privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுமுதம் : ரிப்போர்ட்டரா , புரோக்கரா ?

குமுதம் : ரிப்போர்ட்டரா , புரோக்கரா ?

-

செட்டியார் – ஐயங்கார் கூட்டணியில் இருந்த குமுதம் நிறுவனம் தற்போது ஐயங்கார் கும்பலிடம் மட்டும் உள்ளது. செட்டியார் கும்பல் நீக்கம் நிறைவேற்றப்பட்டதற்கு அம்மாவின் அருளும் ஒரு காரணமென்பதால் சொத்தைக் கைப்பற்றிய ஐயங்கார் கும்பல் அதிமுகவின் அடிவருடி பத்திரிகையாக செயல்படுவதை அனைவரும் அறிந்திருக்கலாம். குமுதம் நிறுவனங்களில் வேலை செய்யும் அனைவரும் கையில் இரட்டை இலையை பச்சை குத்தியும், மூளையில் புரட்சித் தலைவியின் பொற்பாதங்களை வணங்கும் முத்திரையை பதித்தும் பத்திரிகைகளை நடத்துகிறார்கள், எழுதுகிறார்கள். இதில் ஓனர், வொர்க்கர் என்ற பேதமெல்லாம் இல்லை.

தமிழக அரசு அல்லது ஜெயாவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் கருணாநிதியின் சதியே காரணமென்று ஜெயாவே யோசித்திராத கோணத்திலெல்லாம் சிந்தித்து எழுதுகின்றன குமுதம் குழும பத்திரிகைகள்.

விசவரூபம் பிரச்சினை வந்தபோது கூட மற்ற பத்திரிகைகளெல்லாம் சற்று பயந்து கொண்டு தமிழக அரசைக் கண்டிக்கவில்லை என்றாலும் மொக்கையான கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கொஞ்சம் கமலை ஆதரித்தன. ஆனால் குமுதம் மட்டும் இந்தப்பிரச்சினைக்கு சதி செய்த காரணகர்த்தா கருணாநிதி என்று ஒரு திகில் நிறைந்த மர்மக்கதையை அட்டைப்படக் கட்டுரையாக எழுதி வெளியிட்டது. அதன்படி இவர்கள் தமிழக அரசை ஆதரிப்பதோடு கமலையும் ஆதரிக்கிறார்களாம். அப்பாவி கமல் ஒரு பகடைக்காயாக கருணாநிதியின் கையில் சிக்கிவிட்டதாக எழுதியது குமுதம்.

இதற்காக இவர்கள் உருவாக்கிய வரலாறு இன்னும் பயங்கரம். அதாவது இன்று கமல் பலியானது போல அன்று ரஜினி பலியானார் என்று ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியிருந்தார்கள். அதன்படி 1991இல் ஆட்சிக்கு வந்த ஜெயாவை தமிழக மக்கள் அமர்க்களமாக ஆதரித்து தள்ளினார்களாம். அந்த ஆட்சிக்காலத்தின் இறுதியில் பாட்சா பட விழாவில் மணிரத்தினம் வீட்டு குண்டு வீச்சு தொடர்பாகவும், டிராபிக் ஜாமில் தனது கார் நிற்பதற்காகவும் துக்கப்பட்ட ரஜினி தமிழக அரசைக் கண்டித்தது நினைவிருக்கிறதா? அதை ஊதிப்பெருக்கி ரஜினிக்கும் ஜெயாவுக்கும் ஒரு முரண்பாட்டை உருவாக்கி அடுத்த தேர்தலில் ரஜினியை ஒரு வாய்ஸ் கொடுக்க வைத்து அதிமுகவை தோற்க வைத்தவர் கருணாநிதி என்று போகிறது குமுதம் மாமாவின் வரலாறு.

அட மாமாக்களா! அந்த ஆட்சிக்காலத்தில் பாசிச ஜெயாவின் ஆட்சியில் முழு தமிழகமுமே மொட்டை அடிக்கப்பட்டதும், வளர்ப்பு மகன் திருமணம் முதல் டான்சி ஊழல் வரை பாசிச ஜெயாவின் முறைகேடுகளும்தான் அந்த தேர்தலில் தமிழக மக்கள் கொடுத்த செருப்படிக்கு முக்கியமான காரணம். உண்மையாகவே வாக்கு கேட்க வந்த அதிமுக அமைச்சர்கள் பலரை பெண்களின் விளக்குமாறுதான் அடித்தி விரட்டியதெல்லாம் வரலாறு. அதைக்கூட தனது அம்மா போற்றி அடிமைத்தனத்திற்காக இப்படி புரட்டி எழுவது என்றால் இவர்களின் நரித்தனம் எந்த அளவு அபாயகரமானது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இப்படி அந்தக் காலத்தில் ரஜினியை பயன்படுத்திய கருணாநிதி இன்று கமலை மோத வைத்து அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவரை வாய்ஸ் கொடுக்க வைத்து வெற்றி பெற திட்டமிட்டிருக்கிறாராம். இதனாலாயே ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் வேட்டி கட்டிய தமிழர்தான் பிரதமர் ஆக வேண்டும் என்று கமல் விரும்புகிறாரே ஒழிய சேலை கட்டியவரை அல்ல என்று விசமத்தனம் செய்து பேசியவர் கருணாநிதியாம். இப்போதும் முழு தமிழக மக்களும் ஜெயாவை முழுமனதுடன் ஆதரிக்கிறார்களாம். ஒரு வேளை கமல் அப்படி குரல் கொடுத்தால் மக்கள் மாற வாய்ப்பிருக்கிறது என்பது திமுகவின் திட்டமாம்.

இதுதான் விசுவரூபம் கதையின் பின்னணி என்று நாக்கூசாமல் எழுதுகிறது குமுதம். சரி கருணாநிதி இப்படி சதி செய்து கமலை அப்படி பேசவைத்தால் அம்மா ஏன் கோபப்பட்டு கமலை எதிர்க்க வேண்டும்? அந்த சதியை முறியடிக்கும் வண்ணமாக அமைதியாக இருந்து விசுவரூபத்தை அனுமதித்திருக்கலாமே? இப்படியெல்லாம் நாம் கேட்டாலும் குமுதத்தைப் பொறுத்தவரை அம்மாவின் அதிகாரம் என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. அதை தெருவில் போகும் ஒரு குழந்தை கேட்டாலும் அவருக்கு கோபம் வரும். இந்த கோபத்தைப் பொறுத்துக் கொண்டு கேள்வி கேட்ட அந்த குழந்தையை ரெண்டு அடி போடுவதுதான் ஊடக தர்மம் என்று குமுதம் சொல்கிறது. அதாவது அந்த அறியாக் குழந்தையை கருணாநிதிதான் லாலிபாப் வாங்கி இப்படி அம்மாவுக்கு எதிராக பேசவைத்தார் என்று புரிந்து கொள்ள வேண்டுமாம். அடேங்கப்பா, இம்சை அரசனின் அரசவைக் கவிஞர்களெல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட காலத்தில் கூட கமலின் ரசிகர்கள் ஆந்திரா சென்றுதான் படத்தை பார்த்தார்களே அன்றி தமிழகத்தில் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. இப்படிப்பட்ட ரசிகர்களை உசுப்பி விட்டு கமல் குரல் கொடுத்து திமுக வெற்றிபெறும் என்றால் பவர் ஸ்டாருக்கு இதைவிட வாய்ஸ் அதிகம் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். இது போக திமுக வாரிசுச் சண்டையை வைத்து ரிப்போர்ட்டர் எனும் இந்த நரி எழுதிய கதைகளை பிட்டு வைப்பதற்கு இந்த ஜென்மம் மட்டும் போதாது.

குமுதம்-ரிப்போர்ட்டர்-குஷ்பு-மணியம்மைஇதன் தொடர்ச்சியாக இன்று வந்த குமுதம் ரிப்போர்ட்டர் அட்டைப்படத்தில் பெரியார் படத்தில் மணியம்மையாக நடித்த குஷ்பு படத்தை போட்டு பக்கத்தில் பெரியாருக்கு பதில் கருணாநிதி அமர்ந்திருக்கும் படத்தை ஒட்ட வைத்து “இன்னொரு மணியம்மை?” என்று வெட்கம் கெட்ட விதத்தில் எழுதியிருக்கிறார்கள். குஷ்பு இப்படி மணியம்மை பெரியாரை மணந்தது போல கருணாநிதியிடம் நெருங்கி வர முயற்சி செய்கிறார் என்றும் இதை கருணாநிதியின் குடும்ப பெண்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்றும் இந்த மஞ்சள் பத்திரிகை மாமா பச்சையாக வாந்தி எடுத்து வைத்திருக்கிறது.

ஆனந்த விகடனில் பேட்டி கொடுத்த குஷ்பு, திமுகவில் தலைவர் என்பவர் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படுவார் என்பது போல கூறியதை அனைத்து பத்திரிகைகளும் ஊதிப்பெருக்கி ஒரு சென்சேஷன் நியூசை உருவாக்கின. இதன் தொடர்ச்சியாக குஷ்பு வீடு திமுகவினரால் தாக்கப்பட்டதும், கருணாநிதி அதை கண்டித்தாதாகவும் செய்திகளை படித்திருப்பீர்கள். குஷ்பு ஒரு மேட்டுக்குடி ரோட்டரி கிளப் பெண் அரசியலுக்கு வந்தால் எப்படி நடந்து கொள்வாரோ அப்படித்தான் பேசுகிறார். இவரது பிரபலம் தேர்தல் காலங்களில் வாக்கு கேட்க பயன்படும் என்பதால் திமுக இத்தகைய களப்பணி செய்து வந்த ‘போராளிகளை’ வெட்கமில்லாமல் ஏற்றுக் கொள்கிறது. பதிலுக்கு குஷ்புவும் தனது பிரபலத்தை வைத்து திமுகவில் இன்னும் செல்வாக்குமிக்க பதவிகளில் வரலாம் என்று முயற்சி செய்கிறார். பரஸ்பரம் காரியவாதம். அதே போல ஸ்டாலின், அழகிரி மற்றும் பல தளபதிகள் கொண்ட திமுகவின் மையங்கள் பல ஒரு நடிகையின் பிரபலத்தை எந்த அளவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது என்பதை எச்சரிக்கையாகவே கையாள்கிறார்கள்.

இதைத்தாண்டி குஷ்புவின் நேர்காணல்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஸ்டாலின், அழகிரி வாரிச் சண்டையின் பின்னணியில்தான் குஷ்புவின் நேர்காணல் பரபரப்பு செய்தியாக மாற்றப்பட்டது. இதை இன்னும் கொஞ்சம் பாலியல் கலந்த தளத்திற்கு கொண்டு சென்றது குமுதம் ரிப்போர்ட்டர் மட்டுமே.

குமுதத்தின் இலக்கு என்ன? கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்து பெண்களையெல்லாம் காலஞ்சென்ற எஸ்.எஸ்.சந்திரன் பொதுமேடையில் வாய் புழுக்க பேசிய போது குலுங்கி குலுங்கி சிரித்தவர்தான் இந்த ஜெயலலிதா. இன்று குமுதம் ரிப்போர்ட்டரை பார்த்தால் அப்படி சிரிப்பது உறுதி என்று குமுதம் மாமாவுக்கு தெரியும். இந்த ஒரு மேட்டருக்காகத்தான் இத்தகைய தரந்தாழ்ந்த கதையை படத்துடன் எழுதி வெளியிடக் காரணம்.

எனினும் தமது தலைவரை குமுதம் கேவலப்படுத்திவிட்டது, தனது கட்சிக்காரர் என்பதால் குஷ்புவை இழிவுபடுத்திவிட்டது என்று திமுகவின் ஒரு உடன்பிறப்புக்கு கோபம் வந்து குமுதம் அலுவலகத்தை அடிக்க சென்று கலவரமெல்லாம் நடக்காது. ஒன்று அம்மாவின் மீதான பயம். இரண்டு இப்படித்தான் திமுக மட்டுமல்ல அதிமுக மேடைகளிலும் இரண்டு கட்சி பேச்சாளர்களும் பாலியல் அநாகரிகத்தோடு பேசுவார்கள். வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், நாஞ்சில் சம்பத் பேச்சுக்களுக்கு கை தட்டும் இவர்கள் குமுதத்திற்காக கல்லை எடுக்க மாட்டார்கள் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் குமுதம் ரிப்போர்ட்டரின் இத்தகைய அயோக்கியத்தனத்தை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். தமிழகத்தை பிடித்த சாபக்கேடு பாசிச ஜெயா மட்டுமல்ல, அவருக்கு பல்லக்கு தூக்கும் இத்தகைய பத்திரிகை மாமாக்களும்தான் என்பதை உணர்வதோடு பொது அரங்கில் இவர்களை முறியடிப்பதற்கும் நாம் முன்வரவேண்டும்.

  1. அவசியமான பதிவு. குஷ்பு தாக்கப்பட்டதையும் இந்த கட்டுரையில் கண்டித்திருக்க வேண்டும். அப்படியென்ன குஷ்பு தவறாக பேசி விட்டார்? முப்பது வருட பயிற்சிக்கு பின்னரும் கூட கருணாநிதியின் முழங்கால் அளவுக்கு வளராதவர் ஸ்டாலின். [ஆனால், குஷ்பு ஸ்டாலினுக்கு எதிராக பேச நினைத்திருக்க மாட்டார் என்று நிச்சயமாக நம்பலாம்.] புலவர் இந்திராகுமாரி போன்ற ஜெயலலிதாவின் உதிர்ந்த ரோமங்கள் எல்லாம் குஷ்புவுக்கு எதிராக பேசுவதும் கூட ஆபாசம்,தான். இப்போது,கருணாநிதி தலையிட்டதால் விட்டிருக்கிறோம், என்று பாவனை செய்கிறார். [இவர் தனது கையில் பச்சை குத்தியிருந்த ஜெயலலிதா படத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நீக்கியுள்ளார்.] அதனையும் கட்டுரையில் குறிப்பிட்டு கண்டித்திருக்க வேண்டும். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் விட [கனிமொழி உட்பட] தி.மு.கவில் ஒரு பொறுப்புக்கு தகுதியானவர் தான் குஷ்பு.

    கருணாநிதி எவ்வளவு தான் சமரசவாதியாக இருந்தாலும் அவர் அதிகம் நினைவுகூரப்படுவது பெரியாரின் மாணவர் என்பது தான் . பார்ப்பன பண்டாரங்களால் அவர் அதிகம் வெறுக்கப்படுவதன் காரணம் அங்கு தான் இருக்கிறது. அந்தவகையில் அத்தகைய நபர்களை எதிர்கொள்ள நமக்கும் ஒரு கடமை உள்ளது என்பதை இக்கட்டுரை சொல்லாமல் சொல்கிறது.

  2. குமுதம் கட்டுரையை நான் படிக்கவில்லை. ஆனால் ஒரு தொண்ணூறு வயது முதியவரை குஷ்பு பாலியல் ரீதியாக நெருங்கி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் என்ற படு கேவலமான அர்த்தத்தில் குமுதம் உட்பட யாரும் பேச மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்.

    • வெங்கடேசன்,
      கட்டுரையை படிப்பது ஒரு புறம் இருக்கட்டும். அட்டைப்படமும் அந்த வாக்கியங்களையும் பார்த்தால் அதை எப்படி உணர்கிறீர்கள்? உங்களுக்குள் எப்படிப்பட்ட கருத்து உருவாகிறது என்பதைச் சொல்லுங்கள்.

      • ஸ்டாலின், அழகிரி, கனிமொழி போன்றோரை பின்னுக்கு தள்ளிவிட்டு குஷ்பு திமுக தலைவராக முயல்கிறார் என்பது போன்ற ஒரு அரசியல் கிசுகிசுவே கட்டுரையின் மையப் பொருளாக இருக்கும் என்பது என் கணிப்பு. இதை குமுதம் நேரடியாக எழுதி இருக்கலாம். பெரியார், மணியம்மை ஆகியோரை இழுத்திருக்க வேண்டாம். பெரியாருக்கு பிறகு அவரது ஆசி பெற்ற ஒரு பெண் அவரது இயக்கத்துக்கு வாரிசானது போல, கருணாநிதி ஆசி பெற்று குஷ்பு அவரது அரசியல் வாரிசாகலாம் என்ற உதாரணத்தை சொல்ல நினைத்தாலும் நேரடியாக சொல்லி இருக்கலாம். மொத்தத்தில், நீங்கள் சொல்வது போல, அந்த அட்டை படமும் தலைப்பும் விகாரமான பொருளும் தருகின்றன என்பது உண்மையே. ஆனால், எவ்வளவு மோசமான பத்திரிகையாக இருந்தாலும் குஷ்பு கருணாநிதியை பாலியல் ரீதியாக நெருங்குகிறார் என்றோ, அவரை திருமணம் செய்ய முயல்கிறார் என்றோ மிக கீழ்த்தரமாக எழுத மாட்டார்கள் என்றே இப்போதும் நம்புகிறேன்.

  3. தி மு க வில் யார் தலைவராக வரவென்டும் என்பதை தி மு க வினர் மட்டுமெ தீர்மானிப்பர்! மற்ற அல்லக்கைகள் தேவையற்ற சர்ச்சையை கருவாக்கி, உருவாக்கி குளிர்காய்கின்ற்னர்! கருணானிதியின் பெருமை இப்போதுதான் புரிந்ததா! குஷ்புவிற்கு ஆதரவு எஙகிருந்து வருகிறது? எச் வி சேகரும், பிரகாஷ்ராஜும் திராவிட தியாகிகள் பாருஙகள்!

  4. ஒரு மணமான பெண்ணை , ஜனநாயகத்தின் நடைமுறையை விளக்கிய ஒருவரை இவ்வாறு காண்பித்து இருப்பது குமுதத்தின் கேவலமான புத்தியை காட்டுகிறது.

    அடுத்து திராவிட மடத்தில் ஜனநாயகம் பேசியது குஷ்புவின் தவறு. ராஜாங்க வாரிசு சண்டை எனபது காலம் காலமாக ரத்தம் குடிக்கும் சண்டை இதில் உள்ளே மூக்கை நுழைத்தால் உய்ரிலப்பு ஏற்படலாம்

  5. இரண்டு கட்சிகளும் நாற்றத்தில் ஒரே தரமுள்ள மாற்றமில்லாத மலம் என்பதுதான் இவ்வளவு காலத்தில் எனது சிற்றறிவுக்கு புரியக்கூடியதாக உள்ளது. ஜெயலலிதா எஸ் எஸ் சந்திரனை எப்படி பயன்படுத்தி அகமகிழ்ந்தாரோ அதேபோல கருணாநிதி வடிவேலுவை பயன்படுத்தி 09 வயது சிறுவன் தரத்துக்கு படு மட்டமாக தனது நிலையை வெளிப்படுத்தினார்.

    இங்கு யாருக்கும் வெட்கமில்லை.

    தந்திரத்தில் மட்டும் கருணாநிதியுடன் போட்டிபோட இன்னும் எவரும் பிறக்கவில்லை தந்தரமாக ஊரையும் மக்களையும் கிண்டி கிளறுவதில் கருணாநித்க்கு 100 புள்ளியென்றால் ஜெயலலிதாவுக்கு 0 புள்ளி மட்டும் போடமுடியும்.

    குஸ்புவை சந்திக்குக்கொண்டுவந்ததில் குமுதம் ரிப்போட்டருக்குள்ள அவ்வளவு பங்கு கருணாநிதிக்கும் உண்டு. குஷ்புவின் அறியாமை இந்த இடத்தில் மட்டுமல்ல முன்னரும் பலமுறை வெளிப்பட்ட ஒன்றுதான். குஷ்பு ஒன்றும் தந்தரத்திலோ ஆணவத்திலோ ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் முந்திவிடப்போவதுமில்லை.

    தனது சுயரூபத்தை மறைப்பதற்கு ரஜனி, கமல், குஷ்பு இப்படி சினிமாக்காரர்களை அதிகமாக நம்பிக்கொண்டிருப்பது கருணாநிதி என்பதுவெளிப்படை. ஜெயலலிதாவால் அந்தளவுக்கு இறங்கிவர முடிவதில்லை.

  6. //ஆனாலும் குமுதம் ரிப்போர்ட்டரின் இத்தகைய அயோக்கியத்தனத்தை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். தமிழகத்தை பிடித்த சாபக்கேடு பாசிச ஜெயா மட்டுமல்ல, அவருக்கு பல்லக்கு தூக்கும் இத்தகைய பத்திரிகை மாமாக்களும்தான் என்பதை உணர்வதோடு பொது அரங்கில் இவர்களை முறியடிப்பதற்கும் நாம் முன்வரவேண்டும்.//

    ஆமாம் இது கண்டிக்கப் பட கூடிய ஒரு செயல். பெரியாரை கேவலபடுத்தகூடிய செயல்.

  7. குமுதம் ஒரு மஞ்சப் பத்திரிக்கை அப்படிதான் எழுதும். பலான புத்தகத்தை எப்படி படிப்போமோ அப்படித்தான் இதைப் படிக்கனும்.

  8. அம்பி,
    எனக்கு பதில் தருகிற சந்தடி சாக்கில் நீங்கள் குமுதத்தின் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறீர்கள்.குமுதத்தின் பச்சையான yellow ஜர்னலிசத்தை எதிர்க்கும் குறைந்தபட்ச ஜனநாயகப் பண்பை நீங்கள் கொண்டிராதது குறித்து வெட்கப்பட வேண்டும்.

    குஷ்புவை வினவு கட்டுரையின் கருத்துக்களை தாண்டி வேறு எதற்காகவும் ஆதரிக்கவில்லை. அவரது வாழ்க்கை கிட்டத்தட்ட சில்க் ஸ்மிதாவினுடையது போன்றது. சில்க் தற்கொலையை தேர்ந்தெடுத்தார். குஷ்பூ தி.மு.கவை தேர்ந்தெடுத்தார். காங்கிரஸ், பி.ஜெ.பியில் அவர் இணைந்திருந்தால் அவர் வாழ்க்கை இன்னும் சுமூகமாக பயணித்திருக்கும். NDTV யில் ஒரு விவாதத்தின் போது திமுகவில் எதன் பால் ஈர்க்கப்பட்டீர்கள் என்று தமிழகத்தை சேர்ந்த ஒரு வரலாற்று பேராசிரியர் (பெயர் நினைவில் இல்லை) கேட்டார். ‘திமுகவின் கொள்கைகள்’ என்று சொன்ன குஷ்பு, அது குறித்து பேசினார்.

    பார்ப்பனியம் என்பது சமத்துவத்துக்கு, மனித மாண்புக்கு எதிரானது. தி.மு.க., ஒரு வரலாற்றின் வெற்றிடத்தை ஏதோ ஒரு வகையில் நிரப்புகிறது. அதனாலேயே தி.மு.க.வை குறி வைத்து தாக்குகின்றன பார்ப்பன பரிவாரங்களும், பார்ப்பன ஊடகங்களும். கம்யூனிச இயக்கம் வலுப்பெற்று திராவிட இயக்கம் அழிவது பற்றி கவலையில்லை; வரவேற்கத்தக்கது. ஆனால் பார்ப்பனியத்தால் திராவிட இயக்கம் நசுக்கப்படுவதை அனுமதிப்பது, சமத்துவத்துக்கான நெடிய போரை மீண்டும் முதலிலிருந்தே தொடங்கும் சுமையை ஏற்படுத்தக்கூடியது. அதனை அனுமதிக்க முடியாது என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

    • // தி.மு.க., ஒரு வரலாற்றின் வெற்றிடத்தை ஏதோ ஒரு வகையில் நிரப்புகிறது

      இப்போதெல்லாம், கருணாநிதி வீட்டு கல்லா பெட்டியை தவிர வேறெதையும் திமுக நிரப்புவதாக தெரியவில்லை.

  9. அப்போ குமுதம் பெரியார் மூஞ்சில ஒன்னுக்கு போயிருக்குற விஷயம் உனக்கு பெருசா படலையா?? சூப்பருப்பு

  10. ஜெ சினிமாவில் நடிக்கும் போது எம்.ஜி.ஆருக்கு என்னவாக இருந்தார்? அரசியலுக்கு வந்த போது என்னவாக இருந்தார்? இதையும் எழுத்தில் விபச்சாரம் செய்யும் குமுதம் எழுதுமா? தப்பாக நினைக்காதீர்கள். மாமாக்கள் திரித்து நல்லவிதமாக எழுதுவார்களா?

    • athu thaan ellarukkum theriyume,thatha thaana uthamaru,raamaru,thangamaanavaru ippo 90 vayasula khushbu kekkutha,hahaha.

      eppadi thaan oru porikiya thamizh ina thalaivarnnu othukkura parandha manappanmai thamizhargalukku ellam vanducho?

      Thamizhan summa solla koodathu, ilichavaayannu boardu potukittu thiriyiraan,appuram yen kerala karnataka ellam namakku thanni kudupaanga.

  11. எங்கே விஸ்வரூப பிரச்னையோடு நாடு அமைதி அடைஞ்சிடுமோ என்று பயந்து போய் இருந்தேன். நல்ல வேளை குமுதம் ரிப்போட்டர் காப்பாத்திடுச்சு. எல்லாரும் வாங்க கூடிக் கும்மியடிச்சுக் கொண்டாடுவோம்.

  12. அம்பி,
    உங்கள் முதல் பின்னூட்டத்தின் இந்த வரிகள், \\இந்த வகை குஷ்பு ஆதரவு சிந்தனையின் குதர்க்கமான நீட்சிதான் குமுதம் ரிப்போர்ட்டரை கருணாநிதி-குஷ்புவை பெரியார்-மணியம்மையார் ரேஞ்சுக்கு தூக்கிக் கொண்டுபோக வைத்திருக்கிறது..\\ குமுதத்தின் செயலுக்கு ஒரு நியாயம் (extenuation) கற்பித்ததாக உணர்ந்தேன். எனது வாசிப்பில் தவறு இருப்பதாக நீங்கள் கருதினால், எனது தவறான புரிதலுக்காக வருந்துகிறேன். Sorry.

    நான் குஷ்பு ரசிகன் அல்ல; எனவே அந்த வகையில் நாம் ஒன்றுபடுவதை விடவும், அரசியல் இணைத்தால், அதற்காக நான் பெருமைபடுவேன்.

  13. கழகங்கள் மீதான பாலியல் அவதூறுக்கு வினவு இவ்வளவு முக்கியம் தருவது ஆச்சரியமாக உள்ளது…….நமக்கு வேண்டுமானால் இதெல்லாம் அவதூறாக இருக்கலாம்…..இவர்கள் இதையே பெருமையாகநினைக்கூடியவர்கள்…… இவர்கள் மற்றவர்கள் மீது வீசாத பாலியல் அவதூறுகளா?

    ஒரு குடும்பத்தினரை மட்டுமே இயக்குநர்களாகக்கொண்ட பிரைவேட் லிமிடெட் கம்பெனி தி.மு.க……அது ஏதோ ஜனநாயக இயக்கம் போல் பில்ட் அப் செய்து உளறிக்கொட்டியது குஷ்புவின் தவறு……

    மேலும் ,குஷ்புவை இப்படி பேசும்படி தூண்டிவிட்டது கருணாநிதிதான் என்று பொருள்படும்படி கிட்டத்தட்ட எல்லாப்பத்திரிக்கைகளும் எழுதியுள்ளதை வினவு கவனிக்கவில்லையா?

  14. குஷ்பு, ஜெயா டிவியிலிருந்து வெளியேறி, திமுகவில் சேர்ந்தது, கருணாநிதியை மட்டும் ஃபோகஸ் பண்ணி சுற்றி வருவதும், தலைவர் தலைவர் என்று உயரத்தில் தூக்கி நிறுத்துவதும், ஒரு பக்தையைப் போல செயல்படுவதும், ஸ்டாலினைப் புறக்கணிப்பது (அதாவது அடுத்த வாரிசை) போன்ற விமர்சனங்கள் செய்வதும், இப்போது ஜெயாவின் அடிவருடியாக மாறிவிட்ட குமுதத்தின் மூலம், பெரியாருக்கு மணியம்மை என்கிற ரேஞ்சில் புரொமோட் பண்ணப்படுவதும் எல்லாம் ‘எ பார்ட் ஆஃப் கான்ஸ்பிரசி’ போலத் தோன்றுகிறது. இது ஒரு யூகம் தான். பொருத்திருந்து பார்ப்போம்.

  15. மானகெட்ட( குஷ்பு) பிரச்சனை.கருணாநிதி,குஷ்பு இரண்டு பேருமே பிழைப்புவாதிகள்தான்.

    அரசியல்தந்திரத்தில் மட்டும் கருணாநிதியுடன் போட்டிபோட இன்னும் எவரும் பிறக்கவில்லை .

    //ஆனாலும் குமுதம் ரிப்போர்ட்டரின் இத்தகைய அயோக்கியத்தனத்தை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். தமிழகத்தை பிடித்த சாபக்கேடு பாசிச ஜெயா மட்டுமல்ல, அவருக்கு பல்லக்கு தூக்கும் இத்தகைய பத்திரிகை மாமாக்களும்தான் என்பதை உணர்வதோடு பொது அரங்கில் இவர்களை முறியடிப்பதற்கும் நாம் முன்வரவேண்டும்.//

    ஆமாம் இது கண்டிக்கப் பட கூடிய ஒரு செயல். பெரியாரை கேவலபடுத்தகூடிய செயல்.

  16. “என் அம்மா இறந்த போது, அன்றைய முதல்வர் காமராஜர், முதல் ஆளாக, என் வீட்டிற்கே வந்து காத்திருந்தார். அன்றைய அரசியலில், நாகரிகமும், பண்பாடும் இருந்தது. ஆனால், இப்போது இல்லை’ என்று பேசியுள்ளார், கருணாநிதி.நாக்கிலே இருக்கிறது, நன்மையும் தீமையும் என்பர் நல்லோர்.அன்று, காமராஜரிடம் இருந்த நாகரிகமும், பண்பாடும், கருணாநிதியிடம் இருந்ததா?
    இதோ…*”விருதுபட்டியில், கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான், இந்த காமராஜன்’ என்று, ஒன்பது ஆண்டு, பொற்கால ஆட்சி தந்த காமராஜரை அவமானபடுத்தி ஒருமையில் அர்ச்சித்தார், அரசியல் நாகரிகமற்ற கருணாநிதி.

    *”துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை, அவர் தாய் துறந்து விட்டதை போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காக, துறந்து விட்டு நிற்கிறேன்’ என்று, மூத்த எழுத்தாளர் சாவியிடம், கண்கலங்கி கதறி அழுதிருக்கிறார், காமராஜரின் தாய் சிவகாமி. அந்த புண்ணியவதியைத் தான், “கருவாட்டுக்காரி’ என்று, கரித்துக் கொட்டினார், கருணாநிதி.தன் வாழ்வை, 4,000 நாட்களுக்கு மேல், கொடுஞ்சிறையில் கழித்ததாலும், குடும்பம், குழந்தை, குட்டிகள் என்றிருந்தால், பரிசுத்தமாக மக்கள் பணியாற்ற முடியாது என்றும், தன் தாய் எவ்வளவோ வேண்டியும், “திருமணம் வேண்டாம்’ என்று, மக்கள் தலைவராக திகழ்ந்தார், காமராஜர். அதற்கு, “காமராஜருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை’ என, “நாகரிகத்தோடு’ நல்கினார் கருணாநிதி.

    *”காமராஜர் என்ன மெத்த படித்தவரா? முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலை தான், இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று, எருமையையே அனுப்பியுள்ளது’ என, காமராஜர், ரஷ்யா சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமைப்பட்டு பேசினார் கருணாநிதி.
    *”ஐதராபாத் ஸ்டேட் பாங்கிலும், சுவிஸ் வங்கியிலும், பல கோடி ரூபாய், டெபாசிட் போட்டுள்ளார் காமராஜர்’ என, அரசியல், “பண்பாட்டோடு’ம் பறைசாற்றினார் கருணாநிதி.அதற்கு, “அந்த கணக்கோட செக் புக்கை, கருணாநிதி கொண்டு வந்தால், கையெழுத்து போட்டு தருகிறேன்; அவரே எல்லா பணத்தையும் எடுத்துக் கொள்ளட்டும்’ என, நாகரிகத்தோடும், பண்பாட்டோடும் பதிலளித்தார், காலாகாந்தி.இதில் வேடிக்கை என்னவென்றால், காமராஜர் கண் மூடிய போது, அவர் ஜிப்பாவில் வெறும், 100 ரூபாயும், தேனாம்பேட்டை ஸ்டேட் பாங்கில், இரு மாத எம்.பி., சம்பளம், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. இந்த வேதனையிலும், வேடிக்கை என்னவென்றால் பேங்க் பாஸ்புக்கும், செக் புக்கும், சத்தியமூர்த்தி பவனில் தான் இருந்தன.இன்று, “கடந்த கால ஆட்சியின் போது, சுவிஸ் வங்கியில் கணக்கை அதிகரிப்பதில் தான், கருணாநிதி கவனம் செலுத்தினார்’ என்று, கடந்த வாரம், சட்டசபையில் கருணாநிதி மீது கடுங்குற்றஞ்சாட்டினார், விராலிமலை எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர்.முத்தாய்ப்பாக, “அண்டங்காக்கா, எருமை தோலர், காண்டாமிருகத் தோலர், பனை ஏறி, மரமேறி, நாடான், சாணான், நனைச்ச பனை, கட்டைப்பீடி காமராஜர், கோமாளி ராஜா, அறிவிலி, அலி வெறுந் தலைவன்’ என்று, ஒரிஜினல் தென்னாட்டு காந்தியை, 1 சதவீதம் கூட, அரசியல் நாகரிகமோ, பண்பாடோ இல்லாமல், வாய்க்கு வந்தபடி வசைபாடினார் கருணாநிதி.இந்த லட்சணத்தில், “இன்று அரசியல் பண்பாடும் இல்லை, நாகரிகமும் இல்லை’ என, நாக்கிலே வெல்லமாக பேசும் இவரது பேச்சை நம்பிக் கொண்டிருக்க, தமிழக மக்கள் தயாராக இல்லை என்பதை, இவர், எப்போது உணரப் போகிறார்?

    • கருவாடு வித்து காசு சம்பாரிக்கலாம் அதில் தப்பே இல்லை…. அண்ணாச்சிகளின் பிழப்பு விற்பனையில் தான் உள்ளது. ஆனா ஸ்பெக்ரத்தை சுட்டு நாட்டின் தொழில் நுட்ப வளங்களை கொள்ளையடிக்க கூடாது அல்லவா இந்த கருணா? கருணாவே ஒரு மானங்கெட்டவர், அரசியலில் நாகரிகம் என்பதே தெரியாதவர்… நாகரிகம் அற்று பேசும் பிறவிதான் அவர்….

      வினவு தேவையின்றி தன் சக்தியை கருணாவுக்காக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை… குமுதம் எழுதும் எண்ணற்ற விசயங்களில் இதுவும் ஒன்றாக கருதிக்கொள்ள வேண்டியது தான்.

      //இதோ…*”விருதுபட்டியில், கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான், இந்த காமராஜன்’ என்று, ஒன்பது ஆண்டு, பொற்கால ஆட்சி தந்த காமராஜரை அவமானபடுத்தி ஒருமையில் அர்ச்சித்தார், அரசியல் நாகரிகமற்ற கருணாநிதி.//

  17. கம்யுனிச்ம், ஜன நாயகம் என்பதெல்லாம் வெறும் வழிகாட்டு நெறிகள்தான்! அவைகள் எந்த அள்வுக்கு செயல்படுத்தபடுகின்ற்ன என்பதைப் பொருத்தே மக்கள் ஆத்ரவு இருக்கும்! ஜனனாயகம் பேசும் எந்த இயக்கமும் ஜனநாயகத்துடன் நடந்து கொள்கின்ற்னவா? நம்ம ஊருக்கு கட்டை பன்சாயத்து ஜனநாயகம்தான் ! சோஷியலிஷ்ட் நேருவின் வாரிசு கடைசியில் எமெர்ஜென்சி பிரகடனம் செய்து, ஜனநாயக குரலை அடக்க்வில்லையா? (ஆர் எச் எச் சப்போர்ட்டுடன்!) ஏமாந்த ஜனஙகளுக்கு எல்லா இசமும் ஒன்ரறுதான்!

  18. Vinavu,
    Please write more on the way the P.V.R family swindled the Kumudham properties from Chettiyar’s family. Did Cho played any role in it? IF so what? Now he writes in Kumudham which indicates that he is washing their sins and accepts them as the owners.

    Can you do it?
    Scorpio

  19. குமுதம் மாமா மட்டுமல்ல .மைலாப்பூர் மாட்டுகறி மாமாக்களூக்கெல்லாம் மாமா .அக்ரகாரங்களீன் அத்திம்பெர்,

  20. விஸ்வரூபம் பாணியில், இதற்கும் கருத்து சுதந்திர ஆதரவு தெரிவித்து, ரிபோர்ட்டரை எதிர்த்து போராட்டம் நடத்தி பத்திரிக்கையின் ஒரு பிரதியை நெருப்பிட்டு கொழுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய கழக கண்மணிகளை தீவிரவாதிகள் முட்டாள்கள் என்றெல்லாம் ஏன் வினவு எழுதவில்லை? இதில் பெரியாரையும் மணியம்மையும் இழுக்காவிட்டால் அதையும் செய்திருப்பீர்கள். தனக்கு வந்தால் தான் தலைவலியோ?
    பதில் சொல்வீர்களா என்ன?

  21. ‘குமுதத்தின் செயல் கேவலமானது என்பதில் சந்தேகமில்லை.ஆனால்,புரட்சிகர,மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பவர்கள் இத்தகைய அசிங்கங்களைக் கண்டு அருவெருப்புடன் அப்பால் சென்றுவிடுவார்கள்.ஆனால்,”புரட்சிகரமான” வினவு இதற்குள்ளும் மூக்கை நுழைத்து பஞ்சாயத்து செய்து வித்தியாசமான ஒரு புரட்சி செய்திருக்கிறது.முன்பு வேதாந்தி என்பவன் கருணாநிதியின் தலையை வெட்டுவேன் என்று பேசியதற்கும் இவர்கள் தான் ஓடோடிப் போய் வக்காலத்து வாங்கினார்கள்.சேது சமுத்திரத் திட்டத்தில், மீனவர்களுக்கு எதிராகவும் கடல் சூழலியலுக்கு எதிராகவும் கருணாநிதிக்கு ஆதரவாக இவர்கள் குரல் கொடுத்தனர்.பார்ப்பனப் பண்டாரங்களை எதிர்ப்பது என்ற பெயரில் கருணாநிதிக்கு ஆதரவாக நிற்பது எந்தவிதத்திலும் சரியாக இருக்கமுடியாது.ஊரறிந்த ஊழல்வாதிகள்,ஒழுக்கக்கேடர்கள்,அரசியல் பித்தலாட்டக்காரர்களுக்கு வினவோ கினவோ யார் வக்காலத்து வாங்கினாலும் ஊர் சிரிக்கும்.

  22. அப்பாடா! குமுதம்-குஷ்பூ சர்ச்சை முடிந்தது! குஷ்பூ பற்றி, அவதூறாக குறை கூறுபவர்களுக்கு ஒரு செய்தி! தமிழ் நடிகைகளிலேயே சமூக சிந்தனையொடு துணிச்சலாக, அரசியலில் குதித்த அறிவு ஜீவி! கற்பு பற்றி அவரின் கருத்து, பிற்போக்காளர்களால் பிழையாக எதிர்கொள்ளப்பட்டது! கிட்டத்தட்ட பெரியாரும் அதே கருத்தைத்தான் சொன்னார்! கடந்த தேர்தல் காலஙகளில், அ தி மு க வை நன்றாகவே விமர்சித்து பேசினார்! அவரை வடிவெலு உடன் ஒப்பிடாதீர்கள்! அவர் இன்னொரு ஜெயலலிதா ஆக வாய்ப்பு உண்டு! ஆனால் அது தி மு க வினால் அல்ல!

    • சந்தானம், இங்க ஒருத்தர் இன்னோரு கோயில் கட்டுற பரவசத்துல இருக்கார்.. கொஞ்சம் இங்கன வந்து சிபாரிசு பண்ணீங்கன்னா, உங்க தலைமையில நம்ம ரெண்டு பேரும் பூசாரிகளா செட்டில் ஆயிடலாம்..

  23. அரசியல்தந்திரத்தில் மட்டும் கருணாநிதியுடன் போட்டிபோட இன்னும் எவரும் பிறக்கவில்லை

    YOU ARE WRONG

    You forgot MGR.

  24. ஆரம்பத்தில் ஜெயலலிதாவும், இப்படித்தான் அறிவு ஜீவியாக, பெரியாரின் பக்தையாக?, எம் ஜி யாரின் இல்லாத கொள்கையை கஷ்டப்பட்டு பரப்பும் வேலையை செய்ய, தஙகத்தமிழனின் தவப்பயனாய், தமிழினத்தை காக்க அரசியலுக்கு வந்தார்! இன்னொரு புரட்சி தலைவி வந்தால் உஙகளுக்கு என்ன? இதே போல திராவிட இயக்கத்தில் இணைந்தவர்கள், பின்னர் கோடாரி காம்பானதை பார்த்து வருகி றோமே!

Leave a Reply to Kutralingam Murugan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க