privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்'தலித்துக்களை தாக்க உரிமை வேண்டும்!' - ராமதாஸ் !

‘தலித்துக்களை தாக்க உரிமை வேண்டும்!’ – ராமதாஸ் !

-

ரு பிரச்சினையில் பாதிப்படைந்தவர் போராடுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் பாதிப்பை உண்டாக்கியவர்கள் எங்காவது ‘நீதி’ கேட்டு போராடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தருமபுரி நாயக்கன் கொட்டாய் வட்டாரத்தில் தலித் மக்களின் வீடுகளை அழித்து சூறையாடிய வழக்கு நினைவிருக்கலாம். இதில் குற்றவாளிகளான வன்னிய சாதிவெறியர்கள் அனைவரும் தண்டிக்கப்படாத நிலையில் ஒரு சிலர் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். பலர் பிணையில் வெளிவந்து விட்டார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வன்னிய சாதிவெறியர்களின் குடும்பத்தினரை குறிப்பாக பெண்களை அணிதிரட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார் பாமக ராமதாஸ். தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளைத் தாக்கிய வன்னிய சாதிவெறியர்களை விடுதலை செய்யவேண்டும் என்பதோடு அவர்கள் அப்பாவிகள் என்பது ராமதாஸின் கண்டுபிடிப்பு. சரி, இவர்கள் அப்பாவிகள் என்றால் உண்மையான குற்றவாளிகளை ராமதாஸே பிடித்துக் கொடுத்து விடலாமே? இல்லை அவர்களை தூண்டிவிட்டது நானும், காடுவெட்டி குருவும்தான் என்று உண்மையை ஒத்துக் கொண்டாவது தானாக கைதாக முன்வரலாமே?

ஊர் ஊராக ஆதிக்க சாதிவெறியர்களை அணிதிரட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சமூகத் தீண்டாமையை அமல்படுத்த உரிமை வேண்டும் என்று பச்சையாக நஞ்சைக் கக்கும் இந்த பச்சோந்தியை தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடவிட்டதே பெரும் அபாயம். தைலாபுரத்தை விட்டு அவர் எங்கும் வெளியே போகக்கூடாது என்று உத்தரவு போடுவதை விடுத்து, சாதிவெறியை வெளிப்படையாக கக்கும் அவரை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்வதை விடுத்து, அவர் நடத்தும் இந்த சாதிவெறிக் கூட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது தமிழக போலீசு.

ஜெயலலிதா அரசு இப்படி இரட்டை வேடம் போட்டு சாதிவெறிக்கு துணை போனாலும் நாம் தொடர்ந்து ராமதாசையும் வன்னிய சாதிவெறிக் கட்சியான பாமகவையும் தனிமைப்படுத்தும் வண்ணம் போராட வேண்டும். இங்கே தஞ்சையில் நடந்த போராட்டத்தினை பதிவு செய்கிறோம்.

தஞ்சை மாவட்ட நிர்வாகமே! தலித் மக்களுக்கு எதிரான பா.ம.க. ராமதாஸ் தலைமையிலான ஜாதிவெறிக் கும்பலை தஞ்சை மாவட்டத்தினுள் அனுமதிக்காதே!

என்ற முழக்கத்தை முன் வைத்து பிப்ரவரி 22, 2013 வெள்ளிக் கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு ரயிலடியில் மறியல் நடைபெற்றது.

அனைத்து சமுதாய பேரியக்க ஆலோசனைக் கூட்டத்திற்காக தஞ்சை வந்த பா.ம.க. தலைவர் ராமதாசுக்கு எதிராக ம.க.இ.க., பு.மா.இ.மு. தோழர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். இதனை திரளான மக்கள் ஆர்வத்துடன் நின்று பார்த்தனர்.