privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஉச்சநீதிமன்றத்தில் சமச்சீர் வழக்கு - நிதி தாரீர்!

உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் வழக்கு – நிதி தாரீர்!

-

சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வழங்க மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம். எனினும், “சமச்சீர் பாடநூல்களை ஜூலை 22 க்குள் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்” என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை காலநீட்டிப்பு பெற்றிருக்கிறது தமிழக அரசு. இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

அச்சிட்டுத் தயார் நிலையில் உள்ள நூல்களை விநியோகிப்பதற்கு எதற்கு கால நீட்டிப்பு? நடைமுறையில் இந்தக் “காலநீட்டிப்பு” பெறுவதன் நோக்கம் இறுதித் தீர்ப்பு வரும்வரை புத்தகங்களை விநியோகிக்காமல் தடுப்பதுதான்.  மாணவர்களையும் ஆசிரியர்களையும் “இதோ.. ..அதோ” என்று இரண்டு மாதங்களாக அலைக்கழித்து வருகிறது ஜெ அரசு. இதே காரியத்தை கருணாநிதி செய்திருந்தால் சோ, வாசந்தி, வைத்தியநாதன், எச்.ராஜா, தா.பாண்டியன் முதலான “தமிழர்கள்” தம் நாக்காலேயே நெம்பி ஆட்சியைக் கவிழ்த்திருப்பார்கள். மேற்படி அயோக்கியத்தனத்தை செய்துவருபவர் புரட்ச்சித்தலைவி என்பதால், இவர்களுடைய நாக்கு அம்மாவின் பொற்பாதங்களை சுவைத்துக் கொண்டிருக்கிறது.

நம் கண் முன்னால் 1.25 கோடி மாணவர்களை உருட்டிப் பந்தாடுகிறார் புரட்சித்தலைவி. பள்ளிகள் முடங்கிக் கிடக்கின்றன. ஒருவேளை ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைக்காக பத்து நாட்கள் வேலை நிறுத்தம் செய்திருந்தால், மாணவர்கள் அவர்களை ஆதரித்துப் போராடியிருந்தால் – என்ன நடந்திருக்கும்? 2 இலட்சம் அரசு ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டது நினைவிருக்கிறதா? அதுதான் நடந்திருக்கும்.

தமிழக மக்களைத் தனது *@# க்குச் சமமாகத்தான் ஜெ மதிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு கூடுதல் சான்றுகள் தேவையில்லை. நீதித்துறையின் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பு, மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பைக் காட்டிலும் ஒரு *@# கூடுதலாக இருக்கலாம். அவ்வளவே.

சமச்சீர் பாடப்புத்தகங்கள் தரமானவைதானா என்று கமிட்டி போட்டு ஆராய்ந்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அம்மா போட்ட கமிட்டி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போதே, 2002 பாடத்திட்டத்தின் அடிப்படையிலா பாடநூல்களை அச்சடிக்கச் சொல்லிவிட்டார் புரட்சித்தலைவி. இது குறித்த செய்தி நாளேடுகளிலும் வந்துவிட்டது. “இப்படி செய்வது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?” என்று குமுறினார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. “எந்தப் புத்தகத்தை கொடுக்க வேண்டும் என்று ஐயா உத்தரவு பிறப்பித்தாலும், அடுத்த கணமே கொடுத்துவிடவேண்டும் என்பதற்காகத்தான் அதையும் அடிக்கிறோம் மை லார்ட்” என்று நீதபதிக்கு பதில் சொன்னார் அரசு வழக்குரைஞர். இது எப்படி இருக்கு?

“அனாவசியமாக இன்னொரு 200 கோடி செலவு வேண்டாம். சமச்சீர் பாடத்தை இந்த ஆண்டுக்கு கொடுத்து விடுங்கள். அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம்” என்று நீதிமன்றம் சொல்லிவிடக்கூடுமோ என்று அம்மாவுக்கு ஒரு ஐயம். அதனால்தான் இந்த குறுக்கு வழி, தீர்ப்பு வருவதற்கு முன்னரே இன்னொரு 200 கோடியையும் செலவு செய்யச் சொல்லிவிட்டார். நீதிமன்றத்தை உப்பு மூட்டை மேல் படுக்கப் போட்டு வீக்கம் வெளியில் தெரியாதபடி அடிப்பது என்பது இதுதான். இதை மற்றவர்கள் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு. அம்மா செய்தால் அதற்குப் பெயர் துணிச்சல்.

உயர்நீதி மன்றத் தீர்ப்பு வந்தவுடனே கல்வித்துறை செயலர், அட்வகேட் ஜெனரல், அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் டெல்லிக்கு பறந்து விட்டனர். “மனு தாக்கல் செய்யும் நேரம் ராகு காலம் எமகண்டமாக இருக்க்கூடாது. வழக்கிற்கு வழங்கப்படும் வரிசை எண்ணின் கூட்டல் தொகை 9 ஆக இருக்க வேண்டும்”. என்ற இரண்டு முக்கியமான லா பாயிண்டுகளை பின்பற்றுவதில் புரட்சித் தலைவியின் போர்ப்படைத் தளபதிகள் கவனமாக இருந்தனர்.

வெயிட் காட்டுவதன் மூலமாகத்தான் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற முடியும் என்பதனால், இந்தியாவின் சட்டத்துறை சூப்பர் ஸ்டார்களாக அறியப்படும் வழக்குரைஞர்கள்  பலரையும் விலைக்கு வாங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சுபரீம் கோர்ட்டில் இறக்கி விட்டிருந்தார் அம்மா. அரசியல் சட்ட வழக்குரைஞர் பி.பி.ராவ், முகுல் ரோகத்கி, அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார் என்று ஒரு வழக்குரைஞர் படை அரசின் சார்பாக இறக்கப்பட்டிருந்த்து. ரோஹிந்தன் நாரிமன், ஆர்யமா சுந்தரம், ராஜீவ் தவான் உள்ளிட்ட இன்னொரு வழக்குரைஞர் படையைக் களத்தில் இறக்கியிருந்தனர் மெட்ரிகுலேசன் பள்ளி முதலாளிகள். இவர்களுடைய கூட்டமே நீதிமன்ற அறையில் பாதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது,

ஒரு முறை நாறைகாலியை விட்டு எழும்புவதற்கே சில இலட்சங்களை கட்டணமாக வசூலிக்கும் மேற்குறிப்பிட்ட வழக்குரைஞர்கள், நேற்று நெடுநேரம் கால் நோக நின்றபடியே தடையாணை கேட்டு மன்றாடினர். எனினும் நீதிமன்றம் தடையாணை கொடுக்க மறுத்தது. “தடையாணை தராவிட்டாலும் அவகாசமாவது கொடுங்கள். சமச்சீர் பாடத்திட்ட நூல்களை 22 ஆம் தேதிக்குள் விநியோகிக்க இயலாது” என்று கூறி, ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை அவகாசம் கோரினர்.

தயார் நிலையில் கிடங்குகளில் தூங்கும் நூல்களை எடுத்து விநியோகிப்பதற்கு எதற்கு கூடுதல் அவகாசம்? இருப்பினும், “அவ்ளோ பெரிய்ய வக்கீலுங்க, இவ்ளோ தூரம் ப்ரஸ் பண்ணி கேட்பதன் காரணமாக”, மேற்கொண்டு ஒரு பத்து நாட்களைப் போட்டுக் கொடுத்தது உச்ச நீதிமன்றம். நூல்களை விநியோகிப்பதற்கு என்று கூறி ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை அவகாசம் பெற்ற ஜெ அரசு, இந்த அவகாசத்தை “நூல்களை விநியோகிக்காமல் மாணவர்களை இழுத்தடிப்பதற்கான அவகாசமாக” பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதையும், இரண்டு மாதங்களாக மாணவர்களைத் தெருவில் நிறுத்தியிருப்பதையும் ஜெ வின் தனிப்பட்ட குணாதிசயத்தின் விளைவாக மட்டுமே பலர் காண்கின்றனர். இப்பிரச்சினையைப் பொருத்தமட்டில் அது ஒரு அம்சம் மட்டுமே.

மேட்டுக்குடி வர்க்க மாணவர்களுக்கும், உழைக்கும் வர்க்க மாணவர்களுக்கும் பொதுவானதாக ஒரு பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கேட்டவுடனேயே, காதில் ஈயம் காய்ச்சி ஊற்றியது போலப் பலர் துடிக்கின்றனர். மேட்டுக்குடி வர்க்கத்தினர், உயர் நடுத்தர வர்க்கத்தினர், மெட்ரிக் பள்ளி கொள்ளையர்கள், பார்ப்பனிய-புதிய தாராளவாத சித்தாந்தக் குஞ்சுகள் போன்ற பலரும் இதில் அடக்கம். ஜெயலலிதா அவர்களுடைய பிரதிநிதி. எனவே, ஜெயலலிதா இதில் காட்டும் மூர்க்கத்தனம் என்பது, சர்ச் பார்க், டான் பாஸ்கோ, பத்மா சேஷாத்ரி, டி.ஏ.வி உள்ளிட்ட மேட்டுக்குடி வர்க்கத்தின் கண்ணோட்டத்திலும் குணாதிசயத்திலும் விளைந்ததாகும். அம்மையார் பிடிவாத குணம் கொண்ட ஒரு பாசிஸ்டாக இருப்பது மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கு கிட்டிய ஒரு கூடுதல் வரப்பிரசாதம்.

மெட்ரிக் பள்ளித் தொழிலதிபர்கள் கருத்து ரீதியாக ஜெயலலிதாவுக்கு ஆதரவு தருவது மட்டுமின்றி, கோடிகளை வாரி இரைத்து உச்ச நீதிமன்றத்தில் நட்சத்திர வழக்குரைஞர்களையும் நிறுத்தியிருக்கிறார்கள். கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், சட்ட வல்லுநர்கள் அடங்கிய ஒரு பெரும் கூட்டம் அரசாங்க செலவில் டெல்லியில் தங்கியிருந்து வாதிடவிருக்கும் வழக்குரைஞர்களுக்கு தேவையான அனைத்தையும் திரட்டிக் கொடுப்பதுடன், சாதகமான தீர்ப்பை வாங்குவதற்கான எல்லாவிதமான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறது.

பாடத்திட்டம் தரமில்லை என்று வல்லுநர் குழுவை வைத்து நிரூபிக்கும் முயற்சி உயர்நீதி மன்றத்தில் தோற்றுவிட்டது. “அரசு இயற்றிய சட்டத்திருத்தத்தை ரத்து செய்த்தன் மூலம், சட்டமன்றத்தின் அதிகார எல்லைக்குள் உயர்நீதிமன்றம் வரம்புமீறித் தலையிட்டுள்ளது” என்று இதனை ஒரு அரசியல் சட்டச் சிக்கலாக மாற்றி திசை திருப்பும் முயற்சியில் அவர்கள் இறங்கக்கூடும்.

எதிர்த் தரப்பில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருக்கும் வழக்குரைஞர்களின் எண்ணிக்கை மற்றும் “வலிமை”யை ஒப்பிடும்போது, நமது தரப்பு (அதாவது சமச்சீர் பாடத்திட்டத்துக்காக வாதிடுவோரின் தரப்பு) வழக்குரைஞர்களின் எண்ணிக்கை குறைவு என்பதுடன், பலவீனமாகவும் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் பலம் பலவீனத்தை தீர்மானிப்பதில் பணமே முக்கியப் பாத்திரமாற்றுகிறது என்பதை விளக்கத்தேவையில்லை.

இவ்வழக்கைப் பொருத்தவரை முதலில் உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதி மன்றத்திலும், அதன் பின்னர் வல்லுநர் குழு அறிக்கை தொடர்பாக மீண்டும் உயர்நீதி மன்றத்திலும் வழக்கு நடத்தியிருக்கிறோம். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்கள் ஊதியமில்லாமல்தான் இதற்க்காக உழைக்கிறார்கள் என்ற போதிலும், பிரபலமான மூத்த வழக்குரைஞர்களை அமர்த்திக் கொள்ளும்போது அவர்களுக்குரிய கட்டணத்தைக் கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டுமானால் அதற்கு இங்கிருந்து ஒரு வழக்குரைஞர் குழுவே டெல்லி சென்று, மனுவையும், வாதுரைகளையும் தயாரிப்பதுடன், நாம் அமர்த்திக் கொள்ளும் மூத்த வழக்குரைஞர்களுக்கு வழக்கின் சாரத்தை விளக்கிப் புரியவைக்கவும் வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல அவ்வப்போது அவர்கள் கேட்கும் ஐயங்களுக்கும் கேள்விகளுக்கும் விளக்கமளிப்பதற்காக, வழக்கு முடியும் வரை அங்கே இருக்கவும் வேண்டியிருக்கிறது.

டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிக் கொண்டு, தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக மக்கள் பணத்தை கோடிக் கணக்கில் வாரியிரைத்து இந்த வழக்கை நடத்திக் கொண்டிருக்கிறது ஜெ அரசு. அது மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட வரிப்பணம்.

இதுவரை சமச்சீர் கல்வி இரத்துக்கு எதிராக எமது அமைப்புகளின் சார்பில் தமிழகமெங்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் உழைக்கும் மக்களிடமிருந்து பெறப்பட்ட நண்கொடையால்தான் சாத்தியமாயின. பிரச்சார இயக்கம், ஆர்பாட்டங்கள், மெட்ரிக் கல்விக் கொள்ளையர்களுக்கு எதிரான பல முற்றுகைப் போராட்டங்கள், சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற அரங்கக்கூட்டங்கள், உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழக்குகள் என்று கடந்த 2 மாதங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது இப்போராட்டம்.

இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும்.  இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம். தற்போதைய நிதித் தேவை குறைந்த பட்சம் 3 இலட்சம் ரூபாய்

ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது. எனவே உங்கள் நன்கொடையை விரைந்து அனுப்பவும். நாம் வென்றே தீரவேண்டும் என்ற வேட்கை, நீங்கள் வழங்கவிருக்கும் நன்கொடையின் தொகையைத் தீர்மானிக்கட்டும்.

வழக்கு நிதி தாரீர் !

வெஸ்டர்ன் யூனியன் (WESTERN UNION) மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் KANNAIYAN RAMADOSS என்ற பெயருக்கு பணம் அனுப்பி விட்டு விவரங்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

நன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் உரிய இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.