privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபதிவர்களோடு விவாதம்: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு !

பதிவர்களோடு விவாதம்: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு !

-

“சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டையும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளையும் அனுமதிப்பதால் விவசாயிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. சொல்லப் போனால் இத்தனை காலமாக இடைத்தரகர்களாலும் கமிஷன் மண்டி ஏஜென்டுகளாலும் பாதிக்கப்பட்டு வந்த விவசாயிகள் பிழைக்க வேண்டுமானால் அது அவர்களை வால்மார்ட்டின் கையில் ஒப்படைத்தால் மட்டுமே நடக்கும்” – படித்த நடுத்தரவர்க்கத்தின் பொதுப்புத்தியில் இவ்வாறான கருத்துக்களை முதலாளித்துவ ஊடகங்களும் பிற அல்லக்கைகளும் வலிந்து திணிக்கும் கருத்து இது.

வால்மார்ட் எத்தனை நாடுகளில் விவசாயிகளைக் ‘காப்பாற்றி’ இருக்கிறது என்பதைப் பார்க்கும் முன், இங்கே விவசாயத்தின் அழிவுக்கு யார் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய விவசாயத்தின் அழிவுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அது பசுமைப் புரட்சிக்கும் முன் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீண்ட வரலாறு கொண்டது. ‘பசுமைப் புரட்சியின்’ விளைவாய் மண்ணில் கொட்டப்பட்ட லட்சக்கணக்கான டன் ரசாயன உரங்களால் மண்ணே மலடாகிப் போன நிலையில் ஓரளவுக்காவது மகசூல் பார்க்க வேண்டுமானால் விலை கூடிய வீரிய ரசாயன உரங்களை வாங்கியாக வேண்டிய கட்டாயத்துக்குள் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளர்.

மேலும், பசுமைப் புரட்சிக்குப் பின் பாரம்பரிய மரபுசார் விதை / நாற்று ரகங்கள் அழிந்து போய் தற்போது விதைக்கும் கூட பன்னாட்டுக் கம்பெனிகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும் விவசாயிகள் மேல் விழுந்துள்ளது. கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளில் படிப்படியாக பல்வேறு கட்டங்களில் விவசாயத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மானியங்கள் ரத்து செய்யப்பட்டு அவை உர முதலாளிகளுக்கும் மட்டும் அளிக்கப்படுகிறது. பாசனப் பராமரிப்பு உள்ளிட்ட விவசாய உள்கட்டமைப்புக்கான ஒதுக்கீடுகளை வெட்டுவது என்பதை ஒரு கொள்கையாகவே செயல்படுத்துகிறார்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் மேல் சீறிப்பாய்வதாக பீற்றிக் கொள்ளும் முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள், விவசாயம் 0.5 சதவீதமாக தேய்ந்து வருவதைப் பற்றி மூச்சு விடுவதில்லை. 1980 காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36.4 சதவீதமாக இருந்த விவசாயம், 2008-ம் ஆண்டுக்குப் பின் 17 சதவீதமாக வீழ்ந்துள்ளது.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் இந்தியா கையெழுத்திட்ட காட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் இந்திய அரசு விவசாயத்திற்காக ஒதுக்கப்படும் மானியத்தை வெட்ட வேண்டும் என்பது உலக வங்கியின் ஆணை. உள்நாட்டு விவசாயத்தை அழித்து நாட்டின் உணவுத் தற்சார்பை ஒழித்துக் கட்டுவதன் மூலம், இந்த சந்தையை பன்னாட்டுக் கம்பெனிகளின் கையில் சிக்க வைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

இது படிப்படியாக திட்டமிட்ட ரீதியில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. காங்கிரசு போய் பாரதிய ஜனதா வந்தாலும் சரி, மூன்றாம் அணி ஆட்சியமைத்தாலும் சரி, நாட்டை அந்நியர்களுக்கு அடிமையாக்கும் இந்த மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் மட்டும் இவர்களுக்குள் எந்த கொள்கை வேறுபாடும் இருந்ததில்லை. கடந்த 15 ஆண்டுகளில் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்து அரசு படிப்படியாக விலகிக் கொண்டுவிட்டது. 80களின் இறுதியில் உணவு தானியக் கொள்முதலில் 45% அரசு செய்தது – இன்றோ அது 75% தனியார்களின் கையில் இருக்கிறது.

2002-ம் ஆண்டு நாட்டில் கடும் வறட்சியும் பஞ்சமும் நிலவிய காலகட்டத்தில் அரசு தனது கையிருப்பில் இருந்த 2.2 கோடி டன் தரமான கோதுமையை ஐரோப்பிய பன்றிகளுக்கு ( ஆம் பன்றிகளுக்குத் தான்) ஏற்றுமதி செய்தது. அதே நேரம் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை விட இரண்டு மடங்கு விலை கொடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து தரமற்ற கோதுமையை இறக்குமதி செய்தது பஞ்சாப் அரசு. அப்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது ‘தேசபகதர்’ வாஜ்பாயின் தலைமையிலான பாரதிய ஜனதா.

ஒருபுறம் விவசாயத்தை அரசின் பொறுப்பில் இருந்து கைகழுவி அதை அப்படியே அந்நிய தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கும் உள்நாட்டு தரகு முதலாளிகள் கையிலும் ஒப்படைப்பதையே கொள்கையாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். இதனடிப்படையில் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் வேறு வழியின்றி கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் சிக்குகிறார்கள். அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்துக்கு உருளைக்கிழங்கு பயிரிட்டுக் கொடுத்த பஞ்சாப் விவசாயிகளும், மான்சான்டோவின் பி.டி. காட்டன் விதையைப் போட்ட மராத்திய விவசாயிகளும் கடனாளியாகித் தற்கொலை செய்து கொண்ட செய்திகளை நாம் பத்திரிகைகளில் வாசித்திருப்போம்.

இவர்களின் நோக்கம் விவசாயத்தை வாழ வைப்பதல்ல – அதை ஒட்டச் சுரண்டிக் கொழுப்பது தான். இதில் ரிலையன்ஸ், ஐ.டி.சி, பெப்சி, மான்சாண்டோ, வால்மார்ட் என்று இவர்களுக்கும் தேச பேதமெல்லாம் இல்லையென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக்ஸ்பாம் என்கிற அமைப்பு பல்வேறு நாடுகளில் செய்துள்ள ஆய்வுகளின் அடிப்படையில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வால்மார்ட் போன்ற திமிங்கலங்களின் வருகை விவசாயிகளை கடுமையாக பாதித்திருப்பதை வெளிக் கொணர்ந்திருக்கிறது.

தென்னாப்பிரிக்க  ஆப்பிள்களின் ஏற்றுமதிக்கான கொள்முதல் விலை 33 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளத்து. அமெரிக்காவிலேயே விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் விலை 25 சதவீதமாக குறைந்துள்ள அதே நேரம் நுகர்வோருக்கான விலை 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலகளவில் விவசாய விளைபொருட்களின் மொத்த சந்தையில் 40 சதவீத அளவுக்கு நான்கு அல்லது ஐந்து பன்னாட்டுக் கம்பெனிகள் தாம் கட்டுப்படுத்துகின்றன.

ஆரம்பத்தில் நல்ல விலை கொடுத்து பொருட்கள் கொள்முதல் செய்யும் இவர்கள், தங்களது உள்ளூர் போட்டியாளர்களை ஒழித்துக் கட்டியபின் விலையை அடாவடியாகக் குறைப்பது, பணத்தை இழுத்தடித்துக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விவசாயிகளைக் கசக்கிப் பிழிகிறார்கள். உதாரணமாக, ஆக்ஸ்பாம் நடத்திய ஆய்வில் ஒப்பந்த விவசாயத்தில் விளைவித்த ஆப்பிள்கள், 65மில்லி மீட்டர் சுற்றளவு கொண்டதாக இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்திய கார்பரேட் கம்பெனி ஒன்று அந்த அளவுக்குக் கீழ் இருக்கும் ஆப்பிள்கள் தரம் குறைந்தது என்று சொல்லி அடிமாட்டு விலைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

ஆக, இடைத்தரகர்களை ஒழிப்பதல்ல இவர்கள் நோக்கம். ஊருக்குப் பத்து கமிசன் மண்டி ஏஜென்டுகள் என்கிற நிலையை ஒழித்து நாட்டுக்கே நாலு பிரம்மாண்டமான கமிஷன் மண்டிகளை உருவாக்குவது தான் இவர்கள் நோக்கம். இந்த பெரிய சந்தை இன்றைய நிலையில் உள்ளூர் அளவில் பல்வேறு சிறிய போட்டியாளர்களுடன் இயங்கி வருகிறது. இதை ரிலையன்ஸிடமும் வால்மார்ட்டிடமும் ஒப்படைத்து விட்டால் விவசாயிகளுக்கு வேறு போக்கிடமே இல்லாமல் போய் விடும். இடைத்தரகர்களை ஒழிப்பதே நோக்கம் என்று நீட்டி முழங்கும் இவர்களின் உண்மையான திட்டம்  அதற்கு நேர் எதிரானது – இருக்கும் சாதா ஏஜெண்டுகளை ஒழித்து விட்டு சூப்பர் ஏஜெண்டுகளை வளர்ப்பது தான் அது.

விலைவாசி குறையும் என்கிற ஏமாற்று – விலைவாசி உயர  யார் காரணம்?

“இடைத்தரகர்களை ஒழித்து விட்டால் விலைவாசி குறைந்து விடும். இவர்களால் தான் விலைவாசியே உயர்ந்து கொண்டே போகிறது. மேலும் சில்லறை வர்த்தகமே முறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதை முறைப்படுத்துவதன் மூலம் விலைவாசியை ஒரு கட்டுக்குள் வைக்கமுடியும்” – இது மவுனமோகன் சிங், சிதம்பரம் கும்பலில் இருந்து தமிழில் வலைபதியும் ‘டிராபிக் ராமசாமிகள்’ வரை ஒரே குரலில் பாடும் பாட்டு.

இப்போதாவது தனது பொருளை சந்தைக்கு எடுத்து வரும் விவசாயிக்கு பத்து கமிஷன் மண்டிகளில் நல்ல விலை கிடைக்கும் மண்டியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதை முறைப்படுத்த வேண்டுமென்றால் அரசே தலையிட்டு குறைந்தபட்ச விலையை உத்திரவாதப்படுத்திக் கொடுக்கலாமே தவிர அந்தப் பொறுப்பிலிருந்து கைகழுவி விட்டு இருக்கும் கமிஷன் மண்டிகளை ஒழித்துக்கட்டி ரிலையன்ஸையும் வால்மார்ட்டையும் அந்த இடத்தில் அமர வைப்பதல்ல தீர்வு.

இது ஒருபக்கமிருக்க, விலைவாசி உயர்வுக்கு கமிஷன் மண்டிகள் மட்டும் தான் காரணம் என்று சொல்வதே பச்சை அயோக்கியத்தனம். விவசாயத்தை ஒரு முனையில் புறக்கணிக்கும் அதே சமயத்தில், உணவு தானியத்தை ஆன்லைன் டிரேடிங் வர்த்தகத்தில் திறந்து விட்டிருக்கிறார்கள். கட்டுப்படுத்தவியலாலாத பங்குச்சந்தை சூதாட்டத்தில் மக்களின் அடிப்படை உணவு ஆதாரம் சிக்குண்டு கிடக்கிறது.

உதாரணமாக, இன்னும் விளைந்திராத ஒரு குவிண்டால் நெல்லுக்கு விலை பத்தாயிரம் என்று விலை நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொள்ளும் பன்னாட்டுக் கம்பெனி, விளையாத அந்த நெல்லுக்கான ஒப்பந்தப் பத்திரத்தை பங்குச் சந்தையில் ஏலம் விடுகிறார். பல கைகள் மாறிச் சுழலும் இந்தப் பத்திரங்கள் ஓவ்வொரு சுழற்சியிலும் அபரிமிதமாக விலை கூடிக் கொண்டே போகிறது. இறுதியில் அதன் சந்தை விலை பத்து லட்சம் என்று வந்து நிற்கும் போது விளைந்த நெல்லை முன்பு போடப்பட்ட ஒப்பந்த விலையான பத்தாயிரத்துக்கே பறித்துச் செல்கிறது பன்னாட்டுக் கம்பெனி. விளைவித்தவனுக்கே விளைபொருள் மேல் உரிமையில்லை.

இந்தியாவின் உணவுப் பொருட்கள் தானியங்கள் உள்ளிட்டு பல்வேறு பண்டங்களின் மேல் நடக்கும் இந்தச் சூதாட்டச் சந்தையின் மதிப்பு 45 லட்சம் கோடிகளுக்கும் அதிகம். இந்தச் சூதாட்டத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் அரசே கொள்முதல் செய்து வைக்க உணவுக் கிடங்குகள் கட்ட நிதியில்லை என்று புலம்பும் அதே அரசு தான், இந்த பன்னாட்டுப் பதுக்கல்காரர்கள் கட்டும் தானியக் கிடங்குகளுக்கு 50 சதவீத மானியம் வழங்குகிறது.

விலைவாசி உயர்வு என்பதை ‘இடைத்தரகர்கள்’ என்கிற ஒற்றைப் பரிமாணத்தில் பார்த்துப் புரிந்து கொள்ளக் கூடாது. ஆனால், பத்ரி போன்ற ‘மெத்தப் படித்தவர்களே’ கூட அவ்வாறு தான் சிந்திக்கிறார்கள். அவர்களின் மண்டையோட்டுக்குள் நிறம்பி வழியும் ஏகாதிபத்திய அடிமைப் புத்தி அதற்கு மேல் அவர்களின் பார்வை செல்லாமல் தடுக்கிறது. ஒருபக்கம் பல்வேறு வழிகளில் விவசாயத்தை திட்டமிட்டு அழித்து விட்டு அதன் வினியோக வலைப்பின்னலை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கொடுத்து விடுவதன் மூலம் விலை குறையும் என்று சொல்வதும், விவசாய விளைபொருட்களின் மேல் நடக்கும் சூதாட்டத்தை விவாதத்திற்குட்படுத்தாமல் மறைப்பதும் மாபெரும் மோசடி. ஆனால், இது தான் தமிழில் வலைபதியும் பார்த்தசாரதிகளின் யோக்கியதை.

எட்டப்பன் காலத்தில் மட்டும் கூகிளும் பிளாகரும் இருந்திருந்தால் தனது ஏகாதிபத்திய அடிமைச் சிந்தனையை பத்ரி, நாராயணன், வவ்வால் போன்றோரை விட  சிறப்பாக நியாயப்படுத்தியிருப்பான். அப்படித்தான் இவர்கள் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.

வால்மார்ட்டால் விலைவாசி உயர்வு – பிற நாடுகளின் அனுபவம்

வால்மார்ட்டின் பிரம்மாண்ட மூலதன பலமும் உலகளாவிய வலைப்பின்னலும் தொழில் துவங்கிய சில காலத்துக்கு விலையைக் குறைக்கும் வாய்ப்பை அளிக்கிறது. இங்கே வரும் நட்டத்தை வேறெங்கோ கிடைக்கும் லாபத்தைக் கொண்டு ஈடுகட்டிக் கொள்ள முடிகிறது. இந்த ஆரம்பகட்ட விலைக்குறைப்பின் மூலம் உள்ளூர் அளவிலான போட்டியாளர்களை ஒழித்துக் கட்டியபின், அவன் வைத்ததே விலை. உற்பத்தியாளர்களிடம் அடாவடியாக விலையைக் குறைத்து வாங்கும் வால்மார்ட், நுகர்வோருக்கு அதிகவிலையில் விற்பது அவன் ஏற்கனவே கால்நாட்டியிருக்கும் சந்தைகளின் அனுபவத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் பாடம்.

தாய்லாந்தில் பன்னாட்டு சூப்பர் ஸ்டோர்களின் வருகைக்குப் பின் நுகர்வுப் பொருட்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அர்ஜென்டினாவில் காய்கறிகளின் விலை 14 சதவீதம் அதிகம். மெக்ஸிகோவில் சாதாரண கடைகளை விட சூப்ப்ர் ஸ்டோர்களில் விற்கப்படும் பொருட்களின் விலை மிக அதிகமாக இருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. வியட்நாமில் 2002 காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 10 சதவீத அளவுக்கு பொருட்களின் விலை உயர்ந்திருப்பது தெரியவந்தது.

நாம் எதை நுகர்வது என்பதை யார் தீர்மானிப்பது?

வால்மார்ட் தனது விற்பனைப் பொருட்களை கொள்முதல் செய்யும் விதம் பற்றி “மலிவு விலையில் மரணம்” கட்டுரையில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களை வரவழைத்து தலைகீழ் ஏலம் நடத்தும் வால்மார்ட், அதில் குறைந்த விலைக்கு தனது உற்பத்திப் பொருட்களை விற்க முன்வரும் நிறுவனத்திடமிருந்தே கொள்முதல் செய்கிறது. உதாரணமாக, துணி துவைக்கும் சோப்புக் கட்டிகளில் இன்று இருக்கும் பல்வேறு பிராண்டுகளான அரசன், பொன்வண்டு, மகாராஜா போன்றவைகள் சந்தையில் காலம் தள்ள முடியாது. பன்னாட்டு கம்பெனிகளின் தயாரிப்புகளான ரின், சர்ப் போன்றவைகளே வால்மார்ட் எதிர்பார்க்கும் அளவுக்கு உற்பத்தி செய்து குவித்து தாக்குப் பிடிக்க முடியும்.

உணவுப் பொருட்கள் என்று பார்த்தால், ஏற்கனவே இந்தியாவில் ஐ.டி.சி நிறுவனம் தானியக் கொள்முதல் செய்கிறது. இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் “ஆசீர்வாத் ஆட்டா’ நாடு முழுவம் ஒரே சுவையுள்ளதாக இருக்க வேண்டுமென்பதால் அதற்கேற்ற விதையை விநியோகித்து ஒரே விதமான கோதுமையைப் பயிரிடும்படி பல மாநிலங்களின் விவசாயிகளை அந்நிறுவனம் மாற்றிவிட்டது. பலவிதமான ருசிகளைக் கொண்ட கோதுமை ரகங்கள் இப்படி திட்டமிட்டே அழிக்கப்பட்டு விட்டன. தான் உற்பத்தி செய்யும் உருளைக் கிழங்கு வறுவலுக்கு பொருத்தமான ஒரே வகை உருளைக் கிழங்கை உற்பத்தி செய்யும் படி பஞ்சாபின் சில மாவட்டங்களையே மாற்றியிருக்கிறது பெப்சி நிறுவனம்.

வால்மார்ட்டுக்கு உலகளாவிய சந்தை இருக்கிறது. அதை ஆதரிப்பவர்களோ “ஆஹா சீனாவுக்கும் அமெரிக்காவுக்கு நம்ம ஊர் கிழங்குகள் போகப் போகிறது – விவசாயம் வாழப் போகிறது” என்று குதூகலிக்கிறார்கள். இவர்களுக்கு விவசாயம் பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதற்கு வேறு சான்றுகள் ஏதும் தேவையில்லை. பாரம்பரியமாக விளைவிக்கப்படும் சுதேசி ரகங்கள் என்பது அந்தந்த மண்ணின் தன்மைக்கு உகந்தது. அமெரிக்காவில் உருளை வறுவல் சந்தைக்கான உருளைக் கிழங்கு என்பது அந்த சந்தைக்கேற்ற ரகமாகத் தான் இருக்கும். அந்நிய ரகங்களை நமது மண்ணில் விளைவிக்க வேண்டுமென்றால், நிறைய ரசாயனங்களைக் கொட்டியாக வேண்டும். ஏற்கனவே உரங்களால் செத்துப்போன நிலங்களின் நிலை இன்னும் மோசமாகும்.

மட்டுமல்லாமல், இப்படி அந்நிய ரகங்களுக்கான சாகுபடிக்கு விதையில் இருந்து பூச்சி மருந்து, தொழில்நுட்பம் என்று சகல வகையிலும் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். தற்போது, ஒரு பகுதியளவுக்காவது தற்சார்புடன் இருக்கும் விவசாயம் முற்றாக பன்னாட்டுக் கம்பெனிகளை நம்பி இருந்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளுவதாகவே இது அமையும். ஐ.டி.சி ஏற்கனவே கணிசமான அளவுக்கு சந்தையைக் கைபற்றியிருக்கும் நிலையில், முழுமையாக அந்தச் சந்தை அவன் கைகளில் விழுந்தால், நமக்கு நாம் விரும்பிய ரக கோதுமையை உண்ணும் வாய்ப்பு கிடைக்குமா?

வால்மார்ட் வந்தால் சிறு உற்பத்தியாளர்கள் பிழைப்பார்கள் என்கிற புளுகு

வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு மளிகைக்கடைகள் தமது சங்கிலித் தொடர் சூப்பர்மார்ட்டுக்கான கொள்முதலில் 30 சதவீதத்தை உலகெங்கும் உள்ள சிறு உற்பத்தியாளர்களிடம் வாங்கிக் கொள்வார்கள் என்றும், அப்படி நெல்லுக்கு இறைத்தது புல்லுக்கும் கொஞ்சம் புசியுமாதலால் நமது அம்மி அப்பள கம்பேனியிலிருந்து பூ மார்க் பீடி கம்பேனி வரை பிழைத்துக் கொள்வார்கள் என்றும் இதன் மூலமும் நல்ல வேலைவாய்ப்பு உருவாகும் என அதன் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

சிறு உற்பத்தியாளர்கள் ஒருபுறம் இருக்கட்டும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ப்ராக்டர் & காம்பிள் நிறுவனமே வால்மார்ட்டின் ஏகபோகத்தை கட்டுப்படுத்த அரசு தலையிட வேண்டுமென்றும், அதன் கொள்முதல் கொள்கையின் விளைவால் தங்களால் தொழில் நடத்த முடியவில்லையென்றும் தெரிவித்துள்ளது. வால்மார்ட்டுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் முதல் பத்து நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் மஞ்சள் நோட்டிஸ் கொடுத்து ஓட்டாண்டிகளாகியுள்ளன.

2004-ம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க பொம்மைச் சந்தையில் தனக்கு அடுத்த படியாக இருந்த டாய்ஸ் ‘ஆர்’ யூ நிறுவனத்தோடு விலைக்குறைப்புப் போட்டியில் இறங்கிய வால்மார்ட், அந்த நிறுவனம் விற்ற அதே பொம்மைகளை 10 டாலர் குறைவான விலையில் விற்றது. இதன் மூலம் டாய்ஸ் ஆர் யு நிறுவனத்தின் 146 கடைகள் ஜனவரி 2004-ம் ஆண்டு இழுத்து மூடப்பட்டன. இதில் 3,800 தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அதன் பின் அமெரிக்க பொம்மைச் சந்தையில் 30 சதவீதத்துக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த வால்மார்ட், ஏற்கனவே விலைக்குறைப்பில் விட்டதையெல்லாம் பிடித்துக் கொண்டது.

இதே போல் டெக்ஸ்டைல் சந்தையை கபளீகரம் செய்த வால்மார்ட், கரோலினா மில்ஸ், லவ்வபிள் கார்மென்ட்ஸ் போன்ற நிறுவனங்களை ஓட்டாண்டிகளாக்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டுமின்றி தான் கால்பதித்த நாடுகளிலெல்லாம் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஒழித்துக் கட்டியிருக்கிறது வால்மார்ட். பிற நாடுகளின் அனுபவங்களில் இருந்து நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது இந்தியச் சந்தைக்குள் நுழையும் விஷக் கிருமி. ரிலையன்ஸ், ஐ.டி.சி போன்றவை மெல்லக் கொல்லும் ஆர்செனிக் என்றால் வால்மார்ட் உடனே வேலையைக் காட்டும் சயனைட்.

இன்றைய நிலையில் சர்வதேச அளவில் மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது உலக முதலாளித்துவ வர்க்கம். சூதாட்டப் பொருளாதாரத்தின் விளைவாய் வீங்கிப் பெருத்துப் போயுள்ள தனது பிரம்மாண்டமான மூலதனத்தை சுழற்சிக்கு விடும் சந்தைகளை வெறிகொண்ட முறையில் தேடியலைந்து கொண்டிருக்கிறது ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள். இந்தப் பின்னணியில் தான் மூன்றாம் உலக நாடுகளை இரண்டாம் தலைமுறை பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உலக வங்கி நிர்பந்தித்து வருகிறது. சில்லறை வர்த்தகம் என்றில்லாமல் விமானப் போக்குவரத்து, வங்கித்துறை, இன்சுரென்ஸ், தபால் துறை என்று லாபம் கொழிக்கும் துறைகளில் பொதுத்துறையை ஒழித்து விட்டு அந்நிய மூலதனத்தை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை வலுவாக முன்தள்ளுகிறார்கள்.

சில்லறை வர்த்தகம் என்றில்லாமல் பல்வேறு வகைகளில் உள்நுழையும் இந்த மூலதனத்தின் தாக்குதலையும் அதையே செயல்திட்டமாகக் கொண்டிருக்கும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவதே நாட்டின் இறையாண்மையைக் காக்க நாட்டுப் பற்று மிக்கவர்கள் உடனே செய்ய வேண்டிய கடமை.

________________________________________________

– தமிழரசன்

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

———————

———————

———————

———————

  1. எவ்வளவு தெளிவாக எழுதினாலும்,இந்த அல்லக்கை சொம்புதூக்கிகள் மாறப்போவதில்லை.வரிசையா வருவானுங்க பாருங்க.
    ஆனா ஒரு பயலும் கட்டுரையில் உள்ள மேட்டரை
    தொடவும் மாட்டானுங்க.கேள்விக்கு பதிலும் வராது.

  2. அண்ணாச்சி கடைக்காகப் பரிந்து பேசுபவர்கள் அந்தக் கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலைமையை எண்ணிப் பார்த்ததுண்டா?
    சம்பளம் ரூ 500 – 1000 என்கிற ரேஞ்சில் இருக்கும். பி.எஃப், இ.எஸ்.ஐ., 8 மணிநேரக் கணக்கு எதுவும் கிடையாது. ‘சம்பள ஆள் இல்லை’ என்ற போர்டு தொங்கும். கேட்டால், ‘இவன் என் மச்சான், ஊரிலிருந்து அழைத்துவந்து உதவிக்கு வைத்திருக்கிறேன்’ என்பார் அண்ணாச்சி. குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது படு சகஜம். அந்தச் சின்னப் பசங்கள் அடிக்கப்படுவதும் சகஜமே.

    இதுவே வால்மார்ட்டாக இருந்தால் முறையான ஒப்பந்தத்துடன் வேலை, 8 மணிநேரப் பணி, நியாயமான சம்பளம், பெரியவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு, பணிப்பாதுகாப்பு, பி.எஃப், இ.எஸ்.ஐ. வசதிகள்; யாரும் அடிக்கவோ, மரியாதையின்றி நடத்தவோ முடியாது- மீறினால் தட்டிக் கேட்கத் தொழிற்சங்கம் என சகல உரிமைகளும் உண்டு. ஏன் ஸ்ட்ரைக் செய்யக்கூட முடியும்! இத்ல்லாம் அண்ணாச்சி கடையில் நினைத்துப் பார்க்கவாவது முடியுமா?

    ஆண்ணாச்சி கடைகளும் அவர்களது கஸ்டமர் உறவுகளும் நிலப் புரபுத்துவத்தின் நீட்சியே! உதாரணமாக அண்ணாச்சிகள், தன் சொந்த ஊர்க்காரன், சாதிக்காரனுக்கு மட்டுமே வேலை தருவார்கள். உண்மையில் நிலப்புரபுத்துவ மதிப்பீடுகளைக் கொண்ட அண்ணாச்சி கடைகள் அழியுமென்றால் அதை உண்மையான கம்யூனிஸ்டு வரவேற்க வேண்டும். இப்படி அடுத்த வளர்ச்சிநிலையான முதலாளித்துவமும், அது உருவாக்கும் ‘ஆர்கனைஸ்டு லேபரும்’ தான் கம்யூனிஸத்துக்கே அடிப்படைத் தேவைகள். நம்ம ஊர் கம்யூனிஸ்டுகளுக்கு இதெல்லாம் புரியாது – காரணம் அவர்களிடமும் நிலப்பிரபுத்துவ, சாதிய நோக்குதான் உள்ளது என்பதே! அவர்கள் மார்க்ஸியம் பேசுவது ஒரு சுயநலன் சார்ந்த வசதிக்காக மட்டுமே.

    அவர்களுக்கு நம் அரசுப்பள்ளிகளில் பாடம் நடத்தப்படாமல் வீணாகும் ஏழை மாணவன் பற்றி அக்கறை கிடையாது; நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டும் வகுப்புக்கு வராத, அல்லது வந்தாலும் பாடம் நடத்தாத ஆசிரியரது வர்க்க நலன் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். மிடில் கிளாஸான ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் ‘உழைக்கும் வர்க்கம்’ என்றுகூறிக் காப்பாற்றிவருபவர்களைக் கார்ல் மார்க்ஸ் இன்று இருந்திருந்தால் கம்யூனிஸ்ட் என்றே ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.

    • //இதுவே வால்மார்ட்டாக இருந்தால் முறையான ஒப்பந்தத்துடன் வேலை, 8 மணிநேரப் பணி, நியாயமான சம்பளம், பெரியவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு, பணிப்பாதுகாப்பு, பி.எஃப், இ.எஸ்.ஐ. வசதிகள்; யாரும் அடிக்கவோ, மரியாதையின்றி நடத்தவோ முடியாது- மீறினால் தட்டிக் கேட்கத் தொழிற்சங்கம் என சகல உரிமைகளும் உண்டு//

      தாங்க முடியலை சரவணன்.

      தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு வால்மார்ட் உலகளவில் பேர் போன நிறுவனம். “ஸ்வெட் ஷாப்+வால்மார்ட்” என்று கூகிளில் தேடிப் பாருங்கள். தொழிலாளர்களை 16 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்ய நிர்பந்திப்பது, குறைந்த கூலி, நினைத்தால் தூக்குவது, கருங்காலிகளை வைத்து சங்கம் கட்டுவதைத் தடுப்பது மற்றும் சட்டப்பூர்வ / சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் தொழிலாளர் அணிசேர்க்கையை உடைப்பது போன்றவற்றில் வால்மார்ட் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம். உலகத் தொழிலாளர் வர்க்கமே காறித்துப்பும் ஒரு நிறுவனத்தை மேண்மையானது என்று சொல்ல வேண்டுமென்றால் அசாத்தியமான திமிரும் கொழுப்பும் வேண்டும். அது உங்களிடம் கூடுதலாகவே இருக்கிறது போல் தெரிகிறது. காலாற நடந்து தெரு முக்கில் இருக்கும் அண்ணாச்சிக் கடைக்குப் போய் அவரிடம் பேச்சுக் கொடுத்து ‘உழைப்பு’ என்றால் என்னவென்று முதலில் புரிந்து கொள்ளப் பாருங்கள் – உழைப்புச் சுரண்டல் எல்லாம் பெரியவார்த்தை அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

      சிறு வணிகர்கள் பற்றி உங்களுக்கு என்ன எழவு தெரியும்? எத்தனை அண்ணாச்சிக் கடைகளில் வேலையாள் வைத்து நடத்துகிறார்கள்? அது ஒரு குடும்பமே சேர்ந்து வேலை செய்யும் இடம். உள்நாட்டுத் தொழில்களின் அழிவில் தான் புரட்சி நடக்குமென்றால் சோமாலியாவில் தான் நடந்திருக்க வேண்டும். இல்லை வால்மார்ட் வலுவாக இருக்கும் நாடுகளில் நடந்திருக்குமென்றால் அமெரிக்காவில் நடந்திருக்க வேண்டும். காப்பாற்றிக் கொள்ள சொந்த பொருளாதாரமே இல்லாத இடத்தில் மக்கள் பிழைக்கும் வழி தேடுவார்களா இல்லை சமூகப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு வருவார்களா?

      உங்களுக்கு அண்ணாச்சிக் கடையென்றாலே சரவணா ஸ்டோர்ஸ் தான் தெரியுமா? உங்கள் தெருமுக்கில் இருக்கும் சின்ன மளிகைக்கடையும் பெட்டிக்கடைகளும் தான் 99.9999 சதவீத சிறு வணிகர்கள். உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று காலை முதல் இரவு வரை வேர்வையில் செத்து சுண்ணாம்பாகிறவர்கள் ஒழிந்து போக வேண்டும் என்று சாதாரண மனிதத் தன்மை கொண்ட எவரும் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். முதலில் மனிதத்தன்மை என்னவென்று புரிந்து கொள்ள முயலுங்கள் மார்க்சியத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

    • சரவனன்,நம்ம ஊரில் அரசியல்வியாதிகளை கவனித்து விட்டால் குழந்தை தொழிலாலர்கள், தொழிலாலர்கள் நலன் போன்றவற்றை மயிருக்கு கூட நிறுவனங்கள் மதிக்க வேன்டியதில்லை. இதை வால்மார்ட் நண்றாகவே உனர்ந்திருப்பான்.

    • மீறினால் தட்டிக் கேட்கத் தொழிற்சங்கம் என சகல உரிமைகளும் உண்டு. ஏன் ஸ்ட்ரைக் செய்யக்கூட முடியும்…………….noooooooooooooooooooooo

  3. Dear Author,
    The following lines are truly majestic and 100 % precise.

    //இன்றைய நிலையில் சர்வதேச அளவில் மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது உலக முதலாளித்துவ வர்க்கம். சூதாட்டப் பொருளாதாரத்தின் விளைவாய் வீங்கிப் பெருத்துப் போயுள்ள தனது பிரம்மாண்டமான மூலதனத்தை சுழற்சிக்கு விடும் சந்தைகளை வெறிகொண்ட முறையில் தேடியலைந்து கொண்டிருக்கிறது ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள்.//
    Good article . It’s full of facts and truth. only truth. congrats for initiative.
    Regards
    GV

  4. ஆன் லைன் வர்த்தகம் அமலுக்கு வந்தே ஆறு வருடங்கள் தான் ஆகிறது.அதற்கு முன்பு விவசாயிகளின் பொருள்களுக்கு நியாயாமான விலை கிடைத்து வந்ததா என்பதை விளக்கவும்.

  5. வாழ்த்துக்கள் தமிழரசன். உங்கள் கட்டுரை நிறைய புரிதல்களைத் தருகிறது.

  6. இது மவுனமோகன் சிங், சிதம்பரம் கும்பலில் இருந்து தமிழில் வலைபதியும் ‘டிராபிக் ராமசாமிகள்’ வரை ஒரே குரலில் பாடும் பாட்டு.—நாய்க்கு தெரியுமா?இது நல்ல நாள்
    பானை என்று. அதுமாதிரி இருக்கு ஒரே குரலில் பாடும் பாட்டு

  7. மிக எளிமையான விளக்க கட்டுரை. பல இடங்களில் நம்மூர் நிலவரத்தை ஒப்பிட்டுள்ளது பல புரிதல்களை தருகிறது. நன்றிகள்.

  8. 1.100 சதவீதம் அந்நிய மூலதனத்தை ஏற்று கொண்ட சீனாவில்அது நடந்து 10 ஆண்டுக்கு பின்பும் அந்த நாட்டின் மொத்த சில்லறை வணிகம் என்பது இன்னும் 20 சதமானம் மட்டுமே முறைபடுத்தபட்ட வணிகமாக இருப்பது ஏன்

    2.உற்பத்தி முதலாளித்துவமாக இருக்கும் போது வினியோகம் முதலாளித்துவமாக இருக்கும் போது அதில் நடக்கும் சுரண்டலை மட்டும் மறைப்பது ஏன்

    3.இந்தியாவின் அரசு முதலாளித்துவ வர்க்க சார்புடைய அரசு என்பதை புரிந்து கொண்டால் அது 52 சதவீதம் மட்டுமே அந்நிய முதலீட்டை அனுமதிப்பது ஏன் என்றும் மீதம் 48 சதவீதத்தை அது ந்ரிலையன்சின் கடைக்கன் உத்தரவு க்டைத்தால் மட்டுமே அனுமதிக்கும் என்பதும் புரிந்து கொள்ள என்ன தயக்கம்

    4.என்ன இருந்தாலும் சரவணா ஸ்டோரில் வேலை செய்பவன் சொந்த சாதிக்காரணாக இருந்தாலும் அவனுக்கு

    வெளிய வந்து கடை ஓணராக வாய்ப்பிருக்கு என சொல்லும் உங்கள் குட்டி பூர்சுவா சிந்தனை எதை காட்டுகிறது ?

    (ரிலையன்ஸில் வேலை செய்யும் இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கத்தை பற்றி சிந்தித்துக்கூட பார்க்காத உங்கள்

    குட்டி பூர்சுவா மனப்பான்மை அம்பலப்படுவதையும் அம்மணமாக நீங்கள் நிற்பதையும் உணருகிறீர்களா இல்லையா?

    5.வால் ஸ்டீரிட் போராட்டகாரர்கள் தங்களின் சமூக பொருளாதார பிரச்சனைக்கு மறந்தும் கூட அமெரிக்க அர்சுதான் காரணம் என சொல்ல மறுப்பதைபோல நீங்களும் விவசாயிகள் பரந்து பட்ட மக்களின் பிரச்சனைக்கு காரணம் இடைத்தரகர்களான வியாபாரிகள் என்பதையும் இந்த அமைப்பு முழுவதும் முதலாளித்துவ அமைப்புதான் என்பதையும் சொல்ல மறுத்து இதை உடைக்க முயலாமல் பகுதியை கட்டிகாக்க முயலுவதேன்

    6.நீங்க யார் என்பதும் யாரை காக்க போராடுகிறீர்கள் என்பது புரிகிறதா ? வணிகர்களை காப்பாத்த போராடுகிறீர்கள் அவ்வப்போது விவசயிகளுககாக நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள் சரத்குமாருக்கும் உங்களுக்கும் பெரிசா வேறுபாடு இல்லையே நீங்கள் கம்யூனிஸ்டா ?

    7.உங்கள் சிகப்பு அங்கியை கழட்டி விட்டு தமிழ் தேசியவாத கட்சின்னு சொல்லிகொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் . நீங்கள் நேரத்துக்கு தகுந்தாற்போல் முரண்பாடுகளை பேசுவதை விடுத்து பேசாமல் கட்சிக்கு பேரை மாற்றி கொள்ளுங்கள் -தமிழ் தேசிய கட்சி போன்ற பெயர்களை பரிந்துரைக்கிறேன்

    • 100 சதவீதம் அந்நிய முதலீட்டைக் கோரும் நீங்கள்தான் மெய்யான கம்மூனிஸ்டு

    • பெட்டிக்கடைக்காரர், இட்லி சுட்டு விற்கும் ஆயா, சிறு மளிகைக்கடைக்காரர், ஆட்டோ ஓட்டுனர், பானிபூர் விற்கும் சிறுவன், ரோஸ் மிட்டாய் விற்கும் பீகாரி, பீச்சில் சுண்டல் விற்கும் சிறுவன் போன்ற “முதலாளிகளையும்” அவர்களின் “மூலதனத்தையும்” எதிர்த்து ஒழித்துக் கட்டிவிட்டு நீங்கள் நடத்தப் போகும் ‘புரட்சியைக்’ கண்டு வியக்காமல் இருக்க முடியல.

      வியப்பெல்லாம் மக்களுக்குத் தான். வால்மார்ட்டுக்கு சந்தோஷமாக இருக்கும்.

      மக்களே நல்லா பாத்துக்கங்க. நம்ம தியாகுவும் ரவுடி தான்.

      ஒரு பெட்டிக்கடைக்காரரின் ஐந்தாயிரம் முதலீட்டையும் அதை விட லட்சக்கணக்கான கோடி பிரம்மாண்டமான வால்மார்ட்டின் மூலதன பலத்தையும் ஒரே தராசில் வைத்து சமன்படுத்தும் மார்க்சியம் மார்க்சுக்கே தெரியாமல் போனது ஒரு சோகம் தான்.

      உங்கள் கணக்குப் படி, ஏர்கலப்பை சொந்தமாக வைத்து (மூலதனம்!?) அரை ஏக்கரில் (மூலதனம்!?) விவசாயம் பார்க்கும் விவசாயியும் லட்சக்கணக்கான ஏக்கரில் விவசாயம் பார்க்கும் அம்பானியும் ஒன்று தான். இருவரும் முதலாளிகள் இரண்டும் ஒரே சமமான மூலதனம்.

      நீங்கள் இப்படி எதிர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைவதைப் பார்த்தால் கடைசியில் ஒருத்தரும் மிஞ்சமாட்டார்கள். நீங்கள் தனியே பீச்சாங்கரைப் பக்கமாக ஒதுங்கி உங்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதை ஒரு சோசலிச நாடாக பிரகடணம் செய்து கொள்ள வேண்டியது தான். புரட்சி வென்று விடும்.

      //ரிலையன்ஸில் வேலை செய்யும் இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கத்தை பற்றி சிந்தித்துக்கூட//

      நீங்கள் சிந்தித்த வெங்காயம் தான் ஊரே நாறுகிறதே. இருக்கும் பெட்டிக்கடைக்காரனையெல்லாம் ஒழித்து விட்டு ரிலையன்சுக்கும் வால்மார்ட்டுக்கும் அனுப்பி ‘இழப்பதற்கு ஏமற்ற வர்க்கமாக’ மாற்றி அவர்களை வைத்து சங்கம் கட்டி, கட்சி கட்டி, புரட்சி செய்து….. முடியல. முடியல.

      சுசியே ஒரு அரைவேக்காடு – அதிலிருந்து பிய்த்துக் கொண்டு வந்ததுகள் கால்வேக்காடாகத் தான் இருக்கும் என்பதை நீங்கள் நிரூபிக்கிறீர்கள். அரசியலெல்லாம் நல்லாத் தான் சொல்லிக் கொடுத்திருக்கானுக.. ஆனா பேரை மட்டும் தப்பா சொல்லிட்டாய்ங்க – மார்க்சியமல்ல – வால்மார்டியம்.

      போங்க பீச்சாங்கரை பக்கமா ஒதுங்குங்க – சோசலிசம் அமைக்கத்தாவலை?

      • //பெட்டிக்கடைக்காரர், இட்லி சுட்டு விற்கும் ஆயா, சிறு மளிகைக்கடைக்காரர், ஆட்டோ ஓட்டுனர், பானிபூர் விற்கும் சிறுவன், ரோஸ் மிட்டாய் விற்கும் பீகாரி, பீச்சில் சுண்டல் விற்கும் சிறுவன் போன்ற “முதலாளிகளையும்” அவர்களின் “மூலதனத்தையும்” எதிர்த்து ஒழித்துக் கட்டிவிட்டு நீங்கள் நடத்தப் போகும் ‘புரட்சியைக்’ கண்டு வியக்காமல் இருக்க முடியல.//

        வால்மார்ட் வந்து இட்லி சுட்டி விற்க போகிறான்,சுண்டல் விற்க போகிறான்,பாணிபூரி விற்க போகிறான் என்கிற வகையான் உமது விவாதம் சின்னபுள்ள தனமா இருக்கு

        //வியப்பெல்லாம் மக்களுக்குத் தான். வால்மார்ட்டுக்கு சந்தோஷமாக இருக்கும்.

        மக்களே நல்லா பாத்துக்கங்க. நம்ம தியாகுவும் ரவுடி தான்.

        ஒரு பெட்டிக்கடைக்காரரின் ஐந்தாயிரம் முதலீட்டையும் அதை விட லட்சக்கணக்கான கோடி பிரம்மாண்டமான வால்மார்ட்டின் மூலதன பலத்தையும் ஒரே தராசில் வைத்து சமன்படுத்தும் மார்க்சியம் மார்க்சுக்கே தெரியாமல் போனது ஒரு சோகம் தான்.//

        அந்த வேலையை நீங்கதான் செய்றீங்க மக்களே பார்த்துகங்க இவரு ரவுடியே இல்லை பேஸ்மட்டம் வ்வீக்கு பில்டிங்க ஸ்டாராங்கு

        ரிலையன்ஸ்சுக்கும் வால்மார்ட்டுக்கும்தான் மோதல் நடக்கும்னு மக்கள்ட சொல்ல பயப்படும் இவர்கள்தான் அக்மார்க் கம்யூனிஸ்டு

        //உங்கள் கணக்குப் படி, ஏர்கலப்பை சொந்தமாக வைத்து (மூலதனம்!?) அரை ஏக்கரில் (மூலதனம்!?) விவசாயம் பார்க்கும் விவசாயியும் லட்சக்கணக்கான ஏக்கரில் விவசாயம் பார்க்கும் அம்பானியும் ஒன்று தான். இருவரும் முதலாளிகள் இரண்டும் ஒரே சமமான மூலதனம்.

        நீங்கள் இப்படி எதிர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைவதைப் பார்த்தால் கடைசியில் ஒருத்தரும் மிஞ்சமாட்டார்கள். நீங்கள் தனியே பீச்சாங்கரைப் பக்கமாக ஒதுங்கி உங்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதை ஒரு சோசலிச நாடாக பிரகடணம் செய்து கொள்ள வேண்டியது தான். புரட்சி வென்று விடும்.//

        நீங்க போய் முதலில் மார்க்சியத்தில் அ ஆவன்னாவை படிங்க எனக்கு மூலதனம் வகுப்பெடுக்கும் முன்

        //ரிலையன்ஸில் வேலை செய்யும் இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கத்தை பற்றி சிந்தித்துக்கூட//

        நீங்கள் சிந்தித்த வெங்காயம் தான் ஊரே நாறுகிறதே. இருக்கும் பெட்டிக்கடைக்காரனையெல்லாம் ஒழித்து விட்டு ரிலையன்சுக்கும் வால்மார்ட்டுக்கும் அனுப்பி ‘இழப்பதற்கு ஏமற்ற வர்க்கமாக’ மாற்றி அவர்களை வைத்து சங்கம் கட்டி, கட்சி கட்டி, புரட்சி செய்து….. முடியல. முடியல.

        சுசியே ஒரு அரைவேக்காடு – அதிலிருந்து பிய்த்துக் கொண்டு வந்ததுகள் கால்வேக்காடாகத் தான் இருக்கும் என்பதை நீங்கள் நிரூபிக்கிறீர்கள். அரசியலெல்லாம் நல்லாத் தான் சொல்லிக் கொடுத்திருக்கானுக.. ஆனா பேரை மட்டும் தப்பா சொல்லிட்டாய்ங்க – மார்க்சியமல்ல – வால்மார்டியம்.

        போங்க பீச்சாங்கரை பக்கமா ஒதுங்குங்க – சோசலிசம் அமைக்கத்தாவலை?
        //

        இருக்கிற பெட்டிகடை காரனெல்லாம் நேரே பொய் விவசாயிகிட்ட கொள்முதல் செய்வது போலவும் விவசாயி மாடி வீடு கட்டி இருப்பதும் போலவும் பாசாங்கு காட்டி கமிசன்மண்டி காரன் உட்பட கோடிகணக்காக சுருட்டி கொண்டிருக்கும் பெரு முதலைகளை காப்பாற்றுகிறீர்கள்

        • வால்மார்ட் வந்து இட்லி சுட்டி விற்க போகிறான்,சுண்டல் விற்க போகிறான்,பாணிபூரி விற்க போகிறான் என்கிற வகையான் உமது விவாதம் சின்னபுள்ள தனமா இருக்கு
          I live in Canada….Wall Mart selling hot fried Chicken wings legs and parts in their bakery section.Ready to eat.If WM in India defenitely they do all you listed.When you write comments try to contraint yourself not to write..சின்னபுள்ள தனமா இருக்கு

          • //I live in Canada….Wall Mart selling hot fried Chicken wings legs and parts in their bakery section.Ready to eat.If WM in India defenitely they do all you listed.When you write comments try to contraint yourself not to write..சி//

            கனடாவில் லெக் பீஸ் சாப்பிடும் தாங்களும் இந்தியாவின் குடிசை பகுதியில் இட்டிலி சாப்பிடும் நானும் என்னை போன்ற பெரும்பகுதி இந்திய மக்களும் ஒரே வாங்கும் சக்தி கொண்டவர்கள் அல்ல மிஸ்டர் வீரா .
            வால் மார்ட் வருகிறதென்றால் அது என்னை போன்ற வாங்கு சக்தி அற்ற பெரும்பான்மை மக்களை குறிவைத்து வரவில்லை வாங்கும் சக்தி கொண்ட இந்தியாவின் 20 சதவீதம் மக்களையே குறிவைக்கிறது

            • தியாகு…

              %%%%குடிசை பகுதியில் இட்டிலி சாப்பிடும் நானும் %%%%
              %%%%என்னை போன்ற வாங்கு சக்தி அற்ற பெரும்பான்மை மக்களை %%%%

              ஏன்க இப்படி புழுகுறீங்க? நீங்க ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளர் ஆக கணிசமான சம்பளத்தை வாங்கி, குழுந்தையை கான்வென்டுக்கு அனுப்புவதே சரியானது என்று வாதிடும், அண்ணா ஹசாரேவை ஆதரிக்கும் நடதுத்தர வர்க்கத்தை ஆதரிக்கும் பக்காவான நடுத்தர வர்க்க ஆசாமி.. பாட்டாளிகளுக்கான அரசியல் பேசுவது வேறு, நடுத்தர வர்க்கத்தின் நலனை தூக்கிப்படித்துக்கொண்டே நானும் ஒரு பாட்டாளி என்று நாடகமாடுவது வேறு. நீங்க இப்ப அதான செய்யறீங்க..

              %%%%%வால்மார்ட் வாங்கும் சக்தி கொண்ட இந்தியாவின் 20 சதவீதம் மக்களையே குறிவைக்கிறது%%%%

              இது நீங்களே மல்லாக்க படுத்து யோசிச்சிருந்தாலும் சரி அல்லது இயக்கத்து காரங்க்கிட்டேருந்து கடன் வாங்கியதான இருந்தாலும் சரி சுத்த அபத்தம். அப்படி மேட்டுகுடியை டார்கெட் செய்யும் நிறுவனம் ஏனய்யா எங்களை விட குறைந்த விலை வேறுங்கும் இல்லைங்கரதயே தனது கம்பெனியின் தாரக மந்திரமாக வைத்திருக்கிறான். வால் மார்ட்டின் இலக்கே நடுத்தரவர்க்கமும் அதன் கீழ் இருப்பவர்களும்தான்.

              இணையத்தை அக்கப்போர்களுக்காக மட்டும் பயன்படுத்தாமல் கொஞ்சம் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தவும். இணையத்தில் வால்மார்ட் பற்றி தேடிப்பார்க்கவும். குறைந்த பட்சம் கட்டுரையையாவது படித்துவிட்டு எழுதுவது நலம், இல்லேன்னா இப்படித்தான் தியாகுத்தனமா (ஓஹ் நீங்கதானே அது) எழுதவரும்.

              பின் குறிப்பு – அண்ணாச்சிகளெல்லாம் அதிக மார்ஜின் வைத்து மக்களை சுரண்டுகிறார்கள், வால்மார்ட் வந்தால் அம்மக்கள் அந்த சுரண்டலில் இருந்து விடுபட முடியும்னு ஒரு மானஸ்தர் எழுதியிருந்தார் அவரைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்….

              • //ஏன்க இப்படி புழுகுறீங்க? நீங்க ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளர் ஆக கணிசமான சம்பளத்தை வாங்கி, குழுந்தையை கான்வென்டுக்கு அனுப்புவதே சரியானது என்று வாதிடும், அண்ணா ஹசாரேவை ஆதரிக்கும் நடதுத்தர வர்க்கத்தை ஆதரிக்கும் பக்காவான நடுத்தர வர்க்க ஆசாமி.. பாட்டாளிகளுக்கான அரசியல் பேசுவது வேறு, நடுத்தர வர்க்கத்தின் நலனை தூக்கிப்படித்துக்கொண்டே நானும் ஒரு பாட்டாளி என்று நாடகமாடுவது வேறு. நீங்க இப்ப அதான செய்யறீங்க../

                ஊசி உங்களில் எத்தனை பேர் சொந்தமா கம்பெனி நடத்திட்டே பாட்டாளிவர்க்க அரசியல் பேசுகிறீர்கள் என்பது எனக்கும் தெரியும் எத்தனை பேர் முக்கால் லட்சம் சம்பளம் வாங்கிட்டு பாட்டாளி வர்க்க அரசியல் தப்புதவறாக பேசுகிறீர்கள் எத்தனை பேர் ஒரு போராட்டத்துக்கு கூட கலந்து கொண்டிராத பக்கா கீபோர்ட் புரட்சியாளர்கள் என்கிற லிஸ்டெல்லாம் பேச வரவில்லை

                பாட்டாளிவர்க்க அரசியல் என்பது இப்படி ரிலையன்ஸ்க்கும் வால்மார்ட்டுக்கும் நடக்கும் சண்டையை நேரா ரிலையன்ஸுக்கும் சதாரண இட்லி வியாபாரிக்கும் நடக்கும் சண்டையாக திரிச்சு யாரை காப்பாத்த போராடுகிறீர்கள் சாமி

                //அண்ணாச்சிகளெல்லாம் அதிக மார்ஜின் வைத்து மக்களை சுரண்டுகிறார்கள், வால்மார்ட் வந்தால் அம்மக்கள் அந்த சுரண்டலில் இருந்து விடுபட முடியும்னு ஒரு மானஸ்தர் எழுதியிருந்தார் அவரைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்//

                அண்ணாச்சி எல்லாம் அதிக மார்ஜின் வச்சு சுரண்டவில்லை என்றால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக அண்ணாச்சிகளை போல இருந்திருப்பார்கள் என்கிற அடிப்படை பார்வை கூட இல்லையே உங்க கிட்ட

                • தியாகு நான் கூடத்தான் உங்களவுக்கு சம்பளம் வாங்குறேன், பாட்டாளி வர்க்கத்தோட நலனை பிரதிபலிக்கும் அரசியலை பேசறேன்..அப்படிப்பட்ட ஒரு அமைப்பில் இணைஞ்சு வேலை செய்யறேன்…

                  ஆனா நடுத்தரவர்க்க வாழ்க்கை வாழும், அவர்களுக்கான அரசியலை தூக்கிப்பிடிக்கும் நீங்க எத்தனான் தேதியிலிருந்து வாங்கும் சக்தியற்றவராகிப்போனீங்க? ஏன் அப்படி பொய் பேசுனீங்க

                  %%%%%%%%%%%%%

                  அண்ணாச்சி விவசாயப்பொருள் மட்டுமா விக்குறாரு… வர சரக்குல பெரும்பான்மை கம்பெனி தயாரிப்பு என்பது உங்கள் மண்டைக்கு ஏறவே ஏறாதா இல்ல வாழ்க்கையில மளிகை கடை பக்கம் போனதே இல்லயா

                  • நடுத்தர வர்க்க அரசியலை நான் தூக்கி பிடிக்கவில்லை ஆனால் அதை உங்களை போன்று பேசும் வினவு நபர்களே தூக்கி பிடிக்கிறார்கள் ஆதாரம் வேண்டும்னா பாருங்க முந்திய கட்டுரையில் இங்கே அண்ணாச்சி கடைகளில் சுரண்டல் இருக்கிறது ஆனால் அந்த சுரண்டலுக்கு உள்ளாகும் தொழிலாளிக்கு ஒரு முதலாளியாகும் வாய்ப்பு இருக்கிறது என சொல்லி இருக்கிறார்

                    இதானே நடுத்தர வர்க்க சிந்தனை இதற்கு என்ன பதில் மிஸ்டர் ஊசி

                    %%%%%%%%%%%%%

                    அண்ணாச்சி விவசாயப்பொருள் மட்டுமா விக்குறாரு… வர சரக்குல பெரும்பான்மை கம்பெனி தயாரிப்பு என்பது உங்கள் மண்டைக்கு ஏறவே ஏறாதா இல்ல வாழ்க்கையில மளிகை கடை பக்கம் போனதே இல்லயா//

                    • அட அட அட இப்படி ஒரு தியாகுத்தனாமான கண்டுபிடிப்பை நிகழ்த்தி மேலே நீங்க எழுதிய தர்கத்தின் பிரதிபலனாய் உங்களின் அண்டாடாயர் உருவப்பட்ட பின்னூட்டமும் கூடத்தான் இருக்கு… பாக்கனுமா இதோ சுட்டி

                      https://www.vinavu.com/2011/12/09/wal-mart-2/#comment-53384

                      %%%இதானே நடுத்தர வர்க்க சிந்தனை இதற்கு என்ன பதில் மிஸ்டர் ஊசி%%%

                      எது அண்ணாச்சி கடையில் வேலை பார்க்கும் ஒருவனோ, மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் ஒருவனோ, லேத்துப்பட்டரையில் வேலை பார்க்கும் ஒருவனோ வெளியே வந்து சுயமாக தொழில் துவங்கும் இந்த சமூக யதார்தம் நடுத்தர வர்க்க சிந்தனைன்னே ஒரு பேச்சுக்கு வச்சுகுவோம் அப்ப வால்மார்ட் வந்தா அண்ணாச்சி ஒழியுவான், அது நல்லதுன்னு நீங்க எழுதறது பாசிச சிந்தனைதானே.. ஆனா நாங்க அப்படி சொல்லல, உங்களை லூசுன்னு சொல்றோம், தியாகுன்னு சொல்றோம்

                      பேசுற பாயின்டுக்கு பதில் சொல்லம இப்படி சுத்திவளைச்சு ஜல்லியடிச்சிகிட்டிருந்தா அப்பால நீங்க எழுதனது சுத்தமான தியாகுத்தனம் என்பதை நீங்களே ஒத்துகிட்டமாதிரி ஆகிடும்..இப்பவே சொல்லிட்டேன்

              • //குறைந்த விலை வேறுங்கும் இல்லைங்கரதயே தனது கம்பெனியின் தாரக மந்திரமாக வைத்திருக்கிறான். வால் மார்ட்டின் இலக்கே நடுத்தரவர்க்கமும் அதன் கீழ் இருப்பவர்களும்தான்.//

                இதற்கு பதில் இதுதான்

                //Wal-Mart has serious competition from Reliance Group, Piramals, Pantaloon brigade of Central Megamarts, Big Bazaar, Tru-Mart etc. It has to survive in a already buzzing and extremly dynamic market, create its own TRUST factor and be able to focus on India’s rising middle-level population with huge disposable incomes.

                Sincerely,

                Shrinath Navghane

                Founder & CEO, SDN Financial – Investment Banking, Equity, JV Debt & Commercial Funding, Real Estate.Edit
                //

                • ஓஹ் இதுதான் பதிலா.. அப்ப வால்மார்ட் வாங்கும் சக்தி படைத்த மேட்டுக்குடிக்கு பினாத்துனது சுத்தமான உளரல்னு ஒத்துகிட்டீங்களாக்கும்..

                  அது கிடக்கட்டும், அதியமானை விஞ்சும் அளவுக்கும் ஒரு பங்குச்சந்தை சூதாடியின் கருத்தை கொண்டு வைத்து வாதாடுகிறீர்களே, இதுக்கு பேசாம வால்மார்ட் போர்ட் ஆப் டைரக்டர்ஸ் கருத்தையே எழுதியிருக்கலாமே.

                  பரவால்ல இயக்கத்து காரவுக ந்ல்லா மார்க்சியம் சொல்லிக்கொடுத்திருக்காங்க..விரைவில் பாட்டாளித் தோழர் சாம் வால்டன்னு ஒரு பதிவு எழுதுவீங்க போலயே 🙂

                  • //அது கிடக்கட்டும், அதியமானை விஞ்சும் அளவுக்கும் ஒரு பங்குச்சந்தை சூதாடியின் கருத்தை கொண்டு வைத்து வாதாடுகிறீர்களே, இதுக்கு பேசாம வால்மார்ட் போர்ட் ஆப் டைரக்டர்ஸ் கருத்தையே எழுதியிருக்கலாமே.
                    //

                    வால்மார்ட் ரிலையன்ஸுக்கு போட்டி இல்லைன்னு எதாவது ஆதாரம் இருந்தா நிறுவுங்க அப்படி ஏதும் ஆதாரம் இல்லாட்டி பேசாம போய் அதியமான் பக்கதில ஜெய் போட்டு உக்கார்ந்துகங்க கொஞ்சம் கொஞ்சமா நீங்க அதியமானைத்தான் ஆதரிக்கிறீங்க

                    ஏன்னா முதலாளிகளை உருவாக்கும் அண்ணாச்சி கடைன்னு சொன்ன பிற்பாடு அம்பல படுவதற்கு ஏதுமில்லை

                    • ரிலையன்சு வால்மார்டுக்கு போட்டியா இருந்தா என்ன இல்லேன்னா என்ன அதுக்கும் ஒரு பங்குச் சந்தை சூதாடியின் கருத்தை நீங்க வழிமொழிவதர்கும் என்ன தொடர்பு?

                      கொக்கோ கோலோவுக்கு கூடத்தான் தம்ஸ் அப்- லிம்கா வெல்லாம் போட்டியா இருந்திச்சு, அப்புறம் அந்த கம்பெனியை அவனே வாங்கிட்டான்.. உங்களுக்கு லிம்கா கம்பெனி காரன் பத்துன கவலை, எங்களுக்கு கோக்-பெப்சியினால அழிந்து போன உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை பற்றிய அக்கறை.

                      மற்றபடி வால்மார்ட் எப்படி ”தொழில்” செய்கிறது என்பதை இணையத்தில் தேடிப்பார்த்து தெரிந்து கொள்ளவும், அல்லது கட்டுரையை முழுக்க வாசிக்கவும்..

                  • மேலும் இந்திய முதலாளிகளில் நேசசக்தி என அழைக்கும் நீங்க எந்தமாதிரி கம்பெனியெல்லாம் நேசசக்தி எதெல்லாம் எதிரி சக்தின்னு சொல்லிட்டீங்கன்னா விளங்கி கொள்ள ஏதுவாக இருக்கும்

                    ஏன்னா ருசி ஊறுகாய் காரன் வெளிநாட்டில் இடங்களை வளைத்து போடுவதும் இந்தியாவில் பல கம்பெனிகள் அந்நிய நாட்டில் சுரண்டுவதும் நடப்பதை பற்றிய தங்களின் மேலான கருத்து என்ன

                    • வால்மார்ட் அல்லது கேரி போர் எந்த கம்பெனியாக இருந்தாலும் இன்னொரு பெரிய நிறுவனத்துடன் மோதாமல் தனது சந்தையை கைபற்ற முடியாது அந்த உண்மைதான் இந்தியாவில் வால்மார்ட்டுக்கு போட்டியாக ரிலையன்ஸ் உள்பட

                      அமெரிக்காவில் வால்மார்ட்டுக்கு போட்டி :

                      கேமார்ட் ,டார்கெட் , கனெடியன் சூப்பர் ஸ்டோர் போன்றவையே சில சின்ன கடைகள் டாலர் ஸ்டொர்ஸ் எனப்படுபவை வால்மார்ட்டை வெற்றி கரமாக தோற்கடித்துள்ளன சுட்டி

                      //In North America, Wal-Mart’s primary competition includes department stores like Kmart, Target, ShopKo and Meijer, Canada’s Zellers, Hart the Real Canadian Superstore and Giant Tiger, and Mexico’s Comercial Mexicana and Soriana. Competitors of Wal-Mart’s Sam’s Club division are Costco, and the smaller BJ’s Wholesale Club chain operating mainly in the eastern US. Wal-Mart’s move into the grocery business in the late 1990s also set it against major supermarket chains in both the United States and Canada. Several smaller retailers, primarily dollar stores, such as Family Dollar and Dollar General, have been able to find a small niche market and compete successfully against Wal-Mart for home consumer sales.[100] In 2004, Wal-Mart responded by testing its own dollar store concept, a subsection of some stores called “Pennies-n-Cents.”[101]//

                      ஜெர்மனியில் வால்மார்ட் தனது வாலை சுருட்டி கொண்டுள்ளது

                      //Wal-Mart also had to face fierce competition in some foreign markets. For example, in Germany it had captured just 2% of German food market following its entry into the market in 1997 and remained “a secondary player” behind Aldi with a 19% share.[102] In July 2006, Wal-Mart announced its withdrawal from Germany. Its stores were sold to German company Metro.[80] Wal-Mart continues to do well in the UK, and its Asda subsidiary is the second largest chain after Tesco.[103]//

                      ஆக வால்மார்ட் வந்தால் இட்லி கடைக்காரன் அழிந்துவிடுவான் ர்லையன்ஸ்சுக்கும் வால்மார்ட்டுக்கும் சம்பந்தமில்லை போட்டி இல்லை என்ற பொய்யை வாபஸ் வாங்கவும்

                    • அண்ணாச்சி என்றாலே அது சரவணா ஸ்டோர்ஸ் என்று உளருவதை,
                      பெட்டிகடை முதலாளியும் ரிலையன்சு முதலாளியும் ஒன்று என்று உளருவதை..
                      குண்டூசி தயாரிச்சாலும் தொழிலதிபர் – டொகோமோ கம்பெனி ஓனரும் தொழிலதிபர் என்று உளருவதை…

                      நீங்கள் நிறுத்திக்கொண்டு ‘சிந்தித்தால்’ இதற்கான விடையை நீங்களே தெரிந்து கொள்ளலாம்

                    • சரியான விவரம் தியாகு, இப்போதாவது உழைத்து கண்டுபிடித்திருக்கிறீர்களே, பாராட்டுக்கள், ஆனால் சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்டீர்கள்.

                      உங்கள் விவரத்திலிருந்தே தெரிவது

                      மொத்தம் 5 கம்பெனிகள்தான் அமெரிக்காவில் கோலோச்சுகின்றன
                      வால்மார்ட் அமெரிக்காவில் மளிகைகடை-பெட்டிகடை கூட வைத்து நடத்துகிறது
                      வால்மார்ட்டை விட விலை குறைக்க முடியாமல் பலர் கடைகளை மூடினர், சிலர் டாலர் ஸ்டோர் என (எதை யெடுத்தாலும் ஒரு டாலர் போல) பெட்டிகடை வைத்தனர், வால்மார்ட் அதிலும் நுழைந்தது

                      ஜெர்மனியில் ஏற்கனவோ உள்ளூர் மளிகை கடைகளை அழித்து சில்லறை விற்பனையில் ஏகபோகம் அனுபவிக்கும் கம்பெனியை வால்மார்ட்டால் வீழ்த்த முடியவில்லை

                      லண்டனில் வால்மார்ட்டின் பினாமி கம்பெனி நம்பர் டூவாக இருக்கிறது
                      ————————–

                      சரி…..

                      இப்படி சில கோடி குடும்பங்கள் உழைத்துப் பிழைக்கும் இந்திய சில்லறை விற்பனை சந்தையை விரல் விட்டு எண்ணக்கூடிய சில பண்ணாட்டு கம்பெனிகளின் கையில் ஒப்படைக்க நீங்கள் மாமா வேலை பார்ப்பது ஏன் என்பதுதான் இங்கே கேள்வியே

                    • ஏம்பா ரெண்டு பெரும் இப்படி சண்டை போடுறிங்க ஒருவர் வால்மார்டை கொண்டு வருவதில் குறியாக இருக்கிறார். இன்னொருவர் அண்ணாச்சிக்கு லாபம் குறையக்கூடாது என்று போராடுகிறார். ரெண்டு பேருமே முதலாளிகள் தான் ஒன்னு பெருசு இன்னொன்னு சிறுசு. இதில் எவன் வாழ்ந்தா நமக்கு என்ன நமக்கு நல்ல பொருளை எவன் கொடுக்கிறானோ அவன் கடையில வாங்கி கொள்வோம். விடுங்க சார்

    • உனக்கு எத்தனை முறை டவுசரை கழட்டி ஒட விட்டாலும் எப்படி தியாகு இவ்வளவு தெகிரியம் வருது ?

      கழிவறையில் எழுதி வைக்க வேண்டிய உன்னுடைய லூசுத்தனமான உளறல்கள் எல்லாம் ஒரு கம்யூனிஸ்ட் புரட்சியை நடத்துவதற்கு உதவும் என்கிற அளவுக்கு உன்னைப்பற்றி நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய் என்றால் நீ எவ்வளவு பெரிய மறை கழண்ட பேர்வழியாக இருப்பாய்.

      பேசாம அங்கேயே எழுதி காலத்தை ஓட்ட வேண்டியது தானே இங்க வந்து எதுக்கு அடி படுற ?

      • அலோ மிஸ்டர் அம்பேத் ,

        போய் பெரியவங்க யாராவது இருந்தா கூட்டிட்டு வா இல்லா விட்டால் உன்னோட டவுசர் கழர போவத் உறுதி

  9. அழகற்ற அண்ணாச்சி கடை கூட அழகாக மாறிவிட்டது.
    வால் மார்ட் வரும்போது அழகாக வரும்.

    வேறு ஏதும் வித்தியாசம் இருக்காது.

    ரிலையன்ஸ் பிரஷ், ஆதித்ய பிர்லாவின் மோர், சந்திரபாபுவின் Heritage கடைகளின் தொழிலாளிக்கு சம்பளம் எவ்வளவு என்று கேட்டு வந்து விமர்சனம் எழுதுங்கள். அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் அப்படியே எழுதுங்கள்.

    மற்ற கதையை பிறகு பேசுவோம்.

  10. ஆண்டு 1993.

    அன்று இடதுசாரிகள் சொன்னார்கள் – மெக்டொனால்ட்ஸும், பிட்ஸா ஹட்டும் வந்து ஆப்பக்கடை ஆயாவை விரட்டப்போகிறது என்று! அப்படி நடந்ததா என்ன?

    ஆண்டு 2005.

    டெல்லி ஜன்பத்தில் சரவண பவனும் மெக்டொனால்ட்ஸும் அடுத்தடுத்து இருந்தன. (இப்போதும் அப்படியா என்று தெரியவில்லை) மெக்டொனால்ட்ஸ் காற்றுவாங்கும். சரவண பவனிலோ காத்துக்கிடந்துதான் சீட் பிடிக்க முடியும்! இத்தனைக்கும் அப்பவே ஒரு தோசை ரூ.40 க்கு விற்றார்கள் – அநியாய விலை. அப்படி இருந்தும் கூட்டம் மொய்த்தது.

    அதுபோல, எஃப்.டி.ஐ. யை வரிந்துகட்டிக்கொண்டு ஆதரிக்கும் அனைவரும், நான் உட்பட லோக்கல் கடைகளில்தான் பெரும்பான்மையான பர்ச்சேஸ் செய்கிறோம், செய்வோம். அவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள். அரிசி வாங்கிவிட்டு, அதில் ஒருநாள் சமையலுக்கு எடுத்துவிட்டு, ‘அரிசி சரியில்லப்பா, எடுத்துக்கிட்டு மாத்திக்கொடு’ என்று சொல்ல்லாம்! எடைபோட்டு எடுத்துக்கொண்டு மாற்றித்தருவார்கள்! பணம் வசதிப்பட்டபோது தரலாம். டெலிவரி செய்யும் பையனின் கனவு தான் ஒருநாள் சொந்தமாக மளிகைக்கடை வைக்கவேண்டும் என்பது. (அப்பதான் அவர்கள் சாதியில் பெண் தருவார்களாம்!)

    அந்தப்பையன் ஒருநாள் கடைவைத்து வால்மார்ட்டைத் தடுமாற வைப்பான் என்பது உறுதி. வால்மார்ட்டால் கஸ்டமருடன் இத்தனை நெருங்கிவந்து பெர்சனலைஸ்டு சேவை தர முடியாது.

    அப்புறம் ஏன் நான் சூப்பர்மார்க்கட் (ரிலையன்ஸ்) செல்கிறேன்? அண்ணாச்சி கடையில் டீத்துள் வாங்கலாம், ஆனால் டீ பேக்ஸ் கிடைப்பதில்லை; மிக்ஸட் ஃபுரூட் ஜாம் கிடைக்கும், ஆரஞ்ச் மார்மலேடு கிடைப்பதில்லை; பிரட் கிடைக்கும், கார்ன் ஃபிளேக்ஸ் (சாக்கோஸ் தவிர) கிடைப்பதில்லை. இம்மாதிரி சில ஸ்பெஷலைஸ்டு பொருட்களுக்காக மட்டுமே ரிலையன்ஸ் ச்செல்கிறேன். வால்மார்ட் வந்தாலும் அப்படியே.

    நம் சில்லறை விற்பனையாளர்கள் அஞ்சத்தேவையில்லை. விவசாயிகளை உறிஞ்சிக் கொழுக்கும் இடைத்தரகர்களின் (கமிஷன் மண்டி ஏஜன்டுகள்) நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன. அவர்களை வால்மார்ட் விரட்டியடிக்கும்போது நம் விவசாயத்தோழர்களோடு சேர்ந்து கைதட்டி மகிழலாம்.

    • ஏம்ப்பா சரவணா…கட்டுரையை நல்லா படிச்சியா?? ஏன் கேட் கிறேன் என்றால், முதலில் வேற மாதிரி உளறியிருக்கே…எப்படி, இப்படி……”…உண்மையில் நிலப்புரபுத்துவ மதிப்பீடுகளைக் கொண்ட அண்ணாச்சி கடைகள் அழியுமென்றால் அதை உண்மையான கம்யூனிஸ்டு வரவேற்க வேண்டும்….”

      அப்புறம் எல்லோரும் சேர்ந்து தொங்கப்போடவும்…..அண்ணாச்சி கடைகளை விட்டு விட்டு இப்படி உளறியிருக்கிறாய்…..”…..நம் சில்லறை விற்பனையாளர்கள் அஞ்சத்தேவையில்லை. விவசாயிகளை உறிஞ்சிக் கொழுக்கும் இடைத்தரகர்களின் (கமிஷன் மண்டி ஏஜன்டுகள்) நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன……”

      காரணம் கேட்டால், உன் அடுத்த உளறல்……”மெக்டொனால்ட்ஸ் காற்றுவாங்கும். சரவண பவனிலோ காத்துக்கிடந்துதான் சீட் பிடிக்க முடியும்!….” மெக்டொனால்ட்ஸல் தோசையா விற்கிறார்கள்???? அங்கு பர்கர்…இங்கு இந்திய உணவு…இது தான் உன் அறிவுகெட்டிய உதாரணமா??? ஆனால் வால்மார்ட் வந்தால் 2 உணவுப் பொருள் கிடையாது…. நீயே சொன்னது போல ஒரே தேயிலை ஆனால் பேக் பண்ணிய முறை வேற…..இப்படிச் செய்து நாளடைவில் சிறு வணிகர்கள் மட்டும் அல்ல, அவர்களுக்கு சப்ளை செய்கிறவர்கள், சிறு விவசாயிகள் எல்லோரும் பாதிக்கப்பட்டு அடிமையாகி விடுவோம்…….இந்த பாதிப்புகள் எல்லாம் உங்களைப்ப் போன்று குறை கண்டுபிப்பவர்களுக்கு (……மிக்ஸட் ஃபுரூட் ஜாம் கிடைக்கும், ஆரஞ்ச் மார்மலேடு கிடைப்பதில்லை; பிரட் கிடைக்கும், கார்ன் ஃபிளேக்ஸ் (சாக்கோஸ் தவிர) கிடைப்பதில்லை……) புரியாது….

  11. Wal-Mart has serious competition from Reliance Group, Piramals, Pantaloon brigade of Central Megamarts, Big Bazaar, Tru-Mart etc. It has to survive in a already buzzing and extremly dynamic market, create its own TRUST factor and be able to focus on India’s rising middle-level population with huge disposable incomes.

    Sincerely,

    Shrinath Navghane

    Founder & CEO, SDN Financial – Investment Banking, Equity, JV Debt & Commercial Funding, Real Estate.Edit

  12. //ரிலையன்சு வால்மார்டுக்கு போட்டியா இருந்தா என்ன இல்லேன்னா என்ன அதுக்கும் ஒரு பங்குச் சந்தை சூதாடியின் கருத்தை நீங்க வழிமொழிவதர்கும் என்ன தொடர்பு?

    கொக்கோ கோலோவுக்கு கூடத்தான் தம்ஸ் அப்- லிம்கா வெல்லாம் போட்டியா இருந்திச்சு, அப்புறம் அந்த கம்பெனியை அவனே வாங்கிட்டான்.. உங்களுக்கு லிம்கா கம்பெனி காரன் பத்துன கவலை, எங்களுக்கு கோக்-பெப்சியினால அழிந்து போன உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை பற்றிய அக்கறை.

    மற்றபடி வால்மார்ட் எப்படி ”தொழில்” செய்கிறது என்பதை இணையத்தில் தேடிப்பார்த்து தெரிந்து கொள்ளவும், அல்லது கட்டுரையை முழுக்க வாசிக்கவும்..//

    பெரிய மூலதனத்தால் சிறிய மூலதனம் அழிவதை தடுப்பதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமைன்னு மார்க்ஸ் எங்கெல்ஸ் சொல்லி இருக்காங்களா அல்லது தி கிரேட் ஊசி சொன்னதுதானா ?

    • பெரிய மூலதனத்தால் சிறிய மூலதனம் அழிவதை தடுப்பதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமைன்னு மார்க்ஸ் எங்கெல்ஸ் சொல்லி இருக்காங்களா //////////

      ஏகாதிபத்தியத்தை பத்திக்கூட சொல்லாத போலி கம்யூனிஸ்டு மார்க்ஸ் என்ற உங்கள் பின்னூட்டத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்…

      புரியலயா? இது புரியல்லேன்னா அதுவும் புரியாது

  13. //எது அண்ணாச்சி கடையில் வேலை பார்க்கும் ஒருவனோ, மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் ஒருவனோ, லேத்துப்பட்டரையில் வேலை பார்க்கும் ஒருவனோ வெளியே வந்து சுயமாக தொழில் துவங்கும் இந்த சமூக யதார்தம் நடுத்தர வர்க்க சிந்தனைன்னே ஒரு பேச்சுக்கு வச்சுகுவோம் அப்ப வால்மார்ட் வந்தா அண்ணாச்சி ஒழியுவான், அது நல்லதுன்னு நீங்க எழுதறது பாசிச சிந்தனைதானே.. ஆனா நாங்க அப்படி சொல்லல, உங்களை லூசுன்னு சொல்றோம், தியாகுன்னு சொல்றோம்//

    ஹ ஹ செம ஜோக்கு ரிலையன்ஸ் ஒழிவானா இல்லையா என்பது நமக்கு முக்கியமல்ல என சொல்லிட்ட்டு ரிலையன்ஸ் உள்பட பெரிய அண்ணாச்சிகளை காப்பாற்றும் நீங்கள்

    சமூக எதார்த்தத்தை பற்றி பேசுவது வியப்புகுரிய உண்மை வால்மார்ட் வந்தாலும் வராட்டாலும் அண்ணாச்சிக்குதான் ஆப்பு ரிலையன்ஸால் அதாவது உள்நாட்டு முதலாளியால் என்பது உங்களின் பழைய கூற்று

    தனிமனித தாக்குதல்தான் உங்கள் பிரதானமான வாதம் என்பது ஆண்டுக்கு முன்பே சொன்னது

    அண்ணாச்சின்னா -சரவணா ஸ்டோரும் கண்ணன் டிபார்மெண்டும் கமிசன் மண்டிகளும் அண்ணாச்சிகள் தான் இவர்களுக்குள் வருமான் வித்தியாசமே இல்லையா

    நல்ல மார்க்சியம்யா அல்லது ரிலையன்சியம்யா நீங்க பேசுறது

    • ரிலையன்ஸ் ஒழிவானா இல்லையா என்பது நமக்கு முக்கியமல்ல என சொல்லிட்ட்டு ரிலையன்ஸ் உள்பட பெரிய அண்ணாச்சிகளை காப்பாற்றும் நீங்கள்//////////

      இப்படி சொல்லிவிட்டு….. பின்னாலேயே

      வால்மார்ட் வந்தாலும் வராட்டாலும் அண்ணாச்சிக்குதான் ஆப்பு ரிலையன்ஸால் அதாவது உள்நாட்டு முதலாளியால் என்பது உங்களின் பழைய கூற்று

      என்று உளருவதர்கு உங்களுக்கு வெட்கமாகவே இல்லயா?

      ரிலையன்சு போன்று உள்ளூர் பெரும் வணிகர்களை எதிர்க்கும் அதே நிலைப்பாட்டிலிருந்துதானே வால்மார்ட் எனும் ரிலையன்சை விட கொடிய, சென்ற இடங்களிலெல்லாம் நாசத்தை மட்டுமே விளைவித்த வால்மார்ட் எதிர்க்கப்படுகிறது.

      உள்ளூர் கொலைகாரனை விரட்ட வெளியூரிலிருந்து கொலைகாரன் வரவேண்டும் என்பது உங்களுக்கு வேண்டுமானால் சிந்தனையாக தெரியலாம்.. ஆனால் அது பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று என அனைவராலும் காறி உமிழத்தான் படும். துடைச்சிகிடுங்க

  14. //அண்ணாச்சி என்றாலே அது சரவணா ஸ்டோர்ஸ் என்று உளருவதை,
    பெட்டிகடை முதலாளியும் ரிலையன்சு முதலாளியும் ஒன்று என்று உளருவதை..
    குண்டூசி தயாரிச்சாலும் தொழிலதிபர் – டொகோமோ கம்பெனி ஓனரும் தொழிலதிபர் என்று உளருவதை…
    //

    நீங்களும் அண்ணாச்சின்னா இட்லி கடை நடத்தும் அண்ணாச்சி மட்டும்னு உளறுவதை நிறுத்தவும்

    • வேற எப்படி தியாகு, தமிழ்நாட்டில் சரவணா ஸ்டோர்ஸ் போன்று ஒரு நகரத்துக்கு பத்து தேறுமா? எது பெரும்பான்மை. யாரையும் பணிக்கு அமர்த்தாமல் குடும்பத்தோடு உழைக்கும் வணிகர்கள்தான் பெரும்பான்மை என்று ஊருக்கே தெரியும். விதிவிலக்காக கீழ்பாக்கத்த மன நல காப்பகத்தில் இருக்கும் நோயாளிகளுக்கும், உங்களுக்கும் தெரியவில்லை

  15. //ஜெர்மனியில் ஏற்கனவோ உள்ளூர் மளிகை கடைகளை அழித்து சில்லறை விற்பனையில் ஏகபோகம் அனுபவிக்கும் கம்பெனியை வால்மார்ட்டால் வீழ்த்த முடியவில்லை//

    ரிலையன்ஸுக்கும் வால்மார்ட்டுக்கும் போட்டி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்னவென நீங்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது இந்த வரிகளை பார்க்கையில்

    • ஏன் அதே பதிலில் நீங்கள் சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்டது நினைவுக்கு வரவில்லையா?

      இதில் ரிலையன்சு x வால்மார்ட் என்ற சொத்தை வாதத்தை உங்களைத்தவிர வேறு யாரும் பேசவில்லை. ரிலையன்சு வால்மார்ட்டால் அழியலாம், வால்மார்ட் ரிலையன்சின் பங்குகளை வாங்கலாம். அல்லது இரண்டு பேரும் கூட்டாக தொழில் செய்யலாம். இரண்டு முதலாளிகளில் ஒருவருக்கு வால்பிடிக்க நீங்கள் தயாராக இருக்கலாம். ஆனால் இரண்டு பேரையும் ஒழிக்க வேண்டும் என்று பேசும் இவ்விடத்தில் அந்த வால் ஒட்ட நறுக்கப்படும்…

  16. //இப்படி சில கோடி குடும்பங்கள் உழைத்துப் பிழைக்கும் இந்திய சில்லறை விற்பனை சந்தையை விரல் விட்டு எண்ணக்கூடிய சில பண்ணாட்டு கம்பெனிகளின் கையில் ஒப்படைக்க நீங்கள் மாமா வேலை பார்ப்பது ஏன் என்பதுதான் இங்கே கேள்வியே//

    நீங்கள் உள்ளூர் ரிலையன்ஸ் மற்றும் இதர பெரிய கம்பெனிகளுக்கு மாமா வேலையும் விவசாய தொழிலாளர்களுக்கு துரோகம் செய்வதையும் தோலுரிக்கவே நமது பிரதான வேலை திட்டம் அமைகிறது

    • வால்மார்ட்டை எதிர்த்தால் ரிலையன்சுக்கு ஆதரவு என்கிற உன் ஈரவெங்காயத்தை மாசக்கணக்காக உரித்தாலும் செல்ப் எடுக்கவில்லை அப்பனே, வேறு எதாவது பெட்டராக டிரை செய்யவும்.

      நான் தெளிவாக சொல்லவிட்டேன், ரிலையன்சு – வால்மார்ட் போன்ற எந்த நிறுவனமானாலும் எதிக்கிறேன்…

      இதே பதிவிலிருந்து
      &&&&&&&& ரிலையன்ஸ், ஐ.டி.சி போன்றவை மெல்லக் கொல்லும் ஆர்செனிக் என்றால் வால்மார்ட் உடனே வேலையைக் காட்டும் சயனைட்.&&&&

      இப்போ உங்கள் பதில் எங்கே, எதர்காக கோடிக்கணக்கான சில்லறை வியாபாரிகளை ஒழிக்க வரும் வால்மார்டுக்கு சொம்பு?

  17. அடிப்படையான சில கேள்விகளை எழுப்பி இருந்தேன் அதற்கு உங்கள் தர்க்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது திருவாளர் ஊசி

    1.இந்தியாவில் வாங்கும் சக்தி கொண்ட மக்கள் 20 சதமானம் மட்டுமே என சொல்லி இருந்தேன் அதற்கு பதிலாக நேர்மையாக இந்தியாவில் வாங்கும் சக்தி கொண்ட மக்கள் எத்தனை சதவீதம் என நீங்கள் சொல்லவில்லை

    2. ஒருவேளை இந்தியாவில் வாங்கும் சக்தி கொண்ட மக்கள் 80 சதவீதம் இருக்கிறார்களோ (உங்க கருத்துபடி)

    அதாவது தினகூலி வாங்கிட்டு போய் வால்மார்டில் பொருள் வாங்கி அன்றைய தினத்தை ஓட்டும் மக்கள் அதிகம் என சொல்கிறீர்களோ

    இந்த தினக்கூலி வாங்குபவர்கள் எல்லாம் வாங்கும் சக்தி கொண்ட மக்களோ?

    (இப்படி சொல்லிட்டீங்கன்ன நீங்க சொல்ற புதியஜனநாயக புரட்சி தேவைப்படாது அல்லவா? )

    3.வால்மாட்டின் தாரக மந்திரமே குறைந்தவிலைதான் என்றால் அது அவனது போட்டியாளனைவிட குறைந்தவிலையே தவிர நெம்ப குறைந்தவிலையெல்லாம் இல்லை அதாவது இட்லியை நமது பக்கத்து வீட்டு ஆயா 3 ரூபாய்க்கு தந்தால் வால்மார்ட் வந்து 2.5 ரூபாய்க்கு தராது மாறாக சரவணபவன் 10 ரூபாய்க்கு தரும் இட்லியுடன் வால்மார்ட் போட்டி போடும்னு சொல்றேன் மண்டையில் களிமந்தவிர வேறு ஏதும் இருந்தால் புரியும்

    4.ஒரு வியாபாரம் என்பது சந்தையின் வாங்கு சக்தியை நோக்கித்தான் என்பதை மறுத்தால் அதை ஆதாரத்துடன் நிரூபிக்கவும்

  18. பொய் நம்பர் 1

    @@அடிப்படையான சில கேள்விகளை எழுப்பி இருந்தேன் @@

    நீங்கள் முன்பு கேள்வியெதுவும் எழுப்பவில்லை அப்பனே,%%%வால் மார்ட் வருகிறதென்றால் அது என்னை போன்ற வாங்கு சக்தி அற்ற பெரும்பான்மை மக்களை குறிவைத்து வரவில்லை வாங்கும் சக்தி கொண்ட இந்தியாவின் 20 சதவீதம் மக்களையே குறிவைக்கிறது%%%%

    என்று தியாகுத்தனமாக எழுதினீர்கள் அவ்வளவே.

    இப்போது சில கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள்….

    $$$$$$$$$$$1.இந்தியாவில் வாங்கும் சக்தி கொண்ட மக்கள் 20 சதமானம் மட்டுமே என சொல்லி இருந்தேன் அதற்கு பதிலாக நேர்மையாக இந்தியாவில் வாங்கும் சக்தி கொண்ட மக்கள் எத்தனை சதவீதம் என நீங்கள் சொல்லவில்லை$$$$$$$$$

    தியாகு, மீதம் உள்ள 80% யார், அவர்கள் ‘வாங்கு’வார்களா மாட்டார்களா? அவர்கள் வீட்டில் உப்பு மிளகாய் சக்கரைக்கு என்ன செய்கிறார்கள், இல்லை அவர்கள் எதுவுமே வாங்க வேண்டிய தேவை இல்லை பாத்திரத்தை அடுப்பில் வைத்தாலே தானாக சோறும் குழும்பும் நிரம்பி வழியும் என்கிறீர்களா?

    2)@@@@ ஒருவேளை இந்தியாவில் வாங்கும் சக்தி கொண்ட மக்கள் 80 சதவீதம் இருக்கிறார்களோ (உங்க கருத்துபடி)அதாவது தினகூலி வாங்கிட்டு போய் வால்மார்டில் பொருள் வாங்கி அன்றைய தினத்தை ஓட்டும் மக்கள் அதிகம் என சொல்கிறீர்களோ
    @@@@@@

    பொய் நம்பர் – 2
    இப்படி எதுவும் நான் சொல்லவில்லை. மாறாக வால்மார்ட் என்பது மேட்டுக்குடியினருக்கான கடை அல்ல. அது நடுத்தரவர்க்கத்தையும் அதற்கு கீழேயும் உள்ளவர்களை குறிவைத்துதான் வந்திருக்கிறது என்றேன்

    @@@@@@@@@ஒரு வியாபாரம் என்பது சந்தையின் வாங்கு சக்தியை நோக்கித்தான் என்பதை மறுத்தால் அதை ஆதாரத்துடன் நிரூபிக்கவும்@@@@@@@@@

    ஐய்யோ, மனுசனுக்கு ரெண்டு காலுன்னு சொல்லிட்டு அதை மறுக்க சொன்னால் நியாயமா, நான் பாவம் இல்லயா..

    அட மரமண்டை தியாகு, முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படை முரண்பட்டை போய் உங்க ‘இயக்கத்து’ தோழர்களிடத்தில் பாடம் படிக்கவும்.

    @@@@@@@@@@3.வால்மாட்டின் தாரக மந்திரமே குறைந்தவிலைதான் என்றால் அது அவனது போட்டியாளனைவிட குறைந்தவிலையே தவிர நெம்ப குறைந்தவிலையெல்லாம் இல்லை அதாவது இட்லியை நமது பக்கத்து வீட்டு ஆயா 3 ரூபாய்க்கு தந்தால் வால்மார்ட் வந்து 2.5 ரூபாய்க்கு தராது மாறாக சரவணபவன் 10 ரூபாய்க்கு தரும் இட்லியுடன் வால்மார்ட் போட்டி போடும்னு சொல்றேன் மண்டையில் களிமந்தவிர வேறு ஏதும் இருந்தால் புரியும்@@@@@@@@@@

    வணிகம் என்றாலே உற்பத்தியையும் நுகர்வையும் இணைப்பதுதான். உற்பத்தையை யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களிடம் வணிகமும் சரண்டையும். வால்மார்ட் போன்ற பெரு நிறுவனங்களின் செயற்திட்டமே தனது பிரம்மாண்ட மூதலனம் மூலமாக உற்பத்தியை கட்டுக்குள் கொண்டு வருவதுதான். அவர்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தியபின் முருகன் ஸ்டோர்சுக்கு விக்க என்ன இருக்கும்.. ஒன்னும் இருக்காது என்பதுதான் எதார்த்தம். இல்லையென்றால் 40 வருடத்துக்குள் அமெரிக்க வணிக சந்தை விரல்விட்டு எண்ணக்கூடிய இது போன்ற பிரம்மாண்ட நிறுவனங்களின் கையில் சென்றிருக்குமா. அமெரிக்காவுக்கு 40 வருடமென்றால் இந்தியாவுக்கு 20 போதும் என்பதைத்தான் கோக்-பெப்சி உதாரணங்கள் நமக்கு விளக்குகின்றன

    இப்படி இந்த பகாசுர நிறுவனங்களை அம்பலப்படுத்தி ஆதராத்துடன் இணையம் முழுக்க பலர் எழுதியிருக்கிறார்க்ள், இந்த கட்டுரைகளும் அதை எளிய முறையில் விளக்கியிருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு விவாதத்துக்கு வரும் முன் வால்மார்ட் தொடர்பான 3 கட்டுரைகளையாவது படித்திருக்க வேண்டும் ஆனால் எவ்வளவு படிச்சாலும் ஏறாத மண்டையையும், வினவிடம் செருப்படி வாங்கியதால் அது என்ன எழுதினாலும் எதிர்த்தே தீரவேண்டும் என்ற பகை வெறியும் கொண்ட நீங்கள் என்னதான் செய்யமுடியும் பாவம்.

    இதுக்கு மேல நீங்க பதில் எழுதினாலும் உங்களுக்கு பதில் எழுதுவது வீண், கட்டுரையில் எழுதப்பட்டவைகளை நீங்களோ அல்லது உங்களது புதிய தோழர்களோ (ஐயோபாவம்) மறுத்து வால்மார்ட் என்பது பாட்டாளிகளுக்கு எப்படி நல்லது. சிறு வணிகர்கள் ஒழிவது புரட்சிக்கு எப்படி நல்லது என்ற உங்கள் நிலைப்பாட்டை விளக்கி எழுதுங்களேன், அப்போ வச்சுக்கலாம் விவாதத்தை

  19. //$$$$$$$$$$$1.இந்தியாவில் வாங்கும் சக்தி கொண்ட மக்கள் 20 சதமானம் மட்டுமே என சொல்லி இருந்தேன் அதற்கு பதிலாக நேர்மையாக இந்தியாவில் வாங்கும் சக்தி கொண்ட மக்கள் எத்தனை சதவீதம் என நீங்கள் சொல்லவில்லை$$$$$$$$$

    தியாகு, மீதம் உள்ள 80% யார், அவர்கள் ‘வாங்கு’வார்களா மாட்டார்களா? அவர்கள் வீட்டில் உப்பு மிளகாய் சக்கரைக்கு என்ன செய்கிறார்கள், இல்லை அவர்கள் எதுவுமே வாங்க வேண்டிய தேவை இல்லை பாத்திரத்தை அடுப்பில் வைத்தாலே தானாக சோறும் குழும்பும் நிரம்பி வழியும் என்கிறீர்களா?//

    இதான் மழுப்பல் என்கிற பொய்

    வாங்கு சக்தி கொண்ட மக்களின் சதவீதம் 20 என்றால் வாங்கும் சக்தி யற்ற மக்களின் சதவீதம் 80 அது சரியா இல்லையான்னு சொல்லாம அவங்க வீட்டில சட்டி இருக்கா இல்லையா என்கிற ஆராய்ச்சியை செய்யும் மேன்மை தங்கிய திருவாளர் ஊசி தனது அப்பட்டமான நழுவலை செய்கிறார் என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்

    2)@@@@ ஒருவேளை இந்தியாவில் வாங்கும் சக்தி கொண்ட மக்கள் 80 சதவீதம் இருக்கிறார்களோ (உங்க கருத்துபடி)அதாவது தினகூலி வாங்கிட்டு போய் வால்மார்டில் பொருள் வாங்கி அன்றைய தினத்தை ஓட்டும் மக்கள் அதிகம் என சொல்கிறீர்களோ
    @@@@@@

    பொய் நம்பர் – 2
    இப்படி எதுவும் நான் சொல்லவில்லை. மாறாக வால்மார்ட் என்பது மேட்டுக்குடியினருக்கான கடை அல்ல. அது நடுத்தரவர்க்கத்தையும் அதற்கு கீழேயும் உள்ளவர்களை குறிவைத்துதான் வந்திருக்கிறது என்றேன்//

    அதாவது உங்க பாயிண்டுபடி இப்படித்தான் வருகிறது என சொன்னேன் (நான் சொன்னது பொய் இல்லை )
    வால்மார்ட் மேட்டு குடிக்கான கடை இல்லையா அப்போ அன்றாடம் காய்ச்சிகள் பாவப்பட்ட நடுத்த்ர வர்க்கம் அதாவது மாசமான 3 நோட்டை எடுத்துட்டு போய் கேஸ் அண்டு கேரி செய்ய முடியாத நடுத்த்ர வர்க்கத்தின் கடை என்றால் எப்படி

    விலைவாசி உயர்வால் சம்பளம் உயராத நடுத்தரவர்க்கத்தின் செல்போன் வாங்குவதை வாங்கும் சக்தி உயர்ந்ததா சொல்லும் பொய்யை விளக்கும் வினவு கட்டுரை

    வாங்கும் சக்தியற்ற ஏழைகள் நாட்டு பட்டியலில் இருக்கிறது இந்தியா என சொல்லும் வினவு கட்டுரை

    https://www.vinavu.com/2011/01/31/cell-hone-inflation/

    • அண்ணே,
      நம்ம இந்திய அரசு நம்மள பாடாபடுத்துது. அதியமான் சொல்ற மாதிரி கனடா அரசியல்காரவு கிட்ட ஆட்சிய ஒப்படைச்சிரலாமா?

  20. 9.2.1.1.1.1.2.1.2 வது கமெண்டா நான் போட்ட கமெண்டு இருக்கும் போது நான் கேள்வி எதையும் கேட்கவில்லை என நீங்கள் சொல்வது மாபெரும் பொய்

    மேலும் இந்திய முதலாளிகளில் நேசசக்தி என அழைக்கும் நீங்க எந்தமாதிரி கம்பெனியெல்லாம் நேசசக்தி எதெல்லாம் எதிரி சக்தின்னு சொல்லிட்டீங்கன்னா விளங்கி கொள்ள ஏதுவாக இருக்கும்

    ஏன்னா ருசி ஊறுகாய் காரன் வெளிநாட்டில் இடங்களை வளைத்து போடுவதும் இந்தியாவில் பல கம்பெனிகள் அந்நிய நாட்டில் சுரண்டுவதும் நடப்பதை பற்றிய தங்களின் மேலான கருத்து என்ன

    • தியாகு சார்,

      வளவளன்னு எழுதாம எங்களுக்கெல்லாம் புரியற மாதிரி எழுதுங்க. வால்மார்ட் வருவத நீங்க ஆதரிக்கிறீங்களா? வால்மார்ட் வந்தால் யாருக்கெல்லாம் நன்மைன்னு சொல்லுறீங்க?

  21. //Wal-Mart wields its power for just one purpose: to bring the lowest possible prices to its customers. At Wal-Mart, that goal is never reached. The retailer has a clear policy for suppliers: On basic products that don’t change, the price Wal-Mart will pay, and will charge shoppers, must drop year after year. But what almost no one outside the world of Wal-Mart and its 21,000 suppliers knows is the high cost of those low prices. Wal-Mart has the power to squeeze profit-killing concessions from vendors. To survive in the face of its pricing demands, makers of everything from bras to bicycles to blue jeans have had to lay off employees and close U.S. plants in favor of outsourcing products from overseas.//

    வால்மார்ட் குறைந்த விலைக்கு விற்று தனது வாடிக்கை யாளர்களை தக்க வைக்கிறான் என்றால் இரண்டில் ஒன்று நடக்கவேண்டும்

    1.விவசாயிகளிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி சந்தை மதிப்பை விட குறைந்த விலைக்கு மக்களுக்கு கொடுக்க வேண்டும்
    (இப்படி செய்தால் தான் மற்ற போட்டி கம்பெனிகளை விட விவசாயி வால்மார்ட் கிட்ட பொருளை விற்பான்)
    2.அல்லது விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி சந்தை மதிப்பை விட குறைந்த விலைக்கு விற்கனும்
    (இது சாத்தியம் இல்லை ஏனெனில் வால்மார்ட்டின் போட்டியாளன் அதிக விலை கொடுக்கும் போது விவசாயி வால்மார்ட்டிடம் எப்படி பொருளை விற்பான் )

    ஆக போட்டி என்பது வாங்கும் இடத்திலும் விற்கும் இடத்திலும் நிகழும் போது வால்மார்ட் என்னதான் சூரப்புலியாக இருந்தாலும் அதிக விலை கொடுத்து வாங்கி குறைந்த விலைக்கு விற்க முடியும் என்று குறைந்த நாட்களுக்கே செய்தாலும்

    இரண்டு விசயங்கள் சாத்தியம்

    1. தனது லாபத்தில் குறைந்த அளவை அவன் குறைத்து கொள்ள வேண்டும் (இதனால் விவசாயிக்கும் லாபம் வாங்குபவருக்கும் லாபம்)

    2.அல்லது நஸ்டத்துக்கு அவன் வியாபாரம் செய்ய வேண்டும் மேற்கண்ட இருவருக்கும் லாபம்

    மேற்கண்ட எந்த சாத்தியபாட்டையும் பற்றி பேசாமல்
    வால் மார்ட் வந்தால் சின்ன சின்ன ஆயாகடைகள் அழிந்துவிடும் என மந்திரம் போல திருப்பி திருப்பி சொல்வது கோயபல்ஸ் பிரசாரம்

    அப்படி வால் மார்ட் வந்து இந்தியாவின் இடைத்தரகர்கள் அழிகிறார்கள் என்றால்

    1.அவர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி மக்களிடம் அதிக விலைக்கு தற்போது வித்து வர வேண்டும்

    2.அல்லது அவர்கள் ஏற்கனவே நட்டத்தில் வித்து வந்திருக்க வேண்டும் (இது சாத்தியமில்லை ஏனெனில் விவசாயிகள் நாளுக்கு நாள் கீழே போகிறார்கள் வியாபாரிகள் மேலே முன்னேறுகிறார்கள் விவசாயிகள் தற்கொலை நியூஸ் வருது வியாபாரி தற்கொலைன்னு நீயுஸ் வரலை முதலாமவரல்ல இரண்டாமவரே இப்போது உங்கள் நட்பு சக்தி )

    முன்னது நிகழ்ந்து வருகிறது ஆனால் அவன் இந்தியாவின் சொந்த முதலாளி என்றால்

    தேசிய முதலாளிகள் எல்லாம் யார் என்கிற லிஸ்டையும் அவர்கள் எல்லாம் நட்பு சக்திகள் புரட்சிக்கு உதவ போகிறார்கள் என்கிற உறுதியையும் தரும்போது
    இன்னும் இருக்கிறது விவாதம்

    இந்தியாவின் தேசிய முதலாளிகள் அந்நிய நாட்டில் சுரண்டுவதை பற்றி தங்களின் மேலான அபிப்பிராயம் என்ன

  22. //போட்டி என்பது வாங்கும் இடத்திலும் விற்கும் இடத்திலும் நிகழும் போது வால்மார்ட் என்னதான் சூரப்புலியாக இருந்தாலும் அதிக விலை கொடுத்து வாங்கி குறைந்த விலைக்கு விற்க முடியும் என்று குறைந்த நாட்களுக்கே செய்தாலும் //

    லூசுத்தனம் என்பது இது தான்.

    வால்மார்ட் ஒரு நாடு என்று கொண்டால், அதன் மொத்த மதிப்பும் சேர்ந்தால் அது உலகின் 21வது பணக்கார நாடு. அதன் ஒரு அலகில் ஏற்படும் நட்டத்தை (சந்தையை இறுதியில் கைப்பற்ற முடியும் எனும் உத்திரவாதம் இருந்தால்) சில பத்தாண்டுகளுக்குக் கூட தாங்கிக் கொள்ள முடியும். இது தான் பிற நாடுகளில் வால்மார்ட்டின் மூலம் கிடைத்துள்ள அனுபவம்.

    ஜெர்மனியில் வால்மார்ட் வெல்ல முடியவில்லை என்பதற்கு அந்நாட்டின் காப்புப் பொருளாதாரக் கொள்கைகளும் அதன் வலுவான தொழிலாளர் நலச்சட்டங்களும் காரணங்கள். இந்தியா ஒரு திறந்த மடம். என்ரானில் இருந்து டவ் கெமிக்கல்ஸ் வரை இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. இப்போது அணு விபத்து இழப்பீடு குறித்து மாற்றப்பட்ட சட்டங்கள் சமீபத்திய உதாரணம். மேலும், சி.பொ.மண்டலங்களில் சங்கம் கிடையாது, பிற தேசங்கடந்த தொழிற்கழங்களின் உற்பத்தி அலகுகளில் சங்கம் கிடையாது, ஐ.டி துறையில் சங்கம் கிடையாது – பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன்காக்க இந்தியத் தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.ஜெர்மனோடு இந்தியாவை ஒப்பிடுவது லூசுத்தனம் (அ) தியாகுத்தனம்.

    வால்மார்ட்டின் நுழைவினால் ஏற்படக்கூடிய அழிவின் தாக்கத்தை லத்தீன் அமெரிக்க நாடுகள், பிற ஆசிய நாடுகளில் இருந்தும் ஏன் அமெரிக்காவில் இருந்தும் கிடைக்கும் தரவுகளில் இருந்தே உறுதி செய்து கொள்ள முடியும். அப்ப அங்கேயெல்லாம் சங்கமில்லையா என்று சொம்பு தூக்கிக் கொண்டு வராதீர்கள் ப்ளீஸ்… கூகிளில் தேடுங்கள். குறைந்தபட்ச உழைப்பைச் செலுத்தி படித்துப்பாருங்கள். Please dont eat our brain.

    கார்ப்பரேட் நுறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் நுழைவது என்பது உற்பத்தி – வினியோகம் – நுகர்வு என்கிற சங்கியிலியில் வினியோகத்தைக் கைப்பற்றுவதன் மூலம் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதும் -பின்- நுகர்வைத் தீர்மானிப்பதும் தான் – வால்மார்ட் பற்றி உலகெங்கும் உள்ள இடதுசாரிகள் சொல்வதும் – ஏன், லிபரல் லெஃட்டுகள் சொல்வதும் கூட இது தான். “இடது” போல் நடிக்கும் தியாகுவின் அண்டடாயர் அவிழும் இடமும் இது தான். பிற நாடுகளின் அனுபவம் என்னவென்று சொம்பைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் ப்ளீஸ்… கூகிளில் தேடுங்கள். குறைந்தபட்ச உழைப்பைச் செலுத்தி படித்துப்பாருங்கள். Please dont eat our brain.

    மளிகைக்கடைக்காரர் சிறிய “முதலாளி” என்றால் பானிபூரி கடைக்காரரும் சிறிய முதலாளி தானே? மளிகைக்கடைக்காரர் அழிந்து ஒழிய வேண்டும் என்கிற உங்கள் இந்த அளவு கோலை அனைவருக்கும் பொருத்திப் பார்த்தால், ஊரில் ஒருவரும் மிஞ்ச முடியாது.

    தியாகு, உங்கள் நிலையைப் பார்க்க அசிங்கமாக இருக்கிறது. நாகர்கோயிலில் நடக்கும் மார்க்சிய வகுப்புகளில் வால்மார்ட்டுக்கும் ஆதரவாக வர்த்தகச் சூதாடிகளின் வாதங்களையும், முதலாளித்துவ ஆய்வுகளையும் துணைக்கழைக்கத் தானா சொல்லிக் கொடுக்கிறார்கள்? சுசியில் இருந்து ஓடி வந்தவர்களின் தத்துவம் இது தானென்றால் அது நாசமத்துப் போகட்டும். உங்கள் சொந்தக் கண்டுபிடிப்பென்றால் போய்த் தொலையுங்கள் என்று மன்னித்து விட்டு விடலாம். மனநிலைபிறழ்ந்தவர்களை துன்புறுத்துவது பொலிட்டிக்கலி இன்கரெக்ட் என்பது என் கருத்து. உங்கள் சுற்றத்தாருக்காக வருந்துகிறேன் 🙁 ( ப்ளீஸ்.. இதை கூகிளில் தேட வேண்டாம்)

    நீங்கள் ஏன் நற்றினையில் வரும் பொதுவுடைமைச் சிந்தனைகள் குறித்த உங்கள் ‘ஆய்’வைத் தொடரக்கூடாது? இங்கே வந்து தான் தக்காளி சாஸ் வாங்கிச் செல்ல வேண்டுமா? நற்றினையையும் கூகிளில் தேடாதீர்கள். பழைய புத்தகக் கடையில் தேடிப்பாருங்கள்.

    நீங்கள் இன்னும் தொடர விரும்பினால் ஊசியால் குத்துப்படுவதை யாரால் தடுக்க முடியும்?

    நண்பர் ஊசி அவர்களே, ஸ்டார்ட் மியூசிக்.

    • மன்னாரு, செவிடன் காதிலே கூட சங்கூதலாம்.. செத்துப்போன பிணத்தின் காதில் நாயணத்தையே வைத்து பிப்பிப்பீபீபீபீபீ என்று தம் கட்டி ஊதினாலும் நயா பைசாவுக்கு பயனில்லை. ஆகையாலே, தியாகு ஒரு பிணமா இல்லை வெறும் செவிடுதானா என்பதை கண்டுபிடிப்பதற்காக அவரிடம்

      ^^^6

      …… எவ்வளவு படிச்சாலும் ஏறாத மண்டையையும், வினவிடம் செருப்படி வாங்கியதால் அது என்ன எழுதினாலும் எதிர்த்தே தீரவேண்டும் என்ற பகை வெறியும் கொண்ட நீங்கள் என்னதான் செய்யமுடியும் பாவம்.

      இதுக்கு மேல நீங்க பதில் எழுதினாலும் உங்களுக்கு பதில் எழுதுவது வீண், கட்டுரையில் எழுதப்பட்டவைகளை நீங்களோ அல்லது உங்களது புதிய தோழர்களோ (ஐயோபாவம்) மறுத்து வால்மார்ட் என்பது பாட்டாளிகளுக்கு எப்படி நல்லது. சிறு வணிகர்கள் ஒழிவது புரட்சிக்கு எப்படி நல்லது என்ற உங்கள் நிலைப்பாட்டை விளக்கி எழுதுங்களேன், அப்போ வச்சுக்கலாம் விவாதத்தை^^7

      இப்படி சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம் செல்ப் எடுக்குதா இல்ல கண்ணம்மா பேட்டைக்கு ஆம்னி வேனை ரெடி பண்ண்ணுமான்னு…

    • //கார்ப்பரேட் நுறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் நுழைவது என்பது உற்பத்தி – வினியோகம் – நுகர்வு என்கிற சங்கியிலியில் வினியோகத்தைக் கைப்பற்றுவதன் மூலம் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதும் -பின்- நுகர்வைத் தீர்மானிப்பதும் தான் – வால்மார்ட் பற்றி உலகெங்கும் உள்ள இடதுசாரிகள் சொல்வதும் – ஏன், லிபரல் லெஃட்டுகள் சொல்வதும் கூட இது தான். “இடது” போல் நடிக்கும் தியாகுவின் அண்டடாயர் அவிழும் இடமும் இது தான். பிற நாடுகளின் அனுபவம் என்னவென்று சொம்பைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் ப்ளீஸ்… கூகிளில் தேடுங்கள். குறைந்தபட்ச உழைப்பைச் செலுத்தி படித்துப்பாருங்கள். Please dont eat our brain.//

      அண்ணே இதை நம்ம அண்ணாச்சியே செய்றாரே பத்திரிக்கையெல்லாம் படிக்கிறதில்லையா ஆரோக்கிய பால் கொடுக்கும் விவசாயிக்கு லோன் தர்ரான் மாடுவளர்க்க அந்த விவசாயிக்கு விதைகள் தருகிறான் மாட்டு தீவனம் வளர்க்க சோ அந்த மரபான விவசாயம் போயே போச்சு

      எல்லா முதலாளியும் இந்த வேலையை செய்யவே செய்வான் அதை நான் முதலாளித்ஹ்டுவம் என்கிறேன் நீங்கள் வால்மார்டு மட்டும்தான் செய்வான்னு மழுப்புறீங்க

      அப்புறம் டோண்டு ஈட்டு அவர் பிரைன்னுன்னு சொல்றீங்க அப்படி அதிக அளவில் இருக்கும் உங்கள் மூளையை மார்க்ஸ் சொன்ன (சிறு உடமையாளன் பத்தி சொன்ன ) விசயங்கள் எல்லாம் தப்புன்னு ) நிறுவ நீங்க முயலலாமே ஏன்னா ஊசி ஓடி போயிட்டார்

      • தியாகு,

        உங்கள் மண்டை காலி டப்பா என்பதை திரும்பத் திரும்ப நிரூபிக்கிறீர்கள். எனது பின்னூட்டத்தில் கேட்டதற்கும் நீங்கள் சொல்வதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா?

        உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வால்மார்ட்டைப் போலவே அண்ணாச்சிக்கும் உண்டு என நீங்கள் உளருவதை பி&ஜி கேட்டால் மலவாயால் சிரிப்பான். அமெரிக்காவில் பி &ஜியே வால்மார்ட்டைக் கண்டு அலறுகிறான். இங்கே அவனே அண்ணாச்சிகளுக்கு கமிஷனைக் குறைத்துக் கொண்டிருக்கிறான். யார் யாரைக் கட்டுப்படுத்துவது?

        எதற்கும் பதில் சொல்ல வக்கின்றி நசுங்கிய சொம்பைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் என்று இறைஞ்சிக் கேட்டும் பலனில்லை 🙁

        வால்மார்ட்டையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் உலகெங்கும் இருக்கும் புரட்சிகர இயக்கங்கள் எதிர்க்கின்றன. ஆதரிக்கும் ஒர்ர்ர்ரே ‘புரட்சிகர இயக்கம்’ நீங்கள் தான். வாழ்த்துக்கள்

        அடுத்து, நீங்கள் மார்க்ஸின் மேற்கோள்களைப் புரிந்து கொள்ளும் லட்சணத்தைப் பார்த்தேன்.

        “சிறுவணிகர்கள், சிறு உடமையாளர்கள் தாழ்வுற்று பாட்டாளி வர்க்கமாக வந்தடைகிறார்கள்” என்கிறார் மார்க்ஸ். ஆனால், நீங்கள் சொல்வது போல வால்மார்ட்டோடு கைகோர்த்துக் கொண்டு சிறுவணிகர்களை ஒழித்துக்கட்டுவதை கம்யூனிஸ்டு கட்சி தனது செயல்திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

        அடுத்து நீங்கள் சொல்லும் பச்சைப் பொய். வினவின் எந்தக் கட்டுரையில் சிறுவணிகர்களை புரட்சிகர வர்க்கம் என்று சொல்லப்பட்டுள்ளது? ஊத்தையான உங்கள் கோயபல்ஸ் வாயை பினாயில் ஊத்திக் கழுவுங்கள் முதலில்.

        ஒரு வர்க்கம் புரட்சிகரமானதாக இல்லை என்கிற காரணத்தாலேயே அவர்கள் செத்து விழுவதை விரும்புங்கள் என்று சொல்லத் துணீர்வீர்கள் என்றால் நீங்கள் கம்யூனிஸ்ட் அல்ல – மனிதராகக் கூட இருக்க முடியாது.

        இந்தியாவில் 70% விவசாயம் சார்ந்த தொழில்கள். 5% சிறு வியாபாரிகள் – உங்கள் கணக்கில் இவர்கள் எல்லாம் “புரட்சிகரமில்லாத அழிந்து போக வேண்டிய” வர்க்கம். இதையே நீங்கள் சேர்ந்துள்ள சுசியில் இருந்து அறுந்து போன செருப்புகள் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளது. இந்த அழிவைத் துரிதப்படுத்த வால்மார்ட்டுக்கு சொம்பு தூக்கலாம் -ரிலையன்ஸுக்கு __________ கழுவலாம்… ஏனெனில் பாட்டாளிகள் நிறைய உருவாவதை உறுதிப்படுத்தும் பாட்டாளித்தோழர்கள் இவர்கள். அப்படித்தானே?

        • மன்னாரு, தியாகு, தியாகுத்தனமா பேசரத்துகாக நீங்க டென்சசென் ஆகலாமா?

        • //”சிறுவணிகர்கள், சிறு உடமையாளர்கள் தாழ்வுற்று பாட்டாளி வர்க்கமாக வந்தடைகிறார்கள்” என்கிறார் மார்க்ஸ். ஆனால், நீங்கள் சொல்வது போல வால்மார்ட்டோடு கைகோர்த்துக் கொண்டு சிறுவணிகர்களை ஒழித்துக்கட்டுவதை கம்யூனிஸ்டு கட்சி தனது செயல்திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.//

          அதே சமயத்தில் அங்காடி தெருவில் வேலைபார்க்கும் ஒருவனுக்கு முதலாளியாகும் வாய்ப்பு இருக்குன்னு சொல்லி முதலாளியாகும் ஆசையை வளத்துக் கட்சி வளக்கனுன்னு மார்க்ஸ் சொல்லி இருக்கிறாரா? என்ன கொடுமை சாமி இது

          //அடுத்து நீங்கள் சொல்லும் பச்சைப் பொய். வினவின் எந்தக் கட்டுரையில் சிறுவணிகர்களை புரட்சிகர வர்க்கம் என்று சொல்லப்பட்டுள்ளது? ஊத்தையான உங்கள் கோயபல்ஸ் வாயை பினாயில் ஊத்திக் கழுவுங்கள் முதலில்.

          ஒரு வர்க்கம் புரட்சிகரமானதாக இல்லை என்கிற காரணத்தாலேயே அவர்கள் செத்து விழுவதை விரும்புங்கள் என்று சொல்லத் துணீர்வீர்கள் என்றால் நீங்கள் கம்யூனிஸ்ட் அல்ல – மனிதராகக் கூட இருக்க முடியாது.//

          அப்போ சிறுவணிகன் யாரு அல்லது தேசிய முதலாளி யாரு யாரு யாருன்னு எத்தனை கமெண்டு போட்டேன் அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் ஓடி ஒழிந்த ஊத்தை வாயரே இப்ப வந்து நாங்க அதை சொல்லவில்லை இதை சொல்கிறோன்னா

          /வினவின் எந்தக் கட்டுரையில் சிறுவணிகர்களை புரட்சிகர வர்க்கம் என்று சொல்லப்பட்டுள்ளது? ….ஒரு வர்க்கம் புரட்சிகரமானதாக இல்லை என்கிற காரணத்தாலேயே…..//

          அப்படியானால் சிறுவணிகர்களை புரட்சிகர வர்க்கம் இல்லை என்று மார்க்ஸ் சொல்வதை ஒத்துக் கொள்கிறீர்கள். (எதையும் நேர்மையா..நேரடியா ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் போல). சிறுவணிகர்களை புரட்சிகர வர்க்கம் இல்லை என்றால்… மார்கஸ் சொன்னது போல் சிறுமுதலாளிகள் புரட்சிகர வர்க்கம் இல்லை என்றால் … உங்களது “புதிய ஜனநாயகப் புரட்சி”யின் நேசசக்தி யார்?

          சிறுவணிகர்களை புரட்சிகர வர்க்கம் இல்லை என்றால்… சிறுமுதலாளிகள் புரட்சிகர வர்க்கம் இல்லை என்றால் … நீங்கள் “புதிய ஜனநாயகப் புரட்சி”நடத்தப் போவதாகச் சொல்வதே ஏமாற்றுவேலை என்பது உங்களுக்குப் புரிகிறதா?

          புரிய வேண்டுமானால் மர்க்சியம் தெரியவேண்டும் புதிய ஜனநாயகப் புரட்சி என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும்

          சிறு மூலதனம் புரட்சிகர வர்க்கம் இல்லைன்னா செத்து மடியாது மாறாக புரட்சி கா வர்க்கமாக மாறும் அதைத்தான் மார்க்ஸ் “சந்தர்ப்பவசமாய்ப் புரட்சிகரமாய் இருப்பார்களாயின், இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குப் போய்விடும் தறுவாயில் இருக்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம், இவ்வாறு இவர்கள் பாதுகாப்பது தமது எதிர்கால நலன்களையே அன்றி நிகழ்கால நலன்களை அல்ல” என்று சொல்கிறார். இதுதான் மார்க்ஸ் ஐ நீங்கள் புரிந்து கொண்டுள்ள லட்சணமா?

          ஆனால் நீங்க சினிமா வந்தவுடன் ரசிகர்கள் விசிலடிப்பதை போல ரிலையன்ஸ் வந்ததும் விசிலடிப்பீங்க பிற்பாடு உக்கார்ந்துகிடுவீங்க இதானைய்யா நீங்க சிறுவணிகன் செத்து விழுவதை காப்பாற்றும் லட்சணம் .

          ஒருவர்க்கம் புரட்சிகரமானதாக இல்லாமல் இருந்தாலும் அதன் வளர்ச்சி போக்கில் அது புரட்சிகரமானதாக மாறுவதை தடுப்பதே கம்யூனிஸ்டுகளின் வேலைன்னு ஏதும் சொல்லி இருகாரா என்ன

          (ஓ அதான் மளிகை கடையில் வேலை பார்க்கிறவனுக்கு முதலாளியாகும் வாய்ப்பு இருக்குன்னு சொல்றீகளோ)

          /இந்தியாவில் 70% விவசாயம் சார்ந்த தொழில்கள். 5% சிறு வியாபாரிகள் – உங்கள் கணக்கில் இவர்கள் எல்லாம் “புரட்சிகரமில்லாத அழிந்து போக வேண்டிய” வர்க்கம். இதையே நீங்கள் சேர்ந்துள்ள சுசியில் இருந்து அறுந்து போன செருப்புகள் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளது. இந்த அழிவைத் துரிதப்படுத்த வால்மார்ட்டுக்கு சொம்பு தூக்கலாம் -ரிலையன்ஸுக்கு __________ கழுவலாம்… ஏனெனில் பாட்டாளிகள் நிறைய உருவாவதை உறுதிப்படுத்தும் பாட்டாளித்தோழர்கள் இவர்கள். அப்படித்தானே?//

          அதாவது 70 சதவீதம் விவசாயிகளை சுரண்டும் இந்த வியாபாரிகள் அழிவதை தடுப்பதுதான் உங்களது கட்சியின் தலையாய பணி என்றால் ,அடுத்து இந்த சிறு வியாபாரிகளை சுரண்டும் பெரு வியாபாரியான ரிலையன்ஸ்ச்டுன் வால்மார்ட் மோதுவதை தடுப்பதுதான் உமது கொள்கை என்றால் நீங்க சிறுவியாபாரிக்கும் -ரிலையன்சுக்கும் சொம்பு தூக்குங்க ——— கழுவுங்க யாரு வேண்டான்னா?

  23. திருவாளர் ஊசி அவர்களின் கடி இதோ
    //ஏகாதிபத்தியத்தை பத்திக்கூட சொல்லாத போலி கம்யூனிஸ்டு மார்க்ஸ் என்ற உங்கள் பின்னூட்டத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்…

    புரியலயா? இது புரியல்லேன்னா அதுவும் புரியாது//

    நம்ம ஊசி வேறுயாருமல்ல தற்கால லெனின்
    என சொன்னால் அது மிகையாகாது மார்க்ஸ் ஏகாதிபத்தியத்தை அவரது காலத்தில் சொல்லாமல் விட்டதற்காக நான் மார்க்சை போலி என திட்டி கமெண்டு போடப்போவதாக கற்பனை செய்யும் நம்ம ஊசி ஒரு நிகழ்காலத்தின் லெனின் எப்படின்னு கேட்டீங்கன்னா

    ஏகாதிபத்திய காலகட்டத்தின் மார்க்சியமே லெனினியம்
    என சொன்னால் தற்போதைய காலகட்டத்தில் மார்க்சியம் என்பது சிறு மூலதனத்தை ஆதரிப்பதே என ஊசி பிரகடனபடுத்துவதை ஏற்று கொண்டே ஆகவேண்டும்
    ”அதாவது பெரிய மூலதனத்தால் சிறிய மூலதனம் அழிவதை தடுப்பதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமைன்னு “

    ஆனால் பாருங்க ஊசி லெனின் கீழ்கண்ட விசயங்களை பற்றி தனது மூளையை கசக்கி என்ன சொல்லபோகிறார் என்பதை பொறுத்தது அது கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் உள்ளது :
    —————————————————————-
    மத்தியதர வர்க்கத்தின் கீழ்த் தட்டுகளைச் சேர்ந்த சிறு உற்பத்தியாளர்கள், கடைக்காரர்கள், சிறு வாடகை, வட்டி வருவாயினர், கைவினைஞர்கள், விவசாயிகள் ஆகிய எல்லோரும் சிறிது சிறிதாய்த் தாழ்வுற்று பாட்டாளி வர்க்கத்தை வந்தடைகிறார்கள். காரணம் என்னவெனில், முதலாவதாக அவர்களிடமுள்ள சொற்ப அளவு மூலதனம் நவீனத் தொழிலின் வீச்சுக்கும் போதாமல் பெரிய முதலாளிகளுடைய போட்டிக்குப் பலியாகிவிடுகிறது, இரண்டாவதாக அவர்களுடைய தனித் தேர்ச்சியானது பொருளுற்பத்தியின் புதிய முறைகளால் மதிப்பற்றதாக்கப்படுகிறது. இவ்விதம் தேச மக்கள் தொகுதியைச் சேர்ந்த எல்லா வர்க்கங்களிடமிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்கள் திரட்டப்படுகிறார்கள்.”
    —————————————————
    “இன்று முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் மெய்யாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள் நவீனத் தொழிலினது வளர்ச்சியின் முன்னால் நலிவுற்றுச் சிதைந்து முடிவில் மறைந்து போகின்றது, பாட்டாளி வர்க்கம் மட்டும் தான் நவீனத் தொழிலுக்கே உரித்தான அதன் நேரடி விளைவாய் அமைகிறது.”
    ——————————————————
    “மத்தியதர வர்க்கத்தின் கீழ்ப் பகுதிகளாகிய சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் எல்லாரும் தொடர்ந்து தாம் மத்தியதர வகுப்பினராய் நீடித்திருப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆகவே இவர்கள் பழமைப் பற்றாளர்களே அன்றி புரட்சித்தன்மை வாய்ந்தோரல்லர். அது மட்டுமல்ல, இவர்கள் பிற்போக்கானவர்களும் கூட, ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச் செய்யமுயலுகிறார்கள். சந்தர்ப்பவசமாய்ப் புரட்சிகரமாய் இருப்பார்களாயின், இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குப் போய்விடும் தறுவாயில் இருக்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம், இவ்வாறு இவர்கள் பாதுகாப்பது தமது எதிர்கால நலன்களையே அன்றி நிகழ்கால நலன்களை அல்ல”

    ———————————————————-
    மார்க்ஸின் கருத்துக்களோடு உமது கருத்துக்களை உரசி பாருங்க ஊசி என்கிற தற்கால லெனின் அவர்களே

    இதை மறுத்து நீங்கள் சிறு வணிகர்கள் புரட்சிகர சக்தின்னு நிறுவிவிட்டு நீங்கள் மொத்தமா அம்பலபட்டு போகும் ஒரு நாள் இந்த மனித சமூகத்தின் பொன்னாள்

    • தியாகு நீதாண்டா ஒத்தைக்கு ஒத்தை நிக்கிற உண்மையான வீரன். ஒனக்கு முன்னாடி நின்னு விவாதிக்க முடியாம எல்லோரும் எப்படி தெறிச்சி ஓடுறானுங்க பாரு. இன்னும் நல்லா பெரிய பெரிய மார்க்சு மேற்கோள் அப்புறம் ட்ராட்ஸ்கி மேற்கோள் காரத்து, அச்சுதானந்தன், எல்லோரோட மேற்கோளையும் போட்டு இவிங்கள நல்லா சாத்து சாத்துனு சாத்துடா தம்பி.

    • தியாகு
      தோழர்களிடம் மாய்ந்து மாய்ந்து போராடும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. ஆனால் உங்க உழைப்பை பயன்படுத்தி சில கட்டுரைகளில் பிலாக்கணம் பாடும் அதியமான் போன்ற சிறு வணிகர்களிடம் விவாதித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அவரோடு நீங்கள் மோதும் களத்தைக் காண ஆவலுடன்
      நான் மணி

      • திரு.மணி

        அதியமான் என்கிற சிறுமுதலாளி உங்கள் புதியஜனநாயக புரட்சியின் நேசசக்தி அல்லவா .

        /நீங்கள் மோதும் களத்தைக் காண ஆவலுடன்//

        அவருடன் நான் மோதுவது உங்கள் நட்புசக்தியை வீணாக வம்பிழுப்பதாக ஆகும் .

        மேலும் புதியஜனநாயக புரட்சியை நீங்களும் ஏற்றுகொண்டவர் என்ற வகையில் ஊசி மற்றும் மன்னாரு (இவர்கள் இருவரும் எங்கே ஓடினார்கள் என்றே தெரியவில்லை )இருவருக்கு நான் எழுப்பிய கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லலாமே?

        மன்னாருக்கு நான் வைத்த வாதம் இதோ:

        //”சிறுவணிகர்கள், சிறு உடமையாளர்கள் தாழ்வுற்று பாட்டாளி வர்க்கமாக வந்தடைகிறார்கள்” என்கிறார் மார்க்ஸ். ஆனால், நீங்கள் சொல்வது போல வால்மார்ட்டோடு கைகோர்த்துக் கொண்டு சிறுவணிகர்களை ஒழித்துக்கட்டுவதை கம்யூனிஸ்டு கட்சி தனது செயல்திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.//

        அதே சமயத்தில் அங்காடி தெருவில் வேலைபார்க்கும் ஒருவனுக்கு முதலாளியாகும் வாய்ப்பு இருக்குன்னு சொல்லி முதலாளியாகும் ஆசையை வளத்துக் கட்சி வளக்கனுன்னு மார்க்ஸ் சொல்லி இருக்கிறாரா? என்ன கொடுமை சாமி இது

        //அடுத்து நீங்கள் சொல்லும் பச்சைப் பொய். வினவின் எந்தக் கட்டுரையில் சிறுவணிகர்களை புரட்சிகர வர்க்கம் என்று சொல்லப்பட்டுள்ளது? ஊத்தையான உங்கள் கோயபல்ஸ் வாயை பினாயில் ஊத்திக் கழுவுங்கள் முதலில்.

        ஒரு வர்க்கம் புரட்சிகரமானதாக இல்லை என்கிற காரணத்தாலேயே அவர்கள் செத்து விழுவதை விரும்புங்கள் என்று சொல்லத் துணீர்வீர்கள் என்றால் நீங்கள் கம்யூனிஸ்ட் அல்ல – மனிதராகக் கூட இருக்க முடியாது.//

        அப்போ சிறுவணிகன் யாரு அல்லது தேசிய முதலாளி யாரு யாரு யாருன்னு எத்தனை கமெண்டு போட்டேன் அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் ஓடி ஒழிந்த ஊத்தை வாயரே இப்ப வந்து நாங்க அதை சொல்லவில்லை இதை சொல்கிறோன்னா

        /வினவின் எந்தக் கட்டுரையில் சிறுவணிகர்களை புரட்சிகர வர்க்கம் என்று சொல்லப்பட்டுள்ளது? ….ஒரு வர்க்கம் புரட்சிகரமானதாக இல்லை என்கிற காரணத்தாலேயே…..//

        அப்படியானால் சிறுவணிகர்களை புரட்சிகர வர்க்கம் இல்லை என்று மார்க்ஸ் சொல்வதை ஒத்துக் கொள்கிறீர்கள். (எதையும் நேர்மையா..நேரடியா ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் போல). சிறுவணிகர்களை புரட்சிகர வர்க்கம் இல்லை என்றால்… மார்கஸ் சொன்னது போல் சிறுமுதலாளிகள் புரட்சிகர வர்க்கம் இல்லை என்றால் … உங்களது “புதிய ஜனநாயகப் புரட்சி”யின் நேசசக்தி யார்?

        சிறுவணிகர்களை புரட்சிகர வர்க்கம் இல்லை என்றால்… சிறுமுதலாளிகள் புரட்சிகர வர்க்கம் இல்லை என்றால் … நீங்கள் “புதிய ஜனநாயகப் புரட்சி”நடத்தப் போவதாகச் சொல்வதே ஏமாற்றுவேலை என்பது உங்களுக்குப் புரிகிறதா?

        புரிய வேண்டுமானால் மர்க்சியம் தெரியவேண்டும் புதிய ஜனநாயகப் புரட்சி என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும்

        சிறு மூலதனம் புரட்சிகர வர்க்கம் இல்லைன்னா செத்து மடியாது மாறாக புரட்சி கர வர்க்கமாக மாறும் அதைத்தான் மார்க்ஸ் “சந்தர்ப்பவசமாய்ப் புரட்சிகரமாய் இருப்பார்களாயின், இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குப் போய்விடும் தறுவாயில் இருக்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம், இவ்வாறு இவர்கள் பாதுகாப்பது தமது எதிர்கால நலன்களையே அன்றி நிகழ்கால நலன்களை அல்ல” என்று சொல்கிறார். இதுதான் மார்க்ஸ் ஐ நீங்கள் புரிந்து கொண்டுள்ள லட்சணமா?

        ஆனால் நீங்க சினிமா வந்தவுடன் ரசிகர்கள் விசிலடிப்பதை போல ரிலையன்ஸ் வந்ததும் விசிலடிப்பீங்க பிற்பாடு உக்கார்ந்துகிடுவீங்க இதானைய்யா நீங்க சிறுவணிகன் செத்து விழுவதை காப்பாற்றும் லட்சணம் .

        ஒருவர்க்கம் புரட்சிகரமானதாக இல்லாமல் இருந்தாலும் அதன் வளர்ச்சி போக்கில் அது புரட்சிகரமானதாக மாறுவதை தடுப்பதே கம்யூனிஸ்டுகளின் வேலைன்னு ஏதும் சொல்லி இருகாரா என்ன

        (ஓ அதான் மளிகை கடையில் வேலை பார்க்கிறவனுக்கு முதலாளியாகும் வாய்ப்பு இருக்குன்னு சொல்றீகளோ)

        • //அதியமான் என்கிற சிறுமுதலாளி உங்கள் புதியஜனநாயக புரட்சியின் நேசசக்தி அல்லவா .///

          :))) நான் சிறிய முதலாளியா என்பது இங்கு முக்கியமல்ல. எனது நிலைபாடு மற்றும் கருத்துக்கள் தான் பேசப்பட வேண்டும். நண்பர்கள் மாசி. ஜோதிஜி போன்றவர்களும் சிறுமுதலாளிகள் தான். ஆனால் அவர்களின் நிலைபாடுகள் வேறு. எனவோ இது போன்ற் பொதுப்படுத்துதல்கள் வேண்டாத வேலை. மேலும் ‘புதிய ஜனனாயக புரட்சி’ என்றால் என்னவென்றே எனக்கு புரியவில்லை. நேச சக்தி என்பதெல்லாம் ஓவர்.

          மனித உரிமைகளை மீறும் எந்த சித்தாந்த்தையும், அமைப்பையும், நடைமுறையையும் எதிர்க்கிறேன். அவ்வளவு தான். (1948 அய்.நா மனித உரிமை பிரகடனத்தில் சொத்துரிமை என்பதும் சேர்த்தி.)

          • அதியமான் உங்களுக்கு புதியஜனநாயக புரட்சி கிளாஸ் எடுக்கலையா பாருங்களே கடமை தவறுகிறார்கள் (அவங்க கட்சிதிட்டத்த தரசொல்லி படிச்சு பாருங்க அதியமான் இனிமே இதுதான் உங்களோட ஒரே கோரிக்கையா இருக்கனும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்)

            அவர்களின் நேச சக்தியான உங்களுடன் போய் என்னை மோத சொல்கிறார்கள் இது அடுக்குமா ?

            //மனித உரிமைகளை மீறும் எந்த சித்தாந்த்தையும், அமைப்பையும், நடைமுறையையும் எதிர்க்கிறேன். அவ்வளவு தான். (1948 அய்.நா மனித உரிமை பிரகடனத்தில் சொத்துரிமை என்பதும் சேர்த்தி.)//

            அப்போ நீங்க எதிர்க்க வேண்டியது இவங்களைத்தான் ஏன்னா நக்கி புடுங்கி என்பதே ஒரு அரசியல் வார்த்தை பிரயோகமா உபயோகிக்கிறாங்களே 🙂

          • அது ஒன்னுமில்லீங்க அதியமான்,

            நம்ம காம்ரேட் தியாகு ஜி லிமிடெட் சார் இருக்காரே , நீங்க அதாவது சின்ன அளவு மூலதனம் போட்டு பட்டரை வைத்து நடத்தும் சிறு முதலாளி(கைக்காசு போட்டு டீக்கடை, மெக்கானிக்கடை, தள்ளுவண்டி இஸ்திரி கடை etc.,etc., நடத்தறவங்கல்லேருந்து, தண்டல் வட்டிக்கு கடன் வாங்கி காய்கறிவிக்குறவங்க வரைக்க்கும் கூட) குத்தகை/சொந்த நிலம் வச்சிருக்குற விவசாயி. இவங்கல்லாம் அழிஞ்சு உருத்தெரியாம போகனும்னு கொளுகை வச்சிருக்கார். அப்பத்தான் நீங்க இழப்பதற்கு ஒன்றுமில்லாத பாட்டாளியாகி உலகத்தொழிலாளர்களோடு ஒன்று சேருவீங்க. அப்புறம் டைரக்டா புரட்சியோ புரட்சிதான். ஒரு வேளை நீங்களா ஒட்டாண்டியாகி பாட்டாளி ஆகலையின்னு வச்சுக்கங்க, அவரே ஊடு பூந்து அந்த சுப காரியத்தை நிறைவேத்துவார்.

            ஆனா வினவு தோழருங்க உங்களைப் பற்றி அப்படி நினைக்கல. உங்களைப்போன்ற சிறு வணிகர்களையெல்லாம் ஒன்னு சேத்து கோவையில மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாடு நடத்தறாங்க, வெள்ளையன் போன்ற வணிகர் சங்கத்தலைவர் கூட சேர்ந்து சில்லறை வர்த்தகத்தில் அண்ணிய முதலீட்டை எதிர்க்கறாங்க. அதாவது உங்களை பகைமையா கருதல. அது நம்ம தியாகு அண்ணனோட கொளுகைக்கு ஒத்துவரல எனவே இப்படி எழுச்சி உரையாற்றுகிறார்.

            • //ஆனா வினவு தோழருங்க உங்களைப் பற்றி அப்படி நினைக்கல. உங்களைப்போன்ற சிறு வணிகர்களையெல்லாம் ஒன்னு சேத்து கோவையில மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாடு நடத்தறாங்க, வெள்ளையன் போன்ற வணிகர் சங்கத்தலைவர் கூட சேர்ந்து சில்லறை வர்த்தகத்தில் அண்ணிய முதலீட்டை எதிர்க்கறாங்க. //

              பாருய்யா பொய்ய அதியமான் உங்களை என்னைக்காவது மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாட்டுக்கு கூப்பிட்டு இருக்காங்களா இத்தனைக்கும் விடிஞ்சா வினவு முகத்தில முழிக்கிற ஆளு நீங்க உங்களையே கூப்பிடலைன்னா என்னன்னு கேளுங்க அதியமான் நீங்க

              • தியாகுவுக்கு இன்னும் இயக்கத்து பெரியவாள்கிட்டேருந்து ஈமெயில் வரல, எனவே 2001ல் நடந்த நிகழ்வுக்கு 2008ல் துவங்கிய வினவுக்கு அறிமுகமான அதியமானை ஏன் கூப்பிடவில்லை என அறச்சீற்றத்தில் பொங்குகிறார். எனவே அதியமானும் சற்று பொறுமையாக இருக்கும் படி தியாகுலிமிடட் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது

            • //சிறு வணிகர்களையெல்லாம் ஒன்னு சேத்து கோவையில மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாடு நடத்தறாங்க, வெள்ளையன் போன்ற வணிகர் சங்கத்தலைவர் கூட சேர்ந்து சில்லறை வர்த்தகத்தில் அண்ணிய முதலீட்டை எதிர்க்கறாங்க.///

              ’தோழர்’ வெள்ளையன் சுமார் 3 கோடிகளுக்கு அதிபதி. கருப்பு பணம், பினாமி சொத்துகள், டசன் கணக்கில் பார்கள், (முன்பு பிராந்தி கடைகள்) வைத்திருக்கும் ‘சிறு வணிகர்’ அவர். இவர் தான் உங்க ‘கூட்டாளி’ ? :))

              அண்ணாச்சி கடைகளில் சிறுவர்கள் வேலைக்கு இருப்பார்கள். குறைந்த சம்பளத்தில் கசக்கி பிளியப்படுவார்கள். வேலை நேரம் மிக அதிகம். மேலும் கெட்ட வார்த்தைகளில் வசவுகள், சில நேரங்களில் அடியும் உண்டு. ஆனால் ரியலன்ஸ் ஃப்ரெஸ் அல்லது வால்மார்ட்டில் இப்படி எல்லாம் இருக்காது.

              சிறிய அளவில், சிறுவர்களை ‘சுரண்டினால்’ பரவாயில்லை. பெரிய அளவில், பலரை ஒட்டுமொத்தமாக சுரண்ட கூடாது. இது என்ன ‘கொள்கை’ ?

              நான் முன்பு கேட்டது ஒரே ஒரு கேள்வி தான் : செம்புரட்சிக்கு பிறகு இந்த ‘சிறுவணிகர்கள்’ கதி என்ன ஆகும் ? குட்டி பூஸ்வாக்கள் என்று போட்டு தள்வீர்களா அல்லது trainning camps என்று முகாம்களில் குடும்பத்தோடு அடைத்துவிடுவீர்களா ? சோவியத் ரஸ்ஸியாவில் 30களில் 5 ஏக்கருக்கு மேல் வைத்திருந்தவர்களை ‘குளக்குகள்’ என்று முத்திரை குத்தி போட்டு தள்ளினார்கள். அல்லது கூண்டோடு சைபீரிய வதை முகாம்களுக்கு ஏற்றுமதி செய்தார்கள். (இங்கு ராஜஸ்தான் பாலைவனங்களுக்கு அனுப்ப வாய்ப்பு உண்டு).

              பெரு முதலாளிகள், சிறு முதலாளிகளை விழுங்கினால் உங்களுக்கு என்ன ? (அப்படி சாத்தியம் இல்லை என்பது வேறு விசியம்.) எப்படியும் எல்லா ‘முதலாளிகளையும்’ போட்டு தள்ளவது தான் புரட்சிக்கு பின் நடக்க போகிறது..

              • இதத்தான் தியாகுவும் கேட்கறார், உங்களை விஞ்சும் அளவுக்கு பங்குச்சந்தை சூதாடியின் சுட்டி கூட போட்டார், அவங்களும் நீங்க அதியமான் விட மோசமான முதலாளித்துவ சிந்தனையாளர், அவராச்சும் லிபர்டேரியன்னு சொல்லிகிறார், நீங்க அதியமானோட சேர்த்து இந்த சில்லறை வணிகர்களை ஒட்டுமொத்தமா ஒழிச்சு கட்டனும்னு பாசிசத்தனமா சாரி தியாகுதனமா எழுதறார்னு சொல்றாங்க…வாட் இஸ் திஸ் நான்சென்ஸ், விடாதீங்க அதியமான், உங்கள் தோழர் தியாகு இருக்கிறார் சேர்ந்து நியாத்தை கேளுங்க

              • //சிறிய அளவில், சிறுவர்களை ‘சுரண்டினால்’ பரவாயில்லை. பெரிய அளவில், பலரை ஒட்டுமொத்தமாக சுரண்ட கூடாது. இது என்ன ‘கொள்கை’ ?//

                உங்க நேச சக்தியே கேட்குது சொல்லுங்க மிஸ்டர் புரட்டுவாதிகளே

                • தியாகு நீங்கள் அதியமானை எதிரியாக நினைத்து அழிக்க நினைக்கிறீர்கள், ஆனால் அவரோ உங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பேசுகிறார்.

                  எப்படியோ எலியும் பூனையுமாக இருந்த நீங்கள் இருவரும் இப்போது வால்மார்ட் ஆதரவு அணியில் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியான ஒன்று. உங்களுக்கும் இனி போலி பெயர்களில் வந்து அதியமானை கண்டபடி திட்டும் வேலை இல்லை. இருவரும் இணைத்து தீயாக வேலை செய்து இந்த கம்மீனிஸ்டுகளை ஒழித்துவிடுங்கள், தமிழ் பதிவுலகம் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கும்

                  • //தியாகு நீங்கள் அதியமானை எதிரியாக நினைத்து அழிக்க நினைக்கிறீர்கள், ஆனால் அவரோ உங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பேசுகிறார்.//

                    அதியமான் பாட்டாளி வர்க்கத்தின் எதிரி சிறு வணிகர்களை என்னதான் நேச சக்தி என சொன்னாலும் அவர்களும் அதியமானைப்போலத்தான் இருப்பார்கள்

                    எனவே நிலமையில் சிறுமுதலாளியாகவும் சிந்தனையில் முதலாளித்த்வை கொண்டிருக்கும் அதியமானை போன்றோர் பாட்டாளி வர்க்கத்தின் எதிரியாக இல்லாமல் எப்படி இருப்பார்கள்

                    எனவே அவரது சித்தாந்தம் என்றும் எனக்கு எதிரிதான் அவர் உங்களது நட்பு சக்தி என்றால் நீங்களே அவரை போற்றி பாதுகாக்கனும் 🙂

                    என்னை போன்றகம்யூனிஸ்டுகளுக்கு அவர் எதிரிதான்

                    • ///சிறிய அளவில், சிறுவர்களை ‘சுரண்டினால்’ பரவாயில்லை. பெரிய அளவில், பலரை ஒட்டுமொத்தமாக சுரண்ட கூடாது. இது என்ன ‘கொள்கை’ ?////

                      அவரு எதிரியா நண்பனா என்கிறா வாதத்தை விட அவரது கேள்வியின் நியாயத்துக்கு பதில் சொல்லவும்

                    • நியாயத்துக்கு பதில் சொல்லவும்/////////

                      சந்தைக்கு போணும் ஆத்தா வையும் காசு கொடு..

                    • கேள்வியின் நியாயத்துக்கு பதில் சொல்லவும்/////////

                      தியாகு நீங்களும் … அண்ணாச்சி வால்மார்ட் ரெண்டும் ஒண்ணுதான்னு ஒரு தியாகுத்தனமான வாதத்தை – சந்தைக்கு போணும் ஆத்தா வையும் காசு கொடு- ன்னு ரொம்ப நேரமே கத்திகிட்டேயிருக்கீங்க.. அதனால நானும் அதை பரிசீலனை பண்ணும் படியா ஆகிப்போச்சு.

                      உங்க விவாத பில்டிங்கே இவ்வளவு ஸ்டாங்கா இருக்கணும்னா அப்ப அதோட பேஸ்மென்டான உங்க வாழ்க்கை எவ்வளவு ஸ்டாராங்கா இருக்கணும்..

                      இதே ரூலை உங்களுக்கு அப்ளை பண்ணுவோம்

                      நீங்க வேலை செய்யுற கம்பெனி முதலாளி உங்களை சுரண்டரான்.
                      நீங்க உங்களுக்கு கீழே வேலை செய்யும் தொழிலாளர்களை சுரண்டறீங்க
                      அதாவது அவங்களை சுரண்டி வர பணத்துலதான் உங்களுக்கு சம்பளம் வருது, நீங்களும் மாசாமாசம் கைநீட்டி சம்பளம் வாங்கறீங்க.. நீங்க கடைநிலை தொழிலாளி இல்ல, மேனேஜர் என்பதினால முதலாளியோட சுரண்டலில் கூட்டுக்களவாணி நீங்க..

                      உங்க லாஜிக் படி உங்க முலதாளி உங்களையும் மற்ற தொழிலாளிகளையும் சுரண்டுவதும், மேனேஜரான நீங்க உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை சுரண்டுவதும் ஒண்ணு.. அதனால உங்க கொள்கைபடி நீங்களே உங்களுக்கு எதிரி, நியாயப்படி நீங்க தற்கொலை பண்ணிக்கனும்

                      இல்லையா கம்பெனிக்கு குண்டு வச்சோ இல்லை நீங்க இணையத்தில் வேலை செய்வதை நிறுத்தி, கம்பெனி வேலை செய்யத்துவங்கியோ உங்க கம்பெனியை திவாலாக்கி, உங்க முதலாளியையும் உங்களையும் ஒரு தொழிலாளியா மாத்தி உலகத்தொழிலாளர்களோடு ஒன்று சேர்ந்து டைரக்டா புரட்சி பண்ணணும்

                      இரண்டுல ஒண்ணை தவிர வேற வழி இல்லை, ஏன்னா நீங்க கொள்கைவாதியாச்சே

                      இதுல நீங்க எதை சூஸ் செய்யப்போறீங்க தியாகு, கமான் டெல் மீ

                    • தியாகு உங்க தற்கொலை மேட்டர் என்னாச்சு… ரெண்டுல எதாவது முடிவெடுத்தீங்களா? சீக்கிறம் நாள் குறிங்க, திருப்பூருக்கு டிக்கெட் போடனும்

                  • அவரு எதிரியா நண்பனா என்கிறா வாதத்தை விட அவரது கேள்வியின் நியாயத்துக்கு பதில் சொல்லவும்…

                    ////////////////
                    இவ்வளவு நேரம் எதிரி-நண்பன் நட்பு சக்தி-எதிரி சக்தி என்று சதிராட்டம் போட்ட நீங்க இப்படி ஜகா வாங்குவது நல்லால்லே

                    • //தியாகு நீங்களும் … அண்ணாச்சி வால்மார்ட் ரெண்டும் ஒண்ணுதான்னு ஒரு தியாகுத்தனமான வாதத்தை – சந்தைக்கு போணும் ஆத்தா வையும் காசு கொடு- ன்னு ரொம்ப நேரமே கத்திகிட்டேயிருக்கீங்க.. அதனால நானும் அதை பரிசீலனை பண்ணும் படியா ஆகிப்போச்சு.//

                      ஹி ஹி மண்டையில் களிமண் இருந்தால் வாதங்களை எப்படி புரிஞ்சிக்கிறது

                      //உங்க விவாத பில்டிங்கே இவ்வளவு ஸ்டாங்கா இருக்கணும்னா அப்ப அதோட பேஸ்மென்டான உங்க வாழ்க்கை எவ்வளவு ஸ்டாராங்கா இருக்கணும்..

                      இதே ரூலை உங்களுக்கு அப்ளை பண்ணுவோம்

                      நீங்க வேலை செய்யுற கம்பெனி முதலாளி உங்களை சுரண்டரான்.//

                      ஆமாம் என்னை வேலை செய்யுற கும்பனி முதலாளி சுரண்டுகிறான் ஏன்னா அவன் ஒரு சிறு முதலாளி உங்களோட நேச சக்தி

                      //நீங்க உங்களுக்கு கீழே வேலை செய்யும் தொழிலாளர்களை சுரண்டறீங்க
                      அதாவது அவங்களை சுரண்டி வர பணத்துலதான் உங்களுக்கு சம்பளம் வருது, நீங்களும் மாசாமாசம் கைநீட்டி சம்பளம் வாங்கறீங்க.. நீங்க கடைநிலை தொழிலாளி இல்ல, மேனேஜர் என்பதினால முதலாளியோட சுரண்டலில் கூட்டுக்களவாணி நீங்க..//

                      இல்லை சுரண்டலை செய்வது எனது வேலை இல்லை வேலையை செய்வது என்னோட வேலை சுரண்டலை செய்வது நியாயப்படுத்துவது எல்லாம் நீங்க அதாவது உங்க நேச சக்தியான அதியமான் போன்ற சிறு முத்லாளிகள்

                      //உங்க லாஜிக் படி உங்க முலதாளி உங்களையும் மற்ற தொழிலாளிகளையும் சுரண்டுவதும், மேனேஜரான நீங்க உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை சுரண்டுவதும் ஒண்ணு.. அதனால உங்க கொள்கைபடி நீங்களே உங்களுக்கு எதிரி, நியாயப்படி நீங்க தற்கொலை பண்ணிக்கனும்//

                      உங்க லாஜிக் படி என்னை சுரண்டும் முதலாளிய திருத்த முடியாம அவனோட கூட்டணி சேரும் நீங்கள் தற்கொலை பண்ணிக்கனும்

                      //இல்லையா கம்பெனிக்கு குண்டு வச்சோ இல்லை நீங்க இணையத்தில் வேலை செய்வதை நிறுத்தி, கம்பெனி வேலை செய்யத்துவங்கியோ உங்க கம்பெனியை திவாலாக்கி, உங்க முதலாளியையும் உங்களையும் ஒரு தொழிலாளியா மாத்தி உலகத்தொழிலாளர்களோடு ஒன்று சேர்ந்து டைரக்டா புரட்சி பண்ணணும்//

                      அதில்லாட்டா ரயில் தண்டவாளத்துக்கு குண்டு வைக்கும் உங்க ஒரிஜினல்களோட சேர்ந்துடனும்

                      //இரண்டுல ஒண்ணை தவிர வேற வழி இல்லை, ஏன்னா நீங்க கொள்கைவாதியாச்சே//

                      கண்டிப்பா வேற வழியே இல்லை நீங்க ஒன்னு காட்டுக்குள்ள ஓடிடனும் இல்லாட்டா தற்கொலை செய்துக்கனும்

                      /இதுல நீங்க எதை சூஸ் செய்யப்போறீங்க தியாகு, கமான் டெல் மீ//

                      இதுல எதை செய்ய போறீங்க கியாதி சொல்லிடுங்க பிளீஸ்

                    • கியாதி நீங்க தற்கொலை செய்துகிட்டா என்னால நிச்சயம் கண்டுபிடிக்கவே முடியாது ஏன்னா உங்க பேரு ஊரு எதுவுமே தெரியாது அனுதாபங்களை முன்னாடியே தெரிவிச்சுகிறேன்

                      மண்டையில் எதாவது இருந்தால் கருத்துக்கு கருத்தை வைக்கனும்
                      கருத்துக்கு பதிலா தனிநபர் தாக்குதலை வைப்பது பாசிஸ்டு செய்கிற வேலை மிஸ்டர் கியாதி

                    • தோ பாற்றா நைட்டு பூரா ரூம் போட்டு யோசிச்சும் அண்ண்ணுக்கு செல்ப் எடுக்கல..

                      தியாகு நீங்க சாதாரணமாவே பேசினாலே தியாகுத்தனமா இருக்கும், இதுல காமெடி வேற, அதுவும் சொந்த சரக்குன்னு ஒண்ணு இல்லாத போனதினால பிட்டடிச்சு காமெடி பண்றீங்க, ஆனா பிசிக்ஸ் டெஸ்டுக்கு பயாலஜி பிட்டடிச்சா மாதிரி தான் இருக்கு…

                      அதியமானுக்காக கேள்வியின் நியாயத்துக்கு பதில் சொல்லவும்னு சொம்பு எடுத்துகினு வந்தது நீங்க என்பதை நினைவுப்படுத்துகிறேன்… நீங்க அதை வசதியாக மறந்து போனதை, ஒங்க ஓட்டை லாஜிக் இனிமே ஓட்டுப்போட முடியாத அளவுக்கு நஞ்சு நாறாய் நாறாய் போய் நீங்க முழு அம்மணக் கட்டையாக பப்பி ஷேமாக இருப்பதாக புரிந்து கொண்டு, ஏற்கனவே புண்பட்டு புண்ணாகவறாளி பாடும் உங்களின் அந்த பாயிண்டுக்கு விடுத்து நெக்ஸ்டு பாயிண்டுக்கு வறேன்

                      தியாகு நீங்க என்ன நீங்க என்ன ஒங்க ஆபீஸ்பாயிக்கு கீழ அப்பரசண்டியாவா வேல செய்யுறீங்க, மேனேஜருங்கோவ்…

                      தொழிலாளர்களை சுரண்டி வர காசுலதான் தொழிலாளியை மேய்கிறவனான மேனேஜருக்கு தொழிலாளியை விட கூட சம்பளம்னும், ஓனர் இல்லாத நேரத்தில அந்த சுரண்டலை உங்க முதலாளி சார்பா செய்யறதுதான் உங்க வேலைன்னும், அதுக்குத்தான் உங்களுக்கு சம்பளம்னும் கூட புரியாம பேசிகிட்டு பேசனும்னா ஒன்னு கீழ்பாக்கத்து மென்டலா இருக்கனும் இல்லேண்ணா தியாகுவா இருக்கணும் 🙂

                      திரும்புன பக்கமெல்லாம் புண்ணாகி கிடக்கீங்க, நல்லா மஞ்சபத்து போடுங்க சீழ்பிடிக்காமயாச்சும் இருக்கும்…

                    • கருத்துக்கு கருத்தை வைக்கனும்/////////

                      இந்த எழவைத்தான் நானும் சொல்லிகிட்டிருக்கேன்.. உங்களை வினவு செருப்பாலடிச்சி விரட்டிவிட்ட நாள்ளேருந்து உங்களுக்கு காண்டு, தப்பில்ல, காண்டெல்லாம் இருக்க வேண்டீதான், அதுக்கு வேணா சூனா பூனான்னு எதாவது திட்டிட்டு போகவேண்டீதானே.. அதை விட்டுட்டு என்ன மயி*க்கு மார்க்சிய மேதாவி மாதிரி வந்து உளரிக்கொட்டி மறுபடி மறுபடி செருப்படி வாங்கணும்… இதுவரைக்கு என் செருப்பு மட்டுமே அஞ்சு பிஞ்சு போச்சுயா..

                      பிகு..உங்க லாஜிக்கை உங்களுக்கு அப்ளை பண்ணுவது பேரு தனிநபர் தாக்குதல்னா நீங்க அதை சமூகத்துக்கு அப்பளை பண்ணுவது பேரு என்னாங்கோ 🙂

                    • நான் தொழிலாளி இல்லை என்பதை கண்டுபிடித்து
                      கேள்வி கேட்பதற்கு நன்றி

                      ஆனால் தொழிலாளியாக இல்லாதவரெல்லாம் தொழிலாளிவர்க்கத்துக்கு பேச கூடாது என்பது தொழிலாளிகளை நிராயுதபாணிகளாக்குவதாகும்

                      இதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள் என்றால்
                      நீங்க கம்யூனிஸ்டுதானா ? என்பதில் பலத்த சந்தேகம் கிளம்புது எனக்கு

                      அவ்வ்வ்வ்வ்வ்

                      ஒரு முதலாளித்துவ ஆதரவாளரிடம் போய் தொழிலாளிவர்க்கம்னு நினைச்சு தொழிலாளிவர்க்க அரசியலை பேசிவிட்டேனோ

                    • நான் தொழிலாளி இல்லை என்பதை கண்டுபிடித்து/////

                      அண்ணோவ், அதை கண்டுபிடிச்சது நானில்லீங்க, இந்த பின்னூட்டப்பெட்டி ஆரம்பத்துல நான் சோத்துக்கில்லாதவன்னு பொய் சொல்லி ஊசி கிட்ட செருப்படி வாங்கினீங்களே அப்போ ஊருக்கே தெரிஞ்சது.. இப்ப நீங்க எழுதியிருக்குற

                      ///ஆனால் தொழிலாளியாக இல்லாதவரெல்லாம் தொழிலாளிவர்க்கத்துக்கு பேச கூடாது/////

                      இது கூட நான் சொல்லல, நீங்களா நான் அப்படி சொன்னதா நினைச்சுகிட்டிருக்கீங்க.. ஊசி அதை ஆரம்பத்திலேயே சொல்லியாச்சு, தொழிலாளி வர்க்க அரசியலை பேசுவது வேறு, நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டே பாட்டாளின்னு பொய் செல்றது வேறுன்னு. இப்பக்கூட நீங்க அதைத்தான் செய்யுறீங்க…

                      ஆனா உணர்ச்சிவசப்பட்டு சொந்த செலவில் மறுபடியும் சூன்யம் வச்சுக்கிட்டீங்களே

                      எப்படி….?

                      இப்படி…

                      ///ஆனால் தொழிலாளியாக இல்லாதவரெல்லாம் தொழிலாளிவர்க்கத்துக்கு பேச கூடாது என்பது தொழிலாளிகளை நிராயுதபாணிகளாக்குவதாகும்///

                      அதாவது ஒருவன் தொழிலாளியாகும் வரை எந்த வர்க்கத்தில் இருப்பான், இப்ப உங்களையே எடுத்துக்கங்க, நீங்க ஒரு குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை சேர்ந்தவர்.. எனக்கு பாட்டாளி வர்க்க அரசியலை பேச உரிமை இருக்கு – அதை தடுப்பது முதலாளித்துவ அணுகுமுறைன்னு அறச்சீற்றத்தோட பொங்குறீங்க.. பேஷா பேசுங்கோ யார் வேணான்னு சொன்னது….

                      ஆனா அதை யாரோ ரொம்ப நேரமா சொல்றாங்க… யாரு??

                      நீங்கதான் பாஸ் அது

                      குட்டி முதலாளிங்கல்லாம் பாட்டாளி வர்க்கத்துக்கு நேச சக்தி கிடையாதுன்னும், அவங்களை நேச சக்தியாக பாக்குற நாங்கெல்லாம் முதலாளித்துவ ஆதரவுன்னும்.

                      சுரண்டுகின்ற அதியமான் முதல் அண்ணாச்சி போன்ற சிறு முதலாளிகளை நேசிக்கும் கட்சின்னும்

                      வால்மார்டின் சுரண்டலும் அண்ணாச்சியும் சுரண்டலும் ஒண்ணு-ம்னும்

                      வால்மார்ட் வந்தால் அண்ணாச்சி ஒழிஞ்சிடுவான் பிறகு பெரிய அளவில் பாட்டாளி வர்க்கமாக மக்கள் மாறிவிடுவார்கள் அவர்களை பாட்டாளி வர்க்க முண்ண்ணி படையாக அமைப்பாக்க முடியும்னும்

                      இது புரியாத எங்களுக்கு மார்க்சியமே தெரியாதுன்னும் இத்தனை நேரமா குத்த வச்சு ஒப்பாரியை வச்சுப்போட்டு

                      இப்ப வந்து

                      ///ஆனால் தொழிலாளியாக இல்லாதவரெல்லாம் தொழிலாளிவர்க்கத்துக்கு பேச கூடாது என்பது தொழிலாளிகளை நிராயுதபாணிகளாக்குவதாகும்
                      இதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள் என்றால்
                      நீங்க கம்யூனிஸ்டுதானா ? என்பதில் பலத்த சந்தேகம் கிளம்புது எனக்கு///

                      எங்களுக்கு அந்த சந்தேகம்ல்லாம் இல்லீங்க நீங்க சத்தியமா கம்யூனிஸ்டு கிடையாது!

        • ஸ்.. அப்பா.. கண்ணக் கட்டுதே !
          நான் என்னங்க சொன்னேன். ஆயிரம் இருந்தாலும் நீங்க நம்ம நேச சக்தி. அதியமான் நம்ம எதிரி. அவருக்கு என்னால பதில் சொல்ல கஷ்டப்பட்டுத்தான் உங்கள கூப்பிட்டால் நீங்க வேற பஞ்சாயத்த கூட்டுறீங்க• வேற வழியில்லாமப் போனதால் சொல்றேன். ரகசியமா காதக் கொடுங்க•. அவரு மூளைல முதலாளித்துவம் இருக்கு.. அதுனால அவருட்ட போராடுவோம்கிறேன். என்ன தோழரே ! அசராம அடிச்சு ஆடுவீங்கனு பார்த்தால் ஆட்டையக் கலைக்கிறீங்களே !
          மார்கசு மார்க்சு னு சொல்றீங்களே. அவரு காரல் மார்க்சா இல்ல அ.மார்க்சா.. இல்ல ஒரு சந்தேகம்..அதாங் கேட்டேன்.
          சிறு வணிகன் யாரு .. தேசிய முதலாளி யாரு .. சிறு விவசாயி யாரு .. கூலி விவசாயி யாருன்னு எல்லாம் வரையறுத்து சொல்லியிருக்கீங்களா ? சொல்லவேயில்ல• நானும் எதாவது கேட்ருப்பேன்ல•.சொல்லுங்க ப்ளீஸ்..
          புரட்சிகர வர்க்கம் என்று வரையறை செய்து விட்டால் அவிங்க ஏன் நேச சக்தியாக இருக்கணும் என எனக்கு புரியவே இல்லை. இப்போ தொழில் பழகுநர் இருக்குறாங்க•. அவங்க தொழில் கத்துக்கிட்ட பிறகும் அவிங்க பழகுநராத்தான் இருக்கணுமா ? இப்போ டிரைவிங் படிச்ச ஒரு க்ளீனர்ரு லாரில ஓடும்போது ஸ்டீரிங்க பிடிச்சுப் பழகுறான்னு வச்சுக்குவோம். அதுக்கப்புறம் அவன் டிரைவர் ஆகிடுவான்லா ? புரிய கஷ்டமா இருக்கா ?

          • சிறு வணிகன் யாரு .. தேசிய முதலாளி யாரு .. சிறு விவசாயி யாரு .. கூலி விவசாயி யாருன்னு எல்லாம் வரையறுத்து சொல்லியிருக்கீங்களா ? சொல்லவேயில்ல• நானும் எதாவது கேட்ருப்பேன்ல•.சொல்லுங்க ப்ளீஸ்..
            —————————————————————

            மணி, என்னா தில்லிருந்தா எங்க அண்ணாத்த கைல இப்படி கேப்பீங்க, அவருக்கு கேக்க மட்டும்தான் தெரியும், பதில் சொல்லத் தெரியாது என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு அவரை அவமானப்படுத்துகிறீர்களா?

            அவர் எவ்வளவு முறை சாட்டில் ஹாய் சொல்லியும், மிஸ்டு கால் கொடுத்தும் இயக்கத்துக்காரவுங்க லைனுக்கே வரல அதனால அண்ணன் வசமா மாட்டிக்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து வைத்துக்கொண்டு அவரை கேவலப்படுத்கிறீர்களா

            பதில் சொல்ல முடியாமல் நெட்டில் தேடி என்ன மேற்கோள் போடறோம்னே தெரியாம அவர்பாட்டுக்கு எதாவுது ஒரு மேற்கோளை வெட்டி ஒட்டுகிறார் என்பதை அறிந்து வைத்துக்கொண்டு அவரை அசிங்கப்படுத்துகிறீர்களா?

            இரத்த ஆறு ஓடும் ஜாக்கிரதை!!!

            • நான் சொன்னது
              //இல்லை சுரண்டலை செய்வது எனது வேலை இல்லை வேலையை செய்வது என்னோட வேலை சுரண்டலை செய்வது நியாயப்படுத்துவது எல்லாம் நீங்க அதாவது உங்க நேச சக்தியான அதியமான் போன்ற சிறு முத்லாளிகள்//

              ஊசி லெனின் அடுத்து கியாதியாகிய நீர் சொன்னது

              //தொழிலாளர்களை சுரண்டி வர காசுலதான் தொழிலாளியை மேய்கிறவனான மேனேஜருக்கு தொழிலாளியை விட கூட சம்பளம்னும், ஓனர் இல்லாத நேரத்தில அந்த சுரண்டலை உங்க முதலாளி சார்பா செய்யறதுதான் உங்க வேலைன்னும், அதுக்குத்தான் உங்களுக்கு சம்பளம்னும் கூட புரியாம பேசிகிட்டு பேசனும்னா ஒன்னு கீழ்பாக்//

              சுரண்டலை செய்யும் முதலாளியின் சாட்டை நான்
              என்றே வைத்து கொண்டு பேசுவோம் நான் பாட்டாளிவர்க்கத்துக்கு போராடுகிறேன்

              கம்யூனிஸ்டுன்னு சொல்லிட்டு இருக்கிற நீயெலாம் ஏன் வெள்ளையன் கு பின்னாடி வாலா நிக்கிற

              அதை சொல்லிடுன்னா பேர மாத்தி மாத்தி ஓடி ஒழிய வேண்டியது இல்லைன்னா மன்னாருத்தனமா காப்பி பேஸ்டு செய்ய வேண்டியது இல்லைன்னா டீ வரலைன்னு காமெடி செய்து உன்னிய காப்பத்திகிவியா

              முன்பே சொன்னமாதிரி உடனே கட்சி பேரை மாத்திட்டு முதலாளிய காப்பாத்துற கட்சின்னு வச்சிக்கவும்

          • //புரட்சிகர வர்க்கம் என்று வரையறை செய்து விட்டால் அவிங்க ஏன் நேச சக்தியாக இருக்கணும் என எனக்கு புரியவே இல்லை. இப்போ தொழில் பழகுநர் இருக்குறாங்க•. அவங்க தொழில் கத்துக்கிட்ட பிறகும் அவிங்க பழகுநராத்தான் இருக்கணுமா ? இப்போ டிரைவிங் படிச்ச ஒரு க்ளீனர்ரு லாரில ஓடும்போது ஸ்டீரிங்க பிடிச்சுப் பழகுறான்னு வச்சுக்குவோம். அதுக்கப்புறம் அவன் டிரைவர் ஆகிடுவான்லா ? புரிய கஷ்டமா இருக்கா ?//

            வணிகர்கள் நேசசக்தி இல்லையா என்ன தோழரே இது ஒருத்தர் நேச சக்திங்கிறார் இன்னொருத்தர் நேசசக்தியாத்தான் இருக்கனுமா ங்கிறார்
            //அவன் டிரைவர் ஆகிடுவான்லா ? புரிய கஷ்டமா இருக்கா //

            சபாஸ் இதைத்தான் சொல்றாங்க அண்ணாச்சி கடையில வேலை பார்த்து இன்னொரு அண்ணாச்ச்சியாவது என்ன தப்புன்னு கேட்பது நல்ல அறிவுப்பூர்மான வாதம்தான் இதல்லவோ மார்க்சியம் இதை போய் தப்புன்னிட்டு

            • ரொம்ப கண்ணக் கட்டுதே..
              இப்போ.. இப்படி வச்சுக்கோங்க .. ஒரு பெரிய விவசாயி கழுத தேஞ்சு கட்டெறும்பானது போல உலகமயத்தால சிறு விவசாயியாக மாறி கூலி விவசாயியா மாறுறாரு.. அதுக்கப்புறம் அவரு ஏன் கூலித்தொழிலாளிக்கு நேச சக்தியா இருக்கணும். அவரே கூலி விவசாயிதானே

  24. /இதுக்கு மேல நீங்க பதில் எழுதினாலும் உங்களுக்கு பதில் எழுதுவது வீண், //

    ஆகா ஊசி என்கிற லெனின் அவர்களே இந்த முடிவுக்கு தாங்கள் வரலாமா ? அப்படி வந்துவிட்டால் இந்த உலகம் திரு லெனினை அவமதித்தாக என்னை இகழுமே அய்யகோ அந்த தீராத பழிச்சொல்லை எப்படி துடைப்பது
    நீங்கள் எனக்கு பதிலளிக வேண்டிய கேள்விகள் ஏராளம் இருக்கும் போது தங்களின் இந்த முடிவு வருந்ததக்கது மிஸ்டர் ஊசி

    • தியாகு நேத்திக்கு நான்….

      ^^^6…… எவ்வளவு படிச்சாலும் ஏறாத மண்டையையும், வினவிடம் செருப்படி வாங்கியதால் அது என்ன எழுதினாலும் எதிர்த்தே தீரவேண்டும் என்ற பகை வெறியும் கொண்ட நீங்கள் என்னதான் செய்யமுடியும் பாவம்.

      இதுக்கு மேல நீங்க பதில் எழுதினாலும் உங்களுக்கு பதில் எழுதுவது வீண், கட்டுரையில் எழுதப்பட்டவைகளை நீங்களோ அல்லது உங்களது புதிய தோழர்களோ (ஐயோபாவம்) மறுத்து வால்மார்ட் என்பது பாட்டாளிகளுக்கு எப்படி நல்லது. சிறு வணிகர்கள் ஒழிவது புரட்சிக்கு எப்படி நல்லது என்ற உங்கள் நிலைப்பாட்டை விளக்கி எழுதுங்களேன், அப்போ வச்சுக்கலாம் விவாதத்தை^^7

      இப்படி சொல்லியிருக்கிறேன்.

      தம்பி டீ இன்னும் வரல

    • வருத்தமா மட்டுமில்ல இவிங்கள பார்த்தா எனக்கு ரொம்ப பரிதாபமா இருக்கு சாமி, உங்கிட்ட சிக்கி இவிங்க எப்படி சின்னாபின்னமாகப்போறாங்களோ பாவப்பட்ட பசங்க.

  25. //^^^6…… எவ்வளவு படிச்சாலும் ஏறாத மண்டையையும், வினவிடம் செருப்படி வாங்கியதால் அது என்ன எழுதினாலும் எதிர்த்தே தீரவேண்டும் என்ற பகை வெறியும் கொண்ட நீங்கள் என்னதான் செய்யமுடியும் பாவம்.//

    இதைத்தான் கிரேட் எஸ்கேப் என்பார்கள் நீங்கள் வாழும் லெனின் என்பதை நிருபிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் சிறு முதலாளிகள் பாட்டாளிவர்க்கத்தான்னு நிருவிட்டீங்கன்னா நீங்க லெனிந்தான் மேலே போட்டு இருக்கிற மார்க்ஸ் கருத்துக்களை தூக்கி கடாசிடலாம்

    அப்புறம் வால்மார்ட் வந்தா பாட்டாளிகளுக்கு நல்லதுன்னு நான் எங்கயும் சொல்லவில்லை சார்

    நீங்க பொய் பேசகூடாது அது உங்களுக்கே பெருத்த மதிப்பு குறைவான விடயம்

    • ^^^6…… எவ்வளவு படிச்சாலும் ஏறாத மண்டையையும், வினவிடம் செருப்படி வாங்கியதால் அது என்ன எழுதினாலும் எதிர்த்தே தீரவேண்டும் என்ற பகை வெறியும் கொண்ட நீங்கள் என்னதான் செய்யமுடியும் பாவம்.

      இதுக்கு மேல நீங்க பதில் எழுதினாலும் உங்களுக்கு பதில் எழுதுவது வீண், கட்டுரையில் எழுதப்பட்டவைகளை நீங்களோ அல்லது உங்களது புதிய தோழர்களோ (ஐயோபாவம்) மறுத்து வால்மார்ட் என்பது பாட்டாளிகளுக்கு எப்படி நல்லது. சிறு வணிகர்கள் ஒழிவது புரட்சிக்கு எப்படி நல்லது என்ற உங்கள் நிலைப்பாட்டை விளக்கி எழுதுங்களேன், அப்போ வச்சுக்கலாம் விவாதத்தை^^7

      இப்படி சொல்லியிருக்கிறேன்.

      தம்பி டீ இன்னும் வரல்ல்ல்ல

    • உங்களை பத்தி இவிங்க இன்னும் புரிஞ்சிக்கல சாமி. இந்த நாட்டோட கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள், சில்லரை வர்த்தகர்கள் அனைவரும் ஒரு நாள் உங்களுடைய தத்துவத்தை புரிந்துகொள்வார்கள். நம்முடைய மேண்மைக்காக தான் இவர் இப்படி எழுதியுள்ளார் என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தியே தீரும். அப்போது இவர்கள் தத்துவத்தின் வறுமையில் கிடப்பார்கள். வேறு வழியின்றி உங்களை நாடி வந்தே தீருவார்கள்.

  26. தனது சொந்த அரசியலை விளக்கமளிக்க முடியாமல் ஓடு போறவனுக்கு பெயர்தான் ஓடுகாலி மிஸ்டர் ஊசி

    சோ நீங்க லெனினாக இருக்கனும்னா பேசுங்க அல்லது உங்க சார்பார் யாரையாவது பேச சொல்லுங்க இல்லாட்டினா இனிமேல் கம்யூனிஸ்டுன்னு வெளிய சொல்லிக்காதீங்க கம்யூனிசம் பிழைத்து போகட்டும் 🙂

    • கவலைப்படாதீர்கள் சாமி அத்துடன் மகிழ்ச்சியடையுங்கள். கம்யூனிசம் இனிமேல் இவர்களைப் போன்றவர்களின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாது இவர்களுடைய செயல்களை பார்க்கும் போது அது வரலாற்று இயங்கியல் விதிகளுக்கு முற்றிலும் முரணானது என்று தெரிகிறது. இவர்களுக்கு இயங்கியலும் தெரியவில்லை ஒன்றும் தெரியவில்லை. கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதும், அந்நிய முதலீட்டை எதிர்ப்பதும் அயோக்கியத்தனமான கம்யூனிச திரிபாகும். இவற்றை ஆதரிப்பதன் மூலம் தான் சமூகத்தின் பெரும்பகுதி மக்கள் அவர்களுடைய வர்க்க வாழ்விலிருந்து கீழ் நிலைக்கு இறக்கப்படுவார்கள். உதாரணத்திற்கு அந்நிய மூலதனம் சிறு முதலாளிகளுக்கு ஆப்படித்து ஏகாதிபத்தியத்தின் சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் முகத்திலறைந்து உணர்த்தும். அதன் விளைவாக அவர்கள் பெரும்பாண்மை உழைக்கும் மக்களுடன் இணைவது தவிர்க்கவியலாதது. (இவ்வாறு தான் லெனினே சொல்லியிருக்கிறார்.) ஆக பெரும்பாண்மையாக உள்ள மக்கள் அனைவரும் இணைந்து ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி சோசலிச சமூகத்தை படைப்பார்கள். இப்படி தான் புரட்சிக்கான அணி சேர்க்கை நடைபெறும். இவ்வாறு தான் ஒரு சோசலிச சமூகம் இந்த இயக்க போக்கின் படி தான் அமையும். அதை விடுத்து முதலாளிகளை காக்கத்துடிக்கும் இவர்களோடு கம்யூனிசத்தை ஒப்பிடாதீர்கள். முதலாளிகளை கப்பாற்றத்துடிக்கும் ம.க.இ.க பதிவு படித்த பிறகு சாமி நானே இந்த தத்துவ கண்ணோட்டத்திற்கு வந்தேன். புரட்சி நடந்த பிறகு இது போன்ற போலிகளின் செயல்களை அம்பலமாக்கிய உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் நூல் தொகுதிகளாகவும், நூல் திரட்டுகளாகவும் வெளியிட வேண்டும்.

      • //இவர்களுக்கு இயங்கியலும் தெரியவில்லை ஒன்றும் தெரியவில்லை. கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதும், அந்நிய முதலீட்டை எதிர்ப்பதும் அயோக்கியத்தனமான கம்யூனிச திரிபாகும். இவற்றை ஆதரிப்பதன் மூலம் தான் சமூகத்தின் பெரும்பகுதி மக்கள் அவர்களுடைய வர்க்க வாழ்விலிருந்து கீழ் நிலைக்கு இறக்கப்படுவார்கள். உதாரணத்திற்கு அந்நிய மூலதனம் சிறு முதலாளிகளுக்கு ஆப்படித்து ஏகாதிபத்தியத்தின் சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் முகத்திலறைந்து உணர்த்தும். //

        மிஸ்டர் பாலோவர் முதலில் சொந்தபெயரில் வர தைரியம் இருந்தால் மட்டுமே புரட்சியை பத்தி பேசுவதற்கெல்லாம் மெனக்கெடனும்

        அடுத்து நீங்க நினைக்கிறதெல்லாம் நான் சொன்னதாக சொல்லாதீங்க – அந்நிய மூலதனத்தை ஆதரிக்கனும்னு எங்கயும் சொல்லவில்லை மாறாக அந்நிய மூலதனம் மட்டுமே விவசாயிகளை சுரண்டும் உள்நாட்டு மூலதனம் சுரண்டாது கொஞ்சும் என்கிற வாதமே திரிபுவாதம்

        அடுத்து உள்நாட்டில் இருக்கும் சிறுவணிகர்கள் அழிவது முதலாளித்துவ விதி இல்லைன்னா மார்க்சிய வழியில்அவர்களுக்கு வாழ வழி சொல்வது என்பது அவர்களை குட்டி முதலாளியாக்குவதுதான் என்கிறா திரிபுவாதத்தை எதிர்க்கிறேன்

        வறுமை மிஞ்சினாத்தான் புரட்சின்னு நான் சொல்லல சாமி அப்படி பார்த்தா சோமாலியா இன்னேரம் புரட்சியை செய்திருக்கும்

        • ///உள்நாட்டு மூலதனம் சுரண்டாது கொஞ்சும் என்கிற வாதமே திரிபுவாதம்///

          தியாகுனாலே தத்துவம் என்பதை போல மூலதனம்னாலே சுரண்டல் தானே இதிலென்ன சந்தேகம். நானும் அதையே தான் சொல்றேன். ஆனா இவிங்க எழுதுன கட்டுரைல மட்டும் அந்த வரியை காணோம் சாமி ஆனாலும் சாமி சொன்ன மாதிரி இவிங்க திரிபுவாதிங்க தான்.

  27. தியாகு – பு #லி# பாத்திருக்கீங்கலா. புலிக்குமா , தொவக்குமா , தண்ணியில் கரயுமா

    nammoor karanunga pondatti melaum muthaleedu panna xmarttunnu oru caompany varuthamulla…………………..

  28. தியாகு,

    நீங்கள் உளருவதற்கெல்லாம் இடையிடையே ‘பொருள்முதல்வாதம்’ ‘இயங்கியல்’ ‘மார்க்ஸ்’ ‘மூலதனம்’ என்றெல்லாம் மானே தேனே போட்டு எழுதுவதைக் கண்டு பெம்முகுட்டி போன்ற ஏதுமறியாத ஏமாளிகள் (கோமாளிகள்!?) வேண்டுமானால் அசந்து போகலாம். But Sorry, இங்கே அந்தப் பருப்பு வேகாது.

    புதியஜனநாயகம் பற்றி நீங்கள் புரிந்து கொண்டிருக்கும் லட்சணத்தைப் பார்த்தேன் – தியாகுத்தனம் Allways rocks :). ஆனாலும் அதை இங்கே விளக்கிப் பேசும் உத்தேசமில்லை – ஏனெனில் அது இக்கட்டுரையின் பேசுபொருள் இல்லையென்பதோடு உங்கள் மரமண்டைக்குள் ஒரு விஷயத்தை அடித்து இறக்குவதற்கு எனக்குத் தெம்பில்லை என்பதும் ஒரு காரணம். 🙁

    போகட்டும், அண்ணாச்சிகள் முதலாளிகளாக வளருவதை ஊக்குவிக்கும் ம.க.இ.க என்று நீங்கள் எழுதியது / இங்கே பேசிக் கொண்டிருப்பது போன்ற லூசுத்தனமான வாதங்கள் ஒன்றும் புதிதில்லை. இதே போன்ற தியாகுத்தனமான குற்றச்சாட்டு ஏற்கனவே தோழர் வி.இ. லெனின் மேல் சுமத்தப்பட்டுள்ளது தான். அதை அவர் நாலாங்கிளாஸ் பொடியனின் உளறல் என்று புறங்கையால் ஒதுக்கித் தள்ளியும் இருக்கிறார். No worries pal, ‘நாலாங்கிளாஸ் பொடியன்’ என்கிற பெரிய அந்தஸ்தையெல்லாம் உமக்கு நான் வழங்கப் போவதில்லை.

    நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்தில் விவசாயிகள் பிரபுக்களிடமிருந்து நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கைகளை போல்ஷ்விக் கட்சி ஆதரித்த போது அதை விமர்சிக்கும் “புரட்சிகர ருஷ்யா” ஏடு, இதனால் வி.இ. லெனின் சுய உணர்வில்லாமலேயே முதலாளித்துவ விவசாயத்தின் அநேகமாக வளர்ச்சியடைந்த வடிவங்களின் அழிவுகளின் மீது குட்டி முதளாலித்துவ (சிறு உடைமை வடிவம்) பொருளாதாரத்தைக் கட்டுவதற்கு உதவி செய்கிறார். இது மார்க்சியத்தின் ( தனிஉடைமையை ஒழிப்பது) நிலையிலிருந்து பின் வாங்குவது இல்லையா? என்கிறது புரட்சிகர ருஷ்யா ஏடு.

    பாருங்களேன், ரஷ்யாவில் கூட தியாகுக்கள் ‘புரட்சி’ ‘மார்க்சியம்’ என்று மானே தேனே போட்டு தான் எழுதுகிறார்கள். போதாதற்கு “புரட்சிகர ருஷ்யா” என்கிற பெயர் வேறு – உங்களைப் போலவே விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சலம் என்று பெயர் வைப்பதில் அந்தக்கால தியாகுக்களும் கில்லிகளாகத் தான் இருந்துள்ளார்கள்.

    இந்த பாசாங்குக்கும் பம்மாத்துக்கும் செருப்பாலடித்தது போல் “புரோலிட்டாரி” பத்திரிகையில் பதிலளிக்கும் லெனின், பாட்டாளி வர்க்கத்தின் முன் இருக்கும் பிரதான முரண்பாடான பிரபுத்துவ அமைப்பு முறையை வீழ்த்த செயல்தந்திர ரீதியில் சிறு விவசாயிகளோடு பாட்டாளி வர்க்கம் ஐக்கியப் பட வேண்டியதன் அவசியத்தை விளக்கிச் செல்கிறார். அதே பதிலின் ஓரிடத்தில் “ஒரு சிறுகடைக்காரரிடம் நாம் வாங்கிய சாமான்களின் விலையில் எந்த அளவு உழைப்பின் மதிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, எந்தப் பகுதி மோசடி, இதரவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று நாம் கணக்கிட்டுப் பார்க்க முடியாது. என்றும் இதனாலேயே நாம் உழைப்பளவை மதிப்புத்தத்துவத்தைக் கைவிட வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்கிறார்.

    அன்றைக்கு விவசாயத்தில் நிலபிரபுக்களின் செல்வாக்கை வீழ்த்த சிறு உடைமையாளர்களோடு பாட்டாளி வர்க்கம் செயல்தந்திர ரீதியில் ஐக்கியப்பட்டதற்கும் – இன்று பன்னாட்டு ஏகாதிபத்திய மூலதனத்தை எதிர்க்கும் போராட்டத்தில் சில்லறை வணிகர்களோடு நிற்க வேண்டும் என்று நாங்கள் சொல்வதற்கும் சாராம்சத்தில் வேறுபாடில்லை. அன்றைய தியாகு லெனினைப் பார்த்து நீங்கள் உடைமைத்தன்மையை வளர்க்கிறீர்களா என்றதற்கும் இன்றைய தியாகு நீங்கள் அண்ணாச்சிகளை ஆதரிக்கிறீர்களா என்பதற்கும் கூட சாராம்சத்தில் வேறுபாடில்லை தான்.

    இன்றைக்கு நமது நாட்டு மக்களின் முன்னுள்ள இரண்டு பிரதான முரண்பாடுகளில் ஏகாதிபத்திய மூலதனமும் ஒன்று. இதனை எதிர்ப்பவர்களை பாட்டாளி வர்க்கம் தனது தலைமையின் கீழ் அணி திரட்ட வேண்டும் என்பது எமது சொந்தக் கண்டுபிடிப்பல்ல – தோழர் மாவோவின் தலைமையில் சீனத்தில் நடந்ததும் அது தான். மட்டுமின்றி, உலகெங்கும் இருக்கும் மார்க்சிய லெனினியக் கட்சிகள் ஏகாதிபத்திய மூலதனம் மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் செயல்தந்திரமும் இது தான். சும்மா நாலு பல்லு போன கெழ போல்டுகளை கூட்டி வைத்து நாகர்கோயிலின் ஏகாந்தத்தை அனுபவித்துக் கொண்டே கரும் பலகைக்குள் மார்க்சியத்தை அடைத்து விடலாம் என்று மனப்பால் குடிக்கும் நடுத்தரவர்க்க அற்பர்களுக்கு இது தெரிந்திருக்காது தான்.

    நடைமுறையோடு எந்தவிதத்திலும் தொடர்பற்று நடுத்தரவர்க்க உலகத்தில் சஞ்சரிக்கும் பெட்டி பூர்ஷுவா அல்பத்தனம் தரும் திமிரில் இருந்து தான் நடப்பு நிகழ்வுகளை நீங்கள் காணும் அந்தக் கோணல் பார்வை உங்களுக்கு வாய்த்திருக்கிறது. அவற்றை விரித்து எழுதும் எண்ணமில்லை – எனினும் மாதிரிக்குச் சிலவற்றை மட்டுமாவது இங்கே சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் ‘எனக்குப் பதிலளிக்கவில்லை – பயந்து விட்டார்கள்’ என்கிற உங்களின் இறுமாப்புக்குத் தீனி போடுவதாகி விடலாம்.

    1) வால்மார்ட்டின் வருகையால் ரிலையன்ஸோடு அவனுக்கு முரண்பாடு எழும். வால்மார்ட்டின் வருகையை ம.க.இ.க எதிர்ப்பதன் மூலம் ரிலையன்ஸைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள் என்று நீங்கள் உளறியிருப்பது.

    முதலில் வால்மார்ட், கேரிஃபோர் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மல்டி பிராண்டு அங்காடிகள் அமைக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் சதவீதம் 51%. ஆக, அவன் உள்ளே நுழைவதே உள்ளூர் தரகு முதலாளிகளின் கூட்டணியோடு தான். மேலும், ரிலையன்ஸ், பார்த்தி, பிரஸ்டீஜ் போன்ற தரகு முதலாளிகளுக்கு ஏகாதிபத்திய மூலதனத்தோடு இருப்பது பகை முரண் அல்ல – அது நட்பு முரண் தான். ஏகாதிபத்திய மூலதனத்தை அண்டிப்பிழைக்கும் தரகர்கள் தான் இவர்கள் என்பதை எண்ணற்ற உதாரணங்களின் மூலமே புரிந்து கொள்ள முடியும். அல்லது குறைந்தபட்சம் நாளிதழ்களை வாசிக்கும் எவருமே அதைப் புரிந்து கொள்ள முடியும். இன்றைக்குப் பன்னாட்டு ஏகாதிபத்திய மூதலதனத்தின் நுழைவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பது அம்பானியும், மிட்டலும் அல்ல வெள்ளையன் தலைமையிலான சிறு வணிகர்கள் தான். எனில் யாருக்கு யாரோடு முரண்பாடு? இந்த எளிமையான எதார்த்த உண்மைகளைக் கூடப் புரிந்து கொள்ள திறனற்ற செத்த மூளையை வைத்துக் கொண்டு ஏன் மார்க்சியம், இயக்கவியல் என்று உங்களுக்குச் சம்பந்தமில்லாத வார்த்தைகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?

    2) அடுத்து, வால்மார்ட் கேரிஃபோர் ரிலையன்ஸ் போலவே அண்ணாச்சியினுடையதும் ஒரு மூலதனம். ஆக, அதன் தன்னியல்பின் படியே அது சுரண்டித்தான் ஆக வேண்டும். எனவே அண்ணாச்சிகளைக் காப்பாற்றுவது சுரண்டலைக் காப்பாற்றுவது என்கிற உங்கள் கண்டுபிடிப்பு.

    தனியொரு நாடாக இருக்குமென்றால் 21வது பணக்கார நாடாக இருக்கும் வல்லமை கொண்ட வால்மார்ட்டின் ஏகாதிபத்திய மூலதனத்தையும் – வெறும் நான்கைந்தாயிரம் முதலீடு செய்து உழைத்துப் பிழைக்கும் அண்ணாச்சியையும் இணை வைப்பதன் மூலம், எதார்த்தத்தில் அவர்களுக்கிடையேயான முரண்பாட்டைக் காண மறுக்கிறீர்கள். முதலில் வீழ்த்தப்பட வேண்டியது ஏகாதிபத்திய மூலதனமா அண்ணாச்சியின் நாலாயிரமா? எது பிரதான எதிரி? நீங்கள் இவர்களிருவரையும் ஒரே தரப்பில் தள்ளுவதன் மூலம் வால்மார்ட்டின் காலை நக்குகிறீர்கள்.

    அண்ணாச்சிகள் தான் விவசாயிகளை சுரண்டியவர்களா? இதிலிருந்தே நீங்கள் இந்திய சமூகத்தைப் பற்றியும் விவசாயப் பொருளாதாரம் பற்றியும் அறிந்து வைத்துள்ள லட்சணம் தெரிகிறது. விவசாயத்தின் அழிவு பற்றியும் அதன் வரலாற்றுக் காரணங்கள் பற்றியும் இதே கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் அதை தரவுகளோடு மறுத்து விட்டு இந்த வாதத்தை முன் வைத்திருக்க வேண்டும். அந்தளவுக்கு உங்களிடம் அறிவு நேர்மை இல்லையென்பது எமக்குத் தெரியும் என்பதால் உங்கள் பாணியிலேயே கேட்கிறேன், அண்ணாச்சிகள் விவசாயத்தைச் சுரண்டுகிறார்கள் என்று சொன்னதன் மூலம் நீங்கள்,

    அ) பசுமைப்புரட்சியின் மூலம் விவசாயத்தை நாசமாக்கிய காங்கிரசு உள்ளிட்ட ஆளும் தரகு கும்பலின் கூஜா தூக்கி.

    ஆ) மரபீணி மாற்றப் பயிர்களின் மூலம் விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழித்தொழிக்க எத்தனிக்கும் மான்சாண்டோ, கார்கில் போன்ற ஏகாதிபத்திய தேசங்கடந்த தொழிற்கழகங்களின் பூட்ஸ் நக்கி

    இ) மண்ணின் தன்மையை மறுத்து அவுரி பயிரிடச் சொன்ன வெள்ளை ஏகாதிபத்தியத்தின் – மற்றும் – இன்றைக்கு கார்ப்பரேட் விவசாயத்தின் மூலம் மண்ணையும் மக்களையும் பேரழிவுக்குள்ளாக்கி வரும் பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் கொட்டைதாங்கி.

    ஈ) விவசாயத்துக்கான ஒதுக்கீடுகளை ரத்து செய்வது, பாசன வசதிகளைப் புறக்கணிப்பது, விலைச்சலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்துவது, வங்கிக் கடன் போன்ற அத்தியாவசியமான திட்டங்களை வெட்டியெறிந்து விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளிய மன்மோகன் – சிதம்பரம் – மாண்டேக் சிங் உள்ளிட்ட ஆளும் கும்பலின் பாத நக்கி.

    இந்த இடத்தில் நீங்கள் சொன்ன ஒரு பச்சைப் பொய்யைக் குறிப்பிட்டாக வேண்டும். ஏதோ வினவு தோழர்கள் அண்ணாச்சிகளைப் புரட்சிகர வர்க்கம் என்று சொன்னது போலவும், நீங்கள் வந்து கேட்டதால் இல்லையென்று மறுப்பது போலவும் உங்களுக்கு நீங்களே சொரிந்து கொண்டீர்கள். உண்மையில் அவ்வாறு வினவின் எந்தக் கட்டுரையிலுமே அவர்கள் குறிப்பிடவில்லை. ஏகாதிபத்தியத்தையும் அதன் மூலதன தாக்குதலையும் எதிர்க்கும் போது எந்த வகையில் செயல்தந்திர ரீதியிலான ஐக்கியத்தை அமைத்துக் கொள்வது என்கிற ஆசான்களின் வழியையும் பல்வேறு நாடுகளின் புரட்சிகர அமைப்புகளின் அனுபவங்களையும், சொந்த நாட்டின் நிலைமைகளுடனும் ஒட்டியது தான் எமது நிலைப்பாடு.

    இதற்கும் நீங்கள் ‘மானே தேனே’ பாணியில் உளறி வைக்கப் போகிறீர்கள் என்பது தெரியும். ஆனாலும், எனக்கு அவசரமான வேறு வேலைகள் இருப்பதால் இதற்கு மேல் இன்றைக்கு எழுத வாய்ப்பில்லை. நீங்கள் கழிவதைக் கழிந்து விட்டுச் செல்லவும். எனக்கு நேரம் கிடைக்கும் போது முடிந்தால் பதிலிறுப்பேன்.

    உங்களுக்கு ‘எடுத்துக் கொடுக்கும்’ சுசியிலிருந்து அறுந்து விழுந்த வால்களிடம் போய்ச் சொல்லுங்கள் – வால்மார்ட்டின் காலில் விழுந்து நக்குவது தான் பிழைப்பென்றால் மார்க்ஸியத்தின் சொல்லாடல்களுக்குப் பின்னே ஒளிந்து கொண்டு இந்த துரோகத்தனத்தைச் செய்ய வேண்டாமென்று.

    ./மன்னார்சாமி

    • //புதியஜனநாயகம் பற்றி நீங்கள் புரிந்து கொண்டிருக்கும் லட்சணத்தைப் பார்த்தேன் – தியாகுத்தனம் Allways rocks 🙂 . ஆனாலும் அதை இங்கே விளக்கிப் பேசும் உத்தேசமில்லை – ஏனெனில் அது இக்கட்டுரையின் பேசுபொருள் இல்லையென்பதோடு உங்கள் மரமண்டைக்குள் ஒரு விஷயத்தை அடித்து இறக்குவதற்கு எனக்குத் தெம்பில்லை என்பதும் ஒரு காரணம். :(//

      மிஸ்டர் மன்னாரு அவர்களே ,
      ஒரு கட்சியின் அனைத்து போராட்டங்களும் அதன் கட்சிதிட்டத்துடன் ஒத்திசைவாகவும் கட்சி திட்டத்தை முன்னெடுத்து செல்லும்படியும் இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பார்த்தால் சிறுவணிகர்களை ஆதரிக்கும்
      உங்களின் கட்சி திட்டத்தை (புதியஜனநாயக புரட்சி திட்டத்தை ) முன்னெடுத்து செல்வதாக இருக்காது என்கிறேன் நான் இருக்கும் என்றால் முதலில் எப்படி என சொல்லவும் அதை விட்டுவிட்டு சொல்லமுடியாதுன்னு தப்பிச்சு போக முடியாது அன்பரே 🙂

      • தியாகுவுக்கு இன்னும் இயக்கத்து பெரியவாள்கிட்டேருந்து ஈமெயில் வரல, எனவே மன்னாரு அவர்கள் சற்று நேரம் காத்திருக்காமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்டுகிறது

      • பாருங்க மன்னார்சாமி நீங்க சரியா என்னோட பதிவுகளை படிக்கிறதில்லை

        நீங்க சொன்ன இதெற்கெல்லாம்:

        //அ) பசுமைப்புரட்சியின் மூலம் விவசாயத்தை நாசமாக்கிய காங்கிரசு உள்ளிட்ட ஆளும் தரகு கும்பலின் கூஜா தூக்கி.

        ஆ) மரபீணி மாற்றப் பயிர்களின் மூலம் விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழித்தொழிக்க எத்தனிக்கும் மான்சாண்டோ, கார்கில் போன்ற ஏகாதிபத்திய தேசங்கடந்த தொழிற்கழகங்களின் பூட்ஸ் நக்கி

        இ) மண்ணின் தன்மையை மறுத்து அவுரி பயிரிடச் சொன்ன வெள்ளை ஏகாதிபத்தியத்தின் – மற்றும் – இன்றைக்கு கார்ப்பரேட் விவசாயத்தின் மூலம் மண்ணையும் மக்களையும் பேரழிவுக்குள்ளாக்கி வரும் பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் கொட்டைதாங்கி.

        ஈ) விவசாயத்துக்கான ஒதுக்கீடுகளை ரத்து செய்வது, பாசன வசதிகளைப் புறக்கணிப்பது, விலைச்சலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்துவது, வங்கிக் கடன் போன்ற அத்தியாவசியமான திட்டங்களை வெட்டியெறிந்து விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளிய மன்மோகன் – சிதம்பரம் – மாண்டேக் சிங் உள்ளிட்ட ஆளும் கும்பலின் பாத நக்கி.//

        சுமார் நாலைஞ்சு நாளைக்கு முன்னயே உங்க வினவு கட்டுரைக்கு மறுப்பு போடும்போது போட்ட பதில் இதோ :
        ——————————————————-
        http://thiagu1973.blogspot.com/2011/12/blog-post_10.html

        அடுத்து விவசாயி அனுபவிக்கும் பல துன்பத்துக்கும் காரணம் இந்த அரசும் அதன் கொள்கையும் என பட்டியலிடும் நீங்கள் இதையும் கடந்து அவன் உற்பத்தி செய்கிறானே ஒரு பொருள் (விவசாய பொருள் )அதற்கு கூலியை நீங்கள் தூக்கி பிடிக்கும் வியாபாரி விலை நிர்ணயம் செய்ய என்ன தகுதி இருக்கு அந்த பொருளை உற்பத்தி செய்தவனா அவன் அந்த பொருள் மீது கூடுதலாக அவன் செலுத்தும் உழைப்பு ஏதுமின்றி அந்த பொருளை ஒன்றுக்கு மூன்று மடங்காக விலை ஏற்றி விற்பவன் சுரண்டல்காரனா இல்லையா ?

        சுரண்டலை சுரண்டல்னு சொல்லு அது பெரிசா சிறிசா உள்நாடா வெளிநாடா என்பதை பிறகு பார்போம் .ஆக சுரண்டல் இன்றி ஒரு பொருள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தும் நகரவே நகராது என இருக்கும் நிலைமையை பேச, அது உற்பத்தி செய்வதற்கு முன் அந்த உற்பத்தியாளன் படும் கஸ்டங்களை அதாவது பசுமை புரட்சியில் கொட்ட பட்ட உரம் அந்த உரத்தை வாங்க அவன் கொட்டி கொடுக்கும் காசு , அரசு மானியம் இல்லாது ஒழிவது கொள்முதல் விலை குறைவது இதெல்லாம் சந்தை விதிகளால் ; நீர் கட்டி காப்பாத்த முயலும் பெரு வணிகனால்.(அது ரிலையன்ஸோ , கமிசன் மண்டியோ ,வால்மார்ட்டோ) எல்லாப்பயலும் சுரண்டுவது விவசாயிகளைத்தானே நியாயமாகப்பார்த்தால் நீங்கள் அவர்கள் பக்கம் நிற்கவேண்டும்)
        —————————————————————–

        மூளையை திண்ணாதேன்னு என்னை திட்டும் நீங்க உங்க மூளையை உங்களுக்காவது பயன்படுத்த கூடாதா ? 🙂

        • நீர் கட்டி காப்பாத்த முயலும் பெரு வணிகனால்.(அது ரிலையன்ஸோ , கமிசன் மண்டியோ ,வால்மார்ட்டோ) எல்லாப்பயலும் சுரண்டுவது விவசாயிகளைத்தானே நியாயமாகப்பார்த்தால் நீங்கள் அவர்கள் பக்கம் நிற்கவேண்டும்)

          ———————————————————

          குயாதி – ஏண்ணே அவங்கதான் பதிவுல இந்த பெரு வணிகர்கள் டவுசரை கிழிச்சிருக்கீங்களே நீங்க இப்படி சொல்றீங்க

          தியாகு – சந்தைக்கு போணும் ஆத்தா வையும் காசு கொடு

          ———————————————————

          குயாதி – அண்ணே அவங்கதான் இந்த பதிவையே விவசாயிகளுக்கு ஆதரவாத்தேன் எழுதியிருக்காங்க

          தியாகு – சந்தைக்கு போணும் ஆத்தா வையும் காசு கொடு

          ———————————————————

          குயாதி – ஏண்ணே நீங்க அவங்களை ரிலையன்சுக்கு கூஜா தூக்கறாங்கன்னு சொல்லி ஆப்பு வாங்குனப்பறமும் இதையே சொல்றீங்க

          தியாகு – சந்தைக்கு போணும் ஆத்தா வையும் காசு கொடு

          ———————————————————

          குயாதி – ஏன்னே சில்லறை வணிகம்னா அது விவசாயம் மட்டுமில்லன்னு சொல்லியும் இன்னும் இதையே சொல்றீங்களே

          தியாகு – சந்தைக்கு போணும் ஆத்தா வையும் காசு கொடு

          ———————————————————

          குயாதி – ஏண்ணோவ், அவங்கதான் பதிவிலேயே இந்த ஒட்டை வாதத்துக்கு பதில் சொல்லியிருக்காங்களே, நீங்க அதையே படிக்காம கேள்வி மட்டும் கேட்டுகிட்டிருகீங்க

          தியாகு – சந்தைக்கு போணும் ஆத்தா வையும் காசு கொடு

          ———————————————————

          குயாதி – ஏண்ணே நீங்கதேன் இங்க வால்மார்டுக்கு ஆதரவா பேசிகிட்டிருக்கீங்க்னாவது புரியுதா?

          தியாகு – சந்தைக்கு போணும் ஆத்தா வையும் காசு கொடு

          ———————————————————

          குயாதி – ஏன்ணேய்ய்ய், எல்லாத்தும் இதையே சொல்றீங்க…

          தியாகு – டேய் எனக்கு சொல்லிக்கொடுத்ததே இவ்ளோதாண்டா, நானும் எவ்ளோ நேரம்தான் சிரிச்சா மேரியா மூஞ்ச வச்சிகிட்டு இதையே சொல்றது, நாசமா போறவனுங்க போன் போட்டாலும் எடுக்கல.. என்ன என்னதான் சொல்லச்சொல்றே

          குயாதி !@#$?

  29. எங்க தலைவருக்கு நீங்க இவ்வளவு மரியாதை கொடுத்து பதிலளிக்க வேண்டியதில்லை, எமது தானைத்தலைவர் புரட்சித்தளபதி ஒரு பூட்ஸ் நக்கி என்பது அனைவரும் அறிந்ததே.. கூலி விவசாயிகளை சுரண்டும் பணக்கார விவசாயிகளையும் ஐக்கிய முன்னணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று லெனின் கூறிய ஒன்றே இவருக்கு போதுமான பதில்.

  30. வினவு உடைய கொள்கை

    இதோ:
    ———————————————————
    கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்
    வினவு பெயரில் வரும் பின்னூட்டங்களைத் தவிர மற்றவர்களின் கருத்துக்கு அவரவரே பொறுப்பு. அது வினவு கருத்தாக புரிந்து கொள்ள வேண்டாம்
    ஆரோக்கியமான விவாதங்களை வளர்க்கும் பொருட்டே இந்த கொள்கை முடிவுகள். அனைவரும் புரிந்துணர்வுடன் ஆதரிக்குமாறு கோருகிறோம்.

    ————————————————————-

    கீழ்கண்ட மாதிரி தனிநபர் தாக்குதல்கள் செய்தால் தங்களது கொள்கைபடி மட்டறுக்காம
    வெளியிடுவாங்க அதான் கொள்கைக்கும் நடைமுறைக்கும் சம்ப்ந்தமில்லாத வினவுன்னு பதிவுகள் போடவேண்டி இருக்கு
    —————————

    1உள்ளிட்ட ஆளும் தரகு கும்பலின் கூஜா தூக்கி.

    2. பூட்ஸ் நக்கி

    3.பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் கொட்டைதாங்கி.

    4.மன்மோகன் – சிதம்பரம் – மாண்டேக் சிங் உள்ளிட்ட ஆளும் கும்பலின் பாத நக்கி.

    ஆகவே வினவு உங்க கொள்கை லட்சணத்தை சரிபார்க்கவும்

    விவாதம் செய்ய துப்பில்லாத தனத்தை இப்படி எல்லாம் வெளிகாட்டும் உங்களது கொள்கை மீறிய செயலை சீர்தூக்கி பார்க்கவும்

    • தியாகுவுக்கு இன்னும் இயக்கத்து பெரியவாள்கிட்டேருந்து ஈமெயில் வரல, எனவே இது போன்று எதாவது புலம்பிக் கொண்டிருப்பார் வாசகர்காள் சற்று நேரம் காத்திருக்காமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்டுகிறது

  31. =========வர்க்கங்களுக்கிடையே யான உறவுகளை

    கறாராகவும் துல்லியமாகவும் ஒவ்வொரு வரலாற்று

    நிலைமைக்கும் தனிசிறப்பாக உள்ள ஸ்தூலமான

    நிகழ்வுகளை துல்லியமாக வரையறுக்க வேண்டும்
    -===============
    ஏன் என்றால் செயலுக்கான வழிகாட்டியாக தத்துவம்

    இருக்க வேண்டும் வறட்டு சூத்திரமாக அல்ல

    சரி ஸ்தூலமான நிலமையை துல்லியமா பார்க்க

    சொல்கிறார் லெனின் என்றால் நீங்க எப்படி பார்க்கிறீங்க

    // “புரோலிட்டாரி” பத்திரிகையில் பதிலளிக்கும்

    லெனின், பாட்டாளி வர்க்கத்தின் முன் இருக்கும்

    பிரதான முரண்பாடான பிரபுத்துவ அமைப்பு முறையை

    வீழ்த்த செயல்தந்திர ரீதியில் சிறு விவசாயிகளோடு

    பாட்டாளி வர்க்கம் ஐக்கியப் பட வேண்டியதன்

    அவசியத்தை விளக்கிச் செல்கிறார். //
    இதை நான் மறுக்கவில்லை. பிரதான முரண்பாடான

    பிரபுத்துவ அமைப்பு முறை இருக்கும் போது

    செயல்தந்திர ரீதியில் சிறு விவசாயிகளோடு பாட்டாளி

    வர்க்கம் ஐக்கியப் பட வேண்டும். ஆனால் இந்தியாவில்

    பிரதான முரண்பாட்டாக பிரபுத்துவ அமைப்பு முறை

    இல்லாத போதும் சிறுவிவசாயிகள் மட்டுமல்ல

    அனைத்து விவசாயிகளுடனும் செயல்தந்திர ரீதியில்

    ஐக்கியப் பட வேண்டும் என்று கூறித்தான் புதிய

    ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டும் என்று கூறுகிறீர்கள்.

    விவசாயிகள் புதிய ஜனநாயகப் புரட்சியின் நேசசக்தி

    என்று சொல்லவில்லை என்று

    சொல்லிவிடாதீர்கள்-சந்தேகமிருந்தால்

    புரட்சித்திட்டத்தை இன்னொரு முறை படித்துப்

    பாருங்கள்.

    ஆக உங்களது புதிய ஜனநாயகப் புரட்சியில்

    விவசாயிகளும் நேசசக்தி (அல்லது பிரதான சக்தி).
    அதே சமயம் //அன்றைக்கு விவசாயத்தில்

    நிலபிரபுக்களின் செல்வாக்கை வீழ்த்த சிறு

    உடைமையாளர்களோடு பாட்டாளி வர்க்கம் செயல்தந்திர

    ரீதியில் ஐக்கியப்பட்டதற்கும் – இன்று பன்னாட்டு

    ஏகாதிபத்திய மூலதனத்தை எதிர்க்கும் போராட்டத்தில்

    சில்லறை வணிகர்களோடு நிற்க வேண்டும் என்று

    நாங்கள் சொல்வதற்கும் சாராம்சத்தில் வேறுபாடில்லை.

    // என்று கூறி சில்லறை வணிகர்களும் நேசசக்தி

    என்கிறீர்கள். சில இடங்களில் ஒட்டுமொத்தமாக

    வணிகர்களுக்கே கூட வக்காலத்து வாங்குகிறீர்கள்.

    உங்களின் ஒரு நேசசக்தியாகியாகிய விவசாயியின்

    உற்பத்திப் பொருளை -கமிஷன் மண்டி

    மொத்தவியாபாரி(தேசிய முதலாளி) அடிமாட்டு

    விலைக்கு வாங்கி ஒரு கமிஷன் வைத்து – இன்னொரு

    மொத்த வியாபாரிக்கு (அவரும் தேசிய முதலாளியே)

    விற்று அவர் ஒரு கூடுதல் விலை வைத்து -ஆலை

    முதலாளிகளுக்கு-அவர் அரிசி ஆலை வைத்திருக்கும்

    சிறு முதலாளியாகவோ பஞ்சாலை வைத்திருக்கும்

    பெரிய முதலாளியாகவோ(இவர்களும் தேசிய

    முதலாளிகளே) உள்நாட்டு, வெளிநாட்டு பன்னாட்டு

    பகாசுர முதலாளியாகவோ இருக்கலாம்-விற்று ஆலைப்

    பொருளாக (வெள்ளையன் போன்ற)மொத்தச்சில்லறை

    வணிகர்கள் கைக்கு வந்து அவர்கள் அப்பொருளின்

    மதிப்பைக்கூட்ட எந்த உழைப்பையும் செலுத்தாமல் அதன்

    விலையை மட்டும் ஏற்றி -சில்லறை வணிகர்களிடம்

    விற்று-அச்சில்லறை வணிகர்கள் அப்பொருளின்

    மதிப்பைக்கூட்ட எந்த உழைப்பையும் செலுத்தாமல் அதன்

    விலையை மட்டும் ஏற்றி -பெரும்பான்மை உழைக்கும்

    மக்களாகிய தொழிலளர்கள் சிறுவிவசாயியையும்

    உள்ளடக்கிய நுகர்வோருக்கு அதிகவிலைக்கு விற்கும்

    இந்த முதலாளித்துவச் சங்கிலியில் முழுச்சுரண்டலுக்கு

    ஆளாகும் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும்

    அவர்களைச் சுரண்டும் முதலாளித்துவச் சங்கிலியில்

    உள்ள வணிகர்கள் எப்படி நேசசக்தி ஆகமுடியும்.

    மாவோ வணிகர்களை நேசசக்தி என்று சொன்ன

    காலகட்டத்தில் சீனாவில் விவசாயிகளுக்கும்

    வணிகர்களுக்கும் இப்படியொரு முரண்பாடு

    இருக்கவில்லை. விவசாயிகளின் உற்பத்தி தன்னிறைவு

    பெற்ற கிராமப் புற நுகர்வைத்தாண்டி வணிகர்களின்

    வணிகப் பொருளாகவில்லை. இந்தியாவில் அதை

    காப்பியடித்து விவசாயியும் வணிகரும் நண்பர்கள் என்று

    சொல்லிவிட்டு நடைமுறையில் விவசாயிகள்

    இதுநாள்வரை கமிஷன் மண்டி -மொத்த‌வணிகர்களால்

    சிரண்டப் பட்டுக் கொண்டிருந்த போது இத்தனை

    உணர்ச்சிவசப்பட்டு போராடாத நீங்கள் இப்போது இந்த

    கமிஷன் மண்டி -மொத்த‌வணிகர்களுக்குப் போட்டியாக

    ரிலயன்ஸ் வந்த போதும் வால்மார்ட் வருகிற போதும்

    வீறுகொண்டு எழுவதில் இருந்தே உங்களது

    குட்டிமுதலாளித்துவ வர்க்க உணர்வு தெரிகிறது

    பிறகு (ஏற்கனவே போட்ட இரண்டு கமெண்டுகளையும்

    தொகுத்து தருகிறேன்)

    நீங்க சொன்ன இதெற்கெல்லாம்:

    //அ) பசுமைப்புரட்சியின் மூலம் விவசாயத்தை

    நாசமாக்கிய காங்கிரசு உள்ளிட்ட ஆளும் தரகு கும்பலின்

    கூஜா தூக்கி.

    ஆ) மரபீணி மாற்றப் பயிர்களின் மூலம்

    விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழித்தொழிக்க

    எத்தனிக்கும் மான்சாண்டோ, கார்கில் போன்ற

    ஏகாதிபத்திய தேசங்கடந்த தொழிற்கழகங்களின் பூட்ஸ்

    நக்கி

    இ) மண்ணின் தன்மையை மறுத்து அவுரி பயிரிடச்

    சொன்ன வெள்ளை ஏகாதிபத்தியத்தின் – மற்றும் –

    இன்றைக்கு கார்ப்பரேட் விவசாயத்தின் மூலம்

    மண்ணையும் மக்களையும் பேரழிவுக்குள்ளாக்கி வரும்

    பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் மற்றும் உள்நாட்டு தரகு

    முதலாளிகளின் கொட்டைதாங்கி.

    ஈ) விவசாயத்துக்கான ஒதுக்கீடுகளை ரத்து செய்வது,

    பாசன வசதிகளைப் புறக்கணிப்பது, விலைச்சலுக்கான

    குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்துவது,

    வங்கிக் கடன் போன்ற அத்தியாவசியமான திட்டங்களை

    வெட்டியெறிந்து விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளிய

    மன்மோகன் – சிதம்பரம் – மாண்டேக் சிங் உள்ளிட்ட

    ஆளும் கும்பலின் பாத நக்கி.//

    சுமார் நாலைஞ்சு நாளைக்கு முன்னயே உங்க வினவு

    கட்டுரைக்கு மறுப்பு போடும்போது போட்ட பதில் இதோ

    :
    ——————————————————-
    http://thiagu1973.blogspot.com/2011/

    12/blog-post_10.html

    அடுத்து விவசாயி அனுபவிக்கும் பல துன்பத்துக்கும்

    காரணம் இந்த அரசும் அதன் கொள்கையும் என

    பட்டியலிடும் நீங்கள் இதையும் கடந்து அவன் உற்பத்தி

    செய்கிறானே ஒரு பொருள் (விவசாய பொருள் )அதற்கு

    கூலியை நீங்கள் தூக்கி பிடிக்கும் வியாபாரி விலை

    நிர்ணயம் செய்ய என்ன தகுதி இருக்கு அந்த பொருளை

    உற்பத்தி செய்தவனா அவன் அந்த பொருள் மீது

    கூடுதலாக அவன் செலுத்தும் உழைப்பு ஏதுமின்றி அந்த

    பொருளை ஒன்றுக்கு மூன்று மடங்காக விலை ஏற்றி

    விற்பவன் சுரண்டல்காரனா இல்லையா ?

    சுரண்டலை சுரண்டல்னு சொல்லு அது பெரிசா சிறிசா

    உள்நாடா வெளிநாடா என்பதை பிறகு பார்போம் .ஆக

    சுரண்டல் இன்றி ஒரு பொருள் ஒரு இடத்தில் இருந்து

    மற்றொரு இடத்தும் நகரவே நகராது என இருக்கும்

    நிலைமையை பேச, அது உற்பத்தி செய்வதற்கு முன்

    அந்த உற்பத்தியாளன் படும் கஸ்டங்களை அதாவது

    பசுமை புரட்சியில் கொட்ட பட்ட உரம் அந்த உரத்தை

    வாங்க அவன் கொட்டி கொடுக்கும் காசு , அரசு

    மானியம் இல்லாது ஒழிவது கொள்முதல் விலை

    குறைவது இதெல்லாம் சந்தை விதிகளால் ; நீர் கட்டி

    காப்பாத்த முயலும் பெரு வணிகனால்.(அது

    ரிலையன்ஸோ , கமிசன் மண்டியோ

    ,வால்மார்ட்டோ) எல்லாப்பயலும் சுரண்டுவது

    விவசாயிகளைத்தானே நியாயமாகப்பார்த்தால் நீங்கள்

    அவர்கள் பக்கம் நிற்கவேண்டும்)

    அடுத்து

    –//புதியஜனநாயகம் பற்றி நீங்கள் புரிந்து

    கொண்டிருக்கும் லட்சணத்தைப் பார்த்தேன் –

    தியாகுத்தனம் Allways rocks 🙂 . ஆனாலும்

    அதை இங்கே விளக்கிப் பேசும் உத்தேசமில்லை –

    ஏனெனில் அது இக்கட்டுரையின் பேசுபொருள்

    இல்லையென்பதோடு உங்கள் மரமண்டைக்குள் ஒரு

    விஷயத்தை அடித்து இறக்குவதற்கு எனக்குத்

    தெம்பில்லை என்பதும் ஒரு காரணம். 🙁 //

    மிஸ்டர் மன்னாரு அவர்களே ,
    ஒரு கட்சியின் அனைத்து போராட்டங்களும் அதன்

    கட்சிதிட்டத்துடன் ஒத்திசைவாகவும் கட்சி திட்டத்தை

    முன்னெடுத்து செல்லும்படியும் இருக்க வேண்டும் என்கிற

    அடிப்படையில் பார்த்தால் சிறுவணிகர்களை ஆதரிக்கும்
    உங்களின் கட்சி திட்டத்தை (புதியஜனநாயக புரட்சி

    திட்டத்தை ) முன்னெடுத்து செல்வதாக இருக்காது

    என்கிறேன் நான் இருக்கும் என்றால் முதலில் எப்படி என

    சொல்லவும் அதை விட்டுவிட்டு சொல்லமுடியாதுன்னு

    தப்பிச்சு போக முடியாது அன்பரே

    ——-

    வியாபாரி புரட்சிகரமான வர்க்கமில்லை என்பதை ஏற்று

    கொள்ளும் நீங்கள் அவன் நேசசக்தியா இல்லையா

    என்பதை சொல்ல ஏன் இவ்ளோ சுத்தி வளைக்கனும்
    சாராம்சமா ஒன்றா இருக்கு நிலமைகள் என வரலாற்று

    நிலமைகளை காணாமல் கண்ணை மூடிக்கனும்

    சோ சேட் மிஸ்டர் மன்னாரு

    • ஹையா ஜாலி, தியாகுவின் இடைவிடாத முயற்சியின் பலனாக இயக்கத்துகாரவுக்கிட்டேறுந்து இமெயில் வந்துட்டிது,,,

      ஆனா தியாகு அண்ணே, காப்பி பேஸ்டு பண்ணும் அவசரத்துல பார்மேட்டிங்க மறந்திட்டீங்களே…

    • அண்ணே நீங்க ரொம்ப படிச்சவரு போலிருக்கு. மன்னாரு கிடக்கட்டும். வால்மாட்ட ஆதரிக்கும் புரட்சி லிஸ்டுல நீங்க எந்த சக்தி.

    • //இந்தியாவில் பிரதான முரண்பாட்டாக பிரபுத்துவ அமைப்பு முறை இல்லாத போதும் சிறுவிவசாயிகள் மட்டுமல்ல அனைத்து விவசாயிகளுடனும் செயல்தந்திர ரீதியில்
      ஐக்கியப் பட வேண்டும் என்று கூறித்தான் புதிய ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டும் என்று கூறுகிறீர்கள்//

      இந்தளவுக்கு தத்தியாய் இருந்தால் நான் என்ன செய்ய முடியும்? 🙁 நான் சொல்லியிருப்பது பன்னாட்டு ஏகாதிபத்திய மூலதனத்துக்கு எதிரான அணிசேர்க்கையைப் பற்றி. எதிரிக்கு எதிரான அணிசேர்க்கையில் யார் நேசசக்தியாக இருக்கலாம் என்பதற்கு தோழர் வி.இ. லெனின் காட்டிய வழியை உதாரணத்தை காட்டினால் கூட புரிந்து கொள்ள முடியவில்லையா?

      //அதிகவிலைக்கு விற்கும் இந்த முதலாளித்துவச் சங்கிலியில்//

      இந்த சங்கிலியில் தெருமுக்கு அண்ணாச்சியோடு வால்மார்ட் / கேரிஃபோர் / ரிலையன்ஸ் கும்பலும் இணைவைக்க முடியாது / கூடாது என்பதற்கு நிறைய உதாரணங்களோடு எழுதினேன். வால்மார்ட்டின் மூலதன பலமும் அண்ணாச்சியின் மூலதன பலமும் ஒன்று என்பதை தரவுகளோடு ( Statistics man… statistics…!) மறுத்திருந்தால் பரவாயில்லை. இத்தனைக்கும் பிற நாடுகளின் அனுபவம் என்னவென்பது பதிவில் தமிழரசன் எழுதியிருக்கிறார். அங்கெல்லாம் சிறுகடைகள் ஒழிந்ததோடு விவசாயியும் கசக்கிப் பிழியப்பட்டார் என்பதற்கு தரவுகள் கொடுத்திருக்கிறார். இன்னும் வேண்டுமென்றால் கஃபில்லாவில் வந்திருந்த ஷங்கர் கோபாலகிருஷ்ணனின் கட்டுரையையும் ரெஃபர் செய்து கொள்ளலாம். இதையெல்லாம் தரவுகளோடு மறுத்து விட்டு இப்படி உளறிக் கொட்டினால் பரவாயில்லை. சும்மா திரும்பத்திரும்ப எந்த ஸ்டேடிஸ்டிக்ஸும் இன்றி பேசினால் என்ன செய்வது? 🙁

      //சிறுவணிகர்களை ஆதரிக்கும் உங்களின் கட்சி திட்டத்தை (புதியஜனநாயக புரட்சி
      திட்டத்தை ) முன்னெடுத்து செல்வதாக இருக்காது என்கிறேன் //

      இதற்காகவும் தான் தோழர் வி.இ லெனின் முதலாளித்துவத்தின் ஆரம்பக்கூறான சிறு உடைமையை ஊக்குவித்ததையும் தோழர் மாவோவின் உதாரணத்தையும் கொடுத்திருந்தேன். ஏகாதிபத்திய மூலதனத்துக்கெதிரான அணிசேர்க்கையில் யார் யாரெல்லாம் நேச சக்தியென்பதையும் தலைமை பாத்திரம் வகிப்பது யாரென்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.

      அதையும் தர்க்கப்பூர்வமாக / தரவு ரீதியாக மறுத்துரைக்காமல் திரும்பவும் கைய புடிச்சி இழுத்தியா என்றால் என்ன செய்வது? 🙁

      //அவன் நேசசக்தியா இல்லையா என்பதை சொல்ல ஏன் இவ்ளோ சுத்தி வளைக்கனும் //

      நான் எங்கே சுற்றி வளைத்தேன்? 🙁

      நீங்கள் ஒப்பிட்டுப் புரிந்து கொள்வீர்கள் என்று உங்கள் மூளை மேல் அதீத நம்பிக்கை வைத்த என்னை…… கிர்ர்ர்ர்ர்ர்ர்…

      இதற்கு மேல் உங்களிடம் சரக்கு இல்லை என்பது தெரிகிறது. இனி வாரம் ஒருமுறை இந்தப் பதிவைத் திறந்து உங்கள் உளரல்களுக்கு எனது முந்தைய பதிலில் இருந்தே கட் பாப்பி பேஸ்ட் செய்தாலே போதும் 🙂

      ஊசி,

      முக்காலமும் உணர்ந்த ஞானியய்யா நீர் 🙂

        • ஹிஹி, பதில் சொல்லாம தல தியாகுவின் முன்வாயும் பின்வாயும் அடைபடும் போது ஒடனே எஸ்கேப்பு எஸ்கேப்புன்னு எஸ்கேப்பு ஆவதும் அப்புறம் இயக்கத்து காரவங்க கிட்ட நாய் படாத பட்டு பதில் வாங்கி இங்க ஒட்டறதும் எங்களுக்கு பழகிப்போச்சு… உங்களுக்கு??? அதாம்பா இயக்கத்து காரவுகளே ஒங்கத்தான்

  32. தியாகு ஐ எல்லாரும் சேர்ந்து குழப்புறீங்க•. அவரு தெளிவாத்தான் கேட்கிறாரு.. தெரியலன்னா பரவாயில்ல•. நேச சக்தி யாருன்னு சொல்ல மாட்டேன் அப்படின்னு இன்னும் திருவாய அவரு தொறக்கலியே..

  33. தோழர் மணி எனக்கு சப்போர்ட் செய்வதற்கு நன்னி ஆனால் உட்கட்சியில் உங்களுக்கு பிரச்சனை வந்துட போகுது 🙂

    • பாத்தீங்களா மணி, நீங்க அவரை கலாய்பது கூட தெரியாத வெள்ளை மனம் படைத்த வேந்தன் எங்கள் தியாகு..

  34. அலோ நான் வெள்ளையன் கடையில் வேலை பார்க்கும்
    குப்பாண்டி பேசுறேன்

    உங்க நேசசக்தியான வெள்ளையன் எனக்கு esi pf
    பிடிக்கிறதில்லை (violation on ESI act & PF ACT)

    என்னை ஒரு 10 வயசில் இருந்து வேலைக்கு வச்சிருக்காரு (child labour )

    எங்க கடையில் குடிநீர் இல்லை (shopper act )

    எங்களை சங்கமா சேர விடுவதில்லை (indian trade union act)

    நீங்களும் கம்யூனிஸ்டு கட்சிதான்னு கேள்வி பட்டோம்
    எங்களுக்காக போராடுவீர்களா ?

    -கண்ணீருடன் குப்பாண்டி

    • தியாகண்ணே தியாஆஆஆகு அண்ணே, மேல அவர் ஏற்கனவே பதில் போட்டாச்சு… படிச்சு பாத்து ஜவுண்டு விடப்பிடாதா..

      ஏண்ணே இப்படி வாயை குடுத்து குடுத்து அத்த புண்ணாக்கிகிறீங்க..

  35. அய்யா! நான் சின்ன சின்ன கடைங்களெல்லாம் பிச்ச எடுக்குறவய்யா. அதவச்சுதான் என் பொழப்பே ஓடுது. துரைமாருவ நம்ம நாட்டுக்கு கடை தொறக்க வற்ராங்கன்னும் வந்தா சின்ன கடைங்கள்லாம் மூடிறுவாய்ங்கன்னு சொல்லுறாங்க. அப்படி நடந்தா மொத்த சின்ன கடைங்கெல்லயும் கலெடான காச நம்ம வால்மாட் தொரை கொடுப்பாரய்யா!

    • /அப்படி நடந்தா மொத்த சின்ன கடைங்கெல்லயும் கலெடான காச நம்ம வால்மாட் தொரை கொடுப்பாரய்யா!//

      அய்யா அல்லாபிச்சை உன்னை போல உழைக்காம பிச்சை எடுத்து பிழைப்பவர்களுக்கு சுரண்டி பிழைப்பவர்க்குன்னே சங்கம் நடத்திட்டு சிலபேர் இருக்காக அவங்கிட்ட கேட்டீங்கன்னா உமக்கும் சங்கம் நிச்சயம் ஏன்னா உனது மூலதனம் மிக குறைவு அதான் சொன்னேன்

      • நல்லா கேட்டுக்க அல்லாபிச்சை அண்ணனுக்கு பிச்சை எடுத்து அனுபவம் ஜாஸ்தி… அட அறிவுப்பிச்சையை சொன்னேம்பா 🙂

  36. //உதாரணத்தையும் கொடுத்திருந்தேன். ஏகாதிபத்திய மூலதனத்துக்கெதிரான அணிசேர்க்கையில் யார் யாரெல்லாம் நேச சக்தியென்பதையும் தலைமை பாத்திரம் வகிப்பது யாரென்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.அதையும் தர்க்கப்பூர்வமாக / தரவு ரீதியாக மறுத்துரைக்காமல் திரும்பவும் கைய புடிச்சி இழுத்தியா என்றால் என்ன செய்வது?
    ——————-
    நம்ம மன்னாரு அண்ணாச்சிக்கு ஒண்டுமே விசயம் புரியலை அல்லது அவரது மண்டைக்குள்ள மசாலா
    ஏதுமில்லை என்பதை நான் சொல்ல வேண்டியதில்லைசிறு வியாபாரிகள் அழிவது முதலாளித்துவ விதிகளின் படின்னு நான் சொன்னதும் துள்ளி குதித்தார் இறக்கமற்ற பாசிஸ்டு என்றார்

    நாம் மார்க்ஸ் கொட்டேசனை போட்டதும் அதே துள்ளளுடன் வந்து லெனின் நிலபிரபுவை எதிர்க்கும்
    போது நிலங்களை பிரித்து கொடுப்பதை எதிர்த்தவர்களை என்னுடன் ஒப்பிட்டார் மன்னாரு இதன் மூலம் அவர் சிறு மூலதனத்தை ஆதரிக்கிறார் என்று கொண்டால் அதற்கு நான் போட்ட பதில்

    //இதை நான் மறுக்கவில்லை. பிரதான முரண்பாடான பிரபுத்துவ அமைப்பு முறை இருக்கும் போது
    செயல்தந்திர ரீதியில் சிறு விவசாயிகளோடு பாட்டாளி வர்க்கம் ஐக்கியப் பட வேண்டும். ஆனால் இந்தியாவில் பிரதான முரண்பாட்டாக பிரபுத்துவ அமைப்பு முறை இல்லாத போதும் சிறுவிவசாயிகள் மட்டுமல்ல அனைத்து விவசாயிகளுடனும் செயல்தந்திர ரீதியில் ஐக்கியப் பட வேண்டும் என்று கூறித்தான் புதிய ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டும் என்று கூறுகிறீர்கள்.//

    எங்கைய்யா நிலப்பிரப்புவத்துவ பிரதான முரண்பாடு என கேட்டதும் மன்னாரு சொல்வது :

    //நான் சொல்லியிருப்பது பன்னாட்டு ஏகாதிபத்திய மூலதனத்துக்கு எதிரான அணிசேர்க்கையைப் பற்றி.
    எதிரிக்கு எதிரான அணிசேர்க்கையில் யார் நேசசக்தியாக இருக்கலாம் என்பதற்கு தோழர் வி.இ. லெனின்
    காட்டிய வழியை உதாரணத்தை காட்டினால் கூட புரிந்து கொள்ள முடியவில்லையா?//
    மண்டையில் ஏதுமில்லை என்பதை இதன் மூலம் நாம் நல்லா உணர்ந்து கொள்ளலாம்

    எதிரியே இங்க பிரச்சனையான விசயம் நிலபிரபுவோ

    அல்லது நிலபிரபுத்துவ உற்பத்தி முறையோ இல்லாம இருக்கும் போது இல்லாத எதிரிக்கு அணிசேர்க்கை செய்றாய்ங்கப்பா நல்ல கூத்து இது

    அப்புறம் இந்த அணிசேர்க்கை எப்ப நடக்கனும்னு லெனின் சொல்றார் பாட்டாளி வர்க்கம் திரட்டபட்டிருக்கும் போது (அதாவது லெனினும் மாவோவும் பாட்டாளி வர்க்கத்தை
    அணிசேர்த்து வச்சிகிட்டு மற்ற வர்க்கத்த அணிசேர்க்க முயற்சி செய்தாங்க)

    ஆனா அண்ண இப்பவே அண்ணாச்சிக்கு ஆள் சேர்த்து விடுறாரு இப்ப என்ன நடக்கும்னா ஏற்கனவே
    அணிதிரண்ட அண்ணாச்சிகள் இந்த பாட்டாளிகளை பயன்படுத்திட்டு போயிடுவானுக

    /நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்தில் விவசாயிகள் பிரபுக்களிடமிருந்து நிலங்களை அபகரிக்கும்
    நடவடிக்கைகளை போல்ஷ்விக் கட்சி ஆதரித்த போது அதை விமர்சிக்கும் “புரட்சிகர ருஷ்யா” ஏடு, இதனால் வி.இ. லெனின் சுய உணர்வில்லாமலேயே முதலாளித்துவ விவசாயத்தின் அநேகமாக
    வளர்ச்சியடைந்த வடிவங்களின் அழிவுகளின் மீது குட்டி முதளாலித்துவ (சிறு உடைமை வடிவம்)
    பொருளாதாரத்தைக் கட்டுவதற்கு உதவி செய்கிறார். இது மார்க்சியத்தின் ( தனிஉடைமையை ஒழிப்பது)
    நிலையிலிருந்து பின் வாங்குவது இல்லையா? என்கிறது
    புரட்சிகர ருஷ்யா

    ஏடு…………………………….

    …இந்த பாசாங்குக்கும் பம்மாத்துக்கும் செருப்பாலடித்தது போல் “புரோலிட்டாரி” பத்திரிகையில் பதிலளிக்கும் லெனின், பாட்டாளி வர்க்கத்தின் முன் இருக்கும் பிரதான முரண்பாடான
    பிரபுத்துவ அமைப்பு முறையை வீழ்த்த செயல்தந்திர ரீதியில் சிறு விவசாயிகளோடு பாட்டாளி வர்க்கம்
    ஐக்கியப் பட வேண்டியதன் அவசியத்தை விளக்கிச் செல்கிறார். //

    அவ்வாறு பிரபுத்துவ அமைப்பு முறையை வீழ்த்த செயல்தந்திர ரீதியில் சிறு விவசாயிகளோடு பாட்டாளி வர்க்கம் ஐக்கியப் பட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் போது, நீங்கள் நிபந்தனை இன்றி
    வணிகர்களுடன் ஐக்கியப்பட்டிருப்பதுபோல் லெனின் நிபந்தனை இன்றி சிறு விவசாயிகளோடு பாட்டாளி
    வர்க்கம் ஐக்கியப் பட வேண்டும் என்று சொல்லவில்லை.

    நீங்கள் சொல்லாமல் மறைத்த லெனினது வாசகம்

    இதோ:

    “கூலித் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, இன்றய சமூகத்தின் ஒரு வர்க்கம் என்ற முறையில் அவர்களது நலன்களைப் பாதுகாப்பதற்கு நாம் பொறுப்பேற்கிறோம்; ஏனெனில் அவர்களது வர்க்க இயக்கம் மட்டுமே உண்மையான புரட்சிகர இயக்கம் என்று நாம் கருதுவதால் இதைச் செய்கிறோம். மேலும் அக்குறிப்பிட்ட இயக்கத்தை அணிதிரட்டி வழிகாட்டுகிறோம்-அதனுள் சோசலிச
    உணர்வுநிலையெனும் வெளிச்சத்தைக் கொண்டு செல்கிறோம்.
    விவசாயிகளைப் பொறுத்தவரை, இன்றய சமூகத்தின் ஒரு சிறு நிலஉடமை வர்க்கம் மற்றும் சிறு விவசாய வர்க்கம் என்ற முறையில் அதன் நலன்களைப் பாதுகாப்பதற்கு எந்த வகையிலும் நாம் பொறுப்பேற்க மாட்டோம். இது போன்ற எதுவும் கிடையாது.

    “தொழிலாளர்களின் விடுதலை என்பது தொழிலாளி வர்க்கத்தின் செயலாகவே இருக்க முடியும்”, அதன்
    காரணமாகவே சமூக -ஜனநாயகம் -நேரடியாகவும் முழுமையாகவும் – தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்துகிறது; அதன் வர்க்க
    இயக்கத்துடன் மட்டுமே பிரிக்க முடியாத உடல் உறுப்புப் போன்ற ஒற்றுமையை வேண்டுகிறோம். இன்றய சமூகத்தின் மற்ற அனைத்து வர்க்கங்களும் நட‌ப்பில் இருக்கும் பொருளாதார அமைப்புமுறையின் அடித்தளத்தை கட்டிக் காப்பாற்றுவதற்காகவே
    இருக்கின்றன. அதனாலேயே சமூக- ஜனநாயகம் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் – ஸ்தூலமானதும்
    கராறாக வரையறுக்கப் பட்ட நிபந்தனைகளின் பேரில் மட்டுமே அந்த வர்க்கங்களின் நலன்களை
    பாதுகாப்பதற்கு பொறுப்பேற்க முடியும். உதாரணத்திற்கு, சிறு விவசாயிகள் உள்ளிட்ட சிறு
    உற்பத்தியாளர் வர்க்கம், முதலாளித்துவத்திற்கு எதிரான அதன் போராட்டத்தில் ஒரு பிற்போக்கான

    வர்க்கம். எனவே “முதலாளித்துவத்தின்

    கடுந்தாக்குதலில் இருந்து சிறு-அளவு விவசாயத்தையும் சிறு உடமைகளையும் பாதுகாப்பதன் மூலம்
    விவசாயிகளைக் காப்பாற்ற முயற்சிப்பது சமூக வளர்ச்சியை சீர்குலைக்கும் ஒரு பயனற்ற செயலாகவே
    இருக்கும்; அது முதலாளித்துவத்தின் கீழும் கூட வளமான வாழ்வின் சாத்தியம் பற்றிய மாயையினால்
    விவசாயி வர்க்கத்தை ஏமாற்றுவதாக அர்த்தம்; அது

    தொழிலாளிவர்க்கத்தை பிளவுபடுத்தி, பெரும்பான்மையினரின் இழப்பில் சிறுபான்மையினருக்கு
    தனிச்சலுகை பெற்றதொரு அந்தஸ்தை உருவாக்குவதாக அர்த்தம்.”-lenin

    எதிரிக்கு எதிரி நண்பன் என்றாலும் அதுவும் ஒரு கறாரான சூழலில் நிபந்தனை பேரிலேயே
    அதென்ன நிபந்தனை என்பது மண்டையில் நல்லா ஏத்திக்கனும் நீங்க

    அவனுக்கு அவனது சுகபோக வாழ்வூ நீடித்து கிடைக்குமுனெல்லாம் நம்பிக்கை தரக்கூடாது

    //

    அண்ணாச்சி கடையில் சுரண்டல் இருக்கு ஆனால் சுரண்டப்படுபவனுக்கு முதலாளியாகும் வாய்ப்பு
    இருக்குனு)எழுதி கடுப்பேத்த கூடாது அதாவது வரலாற்று சக்கரத்தை பின்னாடி சுத்தபடாது என்கிறார் மார்க்ஸ்இப்ப என்ன சொல்றார்னா பன்னாட்டு மூலதனம் அதான்

    எதிரி அது எங்கெல்லாம் நாடு நாடா போய் சுரண்டி இருக்கு அதை பாருங்கன்னு சொல்றாரு
    ஹி ஹி இவர் சொல்ற நட்பு சக்தி நாடு நாடா போய்

    சுரண்டுவதையும் கண்டிக்கனும்லஎய்யா மூளையை திங்கிறோம்னு என்மேல குற்றசாட்ட
    நீர் வைக்கலாமாஇப்படி சொல்லும் நீங்க என்னைக்காவது இந்திய
    மூலதனம் அடுத்த நாட்டில் சுரண்டுவதை எதிர்த்து இருக்கீகளா

    அடுத்த நாட்டில் இவன் போய் சுரண்டுவதால் அவன் இங்க வந்து சுரண்டுகிறான் என்கிற சின்ன விசயம் கூட புரியலையா

    சுட்டி வேண்டுமா

    உமக்கு லீவு எல்லாம் தரமுடியாது பதில் சொல்லிட்டு போகவும்
    குறைந்த பட்ச உழைப்பை செலுத்தியாவது (

    கொஞ்சமாவது மூளையை உபயோகித்தாவது )
    மார்க்சியத்தை பேச முயற்சிக்கவும் இப்படி எல்லாம்

    ஓடப்பிடாது

    “நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல
    சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும்
    சக்தி இருந்தால் உம்மை கண்டி சிரிக்கும் சத்திரம்தான்

    உனக்கு இடம் கொடுக்கும் “

    என்கிற பட்டுகோட்டை பாடலை திருப்பி திருப்பி சுழல

    விட்டு நீரே யோசித்து பார்

    பதில் சொல்லமுடியாம ஓடிப்போன ஊசி , மன்னாரு

    எல்லாமே ஒரே பக்கமா சேர்ந்துடுவீங்க போல இருக்கே

    (இதில் ஞானி ஏணின்னு என்னாத்து பில்டப்பு )

    • அண்ணே கேட்டு ரெண்டு நாளாச்சு. வால்மாட்ட ஆதரிக்கும் புரட்சி லிஸ்டுல உங்களுடைய நேச சக்தி யார்?

        • குறைந்த காலத்துக்காவது ஆதரிச்சிக்கிறேன்னு அழுதீங்களே மறந்து போச்சா

          • சுட்டி கொடுங்க மாயாண்டி அண்ணே எந்த இடத்தில் நான் ஆதரிக்கிறேன்னு போட்டு இருக்கேன் பாஸ் வேற எதாவது உளறல் இருக்கா உங்ககிட்ட

            • முதலில் அந்நிய கத்தி சொந்த நாட்டின் பெரு கத்தியுடன் மோதும் சூழலில் ஒப்பீட்டளவில் விவசாயிக்கு கொஞ்சம் கூட கிடைக்கும் என்பதை நீங்கள் மறுக்கிறீர்கள்(குறைந்த அளவுக்கேனும் குறைந்த காலமாவது)

              இது நீங்க எழுதினதுதானே!

              • //முதலில் அந்நிய கத்தி சொந்த நாட்டின் பெரு கத்தியுடன் மோதும் சூழலில் ஒப்பீட்டளவில் விவசாயிக்கு கொஞ்சம் கூட கிடைக்கும் என்பதை நீங்கள் மறுக்கிறீர்கள்(குறைந்த அளவுக்கேனும் குறைந்த காலமாவது)

                இது நீங்க எழுதினதுதானே!
                //

                ஊசி மன்னாரு கியாது அடுத்து மாயாண்டியா

                ஓக்கே

                ஒரு கடைக்காரன் ஏற்கனவே இருக்கிறான் புதிசா ஒரு க்டை வைக்கனும்னா அந்த இடத்தில் குறைத்து கொடுத்துதானே வியாபாரம் பிடிப்பான் இந்த லாஜிக்கெல்லாம் புரியலையா உங்களுக்கு

                அதைப்போல ஏற்கனவே கொள்முதல் செய்யும் அண்னாச்சி அடுத்து ரிலையன்ஸ் என்கிற சந்தை போட்டியில் இவர்களை விட கொள்முதல் விலை அதிகமாக குறைந்த காலத்துக்கேனும் கொடுக்காமல் வால்மார்ட் கொள்முதல் செய்ய முடியுமா ?

      • ஏம்ணே, தியாகு என்ன வச்சிகிட்டா வஞ்சனை செய்யுறாரு.. அவருக்கு அதெல்லாம் சொல்லி கொடுக்கலேண்ணே, நாகர்கோயில் வகுப்புக்கு ஒரு நாப்பது வருசம் கன்டின்யூவா போயி கத்துகிட்டு 2051க்குள்ள சொல்றாறா இல்லயா பாருங்களேன்.. சவாலா சொல்றேன் மத்தபடி அதுவரைக்கும் நீங்க கேட்க வேண்டிய பதில்

        சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு கொடு
        https://www.vinavu.com/2011/12/09/wal-mart-2/#comment-53805

    • ரொம்ப கஷ்ட்டம்…

      தியாகு கேட்கும் ‘என்ன கைய புடிச்சி இழுத்தியா’ இது –

      //எதிரியே இங்க பிரச்சனையான விசயம் நிலபிரபுவோ

      அல்லது நிலபிரபுத்துவ உற்பத்தி முறையோ இல்லாம இருக்கும் போது இல்லாத எதிரிக்கு அணிசேர்க்கை செய்றாய்ங்கப்பா நல்ல கூத்து இது

      //

      நான் முன்பே எழுதியது இது-

      //
      அன்றைக்கு விவசாயத்தில் நிலபிரபுக்களின் செல்வாக்கை வீழ்த்த சிறு உடைமையாளர்களோடு பாட்டாளி வர்க்கம் செயல்தந்திர ரீதியில் ஐக்கியப்பட்டதற்கும் – இன்று பன்னாட்டு ஏகாதிபத்திய மூலதனத்தை எதிர்க்கும் போராட்டத்தில் சில்லறை வணிகர்களோடு நிற்க வேண்டும் என்று நாங்கள் சொல்வதற்கும் சாராம்சத்தில் வேறுபாடில்லை. அன்றைய தியாகு லெனினைப் பார்த்து நீங்கள் உடைமைத்தன்மையை வளர்க்கிறீர்களா என்றதற்கும் இன்றைய தியாகு நீங்கள் அண்ணாச்சிகளை ஆதரிக்கிறீர்களா என்பதற்கும் கூட சாராம்சத்தில் வேறுபாடில்லை தான்.

      இன்றைக்கு நமது நாட்டு மக்களின் முன்னுள்ள இரண்டு பிரதான முரண்பாடுகளில் ஏகாதிபத்திய மூலதனமும் ஒன்று. இதனை எதிர்ப்பவர்களை பாட்டாளி வர்க்கம் தனது தலைமையின் கீழ் அணி திரட்ட வேண்டும் என்பது எமது சொந்தக் கண்டுபிடிப்பல்ல – தோழர் மாவோவின் தலைமையில் சீனத்தில் நடந்ததும் அது தான். மட்டுமின்றி, உலகெங்கும் இருக்கும் மார்க்சிய லெனினியக் கட்சிகள் ஏகாதிபத்திய மூலதனம் மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் செயல்தந்திரமும் இது தான் //

      ஒப்பீடு சார் ஒப்பீடு…..

      எதிரிக்கு எதிரான அணிசேர்க்கை பற்றிய ஒப்பீடு.

      இதற்கு மேலும் நான் எப்படி விளாவரியாக விளக்குவது? நான் தமிழில் தானே பேசுகிறேன்? 🙁

      • //நான் தமிழில் தானே பேசுகிறேன்//

        அவரு புரிஞ்சிக்கிறது ஜெர்மனி மொழியில. நான் என்ன நினைக்கிறேன்னா தியாகு மார்க்சியத்த பொஸ்தகுத்துல தேடுறாருன்னு நினைக்கிறேன்.

  37. இப்படித்தான் தியாகு சந்தைக்கு போவணும் ஆத்தா வையும் காசு குடு…, சந்தைக்கு போவணும் ஆத்தா வையும் காசு குடுன்னு பாயை பிராண்டுவாரா… ஏதுடா இது இப்படி பிராண்டினா எங்காயவது தண்ணி பீச்சியடிக்கப்போவுதுன்னு எல்லாரும் ஓடுவாங்களா, ஒடனே தியாகு அண்ணன் பாத்தீங்களா எல்லாரும் ஓடிட்டாங்கன்னு சீன் போடுவாரா…

    ஏண்டா இந்த லூசுப்பயலை பத்தி சொல்லுத, அதான் வருசக்கணக்கா பாக்குற கதைதானேங்கறீங்களா.. அதுவும் சரிதான், ஆனா ஒரு சின்ன வித்தியாசம் என்னான்னா லூசுத்தனம்னு இதை சொல்றது கிளிஷேவாகி இப்போ தியாகுத்தனம்னே பெயர்பெற்று விளங்குகிறது.

    தியாகு அண்ணே, நீங்க ஆரம்பிங்க…

    சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு கொடு… ஒருதரம்
    ..

    …..
    …….

    https://www.vinavu.com/2011/12/09/wal-mart-2/#comment-53805

  38. இந்த மனித உடம்பில் உள்ள மரபுகள் பல பாகங்களாக இருக்கும், அனைத்து செய்திகளும்அனைத்து செல்களிலும் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட செல்கள் குறிப்பிட்ட தனக்கு கொடுக்கப்பட்ட பணியை மட்டுமே பார்க்கும், அதாவது கைகளில் உள்ள செல்களில் கைகள் உருவாக தேவையான செய்திகள் மட்டும் ஆக்டிவ் நிலையிலும் மற்ற மரபுகள் மறைக்க பட்ட (Hidden) நிலையிலும் இருக்கும், அனைத்து மரபுகளும் சில குறிப்பிட்ட செல்களில் மட்டுமே ஆக்டிவ் நிலையில் இருக்கும், அனைத்தும் முழுமையாக அடங்கிய செல்களையே ஸ்டெம் செல் (Stem cells) என்று கூறுகிறோம்…

  39. //சுரண்டுகின்ற அதியமான் முதல் அண்ணாச்சி போன்ற சிறு முதலாளிகளை நேசிக்கும் கட்சின்னும்

    வால்மார்டின் சுரண்டலும் அண்ணாச்சியும் சுரண்டலும் ஒண்ணு-ம்னும்

    வால்மார்ட் வந்தால் அண்ணாச்சி ஒழிஞ்சிடுவான் பிறகு பெரிய அளவில் பாட்டாளி வர்க்கமாக மக்கள் மாறிவிடுவார்கள் அவர்களை பாட்டாளி வர்க்க முண்ண்ணி படையாக அமைப்பாக்க முடியும்னும்

    இது புரியாத எங்களுக்கு மார்க்சியமே தெரியாதுன்னும் இத்தனை நேரமா குத்த வச்சு ஒப்பாரியை வச்சுப்போட்டு//

    வால்மார்ட்டும் அண்ணாச்சியும் பெரிசா ஒன்றும் வித்தியாசமில்லைன்னும் அண்ணாச்சியை ஆதரிக்கும் நீங்கள் அவனது சுரண்டலை சொல்வதில்லைன்னும் பலதடவை சொல்லியாச்சு

    அதுக்குத்தான் சப்பை கட்டு அண்ணாச்சி சுரண்டல் காரன்னா அவன்கிட்ட வேலை செய்யும் தொழிலாளிக்கு முதலாளியாகும் வாய்ப்பு இருக்குன்னு

    இந்தமாதிரி பேசும் கம்யூனிஸ்டு ஒலகத்திலேயே அனேகமா நீங்க மட்டுமாத்தான் இருக்க முடியும் அதான் நீங்க கம்யூனிஸ்டே இல்லைங்கிறேன்

    //குட்டி முதலாளிங்கல்லாம் பாட்டாளி வர்க்கத்துக்கு நேச சக்தி கிடையாதுன்னும், அவங்களை நேச சக்தியாக பாக்குற நாங்கெல்லாம் முதலாளித்துவ ஆதரவுன்னும்.//

    குட்டி முதலாளி யெல்லாம் பாட்டாளிவர்க்க அரசியல் பேசலையே வெள்ளையன் பேசுகிறாரா ? அல்லது
    அதியமான் பேசுகிறாரா

    பேசினா உங்களோட சேர்துகங்க அவன் அவனோட நலனைத்தான் பேசுகிறான்

    எப்ப கூட்டு சேர்ந்தாலும் அவனோட தற்போதைய வாழ்க்கை நிலமை அவனோட சொத்து நீடிச்சு இருக்குமுனெல்லாம் உறுதி கொடுக்க கூடாதுன்னு லெனின் சொல்றாரு

    ஆனால் நீங்க என்ன செய்றீங்க அந்த முதலாளியையும் உண்மையான லெனின் கருத்தை மறுத்து அணி சேர்ந்துட்டு அந்த தொழிலாளியையும் நீ முதலாளி ஆவாய்ன்னு தவறான பாதை காட்டுறீங்க

    நீ கம்யூனிஸ்டா ?

    எவனாவது கேட்டா வாயால சிரிக்க மாட்டான்

    //வால்மார்ட் வந்தால் அண்ணாச்சி ஒழிஞ்சிடுவான் பிறகு பெரிய அளவில் பாட்டாளி வர்க்கமாக மக்கள் மாறிவிடுவார்கள் அவர்களை பாட்டாளி வர்க்க முண்ண்ணி படையாக அமைப்பாக்க முடியும்னும்//

    வால் மார்ட்டு வந்தாலும் வரலைன்னாலும் ரிலையன்ஸ் ஆர் பி ஜி போன்ற இந்திய காரபெரிய முதலைகள் அவனுகளை முழுங்கிடுவானுக நீ மூலதனத்தை காப்பாத்த நிற்காதேன்னு சொல்லித்தான் மார்க்ஸ் கொட்டேசனை போட்டேன் அதுக்கும் பதில் இல்லை

    அடுத்து என் விசயத்துக்கும் வருவோம் நான் தெளிவா சொல்றேன் என்னோட இந்த வாழ்நிலைக்கு எந்த உத்திரவாதமும் தரமுடியாது இந்த சமூக சூழலில் நான் எப்பவேணாலும் பாட்டாளி வர்க்கமாக மாறலாம்

    மேலும் குறைந்த காலமே இருக்கும் இந்த மானேசர் உத்தியோகம் கூட நீண்ட காலம் பாட்டாளியாக இருந்து பெற்றதே ஆக எனதுவாழ் நிலைமையில் இருந்து முரண்பாடை சொல்ல உங்களால் இயலாது

    உங்கள் முரண்பாட்டில் இருந்து உங்களை அம்பலபடுவதை தடுக்க என்னாலும் முடியாது

    சோ சேட்

    • அடுத்து என் விசயத்துக்கும் வருவோம் நான் தெளிவா சொல்றேன் என்னோட இந்த வாழ்நிலைக்கு எந்த உத்திரவாதமும் தரமுடியாது இந்த சமூக சூழலில் நான் எப்பவேணாலும் பாட்டாளி வர்க்கமாக மாறலாம்////////

      இது உங்களுக்கு மட்டுமில்லீங்க… பெரும்பான்மை(கிட்டத்தட்ட ஒட்டுமொத்தன்னு கூட சொல்ல்லாம்) குட்டி முதலாளித்துவ வர்க்கத்துக்கே இதான் கதி… உங்களை நீங்க ரொம்ப விசேசமா கருதிக்கலாம், ஆனா மார்க்சுக்கு உங்களை தெரியாம போச்சு அதனால தப்பா எழுதிட்டாருன்னு வேணா சொல்லிக்கங்க

  40. தியாகு,

    நான் உங்களிடம் தரவுகள் கேட்டேனே?

    1) அண்ணாச்சியின் சுரண்டல் என்பதற்குத் தரவுகள். அவரே முதலீடு போட்டு அவரே வேலை செய்யும் அண்ணாச்சிக் கடைகள் தான் 99.99%. சரவணா ஸ்டோர்ஸ் போன்ற அப்பரேஷன்ஸை விடுத்தால். இந்தக் கடையில் அவரே முதலாளி அவரே தொழிலாளி. இங்கே அண்ணாச்சி அவரையே சுரண்டிக் கொள்வாரா? என்ன ஸ்டேட்ஸ்?

    2) அண்ணாச்சி தான் விவசாயிகள் அழிவுக்கு பிரதான காரணம் என்பதற்கு ஸ்டேட்ஸ்? எத்தனை விவசாயிகள் தற்கொலைக்கு அண்ணாச்சி காரணம். நான் பி.சாய்நாத் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கொடுத்திருக்கும் ஸ்டேடிஸ்டிக்ஸை வைத்துச் சொல்கிறேன் – அரசும் தரகு மூலதனமும் பன்னாட்டு மூலதனமும் தான் காரணம் என்று. நீங்கள் தெருமுக்கு அண்ணாச்சி தான் காரணம் என்பதற்கு ஆதரவாக வைத்திருக்கும் தரவுகள் என்ன?

    3) பன்னாட்டு மூலதனத்துக்கு எதிரான அணிசேர்க்கையில் உள்ளூர் சிறு உடைமையாளர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்பதற்கு உதாரணமாக தோழர் வி.இ லெனின் காட்டிய வழியைச் சொன்னேன். உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதால் இந்த பாயிண்டில் இருந்து உங்களுக்கு விலக்கு அளிக்கிறேன். பாவம் பிழைத்துப் போங்கள் 🙂

    4) அடுத்து பாட்டாளி வர்க்கம் குட்டி முதலாளி வர்க்கத்தை நேச சக்தியாக கருத முடியாது என்பது உங்கள் ஒரிஜினல் வாதம் ஆனால் நீங்களே – //ஆனால் தொழிலாளியாக இல்லாதவரெல்லாம் தொழிலாளிவர்க்கத்துக்கு பேச கூடாது என்பது தொழிலாளிகளை நிராயுதபாணிகளாக்குவதாகும் // இப்படிச் சொல்லி ஒரு அந்தர் பல்டி அடித்திருக்கிறீர்கள் என்பதால் இந்தப் பாயிண்டும் காலாவதியாகி விட்டது. இதற்கும் நீங்கள் பிழைத்துப் போங்கள் 🙂

    ஆக, இப்போது உங்கள் முன் இருப்பது இரண்டு பாயிண்டுகள் தான். அதற்கு தரவு ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் பேச முடிந்தால் பேசலாம்.

    See you next week. bye….

    • மன்னாருக்கு பதில் – பாகம்-1

      நீங்கள் சொல்வது -1

      //3) பன்னாட்டு மூலதனத்துக்கு எதிரான அணிசேர்க்கையில் உள்ளூர் சிறு உடைமையாளர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்பதற்கு உதாரணமாக தோழர் வி.இ லெனின் காட்டிய வழியைச் சொன்னேன். உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதால் இந்த பாயிண்டில் இருந்து உங்களுக்கு விலக்கு அளிக்கிறேன். பாவம் பிழைத்துப் போங்கள்//

      தப்பித்து ஓடும் நீங்கள் என்னை பிழைத்துப் போங்கள் என்று சொல்வது நல்லாத்தான் இருக்கு.

      நீங்கள் சொன்னது-2

      //இன்றைக்கு நமது நாட்டு மக்களின் முன்னுள்ள இரண்டு பிரதான முரண்பாடுகளில் ஏகாதிபத்திய மூலதனமும் ஒன்று. //

      அந்த இரண்டு பிரதான முரண்பாடுகள் எவை? அவற்றில்

      நீங்கள் சொன்னது-3

      //ஏகாதிபத்திய மூலதனமும் ஒன்று.//

      என்று நீங்களெ சொல்லிவிட்டீர்கள். அடுத்தும்
      நீங்கள் சொன்னது-3 (a)
      //இன்று பன்னாட்டு ஏகாதிபத்திய மூலதனத்தை எதிர்க்கும் போராட்டத்தில் சில்லறை வணிகர்களோடு நிற்க வேண்டும்// என்றும் சொல்லிவிட்டீர்கள்.

       அந்த இரண்டு பிரதான முரண்பாடுகளில் மீதமுள்ள மற்றொரு முரண்பாடு எது என்றும் அதனை எதிர்க்கும் போராட்டத்தில் எந்த வர்க்கத்தோடு அணிச்சேர்க்கை என்றும் நீங்கள் சொல்லி இருந்தால் விஷயம் முழுமை பெற்று இருக்கும். ஏனெனில் மார்க்சியவாதிகள் உண்மைகளை பகுதி பகுதியாக ஆராய்வதில்லை. நீங்கள் பாதி முரண்பாட்டைச் சொல்லிவிட்டு மீதி முரண்பாட்டைச் சொல்லாமல் போனதால் நான் நீங்களெ மறந்துபோன புதிய ஜனநாயகப் புரட்சித்திட்டப்படி பிரதான முரண்பாடாக  நீங்கள் சொல்லும் நிலபிரப்புத்துவ முரண்பாடே அந்த மற்றொரு முரண்பாடு என்று சொல்லித்தான்

      நான் சொன்னது -1
      ////இந்தியாவில் பிரதான முரண்பாட்டாக பிரபுத்துவ அமைப்பு முறை இல்லாத போதும் சிறுவிவசாயிகள் மட்டுமல்ல அனைத்து விவசாயிகளுடனும் செயல்தந்திர ரீதியில்
      ஐக்கியப் பட வேண்டும் என்று கூறித்தான் புதிய ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டும் என்று கூறுகிறீர்கள்//// என்று சொன்னேன்.

      ஏனென்றால் இரண்டு முரண்பாட்டைத் தீர்க்க ஒரே புரட்சிக்கு ஒன்றுக் கொன்று முரண்பட்ட விவசாயிகள்-வணிகர்களை நேச சக்தி என்று கூறும் உங்கள் அடிப்படை அரசியல் வழியில் உள்ள கோளாறைச் சுட்டிக்காட்டி அதன் மீது விவாதிக்கவே இப்படிப் பதிவு போட்டேன்: 

      நான் சொன்னது -2
      //பிரதான முரண்பாடான பிரபுத்துவ அமைப்பு முறை இருக்கும் போது செயல்தந்திர ரீதியில் சிறு விவசாயிகளோடு பாட்டாளி வர்க்கம் ஐக்கியப் பட வேண்டும். ஆனால் இந்தியாவில் பிரதான முரண்பாட்டாக  பிரபுத்துவ அமைப்பு முறை இல்லாத போதும் சிறுவிவசாயிகள் மட்டுமல்ல அனைத்து விவசாயிகளுடனும் செயல்தந்திர ரீதியில் ஐக்கியப் பட வேண்டும் என்று கூறித்தான் புதிய ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டும் என்று கூறுகிறீர்கள். விவசாயிகள் புதிய ஜனநாயகப் புரட்சியின் நேசசக்தி என்று சொல்லவில்லை என்று சொல்லிவிடாதீர்கள்-சந்தேகமிருந்தால் புரட்சித்திட்டத்தை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.
      ஆக உங்களது புதிய ஜனநாயகப் புரட்சியில் விவசாயிகளும் நேசசக்தி (அல்லது பிரதான சக்தி). அதே சமயம்

      நீங்கள் சொன்னது-4

      //அன்றைக்கு விவசாயத்தில் நிலபிரபுக்களின் செல்வாக்கை வீழ்த்த சிறு உடைமையாளர்களோடு பாட்டாளி வர்க்கம் செயல்தந்திர ரீதியில் ஐக்கியப்பட்டதற்கும் – இன்று பன்னாட்டு ஏகாதிபத்திய மூலதனத்தை எதிர்க்கும் போராட்டத்தில் சில்லறை வணிகர்களோடு நிற்க வேண்டும் என்று நாங்கள் சொல்வதற்கும் சாராம்சத்தில் வேறுபாடில்லை. //

      என்று கூறி சில்லறை வணிகர்களும் நேசசக்தி என்கிறீர்கள்.

      சில இடங்களில் ஒட்டுமொத்தமாக வணிகர்களுக்கே கூட வக்காலத்து வாங்குகிறீர்கள்.

      உங்களின் ஒரு நேசசக்தியாகியாகிய விவசாயியின் உற்பத்திப் பொருளை -கமிஷன் மண்டி மொத்தவியாபாரி(தேசிய முதலாளி) அடிமாட்டு விலைக்கு வாங்கி ஒரு கமிஷன் வைத்து – இன்னொரு மொத்த வியாபாரிக்கு (அவரும் தேசிய முதலாளியே) விற்று அவர் ஒரு கூடுதல் விலை வைத்து -ஆலை முதலாளிகளுக்கு-அவர் அரிசி ஆலை வைத்திருக்கும் சிறு முதலாளியாகவோ பஞ்சாலை வைத்திருக்கும் பெரிய முதலாளியாகவோ(இவர்களும் தேசிய முதலாளிகளே) உள்நாட்டு, வெளிநாட்டு பன்னாட்டு பகாசுர முதலாளியாகவோ இருக்கலாம்-விற்று ஆலைப் பொருளாக (வெள்ளையன் போன்ற)மொத்தச்சில்லறை வணிகர்கள் கைக்கு வந்து அவர்கள் அப்பொருளின் மதிப்பைக்கூட்ட எந்த உழைப்பையும் செலுத்தாமல் அதன் விலையை மட்டும் ஏற்றி -சில்லறை வணிகர்களிடம் விற்று-அச்சில்லறை வணிகர்கள் அப்பொருளின் மதிப்பைக்கூட்ட எந்த உழைப்பையும் செலுத்தாமல் அதன் விலையை மட்டும் ஏற்றி -பெரும்பான்மை உழைக்கும் மக்களாகிய தொழிலளர்கள் சிறுவிவசாயியையும் உள்ளடக்கிய நுகர்வோருக்கு அதிகவிலைக்கு விற்கும் இந்த முதலாளித்துவச் சங்கிலியில் முழுச்சுரண்டலுக்கு ஆளாகும் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களைச் சுரண்டும் முதலாளித்துவச் சங்கிலியில் உள்ள வணிகர்கள் எப்படி நேசசக்தி ஆகமுடியும்.

      மாவோ வணிகர்களை நேசசக்தி என்று சொன்ன காலகட்டத்தில் சீனாவில் விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் இப்படியொரு முரண்பாடு இருக்கவில்லை. விவசாயிகளின் உற்பத்தி தன்னிறைவு பெற்ற கிராமப் புற நுகர்வைத்தாண்டி வணிகர்களின் வணிகப் பொருளாகவில்லை. இந்தியாவில் அதை காப்பியடித்து விவசாயியும் வணிகரும் நண்பர்கள் என்று சொல்லிவிட்டு நடைமுறையில் விவசாயிகள்

      இதுநாள்வரை கமிஷன் மண்டி -மொத்த‌வணிகர்களால் சுரண்டப் பட்டுக் கொண்டிருந்த போது இத்தனை உணர்ச்சிவசப்பட்டு போராடாத நீங்கள் இப்போது இந்த  கமிஷன் மண்டி -மொத்த‌வணிகர்களுக்குப் போட்டியாக ரிலயன்ஸ் வந்த போதும் வால்மார்ட் வருகிற போதும் வீறுகொண்டு எழுவதில் இருந்தே உங்களது குட்டிமுதலாளித்துவ வர்க்க உணர்வு தெரிகிறது (இதாய்யா வர்க்க பாசம் :))

      ஆனால் இதன் மீது விவாதத்தைத் தவிர்பதற்காகவே

      நீங்கள் சொன்னது-5

      //இந்தளவுக்கு தத்தியாய் இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?  நான் சொல்லியிருப்பது பன்னாட்டு ஏகாதிபத்திய மூலதனத்துக்கு எதிரான அணிசேர்க்கையைப் பற்றி. எதிரிக்கு எதிரான அணிசேர்க்கையில் யார் நேசசக்தியாக இருக்கலாம் என்பதற்கு தோழர் வி.இ. லெனின் காட்டிய வழியை உதாரணத்தை காட்டினால் கூட புரிந்து கொள்ள முடியவில்லையா?// என்று கூறி

      தப்பிக்கப் பார்த்துவிட்டு இப்போது வந்து

      //இந்த பாயிண்டில் இருந்து உங்களுக்கு விலக்கு அளிக்கிறேன். பாவம் பிழைத்துப் போங்கள்// என்ற் சொல்வதை ப்பார்த்தால் பாவமாக இருக்கிறது. பரவால்ல.

      ஆனால் இப்படி கோழைத்தனமாக ஓடுவது பாட்டாளிவர்க்க பண்பாடல்ல

      அடுத்து
      நீங்கள் சொன்னது-7

      //4) அடுத்து பாட்டாளி வர்க்கம் குட்டி முதலாளி வர்க்கத்தை நேச சக்தியாக கருத முடியாது என்பது உங்கள் ஒரிஜினல் வாதம் ஆனால் நீங்களே

      – //ஆனால் தொழிலாளியாக இல்லாதவரெல்லாம் தொழிலாளிவர்க்கத்துக்கு பேச கூடாது என்பது தொழிலாளிகளை நிராயுதபாணிகளாக்குவதாகும் // இப்படிச் சொல்லி ஒரு அந்தர் பல்டி அடித்திருக்கிறீர்கள் என்பதால் இந்தப் பாயிண்டும் காலாவதியாகி விட்டது. இதற்கும் நீங்கள் பிழைத்துப் போங்கள் //

      நீங்கள் காலாவதியான போக்கு நன்றாகவே தெருகிறது. இப்படித்தான் தப்பிச்சி இருப்பீங்க போல எல்லா விவாத்த்திலயும் இருந்து (தி கிரேட் எஸ்கேப்பு)

      //அடுத்து பாட்டாளி வர்க்கம் குட்டி முதலாளி வர்க்கத்தை நேச சக்தியாக கருத முடியாது என்பது உங்கள் ஒரிஜினல் வாதம் //

      என்பது நான் சொன்னதைத் திரித்துக் கூறுகிறீர்கள்.

      நான் சொன்னது
      //எதிரிக்கு எதிரி நண்பன் என்றாலும் அதுவும் ஒரு கறாரான சூழலில் நிபந்தனை பேரிலேயே
      அதென்ன நிபந்தனை என்பது மண்டையில் நல்லா ஏத்திக்கனும் நீங்க அவனுக்கு அவனது சுகபோக வாழ்வூ நீடித்து கிடைக்குமுனெல்லாம் நம்பிக்கை தரக்கூடாது//

      சிறு மூலதனத்தையோ சிறு நில உடமையை யோ சிறு வணிகத்தை யோ பெருமூலதனத்தின் முதலாளித்துவ தாக்குதலில் இருந்து பாதுகாப்போம் என்று ந்ம்பிக்கை அளிக்ககூடாது என்று லெனின் மேற்கோளோடு சொன்னேன். அந்த லெனின் மேற்கோள் இதோ:

      //நீங்கள் சொல்லாமல் மறைத்த லெனினது வாசகம்
      இதோ:
      “கூலித் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, இன்றய சமூகத்தின் ஒரு வர்க்கம் என்ற முறையில் அவர்களது நலன்களைப் பாதுகாப்பதற்கு நாம் பொறுப்பேற்கிறோம்; ஏனெனில் அவர்களது வர்க்க இயக்கம் மட்டுமே உண்மையான புரட்சிகர இயக்கம் என்று நாம் கருதுவதால் இதைச் செய்கிறோம். மேலும் அக்குறிப்பிட்ட இயக்கத்தை அணிதிரட்டி வழிகாட்டுகிறோம்-அதனுள் சோசலிச உணர்வுநிலையெனும் வெளிச்சத்தைக் கொண்டு செல்கிறோம்.
      விவசாயிகளைப் பொறுத்தவரை, இன்றய சமூகத்தின் ஒரு சிறு நிலஉடமை வர்க்கம் மற்றும் சிறு விவசாய வர்க்கம் என்ற முறையில் அதன் நலன்களைப் பாதுகாப்பதற்கு எந்த வகையிலும் நாம் பொறுப்பேற்க மாட்டோம். இது போன்ற எதுவும் கிடையாது.
      “தொழிலாளர்களின் விடுதலை என்பது தொழிலாளி வர்க்கத்தின் செயலாகவே இருக்க முடியும்”, அதன் காரணமாகவே சமூக -ஜனநாயகம் -நேரடியாகவும் முழுமையாகவும் – தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்துகிறது; அதன் வர்க்க இயக்கத்துடன் மட்டுமே பிரிக்க முடியாத உடல் உறுப்புப் போன்ற ஒற்றுமையை வேண்டுகிறோம்.

      இன்றய சமூகத்தின் மற்ற அனைத்து வர்க்கங்களும் நட‌ப்பில் இருக்கும் பொருளாதார அமைப்புமுறையின் அடித்தளத்தை கட்டிக் காப்பாற்றுவதற்காகவே இருக்கின்றன. அதனாலேயே சமூக- ஜனநாயகம் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் – ஸ்தூலமானதும் கராறாக வரையறுக்கப் பட்ட நிபந்தனைகளின் பேரில் மட்டுமே அந்த வர்க்கங்களின் நலன்களை பாதுகாப்பதற்கு பொறுப்பேற்க முடியும். உதாரணத்திற்கு, சிறு விவசாயிகள் உள்ளிட்ட சிறு உற்பத்தியாளர் வர்க்கம், முதலாளித்துவத்திற்கு எதிரான அதன் போராட்டத்தில் ஒரு பிற்போக்கான வர்க்கம்.

      எனவே “முதலாளித்துவத்தின் கடுந்தாக்குதலில் இருந்து சிறு-அளவு விவசாயத்தையும் சிறு உடமைகளையும் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளைக் காப்பாற்ற முயற்சிப்பது சமூக வளர்ச்சியை சீர்குலைக்கும் ஒரு பயனற்ற செயலாகவே இருக்கும்; அது முதலாளித்துவத்தின் கீழும் கூட வளமான வாழ்வின் சாத்தியம் பற்றிய மாயையினால் விவசாயி வர்க்கத்தை ஏமாற்றுவதாக அர்த்தம்; அது தொழிலாளிவர்க்கத்தை பிளவுபடுத்தி, பெரும்பான்மையினரின் இழப்பில் சிறுபான்மையினருக்கு தனிச்சலுகை பெற்றதொரு அந்தஸ்தை உருவாக்குவதாக அர்த்தம்.”-lenin

      நீங்கள் வணிகர்களுக்கு அளிக்கும் நிபந்தனையற்ற ஆதரவு – அதற்கும் மேல் அவர்கள் சுரண்டவே இல்லை என்று வக்காலத்து வாங்குவது, லெனின் சொன்ன  “முதலாளித்துவத்தின் கடுந்தாக்குதலில் இருந்து சிறு-அளவு விவசாயத்தையும் சிறு உடமைகளையும் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளைக் காப்பாற்ற முயற்சிப்பது சமூக வளர்ச்சியை சீர்குலைக்கும் ஒரு பயனற்ற செயலாகவே இருக்கும்; அது முதலாளித்துவத்தின் கீழும் கூட வளமான வாழ்வின் சாத்தியம் பற்றிய மாயையினால் விவசாயி வர்க்கத்தை ஏமாற்றுவதாக அர்த்தம்; அது தொழிலாளிவர்க்கத்தை பிளவுபடுத்தி, பெரும்பான்மையினரின் இழப்பில் சிறுபான்மையினருக்கு தனிச்சலுகை பெற்றதொரு அந்தஸ்தை உருவாக்குவதாக அர்த்தம்.” வழிகாட்டுதலை புறக்கணித்துவிட்டு பாட்டாளி வர்க்க நல்னை வணிகர்களின் நலனுக்காக காவு கொடுத்து விட்டீர்கள் என்பது எனது குற்றச்சாட்டு.

      லெனின் இந்த கருத்துடன் பொருத்தி பார்க்கவும்
      //
      To acknowledge this condition means undertaking to abide unswervingly by the class viewpoint also in the very painful   question of the participation of the small peasants in the Social-Democratic movement, means sacrificing nothing of the proletariat’s standpoint in favour of the interests of the petty bourgeoisie, but, on the contrary, demanding that the small peasant, who is being oppressed and ruined by all modern capitalism, should desert his own class standpoint and place himself at the standpoint of the proletariat.-lenin
      .//
       இல்லையென்றால் மறுத்து வாதிடுங்கள்.

      //அடுத்து பாட்டாளி வர்க்கம் குட்டி முதலாளி வர்க்கத்தை நேச சக்தியாக கருத முடியாது என்பது உங்கள் ஒரிஜினல் வாதம் ஆனால் நீங்களே
      மறுபடியும் இந்த பாயிண்டில் இன்னும் விசயம் இருக்கு :
      – //ஆனால் தொழிலாளியாக இல்லாதவரெல்லாம் தொழிலாளிவர்க்கத்துக்கு பேச கூடாது என்பது தொழிலாளிகளை நிராயுதபாணிகளாக்குவதாகும் // இப்படிச் சொல்லி ஒரு அந்தர் பல்டி அடித்திருக்கிறீர்கள் // என்று நீங்கள் சொல்வது உங்களுக்கு எந்த அளவு மார்க்சியம் தெரியும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வரலாற்றில் பாட்டாளிவர்க்க விடுதலைக்காக முதலில் சிந்திக்கத்தொடங்கியவர்கள் பாட்டாளிவர்க்கத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல(மார்க்சிய ஆசான்களும் விதிவிலக்கு அல்ல); ஆனால் வேறொரு வர்க்கத்தில் இருந்து பாட்டாளி வர்க்க அணிக்கு வரும் அவர்கள் தங்களது சொந்த வர்க்க குணாம்சங்களை உதறித்தள்ளி விட்டு உணர்வுநிலையிலேயே பாட்டாளி வர்க்க குணாம்சங்களை கைக்கொள்ள வேண்டும். (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைப் படிக்கவும்)
      …………. பதிவு பெரிதாகிவிட்டதால்

      //1) அண்ணாச்சியின் சுரண்டல் என்பதற்குத் தரவுகள். அவரே முதலீடு போட்டு அவரே வேலை செய்யும் அண்ணாச்சிக் கடைகள் தான் 99.99%. சரவணா ஸ்டோர்ஸ் போன்ற அப்பரேஷன்ஸை விடுத்தால். இந்தக் கடையில் அவரே முதலாளி அவரே தொழிலாளி. இங்கே அண்ணாச்சி அவரையே சுரண்டிக் கொள்வாரா? என்ன ஸ்டேட்ஸ்?
      2) அண்ணாச்சி தான் விவசாயிகள் அழிவுக்கு பிரதான காரணம் என்பதற்கு ஸ்டேட்ஸ்? எத்தனை விவசாயிகள் தற்கொலைக்கு அண்ணாச்சி காரணம். நான் பி.சாய்நாத் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கொடுத்திருக்கும் ஸ்டேடிஸ்டிக்ஸை வைத்துச் சொல்கிறேன் – அரசும் தரகு மூலதனமும் பன்னாட்டு மூலதனமும் தான் காரணம் என்று. நீங்கள் தெருமுக்கு அண்ணாச்சி தான் காரணம் என்பதற்கு ஆதரவாக வைத்திருக்கும் தரவுகள் என்ன?//
      இவை இரண்டுக்கும் தனிப்பதிவில் இடுகிறேன்…….தொடரும்

      • அதாவது…….

        ச ந் தை க் கு போ னு ம் ஆ த் தா வை யும் கா சு கொ டு

        மற்றும்

        சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு கொடு ….. தொடரும்

      • மன்னாருக்கு பதில் – பாகம்-2

        //1) அண்ணாச்சியின் சுரண்டல் என்பதற்குத் தரவுகள். அவரே முதலீடு போட்டு அவரே வேலை செய்யும் அண்ணாச்சிக் கடைகள் தான் 99.99%. சரவணா ஸ்டோர்ஸ் போன்ற அப்பரேஷன்ஸை விடுத்தால். இந்தக் கடையில் அவரே முதலாளி அவரே தொழிலாளி. இங்கே அண்ணாச்சி அவரையே சுரண்டிக் கொள்வாரா? என்ன ஸ்டேட்ஸ்?//

        மன்னாரு சொல்கிறார்
        //அண்ணாச்சி அவரையே சுரண்டிக் கொள்வாரா?//

        அதிபுத்திசாலித்தனமான வாதம் மன்னாரு. தலை சுத்துது. மார்சியம் ஆனா, ஆவன்னாவில் இருந்து ஆரம்பிக்கனும் போல. பரவாயில்லை சொல்லித் தர்றேன். ”திருவாளர் மூலதனம் (சுரண்டாமல்) சும்மா உட்கார்ந்திருக்கமாட்டார் (Mister Capitol will not sit idle)” அப்படின்னு மார்க்ஸ் மூலதனத்தில் சொல்லியிருக்கார்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? இப்பக் கேள்விப் பட்டுக்கோங்க.

        மார்க்ஸ் சொன்ன மாதிரி மூலதனம் யாரையும் சுரண்டாம சும்மா இருக்க முடியாது. ஏன்னா யாரையாவது எப்படியாவது சுரண்டலைன்னா மூலதனம் மூலதனமாகவே இல்லாம போய்விடும். இது மூலதனம் பற்றிய பொதுவான விதி. இப்ப நீங்களே சொன்ன மாதிரி

        // அவரே முதலீடு போட்டுச் செய்யும் இந்த வணிகத்தில் அவர் போடும் மூலதனமும் மார்க்சியத்தின் மேலே சொன்ன மூலதனம் பற்றிய பொதுவான விதிக்கு உட்பட்டதுதான். உங்களது நேசசக்தி என்பதற்காக அப்பொதுவான விதி வணிகரின் மூலதனத்திற்குப் பொருந்தாது என்று வாதிடமுடியாது. 

        அப்படியானால் வணிகர் //அவரே// போடும் //முதலீடு//
        அதான் மூலதனமும் சுரண்டவே செய்யும். அதில் ஒரு மார்க்சியவாதிக்குச் சந்தேகமே வரக்கூடாது. வணிகர் போடும் மூலதனம் யாரைச் சுரண்டுகிறது? எப்படிச் சுரண்டுகிறது என்பதுதான் கேள்வி.

         //இந்தக் கடையில் அவரே முதலாளி அவரே தொழிலாளி. இங்கே அண்ணாச்சி அவரையே சுரண்டிக் கொள்வாரா?//

        என்று கேட்பதன் மூலம் அவரை அவரே எப்படிச் சுரண்ட முடியும் என்ற மேலோட்டமான பொதுப்புத்தியின்  படிப் பார்ப்பவர்களை குழப்ப முயற்சி செய்கிறீர்கள். அவ்வணிகர் யாரைச் சுரண்டுகிறார் என்றால் அவரிடம் சரக்கு வாங்கும் உழைக்கும் மக்களையும் விவசாயிகளையும் உள்ளடக்கிய நுகர்வோரைச் சுரண்டுகிறார். எப்படிச் சுரண்டுகிறார் என்றால் மொத்த வணிகரிடமிருந்தோ டீலர்களிடமிருந்தோ சரக்குகளை வாங்கி அச்சரக்கின் உண்மை மதிப்பை உயர்த்த எந்த உழைப்பையும் செலுத்தாமல் அதன் விலையை மட்டும் உயர்த்தி நுகர்வோரிடம் விற்பதன் மூலம் நுகர்வோரைச் சுரண்டுகிறார்.

        உடனே நீங்கள் “அப்ப வணிகர் உழைப்பைச் செலுத்தவே இல்லையா? அவரது குடும்பமே அல்லும் பகலும் பாடுபடுவது உங்களுக்கு உழைப்பாகத் தெரியவில்லையா” என்று நீங்கள் அவசரமாகப் பதிவிடச் சென்றுவிடாதீர்கள்.

        வணிகர்கள் குறிப்பாக சிறுவணிகர்கள் குடும்பத்துடன் கடையில் உழைப்பைச் செலவிடவே செய்கின்றனர். ஆனால் அவர்களது உழைப்பு அவர் விற்கும் சரக்கை உருவாக்கவோ அச்சரக்கின் மதிப்பைக் கூட்டவோ செலவிடப்படுவதில்லை. முதலாளித்துவ விநியோகச் சங்கிலியின் கடைசிக் கண்ணி என்ற முறையில் அவரது உழைப்பு விநியோகத்தில் இருக்கிறது.

        அப்படியானால் அவர் சரக்கின் விலையில் ஏற்றி வைக்கும் கூடுதல் விலை அவரது உழைப்புக்குக் கூலிதானே அது எப்படி நுகர்வோரைச் சுரண்டுவதாகும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் வணிகர்கள் ஏற்றி வைக்கும் விலை அவர்கள‌து ஒரு நாள்கூலிக்குச் சமமானது என்று உங்களால் சொல்ல முடியுமா? முடியாது

        ஏனென்றால் வணிகர்கள் பல வடிவங்களில் விலையை ஏற்றி விற்கின்றனர். முதலாளிகளின் லாபத்திற்கு உச்ச வரம்பு கிடையாது என்பது போலவே வணிகர்களின்  லாபத்திற்கும் உச்ச வரம்பு கிடையாது. வணிகர்கள் பொதுவாக ஏற்றும் விலையோடு ரிலையன்ஸ், டாடா போன்ற பெருமுதலாளிகளைப் போலவே (அளவில் வேறுபட்டாலும் குணாம்சத்தில்) அவ்வப்போது பதுக்கலின் மூலம் – எடைக் குறைப்பின் மூலம்-சீசனுக்கு ஏற்படும் தட்டுப்பாடுகள் மூலம் – பேசாத போனுக்கு பில் போடும் ரிலையன்ஸ், ஏர்-டெல் முதலாளிகளைப் போல வாங்காத சரக்குக்கும் சேர்த்து சிட்டை எழுதுவதன் மூலம்- என்று பல வழிகளில் நுகர்வோரைச் சுரண்டுகின்றனர்.
        இதைத்தான் நீங்கள் போட்ட மேற்கோளில் லெனின் //

        இதற்கு //ஸ்டேட்ஸ்// வேண்டுமா என்ன? கைப்புண்ணுக்கு கண்ணாடியா?
        அதனால மன்னாரு //அண்ணாச்சி அவரையே சுரண்டிக் கொள்வாரா? // என்று கேட்டு வணிகர்கள் சுரண்டவில்லை என்று சர்டிபிகேட் கொடுப்பதை நிறுத்துங்கள்.

        அடுத்து லெனின் நிலப்பிரபுத்துவத்தை எதிர்க்க சிறு விவசாயியோடு கூட்டுச் சேரலாம் என்று சொன்னார் அதனால சிறு வணிகரோடு கூட்டுச் சேர்கிறோம் என்று சொல்வது வேறு, நீங்கள் கூட்டுச் சேர்வதால் அவர்கள் சுரண்டவே இல்லை என்று பொய்ப்பிரச்சாரம் செய்வது வேறு.

        இதன்மூலம் லெனின் சொன்ன “தொழிலாளிவர்க்கத்தை பிளவுபடுத்தி, பெரும்பான்மையினரின் இழப்பில் சிறுபான்மையினருக்கு தனிச்சலுகை பெற்றதொரு அந்தஸ்தை உருவாக்குவதாக அர்த்தம்” என்ற எச்சரிக்கையை மறந்து லெனினுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.

        மன்னாரு மேலும் இன்னும் ஒரு பாயிண்டு மட்டும்தான் இருக்கிறது அதையும் போட்டு விடுகிறேன் எனவே நீங்கள் சொன்னமாதிரியே ஒருவாரம் கழித்தே வரவும்
        உண்மையை நோக்கிய நமது பயணத்தை தொடருவோம்

        …………………அடுத்த பதிவில் தொடரும்

        • ஒத்துக்கறேன்,,, தியாகு உங்களைப் போய் மொக்கை பீசு நினைச்சது தப்புதான்… உங்களுக்கு இப்படியெல்லாம் எழுதிக்கொடுக்கறாங்க பாருங்க இயக்கத்துகாரங்க, அவங்க உங்களை விட படு பயங்கற மொக்கையாத்தான் இருக்காங்க — நல்லா சேந்தீங்கய்யா செட்டு.. இத்தனை காலமா அவங்களை பார்த்து போயும் போயும் உங்களைப் புடிச்சாங்களேன்னு பாவமா இருந்திச்சு, ஆனா இதை படிச்சப்புறம் அவங்களுக்கு நீங்களே ஜாஸ்தின்னு புரிஞ்சு போச்சு. மொத தடவயா உங்களை விட கேவலமான மார்க்சிஸ்டுன்னு சொல்லிகிற கேசுகளை பார்க்கறேன்.. அதனால நீங்க பெருமை படலாம். என்ன இருந்தாலும் ராத்திரி ஒம்பது மணி வரைக்கும் வெயிட் பண்ணி இந்தா பெரிய பதிலை வாங்கி, போன தடவ மாதிரி அப்படியே பேஸ்டு பண்ணாம பார்மேட் செஞ்சு போட்ட உங்க உழைப்புக்கு நன்றி. அது இல்லேன்னா அவங்களோட யோக்கியதை இங்க இப்படி வெட்ட வெளிச்சமாகியிருக்காது ..

          சரி மன்னாருமேட்டரை விடுங்க அதான் அவரு அடுத்த வாரம்தான் வருவேன்னு போயிட்டாரு, நம்ம மேட்டரு கீழை ஓடுதே அந்தப்பக்கம் வந்து போங்க

  41. ஏங்க தியாகு தப்பான இடத்துல பதில் எழுதிங்க..
    இந்த விவாத்ததுக்கான மூல சுட்டி இது https://www.vinavu.com/2011/12/09/wal-mart-2/#comment-53920

    முன்கதை சுருக்கம்..
    இங்க சுருங்கி சூம்பிப்போனது அண்ணன் தியாகுதான் — எந்தெந்த கருத்தையெல்லாம் வீராவேசமா முன்வச்சாரோ அதிலெல்லாத்துலேயும் அப்பீட்டாகி, தனக்கு தானே கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச சிறுவாட்டு காசில் சூனியம் வச்சுண்டுட்டார்….அதுலயும் ஆப்பு ஏற ஏற எப்படியெல்லாம் ரூம்போட்டு யோசிச்சு சூன்யம் வச்சிகிகாரு பாருங்கோ….

    /////குட்டி முதலாளி யெல்லாம் பாட்டாளிவர்க்க அரசியல் பேசலையே வெள்ளையன் பேசுகிறாரா ? அல்லது அதியமான் பேசுகிறாரா — பேசினா உங்களோட சேர்துகங்க அவன் அவனோட நலனைத்தான் பேசுகிறான்////

    நல்லா பாத்துக்கங்கப்பா, வர்க்கத்தை தீர்மானிக்க – நட்பு சக்தியை தேர்ந்தெடுக்க அண்ணன் முன்வைக்கும் அளவுகோல….

    அதாவது பாட்டாளி வர்க்க அரசியலை பேசும் குட்டி முதலாளியெல்லாம் நட்பு சக்தியாம்
    பாட்டாளி வர்க்க அரசியலை பேசாத குட்டி முதலாளியெல்லாம் நட்பு சக்தி இல்லயாம்.

    தனது கட்டற்ற ஞானத்தின் மூலம் தியாகு ஒரு புதிய வர்க்கத்தையே கண்டு பிடித்திருக்கிறார் அதுதான் அரை குட்டி முதலாளித்துவ வர்க்கம்.. (ஒடனே அவிங்களுக்கு ஒரு கை , ஒரு கால், ஒரு கண், ஒரு காது இப்படியெல்லாம் பாதி பாதியா இருக்குமான்னு கேட்கப்பிடாது.. பீ கேர்புல்)

    இது தெரியாம லெனினும் மாவோவும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரை சூழ்நிலைகளுக்கு ஏற்ப நட்பு சக்தியாக கருதியதனாலதான் கம்யூனிசமே அங்கங்க திவாலாகிப்போச்சு.. ச்சேய் ஜஸ்டு மிஸ்ஸூ

    சரி பேக் டூ மேட்டர்

    இந்த அரை குட்டி முதலாளிகள் என்னா பண்ணுவாங்கன்னா பாட்டாளி வர்க்க அரசியலை பேசுவாங்க ஆனா குட்டி முதலாளித்துவ வாழ்க்கை வாழுவாங்க.. அப்படியாபட்ட அரை குட்டி முதலாளிகளை மட்டும்தான் பாட்டாளிகள் நட்பு சக்தியாக கருதணுமாம். உதாரணம் அண்ணன் தியாகு..

    ஆக பாட்டாளி வர்க்க அரசியலை பேசாத எவனும் அது விவசாயியோ அல்லது தொழிலாளியோ ஆனாலும் அவன் நட்பு சக்தி இல்லை. கம்யூனிஸ்டு கட்சியில் இல்லாமல் திமுக அதிமுகன்னு தொண்டனாக இருக்கும் உழைக்கும் மக்கள் யாரும் நட்பு சக்தி இல்லை. ஆனா பத்து வருசமா பாட்டாளி வர்க்க பேசிக் கொண்டு மட்டும் இருக்கும் அண்ணன் தியாகு நட்பு சக்தி

    எலி ஏன் அம்மணமா திரியுதுன்னு இப்ப புரியுதாலே….

    அட முட்டாளே, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை சேர்ந்தவன் அவன் வர்க்க நலனை மட்டும்தான் சிந்திப்பான் என்பது தெரிந்துதான் அவனை நட்பு சக்தியாக ஒரு கம்யூனிஸ்டு கட்சி ஏற்கிறது. அதுவும் குறிப்பிட்ட சூழல்களுக்கு மட்டுமே பொருந்தும். லெனின் உழுபவனுக்கு நிலம் அளித்தது சொத்துடைமையை ஊக்குவிக்கவா? சன்யாட்சென்னுடன் சின கம்யூனிஸ்டு கட்சி இணைந்து ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போரிட்டது திரிபு வாதமா? கோமிங்டானை சோவியத் ருஷ்யா ஆதரித்தது துரோகமா?

    ஒரு குறிப்பட்ட சூழலுக்கு ஏற்வாருதான் வர்கங்களின் அணிசேர்க்கை நடக்கிறது. அந்த சூழல் மாறும் பொழுது அந்த அணி சேர்க்கையும் மாறும். நேசமான வர்க்கங்களுக்கிடையே புதிய முரண்பாடுகள் தோன்றும். வர்க்கங்களற்ற சமூகம் தோன்றும் வரை அதுதான் நிலை….எல்லாரும் பாட்டாளியான பிற்பாடுதான் புரட்சி என்றால் இந்த உலகத்தில் அப்படி ஒன்று நடக்கவே நடக்காது. சட்டி சாமானை தூக்கிக்கொண்டு மில்கி வேயில் வேறிடம் தேடவும்.. (இதைத்தான் மன்னாரு விளக்கி உங்கள் மண்டை ஏற்றப்பார்த்தார் — ம், ஏறினால் தானே?)

    வால்மார்ட் வந்து அண்ணாச்சி கடைகளை ஒழித்து அங்கே வேலை செய்பவர்களை பாட்டாளி ஆக்கி நீங்கள் அதை அமைப்பாக்குவது இருக்கட்டும். ஏற்கனவே இருக்கும் அமைப்பான/அமைப்பாகாத பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் முதலில் போய் வேலை செய்யவும். பிறகு வானம் ஏறி வைகுந்தம் போகலாம். ஒளிஞ்சிருந்து வேடிக்கை பார்க்கும் இயக்கத்து காரவுகளே, உங்களுக்கும்தான் சொல்றேன்.

  42. //நல்லா பாத்துக்கங்கப்பா, வர்க்கத்தை தீர்மானிக்க – நட்பு சக்தியை தேர்ந்தெடுக்க அண்ணன் முன்வைக்கும் அளவுகோல….

    அதாவது பாட்டாளி வர்க்க அரசியலை பேசும் குட்டி முதலாளியெல்லாம் நட்பு சக்தியாம்
    பாட்டாளி வர்க்க அரசியலை பேசாத குட்டி முதலாளியெல்லாம் நட்பு சக்தி இல்லயாம்.

    தனது கட்டற்ற ஞானத்தின் மூலம் தியாகு ஒரு புதிய வர்க்கத்தையே கண்டு பிடித்திருக்கிறார் அதுதான் அரை குட்டி முதலாளித்துவ வர்க்கம்.. (ஒடனே அவிங்களுக்கு ஒரு கை , ஒரு கால், ஒரு கண், ஒரு காது இப்படியெல்லாம் பாதி பாதியா இருக்குமான்னு கேட்கப்பிடாது.. பீ கேர்புல்)//

    இதான் திரிபு வாதம் என்பது குட்டி முதலாளித்துவ வர்க்கமா இருந்தாலும் அவர் மக இகவின் நேச சக்தி என்கிறோம்னு சொன்னது நீ

    எங்கன்னு கேட்டா

    //ஆனா வினவு தோழருங்க உங்களைப் பற்றி அப்படி நினைக்கல. உங்களைப்போன்ற சிறு வணிகர்களையெல்லாம் ஒன்னு சேத்து கோவையில மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாடு நடத்தறாங்க, வெள்ளையன் போன்ற வணிகர் சங்கத்தலைவர் கூட சேர்ந்து சில்லறை வர்த்தகத்தில் அண்ணிய முதலீட்டை எதிர்க்கறாங்க. அதாவது உங்களை பகைமையா கருதல. //

    தனது வர்க்க அரசியலே தெரியாமல் இருக்கும் திவால் நிலை இருந்ததுண்டா உங்களை போன்றவர்கள்னா முதலாளித்துவ ஆதரவும் சூழலில் குட்டி முதலாளியுமா இருக்கும் முதலாளித்துவ குட்டி முதலாளிகளை வச்சி மாநாடு போடறவனுக்கு பேரு கம்யூனிஸ்டா ஹி ஹி

    செருப்படி எத்தனை தடவை வாங்கினாலும் திருத்தல் வாதத்தை விடமாட்டியா நீ

    மேலும் அடிப்ப்டை பிரச்சனை குறித்து விவாதிக்க வக்கில்லாத நீ ஊசி என்ற பெயடில் இருந்தி கியாதின்னு பேரு மாத்தி வச்சிட்டா தெரியாதுன்னு நினைப்பார்

    முதல்ல நேர்மையா இருக்க பாரு அப்புறம் மெதுவா கம்யூனிசம் பேசலாம்

    • சரிங்க, உங்களுக்கு ஒன் அவர் டைம், அதுக்குள்ள இயக்கத்து காரவுக்கிட்டேருந்து பதில் வந்தா பேஸ்டு பண்ணுங்க… அதுவரைக்கும் உங்களோட இத்துப்போன சந்தைக்கு போணும் blah blah blah வை எத்தனை வேணா போடுங்க…

      • தியுகுண்ணா எங்க போயிட்டேள், உங்க சங்காத்தத்த இயக்கத்துல கட் பண்ணிட்டாளா? பரவால்ல நீங்க தான் ஒட்டுமொத்த ஒலகத்திலயே ஒண்ணாம் நம்பர் மார்க்.ஷிட்டு அதனால அவாளுக்கு தான் நஷ்டம். உங்களுக்கு ஏண் கஷ்டம், சும்மா வாங்கோண்ணா நீங்க வாங்கோண்ணா…

  43. //ஆக பாட்டாளி வர்க்க அரசியலை பேசாத எவனும் அது விவசாயியோ அல்லது தொழிலாளியோ ஆனாலும் அவன் நட்பு சக்தி இல்லை. கம்யூனிஸ்டு கட்சியில் இல்லாமல் திமுக அதிமுகன்னு தொண்டனாக இருக்கும் உழைக்கும் மக்கள் யாரும் நட்பு சக்தி இல்லை. ஆனா பத்து வருசமா பாட்டாளி வர்க்க பேசிக் கொண்டு மட்டும் இருக்கும் அண்ணன் தியாகு நட்பு சக்தி

    எலி ஏன் அம்மணமா திரியுதுன்னு இப்ப புரியுதாலே….//

    எத்தனை காரல் மார்க்ஸ் வந்தாலும் உன்னையப் போல நபர்களை திருத்த முடியாது மொத்தமா வினவில் நடக்கும் விவாதங்களை திரிப்பதன் மூலம் மனமகிழும் குட்டி முதலாளித்துவ கழிச்சடை நீர் யெல்லாம்

    ஒரு தனிநபர் மார்க்சியம் பேசிட்டா அவன் வர்க்கமே புரட்சிகரமாகிடும்னும்
    அப்படி தனிநபர்கள் மார்க்சியம் பேசுவதை வைத்து ஒரு வர்க்கத்தை எடைபோடலாம்னும் நான் சொன்னதாக நீ சொல்வது திரிபுவாதம் முதலில் இந்த திரிபு வாதத்தை நிப்பாட்டு
    நான் கேட்டுள்ள விசயங்களில் உனக்கு மூளைன்னு ஏதாவது இருந்தால் புரிஞ்சுக்க முயற்சி செய்து விட்டு பதில் போடு ஒன்னும் அவசரமில்லை நிதானமா பதில் போடு அதுவரை நான் மன்னாருக்கு பதில் போடுகிறேன்

    மேலும் உன்னை போல லும்பன்களுடன் நான் விவாதிக்க தயாரில்லை சோ போய் பாட்டாளிவர்க்க அரசியலை படிச்சுட்டு வா வந்தபின் விவாதிக்கலாம் டேக் கேர்

    • மேலும் உன்னை போல லும்பன்களுடன் நான் விவாதிக்க தயாரில்லை ////

      ஆனா நான் தயார்…. ஊசி, மன்னாரு மாதிரி இல்லீங்கோ, உங்களைப் போன்ற எருமைத் தோலர்களுக்காகவே அற்பணிப்பு செய்யும் அருமைத் தோழர் நான்

      • குட்டி முதலாளித்துவ கழிச்சடை நீர் உன்னை போல லும்பன்களுடன்

        ஓ ஒருத்தரு ரெண்டு வர்கத்திலயும் இருக்கமுடியுமா…பேஷ் பேஷ்
        தியாகுயிச கண்டுபிடிப்பு நம்பர் 10199

        அப்படியே உங்கள் ஆய்வை பயன்படுத்தி அரைகுட்டி முதலாளியா இல்லை அரை லும்பனா . இல்லை அரைகுட்டிமுதலாளிய அரை லும்பணான்னு சொன்னீங்கண்ணா 10200ஆ ரவுண்டு நம்பர் வருமில்ல…

    • ஹலோ..ஹலோ..ஹலோ சிறுவணிகன்னா உமக்கு எளக்காரமா போச்சா? கம்யூனிசத்த பாட்டாளிங்ககிட்ட கொண்டு போறது யாருலே? முதல்ல புரட்சியில நீரு எந்த கட்டத்துல இருக்கன்னு புரிஞ்சிகிட்டு பேசுலே.

    • தியாகு தோழர் நீங்க என்ன சொல்ல வர்றீங்க தோழர் ? ஒன்னுமே புரியல தோயர் !! வால்மார்ட்ட எதிர்க்கனுமா ஆதரிக்கனுமா ?

  44. மன்னாருக்கு பதில்-பாகம் 3 
    மன்னாரு அவர்களே
    //2) அண்ணாச்சி தான் விவசாயிகள் அழிவுக்கு பிரதான காரணம் என்பதற்கு ஸ்டேட்ஸ்? எத்தனை விவசாயிகள் தற்கொலைக்கு அண்ணாச்சி காரணம். நான் பி.சாய்நாத் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கொடுத்திருக்கும் ஸ்டேடிஸ்டிக்ஸை வைத்துச் சொல்கிறேன் – அரசும் தரகு மூலதனமும் பன்னாட்டு மூலதனமும் தான் காரணம் என்று. நீங்கள் தெருமுக்கு அண்ணாச்சி தான் காரணம் என்பதற்கு ஆதரவாக வைத்திருக்கும் தரவுகள் என்ன?//

    இந்தக்கேள்வியில் //அண்ணாச்சி தான் விவசாயிகள் அழிவுக்கு பிரதான காரணம் // என்று நான் சொன்னது போல் நீங்கள் சொல்வது தவறான புரிதல் அல்லது திட்டமிட்டுத் திரித்தல்.

    நான் விவசாயிகள் அழிவுக்கு வணிகர்கள் பிரதான காரணம்  என்று சொல்லவில்லை அவர்களும் ஒரு காரணம். எனது பதிவை முழுவதும் படிக்கவில்லை இல்லை என்று நினைக்கிறேன்.
    நான் சொன்னது //இந்த முதலாளித்துவச் சங்கிலியில் முழுச்சுரண்டலுக்கு ஆளாகும் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களைச் சுரண்டும் முதலாளித்துவச் சங்கிலியில் உள்ள வணிகர்கள் எப்படி நேசசக்தி ஆகமுடியும்.// என்று. எனது இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நீங்கள் முயன்றிருந்தால் உங்களுக்கு இந்தக் கேள்வியே எழுந்திருக்காது…வேறு கேள்விகளே எழுந்திருக்கும்.

    விவசாயிகளைச் சுரண்டும் முதலாளித்துவச் சங்கிலியில் வணிகர்கள் இருக்கிறார்கள் என்பது விவாதத்திற்கு இடமில்லாதது. எனவே விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் இடையில் இருக்கும் முரண்பட்ட நலன்கள் ஒன்றுக்கொன்று விரோதமானவை. அதனால்தான் நான் சொல்கிறேன் உங்களது புதிய ஜனநாயகப் புரட்சிக்கு ஒன்றுக் கொன்று முரண்பட்ட விவசாயிகளும் வணிகர்களும் நேச சக்தி என்று கூறும் உங்கள் அடிப்படை அரசியல் வழியில் கோளாறு உள்ளது என்று. 

    உடனே, மாவோ, விவசாயிகளையும் வணிகர்களையும் நேச சக்தி என்று சொல்லித்தானே புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுத்தார் என்று அப்பாவியாகக் கேட்காதீர்கள்.

    புரட்சிக்கு முந்தய சீனாவின் நிலமைகள் வேறு; இன்றைய இந்தியாவின் நிலமைகள் வேறு அதற்குத்தான் எனது முந்தய‌ பதிவில்

    //மாவோ வணிகர்களை நேசசக்தி என்று சொன்ன காலகட்டத்தில் சீனாவில் விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் இப்படியொரு முரண்பாடு இருக்கவில்லை. விவசாயிகளின் உற்பத்தி தன்னிறைவு பெற்ற கிராமப் புற நுகர்வைத்தாண்டி வணிகர்களின் வணிகப் பொருளாகவில்லை. // என்று சொல்லியிருந்தேன்.

    ஆனால் அதற்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லை. 

    பரவாயில்லை இப்போது கூடுதலாக இன்னொரு காரணமும் சொல்கிறேன். மாவோ புதிய ஜனநாயகப் புரட்சியின் நேசசக்தி என்று சொன்ன வணிகர்களும் இன்று இந்தியாவில் இருக்கும் வணிகர்களும் வர்க்க நிலமையில் ஒன்றானவர்கள் அல்ல.

    ஏனென்றால் புரட்சிக்கு முந்தய சீனாவில் நிலப்பிரபுத்துவ சமூக‌த்தில் வணிக மூலதனத்தில் இருந்து தேசியமுதலாளியாக மாறிச் செல்லும் வரலாற்றுக் கட்டத்தில் இருந்தவர்கள் மாவோ நேசசக்தி என்று சொன்ன சீனாவின் வணிகர்கள்.

    அவர்கள் “பெரும்பாலும் நிலங்களோடு கட்டுப்பட்டவர்கள் (இது மாவோ சொன்னது)”. ஆனால் இன்று நீங்கள் நேசசக்தி என்று சொல்லும் இந்தியாவின் வணிகர்கள் தொழிற்துறையினரால் உற்பத்தி செய்யப்படும் சரக்குகளை வாங்கி விற்கும் இடைத்தரகர்கள்.  இவர்கள் முழுக்க முழுக்க தொழிற்துறையைச் சார்ந்திருப்பவர்கள்.

    முதலாளித்துச் சுரண்டலின் பங்கு பகுதியுமாய் ஒன்று கலந்திருப்பவர்கள். புரட்சிக்கு முந்தய சீனாவின் வணிகர்களையும்  இன்றைய இந்தியாவின் வணிகர்களையும் ஒன்றாக நீங்கள் பார்ப்பதில் இருந்தே உங்களுக்கு புரட்சிக்கு முந்தய சீனாவின் நிலமையும் தெரியவில்லை; இன்றைய இந்தியாவின் நிலமையும் தெரியவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது.

    அடுத்து // விவசாயிகள் அழிவுக்கு………………அரசும் தரகு மூலதனமும் பன்னாட்டு மூலதனமும் தான் காரணம்// என்று நீங்கள் சொல்வது முழு உண்மையல்ல. பகுதியளவு உண்மையே.

    ஏனென்றால், விவசாயியைச் சுரண்டும் முதலாளித்துவ வலைப்பின்னலில் இருக்கும் பல கூறுகளில் மூன்று கூறுகளைமட்டும்தான் கூறியிருக்கிறீர்கள். மற்ற கூறுகளை மறைத்திருக்கிறீர்கள். 

    விவசாயிகளின் பிரதானமான பிரச்சனை அவர்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை; ஆனால் அப்பொருட்கள் சந்தையில் நல்ல கிராக்கியுடன் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. ஆக கொள்முதல் விலைக்கும் சந்தைவிலைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை விவசாயிடமிருந்து சுரண்டப்படுகிறது.

    இதைச் சுரண்டுவது யார். அரசும் தரகு மூலதனமும் பன்னாட்டு மூலதனமும் மட்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நான் அவர்களையும் உள்ளடக்கிய முதலாளித்துவச் சுரண்டல் வலைப்பின்னல் என்கிறேன். என‌து பதிவை நீங்கள் படித்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும். மீண்டும் எடுத்துப் போடுகிறேன்.
    என் முந்தய பதிவில்
    நான் கூறியது: //உங்களின் ஒரு நேசசக்தியாகியாகிய விவசாயியின் உற்பத்திப் பொருளை -கமிஷன் மண்டி மொத்தவியாபாரி(தேசிய முதலாளி) அடிமாட்டு விலைக்கு வாங்கி ஒரு கமிஷன் வைத்து – இன்னொரு மொத்த வியாபாரிக்கு (அவரும் தேசிய முதலாளியே) விற்று அவர் ஒரு கூடுதல் விலை வைத்து -ஆலை முதலாளிகளுக்கு-அவர் அரிசி ஆலை வைத்திருக்கும் சிறு முதலாளியாகவோ பஞ்சாலை வைத்திருக்கும் பெரிய முதலாளியாகவோ(இவர்களும் தேசிய முதலாளிகளே) உள்நாட்டு, வெளிநாட்டு பன்னாட்டு பகாசுர முதலாளியாகவோ இருக்கலாம்-விற்று ஆலைப் பொருளாக (வெள்ளையன் போன்ற)மொத்தச்சில்லறை வணிகர்கள் கைக்கு வந்து அவர்கள் அப்பொருளின் மதிப்பைக்கூட்ட எந்த உழைப்பையும் செலுத்தாமல் அதன் விலையை மட்டும் ஏற்றி -சில்லறை வணிகர்களிடம் விற்று-அச்சில்லறை வணிகர்கள் அப்பொருளின் மதிப்பைக்கூட்ட எந்த உழைப்பையும் செலுத்தாமல் அதன் விலையை மட்டும் ஏற்றி -பெரும்பான்மை உழைக்கும் மக்களாகிய தொழிலளர்கள் சிறுவிவசாயியையும் உள்ளடக்கிய நுகர்வோருக்கு அதிகவிலைக்கு விற்கும் இந்த முதலாளித்துவச் சங்கிலியில் முழுச்சுரண்டலுக்கு ஆளாகும் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் …………..//

    இதில், விவசாயிகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் ஒட்டு மொத்த முதலாளித்துவச் சுரண்டல் வலைப்பின்னலில் விடுபட்டுப்போனவர்கள் : விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களையும் உழவு, அறுவடை எந்திரங்கள், மோட்டார்கள், நீர்ப்பாசனக் கருவிகள் போன்ற ஆலைப் பொருட்களை உற்பத்தி செய்து விவசாயிகளிடம் விற்கும் உள்நாட்டு மற்றும் அந்நிய நிறுவனங்கள் – அவர்களது மொத்த வணிகர்கள்-டீலர்கள்-சில்லறை வணிகர்கள், அத்துடன் முதலீட்டிற்காக கடுவட்டிக்குக் கடன் கொடுக்கும் கந்துவட்டிக்காரர்களும் கமிஷன் மண்டி வியாபாரிக‌ளும் ஆவர்.

    எனவே விவசாயிகளின் அழிவுக்குக் காரணம் வணிகர்கள் (அண்ணாச்சிகள் ) மட்டும்தான் என்று சொல்வது எப்படித் தவறோ அதைப்போலவே  விவசாயிகளின் அழிவுக்குக் காரணம் அரசும் தரகு மூலதனமும் பன்னாட்டு மூலதனமும் மட்டும்தான் காரணம் என்று சொல்வதும் தவறானதே. அரை உண்மை முழுப் பொய்யுக்குச் சமமானது. 

    மன்னாரு இன்னொரு ஆச்சரியமான விஷயம் பார்த்தீர்களா, விவசாயிகளின் அழிவுக்குக் காரணம் என்று நீங்கள் சொன்ன
    //அரசும் தரகு மூலதனமும் பன்னாட்டு மூலதனமும் // பட்டியலிலும் நிலப்பிரபு வரவில்லை. இவர்களையும் உள்ளடக்கி நான் சொன்ன பட்டியலிலும் நிலப்பிரபு வரவில்லை. விவசாயிகளின் எதிரிகளாக வருபவர்கள் அனைவருமே ஏதோ ஒரு பிரிவு அல்லது ஒரு வகை முதலாளி வர்க்கத்தினரே. இதில் இருந்தே தெரியவில்லையா விவசாயிகளுக்கு இருக்கும் பிரதான முரண்பாடு முதலாளித்துவத்துடந்தான், நிலப்பிரபுத்துவத்துடன் இல்லை என்பது. 

     மன்னாரு, உங்கள் பாயிண்டுகள் அனைத்திற்கும் மூன்று பாகமாக விடையளித்துவிட்டேன். எனது பதிலின் ஊடே நானும் உங்களுக்கு சில கேள்வி எழுப்பியுள்ளேன். அவற்றை கேள்வி 1, கேள்வி 2, என்று வரிசைப் படுத்திப் போட்டு உங்களை பள்ளிக்கூடப் பிள்ளையாக்க விரும்பவில்லை. எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும். குறிப்பாக நான் போட்டுள்ள லெனின் மேற்கோள்கள் இரண்டையும் பரிசீலித்து விவாதிக்கவும். அதையும் மீறி என் சில கேள்விகள் விடுபட்டுப் போனால் பின்னர் அவற்றை கேள்வி 1, கேள்வி 2, என்று வரிசைப் படுத்திப் போடுகிறேன். நீங்கள் சொன்னமாதிரியே ஒருவாரம் கழித்தே வரவும்
    உண்மையை நோக்கிய நமது பயணத்தை தொடருவோம்.

    • மன்னார் சாமி அவர்களே வியாபாரிகள் நேச சக்தியா ?என்ற நமது விவாதத்தின் தொடர்ச்சியில் கீழ்கண்ட புதிய ஜனநாயக கட்டுரையில் சொல்லப்படும் வியாபாரிகள் யார் என்பது குறித்தும் பதில் அளிக்கும் படி கேட்டு கொள்கிறேன்

      ஒரு வாரம் கழித்து வருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்

      //இந்தத் திடீர் விலை உயர்வைப் பயன்படுத்தி உரங்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கியும், பதுக்கிய உரங்களை மிக அதிக விலையில் விற்றும் கொள்ளை லாபமடிக்கின்றனர். இவ்வாறு கந்துவட்டிக்காரன் போல உரமுதலாளிகளும், ஏஜென்டுகளும் இந்திய விவசாயிகளை ஒட்டச் சுரண்டுகின்றனர்.//
      https://www.vinavu.com/2011/12/26/fertilizer/

      • தியாகண்ணே உங்களுக்கு கேள்வி கேட்டு ஒரு வாரம் ஆச்சுண்ணே ? அதையும் கொஞ்சம் பாருங்கண்ணே.

        • /தியாகண்ணே உங்களுக்கு கேள்வி கேட்டு ஒரு வாரம் ஆச்சுண்ணே ? அதையும் கொஞ்சம் பாருங்கண்ணே.//

          அலோ பாஸ் நீங்க காமெடி பண்ணிட்டு இருக்கீங்க அதுல என்னத்த போயி பதில் சொல்வது உதாரணமா

          ஒடுக்கும் தேசிய இனம் இல்லைன்னா ஒடுக்கப்படும் தேசிய இனம் இருக்காது (இதை தவறு என சொல்லும் நீங்கள் )

          அதை போல விவசாயி ஒடுக்கப்பட்டால் கண்டிப்பா அங்க இருப்பாங்கன்னு காமெடி பண்றீங்க

          ஒரு தப்பை சரியாக்கி இன்னொரு தப்பை எப்படி ஒட்ட வைப்பது வேற பெட்டரா டிரை பண்ணுங்க பாஸ்

          • இந்த மண்டையனுக்கு நாலு வார்த்தைய கோர்வையா கூட பேசத்தெரியல இதுல மண்டைகனம் வேறு !! தாங்க முடியலடா சாமி.

            நண்பர்களே,
            இந்த லூசு மேற்கண்ட பின்னூட்டத்தில் சொல்ல வருவது என்ன என்பதை லூசு மொழியை அறிந்த யாரேனும் இருந்தால் எனக்கு மொழிபெயர்த்து தர இயலுமா ? நல்ல நிலையில் இருப்பவர்கள் யாரும் இம்முயற்சியில் இறங்க வேண்டாம்.

            ///ஒடுக்கும் தேசிய இனம் இல்லைன்னா ஒடுக்கப்படும் தேசிய இனம் இருக்காது (இதை தவறு என சொல்லும் நீங்கள்)///

            ///அதை போல விவசாயி ஒடுக்கப்பட்டால் கண்டிப்பா அங்க இருப்பாங்கன்னு காமெடி பண்றீங்க////

            • சோற்று கருத்து மன்னார் சாமிக்கு நான் எழுப்பிய கேள்விகளுக்கு அவரோட பினாமியை போல தப்பும் தவறுமாக பதில் சொல்லும் உங்களுடன் விவாதிப்பதைவிட மன்னார்சாமியுடன் விவாதிப்பதை கவனிக்கவும்

              எப்பவும் பெரியவங்க பேசும்போது வந்து உளப்ப கூடாது

              குறைந்தபட்சம் அடிப்படை அறிவுடன் பேசவும் மிஸ்டர் சோற்று கருத்து அல்லது மாட்டு கருத்து

              லூசுபயலெல்லாம் மற்றவனை லூசுன்னு சொல்லுவாய்ங்கன்னு ரொம்ப காலத்துக்கு மின்னாடியே சொல்லி இருக்கானுக மிஸ்டர் சோற்றுகருத்து

              நான் உங்களை லூசுனெல்லாம் சொல்ல மாட்டேன் ஏன்னா

              உங்களை போன்ற அல்கைஸ் கொஞ்சம் படிச்சுட்டு வந்து விவாதிக்கலாம் 🙂

              • /////சோற்று கருத்து மன்னார் சாமிக்கு நான் எழுப்பிய கேள்விகளுக்கு அவரோட பினாமியை போல தப்பும் தவறுமாக பதில் சொல்லும் உங்களுடன் விவாதிப்பதைவிட மன்னார்சாமியுடன் விவாதிப்பதை கவனிக்கவும்/////

                இவரு பெரிய தத்துவ தளபதி இவரு விவாதிக்கிறதை நாங்க அமைதியா கவனிச்சு அந்த தத்துவத்தில சங்கமிக்கனுமாம். ஏய் வெண்ண உன் அரசியல் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு தான் உங்கிட்ட பேசிக்கிட்ருக்கேன்.

                என்னோட பதில்ல என்ன தப்பு இருக்குன்னு மட்டும் கொஞ்சம் எடுத்து போடு பேசுவோம்.

  45. ////இந்த முதலாளித்துவச் சங்கிலியில் முழுச்சுரண்டலுக்கு ஆளாகும் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களைச் சுரண்டும் முதலாளித்துவச் சங்கிலியில் உள்ள வணிகர்கள் எப்படி நேசசக்தி ஆகமுடியும்////

    மதம்னா எல்லா மதமும் ஒன்னுதான்னு பார்க்க முடியுமாடே மரமண்ட?
    இந்தியாவில் யார் புரட்சிக்கு முதன்மையான எதிரி பார்ப்பன கும்பலா இசுலாமா ?
    பார்ப்பனீயம் தான் என்றால் அதே போல தான் ஏகாதிபத்திய வால்மார்டையும் சாதாரண அண்னாச்சியையும் பிரிச்சி பார்க்கனும்லே. அப்படி இல்லாம ரெண்டியும் ஒன்னுதான்னு எந்திரகதியாக பார்க்கபிடாதுடே.

    கனவுல லெனின் வந்து ’சிப்தாஸ் யு சி இந்தியா’ன்னு சொன்னதினாலேயே நம்ம ஆசான் சிப்பிதாசு தூக்கத்திலிருந்து குதிச்சி எந்திரிச்சு ஒரு லட்சிய வெறியோட கட்சிய ஆரம்பிச்சு புரட்சி செய்ய கிளம்பி அதிலிருந்து பிரிஞ்ச பிஞ்சி போன பன்னு மாதிரி ஒரு கோஷ்டிக்கிட்ட நீ மாட்டிக்கிட்டு அவங்க சொல்றதையெல்லாம் எல்லாம் அப்படியே சொன்னா இப்படி தாம்டே கிறுக்குத்தனமா இருக்கும்.

  46. ///விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் இடையில் இருக்கும் முரண்பட்ட நலன்கள் ஒன்றுக்கொன்று விரோதமானவை.///

    இவர்களுக்கிடையில் மட்டுமில்ல மண்டையா, தேசிய முதலாளிகளுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கிடையிலும் கூட முரண்பாடு உண்டு ஆனால் அவை அனைத்தும் பகை முரண்பாடுகள் அல்ல. ஏகாதிபத்தியம் தான் முதலில் வீழ்த்த வேண்டும். ஏன் ? ஏனென்றால் ஏகாதிபத்தியம் தான் அனைத்து மக்களுக்கும் முதன்மை எதிரி. மேலும் ஏகாதிபத்தியத்தால் தான் அனைத்து வர்க்கங்களும் அதிகமான ஒடுக்குமுறைக்குள்ளாகிறார்கள். எனவே தமது பொது எதிரியை வீழ்த்த தமக்கிடையிலான சிறு சிறு பிரச்சினைகளை எல்லாம் மறந்து ஒன்று சேர்கிறார்கள். இந்த வர்க்கங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் இடையில் இருப்பது தான் பகை முரண்பாடு. ஆனா உன்னோட அழுகிப்போன மூளை என்ன சொல்லுது ? இல்லை இல்லை சிறு வணிகர்களுக்கும் விவசாயிகளுக்குமிடையிலான முரண்பாடு தான் பிரதான முரண்பாடுன்னு சொல்லுது. இப்படிப்பட்ட வேலை செய்யாத செத்துப்போன போன மூளையை என்ன செய்வது ? செருப்பால் எல்லாம் அடிக்கக்கூடாது, வீட்டுக்குப் போகும் போது திருப்பூர் கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டியில தூக்கி போட்டுட்டு போய்டு, இந்த வீனாப்போன வேலை செய்யாத மூளையாள தானே இவ்வளவு பிரச்சினையும் !

  47. ///மாவோ வணிகர்களை நேசசக்தி என்று சொன்ன காலகட்டத்தில் சீனாவில் விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் இப்படியொரு முரண்பாடு இருக்கவில்லை.///

    இது யாருடைய கண்டு பிடிப்பு ஆசானே ? அன்று விவசாயிகள் விளைவித்தவை எல்லாம் நகர்புறத்திற்கு வரவே இல்லையா ? அவற்றை கொள்முதல் செய்து சிறு வணிகர்கள் சிறிதளவு லாபம் வைத்து விற்கவே இல்லையா ? இந்த கண்டுபிடிப்பு எந்த மண்டையனுடையது ? இதற்கு சான்று கொடு அக்காக்கிஅக்காகியேவிச் !

    முரண்பாடு ஒருபக்கம் இருக்கட்டும். அவர்களின் முதன்மை எதிரியாக ஏகாதிபத்தியம் இருந்ததா இல்லையா ஆசான் ? சொன்னது மண்டையில ஏறிச்சா இல்லையா ?

    • ஒரு அரை மண்டையனுக்கு என் பேர வைச்சு என்னைய அசிங்கப்படுத்தாதீங்க..

  48. ////அதற்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லை.பரவாயில்லை இப்போது கூடுதலாக இன்னொரு காரணமும் சொல்கிறேன் மாவோ புதிய ஜனநாயகப் புரட்சியின் நேசசக்தி என்று சொன்ன வணிகர்களும் இன்று இந்தியாவில் இருக்கும் வணிகர்களும் வர்க்க நிலமையில் ஒன்றானவர்கள் அல்ல.ஏனென்றால் புரட்சிக்கு முந்தய சீனாவில் நிலப்பிரபுத்துவ சமூக‌த்தில் வணிக மூலதனத்தில் இருந்து தேசியமுதலாளியாக மாறிச் செல்லும் வரலாற்றுக் கட்டத்தில் இருந்தவர்கள் மாவோ நேசசக்தி என்று சொன்ன சீனாவின் வணிகர்கள்.////

    அடேங்கப்பா என்னா ஒரு கொழுப்பு ஒனக்கு ? சீனப்புரட்சியிலிருந்து நீ ஏதோ ஒரு பெரிய உண்மைய சொல்லிட்ட மாதிரியும் அந்த உண்மை சுட்ரும்னு நாங்க ஏதோ அதுக்கு பதில் சொல்லாதது மாதிரியும் என்னா ஒரு கெத்து ஒனக்கு, அடிங்கொய்யால..

    சீன நிலப்பிரபுத்துவச் சமூகத்திலிருந்த தேசிய முதலாளிகள் எத்தனை சதம் ? மொத்த உற்பத்தியில் அவர்களுடைய பங்கு என்ன ? சீன சமூகத்தில் அவர்கள் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக வளர்ந்தார்களா ? அவர்களிடமிருந்து இந்திய தேசிய முதலாளிகள் அளவு ரீதியாக மாறுபட்டிருக்கிறார்களா, தன்மை ரீதியாக மாறுபட்டிருக்கிறார்களா ? இரு தேசிய முதலாளிகளுக்கிடையிலான முக்கிய வேறுபாடுகள் என்னென்ன என்று அனைத்தையும் இங்கே பட்டியலிட வேண்டும்.

    ///சீனாவில் நிலப்பிரபுத்துவ சமூக‌த்தில் வணிக மூலதனத்தில் இருந்து தேசியமுதலாளியாக மாறிச் செல்லும் வரலாற்றுக் கட்டத்தில் இருந்தவர்கள்///

    அன்று சீன சமூகத்தில் அவர்கள் தேசிய முதலாளிகளாக வளர எந்த தடைகளும் இல்லையா ? சுயேச்சையாக வளர்ந்து சென்றுவிட்டார்களா ? (முதலில் வளர்ந்தார்களா என்பது முக்கியம், இதை மேலே கேட்டுள்ளேன்) அவர்களுடைய வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்தது ? வளர்ந்தார்கள் அல்லது வளரவில்லை, ஏன் ? தடை இருந்தது அல்லது இல்லை, ஏன் ? இவற்றுக்கெல்லாம் டான் டான் என்று நேரடியாக பதில் கூற வேண்டும். பிறகு அந்த சீன நிலைமையை அப்படியே இந்தியாவுக்கு பொருத்தி கூற வேண்டும். அங்கிருந்த எந்த பிரச்சினை இங்கு இல்லை, எந்த பிரச்சினை இருக்கு, அந்த தே.முதலாளிகளையும் இந்த தே.முதலாளிகளையும் ஏன் ஒப்பிட கூடாது என்று அனைத்திற்கும் பதில் கூற வேண்டும்.

    டாடா, அம்பானி மாதிரி தரகு முதலாளிகளை எல்லாம் தேசிய முதலாளின்னு சொல்றதுக்காக பம்ப்ளிமாஸ் மண்டையனுங்க என்னென்ன தகிடுதத்தம் பன்றானுங்க..

  49. ///சீனாவின் வணிகர்களையும் இன்றைய இந்தியாவின் வணிகர்களையும் ஒன்றாக நீங்கள் பார்ப்பதில் இருந்தே உங்களுக்கு புரட்சிக்கு முந்தய சீனாவின் நிலமையும் தெரியவில்லை; இன்றைய இந்தியாவின் நிலமையும் தெரியவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது.///

    மண்டை மண்டை ஒன்னோட மண்டை தான்யா ரொம்ப வீங்குன மண்டை, இதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். அதனால ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீயே சொல்லு. அதாவது புரட்சிக்கு முந்தய சீனாவின் நிலமையையும், இன்றைய இந்தியாவின் நிலமையும் சொல்லு.

  50. ///அடுத்து விவசாயிகள் அழிவுக்கு அரசும் தரகு மூலதனமும் பன்னாட்டு மூலதனமும் தான் காரணம் என்று நீங்கள் சொல்வது முழு உண்மையல்ல. பகுதியளவு உண்மையே. ஏனென்றால், விவசாயியைச் சுரண்டும் முதலாளித்துவ வலைப்பின்னலில் இருக்கும் பல கூறுகளில் மூன்று கூறுகளைமட்டும்தான் கூறியிருக்கிறீர்கள். மற்ற கூறுகளை மறைத்திருக்கிறீர்கள். விவசாயிகளின் பிரதானமான பிரச்சனை அவர்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை; ஆனால் அப்பொருட்கள் சந்தையில் நல்ல கிராக்கியுடன் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. ஆக கொள்முதல் விலைக்கும் சந்தைவிலைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை விவசாயிடமிருந்து சுரண்டப்படுகிறது.

    இதைச் சுரண்டுவது யார். அரசும் தரகு மூலதனமும் பன்னாட்டு மூலதனமும் மட்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நான் அவர்களையும் உள்ளடக்கிய முதலாளித்துவச் சுரண்டல் வலைப்பின்னல் என்கிறேன்.///

    அட மண்டையா எப்பேர்பட்ட கண்டுபிடிப்பு இது ! ஒனக்கு பிரச்சினையே ஒன்னோட செத்துப்போன மூளை தான்.

    விவசாயிகள் சுரண்டப்படுவது பற்றி இந்த மாமேதை கூடுதலாக சொல்றது என்னன்னா ”முதலாளித்துவச் சுரண்டல் வலைப்பின்னல்” லும் ஒரு முக்கிய காரணமாம் ! அதைத்தானே செத்துப்போன மண்ட ”அரசும் தரகு மூலதனமும்” ன்னு மேல சொல்லியிருக்கு. மண்டையில ஏறுச்சா இல்லையா ? மண்டை தான் பிரச்சினையா இல்ல கண்ணு பிரச்சினையா ?

  51. ///மன்னாரு இன்னொரு ஆச்சரியமான விஷயம் பார்த்தீர்களா, விவசாயிகளின் அழிவுக்குக் காரணம் என்று நீங்கள் சொன்ன அரசும் தரகு மூலதனமும் பன்னாட்டு மூலதனமும் பட்டியலிலும் நிலப்பிரபு வரவில்லை. இவர்களையும் உள்ளடக்கி நான் சொன்ன பட்டியலிலும் நிலப்பிரபு வரவில்லை. விவசாயிகளின் எதிரிகளாக வருபவர்கள் அனைவருமே ஏதோ ஒரு பிரிவு அல்லது ஒரு வகை முதலாளி வர்க்கத்தினரே. இதில் இருந்தே தெரியவில்லையா விவசாயிகளுக்கு இருக்கும் பிரதான முரண்பாடு முதலாளித்துவத்துடந்தான், நிலப்பிரபுத்துவத்துடன் இல்லை என்பது.///

    அடேங்கப்பா என்னா ஒரு கண்டுபிடிப்பு !!
    இந்த கண்டுபிடிப்பச்சொல்றதுல சாருக்கு
    என்ன ஒரு பொறுமை, என்ன ஒரு தன்னடக்கம் !!

    முதலாளித்துவ ஜனநாயகம் என்பதே முதலாளித்துவ சர்வாதிகாரம் தான் என்று மார்க்சியம் சொல்கிறது உடனே நம்ம தியாகுவும் உடனிருக்கும் தத்துவ ஓட்டாண்டிகளும் எங்கே சர்வாதிகாரி என்று தேடுவார்களா ?

    இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் அரசிகளும்,அரசர்களும்,இளவரசர்களும், அரண்மனையும் இருக்கிறது என்றால் உடனே நிலப்பிரபுத்துவம் இல்லையே என்று தேடுவார்களா ?

    இந்தியா பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடாரமாக இருக்கிறது.
    இந்த நாட்டிலிருக்கும் அனைத்து தேசிய இனங்களும் ஒடுக்கப்படுகின்றன.
    ஆனால் ஒரு ஒடுக்குகின்ற (பெரும்)தேசிய இனம் இல்லை.
    எனில் பிற தேசிய இனங்களை ஒடுக்குவது யார் ?

    இதற்கெல்லாம் என்ன பதில் மிஸ்டர் மண்டையன் ?

    ஆனாலும் இந்தியாவில் நிலப்பிரபு வர்க்கம் இருக்கிறது,
    மிகக்குறைந்த அளவில் புதிய வடிவில்.
    நிறைய பண்ணையார்களும் இருக்கிறார்கள்.
    நிலப்பிரபுத்துவம் என்றால் அது நிலப்பிரபுவின் சட்டை பையில் தான்
    இருக்கும் என்று செத்த மூளையை வைத்துக் கொண்டு யோசிக்கக்கூடாது!

    சரி,இன்னமுமா அந்த பிண்டத்தை கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டில தூக்கி போடாம இருக்கீங்க ?

    • சோற்றுக்கருத்து அவர்களே நான் டீ கேட்டு பத்து நாள் ஆச்சு, இன்னும் வரல, உங்களுக்கு மட்டும் வந்திடுமா என்ன? எத்தனை பேர் செருப்பால அடிச்சாலும் பப்பல்லோ மேல ரெயின் பேஞ்சா மேரியா இருப்பாங்க பாருங்க அதான் மாட்டுக்ருத்து, எருமை மாட்டுக்கருத்து.. எனவே மாடு இருக்க இந்த மாட்டு** தியாகுவை நோவானேன்?

      • ஆமாங்க இப்படி ஒரு தடித்த தோலை நான் இதுவரை கண்டதுமில்லை கேட்டதுமில்லை. இந்தாளுக்கு நம்ம ’இந்தியாவிலேயே ஏன் சுசி மட்டுமே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி’ (இது நம்ம மார்க்சிய ஆசான் சிப்பிதாசின் சுசி கட்சி வெளியிட்ட ஒரு புத்தகத்தின் பெயர்) என்கிற கட்சியையே போலிகள்னு சொல்லிட்டு வெளியேறிய 100% உண்மையான புரட்சியாளர்களின் கட்சியில் ஒரு போஸ்டிங் கொடுக்க நான் பரிந்துரைக்கிறேன்.

    • உங்களுக்கு இந்த பிரச்சினை எப்ப தீரப்போவுதோ சரி அது இருக்கட்டும்,
      நீங்க சொல்லுங்க அதியமான் டாடா அம்பானியெல்லாம் தரகு முதலாளியா தேசிய முதலாளியா ?

      • இரண்டும் இல்லை. அவர்களின் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. மேலும் இந்த ‘தரகு’ முதலாளி என்ற சொல்லாட்டலே ஏற்புடையதல்ல. எப்பவும் தான். ’தரகு கம்யூனிஸ்ட்’ அல்ல்து ’தரகு தொழிலாளி’ என்று சொன்ன எப்படி இருக்கும் ? அதே போல் தான் இது போன்ற வீண் வார்த்தைகளின் அர்த்தமற்ற தன்மைகள்.

  52. மக்களே, என்ன 24 மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சு நம்ம மண்டையன இன்னும் காணோம்னு பாக்குறீங்களா, அவருக்கு நெறைய வேலை இருக்கும்லா ?
    போன போடனும் அப்புறம் அவிங்க சொல்றத உள்வாங்கி குறிச்சிக்கனும், அப்புறம் குறிச்சதை டைப் பண்ணனும், டைப் பன்னும் போது நிறைய மறந்திருக்கும் காரணம் உள்வாங்குறது மண்டை தானே அங்கன பிரச்சினை இருக்கிறதால மறுபடியும் போனப்போட்டு கேக்கனும், ரெண்டாவது முறை போனப்போடும் போது அவிங்க பல விசயத்தை மறந்திருப்பாங்க அதனால கொஞ்சம் வெயிட் பன்னுங்க காம்ரேட் இல்லைனா மதியம் பன்னுங்க பாத்துச்சொல்றோம்ன்னு சொல்லுவாங்க ஆக மொத்தம் இதுக்கெல்லாம் நேரம் ஆகாதா ??

  53. தியாகு,

    நான் தீவிரமாக சிந்தித்துப் பார்த்ததில் நீங்கள் சொல்வதே சரியென்கிற முடிவுக்கு வந்து விட்டேன். மிஸ்டர் ஊசி மற்றும் மிஸ்டர் குயாதி – இனிமேல் உங்கள் பேச்சு கா. நானும் இன்றிலிருந்து தியாகுவிஸ்ட் ஆவது என்கிற தீர்மானத்துக்கு வந்து விட்டேன். மக்களே, இதோ நவீன உலகின் கார்ல் மார்க்ஸ் திருப்பூர் தியாகு என்னை இம்ப்ரெஸ் செய்த தருணங்களை நான் தொகுப்பாக வழங்குகிறேன்.

    //ஏனென்றால் இரண்டு முரண்பாட்டைத் தீர்க்க ஒரே புரட்சிக்கு ஒன்றுக் கொன்று முரண்பட்ட விவசாயிகள்-வணிகர்களை நேச சக்தி என்று கூறும் உங்கள் அடிப்படை அரசியல் வழியில் உள்ள கோளாறைச் சுட்டிக்காட்டி அதன் மீது விவாதிக்கவே இப்படிப் பதிவு போட்டேன்//

    பார்த்தீர்களா, எங்கே மன்னார்சாமி கோளாறான பாதையில் நுழைந்து விடுவானோ என்கிற அக்கறையிலும் அன்பிலும் நீங்கள் எத்தனை சரியாக சொல்லியிருக்கிறீர்கள்? நான் தான் அதைப் புரிந்து கொள்ளவில்லை. முதலில் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஒன்றுக் கொன்று தீவிரமாக முரண்பட்டு சண்டை செய்கிறார்கள் என்றும், சிறு வணிகர்களான அண்ணாச்சிகள் விவசாயிகளை ஒழித்துக்கட்டுகிறார்கள் என்றும் நீங்கள் புதிதாக கண்டுபிடித்திருப்பதை நான் மட்டுமல்ல, முத்துராமலிங்க தேவரும் கூட ஒத்துக் கொள்கிறார் –” நம்ம பெண்கள் வயலில் வேலை செய்கிறார்கள் சானாத்திப் பெண்களின் காதுகளில் பாம்படம் பளிச்சிடுகிறது” என்று உங்களது ஆய்வின் வழியிலேயே அவரும் சிந்தித்திருப்பதால் முத்துராமலிங்கமும் ஒரு தியாகுவிஸ்டாகவே இருக்க முடியும்.

    ஆந்திராவில் பி.டி பருத்தி விதைத்த விவசாயிகளின் சாவுக்கும், விதர்பாவின் பருத்தி விவசாயிகளின் சாவுக்கும் கூட நம்ம தின்னவேலி அண்ணாச்சிகளே காரணம். பஞ்சாபின் உருளை விவசாயிகளைக் கசக்கிப் பிழியும் பெப்சி ஐ.டி.சி ஓனர்கள் கூட தின்னவேலிக்குப் பக்கத்திலிருக்கும் வள்ளியூரைச் சேர்ந்த அண்ணாச்சிகள் தான் என்பதை நான் காண மறந்து விட்டேன் 🙁

    இந்தியப் புரட்சியை குறுக்கே விழுந்து தடுத்துக் கொண்டிருக்கும் இந்த அண்ணாச்சிகளை ஒழித்துக் கட்டி விட்டால்…. அப்புறம் என்ன? டைரக்டா சோசலிசம் தான். இந்தியப் பொருளாதாரத்தையும் சமூக வரலாற்றையும் மார்க்சிய ஒளியில் ஆய்ந்தறிந்து விவசாயிகளின் ஆகப் பெரும் எதிரி அண்ணாச்சிகளே என்று கம்யூனிச குன்று திருப்பூர் தியாகு கண்டு பிடித்துக் கொடுத்திருப்பதே இந்நூற்றாண்டில் கம்யூனிசத்துக்குக் கிடைத்த மாபெரும் கொடை.

    ஒரு முரண்பாட்டில் ‘எதிரியாய்’ இருப்பவர்கள் இன்னொரு முரண்பாட்டை எதிர்க்க நேச சக்தியாகக் கொள்ள முடியாது என்கிற மார்க்சிய பால பாடம் மார்க்சுக்கே தெரியாமல் போனது வரலாற்றுச் சோகம் 🙁 மார்க்சியத்துக்கு நேர இருந்த இழுக்கை கம்யூனிச குன்று திருப்பூர் தியாகுவால் தான் தவிர்க்க முடிந்தது. நல்லவேளை நீங்கள் இப்போதாவது அவதரித்தீர்கள். இப்படி ஒரு அவதாரத்துக்காக ஒட்டு மொத்த மனித குலமும் ஒத்தைக் காலித் தவம் புரிந்து வந்தது. இதெல்லாம் அறியாத சிறுவர்களான வி.இ லெனினையும் மாசே துங்கையும் மன்னித்து விட்டு விடுவீர்கள் என்று நம்புகிறேன். எல்லாம் வல்ல தியாகு பேரண்பும் பெருங்கருணையும் கொண்டவரன்றோ

    ஏகாதிபத்தியத்தை எதிர்த்த அணிசேர்க்கையில் சிறு உடைமையாளர்களுடனும் குட்டி முதலாளிய வர்க்கத்துடனும் பாட்டாளி வர்க்கம் தனது தலைமையிலான ஒரு ஐக்கியத்தைக் கட்ட வேண்டும் என்று சொன்ன மாசே துங்கை விட மார்க்சியத்தைக் கரைத்துக் குடித்துள்ளவர் தியாகு என்பதை எதிர்கால வரலாறு சொல்லும். மிஸ்டர் குயாதி, வருங்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு எட்டாங்கிளாஸ் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது வரலாற்றுப் பாடத்தின் மூன்றாவது சேப்டராக கம்யூனிச குன்று தியாகுவின் வாழ்க்கை வரலாறு இடம் பெறப்போகிறது என்று உங்களை எச்சரிக்கிறேன்.என்ன, போட்டோவில் கொஞ்சம் வாய் வெடித்ததைப் போலிருப்பார் என்பதால் வேப்பிலையை மட்டும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

    “பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகிய பொதுவுடைமைக்கட்சி, சூழ்நிலையைக் கையாள்வதில் மாற்றங்களை மேற்கொள்வதும், பாட்டாளிகளிடையே உள்ள பல்வேறு குழுக்களுடனும், பல்வேறு தொழிலாளர் கட்சிகளுடனும், சிறுபட்டறை உரிமையாளர்களுடனும் உடன்பாடுகளையும் சமரசங்களையும் மேற்கொள்வது அவசியமானது” என்று சொன்ன வி.இ லெனின் உண்மையில் முதலாளி- கம்யூனிஸ்டு என்பதையும், சிறுபட்டறை உரிமையாளர்கள் சுரண்டல்வாதியாக இருந்ததை கவனிக்கத் தவறி விட்டார் என்பதையும், இன்றைய காலகட்டத்தின் மார்க்சியம் லெனினியம் அல்ல – அது தியாகுவிசமே என்பதையும் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.

    அதே போல், தனிஉடைமையை ஒழித்து சோசலிசத்தை நிலைநாட்ட வேண்டிய கடமையை வி.இ லெனின் மறந்து போய் விவசாயிகள் நிலங்களை அபகரித்து உடமையாக்கிக் கொள்வதை ஆதரித்துள்ளார் என்பதால் லெனின் கம்யூனிஸ்ட் அல்ல. மேலும் மார்க்சே மூலதனத்தின் இயல்பு சுரண்டல் என்று சொன்னபின் லெனின் சிறு உடமையாளர்களுடன் எப்படி கூட்டு வைக்கலாம்? ஆனால் பாருங்கள், தியாகு மேனேஜராக இருந்து முதலாளியின் சார்பாக சாட்டை சுழற்றினாலும் – தீபாவளிக்கு லீவு கேட்ட ப்யூனிடம் பகுத்தறிவு பேசும் அளவுக்கு பாட்டாளி வர்க்க பாசம் கொண்ட மேனேஜராய் இருப்பதால் தியாகுவே உண்மையான கம்மீனிஸ்டு.

    மக்களுக்கும் தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் இடையே நிலவும் முரண்பாடு மக்கள் மத்தியில் நிலவும் முரண்பாடு என்றும் அது பகையற்றது என்றும் சொன்ன மாசே துங்கை விட தூய மேனேஜரிஸ்ட்டாக.. ச்சீ., கம்யூனிஸ்டாக வாழும் கம்யூனிசக் குன்று தியாகு தான் என்பதை இந்த உலகம் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில், மூலதனம் என்றாலே சுரண்டும் தானே என்று சிண்டைப் பிடித்து உலுக்கும் வல்லமை கொண்டவர் தியாகு – ஆனால், அதிலேயே உள்ள முரண்பட்ட சக்திகளில் மக்களுக்கு ஆதரவானவைகளைக் காணச் சொல்லிக் கொடுத்தவர்கள் லெனினும் மாசேதுங்கும்.

    மேலும், கட்சிக்கு வெளியே உள்ள சிறு முதலாளிய மக்கள் திரளுடன் ஒரு உறுதியான பரந்த நேச அணியை உருவாக்க வேண்டும் என்றும் பொது எதிரிக்கு எதிரான இந்த அணிதிரட்டலில் பாட்டாளி வர்க்கம் உறுதியான தலைமைப்பாத்திரம் வகிக்க வேண்டும் சொன்ன மாசே துங்கை விட அண்ணாச்சியை அப்படியே தள்ளிக்கொண்டு போய் அம்பானியின் பக்கத்தில் உட்கார வைத்து இருவரையும் ஒரு சேர எதிர்க்க வேண்டும் என்று சொல்லும் தியாகுவே மாபெரும் மார்க்சிய அறிஞர் என்பதை மிஸ்டர் குயாதி புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆக, விவசாயிகளை நசுக்கியழிக்கும் அண்ணாச்சிகளை ஒழிக்க, விவசயிகளை வாழவைக்கும் தெய்வமான (கொஞ்சகாலத்துக்காவது என்று எங்க தலையே சொல்லியாச்சு) வால்மார்ட்டை ஆதரிப்போம். மன்மோகன் போன்ற விவசாயிகளின் உற்ற தோழர்கள், விவசாயத்தைக் காப்பதற்காகவே வால்மார்ட்டை வரவழைத்திருக்கும் போது அதை எதிர்க்கும் குயாதி கும்பல் உண்மையில் புரட்சியை தாமதம் செய்பவர்களே. ஏனென்றால், கொஞ்சகாலத்துக்கு விவசாயியைக் காப்பாத்தும் வால்மார்ட் கடவுள், அதன்பின் காலைவாரி பாட்டாளி வர்க்கமாக மாற்றிவிடும். அப்போது பாட்டாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து….அமைப்பாக்கி… கட்சி கட்டி… அப்புறம்? வேறென்ன புரட்சி தான்!. எல்லோரும் கொண்டாடுவோம்… அல்லாவின் பேரைச் சொல்லி.. நல்லோர்கள் வாழ்வை எண்ணி..

    நீங்கள் எங்கள் தலைவர் தியாகு சொல்வதை நம்ப வேண்டும். ஏனென்றால் அப்படித்தான் இன்று வால்மார்ட்டின் பிறந்த வீடு அமெரிக்காவிலும் புகுந்த வீடு இங்கிலாந்திலும் புரட்சி வென்று சோசலிச அரசாங்கங்கள் அமைந்துள்ளன. எக்கனாமிஸ்டே ஒபாமாவை மறைமுக கம்யூனிஸ்ட் என்று சொல்லியிருக்கிறது – இது ஒன்றே போதும். அது போதாதென்றால் எங்கள் தங்கம் கொள்கைச் சிங்கம் தியாகு வந்து சொல்வார்.

    எங்கள் தலைவர் தியாகு என்னை மடக்கிய இடங்கள் கீழே –

    • //ஆனால் வணிகர்கள் ஏற்றி வைக்கும் விலை அவர்களது ஒரு நாள்கூலிக்குச் சமமானது என்று உங்களால் சொல்ல முடியுமா? முடியாது//

    பாவம் லெனினாலேயே முடியவில்லை. அதனால் தான் // ஒரு சிறுகடைக்காரரிடம் நாம் வாங்கிய சாமான்களின் விலையில் எந்த அளவு உழைப்பின் மதிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, எந்தப் பகுதி மோசடி, இதரவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று நாம் கணக்கிட்டுப் பார்க்க முடியாது. என்றும் இதனாலேயே நாம் உழைப்பளவை மதிப்புத்தத்துவத்தைக் கைவிட வேண்டிய அவசியமில்லை// – என்று சொல்லி லெனினே கைகளைத் தூக்கி விட்டார். லெனினாலேயே முடியாததை எங்கள் தலைவர் தியாகு முடித்து காட்டி மார்க்சியத்துக்கான இருபத்தோராம் நூற்றாண்டுக்கான் பங்களிப்பை செய்துள்ளார். மார்க்சியம், லெனினியம், மாவோ சிந்தனைகள் எனும் வரிசையில் தியாகுவியம் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இன்னமும் பல இடங்களில் வால்மார்ட்டை எதிர்த்து சிறுகடை உரிமையாளர்களோடு சேர்ந்து போராடிக் கொண்டிருக்கும் மார்க்சிய லெனினியக் கட்சிகளை இந்த பின்னூட்டத்தின் மூலம் எச்சரிக்கிறேன்.

    என்னால் இதற்கு மேல் முடியலை… முடியலை..

    குன்று தியாகு அவர்களே, ஐயேம் டோட்டல் சரண்டர்.

    ./மன்னார்சாமி

    • அண்ணே! தோலர். தியாகு படத்தை மாவோக்கு பின்னாடி போடலாமா இல்ல லெனினுக்கு முன்னாடி போடலாமா. அதையும் சொல்லிட்டீங்கன்னா ஆர்டர் குடுக்க வசதியா இருக்கும்.

      • முதலாளித்துவம் வளர்ந்து பாட்டாளிவர்கம் உருவாகாத நிலையில், புரட்சிக்கு பாட்டாளி வர்கம் வேண்டும் என்பதால், மார்க்ஸியவாதிகள் வால்மார்ட் முதல் பல பெரும்முதலாளிகளை ஆதரிக்க வேண்டும். வால்மார்ட் வரவால் பாட்டாளிவர்கம் தோன்றும், இப்பொழுது மார்க்ஸியவாதிகள் பாட்டாளிகளை அணிதிரட்டி புரட்சி செய்யலாம். இது தான் தியாகுவிஸம். அத்னால் இந்தியாவில் இனி புரட்சி வர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் ரகசிய தியாகுவிஸ்டான மன்மோக்ன் சிங் வால்மார்ட்டை அனுமதிக்கிறார். இந்தியா புரட்சிக்கு லெனினிஸமோ, மவோயிஸமோ உதவாது, எதிரியை வளர வைத்தே அவனை பழிவாங்க போகும் தியாகுவிஸமே புரட்சியை கொண்டு வரும். மார்க்ஸ்-ஏங்கல்ஸ்- தியாகு உலக தியாகுவிஸ்டுகளே ஒன்றுபடுங்கள்

    • மண்ணாரு, நான் போட்ட மூன்று பகுதி பதிவுகளைப் படிச்சீங்களா இல்லையா? நீங்கள் இப்போ சொல்ற எல்லாத்துக்கும் நான் லெனினையும் மாவோவையும் மேற்கோள் காட்டியே பதில் சொல்லியிருக்கேன். அதுமட்டுமில்லாம, //குறிப்பாக நான் போட்டுள்ள லெனின் மேற்கோள்கள் இரண்டையும் பரிசீலித்து விவாதிக்கவும். // என்றும் கேட்டுள்ளேன்.
      ஆனால் அதற்கு பதிலே சொல்லாம நீங்க சொன்னதையே சொல்லிக்கிட்டிருந்தா எப்படி மிஸ்டர் மண்ணாரு. நான் எந்த இடத்திலும் லெனினும் மாவோவும் பாட்டாளி வர்க்கம் தனது புரட்சியில் சிறு விவசாயிகள் மற்றும் வணிகர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னது தவறு என்று சொல்லவில்லை. அதுபோல இந்தியாவிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும் தனியாகவே புரட்சியை செய்ய வேண்டும் பிற வர்க்கங்களை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் சொல்லவில்லை.

      நான் சொல்வது லெனினும் மாவோவும் எப்போது சிறு விவசாயிகள் மற்றும் வணிகர்களுடன் கூட்டுச் சேர்ந்தார்கள் என்ன நிபந்தனையுடன் கூட்டுச் சேர்ந்தார்கள் நீங்கள் அதுபோல நிபந்தனையுடன் கூட்டுச் சேரவில்லை என்பதுதான் எனது விமர்சனம். 
      (மார்க்சிய விமர்சனங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அடிப்படை மார்க்சியம் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்.

      நீங்கள் ////அண்ணாச்சி அவரையே சுரண்டிக் கொள்வாரா?// என்று கேட்டு வணிகர்கள் சுரண்டவே இல்லை என்று தலை சுத்த வைத்த போதே உங்களுக்கு எப்படிப்பட்ட மார்க்சியம் சொல்லித்தரப்பட்டுள்லது என்பது தெரிந்துவிட்டது.)

      நான் சொன்னது // இந்த அணிசேர்க்கை எப்ப நடக்கனும்னு லெனின் சொல்றார் பாட்டாளி வர்க்கம் திரட்டபட்டிருக்கும் போது (அதாவது லெனினும் மாவோவும் பாட்டாளி வர்க்கத்தை அணிசேர்த்து வச்சிகிட்டு மற்ற வர்க்கத்த அணிசேர்க்க முயற்சி செய்தாங்க) // 

      இதற்கு நீங்க எந்தப் பதிலும் சொல்லவில்லை. அதாவது லெனினும் மாவோவும் சிறு விவசாயிகள் மற்றும் வணிகர்களுடன் அணிசேர்க்கை பற்றிப் பேசியபோது பாட்டாளிகளை அணிதிரட்டவில்லை என்றோ நாங்கள் பாட்டாளிகளை அணிதிரட்டி விட்டோம் என்றோ சொல்லவில்லை. இப்பவும் கேட்கிறேன் அணிதிரட்டப் படாமல் இருக்கும் ஒரு வர்க்கம் ( பாட்டாளி வர்க்கம் ) நன்கு அணிதிரண்டிருக்கும் ஒரு வர்க்கத்துடன் (வணிக வர்க்கத்துடன்) அணிசேர்ந்து அணிதிரண்டிருக்கும் வர்க்கத்தின் (வணிக வர்க்கத்தின்) கோரிக்கைக்காகப் போராடும்போது யார் யாரைப் பயன்படுத்துவார்கள் என்பதே என்பதே என் கேள்வி. அதற்கு ஒரு பதிலையும் காணோமே மண்ணாரு.

      அடுத்தது லெனின் சிறுவிவசாயிகளுடன் அணி சேரும்போது பாட்டாளி வர்க்கக் கட்சி நிபந்தனையுடன் தான் அணிசேரவேண்டும் என்கிறார். அதற்கு நான் போட்ட

      லெனின் மேற்கோள் இதோ
      //“விவசாயிகளைப் பொறுத்தவரை, இன்றய சமூகத்தின் ஒரு சிறு நிலஉடமை வர்க்கம் மற்றும் சிறு விவசாய வர்க்கம் என்ற முறையில் அதன் நலன்களைப் பாதுகாப்பதற்கு எந்த வகையிலும் நாம் பொறுப்பேற்க மாட்டோம். இது போன்ற எதுவும் கிடையாது. “தொழிலாளர்களின் விடுதலை என்பது தொழிலாளி வர்க்கத்தின் செயலாகவே இருக்க முடியும்”, அதன் காரணமாகவே சமூக -ஜனநாயகம் -நேரடியாகவும் முழுமையாகவும் – தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்துகிறது; அதன் வர்க்க இயக்கத்துடன் மட்டுமே பிரிக்க முடியாத உடல் உறுப்புப் போன்ற ஒற்றுமையை வேண்டுகிறோம். இன்றய சமூகத்தின் மற்ற அனைத்து வர்க்கங்களும் நட‌ப்பில் இருக்கும் பொருளாதார அமைப்புமுறையின் அடித்தளத்தை கட்டிக் காப்பாற்றுவதற்காகவே இருக்கின்றன. அதனாலேயே சமூக- ஜனநாயகம் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் – ஸ்தூலமானதும் கராறாக வரையறுக்கப் பட்ட நிபந்தனைகளின் பேரில் மட்டுமே அந்த வர்க்கங்களின் நலன்களை பாதுகாப்பதற்கு பொறுப்பேற்க முடியும். உதாரணத்திற்கு, சிறு விவசாயிகள் உள்ளிட்ட சிறு உற்பத்தியாளர் வர்க்கம், முதலாளித்துவத்திற்கு எதிரான அதன் போராட்டத்தில் ஒரு பிற்போக்கான வர்க்கம். எனவே “முதலாளித்துவத்தின் கடுந்தாக்குதலில் இருந்து சிறு-அளவு விவசாயத்தையும் சிறு உடமைகளையும் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளைக் காப்பாற்ற முயற்சிப்பது சமூக வளர்ச்சியை சீர்குலைக்கும் ஒரு பயனற்ற செயலாகவே இருக்கும்; அது முதலாளித்துவத்தின் கீழும் கூட வளமான வாழ்வின் சாத்தியம் பற்றிய மாயையினால் விவசாயி வர்க்கத்தை ஏமாற்றுவதாக அர்த்தம்; அது தொழிலாளிவர்க்கத்தை பிளவுபடுத்தி, பெரும்பான்மையினரின் இழப்பில் சிறுபான்மையினருக்கு தனிச்சலுகை பெற்றதொரு அந்தஸ்தை உருவாக்குவதாக அர்த்தம்.”-லெனின்

      மண்ணாரு அவர்களே லெனின் சொன்ன இந்த வழிகாட்டுதல்படிதான் நீங்கள் நடக்கிறீர்களா? பதில் இன்னும் நீங்க சொல்லவில்லை. மாறாக நீங்கள் லெனின் சொன்ன நிபந்தனையை விட்டுவிட்டு கூட்டணி என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு நீங்கள் சொல்வது
      // “பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகிய பொதுவுடைமைக்கட்சி, சூழ்நிலையைக் கையாள்வதில் மாற்றங்களை மேற்கொள்வதும், பாட்டாளிகளிடையே உள்ள பல்வேறு குழுக்களுடனும், பல்வேறு தொழிலாளர் கட்சிகளுடனும், சிறுபட்டறை உரிமையாளர்களுடனும் உடன்பாடுகளையும் சமரசங்களையும் மேற்கொள்வது அவசியமானது” என்று சொன்ன வி.இ லெனின் உண்மையில் முதலாளி- கம்யூனிஸ்டு என்பதையும், சிறுபட்டறை உரிமையாளர்கள் சுரண்டல்வாதியாக இருந்ததை கவனிக்கத் தவறி விட்டார் என்பதையும், இன்றைய காலகட்டத்தின் மார்க்சியம் லெனினியம் அல்ல – அது தியாகுவிசமே என்பதையும் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.

      அதே போல், தனிஉடைமையை ஒழித்து சோசலிசத்தை நிலைநாட்ட வேண்டிய கடமையை வி.இ லெனின் மறந்து போய் விவசாயிகள் நிலங்களை அபகரித்து உடமையாக்கிக் கொள்வதை ஆதரித்துள்ளார் என்பதால் லெனின் கம்யூனிஸ்ட் அல்ல. மேலும் மார்க்சே மூலதனத்தின் இயல்பு சுரண்டல் என்று சொன்னபின் லெனின் சிறு உடமையாளர்களுடன் எப்படி கூட்டு வைக்கலாம்? // என்று கூறி லெனினைத் திரிக்கிறீர்கள்.

      முடிந்தால் லெனின் சொன்ன நிபந்தனைப்படிதான் வணிகர்களுடன் கூட்டு வைத்துள்ளோம் என்று சொல்லுங்கள்.

      மண்ணாரு //மக்களுக்கும் தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் இடையே நிலவும் முரண்பாடு மக்கள் மத்தியில் நிலவும் முரண்பாடு என்றும் அது பகையற்றது என்றும் சொன்ன மாசே துங்கை விட….//

      //கட்சிக்கு வெளியே உள்ள சிறு முதலாளிய மக்கள் திரளுடன் ஒரு உறுதியான பரந்த நேச அணியை உருவாக்க வேண்டும் என்றும் பொது எதிரிக்கு எதிரான இந்த அணிதிரட்டலில் பாட்டாளி வர்க்கம் உறுதியான தலைமைப்பாத்திரம் வகிக்க வேண்டும் சொன்ன மாசே துங்கை விட // என்று சொல்லி உங்கள் திவாலான தத்துவத்திற்கு மாவோவை ஏன் பலியாக்குகிறீர்கள். 

      அதற்குத்தான் நான் //உடனே, மாவோ, விவசாயிகளையும் வணிகர்களையும் நேச சக்தி என்று சொல்லித்தானே புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுத்தார் என்று அப்பாவியாகக் கேட்காதீர்கள்.
      புரட்சிக்கு முந்தய சீனாவின் நிலமைகள் வேறு; இன்றைய இந்தியாவின் நிலமைகள் வேறு அதற்குத்தான் எனது முந்தய‌ பதிவில்
      // மாவோ வணிகர்களை நேசசக்தி என்று சொன்ன காலகட்டத்தில் சீனாவில் விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் இப்படியொரு முரண்பாடு இருக்கவில்லை. விவசாயிகளின் உற்பத்தி தன்னிறைவு பெற்ற கிராமப் புற நுகர்வைத்தாண்டி வணிகர்களின் வணிகப் பொருளாகவில்லை. //

      என்று சொல்லியிருந்தேன்.ஆனால் அதற்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லை. 

      பரவாயில்லை இப்போது கூடுதலாக இன்னொரு காரணமும் சொல்கிறேன். மாவோ புதிய ஜனநாயகப் புரட்சியின் நேசசக்தி என்று சொன்ன வணிகர்களும் இன்று இந்தியாவில் இருக்கும் வணிகர்களும் வர்க்க நிலமையில் ஒன்றானவர்கள் அல்ல. ஏனென்றால் புரட்சிக்கு முந்தய சீனாவில் நிலப்பிரபுத்துவ சமூக‌த்தில் வணிக மூலதனத்தில் இருந்து தேசியமுதலாளியாக மாறிச் செல்லும் வரலாற்றுக் கட்டத்தில் இருந்தவர்கள் மாவோ நேசசக்தி என்று சொன்ன சீனாவின் வணிகர்கள்.அவர்கள் “பெரும்பாலும் நிலங்களோடு கட்டுப்பட்டவர்கள் (இது மாவோ சொன்னது)”. 

      ஆனால் இன்று நீங்கள் நேசசக்தி என்று சொல்லும் இந்தியாவின் வணிகர்கள் தொழிற்துறையினரால் உற்பத்தி செய்யப்படும் சரக்குகளை வாங்கி விற்கும் இடைத்தரகர்கள்.  இவர்கள் முழுக்க முழுக்க தொழிற்துறையைச் சார்ந்திருப்பவர்கள்.முதலாளித்துச் சுரண்டலின் பங்கு பகுதியுமாய் ஒன்று கலந்திருப்பவர்கள். 

      புரட்சிக்கு முந்தய சீனாவின் வணிகர்களையும்  இன்றைய இந்தியாவின் வணிகர்களையும் ஒன்றாக நீங்கள் பார்ப்பதில் இருந்தே //உங்களுக்கு புரட்சிக்கு முந்தய சீனாவின் நிலமையும் தெரியவில்லை; இன்றைய இந்தியாவின் நிலமையும் தெரியவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. // என்று சொன்னேன் 🙂 அதற்கும் நீங்கள் பதில் சொல்லவில்லை.

      உங்க அல்லக்கையை அனுப்பி இந்திய நிலைமைக்கும் சீன நிலமைக்கும் உள்ள வேறுபாட்டை நானே சொல்லியும் அது புரியாமல் மீண்டும் நீங்களே சொல்லுங்கள்னு பதிவு போட்டீங்க.
      மாவோ சீனாவிற்குச் சொன்னது வேறு இங்கு நீங்கள் மாவோவின் பெயரில் செய்து கொண்டிருப்பது வேறு. தயவு செய்து இப்பவாவது பதில் சொல்லுங்க. 

      மண்ணாரு நான் ஏற்கனவே//இந்தக்கேள்வியில் //அண்ணாச்சி தான் விவசாயிகள் அழிவுக்கு பிரதான காரணம் // என்று நான் சொன்னது போல் நீங்கள் சொல்வது தவறான புரிதல் அல்லது திட்டமிட்டுத் திரித்தல்.

      நான் விவசாயிகள் அழிவுக்கு வணிகர்கள் பிரதான காரணம்  என்று சொல்லவில்லை அவர்களும் ஒரு காரணம். எனது பதிவை முழுவதும் படிக்கவில்லை இல்லை என்று நினைக்கிறேன்.

      நான் சொன்னது //இந்த முதலாளித்துவச் சங்கிலியில் முழுச்சுரண்டலுக்கு ஆளாகும் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களைச் சுரண்டும் முதலாளித்துவச் சங்கிலியில் உள்ள வணிகர்கள் எப்படி நேசசக்தி ஆகமுடியும்.// என்று.

      எனது இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நீங்கள் முயன்றிருந்தால் உங்களுக்கு இந்தக் கேள்வியே எழுந்திருக்காது…வேறு கேள்விகளே எழுந்திருக்கும்.// என்று தெளிவுபடுத்திய‌ பிறகும்  அதற்குப் பதில் சொல்லாமல் மீண்டும் மீண்டும் வணிகர்களை மட்டும் எதிர்ப்பது போலவும் வால்மார்ட்டை ஆதரித்து வரவேற்பது போலவும் திரிப்பதுதான் உங்கள் விவாத நேர்மை என்பது தெரிந்துவிட்டது.

      அப்படியானால் //விவசாயிகளின் அழிவுக்குக் காரணம் வணிகர்கள் (அண்ணாச்சிகள் ) மட்டும்தான் என்று சொல்வது எப்படித் தவறோ அதைப்போலவே  விவசாயிகளின் அழிவுக்குக் காரணம் அரசும் தரகு மூலதனமும் பன்னாட்டு மூலதனமும் மட்டும்தான் காரணம் என்று சொல்வதும் தவறானதே. அரை உண்மை முழுப் பொய்யுக்குச் சமமானது. // என்று நான் சொன்னதற்கு அர்த்தம் புரியவில்லை என்று நினைக்கிறேன்.

      இருவருமே எதிரிகள் என்பதுதான் அதன் அர்த்தம். இது புரியாமல் // விவசாயிகளின் ஆகப் பெரும் எதிரி அண்ணாச்சிகளே என்று கம்யூனிச குன்று திருப்பூர் தியாகு கண்டு பிடித்துக் கொடுத்திருப்பதே …// என்று சொல்வதன் உள்நோக்கம் என்ன? நான் தமிழில் தானே சொல்றேன்.

      மண்ணாரு // விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஒன்றுக் கொன்று தீவிரமாக முரண்பட்டு சண்டை செய்கிறார்கள் என்றும், சிறு வணிகர்களான அண்ணாச்சிகள் விவசாயிகளை ஒழித்துக்கட்டுகிறார்கள் என்றும் நீங்கள் புதிதாக கண்டுபிடித்திருப்பதை நான் மட்டுமல்ல, முத்துராமலிங்க தேவரும் கூட ஒத்துக் கொள்கிறார் –” நம்ம பெண்கள் வயலில் வேலை செய்கிறார்கள் சானாத்திப் பெண்களின் காதுகளில் பாம்படம் பளிச்சிடுகிறது” என்று உங்களது ஆய்வின் வழியிலேயே அவரும் சிந்தித்திருப்பதால் முத்துராமலிங்கமும் ஒரு தியாகுவிஸ்டாகவே இருக்க முடியும்.// 

      சாதியவாதியான முத்துராமலிங்கத் தேவரும் நீங்களும் தான் ஒரே வழியில் சிந்திக்கிறீர்கள். முத்துராமலிங்கத் தேவர் சுரண்டும் நில முதலாளிகளையும் சுரண்டப்படும் விவசாயக் கூலிப்பெண் தொழிலாளர்களையும் வர்க்கங்களாகப் பார்க்காமல் தேவர்-சாணார் சாதிப் பெண்களாகப் பார்க்கும் சாதியப் பார்வைதான் உங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான் //ஆந்திராவில் பி.டி பருத்தி விதைத்த விவசாயிகளின் சாவுக்கும், விதர்பாவின் பருத்தி விவசாயிகளின் சாவுக்கும் கூட நம்ம தின்னவேலி அண்ணாச்சிகளே காரணம். பஞ்சாபின் உருளை விவசாயிகளைக் கசக்கிப் பிழியும் பெப்சி ஐ.டி.சி ஓனர்கள் கூட தின்னவேலிக்குப் பக்கத்திலிருக்கும் வள்ளியூரைச் சேர்ந்த அண்ணாச்சிகள் தான் ……… விவசாயிகளின் ஆகப் பெரும் எதிரி அண்ணாச்சிகளே என்று  ……………………விவசாயிகளை நசுக்கியழிக்கும் அண்ணாச்சிகளை ஒழிக்க,………..// என்று வணிகர் என்ற ஒரு வர்க்கத்தை “அண்ணாச்சிகள்” “தின்னவேலி அண்ணாச்சிகள்” ” வள்ளியூரைச் சேர்ந்த அண்ணாச்சிகள்” என்ற சொல்லாடல் மூலம் ஒரு குறிப்பிட்ட ச்சாதியாகக் குறுக்கிப் பார்க்கும் சாதியப்பார்வை அருவருப்பாகத் தெரியவில்லையா. நீங்கள்லாம் கம்யூனிஸ்டு சொல்ல வெட்கமாக இல்லையா? நீங்கள் வர்க்கப் பார்வை கொண்ட மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்று சொல்லிக் கொள்வதை விட சாதியப் பார்வை கொண்ட முத்துராம லிங்க தேவரிஸ்ட்னு சொல்லுங்க அதான் பொருத்தமா இருக்கும்.

      அப்புறம் தேவரிஸ்டான உங்களிடம் மார்க்சியத்தின் உழைப்பு-சரக்கின் மதிப்பு-உபரிமதிப்பு -சரக்கில் உட் பொதிந்துள்ள (வணிகர்கள் மோசடியாக ஏற்றி வைத்திருக்கும் விலையை நீக்கிய)உழைப்பின் மதிப்பளவு-பற்றிய புரிதல்களை எதிர்பார்க்க முடியாதுதான். எனவே // ஒரு சிறுகடைக்காரரிடம் நாம் வாங்கிய சாமான்களின் விலையில் எந்த அளவு உழைப்பின் மதிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, எந்தப் பகுதி மோசடி, இதரவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று நாம் கணக்கிட்டுப் பார்க்க முடியாது. என்றும் இதனாலேயே நாம் உழைப்பளவை மதிப்புத்தத்துவத்தைக் கைவிட வேண்டிய அவசியமில்லை// லெனினது மேற்கோளை சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்ப்பது பேராசைதான்.

      மண்ணாரு நான் உங்கள //உண்மையை நோக்கிய நமது பயணத்தை தொடருவோம்.// என்று கூப்பிட்டா, நீங்க வரமாட்டேன்னு அடம்பிடிக்கிறீங்க. உண்மையையும் ஒத்துக்க்காம விவாதத்திற்கும் வராமல் சாமர்த்தியமாக //என்னால் இதற்கு மேல் முடியலை… முடியலை.. குன்று தியாகு அவர்களே, ஐயேம் டோட்டல் சரண்டர்.// என்று வித்தியாசமாக விவாதத்தில் இருந்து ஜகா வாங்கும் அதிபுத்திசாலியை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.

      • நல்ல வேள எங்க நீங்க இம்மா பெரிய பதிவுல “ஆதலால் வால்மார்ட்டை எதிர்பது சரி” அப்படின்னு சொல்லிடுவிங்களோன்ன பயந்துட்டேன்..பாட்டாளி வர்கத்தை உருவாக்கபோகும் வால்மார்ட் வாழ்க சுரண்டும் அண்ணாச்சிகள் ஒழிக. இப்ப தான் மூச்சே வந்தது.

        மார்க்ஸ்-ஏங்கல்ஸ்-தியாகு

      • டியர் மிஸ்டர் தியாகு அண்டு மாட்டுக்கருத்து கம்பேனி பிரைவேட் லிமிட்டெட் கவனத்திற்கு.

        உங்க ரீலு எப்பவோ அந்து போச்சு, நானும் அதை நீங்க கவனிச்சு எஸ்ஸாயிடுவீங்கன்னு பாத்தேன்… ம்.. தியாகுவுக்கு இருக்கும் பட்டானி சைஸ் அரசியல் அளவில் பாதியாவது இருக்குதோ இல்லயோ, அவர் கிட்ட இருக்கும் பரங்கிமலை அளவு ஈகோ முழுசா இருக்கு.. இன்னும் 3 நாள் டைம் எடுத்துகிட்டு உங்க ரீலு அந்து போன எடம் எதுன்னு கரைக்டா சொன்னீங்கன்னா சைலன்டா விட்டுடலாம், இல்லேன்னா நடுவால குந்தவச்சு ரவுண்டு கட்டி கும்மியடிச்சிடுவோம் 🙂

      • பாஸ் நீங்க ஒரு தத்துவஞானியா இருக்கலாம் பாஸ் அதுக்காக பலர் ஏற்றுக்கொண்ட பிறகும் கூட கோட்பாட்டுக்குள்ள இவ்வளவு ஆழமா இறங்கி தியாகுயிசத்தை நிரூபிக்க வேண்டியதில்லை. அதான் எல்லோரும் சொல்லிட்டாங்கல்ல மாவோவுக்கு பின்னாடி நீங்கதான்னு, அப்புறம் எதுக்கு பாஸ் மறுபடியும் மல்லுக்கட்டுறீங்க ? நீங்க இவங்களை வெண்றெடுத்திட்டீங்க பாஸ் ! இனிமேல் நம்ம செய்ய வேண்டியதெல்லாம் மார்க்கெட்டிங் வேலை மட்டும் தான். இதுவரைக்கும் இருந்த ஐவர் படத்தை இனிமேல் அறுவர் படமா அச்சிடனும். கடைசியா நீங்க நம்ம மாட்டுகருத்து கட்சியிலயும் சேர்ந்து புரட்சிக்கு வழிகாட்டனும்

      • தலைவர் தியாகு அவர்களே,

        நமது கட்சியான தூசியின் (தூசி – TUCI – Thiaguist Unity Center of India) கொள்கைகள் பெரும்பாலும் எனக்கு அத்துப்படியாகி விட்டது என்றாலும் சில சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கிறது. சந்தேகத்தை கடைசியில் கேட்கிறேன்.

        //நீங்கள் நேசசக்தி என்று சொல்லும் இந்தியாவின் வணிகர்கள் தொழிற்துறையினரால் உற்பத்தி செய்யப்படும் சரக்குகளை வாங்கி விற்கும் இடைத்தரகர்கள். இவர்கள் முழுக்க முழுக்க தொழிற்துறையைச் சார்ந்திருப்பவர்கள்.முதலாளித்துச் சுரண்டலின் பங்கு பகுதியுமாய் ஒன்று கலந்திருப்பவர்கள். //

        இதை நான் முற்றிலுமாக ஒப்புக் கொள்கிறேன் தலைவர் அவர்களே. அம்மி அப்பளம், பட்டை கிராம்பு பாக்கெட் போடும் தொழிலதிபர்கள், வெத்திலை பாக்கு விற்கும் தொழிலதிபர்கள், பொண்வண்டு, அரசன், ஊர்வசி போன்ற சோப்புகளைத் தயாரிக்கும் மல்டி நேஷனல் கம்பெனிகள், அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் விற்கும் கார்ப்பரேட் கம்பெனிகள், டால்டா விற்கும் தேசங்கடந்த தொழிற்கழகங்கள், சூடம் சாம்பிராணி ஊதுபத்தி போன்றவற்றை பாக்கெட் போட்டு விற்கும் பகாசுர முதலாளித்துவ நிறுவனங்கள், கருவாடு விற்கும் பெருந்தொழில் முதலைகள் மற்றும் தோழர் கவுண்டமணி சொன்ன ‘குண்டூசி விற்பவன் புண்ணாக்கு விற்பவன்’ போன்ற மாபெரும் தொழிலதிபர்களிடம் இருந்து பொருள் வாங்கி விற்கும் இடைத்தரகர் தான் சிறு வணிகர்கள். எனவே இவர்களும் சுரண்டல் சங்கிலியில் முக்கியமானவர்கள். நீங்கள் சொல்வதை 100% ஆதரிக்கிறேன்.

        //இந்த முதலாளித்துவச் சங்கிலியில் முழுச்சுரண்டலுக்கு ஆளாகும் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களைச் சுரண்டும் முதலாளித்துவச் சங்கிலியில் உள்ள வணிகர்கள் எப்படி நேசசக்தி ஆகமுடியும்.//

        அதைத் தானே நானும் கேட்டிருக்கிறேன்? சிறுகடை உரிமையாளரும் அம்பானி மிட்டல் வால்மார்ட், கேரிஃபோரும் ஒரே தரப்பில் நின்று ஒன்று போலவே விவசாயிகளை சுரண்டுகிறார்கள் என்று நீங்களே சொன்ன உங்கள் கருத்தைத் தானே ஆதரித்திருக்கிறேன். இதில் குற்றம் என்ன கண்டீர் கொற்றவா?

        //என்று வணிகர் என்ற ஒரு வர்க்கத்தை “அண்ணாச்சிகள்” “தின்னவேலி அண்ணாச்சிகள்” ” வள்ளியூரைச் சேர்ந்த அண்ணாச்சிகள்” என்ற சொல்லாடல் மூலம் ஒரு குறிப்பிட்ட ச்சாதியாகக் குறுக்கிப் பார்க்கும் சாதியப்பார்வை அருவருப்பாகத் தெரியவில்லையா. நீங்கள்லாம் கம்யூனிஸ்டு சொல்ல வெட்கமாக இல்லையா?//

        தலைவரே இந்த இடத்தில் ஒரு சிறிய சுயவிளக்கம்.

        அண்ணாச்சி என்கிற பதம் பொதுவில் சிறுவணிகர்களைக் குறிப்பதாக இருப்பதால் பொதுவான புரிதலுக்கே அந்த பதத்தை பயன்படுத்தினேன். மேலும் மக்கள் மொழியில் தின்னவேலிக்காரரோ திருவண்னாமலைக்காரரோ மளிகைக்கடை என்றால் அது தெக்கத்திக்கார அண்ணாச்சியின் கடை தான். நான்கு கோடி அண்ணாச்சிக் கடைகள் என்றால் அதை அப்படியே நான்கு கோடி ______ சாதி என்று கன்வர்ட் செய்து புளகாங்கிதம் அடைய உங்களுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவரின் மூளை இருக்காது என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டேன். சமத்துவ மக்களை விடுங்கள், சாதாரண மக்களைப் பொருத்தவரையில் முத்துராமலிங்கத் தேவரே நாளை காலை மதுரை கூடல் நகர் எக்ஸ்பிரசில் கிளம்பி சென்னையில் இறங்கினால் அவரும் ‘அண்ணாச்சி’ தான். ஆகவே அதிகம் பீல் ஆக வேண்டாம். கீழே இருக்கும் பொருட்செறிவு வாய்ந்த பாடலைக் கேட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

        //அண்ணாச்சி கடையிலே சுரண்டல் இல்லைப்பா
        அண்ணாச்சி தானப்பா நேசசக்தியப்பா
        நேச சக்தியப்பா நேச சக்தியப்பா// = http://thiagu1973.blogspot.com/2011/12/blog-post_7465.html

        அடுத்து சந்தேகங்களைக் கேட்டு விடுகிறேன்.

        வணிகர்களோடு கூட்டணி சேர்ந்தால் முதலாளி கம்யூனிஸ்டு என்று நீங்கள் ஏற்கனவே வரையறுத்திருந்தீர்கள். இப்போது நிபந்தனையுடன் கூட்டணி சேரலாம் என்று புதிதாக வரையறுக்கிறீர்கள். அப்படி என்றால் இது நிபந்தனையுடன் கூடிய முதலாளி கம்யூனிஸ்டு கட்சி ஆகாதா என்று நமது விரோதி மிஸ்டர் குயாதி கேட்கிறார். அதற்கு பாட்டாளி வர்க்கம் அணிதிரட்டப்பட்டு நிபந்தனை விதிக்க வேண்டும் என்று நான் சொன்னேன். அவரோ, இந்தியாவில் 70% பேர் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழிலில் இருக்கிறார்கள். 5-10% சிறுவணிகம் மற்றும் அதைச் சார்ந்த தொழிலில் இருக்கிறார்கள், மீதமுள்ளவர்களில் பெரும்பாலும் முறைப்படுத்தப்படாத தொழில்களில் கூலி வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். முறையான ஆலைத் தொழிலில் இருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு அவர்களும் சாதியாய், மதமாய், இனமாய் பிரிந்து கிடக்கிறார்கள். நமது தூசி கட்சியில் இருப்பதோ இரண்டே மெம்பர்கள். நீங்கள் மேட்டாளி (மேனேஜர் + பாட்டாளி) நான் கூட்டாளி (கூலிக்காரன் + பாட்டாளி) நாம்எப்படி பாட்டாளிகளை அணிதிரட்டப் போகிறோம்?

        1. பாட்டாளி வர்க்கம் எந்தச் சூழலில் சிறுவணிகர்களிடம் கூட்டு சேரலாம்? அப்படிச் சேர்ந்தால் அது முதலாளித்துவத்தோடு கூட்டு சேர்ந்தது ஆகாதா?
        2. நிபந்தனை விதிக்கலாம் என்றால் அது என்ன நிபந்தனை? ‘தினமும் காலை எல்லா பெட்டிக்கடைக்காரரையும் வர வைத்து ‘தூசி வாழ்க’ என்று சொல்லிக் கொண்டே தோப்புக்கரணம் போடச் செய்வதா?
        3. அப்படி நிபந்தனையோடு கூட்டு சேர்ந்தாலும் அது சொந்த நாட்டு கத்தியை வைத்து குத்திக் கொள்வதாகும் என்று நமது கட்சியின் விதி எண் 10 / உட்பிரிவு 3Aவில் சொல்லப்பட்டுள்ளதே? (http://thiagu1973.blogspot.com/2011/12/blog-post_10.html)

        4. புரட்சிக்கு முன் இருந்த சீனத்தின் நிலைக்கும் இன்றைய இந்திய நிலைக்குமான வேறுபாடு அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ளும் குயாதி, அதற்காக நாம் செய்திருக்கும் ஆய்வுகள் என்ன? புள்ளிவிபரங்கள் என்ன? என்று கேட்கிறார்.

        5. தெளிவாகச் சொல்லுங்கள் சிறுவணிகர்களோடு கூட்டணி வேண்டுமா வேண்டாமா? வேண்டும் என்றால் ஏன் வேண்டும் எப்போது வேண்டும் எப்படி வேண்டும் எதற்காக வேண்டும். வேண்டாம் என்றால் ஏன் வேண்டாம்?

        இந்தக் கேள்விகளுக்கு என் சிறுமூளைக்குப் புரியும் படி பதில் சொன்னீர்கள் என்றால் நமது கட்சியில் கொ.ப.சேவாக செயல்பட இன்னும் ஊக்கமாக இருக்கும்.

        ./மன்னார்சாமி

        தூசி கட்சியின் துகள்

        • மன்னாரு ,

          /1.பாட்டாளி வர்க்கம் எந்தச் சூழலில் சிறுவணிகர்களிடம் கூட்டு சேரலாம்? அப்படிச் சேர்ந்தால் அது முதலாளித்துவத்தோடு கூட்டு சேர்ந்தது ஆகாதா?
          /

          பாட்டாளி வர்க்கதை திரட்டி வச்சிகிட்டுதான் அணிசேர்க்கையை பற்றி பேசவே
          ண்டும் இப்ப பாட்டாளி வர்க்கத்தை அணி திரட்டி விட்டீர்களா ?
          இதற்குமுதலில் பதில் சொல்லவும்

          • ////பாட்டாளி வர்க்கதை திரட்டி வச்சிகிட்டுதான் அணிசேர்க்கையை பற்றி பேசவே
            ண்டும் இப்ப பாட்டாளி வர்க்கத்தை அணி திரட்டி விட்டீர்களா ?
            இதற்குமுதலில் பதில் சொல்லவும்////

            ஆம் அணிதிரட்டியிருக்கிறோம். ஆனால் பாட்டாளி வர்க்கம் முழுவதையும் அணிதிரட்டிய பிறகு தான் அடுத்த வர்க்கத்தை பற்றி, ஐக்கிய முன்னணியை பற்றி பேச வேண்டும் என்பது எந்த ஊர் மார்க்சியம் ?

            சீன கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்ட போது அங்கு பெரும் எண்ணிக்கையில் இருந்தது விவசாய வர்க்கமே. பாட்டாளி வர்க்கத்தை விட பிற வர்க்கங்களே அதிக எண்ணிக்கையில் அணிதிரட்டப்பட்டன. பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஏகாதிபத்தியத்திற்கெதிரான ஐக்கிய முன்னணி கட்டப்பட நாட்டிலிருக்கும் மொத்த பாட்டாளிகளையும் முதலில் அணிதிரட்ட வேண்டும் என்று கூறுவது ஒரு வகையான எந்திரகதி பார்வையாகும்.

            பாட்டாளி வர்க்கம் அதிக எண்ணிக்கையில் இல்லாத இடத்தில் என்ன செய்ய வேண்டும் ? உதாரணத்திற்கு அந்தமான்.

            • //பாட்டாளி வர்க்கம் அதிக எண்ணிக்கையில் இல்லாத இடத்தில் என்ன செய்ய வேண்டும் ? உதாரணத்திற்கு அந்தமான்.//

              இந்தியாவில் பாட்டாளி வர்க்கம் அதிகமில்லையா அதை அணி திரட்டி விட்டீர்களா ? என்ற கேள்விக்கு என்ன பதில்

              • திரிபுவாதிகளான உங்ககிட்ட எங்கள் புரட்சித்தலைவர் கேட்ட கேள்விக்கு நீங்க சொன்ன பதிலை படிச்சிட்டு மறுபடியும் எப்புடி ஒரு கேள்வி கேட்டார் பாருங்க ! எங்க மண்டைய யாராலும் அடிச்சிக்க முடியாது ஏன்னா இது அப்படி ஒரு மரமண்டை.

              • //இந்தியாவில் பாட்டாளி வர்க்கம் அதிகமில்லையா அதை அணி திரட்டி விட்டீர்களா ? என்ற கேள்விக்கு என்ன பதில்///

                மக்கள் தொகையில் இருக்கும் மொத்த பாட்டாளிகளையும் கணக்கெடுத்து,பின்னர் அவர்களில் கடைசி பாட்டாளி வரை ஒன்று சேர்த்து(கடைசி பாட்டாளிவரை என்பதை குறித்துக்கொள்ளுங்கள், தியாகுவிஸத்தின் ஆணிவேர் அது) சேர்த்துவிட்டு தான் புரட்சி பற்றி பேச வேண்டும் அது வரை வால்மார்ட் வந்தால் வழிவிட வேண்டும், ஏனென்றால் வால்மார்ட் தான் புது பாட்டாளிகளை உருவாக்கபோகிறேதே….

                கடைசி நிமிடம் வரை கூட எதிர்கேள்வி போடுவோமே தவிற வால்மர்ட் வருவது தான் சரி என்பது தியாகுவிஸம். அத விடமாட்டோமே
                மார்க்ஸ்-ஏங்கல்ஸ்- தியாகு

                • சரி உடுங்கண்ணே. அவரு ஏறக்குறைய அழுவுற ரேஞ்சுக்கு வந்துட்டாரு.

                  அண்ணே! தியாகு! நீங்களும் மார்க்சிஸ்டுதான் நீங்களும் மார்சிஸ்டுதான். உங்க விலாசத்த சொல்லுங்க நானும் வந்து டியூசனுக்கு வர்றேன்.

          • நம்ம பாட்டாளி வர்க்க ’ஆசான்’ சுப்புதாசு கோசு கட்சிகாரங்க தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மட்டுமே அறிந்த தமிழ் பாட்டாளிகளிடமும், பீகாரிலுள்ள பீகாரி மட்டுமே அறிந்த பீகாரி பாட்டாளிகளிடமும் அவர்களுடைய சொந்த மொழியில் நோட்டீஸ் கொடுக்காமல் வெள்ளைக்கார துரைங்க மொழியில நோட்டீஸ் கொடுத்து அவர்களை அனிதிரட்டிய அறிவாளிகள் என்பதை எத்தனை தோழர்கள் அறிவார்கள் ? இதை எதற்காக இங்கே அறிவிக்கிறேன் என்றால் பாட்டாளிகளை எல்லாம் அணிதிரட்டிட்டியா என்று கேட்கிற இந்த முட்டாளுக்கு முட்டு கொடுத்துக்கொண்டிருப்பவர்களின் மார்க்சிய ஆசான் சுப்புதாசின் கட்சி பாட்டாளிகளிடையே என்ன லட்சணத்தில் வேலை செய்தது என்பதை தெரிவிக்கவே கூறுகின்றேன். பாட்டாளிகளின் சொந்த மொழியில் கூட பேசாத ஒரு கூட்டம் பாட்டாளிகளை அணிதிரட்டுவதை பற்றி பேசுவது கொடுமையாக அல்லவா இருக்கிறது ?

      • ////இப்பவும் கேட்கிறேன் அணிதிரட்டப் படாமல் இருக்கும் ஒரு வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்) நன்கு அணிதிரண்டிருக்கும் ஒரு வர்க்கத்துடன் (வணிக வர்க்கத்துடன்) அணிசேர்ந்து அணிதிரண்டிருக்கும் வர்க்கத்தின் (வணிக வர்க்கத்தின்) கோரிக்கைக்காகப் போராடும்போது யார் யாரைப் பயன்படுத்துவார்கள் என்பதே என்பதே என் கேள்வி.////

        இந்த வரிசையில் சொத்துடமை கோரிக்கையை கொண்டிருக்கும் விவசாயிகளை சேர்க்க முடியாதா ? விவசாயிகள் மட்டுமல்ல வணிகர்கள், குட்டி முதலாளிகள் உட்பட அனைத்து வர்க்கங்களும் தத்தமது சொந்த கண்னோட்டத்தை தான் கட்சிக்குள் வெளியிடும். கட்சியின் சரியான பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திலிருந்து தமது தவறான கண்ணோட்டத்திற்கு வெண்றெடுக்கத்தான் செய்யும். அதற்கு என்ன செய்வது ? பாட்டாளிகளை அதிக எண்ணிக்கையில் கட்சிக்குள் கொண்டு வந்து தள்ளுவதன் மூலம் இதை களைந்துவிட முடியுமா ? அப்படி பார்த்தால் இந்தியாவிலிருக்கும் இரண்டு போலிக்கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் தான் அதிகமான பாட்டாளிகள் இருக்கிறார்கள்.

        ஒவ்வொரு நாட்டின் தனிச்சிறப்பான தன்மைகளுக்கும் ஏற்ப மார்க்சியத்தை கையாள்வதும், கட்சியிலுள்ள பிற வர்க்கங்களுக்கு மா.லெ அரசியல் பயிற்சியளித்து வர்க்க நீக்கம் செய்ய முயற்சிப்பதும், அனைத்து பிரச்சினைகளிலும் பாட்டாளி வர்க்க உலகக்கண்ணோட்டத்தை வலியுறுத்துவதன் மூலமும் தான் பிற வர்க்கங்களின் கண்ணோட்டத்திற்கு பலியாகாமல் பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தை தக்க வைக்க முடியும்.

        • அம்பேத் இந்த விவாதத்த்தின் ஆரம்பத்தில் //கழிவறையில் எழுதி வைக்க வேண்டிய உன்னுடைய லூசுத்தனமான உளறல்கள் // என்று சொன்ன நீங்களே இப்படி பொறுப்புடன் மன்னார் விட்டுப் போன விவாதத்தை தொடர்வது ரொம்ப சந்தோஷம். 

          லெனின் மேற்கோளில் //’குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில்–ஸ்தூலமானதும் கராறாக வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின்’ பேரில் மட்டுமே அந்த வர்க்கங்களின் நலன்களை பாதுகாப்பதற்கு பொறுப்பேற்க முடியும்// என்று லெனின் சொல்வதை மன்னாரு கேட்பதுபோல்
           //அது என்ன நிபந்தனை? ‘தினமும் காலை எல்லா பெட்டிக்கடைக்காரரையும் வர வைத்து ‘தூசி வாழ்க’ என்று சொல்லிக் கொண்டே தோப்புக்கரணம் போடச் செய்வதா?// என்று லெனினை கிண்டல் செய்யாமல் நீங்கள் ஒத்துக் கொண்டதற்கு நன்றி. ஆனால் // அதில் நீங்கள் சொல்ல வருவது என்ன ?//  என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

          நான் சொல்ல வருவது இதுதான்: லெனின் நிபந்தனையுடன் அணிசேரவேண்டும் என்று சொல்லியுள்ளாரே நீங்கள் வணிகர்களூடன் நிபந்தனை இன்றி அணி சேர்வது சரியா என்பதுதான்.

          அம்பேத்
          1) //விவசாயிகள் மட்டுமல்ல வணிகர்கள், குட்டி முதலாளிகள் உட்பட அனைத்து வர்க்கங்களும் தத்தமது சொந்த கண்னோட்டத்தை தான் கட்சிக்குள் வெளியிடும். // 
          அப்ப ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் விவசாயிகள் மட்டுமல்ல வணிகர்கள், குட்டி முதலாளிகள் கட்சி உறுப்பினராக இருக்க முடியுமா? 

          2) //கட்சியிலுள்ள பிற வர்க்கங்களுக்கு மா.லெ அரசியல் பயிற்சியளித்து வர்க்க நீக்கம் செய்ய முயற்சிப்பதும், அனைத்து பிரச்சினைகளிலும் பாட்டாளி வர்க்க உலகக்கண்ணோட்டத்தை வலியுறுத்துவதன் மூலமும் தான் பிற வர்க்கங்களின் கண்ணோட்டத்திற்கு பலியாகாமல் பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தை தக்க வைக்க முடியும்.// 

           வர்க்க நீக்கம் செய்த பிறகு கட்சிக்குள் அனுமதிப்பதுதானே லெனின் சொன்ன பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க முடியும்.  வர்க்க நீக்கம் செய்யாமல் பிற உடமை வர்க்கங்களான வணிகர்கள், குட்டி முதலாளிகளை அப்படியே கட்சிக்குள் அனுமதித்தால் அவர்கள் தாராளமாகத் தரும் நிதி உதவிகள் நன்கொடைகள் மூலம் ஒட்டுமொத்த கட்சியே குட்டி முதலாளித்துவ கட்சியாகி விடாதா?  வணிகர்கள், குட்டி முதலாளிகளின் ஆதிக்கத்திற்குப் போன கட்சி தொழிலாளர் பிரச்னை என்றால் சாவாதானமாக‌ பஞ்சாயத்து செய்யும் மனப் போக்கிலும்  வணிகர்கள், குட்டி முதலாளிகள் பிரச்னை என்றால் ஆவேசத்துடன் போராடும் போர்க்குணமும் என்ற பாணியிலும்  செயல்படத் துவங்கி விடாதா?எனக்கு கொஞ்சம் விளக்குங்கள் அம்பேத்.

          3)//முரண்பாடு கொண்ட இரு பிரிவினரின் அழிவுக்கு வேறு ஒரு வர்க்கம் காரணமாக இருக்கும் போது தமக்கிடையிலான முரன்பாட்டை முதன்மைப்படுத்துவதா பொது எதிரிக்கெதிராக ஐக்கியப்படுவதா ? என்கிற போது பொது எதிரிக்கெதிராக ஐக்கியப்படுவது தானே சரி//
          //இப்போது சொல்லுங்கள் சிறு வணிகர்களுக்கு விவசாயிகளும் விவசாயிகளுக்கு சிறு வணிகர்களும் எதிரியா அல்லது இருவரையும் ஒடுக்கும் ஏகாதிபத்தியங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் எதிரியா ?//

          அம்பேத் இதில் சிறு வணிகர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏகாதிபத்தியங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் பொது எதிரி என்று எப்படிச் சொல்கிறீர்கள்? ஏகாதிபத்தியங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் விவசாயியை எப்படிச் சுரண்டுகிறார்கள்? விவசாயிகளைச் சுரண்டுவதில்  ஏகாதிபத்தியங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும்  வணிகர்கள் அல்லது சிறுவணிகர்கள் உதவுகிறார்களா? அல்லது எதிர்க்கிறார்களா?
          தொடர்ந்து விவாதிப்போம்….உண்மையை நோக்கி 

      • ////விவசாயிகளைப் பொறுத்தவரை, இன்றய சமூகத்தின் ஒரு சிறு நிலஉடமை வர்க்கம் மற்றும் சிறு விவசாய வர்க்கம் என்ற முறையில் அதன் நலன்களைப் பாதுகாப்பதற்கு எந்த வகையிலும் நாம் பொறுப்பேற்க மாட்டோம்.////

        இதில் என்ன உங்களுக்கு சந்தேகம் ? விவசாயிகளின் கோரிக்கை தனியுடைமை கோரிக்கை தான் அதை கம்யூனிஸ்டுகள் எப்படி பாதுகாக்க முடியும் ?

        ஆனால் விவசாயிகளுக்காக என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்.

        ///இன்றய சமூகத்தின் மற்ற அனைத்து வர்க்கங்களும் நட‌ப்பில் இருக்கும் பொருளாதார அமைப்புமுறையின் அடித்தளத்தை கட்டிக் காப்பாற்றுவதற்காகவே இருக்கின்றன. அதனாலேயே சமூக- ஜனநாயகம் ’குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில்–ஸ்தூலமானதும் கராறாக வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின்’ பேரில் மட்டுமே அந்த வர்க்கங்களின் நலன்களை பாதுகாப்பதற்கு பொறுப்பேற்க முடியும்.///

        ஆம் விவசாயிகளை மேற்கூறியவாறு தான் கான முடியும். இதில் ஒன்றும் மறுப்பதற்கில்லையே. இந்த வரையறையின்படி தான் ரசியப்புரட்சி நடந்து முடிந்ததும் உழுபவனுக்கே நிலம் என்கிற முழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. (நிலம் வாங்கப்பட்டது) பிறகு படிப்படியாக அவர்கள் கூட்டுப்பண்ணை முறைக்கு கொண்டு வர்ப்பட்டார்கள். நாமும் இங்கு அதை தான் வலியுறுத்துகிறோம்.
        இதில் நீங்கள் சொல்ல வருவது என்ன ?

      • ////புரட்சிக்கு முந்தய சீனாவின் நிலமைகள் வேறு; இன்றைய இந்தியாவின் நிலமைகள் வேறு அதற்குத்தான் எனது முந்தய‌ பதிவில் மாவோ வணிகர்களை நேசசக்தி என்று சொன்ன காலகட்டத்தில் சீனாவில் விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் இப்படியொரு முரண்பாடு இருக்கவில்லை. விவசாயிகளின் உற்பத்தி தன்னிறைவு பெற்ற கிராமப் புற நுகர்வைத்தாண்டி வணிகர்களின் வணிகப் பொருளாகவில்லை.////

        அப்படியானால் சீனாவின் நகர்ப்புற சந்தைகளுக்கு விவசாய பொருட்கள் எப்படி வந்தன ? விவாயிகளிடமிருந்து விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படவே இல்லையா ?

        சரி அது ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் கூறுவதை போலவே சீனாவில் இவ்விரு வர்கங்களுக்கிடையே முரண்பாடு இல்லை, இங்கு இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம், சரி அதனால் என்ன ? அவர்களுக்கிடையே உள்ள இந்த சிறு முரண்பாடு தான் (இது நட்பு முரண்பாடு) ஐக்கியத்தை தடுக்கிறதா ? வர்க்கங்களுக்கிடையிலான ஐக்கியத்தை தீர்மானிப்பது அவர்களுக்கிடையிலான முரண்பாடா அல்லது அவர்களின் பொது எதிரியா ?

        முரண்பாடு கொண்ட இரு பிரிவினரின் அழிவுக்கு வேறு ஒரு வர்க்கம் காரணமாக இருக்கும் போது தமக்கிடையிலான முரன்பாட்டை முதன்மைப்படுத்துவதா பொது எதிரிக்கெதிராக ஐக்கியப்படுவதா ? என்கிற போது பொது எதிரிக்கெதிராக ஐக்கியப்படுவது தானே சரி, அதை தானே மாவோ தலைமையிலான சீனக்கம்யூனிஸ்ட் கட்சி செய்தது. அதை தானே இங்கும் செய்ய வேண்டும் என்கிறோம்.

        விவசாயிகளே பல பிரிவினராக இருக்கின்றனர். பணக்கார விவசாயி கூலி ஏழை விவசாயியை கடுமையா சுரண்டுகிறான். இவர்களுக்கிடையிலும் தான் முரண்பாடு இருக்கிறது. உங்களுடைய வாதப்படி பார்த்தால் இவர்களையும் தான் ஐக்கிய முன்னணிக்குள் கொண்டு வர முடியாது. ஆனால் இரசியாவிலும், சீனாவிலும் ஐக்கியப்படுத்தினார்களே. அப்படியானால் ஐக்கியத்தை தீர்மானிப்பது எது ?

        ஐக்கியத்தை இரு வர்க்கங்களுக்கிடையில் முரண்பாடு இருக்கிறதா இல்லையா என்பதைக் கொண்டு தீர்மானிக்க முடியாது, மாறாக இவ்வர்க்கங்கள் அனைத்தும் யாரால் ஒடுக்கப்படுகிறார்கள், அனைவருக்கும் பொது எதிரி யார் என்பதைக்கொண்டே ஐக்கிய முன்னணியை கட்ட வேண்டும்.

        மாவோ இவ்வாறு தான் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னனியை கட்டினார். அந்த ஐக்கிய முன்னனியில் சில இடங்களில் ஆச்சரியம் தரத்தக்க வகையில் ஏகாதிபத்தியத்திற்கெதிராக நின்ற சில யுத்தபிரபுக்களையும் கூட இணைத்துக்கொண்டார்கள். இதை எப்படி பார்ப்பது ? அனைவருக்கும் எதிரான இவர்களை எப்படி ஐக்கிய முன்னனிக்குள் கொண்டு வந்தார்கள் ? எனில் ஐக்கிய முன்னணியை தீர்மானிப்பது எது ?

        இப்போது சொல்லுங்கள் சிறு வணிகர்களுக்கு விவசாயிகளும் விவசாயிகளுக்கு சிறு வணிகர்களும் எதிரியா அல்லது இருவரையும் ஒடுக்கும் ஏகாதிபத்தியங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் எதிரியா ?

        • 3)//முரண்பாடு கொண்ட இரு பிரிவினரின் அழிவுக்கு வேறு ஒரு வர்க்கம் காரணமாக இருக்கும் போது தமக்கிடையிலான முரன்பாட்டை முதன்மைப்படுத்துவதா பொது எதிரிக்கெதிராக ஐக்கியப்படுவதா ? என்கிற போது பொது எதிரிக்கெதிராக ஐக்கியப்படுவது தானே சரி//
          //இப்போது சொல்லுங்கள் சிறு வணிகர்களுக்கு விவசாயிகளும் விவசாயிகளுக்கு சிறு வணிகர்களும் எதிரியா அல்லது இருவரையும் ஒடுக்கும் ஏகாதிபத்தியங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் எதிரியா ?//

          அம்பேத் இதில் சிறு வணிகர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏகாதிபத்தியங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் பொது எதிரி என்று எப்படிச் சொல்கிறீர்கள்? ஏகாதிபத்தியங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் விவசாயியை எப்படிச் சுரண்டுகிறார்கள்? விவசாயிகளைச் சுரண்டுவதில்  ஏகாதிபத்தியங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும்  வணிகர்கள் அல்லது சிறுவணிகர்கள் உதவுகிறார்களா? அல்லது எதிர்க்கிறார்களா?
          தொடர்ந்து விவாதிப்போம்….உண்மையை நோக்கி 

  54. கட்டுரையாளர் தமிழரசன் ‘சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு’ குறித்து விழுந்து விழுந்து எழுதினாலும், அதை நானூத்து முப்பதோரு தடவை நான் படித்தாலும் என் மரமண்டைக்கு விளங்காத கருப்பொருளை, நமதருமை மாண்புமிகு. மன்னாரு அவர்கள் புதிய மார்க்சியக் கொள்கைகளுடன் (!) விவரித்து, மேற்கோளிட்டு, தனது வாதம் எண்.57 புரிந்து கொள்ளவைத்துவிட்டார். நானும் அன்னாரான மன்னாருடன் இணைந்து, புதிய மார்க்சியம் கற்று களம் காணுவோம் என சபதம் ஏற்கிறேன்.

    இத்தனை நேரமும், வெத்து விவாதம் செய்து, நேரத்தை வீண்டடித்த ஊசி, யாகுதி ஆகியோருக்கு, வன்மையான கண்டனகளை மன்னாருடன் சேர்ந்து தெரிவித்துக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். 🙂

  55. தலையில் கூடை சுமந்து அன்றாடம் வெயிலில் தள்ளுவண்டியில் கொண்டு போய் வியாபாரம் செய்து வரும் இலட்சக்கணக்கான சிறு வியாபாரிகளையும், அன்றாடம் காக்கி நாய்களின் அராஜகத்தை சகித்துக் கொண்டு வியாபாரம் செய்து பிழைக்கும் சாலையோர வியாபார்களையும் சிறு பெட்டிக் கடை வைத்துக் கொண்டு அன்றாடம் தானும் தனது குடும்பத்தாரும் மாறி மாறி கடையை பார்த்துக் கொண்டிருக்கும் பல இலட்சம் பெட்டிக்கடைக்காரர்களையும் பெரிய அளவில் கடை வைத்து வியாபாரம் செய்யும் சில ஆயிரம் மளிகைக்காரர்களையும் “வால் மார்ட்டுடன்” ஒப்பீடு செய்யும் அறிவாளியை இங்கே தான் பார்க்கிறேன்..

    அன்றாடம் தெருவில் இறங்கி மக்களைப் பார்க்கும் சாதாரண மனிதனுக்கு தெரியும் உண்மை கூட இந்த ”அறிவாளிகளுக்கு” தெரியவில்லையே ?..

  56. /தலையில் கூடை சுமந்து அன்றாடம் வெயிலில் தள்ளுவண்டியில் கொண்டு போய் வியாபாரம் செய்து வரும் இலட்சக்கணக்கான சிறு வியாபாரிகளையும், அன்றாடம் காக்கி நாய்களின் அராஜகத்தை சகித்துக் கொண்டு வியாபாரம் செய்து பிழைக்கும் சாலையோர வியாபார்களையும் சிறு பெட்டிக் கடை வைத்துக் கொண்டு அன்றாடம் தானும் தனது குடும்பத்தாரும் மாறி மாறி கடையை பார்த்துக் கொண்டிருக்கும் பல இலட்சம் பெட்டிக்கடைக்காரர்களையும்//

    பல கோடியை வெள்ளையிலும் பல கோடிகளை கருப்பிலும் சம்பாதிக்கும்

    வெள்ளையனும் மேற்கூறிய இவர்களும் எப்படி ஒன்று அதுக்கு பதில் சொல்லுங்க

    செ.மருது

    //அன்றாடம் தெருவில் இறங்கி மக்களைப் பார்க்கும் சாதாரண மனிதனுக்கு தெரியும் உண்மை கூட இந்த ”அறிவாளிகளுக்கு” தெரியவில்லையே ?..//

    அன்றாடம் வயலில் இறங்கி வேலை பார்ப்பவன் வந்து கதறுகிறானே நான் விற்கும் நெல் அரிசியாக என்னிடம் வரும்போது 32 ரூபாய் இடையில் யார் திண்கிறார்கள்னு அதுக்கு என்ன பதில்

    • தியாகு ,

      நடைமுறையிலில்லாமல் மார்க்சியத்தை அறைகுறையாக படித்து விட்டு தாங்கள் உளறுவதைப் பார்த்து என்ன சொல்வது என்று தெரியவில்லை ..

      உங்களது பதிலில் தெரிவது சிறு முதலாளிகளுக்கும் அந்நிய முதலீட்டாளர்களுக்கும் வித்தியாசம் தெரியாத கூமுட்டைத்தனமா அல்லது ஏதோ முதலில் உளறிவிட்டோமே மீசையில் மண் ஒட்டிவிடக்கூடாதே என்று சப்பைக்கட்டு கட்டும் கோமாளித்தனமா என்று தான் எனக்கும் புரியவில்லை.

      வால்மார்ட் வந்து விவசாயிகளுக்கு அள்ளிக் கொடுத்துவிடுவானா என்ன ?..
      விட்டால் வால்மார்ட்டின் கொ.ப.செ., அல்லது கோயபல்ஸ் ஆகிவிடுவீர் போலும்.

      சில இலட்சம் தரைக்கடை வியாபாரிகள், காய்கறிக்கடைக்காரர்கள், இரயிலில் விற்பனை செய்பவர்கள் எல்லாம் கருப்புப்பணம் பதுக்கி வைத்துள்ளார்கள் என்று இன்கம் டாக்ஸ் ஆபிசில் போய் புகார் செய்து பாரும்,. காறி உமிழாமல் அனுப்பமாட்டான்.

      முதலில் உதிரித்தனத்தை விட்டொழித்து மார்க்சியத்தை நடைமுறையில் செயல்படுத்த ஏதாவது ஒரு அமைப்பில் இருந்து செயல்பட முயற்சிக்கவும்.

      இல்லை என்றால் இப்படியே லும்பன் தியாகுவாக மார்க்சிய விரோத கருத்துக்களை உளறிக்கொண்டு அனைவரிடமும் இப்படித்தான் செருப்படி பட வேண்டியதிருக்கும்.

      • ////முதலில் உதிரித்தனத்தை விட்டொழித்து மார்க்சியத்தை நடைமுறையில் செயல்படுத்த ஏதாவது ஒரு அமைப்பில் இருந்து செயல்பட முயற்சிக்கவும்.////

        அய்யய்யே… இது தெரியாதா உங்களுக்கு, அவரு தான் நம்ம சிப்பிதாசுகிட்டயிருந்து சிதறிப்போன மாட்டுத்தாவணியா என்னங்க அது.. ஆம் மாட்டுக்கருத்து கோஷ்டி கூட இருக்காறே..

        நீங்க நடைமுறையில் செயல்படுங்கன்னு சொன்னத தியாகு தப்பா புரிஞ்சிக்கிட்டு நாளையிலிருந்து நடைபயிற்சிக்கு கிளம்பிடப்போறாருங்க,எதுக்குங்க தலைவருக்கு இப்படியெல்லாம் சிக்கலை ஏற்படுத்துறீங்க ?

        மாட்டுக்கருத்து டோலர்களே தத்துவத்தின் கோரமான வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கும் போது முறையாக எப்படி நடக்க முடியும்.. இல்லையில்ல நடைமுறைக்கு எப்படி போக முடியும் ?

      • மிஸ்டர் செங்கொடி மருது ,

        நான் எழுப்பிய கேள்விகளில் எதாவது ஓட்டை இருந்தால் அதை அம்பலபடுத்த துப்பு இருந்தால் பேசவும் இல்லாவிட்டால் வாயில் சூயிங்கத்தை மென்று கொண்டே சென்றுவிடவும் அதுதான் இந்த சமூகத்துக்கு நீங்கள் செய்யும் பெரிய நன்மை .

      • மிஸ்டர் செங்கொடி மருது நான் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு ஏதேனும் பதில் தெரிந்தால் போடவும் சும்மா அலட்டிகாம இருக்கவும் பழகி கொள்ளுங்கள்

  57. ///பல கோடியை வெள்ளையிலும் பல கோடிகளை கருப்பிலும் சம்பாதிக்கும்
    வெள்ளையனும் மேற்கூறிய இவர்களும் எப்படி ஒன்று அதுக்கு பதில் சொல்லுங்க///

    சீனாவிலிருந்த தேசிய முதலாளிகள் எப்படி இருந்தாங்க ? கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கி வச்சிக்கிட்டா இருந்தாங்க ?

  58. ///அன்றாடம் வயலில் இறங்கி வேலை பார்ப்பவன் வந்து கதறுகிறானே நான் விற்கும் நெல் அரிசியாக என்னிடம் வரும்போது 32 ரூபாய் இடையில் யார் திண்கிறார்கள்னு அதுக்கு என்ன பதில்///

    ஏகாதிபத்திய வால்மார்ட் வந்தால் கோடிக்கணக்கான அண்ணாச்சிகளும் கதறுவாங்களே அதுக்கு என்ன பதில் ?

    • இன்று காலை பக்கத்து விவசாயி வாலை பழத்தை சைக்கிளில் கொண்டுவந்து கொடுத்தார்

      நம்பமாட்டீர்கள் பழத்தின் விலை 1 ரூபாய்

      இதே பழம் பக்கத்தில் இருக்கும் ஊரில் 3 ரூபாய் அங்கயும் கொண்டு போய் கொடுப்பது இந்த விவசாயிதான்

      1.இங்கே அந்நிய மூலதனம் வரவில்லை

      2.வியாபாரியாகிய நட்பு சக்தி இந்த பழத்தில் எந்த உழைப்பு மதிப்பையும் கூட்டவில்லை

      3.அதனால் உழைப்பின் மதிப்பு இல்லாமல் போய் விடவில்லை

      4.ஆனால் உழுது பாதுகாத்து உருவாக்கியவனை விட இரண்டு மடங்கு விலை வைப்பது எந்த வகையிலும் நாயமில்லாத ஒரு செயல்

      5.இவர்கள் நட்பு சக்தி என சொன்னால் 1 ரூபாய்க்கு பழத்தை விற்ற வியாபாரி மூஞ்சியில் குத்துவானா மாட்டானா ?

      6.இந்த பழத்தை விளைவிக்க அந்த விவசாயி உரம் போட்டு இருக்கிறார் செலவு செய்து இருக்கிறார் வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார் எல்லாம் செய்து இருக்கிறார்

      7.அவருக்கு விலை கிடைக்காததற்கு அரசும் அந்நிய மூலதனமுதான் காரணமா

      • திருத்தம் //இன்று காலை பக்கத்து காடு விவசாயி வாழைப்பழத்தை சைக்கிளில் கொண்டுவந்து கொடுத்தார்//

  59. //நடைமுறையிலில்லாமல் மார்க்சியத்தை அறைகுறையாக படித்து விட்டு தாங்கள் உளறுவதைப் பார்த்து என்ன சொல்வது என்று தெரியவில்லை //

    செங்கொடி மருது இடைத்தரகர்களை ஆதரிக்கும் உங்கள் நண்பர்கள் நான் எழுப்பிய கேள்விக்கு மழுப்பி ஓடிப்போனது மேலே இருக்கிறது

    மேலும் நான் நடைமுறை தெரியாதவனென்றும் எந்த அமைப்பிலும் வேலை செய்ய வில்லை என்றும் , தொழிற்சங்கள் கட்டிய போராடிய அனுபவம் இல்லை என்றும் எதை வைத்து சொல்கிறீர்கள் . நீங்கள் தான் நடைமுறையற்ற முறையில் இஸ்லாமியர்களை தாக்குவதே ஒரே குறிக்கோளாக அதுவே மாபெரும் மார்க்சிய பார்வையாக கருதி இருமாப்பில் அலைகிறீர்கள் ஐயா

    வெள்ளையன் உட்பட கமிசன் மண்டி காரர்கள் இடைத்தரகர்களிடம் கருப்பு பணம் இல்லை என்றால் 22000 கோடி முத்ல 50000 கோடி வரையிலான பணத்தை விவசாயிகளுக்கு கடனாக கொடுக்கிறார்கள் என புதிய ஜனநாயகத்தில் ஏன் எழுதுகிறார்கள் அதை கொஞ்சம் பாருங்கள் சார்

    ஒரு கமிசன் மண்டி காரன் ஏன் விவசாயிக்கு கடனா பணம் கொடுக்கிறான் அதன் மூலம் அவன் அடையும் லாபமென்ன
    அவனுக்கும் தள்ளி வண்டியில் பழம் விற்பவனும் ஒன்றா

    நீங்கள் குட்டி முதலாளித்துவ லும்பதனத்தை மார்க்சியம் என்று ஏன் பேசுகிறீர்களோ

    நடைமுறையை பற்றி என்னிடம் பேசும் நீங்கள் இணையத்தில் மட்டுமே மார்க்சியத்தை படிக்கும் பேசும் உங்கள் நண்பர்களிடம் இந்த அறிவுரையை கூறுங்கள்

  60. //முதலில் உதிரித்தனத்தை விட்டொழித்து மார்க்சியத்தை நடைமுறையில் செயல்படுத்த ஏதாவது ஒரு அமைப்பில் இருந்து செயல்பட முயற்சிக்கவும்.

    இல்லை என்றால் இப்படியே லும்பன் தியாகுவாக மார்க்சிய விரோத கருத்துக்களை உளறிக்கொண்டு அனைவரிடமும் இப்படித்தான் செருப்படி பட வேண்டியதிருக்கும்.//

    உண்மையான முரண்பாட்டை மறைப்பதே உதிரிதனம் தான் பாஸ்

Leave a Reply to குயாதி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க