privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!

பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!

-

மச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழுவில் எந்த கல்வியாளர்களும் இல்லை மாறாக தனியார் பள்ளி முதலாளிகள் மற்றும் நிர்வாகிகள்தான் உள்ளனர்.

அந்தக்குழுவோ சமச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை கல்வியியல் ரீதியாக ஆய்வு செய்யாமல் அதை முடக்குவதே குறிக்கோளாக கொண்டு சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை தரமற்றது என உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சமச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்தாமல் மீண்டும்  பழைய பாடத்திட்டங்களை  கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் ஏழை மாணவர்களிடமிருந்து தரமான பள்ளிக்கல்வி பறிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே சமச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை உடனே அமுல் படுத்தக்கோரியும்,  அதை நிறுத்திவைப்பதற்காக தமிழக அரசால் வெளியிடப்பட்ட  கல்விக்கொள்ளைக்கான அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் உயர் நீதிமன்றம் முன்பு 08.07.2011 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளைச் செயலாளர் தோழர் வ. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் வழக்குரைஞர்களும், ம.க.இ.க தோழர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். நகல் எரிப்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் கார்த்திகேயன் மற்றும் ஐந்து தோழர்கள் ம்ட்டும் வழக்கு தொடரப்பட்டு புழல் சிறையில் அடைக்க்கப்பட்டனர்.

பாசிச ஜெயா வெளியிட்ட அறிக்கையை எரித்து நடந்த போராட்டம் ‘அம்மா’ காதுக்குப் போனால் பிரச்சினை என்ற அடிமைத்தனத்துடன் போலீசு ஆறு தோழர்களை பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறது. ஆயினும் பு.மா.இ.மு, ம.க.இ.க தோழர்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தத்தான் போகின்றனர். இந்த சிறை நடவடிக்கை அவர்களை முடக்கிவிடாது.

பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

 

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. *********பாசிச ஜெயா வெளியிட்ட அறிக்கையை எரித்து நடந்த போராட்டம் ‘அம்மா’ காதுக்குப் போனால் பிரச்சினை என்ற அடிமைத்தனத்துடன் போலீசு ஆறு தோழர்களை பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறது. ஆயினும் பு.மா.இ.மு, ம.க.இ.க தோழர்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தத்தான் போகின்றனர். இந்த சிறை நடவடிக்கை அவர்களை முடக்கிவிடாது**********

    ரோட்டுல வந்து பொது மக்களுக்குத் தொந்தரவு கொடுத்தா சிறையில் அடைக்காம பின்ன என்ன ஆராத்தி எடுத்து அட்சதை போடுவாங்களா…அதான் கோர்ட்ல கேஸ்நடக்குதுள்ள..பின்ன என்ன…இது போல் ரோட்டில் வந்து பொது மக்களுக்கு
    தொந்தரவு கொடுத்தால் அடி பிறிக்கனும்,நீ இன்னும் பத்துநிமிசம் அங்க இற்ந்திறுந்தீனா அதான்நடந்த்திருக்கும்…இது அம்மா ஆட்ஷி தம்பி…

      • Who the hell are you to say me get lost?

        ணான் புண்ணாக்குன்னா நீ என்ன சுண்ணம்பா…செம்பு…

        முதல்ல ஒரு விசயத்தப்புரிஞூக்கோ சமச்சீர் கல்வி பிரச்சனைன்னா கோர்ட்டல கேஸ் போடு…போட்டாச்சு சந்தோசம் வெற்றி பெற்றா இன்னும் சந்தோசம்..ஆனால் அதை விட்டுட்டு ரோட்டுல வருவேன் பஸ்ஸ ஒடப்பேன் பீக் அவர்ஸ்ல தொந்தரவு கொடுப்பேன்னா திரும்பவும் சொல்றேன்…அடி தர்மாடி தான்..தைரியம் இருந்தால் சுண்ணாம்பு அவர்களே நாளை முன்னறிவிப்பு செய்து விட்டு LIC முன்பு வந்து நிற்கவும்…செம விருந்து தான் உனக்கு போ…

  2. ரோட்டுல வந்து பொது மக்களுக்குத் தொந்தரவு கொடுத்தா சிறையில் அடைக்காம பின்ன என்ன ஆராத்தி எடுத்து அட்சதை போடுவாங்களா #### கல்வியை தனியார் மயமாக்குனா தெருவில் இறங்கி தான் போராடனும்…..பின்னே அம்மாவுக்கு ஜால்ரா அடிப்பாங்களா…. …. வாழ்த்துகள் தோழர்களே…….

  3. பு.மா.இ.மு, ம.க.இ.க தோழர்களின் போராட்டம் வெல்க.அடி,உதைக்கு அஞ்சமாடடோம்
    சிறைச்சாலைகண்டு பின் வாங்க மாடடோம்.பேயாடசியேர்,பிசாசாட்சியோ,மிரண்டு ஓடமாட்டோம்.

  4. பையா கவனிக்கவும்.

    “ரோட்டுல வந்து பொது மக்களுக்குத் தொந்தரவு கொடுத்தா சிறையில் அடைக்காம பின்ன என்ன ஆராத்தி எடுத்து ஆட்சதை போடுவாங்களா…அதான் கோர்ட்ல கேஸ்நடக்குதுள்ள..பின்ன என்ன…இது போல் ரோட்டில் வந்து பொது மக்களுக்கு
    தொந்தரவு கொடுத்தால் அடி பிறிக்கனும்,நீ இன்னும் பத்துநிமிசம் அங்க இற்ந்திறுந்தீனா அதான்நடந்த்திருக்கும் “…இது அம்மா ஆட்ஷி தம்பி…”

    இந்த மாதிரி “வால் பையாக்கள்” இந்த அம்மா ஆட்சியில் ஆட்டுவார்கள் ஏற்கனவே

    ஆட்டியவர்களின் வால் என்ன ஆனது??

    கல்விக் “கொள்ளை” எரிக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளப்படும்.கல்விக்கொள்கை அல்ல.

    • அப்ப காலைல 5 மணிக்கு எந்திரிச்சு குளிச்சு ஆபிஸ் போரவன்…

      அப்பாவப் பார்க்க ஆபீஸ் போறவன்..

      அவசரமா ஊருக்குப் போறவன்..அயல்னாடு போக ஏர்போர்ட் போறவன்..

      அட உயிரைக்காப்பாற்றிக் கொள்ள ஆம்புலன்ஸ்ல போறவன்னு எல்லாம் முட்டாளா?????

      னீங்க மட்டும் அறிவளியா????

      இது அம்மா ஆட்சிக்கு வக்காலத்து வாங்கும் வாதம் அல்ல…ஒரு சாதாரன குடிமகன் இதனால் பாதிக்கப்படக்கூடாது…னீ போ சட்டசபை முன்னாட்ப்போ அந்தம்மா வீட்டு முன்னாடிப்போ…

      *******இந்த மாதிரி “வால் பையாக்கள்” இந்த அம்மா ஆட்சியில் ஆட்டுவார்கள் ஏற்கனவே ஆட்டியவர்களின் வால் என்ன ஆனது??

      கல்விக் “கொள்ளை” எரிக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளப்படும்.கல்விக்கொள்கை அல்ல.*******************அடுக்கு மொழி எல்லாம்நல்லாத்தான் இறுக்கு ஆனால் கருத்து இல்லையே..

      யாரு ரோட்டுல வந்து மக்களுக்கு தொந்தரவு கொடுப்பவன் வால்ப்பையனா இல்லநான் வல்ப்பையனா..யோசிச்சுப்பார்..

      • ஒரு திறுத்தம்..

        //அப்பாவப் பார்க்க ஆபீஸ் போறவன்..//

        அப்பாவைப் பார்க்க ஆஸ்ப்பத்திரி போறவன்..

        கர்ப்பணிப் பெண்ணை ஆஸ்ப்பத்திரிக்கு கூட்டீட்டுப் போறவன்..

        மெட்ராஸ்ல மவுன்ட் ரொட் பிளாக் ஆச்சுன்னா எத்தனை ரோடு பிளாக் ஆகும் தெரியுமா..
        காலேஜு பையென் பஸ்ஸநிறுத்துனாலும்…

        ஜாதிக்காரன் பஸ்ஸநிறுத்துனாலும்…நீ பஸ்ஸநிறுத்துனாலும்…னான் பஸ்ஸநிறுத்துனாலும்…அது போராட்டமல்ல பொறுக்கித்தனமே…

  5. என்ன பையா, நீங்க எந்த ஸ்கூலோட சேர்மேன்…இப்படி வுளுந்து கும்புடுறீங்க…

    தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்…

  6. டேய் பைய்யா அவங்க போராடுறது எங்கள் குழந்தைகளுக்காக.மக்கள் தொகையில் இரண்டு சதத்திற்கு குறைவான உங்களுக்காக அல்ல மூடிக்கொண்டு சும்மா இரு. அம்மாவுக்கு பயப்பட அவர்கள் சங்கராச்சாரி போல் கொலை குற்றவாளிககள் அல்ல.

    • டேய்..னீ வளர்ந்தவன் அல்ல வள்ர்ந்து கெட்டவன்.. 1.1.1 இ படிக்கவும்..

  7. உங்கலாலதாண்டா எங்க புள்ளைங்களுக்கு இன்னும் புக்கே கிடைக்கல எப்படியும் அந்தம்மா ஒத்துக்காதுனு தெரிஞ்சும் வீண் வெட்டி பந்தாவுக்கு கேஸ் போட்டு விளம்பரம் பண்ணும் உங்களை எல்லாம் நாடு கடத்தணும்.

    • புண்ணாக்கு!!

      அந்த அம்மா மட்டும்தான் உலகமா, அந்தம்மா ஒத்துக்காதுன்னா, விட்டுரலாமா,

      புத்தகம் கிடைக்கல பாடம் நடத்தலனுதானே போராட்டமே நடக்குது.ரோட்ல இறங்கி

      போராடிப்பார்.

      “வீண் வெட்டி பந்தாவுக்கு கேஸ்” என்னனு தெரியும்

      • ////“வீண் வெட்டி பந்தாவுக்கு கேஸ்” என்னனு தெரியும்/////

        1. கேமிராவப் பாத்துப்பாத்த்க் கத்துவது…
        2.முன்னறே கேமிரா மேனுடன் போவது…
        3. கதை திரைக்தையுடன் முழுநீள சினைமா எதுப்பது..வீடியோவைப்பாற்க்கவும்…

    • //உங்கலாலதாண்டா எங்க புள்ளைங்களுக்கு இன்னும் புக்கே கிடைக்கல எப்படியும் அந்தம்மா ஒத்துக்காதுனு தெரிஞ்சும் வீண் வெட்டி பந்தாவுக்கு கேஸ் போட்டு விளம்பரம் பண்ணும் உங்களை எல்லாம் நாடு கடத்தணும்.//

      உங்களை மாதிரி ஆட்களால்தான் எங்களுடய வாழ்க்கையேபோச்சி.எங்கள் வாழ்க்கையை
      ஒரு மாதம் வாழ்ந்து பாருங்கள் தெரியும்.நாங்களாவது வழக்கு போடுறோம், ரோட்டுக்கு வந்து போறாடுறோம்.உங்களுடைய வாழ்க்கையில் இந்த மாதிரி ஏதாவது நடந்தா ஆளுக்கு ஒரு துப்பாக்கி எடுத்துகிட்டு ரோட்டுல திரியுவீங்க.ஏனென்றால் உங்கள் சிந்தனை அப்படி.
      உங்களுக்கு மற்றவரை பற்றி கவலையில்லை.உங்களுடைய வாழ்க்கை உண்மையானது.
      எங்களுடைய வாழ்க்கை கனவுபோன்றது.

    • //உங்கலாலதாண்டா எங்க புள்ளைங்களுக்கு இன்னும் புக்கே கிடைக்கல//
      எந்த புக் கிடைக்கல(சமூக சிந்தனையற்ற)கறி கோழி வளர்ப்பு பற்றிய புக்கா.

  8. புண்ணாக்கு!!

    சுட்டுத்தள்ளுறது இருக்கட்டும், எந்த “மக்களுக்கு” இடையூறு என்பதை அறிந்து, அதன்

    பிறகு பதிவு போடவும்.

    • புதுநிலாவோ பழயநிலாவோ முடிந்தால்

      4.1, 4.1.1 க்கு பதில் போடவும்…

  9. protest is very needful one…Uniformed based education system everybody should get that. The government should regularize the rules for the uniformed ES. Whenever this ADMK government comes to power their only target Karunanithi and his family. Oh My bloody fool ADMK activists and sympathizers please give a chance to our upcoming generations. If do not want to give a chance to our generations please go and your headquarters and ask them is there any substitute for uniformed ES. They will tell Rajaji’s Kula Kalvi Plan. Please implement first from your home. Then only you will come to know about what is Uniformed ES. So far we have studied normal std syllabus only, if the UES comes our children able to achieve like anything. Please understand the reality and others needs.

    • எதிர்ப்பு மிகவும் தேவைப்படுகிற ஒன்று ..சமச்சீர் அடிப்படையாக கொண்ட கல்வி முறை எல்லோருக்கும் என்று கொள்ள வேண்டும். அரசாங்கம் சம்ச்சீர் கல்வி விதிகளை நெறிப்படுத்த வேண்டும். இந்த அதிமுக அரசுவரும்போதெல்லாம் அதிகாரத்தை தங்கள் இலக்கு கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தை மட்டுமே குறிவைக்கிறார்கள் . ஓ என் அடி முட்டாள் அதிமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களே, இனிவரும் தலைமுறைகளுக்கு, ஒரு வாய்ப்பு கொடுங்கள். நம் தலைமுறைகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்றால் போய் உங்கள் தலைமையை கேளுங்கள், சம்ச்சீர் கல்விக்கு மாற்று ஏதேனும் இருகிறதா என்று கேளுங்கள். அவர்கள் ராஜாஜியின் குலக் கல்வி திட்டம் ப்ற்றி சொல்வார்கள். உங்கள் வீட்டில் இருந்து முதலில் செயல்படுத்தவும். பிறகு தான் நீர் சம்ச்சீர் கல்வி பற்றி அறிவீர்கள்.
      நாம் இதுவரை சாதாரண பாடதிட்டத்தில் மட்டுமே படித்தோம்,சம்ச்சீர் கல்வி திட்டத்தில்நமது குழந்தைகள் படித்தால் எதையும் சாதிக்கலாம்.தயவுசெய்து மற்றவர்களின் தேவைகளையும் யதார்த்தையும் புரிந்துகொள்ளவும்.

  10. உங்கள் போராட்டம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். இந்த அம்மையார் தமிழகத்தின் இரண்டாவது தீய சக்தி. தமிழர்களின் தலை எழுத்து அவ்வளவுதான். இவர் எக்காரணம் கொண்டும் இந்த பாடத்திட்டம் வர அனுமதிக்க மாட்டார். ஒரே வழி இந்த கடவுளாக பார்த்து தீய சக்தி களை தமிழகத்தில் இருந்து திரும்ப பெறவேண்டும். பாருங்கள் ஒரு MLA வாவது நமக்காக ரோட்டில் உங்களுடன் இருந்து போராட உள்ளாரா என்று. ஒரு MLA இன்று நம்முடன் இருந்திருந்தால் அதன் விளைவே தனி. காலம் கடந்து விட்டது. தோழர்களே, அதைத்தான் வினவும், சவுகுக்கும், நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்ன? என்று ஆறு மாதங்களுக்கு முன்பே சொன்னேன்.

    http://www.shansugan.net/2011/01/24/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae/

  11. தோழர்கள்க்கு புரட்சிகர வாழ்த்துகள்,,,,,,,, எத்தனை எதிர்ப்புகல் வந்தாலும் மலையை பிலப்பது போல பிலப்போம்,,,,,,,, துனைக்கு நாங்கல் இருப்போம்,,,,,,, சிறை சென்ற தோழர்கள்க்கு வீரவணக்கங்கள்………….

    ####ராஜசூரியன்####

  12. தோழர்களின் போராட்டம் வெல்லட்டும். புண்ணாக்கு, பையாவின் பேச்சுக்களை நாய் சூசூ போகிறது என்று சட்டை செய்யாதிருக்கவும்.

  13. Dear Vinavu
    Its time to boldly edit the comments section . reason : some (1 or 2) gentlemen diverting the topics and sorringifying their backs. positive comments ,negative comments,ok . but no ugly , un warranted comments.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க