privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்யார் இந்து? ஓடும் ரயிலில் பார்ப்பனர்களோடு சண்டை !

யார் இந்து? ஓடும் ரயிலில் பார்ப்பனர்களோடு சண்டை !

-

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 20ம் தேதி உச்சநீதி மன்றத்தில் நடக்கிறது.

இது பெரியாரின் நிறைவேறாத ஆசை. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பார்ப்பனர்கள் இதை சட்ட ரீதியாக தடுத்து வருகிறார்கள். பெரியார் பிறந்த மண் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழகத்திலிருந்து இதை எதிர்த்து எந்த அமைப்பும் வழக்காடவில்லை.

ஒரு பக்கம் தடைகோரி பார்ப்பனர்கள். இன்னொரு பக்கம் பார்ப்பனர்களை பகைத்துக்கொள்ளாமல் வாதிடும் தமிழக அரசு. எதிர்த்தரப்பாக புரட்சிகர அமைப்புகள். இந்த மூன்று பேரைத் தவிர இந்த வழக்கில் வேறு யாரும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. பார்ப்பனர்கள் தரப்பில் பணத்தை அள்ளி இறைக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள். பெரியார் படத்தையும் கோடிகளில் பணத்தையும் வைத்துக் கொண்டிருப்பவர்களோ அமைதியாக இருக்கிறார்கள் ! இந்நிலையில் ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வழக்கு நிதி திரட்டி வருகின்றனர்.

சென்னை மின்சார இரயிலில் ஒரு முழு நாள் செய்யப்பட்ட பிரச்சாரம் மற்றும் நிதிவசூல் அனுபவம் ஒன்றை வாசகர்களுக்காக இங்கு தருகிறோம்.

ஓடுகின்ற மின்சார இரயிலில் தோழர்கள் குழுக்களாக பிரிந்துகொண்டு ஒவ்வொரு பெட்டியாக ஏறி மக்களிடையே வழக்கைப் பற்றி விளக்கி கூறிய பிறகு நிதி கோருவார்கள். பிரச்சாரத்தின் போது மக்களிடையே பேசிய உரையின் சுருக்கம் இது தான்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தேர்தல் பாதை திருடர் பாதை! புரட்சி ஒன்றே மக்கள் விடுதலைப் பாதை! என்கிற முழக்கத்தோடு செயல்பட்டு வரும் புரட்சிகர நக்சல்பாரி அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்திலிருந்து வருகிறோம். வணக்கம்.

இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் என்கிறார்கள், சரி தான், ஆனால் ஒரு மதம் என்கிற வகையில் மதங்கள் பக்தனுக்கு வழங்கக்கூடிய அடிப்படையான வழிபாட்டு உரிமையை இந்து மதம் அனைத்து இந்துக்களுக்கும் வழங்கியிருக்கிறதா என்றால் இல்லை. பக்தன் தனது கடவுளை தொட்டு வணங்கி பூஜிக்கும் உரிமையை இந்து மதம் அனைவருக்கும் வழங்கவில்லை. நீங்கள் கோவில் வாசல்படி வரை தான் போக முடியும், அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, மீறி எடுத்து வைத்தால் அங்கு வன்முறை வெடிக்கும். இன்றுவரை ஆகம விதிகளின்படி அமைந்த கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்களைத் தவிர வேறு எந்த இந்துவும் நுழைய முடியாது. இது தான் இந்து மதம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இது தான் நிலைமை. இதை எதிர்த்து தான் தந்தை பெரியார் 1970-ல் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

உடனே அன்றைக்கு இருந்த தி.மு.க அரசு அனைவரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. பார்ப்பனர்கள் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை வாங்கினார்கள். தமிழக அரசு அதற்கெதிராக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதன்பிறகு கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து 2006 இல் தி.மு.க அரசு அனைவரையும் அர்ச்சகராக்கும் அரசாணையை வெளியிட்டு, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி ஒன்றையும் துவங்கியது. அதில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்க்கான மாணவர்கள் படித்தார்கள். அவர்களில் 206 மாணவர்கள் முறையாக ஆகம விதிகளை கற்று, சமஸ்கிருத வேதங்கள், ஸ்லோகங்களை கற்று தீட்சையும் பெற்று கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருந்த தருணத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் பார்ப்பனர்கள் மறுபடியும் உச்சநீதி மன்றத்தில் நியமனத்திற்கு தடை வாங்கினார்கள்.

இதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? என்னைத் தவிர எவனும் கோவில் கருவறைக்குள் வரக்கூடாது என்கிறார்கள். பொதுவாக சாதியைப் பற்றி பேசினால் பலரும் இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறாங்க என்று கேட்கிறார்கள். இதோ இது தான் ஆதாரம், இது தான் சான்று. இதற்கு பெயர் என்ன? அப்பட்டமான, பச்சையான சாதிவெறி இல்லையா இது? இவர்கள் தான், இந்த பார்ப்பனர்கள் தான் வெறித்தனமாகவும், பார்ப்பன கொழுப்பு கொப்பளிக்கவும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள். கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் இவர்கள் தான் கோவில் கருவறைக்குள் முழு இடஒதுக்கீடும் தமக்கே வேண்டும் என்று ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துக்களில் பார்ப்பனர்கள் வெறும் மூன்று சதவிகிதம் தான். மூன்று சதவிகிதம் உள்ள பார்ப்பன கும்பல் மிச்சமுள்ள தொண்ணூற்று ஏழு சதம் இந்துக்களை, அதாவது பெரும்பான்மையான இந்துக்களை கோவில் கருவறைக்குள் விட மறுப்பது ஏன்? இது தான் மிக முக்கியமான கேள்வி. நீங்கள் இந்தியாவின் ஜனாதிபதியாகலாம், பிரதமர் கூட ஆகிவிடலாம் ஆனால் கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது ! ஏனென்றால் பெரும்பான்மை மக்களை இந்து மதம் சூத்திரன், பஞ்சமன் என்கிறது. சூத்திரன் என்றால் என்ன தெரியுமா? வேசி மக்கள் என்று அர்த்தம். அந்த வேசி மக்கள் சாமியை தொட்டால் சாமி தீட்டாகி பவரை இழந்துவிடும் என்கிறான் பார்ப்பான். அதனால்தான் பிறப்பிலேயே உயர்ந்தவனாகிய என்னைத்தவிர எவனும் உள்ளே வரக்கூடாது என்கிறார்கள்.

இது செருப்பால் அடித்தது போல் இல்லை? இது அவமானமாகவும், அசிங்கமாகவும் இல்லையா? இந்த நாடு வல்லரசு ஆகிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிறார்கள், ஆனால் சாமியை கும்பிடுவதற்குக் கூட இங்கு ஜனநாயகம் இல்லை.

இங்குள்ள கோவில்களில் எல்லாம் ஆகமவிதிப்படி தான் எல்லாம் நடக்கிறதா ? கோவில்களையே லாட்ஜாகவும், டாஸ்மாக் பாராகவும் பயன்படுத்தும் கிரிமினல் சங்கராச்சாரி, தேவநாதன், தில்லை தீட்சிதர்கள் எல்லாம் ஆகமவிதிகளின் படி தான் நடந்து கொள்கிறார்களா?

இது தமிழனுக்கு நேர்ந்த இழிவு மட்டுமல்ல, தமிழுக்கும் நேர்ந்த இழிவு. தமிழனைப் போல தமிழ் மொழியும் கருவறைக்குள் நுழைய முடியாது. தமிழர்கள் வேசி மக்கள் என்றால் அவர்களின் மொழி வேசி மொழி, நீஷ பாஷை என்று கூறி கருவறைக்குள் விட மறுக்கிறது பார்ப்பனியம்.

எனவே யார் யாரெல்லாம் தன்னை இந்து என்று கருதிக்கொள்கிறார்களோ, யார் யாரெல்லாம் தமிழ் என்னுடைய தாய் மொழி என்று கூறுகிறார்களோ அவர்களுடைய பிரச்சினை இது. உங்களுடைய பிரச்சினை இது. ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் நாங்க தான் அத்தாரிட்டின்னு பேசுகின்ற பி.ஜே.பி.யோ இந்து முன்னணியோ அல்லது வேறு எந்த இந்து அமைப்புகளுமோ இந்தப் பிரச்சினையில் தலையிடவில்லை. அவர்கள் அமைதியான முறையில் ஆலையத் தீண்டாமையை அங்கீகரிக்கிறார்கள். நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தான் இந்தப்பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள்.

வருகின்ற இருபதாம் தேதி இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் இறுதி விசாரணைக்கு வருகிறது. பார்ப்பனர்களின் தரப்பில் பராசரன் என்கிற மூத்த வழக்குரைஞர் ஆஜராகிறார். அவருடைய வாதங்களை முறியடிக்க வேண்டுமானால் அவருக்கு இணையான வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டுக்கு எல்லோரும் சாதாரணமாக போய்விட முடியாது. ஒரு வழக்குரைஞரை நியமித்து அவர் ஒரு முறை எழுந்து நின்று வாதாடினாலே சில பல லட்சங்களை எடுத்து வைக்க வேண்டியிருக்கும். பார்ப்பனர்களுக்கு பல லட்சங்களை கொட்டி அழுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் முதலாளிகளிடமோ, கந்து வட்டிக்காரர்களிடமோ, சமூக விரோதிகளிடமோ போய் கையேந்துபவர்கள் அல்ல. மாறாக அனைத்து போராட்டங்களுக்கும், வழக்குகளுக்கும் மக்களையே சார்ந்து நிற்கிறோம். உழைக்கும் மக்கள் வழங்கும் நிதியிலிருந்து தான் எமது போராட்டங்களையும் வழக்குகளையும் நடத்துகிறோம். அந்த வகையில் இந்த வழக்கை நடத்துவதற்கான நிதியை கோரி உங்கள் முன்னால் வந்திருக்கிறோம். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதன் மூலம் சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்ட உங்களையும் எங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள். சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்ட நிதியளித்து ஆதரவு தாருங்கள். நன்றி.

என்று உரையாற்றிய பிறகு தமது பங்கேற்பை உறுதிபடுத்தும் வகையில் மக்கள் நிதியளிப்பார்கள். இந்த நிதிவசூல் பிரச்சாரம் எந்த தடையுமின்றி நடந்துவிடவில்லை. இந்த பிரச்சாரம் மட்டுமல்ல எந்த பிரச்சாரமும் அப்படி நடப்பதில்லை. பல்வேறு இடையூறுகள், தடைகள், சண்டை சச்சரவுகளைக் கடந்து தான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் நிதிவசூல் நடத்தப்படுகிறது. சிறப்பாக இந்த பிரச்சாரம் நேரடியாக இந்து மதத்தின் தீண்டாமையை தாக்கக்கூடியதாக இருப்பதால் வரவேற்பும் எதிர்ப்பும் சேர்ந்தே இருக்கிறது.

இந்து முன்னணி லும்பன்கள், ஆர்.எஸ்.எஸ் இல் இல்லாத ஆர்.எஸ்.எஸ் காரர்கள், பார்ப்பனியத்தை ஆதரிப்பவர்கள், பார்ப்பனர்கள், கருப்பு பார்ப்பனர்கள் என்று பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு வந்தது. இவர்களைத் தவிர பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் விசயத்தை கூர்ந்து கவனித்து மகிழ்ச்சியோடு நிதியளித்தார்கள். பார்ப்பனர்களையும் கருப்பு பார்ப்பனர்களை எதிர்த்து கேள்வி எழுப்பினார்கள்.

ரு பெட்டியில் தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு பார்ப்பனரும் அவரோடு ஒரு கருப்பு பார்ப்பானரும் சேர்ந்து கொண்டு இந்து மதத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சண்டைக்கு வந்தனர்.

“ஏய் நிறுத்துடா மதத்தை பத்தியும், சாதியை பத்தியும் இங்க பேசாதே!” என்றனர்.

தோழர்கள் பதிலளிப்பதற்குள் தரையில் அமர்ந்துகொண்டிருந்த உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் பாய்ந்துகொண்டு வந்தார்

“ஏன் பேசக்கூடாது, அவனுங்க பன்ற அட்டகாசம் தாங்க முடியலய்யா, காது குத்திலிருந்து கல்யாணம் வரைக்கும் எல்லாத்துக்கும் ஐயாயிரம் பத்தாயிரம்னு காசப் புடுங்குறானுங்க, கொள்ளையடிக்கிறானுங்க. அதை பேசக் கூடாதா ? அவங்கள பேசக்கூடாதுன்னு சொல்ல நீ யாருய்யா? தம்பி நீ பேசுப்பா” என்றார். இரண்டு பேரும் கப்சிப் ஆகிவிட்டார்கள். அதோடு அடுத்த ஸ்டேஷனில் இறங்கியும் போய் விட்டனர்.

ன்னொரு பெட்டியில் பேசிக்கொண்டிருந்த போது குழந்தை குட்டிகளோடு வந்திருந்த நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் எழுந்து நின்று ஆவேசமாகக் கத்தத் துவங்கி விட்டார். “இந்து மதத்தை பத்தி நீ எப்படி பேசலாம், வெளிய போடா நாயே, டிரெய்ன விட்டு கீழ இறங்குங்கடா” என்றார். தோழர்கள் பொறுமையாக விளக்கமளித்தனர். இருந்தும் அவர் அடங்கவில்லை.

“சரி நாங்கள் பேசுவதைப் போல நீங்களும் உங்கள் கருத்தை மக்கள் மத்தியில் நின்று பேசுங்கள்” என்றனர். அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. அத்துடன் “தே.பசங்களா, மகனுங்களா” என்றெல்லாம் கெட்ட வார்த்தைகளில் ஏசத்துவங்கிவிட்டார். அதன்பிறகு தோழர்கள் அவரை நையப்புடைத்து விட்டார்கள். அடி உதைகளால் அல்ல வார்த்தைகளால். நாலா பக்கமும் சூழ்ந்துகொண்டு அவரை நோக்கி தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடிப்போனார்.

இதற்கிடையில் அவருடைய வேட்டி வேறு அவிழ்ந்துவிட்டது. வேட்டியை சரி செய்வதா பதிலளிப்பதாக என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார். அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவிட்டு தோழர்கள் அடுத்த ஸ்டேஷனில் இறங்கினர்.

தொண்ணூற்று ஒன்பது சதம் பார்ப்பனர்கள் வாயையே திறக்கவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர்.

ரு பெட்டியில் ஆறு ஏழு பார்ப்பனர்கள் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களில் நீட்டாக பேண்ட் ஷ்ர்ட் அனிந்து உச்சிக்குடுமியுடன் அமர்ந்துகொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பார்ப்பனர் துண்டறிக்கையை கேட்டு வாங்கி படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது தான் டாஸ்மாக்கிலிருந்து வந்திருக்கிறார் என்பது அவரைக் கடந்து சென்ற போது நன்றாக தெரிந்தது.

பேசிக்கொண்டிருந்த தோழர் ’பார்ப்பனக் கும்பல்’ என்ற வார்த்தையை உச்சரித்ததும் “டேய்” என்றார் லும்பன் பார்ப்பனர். அதை சட்டை செய்யாமல் தோழர் தொடரவே அடுத்ததாக “வேண்டாம்… வேண்டாம்..” என்று இழுத்தார். உடனே அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு தோழர் “என்ன வேண்டாம்.. என்ன..” என்று கேட்டுக்கொண்டே அருகில் நெருங்கியதும் உச்சிக்குடுமி பார்ப்பனர் உதிரிப் பார்ப்பனரை பார்த்து ’எதுக்கு சும்மா டென்ஷன் ஆகிறேள்’ என்றார் ஏதோ ஒரு அர்த்தத்துடன். அத்துடன்டு லும்பன் பார்ப்பனர் நிதானமாக பேச முடியாத நிலையிலும் இருந்ததால் வாயை மூடிக்கொண்டார்.

ன்னொரு கம்பார்ட்மெண்டில் உலகறிந்த பொறுக்கியான நித்தியானந்தாவைப் பற்றி பேசியதற்கு ஒருவர் சண்டைக்கு வந்துவிட்டார். தமிழகத்தில் நித்திக்கெல்லாம் ஆதரவாளர்கள் இருக்கிறார்களே என்று அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு தான் “அந்தாள் நித்தியோட சாதிக்காரன் தோழர் அதனால தான் அவனுக்கு கோபம் வருது” என்றார் ஒரு தோழர்.

வேறொரு பெட்டியில் பேசி முடித்ததும் “சங்கராச்சாரியை பற்றி தப்பா பேசாதீங்க” என்றார் ஒரு பார்ப்பனர். ஏன் என்பதில் துவங்கி பல்வேறு கேள்வி பதில் மறுப்பு என்று போய்க்கொண்டிருந்த விவாதத்தில், “சரி ஜெயேந்திரரை நீங்க மகா பெரியவான்னு சொல்றீங்க அந்த மகா பெரியவா இப்போ நித்தியானந்தாங்கிற மகா பொறுக்கியை பார்த்திருக்கிறாரே அதுக்கு என்ன சொல்றீங்க” என்றதும், “அது அவரோட பர்ஸ்னல்(!) விஷயம்” என்றார். கடைசியில் “நான் என்ன சொல்ல வர்றேன்னா ஜெயேந்திரரை நீங்கள் குற்றவாளின்னு சொல்ல முடியாது ஏன்னா வழக்கு நீதிமன்றத்தில் நடந்துட்ருக்கு அவர் குற்றவாளியா இல்லையான்னு நீதிமன்றம் தான் சொல்லணும். வேணும்னா பொறுக்கின்னு சொல்லிக்கிங்க “என்றார். இவர் நூறு ரூபாய் நன்கொடையும் போட்டார். இது என்ன மாதிரி கேஸ் என்பது புரியவில்லையே என்று எண்ணிக்கொண்டே அடுத்தப் பெட்டிக்கு ஓடினோம்.

தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டிருந்த போதே மூலையில் அமர்ந்திருந்த ஒருவர் விதம் விதமாக முகத்தை சுழித்துக்கொண்டிருந்தார். பிறகு நிதி கோரி உண்டியலை ஏந்திச் சென்ற போதும் “ச்சீ.. போ அந்தப்பக்கம்” என்பதைப் போல நிதி தர மறுத்து வேகமாக தலையை ஆட்டினார். அவ்வாறு தலையை ஆட்டியதில் ‘நான் மட்டுமல்ல நீங்களும் போடாதீர்கள்’ என்று மற்றவர்களுக்கும் சேர்த்து ஆட்டியதை போல இருந்தது. அந்த பெட்டியில் பேசி முடித்ததும் மதிய உணவு இடைவேளைக்காக இறங்க வேண்டும் என்பதால் அதே பெட்டியிலுள்ள இருக்கைகளில் அமர்ந்தோம். ஒரு தோழர் மட்டும் அந்த நபரை ஆரம்பத்திலிருந்தே கவனித்துக்கொண்டே இருந்தார்.
தமிழ்நாடு பார்ப்பனர்
அந்த நபருக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் நிதியளித்திருந்தனர். துண்டறிக்கையை அனைவரும் கூட்டாக சேர்ந்து வாசித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் தான் அந்த முக்கியஸ்தர் அமர்ந்துகொண்டிருந்தார். அவர் அந்த மாணவர்களிடம் “இதெல்லாம் என்னப்பா முட்டாள்தனமா இருக்கு, எல்லோரும் அர்ச்சகராகனும்னு பேசுறாங்களே இதெல்லாம் தேவையா? தேவையில்லாத வேலைப்பா” இது என்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்ததை அந்த தோழர் பார்த்து விட்டார்.

உடனே அனைத்து தோழர்களும் அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு மாறினர். “உங்கள் பிரச்சினையை எங்ககிட்ட சொல்லுங்க சார்” என்றதும் அவர் அதிர்ந்து போனார். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் தோழர்கள் இறங்காமல் அதே பெட்டியில் அமர்ந்துவிட்டதை அவர் கவனிக்கவில்லை, இறங்கிப் போய்விட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு தான் மாணவர்களிடம் தனது பார்ப்பன ஆதரவுப் பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார்.

இருந்தாலும் சமாளித்துக்கொண்டு “எதுக்கு எல்லோரும் அர்ர்சகராகனும்னு சொல்றீங்க” என்றார். “ஆகம விதிப்படி அமைந்த இந்துக்கோவில்களில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் கருவறைக்குள் நுழைய முடியாதுங்க…” என்று விளக்கிக்கொண்டிருக்கும் போதே, “ஏன் நான் நுழைஞ்சிருக்கேனே” என்றார். “நீங்க ஏதாவது ஒரு கருப்பசாமி கோவில்ல நுழைஞ்சிருக்கலாம் சிறீரங்கம், திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி போன்ற கோவில்களில் நுழைய முடியாது, ஏன் தெரியுமா? ஏன்னா அது தீட்டு” என்று விளக்கினோம்.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல காலம்காலமா இப்படித்தான் இருக்கு, இந்து மதம் எல்லோருக்கும் சொந்தமானது தான் நீங்க தான் பர்ப்பனர்களை மட்டுமே வேணும்னு திட்றீங்க அந்த கோவில் இல்லைன்னா வேற கோவிலுக்கு போங்க அங்கே ஏன் போறீங்க” என்றார்.

“வேற கோவிலுக்கு போறதெல்லாம் இருக்கட்டுங்க அந்த கோவிலுக்குள்ள ஏன் விடமாட்டேங்கிறாங்கிறதை முதல்ல பேசுங்க. இடஒதுக்கீட்டை எதிர்க்கிற இந்த பார்ப்பனர்கள் தான் கருவறைக்குள்ள நூறு சதவீதம் இடத்தையும் ஆக்கிரமிச்சிக்கிட்டு மத்தவங்களை விடமாட்டேங்கிறாங்க” என்றதும்.

“இடஒதுக்கீடே குடுக்கக்கூடாதுங்கிறேன் எதுக்கு இடஒதுக்கீடு ? இடஒதுக்கீடு கொடுக்கிறதால தான் திறமை இல்லாம போகுது” என்றார்.

“சார் நீங்க பாப்பானுக்காகவும் இந்துமதத்துக்காகவும் ரொம்ப வருத்தப்படுறீங்க. இந்து மதத்துக்காக இவ்வளவு பேசுறீங்களே பகவத்கீதையோட பதினாறாவது அத்யாயத்துல கண்ணன் என்ன சொல்றான்னு தெரியுமா?” என்றதும் திரு திருவென்று முழித்தார். அருகில் அமர்ந்திருந்த மாணவர்களையும் பார்த்துக்கொண்டார். மாணவர்கள் நக்கலாக பார்த்துக்கொண்டிருந்தனர். கடைசியில் “தெரியல நீங்களே சொல்லுங்க” என்றார்.

“சரி, மனுஸ்மிருதியில் பார்ப்பனர்களைத் தவிர உள்ள பெரும்பான்மை மக்களை என்னன்னு எழுதி வச்சிருக்கான்னு தெரியுமா?” என்றோம் அதற்கும் “தெரியாது நீங்களே சொல்லுங்க” என்றார். இதற்கிடையில் அனைவரும் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. பிளாட்பாரத்தில் இறங்கியும் அவருடைய பார்ப்பன அடிவருடித்தனத்தை அம்பலப்படுத்திக்கொண்டிருந்தோம். அந்த மாணவர்கள் பிளாட்பாரத்தில் இறங்கிய பிறகும் அவரை வடிவேலைப் பார்ப்பதைப் போல பார்ப்பதை விடவில்லை. மாணவர்களுக்கு புத்திமதி சொல்லப்போய் அவர்கள் காரித்துப்பாத குறையாக அந்த நபர் அனைவரின் முன்பாகவும் அவமானப்பட்டுப்போனார்.

இதைப்போன்று இன்னும் பல்வேறு சம்பவங்களும் இந்த நிதிவசூல் அனுபவத்தில் கிடைத்தன. அனைத்தையும் குறிப்பிட்டால் நான்கு பதிவுகளாக விரியும். பார்ப்பனியத்தை எதிர்த்து செய்யப்பட்ட இந்த பிரச்சாரத்தில் பொதுவாக பெரும்பான்மையாக உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கும், மாணவர்கள் மத்தியில் குறிப்பிடும்படியும் வரவேற்பு இருந்தது. இவர்கள் அனைவரும் நிதியளித்து ஆதரவளித்தனர்.

பிரச்சாரத்தின் வீச்சாலும் அதன் நியாயத்தாலும் பார்ப்பனர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கப்சிப் ஆகியிருந்தானர். பார்ப்பனமயமாக்கப்பட்ட பலர் பார்ப்பனர்களாக இல்லாவிட்டாலும் பார்ப்பனர்களுக்காக பரிந்துபேசினார்கள். பார்ப்பனர்களை விட இத்தைகைய கருப்புப் பார்ப்பனர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவர்களை கருத்து ரீதியாக வீழ்த்தாவிட்டால்பெரியார் பிறந்த மண் என்று இனியும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது.

  1. எப்பப் பாத்தாலும் பார்ப்பனர்களோடு தான் சண்டையா…கொஞ்சமாவது பலசாலிகளோடு மோதுங்களேன்…

    • இந்தியாவில் உள்ள பல லட்சம் கோடி மதிப்புள்ள கோவில் சொத்துகளை நிர்வகிப்போர் பலமற்றவர்கள் என்று குறிப்பிடுகிறீர்களா பையா? தெளிவுபடுத்துங்களேன்.

      • தமிழகத்தில் பெரிய கோவில்கள் பெரும்பாலும் அறநிலையத்துறை நிர்வாகத்தில் இருக்கின்றன என்பது என் எண்ணம். தவறிருந்தால் திருத்தவும். இந்த துறை வசம் உள்ள கோவில்கள் மொத்தம் சுமார் 38000. இவற்றை ஆண்டு வருமான அடிப்படையில் இப்படி வகைப்படுத்தலாம்.

        ரூபாய் 10000 மற்றும் கீழே : 34700
        ருபாய் 10000 இருந்து 2 லட்சம் வரை : 3300
        2 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை: 500
        10 லட்சத்திற்கு மேல் : 180

        10000 ரூபாய் ஆண்டு வருமானத்துக்கும் கீழே வறுமையில் உள்ள கோவில்களில் எந்த ஜாதியினர் அர்ச்சகர்களாக உள்ளனர் என்பது போன்ற கணக்கு இணையத்தில் கிடைக்கவில்லை. நீங்கள் சொல்வது போல அனைத்து கோவில்களின் மொத்த சொத்து கிட்டத்தட்ட 5 லட்சம் ஏக்கர்கள். இவை பெரும்பாலும் கோவில்களுக்கும் பயன்படாமல், பொதுமக்களுக்கும் பயன்படாமல் தனியார் குத்தகைதாரர்கள் ஆட்டையை போட்டுள்ளனர். மொத்த குத்தகைதாரர்களின் எண்ணிக்கை சுமார் 1.25 லட்சம். இவர்கள் என்னென்ன ஜாதியினர் என்பது போன்ற கணக்கும் இணையத்தில் கிடைக்கவில்லை. உங்களுக்கு இன்னும் அதிக விஷயம் தெரியும் என நினைக்கிறேன். பகிர்ந்து கொள்ளவும்.

        (நன்றி: http://www.tnhrce.org)

        • வெங்கடேசன் ,

          கோயிலில் உள்ள தங்க வெள்ளி நகைகள் , கோயில் நிலங்கள் , நிதிகள் …அவற்றையெல்லாம் சேர்த்தால் லச்சம் கோடி வராதா …..

          நன்றி

        • நாண்பர் வெங்கடேசன் ,

          மன்னிக்கவும் ….
          தங்கள் பின்னூட்டம் முழுவதுமாக படிக்காமல் மறுமொழி இட்டுவிட்டேன்

          நன்றி!!

      • When a person converts to Christianity or Islam, that person can become Pastor/Father or Maula. Second, everyone has same status inside Church or Mosque. Don’t bring in caste in Tamil Churches, that is purely due to their hindu roots. Not what Bible teaches. There is no ritual like poonool that applies only for a group of people of same faith/denomination. Everyone is given equal opportunity in terms of Heaven and everyone is judged with same law (at least within the religion). In your religion, only brahmans can go to heaven and brahmans have special treatment in law. Isn’t that funny?

        • are you here to show your ignorance?

          Your fixed religions are different from ours,Here anybody can build their own temples and even their own gods,can they do that in Christianity?

          Can someone contradict the new testament,people can do that here contradicting any book written before,

          Caste/Race/Region all these things exist in all religions and atheists throughout the world,don’t try to sell illusions here.

          Everyone in Hinduism can wear the poonal and do everything that the Brahmins do,nobody is going to stop them from doing so.

          People don’t do it out of their own preference.

          And who gave you this joke about heaven/hell,

          There is no heaven/hell concept originally in Hinduism and only Karma exists where whatever good/bad you do gets back to you in this life or later to your kids/grand kids and so on.

          what special treatment do Brahmans have in law?

          reservation to work at a temple getting meager salary and peanut benefits?

          wow,how amazing is this,some great treatment this.

          • @hari,

            //Here anybody can build their own temples and even their own gods,can they do that in Christianity?//

            Don’t you know new prophets and apostles building their new churches everyday? I don’t see that progressive but I see them counter-productive.

            //Caste/Race/Region all these things exist in all religions and atheists throughout the world,don’t try to sell illusions here.//

            thambi, un religion-than illusion create pannuthu! I can name African popes/saints/cardinals. Can you name a shankaracharya born in sudhra household?

            //And who gave you this joke about heaven/hell,

            There is no heaven/hell concept originally in Hinduism and only Karma exists where whatever good/bad you do gets back to you in this life or later to your kids/grand kids and so on.//

            oho… apdiya! Ramayanathula irunthu ithai patri kurippu eduthu kambicha enna pannuva?
            http://en.wikipedia.org/wiki/Shambuka#Story
            I wish to attain the Celestial Region – apdina enna?
            By thy grace, this Shudra will not be able to attain heaven! – apdina enna?

            //what special treatment do Brahmans have in law?//
            I am not talking about Indian law written by Dr. B. R. Ambedkar. I am talking about laws of your religion. Want all that Manu’s crap?

            //reservation to work at a temple getting meager salary and peanut benefits?

            wow,how amazing is this,some great treatment this.//
            Approm ethukkupa antha peanutkaga kashtapadanum? ellarum IIT, NASA-nu settle agattumey? itha paavam kaala kaalama saakadai alli, kuppai alli pozhaikara elaigaluku vittutharalamey?

            • Celestial region doesn’t mean heaven,it means escape from rebirth.

              Even in the previous laws,what special powers did they get,that you talk about?

              Most of the wealth of the brahmins came during the times they served in the courts of many Kings.

              They got brahmadeyam,land and cows.

              But in return they have to follow strict rigid rules,no brahmin got any respect if he violated the behaviour code he has and whenever they did,they faced hell and went into decadence.

              Shambukan Vadam is a very controversial chapter in Ramayanam,but Ram is not supposed to be a perfect human being,he is someone who strives to be perfect and tries to make the correct choice at every situation.

              A shudra cannot read the vedas/do tapas unless he has learnt it properly from a guru,even a brahmin cant do that.

              But does he deserve to die for this,well i think in those times the price for disobeying a rule is death.

              And regarding Ram killing him,he is admired for following the rules to the hilt,if the rules are a problem,it is still not Ram’s fault.

              And the gurukkals at the temple have been serving those temples for centuries and it is those guys who protected the idols during raids by Malik Kafur,staying in jungles and underground and they deserve to continue as the priests.

              Atheists & Non Hindus and even Hindus of different movements have no right to interfere in the birth right of this community.

              Shankaracharyas by rule are a smartha mutt,even Vaishnava Mutts are different,there are many other mutts like jain mutts,saiva pillaimar mutt,In kerala u have Nairs mutt,ezhavas have narayana guru mutt etc etc.

              I wont mind anyone being a priest but he has to undergo rigorous training by the priests themselves and have zero affiliation with the government.

              I dont trust the government in anything.

              • //By thy grace, this Shudra will not be able to attain heaven! – apdina enna?//
                You safely ignored this?!?!

                //Even in the previous laws,what special powers did they get,that you talk about?//
                Haven’t you read Manu?

                //And the gurukkals at the temple have been serving those temples for centuries and it is those guys who protected the idols during raids by Malik Kafur,staying in jungles and underground and they deserve to continue as the priests.

                Atheists & Non Hindus and even Hindus of different movements have no right to interfere in the birth right of this community.//

                Funny!

                //I wont mind anyone being a priest but he has to undergo rigorous training by the priests themselves and have zero affiliation with the government.//
                You won’t mind but they mind!!!

                • Dude,it is an English translation of a sanskrit verse,obviously there ll be a great loss in translation.

                  I said before,the law of the land is that so and so people cannot reach out for xyz things.

                  Let me put it in simple terms,fundamentally the fact the birth makes every difference and the household you belong to determines your destiny and not your own deeds,

                  this is the problem with most people.

                  Understandably so,But then if we are going to make all kids new kids then we should also give off our property and wealth to the government and not to the kids.

                  So,if other varnas kids get their parents properties exclusively,the brahmin kids also deserve to get their parent’s wisdom exclusively.

  2. cha,naan orrula irukkum pothu bussila,trainla ellam indha maadhiri prachaaram pannaliye,

    adhuvum andha bhagavad gita matter en kitta kettirundha oru vivaadham vechu prachanaya solave panni irukkalam.

    paarpanar thanimai paduthapatuttangala?

    yaaru indha veeti boysnnu oru timepassukku paathu irupaanga.

    • இதன் தமிழாக்கம் : ஆம்பள இல்லாத வூட்டுல வந்து சவுண்டு விட்டுப் போயிருக்கீங்களாடா… இப்போ காட்டுங்கடா உங்க வீரத்தை.

    • //cha,naan orrula irukkum pothu bussila,trainla ellam indha maadhiri prachaaram pannaliye,//

      இங்கு இருக்கும் பார்ப்பனர்களுக்கு அறிவு கொஞ்சம்கூட இல்லை, ஒரே அறிவாளியான அரிகுமாரு! ஊர விட்டு ஓடிருச்சு அப்படியா?

      /timepassukku paathu irupaanga./

      சாதிவெறியன் அரிகுமாரு முதலில் மரியாதையா பேச தெரிந்துகொண்டு பேசு

        • /mariyaadhai ellam kettu vaanga mudiyathu/koodathu/

          இந்த சின்ன விசியத்தை புரிய வைக்கத்தான் இவ்வளவுப் போராட்டம்.

          எல்லோரும் அறிவு /அறிவியல் ரீதியாக வளர்ந்திருந்தால் இப்படி அற்பத்தனமான விசியத்திற்கு இப்படியெல்லாம் போராடவேண்டியிருக்க வேளை இருந்திருக்காது.

  3. kadaisi varaikkum chapter 16a pathi sollaveilla,

    idhu,enakku IGya nall theriyum rangeu comedya irukku,

    basically,avaru ketta kelvikku indha vetti pasanga badhile sollala,aana edhir kelvi kettu comedy panraanunga,

    16th chapter padikkamale avarukku gnanam irukku,aana padichu thappa purinjukitta komalikku ellam students fans vera.

    hayyo,hayyo.

  4. சாப்டர் 16 ஐப் பத்தி வினவும் சொல்ல மாட்டாங்க.. நம்ம ஹரிகுமாரும் சொல்ல மாட்டார். அப்படி அதுல என்னதான் இருக்கு!

    • நல்லா கேட்டீங்க ரிஷி. வினவு சொல்லுவாரான்னு தெரியல. ஹரி நமக்கெல்லாம் புரியற மாதிரி சொல்லப்போறதும் இல்ல.

    • நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் பகவத் கீதை (4:13)
      16 வது அத்யாயத்திலும் இந்த குப்பை தான் இருக்கப்போகிறது.
      பகவத் கீதையே ஒழித்துக்கட்டப்பட வேண்டிய ஒரு குப்பை.

    • எப்படி சந்தானம் இப்படி!! நீங்க சொல்லி சரியா பதினெட்டாவது நிமிடத்தில மிகச் சரியா.. புரியாத மாதிரியே சொல்லிட்டாரு! நீங்க ஒரு தீர்க்கதரிசி!

      ஹரிகுமார்,
      ஓடுற டிரெயின்ல இப்படி லேப்டாப் ஓபன் பண்ணி நெட் ப்ரௌஸ் பண்ணி இந்த லிங்கைத்தான் காமிப்பீங்களா? அதுல அப்படி என்ன இருக்குன்னு உங்களுடைய கருத்தாக்கத்தை, பொழிப்புரையைச் சொல்லுங்க.

  5. சந்தானம் & ரிஷி,

    ஹரிகுமார்கிட்ட பகவத்கீதை பொழிப்புரை கேட்பது இருக்கட்டும்..

    //சூத்திரன் என்றால் என்ன தெரியுமா? வேசி மக்கள் என்று அர்த்தம். //

    இந்த வியாக்கியானத்தை எங்கேருந்து பிடிச்சாங்கன்னு வினவுகிட்ட கரீக்ட்டா, தெளிவா கேட்டுச் சொல்லுங்க..

  6. // உங்களுடைய கருத்தாக்கத்தை, பொழிப்புரையைச் சொல்லுங்க.//

    ம்கூம். அப்ப மட்டும் புரிஞ்சிருமாக்கும்

  7. // பிரச்சாரத்தின் வீச்சாலும் அதன் நியாயத்தாலும் பார்ப்பனர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கப்சிப் ஆகியிருந்தானர். //

    100க்கு 3 பார்ப்பனர்கள், நக்சல்பாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்களை எதிர்க்க முடியாது என்பதால்தானே பஸ்,ரயில் என்று ஏறி வாய்க்கு வந்தபடி பேசமுடிகிறது..

    // பார்ப்பனமயமாக்கப்பட்ட பலர் பார்ப்பனர்களாக இல்லாவிட்டாலும் பார்ப்பனர்களுக்காக பரிந்துபேசினார்கள். பார்ப்பனர்களை விட இத்தைகைய கருப்புப் பார்ப்பனர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவர்களை கருத்து ரீதியாக வீழ்த்தாவிட்டால்பெரியார் பிறந்த மண் என்று இனியும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது.//

    பெரியார் வாழ்ந்து கொண்டிருந்த மண்ணிலேயே ‘கருப்பு பார்ப்பனர்களை’ கருத்து ரீதியாக வீழ்த்தமுடியவில்லை.. தவிர, பெரியார் பிறந்ததால் புனிதமடைந்த மண், அவர் பேசிய பேச்சுக்களால் மறுபடியும் சாதாரணமான மண்ணாகிவிட்டது..

    • தவிர, பெரியார் பிறந்ததால் புனிதமடைந்த மண்///.
      .
      யார் பெரியார்? அந்த செலக்டிவ் நாத்திகனா?
      பெரியாரின் பகுத்தறிவு கொள்ளுகைகளை சிறிது பார்ப்போமா?

      23-08-1931 ‘குடியரசு’ இதழில் கூறுகிறார்:-

      புத்தர், கிறிஸ்த்து, மகமது நபி ஆகியோர்கள் சீர்திருத்தகாரர்களாயத் தோன்றினார்கள்… மதங்கள் ஒழிந்த பிறகு தான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும் என்பது அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன்.

      21-02-1935 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-

      ‘‘தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது.
      … பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றப் படிப்பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம் பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்துவ மதத்தையும் ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம்.’’

      ******************************
      என்னமா சப்ளா கட்டை அடித்திருக்கிறார்?புல்லரிக்குது..இதுதான் நாத்திகமா?இதுதான் பகுத்தறிவா?

  8. ஆளுனர்களில் 30 பேர் அதில் பிராமணர்கள் 13 பேர்
    உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர் அதில் பிராமணர்கள் 9 பேர்
    உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர் அதில் பிராமணர்கள் 166 பேர்
    வெளிநாட்டு தூதர்கள் 140 பேர் அதில் பிராமணர்கள் 58 பேர்
    பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர் அதில் பிராமணர்கள் 50 பேர்
    மாவட்ட நீதிபதிகள் 438 பேர் அதில் பிராமணர்கள் 250 பேர்
    கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர் அதில் பிராமணர்கள் 2376 பேர்
    பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர் அதில் பிராமணர்கள் 190 பேர்
    ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர் அதில் பிராமணர்கள் 89 பேர்
    -குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )
    மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள் இடஒத்துக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ? இடஒத்துக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர் என இப்போது புரிகிறதா ?

    நன்றி- Rajesh Deena facebook member.

    • சரி அதற்காக நீங்கள் தெருவில் இரங்கி போராடுங்கள்..அதை விட்டுவிட்டு ஓசி இணைய இணைப்பில் கீபோர்டு தேய வசைபாடி கொண்டிருந்தால் எல்லாம் மாறிவிடுமா என்ன?

    • நில உரிமையும் , தொழில் உரிமையும் மறுக்கப்பட்டது. உன் பாட்டன் சொத்துகளை அனுபவிக்கும் நீயும் ஒரு குற்றவாளியே ! இதில் நல்லவன் போல பிராமணர்களை குறை கூறி தப்பிக்க பார்க்கிறாய் ?

      எத்துனை சதவீத நிலங்கள் ஆதிக்க சாதிகளிடம் இருக்கிறது , அதில் எவ்வளவு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு உள்ளது . நீங்கள் எவ்வளவு நிலத்தை விட்டு கொடுத்து இருகிறீர்கள்

    • //கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர் அதில் பிராமணர்கள் 2376 பேர்//

      What about 50% reservation? Must have got this one wrong. Others are seemingly true.

      • நான் ஒரு ப்ராமனன். ஆனால், என் கூடப் படித்த மாணவர்களுடைய சாதி எதுவும் எனக்குத் தெரியாது. தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இருந்தது இல்லை. ஆனால், என்னைத் தவிர, கதிர் நிலவன் போன்ற மற்ற எல்லோரும், இதைக் கூர்ந்து கவனிக்கின்றனர் போலும்…!!!திருமணத்தைத் தவிர, மற்ற எதற்கும் இன்றைய ப்ராமனன் சாதி பார்ப்பதில்லை…(என்பது என் கருத்து)

  9. படிக்கும் பொழுதே தெரிகிறது நல்ல கற்பனை என்று…..எதாவது உபயோகமாக எழுதுங்கள். வினவில் சில கட்டிரைகள் மிக நன்றாக இருக்கிறது, சில மொக்கையாக இருக்கிறது….இதுவும் ஒரு மொக்கை கட்டுரை.

  10. யார் உண்மையான முஸ்லிம் ஷியாவா சன்னியா?அப்படிங்குற சண்டையில் தினம் நூறு பேரு சாகுறான்…அது பற்றி வினவு எழுதாது..எவனோ ரயிலில் போடும் சண்டைதான் நாட்டுக்கு ரொம்ப முக்கியமோ?

    • சகோதரர் கனவு அவர்களே நீங்கள் இப்போது விவாதித்து கொண்டு இருப்பது பார்ப்பனர்கள் பற்றியது. ஆனால் இதில் ஏன் முஸ்லிம்களை பற்றி பேசுகிறீர்கள். வினவு அணைத்து மதங்களை பற்றியும் விமர்சனம் செய்யும் ஒரு இணையத்தளம் . எனவா அவர்கள் கூறுவது உங்கள் மதத்திற்கோ அல்லது உங்கள் கொள்கைக்கோ மாறாக தவறாக கூறியிருந்தால் அல்லது வினவு கூறிய தகவல் தவறாக இருந்தால் நீங்கள் வினாவை விமர்சிக்கலாம். அதை விட்டு விட்டு முஸ்லிம்களை பற்றி ஒன்னும் வரவில்லையே என்று நீங்கள் கூறுவது இஸ்லாமியர்களை நீங்கள் விரோத போக்குடன் தன் எண்ணுகிறீர்கள் என்று தெரிகிறது . பிறகு இங்கு விவாதித்து கொண்டு இருப்பவர்கள் மதங்களை பின்பற்றுபவர்களாகவும் , மதநம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள் . இவர்கள் இங்கு விவாதிப்பதற்கு காரணம் மதங்களை கெடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அல்ல மாறாக மதங்களில் உள்ள ஏற்ற தாழ்வுகளை மக்களுக்கு புரிய வைபதர்க்கே . அதில் அவர்கள் கூறும் கருத்து உங்கள் மதத்திற்கு மாற்றமாக இருந்தால் அதை சுட்டிக்காட்டி எங்கள் மத நூல்களில் இவ்வாறு இல்லை நீங்கள் அதை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று கண்டியுங்கள் . அதை விடுத்து மற்ற மதங்களை பற்றி விமர்சிக்கவில்லையே என்று ஆதங்கபடாதீர்கள்.
      குறிப்பாக : இந்து மத சாதி முறையும் அதன் ஆதார நூலாகிய இன்றும் கூட உயர் நீதி , உச்ச நீதி மன்றங்களின் தீர்ப்புகளுக்கு முக்கிய அடிப்படையாக உள்ளன. இந்த மனுஸ்மிருதி இல் பிராமணர்களை மட்டும் உயர்ந்த அந்தஸ்தில் வைக்க வேண்டும் மற்றவர்கள் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறுகிறது .குறிப்பாக சிலவற்றை நான் எடுதுகாட்டுகிறேன் .
      1.முதலில் சாட்சிகளை விசாரிப்பது பற்றி:

      8.88 பிராமணனிடத்தில் ‘கூறுக’ என்றும் , ஷத்த்ரியனிடத்தில் ‘உண்மையை கூறு ‘ என்றும் வைசியநிடத்தில் அவனுடைய பொன் ,தானியங்கள் மேல் ஆணையிட்டு கூறு என்றும் , சூட்திரனாஇன் தளி மீது ஆணையிட்டு , பொய் கூறினால் வருகேடுகளை கூறி அட்ச்சுரித்தி கூறுக என்றும் பிரமாணம் செய்க .

      2.மனு பொய்சாட்சி கூறுவதை பற்றி கூறியதாவது .

      8.123 ஷத்ரியர்கள் முதலான மூவகை கீழ் வருணத்தினர் பொய்சாட்சி கூறினால் அரசன் முதலில் அபராதம் விதித்து விட்டுப் பிறகு அவர்களை நாடுகடத்த வேண்டும்,ஆனால் பிராமனனாஇன் நாடுகடத்தல் மட்டுமே செய்ய வேண்டும் .இதிலும் மனு ஒரு விதி விழாக்கு வைத்துள்ளார் .
      8.112 பெண்களிடம் களியாட்டம் தின் பொதும் திருமண ஏற்பாடு தொடர்பாகவும் பசு தீவனதையோ பலத்தையோ தின்றுவிட்டது பற்றியும் யாகதிர்க்கான சமிதைகளை எடுத்து விட்டாது பற்றியும் பிராமணரை காப்பாட்டுவதர்க்காக வாக்குறிதி அளித்தது பற்றியும் பொய்சாட்சி சொல்வது பெரும் பாவம் அன்று ”
      இவ்வாறு மனு பிராமணர்களின் அடிவருடியாக இருந்துள்ளார் . இது மனுவில் உள்ள ஒரு சில தான் .இன்னும் மனுவில் பல உள்ளன . எனவே வினவுகூறிய கருத்து உங்கள் மதத்தில் இல்லை என்று வாதிடுங்கள் பிறகு வினவுவை நாம் விமர்சிக்கலாம் .

      • // இந்த மனுஸ்மிருதி இல் பிராமணர்களை மட்டும் உயர்ந்த அந்தஸ்தில் வைக்க வேண்டும் மற்றவர்கள் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறுகிறது . //

        அப்துல்ரகுமான் பாய்,

        இன்று சிவில்/குற்ற நடைமுறைச் சட்டங்களில் பிராமணர்களுக்கு என்று எந்த சலுகையும் இல்லை.. அர்ச்சக உரிமைகூட, ஆகமங்கள் Vs அரசியல் சட்ட உரிமைகள் என்ற வழக்கில் நிலுவையில் இருக்கிறது.. இஸ்லாமிய சிவில் சட்டங்கள் Vs அரசியல் சட்ட உரிமைகள் வழக்கு எதுவும் நீதிமன்றங்களுக்கு வந்தால் அரசியல் சட்டம்தான் முஸ்லீம் சட்டங்களுக்கு ஏற்றவாறு மாற்றப்படும்.. மனு போனாலும் மார்க்கம் நிலைக்கும்..?!

        • அம்பி உங்களிடம் சில கேள்விகள் அதற்க்கு சரியான பதில் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறன்
          1. கோவிலில் பிராமணர்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டுமா ?
          2. பிராமணர்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும் என்று இல்லை என்றல் பிறகு எதற்காக மற்ற அமைப்பினர் பூஜை செய்வதற்கு இவ்வளவு எதிர்ப்பு இவ்வளவு கஷ்ட்டம் இவ்வளவு இடஞ்சல்கள்?
          3. மனுவில் பிராமணர்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும் என்று உள்ளது ? அதை பற்றி உங்களுடைய கருத்து ?
          4. கடைசியாக ஒருகேள்வி உங்கள் மத வேதங்களில் பிராமணர்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்று உள்ளதா ? மனுவைதவிர .

          • அப்துல்ரகுமான் பாய்,

            // 1. கோவிலில் பிராமணர்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டுமா ? //

            இல்லை.. நீங்கள் கூட ஒரு கோவில் கட்டி பக்தியுடன் சைவ/வைணவ முறைப்படி பூஜை செய்யலாம்..

            // 2. பிராமணர்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும் என்று இல்லை என்றல் பிறகு எதற்காக மற்ற அமைப்பினர் பூஜை செய்வதற்கு இவ்வளவு எதிர்ப்பு இவ்வளவு கஷ்ட்டம் இவ்வளவு இடஞ்சல்கள்? //

            சைவ, வைணவ ஆகம,சம்பிரதாயங்களை பின்பற்றி பூஜை நடைபெறும் கோவில்களில் இதுவரை பிராமணர்களுக்கே பூஜை செய்யும் உரிமை இருந்து வருகிறது.. இவ்வழக்கம் மாறுவதும், மாறாமல் தொடர்வதும் மேற்படி வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து இருக்கிறது.. தீர்ப்பு எப்படி இருந்தாலும் பக்தியும், பயிற்சியும் உடைய, அர்ச்சக வாழ்க்கை முறையையும், சைவ/வைணவ சம்பிரதாயங்களை பின்பற்றும் யாராக இருந்தாலும் (குறிப்பாக, பெரியாருக்கு பூஜை செய்யாதவர்கள்) மேற்படி கோவில்களில் பூஜை செய்யலாம் என்பது நடைமுறைக்கு வருவது தவிர்க்க முடியாதது..

            // 3. மனுவில் பிராமணர்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும் என்று உள்ளது ? அதை பற்றி உங்களுடைய கருத்து ? //

            மனு சாத்திரத்தைப் பொறுத்த வரை தங்களுடைய கருத்துதான் என்னுடைய கருத்தும்.. இஸ்லாமிய சிவில் சட்டங்களைவிட அரசியல் சட்ட உரிமைகள் முக்கியம் என்ற என்னுடைய கருத்துதான் தங்கள் கருத்தா என்பதையும் தெரிவிக்கவும்..

            // 4. கடைசியாக ஒருகேள்வி உங்கள் மத வேதங்களில் பிராமணர்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்று உள்ளதா ? மனுவைதவிர . //

            ஏதேனும் இந்து மத வேதங்களில் பிராமணர்கள்தான் பூஜை செய்ய வேண்டும் என்று உள்ளதா என்று தெரியவில்லை.. ஆனால் பூஜை செய்து கொண்டிருந்தவர்கள் பிரம்ம விசாரம் கொண்டவர்கள், பிரம்ம வித்தை(இறையியல் கல்வி) கற்றவர்கள் என்பதால் பிராமணர்கள் என்று குறிப்பிடப்பட்டனர்..

        • அம்பி
          //அர்ச்சக உரிமைகூட, ஆகமங்கள் Vச் அரசியல் சட்ட உரிமைகள் என்ற வழக்கில் நிலுவையில் இருக்கிறது//
          அர்ச்சக உரிமைகூட நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளீர்கள் அப்படிஎன்றால் ஏன் மாற்று அமைப்பினர் பூசாரியாக வருவதற்கு இவ்வளவு கஷ்டமாக உள்ளது இதிலிருந்தே தெரியவில்லையா சட்டங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளது என்று ?

      • 1.Brahmananidam sothu kidayathu,matravargalidam sothu undu,athu thaan kaaranam brahmananay naadu kadathu enbathu.

        avan nilathai engum kondu sella mudiyathu,aadu maadugalai otti chellavum mudiyathu.

        2.I dont understand what you are exactly mentioning there?

        In Mahabharatam,you see a case in the court where 4 people of all the 4 varnas are under arrest for a murder and the brahmin gets the highest punishment as he was aware of everything and he still commited a crime.

        so,there goes your logic.

  11. @HisFeet

    What are you achieving in portraying christianity better than other religions?

    Topic conveys a clear message – brahmins have to change and come out of their utopic superiority status. For that it will take one more yuga!

    • Dear Karthick,

      I am not saying Christianity is better than other religions. But I just noted that Islam and Christianity offer more rights to a convert than what Hinduism offers to a born Hindu. By the way, please read my other comments which are openly against pentecostal frauds, Catholic child molestation etc.

  12. ambi.

    Dont argue with him as he is very ill informed.He neither knows history nor has the back up of knowledge.

    This article has so much filthy adjectives against hindus. It was shocking.

    Anyway ….when one trusts filth?

    When one doesn’t have substance in his argument he takes it up to fight .. well to shut the opponent’s mouth.Poor guys.

    First let them clarify how many hindu temples are there in TAMIL NADU and who do the pujas there.

    Thousands and thousands are there and each village has so many and NONE is run by brahmins.And they are run by various caste people with no problem.No brahmin can enter into the sanctum sanctoriam.

    IF he has guts let him go and talk to those pujaris with his lg and they know these people’s lg and reply in that.

    Only AKAMA temples need Sivachariyars in Saiva sect and Pattars in Vashnava sect with so much rigidity. If they don’t follow the rules and are indisciplined … they simply reflect the society.

    Of course like any other society hindu society too has so much pollution.

    In tanjore during my school days I too wanted to join these people to bring the change in the society.I found their arguments Hallow and without substance.I was lucky to have my father who refused to teach and allowed me to go to them return on my own.

    My father who was an authority on communism used to poke these people whenever they argue at NCBH tanjore stall…..

    Their one funny argument is TAMIL songs at Thiruvaiyaru Thyagarajar festival.

    Thiyagaiyar was a TELUGU brahmin. He wrote in Telugu all his keerthanas.

    And those who learn his keerthanas in devotion celebrate his DEATH anniversary each year in January by singing his telugu keerthanas During Margazhi Krishna Paksha Panjami thithi..

    THEVASAM kudukkuranunga.Adhai endha Bhashaiyile kuduththa ungalukku ennannu ketpar engappa.Oru paya pesa maattan. mariyathaiyum oru karanam. Logic mudhal kaaranam.

    ADHAPpoi thamizhile kududannu ivarkal pannum attakasam irukke. adhuthaan funny.

  13. பிரச்னை என்ன? கோயிலா? கடவுளா?சொத்துக்களா? மக்கள் நலமும் பகுத்தறிவுமா? பார்பனிய வெறுப்பை இப்படி கலகமாக்கி சமுதாயத்தை திருத்திவிட முடியுமா? பெரியார் உடைத்த சிலைகள் இன்று பலமடங்கு கோயில்களாகவும் மடங்களாகவும் போலிச் சாமியார்களாகவும் பெருகி உள்ளதை எப்படி நிறுத்தலாம் என சிந்திக்காமல் போராட்டம் என்று மக்களை வெறுப்புக் கொள்ள வைப்பதால் யாருக்கு என்ன லாபம்?

  14. இதில் தம்மை இணைத்துக்கொண்டு வாதிடும் நபர்களின் மத நம்பிக்கைகள் / நம்பிக்கை மறுப்புகள் இந்த விஷயத்துடன் சந்தேகத்துக்குரிய வகையில் தொடர்புள்ளவை.
    ஹிந்து மத நம்பிக்கை அடிப்படையில் உள்ள ஒரு சிக்கலுக்கு தீர்வு காண இந்த மிஷநரி நபர்களுக்கு என்ன ஆர்வம்?
    திரு. ஈ வெ ரா காலத்தில் மறைமுகமாக அவரது பின்னாலிரிந்து தூண்டிவிட்டு ஆழம் பார்த்த ______ காசு இப்போது நேரிடையாக முகம் காட்டுகிறது.

  15. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற மைய கருத்தை முழு மனதோடு வரவேற்கிறேன்.
    ஆனால் கட்டுரையில் உள்ள வேறொரு கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை.

    பக்தர்கள் எல்லோரும் கருவறைக்குள் சென்று சாமியை தொட்டு கும்பிடுவது என்பது வட இந்தியக் கோவில்களில் உள்ளது, தமிழ் நாட்டில் இல்லை. இங்கே அர்ச்சகர் மட்டுமே உள்ளே செல்வது, மற்றவர் வெளியே நிற்பது என்பதே வழக்கம். இது மாற்றப் பட வேண்டுமா என்பது பக்தர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். இது உங்களுக்கு தேவையில்லாதது. அடுத்து என்ன, செருப்போடு கோவிலுக்கு செல்வது, எதிர்புறமாக பிரதட்சிணம் செய்வது, பெருமாளுக்கு திருநீறு, சிவனுக்கு துளசி பூஜை என்றெல்லாம் போராடுவீர்களோ?

    • நண்பர் வெங்கடேசன் ,

      ———–அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற மைய கருத்தை முழு மனதோடு வரவேற்கிறேன்.—————–

      என்று கூறிவிட்டு பின்னர்,

      ———-இது மாற்றப் பட வேண்டுமா என்பது பக்தர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். இது உங்களுக்கு தேவையில்லாதது.————–
      என்று பல்டி அடித்து விட்டீர்களே !!
      ஏன் இப்படி?

      நன்றி !!

      • நான் சொல்ல வந்தது வேறு. குழப்பமாக சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன்.

        ஜாதி வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆக முடிய வேண்டும் என்பதே என் கருத்து. இது வேறு விஷயம். கோவிலில் நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர் மட்டும் கருவறைக்குள் செல்வது மற்ற பக்தர்கள் வெளியே இருந்து சாமி கும்பிடுவது என்ற வழக்கம் வேறு விஷயம். நான் கூறுவது, கோவில் அர்ச்சகர் (எந்த ஜாதியாய் இருந்தாலும்) கருவறைக்குள் செல்வது, மற்ற பக்தர்கள் (எந்த ஜாதியாய் இருந்தாலும்) வெளியே இருந்து கும்பிடுவது என்ற மத வழக்கத்துக்கும் வினவுக்கும் சம்பந்தம் இல்லை. இந்த வழக்கம் தொடர வேண்டுமா, அல்லது வட நாட்டில் இருப்பது போல பக்தர்கள் அனைவரும் நேரடியாக கருவறைக்குள் சென்று தாமே சாமியை தொட்டு கும்பிடும் வழக்கம் கொண்டு வரப் வேண்டுமா என்பது பக்தர்கள் நாங்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். இதில் வினவு நாட்டாமை செய்ய வேண்டாம்.

        உங்களுக்கு உதாரணம் வேண்டுமானால் சர்ச்சில் பாதிரியார் மட்டுமே திருப்பலி செய்து பிரசங்கம் செய்வார். சர்ச்சுக்கு வருவோர் எல்லாருக்கும் திருப்பலி செய்ய அனுமதிக்கப் பட வேண்டுமா என்பது அம்மதத்தை பின்பற்றுவோர் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.

        • Venkatesan, //அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற மைய கருத்தை முழு மனதோடு வரவேற்கிறேன்.// ஆக வேண்டும் சரி , ஏன் ஆக முடியல.? ஏன்னா …….
          //கோவிலில் நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர் மட்டும் கருவறைக்குள் செல்வது// சின்ன திருத்தம் , வெறும் அர்ச்சகர் அல்ல …பார்ப்பன அர்ச்சகர்.

          • அஸ்வின்,
            பார்ப்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆவதை தடுப்பதற்காகவே மேற்சொன்ன வழக்கம் கொண்டு வந்ததை போல போல கூறுகிறீர்கள். நமக்கு என்ன தேவை? பார்ப்பனர் அல்லாதோரும் அர்ச்சர்கர் ஆவது. இதற்காக மட்டும் நேரடியாக போராடுவதே சரியானது. “எல்லாரும் கருவறைக்குள் செல்ல முடிந்தால், பார்ப்பனர் அல்லாதோரும் அர்ச்சகர் ஆகி விடலாம்” என்பது சுற்று வழி. அப்போதும், பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகர் ஆவது என்ற நிலை தொடர வாய்ப்புள்ளது (வட இந்தியாவில் இதே நிலைமை).

            மேலும், சம நீதிக்கு எதிரான “பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகர்” ஆவது என்பதை எதிர்க்க எல்லாருக்கும் உரிமை உண்டு. அரசு, நீதிமன்ற தலையீடும் நியாமானதே. ஆனால், அர்ச்சகர் மட்டுமே கருவறைக்குள் செல்வது என்பது ஒரு மத வழக்கம் மட்டுமே. இதை மாற்றுவது பற்றி முடிவு செய்யவேண்டியது இந்து மத பக்தர்கள் நாங்கள் மட்டுமே. இதில் வினவு போன்ற இந்து மத நம்பிக்கை அற்றோர் தலையிடுவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். நாங்கள் எப்படி சாமி கும்பிட வேண்டும் என்பதை இவர்கள் சொல்லித் தர தேவையில்லை.

            • // இதை மாற்றுவது பற்றி முடிவு செய்யவேண்டியது இந்து மத பக்தர்கள் நாங்கள் மட்டுமே. இதில் வினவு போன்ற இந்து மத நம்பிக்கை அற்றோர் தலையிடுவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். நாங்கள் எப்படி சாமி கும்பிட வேண்டும் என்பதை இவர்கள் சொல்லித் தர தேவையில்லை.//

              வெங்கடேசு அண்ணே,

              நீங்கள் யார் சார்பாக மிரட்டுகிறீர்கள் அண்ணே. அனைத்து சாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் இந்துக்கள் அதாவது சாமி கும்பிடும் இந்துக்கள் இப்போது பெரியாரிய கட்சிகள் மற்றும் வினவு பின்னாடியும்தான் இருக்கிறார்கள். பொறவு நீங்கள் யார் சார்பாக சவடால் அடிக்கிறீர்கள் அண்ணே!

              • சந்து தம்பி,
                வினவு பின்னால் இருக்கும் பக்தர்கள் எல்லாம் எப்படி சாமி கும்பிட வேண்டும், கோவிலில் செய்ய வேண்டிய சடங்குகள் என விளக்க வினவை மடாதிபதி ஆக்கிவிட்டார்களா? இனி காலை நேரத்தில் தொலைக்காட்சியில் வினவு காலக்ஷேபம் எல்லாம் செய்யும் என எதிர்பார்க்கிறேன்.

                பழனி கோவிலின் 2012 ஆண்டு வருமானம் 114 கோடி (http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3720560.ece?css=print). இந்தக் கோவிலுக்கு இவ்வளவு பணம் கொடுத்தவர்கள் தங்களது ஆன்மீக குருவான வினவை ரயில் ரயிலாக ஏறி இறங்கி உண்டி குலுக்க வைத்தது வேதனை அளிக்கிறது.

                சரி, வினவு பின்னால் அணி திரண்ட பக்தர்கள் கருவறைக்குள் நுழைய விரும்புகிறார்களா என ஜனநாயக ரீதியில் வாக்கெடுப்பு ஏதாவது எடுத்து விட்டார்களா? அல்லது சொந்த நாட்டாமை தானா?

                நீங்கள் கேட்ட சவடால் அடியார்கள் சார்பாக விடப்பட்டது.

                • மேலே கோபத்தில் சொன்னதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிறைய நிதி கிடைத்து வினவு இந்த வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கோரிக்கையோடு வினவு நிறுத்திக்கொண்டு, அனைத்து பக்தர்களும் கருவறைக்குள் செல்வதா என்பதை பக்தர்கள் விருப்பத்துக்கு விட்டு விட வேண்டும் என்பதே என் கருத்து. வழக்கில் வெற்றி பெற மீண்டும் வாழ்த்துக்கள்

            • வெங்கடேசன், //பார்ப்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆவதை தடுப்பதற்காகவே மேற்சொன்ன வழக்கம் கொண்டு வந்ததை போல போல கூறுகிறீர்கள்.// போல வெல்லாம் கெடையாது. அதான் உண்மை. பிறகு அதன் மூலம் தங்கள் மேலாண்மையை காலத்துக்கும் தக்க வைத்து கொள்ள வேண்டும். ஏன் மற்றவர்கள் அர்ச்சகர் ஆக கூடாது என்பதற்கு பார்பனர்களால் சொல்லப்படும் காரணங்களை தெரிந்து கொண்டு பேச வாருங்கள்.

              • அஸ்வின்,
                சரி, உண்மை நீங்கள் சொல்லும் படியே இருக்கட்டும்.

                தமிழகத்தில் தற்போதும் பல கோவில்களில் பார்ப்பனர் இல்லாதோர் அர்ச்சகராய் உள்ளனர்.
                இங்கும் பக்தர்கள் கருவறைக்கு வெளியே நிற்கிறார்கள். இந்த கோவில்களில் பக்தர்கள் எல்லாரும் கருவறைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என போராட்டம், வழக்கு எல்லாம் நடத்த திட்டம் ஏதும் உண்டா?

              • அஸ்வின்,
                இதே கேள்வி வேறு விதமாக. உச்சநீதிமன்றம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லி தீர்ப்பு வழங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். அதோடு வழக்கு போராட்டம் ஆகியவற்றை நிறுத்திக் கொள்வீர்களா? அல்லது, அனைத்து பக்தர்களும் கருவறைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என வேறொரு போராட்டம், வழக்கு தொடர்வீர்களா?

      • I understand what he says. He is saying that any caste can become priest. But only priest should go inside the karuvarai.

        We have to respect his opinion as it is not harmful. He is talking about temple discipline here.

  16. its the basic right of a man to worship god and do pooja . welcome to the scheme of “anaithu sathiyinarum archagaragalam”. but why they cast themselves as a traditional archagar. it seems to be a copy. let them continue their own tradional dress.

  17. ஹா ஹா பார்பனர்களின் சாதி வெறியை எதிப்பது எனபது ஆதிக்க சாதிகளின் முதலை கண்ணீர்.

    http://reservationfraud.blogspot.com

    கருவறைக்குள் செல்ல அனுமதி இல்லை.
    “நீங்கள் உங்களுக்கு வேண்டுமானலும் தனியாக கட்டி கொள்ளுங்கள் என்கிறார் ஒரு அன்பர் ”

    பெண்களே உள்ளே செல்ல அனுமதி இல்லை
    ” சொர்க்கத்தில் அனைவருக்கும் சமமாக இடம் உண்டு என்று ஆர்பரிகிறார் இன்னொருவர். சொர்க்கத்தில் பெண்கள் பணிப்பெண்களே என்று கொக்கரித்தவர் அவர் ”

    கருப்புக்கு , வெள்ளைக்கு பழுப்புக்கு என்று தனி தனி இடங்கள்
    “சிறவர்கள் மட்டும் தனியாக செல்ல வேண்டாம் என்கின்ற அறிவுரையோடு ”

    மதங்கள் மனிதனை அறிவுகுர்டாகுகின்றன போலும்

  18. “பார்பனன்” என்று நொடிக்கு 100 முறை சொல்பவர்கள், பறையன் அல்லது சூத்திரன் என்று சொன்னால் போருப்பனா. கமல் என்கிற பார்பனன் கருப்பு சட்டை அணிந்து பார்பனர்கள் என்று சொல்லும் உரிமை இந்த நாட்டில் இருக்கிறது. இனிமேல் நாம் மட்டற்ற ஜாதியர்களை பள்ளு, பறையர்கள், சூத்திரன் என்று அழைக்கலாமே!

  19. வட இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் திருநாவுக்கரச நாயனார் காலத்திலேயே தமிழர்கள் எல்லாம் கருவறைக்குள் நுழைந்து பூசை செய்தார்கள் என்பதை திருநாவுக்கரசரின் தேவாரம் தெளிவாகக் கூறுகிறது.

    ” ……போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்!
    யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது
    காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!
    கண்டேன் அவர் திருப்பாதம்! கண்டறியாதன கண்டேன்!!”

    அதாவது திருவையாற்றிலே பூவும், நீரும் சுமந்து கொண்டு சிவனைப் பூசித்துச் செல்கிறார்கள் அடியார்கள்! அவர்கள் முன் புக, அடியேன் பின் புகுவேன்!

    அதனால் தமிழர்கள் ஒன்றும் புதிதாக எதையும் கேட்கவில்லை, தமிழரசர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழரல்லாதாரின் ஆட்சியில் இழந்த, எங்களின் முன்னோர்களின் கோயில்களில், எங்களின் முன்னோர்களைப் போலவே கருவறைக்குள் நுழைந்து இறைவனைப் பூசிக்கும் உரிமையை மீண்டும் புதுப்பிக்கக் கேட்கிறார்கள். உலகத் தமிழர்கள் எல்லோரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். தமிழர்கள் விழித்துக் கொண்டு தமிழ்நாட்டின் கோயில்களைத் தமிழாக்க, தமிழர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டப் போராடுவது, சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை என நம்பும் தமிழர்களனைவருக்கும் மகிழ்ச்சியே. ஆனால் இந்த சைவப் போராளிகள் எல்லாம் மீண்டும் பெரியாரிசம் என்ற முருங்கை மரத்திலேறி, எந்த இந்து மதக் கடவுள்களை தொட்டு வணங்கும் உரிமைகளை கேட்கிறார்களோ அதே இந்துக் கடவுளரை அவமதித்து, சைவ – திருமாலியத்துக்கும் தமிழர்களுக்கும் உள்ள பிரிக்கமுடியாத பாரம்பரியத்தை தமது கடவுள் மறுப்புக் கொள்கையின் அடிப்படையில் மறுத்து, வசை பாட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தமிழர்களனைவரையும் கருவறைக்குள் அனுமதித்தால், இன்று போராடும் பெரியாரிஸ்டுக்கள் எல்லாம் தமிழர்களின் தாய் மதமாகிய சவைத்துக்கு அல்லது திருமாலியத்துக்கு மீண்டு, முழுமனதுடன் விசுவாசமாக இருப்பார்களா என்பது தான் மில்லியன் டொலர் கேள்வி.

    • அட சைவ பக்கியே…சைவ கும்பல் சூடு சொரனையற்று இருப்பதால் தான் நாத்திகர்கள் போராட வேண்டிய் இருக்கிறது.

      • பிள்ளையார் சிலையையும் உடைத்துவிட்டு, பிள்ளையாருக்கு எல்லோரும் பூசை செய்யவேண்டும் என்றும் கூறுவது என்ன வகை சூடு சொரணையோ..?!

        • அம்பி, கொஞ்சம் உங்க பார்ப்பன குருட்டு கண்ணாடிய கழட்டி வச்சிட்டு யோசிங்க புரியும்.

  20. இவனுங்க எல்லாம் கோயிலுக்குள்ள வந்தா… சாமியே வெளியே ஒடிடும்… ஏன் இந்த மானமுள்ள பு.க அமைப்பு மவுண்ட் ரோடு தர்கா முன்னாடி போயி போராட வேண்டியது தானே… பேடிப் பசங்க… இந்துக்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம்… எவனோ பைத்தியகாரப் பய கத்துரானு பத்து பைசா போட்டு வுட்டோம்…

    • இதுதான் பார்ப்பன வாதம் தீண்டாமை. தேவநாதன் கில்மா பண்ணும்போது அம்மன் என்ன வெளியே ஓடி போச்சா ..இல்ல சீன் பாத்துக்கிட்டு இருந்துச்சா ?

  21. எப்பவுமே பாப்பான் ஒழிகன்னு மட்டும் சுருக்கமா சொல்றமே, கொஞ்சம் அய்டியாலாஜி கணக்குல வெவரமா திட்டலாமேனுதான். மத்தபடி கட்டுரையா, பம்மாத்தா? எவன் கேப்பான்? ஒம்ம தலீவருதான் கடவுள நம்புறவன் முட்டாலு, காட்டுமிராண்டி, தமிளு ஒரு காட்டுமிராண்டி பாஷனு குய்யோ முறயோனு கூவினாரே, நீங்க எதுக்கு அப்பாவி தமிழன்கல காட்டுமிராண்டி ஆக்கறதுல குறியா இருக்குறீங்கனு எவனாவது கேக்க முடியுமா? பகுத்தரிவுடா!

    கோயில்ல பூசையும் அருச்சனையும் பண்ணி என்னத்தடா சம்பாதிப்பீங்க தம்பிகளா – படிப்புப் படிங்க, வேல வெட்டியப் பாருங்க, எது குடும்பத்த காப்பாத்தும்னு யோசியுங்கனு சொல்லலாமில்ல? ஊகும்! அதுவா நம்ம குறிக்கோளு? ஒரு பக்கம் இந்து சாமிகள செருப்பு மால போட்டு தொடப்பத்தால விசிறுவோம்; இன்னொரு பக்கம் பூச பண்ண உரிம கேப்போம் – சமநீதி! அதுக்குதான பாடுபடறோம்!

    இந்த தேசத்துல பாப்பானுக்கு படிப்புல வேலையில எந்த உரிமயும் கெடையாது; அவன சாதிப் பேரச்சொல்லி எப்புடி வேணுனாலும் மிதிக்கலாம்னு தான் அரசியல் சட்டத்துல எளுதாத் உரிம இருக்கே மக்கா! ப்ளாக்கு என்னதுககுன்றேன்? அரசாங்க கெசட்டுல போடு! ஒரு பாப்பான் வாயத் தொரந்துருவனானு பாத்துருவம்! என்ன, இந்த பாப்பாரப் பயலுவ கிட்ட கொஞ்சம் கட்டுப்பாடும் குறிக்கோளும் படிப்பு ஆசையும் சாஸ்தி. விடாப்பிடியா முன்னுக்கு வரப்பாப்பனுவ. ஒரு தேவநாதனும் கமலகாசனும் போறாது? அவங்களக் காட்டி இந்தப் பசங்கள மட்டந்தட்டிடலாம் !

    தேசத்துல நடக்குற சதிச்சண்டைக்கு எல்லாம் பாப்பானா காரணம்னு யாரையும் யோசிக்க வுடக்கூடாது; அப்பறம் பகுத்தறிவு என்னா ஆவுறது? நமக்குத் தேவ ஒரு Punch Bag !
    போட்டுக் குத்துவோம்! பாப்பனாமில்ல? ங்கொய்யால!

  22. I find this very funny. I am a brahmin and i cant enter the sanctum-sanctorum of a temple either. You know what…even if the Archagar is a non-brahmin, i have no problems with that as long as he chants the mantras properly. FYI, we dont like the current set of brahmin archagars (some of them) who dont chant mantras properly in temples…So, it doesnt matter who is the archagar. The only request will be: Dont eat Mutton and Chicken and enter the temple’s purest place – karbagraham. For the same reason, i hated the Devanathan event. This is a one-off. In the same fairness, i would like to point out that the govt of TN has produced no evidence against Sankaracharya. So, until then, we should not treat him as guilty. If proved, the brahmin community will be the first to throw him out. Sometimes, i feel websites like Vinavu only aims to create a social unrest by writing nonsense- deliberately to create hostility between people of different castes and religion.

    • கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்பவர், விலங்குணவு உண்ணாதவராக இருத்தல் வேண்டும், (பல கிராமக் கோயில்களில் விலங்குகளைப் பலியிடுகின்றனர் ஆனால் அந்தக் கோயில்களைப் பற்றி நாம் இங்கு விவாதிக்கவில்லை), மந்திரங்களைப் பிழையின்றி உச்சரிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் இங்கு கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் அப்படி ஆச்சாரமான, அதிலும் பல பார்ப்பனர்களை (பார்ப்பான் என்பது தான் உண்மையான பழந்தமிழ்ச்சொல்) விட ஆச்சாரமும், தமிழ், சமக்கிருத மொழிகளில் புலமையும் , இந்துமத சாத்திரங்களைக் கரைத்துக் குடித்த தமிழர்கள் பலர் கூட சாதியடிப்படையில் கருவறைக்குள் நுழைய முடியவில்லை, இன்றும் நுழைய முடியாது. உதாரணமாக சைவ ஆதீனங்கள் தமக்குச் சொந்தமான கோயில்களின் கருவறைக்குள் கூட நுழைய முடியாது. ஆனால் முளைச்சு மூணு இலை விடாத பார்ப்பனப் பையன் கூட ஹாய்யா கருவறைக்குள் நுழைகிறான். அவனுக்கு மந்திரம் மட்டுமில்லை, ஒரு இழவும் தெரியாது. அந்த நிலை மாறவேண்டுமென்பது தான் இந்தப் போராட்டம். இந்த வழக்கில் வெற்றி பெற்றால், இந்தப் போராட்டத்தில் பங்க்கு பற்றும் தமிழர்கள் எல்லாம் சைவ உணவுக்காரர்களாக மாறி, மந்திரங்களைக் கற்றுக் கொண்டு, அர்ச்சகர் வேலைக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை. தமிழர்கள் தமது முன்னோர்களால் கட்டிய கோயில்களின் கருவறைக்குள் நுழைவதற்கு அவரகளின் சாதி இனிமேலும் தடையாக இருக்காது என்பதை உறுதிப்படுத்துவது மட்டும் தான் இந்தப் போராட்டத்தின் நோக்கம்.

      • “ஆனால் முளைச்சு மூணு இலை விடாத பார்ப்பனப் பையன் கூட ஹாய்யா கருவறைக்குள் நுழைகிறான். அவனுக்கு மந்திரம் மட்டுமில்லை, ஒரு இழவும் தெரியாது. ”

        I think this is NOT true. I said, being a brahmin and one who does sandhyavandhanam, cannot enter the கருவறை. May be, you are making a huge hue and cry by picking on few one-off incidents. FYI, our family has been actively involved in temple building and have been huge donors as well. Still, it doesnt give us ANY privilege. If you are talking about helper boys, i am sure they are enrolled in the veda classes. It is a strict rule that one has to follow certain rules – cleanliness, purity in thought(being a normal human being, i myself cant claim i am pure in thoughts), purity in eating habits etc. On a parallel track, my question to you is: Will you fight for the tamils who got converted to Christianity and Islam and still cant be the preacher?

      • //உதாரணமாக சைவ ஆதீனங்கள் தமக்குச் சொந்தமான கோயில்களின் கருவறைக்குள் கூட நுழைய முடியாது//

        ஒரு சின்ன திருத்தம்: பிராமன சாதியில் பிறந்த மடாதிபதி கூட கருவறைக்குள்நுழைய முடியாது…

        //தமிழர்கள் தமது முன்னோர்களால் கட்டிய கோயில்களின் கருவறைக்குள் நுழைவதற்கு அவரகளின் சாதி இனிமேலும் தடையாக இருக்காது என்பதை உறுதிப்படுத்துவது மட்டும் தான் இந்தப் போராட்டத்தின் நோக்கம்.//
        கொஞ்சம் கருஞ்சட்டை வாடை அடிக்கிறது…
        இது வெறும் தமிழருக்கான போராட்டமல்ல…வழக்கில் வெற்றிபெற்றால் நாடு தழுவிய தாக்கம் இருக்கும்…

        அது சரி: உங்கள் அகராதியில் யார் தமிழர்? தமிழ் பேசும் பிராமனரை ஒதுக்கும் போக்கு உங்களை எங்கும் கொண்டு செல்லாது…தவறுக்கு தவறு தீர்வாகாது…

    • // I am a Christian Deist as already told. //

      @HisFeet,

      In your comment (No.38), you have not mentioned you are a christian deist.. :

      // The point is, I am not atheist. I believe in natural religion. Much like Deism. But can you declare yourself as deist in India? Where is the largest community of Deists with Western thoughts in India? I found that Anglican religion is the place where there are many liberal deists in India. So I am one. Moreover, I feel Jesus as the best teacher of natural religion(It is purely my opinion and choice, not fact). So, I am his follower. From inside Church, we (some of us) are doing a silent revolution against all sort of superstitions in Christian faith too. I don’t believe Adam Eve story, Noah’s story is not real, Moses didn’t get the law from God… and the list continues.//

      Liberal deists are not same as christian deists / liberal christians.. Deists believe in a non-intervening creator who leaves the day-to-day business to the laws of nature.. Even christian deists don’t attribute any divinity to Jesus (or His Feet)..

  23. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டியது மிக மிக அவசியம்.அதற்கான போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்!அவசியமான இந்தப் போராட்டத்தை முழுமையான சமூக, பொருளாதார,பண்பாட்டு, அரசியல் மாற்றங்களுக்காகப் போராடும் அரசியல் அமைப்புகள் இதுவரை எடுக்காததனால் தான் அரைகுறை அமைப்புகள் (தி.க.வகையறாக்கள்)தமிழ்நாட்டில் திரிந்துகொண்டிருக்கின்றன.எல்லா மதங்களுமே மக்களுக்கு எதிரானதாகத் தான் செயல்படுகின்றன.பெருஞ்சொத்துத் தனியுரிமையை ஆதரித்துக் காப்பாற்றுகின்றன,அரசிடம் பணிவாக நடந்துகொள்ளவேண்டுமென போதிக்கின்றன, பெண்ணடிமைத்தனத்தை காப்பாற்றி நிலைத்திருக்கச்செய்கின்றன.இதிலே இந்து மதமென்பது அதிகம் கேடுகெட்டது.இதற்கு இந்து மதத்தின் வரலாறு காரணமாகிறது.இதே வரலாறு தாங்கள் இந்துக்கள் என்று நினைக்கிற மக்களிடம் ஒரு ஜனநாயகத்தன்மையையும் கொடுத்திருக்கிறது.அவர்கள்,இதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள போராடியும் வருகின்றனர்.இவர்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பதும் ஒரு மையத்தலைமை இல்லாதிருப்பதும் காரணமாக இருக்கலாம்.இப்படி பல்வேறு காரணங்களால் இந்துக்கள் எனும் மக்கள் கூட்டம் தான் ஜனநாயகத்தன்மையும் நெகிழ்வுத்தன்மையும் கொண்டிருக்கிறது.இந்த மக்கள் கூட்டம் தான் மதவெறியில்லாதவர்களாக இருக்கிறார்கள்.சாதிவெறியுள்ளவர்களாக இருப்பது தான் இத்ற்குக் காரணம்.இந்தச் சாதிவெறி ஒழிந்திட்டால்,இந்துக்கள் மாற்றங்களை வரவேற்கும் மக்கள் திரளாகத் திகழ்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.எனவே அனத்துச் சாதியினரும் அர்ச்சகராகட்டும்,சாதிகள் ஒழிந்துதொலையட்டும் !

  24. ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்!

    உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்!

    வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்!

    பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!

    மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்!

    மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம்…

    கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர்.

    அதில் பிராமணர்கள் 2376 பேர்!

    பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!

    ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!

    -குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்

  25. சாதி அரசியலுக்கும் இல்லை ஆன்மீகத்துக்கும் இல்லை என சொன்னவர்களைதான் நாம் கொலை பழியும் சாதியமும் சொல்லி சாதி தலைவர் என சொல்லிவிட்டொமெ!

  26. சமுகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் நாம்தான்.ஆதலால் சமூகம் மாற வேண்டும் என்றால் முதலில் நாம் நம்மை மாற்றிக் காண்பிக்க வேண்டும்.அல்லது மாற்ற வேணடும்.
    இந்துக்களாக பிறந்த அனைவருக்கும் குலதெய்வம் என்ற ஒரு தெய்வம் அதற்கென ஒரு கோயில் இருக்க வேண்டும்.அப்படி இருக்கா இல்லையா?என்பதை தமது வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.
    அதனை உறுதிசெய்துகொண்டு திரு.வினவு அவர்கள் அவர்களது குடும்ப குலதெய்வக் கோயிலில் அறிமுகபடுத்தி அமல்படுத்தலாமே?
    தலித் அல்லாத சமுகத்தினா் பெரும்பாலான கோயில்களில் அர்ச்சகா்களாக இருக்கிறார்கள்.ஆனால் தலித்கள் தங்களது கோயில்களிலேயே பிராமண அர்ச்சகா்களைத்தான் நியமித்து இருக்கிறார்கள்.
    அப்படி இல்லை எனில் அவா்களுடைய கோயில்களில் நடக்கும் சிறப்பு ஆராதனைகளுக்கு அவர்களைத்தான் அழைத்து செயல்படுத்துகிறார்கள்.
    பிராமணர்களைக் அழைத்துதான் எதனையும் செய்ய வேண்டும். என்ற சட்டமும் கட்டாயமும். இல்லை.நமது வசதிக்கு எது சவுகரியமோ அதனை தாராளமாக செய்யலாம்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

  27. உண்மை சுடும்:
    கடைசி பாப்பாணும்,கடைசி இந்தியனும் இருக்கும் வரை…
    தமிழன் எழுந்துநிற்க முடியாது!

Leave a Reply to v.abdulrahman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க