privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்சாதிவெறிக்கு சில சாட்டையடி கேள்விகள்!

சாதிவெறிக்கு சில சாட்டையடி கேள்விகள்!

-

ஆதிக்க சாதி பெருமை பேசும் உழைப்பாளி மக்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்…

  • ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பேருந்து முதலாளி தனது சாதி மக்களுக்கு சலுகைக் கட்டணம் பயணத்தை அனுமதிப்பாரா ?
  • ஆதிக்க சாதியை சேர்ந்த மற்றும் முதலாளிகளின் வீட்டுப் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ அதே சாதியில் உள்ள கூலி விவசாயியை, ஏழையை, தொழிலாளியை திருமணம் செய்து கொடுப்பாரா ? அல்லது தெரியாமல் காதலித்துவிட்டால் தான் சேர்த்துவைப்பாரா ?
  • ஆதிக்க சாதியை சேர்ந்த பண்ணையார் தனது சாதியை சேர்ந்த கூலி விவசாயிக்கு அதிக கூலி கொடுப்பாரா ? கொடுக்கிறாரா ?
  • தொழிற்சாலையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த முதலாளி, நிர்வாக அதிகாரி போன்றோர் தனது சாதிக்கார தொழிலாளி என்பாதால் சலுகைக் காட்டுவாரா ? அதிக சம்பளம் கொடுப்பாரா ? சங்கம் கட்ட அனுமதிப்பாரா ?
  • ஆதிக்க சாதியைச் சேர்ந்த் பள்ளி, கல்லூரி முதலாளிகள் அதே சாதியில் உள்ள மாணவனுக்கு இலவசமாக கல்வி வழங்குவாரா ? குறைந்தபட்சம் அய்யோ பாவம் என்று அதிக கட்டணம் வசூலிக்காமல் கல்வி கொடுப்பாரா ?
  • ஆதிக்க சாதிக்காரர் வைத்திருக்கும் மளிகை கடையில் எங்க சாதிக்காரனுக்கு மட்டும் தான் பொருள் விற்பனை என அறிவிக்கத் தயாரா ? அதையும் சலுகை விலையில் வழங்கத் தயாரா ?
  • ஆதிக்க சாதியில் பிறந்து வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணம் ஆகாமல் நொந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான உழைப்பாளி பெண்களுக்கு வரதட்சணை இல்லாமல் வாழ்க்கை தரவேண்டும் என்று அதே சாதி இளைஞர்களை வலியுறுத்த ஆதிக்க சாதிச்சங்கங்கள் தயாரா ?
  • நான் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் எங்கள் சாதிக்காரன் தயாரித்தால் மட்டுமே பயன்படுத்துவேன் என்று ஆதிக்க சாதி வெறியர்கள் கூறத் தயாரா ?
  • ஆதிக்க சாதி பெருமை பேசி திரியும் ஒருவர் பேருந்தில் ஏறும்போது தாழ்த்தப்பட்டவர் வண்டி ஓட்டுகிறார் என்றால் ஏறாமல் விட்டுவிடுவாரா ? அதிகாரி தாழ்த்தப்பட்டவர் என்றால் கூழைகும்பிடு போடாமல் இருப்பாரா ?
  • ஆதிக்க சாதிக்காரர் உபயோகிக்கும் ரூபாய் நோட்டை இதற்கு முன் தாழ்த்தபட்ட ஒருவர் கையில் இருந்து வாங்கி இருந்தால் இவர் அதை கீழே போட்டுவிடுவாரா?
  • தொழிலாளியாக ஆலைக்குள் நுழையும்போது, பேருந்தில் ஏறும்போது சாதி குறுக்கே வருகிறதா ? அங்கே சாதி பெருமையை பேச முடியாதது ஏன் ?
  • ஆதிக்க சாதிக்காரர்கள் தனது சாதிக்கு மனு இட்ட கட்டளைகளை, பழக்க வழக்கங்களை அப்படியே கடைபிடிக்க முடியுமா ? முடியவில்லை என்றால் காரணம் என்ன ?
  • ஆதிக்க சாதிக்காரர்கள் என்றால் காவிரித் தண்ணீர் உடனடியாகவோ, மின்சாரம் தடையில்லாமலோ கிடைத்து விடுகிறதா?
  • அன்றாடம் ஆயிரம் வேலைகளில் வர்க்கமாக ஒன்றுபட்டு நிற்கின்ற உழைப்பாளிகளை சாதியாக பிளப்பதால் ஆதாயமடைவது முதலாளிகள்தான் என்பது தெரியவில்லையா ? ஆதிக்க சாதியில் பிறந்து அரும்பாடுபடும் தொழிலாளி தனது உரிமையை கேட்க சங்கம் கட்டுவதை தடுக்கும் முதலாளிகளின் வீடுகளை ஆட்களை திரட்டி இடிப்பதற்கு ரோஷம் வராததன் மர்ம்ம் என்ன ?
  • சாதி வெறியை தூண்டிவிட்டு துப்பாக்கி சூடு, சிறைவாசம், வழக்குகளுக்கு ஆளாகிய உங்களின் நிலையும் , இதனால் ஆதாயம் அடைந்து சொத்து சேர்த்துள்ள தலைவர்களின் யோக்கியதையும் தெரியுமா ?

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் அமலாக்கப்படும் நாட்டை காலனியாக்கும் கொள்கைகாளால் அன்றாடம் பல்வேறு பாதிப்புகளை, கொடுமைகளை அனுபவிக்கும் உழைக்கும் மக்களை பிளக்கும் சாதி பெருமை நம் வாழ்வை பாதுகாக்காது. மாறாக உழைப்பாளிகளை பிளவுபடுத்தி, முதலாளிகள், பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிப்பதையும், சுரண்டி கொழுப்பதையும், உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து முறியடிப்போம் ! உழைப்பாளிகள் அனைவரும் சம்ம் என்ற ஜனநாயக உணர்வுகொள்வோம் ! புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெறுவோம்!

இவண்

விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தமிழ்நாடு-புதுச்சேரி