காஷ்மீர் மக்களுக்கு எதிரான அரசியல் படுகொலையே
அப்சல் குருவின் தூக்கு!
சாட்சியமே இல்லாத போதும் இந்திய தேசியவெறி ‘மனசாட்சிக்கு’
உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் உயிர்ப் பலி!
சட்டப் பூர்வமாகி வரும் அரசு பாசிசத்திற்கு எதிராக போராடுவோம்!
ஆர்ப்பாட்டம் : 11-2-2013, மதியம் : 1.30 மணி, ஆவின் வாயில் முன்பு, உயர்நீதி மன்றம், சென்னை
தகவல் : மனிதை உரிமை பாதுகாப்பு மையம் – சென்னை
neega nallavangla illai kettevangla?
Afsal is a terrorist was hanged very very late but he was hanged only due to public pressure and it now looks cruel joke to watch few lunatics doing dharna after his death.If these lunatics indulge in terrorist activities,they will also meet the same fate as Afsel.
இந்தியவின் தேசியவெறியென்பது இந்திய முதலாளித்துவ லாபவெறியின் மற்றோர் பெயரே ஆகும்.அஃப்ஸலை தூக்கிலிட்டது,இந்திய முதலாலிகலுக்காக வழக்கியல் மன்Dமும் பி.ஜே.பி.காங்ரஸ் கூட்டுக் கூலிக் கும்பல் செய்த கொலையே ஆகும்.மத வெறி என்பதும் தேசிய வெறி என்பதும் முதலாளித்துவத்தின் மறுப்பக்கமே!
” ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் . ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது ” என்பது தான் இந்திய ஜனநாயகத்தின் நோக்கம் என்று கூறுகிறார்கள்.
ஆனால் அப்சல் குரு போன்ற பல நிரபராதிகள் தண்டிக்கப்படுகின்றனர். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் பெருமையோ?
// உச்ச நீதிமன்றம் அதன் ஆகஸ்டு 4, 2005 தீர்ப்பில், அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாத குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று தெளிவாகச் சொல்கிறது. ஆனால், அது இப்படியும் சொல்கிறது. ‘பெரும்பாலான சதித்திட்டங்களில், குற்றச் சதியில் பங்கேற்றதற்கான நேரடி சாட்சியம் இருக்க முடியாது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட அப்சல் கொல்லப்பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகளுடன் ஒத்துழைத்தார் என்பது சூழ்நிலைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது தெளிவாகிறது’.
ஆகவே, நேரடி சாட்சியம் இல்லை, ஆனால், சூழ்நிலை சாட்சியங்கள் உண்டு.
தீர்ப்பின் சர்ச்சைக்குள்ளான ஒரு பத்தியில், ‘இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்ப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சவாலாக இருந்த இந்த பயங்கரவாதிகள் மற்றும் சதிகாரர்களின் செயலுக்கு பரிகாரம் இந்த துரோகச் செயலில் சதிகாரர் என நிரூபிக்கப்பட்ட நபருக்கு அதிகபட்ச தண்டனையை அளிப்பதாகத்தான் இருக்க முடியும்’. //
உச்ச்சாணிக் கொம்பு நீதிமன்றத்தின் யோக்கியதை மேற்கண்ட வரிகளில் காரித்துப்புவது போல் உள்ளது.
சாட்சியங்கள் இல்லாத, குற்றம் சரிவர நிரூபிக்கப்படாத ஒரு முஸ்லீமுக்குத் தூக்கு. ஆனால் ஒப்புதல் வாக்குமூலம் தருகின்ற, தெருவில் ஓடவிட்டு சுட்டுத்தள்ளப்பட வேண்டிய நரவேட்டை மோடி, அத்வானி, மற்றும் ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் சுதந்திரமாக உலவுகின்றனர்.
” தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் ” என்ற பொதுக் கருத்து பெரும்பாலான மக்களின் மனசாட்சியை ஆள்வதனால்தான் இந்த அநீதிக்கெதிராக மக்கள் கொதித்தெழவில்லை.
புரட்சிகர அமைப்பின் போராட்டங்கள்(கருத்திலும் , களத்திலும்) இந்தப் பொதுக்கருத்தைத் தகர்த்து இந்துத்துவ பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை மக்களிடம் அம்பலப்படுத்துகின்றன. இனி மேலும் அம்பலப்படுத்தும்.
அடுத்த பலிகடா யாரோ ?