முகப்புசெய்திஆபாச நடிகை நக்மா நடத்திய 'அல்லேலூயா' மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி

ஆபாச நடிகை நக்மா நடத்திய ‘அல்லேலூயா’ மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி

-

பெரியாரின் தொண்டர் தோழர் நாத்திகம் இராமசாமி நினைவாக நாத்திகம் இதழில் வந்த இக்கட்டுரையை இங்கே பதிவு செய்கிறோம்.

nagma

இந்தியாவில் கிறிஸ்து மார்க்கம் பரவக் காரணமாக இருந்தது, மதப்பிரச்சாரம் செய்ய வந்தவர்களின் தொண்டூழியமும், அன்பும், தாழ்மையும், பண்பும், சகோதரத்துவமும், இரக்கச் சிந்தையும்தான்.

“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்” என்பது கிறிஸ்துவ வேதவாக்கியம்.

இந்த வேதவசனத்தை நடைமுறைப்படுத்தும் நல்லோர்களாக அவர்கள் இருந்ததால், இந்தியப் பார்ப்பனர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, தீண்டத்தகாத சூத்திர அடிமைகளாக வாழ்ந்த இந்திய மக்கள் குடும்பம் குடும்பமாக, ஊர் ஊராகக் கிறிஸ்துவ மார்க்கத்தை தஞ்சமடைந்தார்கள்.

அன்னை தெரசா போன்ற சமூக ஊழியர்களையும், கலைக்டர் பக்கிள் துரை போன்ற அரசு நிர்வாகிகளையும் கண்ட இந்திய மக்கள், கிறிஸ்து மார்க்கவாதிகளின் “உன்னைப் போல் பிறனையும் நேசி” என்ற இயேசு மார்க்கத்தை விரும்பித்தழுவினார்கள்.

ஆனால், இன்றைய நிலையில் கிறிஸ்துமார்க்கம் என்பது கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கும் மிகப் பெரிய இழிவுத் தொழிலாகிவிட்டது!

ஏழைகளுக்கு இரங்கச் சொன்ன இயேசு வழியை விட்டுவிட்டு, ஏழை எளியோரை ஏமாற்றிக் காணிக்கை பெற்று, கோடிஸ்வரன்களாகும் ‘திருட்டுத் தினகரன்’ வழியில் போய்விட்டார்கள், கிறிஸ்துவ ஊழியக்காரர்கள் என்று பெயர் சொல்லிக் கொள்கிறவர்கள்.

கிறிஸ்துவ ஊழியம் என்பதே இந்திய ஏழைப் பாமரக் கிறிஸ்துவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதும், கூடும் கூட்டத்தைப் படம் எடுத்து மேல்நாட்டுப் பணக்காரக் கிறிஸ்துவர்களிடம் காட்டிப் பணக் கொள்ளை நடத்துவதும்தான் என்றாகிவிட்டது!

“இலவசமாய் பெற்றீர்கள்; இலவசமாய் கொடுங்கள்” என்று இயேசு தமது போதகர்களுக்குச் சொல்கிறார். ஆனால், இன்றைய ‘கிறிஸ்துமத வியாபாரிகளோ’ எதையும் கொடுத்துப் பழகியவர்களாக இல்லை; வாங்கிக் குவிப்பவர்களாகவே வாழ்கிறார்கள்!

“ஒரே ஒரு இயேசு பிறந்தான்; அவனும் சிலுவையில் அறையப்பட்டு மாண்டான்” என்று சொல்லிப் புலம்பவேண்டிய நிலையிலேயே கிறிஸ்துவ மதத்தின் இன்றைய நிலை ஆகிவிட்டது!

இந்த நிலைக்கு, இந்தியாவில் மூலதாரமாக – முன் உதாரணமாக வழிகாட்டிய அயோக்யன் திருட்டுத் தினகரன்தான்!

ஏழை – எளிய மக்களுக்குத் தொண்டு செய்து, இயேசுவின் நாமத்தைக் கனம் செய்ய வேண்டிய ஊழியக்காரன், அந்த மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, காசுபறித்துக் குடும்பத்தையே உலகப் பணக்காரர் வரிசைக்குக் கொண்டு சென்றான் என்பது, ‘ஊழியம்’ என்ற பெயரால் கொள்ளையடிக்க வருவதற்கு முன் வழிகாட்டியாகிவிட்டது.

எல்லோரையும் நோய்களிலிருந்து விடுவித்து ‘அற்புத சுகம்’ கொடுப்பதாக ஏமாற்றி – மோசடி செய்து, கோடி கோடியாகச் சம்பாதித்துக் குடும்பத்தாரை வாழவைத்தத் திருட்டுத் தினகரன், பல நோய்கள் பீடிக்கப்பட்டு சாவுநாள் வருவதற்கு முன்பே ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்ற கிறிஸ்துவ வாக்கியத்துக்கு ஏற்ப செத்துப் போனான்!

அந்தப் பாவி அற்ப ஆயுளில் செத்தபின்பு, அவனது வழியில் மற்றொரு திருடன் ‘புகழ்’ பெற்றுக் கொண்டிருக்கிறான்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரை அடுத்துள்ளது நாலுமாவடி என்ற சிற்றூர். இந்தச் சிற்றூரில் மிகச் சாதாரண ஏழை மனிதனாக – ‘கோயில் குட்டி’ பணி செய்து கொண்டிருந்தவர், சி.லாரன்ஸ் என்பவர். இவர் திருடன் தினகரன் கூட்டங்களுக்கு அடிக்கடி போய் வந்ததன் விளைவு, இவரும் தினகரனைப் போல் ஒரு ‘கம்பெனி’ தொடங்கக் காரணமாயிற்று!

திருட்டுத் தினகரன் “இயேசு அழைக்கிறார்” என்ற பெயரில் எமாற்றியதுபோல, நாலமாவடி சி.லாசரஸ் என்பவரும் “இயேசு விடுவிக்கிறார்” என்ற பெயரில் திருட்டுத் தொழிலை ஆரம்பித்தார்! தன் பெயரையும் கவர்ச்சியாக மோகன் சி.லாசரஸ் என்று வைத்துக் கொண்டார்.

உண்மையில் இந்த மோகனின் தாய்-தந்தை வழி முன்னோர்கள் அனைவரும் இந்து மதக்காரர்கள்தான்! இந்த மோகன், கோடி கோடியான கொள்ளை வருமானத்திற்காக ‘பெத்தலேகமி’லிருந்து வந்த கிறிஸ்துவனைப்போல நடிக்கிறார்.

இவரது நடிப்பாற்றல் மூலம் மிக் கறுகிய காலத்துக்குள்ளேயே கோடீஸ்வரனாகி விட்டார்! இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர் என்ற பட்டியலுக்கு வந்து விட்டார்!

தூத்துக்குடி என். பெரியசாமி குடும்பம்தான் தென் மாவட்டங்களிலேயே, ஒரு தொழிலும் செய்யாமல் முதல் பணக்காரர்களான குடும்பம்! இன்று பெரியசாமியைத் தோற்கடிக்கும் மாபெரும் பணக்காரனாகிவிட்டார், “இயேசு விடுவிக்கிறார்” அதிபர் மோகன்-சி.லாசரஸ்!

நாலுமாவடி கிராமத்தையே விலை பேசி வாங்கிக் கொண்டிருக்கிறார், இயேசுவின் பெயரால்!

“என்னைப் பின்பற்றி வருகிறவன் எல்லாவற்றையும் விட்டு விட்டு வரக்கடவன்” – என்றார், இயேசு.

ஆனால், இந்த நாலுமாவடி இயேசுவோ “எல்லாக் கிறிஸ்துவனும் என்னிடம் தந்து விட்டு போங்கள்” என்று ஊழியம்(?) செய்கிறார்.

நோய் இல்லாத மனிதன் எவனும் பூமியில் இல்லை! திருட்டுத் தினகரனும் நோயால்தான் செத்தான்! மோகன்-சி.லாசரஸ்சுக்கும் நோய்களுண்டு.

இந்த நோயாளி லாசரஸ்தான் மற்றவர்களுக்கு சுகம் அளிப்பதாகச் சொல்லி, காசடித்துக் கொண்டிருக்கிறார்! பாமரக் கிறிஸ்துவர்களும் கோடி கோடியாகக் காணிக்கை தந்து கொண்டிருக்கிறார்கள்! மோகன் உல்லாச வாழக்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கூடும் கூட்டத்தை வீடியோ படம் எடுத்து, வெளிநாடுகளில் கொண்டு போய் கிறிஸ்துமதப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லி, அங்கிருந்தும் பெரும் தொகையைப் பெற்றுக் கொள்கிறார், மோகன் சி.லாசரஸ்!

இவர் அண்மையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெரும் பணக்காரர்களுக்கென்று, அற்புத சுகமளிக்கும் ஜெபக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்திற்கு ஆபாசச் சினிமா நடிகை நக்மா என்பவரையும் அழைத்து வந்திருந்தார்.

நடிகை நக்மா ஆபாசத்தொழில் செய்வதில் புகழ் பெற்றவர். அடிக்கடி அரபு நாடுகளுக்குப்போய் பணம் சம்பாதித்து வருவார். இந்தியாவில் குற்றம் செய்து விட்டு, அரபுநாடுகளில் பதுங்கிக்கொண்டிருக்கும் பலரோடு, நடிகை நக்மா தொடர்புள்ளவர் என்றெல்லாம் கூடப் பத்திரிகைச் செய்திகள் வந்ததுண்டு!

அத்தகைய நடிகை நக்மாவோடுதான் “இயேசு ஊழியம்” செய்வதாகச் சொல்லி, கிறிஸ்துவர்களை ஏமாற்றும் மோகன் சி.லாசரஸ் தொடர்பு கொண்டு, நட்சத்திர ஓட்டலில் “ஊழியம்” செய்திருக்கிறார்கள்!

நட்சத்திர ஓட்டல் நெருக்கம் காரணமாக, நாலுமாவடி கிராமத்துக்கும் நக்மாவை அழைத்துப் போய் “அல்லேலூயா” பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

சினிமா நடிகைகளை நேரில் காண்பதில் பாமர ஆசை  கொண்ட கிராமத்து மக்கள், ஆயிரக்கணக்கில் கூடி, நடிகை நக்மாவின் ‘அல்லேலூயா’ ஆட்டத்தைக் கண்டு களித்திருக்கிறார்கள்.

எல்லா வியாபார விளம்பரங்களுக்கும் ஆபாசப் பெண்களின் அரை நிர்வாணம் தேவைப்படும் காலம் இது! கிரிக்கெட் ஆட்டத்திலும் ரசிகர்களை குஷிப்படுத்த அம்மணப் பெண்களை இடையிடையே ஆட்ட விடுகிறார்கள்! ரசிகர்களும் விசிலடித்து ரசிக்கிறார்கள்!

எனவே, ஏமாற்றுத் தொழில் செய்யும் மோகன் சி.லாசரஸ் தன் தொழில் பிரபலத்துக்கு ‘குலுக்காட்ட’ நடிகை நக்மாவைக் கொண்டு வந்து, கூட்டத்தைக்கூட்டி, கூடிய கூட்டத்தை வீடியோ எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி ‘காணிக்கை வியாபாரம்’ செய்து கொண்டிருக்கிறார்!

“ஊசியின் காதுக்குள் ஒட்டகத்தைப் புகுத்தினாலும், பணக்காரன் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க மாட்டான்” – என்பதெல்லாம் பெத்தலேகமில் பிறந்த பழைய இயேசுவின் வழி!

இந்தியாவில் தோன்றியுள்ள தினகரன், லாசரஸ் போன்ற புதிய அப்போஸ்தலர்களோ, ‘கோடிஸ்வரன் வாழ்க்கையே பரலோக இன்பம்’ என்ற இழிவு வாழ்க்கைக்கு வந்துவிட்டார்கள்!

பழைய இயேசுவோ, “பாவப்பட்ட எல்லா மக்களும் என்னிடத்தில் வாருங்கள்” என்றார்! இந்தப் பொய் வியாபாரிகளோ, “காணிக்கை செலுத்தப்பணம் உள்ளவர்கள் மட்டும் என்னிடம் வாருங்கள்” என்கிறார்கள்!

வியாபாரக் கவர்ச்சிக்கு நக்மாக்களைக் கொண்டுவந்து “அல்லேலூயா” போடச்சொல்லுகிறார்கள்!

பார்ப்பனர்களின் இந்து மதத்தால் சூத்திர நாலாஞ்சாதியாக்கப்பட்டு, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் கூட தனித்தகரக் குவளையில் தந்து, செத்த பிணத்தைக் கூட தனிச்சுடுகாட்டில் போடு என்று வருண தருமம் அனுபவித்து மீண்ட மக்கள், ஏழை பங்களான் இயேசுவைத் தேடி வந்தால் இடையிலே இப்படிப் பணப் பேய்களாக தினகரன் – லாசரஸ் போன்ற திருடர்கள் நிற்கிறார்கள்!

தெரு ஓரத்திலே மோடி வித்தை காட்டும் ஏமாற்றுத் தொழில்காரர்களைப் போல, வித்தை காட்டி மக்களை மோசம் செய்யும் இந்த ஏமாற்றுக்காரர்களிடமிருந்து மக்கள் மீண்டும் வரவேண்டும்.

நாட்டை ஆட்சி செய்பவர்களும் லாசரஸ் போன்ற மோசடிக்காரர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேறு பல மாநிலங்களில் இந்த அற்புதச் சுகக்கூட்டங்களை அரசு தடை செய்திருப்பதைப் போலத் தமிழ்நாட்டிலும் அரசு தடை போடவேண்டும். தமிழக அரசுக்கு மானமும் அறிவும் வரவேண்டும்.

இயேசு பிரசிங்கித்தார் என்றால் அவர் இந்தத் திருடர்களைப்போல் காணிக்கை வாங்கி, குடும்ப டிரஸ்ட்டுகள் அமைத்து கோடிஸ்வரனாகவில்லை என்பதை கிறிஸ்துவர்கள் சிந்திப்பார்களாக!

–          நன்றி. நாத்திகம், 18.07.2008 இதழ்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

பெரியாரியக்கத்தின் முதுபெரும் தொண்டர் தோழர் ‘நாத்திகம்’ இராமசாமி மறைவு !!

‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !

யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !

கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்!