அமெரிக்கா, தனது மேலாதிக்க நோக்கங்களுக்குக் கட்டுப்பட்டு, தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் சர்வாதிகாரிகளை ஜனநாயகவாதிகளாகச் சித்தரித்துப் பாதுகாக்கும் என்பதற்கு இன்னுமொரு உதாரணமாகத் திகழுகிறது, மத்திய கினியா (Equatorial Guinea).
மத்திய கினியா மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சிறியதொரு நாடெனினும், புதிய குவைத் என அழைக்கப்படும் அளவிற்கு எண்ணெய் வளம் மிக்கது. ஆப்பிரிக்க கண்டத்தின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் உள்ள இந்நாட்டின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 15 இலட்சம் ருபாய்க்கும் அதிகமென்றும் தனிநபர் வருமானத்தில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்நாடு இருக்கிறதெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் அந்நாட்டிற்குக் கிடைக்கும் வருமானத்திற்கும், அந்நாட்டு மக்களின் வாழ்நிலைக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதையும், 1990களில் மத்திய கினியாவில் கச்சா எண்ணெய் வளம் கண்டெடுக்கப்பட்ட பின், அந்நாட்டின் பொருளாதாரம் எந்தளவிற்கு ‘வளர்ச்சி’ அடைந்ததோ, அந்தளவிற்கு அந்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் அதிகரித்திருப்பதையும் உலக வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 177 நாடுகளின் மனிதவள மேம்பாட்டுத் தர வரிசையில் இந்நாடு 121ஆவது இடத்தில் உள்ளது. இந்நாட்டில் 70 சதவீதம் பேர் நாளொன்றுக்கு 50 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்து வருவதாக இன்னொரு புள்ளி விவரம் சொல்கிறது.
1968ஆம் ஆண்டு ஸ்பெயினின் காலனியாதிக்கத்திலிருந்து ‘விடுதலை’ அடைந்த மத்திய கினியா, 1979ஆம் ஆண்டு வரை பிரான்சிஸ்கோ மக்கியாஸ் என்ற சர்வாதிகாரியால் ஆளப்பட்டது. பின்னர் 1979இல் நடந்த அரண்மனை புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய, தற்போதைய அதிபர் தியோடொரோ ஓபியாங், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார்.
அதேசமயம், கினியாவில் தேர்தல்களும் நடத்தப்படும். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் 95 சதவீத வாக்குகளைப் பெற்று, மீண்டும் அதிபரானார் ஓபியாங். கினியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிதான் நடைபெறுகிறது எனக் காட்டுவதற்குத் தேர்தலைவிட, வேறு மாயமந்திரம் எதுவும் தேவையில்லையே!
1996ஆம் வருடம் இந்நாட்டில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நாட்டின் பொருளாதாரம் அதிவேகத்தில் வளர்ந்தது. பல எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டோடு தொடங்கப்பட்டன. அவையனைத்தும் அதிபர் ஓபியாங், அவரது குடும்பம் மற்றும் உயர் அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளன. இதைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டின் கச்சா எண்ணெய் வருமானத்தில் பெரும்பகுதியை இக்கும்பலே கொள்ளையடித்துவிடுகிறது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி காரணமாகத் தாராளமாகப் பணம் புழங்கும் அரசுத் துறையில் இலஞ்சமும், ஊழலும், பகற்கொள்ளையும் தலைவிரித்தாடுகிறது. ஆட்சியாளர்கள் எண்ணெய் உற்பத்தி ஏற்றுமதியில் மட்டும் அக்கறை காட்டி வருவதால், பாரம்பரிய கொக்கோ, காபி விவசாயம் சீரழிந்து மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டனர்.
மற்றொரு பக்கம் மக்கள் மீதான ஒடுக்குமுறையும் கேள்விக்கிடமற்றதாக இருக்கிறது. சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்கள் போராடக் கூட வேண்டாம், ஆட்சிக்கு எதிராக முணுமுணுத்தாலே போலீசின் சிறப்பு கவனிப்புக்கு ஆளாக நேரிடும். கறுப்புக் கடற்கரைச் சிறைச்சாலையில் அடைக்கப்படும் அரசியல் கைதிகளின் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி சித்திரவதை செய்வது சர்வசாதாரணமானது. சித்திரவதைகளைக் கண்காணிக்கும் ஐ.நா. குழுவினர் இந்தச் சிறைச்சாலையைச் சோதனையிடச் சென்றபோது, போலீசார் சித்திரவதைக் கருவிகளை ஒளித்துக்கூட வைக்கவில்லை. உங்களால் செய்ய முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள் எனக் குழுவினரின் கண்களில் படும்படி அனைத்துக் கருவிகளையும் மேசை மீதே வைத்திருந்தனர்.
அரசியல் கைதிகளைச் சித்திரவதை செய்வதை அரசின் கொள்கையாகவே கொண்டுள்ளது, கினியா. எனினும், கினியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம், “கினியாவிற்கு நீதி குறித்துப் போதிப்பதைக் கைவிட வேண்டும்; மற்றவர்கள் குறிப்பிடும் அளவிற்கு அந்நாட்டில் இலஞ்சமோ, வறுமையோ தாண்டவம் ஆடவில்லைசு என அமெரிக்க அரசிற்கு கமுக்கச் செய்தி அனுப்பியதாக, விக்கி லீக்ஸ் இணைய தளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் சிறப்பு ஆலோசகராக இருந்த லானி ஜே. டேவிஸ், கினியாவின் சர்வாதிகாரி ஓபியாங் குறித்து உலக நாடுகள் மத்தியில் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஒரு பிரச்சார இயக்கத்தையே நடத்தினார். இதற்காக, ஓபியாங்கிடமிருந்து பல கோடி அமெரிக்க டாலர்களைச் சன்மானமாகப் பெற்றுக் கொண்டார், அவர்.
முன்னாள் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் இன் நெருங்கிய கூட்டாளியும் அமெரிக்க ஐரோப்பிய கூட்டுப் படைகளின் கமாண்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பாண்ட்ஸ் எம். கிராட்டாக்குச் சொந்தமான எம்.பி.ஆர்.ஐ., என்ற தனியார் கூலிப்படை நிறுவனம்தான் மத்திய கினியாவின் இராணுவத்திற்கும், போலீசிற்கும் பயிற்சியளித்து வருகிறது. இத்தனியார் படை மத்திய கினியா போலீசாருக்குப் பயிற்சி கொடுப்பதை அமெரிக்க உள்துறை ரத்து செய்தாலும், அதிபர் புஷ் அப்பயிற்சிக்குப் பின்னர் ஒப்புதல் அளித்தார்.
செவ்ரான், மாராத்தான் ஆயில், நோபிள் எனர்ஜி ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில்தான் மத்திய கினியாவின் எண்ணெய் வளம் சிக்கிக் கொண்டுள்ளது. அதே சமயம், லிபியாவின் அதிபர் கடாஃபியோ, தனது நாட்டில் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செவ்ரான், ஓக்ஸிடென்டல் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் உரிமத்தை சென்ற ஆண்டு அக்டோபரில் புதுப்பிக்க மறுத்தார். கினியாவில் ஓபியாங்கின் சர்வாதிகார ஆட்சிக்கு அமெரிக்கா பக்கபலமாக இருப்பதற்கும், லிபியாவில் அதிபர் கடாஃபியைத் தூக்கியெறியும் நோக்கத்தோடு அமெரிக்க ஐரோப்பிய கூட்டுப் படை போர் தொடுத்திருப்பதற்கும் பின்னுள்ள காரணம் இதுதான்.
____________________________________________________________________
– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011
_____________________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்:
- லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!
- ஏகாதிபத்தியங்களின் நெருக்கடியை தீர்க்க அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு போர்கள்!
- துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி!
- துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்
- அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!!
- ஏன் அவர் ஆஃப்கானுக்குத் திரும்பிச் செல்லமாட்டார் !
- ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!
சர்வாதிகார எதிர்ப்பில் நீங்க இரட்டை வேடம் போடலயா? சீனத்துக்கு ஒரு நியாயம். எகிப்துக்கு ஒரு நியாயம். நீங்க பேசின நியாயம் தெரியாதா?
China seinja correct… Mathavanellam waste!!! Communisa-samathuvamna ennanu theriyatha?
ஓரு சமயம் கடாபியை ஆதரிக்கிறீர்கள் மற்றொரு புறம் எதிர்ப்பு உங்கள் லட்சணம் இதிலிருந்தே தெரிகிறதே
சீனாவுக்கு எந்த நியாயம் ?.. எகிப்துக்கு எந்த நியாயம் ?..கொஞ்சம் விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும் பாண்டியன் ?..
எந்த விசயத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது?.. எடுத்துக்காட்டவும்.
//ஓரு சமயம் கடாபியை ஆதரிக்கிறீர்கள் மற்றொரு புறம் எதிர்ப்பு உங்கள் லட்சணம் இதிலிருந்தே தெரிகிறதே// பாண்டியன் , சையிக் இஸ்டம் போல பொய் சொல்லித் திரியக் கூடாது. பொய் சொல்லக் கூடாது பாப்பா
என்றும் புறம் சொல்லல் ஆகாது பாப்பா…
பாண்டிய மன்னன் திரும்ப வந்திட்டார் போல…..
உம்மை யாரும் சோழ மன்னன்னு சொல்ல மாட்டாங்க…
தூங்குபவர்களை எழுப்பி விடலாம்.தூங்குவது போல் நடிப்பவர்களை,,,
கட்டுரை கடாபியை ஆதரிக்கவில்லை வெண்ணைகளா
இடத்துக்கு தகுந்தார்ப்போல் தன் நிலையை மாற்றிக்கொள்ளும்
அமெரிக்காவை சாடுகிறது.
கொள்ளை போகும் குடிநீர் செல்வமும், குடிமக்களின் கடமைகளும்…!
தமிழகத்தில் தண்ணீரை தனியார் மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக நம்மிடையே இரண்டு முக்கிய உதாரணங்கள் இருக்கின்றன.
முதலாவது கேரளாவில் உள்ள பிளாச்சிமாடாவில் உள்ளூர் நிர்வாகம், மக்களால் துரத்தியடிக்கப்பட்டு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நிலைகொண்ட கோக கோலா நிறுவனத் தொழிற்சாலை. இந்த ஆலை ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் தாமிரபரணியில் இருந்து உறிஞ்சி வாங்கி, ஒரு லிட்டர் தண்ணீரை 13 ரூபாய்க்கு திரும்ப நம்மிடம் விற்கிறது. வாயை மூடிக் கொண்டிருந்தால் எப்படியெல்லாம் கொள்ளை அடிக்க முடியும் என்பதற்கு இது உதாரணம்.
http://poovulagu.blogspot.com/2009/03/blog-post.html
சிலர் இதை படித்துவிட்டு இதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று நினைக்கலாம்.. ஆனால் இதனால் பாதிக்கப்படுவது நம் தலைமுறை மட்டும் இல்லை. பாதிப்பு ஏழேழு தலைமுறைக்கும் தொடரும்………………
‘கல்யாணத்துக்கு வரச் சொன்னா… கருமாதிக்கு வந்து சேர்ந்திருக்கான் பாரு’ என கிராமத்தில் சொல்வார்கள். இந்தச் சொலவடை அரசு இயந்திரத்தை உருட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டணிக்கு, காலகாலமாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்படியே பொருந்திக் கொண்டிருப்பதுதான் மக்களின் சாபக்கேடு!
”விவசாயப் பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி என்ற பெயரில் தெளிக்கப்படும் ‘எண்டோசல்ஃபான்’, மிக வீரியம் மிக்க விஷமாக இருக்கிறது. இது மனித இனத்துக்கே, பெரும்கேடாக முடியப்போகிறது” என்று பல ஆண்டுகளாகவே மருத்துவர்களும், சூழல் ஆர்வலர்களும் எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதன் பாதிப்பு எப்படி இருக்கும், என்பதற்கு சாட்சியாக கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
இதன் பிறகும்கூட, ‘எண்டோசல்ஃபான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் வேண்டும்’ என்று சொன்னபடி… அந்தப் பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கு தடைவிதிக்க மறுத்து வருகிறது, இந்திய அரசு.
அது மட்டுமா… சமீபத்தில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் உலக நாடுகள் ஒன்றுகூடி, ‘உலக அளவில் எண்டோசல்ஃபானுக்கு தடை விதிக்கப்படும்’ என்று முடிவெடுக்க… அந்தக் கூட்டத்திலும்கூட, ‘இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எண்டோசல்ஃபானுக்குத் தடை விதிக்க முடியாது. அதற்கு இணையாக இன்னொரு விஷத்தைக் கண்டுபிடித்து எங்கள் கையில் கொடுத்துவிட்டு தடை செய்யுங்கள்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறது இந்தியா! எங்கே போய் முட்டிக் கொள்வது நாம்
http://poovulagu.blogspot.com/search/label/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
சமச்சீர் கல்வியை மிகை/குறைகூறியவர்கள் அதன் தரத்தை இங்கு பார்க்கலாம்………
http://www.textbooksonline.tn.nic.in/Std10.htm
வினவு !!! தயவுசெய்து மாதம் ஒரு சுற்றுசூழல் கட்டுரையை வெளியிடவும்.இதிலும் நமது அரசியல் வியாதிகளின் முகமூடியை கிழிக்கலாம்……….நன்றி
\\உம்மை யாரும் சோழ மன்னன்னு சொல்ல மாட்டாங்க…\\……நன்றி
மன்னன் (இப்போது அரசியல்வா(வியா)தி) என்ற சொல்லுக்கு மறுஅர்த்தம் – மற்றவன் உழைப்பில் உட்கார்ந்து திண்பவன்.