டுகிறீர்கள்.
    முகம்மதுநபி தாலாக் சொன்னபோது அப்பெண்ணருகில் அவரது தாதி இருந்ததாக மட்டும் விபரம் உள்ளது. அப்படிப் பாரப்போமானால் ஒரு சாட்சி மட்டுமே இருந்ததாக பொருள்படும்
    பிஜேவுடைய தலாக் பற்றிய விளக்கத்தை அப்படியே எழுதினால் போதும், நாம் ஏதும் விளக்காமலே புரியும் என்று உங்களைப்போன்றவர்கள் மேல் உள்ள அறிவு நம்பிக்கையில் சங்கர் பிஜே விளக்கத்தை மட்டும் எழுதியள்ளார். பிஜேவின் கட்டுரை என்னவோ அற்புதமானது என்ற கற்பனையில் அதனை படித்துவிட்டு என்னை கட்டுரை எழுதச் சொல்லகிறார். சிரிப்புதான் வருகிறது.
    விமர்சனம் எழுதியுள்ள அன்சார் என்னை அறைகுறை, மந்தப்புத்தி, பொய்யன் என்றெல்லாம் விளித்துள்ளார். அவைகள் யாருக்குப் பொருந்துகிறது என்பதை வாசகர்கள் முடிவு செய்துக்கொள்ளலாம்

  42. அன்புச் சகோ. சாகித்,

    இஸ்லாம், மற்றும் அதன் அடிப்படை விஷயங்கள் பற்றியும் தாங்கள் இன்னும் அறிய வேண்டியவராக இருக்கிறீர்கள். காரணம், எது அடிப்படை? எது அடிப்படையற்றது? என்பன போன்ற விஷயங்களை தாங்கள் அறியாததன் விளைவுதான், இங்கு தாங்கள் மேலதிக- அவசியமற்ற விளக்கங்களைத்? தந்துள்ளீர்கள்.

    இஸ்லாத்தைப் பொருத்த வரை, எந்தவொரு அம்சமானாலும் அதனை ஒரு வணக்கமாகக் கருதுவதெனில், அது இரண்டு அடிப்படைகளை மைய்யமாக வைத்து முடிவு செய்யப் படல் வேண்டும். ஒன்று “அல்குர்ஆன்“ (அல்லாஹ்வின் வேதம்) மற்றயது “அஸ்ஸுன்னா“ (முஹம்மது நபியின் சொல், செயல், அங்கீகாரம்-ஹதீஸ்) இந்த இரண்டுக்கும் மாற்றமாக எப்பெரும் (பாண்டித்தியம் பெற்ற) அறிஞர் வியாக்கியானம் கூறினாலும் அதனை காதில் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. (அப்படி யார் எது சொன்னாலும் சொல்லப் படும் விஷயம், அல்லாஹ் கூறியிருக்கிறானா? அவன் தூதரின் வழிகாட்டுதலில் அது இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இல்லையெனில் புறக்கனிக்க வேண்டும்) இதுதான் அடிப்படை. “நமது இந்த மார்க்கத்தில் இல்லாததை யாரேனும் புதிதாக தோற்றுவித்தால் (அது இறைவனால்) நிராகரிக்கப்படும்” (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா)

    அந்த அடிப்படையை வைத்து தாங்கள் இங்கு சிலவற்றுக்கு, அறிஞர் (இமாம்)களின் வியாக்கியானங்கள் என தந்துள்ளதைப் பார்ப்போமேயானால், அது கணக்கில் கெள்ளப் பட வேண்டிவையல்ல. அது, புஹாரியாக, மஃமராக,அபூ நகஈயாக இருக்கட்டும். அவர்கள் தன் கருத்துக்கு நிறுவ,கொண்டு வரும் ஆதாரம் (ஹதீதாக இருப்பின் அதன் தரத்துடன்) என்னவென்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, அவர் கருத்தை ஏற்க முடியாது. சகோ. சாகித், இங்கு குறிப்பிடாத இமாம்களின் முரண்பட்ட கருத்துக்கள் வேண்டுமெனில், எனக்கும் நிரையவே குறிப்பிடலாம். ஆனால் இங்கு, அவைகளல்ல முக்கியம். “சரியத் சட்டமும் இசுலாமியப் பெண்களின் அவலமும்!” என்பதுதான் அலசப் படவேண்டியது. (அது குர்ஆன்-சுன்னா என்ற இரு அடிப்படைகளை வைத்தே அலசப் படல் வேண்டும்)

    இப்னு உமர் தொடர்பான விஷயங்கள் முரண்பட்டதாக கூறியுள்ளீர்கள். அந்த ஹதீதை பிரித்தரியும் திரனும், தங்களுக்கு இல்லாதிருப்பது (அறைகுரையெனப்) புரிகிறது. முதலில் அது சார்ந்த அறிவிப்புக்களைப் பார்த்தால், உங்களுக்கு முரண்பாடாகத் தெரியும் அம்சங்கள் எளிதில் முரணற்றது எனப் புரியும்?.

    //நபியே! (மக்களிடம் கூறுக) நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு அளிப்பீர்களானால் அவர்களுடை இத்தாவிற்கேற்ற நேரத்தில் மணவிலக்கு அளித்து இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள் (65:1)//
    //அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
    நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள்.
    எனவே, (என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) இதைப் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவியபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், ‘உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும் வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவர் விரும்பினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளை) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலக் கட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (திருக்குர்ஆன் 02:228 வது வசனத்தில்) அனுமதித்துள்ள (‘இத்தாக்’ காலத்தைக் கணக்கிட்டுக் கொள்வதற்கு ஏற்ற) காலக் கட்டமாகும்’//
    //இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.(என் மனைவி மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தபோது நான் அளித்த)அந்த மணவிலக்கை நான் சொன்ன ஒரு தலாக் என்றே கணிக்கப்பட்டது://
    இதில் தங்களுக்கு முரண்பாடாகத் தோன்றுவதற்கு இந்த ஹதீதை வாசித்தால் புரியும் என நினைக்கிறேன். (புரியா விட்டால்…..??) அதாவது இப்னு உமர் செய்த அந்த தலாக் அவருக்கு தண்டணையாக அமைந்திருக்கிறது. இப்னு உமரின் தந்தை இது பற்றி நபியவர்களிடம் தெரிவிக்கும் போது நபியவர்கள் “فتغيظ” “கடும்கோபமடைந்து” அவருக்கு மேலும் அதனை அதிகப் படுத்தி தண்டனையாக வழங்கினார்கள். என்று புரியலாம்.
    أنه طلق امرأته وهي حائض ، فذكر عمر لرسول الله صلى الله عليه وسلم ، فتغيظ فيه رسول الله صلى الله عليه ثم قال : ( ليراجعها ، ثم يمسكها حتى تطهر ، ثم تحيض فتطهر ، فإن بدا له أن يطلقها فليطلقها طاهرا قبل أن يمسها ، فتلك العدة كما أمره الله ) .
    http://www.dorar.net/enc/hadith?skeys=%D9%84%D9%8A%D8%B1%D8%A7%D8%AC%D8%B9%D9%87%D8%A7%D8%8C+%D8%AB%D9%85+%D9%8A%D9%85%D8%B3%D9%83%D9%87%D8%A7+%D8%AD%D8%AA%D9%89+%D8%AA%D8%B7%D9%87%D8%B1&xclude=&degree_cat0=1

    (என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) தம் துணைவியாரை விவாகரத்துச் செய்துவிட்டார்கள். அப்போது அவர்களின் துணைவியாருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே, (என் பாட்டனார்) உமர்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இதைத்) தெரிவித்தார்கள். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிகவும் கோபப்பட்டார்கள். பிறகு, ‘அவர் (அப்துல்லாஹ் இப்னு உமர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்து, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் வரைத் தம் மனைவியாகவே வைத்துக் கொள்ளட்டும்! பிறகு, (மீண்டும்) அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு (அதிலிருந்து) தூய்மையும் அடைந்தால், அப்போது அவருக்குத் தோன்றினால் விவாகரத்துச் செய்யட்டும்! அதுவும் தாம்பத்திய உறவுக்கு முன்னால். (மாதவிலக்கிலிருந்து தூய்மையாகியிருக்கும்) இந்தக் காலமே, (பெண்களை விவாகரத்துச் செய்ய) ஆண்களுக்கு இறைவன் உத்தரவிட்ட காலமாகும்’ என்றும் கூறினார்கள்.” பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4908

    எனவே இது அவருக்களித்த தண்டனையாக, என்று புரிவதானால்? இது முரணானது என்று தாங்கள் புரிய? வேண்டிய அவசியம் வராது. (இது பற்றி தாங்கள் இன்னும் விளங்க-புரிய வில்லையெனின் மீண்டும் விளக்குகிறேன்.-இ.அ)

    //அச்சொல் இன்னுமொரு சொல்லோடு சேறும் போதுதான் கருத்து மாறும்” என்ற விளக்கத்தைப் பற்றிக் கூறியதை இங்கு புஹாரி அவர்கள் குறிப்பிடுகிறார்கள என்று கூடுதலாக புகாரி சொல்லாததை சேர்த்துக் கொள்கிறார்.//

    சகோ. சாகித் தாங்கள் நான் என்ன எழுதினேன் என்பதை, அறைகுரையாக விளங்கியுள்ளீர்கள் போலும். அதாவது, “அக்ரஅத்” என்ற தனிச்சொல்லுக்கு, சாகித்தாகிய நீங்கள் அதன் பின் வருகின்ற “மர்அத்து இதா தனா ஹைலுஹா. மர்அத்து இதா தனா துஹ்ருஹா” என்ற சொற்றொடர்களை சேர்க்காமல் கூறியிருந்தீர்கள். எனவேதான், அந்த சொற்றொடர்களை சேர்க்கும் போதுதான் ஆர்த்தம்-கருத்து மாறுபடும் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். மேலும் // இங்கு புஹாரி அவர்கள் குறிப்பிடுகிறார்கள என்று கூடுதலாக புகாரி சொல்லாததை சேர்த்துக் கொள்கிறார்// இது தாங்கள் அறகுரையாக (ஏற்கனவே ஆய்வு என்ற தோரணையில் எழுதிய கட்டுரையைப் போல்) எழுதியுள்ளீர்கள். புஹாரி அவர்கள் மஃமர் என்ன கூறினாரோ, அந்த முழு வாசகத்தைத்தான் நான் தந்தேன். நான் “கூடுதலாக” சேர்த்துக் கூறியதாகக் கூறும் நீங்கள், நான் தந்த அதே வாசகத்தை மீண்டும் எழுதியுள்ளீர்கள் என்பதைப் பார்க்கும் போது, உங்களுக்கே நீங்கள் முன்னுக்குப் பின் முரண்படுகிறீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.(வேண்டுமெனில், சம்மந்தமில்லாமல் “வ யூகாலு மா கராஅத் பிசலன் கத்தூ இதாலம் தஜ்மஹ் வலதன் பீ பத்தனிஹா” என்று கூடுதலாக் சேர்த்துள்ளீர்கள்)

    //அதாவது வெளியில் போகக் கூடாது, ஒரு ஆணுடன் பேசிவிட்டாலே சந்தேகம் கொள்வது…………….,,,என்ன தொடர்புள்ளது? ஆத்திரத்தில் உளறிக்கொட்டும் சிறுமதியாளர்களின் வழமையான உளரல் இது//

    சகோ, சாகித்! நிஜமாகவே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதில் தங்களிடம் நிரையவே “குறை” இருக்கிறது என்பது தங்களுடைய எழுத்துக்களில் இருந்து நன்கு புலனாகிறது. மீண்டும் மீண்டும் தங்களுக்கு என்னால் பாடம் நடத்த முடியாது. ஒரு ஆணுடன் பேசக் கூடாது,பேசிவிட்டாலே சந்தேகம் என்று எப்படியான ஆண்களோடு “எந்த மாதரியான பேச்சு” என்பதை விளக்கத்தான் ஓர் உதாரணம் கூறினேன். அதர்க்கு என்ன தொடர்பு என்று கேட்கிறீர்கள். பேச்சு எப்படியான பேச்சு என்பதனை தாங்கள் புரியும் பொருட்டு, தொடர்பு படுத்தி ஒரு உதாரணம் காட்டினேன். எனவே அதுதான் அதர்க்கான தொடர்பு. இதை விளங்காமல் போன உங்களைத்தான் “சிறுமதியாளர்” என்று அழைக்க வேண்டும். “வழமையான உளரல்“ உங்களுக்கு வழமையாக வருகிறதெனில் நீங்கள் யார் என்று உங்களையே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

    //தலாக் பற்றி புகாரி அவர்கள் தொகுத்துள்ள எந்த நபிமொழியிலும் இரு சாட்சிகள் முன்னிலையில்தான் தலாக் சொல்ல வேண்டும் என்பதற்கான நபிமொழி ஒன்றும் இல்லை// வேறு ஏதாவதில் ஆதாரமிருந்தால் நீங்கள் எடுத்துக்காட்டலாமே.//

    சகோ. சாகித்! இன்னுமா புரியவில்லை.!? ஏன் “புரிதல்” என்பது உங்களுக்கு எட்டாக் கணி போன்றுள்ளதோ! சகோ. திப்பு சொன்னது போன்று “இப்படி ஒவ்வொன்றையும் தவறாக புரிந்து கொள்வதை மாற்ற நீங்கள் ”இன்னும் வளர வேண்டும்”.அதுக்கு ”காம்ப்ளான்” சாப்பிடுங்கள்” என்றுதான் நானும் தங்களுக்கு கூற வேண்டியுள்ளது. சாப்பிடாவிட்டால் ஒரு முறை சாப்பிட்டுத்தான் பாருங்களேன். கமான்ட்களில் இப்படியான வாசகங்கள் கொண்டு தங்களை அழைப்பது எனக்கு சங்கடத்தை உண்டு பண்ணுகிறது. சரி பரவாயில்லை. முயற்சியுங்கள் எல்லாம் சரியாகி விடும்.

    குர்ஆன் வசனத்தையே ஆதாரமாகத் தந்தேனே அதனை நீங்கள் படிக்க வில்லையா?
    இதோ மீண்டும் தருகிறேன். “அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள், அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோறுக்கு இவ்வாறே அறிவுரை கூறப் படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோறக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.(65:2)”
    “வேறு ஏதாவதில் ஆதாரமிருந்தால் நீங்கள் எடுத்துக்காட்டலாமே” அந்த வசனமே அதர்க்கு ஆதாரம்.
    சகோ. சாகித்! இந்த வசனத்திலே இரண்டு சாட்சிகளை ஏற்படுத்தும் படி அல் குர்ஆனிலே ஆதாரம் இருக்க, எதர்க்கு ஹதீதில் ஆதாரம் தேடுகிறீர்கள்! (இதிலிருந்து உங்களுக்கு குர்ஆன் ஹதீத் என்றால் என்னவென்றே தெரியாமல்தான் இவைகளில் அறைகுரையாக தலையிடுகிறீர்கள். தாங்கள் இன்னும் குழப்பத்தில் உள்ளீர்கள் என்பது (இங்கு தங்களைப் பற்றி கமான்ட் தந்த வாசகர்கள் உட்பட) நன்கு புரிகிறது.

    //முகம்மதுநபியும் தனது ஒரு மனைவியை தலாக் செய்தபோது எந்த சாட்சியையும் முன்னிருத்தியும் தலாக் செய்யவில்லை என்று குறிப்பிட்டுவிட்டு அதனை ஆதாரமாக எடுத்து எழுதியுள்ளேன்//
    சகோ. சாகித்! தங்களை நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது. ”முஹம்மது நபி சாட்சி இல்லாமல் தலாக் விட்டார்கள்” என்பதர்க்கு அறபி வாசகம் உட்பட விளக்கியிருந்தேன். தயவு செய்து “மறுப்பு” என்ற போர்வையில் எதையும் அறைகுரையாக விளங்கிக் கொண்டு எழுதுவதனால் தங்களையே தாங்கள் தாழ்த்திக் கொள்கிறீர்கள். ”தவறுகள் சுட்டிக் காட்டப் படும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடமை” என்று ஆரமபத்திலே புரிந்து கொண்டுதான் அதனைக் கூறினேன். ”நாகரீகமுள்ள யாரும் ஏற்றுக் கொள்வர்“

    //முகம்மதுநபி தாலாக் சொன்னபோது அப்பெண்ணருகில் அவரது தாதி இருந்ததாக மட்டும் விபரம் உள்ளது//
    எதையும் அறைகுரையாகவே விளங்குவது தங்களின் வழக்கமாவுள்ளதை என்னவென்பது? தாதி உட்பட ஒரு பெரும் கூட்டம் இருந்ததை அந்த நபி மொழியின் ஆரம்ப வாசகத்தை வைத்து சுட்டிக் காட்டியிருந்தேன். அதனை தாங்கள் படிக்க வில்லை போலும்.வெளியில் வந்து அபூ உசைதிடம் சொன்னது, இந்த ஹதீதை அறிவிக்கும் அறிவிப்பாளர் உட்பட சாடசியாகவே இருந்துள்ளனர்.இதனை விடுத்து வேறு என்ன ஆதாரம் கேடகிறீர்கள். (பன்மை“ (خَرَجْنَا-நாங்கள் சென்றோம்) என்ற சொல்லைப் பயன் படுத்தியே ஒரு “பெறும் கூட்டம்” நபியவர்களுடன் சென்றுள்ளதை புஹாரி:5255 நபி மொழியில் இடம் பெரும் அறபி வாசகத்தை வைத்து அறியலாம்) இதுவே நபியவர்களோடு சாட்சிகள் இருந்தனர் என்பதை உறுதிப் படுதிதுகிறது. இதனை யாரும் சொல்லாமலே புரிவர். ஆனால் தாங்கள்…………??

    //சாதாரண அறிவுகூட இல்லை என்று நீங்கள் என்னைத் திட்டவில்லை. புகாரியைத் திட்டுகிறீர்கள்// புஹாரியை அல்ல உங்களையேதான். ஏனெனில் புஹாரி எழுதிய தலைப்பை மாத்திரம் பார்த்து பத்வா-தீர்வு வழங்கும் அறைகுரையாக நீங்கள்தான் உளரியுள்ளீர்கள். நான் ஏற்கனவே எழுதிய கமான்ட்டை மீண்டும் வாசியுங்கள். புரியும். (புரியா விட்டால் திப்புவின் மறுந்து உதவும்)

    //பிஜேவின் கட்டுரை என்னவோ அற்புதமானது என்ற கற்பனையில் அதனை படித்துவிட்டு என்னை கட்டுரை எழுதச் சொல்லகிறார். சிரிப்புதான் வருகிறது.//

    உங்கள் குழம்பிய (அறைகுரை) கட்டுரைக்கும் பீ. ஜேவின் தெளிவு மிக்க கட்டுரைக்குமுள்ள வித்தியாச வேறு பாட்டை, வாசகர்கள் நன்கு புரிவர். (உங்களைப் போன்ற பரிதலில் அல்ல) ஆனால் தாங்கள் இக்கட்டுரையை எழுதி வெளியிட்டதிலிருந்து உங்களைப் பார்த்து சிரித்தவர்களை ஏனோ தாங்கள் கண்டு கொள்ளவில்லை!

    //அறைகுறை, மந்தப்புத்தி, பொய்யன்// இது மூன்றுக்கும் சரி நிகராக தாங்கள் உளரியுள்ள ஆய்விலிருந்து? தங்களுக்கு, ஏனைய வாசகர்கள் இட்ட கமான்ட் மூலம் தாங்கள் இன்னமும் “புரிய” வில்லை போலும்.

    நன்றி
    அன்ஸார்-தோஹா

  43. குற்றச்சாட்டு 6. 7
    முகம்மதுநபி செய்த தலாக் விவகாரம்: மணவிலக்கு என்ற திரட்டின்கீழ் “தன் மனைவியை மணவிலக்குச் செய்யும் ஒருவர் அதை மனைவிடம் நேரடியாகத் தெரிவிக்கலாமா?” என்ற கேள்வியை வைத்து புகாரி அவர்கள் முக்ம்மதுநபி செய்த தலாக் நிகழ்வை ஆதாரமாகத் தந்துள்ளார். இதன் மூலம் புகாரி தெரிவிக்கலாம் என்கிறாரா? அல்லது தெரிவிக்க கூடாது என்கிறாரா? மொழிபெய்ர்ப்பாளர்கள் தெரிவிக்கலாம் என்கிறார்கள்.
    மாமேதை அன்சார் அவர்களின் தீப்பு என்ன?
    அடுத்ததாக, ##நாங்கள் இரு தோட்டங்களை அடைந்து அந்த இரண்டிற்கிம் இடையில் அமர்ந்தோம். அப்போது நபி அவர்கள் இங்கே இருங்கள் என்று சொல்லிவிட்டுத் தோட்டத்திற்குள் சென்றார்கள். அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்துவரப்பட்டு போரீச்சந் தோட்டத்திலுள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார்……..
    ………. அவருடன் அவரை வளர்த்த செவிலித்தாயும் இருந்தார்……. அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். “அபூஉசைதே! இரு வெண்ணிற சனல் ஆடைகளை அவளுக்கு அளித்து அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டுவிடு” என்று சொன்னார்கள்.##
    1. தோட்டத்திற்கு வெளியே இருந்தவர்கள் முகம்மதுநபி தலாக் சொன்னதற்கு எப்படி சாட்சியாவார்கள்.?
    2. வெளியில் வந்த முகம்மதுநபி இரண்டு வெள்ளை ஆடைகளைக் கொடுத்து கொண்டுபோய் விட்டுட்டு வாருங்கள் என்று கூறியதைவைத்து வெளியில் உள்ளவர்கள் இது தலாக் என்று எப்படி புரிந்துகொண்டார்கள்? ஒரு வேளை வெள்ளை ஆடை என்பதை வைத்து விதவைகளின் உடை என்ற கருத்தில் புரிந்துகொண்டார்களா அன்சார் அவ்வர்களே?
    3. தலாக் என்றச் சொல்லே இல்லாதபோது இது தலாக் என்று நான் அறைகுறையாக ஆய்வு செய்துவிட்டேன். அதனால், புகாரி இதனை எதற்கு மணவிலக்கு என்ற தலைப்பில் கூறுகிறார் என்று அன்சார் அவர்கள் விளக்கம் கூறுவாரா?

  44. ##இப்னு உமர் தொடர்பான விஷயங்கள் முரண்பட்டதாக கூறியுள்ளீர்கள். அந்த ஹதீதை பிரித்தரியும் திரனும், தங்களுக்கு இல்லாதிருப்பது (அறைகுரையெனப்) புரிகிறது. முதலில் அது சார்ந்த அறிவிப்புக்களைப் பார்த்தால், உங்களுக்கு முரண்பாடாகத் தெரியும் அம்சங்கள் எளிதில் முரணற்றது எனப் புரியும்?.

    ……(மாதவிலக்கிலிருந்து தூய்மையாகியிருக்கும்) இந்தக் காலமே, (பெண்களை விவாகரத்துச் செய்ய) ஆண்களுக்கு இறைவன் உத்தரவிட்ட காலமாகும்’ என்றும் கூறினார்கள்.” பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4908 ##
    இப்னு உமர் ஹதீதை இரு வேறுபட்டது என்றும் எனக்கு பிரித்தரியத் தெரியவில்லை என்றும் கூறுகிறார். அவர் இசுலாமிய கோட்பாடுகளைப் புகாரியைவிட புரிந்து கொண்ட மேதாவி என்று தன்னை கூறுகிறார் போலும். இரண்டு வேறுபட்ட ஹதீதல்ல இது. இதுபோல பல ஹதீதுகளை புகாரி தேவைக்கேற்ற இடங்களில் பயன்படுத்தியுள்ளார். நான் கொடுத்துள்ளது முழுமையானது. அவர் சொல்லுவது தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவது. இக்கருத்தும் நுனிப்புல் மேயும் நானும் புரிந்துகொள்ள முடியாமல் அரைகுறையாக எழுதியுள்ளேன் என்றே வைத்துக்கொள்வோம்.. நான் தலாக் செய்தவர் மாதவிடாய்காலத்தில் தலாக் செய்யலாம் என்று கூறுவதை எடுத்துக்காட்டுத் தந்துள்ளேன். அன்சார், அவரின் மகன் கூறியதை எடுத்துக்காட்டியுள்ளார். யார் சொல்லவது சரியாக இருக்கும்? பிரச்சனைக்குறியவரா? அல்லது அவர் மகனா? இரண்டும் தான் என்றால் முரண்பாடுதானே?
    புகாரி தீர்ப்புச் சொல்லவில்லையாம் . உங்களிடம் கேள்வி கேட்டுள்ளாரோ? என்னே அடிப்புள் மேய்தல். புல்லரிக்குது.

    ##சகோ. சாகித் தாங்கள் நான் என்ன எழுதினேன் என்பதை, அறைகுரையாக விளங்கியுள்ளீர்கள் போலும். அதாவது, “அக்ரஅத்” என்ற தனிச்சொல்லுக்கு, சாகித்தாகிய நீங்கள் அதன் பின் வருகின்ற “மர்அத்து இதா தனா ஹைலுஹா. மர்அத்து இதா தனா துஹ்ருஹா” என்ற சொற்றொடர்களை சேர்க்காமல் கூறியிருந்தீர்கள். எனவேதான், அந்த சொற்றொடர்களை சேர்க்கும் போதுதான் ஆர்த்தம்-கருத்து மாறுபடும் என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.##
    அந்த சொற்றொடர்களின் மொழிபெயர்ப்பைத்தான் நான் எழுதியுள்ளேன். அந்த சொற்றொடர்களை சேர்க்கும் போதுதான் அர்த்தம்-கருத்து மாறுபடும் என்றெல்லாம் புகாரி சொல்லவில்லை. அதனை மீண்டும் எனது பின்னூட்ட எண்:43 படித்துக்கொள்ளுங்கள்.

    ##.(வேண்டுமெனில், சம்மந்தமில்லாமல் “வ யூகாலு மா கராஅத் பிசலன் கத்தூ இதாலம் தஜ்மஹ் வலதன் பீ பத்தனிஹா” என்று கூடுதலாக் சேர்த்துள்ளீர்கள் ##

    இது நான் கூடுதலாக சேர்த்த்து அல்ல. அந்த ஹதீதை வாசகர்கள் புகாரியில் படித்துப் பார்துக்கொள்ளவும்.

    ## இஸ்லாத்தைப் பொருத்த வரை, எந்தவொரு அம்சமானாலும் அதனை ஒரு வணக்கமாகக் கருதுவதெனில், அது இரண்டு அடிப்படைகளை மைய்யமாக வைத்து முடிவு செய்யப் படல் வேண்டும். ஒன்று “அல்குர்ஆன்“ (அல்லாஹ்வின் வேதம்) மற்றயது “அஸ்ஸுன்னா“ (முஹம்மது நபியின் சொல், செயல், அங்கீகாரம்-ஹதீஸ்) இந்த இரண்டுக்கும் மாற்றமாக எப்பெரும் (பாண்டித்தியம் பெற்ற) அறிஞர் வியாக்கியானம் கூறினாலும் அதனை காதில் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. (அப்படி யார் எது சொன்னாலும் சொல்லப் படும் விஷயம், அல்லாஹ் கூறியிருக்கிறானா? அவன் தூதரின் வழிகாட்டுதலில் அது இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இல்லையெனில் புறக்கனிக்க வேண்டும்) இதுதான் அடிப்படை. “நமது இந்த மார்க்கத்தில் இல்லாததை யாரேனும் புதிதாக தோற்றுவித்தால் (அது இறைவனால்) நிராகரிக்கப்படும்” (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா)
    அந்த அடிப்படையை வைத்து தாங்கள் இங்கு சிலவற்றுக்கு,அறிஞர் (இமாம்)களின் வியாக்கியானங்கள் என தந்துள்ளதைப் பார்ப்போமேயானால், அது கணக்கில் கெள்ளப் பட வேண்டிவையல்ல. அது, புஹாரியாக, மஃமராக,அபூ நகஈயாக இருக்கட்டும். அவர்கள் தன் கருத்துக்கு நிறுவ,கொண்டு வரும் ஆதாரம் (ஹதீதாக இருப்பின் அதன் தரத்துடன்) என்னவென்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, அவர் கருத்தை ஏற்க முடியாது ##
    இசுலாத்தின் அடிப்படை குர்ஆனும் ஹதீதும் (நபி வழி.) அதைத்தான் நீங்கள் பார்க்கவேண்டும் எனகிறார் அன்சார்.
    குர்ஆன்? புரிகிறது. நபி வழி என்றால் எங்கே உள்ளது?
    புகாரி, முஸ்லீம், திரமிதி இன்னும் சிலர் தொகுத்ததே நபிவழிக்கு ஆதாரம். ஆனால் புகாரி மற்றும் எந்த மாமேதையின் விளகத்தையும் ஏற்க முடியாது. அப்படியானால் நபி வழிக்கு என்ன ஆதாரம்?
    அவர்களும் புகாரி, முஸ்லீம், திர்மிதி போன்றவர்களைத்தான் ஆதாரமாக காட்டுவார்களாம். ஆனால் அவர்களுடை கருத்துக்கு அது பொருந்தாவிட்டால் ஏற்க முடியாதாம்.
    என்ன புரியவில்லயா? அன்சாரது விளக்கங்களுக்கான பிரச்சனை புரிந்து கொள்வதில் இல்லை. பிஜே அவுலியா சொல்லவதை புகாரியும், முஸ்லீமும் ஏற்றுக் கொள்ளவேண்டும்; நீங்களும் நானும் சுய அறிவோடு ஆராய்ந்து பிஜே அவுலியா சொல்வதை சரி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது கொள்ளை. இறந்து போனவர்களை எப்படி புரியவைப்பது! அதனால் நபிவழி வேண்டும் ஆனால் அதனை தொகுத்தவர்கள் சொல்லவதைக் கேட்கக்கூடாது என்று பினாத்துகிறார்.
    பிற எந்தப்பிரிவு இசுலாமியர்களுடனும் விவாதங்கள் செய்யமுடியம். காரணம் அவர்கள் நிகழ்காலத்தின் வாய்வியல் சார்ந்து இருக்கிறார்கள். பிஜே அவுலியாவின் மீது ஈமான் கொண்டவர்கள் பழம் பக்தி பரவசத்தில் வாழ்கிறார்கள். பிஜே அவுலியாவின் மீதான ஈமான்தான் இவரது இந்த அடிப்புல் விளக்கங்களுக்கு காரணம் என்று புரியாமல் பதில் எழுதிவிட்டேன். அதனால் இத்துடன்….
    ஜனகனமன அதிநாயக …..

  45. சாகித்தின் 45, 46 ஆகிய பின்னூட்டங்களுக்கு…

    //…….தன் மனைவியை மணவிலக்குச் செய்யும் ஒருவர் அதை மனைவிடம் நேரடியாகத் தெரிவிக்கலாமா?” என்ற கேள்வியை வைத்து புகாரி அவர்கள் முக்ம்மதுநபி செய்த தலாக் நிகழ்வை ஆதாரமாகத் தந்துள்ளார். இதன் மூலம் புகாரி தெரிவிக்கலாம் என்கிறாரா? அல்லது தெரிவிக்க கூடாது என்கிறாரா? மொழிபெய்ர்ப்பாளர்கள் தெரிவிக்கலாம் என்கிறார்கள். மாமேதை அன்சார் அவர்களின் தீப்பு என்ன?//

    அதி மேதாவி? அறைகுரை சாகித் அவர்களே! இங்கு எது குறித்து விவாதிக்கப் படுகிறது என்று அறியாமல் உளறுகிறீர்கள். தங்களின் அறைகுரை ஆய்வில் (பின்னூட்டத்தில அல்ல) இவ்வாறு எழுதியு்ளதைத்தான் நான் விமர்சித்து எழுதியிருந்தேன். அதாவது
    “………..உன் குடும்பத்தாரிடம் சென்றுவிடு” என்று கூறிவிட்டு வெளியில் வந்து அபு உசைத் என்பவரிடம் இரு வெண்ணிற சணலால் நெய்யப்பட்ட ஆடைகளை உமையா அவர்களுக்கு கொடுத்து அவரது குடும்பத்தாரிடம் கொண்டு விட்டுவிடுங்கள் என்று கூறியதாக (புகாரி: 5254,5255) நபிமொழி உள்ளது. இந்நிகழ்சி முத்தலாக்கையும் ஒரேதடவையில் முகம்மதுநபியே கூறியதற்கு சாட்சியாகவும் இருக்கிறது”
    இங்கு முத்தலாக்கையும் ஒரே தடவையில் கூற வேண்டும் என்று தங்களுக்கு யார் சொன்னார்? புஹாரியின், அறபி மற்றும் அதன் பொருளையும் தந்து “முத்தலாக்” என்ற “வார்த்தை” இடம் பெற்றிருப்பின் அதனைத் தரும் படி கேட்டிருந்தேன். (அதனை தாங்கள் இன்னும் தரவில்லை.) எனவே, “முத்தலாக்” என்று தாங்கள்தான் அறைகுரையாக விளங்கிக் கொண்டு உளரியுள்ளீர்கள் என்று, ஏற்றுக் கொண்டும் விட்டீர்கள். நபியவர்களுக்கு அப்பெண்ணுடன் “தாம்பத்தியமே” நடைபெறவில்லை, பின் என்ன முத்தலாக்? முதலில் முத்தலாக் என்றால் என்னவென்று முதலில் தாங்கள் விளங்க வேண்டியுள்ளீர்கள். முத்தலாக்கைப் பொருத்த வரை, திருமனமான பெண், (முதல் தலாக) விவாகரத்து செய்யப் பட்ட பின்,அவளுக்கு 3 மாதவிடய்க் காலம் (3 மாதம்) முடியும் வரை, (அவளுக்குரிய அத்தனை உரிமைகளுடன்) தன் கணவன் இல்லத்திலேயே இருக்க வேண்டும். 3மாதவிடாய் அல்லது 3மாதம் முடிவதர்க்கு முன், கனவன் அவளை மீள அழைத்துக் கொண்டால், “முத்தலாக்” என்ற 3 தலாக்கில், ஒன்று குறைந்து விடுகிறது. மீதியாக இரண்டு இருக்கிறது.(3மாதத்திற்குள் கனவன் மீள அழைத்துக் கொள்ளாவிட்டால் இருவரும் தம்பதிகளாகமாட்டார்கள். தானாக மனம் முறிந்து விடும்) பின் வாழ்ந்து மீண்டும் பிணக்குகள் ஏற் படின் 2வது தலாக் நடை பெறும்..(ஒரு ஆரம்பம் ஒரு முடிவு இருந்தால்தான் அது தலாக் என்று கருதப் படும்)

    இங்கு தாங்கள், “இந்நிகழ்சி முத்தலாக்கையும் ஒரேதடவையில் முகம்மதுநபியே கூறியதற்கு சாட்சியாகவும் இருக்கிறது” என்று,
    எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?
    முஹம்மது நபி அப்பெண்ணுடன் வாழ்ந்தாரா?
    பிணக்குகள் ஏற்பட்டு, பின் விவாகரத்து செய்தாரா?
    எனவே, இது தங்களின் “தாலக் பற்றி” எழுத வந்த இலட்சணத்தை நன்கு உணர்த்துகிறது.

    அடுத்து அதிமேதகுவின் கேள்விகள்

    //“1. தோட்டத்திற்கு வெளியே இருந்தவர்கள் முகம்மதுநபி தலாக் சொன்னதற்கு எப்படி சாட்சியாவார்கள்.?//
    “அப்போது நபி அவர்கள் இங்கே இருங்கள் என்று சொல்லிவிட்டுத் தோட்டத்திற்குள் சென்றார்கள்…..அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் ‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி ‘கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள்”
    அம்பி சாகித்! இந்த வாசகங்களையும் ஒருக்கா ஒழுங்காப் படிங்கோவன். அவர்களை அங்கேயே இருக்க வைத்து விட்டு, மீண்டும் வந்து அவர்களே கூறிய வாசகங்களைத்தான் இந்த அறிவிப்பாளர் அறிவிக்கிறார். இன்னும் சொல்லப் போனால் “அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டு போய்விட்டுவிடு” என்பதிலிருந்தும், அவரை விடுவித்து விட்டார் என்பதை சாட்சிகளோடு அறியலாம். இதற்கு ”முத்தலாக்” வேண்டியதில்லை.(இதுவும் விவாகரத்தின் ஒரு வகை)

    //2. வெளியில் வந்த முகம்மதுநபி இரண்டு வெள்ளை ஆடைகளைக் கொடுத்து கொண்டுபோய் விட்டுட்டு வாருங்கள் என்று கூறியதைவைத்து வெளியில் உள்ளவர்கள் இது தலாக் என்று எப்படி புரிந்துகொண்டார்கள்?//

    இதர்க்கும் மேலுள்ள விளக்கத்தைப் படிக்கவும். அத்தோடு “விசுவாசிகளே!
    முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு-இல்லறத்தில் ஈடுபட முன்னமேயே ‘தலாக்’ செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை – ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (33:49)”
    எனவே “இரண்டு வெள்ளை ஆடைகளைக் கொடுத்து” என்பதிலிருந்து அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய சொத்தையும் சேர்த்தே அணுப்புகிறார்.

    //ஒரு வேளை வெள்ளை ஆடை என்பதை வைத்து விதவைகளின் உடை என்ற கருத்தில் புரிந்துகொண்டார்களா அன்சார் அவ்வர்களே?//

    ம் ஹும்! நான் ஏற்கனவே சுட்டியது போல் “புரிதல் என்பது எட்டாக் கணி” போல்தான் உள்ளீர்கள்.உங்களின் புரிதலை அவர்களோடு ஒப்பிடுவதைப் பார்க்கும் போது ஓரளவு விழிப்புடன் உள்ளீர்கள். ஆனால், இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    //3. தலாக் என்றச் சொல்லே இல்லாதபோது இது தலாக் என்று நான் அறைகுறையாக ஆய்வு செய்துவிட்டேன். அதனால், புகாரி இதனை எதற்கு மணவிலக்கு என்ற தலைப்பில் கூறுகிறார் என்று அன்சார் அவர்கள் விளக்கம் கூறுவாரா?//

    சகோ. சாகித்! புஹாரி அவர்கள், அந்த தலைப்பின் கீழ் கொண்டு வந்து, இதுவும் தலாக்கின் ஒரு வகையைச் சார்ந்தது என்பதை சுட்டவே அவ்வாறு கொண்டு வந்துள்ளார். ஆனால், இதர்க்கு ”முத்தலாக்” என்று பொருளல்ல. அது, தங்களின் தவறான (அறைகுரை) புரிதலில்? ஏற்பட்ட குழப்பம்.

    //இப்னு உமர் ஹதீதை இரு வேறுபட்டது என்றும் எனக்கு பிரித்தரியத் தெரியவில்லை என்றும் கூறுகிறார்.//

    “இரு வேறு பட்டது” என்று நான் கூறவில்லையே!. இதோ நான் எழுதியதை மீண்டும் ஒழுங்காக பிழையின்றி வாசியுங்கள். “இப்னு உமர் தொடர்பான விஷயங்கள் முரண்பட்டதாக கூறியுள்ளீர்கள். அந்த ஹதீதை பிரித்தரியும் திரனும், தங்களுக்கு இல்லாதிருப்பது (அறைகுரையெனப்) புரிகிறது. முதலில் அது சார்ந்த அறிவிப்புக்களைப் பார்த்தால், உங்களுக்கு முரண்பாடாகத் தெரியும் அம்சங்கள் எளிதில் முரணற்றது எனப் புரியும்?.” என்று ஒரே சம்பவம் பல இடங்களில் பதிவு செய்யப் பட்டிருப்பதனால், அந்த சம்பவங்கள் குறித்து முழுமையாக தாங்கள் அறியும் பொருட்டு,ஹதீத் எண் 4908ஐ கொடுத்தேன்.ஆய்வு செய்ய களமிறங்கிய நீங்கள், அந்த விஷயம் குறித்த அனைத்து அம்சங்களையும்-சம்பவங்களையும் அறிந்திருப்பதே ஆய்வு? செய்ய முற்படும் (அதி)மேதாவிக்கு அழகு. அதனை விட்டு விட்டு, //இசுலாமிய கோட்பாடுகளைப் புகாரியைவிட புரிந்து கொண்ட மேதாவி …………….கொடுத்துள்ளது முழுமையானது. அவர் சொல்லுவது தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவது. இக்கருத்தும் நுனிப்புல் மேயும் நானும் புரிந்துகொள்ள முடியாமல் அரைகுறையாக எழுதியுள்ளேன் என்றே வைத்துக்கொள்வோம்.. நான் தலாக் செய்தவர் மாதவிடாய்காலத்தில் தலாக் செய்யலாம் என்று கூறுவதை எடுத்துக்காட்டுத் தந்துள்ளேன். அன்சார், அவரின் மகன் கூறியதை எடுத்துக்காட்டியுள்ளார்.// என்று உளறுவதில் அர்த்தமில்லை.

    //யார் சொல்லவது சரியாக இருக்கும்? பிரச்சனைக்குறியவரா? அல்லது அவர் மகனா? இரண்டும் தான் என்றால் முரண்பாடுதானே?//

    இரண்டும் முரண்பாடு இல்லாதது என்பதை விளக்கத்தான் புஹாரியின் 4908 இலக்கத்தை தந்தேன். மீண்டும் கவனமாக வாசியுங்கள் புரியும். (புரியாவிட்டால் துணைக்கு யாரையாவது அழைத்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில் அறபி தெரியாது என்று தாங்கள்தான் உளரினீர்கள்.

    //புகாரி தீர்ப்புச் சொல்லவில்லையாம்.உங்களிடம் கேள்வி கேட்டுள்ளாரோ? என்னே அடிப்புள் மேய்தல். புல்லரிக்குது.//

    உங்களின் அறைகுரை வாதப் படி, புஹாரி அவாகள் இட்ட அனைத்துத் தலைப்புக்களையும் தீர்வாகவேதான் விளங்கிவீர்களோ!!?? என்னே தங்களின் மதி நுட்பத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அதிக பாடங்களுக்குத் தலைப்பிட்டுக் கூறும் புஹாரி அவர்கள், இந்த ஹதீதைக் கொண்டு வரும் போது அந்தத் தலைப்பை ஏன் கேள்வியாக வைக்கிறார் என்றால், அதனை வாசிப்பவர்கள் தேவையான சட்டத்தை அதிலிருந்து எடுத்துக் கொள்ளவே, ஒரு வேளை அந்தத் தலைப்புக்கு சம்மந்தமில்லததாக இருப்பின் புஹாரி அவாகள் அதனைக் கேள்வியாக வைத்ததிலும் தவறு கிடையாது என்றுதான் எவறும் புரிந்து கொள்வார்கள். ஆனால் சாகித் போன்ற ”புரிதலில்” உச்சகட்டத்தை அடைந்தவாகளை என்னவென்பது?

    //அந்த சொற்றொடர்களின் மொழிபெயர்ப்பைத்தான் நான் எழுதியுள்ளேன். அந்த சொற்றொடர்களை சேர்க்கும் போதுதான் அர்த்தம்-கருத்து மாறுபடும் என்றெல்லாம் புகாரி சொல்லவில்லை. அதனை மீண்டும் எனது பின்னூட்ட எண்:43 படித்துக்கொள்ளுங்கள்//

    அதைத்தான் நானும் சொல்கிறேன் அதைச் சொன்னது புஹாரியல்ல மஃமர்தான் என்றும், (நீங்கள்தான் அதனை புஹாரி கூறுகிறார் என்று ஆரமபத்தில் உளரி, பின் வாபஸ் வாங்கி் கொண்டீர்கள்) “அக்ரஅ-த்“ என்று தனியே அதர்க்குப் பொருள் வராது என்றும் “துஹ்ருஹா-ஹைழுஹா” என்ற வாசகம் இல்லாமல் “நெருங்கினால்” என்பது வராது என்பதை சுட்டவே அவ்வாறு கூறினேன்.
    மஃமர், அவ்வாறு (கருத்து மாறு படும் என்று) கூறாவிட்டாலும், அவர் தந்த உதாரணத்தை வைத்து புரிந்து கொள்ள வேண்டும். கருத்து மாறு படும் என்று சொல்லி விட்டுப் போனால் பரவாயில்லை. பின் எதர்க்கு உதாரணத்துடன் விளக்க வேண்டும்.? சாகித் போன்ற அறைகுரைகள் வருவார்கள். இப்படி உளருவார்கள். எனவே அவர்கள் அப்படி உளரக் கூடாது என்று புரிய வைக்கவோ என்னவோ, இப்படி உதாரணத்துடன் விளக்கியுள்ளார்கள் போலும். (உதாரணத்துடன் விளக்கியும் இந்த மாதிரியான மண்டைக்கு விளங்க வில்லையெனின், அதர்க்கு வாசகர்களாகிய நாங்கள் பொருப்பல்லவே!)

    //##.(வேண்டுமெனில், சம்மந்தமில்லாமல் “வ யூகாலு மா கராஅத் பிசலன் கத்தூ இதாலம் தஜ்மஹ் வலதன் பீ பத்தனிஹா” என்று கூடுதலாக் சேர்த்துள்ளீர்கள் //

    என்று நான் கூறியது, நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த இடத்துக்கு அவசியமற்றது-தேவையில்லாதது என்பதனையே! அதனால்தான் “வேண்டுமெனில், சம்மந்தமில்லாமல்” இங்கு அதிகப் படியாக பிரசங்கித்தனம் செய்கிறீர்கள் என்று நாசூக்காக சுட்டினேன். ஏன் சாகித்! எதையும் அறைகுரையாகவே விளங்குவேன் என்று யாரிடத்திலும் சபதம் கொண்டுள்ளீர்களோ? (சாகித்தின் சாகித்திய விளக்கங்கள்-புரிதல்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.)

    //இசுலாத்தின் அடிப்படை குர்ஆனும் ஹதீதும் (நபி வழி.) அதைத்தான் நீங்கள் பார்க்கவேண்டும் எனகிறார் அன்சார். குர்ஆன்? புரிகிறது. நபி வழி என்றால் எங்கே உள்ளது? புகாரி, முஸ்லீம், திரமிதி இன்னும் சிலர் தொகுத்ததே நபிவழிக்கு ஆதாரம். ஆனால் புகாரி மற்றும் எந்த மாமேதையின் விளகத்தையும் ஏற்க முடியாது. அப்படியானால் நபி வழிக்கு என்ன ஆதாரம்?அவர்களும் புகாரி, முஸ்லீம், திர்மிதி போன்றவர்களைத்தான் ஆதாரமாக காட்டுவார்களாம். ஆனால் அவர்களுடை கருத்துக்கு அது பொருந்தாவிட்டால் ஏற்க முடியாதாம்//

    ம்! இப்படி (புரியாவிட்டால்) உறுப்படியான கேள்விகள் கேட்பதே அறிவுடமை. ஒரு விஷயம் விளங்க-புரியவில்லையெனின் உளராமல், அதனை வினாத் தொடுத்து விளங்க முயற்சிக்க வேண்டும். சும்மா “வினவு!” என்று மட்டும் இணையத்தில் பெயர் வைத்தால் போதாது? அதர்க்காக வினவு! என்ற பெயரில் இங்கே உளறுவது போன்று உளரவும் கூடாது. இப்பொழுது சாகித்திடம் ஓரளவு மாற்றங்கள் இருப்பதை உணர முடிகிறது. (தொடரட்டும்! சாகித் ஒரு சானக்கியனாக..)

    சரி, விஷயத்துக்கு வருகிறேன்.
    சாகித் “சாந்தி” மார்க்கத்தை விட்டு வெளியே போகும் போது, இந்த அம்சங்களை அறியாமல் (அறைகுரையாக)தான் வெளியேறியுள்ளார் போலும். அதாவது, இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள் இரண்டேதான். ஒன்று குர்ஆன் மற்றயது நபி வழி. அதைத்தான் அனைத்து முஸ்லீம்களும் (சக்திக்குட்பட்ட அளவு 2:286) (ஆனால் நிர்பந்தம் கிடையாது 2:256 என்ற குர்ஆனிய வசனங்களுக்கேற்ப,) பின் பற்றி ஒழுக வேண்டும். மேலும் அவ்வரண்டையும்தான் ஒழுக வேண்டும் என்பதர்க்கு குர்ஆனிலிருந்தும் நபி மொழியிலிருந்தும் ஆதாரம் கேட்கிறீர்கள். இதோ

    அதர்கான குர்ஆனிய ஆதாரங்கள்:

    (நபியே! ) நீர் கூறும்; “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் – நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. (3:32)

    அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்;. நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (3:132)

    இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (5:92)

    அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
    அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 4:13,14)

    அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ”செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24:51,52)
    இன்னும் ஏராளமான வசனங்களை இந்த எண்களில் பார்க்கவும் (8:01) (8:20) (4:59) (8:46) (64:12)

    நபி மொழிகளிலிருந்து…

    மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை” என்று நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.
    அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : ஹாகிம் (318)

    ”என் சமுதாயத்தினர் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?” என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”எனக்குக் கீழ்ப்படிந்தவர் சுவர்க்கம் புகுவார். எனக்கு மாறு செய்தவர் ஏற்க மறுத்தவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.
    அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (7280)
    (இது பற்றி மேலும் அறிய “கருத்து வேறுபாடுகள் வருவது ஏன்?” என்ற தலைப்பில்
    http://kadayanalluraqsha.com/?p=1748 வாசிக்கவும்)

    //அப்படியானால் நபி வழிக்கு என்ன ஆதாரம்?அவர்களும் புகாரி, முஸ்லீம், திர்மிதி போன்றவர்களைத்தான் ஆதாரமாக காட்டுவார்களாம். ஆனால் அவர்களுடை கருத்துக்கு அது பொருந்தாவிட்டால் ஏற்க முடியாதாம்//

    இங்குதான் தாங்கள் விழுந்து விட்டீர்கள். அதாவது ஒருவர் நபி முஹம்மது சொன்னார் என்று சொல்வதர்க்கும், முஹம்மது சொன்னார் என்று கூறி விட்டு அதர்க்கான விளக்கம் என்று கூறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. புகாரி, முஸ்லீம், திர்மிதி, நஸஈ, அபூ தாவூத், போன்றோர் அவர்கள் யார் யாரிடமிருந்து நபிமொழிகளை தீர விசாரித்து அறிந்து, மனனமிட்டுக் கொண்டார்களோ, அவைகளை நூல் வடிவிலாக்கினார்கள். (இன்னாரிடமிருந்து இன்னார் எனக்கு அறிவித்தார் என்று, முஹம்மது நபி வரைக்குமுள்ள சங்கிளித் தொடரோடு அந்நபிமொழியை பதிவு செய்திருப்பார்.) அதுதான் நபி மொழித் தொகுப்பாக இருந்தது.
    ஆனால், அதர்க்கு வியாக்கியானம் செய்பவர்கள் அவர்களுக்கிருந்த (அன்றைய) அறிவு அனுபவத்தோடு வியாக்கியானம் செய்தார்கள். அது இவ்விரண்டுக்கும் (குர்ஆன், ஹதீஸ்க்கு) மாற்றமில்லையெனின் ஏற்றுக் கொள்வதில் தவறு இல்லை. அதர்க்கு மாற்றமாக இருக்குமெனில் புறக்கனிப்பதுதான் முஹம்மது நபியை மதிப்பதர்க்கு அடையாளமாகும்.புகாரி, முஸ்லீம், திர்மிதி, நஸஈ, அபூ தாவூத், இவைகளில் ஹதீஸ் இருக்கிறது என்று நாங்கள் கூறுவதென்பது, அவர்களுடைய நூல்களில் பதிவு செய்யப் பட்ட நபி மொழிகளையே தவிர, அவர்களது விளக்கங்களை அல்ல. சகோஇ சாகித் இது விஷயத்தில் தெளிவாக விளங்கிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தவறாக எண்ணாவிட்டால் http://kadayanalluraqsha.com/?p=1748 என்ற கட்டுரையை தயவு செய்து வாசிக்கவும். ஏனெனில் தாங்கள் இன்னும் தெளிவு பெறலாம்.)

    //என்ன புரியவில்லயா? அன்சாரது விளக்கங்களுக்கான பிரச்சனை புரிந்து கொள்வதில் இல்லை. பிஜே அவுலியா சொல்லவதை புகாரியும், முஸ்லீமும் ஏற்றுக் கொள்ளவேண்டும்; நீங்களும் நானும் சுய அறிவோடு ஆராய்ந்து பிஜே அவுலியா சொல்வதை சரி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது கொள்ளை. இறந்து போனவர்களை எப்படி புரியவைப்பது! அதனால் நபிவழி வேண்டும் ஆனால் அதனை தொகுத்தவர்கள் சொல்லவதைக் கேட்கக்கூடாது //

    இது வரைக்கும் நீங்கள் சுய அறிவோடு ஆய்வு செய்ததாக குறிப்பிட்டிருப்பது தின்னமாக உங்களுக்கே நீங்கள் முரண் படுகிறீர்கள். காரணம், தங்களின் ஆய்வின் இலட்சணம், (புரிதல் இருப்பின்) தங்களுக்கே புரிந்திருக்கும் இதர்க்கும் முந்திய விளக்கங்கள் போதுமானது என நினைக்கிறேன்.

    //பிஜே அவுலியாவின் மீது ஈமான் கொண்டவர்கள் பழம் பக்தி பரவசத்தில் வாழ்கிறார்கள். பிஜே அவுலியாவின் மீதான ஈமான்தான் இவரது இந்த அடிப்புல் விளக்கங்களுக்கு காரணம்//

    பீ ஜேயாக இருக்கட்டும் பீ ஜேயின் வாப்பாவாக இருக்கட்டும்! எவனாக இருப்பினும் சரி (சாகித் போன்ற அறைகுரைகளாகட்டும்) இந்த மார்க்கத்தில் வேதத்திலும் நபி போதனையிலும் இல்லாததை சொன்னால் அவர்களை சேட்டைப் பிடித்துக் கேட்போம். இஸ்லாத்தில் இருப்பதை, இஸ்லாத்துக்கு வெளியே இருக்கும் எவனாக இருப்பினும் ஷெய்தானாக இருக்கட்டும் (குர்ஆன், ஹதீஸில்) இருந்தால் ஒருக்காலும் பின் பற்ற, தயங்கவே மாட்டோம்.

    நன்றி
    அன்ஸார்-தோஹா

  46. //நபிவழி வேண்டும் ஆனால் அதனை தொகுத்தவர்கள் சொல்லவதைக் கேட்கக்கூடாது என்று பினாத்துகிறார்.//

    சாகித்தின், கூறு கெட்ட புத்திக்கு உதாரணம் கூறியும் புரியவில்லை. இந்த உதாரணத்தையாவது கூறி புரிய வைக்கலாம் என நினைக்கிறேன். அதாவது, சாகித் கூறினார். என்பதர்க்கும், சாகித் கூறியதாக, சுரேஷ் கூறினார் என்பதர்க்கும் என்ன வேறுபாடு உள்ளதோ, அதுபோல்தான், இமாம் கூறினார் என்பதர்க்கும், நபி கூறினார் என்று இமாம் கூறுவதர்க்கும், உள்ள வேறுபாடு. இந்த வேறுபாடு கூட அறியாமல்
    “தலாக் – சரியத் சட்டமும் இசுலாமியப் பெண்களின் அவலமும் !” என்று, (அறபி தெரியாது என்று கூறி) ஆய்வு? எழுதிய இலட்சணம்தான், தாங்களும் குழம்பி, ஏனைய வாசகர்களையும் குழப்பியுள்ளீர்கள். பீ ஜேயை நீ்ஙகள் அவ்லியா அளவுக்கு உயர்த்தியுள்ளது, உங்களையே நீங்கள் யார் என்று நன்கு அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். இஸ்லாத்தை விட்டு வெளியேறும் போது, அந்த (குராபாத்) கொள்கையிலிருந்துதான் வெளியேறியுள்ளீர்.(இஸ்லாம் பற்றிய சராசரி அறிவு கூட இல்லாமல் விமர்சனம் என்ற பேரில் வேறு எழுத வந்து விட்டீர்!!)

    //பிற எந்தப்பிரிவு இசுலாமியர்களுடனும் விவாதங்கள் செய்யமுடியம். காரணம் அவர்கள் நிகழ்காலத்தின் வாய்வியல் சார்ந்து இருக்கிறார்கள். பிஜே அவுலியாவின் மீது ஈமான் கொண்டவர்கள் பழம் பக்தி பரவசத்தில் வாழ்கிறார்கள்.//

    ஆமாம். பிற எந்தப்பிரிவு இஸ்லாமியர்களுடனும் விவாதங்கள் செய்யமுடியும் காரணம் உங்களுக்கேற்றாற் போல் அவர்கள் வளைவதாலும் நெலிவதாலும் தரமான-ஆய்வுகளுக்குட்படுத்தாமலமு் தருவதானால் உங்களுக்கு அவர்கள் செவி சாய்ப்பார்கள். ஆனால் அந்தப் பருப்பு எங்களிடம் வேகாது. உம் போன்ற எந்த அறைகுரையாவது இது போன்ற தரம்கெட்ட விமர்சனங்களை செய்யும் போது, முகமூடி கிழிய, சமூகத்துக்கு தோலுரித்துக் காட்டுவோம். சம்மந்தமில்லாமல் பீ ஜே அவர் இவர் என்று, பந்திகளை நீட்டுவதில் அர்த்தமில்லை. புத்திசாலித்தனமாக எது பற்றி பேசப் படுகிறதோ அது குறித்த வாதங்களை இங்கே வைய்யுங்கள்.

    நன்றி
    அன்ஸார்-தோஹா

  47. சகோ. சாகித் அவர்கள் இக்கட்டுரையில் கீழுள்ள விஷயத்தில் நுனிப் புல் மேய்ந்ததால் விளக்கமளிக்கப் கடமைப் பட்டுள்ளேன். அதாவது

    //பனூமுகிரா குலத்தினர் தங்கள் புதல்வியை அலி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகின்றனர். ஆனால் அதற்கு முகம்மது நபி அனுமதியளிக்க மறுத்துவிட்டு, “பாத்திமா என்னில் பாதியாவார். அவரை வருத்தமடையச் செய்வது என்னை வருத்தமடையச் செய்வது போலாகும். வேண்டுமானால் பாத்திமாவை தலாக் செய்துவிட்டு வேறு திருமணம் செய்து கொள்ளட்டும்” என்று கூறுகிறார்கள். (4 மனைவி ஆதரவாளர்கள் கவனிக்க)// என்கிறீர்கள்.
    இப்படிக் கூறும் தாங்களே அதற்கான நியாயமான காரணங்களையும் சில இடங்களில் பின்வறுமாறு கூறியுள்ளீர்கள்.

    //தனது 6 வயது மகளுக்கு திருமணம் செய்து வைப்பாரா? இல்லை இரண்டாந்தாரமாக தன் மகளை மணமுடித்துக் கொடுப்பாரா? எந்தப் பெண்ணாவது தன் கணவன் வேறு திருமண்ம் செய்துக் கொள்ளத்தான் அனுமதிப்பாரா?//

    மேலும் //திருமணம் என்பதில் பெண்ணைப் பெற்றவர்கள் அல்லவா பெரிதும் இழக்கின்றனர். வரதட்சிணை மட்டுமல்ல பிரச்சனை. திருமணச் செலவு என்பதும் திரும்பப் பெறமுடியாத இழப்பல்லவா. பெண்ணைப் பொறுத்தவரை மறுமணம் என்பது முதல் திருமணத்தை விட கூடுதலாகவே செலவு செய்ய வேண்டியுள்ளது. அல்லது கொஞ்சமும் பொருத்தமில்லாத வயது கூடியவர்களை திருமணம் செய்ய வேண்டும். ஏழைகளைப் பொறுத்தவரை மறுமணம் என்பது கானல் நீர்தான்.//

    இப்படியான நியாயமான காரணிகளைக் கூறும் சாகித்திற்கு, முஹம்மத் நபி அவர்கள் “அனுமதியளிக்க மறுத்துவிட்டு, “பாத்திமா என்னில் பாதியாவார். அவரை வருத்தமடையச் செய்வது என்னை வருத்தமடையச் செய்வது போலாகும். வேண்டுமானால் பாத்திமாவை தலாக் செய்துவிட்டு வேறு திருமணம் செய்து கொள்ளட்டும்” என்று கூறுகிறார்கள்” இப்படிக் கூறுவதில் மட்டும் என்ன தவறுல்லது.??

    ஒரு ஆண் இரண்டாவது திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தில் தடையேதும் இல்லை. ஆனால் இவ்வாறு செய்வதற்கு முன் சில ஒழுங்கு முறைகளைப் பேணிக் கொள்ளுமாறு இஸ்லாம் வழிகாட்டுகின்றது.
    திருமணத்தை உறுதியான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
    وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا(21)4
    உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் (உங்கள் மனைவிமார்கள்) எடுத்துள்ளார்கள்.

    அல்குர்ஆன் (4 : 21)
    மனைவி கணவனைத் தவிர வேறு ஆணை நாடக் கூடாது என்பதும் கணவன் கட்டிய மனைவியைத் தவிர வேறு பெண்ணை நாடக் கூடாது என்பதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இந்த அடிப்படையில் தான் நம் நாட்டில் திருமண ஒப்பந்தங்கள் நடக்கின்றன.
    மேலும் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்வதால் முதல் மனைவியின் உரிமைகளை இரண்டாவது மனைவிக்குப் பங்கு வைத்துக் கொடுக்கும் நிலை ஏற்படுகின்றது.
    மனைவியுடன் இவர் தங்கும் நாட்கள் மனைவிக்கு இவர் அளிக்கும் செலவுத் தொகை இவர் இறந்துவிட்டால் இவருடைய சொத்தில் பங்கு பெறுதல் ஆகிய விஷயங்களில் முதல் மனைவிக்கும் இரண்டாவது மனைவிக்கும் இடையே நீதமாக நடக்க வேண்டும். கணவன் நியாயமாக நடக்கத் தவறினால் அதைத் தட்டிக் கேட்கும் உரிமை மனைவிக்கு உண்டு.
    இரண்டாவது திருமணம் செய்யப் போகும் தகவலை முதல் மனைவிக்குத் தெரியப்படுத்தினாலே இந்த உரிமையை முதல் மனைவிக்கு வழங்க முடியும்.
    ஒருவர் முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்கிறார். இவர் மரணித்து விட்டால் அவர் விட்டுச் சென்ற சொத்தில் முதல் மனைவிக்கும் இரண்டாவது மனைவிக்கும் பங்கு உண்டு.
    ஆனால் இவர் இரகசியமாக இரண்டாவது திருமணம் செய்ததால் இவருடைய சொத்தில் இரண்டாவது மனைவிக்கு பங்கு கொடுக்கப்படாமல் அவர் புறக்கணிக்கப்படும் சூழல் ஏற்படும்.
    மேலும் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்தால் முதல் மனைவியுடன் அவர் செய்த திருமண ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. எனவே ஒப்பந்ததாரரான முதல் மனைவியிடம், தான் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக தெரிவிப்பது அவசியம்.
    இவ்வாறு முதல் மனைவியிடம் தெரிவித்த பின் பழையபடி அதே கணவருக்கு மனைவியாக வாழ்வதற்கும் அல்லது தன்னுடைய திருமண ஒப்பந்தத்தை ரத்துச் செய்து கணவனை விட்டு பிரிந்துகொள்வதற்கும் முதல் மனைவிக்கு உரிமை உள்ளது. இந்த உரிமையை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது.
    இரண்டாவது திருமணம் செய்யும் தகவலை முதல் மனைவியிடம் தெரிவித்தாலே இந்த உரிமையை அப்பெண் பயன்படுத்த முடியும். தெரிவிக்காவிட்டால் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமையை முதல் கணவன் பறித்தவராகிவிடுவார். எனவே முதல் மனைவிக்குத் தெரியாமல் அடுத்த திருமணம் செய்வது தவறு.
    இதற்கு பின்வரும் செய்திகள் ஆதாரங்களாக உள்ளன.

    3110حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْجَرْمِيُّ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَبِي أَنَّ الْوَلِيدَ بْنَ كَثِيرٍ حَدَّثَهُ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ الدُّؤَلِيِّ حَدَّثَهُ أَنَّ ابْنَ شِهَابٍ حَدَّثَهُ أَنَّ عَلِيَّ بْنَ حُسَيْنٍ حَدَّثَهُ أَنَّهُمْ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ مِنْ عِنْدِ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ مَقْتَلَ حُسَيْنِ بْنِ عَلِيٍّ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ لَقِيَهُ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ فَقَالَ لَهُ هَلْ لَكَ إِلَيَّ مِنْ حَاجَةٍ تَأْمُرُنِي بِهَا فَقُلْتُ لَهُ لَا فَقَالَ لَهُ فَهَلْ أَنْتَ مُعْطِيَّ سَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنِّي أَخَافُ أَنْ يَغْلِبَكَ الْقَوْمُ عَلَيْهِ وَايْمُ اللَّهِ لَئِنْ أَعْطَيْتَنِيهِ لَا يُخْلَصُ إِلَيْهِمْ أَبَدًا حَتَّى تُبْلَغَ نَفْسِي إِنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ خَطَبَ ابْنَةَ أَبِي جَهْلٍ عَلَى فَاطِمَةَ عَلَيْهَا السَّلَام فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ فِي ذَلِكَ عَلَى مِنْبَرِهِ هَذَا وَأَنَا يَوْمَئِذٍ مُحْتَلِمٌ فَقَالَ إِنَّ فَاطِمَةَ مِنِّي وَأَنَا أَتَخَوَّفُ أَنْ تُفْتَنَ فِي دِينِهَا ثُمَّ ذَكَرَ صِهْرًا لَهُ مِنْ بَنِي عَبْدِ شَمْسٍ فَأَثْنَى عَلَيْهِ فِي مُصَاهَرَتِهِ إِيَّاهُ قَالَ حَدَّثَنِي فَصَدَقَنِي وَوَعَدَنِي فَوَفَى لِي وَإِنِّي لَسْتُ أُحَرِّمُ حَلَالًا وَلَا أُحِلُّ حَرَامًا وَلَكِنْ وَاللَّهِ لَا تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِنْتُ عَدُوِّ اللَّهِ أَبَدًا رواه البخاري
    ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
    அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தமது இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை நான் செவியுற்றேன். அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன் நபி (ஸல்) அவர்கள், ”ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தனது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறி விட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தமது மருமகனை (அபுல் ஆஸ் பின் ரபீஉவை) அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். ”அவர் என்னிடம் பேசிய போது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப் பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது” என்று கூறினார்கள்.
    புகாரி (3110)
    நபி (ஸல்) அவர்களின் மருமகனார் அபுல் ஆஸ் நபியவர்களின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டார்கள். ஸைனப் மனைவியாக இருக்கும் போது அடுத்த திருமணம் செய்யக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் அபுல் ஆஸ் (ரலி) அவர்களுடன் ஒப்பந்தம் செய்து தனது மகளை அவருக்கு மணமுடித்துக்கொடுத்துள்ளார்கள். அந்த ஒப்பந்தத்தை அபுல் ஆஸ் (ரலி) அவர்கள் கடைசி வரை பேணியதாக நபியவர்கள் அவரைப் புகழ்கிறார்கள்.
    எனவே ஒரு ஆணை ஒரு பெண் திருமணம் செய்யும் போதே நான் மனைவியாக இருக்கையில் என்னைத் தவிர வேறு எந்த பெண்ணையும் அடுத்து மணமுடிக்கக்கூடாது என நிபந்தனையிட்டு மணமுடிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
    5230حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ عَلَى الْمِنْبَرِ إِنَّ بَنِي هِشَامِ بْنِ الْمُغِيرَةِ اسْتَأْذَنُوا فِي أَنْ يُنْكِحُوا ابْنَتَهُمْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَلَا آذَنُ ثُمَّ لَا آذَنُ ثُمَّ لَا آذَنُ إِلَّا أَنْ يُرِيدَ ابْنُ أَبِي طَالِبٍ أَنْ يُطَلِّقَ ابْنَتِي وَيَنْكِحَ ابْنَتَهُمْ فَإِنَّمَا هِيَ بَضْعَةٌ مِنِّي يُرِيبُنِي مَا أَرَابَهَا وَيُؤْذِينِي مَا آذَاهَا هَكَذَا قَالَ رواه البخاري
    மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, ”ஹிஷாம் பின் முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதிகோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீ தாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்க மாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை மன வேதனைப்படுத்துவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும்” என்று சொன்னார்கள்.
    புகாரி (5230)
    அலீ (ரலி) அவர்கள் இரண்டாவது திருமணம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை. முந்தைய செய்தியில் ஆகுமானதை நான் தடை செய்யமாட்டேன் என நபியவர்கள் கூறிய வாசகம் இதை உணர்த்துகின்றது.
    மாறாக இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் தனது மகள் ஃபாத்திமாவை விவாகரத்துச் செய்துவிடுமாறு கூறினார்கள். இரண்டாவது திருமணம் செய்யும் கணவனை விட்டுப் பிரிவதற்கு பெண்ணுக்கு உரிமை உண்டு என்பதால் இந்த உரிமையை இங்கு நபியவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
    எனவே ஒருவர் அடுத்த திருமணம் செய்தால் முதல் மனைவிக்கு அதை அவர் தெரியப்படுத்த வேண்டும்.
    உங்களுடைய நண்பர் இரண்டாவது திருமணம் செய்துவிட்டு பிறகு முதல் மனைவிக்கு இதை தெரியப்படுத்தியாக நீங்கள் கூறினீர்கள். இது சரியா என்று கேட்டுள்ளீர்கள்.
    மேலுள்ள ஹதீஸில் அலீ பின் அபீ தாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு,அவர்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
    இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்பே முதல் மனைவிக்கு தெரியப்படுத்த வேண்டும் என நபியவர்களின் வாசகம் தெளிவுபடுத்துகின்றது.
    ஒப்பந்தத்தில் மாற்றம் செய்வதற்கு முன் ஒப்பந்ததாரரிடம் தெரிவிப்பது தான் சரியான செயல். நம் இஷ்டத்துக்கு ஒப்பந்தத்தை மாற்றவிட்டு பிறகு இதை தெளிவுபடுத்தினால் ஒப்பந்ததாரருக்குரிய உரிமையை நாம் வழங்கவில்லை என்றாகிவிடும். எனவே இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்பே முதல் மனைவிக்கு இதை தெரியப்படுத்துவது தான் சரி.

    மேலும் விளக்கத்துக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
    http://onlinepj.com/kutumbaviyal/palathara_manathin_nibanthanai/
    http://onlinepj.com/kutumbaviyal/palatharamanam/

    எனவே மறுமகன் அலிக்கு இரண்டாவது மனம் முடிக்க அனுமதியளிக்காததன் காரணம் மணம் முடிக்கும் போது எடுத்த உடன் படிக்கையே தவிர வேறு காரணங்ள் அல்ல என்பதை சகோ. சாகித் புறிந்து கொள்வாராக!

    நன்றி
    அன்ஸார்

  48. நண்றி விணவு! நண்றி சாதிக்

    இக்கட்டுறை இஸ்லாமில் மாதவிடாய் மற்றும் தலாக் பற்றிய உங்களின் பார்வையை நண்கு புரியவைத்தது. இவ்விஷயத்தை பற்றி மேலும் அறிந்துக்கொள்ளும் பொருட்டு மார்க்க அறிஞ்சர்களை தொடர்புக்கொன்டு தெளிவுப்பெற்றேன். திருக்குர்ஆனை கதைப்புத்தகம் போல பாவித்து படித்து பொருள்படுத்துவது தவறு. அரபு மொழியில் ஒருவார்த்தை பல அர்த்தங்களை பொருள்படுத்தும்.
    விமர்சணம் செய்ய என்ற ஒரே நோக்கத்தில் எழுதினால் வெளியிலிருந்து ஆயிரம் குற்றங்களை எழுத முடியும். அறிந்ந்துக்கொள்ள வேண்டும் நோக்கில் ஆராய்ந்தால் நிச்சயம் தெளிவுகிடைக்கும்.

    நீங்கள் ஆயிரம் புலுதியை வாரியிரைக்கலாம். பின்வரும் இறைவார்த்தைகளை கொன்டு எங்களின் ஈமானை வலுப்படுத்திக்கொண்டு இருக்கிறோம். நீங்கள் தெளிவுபெற பிரார்த்திக்கிறோம்…..

    திருகுர்ஆண் 57:20. அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.

    திருகுர்ஆண் 6:32. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

    திருகுர்ஆண் 45:24. மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது – அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.

  49. மேற்கில் இலட்சக்கணக்கான செக்ஸ் வெப்சைட்கள் நடத்தி வரும் பெண்களின் காவலர்களை(?) பற்றி யாரும் எழுதுவதேயில்லை.இவர்கள் மிக கண்ணியமானவர்கள்(?)
    working girls,இவர்களை தூற்றுவது பெண்ணடிமைத்தனம்,அலைந்து திரிந்து விபச்சார விடுதிகள் தோறும் சென்று இவர்களைப்பற்றிய குறை நிறைகளை அறிவது,இவர்கள் பெண்ணியத்தின் வெளிப்பாடு போல் அல்லது ஹீரோயின்களாக காட்டுவதில் நாஸ்திக மீடியாக்களுக்கு கொள்ளைப்பிரியம்,

  50. இந்தக் கட்டுரைக்கு அதிகதிமாக, தப்புத்தப்பாக கருத்துக்களை பதிவு செய்தவர் அன்சார் என்பவர். அவர் தன் பெயருக்குப் பின்னே இணைப்புக் கொடுத்த இணையமுகவரி http://www.changesdo.blogspot.com. அதனால் அங்கு எனது சில கேள்விகளை மே 7ஆம் தேதி பதிவு செய்தேன். அதற்கு பதில் கூறுகிறேன் என்றவர் இன்று வரை (ஜூலை 19 வரை) எந்த பதிலும் தரவில்லை. அது பின்வருமாறு:
    “அனசார் அவர்களே,
    வினவில் சாகித் என்பவர் எழுதிய தலாக்-சரியத் சட்டமும் இசுலாமியப் பெண்களின் அவலமும் ……கட்டுரையின் குறிப்பிலிருந்து முகம்மது – உமைமா குறித்த ஹதீது ஒன்றைப் படித்தேன் (புகாரி 5255). அதற்கு நீங்களும் (அன்சார்)பல விளக்கங்கள் எழுதியுள்ளீர்கள். கீழ்வரும் எனது கேள்விக்கும் பதில் தாருங்கள்.

    1. உமைமாவுடன் முதல் முறையாகத்தான் முகம்மது உடலுறவுக் கொள்ள முயற்சிக்கிறார் என்பதை “உங்களிடமிருந்து நான் அல்லாவிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று உமைமா கூறுவதிலிருந்து புரிகிறது.
    பாத்திமா – அலி தலாக் குறித்த உங்கள் விளக்கத்தில் மனைவியிடம் ஒப்பந்தமும் திருமணத்திற்காண அனுமதியும் பெற்றுத்தான் இஸ்லாமியர்கள் திருமணம் செய்வதாகவும், அதுதான் ஹலால் என்றும் புரிகிறது.
    அப்படியானால் முகம்மது, உமைமாவை உடலுறவுக் கொள்ளச் செல்லும்போது உமைமா “ஒரு அரசி, இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா” என்று கூறி தமக்கு வேறு எவ்வித ஆதரவும் இல்லாததால் அல்லாவிடம் பாதுகாப்பு தேடுவதாக கூறுவது ஏன்? திருமணத்திற்கு முன் முகம்மது அனுமதி பெற்றாரா? இல்லையா?
    2. தன் மனைவிடம் உடலுறவுக்கொள்ள செல்லும் ஒருவர் “உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்” என்று கூறவதேன்? “உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்” என்று கூறுவது இதற்கு முன் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டதை குறிக்கவில்லை. அப்படியானால் முகம்மது உமைமாவை திருமணம் செய்துகொண்டு உடலுறவுக் கொள்ள முயன்றாரா? இல்லை திருமணம் செய்யாமலா?
    3. திருமணம் செய்துகொண்ட ஒருவர் தம் மனைவியை தனது வீட்டிற்குத்தான் அழைத்துவருவார். முகம்மது, ஒருவேளை உமைமாவை திருமணம் செய்துகொண்டதாகவே வைத்துக்கொள்ளவோம். ஒரு தோட்டத்தில் உள்ள குடிசையில் இருக்கச் செய்தது அவர் பிற தன்னுடை மனைவிகளிடம் இத்திருமணத்திற்கான அனுமதியை பெறவில்லை என்பதைக்காட்டுகிறது. பிற அனுமதி வாங்கினாரா? இல்லையா என்பதை ஆதாரத்துடன் நீங்கள் விளக்குவீர்களா?
    (அவர் செய்த எந்த திருமணத்திற்கும் தன்னுடைய முதல் மனைவிகளிடம் அனுமதி வாங்கியதாக வரலாறில்லை என்பது வேறு விஷயம்.)
    4. பல பேர்களுடன் சென்று கொண்டிருக்கும் போது இடையில் அவர்களை விட்டு விட்டு அதுவும் பகல் நேரத்தில் ஒரு பெண்ணுடன் (தன் மனைவியே ஆனாலும்) உடலுறவுக் கொள்ளச் செல்வது ஒரு சமூகத் தலைவருக்கு ஏற்புடைய மரியாதையான செயலா?
    5. முகம்மதுவின் 11 பேர் கொண்ட மனைவிகள் பட்டியலிலும், 13 பேர் என்று கூறுபவர்களின் பட்டியலிலும் இந்த உமைமா_வின் பெயர் இடம் பெறவில்லையே! முகம்மது இவரை திருமணம் செய்துகொண்டாரா? இல்லயா? சரியான ஆதாரம் தரவும். இல்லை என்றால் இது விபச்சாரத்திற்கு ஒப்பாகிவிடுமல்லவா ?
    (குறிப்பு: இஸ்லாமியர்கள் என்றால் நேர்மையாளர்கள் என்று கூறிக்கொள்கிறீர்கள். அது உணைமை என்றால் இக் கேள்விகளை பதிப்பித்துமட்டுமே பதில் தருவீர்கள் என நம்புகிறேன். தனிப்பட்ட இமெயில் பதில் தேவை இல்லை. பதில் தரமறுத்தால் வினவு, பறையோசை, செங்கொடி போன்ற தளங்களில் பதியப்படும்.)
    அன்சார்தான் பதில் தரவேண்டும் என்பதில்லை. யாருவேண்டுமானாலும் கூறலாம். வலையுகம் ஹைதர்அலி, வினவை நார்நாரா கிழித்துப்போடுவோம் என்று கூப்பாடு போட்ட அத்திக்கடையார் கூட பதில் கூறலாம்.

  51. பொய்யர் Dakanist எங்கு 5 கேள்வி கேட்டீரோ அங்கேயே அதே திகதியில் உடனடியாக உமக்கு பதில் அளிக்கப் பட்டுவிட்டது.. இந்த லிங்கை க்ளிக் செய்யவும்..

    http://changesdo.blogspot.com/2011/04/new-journey-of-need-changes.html?showComment=1310968033210#comment-c2141077509028560898

    நன்றி
    அன்ஸார்

    • பொய் சொல்வதற்கும் தனி தைரியம் வேண்டும்போலும். அன்சார் கொடுத்துள்ள சுட்டியில் வாசகர்கள் உடனடியாக பதில் கொடுத்துள்ளாரா என்பதை சரிபார்துக்கொள்ளலாம். இவர்கள் புளுகுவதற்கு ஒரு அளவு இல்லையா!

  52. டாங்க்கானிஸ்டுக்கு (மாற்றங்கள் தேவையில் தன்னை அனானியாக காட்டிக் கொண்வர்)
    இந்த லிங்கில் (கமான்டில்)http://changesdo.blogspot.com/2011/04/new-journey-of-need-changes.html?showComment=1310968033210#comment-c2141077509028560898 அளித்த அதே பதிலை இங்கும் தருகிறேன்.

    அனானியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கேள்விகளுக்கான பதில்கள், கீழே ஆங்கிலத்தில் மிகத் தெளிவாக கூடுதல் தகவல்களுடன் தந்திருக்கிறேன். இக்கேள்விகளுக்கு இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன்…
    அதனை வாசித்து விளங்கிக் கொள்ளவும்.

    Jauniyya- the woman who sought refuge from the Prophet

    Ali Sina uses a certain narration from Sahih Bukhari to misguide people about the noble character of the Holy Prophet, may Allah bless him.

    The narration goes as;

    “Narrated Abu Usaid: We went out with the Prophet to a garden called Ash-Shaut till we reached two walls between which we sat down. The Prophet said, “Sit here,” and went in (the garden). The Jauniyya (a lady from Bani Jaun) had been brought and lodged in a house in a date-palm garden in the home of Umaima bint An-Nu’man bin Sharahil, and her wet nurse was with her. When the Prophet entered upon her, he said to her, “Give me yourself.” She said, “Can a princess give herself in marriage to an ordinary man?” The Prophet raised his hand to pat her so that she might become tranquil. She said, “I seek refuge with Allah from you.” He said, “You have sought refuge with One Who gives refuge. Then the Prophet came out to us and said, “O Abu Usaid! Give her two white linen dresses to wear and let her go back to her family.” Narrated Sahl and Abu Usaid: The Prophet married Umaima bint Sharahil, and when she was brought to him, he stretched his hand towards her. It seemed that she disliked that, whereupon the Prophet ordered Abu Usaid to prepare her and to provide her with two white linen dresses.” (Sahih Bukhari, Book of Divorce, Hadith 5255)

    There are certain wrong ideas that get into one’s mind as he reads this rather ‘incomplete’ narration and that too when manipulated by professional missionary liars. I call this incomplete for it does not give all the relevant details of the issue at hand. But Alhamdulillah the vast Hadith treasure saves the rest elsewhere. In the following lines I quote the narrations giving the whole story.

    The Complete Story:

    “Nu’man bin Abi Jaun al-Kindi embraced Islam and came to the Messenger of Allah, may Allah be pleased with him, and said; ‘Shall I not marry you to the most beautiful widow in Arabia? She was married to the son of his uncle who has now died. She is widowed, is inclined towards you and wants to marry you. So the Messenger of Allah, may Allah bless him, married her giving five hundred dirhams of dower. He (Nu’man) said, ‘Please do not reduce her dower.’ The Messenger of Allah replied, ‘I haven’t set up dower of any of my wives or daughters more than this.’ Nu’man said, ‘In your example is a good model. ’ He (further) said, “O Messenger of Allah send to me one who brings to you your wife, I will accompany him and send back your wife with him.’ So the Messenger of Allah sent Abu Usaid al-Sa’di with him … Abu Usaid says, ‘I stayed with them for three days, then I bore her on the camel with covering in a sedan and brought her to Medina and made her to stay with Bani Sa’da. Women of the tribe came to her and welcomed her and as they left they made a mention of her beauty. And the news of her arrival spread in the whole of Medina.’ Abu Usaid said, ‘I turned to the Prophet, may Allah bless him while he was with Banu ‘Amr bin ‘Awf and informed him of her arrival. She was the most beautiful amongst women, so when the women (of Medina) learnt of her beauty they came unto her. One of them said to her, ‘You are a queen, if you wish to be closer to the Messenger of Allah, may Allah bless him, then say to him when he comes to you, ‘I seek refuge from you’, (this way) you will become adorable to him and he will be much inclined to you.’“ (Tabaqat al-Kubra 8/114)

    Yet another narration quoted by Ibn Sa’d says it all;

    “al-Jauniyya sought refuge from the Messenger of Allah, may Allah bless him, for she was told this word will make her adorable to the Prophet. No one other woman sought refuge from him. This was a deception to her because of her beauty. When those who made her to say this were mentioned to the Messenger of Allah he said, ‘They are like the women of Yusuf and their treachery is great.’” (Tabaqat al-Kubra 8/114)

    Hafiz Ibn Hajr has also quoted these narrations in Fath al-Bari to expound this Hadith.

    The details above prove;

    1- She was married to the Prophet, may Allah bless him

    2- Her own father made the arrangement for the marriage.

    3- The Prophet, may Allah bless him, was told that she herself was inclined towards him and wanted to marry him.

    4- Apparently the Prophet, may Allah bless him, married her for through this relation he hoped to strengthen his relations with an important tribe.

    5- She did not hate the Prophet, may Allah bless him. Infact she loved him much and in that she was deceived by a certain woman; reason being the natural jealousy among womankind.

    6- The Prophet, may Allah bless him, sent her back to her family before consummation giving her two dresses.

    7- This infact refutes the lies that Prophet, may Allah bless him, was taken in by some passion for women as he sent her back even though he could have kept her with him.

    8- Although the narration of Bukhari does not give the complete details but the fact that al-Bukhari put this narration in the Book of Divorce testifies that he knew the whole context but brought the narration giving only the part relevant to what he aimed to deduce.

    9- As to the Prophet’s, may Allah bless him, words; “Give me yourself” Hafiz Ibn Hajr explains;

    “His words, ‘Give me yourself’ were to put her at ease and to sway her heart.”

    It was neither a marriage proposal nor a request to get married without dower. Ibn Hajr continues;

    “And this is supported by the narration of Ibn Sa’d that he had agreed with her father on the amount of her dower and her father had told him, ‘She has liking for you and wants to marry you.’” (Fath al-Bari 9/360)

    10- And coming to the words of the woman; “Can a princess give herself in marriage to an ordinary man?”

    This is well explained by Hafiz Ibn Hajr. He quotes Ibn al-Munir;

    “This is what remained with her of ignorance and al-sauqa [the actual Arabic word translated above as ‘ordinary man’] to them refers to anyone other than a King and it appeared strange to her that a queen should marry someone who is not a King. The Prophet, may Allah bless him, could choose to become a King Prophet but he choose a slave Prophet to show his humility to his Lord. And the Prophet, may Allah bless him, did not take exception to her words and excused her as she just came from ignorance [and had not undergone Islamic culturing].” (Fath al-Bari 9/358)

    She was the daughter of the chief of the tribe who had just entered Islam. Knowing that Holy Prophet, may Allah bless him, was the leader of the Muslims she must have thought of him living as Kings. But once she arrived in Medina she learned how the Prophet, may Allah bless him, lived n a simple austere manner which was no way the practice of tribal chiefs let alone kings. This background helps understand her comment. The Prophet, may Allah bless him, overlooked it as she had no knowledge of Islamic ideals.

    The above details certainly kill the arguments of slanderers.

    மேலதிக தகவலுக்கு இதனை சொடுக்கவும்..
    http://www.islamicsearchcenter.com/archive/2011/04/jauniyya-the-woman-who-sought-refuge-from-the-prophet/

    மேலும்
    //(அவர் செய்த எந்த திருமணத்திற்கும் தன்னுடைய முதல் மனைவிகளிடம் அனுமதிவாங்கியதாக வரலாறில்லை என்பது வேறு விஷயம்.)//

    சாகித்துக்கு சரி நிகராக, சாகித் அறை குறை என்றால் நான் அவரை மிஞ்சிய அறை குறை என, இவ்அனானி தன்னை இங்கே வெளிப்படுத்தி, சாகித்துடன் சண்டையிடுவார் போலும்.

    முதலாவது, அறபியில் உள்ள சொற்களின் கருத்துக்களை சாகித் போன்று அறையோடும் குறையோடும் விளங்காமல் அதன் பொருளை சரியாக விளங்கிக் கொள்ள குறைந்த பட்சம் அறபி அகராதிகளையாவது புரட்ட வேண்டும்.. நுனிப் புல் மேயாமல், அடிப் புல்லையும் (சாகித் போன்று அல்லாமல்) மேயுங்கள்.. புரியும்..

    அறபியில் ”تزوج“தஸவ்வஜ என்பதும் “زوج “ ஸவ்வஜ என்பதும், எப்படி வெவ்றோன சொற்களாக இருக்கிறதோ, அதே போன்று அவ்விரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்களும் உள்ளது.

    ”تزوج ” தஸவ்வஜ என்றால் “மனம் முடித்தார்” என்பது பொருள்.
    உதாரணமாக அனானியாக இருக்கும் தாங்கள் சென்ற வருடம் இந்த திகதியில் இன்னாருடைய மகளை மனந்து கொண்டீர்கள் என்றோ அல்லது சாகித் அவளை மனம் முடித்தார் என்றோ, கூறுவதர்க்குத்தான் அறபியில் ”تزوج ” “தஸவ்வஜ” ”மனம் முடித்தார்” என்பதாகும்.
    (அதர்க்காக, ”இல்லை இல்லை நான் ஊர் அறிய உலகம் அறிய அவளின் தாயறிய தந்தையறிய எல்லோர் முன்னிலையிலும்தான் மனந்து கொண்டேன” என்று (நீங்களோ, சாகித்தோ) கூறினால், அவரைப் பாத்து என்ன கூறுவோமோ அதையையே தங்களுக்கும் கூற வேண்டி வரும்.)
    எனவே, அனுமதியோடுதான் மனந்து கொண்டதாக அந்த அர்த்தத்தை (உள்ளடக்கியே) “தஸவ்வஜ” என்ற வாசகம் கையாளப் பட்டுள்ளது. அதுதான் இன்று வரைக்கும் நடை முறையு(வழக்கமு)ம் கூட. இதுதான் முஹம்மத் நபியைப் பற்றி வந்த அறிவுப்புகளும் சொல்லி நிற்கிறது.

    அடுத்து
    “زوج” “ஸவ்வஜ” என்றால் ”மனம் முடித்து வைத்தார்-வைத்தனர்” என்பது பொருள்.
    அதாவது பெண்ணு(மனமகளு)க்குப் பொருப்புதாரியாக யார் இருக்கிறார்களோ, அவர்கள் அந்தத் திருமனத்தை நடத்தி-மனமுடித்து வைத்தார்கள் என்பதைத்தான் அறபியில் “زوج” “ஸவ்வஜ” என்ற வார்த்தையை பயன் படுத்துவார்கள்.

    முஹம்மத் நபியின் வரலாறை சரிவர அறியாததன் விளைவே, தங்களை இவ்வாறு எழுதவைத்துள்ளது. அவரின் ஒவ்வொரு திருமனமும் அந்தந்த பெண்களின் பொறுப்புதாரகள் சகிதம் நடாத்தப் பட்டது என்பதை அவரின் முழுமையான வரலாரை அறிந்தால் இவ்வாறு எழுத மாட்டீர்கள். அதர்க்கான ஆதரங்கள் தேவையாயின் அவரின் வரலாற்றைப் படிக்க இங்கே சொடுக்கவும் http://www.islamkalvi.com/portal/?p=4989

    எனவே, அனானியின் “(அவர் செய்த எந்த திருமணத்திற்கும் தன்னுடைய முதல் மனைவிகளிடம் அனுமதிவாங்கியதாக வரலாறில்லை என்பது வேறு விஷயம்.)” என்ற, தனது அறியாமை வாதம் இதன் மூலம் தெளிவாகிறது. சிலர் தனது அறியாமையை மூலதனமாக்கிக் கொண்டு எழுதுவதைதான் அனானியும் இங்கு இவ்வாறு குறிப்பிடக் காரணமாக இருக்கிறது.

    அடுத்து
    //4. பல பேர்களுடன் சென்று கொண்டிருக்கும் போது இடையில் அவர்களை விட்டு விட்டு அதுவும் பகல் நேரத்தில் ஒரு பெண்ணுடன் (தன் மனைவியே ஆனாலும்) உடலுறவுக் கொள்ளச் செல்வது ஒரு சமூகத் தலைவருக்கு ஏற்புடைய மரியாதையான செயலா?//

    உடலுறவுக்கத்தான் அங்கு சென்றார் என்ற தங்களின் தவறான புரிதலை, மேற்கண்ட (ஆங்கிலத்தில் உள்ள) விளக்கங்களில் அது ”தவறான புரிதல்” என்பதை அறிந்திருப்பீர்கள்.

    ஆனால், அதனோடு சேர்த்து தங்களின் அறியாமையொன்றையும் வெளிப் படுத்தியுள்ளீர்கள். அதாவது பசியெடுத்தால் சாப்பிட வேண்டும். தாகம் வந்தால் தண்னீர் அருந்த வேண்டும். அது போன்றுதான் காமம் ஆசை வந்தால் அது இரவாக, பகலாக, காலையாக, மலையாக, வெயிலாக, குளிராக இருந்தாலும் அதனை தனது சொந்த மனைவியிடம் நிறைவேற்ற வேண்டும். அதர்க்கு காலமும் தேவையில்லை நேரமும் தேவையில்லை.
    முஹம்மத் நபி என்பவர், சாதாரண நம் போன்ற மனிதரே தவிர, கடவுளல்ல. அவர் ஒரு தீர்க்கதரிசி அவ்வளவுதான். ஏனையவைகளில் நம் போன்ற அத்தனை சுபாவங்களுக்கும் அப்பாட் பட்டவர் அல்ல!

    தங்களின் மத மூட நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்தக் கேள்வியை, ஏதோ மலையைப் பிளப்பது போன்று கேட்டுள்ளீர்கள். ஆனால் அது தங்களின் அறியாமை என்பதை அனைவரும் அறிவர். ஒரு சாதாரண மனிதனுக்கிருகும் அறிவு கூட, தங்களிடம் இல்லாதிருப்பது, தங்கள் மீது ஆழ்ந்த பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. தங்களின் உண்மையான பெயரைக் கூட குறிப்பிடாமல் வெறும் அனானியாக எழுதியிருப்தை வைத்தே, தாங்கள் ஏன் தங்களைப் பற்றி (அனானியாக) மறைக்கிறீர்கள் என்பது, இப்பொழுது புரிகிறது.

    அடுத்து
    //5. முகம்மதுவின் 11 பேர் கொண்ட மனைவிகள் பட்டியலிலும், 13 பேர் என்று கூறுபவர்களின் பட்டியலிலும் இந்த உமைமா_வின் பெயர் இடம் பெறவில்லையே! முகம்மது இவரை திருமணம் செய்துகொண்டாரா? இல்லயா? சரியான ஆதாரம் தரவும். இல்லை என்றால் இது விபச்சாரத்திற்கு ஒப்பாகிவிடுமல்லவா ?//

    சரியாகச் சொன்னீர்கள்.. ஒரு பெண்னை மனைவி என்று சொல்வதர்க்கு அவளோடு வாழ்ந்து (குடும்பம்) நடந்திருக்க வேண்டும். இங்கு முஹம்மது நபியவர்கள் வாழவுமில்லை, குடும்பம் நடத்தவுமில்லை. பின் எப்படி மனைவி பட்டியலில் அப்பெண் இடம் பெறுவாள்..? இதர்க்கும் அவ்வாங்கில கட்டுரையில் போதிய விளக்கம் உள்ளதை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    நன்றி
    அன்ஸார்

  53. அன்சார் என்ற பெயரில் உள்ள ஒரு அரை கிறுக்கு அரைவேக்காட்டுடன் பதில் எழுதியுள்ளதை சற்று பார்போம்.
    முதல் மூன்று கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் ஆங்கிலமேதை என்ற நினைப்பில் ஏதோ எழுதியுள்ளார். ஆங்கிலம் எனக்கு தெரியாது என்பதால் அதனை அவரே மொழிபெயர்த்து எழுதினால் அது பற்றிய உளரல்களை விளக்குகிறேன். போதாக்குறைக்கு, இந்த கிறுக்கு பொய்களையே வரலாறு என்று கூறும் சுட்டியை கொடுத்து போய் படிச்சுக்க சொல்லுது.
    நான்காம் கேள்வியான முதல் மனைவிகளிடம் அனுமதி வாங்கினாரா என்பதற்கு அரபு சொல் அது இது என்று சம்பந்தமில்லாது ஏதோ உளறியுள்ளார். “மணமுடித்தேன்” “மணமுடித்துக் கொடுத்தேன்” என்று ஒருவர் திருமணத்தில் கூறுவது எந்தவகையில் முதல் மனைவிகளிடம் இந்த திருமணத்திற்கு அனுமதி வாங்கியதாக பொருள்படும்?
    இந்த இரு சொற்களில்கூட திருமணம் செய்துக்கொள்ளும் அந்த பெண்ணிடம் அனுமதி வாங்கியதற்கான பொருள்பட ஏதும் இல்லை. காப்பாளர் மணமுடித்து கொடுத்தேன் என்று கூறினாலும் அப்பெண்ணின் சம்மதத்துடன் மணமுடித்து கொடுத்தார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. வலுக்கட்டாயமாகக் கூட செய்துவைத்தாலும் அப்படித்தான் கூறுவார். இந்த கேள்வி உமைமா முகம்மதுவைப் பார்த்து அரசி இடையருக்கெல்லாம் தன்னை அனுபவிக்க கொடுக்க மாட்டாள் என்று கூறியதிலிருந்து எழுப்பப்ட்டுள்ளது.
    அடுத்தடுத்து திருமணம் செய்யும்போது முந்தைய மனைவிகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்று இஸ்லாமியரகள் புழுகுவதிலிருந்து எடுத்துக்காட்டாக வினவில் அன்சார் புளுகியுள்ளதிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அன்சாரின் வியாக்கியானத்தை வினவின் சாகித் கட்டுரையில் இந்த சுட்டியில் படித்துக்கொள்ளலாம். (பின்னூட்ட எண்:50 https://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/#comment-46732 ) முதல் மனைவிகளிடம் அனுமதி வாங்கினாரா என்ற கேள்விக்கு, அரபுமொழிப் புலமைப் பித்தன் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்குக் விலை சொல்லுகிறார். இந்தப் பைத்தியங்களிடம் எப்படி விவாதிப்பது?
    பசி எடுத்தால் சாப்பிடுவதைப்போல காமம் தலைக்கேறினால் படுத்துக்கொள்வாராம். அதையாரு இவரிடம் கேட்டது? ஒரு தொண்டர்கள் கூட்டத்துடன் செல்லும்போது ஒரு தலைவருக்கு காம உணர்வு தோன்றுவது முறையா என்பதே கேள்வி. எங்களுக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை; ஆசைவந்தால் எங்கேயும் எப்பொழுதும் படுத்துக்குவோம் என்றால் நன்றாக படுத்துக் கொள்ளும்.
    உடலுறவு கொள்ளவில்லை என்பதால் மனைவியாகமாட்டார் அதனால் உமைமா பட்டியலில் இல்லை என்கிறார். திருமணம் செய்துவிட்டாலே மனைவியாக மாட்டார்களா? அல்லது உமைமாவை திருமணம் செய்யாமலேயே “அன்பளிப்பு” கேட்டாரா? உடலுறவு கொள்ளத்தான் சென்றார் என்பதை அன்சாரின் “பசி எடுத்தால்….” என்ற பதில், அன்சாரும் மறுக்கவில்லை என்பதை சுட்டுகிறது. ஆனாலும் இதிலும் புளுகிறார். முகம்மதுக்கு மரியா கிப்தியா என்ற அடிமைப் பெண் ஒன்று இருந்தார். இவரை திருமணம் செய்யாமலே உறவுகொண்டு இபுராகிம் என்ற ஆண் பிள்ளை ஒன்றையும் முகம்மது பெற்றுக்கொண்டார்.. குடும்பம் நடத்தியாகிவிட்டது. ஆனால் மனைவியர் பட்டியலில் மரியம் கிப்தியா இல்லை. மரியம் கிப்தியா மட்டுமல்ல, இன்னும் நிறைய பெண்கள் உள்ளனர். தேவைப்பட்டால் பட்டியலை பதிவிடுகிறேன்.
    இந்த கிறுக்கு அனானிமஸ் என்று வேறு உளறியுள்ளது. அனானிமசாக பதிவிடும் வசதியை வைத்துவிட்டு இப்படி உளறுவது பதிவாளரையும் பைத்தியம் என்று சொல்லுகிறாரோ? அனானிமசாக பதிவிட வாய்பு வைத்துள்ளது அவர்தானே! அடுத்து ஐபி எண்ணை வைத்து கண்டுபிடித்துவிடவாராம். எங்கே என்னை கண்டுபிடித்து என் வீட்டுக்கு வா பார்ப்போம். அப்பொழுதுதான் நீ ஒரு மனிதன். இல்லையேல் நான்கு கால்…..

    அன்சார் என்ற பெயரில் உள்ள ஒரு அரை கிறுக்கு அரைவேக்காட்டுடன் பதில் எழுதியுள்ளதை சற்று பார்போம்.
    முதல் மூன்று கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் ஆங்கிலமேதை என்ற நினைப்பில் ஏதோ எழுதியுள்ளார். ஆங்கிலம் எனக்கு தெரியாது என்பதால் அதனை அவரே மொழிபெயர்த்து எழுதினால் அது பற்றிய உளரல்களை விளக்குகிறேன். போதாக்குறைக்கு, இந்த கிறுக்கு பொய்களையே வரலாறு என்று கூறும் சுட்டியை கொடுத்து போய் படிச்சுக்க சொல்லுது.
    நான்காம் கேள்வியான முதல் மனைவிகளிடம் அனுமதி வாங்கினாரா என்பதற்கு அரபு சொல் அது இது என்று சம்பந்தமில்லாது ஏதோ உளறியுள்ளார். “மணமுடித்தேன்” “மணமுடித்துக் கொடுத்தேன்” என்று ஒருவர் திருமணத்தில் கூறுவது எந்தவகையில் முதல் மனைவிகளிடம் இந்த திருமணத்திற்கு அனுமதி வாங்கியதாக பொருள்படும்?
    இந்த இரு சொற்களில்கூட திருமணம் செய்துக்கொள்ளும் அந்த பெண்ணிடம் அனுமதி வாங்கியதற்கான பொருள்பட ஏதும் இல்லை. காப்பாளர் மணமுடித்து கொடுத்தேன் என்று கூறினாலும் அப்பெண்ணின் சம்மதத்துடன் மணமுடித்து கொடுத்தார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. வலுக்கட்டாயமாகக் கூட செய்துவைத்தாலும் அப்படித்தான் கூறுவார். இந்த கேள்வி உமைமா முகம்மதுவைப் பார்த்து அரசி இடையருக்கெல்லாம் தன்னை அனுபவிக்க கொடுக்க மாட்டாள் என்று கூறியதிலிருந்து எழுப்பப்ட்டுள்ளது.
    அடுத்தடுத்து திருமணம் செய்யும்போது முந்தைய மனைவிகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்று இஸ்லாமியரகள் புழுகுவதிலிருந்து எடுத்துக்காட்டாக வினவில் அன்சார் புளுகியுள்ளதிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அன்சாரின் வியாக்கியானத்தை வினவின் சாகித் கட்டுரையில் இந்த சுட்டியில் படித்துக்கொள்ளலாம். (பின்னூட்ட எண்:50 https://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/#comment-46732 ) முதல் மனைவிகளிடம் அனுமதி வாங்கினாரா என்ற கேள்விக்கு, அரபுமொழிப் புலமைப் பித்தன் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்குக் விலை சொல்லுகிறார். இந்தப் பைத்தியங்களிடம் எப்படி விவாதிப்பது?
    பசி எடுத்தால் சாப்பிடுவதைப்போல காமம் தலைக்கேறினால் படுத்துக்கொள்வாராம். அதையாரு இவரிடம் கேட்டது? ஒரு தொண்டர்கள் கூட்டத்துடன் செல்லும்போது ஒரு தலைவருக்கு காம உணர்வு தோன்றுவது முறையா என்பதே கேள்வி. எங்களுக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை; ஆசைவந்தால் எங்கேயும் எப்பொழுதும் படுத்துக்குவோம் என்றால் நன்றாக படுத்துக் கொள்ளும்.
    உடலுறவு கொள்ளவில்லை என்பதால் மனைவியாகமாட்டார் அதனால் உமைமா பட்டியலில் இல்லை என்கிறார். திருமணம் செய்துவிட்டாலே மனைவியாக மாட்டார்களா? அல்லது உமைமாவை திருமணம் செய்யாமலேயே “அன்பளிப்பு” கேட்டாரா? உடலுறவு கொள்ளத்தான் சென்றார் என்பதை அன்சாரின் “பசி எடுத்தால்….” என்ற பதில், அன்சாரும் மறுக்கவில்லை என்பதை சுட்டுகிறது. ஆனாலும் இதிலும் புளுகிறார். முகம்மதுக்கு மரியா கிப்தியா என்ற அடிமைப் பெண் ஒன்று இருந்தார். இவரை திருமணம் செய்யாமலே உறவுகொண்டு இபுராகிம் என்ற ஆண் பிள்ளை ஒன்றையும் முகம்மது பெற்றுக்கொண்டார்.. குடும்பம் நடத்தியாகிவிட்டது. ஆனால் மனைவியர் பட்டியலில் மரியம் கிப்தியா இல்லை. மரியம் கிப்தியா மட்டுமல்ல, இன்னும் நிறைய பெண்கள் உள்ளனர். தேவைப்பட்டால் பட்டியலை பதிவிடுகிறேன்.
    இந்த கிறுக்கு அனானிமஸ் என்று வேறு உளறியுள்ளது. அனானிமசாக பதிவிடும் வசதியை வைத்துவிட்டு இப்படி உளறுவது பதிவாளரையும் பைத்தியம் என்று சொல்லுகிறாரோ? அனானிமசாக பதிவிட வாய்பு வைத்துள்ளது அவர்தானே! அடுத்து ஐபி எண்ணை வைத்து கண்டுபிடித்துவிடவாராம். எங்கே என்னை கண்டுபிடித்து என் வீட்டுக்கு வா பார்ப்போம். அப்பொழுதுதான் நீ ஒரு மனிதன். இல்லையேல் நான்கு கால்…..

  54. பகிரங்க அழைப்பு :

    சில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கே
    http://onlinepj.com/vimarsanangal/nonmuslim_vimarsanam/ கிளிக் செய்யவும்

    நன்றி
    அன்ஸார்

  55. Does Islam snatch the Rights of Women?

    Preface

    We find so many religions in the world. Each and every religious scholar claims, what he follows, is the best among the available religion. He preaches it too with his staunch belief.
    However, the thinkers accept Islam is better in many aspects than any other religions of the world. Islam is not only explaining the method of worship but also explain guidelines for all aspects of human life. Islam takes care of human problems and intrudes in it. Moreover, Islam is the advice and apt solution for all the problems of life. Islam is the protected religion and it shuns any corrections from the day of its introduction. Till today, the religious book of Islam, Al-Quran only is not defamed by the human hands.
    Those who certify the goodness of Islam also are dissatisfied about some laws of Islam. In this juncture, it is the duty of a Muslim to analyze their doubts and clarify it logically and convincingly. Islam is not only the religion of the Muslims but also whole human race. For, it has come from the creator of the universe. Therefore, I have written this book to answer for those who accuse listing the aspects which is against woman’s rights. For other accusations, answers are published in two volumes. Those who read all these three volumes can find answers for all accusations against Islam.
    This book is compiled to clarify the doubts of Non-Muslims and let us pray Allah to fulfill that aim.
    With Love,
    P. Zainul Abideen

    http://www.onlinepj.com/PDF/Does-Islam-snatch-the-Rights-of-Women.pdf

  56. இங்கு கருத்து தெரிவித்திருப்பவர்களும் சரி ஆசிரியரின் கட்டுரையும் சரி மிகவும் மென்மையாக முஸ்லீம்களிடம் நடந்து கொள்வது தெரிகிறது. இந்த புனிதமான “மகளிர் தின” நாளில் “பர்த்தா” ஒழிப்பு போராட்டம்த்தை அறிவியுங்கள். அனைவரும் ஆதரிப்பார்கள்!! ஓரளவாவது நல்லது சமுதாயத்திற்கு நல்லது செய்ய முயற்சியுங்கள்!!!
    வாழ்த்துக்கள்!!!!!!!!!!

    • நாட்ராயன், பர்த்தாவை ஒழிக்க வேண்டும் என்கிறார்.எனது அமெரிக்க நண்பர் இந்தியாவில் சேலை ஜாக்கெட்டை சுடிதார் எல்லாம் ஒழித்து,மினி ஸ்கர்ட் மார் கச்சை உடை தவிர வேறு எந்த ஆடைகளும் பெண்கள் அணியக் கூடாது என்று இந்த மகளிர் தினத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்கிறார்

        • yuvaraj///அப்பொழுதாவது நீங்க பர்தாவை விடுவிங்கள….நண்பரே////
          உங்கள் வீட்டு பெண்கள் ஒகே சொல்லிவிட்டார்களா?

      • அனைவருக்கும் ஒரே சட்டம் தேவை. அதேபோல் மதத்தின் பெயரால் உரிமை மறுக்கப்பட கூடாது. முஸ்லீம் பெண்களுக்கு மதத்தின் பெயரால் உரிமைகள் மறுக்கப்படுகிறது. இதனை கண்டிக்கவேண்டும். ஒரு பெண் அணியும் ஆடையை வைத்து இவர் இந்த மதத்தை சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கக் கூடாது. அதற்குத்தான் பெண்கள் “பர்த” ஒழிப்பு போராட்டம் நடத்த வேண்டும்.

        • நட்ராயன் //ஒரு பெண் அணியும் ஆடையை வைத்து இவர் இந்த மதத்தை சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கக் கூடாது. அதற்குத்தான் பெண்கள் “பர்த” ஒழிப்பு போராட்டம் நடத்த வேண்டும்.///
          தங்களது உண்மையான நோக்கம் அதுவெனில்,எல்லா பெண்களையும் பர்தா அணிய சொல்லுங்கள் .
          நெற்றியில் பொட்டு வைப்பதை வைத்து ஹிந்து என்று அடையாள காணமுடிகிறதே அது சரியா? மடிசாரை வைத்து மதம் என்ன ?சாதியைகூட அடையாளம் காணமுடிகிறதே .அதையெல்லாம் முதலில் ஒழித்துவிட்டு அப்புறம் பர்தாவை பற்றி பேசுவோம் .

  57. இது போன்ற வரலாறை பற்றி பேசும் போது உண்மையை மட்டும்மே குறிப்பிட வண்டும். நபியவர்கள் யாரையும் தலாக் செய்ய வில்லை

  58. 5255. அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
    அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து ‘உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!’ என்று கூறினார்கள். அந்தப்பெண் ‘ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?’ என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் ‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி ‘கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு’ என்று கூறினார்கள்.

    முகம்மது ஹுசைன் அவர்களே மேலே உள்ள ஸஹிஹுல் புகாரி 5255ல் உள்ள விவரப்படி முகம்மதுநபி உமைமா என்ற பெண்ணை தலாக் செய்ததாக இதற்கு விளக்கம் தருகிறார்கள். புகாரி அவர்களும் தலாக் என்ற தலைப்பில் இதனை தொகுத்துள்ளார்கள். இது முகம்மதுநபி செய்த தலாக் இல்லை என்றால் வேறு என்ன என்று விளக்கம் தரவும். ஓடிவிடவேண்டாம்.

  59. அய்யா வினவு இந்த பின்னூட்டத அனுமதிக்க மாற்ரறீர் என்றே நினக்கிரேன் முஸ்லீம் மதத்த் மட்டும் ரெம்ப சாப்ட்டா தடவி குடுக்குறிஙக அது பெண்ணடிமை மதம் என்று தெறரிந்தாலும் அய்யோ இதுதான உங்க நடுனிலமை நக்மா மதம் மாறி கூட்டம் நடத்துனாஙகனு இப்போ யென்னடானா பெண்கள் உண்மைல கஸ்டபட்டலும் அத முஸ்லீம் கு வலிக்காம தடவி குடுக்குறிங்க இது தான் உங்க பெண்ணுரிமை நிலைப்பாடா ஒன்னும் விளங்கல ஏன் இப்பிடி முஸ்லீம் பணம் அதிகமா குடுக்குறாங்களா உங்க வெப்சைட் நடத்த தீவிராவாதிகளுக்கு அதிகம் சப்போர்ட் பன்றிங்க அவனுக குண்டு வச்சா அது எதிர் விணைனு சொல்லுறிங்க நீங்க கம்மூனிஸ்ட்டா இல்ல இசுலாமிஸ்ட்டா

  60. @சாகித், மாணம் கெட்டு அழைபவர்களே!
    நீங்கள் ஒரே அம்மாவுக்கும் ஒரே அப்பனுக்கும் பிறந்தது உண்மை என்றிருந்தால் இந்த வீடியோவில் விவாத அழைப்பை ஏற்பீர்கள்.!?

    நீங்கள் ஒரே அம்மாவுக்கும் ஒரே அப்பனுக்கும் பிறந்தது உண்மை இல்லை..அது வேறு விதமாக பிறந்தோம் என்று நிரூபிப்பீர்தற்கு நிங்கள் விவாத அழைப்பை ஏற்க மாட்டீர்கள்…

    ஆதலால் இந்த வீடியோவுக்கு முதலில் ஒழுங்காக விவாதத்திற்கு தயார் என்று பதில் சொல்லுங்கள்.இல்லை என்றால் சாரியும் ஜாகெட்டும் உங்களை அணிய தபாலில் தவண்டு வரும்..மானம்-ரோஷம்-சூடு-சுரணை உங்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன்..

    https://www.facebook.com/photo.php?v=788226924529657&set=vb.338454826173538&type=2&theater

  61. ஒரு சகோதரர் வட்டியைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இஸ்லாத்தில் வட்டி தடைச் செய்யப் பட்ட ஒன்று ஆனால் முஸ்லீம்கள் வட்டி வாங்குகிறார்கள் என்று. ஆம் சில பேர் வாங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர் மறுக்கவில்லை.

    ஆனால் இன்றைய பணத்தாசை சூழலிலும் வங்கியில் இருந்து கூட வட்டி வாங்காத முஸ்லீம்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி வட்டி வேண்டாம் என்று முஸ்லீம்களால் பெறப்படாத தொகை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது ரூ 67,50,000/- கோடி. இந்தியாவின் முஸ்லீம் ஜனத்தொகை 17.22 கோடி. அதாவது இந்த முஸ்லீம்களுக்கான வட்டித்தொகையை எடுத்து முஸ்லீம்களுக்கு கொடுத்தால் ஒவ்வொரு முஸ்லீமிற்கும் ரூ39 லட்சம் கொடுக்கலாம். ஆனால் இந்த சமூகம் அதையும் ஏற்காது ஏனெனில் எங்கள் மார்கக்த்தில் அது தடைச் செய்யப்பட்ட ஒன்று.

  62. பலதார மணம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது ஆனால் சில கட்டுப்பாடுகளோடு இதில் முக்கியமானது மனைவிகளுக்கிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்பது மட்டுமல்ல அது பெரும் குற்றமும் ஆகும். இந்தியாவில் பலதார மணங்களுக்கான புள்ளி விவரங்கள் கீழே…

    முஸ்லீம்கள் 5.7 சதவீதம்
    இந்துக்கள்: 8.9 சதவீதம் (ஆதிவாசிகள், புத்தர்கள், ஜைனர்கள் அனைவரையும் இந்துக்கள் என எடுத்தால்)

    தனித்தனியாக;
    இந்துக்கள்: 5.8 சதவீதம்
    புத்தர்கள்: 7.9
    ஜைனர்கள்: 6.7
    ஆதிவாசிகள்: 15.25

    Research by Mallika B Mistry of the Gokhale Institute of Politics and Economics in Pune in 1993, later recorded by John Dayal, concluded that “there is no evidence that the percentage of polygamous marriage (among Muslims) is larger than for Hindus.”

    • சரி உங்கள் வைத்தபடியே வருவோம் ஹிந்துக்களில் சிலர் பலதார மனம் புரிந்தவர்கள் என்று வைத்துக்கொள்வோம் சட்டம் அதை ஏற்கிறதா ? ஹிந்துக்கள் ஒருவருக்கு மேல் திருமணம் செய்தால் அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஒரு மனைவி இருக்கும் போது இன்னொருவரை எந்த காரணம் கொண்டும் திருமணம் செய்ய கூடாது.

  63. புர்காவையும் தலாக்கையும் தனித்து எதிர்கொண்டு எப்போது முஸ்லிம் பெண்கள் கொதித்து எழுந்தார்கள்?இந்த நீலிக்கண்ணீரைத்தானே ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் வடித்துக்கொண்டே திரிகிறீர்கள்.உங்கள் உள்ளங்களில் இருப்பது அக்கறையா காழ்ப்புண்ர்ச்சியா? ஆழ்ந்து சிந்தியுங்கள்.

    • உங்களை போன்றவர்கள் இஸ்லாம் ஒரு தவறை அனுமதிக்கிறது ஆனால் அதற்கு கட்டுப்பாடு விதிக்கிறது என்று எல்லாம் கதை அலைந்தாலும் தலாக் தவறு தான்.

      • இந்த சட்டத்தை புரிந்து கொள்ள உன் அறிவைக் கொண்டு விளங்க முடியாது குருடனுக்கு பார்ப்பது எல்லாம் இருளாகவே தெறியும்

Leave a Reply to SANKAR பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க