privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்சரத்பவார் + கொலவெறி ரிமிக்ஸ்: "பாத்தேளா கலி முத்திடுத்து!"

சரத்பவார் + கொலவெறி ரிமிக்ஸ்: “பாத்தேளா கலி முத்திடுத்து!”

-

“பாத்தேளா பாத்தேளா கலி முத்திடுத்து. மந்திரியவே ஒத்தன் அடிச்சிருக்கான் பாருங்கோ. என்ன அநியாயம்”  என்று வடநாட்டின் இதயத்துடிப்பு டைம்ஸ் ஆப் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டு ‘தூங்குமூஞ்சி’ இந்து பத்திரிகை வரை பிலாக்கணம் பாடுகின்றன. விஷயம் வேறொன்றுமில்லை – தில்லியில் ஹர்விந்தர் சிங் எனும் சீக்கிய இளைஞர் ஒருவர் விலைவாசி ஏற்றம் மற்றும் ஊழல் முறைகேடுகளால் கடுப்பாகி ‘கொலைவெறி’ தலைக்கேற விவசாயத்துறை கேபினெட் அமைச்சர் சரத் பவாரை பளார் என்று அறைந்துள்ளார் – அவ்வளவு தான்.

இப்போது கொதிக்கும் இதே முதலாளித்துவ ஊடகங்கள் தான், மந்திரிகளும் இன்னபிற அதிகார கும்பலும் சேர்ந்து கொண்டு மக்கள் மேல் கொலைவெறித் தாக்குதல் தொடுத்த போதெல்லாம் ‘நாடு வல்லரசாகுதாக்கும்’ என்று ஒரே குரலில் பாடின. அது ஒரு பக்கமிருக்க, காஷ்மீரின் எல்லையில் குவிக்கப் பட்டிருக்கும் ஆயுதப்படைகளுக்கு நிகராக ஒவ்வொரு மந்திரியும் A டூ Z பல்வேறு பிரிவு பாதுகாப்பு வளையங்களுக்குள் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன் வளைய வரும் நிலையில் இப்படி ஒரு ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை’ நிகழ்ந்ததை ஆளும் வர்க்கத்தால் ஜீரணிக்க முடியவில்லை.

ஏற்கனவே ஒரு முறை செருப்பு வீச்சுக்கும் உள்ளாகியிருப்பதால் மக்கள் யாரும் பேரழிவு ஆயுதங்களை காலில் அணிந்து நடமாடக் கூடாது என்கிற தடையை விதிக்கலாமா என்று கேபினெட் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டு வருவதாக பேசிக் கொள்கிறார்கள்.

ஒட்டு மொத்த அரசமைப்பு முறையே முற்றாக அழுகி நாறிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படித் தனி நபர்களை மட்டும் தாக்குவது பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது தான். ஆனாலும் இது கோபமுற்றிருக்கும் மக்கள் திரளின் பிரதிநிதியாக இருந்து செய்யப்படும் எதிர்வினை.  இந்த கோபத்தின் உணர்ச்சி உண்மையானது.

இருந்தாலும் ‘எத்தனை அடிச்சாலும் தாங்கறாண்டா இவன் ரொம்ப நல்லவண்டா’  என்று காங்கிரஸ் பா.ஜ.கவே உச்சி மோந்து பாராட்டும் அளவுக்குப் புகழ் பெற்ற இந்திய நடுத்தர வர்க்கம் லேசாக முழித்திருப்பது போல் தெரிகிறது.

சரத்பவார் வாங்கிய அடியை கண் குளிரப் பார்த்து மகிழ்ச்சியடைந்த நம்மைப் போன்றோருக்கு போனஸ் மகிழ்ச்சியாக, அதை சமீபத்தில் வெளியான கொலவெறிப் பாட்டோடு ரீமிக்ஸ் செய்தது யுட்யூபில் வழங்கியிருக்கிறார்கள் நமது துடிப்பு மிக்க இளைஞர்கள். செருப்பால் அடித்து சாணி கரைத்து ஊற்றி கழுதையில் ஊர்வலமாய் அழைத்து வந்தாலும் கூட எள் முனையளவும் கூச்சப்படாதவர்கள் தான் நமது ஓட்டுப் பொறுக்கிகள் என்பது ஒரு உண்மையென்றாலும் கூட யுட்யூபின் தயவால் கிடைத்திருக்கும் இந்த திடீர் ‘புகழ்’ அவர்களையே கூட நெளிய வைத்திருக்கும்.

நமது வாசகர்களுக்காக அந்த வீடியோவும் அதன் மொழி பெயர்ப்பும் கீழே –

சீக்கிய இளைஞர் :- நான் பாடுகிறேன்…

‘அறை’ பாட்டு

ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறி ஜி..

ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறி ஜி..

ஏனிந்தக் கொலவெறி _________________ ஜி..

வெலவாசியெல்லாம் மேலே மேலே

பாவாரு நீயோ கீழே கீழே

நீங்களெல்லாம் திருடன் திருடன்

நானே உங்கள மிதிப்பேன் மிதிப்பேன்..

ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறி ஜி..

ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறி ஜி..

பவார் :- பெப்பே பெப்பே பெப்பே பெப்பே.. பெபெப்பெபேபே..

பவார் :- பெப்பே பெப்பே பெப்பே பெப்பே.. பெபெப்பெபேபே..

சீக்கிய இளைஞர்:- ஊழலெல்லாம் மேலே மேலே

நாடு ரொம்பத் தப்பு தப்பு

பேச இது தான் நேரம் நேரம்

பவார்:- என்னெ எப்படி அவன் அடிக்கலாம்

சீ.இளைஞர்:-  உளறுவதை நிறுத்து..

பாட்டு இத்தோட முடியுது..

ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறி ஜி..

ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறி ஜி..

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: