privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

-

அண்ணா ஹசாரே

ஊடகங்களின் திடீர் ஊழல் எதிர்ப்பு: ஒரு நேர்த்தியான விளம்பரத்தைப் போல…

கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு தேசிய அளவிலான முதலாளித்துவ செய்தி ஊடகங்கள் ‘தேச பக்தியின்’ அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டன. டைம்ஸ் நௌ, என்.டி.டீ.வி, சி.என்.என் ஐ.பி.என் உள்ளிட்ட ஆங்கில செய்திச் சேனல்களில் பளீர் மேக்கப்பில் தோன்றும் செய்தியறிவிப்பாளர்களும் விருந்தினர்களும்  இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே இறுதி யுத்தம் நடப்பதாக பிரகடனம் செய்கிறார்கள். இந்தியா முழுவதும் கொந்தளிப்பில் இருப்பதாக திகிலூட்டும் பின்னணி இசை அதிர அறிவிக்கிறார்கள். ஊழலை எதிர்த்து தில்லி, மும்பை, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, சிரீநகர், கொல்கொத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடக்கும் புனிதப் போருக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கிரிக்கெட்டோ இல்லை ஊழலோ எதுவாக இருந்தாலும் தேசபக்தியை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா?

நேரடிச் செய்தி ஒளிபரப்புகளில் மெழுகுவர்த்தியும் கையுமாகத் தோன்றும் ஊழல் ஒழிப்புப் ‘போராட்டக்காரர்கள்’, இதை விட்டால் வேறு வாய்ப்பே இல்லையென்கிறார்கள். இப்போது விட்டால் இனியெப்போதும் ஊழலை ஒழிக்கும் சந்தர்ப்பம் அமையாது என்கிறார்கள். நேரடி ஒளிபரப்பு ஒன்றில் பேட்டியளித்த பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும்  ‘போராட்டக்காரர்’ ஒருவர், “இன்று காலை எங்க வீட்ல வேலை பார்க்கும் பெண்மணியிடம் கேட்டேன். அவருக்கு லோக்பால்  என்றால் என்னவென்றே தெரியவில்லை. என்னவொரு அநியாயம்? இப்படியும் அறிவில்லாத மக்கள் நாட்டில் வாழ்கிறார்களே? அதனால் தான் ஆபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் வந்து போராடிவிட்டுப் போகலாம் என்று வந்துள்ளேன்” என்கிறார். இதைப் போன்ற ‘இலட்சிய வெறியுடன்’ பெருந்திரளான ‘மக்கள்’ நாடெங்கும் கூட்டம் கூட்டமாகத் திரண்டு மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்திக் கொண்டிருப்பதாக ஆங்கிலச் செய்தி ஊடகங்கள் அறிவிக்கின்றன. இதனால் ஐ.பி.எல் போட்டிகளுக்கான கொண்டாட்டம் குறைந்துவிடவில்லை.

டைம்ஸ் நௌ சேனலில் தோன்றிய ஷோபா டே, தனது லிப்ஸ்டிக் கலைந்ததைக் கூடப் பொருட்படுத்தாமல் சத்தியாவேசம் பொங்க ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தையும் போட்டுக் காய்ச்சியெடுத்து விட்டார். பாலிவுட் நடிகர் ஆமீர்கானும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டார். கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய அணிக்கு ஆதரவளித்ததைப் போலவே இப்போதும் ஊழலை ஒழிக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், பல்வேறு இந்தி நடிகர்களும் ஊழலை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவதாக சபதம் ஏற்றுக் கொண்டிருப்பதாக ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தொடர்ந்து அறிவிப்புகள் வருகின்றன. இதில் உச்சகட்ட பரபரப்பான செய்தியென்னவென்றால், காங்கிரஸ் தலைவி அன்னை சோனியாவும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டது தான்.

ஏதோ இந்தியா முழுவதும் படுபயங்கரமான மக்கள் கிளர்ச்சி நடந்து வருவதைப் போன்ற இந்த சித்தரிப்புகள் எல்லாம் கடந்த ஐந்தாம் தேதியில் இருந்து தான் ஆரம்பித்தது. அன்று தான் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே தில்லி ஜந்தர் மந்தரில் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார். ஒரு பக்கம் பகத்சிங் தோழர்களும் அதற்கு எதிர்புறம் அவர்களைப் பார்த்து பொக்கைவாய் காட்டிச் சிரிக்கும் காந்தியும் பிரிண்ட் அடிக்கப்பட்ட பெரிய ப்ளக்ஸ் பேனர் கட்டப்பட்ட மேடையில், பின்னணியில் காந்தி பஜனைப் பாடல்கள் ஒலிக்க, காந்தி குல்லாயை மாட்டிக் கொண்டு, ஒரு காந்தியப் புன்னகையோடு தனது உண்ணாவிரதத்தை அண்ணா ஹசாரே ஆரம்பித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து முதலாளித்துவ ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டு, ஆங்கில இணையத் தளங்களிலும் சமூக வலைத் தளங்களிலும்  பரபரப்பான விவாதப் பொருளாகி, தற்போது நாடெங்கும் உள்ள பல்வேறு பெருநகரங்களில் இருக்கும் படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையே இது ஒரு இயக்கமாக வளர்ந்து வருகிறது. உச்சகட்டமாக, வரும் ஞாயிற்றுக் கிழமையை மஞ்சள் டி-சர்ட், மஞ்சள் தொப்பி சகிதம் ஒரு ‘மஞ்சள் ஞாயிறாக’ கடைபிடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வலைத்தளத்தில் ஏன் ஞாயிற்றுக் கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்குக் கொள்கை விளக்கமாக ‘அது ஒரு விடுமுறை நாள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாளைக்கூட தியாகம் செய்ய முடியாதவர்கள் ஊழலை எதிர்த்து என்ன செய்ய முடியும் என்று நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஊடகங்களின் கேமரா வெளிச்சத்தில் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டங்களைப் பற்றி மேலும் விரிவாகப் பார்க்கும் முன், அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் பின்னணியைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர்கள் கோரும் சீர்திருத்தங்கள் – லோக்பால் மசோதாவின் பின்னணி!

பிரதமர், அமைச்சர்கள், உள்ளிட்ட உயர்மட்டப் பொறுப்புகளில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா, கடந்த 42 வருடங்களாக நிறைவேறாமல் பாராளுமன்றக் கிணற்றுக்குள் போட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. 1969-ஆம் ஆண்டிலிருந்து 2008-ஆம் ஆண்டு வரையில் பத்து முறை இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, வின்னர் கைப்பிள்ளையின் வார்த்தைகளில் சொல்வதானால், கட்சி பாகுபாடின்றி சர்வகட்சிகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு இம்மசோதாவைப் பாராளுமன்ற மூத்திரச் சந்தினுள் போட்டு ரவுண்டு கட்டி தெளிய வைத்து தெளிய வைத்து கும்மியிருக்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க, சமீப நாட்களாக வெளியாகி வரும் ஊழல் செய்திகள் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இமாலய ஊழல்களாக இருக்கின்றது. காமென்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஒதுக்கீட்டு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹசன் அலியின் வருமான வரியேய்ப்பு ஊழல், இஸ்ரோவின் எஸ்-பேன்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று கரையைத் தாக்கும் கடலின் அலைகளைப் போல மாறி மாறி இந்திய மக்களை ஊழல் செய்திகள் தொடர்ந்து தாக்கி வருகின்றன. இவை பொதுவில் பத்திரிகைகள் வாசிக்கும் படித்த நடுத்தர வர்க்க மக்கட் பிரிவினரிடையே ஓரளவுக்குத் திகைப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், பாபா ராம்தேவ், ரவிசங்கர் பாபா போன்ற ஆன்மீக பிரபலங்களை உறுப்பினர்களாகக் கொண்ட  ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் என்.ஜி. ஓ அமைப்பின் சார்பாக, அரசினால் முன்வைக்கப்படும் லோக்பால் மசோதாவுக்கு மாற்றாக முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, கிரன் பெடி, சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன் போன்றோரால், ஜன் லோக்பால் என்கிற மசோதாவின் முன்வரைவு ஒன்றைத் தயாரித்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அரசினால் முன்வைக்கப்படும் லோக்பால் மசோதாவின் படி உண்டாக்கப்படும் ஊழல் தடுப்பு அமைப்பிற்கு ஒரு ஆலோசனைக் கமிட்டிக்கு உண்டான அதிகாரம் மட்டும் தான் உள்ளது. மேலும், புகார்கள் ஏதும் இல்லாத நிலையிலும் ஒரு விவகாரம் பற்றி சுயேச்சையாக விசாரிக்கும் அதிகாரம் (suo moto) இல்லை. மட்டுமல்லாமல், புகார்களை சாதாரண பொதுமக்களிடம் இருந்து பெரும் அதிகாரமும் கிடையாது; மக்களவை சபாநாயகரோ மாநிலங்களவைத் தலைவரோ அளிக்கும் புகார்களை மட்டுமே விசாரிக்க முடியும் அளவிற்குத் தான் அதன் அதிகார வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பினால் முன்வைக்கப்படும் ஜன்லோக்பால் மசோதா, ஊழல் புகார்களின் பேரில் முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யும் உரிமை, சுயேச்சையாய் விசாரிக்கும் அதிகாரம், பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை ஏற்று விசாரிப்பது, அரசியல் தலைவர்களை மாத்திரமல்லாமல் அரசு உயரதிகாரிகளையும் விசாரிக்கும் உரிமை போன்றவற்றை வலியுறுத்துகிறது. இது மட்டுமல்லாமல், சி.பி.ஐயின் ஊழல் தடுப்புப் பிரிவோடு சேர்ந்து லோக்பால் அமைப்பு தேர்தல் கமிஷனைப் போன்றதொரு சுயேச்சையானதொரு அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்பதும் இவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளாகும்.

ஊழலுக்கு எதிரான இந்தியா முன்வைத்துள்ள மசோதா முன்வரைவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், லோக்பால் மசோதாவை இறுதி செய்ய அரசு போடப்போகும் கமிட்டியில் அரசே நியமிக்கும் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், சிவில் சமூகத்தைச் சார்ந்தவர்களையும் இணைத்து ஒரு கூட்டுக் கமிட்டி உருவாக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

மேற்படி மசோதா முன்வரைவைத் தயாரித்த ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பினர், இதை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் சோனியா காந்திக்கும் தொடர்ந்து கடிதம் எழுதினார்களாம். இதற்குப் பேசாமல் அந்தக் கடிதங்களை அவர்கள் நேரடியாக ஒபாமாவுக்கே அனுப்பியிருக்கலாம்; அல்லது குறைந்தபட்சம் இங்கேயிருக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்காவது அனுப்பியிருக்கலாம். சாமியை விட்டுப் பூசாரியிடம் வரம் கேட்டுக் கெஞ்சி இருக்கிறார்கள். போகட்டும்.

மற்ற போராட்டங்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கம் அண்ணா ஹசாராவை ஆதரிப்பது ஏன்?

மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அதிகாரியே பேர் போன திருடனாக இருந்தது சமீபத்தில் தான் அம்பலமானது. அது ஊரெல்லாம் தெரிந்து, சகலரும் காறித் துப்பிய பின்னரும் ‘அப்டியா எனுக்கு ஒன்னியுமே தெரியாதே’ என்று விளக்கம் அளித்த நெம்ப நல்லவர் தான் பிரதமர். அப்போது மட்டுமா? இஸ்ரோவின் எஸ்-பேன்ட் ஊழல் உள்ளிட்டு ஒவ்வொரு முறை முறைகேடுகள் பற்றிய விவரங்கள் அம்பலமாகிய போது சலிக்காமல் அவர் அளிக்கும் விளக்கம் ‘தெரியாது’ தான். அந்தக் கல்லுளிமங்கனுக்குத் தான் அண்ணா ஹசாரே கடிதம் எழுதியதாகச் சொல்கிறார். மவுனமோகனின் மற்ற அரசியல் நடவடிக்கைகள் குறித்து அண்ணா ஹசாரேவுக்கு எந்த புகாரும் இல்லை. அவர் எதிர்பார்த்தது ஊழல் குறித்த ஆலோசனைக்கு ஒரு பதில்தான். ஆனால் அவர் எதிர்பார்த்திற்கும் மேலான பதில்கள் பலரிடமிருந்தும் படையெடுத்து வருகின்றன.

இதில் நமது கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், நாடெங்கும் போராடும் மக்கள் மேல் பாய்ந்து குதறும் அரசு, அண்ணா ஹசாரேவிடம் பொறுமையாகப் பதிலளிக்கிறது. ஒன்றுமே தெரியாத பிரதமரே கூட முன்வந்து அண்ணாவிடம் கோரிக்கை வைக்கிறார். சோனியா காந்தி அண்ணாவின் போராட்டத்தை அரசு புரிந்து கொள்ளும் என்று பரிவோடு பேசுகிறார். பாரதிய ஜனதா, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த உண்ணாவிரதத்தை ஆதரிக்கின்றனர். பிரதமரின் பரிவு, சோனியாவின் ஆதரவு, எதிர்கட்சிகளின் ஆதரவு – இதற்கெல்லாம் மணிமகுடமாக – இத்தனை பேரின் ஆதரவோடு சேர்த்து பீகாரின் மு.க அழகிரியான பப்புயாதவின் ஆதரவையும் அண்ணா ஹசாரே பெற்றுள்ளார். கொலைக் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பப்பு யாதவ், அண்ணாவுக்கு ஆதரவாகத் தாமும் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். ஒரு கிரிமினலைக்கூட ஒரு காந்தியவாதி திருத்திவிட்டார் என்றும் நீங்கள் கருதிக் கொள்ளலாம்.

தற்போது ஊடகங்களில் போராட்டக்காரர்களாகவும் புரட்சிக்காரர்களாகவும் கிளர்ச்சியாளர்களாகவும் ஒளிவட்டம் போட்டுக் காட்டப்படும் நபர்கள் யாரும் அரசின் ஊழல்களால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்தவர்கள் அல்ல. இவர்கள் தமது சொந்த வாழ்க்கையின் சகல சவுகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு, சொகுசான வேலைகளில் இருந்து கொண்டு ஓய்வு நேரத்தில் கொஞ்சம் சமூக உணர்வு வந்திருப்பதாக கருதிக் கொள்பவர்கள். சிலர் கேமராமுன் பேட்டியளித்த போது வெவ்வேறு பாலிஷான வார்த்தைகளில் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கவும் இல்லை. இதே அண்ணா ஹசாரே ஒரு பத்து நாளைக்கு முன் – கிரிக்கெட் உலகக் கோப்பை நடந்து கொண்டிருந்த சமயத்தில் – தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தால் ஜந்தர் மந்தரில் ஒரு குஞ்சு குளுவான் கூட கூடியிருக்காது என்பது தான் நிதர்சனம்.

இது ஒருபக்கம் இருக்க, தற்போது ஆங்கில செய்திச் சேனல்களின் கேமாராக்களின் முன் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் பொங்கியெழுந்து கொண்டிருக்கும் இதே நடுத்தர வர்க்கத்தினர் தான் மத்திய இந்தியாவில் இந்தியாவின் அரிய வளங்களைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்திய அரசு படையலிட்ட போதும் அதை எதிர்த்து பழங்குடியின மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போதும், அந்தப் போராட்டத்தின் மேல் இரத்த வெறியோடு இராணுவம் பாய்ந்து குதறிக் கொண்டிருக்கும் நிலையிலும் அவற்றையெல்லாம் எந்தக் கேள்வியுமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அப்போது மட்டுமல்ல, இன்னும் பல்வேறு சந்தர்பங்களில் மத்திய அரசு தனது மிருகத்தனமான ஒடுக்குமுறையை வடகிழக்கிலும் காஷ்மீரிலும் கட்டவிழ்த்து விட்ட போதும் அதை எதிர்த்து சாமானிய மக்கள் போராடிய போதும் பாப்கார்னைக் கொறித்துக் கொண்டும் கோக்கை அருந்திக் கொண்டும் ஆதரித்தவர்கள்.

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் தொடங்கி மூன்றாம் நாளிலேயே அவரின் கோரிக்கைகளில் ஒன்றான லோக்பால் மசோதாவை இறுதி செய்வதற்கான கூட்டுக் கமிட்டியை அமைக்க அரசு ஒப்புக் கொண்டு விட்டது. காங்கிரசு பார்க்காத கமிட்டியா? இந்த லோக்பால் மசோதாவும் கூட நாற்பத்திரண்டு ஆண்டுகளாக பல்வேறு கமிட்டிகளில் தான் மூழ்கிக் கிடந்தது. இத்தனை நாளும் குட்டையில் முங்கிக் கிடந்த லோக்பால் மசோதாவைத் தூக்கிக் குளத்தில் போடப் போகிறார்கள்.  அநேகமாக இன்னும் இரண்டொரு நாளில் கமிட்டித் தலைவர் யாரென்பதை முடிவு செய்து விட்டு ஊழல் எதிர்ப்புப் போர் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விடும். அதற்கு மேலும் இதை நீட்டித்தால் ‘போராட்டக்காரர்கள்’ உற்சாகத்தை இழக்கவும் கூடும். இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை எந்த வரம்பிற்குள் இருந்து கொண்டு செய்ய வேண்டும் என்பது அண்ணா ஹசாரேவுக்கு தெரியாமல் போனாலும் ஊடகங்களுக்கு நன்கு தெரியும்.

ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லும் இவர்களின் இந்தப் போராட்ட வழிமுறையே உண்ணாவிரதம் என்ற அரதப்பழசான ஆபத்தில்லாத முறையாக இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு இப்போது வேறு சில கேள்விகள் தோன்றியிருக்க வேண்டும். மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்கியே பழக்கப்பட்ட அரசு இதை மட்டும் பரிவோடு பார்ப்பது ஏன்? எங்கெல்லாம் மக்கள் போராட்டங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் போராடும் மக்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவுமே சித்தரித்துப் பழக்கப்பட்ட கார்ப்பரேட் ஊடகங்கள் இதற்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? உண்மையில் இவர்கள் எதிர்த்துப் போராடப் போவதாகச் சொல்வது ஊழலைத் தானா?

எது ஊழல்? ஊழலின் ஊற்று மூலம் எது?

தற்போது ஊழலை எதிர்க்க ஆங்கில செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் கரம் கோர்த்திருக்கும் நடுத்தரவர்க்க முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஊழலைப் புரிந்து கொண்டிருக்கும் விதம் அலாதியானது. பேருந்தில் ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது திருட்டு; அதே அம்பானி அரசாங்கத்திடமிருந்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தால் அது தொழில் திறமை; அரசாங்கமே முன்வந்து வரி விலக்குகள் மூலம் மக்கள் வரிப்பணத்தை அம்பானியின் சட்டைப் பாக்கெட்டில் வைத்தால் அது பொருளாதார சீர்திருத்தம்.  உலகமயமாக்கத்தின் விளைவாய் நாட்டின் வளங்களையும், பொதுத்துறைளையும் தனியார் முதலாளிகள் ஒட்டச் சுரண்டுவதோ திருடுவதோ இவர்களுக்குப் பிரச்சினையாகத் தெரிவதில்லை; அது முறையாக நடந்ததா, சட்டப்படி நடந்ததா என்பது தான் பிரச்சினை.

நாட்டு மக்களுக்குச் சொந்தமானதொரு இயற்கை வளமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையைத் தனியாருக்கு விற்றதைப் பற்றி இந்த அறிவுஜீவிகளுக்குக் கவலையில்லை – ஏன் அதையே முறையான விதிகளைக் கையாண்டு இராசா செய்யவில்லை என்பது தான் இவர்களின் சத்தியாவேசத்தின் ஜுவாலையைத் தூண்டிவிடுகிறது. சந்தையில் டன் ஒன்றுக்கு 7000 ரூபாய் வரை விலை போகும் இரும்புத் தாதுவை ரெட்டி சகோதரர்கள் வெறும் 27 ரூபாயை அரசுக்குக் கொடுத்து விட்டு அள்ளிச் செல்வது ஊழல்  இல்லையென்கிறார்கள். ஏனெனில் அவரிடம் முறையான ஒப்பந்தமிருக்கிறது சட்டப்பூர்வமான ஒப்புதலமிருக்கிறது. வி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றிய டாடா, பலநூறு கோடி மதிப்புள்ள அதன் அசையாச் சொத்துக்களை இலவச இணைப்பாகப் பெற்றதோ, அதன் ரிசர்வ் நிதியையே கடத்திக் கொண்டு போனதோ இவர்களைப் பொறுத்தளவில் ஊழல் இல்லை – ஏனெனில் அது முறையாக சட்டப்பூர்வமாக நடந்துள்ளது.

தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த இரண்டு பத்தாண்டுகளில் எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்கப் பட்டுள்ளது. இதுவும் போதாதென்று, ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகைகளாக தனியார் ஏகபோக முதலாளிகளுக்கு அரசு வாரி வழங்கி வருகிறது. தேசத்தின் பொருளாதாரமே பெரும் சூதாட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் முதற்கொண்டு ஊக பேர வர்த்தகத்தில் இணைக்கப்பட்டு விலைவாசிகள் நம்ப முடியாத அளவுக்குச் செயற்கையாக ஏற்றப்படுகிறது. இவையெதுவும் ஊழல் என்பதாக இவர்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகக் கணக்குக் காட்டி அரசுக்குப் பட்டை நாமம் போடும் அம்பானி இவர்களைப் பொருத்தவரை ஊழல் செய்தவரல்ல; முன்னுதாரணமான தொழிலதிபர்.

அரசு ஏற்று நடைமுறைமுறைப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளே பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் சாதகமானதாக உள்ளது. தேசத்தின் வளங்களெல்லாம் கூறு போட்டு ஏகபோக முதலாளிகளுக்கு படையிலிட வகை செய்யும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. இவ்வாறாக, ஊழல் என்பதை  ஏற்கனவே சட்டப்பூர்வமனதாக ஆக்கிவிட்டனர். இதை செயலுக்குக் கொண்டு வரும் வழிமுறைகளை முறையாக நடத்தாமல்  தேனை வழித்துக் கொடுக்கும் போது புறங்கையைக் கொஞ்சம் நக்கிக் கொள்வதை மட்டும் ஊழல் என்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் முன்னிறுத்துகின்றனர். ஆக, இந்த ஊழல் எதிர்ப்பு வீரர்கள் நம்மிடம் ஔவையாரின் மொழியில் செய்வன திருந்தச் செய் என்கிறார்கள்.

இதனால் தான் தனியார் கம்பெனிகளிடம் தனி ஒப்பந்தங்கள் போட்டு அவற்றின் பங்குகளில் முதலீடு செய்து விட்டு அதன் மதிப்பை சந்தையில் ஊகமாக உயர்த்தும் விதமாக அவற்றின் விளம்பரங்களைச் செய்திகள் போல வெளியிட்ட  டைம்ஸ் நௌ, இந்த ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஊதுகுழலாகச் செயல்படுவதைப் பற்றி கூச்சப்படவில்லை. முதலாளிகளுக்குச் சாதகமான நபர்களுக்கு அமைச்சரவைத் துறைகளை ஒதுக்கீடு செய்ய தரகு வேலை பார்த்த பர்க்கா தத், அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் பற்றி பெரிய நன்னூல் போல் கேமராவின் முன் பேச வெட்கப்படவில்லை. ஏனெனில், அண்ணாவின் கோரிக்கை எந்தவிதத்திலும் முதலாளிகளின் நலனுக்கும் அவர்களின் அடிவருடிகளாகச் செயல்படும் முதலாளித்துவ ஊடகங்களின் நலனுக்கும் முரண்படவில்லை என்பதில் இருந்தே இவர்களின் ஆதரவு எழுகிறது.

தங்களின் வாழ்வாதாரமான நியாம்கிரி மலையைப் போஸ்கோவிடமிருந்து காப்பாற்ற அதன் கைத்தடியான இராணுவத்தையும் சல்வாஜூடும் குண்டர்படையையும் எதிர்த்து நிற்கும் ஒரு கோண்ட் பழங்குடிக்கும் பெங்களூருவில் இருபத்து நான்குமணி நேரமும் குளிரூட்டப்பட்ட ஏசி அறைக்குள் முடங்கிக் கிடக்கும் ஒரு ஐ.டி கம்பெனி ஊழியருக்கும் ஊழல் பற்றிய பார்வை அடிப்படையிலேயே மாறுபடுகிறது. தனது வாழ்வாதாரமான நிலமே தம்மிடமிருந்து பறிக்கப்படுவதை ஒரு அயோக்கியத்தனமான நடவடிக்கை என்று அவரால் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அது தம்மிடமிருந்து திருடப்பட்டுவிட்டால் தமது மக்கள் வாழ்விழந்து போவார்கள் என்பதை உணர்ந்து கொள்வதால் அவர் நிலப்பறிப்பையே ஊழல் என்று சரியாகப் புரிந்து கொண்டுள்ளார் – எதிர்த்துப் போராடுகிறார். ஊடக வெளிச்சத்தில் ஊழலை எதிர்க்கக் கிளம்பியிருக்கும் இந்தத் திடீர்ப் புரட்சியாளர்களோ போஸ்கோவுக்கு அனுமதியளித்ததில் முறையாக டென்டர் கோரப்பட்டதா, யாருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்று சில்லறை நடைமுறைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் – நிலம் அபகரிப்பட்டதை ஒரு தொழில் நடவடிக்கையாகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கையாகவுமே பார்க்கிறார்கள். இரத்தமும் சதையுமான மனிதர்கள் ஒரு பொருட்டில்லை.

அண்ணா எதைப் பேசுகிறார் என்பதை மட்டும் வைத்து அவருடைய போராட்டத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது; அவர் எதைப் பேசவில்லை என்பதிலிருந்து தான் இந்தப் போராட்டங்களும் உண்ணாவிரதமும் யாருடைய நலனுக்கானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் வளங்கள் கொள்ளை போவதை ஒரு வழக்குப் போட்டு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தடுத்து விட முடியாது. அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட எண்ணற்ற வழக்குகளில் அவை அரசின் கொள்கை முடிவுகள் என்பதால் நீதிமன்றம் அவற்றில் தலையிட முடியாது என்று பல்வேறு சந்தர்பங்களில் அறிவித்துள்ளது. அண்ணாவோ, நடந்து கொண்டிருக்கும் கொள்ளையில் ஏற்படும் சில்லறை நடைமுறைத் தவறுகளையே ஊழல் என்றும் அதை எதிர்த்துப் போராடுவதே ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்றும் அறிவிக்கிறார்.

அண்ணா ஹசாரே ஊழலை தோற்றுவிக்கும் தனியார்மயத்தை ஏற்றுக் கொள்கிறார்

இதனால் அண்ணா ஹசாரே இந்த விசயங்களை புரிந்து கொண்டு தவறு செய்கிறார் என்று கருதிவிடக்கூடாது. அவரைப் பொறுத்தவரை இந்த அமைப்பு முறையை அதாவது இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார அமைப்பை அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறார். அந்த பலத்தில்தான் அவர் ஜன்லோக்பால் சீர்திருத்தத்தைக் கோருகிறார். ஆனால் இந்த அமைப்பு முறையே மக்களைச் சுரண்டும் ஊழலை தன் அடிப்படையாக வைத்திருக்கும் போது நாம் எதை எதிர்த்து போராட வேண்டும்? பளிச்சென்று ஒரு எடுத்துக்காட்டு கூறவேண்டுமென்றால் தாமிரபரணி தண்ணியை கொக்கோ கோலாவுக்கு விற்பது ஊழலா, இல்லை அந்த விற்பனையில் ஒரு கலெக்டர் சில இலட்சங்களை கமிஷனாக பெற்றார் என்பது ஊழலா? முன்னது இந்த நாட்டின் இயற்கை வளத்தை அப்பட்டமாக விற்கிறது. பின்னது அதிகார வர்க்கத்திடம் அன்றாடம் நடக்கும் நிர்வாக ஊழல். இரண்டு ஊழல்களின் பரிமாணங்களும் வேறு வேறானவை. சட்டம் போட்டு கலக்டரையோ, இல்லை மந்திரியையோ தண்டித்து விடலாம். ஆனால் நாட்டை விற்பனை செய்யும் இந்த அரசை எப்படி தண்டிப்பது?

தற்போது நடக்கும் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களோ, அண்ணாவின் உண்ணாவிரதமோ தமது நோக்கத்திற்கும் நலனுக்கும் எவ்விதத்திலும் முரண்பட்டதல்ல என்பதைப் புரிந்து கொண்டுள்ளதாலேயே ஆளும் கும்பல் இவர்களிடம் பரிவோடு பேசுகிறது. எதார்த்தத்தில் நீதி மன்றங்களும், சட்டமுமே தனியார்மய கார்பொரேட் பகற்கொள்ளைக்கு ஆதரவானதாக இருக்கிறது. உண்மை இப்படியிருக்கும் போது, சட்டவாத நடைமுறைகளைக் கொண்டே ஊழலை எதிர்த்து விடப் போவதாகச் சொல்வதும், அதையே ஊழலுக்கு எதிரான ஆகப் பெரிய போராட்டம் என்பது போலும் சித்தரிப்பது கேடுகெட்ட அயோக்கியத்தனமாகும். இது சுரண்டலுக்கும் ஊழலுக்கும் எதிராக மக்களிடையே இயல்பாக எழும்பக் கூடிய ஆத்திரத்தை மடைமாற்றி விடவே செய்யும். எனவே தான் இந்த போராட்டக்காரர்களிடம் பணிந்து போவது போலும் பரிந்து பேசுவது போலும் ஒரு நாடகத்தை ஆளும் கும்பல் அரங்கேற்றி வருகிறது.

ஒருவேளை இந்தக் கமிட்டியின்  மூலம் வெகுவிரையில் லோக்பால் அமைப்பு  உண்டாக்கப்பட்டு விட்டால் இவர்களே ஊழல் என்று சொல்வதை அது ஒழித்து விடுமா? இல்லை. அந்த அமைப்புக்குத் தலைவராகப் போட பி.ஜே.தாமஸ் போன்ற இன்னொரு அதிகாரி கிடைக்காமலா போய் விடுவார்? ஏற்கனவே மலக்குட்டையில் முக்குளித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் போலீசு, சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ போன்ற நிறுவனங்களோடு சேர்ந்து புதிதாக இன்னொரு பன்றி என்கிற அளவிலேயே இருக்கும்.

அண்ணாவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலும் அது இந்த அமைப்பு முறையின் அடிப்படையான ஊழலை மாற்றி விடாது. மேலும் முதலாளிகளின் கொள்ளையை நியாயப்படுத்திக் கொண்டே புறங்கையை நக்கியவர்களை மாபெரும் வில்லன்களாக காட்டுவதே இதன் நோக்கம். ஆக அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்கு அம்பானியே ஆதரவளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மும்பையில் நடந்த மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒருவர் செய்திச் சேனல் ஒன்றின் கேமரா முன் தான் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது ஏன் என்று விளக்குகிறார் – “என் தாத்தா காந்தியைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்.  நான் என் வாழ்நாளில் காந்தியைக் கண்டதில்லை. இப்போது அண்ணாவைப் பார்க்கும் போது காந்தி என்பவர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று புரிந்து கொள்ள முடிகிறது” என்றார். ஆம், காந்தியும் இப்படித்தான் இருந்தார் – ஒரு மக்களின் நியாயமான எதிர்ப்புணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாய், தன்னெழுச்சியான போராட்டங்களைக் நீர்த்து போக செய்வதற்கான வேலையைத்தான் அவர் செய்தார்.

வருடம் முழுவதும் பிசா, கென்டகி, எம்.டி.வி, ஐ.பி.எல், என்று வாழும் நடுத்தர வர்க்கம் அதற்கு ஊறு இல்லாமல் கொஞ்ச நேரம் காந்தியையும் போற்றுகிறது. வார இறுதி கேளிக்கைளில் கொஞ்சம் சலித்துப் போனால் கோவிலுக்கு போவதில்லையா? ஆக இந்த ஊழல் எதிர்ப்பு கூட வந்து போகும் ஒரு வீக் எண்ட்தான். இது முடிந்த பிறகு அவர்கள் ஐ.பி.எல்லுக்கு போவார்கள். சியர் லீடர்களோடு சேர்ந்து ஆரவரிப்பார்கள். கிரிக்கெட்டோ, ஊழல் எதிர்ப்போ தொடர்ந்து மக்களை ஆரவாரத்தில் வைத்திருப்பதே அவர்களது நோக்கம். அடிப்படையை மாற்றுவது நம் கையில். புரிந்தவர்கள் இந்த உண்ணாவிரதம் தோற்றுவித்திருக்கும் பொய்மையை கலைப்பதற்கு முன்வரவேண்டும்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

விக்கி லீக்ஸ்

  1. அண்ணா ஹசாரே : ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம் !…

    கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு தேசிய அளவிலான செய்தி ஊடகங்கள் ‘தேச பக்தியின்’ அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டன. கிரிக்கெட்டோ இல்லை ஊழலோ எதுவாக இருந்தாலும் தேசபக்தியை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா?…

  2. உங்களுடைய கட்டுரைகளை விரும்பிப்படிப்பவன் நான், ஆனால் இந்த கட்டுரையை நான் வன்மையாக எதிர்க்கிறேன். எதை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபித்து கொடிபிடிக்கும் உம்மைப்போன்ற கூட்டம் இருக்கும்வரை இங்கு எந்த முனேற்றமும் ஏற்படப்போவதில்லை. முதலில் தெருவிற்கு வந்து போராட துணிந்துள்ள நம் மக்களின் மனப்பான்மையை பாராட்டுங்கள். எல்லாம் தானாக நடந்துவிடாது. திரு அன்னா ஹசாரே அவர்களின் இந்த முயற்சியை பாராட்டுங்கள், ஆதரவுதாருங்கள். நிச்சயமாக உம்மைப்போன்றோரல் இத்தகைய முயற்சியை நினைத்துப்போர்க்கவோ, செய்யவோ முடியாது. மன்னிக்கவும் !

    • முதலில் தெருவிற்கு வந்து போராட துணிந்துள்ள நம் மக்களின் மனப்பான்மையை பாராட்டுங்கள். //

      பழனி,
      போராட்டத்தின் இறுதி வடிவமே இதுதான் என்று நினைக்கிறீர்களா? உண்மையாக ஊழலை ஒழிக்க விரும்புகின்றவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க செய்யும் ஒரு உக்தியாக அன்னாவின் இப்போராட்டம் ஊழல்வாதிகளாலேயே நக்ர்த்தப்படுகின்றது என்பதை தான் இக்கட்டுரை பேசுகிறது.

      • //உண்மையாக ஊழலை ஒழிக்க விரும்புகின்றவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க செய்யும் ஒரு உக்தியாக அன்னாவின் இப்போராட்டம் ஊழல்வாதிகளாலேயே நக்ர்த்தப்படுகின்றது என்பதை தான் இக்கட்டுரை பேசுகிறது//

        உண்மையாக ஊழலை ஒழிக்க விரும்புகின்றவர்கள் யார், வினவு மட்டும் தானா? சரி அவர் செய்வது தப்பு அல்லது அவர் செய்யும் போராட்டம் அரசியல்வாதிகளால் நகர்த்தப்படுகிறது என்றால், ஒரு சரியான போராட்டத்தை வினவு தொடங்கலாமே… எங்கள் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு….

        ஒரு கேள்வி!
        “Jan LokPal Bill”லை படித்துப்பார்த்தீர்களா சார்???

        • உங்க சீனா ரசியா ல ஊழலே நடக்கலயா… ஓரேயடியா அந்தமககள் ஆட்சிய துக்கிப் போட்டுட்டு போயிட்டாங்களே… எதுக்கெடுத்தாலும் பிட்சா பர்கர் பாப்கான் சாப்புடற மக்கள்னு சொல்ல வேண்டியது.. அலோ……… ஓரேயொரு விசயத்த புரிஞ்சுங்க… அந்த மாதிரி மக்களும் ஆதரவு தெரிவிக்கிறாங்க…அவ்வளவுதான்… மற்றவர்கள் எல்லா கட்சியிலும இருக்கற ஆளுங்களும் மற்றும் பொது மக்களும்தான்.. (உம்ம புரட்சியே மிடில் கிளாஸ் அப்பர் மிடில் கிளாஸ் ஆளங்க தலைமை இல்லாம நடக்கவே நடக்காது… )அவ்வளவுஏன் ஓரு முத்துக்குமார் தீக்குளிச்ச உடனே நீர் போய் அந்த எடத்துல ஏதாவது கட்சிக்கு ஆள் கெடப்பாங்களான்னு அலை பாஞ்சீரே… (நீரு முத்துக்குமாரு போராட்டத்தையும் ஆதரிக்கல..).உமக்கு உடனே எல்லாரும் துப்பாக்கி துக்கிடுணம்.. … அதெல்லாம் நடக்கற கத இல்ல சாரே….நீரு எல்லாத்தையும் திட்டிக்கிட்டே காலத்த ஓட்டும்….

      • இது போராட்டத்தின் ஆரம்பமே, முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். இப்போராட்டம் ஏதோ ஒரு அரசியல் கட்சியினரால் ஆரம்பிக்கப்பட்டு இருந்தால் அன்றே முடிவுக்கு வந்திருக்கும். இது ஒரு தனிமனித முயற்சி. ஊழலை ஒழிக்க யாருமே முன்வர மாட்டார்களா என ஏங்கி தவித்த மக்களுக்கு இப்போராட்டம் தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை. அதனால் தான் இப்படி ஒரு மாபெரும் ஆதரவு. இப்போராட்டம், போராட்ட உணர்வை மழுங்கடிக்க செய்யவில்லை, ஒவ்வவொரு மனிதருக்குள்ளும் உள்ள போராட்ட உணர்வை தூண்டியிருக்கிறது இதுதான் உண்மை.

        • ஊழல்-னா என்ன? பாலம் கட்ட ஒப்பந்தம் போட்டுக்கிட்டு அதிலே சிமெண்டுக்குப் பதில் கொஞ்சம் மணலைக் கலப்பதுதான் ஊழல்னு 1990 வரைக்கும் இருந்தது. இன்று ஊழலில் தன்மையே மாறிப் போச்சு.. அது எப்படின்னா, இதுவரை ஊழல் என வரையறுக்கப்பட்டதெல்லாம் சட்ட்ப்பூர்வமாக்கப்பட்டு விட்டது. கார்ப்பொரேட்டுகளின் யானைப்பசிக்காக நாட்டின் இயற்கை வளங்களே சட்டப்படி சூறையாட திறக்கப்பட்டு விட்டன..இதுதான் இன்றைய ஊழலின் பரிமாணம்.. ரூ 27 க்கு மட்டும் ஒரு டன் இரும்புத்தாதுவை வெட்டி எடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட பன்னாட்டு நிறுவனம் ‘வேதாந்தா’ அதை மார்க்கெட்டில் பல ஆயிரத்துக்கு விற்கிறது..இந்த ஒப்பந்தப்படி மலைகளே அவர்களுக்குப் பறிபோகின்றன.. அன்னா இத்தகைய ஊழலை ஒழிக்கத்தான் உண்ணாவிரதம் இருக்காருன்னா…சாரிங்க..இதைவிட வேறு பித்தலாட்டம் வேறு ஏதும் இல்லை..துப்பாக்கி ஏந்தி மாவோயிஸ்ட்கள் இதற்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கும்போது பணிந்து திருந்தாத இந்திய அரசு…கைராட்டை / உண்ணாவிரதத்துக்கு பணிந்துவிடும் என்று நம்புவது… டைபாய்டுக்கு மாத்திரை சாப்பிடாமல் திருநீறு போட ஆத்தாவின் கோவிலில் வரிசையில் நிற்பவரின் நம்பிக்கைதான்

    • Mr.Palani,

      You are 100% correct. VINAVU is a waste portal. They will not appreciate anyone. They will scold everyone…

      KAMARAJAR to KAKKAN all are same to VINAVU…

      The central objective of the essay is scolding everyone…

      • Most of the things that are happening here to be criticized..But, we people, by believing medias not doing that.. Vinavu is doing this for us to think.. they are not criticing this blindly, proper reason, required proofs has been given there.. we have been taught to criticise the issue with its corrent situation.. But to know the reality, we have to approach that issue from its root and comparing that with related issues..thats what vinavu doing…
        i’m not telling this to oppose anybody, i’m just sharing my view..
        if you don’t accept this, you just share your ideas. we shall discuss it..

        • Vinavu has got the right to critise the way we want, but being pesimistic all the time and thinking that they are always right si the worst part of it. Few issues the author has mentioned about the way things happening in India( Pepsi issue,relaince issue…etc) If you really look in to it with open eyes there lies a corruption, the mentality of the money magnets is that ‘if i want something I can get as if it looks like legal by bribing someone’ That means i have a door and I can open it by knocking it with money, but if the person in the otherside of the door knew if he opens that door then he will be punished, he wont open the door, so this bill is in a way is to close the door of corruption. U right even the door is closed they might find another window…… But always thing one step at a time and i belive this is the first step…………….

    • புரட்சியை தொடங்கியவர் காந்தியவாதியாயிற்றே.கம்யூனிஸ்டுவாதியாயிருந்தால் ஆஹா ஓஹோன்னு குடைபிடித்திருப்பார்கள்.நல்லதை யார் செய்தாலும் இவர்களுக்கு பிடிக்காது அதில் என்ன குறை கண்டுபிடிக்கலாமென்று மோப்பம் பிடிக்கும் ஜென்மங்கள்.

  3. நீர் ஒரு உண்மை நக்கீரரோ? இந்தனை நாளும் உங்கள் பக்கத்தை விரும்பிப்படித்தேன், அனால் எதைக் கண்டாலும் குற்றம் கூறும் வினவின் நோக்கு சரியானதில்லை. ஒருத்தன் ஒரு நல்ல விஷயத்த பண்ணுனாலும் அதுல இது சொட்ட, அது சொட்டன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்? இதனை காலமா எத்தனையோ வஷயத்தைப் பற்றி குறை சொன்ன வினவு ஏதாவது மாற்றம் கொண்டுவந்துள்ளதா??? if you cannot do something good dont atleast de-motivate people… you look like a blaming machine… 🙁

  4. >>>The energy of the #hazare moment must be used to clean up politics and strengthen instituitions, not trash our democracy. Agree?<<<

    போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பர்கா தத் டிவிட்டியதுதான் மேலே உள்ளது. அன்னாவின் இப்போராட்டம் ஊடகங்களால் எப்படி நகர்த்தப்படும் என்பதற்கு இதுவே சாட்சி

  5. ஒருவேளை இந்தக் கமிட்டியின் மூலம் வெகுவிரையில் லோக்பால் அமைப்பு உண்டாக்கப்பட்டு விட்டால் இவர்களே ஊழல் என்று சொல்வதை அது ஒழித்து விடுமா? இல்லை. அந்த அமைப்புக்குத் தலைவராகப் போட பி.ஜே.தாமஸ் போன்ற இன்னொரு அதிகாரி கிடைக்காமலா போய் விடுவார்? ஏற்கனவே மலக்குட்டையில் முக்குளித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் போலீசு, சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ போன்ற நிறுவனங்களோடு சேர்ந்து புதிதாக இன்னொரு பன்றி என்கிற அளவிலேயே இருக்கும்.

    – நிச்சயமான உண்மை.

    • கர்நாடகா லோக்காயுதா தலைவர் முன்னாள் நீதிபதி ஊழல ஒழிக்கிறேன்னு உதார் விட்டுட்டு பிறகு கதறி கத்றி அழுததுதான் நினைவுக்கு வருகிறது. பல்லே இல்லாத பொக்கை வாய் புல்டாக் தான் இந்த லோக் பால் சட்டம். மேலும், ஏதோ மஹாராட்டிர அரசியல் தளத்தில் ஊழலை ஒழித்து விட்டது போல அன்னா அவர்கள் பிலா விட்டுக் கொண்டிருக்கிறார். ஆதர்ஸ் நில ஊழலலருந்து, புனே டௌ கெமிக்கல்ஸ்க்கு மஹாராட்டிர சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சட்டி தூக்கியாது அம்பலமாகியுள்ளது (https://www.vinavu.com/2011/04/06/dow-leaks/). சீப்பை ஒழித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்னுடும்னு பழனி போல சிலர் நம்பிக் கொண்டிருக்கலாம். எப்படி மொட்டை போட்டால் பாஸாகிவிடலாம், ஓட்டு போட்டே ஜே/கருணாநிதியை தண்டிதுவிடலாம் என்று நம்புகிறார்களோ அது பொல இதுவும் மூடநம்பிக்கையே. நோய் நாடி நோய் முதல் நாடி கண்டு தீர்வு சொல்ல வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லையே? 1947ல் இந்தியா சுதந்திரம் வேண்டி நின்ற பொழுது ஆளும் வர்க்கத்துக்கு காந்தி என்ற முகமூடி தேவைப்பட்டது. அவரை முதல் NGO ஒரு தோழர் குறிப்பிட்டார். இன்று நாடே பன்னாட்டு கம்பனிகளுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து இன்னொரு சுத்ந்திரப் போரின் தேவை நிலவும் பொழுது NGO காந்தி மறு அவதாரம் எடுத்துள்ளார். மா. சி. யிடம் கேட்டால் அவரே விரிவாகச் சொல்லுவார்.

  6. I think, It is a big sketch plan from the govt, corporate companies, and the media to make people to forget about the india cables(wikileaks) in this election rush. Here the bulshit thing is in tamilnadu no media focus in this and the blody politicians of tamilnadu also did comment on this. However the people are going to bring the legend of the corruption jeyalalitha in cm sheet. But they does not know even for this resultless movement also jeyalalitha did not comment.

  7. நான் இந்த கட்டுரையை முழுமையாக ஆதரிக்கிறேன். எழுதியவருக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு வரியும் முற்றிலும் உண்மை.

    ஒரு விஷயத்தை இங்கு தெளிவுப்படுத்த வேண்டும். காந்தி தான் நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தாருன்னு வரலாறு எழுதப்பட்டு அதை வருடா வருடம் கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு ஒன்று கேட்கிறேன். உண்மையிலேயே நீங்கள் சுதந்திரமாக தான் இருக்கிறீர்களா? 64 வருடங்களா சுதந்திரம் வாங்கிவிட்டோம் என்று நம்பி கொண்டிருக்கவில்லையா?

    இதே கதை தான் இந்த காந்தியவாதியான அண்ணாவின் விஷயத்திலும் பொருந்தும். நாளைக்கு மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியா ஊழலுக்கு எதிராக போராடி வெற்றி பெற்றது இந்த நாளை “ஊழலிருந்து சுதந்திரம் பெற்ற நாள்” என்று நம் பிள்ளைகள் மற்றும் பேர பிள்ளைகளின் காலத்தில் இந்த அண்ணாவின் போராட்டம் வரலாற்று பாடத்தில் ஒரு பகுதியாக வந்து செல்ல உதவலாம்.

    எந்த நட்டையும் போல்ட்டையும் கழற்றி விடலாம் என நினைத்தாலும் முடியாது. ஆம்… நம் அரசியலமைப்பு ஒரு சாக்கடை அதற்குள்ளிருந்து என்ன நறுமணத்தை எதிர்ப்பார்க்கிறீர்கள்.

    • தம்பி சாப்டு போஇ தூங்குங்க .anna is fasting 4 u also.Ippa nee suthandhirama illa ngria..konjam 1930 ku poi parunga…

  8. திகார் சிறையிலிருந்து
    ராசாவை விடுவித்துவிட்டால்
    அவரும் அன்ன ஹசாருடன்
    உண்ணாவிரதமிருப்பார்.
    ஜெயலலிதாவும் கருணா நிதியும்
    மேடையின் இருபக்கங்களிலும்
    அமரவைத்துவிட்டால்
    ‘பேலன்ஸ்’ ஆகிவிடும்.
    போராட்டம் சூடுபிடிக்கும்.

    பாரத் மாதாவின் நெற்றியில்
    அம்பானியும் டாட்டாவும்
    ‘ஆட்டொகிராஃப்’ போட்டுவிட்டால்
    போரட்டம் உச்சத்துக்கே போய்விடும்.

    ஏஆர் ரகுமான் சட்டைப்பொத்தானை
    அவிழ்த்து விட்டுக்கொண்டு
    குரலெடுத்துக் கூவி விட்டால்
    இந்தியா புரட்சியில்
    புகுந்துவிட்டதென அர்த்தம்.

    மீடியாக்கள் மனது வைத்தால்
    கணப்போதில் புரட்சி வரும்
    நொடிப்போதில் மறையும்.
    காளான் நாட்டுக்கு குடை பிடிக்கும்;
    நாடும் காளானுக்கு குடை பிடிக்கும்.
    இன்னொரு கிரிக்கெட் விளையாட்டு.
    சூடு அட்ங்க ஒரு வாரமாகலாம்…

  9. நடுத்தர வர்க்கத்தின் முகத்தில் அறையும் கட்டுரை. நடுத்தர வர்க்கத்தின் மனசாட்சியை தொட்டவுடன் அவர்களுக்கு கோபம் வருகிறது.

    • நீங்களும் போரடமாட்டிங்க, அடுத்தவர்களையும் போரடவிடமாட்டிங்க, ஆனா குற்றம் மட்டும் கண்டுபிடிப்பிங்க. குற்றம் மட்டும் கண்டுபிடிசிக்குனு இருங்க காலம் கனிந்துவிடும்.

      • போராடறதுன்னா ஒரு லட்சியம் இருக்கணும்லாவே..ஹசாரே எதை மாத்தப் போறாடுராரு? நாட்டின் பொருளாதாரக் கொள்கையே ஊழலின் ஊற்றுக்கண்ணா இருக்கறப்போ அதை மாத்தி அமைக்கப் போராடுரது சரியா? இல்லை அதுக்குள்ளேயே நின்னுகிட்டு போராடுரது சரியா? 6 வருசத்துக்கு முந்தி ஆர்.டி.ஐ. ஆக்ட் வந்தப்பவும் சர்வரோக நிவாரணி வந்துடுச்சு..ஊழல் எல்லாம் அம்புட்டுதான்னு நம்ப வச்சாங்க..ஞாபகம் இருக்கா? அதுக்கு பெறகுதானே ஆதர்ஷ், காமன்வெல்த், 2G, எஸ் பேண்ட் எல்லாம் அள்ளிக்கிட்டு போச்சு? என்னத்தப் புடுங்குச்சி ஆர்.டி.ஐ? 2ஜி ல அள்ளிட்டுப் போன டாட்டாவையும் அம்பானியையும் புடிச்சுத் தண்டிக்கச் சொல்லி போராடுவாரா அன்னா ஹசாரே? ஊழலை ஒழிக்கணும்னா அமைப்பையே மாத்தணும்..அன்னிக்கு சௌரிசௌராவிலே மக்கள் கிளர்ந்தப்போ காந்தி அஹிம்சா மூர்த்தி ஆகி பிரிட்டிஷ் காரனைக் காப்பாத்துனத இன்னிக்கு அவரோட சிஷ்யகோடி கார்ப்பரேட் கொள்ளையரைக் காப்பாத்தக் கிளம்பி இருக்காரு

        • Ur name is TIGER, but ur answer is like cat..

          What PALANI says, U will not be doing and u will be scolding everyone(like VINAVU)

          Instead of barking u can do something like ANNA..(That may change this world)

  10. வருசம் பூரா, புரட்சி விலாஸ் கட போட்டு நாம டீ ஆத்துறோம்! ஆளே வரமாட்டீங்குது! போணியும் ஆக மாட்டீங்குது!
    குல்லா போட்ட மண்டையான், திருவிழாவில கட போட்டு, கூட்டத்தை அள்றானப்பா! நம்ம கடயில ஓசி டீ குடிச்சிட்டிருக்கிற, இந்த அக்னிவேஷ சாமியாரும், அங்கிட்டு போயிட்டாப்பல! மாவாட்டற அருந்ததி அக்காவும்,பொறப்படறாப்புல தெரியுது!

    ஏப்பா! நம்மாளுகள எல்லோத்தையும் கூப்புடு! குல்லா மண்டையான் கடயில, டீ குடிக்க வற்றவன எல்லம் காறித் துப்பச் சொல்லு!

    அப்புடியே மருந்துக் கடயில போயி, வவுத்தெரிச்சலுக்கு, ஒரு மூட்டை மாத்திரை வாஙிட்டு வரச் சொல்லுங்கப்பா!

    “ஜெலுசில் மேவதே ஜெயதே!”

  11. உங்களின் பல கட்டுரைகளை பிடித்து படித்தவன் நான்.ஆனால்?

    முதலில் ஒரு போராட்டம் ஆரம்பமானதே நல்ல விஷயம். அது வெற்றிகரமாக முடிந்தால் அப்புறம் அதில் உள்ள குறைகள். அதை மேம்படுத்துவது எப்படி? என்று விவாதிக்கலாம். இதுவே இன்னும் பல போராட்டங்களுக்கு ஆரம்பமாக இருக்கும். அதை விடுத்தது யாருக்கும் புரியாத, தேவை இல்லாத காரணங்களை கூறி முடுக்குவது அசிங்கம். எதையும் குறை கூறி வாழ்வதே உங்கள் வாழ்வாக இருக்கலாமோ என்ற எண்ணம் எனக்கு மேலிடுகிறது. உங்களால் இதைவிட சிறந்த போராட்டம் பண்ண முடியும் என்றால் நானும் உங்கள் பின்னால் நிற்கிறேன்.

    இது நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் வர்கத்துக்கும் உள்ள போராட்டம் இல்லை. முதலில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நடத்துவோம். அப்புறம் அடுத்ததை பேசுவோம். சிலருக்கு வெட்டியாக பேசுவதே பொழப்பாய் ஆகி விட்டது. johny போன்றோர் அவ்வாறானவர்களே. ஏதாவது பண்ணி எங்களுக்கு முன்னுதாரணமாய் இருங்கடா. உங்களை பார்த்து நாங்கள் திருந்துகிறோம்.

    நம் அரசியல் சாக்கடை என்று பேசி கொண்டிருந்தால் என்று தான் அதை சுத்தப்படுத்துவது. குஜராத் மற்றும் பீகார் முன்னேரவிலையா? சாக்கடைக்குள்ளே படுத்து உருள ஆசைப்பட்டால் நீங்கள் பன்றிகளாய் மட்டுமே இருக்க கூடும்.

    • //முதலில் ஒரு போராட்டம் ஆரம்பமானதே நல்ல விஷயம். அது வெற்றிகரமாக முடிந்தால் அப்புறம் அதில் உள்ள குறைகள். அதை மேம்படுத்துவது எப்படி? என்று விவாதிக்கலாம். இதுவே இன்னும் பல போராட்டங்களுக்கு ஆரம்பமாக இருக்கும். அதை விடுத்தது யாருக்கும் புரியாத, தேவை இல்லாத காரணங்களை கூறி முடுக்குவது அசிங்கம். எதையும் குறை கூறி வாழ்வதே உங்கள் வாழ்வாக இருக்கலாமோ என்ற எண்ணம் எனக்கு மேலிடுகிறது. உங்களால் இதைவிட சிறந்த போராட்டம் பண்ண முடியும் என்றால் நானும் உங்கள் பின்னால் நிற்கிறேன்.//

      இதுதான் முத்ல் பொரட்டம் என்று சொல்லுவதே தவறு. மிடியாக்களின் பொய் ம்ற்றும், நடுத்தர வர்க்கம் தான் செய்வது தவிர உலகில் வேறெதுவும் நட்க்கவில்லை என்று நம்புவதன் விளைவுதான் இந்தக் கருத்து. இந்தியாவின் மிகப் பெரிய அச்சுறுத்தலாம் நக்சல் போராட்டமும், பழங்குடி மக்கள், விவசாயிகள்/தொழிலாளர்கள் போராட்டங்கலளும் கடந்த சில வருடங்களாக நாட்டை உலுக்கி வருகின்றனவே அவையெல்லாம் என்னவாம்? நோகாம்ச்ல் நொங்கு திங்க அன்னா வழி சொல்கிறார் அதையும் நம்பி பலர். இருக்காதா பின்னே? சாய்பாபா வாய் வழியே லிங்கம் எடுத்தால் லட்சக்கணக்கில் கூட்டம் கூடுபவர்கள்தானே நாம்?

      • //உங்களால் இதைவிட சிறந்த போராட்டம் பண்ண முடியும் என்றால் நானும் உங்கள் பின்னால் நிற்கிறேன்.///

        உண்ணாவிரதம் இருப்பது சிறந்த போர்ரட்டம் எனில், ஐரோம் ஷ்ர்மிள் 10 வருடமாக இருக்கிறார். மிடிய ஏன் அவருக்கு ஒளி வட்டம் கட்டுவதில்லை? கட்டினால் அவருக்கும் இதே போல கூட்டம் கூடும் , அரசுக்கு ஆப்;பு ஆகிவிடுமே?

        ஏதோ ஒரு பெண்ணின்(ஜெசிகா) கொலைக்கு மெழுகுவத்தி போராட்டம் நடத்தினார்கள். நடுத்த்ர வர்க்கம் மெழுகுவத்தி ஏந்தி வலம் வந்ததை பெரிய புரட்சியாக மீடியா பரப்புரை செய்தது, அதே காலத்தில்தான் லட்சக்கணக்கான் விவசாயிகள் தற்கொலைகள் நிகழ்ந்தன், பல் நூற்றுக்கணக்கில் போராடிய விவசாய, பழங்குடி மக்கள் கொல்லப்பட்டனர். ஏன் விவசாயிகள் கொலையும், போராட்டங்கலும் மீடியாக்களால் பரப்புரை செய்யப்படவில்லை? ஏன் ஜெசிகா போராட்டம் புரட்சி போல முன் தள்ளப்பட்டது? இந்தக் கேள்விகளுக்கான் பதிலில்தான் அன்னாவின் போராட்டமும், ஜெஸிகா போராட்டமும் ஒன்றுதான் என்பதற்கான விடை அடங்கியுள்ளது.

        • // அசுரன்

          உண்ணாவிரதம் இருப்பது சிறந்த போர்ரட்டம் எனில், ஐரோம் ஷ்ர்மிள் 10 வருடமாக இருக்கிறார். மிடிய ஏன் அவருக்கு ஒளி வட்டம் கட்டுவதில்லை? கட்டினால் அவருக்கும் இதே போல கூட்டம் கூடும் , அரசுக்கு ஆப்;பு ஆகிவிடுமே? //

          சரியாகச் சொன்னீர்கள் அசுரன்.
          இது போராட்டம் அல்ல. ஒரு வித கூட்டுக் கொண்டாட்டம். சினிமா, கரிக்கட்டை , தேசபக்தி ரகுமான் பாட்டு இங்கே இல்லாங்காட்டி அங்கே பறந்து போய் கோக் குடிப்பேன் என்று உதார்விட்ட தேசபக்தர் காருக்கான் போன்றவர்களின் கர்ஜனை ….என்ற ஏதாவது ஒன்றில் மக்களை திளைத்திருக்கச் செய்வது. உண்மையான போராட்டங்களுக்கும் சப்பைகளுக்கும் அரசிற்கு வித்தியாசம் தெரிந்தே இருக்கிறது.

          ஐரோம் ஷ்ர்மிள் ‍ ஏன் மீடியாவில் வரவில்லை? ஏன் என்றால் அது போராட்டம். பொழுதுபோக்கு அல்ல.

          டைம்ஸ் ஆப்பு இண்டியா சில வருடங்களுக்கு முன்னால் ப்யூச்சர் லீடர்களை தேர்ந்தெடுப்பதாகக்கூறி தேர்ந்தெடுத்தார்கள். எஸ் எம் எஸ்ல் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தார்கள். அந்தக் கொண்டாட்டம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அழகிரி ரேஞ்சில் ப்ளக்ஸ் எல்லாம் கூட வைத்தார்கள். என்ன கொடுமை என்றால் அதில் யாருக்கும் ஐரோம் ஷ்ர்மிள் பற்றியோ விதர்பா பற்றியோ தெரியாது. போராட்டம் என்பது பொழுது போக்காகிவிட்டது.

    • அண்ணே மிருகம்,
      மதுவிலக்கை அமுல்படுத்த போராடுவோம்னும் சொல்கின்ற நிறுவனர் அய்யா கூட்டணி வைத்திப்பது திமுக கட்சியிடம். ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரே கோரிக்கை வைத்திருப்பது ஊழல் அரசியல்வாதிகளிடம். இரண்டுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா!. சாக்கடை என்பதே அசுத்தமானதுதான். நம் நாட்டில் இருக்கும் அரசியல் சாக்கடை என்றால் அதை முழுவதுமாக அப்புறப்படுத்திதான் சுத்தமாக்கமுடியும்.

  12. ” மெழுகுவத்தி ஏற்ற ஏன் லேட்டா வர.? . இதிலெல்லாம் முன்னோடியா இருக்க வேண்டாமா?.. நான் பாரு அலுவலில் லீவு எடுத்து வந்தேன்..”

    ” எனக்கும் அலுவல் வேலைதான்.. ஒரு காரியத்த முடிச்சு குடுக்க பணம் தரேன்னு சொன்னார்.. அத வாங்கிட்டு வர லேட்டாயிடுச்சு.. சரி வா கல்ந்துக்குவோம்.. கூட்டத்தோட..”

    ——–

    இந்த லட்சணத்தில்தான் இருக்கு .. அண்ணா வின் போராட்டம் நல்லெண்ணம் கொண்டிருந்தாலும்

    //காங்கிரஸ் தலைவி அன்னை சோனியாவும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டது தான்.//

    யாருக்கு எதிரா இங்கே போராட்டம்..?.. ஏலியன்ஸுக்கா..?.. :))

    • நீங்க ஒரு போராட்டம் ஆரம்பிச்சு அதுக்கு ஒரு தீவிரவாத அமைப்பு ஆதரவு தந்தால், நீங்கள் தீவிரவாதியா??? இப்படித்தான் இருக்கிறது உங்கள் கேள்வி!!! மிகவும் வருந்துகிறேன்.
      நீங்கள் “Jan LokPal Bill” லை படித்துப்பார்த்தீர்களா? சோனியா காந்தி தப்பு செய்தால் அது அவரை தண்டிக்காது என்று எந்த ஒரு சரத்தும் அதில் இல்லை.

      • வன்கொடுமைச் சட்டம் கூடத்தான் ரொம்ப நாளா இருக்கு. அதை படிச்சீங்கன்னா நம்ம நாட்டுல வன்கொடுமையே நடக்கலைன்னு சொல்வீங்க போல!

      • நீங்க ஒரு போராட்டம் ஆரம்பிச்சு அதுக்கு ஒரு தீவிரவாத அமைப்பு ஆதரவு தந்தால், நீங்கள் தீவிரவாதியா??? இப்படித்தான் இருக்கிறது உங்கள் கேள்வி!!! மிகவும் வருந்துகிறேன்.//

        அண்ணா ஹசாரே நல்ல மனிதர்.. அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை . மக்களுக்காக பல விஷயம் செய்துள்ளார்..

        ஆனால் என்னைப்போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு ஊடகம் என்ன சொல்லுதோ அதைத்தான் நம்பிப்பழக்கம்.. அதனடியிலுள்ள உண்மைகள் விளங்குவதில்லை..

        கடைசியில் நோக்கம் என்னன்னே தெரியாம நாமளே சில தவறுக்கு ஆதரவாய் இருந்துவிடுகிறோம்..

        கிட்டத்தட்ட சர்ச்ல, கோவில் ல பால் வடியுது கதைதான்..

        ———

        //நீங்கள் “Jan LokPal Bill” லை படித்துப்பார்த்தீர்களா? சோனியா காந்தி தப்பு செய்தால் அது அவரை தண்டிக்காது என்று எந்த ஒரு சரத்தும் அதில் இல்லை.//

        நம் நாட்டில் சட்டமே பல வேளை ஆளுங்கட்சி கையில் இருப்பதுதானே வேதனை..

        சரி இந்த புது சட்டமே வேண்டாம். இருக்கிற சட்டம் வைத்தே பல ஊழல்வாதிகள் மேல் நடவடிக்கை எடுக்கலாமே.?

        63 சீட்டுக்காக சட்டமே ஒடுக்கப்படுதா இல்லையா?..

        திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்.
        அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துகொண்டே இருக்கும்..

        அப்பவே சரியாத்தான் பாடியிருக்காங்க..

        விட்டா ராசாவும் கூட சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பார்..

  13. தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
    ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

    குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
    இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

    இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.

    ஏனென்றால்,
    குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
    ஓட்டுக்கு பணம் கிடையாது.
    டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
    கரண்ட் கட் கிடையாது.
    இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

    இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்…

    குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
    உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
    (ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

    ஆனால்… இன்று..

    அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
    கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

    மீண்டும் உங்கள் நினைவிற்கு..

    குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
    ஓட்டுக்கு பணம் கிடையாது.
    டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
    கரண்ட் கட் கிடையாது.
    இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

    – மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
    -இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

    -இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    -TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

    இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

    நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

    அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

    நம் மாநிலத்தின் நிலை??

    அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

    இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..

    மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

    இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

    இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
    உலகம் நம்மை காரி உமிழும்.
    .

    நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

    • Yabba Rudra… what is your thought? Again bringing back JJ?
      All the time crying about MK’s family, have you ever cried about Sasikala’s family?
      Cheei shameless creature… TN is far better than JJ’s period.

    • Ruthra , ஒரு பத்து நாளுக்கு முன்னாடி circulate ஆனா maila அப்படியே copy பண்ணியிருக்கீங்க! ஒரு நாட்டை இரண்டாவது இடத்துக்கு கொண்டு வரணும்னா ரெண்டாயிரம் பெற கொல்லனுமா? தன்னுடைய மகனை நரபலி கொடுத்துட்டு பணக்காரன் ஆனவன் வீடு மாதிரி இருக்கு குஜராத். அதுக்கு தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை.

  14. ஊழலின் ஊற்றுகண் பற்றி உங்க புரிதலை நீங்க தான் மெச்சிகனும். தனியார்மயம் தான் இதன் ஊற்றுகண் என்றால், பின் முற்றிலும் தனியார் மயமான நாடுகளில் ஏன் இத்தனை ஊழல் இல்லை. ஊழலை பற்றி கண்காணித்து அறிக்கை அளிக்கும் Transparancy International ஊழலில் மிக மிக குறைந்த் நாடாக டென்மார்க்கை தான் சொன்னது. ஆனால் டென்மார்க்கில் இந்தியாவை விட தனியார்மயம், தாரளமயம் மிக மிக அதிகம், ஆழம். பின் எப்படி அவர்களால் இத்தனை தூரம் ஊழலை குறைக்க முடிந்தது ?

    http://www.transparency.org/policy_research/surveys_indices/cpi/2010/results

    காரணிகள் பற்றி ஒரு பழைய பதிவு :

    http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html

    எமது பதிவுகள் :

    http://nellikkani.blogspot.com/2011/03/blog-post.html
    ஊழலின் ஊற்றுகண் – 1

    http://nellikkani.blogspot.com/2011/03/2.html
    ஊழலின் ஊற்றுகண் – 2

    உங்களை பொருத்தவரை பாரளாமன்ற அமைப்பு என்பது ‘மூத்திர குட்டை’ ; அதற்க்கு பதிலாக ‘பாட்டாளி வரக் சர்வாதிகாரம்’ அருமையாக இருக்கும். ஆனால் உண்மை அப்படி அல்ல என்பதையே வரலாறு சொல்கிறது.

      • johnny,

        வருசா வருசம் இண்டெக்ஸில் பட்டியல் மாறுகிறது. மாற்றம் என்பதே மாறாத தத்துவம் ! போன வருடம் இருந்ததை விட இந்த வருடம் நீர் மாறவில்லையா என்ன ? கொஞ்சமாவது அறிவு வளர்ந்திருக்கில்லையா ? :)))))

        • எனக்கு அறிவு வளர்ந்திருக்கிறது ஒத்துக்கொள்கிறேன். உங்களுக்கும் வளர்ந்திருக்கிறதா என்று ஒரு சின்ன டெஸ்ட். நெம்பர் 1 இடத்தில் இருந்த பின்லாந்து இப்போது நெம்பர் 1 இல்லை. அப்போ அங்க ஊழல் அதிகமாயிடுச்சுன்னுதானே அர்த்தம். அதுக்கு காரணம் தாராளமயம்தானே.

          வருசம் வருசம் மாறலாம். ஆனால் நீங்க வாரம்வாரமில்ல மாத்துறீங்க.

  15. அண்ணாவுக்கு கிடைக்கும் ஊடகத்தின் வெளிச்சம் ஏன் ஐரோம் சர்மிளாவுக்கு கிடைக்கவில்லை..?..

  16. The economy of India was under socialist-inspired policies for an entire generation from the 1950s until the late 1980s. The economy was subject to extensive regulation, protectionism, and public ownership, leading to pervasive corruption and slow growth.[23][24][25][26] License Raj was often at the core of corruption.

    http://www.forbes.com/2007/08/15/wipro-tata-corruption-ent-law-cx_kw_0814whartonindia.html

    One strand in the knot of corruption is the legacy of the License Raj, which ended in the early 1990s. The system created bureaucracies that were all but self-perpetuating. In a context where government workers were routinely underpaid, graft became an industry all its own. Civil servants were, and remain, anything but disinterested administrators.

    Wharton management professor Jitendra Singh and Ravi Ramamurti, professor of international business at Northeastern University, have been studying the emergence of multinational corporations in emerging economies such as India. In late June, they organized a conference on this topic in Boston; the conference’s papers will form the core of an edited volume which is planned for publication in 2008.

    “In the bad old days,” Singh said in an interview, “particularly pre-1991, when the License Raj held sway, and by design, all kinds of free market mechanisms were hobbled or stymied, and corruption emerged almost as an illegitimate price mechanism, a shadowy quasi-market, such that scarce resources could still be allocated within the economy, and decisions could get made.

    “Of course, this does not in any way condone the occurrence of such corruption. The shameful part of all this was that while value was captured by some people at the expense of others, it did not go to those who created the value, as it should in a fair and equitable system.”

    The real failing, he said, “was a distortion of incentives within the economy, such that people began expending efforts toward fundamentally unproductive behaviors because they saw that such behaviors could lead to short-term gains. Thus, cultivating those in positions of power who could bestow favors became more important than coming up with an innovative product design. The latter was not as important, anyway, because most markets were closed to foreign competition–automobiles, for example–and if you had a product, no matter how uncompetitive compared to global peers’, it would sell.

    “These were largely distortions created by the politico-economic regime. While a sea change has occurred in the years following 1991, some of the distorted cultural norms that took hold during the earlier period are slowly being repaired by the sheer forces of competition. The process will be long and slow, however. It will not change overnight.”

    The costs of corruption are manifest in various parts of the economy. Inadequate infrastructure, of course, is widely recognized as a serious impediment to India’s advancement. Producing valuable goods is of limited utility if they cannot be transported in a timely fashion, for example. Transparency International estimates that Indian truckers pay something in the neighborhood of $5 billion annually in bribes to keep freight flowing. “Corruption is a large tax on Indian growth,” Ramamurti said in an interview after the conference. “It delays execution, raises costs and destroys the moral fiber.”

    Corruption also cripples the effort to ameliorate poverty in India and to improve the country’s stock of “human capital.” The rate at which this happens varies tremendously from region to region. Edward Luce, for example, author of In Spite of the Gods: The Strange Rise of Modern India, notes that “Rates of theft vary widely from state to state in India, with the better states, such as Kerala and Tamil Nadu, getting more than 80% of subsidized government food to their poor. Meanwhile, in the northern state of Bihar, India’s second poorest with a population of 75 million, more than 80% of the food is stolen.”

    Indian MNC’s as Change Agents

    “A few Indian companies,” Ramamurti said, “such as the Tata group or Wipro, have taken the high road, but most firms find it impossible to get anything done without greasing palms.” Wipro, headed by Azim Premji, is India’s third-biggest global tech services provider (behind Tata Consultancy Services (other-otc: TACSF – news – people ) and Infosys).

    In Bangalore Tiger: How Indian Tech Upstart Wipro Is Rewriting the Rules of Global Competition, business journalist Steve Hamm writes that “Wipro is not just a company, it’s a quest.” That quest, according to some observers, is as much about moral rectitude as it is about business success. For example, according to Hamm, the company pays no bribes and has a zero tolerance policy for corruption.

    “The paradox,” Ramamurti said, “is that even though India’s faster growth in recent years is the result of fewer government controls, most Indian managers would tell you that corruption has increased, not decreased, in tandem.

    “How could this be? The explanation is that faster growth has created new choke points at which politicians and bureaucrats can extract payments, such as land regulation, spectrum allocation or college admissions–all of which have become much more valuable in [this century]. Faster growth has also raised the economic cost to firms of delays in public approvals, giving officials that much more ‘hold-up’ leverage over private investors.”

    • TO ROOT OUT CORRUPTION, BOOT OUT BIG GOVERNMENT
      http://www.businessweek.com/archives/1994/b335623.arc.htm

      IF YOU WANT TO CUT CORRUPTION, CUT GOVERNMENT
      http://www.businessweek.com/archives/1995/b345435.arc.htm

      In modern economies, profits often are determined more by government subsidies, taxes, and regulations than by traditional management or entrepreneurial skills. Huge profits ride on whether companies win government contracts, get higher tariffs and quotas, receive subsidies, have competition suppressed, or manage to have costly regulations eased.

      Companies respond to the importance of government’s role by striving to influence political decisions. It often is effective just to lobby politicians, and human nature guarantees that sometimes businesses bribe officials and politicians in return for government favors and profits.

    • கேள்வி கேள், புரிந்து கொள் என்பதை அற்புதமான தமிழ் வார்த்தையால் “வினவு” என்று பெயரிட்ட தளத்தில் நிறைய தமிழ் வாசகர்கள் வந்து செல்கிறார்கள், அவர்களுக்கு அலுப்பு ஏற்படும் விதத்தில் ஆங்காங்கே பெயர்த்து வந்த ஆங்கில நெடும் பத்திகளைப் போட்டுவிட்டு செல்வதைவிட, அந்த ஆங்கில கட்டுரையிலிருந்து அதியமான் புரிந்து கொண்டது, அல்லது சொல்ல விரும்புவது என்ன என்பதை சுருக்கமாக சொல்லிப்பழகலாமே?

  17. சுரண்டல்வாதி அதியமான் அவர்கள் அவரது கபடவேடத்தை அம்பலப்படுத்திய எனது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஒடி வந்தவர் எனபதை மீண்டும் ஒரு முறை அறியத் தருகிறேன். இந்தப் பதிவின் நோக்கம் கெடாமல் வேறு பதிவில், அவர் பதில் சொல்லாம்ல் ஓடிப் போன கேள்விப் பதில் தொடரை நடத்திச் செல்ல ஆவலுடன் உள்ளேன். தோழர்கள், நண்பர்கள் அவரிடம் மூச்சைக் கொடுத்து இந்த்ப் பதிவின் நோக்கத்தை சிதைத்து விட வேண்டாம் என்று கோரிககை வைக்கிறேன். ஒர் ஓரமாக் அவர் பாட்டுக்கு சம்பந்தமில்லா சுட்டிகளை இட்டுக் கொண்டும், யாருமே இல்லாத பிரஸ் மீட்டிள் எனது கருத்து இது என்று வலியுறுத்தும் டி. ஆர். போல தனது கருத்து என்று எதையாவது எழுதிச் செல்லட்டும் பாவம்

    • எவை சம்பந்தமில்லா சுட்டிகள் என்பதை வாசகர்களும், சித்திரகுபதன் அய்யா போன்ற அறிஞர் பெரு மக்களும், வினவு தள board of directorsகளும் முடிவு செய்துகொள்ளட்டுமே. அருட்கூர்ந்து, கருத்துகளை மட்டும் விவாதிக்கலாமே.

      • ///சுரண்டல்வாதி அதியமான் அவர்கள் அவரது கபடவேடத்தை அம்பலப்படுத்திய எனது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஒடி வந்தவர் எனபதை மீண்டும் ஒரு முறை அறியத் தருகிறேன். இந்தப் பதிவின் நோக்கம் கெடாமல் வேறு பதிவில், அவர் பதில் சொல்லாம்ல் ஓடிப் போன கேள்விப் பதில் தொடரை நடத்திச் செல்ல ஆவலுடன் உள்ளேன்.//

        அப்போ விவாதிக்க தயார் தானே அதியமான்..

        • வெகு தயார். இந்த ஓடிப்போனவன் பேச்சை எல்லாம் கீரல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி பாடிவதை முதல்ல நிறுத்த சொல்லும். மக்கள் முடிவு செய்யட்டும், யார் ஓடிப்போனவர், யார் டபாய்க்கிறார், யார் born genius என்று !! :))) டீக் ஹை.

  18. அண்ணா ஹாசரேக்குப் பின்னாடி கொடி பிடிச்சுக்கிட்டு ஒரு அம்மா நிக்குதே, அதுதானே பாரத மாதா? அந்த் அம்மாவத்தான் அத்வானி, மன்மோகன் கும்பல் அமெரிக்காக்காரனுக்கு வித்துட்டாங்களே, இப்போ போயி அந்த அம்மா படத்தப் போட்டா பேடடண்டு ரைட் பிரச்சினை ஆயிறாது? எதுக்கும் அந்த அம்மாவை மீட்குறதுக்கு அன்னா உண்ணாவிரதம் இருந்தா நல்லாருக்கும்…

    • //அண்ணா ஹாசரேக்குப் பின்னாடி கொடி பிடிச்சுக்கிட்டு ஒரு அம்மா நிக்குதே, அதுதானே பாரத மாதா? அந்த் அம்மாவத்தான் அத்வானி, மன்மோகன் கும்பல் அமெரிக்காக்காரனுக்கு வித்துட்டாங்களே, இப்போ போயி அந்த அம்மா படத்தப் போட்டா பேடடண்டு ரைட் பிரச்சினை ஆயிறாது? எதுக்கும் அந்த அம்மாவை மீட்குறதுக்கு அன்னா உண்ணாவிரதம் இருந்தா நல்லாருக்கும்…//

      இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விபரத்தின் மையக் கருத்தை இதைவிட ரத்தின சுருக்கமாக புரிந்து சொல்ல முடியாது -தோழருக்கு வாழ்த்துக்கள்

  19. அவசரமாக நெட்டில் தேடி 50 லட்சம் மக்கள் தொகையும் தமிழ் நாட்டின் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவேயான டென்மார்க்கை இந்தியாவோடு ஒப்பிட வந்துட்டார் அதியமான்.அவர் எழுதிய ப்ளாக்குகளை வேறு படிக்கணுமாம்.கெட்ட வார்த்தை பேசும் சாராயம் குடிக்கும் பயங்கர கோபக்காரரான அவரை யாராவது அவரை விட பெரிய தாதாவை வைத்து பேசி பாருங்கள்.இம்சை தாங்க முடியவில்லை.

    • எமது சுட்டிகளை, உம்மை படித்து பார்க்க சொல்லவில்லை பங்காரப்பா.

      டென்மார்க் அளவை ஒத்த ஆப்பரிக்க, லத்தீன் அமெரிக்க, ஆசிய நாடுகளும் உண்டு. ஒப்பிடலாமே. லஞ்சம் ஏன் உருவாகுகிறது என்பதற்க்கு பல வாத பிரதிவாதங்கள் உண்டு. அவை பற்றி விவாதிக்க விசிய ஞானம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு திறந்த மனம் வேண்டும். ஆனால்..

      • நாங்கள் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை எப்படி சீரழித்தோம், ஊழல்வாதிகளை அதிபராக்கினோம் என்பன போன்ற விவரங்களைப் பற்றி அமெரிக்க அடியாள் ஒருவர் இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவை தமிழிலும் வெளிவந்துள்ளது. விக்கிபீடியாவில் விக்கிவிக்கி படிப்பவர்களுக்கு இப்புத்தகங்களை படிப்பதற்கு மனம் வரவில்லையோ என்னவோ!

  20. சரி நிறைய தப்பு, அநியாயம் நடக்குது. ஆனால் இதுக்கு என்னதான் தீர்வு. சரியான தீர்வு அகிம்சையா? இல்லை அடிதடியா? எது சரின்னு சொல்றீங்க? இல்லை நாம இப்படி மாத்தி மாத்தி ப்லோகுல வாக்குவாதம் பண்றது மட்டும்தான் தீர்வா?

    • //சரி நிறைய தப்பு, அநியாயம் நடக்குது. ஆனால் இதுக்கு என்னதான் தீர்வு. சரியான தீர்வு அகிம்சையா? இல்லை அடிதடியா? எது சரின்னு சொல்றீங்க? இல்லை நாம இப்படி மாத்தி மாத்தி ப்லோகுல வாக்குவாதம் பண்றது மட்டும்தான் தீர்வா?//

      நண்பரே முதலில் அன்னாவி போராட்டம் உண்மையனதா அல்லது மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் ஏமாற்றா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

      ஐரோம் சர்மிளும், மேத பட்கரும், ஹிமாச்சு குமாரும் இன்னும் பலரும் ஆயுத்ம் ஏந்திப் போராடவில்லை. அவை அஹிம்சை வழியிலேயே நடந்தன் ஆனால் அவற்றின் நோக்கங்கள் தெளிவானவை. அவை மக்களின் எதிரி யார் என்பதை தெளிவாக எடுத்துரைத்து அம்பலப்படுத்தின. ஆனால் பாஜக அரசு எப்படிப்பட்டது என்று அன்னாவிடம் கேட்டால் பதில் சொல்லாமல் மழுப்புகிறார். எல்லாருக்கும் நல்லவன் வேசம் போடுகிறார். மக்களின் எதிரி யார் என்று கூட சொல்லாம்ல் மழுப்பும் இவரது போராட்டம் ஒரு நாடகம், துரோகம் என்பதே உண்மை.

    • மிருகம் உங்களை மாதிரியனவர்கள் பங்கேற்க வேண்டும். எல்லாம் ஒரு இரவில் நடக்கது ஆனால் நடக்க நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது பாருங்கள் அது தான் நல்ல விசயம்.அப்படி என்றால் நிச்சயம் நடக்கும்.

      மேலே உள்ள கட்டுரையை முழுவதும் படியுங்கள் அதை பற்றி விவாதிக்கலாம், கட்டுரையுடன் உடன்படுகிறீர்களா ஆல்து ஏதேனும் கருத்துக்கள் உங்களுக்கு முரணாக உள்ளதா? விவதிக்கலாம்…மேலே உல்ள கட்டுரையில் என்ன பிரச்ச்னை என்ன செய்ய் வேண்டும் என்ன செய்ய கூடாது என்பது தெளிவாக உள்ளது.. கேள்விகளுக்காகவும், ஆக்கபூர்வமாக விவாதிக்க காத்திருக்கிறோம்

  21. மிகச்சிறப்பான கட்டுரை!
    இந்த கட்டுரையை எதிர்த்து
    பின்னூட்ட மிடுபவர்கள் பதட்டத்தில் இருக்கிறார்கள்!
    அவர்கள் இந்த கட்டுரையை நிதானமாக படித்துவிட்டு
    பதில் சொல்வதே சிறந்த நடவடிக்கையாக
    இருக்கும் என கருதுகிறேன்.

  22. //ன் அதன் அதிகார வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மாற்றாக ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பினால் முன்வைக்கப்படும் ஜன்லோக்பால் மசோதா, ஊழல் புகார்களின் பேரில் முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யும் உரிமை, சுயேச்சையாய் விசாரிக்கும் அதிகாரம், பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை ஏற்று விசாரிப்பது, அரசியல் தலைவர்களை மாத்திரமல்லாமல் அரசு உயரதிகாரிகளையும் விசாரிக்கும் உரிமை போன்றவற்றை வலியுறுத்துகிறது. இது மட்டுமல்லாமல், சி.பி.ஐயின் ஊழல் தடுப்புப் பிரிவோடு சேர்ந்து லோக்பால் அமைப்பு தேர்தல் கமிஷனைப் போன்றதொரு சுயேச்சையானதொரு அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்பதும் இவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளாகும்.//

    மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை எரித்த கதைதான் மேலேயுள்ள ஜன் லோக் பால் கோரிக்கை, கிராம பஞ்சாயத்துக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசமில்லை. மக்களின் ஜனநாயக உரிமைக்கு விரோதமாக அதிகாரிகள் மற்றும் சமுக நலவாதிகள் என்ற பெயரில் இருக்கும் ஆதிக்க சக்திகளின் (மக்கள் என்றால் குப்பனும், சுப்பனுமா அங்கிருப்பான்) கையில் நீதி வழங்கும் அதிகாரத்தை ஓப்படைக்கக் கோரும் ஒரு போராட்டத்துக்கு சுதந்திரப் போரா? தந்திரப் போர் என்பதே சரி.

    இது அதிகாரி நல்லவன் அரசியல்வாதிதான் சரியில்லை என்ற நடுத்த்ர வர்க்க மூடநம்பிக்கை முன் வைக்கும் தீர்வே ஆகும். சமீப் ஊழல்கள் அனைத்திற்கும் தரகு முதலாளிகளும்- அதிகாரிகளே சூத்திரதாரிகளாக இருந்துள்ளனர் எனும் போது, ஜன் லோக்பால் கள்ளன் கையில் சாவி ஒப்ப்டைக்கக் கோரும் கோரிக்கையாகும். இந்தப் போரட்டமே கார்ப்பொரேட் – அதிகார வர்க்கம் Vs அரசியல்வாதிகள் சண்டையின் ஊடாக கட்டுமான மறுசீரமைப்புத் திட்டத்தை அமுல்படுத்துவது போலத் தெரிகிறது.

  23. Dear vinavu,
    Jus now i watched cnn ibn , headlines today,ndtv,times now and parallely browsing the web blogs and news feed thru twitter,facebook and reading forwarded sms and emails …. about anna hazare . good. just now i thought this good and will be like egypt and tunisia. …

    but mildly i got some doubts .. how many RTI activist were COLD BLOODLY murdered in the past several months… they fought against the CORPORATE AND STATE CORRUPTION. SO MANY ANNAS WERE FORGOTTEN …FROM SHANKAR GUHA NIYOGI TO AMIT JHETHWA IN GUJARAT… WHERE WERE THIS MEDIA. KEEPING THEIR MUM SHUT ?????????/.. WHY ANNA CANNOT EVEN GIVE A TRIBUTE TO THE FALLEN HEROES ..? EVERYTHING IS INTERLINKED IS WHAT WE LEARN FROM SCIENCE. HOW A GREAT MOVEMENT CAN JUST SUSTAIN BY HOLDING A SINGLE POINT AGENDA???? BAJAJ,ADI GODREJ,BIOCON MAJUMDAR WHAT A COMEDY INDIAN ARMY ALSO JOINING THE CHORUS AGAINST CORRPUTION..TO NIGHT MR AMBANI AND MR TATA WILL EXTEND THE SUPPORT TO ANNA .. AND TOMORROW THE W H O L E I N D I A WILL support anna… to fight whom? >>>>>^^^##@%$%$%

    CRISIS IN CAPITALISM = GLOBALISATION = PRIVATISATION=== CORRUPTION THIS IS THE SCINTIFIC CHAIN ONE HAS TO UNDERSTAND +++++++

    Regards
    rv

    • //RV

      Dear vinavu,
      Jus now i watched cnn ibn , headlines today,ndtv,times now and parallely browsing the web blogs and news feed thru twitter,facebook and reading forwarded sms and emails …. about anna hazare . good. just now i thought this good and will be like egypt and tunisia. …

      but mildly i got some doubts .. how many RTI activist were COLD BLOODLY murdered in the past several months… they fought against the CORPORATE AND STATE CORRUPTION. SO MANY ANNAS WERE FORGOTTEN …FROM SHANKAR GUHA NIYOGI TO AMIT JHETHWA IN GUJARAT… WHERE WERE THIS MEDIA. KEEPING THEIR MUM SHUT ?????????/.. WHY ANNA CANNOT EVEN GIVE A TRIBUTE TO THE FALLEN HEROES ..? EVERYTHING IS INTERLINKED IS WHAT WE LEARN FROM SCIENCE. HOW A GREAT MOVEMENT CAN JUST SUSTAIN BY HOLDING A SINGLE POINT AGENDA???? BAJAJ,ADI GODREJ,BIOCON MAJUMDAR WHAT A COMEDY INDIAN ARMY ALSO JOINING THE CHORUS AGAINST CORRPUTION..TO NIGHT MR AMBANI AND MR TATA WILL EXTEND THE SUPPORT TO ANNA .. AND TOMORROW THE W H O L E I N D I A WILL support anna… to fight whom? >>>>>^^^##@%$%$%

      CRISIS IN CAPITALISM = GLOBALISATION = PRIVATISATION=== CORRUPTION THIS IS THE SCINTIFIC CHAIN ONE HAS TO UNDERSTAND +++++++

      Regards
      rv// அருமையாகச் சொன்னீர்கள் ஆர்வி அவர்களே

  24. பின் வரும் கருத்தில் நான் முழுவதுமாக உடன் படுகிறேன்…………………………….உங்களுடைய கட்டுரைகளை விரும்பிப்படிப்பவன் நான், ஆனால் இந்த கட்டுரையை நான் வன்மையாக எதிர்க்கிறேன். எதை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபித்து கொடிபிடிக்கும் உம்மைப்போன்ற கூட்டம் இருக்கும்வரை இங்கு எந்த முனேற்றமும் ஏற்படப்போவதில்லை. முதலில் தெருவிற்கு வந்து போராட துணிந்துள்ள நம் மக்களின் மனப்பான்மையை பாராட்டுங்கள். எல்லாம் தானாக நடந்துவிடாது. திரு அன்னா ஹசாரே அவர்களின் இந்த முயற்சியை பாராட்டுங்கள், ஆதரவுதாருங்கள். நிச்சயமாக உம்மைப்போன்றோரல் இத்தகைய முயற்சியை நினைத்துப்போர்க்கவோ, செய்யவோ முடியாது. மன்னிக்கவும் !

    • //முதலில் தெருவிற்கு வந்து போராட துணிந்துள்ள நம் மக்களின் மனப்பான்மையை பாராட்டுங்கள்.// மக்கள் என்றால் தனது நடுத்த்ர வர்க்கம் மட்டுமே என்ற கண்ணோட்டத்துல் இந்தக் கருத்து வருகிறது. ந்ண்பரே நாடு முழுவதும் மக்க்ள் போராடிக் கொண்டுதான் உள்ளனர். அவர்களை முறையாக் அமைப்பாக்க தலமையேற்க நல்ல அரசியல் கடசியில்லாததே பிரச்சினை.

  25. எல்லாம் சரிதான் பாஸு.. நொள்ளை , நொட்டை என்று சொல்வது பெரிதில்லையே. களத்தில இறங்கி நீங்க என்ன செய்திர்கள்? என்ன சிறு மாற்றத்தை ஏனும் கொண்டு வந்தீர்கள்? ஊழலை ஒழிக்க எதை முன்மொழிகிறீர்கள் ? அதை சொல்லாவிட்டால் இதை எப்படி முழுமையான கட்டுரை என்று சொல்லமுடியும்

    • வினவு தளம் முழுவதும் போராட்டங்கள், திட்டங்கள், கட்டுரைகள் குவிந்துள்ளன. திடிரென ஒரு கட்டுரை படித்துவிட்டு வினவு அனைத்தையும் குறை கூறுகிறது என்றால் எப்படி. நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்றால் வேடிக்கையாக இருக்கிறது. வினவு தளம் முழுவதுமே உங்கள் கேளிவிக்கான பதில் இருக்கிறது

  26. vinavu,

    i think to SATISFY AND MAKE HAPPY ALL THE B L O G G E R S , COMMENT WRITERS ,FOLLOW UP WRITERS AND YOUR CRITICS ,PLEASE WRITE ANNA HAZARE WAY IS CORRECT AND HE IS A REVOLUTIONARY AND THE NATION IS IN THE STATE OF UPRISING …..AND WRITE ALL IS PERFECT WITH THE MEDIA CHORUS… WHAT TO DO .? TODAY PLS CHANGE FOR ONE DAY ALONE … ATLEAST U WILL GET MORE FOLLOWERS …. TELL LIES AND U WILL HAVE MORE FOLLOWERS AND LESS CRITICS… TELL TRUTH U WILL BE BOMBARDED AND WILL BE NAMED AS AN ECCENTRIC .. JUST FOR A CHANGE SATISFY THE CRITICS … PLS WRITE LIES … MAKE EVERY BODY ENJOY.
    Regards
    RV

  27. 1. as usual vinau understood the subject half way. pithatrals….

    2. medias always needs some sensational, if you minus that the purpose will be really meaningful.

    3. except Tamil TV media most of them broadcasting the news until today morning.

    4. at least some people started some initiative and some people came out of shell.

    5. all big fires are initiated by small spark. so use your brain before vomit.

  28. இதனை எல்லாம் போராட்டம் என்றால்… போராட்டத்தை என்ன சொல்வார்கள் என தெரிய வில்லை… இந்த நாடகம்… மக்களுக்கானதா என்றால் நிச்சயம் இல்லை…

    திருச்சியில் மாவட்டத்தின் ஊழல் ஒழிப்பு காவல் துறை தலைமை பொறுப்பில் இருப்பவர் ஒரு அதிகாரி… அவர் பெயர் அம்பிகாபதி… நீங்கள் அந்த மாவட்டதிற்கு சென்று அரசு அலுவலகங்களை பார்த்தால் லஞ்சம் வாங்க அஞ்சுகிறார்கள்… மாதம் 3-4 ஊழல் வழக்குகள் பதியபடுகின்றன… மற்ற இடங்களில்?

    ஆனால் ஹர்சத் மேத்தா ராவுக்கு கொடுத்த லட்சம் பற்றி யாரும் பேசுவதில்லை… டெல்லியில் மட்டும் ஊழல் ஒழிப்பு போலிஸ் எங்கே மயிர் பிடுங்கி கொண்டு இருந்தது…

    அலைகற்றை பிரச்சனையில் கூட ராசாவையும், கருணாநிதியை குற்றவாளி என சொல்லும் ஊடங்கள் தவறி கூட மன்மோகனையோ… பிரனாபையோ… சோனியாவை சொல்ல மறந்தது ஏனோ? இந்த ஊழலில் உண்மையில் 1 1/2 லட்சம் கோடி அளவிற்கு பணத்தை அபகரித்த அம்பானி, டாடா பற்றி ஒரு நாயும் குரைக்க மறுப்பது…

    சில [obscured] முதலாளிதுவ சாக்கடையை உடம்பில் ரத்தமாக ஏற்றி கொண்டு… பார்ப்பன [obscured] தின்று கொண்டு… குஜராத்… பிகார் என வாந்தி எடுத்து கொண்டு இருக்கிறது…

    இதே போன்று 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது பம்பாயில் உண்ணாவிரதம் இருந்த வி.பி.சிங் பற்றி இந்த முதலாளிதுவ பார்ப்பன [obscured] ஊடங்கள் கண்டு கொள்ளவில்லையே ஏன்? அப்போது எதிரில் உண்ணும் விரதம் இருந்த ஆர்.எஸ்.எஸ். சிவசேனாவின் பொறுக்கிதனத்திற்கு பின்… வி.பி.சிங்… நீர் அருந்துவதை கூட நிறுத்தினார்… அப்போதுதான் அவரின் சிறுநீரகம் பழுதடைந்தது… புற்று நோயை விட ஆர்.எஸ்.எஸ். பொறுக்கிளால் ஏற்பட்ட சிறுநீராக கோளாரே அவரது மக்கள் ஆதரவு செயல்பாடுகளை முடக்கியது… மரணதிற்கும் காரணமானது…

    ஊழல் எதிர்ப்பிற்கு புது மசோதா கேட்கும் [obscured] ஒரு சந்தேகம்… ஏற்கெனவே இருக்கும் அரசியல் சட்டத்தில் அதிகார வர்க்கம் ஊழல் செய்ய உரிமம் கொடுக்கப்பட்டுள்ளதா? இருக்கும் சட்டத்தை ஒரு மயிரை பிடுங்க முடியாத போது… இது போன்ற சட்டங்கள் எல்லாம் அறுக்க தெரியாதவனுக்கு ஆறு அருவாள் எனபது போல்தான்…

    அடக்குமுறை தடா, பொடாவை நீக்கிய போது கூட… பழைய என் எஸ் ஏ கொண்டு… அதிகார வர்க்கம் புது புது வழக்கு போட்டு கோர முகத்தை காட்ட வில்லையா என்ன?

    இந்த நாடத்தை முட்டு கொடுத்து தொடந்து ஒளி பரப்பி வரும் பார்ப்பன [obscured] ஊடங்கள்… சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு என்றால்… பாப்பன சமூக அநீதியில் பக்கம் போய் விடுகிறதே… இதை பார்க்க முடியாத முட்டாள் முண்டங்கள்… தினமலத்தின் பின்னும், என் டிடி வி பின்னும், சி என் என் ஐபிஎன் பின்னும், டைம்ஸ் நவ் பின்னும் பொறுக்கிகள் சென்று கொண்டுள்ளன…

  29. தெளிவான பார்வை…!
    பொதுப்புத்தி மீதான சாட்டையடி..!
    எதையும் மேலோட்டாமாக பார்க்கும் நடுத்தர வர்க்க மனநிலையை தோலுரித்தது என பல பார்வைகள்

  30. எனக்கு இந்த நாட்டில் யாரு நல்லவங்க?, யாரு கெட்டவங்கன்னு தெரிய மாட்டேங்குது. வினவு படிச்சா மட்டும் தான் தெரியுது. நாட்டில் எல்லோரும் கெட்டவர்கள். அப்போ நாட்டில் நல்லவங்களே இல்லையா? இருக்காங்களே. வினவு தளத்தில் எழுதுபவர்கள் மட்டும் தான் நல்லவர்கள். வினவு தளத்தில் படித்தால் உங்களுக்கு வாழ்கையே வெறுத்து விடும். எனக்கு என்னோட வைப்பாட்டி மனைவி புள்ளைங்க யாரை பார்த்தாலும் கெட்டவங்க மாதிரியே தோணுது. நாட்டில் இத்தனை கெட்டவர்கள் இருக்கும் போது, எதுக்கு வாழனும்?

  31. /////// அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்! /////

    தோழர் வினவு : தமிழ் மணத்தின் பிரைம் டைம் விளம்பரம்!

  32. ///////// Your comment is awaiting moderation. /////

    கருத்து சுதந்திரம் ,மக்கள் சுதந்திரம் எதுனா இனி நீங்க பதிவ போட்டா முத குத்து மைனஸ் குத்து என்னுது தான் தோழரே

  33. //rammy
    வருசம் பூரா, புரட்சி விலாஸ் கட போட்டு நாம டீ ஆத்துறோம்! ஆளே வரமாட்டீங்குது! போணியும் ஆக மாட்டீங்குது!
    குல்லா போட்ட மண்டையான், திருவிழாவில கட போட்டு, கூட்டத்தை அள்றானப்பா! நம்ம கடயில ஓசி டீ குடிச்சிட்டிருக்கிற, இந்த அக்னிவேஷ சாமியாரும், அங்கிட்டு போயிட்டாப்பல! மாவாட்டற அருந்ததி அக்காவும்,பொறப்படறாப்புல தெரியுது!
    ஏப்பா! நம்மாளுகள எல்லோத்தையும் கூப்புடு! குல்லா மண்டையான் கடயில, டீ குடிக்க வற்றவன எல்லம் காறித் துப்பச் சொல்லு!
    அப்புடியே மருந்துக் கடயில போயி, வவுத்தெரிச்சலுக்கு, ஒரு மூட்டை மாத்திரை வாஙிட்டு வரச் சொல்லுங்கப்பா!
    “ஜெலுசில் மேவதே ஜெயதே!”

    அண்ணே, ‘கமண்டு’ அடிக்க வந்தேன்.. இதப்பாத்ததும் போதும் மேல வாணாம் னு விட்டுட்டேன்..
    இவனுவளுக்கு தீர்வு ‘பொரட்சி’ இல்ல …’ஆசுபத்திரி, வவுத்தெரிச்ச மருந்து , மாத்தர’ னு கரெக்டா சொல்லிட்டிங்க ..:)

  34. பத்துவருசமா எப்படீங்க ஒருத்தர் ‘உண்ணாவிரதம்’ இருக்க முடியும் ? அவர் என்ன சித்தரா ?

    வட கிழக்கு மாநிலங்களில் இந்தியா ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருப்பதை லிபரல் ஜனனாயகவாதிகள் ஏற்பதில்லை தான். தனி நாடு கேட்டால், அய்.நாவின் மேற்பார்வையில் பொது வாக்கு நடத்தி, பிரிந்து செல்ல அனுமதிப்பதே ஜனனாயகம் மற்றும் விவேகம்.

    ஆனால், அந்த ‘போராட்டத்தை’ ஏன் மீடியா இத்தனை தூரம் கவர் செய்யவில்லை என்பதெல்லாம் விதண்டாவாதம். சரி, இப்ப இந்த போராட்டமே கூடாதா ? அல்லது இதையும் மீடியா கண்டுக்காம விட்டா ஓகேயா. அப்படி கண்டுக்காம விட்டாலும் ஏதாவது நொள்ளை சொல்வீக : முதலாளித்துவ சதியின் பிடியின் மீடியா, etc, etc.

    • பத்துவருசமா எப்படீங்க ஒருத்தர் ‘உண்ணாவிரதம்’ இருக்க முடியும் ? அவர் என்ன சித்தரா ?//

      With her determination not to take food nor water, her health deteriorated tremendously; the police then forcibly had to use nasogastric intubation in order to keep her alive while under arrest. Since then Irom Sharmila has been under a ritual of release and arrest every year since under IPC section 309, a person who “attempt to commit suicide” is punishable “with simple imprisonment for a term which may extend to one year[or with fine, or with both]”.[3][4]

      http://en.wikipedia.org/wiki/Irom_Chanu_Sharmila

      • To JMMS

        அசுரன்:
        சுரண்டல்வாதி அதியமான் அவர்கள் அவரது கபடவேடத்தை அம்பலப்படுத்திய எனது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஒடி வந்தவர் எனபதை மீண்டும் ஒரு முறை அறியத் தருகிறேன். இந்தப் பதிவின் நோக்கம் கெடாமல் வேறு பதிவில், அவர் பதில் சொல்லாம்ல் ஓடிப் போன கேள்விப் பதில் தொடரை நடத்திச் செல்ல ஆவலுடன் உள்ளேன். தோழர்கள், நண்பர்கள் அவரிடம் மூச்சைக் கொடுத்து இந்த்ப் பதிவின் நோக்கத்தை சிதைத்து விட வேண்டாம் என்று கோரிககை வைக்கிறேன். ஒர் ஓரமாக் அவர் பாட்டுக்கு சம்பந்தமில்லா சுட்டிகளை இட்டுக் கொண்டும், யாருமே இல்லாத பிரஸ் மீட்டிள் எனது கருத்து இது என்று வலியுறுத்தும் டி. ஆர். போல தனது கருத்து என்று எதையாவது எழுதிச் செல்லட்டும் பாவம்

      • jmms, இந்த விசியத்த வெளிய கொண்டு வரத்தான் அப்படி கேட்டேன். முன்னாடியே இதை பற்றி படித்திருக்கிறேன்.

        சரி, வினவு தளம் இந்த 10 வருட போராட்டத்தை பத்தி எத்தின தடவ பதிவு எழுதியுருகாங்களாம் ?

        • வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்!
          https://www.vinavu.com/2010/12/07/irom-sharmila/

          ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் !
          https://www.vinavu.com/2010/11/29/armed-forces-special-powers-act-afspa/

          அதியமான்,

          வினவு தளத்தில் இது மட்டுமன்றி நிறைய பதிவுகளில் ஐரோம் ஷர்மிளாவைப் பற்றி குறிப்பிட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள். பதிவுகளை முழுமையாக படிப்பவர்களுக்கு தெரியும். அசுரன், சர்வதேசியவாதிகள், சாக்றேட்ஸ், போராட்டம் போன்ற பல தோழர்கள் இது குறித்து எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.

          பத்து வருடங்களாகப் போராடும் ஐரோம் சர்மிளா!
          http://porattamtn.wordpress.com/2009/10/30/manipur/

          பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வை!!
          http://poar-parai.blogspot.com/2010/11/blog-post.html

          நூறாவது பதிவு: ஐரோம் ஷர்மிளா
          http://vennirairavugal.blogspot.com/2010/02/blog-post_04.html

          யார் இந்த ஐரோம் ஷர்மிளா?
          http://pulavanpulikesi.blogspot.com/2010/11/blog-post_15.html

          புதிய ஜனநாயகம் 2006
          மணிப்பூர் : வீரத்தின் விளைநிலம்
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1260:2008-05-07-20-38-07&catid=35:2006

          மனித உரிமைகள், லிபர்ட்டி என்று கொஞ்ச நாளாக பேசுற நீங்க ஐரோம், அல்லது ஹிமான்ஷு குமார், அல்லது பினாயக் சென் பற்றி எழுதிய உங்க சுட்டிகளை இங்கே பகிரலாம்.

          இல்லாட்டி, முதலாளித்துவத்துக்கு வக்காலத்து வாங்குறதுக்கு இந்த ‘மனித உரிமை’ முகமூடிய யூஸ் பண்றீங்கங்கிறத மக்கள் உறுதிப் படித்திக் கொள்வாங்க.

  35. //முதலில் அன்னாவி போராட்டம் உண்மையனதா அல்லது மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் ஏமாற்றா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.///

    கரெக்டு. நம்ம வைத்து கழுத்தறுக்கும் போராட்டம் தான், சந்தேகமே இல்லை. மாவோயிஸ்டுகளின் போராட்டம் மட்டும் தான் உண்மையான மக்கள் போராட்டம்.

  36. I am a regular reader of vinavu blogs. But for this one, like many other readers, I completely disagree with you points. These protests may or may not bring anything but it is a good start. We should at least acknowledge that. You have criticized everything done by Anna and others. After all this critizising, one would expect you to give some alternate practical solution which is very much missing in this blog.

  37. How it possible ,a persion took hunger strike more than 10 years . What is the scientific basis? 🙂 the real hunger strike is Dhiliban hunger strike death during Eelam struggle,,. This article on the basis of “Gandhi vs safty valve theory” in the british period. Every movement Gandhi identify the threshold level, beyond that level he was stop movement to prevent people uprising against UK. I think Anna also a ‘safty valve’ for carporate Indian government.

  38. அதியமான்னா யாருங்க? பதவி மோகத்துல கொள்கைய தூக்கி கடாசிட்டு கட்சி தாவி MLA ஆனவரோட பேரன்னு
    பெருமையா சொல்லிப்பார அவருங்களா?

    • அவரே தான், சிலந்தி. மேலும் எம் நண்பர்கள் எமது இதர ’அருமை பெருமைகளை’ பற்றி நிறைய பேசுகிறார்கள். இங்கு எடுத்து விடலாம் தான். ஆனா ஒரே தற்பெருமை வாதமாக போய்விடும். அடக்கம் அமரருள் வைக்கும். (அடங்காமை ஜெயிலுள் வைக்கும் !)

  39. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த நேரத்தில் உள்ள கிரக நிலைகளை கணக்கிட்டு பார்த்தேன், அமோகமாக இருந்தது அதன்படி அவர் அனேகமாக நாளை முடிப்பார், அதற்கு அடுத்த நாளே இந்தியாவில் இலஞ்ச ஊழர் ஒழியும், அதற்கும் அடுத்த நாள் இந்தியா வல்லரசு. உங்களுக்கு இனிமேல் வேலையில்லை தோழர்களே, பேசாமல் சீனாவுக்கு போய் கடைவிரிக்கவும்

    • நான் இவன் இல்லை. இது போலி லிபர்ட்டேரியன்.

      Mr.போலி, சொன்னாலும் கொஞ்சம் எம் ஸ்டைலில் சொன்னாதான் நம்புவாக. சீனா தான் பெரிய போலி கம்யூனிச நாடு என்பதில் வினவு தோழர்களுக்கும் எமக்கு கருத்தொற்றுமை. இன்னும் சொன்னா, சீனா எந்த வகையில் சேர்க்க முடியாத ஃபாசிச, க்ரோனி கேப்பிடலிச நாடு தான்.

  40. மிகவும் அருமையான கட்டுரை,வினவு! நிதானமாக வாசித்தால் எல்லா கேள்விகளுக்கும் நேர்த்தியாக விடையளிக்கப்பட்டுள்ளதை புரிந்துகொள்ளமுடியும்.

    பெரும்பாலானோர், இது ஒரு நல்ல ஆரம்பம், அதற்காகவாவது ஆதரிக்க வேண்டுமென்கிறார்கள். சில மாதங்கள் முன்பு வெங்காயமும், தக்காளியும் கிலோ ரூபாய் 100க்கு மேல் விலைவிற்றது. இப்போது ஊழலுக்கு எதிர்ப்பை தெரிவுக்கும்,ஆதரிக்கும் நடுத்தர, மேல் மட்ட மக்கள் அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை? அசாரே அப்போது எங்கே இருந்தார்? அந்த விலைஉயர்வு அவர்களை பாதித்திருக்காது…பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான்.குறைந்தபட்சம், உணவுபொருட்களை ஊகவணிகத்திலிருந்து தடை செய்யவாவது உண்ணாவிரதம் இருந்திருக்கலாமே… செய்யமாட்டார்கள்… ஏனெனில், பங்குச்சந்தையில் லாபம் பார்ப்பதும் இவர்கள்தானே!

    தக்காளி விற்கும் விலையால் தக்காளியோடு சமைத்தே இரண்டு மாதங்களாகிறது என்று சொன்ன சாலைப்பணியாளர் நினைவுக்கு வருகிறார்.

    • //அசாரே அப்போது எங்கே இருந்தார்?///

      இங்கு தான் தம் நிகரற்ற சேவைகளை அமைதியாக செய்து கொண்டிருந்தார். அவரை பற்றி அறியாமையில் இருக்கிறீர்கள் : http://www.annahazare.org/ கிராம புற வளர்சிகளுக்காக தன்னலமில்லாம கடந்த 40 ஆண்டுகளாக அவர் ஆற்றி வரும் அரும் பணிகள் பற்றி படித்து பாருங்க.

      உருப்படியா ஒரு போராட்டத்தை துவங்கினால், அதையும் கொச்சை படுத்தினால், பிறகு நம் பிரச்சனைகளுக்கு தீர்வே சாத்தியமில்லை.

  41. கம்யூனிஸ்ட் சித்தாந்த்தம் ஒரு செத்து போன சித்தாந்தம், எந்த மாதரியான போராட்டம் தீர்வைத் தரும் என்று முடிவு இருந்ததா உங்கள் கட்டுரையில். துப்பாக்கி ஏந்தி சண்டையிட்டு புரட்சி செய்ய வேண்டும் என்பது வினவின் அவா.

    RTI யால் என்ன நண்மை நடந்து, அதனால் ஊழலை கட்டுபடுத்த முடிந்ததா….. RTI யால் மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள். சமீபத்தில் கூட அரசு விளம்பரங்கள் சன் , கலைஞர் தொலைக்காட்சிகளில் அரசாங்க காசு கொடுத்து ஒளிபரப்பபடுகிறது என்பதை RTI காட்டிகொடுத்தது. இதற்க்கு முன் திமுக வின் சாதனை விளக்க விளம்பரங்கள் என்றுதான் பலரும் எண்ணியிருந்தார்கள்.

    வேதாந்தம் இரும்பு தாதை 27 ரூபாய்க்கு வாங்கி இரண்டாயிரத்திற்க்கு விற்கிறது என்றால் அதன் பயனாளி வேதாந்தம் மட்டுமா. எத்தனை அரசியல்வியாதிகள், அதிகாரிகள் பயனடைகிறார்கள். அதேபோல்தான் டாடா, அம்பானி எல்லாம்.

    இப்போது immunity யில் இருக்கும் அமைச்சர்களை எதிர்த்து உங்களால் கேள்விகேட்டு நீதிமன்றம் செல்லமுடியுமா. லோக்பால் மசோதா வந்தால் அமைச்சர்களை கேள்வி கேட்க்கலாம்.அரசியல்வியாதிகளால் பயனடையும் நிறுவனங்களோ, நிறுவனங்களால் பயனடையும் அரசியல் பன்னாடைகளையோ இந்த மசோதா பேதியாக செய்யலாம். அப்படியாவது இந்த ஊழல் சுழற்ச்சியை வெட்ட முயற்ச்சிக்கலாம்.

    எங்காவது ஒரு இடத்தில் தொடங்க வேண்டும்மல்லவா. உலகத்தை சுற்ற போகிறேன்னு சொல்லிகிட்டே இருந்தா போமாண்ண….முதல் அடியை வைத்து நடக்க ஆரம்பிக்கணும்ணா.

  42. @ Bala அருமையாக சொன்னீர்கள். இவர்களுக்கெல்லாம் இந்த விளக்கமே போதுமென்று நினைக்கிறேன்.

    நண்பர்களே, கருத்துப் பரிமாற்றம் மனிதனின் சிந்தனையை தூண்டும்.
    சிந்தனை நல்ல மனிதனை உருவாக்கும்.
    நல்ல மனிதனால் நல்ல சமுதாயம் உருவாகும்.
    நல்ல சமுதாயம் நல்லதோர் நாட்டினை உருவாக்கும்.
    எனவே உங்கள் கருத்துப்பரிமாற்றம் மனிதனின் சிந்தனையை தூண்டுமாறு இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.

  43. மணிப்பூரில் பத்து வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கும் அயர்ன் சர்மிளா பற்றி ஊடகங்கள் ஏன் கண்டுக்கொள்ளவில்லை என்று வினா எழுப்பு வினவுக்கு ஒரு பதில் கேள்வி : வினவு துவங்கப்பட்ட இந்த இரண்டு ஆண்டுகளில், உங்க பத்திரிக்கையான புதிய ஜனனாயகத்தில், கடந்த பத்து வருடங்களில், இதே அயர்ன் சர்மிளா அவர்களை பற்றி எத்தனை கட்டுரைகள் (exclusive on her, not about N.East) வெளியிட்டீர்கள்.

    அவ்வளவு ஏன். மார்ச் 8 மகளிர் தினத்தை ஒட்டி, பெண் பதிவர்கள் பலரும் எழுதினார்கள். அயர்ன் சர்மிளாவை பற்றி ஏன் (வினவு, etc) இதுவரை விரிவான பதிவை எழுதவில்லை ? அவரின் பின்புலம், வரலாறு மற்றும் தற்போதையை நிலை பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாத நிலை. வினவு தளமும் இதுவரை விரிவாக எழுதவில்லை. காரணம் என்ன ?
    மிக சுலபமாக காரணம் கற்பிக்க முடியும். ஆனால் அது சரியாக இருக்காது. இதே லாஜிக் தான் ‘ஊடகங்களின்’ இருட்டடிப்பு அல்லது அண்ணாவின் போராட்டத்திற்க்கு இத்தனை கவரேஜ் அளிப்பதற்கும் இருக்க முடியும். நோக்கங்களை சந்தேகப்படும் வியாதி உங்களுக்கு உள்ளது. மருந்து கிடையாது அதற்க்கு.

  44. //அண்ணாவோ, நடந்து கொண்டிருக்கும் கொள்ளையில் ஏற்படும் சில்லறை நடைமுறைத் தவறுகளையே ஊழல் என்றும் அதை எதிர்த்துப் போராடுவதே ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்றும் அறிவிக்கிறார்.//

    அதனால், பழங்குடி மக்களின் உரிமைகளை நசுக்கப்படுவதை, அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை அவர் ஆதரிக்கிறார் என்று அர்த்தப்படுத்திகொள்வது உங்க வக்கிர புத்திய தான் காட்டுது. நீங்களும் உங்க லாஜிக்கும். சகிக்கல வினவு.

    அனைத்து துறைகளில் உள்ள ஊழல்களையும் அவர் எதிர்கிறார் தான். அதை செய்ய கூட ஆட்கள் மிக குறைவு. இதையும் செய்மால பிழைப்புவாதம் செய்பவர்களை கண்டுக்க மாட்டீக. யாராவது உருப்படியாக ஏதாவது செய்ய முனைந்தால், அவரின் நோக்கங்களை சந்தேகப்பட்டு மிக தவறாக அதை அர்த்தப்படுத்திக்கும் ‘திறமை’ உங்களுக்கு உண்டு.

  45. //ஆம், காந்தியும் இப்படித்தான் இருந்தார் – ஒரு மக்களின் நியாயமான எதிர்ப்புணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாய், தன்னெழுச்சியான போராட்டங்களைக் நீர்த்து போக செய்வதற்கான வேலையைத்தான் அவர் செய்தார்.///

    இன்னும் இந்த இத்து போன பார்வைய விடலையா ? 80 வருடங்களாக கம்யூனிஸ்டுகள், காந்தியின் நோக்கங்களை சந்தேகப்பட்டு, அர்த்தப்படுத்திக் கொண்ட லூசுத்தனமான கோணம் இது. இன்றைய மார்க்சிய ஆய்வாளர்கள் பலரும் இதை இன்று நிராகரிக்கின்றனர் என்பதை அறிவீர்களா ? அல்லது அப்படி கருதுபவர்கள் எல்லோரும் ‘போலிகள்’ என்று பேசுவீர்களா ?

    வடிகால் தியரி எல்லாம் சுத்த அபத்தம். இப்படி மிக தவறான interpretation and unrealistic and wrong judgments about events தான் கம்யூனிஸ்டுகள் உருப்படாம போனதற்க்கு காரணம். நீங்களும் இதற்க்கு விலக்கல்ல.

  46. மருதையன் & கம்பெனி இந்தியாவில் புரட்சி பண்ண பேட்டண்ட் உரிமை காப்பிரைட் உரிமை எல்லாம் வாங்கி வெச்சிருக்கும் போது, எங்கிருந்தோ ஒரு காந்தி குல்லாயை மாட்டிக் கொண்டு, ஒரு காந்தியப் புன்னகையோடு வந்து ஒரு கிழவர் பெயரை தட்டிகினு போனா, வினவு விரலை சப்பிகினு பார்த்துகிட்டு இருக்கமுடியுமா?

    • அற்புதமான கருத்துக்கள். ஏதோ இலவசமா ஒரு பிளாக் கிடச்சதும் என்னத்தயாச்சும் எழுதிட்டு கம்யூட்டர்ல புரட்சி நடத்தறாங்க இந்த வினவு கோஸ்டி.

  47. //காங்கிரஸ் தலைவி அன்னை சோனியாவும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டது தான்.//

    அவங்க எல்லாம் ஆதரவு தெரிவிக்கும் போது தமிழ்நாட்டு சார்பில கலைஞர் கனிமொழி ஜெயலலிதா ராசா போன்றவங்க ஆதரவு கொடுத்த என்ன கொறஞ்சா போயிடுவாங்க? இவங்க இதயாவது செய்யலாமில்ல ! எல்லாரும் ஆதரவு தெரிவிச்சாக்க அப்புறம் ஊழல் என்கிற பேச்சுக்கே இடமில்லயே ! றொம்ப நல்ல முயற்சி, எதிர்கால இந்தியா குறித்து நம்பிக்கை துளிர்விடுகின்றது. நம்ப வடிவேலு கப்டன பத்தி பேசுற வாக்கில ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கும் ஆதரவு கொடுக்கச்சொல்லி ஒரு பிட்ட போட்டா நல்லாருக்கும்.

  48. இந்த அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவிக்கறதுக்கு பதிலா ஐ.பி.எல் மேட்சப்பாத்து சந்தோசமா இருக்கலாம்னு சொல்லவர்றீங்க. நல்ல வேள. சீனால டேங்க் ஏத்தி போராட்டக்காரர்களை ஒழிச்சது மாதிரி அன்னா ஹசாரேய அழிக்கனும்னு சொல்லலை.

  49. நண்பர்கள் சிலர் வினவின் கட்டுரையால் மனம் நொந்து போயிருப்பது தெரிகிறது. உணர்ச்சிவயப் பட்ட நிலையில் இருக்கும் இவர்கள் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளதை உள்வாங்காமலேயே ஆவேசத்தில் கருத்துக்களை சொல்லிச் செல்கிறார்கள்.
    முதலில் ஊழல் என்பதன் பரிமானமே மாறிவிட்டிருக்கிறது என்று கட்டுரை சொல்கிறது. ஊழல் சட்டபூர்வமான நடவடிக்கையாகி விட்டது என்பதை உதாரணங்கள் மூலம் நிறுவியுள்ளது.
    நேற்று இரவு செய்திகளின் படி அனேகமாக அன்னா ஹசாரேவும் ஆதரவாளர்களும் இன்றோ நாளையோ தங்களை வெற்றியை அறிவித்து விடுவார்கள் . அரசு இவர்கள் கோரும் விதமாகக் கமிட்டியைப் போட ஒப்புக் கொண்டு விட்டது. நேற்றே அர்னாப் கோஸ்வாமி “this is a victory here tonight” என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

    சரி, வெற்றி பெற்றாயிற்று. கடந்த 42 ஆண்டுகளாய் போடப்பட்ட கணக்கற்ற கமிட்டிகளை விட இந்தக் கமிட்டி ஒப்புயர்வற்ற கமிட்டியென்றே வைத்துக் கொள்வோம். முதலில் அன்னா முன்வைக்கும் இந்த முன்வை அந்தக் கமிட்டி ஒத்த கருத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொண்டால் தான் அது ஒரு மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட முடியும். கமிட்டியில் அரசு தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களும் அன்னாவின் உறுப்பினர்களும் ஒருவாறாகப் பேசி எடுத்து சில விட்டுக் கொடுப்புகளைச் செய்து. அந்த விட்டுக் கொடுப்புகள் மேல் விவாதித்து…….. இதற்கே எப்படியும் ஒரு பத்து வருடங்கள் ஆகலாம்.
    அடுத்து பாராளுமன்றத்தி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு எப்படியும் ஒரு ஐந்து வருடங்களாவது ஆகும். விவாதம் முடிந்து இரண்டு அவைகளிலும் அது நிறைவேற வேண்டும். ஏற்கனவே இந்த கட்டத்தில் தான் பிரச்சினையாகி அப்படியே 42 வருடங்களாகத் தேங்கி இருந்தது. சரி அப்போது அன்னா மண்டையைப் போட்டு விட்டார் என்று வைத்துக் கொண்டாலும், இன்னொரு தொன்னா வந்து உண்ணாவிரதம் இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அந்த உண்ணாவிரதத்தையும் ஐரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதத்தைக் கையாண்டது போல் இல்லாமல் அதற்கு அரசு மதிப்புக் கொடுத்து கடைசியாக நிறைவேற்றுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
    எப்படியும் இதற்கு ஒரு இருபதிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிடும்.
    சரி இப்போது ஊழலுக்கு வருவோம். இந்த சட்டத்தால் பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் அரசுக்குப் போடும் பட்டை நாமத்தை அழித்து விட முடியுமா? அம்பானிக்கும் இன்னும் தரகு முதலாளிகளுக்கும் மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் ஐந்து லட்சம் கோடி அளவுக்கு வரிச்சலுகை அளிக்கும் அரசின் ஊழலை ஒழித்து விடுமா? கோக்கோ கோலா தாமிரவருணியை உறிஞ்சுவதைத் தடுக்க முடியுமா?
    ஒன்றும் முடியாது. ஏனென்றால் இவையெல்லாம் அரசினால் ஒரு கொள்கையாக ஏற்று நடைமுறைப்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகள். சட்டபூர்வமானது.
    அப்புறம் ஜன்லோக்பாலால் என்ன தான் முடியும்? கல்மாடியையும் ராசாவையும் தண்டிக்க முடியும். சரி அடுத்து ஒரு கூசா வருவார். அவரையும் தண்டிக்க முடியும். அடுத்து ஒரு குப்பனோ சுப்பனோ வருவார். அவரையும் தண்டித்து விடும். அடுத்து ஒரு சொரிநாய் வரும் அதையும் தண்டித்து விடும். —- சரி இந்த ஊழலால் பலனடைந்த அம்பானியை? டாடாவை? மிட்டலை? ஒரு மயிரும் புடுங்க முடியாது. அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் ஒரு புல்லைக் கூட புடுங்கிப் போட முடியாது ஜன்லோக்பால் சட்டத்தால். அது தான் உண்மை. ஏனென்றால் ராசாவோ கூசாவோ செய்தது ஊழல் என்றால் அம்பானி செய்தது தொழில். அதற்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு உள்ளது.
    சிலர் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை மத்தியகிழக்கின் வண்ணப் புரட்சிகளோடு ஒப்பிடுகிறார்கள். முதலில் இதைப் போன்ற அயோக்கியத்தனம் ஏதும் இருக்க முடியாது. இப்படி ஒப்பிடுபவர்கள் மண்டையில் இருந்து மூளையைக் கழட்டி வைத்து விட்ட அடிமுட்டாள்களாகத் தான் இருக்க முடியும். \
    பல ஆண்டுகளாக சர்வாதிகார ஆளும் கும்பலால் ஒடுக்கப்பட்டுவந்த மத்திய கிழக்கு நாடுகளில் வேலையின்மை, வறுமை போன்ற பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான வர்க்கப் போராட்டமாக கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தொழிலாளர் வர்க்கம் போராடி வந்தது. தற்போது அதையே நடுத்தரவர்க்கம் பொருளாதாரக் கோரிக்கைகள் ஏதுமற்ற ஆட்சித் தலைமை மாற்றமாக முன்வைத்துப் போராடுகிறார்கள். தற்போது மத்தியகிழக்கில் நடக்கும் போராட்டங்களின் உள்ளடக்கத்தை விடுத்துப் பார்த்தாலும், அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை மறந்து வீதிகளில் இறங்கி இராணுவத்தின் டாங்கிகளையே எதிர்த்து நிற்கிறார்கள். பஹ்ரைனிலும், யேமனிலும், சவூதியிலும் போராடும் மக்களை இராணுவம் கொன்று குவித்த போதும் அவர்கள் தளராமல் ஒடுக்குமுறையை எதிர்த்து நின்று கொண்டிருக்கிறார்கள்.
    இங்கே ஜந்தர் மந்தரிலோ, பெங்களூருவிலோ வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் இடைவெளியில் போராட்டக் களத்தில் தலையைக் காட்டிப் போகத் தான் வந்தோம் என்றே தொலைக்காட்சியில் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். இதையும் அதையும் ஒப்பிடுவது என்பது உண்மையாகவே அடக்குமுறையை எதிர்த்துப் போராடும் அந்த மக்களையே இழிவு படுத்துவதாகும். சரி… இந்த நடுத்தரவர்க்கத்தினரின் ஆப்பீஸ் to வீடு சைக்கில் கேப் போராட்டம் தான் போராட்டம் என்றால், நந்திகிராமிலும், சிங்கூரிலும், கலிங்காநகரிலும், ஒரிசாவிலும், காஷ்மீரிலும், வடகிழக்கிலும் இன்னும் இந்தியாவெங்கும் தங்கள் விளைச்சலுக்கு விலையில்லாததை எதிர்த்து களத்தில் நின்று கொண்டிருக்கும் விவசாயப்போராட்டங்களும் என்ன?
    அன்னாவின் போராட்டத்தை ஒரு படு பயங்கரமான போராட்ட நடவடிக்கையாகப் பார்ப்பதும் போற்றுவதும் உண்மையாகவே அரசின் அடக்குமுறைகளத்தனையையும் ஏற்றுக் கொண்டு போராடிக் கொண்டிருக்கும் மக்களை அவமானப்படுத்துவதாகும்.

    இங்கே பின்னூட்டியுள்ள நண்பர்களுக்கு உண்மையில் சமூக மாற்றத்தில் அக்கறையிருக்கும் என்றால் – மக்கள் விடுதலைக்கான போராட்டம் என்பது காந்தி குல்லாயினுள் முடிந்து வைக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை உணர்ந்து, மீடியாக்களால் புறக்கனிக்கப்பட்டும் நாடெங்கும் நடந்து வரும் உண்மையான போராட்டத்தில் கலந்து கொள்வதே தங்கள் உணர்ச்சிக்கு நேர்மையாக இருப்பதாகும்

    • அண்ணே நாடெங்கும் நடந்துட்டு இருக்கற உண்மையான போராட்டம் எந்த நாட்டுலண்ணே நடக்குது? இந்தியாலயாண்ணே? நீங்க இந்த கலையிரவு நிகழ்ச்சிகளை சொல்லலைன்னு நினைக்கறேன். சரியாண்ணே.

      • ஐரோம் ஷர்மிளாவின் போராட்டமும், பாஸ்கோ / வேதாந்தாவை எதிர்த்த கோண்ட் பழங்குடியினப் போராட்டங்களும், நிலப்பறிப்பை எதிர்த்த விவசாயிகள் போராட்டங்களும், தொழிற்சங்க உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர் போராட்டங்களும் உங்கள் நொள்ளைக் கண்ணுக்குப் போராட்டங்களாகத் தெரியவில்லையா தொண்ணே?

        அந்தப் போராட்டங்களையெல்லாம் போலீசைக் கொண்டு டீல் செய்யும் அரசு – அன்னாவோடு ஒக்காந்து போராடுவது ஏன் தொண்ணே?

        அந்தப் போராட்டங்களையெல்லாம் திரும்பிக் கூடப் பார்க்காத டைம்ஸ் நௌ, என்.டி.டீ.வி சி.என்.என் ஐ.பி.என் இதுக்கு இந்த குதி குதிப்பது ஏன் தொண்ணே?

  50. (http://idlyvadai.blogspot.com)

    அன்னா பற்றிய வாழ்க்கை குறிப்பு ( இன்று டைம்ஸ் நாளிதழில் தழுவி எழுதியது நன்றி: யதிராஜ் )

    அவர் தம்மை ஒரு ஃபக்கீர் என்று அழைத்துக் கொள்கிறார் – எவ்வித உடமைகளோ, குடும்பமோ,வங்கியிருப்புக்களோ இல்லாத முற்றும் துறந்தவர். புனேவிலிருந்து 110 கிமீ தொலைவிலுள்ள அஹமத் நகர் மாவட்டம், ரலேகான் சித்தி கிராமத்தில் யாதவ் பாபா கோவிலையொட்டியுள்ள 10 x 10 அளவேயுள்ள ஒரு சிறிய அறையில்தான் வசிக்கிறார். கதராடை மட்டுமே உடுத்துவார்.

    ஆனால் இந்த 71 வயது இளைஞர் தனது போராட்டத்தைத் துவங்கியவுடன், பம்பாய் முதல் தில்லிவரை அனைத்து தரப்பினரும் இவரைக் கூர்ந்து நோக்கத் துவங்கினர். அரசியல்வாதிகளும், இவரை விமர்சிப்பவர்களும் கூட, இவரால் மட்டுமே தேசிய அளவில் மக்களை ஒருங்கிணைத்து அரசாங்கத்தையே அசைக்க முடியும் என்று குரோதத்துடன் கூறுகின்றனர்.1975 இல் பொதுவாழ்க்கைக்கு வந்தது முதல், இவர் சமூகப் பிரச்சனைகளுக்காக எண்ணற்ற போராட்டங்களையும், பயணங்களையும், உண்ணா விரதங்களையும் மேற்கொண்டுள்ளார்.

    மரணத்தைப் பற்றி நான் பயப்படவில்லை. என்னுடைய உயிரிழப்பால் கவலைப்பட எனக்கென்று உற்றார் எவரும் இல்லை, தவிர தேச நன்மைக்காக ஏதேனும் செய்யும்பொழுது உயிர்விடுவதையே நான் பெருமையாக நினைக்கிறேன் என்கிறார் இவர். நாட்டிலுள்ள ஊழலை ஒழிக்கவும், அரசாங்க அலுவலகங்களிலுள்ள மெத்தனத்தையும், தாமதங்களையும் அறவே ஒழிக்கவும், அதிகாரிகள் நியமனங்களில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்கவும், நேர்மையான அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதை எதிர்த்தும், நாம் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தருணம் இது என்கிறார்.

    அன்னா தனது தாய் லக்ஷ்மிபாயை 2002 ஆம் ஆண்டு இழந்தார். இவருக்கு திருமணமான இரு சகோதரிகளில் ஒருவர் பம்பாயிலும் மற்றொருவர் ஸங்கம்நெரிலும் இருக்கின்றனர். அன்னா ஒவ்வொருமுறையும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பொழுதும், அவர்களுக்குக் கவலைதான். ஆனால் அன்னாவோ பந்தங்களிலிருந்து எப்பொழுதும் தள்ளியே நிற்பதென்று உறுதி பூண்டுள்ளார். தமது தமக்கைகளின் வீட்டிற்கோ மற்ற உறவினர்களின் வீட்டிற்கோ செல்வதே இல்லை. ராலேகான் சித்தியில் அவருக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கும்பொழுதிலும், கடந்த நாற்பது ஆண்டுகளில் ஒருமுறை கூட அங்கு அவர் சென்றதில்லை.
    அஹமத் நகர் மாவட்டத்திலுள்ள ஃபிங்கர் கிராமத்தில் 1940 ஆம் ஆண்டு ஓர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஹஸாரே. வறுமையின் காரணமாக 1952 இல் தனது பூர்வீக கிராமமான ராலேகான் சித்தியிலுள்ள தனது வீட்டிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு மக்கட்பேறில்லாத அவரது அத்தை அவரை வளர்த்ததோடு, அவரது படிப்பிற்கும் பொருளாதார ரீதியாக உதவி செய்தார். ஆனாலும் நிரந்தரமில்லாத பொருளாதாரச் சூழ்நிலைகளால் ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு பூ வியாபாரம் செய்து வந்தார்.

    விரைவிலேயே ராணுவத்தில் சேர்ந்த ஹஸாரே, அங்கு ட்ரக் ஓட்டுனராகப் பயிற்சியெடுத்தார். மஹாத்மா காந்தி, ஆசார்ய விநோபா பாவே மற்றும் விவேகானந்தர் ஆகியோரது போதனைகளைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். இதுதான் இவரை சமூக சிந்தனையின் போக்கில் திருப்பியது. 1965 இல் பாகிஸ்தானுடனான போரில் நிகழ்ந்த இரு துரதிருஷ்டவசமான நிகழ்வுகள், வாழ்வைப் பற்றிய இவரது எண்ணத்தையே முற்றிலுமாக மாற்றியது. பிறகு 1975 இல் ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர் தனது சொந்த கிராமமான ராலேகான் சித்திக்குத் திரும்பினார். அப்போது அக்கிராமம் வறுமை, குற்றங்கள் மற்றும் குடி போதை போன்ற அசாதாரண சமூக விரோத நடவடிக்கைகளின் பிடியில் சிக்கியிருந்தது.

    தனது சேமிப்பு அனைத்தையும் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக அற்பணித்த ஹஸாரே, மக்களிடம் குடிப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டுமென பிரமாணமெடுத்துக் கொள்ளச் செய்தததோடு மட்டுமல்லாமல், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையையு வற்புறுத்தி, சிறிய குடும்பத்தின் நன்மைகளைப் பிரச்சாரம் செய்தார்.

    கிராமத்தினரை சுய தொழில் புரிய தூண்டிய ஹஸாரே, மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி கால்வாய்களையும், நீர் நிலைகளையும் ஏற்படுத்தச் செய்தார். இதன் மூலம் தண்ணீர் பிரச்சனை பெருமளவில் குறைந்ததோடு மட்டுமல்லாமல், தரிசு நிலங்கள் மேம்படவும் உதவின.

    இவர் செய்த சாதனைகள் மூலம், இந்திரா ப்ரியதர்ஷினி வ்ருக்ஷமித்ரா, க்ருஷி பூஷணா, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், மகஸேசே,கேர் இண்டர்நேஷனல் ஆஃப் த யூஎஸ்ஏ, ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் போன்ற விருதுகள் இவரைத் தேடி வந்து குவிந்தன. தென் கொரிய அரசாங்கம் கூட இவரது சாதனைகளுக்காக இவரைக் கவுரவித்தது.

    ஆகஸ்டு 2003 இல் மஹராஷ்டிரத்தில் சில ஊழல் மந்திரிகளுக்கெதிராக இவர் நடத்திய காலவரையற்ற உண்ணா விரதத்தினால் அசைக்கப்பெற்ற மஹாராஷ்டிர அரசு அம்மந்திரிகளுக்கெதிரான ஊழல் புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ். சாவந்த் தலைமையில் கமிஷன் ஒன்றை அமைத்தது. அக்கமிஷனின் விசாரணை அறிக்கை அம்மந்திரிகள் மீதான ஊழல் புகார்களை நிரூபிக்கவே, அம்மந்திரிகள் பதவி விலக நேர்ந்தது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்காகவும் இவர் போராட்டங்கள், பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார். இக்கோரிக்கையின் மீது மஹாராஷ்டிர அரசு பாராமுகமாக நடந்து கொள்ளவே, 1997 இல் பம்பாயின் ஆஸாத் மைதானத்தில் ஒரு பெரிய போராட்டத்தை நிகழ்த்தினார். பிறகு மீண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 2003 இல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கிய பிறகு, கடைசியாக ஜனாதிபதி தகவல் அறியும் உரிமைச்சட்ட மசோதா வடிவில் கையெழுத்திட்டார்.

    இவை தவிர, மஹாராஷ்டிர கூட்டுறவு அமைப்பிலுள்ள முறைகேடுகளைக் களைவதற்காக இவர் தொடர்ச்சியாக எட்டு மாதங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக சுமார் 125 கோடி ரூபாய் நிலுவையிலிருந்த வாராக் கடன் வசூலிக்கப்பட்டது. இன்னும் சுமார் 400 கோடி ரூபாய்கள் வசூலிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    • இம்மாதிரியான போரட்டங்களை பாராட்டவிட்டாலும் பரவாயில்லை விமர்சனம் செய்யாதீர்கள், உங்களது சித்தாந்தில் பணக்காரர்கள் எல்லாம் தவறானவர்கள் , ஏழைகள் மிக்க நல்லவர்கள் , இப்போது உங்களுக்கு அன்னா ஹஸாரே போன்றவர்களும் தவறானவர்களே , இவ்வுலகம் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கி இருக்கிறது. நீங்கள் ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்குகிறீர்கள், அவர்கள் வாழ்க்கை முன்னேறுவதற்கு உரிய தன்னம்பிகை கொடுங்கள் . உங்களை தவிர யார் சமூகத்திற்காக போராடினாலும் அவர்களை விமர்சனம் செய்வீர்கள் . ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் அவசியமானது , இந்த அளவேனும் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது குறித்து பெருமிதம் கொள்ளுங்கள்,

      • ஏழைகள் மிக்க நல்லவர்கள் , இப்போது உங்களுக்கு அன்னா ஹஸாரே போன்றவர்களும் தவறானவர்களே //

        அன்னா ஹசாரே ஏழையா பணக்காரரா?..

        அவர் மாசற்றவரே.. மிக நல்லவரே.. ஆனால் அவர் என்ன செய்திருக்கலாம?..

        இந்த போராட்டத்தில் எனக்கு ஆதரவு தரும் அனைவரும் என்னைப்போல அப்பழுக்கற்றவராக மட்டுமே இருக்கவேண்டும் என்றல்லவா சொல்லியிருக்கணும்?..

        அவருக்கா மெழுகுவத்தி ஏந்தும்போது ,

        வாழ்நாளில் ஊழல் செய்தவன் , துணை போனவன், அடுத்தவன் உழைப்பை சுரண்டியவன் , அடுத்தவன் வாழ்வை அழித்தவன் , மிரட்டியவன், மிரட்டல் வந்ததா கதறி பொய் சொன்னவன் , அதுக்கு தொண போனவன் ,சாதீ ய மும்முரமா வளர்ப்பவன் , பெண்களை இழிவுபடுத்துபவன் , ஆபாசத்தை வளர்த்தெடுத்து சிறார் கொலைக்கு துணை போறவன், எப்பவும் கெட்ட வார்த்தை மட்டுமே பேசி சமூகத்தை கழிப்பிடமாக்குபவன் , மதவெறி பிடித்தவன் , கையெல்லாம் பொசுங்கி போற மாதிரி இருந்தா எத்தனை நல்லா இருக்கும்.. :)))) ( ன்/ள் போட்டுக்கலாம் ) .

        • அப்படி அவர் சொல்லாவிட்டால், அது பெரிய குற்றமா ? அவர் தன் வழியில் போராடுகிறார். ஆதரிப்பவர்கள் எல்லோரும் spontaneous ஆக செய்கிறார்கள். யாரும் ஆதரிக்கவில்லை என்றாலும் அவர் தொடர்ந்திருப்பார். வினவு வை படித்து ஒரு பக்கம் மட்டும் பார்க்கும் பழக்கம் உங்களுக்கும் வந்திருச்சு. try to look at the big picture holistically.

          பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.

        • Coffin Maker

          அப்படி அவர் சொல்லாவிட்டால், அது பெரிய குற்றமா ? அவர் தன் வழியில் போராடுகிறார். //

          அவர் மேல் எந்த குற்றமும் இல்லை.. ஆனால் அவர் அறியாமையும் கூட தவறுதானே?..

          இவர் பார்வை ஐரோம் சர்மிளா மீது ஏன் விழவில்லை.?.. இப்படி பல கேள்விகளுண்டு..

          இருப்பினும் அவரை விமர்சிக்குமுன் நாம் அவரளவிறகாவது வந்தபின் போராட்டத்தில் கலந்துக்கலாம் என்ற ஆவல் மட்டுமே..

          அதுக்கே நமக்கு நாட்டு நடப்பு பற்ரி இன்னும் பல விபரங்கள் தெரியணும். விழிப்புணர்வு ஏற்படணும்..

          அதுவரை இது ஒரு மாஸ் ஹிஸ்டீரியா, பொது புத்தி , ஆட்டு மந்தைக்கூட்டம் மட்டுமே..

          இதையும் படித்து பாருங்கள்.. Coffin Maker , என் எண்ணம் புரியும்…

          http://punnagaithesam.blogspot.com/2011/04/blog-post_09.html

          அன்னா ஹசாரேவுக்கு நன்றி/மரியாதை செலுத்த நான் என்ன செய்யணும்?

  51. Negative People will Always Criticize ; SOURCE -YOU CAN WIN BOOK)
    Some people criticize no matter what. It does not matter which side you are on, they are
    always on the other side. They have made a career out of criticizing. They are “career
    critics.” They criticize as if they will win a prize at a contest. They will find fault with every
    person and every situation. You will find people like this in every home, family, office.
    They go around finding fault and telling everybody how bad things are and blaming the
    whole world for their problems. We have a name for these people. They are called
    energy suckers. They will go to the cafeteria and drown themselves in 20 cups of tea and
    coffee and smoke to their hearts’ content with one excuse: they are trying to relax. All
    that they are doing is causing more tension for themselves and for others around them.
    They spread negative messages like a plague and create an environment conducive to
    negative results.
    Robert Fulton invented the steamboat. On the banks of the Hudson River he was
    displaying his new invention. The pessimists and the skeptics were gathered around to
    observe. They commented that it would never start. Lo and behold, it did. As it made its
    way down the river, the pessimists who said it would never go, started shouting that it
    would never stop. What an attitude!
    SOME PEOPLE ALWAYS LOOK FOR THE NEGATIVE
    There was a hunter who bought a bird dog, the only one of its kind in the world. That
    could walk on water . He couldn’t believe his eyes when he saw this miracle. At the
    same time, he was very pleased that he could show off his new acquisition to his friends.
    He invited a friend to go duck hunting. After some time, they shot a few ducks and the
    man ordered his dog to run and fetch the birds. All day-long, the dog ran on water and
    kept fetching the birds. The owner was expecting a comment or a compliment about his
    amazing dog, but never got one. As they were returning home, he asked his friend if he had noticed anything unusual about his dog. The friend replied, “Yes, in fact, I did notice
    something unusual. Your dog can’t swim.”

    • I would have had faith in the Anna Hazare fast if he had made action on the Shunglu Committee the pivot of his crusade and fast in Delhi, and not made the personally honest Prime Minister the target of his rage. The fact that this very live issue of high level corruption in the capital – which still reverberates in world capitals – did not even occur to him or his associates should be evidence enough of an unspoken agenda and an illegitimate target. It reminds one of Sherlock Holmes’ quintessential query – but why didn’t the dog bark?

      In conclusion, I must say I cannot agree with the main object of Anna Hazare’s fast –to elevate a select coterie as national super cop and super judge, as a national daily put it so aptly.

      I robustly condemn the idea that Magsaysay Award-winning Indians should figure in the Lokpal selection panel. This stinks of an American hand. Without casting aspersions on any individual, it bears stating that the Magsaysay Award is funded by the Rockefeller Foundation, though it is named after late Philippine leader Ramon Magsaysay.

      As the Rockefeller family has vast business interests all over the globe and doubtless also in India, we shall never know what kind of private networking could take place in government and bureaucracy via its favoured persons, to further Rockefeller interests. Recently we saw US insurance corporate-cum-philanthropist Warren Buffet visiting India and Government pushing to raise FDI in insurance from 26% to 51%! Bill and Melinda Gates were also here – peddling vaccines of unknown quality and of course the detestable GM seeds.

      http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1716

  52. ஆஹா…ஊழலுக்கு எதிராக கூப்பாடுபோட்டவர்களின் வயிற்றில் பால் வார்க்கும் விதமாக இதோ அன்னா தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளப்போகிறார். சோனியா,ஜெயலலிதா மற்றும் பி.ஜே.பி யினரின் ஒட்டுமொத்த ஆதரவோடு ஊழல் ஒழிந்துவிடப்போகிறது.பெப்சியும்,கோக்கும் பீசாவும் கையுமாக அலையும் அரைடிரவுசர்களின் கைகளில் உள்ள ஊழலை ஒழிப்போம் பதாகைகள் நாட்டின் பெரும்பான்மை ஏழைமக்களைப்பார்த்துச்சிரிக்கின்றன. அணிதிரள்வோம், ஜெயலலிதா-சசிகலா,சோனியா-மன்மோகன்சிங்க்,கற்காலத்திற்கு இழுத்துச்செல்லும் பி.ஜே.பி. கும்பல்களுக்குப்பின்னே அணிதிரள்வோம். ….

  53. நீங்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சமூக பிரச்சனைகளில் மக்களின் கவனம் செல்வதின் ஒரு பகுதியாக இந்த போராட்டத்தை ஆதரிக்கலாம்.

    இந்த போரட்டத்தினால் மக்கள் இழப்பது ஒன்றும் இல்லை. ஆகையினால் இந்த போராட்டம் ஊழலை ஒரு சதவீதம் குறைத்தாலும் அது நாட்டிற்கும் மக்களுக்கும் வெற்றிதானே.

    இந்த வெற்றியினால் உந்தபட்ட மக்கள் ஒரு வேளை “சட்டபூர்வமான ஊழல்” களுக்கு எதிராகவும் திரும்ப வாய்ப்பு இருக்கிறது அல்லவா.

    100% துய்மையான அப்பழுக்கற்ற புரட்சி எங்கேயும் நடந்திருக்க சாத்தியமே இல்லை

    • இங்கு இந்தக் கட்டுரையில் நான் காண்பது , போராட்டத்தின் குறி சரியான இலக்கின் மீது இல்லை என்பது தான்.

      உண்மையில் ஊழல் படுத்துபவர்கள் யார் ?. ஊழலின் முக்கிய ஊற்றுக்கண் நோக்கி குறி வைக்காமல் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை காகித அணை கொண்டு தடுக்க நடக்கும் முயற்சியே இந்தப் போராட்டம். வெள்ளத்தை காகித அணை கொண்டு தடுக்க முடியுமா?.

  54. அப்படி அவர் சொல்லாவிட்டால், அது பெரிய குற்றமா ? அவர் தன் வழியில் போராடுகிறார். ஆதரிப்பவர்கள் எல்லோரும் spontaneous ஆக செய்கிறார்கள். யாரும் ஆதரிக்கவில்லை என்றாலும் அவர் தொடர்ந்திருப்பார். வினவு வை படித்து ஒரு பக்கம் மட்டும் பார்க்கும் பழக்கம் உங்களுக்கும் வந்திருச்சு. try to look at the big picture holistically.

    பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.

    • குற்றத்துடன் எழுதினால் கண்டுபிடிப்பதில் தவறு இல்லையே. குற்றம் கண்டு பிடிக்கும் புலவரின் கவிதையில் குற்றம் இருப்பின் விவாதிக்கலாமே..

    • சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி சோக் அடிக்க ஆரம்பிச்சுட்டாருங்கோ – இந்தியன் எக்ஸ்பிரஸ் லிங்க்

      Congress agenda is to eradicate corruption and same was the resolve of Hazare, he said.

      Congress President Sonia Gandhi has also suggested a five-point agenda to check corruption, Moily said.

      Referring to the controversy surrounding remarks by Telecom Minister Kapil Sibal over the Lokpal Bill and the reaction it evoked from Hazare, Moily sought to play it down terming it as a “communication gap”.

  55. என்ன ஒரு அளப்பறை. காந்தீயவாதி உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப்போகிறாராம். அரசு தரப்பில் பி.முகர்ஜி, ப.சி., கபில்சிபல், சல்மான் குர்ஷித்,வீரப்பமொய்லி ஆகியோர் இடம்பெறுகின்றனர். இனி இந்தியாவில் ஊழல் 40 கால் பாய்ச்சலில் முடிவுக்கு கொண்டுவரப்படும். நம்புங்கள். காந்தியும் தனது குழுவில் இவர்களைப் போன்றவர்களைத்தான் வைத்திருந்தார். காந்தி வெள்ளைக்காரனை நம்பியது போலவே ஹசாரேவும் ஆளுங்கும்பலை நம்புகிறார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது மக்களுக்கு காலையில்தான் தெரியும். ஹசாரேவின் உண்ணா முடிவும் நமக்கு காலையில்தான் தெரியும்(என்ன ஒரு ஒற்றுமை). காந்தியால்தான் சுதந்திரம் கிடைத்ததாக நம்புபவர்கள் ஹசாரேவால் ஊழல் ஒழிக்கப்படும் என்பதையும் நம்பலாம்.
    ஹசாரேவால் ஏழைகளுக்கு ஒரே ஒரு நன்மை கிடைத்துள்ளது. இந்த 4 நாட்களில் மிகவும் அதிகமான மெழுகுவர்த்தி விற்றுள்ளது.

  56. கட்டுரை மிக மிக சிறப்பானது. இந்த கட்டுரையின் மைய்யக் கருத்தின் மூலம் ஆங்கிலேயருக்கெதிரான காந்தியின் வெண்ணை வெட்டித்தனமாக, மக்களை ஏமற்றிய போராட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. முதலில் இந்த கட்டுரையை புரிந்துக்கொள்ள வேண்டுமானால் நிச்சயம் முதலாளித்துவ பொருளாதரத்தையும் வர்க்கபோராட்டத்தையும் மார்க்சியத்தையும் தெரிந்திருக்க வேண்டும். அதை தெரியாதவர்களும் மத்திய இந்தியாவில் நடக்கும் மக்கள் விரோத ராணுவத்தாக்குதலை பற்றிய சிந்தனை இல்லாதவர்கள்தான் இந்த கட்டுரையை விமர்சனம் செய்கின்றனர். இதற்க்கு இவர்களின் அறியாமைத்தான் காரணம்.

  57. அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இருக்காதா பின்னே, அடுத்து ஐ.பி.எல் வரப்போகிறதல்லாவா? இதற்கு மேலும் நீட்டி முழக்கிக் கொண்டிருந்தால் டெப்பாசிட்டு காலியாகிவிடும் என்பது மற்றவர்கள் எவரையும் விட அவருக்கே நன்றாகத் தெரியும். அது ஒருபக்கம் இருக்கட்டும். இப்போது ஜன்லோக்பால் மசோதாவுக்கான முன்வரைவு ஒன்றை உருவாக்க ஏற்படுத்தப்படும் கூட்டுக் கமிட்டியில் அரசு தரப்பில் நியமிக்கப்படும் மூத்த அமைச்சர்களோடு இவர்களும் அமர்ந்து ஒரு முன்வரைவைத் தயாரிப்பார்கள். அரசு ஏற்கனவே வரும் மழைக்காலக் கூட்டத் தொடரில் அதை அறிமுகம் செய்து விடுவோம் என்று தெரிவித்து விட்டது.
    நாமும் அது இத்தனை ஆண்டுகள் போல் அல்லாது இரு அவைகளிலும் சிக்கலில்லாமல் நிறைவேறி விடும் என்று வருணபகவானைப் பிரார்த்தித்துக் கொள்வோம். இல்லாவிட்டாலும் ஜந்தர் மந்தர் அப்படியே அங்கேயே தான் இருக்கப்போகிறது – அன்னாவும் அதுவரையாவது தாக்குப்பிடிப்பார் – இன்னொரு முறை உண்ணாவிரதம் இருக்க. ஆக, ஜன்லோக்பால் இந்தாண்டுக்குள்ளாகவே நிறைவேறி விடும் என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம். ி
    இருதரப்பிலும் ஓரிரு விட்டுக் கொடுப்புகள் இருக்கும். இருந்தாலும் நாம் ஒரு வாதத்துக்காக அன்னாவின் கோரிக்கை கேள்வி முறையின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும் என்றே வைத்துக் கொள்வோம். இந்த விதமாக அன்னாவின் விருப்பப்படியும் திடீர் ஊழல் எதிர்ப்புப் போராளிகளின் விருப்பப்படியும் இந்தச் சட்டம் நிறைவேறி விடும் என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டு மேலும் பார்ப்போம்.
    அடுத்து என்ன?
    இந்த சட்டத்தின் மூலம் தேர்தல் கமிஷன் போன்றதொரு சுயேச்சையான அமைப்பு ஏற்படுத்தப்படப் போகிறது. அது சி.பி.ஐயின் ஊழல் தடுப்புப் பிரிவோடு சேர்ந்து அரசியல் நிர்பந்தங்களுக்குப் பணியாத வானளாவிய அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பாகவே இருக்கும் என்கிறார்கள். சரி இருக்கட்டும். இந்த அமைப்பு கீழே உள்ள ஊழல்களை ஒழிக்க என்ன விதமான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை இத்தனை நேரமாக அன்னாவுக்கு வக்காலத்து வாங்கிப் பேசிய அனைவரும் சொல்லக் கடமைப்பட்டவர்களாகிறார்கள். பார்ப்போம் உங்கள் காந்திய நேர்மையின் யோக்கியதையை –

    1) ஸ்பெக்ட்ரம் ஊழலில் அலைக்கற்றைகளை முறையற்ற வழிமுறைகள் மூலம் பெற்ற பார்த்தி, ரிலையன்ஸ், டாடா போன்ற நிறுவனங்களிடம் இருந்து அவற்றைப் பறிமுதல் செய்து மீண்டும் முறையான டென்டர் விட லோக்பால் அமைப்பால் முடியுமா? அல்லது குறைந்த பட்சம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பான 1.76 லட்சம் கோடிகளை இம்முதலாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்ய முடியுமா?
    2) மக்களின் குடிநீர்த் தேவைக்கும் விவசாயப் பயன்பாட்டுக்குமான நதிகளை அநியாயமாக உறிஞ்சிக் கொழுத்த கோக்கோ கோலாவிடம் இருந்து இது நாள் வரை அவர்கள் உறிஞ்சிய தண்ணீருக்கான நட்ட ஈட்டைப் பறிமுதல் செய்ய முடியுமா? அதோடு கூட, தண்ணீரை வரைமுறையின்றி உறிஞ்சுவதற்கு அவர்களுக்கு அளித்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்ய முடியுமா?
    3) ரெட்டி சகோதர்கள் இத்தனை ஆண்டுகளாக அரசிடம் ஒரு டன் இரும்புத் தாதுக்கு வெறும் 27 ரூபாய் கட்டி விட்டு வெளிச்சந்தையில் 7000/ ரூபாய்களுக்கு விற்று சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை ஜன்லோக்பால் பறிமுதல் செய்யுமா?
    4) பன்னெடுங்காலமாய் கோண்ட் பழங்குடிகளுக்குச் சொந்தமாயிருந்த நியாம்கிரி மலையை போஸ்கோ வேதாந்தாவிடமிருந்து மீட்க முடியுமா? போஸ்கோவிற்கும் வெதாந்தாவுக்கும் ஆதரவாக களத்தில் இறங்கி ஆயிரக்கணக்கான பழங்குடிகளைக் கொன்றும், லட்சகணக்கானவர்களை அகதிகளாகவும் விரட்டியடித்த இராணுவத்தின் வெறியாட்டத்திற்கு நட்ட ஈடு கொடுக்க முடியுமா?
    5) மக்கள் கட்டும் வரிப்பணத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் தனியார் ஏகபோகத் தரகு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் வரிப்பணத்தை மீண்டும் அவர்களிடம் இருந்து பறித்து அரசு கஜானாவில் சேர்க்க முடியுமா? இனிமேல் அப்படி மக்களின் வரிப்பணத்தில் இருந்து முதலாளிகளுக்கு வாரி வழங்க மாட்டோம் என்று அரசைச் அறிவிக்கச் செய்ய முடியுமா?
    6) வெளிநாடுகளுக்குச் செல்லும் தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகக் கணக்குக் காட்டி – ஊழல் செய்து – இந்திய அரசுக்கு பட்டை நாமம் போட்ட ரிலையன்ஸ் அம்பானியிடம் இருந்து கொள்ளை போன பணத்தை மீட்டெடுக்குமா ஜன்லோக்பால்?
    7) 1991 முதல் இன்றைய தேதிவரையில் நல்ல லாபத்தில் இயங்கிய பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அடிமாட்டு விலைக்குத் தாரை வார்த்த இந்திய அரசின் ஊழல் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைக்க முடியுமா? மாடர்ன் ப்ரெட்ஸ், பால்கோ, வி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்களைத் தனியாரிடமிருந்து மீண்டும் பறித்து அரசுடமையாக்க முடியுமா?
    8) தனியார்மயப் பொருளாதாரக் கொள்கை அமுலாக்கப்பட்டதிலிருந்து சென்ற 2009ம் ஆண்டு இறுவரை அரசுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பான 73 லட்சம் கோடிகளை மீண்டும் தனியாரிடம் இருந்து பறித்து அரசு கஜானாவில் ஜன்லோக்பால் அமைப்பால் முடியுமா?

    இதெல்லாம் ஜன்லோக்பால் அமைப்பால் முடியுமா முடியாதா என்பதை, அன்னாவும் அவரது ஆதரவாளர்களும் தயாரித்த முன்வரைவைப் படித்துப் பார்த்து விட்டு இங்கே சாமியாடும் அன்னா பக்தர்கள் சொல்லக்கடமைப்பட்டவர்கள். அந்த முன்வரைவு இந்த சுட்டியில் கிடைக்கிறது – http://www.annahazare.org/pdf/Jan%20lokpal%20bill%20by%20Expert%20(Eng).pdf

    நான் சொல்கிறேன் இது எதையும் சாதிக்கும் துப்பு அன்னா ஹசாரேவுக்கோ அவரால் முன்மொழியப்படும் ஜன்லோக்பால் மசோதாவுக்கோ கிடையாது. ஏனெனில் மேலே குறிப்பிட்டதெல்லாம் அரசினால் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டபொருளாதாரக் கொள்கைகளின் விளைவு. முதலாளிகளின் நலனுக்கு பங்கம் ஏற்படும் படிக்கு அன்னாவோ அவரது தம்பிகளோ தமது கோரிக்கைகளை எழுப்புவார்களாயின் ஐரோம்ஷர்மிளாவுக்கும் கோண்ட் பழங்குடியினருக்கும் ஏற்பட்ட அதே விளைவு தான் ஏற்படும். ஏனெனில், கோண்ட் பழங்குடியினரின் போராட்டம் என்பது முதலளிகள் ஏகபோகத்தை எதிர்க்கும் நடவடிக்கையாகவும் அவர்களின் நலனுக்கு விரோதமாகவும் இருப்பது. ஐரோம் ஷர்மிளாவின் கோரிக்கை இந்திய ஆளும் கும்பலின் அதிகாரத்துக்கு சவால் விடுப்பதாகும்.
    அதனால் தான் அன்னா தனது கோரிக்கைகளை தாசில்தார் ஆபீஸில் லஞ்சம் வாங்கும் ப்யூனின் அளவுக்கும், முதலாளிகளிடம் லஞ்சம் வாங்கும் ராசாவின் அளவுக்கும் குறுக்கிக் கொண்டிருக்கிறார். ராசா லஞ்சம் வாங்காமல் இருந்திருந்தால் அது அம்பானியின் நலனுக்கு மேலும் நல்லதாகப் போயிருக்கும். அதனால் தான் இதை மட்டும் ஊழலென்றும், இதனால் அம்பானிக்கு விளைந்த நன்மைகளை பொருளாதார நடவடிக்கையென்றும் பிரித்துச் சொல்கிறார்கள். இதனால் தான் டைம்ஸ் நௌ சேனலால் வெட்கமில்லாமல் இந்தப் போராட்டங்களையே ஊழலுக்கு எதிரான ஆகப் பெரிய போராட்டமாக விரித்துச் சொல்ல முடிகிறது.

    இங்கே பின்னூட்டமிட்டவர்கள் கொண்டிருக்கும் அறம் சார்ந்த ஆவேசத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் ஏதோ தப்பு நடக்கிறது என்றும் அதைத் தடுக்க ஏதோ முயற்சி நடக்கிறது என்றும் ஒரு குழந்தையின் புரிதலுக்கு ஒப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே அந்த நம்பிக்கையின் மேல் வினவு கல்லெரிந்ததும் தாண்டிக் குதிக்கிறார்கள். நீங்கள் உண்மையிலேயே உங்கள் நம்பிக்கைகளுக்கு விசுவாசமாய் இருப்பவர்களாக இருந்தால், ராசா செய்தது மட்டும் ஊழல் அல்ல – அம்பானி செய்ததும் ஊழல் தான் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அம்பானியின் நலனில் இருந்தே ராசாவின் நடவடிக்கை எழுகிறது. எனவே நீங்கள் முதலில் எதிர்த்துப் போராட வேண்டியது ஊழலில் ஊற்று மூலமாய் இருக்கும் இந்தப் பொருளாதாரக் கொள்கைகளைத் தான்.
    முன்வருவீர்களா நண்பர்களே?

    • இல்லை. மிக தவறான வாதம்.

      ஊழலின் ஊற்றுகண் பற்றி உங்க புரிதலை நீங்க தான் மெச்சிகனும். தனியார்மயம் தான் இதன் ஊற்றுகண் என்றால், பின் முற்றிலும் தனியார் மயமான நாடுகளில் ஏன் இத்தனை ஊழல் இல்லை. ஊழலை பற்றி கண்காணித்து அறிக்கை அளிக்கும் Transparancy International ஊழலில் மிக மிக குறைந்த் நாடாக டென்மார்க்கை தான் சொன்னது. ஆனால் டென்மார்க்கில் இந்தியாவை விட தனியார்மயம், தாரளமயம் மிக மிக அதிகம், ஆழம். பின் எப்படி அவர்களால் இத்தனை தூரம் ஊழலை குறைக்க முடிந்தது ?

      http://www.transparency.org/policy_research/surveys_indices/cpi/2010/results

      காரணிகள் பற்றி ஒரு பழைய பதிவு :
      http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html

      எமது பதிவுகள் :

      http://nellikkani.blogspot.com/2011/03/blog-post.html
      ஊழலின் ஊற்றுகண் – 1

      http://nellikkani.blogspot.com/2011/03/2.html
      ஊழலின் ஊற்றுகண் – 2

      உங்களை பொருத்தவரை பாரளாமன்ற அமைப்பு என்பது ‘மூத்திர குட்டை’ ; அதற்க்கு பதிலாக ‘பாட்டாளி வரக் சர்வாதிகாரம்’ அருமையாக இருக்கும். ஆனால் உண்மை அப்படி அல்ல என்பதையே வரலாறு சொல்கிறது.

      • அதியமான் அடித்துவிடும் டென்மார்க் பற்றிய சில உண்மைகள்:

        Denmark officially in recession: Europe to follow
        http://www.wsws.org/articles/2008/jul2008/denm-j09.shtml

        Denmark’s Conservative-Liberal coalition imposes major spending cuts
        http://www.wsws.org/articles/2010/jul2010/denm-j10.shtml

        Denmark: Police arrest members of the Left Socialist Party
        http://www.wsws.org/articles/2006/mar2006/denm-m15.shtml

        Second Danish bank bailout in four months
        http://www.wsws.org/articles/2009/jan2009/denm-j23.shtml

        Anti-globalisation demonstrations in Copenhagen
        http://www.wsws.org/articles/2002/dec2002/cope-d24.shtml

        ….இன்னும் நூற்றுக்கணக்காண கட்டுரைகளும், தளங்களும், லிங்குகளும் டென்மார்க்கை திரைகிழித்து காட்டுகின்றன. அதில் சில மட்டும் இங்கே சாம்பிளுக்காக…

        இனி அதியமான் ஏதாவது உளறுவதற்கு லிங்கு போடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவும். இல்லையென்றால் லிங்குக்கு லிங்குதான் பதில்….எச்சரிக்கை…..

        • லிங்களுக்கு நன்றி. உம்மை போல இல்லாமல், இவைகளை தேடி படிக்கும் ஆர்வம் எமக்கு நிறைய உண்டு. ஆம், டென்மார்கில் பிரச்சனைகள் உள்ளன. 100 % பெர்ஃபெக்ட் என்றெல்லாம் எந்த நாடும், அமைப்பும் கிடையாது. ஆனால் தர வரிசையில் அது முதல் இடத்தில் இருக்கிறது ; ஊழல் குறைவான பட்டியலில். எப்படி ? ஏன் ? அதை பற்றி பேச முடியுமா ? அதுதான் இந்த பதிவின் மைய்யம். தனியார்மயம், தாரளமயம் இந்தியாவை விட மிக மிக அதிகம் உள்ள நாடு அது. ஆனால் இந்தியாவை விட ஊழல் மிக மிக மிக குறைவு. எப்படி ? அப்ப உங்க கோணம் தவறு என்பதையே இது நிருப்பிக்கிறது.

          அரசு எந்திரம் எந்த அளவிற்க்கு பலமும், அதிகாரமும், வீச்சுமும் பெறுகிறதோ, அந்த அளவிற்க்கு ஊழல் பெருகும். Power corrupts, absolute power corrupts absolutely.
          Hence libertarianism means less government and most decentralisation. Secularism means separation of state from religion. Libertarianism means similar separation of state from economy. Look at the history of dictatorships of all types : from dictatorship of the prolatarait to other forms of dictatorships : where maximum power was consolidated with the goverments. corruptions was proportionately high. Denmank and Scandinavian nations have the best possible liberal democracy. hence lowest rates of corruption in the world. even US ranks far behind.

      • அதியமான்,

        தவறான புரிதலா இல்லையா என்பதைப் பார்த்து விடுவோம். நான் ஊழல் தான் என்று குறிப்பிட்டுள்ள விடயங்களில் நீங்கள் ஊழல் இல்லை என்கிறீர் அல்லவா – அங்கேயே ‘இந்த’ விவாதம் முற்றுப் பெற்று விட்டது.

        நான் வளங்களை அடிமாட்டு விலைக்குத் தாரை வார்ப்பதே ஊழல் என்கிறேன். நீங்கள் அதை முறையாக டென்டர் விட்டு, ஒப்பந்தம் கோரி செய்யாமல் இருப்பது ஊழல் என்கிறீர்கள். அதையே தடுத்தால் போதும் என்கிறீர்கள்.

        இதற்கு மேல் நமது விவாதம் அன்னாவைக் குறித்து இருக்காது என்பதால். இங்கெ இவ்வளவு போதும். நீங்கள் அளிக்கும் நெல்லிக்கனி லிங்குகளை ஏற்கனவே நிறைய முறைகள் படித்துப் பார்த்தாயிற்று என்பதை உங்களுக்கு ஒரு தகவலாகச் சொல்லிக் கொள்கிறேன்.

        மற்றபடி, உங்கள் சமீபத்திய குருநாதரான ஞானி அன்னாவைக் குறித்து சொன்னதைப் பற்றிய விளக்கத்தை நீங்கள் அவரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

        முடிந்தால் அன்னாவின் திடீர் தம்பியாக உருவெடுத்து திருப்பூரில் அன்னாவுக்கு ஆதரவாக மூன்று நாட்களாக இடைவிடாத உண்ணாவிரதத்தில் இருக்கும் தியாகுவிடம் பேசி உங்கள் லிபர்ட்டேரியனிச கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள். சமீபமாய் ரோட்டில் போகும் சொறிநாய் கூட அவரைச் சீந்தாமல் இருப்பதால் கடும் மனநோய்க்கு ஆட்பட்டு இணையவெளியெங்கும் தனக்குத் தானே புலம்பியபடி அலைந்து கொண்டிருக்கிறார்.

        உங்களின் காந்திய, அன்னாயிய, லிபர்ட்டேரியக் கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  58. Anna Hazare’s initiative is far more better than our beloved Mu.ka’s 2 hours fasting for the cause of Lankan tamils. Hazare’s initiative would not stop the corruption instantly. But it has created some sort of awareness among the common man to realise the importance of people power. The dimension of corruption has gone beyond our imagination and some one is trying to bell the cat. What is wrong in it? Having written so many articles in the blog what kind of changes you have brought in the society Mr.vinavu. Forget about the media. The media always look for sensational news and publicity of rating.

    We need a point to start some thing constructively. Let it be the Anna’s initiative point.

  59. அருமை !!!!!!!!!!!சரியாகசொன்னீர்கள் தோழர் ,
    இது புரட்சி கிடையாது தோழர். எனத்தான் வீட்டுக்குள் இருக்கும் மக்கள், வேலைக்கு செல்லும் மக்கள் ஒரு நாள் என்றாலும் வெளியில் வந்து ஊழலை ஒழிப்போம் என்றும் கோஷம் போட்டாலும் , அதனால் துளியேனும் நன்மை வந்தாலும் அது புரட்சி கிடையாது தோழர். பல வருடங்களாக புரட்சி புரட்சி என்று நாம் கூவிக்கொண்டிருக்கிறோம் இபோது என்ன வென்றால் அந்த அண்ணாவின் பின்னே மக்கள் செல்வதை பார்த்தல் வயிறு பற்றி எரிகிறது …. நம்மை கண்டுகொள்ளாமல் புரட்சி நடந்தால் (அது உண்மையான புரட்சி என்றாலும் கூட ) அதை கிழித்து தோரணம் கட்டி தொங்க விட வேண்டாமா ??? என்னதான் நல்ல விஷயம் என்றாலும் புரட்சி என்ற வார்த்தையை எப்படி உபயோக படுத்தலாம் ? அனால் ஒன்று , நாம் இப்படி எழுதிக்கொண்டே இருக்கும் போது புரட்சி நடந்து முடிந்துவிடும் பின்பு இதே போல் அதை திட்டி ஒரு பதிவு போடும் நிலைமை வந்து விடபோகிறது தோழர்.

    “நாம் செய்யாத வரை அது புரட்சி கிடையாது தோழர்”

  60. அன்னா பக்தர்களின் கவனத்திற்கு.
    நான் சாரு / ஞானி வகையறாக்களின் ரசிகன் அல்ல. இருந்தாலும் இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துப் பார்க்க பரிந்துரைக்கிறேன்.

    The pseudo warriors behind care to know about someone called Irom Sharmila? Gnani Sankaran
    http://charuonline.com/blog/?p=2005

    It was fashionable to be patriotic during Kargil war and now it is fashionable to be fighters against corruption thanks to Anna Hazare.

    Within two days of the fast of veteran gandhian’s understandable ire against delay in creating a lok pal act, the English media channels and their partners – in- arms English print media have created a pseudo war against corruption in India, with middle and upper middle classes suddenly waking up their consciences through candle light walks.

    Dear pseudo comrades, have you heared of Irom Sharmila , fasting not for one or two days, but a full decade, with absolutely no media hype to create a single candle light walk by the rich and the affluent of India.

    Lend your ears not to me, friends, Indians and countrymen, but to Irom Sharmila, a fellow Indian like Anna hazare. Unfortunately she is from Manipur, which many of us in south and western India confuse with Manipal where money gets education and again unfortunately in Manipur , even money cannot guarantee you your life.

    Here is a quick recap on Irom Sharmila, for the sake of latecomers to public causes. Assam Rifles one of the Indian para military forces under whose control Manipur is, gunned down ten people waiting for bus at a bus stop in Malom in Imphal valley on November 1,2000. While the army claimed that it fired against insurgents , other eye witness accounts challenged that. The killed included an old woman.

    On November 4, Irom Sharmila a 28 year old girl started a fast unto death demanding repeal of the armed forces special powers act of 1958 which empowered the army to kill without being questioned. She was arrested for attempting to commit suicide and force fed by tubes. For the last ten years, the government repeats the farce of arresting her on the same charge every year, after a formal release for a day or two. This is because the very charge of attempt to suicide does not entail imprisonment of more than one year even if convicted. Irom Sharmila continues to be under arrest till date and is being forcefed.

    In 2004, Thangjam Manorama, another Manipuri girl was found dead, brutally killed by the Indian army and this led to hundreds of women protesting ourside army headquarters in Imphal. Forty women, young and old went naked with placards demanding “Indian army, rape us.”

    And Irom Sharmila continued to fast under arrest, while rest of India has been merrily carrying on with regular elections and cricket. (If Anna Hazare had been on fast during semi finals and finals of world cup , the media would have blissfully ignored him. Timing, my dear friends, Indians and countrymen, is very very important in politics and media. Remember that if Government of India has taken 42 years to draft a Lokpal bill, Anna Hazare also has taken so long to launch a fast unto death on that demand.)

    Except for customary casual and superficial mention about Irom Sharmila in their news bulletins whenever an Arundhathi Roy or Mahaswetha devi mentioned her, the entire Indian media has ignored her. Why ? Simple, my dear watsons, it is unpatriotic to question the army or criticize it, even though it may be as corrupt as our politicians and even more brutal than them.

    A government bullying its own citizens of an entire state with its army is worse than corruption. This has been going on in North east irrespective of which party holds power in Delhi. The candle vigilantes of the educated middle, upper middle and rich dare not take up issues of human rights violations, or adivasis’ traditional right violations. It is the easiest option to shout from the rooftops about corruption while being part of the very same corrupt system in day to day life. And the politician is the favourite whipping boy for these classes.

    And is corruption in India waiting only for one single Lok pal bill at the centre to throw it out in entirety ? No. Anna hazare’s fast is only for drafting of a water tight bill which would take atleast three to four months, even if the committee of his choice works on it. And once the bill becomes the act, it does not dent corruption a bit unless it is enforced. Enforecement is the responsibility of the same corrupt machinery and system we havc.

    And remember we already have enough laws to book the corrupt politicians and public servants. Whatever cases that remain in court against a Lalu Prasad yadav or Jayalalitha or Madhu Koda or Ramalinga Raju or Ketan Desai have been booked under the existing well framed laws.

    What we really need is not just a new law but only a honest enforcemenet machinery to implement the best constitution in the world. And such a machinery also unfortunately has to come only from the educated middle, upper middle and rich classes because it is these classes that have produced, protected and perpetuated the existing dishonest enforcement system.

    What we need is therefore not a candle light rally around the half dead Anna Hazare but a protest rally outside the houses of auditors, lawyers, doctors and teachers whop have corrupted oru system blaming everything on an imaginary uneducated politician. But lo, they are an indistinguishable but inseperable part of the cacophony of the pseudo war against corruption.

    I wish before his martyrdom, someone would first educate Anna Hazare about a place called Manipur and an unsung heroine called Irom Sharmila.

    ———————————

    Gnanisankaran is a tamil writer, columnist, theatreperson and video film maker

    Contact at gnanisankaran@gmail.com

  61. வினவு தோழர்கள்
    பல்லாண்டு காலமாக மாவோயிஸ்ட்களை குறை பேசினார்கள். இப்பொது காதலாகி கசிந்துருகுகிறார்கள்.
    விடுதலை புலிகளை மக்கள் விரோதிகள் என்றார்கள் . புலிகளுக்கு அஞ்சலி போஸ்டர் ஒட்டினார்கள்.
    தெலுங்கான போராட்டத்தை எதிர்த்தார்கள் . நடுத்தர வர்க்க போராட்டம் என்றார்கள். நடுத்தர வர்க்கம் புரட்சியின் நேச சக்தி என்கிறார்கள்.
    நேபாள போராட்டத்தை இராணுவவாதம் என்றார்கள் . பின் ஆதரித்தார்கள்.
    அன்ன ஹசாரே போராட்டத்தை கோக் வாலாக்களின் போராட்டம் என்கிறார்கள்.
    அன்ன ஹசாரே போராட்டத்திற்கு ஏன் திரண்டார்கள் ரிலையன்ஸ் முற்றுகை ஏன் நாடு முழுக்க பரவவில்லை என சிந்திக்க மறுக்கிறார்கள்.
    தனியார் மாயம் உலக மயத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவதில் தாங்கள் செய்த பணியை நீங்கள் மெச்சிநீர்கள் ஊர் மேச்சவில்லையே ஏன் செய்வது.
    அனைத்திலிருந்தும் கற்றுக்கொள்ள முயன்றால் நலம்.

    • துக்ளக் சோ ஒரு ஆா் எஸ் எஸ் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் குஜராத் மோடி மிக நல்லவரு என்ற அன்னா ஹசாரே பற்றி இன்றைய துக்ளக்கின் தலையங்கம் பின்வருமாறு-

      வெற்றி- வெற்றி

      அயல்நாட்டு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும், கற்பனைக்கும் எட்டாத, கோடானு கோடி ரூபாய்களுக்கும் மேலான, கறுப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவர, உடனடி நடவடிக்கை வேண்டும் – என்று அவர் கோரவில்லை..

      ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற உலக அற்புதங்களில் ஒன்றாகிவிட்ட ஊழலில், பிடிபட்ட சுண்டெலிகளுக்குப் பின் உள்ள பெருச்சாளிகளையும் பிடியுங்கள் – என்று அவர் கேட்கவில்லை..

      சுதந்திர இந்தியாவில் பதவி ஏற்ற அரசுகளில், மிக அதிகமாக ஊழலில் திளைத்த அரசு வெளியேற வேண்டும் – என்று அவா் கூறவில்லை..

      தன்னைச் சுற்றி நடக்கிற ஊழல்களை எல்லாம் பாதுகாத்துக் கொண்டு, தன்னுடைய புகழ் பெற்ற ‘நேர்மை’ப் போர்வையால், எல்லா மோசடிகளையும் மூடிமறைக்க முயன்று கொண்டு, ‘தருமம் எது என்று எனக்குத் தெரியும், ஆனால் என்னால் அதை கடைபிடிக்க முடியவில்லை’ என்று ஒப்புக் கொண்ட திருதராஷ்டிரனின் நேர்மை கூட இல்லாத பிரதமர், பதவி விலக வேண்டும் – என்று அவர் கோஷம் எழுப்பவில்லை..

      இதற்கெல்லாம் தாயாக திகழ்கிற அன்னை பற்றியோ, அன்னையின் அருள் பெற்ற ஊழல்கள் பற்றியோ – அவர் ஒரு முணுமுணுப்பு கூட செய்யவில்லை..

      ஸி.பி.ஐ-யையும், ஊழல் ஒழிப்புத் துறையையும் நேர்மையாகச் செயல்பட வேண்டும் – என்று கூட பேசவில்லை..

      பின் என்னதான் செய்தார் அன்னா ஹசாரே? ஊழல் புகார்களை உடனடியாக விசாரித்து, வழக்கை விரைவில் முடித்து, சரியான தீர்ப்பு வழங்க – முறையாக நிறுவப்பட்ட லோக்பால் அமைப்பு தேவை, அதற்கான மசோதாவை தயாரிக்க, அரசு பிரதிநிதிகளுடன் அரசியல் சாராத நேர்மையாளர்களையும்,குடிமக்களை பிரதிநிதிகளாகக் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட வேண்டும் – இதுதான் அன்னா ஹசாரே கோரிக்கையின் சாராம்சம்.

      இதைச் செய்யக் கூட மத்திய அரசிற்கு இத்தனை அமர்க்களம் தேவைப் பட்டது. டெலிவிஷ‌ன் சேனல்கள், கிரிக்கெட் வெறியைக் கூட தணித்துக் கொண்டு, அன்னா ஹசாரேயின் உண்ணா விரதத்தை படம் பிடித்து, பிடித்து, பிடித்துக் காட்டிக் கொண்டேயிருக்க – பத்திரிக்கைகள் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களைக்கூட பின்னுக்குத் தள்ளி, அன்னா ஹசாரேயின் போராட்டத்தை பக்கம் பக்கமாக, பரபரப்பு செய்தியாக வெளியிட்டுக்கொண்டிருந்தன..

      இத்தனை நடந்த பிறகு அரசு மனமிறங்கி, சரி கமிட்டி போடுகிறோம் என்று கூறிவிட்டது. கல்கி முன்பு சொன்னார்- ‘ஒரு விஷயத்தைக் கொல்வதற்கு, அதன் மீது கல்லைப் போடு, அல்லது கமிட்டியைப் போடு’ என்றார். இப்போது அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு மசோதா கோரிக்கை மீது, அரசு ஒரு கமிட்டியை போட்டுவிட்டது..

      ‘ஒரு கொடிய விஷப் பாம்பைக் கண்டால் அதை அடித்துக் கொன்றுவிடு, அதை என்ன செய்யலாம் என்று அறிய, ஒரு கமிட்டியை நியமிக்காதே’ என்றார் ஒரு மேல்நாட்டு அறிஞர். ஊழல் என்னும் விஷப் பாம்பை ஒழிக்க, ஒரு அமைப்பைத் தோற்றுவிக்க, ஒரு சட்டம் இயற்ற, ஒரு மசோதா தயாரிக்க, கலந்தாலோசனை நடத்த – ஒரு கமிட்டி வந்தாகிவிட்டது..

      வெற்றி எட்டுத் திக்குமெட்ட கொட்டு முரசே என்று பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் மகிழ்ந்து முரசு கொட்டுகின்றன. நாமும் மகிழ்வோம், அம்மண ஊரில்- கோவணம் கட்டித் திரிகிற பைத்தியக்காரத் தனத்தை தவிர்த்து, நாமும் மற்றவர்களுடன் சேர்ந்து சங்கு கொண்டு ஊதுவோம் பூம்..பூம்..பூம்..

  62. //அவர்களை முறையாக் அமைப்பாக்க தலமையேற்க நல்ல அரசியல் கடசியில்லாததே பிரச்சினை.//

    asuran appo ungka கட்சி என்ன செய்யுது

  63. இரண்டாவது தடவையாக உங்கள் பதிவுகளின் மேல் எதிர்மறையான எண்ணம் தோன்றுகிறது.
    ஏதாவது நல்லது நடந்து விடாதா என்ற ஏக்கத்திலிருக்கும் மக்களுக்கு மழையாய் வந்த ஒரு போராட்டத்தையும் எதிர்க்கிறீர்கள். என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்? ஒரு பதிவு ஆரம்பித்து ஏதாவது எழுதிக்கொண்டேயிருந்தால் மட்டும் போதுமா?

    • தருமி,

      ஊழலின் பரிமானமே மாறி இருக்கும் சூழலில் அன்னாவின் போராட்டம் நிழலோடு போடும் யுத்தமாக இருக்கிறது. எதார்த்தத்தில் நடந்து கொண்டிருக்கும் ஊழல் பற்றி அன்னாவோ அவரது ஆதரவாளர்களோ பேசவே மறுக்கிறார்களே – இது அயோக்கியத்தனம் இல்லையா? இதை அங்கீகரிப்பது என்பது உண்மையாகவே நடந்து கொண்டிருக்கும் ஊழலுக்குத் துணை போவதற்கு ஒப்பானது.

      மேலே இருக்கும் எனது பின்னூட்டங்களைப் படித்து அதைப் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்.

  64. //எதார்த்தத்தில் நடந்து கொண்டிருக்கும் ஊழல் பற்றி அன்னாவோ அவரது ஆதரவாளர்களோ பேசவே மறுக்கிறார்களே//

    மன்னார்சாமி, தேவையற்ற விவாதம் நீங்கள் சொல்வது. முதலில் ஒரு லிஸ்ட் போட்டுவிட்டு அதன்பின் யுத்தத்தை ஆரம்பிக்கணுமா? ஊழலுக்கு எதிர்த்த ஒரு போராட்டம் .. அதுவும் பல ஆண்டுகளாகத் தூங்கும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு போராட்டம். இதிலும் இன்னும் ‘ஓட்டைகளை’ எண்ணிக்கொண்டு இருக்கப் போகிறீர்களா?

    • தருமி,

      உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. முதலில் ஒரு சமூக செயல்பாடு என்பது உணர்ச்சிகளின்பாற்பட்டதாக இருக்க முடியாது – கூடாது. இங்கே விதண்டாவாதம் புரியும் நோக்கத்தோடு பேசும் சிலரைத் தவிர்த்தால் பிறருக்கு உண்மையிலேயே சமூக அக்கறை இருக்கலாம். ஆனால், அவர்களின் அக்கறையும் அதன் பொருட்டு அவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளும் எதார்த்தத்தில் எவரின் நலனுக்கு சேவை செய்கிறது என்பதை விளங்கிக் கொண்டு தமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்வது நல்லதில்லையா?

      சமூக இழிவு ஒன்றை எதிர்த்துப் போராடப் போவதாக அறிவிக்கும் ஒருவர் – அதற்காக பெருந்திரளான மக்களை என்.ஜி.ஓக்களின் நெட்வொர்க் மூலம் திரட்டும் ஒருவர் – அந்த இழிவைக் குறித்தான தனது புரிதல் என்னவென்பதை தெளிவுபடுத்த வேண்டுமா இல்லையா?

      ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று உங்களைப் போலவே நானும் ஆசைப்படுகிறேன். ஆனால், ஊழல் என்பதே சட்டப்பூர்வமாகி விட்ட இன்றைய நிலையில், அன்னாவை ஏற்றிப் போற்றும் ஊடகங்கள் எதை ஊழல் என்று சொல்கின்றன – அன்னாவினி ஆதரவாளர்கள் எதை ஊழல் என்று சொல்லி பிரச்சாரப்படுத்தி மக்களின் பொதுக்கருத்தைக் கட்டமைக்கிறார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா? ஊழலுக்கு ஊற்றுமூலமாய் இருக்கும் அமைப்பு முறையை எதிர்த்துப் போராடாமல் அதன் விதிகளை ஏற்றுக் கொண்டு அதற்குள்ளேயே நின்று கொண்டு போராடுவோம் என்று சொல்வது ஏமாற்று வேலை என்பதை நீங்கள் உணரவில்லையா?

      ஊழல் ஒழிப்பு என்பதைக் குறித்து நீங்கள் உங்கள் புரிதலின் அடிப்படையில் எனக்குத் தெளிவு படுத்துங்களேன். நான் எனது கருத்து என்னவென்பதை மேலே பின்னூட்டங்களாக வைத்துள்ளேன். வினது தனது கருத்து என்னவென்பதைக் கட்டுரையில் தெளிவாகவே எழுதியுள்ளார்கள். நீங்கள் இதையெல்லாம் எதிர்த்துக் கருத்துத் தெரிவிக்க வேண்டுமானால் அந்த வாதங்களை முதலில் மறுக்க வேண்டும்.

      ஒரு போராட்டத்தை லையசன் வேலைகளுக்குப் பெயர் போன முதலாளித்துவ ஊடகங்களும், ஊழலுக்குப் பெயர் போன காங்கிரஸ் கட்சியும் பரிவோடு பார்க்கிறார்கள் என்ற உடனேயே உங்களுக்குச் சந்தேகம் தோன்றியிருக்க வேண்டாமா?

  65. இதோ…
    மாண்டுபோன மகாத்மா,
    கல்லறையிலிருந்து
    மீண்டெழுந்துவிட்டார்.
    மகாத்மா நேர்த்தி செய்ய
    மறந்ததையெல்லாம்
    இந்த மகாத்மா
    சரி செய்துவிடுவார்.
    இனி, அக்சிடப்போகும்
    நோட்டுகளிலும் இடம்பெறலாம்.
    ஆதலால்,
    அவருடன் நாமும்
    உண்ணாவிரதமிருப்போம்.
    ஏற்கெனவே சாப்பாட்டுக்கு
    வழியின்றி வறுமையிலிருப்பவர்களின்
    உண்ணாவிரதம் செல்லாது, செல்லாது.
    ஆதலால் அவர்கள்
    ஓட்டுப்போடா விரதம் இருப்பார்களாக.

  66. //அன்னா மண்டையைப் போட்டு விட்டார் என்று வைத்துக் கொண்டாலும், இன்னொரு தொன்னா வந்து உண்ணாவிரதம் இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம்//

    மன்னார் சாமி,
    உங்கள் எழுத்தின் தரத்தை வைத்தே உங்களுக்குப் பதில் சொல்வதே தவறு என்று தெரிகிறது.

    நீங்கள் தொடர்ந்து இதுபோன்று எழுதிக்கொண்டே இருங்கள். வாழ்க.

    • மிக்க நன்றி தருமி… பதிவுலகில் நீண்ட கால அனுபவஸ்தரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான நீங்கள் நிச்சயம் எனது மறுமொழிகளில் இருந்து விவாதத்தை மறுத்து விலகிச் செல்ல ஏதாவது ஒரு கிளிட்ச்சை கண்டுபிடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்… ஆனால் இத்தனை சொத்தையானவொன்றைக் கண்டுபிடிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

      நீங்கள் தானே குட்மேன் ஜீஸஸ் ஸ்கௌன்ட்ரல் க்ரைஸ்ட் எனும் புத்தகத்திற்கு மதிப்புரை எழுதியவர்?? ஸ்கௌன்ட்ரல் என்பதை விட எனது மறுமொழியின் தன்மை அத்தனை கடுமை என்று நான் ஒத்துக்கொள்கிறேன் 😉

      குட் பை.

    • மேற்கண்ட வரிகளில் என்ன தரக்குறைவை கண்டு விட்டீர்கள் ? மைய்யமான விசயத்துக்கு வாருங்கள் தருமி.

  67. பொரட்சியெல்லாம் இஸ்டாலினு மாதிரி உருக்கு ஒடம்பு முறுக்கு மீச வச்சிகினு தானெ வரும்..இது என்னாடா இது ஒரு பல்லுப்போன குல்லாத்தாத்தாவ காட்டி பொரட்சிங்குறானுவ…

    வராத வரைக்கும் என்னடா ‘பொரட்சி’ இன்னம் வர்லையேன்னு வவுத்தக் கலக்கிகினு இருக்கு.. திடீர்னு பொரட்சி வந்துட்டாங்காட்டியும் என்னடா மெய்யாலுமே இது பொரட்சி தானான்னு ஒரே டவுட்டாக்கீது..

    ஒரே குஸ்டமாக்குது மாமே…

  68. கொஞ்சம் பொறுமையாக சண்டை இடுங்கள் அன்பர்களே. உங்கள் ஆற்றலை முழுதும் செலவிட்டு விடாதிர்கள். வினவு அடுத்து விஜயகாந்தை திட்டியோ இல்லை வடிவேலுவை திட்டியோ சீரியஸாக பதிவு எழுதி கொண்டிருக்கலாம்.எப்படியும் நாளை வெளியாகிவிடும் என்று நம்புகிறேன். எப்பொழுதும் எதிர்மறையாகவே பேசும் வினவு தோழர்களின் ரத்த பிரிவு AB – ஆகத்தான் இருக்ககூடும். ரொம்ப அரிதானவர்கள். இவர்கள் எழுதுவது எல்லாம் சீரியஸாக நினைத்து கொண்டால் அது தான் மிக பெரிய காமெடி. இவர்கள் வடிவேலுவை போல ஒரு காமெடி பீசு. வேண்டும் என்றால் இவர்கள் பதிவை படித்து விட்டு ஒரு முறை எதன் வழியாகவோ சிரித்து விட்டு போய்விடுங்கள். இவர்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் கம்யுனிஸ்டுகள் உண்டியல் பணம் பிச்சை எடுப்பது போல எப்பொழுதும் எதிர்மறையான பதிவுகளை போட்டு page ஹிட் பெற்று அதன் மூலம் பிழைப்பை ஓட்டும் வழியே.

    இவர்கள் எப்போதும் எந்த ஒரு காரியமும் எடுத்தவுடன் நூறு சதவீதம் முடிய வேண்டும். அதற்க்கு ஒரு சின்ன உதாரணம். தமிழ் சினிமாவில் காண்பிப்பதை போல எந்த ஒரு வில்லனும் ஹீரோவின் தங்கையை ஒரு முறை ரேப் செய்தவுடன் அவள் கர்ப்பமாகி விடுவாள். அது போல முதல் முறையிலே இவர்களுக்கு காரியம் நடக்க வேண்டும். ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. விடாது முயற்சித்தால் தான் பலன் கிடைக்கும். இந்த அடிப்படை அறிவுகூட இல்லையே.

    உங்களுக்கு நல்ல அறிவு வளர்ச்சி என்பது சுத்தமாக இல்லையா? இந்தியாவில் கம்யுனிசம் வருவது என்பது கருணாநிதியிடம் நேர்மையை எதிர்பார்ப்பது போன்று.என்ன தான் குரங்கை போல தெருவில் நின்று குட்டி கரணம் போட்டாலும் கஷ்டம். இவர்களின் ஒரே கவலையே நல்ல ஜனநாயக ஆட்சி அமைந்துவிட்டால் (மிகவும் அரிது அவ்வளவு சீக்கிரம்) எப்படி கம்யூனிசத்தை கொண்டுவருவது என்பதுதான்.

    ஆகா மிக சிறந்த கட்டுரை என்று புகழ்பவர்கள் வேறு யாரும் அல்ல. அல்லகைகள் என்று அவர்களை நினைத்து விடாதிர்கள். வினவு தோழர்கள் தான் அவர்கள். யாரும் அவர்களுக்கு ஆதரவாய் பின்னூட்டம் இடுவதை கண்டு இவர்களே வெவ்வேறு பெயரில் இடும் கள்ள பின்னூட்டம். இவர்கள் எழுதுவது கட்டுரை அல்ல. கருமாந்திரம்.

  69. //முடிந்தால் அன்னாவின் திடீர் தம்பியாக உருவெடுத்து திருப்பூரில் அன்னாவுக்கு ஆதரவாக மூன்று நாட்களாக இடைவிடாத உண்ணாவிரதத்தில் இருக்கும் தியாகுவிடம் பேசி உங்கள் லிபர்ட்டேரியனிச கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள். சமீபமாய் ரோட்டில் போகும் சொறிநாய் கூட அவரைச் சீந்தாமல் இருப்பதால் கடும் மனநோய்க்கு ஆட்பட்டு இணையவெளியெங்கும் தனக்குத் தானே புலம்பியபடி அலைந்து கொண்டிருக்கிறார்.

    உங்களின் காந்திய, அன்னாயிய, லிபர்ட்டேரியக் கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    மிஸ்சர் மன்னார் சாமி உங்கள் வாதங்கள் இவ்ளோ சொத்தையாக இருப்பதை கண்டு மிகவும் கவலை படுகிறேன் எனது தளத்தில் என்னோடு விவாதம் செய்ய தயாராக இருக்கிறீர்களா

    ஏனெனில் வினவில் எனது மடல்களை விடுவதில்லை என்ன பயமோ

    • அய்யயோ அப்படியா ?

      வினவு தோழர்களுக்கு இந்த கா.பீ யை கண்டு அவ்வளவு பயமா ?

  70. இதன் மூலம் என்ன விதமான மனநிலைக்கு உள்ளாகிவிட்டார்கள் வினவு கும்பல் என்பதை சாதாரணம் மனிதன் போகிற போக்கில் தெரிந்து கொள்ளலாம்

    1. இம்மாதிரி யான ஒரு மசோதாவுக்கு ஏன் மத்திய அரசு அனுமதி மறுக்கனும் இந்த சட்டத்தை வைத்து ஒன்றும் புடுங்க முடியாதென்றால் ஓக்கே சொல்லி இருக்குமே ஏன் சொல்லவில்லை பிறகு ஏன் ஒத்துகொண்டார்கள் என்கிற விசயத்தை பார்க்கனும்

    2.பிறகு எப்படி ஒத்து கொண்டார்கள் என்கிற விசயங்களை பார்க்கனும்

    பதில் : இம்மாதிரியான மசோதா வந்து ஒரு சிவில் சமூகத்தின் முன்னால் அனைத்து அரசியல் வாதிகளும் தலைகுத்தி நிற்பதை விரும்பவில்லை காங்கிரஸ்

    பதில் 2: ஆறுமாநிலங்களில் நடக்கும் தேர்தலில் இதுவே தமக்கு ஆப்பாகி விட கூடாது என்பதால் உடனே ஒத்துகொண்டு பிறகு பார்த்து கொள்ளலாம் என ஜகா வாங்கியது அரசு

    சரி ஊழலை பார்ப்போம்

    ஊழல் என்கிற கேடு முதலாளித்துவ ஜனநாயகத்தில் ஆழ ஊடுறுவி இருக்கிறது என்பதை இடதுசாரிகள் வலதுசாரிகள் அனைவரும் ஏற்றுகொள்வார்கள் மத்தியில் எந்த இசத்தையும் சாராதவர்களும் ஏற்றுகொள்வார்கள் .

    ஆனால் ஊழலின் ஊற்றுகண் எது என்பதில் பல்வேறு முரண்பாடுகள் அனைவருக்கும் இருக்கு என்பது உண்மைதான்

    ஆனால் இதுதான் ஊழலின் காரணி என்பது ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஏன் கொச்சை படுத்தனும் என்பதுதான் ஆச்சரியத்துக்கு உரிய கேள்வி

    ஒரு இடதுசாரி ஊழலுக்கு காரணம் தனியார்மயம் என்கிறான் அதே நேரம் வலதுசாரி இல்லை அரசாங்க மயம்தான் என்கிறான் ஒரு பொதுசனம் இரண்டுமில்லை தனிநபர் ஆசைதான் என்கிறான்

    ஆனால் இந்த மூவரும் இணையும் புள்ளி அதை ஒழிக்கனும் என்பதே

    ஊழல்- மற்றும் லஞ்சம் என்பது அனைத்து இந்த போலி ஜனநாயக வாதிகள் தப்பி பிழைக்க உதவும் அருமருந்தாக இருக்கிறது

    இந்த ஐந்தாண்டு உனக்கு அடுத்த ஐந்தாண்டு எனக்கு என சொல்லும்போதே
    நாக்கில் எச்சில் ஊறுகிறது இந்த அரசியல் வாதிகளுக்கு

    பொருளாதார முதுகெழும்பை உடைத்து விட்டால் இந்த அற்ப ஜீவன்கள் செத்தே போகும் அதைதான் நொருக்க மக்கள் கிளர்ந்தெழுகிறார்கள்

    ஊழலுக்கு எதிரான போராட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும் இவர்களுக்கு
    கீழ்கண்ட கேள்விகள் எழுப்ப எந்த துப்புமில்லை

    ஏனெனில் இன்னும் ஊழலுக்கு எதிரான குழந்தையே பிறக்கவில்லை

    குழந்தை பிறக்கட்டும் பிறகு ஆணா பெண்ணான்னு முடிவு செய்யலாம்

    ஆனால் கர்பிணியை குற்றம் சொல்லாதே என்கிறோம் புரியுமா

    இந்த போலி புரட்சிகளுக்கு

    மன்னார் சாமி என்கிறா மனிதன் கீழ்கண்டவாறு தனது மொன்னை வாதங்களை வைத்துள்ளார்

    • தியாகு,

      தாங்கலடா சாமீஈஈஈஈஈ…

      வினவு பதிவுகளைப் பார்த்தவுடன் தியாகு ஒரு மசை பிடித்த நாயின் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார் என்று நினைக்கிறேன். மசை பிடித்த நாய் என்ன செய்யுமென்றால், சந்தையில் எதேச்சையாகக் கிடைக்கும் தேங்காயைக் கவ்வியெடுத்து வந்து விடும். அதற்கு அந்தத் தேங்காயை உடைத்துத் தின்ன வேண்டும் என்று ஆசையும் இருக்கும் ஆனால் முடியவும் முடியாது. வாயில் ரத்தம் வர ரத்தம் வர குதறிப் பார்க்கும். வேலைக்காகாது என்று தீர்மானத்துக்கு வந்தவுடன் அப்படியே உருட்டிக் கொண்டு அலையும். பார்க்கும் எவராவது பரிதாபப்பட்டு உடைத்துத் தரலாமே என்று நினைத்து அண்டினாலும் அவர்களை அண்டவிடாது.. இப்படியே ஒரு ரெண்டு பல் உடையும் வரை முயற்சித்து விட்டு அப்படியே எங்காவது விட்டு விட்டு ஓடிவிடும்.

      வினவின் பதிவு வந்ததும், தியாகுவும் இதே நிலைக்குத் தான் ஆட்படுகிறார். அதி தீவிரமானதொரு மனநோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் தியாகுவைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். வினவு தளத்தின் நிர்வாகிகளோ அல்லது அவர்களது ஆதரவுத் தோழர்களோ இந்த நபரை கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு அறிவார்ந்த செயல். அதை அப்படியே தொடருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

      தியாகு, அன்னாவை விடுங்கள்.. நீங்கள் வினவை 24 மணி நேரமும் நினைத்து உள்ளுக்குள் மருகிக்கொண்டிருக்கிறீர்கள். இது ஆபத்தான அறிகுறி. உடனடியாக நீங்கள் எதாவது ஒரு மனநோய் நிபுணரைப் பார்த்து ஆலோசனை பெறுவது அவசியம். அது தான் உங்கள் தனிப்பட்ட / குடும்ப வாழ்க்கைக்கும் நீங்களே செய்து கொள்ளும் பேருதவியாக இருக்கும். கடந்த மூன்று நான்கு மாதங்களாக இணையத்தில் வலம் வந்து வினவையும், அவர்களது எதிர்தரப்புகளையும் வாசிக்க ஆரம்பித்த பின் நீங்கள் மட்டும் தனியாகத் தெரிகிறீர்கள் – ஒரு மனநோயாளியாய். 🙁

      இதை ஒரு அண்ணனின் அன்பான வேண்டுகோளாக ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

      • /குடும்ப வாழ்க்கைக்கும் நீங்களே செய்து கொள்ளும் பேருதவியாக இருக்கும். கடந்த மூன்று நான்கு மாதங்களாக இணையத்தில் வலம் வந்து வினவையும், அவர்களது எதிர்தரப்புகளையும் வாசிக்க ஆரம்பித்த பின் நீங்கள் மட்டும் தனியாகத் தெரிகிறீர்கள் – ஒரு மனநோயாளியாய்//

        ஹ ஹா மன்னார் சாமி இதான் உங்க டக்கா

        ஊருல எல்லா பயலும் உங்களையும் வினவையும் பயித்தியங்கிறான் நீங்களோ என்னை பயித்தியம்னு சொல்றீக

        வேற என்ன செய்ய – தனிமை பட்டு போகுது ஒரு இயக்கம் அனுதாபம்தான் படமுடியும் என்னால் – பை பை

        • பைய்த்தியம் எல்லோரையும் பார்த்து பைய்த்தியம்னு சொல்ற மாதிரி இந்த ’’உண்மையான பைய்த்தியம்’’ நீந்தான் பைத்தியம் நீந்தான் பைத்தியம்னு சொல்லிட்டு ஓடிப்போயிருச்சு.

        • தியாகு, உங்கள் மனப்பிரச்சினைகளைத் தீர்க்க முதலில் நீங்கள் இப்படி டென்சனாவதைக் கைவிட வேண்டும். அடுத்து இப்படியொரு நிலை வரும் போது ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்து விட்டு பத்து முறைகள் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவேண்டும்.

          முடிந்தால் கோணிச்சாக்கில் தைக்கப்பட்ட சட்டையை அணிந்து கொள்ளுங்கள். ஒருவேளை வெறி முற்றிப் போய் நீங்கள் கிழிக்க முயற்சித்தாலும் கிழியாது. கோரைப் பாயில் படுப்பதைத் தவிர்த்து வெறும் தரையில் படுக்க வேண்டும் – ஒருவேளை நீங்கள் தரையைப் பிராண்டிக் கொண்டாலும் அது ஒரு கிணறாக மாறி ஊருக்கு உபயோகப்படும்.

          பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. நாற்பது வயதில் நாய் குணம் என்பார்கள். நம் தியாகுவுக்கு ஒருவருடம் முன்பாகவே அந்தக் குணம் வந்து விட்டது. வீட்டுக்குப் போய் கொஞ்சம் நேரம் ஆதித்யா சேனல் பாருங்கள் – மனதுக்காவது ஆறுதலாய் இருக்கும்.

        • மிஸ்டர் மன்னார்சாமி,

          உங்களிடம் சரக்கு தீர்ந்து போச்சா அவ்ளோதான

          நானென்னமோ பெரிசா எதிர்பார்த்தேன் ஒரு பு கா இப்படியா பின்வாங்கி ஓடுவது 🙂

    • வினவு கும்பல் என்பதற்கு என்ன அர்த்தம் திருவாளர் மிடிள் கிளாஸ் ?

      • எங்க தலைவர என்ன நினைச்சிகிட்டிருக்க? சும்மா கேள்வி மேல கேள்வி கேட்கற,
        ஒரு கேள்வி கேட்டாலே ஒரு வாரம் குத்த வச்சி யோசிச்சு பதில், பதில் மேல பதில் எழுதுவார் எங்க தலைவர். அவ்வளவு அறிவாளி அவர். அவர்கிட்ட ரெண்டு கேள்வி கேட்கறீரியா?
        களப்பணியிலிருந்து ஆய்வுக்கு திரும்பியிருக்கும் அவர் ஆய் போகும் நேரம் கூட உங்களை பற்றியே சிந்திச்சு சின்னாபின்னாமாகனுமா?
        உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?

        இவண்
        ஓடுகாலி தியாகு முன்னேற்றக் கழிகம்
        திருப்பூர் கிளை

  71. காந்திய வழியில் எது நடந்தாலும் சிலருக்கு பொறுக்காது. இதற்கு இந்த கட்டுரை ஒரு உதாரணம்.. ஹசாரே யின் நோக்கம் ஊழல் அற்ற இந்தியா அமைய வேண்டும் என்பதாகத்தான் தெரிகிறது.. அதை திரித்து போலி கம்யூனிசவாதிகள் வெளியிட்டிருக்கும் இத்தகைய கருத்து, தேச பாதுகாப்பிற்கு ஊரு விழைவிக்கும் செயலாகும். இதை ஒரு தேச நலன் விரும்பியாக வன்மையாக கண்டிக்கிறேன்..

    வாழ்க இந்தியா

  72. எல்லாம் சரி தான் பாஸு…
    இந்த மாதிரி எல்லாரையும் குறை சொல்லிக்கிட்டு இருக்கறதுக்கு, வினவு ஒரு அமைப்பாவோ அல்லது ஒரு அரசியல் கட்சியோ ஆரம்பிக்கலாம். இந்திய திருநாட்டில் நடக்கும் அனைத்து தவறுகளையும் எதிர்த்து போராடலாம். என்னைப் போன்றார் நிச்சயம் இதற்கு ஆதரவளிப்போம்.
    (இவ்ளோ பெரிய கட்டுரையை போட்ட உங்களுக்கும் சாஃப்ட்வேர் வேலையில் இருந்து வீட்டுக்கு போகும் வழியில் போராட்டகளத்திற்க்கு சென்றவருக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு தெரியவில்லை. யாருக்கேனும் தெரிந்து இருந்தால் சொல்லுங்க‌ளேன், ப்ளீஸ்)

    • நான் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன். நான் எனது தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் நான் ஒருக்காலும் கோகோ கோலோ அருந்த மாட்டேன்

  73. 1) கருனாநிதி இலங்கை பிரச்சனைக்கு உண்ணவிரதம் !!! அண்ணா ஹசாரே போராட்டம் !!! என்ன வித்தியசம்?

    “மீடியாக்கள் மனது வைத்தால் கணப்போதில் புரட்சி வரும் நொடிப்போதில் மறையும்.” உன்மை ; நம்மில் பலர் மீடியாக்கலை உன்மை என்று நம்புவதால்.
    ————
    2) மற்ற போராட்டங்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கம் மற்றும் மீடியக்கள் அண்ணா ஹசாராவை ஆதரிப்பது ஏன்? இந்த கட்டூரையை வெருப்பவர்கள் விளக்கவும்.
    ————
    3) “எதைக் கண்டாலும் குற்றம் கூறும் வினவின் நோக்கு சரியானதில்லை. ” அண்ணா ஹசாரா போராட்டம் உன்மை என்று நீங்கள் நம்புவதால் வினவின் நோக்கு சரியானதில்லை என்று நீங்கள் குற்றம் கூறுகிரிர்
    ————
    4) நடுத்தர வர்க்கத்தின் முகத்தில் அறையும் கட்டுரை. நடுத்தர வர்க்கத்தின் மனசாட்சியை தொட்டவுடன் அவர்களுக்கு கோபம் வருகிறது. “Johny”
    “Palani நீங்களும் போரடமாட்டிங்க, அடுத்தவர்களையும் போரடவிடமாட்டிங்க, ஆனா குற்றம் மட்டும் கண்டுபிடிப்பிங்க. குற்றம் மட்டும் கண்டுபிடிசிக்குனு இருங்க காலம் கனிந்துவிடும்.”

    ஆம் எனக்கும் கோபம் வந்தது
    ————
    5) “மிருகம்” இது நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் வர்கத்துக்கும் உள்ள போராட்டம் இல்லை. முதலில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நடத்துவோம். அப்புறம் அடுத்ததை பேசுவோம். ” — சரியாக சொன்னிர்கள்.

    கம்யுனிசம் ஒரே நளில் மலராது, ஊழலற்ற சமுதாயம் கம்யுனிசத்தின் மூலம் மட்டும் அமையும் என்பது ஏற்க்க தக்கதல்ல.
    ————
    6) “Bala” கம்யூனிஸ்ட் சித்தாந்த்தம் ஒரு செத்து போன சித்தாந்தம். கம்யூனிசம் என்றால் என்ன என்று கற்றுகொள்ளுங்கள். முலுமையாக தெரியாத அல்லது புரியாத ஒன்றை தவறு என்று சொல்லவேண்டாம் .
    ————
    மற்றபடி அனைவருக்கும் நன்றி. மாற்று கருத்துக்கள் இருப்பதால் நாம் எதிரிகள் இல்லை நம் நோக்கம் ஒன்றுதான். நமக்குள் வெருப்பு வேண்டாம்.

  74. சாய்பாபாவை நாறடைத்த பதிவில் என்னுடைய கனவுப் பின்னூட்டம் கீழே!

    ///(கற்பனை எனினும், இது இங்கே நிஜமாக வாய்ப்புகள் உண்டு!)
    எதிர் பாருங்கள்! விரைவில் வினவில்!
    தலைப்புகள்:
    “அன்னா ஹசாரே, ஒரு போலிப் போராளி!”
    “காந்தியாகும் ஆசையில், அன்னா?”
    “அடிச்சானையா ஸ்டண்ட்! அன்னா கசாரே!”
    “படுத்துக் கொண்டே போராட்டமாம்! துப்பில்லையா பார்ப்பனவாதிகளே?”
    வரவிருக்கும் கருத்து முத்துக்கள்:
    1.ஹசாரேவை, நகர்ப்புற மக்கள் மட்டுமே ஆதரிக்கின்றனர்!எனவே இது ஒரு ஆதிக்க வர்க்கத்தின், சூழ்ச்சியே!
    2.அருந்ததி ராய், இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை!
    3. 42 வருடங்களாக, வோட்டுப் பொறுக்கி கட்சிகளுக்கு பயந்து, யாரும் வாயைத் திறக்கவில்லை! மேல்தட்டு மக்களின் திடீர் ஞானோதயம்!
    4. போராட்டத்தை தூண்டியது அமெரிக்கா!
    5. இந்த உண்ணாவிரதமெல்லாம், வெற்றி பெறாது! புரட்சி ஒன்றே தீர்வு!/////

    நன்றி! நன்றி! என்னுடைய கற்பனை, இனிதே இங்கு நடந்தேறியது!

  75. ஒன்றுமே செய்யாமல் யாராவது முயற்சி எடுத்து செய்யும் பொழுது அவரை குற்றம் சொல்லி வெட்டியாக எழுதிக்கொண்டிருக்கும் உன் போன்றோரை காட்டிலும் செயலில் இறங்கும் அன்னா ஹஜாரே போன்றவர்கள் நூறு மடங்கு உயர்ந்தவர்கள். நமக்குத் தேவை செயல்தான். உம்மால் எழுதுவதைத் தவிர எதுவும் செய்ய முடியாது. ஏதாவது செய்யும் செயல்திறன்மிக்கவர்களின்மீது குற்றமாவது சொல்லாலிருக்கலாம். பெரிய அறிவுஜீவித்தனமாக எழுதுவதாக நினைத்து குற்றம் கண்டுபிடிப்பதே ஒரு தொழிலாக செய்து வருகிறீர்கள்.

  76. நான் இந்தக் கட்டுரை மீது கருத்து எதையும் சொல்லப் போவதில்லை. கட்டுரைபற்றி வந்துள்ள பல பின்னூட்டங்களைப் பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இத்தக் கட்டுரை மீது இத்தனை எதிர் வாக்குகள் ஏன்? எதிர் வாக்கு போட்டவர்கள் முட்டாள்களா அல்லது கெட்டவர்களா? அவர்கள் கெட்டவர்கள் இல்லை. மெத்தப் படித்திருந்தாலும் இவர்கள் இன்னமும் அறியாமையில் உழல்கிறார்கள். இவர்களை அறியாமையிலிலருந்து மீட்பதற்கான முயற்சிகளே இன்றைய தேவை என்பதை இக்கட்டுரையை வெளியிட்டதன் மூலம் உணர முடிகிறது. புலனறிவை பகுத்தறிவாக்கி நடைமுறைக்குச் செல்லும் போது உண்மை உரைக்கும். பலர் புலனறிவுக் கட்டத்திலேயே இன்னமும் இருப்பதால்தான் இத்தகைய எதிர்க் கருத்துக்கள். வினவின் பணி தொடரட்டும்.

  77. வேலை நாளைக்கூட தியாகம் செய்ய முடியாதவர்கள் ஊழலை எதிர்க்க போகிறார்கள் வெட்கக்கேடு
    ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது திருட்டு; அதே அம்பானி அரசாங்கத்திடமிருந்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தால் அது தொழில் திறமை; அரசாங்கமே முன்வந்து வரி விலக்குகள் மூலம் மக்கள் வரிப்பணத்தை அம்பானியின் சட்டைப் பாக்கெட்டில் வைத்தால் அது பொருளாதார சீர்திருத்தம்.என்ன ஜனநாயகம்.ஜனநாயகத்-
    தை தெரியாதவர்கள்கூட அதைப்பற்றி எழுதுவதைப் படித்தால் புல்லரிக்குது.

  78. எனக்கு ஒரு விஷயம் தான் புரிய மாட்டேங்குது. எதற்காக எல்லாவற்றிற்கும் மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. சுனாமி, தீ விபத்து, இப்பொழுது ஊழல் எதிர்ப்பு அனைத்திற்கும் மெழுகுவர்த்தி கொளுத்தி விடுகிறார்கள்.
    மெழுகுவர்த்தியை கையிலேந்தினால் தேசபக்தியாளர், மனிதாபிமானம் உள்ளவர்கள் என்ற நினைப்பு போலும்.

  79. ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் போராடாமல் முடியாது. போராட்ட முறைகளில் மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால் போராட்டமே போலியானது என்பது சரியல்ல.

    • ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் போராடாமல் முடியாது. போராட்ட முறைகளில் மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால் போராட்டமே போலியானது என்பது சரியல்ல.//

      இது போலியானது என்பதால் தான் எங்களுக்கு மாற்றுக்கருத்து ஏற்படுகின்றது.

      ஆனால் நீங்கள் சொல்லும் கருத்தே தவறானது!

      But Pls dont paste some links to read explaining what is போலி what is மாற்றுக்கருத்து.. 🙂

  80. ஹண்ணா ஹசாரேவால் திருவாளர்கள் மோடியும் நிதிஷ்குமாரும் மட்டுமே பாராட்டப் பட்டிருக்கிறார்கள். இதற்கும் மேலே விளக்க வேண்டுமா ஹண்ணா ஹசாரேவின் நோக்கம் என்னவென்று? அவர் யார் என்று?

    ஹண்ணா ஹசாரேவுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வாதாடிய வாசகர்களே இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் யார் பக்கம்? மோடியின் பக்கமா?

    வெளியே வாருங்கள் உங்கள் முகத்தை ஒருமுறை பார்க்க வேண்டும். வருவதற்கு முன் மீண்டும் ஒரு முறை கட்டுரையை படித்துவிட்டு வாருங்கள். அப்பொழுதாவது உங்களை அறியாமலேயே உங்கள் முகத்தில் அப்பியிருக்கும் காவி கரைந்ததா என்பது தெரியவரும். மீண்டும் சந்திப்போம்.

  81. முதலில் தெருவிற்கு வந்து போராட துணிந்துள்ள நம் மக்களின் மனப்பான்மையை பாராட்டுங்கள். //

    நிச்சயமாக.. இவர்களெல்லாம் போராட்டக்காரர்கள் தான். இல்லையென்றால் இவர்களெல்லாம் கிரிக்கெட் பார்க்க டிக்கெட் வாங்க லத்தியால அடிவாங்கி இருப்பாங்களா? லத்தியால் அடி வாங்கினாலும் பரவாயில்லையென்று கிரிக்கெட் பார்க்கும் தேசப்பக்தி இவர்களை விட்டால் யாருக்கு வரும்.

  82. தெரியாமத்தான் கேட்கிறேன் வசவின்றி எந்த விசயமுமே பேசத்தெரியாதா வினவுல

    அப்புறம் வினவு மாடரேட்டர் என்ன செய்றீங்க வசவு வந்தால் அதை அப்படியே போட்டு அந்த வசவை பிந்தொடர செய்றீங்க

    அப்புறம் என்னத்த பேசி என்னத்த கிழிக்க போய் ஆவுற வேலைய பாருங்க

    • “அப்புறம் என்னத்த பேசி என்னத்த கிழிக்க போய் ஆவுற வேலைய பாருங்க”

      இதுக்குப் பேரு என்னவாம்? வசவில்லையோ! எழுதுவதற்கு முன் சற்று சிந்திக்கவும்.

  83. தர்க்க பூர்வமாக சிந்திக்க வைத்து திகைக்க வைக்கும் வாதங்கள் இதோ வினவு அதிரடி

    ——————-

    ஊழலை எதிர்க்க ஆங்கில செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் கரம் கோர்த்திருக்கும் நடுத்தரவர்க்க முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஊழலைப் புரிந்து கொண்டிருக்கும் விதம் அலாதியானது. பேருந்தில் ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது திருட்டு; அதே அம்பானி அரசாங்கத்திடமிருந்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தால் அது தொழில் திறமை; அரசாங்கமே முன்வந்து வரி விலக்குகள் மூலம் மக்கள் வரிப்பணத்தை அம்பானியின் சட்டைப் பாக்கெட்டில் வைத்தால் அது பொருளாதார சீர்திருத்தம். உலகமயமாக்கத்தின் விளைவாய் நாட்டின் வளங்களையும், பொதுத்துறைளையும் தனியார் முதலாளிகள் ஒட்டச் சுரண்டுவதோ திருடுவதோ இவர்களுக்குப் பிரச்சினையாகத் தெரிவதில்லை; அது முறையாக நடந்ததா, சட்டப்படி நடந்ததா என்பது தான் பிரச்சினை.//

    //பேருந்தில் ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது திருட்டு//

    என்ன கொடுமை சார் இது அப்போ பிக்பாக்கெட் அடிச்சா திருட்டில்லையா ஒரு வேளை எல்லா பயலும் தப்பா புரிஞ்சுட்டு இருக்காங்க போல எல்லாருக்கும் பேதி மாத்திரை கொடுக்கனும் சார்

    • தலைவா நீதான் அறிவாளி, நீ மட்டும்தான் அறிவாளி…

      இந்த பத்தியை 594 வாட்டி படிச்ச எனக்கு பிக்பாக்கெட் அடிச்சா எப்படி திருட்டோ அதே மாதிரி அம்பானி செஞ்சாலும் திருட்டு அப்படின்னுதான் புரிஞ்சுது ஆனா நீ ஒன் யானைக்கண்ணுல கிஸ்ணாயில் ஊத்தி படிச்சு எப்பேற்பட்ட கண்டுபிடிப்பு செஞ்சிருக்க. நீ உண்மையிலயே யானைப்பால் குடிச்சுத்தான் தலைவா வளர்ந்திருக்க… மறுபடியும் ஒரு சென்மம்னு இருந்தா அதுலயும் ஒன் அல்லக்கையா பொறக்கணும். அது ஒன்னுதான் என் ஆசை

      இவண்
      ஓடுகாலி தியாகு முன்னேற்றக் கழகம்
      திருப்பூர் கிளை

    • ஒரு தனிநபரிடம் பிக்பாக்கெட் அடிக்கிறது திருட்டுன்னா இந்த தேசத்துக்கே பிளேடு போட்டானே அம்பானி அதுக்கு பேர் என்னங்க அறிவாளி தியாகு ? அதை ஏன் இந்த நடுத்தர வர்க்கமும் அன்னாவும் கேள்வி கேட்கவில்லை அதற்கெதிராக போராடவில்லை என்பது தான் இங்கு கேட்கப்படுகிற கேள்வி. இப்பயாவது மண்டையில் ஏறுச்சா ?

      • //அம்பானி அதுக்கு பேர் என்னங்க அறிவாளி தியாகு ? அதை ஏன் இந்த நடுத்தர வர்க்கமும் அன்னாவும் கேள்வி கேட்கவில்லை அதற்கெதிராக போராடவில்லை என்பது தான் இங்கு கேட்கப்படுகிற கேள்வி. இப்பயாவது மண்டையில் ஏறுச்சா //

        அம்பானியை எதித்து போராடினால் மட்டும்தான் வருவீங்களா

        சபாசு

        1.இந்த அரசையும் அரசமைப்பையும் இயக்குவது முதலாளிகளே
        முதலாளிகளை எதிர்க்கும் போராட்டமும் அரசை எதிர்க்கும் போராட்டமும் ஒன்றுதான்
        3.முதலாளிகளை எதிர்த்தால்தான் வருவேன் என்பது விதண்டாவாதம்
        4.ஒரு மசோதாவுக்கு முப்பதாயிரம் பேரு கூடி திரண்டாத்தான் அரசு மசிகிறது என்றால் நீங்கள் சொல்லும் தனியார் மயம் தாராளமயம் தரகு வர்க்கத்தின் மொள்ளமாறித்தனத்தை மாற்ற கோரும் அடிப்படை மாற்றம் என்பது ஒரு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் அல்லாமல் கிடைக்காது
        5.மசோதாவுக்கு எதிரான போராட்டத்தை ஒன்று அரசின் ஆளும் வர்க்கம் எதிர்கிறான் இன்னொனு நீங்கள் எதிர்க்கிறீர்கள்
        6.நடுத்தர வர்க்கம் இல்லாமல் புரட்சி நடக்காது என முன்பொரு கட்டுரையில் எழுதிட்டு இந்த போராட்டம் என்பது நடுத்த்ரவர்க்கத்தின் பொழுது போக்குதான் என வினவால் மட்டுமே எழுத முடியும்

        இதுக்கெல்லாம் பதில் சொல்லுங்க மிஸ்டர் பு.கா உண்மை

        • நம்ம தியாகுவுக்கு எப்படி சொன்னாலும் மண்டையில் ஏறவே மாட்டேங்குது.

          பக்த்துல இருந்தா நங்குனு மண்டையில ஒரு கொட்டு கொட்டி புரிய வைக்கலாம் ஆனால் அதுக்காக திருப்பூருக்கெல்லாம் போக முடியாது என்பதால் புரட்சியாளர் தியாகு அவர்களிடம் மீண்டும் முயற்சிப்போம்.

          ஊழலை எதிர்க்கிறேன் ஊழலை எதிர்க்கிறேன்னு நீங்களும் உங்களைப்போன்ற நடுத்தர வர்க்க தேசபக்தர்களும் பொதுவாக பேசுறதே முதல்ல அயோக்கியத்தனம்னு நான் சொல்றேன். ஏன்னா இன்னைக்கு ஊழலின் தன்மை,பரிமாணம் அனைத்தும் மாறியிருக்கிறது.

          ஆ.ராசா போன்ற ஓட்டுப்பொறுக்கிகள் செய்வதை மட்டுமே நடுத்தர வர்க்கம் ஊழல் என்று கூப்பாடு போடுகிறது. சொல்லப்போனால் ஆ.ராசா போன்றவர்கள் வெறும் புரோக்கர்களே, அதாவது நாம் ஒரு வீடு பார்த்தால் புரோக்கருக்கு கமிஷன் கொடுக்கிறோம் அல்லவா அது போன்ற கமிஷன் பெறுபவர்களாகவே இத்தகைய ஓட்டுப்பொறுக்கிகள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களும் ஊழல் செய்கிறார்கள் ஆனால் மொத்த ஊழலின் சதவீதத்தில் அது குறை.

          ஆக, டாட்டா, அம்பானி கும்பல் அடித்த கொள்ளை தான் மிகப்பெரிய கொள்ளை அதில் கமிஷன் வாங்கியவர்கள் தான் ராசா, ராடியா போன்ற தரகர்கள். மேலும் நீங்கள் பல ஊழல்களை பட்டியலிட்டிருக்கிறீர்கள் எனினும் இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல் அலைக்கற்றை ஊழல் தான் அதில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் யார் ? கார்ப்பரேட் முதலாளிகள் தானே எனில் அவர்களைப் பற்றி ஏன் பேசுவதில்லை என்பது தான் இங்கு உங்களிடம் கேட்கப்படும் கேள்வி.

      • //அம்பானி அதுக்கு பேர் என்னங்க அறிவாளி தியாகு ? அதை ஏன் இந்த நடுத்தர வர்க்கமும் அன்னாவும் கேள்வி கேட்கவில்லை அதற்கெதிராக போராடவில்லை என்பது தான் இங்கு கேட்கப்படுகிற கேள்வி. இப்பயாவது மண்டையில் ஏறுச்சா //

        அம்பானியை எதித்து போராடினால் மட்டும்தான் வருவீங்களா

        சபாசு

        1.இந்த அரசையும் அரசமைப்பையும் இயக்குவது முதலாளிகளே
        முதலாளிகளை எதிர்க்கும் போராட்டமும் அரசை எதிர்க்கும் போராட்டமும் ஒன்றுதான்
        3.முதலாளிகளை எதிர்த்தால்தான் வருவேன் என்பது விதண்டாவாதம்
        4.ஒரு மசோதாவுக்கு முப்பதாயிரம் பேரு கூடி திரண்டாத்தான் அரசு மசிகிறது என்றால் நீங்கள் சொல்லும் தனியார் மயம் தாராளமயம் தரகு வர்க்கத்தின் மொள்ளமாறித்தனத்தை மாற்ற கோரும் அடிப்படை மாற்றம் என்பது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் அல்லாமல் கிடைக்காது
        5.மசோதாவுக்கு எதிரான போராட்டத்தை ஒன்று அரசின் ஆளும் வர்க்கம் எதிர்கிறான் இன்னொனு நீங்கள் எதிர்க்கிறீர்கள்
        6.நடுத்தர வர்க்கம் இல்லாமல் புரட்சி நடக்காது என முன்பொரு கட்டுரையில் எழுதிட்டு இந்த போராட்டம் என்பது நடுத்த்ரவர்க்கத்தின் பொழுது போக்குதான் என வினவால் மட்டுமே எழுத முடியும்

        இதுக்கெல்லாம் பதில் சொல்லுங்க மிஸ்டர் பு.கா உண்மை

  84. //இந்த பத்தியை 594 வாட்டி படிச்ச எனக்கு பிக்பாக்கெட் அடிச்சா எப்படி திருட்டோ அதே மாதிரி அம்பானி செஞ்சாலும் திருட்டு அப்படின்னுதான் புரிஞ்சுது//

    நன்றி டாட்டாவும் , அம்பானியும் ராசாவுக்கு காசு கொடுப்பதை எதிர்க்க மக்கள் கூடினா அவனுகல்லாம் கிரிக்கெட் இல்லாங்காட்டியும் மெழுத்திரிய கைல புடிச்சுட்டு வந்துட்டானுகன்னு ஏம்மா கேவலமா பேசிட்டிருக்க

    நேரா துப்பாக்கியை தூக்கிட்டு வந்தாத்தான் ஒத்துக்கிவியா

    • முதலில் லூசு மாதிரி உளறுவதை நிறுத்திவிட்டு சொல்ல விரும்புவதை தெளிவான வார்த்தைகளில் சொல்லுங்கள் மிஸ்டர் மிடிள்கிளாஸ் தியாகு.

      டாட்டாவுக்கும், அம்பானிக்கும் எதிராக, துப்பாக்கி வைத்துக்கொண்டு அல்ல உங்களுக்கு விருப்பமான மெழுகுவர்த்தி என்கிற ஆயுதத்தை வைத்துக்கொண்டு கூட யார், எங்கே போராடினார்கள் ?

  85. இந்த கொள்கை தப்புங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும் வினவு… இப்ப இருக்கற நிலைமைல இந்த கட்டமைப்புக்கு எதிரா பேச ஒருத்தனும் வர மாட்டாங்க .. “இறையாண்மை” பிரச்ச்னைங்க.. குஜராத் தை பற்றியும் வளர்ச்சியை பற்றியும் பேசையவர்களுக்கு அது என்னவென்றே புஇயவில்லை..

    அந்த அன்பர்களுக்கு இது :

    வளர்ச்சி என்பது அந்த அரசாங்க வளர்ச்சியையோ அல்லது average income ஐ வைத்தோ முடிவு செய்தல் பைத்தியகாரத்தனம்..

    இதை பாருங்கள்

    நபர் வருட வருமானம்

    1 50000
    2 25000
    3 100000000

    average 33358333.33333333

    நாடு முன்னேறிவிட்டதாக கணக்கு காட்டப்படும்… நாமும் நம்புவோம் .. இதைத்தான் வினவு குழு தவறு என்கிறது ….

    உங்களுக்கெல்லாம் புரியும் படி சொன்னால்

    Rich get Richer poor get poorer

    —– பேச விருப்பம் இருப்பின் koothaadi@twitter.com 🙂

  86. //டாட்டாவுக்கும், அம்பானிக்கும் எதிராக, துப்பாக்கி வைத்துக்கொண்டு அல்ல உங்களுக்கு விருப்பமான மெழுகுவர்த்தி என்கிற ஆயுதத்தை வைத்துக்கொண்டு கூட யார், எங்கே போராடினார்கள் ?//

    மிஸ்டர் உண்மை என்கிற லூசு

    டாட்டாவுக்குக் அம்பானிக்கும் எதிரா போராடினா மட்டும்தான் போராட்டமா

    நடந்த போராட்டத்தை பேசுய்யான்னா இன்னொன்ன பேசிட்டு

    • தியாகு அண்ணே சொந்த வாழ்க்கையில் பிழைப்புவாதிகளாக இருக்கும், சமூகப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் ஆமை போல தலையை தன் வீட்டு கதவிற்குள்ளே இழுத்துக்கொள்ளும் நடுத்தர வர்க்கம் நடத்திய இந்த பிரேக் டைம் போராட்டம் என்பது எந்த ஆபத்திற்கும் தலை கொடுக்காமல் பத்திரமாக வீட்டுக்குப்போய் சேருவதற்கு உத்திரவாதம் கொடுக்கும் அவர்களுக்கு வசதியான போலித்தனமான போராட்டமாகும்.

      வருசத்துக்கு நாலு மெழுகுவர்த்தியை கொழுத்திக்கிட்டு எங்கயாவது ஒரு இடத்தில நின்னுகிட்டு அந்தபக்கமும் இந்த பக்கமும் சாஞ்சி சாஞ்சி டான்ஸாடுற இவனுங்க எல்லாம் ஊழலை எதிர்க்கும் தேச பக்தர்களாம் அந்த தேசபக்தர்களுக்கு இந்த தேசபக்தர் வக்காலத்து வாங்க வந்துட்டாரு. தட்டிக்கேட்க ஆளில்லாமல் இந்த நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளை பத்தி பேசுய்யான்னா இன்னொன்ன பேசிட்டு

      • தோழர் உண்மை,

        தியாகு என்ற இந்த நபர் முக்தி நிலை அடைந்து நாட்கள்பலவாயிற்று. அத்தகைய ஞானியிடம் நீங்கள் புரிய வைப்பது கற்பாறையுடன் பேசுவதற்கு ஒப்பானது. உங்களுக்கு நேரமிருக்கும் பட்சத்தில் இங்கே பொதுவில் வந்து சந்தேகம், கேள்வி கேட்கும் வாசகர்களோடு உரையாடலாம். என்ன இருந்தாலும் மனிதர்களுடன்தானே நாம் உரையாட முடியும். ஞானியை விட்டுவிடுங்கள், நேரத்தை பயனுள்ளமுறையில் செலவிடுங்கள்

        • நீங்கள் சொல்வது சரி தான் தோழர் ஆனால் சில நேரங்களில் குறைப்புச்சத்தம் அதிகமாகும் போது கல்லை எடுத்து விட வேண்டியிருக்கிறது.

          மேலும், இந்த நபருக்கு இருப்பது தேசபக்தியுமில்லை ஒன்றுமில்லை இது ஒரு மனநோய்-வினவை எதிர்க்கும் மனநோய். ஒருவேளை நீங்கள் அன்னா ஹசாரேவை ஆதரித்திருந்தால் இந்த லூஸு அவரை எதிர்த்துக் கூட எழுதியிருக்கும்- இது அப்படிப்பட்ட ஒரு தீர்க்கமான மன்நோய்.

      • தோழர் உண்மை, நீங்கள் சொல்லும் நடுத்தர வர்க்க போலி அறிவுஜீவிகளின் ஒரு சீப்பான , கசங்கிப்போன டிஸ்யூ பேப்பரில் எடுத்த ஜெராக்ஸ் காப்பிதான் தியாகு என்பதை புரிந்து கொண்டு ஆக வேண்டிய காரியத்தை பாருங்கள். மீறி இதையெல்லாம் சொல்லித்தான் ஆக வேண்டும் என்றால் எதாவது ஒரு செருப்பை எடுத்து மேசை மீது வைத்து அதனுடன் பேசவும். செருப்புக்கு கூட ரோசம் உண்டு, கடித்து வைக்கும்… தியாகுவைப் பற்றி அப்படி ஒன்றும் என்னால் திட்டமாக சொல்லமுடியாத நிலையில் இருக்கிறேன்

      • //சொந்த வாழ்க்கையில் பிழைப்புவாதிகளாக இருக்கும், சமூகப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் ஆமை போல தலையை தன் வீட்டு கதவிற்குள்ளே இழுத்துக்கொள்ளும் நடுத்தர வர்க்கம் நடத்திய இந்த பிரேக் டைம் போராட்டம் என்பது எந்த ஆபத்திற்கும் தலை கொடுக்காமல் பத்திரமாக வீட்டுக்குப்போய் சேருவதற்கு உத்திரவாதம் கொடுக்கும் அவர்களுக்கு வசதியான போலித்தனமான போராட்டமாகும்.
        வருசத்துக்கு நாலு மெழுகுவர்த்தியை கொழுத்திக்கிட்டு எங்கயாவது ஒரு இடத்தில நின்னுகிட்டு அந்தபக்கமும் இந்த பக்கமும் சாஞ்சி சாஞ்சி டான்ஸாடுற இவனுங்க எல்லாம் ஊழலை எதிர்க்கும் தேச பக்தர்களாம் அந்த தேசபக்தர்களுக்கு இந்த தேசபக்தர் வக்காலத்து வாங்க வந்துட்டாரு. தட்டிக்கேட்க ஆளில்லாமல் இந்த நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளை பத்தி பேசுய்யான்னா இன்னொன்ன பேசிட்டு
        //

        போராட்டம் தவறா ,வழிமுறை தவறா , எதிரி தவறா ,காரணம் தவறா என்கிற பயங்கர குழப்பம் உங்கள் அனைவரிடமும் நிலவுகிறது முதலில் அதை தீர்த்துவிட்டு வாருங்கள் ஏனெனில் இப்படியே பேசிட்டு இருந்தால் உங்களை யாரும் சீண்ட மாட்டார்கள் இதை ஞானிகளான வினவு நன்கு உணருவார்கள் என நம்புகிறேன்

  87. //
    1. பங்குச் சந்தை ஊழல் 1,000 கோடி
    2. சர்க்கரை ஊழல் 650 கோடி
    3. போபர்ஸ் ஊழல் 65 கோடி
    4. ஹவாலா ஊழல் 65 கோடி
    5. எம்.பி., டிரேடிங் 32 கோடி
    6. உர ஊழல் 133 கோடி
    7. மருத்துவ உபகரண ஊழல் 5,000 கோடி
    8. இந்தியன் வங்கி 1,336 கோடி
    9. மாட்டுத் தீவன ஊழல் (பீகார்) 1,000 கோடி
    10. நில ஊழல் (பீகார்) 400 கோடி
    11. வேட்டி – சேலை ஊழல் (தமிழகம்) 11 கோடி
    12. நிலக்கரி ஊழல் (தமிழகம்) 750 கோடி//

    இந்த ஊழல் எல்லாமே தனியார்மயத்தினால் வந்ததா

    அப்போ கலைக்டர் ஆபிசில் லஞ்சம் வாங்கிறானே அதெல்லாம் அரசுடையாக்கப்பட்ட எல் ஐசி தனக்கு தேவையானவனுக்கு வாரி கொடுத்து ஊழல் செய்தானே அதுக்கு என்ன சொல்ல

  88. Brothers of Vinavu (Mannar sami, Unmai, aasuryan, etc) – I am puzzled to see the poor converation you had with Thiagu. Both of you moved away from topic !!….this is not place to scold each other. I expect more maturity from you folks….

    There are two broad ways for any fight – Gandhi way or Naksal way. In my opinion, both are required for any fight like corruption. Even against British, there is a group to fight against them with ARMS (Nethaji, Tilak, etc)…but our history talks more only about Gandhi. On other hand, Gandhi proved that his way can yield permanent results; Both are required.

    I read many articles in Vinavu about US influence on India, Cricket, Usage of new seeds, Nuclear Treaty, etc. I totally agree with Vinavu – Unmai kasakathan seium…but its true.

    vinavu -> may be its true that Govt. policies are real culprits. Even in ancient India (period of Kings), always there is a group named “Vyabarigal” – and they used to make money in many ways. We cannot stop them in any ERA, like ‘consumption of alchocol’ since ancient periods. Let us park that thought that we have fight against ‘Corporates’ for NOW (few years). Without them, there won’t be so many business developments in country, and hence employment opportunities. Instead, there could have been more ‘naksal’ group in every state due to unemployment.

    We cannot jump into dramatic changes in few years. Let us move step by step. Anna Hazare and Co. attempt in such small step – don’t worry about results. Be happy that there is a start…and pray many more to come in our way. I totally agree with on the HYPE Created by Media…those Idiots used to do that !!

    You didnot answer what can we do now? I suspect ur way is to fight with ‘arms’ – make a note there are many such group exists/existed in world for decades without getting any result. I repeat, terrorism (fight with arms) to some extent is required to eliminate initial ‘blocks’ – but that cannot yield permanent solution.

    Even though all these aspects discussed in many articles I am are worried a lot about this one – “Biotechnology Regulatory Authority of India (BRAI) bill in the upcoming Parliament session”; If the bill is passed as is, the public will be unable to stop genetic contamination of rice or 56 other crops whose GM versions are in the pipeline (following Bt brinjal); WE typical middle class are not worried about many aspects in country simply because we have our earnings, good food, entertainment; Now our FOOD is at stake…if we consume these foods for years, we will be spending MORE HUGE amount for our medicines (again making US Pharma owners rich) !!

    Vinavu leads : there are many middle class folks like me, eagerly ready to do something (except fight with arms) – but we lack good leaders. if you can through some ideas which we can ‘practically’ adapt, it would be nice.

  89. ஒரு பெரிய தலைவர் உண்ணாவிரதம் இருக்காரு. உடனே எருமை தோலு மண்ணுமோகன் சிங் பதறிப் போய், அமைச்சர் கூட்டம் கூட்டி, பரபரப்பா விவாதிக்கிறாராம். பிரச்சினை பெர்சா பொய்டும்னு சோனியா ஆத்தா பயந்து போய் ஓகே சொல்லிடுதாம்.
    இதுக்கு ஃபிக்கி தலைவரு (சிறீலன்காவுல எவ்ளோ இன்வெச்ட் பன்னா எவ்ளோ லாபம் வரும், அதுக்கு எவ்ளோ பேரை கொன்னு போட்டாலும் பரவாலன்னு கொன்ன முத்லாளி கார்ப்பரேட் சங்கம் தலைவரு) , பெரிய கம்பனி முத்லாளிங்க கூட ஆதரவு தர்ராங்களாம் .

    டேய் எங்க்ளை எல்லாம் கேணப் பயலுகன்னே முடிவு பண்ணீட்டாங்க்ளா?

    காங்கிரசும் முதலாளிங்களும் சேர்ந்து நடத்துற பெரிய டிராமா இது ?

    இதப் போய் நம்பி காங்கிரசு நல்லவங்க ஆயிட்டாங்கன்னு நினச்சோமுன்னா , நம்ம்ளை மாதிரி கேணப்பயலுங்க யாரும் கிடயாது ?

    • எல்லாரும் 4 நாள் டி வி பார்த்துவிட்டு, அன்னாவின் உண்ணாவிரதம் வெற்றியடைந்ததன் மூலம் 75% ஊழல் குறைந்துவிட்டது போலவும், ஜன் லோக் பால் மசோதா வந்தவுடன் மீத 25 சதவீத ஊழல் நீங்க வழிபிறக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று மதியமே உள்ளடி வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. ஒரு குழந்தைக்கு கல்வி கிடைக்கவில்லை என்றால் லோக்பால் என்ன செய்துவிடும்? ஒரு வறியவருக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டால் லோக்பால் என்ன செய்துவிடும் என கபில் சிபல் பத்திரிக்கையாளரிடம் கூற, உடனே அன்னா, கிரண்பேடி, அரவிந்த கஜூர்வால் ஆகிய அனைவரும், கபில் சிபல் மசோதா தயாரிப்பு கமிட்டியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றுள்ளார். என்னுடைய கருத்து கபில்சிபல், ப.சிதம்பரம் இருவரும் கமிட்டியில் இருக்கும்வரை அது மக்கள், அன்னா ஆகியோர் எதிர் பார்க்கிற வகையிலான மசோதாவாக அமையாது என்பதுதான் ? வேடிக்கைகளை தொடர்ந்து பார்ப்போம்,,,

  90. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுடன் தோன்றிய முதலாளித்துவ ஜனநாயகம் அதன் உண்மையான உள்நோக்கமான – முதலாளி வர்க்க நலனை மட்டுமே பேணிக்காக்கும் தங்கு தடையில்லாத வாணிபச் சுதந்திரத்தைப் பேணிக் காப்பதாகவே இன்று சுருங்கிப் போயுள்ளது. இம்முதலாளித்துவ சமூக அமைப்பின் அடிப்படைகக் கோட்பாடுகளில் மிகப்பெரிய சறுக்கல்கள் தோன்றும் போது அவற்றிக்கெதிராக கிளர்ச்சிகள் சமூகத்தில் வெடித்துக் கிளம்பும் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டே திரு. அன்னா ஹசாரே அவர்களால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தற்காலங்களில் அரங்கேறும் மாபெரும் ஊழல்களுக்கெதிரான சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாகும்.

    இவ்வகையிலான ஒரு மாபெரும் கிளர்ச்சியானது 1970 களில் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் (ஜே.பி) அவர்களால் தொடங்கப்பட்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்திய அரசியலில் தோற்றுவித்தது. இக்கிளர்ச்சியின் வாயிலாக இன்று திரு. அன்னா ஹசாரே அவர்களை திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் ஒப்பிடும் போக்கு தோன்றியுள்ளதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

    ஊழலுக்கெதிரான லோக்பால் – ஒரு திடமான சட்டவரைவு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் திரு. அன்னா ஹசாரே அவர்களால் துவங்கப்பட்ட இயக்கம், தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் பொதுவாக இந்தியர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய உலகக்கோப்பை வெற்றி போன்ற சம்பவங்களுக்கு மத்தியிலும் இந்திய மக்களனைவரையும், குறிப்பாக இந்திய நடுத்தர மக்களனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு மாபெரும் நாடு தழுவிய இயக்கமாக இவ்வியக்கம் உருப்பெற்றது. எங்கே ஜே.பி இயக்கத்தின் 2ஆம் பகுதி தொடங்கிவிட்டதோ என்ற ரீதியில் ஆட்சியாளர்களுக்கு ஒரு மிரட்சியை ஏற்படுத்தியது.

    வரும் குளிர்காலக் கூட்டத்தொடருக்குள் ஊழலுக்கெதிரான திடமான லோக்பால் சட்டவரைவு கொண்டு வரப்படும் நோக்கில் திரு. அன்னா ஹசாரே உட்பட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் திரு.மன்மோகன் சிங்கால் அறிவிக்கப்பட்டு திரு.அன்னா ஹசாரே அவர்களால் தொடங்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜனநாயகப்போராட்டத்திற்கான ஒரு மிகப்பெரிய வெற்றியாகவே சமூக ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. இக்கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் இப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்ற திரு. அன்னா ஹசாரே அவர்களின் அறிவிப்பு சமூக ஜனநாயக சக்திகளுக்கு ஒரு உத்வேகத்தையும் வழங்கியுள்ளது.

    உண்மையான சமூக ஜனநாயகத்தை இன்றைய சமூக அமைப்பை முழுமையாக மாற்றியமைப்பதின் மூலமே நிறுவமுடியும் என்ற மார்க்சிய பொதுவுடமைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டு செயல்படும் சமூக ஜனநாயகவாதிகள் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பவர்களாக திரு. அன்னா ஹசாரே அவர்களின் கரங்களை வலுப்படுத்த முழுவீச்சில் முன்வர வேண்டும். அதே சமயத்தில் சமூக மாற்றத்தை இந்திய மண்ணில் நிலைநாட்ட இவ்வகையிலானப் போராட்டங்கள் தங்கு தடையில்லாமல் தொடர வேண்டும். சமூக மாற்றத்தை நிலை நிறுத்துவதற்கு ஒரு சரியான கருவியான இவ்வியக்கத்தில் முழுவீச்சுடன் பங்கு பெற வேண்டும். தொடர்ந்து செயல்பட வேண்டும். கோடிக்கால் பூதமென கிளர்ந்தெழ வேண்டும்.

    • //இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய உலகக்கோப்பை வெற்றி போன்ற சம்பவங்களுக்கு மத்தியிலும் இந்திய மக்களனைவரையும், குறிப்பாக இந்திய நடுத்தர மக்களனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.//

      ஊடகங்களால் திரும்பிப் பார்க்க வைக்கப்பட்டது. ஜெசிகா லால் கொலைக்கு மெழுகுவத்தி போராட்டம் நடத்தியது போல.

    • ஆக ஜென்யூன் பார்ட்டியிலிருந்து (SUCI) வெளியேறிய இந்த மிடிள்கிளாஸ் குரூப்பும் மெழுகுவர்த்தி போராட்டத்தை ஆதரிக்கிறது என்று புரிகிறது.

      சமீபத்தில் நடந்த கிரிக்கெட் இந்திய மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது என்கிறார் ஆனால் எந்த அடிப்படையில் இணைத்தது என்பதை மட்டும் கூறவில்லை.

      தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயக விரோதம் என்று கூறும் இந்த போலி ஜனநாயக இந்தியாவை தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிறார் இவர். டாட்டா- அம்பானி போன்ற தரகு முதலாளிகள் எல்லாம் தேசப்பற்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பும் கொண்ட தேசிய முதலாளிகள் என்பது இவர் கூறாமல் விட்ட விசயம்.

      இங்கு நடக்கும் பகாசுர ஊழல்கள் எதிலிருந்தும் முதலாளி வர்க்கத்தை பிரித்துப் பார்க்க முடியாது. ஏனெனில், இன்று நடக்கும் ஊழல்கள் அனைத்தும் சட்டப்படியான கார்ப்பரேட் பகற்கொள்ளைகளாகவே இருக்கின்றன. ஊழலில் 90 சதவீதத்தை சுருட்டிக்கொள்வது முதலாளிகளே, உதாரணத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் குறிப்பிட்ட அளவு மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ரூ 400 கோடிக்கு வாங்கிய தரகு முதலாளி டாட்டா அதை ஏழே நாட்களில் டோகோமா என்கிற ஜப்பான் கம்பெனிக்கு 12,000 கோடிகளுக்கு விற்று கொள்ளையடித்துள்ளான். இதற்கு பெயர் என்ன ? இது தான் ஊழல், சட்டப்படி நடக்கும் ஊழல். இதில் ஆ.ரா போன்ற ’கமிஷன்’ மட்டுமே வாங்கிய புரோக்கர்கள் தான் தற்போது ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவராலும் போகஸ் செய்யப்படுகிறார்கள் உண்மையான பிளேடு பக்கிரி, மொள்ளமாரி, பகற்கொள்ளைகாரர்களான டாட்டா, அம்பானி போன்ற திருடர்களை இதிலிருந்து விலக்கி வைக்கிறார்கள். அதை தான் அன்னா ஹசாரேவும் செய்கிறார் அதில் புல்லரித்துப்போன இந்த மிடிள் கிளாஸ் இயக்கமும் செய்கிறது.

  91. இங்கே நியாயம் பேசுற இத்தன பேருல, எத்தன பேரு போராட்டம் பண்ணி நாட்ட மாத்த முயற்சி செஞ்சீங்க? மொதல உங்கள மத்த ஏதாவது முயற்சி பண்ணுணீங்களா? பேசுறதுக்கு முன்னாடி ஏதாவது பண்ணிட்டு பேசுங்கப்பா, சும்மா லேப்டாப் முன்னாடி ஒக்காந்துகிட்டு கமெண்ட் போடுறது…. (இதுல நானும் அடக்கம்)

  92. vinavu is a selfish blog. they think themselves as the only good and intelligent people. i am not surprised that you dont trust in non violent methods. you will poke fun at a man of 72 years of age who had the courage and concern that youth of this country does not. if you want everyone in this country to carry weapons and fight against govt, ur drean will not come true forever.

    • சதிஷ்,
      எளிமையான கேள்விகள் தான் திரும்ப திரும்ப கேட்டாகிவிட்டது
      1. ஐரோம் ஷர்மிள என்று ஒரு 10 வருடமாக உண்ணவிரதம் இருக்கீறார் அவரை ஏன் மீடியா கண்டுகொள்ள‌வில்லை?
      2. தமிழக‌ மீனவர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டார்களே அவர்களை ஏன் மீடியா கண்டுகொள்ளவில்லை.
      3. லோக் பால் மசோத வேண்டும் என்றால் அதற்கு முன் இருக்க்க்கும் இபிகோ சட்டம் என்ன ஊழல் செய்ய சொல்கிறாதா?

      • //”அன்னா” அவர்களின் போராட்டத்தின் பொது அதற்க ன எற்பாடுகள் செய்யப்பட்டது.உண்ணாவிரதப்பந்தல் கூடாரம் அகியவற்றுக்காக 10லடசம் செலவு தொலைபெசிக்கட்டனம் 9லட்சம். பயனச்செலவு 4.5 லட்சம்.அச்சுக்கூலி8லட்சம்.ஊண்வு வகையில் ஒருலட்சம். இதற்காக ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.கிட்டத்தட்ட 85லட்சம் இதுவரை வசூலாகியுள்ளது.
        உலக பணக்காரர்களில் ஒருவரான அலுமினியக் கம்பேனி முதலாளி ஜிண்டால் 25லட்சம் கொடுத்துள்ளார்மற்றும் ஈச்சர் கம்பெனி, சுரெந்திரபால், அருன் துக்கல்,,ஏஸ்.டி.எஃப்.சி என்று நங்கோடை வந்தவண்ணமிருக்கிறது. அறக்கட்டளை முறையான ரசீதுகளை நங்கொடையளர்களுக்கு அளித்துள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது. .சர்யன கணக்கு உள்ளது என்றும் செலவு போக சுமார் 50 லட்சம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது//

        இது பல வருடங்கள் தீக்கதிர் நாளிதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய அனுபவம் உள்ள தோழர் காஸ்யபன் தனது வலைதளத்தில் அன்னா உண்ணாவிரதம் பற்றிய விமர்சன கட்டுரையில் தெரிவித்திருப்பது. இதையே டைம்ஸ் ஆப் இந்தியா பத்தரிகையும் உறுதி செய்கிறது.

      • இந்த அன்னா ஹசரே அவருடைய லோக் பால் பில், அவருக்கு கொடுக்கபடும் மீடியா வெளிச்சம், அவர் பினால் அணி திரளும் மக்கள் என அனைவரைவடிமும் கேளிவிகள் கேட்கிறது கட்டுரை யாரையும் தனி பட்ட முறையில் தக்குவது நொக்கமல்ல என்பதை புரிந்து கொண்டமைக்கு நன்றி..

        • law does not promote corruption but the loopholes do. even if i agree with you what is wrong in asking to alter the law or to introduce a new one to check corruption. i mean to say you cannot do so by initiating violence and revenge against government. this article portrays that gentleman in a wrong way that readers like me condemn. vinavu is consistenly telling people/readers to follow its principles. it will be better if the author quits looking everyone in a suspicious manner.

        • சதிஷ்,
          சட்டதின் ஓட்டைகள் ஊழலை ஆதரிப்பதில்லை இங்கு அமைப்பே(System) ஊழலை ஆதரிக்கிறது. இந்த அமைப்புக்குள் எத்த்னை வீரியமிகு சட்டம் போட்டாலும் ஊழல் ஒழிந்துவிடாது.. அத்னால் வினவு தளம் இந்த அமைப்பை மாற்றும் போராட்டதிற்கு அனைவரையும் அழைக்கிறது.

          அமைப்புக்குள் இருந்த படி சில சட்ட திருத்தங்கள் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்ற போலி பிரச்சரத்தை எதிர்கிறது. அன்ன அசரே அத்த்கைய பிரச்சாரத்தை தான் மேற்கொல்கிறார். லோக்பால் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்கிறார். நாங்களோ சட்டம் ஊழலை ஒழிக்காது என்கிறோம்..

  93. //தாமிரபரணி தண்ணியை கொக்கோ கோலாவுக்கு விற்பது ஊழலா, இல்லை அந்த விற்பனையில் ஒரு கலெக்டர் சில இலட்சங்களை கமிஷனாக பெற்றார் என்பது ஊழலா?//

    அருமையான உவமை

  94. நூறு சதவிஹிதம் பரிபூரணமான தலைவர்கள் உலக வரலாற்றில் எங்கும் இருக்க முடியாது என்று தான் நினைக்கிறேன். அன்னா ஹசாரேயை ஓகோ என்று புகழ்ந்து தள்ளுகிறவர்கள் ஒரு பக்கம் இருக்க, அவருக்கு உள்நோக்கங்கள் கற்பித்து சந்தேகப் பார்வையோடு விமர்சிப்பவர்கள் இன்னொரு புறம்..எல்லோருமே அவரவர் தம் தம் சித்தாந்த அளவுகோல்களைக் கையில் எடுத்துக்கொண்டு அவற்றுக்குள் இந்தத் தலைவர்கள் பொருந்துகிறார்களா என்று பார்ப்பதால் தான் பிரச்சனையே. காந்திஜியும் கூட இத்தகைய கடுமையான விமர்சனங்களிலிருந்து தப்பிக்கவில்லை.’ காந்திஜி ஏன் ஷே குவேராவாக இல்லை’, அல்லது ‘ஷே குவேரா ஏன் காந்தியாக இல்லை’-என்று கேட்பது அசட்டுத்தனமாகாதா? ஏனென்றால் காந்தியின் ஜீன் வேறு: ஷே குவேராவின் ஜீன் வேறு

    • ஆமாம் , காந்தியின் ஜீன் அவரை பிர்லாவுக்கு நெருக்கமாக்கிற்று.
      சேயின் ஜீன் அவரை ஒடுக்கப்பட்ட மக்க்ளிடம் கொண்டு போய்ச் சேர்த்தது.
      காந்தி எளிமை வேடம் பூண்டு எசமானத்துவத்துடன் நின்றார்.
      சே ஒரு வேடமும் பூணாமல மக்கள் தரப்பிலேயே நின்றார்.

      ஹசாரேயின் நோக்கங்கள் பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் எந்தப் போராட்டமும் எசமானர்களினதும் பெரும் ஊடகங்களதும் கவனிப்பையும் கருணையையும் பெறும் போது அதைப் பற்றி யோசிக்கத் தான் வேண்டும்.
      கட்டுரையின் சாரமும் அதுவே.

  95. வாங்க இராம் காமேஷ்வரன், உங்களைத்தான் எதிர்பாத்திருந்தேன்..
    இன்னிக்கு இப்படி ஒரு செய்தி கேள்விப்பட்டேன்

    @@@@@@@@
    Anna Hazare has been indicted as man involved in corruption by the Justice P.B.Sawant commission of inquiry constituted way back in 2003. The report was submitted in 2005 (Not now!). The pages indicting Hazare is compiled and published in the web site
    http://groups.google.com/group/alt.politics/browse_thread/thread/c3c79ff02635f005

    The full report of the Commission of Inquiry by Justice P.B.Sawant is available in the site
    http://www.scribd.com/doc/32699610/Report-of-JUSTICE-P-B-SAWANT-COMMISSION-OF-INQUIRY
    @@@@@@@@
    இது என்ன விவரம்னு கொஞ்சம் பாத்து சொல்ல முடியுமா?

  96. Vinavirku ore vendukolllll……

    ungal katurai arumai……
    india valam surandapatuvatharkum,ulalukum etiraka porada nangal ready…ninkal thalaimai erka thayara ….veraivilll venue n date sollaungal….

    yours
    popcorn and pizzza boys

  97. போராட கிளர்ந்து எழுந்த மக்களை குறை சொல்லி, போராட்டத்தை மழுங்கடிக்க முயற்சி செய்யும் வினவு தளத்துக்கு கண்டனங்கள். ஊழல் அரசியல்வதிகளிடம் நீங்கள் விலைபோய்விட்டது அப்பட்டமாக தெரிகிறது! ஒரு நாள் புரட்சி வெடிக்கும், அப்போது, உங்களைப் போல ஊழலுக்கு கூஜா தூக்கும் அல்லக்கைகள், ‘போலி ஊழல் எதிர்ப்பாளர்கள்’ அடித்து விரட்டப்படுவீர்கள்!

    இந்த கட்டுரையின் ஹைலைட்:
    “பேருந்தில் ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது திருட்டு; அதே அம்பானி அரசாங்கத்திடமிருந்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தால் அது தொழில் திறமை; நல்ல வேலை செய்பவனோட பணத்தை புடுங்கி நல்லா வேலை செய்யாதவங்கிட்ட கொடுத்தா அது கம்யூனிசம்.”

    • சோக்கா சொன்னீங்க! வீரமணி, கலைஞர், செயா போன்றோறிடம் வினவு அஞ்சோ, பத்தோ வாங்கியது போல தெரியுது! அவங்க எல்லாம் எப்படி அன்னாவ பயந்து போய் திட்ராங்களோ, அதேபோலதான் வினவும்! ஊழலுக்கு எதிரா ஒரு மண்ணும் செய்யல, ஆனா ஒருத்தர் தைரியமா நியாயமா போராட வந்தா, அவர் துப்பாக்கிய எடுத்து போராடலை, அவர் தொப்பி போட்ட்ருக்கார் அப்படின்னு நொண்டி சாக்கு சொல்லவேண்டியது! அடப்போய்யா, பச்சோந்தி!

  98. //பளிச்சென்று ஒரு எடுத்துக்காட்டு கூறவேண்டுமென்றால் தாமிரபரணி தண்ணியை கொக்கோ கோலாவுக்கு விற்பது ஊழலா, இல்லை அந்த விற்பனையில் ஒரு கலெக்டர் சில இலட்சங்களை கமிஷனாக பெற்றார் என்பது ஊழலா? //

    அருமையான எடுத்துகாட்டு.

  99. இந்த மண்ணில் நீ விரும்பும் மாற்றம் வேண்டும் என்றால், ஒரே வழி, ஆட்சி/அதிகாரம் உன்கையில் இருக்க வேண்டும். அதற்க்கு என்ன வழி என்று பாருங்கள் அதைவிட்டு விட்டு நாம் நினைக்கும் மாற்றம் வேண்டும் என்றால் அது நமது கனவிலும் நடக்காதது.

    நாம் மாற்றத்தை குழந்தைகளிடம் ஆரம்பிக்க வேண்டும். அதற்க்கு அவர்களுக்கு கொடுக்க படும் கல்வியுள் இருந்து மாற்றவேண்டும் இல்லையேல் எந்த மாற்றமும் நிலையானது ஆக இருக்க முடியாது. இதை செய்ய ஆட்சி/அதிகாரம் உன்கையில் இருக்க வேண்டும்.

    வினவு, அதை எப்படி அடைவது என்று சிந்தியுங்கள். இல்லையல் மாற்றத்தை பார்காமல் நானும் நிங்களும் மண்ணாவது உறுதி.

    • அந்த மாற்றத்தை எப்படி அடைவது என்பதைப் பற்றி வினவின் பெரும்பாலான கட்டுரைகளில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறதே, அதை உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லையா! நெல்லிக்கனி அதியமான் அதை அபாயகரமானது என அலறுவார். போர் பறையடிக்கும் அசுரனைக் கேட்டால் அதை அதி உன்னதமானது என்பார்.

  100. இந்த கட்டுரையை இவ்வளவு தாமதாமாக படித்தமைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்ன அபத்தமான கட்டுரை இது. அதாவது மக்கள் இயக்கங்கள் எப்படி கிளர்ந்தெழும் அதை எவ்வாறு வர்க்கபோராட்டங்களின் பக்கம் திருப்புவது என்ற எந்த பார்வையும் இல்லாமல் எழுதப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் சுத்தம் சுயம்பிரகாசமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் நாம் யாரையுமே ஓன்று சேர்க்க முடியாது. ஏன் மாவோவே அதற்கு உதாரணம். ஒரு தோழரை கட்சிக்குள் கொண்டுவர எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா . இது போன்ற பெருதிரள் இயக்கங்கள் வரும் பொது நாம் அதை உபயோகபடுத்திக்கொள்ள வேண்டும் அதை விடுத்து அவன் ஏன் ஊழலுக்கு குரல் கொடுக்கிறான், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக ஏன் குரல் கொடுக்க மாட்டனா என்பது எல்லாம் என்ன கேள்வி என்றே புரியவில்லை.மாவோயிஸ்டுகள் பல தவறுகள் செய்கிறார்கள். ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம் நீங்கள் கண்டிப்பாக எந்த மாற்றத்தையும் இங்கு ஏற்படுத்த முடியாது என்பது மட்டும் நிச்சயம். நீங்க டம்மி பீசு.

    • நீங்க டப்பி பீசு என்று சொல்ல இவ்வளவு சுத்தியிருக்க வேண்டாம் அதற்கெதுக்கு மாவோ, கம்யுனிஸ்ட் என்று எழுத்யிருக்கிரீகள் என்று புரியவில்லை. மாவோ என்ன செய்தார், அன்ன அசரேவை கம்யுனிஸ்ட்கள் எப்படி உபயோகித்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் டம்மி பீசுகளுக்கு விளக்கினால் தேவலை..

  101. மவோயிஸ்டுகள் தவற்றைத்திருத்திக்கொள்வார்கள்.பெருந்திரள் இயக்க தலைவர்கள் தவற்றை ஒத்துக் கொள்வார்களா?ஜெயமணி

  102. DEAR GUYS
    INTERNATIONAL HUMAN RIGHTS MOVEMENT ORGANISED A CAMPAIGN AT CHENNAI ANNASALAI ON DECEMBER 10 2010–(ANTICORRUPTION ACTIVITY STARTED FROM TAMI On 2010, december 10, World Human Rights Day, On chennai Anna salai , International Human Rights Movement Conducted a Signature campaign against corruption and EQUALITY STATUS
    1. START LAW EDUCATION FROM SCHOOL LEVEL
    2. DECLARE CORRUPTION AS TREASON (DESA DROHAM)
    3.TO COMMENCE NEW CRIME PREVENTION AGENCY TO ENQUIRE THE CASE AGAINST POLICE AND JUDGES AND MAKES THE LAW EQUALLYLLY TO ALL )

  103. உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமுன்னு ஆங்கிலத்திலே பின்னுாட்டம் விட்டா நாங்க எப்படி படிக்கிறது.டீவியில அன்னா கசரே உளருவதை பக்கத்தில் தமிழ்பெயர்ப்பு இருக்குது.ஆங்கிலமேன்களே! கொஞ்சம் யோசிப்பீர்களாக!!

  104. ஐயா சாமீகளா உங்களுக்கு புண்ணியமா போவும். யாரோ அண்ணாவாமே. பெருச்சா போராட்டமெல்லாம் நடாத்திக் காட்டுறாராம். போராட்டத்துல சாதனயெல்லாம் பண்ணி யிருக்காராம். இதோ இங்கேயும் ஒரு முக்கியமான பிரச்சினை. எங்க வீட்டு கக்கூஸுல தண்ணி வரல. தயவு செஞ்சு அதுக்கும் ஒரு போராட்டம் நடத்திப்பிட்டாருன்னா தண்ணி வந்துரும். எங்க பிரச்சனயெல்லாம் தீர்ந்துரும். மவராசன வந்து ஒரு போராட்டம் பண்ண சொல்லுங்க சாமீகளா. உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போவும்.

  105. நான்கடவுள்இல்லை அவர்களே! உங்களுக்காவது கக்கூஸாவது இருக்கிறது. எங்களுக்கு
    அதுவுமில்லங்கோ,மவராசன்,எஜமான்,தெய்வம் ஒரு பார்வை எனக்கோ,எங்களுக்கோ செலுத்தினால் கொஞசம் தாக்கு பிடிப்போம்.

  106. […] Posted on April 8, 2011June 6, 2015 by krrisd Warning: You may call me fanatic after reading this but my views stand.   True to his Gandhian philosophies, veteran Anna Hazare started his ‘Fast-unto-death’ against corruption. And the nation joins him if I have to believe the media especially national. He scolds the government to his 5 point agenda relating to Jan Lokpal Bill alias Anti-corruption Bill.   I must praise clever Anna about his timings. The nation was fed up with recent scams. The entire nation was jubilant over the World Cup win and the national pride was running at peak. Five states are slated for election so government can’t take extreme steps against. And the issue needs to be solved before IPL starts so that cricket crazy Indians shun away which I believe will happen.   My only big question to Anna is why can’t he fight an election and go to parliament to do the changes, draft a bill and eradicate the corruption? If you believe the idiot box and idiot news channels, entire India is behind this so called ‘second freedom movement’. Students, techies, MBAs and who-not join the rallies and voice for Anna. Everybody is waiting for this precise movement. So logically Anna and his party can sweep the election if they contest. And our country is true democratic. Isn’t it? Largest democracy India is beautifully built upon the constitution where the very right of ‘satyagraha’ and contesting in election are ensured. Then why not contest? People are saying they are waiting for years so that politicians will repent. Then why you are also waiting for? You should have started a party and joined the government machinery to correct it. We are not Libya ruled by Gaddafi likes without a voice for aam aadmi. We are true democratic on foundations created by Babasaheb Ambedkar likes.   This is where precisely Anna’s cleaver works. He knows that anti-corruption can’t bring votes. But issues like poverty, daily bread and minimum wages. Because when nation votes, maximum participants are poor, worker, tribes, under-privileged whose need are minimum assured wages, minimum education, shelter etc but not the great-Indian middle class to whom elections are entertainment which need to be watched in television with Dominos Pizza and colas. That’s why schemes like NREGS (National Rural Employment Guarantee Act), SSN (Sarva Shiksha Abhiyan), JnNURM (National Urban Renewal Mission) and Golden Quadrilateral are need of the hour instead of such stunts.   He has also warned that he doesn’t need any support from politicians but happily accepted the supports from celebrities and media. Just ask the celebrities what they were doing a week back. Partying or what. Suddenly their nationalism has erupted and they tweet-till-death!! Will Anna reject media particularly so called Indian ‘news channels?’ No he won’t because he knows they are the conspirators. I can write a ton about media grazy, media trial and judgment, self-propagation and how they exploit us but that is not the concern here. But it happened to me that while I was watching this Anna stunt at one channel, Peepli-Live was in another movie channel. You understand what I am coming to!   Let me ask you one question. If for a crime a case is filed in court and the proceedings are going on. Suddenly one party takes the law in hand and delivers judgment on other party instead of a judge what you will do? Hold candle light rallies in support!?  Then why if the making of law is the sole responsibility of elected representatives you are trespassing in the zone. Further the constitution of India allows you to be an elected representative and then make/modify/delete bill. I am still not able to understand the motives of this mission. Just because Manmohan Singh has become the soft-target? Or you want only morchas not accountability and can’t able to sustain the pressures of running a nation like ours? Interestingly that’s what exactly Gandhi did!   Let us take Obama. Even after a stable 100 years of American democracy and refined policies on racism, it never had a black president. For that Obama had not started a ‘dharna’ at Times square with a picture of Liberty statue. He gets into the system and become the president. Or close to home take TN Sheshan. He first occupied the CEC India and did reforms. Not bending governments unethically. Anna (or his close aids) is actually bypassing the election machinery to become law maker violating the very own law of land and slapping on the faces of million voters who had dutifully casted their vote on last election to elect a leader of their choice.   This will end up where every Ram and Shyam takes up such measures on any issue they want thus diluting the democracy. Maybe that can bring the Utopian vision of Anna where citizen is law maker with read/write rights! Or divided states which are already trembling and become like Afganistan or so!? The only positive here is The Great Congress had seen such thousand quests and made innumerable committees and know how to deal a committee!!   More over unlike rape, violence, dictatorship corruption is not one sided. It requires two hands to make a clap. So what is Anna’s message to the less transparent giver? If to believe the recent scam proceedings, we can say this giver is nothing but Ratan Tata from Tata Enterprises, Anil Ambani from ADAG etc. Applause! They are ‘candid’, ‘quiet frank’ according to PAC’s MM Joshi. It is quite strange that Ratan Tata from ‘epitome-of-ethics’ Tata Enterprise can write a letter to Tamilnadu CM about the ‘good works’ of Raja and preferring him against Maran cleverly understanding the fallout between Karunanidhi family and Maran family and still roam free and Raja can favor a party and end up in Tihar. While the former is ‘business ethics’ the later is ‘corruption’ which Anna fights. Strange indeed. Why can’t he fight along with Dhinkia and Gobindpur tribes to save their daily bread from forest from POSCO? Why can’t he fight along with Warkari sect at Pune’s Chakkan against polluting their drinking water from DOW chemicals? Or at least at Singur against Tata Motors for stealing the very livelihood of land from the villagers so that Ratan Tata can make his ‘dream project’ of making one-lake-car for the (needy!) middle class in urban! This is true corruption of stealing the entire nation of its very own premium resources and daily breads of million poor by the corrupt and exploit minds either Indian or MNC not a few lakh or crore changed under the table.   Or closer to home can we (including me) pass honesty test? Just a few questions to ponder.   Have you ever bribed the policeman after caught speeding in bike thus breaking the law? Have you ever bribed RTO to get the license faster? Have you ever bribed the municipality to get the home plan approval with more space? Have you ever bribed the municipality officer to get the water connection? Have you ever mentioned your correct 100% income in Income Tax Return statement?   Then who are we to pinpoint the politicians for the malaise of corruption whereas corruption runs deep in our hearts. What Lokpal bill can do to eradicate these corrupt million minds? Will a terrorized politician stature eliminate the great Indian corrupt minds which want easy life, instant justice with ‘me’ syndrome?   Think and Act. Not just become the victim of false populist agenda. PS: If you feel my views are right, link this page elsewhere. If you can read tamil, read this also (https://www.vinavu.com/2011/04/08/anna-hazare-fast/). […]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க