privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தலித்துக்களின் ஜீன்சில் ஆதிக்கசாதி பெண்கள் மயங்குகிறார்களாம் !

தலித்துக்களின் ஜீன்சில் ஆதிக்கசாதி பெண்கள் மயங்குகிறார்களாம் !

-

ராமதாஸ்

லித் இளைஞர்கள் ஜீன்ஸ், கூலிங் கிளாஸ், டி-சர்ட் அணிந்து உயர்சாதிப் பெண்களை மயக்கி விடுகிறார்கள்” என்கிறார் ராமதாஸ். தர்மபுரி தலித் குடியிருப்புகளை எரித்து சாம்பலாக்கிய வெறியாட்டங்களைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு ஆதிக்க சாதி அமைப்புகளை தலித்துகளுக்கு எதிராய் ஒன்றிணைக்கும் கூட்டத்தில் தான் ஆதிக்க சாதி பெண்கள் வெறும் ஜீன்சுக்கும் டிசர்ட்டுக்கும் மயங்கிவிடுவார்கள் என்று உளறிக் கொட்டி ‘சேம் சைடு’ கோல் போட்டுள்ளார்.

வெறும் ஜீன்ஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டாலே ‘உயர்’ சாதிப் பெண்களெல்லாம் மயங்கி விடுவார்கள் என்று ராமதாசுக்கு கவலை பிறந்துள்ளதற்கு  காரணம் இல்லாமல் இல்லை. ராமதாஸ் ஒருபக்கம் தாங்கள் கலப்புத் திருமணங்களை எதிர்க்கவில்லையென்றும், காதல் நாடகத் திருமணங்களைத் தான் எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதிக்க சாதி வானவில் கூட்டணியைச் சேர்ந்த இரா. மணிகண்டன் தமது அமைப்பு காதல் கலப்புத் திருமணங்களையே மொத்தமாக எதிர்ப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் ராமதாசுக்கே குரு மணிகண்டன் தான். ஏப்ரல் மாதம் கரூரில் கூட்டம் நடத்திய கொங்கு வேளாள கவுண்டர்கள், வேறு சாதியில் திருமணம் முடிப்பதால் கொங்குக் கலாச்சாரம் சீர்கெட்டுப் போய் விடுவதாகவும், பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதால் கொங்கு வேளாளர்களின் நிலவுடைமை பாதிக்கப்படுவதாகவும் மேற்படி கூட்டத்தில் பேசிவிட்டு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர். மேலும் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுப்பதையும் எதிர்த்து பேசியுள்ளனர்.

“தேச பக்தி என்பது பொறுக்கிகளின் கடைசி புகலிடம்” என்றார் சாமுவேல் ஜான்சன். இந்தியாவிலோ கடைந்தெடுத்த நாலாந்தர பொறுக்கிகள் சரணடையும் கடைசி புகலிடமாக சாதி இருக்கிறது. இவர்கள் சாதாரண பொறுக்கிகளல்ல – ஓட்டுப் பொறுக்கி ஒட்டுண்ணிகள். தேர்தல் அரசியலில் மாறி மாறி கூட்டணி வைத்து இரண்டு திராவிடக் கட்சிகளின் தோள்களில் வேண்டிய மட்டும் சவாரி செய்து அதன் பலன்களை அனுபவித்தவர் ராமதாஸ். பிறகு தனது பேரங்கள் தோல்வியடைந்த பிறகு அவரது பிழைப்பிற்கு பிரச்சினை வருகிறது. இப்படித்தான் சாதியை வைத்து மீண்டும் கல்லாவைக் கட்டலாமா என்று முனைகிறார்.

சாதி ரீதியிலான அணி திரட்சி என்பது தவிர்க்கவியலாதவாறு பாட்டாளி மக்கள் கட்சியின் மேல்மட்டத்தை தேர்தல் பிழைப்புவாதத்தில் மூழ்கடித்தது என்றால் அதன் கீழ்மட்டமோ கட்டப்பஞ்சாயத்துகளில் சுகம் கண்டு சொந்த சாதியினராலேயே புறக்கணித்து ஒதுக்கப்பட்டனர். வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்று சவடாலடித்த ராமதாசுக்கு வன்னியர் ஓட்டும் இல்லை என்று சொந்த சாதி மக்களே இவர்களை தேர்தல்களில் புறக்கணிக்கத் துவங்கினர்.

இந்த நிலையில் மொத்த கட்சியும் வீழ்ச்சியின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருந்த போது, இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவுத் தளத்துக்கும் கழுத்தறுப்புப் போட்டியாக வேல்முருகன் தோன்றுகிறார்.  ‘உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா’ நிலைத் தவிர்க்க, தனக்கு எது நன்றாக வருமோ அதையே செய்வோமே என்று தீர்மானிக்கும் ராமதாஸ், காடுவெட்டியை ஏவி விடுகிறார். வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் ஊர் ஊராக கூட்டங்கள் நடத்தி அப்பாவி தலித் மக்களுக்கு எதிராக வன்மம் கக்க வைக்கிறார்.

கடந்த சித்ரா பௌணர்மியன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் பேசும் குரு, “வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்”  என்று பகிரங்கமாக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுகிறார். இந்தப் பின்னணியில் தான் தர்மபுரி கலவரம் நடக்கிறது. கலவரத்தைத் தொடர்ந்து முற்போக்கு ஜனநாயக சக்திகளிடம் பா.ம.க முற்றிலுமாக அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் தான், ‘காதல் நாடகத் திருமணம்’ எனும் சொத்தை வாதத்தை ராமதாஸ் கையிலெடுத்துள்ளார்.

ராமதாஸின் முதன்மைக் கூட்டாளிகளான கவுண்டர்கள் சங்கமோ படு பிற்போக்கான ஒரு பின்னணியில் இருந்து உதித்த சாதி அமைப்பு. உலகமே முன்னேறி மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னமும் நியான்டிரதால் காலத்திலேயே உறைந்து போய் நின்று விட்ட மூளைகளுக்குச் சொந்தக்காரர்கள் கொங்கு வேளாளக் கவுண்டர்களின் இந்த அமைப்பினர். ஒரு சாதிக் கட்சி எனும் வகையில் இதுவரையில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த தேர்தல்களிலும் வெற்றி பெறாத அமைப்பு இது. பெரும்பாலான கவுண்டர்கள் வேறு ஓட்டுக் கட்சிகளில் சிதறியிருக்கும் நிலையில், இது போன்ற 8ம் நூற்றாண்டுக் கோரிக்கைகளின் அடிப்படையில் அவர்களைத் திரட்டி அரசியல் ஆதாயம் தேடும் எத்தனிப்பே இவர்களை இயக்குகிறது.

ராமதாசின் வளர்ச்சியில் திராவிடக் கட்சிகளுக்கு எந்தளவுக்குப் பங்கு இருக்கிறதோ அதே அளவுக்கு ‘அறிவுஜீவிகளுக்கும்’ இருக்கிறது. சாதி ரீதியிலான அணி திரட்சி தான் சமூக விடுதலைக்கான துவக்கம் என்று என்பதுகளில் முழங்கிய அறிவுஜீவிகள், தொன்னூறுகளில் கூட ‘இது வித்தியாசமான கட்சி’ என்று பா.ம.க வை உயர்த்திப் பிடித்தனர். வித்தியாசம் என்றவுடன் பீதியடையாதீர்கள் நண்பர்களே. தே.மு.தி.கவுக்கும் விஜயின் மக்கள் இயக்கத்துக்கும் அறிவுஜீவிகளின் ஆலோசனை இல்லாததால் தையல் மிஷினும் அயர்ன் பாக்ஸும் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள் – பாம.கவுக்கு அவர்கள் ஆசி இருந்ததால் மாதிரி பட்ஜெட் போடுவது, மது ஒழிப்பு, தலித்-இடைநிலைச் சாதிகள் ஐக்கியம் என்று சில காலம் பம்மாத்துக் காட்டி வந்தனர்.

இப்போது தேர்தல் அரசியலில் முங்கியெழுந்து முற்றும் துறந்த முனி கோலத்தில் நிற்பதால், மறைந்து கொள்ள ஆட்டம் ஆரம்பித்த சாதியவாதப் புதரின் பின்னேயே ஒதுங்கியிருக்கிறார்கள். அதன் துவக்கம் தான் காதல் நாடகத் திருமண எதிர்ப்பு எனும் நாடகம்.

தலித் அமைப்பினர் இளைஞர்களுக்கு காதலிப்பது எப்படி என்று வகுப்பெடுப்பதாகவும், அதிலும் குறிப்பாக ஆதிக்க சாதி பெண்களை ‘மடக்க’ பயிற்சியளிப்பதாகவும், இந்தப் பயிற்சிகளில் தேறி பட்டையம் பெற்ற மாணவர்கள் ஆதிக்க சாதிப் பெண்களை மயக்கி விடுவதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியினர் புரளி கிளப்பிக் கொண்டுள்ளனர். மேலும், பெண்ணை ஒப்படைக்க வேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டுமென்று மிரட்டிப் பறிப்பதாகவும் கிசுகிசுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையே கொங்கு வேளாளர் அமைப்பினர் வெளிப்படையாகச் செய்கின்றனர்.

இவர்கள் சொல்வது போல் காதலைத் திட்டமிட்டு வரவழைக்கச் செய்ய முடியும் என்று நம்புவதும், பெண்கள் ஜீன்ஸ் பேண்ட்டை பார்த்தே மயங்கி விடுவார்களென்று நம்புவதும் காட்டுமிராண்டித்தனம் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இவ்வாறு தங்கள் சமூகப் பெண்கள் யாரைக் காதலிக்க வேண்டும், எப்படிக் காதலிக்க வேண்டும், எதற்குக் காதலிக்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்க இவர்கள் யார்? பெண்களை உயிரும் உணர்வும் அறிவும் கொண்ட சக மனிதப் பிறவியாகப் பார்க்காமல் வெறும் சொத்தாகப் பார்க்கும் ஆணாதிக்கத் திமிரில் இருந்தும் ரத்ததில் கலந்து விட்ட ஆதிக்கசாதிக் கொழுப்பிலிருந்தும் தான் இப்படிப்பட்ட சிந்தனைகள் வரமுடியும்.

ஆட்சியதிகாரம் இந்தத் தாலிபான்களின் கைகளில் இன்னமும் நேரடியாச் சேரவில்லை. இருந்தால் எப்படியிருக்கும் என்பதை நாம் ஆப்கானிஸ்தானைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  இது போன்ற நச்சுக் கிருமிகள் தலையெடுப்பது அந்த சாதிகளில் இருக்கும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் உழைக்கும் மக்களுக்குமே எதிரானது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு இவர்களை முறியடிக்க முன்வர வேண்டும். அப்போது தான் இவர்களை முற்றாக ஒழித்துக்கட்ட முடியும். அப்படிச் சாதிக்க முடியும் என்பதை இதே தருமபுரியில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னே தோழர்கள் அப்புவும் பாலனும் நிரூபித்துச் சென்றுள்ளனர்.

  1. // ‘உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா’ //

    இது தவறான சொற்பயன்பாடு என்று தோன்றவில்லையா?

  2. தமிழ்நாட்டின் சில வட்டார வழக்குகளில் நொள்ளைக் கண் என்பதை ஊணமுற்ற கண் என்பதாக பார்ப்பதில்லை. எதிலும் நொட்டை நொள்ளை கண்டு பிடிக்கும் கண்கள் என்பதையே அப்படிச் சொல்வார்கள்.

    எல்லாவற்றிலும் நொட்டை நொள்ளை கண்டுபிடிப்பவன், கையிலிருப்பதையும் இழந்து விட்டு நிற்பான் எனும் அர்த்தத்தில் அந்த சொலவடை பயன்படுத்தப்படுகிறது.

    சரி, இந்த மொத்தக் கட்டுரையிலும், இந்த சம்பவம் பற்றிய பிற கட்டுரைகளை படித்ததில் இருந்தும் இது ஒன்று மட்டும் தான் உங்கள் கண்களுக்குப் பட்டதா? 🙂

  3. இந்த சம்பவம் நடந்த பின்னணி பற்றி சவுக்கு எழுதிய கட்டுரை பார்த்தேன் . சும்மா சொல்லக்கூடாது இந்த ராமதாசு வெறும் காமெடியன் எல்லாம் இல்லை , ஒரு விஷக்கிருமி தான்
    . //வெறும் ஜீன்ஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டாலே ‘உயர்’ சாதிப் பெண்களெல்லாம் மயங்கி விடுவார்கள் என்று ராமதாசுக்கு கவலை // அப்போ நீ என்ன செய்யணும்? வன்னியன் எவனும் வெள்ளைக்காரன் போட்ட பேண்டு சட்டை போடக்கூடாது, வட இந்தியாக்காரன் தயாரிக்கிற பைக்கு எல்லாம் வாங்க கூடாதுன்னு சொல்லணும். அது சரி உன் சாதி பயலுங்க decent-ah இருந்தா தான பொண்ணுங்க பார்ப்பாங்க, அந்த பயலுங்க தான் உன் பின்னாடி சுத்தி உருப்படாம இருக்கானுங்களே.

  4. //வெறும் ஜீன்ஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டாலே ‘உயர்’ சாதிப் பெண்களெல்லாம் மயங்கி விடுவார்கள் என்று ராமதாசுக்கு கவலை//
    இவ்வளவு கீழ்த்தரமாக சிந்தித்து பேசுவார் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

  5. Sorry for English

    It is unacceptable that the Dalit youngsters (Not Only) are very arrogant and take the shield of caste. Girls are scared to walk in their streets and frequently complaining. they are unstoppable and ready for anything due to the caste support

    Adanga Maru, Athu Meeru, Thirupi adi. this is what you teach

  6. “இப்போது தேர்தல் அரசியலில் முங்கியெழுந்து முற்றும் துறந்த முனி கோலத்தில் நிற்பதால், மறைந்து கொள்ள ஆட்டம் ஆரம்பித்த சாதியவாதப் புதரின் பின்னேயே ஒதுங்கியிருக்கிறார்கள்.”

    Its true. Excellent article.

  7. ராமதாஸ் மட்டுமல்ல ஒட்டுமொத்த பிறசாதிதமிழர்களின் கருத்தும் அதுதான்.படிப்பில் கவனம் செலுத்தாமல் ஆடம்பர உடைகளிலும் இருசக்கர வாகனத்தில் இரண்டு மூன்று பேரை ஏற்றிக்கொண்டு உயர்சாதி பெண்கள் இருக்கும் பகுதிகளில் freak விடுவதிலும் தான் தலித் இளைஞர்கள் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள்.இதை யாரவது ஒருவர் கண்டிக்கத்தான் வேண்டும்.ஒழுங்காக படித்து முன்னேறி காதலும் செய்யட்டும் கல்யாணமும் செய்யட்டும் யாரும் தடுக்க போவதில்லை.

      • இந்த அறிவாளி வினோத் தர்மபுரி தாக்குதலுக்கு ” ஆமா அப்படித்தான் செய்வோம்” என்று திமிருடன் பின்னூட்டமிட்டவர்…இப்போது மெசேஜ் சொல்கிறார்….அதுசரி படிச்ச மாப்பிளைக்கோ பெண்ணுக்கோ உங்க டாக்டர்ர்ர்ர்ர்ர்ர் நிறைய சாதி மறுப்பு திருமணம் செய்து வச்சுருக்காராமா…..

        • சரியான தமிழ் வார்த்தை சட்டென நினைவிற்கு வராததால் ஆங்கிலம் – exactly that is the one திரு. வினோத் சொல்வது. படித்து முன்னேறிய பின் சுய சிந்தனை வந்த பின் இந்த டாக்டர் எல்லாம் ஏன் தேவை?

      • நீங்கள் எதிர்க்கேள்வி கேட்டு நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள்.
        எல்லோரையும் போலத்தான் இந்த பாதிக்கப்பட்ட தலித் இளைஞர்களுமா? எல்லா வகையிலும் சமமாக உள்ளனரா? எனில் ஏன் தனி கவனம்? தனி அடையாளம்?

  8. Since Ramadoss’ son is wearing coat suit he is picking up the North Indian Girls from the Pub in Mumbai. It has to be stopped. We have to tell Maharastrians to instruct Ramadoss to stop his son Anbumani from wearing the Coat and Suit

  9. வேற்றுமையில் ஒற்றுமை என பிதற்றும் பாரதத்தில் சாதிகளை முன்னிருத்தி கூட்டங்கள் கூடுவது கேவலத்திலும் கேவலம்………..

    • வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தபடுவதால் அதில் திருத்தம் கொண்டுவர சொல்லும் ராமதாசை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்
      – சமத்துவம் ­//

      – ­இந்த சட்டம் தவறாக பயன்படுத்தபடுவதற்க்கு இதை விட நல்ல உதாரணம் வேறு வேண்டுமா?????…

      • யோக்கியன் சுரேஷ்…. வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாகவே பயன்படுத்தப்படுவதேயில்லை ( மேலவளவு கொலை வழக்கு வரை- இதனை சொன்னது உயர்நீதிமன்றம்)… எனக்கு சாதிவெறியுடன் “நடந்து கொள்ள” உரிமை கேட்பவரை என்ன செய்ய….

      • உங்களுக்கெல்லாம் சுதந்திர தினம் கொண்டாட வெக்கமாயில்லை? கூட இருக்கும் மனிதருக்கே நீங்கள் சுதந்திரம் கொடுக்க விரும்பாத நXXXள் ஏன் சுதந்திரம் தினம் கொண்டாடுகிறீர்கள்?

  10. Two statements from our beloved Indian Taliban leader – Ramadoss

    1. Girls are afraid of walk through dalit areas as they are teased by dalit youngsters
    2. Girls are atrackted towards jeans wearing dalit youngsters

    Aren’t they self contradictory in itself.

  11. பகுத்தறிவுவாதிகளே !!.. பகுத்தறிவு வியாதிகளே #
    இந்த கல்யாண புரோக்கர் வேலையை விட்டுட்டு முதலில் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க போராடுங்கள் .
    சட்டமும் ,சலுகைகளும் அனைவருக்கும் சமமாக மாறட்டும்
    அப்பறம் ஜாதி பிரச்சனைகள் இருக்காது ..

    • இந்த ஈர வெங்காயமெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்…. இவ்வளவு யோக்கியமாய் பேசும் உங்க அய்யா வான்னியர்க்கு மட்டும் நீதிபதி பதவியே ( சாக்கடை அள்ளுவது 100 சதம் தலித் மக்களுக்கான ஒதுக்கீடு) கேட்பது ஏன்…அங்க போய் ” சட்டமும் ,சலுகைகளும் அனைவருக்கும் சமமாக மாறட்டும், அப்பறம் ஜாதி பிரச்சனைகள் இருக்காது ..” சொல்றதுதானே…சட்டப்படி 4 நீதிபதி பதவியும், 40 கக்கூஸ் அல்ற பதவியும் குடுனு யோக்கியமாய் போராட வேண்டியதுதானே….

    • வன்னியன், நான் ஷத்ரிய குளத்தை சேர்ந்தவன் என்று சொன்னவுடன் இந்திய ஆர்மியில் 75% வன்னியர்களை சேர்த்துக்கொள்ள போகிறார்களா என்ன ?

  12. சாதி ஒழிக்க புறப்பட்டவர்கள் முதலில் இங்கு உள்ள ஊழல், லஞ்சம், மது, கொலை, கொள்ளை, மக்களை ஏமாற்றும் அரசு அதிகாரிகள், இவைகளை திசை திருப்பும் அரசியல் வாதிகள், கொள்கைலேயேற்ற அரசியல் வாதிகள், மத்தியில் ஒரு கொள்கை மாநிலத்தில் ஒரு கொள்கை கொண்ட அரசியல் வாதிகள், வரி எய்ப்பு செய்யும் அரசியல் வாதிகள், எந்த உணர்வும் இல்லாமல் வாழும் சில தமிழர்கள் இவர்களை முதலில் அகற்றுங்கள்

    • இந்த இழுவைக்கு ” ஆமா நான் வன்னியன் தான் இபோ என்ன” என்னும் வினோத் எவ்வளவோ நல்லவன்…..

  13. சாதி வெறி என்று விமர்சிப்பவர்கள் முதலில் சாதி வெறி என்றால் என்ன என்று முதலில் விளக்க வேண்டும், எது சாதி வெறியுடைய பேச்சு எது சாதி வெறி இல்லாத பேச்சு என்று முதலில் விளக்க வேண்டும்.

    • முதல்ல சாதி என்னனு சொல்லுங்கனு “வெள்ளந்தியா” கேட்கறதுதானே…ஏன் மரம் வெட்ட சொன்ன உங்க அய்யா இதெல்லாம் சொல்லலியா……முழுசா வீட்ட கொழுத்திட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி பின்னூட்டம் இடுறியே இதுதான் சாதிவெறியுடன் கூடிய பேச்சு.

  14. கலப்பு திருமணம் செய்ய ஒடோடி வரும் காக்காக்கள். அவர்கள் பிரச்சனையால் பிரிய நேரிடும் போது மட்டும் சமாதானம் பேச வருவதில்லை. அவர்கள் தொழில் அத்தோடு முடிந்துவிட்டது.

    • உங்க சாதியில் எத்தனை பேர் ” பெரியோர்களால் நிச்சயித்த திருமணம்” கோர்ட்டில் நிக்கும்போது சேர்த்துவைக்க போனிங்க…. அதெல்லாம் மொய் எழுதறதோட சரி பாஸூ…. புதுசா வேற ஏதாவது யோசிங்க….

  15. காமராஜ் தற்கொலை தற்செயலான சம்பவம் என்றால். அடுத்தவன் பெற்ற மகளை, பள்ளிக்கு செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வதும் தற்செயலான சம்பவமா? பொறுக்கிகளுக்கு வக்காலத்து வாங்கும் பகுத்தறிவுவாதிகளே உங்கள் வீட்டு பெண்களை அக்காலிகள் கேலி கிண்டல் செய்தும் அதுவும் தற்செயலான சம்பவம் தான் என்று இருப்பீர்களா?

    • இந்த வகையறா மொட்ட கடுதாசு மாதிரி மொட்ட கதைய அவுத்து விடுறாங்க…1000 வன்னியர் பெண்கள் நாடக திருமணத்தால் பாதிக்கப்பட்டார்னு சொன்ன இவிங்க அய்யாவால் ஒருத்தரு பேரைக்கூட சொல்ல முடியல….ஆனா சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியினர் ஏராளமானவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலா குடும்பம் நடத்துறத இவிங்க எரிச்ச உர்ருக்குள்ளேயே பார்க்கலாம்…. அதுபோல புளுகுதான் “பெண்களை கேலி கிண்டல் செய்வதும் தற்செயலான சம்பவமா” என்பது. இதெல்லாம் சென்டிமென்டால் மக்களை ஏமாற்ற இவர்களின் கதை. உங்க வாதப்ப்டியே யாரை அப்படி கேலி செய்தது…ந்க்க சாதியில் இப்படி கேலி செய்தவர்களை இதுபோலதான் கொன்னீர்களோ……

  16. சட்டையை கருப்பாக போட்டு கொண்டு துக்கம் கொண்டாடும் அவர்கள் , உள்ளத்தையும் கருப்பாகவே வைத்திருப்பார்கள் . பொண்டாட்டியை கோவிலுக்கு அனுப்புவார்கள் , பிள்ளையை ஜாதகம் எழுதி வாங்கி வர சொல்வார்கள் , மேடையில் “எல்லாம் பொய் ” என்று பேசுவார்கள் ..

    பொய்யும் அயோக்கியத்தனத்தையும் நிறைத்து ஒரு உலகத்தை புனித உலகமாக சித்தரிக்கும் கெட்டிக்காரர்கள் அவர்கள்

    —- அர்த்தமுள்ள ஹிந்து மதம் நூலில் கண்ணதாசன் கூறுவது

    • சூப்பர் சுரேஷ்…. யோக்கியன் யோக்கியனோடதான் சேர்வான் போல…..கண்ணதாசன் சாம்பினேசன் சூப்பர்……அப்படியே ” ஒரு கோப்பையில…..கவிதையை உங்க அய்யாவுக்கு சொல்லுங்க……

  17. தங்கள் பெண் பிள்ளைகள் மீது அக்கறை உள்ள எந்த அப்பனும், காதலை ஊக்குவிக்கவும் மாட்டான் … கூட்டி கொடுக்கவும் மாட்டான் …

    வெறும் முகநூளில் சமத்துவம் பேசுவதன் மூலம் நான்கு லைக் கிடைக்கிறது என்று ஆசைப்பட்டு உங்கள் வீட்டு பெண்களின் மானத்தை அடகு வைத்து விடாதீர்கள் …. அவ்ளோதான் சொல்லி புட்டேன் …

    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

    • காலம் காலமாய் தாழ்த்தப்பட்ட பெண்களை பெண்டாளும்போது இது தோணவில்லையா…..அப்போ சூடு போட மறந்திட்டீங்களோ……என்னதான் இருந்தாலும் சம்பதினா கசக்க்த்தான செய்யும்….

      • உண்மை. இந்தப் பெண்டாளலில் பிறந்தவனும் தலித்தாகவே இருக்கிறான். இந்தக்கொடுமையைப் பற்றி மருத்துவர் எதுவுமே சொல்ல மறுக்கிறார். உண்மையில் ஆதிக்கசாதியில் பிறந்துவிட்ட இளைஞர்கள் தலித் பெண்களைக் காதல் செய்தால் இவர்கள் அப்போதும்கூட தலித் பெண்களைத்தான் குற்றம் சொல்கிறார்கள். இதே ஆதிக்க சாதிப்பெண்கள் இதர பிற்படுத்தப்பட்ட சாதி இளைஞர்களைக் காதலித்தால் அதிலும் வசதியான வீட்டு இளைஞர்களைக் காதலித்தால் அப்போதெல்லாம் காதல் இவர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே தெரியாது. இதிலிருந்து தெரியவில்லையா இவர்கள் யோக்கியதை.

  18. தமிழ் சமுதாய கூட்டணிக்கும் …………திராவிட சமுதாய கூட்டணிக்கும் நடக்கும் போட்டி

    யார் வெல்வார்கள் ………..தமிழனா ? திராவிடனா ?

    நான் தமிழன்

      • வேற்றுகிரகத்த சேர்ந்த ஜந்துனு சொல்லலியே சந்தோசம்… அதுசரி தமிழன் பீயை தமிழனே எடுக்கறதுதானே….

        • துப்புரவு தொழிலில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று மருத்துவர் (எ) மாங் கோட்டையார் போராட்டம் நடத்த வேண்டும் என்று ஆண்ட பரம்பரைகள் கேட்டு கொள்ள வேண்டும்

  19. பள்ளிக்கு செல்கிறேன் அண்ணா என்று உன்னிடம் சொல்லிவிட்டு செல்கிறாள் உன் தங்கை .
    சென்று வா என்று வழியனுப்பிய உன் தங்கையின் கூந்தலை வழியில் சில பொறுக்கிகள் இழுத்து பார்த்து
    இது ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்று கேட்க்கிராகள்.

    உன்னிடம் வந்து நடந்ததை சொல்லி அழுகிறாள் உன் தங்கை.ரோசப்பட்டு நீ சண்டைக்கு போனால் நீயும் சாதி வெறியனே..!

    பொறுமையோடு சென்று ஒரிஜினல்தான் என்று அந்த சான்றோரின் அறிவுபசியை தீர்த்து வைத்தால் நீயும் முற்போக்கு சிந்தனைவாதியே!

    • எந்த படத்துல இந்த சீனு வரும்….. அதுசரி கூந்தலை இழுத்ததற்கே சணடைக்கு போகல்லம்னு சோல்லும் நல்லவனே…..பெண்டாளுவதற்கு என்ன செய்யகலாம் நறுக்கிறலாமா….?

  20. இன்றைய கல்லூரியில் காதல் எப்படி இருக்கிறது என்பது தெரியாமல் வெறும் சினிமா படத்தை பார்த்து விட்டு அதன் புனிதத்தை பேசுபவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது … இதை ஒருத்தர் ஊக்கபடுத்தனும்னு வேற சொல்றார் … :(( என்ன கொடுமை

  21. தலித்தாக பிறந்தால் அவர்கள் என்ன சொன்னாலும் நியாய்மாகிவிடுகிறது; பல லட்சம் கோடி ராசா அவர்கள் ஊழல் செய்த பிறகும், கருணாவிடம் இதை பற்றி கேட்ட பொது சொன்னது கூட இதுதான்….ராசா தலித் என்பதால் இப்படில்லாம் சொல்றானகன்னு. தலித் என்றால் எந்த தவறு வேணும்னாலும் செய்யலாம், மத்தவங்க ஏதும் சொல்ல கூடாது..

    தலித் என்றாலே அப்பாவிகள், ஒடுக்க பட்டவர்கள் , அடித்தால் கேட்க்க நாதி ,இல்லாதவர்கள் , குழந்தை போன்ற மனம் உள
    ்ளவர்கள் ன்னு நினைப்பா என்ன ?

    தலித் என்றால்,

    1.ஈவ் டீசிங் செய்யலாம்
    2.ஊழல் செய்யலாம்
    3.கலப்பு மணம் செய்து சொத்து பறிக்கலாம்
    4.போலி வன்கொடுமை வழக்கு போட்டு சம்பாதிக்கலாம்
    5.அடுத்தவன் குடியை கெடுக்கலாம்

    அப்படிதானே..??

    • யோக்கியனாய் இருந்தால் நீ சொன்ன ஒன்றுக்காவது ஆதாரம் தா….. தலித் மக்கள் எல்லொரும் இப்படி செய்கிறார்களா….? உன் சாதியினர் இதெல்லாம் செய்யாத யோக்கிய சிகாமணிகளா….. முதலில் இப்படி பேசி உன் சாதிமக்களை ஏமாற்றமலிரு அதுவே பெருசு… வந்துட்டான் ……

    • 4. போலிவன்கொடுமை வழக்கை உருவாக்குவதே ஆதிக்கசாதியினர்தான். குறிப்பாக ஆதிக்க சாதி வழக்கறிஞர்களுக்கு இதில் பெரும் பங்கு இருக்கிறது.காரணம், இந்த வழக்குகளுக்கு இவர்கள் வாங்கும் கட்டணம் மிக அதிகம். இந்தக்கட்டணத்தையும் பொதுவில் வசூலித்துக்கொள்கிறார்கள். மேலும், ஆதிக்கசாதியினர் தங்களுக்குள் உண்டாகும் தேர்தல், பதவி, வருவாய் போன்ற போட்டிகளினால் எதிரிகளை வீழ்த்த தலித்துகளை இவர்கள் மிரட்டிப் பயன்படுத்துகிறார்கள். அது போன்ற வழக்குகளுக்கு முழுக்காரணமும் ஆதிக்க சாதியினர்தான்.

  22. ‘அறிவுஜீவிகளுக்கும்’ இருக்கிறது. சாதி ரீதியிலான அணி திரட்சி தான் சமூக விடுதலைக்கான துவக்கம் என்று என்பதுகளில் முழங்கிய அறிவுஜீவிகள், தொன்னூறுகளில் கூட ‘இது வித்தியாசமான கட்சி’ என்று பா.ம.க வை உயர்த்திப் பிடித்தனர்.//

    வினவு, இதில் பெயரை (அ.மார்க்ஸ்) சொல்ல என்ன தயக்கம்??? அறி(ரி)வு சீவிகள் என்று பம்முவது ஏனோ?

  23. சுரேசு மனுஷன் மனுஷியை காதலிப்பதோ கல்யாணம் செய்வதோ தவறென்று நீ இந்தியாவை தாண்டி வேறு எங்கும் போய் சொல்ல முடியாது.அதே போல் அவனை விட நீ மேல் சாதி என்று சொன்னால் எப்படி என்று கேட்டு ஆசன வாயால் தான் சிரிப்பார்கள்.எந்த முட்டாளோ எந்த காலத்திலோ சொன்னதை மூடத்தனமாக நம்பிக்கொண்டு உன் சாதியில் பிறந்து விட்டததால் மட்டுமே நீ உயர்ந்த சாதி என்று எண்ணுவது மடமையின் உச்சம்.நீ அவர்களை அறிவாலோ ஆயுதத்தாலோ வென்றிருந்தால் சரி,அப்படி எதுவுமே சாதிக்காமல் சும்மா உங்க அப்பா அம்மா பண்ணிய தப்புக்கு பொறந்துட்டு சாதி ———–என்றெல்லாம் புலம்பாதே.நிறைய படி.

    • உலகின் வேறு சில பகுதிகளிலும் ஜாதி-போன்ற முறை இருந்ததாக விக்கிபீடியா சொல்கிறது.
      http://en.wikipedia.org/wiki/Caste
      ஆனால், இந்தியாவைப் போல் வேறுங்கும் ஜாதி கோட்பாடு ஆழமாக இல்லை என்பது உண்மை. அதே போல காதல் திருமணத்தை எதிர்ப்பதும் இந்தியாவில் மட்டுமே உள்ளதாக தெரிகிறது

  24. காதல் திருமணங்கள் சகல சாதிகளிலும் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. முதலியார் பையன் ஐயர் பெண்ணைக் காதலிக்கலாம் வன்னியர் பையன் வெள்ளாளப் பெண்ணைக் காதலிக்கலாம். கள்ளர் பையன் பிள்ளைமார் பெண்ணைக் காதலிக்கலாம் தேவர் பையன் நாயுடு பெண்ணைக் காதலிக்கலாம். இங்கே எல்லாம் காதலுக்கு எதிராக அனைத்து சாதிகளும் ஒன்றிணைவதில்லை. ஆனால் தலித் பையன் வன்னியப் பெண்ணையோ அல்லது பிற சாதிப் பெண்களையோ காதலிக்கக்கூடாது. அதுதான் இங்கே பிரச்சனை. அதற்காகத்தான் தாக்குதல். அதற்காகத்தான் அனைத்து சாதிகளும் ஒன்றிணைகின்றன. இது அப்பட்டமான தீண்டாமை என்பதைத்தவிர வேறொன்றுமில்லை. இத்தகைய தீண்டாமையை மூடிமறைப்பதற்காகத்தான் ஜீன்ஸ்-கூலிங்கிளாஸ் என்று பூசி மெழுகுகிறார்கள்.

  25. ///“தேச பக்தி என்பது பொறுக்கிகளின் கடைசி புகலிடம்” என்றார் சாமுவேல் ஜான்சன். ///

    யார் இந்த சாமுவேல் ஜான்சன் ?நமது ஹிந்துத்துவாககள் பற்றி இத்தனை சரியாக சொல்லியுள்ளார்.
    விளக்கம் ஹரிகுமார் என்னிடம் கேட்காதீர் ,சாமுவேல் ஜான்சனை கேட்கவும்

      • தீப்பொறி ஆறுமுகம் ,அவரை ஆபாச பேச்சாளர் என்று கூறுபவர்களை பார்த்து கேட்கும் கேள்வி ;
        ஏண்டா ,சினிமாக்காரன் படுக்கையறை காட்சிகளில் அரைகுறை ஆடையோடு கட்டி புரள்வதை காண்பிக்கிறான் அதையெல்லாம் ,அம்மா,அப்பா மகள் மகன் அக்கா தங்கை அண்ணன் தம்பியோடு பார்க்கிரீங்க ,நான் உள்ளதை சொன்னால் மட்டும் ஆபாசமாக தெரிகிறதா?
        சக்கரைவள்ளி கிழங்கு சமஞ்சது எப்படி ? எண்டா இதெல்லாம் உங்களுக்கு ஆபாசமாக தெரியலியா?

        • I dont watch those with parents,it has been 15 years since i went and watched a move in a hall with my parents.

          Cinemavula varadha venamnu vuttralam,illa veliya poi dum kooda adikkalam,illa channela maathalam,aana DMK/ADMK kootathula aabasama pesuna,adhuvum theruvukku naduvula ninnu pesuna,enna seyya mudiyum.

  26. எதுக்கு தலித் தலித் ன்னு கூப்பாடு போடுறிங்க ,முஸ்லிம்களாக மாறிவிடுங்கள் .உங்களை யார் தலித் சொல்லுகிறார்களா?என்று பார்ப்போம் .
    எனது அறிவுக்கு எட்டிய யோசனையை சொல்லியிருக்கிறேன் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்

    • @S.Ibrahim
      கருப்பாயி என்கிற நூர்ஜஹான்
      http://www.maattru.com/2011/12/blog-post_6584.html

      //எதுக்கு தலித் தலித் ன்னு கூப்பாடு போடுறிங்க ,முஸ்லிம்களாக மாறிவிடுங்கள் .உங்களை யார் தலித் சொல்லுகிறார்களா?என்று பார்ப்போம்//

      ஆதிக்க சாதி வெறி இந்துக்களிடம் மட்டும் அல்ல இந்திய கிறித்தவம் மற்றும் இஸ்லாம் மதத்தினரிடம் ஆழமாக உள்ளது. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் இது தலித் முஸ்லீம்களின் நிலை..மதம் மாறினால் மட்டும் இவர்கள் நிலை மாறிடாது..

      கல்வியே இவர்களை உயர்த்தும்.எனது அறிவுக்கு எட்டிய யோசனையை சொல்லியிருக்கிறேன் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்..

      மறுமொழியிடும் முன்னர் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் http://www.maattru.com/2011/12/blog-post_6584.html படிக்கவும்.

      • கல்நெஞ்சம் ,கற்பனைகளை வைத்து யதார்த்தத்தை பேசுவது நியாயமற்ற அணுகுமுறை .ஏழ்மையான முஸ்லிம் பெண்களே பலர் திருமணம் இன்றி தவிக்கவே செய்கின்றனர் .1947 இல் முஸ்லிமான நெல்லை மாவட்ட குறிச்சிகுளம் என்ற கிராமத்தில் துவக்கத்தில் இந்நிலை இருந்தது இப்போது அங்கு பல முஸ்லிம்களும் சகஜமாக திருமண உறவுகள் வைக்கின்றனர் .மீனட்சிபுரமும் அந்தமாதிரியான நிலை அடைய கொஞ்ச காலம் ஆகலாம் .முஸ்லிம் பெண்கள் வசதி படைத்தவர்கள் நிறம் கருப்பாக இருந்தால் மாப்பிளை அமைவது மிக கடினமாக உள்ளது .மேலும் இப்போதைய முஸ்லிம்கள் பெரும்பான்மையோர் 6 அல்லது 7 தலைமுறைகளுக்கு முன்னர் தலித்களே என்பது உண்மை
        இஸ்லாத்திற்கு வாருங்கள் .தூய இஸலாம் அறியுங்கள் .கல்நெஞ்சமும் கரையும்

        • Islam teaches non-muslims should pay a tax to muslim rulers
          Islam teaches that non-muslim witness are only half of a muslim witness
          Islam teaches that a non-muslim can’t marry a muslim girl but a mulsim can marry a non-muslim man
          Islam teaches that you can lie/cheat to kill a non-muslim

          With all said, please refer below links. Ask yourself honestly if isalm can bring equality in a diverse society?

          http://www.jihadwatch.org/2011/05/malaysia-islamic-leaders-say-non-muslims-rights-should-be-restricted.html
          http://www.bible.ca/islam/islam-kills-pact-of-umar.htm
          http://www.answering-islam.org/NonMuslims/rights.htm
          http://www.canadafreepress.com/index.php/article/28334

          Islamin samathuvam patri thambattam adikkum silarukku! Kuran bothanaigal!!!
          9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
          9:5. முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள்.
          8:55. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் – அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
          25:44. அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை-அல்ல; (அவற்றை விடவும்) அவர்கள், மிகவும் வழி கெட்டவர்கள்.
          7:176. அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது – இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும்
          I am not a muslim. I am living a life far better than most muslims and your prophet. I married only one girl at proper age. I never fought or killed anyone. I never took other’s wealth or property and I live my life according to my own values and beliefs. But according to your islam I am like animals, dog, i should pay you tax are to be killed. Are you not feeling ashamed to say this book is from god?

        • இபுறாஹீம்

          பார்ப்பனீயத்திடம் சரணடைந்த இஸ்லாம் என்றால் கோபமாகிறீர்கள். ஆனால், வட இந்தியாவில் ஷேக், சயது, படான் போன்ற சாதிகளினுள் பெண் எடுப்பது, கொடுக்கப்படாது என்ற வழக்கம் உள்ளதுதான். மீறி நடப்பதில் கலவரம் இல்லைதான். என்றாலும் அவர்களின் உணர்வுகளுக்கு பார்ப்பனீயம் தானே காரணம். இன்றும் திண்டுக்கல்லில் ஒரு பாய். அவர் ராவுத்தராம், லெப்பை, மரைக்காயர் என மர்ற சாதிகளில் மண உறவு கொள்வதில் தவறு இல்லை என்றாலும் ராவுத்தர் சாதிக்குத்தான் முன்னுரிமை கொடுப்பாராம். வேண்டுமானால் திண்டுக்கல் வாருங்கள் நேரிடையாக சந்திக்கலாம். இதற்கெல்லாம் என்ன காரணம்

        • ஈப்ராகிம், எனக்கு உன் மேல சந்தேகமா இருக்கு. don’t change the topic for your religion. Debate is going on for people who all are suffering by caste system. If you can’t give some suggestion, please shut

        • straight forward lies,I know many Pathan & Upper caste muslims,they would go to any extent to disassociate themselves with dalit muslims,\

          This classic case is seen very well in the formation of Bangaldesh where Punjabi/Pathan/Up Muslims call Bangaldeshi dalit muslims to be unsophisticated and that they use banana leaves to wash their crap.

          yen ibrahim ippadi aazham theriyama kaala vudureenga.

        • இஸ்லாம் மட்டுமல்ல பௌத்தம் மதத்திற்கு மாறிய அம்பேத்கார் _____________ இன்னும் பிற்போக்கான நிலையில் இருக்கின்றனர். மதம்மாறினால் மட்டும் போதாது பகுத்தறிவு முக்கியம். அதற்கு நல்ல கல்வி, சுய சிந்தனை வேண்டும். ஏனெனில் கல்வி கற்ற _________ கூட வினவு போன்ற தளங்களில் கருத்துக்கள் சொல்லூம் போது சாதி பெயரை சூட்டி மகிழ்கின்றன.

          //கல்நெஞ்சம் ,கற்பனைகளை வைத்து யதார்த்தத்தை பேசுவது நியாயமற்ற அணுகுமுறை//
          சன்னி, ஷியா
          ஷேக், சயது
          லெப்பை, மரைக்காயர்

          இவைகள் எல்லாம் என்ன ஆறு அறிவு விலங்குகளின் சாதி பெயர்தானே. தூய இஸ்லாம் பற்றி இந்த கல்நெஞ்சம் நன்கு அறியும். என்னை மதம் மாற்றம் செய்ய முயலவேண்டாம். கற்பனைகளை வைத்து யதார்த்தத்தை பேசுவது நியாயமற்ற அணுகுமுறை 🙂

          Pakistan caller: Brother, you have to fight. This is a matter of prestige of Islam. Fight so that your fight becomes a shining example. Be strong in the name of Allah. You may feel tired or sleepy but the Commandos of Islam have left everything behind. Their mothers, their fathers, their homes. Brother, you have to fight for the victory of Islam. Be strong.
          Mumbai terrorist: Amen!
          (பாக்.தீவிரவாதிகள் டெலிபோன் உரையாடல் மும்பை 26/11)

          Wasi: ‘Shoot them in the back of the head.’

          Akasha: ‘Sure. Just as soon as we come under fire.’

          Wasi: ‘No. Don’t wait any longer. You never know when you might come under attack.’
          Akasha: ‘Insh’Allah’ (God willing).
          (பாக்.தீவிரவாதிகள் டெலிபோன் உரையாடல் மும்பை 26/11)

          • //சன்னி, ஷியா
            ஷேக், சயது
            லெப்பை, மரைக்காயர்

            இவைகள் எல்லாம் என்ன ஆறு அறிவு விலங்குகளின் சாதி பெயர்தானே. தூய இஸ்லாம் பற்றி இந்த கல்நெஞ்சம் நன்கு அறியும். என்னை மதம் மாற்றம் செய்ய முயலவேண்டாம்.//

            சன்னி, ஷியா முகமது நபிக்கு பிற்பாடு தோன்றிய பிரிவு. ஷேக், சயத், லெப்பை, மரைக்காயர் போன்றவைகள் இந்தியாவில் (பிரிந்து போன பாக். பங். உட்பட) மட்டுமே உள்ள சாதிப் பிரிவுகள் இவற்றிற்கும் நீங்கள் குறிப்பிட்ட உரையாடலுக்கும் தூய இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பிறர் மேல் தெறிக்கும் வண்ணம் நின்று கொண்டு ஒன்னுக்கு அடிப்பதெற்கெல்லாம் இஸ்லாம் பொறுப்பேற்காது.

              • ஹரிகுமார் ,சன்னி ,ஷியா என்பது கொள்கைகள் அடிப்படையில் ஏற்பட்ட பிரிவினை .சன்னி ஷியாவாக மாறலாம் ,ஷியா சன்னியாக மாறலாம் .
                மனுதர்மத்தில் காலில் பிறந்தவன் ,,தோளில் பிறந்தவனாக மாறமுடியுமா?

                • Mudiyum.

                  Brahmin,Kshatriya,Vsiahya,Shudra ngrathu varnam,profession.

                  Jaathingrathu inam sambandha pattadhu.

                  Leave sunni,shia,ahemdiya and all,

                  what abt pakistani muslims calling themselves jatt,arain,malik awan,punjabi sheikh,punjabi syed and all that?

                  • ஹரிகுமார் ,அப்படி எனில் எத்தனை தலித்கள் இதுவரை பிராமாணன் ஆக மாறியிருக்கிறார்கள் ?சொல்லுங்கள்

                    • One cannot become the caste iyer,iyengar because it is a social group but people like Ilayaraja,people who have done good intellectual work in Science,technology,research etc are respected and treated like brahmins.

                      Today if anyone is honest,straightforward and conscientious,he/she is respected regardless of the social group they belong to.

            • ///சன்னி, ஷியா முகமது நபிக்கு பிற்பாடு தோன்றிய பிரிவு. ஷேக், சயத், லெப்பை, மரைக்காயர் போன்றவைகள் இந்தியாவில் (பிரிந்து போன பாக். பங். உட்பட) மட்டுமே உள்ள சாதிப் பிரிவுகள் இவற்றிற்கும் நீங்கள் குறிப்பிட்ட உரையாடலுக்கும் தூய இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பிறர் மேல் தெறிக்கும் வண்ணம் நின்று கொண்டு ஒன்னுக்கு அடிப்பதெற்கெல்லாம் இஸ்லாம் பொறுப்பேற்காது.///

              டெலிபோன் உரையாடல் சாதி பிரிவு பற்றி அல்ல தூய இஸ்லாம் மக்களை எப்படி மூளைச் சலவை செய்யும் என்பதற்கு உதாரணம்.

          • கல்நெஞ்சம் /////சன்னி, ஷியா
            ஷேக், சயது
            லெப்பை, மரைக்காயர்

            இவைகள் எல்லாம் என்ன ஆறு அறிவு விலங்குகளின் சாதி பெயர்தானே. தூய இஸ்லாம் பற்றி இந்த கல்நெஞ்சம் நன்கு அறியும். என்னை மதம் மாற்றம் செய்ய முயலவேண்டாம். கற்பனைகளை வைத்து யதார்த்தத்தை பேசுவது நியாயமற்ற அணுகுமுறை ///

            சன்னி,ஷியா என்பதுகொள்கை அடிப்படையில் உள்ள பிரிவுகள் .ஷியா,சந்நியாகவும் ,சன்னி ஷியாகவும் மாறலாம் .
            ஷேக் ,சையத் என்பது வடநாட்டில் உள்ள குடும்ப கோத்திரம் ,அவர்கள் ஒருவொருக்கொருவர் திருமண உறவுகள் வைத்துக் கொள்கின்றனர் .
            லெப்பை,மரைக்காயர்,ராவுத்தர் இவர்கள் மூதாதையர்கள் செய்த தொழிலின் குறிக்கும் வண்ணம் அழைக்கப்பட்டவர்கள் .முன்பு இவர்களுக்குள் சகஜமாக திருமண உறவுகள் வைத்துக் கொள்கின்றனர் .மேலும் இப்போது தங்கள் பெயருக்கு பின்னால் இந்தபிரிவு பெயர்களை எழுதும் பழக்கம் முற்றிலும் ஒழிந்துவிட்டது .லெப்பை மட்டும் B.Cயாக இருந்த சமயத்தில் அனைவருமே தங்களது சாதி லெப்பை என்றே குறிப்பிட்டு வந்தனர்
            கல்நெஞ்சம் கரையும்
            ////Pakistan caller: Brother, you have to fight. This is a matter of prestige of Islam. Fight so that your fight becomes a shinin…………………………….
            Mumbai terrorist: Amen!
            (பாக்.தீவிரவாதிகள் டெலிபோன் உரையாடல் மும்பை 26/11)

            Wasi: ‘Shoot them in the back of the head.’

            Akasha: ‘Sure. Just as soon as we come under fire.’

            Wasi: ‘No. Don’t wait any longer. You never know when you might come under attack.’
            Akasha: ‘Insh’Allah’ (God willing).
            (பாக்.தீவிரவாதிகள் டெலிபோன் உரையாடல் மும்பை 26/11)///

            பாகிஸ்தானிகளின் இந்த உரையாடல்களை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் ?
            இந்த பதிவுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு?

            • டெலிபோன் உரையாடல் சாதி பிரிவு பற்றி அல்ல தூய இஸ்லாம் மக்களை எப்படி மூளைச் சலவை செய்யும் என்பதற்கு உதாரணம்.

              • கல் நெஞ்சம் /////டெலிபோன் உரையாடல் சாதி பிரிவு பற்றி அல்ல தூய இஸ்லாம் மக்களை எப்படி மூளைச் சலவை செய்யும் என்பதற்கு உதாரணம்.////
                தூய இஸ்லாம் இவ்வாறு செய்ய சொல்லுகிராதா என்பதை குரான் ,ஹதித்களில் இருந்து ஆதாரங்கள் வைக்கப்பட வேண்டும் .அவனவன் இஸ்லாத்தை பயன்படுத்தி பேசுவதெல்லாம் இஸ்லாம் ஆகாது.
                தூய இஸ்லாத்தை படித்தால் கல்நெஞ்சமும் கரையும்

                • கடையநல்லுரில் உள்ளவர்களும் தூய இஸ்லாமை சேர்ந்தவர்கள்தானே 🙂

                  • இல்லை ,அதிலிருந்து விலகியவர்கள் .ஆன்னல் பதிவில் உள்ளது அனைத்தும் உண்மைகள் அல்ல

    • வினவின் கருத்து. இந்த பதிவின் கடைசியில் உள்ளது

      ///ஆட்சியதிகாரம் இந்தத் தாலிபான்களின் கைகளில் இன்னமும் நேரடியாச் சேரவில்லை. இருந்தால் எப்படியிருக்கும் என்பதை நாம் ஆப்கானிஸ்தானைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இது போன்ற நச்சுக் கிருமிகள் தலையெடுப்பது அந்த சாதிகளில் இருக்கும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் உழைக்கும் மக்களுக்குமே எதிரானது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு இவர்களை முறியடிக்க முன்வர வேண்டும். அப்போது தான் இவர்களை முற்றாக ஒழித்துக்கட்ட முடியும். அப்படிச் சாதிக்க முடியும் என்பதை இதே தருமபுரியில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னே தோழர்கள் அப்புவும் பாலனும் நிரூபித்துச் சென்றுள்ளனர்.
      ///

  27. சாதிப் பெருமை பேசுவதே வன்கொடுமைதான்!

    தருமபுரி நாயக்கன் கொட்டாய், கடலூர் பச்சாரப்பாளையத்தைத் தொடர்ந்து தற்போது தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், டி.கல்லுப்பட்டி என தொடர்கின்றன தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தீண்டாமைத் தாக்குதல்கள். டி.கல்லுப்பட்டி கைலாசநாதர் மலைக்கோவிலில் பூசாரியாக இருந்த எஸ்.நாகமுத்து என்கிற 22 வயதான தாழ்த்தப்பட்ட இளைஞர் ஆதிக்கச்சாதியினரால் தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டதால் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தற்கொலை என்று சொல்லக்கூடாது. இது ஒரு படுகொலை!

    இப்படி நாடெங்கிலும் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத்தாக்குதல்கள் தொடர்கின்றன. இத்தகைய தாக்குதல்களில் யாரைக் குற்றவாளியாக்குவது? தாக்குதல்களைத் தூண்டுவோர், தாக்குதல்களில் நேரடியாக ஈடுபடுவோர், தாக்குதல்களுக்குத் துணைபோவோர் மட்டுமே குற்றவாளிகளா? இவர்கள் மட்டுமல்ல!தீண்டாமையை கடைபிடிக்கின்ற அனைவருமே குற்றவாளிகள்தான். அப்படியானால் தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் யார்? தான் இந்தச்சாதிக்காரன் என பெருமை பேசுவதும், தனது பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் போட்டுக்கொள்வதும் தீண்டாமையின் மற்றோரு வடிவமே. ஆம்! இவர்கள் அனைவருமே வன்கொடுமைக் குற்றவாளிகள்தான்!

    சாதியம் குறித்து நான் ஏற்கனவே எழுதிய பதிவுகளை உங்களோடு பகிர்கிறேன்.

    ஜனனி ஐயரும் ஆண்டாள் முதலியாரும்!

    சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?

    சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?….தொடர்ச்சி

    • //தாழ்த்தப்பட்ட இளைஞர் ஆதிக்கச்சாதியினரால் தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டதால் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தற்கொலை என்று சொல்லக்கூடாது. இது ஒரு படுகொலை!//

      தூக்கு மாட்டிக்கொண்ட திரு. காமராஜுக்கு ஒரு நியாயம் (தற்செயல்), திரு. நாகமுத்துவுக்கு ஒரு நியாயம் (படுகொலை).

  28. // தலித் இளைஞர்கள் ஜீன்ஸ், கூலிங் கிளாஸ், டி-சர்ட் அணிந்து உயர்சாதிப் பெண்களை மயக்கி விடுகிறார்கள

    இவனுங்களுக்கு விவரம் பத்தல. கூடவே நைகி ஷூ, பெல்ட் எல்லாம் போட்டுருக்கலாம். பொண்ணுங்க இன்னும் ஜாஸ்தி மயங்கியிருப்பாங்க.

  29. தலித்கள் அனைவரும் இஸ்லாத்துக்கு மாறினால் மட்டுமே தலித் என்ற வார்த்தை இந்தியாவில் இருக்காது,இஸ்லாத்தில் அனைவரும் ஒன்று.தலித்கள் விரைவாக முடிவெடுக்க வேண்டும்,உன்னை கோவிலுக்குள் அனுமதிக்காத கடவுள் உன் கடவுள் அல்ல,உன்னை தாழ்ந்தவன் கீழ்சாதி என்று சொல்லும் மதம் உன் மதம் அல்ல,வலுக்கட்டாயமாக கோவிலுக்குள் நுழைத்து சலுகைகள் கொடுத்து உன்னை அடிமையாகவே ஏன் வைத்திருக்கிறது இந்து மதம் என்று யோசி,இழிவை பொறுக்காமல் நீ வெளியேறி இஸ்லாத்துக்கு வந்தால் இந்தியா இஸ்லாமிய நாடாகும்.

    • ஆதிக்க சாதி வெறி இந்துக்களிடம் மட்டும் அல்ல இஸ்லாம் மதத்தினரிடம் ஆழமாக உள்ளது. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் இது தலித் முஸ்லீம்களின் நிலை..மதம் மாறினால் மட்டும் இவர்கள் நிலை மாறிடாது.
      http://www.maattru.com/2011/12/blog-post_6584.html

    • முதலில் நீங்கள் முஸ்லிமாக வாழுங்கள் .உங்களது அழகிய நடைமுறைகளை பார்த்து அவர்கள் தானாகவே வருவார்கள் .800 வருடம் முகலாயர்கள் மது மாதுவில் மயங்கி வீழ்ந்தார்கள் .அவர்கள் இஸ்லாமியர்களாக ஆட்சி செய்து இருந்தால் ,அழகிய முன்மாதிரி முகம்மது நபி[ஸல்] அவர்களைப்போல உமர்[ரலி] அவர்களைப்போல ஆட்சி செய்து இருந்தால் மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்திருக்க முடியும் .நமது சொற்களை விட செயல்களே மக்களை ஈர்க்கும் .அதைத்தான் இங்கே கல்நெஞ்சம் கேட்கிறார்

        • Christianity is not pure. Christians are not good. Only teachings of Christ is good. Not the heaven and hell thing here. How to live and love. That’s it. No religion mumbo jumbo. I am fighting against petecostals as much you are. I respect Buddha even. I don’t believe Christians alone are “saved”. I draw most of my morals from Jesus’ teaching and I follow him as much as I can. That’s it. I hate all unwanted rituals, violence, money mongering etc done in the name of religion.

    • வினவின் கருத்து. இந்த பதிவின் கடைசியில் உள்ளது

      //ஆட்சியதிகாரம் இந்தத் தாலிபான்களின் கைகளில் இன்னமும் நேரடியாச் சேரவில்லை. இருந்தால் எப்படியிருக்கும் என்பதை நாம் ஆப்கானிஸ்தானைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இது போன்ற நச்சுக் கிருமிகள் தலையெடுப்பது அந்த சாதிகளில் இருக்கும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் உழைக்கும் மக்களுக்குமே எதிரானது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு இவர்களை முறியடிக்க முன்வர வேண்டும். அப்போது தான் இவர்களை முற்றாக ஒழித்துக்கட்ட முடியும். அப்படிச் சாதிக்க முடியும் என்பதை இதே தருமபுரியில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னே தோழர்கள் அப்புவும் பாலனும் நிரூபித்துச் சென்றுள்ளனர்.
      //

  30. இந்தியாவை மறுகாலனியாக்க துடிக்கும் காங்கிரசு உள்ளிட்ட ஓட்டுகட்சிகள் , இலங்கை சிங்கள இனவெறிக்கு துணைபோகும் இந்த அரசு,அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலமக்களை போல கூடங்குல மக்களை ஒடுக்கும் ஜெ வின் கருங்காலி தனம்,சிறுவணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு,தமிழகத்தை இருண்ட கண்டமாக்கி மக்களை சிறுதொழிலில் இருந்து விரட்டும் மத்திய மாநில அரசுகள்,விவசாயிகளை உயிர்பளி வாங்கும் காவிரியில் கர்நாடகத்தின் அடாவடி போன்ற என்னற்ற பிரச்சனைளை முன்னிறுத்தி போராடி கட்சியை வளர்க்க துப்பற்று அரசியல் அனாதையாக்கப்பட்ட பச்சோந்தி ராமதாசு ,இப்போது தனது கட்சியின் கொள்கையான சா தீ யை பற்ற வைத்து அரசியல் செய்யும் ராமதாசின் பச்சோந்தியின்நிறத்தை பல தேர்தல்களில் பார்த்த உழைக்கும் மக்களிடத்தில் மீண்டும் பா ம க வை நிர்வாணமாக்கியுள்ளது.
    ஜீன்ஸ் டி-சர்ட் முதல் செருப்புவரை சாதிவெறியேற்றி, இனியும் சாதி அரசியல் செய்ய முடியும் என்ற ரமதாசின் கனவு பகல்கனவே.

    • அப்ப காட்டுக்கு போங்க…… இனக்குழு சாயங்காலாம தகலையில முக்காடு போட்டுட்டு எங்க போகுதாம்…..

  31. எனக்கு சொந்தமாக இருக்க சில பாரம்பரியம், தகுதிகள் வேண்டும் அது இல்லாத எவனும் எனக்கு சொந்தமாக முடியாது.

    • கருவறையில் பூஜை செய்ய பெண்களை மயக்கியது தேவநாதனின் தகுதி உமக்கு என்ன தகுதி?

  32. 86 மார்க் எடுத்தவனுக்கு கிடைக்காத வேலை
    62 மார்க் எடுத்தவனுக்கு
    ஏன் கிடைக்குது என்றுதான் கேக்கிறேன் ??
    இது பற்றி எவனும் பேச மாட்டானே ??
    இது மட்டும்: பிரிவினை இல்லையா??
    இதனால் ஏழை மாணவன் பாதிக்கப்படலையா ??
    இது மட்டும் உயர்வு தாழ்வு இல்லையா ??
    அப்பறம் எங்க ஜாதிக்காக நாங்கள் போராடாமல்
    சட்னிக்காகவாடா போராட முடியும் ?

    • படையாச்சி உலகத்துலேயே நீ பண்ணுவது தான் சூப்பர் காமெடி,போய் யாராவது உன் சொந்தக்காரன் படிச்சவன்கிட்ட பொய் கேளு உனக்கும் ரிசர்வேஷன் நீ எல்லாம் 50 மார்க் எடுத்தாலே போதும் அதுவும் பல பேர் எடுக்க மாட்டீங்குறீங்க.தலித்கள் போட்டியில் படித்து அவர்கள் கோட்டாவிலேயே கட் ஆப் மார்க் 70, 80 ன்னு போயிட்டு இருக்காங்கப்பா உதாரணம் சட்டாக்கல்வி நுழைவு தேர்வில் 74 சதம் ரெண்டு வருஷம் முன்பே.

      • இந்த கேள்வியை நியாயமாய் ராமதாஸிடம் போய் படியாச்சி கேட்டுபார்க்கணும்…..உங்க சாதியில அன்புமணியைவிட வேறு “இளைஞர்களே” இல்லையாமா……அதுக்கு பதில் சொல்லு அப்புறம் ஊர் நியாயம் பேசு…

    • படையாச்சி!!

      இந்திய தேசத்தின் ராகு காலமே… இந்த சலுகை அந்த இனத்தில்லுள்ள பரம ஏழைகளுக்கு இன்னும் எட்டா சுரக்காய்யாகத்தான் உள்ளது.

      முதலாளித்தும் எப்படி பணக்காரனை மேலும் பணக்காரனாக்குமோ அதேப்போல் வசதி படைத்த தலித்தை சலுகைக்கொடுத்து இடஒதிக்கீடு கொடுத்து மேலும் பணக்காரனக்குகிறது. ஏழை தலித் இன்னும் பரம ஏழையாகத்தான் போய்க்கொண்டிருக்கிறான்..

      நல்ல வேலையிலிருக்கும் 50 தலித்தை விசாரித்தால் அதில் 49 பேர் அவன் தாத்தா காலத்திலிருந்தே வழிவழியாக அரசாங்க வேலையிலிருப்பான் பொருளாதாரமிருந்தும் சலுகை முழுவதையும் அனுபவித்துக்கொண்டிருப்பான்.. ஒரே ஒருவன் மட்டும் பரமஏழை தலித்தாய் இருந்து முதன் முதலில் வேலைக்கு வந்திருப்பான்…

      இப்போது புரியும்…ஏன் 62 வருடமாகியும் இன்னும் சேரி சேரியாகவே இருக்கிறது என்று….

      இந்த சலுகைகளும் இடஓதிக்கீடும் ஒரு பொருளாதாரம் படைத்த தலித்தை மேலும் பொருளாதரம் படைத்தவனாக்கிறதே தவிர…ஏழை தலித்களை முன்னேற்ற அவர்கள் வாழ்விலிக்காக எதும் செய்யவில்லை…

      ஒருவேளை அரசாங்கம் இந்த சலுகைகளை தூக்கி ஏறிய வருமானால்..அவ்வளவுதான்…இந்த ஏழை தலித்களை சாலையில் நிப்பாட்டி..போராட்டாம் என்ர பெயரில் இவன் சலுகையை தக்கவைக்க அநத அப்பாவி ஏழை தலித்களை உறுகாய் ஆக்கி..உப்புக்கண்டம் போடுவான்…

  33. நாங்க யாரையும் அடக்கவோ ,ஒடுக்கவோ
    மாற்றவோ நினைக்கவில்லை ..உங்க வேலைய
    பார்த்தாலே எங்க வேலையை நாங்க பார்க்க போறோம் …
    ஆனால் ஜாதியை ஒழிக்கிறது மட்டும்தான்
    உங்க வேலை என்றால் நாங்கள் ஜாதிவெறியனாகவே
    இருந்துவிட்டு போகிறோ

    • உங்க வேலையே அடுத்தவன் தாலியரறுக்கதுதான்னா பாத்துகிட்டு எப்படி சும்மா இருக்க முடியும்.

  34. தமிழ்நாட்டில ஆதிக்க சாதிக்கு வேற அர்த்தம் இப்ப. கட்டப் பஞ்சாயத்து பண்றத யாராவது கேட்டா அவன் தான் ஆதிக்க சாதி.
    நீங்க முதல்ல நிறைய பாடம் படிக்கணும் பாஸ்.

    • ராமதாஸுகிட்ட முதல்ல இத சொல்லு. தைலாபுரம் தோட்டமே ஒரு கட்ட பஞ்சாயத்து….

  35. இப்போது யாராவது அவர்கள் செய்யும் அயோகியதனங்களை கேள்வி கேட்டால் சாதி வெறியன் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். என்ன கொடும சரவணன்

  36. நாம் வாழும் வாழ்க்கை முறை, கலாச்சார நியதி,
    செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை என பிரித்து தெளிவுபடுத்துவது. சாதியின் பெயரால் மக்களுக்குள் வேற்றுமையும் ஏற்றதாழ்வையும் எதிர்க்கிறோம் என்னும் சில கட்சிகள் மொழியின் பெயரால் தமிழன்-கன்னடன்-மலையாளி என்றும்.. பூகோள ரீதியாக திராவிடன் ஆரியன் என்றும் பிரித்து ஏற்ற தாழ்வு கற்பிக்கிறார்கள்.. அவர்கள் ஆட்சியை பிடிக்க சில வேற்றுமைகளை ஊக்குவிப்பார்களாம், நாம் நமது கலாச்சாரம் பாரம்பரியம் பின்பற்றினால் தவறாம்..அவர்களின் பேச்சை கேட்டு நமது பாரம்பரியத்தையும், மிக சிறந்த பண்பாட்டு வழக்கத்தையும் கைவிடுவது முட்டாள்தனம்.

  37. சாதி ஒழிக்க புறப்பட்டவர்கள் முதலில் இங்கு உள்ள ஊழல், லஞ்சம், மது, கொலை, கொள்ளை, மக்களை ஏமாற்றும் அரசு அதிகாரிகள், இவைகளை திசை திருப்பும் அரசியல் வாதிகள், கொள்கைலேயேற்ற அரசியல் வாதிகள், மத்தியில் ஒரு கொள்கை மாநிலத்தில் ஒரு கொள்கை கொண்ட அரசியல் வாதிகள், வரி எய்ப்பு செய்யும் அரசியல் வாதிகள், எந்த உணர்வும் இல்லாமல் வாழும் சில தமிழர்கள் இவர்களை முதலில் அகற்றுங்கள் பிறகு சாதிகளை அகற்றலாம்,.

  38. பாட்டாளிகளே, திராவிடத்தை வளர்த்த நாம் இனி நாம் சார்ந்த சமுகத்தை வளர்ப்போம், வந்தேறிகள் நம்மை வஞ்சகமாக உபயோகிக்கிறார்கள்.

    திராவிடம் தமிழருக்கு திராவகம்.
    Like ·

  39. // வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தபடுவதால் அதில் திருத்தம் கொண்டுவர சொல்லும் ராமதாசை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்
    – சமத்துவம் ­//

    – ­இந்த சட்டம் தவறாக பயன்படுத்தபடுவதற்க்கு இதை விட நல்ல உதாரணம் வேறு வேண்டுமா?????..

  40. // வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தபடுவதால் அதில் திருத்தம் கொண்டுவர சொல்லும் ராமதாசை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்
    – சமத்துவம் ­//

    – ­இந்த சட்டம் தவறாக பயன்படுத்தபடுவதற்க்கு இதை விட நல்ல உதாரணம் வேறு வேண்டுமா?????..

    சாதி வெறி என்று விமர்சிப்பவர்கள் முதலில் சாதி வெறி என்றால் என்ன என்று முதலில் விளக்க வேண்டும், எது சாதி வெறியுடைய பேச்சு எது சாதி வெறி இல்லாத பேச்சு என்று முதலில் விளக்க வேண்டும்.

    • சுரேஷ் மணி..

      ஆறாம் அறிவில் சிகரட் வைத்து சுட்டதுப்போல் உள்ளது…!!
      சட்டத்திற்கு பின்னால் ஒழிந்துக்கொண்டு வீரமென்ன வீரம்..!!

      சிவன் கழுத்தில் கிடக்கும் பாம்புகள்…இப்படித்தான் பம்மாத்துவிடும்.

      • இது அடுத்த இம்சை…அப்புறம் ஏன் தென்னாப்பிரிக்கா போனீங்க பாஸ்….

        • வாங்க புலிகேசி!!!

          சலுகையோ இடஒதிக்கீடோ இல்லாமல் தங்கள் வாழ்வுதன்னை தமது உழைப்பால் அயாராது முன்னேறி செல்லும் எம் போன்ற மக்களை காண….

          தென்னாப்பிரிக்காவில் எவனுக்கும் எதற்கும் சலுகையில்லை வயதான மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையை தவிர…

          இந்தியாவிலுள்ள சலுகைகளையும் இடஒதிக்கீட்டையும் பற்றி இங்குள்ள கருப்பரின சகோதர்களிடம் பேசியபோது…அவர்கள் இது மாதிரியான விடயம் நிச்சயமாக திறமையற்றவரையும் சோம்பறிகளையும் உருவாக்கும் மற்றும் திறமையாளர்களையும் அறிவுஜீவிகளையும் நலிவடைய செய்யும்.. அரசாங்கம் மீது மக்களுக்கான பிடிப்பினையும் குறையும்..நாடு என்பது எல்லோருக்கும் ஒன்றே அன்றி வேறல்ல என்றனர் (ஓளிக்காட்சி பதிவு செய்துள்ளேன்)

          அதானால்தான் ஆப்பிரிக்க கண்டத்திலேயே இந்த நாடு மட்டும் மிகபெரிய பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது…சலுகை கொடுத்தே ஒய்ந்த நாடு ஜிம்பாபே – இது பக்கத்து நாடுதான்..

          • ஒரு reply போட்டுட்டு அப்படியே தூங்கிடுவியா தியாகு நாம சொன்னது ரைட்டா தப்பா யாராவது ஏதாவது அதைப்பத்தி சொல்லியிருக்காங்களா என்றெல்லாம் பார்த்தல் தான் கொஞ்சமாவது வளர்ச்சி பக்குவம் உலக அறிவு எல்லாம் ஏற்படும் ……இப்பவாவது நன்றாக புரிந்துகொள் உன் சாதிக்கு தான் 51சதம் இட ஒதுக்கீடு அரசாங்கத்தில் கொடுக்குறாங்க கொடுக்குறாங்க கொடுக்குறாங்க. தலித்துக்கு 18 சதம்தான் கொடுக்குறாங்க.

          • // சலுகையோ இடஒதிக்கீடோ இல்லாமல் தங்கள் வாழ்வுதன்னை தமது உழைப்பால் அயாராது முன்னேறி செல்லும் எம் போன்ற மக்களை காண….//

            இவரு மட்டும்தான் உழைக்கிறாராம். அய்யோ! புல்லரிக்குது. என்னமோ இவரு FC ல இருக்கிற மாதிரியும் , இட ஒதுக்கீடு சலுகையை அனுபவிக்காத மாதிரியும் பெரிய ………. மாதிரி பேசுராறு. இந்தியாவில் தலித்துகளுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு இருக்கா? மற்ற சாதிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லையா? தமிழ் நாட்டில் MBC, BC க்கெல்லாம் இட ஒதுக்கீடு இல்லையா? தலித்துகளுக்கு வெறும் 18 சதவீதம் தான். மற்ற சாதிகளுக்குத்தான் மிச்ச 51 சதவீத இட ஒதுக்கீடு. இந்திய அள்வில் தலித்துகளுக்கு 22 சதவீதம், மற்ற பிற்படுத்தப் பட்ட சாதிகளுக்குத்தான் 27 சதவீத ஒதுக்கீடு.

            தலித்துகளை ஒடுக்கும் போது ஆண்ட பரம்பரை, மோண்ட பரம்பரை. இட ஓதுக்கீடு வேணுங்கிற போது வெட்கமே இல்லமல், என்று கூறுவது. நான் ஆதிக்க சாதி என்று கூறும் இந்த மடையர்கள் என்ன ……..க்கு BC, MBC ல இருக்கணும்? தங்கள் சாதிச் சான்றிதழை FC க்கு மாற்றி விட வேண்டியது தானே?

            ஏற்றத்தாழ்வான சமுதாய அமைப்பில் சமத்துவம் என்பதே இப்படித்தான் இருக்க முடியும். ஒரு ஊனமுற்றோனையும், கால் நன்றாக இருப்பவனையும் ஒரே மாதிரி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒட பரிசு தருவது எவ்வளவு அயோக்கியத்தனமோ, அதைப் போன்றதுதான் இந்த சாதிவெறிச் சமத்துவப் புடுங்கிகளின் சமத்துவம்.

            இதெல்லாம் இவர்களுக்குத் தெரியாததல்ல. பிற்படுத்தப்பட்ட மக்களிடம் தலித்துகள் மீது வெறுப்பைத் தூண்டி சாதி வெறி மூலம் பொறுக்கித் தின்ன வேண்டுமல்லவா?

  41. தமிழர்களை திராவிடர்களாக ஆக்க துடிக்கும் திராவிட கட்சிகள், இன்று தமிழகத்தில் திராவிடர்கள் அதிகமாக வாழ்கின்றனர், நாம் கலப்பு திருமணத்தை அனுமதித்தல் திராவிடர்கள் எளிதில் தமிழகத்தை கலப்பினமாக்கி ஒரு சில நூறு வருடங்களில் தமிழ் நாட்டில் தமிழர் இல்லை என்ற நிலை உருவாகும், தமிழர்களே எச்சரிக்கை, எச்சரிக்கை, சில திராவிட தலைவர்கள் பின்னல் இருந்து இங்கிருக்கும் தமிழர்களை துண்டிவிடுகிரர்கள். தமிழர்களே எச்சரிக்கை, எச்சரிக்கை.

  42. ராமதாசு ஒரு பச்சை அயோக்கியர். முழு சாதி வெறியர். இந்த தேர்தலோடு அவர் காணாமல் போய் விடுவார். மக்கள் ஏமாளிகள் அல்ல.

  43. Mr.Uran, why dont you come out with your original name??? if you dont like to add your caste name to your name it is up to you (because you feel ashame about your caste) but you dont have any right to say no one should add their caste name , in that case what the follwing names reveals??
    1) Pranab Mukargi
    2)Manmohan sing
    3)Chenna Reddy
    4) chandra babu naidu
    etc etc

    • எந்தப் பெயரில் வருகிறோம் என்பதல்ல இங்கு பிரச்சனை.

      சாதியை தனது பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்வதில் உள்ள மன ஓட்டத்தில் ஒளிந்துள்ள சாதிப் பெருமையைப் பற்றிதான் இங்கு பேசி வருகிறோம். தனது சாதியை ஒருவன் உயர்ந்ததாக நினைக்கும் அதே வேளையில் தனக்குக் கீழே ஒரு இழிந்த சாதிக்காரன் இருக்கிறான் என்பதும் சேர்ங்தே உள்ளது. இந்த உயர்சாதிப் பெருமை படிப்பால்- பண்பால்- பதவியால்-சேவையால் வருவதில்லை. மாறாக இது பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது. பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரை போட்டுக் கொள்வதே பிறப்பால் தான் உயர்ந்தவன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காகத்தான். நீங்கள் காட்டியுள்ள உதாரணங்களுக்கும் இது பொருந்தும். சமூகத்தில் எவ்வளவு கேடுகெட்டவனாக இருந்தாலும் அவனும் தனது சாதிப் பெயரை போட்டுக் கொண்டு தன்னை உயர்ந்தவனாகத்தானே பாவித்துக் கொள்கிறான்.

      மனிதனை மனிதன் பிறப்பால் இழிவுபடுத்தும் சாதியை போட்டுக் கொள்வதுதான் அசிங்கம்.

      மேலும் சில விவரங்களை கீழ்கண்ட இணைப்புகளில் பார்க்கலாம்.

      http://hooraan.blogspot.in/2011/10/blog-post.html
      http://hooraan.blogspot.in/2011/06/blog-post.html
      http://hooraan.blogspot.in/2011/06/blog-post_1601.html

  44. inimale dalit entha thappu panninalu “avan dalit.athanalathan arrest panitanganu solluveenga pola”… சட்டம் முன் எல்லாரும் சமம் .தவறு செய்த பின் தான் தெரிகிறது அவன் தலித் என்று.பின் இந்த மாதிரி நியூஸ் papers ” இது உயர் சாதினரின் அடக்குமுறை என்பர் “.

  45. Islamin samathuvam patri thambattam adikkum silarukku! Kuran bothanaigal!!!
    9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
    9:5. முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள்.
    8:55. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் – அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
    25:44. அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை-அல்ல; (அவற்றை விடவும்) அவர்கள், மிகவும் வழி கெட்டவர்கள்.
    7:176. அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது – இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும்
    I am not a muslim. I am living a life far better than most muslims and your prophet. I married only one girl at proper age. I never fought or killed anyone. I never took other’s wealth or property and I live my life according to my own values and beliefs. But according to your islam I am like animals, dog, i should pay you tax are to be killed. Are you not feeling ashamed to say this book is from god?

  46. //இந்தியாவிலோ கடைந்தெடுத்த நாலாந்தர பொறுக்கிகள் சரணடையும் கடைசி புகலிடமாக சாதி இருக்கிறது. இவர்கள் சாதாரண பொறுக்கிகளல்ல – ஓட்டுப் பொறுக்கி ஒட்டுண்ணிகள்//

    சுதந்திர காலத்திற்கு முன்பே கடைந்தெடுத்த நாலாந்தர மனிதர்கள் கிளம்பிவிட்டனர்..ஜாதிக்காக இயக்கம்..என்று ஆரம்பித்து இன்று ஜாதியின் பெயரில் இயக்கம் என வளர்ந்துவந்துவிட்டது….

    //இவர்கள் சாதாரண பொறுக்கிகளல்ல///

    அக்மார்க் முத்திரை குத்திய அசல் பொறுக்கிகள்…

  47. @HistFeet///Islathukku vaarungal… pira mathathavarai kafir endu koorungal… avargal ilivaanavargal endru saadungal… orai vittu odungal!///
    காபிர் என்றால் தவறான வார்த்தை அல்ல .முஸ்லிம் அல்லாதவர் என்பதே பொருள் .சில முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களிடம் சண்டையிடுகையில் ஒருவொருக்கொருவர் காபிர் என்பார்கள் .இதைவைத்து நீங்கள் காபிர் என்றால் தவறான வார்த்தை பிரயோகமாக நினைத்துக் கொண்டீர்கள்.
    காபிர் என்ற அரபு சொல்லுக்கு இறைவனாக அல்லாஹ்வை நிராகரிப்பவர் என்று பொருள்

    • நான் அல்லாவை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் காபிரா இல்லையா? காபிர் என்றால் என்னை கொன்றுவிடுவீர்களா?

      • விஜய் , நீங்க கண்டிப்பா காபிர்தான். முகமது வழியில் இஸ்லாமிய ஆட்சி நடந்தால் ,நீங்கள் இரண்டாம் தர மனிதனாகவே நடதப்படுவீர். ஜிசியா என்னும் வரி கட்ட வேண்டும். அல்லாவின் பாதையில் நீங்க கைம்மா செய்யவும் படலாம். அப்படி செய்யப்பட்டால் அதற்க்கு இஸ்லாம் கம்பெனி பொறுப்பாகாது.
        //8:55. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் – அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.// அதாவது , உங்களை பத்திதான் அல்லா சொல்றாரு.

    • ஒரு முஸ்லிம் திட்டுவதற்கு காபிர் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறான் என்றால் அது ஒருவரை கேவலபடுத்தும் நோக்கில் சொல்லப்படுவது தானே. இதை குர்ரான் என்கிற நூலில் அல்லாவே சொல்லுகிரானாம். இது தான் ஒரே கடவுளாம்.

      • அவரது அறியாமையில் சொல்லுகிறார் .அப்புறம் முஸ்லிமாகமாறிவிட்டால் தலித் என்று நீங்கள் பிரித்து பார்க்கப்படமாட்டீர்கள் என்பதுதான் எனது கருத்து.

    • அது ஏன் ஒருவரை திட்டும்போது / சண்டையிடும் போது இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
      அதாவது காஃபிர் களுடன் சண்டை போடலாம் / போட வேண்டும், திட்டலாம் / திட்ட வேண்டும் என்பதாலா?

      தமிழிலும் கூட பார்ப்பான் (அ) பறையன் என்றால் இலக்கணப்பொருள் ஒன்றும் தவறானது இல்லை.

  48. @HistFee,Islam teaches non-muslims should pay a tax to muslim rulers
    முஸ்லிம்கள் சக்காத் என்னும் குர்ஆன் கட்டளைப்படி வருமான வரியை செலுத்த வேண்டும் .முஸ்லிம் அல்லாதவர்கள் அதற்கு இணையாக ஜிஸ்யா என்னும் பாதுகாப்பு வரி செலுத்த வேண்டும்
    Islam teaches that non-muslim witness are only half of a muslim witness
    முஸ்லிம்கள் இறைவனாக அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்கள் ,அவர்கள் பொய் சொன்னால் முபஹாலா என்னும் இறைவனின் சாபத்தை வேண்டும் பிரார்த்தனை பண்ண வேண்டும் .முஸ்லிம் அல்லாதவர்களிடம் இது போன்று முபஹாலா பண்ண நிர்பந்த முடியாது.
    Islam teaches that a non-muslim can’t marry a muslim girl but a mulsim can marry a non-muslim man
    கணவனே ஆதிக்கம் செலுத்தும் நிலையில் முஸ்லிம் பெண் முஸ்லிம் அல்லாதவர்களை திருமணம் செய்தால் மத நடவடிக்கைகளை செய்ய இயலாது.மேலும் தனது குழதைகளின் நிலையம் விரும்பத்தாகத சங்கடத்தில் சிக்கிவிடும்
    Islam teaches that you can lie/cheat to kill a non-muslim
    போர் தந்திரங்களை இங்கே தவறாக சுட்டிகாட்டியுள்ளார்.முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் நடக்கும் போரில் எதிரிகளை கொல்லுங்கள் என்றாலும் முஸ்லிம் அல்லாதவர்களை கொல்லுங்கள் என்றாலும் ஒன்றே . இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் போர் நடந்தால் எதிரிகளை கொள்ளுங்கள் என்று சொல்லுவார்கள் அல்லது பாக்கிஸ்தானி களை கொல்லுங்கள் என்பார்கள் .இதன் பொருள் பாகிஸ்தானில் உள்ள அப்பாவி மக்களை கொள்ளுங்கள் என்று அர்த்தம் அல்ல.
    With all said, please refer below links. Ask yourself honestly if isalm can bring equality in a diverse society?
    இவைகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் திட்டமிட்ட அமைப்புகள் .அவர்கள் கொடுக்கும் ஆதாரங்கள் பற்றிஆய்வு செய்து பாருங்கள் உண்மை தெரியும் .
    “Our offer must be based on religious practices. If we look at the prophet’s agreement in the Madinah constitution, civil rights were given to the Jews but the rights must be paid back with responsibility. They must have the responsibility and agree to defend our country and not insult the agreement,” he said during a forum here.
    முஸ்லிம் அல்லாதவர்களைக் கொன்றால் யூதர்கள் எப்படி அங்கு வாழ்ந்திருக்க முடியும்?மேலும் முஹம்மது நபி[ஸல்] அவர்கள ஆட்சியாளராக இருக்கையில் ,தனது உடமைகளை அடகு வைத்து யூதரிடம் கடன் பெற்றுள்ளார்கள்
    மற்றும் நீங்கள் கூறும் வசனங்கள் எல்லாம் போர்காலத்தில் அருளப்பட்டவைகள .அவைகள் அனைத்தும் அதுபோன்று போர் நடைபெறும் சமயங்களில் மட்டுமே செயல்படுத்தக் கூடியவைகள் .
    I am not a muslim. I am living a life far better than most muslims and your prophet. I married only one girl at proper age. I never fought or killed anyone. I never took other’s wealth or property and I live my life according to my own values and beliefs. But according to your islam I am like animals, dog, i should pay you tax are to be killed. Are you not feeling ashamed to say this book is from god?
    நீகள் இப்போது ஒரு பெண்ணோடு வாழ்கிறீர்கள் .ஆனால் உங்களது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முன்னோர்கள் எத்தனை மனைவிகளுடனும் என்னேனென்ன வயதுகளில் திருமணம் செய்தார்கள் என்ற பார்த்தால் உண்மைகள் தெரியும் .
    நான் தலித்களுக்கு மட்டுமே அழைப்பு விட்டேன் .நீங்கள் தலித் ஆக இருந்தால் ஐம்பது ஆண்டுகளுக்குமுன்னர் உங்கள் சமுதாய அந்தஸ்தை அறிந்து இருக்க மாட்டீர்கள் .
    முஹம்மது நபி ஸல் ஆட்சியில் காபிர்கள் நிறையவே வாழ்ந்தார்கள் ..அவர்கள் கொள்ளை அடித்தார் என்றால் யூதனிடம் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டிருக்காது
    இஸ்லாத்தை உண்மையான வரலாற்றையும் கொள்கைகளையும் அறிந்து கொள்ள
    http://www.onlinepj.com/
    அங்கெ சென்று படஈத்து விட்டு அப்புறம் உங்களது கேள்விகளை வையுங்கள்

    • //நீகள் இப்போது ஒரு பெண்ணோடு வாழ்கிறீர்கள் .ஆனால் உங்களது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முன்னோர்கள் எத்தனை மனைவிகளுடனும் என்னேனென்ன வயதுகளில் திருமணம் செய்தார்கள் என்ற பார்த்தால் உண்மைகள் தெரியும் //

      enga pattan muppattan pannuna thappala neeyum un koottamum innaikku pandra thappu srai agathu thambi. rendumey thapputhan!!!

      //முஸ்லிம்கள் இறைவனாக அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்கள் ,அவர்கள் பொய் சொன்னால் முபஹாலா என்னும் இறைவனின் சாபத்தை வேண்டும் பிரார்த்தனை பண்ண வேண்டும் .முஸ்லிம் அல்லாதவர்களிடம் இது போன்று முபஹாலா பண்ண நிர்பந்த முடியாது.//

      ithey pola Indiavil muslim saatchi paathi satchinu sattam vantha othukuviya?

      //முஸ்லிம்கள் சக்காத் என்னும் குர்ஆன் கட்டளைப்படி வருமான வரியை செலுத்த வேண்டும் .முஸ்லிம் அல்லாதவர்கள் அதற்கு இணையாக ஜிஸ்யா என்னும் பாதுகாப்பு வரி செலுத்த வேண்டும்//

      yen? ellarukkum pothuva varumaana varinu poda vendiyathuthana? ithula ethukku paarapatcham?

      //கணவனே ஆதிக்கம் செலுத்தும் நிலையில் முஸ்லிம் பெண் முஸ்லிம் அல்லாதவர்களை திருமணம் செய்தால் மத நடவடிக்கைகளை செய்ய இயலாது.மேலும் தனது குழதைகளின் நிலையம் விரும்பத்தாகத சங்கடத்தில் சிக்கிவிடும்//

      appo, oru muslim kanavan matra matha pen meethu athikkam seluthi avaloda mathathai thadai seiyalam. anal oru kafir kanavan apdi seiyakoodathu. super samathuvam!!!

      • One thing Hisfeet,

        why does he say your pattan muppatan did what?

        How does he know what they did?

        In India Lord Ram is praised for being a one woman man and is seen as an example and people did respect that.So what makes him say that the forefather did polygamy or paedo stuff.

        Child marriage is not paedo stuff.

        • //In India Lord Ram is praised for being a one woman man and is seen as an example and people did respect that.So what makes him say that the forefather did polygamy or paedo stuff.//

          It won’t take them longer to pull Muruga or Krishna as examples. Even if I say I follow Judaism or Christianity, they will pull David, Solomon, Abraham etc. Why we need to justify something someone did generations ago? I have today’s life before me with lot of good things to do!

          //Child marriage is not paedo stuff.//

          Agree with you on this. Surely child marriage where two children are married to each other is not same as a old man marrying a child. But child marriage also is wrong. Not as bad as pedo but it is wrong.

          • Thats not the point man,Lord Ram is always an example for what he did and they also say Raman senjadha sei,Krishnan sonnadha sei,maathi seyyadhannu.

            Child marriage has its flaws fundamentally when the young boy dies before consumating the marriage and the girl becomes a widow of course the buy and the girls as kids have no idea about thambathyam let alone having a companion.

            It still is not paedo.

  49. //முஸ்லிம்கள் சக்காத் என்னும் குர்ஆன் கட்டளைப்படி வருமான வரியை செலுத்த வேண்டும் .முஸ்லிம் அல்லாதவர்கள் அதற்கு இணையாக ஜிஸ்யா என்னும் பாதுகாப்பு வரி செலுத்த வேண்டும்// ஒரு நாடுன்னா , நாட்டு மக்கள் எல்லோரும் ஒன்னுதானப்பா….பிறகு எதற்கு தனி தனி வரி….”பாதுகாப்பு வரி” கவனிக்கவும்.

  50. //நான் தலித்களுக்கு மட்டுமே அழைப்பு விட்டேன்// சாக்கடை நாற்றத்திற்கு மாற்று , மலக்குட்டைக்கு செல்வதா !

  51. //நீகள் இப்போது ஒரு பெண்ணோடு வாழ்கிறீர்கள் .ஆனால் உங்களது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முன்னோர்கள் எத்தனை மனைவிகளுடனும் என்னேனென்ன வயதுகளில் திருமணம் செய்தார்கள் என்ற பார்த்தால் உண்மைகள் தெரியும்//

    மெத்தச் சரி. மிக மிக சரி. மிகவும் சரி. ஒன்றே ஒன்று மட்டும் இடிக்கிறது. இப்போதய தலைமுறை செர்ந்த பிற மத மக்கள் மேலே கண்டவை தவறு என்று அழுத்தம் திருத்தமாக வெளிப்படையாக கூறி எதிர்த்து மாற்றி அதனை இல்லாதொழித்து வருகின்றனர். அதாவது மாற்றத்திற்கு தயாராக உள்ளனர். வேறு ஏதும் இதைப்போன்ற தவறுகள் இருந்து களையப்பட வேண்டுமாயின். இந்த மாற்றத்தின் தேவை பற்றி பேசுதலே தவறு எனவும் இவை மத சட்டத்திற்கு புறம்பானது எனவும் யாரும் மறுக்க மாட்டார்கள். மாற்றம் / முடிவு அப்போதைய சமூக பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் அமையும். வெளிப்படையாக மாற்றம் ஏற்கப்படும். வளரும். முன்னோர் செய்தவை எல்லாம் சரி என்று கூறி நிறுவ யாரும் முயற்சித்தால் நகைப்பர்.

    இந்த அடிப்படையில் வைத்து நீங்கள் சொன்ன இவை //நீகள் இப்போது ஒரு பெண்ணோடு வாழ்கிறீர்கள் .ஆனால் உங்களது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முன்னோர்கள் எத்தனை மனைவிகளுடனும் என்னேனென்ன வயதுகளில் திருமணம் செய்தார்கள் என்ற பார்த்தால் உண்மைகள் தெரியும்// சரியா தவறா – முன்னர் யார் செய்திருந்தாலும் – என கூறுங்கள்.

    • நோக்கி ///இந்த அடிப்படையில் வைத்து நீங்கள் சொன்ன இவை //நீகள் இப்போது ஒரு பெண்ணோடு வாழ்கிறீர்கள் .ஆனால் உங்களது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முன்னோர்கள் எத்தனை மனைவிகளுடனும் என்னேனென்ன வயதுகளில் திருமணம் செய்தார்கள் என்ற பார்த்தால் உண்மைகள் தெரியும்// சரியா தவறா – முன்னர் யார் செய்திருந்தாலும் – என கூறுங்கள்.//

      அவர்கள் செய்தது அந்த காலத்தில் சரி நாம் செய்வது இந்த காலத்தில் சரி .25 ஆண்டுகளுக்கு முன் சைக்கிளில் இரவில் லைட் இல்லாமல் ஓட்டினால் குற்றம் இப்போது குற்றம் இல்லை .
      புரிந்து கொள்ளுங்கள் 75 ஆண்டுகளுக்கு முன்னர் 10 க்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றேன் என்று சொல்லுவது பெருமை .
      ஆனால் மூன்று குழந்தைகள் என்று சொல்வதற்கே வெட்கம் .
      ஒரு மனைவியுடன் இரண்டு குழந்தைகளை வளர்ப்பதே பொருளாதார சிக்கல் .
      எப்படி இரண்டாவது திருமணத்திற்கு செல்ல முடியும்?
      ஒன்றுக்கு மேற்பட்ட திருமனம்கள் செய்தவர்கள் அதிகம் யார் என்பதை விகிதாச்சார அடிப்படையில் இதுவரை யாராவது சர்வே எடுத்து வெளியிட்டுள்ளார்களா?
      அப்படி வெளியிட்டால் உண்மைகள் வெளியே தெரிந்துவிடும் .

      • //புரிந்து கொள்ளுங்கள் 75 ஆண்டுகளுக்கு முன்னர் 10 க்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றேன் என்று சொல்லுவது பெருமை .
        ஆனால் மூன்று குழந்தைகள் என்று சொல்வதற்கே வெட்கம் .
        ஒரு மனைவியுடன் இரண்டு குழந்தைகளை வளர்ப்பதே பொருளாதார சிக்கல் .
        எப்படி இரண்டாவது திருமணத்திற்கு செல்ல முடியும்?
        ஒன்றுக்கு மேற்பட்ட திருமனம்கள் செய்தவர்கள் அதிகம் யார் என்பதை விகிதாச்சார அடிப்படையில் இதுவரை யாராவது சர்வே எடுத்து வெளியிட்டுள்ளார்களா?//

        இதில் மாற்றமா? அல்லது ஏமாற்றமா? அல்லது வருத்தமா?

        //அவர்கள் செய்தது அந்த காலத்தில் சரி நாம் செய்வது இந்த காலத்தில் சரி // தெரிந்தால் சரி.

        மாற்றம் / முடிவு அப்போதைய சமூக பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் அமையும்.

        • நோக்கி ,எதை நோக்கி ?/////இதில் மாற்றமா? அல்லது ஏமாற்றமா? அல்லது வருத்தமா?////
          இப்போது பலர் வைப்பாட்டி வைத்திருப்பது போல ,அல்லது ஆங்காங்கே விபச்சாரம் நடப்பது போலவோ வாய்ப்புகள் இருந்தும் அந்த வழியில் செல்லாமல் இருக்கிறோமே அது எப்படி ஏமாற்றமாக அல்லது வருத்தமாக் இருக்க முடியும்?
          ////மாற்றம் / முடிவு அப்போதைய சமூக பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் அமையும்.///

          இஸ்லாத்தின் கொள்கைகளை பின்பற்றி அந்த மாற்றங்கள் அடிப்படையில் வாழமுடியும் .இஸ்லாம் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதே நான் இங்கே சொல்ல வந்தது

          • தாங்கள் என்ன சொல்கிறீர்கள்.

            //இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை.இன்றும் அவசியப்படுவோர் செய்கின்றனர்// ஹி ஹி.

          • தவறாக நினைக்கவில்லை எனில், பெண்கள் என்ற உடனே ஏன் தாங்கள் நினைவுக்கு வரும் விஷயங்கள் எல்லாம் இந்த ஒரு வட்டதுக்குள்ளேயே உள்ளன
            1> வைப்பாட்டி
            2> விபச்சாரம்
            3> 4 மனைவியர்

            இதை விட்டு அவர்களுக்கு வேறு என்னவெல்லாம் தெரியும்? என்னவெல்லாம் செய்யலாம்?

            • நோக்கி ///
              தவறாக நினைக்கவில்லை எனில், பெண்கள் என்ற உடனே ஏன் தாங்கள் நினைவுக்கு வரும் விஷயங்கள் எல்லாம் இந்த ஒரு வட்டதுக்குள்ளேயே உள்ளன
              1> வைப்பாட்டி
              2> விபச்சாரம்
              3> 4 மனைவியர்

              இதை விட்டு அவர்களுக்கு வேறு என்னவெல்லாம் தெரியும்? என்னவெல்லாம் செய்யலாம்?///

              நீங்கள் எதைப்பற்றி கேட்டீர்களோ அதைப்பற்றித்தான் நான் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்
              இந்த தளத்தில் பாருங்கள் முஸ்லிம்கள் பலதாரமணம் என்ற விமர்சனங்களே வட்டமடித்துக் கொண்டிருக்கும் .எத்தனைதடவைகள் கேட்டிருக்கிறோம் ,முஸ்லிம்கள் ,ஹிந்துக்கள் கிறித்தவர்கள் ,மதமற்றவர்கள் இவர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் வைத்திருப்பவர்களின் சர்வே எடுத்து பாருங்கள் உண்மை புரியும் .அதைப்போலவே வைப்பாட்டி வைத்திருப்போர் விபச்சாரம் பண்ணுவோர் ,மேற்கண்ட எந்த தரப்பில் அதிகமானோர் இருக்கிறர்கள் என்று பாருங்கள் இன்னும் அதிக உண்மைகள் புரியும் .இதை செய்யாமல் ,ஒரே கேள்வியத்தானே ,முஸ்லிம்கள் 4 திருமணங்கள் செய்ய குரான் அனுமதிக்கிறது அதே பல்லவியைத்தானே பல காலம் பாடி வருகிறீர்கள் .நீங்கள் அந்த வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்

              • ஏன் வெளியே வர வேண்டும். நீங்கள் தான் அந்த புத்தகத்தில் கூறி இருப்பவை எல்லாம் சரி என்கிறீர்கள். எனவே கேட்கிறார்கள்.
                அது தவறு எப்போதும் / யார் செய்தாலும் / செய்திருந்தாலும் என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது.

                அதே பல்லவியை பல காலம் பாடுவது தவறு!!!!:-)
                ஆள் பிடிப்பதற்காகவும் கூட!!!:-)

              • மிகச்சரி. மிக மிகச்சரி. அதேதான். வெறும் ஜாதி பிரச்சினை மட்டுமல்ல இந்து மதம். வெறும் சிலுவைப்போர்கள் மட்டுமல்ல கிருத்துவம். அதே அதேதான்.

        • ஹரிகுமார் ////Then why do you need a Muslim Perosnal Law,go for the uniform civil code.///

          எப்ப பார்த்தாலும் முஸ்லிம்கள் 4 மனைவிகள் திருமணம் செய்கிறார்கள் என்றுதானே புலம்புகிறீர்கள் .மேலும் ஹிந்து விவாக ரத்து சட்டம் எளிதாக்கப் பட்டுவிட்டது ,வரவேற்போம் .அதைப்போல முஸ்லிம் தனியார் சட்டத்தையே uniform civil code ஆக மாற்றினால் ஆயிற்று .ஓகேவா ஹரிகுமார் சார்

          • //மேலும் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் சரியா / தவறா எனில் தாங்கள் அது சரி தவறு என்று தெரிவிக்காமல் பொருளாதார காரணங்களை காரணிப்படுத்துகிரீர்கள். இதனை அடிப்படையாக கொண்டு எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்த முடியும். தவறு என்கிறோம் அனைவரும் எப்போது யார் செய்திருந்தாலும் / செய்தாலும். தாங்கள் என்ன சொல்கிறீர்கள்.
            தாங்கள் என்ன சொல்கிறீர்கள்.

            //இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை .இன்றும் அவசியப்படுவோர் செய்கின்றனர்// ஹி ஹி.

            //ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் அவசியம் இல்லாமற் போயிற்று .தடை செய்யப்படவில்லை. …….விபச்சாரம் சமூக குற்றமாகவும் சட்டப்படி குற்றமாகவும் உள்ளது.//

            என்ன சொல்ல வருகிறீர்கள் என சரியாக புரியவில்லை. புரிந்த வரையில் சொல்வதென்றால் விபச்சாரம் இல்லை அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் அவசியம் (அ) மற்ற மதத்தார் எல்லோரும் விபச்சாரத்தினை குற்றமில்லை என்று கூறி ஆதரிக்கின்றனர் என்கிறீர்கள். இல்லை அப்படி இல்லை எனில் சொல்லவும்.

  52. @HistFeet//enga pattan muppattan pannuna thappala neeyum un koottamum innaikku pandra thappu srai agathu thambi. rendumey thapputhan!!!////

    அண்ணா ,உங்க பாட்டன் முப்பாட்டன் என்று நான் சொல்லவே இல்லை .1000 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள நடைமுறைகளை இப்போது ஒப்பிட்டு பார்க்காதீர்கள் .ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இளம்பெண் இளைஞருடன் பேசினால் ஒரு காதல் கதையில் ஆரம்பித்து கள்ளபிள்ளை பெற்றதாக முடித்துவிடுவார்கள் ஆனால இப்போது இளம்பெண்கள் தங்களது வீட்டுக்கே ஆண் நண்பர்களை அழைத்து தந்தைக்கு அறிமுகம் செய்கிறர்கள் .50 ஆண்டுகளுக்கு முன்னர் படுபாதகமாக பேசப்பட்ட ஒரு நிகழ்வு இன்று நாகரிகமாகி விட்டது .அதைப்போலவே அப்போது அவனவன் கணக்கிலாமல் திருமணம் செய்தபொழுது நான்கு திருமணத்திற்கு மேல் பணன்க் கூடாது என்று சட்டம் .நான்கு பேர்களை காட்டியே தீரவேண்டும் என்று சட்டம் சொல்லுவது போல சில கிறுக்கர்கள் பிரச்சாரம் செய்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது . நீங்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வதகா சொல்லுவதில் பெருமைப்பட ஒன்றுமில்லை .உங்களுக்கு தெரிந்த எத்தனை முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் வாழ்கிறர்கள் என்று உங்களால கூறமுடியுமா? நான் ஒரு மனைவியுடன் 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன் என்பது மட்டுமல்ல .எனது மதம் அந்த ஒரு பெண்ணைத்தவிர அடுத்த பெண்ணின் கை கூட படாத அளவுக்கு என்னை வாழவைத்திருக்கிறது .
    ithey pola Indiavil muslim saatchi paathi satchinu sattam vantha othukuviya?
    மதசார்பற்ற இந்தியாவில் எப்படி கொண்டு வரமுடியும்?
    எங்களது குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதை அந்நாட்டில் செய்கிறர்கள் .
    அதற்காக ஹிந்து வேதங்களில் உள்ளது என்று இப்படி எல்ல்லாம் சேயை முடியுமா?

    . பொதுக் குளத்தில் நாங்கள் தண்ணீர் குடித்த குளம் தீட்டாகிவிட்டதாக’ உயர்சாதியைச் சேர்ந்த இந்துக்கள் அறிவித்தார்கள். தீட்டு போவதற்கு பரிகாரம் செய்யும் வரை உயர்சாதி இந்துக்கள் தண்ணீர் எடுக்க வேண்டாம் என்று அறிவித்தார்கள்.

    நாங்கள் குளத்தில் குடித்த தண்ணீர் தீட்டை போக்கி புனிதமாக்க பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? புரோகித சாஸ்திரிகளை வரவழித்து ஆராய்ச்சி செய்தார்கள். அவர்கள் ‘பஞ்சகவ்யப் பரிகாரம்’ செய்துவிட்டால் குளத்தை புனிதமாக்கிவிடலாம் என்றார்கள்.

    108 பானைகளில் பசுமாட்டு மூத்திரம், சாணம், தயிர், பால், வெண்ணெய் ஆகியவைகளைக் கலந்தார்கள். இந்த கலவைதான் பஞ்சகவ்யம். இதை பார்ப்பனர்கள் வேதம் ஓதி 108 பானைகளின் பஞ்சகவ்யத்தை குளத்தில் ஊற்றிக் கலந்தார்கள். பின் குளம் புனிதமாகிவிட்டதாக அறிவித்தார்கள். அதற்கு பின் உயர்சாதி இந்துக்கள் தண்ணீரை எடுத்துச் சென்றனர்.
    ஆனாலும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதி நீதி தான் கிடைக்கிறது.கிருஸ்ணா கமிசனால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு குற்றவாளிக்கு அரசு மரியாதை கொடுக்கப்படவில்லையா?
    மேலும் வாசிக்க: http://tamizachi.com/articles_detail.php?id=291
    yen? ellarukkum pothuva varumaana varinu poda vendiyathuthana? ithula ethukku paarapatcham?
    முஸ்லிம்களுக்கு குரான் சட்டம் மற்றவர்களுக்கு உலக நடைமுறைப்படி சட்டம் .
    appo, oru muslim kanavan matra matha pen meethu athikkam seluthi avaloda mathathai thadai seiyalam. anal oru kafir kanavan apdi seiyakoodathu. super samathuvam!!!

    ஒரு முஸ்லிம் ஒரு காபிர் பெண்ணை மணந்தால் முஸ்லிமாக மாற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையிலே திருமணம் செய்திருப்பான் ,அதை போல முஸ்லிம் பெண்ணும் காபிர் கணவனாகப் போகிறவனிடம் நிபந்தனை விதித்தால் சரி.அங்ஙனம் இல்லாமல் அவள் திருமணம் செய்தால் அவள் முஸ்லிம் மதத்தை விட்டு வெளியேறிவிடுவாள்..அதைப்போல ஒரு முஸ்லிமும் காபிர் மனைவி முஸ்லிம் ஆகாவிட்டால் அவனும் வெளியேறிவிடுவான் .அவ்வளவே .

    • //பொதுக் குளத்தில் நாங்கள் தண்ணீர் குடித்த குளம்………………………….அதற்கு பின் உயர்சாதி இந்துக்கள் தண்ணீரை எடுத்துச் சென்றனர்.//

      தங்களின் கருத்துப்படி//”அவர்கள் செய்தது அந்த காலத்தில் சரி நாம் செய்வது இந்த காலத்தில் சரி” //

      தெரிந்தால் சரி.

    • //மதசார்பற்ற இந்தியாவில் எப்படி கொண்டு வரமுடியும்?//

      appo matravan matha saarbatravana irukanum. nee mattum un mathatha thooki vachittu aaduviya?

      //ஒரு முஸ்லிம் ஒரு காபிர் பெண்ணை மணந்தால் முஸ்லிமாக மாற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையிலே திருமணம் செய்திருப்பான்//

      ithey pol oru muslim pen virumbi islamai vittu oru kafirai manathaal atharkku islam enna thandanai sollukirathu? ithu samathuvama?

      //108 பானைகளில் பசுமாட்டு மூத்திரம், சாணம், தயிர், பால், வெண்ணெய் ஆகியவைகளைக் கலந்தார்கள். இந்த கலவைதான் பஞ்சகவ்யம். இதை பார்ப்பனர்கள் வேதம் ஓதி 108 பானைகளின் பஞ்சகவ்யத்தை குளத்தில் ஊற்றிக் கலந்தார்கள். பின் குளம் புனிதமாகிவிட்டதாக அறிவித்தார்கள். அதற்கு பின் உயர்சாதி இந்துக்கள் தண்ணீரை எடுத்துச் சென்றனர்.//

      mecca ulla vera mathathukaran pona epdi theettu aguthunu konjam soldreengala? athuvum verum kallum mannum thaney. athu epdai oru manithan vanthu ninna theettu aguthu?

      first stop justifying your mistakes by quoting mistakes in other religions. let us move forward and try to remove all our mistakes than just trying to find excuses.

      • ///appo matravan matha saarbatravana irukanum. nee mattum un mathatha thooki vachittu aaduviya?////

        வேறு எந்த மதத்திலும் இல்லாதவாறு இப்போதும் எப்போதும் எங்ஙனம் வாழவேண்டும் என்பது பற்றி இஸ்லாத்தில் மத சட்ட்டங்கள் உள்ளன .மற்ற மதத்தில் அது போன்று சட்டங்கள் இல்லை .அதனால் அரசியல் அமைப்பு சட்டங்கள் மற்றமதத்தினருக்கு உருவாக்கப் பட்டுள்ளது .அதனால் நான்கள் எங்க மத சட்டத்தை பின்பற்றுகிறோம் ,மற்றவர்கள் அவர்களுக்கு என்று வகுக்கப்பட்டுள்ள சட்டங்களை பின்பற்றுங்கள் என்பதே எங்கள் வேண்டுகோள் .எனது மத சட்டப்படி என் நாடு எனக்கு உரிமை அளிப்பதால் உங்களுக்கு என்ன நட்டம் ?இந்த நாட்டிற்கு என்ன நட்டம்?
        ஹிஸ் பீட் ///mecca ulla vera mathathukaran pona epdi theettu aguthunu konjam soldreengala? athuvum verum kallum mannum thaney. athu epdai oru manithan vanthu ninna theettu aguthu?////

        புரியாமல் உளறி கொட்டாதீர்கள் .அங்கெ தீட்டு என்பது மனிதன் பிறப்பில் உள்ளது .இங்கே தீட்டேல்லாம் இல்லை .அவன் சக்கிளியராக இருந்தாலும் மக்காவுக்கு முஸ்லிம் ஆனால் அனுமதிக்கப்படுவான் .அவன் மக்காவுக்கு செல்ல விரும்பினால் அந்த நிபந்தனை .தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது ,ஊரில் உள்ள பொது குளத்தில் தண்ணீர் எடுக்க அனுமதி இல்லை என்றால் ,தீட்டு என்றால் அதற்கு காரணம் தலித்தாக பிறந்த பாவம் தான் என்றால் அதற்க்கான நீதியை சொல்லுங்கள் .தலித் அதே கடவுளை வணங்கினாலும் அவனுக்கு தீட்டு என்றால் அதற்கு பதில் சொல்ல்லுங்கள் .அவன் சரஸ்வதியை வணங்கினால் உயர்சாதியாகிட வழி இருந்தால் சொல்லுங்கள் .இதற்கு பதில் சொல்ல வக்கற்று மக்காவுக்கு போனால் எப்படி தீட்டாகும் ? என்று உக்ளராதீர்கள் .இஸ்லாத்தில் தீட்டு இல்லை .அனுமதி இல்லை ஒருவேளை அவன் மக்காவுக்கு போனாலும் அங்கெ கழுவிவிட மாட்டார்கள் .அவன் அங்கிருந்து அவனது இடத்திற்கு அழைத்துவிடப்படுவார்

        • என்னவோ போங்க, பன்முகத்தன்மையுடன் இருக்க வேண்டும், அதற்கு எல்லை கிடையாது என்று சொன்னால், நீங்கள் ஏதோ (ஒரே) ஒரு விஷயத்தில் அவங்கள விட மேல் அப்படிங்கறீங்க.
          ஆனா அதிலயும் பல பக்கங்கள் இருக்கு சரியாக பார்த்து விட்டு சொல்லுங்கள் அப்படின்னா மறுக்கிறீர்கள்.

          நன்று. மறுபடி ஒன்றே ஒன்றினை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், தாங்கள் ஒவ்வொரு முறையும் ஒப்புமை படுத்தி / வேறு படுத்தி கூறும்போதும் நம்பிக்கை அளிக்கும் விஷயம் என்னவென்றால் தெனாலி ராமன் கதையில் வரும் பெரிய கே(கோ)டு சிறிய கே(கோ)டு கதை தான்.
          சரி, தங்களின் லாஜிக் படி பார்த்தால், மக்கள் பெரும்பான்மை காஃபிர்களாக இருக்கும் காரணத்தினால் தான் இஸ்லாம் நல்லதாக தெரிகிறது!!

      • @His feet///first stop justifying your mistakes by quoting mistakes in other religions.///

        நான் எனது மதத்தினரை அசல் மதத்தை பின்பற்றுங்கள் என்பதிலே கவனம் செலுத்தி வருகிறேன் .ஆனால் எனது மதம் அக்கிரமமாக சித்தரிக்கப் படும் வேளையில் பதில் சொல்லும் கட்டாயம் எனக்கு உள்ளது

  53. ///Well said Ashwin!!! no religion can change Dalits. Only socially responsible humans can bring them to equality.///

    ஆனால் இஸ்லாம் தலித்களை மாத்தியிருக்கிறது .அதற்கு இந்தியாவே சான்று .எனது ஏழு தலைமுறைகளுக்கு முன்னர் உள்ள பெயர்கள் தெரியவில்லை .அவர்கள் தலித்களாகவே இருந்திருக்க வேண்டும் .எனக்கு தெரிந்த எத்தனையோ தலித்கள் அடையாளம்தெரியாத அளவில் மாறிவிட்டார்கள் .நெல்லை மேலப்பாளையத்தில் பெரும்பாலும் முஸ்லிம்கள் தலித்களாக இருந்தே மாறியவர்கள் என்று சொல்லப்படுகிறது.காயல்பட்டினத்தில் பஞ்சமர் சாதியில் ஒன்றாக ஒதுக்கிவைக்கப்பட நாடார் இன மக்கள் முஸ்லிம்களாக மாரியுள்ளதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்

    • //காயல்பட்டினத்தில் பஞ்சமர் சாதியில் ஒன்றாக ஒதுக்கிவைக்கப்பட நாடார் இன மக்கள்// ??!!

      மிகச்சரி மிகமிகச்சரி.
      ஒதுக்கி வைக்கப்பட்ட நாடார் முதல்வரானார்…..இந்த ஒதுக்கி வைத்த மற்றவர் ஓட்டு பெற்றே!!அந்த சத்திய மூர்த்தி ஐயர் உதவி பெற்றே!!
      இன்றெல்லாருமே ருசி மிகு உணவெனவே கொள்கிறார் சரவண பவனிலே, அன்னத்திலே கை வைக்கிறார் அந்த திரு. ராஜகோபால் அண்ணாச்சி கைவண்ணத்திலே!!

      ஹி ஹி

      //ஒன்றுக்கு மேற்பட்ட திருமனம்கள் செய்தவர்கள் அதிகம் யார் என்பதை விகிதாச்சார அடிப்படையில் இதுவரை யாராவது சர்வே எடுத்து வெளியிட்டுள்ளார்களா?
      அப்படி வெளியிட்டால் உண்மைகள் வெளியே தெரிந்துவிடும் .//

      போயும் போயும் காஃபிர் களுடனா போட்டி போட வேண்டும் இதில்?

      • நோக்கி.எதை நோக்கி?///போயும் போயும் காஃபிர் களுடனா போட்டி போட வேண்டும் இதில்?///

        போட்டி போடவில்லை ,ஹிஸ் பீட்,என்னவோ முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழ்வது போலவும் ,இவர் மட்டுமே ஒரு மனைவியுடன் வாழ்வதை போலவும் பெருமையடித்தார் .உண்மைகளை தெரிந்து கொள்ளும் பொருட்டு அதற்கான பதிலே

        • //முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழ்வது போலவும் ,இவர் மட்டுமே ஒரு மனைவியுடன் வாழ்வதை போலவும் பெருமையடித்தார்//

          I am not boasting about myself. I am boasting about my moral standards. Your morality teaches that it is ok to marry 4 women. My morality teaches that one man should marry one woman. Now, don’ ask me what religion I am and how many of my religions marry more than one woman. Will you accept that if your prophet is alive today and marry many women, he is wrong? you will never accept all the murders, marriages, cheatings your prophet done are wrong. I accept all the holes in my religion or other religions and I want to fix them than to justify them.

          • His feet//Will you accept that if your prophet is alive today and marry many women, he is wrong? .//
            இன்று எங்கள் நபி முஹம்மது [ஸல்] அவர்கள் வாழ்ந்தால் ,இக்காலத்திற்கு ஏற்ப நமகெல்லாம் முன்மாதிரியாக ஒரு மனைவியுடன் வாழ்ந்து காட்டுவார் ,அந்த ஒரு மனைவியுடன் கற்புக்கரசராக வாழ்ந்து காட்டுவார்.அந்நிய பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதெற்கெல்லாம் வழிகாட்டியாக திகழ்வார் .
            ///you will never accept all the murders, marriages, cheatings your prophet done are wrong. ///
            அவர் தேவை இல்லாமல் மரணதண்டனை யாருக்கும் கொடுக்கவில்லை ,எந்த போரையும் வம்பில் பண்ணவில்லை .போரில் எதிரிகளைக் கொள்ளாமல் யாரும் முத்தம் கொடுப்பதில்லை .முஹம்மது நபி [ஸல்] அவர்கள் இன்று வாழ்ந்தால் அவருடைய வாழ்க்கை கண்ணியத்தை நேரில் பார்த்தால் நீங்கள் கூட இஸ்லாத்திற்கு வந்துவிடுவீர்கள் ,ஏனெனில் நீங்கள் நல்லவர் என்று நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள் .
            “ஆட்சியதிகாரம் முகம்மதை போன்று ஒருவரிடம் இருந்தால் இன்றைய உலகின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு ,எங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெற்றிருக்கும் என்று ஜார்ஜ் பெர்னாட்சா .கூறுவதை நீங்களும் கூறும் நிலை ஏற்பட்டிருக்கும் .முஹம்மது நபி ஸல் அவர்கள் பற்றிய தவறான புரிதலிலிருந்து மீள்வு பெற்று பொதுவானவர்களின் நூலகள் மற்றும் பீஜே அவர்களின் ஆன்லைன் பீஜே தளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்

            • naan ippothey muslimaga marugiren. ithuvarai naan kafiraga seitha ella thavarukkum mannipu ketkiren. inimel allavaiyo avarathu iruthi nabiyana muhamadayo kurai koora matten. ok? onlinepj orey naalil ennai muslimaga maatri vittathu!
              😀

    • //ஆனால் இஸ்லாம் தலித்களை மாத்தியிருக்கிறது .அதற்கு இந்தியாவே சான்று .எனது ஏழு தலைமுறைகளுக்கு முன்னர் உள்ள பெயர்கள் தெரியவில்லை .அவர்கள் தலித்களாகவே இருந்திருக்க வேண்டும் .எனக்கு தெரிந்த எத்தனையோ தலித்கள் அடையாளம்தெரியாத அளவில் மாறிவிட்டார்கள் .//

      Hey I am not talking about their Dalit identity. After converting to islam they start to discriminate women and non-muslims. Why even women’s witness is half witness? why only women should cover their face, not men? why one man can marry many women but one woman can only marry one man? In your heart you know that islam never treats women and unbelievers equally. I can wake you up if you are really sleeping. Bu I can’t when you pretend to sleep!

        • தாங்கள் இந்த உரல் கொடுத்து போய் படித்துக்கொள்ளுங்கள் என்ற விளம்பரம் செய்வது ஏன்?
          வேண்டுமானால் நானும் / வேறு யாரும் சில கூகுளிட்ட உரல்கள் தர முடியும்.
          இங்கு இதுவரை பலர் சொல்வதே / கேட்பதே தாங்கள் சொல்லும் அனைத்திற்கும் ஆதாரம் என்று காட்டும் வசனங்கள் மட்டுமே மிக சிறந்தது என்பது எவ்வாறு?

          இதுவும் நீங்களே சொன்னதுதான்
          //அவர்கள் வாழ்ந்தால் ,இக்காலத்திற்கு ஏற்ப நமகெல்லாம் முன்மாதிரியாக ஒரு மனைவியுடன் வாழ்ந்து காட்டுவார் ,அந்த ஒரு மனைவியுடன் கற்புக்கரசராக வாழ்ந்து காட்டுவார்.அந்நிய பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதெற்கெல்லாம் வழிகாட்டியாக திகழ்வார்//
          எக்காலத்திற்குமான சிறந்த வழிமுறைகளை ஏன் மாற்றுவார் என்கிறீர்கள்?

          • நோக்கி, …….நாங்கெல்லாம் எப்பவுமே அப்படிதான் .. ஏன் 12 பொண்ணுங்க முகமது அண்ணனுக்கு, ஏன் குர்ரான் வன்முறைய போதிக்குது என்று கேட்டா, அது அன்னைக்கு நிலைமைக்கு பொருத்தி பாக்கணும் ன்னு சொல்லுவோம். ஆனா ,குர்ரான் ,நபி வழி எக்காலத்துக்கும் பொருந்தும் என்றும் சொல்வோம் . அதாவது 2+2=4, 2+2=10 இரெண்டுமே சரி .

            //இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! குர் ஆன் 9:05 // இது எக்காலத்துக்கும் பொருந்துமா பொருந்தாதா , அதாவது 2+2= 4 ஆ 10 ஆ ?

            இதில் சிந்திப்போருக்கு நிறைய அத்தாட்சிகள் இருக்கு.

            • @Ashwin,

              Thanks for this comment. I like it.
              // இதில் சிந்திப்போருக்கு நிறைய அத்தாட்சிகள் இருக்கு. //

              சிந்திக்கமாட்டீர்களா…..!!!!

        • Ibrahim, I really pitty you. in 21st century there are people so stupid and idiotic like those who wrote this website. They claim that if a woman marries many men, the child’s father can’t be found. That can be found now a days with simple DNA test.

          All the things like women will exaggerate facts, they can lie cleverly etc etc are unscientific and out of pure prejudice. Try to respect women and honor your fellow human.

          can you tell what is the punishment if someone leaves islam?

  54. அஸ்வின் /////நான் தலித்களுக்கு மட்டுமே அழைப்பு விட்டேன்// சாக்கடை நாற்றத்திற்கு மாற்று , மலக்குட்டைக்கு செல்வதா !//

    நான் சாக்கடைவாசிகளுக்கு அழைப்பு விடவில்லை .
    செத்த மாட்டை அறுத்து தின்றதர்க்காக ஐந்து தலித்களை ஹரியனாவில் கொன்றார்களே ,அதைகேட்க நாதியில்லையே ,அப்படிப்பட்ட தலித்களுக்கு மட்டுமே எனது அழைப்பு

    • People would have got slaughtered even if they were muslims.

      Different indian states have different rules,in Kerala it is easy to have beef,whereas in MP it is a crime,In TN you might only face social pressure to not eat beef.

      Why so far,u can go eat buffalo kebabs in lucknow.

      Those people who ate that know very well that eating beef is a taboo in Haryana,so they would have got it even if they were muslims.

      They should be moving to some plavce where they can easily eat beef instead of trying to become muslims and eat it in Haryana.

  55. நோக்கி ,எதை நோக்கி?///பொதுக் குளத்தில் நாங்கள் தண்ணீர் குடித்த குளம்………………………….அதற்கு பின் உயர்சாதி இந்துக்கள் தண்ணீரை எடுத்துச் சென்றனர்.//

    தங்களின் கருத்துப்படி//”அவர்கள் செய்தது அந்த காலத்தில் சரி நாம் செய்வது இந்த காலத்தில் சரி” //

    தெரிந்தால் சரி.

    பொதுக்குளத்தில் தண்ணீர் குடித்த தலித்கள் தடுக்கப்பட்டனர் .இது அப்போதும் சமூக கொடுமை .ஆனால் தடுக்கப்படவில்லை .இன்று தடுக்கப்பட்டது .தீண்டாமை வழக்கில் ஏழு வருடங்கள் சிறையில் தள்ள முடியும்
    ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அன்று மக்களுக்கு தேவைப்பட்டது .இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை .இன்றும் அவசியப்படுவோர் செய்கின்றனர் .இன்றைய நிலையில் 98 சதவீத மக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் அவசியம் இல்லாமற் போயிற்று .தடை செய்யப்படவில்லை. ஆனால் இஸ்லாம் தடை செய்த விபச்சாரம் சமூக குற்றமாகவும் சட்டப்படி குற்றமாகவும் உள்ளது.

    • //காயல்பட்டினத்தில் பஞ்சமர் சாதியில் ஒன்றாக ஒதுக்கிவைக்கப்பட நாடார் இன மக்கள்// ??!!
      மிகச்சரி மிகமிகச்சரி.
      ஒதுக்கி வைக்கப்பட்ட நாடார் முதல்வரானார்…..இந்த ஒதுக்கி வைத்த மற்றவர் ஓட்டு பெற்றே!!அந்த சத்திய மூர்த்தி ஐயர் உதவி பெற்றே!!
      இன்றெல்லாருமே ருசி மிகு உணவெனவே கொள்கிறார் சரவண பவனிலே, அன்னத்திலே கை வைக்கிறார் அந்த திரு. ராஜகோபால் அண்ணாச்சி கைவண்ணத்திலே!!
      ஹி ஹி//

      இதற்கு ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை தாங்கள்.
      இதை விட்டு அடுத்த ஒன்றிற்கு செல்கிறீர்கள்.

      //மேலும் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் சரியா / தவறா எனில் தாங்கள் அது சரி தவறு என்று தெரிவிக்காமல் பொருளாதார காரணங்களை காரணிப்படுத்துகிரீர்கள். இதனை அடிப்படையாக கொண்டு எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்த முடியும். தவறு என்கிறோம் அனைவரும் எப்போது யார் செய்திருந்தாலும் / செய்தாலும். தாங்கள் என்ன சொல்கிறீர்கள்.
      தாங்கள் என்ன சொல்கிறீர்கள்.

      //இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை .இன்றும் அவசியப்படுவோர் செய்கின்றனர்// ஹி ஹி.

      //ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் அவசியம் இல்லாமற் போயிற்று .தடை செய்யப்படவில்லை. …….விபச்சாரம் சமூக குற்றமாகவும் சட்டப்படி குற்றமாகவும் உள்ளது.//

      என்ன சொல்ல வருகிறீர்கள் என சரியாக புரியவில்லை. புரிந்த வரையில் சொல்வதென்றால் விபச்சாரம் இல்லை அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் அவசியம் (அ) மற்ற மதத்தார் எல்லோரும் விபச்சாரத்தினை குற்றமில்லை என்று கூறி ஆதரிக்கின்றனர் என்கிறீர்கள். இல்லை அப்படி இல்லை எனில் சொல்லவும்.

      • நோக்கி ////இன்றெல்லாருமே ருசி மிகு உணவெனவே கொள்கிறார் சரவண பவனிலே, அன்னத்திலே கை வைக்கிறார் அந்த திரு. ராஜகோபால் அண்ணாச்சி கைவண்ணத்திலே!!
        ஹி ஹி//

        இதற்கு ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை தாங்கள்.
        இதை விட்டு அடுத்த ஒன்றிற்கு செல்கிறீர்கள்.///

        நான் மதமாற்றம் ஒன்றும் சாதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மட்டுமே பதில் சொன்னேன் .ராஜகோபால் அண்ணாச்சி எப்படி முன்னேறினார் என்ற ஆய்வுகள் எனக்கு தேவை இல்லை .
        இப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பனையேறி வந்த நாடார்கள் முற்றிலுமாக அந்த தொழிலை கைவிட்டு வியாபாரத்தில் காலெடுத்து முன்னேறினார்கள் .இப்பொது அந்த மக்களிடையே பனை ஏறினாள் பொண்ணு கொடுக்க மாட்டார்கள் .அதனால் வியாபாரம் பண்ண வலி இல்லாவிட்டாலும் முபை சென்று விடுகின்றனர் .தலித்களும் அரசு சலுகைகளை வைத்து முன்னேறியுள்ளனர் .இதெற்கெல்லாம் காரணம் இஸ்லாம் .மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைகிறார்கள் என்பதால் சாதி தீண்டாமை ஒழிக்க அரசு படிப்படியாக நடவடிக்கை எடுத்த காரணத்தினாலே

        • மீண்டும் ஒரு பாதிக்கு பதில் சொல்கிறீர்கள்.
          //ராஜகோபால் அண்ணாச்சி எப்படி முன்னேறினார் என்ற ஆய்வுகள் எனக்கு தேவை இல்லை//
          ஏன் தேவை இல்லை? நீங்கள் சொன்ன அடிப்படையில் மத மாற்றம் தான் காரணம் என்றீர்கள். இப்போது வேறு உதாரணங்கள் என்று வரும் போது அது தேவை இல்லை என்கிறீர்கள்.

          //காயல்பட்டினத்தில் பஞ்சமர் சாதியில் ஒன்றாக ஒதுக்கிவைக்கப்பட நாடார் இன மக்கள்// ??!!
          மிகச்சரி மிகமிகச்சரி.
          ஒதுக்கி வைக்கப்பட்ட நாடார் முதல்வரானார்…..இந்த ஒதுக்கி வைத்த மற்றவர் ஓட்டு பெற்றே!!அந்த சத்திய மூர்த்தி ஐயர் உதவி பெற்றே!!
          இன்றெல்லாருமே ருசி மிகு உணவெனவே கொள்கிறார் சரவண பவனிலே, அன்னத்திலே கை வைக்கிறார் அந்த திரு. ராஜகோபால் அண்ணாச்சி கைவண்ணத்திலே!!//

          //அதனால் வியாபாரம் பண்ண வலி இல்லாவிட்டாலும் முபை சென்று விடுகின்றனர் .தலித்களும் அரசு சலுகைகளை வைத்து முன்னேறியுள்ளனர் .இதெற்கெல்லாம் காரணம் இஸ்லாம் .மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைகிறார்கள் என்பதால் சாதி தீண்டாமை ஒழிக்க அரசு படிப்படியாக நடவடிக்கை எடுத்த காரணத்தினாலே//

          1> சமூக படி நிலையில் உயர்ந்தவர்களாக கருதப்பட்டவர்கள் மதம் மாறி இருக்கிறார்களா?ஆம் எனில் காரணம் என்ன?

          //மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைகிறார்கள் என்பதால் சாதி தீண்டாமை ஒழிக்க அரசு படிப்படியாக நடவடிக்கை எடுத்த காரணத்தினாலே//
          நன்று. ஒன்றே ஒன்றினை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், தாங்கள் ஒவ்வொரு முறையும் ஒப்புமை படுத்தி / வேறு படுத்தி கூறும்போதும் நம்பிக்கை அளிக்கும் விஷயம் என்னவென்றால் தெனாலி ராமன் கதையில் வரும் பெரிய கே(கோ)டு சிறிய கே(கோ)டு கதை தான்.
          சரி, தங்களின் லாஜிக் படி பார்த்தால், மக்கள் பெரும்பான்மை காஃபிர்களாக இருக்கும் காரணத்தினால் தான் இஸ்லாம் நல்லதாக தெரிகிறது!!

          • நோக்கி ////1> சமூக படி நிலையில் உயர்ந்தவர்களாக கருதப்பட்டவர்கள் மதம் மாறி இருக்கிறார்களா?ஆம் எனில் காரணம் என்ன?////
            நாடார் சாதியினர் சமூக படிநிலையில் அக்காலத்தில் உயர்ந்து நிற்கவில்லை. பிராமணாள் கபேகளில் ஐந்து சாதியினர் அதாவது பஞ்சமர் சானார் ,சக்கிலியர் ,பலல்ர்,பறையர் ,துளுவர் என்ற ஐந்து சாதிகள் ‘பஞ்சமர் நீங்கலாக “என்று ஐந்து சாதியினரும் உள்ளே வரக் கூடாதது என்ற போர்டு மாட்டப்பட்டிருக்கும் .இதுதான் அவர்களது நிலை..அதன் பின்னர் அவர்கள் வெள்ளையர் ஆட்சியில் கிறித்தவ மதத்தில் இணைந்தனர் .அதன் மூலம் பல கல்விநிலையங்கள் அவர்கள் ஆளுகைக்கு வந்தது .தொடர்ந்து சிவகாசி இந்து நாடார்கள் சங்கம் ,.தெட்சனா மாற நாடார் சங்கம் என்று என்று அமைப்புகள் ஏற்படுத்தி உயர்நிலையை அடைந்தனர்

            • //பஞ்சமர் சானார் ,சக்கிலியர் ,பலல்ர்,பறையர் ,துளுவர் என்ற ஐந்து சாதிகள் ‘பஞ்சமர் நீங்கலாக “என்று ஐந்து சாதியினரும் உள்ளே வரக் கூடாதது என்ற போர்டு மாட்டப்பட்டிருக்கும்//

              அதை சரி என்று யார் சொன்னது இங்கு.
              கேள்வியே இங்கு மற்றவர்கள் தவறை – யார் செய்தாலும் / செய்திருந்தாலும் – தவறு என்று வெளிப்படையாக சொல்லி மாற்ற முனைகின்றனர்.
              தாங்கள் தவறுகளை நியாயப்படுத்துகிறீர்கள் என்பதுதானே.

              மாற்ற முனைந்து செய்ததற்கு உதாரணமே
              //காயல்பட்டினத்தில் பஞ்சமர் சாதியில் ஒன்றாக ஒதுக்கிவைக்கப்பட நாடார் இன மக்கள்// ??!!
              மிகச்சரி மிகமிகச்சரி.
              ஒதுக்கி வைக்கப்பட்ட நாடார் முதல்வரானார்…..இந்த ஒதுக்கி வைத்த மற்றவர் ஓட்டு பெற்றே!!அந்த சத்திய மூர்த்தி ஐயர் உதவி பெற்றே!!
              இன்றெல்லாருமே ருசி மிகு உணவெனவே கொள்கிறார் சரவண பவனிலே, அன்னத்திலே கை வைக்கிறார் அந்த திரு. ராஜகோபால் அண்ணாச்சி கைவண்ணத்திலே!!//

              மேலும், இந்த கருத்திற்கு –
              //நோக்கி ////1> சமூக படி நிலையில் உயர்ந்தவர்களாக கருதப்பட்டவர்கள் மதம் மாறி இருக்கிறார்களா?ஆம் எனில் காரணம் என்ன?////-
              ஆன பதிலா நீங்கள் கூறியது என்று மீண்டுமொருமுறை சரி பார்க்கவும்!!!

          • நோக்கி ///சரி, தங்களின் லாஜிக் படி பார்த்தால், மக்கள் பெரும்பான்மை காஃபிர்களாக இருக்கும் காரணத்தினால் தான் இஸ்லாம் நல்லதாக தெரிகிறது!!///
            அப்படியெனில் பெரும்பான்மை முஸ்லிம்கள் நாட்டில் மற்ற மதங்கள் நல்லதாக தெரிய வேண்டுமே

            • அது உங்களுடைய லாஜிக் தானே அதனால் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

            • Ibrahim

              Appadi thane irukku, Apart from few countries muslims are allowed to have alcohol in most countries and muslims do have alcohol,apart from Saudi alcohol is sold in all countries including muslim countries.

              Women wear burqa focibly only in saudi and not in other countries.

              women wear hijab only in few countries.

              So basically muslims drink alcohol,women wear normal clothes(only exception is GCC countries & Uneducated desi muslim women),Muslims invest money in interest bearing investments and muslims charge interest on loans given and pay interest to money borrowed,i also know of marriages in India and elsewhere where one person in muslim and the other is not.

              so basically muslims like this liberal culture and follow it.isn’t it true that this liberal culture mostly originating from protestant christianity & partly to atheism is attracting muslims,so even in islamic countries muslims do find it attracyive to be a liberal.

              There goes your argument.

              • //liberal culture mostly originating from protestant christianity & partly to atheism is attracting muslims//

                That’s true. But one change not all Protestants are liberals. The only Protestants Indians know are Pentecostals. 😉

                • am not saying that but then RCs tend to be more orthodox and the fact that protestants thought to move away from RC itself is liberal enough.

                  and tell me one more thing,are christians allowed to eat pork?

                  I mean,do the testaments carry anything about it?

                  • As a liberal Protestant Christian, I think it is acceptable to eat pork. As per Jesus’ teaching, nothing that goes in to a man makes him unclean. Only things that come out of him (words, actions) make him unclean.

                    • Hmm,this is a little interesting because both judaism & islam which come from the middle east area abhor pork,christianity which also came from the same place allows it.

                      Interesting indeed.

  56. //நான் சாக்கடைவாசிகளுக்கு அழைப்பு விடவில்லை .
    செத்த மாட்டை அறுத்து தின்றதர்க்காக ஐந்து தலித்களை ஹரியனாவில் கொன்றார்களே ,அதைகேட்க நாதியில்லையே ,அப்படிப்பட்ட தலித்களுக்கு மட்டுமே எனது அழைப்பு//
    அதனாலதான்ப்பா சொல்றேன் இந்து மதம் சாக்கடை என்று. முஸ்லிம்களின் இந்த தலித்துக்களின் மீதான அக்கறை உண்மையானதல்ல. கூட்டம் சேர்ப்பது, வன்முறை செய்வது, ஆட்சில் அமர்வது. கூட்டம் சேரும் வரைக்கும் “உன் மதம் உனக்கு ஏன் மதம் எனக்கு” . கூட்டம் சேந்துட்டா “அவர்களது கழுதை வெட்டுங்கள்” , “ஜிசியா கட்டும் வரை போரிடுங்கள்” தான்.
    இது ஒன்றே இஸ்லாமின் குறிக்கோள். ஒரு வேலை எல்லா தலித்தும் ஷியா முஸ்லிமா மாறிட்டா இவுங்களே குண்டு வச்சி கொன்னுடுவாங்க.

    • //ஒரு வேலை எல்லா தலித்தும் ஷியா முஸ்லிமா மாறிட்டா இவுங்களே குண்டு வச்சி கொன்னுடுவாங்க.//

      100% correct

      //கூட்டம் சேரும் வரைக்கும் “உன் மதம் உனக்கு ஏன் மதம் எனக்கு” . கூட்டம் சேந்துட்டா “அவர்களது கழுதை வெட்டுங்கள்” , “ஜிசியா கட்டும் வரை போரிடுங்கள்” தான்.//

      muslim nadugalin unmai varalaaru!

    • // இந்த தலித்துக்களின் மீதான அக்கறை உண்மையானதல்ல. கூட்டம் சேர்ப்பது, வன்முறை செய்வது, ஆட்சில் அமர்வது. கூட்டம் சேரும் வரைக்கும் “உன் மதம் உனக்கு ஏன் மதம் எனக்கு” . கூட்டம் சேந்துட்டா “அவர்களது கழுதை வெட்டுங்கள்”// ,

      என்ன கொடுமைடா இது. மரண வியாபாரி நர மோடி, மராட்டிய ஹிட்லர் பால் தாக்கரே தான் தலித்துகளைக் கொண்டு முஸ்லீம்களை நரவேட்டையாடினான். முசுலீம்கள் அதுபோல் எங்கு செய்து உள்ளனர். தசரா, விநாயகர் ஊர்வலம் என்று தலித்துகளை வன்முறையில் ஈடுபட வைப்பதும் இதே ஆர்எஸ்எஸ் அரை டவுசர்கள்தான்.

      முசுலீமாக மாறினால் சாதி தீண்டாமை மறைந்து போகுமா என சிலர் கேலி பேசுகின்றனர். ஆம் நிச்சயமாக மறைந்துதான் போகும். அதற்கு நாங்களே சாட்சி என்று பெருமையாக கூறிக்கொள்கிறேன். இந்தியாவில் முசுலீமாக மதமாறியவர்கள் ஏதேனும் ஒரு சாதியில் இருந்தவர்கள்தான். இந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப மதம் மாறிய அன்று முஸ்லீம்களிடமும் தோன்றிய சாதிய உணர்வுகள் (படான், லெப்பை, மரைக்காயர், சேக், சயது….)இப்போது இல்லை. இப்போது அந்த சாதி அடையாளங்கள் எங்களிடம் இல்லை. இந்த கேடுகெட்ட அரசு, படிவங்களில் சாதி அடையாளப் பெயரை கேட்காவிடில் அதுவும் வழக்கொழிந்து போய்விடும்.

      //“ஜிசியா கட்டும் வரை போரிடுங்கள்” தான்.////

      அசுவின் போன்ற கனவான்கள் எந்த லோகத்தில் இருக்கிறார்களோ. இன்றைய முதலாளித்துவ அரசு நிற்பதற்கும் உட்காருவதற்கும் வரி கேட்காததுதான் பாக்கி. வரி கட்டாதவர்களை இந்த அரசு சும்மா விடுமா? முஸ்லீம்களிடம் வரியாக ஜகாத் வசூலிக்கப்பட்டது. அதுபோல முசுலீம் அல்லாதவர்களிடம் ஜிசியா வரி வசூலிக்கப்பட்டது. அதில் என்ன தவறு உள்ளது.

      • அரை திரௌசர்கள் தலித்துகளை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு பயன்படுத்திக் கொள்வதை எங்கும் நியாயபடுத்தவில்லை.
        //முசுலீம்கள் அதுபோல் எங்கு செய்து உள்ளனர்.// – கூட்டம் சேரும் வரைக்கும் “உன் மதம் உனக்கு ஏன் மதம் எனக்கு” . கூட்டம் சேந்துட்டா “அவர்களது கழுதை வெட்டுங்கள்” , “ஜிசியா கட்டும் வரை போரிடுங்கள்” தான்
        //இப்போது அந்த சாதி அடையாளங்கள் எங்களிடம் இல்லை.// சும்மா அடிச்சி விடக்கூடாது. இந்து சாதி அடையாளங்கள் இல்லை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள்.
        //முஸ்லீம்களிடம் வரியாக ஜகாத் வசூலிக்கப்பட்டது. அதுபோல முசுலீம் அல்லாதவர்களிடம் ஜிசியா வரி வசூலிக்கப்பட்டது. அதில் என்ன தவறு உள்ளது.// – என்னப்பா நியாயம். சகாதுக்கும் ஜிசியாவிர்க்கும் ஆன வேறுபாடுகள் என்ன. அது ஏன், அதுக்கு பாதுகாப்பு வரின்னு பேரு. யாருக்கு யாரிடமிருந்து பாதுகாப்பு ???

      • //ஆம் நிச்சயமாக மறைந்துதான் போகும். அதற்கு நாங்களே சாட்சி என்று பெருமையாக கூறிக்கொள்கிறேன்.//

        apparam ethukku inthu perula vanthu scene podura? muslim perula vara vendiyathuthana?

        //மரண வியாபாரி நர மோடி, மராட்டிய ஹிட்லர் பால் தாக்கரே தான் தலித்துகளைக் கொண்டு முஸ்லீம்களை நரவேட்டையாடினான். முசுலீம்கள் அதுபோல் எங்கு செய்து உள்ளனர். தசரா, விநாயகர் ஊர்வலம் என்று தலித்துகளை வன்முறையில் ஈடுபட வைப்பதும் இதே ஆர்எஸ்எஸ் அரை டவுசர்கள்தான். //

        RRS pakkigala yaar atharicha? islamiya ethirpunaley avan yuthan/inthu apdinu nenaikatha thambi… I am a liberal Christian. So I hate all forms of fundamentalism. I hate RSS/BJP/Angel TV/Mohan C Lazarus/PJ/Zakir Naik etc etc. So get your facts right

        • //apparam ethukku inthu perula vanthu scene podura? muslim perula vara vendiyathuthana?//

          எனது பெயர் பிரகாஷ் @ அஹமத் உசேன். எனது தாய் இந்து. எனது தந்தை முஸ்லீம். இருவரும் சேர்ந்து விருப்பத்திற்கு இணங்க வைத்த பெயர்தான் இது. எனது பதிவேடுகளில் மதம் சாதி சாராதவர் என்றுதான் பதிந்திருக்கிறார்கள். என்ன செய்யலாம் இதற்கு?

          நான் யூதன், இந்து என எங்கு குறிப்பிட்டிருக்கிறேன். தலித்துகளை மதமாற்றி வன்முறைக்கு பயன்படுத்துவதாக அசுவின் குறிப்பிட்டார். அப்படியல்ல அது போல் ஒரு நிகழ்வும் இல்லை. தலித்துகளை வன்முறைக்கு பயன்படுத்துவதே அரைடவுசர்கள் என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறேன்.

          • திரு. பிரகாஷ் @ அஹமத் உசேன்,

            தவறாக நினைக்காதீர்கள், தலித்துகளை இதை விட யாரும் மட்டமாக நினைத்து அவமானப்படுத்திவிட முடியாது. தாங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் அவர்களுக்கு சுயமாக சிந்தித்து தங்களுக்கு தேவையான முடிவினை எடுக்க தெரியாது என்பதாக வருகிறது.
            1> மேலே சொன்னது தவறு (அ)
            2> அப்படி அப்பாவியானவர்களை மூளை சலவை செய்து மதம் மாற்றுவது தவறு.

  57. நோக்கி ////1> சமூக படி நிலையில் உயர்ந்தவர்களாக கருதப்பட்டவர்கள் மதம் மாறி இருக்கிறார்களா?ஆம் எனில் காரணம் என்ன?////
    நாடார் சாதியினர் சமூக படிநிலையில் அக்காலத்தில் உயர்ந்து நிற்கவில்லை. பிராமணாள் கபேகளில் ஐந்து சாதியினர் அதாவது பஞ்சமர் சானார் ,சக்கிலியர் ,பலல்ர்,பறையர் ,துளுவர் என்ற ஐந்து சாதிகள் ‘பஞ்சமர் நீங்கலாக “என்று ஐந்து சாதியினரும் உள்ளே வரக் கூடாதது என்ற போர்டு மாட்டப்பட்டிருக்கும் .இதுதான் அவர்களது நிலை..அதன் பின்னர் அவர்கள் வெள்ளையர் ஆட்சியில் கிறித்தவ மதத்தில் இணைந்தனர் .அதன் மூலம் பல கல்விநிலையங்கள் அவர்கள் ஆளுகைக்கு வந்தது .தொடர்ந்து சிவகாசி இந்து நாடார்கள் சங்கம் ,.தெட்சனா மாற நாடார் சங்கம் என்று என்று அமைப்புகள் ஏற்படுத்தி உயர்நிலையை அடைந்தனர்

    • //பஞ்சமர் சானார் ,சக்கிலியர் ,பலல்ர்,பறையர் ,துளுவர் என்ற ஐந்து சாதிகள் ‘பஞ்சமர் நீங்கலாக “என்று ஐந்து சாதியினரும் உள்ளே வரக் கூடாதது என்ற போர்டு மாட்டப்பட்டிருக்கும்//

      அதை சரி என்று யார் சொன்னது இங்கு.
      கேள்வியே இங்கு மற்றவர்கள் தவறை – யார் செய்தாலும் / செய்திருந்தாலும் – தவறு என்று வெளிப்படையாக சொல்லி மாற்ற முனைகின்றனர்.
      தாங்கள் தவறுகளை நியாயப்படுத்துகிறீர்கள் என்பதுதானே.

      மாற்ற முனைந்து செய்ததற்கு உதாரணமே
      //காயல்பட்டினத்தில் பஞ்சமர் சாதியில் ஒன்றாக ஒதுக்கிவைக்கப்பட நாடார் இன மக்கள்// ??!!
      மிகச்சரி மிகமிகச்சரி.
      ஒதுக்கி வைக்கப்பட்ட நாடார் முதல்வரானார்…..இந்த ஒதுக்கி வைத்த மற்றவர் ஓட்டு பெற்றே!!அந்த சத்திய மூர்த்தி ஐயர் உதவி பெற்றே!!
      இன்றெல்லாருமே ருசி மிகு உணவெனவே கொள்கிறார் சரவண பவனிலே, அன்னத்திலே கை வைக்கிறார் அந்த திரு. ராஜகோபால் அண்ணாச்சி கைவண்ணத்திலே!!//

      மேலும், இந்த கருத்திற்கு –
      //நோக்கி ////1> சமூக படி நிலையில் உயர்ந்தவர்களாக கருதப்பட்டவர்கள் மதம் மாறி இருக்கிறார்களா?ஆம் எனில் காரணம் என்ன?////-
      ஆன பதிலா நீங்கள் கூறியது என்று மீண்டுமொருமுறை சரி பார்க்கவும்!!!

      • .///இந்த உதாரணத்தின் படி 5 முறை முதல்வராக தேர்ந்தெடுக்க வாக்களித்தவர்கள் எல்லாம் யார்?
        முதல்வரை / ஆட்சியை தீர்மானிக்கும் வலிவுடையோர் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களாவார்கள்?///

        முதல் முறையாக கருணாநிதி முதல்வர் என்று முன்னிறுத்தி வரவில்லை .
        1971 இல் ஆதிக்க சக்திகள் காமராஜ் தலைமையிலான கூட்டணியை ஆதரித்தது .பிற்பட்டவர்கள் திமுகவை ஆதரித்தனர் .முதுகுளத்தூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முக்குலத்தோர் ஒட்டுமொத்தமாக தொடர்ந்து திமுகவை ஆதரித்தனர்
        கருணாநிதி மீண்டும் முத்லவரானதும் திராவிட இயக்க பிரச்சாரங்கள் அதிகமாகின .பெரியாரே கருணாநிதி மீது அன்பு கொண்டார் கருணாநிதிக்கு சிலை வைத்தார் பெரியார் .இதனால் ஆதிக்க சக்திகளின் கடும் கோபத்திற்கு உள்ளானர் கருணாநிதி .எம்ஜியார் பிரிக்கப்பட்டார்
        1980 இல்பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்த ஆதிக்க சக்திகள் அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 77 இல் திமுக தனித்து நின்று பெற்ற இடங்கள் கூட 1980 கூட்டணியில் நின்று பெறமுடியவில்லை .
        அதேப்போல 1984 இல் திமுகவால் வெற்றிபெறமுடியவில்லை .ஆனால் 1985 இல் உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றது
        1989 தேர்தலில் ஓட்டுக்கள் நான்காக பிரிந்ததால் பிற்படுத்த மக்களின் ஓட்டுக்களை வைத்தே கருணாநிமுடிவுக்கு வந்துவிட்டது

        தி வெற்றிபெற்றார் .இருந்தாலும் இரண்டு ஆண்டுகளில் அவரை கலைத்தார்கள் .இப்போது ஆதிக்க சக்திகளின் தாக்கம் தமிழ்நாட்டி பொறுத்தவரை முடிவுக்கு வந்துவிட்டது .இப்போது தலித்களுக்கு எதிராக மற்ற சாதிகளை ஒருங்கிணைக்க ராமதாஸ் முயல்கிறார்.அதில் கலந்து கொண்ட இரண்டு முஸ்லிம் அமைப்புகளும் தீர்மானங்கள் நிர்வேற்றழலில் வெளியேறிவிட்டன

    • மேலும் இதற்கு முன்னரே ஒருமுறை மறுமொழி இட்டுள்ளேன் பார்க்க : 59.1.1.1.1.1 . அங்கேயே பதிலிறுக்கவும்

  58. நோக்கி ///என்னவோ போங்க, பன்முகத்தன்மையுடன் இருக்க வேண்டும், அதற்கு எல்லை கிடையாது என்று சொன்னால், நீங்கள் ஏதோ (ஒரே) ஒரு விஷயத்தில் அவங்கள விட மேல் அப்படிங்கறீங்க.
    ஆனா அதிலயும் பல பக்கங்கள் இருக்கு சரியாக பார்த்து விட்டு சொல்லுங்கள் அப்படின்னா மறுக்கிறீர்கள்./////

    ஒரே ஒரு விசயத்தில் அவங்கள விட மேல் அப்படிங்கறீங்க ,என்ன விசயத்தில் எவங்களைவிட எப்படிங்க்றேன்?
    எதிலையும் பல பக்கங்கள் இருக்கு ?எதை நான் மறுக்கிறேன்? நீங்கள் சொல்லுவது ஒண்ணுமே புரியலே ,நோக்கி புரியும்படி மீண்டும் சொல்லுங்கள்

  59. The only thing i understand from this is that every religion has a phase where

    Knowledge,War,Money & Numbers play a role.

    All religions have completed this phase and gone ahead,whereas Islam is still stuck and all the moderating ifluences like Sufis,Dawoodi Bohras etc are all wiped out and used politically by arab and central asian countries and the theology for their own benefits.

    People like Ibrahim is their tool as they seek revenge against the hindu society,thats why their lack of self respect is utilized by their masters to harm the Indian society which is the only thing standing against their goal of supremacy.

  60. நோக்கி ////இன்றெல்லாருமே ருசி மிகு உணவெனவே கொள்கிறார் சரவண பவனிலே, அன்னத்திலே கை வைக்கிறார் அந்த திரு. ராஜகோபால் அண்ணாச்சி கைவண்ணத்திலே!!//

    மேலும், இந்த கருத்திற்கு –
    //நோக்கி ////1> சமூக படி நிலையில் உயர்ந்தவர்களாக கருதப்பட்டவர்கள் மதம் மாறி இருக்கிறார்களா?ஆம் எனில் காரணம் என்ன?////-
    ஆன பதிலா நீங்கள் கூறியது என்று மீண்டுமொருமுறை சரி பார்க்கவும்!!!////

    மீண்டும் மீண்டும் இதையே பிடித்துக் கொண்டீர்கள்.ராஜகோபால் அண்ணாச்சி கைவண்ணத்தில் முதலீடு மட்டுமே ,அங்கு வேலை செய்பவர்கள் அய்யரான ஜீவாவின் கணவர் போன்றவர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள் .பல அசைவ கடைகள் மற்ற சாதியினர் வைத்திருந்தாலும் சமையல் மாஸ்டர்கள் முஸ்லிம்களாக இருப்பார்கள் .
    முன்பு நாடார்கள் சமூகபடிநிலையில் தாழ்ந்தவர்களாகவே இருந்தனர் .நான் பருப்பு வகைகள் வியாபாரம் செய்பவன் .நாடர்களுடன் அதிகம் பழகுவதுடன் மட்டும் அல்ல அவர்கள் அதிகம் வாழும் பகுதியில் இருந்து வந்தவன் .சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் அவர்களை “ஏ சாணான், பைனி [பதநீர்] இருக்கிறதா?”என்று சிறுவர்கள் கூட கேட்பதை பார்த்திருக்கிறேன். இப்போது சொன்னால் நாக்கை அறுத்துவிடுவார்கள் என்பது வேறு விஷயம் .
    பெரு நகரங்களில் இப்போது தலித் கோடிக்கணக்கில் செலவு பண்ணி ஓட்டல் வைத்தாலும் அய்யர்கள் உண்ணவே செய்வார்கள்.திருசெந்தூரில் மணி அய்யர் ஓட்டலில்தான் கனவான்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் .
    தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் தலித்கள் முன்னேறிவருகின்றனர் .முன்பு தலித்கள் முஸ்லிமாக மாறிய விகிதாசாரம் இப்போது குறைந்துவிட்டது மேலும் அவர்களுக்குரிய இட ஒதுக்கீடுகளையும் சலுகைகளையும் கைவிட்டு முஸ்லிமாக தயாராக இல்லை .இன்னும் 50 ஆண்டுகளில் அவர்களும் பல் தொழில்களில் முன்னேறிவிடுவார் .அப்போது அவர்களும் ஓட்டல்களும் வைத்தால் அனைவரும் சாப்பிடவே செய்வார்கள் அப்போது உங்களைப் போன்று ஒருவர் தலித்கள் சமூகபடிநிலையில் உயர்ந்தவர்களாக கருதப்பட்டவர்கள் மதம் மாறியிருக்கிறார்களா?என்று கேட்கவே செய்வார்
    கருணாநிதியும் தாழ்ந்த சாதியிலிருந்து முதல்வர் ஆனவர்தான் .எம்ஜியார் சினிமா மாயையினால் மட்டும் வெற்றி பெறவில்லை .கீழ் சாதிக்காரானான கருணாதி வரக் கூடாது என்பதாலே அவரால் தொடர் வெற்றி பெறமுடிந்தது .காமராஜர் நாடார் என்ற சாதிக்கு அப்பாற்பட்டு முதல்வரானார் .நாடர்களின் முன்னேற்றம் கண்டு கோபம் கொண்ட மற்ற சாதியினரால் எமஎல்யே கூட ஆகமுடியாமல் தோற்கடிக்கப்பட்டார்

    • இதற்கு முன்னரே ஒருமுறை மறுமொழி இட்டுள்ளேன் பார்க்க : 62.1 & 59.1.1.1.1.1. அங்கேயே பதிலிறுக்கவும்

      ஆனால் தாங்கள் மறுபடியும் அந்த கருத்தின் ஒரு பாதிக்கு மட்டுமே பதிலளித்துள்ளீர்கள். அங்கு பதிலளித்தால் அதன் இடம் பொருள் சரியாக விளங்கும்.

      மேலும் // அய்யரான ஜீவாவின் கணவர் போன்றவர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்//
      தவறு. தங்களின் தரவுகளை சரி பார்க்கவும்.

    • You think everything in terms of caste,just like most people.

      There are people who loved MGR and hated Karunanidhi regardless of Caste.

      MGR won because of people loved him and people always thought of karunanidhi to be a corrupt,self serving guy.It has nothing to do with caste,just his own image and actions.

      • @harikumar,

        இந்த உதாரணத்தின் படி 5 முறை முதல்வராக தேர்ந்தெடுக்க வாக்களித்தவர்கள் எல்லாம் யார்?
        முதல்வரை / ஆட்சியை தீர்மானிக்கும் வலிவுடையோர் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களாவார்கள்?

        இதற்கு முன்னரே ஒருமுறை மறுமொழி இட்டுள்ளேன் பார்க்க : 62.1 & 59.1.1.1.1.1. அங்கேயே பதிலிறுக்கவும்

      • ஹரிகுமார் ///MGR won because of people loved him and people always thought of karunanidhi to be a corrupt,self serving guy.It has nothing to do with caste,just his own image and actions.///

        திமுக காங்கிரஸ் கூட்டணி 1980 இல் 38 பாராளுமன்ற இடங்களிலும் எம்ஜியார் கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற்றது .அதன் பிறகு நடந்த 1980 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தோற்றது
        1985 உள்ளாட்சி தேர்தலில் 90 நகராட்சிகளில் 60 நகராட்சிகளை திமுகவும் 30நகராட்சிகளை அதிமுகவும் கைப்பற்றியது
        ஆக கருணாநிதியை முதல்வராக்கக் கூடாது என்பதிலே அப்போதைய ஆதிக்க சக்திகள் கவனமாக் இருந்தன

          • harikumar நான் சொல்ல வருவது திமுக காங்கிரஸ் கூட்டணியில் பாராளுமன்றத்திற்கு என்றால் ஆதிக்க சக்திகள் உள்ளடங்கிய காங்கிரசார் .அந்த கூட்டணக்கு ஓட்டு போடுவார்கள் .அதே சமயத்தில் சட்டசபைக்கு அதே கூட்டணிக்கு ஓட்டு போட மாட்டார்கள்

              • harikumar ,69 சதவீத மக்கள் திமுகவுக்கு 45 அதிமுகவுக்கு 24என்றால் 31 சதவீத ஆதிக்க சக்தி அதிமுகவுக்கு என்று வைத்துக் கொண்டாள் அதிமுக 55 சதவீத ஓட்டுக்களும் திமுக 45 சதவீத ஓட்டுக்களும் வாங்கினால் அதிமுக 150 சீட்களும் திமுக 80 சீட்களும் பெரும் .

                • தங்களின் கருத்துப்படி பார்த்தால் மூன்று முறை, தாங்களே முன்னர் கூறியுள்ள படி பஞ்சமர்களாக கூறப்பட்ட ஒரு சமூகத்திலிரிந்து வந்த திரு. காமராஜ் அவர்களும், – அன்றைய சமூக படிநிலையில் எப்படி கருதப்பட்டார்கள் திரு. அண்ணாதுரை அவர்களது சமூகத்தார் என்றும் தங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அப்படிப்பட்ட திரு. அண்ணாதுரை அவர்களும், அதில் சற்றும் குறைவிலா கேரள சமூக படிநிலையிலிருந்த திரு. எம் ஜி ஆர் அவர்களும் முதல்வர்களானது இவ்வளவு எளிய ஒரு கணித சூத்திரத்தினால் எனும்போது, மிகவும் எளிதானதுதான் போலவே அரசியல்.

                  ஆனால் இது எல்லாம் பதில்கருத்தாக தொடங்கியது இங்கு : இதற்கு முன்னரே ஒருமுறை மறுமொழி இட்டுள்ளேன் பார்க்க : 62.1 & 59.1.1.1.1.1. அங்கேயே பதிலிறுக்கவும். அங்கு பதிலளித்தால் அதன் இடம் பொருள் சரியாக விளங்கும்.

  61. சரி,

    விஷயத்துக்கு வாங்க. இந்த பதிவு எதப்பத்தி? அதை விட்டுவிட்டு வேறு எங்கோ சென்றுகொண்டிருக்கிறது என தோன்றுகிறது.

  62. நோக்கி ,நாம் பதிவை நோக்கியே
    https://www.vinavu.com/2012/12/13/village-boycotts-barber/
    எண்ப‌துக‌ளில் எங்க‌ள் ஊர் நாவித‌ரின் ம‌க‌ன் ப‌த்தாம் வ‌குப்பு பாஸ் ப‌ண்ணி விட்டு, ச‌த்துண‌வுத் திட்ட‌ அமைப்பாள‌ராக‌ வேலைக்கு சேர்ந்தார். எப்போது வெள்ளை வேட்டி, ச‌ட்டை என‌ வ‌ல‌ம் வ‌ரும் அவ‌ரை என் ஊரின் ஆதிக்க‌ சாதி ஆண்க‌ளுக்கு அவ்வ‌ள‌வாக‌ பிடிக்காது. போதாத‌ குறைக்கு ச‌ம‌ வ‌ய‌துள்ள‌ ஆதிக்க‌ சாதி ஆண்க‌ளில் ப‌டித்த‌வ‌ர்க‌ளை அவ‌ர் பெய‌ர் சொல்லியும் கூப்பிடுவார். இளைஞ‌ர்க‌ளிடையே அவ‌ருக்கு ந‌ல்ல‌ ந‌ட்பு வ‌ட்ட‌ம் உண்டு. ஏற்கென‌வே நாடார் சாதியைச் சேர்ந்த‌ வித‌வைப் பெண் ஒருவ‌ர் ச‌மைத்த‌ கார‌ண‌த்தால் ச‌த்துண‌வே வேண்டாம் என‌ ஆதிக்க‌ சாதி ஏழைக‌ள் கூட‌ ஒதுங்கிக் கொண்ட‌ன‌ர். இந்த‌ நிலையில் த‌ன‌து ம‌னைவியை ச‌மைக்க‌ அழைத்து வ‌ந்தார் நாவித‌ர் ம‌க‌ன். பாதி ஊர் ப‌ள்ளிப் ப‌க்க‌ம் வ‌ருவ‌தையே நிறுத்திக் கொண்ட‌து.நன்றி வினவு

  63. நோக்கி ,பதிவை நோக்கியே ,இதோ இந்த வினவு விலிருந்து
    https://www.vinavu.com/2012/12/13/village-boycotts-barber/
    எண்ப‌துக‌ளில் எங்க‌ள் ஊர் நாவித‌ரின் ம‌க‌ன் ப‌த்தாம் வ‌குப்பு பாஸ் ப‌ண்ணி விட்டு, ச‌த்துண‌வுத் திட்ட‌ அமைப்பாள‌ராக‌ வேலைக்கு சேர்ந்தார். எப்போது வெள்ளை வேட்டி, ச‌ட்டை என‌ வ‌ல‌ம் வ‌ரும் அவ‌ரை என் ஊரின் ஆதிக்க‌ சாதி ஆண்க‌ளுக்கு அவ்வ‌ள‌வாக‌ பிடிக்காது. போதாத‌ குறைக்கு ச‌ம‌ வ‌ய‌துள்ள‌ ஆதிக்க‌ சாதி ஆண்க‌ளில் ப‌டித்த‌வ‌ர்க‌ளை அவ‌ர் பெய‌ர் சொல்லியும் கூப்பிடுவார். இளைஞ‌ர்க‌ளிடையே அவ‌ருக்கு ந‌ல்ல‌ ந‌ட்பு வ‌ட்ட‌ம் உண்டு. ஏற்கென‌வே நாடார் சாதியைச் சேர்ந்த‌ வித‌வைப் பெண் ஒருவ‌ர் ச‌மைத்த‌ கார‌ண‌த்தால் ச‌த்துண‌வே வேண்டாம் என‌ ஆதிக்க‌ சாதி ஏழைக‌ள் கூட‌ ஒதுங்கிக் கொண்ட‌ன‌ர்.
    நன்றி வினவு

    • ஏன் எண்பதுகள், சமீபமாக கூட உத்தப்புரம் சுவர் பிரச்சினை நிகழ்ந்தது.
      ஆம். இவ்வாறு இந்த கிராம மக்கள் நடந்துகொண்டது தவறு.

  64. நோக்கி ,வளவாளா வேண்டாம் ,இதற்கு பதில் சொல்லுங்கள் ,காமராஜர் முதல்வராக வந்ததால் ,ராஜகோபால் அண்ணாச்சி ஓட்டலில் எல்லோரும் சாப்பிடுவதால் அந்தகாலத்தில் நாடார்கள் கீழ்சாதியாக ,பஞ்சமாரக ஒதுக்கி வைக்கப்படவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

    • இதற்கு முன்னரே ஒருமுறை மறுமொழி இட்டுள்ளேன் பார்க்க : 62.1 & 59.1.1.1.1.1. அங்கேயே பதிலிறுக்கவும்

    • There is no connection,the idea is that Nadars,even hindu nadars have developed a lot due to education and fundamentally they help each other as a community.

      More than religion or reservation,this is why they have developed as a community.

      No other community does that as much as the nadars.

      I only see muslim people going to gulf to work as manual labour,taxi drivers and at best something slightly better if they are not educated.

      In terms of education/development,i see christian converts and even non converts benefitting a lot,

      Reservation policy did not come or happen due to conversion to Islam,it came about because of Ambedkar asking for separate constituencies or voter lost for dalits and this is why the idea of reservation started happening.

  65. நோக்கி ////நாடார்கள் வழி – நடைமுறை சாத்தியத்துடன் கூடியது. மேலும் நீ யார் என்னை அளக்க? முன்னேறிக்காட்டுகிறோம் பார் என்ற வகை.///

    இது உண்மை .இதை முதலிலே சொல்லிவிட்டு போகலாமே ,ஏன் என்னை இப்படி படுத்த வேண்டும் ?
    நாடார் பையன் ஒரு வருடம் .இரண்டு வருடத்திற்கு மேல் ஒரு கடையில் வேலை பார்க்க கூடாது .அதற்குள் அவன் சொந்தமாக கடைவைத்து விட வேண்டும்.இல்லையெனில் நீ நாடாரா என்று கேட்பார்கள்

    • தாங்கள் இதையா கேட்டீர்கள் முதலில்? தெரியாமல் போயிற்றே. மன்னிக்கவும்.

      • நோக்கி .இந்த பதிவு தலித்களின் தாழ்வுநிலை பற்றியே ,அதனாலே இதுபோன்று தாழ்வு நிலையில் நாடார்களும் பஞ்சமரில் ஒருவராக இருந்தனர் என்பது பற்றியே .முன் காலத்தில் நாடார்கள் கேள் ஜாதியாக ஒதுக்கி வைக்கப்பட்டார்களா இல்லையா ?என்பதே எனது கேள்வி .
        உங்களது பதிலோ இன்று அவர்கள் உயர்நிலை இருக்கிறார்களே அதற்கு என்ன காரணமென்று ?
        இரண்டுக்கும் தொடர்பு இல்லை .
        அன்று ஒதுக்கிவைக்கப்பட்ட நாடார்கள் உயர்நிலை அடைந்தது போல தலித்களும் ஒற்றுமையாக போராடி முன்னேறியிருக்க வேண்டும் என்பது உமது கருத்தாக இருக்கலாம் .எல்லோரும் டாக்டராக முடியாது .எல்லோரும் தொழிலதிபர்களாக முடியாது .எல்லோரும் நோக்கியோ ஆகமுடியாது .ஜாக்கியாக்வும் சிலர் இருந்தே ஆகவேண்டும்

          • ஆனால் இது எல்லாம் பதில்கருத்தாக தொடங்கியது இங்கு : இதற்கு முன்னரே ஒருமுறை மறுமொழி இட்டுள்ளேன் பார்க்க : 62.1 & 59.1.1.1.1.1. அங்கேயே பதிலிறுக்கவும். அங்கு பதிலளித்தால் அதன் இடம் பொருள் சரியாக விளங்கும்.

  66. மாமிசம் சாப்பிடக் கூடாது என்பது அவர்களின் குல தர்மம். மாட்டுக்கறி சாப்பிடும் ஜாதிகளிடம் அவர்கள் எந்த விதத்திலும் வாழ முடியாது.

    • திரு. ராம் அவர்களே,
      மேற்கண்ட தங்களின் மறுமொழி, எதற்கான பின்னூட்ட கருத்து என தெளிவாக இல்லை / புரியவில்லை. தெளிவு படுத்தவும்.

    • அப்படின்னா , மாமிசம் சாப்பிடுபவர்கள் இந்து மதத்தவர் அல்ல என்று அறிவிக்க முடியுமா. “விநாயகர் ஊர்வலத்தில் கலவரம் செய்யமட்டும் மாமிசம் சாப்பிடுபவன் ,அதுவும் மாடு சாப்பிடுபவன் தேவை. அப்போ மட்டும் எல்லோரும் இந்துக்கள் “.

  67. தலிதுகல் ஒன்ட்ரு ஆனால் என்ன ஆகும் தமில்நாடு சொல்லுக மேர்க்கத்திய ஜாதி காரர்கலெ

  68. வன்னியர்கள் இப்படி தலித்களை கொடுமைபடுத்திக்கொண்டே , ஜாதிய அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார்கள். என்ன ஒரு வேஷம். நாமும் ஆரியந்தான் காரணம் என்று பிராமணர்களுக்கு மட்டும் தண்டனை கொடுப்போம்.

  69. றாMஆDஆஸ்ஸ் படித்தது பரயனின் சலுகைகலை பயன்படுத்தி.ஆனால் இப்போது பரயனை பிடிக்கவில்லயா?

  70. பெண்களுக்கு சொந்தபுத்தியே இல்லாதது போல் பேசிதான் இந்த மானங்கெட்ட அரசியல் பண்ண வேணடுமா ???????????

  71. ஒரு அடிப்படையான விசயம் நண்பர்களே! ஒரு வசதியான தலித்(அரசு வேலையில் இருப்பவர் என்று வைத்துக்கொள்ளுங்கள்) தன் சமுதாயத்தில் கடைகோடியில் உள்ள தழ்த்தப்பட்ட கூலி வேலை செய்து வரும் இன்னொரு தலித் வீட்டில் திருமணம் முடிக்க முன் வருவாரா? (அது காதலாக இருந்தாலும்..)என்பதை தெளிவு படுதவும்.. அப்படி இருந்தால் எத்தனை வாழ்க்கை தரம் உயர்ந்த தலித்கள் ஏழை தலித்களை திருமணம் செய்து தன் சமுதாயத்தை வாழ வைத்தார் என்ற பட்டியலை வெளியிடுவதற்கு முன் வர வேண்டும்.. ஐ.டி துறை போன்ற இடங்களில் பொருளாதாரத்தில் மேம்பட்ட இடங்களில் நடக்கும் சாதி மறுப்பு திருமணங்கள் எதிர்ப்புக்கு ஆளானாளும் தர்மபுரி சம்பவம் போல இறப்பிலோ அல்லது அரசியல் விளையாட்டிலோ சிக்குவதில்லை.. இப்பொழுது பிரச்சனைக்கு காரணம் சாதி மட்டும் அல்ல பொருளாதர ஏற்றத்தாழ்வுகளும்தான்.சாதியின் உரிமையை மீட்க போராடும் தலைவர்கள் தயவு செய்து தத்தம் சமுதாய மக்களின் வறுமையை நீக்க நேர்வழியில் போராடுங்கள் குறுக்கு வழி வேண்டாம்… பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மறையும் போது சாதி மெல்ல மெல்ல மறையும் நாம் அழிக்க அவசியமில்லை அதை விடுத்து இன்றுநடக்கும் போராட்டங்கள் அனைத்தும் சாதியை ஒழிப்பதற்காகவோ அல்லது மக்களுக்காகவோநடக்கவில்லை சில சுயநலவாதிகளின் சுய விளம்பரத்திற்காகநடக்கிறது இன்றைய வர்த்தக உலகில் வசதி படைத்தவன் மேல் சாதி வசதி இல்லாதவன் கீழ்சாதி அவ்வளுவுதான்… சாதி என்பதுநடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் தான் உள்ளது அதை சிலர் பயன்படுத்தி தலைவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

  72. அய்யோ இவ்வளவு எதிர்வினைகளா?வழக்கம்போல பாப்பானை திட்டுறதே safe-வினவு மைன்ட் வாய்ஸ்

Leave a Reply to ஊரான் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க