privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமச்சீர்கல்வி நூல்களை வழங்கு ! பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம் !

சமச்சீர்கல்வி நூல்களை வழங்கு ! பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம் !

-

சமச்சீர்கல்வி நூல்களை வழங்கு ! பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம் !

விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை – 22.7.2011 காலை மாணவர்கள் மத்தியில் நமது பெற்றோர் சங்கம் சார்பில் “சமச்சீர் பாட புத்தகத்தை வாங்கிய பிறகு வகுப்புக்குச் செல்லுங்கள். அதுவரை வகுப்பை புறக்கணியுங்கள்,” என்று பேசினோம். உடனே தலைமையாசிரியர் மாணவர்களை அடித்து மிரட்டி உள்ளே தள்ளி கதவை சாத்திவிட்டார்.

எனினும் 100க்கும் மேல் திரண்ட மாணவர்கள் உள்ளே சென்றாலும் அங்கிருந்து எங்களுக்கு கையை ஆட்டி வந்துவிடுகிறோம் என்று உற்சாகப்படுத்தினர். தொடர்நது வந்து கொண்டிருந்த மாணவர்களிடம் நாம் பேசியபொது வகுப்பின் இடைவெளையில் வந்துவிடுகிறோம் என்று கூறி சென்றனர். இடைவெளையின் பொது அனைத்து வாசல்களையும் ஆசிரியர்கள் மூடிவிட்டனர். அசராத மாணவ சிங்கங்கள் சிலர் மதில் சுவர் ஏறி குதித்து வெளியெ வந்து  மதிய உணவு இடைவெளியின் போது வந்துவிடுகிறோம் என்றுஎங்களிடம் தகவல் தந்தனர்.

சொன்னபடி மதியம் 1 மணியளவில் 50-ல் தொடங்கிய மாணவர்களின் எண்ணிக்கை சிறிது நேரத்தில் 200-ஐ தாண்டியது. நாம் கொடுத்த முழக்கம் மாணவர்களின் முழக்கமாக விண்னை எட்டியது. இது கேள்விப்பட்டு வந்த ஜெயா அரசின் செல்லப்பிள்ளையான காவல்துறை மாணவப் பிள்ளைகளைப் பார்த்து செய்வதறியாது திகைத்து நின்றது. மாணவர்களின் புத்தகம் வேண்டும் என்ற ஆர்வம் முழக்கமாக காட்டற்று வெள்ளமாக கரைபுரண்டது. இதை எதிர்பாராத எங்களுக்கே மாணவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

தன்னெழுச்சியாக மாணர்களே பேருந்தை மறித்து முழக்கம் இட்டு ஆரவாரம் செய்தனர். நாம் அவர்களை முறைப்படுத்தி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றோம். பொதுமக்களும், வியாபாரிகளும் அணிதிரண்டு வேடிக்கை பார்த்தனர். தாங்கள் செய்யவேண்டிய போராட்டத்தை மாணவர்களே முன்னின்று செய்வதை வியந்து போற்றினர். முற்றுகை போராட்டம் சூடுபிடித்த பிறகு தாசில்தார், காவல்துறை அதிகாரிகள் வந்தனர்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

 

“பேச்சுவார்த்தைக்கு செவிசாய்க்காமல் போராட்டத்தை முழக்கங்களுடன் நடத்தலாமா” என்று அதிகாரிகள் கேட்டதற்கு ” புத்தகம் வாங்கிதான் பள்ளி செல்லவெண்டும். அது இல்லாமல் அங்கு போய் என்ன செய்யப்போகிறொம்” என்று எதிர் கேள்வி கெட்டனர். சமச்சீர் பாடத்தின் தரத்தை பற்றியும் காசு உள்ளவனுக்கு ஒரு கல்வி, ஏழைக்கு ஒரு கல்வி என்ற கல்வி தீண்டாமைக்காகதான் தங்களுக்கு புத்தகம் வழங்கப்படாமல் இருக்கிறது என்பதை எளிதாகப் புரிந்து கொண்டனர். பள்ளியில் ஆசியர்களின் அத்துமீறல்களை நம்மிடம் புகாராக கொட்டி தீர்ததனர்.

“குடிநீர் குழாயில் புழு வருகிறது என்றும், சத்துணவில் முட்டை போடுவதில்லை, பஸ் தாமதமாக வந்தாலும் வாத்தியார் எங்களை அடிக்கிறார், புத்தகம் இல்லாமலேயே படிக்கவில்லை என்று அடிக்கிறார், என்றெல்லாம் ஈட்டியாக துளைத்தார்கள். தாசில்தாரை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரை பார்த்து இவையனைத்தும் சரி செய்ய வெண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். திங்கள் கிழமை மாணவர்களுடன் பெரும்  மாவட்டகல்வி அலுவலகத்தை முற்றுகையிடுவொம் என்று உற்சாகத்துடன் கூறி சென்றனர் அந்த மாணவர்கள்.

அரசின் கல்வித் திட்டங்களாகட்டும், இல்லை மக்கள நல திட்டங்களாகட்டும் இவை எதுவும் மக்கள் விழிப்புணர்வின்றி அமலுக்கு வராது. சமச்சீர் கல்விக்கான நூல்களை உடனடியாக வழங்க வேண்டுமென்று தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் போராட ஆரம்பித்தால் அதுதான் பாசிச ஜெயாவின் திமிரை அடக்குவதற்கான மருந்தாக செயல்படும். விருத்தாசலத்தில் ஆரம்பித்த இந்த நெருப்பு மாநிலம் முழுவதும் பரவட்டும். சமச்சீர் கல்வி உரிமையை மக்கள் நிலைநாட்டுவதற்கு மாணவர்கள்தான் போராட வேண்டும். போராடுவார்கள்!

முற்றுகை போராட்ட முழக்கங்கள்:

  • மாணவர்களே! புத்தகம் வழங்கிய பிறகு பள்ளிக்கு செல்லுங்கள், புத்தகம் இல்லா பள்ளி எதற்கு?
  • தமிழக அரசே! தமிழக அரசே! புத்தகம் வழங்கு புத்தகம் வழங்கு!சமச்சீர் புத்தகத்தை உடனே வழங்கு!
  •  மாணவர்களே, மாணவர்களே! வகுப்பு எதற்கு, வகுப்பு எதற்கு! புத்தகம் இல்லா வகுப்பு எதற்கு!
  • புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்! புத்தகமில்லா வகுப்புகளை புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்!
  • ஆசிரியர்களே, ஆசிரியர்களே! அடைக்காதீர், அடைக்காதீர், புத்தகமில்லா வகுப்புகளில் மாணவர்களை அடைக்காதீர்!
  • ஆசிரியர்களே, ஆசிரியர்களே! அச்சம் தவிர்! அச்சம் தவிர்! நெஞ்சம் நிமிர், நெஞ்சம் நிமிர்!
  • மாணவர்களே, மாணவர்களே! பள்ளி செல்வோம்! பள்ளி செல்வோம், புத்தகத்துடன் பள்ளி செல்வோம்!
  • தமிழக அரசே, தமிழக அரசே! அமல்படுத்து, அமல்படுத்து! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்து! புத்தகம் வழங்கு, புத்தகம் வழங்கு! சமச்சீர் புத்தகத்தை உடனே வழங்கு!
  • புறக்கணிப்போம், புறக்கணிப்போம்! புத்தகங்கள் கிடைக்கும் வரை வகுப்புகளை புறக்கணிப்போம்!
  • மாணவர்களே, மாணவர்களே! வாருங்கள், வாருங்கள்! வகுப்புகளை விட்டு வெளியே வாருங்கள்!
  • பள்ளிக்குச் செல்வோம், பள்ளிக்குச் செல்வோம், புத்தகத்துடன் பள்ளிக்குச் செல்வோம்!

___________________________________________________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாசலம்

____________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. மாணவர்களுக்கும்,ம.உ.பா.மைய தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    தோழர்கள் மாணவர்களை நன்கு முறைப்படுத்தி போராடியுள்ளதை போராட்ட படங்களிலிருந்து காணமுடிகிறது.

  2. பாசிச ஜெயாவின் திமிரை அடக்குவதற்கான அரு மருந்து மாணவர்களின் போராட்டம்தான்.
    பிள்ளையை பெற்ற பெற்றொர்களே! போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள.

  3. சமசீர் கல்வி நூல்கள் வழங்க மாணவர்கள் போராடும் போராட்டத்துக்கு வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து கொள்கிறோம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க