privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்தவுஹீத் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித் மரைக்காயர்!

தவுஹீத் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித் மரைக்காயர்!

-

புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி வட்டம். வடக்கு அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவுஹீத் ஜமாத்தின் பிரச்சார பீரங்கியாக செயல் பட்டு வருபவர் பாஸ் (என்கின்ற) பாசித் மரைக்காயர். ”நான் இசுலாமியமதத்தை இம்மியளவும் பிசகாமல் கடைபிடிப்பவன்” என்று கூறிக்கொண்டு, வெளியூரிலிருந்து TNTJ காரர்களை கூட்டிவந்து தனது வீட்டில் மத சொற்ப்பொழிவு நடத்துவது, அதிலும் குறிப்பாக பெண்களுக்காக அதிகம் நடத்துவது, தனியாக தொழுகை நடத்துவது (சுன்னத் ஜமாத்துடன் சேராமல்), TNTJ பொதுக்கூட்டம் நடத்துவது  என்று இவரின் செயல்களை கூறிக்கொண்டே போகலாம்.

” இசுலாத்திற்கு எதிராக கருத்துக்களை கூறிக்கொண்டும் வெள்ளிக்கிழமை கூட தொழுகைக்கு வராமல் நாத்திகம் பேசுபவனை அடித்தால் அல்லது கொன்றால் மறுமையில் அல்லா சுவர்க்கம் கொடுப்பான்” என்றும், அதற்கு ஆதாரமாக இசுலாமிய அரசியல் போர் வரலாற்றை கூறி இளைஞர்களை உசுப்பேற்றுவது அவருடைய பொழுதுபோக்கு. அதோடு மட்டுமல்லாமல் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பணம் பெற்றுக்கொண்டு, தனியாக கார் எடுத்து மைக்கு கட்டி ஒவ்வொரு முசுலீம் ஊரிலும் ”திமுகவிற்கு வாக்களியுங்கள், கருணாநிதியிடம் பெரியவர் PJ இடஒதுக்கீடு மற்றும் இசுலாமிய நலன்களைப் பற்றியெல்லாம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டார்” என்று தனது வீட்டு கல்லாவை நிரப்பிக் கொண்டார்.

ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் சட்டமன்ற தேர்தலுக்கு நேர் எதிராக அதிமுக-விற்க்கு (பாசிச ஜெயாவிற்கு) ஆதரவாக பாசித்தும் TNTJ வும் செயல் பட்டனர். இதில் வினோதம் என்ன? ஊராட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி தலைவருக்கு பண செல்வாக்கு இல்லாத ஒரு முசுலீம் உட்பட பலர் போட்டியிட்டனர். இவர்களில் சக்திவேல் என்ற வேட்பாளரைப் பற்றி சின்ன பிள்ளையைக் கேட்டாலும் தெரியும், இந்துத்துவ வெறியனென்று. இந்த ஊரில் நடந்த பல இந்து முஸ்லீம் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணகர்த்தா மேற்கண்ட சக்திவேல்தான்.

இப்படிப்பட்டவரிடம் பாசித்தும் TNTJ ஊர்க்கிளையும் சந்தித்து சக்திவேலுக்கு ஆதரவளிக்க ரூபாய் 60 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு, அவ்வேட்பாளர் வெற்றி பெற்றால் தவ்ஹீது பள்ளிவாசல் கட்டித்தரவேண்டுமென நிபந்தனையும் விதித்தனர். பின்பு அவருக்காக பிரச்சாரம் வாக்குவேட்டை என தூள் கிளப்பினர். மசூதியை இடித்தவர்களிடமே மசூதியை கட்டி தரச் சொல்வது பெரிய வெற்றியல்லவா?.

இந்த யோக்கிய சிகாமணியான அக்மார்க் முஸ்லீம் பாசித்தின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ஊருக்குதான் உபதேசம், எனக்கு இதெல்லாம் பொருந்தாது என்பதும் இஸ்லாமிய மதத்தின் பெண்ணடிமைத்தனமும் பாசித்தின் குடும்ப வாழ்க்கையில் இருந்து வெட்ட வெளிச்சமாக தெரியும்.

அதாவது இவருக்கு திருமணமாகி _____________ என்ற மனைவியும் 3 வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர் சில ஆண்டுகளாக தனது மனைவி ஒல்லியாக இருப்பதாகவும், அழகாக இல்லையென்றும் கூறி மற்ற பெண்களிடம் அவர்கள் அழகை வருணித்து தனது மனைவியின் அழகை இகழ்ந்து கூறியும் தனது காம இச்சையை அவர்களிடம் தீர்த்து வந்துள்ளார். இந்த செயலை நியாயப்படுத்த அந்த பெண்களிடம் இஸ்லாமிய வரலாற்றை கூறி அதாவது ‘வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்’ அல்லாவிற்கு ஏற்ற செயல்தான் என சமூகம் காறி உமிழும் இந்த செயலுக்கு புனிதம் வேறு கற்ப்பித்துள்ளார்.

அவரது அக்காவின் மகளை திருமணம் செய்திருக்கும் கணவனின் தங்கை தனது கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணுக்கும் நம்மாள் பாசித் கொக்கி போட்டுள்ளார். ஆனால் ‘மகர்’ கொடுக்காமல் கொக்கி போட்டதால் ரொம்பநாள் தாக்கு பிடிக்கமுடியவில்லை. இவ்வூரை சேர்ந்த ‘நூர்’ என்ற ஒருவன் அப்பெண்ணுக்கு ‘மகர்’ செய்து கவர்ந்துவிட்டான். இதனால் பாசித் அப்பெண்ணால் கழட்டிவிடப்படவே பொறுமையின் உச்சகட்டத்தை இழந்து அப்பெண்ணின் வீட்டில் நூர் இருக்கும்பொழுது ”விபச்சாரமா செய்கிறீர்கள் இது இஸ்லாத்திற்கு விரோதம்” என கூறி அவனிடம் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளார்.

பாசித்தின் காம விளையாட்டுகள் இப்படி போய்க்கொண்டு இருக்கையில், கிளைமேக்ஸாக கும்பகோணத்தில் ஏழை முஸ்லீம் குடும்பத்தின் வறுமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அக்குடும்பத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டு TNTJ விடம் முதல்மணம் போன்று திருமணம் நடத்திவைக்க கோரியுள்ளார். TNTJ அப்படி சான்றிதழ் கொடுத்தால் பெண்களால் துடைப்பத்தால் அடித்தே துரத்தப்படுவோம் என்பதை உணர்ந்து சான்றிதழை அளிக்க மறுத்துவிட்டனர். ஆனால் திருமணம் செய்ய சூப்பரான ஒரு ஐடியா கொடுத்தனர். நாகூர் போன்ற இடங்களில்  முதல்மணம் என போலியாக திருமணம் செய்ய ரகசியமாக ஏற்பாடு செய்தனர் (எங்கு நடத்த்து என்று நமக்கு சரியாக தெரியவில்லை).

இந்நிலையில் பாசித் இரண்டாவது திருமணம் செய்வதை அறிந்த அவரின் முதல் மனைவி  வடக்கு அம்மாபட்டினம் ஜாமத்தில் புகார் அளித்ததன் பெயரில், பாசித் 18-11-11 அன்று நேரில் ஆஜரானார்.
ஆஜராவதற்கு முன்பே ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகளை கவனித்துவிட்டார். அதிலும் ஜமாத்தலைவராக இருக்கும் அஹமது ஜலாலுதீன் TNTJ ஆதரவாளர் என்பதோடு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மூத்த மருமகளை (மூத்த மகனின் மனைவி) வரதட்சணை கேட்டு கொடுமை செய்தவர். மேலும் பாலியல் தொந்தரவும் செய்தவர். அக்கொடுமை தாங்காமல் அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை போலிசு கேசாக மாற்றினால் தனது பணபலத்தின் மூலம் சமாளிப்பேன் என்று இரு ஜமாத்தார்களை (அப்பெண்ணின் ஜமாத் உட்பட) மிரட்டியவர். அப்பெண்ணின் குடும்பத்திடமும் ஒரு தொகையை குடுத்து தற்கொலையை மூடிமறைத்த பலே கில்லாடிதான் இந்த ஜமாத் தலைவர். இவர்தான் இப்பிரச்சனையை விசாரிக்கிறார்.

சில இளைஞர்கள் மேற்கண்ட பாசித்தின் செயலைக்கண்டு கொதித்தனர். டென்சனான ஜாமாத் தலைவர் ”அவரு ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டாரு இனியொன்னும் செய்யமுடியாது அதனால ரெண்டு பெண்ணும் நமது ஜமாத்தின் இரு கண்கள். அதனால நிர்வாகிகள் நாங்கள் உள்ள தனியா போய் ஒரு முடிவெடுத்திட்டு வரும் வரை எல்லோரும் அமைதியா இருங்க” என்று கூறினார். ஆனால் பாசித்திடம் ஏன் இரண்டாம் கல்யாணம் செய்தாய் என விளக்கம் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள் என நடுநிலையான ஜமாத்தார்கள் கூறவே, விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்க்கு பாசித் ”எனது முத்த பொண்டாட்டி தவுஹீது முறைப்படி நடக்க மாட்டேங்குறா; படிப்பறிவில்ல; அழகில்ல; எனக்கும் உணர்ச்சியெல்லாம் இருக்கு. நான் இசுலாத்தின் முறைப்படிதான் கல்யாணம் செய்திருக்கிறேன். ரசூலுல்லாவுக்கு கூட 7 பொண்டாட்டி. ஒரு இஸ்லாமியன் ஒன்றுக்கு மேற்ப்பட்ட கல்யாணம் பண்ணிகிட்டா அது தப்பில்ல” என்று தத்துவம் பேசவே ஜமாத்தில் சிலர் கொந்தளித்தனர். வாக்குவாதம் கடுமையானது. இறுதியில் நமது நாட்டாமை (ஜமாத் தலைவர்) தலைமையில் நிர்வாகிகள் உள்ளே சென்று முடிவெடுத்து வந்தனர்.

முடிவின் விபரம் என்னவென்றால். பாசித் ரெண்டு கல்யாணம் பண்ணுவதற்கு சொன்ன காரணத்தை ஜமாத் ஏற்றுக்கொண்டது. “அவர் நமது ஜமாத்திற்கு திருமண கட்டணம் ரூவாய் ஐயாயிரம் செலுத்த வேண்டும்; முதல் மனைவியின் பெயரில் இரண்டாண்டுகள் கழித்து ரூவாய் இரண்டு லட்சம் deposit செய்யவேண்டும்; இரண்டு மனைவிகளையும் வாழவைக்கவேண்டும்” என்று ஜமாத் தலைவர் தீர்ப்பை வாசித்த     மறுநிமிடமே பாசித் தயாராக வைத்திருந்த 5,000 ரூபாயை  கொடுத்தார்.  பணத்தைப் பெற்றுக்கொண்ட ஜாமத் தலைவர் பாசித்தை  பார்த்து  சத்தமாக  ”நீங்க  கவுரவமான  மரைக்கா  வீட்டு பிள்ள;  நீங்க  நாலு  பேருக்கு  புத்தி சொல்ல  வேண்டியவர்  அதனால ரெண்டு பொண்டாட்டியையும் சந்தோசமா வச்சிருங்க” என்று advice செய்தார். கவுரவம் என்பது காமத்தில்தான் இருக்கு என்பதை ஜமாத்  தலைவர் உணர்த்தினார்

இஸ்லாத்தில் ஜாதியில்லை பிரிவு இல்லை என்று TNTJ தப்பட்டம் அடிக்கிறது.  ஆனால் ஜமாத் தலைவர் மரைக்கா  வீட்டு பிள்ளை என்று கூறும்பொழுது அங்கே இருந்த TNTJ வினரும்  பாசித்தும் மவுனமாக  ஆமோதித்து சிரித்தனர். பின்னே  எப்படிங்க  எதிர்க்க  முடியும்? ஜமாத் தலைவர் அவர்களுக்காக எவ்வளவு செய்திருக்கார் இப்படிப்பட்ட தீர்ப்பு எங்கும் கிடைக்காதில்லையா!
பாசித்தின் இந்த நடவடிக்கையை TNTJ தலைமைக்கு நெருக்கமாக உள்ள அன்வர் என்பவரிடம் இவ்வூர் இளைஞர்கள் தொலைப்பேசியில் கூறியுள்ளனர். அவர் பிரச்சனையை கேட்டுவிட்டு பொறுமையாக ”இதுபோல இருவது புகார் நம்ம (பிற)சகோதரர்கள் மேல இருக்கு. அதனால நீங்களும் புகாரனுப்புங்க பரிசீலிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

பாசித்தின் முதல் மனைவியிடம் இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க சொன்னபொழுது, அவர் ”நாங்க மொத்தம் 5 பொம்பளபுள்ளைங்க 4 பேருக்குதான் கல்யாணம் நடந்திருக்கு நான் கம்ளைண்டு கொடுத்தா என்னை எம்புருசன் விவாகரத்து பண்ணிருவேன்னு சொல்லிட்டாரு. அப்படி நடந்தா என்னால ஒண்ணுமே செய்யமுடியாது. எனக்கு அத்தா (அப்பா)  இல்லை அதனால பாவம் அம்மாவும் தம்பியும் என்ன பண்ணுவாங்க. இன்னம் – தங்கச்சிங்களுக்கு கல்யாணம் செய்துவைக்கணும், என் தலையெழுத்து இப்படியே இருந்துட்டு போறேன்” என தனது இயலாமையை பதிலாக கூறினார்.

பெண்கள் விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்று இஸ்லாம் கூறுவதை நடைமுறைபடுத்த துடிக்கும் இவர்கள், ஆண்கள் விபச்சாரம் செய்தால் நான்கு மனைவி, வலது கரம் சொந்தமாக்கப்பட்டவர்கள் போன்ற சட்டப் போர்வைக்குள் புகுந்து கொள்கின்றனர். பெண்ணடிமையை போதிக்கும் இஸ்லாத்திடம் நிச்சயம் இதற்கு தீர்வு தேடமுடியாது. இந்திய நீதிமன்றங்கள் நிர்வாக சிக்கல் நிறைந்ததும் ஊழல் மலிந்தும் காணப்படுவதால் இவரைப் போன்ற ஏழைப்பெண்கள் நீதி பெறுவதென்பது கடினமான பாதை. இதற்கு தீர்வுதான் என்ன?

இஸ்லாம் போற்றும் அரபு பாதையிலேயே தீர்வை குடுக்கலாமா? திருடினால் கையை வெட்டலாம். பெண் விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்து கொல்லலாம். ஆண் விபச்சாரம் செய்தால்……..ஆண் உறுப்பை அறுத்து நாய்க்கு போடும்படி இஸ்லாமிய சட்டத்தை திருத்தலாமா? சம்மதிக்குமா TNTJ?

தமிழகம் முழுவதும் இவர்கள் போட்டு வந்த புனித வேடங்கள் இப்போது ஒவ்வொன்றாக  கலைகிறது. ஒரு ஏழைப்பெண்ணின் வாழ்க்கையை இரக்கமின்றி சீரழித்திருக்கும் இந்தக் கயவர்கள்தான் மதத்தின் புனிதத்தை காக்கும் புண்ணியவான்களாக காட்டிக்கொள்கிறார்கள். மட்டுமல்ல தேர்தல் என்று வந்தால் இந்து மதவெறியருக்கும் ஆதரவு கொடுக்கிறார்கள். இத்தகைய பொறுக்கி தளபதிகளைக் கொண்டுதான் தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் சீரும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது.

உண்மையில் சமூக அநீதிகளுக்கெதிராகவும், சொந்த சமூகத்தில் பெண்கள் அடிமைகளைப் போல நடத்தப்படும் நிலை கொண்டும் கொதிக்கும் இசுலாமிய இளைஞர்கள் தவ்கீத் போன்ற இத்தகைய மதவாதிகளின் மாயவலையிலிருந்து துண்டித்துக் கொள்ளவேண்டும். இசுலாமிய உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் சேர்வதினூடாகத்தான் தங்களது சொந்த விடுதலையை சாதிக்க முடியும்.

கயவர்களுக்கு பாடம் புகட்ட களம் காணுவோம்!

____________________________________________________________________

–       ஜமால்

_____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. Arai vekadu thanama katurai. Islamaiya sattam theriyamal istatuku yeluturathu. Islamaiyai sattathai padithuvitu vimarsam seiyavum. arai kurai yai padithu vitu muslim peyirail katurai yeluthuvathu Kolai thanam varuthathuku uriyathu.

    • இஸ்லாம் என்ற மதமே பெண்ணடிமைத்தனத்தின் மீது கட்டப்பட்டது. சில ஆணாதிக்கவெறியர்கள்,எங்கள் புனிதநூலில் அப்படி ஒன்றும் இல்லை,இப்படி ஒன்றும் இல்லை என்றும் நடைமுறைக்கும் கருத்துக்கும் வித்தியாசம் தெரிந்தும் ஆதிக்கத்தை மூடி மறைத்துக்கொள்கிறார்கள்.

      • நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை!தோழர் செங்கொடி ஏற்கெனவே இதை விவாதத்தின் மூலம் நிறுவியுள்ளார்!

        • மனிதன் என்ற பெயரில் வரும் நீங்கள்,
          தோழர் செங்கொடியும், வினவும் இந்து மதம் பற்றி விவாதத்தின் மூலம் நிறுவியுள்ள கருத்துகளை இது போன்று திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்.

      • என்ன சொல்றீங்க மீரா ஒன்னுமே புரியலியே. நீங்க ஒரு பெண் என்று நினைக்குறேன் . இஸ்லாத்தில் பெண் அடிமை தனம், பெண் அடிமை தனம் நு சொல்றீங்களே தவிர அது என்னனு புட்டு புட்ட வைக்க மாட்டேன்குறீங்க.நீங்க என்ன பன்றீங்கனா இதெல்லாம் பெண் அடிமைத்தனமா இஸ்லாத்தில் இருக்கு அதற்க்கு பதிலாக அந்த சட்டம் இப்படிதான் இருக்கணும்னு நச்னு எல்லோருக்கும் உரைக்குற மாதரி சொல்லுங்களேன் ….சொல்லுவிங்களா??

        • ஆஹா mak
          மார்க்க சகோதரர் மக்கு அவர்கள் இங்கே எழுதியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
          உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக(c) mumins
          பெண்களை கார் ஓட்டக்கூடாது என்று சவுக்கடி கொடுப்பதெல்லாம் பெண்ணடிமைத்தனமா? அல்லது அவர்களது பெண்குறியை வெட்டுவதெல்லாம் பெண்ணடிமைத்தனமா? அல்லது அவர்களை ஆஸ்ட் அட்டாக் மூலமாக அவர்களை பர்க்கா போட வைப்பது பெண்ணடிமைத்தனமா? அல்லது மஹ்ரமான ஆண் துணையில்லாமல் வெளியே போகக்கூடாது என்பது பெண்ணடிமைத்தனமா? அல்லது மசூதிக்கு வரக்கூடாது, வீட்டுக்குள்ளே மிகவும் மூலையான அறையில்தான் வணங்கவேண்டும் என்று சொல்வது பெண்ணடிமைத்தனமா? பெண்கள் கண்களை காட்டி ஆண்களை கவரக்கூடாது என்று கண்களுக்கே பர்தா போடுவது பெண்ணடிமைத்தனமா? பெற்றோர் சொத்தில் ஆணுக்கு கொடுப்பதில் பாதிதான் பெண்ணுக்கு என்பது பெண்ணடிமைத்தனமா? அல்லது ஒரு ஆணின் சாட்சிக்கு இரண்டு பெண்களின் சாட்சிதான் சமம் என்பது பெண்ணடிமைத்தனமா? பெண்களுக்கு மூளை கம்மி என்று நபிஹள் நாயஹம் சொல்லியது பெண்ணடிமைத்தனமா? ஈமானுள்ள நம் சகோதரர்கள் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பெண்களின் பள்ளிக்கூடங்களை குண்டு வைத்து தகர்த்து பெண்களை அலையவிடாமல் காத்து ஈமானை பரப்புவது பெண்ணடிமைத்தனமா? இல்லவே இல்லை. இதெல்லாம் பெண்ணடிமைத்தனம் என்று சொல்பவர்கள் மூளை கழண்டவர்கள். இதையெல்லாம் பெண்களை கண்ணியப்படுத்த அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் கூறிய கட்டளைகள்.

          நபிஹள் நாயஹத்தை பின்பற்றி நான்கூட கார் ஓட்டும் பெண்களை கண்ணியப்படுத்த அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் வழியில் புரட்சிகரமான சிந்தனையாக அவர்கள் கால்களை வெட்டிவிடலாம். அதன் மூலம் எளிதாக முஸ்லிமாக்களின் ஈமானை காப்பாற்றிவிடலாம் என்று யோசனை கூறியிருக்கிறேன்.
          மூஃமின்கள் இதனை ஆதரித்து முஸ்லிமாக்களின் காலை எடுக்கும் புரட்சிகரமான யோசனையை நடைமுறைப்படுத்தி சுவனத்துக்கான பாதையை எளிதாக்கி, சுவனத்தில் 72 ஹூருல் ஈன்களையும் 28 கில்மான்களை அனுபவிக்க முயலலாம்.

          கார் ஓட்டும் பெண்களை கண்ணியப்படுத்த அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் வழியில் புரட்சிகரமான சிந்தனை

          ய்ய்யாஅ அல்லாஹ்!

          • பொட்டை தனமாக இருக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்வது.டிஎன் டிஜே.மட்டும்தான். அந்த ஆள் தப்பு செய்தாலும்.தூக்கி எரிவதற்கும் தயங்காட்து. டிஎன்.டிஜே,பெயரை மாத்தி.ப்யந்து கொண்டு கட்டுரை எழுத வெட் கபடவேன்டும்.
            குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்ட்ரு சொலுகிர கூட்டம் இப்படித்தான் கட்டுரை எழுதும்.சிந்தித்து பார்க்கவும்.ஒரு சில இஸ்லாமிநய பெயர்தாங்கிகள் செய்யக்குடிய.தப்பால்.மார்க்கத்தை

          • வருக நண்பர் இப்னு ஷகிர். எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம். மட்டற்ற மகிழ்ச்சி

    • rai kurai yai padithu vitu muslim peyirail katurai yeluthuvathu///
      .
      .
      இதுக்காக பேரை மாத்திகிட்டா வர முடியும்?இதென்ன நியாயம்?

    • விலங்கம் பிடிச்ச வின்வுக்கு.இதில் TNTJவை சார்ந்த பாசித்தை தனிப்பட்ட முறையில் வினவு விமர்சித்திருக்கும் விஷயம் உண்மையோ ,பொய்யோ அதை அல்லாஹ் அறிவான். அதை தெளிவுபடுத்த சம்மந்தபட்டவர்கள் கடமைபட்டவர்கள்.

      ஆனால் இந்த கட்டுரையை நடுநிலையோடு பார்த்த வகையில் இந்த கட்டுரை TNTJவை தாக்குவது போல் இஸ்லாத்தை தாக்கி எழுத வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதாகவே தெரிகிறது. பல விஷயங்கள் பொய்யாக புனையபட்டுள்ளது நன்றாக தெரிகிறது. TNTJ இதை தக்க முறையில் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.

    • கள்ள காதலர்களின் புகலிடம் மயிலாடுதுறை விஜயா திரை அரங்கம்

      http://kiliyanur.net/index.php?option=com_content&view=article&id=109:kallakatharhalin-theatre&catid=27:kiliyanur-news&Itemid=27

      இப்ராஹிம் பாய், திப்பு பாய் மற்றும் ஹைதர் பாய் — மூவரும் இந்த சம்பவத்தை பரிசீலித்து பின்னூட்டம் இடுவார்களா?

  2. most of the culprits are hiding under religious name to show (act) society that they are good. these peoples are real culprits who are dividing in the name of nation, religion, states, language.

    • அண்ணே நேர்மையாளர்!? நான் பதில் கூறுகிறேன்
      அதற்கு முன் நீங்கள் பதில் கூறுறுறுறுங்கள்

  3. ஷாகித் இது ஒரு விசயம் தான் உஙலுக்கு தெரிஞிருக்கு போல. சென்னைலநெரயநடக்குது. இவர்கல் யோக்கியர்கல்நு சொல்லும் போதெநாம் தெரிஞுக்கனும் Tண்TJ ல இது போன்ர அயஒகியர்கல் தான் அதிகம்நு. விபஷாரம் பன்னும் அஙலையும் கல்லலா அடிசி கொல்லனும்நு இஷ்லாம் சொல்லுது. ஆன அத இவங ரொம்ப தெரமயா மரகிராங!! தவுகேதுநு சொல்லிடு இவங பன்ர ( சந்தர்ப வாத )நடிப்பு ரொம்ப அருமயா இருக்கு !! இவஙல்ட சாயம் வெலுக்குது!!!

  4. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எஸ் எம் பாக்கர் செய்யும் லீலைகளையும் அம்பல படுத்துக!வின் டிவியின் மறைமுக முதலாளியாக இருந்து கொண்டு மத பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர் பாக்கர்!

  5. ஆஜராவதற்கு முன்பே ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகளை கவனித்துவிட்டார்.///…
    .
    .
    இஸ்லாமியர்களும் நீதியை நீதி மன்றத்தில் பெறுமாறு மாற்றி அமைக்க வேண்டும்.அப்போதுதான் பல பெண்களின் வாழ்வு காப்பாற்றப்படும்!

    • ஏன் இப்போது உள்ள நிதிமன்றத்தில் எல்லா பெண்களுக்கும் நீதி சரியாக கிடைக்குதா? அப்படி எத்தனை பெண்கள் பெருமுச்சு விட்டு விட்டார்கள். எங்களுக்கு சரியான நீதி கிடைத்து விட்டது என்று கொஞ்சம் தெரிவிக்கவும்.

  6. http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/

    மேல கொடுக்கப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று ஆற அமர உட்கார்ந்து படித்துவிட்டு உங்களின் கேள்விகளை தொடுங்கள். சரி வர தெரியாம சும்மா சும்மா எதாவது கேக்கனும்னு சொல்லி கேக்க கூடாது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் தான் உங்க கதை.

      • சகோதரர் அவர்களுக்கு, செங்கொடி என்பவர் என்னோமோ மற்ற மக்களுக்கு அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தை மக்களுக்கு புரிய வைக்கின்ற மாதிரி லூசுதனமா? முழுசா ஆராயாமல் தனது குறு மூளைக்கு எட்டியதில்லாம் எழுதி வைத்திருக்கிறார். அத எல்லாம் ஒரு ஆதாரமா சொல்லாதிங்க.. எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அதற்க்கு இரு வேறு கருத்துக்கள் உண்டு. ஒன்று ‘ஆமாம்’ இன்னொன்ன்று ‘இல்லை’ இரண்டுக்கும் விரிவான விளக்கம் தேவை. இஸ்லாம் சொன்ன விஷயங்களை எல்லாம் மறுத்து எழுதி இருக்கிறாரே தவிர இதில் ஒன்றும் சொல்வதர்கில்லை. இதை எல்லாம் ஆதாரம் என்று கூறுவது காதில் கேட்பதை எல்லாம் சொல்லும் அறிவிலி போல இருக்கு

        • ஒரே ஆப்ரஹாமிய மதத்தின் மூன்று பிரிவுகள்தான் இஸ்லாம் கிருத்துவம் மற்றும் யூதம்!ஒரே இறைவன் அனுப்பிய தூடரையே ஒரு க்ரூப் நிராகரத்ததால் வேறொரு மதம் உருவானது!ஜீசஸ் உயிர்த்தேழுந்தார்னு ஒரு க்ரூப் சொல்லுது அதை நீங்க மறுக்குரீங்க!இப்படி முன்னுக்கு பின் முரணான தகவல்!குரானின் ஒரிஜினல் பத்திப்பா இப்போது பயன்பாட்டில் உள்ளது?இல்லையே?அது தொலைந்து போனதா இல்லையா?

          • எல்லா தீர்கதரிசிகளும் (நபிமார்களும் ) ஒரே இறைவனை மட்டுமே வணங்க சொன்னார்கள் ,ஆனால் மக்கள் தங்கள் மனதிற்கு ஏற்றார் போல் மாற்றிக்கொண்டார்கள்…மற்றபடி ஒவ்வருவருக்கு பின்னாடியும் ஒரு மதத்தை இறைவன் ஏற்படுத்த சொல்லவில்லை ,

            கடவுள் இல்லை என்று சொல்லும் நீங்கள் எல்லாம் “பெரியாருடைய” திராவிடர் கழகத்திலா இருக்கின்றீகள்.?
            உங்களுக்குள் ஏன் இத்தனை பிரிவு ?தி க , தி மு க , பெரியார் தி க , ம க இ க ,….என்று
            இப்படி எத்தனை பிரிவு,பிளவு ஏன் ? மனிதர்கள் எப்போதும் ஒரே சிந்தனையில் ஒரே அணியாக இருப்பது இல்லை ,
            அப்படி இருந்தால் ! கால்நடைகளுக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது ,

            குரானுடைய ஒரிஜினல் பதிப்புதான் இன்று இருப்பது…சந்தேகம் என்றால் துருக்கி இஸ்தான்புல் அருங் காட்சியகம்
            சென்று ஒப்பிட்டு பார்க்கவும்.. “மனிதன்” கொஞ்சமாவது வரலாறு படிக்கவும்

  7. என்னடா இன்னும் ஒன்னையும் காணோமேன்னு நினச்சேன். பாசித் தவறு செய்திருப்பின் நிச்சயம் தண்டிக்க படக்கூடியவரே. ஆனால் டிஎன் டி ஜெ எப்போடா மாட்டும் நல்லா புழுதிவாரி போடலாம்னு காதுகொண்டிருந்து கட்டுரை எழுதியது மாதரி இருக்கு .போகட்டும். ஒரு தனி மனிதனின் தவறை ஒரு மதத்தின் தவறாக வாதத்தை முன்வைப்பதை ஏற்றுகொள்ள இயலாது. பாசித்தை தூக்கி அந்தாண்ட வையுங்க இஸ்லாத்தை பற்றி வினவு என்ன நினைக்கிறது என்பதை தெரியபடுத்துங்கள். இஸ்லாத்தின் குறைகளை (இருக்குதுனு நினைத்தால்) தெரியபடுத்துங்கள். அது தவறு என்று சுட்டி காட்டுங்கள். இஸ்லாத்தின் சட்டத்திற்கு மாறாக உங்களின் சட்டத்தையும் முன்வையுங்கள் . பரிசிலனை பண்ணுவோம் .அத விட்டுட்டு சும்மா எதாவது சொல்லனும்னு சொல்றது நல்ல இல்லை.

    • ஒரு தனி மனிதனின் தவறை ஒரு மதத்தின் தவறாக வாதத்தை முன்வைப்பதை ஏற்றுகொள்ள இயலாது///……..ஒரு மதத்தின் தவறுகள் மேலே உள்ள செங்கொடி தல இனைப்புக்கு சென்று படிக்கவும்!சும்மா சொல்லனும்னு சொல்லலை!தவறை சுட்டி காட்டுனாலே பொங்குவது எந்த ஊர் நியாயம்?கோபம கூடாதுன்னு குரானில் சொல்லப்பட்டிருப்பதாக கேள்வி!

      • எல்லாம் “கேள்வி”படுவதுதான்,”மனிதன்” சொந்தமாக படிப்பதில்லை போல,இஸ்லாத்தை முழுவதுமாக படித்துவிட்டு ,பிறகு கருத்து சொல்லுங்கள் ,

    • பதிவில் தவ்கீத் கட்சிக்காரரின் காமவிளையாட்டுகளுடன் தவ்கீத் கட்சியின் அரசியல் சந்தர்ப்பவாதமும் தோலுரிக்கபட்டுள்ளது, சகோதரர்கள் அதற்கும் குரானிலிருந்து விளக்கம் கொடுப்பார்களா?

  8. இஸ்லாம் பற்றி அரைகுறை ஞானம் உள்ளவர்களின் கட்டுரை இது ,நீங்கள் நேரடி விவாதத்துக்கு மக்கள் முன் வாருங்கள் ,மக்கள் புரிந்து கொள்வார்கள் உங்களுடைய அரை குறை அறிவை ,மக்கள் முன் TNTJ உடன் நேரடி விவாதத்துக்கு தயாரா ?

    • உங்களின் பதில் புதுசில்லையே!!!எப்போ விவாதம் தொடன்குனாலும் எண்கள் ஒபீசுக்கு வந்து விவாதித்தால்தான் நியாயம்னு சொல்வது காமெடியா தெரியலியா?இங்கியே விவாதிப்பதில் என்ன கஷ்டம்?நாளு பேரு பாக்குராங்கன்னு கூச்சமா இருக்கா?

      • சரி அப்போ எங்கே விவாதத்தை வைத்துக்கொள்ளலாம் ? நீங்களே அரங்கத்தை ரெடி பண்ணுங்கள் ,ஒப்பந்தம் முதலில் போட்டுக்கொள்வோம் ,
        “நாலு பேர் பார்க்கின்றார்களே” என்று கூச்சம் இல்லை ,! இந்த “வினவை” நாலு பேர் மட்டும்தான் பார்க்கின்றார்கள் என்றுதான் கூச்சம், நேரடி விவாதத்துக்கு வந்தால் நான்கு லட்சம் பேர் பார்ப்பார்கள். பிறகு “வினவின்” அறிவாளி !!யோக்கியதை உலகுக்கு புலப்பட்டு விடும் ,பிறகு “மனிதன்” யார் என்று மக்களுக்கு தெரிந்து விடும்

  9. இந்த ஒரு விசயத்தை வினவு தகுந்த ஆதாரம் கிடைத்ததும் பெயர்களோடு வெளியிட்டுவிட்டது. ஆனால் இங்கே விவாதிக்கும் இசுலாமியர்களுக்கும் மாற்று சிந்தனயாலர்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். மேலும் குறிப்பாக இந்த ஒரு சம்பவத்தை மட்டுமே அளவுகோலாக பார்த்து இசுலாமிய பெண்ணியத்தை விவாதிப்பதாக என்னும் இசுலாமியர்க்கும். இது ஒரு sample தானே தவிர நான் அறிந்து தமிழகம் முழுவதிலும் கேரளாவிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன. அதற்க்கெல்லாம் உங்கள் விளக்கம் என்ன. எந்த மதமும் பெண்ணை ஒரு நுகரும் பண்டமாக மட்டுமே பார்க்கிறது. இனி நானும் முஸ்லீம் பெயரில் எழுதுவதாக எண்ணிவிடவேண்டாம் (அதென்னங்க அநியாயம் இசுலாமியர்களில் இருந்து மட்டும் பகுத்தறிவுவாதிகள் வரவே கூடாதா இல்லை உங்களை வைத்து நீங்களே மதிப்பிட்டுக்கொல்கிரீரா) நான் ஒரு மிகவும் அதிகமாக தவுஹீது கொள்கையை கடைபிடிக்கும் ஒரு முஸ்லீமே. எங்கள் பகுதியிலும்(கோவை)இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் உண்டு வேண்டும்பொழுது அதையும் பின்னூட்டமாக பதிவேன்

    • #அதென்னங்க அநியாயம் இசுலாமியர்களில் இருந்து மட்டும் பகுத்தறிவுவாதிகள் வரவே கூடாதா#

      பகுத்தறிவாளர் வரலாம்.ஆனா பேருதான் உதைக்குது. அதனால நீங்க பகுத்தறிவாளர் இல்லன்னு தெரியுது

      • பேர வச்சே பகுத்து அறியிற உன் மூளைய நெனச்சா புல்லரிக்குதுப்பா

        • அண்ணே என்ன அண்ணே கோவப்படுறீங்க.உங்களுக்கு சப்போர்ட்டா தானே அண்ணே பேசினேன்.அதுக்கு என்ன கேவலப்படுத்திர மாதிரி புல் அரிக்குது அது அறிக்குதுனு சொறியிறீங்களே அண்ணே.புல் அரிச்சா பரவா இல்லைன்னே வேறு எதாவது அறிக்கும்போது தானே பிரச்சனை அண்ணே.நம்ம புஷ் பாய்-ங்கள ஒழிக்கிரதுக்காக உள்குத்து வேலை செய்தான் அண்ணே.இப்ப என்னடான்னா அங்க பாய்- ங்க கூடிபோயட்டாங்க அண்ணே.என்ன அண்ணே முறைக்கிறீங்க நம்ப புஷ் -ன்னு சொன்னதுக்கா.அப்படியெல்லாம் கோவப்படாதீங்க நான் முட்டாளா இருந்தாலும் அறிவாளியா இருந்தாலும் நீங்க தான் அண்ணே என் குரூ.அத முதல்ல மனசில வச்சுக்கொங்கன்னே.பீ.ஜே.பாய் இருக்காரே அண்ணே எதுக்கு எடுத்தாலும் குரான் ,ஹதீஸ கொண்டு வந்து ஆதாரத்தோட பேசராருன்னே.நம்ப செங்கொடி இருக்காரே அண்ணே அவர் புலி ச்சே புலிதான் செத்துபோச்சே சிங்கம் அண்ணே சிங்கம்.பீ.ஜே.பாய் தெய்ரியமா எல்லாரும் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்றார் அண்ணே.நம்ப சிங்கம் குகைக்குள்ளேயே இருக்காம வெளியே வந்து பீ.ஜே.பாய் உடைய முகத்திரையை கிழிக்கணும் அண்ணே.பாய் விவாதத்திற்கு எத்தனை பேரையாவது கொண்டுவருட்டும் அண்ணே. நம்ப சிங்கம் சிங்கிளா போகட்டும் அண்ணே.கும்பலா போனா சிங்கம் இல்லன்னே அசிங்கம் அண்ணே.பாய் கேட்கிற கேள்விக்கு சிங்கத்து பதில் தெரியலே என்றாலும் ஆதாரம் எல்லாம் நமக்கு எதுக்கு அண்ணே பாய் களுக்கு எதிரா போற வழிலே போட்டு போரவங்களது எடுத்து போட்டா பயந்து போய்விடுவார் அண்ணே.உஜிலா தேவி நமக்கு எதிரா பரவாஇல்லை, ஈச குரான் போய்பாருங்க அண்ணே.அவங்களுக்கு அதாரம் எல்லாம் தேவை இல்லை.ஆனா மறந்தும் online pj,ethirkkural அங்கே போயடாதீங்கன்னே.பிறகு தொடருகிறேன்

          • அண்ணே வந்துட்டேன் அண்ணே (இனி அண்ணன் வேண்டாம்).உள்குத்து வேலை என்று சொன்னேன் இல்ல.நாம அவங்கள பற்றி இல்லாததெல்லாம் எழுதினோம் இல்ல அவங்க vunarvu பத்திரிகைல நம்மள கிழி கிழின்னு கிழிச்சாங்க அந்த கோவத்தில நாம இருக்கோம்.இத வேணுமின்னு யாரோ ஒருத்தரு பாய் பேருல போட்டுட்டு நமக்குள்ள சண்டைய மூட்ரானுங்கன்னு சொல்ல வந்தேன்.பகுத்தரிவாலராகிய நமக்கு அரபி பேர் தான் பிடிக்காதே.பின்ன எப்படி இவர நம்பரதான்.பெண்ணுரிமை பெண்ணுரிமை-ன்னு வாய் கிழிய கத்துறோம்.அப்படி என்னாபா உங்க பெண்களுக்கு உரிமை கொடுத்தீங்கன்னு பாய் கேட்கும் போது நமக்கு கத்தி தானே பழக்கம்.நீங்க எங்ககிட்ட கேட்ககூடாது.என்று சொல்லி அவரு வாயை அடைச்சிட்டேன் இல்ல.நம்ப பேரை நான் காப்பாத்திட்டேன்லே.அதோட சும்மா விட்டேனா?குரான், ஹதீசிலிருந்து ஆதரத்த கேட்டா புட்டு புட்டு (சாபிடற புட்டு இல்லன்னே)வைக்கிறாரு.நம்ப சகாங்க இருக்காங்களே லேசு பட்டவங்க இல்ல சும்மா விடுவாங்களா.உடான்சுங்க தளத்தில் போயி பாருங்கன்னு.நாங்க பகுத்தறிவாதி.ஆனா நாங்க எதையும் பகுத்தரியமாட்டோம்.நாங்க சொல்லறத நீங்ககேட்கனும்.எங்ககிட்ட ஆதாரம் எல்லாம் கேட்க கூடாது.என்று சொல்லி அவங்க கரியை பூசிட்டாங்கள்ள.நீங்க எனக்கு சப்போர்ட் செய்தீங்கன்னா எடைக்கு எடை தங்கம் வாங்கி அதை வித்து பாய் கூட விவாதம் செய்து ஜெயிச்சு காட்றேன்.செங்கொடியை நம்பாதிங்க அவர் கன்னித்தீவு சிந்துபாத் கதைதான் எழுதுவேன்.அதுக்கு வந்தா வாங்க நேரிடையான விவாதத்திற்கு வரமாட்டேன் என்றாரு.பாய் தான் எழுதினா எத்தனை வருஷம் ஆகும் என்று தெரியல.அதனால நேரிடையா உங்க பகுத்தறிவ நிரூபிங்கன்னு கூபிடராறு.நம்ப பகுத்தறிவ எப்படி நிரூபிப்பது நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதிங்க.சுயமரியாதைய பற்றி பேசறோம்,மதங்களைப்பற்றி பற்றி பேசறோம்.நம்ப எப்படி இருக்கோம்னு கொஞ்சம் கூட சிந்தித்து பார்த்ததே இல்ல.புர்கா பற்றி பேசறோம் ஆனா பிriட்டன்லே புதிதாக இஸ்லாத்தில் மூனில் இரண்டு பெண்கள் முஸ்லிம் ஆகி புர்கா போட்டு வர்றாங்க.சிந்திக்கிறேன்

            • ஒரே confusingபா கன்னித்தீவு மாதிரி இல்லாம உன் பிரச்சினைய சுருக்கமா சொல்லு, தீர்க்கமுடியுமான்னு பார்ப்போம்

              • என்னாபா?இதையே குழப்பமா கீதுன்னு சொல்லிக்கினு கீறியே உன்னோ எவ்வளோ கீது அதெல்லாம் எடுத்து உட்டா இன்னா சொல்லுவியோ.சரி இதை உடு.அண்ணே இப்போ புரியுதானே.ஏன் அண்ணே இப்படி நடிக்கிறீங்க.

                • பத்தாவது தடவை படிச்ச பின்னாடிதான் புரிஞ்சுதுப்பா.

                  //புதிதாக இஸ்லாத்தில் மூனில் இரண்டு பெண்கள் முஸ்லிம் ஆகி புர்கா போட்டு வர்றாங்க.சிந்திக்கிறேன்//

                  எங்க நாட்டுல கூடத்தான் 3ல் 2பேர் என்ற கணக்குல அம்மாவுக்கு ஓட்டுப் போட்டு CM ஆக்குனாங்க அதுக்காக அவங்க நல்லவங்கள்னு சொல்லிறலாமா!

                  • #பத்தாவது தடவை படிச்ச பின்னாடிதான் புரிஞ்சுதுப்பா#
                    #எங்க நாட்டுல கூடத்தான் 3ல் 2பேர் என்ற கணக்குல அம்மாவுக்கு ஓட்டுப் போட்டு CM ஆக்குனாங்க அதுக்காக அவங்க நல்லவங்கள்னு சொல்லிறலாமா!#

                    அண்ணே அதுக்குதான்னே சொன்னே நாம வறட்டு சித்தாந்தம் பேசி பேசி நம்ம பகுத்தறிவே மங்கி போச்சுன்னே.இதுக்கே பத்து முறை படிக்கோணும்.விண்வெளி,பரிணாமம் .etc….பத்தி படிக்கொனுமின்னா எத்தனை ஒலி வருடம் ஆகும்னே தெரியலேன்னே.
                    அட அப்படி யாருன்னே சொன்னது.அப்படி நம்ம சொல்லமுடியுமா அண்ணே.அப்படி சொல்லிட்டா நம்ம மானம் மரியாதை என்னாவரதான்?குரங்கிலிருந்து மனிதன் வந்தான்,திருவள்ளுவர் இந்த உருவத்தில்தான் இருந்தாரு என்று நம்பர நாம இதை எப்படின்னே நம்பறது.கண்ணால் கண்டால் தான் நம்போனும்னே.அதுக்காக செலவு செய்து பிரிட்டன் போய் பாத்துட்டா நம்பமுடியும். நாம் இதெல்லாம் நம்பகூடதுன்னே.ஊர்லே இப்படி சொல்லி திரியரானுவோ பயபுல்லவோ.அதைத்தான்னே சொன்னேன்.ப்ளீஸ் கோவிச்சுக்காதீங்க அண்ணே.நாம நல்லவங்களுக்குதானே ஓட்டு போடுவோம்.அண்ணே நம்ம நாட்டுல யாருன்னே நல்லவங்க.நாம யாருக்குண்ணே ஓட்டு போட்டோம் மறந்து போயட்டேன்னே.நீங்க கொஞ்சம் சொல்லுங்க அண்ணே.ஒன்னு சொல்ல மறந்துட்டேண்ணே நாம மட்டும்தான்னே நல்லவங்க.நம்ம கொள்கைக்கு எதிரா இருக்கிற எல்லோரும்……………………….

  10. திராவிடன்!

    //மேல கொடுக்கப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று ஆற அமர உட்கார்ந்து படித்துவிட்டு உங்களின் கேள்விகளை தொடுங்கள். சரி வர தெரியாம சும்மா சும்மா எதாவது கேக்கனும்னு சொல்லி கேக்க கூடாது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் தான் உங்க கதை.//

    நாமளும் எவ்வளவோ கரடியா கத்தினாலும் இந்த பாய்ங்கள நம்ம(கம்யூனிஷ) கூடாரத்துக்கு கொண்டு வர முடியலீயே! இந்துக்களிலும் கிறித்தவர்களிலும் ஓரளவு கூட்டத்தை திரட்டி விட்டோம். இந்த தவ்ஹீத் ஜமாத் வேறு முஸ்லிம்களை சிறந்த சிந்தனைவாதிகளாக மாற்றி வருகின்றார்களே. இவர்கள் இருக்கும் வரை நம்ம கம்யூனிஷ கடையை முஸ்லிம்கள் மத்தியில் விதைக்க முடியாது என்ற விரக்தியில் எழுதப்பட்டதே வினவின் தற்போதய கட்டுரை. வினவின் வயிற்றெறிச்சலை பதிவின் மூலமே தீர்த்துக் கொள்கிறது. பாவம்…. இருக்கும் ஒரே வழியையும் அடைத்து விடக் கூடாதல்லவா…..

    இஸ்லாத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு மேற்கண்ட புத்தகத்தை படித்து வினவு தெளிவு பெறட்டும். நாம் நமது வழியான சாந்தியும சமாதானமுமான வழியிலேயே பயணிப்போம்…..

      • மனிதன் அவர்களுக்கு ஒரு விஷயம், கண்டதெல்லாம் கடவுள் என்று சொல்லுபவனும், கண்டால் தான் கடவுள் என்று சொல்லுபவனும் முட்டாள் என்று உங்கள் விஷயத்தில் தெளிவாகிவிட்டது. எப்படி இதெல்லாம் எவனோ ஒருத்தன் உளறிய எல்லாம் ஒரு செய்தி என்று நீங்கள் இங்கே காட்டுகிறீர்கள்.

    • நாம் நமது வழியான சாந்தியும சமாதானமுமான வழியிலேயே பயணிப்போம்….////.
      .
      .
      போக வேண்டியதுதானே?எதுக்கு இங்க வந்து கூப்பாடு போடுறீங்க?வாதத்துக்கு பதில் சொல்லுன்னா உடனே எங்க ஒபீசுக்கு வர தயாரான்னு கேக்க வேண்டியது!ஏன் இங்கியே விவாதம் செய்ய கூடாதுன்னு இண்டர்னட் விதிகளில் அல்லா சொல்லியுலாரா?சைக்கிள பஞ்சரானாலும் எந்த திசையில் வைத்து ஓட்டனும்னு குரானை தேடுறீங்க!செம காமெடி!

  11. எனக்கு ஒரு சந்தேகம் கட்டுரையாளர் அவர்(பாஸ்) மூலமா அவர் வீட்டில் பாதிக்கப்பட்டுருகிறார் போல. தனி மனிதன் விமர்சனம் கூடாது என்று கூறிவிட்டு கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருக்கிறார்.

  12. திரவிடன் அவர்களே,

    ரபீக் அவர்களிடம் கேட்ட கேள்வியையே உங்களிடமும் கேட்கிறேன்.
    இந்நிகழ்வுக்கு பாசித்தை இசுலாமியச் சட்டப்படி என்ன செய்யலாம் என்று கூறுங்களேன்? இசுலாம் செல்லும் பெண் உரிமைகள் அடிப்படையில்கூட என்ன செய்யலாம் என்று கூறுங்கள். சும்மா இசுலாம் வழங்கும் பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று பழைய பல்லவியையே பாடாமல் பிரச்சனைக்கு பதில் சொல்லுங்கள்.

    • சாகித் அவர்களுக்கு, இங்கே இஸ்லாமிய சட்டம் இருந்திருந்தால் அவர் இந்நேரம் பூமிக்கு அடியில் இருந்திருப்பார். இங்கே இஸ்லாமிய ஆட்சி இல்லை. அதனால் நீங்கள் இது குறித்து அதாவது இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் இந்திய சட்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதை விடுத்து ஜமாத்தை அல்லது முஸ்லிம்களை குறை சொல்ல வேண்டும் என்று நிங்கள் விரும்பினால் அதற்க்கு எந்த உடன்ப்படும் இல்லை.

    • அண்ணே நீங்க வரும்போதேல்லாம்
      யோக்கியன் வர்றான் சேம்பை உள்ளே எடுத்து வை
      என்கிற பழமொழி ஏணே நினைவுக்கு வருது

      • ஹைதர் அலி, கட்டுரையின் மையப்பொருள் பற்றி பேசாமல் சென்றிருப்பதன் மர்மம் என்ன? ஒரு மத அமைப்பின் தளபதி தனது செல்வாக்கை வைத்து பெண்களை சீரழிக்கும் கயவனை அம்பலப்படுத்தி எழுதினால் உங்களுக்கு ஆத்திரம் வருவது ஏன்? நாங்கள் அந்த அப்பாவிப் பெண் பக்கம், நீங்கள் அந்த கயவன் பக்கமா? கொஞ்சம் மனசாட்சியுடன் – இப்படி ஒன்று இருந்தால் – நடந்து கொள்ளுங்கள், மத அபிமானம் நாட்டில் நல்லது கெட்டதுகளை கூட பார்க்க விடாமல் மறைப்பது நல்லதல்ல.

        • அண்ணே வினவு

          “ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள் “இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார்(பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்” என்றார்கள் ( நூல்:அபூதாவூத்).

          இனவெறி என்றால் என்ன? என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள் கேட்ட போது நபியவர்கள்
          “தன் இனத்தான் தவறு செய்தாலும் அதை நியாயப்படுத்துவது தான் இனவெறி” என்றார்கள். (நூல்: புகாரி)

          அந்த கயவன் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அது கண்டிக்கதக்கது இதில் மாற்று கருத்துஇல்லை

          ஆனால் இதை கைலே மாடியிலே போட்டு கண் காது வைத்து மிகைப்படுத்தி எழுதியிருப்பதை அம்பலப்படுத்த வேண்டாமா வினவு?

          • மதவெறிக்கு சமூகத்தை நேசிப்பது என்கிற முகமூடியை போடாதீர்கள். வாழ்க்கை வசதி உள்ளவனுக்கு தான் இசுலாம் இணிக்கும் (அதாவது உங்களைப்போன்றவர்களுக்கு) காய்ந்து போன வயிற்றை தடவிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஏழை முசுலீம்களுக்கு எப்போதும் கஞ்சியை பற்றிய கவலை தான் முதல் பிரச்சினை.

            • வாங்க பகத் என்கிற இப்போதைக்கு தோழமை என்கிற நண்பரே

              //மதவெறிக்கு சமூகத்தை நேசிப்பது என்கிற முகமூடியை போடாதீர்கள்.//

              மூகமுடி போடுபவருக்கு தான் மூகமுடியை பற்றிய டிட்டியல் தெரியும் அதனால் மூகமுடி அனிந்து இருப்பதால் அனைவரும் மூகமுடி என்று அர்த்தமில்லை மிஸ்டர் பகத்

              //வாழ்க்கை வசதி உள்ளவனுக்கு தான் இசுலாம் இணிக்கும்//

              அப்பூடியா காய்ந்த ரொட்டிகளை தின்று கொண்டு ஆப்கானில் மண்வீட்டில் வசிக்கிறவாய்ங்களா விட்டா ஒலகத்திலேயே பெரிய பணக்காரனு சொல்வீங்கே போல உங்கள் கடும்மதகொட்பாடு உடையவர்கள் என்று சன்றிதழ் கொடுக்கப்பட்ட அவர்கள் ஏழைகள் தான் கண்ணை திறந்து பாருங்கள்

              • ////அப்பூடியா காய்ந்த ரொட்டிகளை தின்று கொண்டு ஆப்கானில் மண்வீட்டில் வசிக்கிறவாய்ங்களா விட்டா ஒலகத்திலேயே பெரிய பணக்காரனு சொல்வீங்கே போல உங்கள் கடும்மதகொட்பாடு உடையவர்கள் என்று சன்றிதழ் கொடுக்கப்பட்ட அவர்கள் ஏழைகள் தான் கண்ணை திறந்து பாருங்கள்/////

                எங்க ஊர் ஏழை பாய்ங்களும் அப்படி இல்லை ஆப்கான் பாய்ங்களும் அப்படி இல்லை. ஆப்கன் ஏழை மக்கள் அமெரிக்காவை எதிர்க்க வேறு வழி இல்லாமல் மதவாதிகளுடன் சேருவதை மத அடிப்படைவாதிகளுக்கான அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளாதீர்கள் ஹைதல் அலி, அங்கே கம்யூனிஸ்ட் கட்சி இருந்தால் ஏழை மக்கள் அதில் தான் அணிதிரள்வார்கள் தவிர மதவாதிகள் பின்னால் போக மாட்டார்கள்.

                மேலும் சமூகம் என்றால் இசுலாமிய மக்களை மட்டுமே சமூகம் என்று பார்க்கும் மதவெறியர்கள் அல்ல நாங்கள். இசுலாமிய மக்களையும் உள்ளடக்கிய உழைக்கும் வர்க்கத்திற்காக போராடுபவர்கள் தான் கம்யூனிஸ்டுகள். எங்கள் சமூகம் என்று நீங்கள் அனைத்து முசுலீம்களையும் என்றைக்குமே அணிதிரட்ட முடியாது. அவர்கள் பல வர்க்கங்களின் கூட்டமாக தான் இருக்கிறார்கள். அதில் பெரும்பாண்மையானவர்கள் ஏழைகள். உங்களைப் போன்ற புதிய பணக்காரர்கள் வேண்டுமானால் சுரண்டுகின்ற பணக்கார முதலாளிகளோடு கூட்டு சேர்ந்து கொண்டு அவர்களை சகோதரா என்று தழுவிக் கொள்ளலாம் ஆனால் கோடிக்கணக்கான ஏழை முசுலீம்களுக்கு அவர்கள் என்றுமே எதிரிகள் தான். ஏழை இசுலாமியர்களுக்கு இசுலாம் என்றைக்கும் விடிவை பெற்றுத்தர முடியாது.

            • நம்ம அலாவூதீன் பள்ளிவாசலுக்கு எதித்த வீட்டுலே இருந்துகிட்டு காலையில்
              வெளிக்கி இருக்க மட்டும் பள்ளிவாசலுக்கு போவது ஷு கால்களுடன் உள்ளே நுழைவது இதை எவனாவது தட்டி கேட்ட அய்யகோ பாருங்கள் கம்யூனிஸ்ட்டை,நத்திகனை அடிக்க வருகிறான் என்று ஒலமிட்டு உங்களிடம் பிராது கொடுப்பது இந்த நேர்மையான்வரிடம் விசாரிப்போமா?

              • “நம்ம அலாவூதீன் பள்ளிவாசலுக்கு எதித்த வீட்டுலே இருந்துகிட்டு காலையில்
                வெளிக்கி இருக்க மட்டும் பள்ளிவாசலுக்கு போவது ஷு கால்களுடன் உள்ளே நுழைவது இதை எவனாவது தட்டி கேட்ட அய்யகோ பாருங்கள் கம்யூனிஸ்ட்டை,நத்திகனை அடிக்க வருகிறான் என்று ஒலமிட்டு உங்களிடம் பிராது கொடுப்பது இந்த நேர்மையான்வரிடம் விசாரிப்போமா?”அலாவுதின் மட்டும் பள்ளிவாசலுக்கு உள்ளே வெளியருக்க போவது கிடையாது ஜமாத்தே பள்ளிவாசள் பள்ளிவாசல் கழிப்பறையில்தான் வெளிக்கு போரார்கள்.டி.என்.டி.ஜெ உட்பட.ஏனன்றல் பெரும்பாளான வீடுகளில் கழிப்பிட வசதிகிடையாது.மேலும் அலாவுதீன் கம்யுனிஸ்டா இருக்கவேண்டும் என்பதுதான் பெரும்பாலான முஸ்லிம்களின் விருப்பம்.அதனால்தான் மக்களுடைய ஆதரவுடன் பள்ளிவாசலுக்கு எதிரே குடி இருந்துக்கிட்டு மக்களுடைய ஆதரவுடன் தனது சுவரில் மதத்தை அம்பலபடுத்தும் வாசகங்களையும், புரச்சிகர வாசகங்களையும் எழுதமுடிகிறது.பாதிக்கபட்ட மக்கள் வினவு போன்ற புரட்சிகர சக்திகளை தொடர்புகொள்ள முடிகிறது.இப்ப பிரச்சனை ” பீ” பேளுவதில் இல்லை பாசித்தின் இரண்டாவத திருமணம்,தவுகித் ஜமாத்தினரசியல் இரட்டை
                வேடம்,இஸ்லாமிய பெண்ணடிமைதனம்,போலி இந்துமத எதிர்ப்பு போன்றவற்றைபற்றி பதிவர் பேசினால் ஆரோக்கியமாக இருக்கும்.

                • வெளிக்கி இருக்க போன இடத்தில் விளாம்பழம் கிடைத்த மாதிரி
                  நம்ம அலாவூதீனுக்கு இஸ்லாத்தை அசிங்கப்படுத்த எப்படி பாஸ் என்கிற பாசித் கிடைத்தார் என்பது தான் இந்த பதிவின் முன்கதை சுருக்கம்

                  • என்னண்ணா இன்னும் பாசித் லைன் கிடைக்கிலியா? படத்துக்கு டிஷ்கசன் பண்ற மாதிரி என்னென்னமோ உளறுரீங்க.

              • இப்போ பிரச்சனை பீ பேலுவதில் இல்லை.பாசித் திருமனம்,தவிகித்ஜமத்தின் அரசியல் இரட்டைவேடம், இசுலாமிய பென்னாடிமைதனம்,போலி இந்து மதஎதிர்ப்பு இது தொடர்பாக பதிவர் பேசினால் ஆரோக்கியமாக இருக்கும்.ஊர்க்காரன்

                • ஆனா பீ பேலுவதை தடுக்க போனதினால் வந்த வீனை என்பதை இங்கு பதிவு செய்கிறேன் யுவர் ஆனார்

        • ஒரு பக்க நணயமும் ஒருபக்கசார்பு செய்தியும் சேல்லாது என்கிற எளிய உண்மை கூடவா ஒங்களுக்கு தெரியவில்லை

          இப்போது தான் பாசித் என்கிற பாஸின் மொபைல் நம்பர் எனக்கு கிடைத்து இருக்கிறது
          பேசி விட்டு ஆடியோ கிளிப் தருகிறேன் அதுவரை அண்ணன் சாகித் அவர்களிடம் நிறைய பேச வேண்டி இருக்கிறது

          • பொறுக்கியிடம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது ? அப்பகூட அந்த ஊரில் உள்ள நேர்மையான ஆட்களிடம் பேசி உண்மை என்ன என்று அறிந்து கொள்ள முயலாமல் அந்த பொறுக்கியிடமே பேசும் அண்ணன் ஹைதர் அலி இப்படியே காலத்தை கழிக்காமல் ஜமாத் தலைவரானால் எதிர்காலத்தில் மணமேல்குடி ஜமாத் கூட்டத்தை போல வளர்ந்துவிடலாம்.

            • //பொறுக்கியிடம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது ? ///

              இது எந்த ஊரு நியாயம் நீங்க பொறுக்கின்னு சொன்ன நாங்க அதை ஒத்துக் கொள்ள வேண்டுமா சர்வதிகாரமாக அல்லவா இருக்கிறது

              ஊருல ஊள்ள தவ்ஹீத் ஜமாத்,பஞ்சாயத்து பன்னின ஊள்ளுர் ஜமாத் எல்லாரும் கெட்டவாய்ங்கனு ஓங்க கிசு கிசு பணி கட்டுரை சொல்கிறது

              நீங்களே சொல்லுங்கே யாரிடம் விசாரிக்கலாம் நம்ம அனைந்த விளக்கு அலாவூதின் அவர்களிடம் விசாரிக்கலாமா?

              • எங்கள் ஊரில் ஒரு பணக்கார கிழவன் இருந்தான். முஸ்லீம்தான். வருடத்திற்கு ஒரு முறை ஒரு ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து கள்யாணம் ஆகாத பெண்ணை திருமணம் செய்து கொள்வான். ஜாமத்தும் திருமணம் செய்து வைக்கும். எனக்குத் தெரிந்து அவன் இதுபோன்று 7 திருமணங்கள் செய்து இருக்கிறான். பிறகு விவாகரத்து செய்து விடுவான் (குழந்தை பிறந்துவிட்டால் சொத்து கொடுக்க வேண்டி வருமே) இந்த உணர்வை கொடுப்பது எது, இஸ்லாம்தானே. இஸ்லாத்தின் சட்டத்தை பயன்படுத்தித்தானே செய்திருக்கிறான்.

                • எங்க ஊரில் ஒரு கம்யூனிஸ்ட் இருந்தான்
                  சிறுகடை வியாபரிகளிடம் போராட்டம் அது இதுன்னு சொல்லி வசூல் பன்னி சாயங்காலம் டஸ்மாக்கில் அந்த காசை வைத்து நல்லா தண்ணியடித்து வப்பாட்டி வீட்டில் போய் படுத்து கிடப்பான்

                  இந்த ஏமாற்று குணத்தை கம்யூனிஸம் தானே கற்றுக் கொடுக்கிறது

                  • வப்பாட்டி வீட்டில் படுத்தவனை கம்யூனிஸ்ட் என்று உங்கள் ஜமாத் போல எவனாவது சொன்னானா!

                    • வருஷம் ஒரு கல்யாணம் பன்னுகிரவனை உண்மையான முசுலிம்னு எவனாவது சொன்னான?

                    • முசுலீமுன்றனாலதாண்ணே ஜாமத் கல்யாணம் பண்ணிவைக்குது.

                    • //இந்த ஏமாற்று குணத்தை கம்யூனிஸம் தானே கற்றுக் கொடுக்கிறது//

                      கலியாணம் பண்ணிக்கிறதுக்கு குரான்ல அனுமதியிருப்பது போன்று வப்பாட்டி வச்சிக்கிறதுக்கு கம்யூனிசத்துல ஆதாரம் காட்ட முடியுமாண்ணே.

                • செவப்பு சட்டை போட்டு செவப்பு கொடி பிடிச்சா
                  உண்டியலில் மக்கள் காசு போட்டு விடுவார்கள் என்கிற வித்தையை யார் கற்றுக் கொடுத்தது. இவ்வளவுக்கும் தண்ணீ அடித்து விட்டு விடிய விடிய மார்க்ஸ் எங்கல்ஸை பற்றி விலாவைர்யாக பேசுவான்

                  • அண்ணே குன்றங்குடி அடிகளார் கூடத்தான் குரான விலாவரியா பேசுறாரு அவருக்கு பள்ளிவாசல்ல கல்யாணம் பண்ணிவைப்பீங்களான்னே.

                    • மேல் மருத்துவர் ஆதிபராசக்தி குரூப் கூடத்தான் செவப்பு சட்டை அணிகிறார்கள் அவர்களை கம்யூனிஸ்ட்னு சொல்லி விடுவீர்களா?

                    • அதத்தாண்ணே நானும் கேக்குறேன் சிவப்பு சட்ட போட்டு உண்டியல் குலுக்குறவன்லாம் கம்யூனிஷ்டா. குன்றக்குடி அடிகளாருக்கு எப்படி பள்ளவாசல்ல கலியாணம் செய்து வைக்க மாட்டீர்களோ அதுபோலத்தன் மேல்மருவத்தூரின் செவப்பு சட்டையும் உண்டியல் குலுக்கும் செவப்பு சட்டையும் கம்யூனிஸ்டு இல்லை. ஆனால், பள்ளிவாசல்ல கலியாணம் செஞ்ச அந்த கிழட்டு நாய் (வயது 70) முஸ்லீமுதானே?

            • தோழமை அண்ணே, என்னென்னே நீங்க பொருக்கின்னு சொல்லி என்ன வம்புல மாட்டவுட்டீங்க.பாய்-ங்க உங்கள பொருக்கிகளுக்கெல்லாம் குருன்னு சொல்லறாங்க அண்ணே. நானும் இருங்க அண்ணே கிட்டே கேட்டுட்டு சொல்றன்னு சொன்னேன்னே.அதுக்கு நீங்க கேட்ட மாதிரி கேள்வி கேட்கிராங்கோன்னே நான் என்னன்னே பதில் சொல்றது.கேள்வி கேட்கிற அதிகாரம் எங்களுக்கு மட்டும்தான் இருக்கு சொல்லிவிடலாமா அண்ணே

              • இதத்தானே நானும் கேக்குறேன்

                இங்கு இருக்கிற எல்லா இஸ்லாமிய அடிப்படை கொட்பாடு தெரிந்து
                பின்பற்றுகிற ஜமாத் இல்லைண்ணே

                நம்ம அலாவூதீன் கூட கம்யூனிஸ்ட்டாக்க இருந்துகிட்டு பள்ளிவாசல் நிர்வாகியாக இருந்தார்னா? பத்துகங்கே?

                • இங்கு இருக்கிற எல்லா பள்ளிவாசல் ஜமாத் இஸ்லாமிய அடிப்படை கொட்பாடு தெரிந்து
                  பின்பற்றுகிற ஜமாத் இல்லைண்ணே

                  பள்ளிவாசல் ஜமாத் என்பதை இணைத்து படிக்கவும்

                  • //பின்பற்றுகிற ஜமாத் இல்லைண்ணே//

                    அந்த 70 வயசு கிழவன முஸ்லீமு இல்லன்னு சொன்னதுக்கும், இஸ்லாமிய அடிப்படை கொட்பாடு தெரிந்து பின்பற்றுகிற ஜமாத் இல்லைன்னு நீங்க சொன்னதுக்கும் குரான்ல ஆதாரம் காட்டமுடியுமா?

                    • //சொன்னதுக்கும் குரான்ல ஆதாரம் காட்டமுடியுமா?//

                      கண்டிப்பாக தருகிறேன் பாத்தீங்களா? இதே ரோஷத்தோடு இரண்டு வருடமாய் சாகித் அவர்களிடம் கேட்டு வருகிறேன்

                      பாருங்க இரண்டு நாட்களாக சாகித் அவர்களுக்காக காத்து கிடக்கிறேன்
                      நீங்கள் நியாயவான் போல தெரிகிறீர்கள் கொஞ்சம் இரண்டு வருட என் கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்லுங்கள் ப்ளீஸ்

                    • அதெல்லாம் நம்ம வேல இல்லீங்கண்ணா. எனக்கு நீங்க ஆதாரத்த குடுங்கண்ணா.

                    • //அதெல்லாம் நம்ம வேல இல்லீங்கண்ணா. எனக்கு நீங்க ஆதாரத்த குடுங்கண்ணா.//

                      அண்ணே அவசரக் குடுக்கை நான் இரண்டு வருடமாக காத்து இருக்காலே
                      நேத்து வந்துகிட்டு பொறுமை சாகித் இப்ப வந்து விடுவார்

                      சாகித் அண்ணனை பார்த்தவுடன் யாருக்காக இருந்தாலும் பதில் இதில் விட்டு கொடுக்க மாட்டேன்

                      கம்யூனிஸ்ட்கள் மக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவர்கள் என்ற அடிப்படை கம்யூனிச கொள்கையை விளங்கி இப்போது வந்து சாகித பதில் சொல்லுவார் ப்ளீஸ் வெயிட்

                • இஸ்லாமிய கோட்பாட்டை பின்பற்றுவர்கள் என்று கூறும் மதபுண்ணியவான்களைவிட,உழைக்கும் மக்களுக்காக போராடும் கம்னிஸ்ட் அமைப்பை சேர்தவர்கள் ஜமாத்நிர்வாகத்திற்க்கு வருவது இவ்வுர் மக்களால் விரும்பப்பட்டது.வடக்குஅம்மாபட்டினத்தில் ஜமாத்தின் உறுப்பினராக இருக்க முஸ்லிம்மத கோட்பாடுகளை பின்பற்றுகிறேன் என்று போலியாகூட சொல்லவேண்டியது இல்லை.பல பிரச்சனைகளுக்கு இயற்கை -தகமை நெறிகள் அடிப்படையில் தான் தீர்புகள் வழங்கப்பட்டுவந்தது.இதுதான் இந்த ஜமாத்தின் சிறப்பு.ஆனால் “இஸ்லாமிய கோட்பாடுகளை திணித்தேதீறுவேன்”என்ற வெறியுடன் டி.என்.டி.ஜெ இங்கு செயல்பட ஆரமித்ததில் இருந்துதான் புனிதசடங்குகள் என்ற பெயரில் பெண்களை சீரழிக்கும் கொடுமை நடக்கின்றது.

            • தோழமை அண்ணே என்னன்னே நீங்க, நாம எவ்வளவு நேர்மையானவங்க பகுத்து அறியிறோம் என்ற பேரிலே நம்மலேயே அசிங்கப்படுத்திட்டோம்ன்னே.பாய்-ங்க உங்கள பொருக்கிகளுகல்லாம் குரு என்று சொல்லி உங்கள மட்டும் அவமானபடுத்தினா பரவால்லைன்னே என்னையும் சேர்த்து அவமானப்படுத்திட்டாங்கன்னே.நான் அவங்ககிட்ட நம்ம மதத்தில் (கம்யுநிசம்)பெண்ணுரிமை பற்றி பேசும் போது ரஷ்யா,சீனான்னு வாய்தவறி சொல்லிட்டேன்னே.உடனே அவங்க சீனாவில் பெண்ணுரிமை பற்றி எங்களுக்கும் தெரியும்.சீனாவில விவாகரத்து 7% கூடி போச்சாம் என்னடான்னு பார்த்தா பெண்ணுரிமை எல்லாம் சும்மா பெயருக்குத்தானாம். அப்படின்னு அங்குள்ள பெண்கள் அழுவுரான்கலாம்.கொஞ்சம் பொறுங்க எங்க தோழர் கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன்.அந்த பொறுக்கிய தவிர வேற நல்லவங்க உனக்கு தெரியாதான்னு கேட்கிறாங்க அண்ணே.சீன நாட்டு பெண்ணுரிமைய பற்றி கொஞ்சம் அவுத்து உடுங்கோ அண்ணே.

    • ஆப்ரஹாமிய மதங்கள் பற்றி தெரியாத்தனமா படிக்க ஆரம்பித்து இடியாப்ப சிக்கலில் மாட்டி கொண்டேன்,!ஒரே இறைவன்!ஆனால் அவர் அனுப்பிய(!!??) தூதரை மற்றோரு மக்கள் குழு நிராகரித்ததால் வேறொரு மதம் ஸ்டார்ட்!மீண்டும் இவர்கள் பின்பற்றும் தூதரை இன்னொரு குழு நிராகரித்ததால் இன்னொரு மதம்!அடங்கப்பா!தல சுத்துது!

      • தலைவா! கொஞ்சம் தூங்கி எந்திரிங்க.. உங்க உளறல் தாங்கமுடியல.. குரான்-அ கொஞ்சம் புரட்டி பாருங்க புரியும்.. அல்லாஹ் சொன்னது ஒரு வழிமுறையா? அல்லது மூன்று வழிமுறையா? ஒங்கள மாதிரி மரமண்டை மக்களுக்கு முதலில் மூசா சொன்னதும் அந்த ஒரே இறைவனை தான். ஜீசுஸ் மூசா சொன்னதும் அந்த ஒரே இறைவனை தான். முஹம்மது அவர்கள் மூசா சொன்னதும் அந்த ஒரே இறைவனை தான்… ஆபிரகாம் சொன்னதும் அதை தான்.

          • அதான் சொன்னன்ல ஒங்கள மாதிரி மரமண்டை மக்கள் தூதர்கள் சொன்னத கேட்காம மாறி மாறி சிலைகளையும், காளை கன்றையும், மனிதர்களையும் வணங்கினதுனால தலைவா!

            • அதுக்கு ஏம்பா புதுக்கதைய சொல்லனும். பழைய கதையே சொல்லவேண்டியதுதானே! ஏன் அல்லாவுக்கு பழைய கதை மறந்துபோச்சா?

    • sawri அண்ணா உங்கள பற்றி ஒரு கட்டுரை எழுத சொல்லுங்கண்ணா அப்ப கட்டுரைபற்றி பேசலாமன்னா

  13. tholaruku

    thavru yar saithalum athu thandaikuriyathu than. inga naam kavanika vayndiyathu islamia sattam ipothu indiavil nataimurail ulatha enpathu than? avaru ilatha oru satathai penn adimai endru vimarsipathu arai kurai arivu petravargal panuvathu. communism attchiyil russiail nadantha adimai thanam patri negal vasika vayndum tholara. 7 andu kalam communism atchiyil 7 latcham makkal stalinal kolapatulargal ithu manitha samugathin meethu natantha adimai ilaya? neegal parka vayndiyathu sattathai matum than atil ula manithargalai ala. tntj matum muslimkalin adayalam ala athu perpanmai muslimkalal purakaika patura oru iyakam tntj saiyalkal anaithum veenanathu arivu ula yarum athil inaya matargal. naam islathai oru vivatha porulaga matra vandum apothu tha athu sola varum visayam naam arivuku thareya varum ,

  14. சரி இந்த கட்டுரையை பார்க்கும் போது ஒன்று மட்டும் விளங்குது. வினவோ அல்லது அதை சேர்த்த புதிய கலாசாரம்(?) முஸ்லிம்களை பற்றி குறிப்பாக பெண்களை பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள். நாங்கள் எல்லாம் வேடிக்கை மட்டும் பார்க்கணும். அதை பற்றி ஏதாவது மறுப்பு தெரிவித்து நாங்கள் எழுதினால் மதவாதி, பெண்ணடிமை என்று எங்களை ஏசுவார்கள். அதற்கும் பதில் கூறினால் செவிடன் காதில் ஊதிய சங்கை போல இருந்து விட்டு அந்த சமுதாயத்தில் உள்ள ஏதாவது ஒரு மனிதனின் தவறை வைத்து அந்த ஜமாத்தையே அழிக்க நினைப்பது சுத்த அரசியல்தனம். அதற்க்கு முன்னாடி தவ்ஹீத் ஜமாத்தை பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு பேசினால் ரொம்ப நல்லா இருக்கும்.

    • //அதற்க்கு முன்னாடி தவ்ஹீத் ஜமாத்தை பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு பேசினால் ரொம்ப நல்லா இருக்கும்.//

      அதற்கு முன்னாடி தவ்கீத் ஜமாத்து அய்யாவுக்கும் அம்மாவுக்கும் மாத்தி மாத்தி ஓட்டு கேக்குறாய்ங்களே நீங்களும் அதப்பத்தி பேசினா நல்லா இருக்கும்.

      • அக்கா நீங்க எதை சரின்னு சொல்றீங்க.நீங்கள் பின் பற்றுகிற மதத்தில்,சாரி கொள்கையில் உங்களுக்குள்ள பெண்ணுரிமையை கூறிவிட்டு நீங்கள் அனுபவிக்கும் அருமை பெருமையெல்லாம் எடுத்து சொல்லி பெண்ணுரிமைக்கு எதிராக மற்ற மதங்களில் உள்ளதை (அதாவது அவர்கள் வேதங்களில் இருந்து)எடுத்துக்கூறினால் நன்றாக இருக்கும்.நீங்கள் உங்களை அதி புத்திசாலி என நினைக்கும்போது மற்றவர்கள் புத்திசாலி என நினைப்பதில் என்ன தவறு.நீங்கள் மட்டும்தான் புத்திசாலியாக இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களா?

  15. தனிமனிதன் செய்யும் தவறுகளுக்கு,இஸ்லாத்தின் மீது புழுதிவாரிதூற்றுவது தான் ஊடக தர்மமா…? “வினவு” என்றால் விழிப்புணர்வு என இதுநாள் வரை நான் அறிந்திருந்தேன்.ஆனால் இப்போதுதான் அறிந்தேன் இதுவும் ஒரு “விளக்கெண்னெய்” தான் என்று

  16. இஸ்லாத்திள் டி.என்.டி.ஜெ முற்போக்கானா அமைப்பு என்கிரிர்கல் டி.என்.டி.ஜெயின் தவப்புதல்வர் பாசித் செய்தது நியாயமா ? பெண்ணுரிமை பெண்ணுரிமை என்கிரீர்களே
    இதுதான் பெண்ணுரிமையா..?

  17. விபச்சாரத்தில் ஆண்களுக்கும் தண்டனை.
    24:2. விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

  18. பாசித் தவறு செய்திருந்தால் அவர் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, இதே பாசித் திருமணம் செய்யாமல் தவறான வழியில் ஒருபெண்ணை நாடி இருந்தால் அது தான் உண்மையான பெண் சுதந்திரம் என்று வினவுபோற்றுமோ?, இஸ்லாத்தை நேரடியாக விமர்சிக்க துப்பில்லாத வினவு, இந்த ஊருல இவன் இப்படி செய்தான், அந்த ஊருல அவன் அப்படி செய்தான் அதனால் இஸ்லாம் பெண்ணடிமை மார்க்கம் என்பது அறிவீனர்களின் அறியாமை

  19. விபசாரத்தை பற்றி வினவின் பார்வை என்ன என்பதை இன்று விளக்க வேண்டும் . விபசாரத்தை வினவு ஆதரிக்கிறதா? இல்லை எதிர்க்கிறதா? என்பதை தம்பட்டம் அடித்து தம் வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டும். வினவின் சார்பாக எழுதி வரும் சாகித் கூட இதனை தெளிவு படுத்தலாம்.

  20. எப்படா ஒரு போலீஸ்காரன் சிக்குவான், ஜெயலலிதா ஆட்சியே இப்படித்தான் என்று கட்டுரை எழுத காத்து இருந்த திமுக காரன் மாதிரி இல்லை இருக்கு உங்க நிலைமை ,!! ஐயோ பாவம் ,வினவு
    உங்களுடைய மரியாதயை இதைப்போல் (கூறுகெட்டு) எழுதி கெடுத்துக் கொள்ளதீர்கள்,தனி நபரின் செயலை ஒரு தலை சிறந்த மதத்துடன் அல்லது ஒரு அமைப்புடன் தொடர்பு படுத்த வேண்டாம்

  21. ஒரு ஆணோ ஒரு பெண்ணோ, விபச்சாரம் செய்தால் அவர்கள் இருவரையும் கல்லால் அடித்து கொள்ள சொல்லி இருக்கிறது. பாசித் செய்த தவறுக்கு அவரை முறைப்படி கல்லால் அடித்து கொள்ளத்தான் வேண்டும், அவருக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லியவர்கள் உட்பட அனைவரும் தண்டிக்க பட வேண்டியவர்களே, இஸ்லாமிய ஷரீத் நீதி மன்றம் ஒன்று நிறுவினால் இப்படி பட்டவர்களுக்கு தண்டனை கொடுக்க வசிதாயக இருக்கும்

    நீதவான்கலையே அல்லாஹ் நேசிக்கிறான்
    நீங்கள் தீர்ப்பு வழங்கும்போது நியயமானதைய தீர்ப்பு வழங்குங்கள் இதனால் உங்கள் பெற்றோர்களுக்கோ பிள்ளைகளுக்கோ பாதகம் வந்தாலும் . நீதியை பற்றி கொள்ளுங்கள் என்று அல்லாஹ் குரானில் சொல்லி இருக்கிறான்
    இங்கே குற்றவாளுயும் , தீர்ப்பு வழங்கியவரும் தவறு செய்து இருக்கிறார்கள் அதற்க்கு இஸ்லாத்தை எப்படி குறை கூறுவீர்கள் ?

  22. இயேசு உயிர்த்தேழுந்தார்னு ஒரு க்ரூப்பு சொல்ல மத்த க்ரூப்புகள் இல்லைன்னு சொல்றாங்க!எதுதான் உண்மை?மேலும் ஏசு போலியான மத தூதர்னு ஒரு புறம சொல்ல மற்றொரு புறம அவரது செய்தி போளியானதுன்னு சொல்றாங்க!அப்போ இறை தூதரே போலியா இருந்தாங்களா?நமக்கேன் வம்பு!மொதல்ல ஓங்க க்ரூப்புகுள்ள சரி பண்ணிக்கிட்டு எங்க கிட்ட விவாதத்துக்கு வாங்க!
    http://www.religionfacts.com/islam/comparison_charts/islam_judaism_christianity.htm

    • மனிதன் அவர்களுக்கு ஒரு விஷயம், கண்டதெல்லாம் கடவுள் என்று சொல்லுபவனும், கண்டால் தான் கடவுள் என்று சொல்லுபவனும் முட்டாள் என்று உங்கள் விஷயத்தில் தெளிவாகிவிட்டது. எப்படி இதெல்லாம்… எவனோ ஒருத்தன் உளறிய எல்லாம் ஒரு செய்தி என்று நீங்கள் இங்கே காட்டுகிறீர்கள். ஏன் தமிழக சுனாமி நேரத்தில் என்ன துங்கிகிட்டா இருந்திங்க? அங்கே நடைபெற்ற மீட்பு பணிகளில் ஈடுபட்டது யாருன்னா கொஞ்சம் கடற்கரை கிராமங்களில் போய் கேளுங்க… சொல்லுவாங்க..

      • ன் தமிழக சுனாமி நேரத்தில் என்ன துங்கிகிட்டா இருந்திங்க///
        .
        .
        தமிழகமோ இந்தியாவோ குரானை கிழித்து போட்டதா?தடை செய்ததா?அதை காரணமாக சொல்லி ஜப்பான் பேரழிவுக்கு நியாயம் கற்பிப்பது என்னைய்யா நியாயம்?அப்படியே அய்யா பீஜே வின் அருமை பெருமைகளும் கீழே உள்ள பதிவுகளில் உள்ளன அதையும் படிங்கோ!

        • நான் சொல்றது உங்களுக்கு புரியலேன்னு நினைக்கிறேன்… யார் அப்படி sms அனுப்பினது என்று எங்களுக்கு சொல்ல முடியுமா? எவனாவது தறுதலை சொன்னத எல்லாம் எங்க ஆதாரமுனு வந்து சொல்லாதிங்க?

  23. முஸ்லீம்கள் செல்போன் இணையம் பயன்படுத்தலாமா?குரான் என்ன சொல்லுது?கேட்டு சொல்லுங்கோ!

  24. ஒருவர் தவறு செய்தாரா இல்லையா என்று முழுமையாக தெரியாமலும். தவறு செய்து இருந்தாலும் அதை தனி நபர் தவறு என்று சொல்லாமல் மதத்தை குறை கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது… தயவு செய்து இஸ்லாத்தை பற்றி அறை, குறை அறிவுடன் எழுதுவதை வினவு நிறுத்தி கொள்ளவும்…..

  25. ஒரு முஸ்லிம் செய்த தவறை இஸ்லாத்தோடு சம்மந்தபடுதும் வினவு, தன்னுடைய இயக்கதொன்டர்கள் தவறே செய்யாத ஞானசூனியர்கள் என்று சொல்லமுடியுமா? அப்படி உம்முடைய இயக்கு உறுப்பினர் ஒருவர் தவறு செய்தால் அதனால் உம் கம்யுனிச சித்தாந்தமே தவறு என்று சொல்லிவிடலாமா?, நான் கேட்கிறேன் உங்கள் கொள்கையில் உள்ள எல்லோரும் பொருளாதாரத்திலும் இன்னபிற விசயங்களிலும் சமநிலையில் ஒரே சீராகத்தான் உள்ளீர்களா?, நீங்கள் சொல்லும் கம்யுனிசம் முதலில் உங்களால் கடைபிடிக்கப்படுகின்றதா?

    • //நான் கேட்கிறேன்//

      நானுந்தான் கேக்குறேன். ஒருத்தன் நல்லது செஞ்சாமட்டும். அல்ஹம்துலில்லாஹ், மாஷாஅல்லா இவன் முசுலீமா இருக்கறனாலதான் நல்லவனா இருக்குறான்னு சொல்லிகிட்டு ஆதாரமா பல வசனங்கள அவுத்துவுடுறீங்கள்லே, தப்பு செஞ்சா மட்டும் ஏன் கழட்டிவுட்டுற்றீங்க?

  26. முஸ்லிம் ன என்னா இஸ்லாத் ன என்னா ? ஒரு முஸ்லிம் செய்த தவருக்கு இஸ்லாத்தில் என்ன தன்டனை கொடுப்பிர்கள்5000.10000 அபதாரம் போடுவீர்கள் அல்லது ஊரை விட்டு ஒதுக்கிவைப்பிர்கல் இதைத்தவிர வேரு என்னா இருக்கு? 5000 ம் கட்டினால் கல்லகாதல் பன்னலாம் .10000 ம் கட்டினால் 2.3 திருமணங்கள் செய்துகொள்ளலாம்.30000.40000 ம் கட்டினால் கொலையும் செய்யலாமா ?
    இதுதான் இஸ்லாத்தின் கொள்கையா
    இந்தக்கொள்கையை ஆதரித்து எழுதினா கம்யுனிசத்தை ஏத்துக்கொள்விர்களா? இப்படிப்பட்ட கேவலமான கொல்கையை கம்யுனிசம் மட்டுமல்ல கம்யுனிசம் தெரியாதவணும் காரித்தான் துப்புவான் !

    • புத்தி கேட்ட கத்தி அவர்களுக்கு, எந்த ஊரில் யாருக்கு நீங்க சொன்ன மாதிரி நடந்தது என்று சொல்ல முடிமா? அப்படி நடந்து இருந்தாலும், கிராம புறங்களில் உள்ள மக்களிடம் உள்ளதை எங்களுடன் கோர்த்து சொல்லாதிங்க? இப்படி ஒரு சட்டம் இஸ்லாத்தில் கிடையாது. முதலில் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொண்டு இங்க பேசுங்க. கூட்டத்தோடு கூச்சல் போடாதீங்க!

      • //இப்படி ஒரு சட்டம் இஸ்லாத்தில் கிடையாது.//

        சரிங்க இதற்கு முன்பு TNTJ ல் இருந்த பாக்கர் என்பவரின் காமலீலைகள் உலகறிந்த ஒன்று. அவரை கல்லால் அடித்து கொல்வீர்களா? மாட்டீர்களா? இந்தியாவில் முடியாது என்றால் சவூதிக்கு கூட்டிட்டு போய் கல்லால் அடித்து கொல்லுங்கள். சவுதியில் செங்கொடியை எதிர்க்கும் சில நேர்மையான! தமிழ் முஸ்லீம்கள் இருக்கின்றனர். அவர்கள் உங்களுக்காக உதவுவர்

      • மைதின் அண்னே.ரொம்ப உனர்சிவச படாதிங்க.நம்ம பாசித் இன்னும் தவுகித்ஜமாத்தில்தான் இருக்காரு அவரு செய்யிர ஒவ்வொரு அயோக்கியத்தனத்தையும் இஸ்லாத் தவுகித் ங்கிர போர்வைக்குல் ஒலிந்துகொன்டுதான் இன்னும் செய்துகொன்டு இருக்கிரார்.அவருடைய ஒவ்வொரு நடவடிக்கைகலின் தாக்கமும் இஸ்லாத்தின் விளைவே.அண்னே! பாசித் வேறு இஸ்லாம் வேறுன்னு புத்திசாலித்தனமா பதிலலிச்சா சமூகத்தை ஏமாத்திரமுடியுமா ? சமூகத்தில் பாசித் அம்பலபடுவதற்க்கு முன்னர் அவர் செய்த ஒவ்வொரு காரியங்களையம் இஸ்லாத்தின் துாய வடிவமென போற்றுவிர்கல். வினவு போன்ற புரச்சிகர சக்திகள் மதவாதிகளை அம்பலபடுத்தியதும் பாசித் வேறு இஸ்லாம் வேறு,இஸ்லாத்தை கற்றுக்கொள்,நேரடியாக விவாதத்திற்கு வரதயாரா என்று ஓலம்விடுவீர்கல்..

  27. /////////இஸ்லாம் போற்றும் அரபு பாதையிலேயே தீர்வை குடுக்கலாமா? திருடினால் கையை வெட்டலாம். பெண் விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்து கொல்லலாம். ஆண் விபச்சாரம் செய்தால்……..ஆண் உறுப்பை அறுத்து நாய்க்கு போடும்படி இஸ்லாமிய சட்டத்தை திருத்தலாமா? சம்மதிக்குமா TNTJ?///// – தோழர் ஜமால் , இஸ்லாமிய சட்டத்தைத் திருத்தவேண்டியது இல்லீங்க . ஆண் விபச்சாரம் பண்ணினாலும் அவனுக்கும் மரண தண்டனைதான் . நீங்க சொல்ற மாதிரி ஆண் உறுப்பை அறுத்துப் போடுற தண்டனையும் உண்டு ; அது கற்பழிப்புக்கு . வேணும்னா மெயில் ஐடி குடுங்க தோழரே உறுப்பு அறுக்கிற வீடியோ அனுப்புறேன். தோழரே , வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்க்காகப் போராடுவதாகவும் , பாடுபடுவதாகவும் கூறிக்கொண்டு இயக்கம் காணும் பலபேர் இப்படி ஒரு நவீன சுகவாசியாக வாழவும் , அதற்கு மதத்தை ஒரு கேடையமாகவும் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை விட கண்களுக்கும் , உள்ளத்திற்க்கும் புலப்படாத இத்தகைய துரோகிகளாலும் கூட ஒட்டுமொத்த சமூகத்திற்கும் இழிவு. உண்மையில் மகளிர் அமைப்புகளோடு இணைந்து, இஸ்லாமிய அமைப்புகள் இத்தகைய காவாளித்தனத்தைக் கண்டிக்க முன்வரவேண்டும்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் .

  28. (மாக், திராவிடன், நூர்முகம்மது ஆகியோர் குறிப்பாக கவனிக்கவும்}
    TNTJ வகையறாக்கள் தாங்கள் மட்டும்தான் அக்மார்க் முசுலீம்கள் என்கின்றனர். பிற முசுலீம்ளைப் பற்றி எழுதினால் அவர்களெல்லாம் முசுலீம்கள் இல்லை என்று சாதிக்கின்றனர். இவர்களிடமுள்ள களவானித்தனங்களைப் பற்றியும், ஒழுக்கக் கேடுகளையும் எழுதினால் தனிமனித செயல்கள் என்று சால்ஜாப்பு சொல்கின்றனர். அப்படியானால் அவர்களின் அமைப்பில் உள்ளவர்கள் இசுலாமியர்களாக இல்லையா? ஒருசில பக்தி மிக்க சாமானியர்கள் ஒழுக்க சீலர்களாக இருக்கலாம். ஆனால் அமைப்புத் தலைமை, நிர்வாகம், உறுப்பினர்களின் பெரும்பான்மையினர் அப்படி இல்லை. ஆனால் அவர்கள்தான் அக்மார்க் என்று சாதிக்கின்றனர். அதனை சில நல்ல உள்ளங்களும் “அல்லாமீது சத்தியமாக’ என்று களவானிகள் கூறியதும் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகின்றனர். இது எதனால்? மதத்தின் மீதுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கைதானே! கயமைத்தனங்களை அம்பலப்படுத்தினால் புழுதிவாரியி இரைப்பதாக ஆகுமா?

    சரி, பிரச்சைனக்கு வருவோம். நம்மால் பாஸ் இரண்டாவது ஒரு பெண்ணுடன் பழகி, பிறகு திருமணமும் செய்து கொண்டது எதனால்? இசுலாம் வழங்கும் 4 மனைவிகள் சட்டம்தானே. ஜமாத்தும், இமாம்களும் இப்படிப்பட்ட திருமணங்களை அவர்களின் புனிதமான பள்ளிவாசல்களில் நடத்திவைப்பது எதனால்? இசுலாமிய சரியத் சட்டம் அனுமதிப்பதில்தானே? (அவர்களெல்லாம் இசுலாமியர்கள் இல்லை என்று தேய்ந்த இசைத்தட்டாக தேய்க்க வேண்டாம்.) இசுலாம் பெண்களுக்கு சமுரிமை வழங்குகிறது என்று கூறுபவர்கள் இப் பெண்ணிற்கு உங்கள் சரியத் சட்டம் என்ன தீர்ப்பு வழங்குகிறது என்று கூறுங்கள். முகைதீன் அவர்களே நீங்கள் கூறும் சட்டத்திற்று நேரில் பார்த்த இருவர் சாட்சி கூறவேண்டும். அது சாத்தியமாக அப்பெண்ணிற்கு இல்லாது போது என்ன செய்வாள்? ஆனால் இன்னொரு பெண்ணுடன் திருமணம் என்ற போர்வையில் வாழ்ந்தால் அவளுக்கு சரியத் என்ன சொல்லகிறது?
    அடுத்ததாக, இதேபோல் ஒரு பெண் தன் கணவனை பிடிக்காமல் வேறு ஒரு ஆணுடன் பழகி திருமணம் செய்து கொள்ள முயற்சித்தால் என்ன செய்வீர்கள்? விபச்சாரி என்று பட்டம் கட்டி, இந்திய நாட்டில் கல்லால் அடித்து கொல்ல முடியாது என்பதால் நிர்வானப்படுத்தி கட்டிவைத்து அடிப்பீர்கள். அடித்துள்ளீர்கள். (சம்பந்தப்பட்டவர்களின் பயத்தால் இவைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உட்படவில்லை. ) இது எதனால்? இசுலாம் வழங்கும் விபச்சார சட்டம். ஆனால் ஒரு ஆண் செய்தால் முடிந்தவரை மூடிமறைத்து காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள். முடியாத கட்டத்தில் அபராதம் அல்லது திருமணம் செய்துவைத்தல் என்று தீர்ப்பு வழங்குகிறீர்கள். ஆனால் ஒரு பெண்ணுக்கு இப்படிப்பட்ட தீர்ப்புகளை வழங்க மறுப்பதற்கு உங்களின் ஆயுதம் புனிதமான சரியத் சட்டம்தானே.
    கம்யூனிசம் இதற்கு என்ன வழி சொல்லுகிறது என்று சிலர் வினவுகின்றனர். கம்யூனிசம் என்பது வரட்டுக் கோட்பாடல்ல. எழுதப்பட்டதை எக்காலத்திற்கும் மாற்ற முடியாத சட்டம் என்று கூறும் மூட நம்பிக்கையல்ல. அதனாலேயே பெண் தன் சுய வருமானத்தில் வாழும் சமூகச் சூழ்நிலை இருந்தால் மட்டுமே ஒரு ஆண் தன் மன விருப்பப்படி இணைந்து வாழ விரும்பாத நிலையில் எளிமையான பிரிதலை (மணவிலக்கு) அனுமதிக்கும். அதுவரை அவனுக்கு கடுமையான தண்டனைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கும். இங்கே சில நல்ல இசுலாமிய உள்ளங்கள் விர்ம்புவதுபோல சூழ்நிலையை கணக்கிலெடுத்து ஆய்வுக்கு உட்படுத்தி தீர்ப்பு வழங்கும்.

    இன்னும் ஒன்றை கவனியுங்கள். நான் கம்யூனிசத்தின் நிலைபற்றி கூறியதே பெரும்பாலான நாடுகளிலும், இந்தியாவில் பெரும்பாலான சமூகங்களிடையேயும் நடைமுறைக்கு வந்துவிட்டன. இசுலாமியர்களிடையேக்கூட இந்த சிந்தனைகள் தோன்றி நடைமுறைப்படுத்தப் படுகிறது. பாசித்திற்கு ஒருபுறம் மறுமணம் செய்துவைத்தாலும் முதல் மனைவிக்கு 2 இலட்சம் பாதுகாப்புத் தொகை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பையும் ஜமாத் வழங்கி உள்ளது. பாதுகாப்புத் தொகை என்பது சரியத் சட்டத்திற்கு முரணானது. இன்று நல்ல உள்ளங்களால் இப்படி சிந்திக்க முடிகின்றதே தவிர பழங்கதை பேசுவதில்லை.
    இது எதைக்காட்டுகிறது? சிலரின் எதேச்சையதிகாரத்தினால் பாதகமான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டாலும் கூட்டு நடவடிக்கை என்று வரும்பொழுது நல்ல உள்ளங்களின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு எதேச்சையதிகாரர்கள் பணிந்துதான் ஆகவேண்டியுள்ளது. கூட்டு நடவடிக்கை என்பதே கம்யூனிசம் வழங்கியதுதான். இதே முகம்மதுநபி, காலிபாக்களின் காலத்தில் எப்படி நடந்தது? தலைவரின் விருப்பமே சட்டமாக இருந்தது. முதாளித்துவம் கூட ஆரம்ப காலங்களில் முதலாளிகளின் மன விருப்பத்தையே சட்டமாக, தீர்ப்பாக வழங்கியது. காலம் அவர்களை அனுமதித்ததா? இல்லை. இதற்கு பல ஜனநாயகவாதிகளின் போராட்டமும் கம்மயூனிசத்தின் தாக்கம் என்பதையும் மறுக்க முடியாது.

    இப்பிரச்சனையில் அப்பெண் தன் சுய வருமானத்தில் வாழ்ந்து வந்தால், ‘இவனுடன் வாழ்வதைவிட மணவிலக்கு செய்துவிட்டு மறுமணம் செய்துகொள் அல்லது தனித்து வாழ்’ என்றுதான் நாம் நிச்சயமாக வழிகாட்டுவோம். ஆமாம்! ஒரு கயவனுடன் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற ஏன் வாழவேண்டும்?

    • “சரி, பிரச்சைனக்கு வருவோம். நம்மால் பாஸ் இரண்டாவது ஒரு பெண்ணுடன் பழகி, பிறகு திருமணமும் செய்து கொண்டது எதனால்? இசுலாம் வழங்கும் 4 மனைவிகள் சட்டம்தானே”
      பழகி என்பது உங்களின் இடைச்சொருகல், தனிப்பட்ட காரணங்களால் சிலருக்கு முதல் மனைவியோடு பிணக்கு ஏற்பட்டால், மனிதனின் இயற்கை உடற்தேவைககை நிறைவேற்றிக்கொள்ள, வேறொரு பெண் வேண்டும் என்ற நிலை வந்தால் சரியான வழியில் இன்னுரோ பெண்ணை தேர்ந்தெடுப்பது என்பது தான் மனிதகுலத்திற்கு ஏற்ற சரியான மாற்றுத்திட்டம், பாசித் திருமணம் செய்யாமல் விபச்சாரம் செய்திருந்தால் கம்யுனிசம் அதை வரவேற்குமா? உலகில் உள்ள எல்லா முஸ்லிமும் நான்கு திருமனகளை செய்வதில்லை அப்படி செய்யசொல்லி இஸ்லாமும் வலியுறுத்தவில்லை, பிரச்சனைக்கு தீர்வாகவே இஸ்லாம் நன்கு திருமணங்கள் வை மாற்றுவழியாக முன்வைக்கின்றது என்பதை சாதிக் புரிந்து புரியால் பிடிவாதம் செய்கிறார்

      • சத்தியசீலன் அவர்களே.மனிதனுக்கு இயற்கை உடல் தேவைக்காக நிறைவேற்றி கொல்ல
        வேறு பென் வேன்டும் அதுபோல் பென்னுக்கு இயற்க்கை உடல் தேவையை நிறைவேற்றிக்கொல்ல வேறு ஆணை தேடிக்கொல்லலாமா ?

            • தவறு யார் செய்தாலும் தவறுதான்.தண்டனையும் ஒன்று தான்.திருமணம் ஆனவர்களுக்கு கல்லெறி தண்டனையும் திருமணம் ஆகாதவர்களுக்கு கசையகடியும் தான் இஸ்லாதில் தண்டனை.இது எங்கள் வேதவசனம்.

    • //இன்று நல்ல உள்ளங்களால் இப்படி சிந்திக்க முடிகின்றதே தவிர பழங்கதை பேசுவதில்லை.//

      இறந்தகாலத்தின் நீதியும், நியாயமும் நிகழ்காலத்தில் அநியாயமாகத் தெரிவதானது, சமூகம் மாற்றமடைந்துக் கொண்டிருக்கிறது என மார்க்ஸ் கூறியதாக படித்த ஞாபகம். இது முஸ்லீம்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்கள்தான் 1400 வருடங்களாக சமூகம் மாறவில்லை என அடம்பிடிப்பவர்களாச்சே.

      //இப்பிரச்சனையில் அப்பெண் தன் சுய வருமானத்தில் வாழ்ந்து வந்தால்//

      அவர்களுக்கு கம்யூனிசம் புரிய வாய்ப்பில்லை. அவர்கள் அடிமை சமுதாய மனோநிலையிலிருந்து வெளிவராதவர்கள். இன்னும் அவர்களுடைய சிந்தனைகள் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமுதாயக் கட்டங்களை கடக்க வேண்டியுள்ளது. இதற்கு அவர்களுக்கு பல நூற்றாண்டுகள் கூட தேவைப்படும். அதன் பிறகுதான் அவர்களுக்கு கம்யூசம் கூறும், பெண்களை வீட்டு வேலைகளிலிருந்து விடுதலை செய்வது பற்றியும், கணவன் மனைவியிடையேயான தோழமை உறவு பற்றியும், குழந்தை வளர்ப்பு பற்றியும் புரிதல் ஏற்படும். அதுவரையிலும் பொதுவுடைமை என்றால் பெண்களும் பொதுவா! என வாய்பிளந்து கீழ்த்தரமாகவே சிந்திப்பார்கள்.

      • கலை ,

        //இன்று நல்ல உள்ளங்களால் இப்படி சிந்திக்க முடிகின்றதே தவிர பழங்கதை பேசுவதில்லை.//

        இறந்தகாலத்தின் நீதியும், நியாயமும் நிகழ்காலத்தில் அநியாயமாகத் தெரிவதானது, சமூகம் மாற்றமடைந்துக் கொண்டிருக்கிறது என மார்க்ஸ் கூறியதாக படித்த ஞாபகம். இது முஸ்லீம்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்கள்தான் 1400 வருடங்களாக சமூகம் மாறவில்லை என அடம்பிடிப்பவர்களாச்சே.

        அந்த நல்ல உள்ளங்கள் எடுத்த முடிவுக்கு எக்ஸ் சாஹித் வுக்கு புதுமையாக தெரிந்தாலும் அது 1400 ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட மகர் கொடுக்கும் சட்டத்தின் அடிப்படையிலே அது செல்லும் என்பதை அறிவீராக.

        கலை தாங்கள் சொல்லுவது போல் இப்போது சமூகம் மாறிவிட்டது .ஆனால் நீங்கள் தான் மார்க்ஸ் சொன்ன சமூகம் மாறவே மாறாது என்று அடம்பிடிக்கிறீர்கள்.ஸ்டாலின் காலத்தில்தான் ரசியாவில் உண்மையான சோசலிசம் இருந்ததாகவும் இப்போது ரசியாவிலும் சீனாவிலும் சோசலிசம் இல்லைஎன்றும் முதலாளித்துவம் இருப்பதாகவும் கூறி வருகிறீர்கள்.தவறு கலை ,’ இறந்தகாலத்தின் நீதியும், நியாயமும் நிகழ்காலத்தில் அநியாயமாகத் தெரிவதானது, சமூகம் மாற்றமடைந்துக் கொண்டிருக்கிறது என மார்க்ஸ் கூறியதாக படித்த ஞாபகம்.”என்று மார்க்ஸ் கூறியதை ஞாபக படுத்தி பாருங்கள்.இப்போது ரசியாவில் இருப்பதும் சோசலிசமே ஏனெனில் இறந்த காலஅநீதியும் அநியாயமும் இப்போது ரசிய மக்களுக்கு நீதியாகவும் நியாயமாகவும் உணர்ந்துவிட்டார்கள். நமது இந்திய கம்யுனிஸ்ட் கட்சிகளும் இந்திய சமூக மாற்றத்திற்கேற்ப மாறி செயல்படுவதை என் போலி கம்யுனிஸ்ட்கள் என்று கூற வேண்டும்?

        //இதற்கு அவர்களுக்கு பல நூற்றாண்டுகள் கூட தேவைப்படும். அதன் பிறகுதான் அவர்களுக்கு கம்யூசம் கூறும், பெண்களை வீட்டு வேலைகளிலிருந்து விடுதலை செய்வது பற்றியும், கணவன் மனைவியிடையேயான தோழமை உறவு பற்றியும், குழந்தை வளர்ப்பு பற்றியும் புரிதல் ஏற்படும். அதுவரையிலும் பொதுவுடைமை என்றால் பெண்களும் பொதுவா! என வாய்பிளந்து கீழ்த்தரமாகவே சிந்திப்பார்கள்.///

        கலை ,பலநூற்றாண்டுகள் என்றால் ஆயிரம் நூற்றாண்டுகள் என்று கொள்ளலாமா? அப்புறம் உங்களது உண்மை கம்யுனிஸ்ட்களின் வீட்டு பெண்களுக்கு அதன் பிறகுதான் அவர்களுக்கு கம்யூசம் கூறும், பெண்களை வீட்டு வேலைகளிலிருந்து விடுதலை செய்வது பற்றியும், கணவன் மனைவியிடையேயான தோழமை உறவு பற்றியும், குழந்தை வளர்ப்பு பற்றியும் புரிதல் ஏற்பட்டுவிட்டதா? இல்லை அவர்களுக்கும் பல நூற்றாண்டுகள் ஆகுமா?

        • இபுறாஹிம்,

          ஒரு திருகாணி தத்துவம் கூட புரியாத ’மறை’கழன்ற மண்டைகளிடம் பேசுவது வீண். இதனை ஒரு தொழிலாளிக்கு எளிதில் புரியவைத்துவிடலாம். அவரின் அனுபவம் அதை அவருக்கு புரிய வைத்துவிடும். உமது அனுபவம் உமக்கு புரிய வாய்ப்பில்லை.

          //இல்லை அவர்களுக்கும் பல நூற்றாண்டுகள் ஆகுமா?//

          14ம் நூற்றாண்டு அறிவாளியின் தஜ்ஜால் பயத்தை அவ்வளவு எளிதில் போக்கிவிட முடியுமா என்ன! இருந்தாலும், முயன்று கொண்டே இருப்போம் இபுறாஹிம்.

      • கலை ,
        ///ஒரு திருகாணி தத்துவம் கூட புரியாத ’மறை’கழன்ற மண்டைகளிடம் பேசுவது வீண். இதனை
        திருகாணி தத்துவம் என்றால் காது குத்தும் தத்துவமா?
        ///மறை கழன்ற மண்டைகளிடம் பேசுவது வீண்///
        மறை ,திருமறை கலந்த மண்டைகளிடம் பேசுவது வீண் என்பது விரக்தியின் விளைவா?

        ////ஒரு தொழிலாளிக்கு எளிதில் புரியவைத்துவிடலாம். அவரின் அனுபவம் அதை அவருக்கு புரிய வைத்துவிடும். உமது அனுபவம் உமக்கு புரிய வாய்ப்பில்லை.////
        போலி கம்யுனிஸ்டில் தான் அதிகமான தொழிலாளிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு புரிய வைத்தீர்களா?அவர்களின் அனுபவம் அவர்களுக்கு புரிய வைத்தது என்றால் அவர்கள் ஏன் இன்னும் அதில் உறுப்பினர்களாக உள்ளனர்.?

        ////இறந்தகாலத்தின் நீதியும், நியாயமும் நிகழ்காலத்தில் அநியாயமாகத் தெரிவதானது, சமூகம் மாற்றமடைந்துக் கொண்டிருக்கிறது என மார்க்ஸ் கூறியதாக படித்த ஞாபகம். இது முஸ்லீம்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்கள்தான் 1400 வருடங்களாக சமூகம் மாறவில்லை என அடம்பிடிப்பவர்களாச்சே.////
        கலை ஐயா ,நானும் இதைத்தான் சொல்லுகிறேன் ,இறந்தகாலத்தின் அதாவது நபி [ஸல்] அவர்கள் காலத்தில் அடிமை வர்த்தகமும் ,பால்ய விவாகமும் ,பலதார மணம் ஆகிய நீதியும் நியாயமும்: நிகழ் காலத்தில் அநியாயமாக தெரிவதானது சமூகம் மாற்றமடைந்து வருகிறது.அந்த மாற்றத்தை அதாவது குரு–சிஷ்யன் ;தலைவர் –தொண்டன் என்ற இறந்த கால நியாயத்தை தோழர்கள என்று சொல்லுவதுதான் நிகழ் காலத்தின் நியாயமாக மாற்றிய முஹம்மது நபி[ஸல்] அவர்கள் அடிமை முறைகளை ஒழித்திட ஒவ்வொருவரும் செய்த பாவங்களுக்காக அது இறைவன் பொருட்டு மன்னிக்கும் வண்ணமாக அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கும் உத்தியை கடைபிடித்தார்கள்.மேலும் திருமணம் செய்வது மூலமும் அடிமை முறைகளை ஒழிக்க முனைந்தார்கள்.நபி[ஸல்] அவர்களுடைய சம காலத்தில் மக்களிடம் நீதியும் நியாயமாக இருந்த பால்ய விவாகம் அதன்பின்னர் அநியாயமாக தெரிவது சமூகம் மாற்றமடைந்து வருகிறது என்பதையே காட்டுகிறது. அந்த மாற்றத்தை நபி[ஸல்] அவர்களே பெண்களின் சம்மதம் இல்லாமல் செய்யும் திருமணம் கூடாது என்ற சமூக சூழ்நிலைக்கேற்ப சட்டம் வகுத்தது .
        {///இப்பிரச்சனையில் அப்பெண் தன் சுய வருமானத்தில் வாழ்ந்து வந்தால்//

        அவர்களுக்கு கம்யூனிசம் புரிய வாய்ப்பில்லை. அவர்கள் அடிமை சமுதாய மனோநிலையிலிருந்து வெளிவராதவர்கள். }

        இதற்கு அவர்களுக்கு பல நூற்றாண்டுகள் கூட தேவைப்படும். அதன் பிறகுதான் அவர்களுக்கு கம்யூசம் கூறும், பெண்களை வீட்டு வேலைகளிலிருந்து விடுதலை செய்வது பற்றியும், கணவன் மனைவியிடையேயான தோழமை உறவு பற்றியும், குழந்தை வளர்ப்பு பற்றியும் புரிதல் ஏற்படும்.//////

        உங்களுக்கு சில தசம ஆண்டுகளில் புரிந்தது பெண்களுக்கு புரிய பல நூற்றாண்டுகள் ஆகும் என்றால் ஆண்களும் பெண்களும் அறிவில் சமம் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?அவ்வாறெனின் ஒரு ஆணின் சாட்சி க்கு இரண்டு பெண்கள் சாட்சி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

        மீண்டும் புரிதல் இல்லை என்றால் நீங்கள் எப்படி புரிய வேண்டும் என்று சொல்லுங்கள்

        • //பெண்களுக்கு//

          பெண்களுக்கு என்று நான் எங்கானும் குறிப்பிட்டு இருக்கிறேனா! வீணாக உங்க மறை சரக்கை என்மீது சுமத்த வேண்டாம்.

          • //இப்பிரச்சனையில் அப்பெண் தன் சுய வருமானத்தில் வாழ்ந்து வந்தால்//

            அவர்களுக்கு கம்யூனிசம் புரிய வாய்ப்பில்லை. அவர்கள் அடிமை சமுதாய மனோநிலையிலிருந்து வெளிவராதவர்கள். இன்னும் அவர்களுடைய சிந்தனைகள் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமுதாயக் கட்டங்களை கடக்க வேண்டியுள்ளது. இதற்கு அவர்களுக்கு பல நூற்றாண்டுகள் கூட தேவைப்படும். அதன் பிறகுதான் அவர்களுக்கு கம்யூசம் கூறும், பெண்களை வீட்டு வேலைகளிலிருந்து விடுதலை செய்வது பற்றியும், கணவன் மனைவியிடையேயான தோழமை உறவு பற்றியும், குழந்தை வளர்ப்பு பற்றியும் புரிதல் ஏற்படும். அதுவரையிலும் பொதுவுடைமை என்றால் பெண்களும் பொதுவா! என வாய்பிளந்து கீழ்த்தரமாகவே சிந்திப்பார்கள்.
            கலைக்கு பதிலாக சுஜித் வருது

        • தவறிற்கு வருத்தம். தோழரின் கணிணியின் வினவு தளத்தில் default ஆக இருந்த பெயரையும் மின்னஞ்சலையும் மாற்றாமல் நான் பின்னூட்டமிட்டதால் தோழரின் பெயரிலேயே எனது பின்னூட்டம் வெளியாகியிருக்கிறது. அது நான் இட்ட பின்னூட்டமே.

    • “இதேபோல் ஒரு பெண் தன் கணவனை பிடிக்காமல் வேறு ஒரு ஆணுடன் பழகி திருமணம் செய்து கொள்ள முயற்சித்தால் என்ன செய்வீர்கள்?”

      பெண் தன்னுடைய கணவரை பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து பெற அந்த பெண்ணிற்கு தார்மீக உரிமை உள்ளது, இன்னும் சொல்லப்போனால் ஆண்களுக்கு ஒரு படி மேலாக சரியான காரணம் சொல்லாமல் கூட தன் கணவரிடம் விவாகரத்து பெறமுடியும், இப்படியல்லாமல் கள்ளக்காதளுக்கான சட்டம் தான் மரணதண்டனை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே தண்டனைதான், உண்மை இப்படி இருக்கு தவறான தகவல்களை தந்து எதையோ சாதிக்க முயல்கிறார் நம் சாதிக்

    • சாகித், நிங்க என்ன தான் காட்டு கத்தினாலும் ஒரே பதில்.. எங்களால் முடிந்த வரைக்கும் நியாயமாக தான் பதில் கூறுகிறோம். சொல்கின்ற கருத்துகளையும், தவறுகளையும் திருத்தி கொள்ளும் மனப்பான்மை உங்களிடம் கிடையாது. ஏனென்றல் நீங்கள் எல்லாம் கால நிகழ்வுக்கு தகுந்தார் போல மாத்தி மாத்தி பேசுவீர்கள்.

      ஏக இறைவனை மறுப்பவர்களே!” நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு.என் மார்க்கம் எனக்கு” என (முஹம்மதே) கூறுவீராக

    • அன்புள்ள அண்ணன் மிகப்பெரும் பொய்யர் ———————–

      இஸ்லாத்தை ஒழித்து விட வேண்டும் என்கிற உங்களின் வெறி(பகடு)யை தனித்துக் கொள்ள அல்லது தனித்துக் கொள்ள இதுதானே வாய்ப்பு.

      சரி என்ன சொன்னிங்க நீதி நேர்மை இத பத்தி நீங்க சிரிப்பை அடக்க முடியவில்லை.
      உங்களுக்கு மானம், ரோஷம்,வெட்கம்,நேர்மை இருந்தால் நீங்கள் அடித்து விட்ட பல வருட பொய்களுக்கு பதில் சொல்லுங்கள் இல்லையேன்றால் நான் இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும் என்ற வெறியில் அடித்து விட்டேன் என்று ஒப்புக் கொள்ளுங்கள்.

      அதற்கு பிறகு நீங்கள் வைத்த அனைத்து கேள்விகளுக்கும் நான் கண்டிப்பாக பதில் சொல்லுகிறேன்.

      இரண்டு வருடங்களாக ரோசமற்றுப் போய் பதில் சொல்லாமல் ஓடிய கேள்விகள்

      /முகம்மது நபி (ஸல்) அவர்கள் போர் ஒன்றிற்குச் சென்று திரும்பியதும் தமது வெற்றியை அறிவித்துவிட்டு “கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)” என்று கூறுகிறார்..சாகித்சாகித், எந்த ஹதீஸ் தொகுப்பில் – எத்தனையாவது ஹதீஸாக இது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை தயவு செய்து தரவும்//////“….முகம்மது நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவின் கணவனரான அலியிடம் “என் மகளே ஆனாலும் பெண்கள் சொல்வதைக் கேளாதீர்கள்” என்று கூறியிருந்தாலும்….. ” – சாகித்.நண்பர் சாகித்… இதற்கும் நீங்கள் தக்க ஆதாரத்தை தருவீர்கள் என்று/// ஏம்பா சாகித் எங்கே பொயி தொலைஞ்ச வந்து இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லு

      ,/// உமர் காலிஃபா முத்தலாக்கையும் ஒரேதடவையாக சொல்லிவிடவேண்டும் என்று சரியத் சட்டத்தை மாற்றிவிட்டது தெரியாது போலும்/// சாகித் அவர்களே இஸ்லாமிய சட்டங்களை முதல் கலீபா அபூபக்கர் இராண்டாம் கலீபா உமருக்கொ மாற்றி அமைப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை இந்த விஷயங்களை பி ஜெ தன்னுடைய குறுந்தகடில் பேசி இருக்கிறார் உங்களுக்கு தேவை என்றால் தொன்டிtntjஅபீஸில் பெற்றுக்கொள்ளலாம் நான் குர்ஆன் ஹதீஸ் அய்வு செய்யும் மாணவன் என்ற முறையில் இரண்டு விஷயங்கள் தான் இஸ்லாம் ஆகும் ஒன்று குர்ஆன் மற்றொன்று ஹதீஸ் (முஹம்மது நபியின் சொல்.செயல்.அங்கிகாரம்) இவையல்லமால் உமர் சொன்னாலும் சட்டமாகாது பி ஜெ சொன்னலும் சட்டமாகாது உங்களுடைய வாதமேல்லாம் பி ஜெ அவர்களை சுற்றியே இருக்கிறதே ஏன்? உங்களுடைய வாதங்கள் எல்லாம்(குர்ஆன் ஹதீஸ்). இஸ்லாமிய அடிப்படை சம்பந்தமாக இல்லை நீங்கள் ஹதீஸ்கள் என்று இந்த பதிவில் குறிப்பிட்ட ஒரு சில சம்பவங்கள் ஹதீஸ் கிதாபுகளில் இல்லை(நான் இங்கே அரபு நாட்டில் குர்ஆன் ஹதீஸ் மற்றும் பல புத்தகங்கள் வாசிக்கும் நூலகத்தில் பகுதி நேர வேலை பார்க்கிறோன்) அதனால் எனக்கு அய்வு செய்ய நேரமும் வசதியும் இருக்கிறது உங்களுக்கு நேரமும் வசதியும் இருந்தால் நீங்கள் ஹதீஸ் என்று எடுத்து வைத்த கனவனை இழந்த பெண்கள் மொட்டையடிக்கசொன்ன ஹதீஸை காட்டுங்கள் மற்றபடி இந்த ஊருல இப்பிடி நடக்குது அந்த ஊருல அப்புடி நடக்குது இதுலாம் எனக்கு தேவையும் இல்ல அது இஸ்லாமிய அடிப்படையும் அல்ல உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறோன்.

      இப்படியும் பலமுறை கேட்டு விட்டேன்

      எதற்கு இந்த இரண்டு வருட கள்ளமவுனம் பதில் சொல் பதில் சொல்

      நீ வைத்த அனைத்து ஹதிஸ்களுக்கும் பதில் சொல்லுகிறேன்

      • சாஹிதுக்கு மட்டுமே புன்னூட்டம் போடுறீங்களே. சாகிதால ரொம்ப பாதிக்கப்பட்டுருப்பீங்க போல. பதிவப்பத்தி பேசவே மாட்றீங்க.

        • என்னணே பன்ன சொல்லுறீங்கே
          நம்ம சாகித் கீ போர்டை தொட்டால் பொய் தான் வந்து விழுகிறது

          கடந்த இரண்டு வருடங்களாக அவருடைய ஒரு எழுத்த கூட விடாமல் படித்து வருகிறேன்

          உதாரணத்திற்கு
          அடிமை அது அல்லாஹ்வின் ஆணை அப்புடியின்னு ஒரு புத்தகம் எழுதியிருந்தார் அதில்
          நூல் அடிமை-அது அல்லாவின் ஆணை: பக்கம்72 – தலைப்பு 7.தொடரும் அடிமை முறை என்ற தலைப்புல நம்ம சாகித் இன்ன சொல்றாருன்ன.

          1. புனித ஹஜ் யாத்திரையை பற்றி நீங்கள் அறிவீர்கள் அப்போது மக்காவிலே நடைபெறும் சடங்குகளில் அரபாத் மைதானம் என்ற இடத்தை அல்லாவின் புகழ்பாடிக்கொண்டு நடந்து கடக்க வேண்டும் அவ்வாறு நடந்து செல்ல முடியாதவர்களுக்காக அன்று முதல் இன்று வரை பல்லக்கும் அதனைச் சுமந்து செல்லும் அடிமைகளும் உள்ளனர் அன்றோ அவர்கள் அடிமை காட்டரபிகள் இன்று சற்று நிலை மாறி கூலியடிமைகள் சடங்கின் புனிதம் காக்க மனிதனை மனிதன் சுமக்கும் அவலம்,
          சாகித்தின் முதல் பொய் நெ1.
          அராபா மைதானத்தை கடக்க வேண்டும் என்பது.

          உண்மை நெ.1

          இதற்கு பதிலாக என்னுடைய சொந்த அனுபவத்தை பதிலாக பதிய போகிறேன் நான் 2004ல் ஹஜ் செய்தேன் (இந்த புத்தகம் முதல் பதிப்பு. பிப்ரவரி2003 இரண்டாம் பதிப்பு டிசம்பர்2008 என்பதை நினைவில் கொள்க) ஆனால் அராபா மைதானத்தில் டென்ட் போட்டு அதில் தங்கி இருக்க வேண்டும் என்பதுதான் சடங்காக செய்து வருகிறார்கள் ஹஜ்ஜின் மிக முக்கியமான கிரியை அரபாவில் தங்குவது தான் சிறிது நேரமேனும் அராபவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது, பார்க்க ஹதிஸ்: அறிவிப்பாளர் அப்துல்ரஹ்மான் பின் யமுர்(ரலி) நூல்கள்:நஸயீ2966.2994. திர்மீதி814 “ஹஜ் என்பதே அரபாவில் தங்குவது தான் பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் அரபாவுக்கு வந்து தங்கி விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வர், அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்:முஸ்லிம்2137 “நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சூரியன் மறையும் வரை அரபாவில் தாங்கினார்கள் சூரியன் மறைந்ததும் புறப்பட்டு முஸ்தலிபாவுக்கு வந்தார்கள், இதிலிருந்து இன்னா தெரியவருதுன்னா அரபாவை கடந்து செல்வது சடங்கல்ல அங்கே தாங்க வேண்டும் அதுவும் சூரியன் மறையும் வரை.

          பொய் நெ.2
          நடந்து செல்ல முடியாதவர்களுக்காக அன்று முதல் இன்று வரை பல்லக்கும் அதனைச் சுமந்து செல்லும் அடிமைகளும் உள்ளனர் அன்றோ அவர்கள் அடிமை காட்டரபிகள் இன்று சற்று நிலை மாறி கூலியடிமைகள் சடங்கின் புனிதம் காக்க மனிதனை மனிதன் சுமக்கும் அவலம்

          உண்மை நெ.2
          மினாவிலிருந்து அரபா மைதானத்திற்கு போவதற்கு பஸ்ஸில் சொன்றால் அரபா மைதான டென்ட் வாசலில் இறக்கி விட்டு விடுவார்கள் 5ரியால் வடகை டாக்சி இருக்கிறது நம்ம பாகிஸ்தானி டிரைவர்கள் தான் அங்கு முக்கால் வாசி டாக்சி ஒட்டுனார்கள் (ஒருவேல இந்த டாக்ஸி ஒட்டுனார்களைத்தான் நம்ம சாகித்து அடிமையின்னு சொல்றாருன்னு நெனைக்கிறேன்) அவர்கள் வாசலில் கொண்டு போயி இறக்கிவிடுவார்கள் அப்புறம் பல்லாக்கு என்கிற ஒரு விஷயத்தை நான் பார்க்கவேயில்லை அப்புறம் இந்த கபாவை 7 ரவுண்டுகள் சுத்தி வரும்போது தான் நடந்து சுற்ற வேண்டும் இங்கு நடக்க முடியதாவர்களுக்காக கைட்ராலிக் நான்கு சக்கர ரிமோட்டை அமுக்கினால் இயங்கக்கூடிய நற்காலி கொடுக்கிறார்கள் அதுவும் இரண்டாவது தளத்தில் குளு குளு ஏஸியில் மெசைக் தரையில் ட்ராலி செல்வதற்கு தனி ப்ளாட் பாராம் தனி வழித்தடம் புதிதாக இயக்க தெரியதவர்களுக்கு அங்குள்ள தன்னர்வ தொண்டர்கள் சொல்லி கொடுக்கிறார்கள் முடியாத பச்சத்திற்கு அவர்களே தள்ளி கொண்டு செல்கிறார்கள் (நம்ம ஊருல ncc மாணவர்கள் மாதிரி சவூதியில் படிக்கும் அரபிய மாணவர்கள் ஹஜ் மாதத்தில் 10 நாட்களுக்கு ஸ்கூல் லீவு இந்த மாணவர்கள் சேவையில் இருப்பார்கள்) ஒரு வேல இவுங்கள நம்ம சாகித் அடிமையின்னு சொல்றாருன்னு நேனைக்கிறேன்

          இப்படி நான் பதில் சொன்னதிற்கு

          நம்ம அண்ணே சாகித் அவர்களின் பதில் சொல்லும்போது எழுத்து பிழை என்றார்

          இது எழுத்து பிழையா, கருத்து பிழையா, காட்சி பிழையா,

          தாங்கள் நியாவான் போல தெரிகிறீர்கள் நீங்கள் கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள்

          • சரிங்க. இங்கு கட்டுரை எழுதியது ஜமால் என்பவர். கட்டுரையைப் பற்றி பேசாமல் சாகித்தை மட்டும் குறி வைப்பது ஒருவேளை சாகித் சொன்னதில் தவறு இருந்தால் அதை வைத்து ஒட்டு மொத்தமாக உதாசீனப்படுத்திவிடலாம் என ஆசைப்படுகிறீர்களோ! .

            • சகோ சுஜித் நீங்க இங்கு சொன்னதை பகுத்தறிவு இருந்தா?கொஞ்சம் மாற்றி யோசிச்சு பாருங்க.(இதே கேள்விய நாங்க உங்ககிட்ட திருப்பி கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க.

    • ///இன்னும் ஒன்றை கவனியுங்கள். நான் கம்யூனிசத்தின் நிலைபற்றி கூறியதே பெரும்பாலான நாடுகளிலும், இந்தியாவில் பெரும்பாலான சமூகங்களிடையேயும் நடைமுறைக்கு வந்துவிட்டன. இசுலாமியர்களிடையேக்கூட இந்த சிந்தனைகள் தோன்றி நடைமுறைப்படுத்தப் படுகிறது. பாசித்திற்கு ஒருபுறம் மறுமணம் செய்துவைத்தாலும் முதல் மனைவிக்கு 2 இலட்சம் பாதுகாப்புத் தொகை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பையும் ஜமாத் வழங்கி உள்ளது. பாதுகாப்புத் தொகை என்பது சரியத் சட்டத்திற்கு முரணானது. இன்று நல்ல உள்ளங்களால் இப்படி சிந்திக்க முடிகின்றதே தவிர பழங்கதை பேசுவதில்லை.///

      சாஹித் ,முதலில் நீங்கள் முஸ்லிமாக பிறந்தவரா?இல்லையா? கம்யுனிசத்திற்கு மாறிவிட்டால் அரபு பெயரை இன்னும் வைத்துக் கொள்வது ஏனோ? இரண்டு லட்சம் பாதுகாப்புத் தொகை என்று உங்களிடம் ஜமாத்தினர் சொன்னார்களா?இஸ்லாமியகள் பெரும்பாலும் திருமணம் நடக்கையில் மகர் கொடுப்பதில்லை .சட்டத்தை ஏமாற்றவே பார்மாலிட்டிக்காக குறிப்பிட்ட தொகையை மகராக குறிப்பிடுகிறார்கள்.ஆதலால் விவாகரத்து நடை பெரும் சமயத்தில் அந்த பெண்ணின் மகராக ஒரு தொகையை அவர்கள் வீட்டாருடன் ஆலோசித்து முடிவு செய்கிறார்கள்.மேலும் திருமணத்தில் மணமகன் தான் விருந்து வைக்க வேண்டும் .ஆனால் மாறாக பெண்வீட்டார் விருந்து வைக்கிறார்கள்.விவாகரத்து நடை பெறுகையில் அந்து விருந்து செலவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.இன்னும் எந்த ஒரு பிரச்னைகளும் குடும்ப அளவிலானும் சரி ,சமுதாய அளவிலானாலும் சரி ‘மசூரா” என்னும் ஆலோசனை கூட்டம் நடத்தியே செய்ய வேண்டும் என்பது நபி வழி.
      ////அடுத்ததாக, இதேபோல் ஒரு பெண் தன் கணவனை பிடிக்காமல் வேறு ஒரு ஆணுடன் பழகி திருமணம் செய்து கொள்ள முயற்சித்தால் என்ன செய்வீர்கள்? விபச்சாரி என்று பட்டம் கட்டி, இந்திய நாட்டில் கல்லால் அடித்து கொல்ல முடியாது என்பதால் நிர்வானப்படுத்தி கட்டிவைத்து அடிப்பீர்கள். அடித்துள்ளீர்கள்.////
      அதே போன்றே வேறு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்த ஆண்களும் கட்டிவைத்து அடிப்போம் அடிக்கப்பட்டுள்ளார்கள்.பெண்கள் மட்டும் தான் அடிக்கப்படுகிறார்கள் என்பது அப்பட்டமான பொய்.
      ////அதனாலேயே பெண் தன் சுய வருமானத்தில் வாழும் சமூகச் சூழ்நிலை இருந்தால் மட்டுமே ஒரு ஆண் தன் மன விருப்பப்படி இணைந்து வாழ விரும்பாத நிலையில் எளிமையான பிரிதலை (மணவிலக்கு) அனுமதிக்கும். அதுவரை அவனுக்கு கடுமையான தண்டனைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கும். இங்கே சில நல்ல இசுலாமிய உள்ளங்கள் விர்ம்புவதுபோல சூழ்நிலையை கணக்கிலெடுத்து ஆய்வுக்கு உட்படுத்தி தீர்ப்பு வழங்கும்.///
      அந்த பெண்ணுக்கு சுய வருமானத்தில் வாழும் சமூக சூழ்நிலை இருந்தால் மட்டுமே என்றால் ,அச்சூழ்நிலை இல்லைஎன்றால் அந்த பெண் என்ன செய்வாள்?கம்யுனிசத்தின் நிலை என்ன?
      அடுத்து ,ஒரு பெண் நபி[ஸல்] அவர்களிடம் தனது கணவருக்கு ஆண்மை இல்லை என்பதை சூசகமாக தெரிவித்தார் .அதன் உண்மையை உடன் அறிந்து அந்த பெண்ணுக்கு மணவிலக்கு அளித்தார்.என்னும் சம்பவங்கள் ஹதிதில் உண்டு.இதன் அடிப்படையிலே நீங்கள் குறிப்பிடும் நல்ல இஸ்லாமிய உள்ளங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
      ////இப்பிரச்சனையில் அப்பெண் தன் சுய வருமானத்தில் வாழ்ந்து வந்தால், ‘இவனுடன் வாழ்வதைவிட மணவிலக்கு செய்துவிட்டு மறுமணம் செய்துகொள் அல்லது தனித்து வாழ்’ என்றுதான் நாம் நிச்சயமாக வழிகாட்டுவோம். ஆமாம்! ஒரு கயவனுடன் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற ஏன் வாழவேண்டும்?////

      இது இஸ்லாமிய சட்டத்தின் நகலை வெளியிட்டுள்ளீர்கள்.நன்றிகள்.

  29. “கம்யூனிசம் இதற்கு என்ன வழி சொல்லுகிறது என்று சிலர் வினவுகின்றனர். கம்யூனிசம் என்பது வரட்டுக் கோட்பாடல்ல. எழுதப்பட்டதை எக்காலத்திற்கும் மாற்ற முடியாத சட்டம் என்று கூறும் மூட நம்பிக்கையல்ல”

    திருமண உறவில் வரும் பிரச்சனைகளும், விபச்சார சட்டுமும் எல்லா காலகட்டத்திலும் நிகழக்கூடிய அன்றாட நிகழ்வு அப்படிப்பட்ட அன்றாட நிகழ்விற்கு ஒரு தீர்வை சொல்லாத கொள்கை எப்படி மனிதகுலத்திற்கு நன்மை செய்யமுடியும் , சாரி நான் கேட்கும் கேள்விக்கு எழுதப்பட்ட கம்யுனிச கொள்கையில் பதில் இல்லை என்றாலும் திருத்தப்பட்ட இந்த காலசூலளுக்கு உகந்த சரியான தீர்வையாவது சொல்லமுடியுமா?

    • மார்க்க சகோதரர் சத்தியசீலன்,
      மிகச்சரியான விசயத்தை சொல்லியிருக்கிறீர்கள். திருமண உறவில் பிரச்னை விபச்சார சட்டமும் எல்லாக்காலத்திலு நடக்கக்கூடிய விஷயம்தான். திருமண உறவுக்கு மட்டுமா இஸ்லாம் பதில் சொல்கிறது? அடிமைகளை எப்படி நடத்த வேண்டும் என்றெல்லாம் சொல்கிறது. அதுவும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சட்டங்கள்தானே? அல்குரானில் ஒரு புள்ளி கூட மாற்றாமல் எக்காலத்திலும் பயன்படுத்தலாம் என்பதே நமது கொள்கை. ஆனால் இப்போது அடிமை முறையை தவறு என்று காபிர்கள் ஒழித்துவிட்டார்கள். ஆகையால், நாம் அல்குரானில் உள்ள ஏராளமான அடிமைகளை பற்றிய வசனங்கள் தேவையில்லை என்று முடிவு செய்து அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டோம். ஆகவே அடிமை முறையை திரும்ப கொண்டுவர நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு உதவுபவர்களுக்கு அல்லாஹ் உதவுவான் என்று சொல்லியெல்லாம் நம்மை வேலை வாங்குகிறான். அவனால் முடிந்தால் அவனே செய்துவிடமாட்டானா? நமது உதவி தேவைப்படுவதால்தானே நம்மிடம் கெஞ்சுகிறான். ஆக்வே நாம் கடுமையாக உழைத்து அல்லாஹ்வுக்கு உதவி அடிமை முறையை திரும்ப கொண்டுவருவோம்.
      ய்ய்ய்ய்யாஅ அல்லாஹ்!


      பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்

      இதனையும் படித்துகொள்ளுங்கள்

      • இப்னு அண்ணே?”” சத்தியசீலன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியல என்றாலும்.குரானை பற்றி முழுமையா தெரியல என்றாலும் எதையாவது அடிச்சி வுட்டு நம்ப பகுத்தரிவாளின்னு நிருபிசிட்டீங்கன்னே.பாய்-ங்க எல்லாம் என் கிட்டேயும் இப்படிதான்னே கேட்கிராங்கோ.நம்ப பெரியார் மதத்திலிருந்து எப்படினே பதில் சொல்லறது.அண்ணே எனக்கு மட்டுமாவது சொல்லுங்கண்ணே.

  30. //இதே முகம்மதுநபி, காலிபாக்களின் காலத்தில் எப்படி நடந்தது? தலைவரின் விருப்பமே சட்டமாக இருந்தது. முதாளித்துவம் கூட ஆரம்ப காலங்களில் முதலாளிகளின் மன விருப்பத்தையே சட்டமாக, தீர்ப்பாக வழங்கியது.//
    என்ன காமெடி பண்ணுரிங்க? இஸ்லாத்தில் நீதிபதியின் தீர்ப்பை விட பாதிக்க பட்டவனின் உணர்வுக்கே முக்கியதுவம் கொடுக்கப்படும். இஸ்லாத்தில் உள்ள காள்புனர்சியின் காரணமாக உங்களின் அரிப்பை தீர்த்து கொள்ள முயற்சி சைதுள்ளிர்கள் போலும்….

    எதோ தப்பு நடந்து விட்டது. .. சரி இந்த பிரச்சினைக்கு உங்கள் கணிப்புபடி கம்மயூனிசத்தின் உள்ள சட்டம் என்ன என்று எங்கலுக்கு உணர்த்தினால் ரொம்ப நல்ல இருக்கும். ஏனென்றல் இந்த பிரச்சினைக்கு இஸ்லாமிய நாடுகளில் அந்த விரும்பினால் குற்றவாளிக்கு (விபச்சாரம் செய்ததருக்க) மரண தண்டனை நிச்சயம். அதை இந்தியாவில் நடைமுறை படுத்த முடியாது.

    நீங்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாமே இஸ்லாமிய ஆட்சி உள்ள இடத்தில இவ்வாறு நடந்து சரியாக நீதி கிடைக்கவில்லை என்றால் அங்கே கேட்கலாம். இங்கே இந்திய குற்றவியல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தான் எதையும் செய்ய முடியும். நாங்கள் ஒன்றும் இந்த நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் கிடையாது..

  31. இஸ்லாம் நான்கு மனைவிகள் வரை திருமணம் முடித்து கொள்ள அனுமதிக்கிறது இது ஷரீஅத் சட்டம். அந்த சட்டத்தின் உல் விதிகள் இருப்பதை நீங்கள் படிக்க மாட்டீர்களா?அந்த நான்கு மனைவிகளையும் அவர் ஒரே அந்தஸ்தில் நடத்த வேண்டும்,
    முஸ்லிம்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை திருமணம் செய்து கொள்ள அனுமதித்திருப்பது, தவறான உறவுகளை தடுப்பதற்குத்தான்,
    இந்தியாவில் கணக்கு எடுத்து பாருங்கள் முஸ்லிம்களை விட மாற்று மதத்தினர் மற்றும் கடவுள் மறுப்பு கொள்கை உடையோர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் இருப்பதை பார்க்க முடியும், இன்னும் சில பேர் ரகசியமாக வைத்திருப்பார்கள்.
    உங்கள் லெனினும், ஸ்டாலினும் ஆட்சி செய்த காலத்தில் ரஷ்யாவில் விபச்சாரம் நடக்க வில்லையா? உங்களின் அறிவு புரட்சி எப்படி தடுத்தது? அந்த கால கட்டத்தில் ஒரு மனைவிக்கு மேல் யாரும் திருமணம் செய்ய வில்லையா?
    ம க இக தோழர்கள் கம்யூனிச கட்சி காரர்களை பார்த்து போலி கம்யூனிசம் என்று ஏன் சொல்கிறார்கள்? அவர்கள் அதை சரி வர பின் பற்ற வில்லை என்பதால் தானே அப்படிதான் நாங்களும் சொல்கிறோம் யார் இஸ்லாத்தை சரியாக பின்பற்ற வில்லையோ அவரை முஸ்லிம் இல்லை என்று

  32. “பெண்ணடிமையை போதிக்கும் இஸ்லாத்திடம் நிச்சயம் இதற்கு தீர்வு தேடமுடியாது”

    இது எல்லாம் எழுதி கடைசியில் ஒரு பன்ச் கொடுத்து ஏன்? இஸ்லாம் புரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் ஏன் இருக்கிறார்கள்? ஏதோ ஒரு இந்திய மூலையில் யாரோ செய்தமைக்கு நான் இங்கே இஸ்லாத்தில் பெண்கள் அப்படின்னு விவாதப்போவது இல்லை. அதை நீங்கள் தான் தெரிந்து கொண்டு இனி வரும் காலங்களில் எழுத வேண்டும்.

  33. கிளம்பிட்டாங்கயா…. கிளம்பிட்டாங்கயா…. ஆமா தெரியாமதா கேக்குறே உங்களுக்கு பிரேச்சனைதா என்ன???? இப்போ இந்த article ல பாஸித் கூட உங்களுக்கு சண்டெய்ய இல்ல குர்ஆன் கூடைய???

    ////அவரது அக்காவின் மகளை திருமணம் செய்திருக்கும் கணவனின் தங்கை தனது கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.////

    ஆமா கல்யாணம் பண்ண தானே try பண்ணி இருக்காரு??? உங்கள மாதிரி small house, big house னு ஊருக்கு ஒன்னு, street க்கு ஒன்னு னு கல்யாணம் பண்ணாம வச்சுக்க try பண்ணலையே??? இதுல என்னங்க தப்பு. ஒடனே வரிஞ்சுகட்டிக்கிட்டு வந்துருவாங்க இதான் இஸ்லாம் சொல்லுதா? ஆமா உங்க நபி தான் 11 கல்யனோ பண்ணிக்க சொல்லி green signal கொடுத்து இருக்காரேனு. அட போங்கப்பா, இந்த சொத்த point க்கு விளக்கோ சொல்லி விளக்கோ சொல்லி நாங்க ஓஞ்சு போய்டோ. ஆனா உங்களுக்கு கொண்ஜோன்குட சலிக்கல.

    ஆடே………………………..யப்பா, சாகித் ஒரு பெரிய அரிவலிதாங்க செம கேள்விகள் கேட்டு முஸ்லிம்களுடைய மூக்க ஓடசுடருங்க. சாகித் நல்லா புரிஞ்சுகோங்க நீங்க உடச்சது முஸ்லிம்களோட மூக்கதானே தவிர இஸ்லாத்தை இல்ல.

    பெயரளவுல இஸ்லாமியன் னு சொல்லிக்கிட்டு பகுத்தரிவலன்னு போர்வை போத்திக்கிட்டு திரியுறே நீங்க பெருசா வந்து கேள்வி கேக்குறாரு. மேல ஒரு நண்பர் சொன்னாரு கோரங்குல இருந்துதா மனுஷன் வந்தனு சொல்றே அறிவு இல்லா தவங்க தானே நிங்களா. அப்படினா TNTJ போன வருசோ உங்க (உங்க பெரிய பெரிய தலைங்க) கூட தானே விவாதம் பண்ணுச்சு. அவங்களால ஒண்ணுமே சொல்ல முடியலையே……இந்த கடவுள் இல்லை னு சொல்ரவங்கள அறுத்து உட்டு, சாரி மூக்க அறுத்து விட்டு அனுப்புனன்களே TNTJ, அந்த கோவம் தானோ இந்த article????

    செங்கொடி செங்கொடி னு நடுல ஒரு கோடி பறக்க விட்ட ஆளு எங்க???? அவருக்கு ஒன்னு சொல்லிகிறே, இந்த செங்கொடி ஒரு சரியான மாங்கா னு ஒரு சின்ன பைய மறுப்பு போட்டு அதுக்கு பதில் சொல்ல முடியாம ஒளிஞ்ச பயலே துக்கி இங்கே பேசுறதே ஒரு முட்டாள் தனம்.

    அப்ரோ ராஜன்லீக்ஸ் னு ஒருத்தர் வந்து லிங்க் போட்டாரு அவருக்கு, அவன் (ராஜன்லீக்ஸ்) சரியான டுபாகொர் .

    ///முக்கியமான விஷயங்கள் தெளிவுபடுத்தப்படாமல் இருந்தால், அவற்றை தெளிவுப்படுத்த, பிரச்சாரங்களை இன்னும் கூர்மைப்படுத்துவதுதானே முறை. அதை விடுத்து, ஆறு மாத காலம் ஆய்விற்குச் செல்கிறேன் என்று கூறுவது என்ன வகை என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.////

    /////பிஜே இந்த முடிவை எடுத்ததன் மூலம், குர் ஆனில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது./////

    இவரு பெருசா யுகிசுடறு நம்மள யூகிக்க சொல்றாரு. அட கிறுக்கு சிறுக்கி, விஷயம் தெரியாத நாள்த ஆய்வு க்கு போறேன்னு தெளிவா அவர் (PJ) சொல்றாரு. அத விட்டுட்டு குர்ஆன்ல முரண்பாடு இருக்கு னு லூசு தனமா உலரர் அந்த அம்பி.

    இப்படியே திட்டி திட்டி (வினவு, ராஜன்லீக்ஸ், செங்கொடி, etc.,) மனச பலப்டுதிகிரத தவிர வேற வழி இல்ல.

  34. ௧.எனக்கு ரெண்டு டவுட்டு!மனிதர்கள் காட்டுவாசிகளாக திரிந்த பொது ஏன் இறைவன் தனது தூதரை அனுப்பி மக்களை பண்பட செய்யவில்லை?ஏன் மக்கள் civilized ஆனா பின்பே தூதரை அனுப்பினார்?வேலை மிச்சம் பிடிக்கவா?
    ௨.எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள மூலம் தோன்றியவர்கள் என்றால் தமது உடன் பிறந்தோர்களை அல்லாவா நாம் புணர்ந்து கொண்டிருக்கிறோம்?இது uncivilized இல்லையா?

  35. எனக்கு ஒரு டவுட் கடவள் நம்மை படைத்தாரா கடவுளை நாம் படைத்தோமா ? என்பதைசொல்லுங்கள்

    • கடவுள் ஒருவர் தான் நம்ம அனைவரையும் படைத்தார்.நீங்க கடவுள்களை படைத்தீங்க அவ்வளவுதான் வித்தியாசம்

  36. கம்யூனிஸ்ட்கள், ஹிந்துக்கள், கிருத்தவர்கள் உள்ள பெண்கள் தொப்புள் மார்பை காட்டி நடமாடுவதால் தான் இந்தியாவில் 10நிமிடத்திற்கு ஒரு பெண் மானபங்க படுத்த படுகிறாள் இதனால் தான் இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே ஹிஜாப் என்ற ஒரு முறையை கடமையாக்கியது.
    கம்யூனிச பெண்கள் மானபங்க படுத்தப்பட்டால் தான் ஹிஜாபின் அருமை புரியும்.

    • //கம்யூனிச பெண்கள் மானபங்க படுத்தப்பட்டால் தான் ஹிஜாபின் அருமை புரியும்.//

      un mathathin unmai mugam velipattu vittathu!!!

    • போங்க சார் ஒன்னும் தெரியாம பதிவு பண்றீங்க.நாங்க ஆட்சி செய்த மேற்குவங்கம்,கேரளா வந்து பாருங்க பெண்களுக்கு எந்த அளவுக்கு உரிமை கொடுத்திருக்கோம் என்று.எங்கள பிடிக்காத சில பேர் சொல்லுவாங்க அவங்க தொழில் செய்ய விபச்சார விடுதி கட்டி கொடுத்தாங்க,செங்கொடி பிடிச்சி கொடிபிடிச்சி தொழிற்சாலைகளை மூடி எழைகளை பட்டினி போட்டார்கள் என்று அதெல்லாம் சும்மா ஹா ஹ்ஹ்ஹா இது எப்டி இருக்கு

  37. Tண்TJ ஒரு லட்டர் பேடு இயக்கம் அல்ல அது தமிழகத்தில் அதிக உறுப்பினர்கள் கொண்ட இயக்கம் அது. உங்களை போன்ற கைக்கூலிகள் அதை விமர்சனம் செய்ய தகுதி இல்லை, உங்களுக்கு தைரியம் இருக்கும் பட்சத்தில் அதனுடன் நேரடி விவாதம் செய்ய முயற்சி செய்யுங்கள்.

  38. இந்திய ஜனநாயகத்தையும், இஸ்லாமிய சட்டத்தையும் சரியான முறையில் மதித்து பயணித்து கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே !

    தமிழக அளவில் தன்னுடைய இரத்தத்தை தானமாக வழங்கி பல உயிர்களை காத்து கொண்டிருக்கும் தவ்ஹீத் ஜமாஅத் தான், பல ஆண்டுகளாக இரத்த தான சேவையில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து வருகிறது

    இந்த மனிதநேயமிக்க ஜனநாயக அமைப்பை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது

    இதன் உண்மை நிலையை தவ்ஹீத் ஜமாஅத் தலைமையிடம் விசாரித்து விட்டு செய்தியை வெளியிட்டு இருந்தால் உண்மை நிலை மக்களுக்கு சரியான முறையில் சென்றிருக்கும்

    ஒரு தலை பட்சமாக செய்தி வெளியிட்ட “வினவு” கண்டிக்கத்தக்க ஒன்று !

  39. அஸ்ஸலாமு அலைக்கும் ,

    இந்த தொகுப்பின் மூலம் வினவு, மதத்திற்குள் சண்டை உண்டு பண்ணுகிறாண் .இந்தியாவில் அரசியல் கட்சி மூலமாக தான் முன்பெல்லாம் மதத்திற்குள் சண்டை வரும் . அனால் இப்போது வினவு மூலம் அதிகமாகவே வருகின்றது. இதில் வினவுக்கு என்ன லாபம் இருக்க கூடும்? வினவு தன்னுடைய ப்ளாக் ரேடிங் அதிகம் கொண்டு வர எண்ணத்தில் தான் இவ்வாறு செய்கிறான். வினவு என்பவன் யார்? அவன் எல்லா மதத்தையும் கிண்டலும் கேலியும் பண்ணுகிறான். அவ்வளவு தான். மேலும் தான் மிகவும் ஞானம மிகுந்தவன் போல காட்டி கொள்கிறான். குரான்,பைபிள்,போன்ற வேதத்தை குறை கூறுகின்றான். இவன் வினவு ஒரு மேடை பேட்சலரா ? இவன் ஒரு 10000 மக்கள் முன்னிலையில் நின்று என்றாவுது பேசி இருப்பானா? ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டு தனக்கு என்னலாம் தோன்றுதோ அதலம் அவன் எழுத்து வடிவில் போஸ்ட் செய்கிறான். இவன் மற்ற மதத்தின் உள்ள பேச்சாளரின் குறையை சொல்லுகிறானே தவிர , இவன் என்றாவது மேடை ஏறி பேசியது உண்டா? அப்போது தான் இவனுடைய தவறை சுட்டி காட்ட முடியும் . அப்போது தான் இவன் அறிவின் தன்மை எந்த அளவில் உள்ளது என்று புரியும்.இவன் தன்னை பற்றி ஒரு போதும் கூறியது இல்லை. உன் குடும்பததிற்கு நீ எந்த கோட்பாடும் விதிகவில்லியா? உன் குடும்ப மக்களுக்கு நீ கம்முநிசதை பின் பற்ற சொல்கிறாயா? ஒரு மதத்தை கேலி செய்வது மிகவும் எளிது. நீ அதை செய்ந்து விட்டாய் என்று பெருமை கொள்ள வேண்டாம். நம் வாழ்வில் நாம் சில வழிமுறைகளை பின்பற்றி தான் வாழ்கிறோம். பள்ளி பருவத்தில் பள்ளி சொல்கின்ற வழிமுறை படி.வேலை செய்யும் இடத்தில் அங்கு உள்ள விதிப்படி. வீட்டில் பெற்றோல் சொல்கின்ற விதிப்படி.இப்படி எல்லாத்துக்கும் இருக்க போய்தான் சமூகமாக வாழ்க்கை செல்கின்றது.மனிதனின் வாழ்க்கைக்கும் அவ்வாறே ஒரு விதி முறைகள் தேவை படுகின்றது. அது நாம் வேதத்தின் மூலம் கற்று கொள்கிறோம். ஆனா கம்முநிசம் மனிதனின் விதிமுறைக்கு மனிதனே அவனுக்கு சாதகமாக ஒன்று எழுதி வைத்துகொன்று இது தான் மனித வரம்பு என்று கூறுகிறான்.நீ இஸ்லாம் உள்ளதில் குறை சொல்கிறாய்.அனால் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களோ இஸ்லாத்தை பற்றி மேடை ஏறி பேசுகிறார்கள். அது அவர்களின் நம்பிக்கை இஸ்லாம் உண்மை என்று. அதே போல நீயும் உன் கம்முநிசம் பற்றி அது சரி என்றால் ஒரு மேடை மேடை போட்டு பேசி பாரு. அப்போது உனக்கு தெரியும் உன் தகுதி என்னவென்று . அப்போது உன்னிடம் அந்த இடத்தில் வைத்து கேட்கும் கேள்விகளுக்கு நீ பதில் கொடு . அப்போது வினவின் பித்தலாட்டம் கண்டிப்பாக தெரிய வரும். நீ மதத்தின் டாபிக்கை கையில் எடுத்து கொண்டு உன் இஷ்டத்துக்கு உனக்கு தெரிஞ்சத சொல்லிடு இருக்க. நீ ஒரு சிறிய வட்டத்துக்கு உள்ள உட்காந்துட்டு பேசுறத நிறுத்திட்டு பப்ளிக் ஸ்பீச் குடு. அப்போ உன்னுடைய சாமர்த்தியத்த பாக்கலாம். நீ மக்களுக்குள் வெறுப்பு உணர்வை கொண்டு வர. நீ யார தப்பா பேசனும்னு நினைக்கிறியோ பப்ளிக் ஆஹ் பேசு. அத விட்டு உன் ப்ளாக்ல போடறத நிறுத்து. முஸ்லிம தாக்கி பேசுனா அத எழுதினது ஒரு முஸ்லிமுனு போடற. சரியான ஆள் தாண்டா நீ. உன்னாலா இங்க பிரச்சன தான் அதிகம்.என்னைக்கும் மதத்த பேசும் பொது பப்ளிக் ஆ பேசு. அது தான் தைரியம். யோசிச்சு பேசு. நீ ஏன் கேடு கெட்ட இஸ்லாம் அப்படி சொல்றன்னு தெரியும் உனக்கு அப்போ தான் நெறைய கமெண்ட்ஸ் வரும்னு . கேவலம் உன் ப்ளாக் பிரபலம் ஆணும்னு நீ என்னலாம் பண்ற வினவு. உன்னுடைய பித்தலாட்டத்தை ஏற்கனவே எதிர்குரல ஆசிக் பிரதர் எழுதி இருக்காங்க. உன்கிட்ட நெறைய வினவியாச்சு நீ திரும்பவும் எனக்கு மறுமொழி பன்றத விட்டுட்டு, உன் மார்க்கெட்டிங் உத்திய கண்டினு பண்ணு.நீ எதேலம் தப்புன்னு சொல்ட்றியோ அதுக்கெல்லாம் நீ பண்ணலாம்னு சொல்லு. ஒரு புத்தகம் வெளியுடு, இப்படி இருந்தா தான் சரி, இதெல்லாம் தவறு அப்படின்னு. குறை சொல்றத நிறுத்திட்டு அத உன் கம்முநிசம் படி எப்படி சரி செய்யலாம்னு சொல்லு. அப் தான் தெரியும் நீ சொல்றதுல எவ்வளவு முரண் பாடு இருக்குனு.வினவு நீ யாரலாம் தப்பா பேசுறியோ அவங்க கூட ஒரு கருத்தரங்கம் வை.அதுல நீ பேசு, அத விட்டு சும்மா சண்டை உண்டு பண்ணாத.. சரியான போலி யான ஆள் தான் நீ.

  40. திருமணம் பற்றியும் விபச்சாரம் பற்றியும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவான சட்டங்கள் உடையவர்களே! பின் வரும் ஹதீதுகளுக்கு விளக்கம் தாருங்களேன்.

    புகாரி ஹதீஸ் 5255. அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) அஷ்ஷவ்த் (அல்லது அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்)உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!. என்று கூறினார்கள். அந்தப்பெண் “ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?” என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி கண்ணியமான (இறை) வனிடம்தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு’ என்று கூறினார்கள்.

    புகாரி ஹதீஸ் 2229 அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

    நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ’இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ’அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!’’ என்று கூறினார்கள்.

    புகாரி ஹதீஸ் 2203. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார்.
    ’மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட எந்த மரமாவது அதன் கனிகள் (யாருக்குச் சேரும் என்பது) பற்றிப் பேசப்படாமல் விற்கப்படுமானால் அவை மகரந்தச் சேர்க்கை செய்த(விற்ற)வருக்கே உரியவையாகும்! அடிமையும் பயன்படுத்தப்பட்ட நிலமும் கூட இவ்வாறே ஆகும்!’’

    • மிஸ்டர் மார்க்ஸிய மதவெறியர் சாகித் அவர்களுக்கு

      நீங்க ஹதீஸ் கொடுக்கிற லட்சணம் புதியவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்

      சம்பந்த சம்பந்தமில்லாமல் அந்த ஹதீஸ் எந்த காலகட்டத்தில் எறங்கிச்சு என்பதை நன்றாக தெரிந்து வைத்துக் கொண்ட இஸ்லாமிய எதிர்ப்பு வெறியில் ஹதீஸ்களை அடித்து விடுவதில் வல்லவர் நீங்கள்

      உதாரணத்திற்கு

      இசுலாமிய “உணர்வு” பத்திரிகைக்கு ஒரு மறுப்பு! என்ற பதிவில் ஹதிஸ் என்று ஒரு ஆசிட்டே அடித்து விட்டு போய் இருந்தீர்கள். பார்க்க

      //“ஒருவன் என்ன வேண்டும் என்று நினைக்கிறானோ அதனையே பெறுவான்; ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அதனையே அடைவர்” என்று முகம்மதுநபி சொல்லி இருக்கும்போது, இந்த ………… பெண்கள்,இவர்களின் ஆசையை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தால் ஆசிட் வீசாமல், வேடிக்கையா பார்பார்கள்?//

      சூப்பர் என்ன ஒரு புனைவு தினமலர் ஓங்கிட்ட பாடம் படிக்கனும் சரி ஹதிஸ்க்கு வருகிறேன்.

      “ஒருவன் என்ன வேண்டும் என்று நினைக்கிறானோ அதனையே பெறுவான்; ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அதனையே அடைவர்”

      இந்த ஹதீஸ் வந்த பிண்ணனி

      மக்காவில் இஸ்லாமிய புரட்சியை நபியவர்கள் ஆரம்பித்த போது கொடுமைப்படுத்தப் பட்டார்கள் அப்போது நாடு துறந்து அனைவரும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு போகிறார்கள் இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக நாடு துறக்காமல் சிலர் மதீனாவில் அழகிய பெண்கள் இருக்கிறார்கள் அவர்களை மணமுடிப்பதற்காக துய எண்ணம் இல்லாமல் கலந்து விடுகிறார்கள் அப்போது அவர்களை நபி அவர்களை கண்டிக்கிறார் இப்படி
      “ஒருவன் என்ன வேண்டும் என்று நினைக்கிறானோ அதனையே பெறுவான்; ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அதனையே அடைவர்”

      அதாவது புரட்சிக்காக இல்லாமல் பெண்ணுக்காக இடம் பெயராதீர்கள் என்ற கொள்கை தூய்மையை சொல்லக்கூடிய ஹதீஸ்

      இது புகாரி ஹதீஸ் புத்தகத்தில் முதல் ஹதீஸ் இதன் பின்னனியும் விளக்கப்பட்டிருக்கு.

      இப்பாவது புரியுதா இல்லை மறுபடியும் அழுகுனி ஆட்டமா பார்ப்போம்

      • ////நான் நபி அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, இறைத்தூதர் அவர்களே ! எங்களுக்கு பெண் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியே விட்டுவிடும் செயலைச்) செய்யலாமா ? என்று கேட்டேன். அதற்கு நபி அவர்கள், அப்படியா செய்கிறீர்கள் ? இப்படிச் செய்வதற்குத் ஒன்றும் தடையில்லை, ஆயினும் அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை ! என்று கூறினார்கள்.///

        சன் டிவி யில் தினமும் இரவு 11 மணிக்கு உடலுறவின் போது என்னென்ன செய்யலாம் என்னென்ன செய்யக் கூடாது என்று பலர் காமராஜ் என்கிற டாக்டரிடம் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அதைப் போல இவர்கள் இறைத்தூதன் என்று சொல்லிக்கொள்கிற நபர் திமிரெடுத்த ஆணாதிக்க முசுலீம் வெறியர்களுக்கு கூறுகின்ற அறிவுரையை பாருங்கள்.

      • சாகித்தை நேர்மையற்றவர் என்று பேசுகின்ற நீங்கள் தான் ஹைதர் அலி நேர்மையும், நாணயமுமற்றவர். வெளிநாட்டில் போய் கொஞ்சம் சம்பாதிக்கத் துவங்கியவுடன் மதவெறி போதை தலைக்கேறி கோடிக்கணக்கான ஏழை எளிய முசுலீம்களுக்கு எதிரான இசுலாத்தின் பக்கம் நின்று கொண்டு சொந்த வர்க்கத்திற்கு துரோகம் செய்யும் நீங்கள் தான் நேர்மையற்ற மனிதர்.

        இன்றைய உங்களுடைய வாழ்க்கைக்கு (என்றைக்கும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே) பொருத்தமாக, தேவையாக இருக்கும் இசுலாம் என்கிற பிற்போக்குதனத்தை தழுவிக்கொள்வதற்காக உழைக்கும் மக்களின் சோவியத் அரசை பற்றி கேடுகெட்ட முறையில் ஏகாதிபத்திய கைக்கூலி எழுத்தாளனை விட கேவலமான முறையில் பொய்களை அள்ளிவிட்டு கை கூசாமல் எழுதுகின்ற நீங்கள் தான் நேர்மையும், நாணயமுமற்றவர்.

        • வாயிலே நல்லா வந்துற போகுது

          //உழைக்கும் மக்களின் சோவியத் அரசை பற்றி கேடுகெட்ட முறையில் ஏகாதிபத்திய கைக்கூலி எழுத்தாளனை விட கேவலமான முறையில் பொய்களை அள்ளிவிட்டு கை கூசாமல் எழுதுகின்ற நீங்கள் தான் நேர்மையும், நாணயமுமற்றவர்.//

          சொந்த பெயரில் போட்டவோடு நான் எங்கு இருக்கிறேன் என் அட்ரஸ் என்ன என்ற அடையாளத்தோடு எழுதுகிறவன் நேர்மையற்றவனா? இல்லை

          நல்ல பெயரில் நாலு தளம் கள்ள பெயரில் நாலு பிளாக் நடத்தி Rss கரானை விட கேவலமாக இசுலாமிய மக்களையும் நம்பிக்கையும் அவதூறு செய்கின்ற சாகித் கோழைகள் நேர்மையற்றவர்களாக?
          நீங்க அவதூறாக பதிவு போடும் போது எப்படி ஒடி வந்து நூற்றுகணக்கில் புன்னூட்டம் போட்டு எங்கள் தரப்பு நியாயத்தை சொல்கிறோம் அதுபோன்று நீங்களும் வாங்க ராசா யார் தடுத்தா?

          பின்குறிப்பு

          சாகித் கள்ள பிளாக் நடத்துகிறார் என்று ஆதாரமில்லாமல் சொல்லவில்லை அவருடைய எழுத்து ஸ்டைல் எனக்கு நன்றாக தெரியும்
          உதாரணத்திற்கு எல்லோரும் நரகவாசி என்று எழுதினாள் நம்ம சாகித் நரகத்தாளி என்று எழுதுவர் இது அவருடை நம்பூதழை ஊர் எழுத்து ஸ்டைல் ஏற்கனவே சொன்னது மாதிரி அவருடைய ஒரு எழுத்த கூட விடாமல் படித்துக் கொண்டு வருவதால் வந்த அனுபவபூர்வ அறிவு

    • ex sahith,இந்த சுட்டியை படித்துவிட்டு உங்களது விமர்சனத்தை தொடருங்கள்
      http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/107/
      அதே போன்றே நபி[ஸல்] அவர்கள் ,போர்க்கால அடிமையான உமைமா, நபி[ஸல்] அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றதும் அந்த பெண்ணை பலவந்தப் படுத்தாமல் அன்பளிப்பாக உடைகள் கொடுத்தும் வேறிடத்திகு அனுப்பசெய்கிரார்கள் .இதை இஸ்லாம் அல்லாத மன்னராக இருந்தால்,அவரை ஆட்டிடையர் என்ற சாதி வெறியராக கூறியதற்கும் தனது ஆசைக்கு உடன் படவில்லை என்றாலும் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்
      .மேலும்நபி [ஸல்] அவர்கள் பற்றி எந்த ஒரு செய்திகளும் மறைக்கபடாமல் மக்கள் மத்தியில் வெளிப்படையாக வைக்கபட்டிருப்பது போன்று வேறு எந்த தலைவர்களை பற்றி அவர்கள் தரப்பிலிருந்தே இவ்வாறன வாழ்க்கை வரலாறு வெளிப்படையாக சொல்லப்பட்டுள்ளதா?

      • இபுறாஹிம்,

        ஒரு ஆணும் பெண்ணும் மணம் முடிக்காமல் உறவு கொள்ளலாமா?

        • நீங்கள் போருக்கு வாளேந்தி சென்றால் ,அந்த போரில் உங்களது தரப்பு வென்றால் ,அங்கெ உங்களுக்கு பெண் கைதி கிடைத்தால்,அந்த கைதி உங்களின் வலகரத்தை சொந்தமாக்கிக் கொண்டால்,அதாவது சம்மதித்தால் ,அவளை புணர அனுமதி உள்ளது.ஆனால் நீங்கள் அவளுக்கு விடுதலை கொடுத்து அதையே மகராக்கி அவளை திருமணம் செய்து கொள்வதிலும் தவறில்லை.

          நீங்கள் போருக்கு வாளேந்தி செல்வது எப்போது? அப்போது இதைப் பற்றி சிந்திக்கவும் .அப்படி இல்லாத பொழுது வீண் சலம்பல் வேண்டாம்.

          • ///அந்த கைதி உங்களின் வலகரத்தை சொந்தமாக்கிக் கொண்டால்,அதாவது சம்மதித்தால் ,அவளை புணர அனுமதி உள்ளது.ஆனால் நீங்கள் அவளுக்கு விடுதலை கொடுத்து அதையே மகராக்கி அவளை திருமணம் செய்து கொள்வதிலும் தவறில்லை.//

            அல்லா எல்லாத்துக்கும் சான்ஸ் கொடுத்திருக்காரே! மணமுடிக்காமல் உறவு கொள்வது விபச்சாரம் என்று கூறிவிட்டு எதற்கு வலக்கரம் என்ற சான்ஸ். விடுதலையே மஹர் என்றால் விவாகரத்தின் போது அந்த பெண் மஹராக திரும்ப பெற்றுக்கொள்வது எதனை?
            ஆனாலும் லெனினும் ஸ்டாலினும் போர்களின்போது யாரையும் வலகரம் சொந்தமாக்கிக் கொள்ளவில்லைங்க.

            • எனக்கொரு சந்தேகம் இபுறாஹிம்,
              முகமது நபி காலத்தில் போர் செய்வதற்கு பெண்களும் பங்குபெற்றனரா? முகமது நபியும் போரில் பெண்களை பயன்படுத்திக்கொண்டாரா?

  41. பாசித் போன்றோரின் செயல்களுக்கு மதம் அடிப்படை காரனமாக உள்ளது என்படை பின்னோட்டம் எண் 35 ல் குறிப்பிட்டுள்ளேன். ஒரு கம்யூனிஸ்டின் தவறுகளுக்கு கம்மயூனிசக் கொள்ளை எவ்வாறு அடித்தளமாக அமைகிறது என்று எடுத்துக்காட்டை கூறவும்.

    • “பாசித் போன்றோரின் செயல்களுக்கு மதம் அடிப்படை காரனமாக உள்ளது என்படை பின்னோட்டம் எண் 35 ல் குறிப்பிட்டுள்ளேன். ஒரு கம்யூனிஸ்டின் தவறுகளுக்கு கம்மயூனிசக் கொள்ளை எவ்வாறு அடித்தளமாக அமைகிறது என்று எடுத்துக்காட்டை கூறவும்”.
      முதலில் கம்மயூனிச திருமணக் கொள்கை என்ன என்பதை (இருக்கிறதா என்ன?) இருந்தால் சொல்லுங்கள். கம்மயூனிசக் கொள்கையில் பெண்களுக்கு என்ன உரிமைகைள் என்ன என்ன விசயங்களில் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வராமல் கொடுத்துள்ளிர்கள் என்பதை கூறுங்கள். எங்கள் கம்முநிசதில் எந்த கொள்கையும் வகுக்கப்படவில்லை …நாங்கள் மற்ற கொள்கைகளை மட்டுமே விமர்சனம் செய்வோம் என்று கூற வருகின்றீர்களா ?
      உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு , இஸ்லாத்தில் பெண்களுக்கு உள்ள குறைகள் அனைத்தையும் நீங்கல் மக்கள் மன்றத்திற்கு முன்னாடி வைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு..ஆனால் ஒரு நிபந்தனை நீங்கள் பெரும் மக்கள் திரளுக்கு முன்னாடி தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்துடன் நேரடி விவாதத்தில் பங்கு கொள்ள வேண்டும். கேட்டு சொல்லுங்கள் உங்கள் புதிய ஜனநாயகத்தின் தலைமையிடதிலிருந்து.

      • உரிமையை கொடுப்பதுக்கு ஆண்கள் என்ன உரிமைகள் கடைகளா வைதிரிக்கிரர்கள் . கொடுப்பது இல்லை உரிமை . எடுப்பதில் தான் இருக்கிறது உரிமை . இந்த உரிமையை நான் உனக்கு கொடுதுரிக்கிறேன் எனபது (இஸ்லாம் ) ஆண்ணடிமைதனம் . எனக்கு இருப்பது போல் உனக்கும் எல்ல உரிமையும் உனக்கும் இருக்கிறது எனபது கம்முனிஷம்

        • ஆண்களுக்கு பெண்கள் மீது என்ன உரிமை இருக்கிறதோ அதே போன்றே பெண்களுக்கும் ஆண்கள் மீதும் உரிமைகள் இருக்கிறது ,என்றுதான் குர்ஆன் கூறுகிறது
          கம்யுனிசகடையின் விளம்பரம்தான் இருக்கிறது கடையை காணோம்

    • அப்படிப்பார்த்தால் 2 திருமணம் அதற்க்கு மேலும் செய்தவர்கள் (கலைஞர்,எம்ஜியார்),சின்னவீடு,பெரியவீடு வைத்திருக்கும் உங்கள் பெரியார் மதத்தவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் செய்தால் சரி,மற்றவர்கள் செய்யும்போது பெண்ணுரிமை பறிக்கப்படுகிறதா?திருமணம் உங்கள் கொள்கை படி செய்யலாமா?செய்யக்கூடாதா?ஏன் என்றால் பெரியார்,திருமணம் பெண்ணுரிமையை பறிக்கிறது,பெண் பிள்ளைபெறும் எந்திரமாக மாறி அவள் உரிமையை இழக்கிறாள் எனவே சட்டப்படி குற்றமாக்கவேண்டும் என்றார்.அவர் கூற்றை அவரே பின்பற்றினாரா என்றால் இல்லை……..சரி அவர் கதை எதற்கு இங்கே எல்லோரும் அறிந்ததுதானே)நீங்கள் எப்படி பெண்ணுரிமை பாதிக்கப்படாமல் பிறந்தீர்கள்.(நான் குரங்கிலிருந்து வந்தேன் என்றெல்லாம் ஜோக் அடிக்கக்கூடாது)திருமணம் அந்தகால வழக்கத்திற்கு அவசியமில்லை.இப்போது அவசியம் என்று சொல்லப்போகிறீர்களா?(நான் கூறும் காலம் கற்காலம் அல்ல பெரியார் காலம்)நீங்கள் சொன்னாலும் சொல்வீர்கள் ஏன் என்றால் எங்களுக்கு வறட்டு சட்டம் இல்லை.இன்னிக்கி என்ன தோணுதோ அதுதான் எங்கள் சட்டம்னு சொன்னவங்க தானே நீங்க.உங்க குரூப்ல யாரோ ஒருத்தரு tntj அய்யா அம்மா-ன்னு மாற்றி மாற்றி வோட்டு போடுறாங்கன்னு.அவங்க யாரு எங்கள் சமுதாயத்திற்கு நல்லது செய்றேன்னு சொல்றாங்களோ அவங்களுக்கு போடசொல்றாங்க.இதிலென்ன தப்பு.ஆனா உங்க பார்டி காரங்க கேரளாவில ஒருத்தருக்கு சப்போர்ட் பண்ணுவாங்க அதே தேர்தல்ல தமிழ்நாட்ல அவங்களுடைய எதிரிக்கு ஒட்டு போடச்சொல்லுவாங்க.நாடே அறியுமே உங்கள் லட்சணம் இதுல வேற அடுத்தவனுடையத சொரியறது.இனிமேல் ஏதேனும் எழுத நினைத்தா? முதல்ல உங்கள் கொள்கை என்ன என்று தெரியப்படுத்திவிட்டு எங்க கொள்கையை பாருங்க எவ்வளவு அறிவுப்பூர்வ இருக்கு என்று விளக்கிவிட்டு மற்ற மதங்களை அணுகுங்கள்.அப்போது நாங்கள் ஏற்றுகொள்கிறோம்.உங்களுக்கு நான் எழுதியது தவறாக இருந்தால் சுட்டிக்காடுங்கள் திருத்திக்கொள்கிறேன்.

    • கண்டிப்பாக கூறுகிறோம் அப்படியே கூறு போட்டு விற்கிறோம்
      35ல் கூறிப்பிட்ட உங்களுக்கு பதில் சொல்லும் முன் 35 க்கு கீழ் சில கேள்விகள் வைத்திருக்கிறேன் அரசியல் நேர்மை இருந்தால் பதில் சொல்லுங்கள்

    • இறைவன் இல்லை ,மறுமை இல்லை ,அதனால் தண்டனை என்பதும் கிடையாது.ஒருவனுக்கு ஒருத்தி என்பதும் பிள்ளைகள் பெற்று வளர்ப்பதும் சமுதாய சடங்குகள் ,இவைகள் இல்லாமல் நாம் மனம் போன போக்கில் கண்டவளுடன் சுகம் அனுபவிக்கலாம் .யாருடன் வேண்டுமானாலும் லிவ்விங் டுகெதர் பண்ணி கொள்ளலாம்,என்ற வரைமுறையற்ற வாழ்க்கை யை கொள்கை வைத்துக் கொண்டு ,யார் வேண்டுமானாலும் எந்த பொருள் வேண்டுமானாலும் எந்த கடையிலும் எடுத்துக் கொள்ளலாம் என்னும் போது திருட்டு வழக்கு யார் மீது போட முடியும்?

  42. இந்த தொகுப்பின் மூலம் வினவு, மதத்திற்குள் சண்டை உண்டு பண்ணுகிறாண்///
    .
    .
    கிருத்துவம் இயேசு சிலுவையில் அறையபட்டார்னு சொல்லுது!ஆனா இஸ்லாம் அவர் அறையப்படவில்லைன்னு சொல்லுது!இயேசு இறைதூதர்னு கிருத்துவம் சொல்ல நீங்களோ அவரின் செய்தி corrupted(என்ன வைரஸ் வந்துடுச்சா?) னு சொல்றீங்க!
    முதல்ல உங்க ஆபிரகாமிய மதத்துக்குள் பேசி ஒரு முடிவுடன் வாங்க நாங்க இங்கதான் இருப்போம்!

  43. கம்யூனிச பெண்கள் மானபங்க படுத்தப்பட்டால் தான் ஹிஜாபின் அருமை புரியும்.///
    .
    .
    ஆகா இதான் சாந்தியும் சமாதானமும் உண்டாகும் லட்சணமா?உங்கள் உண்மை முகம் வெளிப்பட்டது!நான் கெட்ட ரெண்டு கேள்விகளுக்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை!தெரியலியா?

  44. இசுலாமிய சட்டத்த மாத்த உனக்கு யாருடா அதிகாரம் கொடுத்தது. உனக்கு தைரியம் இருந்தா ஜனங்கலின் மத்தியில் விவாதம் நடத்த தாயாரா?

      • குணா,அமைதியும் சமாதானமும் எங்கு வரவேண்டுமோ அங்கு வரும் .ஒரு கன்னத்தில் அடித்தால் இஸ்லாம் அடித்தவன் மறு கன்னத்தில் அடிக்கவே சொல்லும் .சோஷலிச நாட்டில் கம்யுனிசத்தை கிண்டல் செய்தாலே சிறை என்பதை அறிவீர்களா?

        • //சோஷலிச நாட்டில் கம்யுனிசத்தை கிண்டல் செய்தாலே சிறை என்பதை அறிவீர்களா?//

          நேரா சோசலிச நாட்டு சிறையிலிருந்துதான் தப்பிச்சி வருகிறீர்களா?

          • சுஜித்கான்பாய் ,இப்போது சோஷலிச நாடே இல்லை என்கிறார்கள் அசல் கம்யுனிஸ்ட்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்,நீங்கள் அப்போது அந்தகம்யுநிஸ்ட் கிடையாதா? இல்லாத ஒரு நாட்டிலிருந்து எப்படி தப்பமுடியும் ?

            அந்த சோஷலிச காலத்தில் சிறையில் இருந்தவர்கள் எப்படி தப்ப முடியும்?இரும்பு கோட்டை இலிருந்து தப்பினால் சைபிரியாவுக்கல்லவா போகமுடியும்.

    • தம்பி டீ இன்னும் வரலை!அது வரைக்கும் சைக்கிளை எந்த திசையில் பஞ்சர் ஓட்டுவதுன்னு குரானை பாத்து சொல்லவும்!

  45. அட போங்கையா!!நான் கெட்ட ஒரு கேள்விக்கும் ஒருத்தனுக்கும் விடை தெரியல!இதுல தனியா வேற விவாதம் பண்ணனுமா?தம்பி டி இன்னும் வரலை!

      • kathir,நபி[ஸல்] அவர்களும் ஒரு அவையில் அமர்ந்திருக்கையில் பால் பரிமாறப்படுகிறது.வலப்புற வரிசையில்தான் எது வேண்டுமானாலும் பரிமாறப்படவேண்டும் என்பது நபி வழி.அதன்படி நபி[ஸல்]அவர்களுக்கு வலப்புறமாக ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறார்.அபுபக்கர்[ரலி].உமர்[ரலி]போன்ற தலைவர்கள் இடப்புறத்தில் இருக்கிறார்கள்.வழக்கம் போல் வலப்புறம் ஆரம்பிக்கும் முன் சிறுவரிடம் நபி[ஸல்] அவர்கள் அனுமதி கேட்கிறார்கள்,இடது புறம் பெரியவர்கள் இருப்பதால் அவர்களுக்கு முதலில் கொடுக்கட்டுமா என்று அந்த சிறுவனிடம் அனுமதி கேட்கப்படுகிறது.அந்த சிறுவரோ வழக்கப்படி வலது புறமே கொடுக்க வேண்டும் என்று கூறி பாலை முதலாவதாக பெற்று அருந்துகிறார் .உங்களது கம்யுனிசஅவையில் டீ கொண்டு வந்தால் இது போன்று சமத்துவம் காண முடியுமா?

  46. இதே இந்து மதத்தை தாறுமாறாக விமர்சனம் பண்ணப்போ எம்புட்டு எதிர்ப்பு இப்போ எம்புட்டு எதிர்ப்புன்னு வினவு சீர்தூக்கி பார்ப்பது நல்லது!முஸ்லிம் நாடா இருந்தா கம்யூனிசமே பேச விட மாட்டார்கள்!பாகிஸ்தானில் கடவுள் இல்லைன்னு சொன்னா ஆளை க்ளோஸ் பண்ணி விடுவர்!ஆக இந்தியாவில்தான் உங்களுக்கு இம்புட்டு சுதந்திரம்!அதை மனதில் வைக்கவும்!

    • யாருடா இது கூட்டத்தோடு கோயிந்தா போடுறதுன்னு பார்த்தா இப்ப தான் தெரியுது பாரத மாதாவை அமெரிக்காவிற்கு கூட்டிக்கொடுக்கும் காவி கும்பல்னு. இந்தியாவில் எங்களுக்கு முதல் எதிரி முசுலீம்கள் இல்லை குணா RSS பார்ப்பன கும்பல் தான்.

    • குணா ,அங்கு இந்து மதம் விமர்சிக்கப்படுகிறது.இங்கு தவறு செய்யும் முஸ்லிம்களை வைத்துக் கொண்டு இஸ்லாம் விமர்சிக்கப்படுகிறது.இந்து மதத்தில் எதிர் வாதம் வைக்கவும் இயலாது.அங்கு இந்து மதத்தை விமர்சிக்கும் கம்யுனிஸ்ட்கள் அனைவரும் இந்துக்களே .ஆனால் முஸ்லிம் மதத்தை விமர்சிப்பவர்கள் முஸ்லிம்கள் பெயரில் வரும் இந்துக்கள்.என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

  47. வினவிற்கு ஜமால் என்ற பெயரில் வந்த செய்தியை கொடுத்த நபர்களை அடயாளம் காட்டினால் ஒருலட்சம் பணம் தருவதாக உள்ளுர் டி.என்.டி.ஜெ காறர் அலாவுதினிடம் பேரம்பேசி உள்ளார்.(வினவிற்கு செய்தி கூறியவர்களை கன்டுபிடிக்க 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இதில் அனைவரும் டீ.என.டி.ஜெ காரர்கள்)பாசித் ஜமாத்தில் ரூ 5000 பணத்தை கட்டிவிட்டு வீட்டிற்க்கு சென்று கொண்டு இருந்தபோது அவருடைய முதல் மனைவி வழிமறித்து பாசித்தின் மேல் மண்ணைவாரி அள்ளிவீசி ”நீ நாசமா போக”என சாபம்விட்டார்.இதனால் கோபம்கொண்டு பாசித் தனது மனைவியை கடுமையாக தாக்கினார்.இதை ஊரில் உள்ள பல பெண்கள் பாசித்தை பார்த்து காறித்துப்பினர்.மேலும் இரண்டாவது கல்யாணம் செய்துள்ள பெண் யார் என்றால் இவ் ஊர் பள்ளிவசாலில் மோதினாராக வேலைபார்த்த வெளியுர் ஏழையின் மகள்.அவரின் வறுமையை பயன்படுத்தி முதல்மணம் போன்று மோசடியாக திருமணம் செய்துள்ளார்.இதற்க்கு ஒரு மாதத்திற்கு முன் நடுத்தர வயது பெண்ணிடம் தவறாக நடக்கமுற்ப்பட்டபோது,அந்த பெண்ணின் உறவினற்களுக்கு தெரிந்து பிரச்சனையாகிவிட்டது.உடனே பாசித் அந்த பெண்ணை பார்த்து ”நான் தப்பாக நடந்து இருந்தால் குரானில் சத்தியம் செய்”என்று கூறிய உடனே அந்த பெண் குரானில் சத்தியம் செய்துவிட்டார்.எனவே ஹைதர் அலி அண்ணன் யோக்கியன் பாசித்துக்கு போன்செய்து விபரம் கேட்டுவிட்டு மேற்கண்ட பாசித் செயல்கள் அனைத்திற்கும் குரான் அடிப்படையிலோ அல்லது நபிமொழிகள் அடிப்படையில் விளக்கம்தந்து இஸ்லாத்தை காப்பாற்ற வேண்டுகிறேன்.

  48. பின்னூட்ட எண் –லுள்ள ஹதீதுகளுக்கு எவரும் நேரிடையாகப் பதில் சொல்லப்போவதில்லை. அதனால் நானே சில விளக்கங்களை கூறிவிடுகிறேன்.

    உமைமாவை முகம்மதுநபி திருமணம் செய்து கொள்ளவில்லை.

    1. அதனாலேயே திருமணம் செய்துகொண்டதாக அடைப்புக்குறிக்குள் மொழிபெயர்பாளர்கள்
    எழுதுகிறார்கள்.
    2. முகம்மதுநபி திருமணம் செய்து கொண்ட 11 அல்லது 13 பேர்களின் பட்டியலில்
    இவரின் பெயர் கிடையாது.
    3. ‘ஒரு இடையருக்கொல்லாம் ஒரு அரசி தன்னை அன்பளிப்புச் செய்வாளா’ என்ற
    அப்பெண்ணின் பதில், அப்பெண்ணை அவர் திருமணம் செய்யவில்லை
    என்பதைக்காட்டுகிறது. அது மட்டுமல்லாது ஒருவேளை திருமணம்தான்
    செய்துகொண்டார் என்று இவர்கள் சாதித்தீலும் திருமணத்திற்கு முன் பெண்ணின்
    விருப்பத்தை கேட்க வேண்டும் என்று இவர்கள் கூறுவது அப்பட்டமான பொய்
    என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த பெண்
    முதலுறவுக்கே மறுப்பது ஏன்?
    4. முகம்மதுநபி முறையாக தலாக் சொல்லவில்லை என்பது இந்த ஹதீதில் தெளிவாக
    உள்ளது. அதனாலும் திருமணம் செய்யவில்லை என்பது உறுதியாகிறது.
    5. இது மட்டுடமல்லாது, மரியா கிப்தியாவையும் இவரு திருமணம் செய்யவில்லை
    என்பது உண்மையாக உள்ளதால் உமாமைமாவின் விவகாரம் புதிதல்ல.

    அடுத்ததாக அடிமைப்பொண்கள் வியாபாரம் தொடர்பாக :

    விபச்சாரம் என்றால் என்ன?
    போரில் கைப்பற்ற பெண் ஏற்கனவே ஒருவரின் மனைவி. கைப்பற்றப்பட்டதும் இவரின் வெற்றியாளர்களின் காமக் கிழத்தி. அடிமைப்பெண்ணிடம் இவர் உடலுறவு கொள்கிறார். பின்னர் விற்கப்பட்டதும் அடுத்த ஆண்டை உறவுக் கொள்கிறார். பின்னர் விற்கப்பட்டதும் அடுத்த ஆண்ண்டை… என்று இது ஒரு தொடர்கதை.

    விபச்சாரம் என்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

    இது போன்ற முகம்மதுநபியின் வழிகாட்டல்களை நாம் கூறினால் காலத்தை பார்கச் சொல்கிறார்கள். ஆனால் இசுலாம் காலத்திற்கும் பொருத்தமான சட்டங்களை உடையது என்று நாக்கை புரட்டுகிறார்கள்.அடிமைப்பெண்களுடனான உறவை முகம்மதுநபி தடை செய்துவிட்டார்கள் என்று இவர்கள் புளுகினாலும் ஆச்சரியப்படவேண்டாம்.

    பாசித்திற்கு இந்த நபிவழிகள் துணை செய்திருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

    • நீங்கள் கூறும் இந்த ஹதீஸின் உங்கள் சுய விளக்கம் உண்மையாக இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் எப்படி இஸ்லாத்திற்கு வந்து ஒரு மாபெரும் பேரரசை நிறுவ முடிந்தது.உங்களைப்போன்று இஸ்லாத்தின் எதிரிகள் அன்றும் இருந்தார்கள்.ஆனால் உங்களை போன்று இந்த ஹதீஸை தவறாக புரிந்துகொண்டு இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக வரலாறு இல்லை.அவர்கள் செய்தது எல்லாம் ஒரு கடவுள் கொள்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது,என்பதுதான்

    • ஸனாதிக்கா சாகித் அவர்களே,
      உங்கள் தலை மீது ஏக்க இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக(c) mumins

      எப்போதுதான் நீங்கள் இஸ்லாமைபுரிந்துகொள்ளப்போகிறீர்களோ தெரியவில்லை. உங்களுக்கு பொதுஅறிவும் இல்லை.
      ஒரு பெண்ணுக்கு காசு கொடுத்து உறவுகொள்வதற்கு பெயர்தான் விபச்சாரம். உதாரணமாக முடா திருமணத்தை (இதனை நபிஹள் நாயஹம் (ஸல்) அவர்கள் ரத்து செய்யவே இல்லை. ரத்து செய்தது உமர்(ரலி). ஆகவே இது சுன்னா ஆகும். ) சொன்னால் ஒப்புகொள்ளலாம். இதிலும் மெஹர் கொடுத்து தற்காலிகமாக திருமணம் செய்து பிறகு முத்தலாக் சொல்லி ரத்து செய்யலாம். இதுதான் விபச்சாரம். மெஹர் கொடுப்பது அந்த பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்கு கொடுக்கும் பணம்.
      நிக்காவும் இதே போலத்தான் மெஹர் கொடுத்து செய்யவேண்டும். இதிலும் முத்தலாக் உண்டு என்பதால், முடா திருமணத்துக்கும் நிக்கா திருமணத்துக்கும் என்ன வேறுபாடு என்று கேட்கலாம். அதிகமாக ஒன்றும் வித்தியாசம் இல்லை. எல்லா இஸ்லாமிய திருமணங்களும் மெஹர் என்ற காசு கொடுத்து பெண்ணுடன் உறவு கொள்வதுதான். ஒரே வித்தியாசம், நிக்கா திருமணத்தில் பிறந்த குழந்தைகள் தந்தைகளின் பிள்ளைகளாக அங்கீகரிக்கப்படும். அது ஒன்றுதான் வித்தியாசம்.
      வேண்டுமானால், தவ்ஹீத் அண்ணனாலும் அங்கீகரிக்கப்படும் ஹதீஸ்களை எடுத்து மெஹர் என்பதன் பொருள் என்ன என்று நபிஹள் நாயஹம் (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள் என்று தேடிப்பாருங்கள்.
      போரில் கைப்பற்ற பெண்ணுடன் உடலுறவு கொள்வது நபிஹள் நாயஹத்தின் சுன்னாஹ் ஆகும். இதனை தமிழில் கற்பழிப்பு என்று சொல்லலாம்.இதற்கு அந்த பெண்ணுக்கு எந்த பணமும் கொடுக்கப்படுவதில்லை. அதனால் இதனை விபச்சாரம் என்று சொல்லமுடியாது. அந்த பெண்ணை ஈமானுள்ள முஸ்லீமக்ள் கற்பழித்து பிறகு விற்று காசும் பார்த்துவிடுவார்கள். ஆகவே இதனை விபச்சாரம் என்று சொல்வது தவறு.

      அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியான இஸ்லாத்தை காட்டட்டும்.

      ஊ அல்லாஅஹ்

      • இப்னு அண்ணே.சூப்பரு அண்ணே சூப்பரு. வெயில் காலத்தில் மட்டும்தான் உங்க மூளை வேலை செய்யும் என நினைச்சேன் அண்ணே.மழைகாலத்திலும் எப்படின்னே? எனக்கும் கொஞ்சம் சொல்லிகொடுங்கன்னே.அண்ணே போரு அடிக்குது அண்ணே.சீனாவில உள்ள பெண்ணுரிமை,மாணவர்கள் போராட்டம்,முதலாளி,தொழிலாளி,(அண்ணே அங்கேயும் முதலாளி கார்லயும் தொழிலாளி சைகிள்ளேயும் போறாங்களா? அண்ணே.) அங்கே பெண்களும் ஆட்சியிலே பாதிக்கு பாதிதானே அண்ணே? அதையும் எடுத்து போடுங்க அண்ணே.அதை படிச்சாவது பாய்-ங்க திருந்தட்டும் அண்ணே.

  49. துப்பறியும் சூறப்புளி ஹைதர்அலி அண்ணா, தூள் கிளப்புறீங்க அண்ணா. மணமேல்குடிக்கு அடுத்த ஜமாத் தலைவராக உங்களைத்தான் சொல்கிறார்கள் அண்ணா !

    • நந்தன் அண்ணா உங்களுக்கு யாரு அண்ணா சொன்னது?எப்ப அண்ணா சொன்னாங்க?இல்ல நீங்களே துப்பி அறிந்தீர்களா?நீங்க நேர்மையாளரா இருந்தா இதுக்கு பதில் சொல்லுங்க அண்ணா?நானும் உங்கள இதேமாதிரி சொல்லதெரியும் அண்ணா.ஆனா நல்லா இருக்காது அண்ணா.அண்ணா தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.அதற்க்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் ஜமால் என்ற பெயரில் இட்ட பதிவு அதற்காக இல்லை.போலி பகுத்தரிவாலர்களின் முகத்திரையை கிழிக்கும்ஒரு மாபெரும் ஜமாத்தை எப்படியாவது அவமானப்படுத்தவேண்டும் என்ற நோக்கமே தவிர வேறொன்றும் இல்லை.

  50. தவறு செய்பவர்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பார்கள் .அதில் தவ்ஹித் ஜமாத்திலும் குறைவான நபர்கள் இருக்கவே செய்வார்கள்.ஆனால் தவறுகள் வெளியான பிறகும் அவரை அமைப்பில் வைத்துக் கொள்வதே தவறு ,நீங்கள் குறிப்பிட்ட பாசித் தவ்ஹித் ஜமாத்திலிருந்து உடன் நீக்கப் பட்டுவிட்டார்.மேலும் அவர் தளபதி என்பதும் தவறான தகவல் .அந்த கிளையின் துணை செயலாளர்.மேலும் உள்ளாட்சி தேர்தலில் தவ்ஹித் ஜமாஅத் பங்கேற்காத பொழுது அவர் அறுபதினாயிரம் ரூபாய் வாங்கினார் என்பது அடிப்படை இல்லாத குற்றச்சாட்டு.உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் அந்த குற்றச்சாட்டை கூறி இருந்தால் தலைமை விசாரித்து இருக்கும்.

  51. வாங்க நந்தன்
    ///துப்பறியும் சூறப்புளி ஹைதர்அலி அண்ணா, தூள் கிளப்புறீங்க அண்ணா ///

    கறிக்கடை கரீம்பாய் பொம்மையும் நந்தன் பொம்மையும் ஒரே பொம்மை
    இரண்டும் ஒரே ஆள் வேறு பெயரில் பின்னூட்டம் போடும் போது
    இமெயில் ஐடியை மாற்றிக் கொடுக்கவும்

    ஹா ஹா ஹா ஹி ஹி ஹி ஹெ ஹெ ஹெ

    • இன்னாது ஒரே பொம்மையா???
      மதவெறி கண்ணை மறைக்கும்னு சொம்மாவா சொன்னாங்க பெரியவங்க !!!
      ஹொ ஹொ ஹொ ஹௌ ஹௌ ஹௌ ஹஃ ஹஃ ஹஃ

    • ஹைதர் அலி உங்க சோசியம் தப்பு அல்லாவிடம் துாவா கேளுங்க எனக்கு துப்பரியும் சக்தியை கொடு என்று அல்லா என்னபன்றார்னு பாக்கலாம்.

  52. நான் வினவில் புதிதாய் பதிவிடுகிறேன்…
    1. சாகித் அவர்களின் 56 வது கேள்விக்கு ibnushakir 56.1 பதில் சரியானதுதானா ?
    // போரில் கைப்பற்ற பெண்ணுடன் உடலுறவு கொள்வது நபிஹள் நாயஹத்தின் சுன்னாஹ் ஆகும். இதனை தமிழில் கற்பழிப்பு என்று சொல்லலாம்.இதற்கு அந்த பெண்ணுக்கு எந்த பணமும் கொடுக்கப்படுவதில்லை. அதனால் இதனை விபச்சாரம் என்று சொல்லமுடியாது. அந்த பெண்ணை ஈமானுள்ள முஸ்லீமக்ள் கற்பழித்து பிறகு விற்று காசும் பார்த்துவிடுவார்கள். ஆகவே இதனை விபச்சாரம் என்று சொல்வது தவறு . //

    இதுதான் பதில் என்றால் இஸ்லாத்தில் கற்பழிப்பு அனுமதிக்கப்படுகிறது என்று பொருளாகிறது
    இதையாராவது விளக்க முடியுமா ?

    2. முகமது நபி பத்துக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துள்ளார். இதை எவ்வாறு விளகுவீர்கள் …..
    இதேபோல ஏதாவது ஒரு இஸ்லாமியப் பெண்…பத்துக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம்
    செய்தது உண்டா ?…. இஸ்லாதில் பெண்களுக்கும் இதுபோல வாய்ப்பு அனுமதிக்கப் படுகிறதா ?

  53. சாமியே ,வாருங்கள் சிவன் ஆயிரம் பெண்களை திருமணம் செய்தார் என்பதால் ஒவ்வொரு பெண்களும் ஆயிரம் ஆண்களை திருமணம் செய்ய அனுமதி உண்டா? பாஞ்சாலியை பின்பற்றுவீர்களா? கோகுலத்தில் கண்ணனைப்போல் இன்றைய கன்னிகளுக்கும் அனுமதிப்பார்களா?என்றெல்லாம் கேட்காமல் கீழே உள்ள லிங்க் களை படித்து விட்டு அதன் பின்னர் வாருங்கள் ,வரவேற்போம்
    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/107/
    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378/
    http://onlinepj.com/books/nabikal_pala_thirumanangal_seythathu_en/

  54. துப்பறியும் சூரப்புளி ஹைதர் அலி அண்ணா, ந ந்தனை கிளிக் செய்தால் உங்கள் வலைத்தளத்திற்கு செல்வதை கவனிக்க வில்லையா?

  55. கலம், அன்றைய மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் சரி. இன்று உல்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியுமா, முடியாதா?

    • எக்ஸ் சாஹித் ,இப்போது போர் வரட்டும் நீங்களும் நானும் வாளேந்தி குதிரையில் ஏறி வாகா வில் சென்று போரிட்டு அங்கு பாக்கிஸ்த்தான் பெண்கைதிகள் கிடைத்தால் அவர்களுக்கு விடுதலை கொடுப்பது இப்போது மார்க்கத்திற்கு உகந்ததாக இருக்குமா? அல்லது அடிமையாக வைத்துக் கொண்டு நம்மை அவர்கள் ஏற்றுக் கொண்டால் புணருவது சரியாக இருக்குமா என்பது பற்றி முடிவு செய்துவிடலாம் .அதுவரை உங்களது கேள்விகளை பொத்திக் கொண்டு கீழ் காணும் சுட்டிக்கு சென்று உங்களது விமர்சனத்தை தொடருமாறு வேண்டுகிறேன்.

      http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/107/

  56. சத்திய சீலரே,
    மன ஒற்றுமை இல்லாதவர்கள் மணவிலக்கு செய்துகொள்வதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை வழங்குவதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் ஒரு பெண் தன் கணவன் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து பெற்றுக் கொளவதில் பிரச்சனை இல்லை. ஏனென்றால் ஆண் பெண்ணின் வருமானத்தைச் சார்ந்து வாழவில்லை. (இந்தப்பிரச்சனையில் மட்டும் கவனம் கொள்க) ஆனால் ஆண் தன் விருப்பம்போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விவாகரத்து செய்ய அனுமதிக்கமுடியமா? முடியாது. அப்பெண்ணும் தனக்கு அவமானமும் துன்பமும் ஏற்பட்டாலும் மணவிலக்கை விரும்ப முடியவில்லை. அதனால் பெண்களுக்கு எளிமையான மணவிலக்கு வழிவகை உள்ளது என்பது எல்லோருக்கும் பொருந்தாது. (பெண் தன் சுய வருமானத்தில் வாழாதவரை)

    உடல் தேவை பற்றி கூறுகிறீர்கள். அப்படிப்பட்ட தேவை பெண்களுக்கு இல்லையா? எல்லா ஆண்களும் உடலுறவில் எப்பொழுதும் தகுதியுடனேயே இருக்கிறார்களா? சிட்டுக்குருவி லேகியம், வயாகரா மாத்திரைகள் பின்னால் அலைபவர்கள் யார்? ஆண்களா? பெண்களா? சக்கரை நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் இதில் குறைபாடுள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். ஆணுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது நான்கு மனைவிவரை என்று கூறும் நீங்கள் குறைபாடுள்ள கணவனையுடைய பெண்ணிற்கு மட்டும் மணவிலக்கை கூறுகிறீர்கள். ( நான்கு கணவன் என்று நான் கூறவரவில்லை). குறைபாடுள்ள கணவனை சகித்துவ வாழும் பெண்களைப்போல் ஆண்களை சகித்துவாழ எவரும் கூறுவதில்லை. அதுவே ஆணுக்கு தனது மனைவியை பிடிக்கவில்லை என்றால் மணவில்கு செய்துவிட்டு திருமணம் செய்து கொள் என்றுதான் சட்டமாக இருக்கனுமே தவிர 4 மனைவிகள் சட்டம் மோசடியானது. அப்படி மணவிலக்கு செய்வதிலும் கட்டுப்பாடு வேண்டும். எடுத்துக்காட்டாக சுஜித் கான் கூறியுள்ள 7 திருமணம் செய்தவர், தனது மனைவி ஒல்லியாக இருக்கிறாள் என்று கூறும் பாசித் (திருமணத்திற்கு முன் இந்த ஒல்லி என்பதை அவர் கண்களுக்கு மறைத்தது எது?) போன்றவர்களுக்கு (இது போல ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன) சூழ்நிலைக்கு ஏற்ற கட்டுப்பாடு தேவையா? இல்லையா?

    ‘பழகி’ என்று நான் கூறியுள்ளது இடைச் செருகளெல்ல. அதுபற்றிகூட ஜமால் அதிகம் அறிவார்.

  57. இபுராகிம், ஆத்திரம் தலைக்கேறுகிறதா? அது சரி

    “அடிமையாக வைத்துக் கொண்டு நம்மை அவர்கள் ஏற்றுக் கொண்டால் புணருவது சரியாக இருக்குமா”

    அடிமைகள் விருப்பத்தைப் பெற்றுக்கொண்டா உடலுறவு கொண்டார்கள்? சந்தையில் விற்றார்கள்?

    • எக்ஸ் சாஹித் ,ஆமாம் உமது வலக்கரத்தை சொந்தமாக்கி கொண்டவர்கள் என்பதன் பொருள் அதுவே .அவர்களது சம்மதமே ,உமைமா விசயத்தில் என்ன எழுதி உள்ளீர்கள் என்பதை திரும்ப் ஒருதடவை படியுங்கள்.

  58. இபுராகிம்,

    இப்பொழுது ‘அடிமை உறவு’ பொருந்தாது என்றாவது உணருகிறீர்களே. அதுவரைக்கும் நாம் மகிழ்கிறோம்.

    • ///இப்பொழுது ‘அடிமை உறவு’ பொருந்தாது என்றாவது உணருகிறீர்களே. அதுவரைக்கும் நாம் மகிழ்கிறோம்.////
      இப்பொழுதுதான் இஸ்லாம் உங்களுக்கு புரிந்திருக்கிறது.இனியாவது அரைவேக்காடாக உளறுவதை நிறுத்துங்கள்.

  59. நேர் வழியைப் பின் பற்றும் எல்லோர் மீதும் சாந்தி உண்டாகட்டும்

    திரு ஜமால்,

    உங்களுடைய கட்டுரையைப் படித்தேன்.. உங்களுடைய ஆதங்கமே என்னுடையதும்..ஆனால் அதில் நியாயம் இருக்க வேண்டும்.. ஒரு தனி மனிதன் அல்லது சில மனிதர்கள் செய்த / செய்யும் தவறுக்கு, இஸ்லாம் எப்படிப் பொறுப்பாகும்?

    விபச்சாரம் செய்தால், ஆணானாலும், பெண்ணானாலும் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்.. ஆணுக்கு தனிச் சட்டம் கிடையாது.

    மேலும் இவ்வளவுத் துல்லியமாக பாசித் என்பவரைக் குற்றம் சொல்கிறீர்களே, அவரைத் திருத்த முயற்ச்சித்துள்ளீர்களா ??

    அவருக்கெதிராக உங்களுடைய குற்றச்சாட்டுக்களுக்கு (தேர்தலுக்குப் பணம் வாங்கியது மற்றும்) ஆதாரம் உள்ளதா??

    உங்களுடைய கவனத்திற்ககு, இஸ்லாத்தில் நான்கு கல்யாணம் கட்டாயக் கடமையில்லை (பார்க்க குர் ஆன் — அத்தியாயம் 4 வசனம் 3)..

    இஸ்லாத்தைக் குறித்து, ஏதாவது சொல்வதென்றால், இஸ்லாம் அது குறித்து என்ன சொல்கிறது என தெரிந்து கொள்ளுங்கள்..

    அதன் பின் விமர்சியுங்கள்…

    பதிலுக்கு காத்திருக்கிரஎன்..

  60. இபுராகிம் அவர்களே
    ஆத்திரம் தலைக்கேறினால் என்ன சொல்கிறோம் என்று புரியாமல் போய்விடும். மகர் பற்றி இங்கே பிரச்சனையே இல்லை. காரணம் பாசித் தலாக் சொல்லவில்லை. 2 இலட்சம் என்பது பாதுகாப்புத் தொகைதான். அதுசரி, மகர் கொடுக்காமலேயே திருமணம் செய்யலாம் என்றும், மகர் திட்டமாக குறிப்பிடவில்லை என்றால் மகர் தொகையைத் திருப்பிக்கொடுக்கத் தேவையில்லை என்று குர்ஆன் கூறுவது உங்களுங்குத் தெரியுமா? தெரிந்தால் அந்த குர்ஆன் வசனத்தை எழுதி விளக்கம் தாருங்கள்.

    அடிமை உறவு பொருந்தாது என்பதில் இசுலாமியச் சட்டமும் பொருந்தாது என்ற பொருளும் உள்ளதை அறிவு மண்டைக்கு புரியவில்லையா?

    • ஆத்திரம் யாருக்கு தலைக்கு ஏறுகிறது ;மூத்திரம் யாருக்கு தரைக்கு இறங்குகிறது எனபது நன்றாகவே தெரிகிறது தலாக் சொன்னாலும் சொல்லபடாவிட்டாலும், திருமண நேரத்தில் கொடுக்கப்படவேண்டிய மகர்தொகை மற்றும் பெண் வீட்டு விருந்த்க்கான செலவு இவற்றையே கணக்காக்கி இரண்டு லட்ச ரூபாய் நிர்ணயிக்க படுகிறது, இரண்டாவது திருமணம் செய்துள்ளதால் முதல் தன்னை கைவிட்டுவானோ என்ற பயத்திலே ஜமாத்தாரிடம் பஞ்சாயத்து போகிறது..அவர்கள் வரதட்சணை வாங்கியவரா? மகர் கொடுத்தவரா?இல்லை இரண்டும் இல்லாமல் திருமணம் செய்தவரா? குழந்தைகள் என்பதெல்லாம் கவனத்தில் கொண்டே இஸ்லாமிய அடிபடையில் அதை மகராக கொள்ளப்படுவதால் தான் கணவனும் கோர்ட்டுக்கு செல்ல முடியாது.

      ///அடிமை உறவு பொருந்தாது என்பதில் இசுலாமியச் சட்டமும் பொருந்தாது என்ற பொருளும் உள்ளதை அறிவு மண்டைக்கு புரியவில்லையா?///
      மாமேதையே ,இப்போது அடிமைக்கே சாத்தியம் இல்லை என்பதே எனது கருத்து.அக்காலத்தில் போர்படை என்றும் தனியாக இல்லை .அரசிடமும் அதற்கென்று ஆயுதங்களும் இல்லை. போருக்கு அழைப்புவிட்ட பின்னர் அவரவர் தங்களிடம் உள்ள ஆயுதம்கள் ,குதிரைகள் ,ஒட்டகங்கள் கொண்டு வந்து போரிடுவார்கள்.போரில் கைபற்றப்பட்ட ஆயுதம்கள்,பொருட்கள் ,மற்றும் கைது செய்யப்படட் கைதிகள் போரில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கு வைத்து கொடுப்பதுதான் போரின் ஊதியம்.ஆனால் இப்போது ஒவ்வொரு நாட்டிலும் ராணுவம் உள்ளது. ஆயுதம் களை அரசுவே கொள்முதல் செய்கிறது.வீரர்களுக்கு மாதம் தோறும் சம்பளம் ,மற்றும் அரசு கேண்டீன்களில் விரிவிலக்கு பெற்ற பொருட்கள்,பென்சன் என்று ஏராளமான பொருட்கள் ஊதியமாக வழங்கப்படுகிறது.போரில் கைது செய்யப்பட கைதிகள் அரசு பொறுப்பில்சிறையில் அடைக்கப்பட்டு சர்வதேச சட்டப்படி அவர்கள் நடதப்படுகிரார்கள்.அவ்வாறெனின் அடிமை என்றே சொல்லுக்கே இடமில்லை என்னும் பொழுது பொருந்துமா?பொருந்தாதா?என்ற கேள்விகள் எதற்கு?
      முன்பு நாடுவிட்டு நாடு பொருள் கடத்தப்பட்டது. அப்போது கடத்தல் குற்றத்திர்கான் சட்டங்கள் கடுமையாக இருந்தது.இப்போதும் இருக்கிறது.ஆனால் தாராளமயமாக்கப்பட்ட பிறகு அந்த சட்டத்திற்கு வேலையில்லை .இப்போது பொருட்கள் வரி கட்டாமல் கடத்தி வந்தாலும் அந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் படுவது இல்லை.அதனால் தான் சொல்லுகிறேன் நீங்களும் நானும் பாகிஸ்தானுடன் போருக்கு குதிடையில் ஏறி வாளேந்தி போகும் காலம் வருமானால்,அப்போது அங்கெ பெண்கைதிகள் கைது செய்யப்பட்டால் ,அதில் எனது பங்குக்கு பெண் கிடைத்தால்,அவள் சம்மதம் என்றால் நான் அவளுக்கு விடுதலையை மகராக்கி திருமணம் செய்துகொள்கிறேன்.இல்லையெனில் அரசு அனுமதித்தால் அவள் நாட்டுக்கே அனுப்பிவிடுகிறேன்.இதுதான் இஸ்லாத்தின் நிலை

  61. முகம்மது ரிளுவான்,
    எல்லா பின்னூட்டங்களையும் படியுங்கள். இசுலாம் எப்படி பொறுப்பாகிறது என்று விளக்கம் உள்ளது.

  62. ##எக்ஸ் சாஹித் ,ஆமாம் உமது வலக்கரத்தை சொந்தமாக்கி கொண்டவர்கள் என்பதன் பொருள் அதுவே .அவர்களது சம்மதமே##

    முழுவேக்காடுவாகத்தானே உள்ளீர்கள் இபுராகிம்?
    எந்த மனிதனாவது தன்னை அடிமையாக்கிக் கொள்ளவோ, அல்லது புணர்ந்துகொள்ளவோ விருப்பத்துடன் சம்பதிப்பானா?

    • அரைவேக்காடு எக்ஸ் சாஹித் ,அவன் கைதியாக இருக்கும் பொழுது எந்த மனிதனாவது தனது விருப்பபடி உண்ண முடியுமா?தனது விருப்பபடி உடுத்த முடியுமா? நிலைமையை புரிந்து கொண்டே செயல்பட முடியும் .சைபிரியாகாட்டில் என்ன நடந்து என்று யாருக்காவது தெரியுமா?நபி[ஸல்] காலத்தைபோன்று ஹதிஸ் அறிவிப்பாளர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் கம்யுனிஸ்ட் களின் சோஷலிச காலத்தின் உண்மைகளை அவர்கள் பதிவு செய்தால் ,கம்யுனிஸ்ட் என்று சொன்னாலே உங்களால் வீதியில் நடமாட முடியாது

      ரஸ்யா ,ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்தது ஏன் ?அப்பொழுது அநாட்டு பெண்கள் எத்தனை சீரழிவுகளை சந்தித்தார்கள்? மனிதாபிமானம் ,பொதுவுடமை ,அனைவரும் சமம் ,ஏழைக்கு கவலை எல்லாம் வெறும் உதட்டளவில் அல்லது இணையதள அளவில்தானே உள்ளது.

  63. // Author: S.Ibrahim
    Comment:
    சாமியே ,வாருங்கள் சிவன் ஆயிரம் பெண்களை திருமணம் செய்தார் என்பதால் ஒவ்வொரு பெண்களும் ஆயிரம் ஆண்களை திருமணம் செய்ய அனுமதி உண்டா? பாஞ்சாலியை பின்பற்றுவீர்களா? கோகுலத்தில் கண்ணனைப்போல் இன்றைய கன்னிகளுக்கும் அனுமதிப்பார்களா?என்றெல்லாம் கேட்காமல் //

    நன்றி இப்ராகிம்….
    நான் ஏன் இங்கே சம்பந்தம் இல்லாமல்… சிவனையும் பாஞ்சாலியைப் பற்றியும் கேள்வி கேட்க வேண்டும் ? (நிச்சயமாக இந்த கேள்வியை கேக்க வேண்டிய இடதில் கேட்பேன் ….)
    நீங்கள் கொடுத்த லின்க்கில்….முகமதுநபின் திருமணத்தை படித்ததில் தலையே சுற்றிவிட்டது……
    ஆனாலும் என்னுடைய கேள்விக்கு முழுமையான பதில் இல்லை….
    நான் கேட்ட கேள்வி………
    இஸ்லாமில் ஆண்களுக்கு பல மணைவிள் அனுமதிக்கப் பட்டது போல பெண்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளதா ….இல்லையென்றால் …ஏன் ?

  64. மன்னிக்கவும் தங்களை இந்து சாமி என்று நினைத்தே கேட்டுள்ளேன் .நீங்கள் நாத்திக சாமியோ ?பொதுவுடமை சாமியோ?
    பெண்களுக்கு அனுமதி இல்லை.ஏன் என்பதற்கு இந்த சுட்டியில் கேட்டு விளக்கம் கேளுங்கள்.http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/pengal_pal_thirumnam/

    முன்பு கொடுத்த மூன்று சுட்டிகளிலும் உங்களுக்கு தலை சுற்றல் ஏன் வந்தது?
    அடுத்து பல பெண்களிடம் உடலோடு உறவாடக் கூடியவர்கள்,தங்கள் வீட்டு பெண்களை அது போன்று பல ஆண்களிடம் அது போன்று உறவுகள் வைத்துக் கொள்ள அனுமதிப்பார்களா?இல்லை என்றால் ஏன்?
    ரஜினிகாந்த் ,அமிதாப் பச்சன்,சிவாஜிகணேசன் ஆகியோர் தங்களது மகள்களை சினிமாவில் நடிக்க அனுமதிக்கவில்லை.

  65. நான் சாதாரன Telecom employee. வேலை நேரம் போக மீதி நேரத்தில் சில வலைத்தளங்கள் வாசிப்பவன்….

    பொதுவுடைமையும் பிடிக்கும்…நாத்திகமும் பிடிக்கும்….

    நீங்கள் கொடுத்த சுட்டியில் பேசுகிறவர் சொல்கிறது பழமையான வாதம்…

    இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் மரபனு (DNA)சோதனை மூலம் யார் தந்தை என்பதை மிகத் துல்லியமாய் கண்டு பிடிக்க முடியும்…….. வேறு ஏதாவது காரணங்கள் இருந்தால் சொல்லுங்கள் ?

    நீங்கள் கேட்ட மூன்றாவது கேள்வி ஆனுக்கும் பொருந்த வேண்டும் என்பதுதான் சரியானதாய் இருக்கும்…..

    அதாவது…ஒரு பெண் பல ஆண்களோடு உடலோடு உறவாடினால் எப்படி பார்கப்படுவாளோ அல்லது சமூகத்தில் எப்படி நடத்தப்படுகிறாளோ….அதே அளவுகோல் ஆண்களுக்கும் பொருத்தப்பட வேண்டும் (ஆண்கள் பல பெண்களோடு உடறவாடினால் சில பல காரண்களைச் சொல்லி அதை நியாப் படுத்துவது சரியல்ல… அப்படி நாயப் படுத்துபவர்கள் பெண்களுக்கும் அதே நியாங்களை பார்பதில்லை….)

    இரண்டாவது கேள்விக்கு பதில்;

    இதில் நிரையவே தலைசுற்றல் செய்திகள் உள்ளன…..அவைகளில் சில ….

    1. 6-வயது பெண்னை 40 வதிற்கு மேற்பட்டவர் திருமணம் செய்ததினால் இந்த சமூகத்திற்கு நபி அவர்கள் என்ன செய்தியை விட்டுச் சென்றிருக்கிறார். ஒரு சாதாரணமனிதன் இதை செய்திருந்தால்..நான் கேள்வி கேட்கப் போவதில்லை…நபி அவர்கள் இறைதூதர் என்று சொல்வதினால் தான் கேட்கிறேன்…

    2. நபி அவர்கள் இவ்வளவு திருமண்ங்கள் செய்ததற்குப் பதில்…இந்த பெண்களை…மகளாகவோ அல்லது சகோதிரியாகவோ தத்து எடுத்திருக்கலாம் ஏன் செயவில்லை ?(அவர் ஒரு மகனை மட்டும் தத்து எடுத்துள்ளார்)

    3. இன்றைய நிலையில் யாராவது 10க்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டு மதத் தலைவர் ஆக முடியுமா ?

    4. onlinepj வில் தங்களுக்கு தேவைப்படும் இடதில் மட்டும் நபி அவர்களின் விளக்கங்களை அவருடைய கால சூழ்நிலையை கருதில் கொண்டு விளக்குகிறார்கள்… இறைவனுடைய வேதமாயின் எக்காலத்துக்கும் பொருந்த வேண்டும்

    உங்களிடமிருந்து இவைகளுக்கான விளக்கங்களை எதிர்பார்கிறேன்…

    • சாமி ,எனது மூன்றாவது கேள்விக்கு தங்களின் பதில் தெளிவாக இல்லை .
      அடுத்து பல பெண்களிடம் உடலோடு உறவாடக் கூடியவர்கள்,தங்கள் வீட்டு பெண்களை அது போன்று பல ஆண்களிடம் அது போன்று உறவுகள் வைத்துக் கொள்ள அனுமதிப்பார்களா?இல்லை என்றால் ஏன்?
      அமிதாப்பச்சனும் சிவாஜியும் தங்களது மகன்களை கலை சேவைக்கு அனுப்பினார்கள் ஆனால் அவர்களது மகள்களை அனுப்பவில்லையே என்பதை கவனத்தில் கொள்ளவும்.
      ///இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் மரபனு (DNA)சோதனை மூலம் யார் தந்தை என்பதை மிகத் துல்லியமாய் கண்டு பிடிக்க முடியும்…….. வேறு ஏதாவது காரணங்கள் இருந்தால் சொல்லுங்கள் ?//
      சார்,ஒருவரிடம் பல பெட்டிகளின் சாவிகள் இருக்கலாம். ஆனால் ஒரு பெட்டியின் பல சாவிகள் பலரிடம் இருந்தால் பெட்டியின் நிலை என்னவாகும்?ஒருவர் பல பாக்டரிகளுக்கு மேனேஜராக இருந்தாலும் அவரால் திறமையாக நிர்வாகிக்க முடியும்.ஒரு பாக்டரிக்கு பல மேனேஜர்கள் இருந்தால் அந்தபாக்டரியின் நிலை என்னவாகும்?

      நீங்கள் வேண்டுமானால் ஒரு ஆணுக்கு நான்கு மனைவிகள் கொடுத்தும் ,ஒரு பெண்ணுக்கு நான்கு கணவன்கள் கொடுத்தும் அவர்களை வாழ வைத்து பாருங்கள் .எந்த குடும்பம் சிறப்பாக செயல்படுகிறது என்பது அப்புறம் தெரியும் .அதன் பின்னர் நீங்களே இஸ்லாம் முடிவில் சரி காண்பீர்கள்.
      இரண்டாவது கேள்வியில் உங்கள் தலை சுற்றல்கள் பற்றி சொல்லியுள்ளீர்கள்.உங்களுக்கு அந்த லின்க்களிலே நல்ல விளக்கம் உள்ளது இருபினும் என்னை சீண்டி பார்க்க ஆசைபடுகிறீர்கள் ,இன்சா அல்லா இரவில் பார்ப்போம் .இப்போது நேரமில்லை.

      • நீங்கள் கொடுத்த சுட்டியில் பேசுகிறவர் சொல்கிறது பழமையான வாதம்…
        சாமி ,இப்போது புதுமையான வாதம் வைப்போம்.,நான்கு மனைவிகள் வைத்திருப்பவர் ஏக காலத்தில் நான்கு மனைவிகள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் .ஆனால் நான்கு கணவர் உள்ளவர் நிலை என்ன?நான்கு கணவர்களுக்கும் குழந்தைகள் வேண்டும் என்றால் பத்தாண்டுகள் வேண்டும் அல்லவா? இல்லை ஒரே சமயத்தில் நான்கு கணவர்களுக்கும் அவரவர் குழந்தையை தனி தனித்தனியாக பெற்றுக் கொள்ள புதிய தொழில் நுட்பம் கண்டுபிடித்துள்ளீர்களா?
        ///இதில் நிரையவே தலைசுற்றல் செய்திகள் உள்ளன…..அவைகளில் சில ///….
        இஸ்லாத்தை பற்றி கம்யுனிச நாத்திக தளங்களில் இது போன்ற செய்திகளை அதிகமாக படித்து அந்த கருத்திலே ஒன்றிப்போன உங்களுக்கு ஆன்லைன் பீஜே விளக்கங்களை கண்டதும் நாம் இஸ்லாமை பற்றி கொண்ட அபிப்பிராயங்களுக்கு மாற்றமான நெத்தியடி பதில்களை பார்த்ததும் உங்களுக்கு தலை சுற்றல் ஏற்பட்டிருக்கலாம்.மற்றபடி மிகத்தெளிவான எளிமையான விளக்கங்கள் மூளைக்கு சிந்தனை விருந்தாகவே உள்ளன.
        1. 6-வயது பெண்னை 40 வதிற்கு மேற்பட்டவர் திருமணம் செய்ததினால் இந்த சமூகத்திற்கு நபி அவர்கள் என்ன செய்தியை விட்டுச் சென்றிருக்கிறார். ஒரு சாதாரணமனிதன் இதை செய்திருந்தால்..நான் கேள்வி கேட்கப் போவதில்லை…நபி அவர்கள் இறைதூதர் என்று சொல்வதினால் தான் கேட்கிறேன்…
        சம காலத்தில் ஏனைய நாடுகளில் பால்ய விவாகங்கள் நடேந்தே வந்திருக்கிறது .இந்தியாவில் கூட கடந்த நூற்றாண்டு வரை பால்யவிவாகம் ,உடன்கட்டை ஏறுதல் இருந்து வந்துள்ளது.அப்படிப்பட்ட காலத்தில் நபி [ஸல்] அவர்கள் தனது தோழருடன் உறவை பலப்படுத்த அபுபக்கருக்கு வேறு மகள்கள் இல்லாததால் ஆயிசாவை திருமணம் செய்து வைக்கப்பட்டது.இதற்கு காமம் காரணமல்ல என்பதற்க்கான காரணங்கள் ஆன்லைன் பீஜே வில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.அதில் உங்களுக்கு மறுப்பு ஏதும் இருந்தால் குறிப்பிடுங்கள் .பாலியல் சம்பந்தமான விசயங்களில் இஸ்லாம் என்ன சொல்லுகிறது என்பது தங்களது மனைவியர் மூலமே பெண்களுக்கு செய்திகள் சொல்லியுள்ளார்கள்.மேலும் வயதான பெண்கள் அவர்கள் காலத்தில் வாழ்ந்த பெண்களுக்கும் நபி[ஸல்] அவர்கள் காலத்திற்கு பின்னர் பெண்கள் தொடர்பான செய்திகளை மக்களுக்கு அறிவிக்க அவர்கள் நம்பிக்கைக்கு உரிய பெண்ணாக ஆயிசாவை மணந்திருக்கலாம்..நபி[ஸல்] பற்றிய செய்திகள் அவர்கள் காலத்திற்கு பின் வயது முதிர்ந்த மனைவிகள் இறந்துவிட்டால் ,அவர்களின் இல்லற வாழ்க்கை மற்றும் பெண்கள் தொடர்பான மார்க்க வழிமுறைகள் பற்றி மக்களுக்கு எடுத்து சொல்ல நீண்ட காலம் வாழ கூடியவராக இளம் வயதுள்ளவரை தேர்ந்தெடுத்திருக்கலாம்.அவர்களது நம்பிக்கைக்கு உகந்தவாறு ஆயிஷா [ரலி]அவர்கள் அதிகமான ஹதித் அறிவித்தவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்கள்.மேலும் அரபுலக பெண்கள் நமது பெண்களை விட திட்காதிரமானவர்கள் .நபி[ஸல்] அவர்கள் ஆரம்ப காலங்களில் குறைஷிகள் கொடுத்த கொடுமைகளில் நபி[ஸல்] நெற்றிவைத்து வணங்குகையில் அவர்கள் எழுந்திருக்க இயலாதவாறு அவர்களின் முதுகில் ஒட்டக குடலை வைத்துவிட்டார்கள் .அவர்களால் எழுந்திருக்க முடியாத நிலையில் அங்கு நின்ற சிறுமியான பாத்திமா[ரலி] அவர்கள் அந்த குடலை இழுத்து கீழே போடுகிறார்கள் .ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் நிலையில் ஒட்டக குடலை 75 கிலோவுக்கு மேல் உள்ளதை இழுத்து போடும் பலம் அவருக்கு இருந்திருக்கிறது.
        பெண்களுக்கு சொத்து உரிமை உலகம் முழுவதும் கடந்த நூற்றாண்டுகளிலே வந்துள்ளது .இஸ்லாம் நபி[ஸல்] அவர்கள் காட்டித் தந்த பெண்களுக்கான சொத்துரிமை படிப்படியாக உலக மக்களிடம் பரவி யுள்ளது. அதே போன்றே அக்காலத்தில் இருந்த பால்ய விவாகம் நபி[ஸல்] ஆவர்கள் ஆயிசாவை திருமணம் செய்ததைக் கொண்டு அதிலுள்ள சிரமங்களை வைத்து திருமணம் பெண்களின் சம்மதம் பெற்றே பண்ணவேண்டும் என்ற சட்டத்தை அமல் படுத்தியிருக்கலாம்.அதே பார்த்தே உலகம் முழுவதும் பால்யவிவாகம் தடுக்கப்பட்டிருக்கலாம்.
        2. நபி அவர்கள் இவ்வளவு திருமண்ங்கள் செய்ததற்குப் பதில்…இந்த பெண்களை…மகளாகவோ அல்லது சகோதிரியாகவோ தத்து எடுத்திருக்கலாம் ஏன் செயவில்லை ?(அவர் ஒரு மகனை மட்டும் தத்து எடுத்துள்ளார்)
        பாலியல் செய்திகளை பெண்கள் பின்பற்றுவதற்கு மகளாகவோ சகோதரியாகவோ இருந்தால் சொல்லியிருக்க முடியாது மீண்டும் திறந்தமனதோடு ஆன்லை படித்து பாருங்கள் அங்கு செக்ஸ் முக்கியத்துவம் பெறவில்லை என்பது புரியும்.
        3. இன்றைய நிலையில் யாராவது 10க்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டு மதத் தலைவர் ஆக முடியுமா ?
        முடியாது மதத்தலைவர் நபி[ஸல்] அவர்கள் மட்டுமே .இன்றைய நிலையில் மக்கள் ஒரு திருமணம் புரிந்து வாழவ்தே பெரிய காரியம் இப்போது அதற்கு அவசியமும் இல்லை.உங்களுக்கு நான் கொடுத்த லின்க்களை படிக்கும் முன்பே தலை சுற்றல் வந்துள்ளது .ஏனெனில் உங்கள் கேள்விகளை பார்த்தால் ஆன்லைன் பீஜே வை தாங்கள் படித்ததாக தெரியவில்லை.
        4. onlinepj வில் தங்களுக்கு தேவைப்படும் இடதில் மட்டும் நபி அவர்களின் விளக்கங்களை அவருடைய கால சூழ்நிலையை கருதில் கொண்டு விளக்குகிறார்கள்… இறைவனுடைய வேதமாயின் எக்காலத்துக்கும் பொருந்த வேண்டும்
        எந்த சட்டம் எக்காலத்துக்கும் பொருந்தவில்லை ?அதை ஏன் சொல்லவில்லை?

  66. மார்க்க சகோதரர்களுக்கு ஒரு இனிப்பு செய்தி!

    //அங்கு பாக்கிஸ்த்தான் பெண்கைதிகள் கிடைத்தால் அவர்களுக்கு விடுதலை கொடுப்பது இப்போது மார்க்கத்திற்கு உகந்ததாக இருக்குமா? அல்லது அடிமையாக வைத்துக் கொண்டு நம்மை அவர்கள் ஏற்றுக் கொண்டால் புணருவது சரியாக இருக்குமா என்பது பற்றி முடிவு செய்துவிடலாம் //
    என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம்.
    http://www.ghazwatulhind.com/english/English/Ghazwatulhind_English_site_home_page.html

    கஜ்வா-ஈ-ஹிந்த் என்ற போரில் மூமின்கள் வெற்றிபெற்று இந்து அரசர்களை சங்கிலியால் பிணைத்து எடுத்து செல்வார்கள். இந்தியாவின் செல்வங்களை கொண்டு ஜெருசலத்தை அலங்கரிப்பார்கள். அப்போது சிரியாவில் ஈஸா(நபி) இருப்பார் என்று நபிகள் நாயகம் சொன்னதை வைத்து பாகிஸ்தான் இந்தியாவின் மீது போர்தொடுத்து இந்திய பெண்களை நபிவழியில் அடிமைப்படுத்தி விற்க தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
    ஆகவே உங்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் கிடைப்பதற்கு லக் இல்லை!

  67. சரி,சரி, இபுராகிம். சாகித் தோழரை விடுங்க. அவர் அரைவேக்காடு. முழுசாவெந்துவிட்ட நாம ஏதாவது போருக்கு போவோம். வெற்றி பெற்று (அல்லா நம்ம பக்கம்தான் இருப்பான் என்பதால் வெற்றி நிச்சயம்) கொஞ்சம் பெண்களை பிடிச்சிகிட்டு வந்து விடுதலையை மகராக கொடுத்து கல்யாணம் செஞ்சிக்குவோம். அடிமைகள்தான் என்பதில் அவர்கள் என்ன மறுக்கவா முடியும். நாம விடுதலையையே முகம்மதுநபி ஜுவைரியாவுக்கு கொடுத்தது போல கொடுத்திடுவோம். ஆனால் ஒண்ணு, அந்த பெண்களில் என்க்கு ஆ…. சொல்ல பயமாயிருக்கு இபுராகிம், எங்கே நீங்கள் டபுள் பாயிலாடுவீங்களோன்னு பயமாயிருக்கு. அதனால …….யும், ……யும் பொத்திக்கிட்டு சும்மாயிருந்துரேன்.

    • நந்தன் பாய் நாம மீண்டும் பழைய காலத்துக்கே போகலாம் என்றே சொல்லறீங்க.சரி கத்தி,அருவா குதிரை ஒட்டகம் கேடயம் இதுக்கு எல்லாம் எங்கே போறதாம்.சரி எப்படியாவது செஞ்சிட்டு போனாலும்.எதிரி நாட்டுகாரங்க நம்மள ஒரே குண்டு போட்டு காலி பண்ணிடுவான்.சரி அவங்களையும் நம்மள மாதிரி தான் போர் செய்யணும்னு சொன்னாலும் இப்ப இருக்கிற கைதி பரிமாற்ற சட்டம் எல்லாம் மாற்றனும் இப்படி நிறைய விஷயம் இருக்கு.நீங்க சொன்ன மாதிரி நீங்க வாய் பொத்திட்டு இருக்கிறதுதான் நல்லதுனே நினைக்கிறேன்

    • நந்தனை சுட்டினால் ஹைதர் வலையுகம் வர காரணம் கடவு சொல் களவு அல்லவா? வினவு களவு வை சொல்ல மறுப்பது ஏன்?
      நந்தன் வாதங்கள் வலு விழந்து விட்டால் இது போன்று நையாண்டி மேளம் தட்ட வேண்டியதுவரும்

      • சகோதரர் இபுறாஹீம் இது சாதாரண வேலை இதற்கு கடவுச் சொல் தேவையில்லை

        • எனக்கும் இதுபோன்ற வேலைகள் தெரியும்
          அப்புறம் அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்

          • அடங்கப்பா தாங்கமுடீலடா சாமி, என்னமோ வெப்சைட் யூஆர் எல் போடுவது பெரிய ராக்கெட் சயின்சு ஐதர் பாயிக்கு அது தெரியுமாம் ஆனா பண்ண மாட்டாராம்…. உங்களுக்கே இது ஓஓஓஓஓவரா இல்ல, பின்னூட்ட பொட்டீல பேரு-இமெயிலுக்கு அடுத்து கீழே இருக்குற சந்துல எந்த கசுமாலத்தை வேணா என்டர் செஞ்சா அங்க வரப்போவுது… நாங்கூட ஒங்களுக்காவ ஒன்னு போட்டிருக்கேன் பாத்துகிடுங்க..

            ஆனா ஒன்னு, வினவுல ஆள்மாராட்ட பிதாமகன் என்கிற பட்டம் ‘உங்க’ நெத்தியடி மொகம்மதுக்கே உரியது. அதுல அண்ணாத்தையே ஆட்டவோ அசைக்கவோ முடியாது….

  68. ஜமால் என்ற முஸ்லிம் பெயரில் எழுதுவது இஸ்மாயில் என்ற பெயரை தாங்கி அன்ணல் காந்தியை கொலை செய்த கொள்கையை ஒத்திறுக்கிறது. இந்த அறவேக்காட்டு கட்டுறை எந்த வகையிலும் முஸ்லிம்களை பிரிக்கவோ பாதிக்கவோ செய்யாது. இரண்டாவது திருமணம் செய்வது தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானதாக இருந்தாலும் விபச்சாரத்தை தடுக்கும் பொருட்டு அது இறைவனால் ஆகுமானதாக ஆக்கிவைக்கப்பட்டுள்ளது. அவர் இரண்டாவது திருமணம் செய்ததால் வினவு விளக்கு பிடித்து பார்த்தது போல செய்திகளை புனைவது வேதனை அளிக்கிறது.. என்னத்த தான் பேசினாலும் மூமினான பெண்கள் இறைகட்டளையை ஏற்றுக்கொன்டுள்ளதை எவராலும் இம்மியளவும் அசைக்கமுடியாது. இங்கு பெண்கள் கார் ஓட்டுவதும் புர்க்கா போடுவதும் தான் பெண்னடிமை என்றால் உங்களின் சிந்தனை முதிர்ச்சியானதாக இல்லை என்பதை உணர்த்துகிறது….

    • ///இரண்டாவது திருமணம் செய்வது தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானதாக இருந்தாலும் விபச்சாரத்தை தடுக்கும் பொருட்டு அது இறைவனால் ஆகுமானதாக ஆக்கிவைக்கப்பட்டுள்ளது.//// அப்படினா பெண்களுக்கும் இது பொருந்துமா?? ஏன் கேட்க்கிறேன்னா இப்போதான் முதலாளித்துவ சமூக வளர்ச்சியின் விளைவாக பேரு நகரங்களில் ஆண் விபச்சாரிகள் அதிகரித்து வருகின்றனரே அப்போ பெண்களுக்கும் இச்சட்டம் பொருந்துமா????

    • ///ஜமால் என்ற முஸ்லிம் பெயரில் எழுதுவது /// பெயராயா பிரெச்சனை நடந்த சம்பவங்கள் உண்மையா இல்லையா? அது இசுலாமிய மத அடிப்படைவாதத்தின் படி சரியானது என ஜமாத்துகள் ஒத்துக்கொள்வது உண்மைதானே (ஏன் இங்கேயும் கூட யாரும் இது தவறு என்று சொல்லவில்லை இசுலாமிய அடிப்படையில் சரி எண்டே சொல்கின்றனர்) இதிலிருந்து பேசுங்க நண்பர்களே….

  69. TNTJ -வின் ஒழுக்க மாண்பும் அக்மார்க் இசுலாமும்.
    1. தங்களிடமுள்ள குற்றங்களை ஜென்டில்மேன் அக்ரிமென்ட மூலம் மறைத்துக்கொண்டு அமைப்பிலுள்ளவர்களை ஏமாற்றுதல்.
    2. அமைப்பிலுள்ளவர்களின் (பொதுக்குழுவில் உள்ளவர்களின்) பண்பு பற்றிய முன்னணியிலுள்ளவர்களின் யோக்கியமான கருத்துக்கள்.
    3. பொதுக்குழு, நிர்வாகக் குழு, செயற்குழு எதுவானாலும் சுயமான கருத்துக்களை பிரதிபலிக்கக் கூடாது. பிஜே அண்ணன் கூறுவதைதான் கக்கவேண்டும்.
    4. போட்டி வேட்பாளர்கள் என்றெல்லாம் கூறக்கூடாது. இதுதான் உண்மையான ஜனநாயகம்.
    5. சமானியன் ஜல்சா பண்ணினால் கட்டிவைத்து அடிப்போம். முன்னணியில் உள்ளவர்கள் செய்தால் ஜென்டில்மேன் அக்ரிமெனட் போட்டுக்கொண்டு அமைப்பிலுள்ளவர்களுக்கு பொய் சொல்லி ஏமாற்றுவோம்.
    இன்னும் நிறைய நிறைய சொல்லலாம். வீடியோவை பாருங்கள். இந்த வீடியோ 5 மணிநேரம் நீளம் உடையது என்பதால் முடிந்தவரை கருத்துச்சிதையாமல் குறைக்கப்பட்டு பல பிரிவுகளாக ஏற்றப்பட்டுள்ளது.
    1. http://youtu.be/Ik1HulGFvfs
    2. http://youtu.be/1pozmfPT0ck
    3. http://youtu.be/CPv7QNfpECw
    4. http://youtu.be/ShYWbpdVgh0
    6. http://youtu.be/Cq_24ScDOGM
    7. http://www.youtube.com/watch?v=FBtJROp1C9c&feature=mfu_in_order&list=UL
    8. http://youtu.be/9rQQpdx7jFY
    9. http://www.youtube.com/watch?v=EN4ncUUsEKwh

    இந்த வீடியோக்களில் நான் சிலவற்றை மறைத்துவிட்தாக கருதுபவர்கள் இந்த இணைப்பிற்குச் சென்று முழுதாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    https://www.cx.com/mycx/member/zXskZRjxEeGGlBIBOAowtQ

    ‘வின்’ டிவியில் இவர்களின் முதலாளிகள் ஒன்றுக்கு மூன்று என்று திட்டமாக வரையறுக்கப்பட்ட தொகை வாங்க ஒப்பந்தம் போட்டதும் வட்டிதான் . வட்டியில்லை என்று விசுவாசிகள் வாதிட்டால் வங்கி வாங்கும் அல்லது கொடுக்கும் நூற்றுக்கு 12, 5 என்பது வட்டி என்று கூறுவது ஏன்?
    இணைப்புத் தரப்பட்டுள் வீடியோவையும் பாருங்கள்

    http://youtu.be/QOvvu_njOwE

    வட்டி தொர்பாக பிஜேவின் உரை ;
    http://www.youtube.com/watch?v=yQowQ6FkN3o
    http://www.youtube.com/watch?v=Eh3tQplx0KU

    இந்த வீடியோவில் ரியல் எஸ்டேட் தொழிலும் சூதாட்டம் என்கிறார். ஆனால் பெரும்பாலான இவ்வரைப்பின் முன்னணியாளர்கள் இந்த தொழிலையே செய்கின்றனர். நான் இணைத்துள்ள வீடியோவில் ஒரு ஆதாரம் உள்ளது

    • எக்ஸ் சாகித் நீங்கள் எண்ணிட்டவைகளில் நான்கு வரை உள்ளவை அர்த்தமில்லாதவைகளாக உள்ளன 5///சமானியன் ஜல்சா பண்ணினால் கட்டிவைத்து அடிப்போம். முன்னணியில் உள்ளவர்கள் செய்தால் ஜென்டில்மேன் அக்ரிமெனட் போட்டுக்கொண்டு அமைப்பிலுள்ளவர்களுக்கு பொய் சொல்லி ஏமாற்றுவோம்.///
      கையும் களவுமாக பிடிபட்டால் எல்லோரின் கதையுமொன்றுதான் .நீங்கள் கூற வரும் பாக்கர் மட்டும் நண்பர் நெல்லைசெய்யதுஅலியின் கையில் கிடைத்தால் நிலைமை வேறுமாதிரியாக இருந்திருக்கும் .

      நீங்கள் சில யு டிப்களை வெளியிட்டுள்ளீர்கள் .ஏதோ தங்களுக்கு ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ கிடைத்திருப்பது போல் வெளியிட்டுள்ளீர்கள்.பொது செயலாளர் பாக்கர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க கூடிய தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநில நிர்வாக கமிட்டியின் கூட்டம் தான் அது. அதில் விசாரிக்கப்படும் நிகழ்வு அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என்று அனைவர்க்கும் தெரிவிக்கப்பட்டு நடந்த விசாரணை.கடந்த 2009 ஜனவரியில் சேலத்தில் நடந்த செயற்குழுவில் வெளியிடப்பட்டு அனைத்து கிளைகளுக்கும் காப்பிகள் கொடுக்கப்பட்ட சிடிக்களைத்தான் இப்போது X.S கொண்டு வந்து டவுன்லோடிங் செய்யும் சமுதாயப்பணி செய்துள்ளார்.நன்றிகள் .இதுபோன்று உலகில் எந்த இயக்கமாவது தனது உயர்மட்ட நிர்வாகியின் குற்றத்தை விசாரித்து ,அங்கு ஆத்திரத்தில் பீஜே மீது எந்த குற்றங்கள் வேண்டுமானாலும் சொல்லமுடியும் என்ற நிலையில் அதை பதிவு செய்து மக்கள் மத்தியில் விநியோகித்ததை நீங்கள் காட்ட முடியுமா?
      ////வின்’ டிவியில் இவர்களின் முதலாளிகள் ஒன்றுக்கு மூன்று என்று திட்டமாக வரையறுக்கப்பட்ட தொகை வாங்க ஒப்பந்தம் போட்டதும் வட்டிதான் . வட்டியில்லை என்று விசுவாசிகள் வாதிட்டால் வங்கி வாங்கும் அல்லது கொடுக்கும் நூற்றுக்கு 12, 5 என்பது வட்டி என்று கூறுவது ஏன்?
      இணைப்புத் தரப்பட்டுள் வீடியோவையும் பாருங்கள்////
      வின் டிவி யில் முதலீடு செய்யப் படும் பொழுது ஒப்பந்தம் செய்யப்படவில்லை .வின் டிவியை விற்கும்பொழுது அதை அதிமுக கூடுதலான தொகைக்கு கேட்டபொழுது அந்த தொகைக்கு விற்றால் முதலீடு செய்தவர்களுக்கு என்ன முறையில் பணத்தை திருப்பிக் கொடுப்பது என்ற விவகாரத்தில் தலியிட்ட பீஜே அவர்கள் விற்பனை தொகையை கணக்கிட்டால் முதலீட்டாளர்களுக்கு ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் திருப்பி கொடுக்கலாம் என்று ஒப்பந்தம் செய்ததாக பீஜே கூறுகிறார்.முதலீடு செய்யும் பொழுதே ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.பீஜே அங்கு கூறுவது முதலீடு செய்யும் பொழுது போடப்பட்ட ஒப்பந்தம் பற்றி பேசவில்லை .குறிப்பிட்ட விலைக்கு விற்றால் எப்படி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பது பற்றித்தான் ஒப்பந்தம் போடப்பட்டது

  70. அப்துர் ரஹ்மான் : அவரு இருக்காரே அவரு, அதான் அபுபக்கர் அவரு முகம்மதுநபிக்கு ரொம்ப பக்கபலமா இருந்து இசுலாத்தை பரப்ப உதவினாராம்.
    கருப்பன் ; ஆங்…. அப்படியா !
    அப்துர் ரஹ்மான் : ஆமாம், மக்காவிலிருந்து முகம்மதுநபி மதினாவுக்கு தப்பி போகும்போது உதவினது மட்டுமல்லாமல் கூடவே மதினாவுக்கு சொத்துகளை எல்லாம் விட்டு விட்டு போனார்பா.
    கருப்பன் ; ஓ…. ரொம்ப பாசமுள்ளவர்னு சொல்லுங்க.
    அப்துர் ரஹ்மான் : மதினா போகும்போது வழியில முகம்மது நபி ஒய்வெடுக்கும் போது, ஒரு வண்டு அபுபக்கர கடிச்சிக்கிட்டு இருந்துச்சாம். மடியில் படுத்து தூங்கிக்கிட்டு இருந்த அவரது தூக்கம் கலைஞ்சிடக்கூடாதுன்னு அபுபக்கர் ஆடாம அசையாம கடியுடைய வேதனையை தாங்கிக் கொண்டாராம்.
    கருப்பன் : அய்யய்யோ ! அப்புறம் ?
    அப்துர் ரஹ்மான் : மதினாவில அபுபக்கர்தான் உற்ற தோழர். உற்ற தோழராக இருந்தாலும் முகம்மது நபிக்கு திருப்தி இல்லே. எப்படியாவது அவரோட உறவை பலப்படுத்தனும்னு கவலையா இருந்தார்.
    கருப்பன் : அதுக்கு என்ன செய்தார் ?
    அப்துர் ரஹ்மான் : கவலையில கொஞ்சநாள் போயிடுச்சு. திடீரென அவருக்கு கனவில அல்லா வந்து அபுபக்கருடைய மகள கல்லாயணம் பண்ணிக்கிட்டு உறவை உடனே பல்படுத்தச் சொல்லி உத்தரவு வந்துச்சு. கண்ணு முழிச்துதான் தாமதம் உடனே சம்பந்தம் பண்ண ஆளனுப்பினார். மறுபடியும் ஒரு யோசனை வந்துச்சான். அபுபக்கர் மகளுக்கு 6 வயது தானே ஆகுதுன்னு என்ன செய்யலாம் னு. அல்லாவே சொல்லிட்ட பிறகு அதை நாம செய்யாமல் இருக்கலாமா? நாம மட்டுமா செய்யுரோம் எல்லாரும்தானே செய்யுறாங்க என்று நினைச்சுக்கிட்டு சம்பந்தம் பேசி கல்யாணம் பண்ணிக்கிட்டு “உறவை” பலப்படுத்திக்கிட்டார். பாவம் அவரு என்னதான் பண்ணுவாரு. அபுபக்கருக்கு வேறு பொம்புளை புள்ளைங்களும் இல்ல. உறவுதான நமக்கு முக்கியம். தோழமையல்லாம் பின்னாடிதானே.
    கருப்பன் ; என்னங்க சொல்லுறிய? 6 வயது பொண்ணா?
    அப்துர் ரஹ்மான் : ஆமாம் அப்பவெல்லாம் பொறக்குறதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்குவாங்க தெரியுமா ! காலச்சூழ்நிலையை பாக்கனும் கருப்பா. இல்லேன்னா நாம அரைவேக்காடாக போய்விடுவோம். முழுசா வெந்தாத்தான் ருசியா இருக்கும். மண்டையில மசலாவும் சேரும்.
    கருப்பன் ; ரஹ்மான் என் அறிவுக் கண்ணை தெறந்திட்டீங்க. இனிமே அடுத்த அவுலியா நீங்கதான். உங்களுக்குதான் அந்த முழுதகுதியும் இருக்கு. ஆன்லைன்லகூட நீட்டி முழங்கிக்கிட்டு…. நச்சு நாலே வாரத்தையில அழகாக சொல்லிட்டீங்க. எனக்குகூட இப்போ நாளைக்கே இஸ்லாத்திற்கு வந்து உங்களோட உறவை பலப்படுத்திக்கனும்னு ஈமான் துடிக்குது.

    • கருப்பன் , நீங்கள் மட்டும் AR இடம் இருந்து மார்க்க அறிவை பெறவில்லை, எனக்கும் கிடைக்க உதவி இருக்கிறீர்கள். சூப்பர்.

  71. அப்துரஹ்மான் ;தாரளமாக நாளைக்கே முஸ்லிமாகிவிடு
    கருப்பன் முஸ்லிம் ஆகிவிட்டார்..பெயரை கலிமுல்லா என்று மாற்றிக் கொண்டார்.உடன் அப்துரகுமானை சந்தித்து ஆறுவயது பெண்ணை திருமணம் செய்து வைக்க கோருகிறார்.
    AR உடனே திருமணம் செய்துவைக்க முடியுமா? முதலில் தொழ ஆரம்பிக்க வேண்டும் தெரியுமா?
    கலிமுல்லா :அப்படியா தொழ கற்று தாருங்கள்
    AR நாளை என்னுடன் தாவ செண்டர் மண்ணடியில் உள்ளது அங்கு வாருங்கள்
    கலிமுல்லா’ சரி வருகிறேன்
    மறுநாள் தொப்பி தலையுடன் கலிமுல்லா தாவ செண்டர் செல்கிறார் அப்துரஹ்மான் அவரை தாயீ க்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் அவர் ஒரு மாதம் அங்கு தங்க வைக்கப்படுகிறார். அப்போது அவர் அங்கு மார்க்க விசயங்களை கற்கிறார்.ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி தொழுகையில் முதல் வரிசையில் நின்று தொழுகிறார் ஒரே தட்டில் இருந்து சாப்பிடுகிறார்கள்
    கலிமுல்லா,சுகாதார சிப்பந்தியாக இருந்த தன்னை ஒருமையில் பலரால் விளிக்கப்பட்ட தன்னை இப்பொது முஸ்லிமாக ,தங்களில் ஒருவராக ,தெருவில் சென்றால் பாய் என்று அழைக்கப்படும் மகிழ்ச்சியை அவரால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.[தொடரும்,இறைவன் நாடினால்} .

        • தொடர்ந்து கலிமுல்லாஹ் பீஜே அவர்களின் பல நூல்களை படிக்கிறார் வீடியோ நிகழ்ச்சிகள் காணுகிறார்.அதில் ஆயிஷா[ரலி] அவர்களின் திருமணம் ,மற்றும் பலதார திருமணம் ,இஸ்லாத்தில் பெண்கள் உரிமை பற்றியெல்லாம் படிக்கிறார்.மற்றும் அங்கு வந்த பீஜே அவர்களிடமும் மற்ற மார்க்க அறிஞர்களிடமும் தனது சந்தேகங்களுக்கும் “வினவு”களுக்கும் விடைகள் கேட்டு உண்மைகளை அறிந்துகொண்டு கொண்டு திருப்தியடைகிறார்.AR .அவர்களை அழைத்து தன்னுடைய தவறுதலான புரிதலுக்கு வருத்தம் தெரிவித்து தனது மனைவி குழந்தைகள் அனைவரையும் முஸ்லிம் மதத்தை தழுவ செய்கிறார்.
          AR : கலிமுல்லாஹ் பாய் திருமணம் பண்ணப்போவதாக சொன்னேர்களே பண்ணிவைத்திடுவோமா?
          கலிமுல்லாஹ்: ஒரு திருமணம் பண்ணி வாழ்வதற்கே இப்போதைய பொருளாதாரம் ஒத்து வராது,நீங்கள் என்ன இரண்டு திருமணமா பண்ணியுள்ளீர்கள் ,மேலும் நான் தாவ சென்டரில் இருந்த பொழுது எத்தனையோ சகோதரர்களை சந்தித்தேன் ,அவர்கள் யாரும் இரண்டு திருமணம் செய்யவில்லை .ஒரு சந்தேகத்தில் அடிமைகள் வைத்திருப்பார்களோ என்று விசாரித்து பார்த்தேன்,அதற்கும் பதில் சொன்னார்கள் ,பீஜேவின் விளக்கத்தையும் படித்து உண்மைகளை அறிந்து கொண்டேன்.நபி[ஸல்] அவர்கள் பாவ செயலுக்கும் தவறுகளுக்கும் அடிமைகள் விடுதலை அளிக்க உத்தரவிட்டது அடிமை முறைகளை ஒழிக்கவே என்பதையும் புரிந்து கொண்டேன்.எனது மூத்தமகனுக்கு தாவா சென்டரில் ஒரு சகோதரர் மகளை திருமணம் செய்துவைக்க முடிவுபண்ணியுள்ளோம்..நான் இளைஞர் ஆக இருந்த பொழுது படித்தது வேளையில் இருந்தாலும் கம்யுனிச கொள்கை யிலிருந்த எனக்கு எந்த சாதியினரும் பெண் தர மறுத்துவிட்டார்கள்.என்னை ஒரு கம்யுநிசவாதியாக பார்க்காமல் சக்கிலியனாகவே பார்த்தார்கள். மேலும் அவர்கள் வீட்டுக்கு விருந்து அழைக்கும்பொழுது என்னை சாதுர்யமாக தவிர்த்துவிடுவார்கள்.மேடையில்தான் சமத்துவம் ,புரட்சி என்பார்கள்.அவர்கள் சொல்லைகேட்டு நானும் இஸ்லாம் பற்றி தவராகபுரிந்துவிட்டேன் .ஆனால் இஸ்லாத்தில் வந்த பிறகே உண்மைகள் தெரிகிறது .அல்ஹம்துலில்லாஹ்

          • தமிழன் உங்களது சங்கதிகள் வினவு இல் நிறைய உள்ளது .அதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டிவிட்டு இஸ்லாம் பற்றி பேசுங்கள் .அதவே தங்களது உண்மையான ஹிந்த்த்துவா பக்தியை வெளிப்படுத்தும்

  72. இபுராகிம் நல்லா சொன்னீங்க இபுராகிம். எத்தனை இந்து பொண்ணுங்களை தள்ளிட்டுவந்த பையனுகளுக்கெல்லாம் தாவா சென்டர்ல வச்சு மதம் மாற்றி, தொழுவ, ஓத பயிற்சி கொடுத்து கல்யாணம் பண்ணிவச்சிருக்கப்ப எனக்கு மட்டும் மாட்டேன்னுவா சொல்லுவீங்க. நம்ம பையன் அன்வரும் அவன் பிரண்டும் சேர்ந்து செஞ்சியிலேர்த்து இரண்டு பொண்ணுங்களை தள்ளிக்கிட்டுவந்ததும் மதுரையில உள்ள மதஸாவில சேர்த்து பயிற்சி கொடுப்பதுபோல எனக்கும் கிடைக்குன்னு ஈமானுடன்தான் இருக்கிறேன்.

    ஆனால் ஒரு சின்ன சந்தேகம் நம்ம சிரில் அண்ணனுக்கு அதான்ண பிஜேவுக்கு பாடிகாடா இருந்தார்ல அவருதான், குஞ்சல்லாம் கட் பண்ணிகிட்டு ஈமானோட இருந்தும் அவரு ஆசைப்பட்ட டீச்சர் பொண்ணை கல்யாணம் பண்ணிவைக்காம கடையரு வீட்டு பசங்களுக்கெல்லாம் நாசுவ வீட்டு பொண்ணு இருக்குன்னு சொல்லி ஆசைப்பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்காத து போல எனக்கும் சொல்லிடுவீங்களோன்னு ஒரு சந்தேகம். நமக்கு நாசுவ வீடு பக்கீர்சா வீடு எதுவானாலும் பலவாயில்லைனா. ஆனால் உங்களோட உறவையும் வலுப்டுத்தனும்னா. அதனால நீங்கள் பக்கீர்சாவா இருந்தாலும் பரவாயில்லைனா. பாவம்னா சிரில். தவ்ஹீதுலேயும் சாதியான்னு வெருத்துப்போய் குஞ்சு வெட்டிய கிறித்தவராக திரும்பிட்டார்னா.

    இன்னொன்ன சொல்ல மறந்துட்டேன்னா. நம்ம இசுமாயிலுக்கும் பக்கீர்சா வீடுன்னு பொண்ணு கொடுக்காம பக்கத்து ஊர்லதான்னா கல்யாணம் பன்ணினார். நிறைய கம்மயூட்டர் பத்தி படிச்சி நல்ல சம்பளமும் போது வீடு இருந்த தால பக்கத்து ஊர்காரங்க என்னசாதியின்னு பாக்காம பொண்ண கொடுத்தாங்கண்ணா.
    இபுராகிம் அண்ணா எப்ப வரனும் ? நம்ம பிர்தவுஸ் வீட்லகூட தங்கிக்கிடலாமுண்ணா. பக்கத்தில இருப்பதால வசதியா இருக்கும்.

    இரண்டாவது இபுராகிம் பின்னூட்டத்திற்கு, : ஏன்னா கிண்டல்ல வேணாண்னா. இன்னும் நமக்கு கல்யாணம்லா ஆகலியாங்காட்டுக்கும்.

    • ////அப்துர் ரஹ்மான் : ஆமாம் அப்பவெல்லாம் பொறக்குறதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்குவாங்க தெரியுமா ! காலச்சூழ்நிலையை பாக்கனும் கருப்பா. இல்லேன்னா நாம அரைவேக்காடாக போய்விடுவோம். முழுசா வெந்தாத்தான் ருசியா இருக்கும். மண்டையில மசலாவும் சேரும்.////

      கருப்பா இப்பொ நொந்து விட்டேர்கல்

  73. இபுராகிம் காக்கா,

    நம்ம பாசித் விவாகரத்த விட்டுடோம்மே. அப்புறம் அவர கட்சியைவிட்டு தூக்கிட்டாங்களாமா? உண்மையா? இல்ல அலாவுதீன் கதை, பாக்கர் கதையாகிடுச்சா ?

    • 1கருப்பன் பின்னூட்டம் எண் 58 ஐ பாருங்கள் .
      2பாக்கர் கதையாகிடுச்சுன்னா ,,புரியலியே
      3இங்கு பாசித் அல்ல இஸ்லாமே

  74. இபுராகிம் காக்கா, நீங்க நீக்கியாச்சுன்னு சொல்லுறீங்க. ஆனால் மணமேல்குடி டிஎன்டிஜே காரவுங்க அவரு பின்னாடி சுத்திக்கிட்டு இருக்காங்க. எப்ப கூட்டம்போட்டு விசாரிச்சு நீக்குனாங்கன்னு சொல்லுங்க காக்கா. நோட்டீசு அடிச்சு ஒட்டு எச்சரிக்கை செய்வோம். உங்களுக்கு தெரியலன்னா நம்ம சிஐடி ஹைதர்காக்காட்டே கேட்டா தெரியுமா?

    பாக்கர் கதைன்னா ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போட்டுட்டாங்களோன்னு கேட்டேன் காக்கா.

    அப்புறம், பிஜே காக்கா பயான்லா கேட்டு அவரு அடிமையா ஆகனுமாக்கும். பரவாயில்லை காக்கா. நமக்கு எப்படியும் ‘உறவை’ பலப்படுத்தனும். தோழமை எல்லாம் சும்மா வெளிவேசம் காக்கா. உறவு அதுதான் முக்கியம்.

    • கருப்பா ,வினவுவில் பாசித் பற்றி கூறப்பட்டுள்ளது அத்தனையும் உண்மையல்ல .இரண்டாவது திருமணம் செய்தது தான் அவரின் குற்றம் அந்த வகையில் முதல்மனைவியின் புகாருக்கு அவருக்கான ஜமாத்தின் முடிவையும் பாசித் ஏற்றுக் கொண்டார்.பாசித் இரண்டாவது திருமணம் செய்தது குற்றம் என்றால் ,இது விசயமாக வின்வுவில் எழுதியவர்கள் எத்தனை பேர் மனைவியத்தவிர வேறு யாரிடமும் அந்த உறவு வைத்ததில்லை என்று மனசாட்சியுடன் கூறத்தயார?
      பாசித் நீக்கம் பட்டாலும் நண்பர் என்ற முறையில் உறவை துண்டிக்க யாருக்கும் அதிகாரமில்லை.

      நாங்கள் விரும்பியவருடன் உறவை பலப்படுத்த விரும்புவோமே தவிர உம்மைப்போல் கழிசடைகளிடம் உறவை பலப்படுத்த விரும்புவதில்லை.

  75. அன்பார்ந்த முற்போக்காளர்கள் கவனத்திற்கு,
    [குறிப்பாக கட்டுரையாளர் சமால்,வினவு,இசுலாமிய ஆன்மீகவியலில் கரை கண்ட சாகித்,இயக்கவியல் பொருள்முதல்வாத பகுத்தறிவு பகலவன் அலாவுதீன் ஆகியோரின் ”கனிவான” கவனத்திற்கு]

    வினவு
    இசுலாமிய அடிப்படைவாதிகள் குறித்து எழுதும்போது நீங்கள் வழக்கமாக சொல்வது,
    ”ஒருவேளை பொதுவுடைமையாளர்களான நாங்கள் புரட்சி நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோமேயானால் அப்போது இந்த இசுலாமிய அடிப்படைவாதிகள் எங்களை எதிர்க்க இந்துமத வெறியர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நிற்க தயங்க மாட்டார்கள்”

    ஐயா,புரட்சியாளர்களே,உங்கள் ஆட்சியை இசுலாமிய அடிப்படைவாதிகள் எப்படி எதிர்ப்பார்கள் என்று ஆருடம் கூறும் நீங்கள்தான் இப்போது சங்க பரிவார் கும்பலால் வெறியூட்டப்பட்ட பார்ப்பன பாசிசவாதிகளை போல இசுலாமிய மதத்தின் மீதும் அதன் மூலம் இசுலாமிய மக்கள் மீதும் அவதூறு சுமத்தி இழிவு படுத்துகிறீர்கள். இதுவும் சங்க பரிவார் பாணியிலான வெறுப்பு பரப்புரையே.[hate compaign] . பாசித் என்ற தனிமனிதனின் தவறுகளுக்கு இசுலாமிய மதத்தை பொறுப்பாக்க முயல்வது சங்க பரிவார் கும்பலின் செயல்பாட்டை ஒத்து இருக்கிறது.

    ”குர் ஆன்தான் குண்டு வைக்க தூண்டுகிறது என்று பேசும் பார்ப்பன இந்து மத வெறியர்களுக்கும் இசுலாம்தான் பாசித்தை கள்ள உறவுக்கு தூண்டியது என்று பேசும் புரட்சியாளர்களுக்கும் என்ன வேறுபாடு.

    சமால்,
    \\இவர் சில ஆண்டுகளாக தனது மனைவி ஒல்லியாக இருப்பதாகவும், அழகாக இல்லையென்றும் கூறி மற்ற பெண்களிடம் அவர்கள் அழகை வருணித்து தனது மனைவியின் அழகை இகழ்ந்து கூறியும் தனது காம இச்சையை அவர்களிடம் தீர்த்து வந்துள்ளார். இந்த செயலை நியாயப்படுத்த அந்த பெண்களிடம் இஸ்லாமிய வரலாற்றை கூறி அதாவது ‘வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்’ அல்லாவிற்கு ஏற்ற செயல்தான் என சமூகம் காறி உமிழும் இந்த செயலுக்கு புனிதம் வேறு கற்ப்பித்துள்ளார்.//

    அதாவது கள்ள உறவு வைத்துக்கொள்ளும் ஒரு பொறுக்கி தனது கேடுகெட்ட செயல்களுக்கு நியாயம் கற்பிக்க இசுலாமிய கோட்பாடுகள் துணை போவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறீர்கள்.’வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்’ எனபது அடிமைகளை குறிப்பதுதானே.அப்படியானால் பாசித் அந்த பெண்களை தனது அடிமை என்று நம்ப செய்து கள்ள உறவு வைத்துக் கொண்டார் என்கிறீர்கள்.ஒரு பொம்பளை பொறுக்கி,கள்ள உறவுக்கு அடிப்போடும் ஒரு கயவன் தம்மை அடிமை என்று சொல்வதை ஏற்றுக்கொண்டு அந்த பெண்கள் ஒத்துழைத்தார்கள் என்பதை பகுத்தறிவுடன் எண்ணிப்பார்க்கும் எவராவது நம்புவார்களா. மேலும் அப்படியான கள்ளத்தனங்கள் நடந்திருந்தால் அவை தனிநபர்கள் தொடர்புடைய ஒழுங்கீனங்கள்தானே அன்றி அதற்கும் இசுலாமிய மதத்திற்கும் என்ன தொடர்பு.

    \\ அவரது அக்காவின் மகளை திருமணம் செய்திருக்கும் கணவனின் தங்கை தனது கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணுக்கும் நம்மாள் பாசித் கொக்கி போட்டுள்ளார். ஆனால் ‘மகர்’ கொடுக்காமல் கொக்கி போட்டதால் ரொம்பநாள் தாக்கு பிடிக்கமுடியவில்லை. இவ்வூரை சேர்ந்த ‘நூர்’ என்ற ஒருவன் அப்பெண்ணுக்கு ‘மகர்’ செய்து கவர்ந்துவிட்டான். இதனால் பாசித் அப்பெண்ணால் கழட்டிவிடப்படவே பொறுமையின் உச்சகட்டத்தை இழந்து அப்பெண்ணின் வீட்டில் நூர் இருக்கும்பொழுது ”விபச்சாரமா செய்கிறீர்கள் இது இஸ்லாத்திற்கு விரோதம்” என கூறி அவனிடம் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளார்.//

    இதையெல்லாம் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என அருவருப்பாக உள்ளது.மூன்று கழிசடைகளின் கயவாளித்தனத்திலும் இசுலாத்தை இழுக்காமல் உங்களால் எழுத முடியவில்லை.அந்த கழிசடைகள் என்ன சொல்லி சண்டையிட்டால் என்ன.
    \\விபச்சாரமா செய்கிறீர்கள் இது இஸ்லாத்திற்கு விரோதம்” //
    இசுலாம் மட்டும்தான் விபசாரத்தை தடை செய்கிறதா.இசுலாமியர் அல்லாத சமூகங்களும் அதனை தடை செய்திருப்பதுதானே எதார்த்தம்.

    \\திருடினால் கையை வெட்டலாம். பெண் விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்து கொல்லலாம். ஆண் விபச்சாரம் செய்தால்……..ஆண் உறுப்பை அறுத்து நாய்க்கு போடும்படி இஸ்லாமிய சட்டத்தை திருத்தலாமா? //

    இசுலாமிய குற்றவியல் சட்டப்படி கள்ள உறவுக்கான தண்டனையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாரபட்சம் ஏதுமில்லை.ஒரு பொருள் குறித்து விமர்சனம் எழுத முற்படும்போது அது குறித்த முழுமையான புரிதல் இருக்கவேண்டும் என்ற அடிப்படை அறிவு நாணயமின்றி எழுதும் நீங்களெல்லாம் ”முற்போக்கான புரட்சியாளர்கள்”.இசுலாமிய மக்கள் தங்கள் விடுதலையை சாதிக்க உங்களை போன்றவர்கள் தலைமையில் அணிதிரள அறைகூவல் வேறு.கொடுத்து வைத்தவர்கள் தமிழக முசுலிம்கள்.

    சாகித்,
    வினவில் வெளியாகும் பெரும்பாலான,ஏன்,இசுலாம் குறித்தவை தவிர்த்து அநேகமாக எந்த கட்டுரைக்கும் நீங்கள் பின்னூட்டம் போடுவதை காணமுடியவில்லை.[ஒரு சில பதிவுகளில் பறையோசை என்ற பெயரில் மறுமொழி எழுதியதாக நினைவு]இசுலாம் குறித்த கட்டுரை என்றால் ஓடோடி வந்து விடுகிறீர்கள்.ஆக பொதுவுடைமை புரட்சியின் மீதும் சமகால அரசியல் நிகழ்வுகள் மீதும் இருக்கும் அக்கறையை விட இசுலாமிய வெறுப்பு பரப்புரையே உங்களுக்கு முதன்மையானதாக இருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.

    உங்களுக்கு தவ்கீது அமைப்பின் மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் விமரிசனங்கள் இருந்தால் தாராளமாக எடுத்து வைக்கலாம்.இந்த பதிவில் கூட பாசித் ஒரு இந்து மத வெறி வேட்பாளருக்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்கு கேட்டது பற்றி எழுதப்பட்டுள்ளது.அது போன்ற குறைபாடுகளை சுட்டிக்காட்டி எழுதலாம்.அதற்கு தொடர்புடையவர்கள் விடையளிக்கட்டும்.ஆனால் அவர்களது குறைபாடுகளுக்கு எல்லாம் இசுலாமிய கோட்பாடுகள்தான் காரணம் என்று சொல்வது என்ன வகை நியாயம்.இசுலாம் மீதான விமர்சனங்களையும் முன் வைக்கலாம்.ஆட்சேபனை சொல்வதற்கில்லை.அதற்கு இசுலாமிய சகோதரர்கள் விடையளிக்கட்டும்.ஆனால் வாதம் என்ற பெயரில் நபிகள் நாயகம் மீதும் அதன் மூலம் இசுலாம் மீதும் அவதூறு சொல்வது கண்டிக்கத்தக்கது.

    இந்த பதிவில்
    \\உமைமாவை முகம்மதுநபி திருமணம் செய்து கொள்ளவில்லை.//
    என்று எழுதும் நீங்கள்தான் முன்பு
    தலாக்.சரியத் சட்டமும் இசுலாமிய பெண்களின் அவலமும்
    https://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/
    என்ற கட்டுரையில் இப்படி கூறுகிறீர்கள்.
    \\உமையா என்ற அப்பெண்ணிடம் தாம்பத்திய உறவுகொள்ள முற்பட்டபோது அப்பெண் குலப் பெருமைகூறி இணங்க மறுத்துவிடவே, முகம்மதுநபி “உன் குடும்பத்தாரிடம் சென்றுவிடு” என்று கூறிவிட்டு வெளியில் வந்து அபு உசைத் என்பவரிடம் இரு வெண்ணிற சணலால் நெய்யப்பட்ட ஆடைகளை உமையா அவர்களுக்கு கொடுத்து அவரது குடும்பத்தாரிடம் கொண்டு விட்டுவிடுங்கள் என்று கூறியதாக(புகாரி: 5254,5255) நபிமொழி உள்ளது. இந்நிகழ்சி முத்தலாக்கையும் ஒரேதடவையில் முகம்மதுநபியே கூறியதற்கு சாட்சியாகவும் இருக்கிறது.//

    ஐயா நேர்மையாளரே,இப்போதைய வாதப்படி திருமணம் முடிக்காத ஒரு பெண்ணை முந்தைய வாதப்படி நபிகளார் மணவிலக்கு செய்தார்கள்.உங்கள் வாதம் ”நல்ல்ல்லா இருக்குய்யா,உங்கள் அறிவார்ந்த வாதத்தில் மூளை மூலாதாரத்தை தொட்டுவிட்டு முட்டியை நோக்கி போகட்டும்யா”
    வினவை படிப்பவர்கள் முட்டாள்கள்,நாம் என்ன எழுதினாலும் ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறீர்களா.
    இப்போதைய வாதப்படி அடிமை என்ற முறையில் அப்பெண்ணை நபிகளார் பாலுறவுக்கு அழைத்தார் என அவதூறு கூறுகிறீர்கள்.அந்த நிகழ்வை முழுமையாக படிக்கும் எவரும் நீங்கள் நபிகளாரை இழிவு படுத்துவதை உணர்ந்து கொள்ள முடியும்.நபிகள் அன்பளிப்பு செய்ய கேட்டபோது அப்பெண்ணின் வளர்ப்புத் தாயும் உடன் இருந்திருக்கிறார்.யாராவது மூன்றாவது நபர் முன்னிலையில் கலவிக்கு எத்தணிப்பார்களா.உங்கள் மூளையில் பொங்கும் இசுலாமிய வெறுப்பு உங்கள் அறிவு கண்களை மறைப்பதால் இப்படியெல்லாம் கீழ்த்தரமாக எழுத முடிகிறது. பகுத்தறிவு உள்ள ஒரு மனிதன் உங்கள் வாதத்தை ஏற்பானா.

    உண்மை என்னவென்றால் நபிகளார் அந்த பெண்ணின் தந்தையிடம் திருமண ஒப்பந்தம் செய்திருக்கிறார்.அந்த பெண்ணுக்கு அது சம்மதம்தானா என்பதை அறிந்து கொள்ளவே அவ்வாறு கேட்டிருக்கிறார்கள்.வளர்ப்புத் தாயும் உடன் இருந்திருக்கிறார் என்பதை வைத்து இப்படித்தான் பொருள் கொள்ள முடியும்.நீங்கள் சொல்வது போல் பொருள் கொள்ள முடியாது.

    அடுத்து பாசிதும் அவரது ”அடிமைகளும்”

    ஆண்டான் அடிமை முறை என்பதே இப்போது வழக்கொழிந்து போன ஒன்று.இல்லாத ஒரு நடைமுறைக்கு இசுலாமிய சட்டங்கள் என்ன என விவாதிப்பது தேவையற்றது.

    உமைமா விவகாரத்தில் நபிகளார் மீது அவதூறு சுமத்தி அதன்மூலம் ஒரு பொம்பளை பொறுக்கியை ஒழுங்கீனத்துக்கு தள்ளியது நபிவழியே எனபது எத்தகைய கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

    அடுத்து அலாவுதீன்.
    கடவுள் மறுப்பு பேசிக்கொண்டே ஒரு மத நம்பிக்கையாளர்களின் வழிபாட்டு இடத்தை,அவர்களது செலவில் செய்யப்படும் வசதிகளை சொந்த தேவைக்கு பயன்படுத்துவது ஒரு நேர்மையாளனின் செயலாகுமா.
    அந்த மத நம்பிக்கையாளர்கள் புனிதமாக கருதும் இடத்திற்கு காலணிகளுடன் சென்று உலாவுவதுதான் நாகரீகம் என்று பொதுவுடைமை பண்பாடு உங்களுக்கு சொல்லித் தருகிறதா.

    • திப்பு,
      உங்கள் கேள்விகளுக்கு விடையளிப்பது என்பதை விட இசுலாத்தை விமரிசிப்பதன் பால் உங்கள் அணுகுமுறை என்ன என்பதை புரிந்து கொண்டு பேசுவது சரியாக இருக்கும். இதற்காக அலாவுதீன் ஒரு அற்புத விளக்கு பதிவில் உங்கள் பின்னூட்டத்தை வாசித்து விட்டே இதை சொல்கிறேன். அதே நேரம் எங்களது கருத்தை முழுமையாக எழுதுவது சாத்தியமில்லை. முடிந்தால் நேரில் விளக்குகிறோம்.

      திப்பு, நீங்கள் மட்டும்தான் ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர வினவின் அரசியல் பதிவுகளில் வாதிடும் நண்பராக இருக்கிறீர்கள். அத்தகைய ஆர்வத்தை இசுலாத்தை விமரிசிக்கும் பதிவு என்றால் ஓடி வரும் இசுலாமிய நண்பர்களிடம் காண முடியவில்லை. ஆனால் நீங்கள் பிறப்பால் ஒரு இசுலாமியர் என்பது தற்செயலாகவே தெரியும். அப்படிக் குறிப்பிட்டமைக்கு மன்னிக்கவும்.

      இசுலாத்தை விமரிசித்தால் அதை மிகவும் சென்சிட்டிவாக பார்க்கும் பலவீனம் உங்களிடமும் இருக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இசுலாத்தை விமரிசிப்பதை நீங்கள் பொதுவில் ஏற்பதாக கூறிக் கொண்டாலும் அந்த விமரிசன வரம்பின் அளவு என்று ஒன்றும் வைத்திருக்கீறீர்கள். அந்த அளவுக்கு ஏதும் இலக்கணம் இருக்கிறதா திப்பு?

      சீர்திருத்த மணம் செய்த அலாவூதீனை ஊர் விலக்கம் செய்வது என்பது இசுலாத்தின் புனிதத்தை காக்கும் ஒன்று என்ற முறையில் தவுகீத்தும், ஊர் ஜமா அத்தும் செயல்பட்ட போது நீங்கள் ஏற்கவில்லை. நல்லது, எனில் எது இசுலாம், எது இசுலாமிய விமரிசனம் என்பதற்கு யார் நீதிபதி, திப்புவா இல்லை தவுகீத்தா?

      அடிப்ப்படை இசுலாமியக் கடமைகளை செய்யவில்லை என்றால் அதை கேள்வி கேட்பதற்கு ஆண்டவனுக்குத்தான் உரிமை உள்ளது என்றும் மனிதர்களுக்கு உரிமை இல்லை என்றும் கூறியிருக்கிறீர்கள். எனில் இசுலாத்தின் கடமைகளை வலியுறுத்தும், செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கும் இசுலாமிய அமைப்புகள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? இதைத்தாண்டி அந்த ஆண்டவனை கேள்வி கேட்க கூடாத நிலையில் வைத்திருக்க ஏன் விரும்புகிறீர்கள்?

      திப்பு,
      மதம், சாதி, ஏனைய கருத்தியல் நிறுவனங்கள் எதுவும் சில புனித நூல்களிலோ, இல்லை ஆலயங்களிலோ மட்டும் இருந்து விடவில்லை. அவை சமூக அளவில் அதிகாரத்தை செலுத்தும் அளவே உயிர் வாழ்கின்றன. இதற்கு இசுலாமும் விதிவிலக்கல்ல. அந்த அதிகாரம் என்பது வசதி படைத்தோர் அல்லது பணக்காரர்களுக்கு மட்டும் சொந்தமானது என்பதும் சமூக யதார்த்தம்தான்.

      அக்மார்க் இசுலாத்தை வலியுறுத்தும் தவுகீத்தின் உள்ளூர் தளபதிதான் இந்த பாசித் மரைக்காயர். அவர் அங்கே ஏழை பெண்ணின் வாழ்வை சீரழித்திருப்பது சரி என்பதற்கு இசுலாத்தை ஆதாரமாக காட்டுகிறார். அவர் மட்டுமல்ல எல்லா மதவாத, சாதிய அமைப்புகளிலும் இப்படித்தான் உள்ளூர் அளவில் எளியோரையும், பெண்களையும் அடக்கி ஒடுக்குகின்றனர். அதற்கு ஆதாரமாக மரபையும், சடங்குகளையும் கைவசம் வைத்திருக்கிறார்கள்.

      நீங்கள் கற்பித்திருப்பது போல நாங்கள் இசுலாமிய மக்களை இழிவுபடுத்தவில்லை. உள்ளூர் அளவில் ஒரு பொறுக்கியை அம்பலப்படுத்தியதை அவர்கள் நிச்சயம் வரவேற்றிருக்கிறார்கள். பாசித்தின் ஜால்ராக்களைத் தவிர வேறு யாரும் அவர் பக்கம் இல்லை. உள்ளூர் ஜமாத் அவருக்கு சாதகமாகவே செயல்பட்டிருந்தாலும் அந்த ஊர் மக்களது கருத்து அதுவல்ல.

      ஆப்கானிஸ்தானில் ரசியா ஆக்கிரமிப்பு செய்த போது, அமெரிக்காவும், மேற்குலகமும் இசுலாத்தின் நண்பனாக காட்டிக் கொண்டன. ஜிகாதும், போராளிகளும் புரட்சி வீரர்களாக சித்திரிக்கப்பட்டனர். சதாம் உசேன் குவைத்தை ஆக்கிரமிப்பு செய்த போதும், பாலஸ்தீன், ஈரான் பிரச்சினை காரணமாகவும் இப்போது அவர்கள இசுலாமிய மதத்தை இழிவு படுத்துகிறார்கள். எனில் அவர்கள் போற்றித் துதித்த காலத்தில் கொஞ்சி குலாவியது யார்? இன்றையத வெறுப்பு பிரச்சாரத்தை வெறுப்பவர்கள் அன்றைய ஐஸ் பிரச்சாத்தை ஏன் ஆதரித்தார்கள்?

      எந்த ஒரு மதமும் அதன் புனிதமும், வரலாறும் இன்றைய வாழ்வில் அந்தந்த மக்களது சமூக பொருளாதார வாழ்வை தீர்மானிக்கவுமில்லை, அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வையும் வழங்கிவிடவும் இல்லை, வழங்கவும் முடியாது. இசுலாமிய மக்களைப் பொறுத்த வரை அவர்கள் மத ரீதியாக அணி திரள்வது என்பது நீண்ட கால நோக்கில் சரியானது இல்லை. இசுலாமிய மக்கள் வர்க்க ரீதியான அமைப்புகளில் அணிதிரள்வதுதான் ஆரோக்கியமானது.

      உலக நிலைமைய விடுத்து இந்திய நிலைமையை பார்ப்போம். இந்தியாவில் இசுலாமியர் என்பதற்காக ஏராளமான அடக்குமுறை இருப்பதும், இந்துமதவெறியரின் ஆதிக்கம் இருப்பதும் மறுக்க முடியாத உண்மை. முசுலீம் என்பதற்காக கல்வி மறுப்பு, வேலை மறுப்பு, குடியிருப்பு மறுப்பு, பயங்கரவாத பூச்சாண்டி, கைது, சிறை என்று ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இந்தப் பிரச்சினைகளுக்கு இசுலாமிய அமைப்புகளில் அணி திரண்டு இந்துமதவெறியை ஒழிக்க முடியாது. அப்படி அணி திரள்வது இந்துமதவெறியை வலுப்படுத்தவே செய்யும். ஏனெனில் இந்துமதவெறி என்பது பெரும்பான்மையின் பெயரால் வந்து நிற்கும் அபாயம். அதே சமயம் பெரும்பான்மை உழைக்கும் ‘இந்துக்களுக்கும்’ எதிரான அபாயம். அதை அத்தகைய உழைக்கும் ‘இந்துக்களோடு’ சேர்ந்துதான் ஒழிக்க முடியும். அதைத்தான் வர்க்க ரீதியான அமைப்புகளில் இசுலாமிய மக்கள் சேர வேண்டும் என்கிறோம். இதனால் இசுலாமிய அமைப்புகள் இருக்க கூடாது என்பதல்ல. சிறுபான்மை மதத்தவர் என்ற முறையில் அவர்களது உரிமைகளை வலியுறுத்தவதற்கு அப்படி சில அமைப்புகள் தோன்றலாம். ஆனால் அதில் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்பதையே வலியுறுத்துகிறோம். தலித்துகள் மட்டும் தலித் அமைப்புகளில் அணிதிரண்டு சாதி ஆதிக்கத்தை முறியடிக்க முடியாது என்பதும் இதனோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய ஒன்று.

      தவுகீத் கடுங்கோட்பாட்டு மத வழிமுறைகளை முன்னிறுத்தி இதுதான் இசுலாம் என்று வலியுறுத்துவது ஏற்கனவே தனிமைப்பட்டிருக்கும் இசுலாமய மக்களை மேலும் தனிமைப்படுத்தும். உழைக்கும் இசுலாமிய மக்கள் தர்காவுக்கு போகக்கூடாது என்பதிலிருந்து இவர்கள் செய்வது பலவிதத்திலும் பார்ப்பனியத்தை நினைவூட்டுகிறது. உழைக்கும் இந்துக்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு கிராம ‘சிறு’ தெய்வங்களை வணங்குவதை பார்ப்பனியுமும் எதிர்க்கிறது. இருப்பினும் இத்தகைய கடுங்கோட்பாட்டை வலியுறுத்துபவர்கள் உள்ளூர் அளவில் எல்லா சீர்கேடுகளையும், ஆணாதிக்கத்தையும், தேவைப்பட்டால் எந்தக்கட்சிக்கும் விலை போவதையும் செய்கிறார்கள். அவர்கள் மேல் வரவேண்டிய கோபம் எங்கள் மேல் வரவேண்டிய அவசியம் என்ன?

      இசுலாமிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டே ஒரு இசுலாமியர் கம்யூனிஸ்ட்டாக வேலை செய்வது சாத்தியமா, அதை இசுலாம் அனுமதிக்குமா? என்ன சொல்கிறீர்கள் திப்பு?

      திரும்பவும் விளக்கம் சொல்வதற்காக மதத்திடம் போகாதீர்கள். ஒரு அபலைப் பெண்ணின் அவலத்தை புரிந்து கொண்டு அவளுக்கு ஆதரவாக இருப்பதற்கு நாம் எந்த மத்தையும் படிக்கவோ, பின்பற்றவோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இங்கே மதத்தை இழுத்து வைத்து கேடயமாக்கி வாதிடுபவர்கள் நாங்கள் அல்ல.

      பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்து விரிவாக எழுதுகிறோம்.

      • நல்ல விளக்கம். ஆனால் இசுலாமிய சகோதரர்கள் மதத்தை கட்டிக்கொண்டு அழுதாலும் அழுவார்களே தவிர. மத அடையாளங்களை விடுத்தது பொதுவில் வரவோ பேசவோ தயாரில்லை. இதைபற்றி வினவு விரிவானதொரு கட்டுரை / பதிவு போடுவது அவசியம்.

  76. வணக்கம் திப்பு.

    ///சங்க பரிவார் கும்பலால் வெறியூட்டப்பட்ட பார்ப்பன பாசிசவாதிகளை போல இசுலாமிய மதத்தின் மீதும் அதன் மூலம் இசுலாமிய மக்கள் மீதும் அவதூறு சுமத்தி இழிவு படுத்துகிறீர்கள்.///

    இங்கு இசுலாம் என்கிற மத அடிப்படைவாத பிற்போக்கு தனம் தான் விமர்சிக்கப்படுகிறது. அதை ஏன் இசுலாமிய மக்களோடு தொடர்பு படுத்துகிறீர்கள். இசுலாமிய மக்களை இழிவுபடுத்தும் படி இங்கு ஒன்றும் எழுதப்படவில்லை. இசுலாத்தை விமர்சித்ததற்காகவே வினவு தோழர்களை பார்ப்பன பாசிஸ்டுகளோடு ஒப்பிடுகிறீர்களே இது சரியா திப்பு ?

    ///பாசித் என்ற தனிமனிதனின் தவறுகளுக்கு இசுலாமிய மதத்தை பொறுப்பாக்க முயல்வது சங்க பரிவார் கும்பலின் செயல்பாட்டை ஒத்து இருக்கிறது.///

    ///இசுலாம்தான் பாசித்தை கள்ள உறவுக்கு தூண்டியது என்று பேசும் புரட்சியாளர்களுக்கும் என்ன வேறுபாடு.///

    இதற்கான அடிப்படை நபிகளிடம் இருக்கிறதா இல்லையா ? அவர் பெண்களிடம் அவ்வாறு நடந்துகொண்டாரா இல்லையா ?

    ///அதாவது கள்ள உறவு வைத்துக்கொள்ளும் ஒரு பொறுக்கி தனது கேடுகெட்ட செயல்களுக்கு நியாயம் கற்பிக்க இசுலாமிய கோட்பாடுகள் துணை போவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறீர்கள்.’வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்’ எனபது அடிமைகளை குறிப்பதுதானே.அப்படியானால் பாசித் அந்த பெண்களை தனது அடிமை என்று நம்ப செய்து கள்ள உறவு வைத்துக் கொண்டார் என்கிறீர்கள்.ஒரு பொம்பளை பொறுக்கி,கள்ள உறவுக்கு அடிப்போடும் ஒரு கயவன் தம்மை அடிமை என்று சொல்வதை ஏற்றுக்கொண்டு அந்த பெண்கள் ஒத்துழைத்தார்கள் என்பதை பகுத்தறிவுடன் எண்ணிப்பார்க்கும் எவராவது நம்புவார்களா///

    1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் கூறியதைப் போலவே வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர் என்பதற்கு அடிமை பெண்களை சொந்தமாக்கிக் கொள்தல் என்று பெண்களுக்கு கோட்பாட்டு விளக்கம் கூறி தான் பாசித் அவர்களை வளைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா திப்பு. மேலும் ஏழை எளிய இசுலாமிய பெண்களுக்கு இது பற்றிய அறிவெல்லாம் இல்லாத நிலையில் பாசித் போன்றவர்கள் இப்படி தான் நடந்து கொள்வார்கள் ? பொறுக்கிகள் இவ்வாறு நடந்துகொளவ்தற்கு முன்னுதாரணமாக நபிகளும் அவருடைய சகோதரர்களும் இருந்தார்களா இல்லையா என்பது தான் கேள்வி. ஆம் எனில் அதற்கு மதத்தை பொறுப்பாக்குவதில் என்ன தவறு இருக்க முடியும் ?

    ///மூன்று கழிசடைகளின் கயவாளித்தனத்திலும் இசுலாத்தை இழுக்காமல் உங்களால் எழுத முடியவில்லை.அந்த கழிசடைகள் என்ன சொல்லி சண்டையிட்டால் என்ன.///

    அப்படியானால் மதத்திற்கு இழிவு சேர்க்கும் இந்த கேடுகெட்ட பிறவிகளை இசுலாத்தை விட்டு வெளியேற்றுவது தானே சரியான நடவடிக்கை. TNTJ அக்காரியத்தை செய்து மதப்புனிதத்தை காத்துக்கொண்டதா ? இல்லையே, குறைந்தப்பட்சம் கட்சியிலிருந்தாவது நீக்கியதா ? இதைப்பற்றி அவர்களிடம் நீங்களாவது நடவடிக்கை கோரி முறையிட்டீர்களா ?
    மேலும் பாசித்தின் பொறுக்கித்தனத்தை மூடி மறைக்க எண்ணிய உள்ளூர் ஜமாத்தும், ஜமாத் தலைவரும் காசு வாங்கிக்கொண்டு பாசித்தை விட இசுலாத்திற்கு கூடுதலான இழிவையும், அவப்பெயரையும் தேடித்தந்துள்ளனர் ! பாசித்தை பொறுக்கி என்று சொன்னால் அந்த பொறுக்கியிடம் காசு வாங்கிக்கொண்டு பஞ்சாயத்து பேசிய தலைவர்களை என்ன சொல்வது ?

    இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டியது பாசித் மீது மட்டுமல்ல அவருடைய பொறுக்கித்தனத்துக்கு உடந்தையாக இருந்து இசுலாத்தை அவமதித்த ஜமாத் கூட்டத்தையும் மத நீக்கம் செய்ய வேண்டும். இதை செய்யும் அதிகாரம் யாருக்கு உண்டு ? இதற்காக நீங்கள் யரிடம் போராடப்போகிறீர்கள் ?

    ///இசுலாமிய மக்கள் தங்கள் விடுதலையை சாதிக்க உங்களை போன்றவர்கள் தலைமையில் அணிதிரள அறைகூவல் வேறு.கொடுத்து வைத்தவர்கள் தமிழக முசுலிம்கள்.///

    வேறு யாரிடம் திரள வேண்டும் என்பதை கூறுங்கள். ஏகாதிபத்தியத்திற்கு என்ன தீர்வு ? விடுதலைக்கான மாற்று பாதை எது என்பதை சொல்லுங்கள்.

    ///சாகித், வினவில் வெளியாகும் பெரும்பாலான,ஏன்,இசுலாம் குறித்தவை தவிர்த்து அநேகமாக எந்த கட்டுரைக்கும் நீங்கள் பின்னூட்டம் போடுவதை காணமுடியவில்லை.[ஒரு சில பதிவுகளில் பறையோசை என்ற பெயரில் மறுமொழி எழுதியதாக நினைவு]இசுலாம் குறித்த கட்டுரை என்றால் ஓடோடி வந்து விடுகிறீர்கள்.ஆக பொதுவுடைமை புரட்சியின் மீதும் சமகால அரசியல் நிகழ்வுகள் மீதும் இருக்கும் அக்கறையை விட இசுலாமிய வெறுப்பு பரப்புரையே உங்களுக்கு முதன்மையானதாக இருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.///

    சொந்த சாதியின் ஒடுக்குமுறையையும், மதத்தின் ஒடுக்குமுறையையும் அந்தந்த சாதி, மதத்தை சேர்ந்தவர்கள் தான் மற்றவர்களை விட கடுமையாக எதிர்க்க வேண்டும், அவர்களால் தான் அதை மிகச்சரியாக அம்பலப்படுத்தவும் முடியும். அதன் தீமையையும், அது தீர்வல்ல என்பதையும் அதிலிருந்து வந்தவர்கள் தான் பிறருக்கு எளிமையாக புரிய வைக்க முடியும். அந்த வகையில் சாகிதும் மற்ற தோழர்களும் செய்வது மிக மிகச் சரியான செயல். எனவே சாகித் ஏன் இப்படி இருக்கிறார் என்று கேட்பதை விட முற்போக்காக எழுதிக்கொண்டிருக்கும் திப்பு ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தான் கேட்க வேண்டும்.

    ///வாதம் என்ற பெயரில் நபிகள் நாயகம் மீதும் அதன் மூலம் இசுலாம் மீதும் அவதூறு சொல்வது கண்டிக்கத்தக்கது.///

    நபிகள் பரிசுத்தர் என்கிறீர்களா ?

    ///அடுத்து அலாவுதீன்.கடவுள் மறுப்பு பேசிக்கொண்டே ஒரு மத நம்பிக்கையாளர்களின் வழிபாட்டு இடத்தை,அவர்களது செலவில் செய்யப்படும் வசதிகளை சொந்த தேவைக்கு பயன்படுத்துவது ஒரு நேர்மையாளனின் செயலாகுமா. அந்த மத நம்பிக்கையாளர்கள் புனிதமாக கருதும் இடத்திற்கு காலணிகளுடன் சென்று உலாவுவதுதான் நாகரீகம் என்று பொதுவுடைமை பண்பாடு உங்களுக்கு சொல்லித் தருகிறதா.///

    இதற்கு அவர் தான் பொறுப்பு. என்னை பொறுத்தவரை இதை நான் தவறு என்று ஏற்கிறேன் திப்பு.

    • அம்பேத் ,

      //இசுலாம்தான் பாசித்தை கள்ள உறவுக்கு தூண்டியது என்று பேசும் புரட்சியாளர்களுக்கும் என்ன வேறுபாடு.///

      இதற்கான அடிப்படை நபிகளிடம் இருக்கிறதா இல்லையா ? அவர் பெண்களிடம் அவ்வாறு நடந்துகொண்டாரா இல்லையா ?

      அவர் அவ்வாறு நடந்து கொண்டதற்கு ஆதாரம் தாருங்கள் .இதில் ரசிய மொழி கலக்கவில்லை பதில் தாருங்கள்

      1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் கூறியதைப் போலவே வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர் என்பதற்கு அடிமை பெண்களை சொந்தமாக்கிக் கொள்தல் என்று பெண்களுக்கு கோட்பாட்டு விளக்கம் கூறி தான் பாசித் அவர்களை வளைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா திப்பு. மேலும் ஏழை எளிய இசுலாமிய பெண்களுக்கு இது பற்றிய அறிவெல்லாம் இல்லாத நிலையில் பாசித் போன்றவர்கள் இப்படி தான் நடந்து கொள்வார்கள் ? பொறுக்கிகள் இவ்வாறு நடந்துகொளவ்தற்கு முன்னுதாரணமாக நபிகளும் அவருடைய சகோதரர்களும் இருந்தார்களா இல்லையா என்பது தான் கேள்வி. ஆம் எனில் அதற்கு மதத்தை பொறுப்பாக்குவதில் என்ன தவறு இருக்க முடியும் ?

      வினவு வில் பாசித் பற்றி எழுதப்பட்ட அத்தனையும் உண்மையாக நடந்தவைகள் என்று நிருபிக்க முடியுமா?

      பாசித் அடிமை பெண்களை சொந்தமாக்கி கொள்ளுதல் பற்றி அந்த இளம்பெண்ணிடம் பேசியது கட்டுரையாளரின் கற்பனையே தவிர உண்மை அல்ல என்பதை உமது கட்டுரையாளர் மறுப்பாரா?

      மேலும் கீல்கானுபவைகளுக்கும் விளக்கம் தாருங்கள்

      [2] கம்யூன் இருந்தது இப்பொழுது மறுக்கப் பட்டாலும், அவ்வழக்கம் இருந்தது. நவீனகாலத்தில் இருந்ததற்கான ஒரு உதாரணம் கொடுக்கப் படுகிறது – சீனாவில் 1958ல் அத்தகைய கம்யூன்கள் பரிசோதனை நிமித்தம் ஆரம்பிக்கப் பட்டது. ஆண்களும், பெண்களும் தனித்தனியாக இருக்கவேண்டும். ஆனால் சனிக்கிழமை அவர்கள் இரவிலும், பகலிலும் கூடலாம். Statesman, Dec.15, 1966.
      [3] கம்யூன்கள் பற்றி பல புத்தகங்கள் உள்ளன. ஆனால் அதிலுள்ள விவரங்கள் இன்றைய கால்கக்கட்டங்களில் சமுதாய நோக்கில் எதிராக இருப்பதால் மேனாட்டவரே அதை மறைக்கின்றனர். மறுபதிப்புகூட வெளியிடுவதில்லை. விகிபீடியாக்கூட மறைந்துபோகின்றது. அல்லது மௌனம் காக்கிறது!

      அம்பேத் நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கை ஒரு துளி கூட விடுபடாமல் வெளிப்படையாக உள்ளது இப்போதும் இணைய தளங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.அதை ஆங்கில மாக்கும் திரிபுவாதிகள்எழுதுவதையே மட்டும் உண்மை என்று கொள்ள வேண்டாம்
      கம்யுனிச அசிங்கங்களை மறைத்த மேனாட்டவர்கள் ,இஸ்லாம் பற்றி மிகைத்து எழுதுகிறார்கள்

    • வடக்குஅம்மாபட்டினம் ஜமாத்தை பொறுத்தவரை உறுப்பினராக இருக்க இஸ்லாமிய மத கோட்பாடுகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.இதை அலாவுதீன் ”நான் ஒரு கம்னிஸ்ட் இஸ்லாமிய மதத்தை பின்பற்ற மாட்டேன்” என்று ஜமாத்தில் கூறியபோது(ஆடியோ ஆதாரம் உள்ளது)ஜமாத்தைவிட்டு அலாவுதீனை நீக்கவேண்டும் என TNTJ அமைப்பினர் மட்டும் தான் கூறினர். ஆனால் பெரும்பான்மை ஜமாத்தார்கள் அவர் ஜமாத்தில் நீடிக்க ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். அவர் மசூதியில் நடைபெறும் எந்த தொழூகையிலும் கலந்துகொள்ளமாட்டார்.ஆனால் தனது கொள்கைகளை இவ்வுரில் பிரச்சாரம் செய்வது(சுவரெழூத்து,பிரசுரம் போன்ற வடிவங்கள்)அமோக ஆதரவு உண்டு. இவ்வுர் இஸ்லாமிய இளைஞர்கள் புரட்சிகர அமைப்புகளில் தொடர்பு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் மசூதியில் செருப்பு காலுடன் நுழைந்தார் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பொய்.மசூதிக்குல் எப்போது வேண்டுமானாலும் சகஜமாக சென்று இளைஞர்களுடன் பொதுநல சம்மந்தமான பிரச்சனைகளை ஆலோசிப்பது போன்றவை நடக்கும். ஏனெனில் மசூதியே இவ்வுர் மக்கள் ஒன்று கூடும் இடமாகவும் மதியம்,இரவு போன்ற நேரங்களில் உறங்கும் இடமாகவும் பயன்பட்டு வருகிறது.மேலும் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவது, பின்பற்றாமல் இருப்பது அவரவர் தனிப்பட் உரிமை என்று இவ்வுர் மக்கள் கருதுகின்றனர்

      • அலாவுதீனே ,தன்னைப் பற்றி இங்கே எழுதிஉள்ளார் இப்படியெல்லாம் கதை அளந்து ஒரு பிரச்னையை அணுக வேண்டுமா?

        • என்னுடைய ஒரிஜினல் முகவரியை நிருபிக்க தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள id காட்டட்டுமா இப்ராகிம் அவர்களே?

            • நான் id இங்கு காண்பித்தால் உள்ளுர் tntj குரூப் நான் தான் வினவுக்கு ஊரில் நடந்ததை தகவல் கொடுத்தேன் என வேண்டுமென்றே பட்டம் கட்டி தண்டித்து விடுவார்களே பாய். வேற நல்ல ஜடியா இருந்தா சொலலுங்க. நான் அடுத்த மாதம் சவுதி வந்து விடுவேன் அங்க யார்டயவது காட்டலாமா?

              • உங்களிடம் நேர்மையும் உண்மையும் இருந்தால் நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்?
                பாசித்தின் விசயத்தில் நிறைய கதை கட்டினோமே ,அதை நிருபிக்க கூறுவார்களோ என்ற பயமோ ?
                ///அசிங்கத்தை மேலும் அதிகமாக தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் நேரடியாக ஊருக்குச் சென்று மதப்பெரியவர்களிடம் கேட்காமல் ஊரிலுள்ள உழைக்கும் மக்களிடம் கேளுங்கள் கதை கதையாக சொல்வார்கள்.///
                இது உங்களது அறிஞர் அம்பேதின் கூற்று.நீங்கள் உழைக்கும் மக்களா? அல்லது சவுதியில் அரபுகளை ஏச்சு பிழைக்கும் மக்களா? கதை சொல்ல கூட பயமா?
                இங்கே உங்களை அடையாளம் காட்டினால் அலாவுதீன் சொன்னதையே நான் எழுதினேன் என்று கூற வேண்டியது வருமோ?

                • தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சும் மூட்டை புச்சிகளான அரபு முதலாளிகளிடம் வேலை பார்க்கும் சாதாரண லேபர்தான் நான். லேபர் எப்படிங்க அவ்வளவு பெரிய அரபிய ஏமாற்ற முடியம். என்ன ஏமாத்தாம என் பொலப்ப ஓட்டுறதுக்கு ஒழுங்கா சம்பளம் தந்தாபத்தாதா. நான் பயப்புறது உண்மைதான். மதவாதிகல் எப்படிபட்ட முரடர்கள் என்று எனக்கு தெரியும். நான் யார் சொல்வதையும் கேட்டு எழுத வேண்டிய அவசியம் இல்லை. லேபருக்கும் மூளை இருக்கு.எனக்கு மூளை இருக்குன்னு நான் சொன்னா நீங்க நம்பபோரது இல்லை. உங்களுக்கு அல்லா நபியிடம் சொன்னாதான் நம்புவிங்க. நானும் குரான்,ஹதிஸ் எல்லாத்திலையும் லேபர் பத்தி ஏதாவது சொல்லிருக்கானு பார்கிறேன்.

                  • லேபரப் பத்தி என்ன சொல்லியிருக்கு. வியர்வை உலரும் முன் கூலி கொடுத்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கு. கூலி கொடுக்க சொன்ன அல்லா எவ்வளவுன்னு சொல்லலை. அங்கதான் இருக்கு அல்லா யார் பக்கம்ன்ற விசயமே . லேபருக்கு வியர்வை வரலைன்னா கூலி கொடுக்காமல் இருக்குறதுக்கு இந்த ஹதீதை நம்ம திடீர் நாயக் காரணம் காட்டுனாலும் காட்டுவாறு.

                  • ஊர்க்காரன்
                    சரி அந்த மூட்டை பூச்சிகளை நசுக்கி விடுங்கள் .ஸ்டாலின். தொழிலாளர்கள் தலையில் வைத்துத்தானே ஆடினார்.பிறகு ஏன் அவர் சிலையையும் விட்டு வைக்காமல் மிதித்து தள்ளினார்கள்.
                    தொழிலாளியின் ரத்தத்தை உறிஞ்சும் அந்த மூட்டை பூச்சிகளிடம் ஏன் செல்ல வேண்டும்? இந்தியாவில் இல்லாத பிழைப்பா அங்கு உள்ளது? கால் வயிறு கஞ்சி குடித்தாலும் ,குழந்தை குட்டிகளுடன் இருந்து இந்த மண்ணில் வாழும் பாசித் போன்ற அநியாயக்காரர்களை ஒழித்து புரட்சி படைக்க வேண்டாமா?இப்படி செங்கொடி முதல் எல்லோரும் அரபியாவில் இருந்து கொண்டு உழைப்பாளி வர்க்கம் பற்றி பேசுவது எத்துனை நியாயம்? பாவம் இங்கே உழைப்பாளிகள் ரத்தம் சிந்தி உழைக்க வேண்டும் .நீங்கள் வியர்வை கூட வராத அளவு ரூமில் உட்கார்ந்து கொண்டு உழைப்பாளிகள் பற்றி பேசுவது சரியன்றே

                    • நாங்க(தொழிலாளர்கள்) இல்லை என்றால் இன்னும் அரபிகள் காட்டரபிகளாக தான் இருந்திருப்பார்கள். பாலை வனத்தை சோழை வனமாக மாற்றியது தொழிலாளி வர்க்கம் தான்.முதலாளிகளால் தொழிலாளர்கள் வாழவில்லை. தொழிலாளிகளால் தான் முதலாளிகள் சுகபோக வாழ்கை வாழ முடிகிறது. இந்த உண்மை உங்கள் சூப்பர் பவர் மூளை ஏற்க வேண்டுமென்றால் மத போதையை துக்கி எரிந்தால் மட்டுமே அறிய முடியும். இந்த அற்புத உலகை படைத்த தொழிலாளிகளுக்கு உங்கள் அல்லா என்ன கொடுத்துள்ளார்? ஒரு வேலை மறுமையில் தேனும் பாலும் வழங்குவாறோ?

                    • ஊர்காரன் ///இந்த அற்புத உலகை படைத்த தொழிலாளிகளுக்கு உங்கள் அல்லா என்ன கொடுத்துள்ளார்? ஒரு வேலை மறுமையில் தேனும் பாலும் வழங்குவாறோ?////
                      இந்த அற்புத உலகை படைத்த தொழிலாளிகளுக்கு அல்லாஹ் கைகளும் கால்களையும் ஆரோக்கியத்தையும் கொடுத்துள்ளார்.உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்க முதலாளிகளுக்கு செல்வத்தையும் கொடுத்துள்ளார்.
                      அந்த மண்ணில் இப்ராஹீம் நபி [அலை] அவர்கள்,’ இந்த மண்ணில் மக்களை கொண்டு குவிப்பாயாக ,அவர்களுக்கு செல்வத்தை கொடுப்பாயாக ! என்று துஆ செய்த பிறகு அந்த மக்கள் இன்னும் எப்படி காட்டரபிகளாக இருப்பார்கள்?
                      ஒருவேளை நீங்கள் செல்லாவிட்டால் அவர்கள் காட்ட்ரபிகளாக இருந்து விட்டு போகிறார்கள்.உங்களுக்கு என்ன கவலை?

    • வினவு
      ///இதற்கு அவர் தான் பொறுப்பு. என்னை பொறுத்தவரை இதை நான் தவறு என்று ஏற்கிறேன் திப்பு.////

      பகுத்தறிவு இதற்கு பொறுப்பு கிடையாதா?

      • மாற்று திறனாளிகள், புத்திசுவாதினம் அற்றவர்கள் இவர்களுக்கு அல்லா என்ன பரிசு கொடுத்துள்ளான்?.ஃஃஃஇந்த அற்புத உலகை படைத்த தொழிலாளிகளுக்கு அல்லாஹ் கைகளும் கால்களையும் ஆரோக்கியத்தையும் கொடுத்துள்ளார்.ஃஃஃ தொழிலாளிகளுக்கு அல்லா வறுமையை போனஸாகவும் முதலாளிகளுக்கு நிரந்தர செல்வத்தின் மூலம் சுகபோக வாழ்வை போனஸாகவும் வழங்கி ஆதாம்-ஏவாலின் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளுக்கு ஏன் இப்படி ஓர வஞ்சகம் செய்யவேண்டும். ஏற்ற தாழ்வை உருவாக்கிய அல்லாவிற்கு எதிராக பாதிக்கப்பட்ட தொழிலாளிவர்க்கம் நின்று வெல்வதுதானே இயற்கையாக இருக்க முடியும். முதலாளித்துவ வர்க்கம் நீங்கள் கூறும் அல்லா போன்ற கடவுள்களின் பின்னால்தான் ஒழிந்துகொண்டு தொழிலாளிகளை ஏமாற்றி வருகிறது. எனவே தான் கடவுள் இருப்பை தகர்த்து எறியவேண்டும். நம்ம வளைகுடா சேக்குகள் அமெரிக்க முதலாளிகளுக்கு மாமா வேலை பார்ப்பதை ஏன் இஸ்லாத்தால் தடுக்கமுடியவில்லை.

        • ஊர்காரன் ,ஏற்ற தாழ்வுகள இருந்தாலே டயரில் கிரிப் கிடைக்கும் சாலையில் வாகனங்கள் நன்றாக செல்லும் .
          மாம்களிடம் செல்லாமல் உங்களது சித்தப்பா வான ரஷ்யா வுக்கோ க்யுபா ,சீனாவுக்கோ சென்று உங்களது உழைப்பை காட்டி அதற்குரிய ஊதியத்தை பெற முயற்சி செய்யுங்கள்

          • அல்லா தான் ஏற்ற தாழ்வுகளை படைத்தான் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஏற்றத்தை முதலாளிகளுக்கும், எல்லா தாழ்வை தொழிலாளிகளுக்கும் வழங்கி தொழிலாளி வர்கத்தை அல்லா தன் எதிரி வர்க்கமாக வைத்துள்ளான். ஆகவே தொழிலாளி வர்க்கம் அல்லாவுக்கு எதிராகவும் போரிட வேண்டியுள்ளது. இப்ராஹிம் நீங்கள் தொழிலாளி பக்கமா? முதலாளி பக்கமா? (இஸ்லாமிய தொழிலாளி வர்க்கம், இஸ்லாமிய முதலாளி வர்க்கத்தை விட பெரும்பான்மையாக உள்ளது என்பதை நினைவில் வைத்து பதில் கூறுங்கள்) நீங்கள் கூறுவது போல் இஸ்லாம் முதலாளிகள் பக்கம் என்றால் உலகின் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதம் இஸ்லாம் என்று தப்பட்டம் அடிப்பதை நிறுத்த வேண்டி வரும்.

            ரஷ்யா, சீனா, கியுபா போன்ற நாடுகளில் மட்டும் தான் தொழிலாளி வர்க்கம் இருப்பதாக நினைத்து கிணற்று தவளை போல் எழுதுகிறிர்கள். இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் எழுச்சிகளையும், அமெரிக்க வால்ஸ்டிரிட் நடைபெறும் எழுச்சிகளையும் நீங்கள் காணவில்லையா? தொழிலாளி வர்க்கம் உலகம் முழுவதும் தன்னுடைய எதிரிகளுக்கு சமாதிகட்டும் வேலைகளில் ஈடுபட்டு கொண்டு தான் இருப்போம். இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் எழுச்சிகளுக்கு என்ன காரணம் என்பதை குர்ரான்,ஹத்திஸ் அடிப்படையில் கதை சொல்லுங்களேன்; நானும் கதை கேட்டு ரொம்ப நாளாச்சு!

            • (குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து சேர்ந்தார்கள். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தம் அவைக்கு அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரையும் அழைத்து வரக்கூறினார்.
              பிறகு மன்னர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, ‘உங்களில் அவரின் குலம் எத்தகையது?’ அதற்கு, அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர் என்றேன். ‘இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தைச் செய்ததுண்டா?’ என்று கேட்டார். இல்லை என்றேன். ‘இவரின் முன்னோர்களில், எவரேனும் மன்னர்களாக இருந்திருக்கிறார்களா? என்றார். இல்லை என்றேன். ‘அவரைப் பின்பற்றுவோர் மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா?’ என்றார். மக்களில் சாமானியர்கள் தாம் என்றேன். ‘அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?’ என்று வினவினார். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்றேன். ‘அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று யாரேனும் மதம் மாறியிருக்கின்றனரா?’ என்று கேட்டார். நான் இல்லை என்றேன். ‘அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?’ என்றார். நான் இல்லை என்றேன். ‘அவர் வாக்கு மீறியது உண்டா?’ என்றார். (இதுவரை) இல்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றேன்
              ஊர்காரனே ,நபி[ஸல்] அவர்களின் எதிரியாக அபு சுப்யான் [ரலி]அவர்கள் இருந்த சமயத்தில் ஹெராக்ளியஸ் மன்னரிடம் என்ன சொல்லுகிறார்?பாருங்கள் நபி[ஸல்] அவர்களை பின்பற்றும் மக்கள் சாமானியர்கள் என்றே சொல்லுகிறார்.
              நீங்கள் கம்யுனிச பக்தராக இருந்தும் கம்யுனிச நாடுகளுக்கு வேலைக்கு செல்லாமல் சவூதி அரேபியா வில்தான் நியாயமான ஊதியம் கிடைக்கும் .சுதந்த்திரம் இருக்கும் மனிதாபிமானம் இருக்கும் என்ற நம்பிக்கையில் அல்லவா சவூதி அரேபியாவுக்கு சென்று உள்ளீர்கள்.
              ////இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் எழுச்சிகளையும், அமெரிக்க வால்ஸ்டிரிட் நடைபெறும் எழுச்சிகளையும் நீங்கள் காணவில்லையா? ////
              ///இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் எழுச்சிகளுக்கு என்ன காரணம் என்பதை குர்ரான்,ஹத்திஸ் அடிப்படையில் கதை சொல்லுங்களேன்; நானும் கதை கேட்டு ரொம்ப நாளாச்சு!///
              நீங்கள் தான் எழுச்சி என்று மெக்சிக்க வேண்டும்.எண்ணை கொள்ளை நாட்டுக் கம்பெனிகள் ஆயுதம்கள் காசுகள் வழங்கி தூண்டப்பட்ட கலகமே அது.
              ///தொழிலாளி வர்க்கம் உலகம் முழுவதும் தன்னுடைய எதிரிகளுக்கு சமாதிகட்டும் வேலைகளில் ஈடுபட்டு கொண்டு தான் இருப்போம்.///
              சும்மா தொழிலாளி வர்க்கம் என்று ஊளை கூச்சல் போடாதீர்கள் .அவர்கள் ஒன்றும் மகைகவினர் அல்ல .தொழிலாளிகளில் ௮௦ சதவீதம் பேர் மத நம்பிக்கையாளர்கள் அவரவர் சொந்தங்கள் இறந்தால் மட்டுமே சமாதி கட்டுவார்கள்.இன்னும் பிறர் எரிப்பார்கள் .

          • அல்லா தான் ஏற்ற தாழ்வுகளை படைத்தான் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஏற்றத்தை முதலாளிகளுக்கும், எல்லா தாழ்வை தொழிலாளிகளுக்கும் வழங்கி தொழிலாளி வர்கத்தை அல்லா தன் எதிரி வர்க்கமாக வைத்துள்ளான். ஆகவே தொழிலாளி வர்க்கம் அல்லாவுக்கு எதிராகவும் போரிட வேண்டியுள்ளது. இப்ராஹிம் நீங்கள் தொழிலாளி பக்கமா? முதலாளி பக்கமா? (இஸ்லாமிய தொழிலாளி வர்க்கம், இஸ்லாமிய முதலாளி வர்க்கத்தை விட பெரும்பான்மையாக உள்ளது என்பதை நினைவில் வைத்து பதில் கூறுங்கள்) நீங்கள் கூறுவது போல் இஸ்லாம் முதலாளிகள் பக்கம் என்றால் உலகின் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதம் இஸ்லாம் என்று தப்பட்டம் அடிப்பதை நிறுத்த வேண்டி வரும்.

            ரஷ்யா, சீனா, கியுபா போன்ற நாடுகளில் மட்டும் தான் தொழிலாளி வர்க்கம் இருப்பதாக நினைத்து கிணற்று தவளை போல் எழுதுகிறிர்கள். இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் எழுச்சிகளையும், அமெரிக்க வால்ஸ்டிரிட் நடைபெறும் எழுச்சிகளை நீங்கள் காணவில்லையா? தொழிலாளி வர்க்கம் உலகம் முழுவதும் தன்னுடைய எதிரிகளுக்கு சமாதிகட்டும் வேலைகளில் ஈடுபட்டு கொண்டு தான் இருப்போம். இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் எழுச்சிகளுக்கு என்ன காரணம் என்பதை குர்ரான்,ஹத்திஸ் அடிப்படையில் கதை சொல்லுங்களேன்; நானும் கதை கேட்டு ரொம்ப நாளாச்சு!

            • ‘அவரைப் பின்பற்றுவோர் மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா?’ என்றார். மக்களில் சாமானியர்கள் தாம் என்றேன். ‘அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?’ என்று வினவினார். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்றேன்.

    • ///சொந்த சாதியின் ஒடுக்குமுறையையும், மதத்தின் ஒடுக்குமுறையையும் அந்தந்த சாதி, மதத்தை சேர்ந்தவர்கள் தான் மற்றவர்களை விட கடுமையாக எதிர்க்க வேண்டும், அவர்களால் தான் அதை மிகச்சரியாக அம்பலப்படுத்தவும் முடியும். அதன் தீமையையும், அது தீர்வல்ல என்பதையும் அதிலிருந்து வந்தவர்கள் தான் பிறருக்கு எளிமையாக புரிய வைக்க முடியும். அந்த வகையில் சாகிதும் மற்ற தோழர்களும் செய்வது மிக மிகச் சரியான செயல்.///

      நாட்டாமை சரியான செயல் என்று தீர்ப்பு சொல்லிவிட்டார் தீர்ப்பை கேட்டு விட்டு கலைந்து போவதற்கு முன்பு சாகித் எப்படி சொந்த சமூகத்தை நேசித்து அம்பலப்படுத்துகிறார் என்பதை சொல்லி விட்டு போகிறேன்

      நூல்: அடிமை அது அல்லாஹ்வின் ஆணை பக்கம்:137ல் இஸ்லாமிய உழைக்கும் மக்களை சாகித் கேவலப்படுத்துறத பாருங்க.

      அங்கே (வெளிநாட்டில்)மிஸ்கின் பிச்சைக்காரன் அல்லது ஏழை என்று தன்னை அடையாளம் காட்டி ஆண்டைகளின் இரக்கப் பார்வையை இசுலாமியர்கள் கெஞ்சிப் பெறுகின்றனர்.

      என்னை போன்று உள்ளூரில் வேலை கிடைக்காமல் வெளிநாட்டு வேலைக்கு வருகின்ற வெளிநாட்டில் சம்பாதிக்கின்ற சகோதரர்களை சாகித் எவ்வளவு அசிங்கமாக கேவலப்படுத்துகிறார் பாருங்கள்.

      யாரு இங்கே கையேந்தி பிச்சை கேட்கிறோம் நாங்கள் உழைக்கிறோம் சம்பாதிக்கிறோம்

      சாகித் வயசுக்கு மூத்தவர் இல்லயேன்றால் இப்படி கேட்க எனக்கு தொன்றுகிறது

      யாருடா இங்கே பிச்சை கேட்கிறோம் அவன் யாருடா நாயே எங்களுக்கு பிச்சை போடுவதற்கு

      இப்படி தன்மானத்தோடு வாழ்கிற எங்களை கேவலப்படுத்துவதற்கு பெயர் சொந்த சமூகத்தை நேசிப்பதா?

      வாயே கேளறாதீங்கே அப்புறம் நான் திட்டுன பிறகு
      மதவெறி மதபோதைன்னு நீங்க எழுத வேண்டியது வரும்

    • உலகத்தில் எந்த தலைவரின் வரலாறும் இவ்வளவு வெளிப்படைக்யாக இருந்ததில்லை.எங்கள்நபியின் வாழ்க்கை போல் தெரியுமா ற்தோழா.அவர் வாழ்ந்த காலத்தில் அடிமை முறை என்பது அனைத்து மக்களாளும் கடைபிடிக்கப்பட்ட ஒரு வழக்கம்.அதை இப்போது கம்பெர்பன்னிவிவாதிப்பதே தவறு.ஒரு மாபெரும் சாம்ராஜியத்தின் ஜனாதிபதியை அவரின் குலத்தை கூறி தன்னை தொடக்கூட விடாத சுதந்திரம் வேறு எந்த மதத்தில் உண்டு கூறுங்கள்.அலாவுதினின் தவறுகளை ஒத்துக்கொண்ட உங்கள்நேர்மைக்குநன்றி

  77. ///நபிகள் பரிசுத்தர் என்கிறீர்களா ?///
    அம்பேத் ,
    நபிகள் நாயகம் பரிசுத்தர் என்பதற்கு உங்களது சான்றிதல் தேவை இல்லை.அவர்கள் காலத்தில் வாழ்ந்த அவர்களை மிருகத்தனமாக எதிர்த்த மக்கள் நபி[ஸல்] அவர்கள் மீது பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டுகள் வைக்கவே இல்லை.மேலும் அதன் மீது ஆசை காட்டியும் அவர்கள் அதன் பால் ஈர்க்கப்படவில்லை .நபி[ஸல்]அவர்களின் ஓரிறை கொள்கையை எதிர்த்தார்களே தவிர அவர்களின் தனி நபர் வாழ்க்கையை அவர்களால் குற்றப்படுத்த முடியவில்லை.

    • அம்பேத் சார்,////சொந்த சாதியின் ஒடுக்குமுறையையும், மதத்தின் ஒடுக்குமுறையையும் அந்தந்த சாதி, மதத்தை சேர்ந்தவர்கள் தான் மற்றவர்களை விட கடுமையாக எதிர்க்க வேண்டும், அவர்களால் தான் அதை மிகச்சரியாக அம்பலப்படுத்தவும் முடியும். அதன் தீமையையும், அது தீர்வல்ல என்பதையும் அதிலிருந்து வந்தவர்கள் தான் பிறருக்கு எளிமையாக புரிய வைக்க முடியும். அந்த வகையில் சாகிதும் மற்ற தோழர்களும் செய்வது மிக மிகச் சரியான செயல். எனவே சாகித் ஏன் இப்படி இருக்கிறார் என்று கேட்பதை விட முற்போக்காக எழுதிக்கொண்டிருக்கும் திப்பு ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தான் கேட்க வேண்டும்.///
      இது உண்மை எனின் மீடியா வில் அல்லாத வகையில் பாதிக்கப்படும் எத்தனை மக்களுக்கு என்ன உதவிகள் செய்தார்? வினவு வில் இஸ்லாத்தினை பற்றி மிகையாக அவதூறு பரப்புவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாகிவிடுமா? இது உங்களைப் போன்ற போலி கம்யுனிச வாதிகளிடம் தங்களின் புகளை உயர்த்திக் கொள்ளவே
      இப்போதும் இங்கும் பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓடிவிட்டார்.

      • இபுராகிம் நீங்கள் அரபி கலந்த தமிழில் பேசியிருக்கிறீர்கள் எனக்கு சுத்தமாக புரியவில்லை கொஞ்சம் தமிழ் மொழியில் பேசுறீங்களா ?

  78. நபிகளார் மீது விசுவாசம், அன்பு வைக்கவேண்டும் என்பது இஸ்லாத்தில் சொல்லப்படாத கடமை. அந்த அன்பு கலந்த விசுவாசத்துடனேயே திப்பு நபியை அணுகுகிறார். போரில் கைப்பற்றப்பட்ட பெண் அடிமைகளுடன் நபியின் தோழர்கள் உறவு வைத்துக் கொண்டது தொடர்பான செயல்களுக்கு ஆலிம்கள், அடிமைகளுக்கு பாதுகாவலர்கள் இல்லாததினாலும் அவர்கள் தவறான வழியில் செல்லாமலிருக்கவும் இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டது என விளக்கம் கொடுக்கிறார்கள். இன்று அரபுநாடுகளுக்குச் வேலைக்குச் செல்லும் பனிப்பெண்களின் நிலையும் அதுவேதான். ஒரேயொரு வித்தியாசம்தான் அன்று ஆயுதத்தினால் பலவந்தப்படுத்தப்ப்ட்டார்கள் இன்று மூலதனத்தால் பலவந்தப்படுத்தப்படுகிறார்கள். அரபிகளின் இத்தகைய செயலுக்கு இஸ்லாத்தையும் விமர்சனப்படுத்தாமல் வேறென்ன செய்வது? திப்பு விளக்கமளிக்க வேண்டும். இன்று இப்பெண்களின் நிலைக்காக உச்சு கொட்டும் சகோதரர்களினால் ஏன் அன்றைய அடிமைகளுக்காக உச்சு கொட்டமுடிவதில்லை?

    • ////இன்று அரபுநாடுகளுக்குச் வேலைக்குச் செல்லும் பனிப்பெண்களின் நிலையும் அதுவேதான். ஒரேயொரு வித்தியாசம்தான் அன்று ஆயுதத்தினால் பலவந்தப்படுத்தப்ப்ட்டார்கள் இன்று மூலதனத்தால் பலவந்தப்படுத்தப்படுகிறார்கள். அரபிகளின் இத்தகைய செயலுக்கு இஸ்லாத்தையும் விமர்சனப்படுத்தாமல் வேறென்ன செய்வது? திப்பு விளக்கமளிக்க வேண்டும்///

      இந்தியாவிலும் வீட்டு வேலைக்கு சென்றால் ,அவள் இளம் பெண்ணாக இருந்தால் நிலைமை அதுதான்..எந்த நாட்டிலும் எந்த பணக்காரன் வீட்டிலும் பெண்கள் வீட்டு வேலைக்கு சென்றாலே பலவந்த படுத்தபடுவது சகஜமே

      • ஆக, ஒருவன் நல்லவனாகவோ கெட்டவனாகவோ இருப்பதற்கு எந்தவிதத்திலும் மதம் காரணமாகாது இல்லையா?

        • மதம் ஒருவனை நெறிபடுத்தவே தான்..,அதிகமானமக்களை இஸ்லாம் நல்லவர்களாக ஆக்கியுள்ளது .பல கல்லூரி மாணவர்களை இஸ்லாம் ஒழுக்க சீலர்களாக ஆக்கியுள்ளது .பலரை தர்ம சிந்தனையாளர் களாக மாற்றியுள்ளது.
          பாசிதை எந்த விதத்திலும் மதம் கெடுக்கவில்லை.அவரை இஸ்லாம் ஒழுக்க நெறியுடன் வாழ வைத்துள்ளது..அவர் காம உணர்வு அதிகமாக உள்ளவாராக இருந்திருப்பாரானால் இஸ்லாம் இந்த மட்டில் அவரை காப்பாற்றி உள்ளது.அவர் மதத்தில் ஈடுபாடு அல்லதவாரக இருந்தால் இன்று அவர் மதுவும் மாதுவுமாக சீரழிந்து மனிதநிலை கெட்டவராக இருப்பார்.

    • உலகத்தில் எந்தமூலைக்கு சென்றாலும் பெண்களின்நிலை இதுதான்.என்னவோ ரஷியாவிலும் அமெரிக்காவிலும் மற்றமேலைநாடுகளிலும் பெண்கள் சுதந்திரமாக வேலைக்கு போவது போல் சித்தரிக்கவேண்டாம்.னமதுநாட்டில் மட்டும் என்ன வாழுகிறது.பெண்களை போகப்பொருளாக பார்க்கும்நிலை எல்லானட்டிலும் உள்ளது.இதற்காகவும் உச்சு கொட்டிக்கொள்ளவும்

  79. ## இப்போதைய வாதப்படி அடிமை என்ற முறையில் அப்பெண்ணை நபிகளார் பாலுறவுக்கு அழைத்தார் என அவதூறு கூறுகிறீர்கள்.அந்த நிகழ்வை முழுமையாக படிக்கும் எவரும் நீங்கள் நபிகளாரை இழிவு படுத்துவதை உணர்ந்து கொள்ள முடியும்.நபிகள் அன்பளிப்பு செய்ய கேட்டபோது அப்பெண்ணின் வளர்ப்புத் தாயும் உடன் இருந்திருக்கிறார்.யாராவது மூன்றாவது நபர் முன்னிலையில் கலவிக்கு எத்தணிப்பார்களா.உங்கள் மூளையில் பொங்கும் இசுலாமிய வெறுப்பு உங்கள் அறிவு கண்களை மறைப்பதால் இப்படியெல்லாம் கீழ்த்தரமாக எழுத முடிகிறது. பகுத்தறிவு உள்ள ஒரு மனிதன் உங்கள் வாதத்தை ஏற்பானா.

    உண்மை என்னவென்றால் நபிகளார் அந்த பெண்ணின் தந்தையிடம் திருமண ஒப்பந்தம் செய்திருக்கிறார்.அந்த பெண்ணுக்கு அது சம்மதம்தானா என்பதை அறிந்து கொள்ளவே அவ்வாறு கேட்டிருக்கிறார்கள்.வளர்ப்புத் தாயும் உடன் இருந்திருக்கிறார் என்பதை வைத்து இப்படித்தான் பொருள் கொள்ள முடியும்.நீங்கள் சொல்வது போல் பொருள் கொள்ள முடியாது.##

    திப்பு பாய்,
    உமைமா குறித்த ஹதீஸை முந்தைய கட்டுரையில் தலாக் பற்றிய தலைப்பில் எடுத்துக்காட்டாக தந்துள்ளேன். கணவனே நேரடியாக தலாக் சொல்லலாம் என்ற தலைப்பில் புகாரி தந்துள்ள ஹதீஸ் அது. அது ஒன்று தான் அவர் தரும் ஆதாரம். அதனால் அது எடுத்துக்காட்டுத் தரப்பட்டது. திருமணம் செய்தாரா இல்லையா என்ற விவரங்கள் அந்தக்கட்டுரைக்கு அவசியமில்லாதது. ஆனால் இக்கட்டுரையின் பின்புலத்திற்கு அவசிமானது என்பதால் பின்னூட்டத்தில் எடுத்துக்காட்டாக தரப்பட்டுள்ளது.

    உங்களின் கூற்றுப்படி திருமணம் செய்து கொண்டார் என்றே வைத்துக்கொள்வோம். அப் பெண்ணிடம் திருமணத்திற்கான அனுமதி பெறாமல் தந்தையிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்வது முறையானதா? ஒப்பந்தம் போட்டது மட்டுமல்லாது வலுக்கட்டாயமாக அவர் தன்னுடைய இடத்திற்கு அழைத்து வந்ததாகவும் பொருள்படுகிறது. காரணம் (உங்கள் கூற்றுப்படி அன்பளிப்புச் செய் என்பது திருமணத்திற்கான ஒப்பந்தம் என்று எடுத்துக்கொண்டாலும்,) அப்பெண் “ஒரு இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா” என்று மறுப்பதாகும். விருப்பத்துடன் வந்திருந்தால் மறுக்க மாட்டாள்தானே. ஒருபெண்ணின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது என்ற சரீயத்சட்டத்திற்கு முரணாக முகம்மதுநபியே வழிகாட்டியாக அமைகிறார்.

    திருமணத்திற்கு சம்மதாமா என்று கேட்காமல் அன்பளிப்புச் செய் என்று முகம்மதுநபி கேட்பது திருமணம் செய்யவில்லை என்பதையும், அடிமையை அழைப்பதாகத்தான் காட்டுகிறது.

    மூன்றாம் நபர் முன்னிலை யாரும் உடலுறவு கொள்வார்களா என்று நீங்கள் கேட்பதி சிறு பிள்ளைத்தனமானது. உமைமா சம்மதம் தெரிவித்துவிட்டால் அந்த மூன்றாமவர் வெளியே வந்துவிடப்போகிறார். வெளியே வரவே முடியாதா?

    உங்களின் பிற கேள்விகளுக்கு அம்பேத் அவர்கள் தந்த பதில் போதும் என்று கருதுகிறேன்.
    அதுசரி. பிற இசுலாமியர்கள் குற்றம் செய்தால் அவர்களை இசுலாமியர்களே இல்லை என்று சாதிக்கிறீர்கள். தவ்ஹீதிலுள்ளவர்கள் தனிமனித ஒழுக்கம் என்கிறீர்கள். இது என்ன வகை நாக்கு என்று என்று தெரியவில்லை.

    இசுலாத்தை பிற மதத்தவர் அல்லது மதத்திலிருந்து நாஆத்திகர்களானவர்கள் விமர்சித்தால் “ உனக்கென்ன இசுலாத்தின் மாணபைப் பற்றி தெரியும் , உனக்கு அதற்கெல்லாம் தகுதி இல்லை என்கிறீர்கள். இசுலாத்திலிருந்து வெளியேறிவர்கள் விமர்சித்தால் இசுலாமியப்ப பெயரை ஏன் வைத்துக்கொண்டிருக்கிறாய் பெயரை மாற்று என்கிறீர்கள். புனைப்பெயரில் எழுதினால் மறைந்து கொண்ட கோழை என்கிறீர்கள். இது என்னவகை மனநோய் என்றே தெரியவில்லை.

    • சாகித்.
      \\அப் பெண்ணிடம் திருமணத்திற்கான அனுமதி பெறாமல் தந்தையிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்வது முறையானதா? ஒப்பந்தம் போட்டது மட்டுமல்லாது வலுக்கட்டாயமாக அவர் தன்னுடைய இடத்திற்கு அழைத்து வந்ததாகவும் பொருள்படுகிறது. காரணம் (உங்கள் கூற்றுப்படி அன்பளிப்புச் செய் என்பது திருமணத்திற்கான ஒப்பந்தம் என்று எடுத்துக்கொண்டாலும்,) அப்பெண் “ஒரு இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா” என்று மறுப்பதாகும். விருப்பத்துடன் வந்திருந்தால் மறுக்க மாட்டாள்தானே. ஒருபெண்ணின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது என்ற சரீயத்சட்டத்திற்கு முரணாக முகம்மதுநபியே வழிகாட்டியாக அமைகிறார்.
      திருமணத்திற்கு சம்மதாமா என்று கேட்காமல் அன்பளிப்புச் செய் என்று முகம்மதுநபி கேட்பது திருமணம் செய்யவில்லை என்பதையும், அடிமையை அழைப்பதாகத்தான் காட்டுகிறது.//
      உமைமா தொடர்பான நிகழ்வை நபிகளார் மீது அவதூறும் கற்பிக்கும் நோக்கத்தில் மீண்டும் மீண்டும் திரித்து புரட்டி புழுதி வாரி இறைக்கிறீர்கள்.அந்த நிகழ்வை முழுமையாக தலாக் குறித்த முந்தைய விவாதத்தில் சகோதரர் அன்சார் தந்துள்ளார்.

      பார்க்க;https://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/#comment-46756

      அந்த பெண்ணின் தந்தை ஒரு இனக்குழுவின் தலைவர்.புதிதாக இசுலாத்தை ஏற்றுக்கொண்டவர்.அவர் தாமாகவே முன்வந்து நபிகளாருக்கு தனது மகளை திருமணம் செய்விப்பதாக கூறி ஒப்பந்தம் செய்து கொண்டு அதன்படி நபியின் தோழர் ஒருவரை தனது ஊருக்கு அழைத்துச் சென்று அவரது பாதுகாப்பில் தனது மகளை அனுப்பி வைக்கிறார்.

      ஆனால் இந்த உண்மையை மறைத்து உமைமா அடிமையாக பிடிபட்டவர்,அதனால் அவரிடம் முகமது பாலியல் அத்துமீறல் செய்ய முயன்றார் என்று நபிகளார் மீது அவதூறு கூறும் நோக்கில் கூசாமல் பொய்யுரைக்கிறீர்கள்.

      அந்த பெண்ணுக்கு நபியுடனான திருமணத்தில் விருப்பம் இல்லையெனில் தனது தந்தையிடம் ஆட்சேபனை எதுவும் சொல்லாமல் நபியின் தோழருடன் ஏன் புறப்பட்டு வரவேண்டும்.ஆகவே நபிகளார் கட்டாயப்படுத்தி அவரை அழைத்து வந்தார் என்ற உங்கள் குற்றச்சாட்டும இட்டுக்கட்டப்பட்டதே.வந்த பின் அந்த பெண் மனதில் ஏதோ மாற்றம் ஏற்பட்டு திருமணத்தை ஏற்க மறுக்கிறார்.அதையும் நபிகளார் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்கிறார்.அந்த சனநாயக பண்பை பாராட்டுவதை விடுத்து நபிகளாரை ஒரு பாலியல் குற்றவாளி போல் சித்தரிக்கும் கயமையை செய்கிறீர்கள்.

      இவ்வளவு பொய்யும் புனைசுருட்டுமாக எழுதிவிட்டு அதுசரிதான் என வாதிக்கும் உங்களுக்கு மனநோயா உண்மையை சொல்லி அதை மறுக்கும் எங்களுக்கு மனநோயா.தடம் புரண்டு புரண்டு பொய்யுரைப்பது யாருடைய நாக்கு.

      • ஆமாமா 1500 வருசத்துக்கு முன்ன நடந்த நபியோட கலியாணம் தான் இப்போ ரொம்ப ரொம்ப முக்கியம். அதுல ரெண்டுல ஒன்னணை பார்த்துவிட்டால் உலக பிரச்சனைக்கெல்லாம் தீர்வு கிடைச்சிடும் விடாதீங்க தோழர்களே-சகோதர்களே
        இந்த உலகத்தோட எதிர்காலம் உங்கள் கையில்

  80. ‘புதிய கலாச்சாரம் தோற்றுவிட்டது’ உணர்வு பத்திரிக்கையின் கட்டுரையாளரின் சுய சொரிதல்.

    ##இப்போதும் இங்கும் பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓடிவிட்டார்.## இது இபுராகிமின் சுய சொரிதல்.

    சொரிந்து கொள்வதற்கு ஒரு அளவே இல்லையா ?

    பாசித்தை அமைப்பிலிருந்து விலக்கப்பட்டதாக திரும்ப திரும்ப பொய்வேறு. ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போடுபவர்கள் பொய்யைச் சொல்லாமல் வேறு என்ன சொல்வார்கள்.
    பாசித் விலக்கப்ட்டால் அதன் பிறகான மணல்மேல்குடி நிகழ்வுகளில் நிறைய வேடிக்கை காத்திருக்கிறது.

  81. இபுராகிம் அண்ணா,
    மனம் திருந்தி முஸ்லீமாக மாறிவிட்டேன்னு சொல்லிவிட்டு இப்போ கழிசடை என்று கழற்றுகிறீர்களே. உறவை பலப்டுத்த எவ்வளவு ஆர்வமாக இருக்கேன் தெரியுமா ! நம்ம முக்தார், சேக் , நஜிம் இப்படி 50 பேர்களுக்கு மேல் உறவை பல்படுத்த தயாராகிட்டோம். இவர்களெல்லம் யார் என்று கேட்கிறீர்களா? பிஜே எஜமானுக்கு நல்லா தெரியும். அவரிடம் கேட்டுக்குங்க.
    நீங்க வரச் சொல்லாட்டாலும் நாங்கள் எல்லோரும் ஒருநாள் திடீரொன்று தாவாவுக்கு வந்துவோமுள்ள.

  82. நண்பர்களே,
    இசுலாம் விமர்சிக்கப்படுவதால் உணர்வு பூர்வமாக உந்தப்பட்டு மறுப்பு எழுதுகிறேன் எனபது தவறான கணிப்பு.சமூகத்தின் எந்த ஒரு பிரிவினரானாலும் அவர்களை வஞ்சிக்கும் வகையில் வரும் கருத்துக்களுக்கு இந்த வகையில்தான் எனது எதிர்ப்பு இருக்கும்.தலித் மக்களுக்கு எதிராக,இட ஒதுக்கீடுக்கு எதிராக,விவசாயிகளுக்கு எதிராக,அவ்வளவு ஏன் ”உலகின் அழகிய மணமக்கள்”பதிவில் மணமகளின் தந்தைக்கு எதிராக, ஒடுக்கப்படும் மக்களின் எதிரிகள் நஞ்சு கக்கியபோதேல்லாம் அவற்றை மறுத்து இதே போன்ற உணர்வுடன் வாதங்களை எடுத்து வைத்திருக்கிறேன்.[இதை பெருமைக்காக சொல்லவில்லை.சான்றாகத்தான் சொல்கிறேன்]

    இசுலாமிய சமூக மக்கள் என்று வரும்போது உங்களிடம் எப்போதுமே அவர்கள் குறித்து ஒரு மட்டமான அபிப்ராயமே வெளிப்படுகிறது.உடனே தாழ்வு மனப்பான்மையால், பாதுகாப்பற்ற சமூக சூழலால் ,ஏற்படும் கற்பனை என கதைக்க வேண்டாம்.சான்றுகள் தருகிறேன்.
    அலாவுதீன் அற்புத விளக்கு பதிவில் நான் அவருக்கு ஆதரவாக எழுதியவற்றை இப்போது எடுத்துப்போடும் நீங்கள் அதே பதிவில் இசுலாமிய மக்களை கால்நடைகளுக்கு ஒப்பாக நீங்கள் எழுதியதை கண்டித்து நான் இட்ட பின்னூட்டத்திற்கு மவுனத்தையே மறுமொழியாக தந்தீர்கள்.மவுனம் சம்மதத்தின் அறிகுறி என்றால் அப்படி எழுதியது சரிதான் என்கிறீர்களா.
    இப்போது கூட கலை இசுலாமிய மக்கள் ஆறாம் நூற்றாண்டு அடிமை சமூக மனநிலையிலிருந்து வெளிவரவில்லை என்கிறார்.நிலவுடைமை சமூகம்,முதலாளித்துவ சமூகம்,இன்றைய ஏகாதிபத்திய உலக சமூக ஒழுங்கு பற்றிய புரிதல் பொதுவுடைமையாளர்களான நமக்கு மட்டுமே உண்டு என்ற உயர்வு மனப்பான்மை அவரை இப்படி ஏளனம் பேச வைக்கிறது.அவருக்கு ஒரே வரியில் ஒரு விடை.மக்கள் [அவர்கள் எந்த மதத்தை பின்பற்றுபவர்கள் ஆனாலும்] என்னை விட உங்களை விட அறிவாளிகள்.நினைவில் வையுங்கள்.
    அரபு நாடுகளில் பணியாற்ற செல்லும் அபலை பெண்களின் நிலை குறித்து விளக்கம் அளிக்க கோருகிறார் கலை.இது குறித்து ஏற்கனவே ”சவூதி எனும் நரகத்தீயில் பெண்கள்”பதிவில் விளக்கம் அளித்திருக்கிறேன்.என்ன நீங்களும் உங்கள் தோழர்களும்தான் வழக்கம் போல் கள்ள மவுனம் சாதித்து விட்டீர்கள். பார்க்க.https://www.vinavu.com/2010/08/13/saudi-women-labours/#comment-29073

    இந்த பதிவிலும் இசுலாமிய மக்களை இழிவு படுத்த நீங்கள் தவறவில்லை.பாசித்தின் கள்ள உறவுக்கு [அவை உண்மையில் நடந்தவை எனும்பட்சத்தில்] பலியானவர்கள் இசுலாமிய சமூக பெண்கள் என்று பூடகமாக உணர்த்துகிறது கட்டுரை.பாசித் எப்படி ”கொக்கி”போட்டார் என்பதையும் விவரித்துள்ளீர்கள்.[உண்மையில் இப்படி ஒரு கேடு கெட்ட கழிசடைத்தனத்தை மீண்டும் மீண்டும் எழுத அருவருப்பாகவும் அவலமாகவும் உள்ளது]அதாவது காமுகன் ஒருவன் இசுலாமிய சமூக பெண்களிடம் தனது மனைவியை இகழ்ந்து பேசி நீ அழகாக இருக்கிறாய், நீ என் வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவள் என்று பேசினால் அவர்கள் அடிமை என ஒப்புக்கொண்டு படுக்கைக்கு வந்து விடுவார்கள்.இது அந்த பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா.அந்த சமூகத்தையே இழிவு படுத்துவது இல்லையா.

    சாதாரண தட்டச்சு பிழைக்கு கூட சுய விமர்சனம் ஏற்கும் ”உயர்ந்த பண்பு” கொண்ட பொதுவுடைமையாளர்களான நீங்கள் [யாரும் சிரிக்காதீர்கள்,அம்பத்தூரில் நடந்த முதலாளித்துவ எதிர்ப்பு மாநாட்டில் போதுமான அளவுக்கு சோறு ஆக்கி வைக்கவில்லை என்பதற்கு கூட தோழர் முகுந்தன் சுய விமர்சனம் ஏற்றுக்கொண்டார்] இவ்வளவு பெரிய தவறுகளுக்கு சுய விமர்சனம் ஏற்பீர்களா.

    இன்னும் எழுத வேண்டியது இருக்கிறது.நாளை சந்திப்போம்.

    • சகோதரர் திப்பு

      //அதே பதிவில் இசுலாமிய மக்களை கால்நடைகளுக்கு ஒப்பாக நீங்கள் எழுதியதை கண்டித்து நான் இட்ட பின்னூட்டத்திற்கு மவுனத்தையே மறுமொழியாக தந்தீர்கள்.மவுனம் சம்மதத்தின் அறிகுறி என்றால் அப்படி எழுதியது சரிதான் என்கிறீர்களா.//

      என்னுடைய ஆதங்கமும் இதுதான்

      • இசுலாமிய மத அமைப்புகள் இசுலாமிய மக்களை ”பத்தி” விடுகின்றன என்னும் சொல் ஐதருக்கும், திப்புவுக்கும் இசுலாமியர்களை ஆடு மாடு போல எழுதிவிட்டார்கள் என்னும் தோற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியதாம்.. அடேங்கப்பாடியப்பா? ”சுத்தமான அக்மார்க் நயம் டமிள் யானைப்பால்” குடிச்சே வளர்ந்தவங்க போல???

        ஐயா புலவர்களே பத்தி விடுவது என்பது கால்நடைகளுக்கு மட்டும் அல்ல மக்கள் கூட்டத்தை இங்கே போ அங்கே போன்னு அதிகாரத்தோடு விரட்டி விடுவதையும் குறிக்கும், வழக்கு மொழிதான். இது தெரியாதுன்னு மட்டும் சொல்லிப்புடாதீங்க அப்புறம் சாமி கண்ணை குத்திடும் 🙂

        அது எப்படிங்க பார்ப்னியத்துல கைவச்சா எப்படி ஆர்.எஸ்.எஸ் காரன் எப்படி பிலாக்கணம் வாசிப்பானோ , அச்சு அசலா அப்படியே வாசிக்கிறீங்க…???

        • //அது எப்படிங்க பார்ப்னியத்துல கைவச்சா எப்படி ஆர்.எஸ்.எஸ் காரன் எப்படி பிலாக்கணம் வாசிப்பானோ , அச்சு அசலா அப்படியே வாசிக்கிறீங்க…???//

          ஆமா இவுக ஆசான்களை திட்டுன லீணா……வை போய் வாழ்த்திட்டு வந்த நீர் எல்லாத்தும் மேலே அதிகமாக யானைப்பால்” குடித்ததை நீருபித்தீர்

          லீணாவை நாங்க மகளிர் அணியை வச்சு செருப்ப கழட்டி அடிக்க போகவிலையேன்று புளுகி வீடாதிர்

          கார்ல்மர்க்ஸ் கொல தெய்வம் கனவுலே வந்து……….

          • ஐதர் காகா, உண்மையை சொன்னா கோவம் வரும், கோவம் வந்த ஒடனே நல்லா காமெடி பண்ணுறீக, ஆனா காமெடிங்கர பேருல உண்மையை திரிக்க கூடாது, அந்தம்மா லீனா பெண் தோழர்களை அடிக்க பாஞ்சாக, அவங்களுக்கு பதிலுக்கு பாஞ்சாக.. ஆனா பாஞ்சதோட சரி, யாரும் ஒருத்தலை ஒருத்தரு அடிச்சுகிடல. அதனால வேற எதாச்சும் டிரை பண்ணுங்க..

            • ஊசி குருவி நீங்க பொய்யா சொல்லி போறீகே நீங்கதான் கம்யூனிஸ்ட ஆச்சே

              உங்கள் பெண் தோழர்கள் அடிக்க போனது வீடியோ ஆதாரத்தோட இருக்கு ntt டிவி
              சேனலில் கூட காமிச்சாங்க அதே எப்படி சாமளிப்பீங்கன்னு உங்களுக்கு சொல்லி வேற கொடுக்கனுமா? முதலாளித்துவ பாசிச ஊடகங்கள் திரித்து விட்டன என்று கோவப்படமே நிதானமாக காமெடி பன்னுவீங்கே தப்பு தப்பு ஒங்களுக்கு காமெடி பன்னவே தெரியாது நீங்க நேர்மையாளர் ஏனா? நீங்க கம்யூனிஸ்ட் அச்சே

              • அண்ணே கோவத்தை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்கன்னே பிரசர் ஏறிச்சுன்னா ஒடம்புக்கு ஆவாது, அப்புறம் நீங்க அதுக்காகவேற ஒரு எக்சைசு எக்ஸ்டிராவா பண்ணனும் 🙂

                நான் மேலே என்ன சொன்னேன், அவங்க அடிக்க பாஞ்சாங்க, பதிலுக்கு நாங்களும் அடிக்க பாஞ்சோம்னுதானே சொன்னேன்… அதையே திருப்பி அதே வார்த்தையில சொல்லிட்டு பொய் பொய்யுன்னு அலருனா எப்பூடீன்ன்னேன்…

                அடுத்து என்-டி டீவியல அவங்க அடிக்க பாஞ்சதை காமிக்கலயேன்னு கேக்காதீங்க, அது என்ன ஒன்டே மேட்சா என்-டி டீவி, பிபிசியெல்லாம் லைவா கவரேஜ் செய்ய, லீனா கம்பெனி காரவுக எடுத்த வீடியோவை அவங்க என்டிடீவிக்கு கொடுத்ததை அவங்க போட்டாங்க.. இது ஒங்களுக்கு தெரியும்.. ஆனான ஒரு சின்னப்பயகிட்ட விவாத்துல தோக்குறதாங்கற அறச்சீற்றத்தல என்னமோ ஓலப்பாயில தண்ணி ஊத்துன மாதிரி சல சலன்னு என்னத்தையோ அடிச்சுட்டிருக்கீக

                • //அண்ணே கோவத்தை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்கன்னே பிரசர் ஏறிச்சுன்னா ஒடம்புக்கு ஆவாது, அப்புறம் நீங்க அதுக்காகவேற ஒரு எக்சைசு எக்ஸ்டிராவா பண்ணனும்//

                  எங்க அண்னனுக்கு என்ன அக்கறை கண்ட்ரோல் பண்ணிவிட்டேன்
                  ஆனா இதையும் நாளைக்கு விளம்பரம் பண்ணி
                  சின்னபுள்ளைகளே சொல்றமாதிரி அன்னைக்கு நான் கொடுத்த மிட்டய்யே திண்டேயில்லே கக்கு என்பது போல் முசுலிம்களே நாங்க தான் காப்பத்துனம் காப்பத்துனமுன்னு சொல்லபிடாது சரியா.

                  //என்னமோ ஓலப்பாயில தண்ணி ஊத்துன மாதிரி சல சலன்னு என்னத்தையோ அடிச்சுட்டிருக்கீக//

                  நீங்கே ரொமப நிதானமாகத்தான் இருக்கிங்கே!? ஒங்கள தொற்கடிக்க முடியுமா நீங்க ஊசி உருவில் வந்திருக்கும் கடப்பறை

                  • அண்ணே, எங்கூரு பக்கமெல்லாம் ஓலப்பாயில ஒண்ணுக்குப் பேஞ்சா மாதிரி சொள சொளன்னு பேசுறதுல பிரயோசனம் இல்லேம்பாங்க.. அதத்தான் கொஞ்சம் பாலிசா சொன்னேன் ஆனா பாருங்க, நீங்க எழுதரதுக்கு ஒன்னுக்கே தேவலாம் போலிருக்கு…

                    முசுலீம்களுக்கு ஒத்தாசை செய்ய நாங்க எதுக்குன்னேன், அதான் ஆர்.எஸ்.எஸ் காரனும் அமெரிக்கா-இசுரேல் காரனும் இருக்கான் இல்ல, நேர சொர்கத்துக்கு அனுப்புறதுதான் அவனோட மொத வேலையாம்.. இதைவிடவா மத்தவங்க ஒத்தாசை செஞ்சுட முடியும்…?

                  • அண்ணே,
                    இதுவரைக்கும் நீங்க பதிவ பத்தி பேசவே இல்ல போல. பாசித்துக்கு இன்னுமா லைன் போய்ட்டேயிருக்கு

        • ஆகா,என்ன ஒரு அறிவு உங்களுக்கு ஊசி,
          தமிழை ஏட்டளவிலேயே கற்று ஏட்டு சுரைக்காயை மட்டுமே அறிந்திருந்த எனக்கு மக்கள் மொழியை எடுத்துச் சொல்லி அறிவு கண்களை திறந்து விட்டமைக்கு மிக்க நன்றி.

          க.க.க.போ.[கருத்துக்களை கன்னா பின்னாவென கக்குகிறீர்கள்,போங்கள்]

          ஒரே ஒரு வேண்டுகோள்.அடுத்தமுறை ம.க.இ.க.அரங்க கூட்டமோ மாநாடோ நடக்கும்போது நிகழ்ச்சி துவங்கும் முன்பு நீங்கள் மேடையேறி ஒலி பெருக்கியில்

          ”நிகழ்ச்சி துவங்குகிறது.வெளியில் ஆங்காங்கே நிற்பவர்களை உள்ளே பத்தி விடுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கேட்டுக் கொள்கிறேன்

          என்று அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

          ஆமாங்க ஊசி, நேரம் குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு கட்டுப்பாடாக உள்ளே வந்து அமராமல் அந்த நேரத்திலும் வெளியில் புகை பிடித்துக்கொண்டோ,பேசிக்கொண்டோ நின்று கொண்டிருப்பவர்களை அதிகாரமாக உள்ளே விரட்டி விட உங்களுக்கு முழு உரிமை உண்டு.

          • திப்பு, நான் மேலே தெளிவாக குறிப்பிட்டது ”அதிகாரத்தோடு விரட்டி விடுவதை குறிக்கும் வழக்கு மொழி என்று” இது காவல்துறை போன்று மக்களை அதிகாரம் செய்பவர்களை, அவர்களின் செயலை, அந்த அதிகாரத் தோரணையை, நாட்டாமைதனத்தை குறிப்பிடும் சொல், அந்த கண்ணோட்டத்தில்தான் தவ்கீதின் செயலும் மக்களை பத்திவிடுகிறார்கள் என்று விமர்சிக்கப்பட்டது. இது ஒன்றும் உங்களுக்கு தெரியாததல்ல ஆனாலும் விதண்டாவாதம் செய்கிறீர்கள்.

            இஸ்லாமை விமரிசனம் செய்வதால் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் உங்களுக்கு எங்கள் மேல் கோபம் இருக்கலாம், ஆனால் அதை நியாயப்படுத்த இப்படி வலுவில்லாத வாதங்களை முன்வைக்காதீர்கள். அதுவும் அந்த கண்ணோட்டம் இம்மியளவும் இல்லை என்று தோழர்கள் விளக்கியபின்னரும் விடாமல் பிடித்துக்கொண்டிருப்பது அழகன்று.

            மக்கள் விரோதிகளிடம் கூட அமைதியாக ஆணித்தரமாக வாதத்தை முன்வைக்கும் திப்புவிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை 🙁

          • இசுலாம் விமர்சிக்கப்படுகிறது என்பதால் நீங்கள் உணர்ச்சிவயப்பட்டு எழுதுகிறீர்கள் என்பதற்கு இந்த பின்னூட்டமும் ஒரு சான்று திப்பு.

            • அம்பேத்,ஊசி ஆகியோரின் கவனத்திற்கு ////இசுலாமிய மத அமைப்புகள் இசுலாமிய மக்களை ”பத்தி” விடுகின்றன என்னும் சொல் ஐதருக்கும், திப்புவுக்கும் இசுலாமியர்களை ஆடு மாடு போல எழுதிவிட்டார்கள் என்னும் தோற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியதாம்.. அடேங்கப்பாடியப்பா? ”சுத்தமான அக்மார்க் நயம் டமிள் யானைப்பால்” குடிச்சே வளர்ந்தவங்க போல???///

              /////ஒரே ஒரு வேண்டுகோள்.அடுத்தமுறை ம.க.இ.க.அரங்க கூட்டமோ மாநாடோ நடக்கும்போது நிகழ்ச்சி துவங்கும் முன்பு நீங்கள் மேடையேறி ஒலி பெருக்கியில்

              ”நிகழ்ச்சி துவங்குகிறது.வெளியில் ஆங்காங்கே நிற்பவர்களை உள்ளே பத்தி விடுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கேட்டுக் கொள்கிறேன்

              என்று அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.////[திப்பு]
              ///இஸ்லாமை விமரிசனம் செய்வதால் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் உங்களுக்கு எங்கள் மேல் கோபம் இருக்கலாம், ஆனால் அதை நியாயப்படுத்த இப்படி வலுவில்லாத வாதங்களை முன்வைக்காதீர்கள்.///[ஊசி]

              சரி ,இப்படி சொலலாமா? “தோழர்களே! செங்கொடி நண்பர்களே ! எல்லோரும் அரசு பஸ் நோக்கி ஓடுங்கள் ,அதில் ஏறுங்கள் ,டிக்கெட் எடுக்காதீர்கள்,நம்ம பஸ்தான் ,நமது வரி பணத்தில் வாங்கிய பஸ்கள் தான்,நமது மத்திய அரசாங்கம் வாங்கிய பெற்றோல்லில் தான் ஓடுகிறது.இன்னும் நமது தோழர்கள் செங்கொடி,கலை,சுஜித்கான்,அம்மாபட்டணம் ஊர்காரன் எல்லாம் சவுதியில் சென்று உழைத்து வாங்கி அனுப்பிய டீசலில் தான் ஓடுகிறது அதனால் யாரும் டிக்கட் எடுக்காதீர்கள்.என்று மகைக மேடையில் பேசியவர் மகைக தோழர்களை பஸ்ஸை நோக்கி பத்திவிட்டார் என்று சொன்னால் அப்போது பொருந்தும் தானே !

              ஊசி,அம்பேத் நீங்கள் எப்படி முஸ்லிம் தலைவர்களின் சொல்லை ஆடு மாடு போல் சிந்திக்காமல் முஸ்லிம்கள் அதை ஏற்று செயல்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்களோ ,அதைப் போன்றே மகைக தோழர்களும் அதன் தலைவர்கள் சொல்லை கேட்டு ஆடுமாடுகள் போல் அதை அப்படியே ஏற்று செயல்படுகிறார்கள் என்று சகோதரர் திப்பு கூறுகிறார்.

              அம்பேத் ///இசுலாம் விமர்சிக்கப்படுகிறது என்பதால் நீங்கள் உணர்ச்சிவயப்பட்டு எழுதுகிறீர்கள் என்பதற்கு இந்த பின்னூட்டமும் ஒரு சான்று திப்பு.///

              மேலே கண்டது உங்கள் கூற்று .ஆம்,நான் உங்களிடம் “ஆணாதிக்கம் இல்லாமை” பற்றி வினவியதும் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு எடுத்து வைத்த குப்பை கூளங்கள் போன்ற தரத்திலுள்ள கீழ் காணும் சுட்டிகளை எடுத்து வைத்தது

              ////சுட்டிகளை இங்கு போட வேண்டாம் என்று நினைத்தேன் நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்பதால் தருகிறேன்.

              பெண்கள் – இஸ்லாமிற்கு முன்னும் பின்னும்///

              • இப்ராகிம் பாய், நீங்க எவ்வளவுதான் பீல் பண்ணாலும் அது வலுவில்லாத வாதம்தான், உங்க கட்சியான் தவகீத்காரங்களை விமர்சித்த வழக்குதானே அன்றி அது இஸ்லாமிய மக்களை விமர்சித்த ஒன்றல்ல. அதாவது தவ்கீது போன்ற மத அமைப்பினர் மக்களை ஆடு மாடுகளைப்போல (இங்கே போ அங்கே போ, இந்தாட்டம் திமுக, இந்தாட்டம் அதிமுக) என அதிகாரத்தோடு விரட்டுகிறார்கள் என்ற பொருளில்தான் எழுதப்பட்டது.

                அதனால

                சும்மா அதே எடத்துல நிக்காம நவுறுங்க..வேற மேட்டர் தறேன்.. ஏற்கனவே மேலே கேட்டதுதான்

                கள்ள காதலர்களின் புகலிடம் மயிலாடுதுறை விஜயா திரை அரங்கம்

                http://kiliyanur.net/index.php?option=com_content&view=article&id=109:kallakatharhalin-theatre&catid=27:kiliyanur-news&Itemid=27

                இப்ராஹிம் பாய், திப்பு பாய் மற்றும் ஹைதர் பாய் — மூவரும் இந்த சம்பவத்தை பரிசீலித்து பின்னூட்டம் இடுவார்களா?

                • //மணமகள் அறியாமல் ஒப்பந்தம் செய்வது அழகானதா?//

                  ஆயிஷாவை விட்டுவிட்டீர்களே. ஆயிஷாவிடம் அனுமதி கேட்டா திருமணம் நடந்தது!

                  இதற்கான காரணத்தை எத்தனை தடவை சொல்லியாயிற்று .மீண்டும் இவர் விளக்கம்கேட்கிறார் என்றால் நீங்கள்; கலை சொன்னால் தான் ஏற்கக்கூடிய “பத்தி” நிலையிதான் இருக்கிறார்.
                  ///அதாவது தவ்கீது போன்ற மத அமைப்பினர் மக்களை ஆடு மாடுகளைப்போல (இங்கே போ அங்கே போ, இந்தாட்டம் திமுக, இந்தாட்டம் அதிமுக) என அதிகாரத்தோடு விரட்டுகிறார்கள் என்ற பொருளில்தான் எழுதப்பட்டது.////

                  அவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டது தனதாயதிர்க்காக அல்ல சமுதாயத்திர்க்காகவே என்பதை அதற்க்கான முடிவு எடுக்கப்படும் செயற்குழு வில் நடக்கும் கலந்தாய்வுகளை கண்டவர்களுக்கு தெரியும்.

                  திமுக தேர்தலில் வெற்றிபெறும் கணிப்பில்,களிப்பில் இருக்கும் பொழுது டிஎன்டிஜேவின் கோரிக்கைகளை கண்டு கொள்ள மாட்டிருக்கிரார்கள்.அதிமுக வழிய வந்து கோரிக்கைகளை ஏற்பதாக சொலுகிறது.அதே போன்று இந்த தடவை அதிமுக வெற்றி கணிப்பில் இருக்கும் வேளையில் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு பற்றி தேர்தலுக்கு முன்னர் உறுதி அளிக்க முடியாது என்று கூறியதாலும் கருணாநிதி வாக்குறுதி அளித்ததாலும் மாறி ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை.உன்க்ளஹு போலி கம்யுனிஸ்ட்களுக்கு நீங்கள் சொல்லுவது ஒ.கே

                  ///சும்மா அதே எடத்துல நிக்காம நவுறுங்க..வேற மேட்டர் தறேன்.. ஏற்கனவே மேலே கேட்டதுதான்///

                  இறைவன் நாடினால் நாளை ,,,,

                • ஐயோ! தாலிபான் ஆட்சியா இங்கு நடக்கிறது என்று கூப்பாடு போட தயாராக வேண்டாம்.
                  அனைத்து சமுதாய மற்றும் அனைத்து ஊர் மக்களிலும் இது போன்று ஒழுக்க கேடர்கள் ஐந்து முதல் பத்து சதவீதம் வரை இருப்பார்கள்.இவர்கள் சிறுபான்மையினர் என்பதாலும் கணவர்கள் வெளிநாடுகளில் உழைக்கும் வர்க்கமாக இருப்பதாலும் நம் மக்கள்தான் இவ்வாறு அதிகமாக நடந்து கொள்வதாக நினைக்கிறார்கள் .அதை பர்தாவும் அடையாளம் காட்டி கொடுக்கிறது.இதனால் ஏற்படும் தாழ்வு உணர்வுகள் அவர்களை மிகைத்து செயல்பட வைக்கிறது.அந்த செயல்வீரர்களும் வெளிநாடு உழைக்கும் வர்க்கமே .இது போன்ற நடவடிக்கைகளினால் அந்த பகுதி மக்களும் அவர்கள் வெளிநாடு சென்றால் அவர்கள் வீட்டு பெண்களும் இது போன்ற தவறுகளை செய்து விடக் கூடாது என்ற சுய நலமும் வெளிநாட்டில் இருக்கும் தனது சகோதர மக்களின் குடும்பத்தினரும் இது போன்ற தவறுகளில் விழுந்து விடக் கூடாது என்பதற்காக் எடுக்ல்கப்படும் எச்சரிக்கை நடவடிக்கையே !

    • பின்னூட்டம் இடும்போது சில நேரங்களில் சில பிழைகள் நேர்ந்துவிடுகிறது. நான் அனைத்து முஸ்லீம் மக்களையும் அவ்வாறு குறிப்பிடவேண்டும் என நினைத்து எழுதவில்லை. அவ்வாறு பொருள்படும் ’இது முஸ்லீம்களுக்கு’ என்ற எனது எழுத்திற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மாறாக இணையத்தில் இதற்கு முன் நடந்த விவாதங்களின் தொடர்ச்சியாகவே இதை நான் குறிப்பிட்டேன். எனவே, அடிமை சமுதாய காலகட்ட நியாயங்கள் இப்பொழுதும் பொருந்தும் என்பவர்களுக்கும், பொதுவுடைமை பற்றி கொச்சையாக பேசுபவர்களுக்கும் மீதான எனது கருத்து சரியென்றே கூறுகிறேன். மேலும், ’மக்களிடமிருந்து மக்களுக்கு’ என்ற அடிப்படையிலேயேதான் இயங்கிக்கொண்டிருக்கிறோம். மக்களை நான் ஏளனப்படுத்துபவனல்ல அல்லது என்னை நானே அறிவாளியாக்கிக் கொண்டு சொரிந்து கொள்ளும் அற்பவாதியல்ல என்பதையெல்லாம் இணையத்தில் எழுதுவதின் மூலம் ஆகப்போவது ஒன்றுமில்லை.

      • ///நண்பர்களே,இசுலாம் விமர்சிக்கப்படுவதால் உணர்வு பூர்வமாக உந்தப்பட்டு மறுப்பு எழுதுகிறேன் எனபது தவறான கணிப்பு.சமூகத்தின் எந்த ஒரு பிரிவினரானாலும் அவர்களை வஞ்சிக்கும் வகையில் வரும் கருத்துக்களுக்கு இந்த வகையில்தான் எனது எதிர்ப்பு இருக்கும்///

        வினவு குறிப்பிட்டுள்ளதை போல நீங்கள் மட்டும் தான் இவ்வாறு எழுதுகிறீர்கள், உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவன் என்கிற முறையில் நானும் அதை அறிவேன், இது பாராட்டத்தக்கது தான். ஆனால் இங்கே யாரை வஞ்சித்து எழுதப்பட்டுள்ளது நீங்கள் எதிர்வினையாற்றுவதற்கு ? இசுலாமிய மக்களுக்கு எதிராக வினவில் ஒன்றும் எழுதப்படவில்லையே.

        சிறுபாண்மையினரின் மதம் என்பதாலேயே இசுலாத்தை விமர்சிக்காமல் இருக்க முடியாது. அந்த விமர்சனமும் பெரும்பாண்மை உழைக்கும் இசுலாமிய மக்களின் நலனிலிருந்து தான் வைக்கப்படுகிறது. இசுலாமிய மக்கள் மத அடிப்படைவாதிகளின் பின்னால் அணிதிரள்வது இந்துமதவெறியர்களின் கரத்தை தான் வலுப்படுத்தும், பார்ப்பன பாசிஸ்டுகள் விரும்புவதும் அதைத்தான். எனவே இசுலாத்தை விமர்சித்து எழுதுவது இசுலாமிய மக்களை இழிவுபடுத்துவது ஆகாது. பாசித் தன்னுடைய பொறுக்கித்தனத்திற்கு நபிகளின் நடைமுறையிலிருந்து தான் உதாரணங்களை தருகிறான். அதற்கு உங்களுடைய பதில் என்ன ?

        ///இசுலாமிய சமூக மக்கள் என்று வரும்போது உங்களிடம் எப்போதுமே அவர்கள் குறித்து ஒரு மட்டமான அபிப்ராயமே வெளிப்படுகிறது./// //இசுலாமிய மக்களை கால்நடைகளுக்கு ஒப்பாக நீங்கள் எழுதியதை கண்டித்து நான் இட்ட பின்னூட்டத்திற்கு மவுனத்தையே மறுமொழியாக தந்தீர்கள்//

        இந்துமதவெறியர்கள் அவ்வாறு எழுதலாம் வினவு அவ்வாறு எழுத வேண்டிய அவசியம் என்ன ? இதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் இப்படி அடிப்படையற்ற முறையில் குற்றம் சாட்டுவது சரியா ?

        ’அலாவுதீன் ஒரு அற்புத விளக்கு’ பதிவில் நீங்கள் குறிப்பிடும் அந்த பத்தி இது தான்.

        “தவ்ஹீத் ஜமாத்தோ, த.மு.மு.கவோ அல்லது பிற இசுலாமிய அமைப்புகளோ திமுக, அதிமுக யாரோடு வேண்டுமானாலும் கூட்டு சேருவார்கள். அவர்களுக்கு ஓட்டுப் போடச்சொல்லி இசுலாமிய மக்களை பத்தி விடுவார்கள்.”

        இவ்வாறு நடக்கிறதா இல்லையா ? இசுலாமிய அமைப்புகள் மட்டுமல்ல தலித் அமைப்புகளும் கூட இப்படி தான் நடந்து கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை ஓட்டுப்பொறுக்கிகளிடம் அடகு வைக்கிறார்களா இல்லையா ? ஒடுக்கப்பட்ட தலித், சிறுபாண்மை மக்களின் வாக்குகளை ஓட்டுக்கட்சிகளுக்கு பெற்றுத்தர மாறி மாறி ஓட்டுப்போட அம்மக்களை மந்தைகளை போல நடத்துகிறார்களா இல்லையா ? ஆம் எனில் வினவு அதை தான் மேற்கண்ட பத்தியில் எழுதியுள்ளது. இதைச் சுட்டிக்காட்டுவது எப்படி இழிவுபடுத்துவதாகும் ? பாதிரி வேடத்தில் பொறுக்கித்தனம் செய்துகொண்டிருந்த ராஜரத்தினத்தை அம்பலப்படுத்திய போது என்ன நடந்தது ? ம.க.இ.க தலித் மக்களை இழிவுபடுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார்கள் https://www.vinavu.com/2010/10/15/st-josephs-trichy/ நீங்கள் கூறுவதும் அப்படித்தான் இருக்கிறது. மேலும், கலை இட்ட பின்னூட்டத்திற்கு அவரே விளக்கமளித்துள்ளார்.

        உண்மையில் இசுலாமிய மக்களையும், தலித் மக்களையும் கால்நடைகளுக்கு ஒப்பாக நடத்துவது அவர்கள் சார்ந்துள்ள அமைப்புகளே அன்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இருக்கும் புரட்சிகர அமைப்புகள் அல்ல !

        ///அரபு நாடுகளில் பணியாற்ற செல்லும் அபலை பெண்களின் நிலை குறித்து விளக்கம் அளிக்க கோருகிறார் கலை.இது குறித்து ஏற்கனவே ”சவூதி எனும் நரகத்தீயில் பெண்கள்”பதிவில் விளக்கம் அளித்திருக்கிறேன்.என்ன நீங்களும் உங்கள் தோழர்களும்தான் வழக்கம் போல் கள்ள மவுனம் சாதித்து விட்டீர்கள். பார்க்க.https://www.vinavu.com/2010/08/13/saudi-women-labours/#comment-29073////

        இந்த விவாதத்தில் என்ன சொல்லி வருகிறீர்களோ அதையே தான் மேற்கண்ட சுட்டியிலும் கூறியுள்ளீர்கள். அதாவது ஆணாதிக்க பொறுக்கித்தனத்திற்கும் இசுலாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று. அனைத்தும் மதங்களையும் போல தான் இசுலாமும் பெண்களை பேசவிடுவதில்லை, ஒடுக்குமுறை செலுத்துகிறது. ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு நபிகளே உதாரணம். திப்பு என்கிற நீங்கள் நேர்மையான மனிதராக இருக்கலாம், உங்களைப்போன்ற பல இந்துக்களும், கிறித்தவர்களும் இருக்கலாம் ஆனால் அனைத்து மதங்களும் ஆணாதிக்க பிற்போக்கின் மேல் தான் நிற்கிறது. அதை தான் வலியுறுத்துகிறது. ஆணாதிக்கத்தையும், வர்க்க ஒடுக்குமுறையையும் செலுத்தாத மதம் மதமாக இருக்க முடியாது. அதற்கு இசுலாமும் விதிவிலக்கல்ல.

        ///இந்த பதிவிலும் இசுலாமிய மக்களை இழிவு படுத்த நீங்கள் தவறவில்லை.பாசித்தின் கள்ள உறவுக்கு [அவை உண்மையில் நடந்தவை எனும்பட்சத்தில்] பலியானவர்கள் இசுலாமிய சமூக பெண்கள் என்று பூடகமாக உணர்த்துகிறது கட்டுரை.பாசித் எப்படி ”கொக்கி”போட்டார் என்பதையும் விவரித்துள்ளீர்கள்.[உண்மையில் இப்படி ஒரு கேடு கெட்ட கழிசடைத்தனத்தை மீண்டும் மீண்டும் எழுத அருவருப்பாகவும் அவலமாகவும் உள்ளது]அதாவது காமுகன் ஒருவன் இசுலாமிய சமூக பெண்களிடம் தனது மனைவியை இகழ்ந்து பேசி நீ அழகாக இருக்கிறாய், நீ என் வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவள் என்று பேசினால் அவர்கள் அடிமை என ஒப்புக்கொண்டு படுக்கைக்கு வந்து விடுவார்கள்.இது அந்த பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா.அந்த சமூகத்தையே இழிவு படுத்துவது இல்லையா///

        ஒரு மதத்திற்குள் நடக்கும் ஆணாதிக்க சுரண்டலை அம்பலமாக்கினால் அது எப்படி சம்பந்தப்பட்ட மதத்தின் மக்களை இழிவுபடுத்துவதாகும் ? நீங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வருத்தப்பட்டு பாசித்துக்கு எதிராக கோபம் கொள்வதற்கு பதிலாக இதில் இசுலாத்தை இழுத்துவிட்டோம் என்பதற்காக தான் அதிகம் வருத்தப்படுகிறீர்கள். நீங்களும் இவ்வாறு எழுதுவது தவறு திப்பு !

        இப்படி பதிவில் எந்த தவறுகளுமே இல்லாத போது எதற்காக தோழர்கள் சுயவிமர்சனம் ஏற்க வேண்டும் ?

        • ambeth///பாசித் தன்னுடைய பொறுக்கித்தனத்திற்கு நபிகளின் நடைமுறையிலிருந்து தான் உதாரணங்களை தருகிறான். அதற்கு உங்களுடைய பதில் என்ன ?////
          கம்யுனிச போதையில் மீண்டும் மீண்டும் அவ்வாறு கூறாதீர்கள்? ஏற்கனவே நபி[ஸல்] அவர்கள் பற்றி கூறும் அவதூறுகளை அப்படியே பாசித் மேல் ஏற்றி வசனம் எழுதி கதைவிட வேண்டாம். பாசித் அவ்வாறு சொன்னதற்கும் அது போன்று நடந்ததற்கும் ஆதாரங்களுடன் சொல்லுங்கள்.

          • அறிஞர் பெருமானே! அம்பேத், நடைமுறையில் இஸ்லாமிய குடும்பங்களில் இருக்கும் ஆணாதிக்கத்தையும் உண்மை கம்யுனிஸ்ட்கள் என்று சொல்லிக் கொள்வோர் வீட்டில் அவ்வாறன ஆணாதிக்கம் இல்லாமையும் கொஞ்சம் ஒப்பிட்டு விளக்குங்கள் . நீங்கள் சொல்லுவது போல் மகஇக குடும்பங்களை தேடி பார்த்து அங்கு என்னாதிக்கம் இருக்கிறது என்று சோதித்து பார்த்துக் கொள்ள வசதியாக இருக்குமே !
            எம் வீட்டிலும் அதை நடைமுறைபடுத்த இஸ்லாம் இடையூறாக இருக்கிறதா என்று முயற்சிக்கவும் உதவியாக இருக்குமே!

            • அது என்ன கொசு மருந்தா சோதித்து பார்க்க ?
              ஆணாதிக்கம் உங்களுடைய மண்டையில் இருக்கிறது.
              மதத்தை பற்றியும், பெண்களை பற்றியும் நீங்கள்
              வைத்திருக்கும் பழைய கண்ணோட்டத்தை மாற்றாமல்
              நீங்கள் ஜனநாயகமுள்ள மனிதனாக மாற முடியாது !

              • அறிஞர் பெருமானே! அம்பேத், நடைமுறையில் இஸ்லாமிய குடும்பங்களில் இருக்கும் ஆணாதிக்கத்தையும் உண்மை கம்யுனிஸ்ட்கள் என்று சொல்லிக் கொள்வோர் வீட்டில் அவ்வாறன ஆணாதிக்கம் இல்லாமையும் கொஞ்சம் ஒப்பிட்டு விளக்குங்கள் . நீங்கள் சொல்லுவது போல் மகஇக குடும்பங்களை தேடி பார்த்து அங்கு என்னாதிக்கம் இருக்கிறது என்று சோதித்து பார்த்துக் கொள்ள வசதியாக இருக்குமே !
                எம் வீட்டிலும் அதை நடைமுறைபடுத்த இஸ்லாம் இடையூறாக இருக்கிறதா என்று முயற்சிக்கவும் உதவியாக இருக்குமே!

                இதுதான் எனது கேள்வி , உங்களது பதில் ////அது என்ன கொசு மருந்தா சோதித்து பார்க்க ?//
                என்ன இது ,ஆணாதிக்கம் இல்லாமல் நீங்கள் எப்படி வாழுகிறீர்கள் ?எப்படி உங்களது குடும்ப நடைமுறை பழக்க வழக்கங்கள் இருக்கிறது என்று கேட்டால் செங்கொடி முதல் அறிஞர் பெருமான் அம்பேத் வரை தஹின்னத்தன்னோம் ,,பாடுகிறார்கள் .அப்படி எனில் இந்த ஆணாதிக்கம் ,பெண்ணுரிமை எல்லாம் இணைய தளத்தோடும் மேடையோடும் முடிந்து விடுகிறதா?

                • ////என்ன இது ,ஆணாதிக்கம் இல்லாமல் நீங்கள் எப்படி வாழுகிறீர்கள் ?எப்படி உங்களது குடும்ப நடைமுறை பழக்க வழக்கங்கள் இருக்கிறது என்று கேட்டால் செங்கொடி முதல் அறிஞர் பெருமான் அம்பேத் வரை தஹின்னத்தன்னோம் ,,பாடுகிறார்கள் .அப்படி எனில் இந்த ஆணாதிக்கம் ,பெண்ணுரிமை எல்லாம் இணைய தளத்தோடும் மேடையோடும் முடிந்து விடுகிறதா ?////

                  இபுராகிம்,
                  ஆணாதிக்க சமூகத்தில் அனைத்து ஆண்களிடமும் ஆணாதிக்க பன்பு வெளிப்படத்தான் செய்யும், அது கூட குறைய இருக்கும், மலைக்கும் மடுவிற்குமான அளவிற்கு கூட ஏற்ற இறக்கம் இருக்கும். கம்யூனிஸ்டுகள் தம்மிடமுள்ள ஆணாதிக்க பண்புகளை வெறுத்து, அதற்கெதிரான போராட்டத்தை நடத்துகிறார்கள். சாதியை போலவே ஆணாதிக்கத்தையும் ஒழித்துக்கட்ட விரும்புகிறார்கள். எனவே தான் இந்த ஆணாதிக்க சமூகத்தை தூக்கியெறிந்துவிட்டு சாதி, மதம், வர்க்கமற்ற அத்துடன் ஆணாதிக்கமுமற்ற ஓர் சமத்துவ சமூகத்தை கட்டியமைக்க போராடுகிறார்கள்.

                  மாறாக அனைத்து மதங்களும் ஆணாதிக்க பிற்போக்குத்தனத்திற்கு வகை வகையான விளக்கங்களை வைத்து அதை நியாயப்படுத்திக்கொண்டிருக்கின்றன. மதம் ஆணாதிக்கத்தை தாங்கிப்பிடித்தாலும் அந்த மதத்தை சேர்ந்த அனைவரும் ஆணாதிக்கவாதிகளாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மதம் கற்பிக்கும் ஆணாதிக்கத்தையும் தாண்டி பலர் ஓரளவிற்காவது ஜனநாயகவாதிகளாக நடந்து கொள்கிறார்கள்.

                  இசுலாம் பெண்களுக்கு பல உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கியுள்ளதாக கூறுகிறீர்கள். சலுகை வழங்குகிறேன், உரிமை வழங்குகிறேன் என்று கூறுவதே ஆண்டை மனப்பாண்மையிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் தான். இசுலாம் இதே போல ஆண்களுக்கும் பல சலுகைகளையும், உரிமைகளையும் வழங்கியுள்ளது என்று ஏன் நீங்களெல்லாம் கூறுவதில்லை என்கிற கேள்வியை எழுப்பினாலே அங்குள்ள சமத்துவமின்மையை அறிந்து கொள்ள முடியும் !

                  இசுலாத்தின் பிற்போக்குத்தனத்தை காப்பதற்காக உங்களுடைய சகோதரர்கள் எவ்வளவு நேர்மையற்ற முறையில் கம்யூனிசத்தை தாக்குகிறார்கள் என்பதற்கு ஹைதர் அலி எழுதிய அபத்தமான பதிவே சான்று.

                  இசுலாம் பெண்களுக்கு முக்காடு போட்டுவிடுவதை நியாயப்படுத்துவதற்காக தோழர் ஸ்டாலின் தனது மகளை பர்தா அணிந்துகொள்ளச் சொல்லி வலியுறுத்தினார் என்று வினவு என்கிற புரட்சிகர தளம் இருப்பதை கூட மறந்துவிட்டு அசட்டுத்துணிச்சலுடன் எழுதியுள்ளார்.

                  சோவியத் சோசலிச குடியரசு பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக சொந்த காலில் நிற்க வைத்ததை திரித்து அவர்களை மிரட்டி, கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதாக கொஞ்சம் கூட கூச்சமின்றி பச்சையான பொய்களை எல்லாம் எழுதியுள்ளார். அத்துடன் பாலுணர்வை கட்டுப்படுத்திக்கொண்டு உற்பத்தியில் ஈடுபடுங்கள் என்றும் அரசு மக்களுக்கு அறிவுரை கூறியதாம் ! இதையெல்லாம் இவர் எங்கே போய் படித்தார் என்று தெரியவில்லை. உண்மையோ ஹைதர் அலி கூறுவதற்கு எதிரானது அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதியரை சோவியத் அரசு ஊக்குவித்தது.

                  இதைப்போல சோவியத் பெண்களைப் பற்றி மேலும் பல பொய்களை எழுதி வைத்துள்ளார் ஹைதர் அலி. இசுலாம் என்று வருகின்ற போது முதலாளித்துவத்தை காக்க கம்யூனிசத்தை தாக்கும் அதியமானை போலவே தான் நீங்களும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.

                  எனவே முற்போக்கு பேசும் ஆண்கள் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடுகிறார்கள், தங்களுடைய திருமணத்தில் உறுதியேற்கும் போது கூட எனது திருமண வாழ்க்கையில் நான் ஆணாதிக்கவாதியாக நடந்துகொள்ளமாட்டேன் என்று அனைவரின் முன்பும் உறுதியேற்றுக்கொள்கிறார்கள், பிறகு ஏற்படும் சிறு தவறுகளுக்கு கூட மனைவியிடம் மனம் திறந்து சுயவிமர்சனம் ஏற்றுக்கொள்கிறார்கள் இறுதியில் அதை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் விரும்புகிறார்கள். ஆனால் மதத்தை பின்பற்றுபவர்கள் ஆணாதிக்கவாதிகளாக தான் இருக்க முடியும். அவர்களும் அப்படி இருக்கத்தான் விரும்புகிறார்கள். எனவே தான் மதம் வலியுறுத்தும் பெண்ணடிமைத்தனத்திற்கு சலுகைகள், உரிமைகள் என்று விளக்கமளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

                  • அம்பேத் ///கம்யூனிஸ்டுகள் தம்மிடமுள்ள ஆணாதிக்க பண்புகளை வெறுத்து, அதற்கெதிரான போராட்டத்தை நடத்துகிறார்கள். சாதியை போலவே ஆணாதிக்கத்தையும் ஒழித்துக்கட்ட விரும்புகிறார்கள்///
                    தங்களிடமுள்ள ஆணாதிக்க பண்புகள் என்று குறிப்பிடுவது எவை?.
                    அதற்கான போராட்டத்தை எங்கே எப்படி நடத்துகிறீர்கள்?
                    சாதியப் போலவே ஆணாதிக்கத்தையும் ஒழித்துக்கட்ட விரும்புகிறீர்கள் .ஆனால் இன்னும் ஒழித்துக்கட்டவில்லை .காட்டவும் இல்லை.உங்களால் இதுவரை ஒழித்துக் கட்டவும் மற்றவர்களுக்கு அதை முன்மாதிரியாக காட்டவும் முடியாதபோது அது பற்றி பேசுவானேன்?
                    ஆகவே நீங்கள் உங்களிடம் உள்ள ஆணாதிக்க பண்புகள் எவை என்பதை எடுத்து வைத்து அதை ஒழித்து ஆணாதிக்கமற்ற சமூகத்தை உங்களிடையே உருவாக்கி அதன் பிறகே அடுத்த சமூகத்திலுள்ள ஆணாதிக்க சமூகத்தை நீங்கள் விமர்சிக்க வேண்டும்.மக்களை உங்களைப் போல் ஆணாதிக்க மற்ற சமூகத்தை நோக்கி அழைக்க வேண்டும் .உங்கள் சொற்களை விட மக்களிடம் உங்களது செயல்கள்தான் அதிக வரவேற்பைத்தரும்.முயற்சியுங்கள் வாழ்த்துவோம்.
                    . ////மாறாக அனைத்து மதங்களும் ஆணாதிக்க பிற்போக்குத்தனத்திற்கு வகை வகையான விளக்கங்களை வைத்து அதை நியாயப்படுத்திக்கொண்டிருக்கின்றன. /////
                    நீங்களும் வகை,வகையான காரணங்களை சொல்லிக் கொண்டுதான் ஆணாதிக்கமற்ற மற்ற சமூகத்தை இன்னும் உருவாக்கமால் போராடிக் கொண்டு இருப்பதாக கூறியுள்ளீர்கள் .
                    ///மதம் கற்பிக்கும் ஆணாதிக்கத்தையும் தாண்டி பலர் ஓரளவிற்காவது ஜனநாயகவாதிகளாக நடந்து கொள்கிறார்கள்.////
                    நீங்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலே அவர்கள் ஓரளவிற்கு ஆணாதிக்கமின்மையை நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.என்று சொல்ல வருகிறீர்களா?
                    ////இசுலாம் பெண்களுக்கு பல உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கியுள்ளதாக கூறுகிறீர்கள். சலுகை வழங்குகிறேன், உரிமை வழங்குகிறேன் என்று கூறுவதே ஆண்டை மனப்பாண்மையிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் தான். ////
                    இஸ்லாம் வழங்கியுள்ளளது என்பது இறைவன் புறத்திலிருந்து சொல்லப்படுகிறது. இஸ்லாத்தில் பெண்ணுரிமைகள் நசுக்கப்படுவதாக பிரச்சாரம் உலகம் முழுவதும் நடைபெறுகிறது.அதற்கு பதில் சொல்லும் முகமாகவே பெண்களுக்கு இஸ்லாம் உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கியுள்ளதாக கூறுகிறது.ஆண்களுக்கு பெண்கள் மீது என்ன உரிமைகள் இருக்கின்றதோ அதே போன்றே பெண்களுக்கும் ஆண்கள்மீது உரிமை இருக்கின்றது என்று குர்ஆன் கூறுவது ஆண்டை மனப்பான்மையிலிருந்து அல்ல.ஆண்டவனிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் .
                    ///இசுலாம் இதே போல ஆண்களுக்கும் பல சலுகைகளையும், உரிமைகளையும் வழங்கியுள்ளது என்று ஏன் நீங்களெல்லாம் கூறுவதில்லை என்கிற கேள்வியை எழுப்பினாலே அங்குள்ள சமத்துவமின்மையை அறிந்து கொள்ள முடியும் !///
                    அந்த குர்ஆன் வசனம் உங்களது இந்த வாதத்தை தகர்க்கிறது.
                    ////இசுலாத்தின் பிற்போக்குத்தனத்தை காப்பதற்காக உங்களுடைய சகோதரர்கள் எவ்வளவு நேர்மையற்ற முறையில் கம்யூனிசத்தை தாக்குகிறார்கள் என்பதற்கு ஹைதர் அலி எழுதிய அபத்தமான பதிவே சான்று.////
                    உங்களுடைய பிற்போக்குத்தனத்தை காட்டுவதற்காக நீங்களும் நாலாம்தர சுட்டிகளை காட்டியிருந்தீர்கள்.
                    ////இசுலாம் பெண்களுக்கு முக்காடு போட்டுவிடுவதை நியாயப்படுத்துவதற்காக தோழர் ஸ்டாலின் தனது மகளை பர்தா அணிந்துகொள்ளச் சொல்லி வலியுறுத்தினார் என்று வினவு என்கிற புரட்சிகர தளம் இருப்பதை கூட மறந்துவிட்டு அசட்டுத்துணிச்சலுடன் எழுதியுள்ளார்.////
                    அதற்க்கான ஆதாரங்களை அவர்களிடம் கேட்டிருக்கலாம் .மேலும் கீழே உள்ள சுட்டியில் சோவித் ரஷ்யாவின் போர்கால ஆட்சியில் பெண்களின் படங்கள் வெளிவந்துள்ளன.அவர்கள் அணிந்துள்ள ஆடைகள் முஸ்லிம்களின் பர்தாவை படம் பிடித்து காட்டுவது போல் உள்ளது.
                    senkodi.wordpress.com/2011/11/07/nov-7/
                    ///முற்போக்கு பேசும் ஆண்கள் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடுகிறார்கள், தங்களுடைய திருமணத்தில் உறுதியேற்கும் போது கூட எனது திருமண வாழ்க்கையில் நான் ஆணாதிக்கவாதியாக நடந்துகொள்ளமாட்டேன் என்று அனைவரின் முன்பும் உறுதியேற்றுக்கொள்கிறார்கள், பிறகு ஏற்படும் சிறு தவறுகளுக்கு கூட மனைவியிடம் மனம் திறந்து சுயவிமர்சனம் ஏற்றுக்கொள்கிறார்கள் இறுதியில் அதை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் விரும்புகிறார்கள்.///
                    திருமனம்கள் சாதிக்கு அப்பாற்பட்டு நடக்கின்றனவா என்பதற்கு சமிபத்திய உங்களது சகோதர்களின் திருமனம்களை ஆதாரமாக காட்ட வாய்ப்புகள் உண்டா?
                    மேலும் நீங்கள் இன்னும் ஆணாதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்.இவ்வாறு முற்றிலுமாக ஒழிக்காத நிலையில் உங்களைவிட எங்களிடம் மிகைத்து நிற்கும் ஆணாதிக்கம் என்னவென்பதை விளக்குமாறு வேண்டுகிறேன்.

                    • சோவியத் ரஷ்யாவின் பொற்கால ஆட்சி என்பது போர்கால ஆட்சி என வெளியாகி உள்ளது

                    • நீங்கள் இவ்வாறு தான் பதிலளிப்பீர்கள் என்பது நான் எதிர்பார்த்தது தான். இசுலாமிய போதை உங்களை இப்படித்தான் பேச வைக்கும். ஆணாதிக்கவாதியாக தான் வாழ்வேன் என்கிறீர்கள் எத்தனை நாட்களுக்கு என்று பார்க்கிறோம்.

                    • அம்பேத்,என்னுடைய ஆவல் சாதியைத்தாண்டி உங்களது கொள்கையாளர்கள் யாரும் தங்களுக்கோ,தங்களது குழந்தைகளுக்கோ அம்பேத்கார் என்ற பெயரை வைத்துள்ளார்களா?

                    • ////சோவியத் சோசலிச குடியரசு பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக சொந்த காலில் நிற்க வைத்ததை திரித்து அவர்களை மிரட்டி, கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதாக கொஞ்சம் கூட கூச்சமின்றி பச்சையான பொய்களை எல்லாம் எழுதியுள்ளார். அத்துடன் பாலுணர்வை கட்டுப்படுத்திக்கொண்டு உற்பத்தியில் ஈடுபடுங்கள் என்றும் அரசு மக்களுக்கு அறிவுரை கூறியதாம் ! இதையெல்லாம் இவர் எங்கே போய் படித்தார் என்று தெரியவில்லை. உண்மையோ ஹைதர் அலி கூறுவதற்கு எதிரானது அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதியரை சோவியத் அரசு ஊக்குவித்தது.////
                      ///சோவியத் சோஷலிச குடியரசு பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக சொந்த கால்களில் நிற்கவைததை,,,,,,,,,,,,,,,,,,,,,,///
                      இன்ஜினியர்களை கொத்தனாராகவும் ,கொத்தனார்களை இன்ஜினியர்களாகவும் செயல்படவைத்தால் என்ன ஆகுமோ அதுதான் ரஷ்யாவில் நடந்தது.பெண்களை குழந்தைகளை உற்பத்தி செய்ய வைப்பதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் .ஆனால் அவர்களை ஆண்கள் போல் பொருள் உற்பத்தியிலும் ,பெண்களைப்போல் குழந்தைகள் உற்பத்தியிலும் ஈடுபட வைத்தது சமமின்மை அல்லவா? அதைப்போல் ஆண்களையும் குழந்தை உற்பத்தியிலும் பொருள் உற்பத்தியிலும் ஈடுபடுத்தவேண்டும் அல்லவா? இங்கே சமத்துவம் இல்லாமல் சமம் என்ற வெற்று கோசத்தில் இயற்கைக்கு மாறாக பெண்களை செயல்படுத்தினீர்கள்.குழந்தை வளர்ப்புகளை அதன் அதன் தாயிடமே விட்டிருக்கவேண்டும் .அப்போதுதான் தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை என்பார்களே ,அது தாயின் அணைப்பில் தாய் ஈர்க்கப்பட்ட கம்யுனிசத்தில் வளர்ந்திருக்கும் .ஆனால் பொதுவில் வளர்ப்பது கம்யுனிசம் என்று இயற்கைக்கு மாறாக தவறு இழைத்ததால் அந்த குழந்தைகள் வளர்ந்த பின்னர் வந்த சமுதாயம் கம்யுநிசத்தையும் மிதித்தது.அதன்தலைவர்களையும் மிதித்தது.
                      ஆணும் பெண்ணும் சமம் என்பது இறைவன் வார்த்தெடுத்த அமைப்பிலே இருக்க வேண்டும் .சொந்த வாழ்க்கையை ஒழுங்காக அமைத்து கொள்ளாத கோமாளிகளின் செயற்கை சமம் எல்லாம் அற்ப காலத்திலே முடிவுக்கு வந்து விடும்.

                    • /////நீங்கள் இவ்வாறு தான் பதிலளிப்பீர்கள் என்பது நான் எதிர்பார்த்தது தான். இசுலாமிய போதை உங்களை இப்படித்தான் பேச வைக்கும். ஆணாதிக்கவாதியாக தான் வாழ்வேன் என்கிறீர்கள் எத்தனை நாட்களுக்கு என்று பார்க்கிறோம்./////
                      அம்பேத் ,உங்களால் எனது கருத்துக்களுக்கு பதிலுரைக்க முடியாது என்பதை நான் அறிவேன்.இந்த வார்த்தைகளுக்கு மேல் ஒன்றும் அதிகரிக்க முடியாது நான் ஆணாதிக்க வாதியாக தான் வாழ்வேன் .எத்ததனை ஆண்டுகள் இறைவன் வாழவைக்கீரானோ ,அத்தனை ஆண்டுகள் வரை .ஆனால் நான் கொள்ளும் ஆணாதிக்கம்,ஆண்ங்களுக்கு பெண்கள் மீது என்ன உரிமை இருக்கிறதோ ,அதே போன்றே பெண்களுக்கும் ஆண்கள் மீது இருக்கின்ற உரிமைகளை பகிர்ந்தவானாக ,இஸ்லாம் கூறும் ஆண் ,நேர்மையாக ,நீதி செலுத்துபவனாக , பெண்களிடம் கண்ணியம் காப்பவனாக ,அநியாயத்தை எதிர்க்கக் கூடியவானாக,பெண்களிடம் தவறான முறையில் காமாதிக்கம் செலுத்தும்பவர்களை ஒழிக்ககூடியவனாக,வாழ்வோம் எத்தனை நாட்கள் என்று உங்களால் எண்ண முடியாது ,ஏனெனில் உங்கள் பொதுவுடமை அதற்குள் எண்ணி முடிக்கப்படும்

          • சுட்டிகளை இங்கு போட வேண்டாம் என்று நினைத்தேன் நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்பதால் தருகிறேன்.

            பெண்கள் – இஸ்லாமிற்கு முன்னும் பின்னும்
            http://tamil.alisina.org/?p=107

            மரியா – தூதரின் காமவெறிக்கு இரையான பணிப்பெண்.
            http://tamil.alisina.org/?p=285

            முகமது ஒரு சிறுமிக்காமுகனா?
            http://tamil.alisina.org/?p=220

            மெஹர் என்பது என்ன?
            http://pagadu.blogspot.com/2011/12/blog-post.html

            பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்
            http://pagadu.blogspot.com/2011/08/blog-post.html

            http://tamil.alisina.org/?cat=7

            http://tamil.alisina.org/?p=215

            http://tamil.alisina.org/?p=298

            http://paraiyoasai.wordpress.com/2011/12/02/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-17/#comment-307

            http://senkodi.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%A4%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/

            http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378/

            குறிப்பு : மேல் உள்ள தளங்களில் குறிப்பாக அலிசினாவின் தளத்திலும், இபுனு சாகிர் தளத்திலும் நீங்கள் யாரும் விவதிக்கத்துணிவதில்லை.

            பாசித்தின் பொறுக்கித்தனத்திற்கு இந்த பதிவு தான் ஆதாரம். அசிங்கத்தை மேலும் அதிகமாக தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் நேரடியாக ஊருக்குச் சென்று மதப்பெரியவர்களிடம் கேட்காமல் ஊரிலுள்ள உழைக்கும் மக்களிடம் கேளுங்கள் கதை கதையாக சொல்வார்கள்.

            • இவைகள் நாங்கள் ஒன்றும் அறியாதது ஒன்றல்ல .இருப்பினும் உங்களை புரிந்து கொள்ள வாய்ப்பு
              “அவன் இருபதற்கும் மேலான மனைவிகளையும் வைப்பாட்டிகளையும் கொண்ட ஒரு வயதானவன். அவன் மனைவிகள் எல்லோருமே இளம் அழகிகள். அவன் தனது கிழ வயதில் அதிகாரம் வாய்ந்த தலைவனாக ஆனான். அதனால் அவனால் பலரை மணக்க முடிந்தது. சிலர் தானே முன்வந்து அவனுக்கு தன்னை கொடுத்துக் கொண்டார்கள். அவன் மிகவும் அழகான பெண்களை மட்டுமே ஏற்றுக்கொண்டான்.”

              மேலே உள்ளது நீங்கள் கூறிய சுட்டியில் உள்ளது
              ஒரு சிறுவனிடம் கூட நேர்மையற்ற முறையில் அதிகாரம் பண்ணியதில்லை என்பதற்கு கீழ்காணும் சம்பவம் ஒரு ஆதாரம் .

              kathir,நபி[ஸல்] அவர்களும் ஒரு அவையில் அமர்ந்திருக்கையில் பால் பரிமாறப்படுகிறது.வலப்புற வரிசையில்தான் எது வேண்டுமானாலும் பரிமாறப்படவேண்டும் என்பது நபி வழி.அதன்படி நபி[ஸல்]அவர்களுக்கு வலப்புறமாக ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறார்.அபுபக்கர்[ரலி].உமர்[ரலி]போன்ற தலைவர்கள் இடப்புறத்தில் இருக்கிறார்கள்.வழக்கம் போல் வலப்புறம் ஆரம்பிக்கும் முன் சிறுவரிடம் நபி[ஸல்] அவர்கள் அனுமதி கேட்கிறார்கள்,இடது புறம் பெரியவர்கள் இருப்பதால் அவர்களுக்கு முதலில் கொடுக்கட்டுமா என்று அந்த சிறுவனிடம் அனுமதி கேட்கப்படுகிறது.அந்த சிறுவரோ வழக்கப்படி வலது புறமே கொடுக்க வேண்டும் என்று கூறி பாலை முதலாவதாக பெற்று அருந்துகிறார் .உங்களது கம்யுனிசஅவையில் டீ கொண்டு வந்தால் இது போன்று சமத்துவம் காண முடியுமா?

              இப்படி நேர்மையானவர் எங்ஙனம் தவறான முறையில் அதிகாரம் செலுத்தியிருப்பார் .அடுத்தும் பொய்களை பாருங்கள்

              நபி[ஸல்] அவர்களின் முதல் மனைவி கதிஜா [ரலி] அவர்கள் இளம் அழகியா?[25 ஆண்டுகள் ஒரே மனைவி ]
              அவர்களின் மறைவிற்கு பின்னர் திருமணம் செய்த இரண்டாவது மனைவி சௌதா[ரலி]வயது 55
              அடுத்து அவர்களது மனைவி ஹப்சாவும் விதவையே
              சைனப் பின்த் குஸைமா அவர்கள் வயது 56
              சைனப் பின்த் ஜஹ்ஸ் அவர்கள் வயது 36
              அடுத்து உம்மு சல்மா அவர்கள் நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன்.என்
              வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை.குழந்தை வயதை கடந்து விட்டேன்.என்று கூறியுள்ளார்கள்.
              ஜுவைரிய்யா என்பவரும் முதியவர்
              உம்மு ஹபீபா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் தனது கணவருடன் அபிசீனியா சென்றார்.கணவர் அங்கு கிறிஸ்தவராக மாறிவிட்டதால் இவர் நிர்கதியானார்.அபிசீனியாவுக்கு சென்று பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் மதீனாவுக்கு திரும்பிய பிறகு மணம் செய்யப்பட்டவர்.
              சபியா ,இவரும் திருமனமானவரே
              மைமூனா இவரும் தனது இரண்டு கணவன்களை இழந்தவர் என்பதால் இவருடைய வயதும் நடுத்தர வயதாகவே இருக்கும்
              ஆக இரண்டு அல்லது மூன்று பேர்களே இளம் வயதுடையவர்கள்.
              இப்படி பச்சையாக பொய் சொல்லும் அலிசீனா. அவர் எடுக்கும் ஆதாரங்கள் முஸ்லிம்களின் ஜன்ம விரோதிகளான யூதர்களின் மொழியாக்கங்களிருந்து .

              அங்கு காட்டப்பட்டுள்ள படங்களிலிருந்து இவர்கள் எவ்வளவு கொடியவர்கள் என்பது புரியும் .எத்தனை விகார மணம் படைத்தவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம் .
              ஓரளவு நடுநிலை வகிப்பவர்களின் தளத்தில் மக்கள் மத்தியில் எற்றுக்ஜ் கொள்ளப்பட்ட தளத்தில் இஸ்லாம் பற்றி தவறான கருத்துக்கள் வந்தால் அதற்கு பதில் அளிக்கலாம் .வினவு வில் கூட அவர்களைப்பற்றிய விமர்சனத்தை வெளியிட மறுக்கிறார்கள் .நீங்கள் இஸ்லாம் பற்றிய லிங்க் கள் அனைத்தையும் வெளியிட்டுள்ளார்கள் .ஆனால் நான் கம்யுனிஸ்ட்கள் பற்றி லிங்க் கள் கொடுத்தால் அதை வெளியிட மறுக்கிறார்கள்.
              அப்புறம் இப்னுசக்கீர் என்பவனின் தளம் பற்றி கேட்டிருந்தீர்கள் .
              அம்பேத் ,சிங்கத்துடன் மோதினால் சிங்கத்துடன் மோதிய சிங்கமே! என்பார்கள் .புலியுடன் மோதினால் புலியுடன் மோதிய இளம் புலியே! என்பார்கள்.ஜல்லியில் இறங்கினால் காளையை அடக்கிய காளையே! என்பார்கள் .
              ஆனால் பன்னியுடன் மோதினால் ,பன்னியை வென்ற பன்னியே! என்று சொல்லாவிட்டாலும் பன்னிக்கல்லவா பெருமை .
              அப்போது ஜுவரியாவிற்கு வெறும் 20 வயது தான், ஜுவைரியாவுக்குஇருபது வயது என்பதற்கு ஏதாவது ஆதாரம் காட்டப்பட்டுள்ளதா?
              அவரது விடுதலைக்கு ஏழு வெள்ளி காசுகள் மட்டுமே கொடுக்கப்பட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதிகள் கூறுகின்றன.ஆனால் அளிசினாவோ ஒன்பது தங்க காசுகள் என்று தனது மணம் போல் உளறுகிறார்.
              ஆதாரமற்ற கதைகளை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் .உங்களுக்கு நேர்மையான் மனசாட்சி இருந்தால் இது போன்று சுட்டிகளை சொல்லாமல் செங்கொடி போன்ற்தொடு நிறுத்தியிருப்பீர்கள்.அதற்கான பதில்களும் ஆன்லைன் பீஜே வில் ஆதாரத்துடன் சொல்லப்பட்டுள்ளன.நான் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அவைகளின் பொய்களை இங்கு எடுத்து வைத்துள்ளேன்

              ///பாசித்தின் பொறுக்கித்தனத்திற்கு இந்த பதிவு தான் ஆதாரம். அசிங்கத்தை மேலும் அதிகமாக தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் நேரடியாக ஊருக்குச் சென்று மதப்பெரியவர்களிடம் கேட்காமல் ஊரிலுள்ள உழைக்கும் மக்களிடம் கேளுங்கள் கதை கதையாக சொல்வார்கள்.///

              நீங்களே சொல்லிவிட்டீர்கள் கதை கதையாக என்று ,பிறகென்ன கதையைத்தான் எழுதி உள்ளீர்கள் ..
              உங்களிடம் அதாவது புனித கம்யுனிஸ்ட் களிடம் ஆணாதிக்கம் இல்லை என்பது வெறும் தியரி அளவிலா ?அலது நடைமுறையிலும் செயபடுத்துகிறேர்களா/அப்படி செயல்படுத்துவது என்றால் நாங்கள் அதை எப்படி அறிந்து கொள்வது?இதுதான் கேள்வி ,அதற்கு பதில் சொல்லாமல் பகடு வை தூக்கிக் கொண்டு வருகிறீர்கள் என்றால் உங்களது நோக்கம் என்ன? கொள்கை என்ன?

              • திருத்தம்
                அடுத்து உம்மு சல்மா அவர்கள் நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன்.என்
                வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை.//குழந்தை வயதை கடந்து விட்டேன்.என்று கூறியுள்ளார்கள்.///
                “குழந்தை பெறும் வயதை கடந்து விட்டேன் என்று கூறினார்கள்” என்று திருத்திக் கொள்க

            • தோழர் அம்பேத்,
              உங்களிடமிருந்து அலிசீனா லிங்கை எதிர்பார்க்கவில்லை.

              • அலிசினாவின் பதிவுகள் ஒன்றும் புனைவுகள் இல்லையே ?
                அவருடைய எழுத்து இசுலாமியர்களை வென்றெடுக்கும்
                நேர்மறையில் எழுதப்படவில்லை என்று வேண்டுமானால்
                சொல்லலாமே தவிர அவற்றை பொய் என்று கூற முடியாது.

                • அம்பேத்,நீதி மறுத்து பேசுவதுதான் புனித கம்யுனிஸ்ட்களின் பண்பு என்பதயும் அத்துடன் அறிவியுங்கள்.அலிசினாவில் உள்ள பொய்யை எடுத்து காட்டி ,ஒருபானை சோறுக்கு ஒரு சோறு பதம் போல் பொய்யை கூறியுள்ளேன் .நீங்கள் உங்கள் கொள்கையில் நம்பிக்கை உள்ளவாராக இருந்தால்,நீங்கள் அம்பேத் என்ற பெயருக்கு தகுதிடைவராக இருந்தால் , அதை உண்மை என்று நிருபித்து காட்டுங்கள் .

                • கம்யூனிச புரிதலுக்கு, லெனின் தொழிலாளர்களின் உடல்நலத்தினை கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் தொழிலாலர்களை 16 மணி நேரம் வேலை வாங்கினார் என்று எழுதப்பட்ட பதிவிற்கு இதுபோல லிங்க் கொடுப்பீர்களா! அலிசீனாவிற்கும், செங்கொடிக்கும், பறையோசைக்கும் அதிக வேறுபாடுகள் இருக்கிறது.

        • தெரியும் தோழர்களே,நீங்கள் தன் விமர்சனம் ஏற்கமாட்டீர்கள்.மவுனமாக இருந்தே சாதிக்க தெரிந்த உங்களுக்கு பேசி சாதிக்க தெரியாதா என்ன.நான் எழுதியது முன்முடிவுகளின்றி இந்த பிரச்னையை படிப்பவர்கள் எது சரி எது தவறு என ஒரு முடிவுக்கு வர உதவும் என்ற அளவில் மகிழ்ச்சி.

          • உங்களுக்கு மேலே விளக்கமளித்துள்ளேன் திப்பு. அதற்கு பதிலளிக்காமல் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருக்கிரீர்கள். சுயவிமர்சனம் ஏற்பது அல்ல பிரச்சினை எதற்காக சுயவிமர்சனம் என்பது தான் பிரச்சினை. விமர்சனத்தில் உண்மை இருந்தால் கம்யூனிஸ்டுகள் தயக்கமின்றி சுய விமர்சனம் செய்து கொள்வார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்..

            • மக்களில் அவர்களை மேட்டு குடி மக்கள் பின்பற்றுகின்றனரா?அல்லது பலஹினமான மக்கள் பின்பற்றுகிறார்களா?என்று அவர் கேட்டார்.இல்லை ,பலவீனமான மக்கள்தான் அவர்களை பின்பற்றுகின்றனர் என்று கூறினேன் ,,,,,,இவ்வாறு ரோமானிய பேரரசரான ஹெராக்ளியஸ் தன்னிடம் விசாரித்ததாக அபுசுப்யான்[ரலி],அவர்கள் வணிகம் செய்ய சாம் தேசத்திற்கு சென்று வந்த பொழுது தன்னிடம் கூறியதாக இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்

  83. ///இசுலாத்திலிருந்து வெளியேறிவர்கள் விமர்சித்தால் இசுலாமியப்ப பெயரை ஏன் வைத்துக்கொண்டிருக்கிறாய் பெயரை மாற்று என்கிறீர்கள். புனைப்பெயரில் எழுதினால் மறைந்து கொண்ட கோழை என்கிறீர்கள். இது என்னவகை மனநோய் என்றே தெரியவில்லை./////
    இப்படி நொண்டி சாக்கு சொல்ல வேண்டாம் .இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டால் உங்களுக்கும் அரபிக்கும் தொடர்பு இல்லை .
    உங்கள் பெயரை மாற்றி அந்த புது பெயரில் எழுதுங்கள்.உங்களது புனை பெயர் உங்களை அடையாளம் காட்டும் வண்ணம் இருக்க வேண்டும் .உங்களது profile மறைக்காதீர்கள்

    • இஸ்லாத்தில், இஸ்லாத்தின் மீது விமர்சனம் உள்ளவர்கள் அதிலிருந்து வெளியேறுவது தங்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா என்ற இறுக்கத்தில் பலர் இருக்கின்றனர். அவர்களுக்காக ‘நாங்கள் இருக்கிறோம்’ என அடையாளப்படுத்த அரபி பெயரில் எழுதப்படுகிறது. மேலும், அல்லாவையோ, முஹம்மதையோ குறிக்கும் பெயர்களைப் பயன்படுத்தாமல் பொதுவான அரபுப் பெயர்களை பயன்படுத்துவதின் மீது கேள்வியெழுப்ப உமக்கு உரிமையில்லை, என்பதை மிகவும் வன்மையாகவே கூறிக்கொள்கிறேன்.

      • கலை///இஸ்லாத்தில், இஸ்லாத்தின் மீது விமர்சனம் உள்ளவர்கள் அதிலிருந்து வெளியேறுவது தங்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா என்ற இறுக்கத்தில் பலர் இருக்கின்றனர். அவர்களுக்காக ‘நாங்கள் இருக்கிறோம்’ என அடையாளப்படுத்த அரபி பெயரில் எழுதப்படுகிறது.///
        இறுக்கத்தில் இருப்பவர்களை கண்டது யார்? இது காரணம் அல்ல .இப்படி விமர்சிப்பவர்கள் சங்க குடும்ப கூட்டம் என்றோ பகுத்தறிவு கூட்டமோ அல்லது பொ.உ வகையறாக்கள் என்றோ நினைத்து விடாதீர்கள் ,”நாங்களும் முஸ்லிம்கள் தான் என்று காட்டி கொள்ளவே.”
        இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிறகு உங்களை முஸ்லிம்கள் என்று ஏன் காட்டி கொள்ளவேண்டும்?முஸ்லிம்கள் என்றால் அல்லாஹ்வுக்கும் அவனின் தூதர் முஹம்மது நபி[ஸல்] அவர்களுக்கும் கட்டுப்பட்டவர்கள் என்று பொருள்.அப்படியெனில் நீங்கள் முஸ்லிம் இல்லை .முஸ்லிம் இல்லாத உங்களுக்கும் அரபுக்கும் என்னதொடர்பு?நீங்கள் என்ன அரபு இலக்கிய வாதியா?இல்லை அரபுலகத்தில் பிறந்தவர்களா? அரபுவில் உள்ள பெயர்களை கண்டாலே அவர்கள் முஸ்லிம்கள் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளபோழ்து உங்களை ஏன் முஸ்லிம் என்று ஏன் காட்ட வேண்டும்? நான் முஸ்லிமாகத்தான் இருந்தேன்.இப்போது மாறிவிட்டேன் என்று சங்கூத வேண்டியதுதானே
        ///அங்கே (வெளிநாட்டில்)மிஸ்கின் பிச்சைக்காரன் அல்லது ஏழை என்று தன்னை அடையாளம் காட்டி ஆண்டைகளின் இரக்கப் பார்வையை இசுலாமியர்கள் கெஞ்சிப் பெறுகின்றனர்.///
        இப்படி கூறும் நபர் அரபு மொழியில் பெயர் பிச்சை கேட்பதேன்?
        பொ.உ.க்களிடம் ரஷ்ய பெயர்களை காணோம்.
        ///பொதுவான அரபுப் பெயர்களை பயன்படுத்துவதின் மீது கேள்வியெழுப்ப உமக்கு உரிமையில்லை, என்பதை மிகவும் வன்மையாகவே கூறிக்கொள்கிறேன்.///
        உமக்கு வெட்கம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லிகொள்ளுங்கள்.

        இன்னும் இருக்கமானவர்களிடம் காட்டிக்கொள்ள ஐடியா
        நீங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் வேளையில் சாகித் போன்றோருக்கு பச்சை சட்டை அணிந்து தலையில் தொப்பியும் நாடியில் ஒட்டுத் தாடியும் வைத்துக் கொள்ளுங்கள் .
        .

    • இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டால் உங்களுக்கும் அரபிக்கும் தொடர்பு இல்லை????????????

      முட்டியலடா சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

      மொதல்ல இஸ்லாம் வந்திச்சா இல்ல அரபி வந்திச்சா?

      அரபி மின்னாலயே இல்லேன்னா அப்புறம் குரானை எப்படி ஐயா அரபியில எழுதினாங்க? யாருக்குமே புரியாத-தெரியாத மொழியிலயா இம்மாம் பெரிய பொஸ்தகத்தை எழுதுவாங்க.

      ஏற்கனவே சொல் வடிவிலும் – எழுத்துவடிவிலும் புழக்கத்துல இருந்த மொழியை செம்மையாக்கித்தான் குரான் எழுதப்படுது, விட்டா நபிகள் நாயகம் வர்ரதுக்கு மின்னால அந்த பகுதியில எல்லாரும் பெப்ப்பேபேபேன்னு சைகை மொழியில பேசினாங்கன்னு சொல்லுவீங்க போலயே….

      • //முட்டியலடா சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ//

        தண்ணீ குடியுங்கே தண்ணீ குடியுங்கே

        அந்த தண்ணீ இல்லே ம.க.இ.க வில் அந்த தண்ணீ அடிக்க அனுமதி இல்லை
        சிகரேட் குடிக்கலாம் அது சுற்றுசூழலை எந்தவிததிலும் பாதிக்காது போங்க ராசா போயி தம் அடிச்சுட்டு ரொசனை பன்னிகிட்டு வாங்கே

        • ஒய் திஸ் கொலவெறி கொலவெறி பாய்
          ஒய் திஸ் கொலவெறி கொலவெறி பாய்
          ஐதர் பாய்….
          ஒய் திஸ் கொலவெறி கொலவெறி பாய்
          ஒய் திஸ் கொலவெறி கொலவெறி பாய்
          ஆங்..
          கெட்டிங்கு நைசு ஆப்பு ஆப்பு
          கோயிங் ஓவர் த டாப்பு டாப்பு
          ஒய் திஸ் கொலவெறி கொலவெறி பாய்
          ஒய் திஸ் கொலவெறி கொலவெறி பாய்

          அதாவது என்ன சொல்ல வற்றேன்னா.. இது மாதிரி சம்பந்தமில்லாம எழுதரதுக்கு பதிலா எதாச்சும் உருப்படியா எழுதுங்க இல்லேன்னா உங்களுக்கு சரிக்கு-சமமா ஞானும் வல்லிய மொக்கை போடுவேனாக்கும்.

          • சரிங்கண்ணே
            பகுதி நேர வேலைக்காக போகிறேன் சாயங்காலம் 5 மணியிலிருந்து இரவு 10 மணிவரை உழைத்தால் தான் நாங்க சொறு திங்க முடியும்.

            //அங்கே (வெளிநாட்டில்)மிஸ்கின் பிச்சைக்காரன் அல்லது ஏழை என்று தன்னை அடையாளம் காட்டி ஆண்டைகளின் இரக்கப் பார்வையை இசுலாமியர்கள் கெஞ்சிப் பெறுகின்றனர்.//

            ஒங்க தோழர் சாகித் சொல்லுகிற மாதிரி இல்லை பாருங்களேன்

            இரவு வந்து அதுக்கப்புறம் ஒக்கந்து பேசுகிறேன் வர்ட்டா

      • ஊசி போய்விட்டதா.?உண்ண முடியாமல் ஊசி போய்விட்டதா?தைக்க முடியாமல் ஊசி ஒடிந்து போய்விட்டதா?
        தங்கத் தமிழனுக்கு அரபி மொழியில் வந்த பாசம் ஏன்?அவர் பூட்டன் முஸ்லிம் என்பதால் தான் அவருக்கு அரபியில் பயர் வைத்தார்கள் . இப்போது அவர் முஸ்லிம் இல்லை என்றால் அந்த மொழிக்கும் இவருக்கும் என்ன உறவு? தமிழோடு என்ன துறவு?

        • இப்ராகிம் பாய், ஏன் மதத்தையும் மொழியையும் குழப்பிக்கிறீங்க – உருது ஹிந்தி போன்ற மொழியில் கூட சாகித் என்ற சொல் இருக்கே.. அப்போ இந்தி பேசுர ஆர்.எஸ்.எஸ் காரனோட பாட்டன் கூட முஸ்லீமா? சாகித் கபூர்னு ஒரு சினிமாக்காரன் கூட இருக்கான், அவன்கிட்ட போய் பேர மாத்துன்னு சொல்லிப்புடாதீங்க :)))

          • நமதூர் கமல ஹாசன் இருக்கிறார்.சீனிவாச அய்யரின் நண்பர் ஹாசன் என்ற மரியாதையில் வைத்துள்ளார். அதைபோல் சாகித்கபூர்ஏதோ காரணத்திற்க்காக வைத்துள்ளார்,ஆனால் நம் சாகித் அவர்கள் தன்னை முஸ்லிம் என்று காட்டிக் கொள்ளவே அந்த பெயரை வைத்துள்ளதாக கலை ஐயா அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள் .
            ///ஏன் மதத்தையும் மொழியையும் குழப்பிக்கிறீங்க///
            மதத்தினாலே இவருக்கு அரபியில் அந்த பெயர் வந்து உள்ளதால் ஆட்சேபம் தெரிவிக்கிறோம் .
            இவருடைய தகப்பனார் அரபி பண்டிதர் அல்ல.
            ஒருவேளை இவர் உர்து மொழிக்காரராக இருந்தால் அந்த மொழியின் ஞாபகார்த்தமாக வைத்துள்ளேன் என்று சொல்லட்டும் .கொஞ்ச ஓவராக கேட்பதாக எடுத்துக் கொள்ளுங்கள் …”உர்துவில் அதன் பொருள் என்ன?”

            • உருது – இந்தி – அரபி எல்லாத்துலேயும் சாகித் என்றால் தியாகி என்றுதான் பொருள் என்பது என் புரிதல். தியாகி என்பது பொதுவான சொல்தானே, பகத்சிங்கை கூட வடநாட்டில் சாகித் பகத்சிங் என்றுதான் அழைக்கின்றனர்.

              எனவே மறுபடியும் வலியுறுத்துவது என்னவென்றால், மொழிவேறு மதம் வேறு. அதையும் இதையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

              அது இறைவனின் பெயர் என்றால் கூட இறைவனுக்கு பெயர் வைப்பது மனிதன் என்ற புரிதல் உள்ள நாத்திக பெரியார் கடைசிவரை இராமசாமி என்ற பெயரை மாற்றவில்லை என்பதையும் கவனியுங்கள்

              • ஊசி ///எனவே மறுபடியும் வலியுறுத்துவது என்னவென்றால், மொழிவேறு மதம் வேறு. அதையும் இதையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்///
                எனவே மறுபடியும் நான் கூறுவது என்னவென்றால் இவர் தியாகி என்பதாலும் அந்த சொல்லை தனது வட இந்திய மோகத்தில் சாகித் என்று வைத்து கொண்டுள்ளாரா?
                இல்லை ,இவர் தந்தை முஸ்லிம் என்பதால் இவருக்கு வைத்த பெயரே அது .
                ஒருவேளை தனது கொள்கை பிடிப்பால்,தனது மதத்தை தியாகம் செய்ததால் இந்த பெயர் அவருக்கு பொருந்தும் என்று வைத்துக் கொள்வோம் .அது தமிழ் மக்களுக்கு விளங்கும் வகையில் தியாகி என்று வைத்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் .மதத்தை தியாகம் செய்தவர் பெயரை தியாகம் செய்ய மறுத்து விட்டார் போலும்.

                • சர்ரீங்க பாய், உங்களுக்கு புரியர மாதிரி கேக்கறேன், உங்க குடும்பத்துல ஒரு குழந்தை பிறந்தால், அதுக்கு 18 வயசாகி விவரமெல்லாம் தெரிஞ்சு, மொழி மதம் இதிலெல்லாம் கரைகண்டு அரபி-இஸ்லாம் இதெல்லாம் தேர்ந்தெடுத்த பின்னாலதான் பேரு வைப்பீங்களா? அதுக்கப்புறம்தான் முஸ்லீமா ஏத்துக்குவீங்களா?

                  • ஊசி ,அதைத்தான் நான் சொல்லுகிறேன் ,இவரது தந்தை தனது மகன் முஸ்லிமாகவே இருப்பான் என்ற நம்பிக்கையில் சாகித் என்று பெயர் வைத்திருப்பார் .இப்போது கொள்கைக்காக அந்த மதத்தை கைவிடும் பொழுது பெயரை மட்டும் ஏன் கலை சொல்லும் காரியத்திற்காக வைத்திருக்க வேண்டும்?

                    • இப்ராகிம் பாய், அப்போ சாகித் என்று பெயர் வைத்த தந்தையிடமல்லவா நீங்கள் இந்த வாதத்தை வைக்க வேண்டும்?

                    • ஏனுங்க இபுறாகிம் பாய், அரபுல பேரு வைச்சுருக்குறவங்க எல்லாம் முசுலீம்களா. உங்க அறிவ நினச்சா ……….

                    • சுஜித்கான் உங்கள் அறிவு கூடுதல்தான் ,மறுக்கவில்லை.ஆனால் தமிழ்நாட்டில் பரயோசை எழுப்புபவர் அரபு பெயரில் வர காரணமென்ன?என்பதே கேள்வி .அரபுலகில் பிறந்தவர்கள் அரபியில் பெயர் வைத்தவர்கள் எல்லாம் முஸ்லிம் அல்ல என்றுதான் நாங்கள் தெரிந்து கொண்டோம்.
                      காரணம் இல்லாமல் யாரும் பெயர் வைக்க மாட்டார்கள் .உங்களது தந்தை முஸ்லிமாக இருந்து மகஇக கொள்கையில் அபிமானியாகவும் ஈடுபாடும் உள்ளவராக இருந்தால் உங்களுக்கு நிச்சயமாக சுஜித்கான் என்று பெயர் வைத்திருக்கமாட்டார்..

                    • என்னய்யா இது வம்பா இருக்குது. பேரு வச்சிக்கிறதுக்கே இவ்வளவு போராட வேண்டியிருக்கே. நீங்கள்லாம் ஆட்சிக்கு வந்தா என்னாவுறது. கருணாநிதி கூடத்தான் அவரோட பையனுக்கு ஸ்டாலின்ன்னு பேரு வச்சிருக்காரு அதுக்காக அவரு கம்முனிஸ்டுன்னோ, ஜார்ஜியாக்கரன்னா எல்லாரும் புரிஞ்சிக்கிறாங்க.

                    • சுஜித் கான்,புனித கம்யுனிஸ்ட் களில் நீங்க கொஞ்சம் அரை குறை போல் தெரிகிறது .கருணாநிதி தனது மகனுக்கு ஏன் ஸ்டாலின் என்று பெயர் சூட்டினேன் என்பதை பலமுறைகள் கூறியுள்ளாரே அதை நீங்கள் அறியவில்லையா?பக்கத்தில் இருக்கும் கலையிடம் கேளுங்கள்
                      இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் காரணத்தோடுதான் பெயர் வைப்பார்கள் என்பதை

                    • இபுறாஹீம் பாய்,

                      அவுரு எதுக்கு வேண்ணா வச்சிக்கிட்டு போகட்டும். இங்கு பேரு வைத்தவர் மீதா விவாதம். வைத்திருப்பவர் மேல் தானே விவாதம் ஸ்டாலின் என்ற பேரு வச்சிருக்காருன்றதுக்காக நம்ம ஊரு ஸ்டாலினு ஜார்ஜியா ஸ்டாலின் போன்ற கொள்கையுடயவருன்னோ, கிறித்தவருன்னோ, ஜார்ஜியாகாரருன்னோ, யாரும் புரிந்து கொள்வதில்லை. பேர மாத்துப்பான்னு நாங்களும் கோருவதில்லை.

                    • சுஜித்கான் ,அவர் கம்யுனிசத்திற்கு எதிராகவோ ஸ்டாலினுக்கு எதிராகவோ பேசவில்லை.

  84. 2.12.2011 வெள்ளிகிழமை பாசித் ஊரின் ஜமாத் ஒன்று கூடி பாசித் விசயத்தில் ஜமாத் தலைவர் அவசர கோலத்தில் அறிவித்த தீர்ப்பை ஜமாத்தார்கள் பல விமர்சித்தனர். அப்போது பாசித் ”எவனாவது எனது இஸ்லாம் முறைப்படி செய்த திருமணத்தை பேசினால் கொன்னுடுவேன்,காலைமுறிப்பேன்,வெட்டுவேன்” என்று கூறி எழுதமுடியாத கெட்டவார்த்தைகளால் மசூதி உள்ளே இருந்துகொண்டே திட்டுகிறார். இதற்கு உள்ளுர் tntjஆதரவு தெரிவிக்கின்றனர். பொதுவுடமைவாதிகளோ அல்லது பகுத்தறிவுவாதிகளோ மசூதி மற்றும் இஸ்லாமிய மக்களை அவமானபடுத்துவது கிடையாது. மதபுன்னியவான்கள் தான் இந்த கீழ்தரமான வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஏனோ திப்பு போன்றவர்களின் காதுகளில் கேட்பதில்லை. ஒருவேலை அல்லா தனது சூப்பர் பவரால் தடுத்துவிடுகிறாறோ? மேலும் tntjஅமைப்பைவிட்டு பாசித் நீக்கப்பட்டுவிட்டதாக சிலர் பதிவுசெய்கின்றனர்.tntjஅமைப்பைவிட்டு பாசித்தை நீக்கவேண்டுமென்றால் பாசித்தின் முன் அனுமதி பெற்றால் மட்டுமே பெயர் அளவுக்கு நீக்கமுடியும். ஏனெனில்tntj அமைப்பு கிளையை இந்த ஊரில் நிறுவி இளைஞர்களை தனது தீவிர ஆதரவாளர்களாக வைத்துள்ளார். ஆதலால் tntj அமைப்பைவிட்டு பாசித் நீக்கப்படவில்லை. அதோடுமட்டுமல்ல சென்றவாரம் வினவுக்கு தகவல் கொடுத்த நபர்களை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட குழு சரியாக செயல்படாததால் குழுவில் சிலர் நீக்கப்பட்டு tntj அமைப்பை சேர்ந்த அப்பாஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு tntj அமைப்பை சேர்ந்த 10 போ் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னை சென்று வினவிடம் இஸ்லாமிய சட்ட கேள்விகளால் துளைத்தெடுத்து,தகவல் கொடுத்தவர்களின் விவரத்தை கேட்பது.வினவு தகவல் தராதபட்சத்தில் நாங்கள் யார் என்பதை நிருபிப்போம் என கூறி பயணத்திற்கு தயாராகி வருகின்றனர். இவர்களை பொறுத்தவரை ஜமால் எழுதிய கட்டுரையில் உள்ள மையப்பொருள் பிரச்சனை அல்ல.தவ்வுகித்தை விமர்சனம் செய்ததையும்,பாசித்திருமணத்தையும், ஜமாத்தலைவர் ரகசியத்தை வெளியிட்டதும் தான் அவர்களுடைய எல்லையில்லா கோபத்திற்கு முக்கிய காரணம். ஏழைப் பெண்களின் துயரம் அவர்களுக்கு தெரியவாய்ப்பு இல்லை.ஏனெனில் அவர்களின் கண்களை மதம் என்ற சைத்தான் மறைத்து கொண்டுள்ளான்.

    • கறிக்கடை கரீம் பாய் ,ஏற்கனவே நந்தன் பெயரிலும் நீங்கள் வந்ததாக குற்றச்சாட்டு உண்டு.பாசித் மீதும் மற்றும் அந்த கிளை டிஎன்டிஜே காரர்கள் மீதும் உள்ள குற்றச்சாட்டை ஆதாரத்துடன் டிஎன்டிஜே தலைமைக்கு அனுப்பி வையுங்கள் .சாட்சிகளையும் கூறுங்கள் .நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்..மாநில பொது செயலாளராக இருந்த பாக்கர் [பீஜே விற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருந்தவர் சாட்சிகளுடன் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டு விசாரணை வீடியோக்கள் எடுக்கப்பட்டு அதன் பிரதிகள் ஒவ்வொரு கிளைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.] அவரது குற்றங்களுக்காக் நீக்கப்பட்டனர்.இது போன்று பாலியல் ,மற்றும் பொருளாதார குற்றங்களுக்காக நீக்கப்பட்டவர்கள் இப்போது ஐஎண்டிஜெவில் ஒரு அமைப்பாகவே உருவாகிவிட்டனர்.சமிபத்தில் சைபுல்லா காஜா என்ற நீண்ட நாள் பீஜேவின் இரு நண்பர்களில் ஒருவர் ,அமைப்பைவிட்டு தூக்கி வீசப்பட்டார்.சில சமயங்களில் ஒரு மாவட்ட நிர்வாகமே நீக்கப் பட்டுள்ளது.தவறுகள் செய்திருப்பின் ஆதாரங்களுடன் சமர்பிக்கப்பட்டால் அந்த கிளை உறுப்பினர்கள் அனைவரையும் நீக்கவும் டிஎன்டிஜே தலைமை தயங்காது என்பதை மீண்டும் ஒருமுறை கூறிகொள்கிறேன் ..தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைக்காமல் ஆதாரங்களை தலைமைக்கு அனுப்புங்கள்
      தயவுடன் வேண்டுவது தனி நபர் காழ்ப்புணர்வு காரணமாக கிளையின் மீது அவதூறு பரப்பாதீர்கள்.

      • அய்யா tntj நீதிமன்றத்தில் மனுசெய்து வாதாட இஸ்லாமிய சட்டம்படித்த வக்கில்களின் முகவரியை தந்தால் வழக்கு செலவிற்க்கு பணம் தயார் செய்துகொண்டு மனு போட வந்துவிடுவோம்.

        • //கறிக்கடை கரீம் பாய் ,ஏற்கனவே நந்தன் பெயரிலும் நீங்கள் வந்ததாக குற்றச்சாட்டு உண்டு.//இப்ராகிம்பாய் நீங்களும் துப்பறியும் புலியா? உங்க ழூளைய அதிகம் யூஸ் பண்ணாதிங்க.ஏன்னா இந்தியாவோட“ ரா” அதிக சம்பளத்திலே பதவி கொடுத்திறபோகுது.

          • கறிக்கடை கரீம்பாய் நீ டூப்ளிகேட்டு ஒரிஜினல் கறிக்கடை கரீம்பாய் கிட்டே சொல்லி நல்ல ஆட்டு மூளையா எடுத்துவைக்க சொல்லுறேன் ஓசியா திண்டாவது ஒடம்பா ச்சீ மூளைய வளத்துக்க

            • tntjவை தவிர எல்லா முஸ்லீம்களும் டூப்ளிகேட்டுனு தெரியும். ஒரிஜினல் முஸ்லீம் ஹைதர் அலி முடிந்தால் அங்கு உள்ள அரபு சேக்குக்கு என் கடைல ஓசில கறி தர்ரேன் திங்ககொடுக்கவும். அப்போதாவுது அமெரிக்கனை எதிர்க்கும் சுய மரியாதை வருதான்னு பார்க்கலாம்.ஹைதர் அலி நீங்க என் கடை கறிய சாப்பிடவேண்டாம்.ஏன்னா கறிய பிஸ்மி சொல்லி அறுக்கல. உங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாவின் குர்ரான் துணை இரு்ப்பதால் மூளை அதிகம் என்பது எனக்கு தெரியும்.தவறு செய்யும் பாவிகளுக்கு மறுமையில் அல்லா நிச்சயம் தண்டனை கொடுப்பான் என்று நபி என் கனவில் வந்து சொன்னார். அதுவரை டூப்ளிகேட்டு முஸ்லீம்கள் இம்மையில் கலகம் செய்யாமல் தடுப்பது ஒரிஜினல் முஸ்லீம்களின் கடமை. நீங்க உங்க கடமைய நல்லா செய்ரிங்க வாழ்த்துக்கள்.

        • கறிக்கடை கரீம் பொய் ,,ஆதாரம் சாட்சிகள் என்றவுடன் தடுமாறுவது தடம் புரளுவதும் ஏனோ?

          • பாய் ஆதாரத்தோட பாதிக்கப்பட்டவங்க போலிஸ்ல புகார் செய்வதற்கு தயார இருக்காங்க.ஆனா உங்க tntj அமைப்பு காரவங்கதான் ஜமாத்தை மீறி போலிஸ்க்கு போனா ஜமாத் மூலமா கடும் நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்ராங்க. கூடிய விரைவில் ஆதாரத்தோட புகார் செய்யப்படும்.நீங்க பாதிக்கப்பட்டவங்கள்ட விசாரிக்கமாட்டிங்க என்பது தெரியும். ஏன்னா அவங்க tntj அமைப்பை சேர்ந்தவங்க இல்லை. தவ்ஹித் மட்டும் தான் உண்மையான முஸ்லீம்.

          • பெண்களின் சாட்சி தான் அதிகம் உள்ளது. ஒரு பெண் சாட்சியின் மதிப்பு எவ்வளவு வரும் என்று இஸ்லாமிய முறைப்படி கணக்குப்போட்டு வகுப்பு எடுத்தால் என்னைப் போன்ற டூப்ளிகேட்டு முஸ்லீம்கள் மார்க்க அறிவு பெறமுடியும். செய்வீர்களா இப்ராஹிம்?

            • க.க.க நீங்கள் உண்மையில் நீங்கள் பாசித் பிரச்சனையை கையில் எடுத்தது பாவப்பட்ட பெண்களுக்ககா அல்ல.இப்படி இஸ்லாத்தை நொண்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே எனபதும் வெளிபடையாகவே புரிகிறது..

  85. ///இஸ்லாம் போற்றும் அரபு பாதையிலேயே தீர்வை குடுக்கலாமா? திருடினால் கையை வெட்டலாம். பெண் விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்து கொல்லலாம். ஆண் விபச்சாரம் செய்தால்……..ஆண் உறுப்பை அறுத்து நாய்க்கு போடும்படி இஸ்லாமிய சட்டத்தை திருத்தலாமா? சம்மதிக்குமா TNTJ?////
    ////அதாவது இவருக்கு திருமணமாகி _____________ என்ற மனைவியும் 3 வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர் சில ஆண்டுகளாக தனது மனைவி ஒல்லியாக இருப்பதாகவும், அழகாக இல்லையென்றும் கூறி மற்ற பெண்களிடம் அவர்கள் அழகை வருணித்து தனது மனைவியின் அழகை இகழ்ந்து கூறியும் தனது காம இச்சையை அவர்களிடம் தீர்த்து வந்துள்ளார். இந்த செயலை நியாயப்படுத்த அந்த பெண்களிடம் இஸ்லாமிய வரலாற்றை கூறி அதாவது ‘வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்’ அல்லாவிற்கு ஏற்ற செயல்தான் என சமூகம் காறி உமிழும் இந்த செயலுக்கு புனிதம் வேறு கற்ப்பித்துள்ளார்.////
    ஜமால் என்ற கள்ள பெயரில் எழுதுபவர் பாசித் பல பெண்களிடம் வலக்கரத்தை சொந்தமாக்கிக் கொண்டவர் என்று சொல்லி தனது காம இச்சையை தீர்த்துள்ளதாக கூறியுள்ளார்.இப்படி அவரவர் கூறும் அவதூறுகளை இஸ்லாம் ஏற்காது சட்டப்படி இரண்டு சாட்சிகளை டிஎன்டிஜே தலைமை முன்பு கொண்டு அவர் நிறுத்துவாரா?

  86. ஒருவனின் நல்ல பண்புகளுக்கு மட்டுமே இஸ்லாம் காரணமாகும், கெட்ட பண்புகளுக்கு இஸ்லாம் காரணமல்ல என்றும், 14ம் நூற்றாண்டில் நடந்த சில நிகழ்வுகள் இன்று அசிங்கமாக தெரியும்போது அது அன்றைய காலகட்டத்திற்கு மட்டும் பொருந்தக்கூடியவைகள் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இந்த வாதம் ஏன் மற்ற மதங்களுக்கும், மதத்தவர்களுக்கும் பொருந்தாது? பிறகு எந்த விதத்தில் இஸ்லாம் உயர்வானதாகிடும்?

    • உங்களீன் பெரும்பான்மையினர் அருவருக்கதக்க தனியுடைமைவாதியாக இருந்து கொண்டு இதற்கு கம்யூனிஸம் கராணமல்ல எங்கள் தற்கால சூழல் என்று சொல்லிக் கொண்டு
      “திங்கிற சோத்துக்கும் நாங்க பேசுகிற தத்துவஞானத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்று சொல்லிக் கொண்டு பேசுகிற பேச்சுக்கு எதிராக வாழ்ந்துகிட்டு

      மார்க்ஸ் ஸ்டாலின் தவறுகளை சுட்டிக் கட்டும் போது அது அவர்களை சர்ந்தது என்று சப்பை கட்டு கட்டிக் கொண்டு
      நல்ல விஷயங்களை மட்டும் மார்க்ஸ் அப்படி சொன்னார் மாவோ இப்படி சொன்னர் என்று பேசுவது

      பிறகு மாதங்களை விட நீங்கள் எந்த விதத்தில் உயர்ந்து விட்டீர்கள்?

    • கலை ///14ம் நூற்றாண்டில் நடந்த சில நிகழ்வுகள் இன்று அசிங்கமாக தெரியும்போது அது அன்றைய காலகட்டத்திற்கு மட்டும் பொருந்தக்கூடியவைகள் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். ////
      எந்த நிகழ்வுகள் இன்று அசிங்கமாக தெரிகிறது? அன்றைய கால கட்டத்திற்கு மட்டும் எது பொருந்தும் இப்போது பொருந்தாது என்று எதை சொன்னோம்?

  87. சம்பந்தம் இருக்குற இடத்தில் ஆஜராகி சம்பந்தம் சம்பந்தமில்லாமல் சம்பாஷனை செய்து சம்பந்தம் இருப்பது போன்று சம்பவங்களை பேசுவதன் மூலம் சம்பந்த சம்பவங்களை பேசாமல் சம்பந்த சம்பந்தமில்லாமல் பேசி சம்பந்த சம்பவங்களை பேசாமல் இருப்பது ஏன்?

    • சம்பந்தமில்லாமல் தங்கள் ஆஜராகி விடுவதை சுருக்கமாக சொல்லுங்க

      ஒய் திஸ் கலைவெறி கலைவெறி
      ஒய் திஸ் கலைவெறி கலைவெறி

  88. இப்ராகிம் போன்ற மார்க்க அறிஞர்களை பொறுத்தவரை பாசித் எந்த குற்றமும் செய்யவில்லை.அப்படியே இருந்தாலும் நிச்சயமாக ஆதாரம் சாட்சிகள் காட்டமுடியாது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் இருப்பது தெரிகிறது. ஜமால் கட்டுறையில் குறிப்பிடாத இன்னும் சில சம்பவங்கள் உள்ளன. ஒரு பெண்ணிடம் பல முறை பாசித் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். கடைசியாக அந்த பெண்ணின் கையை பிடித்துள்ளார். அந்த பெண் அழுது கொண்டே தனது உறவினர்களிடம் கூறிவிட்டார். அந்த உறவினர்கள் பாசித்திடம் சண்டைக்கு சென்ற போது பாசித் அந்த பெண்ணை குர்ரானில் சத்தியம் செய்ய சொல்லியுள்ளார். அந்த பெண்ணும் குர்ரானில் சத்தியம் செய்தார்.(இச்சம்பவத்தை தேவை ஏற்பட்டால் மட்டும் விரிவாக தருகிறேன்)இதைப் பற்றி பாசித்திடம் போன் செய்து உறுதி செய்து கொள்ளவும்.இதுமட்டுமல்ல இந்ந பக்கிரித் பண்டிகையின் போது இவ்வுரில் 50 வருடத்திற்கு மேலாக பள்ளிவாசலில் குடியிருந்து அடிமை வேலை செய்து வரும் நாவிதர் குடும்பத்தை ஊரைவிட்டே விரட்டிவிட்டனர். எதனால் என்றால் ஆடு அறுத்த தோலை வீடு வீடாக சென்று நாவிதர் குடும்பத்தை சேர்ந்த பையன் எடுக்காமல் சினிமாவுக்கு போய்விட்டான் என்று.அடிமை வேலை என்றால் இந்து மதத்தில் தலித்துகள் ஆதிக்க சாதிகளுக்கு செய்ததைவிட பல மடங்கு அதிகம். இதைப்பற்றி வரும் பின்னுட்டங்களில் விளக்கமாக எழுதுகிறேன். இஸ்லாத்தில் சாதி இல்லை,ஏற்ற தாழ்வு இல்லை என்று கூறுபவர்கள் பாசித்தின் ஊருக்கு வந்தால் நீங்கள் கேட்கும் ஆதாரத்துடன் விடை கிடைக்கும்.

    • சகோதரர் இமாம் அலி ,நான் முதலில் மார்க்க அறிஞர் அல்ல .நீங்கள் கூறியவைகள் உண்மையான் குற்றச்சாட்டுகளாக இருக்கலாம் .அவற்றுக்கு தெளிவான ஆதாரங்கள் இல்லாமலும் இருக்ககூடும் ,ஆனால் உங்களது குற்றச்சாட்டுகளில் நியாயமும் எதார்த்தமும் உள்ளது.,ஆனால் நீங்கள் கொடுத்த மூலக்கதையை வைத்து ,வினவுவில் திரைக்கதை வசனம் எழுதி உள்ளார்கள்.
      வலக்கரம் சொந்தமாக்குதல் என்பதை முஸ்லிம்கள் இப்போதும் நடைமுறைபடுத்துகிரார்கள் என்பதை உலகுக்கு காட்ட பாசித் கதையை தங்களுக்கு சாதகமாக அவர்கள் பயன்படுத்த முனைகிறார்கள் .மற்றபடி அவர்களுக்கு அந்த பெண்மீதோ மற்ற பெண்கள் மீதோ நீலி கண்ணீர் காட்டுகிறார்கள். அவர்களுக்கு பாசித் முக்கியம் அல்ல .பாசித்தை கொண்டு இஸ்லாத்தை சிதைக்க வேண்டும் என்பதே இலக்கு.அதைதான் இங்கு நாங்கள் எதிர்க்கிறோம். பாசித்தின் தவறான நடவடிக்கைகளுக்கு கிளை உறுப்பினர்கள் உறுதுணையாக இருந்தால் டிஎன்டிஜே மாவட்டதலமைக்கு தெரியப்படுத்துங்கள்.

      பஸ்ஸில் நேரடி நடவடிக்கையில் இறங்கியதாக பெருமைபட கூறினார்கள் வரவேற்போம்..அது போன்று பாசித்தின் நடவடிக்கைகளை தொடராக கவனித்து கையும் களவுமாக சிக்க வைத்து கட்டி வைத்து ,,,,,நடவடிக்கை எடுத்திருக்கலாமே .புரட்சிபடை தளபதி அலாவுதீன் தலைமையில் அக்கிரமத்தை எதிர்த்து அயோக்கியர்களை கட்டம் கட்டியிருக்கலாமே..அவர் வினவவு வில் அதன் பிறகு ஆதாரபூர்வமாக வெளியிட்டிருக்கலாம்.நாங்கள் எங்களது ஊர்களில் அதை செய்கிறோம் .அவன் பலமிக்கவன் என்றால் பணக்காரன் என்றால் அதிவிரைவு நடவடிக்கை அல்லவா எடுத்துக் கொண்டிருக்கிறோம்.இதனால் எங்கள் மீது சட்டத்தை கையில் எடுக்கிறார்கள் என்று போலிஸ் மூலமே எங்களது தலைமைக்கு புகார்கள் சென்று ஒரு கிளைத்தலைவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
      நாவிதர் இழிவுபடுத்தப் பட்டார் என்றால் அதை தட்டி கேட்க வழியில்லாத அலாவுதீன் ஜமாத்துடன் குலாவுவது ஏன்?
      எங்கள் ஊரில் நாவிதர் இருக்கிறார்.வெளிநாட்டில் இருக்கிறார்.ஏசி வீட்டில் வசிக்கிறார்.ஆனால் ஊருக்கு பெருநாள் நேரத்தில் வந்தால் வழக்கமான வசூலையும் செய்கிறார்.இந்த இழிசெயலையும் கைவிட அவர்கள் முன்வரவேண்டும்.

  89. கலிமுல்லாவாகிய கருப்பன் நான். அப்துல் ரஹ்மான் யார் ? அப்துல் ரஹமானிடமிருந்து வந்த மின்னஞ்சலிருந்து ரஹ்மான் சொன்னதை உரையாடலாக தந்திருந்தேன். நம்ம இபுராகிம் ரஹ்மானுடைய உரையாடலையும் என்னுடைய நடவடிக்கையையும் எழுதியதன் மூலம் நம்ம இபுராகிம்தான் ரஹமான் என் அறிந்து கொண்டேன். மனம் திருந்திய என்னை பொட்டாட்டி புள்ளைங்களோட மதம் மாறினேன் என்று சொன்னது மட்டும் பொய் என்பதால் பொய் என்று கடுமையாக குற்றம் சாட்டாமல் கல்யாணம் எல்லாம் ஆகலீங்க என்ற தகவலைச் சொன்னேன். என்ன செய்ரது உறவை பலப்படுத்தனும்னா எல்லாத்தையும் பொறுத்துக் கொள்ளனுமுள்ள.
    ஆனால் மனம் திருந்திய சக்கிலியனான என்னை கழிசடை என்று கழட்டிவிட முயற்றசிப்பதும் அப்துல் ரஹ்மானை கூட்டிகிட்டு வா என்று சொல்வதும்……
    சக்கிலியனா இருந்து கேவலப்பட்ட என்னை பாய் என்று அழைத்ததும் புல்லரித்து போயிருக்கும் என்னை…. அண்ணா கிண்டல் வேணாமுங்க. நீங்கதான்னா அப்துல் ராஹ்மான். இல்லன்னா அப்துல் ரஹ்மான் என்னிடம் சொன்னது எப்படி உங்களுக்க தெரியும் ?

    • கருப்பன் ,நான் அப்துல்ரகுமான் என்றாலும் என்னிடம் வந்த கருப்பன் கலிமுல்லாவாக மாறிவிட்டார். அவர் தன அறியாமையை உணர்ந்து தனக்கு ஒரு திருமணமே போதும் என்று சொல்லி உங்களைப் போன்ற கழிசடை கறுப்பன் களுக்கு இப்போது தாவ பண்ணி கொண்டு இருக்கிறார்.அவர் மீண்டும் தன்னை கருப்பன் என்று சொல்லப்போவது இல்லை.உங்கள் உறவை பலப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் பலப்படுத்த விரும்பினால் உங்கள் உறவு பெண்களை முஸ்லிமாக்கி உங்களது ஊர் முஸ்லிம்களை அணுகவும் .அதன் பின்னர் உங்களுக்கு அங்கெ பெண் தந்து பலப்படுத்திக் கொள்வார்கள். ஆக இப்போது இரட்டை பலப்படுத்தல் ஆகிவிடும்.

  90. ##பாசித் மீதும் மற்றும் அந்த கிளை டிஎன்டிஜே காரர்கள் மீதும் உள்ள குற்றச்சாட்டை ஆதாரத்துடன் டிஎன்டிஜே தலைமைக்கு அனுப்பி வையுங்கள் .சாட்சிகளையும் கூறுங்கள் .நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்..மாநில பொது செயலாளராக இருந்த பாக்கர் [பீஜே விற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருந்தவர் சாட்சிகளுடன் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டு விசாரணை வீடியோக்கள் எடுக்கப்பட்டு அதன் பிரதிகள் ஒவ்வொரு கிளைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.] அவரது குற்றங்களுக்காக் நீக்கப்பட்டனர்##

    மேலே உள்ள வரிகள் பின்னோட்டம் எண் 94-ல் இபுராகிம் சொன்னது.

    நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டார் என்று முதலில் சொன்னார், இப்பொழுது புகார் செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்.

    பாக்கர் நந்தினியோட ஜல்சா பண்ணினதற்கு ஜென்டில்மேன் அக்கிரிமேன்ட் போட்டுக்கிட்டு இரண்டுவருசமா அணிகளிடம் பொய் சொல்லி காப்பாத்துன பீஜேவும் நிர்வாகிகளும் சக்கிலா மேட்டரில் ஹாமிம் இபுராகிம், பாக்காரை விலக்காவிட்டால் நோட்டீசு அடிச்சு ஒட்டுவேன்னு கடிதம் எழுதிய பிறகு வேறு வழியில்லாமல் நீக்கினர். இப்பொழுதும் பிஜே மறைச்சுடலாம் என்றும் ஹாமிம் மனுவை தூக்கிப்போட்டுடலாம் என்றும் கூறுவதை நான் இதற்கு மூன் தந்துள்ள வீடியோ இணைப்பில் பாருங்கள்.

    ஆனாலும் இபுராகிம் தைரியமா இவ்வளவு பொய் சொல்லக்கூடாது. எல்லாம் விசுவாச போதைதான்.

    • ///நான் இதற்கு மூன் தந்துள்ள வீடியோ இணைப்பில் பாருங்கள்.///
      டிஎன்டிஜே மக்களுக்கு வெளியிட்ட வீடியோவக்களை நீங்கள் தந்துள்ளதாக பம்மாத்து காட்ட வேண்டாம் .இறையருளால் விரிவான பதில் நாளை

    • எக்ஸ் .சாஹித்,பாசித் கிளை செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.அவரை உறுப்பினர் ஆகவும் நீக்க வேண்டியது மாநில தலைமை தான் .மேலும் கிளை சேர்ந்தவர்களும் பாசித்தின் தவறான் நடவடிக்கை களுக்கு துணைபுரிவதாக சொன்னார் கள்ள பெயரில் வரும் க.க.க. சொல்லியுள்ளதால் நீங்கள் புகார் ஆதாரத்துடன் பண்ணுங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியுள்ளேன் .
      ////பாக்கர் நந்தினியோட ஜல்சா பண்ணினதற்கு ஜென்டில்மேன் அக்கிரிமேன்ட் போட்டுக்கிட்டு இரண்டுவருசமா அணிகளிடம் பொய் சொல்லி காப்பாத்துன பீஜேவும் நிர்வாகிகளும் சக்கிலா மேட்டரில் ஹாமிம் இபுராகிம், பாக்காரை விலக்காவிட்டால் நோட்டீசு அடிச்சு ஒட்டுவேன்னு கடிதம் எழுதிய பிறகு வேறு வழியில்லாமல் நீக்கினர். இப்பொழுதும் பிஜே மறைச்சுடலாம் என்றும் ஹாமிம் மனுவை தூக்கிப்போட்டுடலாம் என்றும் கூறுவதை நான் இதற்கு மூன் தந்துள்ள வீடியோ இணைப்பில் பாருங்கள்.///
      நாங்கள் கொடுத்த வீடியோவில் நாங்கள் பார்த்து விட்டோம்.பாக்கர் நந்தினியுடன் பஸ்ஸில் ஒரே சீட்டில் பயணித்ததை சாட்சிகளுடன் பிடிபட்டார்.அதற்காக அவர் வருத்தம் தெரிவித்து இனி அதுபோன்று செயல்படமாட்டேன் என்று உறுதி கூறியதால் அவர் மூன்று மாத காலம் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.மீண்டும் அவர் அமைப்பில் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட பிறகு சக்கிலா மேட்டர் அதாவது அலுவலக அறையில் தனியாக சந்தித்தது சந்திக்கு வந்த பிறகு
      அவர்மீது அபரித நம்பிக்கை வைத்திருந்த மக்களுக்கு பஊரிய வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது
      இதில் என்ன பொய் இருக்கிறது.?

  91. சகோதரர் நீங்கள் கூறுவது போல் எங்கள் ஊரில் நாவிதர் குடும்பம் வளமான வாழ்வு வாழவில்லை. அவர்கள் மிகவும் கேவலமான முறையில் நடத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டுள்ளார்கள். அதனை நாம் ஒவ்வொருவரும் கண்டிக்கவேண்டும்.அதே போல் பாசித்தும் எங்கயோ ஒரு இடத்தில் முதல் மணம் என்று கூறிதான் திருமணம் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுவரை அவர் திருமணம் தொடர்பான எந்த ஆதாரத்தையும் ஜமாத்தில் அளிக்கவில்லை. இந்த திருமணத்தை விமர்சனம் செய்தவர்களை திட்டுகிறார். இது தொட்பாக கூட பாசித்தை கண்டித்து ஜமாத்தில் வெள்ளிகிழமை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு எல்லாம் தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள் இது சரியா? அவர்கள் தானே நீங்கள் கூறியபடி தலைமைக்கு அறிக்கை அனுப்பியிருக்க வேண்டும். இப்பொழுது நாவிதர் குடும்பமும் நீதி பெற்றுக்கேட்டு வினவு குரூப்களிடம் நிற்பதை கவனித்துவிட்டு தான் வருகிறேன். சகோதரரே இந்த அநீதியை நாமே தடுத்து இருந்தால் அவர்கள் உள்ளே புகுந்திருக்க முடியுமா? இதற்கு நாம் தான் காரணம் என்பது தான் என்னுடைய குற்றசாட்டு.

  92. சவரக் கத்தி மூலம் தயார் செய்வது என்றால் என்ன? விதவை பெண்கள் மொட்டை அடிப்பதுதானே
    Buhari 5245. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்
    நான் ஒரு போரில் (தபூக்கில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தேன். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக் கொண்டிருந்தபோது, மெதுவாகச் செல்லக் கூடிய ஒட்டகத்தின் மீது இருந்தவாறு நான் அவசரப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனமொன்றில் வந்து சேர்ந்தார். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்,) ‘உமக்கு என்ன அவசரம்?’ என்று கேட்டார்கள். ‘நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்” என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘கன்னிப் பெண்ணை மணந்தாயா. அல்லது கன்னி கழிந்த பெண்ணை மணந்தாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை. கன்னிகழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)” என்றேன். நபி(ஸல்) அவர்கள், அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக் குலாவி மகிழ்ந்திருக்கலாமே!” என்றார்கள்.
    பிறகு நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்து (ஊருக்குள்) நுழையப் போனபோது நபி(ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இஷா நேரம் வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
    அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹுஷைம் இப்னு பஷீர்(ரஹ்) கூறுகிறார்கள்:
    நபி(ஸல்) அவர்கள் ஜாபிர்(ரலி) அவர்களிடம், ‘புத்திசாலித்தனமாக நடந்துகொள்” என்றார்கள். அதாவது ‘குழந்தையைத் தேடிக்கொள்” என்றார்கள் என நம்பத் தகுந்த (அறிவிப்பாளர்) ஒருவர் என்னிடம் கூறினார்.
    Volume :5 Book :

    • ram ,இங்கே மருத்துவம் என்ன சொல்லுகிறதோ அதையே இஸ்லாமும் சொல்லுகிறது. ஆண்களும் பெண்களும் தங்களது தேவையற்ற இடங்களில் வளரும் முடிகளை அகற்ற சொல்லுகிறது .நாற்பது நாட்களை அதிகபட்ச நாளாக வைத்துக் கொள்ளுங்கள் என்பதும் நபி மொழியே

  93. என் பெயர் சாகித். எனது பெற்றோர் என்ன காரணத்தாலோ அப்துல்லா, முகம்மது என்ற பின்னொட்டுகளை சேர்க்வில்லை. அது ஒருவகையில் எனக்கு, நான் நாத்திகனானதிலிருந்து உதவுகிறது. 9 ஆம் வகுப்பு படிக்கும்போது நான் நாத்திகனாலும் இது குறித்த விவாதங்களில் 20 வயதுகளிலேயே செய்யத்தொடங்குகிறேன். பள்ளிப்படிப்ப முடிந்த பிறகு ஒரு விளம்பரத்தைக் கண்டு ரேடியோ மெக்கானிசம் கற்றுக்கொள்ளச் செல்கிறேன். அதன் உரிமையாளர் இக்பால் ஒரு சல நாளில் ஏதோ ஒன்றில் சர்ச்சையிட, நான் நாத்திகன் என்பதை அறிந்து கோவப்பட்டார். பெயரை வைத்து என்னை முஸ்லீம் என்று நினைத்து ஏமாந்து விட்டதாகவும் பெயரை மாற்றுங்கள் என்றும் கூறினார். முஸ்லிம் என்பதற்காக அவர் சலுகை கட்டணமோ அல்லது வேறு எந்தவையிலும் சலுகையோ தரவில்லை. ஆனாலும் அவர் ஏமாந்துவிட்டதாக புலம்பினார். நானும் ஒரு தவறு செய்துவிட்டேன் என் நெற்றியில் நாத்திகன் என்று எழுதி ஒட்டிக்கொள்ளாமல் சென்றுவிட்டேன். உண்மையில் ஏமாந்தது நான் தான். வழக்குரைஞர் பட்டம் பெற்ற அவர், அதில் குப்பை கொட்டமுடியாமல் டெக்னிகல் இன்ஸ்டிடியூட் நடத்திய அவருக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது. பாடம் நடத்த வந்த வாத்தியாருக்கு சம்பளம் ஒழுங்காக தராததால் அவர் நின்றுவிட எனக்கு பயிற்சியும் போச்சு பணமும் போச்சு.

    இந்த பிரச்சினைக்குப் பிறகு சரி, நம்ம பெயரை மாற்றிக் கொள்வோம் என்று வளவன் என்று மாற்றிக்கொண்டேன். என்னுடைய இளவயது நண்பர்கள் அனைவரும் வளவன் என்றே கூப்பிடலாயினர்.

    ஒருமுறை கல்கத்தாவிற்கு தொடர்வண்டியில் சென்ற பொழுது பக்கத்திலிருந்தவர்கள் இசுலாத்தின் மாண்புகளை போற்றி புளங்காகிதம் அடைந்து கொண்டிருந்தனர். இடையிடையே என்னிடமும் கருத்து கேட்டனர். நான் வெளியில் விவாதம் செய்து பழக்கமில்லாதிருந்தேன். அதுபோல என் வயதும் தயக்கத்திற்கு காரணமாக இருந்தது. அதனால் மழுப்பலான சிரிப்பையே பதிலாகத்தந்தேன்

    மூஸாநபியும் ஹிள்ருநபியும் பயணம் செய்த கதையைக் கூறிக்கொண்டிருந்தனர். ஹிள்ருநபி விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை கொலை செய்த கதையை கூறிவிட்டு “அப்படி கொலை செய்தாலும் ஒரு நனமையை அல்லா நமக்கு வைத்திருக்கிறான்” என்று கூறினர். என்னைப் பார்த்தும் கேளுங்கள் என்பது போல் தலையாட்டினர். சிறிது தயக்கம் ஏற்பட்டாலும் மனம் பொறுக்காமல் ‘அதுதான் அல்லா சைத்தானை உன்னால் முடிந்ததைப்பார் என்று சொல்லிவிட்டானே. பிறகு இந்தப் பையன் சைத்தான் வழியில் போய்விடுவான் என்றால் இறந்த பிறகு நரகத்தில் போடுவதுதானே சரியானது. இப்படி கொலை செய்வதென்றால் படைக்காமலே இருந்திருக்கலாம். அதுபோல தவறு செய்பவர்களை எல்லாம் முகம்மதுநபி கால்திலேயே கொலைசெய்து தூய்மையான இசுலாமியர்களை மட்டும் அவர் விட்டுவிட்டு போயிருந்தா எல்லோரும் நன்மை செய்தவர்களாக உலமே நன்மையில் மூழ்கி கிடக்குமே என்றேன்.” (அப்படி எல்லோரையும் நூஹ்நபி காலத்தில் அழித்த்தாக கதை ஒன்றும் உள்ளது) அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. ஏற்கனவே பொயரை கேட்டு அறிமுகமாயிருந்ததால் ‘உங்களுக்கு இசுலாத்தைப் பற்றி என்னங்க தெரியும். முழுசா குர்ஆனை படிச்சிட்டு சொல்லனும். குன்றக்குடி அடிகளாரெல்லாலாம் இசுலாத்தின் சிறப்புகளை கூறுவதை கேட்கவில்லையா? என்றனர். எனக்கு கொஞ்சம் தெரியும் என்றேன். உடனே தமிழ்ல படிக்க க்கூடாதுங்க. அதை அரபிலேயே படிக்கனும்ங்க. என்றனர். அப்போ குன்றக்குடி அடிகளார் அரபியிலயா குர்ஆனை படிச்சார் என்று கேட்டேன். சுருக்குன்னு கொஞ்சம் கோவப்பட்ட ஒருவர் நீங்க விதன்டா விவாதம் செய்கிறீர்கள் என்றனர்.(நேரான விவாதம் என்றால் என்ன என்று புரியவில்லை. சொல்லுவதை அப்படியே ஏத்துக்கிட்டா விவாதம் போல) தமிழ் ஆளுகளுக்கு என்ன தெரியும் என்பது போல் கொஞ்சம் நேரம் பேசினர். மெதுவாக நானும் இசுலாமிய பெற்றோர்களுக்கு பிறந்தவன்தான் என்று கூறியதும் இன்னும் கொஞ்சம் கடுப்பாகி இசுலாமியனா இருந்துகிட்டு நீங்க இப்படி பேசலாமா என்றனர். ஏங்க அப்ப பெயரை மாத்தி சொன்னீங்க என்று ஒருவர் கேட்க, எனக்கு பிடிக்கல. அதுனால மாத்திக்கிட்டேன் என்றேன். ஏங்க பேரைமாத்திக்கிட்டு ஏமாத்துறீங்க. இசுலாமியனா இருந்துகிட்டு, வேறு பெயர்ல ஒளிஞ்சுகிட்டு இசுலாத்திற்கு துரோகம் பண்ணுறீங்க என்றார். என்ன துரோகம்ங் செஞ்சுட்டேன். இந்த கதை சரியில்லைன்னுதானே சொன்னேன் என்றேன். இசுலாத்தைப் பற்றி சரியாக புரியாம பேசாதீங்க என்று முனகிவிட்டு ஒதுங்கிவிட்டனர்.

    அப்பொழுதும் கூட வளவனாக இருப்பது பற்றி எந்த மாற்றமும் மனதில் இல்லை. அமைப்பு வேலைகள் செய்யத் தொடங்கிய காலத்தில் தோழர்களுக்கும் இந்துக்களுக்கும், இசுலாத்தின் பெருமைகளை சொல்லும் இசுலாமியர்கள் சில மறுப்புகளை நான் சொல்லும்போது நானும் ஒரு இந்து மதத்திலிருந்து வந்தவன்தான் என்ற கருதிக்கொண்டு சரியா தெரிஞ்சிகிட்டு பேசனும் என்று அறிவுரை கூறுவர். பிறகு நான் இசுலாத்திலிருந்து வந்தவன் என்று சொன்னதும், பதில் சொல்ல முடியாமல் ஏங்க கோழைத்தனமா பெயரை மாத்திவச்சிகிட்டு ஏமாத்துறீங்க எனபர். இதில் என்ன கோழைத்தனம், ஏமாற்றுதல் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. இசுலாமியனா பிறந்து அல்லாவை கேள்விக்குள்ளாக்குவதால் என்ன சொல்லுவது என்று புரியாமல் உளறும் சொற்கள் இவைகள்.

    இதில் இன்னொரு பிரச்சனையும் உள்ளது. இசுலாமியன் என்றால் ஊர்கட்டுப்பாடு போடலாம் பிறரை தூண்டி விட்டு தாக்கலாம் (ஒரு இந்து அப்படி உடனே செய்யமுடியாது தானே. ஆர்.எஸ்.எஸ். காரன் வந்துவிடுவான்ல) என்பதை புரிந்து வைத்திருப்பதால் மாற்றுப் பெயரில் வருபவர்களைக் கண்டு கோபம் கொள்கின்றனர். (இதற்கும் எனக்கு ஒரு அனுபவம் உண்டு)

    ஒரு கட்டத்தில், 2000மாவது ஆண்டுகளில், அமைப்பிலும் சாகித் என்ற பெயரிலேயே இயங்குவது என்று முடிவு செய்து சாகிதாகவே இன்றுவரை அழைக்கப்படுகிறேன். அதன் பிறகே “அடிமை அது அல்லாவின் ஆணையை” வெளியிட்டேன். அதனை ஒரு இந்து அல்லது கம்யூனிஸ்ட் வெளியிட்டால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.

    இங்கே இசுலாமியப் பொயர்களில் வரும் அனைவரையும் இந்துக்கள் என்றும், புனைப் பெயரில் வரும் இசுலாமிய பெற்றோர்களுக்கு பிறந்தவர்களை உன் உண்மையான பெயரில் எழுதுடா கோழையே என்றும், உண்மையான பெயரில் வந்தால் பெயரை மாத்துடா என்றும், இந்த முழுதாக வெந்தவர்கள் (நாமெல்லாம் அரைவேக்காடு) கூறுவதை எல்லோரும் அறிந்ததுதானே. அதனால் இந்த முழுவேக்காடுகளுடன் பெயர் குறித்து விவாதித்து வீணாக காலத்தை கழிக்காதீர்கள் தோழர்களே.

    பின்னூட்டம் ஒரு கட்டுரை அளவிற்கு பெரிதாகிவிட்டதற்கு பொறுத்துக்கொள்ளவும்.

  94. யார் என்ன சொன்னாலும் அதை கேட்டு பெயர் மாற்றும் முன்னால் சாகித் ,பெயரளவில் கூட உறுதி இல்லாதவர்.கொள்கையளவில் எப்படி உறுதியாக இருக்கிறாரோ?

  95. X.SAHITH ////அதன் பிறகே “அடிமை அது அல்லாவின் ஆணையை” வெளியிட்டேன். அதனை ஒரு இந்து அல்லது கம்யூனிஸ்ட் வெளியிட்டால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.//
    உலகமே வடித்து பரிணாம மாற்றம் நிகழ்ந்திருக்கும் ,வேறு என்ன பெரிதாக நடந்து விடும்?

  96. //அந்த பணியாளரை பாலியல் வலுவந்தம் செய்யும் அரபி இசுலாமிய குற்றவியல் சட்டப்படி சாவுத்தண்டனைக்குரிய குற்றத்தை செய்கிறான்.ஆக இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது அந்த அரபி தாம் சார்ந்துள்ள மதத்தையே முழுமையாக பின் பற்றி நடக்காதவன் //

    திப்பு பாய்,
    போர் நடந்த இடங்களிலேயே போரில் கைப்பற்றப்பட அடிமைப் பெண்களுடன் நபித் தோழர்கள் உடலுறவு கொண்டிருக்கின்றனர். அதற்கு நபி முகமதும் அனுமதியளித்திருக்கிறார். தங்களது இல்லங்களிலும் அடிமை பெண்களுடன் மணமுடிக்காமல் உறவு கொள்ளவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இதில் வலுவந்தம் நடைபெறவில்லை என்கிறீர்களா? இதை விபச்சாரம் இல்லை என்கிறீர்களா?

    • சுஜித்கான் பாய்,பெண் போர் கைதிகளை பாதுகாக்க வேறு வழி இல்லாததால் அந்த சமயத்தில் இஸ்லாம் ஏற்றுக் கொண்ட லிவ்விங் டுகெதர். இப்போது அவ்வாறான சூழ்நிலைக்கு வாய்ப்பு இல்லை.

  97. //அந்த பணியாளரை பாலியல் வலுவந்தம் செய்யும் அரபி இசுலாமிய குற்றவியல் சட்டப்படி சாவுத்தண்டனைக்குரிய குற்றத்தை செய்கிறான்.ஆக இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது அந்த அரபி தாம் சார்ந்துள்ள மதத்தையே முழுமையாக பின் பற்றி நடக்காதவன் //

    அன்றைய்ய உற்பத்தி முறைக்கு ஏற்ப தங்களுடைய செல்வத்தை பெருக்கிக்கொள்ள ஆண்டையால் அடிமைகள் விலைக்கு வாங்கப்படுகின்றனர். அவ்வாறு வாங்கப்பட்ட அடிமைகள், தங்களுடைய குடும்பத்தை விட்டுப் பிரிந்து தங்களை வாங்கிய ஆண்டையினுடேயே தங்கிவிடுவதினால் அவர்களின் பாலுணர்வு இச்சையை தணிக்கவே அவர்களை வலகரம் சொந்தமாக்கிக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டதாக இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர். இன்று உற்பத்தி முறையும் அதனாலான உறவு முறையும் மாற்றமடைந்திருக்கிறது. அடிமையைப் போல ஒரு தொழிலாளி முதலாளிடமே தங்கிவிட வேண்டிய நிலை இல்லை. இருந்தபோதிலும் குடும்பத்தை விட்டு வருடக்கணக்கில் வெளிநாட்டில் தங்கி வேலைசெய்யும் பெண்களின் நிலை ஏறக்குறைய அடிமை நிலையை ஒத்ததாகவே இருக்கிறது. இங்கு இப்பணிப்பெண்களின் பாலுணர்வுத் தேவையை பூர்த்திசெய்ய ஒரு அரபி செய்யும் செயலுக்கு அவர் மேல் சாவுத்தண்டனை அளிப்பது நபியின் வழிக்கு மாற்றமானது. சொல்லப்போனால் சவூதி அரசுதான் தாம் சார்ந்த மதத்தையே முழுமையாக பின்பற்றி நடக்காத அரசு. நபி முகமது கூட அடிமைப்பெண் என்றழைக்காதீர்கள் பணிப்பெண்கள், பணியாள் என்றே அழையுங்கள் என வேறு கூறியிருக்கிறார். ஒரு வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு குரானையே மாற்றிப்போடும் நமது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் செயல்படி பார்த்தாலும் நபி கூறிய ’பணியாளும்’ திப்பு கூறிய ’பணியாளும்’ ஒன்றுதான்.

    • மேற்கோள் காட்டும் பகுதிக்கு பின்னால் விடை உள்ளது. பார்க்கவும்.

      \\அந்த பணியாளரை பாலியல் வலுவந்தம் செய்யும் அரபி இசுலாமிய குற்றவியல் சட்டப்படி சாவுத்தண்டனைக்குரிய குற்றத்தை செய்கிறான்.ஆக இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது அந்த அரபி தாம் சார்ந்துள்ள மதத்தையே முழுமையாக பின் பற்றி நடக்காதவன் என்பதே//.

      \\அப்படிப்பட்ட ஒருவன் தமது பாலியல் அத்துமீறல்களுக்கு இசுலாம் அனுமதித்த அடிமை முறையின் படி தர்க்க நியாயம் கற்பித்துக் கொள்கிறான் என்பது கற்பனையானது.//

      மற்றபடி நீங்கள் எழுப்பும் கேள்விகள் ஓரிரு பின்னூட்டங்களில் விவாதித்து தீர்வு காணக்கூடியவை அல்ல.முழுமையாக இசுலாமிய மதம் குறித்த ஒரு விரிவான விவாதம் இதற்கு தேவை.அத்தகைய விவாதத்திற்கு பொருத்தமானவர்கள் தமிழ்நாடு தவ்கீது அமைப்பினர்தான்.அவர்கள்தான் தங்கள் வலைத்தளத்தில் இப்படியான விவாதங்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கிறார்கள்.

      http://www.onlinepj.com/

      மதவாதிகளுடன் விவாதிக்க மாட்டோம் என்ற மொக்கை காரணத்தை மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போல் சொல்ல வேண்டாம்.மதத்தை பற்றி மதவாதிகளிடம் விவாதிப்பதுதானே சரியானது.அதெல்லாம் முடியாது மதத்தை பற்றி மளிகை கடை பாய் கூடத்தான் விவாதிப்போம் எனபது எப்படி சரியாகும்.

      • மத அடிப்படைவாதிகளோடு எங்களுக்கென்ன விவாதம் வேண்டிக்கிடக்கிறது ? இசுலாம் சரியா இந்து மதம் சரியா என்று விவாதித்து கடைசியில் கொஞ்சம் சுமாரான ஏமாற்றுக்காரர்களுக்கு பின்னால் செல்லலாம் என்று மக்களுக்கு வழிகாட்டச்
        சொல்வதற்காக விவாதிக்கச்சொல்கிறீர்களா அல்லது எங்களையும் கம்யூனிஸ்ட் கட்சி, சிவப்புக்கொடி,போராட்டம்,உழைக்கும் மக்கள் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு PJ கூட்டத்தோடு சேர சொல்வதற்காக விவாதிக்கச் சொல்கிறீர்களா ?

        மதங்கள் மக்களுக்கு எதிரானவை என்பதை நிரூபிக்க மதவாதிகளோடு விவாதித்து தான் தெளிவு பெற வேண்டும் என்கிற அவசியம் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை. அதை அறிய மார்க்சியம் என்கிற அறிவியல் இருக்கிறது. மேலும் பிற பிரிவு உழைக்கும் மக்களைப் போலவே தான் கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் வாழ்க்கையும் நாளுக்கு நாள் நெருக்கடிக்குள்ளாகி வருகிறது. இது போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை எத்தனை PJ வந்தாலும் தீர்க்க முடியாது. அதற்கு கம்யூனிஸ்ட் கட்சி தான் வேண்டும்.

        அந்நிய முதலீடு பற்றி தற்போது நீங்கள் எழுதியுள்ள பதிவையே கூட எடுத்துக்கொள்வோம். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தால் என்னவாகும் ? கோடிக்கணக்கான சில்லரை வர்த்தகர்கள் அழிந்து போவார்கள் அதில் சில லட்சம் இசுலாமிய மக்களும் அடங்குவார்கள். இதை எதிர்த்து PJ வால் என்ன செய்ய முடியும் ? இதை இவர்களால் எதிர்க்க முடியுமா முடியாதா என்பதை பற்றி பேசுவதற்கு முன்னால் இது ஏன் இந்தியாவிற்குள் வருகிறது என்பதற்கான காரணத்தையாவது கூற முடியுமா PJ வால் ?

        சொல்லுங்கள் மேற்கொண்டு பேசுவோம்.

        • அம்பேத்,////மேலும் பிற பிரிவு உழைக்கும் மக்களைப் போலவே தான் கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் வாழ்க்கையும் நாளுக்கு நாள் நெருக்கடிக்குள்ளாகி வருகிறது. இது போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை எத்தனை PJ வந்தாலும் தீர்க்க முடியாது. அதற்கு கம்யூனிஸ்ட் கட்சி தான் வேண்டும்.///
          கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் இப்படி பேச உங்களுக்கு யார் கற்று கொடுத்தார்கள்?
          ரஷ்யாவின் வாழவாதர பிரச்னைகளை கம்யுனிசம் தீர்த்து வைத்ததா?
          ///[சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ]இந்தியாவிற்குள் வருகிறது என்பதற்கான காரணத்தையாவது கூற முடியுமா PJ வால் ?///
          உலகமே இருட்டு என்று கண்ணை மூடிக்கொண்ட பூனை சொல்வது போல உள்ளது.அவரிடம் கேட்டு பாருங்கள்.உங்களுக்கு தெரியாத விசயங்களுக்கும் இதில் பதில கிடைக்கும்.

    • மளிகை கடை பாயை மதமெனும் மாய வலையிலிருந்து மீட்பதற்காகவே அவர்களுடன் விவாதம் செய்ய முனைகிறோம் என்று சொல்வீர்களேயானால் அதை ஏற்கிறேன். அதனால்தான் சொல்கிறேன்.இப்படி தனித்தனியாக ஒவ்வொருவருடனும் விவாதித்து ”வென்றெடுக்கும்”சிரமம் இல்லாமல் பல லட்சம் மக்களை சென்றடையும் வகையில் பகிரங்க விவாதம் நடத்தி அந்த வாதத்தில் வெற்றி பெற்று பல்லாயிரம் பேரை வென்றெடுங்களேன்.

      • பல்லாயிரம் அல்ல பல லட்சக்கணக்கான முசுலீம் மக்கள் அடிப்படை வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் திப்பு. PJ அந்த மக்களுடைய மண்டைக்குள் எவ்வளவு தான் இசுலாத்தை இறக்கி வைத்து வளைத்து போட நினைத்தாலும் அது கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடிப்பதை போன்றது தான். உழைக்கும் மக்களுடைய வாழ்க்கை சூழல் அப்படி, அவர்களால் இசுலாத்தை பின்பற்றி நடக்கவே முடியாது.

        உழைக்கும் மக்களை வென்றெடுக்க மதவாதிகளோடு விவாதிக்க வேண்டியதில்லை திப்பு, மட்டுமின்றி PJ வின் பின்னால் லட்சக்கணக்கான பேரும் இல்லை. கோடிக்கணக்கான இசுலாமிய மக்கள் இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியில் தான் அணிதிரண்டாக வேண்டும். எனவே கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை வென்றெடுப்பது எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையே இல்லை, காரணம் அவர்கள் உழைக்கும் வர்க்கமாக இருப்பது தான். மாறாக ஹைதர் அலி, திப்பு போன்றோரை வென்றெப்பது தான் பெரிய பிரச்சினையாக உள்ளது. எனவே நாம் நேரில் சந்தித்து விவாதிப்பது தான் இப்போதைய அவசர தேவை. சந்தித்து பேசலாமா ?

        • ///கம்யூனிஸ்டுகள் தம்மிடமுள்ள ஆணாதிக்க பண்புகளை வெறுத்து, அதற்கெதிரான போராட்டத்தை நடத்துகிறார்கள். சாதியை போலவே ஆணாதிக்கத்தையும் ஒழித்துக்கட்ட விரும்புகிறார்கள். எனவே தான் இந்த ஆணாதிக்க சமூகத்தை தூக்கியெறிந்துவிட்டு சாதி, மதம், வர்க்கமற்ற அத்துடன் ஆணாதிக்கமுமற்ற ஓர் சமத்துவ சமூகத்தை கட்டியமைக்க போராடுகிறார்கள்.
          நான் ஆணாதிக்கவாதியாக நடந்துகொள்ளமாட்டேன் என்று அனைவரின் முன்பும் உறுதியேற்றுக்கொள்கிறார்கள், பிறகு ஏற்படும் சிறு தவறுகளுக்கு கூட மனைவியிடம் மனம் திறந்து சுயவிமர்சனம் ஏற்றுக்கொள்கிறார்கள் இறுதியில் அதை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் விரும்புகிறார்கள். ////
          இப்படி உங்கள் கொள்கைகளை உங்களிடம் அமல்படுத்தவே போராடிக்கொண்டு இருக்கிறீர்கள்.அப்புறம் உங்கள் பெண்களுக்கு புரிய வைக்க பல நூற்றாண்டுகள் ஆகும் என்று உங்களது தோழர் கலை சொல்லுகிறார். கம்யுனிசத்தில் இருந்த மக்களும் இப்போது அதை கை கழுவி விட்டனர்.இந்த நிலையில் நீங்கள் எப்படி கோடிக்கணக்கான இஸ்லாமியர்களை உங்கள் பக்கம் திரட்டப் போகிறீர்கள் ?
          ///உழைக்கும் மக்களை வென்றெடுக்க மதவாதிகளோடு விவாதிக்க வேண்டியதில்லை திப்பு, மட்டுமின்றி PJ வின் பின்னால் லட்சக்கணக்கான பேரும் இல்லை. கோடிக்கணக்கான இசுலாமிய மக்கள் இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியில் தான் அணிதிரண்டாக வேண்டும். எனவே கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை வென்றெடுப்பது எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையே இல்லை, ////
          பீஜே லட்சக்கணக்கான மக்களை திரட்டி பல போராட்டங்கள் நடத்தியுள்ளார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?அவரது 27 ஆண்டுகால போராட்டத்தில் அடிதடிகள் வெட்டு குத்துகள் வாங்கிக் கொண்டு களத்தில் நேரடியாக நின்று போராடி பன்னெடுங்காலமாக பின்பற்றி வந்தமக்களை பல மூட பழக்க வழக்கங்களை தூக்கி எறிய வைத்தவர்.உங்களைப்போல் அறையில் இருந்து கொண்டு இணையதளத்தில் கோலாட்சுபவர் அல்ல .

  98. ##டிஎன்டிஜே மக்களுக்கு வெளியிட்ட வீடியோவக்களை நீங்கள் தந்துள்ளதாக பம்மாத்து காட்ட வேண்டாம் ##

    இபுராகிம்,
    நான்கூட நிர்வாகத்திலுள்ளவர்கள் மட்டுமே ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போட்டுக்கொள்வீர்கள் என்று நினைத்தேன். மக்களும் அதாவது உங்களின் அமைப்பிலுள்வர்களும் அப்படிச் செய்யலாம் என்று வீடியோவாக வெளியுட்டீர்கள் என்பதன் மூலம் முழுவேக்காடா மாறிக்கொள்ள எனக்கும் அறிவித்துள்ளீர்கள் என்பதை அறிந்து மகிழ்சி. அதனால்தான் மணமேல்குடியைச் சேர்ந்த உங்களின் மக்கள், மாவட்ட கண்காணிப்பாளரிடம் வினவு குறித்து புகார் செய்தபோது “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று சாதித்தார்களாம். உடன் சென்ற ஜமாத்தினர் வெளியில் வந்து நீங்கள் எப்படி அப்படிச் சொல்லலாம் என்று வாதிட்டுள்ளனர். ஊருக்கு ஊர் ஜென்டில்மேன் அக்ரிமென்ட். வாழ்க ஜனநாயகம்.
    மாவட்ட அமைப்புக்கு பொறுப்பிலிருந்து நீக்கமட்டும் அதிகாரம் உள்ளதாக்கும். அடிப்படை உறுப்பினரிலிருந்து மையம் தான் நீக்க வேண்டுமாக்கும். அதுசரி, ஒரு உறப்பினர் தவறு செய்தால் விசாரித்து, நிர்வாகக் குழுவில் கலந்து முடிவெடுப்பதுதானே ஜனநாயகம். அதுபோல பிற உறுப்பினர்கள் தவறு செய்தவரைவிட்டு விலகிடுவதுதானே நியாயம். அவ்வாறில்லாமல் அவருடன் இணைந்து சுற்றுவதும் அவருக்காக போலீசில் புகார் செய்ய செல்வதும் என்னவகை ஜனநாயகம்?

    –மன உறுதியற்ற அரைவேக்காடு.

    • ///அதனால்தான் மணமேல்குடியைச் சேர்ந்த உங்களின் மக்கள், மாவட்ட கண்காணிப்பாளரிடம் வினவு குறித்து புகார் செய்தபோது “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று சாதித்தார்களாம். உடன் சென்ற ஜமாத்தினர் வெளியில் வந்து நீங்கள் எப்படி அப்படிச் சொல்லலாம் என்று வாதிட்டுள்ளனர். ஊருக்கு ஊர் ஜென்டில்மேன் அக்ரிமென்ட். வாழ்க ஜனநாயகம்.///
      வினவு குறித்து அவர்கள் என்ன புகார் செய்தார்கள்?’அப்படி ஒன்றும் நடக்கவில்லை” எப்படி ஒன்றும் நடக்கவில்லை ?என்று சாதித்தார்கள் .எவனாவது என்னவாது உளறுவான். அதை அப்படியே கேட்டுக் கொண்டு இங்கே எழுதி வீணாக ஏன் எழுதி நேரம் போக்க வேண்டும்?
      வலக்கரம் என்பதெல்லாம் பொய் என்று அந்த ஊரை சேர்ந்த இமாம் அலி சொல்லியுள்ளார்.அப்படி என்ன நடந்தது என்று ஆதாரத்துடன் நீங்கள் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்க வேண்டியதுதானே

      • Ex.சாஹித் ////இபுராகிம்,
        நான்கூட நிர்வாகத்திலுள்ளவர்கள் மட்டுமே ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போட்டுக்கொள்வீர்கள் என்று நினைத்தேன். மக்களும் அதாவது உங்களின் அமைப்பிலுள்வர்களும் அப்படிச் செய்யலாம் என்று வீடியோவாக வெளியுட்டீர்கள் என்பதன் மூலம் முழுவேக்காடா மாறிக்கொள்ள எனக்கும் அறிவித்துள்ளீர்கள் என்பதை அறிந்து மகிழ்சி. ////
        நிர்வாகத்தில் உள்ளவர்கள் தவறு செய்தாலும் விட்டு வைக்கமாட்டோம் .அவர்கள் மீதும் விசாரணை வைத்து குற்றங்களுக்கு ஆதாரங்கள் இருக்குமானால் நீக்கி விடுவோம் என்பதைத்தான் அமைப்பில் உள்ளவர்களும் அறிய செய்வதற்காக வீடியோ வெளியிட்டிருக்கலாம்

      • சகோதரரே மாவட்ட கண்காணிப்பாளரிடம் உள்ளுர் tntj ”எதுவுமே நடக்கவில்லை” என்று கூறியதன் விளைவாக ஜமாத்தார்கள் சண்டையிட்டது உண்மையே. வலக்கரம் பொய் என்று எல்லாம் நான் சொல்லவே இல்லையே. பாசித் மற்றும் tntj காரர்கள் இன்னும் வலக்கரம் இரண்டாவது திருமணம் சரி என்று பேசி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நேற்று கூட tntj சேர்ந்த அப்பாஸ்,சுல்தான் என்னிடம் இது தொடர்பாக சரி என்று வாதம் செய்தனர். அவர்கள் முட்டா திருமண முறையை மட்டும்தான் எதிர்க்கின்றனர். ஆனால் வலக்கரம்,நான்கு திருமணம்,மஹர் போன்றவற்றை ஆதரிக்கின்றனர். பெண்கள் வேலைக்கு செல்வது,பொது நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்துகொள்வது போன்றவற்றை கேவலமாக பேசுகின்றனர்.

  99. திப்பு அவர்களே,
    நாங்கள் முக்ம்மதுநபி வன்புனர்வு செய்ததாக எழுதவரவில்லை. அக்கால நடைமுறை இக்காலத்திற்கு பொறுந்தாது என்பதால் இன்று சமூகத்திற்கு பொறுந்தாத குற்றங்கள் புரிபவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்காதிர்கள் என்பதும் இசுலாமியர்களுக்கு அந்த சரீயத் சட்டத்தில் மாற்றங்கள் வேண்டும் என்பதும் அடிப்படையாகக் கொண்டதே எங்களது கட்டுரைகளின் சாராம்சம்.
    இங்கு விபச்சாரம் என்பதன் உங்களின் நிலைப்பாட்டுக்கும், அக்கால நடைமுறை ஒத்துவராது என்பதாற்காகவும்தான் நபிவழிகளை போற்றுபவர்களுக்கு நபிவழிகளை எடுத்துக்காட்டுகள் தரப்படுகின்றன.
    உமைமா விவகாரத்தில் உங்களால் இசுலாமிய பழமைவாதத்திலிருந்து மீள முடியாததால் ஏதோதோ எழுதுகிறீர்கள். புதிதாக இசுலாத்திற்கு வந்தவர் முகம்மது நபிக்கு தன் மகளை மணமுடித்துக்கொடுத்தார் என்பதற்காக மணமகள் அறியாமல் ஒப்பந்தம் செய்வது அழகானதா?
    உமைமா விவகாரமட்டுமல்ல, மரியா கிப்தியாக்கூட அடிமை உறவுக்கு ஒரு எடுத்துக்காட்டாக கூறலாம்.
    ஆனாலும் திப்பு இந்த வாதமும் உங்களால் இச்செயலை செரிக்க முடியாமல் உங்களுக்கு நீங்களே சமாதானமடைவதாகும். இல்லை என்றால் இந்நிகழ்வுக்கு நீங்கள் கூறிய வரலாற்றிற்கு ஹதீஸகளில் ஆதாரம் தாருங்கள். அவர் எழுதியுள்ளார் இவர் எழுதியுள்ளார் என்றெல்லாம் கதைக்க க்கூடாது. குர்ஆன் அல்லது ஹதீஸ்களில் மட்டுமே தரவேண்டும்.

    • //மணமகள் அறியாமல் ஒப்பந்தம் செய்வது அழகானதா?//

      ஆயிஷாவை விட்டுவிட்டீர்களே. ஆயிஷாவிடம் அனுமதி கேட்டா திருமணம் நடந்தது!

    • எதுவும் புதிதில்லை.ஆதாரம் தேடி எங்கும் அலைந்து திரிய வேண்டாம்.வினவிலேயே பதிவு செய்யப்பட்டு உள்ளது.

      \\புதிதாக இசுலாத்திற்கு வந்தவர் முகம்மது நபிக்கு தன் மகளை மணமுடித்துக்கொடுத்தார் என்பதற்காக மணமகள் அறியாமல் ஒப்பந்தம் செய்வது அழகானதா?//

      “Nu’man bin Abi Jaun al-Kindi embraced Islam and came to the Messenger of Allah, may Allah be pleased with him, and said; ‘Shall I not marry you to the most beautiful widow in Arabia? She was married to the son of his uncle who has now died. She is widowed, is inclined towards you and wants to marry you. So the Messenger of Allah, may Allah bless him, married her giving five hundred dirhams of dower.

      ஆதாரம்.Tabaqat al-Kubra 8/114

      https://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/#comment-46756 -ல் இந்த தகவல் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
      அந்த பெண்ணின் தந்தையே நபியை மணமுடிக்க அவரது மகள் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.கவனிக்கவும்.ஒரு தந்தை தனது மகளின் திருமண விருப்பத்தை இட்டுக்கட்டி கூறுவாரா.

      \\இந்நிகழ்வுக்கு நீங்கள் கூறிய வரலாற்றிற்கு ஹதீஸகளில் ஆதாரம் தாருங்கள். அவர் எழுதியுள்ளார் இவர் எழுதியுள்ளார் என்றெல்லாம் கதைக்க க்கூடாது. குர்ஆன் அல்லது ஹதீஸ்களில் மட்டுமே தரவேண்டும்.//

      ஆதாரம்.Tabaqat al-Kubra 8/114

      \\நாங்கள் முக்ம்மதுநபி வன்புனர்வு செய்ததாக எழுதவரவில்லை. //

      இப்போது இப்படி புரளும் நாக்கு முன்னர் சொன்னது.\\திருமணத்திற்கு சம்மதாமா என்று கேட்காமல் அன்பளிப்புச் செய் என்று முகம்மதுநபி கேட்பது திருமணம் செய்யவில்லை என்பதையும், அடிமையை அழைப்பதாகத்தான் காட்டுகிறது//.

    • ///நாங்கள் முக்ம்மதுநபி வன்புனர்வு செய்ததாக எழுதவரவில்லை. அக்கால நடைமுறை இக்காலத்திற்கு பொறுந்தாது என்பதால் இன்று சமூகத்திற்கு பொறுந்தாத குற்றங்கள் புரிபவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்காதிர்கள் என்பதும் இசுலாமியர்களுக்கு அந்த சரீயத் சட்டத்தில் மாற்றங்கள் வேண்டும் என்பதும் அடிப்படையாகக் கொண்டதே எங்களது கட்டுரைகளின் சாராம்சம்.////
      இன்று சமூகத்தில் பொருந்தாத குற்றங்கள் புரியும் முஸ்லிம் அல்லாதவர்களை எந்த சட்டத்தின் மூலம் மாற்றி விட்டீர்கள்? அந்த சட்டங்கள் இப்போது சமூகத்தில் பொருந்தாத குற்றங்கள் செய்வதை முற்றிலுமாக தடுத்து விட்டதா?
      இல்லையெனில் அந்த சட்டங்கள் கட்டுபாட்டிற்குள் உள்ள மக்களை விட முஸ்லிம்கள் தான் அதிக விகிதாசாரத்தில் சமூகத்திற்கு பொருந்தாத குற்றங்கள் செய்கிறார்களா?அதற்கான புள்ளிவிவரங்கள் உங்களிடம் உண்டா?

  100. ##அப்படி என்ன நடந்தது என்று ஆதாரத்துடன் நீங்கள் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்க வேண்டியதுதானே##

    இபுராகிம். இந்த அரைவேக்காடுகளுக்கு இதெல்லாம் எங்க தெரியப்போகுது. பினங்கால் பிடரியில் அடிக்க ஓடத்தான் தெரியும். முழுவேக்காடுகளிடம் ஆலோசனை கேட்ககூடத் தெரியவில்லை. பாய் அப்படியே பாசித்திடமும் கொஞ்சம் சொல்லிவிடுங்கள். நீங்கள் போலீஸ்சில் புகார் கொடுக்கச் சொல்லிவிட்டதாக சொல்லிவிடுங்கள். நாங்களும் உங்க அமைப்பிலேயே சொல்லிட்டாங்க என்று சொல்லிக் கொள்கிறோம்.

  101. திப்புபாய் அடிமையை அழைப்பது என்பது அக்கால உறவுமுறை. என்புனர்வு என்பது மறுக்கும்போதும் பலத்தால் உறவு கொள்வது. அது போகட்டும் பாய்

    அந்த பெண்ணின் தந்தையே நபியை மணமுடிக்க அவரது மகள் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.கவனிக்கவும்.ஒரு தந்தை தனது மகளின் திருமண விருப்பத்தை இட்டுக்கட்டி கூறுவாரா.

    மணப்பெண்ணிடம் அனுமதி பெறவேண்டும் என்ற சரியத் சட்டதை அவரது தந்தையிடம் அனுமதி வாங்கினால் போதும் என்று மாற்றிக்கொள்ளுங்கள் என்கிறீர்கள். நீங்கள் கேட்பதும் மாற்றம். நாங்கள் கேட்பதும் மாற்றம். பிறகென்ன? ஆனால் ஒருவேறுபாடு. நீங்கள் பின்னோக்கி இழுக்கிறீர்கள்.

    • சாஹித் ,இந்த சுட்டியை பாருங்கள். ஏற்கனவே நீங்கள் பைட்த்திருப்பீர்கள்.இருந்தாலும் நீங்கள் அரை வேக்காடு என்பதால் உடனுக்குடன் மறந்து விடுவீர்கள் .மீண்டும் படித்து அதன் பிறகு மாற்றம் யாருக்கு தேவை என்பதை சொல்லுங்கள்
      http://www.letmeturnthetables.com/2011/04/jauniyya-woman-refuge-from-prophet.html

      • மார்க்க சகோ இப்ராஹிம்
        உங்கள் மீது எக்க எரைவனின் சாந்தி சமாதானம் நில்வுவதாஹ!
        அருமையான சவுக்கடி, செருப்படி, இன்ன இதர அடிகள் கொடுத்ததற்கு அல்லாஹ் மகிழ்ந்து உங்களுக்கு சலாவத்து சொல்ல வேண்டுகிறேன்.
        சஹி ஹதீஸிலிருந்து கொடுத்தால் இது பெலஹீனமான ஹதீஸ் என்று தப்பிப்பதும், அதற்கு பதிலாக 500 வருடங்களுக்கு பிறகு யாராவது சால்ஜாப்பு எழுதியிருந்தால் (அது சஹியாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று) அதிலிருந்து காட்டி தப்பிப்பதும், மூஃமின்களான நமக்கே கை வந்த கலை.
        யா அல்லாஹ்!

        • //சஹி ஹதீஸிலிருந்து கொடுத்தால் இது பெலஹீனமான ஹதீஸ் என்று தப்பிப்பதும், அதற்கு பதிலாக 500 வருடங்களுக்கு பிறகு யாராவது சால்ஜாப்பு எழுதியிருந்தால் (அது சஹியாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று) அதிலிருந்து காட்டி தப்பிப்பதும், மூஃமின்களான நமக்கே கை வந்த கலை.//
          மீண்டும் மீண்டும் நம் மீது வந்து விழுவதால் கம்பெடுத்து விரட்டவேண்டியுள்ளது.கம்பை எடுப்போம் ,விரட்டுவோம் ,கம்பை எடுத்து விரட்டுகையிலே சாக்கடை நம்மீதும் தெறிக்கிறது.
          இப்னு சைத்தான் நீங்கலாக மற்றவர்கள் விமர்சித்தாலே பதில் சொல்லுவோம் .

          • ஆஹா!!
            மார்க்க சக்கோ இப்ராஹிம்,
            அழகான மொழியில் (பன்றி,அரைகுறை, அரைவேக்காடு இன்ன இதர பிற) வார்த்தைகளில் நபிஹள் நாய்ஹம் கூறிய முறையில் வாதிடும் உங்களது வாதத்தில் காஃபிர்கள் எல்லோரும் தோற்றோடுகிறார்கள்.என்ன, அவ்வப்போது அல்லாஹ் அல்குரானில் காஃபிர்களை திட்டுவது போல திட்ட ஆரம்பித்துவிடுகிறீர்கள்.
            ஆ அல்லாஹ்!

  102. ///எவனாவது என்னவாது உளறுவான். அதை அப்படியே கேட்டுக் கொண்டு இங்கே எழுதி வீணாக ஏன் எழுதி நேரம் போக்க வேண்டும்?
    வலக்கரம் என்பதெல்லாம் பொய் என்று அந்த ஊரை சேர்ந்த இமாம் அலி சொல்லியுள்ளார்.அப்படி என்ன நடந்தது என்று ஆதாரத்துடன் நீங்கள் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்க வேண்டியதுதானே/// சாகித் தான் எவனாவது உளறுவதை இங்கு கூறுகிறார். நீங்களாவது எதாவது அறிவாளியிடம் கேட்டு இங்கு உண்மையை சொல்லலாமே. இஸ்லாமிய கோட்டையில் ஏற்பட்டுள்ள விரிசலை அடைக்க என்னமா புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டு நீங்களும்,துப்பறியும் புலி ஹைதர்அலியும் முயற்சிகிறிர்கள் முடியவில்லையே….. அல்லாவிடம் தொடர்ந்து துவா கேளுங்கள் வெற்றிகிட்டும்!!!! இப்ராஹிம் பாசித் மட்டும் ஏதோ விதிவிலக்காக தவறு செய்து விட்டதாக வாசகர்களை நம்பவைக்க பல தகிடுதத்தங்களை செய்து வருகின்றீர்.இஸ்லாமே இந்த மோசடிகளின் பிறப்பிடம் தான். இஸ்லாமே சாதரண முஸ்லீம் மக்களின் வாழ்வாதரத்திற்கு எதிரானது தான். நபி காலத்தில் தனக்கு எதிரான சமூகத்தை வீழ்த்தவும், தன்னுடை சமூக நலனை உறுவாக்கவும் இயற்றப்பட்டது தான் இஸ்லாமிய சித்தாந்தம்.அல்லா அருளியது என்ற நம்பிக்கை அடிப்படை என்பதை எல்லாம் அத்வானி கும்பலிடம் போய் கூறுங்கள்.அவர்கள்தான் ”நம்பிக்கை”,”நம்பிக்கை” என்று கூறி அழைவார்கள். உழைக்கும் இஸ்லாமிய மக்களை நீங்கள் கூறும் மாயாசாலங்களில் இருந்து விடுவிப்பது தான் இன்றைய முதல் தேவை. உடனே நான் இஸ்லாமியன் அல்ல என்று கூப்பாடு போட வேண்டாம்.நானும் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவன் தான். என்னுடைய கடமை உழைக்கும் இஸ்லாமிய மக்களை அவர்களின் துயரத்திற்கான காரணத்தை அறிவியல் ரீதியாக அறியவைப்பது தான் என கருதுகிறேன்.

  103. க.க.க.////இப்ராஹிம் பாசித் மட்டும் ஏதோ விதிவிலக்காக தவறு செய்து விட்டதாக வாசகர்களை நம்பவைக்க பல தகிடுதத்தங்களை செய்து வருகின்றீர்.இஸ்லாமே இந்த மோசடிகளின் பிறப்பிடம் தான். இஸ்லாமே சாதரண முஸ்லீம் மக்களின் வாழ்வாதரத்திற்கு எதிரானது தான். நபி காலத்தில் தனக்கு எதிரான சமூகத்தை வீழ்த்தவும், தன்னுடை சமூக நலனை உறுவாக்கவும் இயற்றப்பட்டது தான் இஸ்லாமிய சித்தாந்தம்.////
    நபி[ஸல்] காலத்தில் அவருக்கு எதிராக எந்த சமூகமும் இல்லை .ஆதாரமற்ற அற்ப குற்றச்சாட்டு.
    இஸ்லாம் சாதரணமக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரானது என்பது கள்ள பெயரில் வரும் நீங்கள் சொல்லிவிட்டால் உண்மையாகிவிடாது.
    ///என்னுடைய கடமை உழைக்கும் இஸ்லாமிய மக்களை அவர்களின் துயரத்திற்கான காரணத்தை அறிவியல் ரீதியாக அறியவைப்பது தான் என கருதுகிறேன்///

    இப்படி சொல்லி கம்யுனிச போதையில் உள்ள நீங்கள் இஸ்லாமிய மக்களை ஏமாற்ற முடியாது.உங்கள் வகையாறாக்களின் பொய்கள் இந்து மக்களிடமே எடுபடவில்லை.அது சரி நீங்கள் இஸ்லாமிய மக்களுக்கு அறிவியல் ரீதியாக அறியவைப்பது இருக்கட்டும்,முதலில் நீங்கள் அறிந்தது என்னவென்று சொல்ல முடியுமா?.

  104. எதுக்காக இந்த விவாதம். பாசித் , அல்லா சொல்லிய படி செய்திருக்கிறார். அவர் மேல் எந்த குற்றமும் இல்லை. அல்லா சொல்வது , மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்றாலோ, வயதாகி விட்டாலோ அவளை விவாகரத்து செய்யாமல் , அப்படியே ஓரம்கட்டிவிட்டு வேறு பெண்ணை மணந்து கொள் என்று கூறுகிறான்.
    அல்லாவுக்கு ஆண்களின் உடற்சுகம் தான் முக்கியம். இதைக்கேள்வி கேட்க கேடுகெட்ட காஃபிர் மனிதர்களாகிய உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது…

    //4:128. ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.//

    Volume :5 Book :65
    5206. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
    ஒரு பெண் ஒருவரின் மனைவியாக இருந்து வருகிறாள். (அவளுடைய முதுமை, நோய் போன்ற காரணத்தினால்) அவளை அவருக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது; அவளை விவாகரத்துச் செய்துவிட்டு மற்றொருத்தியை மணமுடிக்கவும் அவர் விரும்புகிறார். (இந்நிலையில்) அவள் ‘என்னை (மனைவியாக) இருக்கவிடுங்கள்; என்னை விவாகரத்துச் செய்துவிடாதீர்கள். பின்னர் (வேண்டுமானால்) மற்றொரு பெண்ணை மணந்துகொள்ளுங்கள். எனக்காகச் செலவழிப்பதிலிருந்தும், இரவைப் பம்ர்ந்தளிப்பதிலிருந்தும், இரவைப் பம்ர்ந்தளிப்பதிலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளலாம்” என்று தம் கணவரிடம் கூறுகிறாள். இதையே இவ்வசனம் கூறுகிறது: ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ளமாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன் – மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம்விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில தவறேதும் இல்லை. (திருக்குர்ஆன் 04:128)
    Volume :5 Book :67

  105. முதலில் பாசித் பற்றி வினவுவில் எழுதப்பட்டது அத்தனையும் உண்மைகள் அன்றுஎன்பதை தமிழன் என்ற பெயர் தாங்கி தெரிந்து கொள்ளட்டும்/

    தமிழன் என்பவரின் கருத்து படி பார்த்தால் வைப்பாட்டி வைத்துக் கொள்ளவேண்டுமா?அல்லது விபச்சாரம் பண்ண வேண்டுமா?
    எனக்கு தெரிந்த தூத்துக்குடியை சேர்ந்த வணிகர் ஒருவர் ,சிவகாசி நாடார் அவர்.சிவகாசி நாடார்கள் திருமணத்தில் வரதட்சணை வாங்குவதை பிச்சைகாரத்தனமாக பார்ப்பார்கள்.மணமகள் வீட்டார் பெண்ணுக்கு நூறு பவுன் தங்க அணிவித்தால் மாப்பிள்ளை வீட்டார் அதில் கால் பங்கு அளவில் பெண்ணுக்கு பரிசாக தங்கநகை அணிவிப்பார்கள்.மேலும் தனித்தனி திருமணமண்டபம் அமர்த்திக் கொள்வார்கள். அவரவர் விருந்தாளிகளை அவரவர் கவனித்துக் கொள்வார்கள்.இது விசயத்தில் நபி இல்லாமலே நல்ல வழிகாட்டலில் உள்ளனர்.ஆனால் முஸ்லிம்களுக்கோ திருமண விசயத்தில் நல்லதொரு நபி[ஸல்] அவர்களின் வழி காட்டல் இருந்தும் பிராமணர்கள் போல் பெண் வீட்டாரின் தலையில் மசாலா அரைத்து விடுகிறார்கள்.எனது அந்த நண்பர் தனது திருமணத்தில் மணப்பெண்ணுக்கு அவர் நூறு பவுன் அணிந்து வந்தாலும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் நாற்பது பவுன் தங்கநகை பரிசாக கொடுத்திருந்தார்கள். தனது மனைவியை திருமணம் செய்த ஈராண்டுகளில் பிரச்னை வந்தது. அவரது மனைவிக்கு காலேஜில் படிக்கையில் இன்னொருவருடன் காதல் இருந்தது தெரிய வந்தது.இதனால் கணவன் மனைவியரிடையே சச்சரவுகள் உருவாக அந்த பெண் தனது தந்தை மூலமாக தன்னிடம் தனது மாமனார் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் கணவரும் அவருடன் சேர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் வழக்கு தொடர்ந்தார்கள்.அன்று இரவே ததையையும் மகனையும் போலிஸ் கைது செய்து௧15நாட்கள் ரிமாண்டில் வைத்துவிட்டார்கள்.பின்னர் அவர்கள் தங்களது சங்கத்தின் மூலம் அவர்களுக்கும் திருமனத்தில் என்ன நடந்து என்பது அறிவார்கள் அவர்களின் வற்புறுத்தலின் பேரில் வரதட்சணை வழக்கை வாபஸ் பெற்றார்கள் .ஆனால் அதன் பின்னர் விவாக ரத்து வழக்கு பத்து ஆண்டுகளாக நடந்தது .கணவர் கஞ்சத்தனமாக இருந்தாலும் ஒழுக்கமுள்ளவராக பத்தாண்டுகள் அவர் வடித்த கண்ணீர் ,பெண்களின் கண்ணீரை விட துயரமானது.அவர் ஒருதடவை திருச்செந்தூர் கோயில் சென்றபொழுது அதாவது வழக்கு நடந்து கொண்டிருக்கையில் இவரது மனைவி மகனுடன் வேறொருவருடன் உலா வருவதை பார்த்துள்ளார்.
    அடுத்து ஒரு செய்தி தினமணியில் வந்தது .நமது புதிய காந்தி அன்னாஹசாரே தான் அந்த செய்தியை கொடுத்து இருந்தார் ,அதாவது மகாராஸ்ட்ராவில் 15000 கணவர்களை காணவில்லை என்று போலீசிடம் புகார் உள்ளது.உண்மை என்னவென்றால் பல தம்பதியர்களிடையே விவாகரத்து வழக்கு முடிந்து ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்ட பிறகு ஒரு சில மாதங்கள் கொடுத்து விட்டு அதன் பிறகு முகவரி மாறிவிட்டார்கள் ஒவ்வொரு தடவையும் கோர்ட் நோட்டிஸ் அனுப்பியும் போலீசார் அவர்கள் அந்த முகவரியில் காணவில்லை என்ற தகவலையே தந்துள்ளார்கள்.
    இதே போன்று கணவரால் கைவிடப்பட்ட வாழாவெட்டிகள் நிறையவே இருக்கிறார்கள் இவர்களுக்கு இந்திய அரசுவின் எந்த சட்டங்களாலும் எந்த பரிகாரமும் காணமுடியவில்லை.நீங்கள் வேண்டுமானால் ஒரு சர்வே செய்யுங்கள் இதிய அரசுவின் சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றியும் விகிதாசாரம் அடிப்படையில் பாருங்கள்
    மேலும் இந்திய முஸ்லிம்களை திருமண விசயங்களில் அவர்களை நான் சரிகாணவில்லை. அவர்கள் தங்களுக்கு இஸ்லாமிய சட்டத்தை சாதகமாக இருக்கும் வேளையில் மட்டுமே கையாளுகிறார்கள் . அதாவது திருமணம் ரத்து செய்யப் படும் பொழுதும் இரண்டாவது திருமணம் செய்யும் பொழுதும் மட்டுமே இஸ்லாமிய சட்டங்களை தேடுகிறார்கள்.ஆனால் திருமணம் செய்யும் பொழுது இஸ்லாமிய சட்டங்கள் என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதில்லை.ஆகவே இஸ்லாமிய சட்டப்படி திருமணம் செய்யதவர்களின் திருமணம்களை பொது சிவில் சட்டத்தில்தான் பதிவு செய்ய வேண்டும் .அதற்கான மாற்றங்களை கொண்டுவர முஸ்லிம் நலன் கருதும் இயக்கங்கள் முயற்சிக்க வேண்டும் .
    நீங்கள் குறிப்பிடும் குர்ஆன் வசனம் சரியாகவே சொல்லியுள்ளது. இந்த இடத்தில் நீங்கள் சட்டம் கொண்டு வந்து தடுத்தால் பல குற்றங்களே நடைபெறும்.ஒன்று அவள் கொல்லப்படுவாள்.இல்லையெனில் வாழவெட்டியாக இருப்பாள் .அதை தவிர்க்கவே அழகிய சமாதான முறைகளை குர்ஆன் கற்றுத்தருகிறது.
    நண்பர் தமிழன் பாசித் மட்டுமல்ல ,அநேக தமிழர்கள் ,இந்தியர்கள் ,உலகர்கள் அவ்வாறே உள்ளனர்.

  106. வினவின் வாசகர்களுக்கு ஒரு செய்தி. பாசித் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டு இன்று பாசித் சிறையில் உள்ளார். விசாரனையின்போது தான் இசுலாத்தை முழுமையாக கடைபிடிக்கும் ஒருவன் என்றும், தனக்கு இசுலாமிய சட்டப்படி மறுதிருமணம் செய்து கொள்ள உரிமையுண்டு என்றும் வாதாடியுள்ளார். நிலைம் அவருக்கு எதிராக திரும்புவதைக் கண்டு ஒரு கெட்ட வார்த்தையைக்கூறி என்னை ஒரு மயிரும் புடுங்கமுடியாது என்று கொக்கரித்ததால் பாசித்தின் முதல் மனைவி உறவினர்கள் அவரை அடித்து நொறுக்கினர். கைது என்றதும் கோழைபோல அழுது புரண்டார். இவர் காவல் நிலைய விசாரனைக்கு செல்லும்போது உடன் சுற்றிய டிஎன்டிஜே-வினர் மன்னிக்கவும் டிஎன்டிஜே-நண்பர்கள் கழற்றிவிட தனித்துவிடப்பட்டு அரற்றத் தொடங்கிவிட்டார்.

    மேலும் கைது செய்ய அங்க அடையாளங்களுக்காக காவல் துறையினர் சட்டையை கழற்றச் சொன்னதும் என்னிடம் கத்தியிருக்கிறது வெட்டிக்கொள்வேன் என்றும் அழுது ஓலமிட்டும் காவல்துறையினரை மிரட்டியுள்ளார். அதுமட்டுமல்ல. இவர் தான் ஒரு பொறுக்கி என்பதை மீண்டும் நிறுவும் வகையில் சட்டையை மட்டும் கழற்றச் சொன்னதற்கு, மகளிர் காவல் நிலையம் என்பதால் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவலர்களை பிளாக்மெயில் செய்யும் வகையில் கைலியையும் அவிழ்த்துவிட்டு அரைநிர்வாணத்துடன் நின்று மிரட்டியுள்ளார். தன்னுடைய டிஎன்டிஜே-வினருக்கு மன்னிக்கவும் டிஎன்டிஜே-நண்பர்களுக்கு SMS செய்து போலீஸ் தன்னை நிர்வானப்படுத்திவிட்டதாக பிறருக்கும் SMS செய்யும்படி கூறியுள்ளார். அதனால் காவல் துறையினர் டிஎஸ்பி அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆண் காவலர்களை வரவழைத்து கைது செய்தனர். பாசித்துடன் அவரது குற்றத்திற்கு துணை நின்ற அவரது தாயாரும், சிற்றன்னையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இன்னும்மொன்று நம் மனதை நெருடும் நிகழ்சி என்னவென்றால் இரண்டாவதாக திருமணம் செய்த பெண், பள்ளியில் வேலை செய்யும் மோதினார் ஒருவரின் ஏழைப்பெண். பாசித் தன்னுடை பொருளாதாரத்தால் அம்மோதினாரை மயக்கி அவரது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் இன்னொரு பெண்ணிற்கு துரோகமிழைக்கும் கொடுமைக்குள் இந்த சமூகத்தின் வறுமை நிலை உள்ளது. இப்பெண்ணிற்காகவும் நாம் வருத்தப்பட்டாலும் பாசித் போன்றோறின் இது போன்ற செயல்களை அனுமதித்தால் குற்றம் செய்பவர்களுக்க கொண்டாட்டமாகவும் அபலைப் பெண்கள் நடுத்தெருவிலும் நிற்கும் நிலை ஏற்படும். அதனால் சரியத் என்றெல்லாம் பழமைப் பேசிக்கொண்டிராமல் முஸ்லீம் ஜமாத்துகள் இது போன்ற திருமணங்களை தடுக்கவேண்டும். அவர்கள் தாங்களும் பிள்ளைகள், சகோதரிகளுடன் பிறந்தவர்கள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

  107. அய்யோ, பாசித் ஜெயில்லயா! எப்பா தப்பிச்சம்பா. இபுராகிம் சொன்னதை கேட்டு உறவை பலப்படுத்தனும்னு ஏதோ 6, 7 வயதுல கொஞ்சம் பெரிய பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சிருந்தாலும் என்னையும் குழந்தை திருமணம் சட்டத்தில கைது செய்திருப்பர்களோ. இபுராகிமும் சரியத் சட்டத்தை எல்லாம் சொல்லி காப்பாத்தாம “அவர் தவ்ஹீது இல்லை, நாங்கள் அவருக்கு நண்பர்கள்தான்” என்று கழற்றி விட்டிருப்பாருல்லே. அப்பா வேணாம்டா சாமி, தாவா சென்டர் பக்கமே போகக் கூடாதுடா. பாய்ன்னு பெருமையல்லாம் வேணாம்டா என்க்கு. சக்கிலியன்னு கேவலமா இருந்தாலும் பரவாயில்லை. அண்ணா நான் இப்போ கலிமுல்லா இல்லேன்ணா. கருப்பன்தான்ணா.

  108. TNTJ-வைச் சேர்ந்த இபுராகிம், பாசித்தை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டதாகவும், பிற டிஎன்டிஜேவினர் நணபர்கள் என்ற முறையில் அவருடன் சேர்ந்து சுற்றவதாகவும், போலீசில் புகார் கொடுங்கள் என்றும் வாய்வெட்டு வெட்டினார். சிலர் வினவு அவதூறைப் பரப்புகிறது என்றும், எங்களிடம் போன் நெம்பர் இருக்கு உண்மையை நாங்கள் விசாரித்து எழுதப்போகிறோம் என்றும் யோக்கிய சிகாமணிபோல் பின்னோட்டம் இட்டனர். இன்று பாசித் சிறையில் இருந்து மீட்க (ஜாமீன் எடுக்க) டிஎன்டிஜே அமைப்பினர் வரிந்து கட்டிக்கொட்டு களம் இறங்கியுள்ளனர். இதுதான் இவர்களின் ஒழுக்க மாண்பு. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் முறையீட்டால், ஜாமீன் இம்முறை மறுக்கப்பட்டுவிட்டது. எப்படியும் பிணையில் வெளிவரத்தான் போகிறான் இந்த பாசித். ஆனால் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிடலாம் என்ற கனவையும் வழக்கை வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவையும் கானல் நீராக்குவோம். எத்தனை அமைப்புகள் வந்தாலும் இந்தக் கனவு நிறைவேறாது. தண்டனை என்பது உறுதியானதாகவே இருக்கும்.

  109. நாம் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகில் நிகழும் எந்த ஒரு செயலும் நம் வாழ்வின் மீது தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது, நம்மைப் பிசைந்து உருக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நம்மீது தாக்கம் செலுத்தும் செயல்களை நம்மால் கவனிக்காமல் கடந்துவிட முடியுமா?

    இஸ்லாமிய இளைஞர்களே! எங்கு செல்கிறீர்கள்?
    https://nallurmuzhakkam.wordpress.com/2011/12/23/muslim-youth/

  110. ex.sahith decembar 19////உடன் சுற்றிய டிஎன்டிஜே-வினர் மன்னிக்கவும் டிஎன்டிஜே-நண்பர்கள் கழற்றிவிட தனித்துவிடப்பட்டு அரற்றத் தொடங்கிவிட்டார்.////
    decembar 21////இன்று பாசித் சிறையில் இருந்து மீட்க (ஜாமீன் எடுக்க) டிஎன்டிஜே அமைப்பினர் வரிந்து கட்டிக்கொட்டு களம் இறங்கியுள்ளனர். /////
    முரண்படுகிறார் முன்னால் தியாகி
    எத்தனை அமைப்புகள் வந்தாலும் இந்தக் கனவு நிறைவேறாது. தண்டனை என்பது உறுதியானதாகவே இருக்கும்.

    என்னவோ தவ்ஹித் ஜமாஅத் இதில் தலையிட்டது போல் அரிப்பை தீர்த்துக் கொள்வதா?

    அதே வேளையில் பாசித் பக்கம் நியாயம் இருந்தால் தவ்ஹித் ஜமாஅத் போராட தயங்காது.

  111. ///திருமனம்கள் சாதிக்கு அப்பாற்பட்டு நடக்கின்றனவா என்பதற்கு சமிபத்திய உங்களது சகோதர்களின் திருமனம்களை ஆதாரமாக காட்ட வாய்ப்புகள் உண்டா?
    மேலும் நீங்கள் இன்னும் ஆணாதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்.இவ்வாறு முற்றிலுமாக ஒழிக்காத நிலையில் உங்களைவிட எங்களிடம் மிகைத்து நிற்கும் ஆணாதிக்கம் என்னவென்பதை விளக்குமாறு வேண்டுகிறேன்./////

    எனது இந்த கருத்துக்கு உங்களது பதிலை பாருங்கள்

    R
    அம்பேத்December 6, 2011 at 10:16 pm 91.2.1.1.1.1.1.1.1.2
    /////நீங்கள் இவ்வாறு தான் பதிலளிப்பீர்கள் என்பது நான் எதிர்பார்த்தது தான். இசுலாமிய போதை உங்களை இப்படித்தான் பேச வைக்கும். ஆணாதிக்கவாதியாக தான் வாழ்வேன் என்கிறீர்கள் எத்தனை நாட்களுக்கு என்று பார்க்கிறோம்.////

    அம்பேத் ,இப்படி உங்கள் கொள்கைகளை உங்களிடம் அமல்படுத்தவே போராடிக்கொண்டு இருக்கிறீர்கள்.அப்புறம் உங்கள் பெண்களுக்கு புரிய வைக்க பல நூற்றாண்டுகள் ஆகும் என்று உங்களது தோழர் கலை சொல்லுகிறார். கம்யுனிசத்தில் இருந்த மக்களும் இப்போது அதை கை கழுவி விட்டனர்.இந்த நிலையில் நீங்கள் எப்படி கோடிக்கணக்கான இஸ்லாமியர்களை உங்கள் பக்கம் திரட்டப் போகிறீர்கள் ?

    அம்பேத் ,முதலில் உங்களது கொள்கைகளை நீங்கள் நடைமுறைபடுத்தி காட்டுங்கள் .அப்புறம் உங்களது போலி கம்யுனிஸ்ட்களை அழைத்து அவர்களை நெறிப்படுத்துங்கள் அதன் பின்னர் இஸ்லாமிய இளைஞர்களைப் பற்றி சிந்திக்கலாம் ,

  112. இபுராகிம், அது என்ன இன்னும் பாசித் பக்கம் நியாயம் இருந்தால் தவ்கீது போராடத்தயங்காது? ஜாமீன் எடுக்க தவ்கீது அலைவது தெரியாதா? பாசித் செய்தது சரி என்று என்று தைரியமா சொல்லவேண்டியதுதானே? ஜாமீன் எடுக்க அலையும் நீங்கள் வினவின் வாசகர்களை ஏமாற்ற இன்னும் ஒன்றும் தெரியாதா அப்பாவி மாதிரி புலம்பாதீர்கள்.

  113. india sattapadi islamian oruvan irandu manaivihalai manathal athai thaduka mudiyaathu mela ulla anaithum adipadaiye illatha vimarsanam.

    anaithu comunisa naaduhalilum divorce anumathikappatta ondruthaan. communisa naaduhal aatharithal sari. islaam anumathithaal thavaru yenna ungal niyaaya unarvu.

    communisathin ottahali paarthal ungla kodiye irukkathu

  114. பரித், இஸ்லாமிய சட்டப்படி பெண்ணுக்கு மகர் எவ்வளவு என்று கேட்பது அவளது விருப்பம் .திருமண விருந்து ,மற்றும் அனைத்து திருமண செலவுகளையும் மணமகன் செய்ய வேண்டும்.விவாகரத்து முத்தலாக என்ற ஒரு வார்த்தையில் இல்லை அதற்கென்று ஒரு வரைமுறையை மிகதெளிவாக குர்ஆன் கூறுகிறது .ஆனால் அதற்கு முற்றிலும் மாற்றமாக நடந்துவரும் பெரும்பான்மை முஸ்லிம் களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் ,பாசித் என்ற நியாயமற்ற ஒருவருக்கு வக்காலத்து வாங்குவது இஸ்லாமிய சட்டப்படி சரியா?

  115. சகோ இப்ராகிம்
    என்ன இங்கு பதிவு செய்கிறீர்களா? உங்கள இறையில்லா இஸ்லாம் தளத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்!
    இஸ்லாமிய சட்டத்தை பற்றி கதைக்கிறீர்களா?

  116. சகோதரன் என்ற பெயரில் வருபவரே ,நான் யாரிடம் எதை பதிவு செய்ய வேண்டுமோ அவர்களிடம் பதிவு செய்கிறேன் .அவசியம் ஏற்பட்டால் காசுக்காக அலையும் வேசதாரிகளின் தளத்திலும் பதிவு செய்யலாம் .குறையில்லா இஸ்லாம் பற்றி விவாதிக்க விருப்பம் இருந்தால் இங்கே வாருங்கள்
    http://arampannai.blogspot.in/

Leave a Reply to ஹைதர் அலி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க