privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபார்ப்பன சிவச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம்!

பார்ப்பன சிவச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம்!

-

டலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருதகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 5 வருடங்களாக ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட விழாக்காலத்தின் போதும், தினசரி இரவு 8.30 மணி அர்த்த ஜாம பூஜையின் போதும் பழம்பெரும் இசைக்கருவிகளான உடன், கொம்பு, சங்கு, நெடுந்தாரை, எக்காலம், உடுக்கை  போன்ற கைலாய இசைக்கருவிகளை வாசித்து சிறுவர்கள் இளைஞர்கள் ஆன சிவனடியார்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.

இந்த இசையின் காரணமாக இரவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. சாதாரண உழைக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இது அர்ச்சகர்களான  கோயில் சிவாச்சாரியார்கள் கண்ணை உறுத்தியது. ஊர் பெரிய மனிதர்கள் சிலரின்  மூலம் கோயில் நிர்வாக அதிகாரியிடம்  அதிக சத்தமாக இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கொடுத்த  புகாரின் மூலம் மேற்படி சிவனடியார்கள் இசைக்கருவிகளை வாசிக்க கூடாது என 13.07.2011 தடை விதிக்க பட்டது.

நிர்வாக அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக சிவனடியார்கள் விழுப்புரம் இணை ஆணையரிடம் முறையீடு செய்தனர். ஆறு மாதமாக சிவனடியார்கள் அலைந்தது தவிர  எந்த பலனும் ஏற்படவில்லை. மனம் தளராத சிவனடியார்கள் இறுதியில் மனித உரிமை பாதுகாப்பு மையத்திடம் வந்து சேர்ந்தனர். ஆறு மாதமாக கோயிலில் இசைக்காமல் சிவனடியார்கள் சோர்வுற்றுள்ளனர். மனுவைத் தூக்கிக் கொண்டு இனிமேலும் எங்களால் அலைய முடியாது. ஆருத்ரா தரிசனம் அன்று (08.01.2012) சாமி புறப்படும் முன்பு நாங்கள் வாசிக்க வேண்டும். காவல் துறை கைது செய்தாலும் பரவாயில்லை. நாங்கள் இறை தொண்டிற்காக சிறை செல்லவும் தயார்.  மனித உரிமை பாதுகாப்பு மையம் எங்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆதரவு கொடுத்தோம்.

நேற்று ஆருத்ரா தரிசனத்தின் போது சிவாச்சாரியார்கள் சாமி பல்லக்கை தூக்கி புறப்பட்டனர். சிவனடியார்கள்  இசைக்ருவிகளை வாசிக்க துவங்கியவுடன் ஆத்திமடைந்த சிவாச்சாரியார்கள் நடராஜர் சாமியை கோவில் உட்பிரகாரத்தில் செல்லும் வழியிலேயே அப்படியே கீழே இறக்கி வைத்து விட்டு, சிவனடியார்கள் வாசிப்பதை நிறுத்தினால்தான் சாமி புறப்பாடு என கூறி தரையில் அமர்ந்து கொண்டனர். சிவனடியார்களும் பல்லக்கு புறப்பட்டால் வாசிப்போம் என உறுதியாக நின்றனர்.

போலீசார், கோவில் நிர்வாக ஊழியர்கள், சிவாச்சாரியார்களுக்கு ஆதரவான ஜால்ராக்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் சிவனடியார்கள் பின்வாங்காமல் உறுதியாக இருந்தனர். நின்றிருந்த பொதுமக்கள் சிவனடியார்கள் வாசிக்கலாம் எனவும் பிரச்சனை வேண்டாம் சாமிக்கு வழிவிடுங்கள் எனவும் இரண்டாக பிரிந்தனர். பிரித்தது மனித உரிமை பாதுகாப்பு மையம். சுமார் இரண்டு மணி நேரம் நடராஜர் என்ன செய்வது என்று தெரியாமல் சிவாச்சாரியார்களுக்கு பின்பு பல்லக்கிலே காத்திருந்தார்.

அ.தி.மு.க நகர செயலாளர்கள் பா.ம.க கவுன்சிலர், ஒயின்ஷாப் ஓனர் ஆகியோர் சிவனடியார்களை பலவந்தமாக அப்புறப்படுத்த முயன்ற போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், செந்தில், காசி விசுவநாதன், மற்றும் நிர்வாகிகள்  தடுத்தனர்.  வேடிக்கை பார்க்கும்  போலீசாரிடம் வாக்கு வாதம் செய்தனர். நிருபர்கள் புகைப்படம் எடுக்க முயற்சித்ததால் கைகலப்பு கட்டுப்பாட்டோடு நின்றது. திராவிட கழக நகர செயலாளர் இளந்திரையன் ஆகியோர் வந்தவேலை முடிந்ததா என அ.தி.மு.க வை கண்டித்தனர். சிவனடியார்கள் இசைக்கருவிகளை வாசிக்கவும் தங்களை பலவந்தமாக அப்புறப்படுத்திய அ.தி.மு.வினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாண்கிடையாக படுத்து போராட்டம் நடத்தினர். இச்சூழலில்தான் பல்லக்கு புறப்பட்டு சென்றது.

மனித உரிமை பாதுகாப்பு மையம், காவல் துறை அதிகாரியிடம் இசைக்கருவிகளின் மூலம் இறைவனை வழிபட யாருடைய அனுமதியும் தேவையில்லை. அதற்கு யாரும் தடையும் விதிக்க முடியாது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இதே கருவிகள் வாசிக்கப்படுகிறது அதற்கு அரசு சம்பளமும் கொடுக்கிறது. அதுபோல் சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் வாசிக்கப்படுகிறது. அங்கெல்லாம் பொதுமக்களுக்கு ஏற்படாத இடையூறு விருத்தாசலம் கோவிலில் மட்டும்  இடையூறு என்று நிர்வாக அதிகாரியின் உத்தரவு ஒருதலைபட்சமானது உள்நோக்கம் உடையது. சிவனடியார்கள் செய்வது தவறு என்றால் காவல் துறை கைது செய்யட்டும். அ.தி.மு.க வினர் தலையீடை அனுமதிக்க முடியாது  என வாதிட்டனர்.

அருகிலிருந்த சிவாச்சாரியார்கள்  இந்த கோயிலின் ஆகமபடி இந்த இசைகருவிகள் வாசிக்க கூடாது என வாதிட்டனர். ஆறு வருடங்களாக தடுக்காத ஆகமம் இன்று ஏன் தடுக்கிறது. நீங்கள் ஆகமத்தை மீறிவிட்டார்கள் என  புகார் கொடுங்கள் அதையம் பார்த்து விடுவோம் என வழக்கறிஞர்கள் பேசினர். காவல் துறையினரும், கோயில் நிர்வாகிகளும், சிவாச்சாரியார்களும் ஊர் முக்கியஸ்தர்கள் சிலரும், செய்வதறியாது நின்றனர். விழித்துக் கொண்ட காவல் துறை சிவனடியார்கள் பிரச்சனையை சுமுகமாக தீர்க்க உதவும் படி வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டது. இசைக்கருவிகளுடன் சிவனடியார்களின் உள்ளிருப்பு போராட்டம் மனித உரிமை பாதுபாப்பு மையத்தின் ஆதரவுடன் இரவு 8.30 மணி வரை தொடர்ந்தது.

விருத்தாசலம் நகர் மன்ற தலைவர் அ.தி.மு.க வை சேர்ந்த ஆர்.டி.அரங்கநாதன் கோயில் நிர்வாகிகள், சிவனடியார்கள், என பல தரப்பில் பேசி இன்றைக்கு  வாசிக்க வேண்டாம்,  நாளை கோட்டாச்சியர் தலமையில் அமைதி பேச்சு வார்த்தை மூலம் முடிவு செய்வோம். மீறி இசைத்தால் கோயில் நிர்வாகம் எதிராக போகும் என எச்சரித்தார். அவர் ஒரு கோயிலுக்கு சொந்தக்காரர். அதோடு கரகாட்டம் ஆடும் பூசாரியும் ஆவார்.  சிவனடியார்களோ சிறுவர்களாக இருந்தாலும் இசைக்காமல் இங்கிருந்து போகமாட்டோம் என உறுதியுடன் வாசித்த பிறகுதான் கோயில் சாத்தப்பட்டது.

சிவனடியார்கள் மனித உரிமை பாதுகாப்பு மையம் இல்லையென்றால் எங்களை இன்று தூக்கி வெளியே போட்டிருப்பார்கள் என மனம் நெகிழ்ந்தனர். போராட்ட செய்தி கேள்விபட்டு அருகாமை ஊரில் உள்ள சிவனடியார்கள் 50 க்கும் மேற்பட்டோர் நேற்று  இரவு பூஜைக்கு வந்து சேர்ந்தனர். இறைவனை வழிபடும் உரிமையை போராடி பெற்ற மகிழ்ச்சியை அனைத்து சிவனடியார்கள் முகத்திலும் பார்க்க முடிந்தது. தொடந்து விருத்தாசலம் கோவிலில் இசை்கருவிகளை வாசிக்கும் உரிமையை நிலைநிறுத்திட  போராடும் சிவனடியார்கள் முதியவர்கள் அல்ல, இளைஞர்கள். எனவே விரைவிலேயே இந்தப் போராட்டம் வெற்றிபெறும்.

இந்த இசைக்கருவிகளை வாசிப்பதில் தலித், மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர் உள்ளனர். இவர்களையும், இவர்களது இசைக்கருவிகளையும் பார்ப்பன சிவாச்சாரியர்கள் இழிவாகவும், மட்டமாகவும் கருதுவதில் வியப்பில்லை. ஏதாவது ஒரு சாக்கினைச் சொல்லி தடுத்து விடலாம், நடப்பது மயிலாப்பூர் மாமியின் ஆட்சி என்று அவர்கள் நினைக்க அது போலவே மாமியின் அடியாட்படையான அ.தி.மு.கவும் உதவிக்கு வந்தது. ஆனால் இளைஞர்கள் உறுதியாக இருக்கவே அந்த உறுதிக்குப் பின்னால் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அரணாக இருக்கவே பார்ப்பன சூழ்ச்சி பலிக்கவில்லை.

ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இந்த ஆத்திகர்கள் நாத்திகர்களின் உதவியை ஏன் நாடுகிறார்கள் என்பதிலிருந்தே இந்து மதம் என்பது பார்ப்பன ஆதிக்க சாதியினரது மதம் என்பதையும், இதே உதவியை ஆர்.எஸ்.எஸ் இடம் கேட்டால் கிடைத்திருக்காது என்பதையும் இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.

அந்த வகையில் ஒடுக்கும் இந்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்றால் ஒடுக்கப்படுபம் ‘இந்துக்களுக்கு’ நாம்தான் பாதுகாப்பு!

—————————-

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாச்சலம்

  1. மகர ஜோதி உற்சவத்தின் போது, அங்குள்ள பொன்னம்பலமேட்டில், மலையர சமுதாயத்தினர் (ஆதிவாசிகள்) ஒவ்வொரு ஆண்டும் மகர விளக்கு ஏற்றுவர். நேற்றுமுன்தினம் பேட்டி அளித்த தேவஸ்வம் போர்டு தலைவர், ராஜகோபாலன் நாயர், ” “பொன்னம்பலமேட்டில் தேவஸ்வம் நியமிக்கும் அர்ச்சகர் (சாந்திமார்) தான் தீபாராதனை காட்டுவார். மலையரரை அனுமதிக்க மாட்டோம்’ என்றார். இது முன்னர் கோர்ட்டில் தெரிவித்த தகவலுக்கு மாறாக இருந்ததால், அது மலையரர் சமுதாயத்தினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பொன்னம்பல மேட்டில், தாங்களும் தீபம் ஏற்றப்போவதாக தெரிவித்தனர்.

    தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் வசிக்கும் மலையரர் சமூகத்தினர், தேவஸ்வம் போர்டிடம் விண்ணப்பித்தனர். அத்துடன், மகர ஜோதி தினத்தன்று பொன்னம்பலமேட்டில் தீபாராதனை காண்பிக்கப்போவதாக கூறி, எருமேலி சந்திப்பில் இருந்து பேரணியாகவும் புறப்பட்டுச் சென்றனர். இதனால், இவ்வாண்டு சபரிமலையில், இரண்டு மகர விளக்கு தீபாராதனை காட்டப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    தீண்டாமை நெருப்பிலும் தொடர்கிறது. ஆதிவாசிகள் ஜோதியைக் காட்டும் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்கக்கூடாது. அதைத்தடை செய்யும் பிராமணர்களின் சாதிக்கொழுப்பை அடக்க, பதினெட்டு படிமேல் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் ஐயப்பனின் கருவரைக்குள்ளும் நுழைந்து தங்களின் போராட்டத்தை விரிவாக்கவேண்டும். ஆதிவாசிகள், தேவசம் போர்டில் நியாயம் கேட்பதைத் தவிர்த்து,போராடவேண்டும். நீதிமன்றங்களை அணுகவேண்டும்.

  2. பார்ப்பன பாம்புகள் சீறத் தொடங்கிவிட்டன. பாம்பைத் துண்டு துண்டாக வெட்டவில்லை என்றால் ஊரில் தமிழன் நடமாடக்கூட முடியாத நிலை ஏற்படும். தொடங்கி வைத்த ம.உ.பா.மையத்துக்கு பாராட்டுகள்.

  3. சுடலையில் நடமாடும் சிவபெருமான் எத்தனையோமுறை தான் எளியவர்களின் கடவுள் என்று உணர்த்தினாலும் மண்டைக்குள் ஏறுவதில்லை இந்த சிவாச்சாரியார்களுக்கு.

  4. சென்ற ஆண்டு திருவரங்கத்தில் நாம பார்ப்பனர்களுக்கு ஆப்பு வைத்த முற்போக்கு இயக்கங்கள்… இந்த ஆண்டு திருமுதுகுன்றத்தில் பட்டை போடும் பார்ப்பனர்கள் ஆப்பு… படிக்கவே மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது…

  5. சரி ஜெயமோகன் தளத்தின் மூலம் வந்து தொலைத்துவிட்டேன், இந்தக் கட்டுரையையும் படித்துவிட்டேன். என்னவோ மூச்சுக்கு மூச்சு பார்ப்பனர் என்றால் பிறப்பைக் குறிப்பது இல்லை என்று நீங்களும் உங்கள் ரசிகர்களான அரை டிக்கெட், பகத், கலக்கம் மற்றும் பலரும் வாதிடுவீர்களே, இந்தப் பதிவில் “பார்ப்பன சிவாச்சாரியார்கள்”, “மயிலாப்பூர் மாமி” போன்ற சொல்லாட்சிகள் பிறப்பால் பார்ப்பனர் என்பதை குறிப்பிடாமல் உங்கள் ஸ்பெஷல் வரையறையை தரும் பொருளில் பயன்படுத்தப்படவில்லையே? உங்களுக்கு வந்திருக்கும் மறுமொழிகளில் “பார்ப்பன பாம்புகள்”, “நாம பார்ப்பனர்கள்”, “பட்டை போடும் பார்ப்பனர்கள்” என்பதெல்லாம் பிறப்பை குறிக்காமல் எதை குறிக்கின்றன?

    (மீண்டும்) ஆர்வி

    • ஆர்.வி,

      தேவர் சாதி வெறி, கவுண்டர் சாதி வெறி, வண்ணியர் சாதிவெறி, பார்ப்பன சாதி வெறி இது எல்லாம் அந்தந்த சமூகத்து மக்களை குறிப்பதே, மற்ற சமூகத்தினரின் சாதிவெறியை இந்த சொற்களை வைத்து வினிவில் பதிவு வந்துள்ளது, அங்கே உங்கள் முறையீட்டைத்தான் காணோம்.

      இந்த கோயிலில் பூணூலை மாட்டிக்கொண்டு சிவாச்சாரியாராக இருக்கும் பார்ப்பனக்கூட்டம் தானே பார்பனர் அல்லாதோர் மீது ஒடுக்குமுறை செலுத்தியது. இதை வேறு எப்படி எழுதுவது? உங்கள் பின்னூட்டம் நடந்த இந்த நிகழ்வைப்பற்றி ஒரு சொல் கூட பேசாத மருமம் என்னவோ?

      ///பார்ப்பனர் என்றால் பிறப்பைக் குறிப்பது இல்லை ////

      பார்ப்பனியம் என்பது பார்ப்பன சமூகத்தை ‘மட்டும்’ குறிப்பது அல்ல என்று தோழர்கள் கூறுவார்கள்

  6. ஊசி, பல முறை மாய்ந்து மாய்ந்து பக்கம் பக்கமாக இரண்டு வருஷங்களுக்கு மேலாக பின்னூட்டம் எழுதித் தள்ளிவிட்டேன். ஒன்று ஒன்றரை வருஷம் முன்னால் இங்கே அதிகமாக பிநூட்டமிட்டதே நானாகத்தான் இருக்கும். முடிந்தால் படித்துக் கொள்ளுங்கள், மர்மம் விலகிவிடும்.

    • இங்கே குறிப்பான பிரச்சனை பார்பனர் V/S பார்பனரல்லாதோர் என்று பிளாக் அண்ட் ஒயிட்டாக இருக்கிறது. அதை குறிக்கும் போது பார்ப்பன சாதி வெறி என்று எழுதுவதில் என்ன பிரச்சனை, இந்த சம்பவத்தை பற்றி என்ன கருத்து, உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை கேட்டேங்க

  7. நாழிதள்களில் வெளிவராத செய்தி (நான் பார்க்கலையோ என்னவோ)… ஒரு வேலை நக்கீரன் கவர் ஸ்டோரி போடுவானோ… ? அதுக்குள்ளே அவனை தூக்கி உள்ள போடாம இருந்த பார்க்கலாம் 🙂

    அது என்ன ஆத்திகர்களுள் ஒடுக்கப்பட்டவன், ஒடுக்கப்படாதவன் என்ற உட்பிரிவு வேறு… அத்தனை பேரும் மூடநம்பிக்கை பழமை வாதிகள் தான்… முதியவர்களை தான் திருத்த முடியவில்லை… இந்த இளைஞர்களின் மூட நம்பிக்கையாவது களைய முயன்றிருக்கலாமே… தீயாய் எறியும் ஆத்திக உணர்வு மூட நம்பிக்கைக்கு ஊதுகோலாய் இருக்காதீர்… அந்த வாத்தியக்கருவிகளின் வாசிப்பில் கிடைக்கும் இசையை முதலீடு செய்து பெரும் அரங்கங்களில் சில அரிவை, தெரிவை அட அட்லீஸ்ட் ஒரு சில பேரிளம்பெண்களாவது சேர்த்து கொண்டு, சில ஆடிக்களைத்த கிழித்த, கிழிபட்ட கிழத்திகளை நடுவராய் கொண்டு,மானாட மயிலாட என்று முக்கி முனகி ஆடுவதர்கேற்ப வாசிக்க ஏற்பாடு செய்து கொடுங்கள்… அவர்கள் பிழைப்புக்குதவும்… காணொளி பெட்டி முன் இக்காட்சி கண்டு கழித்து தமிழிணம் தம் பிறவி பயன் பெரும்…

    அப்புறம் மெயின் சப்ஜெக்டை ஏன் மிஸ் பண்ணீங்க… தொகுதி எம்.எல்.ஏ என்ன ஆனார்?

    • //அது என்ன ஆத்திகர்களுள் ஒடுக்கப்பட்டவன், என்ற உட்பிரிவு வேறு… //

      இது தெறியவில்லையா? கோவில் கருவரைக்கு உள்ளே இருந்து நான் தான் கடவுளின் “தலை”மகன் என்று சொல்லுவோர் ஆத்திகர்களுள் ஒடுக்கப்படாதவன். வெளிய இருந்தவாரு அதை இன்னமும் நம்பும் மனிதன் ஆத்திகர்களுள் ஒடுக்கப்பட்டவன்.

      என்னது கோவில்கலில் பழந்தமிழ் இசை வாத்தியங்களை வாசித்தால் அது மூடநம்பிக்கையா? வாசித்த இளைஞர்களுக்கு மூடநம்பிக்கை பேய் பிடித்துள்ளதா? உங்க காமடிக்கு எல்லையே இல்லிங்க.

      //அந்த வாத்தியக்கருவிகளின் வாசிப்பில் கிடைக்கும் இசையை முதலீடு செய்து பெரும் அரங்கங்களில் சில அரிவை, தெரிவை அட அட்லீஸ்ட் ஒரு சில பேரிளம்பெண்களாவது சேர்த்து கொண்டு, சில ஆடிக்களைத்த கிழித்த, கிழிபட்ட கிழத்திகளை நடுவராய் கொண்டு,மானாட மயிலாட என்று முக்கி முனகி ஆடுவதர்கேற்ப வாசிக்க ஏற்பாடு செய்து கொடுங்கள்… அவர்கள் பிழைப்புக்குதவும்… காணொளி பெட்டி முன் இக்காட்சி கண்டு கழித்து தமிழிணம் தம் பிறவி பயன் பெரும்…//

      எப்படி உங்க பரத நாட்டிய அரங்கேற்றம் போலவா? இன்னமும் சொல்ல போன எங்கள் நாட்டிய கலையை திருடி அதற்கு பாரததின் நாட்டியம் என்று பரதனுக்கு அற்பனித்த உத்தமர்கள் அல்லவா நீங்கள். நாங்க எங்கள் இசயை உங்களை போல் பிழைப்புக்காக வாசிப்பதில்லை நாங்கள் என்றைக்கும் அதை ஒரு கலையாக தான் போற்றுகிறோம். பிழைப்புக்காக நடத்துவோர் தான் தங்களுக்கு தானே நாட்டியா சகாப்தம், சங்கித பூசனம் என்று பெயர் வைத்திக் கொள்வார்கள்.

      //காணொளி பெட்டி முன் இக்காட்சி கண்டு கழித்து தமிழிணம் தம் பிறவி பயன் பெரும்…//

      நாங்க எங்க பிறவி பயன பத்தி யோசித்து கொல்கிறோம். நீங்க வளக்கம் போல என்னது நாட்டிய கலையை தமிழர்களிடம் இருந்து திருடினோமா என்று அதிர்ச்சி அடைந்து உனர்ச்சி பொங்க என்ன அரவேக்காடுனு சொல்லி மறுமொழி எழுதுங்க.

  8. //சுமார் இரண்டு மணி நேரம் நடராஜர் என்ன செய்வது என்று தெரியாமல் சிவாச்சாரியார்களுக்கு பின்பு பல்லக்கிலே காத்திருந்தார்.//

    🙂

  9. அதிக எண்ணிக்கையில பின்னூட்டம் போடுறதெல்லாம் சாதனையாங்க.என்ன கருத்து சொல்றோம்,அது ஒடுக்குபவர்களுக்கு ஆதரவானதா ஒடுக்கப்படுபவர்களுக்கு ஆதரவானதா,அதனால் யாருக்கு பயன்கிறதுதானே முக்கியம்.

    அப்படி எண்ணிக்கை பாக்கறதா இருந்தா அதுல முதலாளித்துவம கண்டெடுத்த முத்து,சோதிடர் குல திலகம் அண்ணன் அதியமான யாரும் மிஞ்ச முடியாது.

    அன்பு

  10. உண்மைதான். மூட நம்பிக்கைகளில் ஊறிக் கிடக்கும் இந்த சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களை ஒடுங்கியவர்களாகவே வைப்பதற்கு இந்த கோயில்களும் அதனைச் சார்ந்த பழக்கவழக்கங்களும் மிகவும் துணைபுரிகின்றன. இங்கே ஆகமவிதிகளின் படியல்லாமல் பொதுவான முறைப்படி வழிபாடுகள் செய்தாலும் அதுவும் தவறான போக்கே. உங்கள் நோக்கத்தை தெளிவுபடுத்தி விடுங்கள். நீங்கள் செய்தது இறைவனை பார்ப்புகளிடம் இருந்து பொதுமக்களிடம் சேர்க்கவா( அது மேலும் அவர்களை மூட நம்பிக்கை வழிப்படுத்தும். ஏனெனில் இறைவனுக்காக இங்கே நாத்திகர்களும் போராடுவதால் இறைவனுக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்கிறது), அல்லது வெகுஜனத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்வதா( அப்போது ‘உங்களை வேண்டாம் என்ற கடவுளை நீங்களும் மறுதலியுங்கள்’ என்று இவர்களிடம் கூறுவதே சரியாக இருக்கும்).

  11. அந்த சாமி விக்ரஹங்களை செய்தது யார்? அது போட்டிருக்கும் நகைகளை கொடுத்தது யார்? கோயில்களை யார் கட்டியது? பல்லக்கை செய்தது யார்? இவர்கள் வாசிக்கும் வாத்தியங்களை செய்தது யார்?பாப்பான் எப்படி இதில் நுழைந்து நம்மிடையே பிரிவை உண்டாக்கி வேண்டியதை சாதித்து கொள்கிறான்?இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களும் பாப்பானை துரத்தும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    • ஓசியில செய்யனுமாடா உங்களுக்கு? எந்த தொழிலும் சாமியை நம்பியோ கோவிலை நம்பியோ இல்லை.தொழிலாளியை அழைத்து கோயிலை கட்டிவிட்டு உனக்கு மறுபிறவியில் புண்ணியம் சேரும் என்று நாமத்தை போட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாதானே நிச்சயம் நடந்திருக்கும்.

    • சரி சம்பளத்த சுப்ரமநியோட தாத்தா திருநெல்வேலில ஏர் உழுது சம்பாரிச்சு குட்தாரா.இல்ல எந்த பார்ப்பனராவது ஆடு மாடு கோழி வளத்து சம்பாருச்சு குடுத்தார்களா.அத தமிழ் மக்கள்தான் ரத்தமும் வேர்வையும் சிந்தி சம்பாரிச்சு குடுத்தாங்க.

      • \\அந்த சாமி விக்ரஹங்களை செய்தது யார்? அது போட்டிருக்கும் நகைகளை கொடுத்தது யார்? கோயில்களை யார் கட்டியது? பல்லக்கை செய்தது யார்? இவர்கள் வாசிக்கும் வாத்தியங்களை செய்தது யார்\\

        இதையெல்லாம் பார்ப்பானும் செய்யவில்லை, எந்த கம்யுனிஸ்ட் புரட்சியாளனும் செய்யவில்லை
        ஏதோ சிற்பிகளையும், கட்டிடக்கலை வல்லுனர்களையும், வாத்தியக்கருவிகள் செய்யும் இசை வல்லுனர்களையும் ஒடுக்கப்பட்டவர்களாக சித்தரிக்க முயலக்கூடாது…
        இவையெல்லாம் கலைகள்.. இந்த கலைஞர்கள் அன்று முதல் இன்று வரை அவரவர் திறமைக்குரிய மரியாதையோடுதான் பார்க்கப்பட்டுள்ளனர்…
        ஓவியர்களும், சிற்பிகளும், இசை வல்லுனர்களும், கட்டிடக்கலை வல்லுனர்களும் கடல் கடந்து பல நாடுகள் சென்று பெரும் புகழோடு வாழ்ந்தவர்கள் என்பதை சங்க கால நூல்களில் இருந்து அறிய முடியும்…
        அனால் இன்றைய கம்யுனிச குழுக்கள் இவ்வல்லுனர்களையும் சராசரியாக ஓர் முதலாளிக்கடியில் வேலை பார்க்கும் தொழிலாளி வர்க்கமாக முத்திரை குத்தி அவர்களையும் ஊதிய உயர்வு கேட்டு போராடும் நிலைக்கு தள்ளி கலை விற்பனைக்கு என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்…
        தமிழ்நாடு போன்ற கலாச்சார தொன்மை நிறைந்த இனங்களில் கம்யுனிசத்தின் ஊடுருவலின் விளைவு இது…

        • மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
          அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
          தண்டமிழ் வினைஞர் தம்மொடுங் கூடி
          – மணிமேகலை
          சிற்பக் கலைஞரைச் சிலப்பதிகாரம் ‘மண்ணீட்டாளர்’ என்று கூறுகிறது…
          ஓவியர்கள் மதுரைக்காஞ்சியில் “கண்ணுள் வினைஞர்” என்று அழைக்கப்டுவதாக குறிக்கப்படுகின்றனர்…

  12. boss,maakan madhiri pesadheenga,adhu oru collective society and barter system.

    ellaru,ellathukkum othukittu thaan vaazhnthaanga.Raja thaan periyaalu and avaru vechathu thaan sattam.idhula koil yaaru kattuna,kalla yaaru odaichangrathu ellam vethu pechu.

    appuram naanga ellam koil sotha kollaia dichu swiss bankula ellam account vekkala.aapo ellam rendu velai saapiduvaanga,konjam arisi,konjam paruppu,keerai,marakkari,paal,thayir,vennai.Idhula appadiye economyave naanga sedachuttuma.

    anaikkum makkalukku spiritual help thevai pattichu,ippovum thevai paduthu.athai neraya peru senjanga avalu thaan.

    makkalukku kadavul nambikkai irunthathunaal thaan koilukku ponanga,saami kumbittuaanga,summa yaaro solli ellam yaarum edhuvum seyyala.

    inna thambi,idhellam thee kaa koothathula solli kudukkalaya.illa appo unga arivu kanna moodikittu iruntheengala.

    • ராசா கோவில கட்டினான் பார்ப்பான் அதுல குடும்பம் நடத்தினான். அந்த காலத்துல பழந்தமிழர்கள் எதற்கு கோவில் கட்டினாங்கனு முதல்ல தெறிந்து கொல்லுங்கள், கோவில் என்பது மக்கள் ஒன்று கூடி அவர்கள் கருத்துகளை பகிர்ந்து கொல்லவும், இளைப்பாரவும், பயனிகள் வழி போக்கில் தங்கவும் மன்னர்கலால் கட்டபட்ட ஒரு கட்டமைப்பு. அந்த கால மன்னர்கள் ஏன் சிவ ஆலயங்கலை மிகுதியாக கட்டினார்கள் என்று சொல்லுங்கள் பார்போம்? வாய் கிழிய ஆத்திகம் பேசும் நீங்கள் சைவம் மதம் என்றால் என்னவென்று சொல்லுங்கள் பார்போம்?

      அந்த காலத்துல நீங்க சொன்ன உணவு பொருள்களை எல்லாம் பன்டக மாற்றம் செய்தா வாங்கினீர்கள்? கடல்ல போய் மூழ்கி முத்து எடுப்பவன் அதில் ஒரு பங்கை அரசனுக்கும், இரண்டு பங்கை படகில் அமர்ந்து முத்து எடுப்பவன் இறந்து விடகுடாது என்று மந்திரம் ஓதுகிறேன் என்று பொய் பகட்டு கூறிய பார்ப்பனனுக்கு போய்விடும் மிதம் பாவம் தன் உயிரை துச்சமாக மதித்து கால் வயித்து கஞ்சிக்காக பாடுப்படும் அந்த மனிதருக்கு போய் சேறும். இது போன்று ஆயிரம் உதாரணங்களை சொல்ல முடியும், நாங்க என்ன ஸ்விஸ் வங்கிலயா பணம் போட்டோம் பொருளாதாரத்த செதச்சிட்டோமனு கேள்வி எழுப்பாதிர்கள், அடுத்தவன் உழைப்பை சுரன்டுவது காட்டிலும் கொச்சையானது வேறு எதுவும் இருக்க முடியாது.

      ஒருவன் இறை நிலை அடைய நீங்க என்ன உதவி செய்தீர்கள்? புத்தனும், மகாவீரரும், சித்தர்களும் உஙள் தயவை எப்பொழுதும் நாடவில்லையே. இறை அவன் என்பதின் பொருள் தான் இறைவன். கடவுள் உன்னுல் இருக்கிரான் வெளியே தேடாதே என்று சொன்ன திருமுலர் முதல் புத்தன் தொட்டு ஓசோ வரை அனைவரையும் இலிவு படுத்திய சிகாமணிகள் தானே நீங்கள்.

      கடவுள் நம்பிக்கை என்று சொல்லி சொல்லி மக்களின் தன் நம்பிக்கையை கெடுத்துவிட்டீர்கள். இப்ப இத ஒரு கருத்தோட்டமா வேற எழுதிறிங்க.

      மக்களிடம் மூடிகிடந்த அறிவு கண்னை திறந்தவர்கள் தி.க வினர். சொல்லிக்குடுத்து வருவதற்கு இது உங்கள் வேதங்கள் இல்லை பகுத்தறிவு அது ஒரு பகுத்தறிவாளனுக்கு மட்டும் தான் புரியும் உங்களை போல் வேதம் ஓதுவோருக்கு புலப்படாது.

      • கோவில்….மன்னர்களின் கடைசி புகலிடம்….

        நம்பியவர்களை நடு ஆற்றில் தவிக்கவிட்டு…கர்ப்பகிரகத்தில் உள்ளே சுரங்கப்பாதை மூலம்
        தப்பிபோன தறுதலைகள்…..

  13. arasanukku yen vari kattanum,innoru army vandhu namma naatu mela padai edukkum pothu sandai podravan thaane arasan,muthueduka ponavan alpaisula poida koodthille.

    appuram innoru vishayam,ella brahminsum koilla poojai seyyala.neraya peru arasanudaya courtla mandiringalagavum,martial kalvi sollikodukkavum,arasanudaya makkalukku arts,economics,political science solli kudukkavum irunthaanga,idhuve ungalukku theiryala,ungala porutha varaikkum panam podura modhalali ellarume mokkayan,aana vaanthula iruntha vandha factoryila uzhaikkiravan uzhaippali.

    mandhiram othurathunnala,oruthanukku nalla feeling varum.confidence varum,thannambikkai varum,idhukkaga ellam yaarum perusa onnum seyya maatanga,soru vena poduvaanga,avlo thaan.ennamo sotha vithu brahminukku kudutha maadhiri pesureenga.

    ellarume adhuthavan uzhaippa suranduravunga thaan,annaikku iruntha nelamayile yaarume soru illama sethutaannu irukkathu pancham vandhal ozhiya.sethavan ellarume onnu porla sethuruppanga illa noi vandhu sethuruppanga,anaikku irukkira soozhalla ennamo inter national commodities exchangeula vikka vendiya arisiyum paruppum naanga ellam hoarding pannura madhiri pesureenga,

    neenga sonne athe vishayatha thaan adi shankarum sonnaru,agamum brahamum onnunnu,avaru sonnathum adhe dhaan.Saiva siddhaandhatha pathi naatheekangalana neenga ellam enagaukku solladheenga.neenga padichatha naanga vaazhnnthirukkom.

    enga orru tirunelveli,saiva vazhipaatum,saiva siddhantha maakalum adhigam vaazhum idam,naane siva bhaktan,enga veetula amarnathula irunthu vandha siva lingam ellam irukku.

    Makkalidam iruntha amaidiyayum,deiva bayathayum duaitherinthu avargalai ellam arai verkaattu makkalagiyavargala maatrina perumai thee.kaavai cherum.

    neenga ellame emotional idiots,periyare thennagallu erakuraangalamnu thennanthoppai vetti pottaram,appa athula velai seeyiravaunga ellam.

    avaru thaan ivalavo sothu vechiruthaaru illa,nalla business panni ethanaiyo perukku velai kudukka vendiyathu thane.

    neenga ivalavo internet veeram kaatureengale,enga thuppaki eduthu uprising pannunga paakalam,neenga sonna vishayam ellam unmaiyya irunthiruntha inneram neenga adha senjorupeenga,

    summa whistle adikkira kunju ellam law pesa kelambituthu,englishkaaran ezhuthunna putthagatha vechu arivu valarthittu summa pagutharivunnu kadhai adikkira grouppu.

    appadi neenga sonna pagutharivu makkalai poi sernthiruntha inaikku evanum kaasu vaangikittu ottu poda maatan,kamarajara thokkadichirukka maatan,kalaignarukkum congresukkum eazhathula prachanai nadukkom bothu voteu poda maatan,adhu ellathukkum mela,periyar udhavunadha sollum vaikkom ezhavargal ellam narayana guruva follow panni inaikki ellarodayum romba inakkama irukkaanga,aana thee kaa kootathula whistle adicha kunju ellam inaikki addressey kaanumam.

    ivalavu pesura unga veeramani,arivukku arasu ellarume kalaignara oru vaarthai kekka mudiyutha,moodikittu thaana thiriyuraanga,aapuram edhukku vethu vettu.

  14. @Anbu

    dei sombu,

    enga oorla enagalukku 30 acre nelam irukku.1850 varaikkum adhula naangale erangi vivasayam panni irukkom,30-40 aadu maadu ellam vechu mechu irukkom,adhukku appuram enga nelatha leasukku kuduthu enga samsaaringa kitta inaikkum naanga paasamathana irukkom.

    ennalaye thennai maram yera mudiyum,maadu paal karakka mudiyum,thamiraparani aathula 2 mani neram neechala dikka mudiyum.

    etho tamizhnaadungrathu naala thaan summa nee solradha ellam kettukittu irukkom,

    tirunelveli,kanyakumari,thootukudi ellam periya paruppu orru thaan.anga thee kaa vum kedayathu,oru karuppu chattayum kedyathu.ellar nethiyulayum thiruneeru irukkum,naanga naanga thaan,neenga neenga thaan.

    • என்ன சுப்பிரமணி ரொம்ப கோவப்படுற.ரத்த அழுத்தம் எகுறி ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிரப் போவுது.பாத்து சூதானமா இருந்துக்க.

      விவசாய வேலையெல்லாம் பாத்தோம்னு கதை வுடுரையே.ஏர் உழுத ஒரே ஒரு பார்ப்பனரை பார்த்ததாக உன்ன போல நெஞ்சறிய பொய் சொல்லும் எத்தர்கள்தான் சொல்ல முடியும்.மனசாட்சி உள்ள யாரும் சொல்ல மாட்டார்கள்.

      அதுவும் 160 ஆண்டுகளுக்கு முன்னால விவசாயம் பாத்ததுனால தென்ன மரம் ஏறுவேன் என்று ஜம்பம் வேறு.நீங்க மரம் ஏறுவதா இருந்தா எதுக்காக அய்யா ஒரு சாதியையே மரமேறி பொழக்க வச்சீங்க.அதுவும் எப்படி.உங்க திருநெல்வேலி,கன்யாகுமரிளதா நாடார் இனப்பெண்கள் மார்மீது சட்டையே போடக்கூடாது என்று ஆட்டம் போட்ட அயோக்கிய பசங்களா.அது சரிதான்னு இப்ப சொல்லிப்பாரு. அண்ணாச்சிமாரு உங்கள செருப்பால அடிப்பாங்க.

      \\etho tamizhnaadungrathu naala thaan summa nee solradha ellam kettukittu irukkom,//

      வட நாடா இருந்தா உங்க பஜ்ரங் தள் வானரங்கள விட்டு அடிக்க சொல்லுவ.அதான.இதுவே எம் தமிழ் மண்ணின் பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்தை பறை சாற்றுகிறது.இங்க உங்க டகல்பாச்சி வேலை எப்போதும் எடுபடாதுடி.

      • // அதுவும் 160 ஆண்டுகளுக்கு முன்னால விவசாயம் பாத்ததுனால தென்ன மரம் ஏறுவேன் என்று ஜம்பம் வேறு.நீங்க மரம் ஏறுவதா இருந்தா எதுக்காக அய்யா ஒரு சாதியையே மரமேறி பொழக்க வச்சீங்க.//

        பார்ப்பான் கள்ளு குடிக்க நாடார்களை மரமேற்றினான் என்று கள்ளுக் கலயத்தைத் தூக்கி பார்ப்பான் தலையில் போடுகிறீர்கள்.

        //அதுவும் எப்படி.உங்க திருநெல்வேலி,கன்யாகுமரிளதா நாடார் இனப்பெண்கள் மார்மீது சட்டையே போடக்கூடாது என்று ஆட்டம் போட்ட அயோக்கிய பசங்களா.அது சரிதான்னு இப்ப சொல்லிப்பாரு. அண்ணாச்சிமாரு உங்கள செருப்பால அடிப்பாங்க. //

        தோள்சீலைக் கலகம் பற்றிய நூல்களையும் கட்டுரைகளையும் படித்துப் பார்த்தால் அண்ணாச்சிமாரு பார்ப்பனர்களை செருப்பால் அடிக்கவேண்டும் என்ற உங்கள் ஆசை நிறைவேற வாய்ப்பில்லை என்பது புரியும்.

        • \\பார்ப்பான் கள்ளு குடிக்க நாடார்களை மரமேற்றினான் என்று கள்ளுக் கலயத்தைத் தூக்கி பார்ப்பான் தலையில் போடுகிறீர்கள்.//

          பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்று பெரியார் சொன்னது சரியாத்தா இருக்கு.பனமரம் தென்னமரம்னாவே கள்ளுதா உங்களுக்கு நினைவு வருதா அம்பி.அவற்றிலிருந்து நூற்றுக்கணக்கான பொருட்கள் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்தன.இருக்கின்றன. அவற்றில் சில

          கொட்டான்,கடவாய் பெட்டி.வீடு கட்ட உத்தரம்,கூரை வேய அடுக்கு ஓலைகள்,பதநீர்,கருப்பட்டி, பனங்கிழங்கு.நுங்கு,பனம்பழம்.ஓலைப்பாய்,மிதியடி,வணிகசாலைகளில் பொருட்கள் கட்ட பாய் மற்றும் நார்கயிறுகள்.

          அந்த காலத்துல ஓலைவிசிறியும் பார்ப்பனர்களும் ஒட்டிப்பிறந்த ரெட்டையர் போல இணைந்தே இருப்பார்கள்.கதைகளில் படித்ததில்லையா.கள்ளுதா ஞபாகம் வருதுன்னா அது உங்கள் குற்றம் மட்டுமல்ல.அடிச்ச சோமபான,சுராபான கிறக்கம் நூற்றாண்டுகளையும் தாண்டி தொடர்கிறது.

          \\தோள்சீலைக் கலகம் பற்றிய நூல்களையும் கட்டுரைகளையும் படித்துப் பார்த்தால் அண்ணாச்சிமாரு பார்ப்பனர்களை செருப்பால் அடிக்கவேண்டும் என்ற உங்கள் ஆசை நிறைவேற வாய்ப்பில்லை என்பது புரியும்.//

          http://www.keetru.com/vizhippunarvu/mar06/kumari.php

          வழக்கமாகத் திருவிதாங்கூரில் உயர்ந்த அந்தஸ்துடையவர்களின் முன்னிலையில் தாழ்ந்த அந்தஸ்துடையவர்கள் மரியாதையின் அடையாளமாகத் தங்கள் மார்பைத் திறந்து போடுவது வழக்கம். சாதி வரிசையின் நீண்ட படிகளில், உதாரணத்துக்கு நாயர்கள், நம்பூதிரி பிராமணர்களின் முன்னிலையில தங்கள் மார்பைத் திறந்து போட்டார்கள். பிராமணர்களோ தெய்வங்களின் முன்னிலையில் தங்கள் மார்பைத் திறந்து போட்டார்கள்…. இந்த வழக்கத்தின்படி மற்ற தாழ்ந்த சாதிகளைப் போல நாடார்களும் எந்த நேரத்திலும் தங்கள் மார்பை மூடுவதினின்றும் தடுக்கப்பட்டார்கள்… நாடார் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய உடை அரையில் முழங்கால் வரை ஒரு முரட்டுத் துணியைச் சுற்றிக் கொள்ளுவதாகும் (ஹாட்கிரேவ் 59, தெற்கிலிருந்து என்ற நூலில்) 1829ஆம் ஆண்டு சாணார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்று திருவிதாங்கூர் அரசாங்கமே உத்தரவிட்டது.
          சாணார், ஈழவர், காவேரிநாவிதர், பறையர், புலையர், சாம்பவர், வள்ளுவர், சேரமர் போன்ற சாதிகளில் உள்ள பெண்கள், மேலாடை அணிவதிலிருந்து இந்து ஆதிக்க சாதிகளான நம்பூதிரிகள், நாயர்கள், வேளாளர்கள், தமிழ்ப் பார்ப்பனர்களால் தடை செய்யப்பட்டனர். அரசில் பெரும் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் முன்பு திறந்த மார்போடுதான் இருக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் மேலாடை கொண்டு மூடுவது சாதிக் குற்றமாகக் கருதப்பட்டது. தாழ்த்தப்பட்ட இந்துச் சாதியினர் இந்துக் கோயில்களுக்குச் செய்ய வேண்டிய ஊழியங்களை கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் கூடச் செய்தாக வேண்டும் என்பதைச் சட்டமாகவே வலியுறுத்தினர். மேற்காணும் இரண்டு ஒடுக்குமுறைகளும் தான் தாழ்த்தப்பட்ட மக்களிடையே பெரும் எழுச்சியைக் கொண்டு வந்ததாக திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

          சமூகத்தில் பெரும் மரியாதைக்குரிய ஒரு மனிதரிடம் ஒரு பெண் தனது மார்பைக் காட்டுவது என்பது அந்நபருக்கு சமூகம் அளிக்கும் மரியாதையாகவே கருதப்பட்டது என்று சாமுவெல் மேட்டீர் திருவிதாங்கூரின் இயல்பு வாழ்க்கை என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

          • // பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்று பெரியார் சொன்னது சரியாத்தா இருக்கு.பனமரம் தென்னமரம்னாவே கள்ளுதா உங்களுக்கு நினைவு வருதா அம்பி. //

            பெரியாரும் முன்புத்தியில்லாமல்தான் தன் தோப்பிலிருந்த தென்னைமரங்களை வெட்டினார் போல. பின்னாளில் கள்ளிறக்கும் தொழிலும், மற்ற ஏழைக் குடிமகன்களும் மதுவிலக்கால் பாதிக்கப்பட்டபோது கள்ளை இறக்கியவுடன் குடிப்பதற்கு தடையிருக்கக் கூடாது என்றும் கூறினார். மரமெல்லாம் போச்சே என்று வருத்தப் பட்டிருப்பாரோ? தெரியவில்லை.

            // அவற்றிலிருந்து நூற்றுக்கணக்கான பொருட்கள் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்தன.இருக்கின்றன. அவற்றில் சில

            கொட்டான்,கடவாய் பெட்டி.வீடு கட்ட உத்தரம்,கூரை வேய அடுக்கு ஓலைகள்,பதநீர்,கருப்பட்டி, பனங்கிழங்கு.நுங்கு,பனம்பழம்.ஓலைப்பாய்,மிதியடி,வணிகசாலைகளில் பொருட்கள் கட்ட பாய் மற்றும் நார்கயிறுகள். //

            இத்தனை பனை/தென்னை விளைபொருட்களையும் பயன்படுத்தியது எல்லா மக்களளும்தானே, பார்ப்பனர்கள்தான் நாடார்களை மரமேற்றிவிட்டது என்று எப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள்?

            // அந்த காலத்துல ஓலைவிசிறியும் பார்ப்பனர்களும் ஒட்டிப்பிறந்த ரெட்டையர் போல இணைந்தே இருப்பார்கள்.கதைகளில் படித்ததில்லையா.கள்ளுதா ஞபாகம் வருதுன்னா அது உங்கள் குற்றம் மட்டுமல்ல.அடிச்ச சோமபான,சுராபான கிறக்கம் நூற்றாண்டுகளையும் தாண்டி தொடர்கிறது. //

            விசிறிக்காக மரம் ஏறவைத்தார்கள் என்று சொல்லவந்தீர்கள் போல.

            தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்- எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன்

            http://solvanam.com/?p=2648

    • \\tirunelveli,kanyakumari,thootukudi ellam periya paruppu orru thaan.anga thee kaa vum kedayathu,oru karuppu chattayum kedyathu.ellar nethiyulayum thiruneeru irukkum,naanga naanga thaan,neenga neenga thaan.//

      எவ்வளவு பழி பாவங்களைச் செய்தாலும் திருநீறு பூசிக் கொண்டு விட்டால் அந்தப் பழி பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்கிற பித்தலாட்டத்தை விளக்கும் கட்டுரை இது. 24.6.1928 குடிஅரசு ஏட்டிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது.

      விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு-
      நீறு புனைவார் வினையை
      நீறு செய்தலாலே
      வீறுதனி நாமமது
      நீறென விளம்பும்
      சீறு நரகத்துயிர்
      செலாவகை மருந்தாய்க்
      கூறுடைய தேவிகையில்
      முன்னிறை கொடுத்தார்.

      இதன்பொருள்:- திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில் உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒருமருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு என்பதாம்.

      சிவபுராண புளுகு

      கதை:- ஒரு காலத்தில் மகா பாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயுசு முடிவிலே, யம தருமராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடுகிறதற்குத் தூதர்களை அனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை போட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும் தலையிலும் ஏறி மிதித்துக் கொண்டு போய் விட்டது. அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம்பல் அவனுடைய மார்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக் கண்டு யமதூதர்கள் கிட்டப் போக பயந்து விலகி விட்டார்கள். உடனே சிவகணங்கள் வந்து அவனைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள் என்று சிவபுராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

      பாவத்திற்குப் பரிகாரம்

      தெளிதல்: இதை வாசிக்கிற என் ஜென்மதேசவாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும், கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத்துவம் எத்தனை? சிவனும் சக்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவவினை தீர அதைத் தரித்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறதே. இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன்றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால் தாங்கள் அன்றாடம் செய்கிற பாவகருமம் தொலைந்து போம் என்றெண்ணார்களோ!

      அப்படியே தாங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டுவிட்டாலும், தாங்கள் சாகும்போது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும் தங்கள் முறையார் தங்களை தகனிக்கக் கொண்டு போகிறபொழுது, எப்படியும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்கமாட்டார்களா?

      நன்றி.விடுதலை நாளேடு.

  15. பிராமின்ஸ் அரசனுடைய கோர்ட்ல மந்திரிங்களாகவும் ,martial kalvi சொல்லிகொடுக்கவும்,அரசனுடைய மக்களுக்கு ஆர்ட்ஸ்,எக்கனாமி,பொலிடிகல் சயின்ஸ் சொல்லி குடுக்கவும் இருந்தாங்க…….சுப்ரமணியம் சார் எனக்கு சுத்தமா புரியல அடுத்து வெள்ளைக்காரன் ஆட்சியில் அவனுக்கும் நீங்க தான் இதையெல்லாம் சொல்லி கொடுத்தீங்களா? உங்க எக்கனாமிக்சும் சைன்சும் எங்களுக்கும் தெரியும் அப்பு உழைக்காமல் சாப்பிடுறது எக்கனாமிக்சு மற்றும் ராகு என்கிற பாம்பு சந்திரனை முழுங்குறது சைன்சு.அப்புறம் நீங்க மந்திரியா இருந்த போதுதான் இந்த குலக்கல்வி அப்படீன்னு ஒன்னு கொண்டு வந்து பெரியார் கிட்டே உதை வாங்கிகொண்டு ஓடினதா சொல்வாங்க……அந்த மார்ஷல் ஆர்ட்ஸ்……. கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணறீங்க.

  16. boss ungalukku yaaro thappu thappa history ellam solli kuduthaanganna adhukku naan poruppu kedyatahu.Thee Kaa koothathula ukkantha biased information kedaikkumngrathu thappu kedyatahu.

    Ella brahminsum priests kedyatahu,ungala porutha varaikkum teacher,professor,businessman ivunga ellam somberinga.naama ellarum 1000 varushathukku munnadi irukkura madhiri poi subsistence farming senju pozhaikkanum,appo thaan ulagathula needhi thazhaikkum.

    ungalukku aazh manasula veruppu iruntha summa umizhnthu kottunga,onnum thappu illa.adhukkaga unga emotionakukku justification ellam sappai madhiri kudukaatheenga,romba comedya irukku.

  17. maharadeepam 365 kattunnakuda tamilnattu bhaktan thiruntha mattaan .avanaikuda mannikkalam kodikkankana makkalai yematra uruthunai iruntha bolicommunist kootathai yethai vaithu adippathu. patpanaiveda bayangaravathikal.

Leave a Reply to அன்பு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க