privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள்- 01/10/2012

ஒரு வரிச் செய்திகள்- 01/10/2012

-

செய்தி: அ.தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் தி.மு.க.,தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் தெரிவித்தார்.

நீதி: நில மோசடி வழக்குகளுக்காக உடன்பிறப்புகள் குடியிருக்கும் சிறையிலா போராட்டம்?

____________

செய்தி: “”நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் இருந்து, மக்கள் கவனத்தை திசை திருப்பவே, காங்கிரஸ் கட்சி, என் மீது புகார்களை வாரி இறைத்துள்ளது,” என, மகாராஷ்டிர மாநில, “மாஜி’ துணை முதல்வர் அஜித் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

நீதி: சரி, நீங்களும் திசை திருப்ப யார் மீதாவது புகார் கொடுங்கள். உங்கள் போட்டியில் உண்மைகள் வெளிவரட்டும்!

___________

செய்தி: விரைவில் மாற்றம் செய்யப்படவிருக்கும் ஆளும் காங்கிரஸ் அரசில் அமைச்சர் பதவி எங்களுக்கு வேண்டாம் என்று சொல்வதற்கென முடிவு எடுப்பது தொடர்பாக தி.மு.க, அவசர செயற்குழு இன்று காலையில் அறிவாலயத்தில் கூடியது.

நீதி: இல்லையேல் கோபாலபுரத்திற்கும், சிஐடி காலனிக்கும், மதுரைக்கும் வேளச்சேரிக்கும் உலகப்போரே மூண்டிருக்கும்! பிழைத்தார் கருணாநிதி!

___________

செய்தி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங். கட்சி டில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

நீதி: கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு இடம்பெயர்ந்திருக்கும் இந்த சலிப்பூட்டும் நாடகத்தை ஆர்ப்பாட்டம் என்று அழைப்பது நடிப்புக் கலையை இழிவுபடுத்துவதாகும்.

___________

செய்தி: சென்னை:தமிழக இளைஞர் காங்கிரஸ், மாநிலத் தலைவராக யுவராஜா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீதி: தேர்வு செய்யப்படாதவர்கள் தி.நகரில் வேட்டிகளை வாங்கிக் கொண்டு சத்தியமூர்த்தி பவனுக்கு விரைந்துள்ளனர்.

__________

செய்தி: “கூடங்குளம் அணு உலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, விரிவாக ஒரு அறிக்கை தயார் செய்து, அக்டோபர், 4ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது,” என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

நீதி: பாதுகாப்பு ஏற்பாடுகளில் கருமாதிக்கான ஏற்பாடுகளும் அடக்கம்தானே?

___________

செய்தி: “மத்திய அரசுக்கு எதிராக, தேசிய ஜனநாயகக் கூட்டணிசார்பில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் திட்டம் இல்லை,” என, ஐக்கிய ஜனதா தளம் தலைவர், சரத் யாதவ் கூறி உள்ளார்.

நீதி: சில்லறை வணிக அந்நிய முதலீட்டை எதிர்ப்பதில் எங்களுக்கே நம்பிக்கை இல்லை! நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓட்டு இல்லை! எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை. இல்லவே இல்லை.

___________

செய்தி: “அரசியல் களத்தில், மீண்டும் புத்துணர்ச்சியுடன் குதிக்க விரும்புகிறேன்’ என, 86 வயதான, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், என்.டி.திவாரி கூறியுள்ளார்.

நீதி: ஒரே ஒரு நிபந்தனையுடன்: படுக்கை அறையில் கேமரா இருக்கக் கூடாது.

___________

செய்தி: “அரசியல் முழுவதும் அழுக்கு நிறைந்தது,” என, சமூக சேவகர், அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

நீதி: சாக்கடையில் இறங்கி தூர்வாரினால் வெள்ளைச் சட்டை அழுக்கடையும் என்பதால் கரையிலிருந்து சவுண்டு மட்டும் கொடுப்பேன்.

___________
 செய்தி: “2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம், நவம்பர் 12ம் தேதி துவங்குகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள், குறைந்த பட்ச டேவணித் தொகையாக, 1,332 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி: கமிஷனை கருப்பாக சுவிஸ் வங்கியில் செலுத்த வேண்டுமோ?

___________

செய்தி: நாட்டின் பெரிய, துணை ராணுவ படையான, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) பொது இயக்குனர் பதவியில் இருந்து, கே. விஜயகுமார் நேற்று ஓய்வு பெற்றார்.

நீதி: இதனால் தண்ட்காரன்யா பழங்குடி மக்கள் நிம்மதி அடைய முடியாது. ஒரு விஜயகுமார் போனால் இன்னொரு அஜய் குமார் வருவார்.

___________

செய்தி: :”நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும், அரசு நிறுவனமான, “ஏர் இந்தியா’வை, பாதியளவுக்கு தனியார் மயமாக்கினால், லாபப் பாதையில் திரும்பும்’ என, மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி: ஏர் இந்தியாவை மட்டுமல்ல, ஏரையே (AIR-காற்று) தனியார் மயமாக்கினால் லாபம் பிய்த்து உதறுமே?

__________

செய்தி: காவிரி நதி நீர் பிரச்னையில், கர்நாடக அரசு கடைபிடிக்கும் போக்கு, டெல்டா பாசன விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதால், தஞ்சை சுற்றுப்பயணத்தை, பிரதமர் மகள் உபீந்தர் சிங் திடீரென ரத்து செய்து விட்டு, டில்லிக்கு புறப்பட்டார்.

நீதி: இப்படி இந்திய மக்கள்  கொதித்தெழுந்தால் மன்மோகன் சிங் அமெரிக்காவிற்கு புறப்படுவார்!