சசிகலா நீக்கம் : மன்னார்குடிக்குப் பதிலாக மயிலாப்பூர் கும்பல் !

சசிகலா நீக்கம் : மன்னார்குடிக்குப் பதிலாக மயிலாப்பூர் கும்பல் !

கடந்த டிசம்பர் 19ஆம் தேதியன்று தனது நெருங்கிய தோழியும் அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது உறவினர்களைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகவும், இவர்களுடன் கட்சிக்காரர்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவித்துள்ள தமிழக முதல்வரும் அ.தி.மு.க. தலைவியுமான ஜெயலலிதா, சசிகலாவை போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியேற்றியுள்ளார். மன்னார்குடி மாஃபியா என்று அழைக்கப்பட்ட சசிகலா கும்பலின் விசுவாச அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

யாருடைய தலையீடும் இல்லாத, நிர்வாகத் திறன்மிக்க ஆட்சியை ஜெயலலிதா தருவார் என்று பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிய பிம்பம் கடந்த ஆறு மாதங்களுக்குள்  உடைந்து நொறுங்கிவிட்டது. ஜெயாவின் ஆட்சி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி, எதையும் உருப்படியாகச் சாதிக்க முடியாமல்  சீர்கேடைந்துள்ளது என இந்தியா டுடே போன்ற ஊடகங்களே குறிப்பிடுகின்றன. ஜெயா ஆட்சியில் சசிகலா கும்பலின் ஆதிக்கத்தை மூடிமறைத்தும், கருணாநிதியின் குடும்ப ஆட்சியைச் சாடியும் நேற்றுவரை பிரச்சாரம் செய்துவந்த பார்ப்பனப் பத்திரிகைகள், இப்போது  சசிகலா கும்பல் வெளியேற்றப்பட்டதும்,  ஜெயா ஆட்சியில் சசிகலா கும்பலின்  தலையீடு காரணமாகவே ஊழல்கொள்ளை, நிர்வாகச் சீர்கேடுகள் பெருகியதாகவும், ஜெயாவுக்கு எதுவுமே தெரியாது என்பது போலவும், ஊரறிந்த ஊழல் பெருச்சாளியை உத்தமராகக் காட்டி ஒளிவட்டம் போடுகின்றன.

சசிகலா வெளியேற்றப்பட்டதை மாபெரும் புரட்சி போலச் சித்தரிக்கும் பார்ப்பன ஊடகங்கள், இனி தலையீடற்ற, ஊழலற்ற நிர்வாகம் தொடங்கப் போவதாகவும், ஜெயாவின் அற்புதமான ஆட்சியில் இருந்த ஒரேயொரு குறையும் அகற்றப்பட்டுவிட்டது போலவும் சித்தரிக்கின்றன. ஜெயலலிதா மயக்கத்திலிருந்து தெளிந்து விட்டதாகவும், தொண்டர்களிடம் நிலவி வந்த அதிருப்தி நீங்கிவிட்டதாகவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றன.  அன்றைய ரஷ்யப் பேரரசி ஜாரினிக்கு ஒரு ரஸ்புடீன் இருந்ததைப் போல, ஜெயாவுடன் ஒட்டியிருந்த மன்னார்குடி கும்பல் இலஞ்சஊழல், நியமனங்கள், வெளியேற்றங்கள் அனைத்தையும் ஜெயாவுக்குத் தெரியாமல் செய்ததாகச் சித்தரிக்கும் பார்ப்பன  ஊடகங்கள், ஜெயாவை நிரபராதியாகக் காட்டும் முயற்சியில் அம்மா எதுவும் தெரியாத களிமண் என்பதை எதிர்மறையில் ஒப்புக் கொள்கின்றன.  இவர்கள் கூறும் களவாணிக் கும்பலால் கடந்த 20 ஆண்டுகளாக ‘ஆட்டுவிக்கப்பட்ட பொம்மை’யை வேறென்னவென்று அழைப்பது?

சொந்த சிந்தனை முறையில் ஜெயா ஒரு பார்ப்பன பாசிஸ்டு. அந்த வகையில்  அவரது தலைமையிலான அ.தி.மு.க. என்ற பொறுக்கி கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியதும் பார்ப்பனக் கும்பல் மகிழ்ந்தது. எனினும், ஓட்டுக்காக, பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்க சக்திகளைக் கொண்ட சமூக அடித்தளத்தை மன்னார்குடி மாஃபியா மூலமாக ஜெயலலிதா பராமரித்துப் பயன்படுத்தி வந்தார். தொடக்கம் முதலே ஜெயாவின் ஊழல்கொள்ளையை மறைக்க இந்தக் கும்பல் மீது பழிசுமத்திப் பார்ப்பன ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டன. கட்சியிலுள்ள எதிர்கோஷ்டிகளும் சசிகலா கும்பலின் தலையீட்டினால்தான் அமைச்சர்களேகூட அம்மாவை நெருங்க முடியாமல்,  கட்சிக்கும் ஆட்சிக்கும்  கெட்டபெயர் ஏற்பட்டுள்ளதாகக் கருத்தை உருவாக்கின.

ஜெயாவையும் அவரது கட்சியையும் சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கும் அரசியல் விமர்சகராகக்  காட்டிக் கொள்ளும்  துக்ளக் சோ, இது சட்டத்துக்கு அப்பாற்பட்ட எவ்வித அதிகார மையமும் செயல்படாமல் முடக்கும் தீர்மானகரமான நடவடிக்கை என்று சசிகலா கும்பல் வெளியேற்றப்பட்டதைப் பற்றி பெருமையுடன் கூறுகிறார். ஜெயலலிதாவின் ஆலோசகரான துக்ளக் சோவின் உறவினர்களும், பார்ப்பனக் கூட்டமும் போயஸ் தோட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருப்பதாகக் கிசுகிசு ஏடுகள் பரபரப்புச் செய்திகளை வெளியிடுகின்றன. குஜராத்தின் மோடி பாணியில், “ஊழலற்ற நல்லாட்சி’’, “சிறந்த அரசாளுமை” முதலான முழக்கங்களை முன்வைத்து 2014இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைச் சாதிக்கவும், அந்நிய முதலீடுகளை ஈர்த்து கார்ப்பரேட் சேவையில் புதிய அத்தியாயம் படைக்கவும், ஏற்கெனவே ஊழல்கொள்ளைக் கூட்டமாக அம்பலப்பட்டுப் போயுள்ள சசிகலா கும்பலின் மீது பழி போட்டு  தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொள்ளவும்தான் ஜெயலலிதா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

உலகவங்கி எடுபிடிகளான மன்மோகன் சிங் பிரதமராகவும், அலுவாலியா திட்டக் கமிசன் துணைத்தலைவராகவும், தரகு முதலாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரான அமித் மித்ரா மே.வங்க நிதியமைச்சராகவும் இருப்பதைப் போல, மறுகாலனியாதிக்கத்தின் கீழ் கார்ப்பரேட் சேவைக்கேற்ற வகையில் அரசு அமைப்பிலும் அரசியல் கட்சிகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியல் சாராத படித்த வர்க்கத்தினரும், நிபுணர்களும், வல்லுநர்களும் நிர்வாகத்தை நடத்தினால்தான் நாடு முன்னேறும்; வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற பிரச்சாரத்துடன், நிபுணர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உலக வங்கித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நேற்றுவரை சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக இயங்கிய தமது விசுவாசக் கும்பல்களை வைத்துக் கொண்டு இத்தகைய நோக்கத்தை நிறைவேற்ற இயலாது என்பதால், அந்த இடத்தில் கார்ப்பரேட் சேவைக்கேற்ற ஆலோசகர்களை ஆளும் கட்சிகள் அமர்த்தி வருகின்றன.

மக்களுக்கும் கட்சி ஊழியர்களுக்கும் அப்பாற்பட்ட அதிகாரமாகச் செயல்பட்ட மன்னார்குடி கும்பலை அகற்றிவிட்டு, அந்த இடத்தை இப்போது பார்ப்பனக் கும்பல் கைப்பற்றியிருக்கிறது. பா.ஜ.க. இல்லாத பா.ஜ.க. ஆட்சியாக ஜெயலலிதாவின் ஆட்சி உருமாற்றம் பெற்றிருப்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகள் உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றனர். சட்டத்துக்கு அப்பாற்பட்ட மன்னார்குடி கும்பலோ பொறுக்கித் தின்பதற்கு மட்டும்தான் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. ஆனால், பார்ப்பனக் கும்பலின் அதிகாரம், தமிழகத்தில் கடுமையான விளைவுகளையே ஏற்படுத்தும். பகுத்தறிவு, திராவிடம், ஈழ ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, தமிழின உணர்வுகளை வேரறுப்பதும், தீவிரவாத  பயங்கரவாதப் பீதியூட்டி புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதும், கார்ப்பரேட் கொள்ளைக்கான மறுகாலனியாக்கத்தை புதுவேகத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும்தான் நடக்கும். இப்படித்தான் குஜராத்தில் மோடியின் ஆட்சி பயங்கரவாதப் பீதியூட்டி, பெயரளவிலான மனித உரிமை ஜனநாயக உரிமைகளை நசுக்கி, கார்ப்பரேட் கொள்ளைக்கான களமாக அம்மாநிலத்தை மாற்றியது. குஜராத்தின் மோடி மற்றும் பார்ப்பனக் கும்பலின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தக் கிளம்பியிருக்கிறார், பாசிச ஜெயா. பாசிசம் என்பதை கார்ப்பரேட்டிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது என்று விளக்கமளித்தான், முசோலினி. அதற்கு இலக்கணப் பொருத்தமாகத் திகழ்கிறது பாசிச ஜெயாவின் பச்சையான பார்ப்பன ஆட்சி.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

114 மறுமொழிகள்

  1. //பா.ஜ.க. இல்லாத பா.ஜ.க. ஆட்சியாக ஜெயலலிதாவின் ஆட்சி உருமாற்றம் பெற்றிருப்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகள் உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றனர்//
    //விரவாத பயங்கரவாதப் பீதியூட்டி புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதும், கார்ப்பரேட் கொள்ளைக்கான மறுகாலனியாக்கத்தை புதுவேகத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும்தான் நடக்கும்.//

    வினவின் நியாமான பதிவு.

  2. //அதிகாரமாகச் செயல்பட்ட மன்னார்குடி கும்பலை அகற்றிவிட்டு, அந்த இடத்தை இப்போது பார்ப்பனக் கும்பல் கைப்பற்றியிருக்கிறது. பா.ஜ.க. இல்லாத பா.ஜ.க. ஆட்சியாக ஜெயலலிதாவின் ஆட்சி உருமாற்றம் பெற்றிருப்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகள் உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றனர்.//

    //பார்ப்பனக் கும்பலின் அதிகாரம், தமிழகத்தில் கடுமையான விளைவுகளையே ஏற்படுத்தும். பகுத்தறிவு, திராவிடம், ஈழ ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, தமிழின உணர்வுகளை வேரறுப்பதும், தீவிரவாத பயங்கரவாதப் பீதியூட்டி புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதும், கார்ப்பரேட் கொள்ளைக்கான மறுகாலனியாக்கத்தை புதுவேகத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும்தான் நடக்கும். //

    மிகவும் சரியான பதிவு

  3. // மக்களுக்கும் கட்சி ஊழியர்களுக்கும் அப்பாற்பட்ட அதிகாரமாகச் செயல்பட்ட மன்னார்குடி கும்பலை அகற்றிவிட்டு, அந்த இடத்தை இப்போது பார்ப்பனக் கும்பல் கைப்பற்றியிருக்கிறது. பா.ஜ.க. இல்லாத பா.ஜ.க. ஆட்சியாக ஜெயலலிதாவின் ஆட்சி உருமாற்றம் பெற்றிருப்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகள் உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றனர். சட்டத்துக்கு அப்பாற்பட்ட மன்னார்குடி கும்பலோ பொறுக்கித் தின்பதற்கு மட்டும்தான் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. ஆனால், பார்ப்பனக் கும்பலின் அதிகாரம், தமிழகத்தில் கடுமையான விளைவுகளையே ஏற்படுத்தும். பகுத்தறிவு, திராவிடம், ஈழ ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, தமிழின உணர்வுகளை வேரறுப்பதும், தீவிரவாத பயங்கரவாதப் பீதியூட்டி புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதும், கார்ப்பரேட் கொள்ளைக்கான மறுகாலனியாக்கத்தை புதுவேகத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும்தான் நடக்கும். இப்படித்தான் குஜராத்தில் மோடியின் ஆட்சி பயங்கரவாதப் பீதியூட்டி, பெயரளவிலான மனித உரிமை ஜனநாயக உரிமைகளை நசுக்கி, கார்ப்பரேட் கொள்ளைக்கான களமாக அம்மாநிலத்தை மாற்றியது. குஜராத்தின் மோடி மற்றும் பார்ப்பனக் கும்பலின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தக் கிளம்பியிருக்கிறார், பாசிச ஜெயா. பாசிசம் என்பதை கார்ப்பரேட்டிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது என்று விளக்கமளித்தான், முசோலினி. அதற்கு இலக்கணப் பொருத்தமாகத் திகழ்கிறது பாசிச ஜெயாவின் பச்சையான பார்ப்பன ஆட்சி. //

    ஒரு பாராவில் 6 இடத்தில் ”பார்ப்பன” வார்த்தை வந்துடுத்து. அம்மாவை அப்போ கைப்பாவை இல்லை, ஆன இப்போ கைப்பாவைன்னு குழப்றீங்க. சோவிடம் அம்மா மாட்டிக்கொண்டுவிட்டாரா இல்ல அம்மாவிடம் சோ மாட்டிகொண்டுவிட்டாராங்கறத பதட்டப்படாம பொறுத்திருந்து பாருங்கோ..

  4. Best line was what would happen to the following in amma’s aatchi

    1.Dravidam
    2.Pagutharivu
    3.Paarpana edhirppu
    3.Tamil Emotionalism
    4.Eazha support

    basically the top 5 negative qualities of TN and its people which alienates them and gets them a bad name nationwide and worldwide,and a legacy of half baked verbose crooked corrupt politicians.

    If anything could get rid of these bad qualities,i guess most people ll be happy.

    • தமிழின உணர்வு, ஈழ ஆதரவு – இரண்டும் தவறென்றால் தமிழ் நாடு என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

  5. http://viruvirupu.com/people-demanding-money-from-sasikala-family/tamil-news/13015/

    “வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள்” என்று சசிகலா குடும்பத்துக்கு நெருக்கடி!

    இங்கே கவனியுங்கள், இந்த நெருக்கடி சசிகலா கும்பலுக்குத்தான்! ஜெயாவிற்கு இல்லை. எனவே யார் அதிகம் அடித்தது, அதும் வெறும் இந்த ஆறு மாதத்தில். ஆனால், அடிக்க விட்டு அதை வேடிக்கை பார்த்ததோ அல்லது கண்டும் காணாமல் இருந்ததோ கட்டாயம் ஜெயாவின் குற்றமே.

    இப்போது ஜெயாவிடம் இருக்கும் சொத்து போயஸ் வீடும், ஜெயா டிவியும், கொடநாட்டு எஸ்டேட்டும் மட்டும்தான். அதுபோக ரொம்பநாட்கள் முன்பு விஜய் மல்லையாவிடம் கிங் ஷர் துவங்க கொடுத்த 5000 கோடி, இது எப்படி திரும்பிவரும் என தெரியாது. தாடிக்காரரே இப்போது பணப்பஞ்ச்சத்தில் உள்ளார். அது போக திமுக ஜே.வை கைது செய்தபோதும் 65 கோடி பணம் மற்றும் நகைகளை அள்ளிக்கொண்டு கோர்ட்டில் ஒப்படைத்துவிட்டன்ர(அது என்ன கதி ஆயிற்று என்பது அந்த திமுகவுக்கே வெளிச்சம்!)

    ஆக, இத்தனை நாள் சசி கும்பல் போட்ட ஆட்டத்தின் பலனாக பணத்தை அவர்களும் பழியை ஜெயாவும் பெறுகின்றனர். பார்ப்போம் யணிஏதாவது நல்லது நடக்கிறதா என

  6. தமிழகம் இப்போது அழகாய் அமைதியாய் ஆகிப்போச்சு…கொலை இல்லை..கொள்ளை இல்லை..சசிகலாவை நீக்கியதால் எல்லாம் சரி ஆகிப்போச்சு..
    ஜல்லிகட்டை நிப்பாட்டிடுங்கோ..
    ஆடு கோழி வெட்ட கூடாதுனு சொல்லிடுங்கோ..
    கரகாட்டம்,ஒயிலாட்டம், பறையாட்டம் எல்லாத்துக்கும் தடை போட்ருங்கோ…
    திராவிடம்..டம் டம் டம்
    பெரியார்..டம் டம் டம்
    வாழ்க டமிழகம்..

  7. சும்மா கதை விட வேண்டாம்!சில வயதானவர்களைத் தவிர பெரும்பாலான தமிழ் பிராமணர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி எத்தனையோ காலமாகிவிட்டது!பிராமணர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மேலும், ஏன் அரசு வேலை மேலும் வைத்திருந்த நம்பிக்கை எப்போதோ போய்விட்டது!கடந்த 30தாண்டுகளில் அரசு வேலைகளில் நியமிக்கப்பட்டவர்களில் ஒரு விழுக்காடு கூட பிராமணர்கள் இல்லை!மொத்தம் இரண்டே Mளா க்கள்தான் !சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசும் திமுக சீட்டுக் கொடுத்ததேயில்லை!பிராமணர்களில் பெரும்பாலானோர் பல ஆண்டுகளுக்கு முன்பே பெரும் தனியார் நிறுவனங்கள், சாப்ட்வேர், அந்நியநாடு என வெளியேறிப்போய் வெகு காலமாகிவிட்டது!இப்போது மிச்சம் 10 விழுக்காடு கூட இங்கில்லை!அதிலும் வயதானவர்களே அதிகம்! அவர்களுக்கும் அரசியலிலோ, அதிகார பதவிகளிலோ ஆர்வமே இல்லை!கற்பனையுலகில் சஞ்சரித்துக்கொண்டு வழக்கம்பொல் மிருகடதனமாக எழுதவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன!

    • ஏன் பிராமணர்களல்லாம் பிள்ளை பெற்றுக்கொல்வதை நிருத்தி விட்டார்களா ? இப்ப தமிழ் நாட்டை ஆல்ரதே பிராமண கூட்டம்தானெ

    • //சில வயதானவர்களைத் தவிர பெரும்பாலான தமிழ் பிராமணர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி எத்தனையோ காலமாகிவிட்டது//

      சோ,ஜெயா,எஸ்.வி.சேகர் ஜால்ரா போன்ற பலர் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிறது உங்களுக்கு தெரியாதா?

      • என்னே ஒரு சுவாரசியமான சுறுசுறுப்பு இருக்கும் ஒரு சில பிராமணர்களையும் பெயர் சொல்லி அழைத்து நாட்டை விட்டு துரத்த…

        பரவாயில்லை, பிராமண சமூக தாக்கு என்பதுl இப்போது வெகுவாக குறைந்திருக்கிறது.. ஒரு நான்கைந்து நபர்களை பெயர்களை குறிப்பிட்டு தாக்குவது வரை குறைந்திருப்பது மகிழ்வே.. சென்னையில் உள்ள இந்த நான்கைந்து பிராமணர்களும், காஞ்சியில் உள்ள ஒன்றிரண்டு பிராமணனையும் தவிர நாட்டில் உள்ள பிற பிராமணர்கள் பெரும்பாலும் புலம் பெயர்ந்து விட்டனர் என்று கேசவன் சொல்வது உண்மைதான்…

        பிராமணன் இல்லாத தெருக்கள், சிற்றூர்கள், ஊர்கள், பேரூர்கள் நிறைய உள்ளன இன்றைய தமிழத்தில்.. அங்கெல்லாம் சமத்துவம் மேலோங்கி இருக்கிறதா? தென் தமிழகத்தின் தீண்டாமை கொடுமைக்கு நீங்கள் குறப்பிட்ட எஸ்.வி.சேகர் ஜால்ரா உள்ளிட்ட பார்ப்பனர்கள்தான் காரணமா? அல்லது பதிவர் குறிப்பிடும் சாதி ஆதிக்க சக்தி காரணமா?

        இன்னும் பிராமண பார்ப்பன எதிர்ப்பு என்ற பெரியார் காலத்து வட்டத்துக்குள் வசிக்கமால் வெளியே வந்து உண்மையான கருப்பு பார்ப்பனர்களை தாங்கள் சார்ந்திருக்கும் சாதியில் இருந்தாலும் அழித்தொழித்து சமத்துவம் சமைத்திட முற்படுங்கள்…

        • //சாதி ஆதிக்க சக்தி காரணமா?//

          சாதி ஆதிக்க பண்பு எங்கிருந்து பிறப்பெடுக்கிறது மனிதன்?

        • \\சென்னையில் உள்ள இந்த நான்கைந்து பிராமணர்களும், காஞ்சியில் உள்ள ஒன்றிரண்டு பிராமணனையும் தவிர நாட்டில் உள்ள பிற பிராமணர்கள் பெரும்பாலும் புலம் பெயர்ந்து விட்டனர் என்று கேசவன் சொல்வது உண்மைதான்//

          சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரட்டும்.கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு. கேசவன் புளுகு எத்தனை நாளைக்கு என்று பார்த்து விடலாம்.அதிகார மையங்கள்,அரசு அலுவலகங்கள்,மக்கள் வரிப்பணத்தில் இயம்கும் கல்வி நிலையங்கள் அத்தனையிலும் உட்காந்துகிட்டு என்ன ஒரு மாய்மாலம்.

          \\பிராமணன் இல்லாத தெருக்கள், சிற்றூர்கள், ஊர்கள், பேரூர்கள் நிறைய உள்ளன//

          ஆமாம் மனிதன்,நெறயவே இருக்கு.ஆனால் நகரங்களையும்,பெருநகரங்களையும் விட்டு விட்டீர்களே.அங்கேதானே சூட்சுமம் உள்ளது.தமிழகம் முழுவதும் நில உடைமையே பிரதான வருவாய் வழியாக இருந்த வரைக்கும் பார்ப்பன சமூகத்தினர் எல்லா ஊர்களிலும் இருந்தனர். மன்னர்களின் உதவியோடு கிராமங்களை ஆட்டையை போட்டு விட்டு வெள்ளைக்காரன் காலத்தில் அதிகார மையங்களாக நகரங்கள் உருவெடுத்தபோது அங்கு டேராவை மாற்றி கொண்டீர்கள்.

          \\தென் தமிழகத்தின் தீண்டாமை கொடுமைக்கு நீங்கள் குறப்பிட்ட எஸ்.வி.சேகர் ஜால்ரா உள்ளிட்ட பார்ப்பனர்கள்தான் காரணமா? அல்லது பதிவர் குறிப்பிடும் சாதி ஆதிக்க சக்தி காரணமா?//

          வர்ணாசிரம தர்மத்தை படைத்து பரிபாலித்து வரும் பார்ப்பனியம்தான் காரணம். தீண்டாமை ஷேமகரமானது என்று ”தெய்வத்தின் குரல்” புக்குல விஷம் கக்கும் சங்கராச்சாரியை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யாத அரசுதான் காரணம்.”சூத்திர” ”பஞ்சம” ஆடுகளை முட்ட விட்டு ரத்தம் குடிக்கும் நயவஞ்சக நரிகள்தான் காரணம்.

          \\இன்னும் பிராமண பார்ப்பன எதிர்ப்பு என்ற பெரியார் காலத்து வட்டத்துக்குள் வசிக்கமால் வெளியே வந்து உண்மையான கருப்பு பார்ப்பனர்களை தாங்கள் சார்ந்திருக்கும் சாதியில் இருந்தாலும் அழித்தொழித்து சமத்துவம் சமைத்திட முற்படுங்கள்//…

          பெரியார் என்ற வார்த்தையை கேட்டாலே பத்திக்கிட்டு வருதோ,
          வேறொரு பின்னூட்டத்தில் கேசவன் வன்கொடுமை வழக்குகளில் பார்ப்பனர்கள் ஏன் சிக்குவதில்லை என்று கேட்டதுக்கு இதுல பதில் இருக்கு.மத்தவங்கள ஏவி விட்டே தங்கள் வேலையை சாதிக்கும் எத்து வேலை தெரிந்தவர்கள் அவாள்.சாதி ஆதிக்க மனோபாவம் மனிதப் பண்பற்றது என்பதை பிரச்சாரம் செய்து சாதி ஆதிக்கத்தை தகர்க்க சொல்லாமல் ”அழித்தொழிப்பு” செய்ய சொல்வது கயவாளித்தனம்.

          • // பெரியார் என்ற வார்த்தையை கேட்டாலே பத்திக்கிட்டு வருதோ,
            வேறொரு பின்னூட்டத்தில் கேசவன் வன்கொடுமை வழக்குகளில் பார்ப்பனர்கள் ஏன் சிக்குவதில்லை என்று கேட்டதுக்கு இதுல பதில் இருக்கு. மத்தவங்கள ஏவி விட்டே தங்கள் வேலையை சாதிக்கும் எத்து வேலை தெரிந்தவர்கள் அவாள். //

            வன்கொடுமையைச் செய்ய பார்ப்பனர்கள் ஏவிவிட்டார்களா ? யாரை, எப்போது ?!

            தனித்தமிழ் இயக்கம் பார்ப்பன,வேளாள, தலித் தமிழறிஞர்களால் முன்னெடுக்கப் படுவதை உணர்ந்தவுடன் தமிழனைத் திராவிடனாக்கி பார்ப்பனர்கள் மீது பெரியாரும், நாயரும் ஏவிவிடவில்லையா ?

            கூலி உயர்வு கேட்ட தலித்துகள் கூட்டமாகக் கொலை செய்யப் பட்டபோது செய்தவனைக் காப்பாற்ற பொதுவுடமை இயக்கத்தை குற்றம் சாட்டியது பார்ப்பனனா, பெரியாரா ?

            தேவர்களுக்கும், தேவேந்திரர்களுக்கும் இடையே இருந்த பகைமையை அரசியல் லாபத்திற்காக ஊதிவிட்டு முட்டிமோதவிட்டது பார்ப்பனனா ?

            கவுண்டர்கள்-தலித், வன்னியர்கள்-தலித், பிள்ளைமார்கள்-தலித் மோதல்களில் பார்ப்பானின் பங்கு என்ன ?

            போன வினாயகர் சதுர்த்திக்கு பார்ப்பானிடம் வாங்கிய கொழுக்கட்டையைத்தான் இன்னும் மென்று கொண்டு இருக்கிறோம் என்று பதில் சொல்லவேண்டாம்.

      • நீங்கள் குறிப்பிட்டவர்களில் யாரும் பிழைப்புக்காக தமிழகத்தைவிட்டு வெளியேறவேண்டிய அவசியமில்லாதவர்கள். நடுத்தர, கீழ்த்தட்டு பிராமணர்களே அதிகம் அவதிப்பட்டு நாடோடிகளாக்கப்பட்டுள்ளனர்.

  8. expulsion of Sasikala and her group would be to safeguard J. This conclusion is absolutely a selfish decision of J as per advise of Cho and Modi. All Brahmin people want to project that there will be nothing wrong in future. What will be punishment for all the offences committed by Sasikala in the name of J? J could not project anything that they were committed by Sasikala. All acts were done either in the name of J or CM of TN or by TN Government. J should take responsible for all these indeeds. Explanation of J group will not be appealing to common sense of a prudent man

  9. மயிலாப்பூர் கும்பல் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்? சோ-வையா? ஒரு நபர் எப்படி கும்பல் ஆக முடியும்? சோ தவிர ஜெயந்திரன் உட்பட வேறு பார்ப்பனர் சொல்வதை ஜெயா இதுவரை கேட்டதில்லையே…
    தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் மயிலாப்பூர் கும்பலின் அங்கமாக படத்தில் குறித்திருப்பது விகல்பமாக இல்லை? யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த பத்திரிகைகள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டதில்லையே.. சசி போனதால் இவர்கள் என்ன புதிதாய் செய்துவிட போகிறார்கள்?
    \\ ஓட்டுக்காக, பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்க சக்திகளைக் கொண்ட சமூக அடித்தளத்தை மன்னார்குடி மாஃபியா மூலமாக ஜெயலலிதா பராமரித்துப் பயன்படுத்தி வந்தார்\\
    நீங்கள் குறிப்பிடும் இந்த சாதி ஆதிக்க சமுதாயம் தான் உண்மையான பார்ப்பனிய சமுதாயம்… தமிழத்தின் பல இந்து வெறி அமைப்புகள் இந்த சமுதாயத்தாரால் தான் நிரம்பி வழிகின்றன… இந்த சாதி ஆதிக்கம் பரமக்குடி முதல் தூத்துக்குடி வரை பல குடிகளை கெடுத்துள்ளது… இந்த சமுதாய ஆதிக்கத்தை சோ-தான் அகற்றினார் என்று சொன்னால் அது நன்மையே..
    திருமாவளவன், இராமதாசன், கிருட்டிணசாமி, ஜவாஹிருல்லாஹ், சேதுராமன், காதர் மொகிதீன் போன்ற ஒட்டுக்காக சாதி வளர்க்கும், மதம் வளர்க்கும் ஒட்டு கட்சி தலைவர்களை விட நாட்டுக்காக நன்மை செய்த சோ-ராமசாமி ஒன்றும் நஞ்சுடையவர் அல்லரே….

    • //மயிலாப்பூர் கும்பல் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்? சோ-வையா? ஒரு நபர் எப்படி கும்பல் ஆக முடியும்? சோ தவிர ஜெயந்திரன் உட்பட வேறு பார்ப்பனர் சொல்வதை ஜெயா இதுவரை கேட்டதில்லையே…//

      மயிலாப்பூர் கும்பல் என்று தான் சொன்னார்கலே தவற அந்த கும்பல் சோ தான் என்று சொல்லவில்லையே.நீங்கள் தான் “கும்பல் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்? சோ-வையா?” என்று கேட்டுக் கொண்டு நீங்களே மறுபடியும் “ஒரு நபர் எப்படி கும்பல் ஆக முடியும்?” என்று எதிர் கேள்வினை கேட்டு உங்கள் மனதின் உன்மையை வெளிப்படுதுகின்றிர்கள்.

      //தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் மயிலாப்பூர் கும்பலின் அங்கமாக படத்தில் குறித்திருப்பது விகல்பமாக இல்லை? யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த பத்திரிகைகள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டதில்லையே.. சசி போனதால் இவர்கள் என்ன புதிதாய் செய்துவிட போகிறார்கள்?//

      நிச்சயமாக இல்லை உன்மை அதானே. எப்பொழுதும் பார்பன வசம் பாடும் இந்த ஊடகங்கள் யார் ஆட்சியில் இருந்தாலும் பார்பன வாழ்வாதாரத்தை மட்டுமே பரைசாட்டுகின்றார்கள் ஆகையால் தான் அவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டதில்லை.

      //நீங்கள் குறிப்பிடும் இந்த சாதி ஆதிக்க சமுதாயம் தான் உண்மையான பார்ப்பனிய சமுதாயம்… தமிழத்தின் பல இந்து வெறி அமைப்புகள் இந்த சமுதாயத்தாரால் தான் நிரம்பி வழிகின்றன… இந்த சாதி ஆதிக்கம் பரமக்குடி முதல் தூத்துக்குடி வரை பல குடிகளை கெடுத்துள்ளது… இந்த சமுதாய ஆதிக்கத்தை சோ-தான் அகற்றினார் என்று சொன்னால் அது நன்மையே..//

      அவர்கள் தங்களை எப்பொழுதும் இந்துகள் என்று குறிப்பிட்டது இல்லையே. அப்படி இருக்கும் பொழுது அவர்களை எந்த அடிப்படையில் இந்து வெறி அமைப்புகள் என்று குற்றம் சுமத்துகின்றிர்கள்? சோ தான் சமுதாய ஆதிக்கத்தை அகற்றினாரா? எங்கே செல்கிறது பார்பனம் என்ற தொடரை பார்திருந்தால் உன்மை விளங்கும்?

      //திருமாவளவன், இராமதாசன், கிருட்டிணசாமி, ஜவாஹிருல்லாஹ், சேதுராமன், காதர் மொகிதீன் போன்ற ஒட்டுக்காக சாதி வளர்க்கும், மதம் வளர்க்கும் ஒட்டு கட்சி தலைவர்களை விட நாட்டுக்காக நன்மை செய்த சோ-ராமசாமி ஒன்றும் நஞ்சுடையவர் அல்லரே….//

      தேர்தளுக்கு முன்பு இவர்களுள் சிலர் அரசியல் கட்சியாக தெறிந்தது ஆட்சி அமைக்க மட்டும் இவர்கள் தயவு தெவைப் பெற்றது அமைத்தவுடன் இவர்கள் சாதி, மதம் போற்றும் கட்சியாக மாரிவிட்டார்களா? அப்படி சோ. ராமசாமி நாட்டுக்கு என்னங்க நன்மை பன்னாறு? சொல்லுங்க நாங்க தெறிந்து கொள்கிறோம்.

      • \\மயிலாப்பூர் கும்பல் என்று தான் சொன்னார்கலே தவற அந்த கும்பல் சோ தான் என்று சொல்லவில்லையே\\
        அது தான் யாரை குறிப்பிடுகிறார்கள் என்று கேட்கிறேன்… உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன் செந்தமிழரே…

        \\எப்பொழுதும் பார்பன வசம் பாடும் இந்த ஊடகங்கள் யார் ஆட்சியில் இருந்தாலும் பார்பன வாழ்வாதாரத்தை மட்டுமே பரைசாட்டுகின்றார்கள் \\
        தினமலர், தினமணி பத்திரிகைகள் சசி போனதால் என்ன புதிதாய் செய்துவிட போகிறார்கள் எனபது தான் கேள்வி.. பதில் இல்லையே?

        \\திருமாவளவன், இராமதாசன், கிருட்டிணசாமி, ஜவாஹிருல்லாஹ், சேதுராமன், காதர் மொகிதீன் – இவர்கள் சாதி, மதம் போற்றும் கட்சியாக மாரிவிட்டார்களா\\
        இல்லை இல்லை இவர்கள் சாதி சமுதாயம் ஒழித்து சமத்துவம் படைக்கும் கட்சிகள்… 🙂

        \\அவர்கள் தங்களை எப்பொழுதும் இந்துகள் என்று குறிப்பிட்டது இல்லையே. அப்படி இருக்கும் பொழுது அவர்களை எந்த அடிப்படையில் இந்து வெறி அமைப்புகள் என்று குற்றம் சுமத்துகின்றிர்கள்? சோ தான் சமுதாய ஆதிக்கத்தை அகற்றினாரா?\\

        வினவு குறிப்பிடும் “பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்க சக்தி பற்றி” நான் பேசுகிறேன்… நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்..
        அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் எந்த சாதியின் ஆதிக்கம் அதிகம் என்று அனைத்து கட்சி காரர்களுக்கும் தெரியும்… பரமக்குடி வெறித்தனம் இந்த சாதி
        வெறியின் சமீபத்திய உதாரணம்… இவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொன்னால் தான் நீங்கள் இந்து என்று ஒப்புவீரோ?

        \\சோ. ராமசாமி நாட்டுக்கு என்னங்க நன்மை பன்னாறு? சொல்லுங்க நாங்க தெறிந்து கொள்கிறோம்\\
        இக்கட்டுரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் குறித்தது… அவ்வகையில் சோ செய்ததாக குறிப்படப்படும் (பூர்வாதரங்கள் இல்லை) இந்த சசிகலா கும்பல் நீக்கம் எனபது சாதாரண அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனை விண்ணதிர, வினவதிர, இம்மன்னதிர, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அதிர பட்டாசு வெடித்து கொண்டாட வைத்துள்ளது… ஒரு தலைவன் தன் தொண்டர்களை மகிழ்விக்க கூடிய இம்முடிவை எடுத்திருப்பது அக்கட்சியை பொறுத்தவரை காலவரையற்ற நன்மையே…
        மற்றபடி உட்கட்சி விடயங்கள் நாட்டுக்கு என்ன நன்மை செய்தது என்று கேட்பது அபத்தம்…

        • //அது தான் யாரை குறிப்பிடுகிறார்கள் என்று கேட்கிறேன்… உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன் செந்தமிழரே…//

          பார்பனிய ஆதிக்கம் செலுத்த முற் படும் அனத்து பார்பனர்களையும் தான் மனிதரே!

          //தினமலர், தினமணி பத்திரிகைகள் சசி போனதால் என்ன புதிதாய் செய்துவிட போகிறார்கள் எனபது தான் கேள்வி.. பதில் இல்லையே?//

          சசிகலா போனதால் என்னவோ தமிழ் நாட்டில் செங்கோள் ஆட்சி மலருவது போல் பரைசாற்றும் இந்த ஊடகங்கள் ஜெயா ஒன்றும் அறியாத அப்பாவி என்று ஒரு தொரனை ஏற்படுத்த முற்படுவது ஏன்? அப்போ இது அனைத்தும் தெறியாமல் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார ஜெ? இது போல் ஒரு முறன் பட்ட சித்தரிப்பை ஏன் செய்கிறார்கள் இந்த ஊடகத்தோர் என்பதே எங்கள் கேள்வி? அவர்கள் புதிதாக எதுவும் செய்யவில்லை எப்பொழுதும் செய்வது போல் பார்பன வசம்தான் பாடுகிறார்கள் ஆனால் இப்பொழுது சசிகலாவை பகடகாயாய் செய்து ஜெயாவை நல்லவர் போல் சித்தரிக்க முயலுவது ஏன்? ஜெயா பார்பனர் என்பதாலா? குற்றம் செய்த இருவரையும் குற்றம் சாட்ட வேண்டும் ஒருவரை மற்றும் அல்ல.

          //இல்லை இல்லை இவர்கள் சாதி சமுதாயம் ஒழித்து சமத்துவம் படைக்கும் கட்சிகள்//

          சரி சாதி தீயை முதலில் மூட்டியது யார்? இன்றலவும் ப ஜா கா, ஆர் எஸ் ஏஸ் பார்பனியத்தை காக்கவும் போற்றவும் செய்து கொண்டு இறுக்கிறார்கள். ஆவர்களை இந்த பட்டியலில் செற்காதது ஏன்?

          //அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் எந்த சாதியின் ஆதிக்கம் அதிகம் என்று அனைத்து கட்சி காரர்களுக்கும் தெரியும்…//

          சரி இவர்கள் ஆதிக்கத்தை தாள்தியாகிவிட்டது இப்பொழுது யார் ஆதிக்கம் பெற சோ அவர்களும், பார்பனிய மறை போற்றும் ஊடகங்களும் வேலை செய்கிறார்கள்? ஆதிமுகாவை ஒரு திராவிட கொட்பாட்டு கட்சியாக உறுவேடுக்கவா? இல்லை ஒரு முலு பா ஜா கவாக செய்யவா?

          // ஒரு தலைவன் தன் தொண்டர்களை மகிழ்விக்க கூடிய இம்முடிவை எடுத்திருப்பது அக்கட்சியை பொறுத்தவரை காலவரையற்ற நன்மையே…//

          ஒட்ட வந்த பிடரியை விளக்கியாகிவிட்டது அதற்கு பதில் மற்ற ஒரு பிடாரியான் பார்பன ஆதிக்கம் வருகிறதே அதனால் அந்த தொன்டனுக்கு என்ன பயன்? உங்கள் வெற்றியை ஆவர்கள் வெற்றியாக காட்டாதிர்கள். சசிகலா முட்கல்வராக இருந்து ஜெயாவை வெளியேற்றம் செய்து இருந்தாலும் தொன்டர்கள் இப்படி தான் செய்திருபார்கள்.

          • செந்தமிழரே பார்த்தீர்களா, நண்பர் சுப்பிரமணியன் சொல்லுவது போல நீங்க உணர்ச்சிவசப்பட்டு துடி துடித்து மறுமொழி எழுதுவதால் எவ்வுளவு எழுத்துப் பிழைகள். தமிழ் தமிழ் என்று பேசிவிட்டு நாமே இப்படி தமிழை கூறு போடலாமா? இதை தான் உணர்ச்சி கொந்தளிப்பின் விளிம்பில் நின்று இன்றைய தமிழர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்…

            \\சசிகலா முட்கல்வராக (முதல்வராக ?) இருந்து ஜெயாவை வெளியேற்றம் செய்து இருந்தாலும் தொன்டர்கள் இப்படி தான் செய்திருபார்கள்\\
            ராசீவ் காந்தி உயிரோடு இருந்திருந்தால் இந்த மூவரையும் மண்ணித்திருப்பார் – கருணாநிதி

            இரண்டும் ஒன்று போல் இல்லை… இரண்டு வாக்கியங்களுமே மேலதிகமாக எழுந்த உணர்ச்சியின் உந்துதல் தான்…

            • மனிதன் நான் முட்கல்வராக என்று எழுதியதற்கு பொருள் உங்களுக்கு விளங்கும் என்று என்னியது என் தவறு. அதன் பொருள் இலை மரை காய் மரையாக சொல்ல வேண்டும் என்றால் தன்னை சுற்றி ஒரு முல், கல் வேளி வைத்து கொண்டு அரசியல் மற்றும் கட்சி முடிவுகளை எடுப்பது பயன் அற்றது என்பதாகும்.

              நான் சொல்வதில் உணர்ச்சி மிக்க வாக்கியங்கல் இல்லையே. மாறாக தங்கள் எழுத்தில் தான் நீங்கள் கூறும் “உணர்ச்சியின் உந்துதல்” அதிகம் இருக்கிறது. உதாரனம்:

              //இந்த சசிகலா கும்பல் நீக்கம் எனபது சாதாரண அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனை விண்ணதிர, வினவதிர, இம்மன்னதிர, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அதிர பட்டாசு வெடித்து கொண்டாட வைத்துள்ளது…//

              என்னுடைய மற்ற கேள்விகலுக்கு பதில் இல்லையே…

  10. நிருபர் : தூத்துக்குடி டாக்டர் சேதுலட்சுமி ஒரு ஆச்சராமான பிராமண பெண்..
    வினவு : ஒ அப்படியா? எடு பேனாவை, எழுது வசவுகளை.. பார்ப்பண கும்பல், அதிகார வர்க்கம், பண வெறி, வர்ணாசிரமம், பாசிசம், சோ, தினமணி, தினமலர், பாசிசம், அத்வானி,ஆர் எஸ் எஸ், எல்லா வார்த்தைகளும் கலந்து போட்டு பதிவெழுதி பிரிச்சு மேய்ஞ்சுருங்க..
    நிருபர் : ஆங்… இப்பதான் தகவல் வந்தது… சேதுலட்சுமி பிராமண பெண் இல்லையாம்… எழுதினதை என்ன செய்ய?
    வினவு : வடை போச்சே! ஒன்னும் கெட்டு போகலை எழுதினதை அப்படியே வச்சிக்க அடுத்த பதிவுல இணைச்சிடலாம்… பார்ப்பனனை திட்டி எழுதியதை எந்த பதிவில் வேண்டுமானாலும் ஈசிய சேர்த்துக்கலாம்..

  11. exactly,what is it that CHO has done bad for TN?

    Which Paarpanar has ever done anything bad for TN’s economy?

    whether is it TVS/India Cements/any bureaucrat has ever done bad to TN?

    They continue to invest here and keep the same employees.

    • சோ செய்யும் அனைத்தும் நயவஞ்சகமே. மூவறையும் துக்கிளிட துக்களக்கில் தூக்கி எழுதியவர் தான் உங்கள் சோ. சோ தமிழகத்துக்கு என்ன நன்மை செய்தார்? கூடங்குளம் மக்கள் போராட்டர்திற்கு ஆதரவு தெறிவித்தாரா இல்லை முல்லை பெரியார் அனை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நின்றாரா? பார்பனர்களுக்கு நன்மை செய்ய முயர்ச்சி செய்கிறார் என்று சொல்லுங்கல் தமிழ் நாட்டிற்கு அல்ல. சேது சமுதிர திட்டதிற்கு ஆதரவான நிலைப்பாடை வெளியிட்டாரா? இல்லை நிதமும் சிங்கள வெறியர்களின் துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் சுமக்கும் எம் தமிழக மீனவர்களுக்காக கொடி பிடித்து சன்டையிட்டாரா?

      பார்பனர்கள் பொருளாதாரதிற்கு என்ன தவறிலைத்தார்கள் என்பதைவிட சாமுதாயதிற்கு என்ன நன்மை செய்திர்கள் என்று சொல்லுங்கள்? மொழி வழி மாநிலங்களாக பிரிக்கும் பொழுது உங்கள் பார்பன அதிகாரிகள் செய்த துரோகத்தை பட்டியலிடலாமா, இல்லை அன்று இரையில்வே துறையில் உங்கள் பார்பனர்கள் செய்த அட்டுளியங்களை பட்டியலிடலாமா, இல்லை கல்வி துறையில் உங்கள் பார்பன அதிகாரிகள் செய்த தீங்கினை பட்டியலிடலாமா.

    • பார்ப்பனியம் தமிழக பொருளாதாரத்துக்கு செய்யும் தீங்குகளில் சில.

      ஒவ்வொரு அமாவாசையன்றும் உணவுப் பொருளாக பயன்படவேண்டிய பல டன் பூசணிக் காய்களை நட்ட நடு ரோட்டில் போட்டு உடைத்து வீணாக்குகிறார்கள்.அதனால் பல பைக்குகள் விபத்துக்கு உள்ளாவது தனி இழப்பு.

      ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் டன் கணக்கில் எலுமிச்சையை அறுத்து தெருவில் வீசி விட்டு ”ஒக்க ஒக்க லெமனு ஒக்க ஒக்க சோல்ஜரு” என மூடத்தனம் வளக்குது பார்ப்பனியம்.

      வெள்ளி கிழமையானா எத்தனை லட்சம் தேங்காய தெருவில போட்டு உடைத்து குப்பைக்கு அனுப்புகிறது பார்ப்பனியம்.

  12. The Paarpanar always against Tamil Sentiments and Tamil language (in temples). by using the Delhi lobby, they take decisions against Tamil’s interest in Eelam issue and even in Mullaperiyar Dam, Sethu project,…etc. Their print media always against Tamil cause (Eelam). They are in high position of central govt. department so they decide whatever against Tamils.

  13. சாதி வன்கொடுமை வழக்குகளில் எதிலும் பார்ப்பனர்கள் பெயர் இருப்பதில்லையே? ஏன்? தலித்துக்கள் பார்ப்பனர்களால் சற்றும் பாதிக்கப்படவில்லை என்பதால்தானே ? உண்மையில் வன்கொடுமை வழக்குகளில் அதிகம் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் பிற்பட்ட, மற்றும் மிகவும் பிற்பட்ட சாதிகளுக்கான சலுகைகளை பெருமளவு ஆக்கிரமிதுக்கொண்டுள்ள, நாடார், வன்னியர்,தேவர் மற்றும் கவுண்டர்கள்தான்!பழி ஓரிடம். பாவம் ஓரிடம்!மக்கள்தொகையில் மூன்று விழுக்காடு உள்ள பார்பனர்களுக்கு திமுக தன வரலாற்றிலேயே ஒரே ஒரு Mளா , MP சீட் கூட கொடுத்ததேயில்லை! அதிமுகவில் கூட இப்போது ஜெயா உட்பட இரண்டே Mளா க்கள்!ஆனால் கருணாநிதியோ அரை விழுக்காடு கூட இல்லாத தன சமூகத்திற்கு அளித்தது முதல்வர், து,முதலவர் , மாநில அமைச்சர், 3 MP க்கள் , 2மத்திய மந்திரிகள் இத்யாதி!இப்போதும் தமிழக அமைச்சரவையை பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது, வன்கொடுமைகளில் அதிகம், குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூகத்தினர் என்பது உண்மையா இல்லையா? எத்தனை திராவிட இயக்கத்தினர் தலித்துகளோடு நேரடி திருமண உறவு கொண்டவர்கள் அல்லது ஒப்புக்கொள்பவர்கள்?ஆனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் போய்க் கேளுங்கள்! எந்த சாதியினர் அதிகபட்ச கலப்புமணங்களில் சம்மந்தப்பட்டுள்ளனரென்று? சந்தேகமேயில்லாமல் பிராமணர்களே!அதுவும் குடும்பத்தார் சம்மதத்துடன் மண்டபங்களில் நடப்பது இன்றும் தினம் காணும் காட்சி! பார்ப்பன எதிர்ப்பு இப்போது ஒரு மழுங்கிப்போன ஆயுதம்!காய்ந்த இலை! நாறிய மலர்!வெற்றுக் குப்பை! ஊர் ஊராக அலைந்து தமிழ்சுவடிகளை யார்யார் காலிலோ விழுந்து வாங்கி தொகுத்து தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட உ வே சா வையும், தமிழ் இணைய வளர்ச்சியின் தந்தை சுஜாதா ரங்கராஜனையும் ,மகா கவியையும் தந்த இனத்தை உங்கள் கிறுக்கல்கல்மூலம் கேவலப் படுத்தாதீர்கள்!மன்னார்குடி மாபியாவின் லட்சணத்தை அவர்களது திருவாரூர் மாவட்டத்திலேயே போய்க் கேளுங்கள்.அவர்கள் அடித்த கொள்ளைகளின் விவரங்கள் ஹார்ட் அட்டாக்கை இலவசமாகத் தரும்!

    • சாதிகளை தோற்றுவிட்டது யார். விஸ்னுவின் தலையில் இருந்து பிறந்தவன் பிராமனன், நெஞ்சில் இருந்து பிறந்தவன் சத்திரியன், தொடையில் இருந்து பிறந்தவன் வைசியன் காலில் இருந்து பிறந்தவன் சூந்திரன் என்று அக்காலத்தில் பொய் பகட்டினை சொல்லி மனிதர்களிடையே வேற்றுமையும் பகைமையும் தோற்றுவித்து சாதி என்னும் தீங்கினை சமுதாயத்தில் உடுறுவ செய்து இப்பொழுது என்னமோ ஒலுங்கு சீலர்களை போல் வேசம் இடாதிர்கள்.

      கலப்பு திருமணங்களை காலம் தொட்டு தமிழர்களிடையே இருந்து வந்த ஒரு சமுதாய ஒற்றுமை தான், வந்தேரிகளான உங்கள் குறுக்கு புத்திகலால் வந்ட்க வினை தான் ஒரு சமுதாயத்தின் திருமணக் கொட்பாடு. அதை மீட்டேடுத்தவர்கள் திராவிட கழகதினர், சமுதாய விழிப்புனர்வை செய்தவர்கள். கலப்பு திருமணத்தில் எற்று கொள்ளும் நீங்கள் எத்தனை தலித் சமுதாயத்தினருடன் திருமணத்தை செய்து கொள்கின்றிர்கள்? ஆதாரம் இல்லாமல் ஒரு கருத்தை எழுதாதிர்கல், பிராமனர்கள் அதிகமாக கலப்பு திருமணத்தை செய்து சமுதாய ஒற்றுமையை நிலை நாட்டுகிறார்கள் என்று உங்கள் பொய் பகட்டினை முன் வைக்காதிர்கள்.

      //பார்ப்பன எதிர்ப்பு இப்போது ஒரு மழுங்கிப்போன ஆயுதம்!காய்ந்த இலை! நாறிய மலர்!வெற்றுக் குப்பை!//

      பயம் வந்தால் இப்படிதான் பினத்துவார்கள், உங்களை கூட்டாக வாழ்கா நதிகரைக்கு மின்டும் செல்லும் நாள் வரும். பார்பனிய குப்பையை எரிப்பதர்கு தேவை எங்கள் காய்ந்த இலைகல். மழுங்கிபோன ஆயுதம் பார்து எதற்கு பயம்?

      //ஊர் ஊராக அலைந்து தமிழ்சுவடிகளை யார்யார் காலிலோ விழுந்து வாங்கி தொகுத்து தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட உ வே சா வையும், தமிழ் இணைய வளர்ச்சியின் தந்தை சுஜாதா ரங்கராஜனையும் ,மகா கவியையும் தந்த இனத்தை உங்கள் கிறுக்கல்கல்மூலம் கேவலப் படுத்தாதீர்கள்!//

      தமிழ் என்றும் விழ்ந்தது இல்லை அது மறுமலர்ச்சி அடைய. கல் தோன்றா மன் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி எங்கள் தமிழ் குடி. இதற்கு அர்தம் தெரியுமா? உலகத்தில் மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி. பிற் மொழிகல் எழுத்து வடிவம் வருவதற்கு முன்பே இலக்கனத்தயும், இலக்கியத்தயும் பெற்றவர்கள் நாங்கள். ஆகயால் உ வே வா, சு மே மோ, டா முதா என்பவர்களால் தான் தமிழ் மறுமலர்ச்சி அடைந்தது என்று பினாததிர்கள்.

      உங்கள் தமிழ் இணைய வளர்ச்சியின் தந்தை சுஜாதா ரங்கராஜனை பற்றி எழுதினால் டர் ஆகிடும். ஜென்டில் மென் படத்தில் இட ஒதிக்கிடுக்கு எதிராக அமைத்த கதை. அன்நியன் படத்தில் எதோ பார்பனர்கள் தான் உஅழலை எதிற்கும் தர்ம பிரபுகலாக சொல்லியது. இது போன்று ஆயிரம் உதாரணங்களை சொல்ல முடியும். உங்கள் சுஜாதா இணைய தளத்தை பார்பதற்கு முன்பே எங்கள் ஈழ உறவுகள் அதில் கோலோச்சியாகிவிட்டது. ஆகயால் மிண்டும் ஆதாரம் இல்லாததை சொல்ல வேண்டாம்.

      மகாகவி பாரதி பற்றி பேச வேண்டாம். விடுதலை போராட்தின் பொழுது ஆங்கிளேயர்கள் அவர் மீது கைது வாரன்ட் குடுத்த பொழுது ஓடி புதுசேரியில் தஞ்சம் புகுந்த வீரதிருமகன் உங்கள் பாரதி.

      பெண் விடுதலைக்காக போராடினான் சரி. எந்த இனத்து பெண் விடுதலைக்காக? உங்கள் சமுதாயத்தின் பெண்கள் கல்வி கற்க பாடுபட்டானே தவற மொத்த பெண் சமுதாயத்திர்காக அல்ல. அப்படி அனைத்து தரப்பு பெண்களுக்காக பாடுபட்டிருந்தால், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பட்டம் பெற்ற பொழுது அதை பற்றி கேட்ட பொழுது வாய் திரக்காமல் இருந்தது ஏன்?

      தமிழை அவர்கள் சுய நலனுக்காக உபயோகம் செய்து கொண்டார்களே தவர தமிழுக்காக இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் சொல்லுவதை எல்லாம் வரலாறு தெறியாதவைகளிடம் பேசுங்கள் எங்களிடம் வேண்டாம்.

      • இந்த நோபல் பரிசுக் கமிட்டியை செரு..ல் அடிக்கவேண்டும்! போயும் போயும் சர் CV ராமய்யர், சந்திரசேகர அய்யர், வெங்கி அய்யர் என சாதி பார்ததுத்தான் அறிவியல் நோபல் பரிசு அளிக்கிறான்! இது சமூக நீதிக்கும், இட ஒதுக்கீடுக்கும் எதிரானது!இது தெரியாமல் கவிதார்க் ஸ்ரீராம் ஐயங்கார் துவக்கி, கூகிள் தேடுபொறியைப் (கூகிள் சர்ச் எஞ்சின்) பயன்படுத்தும் தமிழன் சொந்த இன எதிரியே!

      • — பிரபாகரனுக்கு ஒரு நீதி , உள்ளூர் பாப்பானுக்கு ஒரு நீதியா ? சிங்களம் தன் இனம் காக்க இடஒதுக்கீடு கொண்டுவந்ததை எதிர்த்துத்தான் தமிழ் இளைஞர்கள் ஈழப் போராட்டத்தைத் துவக்கினர் !இட ஒதுக்கீட்டை எதிர்த்த சிங்கள ஏகாதிபத்தியத்தின் எதிரி பிரபாகரன் உங்க பார்வையில் நல்லவன்! ஆனால் அதே ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டு, அரசு வேலை ,கல்வியே வேண்டாமென அயல்தேசத்துக்கு ஓடிப்போன சாது பார்ப்பான் கெட்டவன்! நல்லா இருக்கு ஒங்க நீதி!

        • \\அரசு வேலை ,கல்வியே வேண்டாமென அயல்தேசத்துக்கு ஓடிப்போன சாது பார்ப்பான் கெட்டவன்! நல்லா இருக்கு ஒங்க நீதி!//

          நீங்க சாதுவா.நாட்டில் ரத்த ஆறு ஓடவிட்டு ரத்தம் குடிக்கும் காட்டேறிகள் அமைப்பான சங்க பரிவார் அமைப்புகளை இயக்குவதும் கருத்து ரீதியாக அப்பாவி இந்துக்கள் மத்தியில் அந்த காட்டேரிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதும் நீங்கள்தானே.

          அயல் நாட்டுக்கு எப்படி ஓடிப்போகிறீர்கள்.நோபல் புகழ் வெங்கி அய்யர் போன்று IIT யிலும் மருத்துவ கல்லூரிகளிலும் மக்கள் வரிப்பணத்தில் படித்து விட்டு இந்த நாட்டுக்காக உழைக்காமல் நன்றி கெட்டு ஓடிப்போகிறீர்கள்.

    • தமிழ் இணையத்தின் தந்தை என சொல்லும் அளவுக்கு சுஜாதா என்னத்த கண்டு பிடிச்சார்.பாரத் எலெக்ட்ரானிக்சில் அவர் வேலை பார்த்தபோது அந்நிறுவனம் பல ஊழியர்களின் கூட்டு முயற்சியால் வாக்கு பதிவு எந்திரத்தை உருவாக்கியது. அவ்வளவுதான்.மற்றவர்களின் கண்டுபிடிப்புகளை பற்றி கட்டுரை எழுதுறவன் எல்லாம் அந்த கண்டுபிடிப்புக்கு உரிமை கொண்டாட முடியாது.

  14. tamizh language?I know so many of the sanga illakiyam written by us and even freedom fighters and recent people who have done things for tamizh language.

    Tamil Ealam is a different case,India has lost so much by supporting LTTE and Rajiv Gandhi’s death is the ultimate nail in the coffin.Mu.ka kuttaiya kozhapuna kozhappula avaru aatchiyum pochu,rajiv gandhi uyirum pochu.

    watch this: http://www.youtube.com/watch?v=pi58-22t-60

    People like Veeramani and Suba Veera Pandian,makes a grandplan to make TN and Eazham secede from India and SL and have a great Tamizh country.Indha maadhiri agala vekka ivanunga kitta sakhtiyum thairiyamum kedayathu,aana ivunga pecha kettu yaazhpanathula ethana peru sethang.

    Rajiv Gandhi ya mattum kollama irunthiruntha inneram eazhamngura provinceaavadhu kedachirukkum.Ippo paarunga ellam manna pochu,ippadi ethavathu nadanthu iruntha ithunala payan adaya porathu Dravidar kazhaga sigaamaninga thaan.

    Naanga vetti pechu pesi kittu orr suthikittu pozhappu nadathula,naanga munneranum enga kooda yaaru vandhalum munnethuvom.Neenga thaan sila sombunga,sappainga solradha kettukittu irukeenga.

    ellathayum unarvu poorvama yosikaadheenga,konjam soodhanama nadanthukkunga.

    Mullaperiyar avalavu sadharanamana prachanai illa,ias officer seiradhukko.Namma aalunga ethana peru irukkanagalo,athana peru keralavila irunthum irukkanga.

    Yen ippo Koodangulam thittam irukku,adhu vandha andha areavila neraya development nadakkum aana paathiriyaarunga madha maatram kettu podiumnu ippavum andha makkala vaanam paathu vivasayam pannikitte irukka solranga.

    • சங்க இலக்கியத்தில் பார்பனர்களா? யார் யார் என்று சொல்லுங்கள் பார்போம். உங்கள் விடுதலை வீரர்களை பற்றி நாடறிந்தது தானே. இப்ப யாருங்க தமிழுக்காக கொடி பிடித்த நல்லவங்க கொஞ்சம் சொல்லுங்கோனா?

      விடுதலை புலிகளுக்கு உதவி செய்திங்களா எப்ப பாஸ். இந்திரா காந்தி செய்ததை சொல்றிங்களா? காமடி பன்னாதிங்க அதினுடைய உன்மை எல்லாத்துக்கும் தெறியும். சரி ராசிவ் காந்தி இறப்பிற்கு காரணம் சொல்லுங்க பாஸ். ஈழத்துள இந்திய பாதுகாப்பு படை செய்த அட்டுலியங்களுக்கு கிடைத்த பரிசு. காஸ்மிர்ல நீங்க செய்தா அது தேச பாதுகாப்பு அதுவே புலிகள் செய்தால் அது திவிரவாதமா?

      ராசிவ் காந்தி கொன்னதாள ஈழமுனு ஒன்னு இல்லாம போனதா எதோ பினாதிறிங்க சரி இந்திரா காந்திய கொன்ன சீக்கிய சிகாமனிகளை உச்சி முகர்ந்து கொண்டு இருப்பது ஏன்?

      நீங்க முன்னேறிங்களா? யார் வைத்துள அடிச்சிட்டு பாஸ். நீங்க எப்படியல்லாம் முன்னேறுனிங்கனு 6000 வருசமா பாத்துகிட்டு தான் பாஸ் இருக்கோம். உங்க சப்ப சார்வார்கர் சொன்னதயும் சொம்பு வால்மிகி எழுதியதையும் வச்சு ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் இராமாயனம் என்று பகுத்தறிவே இல்லாம பேசரவங்க முற்போக்குவாதிகளை பேசரதுக்கு தகுதியில்ல பாஸ்.

      பகுத்தறிவ வச்சு நீங்க அடிச்ச லுட்டிகளை டார் டார கிழிச்சா ஏன் பாச் உனர்ச்சி பொங்க பேசுறதா சொல்றிங்க பாஸ். கருத்துக்கு கருத்து பேசுங்க பாஸ் தெறியலனா பொத்திகிட்டு இருங்க பாஸ் அதவிட்டுட்டு பினாதாதிங்க பாஸ்.

  15. மனிதன், சுப்ரமணியன் போன்றோர்களுக்காக இந்தநாட்டுப் பாடல்.
    ஆறு கெட நாணலை எடு.
    காடு கெட ஆட்டை விடு.
    ஊர் கெட நூலை விடு.

    • இந்தப் பழமொழியை உருவாக்கிவிட்டது யாரோ ?

      சத்திரியர்களும், வைசியர்களும் நூலை விட்டுவிட்டார்கள், இன்னும் விடாமல் வைத்துக் கொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்களும், ஆசாரிகளும், சில நெசவாளர்களும் தான். அவர்களும் விட்டுட்டா ஊர் சுத்தமா கெட்டுபோகுமா !!!

  16. romba puthisalithanama pesaradha nenaikaadheenga,idhu dhaan unga ketta pazhakkame.Vaai kizhiya pesuveenga aana poi edhavadhu seyngadanna nera paatu ellam paada aarambichuruveenga.

    Ghilli padathula prakashraj solra madhiri,vaai illana naai thookittu poidum ungala ellam.

    • சரி உன் வீட்டு கலிவுகளை நீ அகற்ற வேண்டியது தானே அதற்கு மட்டும் தாள்த பட்ட சமுகத்தினரை ஏன் எதிர்பாக்குர? எங்களை வாய்மூடி வைத்திறுந்த காலத்தில் நன்றாக இருந்ததா? இப்பொழுது எதிர் கேள்வி கேட்டவுடன் கோபம் பொங்குதோ? கருத்தை கருத்தால் பேசு அதை விட்டுவிட்டு இது போல பினாததே.

  17. rendu,

    Tamizhnaatula thanni irukku nilam irukku,ellarum thirumbi oorukku poi vivasayam pannungalen.Indiave venaam,mudiyuma ungalala.

    Modhalla unarchiye melnnu irukkaradhu vidunga,unrachi iruntha soru kedaikkathu,2000 varushuthukku munnadi irundha madhiri ippo irukka mudiyathu.

    • நாங்க என்ன வேன்னா பன்றோம் உனக்கு எதுக்கு, என்னமோ இந்தியவோட தயவு இல்லனா தமிழ் நாடே இல்லாத மாதிரி பேசாதே. இந்த சொத்துக்கு தானே 6000 வருசமா எவளவுதான் கலிவி கலிவி ஊத்தினாலும் இங்கேயே இருக்கிங்க. வீரனுக்கும் மானமுள்ளவனுக்கும் உனர்சிகள் இருப்பது இயல்பு அது எதுவுமே இல்லாத உங்கள மாதிரி எங்கள இருக்க சொல்லாதே.

  18. senthamizhan

    unga ara verkaathuthanathukku oru alavey illama pochu.Neenga endha aaniya vena pudigkkunga,enakku endha prachanayum illa.Naan whistle adiche kettu povenna yaaru thadukka mudiyum.Aana Koodankulam project varum,paakalama?

  19. yaaru veeran,yaaru manamullavan.enga thuppaki eduthu poradu paakalam,ippadi mokkai thanama pesadheenga.

    unarchi ellarukkum irukku aana,adha mattume vechu pozhaikka mudiyathu.

    nee yaara enna kazhuvi ootha,700 varushama enga kudumbam tirunelvelithaan irukku,oru mayirayum yaaru pudungala.

    300 varhusthakku munnala vandha vaikovum,vijaykanthum,periyarum modhalla kelamabattum appuram paakalam.

  20. @senthamizhan

    indha karuthu vaangikko.

    Ramayanathula ppadi enna thappu irukku,seekiyaragala konnadhu thappu thaan,adhukku indira gandhi uyir poidichu,rajiv gandhi enna senjaaru?

    Indira Gandhi mattum illa,MGRum thaan udhavi senjaaru adhe CHO,Saavi pecha kettu thaan.MGR sethathukku appuram unga mokkai mandayanunga Mu.Ka,veeramani and all mokka pandies vandhu kuttaya kozhappi prabhakarana usuppu ethi vittutanga.

    Idha avunga aale solli irukaaru,poi Youtube videova paarunga.

    Rajiv Gandhiya konnadhu thappu thaan,politicala enna nadanthi iru nthaalum indiya pradhamara konnutu pozhaikkura alavukku yaarukkum inga kottayum kedyatahu,nenjuka manja sorum kedyatahu.

    Indiya urimai illama yaarume ilangai arasukku udhavi seyya mudiyathu.Indiava pagaichukittu eazhamum amaindirukka mudiyathu,idhu dhaan unmai,

    Ungala madhiri velai vetti illama kuttaiya kozhappuravana sila peru naala thaan inaikki yaazhpanathula ratha aaru oduthu.

    Vaiko madhiri sombungalala thaan anga prachanaiye.

    Ulagame amaidhiya vaazha muyarchi seyyum pothu,periya lord maadhiri pazhaya kadhai ellam pesi oru inathaiye azhicha poruoppu muttrilum dravidar kazhagathai saarnathathe.

    Idha avunga aalungale othukkuranga,neenga thaan sugama tamizhnaatula ukkanthukittu arasiyal pesikittu thiriyareenga.

    And naanga ellam sondha uzhaippula thaan munneri irukkum,yaaru kitta irunthum pudingi thingala.enga nelatha payir ittavunga yaarume inaikkiazhinju pogala,ellarume nalla uzhaichu inaikku nalla irukkanga.

    oru velai thee.kaa kootathula poi ukkanthu iruntha naasama poiruppanga.

    • \\indha karuthu vaangikko.Ramayanathula ppadi enna thappu irukku,//

      சுப்பிரமணி,முதல்ல தமிழ்ல எழுத கத்துக்கய்யா.தமிழ ஆங்கில எழுத்துக்கள்ல படிக்கிறது ரொம்ப சிரமம்.”சூத்ராளே” அழகா தமிழ்ல எழுதறப்போ நோபல் பரிசையே அனாயசமாக தட்டி செல்லும் ”அறிவார்ந்த” கூட்டத்தில் பிறந்த உமக்கு தமிழ்ல எழுத முடியாதா.

      ராமன் சம்பூகனை கொன்றது தப்பில்லையா.வாலியை மறைந்திருந்து கொன்றது தப்பில்லையா. சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது தப்பில்லையா.கட்டிய மனைவியையும் பெற்ற பிள்ளைகளையும் காட்டுக்கு அனுப்பி பரிதவிக்க விட்ட ராமன் யோக்கியனா

      \\rajiv gandhi enna senjaaru?//

      உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இருக்காதாவே.அமைதிப்படை என்ற பேர்ல போய் தமிழ் பொண்ணுங்கள கற்பழிச்ச அயோக்கிய பசங்களுக்கு ”அவங்களும் மனுசங்கதானே” என்று வக்காலத்து வாங்கிய அயோக்கியனுக்கு பரிஞ்சு பேசுதீரே உம்மை என்ன பேர் சொல்லி அழைப்பது

      மு,கவையும் வீரமணியும் பண்டிங்கிரீரே பண்டியா பிறப்பெடுத்த பெருமாள கும்புடுதீரே.என்னதா கருத்து வேறுபாடு இருந்தாலும் சக மனிதர்களை இப்படி கேவலப்படுத்துவதே நீர் எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டினு காட்டுதய்யா.

      \\Rajiv Gandhiya konnadhu thappu thaan,politicala enna nadanthi iru nthaalum indiya pradhamara konnutu pozhaikkura alavukku yaarukkum inga kottayum kedyatahu,nenjuka manja sorum kedyatahu.//

      ராசீவ போட்டு தள்ளிய பின்னாலும் பதினெட்டு ஆண்டுகள் ஈழத்தின் முடி சூடா மன்னனாக இருந்தார் பிரபாகரன்.ஒரு ———- இந்தியாவால புடுங்க முடியல.புலிகள் அழிந்தது அவர்களது அரசியல் தோல்வியால்தான்.2009 க்கு பல்லாண்டுகளுக்கு முன்பே அரசியல் ரீதியாக அடைந்த தோல்விதான் ராணுவ தோல்வியாக பரிணமித்தது.

  21. @Subbamani

    I dont know how to write in tamizh font.I see only two options here,aangilam and tamizh oli peyarppu.the tamizh oli peyarppu is not good as it gets the incorrect tamizh letters for translation.

    Naan Mu.Ka vayum veermaniyayum entha peru solliyum thittala.Enna porutha varaikkum avunga indha naatai surandura peruchaalinga.Eazhathula nadantha issuevukku mukkiya kaaranam ivangolda arasiyal saarntha thappana kannottam thaan.

    Idhu namma thiraithurai maadhiri thaan.karnatakavula namma aalu ithana peru irunthum,edhavadhu prachanainna thiruppi thruppi sooodakki innum neraya pera adi vaanga vekkira pazhakkam,adhe dhaan eazhathulayum nadandathu.

    Rajiv Gandhi yoda death caused a huge problem for LTTE as they lost Indian support.Whatever u say without R&AW support,nothing happens in the Indian Ocean.The reason why India didn’t want to fight with the LTTE was because they didn’t trust the sinhalese govt which was close to USA & Pakistan at that moment and they wanted to keep the LTTE.

    But LTTE is not so saintly as many think,You can read so many articles and interviews.There were a lot of inter dealings politically like how Prabhakaran made Ranil Wickremasinghe lose who was a more sympathetic to his cause than Rajapakshe.

    Similarly,there was a big political fall out after Indira Gandhi’s death and MGR’s illness in 1985.

    Thats when Prabhakaran got politically misled by DK,DMK and all the surandum peruchaalis who misled him and made him take on Rajiv Gandhi.

    Boss Tamizh Eazham fight was heppening due to help from so many people,most of the European Union,Narcotics Trade and also money and support from India and R&AW.

    It did not happen on its own and regarding the IPKF atrocities,prabhakaran is no fool to kill the Indian PM just in order to take revenge against these things,

    The fact of the matter if u r inviting an army into action,they are going to commit atrocities.And secondly the LTTE openly went into conflict and pretty much slaughtered the IA,so basically the LTTE is not so innocent.They could have easily taken the IA into their support and keep on fighting but Prabhakaran did not want that.

    There are too many political and economic compulsions that warrant any political action,it is not because of anyone’s emotions.

    IMO,if MGR would have been alive we would not have seen what happened in 2009 today and it is the space that was vacant after the great man’s death caused this ultimate mayhem.

    Rajiv Gandhi periya uthaman ellam kedyatahu,aana antha pokkiriyaala namakku nallathu nadantha avana kolradhu muttal thanam.soddhanama yoseenga sir,ippadi eduhtom udaichomnu edhuvum seyya mudiyathu.

    Rajiv’s death alienated India and especially TN from the Eazham issue.

    Unlike what you think most people in TN are not that concerned by the Eazham issue,if that was the case Congress would not have sweeped the elections in 1991 and not only that if Prabhkaran is allowed to have shootout with UmaMaheshwaran right in the middle of T.Nagar.You think putting our women and children’s lives for a stray bullet from these guys is worth the effort.

    This is my problem with the whole issue,Everyone playing for political gains and not worried about common people.

    @Ramayanam

    Oru mukkiyamana unmai irukku,naanum Rajaji exhuthiya Ramayanatha padichu irukken.Ramyanathula endha edathulayume Raman Hero,Ravaanan villain appadinnu ezhuthala.

    Raman,Raavanan rendu perume avunga desathu makkalukku nalla arasanave irunthirukkanga.Raman neraya flawsa senji irukkaru,aana appadiye ellam seyyalanna avaru seyya vendiyataha seyya mudiyathu.Neja vaazhakailayum ippovum manasatchikku vidrodama pala vioshayangal seyya vendiyatha irukku,raavanukku nadanthathum adhe dhaan.

    neenga rajaji ramayanatha padicheenganna adhula romba theliva raman thappu pannugira edathula ellam clear critcismum irukku and adhukku pirkalathula raman badhil solla vendirukkumnum irukku.

    Aana Ramyanathula irukkura mukkiya vishayame,aduthavan pindattikku aasai pada koodathungrathu thaan,andha messageukku kaaga thaan raman herovagavum raavanan villanagavum aayitaanga.

    Soorpanakai mooka vettunathula onnum thappu kedyatahu,appadi ramar soorpanakaiya rapeo murdero panni irunthathaan adhu thappu.

    Raman parama yogiyyan illa thaan,aana nethu vandha arasiyal vaadhi ellam unmaiyya maraichu naan yogiyannu thambattam adikkum pothu,thannudaya thappugalayum thavarugalayum ulagame ariyum vannam nadakira oru aalu unmayavan thaan even if not a yogiyan.

    Rendu,adhu naala thaan hindu religionla ungala yaarum ramana kumbudnnu sollave illa.unakku pudicha saamiya kumbidu,illa kumbudama po.

    Murugan kooda thaan 2 pondatti vechirukkaru,adhu namma kalaachara padi thappu thane,appuram yen naama innum avura kumbudarom.

    MGR pala affair vechiruntharu,romba ilam heroinegaldo gujaala nadichirukkaru aan aadhukkaga avaru ezhai makkalukka senja nalladhu,sathunavu thittatha thirampada seyal pannunadhu ellam nalla vishayam kedayatha.

    Yen namale iyalpaana vaazhakila munnukku pinnaga nadakka vendiya kaatayam irukku,adhu namma kadavulukkumm iruntha enna thappu,

    thanni mela nadantha yesuvavida,kanukke theiryatha allava vida,soothanama nadanthukitta raman yevalavo mel.

  22. வன்கொடுமை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோர் எல்லோருமே, சுய மரியாதை இயக்கத்தின் தூண்களாக இருந்த சாதியினரே! பிராமணர்களல்ல! இது தலித்துக்களுக்கு நன்றாகத் தெரியும்! அவர்களை உங்களால ஏமாற்ற முடியாது! , சில முன்னேறிய சாதித்தலைவர்கள்,(மோசடியாக பிற்பட்டோர் பட்டியலில் உள்ளவர்கள்) தனது சுய நல அரசியல் விபச்சாரத்துக்குப் பயன்படுத்திய ஆயுதமே பார்ப்பன எதிர்ப்பு!இப்போதும் அவர்களது சொந்த ஆடிட்டர், வக்கீல்கள் பாரபனர்கள்தான் !அந்த மழுங்கிப்போன சாதி ஒழிப்பு ஆயுதத்தை இப்போது அவர்களே கைவிட்டுவிட்டது 100 % உண்மை! இன்னும் உறக்கத்திலிருந்து எழும்ப விரும்பாத சோம்பேறிகள் பார்பன ஆத்திகம் என பொருந்தாத விவாதங்களைதுவக்கி, குளிர் காய நினைக்கின்றனர்! அந்தோ பாவம்,. இவர்களை நம்ப தலித்துக்கள் தயாரில்லை!ஏனெனில் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோர் எல்லோருமே, சுய மரியாதை இயக்கத்தின் தூண்களாக இருந்த சாதியினரே! பிராமணர்களல்ல! இது தலித்துக்களுக்கு நன்றாகத் தெரியும்! அவர்களை உங்களால ஏமாற்ற முடியாது! ,

  23. கில்மா தமிழனின் கருத்து 100 % கரெக்ட் ! பிரபாகரனுக்கு ஒரு நீதி , உள்ளூர் பாப்பானுக்கு ஒரு நீதியா ? சிங்களம் தன் இனம் காக்க இடஒதுக்கீடு கொண்டுவந்ததை எதிர்த்துத்தான் தமிழ் இளைஞர்கள் ஈழப் போராட்டத்தைத் துவக்கினர் !இட ஒதுக்கீட்டை எதிர்த்த சிங்கள ஏகாதிபத்தியத்தின் எதிரி பிரபாகரன் உங்க பார்வையில் நல்லவன்! ஆனால் அதே ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டு,(திராவிட இயக்க ரவுடிகளின் தொல்லை தாங்காமல்??), அரசு வேலை ,கல்வியே வேண்டாமென அயல்தேசத்துக்கு ஓடிப்போன சாது பார்ப்பான் கெட்டவன்! நல்லா இருக்கு ஒங்க நீதி!

  24. இட ஒதுக்கீட்டுக் கொள்கையால், அறிவயல் ஆராய்ச்சிக்கு இந்திய அரசு ஊக்கம் கொடுக்காததால், வெளிநாட்டுக்கு விரடப்படவர்கள் சந்திரசேகரனும், வேங்கியும்!இந்த முறைகேடான இட ஒதுக்கீடு இன்னும் எத்தனை திறமைசாலிகளை அழிக்கப்போகிறதோ தெரியவில்லை!இதே இட ஒதுக்கீடு சிங்களர்க்கு கொடுக்கப்பட்டபோது அதனை எதிர்த்து ஈழ இளைஞர்கள் ஆயுதமேந்தினர்!ஆனால் நம்ம ஊர் பிராமணனோ தம்மை மதிக்கும் நாடுகளுக்குக் சென்றனர்!திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவது தமிழர் பண்பாட்டு அடையாளம்தானே? இனியும் சாதி அடிப்படையில் கேவலமாக எழுதாதீர்கள்!உண்மையில் பிற பிற்பட்ட சாதி உறவினர்கள் இல்லாத பிராமணர்கள் தமிழகத்திலில்லை! சங்கராச்சாரியார் உட்பட!இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு பிராமணக் குடும்பத்திலும் கலப்பு மணம் உள்ளது!மற்ற சதிகளில் இதே நிலைமையில் வன்முறை வெடித்திருக்கும், சாதி மோதல்கள் வலுத்திருக்கும்! பெண்கள் கலப்பு மணத்தால் வந்த வினை என்ன தெரியுமா ?!பல பிராமண இளைஞர்கள் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் அவதியுறுவதை matrimony வலை தளங்களில் அறியலாம்!ஜெயேந்திரரே மனம் மாறி, தலித் பூசாரிகளிடம் கைநீட்டி பிரசாதம் பெற்றது உலகறிந்தது ! இது தேவர்,நாடார், கவுண்டர், முதலியார் அதிகமிருக்கும் கிராமங்களில் நடக்குமா? நடக்கவிடுவார்கள? மற்றபடி உங்க பிடிவாதத்துக்கு மர்ந்தேது. தூங்குவதைப்போல் நடிப்பவனை யார் எழுப்ப முடியும்?

    • \\இட ஒதுக்கீட்டுக் கொள்கையால், அறிவயல் ஆராய்ச்சிக்கு இந்திய அரசு ஊக்கம் கொடுக்காததால், வெளிநாட்டுக்கு விரடப்படவர்கள் சந்திரசேகரனும், வேங்கியும்!//

      படிச்சு முடிச்ச கையோட வெளிநாட்டுக்கு ஓடிப்போகும் துரோகி,பல லட்சம் செலவு பண்ணி தங்களை படிக்க வைக்கும் மக்களுக்கு நன்றிகெட்டு துரோகம் செய்பவனெல்லாம் தியாகி வேடம் போடுறான்.என்ன ஒரு எத்துவாளி கூட்டம்..அது சரி பெத்த தாய் தகப்பனையே முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு சொகுசு வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தும் கூட்டம்தானே.முதியோர் இல்லங்கள் நடப்பதே உங்களை நம்பித்தானே.

      \\ஆனால் நம்ம ஊர் பிராமணனோ தம்மை மதிக்கும் நாடுகளுக்குக் சென்றனர்!திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவது தமிழர் பண்பாட்டு அடையாளம்தானே? //

      எப்புடி மதிக்கிறான்.அண்ணா மேம்பாலத்துக்கு கீழே பிளாட்பாரத்துல வரிசையா காக்க போடுறான்.டீக்கடை வாசலில் பொறைக்கு காத்திருக்கும் நாயை போல காத்துக் கிடக்க வைக்கிறான்.உள்ளே நுழையும்போதே கோவனத்தக்கூட கூட விடாம சோதனை போடுறான்.

      \\பல பிராமண இளைஞர்கள் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் அவதியுறுவதை matrimony வலை தளங்களில் அறியலாம்!//

      அப்புடி போடு அருவாள.கலப்பு மணங்களை பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று முந்தய பின்னூட்டங்களில் அடித்த பெருமை சாயம் போயிருச்சு.பெண் கிடைக்கவில்லை என்றால் பெண்கள் கலப்பு மணம் செய்து கொள்வது போல் ஆண்கள் செய்வதில்லை.அப்படித்தானே, இதுலயும் கணக்கு போட்டு காரியமா..வரதட்சனை கொடுமையை எப்புடி சமாளிக்கிறது என்பதற்கான ஒரு வழியா.

    • //இட ஒதுக்கீட்டுக் கொள்கையால், அறிவயல் ஆராய்ச்சிக்கு இந்திய அரசு ஊக்கம் கொடுக்காததால், வெளிநாட்டுக்கு விரடப்படவர்கள் சந்திரசேகரனும், வேங்கியும்!இந்த முறைகேடான இட ஒதுக்கீடு இன்னும் எத்தனை திறமைசாலிகளை அழிக்கப்போகிறதோ தெரியவில்லை!//

      தோழரே! சுப்பிரமணி சந்திரசேகரன் வெளிநாட்டுக்கு விரட்டபட்டவர் அல்ல சகல மரியாதைகளுடன் ஜூலை 1930ஆம் ஆண்டு அரசாங்கம் அவருக்கு ஸ்காலர் ஸிப் குடுத்து இங்கிலாந்து அனுபியது. சென்றவர் சென்றவர் தான் பிறகு இந்தியா பக்கம் எட்டி பார்கவே இல்லை ஏன்? அதே போல் உங்கள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் இந்தியாவை விட்டு சென்றதுக்கு இட ஒதிக்கிடு காரணம் அல்ல மகாராசா சாயாஜி ராவ் பல்கலைகழகத்தில் அவர் தந்தை தென் இந்தியர் என்பதால் அவருக்கு இலைக்க பட்ட அந்நீயதியால் வெறுப்புற்று வெளிநாடு சென்றார்கள், இது அவரே சொன்ன உன்மை. அப்படி இருக்கும் பொழுது எதற்கு இட ஒதிக்கீட்டில் உங்களுக்கு இருக்கும் வெறுப்பை இது போல் ஆதாரம் அற்ற எழுத்துகலை முன் வைக்கின்றிர்கல்.

      //இதே இட ஒதுக்கீடு சிங்களர்க்கு கொடுக்கப்பட்டபோது அதனை எதிர்த்து ஈழ இளைஞர்கள் ஆயுதமேந்தினர்!//

      இதுவும் பொய் இலங்கையில் அனத்து உறிமைகலும் சிங்களவருக்கே என்று சிங்கள அரசு அறிவித்தபின் தமிழர்களுக்கு அவர்கள் இளைத்த ஒடுக்குமுறைக் காரணமாக தான் ஈழ உறவுகல் ஆயுதமேந்தினர்

      //திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவது தமிழர் பண்பாட்டு அடையாளம்தானே?//

      இது தமிழனுக்கு மட்டும் தான். இதில் உங்கள் பார்பனியத்தையும் போலி திராவிடர்களான கருணாநிதி, வீரமணி போன்றோரும் இல்லை. தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழர்கள் முதுகில் குத்தும் திராவிடர்களும் வேண்டாம் தமிழ் நீச மொழி என்று சொல்லி அனுதினமும் தமிழில் பேசியும் வாழ்ந்து வரும் பார்ப்பனர்களும் இல்லை

      //இனியும் சாதி அடிப்படையில் கேவலமாக எழுதாதீர்கள்!//

      தோழரே! நான் ஆயிரம் முறை சொல்லியும் எழுதியும் இருக்கிறேன், சாதி என்னும் பீதியை சமுதாயத்தில் ஊடுறுவ செய்தது முதலில் யார் என்ற கேள்விக்கு இது வரை யாரும் பதில் கூறாமல் இருப்பது ஏன்?

    • திரை கடலோடி திரவியம் தேடுவது தமிழர் பண்பாடு.பார்ப்பனர் பண்பாடு அல்ல.

      அந்த சமயத்தில் பார்ப்பனர்கள் கடல் தாண்ட கூடாது என்று மூட நம்பிக்கையில் மூழ்கி கிடந்தனர். இங்கேயே நல்ல வருமானம் பூதானமாக கோதானாமாக எதற்கெடுத்தாலும் தோஷம் கழித்து பரிகாரம் என்று தானம் பெற்று புரோகிதம் அர்ச்சனை திவசம் காரியம் கிரகப் பிரவேசம் நல்லநாள் குறித்து தருவது மணநாள் குறிப்பது சாந்தி முகூர்த்த நேரம் குறிப்பது திருமணம் நடத்தி வைப்பது என கொட்டியதால் பார்ப்பனர் கடல் தாண்டி செல்லாமாலே உடல் உழைப்பு ஏதுமின்றி சொத்துக்களை சேர்த்துக் கொண்டு பெரும் பெரும் வீடுகளை கட்டி அக்ரகாரம் அமைத்து வாழ்ந்து வந்தனர்.

  25. செந்தமிழன் சாரு அரைகுறை அறிவு+தகவல்களுடன் எழுதுவது வழக்கம்தான்!க்ட்ட்ப்://என்.நிகிபெடிஅ.ஒர்க்/நிகி/Pஒலிச்ய்_ஒf_ச்டன்டர்டிழடிஒன் படித்துப் பாருங்கள். பெரும்பாலான ஈழ இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கக் காரணமே இந்த இட ஒதுக்கீடு சனியனால் பாதிக்கபட்டதால்தான் .(விக்கிபீடியா . ஸ்ரி ளன்க. ஈன் 1971 ட்கெ ஸ்டன்டர்டிழடிஒன் பொலிச்ய் ஒf ஸ்ரி ளன்கன் உனிவெர்சிடிஎச் நச் இன்ட்ரொடுசெட் அச் அன் அffஇர்மடிவெ அச்டிஒன் ப்ரொக்ரம் fஒர் ச்டுடென்ட்ச் fரொம் அரெஅச் ந்கிஷ் கட் போர் எடுசடிஒனல் fஅசிலிடிஎச் டுஎ டொ 200 யெஅர்ச் புர்பொசெfஉல் டிச்ச்ரிமினடிஒன் ப்ய் Bரிடிஷ் சொலொனிஅலிச்ட்ச். Tகெ Bரிடிஷ் கட் ப்ரச்டிசெட் சொம்முனல் fஅவொரிடிச்ம் டொநர்ட்ச் Cக்ரிச்டிஅன்ச் அன்ட் ட்கெ மினொரிட்ய் Tஅமில் சொம்முனிட்ய் fஒர் ட்கெ என்டிரெ 200 யெஅர்ச் ட்கெய் கட் சொன்ட்ரொல்லெட் ஸ்ரி ளன்க, அச் பர்ட் ஒf அ பொலிச்ய் ஒf டிவிடெ அன்ட் சொன்ஃஉஎர்.).அதுபோல நமது நோபல் பரிசாளர்களுக்கு இங்கு போதுமான வசதிகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை!சாதியை காட்டி விரட்டப்பட்ட பல அந்தண அறிவாளிகளை அடையாளம் காட்ட முடியும்!அதே Mஸ் பல்கலைக் கழகத்தில் எனக்குத் தெரிந்து பல தமிழர்கள் நல்ல நிலைமையில் வேலை செய்வதும், படிப்பதும் இன்றுவரை நிகழ்வதேன்? நான் எழுதியதுபோல் வன்கொடுமை வழக்குகளில் எத்தனை பார்பனர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்?அந்தப் பட்டியலில் அவர்களைச் சேர்க்க எந்த தலித்தும் புகார் கொடுக்கவில்லையே என்? இன்னும் சொல்லபோனால் சாதீயம் , நிறவெறி உலகின் பல நாடுகளில் இன்னுமுள்ளது!அடிமை முறை, ஏலம் ஆகியவற்றை இஸ்லாம், கிறித்தவர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளில் நடைமுறைப்படுத்தியதுபோல் இங்கில்லையே ஏன்?தீண்டாமையால் ஆதாயமடைந்தது ,அடைந்துகொண்டிருப்பது நிலப்பிரபுக்களும், வணிகர்களுமே! அந்தணர்களல்ல!சாதிப் பிரிவினைக்கும், அந்தணருக்கும் தொடர்பில்லை! வருணாசிரமம் வேறு சாதி வேறு என்பது இன்னும் உங்களுக்கு விளங்கவில்லை! வரலாற்றுப் பிழைகளை ஆராய்வதைவிட இப்போதிருக்கும் தீண்டாமைக் குற்றங்களை புரிவது எந்த இனம் என இனம் கண்டு தண்டிப்பதுதானே முறை?சாதிப் பிரிவினை முக்கியமென்றால் அந்தணர்கள், வெட்டியானான சிவனையும், தலித்துகளான திருப்பானாழ்வாராயும் , நந்தனாரையும், சாதியே அறியாத அனாதையான ஆண்டாளையும் வணங்குவரா? அல்லது பிராமணரான ராவணனை அரக்கனாகவும், அவனைக் கொன்ற க்ஷத்திரிய ராமனைக் கொண்டாடுவார்களா? யாதவக் கோனாராகப் பிறந்த கண்ணனை வணங்குவரா?அல்லது க்ஷத்திர்யனாகப் பிறந்து உயர்ந்த விசுவாமித்திரரை மதிப்பானா? கலப்புமண பிரபலங்கள் ருக்மணி அருண்டேல்,, பெப்சி இந்திரா நூயி, டாக்டர் கமலா செல்வராஜ், ஸ்ரீநிதி சிதம்பரம் போன்ற பற்பலரை வெறுத்தொதுக்கி விட்டார்களா? இன்றைய காலக் கட்டத்தில் தலித்துக்களை தீண்டாமை மூலம் வாழவொட்டாமல் தடுக்கும் அரக்க குலத்தினரைக் கண்டித்துவிட்டு, பின்னர் உதவாத பழங்கதை வரலாறு பேசுங்கள். பிராமணர்களைத் தூற்றுவதன் மூலம் விடுதலை நடக்காது!(Please refer WIKI PEDIA ..Sri Lanka. In 1971 the Standardization policy of Sri Lankan universities was introduced as an affirmative action program for students from areas which had poor educational facilities due to 200 years purposeful discrimination by British colonialists. The British had practised communal favoritism towards Christians and the minority Tamil community for the entire 200 years they had controlled Sri Lanka, as part of a policy of divide and conquer.)

    • பூனுல் ஐயா நான் அறைகுறை விசயத்துடன் எழுதுகிறேன் என்று சொல்லும் நீங்கள் அது எது எது என்று குறிப்பிட வேண்டியது தானே? இனையதளத்தில் இருந்து அறைகுறை விசயங்களை எடுத்து கருத்து எழுதியிட்டு உங்கள் கருத்துக்கு எதிர்வினை எழுதிவிட்டால் உடனே எழுதியவன் அரவேக்காடு.

      முதல இட ஒதுக்கிட்டால் தான் உங்கள் அந்தண அறிவுஜிவிகள் நாட்டில் இருந்து விரட்டபட்டார்கள் என்று சொல்லியபின் அதற்கு நான் எழுதிய வாசகத்துக்கு எதிர்விடை எழுத தெறியாமல் “அதுபோல நமது நோபல் பரிசாளர்களுக்கு இங்கு போதுமான வசதிகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை” ஒரு வியாக்கியானத்தை எழுதிறிங்க.

      //அதே Mஸ் பல்கலைக் கழகத்தில் எனக்குத் தெரிந்து பல தமிழர்கள் நல்ல நிலைமையில் வேலை செய்வதும், படிப்பதும் இன்றுவரை நிகழ்வதேன்? //

      நான் உங்கள் வெங்கி குடும்பத்தார் நாடுவிட்டு சென்றதற்கு அவர் சொன்ன காரணத்தை சொன்னேன். நான் அங்கு தமிழர்களுக்கு நல்ல நிலைப்பாடு இல்லை என்று சொல்லவில்லையே. திரி திரிப்பதில் உங்களை மிஞ்ச உலகத்தில் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்கிறீர்.

      // நான் எழுதியதுபோல் வன்கொடுமை வழக்குகளில் எத்தனை பார்பனர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்?அந்தப் பட்டியலில் அவர்களைச் சேர்க்க எந்த தலித்தும் புகார் கொடுக்கவில்லையே ஏன்?//

      எங்க நான் திரும்பவும் அதான் கேட்பது முதல்ல இந்த சாதி பேதத்தை தோற்றுவித்தது யாருனு கேட்டா அதுக்கு பதிலகாணும். இந்த நாசமா போன சாதி வெறிய மக்களிடத்தில் ஊடுறுவ செய்து, இப்ப என்னமோ தலித்துக்கள் எங்கள் மீது புகார் செய்வதில்லை ஆகையால் நாங்கள் ஒழுங்கு சீலர்களுனு சொல்லாதிர்கள்.

      //வருணாசிரமம் வேறு சாதி வேறு என்பது இன்னும் உங்களுக்கு விளங்கவில்லை!//

      அது எப்படி வேறாக முடியும். வருணாசாரம் என்னும் பொய் பகட்டை கொண்டு வந்த விளைவுதான் சாதி தோற்றம். இட் ஸ் ய எக்ஸ்டென்டட் பீப்புல் கிலாசிபிகேஸன்.

      // வரலாற்றுப் பிழைகளை ஆராய்வதைவிட இப்போதிருக்கும் தீண்டாமைக் குற்றங்களை புரிவது எந்த இனம் என இனம் கண்டு தண்டிப்பதுதானே முறை?//

      சரி வரலாற்றுப் பிழைனு சொல்லி ராசிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்ட பெற்ற அந்த மூவரையும் விடுதலை செய்தால் ஒத்துக் கொள்வீர்களா? நாங்க என்னமோ வன்கொடுமை செய்த வெறிநாய்களை தண்டிக்க வேண்டாம் என்று சொன்னார் போல் சித்தரிப்பது ஏன்?

  26. செந்தமிழன் சாரு அரைகுறை அறிவு+தகவல்களுடன் எழுதுவது வழக்கம்தான்!அதுபோல நமது நோபல் பரிசாளர்களுக்கு இங்கு போதுமான வசதிகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை!சாதியை காட்டி விரட்டப்பட்ட பல அந்தண அறிவாளிகளை அடையாளம் காட்ட முடியும்!அதே MS பல்கலைக் கழகத்தில் எனக்குத் தெரிந்து பல தமிழர்கள் நல்ல நிலைமையில் வேலை செய்வதும், படிப்பதும் இன்றுவரை நிகழ்வதேன்? நான் எழுதியதுபோல் வன்கொடுமை வழக்குகளில் எத்தனை பார்பனர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்?அந்தப் பட்டியலில் அவர்களைச் சேர்க்க எந்த தலித்தும் புகார் கொடுக்கவில்லையே என்? இன்னும் சொல்லபோனால் சாதீயம் , நிறவெறி உலகின் பல நாடுகளில் இன்னுமுள்ளது!அடிமை முறை, ஏலம் ஆகியவற்றை இஸ்லாம், கிறித்தவர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளில் நடைமுறைப்படுத்தியதுபோல் இங்கில்லையே ஏன்?தீண்டாமையால் ஆதாயமடைந்தது ,அடைந்துகொண்டிருப்பது நிலப்பிரபுக்களும், வணிகர்களுமே! அந்தணர்களல்ல!சாதிப் பிரிவினைக்கும், அந்தணருக்கும் தொடர்பில்லை! வருணாசிரமம் வேறு சாதி வேறு என்பது இன்னும் உங்களுக்கு விளங்கவில்லை! வரலாற்றுப் பிழைகளை ஆராய்வதைவிட இப்போதிருக்கும் தீண்டாமைக் குற்றங்களை புரிவது எந்த இனம் என இனம் கண்டு தண்டிப்பதுதானே முறை?சாதிப் பிரிவினை முக்கியமென்றால் அந்தணர்கள், வெட்டியானான சிவனையும், தலித்துகளான திருப்பானாழ்வாராயும் , நந்தனாரையும், சாதியே அறியாத அனாதையான ஆண்டாளையும் வணங்குவரா? அல்லது பிராமணரான ராவணனை அரக்கனாகவும், அவனைக் கொன்ற க்ஷத்திரிய ராமனைக் கொண்டாடுவார்களா? யாதவக் கோனாராகப் பிறந்த கண்ணனை வணங்குவரா?அல்லது க்ஷத்திர்யனாகப் பிறந்து உயர்ந்த விசுவாமித்திரரை மதிப்பானா? கலப்புமண பிரபலங்கள் ருக்மணி அருண்டேல்,, பெப்சி இந்திரா நூயி, டாக்டர் கமலா செல்வராஜ், ஸ்ரீநிதி சிதம்பரம் போன்ற பற்பலரை வெறுத்தொதுக்கி விட்டார்களா? இன்றைய காலக் கட்டத்தில் தலித்துக்களை தீண்டாமை மூலம் வாழவொட்டாமல் தடுக்கும் அரக்க குலத்தினரைக் கண்டித்துவிட்டு, பின்னர் உதவாத பழங்கதை வரலாறு பேசுங்கள். பிராமணர்களைத் தூற்றுவதன் மூலம் விடுதலை நடக்காது!(Please refer WIKI PEDIA ..Sri Lanka. In 1971 the Standardization policy of Sri Lankan universities was introduced as an affirmative action program for students from areas which had poor educational facilities due to 200 years purposeful discrimination by British colonialists. The British had practised communal favoritism towards Christians and the minority Tamil community for the entire 200 years they had controlled Sri Lanka, as part of a policy of divide and conquer.)

  27. பெரும்பாலான ஈழ இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கக் காரணமே இந்த இட ஒதுக்கீடு சனியனால் பாதிக்கபட்டதால்தான் .(விக்கிபீடியா Sri Lanka. In 1971 the Standardization policy of Sri Lankan universities was introduced as an affirmative action program for students from areas which had poor educational facilities due to 200 years purposeful discrimination by British colonialists. The British had practised communal favoritism towards Christians and the minority Tamil community for the entire 200 years they had controlled Sri Lanka, as part of a policy of divide and conquer.)http://en.wikipedia.org/wiki/Affirmative_action.. இனியும் சாதி அடிப்படையில் கேவலமாக எழுதாதீர்கள்!உண்மையில் பிற பிற்பட்ட சாதி உறவினர்கள் இல்லாத பிராமணர்கள் தமிழகத்திலில்லை! சங்கராச்சாரியார் உட்பட!இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு பிராமணக் குடும்பத்திலும் கலப்பு மணம் உள்ளது!இப்போது வரதட்சணை கிட்டத்தட்ட மறக்கப்பட்ட ஒன்று! பிராமணர்கள் வீடுகளில் அது ஒரு விவாதப்பொருள்கூட கிடையாது!பெண்களே கிடைக்காமலிருக்கும்போது டவுரியைப் பற்றி பேசமுடியுமா? தன ஒரே மகன் அயல்நாட்டில் சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்படும் முதியோர், முதியோர் இல்லத்துக்கு தயாராகத்தானிருக்கின்றனர்!அது அவர்களது சொந்த விருப்பம்!பெற்றோரைக் காக்க வேண்டிய கடமை (பெண்களைவிட)மரபுப்படி ஆண்களுக்கு இருப்பதால் அவர்கள் காதல் மணம் புரிய சற்று தயங்குகிறார்கள் . அதானால்தான் பெண் கிடைப்பது கடினமாயுள்ளது!கஸ்மால திருட்டு திராவிட ஆட்சியாளர்களிடம் LDC UDC கிளார்க் வேலை பார்ப்பதைவிட அமெரிக்கன் எம்பாசியில் கால்கடுக்க நின்று விசா வங்கி வேலை பார்ப்பது அசிங்கமல்ல !

    • \\!கஸ்மால திருட்டு திராவிட ஆட்சியாளர்களிடம் LDC UDC கிளார்க் வேலை பார்ப்பதைவிட அமெரிக்கன் எம்பாசியில் கால்கடுக்க நின்று விசா வங்கி வேலை பார்ப்பது அசிங்கமல்ல !//

      அப்படியானால் இன்று அரசுவேலையில் இருக்கும் பார்ப்பனர்கள் அசிங்கம் பிடித்தவர்களா. அசிங்கம் புடித்த அரசு காசில் பட்டம் படிப்பு படிக்க மட்டும் இனிக்குதோ.அது சரி மதிய சாப்பாட்டுக்கு பின் மன்னர் தாம்பூலம தரித்தது தோஷம் என்று புருடா விட்டு பரிகாரமாக கோதானம் பெற்று வயிறு வளர்த்த கூட்டத்துக்கு இதெல்லாம் ஜுஜுபி.

  28. \\ சாதீயம் , நிறவெறி உலகின் பல நாடுகளில் இன்னுமுள்ளது!அடிமை முறை, ஏலம் ஆகியவற்றை இஸ்லாம், கிறித்தவர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளில் நடைமுறைப்படுத்தியதுபோல் இங்கில்லையே ஏன்?தீண்டாமையால் ஆதாயமடைந்தது ,அடைந்துகொண்டிருப்பது நிலப்பிரபுக்களும், வணிகர்களுமே! அந்தணர்களல்ல!சாதிப் பிரிவினைக்கும், அந்தணருக்கும் தொடர்பில்லை! வருணாசிரமம் வேறு சாதி வேறு என்பது இன்னும் உங்களுக்கு விளங்கவில்லை! //

    வெளிநாடுகளில் இருந்த மனித குலத்துக்கே எதிரான அடிமை முறையை விட கொடுமையானது சாதிய தீமை. மாடு போல் வேலை செய்து அடிமையாக இருக்கும் மனிதனுக்கு சோறு போட்டு தங்குமிடம் தரும் பொறுப்பு ஆண்டைக்கு இருந்துள்ளது. ஆனால் அடிமை சாதிகளின் எந்த ஒரு நலனுக்கும் பொறுப்பேற்காமல் அவர்களிமிடமிருந்து உழைப்பை மட்டும் கறந்து வந்திருக்கிறது இந்திய சாதிய அமைப்பு.

    சாதிப்பிரிவினைக்கும் ”அந்தணருக்கும்” தொடர்பில்லை எனபது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்.உங்கள் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறாரே.நானே படைத்தேன் நான்கு வர்ணங்களையும் என்று.மனித இனத்தை நான்கு கூறுகளாக பிரித்து ஒவ்வொரு கூறிலும் எண்ணிறந்த சாதிகளை உருவாக்கி விட்டு வருணாசிரமம் வேறு சாதி வேறு என கூறுவது கடைந்தெடுத்த பொய். தொழில் பிரிவினைதான் சாதியாக மாறியது என்று சப்பை கட்டு இனியும் செல்லாது.இன்னின்ன வர்ணத்தாருக்கு இன்னின்ன தொழில் என்று வரையறை செய்ததே வர்ணாசிரமம்தனே.

  29. \\தன ஒரே மகன் அயல்நாட்டில் சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்படும் முதியோர், முதியோர் இல்லத்துக்கு தயாராகத்தானிருக்கின்றனர்!//

    அதான் dependent விசா தர்ரானே அமெரிக்காகாரன்.காரும் பங்களாவுமா நல்ல இருக்கும் போது பெற்றோரையும் அழைத்துக் கொள்வதற்கு என்ன கேடு.உடனே உனக்கு ஏன் இந்த கவலை என குதர்க்கம் பேச வேண்டாம்.அந்த கவலை எங்களுக்கும் தேவையில்லை.முதியோர் இல்லங்களை குறிப்பிட்டதன் காரணமே அந்த ஓடுகாலிகள் சொந்த பெற்றோருக்கே நன்றி கெட்டவர்களாக இருக்கும் நிலையில் தாய்நாட்டுக்கு நன்றியோடு இருப்பார்களா என்பதை சுட்டவே.

  30. random direction of discussion,when we need a dignity of labour discussion we are talking about irrelevant things.

    One of the biggest fallacies is brahmins exist as a group,which is wrong.Brahmins are amongst the most independent minded communities and there is no unity.

    so,every brahmin acts on his own interests and like everyone else.

  31. Andhanar OBC kitta poi jaadhiya pirichaanganna avunga,yen kettanga.Avungalukku suya puthi illadhadhunaala thane sol puthi thevai pattatdhu.

    there is something called type problem,one type of persoanlity dont get along with aniother type.it is like the relationship today between kerala and tamizh nadu.

    kerala conservative state,aana anga national katchigal thaan aatchi seyyaranga and adhunaala pala vishayangalil avargalukku congress/cpm o udhavi seygirathgu,anga malayalee thavira marravar edhuvume seyya mudiyathu.

    TN,libersl state,vandharai vaazha vaiukkum desam,ingu pala orrgalil irundhum,mozhigalai pesum manidhargal,parpala kalacharathai kondavargalum ullanar,appudi irunthum dravida kazhagangale aatchis eyginrana.Anaithu vishayangalilum |Central govto indiavo Tn govtukku udhavis eyvadhu illai.

    Idhu oru periya paradozaga ulladhu.

  32. \\!கஸ்மால திருட்டு திராவிட ஆட்சியாளர்களிடம் LDC UDC கிளார்க் வேலை பார்ப்பதைவிட அமெரிக்கன் எம்பாசியில் கால்கடுக்க நின்று விசா வங்கி வேலை பார்ப்பது அசிங்கமல்ல !//

    ஆமா பூணூலு,திருட்டு திராவிட ஆட்சியாளர்களிடம் கிளார்க் வேலை பார்ப்பது அசிங்கம்னா உலகம் முழுவதும் கொள்ளையடிக்கும் அமெரிக்காகாரனிடம் வேலை பார்ப்பது மட்டும் எப்படி அசிங்கமில்லை.

    வழிப்பறி திருடனை விட கன்னக்கோல் திருடன் எப்படி உயர்ந்தவன் ஆனான். பெரிய எலும்பு துண்டா போடுறான் என்பதாலா.

  33. \\பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறாரே.நானே படைத்தேன் நான்கு வர்ணங்களையும் என்று.\\

    ஹ்ம்ம்…. இப்படி 4 வரியில் சொன்ன விசயத்தை அழகாக் வெட்டி இரண்டு வரியை மட்டும் போட்டால் எப்படி?

    4 வரியையும் முழுமையாக எழுதுங்கள்… சம்ஸ்கிரித வார்த்தையை அப்படியே மொழி பெயர்ப்பு செய்து எழுதுங்கள்…. அப்புறம் தெரியும் அந்த வரிகள் சாதியை பற்றி சொல்கிறதா? இல்லை வேறு எதையாவது பற்றி சொல்கிறதா என்று?

    \\நான்கு கூறுகளாக பிரித்து ஒவ்வொரு கூறிலும் ***எண்ணிறந்த சாதிகளை*** உருவாக்கி விட்டு\\

    இது என்ன புதிய விசயம்?.. இது எங்கு இருந்து எடுக்கப்பட்டது? எந்த பகவத் கீதை மொழி பெயர்ப்பில் இருந்து உருவானது?

    http://en.wikipedia.org/wiki/Caste_system_in_Africa

    http://www.kalachuvadu.com/issue-81/katturai04.htm

    சரி உலகெங்கிலும் சாதிகள் இருந்தனவே? அவைகள் கூட பார்ப்பணர்கள் தான் உருவாக்கினார்களா?

    இந்த ஆரிய திராவிட கட்டுகதைகள் என்றோ சர்வதேச மொழியியல், மரபியல் மற்றும் தொல்லியல் ஆட்களால் நிராகரிக்கப்பட்டு… கடைசியில் ஆரிய படையெடுப்பு… ஆரிய புலம் பெயர்வு என்று ஆனது… இனி கடைசியில் இருக்கும் ஒரே விசயம்…. indo europian மொழியியல்… இதுவும் உடைக்கப்பட்டால் ஆரிய புரட்டு கதைக்கு சங்கு தான்…

  34. modhalla oru mukkiyamana vishayam,

    yen ellarum indha jaathi thalaiya irunthu porandichu,nenjula,thodaiyila,kaalulannu sonna dhul enna thappu,intha naalum oru manushan uyir vaazha thevaya onnu thane.

    Kaal illama oru manushan eppadi iruppan mundamam thane,moolai illama oru manushan paithiyamavum,nenju illama oru manushan kozhaiyavum,thodai illatha orummanushan veeriyam illadhavanavum thane iruppan.

    idhula mel enna,keezh enna?

    • அதென்ன ”professional respect ”.ஓ அதானா,உயர் அதிகாரி எவ்வளவுதான் சின்ன வயசாக இருந்தாலும் சார்,ஐய்யா னு கூனி குறுகி நிக்கிறது. வெளியே வந்து டவாலி,பியூன் முதலான கடைநிலை ஊழியரை நாளக்கி ரிட்டையர் ஆவப்போற தாத்தாவா இருந்தாலும் பேர் சொல்லி கூப்பிடுவது.

      அது சரி.என்னக்கி நீங்க மனுசன மனுசனா மதிச்சிருக்கீங்க.இதுல வயசுக்கு மரியாதை குடுப்பீங்களா.

  35. இந்த பதிவுக்கான பின்னூட்டங்களில் பார்ப்பன சமூக அன்பர்கள் மிகுதியாக குறை கூறுவது இட ஒதுக்கீடு முறையைத்தான்.இட ஒதுக்கீடு நியாயமானதுதான் என முன்பு எழுதிய வாதங்கள் அவர்கள் பார்வைக்கு.

    https://www.vinavu.com/2011/08/11/death-of-merit/#comment-47632

    இந்தியாவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் அனைவருக்கும் போதுமானதாக இல்லை என்பதால் இருக்கும் இடங்களை நியாயப்படி பகிர்ந்து கொள்வதற்குத்தான் இட ஒதுக்கீடு அமுலில் உள்ளது.இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சலுகையல்ல.அது அவர்களின் உரிமை,அது மட்டுமல்ல நாடு முன்னேறுவதற்கு அவசியமானதும் கூட.

    ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் முன்னேறினால் மட்டுமே சாத்தியமாகும்.வெறுமனே உற்பத்தியை பெருக்குவதால் மட்டுமே பொருளாதாரம் முன்னேறி விடாது.உற்பத்தியான பொருட்கள் நுகரப்பட வேண்டும்.அதற்கு மக்களிடம் வாங்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.
    வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் நிலையில் பெரும்பகுதியான மக்கள் வாழும் நாட்டில் பொருளாதார முன்னேற்றம் என்பது குதிரை கொம்புதான்.அப்படி பின்தங்கிய மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்து வரும் பணியில் இட ஒதுக்கீடு கணிசமான பங்களிப்பு செய்கிறது.அப்பன் செய்த தொழிலையே பிள்ளையும் செய்து கொண்டிருந்தால் ஒரு நாளும் முன்னேற்றம் சாத்தியமில்லை. வெள்ளையன் எந்த நிலையில் விட்டு சென்றானோ அப்படியே இருந்திருக்க வேண்டியதுதான்.

    கல்வியில் இட ஒதுக்கீடு கொடுப்பதால் தரம் தாழ்கிறது என்பதும் ஒரு மோசடியான வாதம். கல்லூரியில் நுழைவதற்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரப்படுகிறது. பாடத்திட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான்.தேர்வு முறையும் ஒன்றுதான்.பிறகு எப்படி தரம் தாழும். அப்படி தரம் இல்லை என்றால் அதற்கு பாடத்திட்டமும் தேர்வுமுறையும்தான் காரணமாக இருக்க முடியுமேயன்றி மாணவர்களை குற்றம் சொல்லமுடியாது.

    இட ஒதுக்கீட்டின் கீழ் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்கள் குறைவாக நிர்ணயம் செய்யப்படுவதும் குறையாக சொல்லப்படுகிறது.தகுதிதேர்வுகளிலும் நுழைவு தேர்வுகளிலும் முன்னேறிய,நகர்ப்புற மாணவர்கள் எப்படி கூடுதல் மதிப்பெண் பெறுகிறார்கள்.பல லட்சம் உருவாக்கள் செலவில் தனிப்பயிற்சி பெற்றுதான் அந்த மதிப்பெண்களை ”ஈட்டுகிறார்கள்”.யாருக்கு வாய்ப்பு என்பதை மதிப்பெண்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டு விட்டால் ”காசுக்காரனுக்கு இட ஒதுக்கீடு” என்பதுதானே அதன் பொருள்.

    மேலும் கல்விக்காக அரசு செலவிடுவதும்,அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுவதும் யாருடைய பணம்.அது மக்களின் வரிப்பணமல்லவா.அந்த வரியை செலுத்தும் மக்கள் அந்த நிறுவனங்களில் இடம் பெற முடியாதென்றால் அது அநீதியல்லவா.
    ஆகவே கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அவசியமானது.அது மக்களுக்கு உரிமையானது.

  36. தமிழகத்தில் பல ஆண்டுகளாக ரிசர்வேஷன் முறை கடைபிடிக்கப்பட்டதால் ஏற்பட்ட முன்னேற்றத்தை கீழ் வரும் தகவல் மூலமாக அறியவும்:

    Monday, June 30, 2008
    What is the Community wise Composition of Top 500 Rankers in Tamil Nadu
    Counseling for Admission to MBBS / BDS in Tamil Nadu starts from 04.07.2008 and Director of Medical Education, 162, Periyar Road, Chennai has releasted the counselling schedule The Community of the Top 500 Rankers can be seen from that
    Of the Top 500 Rankers in Tamil Nadu

    Forward Community – FC – 55 Students – 11 %
    Backward Community – BC – 293 Students – 58.6 %
    Christians – BCC – 29 Students – 5.8 %
    Muslims – BCM – 20 Students – 4 %
    Most Backward Community – MBC – 70 Students – 14 %
    Scheduled Castes – SC – 32 Students – 6.4 %
    Scheduled Tribes – ST – 1 Student – 0.2 %

    இதே போல IIT களில் வரும் முன்னேற்றத்தை பார்க்க சில வருடங்கள் பிடிக்கத்தானே செய்யும். இப்போது தானே மண்டல் கமிஷன் மூலமாக உள்ளே அனுமதித்து உள்ளீர்கள் துரியோதனன்/வி.பி.சிங் தயவில் – கர்ணனுக்கு/ ஒ.பி.சி மக்களுக்கு வாய்பு கிடைத்தது போல)

    வாழ்க!!!வாடிய பயிரை கண்டு மனம் வாடிய-வள்ளலார் பிறந்த/ வாழ்ந்த ” தமிழ் நாடு”

  37. Pl c link which is self expalatory:
    http://planningcommission.nic.in/reports/genrep/resedu/rpresedu_a10.pdf
    Interim report of the oversight committee on the implementation of the new reservation policy in higher educational Institutions ; 348 [Annexure X]
    RESERVATION POLICY AND ACADEMIC PERFORMANCE:
    A TAMILNADU CASE STUDY: Dr. M. Anandakrishnan (Chairman MIDS & Chairman IIT Kanpur)
    Abstract: The evolution of reservation policy in Tamilnadu over the past several decades has resulted in the following distributions of the reservation among the different categories:

    OC Open Category 31%;BC Backward Class 30% ; MBC Most Backward Class 20%;SC Scheduled Caste 18%;ST Scheduled Tribes 1%.; Total 69%.

    The academic performance of the various categories in the Higher Secondary Education in Tamilnadu State Board, the professional courses Entrance Examinations and the Final year performances at the State level institutions as well as in a premier engineering institution and a prestigious Arts and Science College in Tamilnadu are analyzed. The analysis shows the performance of the students in reserved categories in comparable to those in the Open Category and the institutions with high percentage of students from reserved categories have not in anyway deteriorated in quality.
    ………………………………………………………………………………………………..
    ………………………………………………………………………….
    9. CONCLUSION
    The experience in Tamilnadu reservation policy has clearly demonstrated that the
    students from backward sections of the society have performed at a level of excellence comparable to the Open Categories. This policy has not resulted in any deterioration in the standards of the premier institutions. However, it is also seen without the reservation policy large number of students from backward communities would have been denied admission to the prestigious institutions because of shortage of a few percentage points in their Higher Secondary and Entrance Examination Scores.

  38. தமிழ்நாடு எல்லாத் துறையிலும் முன்னணியில் – இந்தியாவிலேயே முதல் மூன்று இடங்களில் வருவதற்கு 10%மக்கள் தொகையை உடைய, சாதி மக்கள் தான் காரணம் என்று சத்தியம் செய்தால்- அதை நிரூபிக்கும் மக்களும்/ வக்காலத்து வாங்கும் மீடியாக்களும்/ மக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்……

    ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்.

    ஹி…ஹி…ஹி சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டம்பா!!!

  39. pl c link – page NO 105 :http://oversightcommittee.gov.in/ocrep.pdf

    இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களில் சாதி வித்தியாசங்கள் இருப்பினும்- எல்லா
    சாதியினரும், மத குரு / அர்ச்சகர்கள் ஆகவும் ஆண்டவனை தொட்டு பூஜிக்கவும்
    / அபிஷேகம் செய்து அலங்கரிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்து மதத்தில் பிராமணர் தவிர பிறருக்கு அனுமதி மறக்கப்படுகிறது. பொறியியல் படித்தவன்
    பொறியாளர் ஆகலாம், மருத்துவம் படித்தவன் மருத்துவர் ஆகலாம்- ஆனால் அர்ச்சக மந்திரம் படித்தவன் அர்ச்சகராக பிராமண சாதியும் தேவை. இந்தக்கொடுமை உலகத்தில் எங்காவது உண்டா?

    தமிழ்த்தேசியம்:

    தெலுங்கருக்கு – நைனா, அம்மா; மலையாலத்தவருக்கு -அச்சன், அம்மா;
    கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி; தமிழருக்கு – பொது அப்பா, அம்மா;

    என்ன ஞாயம் இது???? திராவிடம், திராவிடம் என்று ஏமாந்ததைச் சொல்லுகிறோம்.

    தமிழர் வாழ்வியல் நடவடிக்கைகள்/ பிரச்சினைகள் ஆகியவற்றை- வீட்டிலும், வெளியிலும், கனவிலும் /நனவிலும் தமிழ் பேசும் தமிழர்களே, நமக்காக கையாள வேண்டும்.. இல்லாவிடில் பிற மாநிலத்தவர்களிடம் இருந்து முழுதாக ஒதுக்கப்படும்/ வெறுக்கப்படும் சூழ்நிலைக்கு ஆளாகுவோம். யாரும் நம்மை காப்பாத்த முடியாது. வீரம் வேறு- விவேகம் வேறு என்பதை உணரவும். தமிழர் முன்னேற்றம் விரும்புவோர் தயவு செய்து இவற்றை சிந்திக்கவும். வாழ்க தேசியம்.

  40. தூங்குபவனை எழுப்பிவிடலாம். தூங்குபவனை போல நடிப்பவனை எழுப்ப முடியாது.

    அன்றைய கால கட்டத்தில் சாதி உயர்வு/ தாழ்வு மனப்பான்மையிளுருந்து வெளிவர ஒரு கூட்டணி பிராமணர் அல்லாத கீழ் சாதி மக்களை பயன்படுத்திக்கொண்டது.

    அன்று பிராமனரல்லாதவர்களிடமிருந்து, தண்ணீர் தெளித்த பின்னரே பொருளை பெற்றுக்கொண்டனர் பிராமணர்கள்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் இன அடையாளம் தேவைப்படுகிறது. இந்திய பிராமணர்கள் தனக்கென ஒரு கூட்டமைப்பு வைத்து, உயர்த்திக்கொள்ள உதவுகிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது.

    நீங்கள் வட இந்தியரிடம் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் போது; அவர் காஷ்மீர்,
    பஞ்சாபியோ, குஜராத்தி பிராமின் ஆக இருந்தால்- உங்களை தமிழ் பிராமினாக காட்டிக்கொள்வீர்கள், அவர் பிராமனரல்லாதவராக இருந்தால் சிம்பிளாக ப்ரம் தமிழ்நாடு என்று சொல்வீர்கள்.

    நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. நீ அரிசி எடுத்துக்கொண்டு வா- நான் உமி எடுத்து வருகிறேன் ஊதி,ஊதி சாப்பிடலாம் என்பதைப்போல. எங்களுக்காக அரசு கோயில் கட்டிகொடுத்து அதில் நாங்கள் செல்ல வேண்டுமா?? அப்புறம் நாட்டை காலி செய்து அந்தமான்- நிகோபார் போகச்சொன்னாலும் சொல்வீர்கள்.

    போராடி தனி ஒதுக்கீடு பெற்றபின்னரும் 27% கோட்டாவில் – 5% கூட எட்டவில்லை என obc தகவல் சொல்கின்றன. நல்லதை நினையுங்கள். நல்லது நடக்கும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

  41. வாழ்க- யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்ந்து கெட்ட தமிழகம்”

    “1979 எம்.ஜி.ஆர் – அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, தமிழக காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. ஆனால் கேரள போலீசுக்கான சம்பளத்தை, தமிழகமே தருகிறது. அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் தமிழக அரசிடமிருந்து பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல வேண்டும்?”

    இது தான் நம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மலையாளிகளுக்கு பெற்றுத் தந்த மண்ணின் பாச உணர்வு; அதன் பரிசாக மலையாள சகோதரர்கள் நமக்கு காட்டும் விசுவாசம்./. நம்பிக்கைத் துரோகம். …. தூ….????
    தமிழா மண்ணின் மீதும் உனது மக்கள் மீதும் ஞாய உணர்வு கொள்!

  42. தமிழர் நலம் நாடுவோர் அஹிம்சை முறையில் மனதளவில் கடைபிடிக்க வேண்டிய ஆறு (6) உறுதிமொழிகள்:

    1) தமிழர் கடைகளிலேயே வணிகம் செய்வோம்.

    2) உற்பத்தியாகும் பொருட்களை, நமது நலன் விரும்பாதவர்கள்- பயன்படுத்தும் எல்லா செயல்களின்/ ஒத்துழுயாமைக்கு, ஒத்துழைப்போம்.

    3)பெரியதிரை/சின்ன திரை- அண்டை மாநில கவர்ச்சிக்கு கொடுக்கும் பேராதவருக்கு முடிவு கட்டுவோம்.

    4) எங்கெங்கு காணினும் சக்தியடா என்பதை உணர்வோம்.

    5) சாதி,மத,அரசியல் பேதமின்றி- தமிழர்கள் எல்லோரும் அரசுடன் நல்ல செயல்களுக்கு ஒத்துழைப்போம்.

    6)நமக்கு நண்பன் யார்? பகைவன் யார்?—-நல்லவன் யார்? கெட்டவன் யார் ?- என்பதை எப்போதும் ஞாபகத்தில் கொண்டு – பகுத்தறிவுடன் செயல்படுவோம்.

    வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
    வாய்ப்புக்கு நன்றி.

  43. தில்லி தழிழ்ச் சங்கம் நடத்தும் இசைப் போட்டிகள்

    புது தில்லி, டிச.24: தில்லித் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் விழா போட்டிகளை நடத்தவுள்ளது. நாளை டிச.25 காலை 10 மணிக்கு 6,7,8ம் வகுப்புகளுக்கும், காலை 11 மணிக்கு 9,10 ஆம் வகுப்புகளும், பகல் 12 மணிக்கு 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் என்று இசைப்போட்டிகளை நடத்தவுள்ளதாக சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலுக்கு… பி.ராகவன் நாயுடு : 9891816605, எம்.ஆறுமுகம்:9868530644, பி.ராமமூர்த்தி: 9968328116, ஏ.வெங்கடேசன்: 9313006908 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    கருத்துகள்:

    தமிழ்ச் சங்கமா? நாயுடுகள் சங்கமமா?? தமிழ் இசை எப்படி வளரும்???

    ஹி….ஹி….ஹி…. அதனால் தாங்கோ செயற்கை முறையில் அண்டை மாநில மக்களின் உதவியுடன் தமிழ் இசையை உருவாக்கி கேட்டு/ரசித்து இன்புறுகிறோம்! – செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!…………………..தினமணி பிரசுரிக்கும் என நம்புகிறேன். நன்றி

    pl c link:http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&artid=527395&SectionID=164&MainSectionID=164&SectionName=Latest%20News&SEO=

  44. திராவிடம் என்ற சொல்லை உபயோகித்து அண்டைய மாநில மொழி பேசுபவர்களே அதிகம் பயனடைந்து, நம்மை புறம் தள்ளி முன்னேறியுள்ளனர் .ஆதலால் நெல்லுக்கும், புல்லுக்கும் வித்தியாசம் தெரியாத, பல முடத் தெங்குத் தமிழர்கள்/ வெகுளிகள் உருவாகி தமிழினம் முன்னேற தன்னை அறியாமலே, தமிழர் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். எனவே இனி தமிழகம்/தமிழர்/ தமிழ் என்று முழங்க வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.வாழ்க தமிழ் உணர்வு. வாழ்க பகுத்தறிவு.

  45. சுப்பாமணி,

    // சாதிப்பிரிவினைக்கும் ”அந்தணருக்கும்” தொடர்பில்லை எனபது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்.உங்கள் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறாரே.நானே படைத்தேன் நான்கு வர்ணங்களையும் என்று.மனித இனத்தை நான்கு கூறுகளாக பிரித்து ஒவ்வொரு கூறிலும் எண்ணிறந்த சாதிகளை உருவாக்கி விட்டு வருணாசிரமம் வேறு சாதி வேறு என கூறுவது கடைந்தெடுத்த பொய். தொழில் பிரிவினைதான் சாதியாக மாறியது என்று சப்பை கட்டு இனியும் செல்லாது.இன்னின்ன வர்ணத்தாருக்கு இன்னின்ன தொழில் என்று வரையறை செய்ததே வர்ணாசிரமம்தனே //

    இன்று தமிழகத்தில் உள்ள எண்ணற்ற சாதிகளின் மூலத்தை ஆராய்ந்தால் எந்தச் சாதியும் தங்கள் குலமுதல்வர்கள் தோள், தொடை, காலிலிருந்து வந்தவர்கள் என்ற மனு வார்த்தைகளை பின்பற்றி சாதிகளை உருவாக்கவில்லை என்பது புரியும்.

    செட்டியார்கள் சந்திரகுலம் என்றும், தேவர்கள் சேர, சோழ, பாண்டியர்களின் வழிவந்தவர்களாக சூரியன், சந்திரனை குலமுதல்வர்கள் என்றும், வன்னியர்கள் அக்கினியின் குலம் என்றும், நாடார்கள் சூரியன் குலமென்றும், தேவேந்திரர்கள் இந்திரன் / வேந்தர்கள் குலமென்றும், மீனவர்கள் பர்வதகுலம் என்றும், பஞ்ச கம்மாளர்கள் விஸ்வகர்மா / மயன் குலம் என்றும், பார்ப்பனர்கள் பிரம்மகுலம் என்றும், வேளாளச் சாதியினர் தங்கள் குலமுதல்வர்கள் வீரபத்திரர், சிவருத்திரர்கள் என்றும், அவரவர் குலவரலாற்றை மேற்கோள் காட்டுகிறார்கள் ! மனுவை யாரும் மேற்கோள் காட்டுவதில்லை.

    சாதியில் இப்படியென்றால், வர்ணத்தில் எல்லோரும் பிராமண, சத்திரிய, வைசியர்களாகத்தான் தங்களை அடையாளம் காண்கிறார்கள். இவர்கள் யாரிடமாவது போய் நீங்கள் சூத்திரர்கள், மனு சொல்றான், பார்ப்பான் சொல்றான் என்று சரடு விட்டுப் பாருங்கள்.. பெரியாரைத் திட்டியதைப் போல் உங்களைத் திட்டி, உதைக்காமல் அனுப்பமாட்டார்கள்.

    இவர்களை உண்மையாக ஒன்றுபடுத்த நீ திராவிடன், ஆரியனால் அடிமையாக்கப்பட்டாய் என்ற இனவாதப் பொய்யும் உதவாது. தமிழ் என்ற மெய்மொழியே, தமிழர்தம் சாதனைகளின் வரலாறே அதைச் சாதிக்கும் வல்லமை கொண்டது. முல்லைப் பெரியாறு விசயத்தில் சாதி, மதம் பாராது வாழ்வாதார உரிமைக்காக தமிழர்கள் தன்னிச்சையாக ஒன்று சேர்ந்தது ஒரு அருமையான நிகழ்வு.

    • வரலாற்றை புரட்டி போடுவதில் உங்களிடம் அமேரிக்கா பாடம் கற்று கொள்ள வேண்டும். அது எப்படி 5000 ஆண்டுகளுக்கு முன் வருணாசிரம் கொண்டு வந்து உலகத்தின் முதல் அடிமை சாசனத்தை ஏற்படுத்தி மக்களை அடிமைகலாக செய்து அவர்களை சுரன்டியாகிவிற்றது.

      அப்படியும் மனம் ஆறாமல் மனு என்னும் பொய் பகட்டை உறுவாக்கி அதில் புனர்ஜென்மம் என்னும் பொய்யை உறுவாக்கி, பார்பனாக பிறக்காதவர்கள் பார்பனற்கு இந்த ஜென்மம் தொட்டு 6 ஜென்மம் சேவை செய்தால் 7வது ஜென்மத்தில் மோட்சம் பெற்று பிராமனன் ஆக பிறக்கும் பாக்கியம் கிடைக்கும் என்னும் பொய்யை எழுதி மக்களை அடிமை பல்லதாக்கில் தள்ளிவிட்ட பாதகர்கள் அல்லவா நீங்கள்.

      அதன் பொய்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த புத்தரையும், அவர் வழி வந்த மக்களையும் எதிற் கொள்ள ஆற்றல் இல்லாமல் சானக்கியனால் குறுக்கு முறையில் அரசனான சந்திர குப்த மவுரியாவின் வழி வந்த குமர குப்த மவுரியாவின் காலத்தில் புத்த மததினரை கட்டாய மதமாற்றதிற்கு கொடுமை படுத்தி மதம் மாற மறுத்த மக்களை கொடுரமாக கொன்று அப்படியும் மதம் மாற மறுத்த மக்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி பிற்காலத்தில் அவர்களை தலித் மக்களாக மாற்றிய பெறுமை உங்களுக்கு தானே.

      நலந்தா பல்கலைக்கழகம் அழிந்த காரணத்தை இங்கு விவாததில் இருக்கும் அனைவருக்கும் தெறியும். அதற்காக தான் இன்னமும் குப்த மன்னர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றிர்கள், இந்தியாவின் பொற்காலம் குப்த மன்னர்களின் காலம் என்று பொய் வரலாற்றை எழுதி எதிர்கால சமுதாயத்தை மூடகற்கலாக செய்து கொண்டு இருக்கின்றிர்கள்.

      ஏன் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை காட்டிலுமா செங்கோள் ஆட்சி செய்தார்கள் குப்த மன்னர்கள்?

      பின்பு வருணாசிரம் அடிப்படையில் மக்கள் செய்யும் தொழிலிலைக் கொண்டு சாதிப் பிறிவினையை தொற்றுவித்து சமுதாயத்தில் சாதி வேறி தொற்றுவித்து மக்களிடம் பகைமை பாராட்ட செய்துவிட்டு, இப்ப என்னவோ சந்திரறே சுரியறே நட்சத்திர நாயகறேனு பாட்டு பாடும் அலவுக்கு சாதி தோற்றத்துக்கு புது பரிமானத்த குடுகிறிங்க.

      ஓ இது ஆர் எஸ் எஸின் புதிய யுக்தியா? யுக்தாமுகி யுக்தாமுகி யுக்தாமுகி நீயா?

      //இவர்கள் யாரிடமாவது போய் நீங்கள் சூத்திரர்கள், மனு சொல்றான், பார்ப்பான் சொல்றான் என்று சரடு விட்டுப் பாருங்கள்.. பெரியாரைத் திட்டியதைப் போல் உங்களைத் திட்டி, உதைக்காமல் அனுப்பமாட்டார்கள். //

      அப்படி சொல்லி பகுத்தறிவு பிறப்பிததால் தான் உங்க கொட்டம் கொஞ்சம் அடங்கியது. பெரியாரை திட்டினாங்களா? யார் தலித்துகளா இல்லை உங்கள் பார்பன சமுகத்தோரா?. வைக்கதிலும், திருவரங்கத்திலும் நீங்க செய்த அட்டுலியத்தோடவா?

      சரி வண்கொடுமை, சாதி தீ ஒழிக்க வேண்டும் என்று ஆற்பரிக்கும் நீங்கள் ஒரு தலித்தை திருவரங்கம் ரங்கநாதர் கோவில் முலஸ்தானத்தில் அனுப்ப ஒத்துக் கொள்வீர்களா?

      பார்பனத்தின் பொய் பகட்டை கிழித்து எறியும் கிழ் கண்ட நூல்கலை படியுங்கள்.

      1. வல்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சங்கமித்திராய்
      2. வள்ளுவத்தின் வீழ்ச்சி – குனா – உலகத்தில் அனுவியம் தோற்றுவித்த தமிழர்கள் தான் அது எப்படி கிரிக்கியர்கள் கையில் சென்றது, சோதிடம், வான் ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழர்களின் முன்னோட்டம் பற்றிய மிக சிறந்த ஆராய்ச்சி.
      3. இராவணன் நாடு – அகத்தியதாசன் – இராவணனின் உன்மையான நாடு எது, இராவணன் எவ்வாறு வஞ்சிகப்பட்டான், இராமாயணம் எங்கு நடந்தது ஆகியவனை பற்றி விரிவான ஆராய்ச்சி
      4. மண்னுறிமை முதல் மற்றும் இராண்டாம் பாகம் – குனா
      5. தொல்காப்பியக் காலம் – குனா
      6. சக்கர்வலங்கோட்டம் – குனா.

      • // வரலாற்றை புரட்டி போடுவதில் உங்களிடம் அமேரிக்கா பாடம் கற்று கொள்ள வேண்டும். அது எப்படி 5000 ஆண்டுகளுக்கு முன் வருணாசிரம் கொண்டு வந்து உலகத்தின் முதல் அடிமை சாசனத்தை ஏற்படுத்தி மக்களை அடிமைகலாக செய்து அவர்களை சுரன்டியாகிவிற்றது. //

        செந்தமிழரே,

        இதற்குமுன் 6000 ஆண்டுகள் என்றீர்கள், இப்போது 5000 ஆண்டுகள் என்கிறீர்கள். என்ன கணக்கு என்று புரியவில்லை. மனிதகுலம் தோன்றி 6000 ஆண்டுகள் ஆகவில்லை என்ற பைபிள் கணக்கா ?

        // அப்படியும் மனம் ஆறாமல் மனு என்னும் பொய் பகட்டை உறுவாக்கி அதில் புனர்ஜென்மம் என்னும் பொய்யை உறுவாக்கி, பார்பனாக பிறக்காதவர்கள் பார்பனற்கு இந்த ஜென்மம் தொட்டு 6 ஜென்மம் சேவை செய்தால் 7வது ஜென்மத்தில் மோட்சம் பெற்று பிராமனன் ஆக பிறக்கும் பாக்கியம் கிடைக்கும் என்னும் பொய்யை எழுதி மக்களை அடிமை பல்லதாக்கில் தள்ளிவிட்ட பாதகர்கள் அல்லவா நீங்கள். //

        புனர்ஜென்மம், கர்மா எல்லாம் புத்தரும்தான் கூறினார். போதிசத்துவர் எத்தனை ஜென்மங்கள் எடுத்தார் என்ற கணக்கு வழக்கில்லை. மனு சொன்னால் தட்டமுடியாது என்பது இக்கால நம்பிக்கை. பார்ப்பானுக்கு சேவை செய்து மோட்சம் அடையலாம் என்று எத்தனை பேர் நம்பினார்கள் என்று தெரியாது. மக்கள் நம்பினார்கள் என்று நீங்கள் சொல்வதை நம்பமுடியவில்லை.

        // நலந்தா பல்கலைக்கழகம் அழிந்த காரணத்தை இங்கு விவாததில் இருக்கும் அனைவருக்கும் தெறியும். அதற்காக தான் இன்னமும் குப்த மன்னர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றிர்கள், இந்தியாவின் பொற்காலம் குப்த மன்னர்களின் காலம் என்று பொய் வரலாற்றை எழுதி எதிர்கால சமுதாயத்தை மூடகற்கலாக செய்து கொண்டு இருக்கின்றிர்கள். //

        வரலாற்றை புரட்டிப் போடுவது இப்போது நீங்கள் தான்.

        // ஏன் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை காட்டிலுமா செங்கோள் ஆட்சி செய்தார்கள் குப்த மன்னர்கள்? //

        இல்லை.

        // பின்பு வருணாசிரம் அடிப்படையில் மக்கள் செய்யும் தொழிலிலைக் கொண்டு சாதிப் பிறிவினையை தொற்றுவித்து சமுதாயத்தில் சாதி வேறி தொற்றுவித்து மக்களிடம் பகைமை பாராட்ட செய்துவிட்டு, இப்ப என்னவோ சந்திரறே சுரியறே நட்சத்திர நாயகறேனு பாட்டு பாடும் அலவுக்கு சாதி தோற்றத்துக்கு புது பரிமானத்த குடுகிறிங்க. //

        சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே ஒரு அருமையான பாடல். அதை நானா பாடினேன் ?? சாதிகளின் தோற்றம் பார்ப்பனச் சதி என்பது மேலோட்டமான புரிதல்.

        // சரி வண்கொடுமை, சாதி தீ ஒழிக்க வேண்டும் என்று ஆற்பரிக்கும் நீங்கள் ஒரு தலித்தை திருவரங்கம் ரங்கநாதர் கோவில் முலஸ்தானத்தில் அனுப்ப ஒத்துக் கொள்வீர்களா? //

        அங்கு மட்டுமல்ல எல்லாக் கோவில்களிலும் எல்லோரும் பூசை செய்யும் நிலை வரவேண்டும். தடுப்பதன் பின்னனியில், பிழைப்பு கெட்டுப் போகும்; ஒவ்வொரு கோயிலிலும் பாரம்பரியமாக பூசை உரிமை பெற்ற குடும்பங்கள்; போன்ற காரணங்களே உண்மையில் ஒளிந்திருப்பதாகத் தோன்றுகிறது.

        // பார்பனத்தின் பொய் பகட்டை கிழித்து எறியும் கிழ் கண்ட நூல்கலை படியுங்கள்.

        1. வல்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சங்கமித்திராய்
        2. வள்ளுவத்தின் வீழ்ச்சி – குனா – உலகத்தில் அனுவியம் தோற்றுவித்த தமிழர்கள் தான் அது எப்படி கிரிக்கியர்கள் கையில் சென்றது, சோதிடம், வான் ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழர்களின் முன்னோட்டம் பற்றிய மிக சிறந்த ஆராய்ச்சி.
        3. இராவணன் நாடு – அகத்தியதாசன் – இராவணனின் உன்மையான நாடு எது, இராவணன் எவ்வாறு வஞ்சிகப்பட்டான், இராமாயணம் எங்கு நடந்தது ஆகியவனை பற்றி விரிவான ஆராய்ச்சி
        4. மண்னுறிமை முதல் மற்றும் இராண்டாம் பாகம் – குனா
        5. தொல்காப்பியக் காலம் – குனா
        6. சக்கர்வலங்கோட்டம் – குனா. //

        நீங்கள் படித்திருக்கிறீர்களா ?

        ராகுல்ஜி, திராவிடர்கள் அடிமைகளை வைத்திருந்த சமூகம் என்றும் அவரது புத்தகத்தில் கூறியிருக்கிறார். ஒத்துக் கொள்வீர்களா ?!

        ராவணன் பார்ப்பனன், ராமன் தமிழன் என்று நாளை யாராவது தரவுகளுடன் நிறுவினால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்குமா ?

        குணா அவர்கள், தொல்காப்பியத்தின் காலம் எது என்று கூறியிருக்கிறார்கள் ?

        கட்டாயம் புத்தகங்களை வாங்கிப் படிக்கிறேன்.

        • /அம்பி உங்கள் பதில்களுக்கு நன்றி உங்கள் கேள்விகளுக்கு பதில் பின் இதோ!

          //இதற்குமுன் 6000 ஆண்டுகள் என்றீர்கள், இப்போது 5000 ஆண்டுகள் என்கிறீர்கள். என்ன கணக்கு என்று புரியவில்லை. மனிதகுலம் தோன்றி 6000 ஆண்டுகள் ஆகவில்லை என்ற பைபிள் கணக்கா ?//

          6000 ஆண்டுகளுக்கு முன் ஆரிய வருகை பின்பு உங்கள் வேதங்கள் உறுவான காலங்கள் அடிப்படையில் எழுதியது. பார்பனியதை மற்றும் எதிர்பது எமது நோக்கம் இல்லை அறிவியலை நம்பாது மூடநம்பிக்கை போற்றும் எல்லா மதமும் தான்

          //வரலாற்றை புரட்டிப் போடுவது இப்போது நீங்கள் தான்.//

          எங்கே ஆதாரத்துடன் சொல்லுங்கள், நலந்தா மற்றும் மவுரிய மன்னர்களை பற்றி நான் கூறியது தவறு என்று.

          //சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே ஒரு அருமையான பாடல். அதை நானா பாடினேன் ?? சாதிகளின் தோற்றம் பார்ப்பனச் சதி என்பது மேலோட்டமான புரிதல்.
          //

          சும்மா கின்டலுக்காக எழுதியது பிடிகவில்லை என்றால் விட்டுவிடுங்கள் அதற்கு என் வறுத்தங்கள்.

          //சாதிகளின் தோற்றம் பார்ப்பனச் சதி என்பது மேலோட்டமான புரிதல்//

          இந்த கூற்று ஏற்கதக்கது அல்ல. ஆல்மையாக சிந்திதாலும் உன்மை அதான்

          //அங்கு மட்டுமல்ல எல்லாக் கோவில்களிலும் எல்லோரும் பூசை செய்யும் நிலை வரவேண்டும். .//

          உஙகளின் இந்த கூற்று வரவேற்கத்தக்கது.

          //தடுப்பதன் பின்னனியில், பிழைப்பு கெட்டுப் போகும்; ஒவ்வொரு கோயிலிலும் பாரம்பரியமாக பூசை உரிமை பெற்ற குடும்பங்கள்; போன்ற காரணங்களே உண்மையில் ஒளிந்திருப்பதாகத் தோன்றுகிறது//

          ஆனால் ஏன் எல்லா கோவில்களிலும் பார்பனர்களே பாரம்பரியமாக பூசை உரிமை பெற்ற குடும்பங்களாக இருகின்றார்கள் என்பது என் கேள்வி.

          //நீங்கள் படித்திருக்கிறீர்களா ?//

          படித்ததால் தானே சொல்கிறேன் அம்பி.

          //ராகுல்ஜி, திராவிடர்கள் அடிமைகளை வைத்திருந்த சமூகம் என்றும் அவரது புத்தகத்தில் கூறியிருக்கிறார். ஒத்துக் கொள்வீர்களா ?!//

          அவ்வாறு அவர் சொன்னதாக எனக்கு தெறியவில்லை. பெரியாரின் முற்போக்கு சிந்தனைகளை ஏற்பவன் நான் ஆனால் தமிழனை திராவிடன் என்னும் கோட்பாடுக்குல் அடக்கும் நெறியை ஒத்துக் கொள்ள மாட்டேன். அதையும் தான்டி தமிழின் பெறுமை உள்ளது அதை மீட்க வேண்டும் என்பதே எனது நோக்கம் மட்டும் அல்ல தமிழர்கள் அனைவரின் நோகக்மும். அதற்கு தான் குனா அவர்களின் புத்தகங்களை பரிந்துரை செய்தேன் படியுங்கள், படித்துவிட்டு சொல்லுங்கள்.

          //ராவணன் பார்ப்பனன், ராமன் தமிழன் என்று நாளை யாராவது தரவுகளுடன் நிறுவினால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்குமா ?//

          கண்னால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதை உறுதியாக நம்புகிறவன் நான். ராவணன் பார்ப்பனனாக ஆக போவதும் இல்லை, ராமன் தமிழனாக ஆக போவதும் இல்லை நான் அதிர்ச்சி அடைய போவதும் இல்லை.

          //குணா அவர்கள், தொல்காப்பியத்தின் காலம் எது என்று கூறியிருக்கிறார்கள் //

          சுவாரசியமே அதானே அதைச் சொல்லிவிட்டால் படிக்காமல் என்னிடத்தில் விவாதம் செய்ய வந்துவிடுவீற்களே. படியுங்கள் பின்பு விவாதிக்கலாம்.

          உங்களுக்கு தமிழின் மீதும் காதல் இருக்கிறது அதை தான்டி பார்பனியதின் மீது பாசம் இருக்கிறது பாவம் கமல் போன்று உங்களுக்கும் ஒரு நெருக்கடி!!!

          • // எங்கே ஆதாரத்துடன் சொல்லுங்கள், நலந்தா மற்றும் மவுரிய மன்னர்களை பற்றி நான் கூறியது தவறு என்று //

            நாளந்தா பல்கலைகழகம் மவுரியருக்குப் பின் குப்தர்களாலும் ஆதரிக்கப்பட்டு வந்தது. அதற்க்குப்பின்னும் 1000 ஆண்டுகள் சிறப்புடன் செயல்பட்டு வந்தது, கி.பி.1193 ல் அழிக்கப்படும் வரை :

            http://en.wikipedia.org/wiki/Nalanda#Founding_of_the_university_and_the_Gupta_heyday

    • \\இன்று தமிழகத்தில் உள்ள எண்ணற்ற சாதிகளின் மூலத்தை ஆராய்ந்தால் எந்தச் சாதியும் தங்கள் குலமுதல்வர்கள் தோள், தொடை, காலிலிருந்து வந்தவர்கள் என்ற மனு வார்த்தைகளை பின்பற்றி சாதிகளை உருவாக்கவில்லை என்பது புரியும்…………வேளாளச் சாதியினர் தங்கள் குலமுதல்வர்கள் வீரபத்திரர், சிவருத்திரர்கள் என்றும், அவரவர் குலவரலாற்றை மேற்கோள் காட்டுகிறார்கள் ! மனுவை யாரும் மேற்கோள் காட்டுவதில்லை.//

      சாதிய பித்து பிடித்தவர்கள் தங்கள் சாதி ”ஒசந்த சாதி” னு காட்டிக்கொள்ள அவுத்துவிட்ட கட்டுக்கதைகளை ஒரு ஆதாரம்னு தூக்கிட்டு வர்றீங்களே அம்பி,உங்கள பாத்தா பாவமா இருக்கு. என்னவோ அந்தந்த சாதிக்காரர்களே அவரவர் சாதியை உருவாக்கிக் கிட்ட மாதிரி பீலா உட்டாவது பார்ப்பனர்கள் சாதியை உருவாக்கலன்னு சொல்ல முயற்சி செய்கிறீர்கள்.எந்த சாதியை சார்ந்தவர்களாக இருப்பது என தேர்வு செய்ய உரிமை இருந்திருந்தால் யாராவது கீழ்நிலை சாதிகளை தேர்வு செய்திருப்பார்களா.

      இதுல பெரிய காமடி.தேவர்கள் தங்களை சேர,சோழ,பாண்டிய மன்னர் பரம்பரை என சொல்லிக்கொள்வது.மூன்று பேரின் வாரிசுகள் இரண்டாயிரம் ஆண்டுகளில் போர்களில் செத்தவர்கள் போக மிஞ்சி போனால் சில ஆயிரமாகவோ,ஓரிரு லட்சமாகவோ இருக்கலாம்.மீதிப்பெரேல்லாம் யார். தேவரினத்தில் உள்ள சாமான்ய மக்களை உசுப்பேத்தி தங்கள் பின் திரட்டிக் கொள்ள அந்த சாதி சங்க தலைவர்கள் விடும் சரடான இதெல்லாம் ஒரு ஆதாரம்னு தூக்கிட்டு வாரிகளே நீங்க நல்ல காமெடியன்தான்.

      நாங்களோ கிருஷ்ண பரமாத்மா,சங்கராச்சாரி வாக்குமூலங்கள்,புராணங்கள் மற்றும் வரலாற்றை காட்டி சாதிகளின் உருவாக்கத்தில் பார்ப்பனர்களின் பங்கை சுட்டிக் காட்டுகிறோம்.

      \\சாதியில் இப்படியென்றால், வர்ணத்தில் எல்லோரும் பிராமண, சத்திரிய, வைசியர்களாகத்தான் தங்களை அடையாளம் காண்கிறார்கள். இவர்கள் யாரிடமாவது போய் நீங்கள் சூத்திரர்கள், மனு சொல்றான், பார்ப்பான் சொல்றான் என்று சரடு விட்டுப் பாருங்கள்.. பெரியாரைத் திட்டியதைப் போல் உங்களைத் திட்டி, உதைக்காமல் அனுப்பமாட்டார்கள்.//

      பெரியாரை திட்டியதும் தாக்கியதும் பார்ப்பனர்களும் அவர்களது பாதந்தாங்கி கிடந்த விபீடணர்களின் கூட்டம்தான்.சூத்திரர்கள் பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு கிடந்த மக்கள் ஒரு போதும் அய்யாவை தாக்கியதில்லை.

      சூத்திரன்னு யாருமே இல்லையா.அப்ப கால்ல பொறந்தவாளெல்லாம் எங்கே.என்னய்யா உங்க காமடிக்கு ஒரு அளவில்லையா.அதிருக்கட்டும் எந்த வர்ணத்துளையும் இடம் புடிக்கமால் இருந்த தலித்களை ஏன் பெருமாள் புள்ளையா [புரியுதுல அதா அரிஜன்] ஆக்குனீங்க.

      வர்ணத்தில் எதனோடு அடையாளம் காண்கிறார்கள் என்பதே சாதிய இழிவிலுருந்து தப்ப முயற்சிப்பதையே உணர்த்துகிறது.சாதிய இழிவிலிருந்து விடுதலை எனபது சாதிகளை ஒழிப்பதில் தான் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து தெளியும்போது சாதிகள் இருக்காது. வர்ணமும் இருக்காது.

      \\இவர்களை உண்மையாக ஒன்றுபடுத்த நீ திராவிடன், ஆரியனால் அடிமையாக்கப்பட்டாய் என்ற இனவாதப் பொய்யும் உதவாது.//

      நக்கலா.நாங்கதா சாதிகள வச்சு பிரிச்சு வச்சிருக்கமே எப்படி ஒன்றுபடுகிறீர்கள்னு பாத்துர்றோம்னு சவால் உடுறீங்க.

      \\தமிழ் என்ற மெய்மொழியே, தமிழர்தம் சாதனைகளின் வரலாறே அதைச் சாதிக்கும் வல்லமை கொண்டது. முல்லைப் பெரியாறு விசயத்தில் சாதி, மதம் பாராது வாழ்வாதார உரிமைக்காக தமிழர்கள் தன்னிச்சையாக ஒன்று சேர்ந்தது ஒரு அருமையான நிகழ்வு.//

      இதுதான் சாத்தான் வேதம் ஓதுவதோ.தமிழை குழி தோண்டி புதைக்க அத்தனை வேலைகளையும் செய்யும் கூட்டம் [வட மொழியை தமிழில் கலப்பது,மணிப்பிரவாளம் என அடிமை புத்தியை வளர்ப்பது,இப்போது ஆங்கிலத்தை தமிழில் கலந்து கட்டி அடிப்பதன் முன்னோடியே பார்ப்பனர்கள்தான்]தமிழுக்கு தமிழன் உரிமைக்கு தமிழன் நலனுக்கு பாடுபடும் என்று சின்ன குழந்த கூட நம்பாது அம்பி.

      • // சாதிய பித்து பிடித்தவர்கள் தங்கள் சாதி ”ஒசந்த சாதி” னு காட்டிக்கொள்ள அவுத்துவிட்ட கட்டுக்கதைகளை ஒரு ஆதாரம்னு தூக்கிட்டு வர்றீங்களே அம்பி,உங்கள பாத்தா பாவமா இருக்கு. என்னவோ அந்தந்த சாதிக்காரர்களே அவரவர் சாதியை உருவாக்கிக் கிட்ட மாதிரி பீலா உட்டாவது பார்ப்பனர்கள் சாதியை உருவாக்கலன்னு சொல்ல முயற்சி செய்கிறீர்கள்.எந்த சாதியை சார்ந்தவர்களாக இருப்பது என தேர்வு செய்ய உரிமை இருந்திருந்தால் யாராவது கீழ்நிலை சாதிகளை தேர்வு செய்திருப்பார்களா. //

        உலகின் பல பகுதிகளிலும் கோத்திரங்கள் (Clans) போன்ற இனக்குழுக்கள் உண்டு. சில குழுக்கள் பண்டைய கிரேக்க, எகிப்திய, ரோமானியப் பாகனிய தெய்வங்களைத் தம் முன்னோர்களாக கூறுவதுமுண்டு. இந்தியாவிலும் இவை குலங்களாக ( பின்னர் சாதிகளாக ) அறியப் படுகின்றன. குலத்தோற்றங்களுக்கும் அவற்றின் பிரிவுகளுக்கும் பார்ப்பனர்களே காரணம் எனக் கூறுவது சரியா ?

        இந்தியாவில் இனக் குழுக்கள் அளவில் பெரியவை. இனக் குழுக்களிடையே போட்டிகள் (அரசியல் அதிகாரம், நிலவுடைமை, வர்த்தக நலன்கள் etc) முற்றி ஒரு இனக்குழு ஒடுக்கப்படுவதும், ஒடுக்கப்பட்ட இனக்குழுவை மேலும் தனிமைப் படுத்த மற்றவர்களுக்குத் தேவையாக இருந்ததெல்லாம் ஒரு சாக்கு போக்கு மட்டுமே. வசமாக மாட்டியது மனு என்ற பழைய பார்ப்பனக் கையேடு. தீண்டாமை, காணாமை, கேளாமை, நினையாமை என்ற எந்த ஆமையையும் ஏவிவிட வசதியும் கிடைத்துவிட்டதா ? புதிய பஞ்சமர்கள் உருவாக்கப்பட்டுவிட்டார்கள். பார்ப்பான் தனக்குப் போட்ட கோட்டை தங்கள் வசதிக்கு ரோடாக்கியவர்களேல்லாம் இப்போது அப்பாவிகளாகி பார்ப்பான் மீது பாய்கிறார்களே, சுப்பாமணி.

        // பெரியாரை திட்டியதும் தாக்கியதும் பார்ப்பனர்களும் அவர்களது பாதந்தாங்கி கிடந்த விபீடணர்களின் கூட்டம்தான்.சூத்திரர்கள் பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு கிடந்த மக்கள் ஒரு போதும் அய்யாவை தாக்கியதில்லை.//

        பெரியாரை விமர்சித்தவர்களெல்லாம் பார்ப்பன ஆதரவாளர்கள் அல்ல, ’பஞ்சமர்’களெல்லாம் பெரியாரை, அவருடைய வார்த்தைகளை, விமர்சிக்காமலும் இல்லை.

        // சூத்திரன்னு யாருமே இல்லையா.அப்ப கால்ல பொறந்தவாளெல்லாம் எங்கே.என்னய்யா உங்க காமடிக்கு ஒரு அளவில்லையா.அதிருக்கட்டும் எந்த வர்ணத்துளையும் இடம் புடிக்கமால் இருந்த தலித்களை ஏன் பெருமாள் புள்ளையா [புரியுதுல அதா அரிஜன்] ஆக்குனீங்க. //

        கால்ல பொறந்தவாளை நீங்கதான் தேடிக்கண்டுபிடிக்கணும்.!

        மற்ற சாதியினர் தலித்துகளை இழிவுடன் நடத்தும் போக்கை நிறுத்த காந்திஜி தனக்குத் தெரிந்த முறையில் அவர்களுக்கு தனி அந்தஸ்து கொடுக்கமுயன்றார். இதற்குமுன் ராமானுசரும் திருக்குலத்தார் என அழைத்து அரவணைத்திருக்கிறார்.

        /////

        \\இவர்களை உண்மையாக ஒன்றுபடுத்த நீ திராவிடன், ஆரியனால் அடிமையாக்கப்பட்டாய் என்ற இனவாதப் பொய்யும் உதவாது.//

        நக்கலா.நாங்கதா சாதிகள வச்சு பிரிச்சு வச்சிருக்கமே எப்படி ஒன்றுபடுகிறீர்கள்னு பாத்துர்றோம்னு சவால் உடுறீங்க.

        /////

        திராவிடனாகத் தன்னை நம்பி தமிழன் பெற்றதைவிட இழந்தது அதிகம்.

        /////

        \\தமிழ் என்ற மெய்மொழியே, தமிழர்தம் சாதனைகளின் வரலாறே அதைச் சாதிக்கும் வல்லமை கொண்டது. முல்லைப் பெரியாறு விசயத்தில் சாதி, மதம் பாராது வாழ்வாதார உரிமைக்காக தமிழர்கள் தன்னிச்சையாக ஒன்று சேர்ந்தது ஒரு அருமையான நிகழ்வு.//

        இதுதான் சாத்தான் வேதம் ஓதுவதோ.தமிழை குழி தோண்டி புதைக்க அத்தனை வேலைகளையும் செய்யும் கூட்டம் [வட மொழியை தமிழில் கலப்பது,மணிப்பிரவாளம் என அடிமை புத்தியை வளர்ப்பது,இப்போது ஆங்கிலத்தை தமிழில் கலந்து கட்டி அடிப்பதன் முன்னோடியே பார்ப்பனர்கள்தான்]தமிழுக்கு தமிழன் உரிமைக்கு தமிழன் நலனுக்கு பாடுபடும் என்று சின்ன குழந்த கூட நம்பாது அம்பி.

        /////

        எனது கருத்தை நான் கூறினேன். நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.

        • இப்படி எதையாவது உளறிக் கொட்டியேனும் வாதத்தை வென்றாகனுமா அம்பி.சரி உங்கள் விருப்பம் நிறைவேற கடவ.ஏன்னா பதிலுக்கு பதில் நான் உளறிக்கொண்டிருக்க முடியாது.இந்த பின்னூட்டத்தோட விவாதத்தை முடிச்சுக்கிறேன்.பதில்னு எதையாவது போட்டு நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

          \\உலகின் பல பகுதிகளிலும் கோத்திரங்கள் (Clans) போன்ற இனக்குழுக்கள் உண்டு. சில குழுக்கள் பண்டைய கிரேக்க, எகிப்திய, ரோமானியப் பாகனிய தெய்வங்களைத் தம் முன்னோர்களாக கூறுவதுமுண்டு. இந்தியாவிலும் இவை குலங்களாக ( பின்னர் சாதிகளாக ) அறியப் படுகின்றன. //

          என்ன அம்பி.உள்ளூர் பருப்பு வேகலன்னு இறக்குமதி பண்ண கிளம்பீட்டீங்க.அங்க இனக்குழு இருந்ததுக்கும் இங்க சாதி உருவானதுக்கும் தொடர்பு இருக்கலாம்.வெளிலேர்ந்து வந்த பார்ப்பனர்கள் அங்க வழக்கத்தில் இருந்தத இங்கேயும் புகுத்திட்டாங்க.பார்ப்பனர் படையெடுப்புக்கு முன் [அதாங்க நீங்க சொல்ற ஆரிய வர்த்தமானம்.நீங்க வரலாற்றை சொல்லும்போதே உங்களுக்கு சாதகமாத்தான சொல்வீங்க] இந்திய துணைக்கண்டப் பகுதியில் மிகச் சிறந்த நாகரீகங்கள் தழைத்தோங்கி இருந்துள்ளன.அந்த சமுதாயங்களில் சாதிப் பிரிவினைகள் இருக்கவில்லை.இருந்தன என எந்த ஆதாரத்தையும் உங்களால் தர முடியாது.

          \\இந்தியாவில் இனக் குழுக்கள் அளவில் பெரியவை. இனக் குழுக்களிடையே போட்டிகள் (அரசியல் அதிகாரம், நிலவுடைமை, வர்த்தக நலன்கள் etc) முற்றி ஒரு இனக்குழு ஒடுக்கப்படுவதும், ஒடுக்கப்பட்ட இனக்குழுவை மேலும் தனிமைப் படுத்த மற்றவர்களுக்குத் தேவையாக இருந்ததெல்லாம் ஒரு சாக்கு போக்கு மட்டுமே. வசமாக மாட்டியது மனு என்ற பழைய பார்ப்பனக் கையேடு. தீண்டாமை, காணாமை, கேளாமை, நினையாமை என்ற எந்த ஆமையையும் ஏவிவிட வசதியும் கிடைத்துவிட்டதா ? புதிய பஞ்சமர்கள் உருவாக்கப்பட்டுவிட்டார்கள். பார்ப்பான் தனக்குப் போட்ட கோட்டை தங்கள் வசதிக்கு ரோடாக்கியவர்களேல்லாம் இப்போது அப்பாவிகளாகி பார்ப்பான் மீது பாய்கிறார்களே,//

          நல்ல கற்பனை.மனு எந்த இனக்குழுவ ஒடுக்க இந்த கையேட போட்டாராம்.பிணம் எரிக்கவும் பீ அள்ளவும் ஒரு மக்கள் திரள் பிரிவையே பணித்துவிட்டு அவன் ஏதோ போரில் தோற்ற மன்னர் பரம்பரை என போதை ஊசி போட்டுவிடும் கேடு கெட்ட செயல் இது.

          \\ பெரியாரை விமர்சித்தவர்களெல்லாம் பார்ப்பன ஆதரவாளர்கள் அல்ல,//

          என்ன ஒரு உளறல்.பெரியார் பார்ப்பனியத்தை எதிர்த்தார்.அதனை விமர்சித்தார்.அவரை விமர்சிப்பது,எதிர்ப்பது என்றால் என்ன .பார்ப்பனியத்தை ஆதரிப்பதுதான் அது.அப்படியானால் அதை செய்பவர்கள் பார்ப்பன ஆதரவாளர்கள்தானே.

          \\’பஞ்சமர்’களெல்லாம் பெரியாரை, அவருடைய வார்த்தைகளை, விமர்சிக்காமலும் இல்லை.//

          தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்கு எதிரானவர் என்று எந்த தலித் பெரியாரை விமர்சித்துள்ளார். ஆதாரம் காட்டி பேசுவதே அறிவு நாணயம்.

          \\கால்ல பொறந்தவாளை நீங்கதான் தேடிக்கண்டுபிடிக்கணும்.!//

          நாங்க தெளிவா சொல்றோம்.ஆகப் பெரும்பான்மையான தமிழர்களை ”சூத்திர” சாதியாகத்தான் பார்ப்பனியம் வரையறுத்து வைத்துள்ளது.நீங்கதா விதண்டாவாதமா யாரையுமே சூத்திரன்னு சொல்லலை என்று ஒரு பூசணிக்காய் கடையையே உங்க வாய்க்குள்ளே வச்சு அமுக்கிறீங்க.

          இந்த இடத்துல உங்களுக்கு ஒரு சவால்.

          கோவில்களில் அர்ச்சனை செய்ய வரும் சூத்திர சாதியினரிடம் பேரும் நட்சத்திரமும் கேட்டுக் கொண்டு கருவறைக்குள் நுழைந்து பார்ப்பன பூசாரி சொல்லும் ”மந்திரங்களின்” தமிழ் மொழி பெயர்ப்பை இங்கு வெளியிட தயாரா நீங்கள்.

          \\மற்ற சாதியினர் தலித்துகளை இழிவுடன் நடத்தும் போக்கை நிறுத்த காந்திஜி தனக்குத் தெரிந்த முறையில் அவர்களுக்கு தனி அந்தஸ்து கொடுக்கமுயன்றார். இதற்குமுன் ராமானுசரும் திருக்குலத்தார் என அழைத்து அரவணைத்திருக்கிறார்.//

          அம்பேத்காரை படியுங்கள்.காந்தியாரின் உண்மை சொரூபம் தெரியும்.

          \\திராவிடனாகத் தன்னை நம்பி தமிழன் பெற்றதைவிட இழந்தது அதிகம்.//

          எப்படின்னு சொன்னீங்கன்ன நல்லாருக்கும்.

          • // என்ன அம்பி.உள்ளூர் பருப்பு வேகலன்னு இறக்குமதி பண்ண கிளம்பீட்டீங்க.அங்க இனக்குழு இருந்ததுக்கும் இங்க சாதி உருவானதுக்கும் தொடர்பு இருக்கலாம்.வெளிலேர்ந்து வந்த பார்ப்பனர்கள் அங்க வழக்கத்தில் இருந்தத இங்கேயும் புகுத்திட்டாங்க.பார்ப்பனர் படையெடுப்புக்கு முன் [அதாங்க நீங்க சொல்ற ஆரிய வர்த்தமானம்.நீங்க வரலாற்றை சொல்லும்போதே உங்களுக்கு சாதகமாத்தான சொல்வீங்க] இந்திய துணைக்கண்டப் பகுதியில் மிகச் சிறந்த நாகரீகங்கள் தழைத்தோங்கி இருந்துள்ளன.அந்த சமுதாயங்களில் சாதிப் பிரிவினைகள் இருக்கவில்லை.இருந்தன என எந்த ஆதாரத்தையும் உங்களால் தர முடியாது. //

            எகிப்திய குலங்களுக்கும், யூதர்களின் குலங்களுக்கும் (Bani), இஸ்லாத்துக்கு முன் இருந்த அரபுக் குலங்களுக்கும் (Banu), ஆப்ரிக்க சாதிகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் என்ன தொடர்பு ? ஆரியப் படையெடுப்பை, அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்றாலும், பார்ப்பனப் படையெடுப்பு என்று பார்ப்பானின் கையில் ஆயுதத்தைக் கொடுத்துவிட்டீர்கள். பார்ப்பனர்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வரவில்லை என்பதை மரபணு ஆராய்ச்சி நிறுவுகிறதே :

            http://www.nature.com/jhg/journal/v54/n1/full/jhg20082a.html

            // நல்ல கற்பனை.மனு எந்த இனக்குழுவ ஒடுக்க இந்த கையேட போட்டாராம்.பிணம் எரிக்கவும் பீ அள்ளவும் ஒரு மக்கள் திரள் பிரிவையே பணித்துவிட்டு அவன் ஏதோ போரில் தோற்ற மன்னர் பரம்பரை என போதை ஊசி போட்டுவிடும் கேடு கெட்ட செயல் இது. //

            மலம் கழிக்க சொம்புடன் ஒதுங்கும் பழக்கம் கிராமங்களிலும், சாக்கடை வதிகளுடன் கட்டப்பட்ட நகரங்கள் இருந்தன என்று அகழ்வாராய்ச்சிகளும் கூறும்போது, மலம் அள்ளும் வழக்கம் எப்போது ஏற்பட்டது ? 400 ஆண்டுகளுக்கு முன் வந்த ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னரா ? மலம் அள்ளும் பிரிவினர் அதற்குமுன் இல்லையா / வேறு தொழில் செய்தார்களா ? இவை என்னுடைய சந்தேகங்கள், தீர்த்து வைப்பவர்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.

            // நாங்க தெளிவா சொல்றோம்.ஆகப் பெரும்பான்மையான தமிழர்களை ”சூத்திர” சாதியாகத்தான் பார்ப்பனியம் வரையறுத்து வைத்துள்ளது.நீங்கதா விதண்டாவாதமா யாரையுமே சூத்திரன்னு சொல்லலை என்று ஒரு பூசணிக்காய் கடையையே உங்க வாய்க்குள்ளே வச்சு அமுக்கிறீங்க. //

            நாங்கள் சூத்திரர்களே இல்லை என்று குலவரலாற்றைக் காட்டும் சாதியினரிடம், நீங்கள் சூத்திரர்கள்தான் என்று ஏதேனும் சாத்திரத்தைக் காட்டி பார்ப்பனர்கள் கூறியிருந்தாலும் ஒத்துக்கொண்டு போகவேண்டிய கட்டாயம் ஏதேனும் இருக்கிறதா ?

            // என்ன ஒரு உளறல்.பெரியார் பார்ப்பனியத்தை எதிர்த்தார்.அதனை விமர்சித்தார்.அவரை விமர்சிப்பது,எதிர்ப்பது என்றால் என்ன .பார்ப்பனியத்தை ஆதரிப்பதுதான் அது.அப்படியானால் அதை செய்பவர்கள் பார்ப்பன ஆதரவாளர்கள்தானே. //

            கடவுளைத் திட்டுபவன் சாத்தானாகத்தான் இருக்கமுடியும் என்பது போல் இருக்கிறது உங்கள் பதில்.

            // இந்த இடத்துல உங்களுக்கு ஒரு சவால்.

            கோவில்களில் அர்ச்சனை செய்ய வரும் சூத்திர சாதியினரிடம் பேரும் நட்சத்திரமும் கேட்டுக் கொண்டு கருவறைக்குள் நுழைந்து பார்ப்பன பூசாரி சொல்லும் ”மந்திரங்களின்” தமிழ் மொழி பெயர்ப்பை இங்கு வெளியிட தயாரா நீங்கள். //

            நீங்களே தாராளமாக வெளியிடலாமே !

            // தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்கு எதிரானவர் என்று எந்த தலித் பெரியாரை விமர்சித்துள்ளார். ஆதாரம் காட்டி பேசுவதே அறிவு நாணயம். //

            ஆதாரங்களைக் காட்டி தலித் ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். கட்டாயம் காட்டவேண்டும் என்றால் : “ பெரியார் யாருக்குப் பெரியார் ? ” – திரு. ம. வெங்கடேசன் அவர்கள்.

            // எப்படின்னு சொன்னீங்கன்ன நல்லாருக்கும். //

            தமிழ்த் தேசியவாதிகள் அடுக்கும் குற்றச்சாட்டுகளுக்கு இன்றுவரை சரியான பதில் இல்லை. நீங்களோ பதில் அளிக்கப் போவதில்லை என்று கூறிவிட்டீர்கள்.

            • இது ஒன்றை தவிர மற்றவை அனைத்தும் ஏற்கனவே அரைத்த மாவே.முன்னரே சொன்னமாதிரி புதிய பதில்கள் தேவையில்லை என்பதே எனது கருத்து.

              \\ஆதாரங்களைக் காட்டி தலித் ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். கட்டாயம் காட்டவேண்டும் என்றால் : “ பெரியார் யாருக்குப் பெரியார் ? ” – திரு. ம. வெங்கடேசன் அவர்கள்.//

              ம.வெங்கடேசன் என்ற விபீடணனுக்கு தகுந்த பதிலடி தரும் சுட்டிகள்.

              http://thamizhoviya.blogspot.com/2009/06/blog-post_7295.html#uds-search-results

              http://thamizhoviya.blogspot.com/2009/06/blog-post_1317.html

    • //தமிழர்தம் சாதனைகளின் வரலாறே அதைச் சாதிக்கும் வல்லமை கொண்டது. முல்லைப் பெரியாறு விசயத்தில் சாதி, மதம் பாராது வாழ்வாதார உரிமைக்காக தமிழர்கள் தன்னிச்சையாக ஒன்று சேர்ந்தது ஒரு அருமையான நிகழ்வு.//

      இது வஞ்ச புகழ்ச்சியாக தோன்றுகிறது. ராச ராசன் கனவு கண்டு மெய்பித்த அகண்ட தமிழ் தேசம் சாதிக்கும் வல்லமை எங்களுக்கு உன்டு என்று ஒத்துகொன்றதற்கு நன்றி!!. எத்தனை சாதி மதம் பேதங்களை கொண்டு வந்தாலும் தமிழ், தமிழ் நாடு, தமிழர்கள் என்று வந்தால் தமிழர்கள் எழுச்சி அடைந்துவிடுவார்கள் என்று புரிந்தால் சரி

  46. thambi,

    enakku unna pathi theriyadhu,anna naanga tirunelvelila pesura tamizh thaan yaazhpanathil pesum thamizhukku othatdu.madurai mela ellam telungu kannadam vadamozhi ekkam kalandha mozhi thaan.

    appuram englush kalandhu tamizh pesara grouupla ellarume thaan irukkanga,paarpanargal mattum illa.thee kaa kootathukku poi madai kaanju pochunnu nenaikkiren.

  47. hey pops,

    In BJP regime NGC (National Geographic Channel) program was banned, that program showed DNA relationship between one African-one Tamilan (in Madurai, I think the person’s name is Virummanndi)-One Australian Tribe(Aubergines). Blood samples were collected from 400 to 500 people, finally they find out same DNA model from 3 continents. It was an one-hour program, which was not re-telecasted and banned by the BJP Govt. Also, one DNA sample from Europe and one from North India, they find out same DNA model. It proved your origin (pops)…..

    • same DNA model என்றால் எந்த அளவுக்கு same?

      வட இந்தியாவில் பாப்ஸ் மட்டும்தான் இருக்கிறார்களா ?

      துருக்கியர்களின் DNA, பல ஐரோப்பிய, வட இந்தியர்களின் DNA உடன் ஒத்துப் போகும். எழுதப்பட்ட வரலாற்றையே ஆதாரமாகக் கொண்டால் வட இந்தியா முழுவதும் அடுக்கடுக்காய் பல்வேறு வேற்று இனத்தவர் கலப்பு நிகழ்ந்து கொண்டே இருந்தது. கிரேக்கர்கள், ஹூணர்கள், பாரசீகர்கள், அரேபியர்கள், ஆப்கானியர்கள், துருக்கியர்கள், தார்த்தாரியர்கள்….

      இந்தியா இன்று ஒரு அவியல், இதில் ஆரியக் காய் எங்கே, திராவிடக் காய் எங்கே என்று தேடிக் கொண்டே இருங்கள்.

    • ஆமாங்க மக்கான் நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்த நியாபகம் இருக்கு…மதுரைப்பக்கத்தில் உசிலம்பட்டியில் அவருடைய பெயர் விருமாண்டினு தான் நினைக்கின்றேன்..

  48. Indians belonging to higher castes are genetically closer to Europeans and lower castes- genetic profiles are closer to Asians.

    Monday, August 25, 2008
    Genetic evidence suggests European migrants may have influenced the origins of India’s caste system

    By Bijal P. Trivedi
    http://www.genomenewsnetwork.org/articles/05_01/Indo-European.shtml

    A new study has revealed that Indians belonging to higher castes are genetically closer to Europeans than are individuals from lower castes, whose genetic profiles are closer to those of Asians.

    The study compared genetic markers—located on the Y chromosome and the mitochondrial DNA—between 265 Indian men of various castes and 750 African, Asian, European and other Indian men. To broaden the study, 40 markers from chromosomes 1 to 22 were analyzed from more than 600 individuals from different castes and continents. The comparison of the markers among these groups confirmed that genetic similarities to Europeans increased as caste rank increased.

    The study, led by Michael Bamshad of the University of Utah, in Salt Lake City, and his colleagues, is reported to be the most comprehensive genetic analysis to date of the impact of European migrations on the structure and origin of the current Indian population. The article appears in the current issue of Genome Research.

    The caste system, defined in ancient Sanskrit texts, determines a person’s rank in society: The Brahmin, who were traditionally priests and scholars, held the highest rank in Hindu society. Warriors and rulers made up the Kshatriya who were the next in line to the Brahmin. Merchants, traders, farmers, and artisans were the third caste called the Vysya. The Shudra were the fourth rank and consisted of laborers. Because of strict rules forbidding marriage between men and women of different castes, these four classes remained distinct for thousands of years.

    Bamshad’s team found that Y chromosomes from the Brahmin and Kshatriya closely resembled European Y chromosomes rather than Asian Y chromosomes. The Y chromosomes from the lower castes bore more similarities to the Asian Y chromosome. The mitochondrial DNA showed the same pattern.

    The authors believe their results support the notion that Europeans who migrated into India between 3,000 and 8,000 years ago may have merged with or imposed their social structure on the native northern Indians and placed themselves into the highest castes.

    Analysis of the paternally transmitted Y chromosome among Indians in general indicated that the Y chromosome had a more European flavor. Maternally inherited mitochondrial DNA among Indians is more Asian than European. This suggests that the Europeans who entered India were predominantly male. _

  49. பார்பனர்களின் தாயகம் இந்தியாதான். பார்ப்பனர்களும் இந்தியாவின் தொல்குடிகள்.
    நம்பக் கடினமாக இருக்கிறதா ? என்ன செய்ய ? Genetic studies அப்படித்தானே சொல்றது :

    ” observation of R1a1* in different tribal population groups, existence of Y-haplogroup R1a* in ancestors and extended phylogenetic analyses of the pooled dataset of 530 Indians, 224 Pakistanis and 276 Central Asians and Eurasians bearing the R1a1* haplogroup supported the autochthonous origin of R1a1 lineage in India and a tribal link to Indian Brahmins. ”

    http://www.nature.com/jhg/journal/v54/n1/full/jhg20082a.html

  50. புத்தாண்டின் முதல் தினமே பார்பானிய சங்பரிவாரங்கள், கர்நாடகா பிஜாப்பூரில் செய்த சூழ்ச்சிகளை கீழே உள்ள சுட்டிகளில் காணவும்
    http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=126207(Sindhagi Town Tense as Pak. Flag Hoisted)
    http://mangaloretoday.com/mt/index.php?action=headlines&type=2572 (special investigation team)
    http://indiatoday.intoday.in/story/sri-ram-sene-activists-pakistani-flag/1/167409.html
    http://www.megamedianews.in/index.php/44924/gang-of-7-in-rama-sene-hoisted-the-pak-flag-6-arrested-one-absconds/

  51. and jaathingra vishayam oruthar solli,innoruthar kettu ellam vandhadhu kedayathu.Enna porutha varaikkum endha paarpanum raja raja chozhan kitta poi nee soothran,ennaya vida thaazhndhavanna avaru kettukittu summa iruppara.Avurey yaarayo madichu vekkirarunna avunga thane automatica paarpanan aagiriuppanga.

    basically idhula irunthu theriyira vishayam ennana,vetti paya,somberi,communist,poi uzhaikka thayara illadhavan,govt kaasula ukkandhu saapidanumnu nennaikiravan ivungalam thaan indha madhiri conspiracy theory ezhuthikittu thirivanga.

  52. “இதுவல்ல சுதந்திரம்”

    தலையங்கம்:இதுவல்ல சுதந்திரம்!

    First Published : 11 Jan 2012 03:58:42 AM IST

    கடந்த நூற்றாண்டில் உலகில் எத்தனை எத்தனையோ நாடுகளில் சுதந்திரப் போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வெற்றியடைந்து சுதந்திரம் கிடைத்த நாடுகள் பல. ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்தைப்போல வித்தியாசமான போராட்டம் அமையவில்லை. இந்த அளவுக்குக் கனவுகளுடனும், லட்சியங்களாலும் அமைந்த ஒரு சுதந்திர தேசமும் கிடையாது……
    இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அந்த உரிமைகள் வழங்கப்பட்ட அதிசயத்தை உலகமே பார்த்து வியந்தது. பரிபூரண பேச்சுரிமையும், எழுத்துரிமையும் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.
    ……………………………………………………………………………………….
    நல்ல தலையங்கம். பாராடுக்கள்- நன்றி.

    “மனுசனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே! இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை? “- நீதி கேட்டு நிற்கும் பிராமணரல்லாத சாதி அர்ச்சகர்கள்…….

    ஹி… ஹி…ஹி…. நீதி மன்றத்தை எந்தச் சுதந்திரமின்மை மௌநியாக்கி உள்ளது. பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது. அது “இதுவல்ல சுதந்திரம்’ என்பதை! -பாருக்குள்ளே நல்ல நாடு – நம் பாரத நாடு???????????????????????

  53. பதில்சொல்வார்களா மௌனி/ மிதவாதியாக உள்ள தலைவர்களும்/ பத்திரிகைகளும்???-

    நாம் கட்டிய கோயில்களில்- ஆண்டவனை அர்ச்சனை செய்து, அணைத்து பிறப்புக்களும் ஆண்டவன் முன் சமம் என்னும் தன்னம்பிக்கையை தடுப்பது, யாரிடம் சிறைபட்டிருக்கும் சுதந்திரம்???

    பதில்சொல்வார்களா மௌனி/ மிதவாதியாக உள்ள தலைவர்களும்/ பத்திரிகைகளும்???- பிரசுரித்தால் கோடி நன்றி சொல்வோம் – நிமிர்ந்த நடை,நேர்கொண்ட பார்வை- நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் தரும் பத்திரிகை தர்மத்தை கடைபிடிப்பதில்- தினமணி முதல்வன்/தலைவன்/ மக்கள் வழிகாட்டி என்று – இன்றையத் தேவை ஒன்றுபட்ட தமிழர் இயக்கம் (United Tamil Front).

  54. இந்துத்துவம் வேண்டாம்.சரி.பள்ளத்துவம்,பறையத்துவம் அல்லது சக்கிலியத்துவம் இவற்றில் எதை வைத்துக்கொள்ளலாம்?

Leave a Reply to புனிதன், பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க