ஜெயலலிதா-கருப்பு-கொடி-14
கூடங்குளம் அணு உலையை மூடு!
வெறியாட்டம் போடும் போலீசை திரும்பப் பெறு!
ம.க.இ.க, பெ.வி.மு தோழர்கள்
சீரங்கத்துக்கு வந்த பாசிச ஜெயலலிதாவுக்கு
கருப்புக் கொடி!

ஜெயலலிதா-கருப்பு-கொடி-14மேலும் படங்கள் இங்கே

திருச்சி விமான நிலையத்திலிருந்து சீரங்கத்துக்கு ஜெயலலிதா வந்து கொண்டிருந்த போது, வரும் வழியில் டோல்கேட்டில் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள். அம்மாவை வரவேற்பதற்காக சென்று கொண்டிருந்த அ.தி.மு.க பொறுக்கிகள், தோழர்களைச் சூழ்ந்து கொண்டு மிருகத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க ரவுடிகளுக்கு தோழர்களைப் பிடித்துக் கொடுக்கும் வேலையினை கியூ பிரிவு போலீசு எலும்பு தின்னிகள் செய்தனர்.  கட்டையால் மண்டையில் தாக்கப்பட்ட பெண் தோழர்கள் ரத்தம் வழிய போராட்டத்தை தொடர்ந்தனர்.

எத்தனை பேர் சூழ்ந்து கொண்டு அடித்தபோதிலும் எதிர்த்துப் போராடிக் கொண்டே முழக்கமிட்டார்கள தோழர்கள். அம்மாவின் கண்ணில் கருப்புக் கொடி பட்டுவிட்டால், தங்கள் கதி அதோகதிதான் என்பதால், நடுக்கம் கொண்ட பேடிகளான அதிமுகவினரும், போலீசும் தோழர்களை அமுக்கிக் கைது செய்தனர். சுமார் 25 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஊடகங்களுக்குத் தெரியாமல் தடுத்துவிட வேண்டும் என்ற அதிமுக அடிமைகளின் முயற்சி பயனற்றுப் போனது.

கூடங்குளம் இடிந்தகரை மக்களுடைய போராட்டத்தை ஆதரித்தும் பாசிச ஜெ அரசின் போலீசு ஆட்சியை எதிர்த்தும் தங்களது போராட்டம் தொடரும் என்று ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புகளும் அறிவித்திருக்கின்றனர்.

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: