privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது !

மதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது !

-

மதுரவாயல் ரவுடி யோசுவாவை எதிர்த்து...
மதுரவாயல் ரவுடி யோசுவாவை எதிர்த்து...

சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் கட்டாய நன்கொடையை எதிர்த்தும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் எனும் பெயரில் பகுஜன் சமாஜ் கட்சி ரவுடி யோசுவா நடத்தும் ஆதிக்கத்தை எதிர்த்தும் பு.மா.இ.மு போராடி வருகிறது. இது குறித்து முன்னர் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இதன் காரணமாக பள்ளி மாணவர்களும், பு.மா.இ.மு தோழர்களுமான மணி, சதாம் இருவரையும் பள்ளிக்கூட நிர்வாகம் பள்ளியிலிருந்து நீக்கியது. சாதரணமாக ஈவ் டீசிங், ராகிங், முதலான பிரச்சினைகளுக்குத்தான் மாணவர்கள் நீக்கப்படுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இங்கு இரு மாணவர்கள் ரவுடியை எதிர்த்ததற்காக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த அநீதியை எதிர்த்து மாணவர்களிடமும், பகுதி மக்களிடமும் பிரச்சாரம் செய்த தோழர்கள் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். ரவுடி யோசுவா மீதான கிரிமனல் வழக்குகள் குறித்த ஆதாரங்களும் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது.

இப்படி ஒரு வழக்கை நீதிமன்றம் சந்தித்திருக்காது என்பது நிச்சயம். அரசு தரப்பு வழக்குரைஞர் மாணவர்களை நீக்கியது செல்லும் என்று வைத்த வாதங்களை நீதிபதி ஏற்கவில்லை. மேலும் “கட்டாய நன்கொடை ஏன் வாங்கப்பட்டது?, அதை எதிர்த்துக் கேட்ட பள்ளி மாணவர்களை எப்படி நீக்க முடியும்?, இப்படி செய்வதற்கு தலைமை ஆசிரியருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?, கிரிமினல் வழக்குள்ள யோசுவா பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் எப்படி இருக்க முடியும்? “ என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார் அந்த நீதிபதி.

அதற்கு அரசு தரப்பு எந்த விளக்கத்தையும் நியாயமாக அளிக்க முடியவில்லை. எனவே இப்படி அநீதியாக பள்ளி மாணவர்களை நீக்கிய தலைமை ஆசிரியர் மீது பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளார் நீதிபதி.

நீதிமன்ற உத்தரவை காண்பித்து நீக்கப்பட்ட பள்ளிமாணவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டனர். பொதுவில் மாணவர்களை நீக்குவதும், மிரட்டுவதும் என்று சர்வாதிகாரம் நடக்கும் பள்ளிகளில் இரு மாணவர்கள் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்திருப்பது பலருக்கும் அதிசயமாக இருந்தது.

ஒருபுறம் ரவுடி யோசுவாவின் ஆதிக்கம். மறுபுறம் அதற்கு ஒத்தூதும் பள்ளி நிர்வாகம். இப்படி இரண்டையுமே பு.மா.இ.மு தோழர்கள் மக்களையும், மாணவர்களையும் அணிதிரட்டி வென்றிருக்கிறார்கள்.

மாணவர்களுக்கு எதற்கு அரசியல் என்று எகத்தாளம் பேசும் அறிஞர் பெருமக்கள் இதற்கு என்ன சொல்வார்கள்?

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்