privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஆதிக்க சாதி வெறிக்கு எதிராக - நாட்றாம்பாளையம்

ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக – நாட்றாம்பாளையம்

-

சாதி வெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்!
மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைப்போம்!

என்ற தலைப்பின்கீழ் 23.01.2013 மாலை 5.00 மணியளவில் தேன்கனிக்கோட்டை வட்டம், நாட்றாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழக மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை
நாட்றாம்பாளையம் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் சரவணன்

கண்டன உரை
தோழர் மாரியப்பன் (வி.வி.மு),
தோழர் வெங்கடேசன் (பு.ஜ.தொ.மு),
தோழர் சுரேஷ் (வி.வி.மு),
தோழர் ஜானகிராமன் (ம.உ.பா.மையத்தின் மாவட்ட செயலாளர்)

சிறப்புரை
தோழர் கோபி (வி.வி.மு வட்ட செயலர், பென்னாகரம்)

திரளான மக்கள் கூடி நின்று கண்டு உணர்வோடு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். கூட்டத்தின் கடைசியில் போலீசு அதிகாரிகளின் அருகில் பாதுகாப்போடு நின்றுகொண்டு மூன்று அஇதிமுகவைச் சேர்ந்த வன்னிய சாதியை சேர்ந்தவர்கள் தகறாறு செய்ய முற்பட்டபோது அதே சாதி சமூகத்தை சேர்ந்த நண்பர்கள் அவர்களை தடுத்து விரட்டியடித்தனர்.

புரட்சிகர கலை நிகழ்சியை காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களும் இறுதிவரை ஆர்வமுடன் கேட்டனர். தோழர்கள் துண்டேந்தி நிதிகேட்டு வந்த போது உழைக்கும் மக்களின் உணர்வோடு சில காவல் நண்பர்களும் நிதி தந்தும் வாழ்த்து தெரிவித்து சென்றது நல்ல அனுபவமாக இருந்தது. இறுதியில் பிரச்சினை செய்ய முயற்சித்து தோற்றுச் சென்ற மூவரில் ஒருவர் ஓடிவந்து கலைக்குழு தோழர்களில் ஒருவரிடம் கைகுலுக்கி, “நீங்கள் எல்லா சாதித் தலைவர்களையும்தான் திட்டுகிறீர்கள்! நான் வன்னிய ராமதாசை மட்டும்தான் திட்ட கூட்டம் போடுகிறீர்கள் என்று தவறாக நினைத்துக்கொண்டேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.