privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்செயின்ட் ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் பாதிரி ராஜரத்தினம் !!

செயின்ட் ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் பாதிரி ராஜரத்தினம் !!

-

விடுதலை சிறுத்தைகள் போஸ்டர்பிளாரன்ஸ் மேரி என்ற கன்னியாஸ்திரியை மிரட்டி கடந்த நான்காண்டுகளாகப் பாலியல் வன்முறையை ஏவி வந்த,  திருச்சி ஜோசப் கல்லூரி முதல்வராகவும் பாதிரியாராகவும் உள்ள ராஜரத்தினத்தின் பாலியல் அட்டூழியம் அண்மையில் வெளிவந்து தமிழகமெங்கும் நாறத் தொடங்கியுள்ளது.

பாதிரியின் இப்பாலியல் அட்டூழியம் பற்றி அறிந்ததும், திருச்சி நகர ம.க.இ.க. தோழர்கள், தோழமை அமைப்பான பெண்கள் விடுதலை முன்னணியுடன் நூற்றுக்கணக்கில் அணிதிரண்டு கடந்த 13.10.2010 அன்று காலை ஜோசப் கல்லூரி வாயிலை மூடி பூட்டுப் போடும் போராட்டத்தைத் திடீரென நடத்தினர். ம.க.இ.க. மாவட்டச் செயலர் தோழர் ராஜா தலைமையில் காமவெறியன் பாதிரி ராஜரத்தினத்தைக் கைது செய்து தண்டிக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரியும், சிறுபான்மை மத அடையாளத்துடன் காம வேட்டையாடும் இத்தகைய தனியார் பள்ளி – கல்லூரிகளை அரசே கையகப்படுத்த வேண்டும் என்றும் விண்ணதிரும் முழக்கங்களுடன் கல்லூரி வாயிலருகே ஆர்ப்பாட்டம் செய்த தோழர்கள், கல்லூரிக்குள் நுழைந்து அதன் வாயிலுக்குப் பூட்டுபோட முயன்றபோது கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

“ஜோசப் கல்லூரி கல்விக்கூடமா, காமவெறியர் கூடாரமா?” என்ற தலைப்பிட்டு திருச்சி நகரமெங்கும் மேற்கொள்ளப்பட்ட சுவரொட்டிப் பிரச்சாரம் திருச்சபைகளின் யோக்கியதையைச் சந்தி சிரிக்க வைத்தது.

இந்தத் திடீர் ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர்தான் ராஜரத்தினத்தை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருக்கிறது. போலீசும் இப்பாதிரி மீது கொலைமிரட்டல், கற்பழிப்பு, கட்டாய கருக்கலைப்பு ஆகிய மூன்று வழக்குகளைப் போட்டுள்ளது. ராஜரத்தினமோ அதிகார வர்க்கத்தின் துணையுடன் தலைமறைவாக உள்ளார்.

பணபலமும் அதிகாரபலமும் ஆணாதிக்கத் திமிரும் கொண்டு பாலியல் வன்முறையை ஏவியுள்ள அயோக்கிய பாதிரி ராஜரத்தினம் தாழ்த்தப்பட்டவர் என்பதால்,  “இது நம்ம ஆளு!” என்று விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் தி.க. ஆகிய கட்சிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளன. இப்பாதிரியார் தலித் என்ற ஒரே காரணத்துக்காக பழிவாங்கப்பட்டுள்ளார் என்றும், சேசுசபையிலுள்ள சாதிவெறியர்களின் தூண்டுதலின் காரணமாகவே வன்னியரான பிளாரன்ஸ் மேரி மூலம் இப்படியொரு கதை சோடிக்கப்பட்டுள்ளது என்றும்  இக்கட்சிகள் கூசாமல் புளுகுகின்றன.

ராஜரத்தினத்துக்கு ஆதரவாக நின்று பாதிக்கப்பட்ட பெண்ணை சேசுசபையிலிருந்தே விரட்டியுள்ள நிலையில், அந்தச் சபை ராஜரத்தினத்துக்கு எதிராக நிற்பதாகக் காட்டுவது யாரை ஏமாற்ற? ராஜரத்தினத்துக்கு ஆதரவாக செயல்பட்ட பாதிரி தேவதாஸ், பாதிரி சேவியர் வேதம் ஆகிய உயர் சாதியினரும் குற்றவாளி பட்டியலில் உள்ளபோது, எந்த சாதிவெறியர்களின் தூண்டுதலால் ராஜரத்தினம் மீது அவதூறு பரப்பப்பட்டுள்ளது – என எழுந்துள்ள  கேள்விகளால்  இக்கட்சிகள் மக்களிடம் மேலும் அம்பலப்பட்டுப் போயுள்ளன. மக்களிடம் உண்மையை விளக்கி பாதிரியின் பாலியல் அட்டூழியத்துக்கு எதிராக ம.க.இ.க. அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. இதற்கு மேலும் தலித்துகளின் உயிர்களை பலியிட விரும்பவில்லை…தேர்தல் அரசியல் மூலம் விடுதலை அடைவோம் என்று கூறி……..சாக்கடை ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்குச் சென்ற வி.சி….இன்னும் முடை நாற்றமெடுத்து அம்பலப்பட்டு வருகிறது…

    ஒட்டுமொத்த தலித்துகளுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டிருக்கிற விடுதலைச்சிறுத்தைகளின் யோக்கியதை இதுதான் போல……திருமாவிற்கோ அல்லது சிந்தனைக்கோ இது தெரியுமா????

    அது சரி கட்டப்பஞ்சாயத்து வரை சென்றும்… ரசிகர் மன்றக் கூட்டமாக மாறியுள்ள கட்சித் தொண்டர்களை ஒன்றும் செய்யாத வி.சி தலைமை இதற்கு மட்டும் என்ன செய்துவிடப் போகிறது…..இதுவும் கட்டப்பஞ்சாயத்தின் ஒரு வடிவம் தான்…..

  2. தவறு செய்யும் பலர் மாட்டிக்கொள்ளும்போது ‘நான் உங்கள் சாதி, அதனால் எதிர்சாதிக்காரங்க இப்படி பண்ணறாங்க’ன்னு சொல்லி சேர்ந்துக்கிறது பல இடத்தில் பாத்தாச்சு. இப்பொ இன்னொன்னு.

    இதுபோன்ற பல சாதி அமைப்புகள் ஒருவன் என்ன தவறு செய்திருந்தாலும் தன் சாதி என்பதால் காப்பாற்ற முனைகின்றன. இதில் விடுதலை சிறுத்தைகளும் விதிவிலக்கல்ல என நிரூபித்திருக்கின்றனர்.

  3. A women come out for getting justice in sexual violation case is rare, because of our male dominated society. In feature the nun suffer all walks of life. I congradulate ma.ka.e.ka getting justice for nun.

  4. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் காமவெறி பாதிரி ராஜரத்தினம் !! | வினவு!…

    அயோக்கிய பாதிரி ராஜரத்தினம் தாழ்த்தப்பட்டவர் என்பதால், இது நம்ம ஆளு! என்று விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் தி.க. ஆகிய கட்சிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளன…

  5. கோவை குழந்தைகள் கொலை வழக்கில் என்கௌன்ட்டர் செய்யப்பட்ட மோகன கிருஷ்ணனுக்கு வக்காலத்து வாங்கிய வினவு, அந்த பாதிரியார் குற்றம் சாட்ட பட்டு நிரூபிக்க படாத நிலையில் அவருக்கு எதிராக மகஇக படைகளை இறக்கி விட்டு ஆர்பாட்டம் செய்வது எந்த வகையில் நியாயம்,

    ஏன் இந்த இரட்டை நிலை. ஏன் இந்த போலி வேஷம். தாங்கள் நினைத்தது மட்டும் தான் சரி என்ற நிலையை உங்களுக்கு யார் கொடுத்தது.

    • வினவு மோகன் ராஜுக்கு வக்காலத்து வாங்கவில்லை. எந்த விசாரணைக்கும் முன்னால் சுட்டு கொல்லத்துடிக்கும் மனநிலைக்கு மக்களை இழுத்துச் சென்ற பத்திரிகை-போலீஸ் கூட்டுச் வேலையைத் தான் வினவு சாடியது. கூடவே ஆளும் கட்சியின் சதியையும். முதலில் கொஞ்சம் தெளிவாக படிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

      சரி…. சதாம் உஸேனை கொல்லும் அதிகாரத்தை அமெரிக்க எடுத்துக்கொண்டது சரியா?

    • Dear Mr.கார்பன் கூட்டாளி
      Before publish any comment, please read article fully and than publish your comments. Please don’t give wrong information.

  6. ஆம் எதற்கெடுத்தாலும் ஜாதியின் பெயரை சொல்லித் தப்பிக்கும் வழியை குற்றவாளிகள் பயன்படுத்துகிறார்கள். .பாவிகளுக்கு ஜாதி ஏது?இதில் கூடவா இட ஒதுக்கீடு?இப்போதுக்கூட வீரமணி கருணாநிதி போன்றவர்கள் அ.ராசா 2 G விவகாரத்தில் ஜாதி அஸ்த்திரத்தை எடுக்கிறார்கள்.ஊழல் புரிபவர்களில் என்ன பாகுபாடு.யார் தவறு செய்கிறார்களோ சட்டத்தின் தண்டனையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.ஜாதியைக் கேடயமாக பயன் படுத்தக் கூடாது .

  7. ஜாதி என்று குறிப்பிடவும். ஜாதி என்பது தமிழ் கிடையாது. அப்படி ஒரு சொல் தமிழில் கிடையாது. சாதி என்று சொல்வதனால் அது ஏதோ தமிழ் சொல் மாதிரி ஆகி விடுகிறது. தயவு செய்து தவிர்க்கவும்

  8. என்னவாயிற்று உங்களுக்கு? கேவலம். உங்களை ஒரு நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா? சாதி ஒரு பக்கம் என்றாலும், அந்தப் பெண்ணின் சம்மதம் இல்லாமலா இத்தனை நிகழ்வுகள் நடந்திருக்க முடியும்? நீங்களே யோசித்துப் பாருங்கள். அவர்கள் எங்கெங்கு சென்றார்களோ அங்கெல்லாம் அப்பெண்ணின் அனுமதியில்லாமலா அழைத்துச் சென்றிருக்க முடியும்? முதல் முறையே அப்பெண்ணை அவர் தவறாகப் பயன்படுத்திய பொழுதே அப்பெண் ஏன் அதைப் பற்றி வாய்திறக்கவில்லை? இரு தரப்பிலும் குற்றங்கள் இருக்கும் பொழுது ஒரு தரப்பினரை மட்டும் நீங்கள் விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? அப்பெண்ணுக்கு இது முதல்முறை என்றால், உங்கள் போராட்டத்தில் நியாயம் இருக்கும். இதற்கு மேல் உங்களுக்கு என்னத்த சொல்ல… சும்மா சிவப்பு சட்டையை போட்டுகிட்டு, கொடிய புடுச்சுட்டா மட்டும் போதாது…

    • நான்கு வருடமாக அந்த பெண்ணின் அனுமதியோடு (ஏறக்குறைய நித்யானந்தா கேசு மாதிரிதான் ) நடந்த முடிந்த பிறகு பணம் வேன்டும் பதவி வேன்டும் இல்லையென்றால் கேவலப்படுதிவிடுவேன் என்று மிரட்டுவது அந்த பாதிரியார் தாழ்த்த ஜாதியில் இருந்து இந்த நிலைக்கு வந்ததால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்களோ அவர்களின் மறைமுக சதியகவும் இருக்க வாய்ப்பு உள்ளது .மத அடையாளங்களை தவிர்த்து பார்த்தால் இது இந்த சமுதாயத்தில் நடக்கும் தினசரி நிகழ்வுகளில் ஓன்று .மற்றபடி இதற்கு ம.க.இ .க இந்த அளவு முக்கியம் கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை .

      • ஏங்க பாதிரியாருன்ன உணர்ச்சி இருக்காதா?இவனுங்க மட்டுமல்ல கோயில் பூசாரி ,முஸ்லிம் மத பூசாரி இவனுங்க எல்லாருக்குமே பாலுணர்ச்சி கொஞ்சம் நம்ம மாதிரி ஆளுங்களை விட அதிகம்.ஏன்? எல்லாம் திங்கற உட்டம் அப்புடி .அதிலும் பாதிரியாருகளுக்கு சொல்லவே வேண்டாம் .பாதிரியாருங்கற வேஷத்துல செய்ததுதான் தப்பு ,அந்த கன்னியாஸ்திரி (இனிமேல் அப்புடி சொல்லமுடியாது ) அதுக்கு ஒத்துழைத்த விதமும் தப்புதான் .நாலு வருசமா இந்த தப்பை பாதிரியார் செய்வதற்கு அனுமதித்தது (இது அவர் சார்ந்த சபைக்கு தெரிந்துதான் நடந்ததா?)எல்லா சாமியார் மயி….ரா…ன்களும் இப்புடி காம வெறி புடிச்சிதன் அலையுறானுகப்பா !கண்டிப்பாக தண்டிக்க படவேண்டியவர்தான் இந்த பாதிரியார் வேஷம் போட்ட ஆசாமி .

      • ஒரு பெண்ணை அவளின் சம்மதம் இல்லாமல்
        கற்பழிக்கவோ அல்லது உறவு கொள்ளவோ முடியாது என்பது மருத்துவ கூற்று (சுய நினைவுடன் இருக்கும் நிலையில் ) நான்கு வருடமாக மயக்க நிலையிலேயே இருந்து இப்பொழுதுதான் நினைவு திரும்பியதா ?இதைதான் இனமான பெரியார்,” கடவுளை கற்பித்தவன் முட்டாள் வணங்குபவன் காட்டுமிராண்டி “(இது அனைத்து மத கடவுளுக்கும் பொருந்தும் )என்று எந்த காலத்திற்கும் பொருந்தும் கருத்தை உதிர்த்தார் .பாதிரியார் கடவுளின் பிரதிநிதி என்பதால் இதையெல்லாம் சொள்ளவேண்டியிருக்குது .

    • பாவிகளுக்கு பாவமன்னிப்பு வழங்கும் பாதிரி பாவச்செயல்கள் செய்யலாமோ!

  9. பாதிரி தவறான எண்ணத்தோடு அணுகும் போதே தவிர்த்திருக்கலாம் அல்லது தன்னுடைய மடத்தின் தலைவியிடம் தெரிவித்து இருக்கலாம், அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சபையின் (mother Superior ) தலைவியிடமோ, உறவுக்கரரிடம் சொல்லியிருக்கலாம் (அ) ஊரில் உள்ள பங்கு பேரவை போன்ற அமைப்புகளிடம் முறையிட்டு இருக்கலாம், ஏனென்றால் 4 வருடம் ஒருவர் துன்புறுத்துவதை சகித்துக்கொண்டு இருக்கவேண்டிய அவசியமென்ன? அந்த பாதரி உண்மையில் தவறு செய்திருந்தால் கடுமையாக தண்டிக்க பட வேண்டும். இதில் சாதியை நுழைத்து குற்றவாளியை தப்பவிடகூடாது.

  10. வினவு, நான் நேத்து கேட்ட கேள்விக்கு இந்தப் பதிவுல பதில் கிடைச்ச மாதிரி தான் இருக்குது. சாதி எதுவானாலும், தப்பு தப்பு தான். வன்புணர்வு குற்றம் தான். நன்றி. உங்க போராட்டத்துக்கும் வாழ்த்துக்கள்.

  11. எங்காவது சாதி வெறியர்கள் தலித்கள் மீது நடத்திய வல்லுறவு மற்றும் கொலைகளில் தலையிட்டு இருக்கிறீரா?நாலு வருஷமா ஒரு டிஎஸ்பி கற்பழித்துகொண்டு இருக்கிறான் என்று மதுரையில் ஒரு பெண் நேற்று ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார் அதை போய் கவனியுங்கள் வினவு. போலீஸ்காரனும் சாமியாரும் தானே எளிய வாய்ப்புகள்?

  12. Athaium veliye kondu Varuvoom sir, athukku munnaal Unga unmaiyaana perail comment Poodunga.
    Unga Ooraiyum peraiyum Sollunga DSP ai Naama Sernthe Pooi Ambalappaduththuvoom,
    Athukku Munnaadi
    Paathiri Visayathil yaar Seithathu Sarinu Sollunga ?
    Saathiyai Vaiththu Kaappaatra Muyalvathu Sariyaa Allathu Evanaaga irunthaalum Ambalappaduththuvathu
    sariyaa ?

  13. some days back one religious head request the IRAQUE government to stop the death penalty of the Hard Core criminal who is resposible for lahks of innocent people murder.
    because he belonged his region. God save us, he never thinks or sorry ,about the mass murder of the innocent children , woman and people.

    now here caste enter to save this person.
    there is no end for this,
    we must try to unite the people by Inter-caste, Inter-religious marriage.

  14. En peyar suresh,
    naan ma.ka.e.ka amaippukku aatharavaalan.

    r.s.s paarppana kumbal,
    saathi veriyargal,
    muthalaaligal,
    oottupporukkigal
    matrumulla pirpookku sakthigal thaan engal Amaippukku Ethirigal.
    _
    neengal entha vagaiyai sernthavar ?
    Saathi veri kumbalaa allathu oottupporukkiyaa ?
    _
    oru pompalai porukkikku vakkaalaththu vaanga ungalukku vetkamaa illaiyaa ?

  15. “அயோக்கிய பாதிரி ராஜரத்தினம் தாழ்த்தப்பட்டவர் என்பதால், “இது நம்ம ஆளு!” என்று விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் தி.க. ஆகிய கட்சிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளன.”

    விடுதலை சிறுத்தைகள் இவ்வாறு செய்யக்கூடிய அமைப்புதான் என்பதற்கு முன் உதாரணங்கள் உள்ளன. ஆனால் பெரியார் தி.க. ஏன் இவ்வாறு செய்கிறது? புரிய முடியவில்லை. பெரியார் திகவினர் விளக்கினால் சரியாக இருக்கும்.

  16. வணக்கம், கன்னித்துறவி மேரி மற்றும் துறவுத்தந்தை ராசரத்தினம் தொடர்பான பாலியல் குற்றம் பற்றிய சில மறுக்க முடியாத உண்மைகள். கன்னித்துறவி தனது ஆகஸ்டு 25 நாளிட்டு புனித அன்னாள் மடத்தலைமைக்கு எழுதிய கடிதத்தில் தான் துறவுத்தந்தையோடு மனமொப்பிய பாலுறவு கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் செப்டம்பர் 23 நாளிட்ட கடிதத்தில் யேசு மறையகத்திற்கு அது ஒரு வன்புணர்ச்சி என்று கூறியுள்ளார். இடையில் என்ன நடந்தது? தான் யேசு சபையிலிருந்து நிக்கப்பட்டதற்குப் பின்பே காவல்நிலையத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார். ஏன்? யார் இவரை நகர்த்துவது? கன்னித்துறவி ஏழ்மையான குடும்பப்பின்னணியுடையவர் என்றால் அவருடைய சகோதரர் இலண்டனில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாரே, யார் உபயம்? யேசு சபையிடம் பணம் கேட்டு வன்னியர் சாதியைச் சேர்ந்த ஒரு தாதா மூலம் கன்னித்துறவி மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஏன் விசாரிக்கவில்லை? அது என்ன மனமொப்பிய பாலுறவுக்கான கூலியா? 2006ஆம் ஆண்டிலிருந்து நடந்து கொண்டுவரும் இவர்களின் சுமூகமான உறவு கன்னித்துறவி யேசு சபையிலிருந்து விலக்கப்பட்டபின் அரங்கேற்றப்பட்டிருப்பதன் காரணம் என்ன? துறவு என்பது ஒரு தவறான மத நம்பிக்கை. பிழைப்பிற்காக கிறித்துவ மதம் மாறி அதில் துறவும் பூண்டு தமது இயல்பான பாலியல் உணர்வுகளை திரைமறைவில் அரங்கேற்றிக்கொண்ட இவ்விரு துறவிகளும் ‘மதத்துறவின்’ பலிகடாக்கள். இது போன்ற எண்ணற்ற துறவிகள் எல்லா மதங்களிலும் இக்குற்றாச்சாட்டிற்கு உள்ளாவது தெரிந்ததே. பார்ப்பன சங்கராச்சாரி இருவரின் திரைமறைவு வாழ்க்கை அம்பலத்திற்கு வரவில்லையா? பார்ப்பனரல்லாத பிரேமானந்தா வகையறாக்கள் இத்தகு குற்றங்களுக்கு ஆளாகவில்லையா? ஆனால் யார் மாட்டிக்கொள்கிறார்கள், யார் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதுதான் சமூகக் கேள்வி? இவ்வகையில் திருச்சியைச் சேர்ந்த கிறித்துவ வன்னிய துறவுத்தந்தைகள் தலித் கிறித்துவ ராசரத்தினத்தினத்திற்கு எதிராக பணியாற்றிய மர்ம முடிச்சுக்கள் ஏன் அவிழ்க்கப்படவில்லை? வேறு ஏதோ வகையில் ஜோசப் கல்லூரி, அதன் நிருவாகம், ராசரத்தினம் செய்த தவறுகள், குற்றங்களை நேரடியாக மட்டுமே எதிர்க்க வேண்டும். துறவு ஒழுக்கத்திற்கு பலியான வகையில் ராசரத்தினம் செய்த மதக்குற்றத்தை காரணமாக வைத்துப் பழிவாங்குவதும் மிரட்டலே. இது பார்ப்பானின் ராசதந்திரம். இது ம.க.இ.கவிற்கு தேவையற்றதே. உண்மையில் இந்தப் பாலுறவுக் குற்றச்சாட்டின் பின்னணியில் இருக்கும் சமூக கோளாறு என்ன என்பதை ஆராயத் தவறிவிட்டது ம.க.இ.க. ஏனென்றால் இதன் பின் பார்ப்பன மூலை இருப்பது தான். வேறொரு வகையில் ராசரத்தினமும் ஜோசப் கல்லூரி நிருவாகமும் குற்றவாளிகள். ஆனால் அக்குற்றங்களுக்கு அவர்களை தண்டிக்க முடியவில்லையே என்று ‘சரிதான் இது தான் சாக்கு’ என்று இந்தப் பாலியல் குற்றச்சாட்டை ஆயுதமாக ஏந்திய ம.க.இ.க.வின் சமூக யோக்கியதை என்ன? துறவிகள் பலர் மீது பாலியல் குற்றங்கள் உள்ளன. அது வன்புணர்வா அல்லது மனமொப்பிய புணர்வா என்பது ஆராயப்படவேண்டும். அது மனமொப்பிய புணர்வு என்றால் அதில் மதக்குற்றம் இருக்க முடியுமே ஒழிய சமூகக் குற்றம் இருக்க முடியாது.மதக்குற்றம் என்றால் அது ஒரு பெரிய பிரச்சனையில்லை. அதனை நாம் ஆதரிக்கின்றோம். வன்புணர்வேயில்லை என்று கன்னித்துறவி மேரி வாக்குமூலம் கொடுத்துவிட்டு பின் வன் புணர்ச்சி என்று மாற்றிப்பேசவேண்டிய அவசியத்தின் பின்னணியை ஏன் ஆராயவில்லை. ஒரு குற்றச்சாட்டு என்பதை சமூக ஆய்வின் அடிப்படையில் தான் ஆராய வேண்டும். சொந்த காழ்ப்புணர்வுகளின் அடிப்படையில் அணுகமுடியாது. மேசை நாற்காலியும், காகிதமும் பேனாவும் கிடைத்தால் எத்தனை சமூகவியல் கட்டுரைகளும் எழுதமுடியுமா? அப்படி எழுதினாலும் அதனை ஒப்புக்கொள்வோர் யார்? உண்மை வரவேண்டும். அதற்கான உள்ளுணர்வு சுடர்விட்டு எரியவேண்டும். அதுவே எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் மெய்ப்பொருள் காணும் வழி. ஏதோ ஒரு வகையில் இருக்கும் காழ்ப்புணர்வால், மதக்குற்றம் புரிந்த ராசரத்தினத்தின் மீது இதுதான் சாக்கு குற்றம் சாட்டலால் சில சமூக எதார்த்தங்கள் மறைக்கப்பட்டுவிடும் அபாயம் இருக்கின்றது. அந்த ஒரு நிகழ்வின் பின்புலம், சமூக ஆய்வு என்ன என்பது தான் இங்கே முக்கியம். ம.க.இ.க இதைச் செய்யத்தவறிவிட்டதனால் அது தனது சமூக ஆய்வுப் பார்வை என்ற மார்க்சிய மெய்ஞானத்திலிருந்து தவறிவிடுகிறது. இந்து மதத்தின் பாதிப்பால் இந்திய கிறித்துவ மதத்திருச்சபைகளிலும் கிறித்துவ வன்னியர், வெள்ளாளர் போன்ற உயர் சாதி இந்துக்கள் தலித் கிறித்துவர்களை ஒடுக்க எத்தனிக்கும் போக்கு தொடர்ந்து இருந்து கொண்டுதான் வருகிறது. அவ்வகையில் கிறித்துவ வன்னியரான மேரிக்குப் பின்னால் இருக்கும் வன்னியர் தாதா ஒருவரும், கிறித்துவ வன்னிய துறவுத்தந்தைகளும் மேரியை வைத்து ஆடும் நாடகங்கள் எவ்வகைப்பட்டவை? ஒரு பெண் வன்புணர்ச்சி குற்றம் சாட்டப்பட்டதாலேயே ஒரு ஆண் குற்றவாளியாகிவிடமுடியுமா? பெண்ணியம் என்ற பொய்ப்போர்வையில் தலித்தை பலிகொடுக்கும் ம.க.இ.கவின் முக்கிய நோக்கம் என்ன? மேலும் இந்நிகழ்வில் பணம் பறிக்கும் நோக்கம் அடிப்பட்டையாக மய்யம் கொண்டுள்ளதா? என்றும் ஆராய வேண்டும். யார் குற்றவாளி? ம.க.இ.கவே பதில் சொல். இது தான் சாக்கு என்று வரிந்து கட்டும் ம.க.இ.க ஒரு ‘பிளாக் மெயில்’ பேரிவழியா!

    • சிங்காரம்,

      பாலியல் வன்முறைக்குள்ளாகும் எல்லாப் பெண்களைப் பற்றியும் இப்படித்தான் பல்வேறு கதைகளும் கட்டியெழுப்பப்படுகின்றன. அதற்கு பிளாரன்ஸ் மேரியும் விதிவிலக்கல்ல. அதிகாரத்தில் இருக்கும் ராஜரத்தினமும், அதிகாரம் ஏதுமற்ற கன்னித்துறவியும் மனமொப்பி உறவு கொள்ள முடியுமா என்பதை கொஞ்சம் நடைமுறை அறிவு இருந்தாலே புரிந்து கொள்ளலாம். அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தியே தமக்கு கீழ் இருக்கும் பெண்களை வன்புணர்ச்சி செய்கிறார்கள். இது ராஜரத்தினத்திற்கும் பொருந்தும். அவர் பிறப்பால் ஒரு தலித் என்பதை பயன்படுத்தி ஆதாயம் தேடப் பார்க்கிறார். அப்படி ஒரு தலித் சிந்தனை இருக்கும்பட்சத்தில் இவர் இத்தனை நாட்கள் திருச்சபையில் உள்ள தீண்டாமை கொடுமைகளை – திருச்சி கல்லறை மயானத்தில் இருக்கும் தீண்டாமைச் சுவர் – எப்படி சகித்துக் கொண்டார்? தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் வரை அவருக்கு புகார்கள் இல்லை. பாலியல் குற்றச்சாட்டு வெளிவந்ததும் தீடீரென்று தலித் ஆகிவிட்டார். சகிக்க முடியாத நாடகம், சலித்துப்போன வசனங்கள், தேவன் உங்களை மன்னிக்கட்டும்.

    • @
      Singaram,

      Neengal V.C.K, PE.D.K iruvarum Seithathu,
      Sari Endru Solla Varugireergalaa, athaavathu Dalit Enbathaal Oru Porukkiyai Kaappaatra Munaivathai Sari Endru Solgireergalaa ?
      _
      aam Endraal Velippadiyaaga aamaam Atharku Thaan Muyalgiroom Endru Thunivudan Sollungal.
      _
      illai Avargal Seivathu Thavaru Endraal Thavaru Endru Sollungal.
      _
      Athai Viduththu Oru Ayookkiyanai Kaappaatra Muyalum irandu Yookkiya Sigaamani Amaippugalai Kaappaatruvatharkaaga
      Neengal Ma.Ka.E.Ka Meethu Paaivathu Kandanaththirkuriyathu.
      _
      innum Thelivaaga Solla Vendum Endraal intha Visayaththil
      Ma.Ka.E.Ka Seithathu Sariyaa ?
      V.C.K-PE.D.K Seithathu Sariyaa Enbathai Udaiththu Sollungal.

  17. […] This post was mentioned on Twitter by ஏழர, மணி. மணி said: https://www.vinavu.com/2010/11/12/st-josephs-trichy-2/#comment-33036 தலித் முகமூடியுடன் ஆணாதிக்க அறைகூவல் comment […]

  18. “பாலியல் வன்முறைக்குள்ளாகும் எல்லாப் பெண்களைப் பற்றியும் இப்படித்தான் பல்வேறு கதைகளும் கட்டியெழுப்பப்படுகின்றன. அதற்கு பிளாரன்ஸ் மேரியும் விதிவிலக்கல்ல. அதிகாரத்தில் இருக்கும் ராஜரத்தினமும், அதிகாரம் ஏதுமற்ற கன்னித்துறவியும் மனமொப்பி உறவு கொள்ள முடியுமா என்பதை கொஞ்சம் நடைமுறை அறிவு இருந்தாலே புரிந்து கொள்ளலாம். அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தியே தமக்கு கீழ் இருக்கும் பெண்களை வன்புணர்ச்சி செய்கிறார்கள்”—————————- சரி, இது உங்களுடைய அனுமானம் அல்லது பல்வேறு நிகழ்வுகளில் காணக்கிடைக்கும் அனுபவம் என்று வைத்துக்கொள்ளலாம். அதுவே எல்லா நிகழ்வுகளுக்கும் பொதுவான முடிவாக எடுத்துக்கொண்டு தீர்ப்பு எழுதி விட முடியுமா? உங்களுடைய இது குறித்த கள ஆய்வினை வெளியிடுங்கள். அப்படி ஏதேனும் கள ஆய்வு செய்தீர்களா? கன்னித்துறவியாரின் ஆகஸ்டு 25 ஆம் நாளிட்ட புனித அன்னம்மாள் மடத்தலைமைக்கு எழுதப்பட்ட கடிதத்தைப் பற்றி கன்னித்துறவியிடம் ஏதாவது கேள்வி கேட்டீர்களா இல்லையா? அது பற்றிய கன்னித்துறவியின் பதில் என்ன? கன்னித்துறவி ஏன் யேசு சபையிலிருந்து நீக்கப்பட்டபின் தான் காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார். அவர் நீக்கப்படாவிட்டால் அவ்வாறு புகார் கொடுக்காமலேயே இருந்திருப்பாரா? ஆகஸ்டு 25 ஆம் நாளிட்ட கடித்ததில் தான் மனமொப்பிய பாலுறவு கொண்டதாக ஏன் சொன்னார்? என எத்தனையோ அவிழ்க்கப்படாத முடிச்சுகளை ஏன் அவிழ்த்துப்பார்க்க யோசிக்கின்றது ம.க.இ.க. அல்லது அவிழ்க்க மனமில்லையா? சிக்குனாண்ட சாமியார் என்று மொட்டையாக களத்தில் இறங்கிவிட்டதா ம.க.இ.க. எனக்கு சான்றுகள் வேண்டும். விளக்கங்கள் வேண்டும். சம்பந்தப்பட்ட நிகழ்வில் என்ன நடந்தது என்ற தெளிவான பதில் வேண்டும். பறப்பது எல்லாம் பறவை எனவே ஏரோப்பிளேனும் பறவை என்றால் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். எந்திரன் படத்தில் சொன்னது போல, “படைத்தவன் தான் கடவுள் என்றால் என்னைப் படைத்தவன் வசீகரன், வசீகரன் இருக்கிறான் எனவே கடவுள் இருக்கிறது” என்று சுஜாதா வசனம் தேவையில்லை. எல்லாம் வல்ல பரலோக பரமபிதாவான மார்க்சின் அங்கீகரிக்கப்பட்ட அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட கம்யூனிச தேவதூதன் என்று களமிறங்கியிருக்கும் ம.க.இ.கவே நீங்கள் போட்டது தான் ரோடு மற்றது எல்லாம் கோடு என்ற உங்கள் ரோடுரோலரில் இருந்து இறங்கி இந்த உலகத்திற்கு வாருங்கள். வந்து விவாதியுங்கள். உங்களுடைய பொதுமைவாதம் எமக்குத் தேவையில்லை. களத்தில் என்ன உண்மை? நன்றியுடன் முரசு.

    • திருச்சபையினுள் இருக்கும்போது அது தனது அதிகாரத்தை கன்னிகளிடம் எப்படி எல்லாம் ஏவும் என்பதும் அதன் கொடுங்கரத்தின் கீழே அதனை எதிர்க்கமுடியாது என்பதும் புதிதல்ல. சபையை விட்டு நீக்கும் முகாந்திரத்தோடு மிரட்டி எழுதிவாங்கப்பட்ட காகிதத்தின்பேரில் விவாதம் சிங்காரம் விவாதம் நடத்துவதும், கைதானவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தையே சாட்சியமாக்கிடும் தடா சட்டநடைமுறைகளும் வெவ்வேறல்ல. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒப்புதல் வாக்குமூலத்தை அலசிப்போடும் சிங்காரம் (சிங்காரத்தின் கல்லாப்பெட்டி தரும் வெள்ளிக்காசுக்களின் எண்ணிக்கை யாமறியோம்),

      //அவர் பிறப்பால் ஒரு தலித் என்பதை பயன்படுத்தி ஆதாயம் தேடப் பார்க்கிறார். அப்படி ஒரு தலித் சிந்தனை இருக்கும்பட்சத்தில் இவர் இத்தனை நாட்கள் திருச்சபையில் உள்ள தீண்டாமை கொடுமைகளை – திருச்சி கல்லறை மயானத்தில் இருக்கும் தீண்டாமைச் சுவர் – எப்படி சகித்துக் கொண்டார்? தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் வரை அவருக்கு புகார்கள் இல்லை. பாலியல் குற்றச்சாட்டு வெளிவந்ததும் தீடீரென்று தலித் ஆகிவிட்டார். சகிக்க முடியாத நாடகம், சலித்துப்போன வசனங்கள், தேவன் உங்களை மன்னிக்கட்டும்.//

      இதற்கென்ன சொல்வார்?

      திராவிட இயக்கத்தின் புளித்துப்போன தர்க்கம்தான் இவை எல்லாம். எல்லா முடிச்சுமாறித்தனமும் பண்ணுறது. மாட்டிக்கிட்டா ‘நான் சூத்திரன்..அதனாலதான் இப்படி எல்லாம் தண்டிக்கிறான்’ன்னு புலம்புறது.

      வீரமணி: களவாணிப்பயலுகளான ராமசாமிக்கும் தினகரனுக்கும் இதே ஆயுதத்த எடுத்தார் (களவாணிகளை நாகரிகமாக நீதிபதின்னும் சொல்வர், மக்கள்)

      இப்போ ஊழல் ராசாவுக்கு பக்கம் பக்கமா இதே லாஜிக்கிலே அட்டைக்கத்தி வீரன்கள் வீரமணியும் கோபாலபுரமும் ‘பார்ப்புக்கொரு நீதி..சூத்திரனுக்கு ஒரு நீதியான்னு’ கிளம்பீருக்கு..

      பாதிரியா இருந்துக்கிட்டு இப்படி பெண்ணைச் சுரண்டுவதை தலித் எனும் பேரால் ஆதரிக்கும் பாதிரியின் கல்லாப்பெட்டி சிங்காரமே..

      ப்ளாரன்ஸ் மேரி ஒருக்கால் தலித்தாக இருந்திருப்பின்..என்ன செய்திருப்பாய்? அப்போது..தலித் நிலங்களையே ஆட்டையப் போட்ட தலித் தினகரனுக்கு வக்காலத்து வாங்கும் சில திராவிடக் கொழுந்துகளாட்டம் பேசி இருப்பியோ! ராஜரத்தினத்தின் வெள்ளிக்காசுகளின் மகிமையே மகிமை.

  19. “இது ராஜரத்தினத்திற்கும் பொருந்தும். அவர் பிறப்பால் ஒரு தலித் என்பதை பயன்படுத்தி ஆதாயம் தேடப் பார்க்கிறார். அப்படி ஒரு தலித் சிந்தனை இருக்கும்பட்சத்தில் இவர் இத்தனை நாட்கள் திருச்சபையில் உள்ள தீண்டாமை கொடுமைகளை – திருச்சி கல்லறை மயானத்தில் இருக்கும் தீண்டாமைச் சுவர் – எப்படி சகித்துக் கொண்டார்? தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் வரை அவருக்கு புகார்கள் இல்லை. பாலியல் குற்றச்சாட்டு வெளிவந்ததும் தீடீரென்று தலித் ஆகிவிட்டார்.”————————– சரி, இது பழைய கேள்வி. பணம் பதவி பட்டம் என்று கிடைத்துவிட்டால் பலர் தங்கள் இனத்தையே மறந்து விடுகிறார்கள். இளையராஜா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அவர் தனது இன மக்களுக்கு என்ன செய்தார்? அல்லது நாட்டுப்புற பாடலைக் காப்பியடித்துத்தான் கர்நாடக சங்கீதம் உருவானது என்று என்றைக்கேனும் சொல்லியிருக்கிறாரா. இன்னும் தியாக பிரமத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டுதானே இருக்கிறார். அதற்காக, அவரை இழிவு படுத்தும் பார்ப்பன மேதைகளை நாம் கண்டிக்கவில்லையா, கர்நாடக சங்கீதத்தின் தோலை உரிக்கவில்லையா? அவர் தலித் என்பது பிறப்பு, வாய்ப்பும் வசதியும் வந்தபின் அதை மறந்துவிட்டது அவரது சமூக அவலம். அதற்காக தலித் என்பதாலேயே அவரை மட்டப்படுத்தும் பார்ப்பன முகங்களில் நாம் எச்சில் துப்பவில்லையா? அப்படி பார்ப்பனர்கள் மட்டப்படுத்தும் போது, அட இளையராஜா தலித்துகளுக்கு என்ன செய்தார், அவரைப் போய் ஏன் நாம் ஏற்றுக்கொண்டு பேச வேண்டும்? என்று நாம் ஒதுங்கியது கிடையாதே. —– என்னத்தையாவது நீங்கள் பதில் சொன்னால் அதற்கு ஆமாம்சாமி போடுவதற்கு நான் ஒன்றும் பு.ஜா வாசகன் கிடையாது. கேள்வி கேள், சந்தேகி அதோ அங்கே சே குவேரா வழிகாட்டுகிறார்.

  20. aaga,
    Ungalukku Pirachinai Ma.Ka.E.Ka Mattumalla Marxiame Periya
    Pirachanaiyaaga irukkirathu Enbathu Purigirathu.
    _
    oottuppoorukkikku, Mannikkavum
    MLA vukku ivaiyellaam Kudaichalaaga iruppathu Viyappukkuriyathalla!-
    Pinnoottam En 22.2kku Eppa Sir Pathil Solluveenga ?

    Kaazppunarvu Kannai Maraikkum,
    irunthaalum Konjam Kannai Thiranthu Ketta Kelvigalukku Ozunga Pathilai Sollittu Poonga Sir.

  21. Pennaadam Bharathum Dalit Thaane ?

    Antha Siruvanukkaaga Kalaththil Nindrathu Ma.Ka.E.Ka Vaa
    Viduthalai Chiruththaigalaa ?

    Ange een Bharathai Kai Vitteergal ?
    Avanukku aatharavaaga Nirkaathathu Mattumalla ethiraaga Nindreergale athu
    een ?
    Bharath enna Vanniya Saathiyaa,
    illai Dalit thaane ?

    Appadiyaanaal inge Seyalpaduvathu Saathiyaa Vargamaa ?

    • Che guveravaa Ungalukku ippadi thaan Vazi Kaattinaa ?

      Panamulla
      paathirikku
      aatharavaagavum,
      eezai Bharathukku
      Ethiraagavum Nirkavaa Vazikaattinaar ?

      Ungalukku ippadi Vazi kaattiyathu Che vaa allathu Che Poolave Mackup Poottukkondu Suvargalil Bose Kodukkum Annan THIRUMA vaa ?

  22. நான் அமைப்பு சாராதவன். நாம் தெரிய வரும் செய்திகளை விமர்சிக்கின்றோம். அது ம.க.இ.க வாக இருந்தாலும், விடுதலை சிறுத்தைகளாக இருந்தாலும், பெ.தி.கவாக இருந்தாலும் அல்லது பிற மார்க்சிய மற்றும் தமிழ்தேசியவாத அமைப்புக்களாக இருந்தாலும் நமக்குக் கவலையில்லை. விசயம் என்ன என்பதிலிருந்து தான் விமர்சனம் பிறக்கின்றது. இந்த அமைப்பா அந்த அமைப்பா என்று நாம் பிரித்துப் பார்த்தது கிடையாது. அதனால் உங்களைப்போல ஒரு அமைப்புக்காக கட்டாயம் காவடி தூக்கியே ஆகவேண்டிய கட்டாயம் இல்லை. நான் சுதேச்சையான சுதந்திரமான சிந்தனையாளன். ம.க.இ.க எந்தக் கள ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதியது என்பதை வெளியிடவேண்டும். இல்லையேல் இந்த முரசு விரைவில் இந்நிகழ்வு தொடர்பாக ஒரு கள ஆய்வு செய்து உண்மை என்ன என்பதை ஆதாரங்களுடன் வெளியிடுவான். அப்பொழுது உண்மைக்குப் புறம்பான உங்கள் செய்தியை திருத்திக்கொள்ளுங்கள். மேலும் இனிமேலும் சொந்த காழ்ப்புணர்ச்சிகளின் அடிப்படையில் ஒரு விசயத்தை அணுகும் போக்கை கைவிடுங்கள். கள ஆய்வு நடத்தி எந்தச் செய்தியையும் அந்தத் தரவுகளின் அடிப்படையில் வெளிவிடுங்கள். இது சொன்னா குத்தமா. ஏன் கொந்தளிக்கிறீர்கள். கேள்வியே கேட்காமல் இருப்பதற்கு இது என்ன காம்ரேட் ஸ்டாலினின் சோவியத்தா? நன்றி.

    • சிங்காரம்,

      நீங்கள் எந்த அமைப்பையும் சாராமல் இருப்பது ஏன்?

      உங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் அமைப்புகள் எதுவும் இந்த உலகத்திலேயே இல்லையா?

      நான் மார்க்சியம் தான் சரி என்கிறேன் எனவே அதை தமிழகத்தில் உயிர்ப்புடன் பிரயோகிக்கும் ம.க.இ.கவில் இருக்கிறேன்.

      இது உங்களுக்கு காவடி தூக்குவதாக தெரிகிறதா? ஒரு கொள்கைக்காக, பெரும்பான்மை மக்களின் விடுதலைக்காக ஒரு அமைப்பில் இயங்குவதை காவடி தூக்குகிறேன் என்று சொல்கிற, நீங்கள் யார்?

      தமிழக மக்களை சுரண்டிக்கொழுக்கும் ஓட்டுப்பொறுக்கி கருணாநிதியன் குடும்ப ஆட்சிக்கு காவடி தூக்கும் இரண்டு கட்சிகளுக்கு (வி.சி, பெ.தி.க) எந்த அமைப்பையும் சாராமல் இருப்பதாக கூறிக்கொண்டு காவடி தூக்கும் நீங்கள் என்னை பார்த்து காவடி தூக்குகிறேன் என்கிறீர்கள்.

      மக்களை கொள்ளையடிக்கும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு காவடி தூக்க, சொம்பு அடிக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

    • ///உண்மைக்குப் புறம்பான உங்கள் செய்தியை திருத்திக்கொள்ளுங்கள்.///

      எது கல்லாபெட்டி(!) உண்மைக்கு புறம்பானது?

      பாதிரியார் பொம்பளை பொறுக்கி என்பது உண்மைக்கு புறம்பானதா? அல்லது வி.சி, பெ.தி.க இருவரும் அந்த பொறுக்கிக்கு வக்காலத்து வாங்குவது உண்மைக்கு புறம்பானதா? எது உண்மைக்கு புறம்பானது?

      ///இனிமேலும் சொந்த காழ்ப்புணர்ச்சிகளின் அடிப்படையில் ஒரு விசயத்தை அணுகும் போக்கை கைவிடுங்கள்.///

      எங்களுக்கு யார் மீது காழ்ப்புணர்ச்சி, சிங்காரம்?
      உங்கள் மீதா? அல்லது நீங்கள் சொம்படிக்கும் சொம்பைகள் மீதா? ஓட்டு பொறுக்கிகளையும் ஓட்டு பொறுக்கிகளுக்கு சொம்படிக்கும் சொம்பைகளையும், மக்கள் மத்தியில் வைத்து டவுசரைக் கழட்டவேண்டும் என்கிற ஆசையை தவிர எங்களுக்கு வேறு எந்த ஆசையும் இல்லை.

      எப்படி உங்களால் மட்டும் இப்படி எல்லாம் காமெடி பண்ண முடியுது?

      ///கேள்வியே கேட்காமல் இருப்பதற்கு இது என்ன காம்ரேட் ஸ்டாலினின் சோவியத்தா? நன்றி.///

      ஸ்டாலின் ஆட்சியை கண்டு குலை நடுங்குபவர்கள், மக்களை சுரண்டும் ஏகாதிபத்தியவாதிகளும், முதலாளிகளும் தான். நீங்களும் மக்களை சுரண்டுகிறீர்களோ?

      சிவப்பென்றால் சிலருக்கு பயம்! பயம்!!

  23. கேள்வி கேள், கேலி செய். கேள்வி கேட்டால் குற்றமா? நீங்கள் எந்தக் கள ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் இந்தச் செய்திகளை வெளியிட்டுள்ளீர்கள்? அந்தத் தரவுகளை வெளியிடுங்கள். ஒரு சமூக நிகழ்வை அணுகும் முறை கள ஆய்வு முறையாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட அணுகுமுறை உங்களுக்கு இருக்கின்றதா? அப்படியிருந்தால் அந்தத் தரவுகளை வெளியிடுங்கள். இந்தக் கேள்வி தவறா? எது தடா, எது பொடா? என்ன ஆதாரம்? ஏன் யேசு சபையை விட்டு விலக்கப்பட்ட பின் இப்புகார் கொடுக்கப்பட்டுள்ளது? இதன் பின்னணி என்ன? பதில் சொல் ம.க.இ.க அல்லது வினவு.

    • சிங்காரம்,

      மக இகவா பெதிக வாங்கிறது அப்புறம் இருக்கட்டும்.
      விசயத்தை அதன் தர்மநியாயத்தின் பேரில் அணுகுவோம்.

      எல்லோரும் புரிந்துகொள்ளும் விதமாக இருக்கட்டும் என சம்பவம் நடந்த இடம் கலெக்டர் ஆபீஸ்னு வச்சுக்குவோம். ப்ளாரன்ஸ் மேரி லோயர் டிவிசன் கிளார்க்.. பாதர்தான் கலெக்டர். கலெக்டர் தனது வாய்ப்பு,அதிகார தோரணை மூலமாக மிரட்டியோ, காசு / சலுகை மூலம் பணியவைத்தோ கிளார்க்கை பாலியல் சுரண்டல் செய்கிறார். இது சில ஆண்டுகள் நீடிக்கிறது. கலெக்டர் இப்போது கழற்றிவிட முடிவு செய்கிறார். இங்கே முரண்பாடு முற்றுகிறது. கலெக்டர் மீது நிர்வாகத் தீர்ப்பாயத்தில் கிளார்க் புகார் கொடுக்கிறார். கலெக்டர் நான் யோக்கியமானவன் எனப் புலம்புகிறார். சில ஆதாரங்களை கிளார்க் முன்வைத்தபின்னர் அங்கே கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. தாங்கள் சொல்லியபடி எழுதிக் கொடுங்கள் என்று பேரமும் மிரட்டலும் கலந்த அந்தப்பஞ்சாயத்தில் ‘இருவரும் மனம் ஒத்து இதைச் செய்தோம்’னு அந்தப் பெண்ணிடம் எழுதி வாங்கப்படுகிறது. அதே காகிதத்தை ஆதாரம் காட்டி பெண் மீது ஒழுங்கு நடவடிக்கையும்..கலெக்டர் மீது நடவடிக்கை ஏதும் இன்றியும் விசயம் முடித்து வைக்கப்படுகிறது. இதுதான் 99 சதம் நடக்க சாத்தியமுள்ளது- ஆணாதிக்க, அதிகாரவர்க்க நிறுவனங்கள் அனைத்திலும். இப்போது வேலை நீக்கம் செய்யப்பட்ட பெண் – குமுறாமல் என்ன செய்வாள்? தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுரண்டுவதும், பின்னர் தன்னை மட்டும் ஒழுக்கம் கெட்டவள் என்று வீசி எறிவதும் மகா அநீதி என உணர்ந்து போராடமாட்டாளா? அவளிடம் நீ அன்னிக்கு அப்படி எழுதிக்கொடுத்தவதானே..என்று வக்கிரமாகக் கேக்கும் சிங்காரமே பதில் சொல்..இதில் பாதிரி குற்றமற்றவனா? அவன் மட்டும் ஏன் தண்டிக்கப்படவில்லை? சபையை விட்டு ஏன் துரத்தப்படவில்லை? அவனை போலீசு நடவடிக்கையின் கீழ்க் கொண்டுவருவதுதானே நியாயம்? இதில் கத்தோலிக்கம், சாதி எல்லாத்தையும் விட்டுவிட்டுப் பார்த்தாலும் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு தனது காமவெறியை கையறுநிலையில் உள்ள பெண்ணிடம் தீர்த்துக்கொண்டு அவளையே தண்டிக்கும் மிருகமாகத்தானே உள்ளான் – பாதிரி? அவன் எந்தச்சாதியாய் இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டியவனே? இதுக்கெல்லாம் சாதி முகமூடி போட ஆரம்பித்தால் என்னாகும்? தலித்தாகப் பிறந்த காரணத்தைக் காட்டியே ஒருவன் “எக்ஸ் க்யூஸ் மீ..நான் ஒரு ரேப் பண்ணிக்கிறேன்..நான் தலித்..எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க” “வி.சி. / பெதிக..ரெடியா இருந்துக்கோங்க..எனக்காகக் குரல் கொடுங்க” என்று சொல்ல வெகுநாளாகாது. கள ஆய்வுன்னா என்ன ஓய்..பாதிரியார் வீசி எறியும் எலும்புகளைக் களத்தில் முகர்ந்து ஆய்வதா? உன்னை ஏவி விட்டவர்கள் சந்தடி சாக்கில் ஸ்டாலினையும் கடித்துவா என்றுள்ளனர்..

    • மேற்கண்டவாறு கள ஆய்வு, கள ஆய்வு என்று நீங்கள் குதிப்பதன் நோக்கம் வேறு ஒன்றும் அல்ல, பிரச்சனையை திசைதிருப்பி அந்த பெண்ணை முதன்மை குற்றவாளியாக்கி பாதிரியை காப்பாற்றுவதே நோக்கம். இதன் மூலம் நீங்கள் பாதிரிக்கு வக்கீல் வேலை செய்கிறீர்கள் என்று உங்கள் மீது குற்றம் சாட்டுகிறேன்.

      அந்த வேலையெல்லாம் இங்க நடக்காது சார்!

      மேற்கண்ட செய்தி கள ஆய்வின் அடிப்படையில் தான் வெளியிடப்பட்டிருக்கிறது. கள ஆய்வு அறிக்கைகளின் நகல்கள் அனைத்தும் உங்களுக்கு கொடுப்பதற்கென்றே தயாராக இருக்கின்றன.
      அவற்றை உங்கள் வீடு தேடி வந்து நானே தருகிறேன். அட்ரஸை தாங்க கல்லாபெட்டி(!)

  24. கேள்வியே கேட்காமல் இருப்பதற்கு இது என்ன காம்ரேட் ஸ்டாலினின் சோவியத்தா? நன்றி…

    சிங்காரம்…//

    நீங்கள் கேள்விக்கேட்கலாம் யார் உங்களை தடுத்தார்.ஸ்டாலினை ஏன் இழுகிருங்க.முதலாளித்துவ சிந்தனையும்,முதலாளிகளும்,அதிகமான உடைமை வைத்து இருப்பவர்கள் தான் அவரைக்கண்டு பயப்படுவார்கள் நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.

  25. கலெக்டர் ஆபீசில்லையே அது, அங்கே கலெக்டரும் இல்லை, டைபிஸ்டும் இல்லையே. காது காதுனா வேது வேதும்பீங்களோ? இதுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. எந்த ஆதாரம் என்று சொல்லவேண்டிய அவசியம் வினவிற்கும், ம.க.இ.கவிற்கும் தான் இருக்கிறது. அதற்குக் காவடித்தூக்கி அது போடும் எலும்புகளைக் கடிக்கும் உங்களுக்கு வேண்டுமானால் சப்பை கட்டு கட்ட வேண்டிய அவசியம் இருக்கலாம். அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. குறிப்பிட்ட நிகழ்வின் கள ஆய்வு என்ன? அதன் தரவுகளை வெளியிடமுடியுமா? இது தான் கேள்வி? ஒக்காத்து யோசிக்காதீங்க. ஃபீள்டுக்குப் போங்க பாஸ்.

  26. தர்மம் என்றால் என்ன? நியாயம் என்றால் என்ன? தர்மநியாயம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட நிகழ்வினை அதன் சமூகவியலை விசாரிக்காமல், கற்பனை நிகழ்வை விசாரித்து முடிவெடுப்பது நியாமா? தர்மமா? மல்லாந்து படுத்து விட்டத்து பார்த்துக்கொண்டே எழுதுவது சுகம் தான் தோழர், அது உங்கள் காதல் கவிதையாக இருந்தால். இது ஒரு சமூக நிகழ்வு. இதற்கு வீட்டைவிட்டு வெளியே போய் ஊர் ஊராய்ச் சுற்றி விசாரணை செய்து தரவுகளை ஆராய்ந்து எழுத வேண்டும். அது கஷ்டம் தான். நமக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம். போய் தூங்குங்க அப்பு…

  27. சிங்காரம் அவர்களே, ராஜரத்தினம், மேரி விவகாரத்தை தாங்கிய கட்டுரையை நீங்கள் கேள்விக்குள்ளாக்குவதையோ, அல்லது நீங்கள் கேள்வி கேட்பதே குற்றம் என்றோ யாரும் சொல்லாத நிலையில், அப்படி உங்களை யாரோ சொல்லிவிட்டது போல் நீங்களே கற்பனை செய்துகொண்டு அணுகுவது என்ன வகைப் பண்போ ? கட்டுரையின் விபரங்கள் மீது ஆயிரம் கேள்விகள் கேளுங்கள். அது நல்ல விசயம் ஆனால் வினவுக் கட்டுரைகளின் கண்ணோட்டமே மாறிவிட்டது போல வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதால் நீங்கள் எந்த வகை கண்ணோட்டத்தாளுன்னு இப்ப புரியுது. அதான் ஸ்டாலினையும், பு.ஜ வாசகர்களையும் இழிவுபடுத்தவும் முடிகிறது.

  28. தோழர்களே!

    சிங்காரம் யார் என்பதை அவரே தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதாவது அமைப்பற்ற, அரசியலற்ற பேர்வழி என்பதை அவரே வாக்குமூலமாகச் சொல்லியிருக்கிறார். சும்மாவா, எல்லாம் ஒரு பாதுகாப்புக்காகத்தான்… விடுதலைச் சிறுத்தை என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டுவிட்டால் அண்ணன் திருமாவின் அந்தரங்களுக்கெல்லாம் பதில் சொல்ல நேரிடுமே… போகட்டும்…

    எல்லாவற்றுக்கும் ஆதாரத்தைத் தாருங்கள் என்று அண்ணன் சிங்காரம் கோருகிறார். அதாவது நித்தியானந்தா – ரஞ்சிதாவின் அந்தரங்கம் வீடியோவாக வெளியிட்டதைப் போல, பாதிரி ராஜரத்தினத்தின் பாலியல் வெறியாட்டங்களுக்கான ஆதாரத்தை கோருகிறார், போலும்! அதற்கு அவர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி குமுதம் பப்ளிகேஷன்ஸ், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், கருணாநிதி குடும்ப ஊடகங்கள் தான்.

    இதுபோன்ற பலான படங்களுக்கான அத்தாரிட்டி அவர்கள்தான், சிங்காரம். உங்களுக்கு வேறு ஏதோ தத்துவார்த்த ரீதியான, சமூக ரீதியான பிரச்சினை என்று நாங்கள் தவறாக எண்ணிவிட்டோம். மீண்டுமொருமுறை உங்களுடைய அருவெறுப்பான பின்னூட்டங்களை நிதானமாக வாசிக்கும்போதுதான் தெரிகிறது, உங்களின் பிரச்சினை பலான படம், என்பது. ஆகவே தவறாமல் மேற்கண்ட ஊடகப் பொறுக்கிகளை அனுகி உங்களுக்குத் தேவையான விபரங்கள் இருந்தால் பெற்றுக்கொள்ளுங்கள்.

    நேற்றையதினம் சன் செய்திகள் என்ற சேனலில் பாதிரியார் ராஜரத்தினத்திற்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட விபரங்களைத் திரும்பத்திரும்ப ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். அவர் பல பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததை மருத்துவ அறிவியலின் மூலமாக நிரூபித்து அதற்கான ஆதாரங்களை முறையாக வெளியிட்டிருக்கின்றனர். அவன் ஒரு பாலியல் வெறிபிடித்த அயோக்கிய பாதிரி என்பது மருத்துவ ரீதியாக, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த மருத்துவ பரிசோதனை செய்தவர்களும் வன்னிய கிறித்தவ தேவதூதர்களாக இருக்கக்கூடுமோ?!

    முரசு மேற்கொள்ளவிருக்கும் கள ஆய்வுக்கான கோப்பில் மேற்கண்ட மருத்துவ அறிக்கையையும் இணைத்து வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    நித்தியானந்தா பிரச்சினையைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பெண்கள் என்று யாரும் புகார் அளிக்கவில்லை. ரஞ்சிதாவுடன் மனம் ஒத்து உறவு வைத்துக்கொண்டிருந்ததால் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஒருவேளை ப்ளாரன்ஸ்மேரியும் புகாரளிக்காமல் விட்டிருந்தால் இந்த தலித்-வன்னிய கிறித்தவ சாதிவெறி எனும் சமூகப் பிரச்சினை திரைமறைவில் தீர்க்கப்பட்டிருக்கும்; இல்லையா மிஸ்டர் சிங்காரம்!

    வேறுபல ஆதிக்க சாதிவெறியர்களால் வன்புணர்வுக்கும், இன்னபிற கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு அரசு அளித்த உதவித்தொகையைக் கையாடல் செய்து மாட்டிக்கொண்ட விடுதலைச் சிறுத்தைகளை நாறடித்து செய்திகளை அம்பலப்படுத்தியிருக்கிறார், வழக்கறிஞர் ரத்தினம் அவர்கள். அவர்களுக்கு ஒற்றைவரியில்கூட எந்த ஒரு யோக்கிய சிகாமணியும் பதில் சொல்லவில்லை.

    மேலவளவு வழக்கை நடத்திக்கொண்டிருக்கின்ற வழக்கறிஞர் ரத்தினம்தான் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை வெளியிட்டவர்.

    விருத்தாசலத்தை அடுத்த ஒரு சிறு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த முருகேசன் என்ற பொறியியல் மாணவனும், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த கண்ணகியும் காதலித்தார்கள் என்ற குற்றத்திற்காக, பல நூறு பேர் கூடியிருக்க பச்சைப் படுகொலை செய்யப்பட்டார்களே, அந்த ஆதிக்க சாதிவெறியில் உங்கள் அண்ணன் திருமாவளவரின் பங்கு என்ன தெரியுமா? புதுவிசை பத்திரிக்கையில் ஆதவன் தீட்சன்யா கள ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருக்கிறார். சிங்காரத்தின் யோக்கியத்தன்மையை அதில் காட்டிவிட்டு இங்கு வந்து பேசட்டும்.

    அதவிட்டுட்டு இங்க வந்து “வாங்குன காசுக்கு மேலயே ரொம்பக் கூவுறாண்டா…” என்கிற அளவுக்கு எங்களைப் பேசவக்காதீங்க, நண்பர் சிங்காரம்.

  29. ////////ராஜரத்தினத்துக்கு ஆதரவாக நின்று பாதிக்கப்பட்ட பெண்ணை சேசுசபையிலிருந்தே விரட்டியுள்ள நிலையில், அந்தச் சபை ராஜரத்தினத்துக்கு எதிராக நிற்பதாகக் காட்டுவது யாரை ஏமாற்ற? ராஜரத்தினத்துக்கு ஆதரவாக செயல்பட்ட பாதிரி தேவதாஸ், பாதிரி சேவியர் வேதம் ஆகிய உயர் சாதியினரும் குற்றவாளி பட்டியலில் உள்ளபோது, எந்த சாதிவெறியர்களின் தூண்டுதலால் ராஜரத்தினம் மீது அவதூறு பரப்பப்பட்டுள்ளது – என எழுந்துள்ள கேள்விகளால் இக்கட்சிகள் மக்களிடம் மேலும் அம்பலப்பட்டுப் போயுள்ளன. மக்களிடம் உண்மையை விளக்கி பாதிரியின் பாலியல் அட்டூழியத்துக்கு எதிராக ம.க.இ.க. அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது./////////

    அய்யா சிங்காரம்,

    நான் மேற்குறிப்பிட்டுள்ள வரிகள் மேலேயுள்ள பதிவின் இறுதி வரிகள் உங்களுடைய அனைத்து பின்னூட்டத்திற்கான பதில் என்று நான் கருதுகிறேன். பாதிரி ராஜரத்தினத்தின் அயோக்கியத்தனத்தை தலித் முகமூடிக்குள் வைத்து இருட்டடிப்பு செய்ய முயல்கிறீர்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். வேறு பல சாதிகளைச் சேர்ந்த, குறிப்பாக வன்னிய கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த பாதிரிகள் அதிகாரத்தில் உள்ள இந்த திருச்சபையில்தான், ராஜரத்தினத்திற்கு ஆதரவாக ஒற்றைச்சார்புடன் ப்ளாரன்ஸ் மேரி பழிவாங்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக அவரது சமூகமான வன்னிய-கிறித்தவ பாதிரிகள் நடந்துகொண்டதற்கான ஆதாரத்தை நீங்கள்தான் வெளியிட வேண்டும். வெளியிடுவீர்களா?

    பாலியல் வெறிபிடித்த ராஜரத்தினத்தின் சிறுநீரை மையாகக் கொண்டு நீங்கள் இங்கே எழுதிவருகின்ற கருத்துக்கள் எந்த கள ஆய்வின் படி இங்கு பதியப்படுகின்றன, என்பதை வெளியிடுவீர்களா?!

  30. விடுங்க தோழர்களே, கேள்வியின் காரம் பொறுக்காமல் விக்கல் எடுத்தபேர்வழிகள் பற்றி நமக்குக் கவலையில்லை. சற்றும் மனம் தளராத சிங்காரம் மீண்டும் முருங்கை மரத்திலி ஏறினார். அதாகப்பட்டது என்னவென்றால், ஒரு நிகழ்வு அதைப்பற்றிய விமர்சனம் என்று எடுத்துப் பேசவந்தால் ஏன் இந்த ஒப்பாரி? ரொம்ப பிள்ட் அப் பண்ணாதீங்க தோழர். இந்தக் கட்டுரையின் முகப்பினில் “பிளாரன்ஸ் மேரியை தூண்டிவிட்ட சாதி வெறிபிடித்த சேசு சபை பாதிரியார்களையும் பேராசிரியர்களையும் கைது செய்” என்று ஒரு விடுதலை சிறுத்தைகள் என்ற அமைப்பு சொல்கிறது. ம.க.இ.க என்ன சொல்கிறது என்றால் காமவெறிபிடித்த ராஜரத்தினத்தை கைது செய் என்கிறது. இதில் எது உண்மை? எது பொய்? நிங்கள் சொல்வதில் என்ன உண்மை இருக்கின்றது, ஏதாவது ஆதாரம் இருக்கின்றதா? அதைத் திரட்ட நீங்கள் ஏதாவது கள ஆய்வு செய்திருக்கிறீகளா? அல்லது ரூம் போட்டு ஒக்காந்து யோசிச்சு எழுதுறீங்களா? என்று கேட்டால் ஏம்பா இப்படி அல்றுறீங்க? ‘உண்மையிலேயே கொடுத்த காசுக்கு இல்லை இல்லை கடுச்ச் எலும்புக்கு மேலேயில்ல கூவுறீங்க’. நீங்க என்ன டெகல்கா மாதிரி உண்மை கண்டுபிடிக்க ஏதாவது முயற்சியெடுத்து இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறீர்களா என்ன? சும்மா ஒக்காந்துகிட்டேயே ஊளையிடக்கூடாது. உங்களுக்கும் உங்க அமைப்புக்கும் நல்லதுதாம்பா சொல்றேன். செய், வினை செய், டெகல்கா மாதிரி வினை செய். வினவினால் ஏன் உனது தொண்டையை வீண்செய்கிறாய்? இந்தியா முழுவதும் வரக்கூடிய முற்போக்கு இதழ்களை வாங்கி தமிழில் மொழிபெயர்த்துக் கட்டுரை எழுதும் நீ ரொம்பக் கத்தக் கூடாது. டெகல்கா மாதிரி ஒரு டீம் வைத்து ஒரு சமூக நிகழ்வை ஆய்ந்து எழுது! ஒத்துக்கிறேன், நீ பொம்பளை தான் என்று. (ஆம்பளை தான் என்று சொன்னால் ஆணாதிக்கம் பிடித்தவன் என்று கூட விமர்சனம் செய்வீர்கள், எதற்கு வம்பு). இன்னும் வாங்கப்பா எத்தனை பேரு கத்துவீங்களோ கத்துங்க, ஆனா கத்துக்க மாட்டேங்கிறீங்களேப்பா! நன்றியுடன் சிங்காரம். கேள்விகேள் கேலிசெய். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் நான் எந்த அமைப்புக்கும் காவடி தூக்கும் பக்தன் கிடையாது. சுயேச்சை.

    • சிங்காரம் அவர்களே,
      முற்போக்கு இதழ்களை எல்லாம் மொளி பேத்துப் போடும் இவுங்க கிடக்காங்க.. களத்தில் இறங்கி ஆய்வு செய்தாங்க பாருங்க அவங்கதான் ரொம்ப யோக்கியம்.. அவங்க செஞ்ச கள ஆய்வு பத்திப் பேசுவோமா?

      பாதிரிக்கு ஆதரவாக அக்டோபர் 19 அன்று ஓர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் சிலர்.

      அச்செய்தி: “பாதிரியார் ராஜரத்தினம் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்து உயர் பதவிக்கு வருவதை தடுக்கிறார்கள், இது தீண்டாமை செயல், எனவே அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று போராட்டடத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் போட்டனர். சார்லஸ் ரிச்சர்டு தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.

      பிறகு அவர்கள் மறியலுக்கு முயன்றனர். உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர். பெரியார் திராவிடர் கழக தலைவர் ராஜேந்திரன் மற்றும் பால்பிரபாகரன், தலித் ஆரோக்கியதாஸ் உள்பட 79 பேரை போலீசார் கைது செய்தனர். ”

      இதில் “கள ஆய்வு” செய்து போராட்டத்தில் கலந்து கொண்ட பெ.தி.க தலைவர் ராஜேந்திரனை அக்கட்சி இந்த “கள ஆய்வுக்காக” கடிந்து கொண்டதாம். அது பற்றி பெதிக பத்திரிக்கை ‘பெரியார் முழக்கத்தில்’ வந்த செய்தி..

      “திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராக உள்ள பாக்கியராஜ் எனும் கிறிஸ்தவ ‘பாதிரியார்’ மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் திருச்சி மாவட்ட கழகத் தலைவர் செ.த.இராசேந்திரன் பங்கேற்றதை கழக மாவட்டக் கமிட்டி கண்டித்தது. செ.த. இராசேந்திரன், தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். ”

      சிங்காரம் அய்யா, இப்போ சொல்லுங்கய்யா?

      செ.த.ராசேந்திரன் செய்தது “கள ஆய்வா?” அல்லது அந்தக் “கள ஆய்வு”க்காகவே கட்சி அவரைக் கண்டித்ததே அது “கள ஆய்வா?”

      பெ.தி.க. தலைமையை வன்னியர் சக்திகள் தூண்டி விட்டுருக்குமோ?
      பெதிக ராசேந்திரன் மட்டும் ஏன் முதலில் வன்னிய சக்திகளிடம் சேராமல் போனார்?

      உங்களோட “கள ஆய்வு” அப்படிங்கறது “கவர்” ஸ்டோரி மாதிரிதானே?

    • ///கட்டுரையின் முகப்பினில் “பிளாரன்ஸ் மேரியை தூண்டிவிட்ட சாதி வெறிபிடித்த சேசு சபை பாதிரியார்களையும் பேராசிரியர்களையும் கைது செய்” என்று ஒரு விடுதலை சிறுத்தைகள் என்ற அமைப்பு சொல்கிறது. ம.க.இ.க என்ன சொல்கிறது என்றால் காமவெறிபிடித்த ராஜரத்தினத்தை கைது செய் என்கிறது. இதில் எது உண்மை? எது பொய்?///

      சற்றும் மனம் தளறாத சிங்காரம் அண்ணே, அப்படின்னா பாதிரி ராஜரத்தினம் யோகியர்ரு, நல்லவர்ருன்னு சொல்றீங்க, சொல்றீங்க என்ன அதான் சொல்லிட்டீங்களே.
      இந்த எழவை நேத்தே சொல்லி தொலைக்க வேண்டியது தானே, அதுக்கு எதுக்கு 24 மணி நேரம்?

      சரி, எப்படியோ உங்களை கொண்டு வர வேண்டிய இடத்துக்கு கொண்டுவந்து கோவணத்தையும் கழட்டியாச்சு (அண்ணன் அம்மணமா நிக்குற அழகை எல்லோரும் பாத்துக்கோங்க). சரி, இப்ப போயி நீங்க பாதிரிகிட்ட அப்பம் வாங்கி சாப்பிடலாம், தங்க பஸ்பம் கூட கிடைக்கிறதாம்!

      அய்யய்யோ! ஆனா அவர எங்க போயி தேடுவீங்க? பாதிரி மீது திருச்சி போலீசு கொலை மிரட்டல், கற்பழிப்பு, கட்டாய கருக்கலைப்பு என்று மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்திருக்கிறது. எனவே பாதிரி தலைமறைவு வாழ்க்கையில் இருக்கிறார். அவரை எங்கேன்னு தேடி கண்டுபிடிப்பீங்க?
      சரி கவலைப்படாதீங்க, அந்த போராளி எங்கே தலைமறைவாக இருக்கிறார் என்று வி.சி க்கும், பெ.தி.க வுக்கும் தெரியும். அவங்ககிட்ட போயி கேளுங்க!
      சும்மா கேட்க்காதீங்க, நான் உங்களுக்கும் பாதிரிக்கும் காவடி தூக்குகிற சொம்பைன்னு சொல்லி கேளுங்க அப்ப தான் சொல்லுவாங்க.

      டாடா பாய் பாய்!

    • சிங்காரம்,
      ‘சுயேச்சை’ என்பது ஜனநாயக பண்புக்கு எதிரானது தெரியுமா? “அமைப்பு” என்பது மட்டுமே பொது ஒழுங்கை ம்திக்கும் சுய கட்டுப்பாடான ஜனநாயகப் பண்பைக்கொண்டது என்பதாவது தெரியுமா? நான் சொல்வது எல்லா அமைப்பையும் அல்ல. நக்சல்பாரி அமைப்பை.

  31. திரு. சிங்காரம் அவர்களுக்கு நீங்கள் ஆதாரம் ஆதாரம் என்று இரண்டு நாட்களாக கூவிக் கொண்டு இருப்பது நான் இப்போது தான் கவனிக்க முடிந்தது தாமதத்திற்கு மன்னிக்கவும். பாதிரி ராஜரத்தினம் ஒரு பெண்ணை அதுவும் ஒரு கன்னிகாஷ்திரியை 4 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து இருந்துள்ளார் என்பதுதான் ஊரறிந்த உலகறிந்த உண்மை ஆனால் அதற்காக அவர் தண்டிக்கபடாமல் பதிலாக பாதிக்கப்பட்ட பெண்ணையே தண்டித்து உள்ளனர் திருச்சபையை சேர்ந்தவர்கள்.(திருச்சபை இது ஒன்றும் ஆச்சரியமில்லைதான் உலக கத்தோலிக்க திருச்சபையே பாலியல் வழக்கில் குற்றம் நீரூபிக்கப் பட்ட பாதிரியார்களை காபாற்றி விஷயம் வெளியே வராமல் தடுத்து வைத்திருந்த விஷயம் கசிந்து வெளியேறி நாறியது உலகறிந்த்து). இன்று தலித் உருவத்தில் மறைந்து கொள்ளும் ராஜரத்தினத்திற்கு ஆதரவாக அன்று திருச்சபையில் இருந்த மேல்சாதியினரே அவருக்கு ஆதரவாக செயல்பட்டு அந்த கன்னிகாஷ்திரியை வெளியேற்றினார்களா இல்லையா. இப்போது நீங்கள் சொல்வது போலவே அந்த பெண் மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த்தாகவே வைத்துக் கொள்வோம் ஆனால் இதன் மூலமாக நீங்கள் சொல்வது என்ன? பாதிரியார் குற்றமே செய்யவில்லை என்கிறீர்களா? அப்படி அவர் குற்றம் செய்யவில்லை என்றால் அவர் ஏன் தலை மறைவாக உள்ளார். முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள். ராஜரத்தினம் குற்றம் செய்துள்ளார் என்பது சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் இருந்ததால்தான் காவல்துறை அவர் அதிகார வர்கத்தில் இருப்பவர் என்பதையும் புறந்தள்ளிவிட்டு அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவரை கைது செய்துள்ளது. கைது செய்த பிறகு அவரிடம் எடுக்கப்பட்ட மருத்துவ சோதனைப்படி அவர் கன்னிகாஷ்திரியிடம் குற்றம் புரிந்துள்ளார் என்பதும் அது மட்டுமின்றி பல பெண்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது என்றும் நிரூபணமாகியுள்ளது. இதெல்லாம் உண்மையா, இல்லையா? இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன. மா.க.இ.க வின் நிலைப்படி பாதிக்கப்பட்ட பெண்ணையே தண்டித்திருக்கும் ஆனாதிக்க திருச்சபையின் முகமூடியை கிழிக்க வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தை திருச்சபைக்கு வெளியே கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளோம். ஆனால் விஷயம் வெளியே வந்தவுடன் சட்டதின் முன் குற்றம் நிரூபணமாகும் வாய்ப்புள்ளதை சரியாக புரிந்து கொண்ட ராஜரத்தினம் இனி திருச்சபையில் உள்ள மேல் சாதியினரின் உதவி தன்னை காப்பாற்றது என்பதால் உடனடியாக தலித் போர்வையில் மறைந்து கொள்ள நினைக்கிறார். இங்கே யார் செய்தாலும் குற்றம் குற்றம் தான் என்கின்ற மா.க.இ.க வின் செயல் சரியா, அல்லது என்ன குற்றம் செய்தாலும் சரி அவர் தலித் என்ற்றால் அவருக்கு ஆதரவாக செம்பு தூக்குவோம் என்கின்ற ஓட்டுக் கட்சிகளின் நிலை சரியா. சரி இப்போது உங்களுடைய முறைக்கு வருவோம். இரண்டு நாட்களாக ஆதாரம், ஆதாரம் என்று கூவிக்கொண்டிருக்கும் நீங்கள் ராஜரத்தினம் செய்த குற்றத்திற்கு ஏன் திருச்சபை அவரை தண்டிக்காமல் அந்த பெண்ணை மட்டும் தண்டித்தது? இதற்கு நீங்கள் கருத்து சொல்ல மாட்டீர்கள் ஏன் என்றால் உங்களுக்கு ஆதாரம் தேவை. சரி நான் என் நிலைப்படி சொல்கிறேன் வினவினுடைய கள ஆய்வின்படி ராஜரத்தினம்தான் அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார் என்பது உறுதி ஆகியுள்ளது. அப்படி நீங்கள் அதை மறுத்தீர்களானால் நீங்கள் கள ஆய்வு செய்து ராஜரத்தினம் குற்றமற்றவர் என்று நிரூபியுங்கள். ஆனால் இதையெல்லாம் நீங்கள் செய்ய மாட்டீர்கள். ஏனென்றால் உங்களுடைய நோக்கமே ஓட்டுப் பொறுக்கிகளுக்கு காவடி தூக்கி ஜால்ரா அடிப்பது தான் என்பது இரண்டு நாட்களாக உங்கள் பின்னூட்டத்தை படித்தாலே தெரிகிறது. இதை எடுத்து நீரூபித்தாலும் நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் ஏன் என்றால் “you want evident”

  32. கேள்வி கேள் கேலி செய். ஒரு வாரம் இடைவெளியாகிவிட்டது. அதுக்குள்ள கட்டுரையை எடுத்து உள்ளூக்குள்ளே ஒளித்து வைத்துவிட்டீர்கள். பரவாயில்லை. என்னவேணும்னாலும் கத்துங்க. கத்துவதைத் தவிர வேற வழியில்லை. கத்து, கதை செய். என்று வேண்டுமானல் தளத்தின் பெயரை மாற்றிக்கொள்ளலாம். ஆதாரம் இல்லாமல் சொந்த விருப்பு வெறுப்பின் காரணமாக ஒரு கட்டுரையை எழுதியாச்சு. இப்போ நிரூபிக்க முடியாமல் தவிப்பு. ராஜரத்தினம் குற்றாவாளியா இல்லையா என்பதை எப்படித் தீர்மானம் செய்வது. இது தான் இயங்கியல் பொருள்முதல்வாதம் கற்றுக்கொடுத்த அறிவியல் பார்வையா? கேள்வி கேள் கேலி செய். நான் சுயேச்சை தான். அமைப்பு தான் ஒழுங்கு என்றால் மற்றவர்கள் எல்லாம் விலங்கா? ஏம்பா உளறுரீங்க? உளறுகிறவன் தான் சித்தாந்தவாதியா? அதுவும் நீ ஏற்றுக்கொண்ட சித்தாந்தப்படி கூட ஒரு கருத்தை விவாதிக்க முடியவில்லையே உன்னால். ஒரு தரப்பு இல்லை என்கிறது ஒரு தரப்பு உண்டு என்று சொல்கிறது என்றால் எது உண்மை என்பதை எப்படித் தேடுவது. உண்டு என்று சொல்பவன் தான் ஆதாரம் தர வேண்டும். தரமாட்டேன் கத்துவேன் என்றால் கத்து. எமக்குக் கவலையில்லை. நீ அடையாளம் காணப்படுகிறாய் என்பதி கவனி. தில்லை வழக்கில் உச்ச நீதிமன்ற செலவிற்காக உங்களுக்கு நான் ரூ.1000 வரை கொடுத்திருக்கின்றேன். எனக்கு கொடுக்கும் பதிலா இது. என்ன சமூகப் பொறுப்பி இருக்கிறது உனக்கு. பதில் சொல். அடியாட்களையும், அல்லைக் கைகளையும் விட்டு சலம்பவிடுவது என்ன ஜனநாயகம். புதிய ஜனநாயகமா? இனி கத்து, கதை செய். ‘இப்ப விடு பாக்கலாம்’

  33. சிங்காரம்,
    “வினவு தளத்தில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!” என்ற வாசகங்களை ஒவ்வொரு பக்கத்திலும் சொல்லியிருப்பதை தாங்கள் கவனிக்கவில்லையோ! எல்லாப் படைப்புகளுக்கும் இது பொருந்தும் என்றானப் பிறகு கேவலம் பாதிரியின் “பலான” விசயத்தை அம்பலப்படுத்தியதற்கு மட்டும் பொருந்தாமல் போயிடுமா என்ன? ஒரு வேளை அப்படி நீங்க சொல்ற மாதிரியே உண்மைக்கு மாறாய் இருந்தா ஒங்க சொந்தக் காரங்கதான் விட்டுடுவாங்களா? (அதாங்க ஒங்க வர்க்கப் பேர்வழிங்க எல்லோரும்தான்.) அதனால அதிபுத்திசாலித்தனமா பேசுறோம்ன்னு நெனச்சுக்கிட்டு மட்டரகமாக அணுகுவது அப்பட்டமாகத் தெரிகிறது ஒங்க புலம்பலில். தனி மனித அகம்பாவம், அல்லது தனி மனித மனோபாவம் என்பது சமூக நலனுக்கு எந்தவிதத்திலும் ஏற்புடையதாக இருந்துவிட முடியாது. அதேபோல் சமூகத்தில் யாரும் தன்னை “சுயேச்சை, சுயேச்சை” என்று சொல்லிக்கொண்டு அலைவதுமில்லை. தங்களைத் தவிர. ஆனால் அமைப்புக் கண்ணோட்டம் என்பது ஒரு கூட்டுத்துவ சிந்தனையை அடிப்படையாகக்கொண்டது. இதில்தான் இரக்க உணர்ச்சியைத் தாண்டி கடமை உணர்ச்சி வெளிப்படும். இயக்கவியல், பொருள்முதல்வாதம் போன்ற சில வார்ததைகளை உச்சரித்துவிட்டால் உங்கள் வாதம் தர்க்கம் ஆகிவிடுமா? என்னமோ ஒரு பெரிய சமூக கூட்டத்துக்கே நியாயம் பேசுவது போல், கேவலம் ஒரு பலான பாதிரிக்கு இப்படி வரிந்துகட்டிக்கொண்டு ஒரு சுயேட்சையினால்தான் பேச முடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். சமூகத்தை நேசிக்கும் வேறு யாரும் இப்படிப் பேச முடியாது.
    நீங்க ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தீர்கள் என்பதற்காக நேர்மையையும், கொள்கைகளையும் கைவிடவேண்டும் என்கிறீர்களா? ஒங்க சொந்தக்காரங்ககிட்டயே போயி கேட்டுப் பருங்க ம.க.இ.க. தோழர்களின் பண்பாடு பற்றி?

  34. கேள்வி கேள், கேலி செய், தோழர்களே இதோ திருச்சி பத்திரிக்கையாளர் கிளப்பில் 17.12.2010 மக்கள் கண்காணிப்பகம் நியமித்த உண்மை அறியும் குழுவினர் தங்கள் விசாரணையின் முடிவாக இந்தப் பிரச்சனையில் பாலியல் பலாத்காரம் இருந்ததாக நம்பமுடியவில்லை என்றும் இவர்களுக்கு இடையே, அதாவது ராஜரத்தினம் மற்றும் மேரிக்கு இடையே, இணக்கமான உறவே இருந்திருக்கின்றது என்று கூறியிருக்கின்றது. மேலும் பிளாரன்சு மேரியின் ஆதரவாளர்கள் யேசு சபையை பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கின்றனர். கத்திக் கத்தி கதை செய்தீர்களே, வினவும் ம.க.இ.கவும் இப்பொழுது உங்கள் பொய் முகத்தை எங்கே போய் வத்துக்கொள்வீர்கள். உங்களின் அயோக்கியத்தனம், உட்கார்ந்த இடத்திலிருந்தே கதை எழுதும் நாடகம் மற்றும் ஒருவர் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் அந்நபரை கவிழ்க்கலாம் என்ற பார்ப்பன மூளை வெளியே வந்துள்ளது. போது உங்கள் போலித்தனம். வெளியே வா தக்க பதிலோடு. 17.12.2010 தமிழ்முரசு மாலை இதழைப் படித்துப்பார்த்திருப்பீர்கள். ஒரு உண்மையை நடுநிலையில் இருந்து விசாரித்து கட்டுரை எழுதுங்கள். நீங்கள் செய்தது தவறு என்று ஏற்றுக்கொள்ளுங்கள். உண்மைக்கான கேட்கையிலிருந்து புரட்சி பிறக்கின்றது. போலி புரட்டுகளிலிருந்து அழுகிய வாடைதான் வருகின்றது. உங்கள் தவறுகளை திருத்திக்கொண்டு ஒத்துக்கொண்டு கட்டுரை எழுதுங்கள். கேள்வி கேள் கேலி செய். நன்றி சிங்காரம்

  35. உனது முகம் கிழிந்தது. வினவுவே பதில் சொல். மக்கள் கண்காணிப்புக்குழுவின் உண்மை அறியும் குழுவினர் இது பாலியல் பலாத்காரம் அல்ல என்றும், யேசு சபையிடம் பிளாரன்சு மேரியின் சாதிக்காரர்கள் பணமிரட்டல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. வாய் கிழிய உனது அடியாட்களையும் அல்லக்கைகளையும் அனுப்பி பொய்க்கதைகளையும், கட்டுக்ககதைகளையும் எழுதும் மஞ்சள் தளமாகிவிட்டது வினவு. ராஜரத்தினம் மற்றும் மேரியின் உறவு மனமொப்பிய உறவே. பாலியல் பலாத்காரம் என்பது நீ மேரிக்கு எழுதிக்கொடுத்த கதையா கடிதமா? அல்லது பணமிரட்டலுக்கு நீங்களும் துணை போனீர்களா? பதில் சொல்லுங்கள். யார் இந்த வினவு? யார் இந்த ம.க.இ.க? மக்களே புரிந்துகொள்ளுங்கள்.

  36. ஆசாத், இரா.மணிகண்டன், அமைப்பு ஆதரவாளன் போன்றோர்களே படியுங்கள் 17.12.2010 தமிழ்முரசு மாலை இதழின் செய்தியை. மக்கள் கண்காணிப்புக் குழு அமைத்த உண்மை அறியும் குழு கொடுத்த பேட்டியை. பின்பு, வினவு மற்றும் ம.க.இ.கவின் யோக்கியதையை பேசுங்கள். இன்னா நைனா இவங்க யோக்கியதை. கேள்வி கேளு அண்ணாத்தே. கேள்வி கேக்காட்டி பேஜாராப்பூடும், நம்பளை ஏமாத்திடுவாய்ங்க. உசாரு.

  37. கன்னித்துறவி மேரியும் துறவுத்தந்தை ராஜரத்தினமும் கொண்ட களவொழுக்கம் வெளியேவந்துவிட்டது. மேரி யேசு சபையை மிரட்டியிருக்கிறார் என்பதும் உண்மை. வன்னியர் சாதிவெறியால் தாழ்த்தப்பட்டவரான ராஜரத்தினம் துரத்தப்பட்டிருக்கிறார் என்பதும் உண்மை. இதை நான் முன்பே எடுத்துச் சொன்னேன். வினவு எம்மை அசிங்கப்படுத்திவிட்டது. இன்று உண்மை கண்டறியப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. ம.க.இ.கவின் பார்ப்பன மூளையும் சாதிவெறியும் வெளிப்பட்டுவிட்டது. எச்சரிக்கை. வினவுவும், ம.க.இ.கவும் இனி கவனமாக நிகழ்வுகளை ஆராய்ந்து எழுதுங்கள். இல்லையேல் மக்கள் காறித்துப்புவார்கள். வினவு வாசகர்களே, ம.க.இ.க தோழர்களே எதையும் கேள்வி கேளுங்கள்.

    • ஆமா சிங்காரம் நீங்க சொல்றது உண்மைதான். ராசாவ கூட தலித் என்பதற்காகத்தான் ஊழல் அது இதுன்னு போலியா அம்பலப்படுத்துறாங்க• பாருங்க• அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட டாடா ராடியா ராசா இன்னுமுள்ள பார்ப்பன அதிகாரிகள் எல்லாம் உடந்தை என்பது கூட டேப் மூலமா வெளிய வந்திருச்சு.

      ஆனா ஊருல இருக்குற பிற்பட்டசாதி பெண்கள் எல்லாம் முன்னேறின தலித் ஆண்கள் கூட உறவு வச்சுக்கிட்டு பின்னாடி அத வச்சே காசு பறிக்குறாங்க• இத அம்பலப்படுத்துறதுதான் மக்கள் கண்காணிப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புகளோட வேலை. மேல்சாதி பெண்களோட சாதித் திமிரை உடைக்க தலித் ஆண்கள் ஆணாதிக்கவாதியாக இருந்தால் கூட பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராகவே அணிதிரள வேண்டும்.

      சமூகத்தில் ஆண்=பெண் என இருக்கும் ஜனநாயகத்தில் யார் பாதிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவரும் தவறிழைத்தாரா அல்லது தவறுக்கு துணை போனாரா என ஆராய்ந்து தலித் விடுதலையை சாதிக்க வேண்டும் என்ற மக்கள் கண்காணிப்பகத்தின் சமூகப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  38. யார்மீதும் யாரும் பொய் கூறவேண்டியது இல்லை. உண்மை என்ன என்பது ஒரு தாகம். காழ்ப்புணர்ச்சி தேவையில்லையே. கண்மூடித்தனமாக எதையும் வெளியிடுவதன் பொருள் என்ன? ராசரத்தினம் மேரியை வல்லுறவு கொள்ளவில்லை. இவர்களிடையே இணக்கமான உறவே இருந்திருக்கின்றது. பேரம் பேசப்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. சாதிசங்கங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. இதுபோன்ற உண்மைகளை விசாரணையின் மூலம் மக்கள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் மீதான் வினவுவின் நிலைப்பாடு என்ன? அறைக்குள்ளிருந்தே ஒரு கட்டுரையை தயாரிக்கிறீர்களா? இது வினவா அல்லது புனைவா? பதில் சொல். ஏன் உனது கள்ள மவுனம்?

  39. நான்கு வருடங்களாக ஒரு பாதிரியார் திருச்சபைக்குள் தகாத பாலுறவில் ஈடுபட்டுள்ளார்.

    அதற்கு அவர் தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தினாரா இல்லையா என்பது இன்னொரு விடயம்.

    முதலாவது குற்றத்தைத் திருச்சபை தண்டிக்க வேண்டும்.
    மற்றது நாட்டின் சட்டம் தொடர்பானதும் கூட.

    ஆணாதிக்கம் பற்றிய கவலையைத் தலித்தியப் பார்வை மேவ விடலாகாது.

    ராசா விடயத்திலும் மற்றவர்களைத் தண்டிக்க வற்புறுத்துவது தேவையே ஒழிய, களவில் ராசாவின் பங்கை மூடி மறைப்பது தலித்துக்களுக்கு வழங்கப்படும் நியாயமாகிவிடாது.

  40. வல்லுறவு கொண்டார் என்ற பொய்யைச் சொல்லவேண்டியது இல்லையே. ஏன் சொல்ல வேண்டும். இருவருக்கும் இணக்கமான உறவே இருந்திருக்கின்றது. ஏன் பொய் சொல்லவேண்டும். காழ்ப்புணர்ச்சியா? என்ன காரணம். எதிர்த்து கேள்வி கேட்டதற்கு நக்கலும் நையாண்டியும் தேவையா? புனைவாக ஒரு கதையைச் சொல்லி இது எல்லாம் இப்படித்தான் என்று ‘ஒக்காந்து யோசிக்க’ இது ஒன்றும் திரைக்கதை இல்லையே. பின் உனது யோக்கியதை என்ன? பதில் சொல். இங்கே தலித் பிரச்சனையே இல்லை என்று வைத்துக்கொள்வோம். இதனை, இப்பிரச்சனையில் நீங்கள் சொன்ன பொய்யை நாம் எப்படி புரிந்துகொள்வது? பாதிரியார் ஒரு தலித் மேலும் மாநில கத்தோலிக்க திருச்சபையின் தலித் பிரிவின் துணைத்தலைவர். திருச்சி மறைமாவட்டத்தில் வன்னியகிறித்துவர்களின் ஆதிக்கம் அதிகம். என்ற சமூக எதார்த்தத்தில் சம்பந்தப்பட்ட பாதிரியார் மீது வல்லுறவு பொய்க்குற்றச்சாட்டு சாட்டுவதும், பதவி விலகச்சொல்லி போராட்டம் செய்வதும் எதை உணர்த்தும்? பதில் சொல்லுங்கள்? உண்மையை மறைக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது? பொய் சொல்லவேண்டியதன் அரசியல் என்ன?

  41. பொய், பொய், பொய். ஏனிந்த பொய்? பாதிரியார் வல்லுறவு கொண்டார் மேரியை என்று ஏன் பொய் சொல்லவேண்டும்? உங்களுக்கும் பாதிரியாருக்கும் வேறு என்ன பகை? உங்களுக்கும் மேரிக்கும் என்ன கூட்டு? மேரியின் ஆதரவாளர்கள் ஏசு சபையிடம் பேரம் பேசியிருக்கிறார்கள் என்று மக்கள் கண்காணிப்பகம் சொல்கிறது. பேரம் பேசுவது எல்லாம் ஒரு புரட்சியா? ஒரு பிழைப்பா?

    • பிளாரன்சு மேரி யோ அல்லது அவரது உறவினர்களோ புரட்சியாளரா அல்லது சமரசவாதிகளா என்பது பிரச்சினைக்கு அப்பாற்பட்ட விசயம். தனது தலித் போர்வை மூலமாக அதிகார வர்க்கத்தில் அமர்ந்த பிறகு தன்னை போலவே சமூக அரங்கில் ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தை சார்ந்த ஒருவரிடம் அதிகாரத்தை காட்டி உறவுகொள்வதற்கும் ஆதிக்கசாதியினரின் பொறுக்கித்தனத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஆதிக்கசாதியினர் இதுபோன்ற தருணங்களில் தாம் பார்ப்பன வேளாள சாதியால் ஒடுக்கப்படுவதை முன்னிலைப்படுத்துவதைப் போல இப்பிரச்சினையில் தலித் போர்வையை பாதிரியார் பயன்படுத்துகிறார். மக்கள் கண்காணிப்பகம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான வரம்பில் பெண் விடுதலை வராதிருப்பதாலும் அதற்கான பிரியாரிட்டி அவர்களுக்கு இரண்டாம் பட்சமானதாலும் உண்மையை விட அதிகார வர்க்க தலித் விடுதலை அவர்களுக்கு முதல் பட்சமாகிறது. இணக்கமான மனநிலையில் உறவுகொண்டனர் என ஒரு மனித உரிமைகளுக்கான அமைப்பு போல தன்னை நிறுவிக்கொள்ளும் ஒரு அமைப்பு கண்டறிந்த்தாக சொல்வதை போலீசு கூட தன் விசாரணையின் முடிவில் சொல்ல கூசும் வார்த்தைகள். பிரச்சினையை விட உண்மையை விட பெண்ணீயமா அல்லது தலித்தியமா எதனை ஆதரிப்பது என்ற மக்கள் கண்காணிப்பகத்தின் முன்முடிவும் அம்முடிவினை நோக்கிய அவர்களது விசாரணையும் விபரமாக இதுவரை அவற்றை முன்வைக்காத அடிப்பொடிகளின் ஆளுமைகளும் அவதூறுகளின் பிலாக்கணமாகவே உள்ளது.

  42. வினவு, புதிய ஜனநாயகம், ம.க.இ.க போன்ற அமைப்புகள் பாசிஸ்டுகளாக பரிணாம வளர்ச்சிபெற்றுவிட்டன. எத்தனை தடவை சொன்னாலும், உண்மையைச் சொன்னாலும் தான் சொல்லிவிட்டால் சொல்லியது தான் அது தான் உண்மை. பொய்யைத் திரும்பத்திரும்ப சொன்னல் உண்மையாகிவிடும். என்றெல்லம் ஒரு பாசிஸ்டாக நீங்கள் சிந்திப்பது கேவலமாக இருக்கின்றது. பாசிஸ்டுகளிடம் உண்மை பேசுவது எவ்வளவு கஷ்டம் என்று புரிகிறது.

  43. இட்லரின் நிழல்களே, முசோலினியின் முகமூட்களே கேளுங்கள்! ராஜரத்தினம் மற்றும் மேரி விவகாரத்தில் மக்கள் கண்காணிப்பகம் என்ற நடுநிலை அமைப்பு சில கட்ட விசாரணைகளின் முடிவில் சில உண்மைகளை வெளியிடப்பட்டுள்ளன. அவை. 1. ராசரத்தினம் மேரியை வல்லுறவு கொள்ளவில்லை. 2. ராசரத்தினம் மற்றும் மேரிக்கு இடையே இணக்கமான உறவே இருந்திருக்கின்றது. 3.மேரியின் ஆதரவாளர்கள் ஏசு சபையிடம் பேரம் பேசியுள்ளனர். 4.சாதிச் சங்கங்கள் இவ்விவகாரத்தில் தலையிட்டுள்ளன. மேற்கண்ட உண்மைகளைச் சொல்வதற்கு மக்கள் கண்காணிப்பகம் ஆதாரங்களை வைத்துள்ளன. ஆனால் ம.க.இ.க, வினவு, புதிய ஜனநாயகம் போன்ற அமைப்புகள் ராஜரத்தினம் மேரியை வல்லுறவு கொண்டுவிட்டார் என்று பிரச்சாரம் செய்கின்றனர். என்ன ஆதாரம் வைத்துள்ளனர்? இவ்வாறு கேட்டால், பல உதாரண கதைகளை அவிழ்த்துவிடுகின்றனர். இது எல்லாம் அப்படித்தான் இருக்கும் என்று புனைகின்றன. இது ஜனநாயகமா. நீங்கள் என்ன விசாரணை நடத்தியுள்ளீர்கள்? இவ்வாறு கேள்விகள் கேட்டால், அவதூறாக பேசுவது கேவலமாக பாசிஸ்டுகளாக நடந்துகொள்வது எல்லாம் இவ்வமைப்புகளின் நோக்கங்களை வெளிப்படுத்துகின்றன. மக்களே எச்சரிக்கை! பார்ப்பான் முகமூடி போட்டுக்கொண்டு வெளியே வருகின்றான். இது போன்ற விவகாரங்களில் மாட்டிக்கொண்டதைப் போல வெகு சில சமயங்களில் மட்டுமே இவர்கள் மாட்டிக்கொள்வார்கள். மாட்டிக்கொண்டதை வைத்து நாம் உசாராகிவிட வேண்டியது தான். இது எல்லாம் ஒரு பொழைப்பா! புரட்சி என்கிற பேரில் பேரம் பேசுவது, பொய் சொல்வது, காழ்ப்புணர்ச்சியோடு நடந்துகொள்வது, பாசிஸ்டுகளே முசோலினியின் முகமூடிகளே. சீச்சீ, தவறை ஒத்துக்கொள்ளாத நீயெல்லாம் ஒரு சமூக அமைப்பா?

    • சிங்காரம், நீங்கள் ஒரே பெயரில் வந்து ஒரே விசயத்தை சொல்ல்லாமே? எதற்கு முரசு, கலாட்டா என்று பல்வேறு அவதாரங்கள்?

    • கலாட்டா முரசு சிங்காரம்,
      ஜனநாயக நெறிகளை வெறுக்கும் அதிகாரத்துவம் தனக்கு கீழ்படியும் ஒரு பெண்ணிடம் வைத்துக்கொள்ளும் பாலியல் உறவு அது மனமொத்த உறவாக இருந்தாலும், வல்லுறவாக இருந்தாலும் சாராம்சத்தில் ஒன்றுதான் என்பதை உங்கள் நடுநிலைத் தத்துவக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள முடியாது. இதை அந்த உறவுகளுக்கே உரிய குணாம்சத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அரசியல் நேர்மை வேண்டும். அதிகாரத்துவமும், பார்ப்பனியமும் இரு வேறு குணாம்சம் அல்ல; பாதிரி ராஜரத்தினம் ஒரு தலித் என்பதற்காக இக்குணாம்சத்திற்கு அப்பாற்பட்டவராக ஆகிவிட முடியுமா என்ன?

  44. கேள்வி கேள், கேலி செய். அவதாரம் எடுக்குமளவிற்கு நான் ஒன்று உயர் சாதியல்ல. வினவு, ம.க.இ.க., பு.ஜ இன்னும் பல அவதாரங்களாய் அரிதாரும் பூசும் நீங்கள் இந்த எளியவனின் ஒரே கேள்விகயை பல்வேறு பெயர்களில் எதிர்கொள்வதில் கஷ்டம் இருக்காதே. உண்மையை ஒருத்தராய் சொல்லிப்பார்த்து எடுபடவில்லையே. அது இருக்கட்டும் ஒருபுறம். இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் பாசிச வாயைத்திறந்து. உங்கள் பொய்யின் அரசியல் என்ன?

  45. பொய்யே ஒரு அரசியல் தான். இதில் பொய்க்கு ஒரு அரசியலா என்று கேட்கலாமா? உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அந்தக் கன்றாவியைத்தான் முன்னாடியே சொல்லியிருக்கலாமே! பொய்யை மேதாவித்தனமாக சொன்னால் உண்மையகிவிடுமா? பாசிச அரசியலுக்கு வெட்கம் இருக்காது. அதை எதிர் பார்ப்பது நமது தவறு.

    • சிங்காரம், எத்தனை தடவை சொல்வது? அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் தனக்கு கீழே இருக்கும் பெண்ணிடம் உறவு வைத்திருப்பதும் சரி, மிரட்டி உறவு கொள்வதும் ஒன்றுதான். இது கூட புரியவில்லை என்றால் என்ன செய்வது? அவர் தலித்தாக இருப்பதால் அவரை மன்னிக்க வேண்டும் என்று இந்த குற்றத்திற்கு துணை போகாமல் உண்மையின் பக்கம் நின்று பேசுங்கள்.

      • “வந்துட்டான்யா யோக்கியன் சொம்பை எடுத்து உள்ளே வை”. சரிதான். //பிளாரன்ஸ் மேரி என்ற கன்னியாஸ்திரியை மிரட்டி கடந்த நான்காண்டுகளாகப் பாலியல் வன்முறையை ஏவி வந்த, திருச்சி ஜோசப் கல்லூரி முதல்வராகவும் பாதிரியாராகவும் உள்ள ராஜரத்தினத்தின் பாலியல் அட்டூழியம் அண்மையில் வெளிவந்து தமிழகமெங்கும் நாறத் தொடங்கியுள்ளது// இது தான் நிங்கள் சொன்னது. நினைவிருக்கின்றதா? மிரட்டி, பாலியல் வன்முறை, பாலியல் அட்டூழியம் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இப்பொழுது /////அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் தனக்கு கீழே இருக்கும் பெண்ணிடம் உறவு வைத்திருப்பதும் சரி, மிரட்டி உறவு கொள்வதும் ஒன்றுதான். இது கூட புரியவில்லை///// இப்படி சொல்வது. எப்படி சார், உங்களால மட்டும் இப்படி முடிகிறது. ஒரு இடத்தில் பணிபுரியும் துறவொழுக்கத்தில் இருப்பவர்கள், துறவொழுக்கத்தில் இயலாமை காரணமாக இணக்கமான உறவு வைத்திருப்பது பாலியல் வல்லுறவா? அது எப்படி ‘மிரட்டி உறவு கொள்வதும் ஒன்றுதான்’ என்று வெகமில்லாமல் சொல்கிறீர்கள்? இப்பதான் இந்தக் கேள்வியை நான் கேட்க வேண்டும்? தலித்துனா அப்படித்தானா? ஏன் மருதையன், ம.க.இ.க பொதுச் செயலாளர், தன்னோடு களப்பணியாற்றும் ஒரு பெண்தோழரோடு காதல் கொள்ளும் போது, மருதையன் தனது பொதுச் செயலாளர் பதவியைப் பயன்படுத்தி, ஒரு பெண்தோழரின் விதவைத்தன்மையை பலவீனமாகப் பயன்படுத்தி வசப்படுத்தினார் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? மருதையனும் மாநிலம் தழுவிய ஒரு நக்சல் பாரி இயக்கத்தின் வலிமை வாய்ந்த பொதுச் செயலாளர் தானே! அவர் தன்னோடு களப்பணியாற்றும் ஒரு காம்ரேடை காதல்கொள்வதும் காதல்வசமாவதும் காதல்வசப்படுத்துவதும், மிரட்டி உறவுகொள்வதற்குச் சமமா? பார்ப்பான் என்றால் ஒரு நியாயம் தலித் என்றால் ஒரு நியாமா? சொல்லுங்கள்!!!

        • //சிங்காரம், எத்தனை தடவை சொல்வது? அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் தனக்கு கீழே இருக்கும் பெண்ணிடம் உறவு வைத்திருப்பதும் சரி, மிரட்டி உறவு கொள்வதும் ஒன்றுதான். இது கூட புரியவில்லை என்றால் என்ன செய்வது?//

          வினவு & கோ.விடமிருந்து இப்படி ஒரு வசனம்(!) வருவது விந்தை தான்…

        • அய்யா கலாட்டா முரசு சிங்காரம்,
          பலான பாதிரி ராஜரத்தினம் கன்னியாஸ்திரி மேரியிடம் கொண்ட பாலியல் உறவு மென்முறையா? வன்முறையா?
          ஒரு பண்ணையாரிடம், கீழ் வேலை பார்க்கும் திருமணமான ஒரு பண்ணை அடிமைப் பெண் அந்தப் பண்ணையாரிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்வதை பெருமையாகக் கொள்கிறாள். இது எந்த ரகம்? எதனின் வெளிப்பாடு? மென்முறையா? வன்முறையா?
          கல்வி கற்கும் மாணவியிடம் ஒரு ஆசிரியன் தேவையில்லாமல் வருடுவது, கிள்ளுவது, தொடுவது என நடந்துகொள்வதை அம்மாணவி சகித்துக்கொள்வது இது எந்த வகை உறவு? மென்முறையா? வன்முறையா?
          ஆண், பெண் தொழிலாளர்கள் தாம் பணிபுரியும் இடங்களில் மேலதிர்காரிகளிடம் சமரசம் செய்து கொள்வதெல்லாம் தமது வேலையைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் என்கிற போது இதை மனமொத்து ஏற்றுக்கொள்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
          அவ்வளவு ஏன் வறுமைக்காக பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படும் பெண்கள் மென்முறைக்கு ஆளாகிறார்களா? வன்முறைக்கு ஆளாகிறார்களா?
          அதிகாரத்துவத்துக்கும், அதற்குக் கீழ்படிதலுக்குமான உறவின் முரணை புரிந்துகொள்ள முடியாததின் அவலம், அல்லது கீழ்படிதலுக்குள்ளவர்களின் இருப்பின் துயரத்தை உணரமுடியாததின் உங்களின் வர்க்கப் புத்தி உங்களை இப்படி பேச வைக்கிறது. அது மட்டுமல்ல, தோழமை உறவை கொச்சைப் படுத்தவும் முடிகிறது. குறைந்தபட்சம் அரசியல் அறிவு, அரசியல் உணர்வு, அரசியல் நேர்மை இருக்கும் யாரும் இப்படி பேச மாட்டார்கள்.

  46. எதேச்சதிகாரம் பிரைவேட் லிமிடட் அவர்களுக்கு (அது தான் வினவு அவர்களுக்கு), பல்வேறு பெயர்கள் தான் உங்கள் பிரச்சனையா? அதில் கூறப்பட்ட செய்திகள், கேட்கப்பட்ட கேள்விகள் உங்களை ஒன்றும் செய்யவில்லையா?

  47. ஓடுக்கப்பட்ட சமூகத்தின் பேரைச்சொல்லிச் சமூக விரோதக் குற்றங்களிலிருந்து புல்லுருவிகள் தப்பிக் கொள்ள உதவுகிறவர்கள் ஓடுக்கப்பட்ட சமூகங்களின் நண்பர்களல்ல.
    தலித்தியம் என்ற பேரில் இன்று ஆணாதிக்கத்தையும் வர்க்கச் சுரண்டலையும் மதவாதத்தையும் இனவெறியையும் கூட நியாயப்படுத்த இயலுமாகியுள்ளமை வருந்தத்தக்கது.

    • hello singaram,
      ஒத்த ஆளா இவிங்க எல்லோருடைய டவுசரையும் கழட்டிடயேயா…. கலக்கிட போ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க